எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அக்னி-ஸ்ரீ - கதை திரி

Status
Not open for further replies.

admin

Administrator
Staff member
புதிய எழுத்தாளருக்கு எங்கள் வாழ்த்துக்கள்
 
அத்தியாயம் 1


ஓம் பூர் : புவ: ஸுவ: தத் சவிதுர்:
வரேண்யம் பர்கோ தேவஸ்ய
தீமஹி தியோ: யோந:
ப்ரசோதயாத்..!


என்ற காயத்ரி மந்திரத்தை, சூரிய பகவானை நோக்கி உச்சாடனம் செய்து தனது காலை சந்தியா வந்தனத்தை
சிரத்தையாக முடித்த விஷ்ணு நாராயண், அதனைத் தொடர்ந்து எதிரிகளை வலுவிழக்கச் செய்யும் ஆதித்ய ஹ்ருதயம் ஸ்லோகத்தையும்
தெளிவாக உச்சரித்துக்கொண்டே, தோளில் இருந்த பூணூலை சரி செய்தபடி மாடித்தோட்டம்
போடப்பட்டிருந்த பெரிய பால்கனியில் இருந்து, கூடத்திற்கு நுழைய எத்தனிக்கும் போது, ஆதவனின் கிரணங்கள் ஆறடியில் உருண்டு திரண்டிருந்த அவனது வெண்மை நிற வெற்று மார்பின் செம்மை நிற தோள்களில்


'சமாஸ்ரயணம்'(பெருமாள் கைகளில் இருக்கும் சங்கு, சக்கர வடிவத்தை போல், சிறிய வெள்ளியிலான அச்சினை நெருப்பு தணலில் காட்டி, உபநயனத்திற்கு (முதல் முதலில் பூணூல் அணிவித்ததும்) பிறகு சங்கை ஒரு தோளிலும், சக்கரத்தை மறு தோளிலும் பதிப்பார் ஆச்சாரியன் என்றழைக்கப்படும் வைணவ குருமார்) செய்யப்பட்டிருந்த, சங்கு சக்கர முத்திரையின் மீது படிந்து ஜொலிக்க, கூடத்திற்கு வந்த மைந்தனிடம் எப்பொழுதும் போல் வேதவல்லி,


" விஷ்ணு, சந்தியா வந்தனம் ஆச்சா,
டேபிள் மேல தளிகை(சமையல்) பண்ணி வச்சிருக்கேன், சாப்ட்டுட்டு
ஆபிசுக்கு கிளம்பு ..." என்று உத்தரவு பிறப்பித்த படி தன்னுடைய
காலை நேர ஆசார அனுஷ்டான பூஜைகள் முடிந்ததால் , மடிசார் உடுத்தியிருந்தவர்
உடைமாற்ற தன் அறைக்குள் நுழைய, அவரது பேச்சைக் காதில் வாங்கியபடி மைந்தனும் தன் அறைக்கு சென்று அலுவலக உடைக்கு மாறினான்.


விஷ்ணு நாராயண், அசிஸ்டன்ட் சென்ட்ரல் இன்டலிஜென்ஸ் அதிகாரியாக (Assistant Central Intelligence Officer (ACIO) grade I) , (இன்டலிஜென்ஸ் பீயூரோவில் Intelligence Bureau -IB ) இந்திய உள்நாட்டு உளவு பிரிவில் பணியாற்றுகிறான்.


மும்பை பெருநகரம் செம்பூரில், 22 அடுக்கு மாடிகளைக் கொண்ட
'கோல்டன் நெஸ்ட் ' என்ற வசதி படைத்தவர்கள் வசிக்கும் குடியிருப்பில் 15வது தளத்தில்
' வேதா நிவாஸ் ' என்ற பெயர் கொண்ட பெண்ட் ஹவுஸில் (pent house - தனி வீடு போல், கீழ்த்தளம், மேல்தளம் என இரு தளங்களை கொண்ட வீடு) வசிக்கிறான்.


ஃபார்மல் ஷர்ட் மற்றும் பேண்ட்டில் கம்பீரமாக காட்சியளித்தவனுக்கு, மடிசாரிலிருந்து சுடிதாருக்கு மாறியிருந்த தாய் வேதவல்லி, காலை உணவினை பரிமாறிய படி,


" எப்படா விஷ்ணு கல்யாணம் பண்ணிப்ப.." என்றார் வழக்கம் போல் .


திருமணத்தை தட்டிக்கழிக்க மைந்தன் கூறும் புது புது காரணங்களை சுவாரஸ்யத்துடன் கேட்பதற்கும், அவனது மன உணர்வுகளை புரிந்து கொள்வதற்காகவும் இந்தக் கேள்வியை வேதவல்லி அடிக்கடி விஷ்ணுவிடம் கேட்பதுண்டு.


" எவன் பொண்ணு கொடுக்கிறான் ... உங்க ஆளுங்க கிட்ட பொண்ணு கேட்டா , எடுத்த எடுப்புல வடகலையா தென்கலையான்னு கேட்கறான்...
கடைசில நான் முருங்க கிளைன்னு சொல்ல வேண்டியதாயிடுச்சு...." என்று புன்னகையோடு சமாளித்தவனின் மனதில் நிழல் ஓவியமாய்
தன் மனதிற்கினியவளுடன் மாலை மாற்றிய காட்சி வந்து போக, அதே நிகழ்வை மனதில் நினைத்தபடி , மைந்தனின் முக உணர்வை படிக்க முயன்ற தாயிடம், சடுதியில் முகபாவத்தை மறைத்திருந்தான் மைந்தன் .


" சரி.... என் ஆளுங்கதான் பொண்ணு கொடுக்க மாட்டேன்னு ட்டா ... உன் ஆளுங்கயிண்ட பொண்ணு கேட்க வேண்டியதுதானே .."


" என் ஆளுங்க யாரு இங்க இருக்கா .."
என்றான் அவனது அடர்ந்த மீசையை முறுக்கியபடி.


" ஏன்டா, நீ ஆள் பாக்க ஜம்முனு கம்பீரமா ஹாலிவுட் ஹீரோ மாதிரி இருக்க... அட்லீஸ்ட் யாரையாவது லவ் பண்லாமோல்யோ... மராட்டி, குஜராத்தி, பெங்காலி, அஸ்ஸாமின்னு எவ்ளோ அழக அழகான பொண்ணுங்க எல்லாம் இருக்கா ..."


" நீங்க லாங்குவேஜ் தெரியாம, அவ கூட சண்டை போட முடியாம கஷ்டப்பட கூடாதுங்கிற நல்ல எண்ணத்துல தான் .." என்றான் குறும்பாக.


" பரவால்ல நான் ஹிந்தில, இல்ல இங்கிலீஷ்ல அவளிண்ட சண்டை பிடிச்சுப்பேன்...நீ அதை பத்தி வருத்தப்படாத... ச்சரியா ..." என்ற தாய் வேதாவை பார்த்து விஷமமாக சிரித்தபடி வாஷ் பேசினில் கை கழுவிக் கொண்டு கிளம்ப எத்தனித்தவனிடம்,


" விஷ்ணு, மும்பை ஃபோர்ட் கிட்ட ( Mumbai fort)சில நியூ கம்பெனிங்க கூட , ஸ்டாக் மார்க்கெட் மீட்டப் (stock market meetup) இருக்கு .. என் பிஏ(PA) இன்னைக்கு லீவு... சோ நான் தான்
நம்ம கம்பெனி சார்பா அட்ரஸ் பண்ண போறேன் ... நீயும் என் கூடவே வந்துடு, உன்னை உன் ஆபீஸ்ல ட்ராப் பண்ணிடறேன் .."


" இல்லம்மா நீங்க கிளம்புங்க .. எனக்கு இன்னைக்கு காட்கோபர்ல(Ghatkopar) ஒரு வேலை இருக்கு... நான் என்னோட அபிஷியல் கார்ல, கவர்மெண்ட் லோகோவோட போனா தான் , ஈஸியா மும்பை டிராபிக்ல பூந்து பூந்து போக முடியும்..." என்று கூறியபடி கிளம்பி கொண்டிருந்தவனை பார்த்து,


" டேய், சொன்னா கேட்கவே மாட்டியா டா ... எத்தனை தடவை சொல்றது இந்த வாட்சை (Watch)ஆத்துல வச்சிட்டு, வேற ஏதாவது நன்னா புது வாட்ச் வாங்கி கட்டிக்கோன்னு...ரொம்ப புராணா வா இருக்குடா...நன்னாவே இல்ல ..."


" அம்மா, ஐ அம் எமோஷனாலி அட்டாச்சிடு வித் திஸ் வாட்ச் ... இட் ஸ் வெரி லக்கிம்மா...இந்த வாட்ச் என் கையில இருக்கும் போதெல்லாம் என் தாத்தா என் கூடவே இருக்கிற மாதிரி ஒரு ஃபீல்(feel) .. தி ஓல்ட் எச்.எம்.டி(HMT) பைலட்(pilot) டிசைன் ... வெரி நைஸ் ...இல்ல ..." என்று தான் அணிந்திருந்த வாட்சை சிலாகித்தவனுக்கு தெரியாது,
அந்த வாட்ச் தான் நம் நாட்டை பெரும் தீவிரவாத தாக்குதலில் இருந்து காக்க உதவ போகிறதென்று.


" இது உன் லக்கி வாட்ச்....உன் தாத்தா தான் இதை கொடுத்தது ...அதெல்லாம் ஓகே ... ஆனா வாட்டர் ப்ரூப் இல்லயேடா ...ரொம்ப பழசு ...ஸ்ட்ராப்(Strap) மட்டும் அடிக்கடி மாத்துர....என்னிக்காவது ஒரு நாள் இது ஓடாம போச்சுன்னா என்ன பண்ணுவ ...."


" அப்ப பாத்துக்கலாம் மா..." என்று துள்ளிக் குதித்தபடி கார் சாவியை எடுத்துக்கொண்டு, வீட்டை விட்டு வெளியேற எத்தனித்தவனிடம்


" ஏய் நில்லு, பிஸ்டல(pistol) எதுக்காக எடுத்துண்ட.. " என்றார் அவனது பேண்ட் பாக்கெட்டை பார்த்து,


" கண்டுபிடிச்சிட்டீங்களா..." என்று சமாளிக்க முயன்றவனை பார்த்து,


" விஷ்ணு, நீ டெஸ்க் ஒர்க்கு (Desk work)தான பண்றேன்னு சொல்லி இருக்க ... பின்ன ஃபீல்ட் ஒர்க் (field work) பண்ற மாதிரி எதுக்கு பிஸ்டல்..."


" அம்மா உங்களுக்கே தெரியும், போலீஸ் மாதிரி எங்களுக்கு யூனிஃபார்ம் கிடையாது ...


தப்பு பண்றவனை அரெஸ்ட் பண்ற அதிகாரமும் கிடையாது ...


ஆனா நாங்க நினைச்சா, நாளைக்கு இந்தியாவோட தலைப்புச் செய்தியையே மாத்தலாம்...


நாங்க லோக்கல் போலீஸ், ஐபிஎஸ், ஐஏஎஸ்னு யாருக்கும் கட்டுப்பட வேண்டிய அவசியமில்லை ... ஹோம் மினிஸ்டிரிக்கு(உள்துறை) மட்டும் கட்டு பட்டா போதும் ... பெரிய அரசியல்வாதிங்க, அதிகாரிங்க, தீவிரவாதிங்கன்னு சந்தேகப்படுற அத்தனை பேரோட டெலிபோனிக் கான்வர்சேஷனையும் வயர் டேப்பிங்(Wire tapping - ஒட்டு கேட்டல்) பண்றோம் ...


போலீஸா இருந்தா, உள்நாட்டுல இருக்கிற கிரிமினல்ஸ் மற்றும் அரசியல்வாதிகளால மட்டும் தான் பிரச்சனை...


