Fa.Shafana
Moderator
அன்று மாலை தொடங்கிய மழை இரவு வரை விடாமல் பெய்து கொண்டிருந்தது.
அலுவலகத்தில் இருந்து வந்து குளித்து இலகுவான உடை ஒன்றை மாற்றிக் கொண்டு கீழே செல்ல எத்தனித்த யுகனைத் தடுத்தது அலைபேசி ஒலி.
"ஹலோ சொல்லு மச்சான்" என்றவனுக்கு
எதிர்ப்புறத்தில் இருந்து பதிலாக வந்த செய்தியில் திகைத்து நின்றவன் சில வினாடிகளின் பின்னர் தான் சுயம் பெற்றான்.
படபடக்கும் இதயத்துடன் தடதடவென அவன் படிகளில் இறங்க ஏன் இந்த அவசரம் எனும் விதமாகப் பார்த்துக் கொண்டு நின்ற தன் தாயிடம்
"ஆதித்யாவுக்கு ஆக்.. ஆக்ஸிடெண்ட் ம்மா. இப்போ தான் கால் வந்தது. நான் போய் பார்த்துட்டு வர்றேன்" என்றான்.
"என்னடா சொல்ற? எங்க வெச்சி ஆக்ஸிடெண்ட் ஆகியிருக்காம்?"
"அவன் ஆதினிய கூட்டிட்டு வரப் போய் இருந்தான் ம்மா வரும் போது தான் ஆக்ஸிடெண்ட் ஆகி இருக்கும். லொகேஷன் அனுப்புறேன்னு சொன்னாங்க, நான் போய் என்னன்னு பார்த்து கால் பண்றேன்"
"இரு யுகா நானும் வர்றேன்" என்று விட்டு எழுந்து சென்று மேல் சட்டையைப் போட்டுக் கொண்டு அவனுடன் சேர்ந்து கொண்டார் அவனின் தந்தை தமிழ்வாணன்.
தமிழ்வாணன் தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றுகிறார். அவர் மனைவி சரண்யா தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியர்.
அவர்களுக்கு இரண்டு பிள்ளைகள். மூத்தவள் யுவஸ்ரீ. அதே ஊரில் திருமணம் முடித்துக் கொடுத்திருந்தார்கள்.
இளையவன் யுகன்.
வெளிநாட்டில் எம். பீ. ஏ படித்து விட்டு வந்து சொந்தமாக தொழில் ஆரம்பித்து செய்து கொண்டிருக்கிறான்.
யுவனுடன் கல்லூரியில் படித்தவன் தான் ஆதித்யா. நடுத்தர வர்க்கத்தினர் தான் என்றாலும் யுகனின் நெருங்கிய நண்பன்.
மழை சற்றே தணிந்திருந்தாலும் வண்டியை வேகமாக செலுத்தும் அளவுக்கு இல்லை.
நண்பனுக்கு என்ன ஆனதோ? என்ற பதற்றம் இருந்தாலும் நிதானமா வண்டியைக் கையாண்டு வர வேண்டிய இடத்திற்கு வந்து சேர அப்போது தான் அவசர ஊர்தியும் வந்திருந்தது.
யுவன் தன் வண்டியை ஓரமாக நிறுத்தி விட்டு இறங்கி வேகமா ஓடினான்.
சேர்ந்திருந்த பத்துப் பதினைந்து நபர்களை விலக்கிக் கொண்டு முன்னே சென்றான்.
ஆதித்யா அவனது தந்தை, தாய் என மூன்று பேரின் உயிரற்ற உடல்கள் தான் அவசர ஊர்தியில் ஏற்றப்பட்டு இருந்தன.
அவர்களின் உடல்களைப் பார்த்த நொடி "ஆதீஈஈ" என்று அதிர்ந்து கத்த,
"சார் நீங்க யாரு?" அங்கு வந்திருந்த காவல்துறை அதிகாரி தான் கேட்டார்.
"நான் இவனோட ஃப்ரெண்ட், யுகன். இங்க யாரோ தான் இவன் ஃபோன்ல இருந்து எனக்கு கால் பண்ணி இருந்தாங்க" அழுகையை விழுங்கிய குரலில் கூறினான். ஆதித்யா மட்டும் சென்ற பயணம் என்று எண்ணியிருக்க அவனது பெற்றோரும் சேர்ந்து சென்று விபத்தில் இறந்தது அதிர்ச்சியையும் கவலையையும் அளித்தது.
