S. Sivagnanalakshmi
Well-known member
உனக்கென மட்டும் வாழும் இதயம்(டா) டி கதை அருமை. காதல் நட்பு பழிவாங்கல் பாசம் பொறாமை கொலை செய்ய துடிக்கும் அப்பா பைத்தியம்மான குடும்பம் சஸ்பென்ஸ் அனைத்து கலந்து விறுவிறுப்பாக போகுது கதை. ஷ்ராவனி தன்னை அப்பா கொல்ல வரும் போது தன்னை காப்பற்றியவனை காதலிக்க ஆரம்பிக்கிறாள். சஞ்சீவ் இவன் வேற ஓருவளை காதலிக்கிறான். அம்மா சொல்லுக்கு கல்யாணம் செய்கிறான் அதனால் அவளை கொடுமை படுத்துகிறான் அரக்கன் வடிவில் அதையும் பொருத்து போகிறாள் காதலுக்காக. சித்தார்த் மிஹா அரு பாட்டி ஷ்ராவனி இவர்களே நல்லவர்கள். மற்றவர்கள் மனம் மாறி மாறி கெட்டவர்கள். சஞ்சீவ் ஷ்ராவனி பிரச்சினை மாட்டும் போது புரிந்து அவளை விரும்ப ஆரம்பிக்கிறது பின்னர் சூழ்நிலை காரணமாக அவளை தொரத்தி விடுவது பின்னர் அவள் ரொம்ப கஷ்டத்தை அனுபவித்து சுகமாக இருக்கும் போது சஞ்சீவ் வந்து காதலிக்கிறேன். என்கிறது அப்பா கொல்லவரும் போது அவரை காப்பாற்ற போய் இவன் விழுவதும் பின்னர் வருவதும் அவனுடைய காதலை உணர்த்துவதும் சூப்பர். வசு சைலஜா சஞ்சனா இவர்கள் வில்லிகள். சம்யுக்தா யுவராஜ் அபி சூப்பர். சங்கர் தாத்தா சூப்பர். துன்பபட்டு பின்னர் அவளுக்கு விடியல் வருகிறது சூப்பர் சகி. வாழ்த்துக்கள் ஷாபனா சகி. வாழ்க வளமுடன்.