ஆனா நாங்க உள்நாடு வெளிநாடுன்னு பார்க்காம எல்லா இடத்திலிருந்தும்,
நம் நாட்டுக்கு எதிரா நடக்கிற இன்டலிஜென்ஸை(means Information) கலெக்ட் பண்ணி, டெரரிஸத்தை தடுக்கிறது, கவுண்ட்டர் டெரரிஸம் அட்டாக்(Counter terrorism attack - எதிர் தீவிரவாத தாக்குதல் ) நடத்திக்கிட்டு இருக்கோம்... அதுவும் உன் புள்ள நான் ஒரு இடம் விடாம கண்டம் விட்டு கண்டம் எல்லா இடத்துலயும் வம்பு இழுத்து வச்சிருக்கேன்.. அதனால எவன் என்னை எப்ப போடுவான்னு எனக்கே தெரியாது... அதனாலதான் இந்த சேஃப்டி ..."


" போடா நீயும் உன் வேலையும் ... போன்ல யாரோ பேசறதை ஒட்டுக் கேட்கறதும், உளவு பார்க்கறதும் ஒரு வேலையா டா..."


" அம்மா....நாட்டுல நடக்கிற பல தீவிரவாத செயல்களை, இப்படி ஒட்டு கேட்கிறதால தான் தடுக்க முடியுது...
உங்களுக்கு சொன்னா புரியாது ... நான் காஷ்மீர் பார்டர்ல இருந்து, மும்பைக்கு டிரான்ஸ்பர் ஆகி கிட்டதட்ட ஒரு வருஷம் தானே ஆகுது போகப் போக என்னோட வேலையை புரிஞ்சிப்பீங்க ..."


" என்னமோ போடா நினைச்சாலே பயமா இருக்கு ...
ஓகே தென்... சீ யூ இந்த ஈவினிங்..." என்று கார் சாவியை எடுத்துக்கொண்டு வேதா புறப்பட்டு செல்ல,
விஷ்ணு காட்கோபரை நோக்கி பயணமானான்.


வேதா கூறியது போல் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்பது மட்டும் இன்டெலிஜென்ஸ் அதிகாரிகளின் வேலை கிடையாது.
உள்நாடு மற்றும் வெளிநாட்டு முக்கிய பிரமுகர்களுக்கு 'விஐபி செக்யூரிட்டி' எனப்படும் பாதுகாப்பு வழங்குதல் ...


IBக்கு கிடைக்கும் தகவல்கள் சரியானதா என ஆராய்ந்து சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு வழங்குவதோடு, சம்பந்தப்பட்ட மற்ற இந்திய இன்டெலிஜென்ஸ் ஏஜென்சிகளான NIA, CBI,CID,DIA,NCB
ஆகியவற்றுக்கும் வழங்குதல்...


நம் நாட்டின் ராணுவ ரகசியங்கள்,
விண்வெளி ஆராய்ச்சி, ஏவுகணை செலுத்துதல், இந்தியாவில் தயாரிக்கப்படும் காப்புரிமை பெற்ற மருந்துகளை பற்றிய தகவல்கள் (கொரோனா), உள்நாட்டு முக்கிய அரசியல் விவகாரங்கள் ஆகியவை இந்தியாவிற்குள் மட்டுமல்ல( ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு) வெளிநாட்டிலும் கசியாமல் காப்பது ...


CIA (அமெரிக்கா) ISI(பாகிஸ்தான்) MOSSAD(இஸ்ரேல்) போன்ற இந்தியாவின் போட்டி நாடுகளில் இருக்கும் உளவுத்துறையில் இருந்து இந்தியாவிற்கு எதிராக தீட்டப்படும் ரகசியங்களை கைப்பற்றுதல் ...


நக்சலைட்கள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தால் , அது குறித்து அந்தந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு முன்கூட்டியே தெரிவித்து , பாதுகாப்பு பணியை பலப்படுத்துதல் ...


இந்திய விமான நிலையத்தில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவிலும் இவர்கள் பணியமர்த்தப்படுவர் ...


இவர்களது பணி காலம் முடிவதற்குள் மேலே குறிப்பிடப்பட்டுள்ள, கிட்டத்தட்ட அனைத்து பிரிவிலும் இவர்கள் பணியமர்த்தப்படுவர் .. இவர்களது பணி பெரும்பாலும் இடத்தையும் சூழ்நிலையையும் சார்ந்தது. (Region specific work)


இவர்களது பணி மிகவும் ரகசியமானது,
பெற்ற தாய், கட்டின மனைவி , குடும்ப உறுப்பினர்களிடம் கூட இவர்கள் தங்கள் பணிகளை குறித்த விவரங்களை விவாதிக்கக் கூடாது என்பது விதி.


****************************************


இடம் : காட்கோபர் காவல் நிலையம்


விஷ்ணு தன் அரசாங்க வாகனத்தை விட்டு இறங்கவும், அர்ஜுன் கிருஷ்ணா
அவனுடைய அரசாங்க வாகனத்தில், காட்கோபர் காவல் நிலையத்தை அடையவும் சரியாக இருந்தது.


இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்துக்கொண்டே "ஜெய் ஹிந்த்" என்று கூறியபடி கைகுலுக்கிக் கொண்டனர்.


அர்ஜுன் கிருஷ்ணா(ஏ.கே என்றால் அனைவருக்கும் தெரியும்) ஸ்டேட் இன்டலிஜென்ஸ் டிபார்ட்மென்டில் (State Intelligence Department (SID) , எஸ்.பியாக(Superintendent of police) பணியாற்றுகிறான். அவன் மீண்டும் மும்பைக்கு மாற்றலாகி கிட்டத்தட்ட 4 மாதங்கள் ஆகிறது.


கடந்த 3 மாத காலமாக தான் , இருவரும் பரிச்சயம். அதுவும் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் சந்திக்க வேண்டிய சூழலில் ஏற்பட்ட நட்பு. தமிழ்நாட்டை சார்ந்தவர்கள் என்ற ஈர்ப்பே இருவரையும் சந்திக்கும் இடத்திலெல்லாம் பேச வைத்திருந்தது.


மும்பையில் அடுத்த ஆறேழு மாத காலத்திற்குள் ஏதோ பெரிய தீவிரவாத சம்பவம் நிகழ போவதாக,
தகவல் கிடைத்ததை அடுத்து, மகாராஷ்டிர மாநில புலனாய்வு துறையில் காவல்துறைக் கண்காணிப்பாளராக பணியாற்றும்
அர்ஜுன் கிருஷ்ணாவிற்கு, ஒரு வாரத்திற்கு முன்பே விஷ்ணு தகவல் கொடுத்திருக்க, அது குறித்த விசாரணையில் மும்பை காவல்துறையினர் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது,
முந்நாள் இரவு இது தொடர்பாக ஒருவனை கைது செய்திருப்பதாக காட்கோபர் இன்ஸ்பெக்டர் யாதவ் இருவருக்கும் தகவல் தெரிவித்த நிலையில் தற்போது இருவரும் காட்கோபர் காவல் நிலையத்தை வந்தடைந்தனர்.


விஷ்ணு ஆறடி உயரம் என்றால், அர்ஜுன் கிருஷ்ணா 6 அடி 2 அங்குல உயரம், மாநிறம் , அழுத்தமான அதே சமயத்தில் ஆளுமையான
முகவெட்டும், 90 கிலோ எடையுடன் கனகச்சிதமான உடற்கட்டும், பேசும் மெல்லிய பூனை கண்களும், கன்னக்குழியும் அவன் பெயருக்கு பத்து பொருத்ததை ஏற்படுத்தி தந்திருந்தன.


" வாங்க சார் ... வருஷத்துக்கு நாலஞ்சு தடவையாவது, டெரரிஸ்ட் அட்டாக்ன்னு சொல்லி ஏழரையை கூட்டிடுறீங்க... " என்று விஷ்ணுவைப் பார்த்து கூறிய அக் காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டர் யாதவை அவன் முறைக்க,


" தப்பா எடுத்துக்காதீங்க சார் ... நாலஞ்சு தடவைல ஒரு தடவை நிச்சயமா உண்மையா இருக்கு சார்..." என்ற யாதவின் நக்கலை கேட்டு


" அப்ப நாங்க பொய் சொல்றோம்னு சொல்றீங்களா ... எங்களுக்கு கிடைச்ச தகவல்களை அந்தந்த மாநில அரசாங்கத்துக்கு கொடுத்து அலர்ட் பண்றோம்...
இவ்ளோ செஞ்சும் சில நேரத்துல எங்கள மீறி தீவிரவாதத் தாக்குதல் நடந்திடுச்சின்னா உடனே உள்துறை என்ன பண்ணுது... உளவுத்துறை என்ன பண்ணுதுன்னு எங்களை தான பொங்க வைக்கறீங்க...."


" கோச்சுக்காதீங்க சார் .... சும்மா தமாசுக்கு சொன்னேன்...நாம எல்லாம் அங்காளி பங்காளிங்க தானே... "


" அதுக்காக என் கிட்ட பொண்ணு
கேட்டுடாதே... எனக்கே இன்னும் கல்யாணம் ஆகல... ஒருத்தனும் பொண்ணு கொடுக்க மாட்டேங்குறான் .." என்று விஷ்ணு வெளிப்படையாக குமுற


"உங்களுக்கா சார் ஆளில்லை.."


" அறிவில்லையான்னு கேளு சந்தோஷப்படறேன்.... ஆள் இல்லையானு கேக்காத கடுப்பாயிடுவேன்...." என மீண்டும் பொங்கிய விஷ்ணுவைப் பார்த்து அர்ஜுன் சிரிக்க, இவ்விருவரையும் பொதுவாகப் பார்த்து,


" சார் ,நேத்து அரஸ்ட் பண்ண ஆளு கேள்வி கேட்டா பதில் சொல்ல மாட்டேங்குறான் சார்... கழுத்தை திருப்பிக்கிறான் சார் ..." என கூறியபடி இன்ஸ்பெக்டர் யாதவ் முன்னே நடக்க, அவரை இருவரும் பின் தொடர, உள் அறையில் தரையில் அமர்ந்திருந்தவன் இவர்களைப் பார்த்ததும் மீண்டும் தலையை குனிந்து கொண்டான்.


" டேய், என்னா... புது பொண்டாட்டி மாதிரி அடிக்கடி தலைய குனிஞ்சுக்கிற... பதில் சொல்லுடா ..." என்று விஷ்ணு அவனை பார்த்து எகிற,


" இவனை எங்க அரெஸ்ட் பண்ணீங்க .." என்றான் அர்ஜுன் யாதவை நோக்கி.


" சார் , நேத்து ராத்திரி, இவன் ஏ-1 பார்ல குடிச்சிட்டு, இன்னும் ஆறேழு மாசத்துல மும்பையில என்னென்னமோ நடக்கப்போகுது ... பாகிஸ்தான்ல பெரிய மாற்றம் வரப்போகுதுன்னு ... எல்லார் முன்னாடியும் ரெண்டு மூணு தடவ உளறி இருக்கான் சார் ... அந்த பார் மேனேஜர், எனக்கு போன் பண்ணி சொன்னாரு... இமெடியட்டா இவனை அரெஸ்ட் பண்ணி இங்க கொண்டு வந்துட்டோம் சார்... சரி போதை தெளியட்டும்னு ராத்திரி கேள்வி கேட்க வேணாமேன்னு விட்டுட்டு காலையில கேள்வி கேட்டா பதில் சொல்ல மாட்டேங்குறான் சார் ..."


" எஃப்.ஐ.ஆர் (FIR) போடல இல்ல .." என்ற அர்ஜுனனைப் பார்த்து


" இல்ல சார் ..."


" இவனை அரெஸ்ட் பண்ணி இங்க கூட்டிட்டு வந்ததை யாரும் பார்க்கல இல்ல ..."


" இல்ல சார், எல்லாரும் போதைல இருந்தாங்க ..."


" அப்ப ஒன்னு பண்றேன் ... இவனை நான் க்ளோஸ் பண்ணிடறேன்...நீ பாடியை டிஸ்போஸ் பண்ணிடு..." என்றபடி அர்ஜுன், தனது பிஸ்டலை எடுத்து கீழே அமர்ந்தவனின் நெற்றியில் வைக்க, அவன் அலறியபடி


" சாப்(sahib...)இப்ப தான் சாப் கொஞ்சம் கொஞ்சமா ஞாபகத்துக்கு வருது... எனக்கு தெரிஞ்சதை சொல்லிடறேன் சாப் ....என்னை விட்டுடுங்க சாப்... நான் தீவிரவாதி இல்ல சாப்..."


