அத்தியாயம் 1
ஓம் பூர் : புவ: ஸுவ: தத் சவிதுர்:
வரேண்யம் பர்கோ தேவஸ்ய
தீமஹி தியோ: யோந:
ப்ரசோதயாத்..!
என்ற காயத்ரி மந்திரத்தை, சூரிய பகவானை நோக்கி உச்சாடனம் செய்து தனது காலை சந்தியா வந்தனத்தை
சிரத்தையாக முடித்த விஷ்ணு நாராயண், அதனைத் தொடர்ந்து எதிரிகளை வலுவிழக்கச் செய்யும் ஆதித்ய ஹ்ருதயம் ஸ்லோகத்தையும்
தெளிவாக உச்சரித்துக்கொண்டே, தோளில் இருந்த பூணூலை சரி செய்தபடி மாடித்தோட்டம்
போடப்பட்டிருந்த பெரிய பால்கனியில் இருந்து, கூடத்திற்கு நுழைய எத்தனிக்கும் போது, ஆதவனின் கிரணங்கள் ஆறடியில் உருண்டு திரண்டிருந்த அவனது வெண்மை நிற வெற்று மார்பின் செம்மை நிற தோள்களில்
'சமாஸ்ரயணம்'(பெருமாள் கைகளில் இருக்கும் சங்கு, சக்கர வடிவத்தை போல், சிறிய வெள்ளியிலான அச்சினை நெருப்பு தணலில் காட்டி, உபநயனத்திற்கு (முதல் முதலில் பூணூல் அணிவித்ததும்) பிறகு சங்கை ஒரு தோளிலும், சக்கரத்தை மறு தோளிலும் பதிப்பார் ஆச்சாரியன் என்றழைக்கப்படும் வைணவ குருமார்) செய்யப்பட்டிருந்த, சங்கு சக்கர முத்திரையின் மீது படிந்து ஜொலிக்க, கூடத்திற்கு வந்த மைந்தனிடம் எப்பொழுதும் போல் வேதவல்லி,
" விஷ்ணு, சந்தியா வந்தனம் ஆச்சா,
டேபிள் மேல தளிகை(சமையல்) பண்ணி வச்சிருக்கேன், சாப்ட்டுட்டு
ஆபிசுக்கு கிளம்பு ..." என்று உத்தரவு பிறப்பித்த படி தன்னுடைய
காலை நேர ஆசார அனுஷ்டான பூஜைகள் முடிந்ததால் , மடிசார் உடுத்தியிருந்தவர்
உடைமாற்ற தன் அறைக்குள் நுழைய, அவரது பேச்சைக் காதில் வாங்கியபடி மைந்தனும் தன் அறைக்கு சென்று அலுவலக உடைக்கு மாறினான்.
விஷ்ணு நாராயண், அசிஸ்டன்ட் சென்ட்ரல் இன்டலிஜென்ஸ் அதிகாரியாக (Assistant Central Intelligence Officer (ACIO) grade I) , (இன்டலிஜென்ஸ் பீயூரோவில் Intelligence Bureau -IB ) இந்திய உள்நாட்டு உளவு பிரிவில் பணியாற்றுகிறான்.
மும்பை பெருநகரம் செம்பூரில், 22 அடுக்கு மாடிகளைக் கொண்ட
'கோல்டன் நெஸ்ட் ' என்ற வசதி படைத்தவர்கள் வசிக்கும் குடியிருப்பில் 15வது தளத்தில்
' வேதா நிவாஸ் ' என்ற பெயர் கொண்ட பெண்ட் ஹவுஸில் (pent house - தனி வீடு போல், கீழ்த்தளம், மேல்தளம் என இரு தளங்களை கொண்ட வீடு) வசிக்கிறான்.
ஃபார்மல் ஷர்ட் மற்றும் பேண்ட்டில் கம்பீரமாக காட்சியளித்தவனுக்கு, மடிசாரிலிருந்து சுடிதாருக்கு மாறியிருந்த தாய் வேதவல்லி, காலை உணவினை பரிமாறிய படி,
" எப்படா விஷ்ணு கல்யாணம் பண்ணிப்ப.." என்றார் வழக்கம் போல் .
திருமணத்தை தட்டிக்கழிக்க மைந்தன் கூறும் புது புது காரணங்களை சுவாரஸ்யத்துடன் கேட்பதற்கும், அவனது மன உணர்வுகளை புரிந்து கொள்வதற்காகவும் இந்தக் கேள்வியை வேதவல்லி அடிக்கடி விஷ்ணுவிடம் கேட்பதுண்டு.
" எவன் பொண்ணு கொடுக்கிறான் ... உங்க ஆளுங்க கிட்ட பொண்ணு கேட்டா , எடுத்த எடுப்புல வடகலையா தென்கலையான்னு கேட்கறான்...
கடைசில நான் முருங்க கிளைன்னு சொல்ல வேண்டியதாயிடுச்சு...." என்று புன்னகையோடு சமாளித்தவனின் மனதில் நிழல் ஓவியமாய்
தன் மனதிற்கினியவளுடன் மாலை மாற்றிய காட்சி வந்து போக, அதே நிகழ்வை மனதில் நினைத்தபடி , மைந்தனின் முக உணர்வை படிக்க முயன்ற தாயிடம், சடுதியில் முகபாவத்தை மறைத்திருந்தான் மைந்தன் .
" சரி.... என் ஆளுங்கதான் பொண்ணு கொடுக்க மாட்டேன்னு ட்டா ... உன் ஆளுங்கயிண்ட பொண்ணு கேட்க வேண்டியதுதானே .."
" என் ஆளுங்க யாரு இங்க இருக்கா .."
என்றான் அவனது அடர்ந்த மீசையை முறுக்கியபடி.
" ஏன்டா, நீ ஆள் பாக்க ஜம்முனு கம்பீரமா ஹாலிவுட் ஹீரோ மாதிரி இருக்க... அட்லீஸ்ட் யாரையாவது லவ் பண்லாமோல்யோ... மராட்டி, குஜராத்தி, பெங்காலி, அஸ்ஸாமின்னு எவ்ளோ அழக அழகான பொண்ணுங்க எல்லாம் இருக்கா ..."
" நீங்க லாங்குவேஜ் தெரியாம, அவ கூட சண்டை போட முடியாம கஷ்டப்பட கூடாதுங்கிற நல்ல எண்ணத்துல தான் .." என்றான் குறும்பாக.
" பரவால்ல நான் ஹிந்தில, இல்ல இங்கிலீஷ்ல அவளிண்ட சண்டை பிடிச்சுப்பேன்...நீ அதை பத்தி வருத்தப்படாத... ச்சரியா ..." என்ற தாய் வேதாவை பார்த்து விஷமமாக சிரித்தபடி வாஷ் பேசினில் கை கழுவிக் கொண்டு கிளம்ப எத்தனித்தவனிடம்,
" விஷ்ணு, மும்பை ஃபோர்ட் கிட்ட ( Mumbai fort)சில நியூ கம்பெனிங்க கூட , ஸ்டாக் மார்க்கெட் மீட்டப் (stock market meetup) இருக்கு .. என் பிஏ(PA) இன்னைக்கு லீவு... சோ நான் தான்
நம்ம கம்பெனி சார்பா அட்ரஸ் பண்ண போறேன் ... நீயும் என் கூடவே வந்துடு, உன்னை உன் ஆபீஸ்ல ட்ராப் பண்ணிடறேன் .."
" இல்லம்மா நீங்க கிளம்புங்க .. எனக்கு இன்னைக்கு காட்கோபர்ல(Ghatkopar) ஒரு வேலை இருக்கு... நான் என்னோட அபிஷியல் கார்ல, கவர்மெண்ட் லோகோவோட போனா தான் , ஈஸியா மும்பை டிராபிக்ல பூந்து பூந்து போக முடியும்..." என்று கூறியபடி கிளம்பி கொண்டிருந்தவனை பார்த்து,
" டேய், சொன்னா கேட்கவே மாட்டியா டா ... எத்தனை தடவை சொல்றது இந்த வாட்சை (Watch)ஆத்துல வச்சிட்டு, வேற ஏதாவது நன்னா புது வாட்ச் வாங்கி கட்டிக்கோன்னு...ரொம்ப புராணா வா இருக்குடா...நன்னாவே இல்ல ..."