"நான் தான் சார் கால் பண்ணேன். அவங்க ஃபோன்ல எமர்ஜென்சி கான்டாக்ட்ல உங்க நம்பர் இருந்தது"
கல்லூரி மாணவன் என்று பார்த்தவுடன் கணிக்கக் கூடிய தோற்றத்தில் இருந்த ஒருவன் சொல்லிக் கொண்டு யுவன் அருகில் வர தமிழ்வாணனும் வந்து விட்டார்.
"எங்க அப்பாவோட கடை தான் அது. காலேஜ் விட்டு வந்து நைட் கடை மூடும் வர இங்க தான் இருப்பேன். இன்னைக்கு மழைல பிசினஸ் அவ்வளவா இல்லைன்னு கடைய மூடலாம்னு பேசிட்டு இருக்கும் போது தான் ஆக்ஸிடெண்ட் ஆச்சு" அவன் தான் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தான்.
"எப்பிடிப்பா ஆக்ஸிடெண்ட்டாச்சு? நீ பார்த்தியா?" தமிழ்வாணன் கேட்டார்.
"ஆமாங்க சார். கடை வாசல்ல சேர் போட்டு உட்கார்ந்து ரோட்டுல போற வர்ற வண்டிகள தான் வேடிக்கை பார்த்துட்டு இருந்தேன்.
கொஞ்சம் வேகமாத் தான் அந்த கார் வந்துச்சு, ப்ரேக் பிடிக்கல்ல போல சார், திடீர்ன்னு அந்த மரத்துல மோதிடுச்சு" என்று அவன் கூற
"இவன் ஸ்பீடா தான் வண்டி ஓட்டுவான் எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டானே ப்பா" என்றான் யுகன்.
"மோதின வேகத்துல தலை, நெஞ்சுன்னு அடிபட்டிருக்கும் போல சார். அந்த அம்மாவுக்கு உயிர் இருந்தது. முதல்ல அவங்கள தான் வெளிய எடுத்தோம் ஆனா உடனே இறந்துட்டாங்க.
அப்புறம் முன்னாடி இருந்தவங்க டெட் பாடிய தான் ரொம்ப கஷ்டப்பட்டு வெளிய எடுத்தோம்"
அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே அவசர ஊர்தியும் கிளம்பியது.
விபத்துக்குள்ளான வண்டியில் இருந்த கைபேசிகள் மற்றும் இதர பொருட்களை ஒரு பையில் போட்டுக் கொடுக்க அவற்றை தமிழ்வாணன் வாங்கி தங்கள் வண்டியில் வைத்துக் கொண்டார். முழுமையாக உடைந்து தான் இருந்தன அவை.
அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு தான் உடல்கள் கொண்டு செல்லப்படுகின்றன என்று கேட்டுத் தெரிந்து கொண்டு அதைத் தொடர்ந்து செல்லவென வண்டியில் ஏறியவனுக்கு தான் சட்டென்று ஆதினியின் நினைவு வந்தது.
"அப்பா, ஆதினிய கூட்டிட்டு வரத் தான் ஆதித்யா போறேன்னு சொன்னான். அப்போ அவ எங்க?" யோசனையுடன் கேட்டு விட்டு மீண்டும் அந்தக் கடை அருகே ஓடினான்.
கூடி இருந்தவர்கள் அங்கே தான் நின்று பேசிக் கொண்டிருந்தார்கள்.
"அந்த வண்டில மூனு பேர் தான் இருந்தாங்களா?" பொதுவாக அவர்களைப் பார்த்து கேட்க,
"ஆமா, ஏன் கேட்கிறீங்க?"
"இல்ல அவங்க பொண்ணு வெளியூர்ல காலேஜ்ல படிக்கிறா அவளக் கூட்டிட்டு வரத் தான் போனாங்க" யோசனையாகக் கூறிக் கொண்டே அந்த இடத்தை சுற்றி கண்களை சுழற்றினான்.
"அவ இங்க தான் இருக்கணும்னு தோனுது. ப்ளீஸ் கொஞ்சம் தேடிப் பார்க்கலாமா?" என்று அவர்களுடன் யுகன் பேசிக் கொண்டே சற்று நகர்ந்து செல்ல,
தமிழ்வாணன் வண்டி அருகில் சென்று தான் வைத்த பையை எடுத்துப் பார்க்க கைபேசிகள் இருந்தன.
"யுகன் இங்க பாரு" என்று கூறியபடி வந்தார்.
"என்னப்பா?"
"இந்த பேக்ல ஃபோன் இருக்கு. அதுல இது பொண்ணுங்க யூஸ் பண்ற ஃபோன் கவர் மாதிரியே இருக்கு பாரு" என்று ஒன்றை எடுத்து நீட்ட ஆதினி அங்கே இருப்பது உறுதி ஆகிவிட்டது.