" டேய் **** , பொற***கு,
*****, தீவிரவாதின்னு நீயே ஒத்துக்கிட்டாலும் நாங்க ஒத்துக்க மாட்டோம்... அதுக்கெல்லாம் ஒரு மூஞ்சி வேணும்... கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுடா பரதேசி ..." என்ற விஷ்ணு, தன் தலையை அழுந்த கோதியபடி,


" ச்சே, காயத்ரி மந்திரம் சொன்ன வாயால கெட்ட வார்த்தையை பேச வச்சிட்டான் ... கெட்ட வார்த்தை சொல்லாம உன் மூஞ்சை எல்லாம் தீட்டவும் முடியல ... " என வெளிப்படையாக நொந்து கொண்டிருந்த போது,


கீழே அமர்ந்திருந்தவன் அர்ஜுனை பயத்தோடு பார்த்தபடி,


" சாப், எம் பேரு சமீர்..
நான் ஈசி ஃப்ளை(Easy fly) டாக்ஸி டிரைவர் சாப் ... நேத்து சாயங்காலம் ரெண்டு பேரை சத்ரபதி சிவாஜி மகராஜ் இன்டர்நேஷனல் ஏர்போர்ட்ல டெர்மினல் 2ல இறக்கி விட்டேன் சாப் ...
அவங்க ரெண்டு பேரும் பேசிக்கிட்டதை தான் சாப் நான் பார்ல சொன்னேன் ..."


" அவங்க ரெண்டு பேரும் அப்படி என்ன பேசிக்கிட்டாங்க..." என்றான் அர்ஜுன் பார்வையைக் கூர்மையாக்கி .


" சாப், அவங்க ரெண்டு பேரும், இன்னும் ஆறேழு மாசத்துல மும்பையில பெரிய சம்பவம் நடக்கப்போகுது ... அதனால பாகிஸ்தான்ல பெரிய மாற்றம் வரும்னு பேசிக்கிட்டாங்க சாப் ..."


" மும்பைல சம்பவம் நடந்தா, பாகிஸ்தான்ல எப்படி மாற்றம் வரும்... " என்று தனக்குத்தானே வெளிப்படையாக கேட்டுக் கொண்டவன்
" சரி, எந்த மொழில பேசிக்கிட்டாங்க ..." என்றான் விஷ்ணு.


" நிறைய பஞ்சாபியும், சிந்தியும்(Sindhi) கலந்து பேசினாங்க சாப் ... அப்புறம் கொஞ்சம் உருதுல பேசினாங்க எனக்கு அது சரியா புரியல... கடைசியா அரபில பேசினாங்க சாப்..."

" உனக்கு எப்படி அவங்க பேசுனது புரிஞ்சது..." என்ற விஷ்ணுவுக்கு


" சாப், என் வைஃப்(wife) பஞ்சாபி சாப்... அதனால எனக்கு பஞ்சாபியும் சிந்தியும் ஓரளவு நல்லாவே தெரியும் சாப்... அது மட்டும் இல்ல 10 வருஷம் நான் டிரைவரா சவுதில வேலை பார்த்து இருக்கேன் சாப்... அதனால எனக்கு கொஞ்சம் அரபியும் தெரியும் சாப் ..."


" எந்த பிளைட்ல போறதா
பேசிக்கிட்டாங்க ..." என்ற அர்ஜுனிடம்


" நான் கவனிக்கல சாப் ..."


" அவங்க இந்தியன்ஸா, பாகிஸ்தானிஸா, இல்ல வேற யாராவதா ..."


" பொதுவா இந்தியன்ஸ் அரபி பேச மாட்டாங்க சாப் ... அதில்லாம அவங்க பேசின பஞ்சாபியும் சிந்தியும் , நாம பேசுற மாதிரி இல்ல சாப் ...வேற மாதிரி இருந்தது.. அவங்க பாகிஸ்தானீஸ் தான்னு நினைக்கிறேன்..."


" அவங்க ரெண்டு பேரும் பாக்க எப்படி இருந்தாங்க..." என விஷ்ணு கேட்க,


" அதுல ஒருத்தர் ரொம்ப வயசானவரு...
இன்னொருத்தர் நடுத்தர வயசுல, இதோ.... இந்த அங்கிள்(Uncle) மாதிரி இருந்தாரு சாப்..." என அருகில் நின்றிருந்த யாதவை காட்டி அவன் கூற,


" அடிங் , **** , மூஞ்ஜை பேசிடுவேன்.. யாரைப் பார்த்து அங்கிள் மாதிரி இருக்கேன்னு சொன்ன.. அதுவும் உனக்கு நான் அங்கிளா..." என எகிறிய யாதவ்


" சார், இவன் சுத்த சாவுகிராக்கி சார் ...
இன்னிக்கு காலையில சாய்(Chai) கேட்டான் சார் ... வாங்கிக் கொடுத்தோம் ... அப்புறம் போஹா(அவல் உப்புமா) கேட்டான் சார்... அதையும் வாங்கி கொடுத்தோம் ... இப்ப மதியம் லஞ்சுக்கு பிரியாணி வேணுமாம் சார்.. அதுவும் தாஜ் ஹோட்டல் பிரியாணி...


இவன் கிட்ட நம்பர் வாங்கி இவன் பொண்டாட்டிக்கு போன் பண்ணா,
அந்த பொம்பள, இவன வீட்டுக்கே அனுப்பாதீங்க.. வீட்டுக்கு வந்தா குடிச்சிட்டு பிரச்சனை பண்றான்... நீங்களே வச்சுக்கோங்கன்னு சொல்லுது சார்..."


" அப்ப நல்லதா போச்சு ... இனிமே இவனை தேடி யாரும் ஜாமீன் எடுக்க வர மாட்டாங்க ... இவன் சரியா பதில் சொல்ற வரைக்கும் இங்கேயே இருக்கட்டும் ... ஒன் திங் யூ டூ யாதவ்,
ஏர்போர்ட்டுக்கு போன் பண்ணி, கோவிட் கைடுலைன்ஸ் ஃபார் இன்டர்நேஷனல் அரைவல்ஸ் , டொமஸ்டிக் அரைவல்ஸ் என்னென்னனு கேளுங்க ... நேத்து டெர்மினல் 2ல டேக் ஆஃப், லேண்ட் ஆன எல்லா பிளைட்ஸோட டி பார்ச்சர் அண்ட் அரைவல் டீடைல்ஸ கலெக்ட் பண்ணுங்க, அதுல யார் யாரெல்லாம் ட்ராவல் பண்ணி இருக்காங்கன்ற டீடைல்ஸை வாங்குங்க..."


என அர்ஜுன் பேசிக்கொண்டிருக்கும் போது, ஏதோ பேச்சுக்குரல் கேட்டு எதேச்சையாக காவல் நிலையத்தின் வாசலை பார்த்த விஷ்ணு , ஆனந்தம், இன்ப அதிர்ச்சி , ஆர்ப்பரிக்கும் மனது என தனித்தனியே விவரிக்க முடியாத கலவையான மனநிலையில் ஒரு நொடி உறைந்தவன், மீண்டும் ஒரு முறை ஆழ்ந்து நோக்க, என்னதான் மாஸ்க் அணிந்திருந்தாலும், அவன் பார்த்து ரசித்த, அவன் மனதை கொள்ளை கொண்ட கண்கள் அல்லவா ....எப்படி மறக்க முடியும் ...


உடனே யாதவிடம்,


" அங்க செகப்பா, கொஞ்சம் குண்டா ஒரு பொண்ணு நிக்குதே, அந்த பொண்ணு எதுக்காக வந்து இருக்கான்னு கொஞ்சம் கேட்டுட்டு வாங்க ..." என்றதும் யாதவ் அவ்விடத்தை விட்டு நகர,


" யாருடா அது ..." என்றபடி அர்ஜுனும் திரும்பி காவல் நிலையத்தின் வாயிலைப் பார்க்க ,


" ஸ்ரீலக்ஷ்மி ரங்கநாதன் , தூரத்து சொந்தம் ..."


" அது என்ன தூரத்து சொந்தம்..."


" பொண்டாட்டி மாதிரி ..."


" என்னது ....பொண்டாட்டி... மாதிரியா ... இந்த மாதிரி ஒரு உறவ நான் கேள்விப்பட்டதே இல்லையே டா... ஒன்னு பொண்டாட்டின்னு சொல்லு, இல்ல கட்டிக்கப் போற பொண்ணுன்னு சொல்லு...
இது என்ன புதுசா இருக்கு ..."


" அது ஒரு பெரிய கதை பையா(bhaiya) ... அப்புறம் சொல்றேன் .." என்றான் விஷ்ணு, யாதவ் அப்பெண்ணிடம் பேசிக்கொண்டிருப்பதை பார்த்தபடி .


விஷ்ணுவிற்கு 28 வயதாகிறது. அர்ஜுன் விஷ்ணுவை விட நான்கு வயது பெரியவன். விஷ்ணு அர்ஜுனை சில நேரம்
'பையா', 'அண்ணா'
என்று மரியாதையோடு விளிப்பான் ... சில நேரம் 'அர்ஜுன்' , 'சீனியர்' என்றும் சில நேரம் 'வா, போ' என்றும் அழைப்பான் ... அவனுடைய மனோநிலையும், அங்கிருக்கும் சூழலுமே அவனுடைய அழைப்பை உறுதி செய்யும்.


" நேத்திலிருந்து யார் முகத்துல முழிச்சேன்னே தெரியல .... வர்றதெல்லாம் ஏழரையாவே இருக்கு ....." என்று வெளிப்படையாக புலம்பியபடி வந்த யாதவ், விஷ்ணுவிடம்


" சார் , அந்த பொண்ணு பேரு ஸ்ரீலட்சுமி ரங்கநாதன் .... மதராஸி போல ... மராட்டி சுத்தமா புரியல ... ஹிந்தி அரைகுறையா பேசுது ... இங்கிலீஷ்ல ஃபாஸ்ட்டா(fast) பேசுது சார் ... அதான் புரிஞ்சிக்க கொஞ்சம் லேட்டாயிடுச்சு ... ஏதோ ஹோண்டா ஆக்டிவாவை தொலைச்சிடுச்சாம்... கம்ப்ளைன்ட் கொடுக்க வந்திருக்கு ..."


" இவ ஹோண்டா சிட்டியை தொலைச்சாலே, தேட வேண்டிய அவசியம் இல்ல.... ஒரு ஸ்கூட்டிகாகவா இவ்ளோ தூரம் வந்திருக்கா.." என்று முணுமுணுத்த விஷ்ணு


" யாதவ், நீங்க அந்த ரெண்டு பொண்ணுங்களையும் உள்ள கூப்பிடுங்க... " என்றான்.


" சுனோ, ஓ தோ லடுகியோன் கோ இதர் பேஞ்சு தோ ..." (யோவ்,அந்த ரெண்டு பொண்ணுங்களையும் இங்க அனுப்பு யா...) என்று யாதவ் கூறிய மாத்திரத்தில்,


ஸ்ரீ லட்சுமியும், அவளுடன் இருந்த பெண்ணும் உள் அறை நோக்கி வர, வேண்டுமென்றே அவர்களுக்கு முதுகு காட்டி நின்ற விஷ்ணு, அவர்கள் அருகில் வந்ததும், திரும்பிப் பார்க்க,


அவனை எதிர்பாராமல் அங்கு கண்டதும் இம்முறை இன்ப அதிர்ச்சியில் உறைந்து போனது ஸ்ரீ தான்.


தன் முகத்திலிருந்த மாஸ்க்கை விலக்கியபடி
அவன் முகத்திலிருந்து பார்வையை விலக்காமல், ஓரிரு நொடி
உறைந்திருந்தவள், சுய உணர்வு பெறும் போது ,அவள் கண்ணில் மெல்லிய நீர்த்திரையிட, அதில் தவிப்பு, ஏக்கம் , காதல் என அனைத்தும் கரைபுரண்டோட,
" விஷூ...." என்று அவளது உதடுகள்
சத்தம் வராமல் உச்சரித்ததை கண்டுகொள்ள வேண்டியவன் கண்டுகொள்ள, அவன் முகத்தில் தெரிந்த புரிதலை , ஒருவித நாணத்துடன் எதிர்கொண்டு அவள் தலை குனிந்து கொண்டாள்.