" அம்மா, ஐ அம் எமோஷனாலி அட்டாச்சிடு வித் திஸ் வாட்ச் ... இட் ஸ் வெரி லக்கிம்மா...இந்த வாட்ச் என் கையில இருக்கும் போதெல்லாம் என் தாத்தா என் கூடவே இருக்கிற மாதிரி ஒரு ஃபீல்(feel) .. தி ஓல்ட் எச்.எம்.டி(HMT) பைலட்(pilot) டிசைன் ... வெரி நைஸ் ...இல்ல ..." என்று தான் அணிந்திருந்த வாட்சை சிலாகித்தவனுக்கு தெரியாது,
அந்த வாட்ச் தான் நம் நாட்டை பெரும் தீவிரவாத தாக்குதலில் இருந்து காக்க உதவ போகிறதென்று.
" இது உன் லக்கி வாட்ச்....உன் தாத்தா தான் இதை கொடுத்தது ...அதெல்லாம் ஓகே ... ஆனா வாட்டர் ப்ரூப் இல்லயேடா ...ரொம்ப பழசு ...ஸ்ட்ராப்(Strap) மட்டும் அடிக்கடி மாத்துர....என்னிக்காவது ஒரு நாள் இது ஓடாம போச்சுன்னா என்ன பண்ணுவ ...."
" அப்ப பாத்துக்கலாம் மா..." என்று துள்ளிக் குதித்தபடி கார் சாவியை எடுத்துக்கொண்டு, வீட்டை விட்டு வெளியேற எத்தனித்தவனிடம்
" ஏய் நில்லு, பிஸ்டல(pistol) எதுக்காக எடுத்துண்ட.. " என்றார் அவனது பேண்ட் பாக்கெட்டை பார்த்து,
" கண்டுபிடிச்சிட்டீங்களா..." என்று சமாளிக்க முயன்றவனை பார்த்து,
" விஷ்ணு, நீ டெஸ்க் ஒர்க்கு (Desk work)தான பண்றேன்னு சொல்லி இருக்க ... பின்ன ஃபீல்ட் ஒர்க் (field work) பண்ற மாதிரி எதுக்கு பிஸ்டல்..."
" அம்மா உங்களுக்கே தெரியும், போலீஸ் மாதிரி எங்களுக்கு யூனிஃபார்ம் கிடையாது ...
தப்பு பண்றவனை அரெஸ்ட் பண்ற அதிகாரமும் கிடையாது ...
ஆனா நாங்க நினைச்சா, நாளைக்கு இந்தியாவோட தலைப்புச் செய்தியையே மாத்தலாம்...
நாங்க லோக்கல் போலீஸ், ஐபிஎஸ், ஐஏஎஸ்னு யாருக்கும் கட்டுப்பட வேண்டிய அவசியமில்லை ... ஹோம் மினிஸ்டிரிக்கு(உள்துறை) மட்டும் கட்டு பட்டா போதும் ... பெரிய அரசியல்வாதிங்க, அதிகாரிங்க, தீவிரவாதிங்கன்னு சந்தேகப்படுற அத்தனை பேரோட டெலிபோனிக் கான்வர்சேஷனையும் வயர் டேப்பிங்(Wire tapping - ஒட்டு கேட்டல்) பண்றோம் ...
போலீஸா இருந்தா, உள்நாட்டுல இருக்கிற கிரிமினல்ஸ் மற்றும் அரசியல்வாதிகளால மட்டும் தான் பிரச்சனை...
ஆனா நாங்க உள்நாடு வெளிநாடுன்னு பார்க்காம எல்லா இடத்திலிருந்தும்,
நம் நாட்டுக்கு எதிரா நடக்கிற இன்டலிஜென்ஸை(means Information) கலெக்ட் பண்ணி, டெரரிஸத்தை தடுக்கிறது, கவுண்ட்டர் டெரரிஸம் அட்டாக்(Counter terrorism attack - எதிர் தீவிரவாத தாக்குதல் ) நடத்திக்கிட்டு இருக்கோம்... அதுவும் உன் புள்ள நான் ஒரு இடம் விடாம கண்டம் விட்டு கண்டம் எல்லா இடத்துலயும் வம்பு இழுத்து வச்சிருக்கேன்.. அதனால எவன் என்னை எப்ப போடுவான்னு எனக்கே தெரியாது... அதனாலதான் இந்த சேஃப்டி ..."
" போடா நீயும் உன் வேலையும் ... போன்ல யாரோ பேசறதை ஒட்டுக் கேட்கறதும், உளவு பார்க்கறதும் ஒரு வேலையா டா..."
" அம்மா....நாட்டுல நடக்கிற பல தீவிரவாத செயல்களை, இப்படி ஒட்டு கேட்கிறதால தான் தடுக்க முடியுது...
உங்களுக்கு சொன்னா புரியாது ... நான் காஷ்மீர் பார்டர்ல இருந்து, மும்பைக்கு டிரான்ஸ்பர் ஆகி கிட்டதட்ட ஒரு வருஷம் தானே ஆகுது போகப் போக என்னோட வேலையை புரிஞ்சிப்பீங்க ..."
" என்னமோ போடா நினைச்சாலே பயமா இருக்கு ...
ஓகே தென்... சீ யூ இந்த ஈவினிங்..." என்று கார் சாவியை எடுத்துக்கொண்டு வேதா புறப்பட்டு செல்ல,
விஷ்ணு காட்கோபரை நோக்கி பயணமானான்.
வேதா கூறியது போல் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்பது மட்டும் இன்டெலிஜென்ஸ் அதிகாரிகளின் வேலை கிடையாது.
உள்நாடு மற்றும் வெளிநாட்டு முக்கிய பிரமுகர்களுக்கு 'விஐபி செக்யூரிட்டி' எனப்படும் பாதுகாப்பு வழங்குதல் ...
IBக்கு கிடைக்கும் தகவல்கள் சரியானதா என ஆராய்ந்து சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு வழங்குவதோடு, சம்பந்தப்பட்ட மற்ற இந்திய இன்டெலிஜென்ஸ் ஏஜென்சிகளான NIA, CBI,CID,DIA,NCB
ஆகியவற்றுக்கும் வழங்குதல்...
நம் நாட்டின் ராணுவ ரகசியங்கள்,
விண்வெளி ஆராய்ச்சி, ஏவுகணை செலுத்துதல், இந்தியாவில் தயாரிக்கப்படும் காப்புரிமை பெற்ற மருந்துகளை பற்றிய தகவல்கள் (கொரோனா), உள்நாட்டு முக்கிய அரசியல் விவகாரங்கள் ஆகியவை இந்தியாவிற்குள் மட்டுமல்ல( ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு) வெளிநாட்டிலும் கசியாமல் காப்பது ...
CIA (அமெரிக்கா) ISI(பாகிஸ்தான்) MOSSAD(இஸ்ரேல்) போன்ற இந்தியாவின் போட்டி நாடுகளில் இருக்கும் உளவுத்துறையில் இருந்து இந்தியாவிற்கு எதிராக தீட்டப்படும் ரகசியங்களை கைப்பற்றுதல் ...
நக்சலைட்கள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தால் , அது குறித்து அந்தந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு முன்கூட்டியே தெரிவித்து , பாதுகாப்பு பணியை பலப்படுத்துதல் ...
இந்திய விமான நிலையத்தில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவிலும் இவர்கள் பணியமர்த்தப்படுவர் ...
