பெண்ணே!
சொல்லால்
செயலால் உணர்ந்திடுவாய்
நீ அக்னிச் சிறகென்று!
பாரதியின் புதுமை பெண்ணாய்
சிறகை விரித்து உலகை அளந்திடுவாய்
கயவர் உன்னை காணும் நேரம்
உன் தீ விழி பார்வை ஒன்றே போதும்
உன் தீ விழி வேள்வியால் பொசுங்க
உலகம் காட்டும் பாதையை
உன் வழியாக்காமல்,
உன் வழி இப்பார் பின்பற்ற
உனக்கென தனி வழி வகுத்திடுவாய்!
ஒரு நிமிடம் தீ பிளம்பாய்,
மறுநிமிடம் நிலவின் குளிராய்,
மாறும் விந்தையானவளே!
தீயும் அவளே!
குளிரும் அவளே!
பெண்......
சொல்லால்
செயலால் உணர்ந்திடுவாய்
நீ அக்னிச் சிறகென்று!
பாரதியின் புதுமை பெண்ணாய்
சிறகை விரித்து உலகை அளந்திடுவாய்
கயவர் உன்னை காணும் நேரம்
உன் தீ விழி பார்வை ஒன்றே போதும்
உன் தீ விழி வேள்வியால் பொசுங்க
உலகம் காட்டும் பாதையை
உன் வழியாக்காமல்,
உன் வழி இப்பார் பின்பற்ற
உனக்கென தனி வழி வகுத்திடுவாய்!
ஒரு நிமிடம் தீ பிளம்பாய்,
மறுநிமிடம் நிலவின் குளிராய்,
மாறும் விந்தையானவளே!
தீயும் அவளே!
குளிரும் அவளே!
பெண்......