உன்னை தாண்டி கிட்டத்தட்ட ஒரு வருஷ லாக் டவுன் டைம்ல தேடிகிட்டு இருந்தேன் ... இவளை கண்ணுல காட்டினதுக்கு, தேங்க்ஸ் எ லாட் தாத்தா ... என விஷ்ணு மானசீகமாக தன் தாத்தாவுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டிருக்கும் அதே வேளையில் ,


இவனைப் பார்த்து கிட்டத்தட்ட அஞ்சு வருஷமாச்சு இல்ல .. என மானசீகமாக நிம்மதி பெருமூச்சு அவள் விட,


இவ்விருவருக்கும் இடையே நடக்கும் மொழியற்ற சம்பாஷணையை நொடியில் புரிந்துகொண்ட அர்ஜுன்,
குரலை உயர்த்தி செறும, சூழ்நிலையை புரிந்துகொண்ட விஷ்ணு பொங்கி எழுந்த சிரிப்பை மறைத்தபடி ஸ்ரீயை அணுவணுவாய் பார்த்துக்கொண்டே


" வெல், நீ உன் ஹோண்டா ஆக்டிவாவை தொலைச்சிருக்க ..."


" ம்ம்ம்ம்..."


" எங்க தொலைச்ச..."


" ரெண்டு தெருவுக்கு முன்னாடி இருக்கிற சிவாஜி மஹராஜ் சிலை கிட்ட வண்டிய நிறுத்திட்டு ஷாப்பிங் போயிருந்தேன் ... திரும்பி வந்து பார்த்தா வண்டி அங்க இல்ல ...தொலைஞ்சிடுத்து..."


" இது என்ன தமிழ்நாடா ... தெற்காசியாவையே கட்டி ஆண்ட ராஜராஜ சோழன், பூலித்தேவன், நரசிம்மவர்மனுக்கு சிலை வைக்காம திரும்பின இடத்துல எல்லாம் அரசியல்வாதிங்க சிலை இருக்கிறதுக்கு... இது மகாராஷ்டிரா ... எல்லா இடத்துலயும் சிவாஜி மகாராஜ் சிலை தான் இருக்கும்..
திருப்பதில போய் மொட்டையை தேடினா மாதிரி பதில் சொல்லக்கூடாது .." என்று குரலை உயர்த்தி வேண்டுமென்றே விஷ்ணு மிரட்ட,


சற்று நேரத்திற்கு முன்பு அவளது கண்ணில் தோன்றியிருந்த நாணம் மறைந்து , பய உணர்வு தலை தூக்குவதை அவள் முகம் வெளிச்சம் போட்டு காட்ட, மிகுந்த சுவாரஸ்யத்தில் இருவருக்கும் இடையே நடக்கும் உரையாடல்களை ரசிக்க ஆரம்பித்தான் அர்ஜுன்.


" சரி, மும்பை வந்து எவ்ளோ நாளாச்சு.."


"கிட்டத்தட்ட ஒன் இயர் ஆக போற்து ..."


" லைசென்ஸ் எடு ..."


" வண்டி வாங்கி 15 நாள் தான் ஆர்து..
லைசன்ஸ் எடுக்கலாம்னு நினைச்சுட்டுண்டு இருந்தேன் அதுக்குள்ள வண்டியே தொலைஞ்சிடுத்து..." என்றவளின் கலங்கிய பதில் இருவருக்கும் சிரிப்பை பொங்கி எழச் செய்ய, விஷ்ணு அடக்கியபடி அடுத்த கேள்விக்கு தாவ, அர்ஜுன் சிரிப்பை அடக்க முடியாமல், தலைகுனிந்தபடி அதனை மறைத்துக் கொண்டிருந்தான்.


" கிரைம் நம்பர் ஒன்... லைசென்ஸே இல்லாம நீ வண்டி ஓட்டி இருக்க... கிரைம் நம்பர் டூ... வண்டியையும் தொலைச்சிருக்க.." என்றவன் பேசப் பேச, அவள் முகம் பொலிவிழந்து போக,


" சரி, யார் இது , உன் ஃப்ரெண்டா..."


" இல்ல , இவ பக்கத்து ஆத்துல குடியிருக்கா... டென்த் கிளாஸ் படிக்கிறா..."


" ஏன் இதை விட சின்ன பொண்ணு உனக்கு கிடைக்கலையா... கூட கூட்டிட்டு வர..."


" இவளோட தங்கை சிக்ஸ்த் ஸ்டாண்டர்ட் படிக்கிறா, முதல்ல அவளை தான் கூப்பிட்டேன் ... அவ வர மாட்டேன்னுட்டா... அதான் இவளை அழைச்சிண்டு வந்தேன் ..."
இம்முறை அர்ஜுனுக்கு சிரிப்பை அடக்கவே முடியாமல்


" ஐ அம் சாரி டா ... என்னால கண்ட்ரோல் பண்ணவே முடியலை... " என்று சிரித்தவன் " நீ அவள கலாய்க்கிறயா... இல்ல அவ உன்னை கலாய்க்கிறாளான்னு ஒன்னுமே புரியலையே டா..." என்று சன்னமாக விஷ்ணுவிற்கு மட்டும் கேட்கும் ரீதியில் மராட்டியில் மொழிய,


" சரி வண்டியை கொடுத்தா குரங்குபெடல் அடிச்சிக்கிட்டாவது வீடு போய் சேர்ந்துடுவியா..." என்ற விஷ்ணுவை ஸ்ரீ முறைத்து பார்க்க,


" இல்லம்மா...., உனக்கு வண்டி ஓட்ட தெரியுமா ... சரியா வீடு போய்
சேர்ந்துடுவியான்னு தெரிஞ்சுக்க தான் கேட்கிறேன் ... சரி வீடு எங்க இருக்கு ..."


" பவாய்ல (Powai)... என் வண்டி கிடைச்சிடுமா .." என ஆவலாக கேள்வி எழுப்பியவளிடம்


" யாருக்கு தெரியும் ... சரி உன் வண்டியை எந்த பார்க்கிங்கில் பார்க் பண்ண p1னா(parking 1) இல்ல p2 (parking 2) வா ..." என்று விஷ்ணு கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கும் போதே,


யாதவ் விஷ்ணுவை நெருங்கி சன்னமாக,


" சார், வண்டி ராங்க் (Wrong) பார்க்கிங்கில் இருந்திருக்கும் சார் ...அதனால டூவீலரை ஆர்டிஓ ஆபீஸ்க்கு டோ(Tow) பண்ணிக்கிட்டு போயிருப்பாங்க ..."


" தெரியும் யாதவ்...அதான் கேட்டுகிட்டு இருக்கேன் ..." என்றவன் பார்வையை திருப்பி ஸ்ரீயை பார்க்க, அதன் அர்த்தத்தை புரிந்து கொண்டவள்


" நேக்கு பார்க்கிங் பத்தி ஐடியா இல்ல..."


" ப்ரைம் லோகேஷன்ல, ஒத்த படை தேதில P1 பார்க்கிங்...இரட்டை படை தேதில P2 பார்க்கிங்ல டூவீலர நிறுத்தனும்னு உனக்கு தெரியாதா ... உன் வீட்டுல துவாரபாலகர்கள் மாதிரி ரெண்டு அண்ணனுங்க இருப்பானுங்களே.. இது கூடவா உனக்கு சொல்லிக் கொடுக்கலை ..." என்று விஷ்ணு கூறி முடிக்கும் முன், அவள் முகத்தில் ஒரு வித பயம் பரவுவதை உணர்ந்து கொண்டவன்,


" சரி சரி நீ என்ன பண்ற ... நான் எப்ப எல்லாம் கூப்பிடறேனோ அப்ப எல்லாம் இங்க வந்து, வண்டி கிடைக்கிற வரைக்கும் சைன் போட்டுட்டு போற..." என்றவன் கூறிய மாத்திரத்தில்,


" இது என்னடா புது சட்டம்...வண்டிய தொலைச்சவங்க ஏன்டா சைன் போடணும் ..." என அர்ஜுன் சன்னமான குரலில் குதூகலத்தை விதைத்தபடி கிசுகிசுக்க, அதே வேளையில்


" நான் எதுக்காக இங்க வந்து சைன் போடணும்..." என மெல்ல ஸ்ரீ கேள்வி எழுப்ப,


" நீ தீவிரவாதியா இருக்கலாம்... வேணுமுன்னே இல்லாத வண்டிய தொலைச்சுட்டேன்னு பொய் சொல்லி, எங்களை உளவு பார்க்க
வந்திருக்கலாம்... நாங்க எப்படி உன்னை நம்புறது ... நீ உண்மையா வண்டியை தொலைச்சியிருந்தா , வண்டி கிடைக்கிற வரைக்கும் டெய்லி வந்து சைன் போடுவ ...எங்களுக்கும் உன் மேல நம்பிக்கை வரும் , நம்பிக்கை வந்ததுக்கு அப்புறம் நாங்க வண்டிய தேடுவோம் ..." என்ற விஷ்ணுவின் பேச்சை கேட்டு,


ஸ்ரீ 'ஆ' என்று வாயை திறந்தபடி உறைந்து நிற்க, மற்ற ஆண்கள் சிரிப்பை அடக்க முயன்று கொண்டிருக்கும் போது, முதலில் சுதாரித்துக்கொண்ட விஷ்ணு,


" நீ வண்டியை பத்தின எல்லா டீடெயில்சும் இவர் கிட்ட கொடுத்துட்டு கெளம்பு..." என யாதவை காட்டி கூற, தயங்கி நின்ற ஸ்ரீ


" கூப்பிடறேன்னு சொன்னேளே..." என்றதும்


அடிக்கள்ளி, உனக்கு என் நம்பர் வேணுமா.... என்றெண்ணிவன் மென் புன்னகை பூத்தபடி


" உன் நம்பரை உன் கிட்ட கேட்டு தெரிஞ்சுகிட்டா , இவ்ளோ நாளா நான் செஞ்சுகிட்டு இருக்கிற இந்த வேலைக்கு என்ன மரியாதை .... ப்ளூடூத் ஐ ஆன் பண்ணியே வச்சி இருக்க போல இருக்கு ... உன் நம்பர் என்கிட்ட இருக்கு இதானே ..." என்று காட்டி


"மெசேஜ் அனுப்புறேன் போ ..." என்றவனை அவள் ஆச்சரியமாக பார்க்க, அதே வேளையில் விஷ்ணுவின் பார்வையும் அவளை உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை அளவு எடுத்தது.


மென்மையான லாவண்டர் நிற சல்வார் அணிந்து, முதுகு வரை இருக்கும் கட்டையான கூந்தலை குதிரைவாலிட்டு , ஒப்பனை ஏதுமில்லாமல் சிறிய லாவண்டர் நிற பொட்டில் ஜொலித்தவளிடம்


" ம்ம்ம்ம், முன்ன விட கொஞ்சம் வெயிட் போட்டிருந்தாலும் அம்சமா தான் டி இருக்க ...." என அவளுக்கு மட்டும் கேட்குமளவுக்கு
அவன் கிசுகிசுக்க, அவனது பேச்சு புரியாமல்


" என்ன சொன்னிங்கோ..."


" ஒன்னும் இல்ல... அப்புறம் சொல்றேன்..." என்றவனிடம்


" நீங்க போலீசா ..." என ஆர்வத்துடன் அவள் கேள்வி எழுப்ப , அதற்கு சன்னமாக


" உன் புருஷன் ..." என்றான் கண்கள் சிமிட்டி.