"ஆதினி.. ஆதினி.. எங்க இருக்க?" என்று இவன் அழைத்துக் கொண்டே முன்னேற அங்கிருந்தவர்களும் ஒவ்வொரு பக்கமும் தேட ஆரம்பித்தனர்.
அடித்துப் பெய்த மழையால் மின்சாரம் வேறு தடைப்பட்டிருந்தது.
"ஆதினி.. ஆதினி" என்று அழைத்தபடியே தேடத் துவங்கினர்.
விபத்து நடந்த இடத்தில் இருந்து சற்றுத் தொலைவு வரை நடந்து சென்ற யுகனின் கண்களில் வீதி ஓரமாக இருந்த பெரிய மரம் ஒன்று கண்ணில் படவே ஏதோ உள்ளுணர்வின் உந்துதலால் அங்கே விரைந்தான்.
மூச்சிறைக்க ஓடிச் சென்று மரத்தைச் சுற்றிப் பார்க்க, மரத்தின் பின்புறம் அமர்ந்து இலக்கில்லாமல் வெறித்துக் கொண்டிருந்தாள் ஆதினி.
மழையில் நனைந்தபடி பிரம்மை பிடித்தவள் போன்று அவள் அமர்ந்திருந்த தோற்றமே அவன் மனதைக் கலங்க வைத்தது.
"ஆதினி.. ஆதினி இங்க பாரு. இங்க பாரு ஆதினி" அருகே சென்று தோள்களில் தட்டி அழைத்தும் அவளிடம் எந்த எதிர்வினையும் இல்லை.
"ஏய்.. ஆதினி இங்க பாரு யுகன் வந்திருக்கேன். இங்க பாருடா. ஏதாவது பேசு" என்று வலுக்கட்டாயமாக அவளைப் பிடித்துத் தூக்கி நிறுத்த சுற்றம் உணர்ந்தவள் பெருங்குரல் எடுத்து அழ ஆரம்பித்தாள்.
"வண்டி ஆக்ஸிடெண்ட்.. அவங்க எல்லாம் எங்க? எனக்கு பயமா இருக்கு"
அண்ணா, அம்மா, அப்பா எல்லாரும் வந்திருந்தாங்க. நீங்க அவங்களப் பார்த்தீங்களா? அவங்களுக்கு ஒன்னும் இல்லைல்ல. எனக்கு பயமா இருக்கு" என்று கூறி முடிய அவன் பதில் கூற நேரம் கொடுக்காமலே மயங்கி அவன் கைகளில் விழுந்தாள்.
"ஆதினி ஏய் என்னாச்சு?"
என்றவனுக்கு அவள் மயங்கி இருப்பது புரிய கைகளில் ஏந்திக் கொண்டு வீதிக்கு வந்தான். தூரத்தில் இருந்து அவனைக் கவனித்தவர்களும் ஓடி வந்து விட்டார்கள்.
"என்னாச்சு யுகன்? இவ எங்க இருந்தா?" என்று அவனது தந்தையும்
"இவங்களுக்கு ஒன்னும் இல்லைல்ல" என்று அங்கிருந்தவர்களும் மாறி மாறிக் கேட்க,
"அந்த மரத்துக்குப் பின்னாடி பிரம்ம பிடிச்ச மாதிரி உட்கார்ந்து இருந்தா. நான் பேசவும் ஆக்ஸிடெண்ட்னு சொல்லிப் பயந்து அழுதவ மயங்கிட்டா" என்று பதில் கூறிக் கொண்டே விரைந்து வண்டியை அடைந்தான்.
"புள்ள மழைல நனைஞ்சும் இருக்கு. சீக்கிரம் ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டுப் போங்க சார்" என்றார்கள் அங்கிருந்தவர்கள்.
அவளைப் பின் இருக்கையில் கிடத்தி விட்டு ஓட்டுனர் இருக்கைக்கு வந்தான்.
தமிழ்வாணனும் வந்து ஏறிக் கொள்ள மருத்துவமனையை நோக்கி வண்டி விரைந்தது.
அரசு மருத்துவமனையில் கட்டண அறைப் பகுதியில் ஒரு தனி அறையில் ஆதினியை அனுமதிக்க முதலுதவி அளிக்கப்பட்டது. மயக்கம் தெளிந்து எழுந்தவளிடம் ஏதேதோ பொய்கள் கூறி மறுபடியும் தூங்க வைத்துவிட்டார்கள்.
இரவு பன்னிரண்டு மணியளவில் மருத்துவமனையில் இருந்த தன் தந்தையை வீட்டிற்கு அனுப்பி வைத்தான் யுகன்.