இவர்களது பணி காலம் முடிவதற்குள் மேலே குறிப்பிடப்பட்டுள்ள, கிட்டத்தட்ட அனைத்து பிரிவிலும் இவர்கள் பணியமர்த்தப்படுவர் .. இவர்களது பணி பெரும்பாலும் இடத்தையும் சூழ்நிலையையும் சார்ந்தது. (Region specific work)
இவர்களது பணி மிகவும் ரகசியமானது,
பெற்ற தாய், கட்டின மனைவி , குடும்ப உறுப்பினர்களிடம் கூட இவர்கள் தங்கள் பணிகளை குறித்த விவரங்களை விவாதிக்கக் கூடாது என்பது விதி.
****************************************
இடம் : காட்கோபர் காவல் நிலையம்
விஷ்ணு தன் அரசாங்க வாகனத்தை விட்டு இறங்கவும், அர்ஜுன் கிருஷ்ணா
அவனுடைய அரசாங்க வாகனத்தில், காட்கோபர் காவல் நிலையத்தை அடையவும் சரியாக இருந்தது.
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்துக்கொண்டே "ஜெய் ஹிந்த்" என்று கூறியபடி கைகுலுக்கிக் கொண்டனர்.
அர்ஜுன் கிருஷ்ணா(ஏ.கே என்றால் அனைவருக்கும் தெரியும்) ஸ்டேட் இன்டலிஜென்ஸ் டிபார்ட்மென்டில் (State Intelligence Department (SID) , எஸ்.பியாக(Superintendent of police) பணியாற்றுகிறான். அவன் மீண்டும் மும்பைக்கு மாற்றலாகி கிட்டத்தட்ட 4 மாதங்கள் ஆகிறது.
கடந்த 3 மாத காலமாக தான் , இருவரும் பரிச்சயம். அதுவும் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் சந்திக்க வேண்டிய சூழலில் ஏற்பட்ட நட்பு. தமிழ்நாட்டை சார்ந்தவர்கள் என்ற ஈர்ப்பே இருவரையும் சந்திக்கும் இடத்திலெல்லாம் பேச வைத்திருந்தது.
மும்பையில் அடுத்த ஆறேழு மாத காலத்திற்குள் ஏதோ பெரிய தீவிரவாத சம்பவம் நிகழ போவதாக,
தகவல் கிடைத்ததை அடுத்து, மகாராஷ்டிர மாநில புலனாய்வு துறையில் காவல்துறைக் கண்காணிப்பாளராக பணியாற்றும்
அர்ஜுன் கிருஷ்ணாவிற்கு, ஒரு வாரத்திற்கு முன்பே விஷ்ணு தகவல் கொடுத்திருக்க, அது குறித்த விசாரணையில் மும்பை காவல்துறையினர் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது,
முந்நாள் இரவு இது தொடர்பாக ஒருவனை கைது செய்திருப்பதாக காட்கோபர் இன்ஸ்பெக்டர் யாதவ் இருவருக்கும் தகவல் தெரிவித்த நிலையில் தற்போது இருவரும் காட்கோபர் காவல் நிலையத்தை வந்தடைந்தனர்.
விஷ்ணு ஆறடி உயரம் என்றால், அர்ஜுன் கிருஷ்ணா 6 அடி 2 அங்குல உயரம், மாநிறம் , அழுத்தமான அதே சமயத்தில் ஆளுமையான
முகவெட்டும், 90 கிலோ எடையுடன் கனகச்சிதமான உடற்கட்டும், பேசும் மெல்லிய பூனை கண்களும், கன்னக்குழியும் அவன் பெயருக்கு பத்து பொருத்ததை ஏற்படுத்தி தந்திருந்தன.
" வாங்க சார் ... வருஷத்துக்கு நாலஞ்சு தடவையாவது, டெரரிஸ்ட் அட்டாக்ன்னு சொல்லி ஏழரையை கூட்டிடுறீங்க... " என்று விஷ்ணுவைப் பார்த்து கூறிய அக் காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டர் யாதவை அவன் முறைக்க,
" தப்பா எடுத்துக்காதீங்க சார் ... நாலஞ்சு தடவைல ஒரு தடவை நிச்சயமா உண்மையா இருக்கு சார்..." என்ற யாதவின் நக்கலை கேட்டு
" அப்ப நாங்க பொய் சொல்றோம்னு சொல்றீங்களா ... எங்களுக்கு கிடைச்ச தகவல்களை அந்தந்த மாநில அரசாங்கத்துக்கு கொடுத்து அலர்ட் பண்றோம்...
இவ்ளோ செஞ்சும் சில நேரத்துல எங்கள மீறி தீவிரவாதத் தாக்குதல் நடந்திடுச்சின்னா உடனே உள்துறை என்ன பண்ணுது... உளவுத்துறை என்ன பண்ணுதுன்னு எங்களை தான பொங்க வைக்கறீங்க...."
" கோச்சுக்காதீங்க சார் .... சும்மா தமாசுக்கு சொன்னேன்...நாம எல்லாம் அங்காளி பங்காளிங்க தானே... "
" அதுக்காக என் கிட்ட பொண்ணு
கேட்டுடாதே... எனக்கே இன்னும் கல்யாணம் ஆகல... ஒருத்தனும் பொண்ணு கொடுக்க மாட்டேங்குறான் .." என்று விஷ்ணு வெளிப்படையாக குமுற
"உங்களுக்கா சார் ஆளில்லை.."
" அறிவில்லையான்னு கேளு சந்தோஷப்படறேன்.... ஆள் இல்லையானு கேக்காத கடுப்பாயிடுவேன்...." என மீண்டும் பொங்கிய விஷ்ணுவைப் பார்த்து அர்ஜுன் சிரிக்க, இவ்விருவரையும் பொதுவாகப் பார்த்து,
" சார் ,நேத்து அரஸ்ட் பண்ண ஆளு கேள்வி கேட்டா பதில் சொல்ல மாட்டேங்குறான் சார்... கழுத்தை திருப்பிக்கிறான் சார் ..." என கூறியபடி இன்ஸ்பெக்டர் யாதவ் முன்னே நடக்க, அவரை இருவரும் பின் தொடர, உள் அறையில் தரையில் அமர்ந்திருந்தவன் இவர்களைப் பார்த்ததும் மீண்டும் தலையை குனிந்து கொண்டான்.
" டேய், என்னா... புது பொண்டாட்டி மாதிரி அடிக்கடி தலைய குனிஞ்சுக்கிற... பதில் சொல்லுடா ..." என்று விஷ்ணு அவனை பார்த்து எகிற,
" இவனை எங்க அரெஸ்ட் பண்ணீங்க .." என்றான் அர்ஜுன் யாதவை நோக்கி.
" சார் , நேத்து ராத்திரி, இவன் ஏ-1 பார்ல குடிச்சிட்டு, இன்னும் ஆறேழு மாசத்துல மும்பையில என்னென்னமோ நடக்கப்போகுது ... பாகிஸ்தான்ல பெரிய மாற்றம் வரப்போகுதுன்னு ... எல்லார் முன்னாடியும் ரெண்டு மூணு தடவ உளறி இருக்கான் சார் ... அந்த பார் மேனேஜர், எனக்கு போன் பண்ணி சொன்னாரு... இமெடியட்டா இவனை அரெஸ்ட் பண்ணி இங்க கொண்டு வந்துட்டோம் சார்... சரி போதை தெளியட்டும்னு ராத்திரி கேள்வி கேட்க வேணாமேன்னு விட்டுட்டு காலையில கேள்வி கேட்டா பதில் சொல்ல மாட்டேங்குறான் சார் ..."
" எஃப்.ஐ.ஆர் (FIR) போடல இல்ல .." என்ற அர்ஜுனனைப் பார்த்து
" இல்ல சார் ..."
" இவனை அரெஸ்ட் பண்ணி இங்க கூட்டிட்டு வந்ததை யாரும் பார்க்கல இல்ல ..."
" இல்ல சார், எல்லாரும் போதைல இருந்தாங்க ..."