பிறகு அங்கு வந்த ஏட்டையா ஸ்ரீயிடம் வண்டியை பற்றிய தகவல்களை கேட்டுத் தெரிந்து கொண்டிருக்கும் போது, யாதவ் விஷ்ணுவிடம்


" ஓ கோன் ஹ ..." என ஹிந்தியில் ஸ்ரீயை பற்றி விசாரிக்க


" வோ, மேரீ பத்தினி பண்ணே ஜா ரஹி ஹ.. மிஸ்ஸஸ் விஷ்ணு நாராயண்..."( எனக்கு மனைவியாக போகிறவள்...) என சிலாகித்து
கூறியவனை அர்ஜுன் ஆச்சரியமாக பார்க்க


வழக்கம் போல் மராட்டிக்கு மாறிய யாதவ்,


" உள்துறை உளவுத்துறை எல்லாம் அவங்களை பேட்டி எடுக்கும் போதே நினைச்சேன் சார்... பெரிய ஆளா தான் இருப்பாங்கன்னு ... இப்பவே போய் ஆர்டிஓ ஆபீஸ்ல இருக்கிற எல்லா ரெட் கலர் ஹோண்டா ஆக்டிவாவையும் எடுத்துகிட்டு வர சொல்றேன் சார் ...
பாபியோட வண்டி எதுன்னு பார்த்து அவங்களே எடுத்துக்கிடட்டும்... "


" அதெல்லாம் வேணாம் யாதவ் ... அவளோட வண்டியை மட்டும் எடுத்துக்கிட்டு வந்து ஸ்டேஷன்ல வைங்க ... மத்ததை அப்புறம் பாத்துக்கலாம் ... அப்புறம் ஒரு ஆட்டோவை கூப்பிட சொல்லுங்க..."


" கவலையே படாதீங்க சார்... நமக்கு தெரிஞ்ச ஆட்டோகாரர் இருக்காரு ...அவரோட வண்டியில பாபியை அனுப்பிட்டு, அவங்க பின்னாடியே போய் அவங்க வீட்டுக்குள்ள நுழையற வரைக்கும் நானே ஃபாலோ பண்ணிடறேன் ..."


" பார்த்து... அவங்க அப்பா ஒரு மாதிரி யாதவ் ..." என்று முன்னெச்சரிக்கை செய்தவன், ஸ்ரீயை சைகையால் அழைத்து


" என்னா... ஆட்டோ பிடிச்சு கொடுத்தா சரியா வீடு போய் சேர்ந்திடுவியா..."


" ம்ம்ம்ம்..."


"உனக்கு மராட்டி தெரியாது ஓகே...ஹிந்தி பேசுவ இல்ல ..."


" ம்ம்ம்... இத்தனை நாள் துபாய்ல இருந்திருக்கேனே...." என பெருமிதத்தோடு கூறியவளைப் பார்த்து


" அதான் தப்ப தப்பா பேசறீயா..." என்றவனை அவள் முறைக்க


" நான் சொல்லலம்மா... என்னை முறைக்காத.... இந்த இன்ஸ்பெக்டர் தான் சொன்னாரு.. நீ சரியா பேசலன்னு..." என யாதவை அவன் கோர்த்து விட,


" பாபி ஏன் என்னை முறைக்கிறாங்க..."


" உங்களைப் பத்தி ரொம்ப பெருமையா சொல்லிகிட்டு இருக்கேன் யாதவ்.. அதான்... சரி நீ கிளம்பு..." என்றவனுக்கு அவளை அவள் வீட்டிற்கு அனுப்ப மனமே இல்லை ...
இப்படியே அவளைத் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று விடலாமா என்ற எண்ணம் தலை தூக்கிய நிலையில்,


இப்ப வேணாம் ... அதுக்குன்னு நேரம் வரும்... எனத் தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டவன்


ஆட்டோவில் அமர்ந்தபடி வெளியே தலை நீட்டி, ஆர்வத்துடன் பார்த்தவளை பார்த்து கையசைத்து வழியனுப்ப, அப்போது அவன் முதுகில் அர்ஜுன் ஓங்கி ஒரு அடி வைத்தபடி,


" யாருடா அது ....மாமி மாதிரி இருக்கு..."


" மாமியே தான் ..."


" உன்னை மாதிரி க்ராஸா(cross)... "


" ம்ச்... இல்ல ...அக்மார்க் அக்ரஹாரம்...."
என்றவனிடம் நினைவு வந்தவனாய் ,


" டேய், உள்ள இருக்கிற அந்த மூஞ்சி தீவிரவாதி இல்ல.. இந்த மூஞ்சி(ஸ்ரீ யை காட்டி) தீவிரவாதியா உனக்கு ..." என்றவனை பார்த்து விஷ்ணு குலுங்கி சிரிக்க,


" ஆழாக்கு அமுல் வெண்ணையை அப்பன மாதிரி ஒரு மூஞ்சி ....இது உனக்கு தீவிரவாதி ...உனக்கே ஓவரா இல்ல ...ஆமா... இவளையா கல்யாணம் பண்ண போற ... சைல்ட் மேரேஜ்ன்னு சொல்லி உன்னை போக்சோ சட்டத்துல அரெஸ்ட் பண்ணிட போறாங்க டா...." என மேலும் வாரியவனை பார்த்து விஷ்ணு குலுங்கி சிரித்தபடி


" அது ஒரு பெரிய கதை அப்புறம் சொல்றேன் சீனியர் ... அந்தேரில தான இருக்கீங்க ... ஃபேமிலிய கூட்டிக்கிட்டு ஒரு நாள் என் வீட்டுக்கு வாங்களேன்...
என் வீட்டுல நான், எங்க அம்மா, அப்பா தான் ... அக்காவுக்கு கல்யாணம் ஆகி அமெரிக்கால இருக்கா... அவளுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கு ...உங்க வீட்ல யாரெல்லாம் இருக்காங்க ..." என்றவனின் கேள்வி நீண்ட கொடிய நாட்களுக்கு பிறகு தன்னை மறந்து சிரித்துக் கொண்டிருந்த அர்ஜுனின் முகத்தை இருட்டு அடைய செய்ய,
உடனே அதை மறைக்க முயலும் போது, அவனது கைபேசி சிணுங்கியது.


" ஒரு நிமிஷம் விஷ்ணு ...அப்பா கூப்பிடுறாரு..." என்றவன் கைபேசியை எடுத்துக் கொண்டு சற்று தூரம் நடந்தபடி அதனை காதுக்கு கொடுக்க,


" எப்படிப்பா இருக்க ராஜா ..."


" நல்லா இருக்கேன் பா ... நீங்க எப்படி இருக்கீங்க ...."


" ம்ம்ம்... ஏதோ இருக்கேன் ... " என்று பெருமூச்சு விட்டவர்,


" ராஜா, நான் ஒன்னு சொல்லுவேன் கேப்பியா..." என்றவரின் கேள்வியிலேயே அவர் பேசப் போகும் விஷயத்தை அனுமானித்தவன், ஒருவித விரக்தி மனோநிலையில்


" சொல்லுங்கப்பா ... " என்றான்.


" இப்ப நான் காசில இருக்கேன்.... காலமான கோகிலாக்கு செய்ய வேண்டியதெல்லாம் செய்து முடிச்சாச்சு ... முக்கியமான ட்ரெய்னிங்ல இருந்ததால கோகிலா சாவுக்கு உன்னாலயும் வர முடியாம போயிடுச்சு ... சரி விடு... இப்ப அக்னியும் அஷ்வத்தும் என் கூட தான் இருக்காங்க... நேத்து ராத்திரி தான் அக்னி கிட்ட பேசினேன்... அவ கல்யாணத்துக்கு சம்மதிச்சுட்டா ... நீ என்னப்பா சொல்ற ....
எவ்ளோ நாள் தான் இப்படி தனியா இருப்ப..." என்றவரின் பேச்சு,
ஏனோ அவன் மனதில் நீண்ட நாட்களுக்கு பிறகு மெல்லிய மாருதத்தை வீச, ஓரிரு நொடி அமைதி காத்தவன்,


" சரிப்பா, கல்யாணம் பண்ணிக்கிறேன் ... " என்று மென்மையாக சொன்னவன், திடீரென ஆக்ரோஷத்துடன்


" இரக்கமே இல்லாம ரெண்டு கொலை செஞ்ச அந்த கொலைகாரி என் கல்யாணத்துக்கு வரக்கூடாது ... இதான் என்னோட ஒரே கண்டிஷன் ..." என்ற மைந்தனின் திடீர் பேச்சு, அவர் மனதில் பழைய நினைவுகளை தூண்ட,


" சரிப்பா, நிச்சயமா வரமாட்டா... அடுத்த வாரமே சிம்பிளா நம்ம கொடைக்கானல் எஸ்டேட்ல கல்யாணத்த வச்சிக்கலாம் ..." என்றவரிடம் தன் சம்மதத்தை உறுதிப் படுத்தி விட்டு விஷ்ணுவிடம் வந்தவன்,


" என்ன கேட்டுக்கிட்டு இருந்த விஷ்ணு ..."


" உங்க வீட்ல யார் யாரெல்லாம் இருக்காங்க.. ஒருநாள் குடும்பத்தோட எங்க வீட்டுக்கு வாங்கன்னு கூப்பிட்டுகிட்டு இருந்தேன்..."


" நிச்சயமா என் குடும்பத்தோட வரேன்,
என் வீட்டுல
நான், என் வைஃப்(wife) அக்னி, என் பையன் அஷ்வத் மூணு பேரு தான் ...." என்றான் அர்ஜுன்.


தகிப்பாள்



Dear readers ,


இந்த தளம் எனக்கு மிகவும் புதிது.
இந்தக் கதையைப் பற்றி ஒரு சின்ன புரோலாக் கொடுத்துள்ளேன்.
Actually preface எழுதி இருக்கணும் ..
Since the story started already...வேற வழியில்லாம கடைசியா புரோலாக்கை இணைத்துள்ளேன்.


Prologue:


அக்னி-ஸ்ரீ இரு கதாநாயகிகள் கதை.


கதாநாயகர்கள் அர்ஜுன் கிருஷ்ணா, விஷ்ணு நாராயண்.


கதைகளம் : மும்பை


கதாநாயகி அக்னி பெயருக்கேற்றார் போல் தகிப்பவள், மற்றொரு கதாநாயகி ஸ்ரீலக்ஷ்மி நிலவைப் போல் குளிர்ச்சியானவள்....


நாயகி அக்னி - க்ரைம் லேபரட்டரி அனலிஸ்ட் ( பாரன்சிக் டிபார்ட்மென்ட் )
(Forensic department -தடவியல்)


நாயகி ஸ்ரீ - கல்லூரி மாணவி
( கார்மெண்ட் டெக்னாலஜி)


ஒரு குறிப்பிட்ட கால அளவிற்குள் மும்பையில் தீவிரவாத தாக்குதல் திட்டமிடப்பட்டிருக்க , அதை அறிந்த இரு நாயகர்களும் அதனை எப்படி முறியடிக்கின்றனர் என்பதே முழு கதை.
கதை IB( இந்திய உள்நாட்டு உளவு பிரிவு) RAW Agent( இந்திய வெளிநாட்டு உளவுப் பிரிவு) ,IPS அதிகாரிகளைப் பற்றியது.


கதையோடு துறை சார்ந்த பல தகவல்களை ஆங்காங்கே துணுக்குகளாக(Snippets) கொடுத்திருக்கிறேன்.


I hope deep readers would love this story...


Its a complete political thriller ...


உடனே அரசியல்ல விருப்பமில்லாதவங்க முகம் சுளிக்க வேண்டாம் .....
வழக்கம் போல என் கதைல இருக்கிற எல்லா விஷயங்களும் இதுலயும் இருக்கு .


அழகான குடும்பம், அன்யோன்யமான காதல், ஆத்மார்த்தமான நட்பு, ஆன்மீகம், மனோதத்துவம் , அறிவியல், ஹாஸ்யம் இவை அனைத்துடன் கொஞ்சம் தூக்கலாக அரசியல் நெடி...


சொல்ல மறந்துட்டேனே, இதுல அமானுஷ்யமும் இருக்கு.... (ஆமாங்க பேய்தான் ...?)


கதைக்களம் மும்பையில் நடந்தாலும் 2 கதாநாயகர்களுக்கும் பெரிய பெரிய பிளாஷ்பேக் ...


கிட்டத்தட்ட பத்து, பத்து எபிசோட் ஃபிளாஷ்பேக் ....