காலையில் கண் விழித்து எழுந்தவுடன் தன் பெற்றோரையும் தமையனையும் தான் கேட்டாள் அவள்.
"அவங்க வேற வார்டுல இருக்காங்கம்மா நீ போய் ஃப்ரஷ்ஷாகிட்டு வா. ஏதாவது சாப்டணும்ல"
"இல்ல ஆண்ட்டி எனக்கு அம்மா, அப்பாவ பார்க்கணும் கூட்டிட்டுப் போங்க பிளீஸ்"
குழந்தை போல கெஞ்சிக் கேட்டுக் கொண்டிருந்தவளை சமாளிக்க முடியாமல் திணறிப் போனார் சரண்யா.
"யுகன் வந்ததும் டாக்டர் கிட்ட கேட்டுட்டு நாம போகலாம்டா. நீ முதல்ல சாப்பிட வா. உடம்புல அங்க இங்க சிராய்ப்பு இருக்கு, அதுக்கு டேப்லெட் கொடுத்திருக்காங்க. சாப்பிட்டா தான் அதைக் குடிக்கலாம்" என்று கூறி அவளை குளியலறைக்குள் அனுப்பி வைத்தார்.
தமிழ்வாணனுடன் காலையில் வந்த சரண்யாவிடம் ஆதினியைப் பொறுப்புக் கொடுத்து விட்டு, தந்தையும் மகனும் உடல்களை பொறுப்பெடுப்பதற்கான வேலையில் இறங்கி விட்டார்கள்.
விபத்து குறித்த விசாரணைகள், அதற்கான அலுவல்கள் முடிந்து உடல்கள் இவர்களின் கைக்கு வரும் நேரத்தில் சரியாக அவர்கள் குடி இருந்த வீட்டு உரிமையாளர் வந்து சேர்ந்தார்.
"இங்க பாருங்க சார். இவங்க வாடகைக்கு இருந்தாங்கன்னு அங்கயே உடல்கள வைக்கணுமா? ஏன் கேட்குறேன்னா எங்க அம்மா, அப்பா அந்தக் காலத்து ஆட்கள். உடல அந்த வீட்டுக்கு கொண்டு வர விடாதன்னு ஒரேடியாக சொல்றாங்க அதான் என்ன பண்றதுன்னு தெரியல"
தயங்கியபடி கூறி முடித்தார்.
"இல்லை.. பரவாயில்லை சார், நாங்க எங்க வீட்டுக்கு எடுத்துட்டு போறோம். ஒன்னும் ப்ராப்ளம் இல்லை. எங்களுக்கு உங்க நிலமை புரியுது. பெரியவங்க சொல்றாங்க நீங்களும் அவங்கள மீறி எதுவும் செய்ய முடியாதில்லையா? இவங்கள தெரிஞ்சவங்க, உறவுக்காரங்க யாராவது கேட்டா எங்க நம்பர கொடுங்க" என்று அலைபேசி எண்களை அவரிடம் கொடுத்தார் தமிழ்வாணன்.
"என் நிலமைய புரிஞ்சுக்கிட்டதுக்கு ரொம்ப நன்றி சார்" என்று கூறி விட்டு அவர்களுடனே இருந்து கொண்டார் அவர்.
"நீங்க இங்கயே இருங்கப்பா, நான் போய் ஆதினியையும் அம்மாவையும் கூட்டிட்டு வர்றேன்" என்று விட்டு அவள் இருந்த அறையை நோக்கி நகர்ந்தவனுக்கு
அவளிடம் என்னவென்று கூறி சமாளிப்பது என்ற சிந்தனையே மனதில்.
கதவை மெதுவாகத் தட்ட சரண்யா தான் வந்து திறந்தார்.
"என்னாச்சு யுகன்?" என்றவருக்குப் பதில் கூற முன்,
"நான் அப்பா, அம்மாவ பார்க்கணும் என்னை கூட்டிட்டு போங்க ப்ளீஸ்" என்றபடி அவன் அருகில் வந்தாள் ஆதினி.
"அது வந்து ஆதினி.." என்றவனுக்கு வார்த்தைகள் வெளியே வருவேனா என்று சண்டித்தனம் செய்தன.
"என்ன? என்னாச்சு? அவங்களுக்கு ஒன்னும் இல்லைல்ல? நீங்க என்ன சொல்ல வந்தீங்க? ஆண்ட்டி என்னன்னு சொல்ல சொல்லுங்க எனக்கு பயமா இருக்கு" என்று அவள் அடுக்கிக் கொண்டே போக திணறிப் போனார்கள் தாயும் மகனும்.