" அப்ப ஒன்னு பண்றேன் ... இவனை நான் க்ளோஸ் பண்ணிடறேன்...நீ பாடியை டிஸ்போஸ் பண்ணிடு..." என்றபடி அர்ஜுன், தனது பிஸ்டலை எடுத்து கீழே அமர்ந்தவனின் நெற்றியில் வைக்க, அவன் அலறியபடி
" சாப்(sahib...)இப்ப தான் சாப் கொஞ்சம் கொஞ்சமா ஞாபகத்துக்கு வருது... எனக்கு தெரிஞ்சதை சொல்லிடறேன் சாப் ....என்னை விட்டுடுங்க சாப்... நான் தீவிரவாதி இல்ல சாப்..."
" டேய் **** , பொற***கு,
*****, தீவிரவாதின்னு நீயே ஒத்துக்கிட்டாலும் நாங்க ஒத்துக்க மாட்டோம்... அதுக்கெல்லாம் ஒரு மூஞ்சி வேணும்... கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுடா பரதேசி ..." என்ற விஷ்ணு, தன் தலையை அழுந்த கோதியபடி,
" ச்சே, காயத்ரி மந்திரம் சொன்ன வாயால கெட்ட வார்த்தையை பேச வச்சிட்டான் ... கெட்ட வார்த்தை சொல்லாம உன் மூஞ்சை எல்லாம் தீட்டவும் முடியல ... " என வெளிப்படையாக நொந்து கொண்டிருந்த போது,
கீழே அமர்ந்திருந்தவன் அர்ஜுனை பயத்தோடு பார்த்தபடி,
" சாப், எம் பேரு சமீர்..
நான் ஈசி ஃப்ளை(Easy fly) டாக்ஸி டிரைவர் சாப் ... நேத்து சாயங்காலம் ரெண்டு பேரை சத்ரபதி சிவாஜி மகராஜ் இன்டர்நேஷனல் ஏர்போர்ட்ல டெர்மினல் 2ல இறக்கி விட்டேன் சாப் ...
அவங்க ரெண்டு பேரும் பேசிக்கிட்டதை தான் சாப் நான் பார்ல சொன்னேன் ..."
" அவங்க ரெண்டு பேரும் அப்படி என்ன பேசிக்கிட்டாங்க..." என்றான் அர்ஜுன் பார்வையைக் கூர்மையாக்கி .
" சாப், அவங்க ரெண்டு பேரும், இன்னும் ஆறேழு மாசத்துல மும்பையில பெரிய சம்பவம் நடக்கப்போகுது ... அதனால பாகிஸ்தான்ல பெரிய மாற்றம் வரும்னு பேசிக்கிட்டாங்க சாப் ..."
" மும்பைல சம்பவம் நடந்தா, பாகிஸ்தான்ல எப்படி மாற்றம் வரும்... " என்று தனக்குத்தானே வெளிப்படையாக கேட்டுக் கொண்டவன்
" சரி, எந்த மொழில பேசிக்கிட்டாங்க ..." என்றான் விஷ்ணு.
" நிறைய பஞ்சாபியும், சிந்தியும்(Sindhi) கலந்து பேசினாங்க சாப் ... அப்புறம் கொஞ்சம் உருதுல பேசினாங்க எனக்கு அது சரியா புரியல... கடைசியா அரபில பேசினாங்க சாப்..."
" உனக்கு எப்படி அவங்க பேசுனது புரிஞ்சது..." என்ற விஷ்ணுவுக்கு
" சாப், என் வைஃப்(wife) பஞ்சாபி சாப்... அதனால எனக்கு பஞ்சாபியும் சிந்தியும் ஓரளவு நல்லாவே தெரியும் சாப்... அது மட்டும் இல்ல 10 வருஷம் நான் டிரைவரா சவுதில வேலை பார்த்து இருக்கேன் சாப்... அதனால எனக்கு கொஞ்சம் அரபியும் தெரியும் சாப் ..."
" எந்த பிளைட்ல போறதா
பேசிக்கிட்டாங்க ..." என்ற அர்ஜுனிடம்
" நான் கவனிக்கல சாப் ..."
" அவங்க இந்தியன்ஸா, பாகிஸ்தானிஸா, இல்ல வேற யாராவதா ..."
" பொதுவா இந்தியன்ஸ் அரபி பேச மாட்டாங்க சாப் ... அதில்லாம அவங்க பேசின பஞ்சாபியும் சிந்தியும் , நாம பேசுற மாதிரி இல்ல சாப் ...வேற மாதிரி இருந்தது.. அவங்க பாகிஸ்தானீஸ் தான்னு நினைக்கிறேன்..."
" அவங்க ரெண்டு பேரும் பாக்க எப்படி இருந்தாங்க..." என விஷ்ணு கேட்க,
" அதுல ஒருத்தர் ரொம்ப வயசானவரு...
இன்னொருத்தர் நடுத்தர வயசுல, இதோ.... இந்த அங்கிள்(Uncle) மாதிரி இருந்தாரு சாப்..." என அருகில் நின்றிருந்த யாதவை காட்டி அவன் கூற,
" அடிங் , **** , மூஞ்ஜை பேசிடுவேன்.. யாரைப் பார்த்து அங்கிள் மாதிரி இருக்கேன்னு சொன்ன.. அதுவும் உனக்கு நான் அங்கிளா..." என எகிறிய யாதவ்
" சார், இவன் சுத்த சாவுகிராக்கி சார் ...
இன்னிக்கு காலையில சாய்(Chai) கேட்டான் சார் ... வாங்கிக் கொடுத்தோம் ... அப்புறம் போஹா(அவல் உப்புமா) கேட்டான் சார்... அதையும் வாங்கி கொடுத்தோம் ... இப்ப மதியம் லஞ்சுக்கு பிரியாணி வேணுமாம் சார்.. அதுவும் தாஜ் ஹோட்டல் பிரியாணி...
இவன் கிட்ட நம்பர் வாங்கி இவன் பொண்டாட்டிக்கு போன் பண்ணா,
அந்த பொம்பள, இவன வீட்டுக்கே அனுப்பாதீங்க.. வீட்டுக்கு வந்தா குடிச்சிட்டு பிரச்சனை பண்றான்... நீங்களே வச்சுக்கோங்கன்னு சொல்லுது சார்..."
" அப்ப நல்லதா போச்சு ... இனிமே இவனை தேடி யாரும் ஜாமீன் எடுக்க வர மாட்டாங்க ... இவன் சரியா பதில் சொல்ற வரைக்கும் இங்கேயே இருக்கட்டும் ... ஒன் திங் யூ டூ யாதவ்,
ஏர்போர்ட்டுக்கு போன் பண்ணி, கோவிட் கைடுலைன்ஸ் ஃபார் இன்டர்நேஷனல் அரைவல்ஸ் , டொமஸ்டிக் அரைவல்ஸ் என்னென்னனு கேளுங்க ... நேத்து டெர்மினல் 2ல டேக் ஆஃப், லேண்ட் ஆன எல்லா பிளைட்ஸோட டி பார்ச்சர் அண்ட் அரைவல் டீடைல்ஸ கலெக்ட் பண்ணுங்க, அதுல யார் யாரெல்லாம் ட்ராவல் பண்ணி இருக்காங்கன்ற டீடைல்ஸை வாங்குங்க..."
என அர்ஜுன் பேசிக்கொண்டிருக்கும் போது, ஏதோ பேச்சுக்குரல் கேட்டு எதேச்சையாக காவல் நிலையத்தின் வாசலை பார்த்த விஷ்ணு , ஆனந்தம், இன்ப அதிர்ச்சி , ஆர்ப்பரிக்கும் மனது என தனித்தனியே விவரிக்க முடியாத கலவையான மனநிலையில் ஒரு நொடி உறைந்தவன், மீண்டும் ஒரு முறை ஆழ்ந்து நோக்க, என்னதான் மாஸ்க் அணிந்திருந்தாலும், அவன் பார்த்து ரசித்த, அவன் மனதை கொள்ளை கொண்ட கண்கள் அல்லவா ....எப்படி மறக்க முடியும் ...