ஸ்ரீவில்லிபுத்தூர்( தமிழ்நாடு), நார்த் பர்கானா ( மேற்கு வங்கம்) நாசிக் (மகாராஷ்டிரா) போன்ற இடங்களில் கதை பயணிக்கிறது.


கதை பிளாஷ்பேக் பாதி 80களில் நடக்கிறது, பாதி 2016ல் நடக்கிறது.


கதை போன வருடம் 2020 லாக் டவுனுக்கு பிறகு தொடங்குகிறது....
அதாவது போன வருடம் அக்டோபர் கடைசியிலிருந்த ஊரடங்கு தளர்விற்கு பிறகு (Unlock 5.0) கதை தொடங்குகிறது. இவை அனைத்தும் முழுக்க முழுக்க மகாராஷ்டிரா மாநிலத்தின் ஊரடங்கை அடிப்படையாகக் கொண்டது.


கதைக்கு தேவையில்லை என்பதால் கொரோனா இரண்டாவது அலையை
நான் கதையில் பயன்படுத்திக் கொள்ளவில்லை.


ஏற்கனவே பிரதிலிபியில் இந்த கதையின் முதல் ரெண்டு எபிசோடை பதிவேற்றி விட்டேன் ..இப்பொழுது நறுமுகையிலும் பதிவேற்றி இருக்கிறேன்.


ஒவ்வொரு வாரமும் ஞாயிறு (இன்றிலிருந்து) மற்றும் புதன் இரவு 10 to 10:45க்குள் அத்தியாயங்களை பதிவேற்றி விட்டு திரிகளை பகிர்கிறேன் நட்புகளே ..


ஒவ்வொரு எபிசோடும் குறைந்தபட்சம் 10 நிமிடம் , அதிகபட்சம் 20 நிமிடம் இருக்கும் .


இருபது நிமிஷம் கொண்ட முழு எபிசோட்ல
உங்களுக்கு ஒரு பூரணத்துவம் கிடைக்கும் அதோட ஒரு எதிர்பார்ப்போட முடிக்கும் போது அடுத்து வரும் அத்தியாயத்தை படிக்கும் ஆவல் அதிகமாக இருக்கும் தோழமைகளே... அதனால் தான்.

உங்களது மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன் தோழமைகளே ..
கீழ்க்கண்ட லிங்கில் உங்களது கமெண்டுகளை பதிவுசெய்யவும்.

Thread 'அக்னி-ஸ்ரீ - கருத்து திரி' https://narumugai.ink/index.php?threads/அக்னி-ஸ்ரீ-கருத்து-திரி.98/




Thanks to jaanu and prasha for giving me the opportunity.
Happy reading


ப்ரியமுடன்


ப்ரியா ஜெகன்நாதன்
 
Last edited:
அத்தியாயம்-2


இடம்: காசி


பனிப்பொழியும் இரவில், ஹோட்டல் அறையின் பால்கனியில் நின்றிருந்த அக்னிக்கு, அவள் அணிந்திருந்த ஜெர்கின், டீ-ஷர்ட் ,
ஜீன்ஸை தாண்டி குளிர் அவளது உடலை அணுவணுவாக துளைத்தெடுக்க, அதனை உணர்ந்தும் உணரா மனநிலையில்,
சற்று தொலைவில் பரந்து விரிந்து பயணித்துக்கொண்டிருந்த கங்கை நதியின் மேல் அவளது பார்வை நிலைத்திருந்தாலும், மனமோ எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனையில் மூழ்கி துடித்துக்கொண்டிருந்தது.


" அக்னி ..." என்று வாஞ்சையாக அவளது தாய்மாமன் ரகு கிருஷ்ணா அழைக்க, சுயம் உணர்ந்து மெல்ல திரும்பியவளை பார்த்து


" ரொம்ப நேரம் பனில நிக்காத.. உடம்புக்கு ஒத்துக்காதும்மா... காலைல ராஜா கிட்ட பேசினேன் ... கல்யாணத்துக்கு சம்மதிச்சிட்டான்...
அடுத்த வாரமே உனக்கும் அவனுக்கும் நம்ம கொடைக்கானல் எஸ்டேட்ல கல்யாணம்....ஆனா உன்னோட
வேலைம்மா.... " என பேச்சை அரைகுறையாக முடித்துவிட்டு , ஒருவித தயக்கத்துடன் நோக்கியவரிடம்


" மாமா, நான் ஏற்கனவே என்னோட டெல்லி வேலைய ரிசைன் பண்ணிட்டேன்... " என்றவள் மீது ரகு கிருஷ்ணா புரியாத பார்வை ஒன்றை வீசி வைத்தார், காரணம் அக்னி விரும்பிப் படித்த படிப்பு பாரன்சிக் சயின்ஸ் (forensic science - தடவியல்).


அதிலும் அவளுக்கு மிகவும் பிடித்தமான கிரைம் லேபரட்டரி அனலிஸ்ட்டாக தில்லியில் உள்ள ரீஜினல் பாரன்சிக் லேபில் பணிபுரிந்து வருகிறாள், அந்தப் பணியை அவள் ராஜினாமா செய்ததாக சொன்னது தான் அவருக்கு ஆச்சரியத்தை கொடுத்திருந்தது.


" ரொம்ப சந்தோஷம்மா... உங்க டெல்லி வீட்டை அப்படியே வாடகைக்கு விட்டுட்டு கல்யாணம் முடிஞ்ச கையோட, நீ ராஜாவோட மும்பையில செட்டில் ஆயிடு... இனிமேலாவது அந்த கடவுள் உன் வாழ்க்கையில நிம்மதியை கொடுக்கட்டும் ... அஷ்வத் தூங்கிட்டான் ...
நீயும் போய் தூங்கு ம்மா..." என்றவரிடம் விடைபெற்று கொண்டு தன் அறைக்கு வந்தவள், உறங்கிக்கொண்டிருந்த தன் நான்கு வயது மகனின் தலையை கோதியபடி, நேற்றிரவு இதே நேரத்தில்
நடந்த நிகழ்வினை மனதில் ஓட்டிப் பார்த்தாள்.


அனுமன் கட்டில் (Hanuman ghat), பௌர்ணமி இரவு ஒளியில் குளிர்ந்த காற்றில், குழந்தை அஷ்வத்தை தன் மார்போடு அணைத்தபடி, கங்கை நதியின் அருகே இருந்த திட்டின் மேல் அமர்ந்துக்கொண்டு , சற்று தொலைவில் தெரிந்த ஹரிஷ்சந்திர கட்டில்(Harish chandra ghat) பிணம் எரிந்து கொண்டிருப்பதை விழிகளில் வழியும் நீரோடு நோக்கிக்கொண்டிருந்தவளின் மனதில்,


குழந்தை வேணாம், குழந்தை வேணாம்னு எதுக்காக சொன்னீங்கன்னா இப்பதான் புரியுது அஜய் ... அஷ்வத் மட்டும் இல்லன்னா நானும் உங்க கூடவே வந்திருப்பேன் ...
இப்படித் தன்னந்தனியா குழந்தையோட கஷ்டப்பட வேண்டிய அவசியமே இருந்திருக்காது ...


இத்தனை நாளா எப்படியோ கஷ்டப்பட்டு வாழ்க்கையை ஓட்டிட்டேன்... ஆனா இனிமே என்னால ஓடி ஒளிஞ்சு, குழந்தையை
காப்பாத்திகிட்டு என்னையும் காப்பாத்திக்க முடியும்னு தோணல அஜய்...


ஒரு சமயம் நானும் அஷ்வத்தும் உங்க கிட்டயே வந்துடனும்னு தோணுது... ஆனா உங்களை போலவே நிறம், குணம் , முகவெட்டோட இருக்கிற குழந்தையை கொன்னுட்டு தற்கொலை பண்ணிக்கிற அளவுக்கு தைரியம் வரல ...அவனை இந்த உலகத்துல தன்னந்தனியா விட்டுட்டு சுயநலமா தற்கொலை பண்ணிக்கவும் மனசு வரமாட்டேங்குது ...


ப்ளீஸ் அஜய் ...ஏதாவது பண்ணி எங்க ரெண்டு பேரையும் உங்க கிட்டயே கூப்பிட்டுகோங்க...எனக்கு வாழவே பிடிக்கல ... என்றெண்ணியபடி, விழிகளில் கண்ணீர் மல்க உள்ளுக்குள் ஓங்காரமாய் அழுது கொண்டிருந்தவள், சற்று தொலைவிலிருந்து வரும் சப்தத்தைக் கேட்டு திரும்பிப் பார்க்க,


அங்கு சில சாதுக்கள் மற்றும் அகோரிகள், குளிரைப் போக்க நெருப்பை மூட்டி விட்டு அதை சுற்றி
ஏதேதோ பேசி, பாடிய படி நடனமாடிக் கொண்டிருந்தனர் .


அவர்கள் உடலில், இடையில் தரித்திருக்கும் ஒரே ஒரு வஸ்திரத்தை தவிர, தலை முதல் உள்ளங்கால் வரை சாம்பல் பூசப்பட்ட நிலையில், பின்னிப்பிணைந்த பாம்புகளைப் போல் இடையை தாண்டும் ஜடா முடி, கழுத்தில் நீண்ட கபால மாலை அணிந்தபடி
அவர்கள் எழுப்பும் அமானுஷ்ய சப்தங்கள், அவள் மனதில் ஒருவித கலக்கத்தை தோற்றுவிக்க,


இருந்தும் அவ்விடத்தை விட்டு நகர மனமில்லாமல் , அவர்களையே அவள் உற்றுநோக்கி கொண்டிருந்த போது ,அதிலிருந்த ஒரு சாது ஏதோ வேகமாக ஹிந்தியில் மொழிந்த படி அவள் அருகில் வந்தவர், அவளை நெருங்கி


"தர்மனின் பத்தினியே... கனலின் மறுமொழியான திரௌபதியே... உனக்கு ஒரு உபாயம் கூறுகிறேன் ....கேள்...


காண்டீபத்தை கையிலேந்தும் வில்லாளனின் நாமத்தோடு , கீதையைச் உபதேசம் செய்தவனின் நாமமும் கொண்ட ஒருவனால் மட்டுமே உன்னையும் உன் குழந்தையையும் காக்க முடியும் ...


ஓடு... அவனிடம் ஓடு ... சற்றும் தாமதிக்காதே...அவன் ஒருவனால் மட்டுமே, உன்னை சூழ்ந்துள்ள சூழ்ச்சியிலிருந்து உன்னை காப்பாற்றிக் கரை சேர்க்க முடியும் ...


ஓடு... அவனிடம் ஓடு... நீ தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் உனக்கும் உன் குழந்தைக்கும் ஆபத்து ... உன் விதியை மாற்றும் வல்லமை படைத்தவன் அவன் ஒருவனே ... " என தூய தமிழில் கம்பீரத்தோடு உரைத்தவரின் குரல், அவளது கணவன் அஜய்யின் குரலாகவே அவளுக்கு ஒலித்தது.


அஜய், மராட்டிய மைந்தன் ... தமிழ் என்ற வார்த்தையை தவிர தமிழே அறியாதவன்... ஆனால் இந்த சாதுவின் குரலில் வெளிப்பட்டது 100% அவளது அஜய்யின் குரலே....என்றுணர்ந்து அதில் உறைந்து போயிருந்தவளின் முகத்தில் , அந்த சாது, தன் கழுத்தில் இருக்கும் பெரிய மண்டை ஓட்டில் இருந்த சாம்பலை எடுத்து வீசி,


" கிளம்பு சற்றும் தாமதிக்காதே.." என்று மீண்டும் அவளது அஜய்யின் குரலிலேயே பிளிறியவர், அதற்கு மேல் அங்கு நிற்காமல் கூத்தாடிய படியே, பிணம் எரிந்து கொண்டிருக்கும் இடத்தை நோக்கி நடந்து, கடைசியில் புள்ளியாய் மறைந்து போனார்.