அலுவலகத்தில் இருந்து வந்து குளித்து இலகுவான உடை ஒன்றை மாற்றிக் கொண்டு கீழே செல்ல எத்தனித்த யுகனைத் தடுத்தது அலைபேசி ஒலி.
"ஹலோ சொல்லு மச்சான்" என்றவனுக்கு
எதிர்ப்புறத்தில் இருந்து பதிலாக வந்த செய்தியில் திகைத்து நின்றவன் சில வினாடிகளின் பின்னர் தான் சுயம் பெற்றான்.
படபடக்கும் இதயத்துடன் தடதடவென அவன் படிகளில் இறங்க ஏன் இந்த அவசரம் எனும் விதமாகப் பார்த்துக் கொண்டு நின்ற தன் தாயிடம்
"ஆதித்யாவுக்கு ஆக்.. ஆக்ஸிடெண்ட் ம்மா. இப்போ தான் கால் வந்தது. நான் போய் பார்த்துட்டு வர்றேன்" என்றான்.
"என்னடா சொல்ற? எங்க வெச்சி ஆக்ஸிடெண்ட் ஆகியிருக்காம்?"
"அவன் ஆதினிய கூட்டிட்டு வரப் போய் இருந்தான் ம்மா வரும் போது தான் ஆக்ஸிடெண்ட் ஆகி இருக்கும். லொகேஷன் அனுப்புறேன்னு சொன்னாங்க, நான் போய் என்னன்னு பார்த்து கால் பண்றேன்"
"இரு யுகா நானும் வர்றேன்" என்று விட்டு எழுந்து சென்று மேல் சட்டையைப் போட்டுக் கொண்டு அவனுடன் சேர்ந்து கொண்டார் அவனின் தந்தை தமிழ்வாணன்.
தமிழ்வாணன் தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றுகிறார். அவர் மனைவி சரண்யா தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியர்.
அவர்களுக்கு இரண்டு பிள்ளைகள். மூத்தவள் யுவஸ்ரீ. அதே ஊரில் திருமணம் முடித்துக் கொடுத்திருந்தார்கள்.
இளையவன் யுகன்.
வெளிநாட்டில் எம். பீ. ஏ படித்து விட்டு வந்து சொந்தமாக தொழில் ஆரம்பித்து செய்து கொண்டிருக்கிறான்.
யுவனுடன் கல்லூரியில் படித்தவன் தான் ஆதித்யா. நடுத்தர வர்க்கத்தினர் தான் என்றாலும் யுகனின் நெருங்கிய நண்பன்.
மழை சற்றே தணிந்திருந்தாலும் வண்டியை வேகமாக செலுத்தும் அளவுக்கு இல்லை.
நண்பனுக்கு என்ன ஆனதோ? என்ற பதற்றம் இருந்தாலும் நிதானமா வண்டியைக் கையாண்டு வர வேண்டிய இடத்திற்கு வந்து சேர அப்போது தான் அவசர ஊர்தியும் வந்திருந்தது.
யுவன் தன் வண்டியை ஓரமாக நிறுத்தி விட்டு இறங்கி வேகமா ஓடினான்.
சேர்ந்திருந்த பத்துப் பதினைந்து நபர்களை விலக்கிக் கொண்டு முன்னே சென்றான்.
ஆதித்யா அவனது தந்தை, தாய் என மூன்று பேரின் உயிரற்ற உடல்கள் தான் அவசர ஊர்தியில் ஏற்றப்பட்டு இருந்தன.
அவர்களின் உடல்களைப் பார்த்த நொடி "ஆதீஈஈ" என்று அதிர்ந்து கத்த,
"சார் நீங்க யாரு?" அங்கு வந்திருந்த காவல்துறை அதிகாரி தான் கேட்டார்.
"நான் இவனோட ஃப்ரெண்ட், யுகன். இங்க யாரோ தான் இவன் ஃபோன்ல இருந்து எனக்கு கால் பண்ணி இருந்தாங்க" அழுகையை விழுங்கிய குரலில் கூறினான். ஆதித்யா மட்டும் சென்ற பயணம் என்று எண்ணியிருக்க அவனது பெற்றோரும் சேர்ந்து சென்று விபத்தில் இறந்தது அதிர்ச்சியையும் கவலையையும் அளித்தது.
"நான் தான் சார் கால் பண்ணேன். அவங்க ஃபோன்ல எமர்ஜென்சி கான்டாக்ட்ல உங்க நம்பர் இருந்தது"
கல்லூரி மாணவன் என்று பார்த்தவுடன் கணிக்கக் கூடிய தோற்றத்தில் இருந்த ஒருவன் சொல்லிக் கொண்டு யுவன் அருகில் வர தமிழ்வாணனும் வந்து விட்டார்.