உடனே யாதவிடம்,
" அங்க செகப்பா, கொஞ்சம் குண்டா ஒரு பொண்ணு நிக்குதே, அந்த பொண்ணு எதுக்காக வந்து இருக்கான்னு கொஞ்சம் கேட்டுட்டு வாங்க ..." என்றதும் யாதவ் அவ்விடத்தை விட்டு நகர,
" யாருடா அது ..." என்றபடி அர்ஜுனும் திரும்பி காவல் நிலையத்தின் வாயிலைப் பார்க்க ,
" ஸ்ரீலக்ஷ்மி ரங்கநாதன் , தூரத்து சொந்தம் ..."
" அது என்ன தூரத்து சொந்தம்..."
" பொண்டாட்டி மாதிரி ..."
" என்னது ....பொண்டாட்டி... மாதிரியா ... இந்த மாதிரி ஒரு உறவ நான் கேள்விப்பட்டதே இல்லையே டா... ஒன்னு பொண்டாட்டின்னு சொல்லு, இல்ல கட்டிக்கப் போற பொண்ணுன்னு சொல்லு...
இது என்ன புதுசா இருக்கு ..."
" அது ஒரு பெரிய கதை பையா(bhaiya) ... அப்புறம் சொல்றேன் .." என்றான் விஷ்ணு, யாதவ் அப்பெண்ணிடம் பேசிக்கொண்டிருப்பதை பார்த்தபடி .
விஷ்ணுவிற்கு 28 வயதாகிறது. அர்ஜுன் விஷ்ணுவை விட நான்கு வயது பெரியவன். விஷ்ணு அர்ஜுனை சில நேரம்
'பையா', 'அண்ணா'
என்று மரியாதையோடு விளிப்பான் ... சில நேரம் 'அர்ஜுன்' , 'சீனியர்' என்றும் சில நேரம் 'வா, போ' என்றும் அழைப்பான் ... அவனுடைய மனோநிலையும், அங்கிருக்கும் சூழலுமே அவனுடைய அழைப்பை உறுதி செய்யும்.
" நேத்திலிருந்து யார் முகத்துல முழிச்சேன்னே தெரியல .... வர்றதெல்லாம் ஏழரையாவே இருக்கு ....." என்று வெளிப்படையாக புலம்பியபடி வந்த யாதவ், விஷ்ணுவிடம்
" சார் , அந்த பொண்ணு பேரு ஸ்ரீலட்சுமி ரங்கநாதன் .... மதராஸி போல ... மராட்டி சுத்தமா புரியல ... ஹிந்தி அரைகுறையா பேசுது ... இங்கிலீஷ்ல ஃபாஸ்ட்டா(fast) பேசுது சார் ... அதான் புரிஞ்சிக்க கொஞ்சம் லேட்டாயிடுச்சு ... ஏதோ ஹோண்டா ஆக்டிவாவை தொலைச்சிடுச்சாம்... கம்ப்ளைன்ட் கொடுக்க வந்திருக்கு ..."
" இவ ஹோண்டா சிட்டியை தொலைச்சாலே, தேட வேண்டிய அவசியம் இல்ல.... ஒரு ஸ்கூட்டிகாகவா இவ்ளோ தூரம் வந்திருக்கா.." என்று முணுமுணுத்த விஷ்ணு
" யாதவ், நீங்க அந்த ரெண்டு பொண்ணுங்களையும் உள்ள கூப்பிடுங்க... " என்றான்.
" சுனோ, ஓ தோ லடுகியோன் கோ இதர் பேஞ்சு தோ ..." (யோவ்,அந்த ரெண்டு பொண்ணுங்களையும் இங்க அனுப்பு யா...) என்று யாதவ் கூறிய மாத்திரத்தில்,
ஸ்ரீ லட்சுமியும், அவளுடன் இருந்த பெண்ணும் உள் அறை நோக்கி வர, வேண்டுமென்றே அவர்களுக்கு முதுகு காட்டி நின்ற விஷ்ணு, அவர்கள் அருகில் வந்ததும், திரும்பிப் பார்க்க,
அவனை எதிர்பாராமல் அங்கு கண்டதும் இம்முறை இன்ப அதிர்ச்சியில் உறைந்து போனது ஸ்ரீ தான்.
தன் முகத்திலிருந்த மாஸ்க்கை விலக்கியபடி
அவன் முகத்திலிருந்து பார்வையை விலக்காமல், ஓரிரு நொடி
உறைந்திருந்தவள், சுய உணர்வு பெறும் போது ,அவள் கண்ணில் மெல்லிய நீர்த்திரையிட, அதில் தவிப்பு, ஏக்கம் , காதல் என அனைத்தும் கரைபுரண்டோட,
" விஷூ...." என்று அவளது உதடுகள்
சத்தம் வராமல் உச்சரித்ததை கண்டுகொள்ள வேண்டியவன் கண்டுகொள்ள, அவன் முகத்தில் தெரிந்த புரிதலை , ஒருவித நாணத்துடன் எதிர்கொண்டு அவள் தலை குனிந்து கொண்டாள்.
உன்னை தாண்டி கிட்டத்தட்ட ஒரு வருஷ லாக் டவுன் டைம்ல தேடிகிட்டு இருந்தேன் ... இவளை கண்ணுல காட்டினதுக்கு, தேங்க்ஸ் எ லாட் தாத்தா ... என விஷ்ணு மானசீகமாக தன் தாத்தாவுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டிருக்கும் அதே வேளையில் ,
இவனைப் பார்த்து கிட்டத்தட்ட அஞ்சு வருஷமாச்சு இல்ல .. என மானசீகமாக நிம்மதி பெருமூச்சு அவள் விட,
இவ்விருவருக்கும் இடையே நடக்கும் மொழியற்ற சம்பாஷணையை நொடியில் புரிந்துகொண்ட அர்ஜுன்,
குரலை உயர்த்தி செறும, சூழ்நிலையை புரிந்துகொண்ட விஷ்ணு பொங்கி எழுந்த சிரிப்பை மறைத்தபடி ஸ்ரீயை அணுவணுவாய் பார்த்துக்கொண்டே
" வெல், நீ உன் ஹோண்டா ஆக்டிவாவை தொலைச்சிருக்க ..."
" ம்ம்ம்ம்..."
" எங்க தொலைச்ச..."
" ரெண்டு தெருவுக்கு முன்னாடி இருக்கிற சிவாஜி மஹராஜ் சிலை கிட்ட வண்டிய நிறுத்திட்டு ஷாப்பிங் போயிருந்தேன் ... திரும்பி வந்து பார்த்தா வண்டி அங்க இல்ல ...தொலைஞ்சிடுத்து..."
" இது என்ன தமிழ்நாடா ... தெற்காசியாவையே கட்டி ஆண்ட ராஜராஜ சோழன், பூலித்தேவன், நரசிம்மவர்மனுக்கு சிலை வைக்காம திரும்பின இடத்துல எல்லாம் அரசியல்வாதிங்க சிலை இருக்கிறதுக்கு... இது மகாராஷ்டிரா ... எல்லா இடத்துலயும் சிவாஜி மகாராஜ் சிலை தான் இருக்கும்..
திருப்பதில போய் மொட்டையை தேடினா மாதிரி பதில் சொல்லக்கூடாது .." என்று குரலை உயர்த்தி வேண்டுமென்றே விஷ்ணு மிரட்ட,
சற்று நேரத்திற்கு முன்பு அவளது கண்ணில் தோன்றியிருந்த நாணம் மறைந்து , பய உணர்வு தலை தூக்குவதை அவள் முகம் வெளிச்சம் போட்டு காட்ட, மிகுந்த சுவாரஸ்யத்தில் இருவருக்கும் இடையே நடக்கும் உரையாடல்களை ரசிக்க ஆரம்பித்தான் அர்ஜுன்.
" சரி, மும்பை வந்து எவ்ளோ நாளாச்சு.."
"கிட்டத்தட்ட ஒன் இயர் ஆக போற்து ..."
" லைசென்ஸ் எடு ..."