அதற்கு மேல் அங்கு அமர மனமில்லாமல், ஒன்றுமே புரியாமல், அந்த சாது கூறி சென்றதை மனதில் அசை போட்டபடி அருகிலிருந்த ஹோட்டல் அறைக்கு வந்தவளிடம், அவளது தாய்மாமன் ரகு கிருஷ்ணா,


" இத்தனை நாள் உன் அம்மா உனக்கு பாதுகாப்பா இருந்தா...இப்படி திடீர்னு ஹார்ட் அட்டாக்ல அவ இறந்து போவான்னு நான் கொஞ்சம் கூட எதிர் பாக்கல .. அவ இறந்து இன்னையோட ஒரு மாசம் ஆச்சு... உன் அம்மா உயிரோட இருக்கும் போதே ராஜாக்கும் உனக்கும் கல்யாணம் பண்ணனும்னு நினைச்சுகிட்டு இருந்தேன்...ஆனா அதைப்பற்றி உன்கிட்டயோ, கோகிலா கிட்டயோ பேச வேண்டிய சூழ்நிலை அப்ப அமையல ... இப்ப கோகிலாவும் இல்ல ... இனிமே நீ குழந்தையோட தனியா இருக்கிறது சரி இல்ல ம்மா...எத்தனை நாளைக்கு தான் இப்படி தனியா இருப்ப ....நீ ஏம்மா ராஜாவை கல்யாணம் பண்ணிக்க கூடாது ..." என்றவரின் திடீர் கேள்வியில், ஏதோ புரிந்தவளாய், அவரை உற்று நோக்கி,


" என்ன சொன்னீங்க ... திரும்ப சொல்லுங்க..." என்றாள் புரிந்து கொள்ள முயன்று.


" நீ ஏன் என் மகன் அர்ஜுன் கிருஷ்ணாவை கல்யாணம் பண்ணிக்க கூடாதுன்னு கேட்கிறேன் .." என்றவரின் அழுத்தமான பேச்சு சற்று முன் ஒலித்த சாதுவின் வாய் மொழியோடு ஒத்துப்போவதை உணர்ந்து,


'அர்ஜுன் கிருஷ்ணா' என்ற பெயரை மீண்டும் ஒரு முறை மனதிற்குள் உதிர்த்து பார்த்து உறைந்து போனவள், ஓரிரு நிமிடம் ஆழ்ந்து சிந்தித்து விட்டு பிறகு
பெருமூச்சை எடுத்து மனதை சமன் செய்தபடி


அஜய், நான் இப்ப இருக்கிற நிலைமையில , நீங்க எனக்கு காட்டின வழியா இதை எடுத்துக்கிறேன்... என மானசீகமாக தன் கணவனிடம் கூறி முடித்தவள்


" சரி மாமா ... அவருக்கு என்னை கல்யாணம் பண்ணிக்க விருப்பம் இருந்தா, ப்ளீஸ் கோ எ ஹெட் .."
என்றாள்.


அவள் ஏற்கனவே மும்பைக்கு செல்ல திட்டமிட்டு தான் டெல்லி பணியை ராஜினாமா செய்திருந்தாள்.
தற்போது அவளுக்கு டெல்லியில் வசிப்பது ஆபத்து என்றால் மும்பைக்கு குடிபெயர்தல் பேராபத்து என்றும் நன்கு அறிவாள் .


ஆனால் அவளைப் பொறுத்த மட்டில் வேறு வழியில்லை, வேறு போக்கிடம் இல்லை ... பள்ளிப் படிப்பை மும்பையில் முடித்தவள், கல்லூரி படிப்பை டெல்லியில் முடித்திருந்தாள்.
ஆதலால் இந்த இரண்டு மாநிலங்கள் மட்டுமே அவளுக்கு மிகவும் பரிச்சயம்.
அவளது நீண்ட நாள் கல்லூரி தோழி கீதா மும்பையில் பணிபுரிந்து வருகிறாள். அவளது அறிவுறுத்தலின் பேரில் தான் மும்பைக்கு குடிபெயர திட்டமிட்டிருந்தாள்.


தமிழ்நாடு அவளது பூர்வீகம் என்றாலும், அவளை அங்கு அழைத்து ஆதரிக்க யாரும் இல்லை என்று தான் இத்தனை நாட்களாக எண்ணிக் கொண்டிருந்தாள், சொல்லப் போனால் அவள் தாய் தந்தை இருந்த போதே இவ்வாறுதான் நினைத்து கொண்டிருந்தாள்.


அவளது தாயின் பிறந்த ஊர் மற்றும் தாய் மாமன் வசிக்கும் கொடைக்கானலுக்கு சிறுவயது முதல் வருடத்திற்கு ஒருமுறையாவது மூன்று நான்கு நாட்கள் சென்று தங்கியிருந்து விட்டு வருவது வழக்கம். கடந்த சில வருடங்களாக, தாய் மாமனோடு தொலைபேசி தொடர்பு மட்டும்தான், அதுவும் தேவை ஏற்பட்டால் தான்.


ஏற்கனவே தந்தை மற்றும் கணவரை இழந்து தத்தளித்துக் கொண்டிருந்தவளுக்கு போன மாதம் தாயும் இறந்துவிட நிராதரவாக நின்றவளுக்கு ஆதரவுக்கரம் நீட்டியது அவளது தாய்மாமன் ரகு கிருஷ்ணா தான்.


அவர் தற்போது மும்பையில் காவல்துறை அதிகாரியாக பணிபுரிந்து கொண்டிருக்கும் தனது மகன் அர்ஜுன் கிருஷ்ணாவை
மணந்து கொள்ள கேட்க, அவளையும் அவளது குழந்தையையும் காத்துக் கொள்ள ஒரே வழி, அவன் தான் என முடிவெடுத்து அதற்கு சம்மதம் தெரிவித்தாள் அக்னி.


**************************************
இடம்: அந்தேரி, மும்பை


இரவு வீடு திரும்பிய அர்ஜுனுக்கு , மனம் ஒரு நிலையில் இல்லை. ஏற்கனவே குற்ற உணர்வில் சிக்கித் தவித்துக் கொண்டிருப்பவனுக்கு தற்போது நடக்கவிருக்கும் அக்னி உடனான திருமணம் , அதனை மேலும் அதிகரித்திருக்க, ஏகப்பட்ட நினைவலைகள் ஒன்றன்பின் ஒன்றாக தோன்றி அலைக்கழிக்க, அறையில் இருப்பு கொள்ளாமல் சற்று நேரம்,
மொட்டை மாடிக்கு சென்று குறுக்கு நெடுக்காக நடந்தவன், மனதை திசை திருப்ப என்னும் போது திடீர் யோசனை உதிக்க, உடனே யாதவை அலைபேசியில் தொடர்பு கொண்டு ஸ்டேஷனுக்கு வருமாறு பணித்தான்.


" யாதவ், அந்த டிரைவர் வேற ஏதாவது சொன்னானா ..." என்றான் அர்ஜுன் காட்கோபர் போலீஸ் ஸ்டேஷனில் மஃப்டி உடையில்.


" இல்ல சார் ..." என்றவனை பின் தொடர்ந்து, அந்த ட்ரைவர் அடைபட்டிருக்கும் சிறையை அடைந்தவன்,


" யாதவ், இவன் கிட்ட நம்ம எல்லா கவர்மெண்ட் டேட்டா பேஸ்ல
இருக்கிற போட்டோஸை காட்டி அவன் பார்த்தா அந்த ரெண்டு பேர் அதுல இருக்காங்களான்னு அடையாளம் காட்ட சொல்லுங்க .... " என்றான் அந்த டிரைவரை பார்த்தபடி.


" சாப், அந்த ரெண்டு பேரும் மாஸ்க் போட்டிருந்தாங்க , அதனால நான் சரியா முகத்தை பாக்கல ...." என்றான் அந்த ட்ரைவர் அர்ஜுனிடம் நேரடியாக.


" ஓ காட் ...மறந்தே போயிட்டேன் ..
சரி, ஏர்போர்ட் மெயின் என்ட்ரன்ஸ்ல இருக்கிற சிசிடிவி கேமரா ஃபுட்டேஜை
பார்த்தா இவன் அவங்களை எங்க இறக்கி விட்டான், அவங்க எந்த பிளைட்ல போனாங்கன்னு ஒரு ஐடியா கிடைக்குமில்ல ..."


" சாப் , வழக்கமா எல்லாரும் கார் நிறுத்துற இடத்துல வேண்டாம்னு சொல்லிட்டு கொஞ்சம் தள்ளி வேற இடத்துல காரை நிறுத்த சொன்னாங்க சாப்..
அது மட்டும் இல்ல, கார்ல இருந்து இறங்கி அவங்க ஏர்போர்ட் உள்ளே போகாம, வேற ஒரு காரை நோக்கி போனாங்க சாப்..."


" அவங்க மாஸ்க் போட்டிருந்தாலும் வேற ஏதாவது அவங்ககிட்ட வித்தியாசமா , உனக்கு தெரிஞ்சதா..." என்ற அர்ஜுனின் கேள்விக்கு ஓரிரு நிமிடம் யோசித்தவன்,


" சாப், அதுல வயசான மாதிரி இருந்த
அந்த ஆளோட கண்ணு முழி பச்சையும் நீலமும் கலந்த மாதிரி வித்தியாசமா இருந்தது, இடது கண்ணு புருவம்னு நினைக்கிறேன்.... அதுல பாதி புருவம் இல்ல சாப் ....


அப்புறம், அந்த யங்கான ஆளோட (young) முகத்தை பார்க்கவே முடியல... ஆனா அந்த ஆளோட மணிக்கட்டுக்கு கீழ 'ஓம்'னு கருப்பு நிறத்துல ஹிந்தில பச்சை குத்தி இருந்தது..."


" வாட் ... பாக்கிஸ்தான் காரன் எதுக்காக ஓம்னு பச்சை குத்திக்கணும்... அதுவும் கைல... நல்லா பாத்தியா அது
'ஓம்' சிம்பள் தானா..."


" ஆமா சாப், அந்தாள் குனிஞ்சு லக்கேஜ் எடுக்கும் போது அவன் போட்டிருந்த வெள்ளை குர்தாவை மடிச்சு விட்டான் ... அப்ப தான் பார்த்தேன் ..."
என்பதைக் கேட்டு ஒன்றுமே புரியாமல் திணறியவன் ,


" யாதவ், ஃபிளைட் டீடைல்ஸ் எல்லாம் கிடைச்சுதா ..."


" கிடைச்சது சார் ..."


" குட், கோவிட் ரெஸ்ட்ரிக்ஷன்ஸ் இருக்கிறதால டொமஸ்டிக் அண்ட் இன்டர்நேஷனல்க்கு மினிமம் பிளைட்ஸ் தான்
ஆப்பரேட் பண்ணியிருப்பாங்க ... அதுமட்டுமில்ல அங்கங்க கோவிட் செக்கப் நடந்திருக்கும் ... கண்டைன்மெண்ட் சோன்ல(containment zone) இருந்து வந்திருக்காங்களான்னு செக் பண்ணி பேசஞ்சரோட அட்ரஸ் டீடைல்ஸ் வாங்கியிருப்பாங்க... சோ அவங்க ட்ராவல் பண்ணி இருந்தா நிச்சயமா சிசிடிவி புடேஜ்ல எங்கேயாவது ஒரு இடத்துலயாவது மாட்டுவாங்க..." என்ற அர்ஜுனின் பேச்சுக்கு பதிலேதும் கூறாமல் யாதவ் அமைதி காக்க ,


" என்ன யாதவ், ஒரு மாதிரி இருக்கீங்க ..."


" அதான் நீங்களே சொல்லிட்டீங்களே சார் ... அவங்க ரெண்டு பேரும் ட்ராவல் பண்ணி இருந்தா நிச்சயமா மாட்டு வாங்கன்னு ... நாங்க மொத்த பிளைட் டீடெயில்ஸ் , சிசிடிவி புட்டேஜஸ் எல்லாத்தையும் இவனோட(டிரைவரை காட்டி ) சேர்ந்து பார்த்தாச்சு சார்... அவங்க கிடைக்கல ... சோ நீங்க சொன்ன மாதிரி அவங்க டிராவல் பண்ணல...."