"எங்க அப்பாவோட கடை தான் அது. காலேஜ் விட்டு வந்து நைட் கடை மூடும் வர இங்க தான் இருப்பேன். இன்னைக்கு மழைல பிசினஸ் அவ்வளவா இல்லைன்னு கடைய மூடலாம்னு பேசிட்டு இருக்கும் போது தான் ஆக்ஸிடெண்ட் ஆச்சு" அவன் தான் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தான்.
"எப்பிடிப்பா ஆக்ஸிடெண்ட்டாச்சு? நீ பார்த்தியா?" தமிழ்வாணன் கேட்டார்.
"ஆமாங்க சார். கடை வாசல்ல சேர் போட்டு உட்கார்ந்து ரோட்டுல போற வர்ற வண்டிகள தான் வேடிக்கை பார்த்துட்டு இருந்தேன்.
கொஞ்சம் வேகமாத் தான் அந்த கார் வந்துச்சு, ப்ரேக் பிடிக்கல்ல போல சார், திடீர்ன்னு அந்த மரத்துல மோதிடுச்சு" என்று அவன் கூற
"இவன் ஸ்பீடா தான் வண்டி ஓட்டுவான் எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டானே ப்பா" என்றான் யுகன்.
"மோதின வேகத்துல தலை, நெஞ்சுன்னு அடிபட்டிருக்கும் போல சார். அந்த அம்மாவுக்கு உயிர் இருந்தது. முதல்ல அவங்கள தான் வெளிய எடுத்தோம் ஆனா உடனே இறந்துட்டாங்க.
அப்புறம் முன்னாடி இருந்தவங்க டெட் பாடிய தான் ரொம்ப கஷ்டப்பட்டு வெளிய எடுத்தோம்"
அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே அவசர ஊர்தியும் கிளம்பியது.
விபத்துக்குள்ளான வண்டியில் இருந்த கைபேசிகள் மற்றும் இதர பொருட்களை ஒரு பையில் போட்டுக் கொடுக்க அவற்றை தமிழ்வாணன் வாங்கி தங்கள் வண்டியில் வைத்துக் கொண்டார். முழுமையாக உடைந்து தான் இருந்தன அவை.
அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு தான் உடல்கள் கொண்டு செல்லப்படுகின்றன என்று கேட்டுத் தெரிந்து கொண்டு அதைத் தொடர்ந்து செல்லவென வண்டியில் ஏறியவனுக்கு தான் சட்டென்று ஆதினியின் நினைவு வந்தது.
"அப்பா, ஆதினிய கூட்டிட்டு வரத் தான் ஆதித்யா போறேன்னு சொன்னான். அப்போ அவ எங்க?" யோசனையுடன் கேட்டு விட்டு மீண்டும் அந்தக் கடை அருகே ஓடினான்.
கூடி இருந்தவர்கள் அங்கே தான் நின்று பேசிக் கொண்டிருந்தார்கள்.
"அந்த வண்டில மூனு பேர் தான் இருந்தாங்களா?" பொதுவாக அவர்களைப் பார்த்து கேட்க,
"ஆமா, ஏன் கேட்கிறீங்க?"
"இல்ல அவங்க பொண்ணு வெளியூர்ல காலேஜ்ல படிக்கிறா அவளக் கூட்டிட்டு வரத் தான் போனாங்க" யோசனையாகக் கூறிக் கொண்டே அந்த இடத்தை சுற்றி கண்களை சுழற்றினான்.
"அவ இங்க தான் இருக்கணும்னு தோனுது. ப்ளீஸ் கொஞ்சம் தேடிப் பார்க்கலாமா?" என்று அவர்களுடன் யுகன் பேசிக் கொண்டே சற்று நகர்ந்து செல்ல,
தமிழ்வாணன் வண்டி அருகில் சென்று தான் வைத்த பையை எடுத்துப் பார்க்க கைபேசிகள் இருந்தன.
"யுகன் இங்க பாரு" என்று கூறியபடி வந்தார்.
"என்னப்பா?"
"இந்த பேக்ல ஃபோன் இருக்கு. அதுல இது பொண்ணுங்க யூஸ் பண்ற ஃபோன் கவர் மாதிரியே இருக்கு பாரு" என்று ஒன்றை எடுத்து நீட்ட ஆதினி அங்கே இருப்பது உறுதி ஆகிவிட்டது.