" வண்டி வாங்கி 15 நாள் தான் ஆர்து..
லைசன்ஸ் எடுக்கலாம்னு நினைச்சுட்டுண்டு இருந்தேன் அதுக்குள்ள வண்டியே தொலைஞ்சிடுத்து..." என்றவளின் கலங்கிய பதில் இருவருக்கும் சிரிப்பை பொங்கி எழச் செய்ய, விஷ்ணு அடக்கியபடி அடுத்த கேள்விக்கு தாவ, அர்ஜுன் சிரிப்பை அடக்க முடியாமல், தலைகுனிந்தபடி அதனை மறைத்துக் கொண்டிருந்தான்.
" கிரைம் நம்பர் ஒன்... லைசென்ஸே இல்லாம நீ வண்டி ஓட்டி இருக்க... கிரைம் நம்பர் டூ... வண்டியையும் தொலைச்சிருக்க.." என்றவன் பேசப் பேச, அவள் முகம் பொலிவிழந்து போக,
" சரி, யார் இது , உன் ஃப்ரெண்டா..."
" இல்ல , இவ பக்கத்து ஆத்துல குடியிருக்கா... டென்த் கிளாஸ் படிக்கிறா..."
" ஏன் இதை விட சின்ன பொண்ணு உனக்கு கிடைக்கலையா... கூட கூட்டிட்டு வர..."
" இவளோட தங்கை சிக்ஸ்த் ஸ்டாண்டர்ட் படிக்கிறா, முதல்ல அவளை தான் கூப்பிட்டேன் ... அவ வர மாட்டேன்னுட்டா... அதான் இவளை அழைச்சிண்டு வந்தேன் ..."
இம்முறை அர்ஜுனுக்கு சிரிப்பை அடக்கவே முடியாமல்
" ஐ அம் சாரி டா ... என்னால கண்ட்ரோல் பண்ணவே முடியலை... " என்று சிரித்தவன் " நீ அவள கலாய்க்கிறயா... இல்ல அவ உன்னை கலாய்க்கிறாளான்னு ஒன்னுமே புரியலையே டா..." என்று சன்னமாக விஷ்ணுவிற்கு மட்டும் கேட்கும் ரீதியில் மராட்டியில் மொழிய,
" சரி வண்டியை கொடுத்தா குரங்குபெடல் அடிச்சிக்கிட்டாவது வீடு போய் சேர்ந்துடுவியா..." என்ற விஷ்ணுவை ஸ்ரீ முறைத்து பார்க்க,
" இல்லம்மா...., உனக்கு வண்டி ஓட்ட தெரியுமா ... சரியா வீடு போய்
சேர்ந்துடுவியான்னு தெரிஞ்சுக்க தான் கேட்கிறேன் ... சரி வீடு எங்க இருக்கு ..."
" பவாய்ல (Powai)... என் வண்டி கிடைச்சிடுமா .." என ஆவலாக கேள்வி எழுப்பியவளிடம்
" யாருக்கு தெரியும் ... சரி உன் வண்டியை எந்த பார்க்கிங்கில் பார்க் பண்ண p1னா(parking 1) இல்ல p2 (parking 2) வா ..." என்று விஷ்ணு கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கும் போதே,
யாதவ் விஷ்ணுவை நெருங்கி சன்னமாக,
" சார், வண்டி ராங்க் (Wrong) பார்க்கிங்கில் இருந்திருக்கும் சார் ...அதனால டூவீலரை ஆர்டிஓ ஆபீஸ்க்கு டோ(Tow) பண்ணிக்கிட்டு போயிருப்பாங்க ..."
" தெரியும் யாதவ்...அதான் கேட்டுகிட்டு இருக்கேன் ..." என்றவன் பார்வையை திருப்பி ஸ்ரீயை பார்க்க, அதன் அர்த்தத்தை புரிந்து கொண்டவள்
" நேக்கு பார்க்கிங் பத்தி ஐடியா இல்ல..."
" ப்ரைம் லோகேஷன்ல, ஒத்த படை தேதில P1 பார்க்கிங்...இரட்டை படை தேதில P2 பார்க்கிங்ல டூவீலர நிறுத்தனும்னு உனக்கு தெரியாதா ... உன் வீட்டுல துவாரபாலகர்கள் மாதிரி ரெண்டு அண்ணனுங்க இருப்பானுங்களே.. இது கூடவா உனக்கு சொல்லிக் கொடுக்கலை ..." என்று விஷ்ணு கூறி முடிக்கும் முன், அவள் முகத்தில் ஒரு வித பயம் பரவுவதை உணர்ந்து கொண்டவன்,
" சரி சரி நீ என்ன பண்ற ... நான் எப்ப எல்லாம் கூப்பிடறேனோ அப்ப எல்லாம் இங்க வந்து, வண்டி கிடைக்கிற வரைக்கும் சைன் போட்டுட்டு போற..." என்றவன் கூறிய மாத்திரத்தில்,
" இது என்னடா புது சட்டம்...வண்டிய தொலைச்சவங்க ஏன்டா சைன் போடணும் ..." என அர்ஜுன் சன்னமான குரலில் குதூகலத்தை விதைத்தபடி கிசுகிசுக்க, அதே வேளையில்
" நான் எதுக்காக இங்க வந்து சைன் போடணும்..." என மெல்ல ஸ்ரீ கேள்வி எழுப்ப,
" நீ தீவிரவாதியா இருக்கலாம்... வேணுமுன்னே இல்லாத வண்டிய தொலைச்சுட்டேன்னு பொய் சொல்லி, எங்களை உளவு பார்க்க
வந்திருக்கலாம்... நாங்க எப்படி உன்னை நம்புறது ... நீ உண்மையா வண்டியை தொலைச்சியிருந்தா , வண்டி கிடைக்கிற வரைக்கும் டெய்லி வந்து சைன் போடுவ ...எங்களுக்கும் உன் மேல நம்பிக்கை வரும் , நம்பிக்கை வந்ததுக்கு அப்புறம் நாங்க வண்டிய தேடுவோம் ..." என்ற விஷ்ணுவின் பேச்சை கேட்டு,
ஸ்ரீ 'ஆ' என்று வாயை திறந்தபடி உறைந்து நிற்க, மற்ற ஆண்கள் சிரிப்பை அடக்க முயன்று கொண்டிருக்கும் போது, முதலில் சுதாரித்துக்கொண்ட விஷ்ணு,
" நீ வண்டியை பத்தின எல்லா டீடெயில்சும் இவர் கிட்ட கொடுத்துட்டு கெளம்பு..." என யாதவை காட்டி கூற, தயங்கி நின்ற ஸ்ரீ
" கூப்பிடறேன்னு சொன்னேளே..." என்றதும்
அடிக்கள்ளி, உனக்கு என் நம்பர் வேணுமா.... என்றெண்ணிவன் மென் புன்னகை பூத்தபடி
" உன் நம்பரை உன் கிட்ட கேட்டு தெரிஞ்சுகிட்டா , இவ்ளோ நாளா நான் செஞ்சுகிட்டு இருக்கிற இந்த வேலைக்கு என்ன மரியாதை .... ப்ளூடூத் ஐ ஆன் பண்ணியே வச்சி இருக்க போல இருக்கு ... உன் நம்பர் என்கிட்ட இருக்கு இதானே ..." என்று காட்டி
"மெசேஜ் அனுப்புறேன் போ ..." என்றவனை அவள் ஆச்சரியமாக பார்க்க, அதே வேளையில் விஷ்ணுவின் பார்வையும் அவளை உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை அளவு எடுத்தது.
மென்மையான லாவண்டர் நிற சல்வார் அணிந்து, முதுகு வரை இருக்கும் கட்டையான கூந்தலை குதிரைவாலிட்டு , ஒப்பனை ஏதுமில்லாமல் சிறிய லாவண்டர் நிற பொட்டில் ஜொலித்தவளிடம்
" ம்ம்ம்ம், முன்ன விட கொஞ்சம் வெயிட் போட்டிருந்தாலும் அம்சமா தான் டி இருக்க ...." என அவளுக்கு மட்டும் கேட்குமளவுக்கு
அவன் கிசுகிசுக்க, அவனது பேச்சு புரியாமல்
" என்ன சொன்னிங்கோ..."
" ஒன்னும் இல்ல... அப்புறம் சொல்றேன்..." என்றவனிடம்
" நீங்க போலீசா ..." என ஆர்வத்துடன் அவள் கேள்வி எழுப்ப , அதற்கு சன்னமாக
" உன் புருஷன் ..." என்றான் கண்கள் சிமிட்டி.
பிறகு அங்கு வந்த ஏட்டையா ஸ்ரீயிடம் வண்டியை பற்றிய தகவல்களை கேட்டுத் தெரிந்து கொண்டிருக்கும் போது, யாதவ் விஷ்ணுவிடம்
" ஓ கோன் ஹ ..." என ஹிந்தியில் ஸ்ரீயை பற்றி விசாரிக்க
" வோ, மேரீ பத்தினி பண்ணே ஜா ரஹி ஹ.. மிஸ்ஸஸ் விஷ்ணு நாராயண்..."( எனக்கு மனைவியாக போகிறவள்...) என சிலாகித்து
கூறியவனை அர்ஜுன் ஆச்சரியமாக பார்க்க
வழக்கம் போல் மராட்டிக்கு மாறிய யாதவ்,
" உள்துறை உளவுத்துறை எல்லாம் அவங்களை பேட்டி எடுக்கும் போதே நினைச்சேன் சார்... பெரிய ஆளா தான் இருப்பாங்கன்னு ... இப்பவே போய் ஆர்டிஓ ஆபீஸ்ல இருக்கிற எல்லா ரெட் கலர் ஹோண்டா ஆக்டிவாவையும் எடுத்துகிட்டு வர சொல்றேன் சார் ...
பாபியோட வண்டி எதுன்னு பார்த்து அவங்களே எடுத்துக்கிடட்டும்... "
" அதெல்லாம் வேணாம் யாதவ் ... அவளோட வண்டியை மட்டும் எடுத்துக்கிட்டு வந்து ஸ்டேஷன்ல வைங்க ... மத்ததை அப்புறம் பாத்துக்கலாம் ... அப்புறம் ஒரு ஆட்டோவை கூப்பிட சொல்லுங்க..."
" கவலையே படாதீங்க சார்... நமக்கு தெரிஞ்ச ஆட்டோகாரர் இருக்காரு ...அவரோட வண்டியில பாபியை அனுப்பிட்டு, அவங்க பின்னாடியே போய் அவங்க வீட்டுக்குள்ள நுழையற வரைக்கும் நானே ஃபாலோ பண்ணிடறேன் ..."
" பார்த்து... அவங்க அப்பா ஒரு மாதிரி யாதவ் ..." என்று முன்னெச்சரிக்கை செய்தவன், ஸ்ரீயை சைகையால் அழைத்து
" என்னா... ஆட்டோ பிடிச்சு கொடுத்தா சரியா வீடு போய் சேர்ந்திடுவியா..."
" ம்ம்ம்ம்..."
"உனக்கு மராட்டி தெரியாது ஓகே...ஹிந்தி பேசுவ இல்ல ..."
" ம்ம்ம்... இத்தனை நாள் துபாய்ல இருந்திருக்கேனே...." என பெருமிதத்தோடு கூறியவளைப் பார்த்து
" அதான் தப்ப தப்பா பேசறீயா..." என்றவனை அவள் முறைக்க
" நான் சொல்லலம்மா... என்னை முறைக்காத.... இந்த இன்ஸ்பெக்டர் தான் சொன்னாரு.. நீ சரியா பேசலன்னு..." என யாதவை அவன் கோர்த்து விட,
" பாபி ஏன் என்னை முறைக்கிறாங்க..."
" உங்களைப் பத்தி ரொம்ப பெருமையா சொல்லிகிட்டு இருக்கேன் யாதவ்.. அதான்... சரி நீ கிளம்பு..." என்றவனுக்கு அவளை அவள் வீட்டிற்கு அனுப்ப மனமே இல்லை ...
இப்படியே அவளைத் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று விடலாமா என்ற எண்ணம் தலை தூக்கிய நிலையில்,
இப்ப வேணாம் ... அதுக்குன்னு நேரம் வரும்... எனத் தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டவன்
ஆட்டோவில் அமர்ந்தபடி வெளியே தலை நீட்டி, ஆர்வத்துடன் பார்த்தவளை பார்த்து கையசைத்து வழியனுப்ப, அப்போது அவன் முதுகில் அர்ஜுன் ஓங்கி ஒரு அடி வைத்தபடி,
" யாருடா அது ....மாமி மாதிரி இருக்கு..."
" மாமியே தான் ..."
" உன்னை மாதிரி க்ராஸா(cross)... "
" ம்ச்... இல்ல ...அக்மார்க் அக்ரஹாரம்...."
என்றவனிடம் நினைவு வந்தவனாய் ,
" டேய், உள்ள இருக்கிற அந்த மூஞ்சி தீவிரவாதி இல்ல.. இந்த மூஞ்சி(ஸ்ரீ யை காட்டி) தீவிரவாதியா உனக்கு ..." என்றவனை பார்த்து விஷ்ணு குலுங்கி சிரிக்க,
" ஆழாக்கு அமுல் வெண்ணையை அப்பன மாதிரி ஒரு மூஞ்சி ....இது உனக்கு தீவிரவாதி ...உனக்கே ஓவரா இல்ல ...ஆமா... இவளையா கல்யாணம் பண்ண போற ... சைல்ட் மேரேஜ்ன்னு சொல்லி உன்னை போக்சோ சட்டத்துல அரெஸ்ட் பண்ணிட போறாங்க டா...." என மேலும் வாரியவனை பார்த்து விஷ்ணு குலுங்கி சிரித்தபடி
" அது ஒரு பெரிய கதை அப்புறம் சொல்றேன் சீனியர் ... அந்தேரில தான இருக்கீங்க ... ஃபேமிலிய கூட்டிக்கிட்டு ஒரு நாள் என் வீட்டுக்கு வாங்களேன்...
என் வீட்டுல நான், எங்க அம்மா, அப்பா தான் ... அக்காவுக்கு கல்யாணம் ஆகி அமெரிக்கால இருக்கா... அவளுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கு ...உங்க வீட்ல யாரெல்லாம் இருக்காங்க ..." என்றவனின் கேள்வி நீண்ட கொடிய நாட்களுக்கு பிறகு தன்னை மறந்து சிரித்துக் கொண்டிருந்த அர்ஜுனின் முகத்தை இருட்டு அடைய செய்ய,
உடனே அதை மறைக்க முயலும் போது, அவனது கைபேசி சிணுங்கியது.
" ஒரு நிமிஷம் விஷ்ணு ...அப்பா கூப்பிடுறாரு..." என்றவன் கைபேசியை எடுத்துக் கொண்டு சற்று தூரம் நடந்தபடி அதனை காதுக்கு கொடுக்க,
" எப்படிப்பா இருக்க ராஜா ..."
" நல்லா இருக்கேன் பா ... நீங்க எப்படி இருக்கீங்க ...."
" ம்ம்ம்... ஏதோ இருக்கேன் ... " என்று பெருமூச்சு விட்டவர்,
" ராஜா, நான் ஒன்னு சொல்லுவேன் கேப்பியா..." என்றவரின் கேள்வியிலேயே அவர் பேசப் போகும் விஷயத்தை அனுமானித்தவன், ஒருவித விரக்தி மனோநிலையில்
" சொல்லுங்கப்பா ... " என்றான்.