"ஆதினி.. ஆதினி.. எங்க இருக்க?" என்று இவன் அழைத்துக் கொண்டே முன்னேற அங்கிருந்தவர்களும் ஒவ்வொரு பக்கமும் தேட ஆரம்பித்தனர்.
அடித்துப் பெய்த மழையால் மின்சாரம் வேறு தடைப்பட்டிருந்தது.
"ஆதினி.. ஆதினி" என்று அழைத்தபடியே தேடத் துவங்கினர்.
விபத்து நடந்த இடத்தில் இருந்து சற்றுத் தொலைவு வரை நடந்து சென்ற யுகனின் கண்களில் வீதி ஓரமாக இருந்த பெரிய மரம் ஒன்று கண்ணில் படவே ஏதோ உள்ளுணர்வின் உந்துதலால் அங்கே விரைந்தான்.
மூச்சிறைக்க ஓடிச் சென்று மரத்தைச் சுற்றிப் பார்க்க, மரத்தின் பின்புறம் அமர்ந்து இலக்கில்லாமல் வெறித்துக் கொண்டிருந்தாள் ஆதினி.
மழையில் நனைந்தபடி பிரம்மை பிடித்தவள் போன்று அவள் அமர்ந்திருந்த தோற்றமே அவன் மனதைக் கலங்க வைத்தது.
"ஆதினி.. ஆதினி இங்க பாரு. இங்க பாரு ஆதினி" அருகே சென்று தோள்களில் தட்டி அழைத்தும் அவளிடம் எந்த எதிர்வினையும் இல்லை.
"ஏய்.. ஆதினி இங்க பாரு யுகன் வந்திருக்கேன். இங்க பாருடா. ஏதாவது பேசு" என்று வலுக்கட்டாயமாக அவளைப் பிடித்துத் தூக்கி நிறுத்த சுற்றம் உணர்ந்தவள் பெருங்குரல் எடுத்து அழ ஆரம்பித்தாள்.
"வண்டி ஆக்ஸிடெண்ட்.. அவங்க எல்லாம் எங்க? எனக்கு பயமா இருக்கு"
அண்ணா, அம்மா, அப்பா எல்லாரும் வந்திருந்தாங்க. நீங்க அவங்களப் பார்த்தீங்களா? அவங்களுக்கு ஒன்னும் இல்லைல்ல. எனக்கு பயமா இருக்கு" என்று கூறி முடிய அவன் பதில் கூற நேரம் கொடுக்காமலே மயங்கி அவன் கைகளில் விழுந்தாள்.
"ஆதினி ஏய் என்னாச்சு?"
என்றவனுக்கு அவள் மயங்கி இருப்பது புரிய கைகளில் ஏந்திக் கொண்டு வீதிக்கு வந்தான். தூரத்தில் இருந்து அவனைக் கவனித்தவர்களும் ஓடி வந்து விட்டார்கள்.
"என்னாச்சு யுகன்? இவ எங்க இருந்தா?" என்று அவனது தந்தையும்
"இவங்களுக்கு ஒன்னும் இல்லைல்ல" என்று அங்கிருந்தவர்களும் மாறி மாறிக் கேட்க,
"அந்த மரத்துக்குப் பின்னாடி பிரம்ம பிடிச்ச மாதிரி உட்கார்ந்து இருந்தா. நான் பேசவும் ஆக்ஸிடெண்ட்னு சொல்லிப் பயந்து அழுதவ மயங்கிட்டா" என்று பதில் கூறிக் கொண்டே விரைந்து வண்டியை அடைந்தான்.
"புள்ள மழைல நனைஞ்சும் இருக்கு. சீக்கிரம் ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டுப் போங்க சார்" என்றார்கள் அங்கிருந்தவர்கள்.
அவளைப் பின் இருக்கையில் கிடத்தி விட்டு ஓட்டுனர் இருக்கைக்கு வந்தான்.
தமிழ்வாணனும் வந்து ஏறிக் கொள்ள மருத்துவமனையை நோக்கி வண்டி விரைந்தது.
அரசு மருத்துவமனையில் கட்டண அறைப் பகுதியில் ஒரு தனி அறையில் ஆதினியை அனுமதிக்க முதலுதவி அளிக்கப்பட்டது. மயக்கம் தெளிந்து எழுந்தவளிடம் ஏதேதோ பொய்கள் கூறி மறுபடியும் தூங்க வைத்துவிட்டார்கள்.
இரவு பன்னிரண்டு மணியளவில் மருத்துவமனையில் இருந்த தன் தந்தையை வீட்டிற்கு அனுப்பி வைத்தான் யுகன்.
காலையில் கண் விழித்து எழுந்தவுடன் தன் பெற்றோரையும் தமையனையும் தான் கேட்டாள் அவள்.
"அவங்க வேற வார்டுல இருக்காங்கம்மா நீ போய் ஃப்ரஷ்ஷாகிட்டு வா. ஏதாவது சாப்டணும்ல"
"இல்ல ஆண்ட்டி எனக்கு அம்மா, அப்பாவ பார்க்கணும் கூட்டிட்டுப் போங்க பிளீஸ்"
குழந்தை போல கெஞ்சிக் கேட்டுக் கொண்டிருந்தவளை சமாளிக்க முடியாமல் திணறிப் போனார் சரண்யா.
"யுகன் வந்ததும் டாக்டர் கிட்ட கேட்டுட்டு நாம போகலாம்டா. நீ முதல்ல சாப்பிட வா. உடம்புல அங்க இங்க சிராய்ப்பு இருக்கு, அதுக்கு டேப்லெட் கொடுத்திருக்காங்க. சாப்பிட்டா தான் அதைக் குடிக்கலாம்" என்று கூறி அவளை குளியலறைக்குள் அனுப்பி வைத்தார்.
தமிழ்வாணனுடன் காலையில் வந்த சரண்யாவிடம் ஆதினியைப் பொறுப்புக் கொடுத்து விட்டு, தந்தையும் மகனும் உடல்களை பொறுப்பெடுப்பதற்கான வேலையில் இறங்கி விட்டார்கள்.
விபத்து குறித்த விசாரணைகள், அதற்கான அலுவல்கள் முடிந்து உடல்கள் இவர்களின் கைக்கு வரும் நேரத்தில் சரியாக அவர்கள் குடி இருந்த வீட்டு உரிமையாளர் வந்து சேர்ந்தார்.
"இங்க பாருங்க சார். இவங்க வாடகைக்கு இருந்தாங்கன்னு அங்கயே உடல்கள வைக்கணுமா? ஏன் கேட்குறேன்னா எங்க அம்மா, அப்பா அந்தக் காலத்து ஆட்கள். உடல அந்த வீட்டுக்கு கொண்டு வர விடாதன்னு ஒரேடியாக சொல்றாங்க அதான் என்ன பண்றதுன்னு தெரியல"
தயங்கியபடி கூறி முடித்தார்.
"இல்லை.. பரவாயில்லை சார், நாங்க எங்க வீட்டுக்கு எடுத்துட்டு போறோம். ஒன்னும் ப்ராப்ளம் இல்லை. எங்களுக்கு உங்க நிலமை புரியுது. பெரியவங்க சொல்றாங்க நீங்களும் அவங்கள மீறி எதுவும் செய்ய முடியாதில்லையா? இவங்கள தெரிஞ்சவங்க, உறவுக்காரங்க யாராவது கேட்டா எங்க நம்பர கொடுங்க" என்று அலைபேசி எண்களை அவரிடம் கொடுத்தார் தமிழ்வாணன்.
"என் நிலமைய புரிஞ்சுக்கிட்டதுக்கு ரொம்ப நன்றி சார்" என்று கூறி விட்டு அவர்களுடனே இருந்து கொண்டார் அவர்.
"நீங்க இங்கயே இருங்கப்பா, நான் போய் ஆதினியையும் அம்மாவையும் கூட்டிட்டு வர்றேன்" என்று விட்டு அவள் இருந்த அறையை நோக்கி நகர்ந்தவனுக்கு
அவளிடம் என்னவென்று கூறி சமாளிப்பது என்ற சிந்தனையே மனதில்.
கதவை மெதுவாகத் தட்ட சரண்யா தான் வந்து திறந்தார்.
"என்னாச்சு யுகன்?" என்றவருக்குப் பதில் கூற முன்,
"நான் அப்பா, அம்மாவ பார்க்கணும் என்னை கூட்டிட்டு போங்க ப்ளீஸ்" என்றபடி அவன் அருகில் வந்தாள் ஆதினி.
"அது வந்து ஆதினி.." என்றவனுக்கு வார்த்தைகள் வெளியே வருவேனா என்று சண்டித்தனம் செய்தன.
"என்ன? என்னாச்சு? அவங்களுக்கு ஒன்னும் இல்லைல்ல? நீங்க என்ன சொல்ல வந்தீங்க? ஆண்ட்டி என்னன்னு சொல்ல சொல்லுங்க எனக்கு பயமா இருக்கு" என்று அவள் அடுக்கிக் கொண்டே போக திணறிப் போனார்கள் தாயும் மகனும்.