" இப்ப நான் காசில இருக்கேன்.... காலமான கோகிலாக்கு செய்ய வேண்டியதெல்லாம் செய்து முடிச்சாச்சு ... முக்கியமான ட்ரெய்னிங்ல இருந்ததால கோகிலா சாவுக்கு உன்னாலயும் வர முடியாம போயிடுச்சு ... சரி விடு... இப்ப அக்னியும் அஷ்வத்தும் என் கூட தான் இருக்காங்க... நேத்து ராத்திரி தான் அக்னி கிட்ட பேசினேன்... அவ கல்யாணத்துக்கு சம்மதிச்சுட்டா ... நீ என்னப்பா சொல்ற ....
எவ்ளோ நாள் தான் இப்படி தனியா இருப்ப..." என்றவரின் பேச்சு,
ஏனோ அவன் மனதில் நீண்ட நாட்களுக்கு பிறகு மெல்லிய மாருதத்தை வீச, ஓரிரு நொடி அமைதி காத்தவன்,
" சரிப்பா, கல்யாணம் பண்ணிக்கிறேன் ... " என்று மென்மையாக சொன்னவன், திடீரென ஆக்ரோஷத்துடன்
" இரக்கமே இல்லாம ரெண்டு கொலை செஞ்ச அந்த கொலைகாரி என் கல்யாணத்துக்கு வரக்கூடாது ... இதான் என்னோட ஒரே கண்டிஷன் ..." என்ற மைந்தனின் திடீர் பேச்சு, அவர் மனதில் பழைய நினைவுகளை தூண்ட,
" சரிப்பா, நிச்சயமா வரமாட்டா... அடுத்த வாரமே சிம்பிளா நம்ம கொடைக்கானல் எஸ்டேட்ல கல்யாணத்த வச்சிக்கலாம் ..." என்றவரிடம் தன் சம்மதத்தை உறுதிப் படுத்தி விட்டு விஷ்ணுவிடம் வந்தவன்,
" என்ன கேட்டுக்கிட்டு இருந்த விஷ்ணு ..."
" உங்க வீட்ல யார் யாரெல்லாம் இருக்காங்க.. ஒருநாள் குடும்பத்தோட எங்க வீட்டுக்கு வாங்கன்னு கூப்பிட்டுகிட்டு இருந்தேன்..."
" நிச்சயமா என் குடும்பத்தோட வரேன்,
என் வீட்டுல
நான், என் வைஃப்(wife) அக்னி, என் பையன் அஷ்வத் மூணு பேரு தான் ...." என்றான் அர்ஜுன்.
தகிப்பாள்
Dear readers ,
இந்த தளம் எனக்கு மிகவும் புதிது.
இந்தக் கதையைப் பற்றி ஒரு சின்ன புரோலாக் கொடுத்துள்ளேன்.
Actually preface எழுதி இருக்கணும் ..
Since the story started already...வேற வழியில்லாம கடைசியா புரோலாக்கை இணைத்துள்ளேன்.
Prologue:
அக்னி-ஸ்ரீ இரு கதாநாயகிகள் கதை.
கதாநாயகர்கள் அர்ஜுன் கிருஷ்ணா, விஷ்ணு நாராயண்.
கதைகளம் : மும்பை
கதாநாயகி அக்னி பெயருக்கேற்றார் போல் தகிப்பவள், மற்றொரு கதாநாயகி ஸ்ரீலக்ஷ்மி நிலவைப் போல் குளிர்ச்சியானவள்....
நாயகி அக்னி - க்ரைம் லேபரட்டரி அனலிஸ்ட் ( பாரன்சிக் டிபார்ட்மென்ட் )
(Forensic department -தடவியல்)
நாயகி ஸ்ரீ - கல்லூரி மாணவி
( கார்மெண்ட் டெக்னாலஜி)
ஒரு குறிப்பிட்ட கால அளவிற்குள் மும்பையில் தீவிரவாத தாக்குதல் திட்டமிடப்பட்டிருக்க , அதை அறிந்த இரு நாயகர்களும் அதனை எப்படி முறியடிக்கின்றனர் என்பதே முழு கதை.
கதை IB( இந்திய உள்நாட்டு உளவு பிரிவு) RAW Agent( இந்திய வெளிநாட்டு உளவுப் பிரிவு) ,IPS அதிகாரிகளைப் பற்றியது.
கதையோடு துறை சார்ந்த பல தகவல்களை ஆங்காங்கே துணுக்குகளாக(Snippets) கொடுத்திருக்கிறேன்.
I hope deep readers would love this story...
Its a complete political thriller ...
உடனே அரசியல்ல விருப்பமில்லாதவங்க முகம் சுளிக்க வேண்டாம் .....
வழக்கம் போல என் கதைல இருக்கிற எல்லா விஷயங்களும் இதுலயும் இருக்கு .
அழகான குடும்பம், அன்யோன்யமான காதல், ஆத்மார்த்தமான நட்பு, ஆன்மீகம், மனோதத்துவம் , அறிவியல், ஹாஸ்யம் இவை அனைத்துடன் கொஞ்சம் தூக்கலாக அரசியல் நெடி...
சொல்ல மறந்துட்டேனே, இதுல அமானுஷ்யமும் இருக்கு.... (ஆமாங்க பேய்தான் ...?)
கதைக்களம் மும்பையில் நடந்தாலும் 2 கதாநாயகர்களுக்கும் பெரிய பெரிய பிளாஷ்பேக் ...
கிட்டத்தட்ட பத்து, பத்து எபிசோட் ஃபிளாஷ்பேக் ....
ஸ்ரீவில்லிபுத்தூர்( தமிழ்நாடு), நார்த் பர்கானா ( மேற்கு வங்கம்) நாசிக் (மகாராஷ்டிரா) போன்ற இடங்களில் கதை பயணிக்கிறது.
கதை பிளாஷ்பேக் பாதி 80களில் நடக்கிறது, பாதி 2016ல் நடக்கிறது.
கதை போன வருடம் 2020 லாக் டவுனுக்கு பிறகு தொடங்குகிறது....
அதாவது போன வருடம் அக்டோபர் கடைசியிலிருந்த ஊரடங்கு தளர்விற்கு பிறகு (Unlock 5.0) கதை தொடங்குகிறது. இவை அனைத்தும் முழுக்க முழுக்க மகாராஷ்டிரா மாநிலத்தின் ஊரடங்கை அடிப்படையாகக் கொண்டது.
கதைக்கு தேவையில்லை என்பதால் கொரோனா இரண்டாவது அலையை
நான் கதையில் பயன்படுத்திக் கொள்ளவில்லை.
ஏற்கனவே பிரதிலிபியில் இந்த கதையின் முதல் ரெண்டு எபிசோடை பதிவேற்றி விட்டேன் ..இப்பொழுது நறுமுகையிலும் பதிவேற்றி இருக்கிறேன்.
ஒவ்வொரு வாரமும் ஞாயிறு (இன்றிலிருந்து) மற்றும் புதன் இரவு 10 to 10:45க்குள் அத்தியாயங்களை பதிவேற்றி விட்டு திரிகளை பகிர்கிறேன் நட்புகளே ..
ஒவ்வொரு எபிசோடும் குறைந்தபட்சம் 10 நிமிடம் , அதிகபட்சம் 20 நிமிடம் இருக்கும் .
இருபது நிமிஷம் கொண்ட முழு எபிசோட்ல
உங்களுக்கு ஒரு பூரணத்துவம் கிடைக்கும் அதோட ஒரு எதிர்பார்ப்போட முடிக்கும் போது அடுத்து வரும் அத்தியாயத்தை படிக்கும் ஆவல் அதிகமாக இருக்கும் தோழமைகளே... அதனால் தான்.
உங்களது மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன் தோழமைகளே ..
கீழ்க்கண்ட லிங்கில் உங்களது கமெண்டுகளை பதிவுசெய்யவும்.
Thread 'அக்னி-ஸ்ரீ - கருத்து திரி'
https://narumugai.ink/index.php?threads/அக்னி-ஸ்ரீ-கருத்து-திரி.98/
Thanks to jaanu and prasha for giving me the opportunity.
Happy reading
ப்ரியமுடன்
ப்ரியா ஜெகன்நாதன்