" ஆர் யூ ஷ்யூர்.... அப்ப இவன் சொன்னதும் சரிதான்... அவங்க ஏர்போர்ட்க்குள்ள போகாமலே வெளிய போயிட்டு இருக்காங்க ...சோ வீ ஹவ் டு மேக் எ சிட்டி வைடு அல்ர்ட் ..."


" நிச்சயமா மும்பையை விட்டு எங்கேயும் போயிருக்க மாட்டாங்கன்னு நம்பறீங்களா சார் ..."


" நேத்திக்கு போகல அது மட்டும் உண்மை ... ஏர்போர்ட்டுக்கு கிளம்பி வந்திருக்காங்க கடைசி நேரத்துல பிளான் மாறியிருக்கு அதனால ஏர்போர்ட்குள்ள போகாமலே திரும்பி போயிட்டீருக்காங்க .... ஒரு வேளை
இன்னைக்கு போயிருக்கலாம் ... அடுத்த வாரம் போகலாம் ... இல்ல சிட்டிலயே இருக்கலாம் ..."
என்றவன்
தன் அடர்ந்த கேசத்தை அழுந்த கோதியபடி , ஓரிரு நொடி சிந்தித்து விட்டு


" யாதவ், ஏர்போர்ட் எக்ஸிட் கேட்(exit gate) ஃபுட்டேஜை செக் பண்ண சொல்லுங்க ... ஏதாவது இன்ஃபர்மேஷன் கிடைக்குதான்னு பார்ப்போம் ... அதோட
பாரன்சிக் ஆர்டிஸ்ட்டை கூப்பிட்டு இவனை அடையாளம் சொல்ல சொல்லி அந்த ஆளோட கண்ணை வரைய செல்லுங்க... அந்த கண்ணு நம்ம கவர்மெண்ட் டேட்டாபேஸ்ல இருக்கிறவங்களோட மேட்ச் ஆகுதான்னு பார்க்கணும்... அதுல கூட சில சிக்கல் இருக்கதான் செய்யுது ... பார்க்கலாம்... " என பெருமூச்சு விட்டவனிடம்


" எஸ் சார்..." என்று யாதவ்
பதில் அளித்ததும், வீட்டிற்கு போகவே பிடிக்காமல் வேறு வழியின்றி வீட்டை நோக்கிப் பயணமானான் அர்ஜுன்.


****************************************


இடம்: செம்பூர் ,மும்பை


" ஏன்டா விஷ்ணு, அதான் சாப்பிட்டு முடிச்சிட்டயோல்யோ... எதுக்காக விட்டத்தை வெறிச்சிண்டு இருக்க....நேரமாற்துடா நான் போய் தூங்கணும் ...


நீ சாப்பிட்டு முடிச்ச தட்டை உன் ஆம்டியாளா (மனைவி) வந்தெடுப்பா... நீதான் எடுக்கணும் ...." என்று வேதா பேசிக்கொண்டே உணவு மேஜையின் மேல் இருக்கும் பாத்திரங்களை முறைப் படுத்த, ஏற்கனவே தன் காதல் தேவதை ஸ்ரீயை பற்றிய எண்ணத்தில் மூழ்கி இருந்தவன் , தற்போது தன் தாய் கூறிய வார்த்தையில், மதிமயங்கி


ஸ்ரீயின் பிம்பம் அவன் அருகே நின்று உணவு பரிமாறுவது போல், காட்சிகள் விரிய, தனக்குத்தானே புன்னகை பூத்துக் கொண்டிருந்தவனை பார்த்து


" டேய் விஷ்ணு.... பேசுடா ... ஏன்டா மந்திரிச்சு விட்டா மாதிரி இருக்க...." என்று வேதா அவனை உலுக்கிய போது தான் சுற்றம் தெளிந்தவன்,


" அம்மா, உங்க கிட்ட நான் எதையும் இதுவரைக்கும் மறைச்சதே இல்ல... இன்னிக்கு ஸ்ரீயை பார்த்தே ம்மா..."


" யாரு... ஸ்ரீ ..."


" ஸ்ரீ லக்ஷ்மீ ரங்கநாதன் ..."


" வாவ் ...என் அண்ணன் பொண்ணு
ஸ்ரீயையா சொல்ற ... டேய் டேய் ரங்கு எப்படிடா இருக்கான் .... சுமித்ரா மன்னி நன்னா இருக்காளா ... அவா துபாயில இல்ல இருந்தா... எப்ப மும்பை வந்தா... இங்க எங்க இருக்கா ..." என ஆர்வமிகுதியில் வேதா கேள்விகளை அடுக்க


" வண்டியை தொலைச்சிட்டேன்னு காட்கோபர் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து நின்னா ஸ்ரீ ... மத்தபடி அந்த அரை மண்டையனையோ, உங்க வீட்டு ஆளுங்களையோ நான் பார்க்கவே இல்ல... மும்பை வந்து ஒரு வருஷம் ஆச்சாம்..."


"ஏன்டா எல்லாரையும் வயசு வித்தியாசம் பார்க்காம சகட்டுமேனிக்கு வைய்யற.... "


"உங்க வீட்டு ஆளுங்கன்ன உடனே , பாசம் பொத்துக்கிட்டு வருதோ ... அந்தாள் என் அப்பாவை என்னைக்காவது மதிச்சிருக்கானா ..."

"அது பெரியவாகுள்ள நடக்கிற கோல்டு வார் (Cold war) அதை பத்தி நோக்கு என்ன... மறந்துடாத, ஸ்ரீயும் எங்காத்து ஆளு தான் ... "


"அதுக்காக தான் அவளை நம்ம வீட்டு ஆளா மாத்தணும்னு முடிவு பண்ணியிருக்கேன் ... நீங்க என்ன பண்றீங்க ... அப்பா வந்ததும் ஸ்ரீ வீட்டுக்கு போய் பேசறீங்க ... " என்றவனை மென்மையாக பார்த்து


" இன்னும் நீ ஸ்ரீயை மறக்கலையா ..." என்றார் சிறிய கலக்கத்தோடு.


" எப்படிம்மா மறக்க முடியும் ... அவ என் பொண்டாட்டி ம்மா ...." என்றான் உணர்ச்சிமிக்க குரலில்.


" டேய், ரங்கு ஒத்துக்க மாட்டான் டா.... உனக்கே தெரியும், ஏற்கனவே எல்லாம் முறையா நடந்தே பிரச்சனைல இருக்கு..."


"அப்ப வேற வழியே இல்ல... நான் என் பொண்டாட்டியை தூக்கறேன்..."


"இடியட் மாதிரி பேசாதடா... இன்டலிஜென்ஸ் ஆபிஸர் மாதிரி பேசு ... விஷ்ணு நான் சொல்றத கேளு ... முதல்ல இந்த வேலையை விட்டுடு... இவ்ளோ ரிஸ்க்கியான ஜாப் தேவையே இல்லடா...ஒவ்வொரு நாளும் உன் அப்பா ஆத்துக்கு வந்து சேர்றதுக்குள்ள நான் பயந்த பயம் நேக்கு தான் தெரியும் ... இதை நான் மட்டும் சொல்லல , உன் அக்கா அத்திம்பேர் எல்லாரும் தான் சொல்றா..."


" அந்தாள் பேச்சுக்கெல்லாம் மரியாதை கொடுக்கணும்னு அவசியம் இல்ல..."


" ஓங்கி அறைஞ்சேன்னா பாரு ... நம் ஆத்துக்கு ஒரே மாப்பிள்ள ... தங்கமான மனுஷன் ...அவரை இப்படி எல்லாம் பேசாதே ... அவர் உன் நல்லதுக்கு தான் சொல்றேர்... ஒழுங்கா அவரை அத்திம்பேர்ன்னு சொல்லு..."


"ஐயோ ...அம்மா, போலீஸ், ராணுவம், எங்களை மாதிரி ஐபி(IB) ரால(RAW) இருக்கிறவங்களுக்கு மட்டும்தான் சாவு வருதுன்னு சொல்லுங்க ...நான் வேலையை விட்டுடறேன்... மனச தொட்டு சொல்லுங்க, இந்த வேலைக்காகவா உங்க அண்ணன் அன்னைக்கு அப்படி பேசினாரு ..." என்று பார்வையை கூர்மையாக்கி விஷ்ணு கேட்க, அதற்கு பதில் கூற முடியாமல் திணறிய வேதா, பேச்சை மாற்றும் முயற்சியில்


" சரி அதவிடு ... ஸ்ரீ இப்ப பார்க்க எப்படி இருக்கா ...."


" ம்ம்ம்ம்....நீங்க, உங்க பொண்ணு வித்யா எல்லாம் அவ பக்கத்துல நிக்கவே முடியாது... அவ்ளோ அழகா இருக்கா..."


" உனக்கு மட்டும் தைரியம் இருந்தா இதை என் ஆத்துக்காரர் முன்னாடி சொல்லி பாரேன்டா..."


" நிச்சயமா சொல்றேன்... உங்க வூட்டுக்கார் வரட்டும் ..."


" அப்படி என்ன வண்டியை டா அவ தொலைச்சா ..."


" ஸ்கூட்டி ..."


" கிடைச்சுடுமாடா கண்ணா... "


" ம்ம்ம்ம், இப்ப வண்டி ஸ்டேஷன்ல தான் இருக்கு ..." என்றவன்


" கூடிய சீக்கிரம் ஸ்ரீ யை நம்ம வீட்டுக்கு கூட்டிக்கிட்டு வர தான் போறேன்... யார் தடுத்தாலும் இது நடந்தே தீரும்... இப்ப உங்க வூட்டுக்கார் கிட்ட பேசுவீங்க இல்ல ... சொல்லி வைங்க .... "


" என் ஆத்துக்காரர் கிட்ட நான் பேசுறதுக்கு ... ஏன் உன் கண்ணுல ஜலசி(Jealousy) தெரியர்து..."


" யாருக்கு ஜலசி... எனக்கு ஆள் இல்லன்னு நினைச்சீங்களா ... நானும் இப்ப என் ஸ்ரீ யோட பேச போறேன்..."
என தன் முடிவை மறைமுகமாக அதே சமயத்தில் தீர்க்கமாக கூறிவிட்டு தன் அறைக்கு சென்றான் விஷ்ணு .


விஷ்ணுவை நன்கு அறிவாள் வேதா.
ஒரு விஷயத்தை அவன் நினைத்து விட்டால், அது ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டி இருந்தாலும் அடைந்தே தீருவான்.


மைந்தனின் முடிவை மனதில் அசை போட்டபடி, சற்றுநேரம் அமர்ந்திருந்தவர், பிறகு தன் காதல் கணவரை வாட்ஸ்அப் வீடியோ காலில் அழைக்க,


முதல் அழைப்பிலேயே , இணைப்பை எடுத்த வெங்கடேஷ்,


" என்ன மாமி, வழக்கத்தை விட ஒரு மணி நேரம் முன்னாடியே கால் பண்ணிட்ட.."


" உங்களிண்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்னா ..."


" என்ன மாமி, ஏதாவது விசேஷமா..." என விஷமமாக கேட்டு எதிர்முனையில் பெருங்குரலெடுத்து அவர் சிரிக்க,


" ஐய்ய... எந்த வயசுல எதைப் பத்தி பேசுறீங்கோ ... உங்களுக்கு பித்து தான் பிடிச்சிருக்கு தேவரே...நமக்கு பேத்தி இருக்கா... நீங்க தாத்தா, நான் பாட்டி நினைவிற்கோல்யோ.." என்ற வேதாவின் பேச்சைக் கேட்டு மீண்டும் சிரித்தவர்,


" இல்ல மாமி, நீ விசேஷம்னு சொன்னவுடனே பழைய ஞாபகம் எல்லாம் நினைவுக்கு வந்துடுச்சு டி... உன்னை பார்த்தா பாட்டி மாதிரியே தெரியல... க்யூட்டி மாதிரி இருக்க ... எப்போ உன்னை முதன் முதல்ல பார்த்தேனோ, அப்ப ஏறின பித்து தான் இப்ப வரைக்கும் தெளியல... சொல்லப்போனா நீ விஷ்ணுவுக்கு அக்கா மாதிரி இருக்க..." என்றவரின் பேச்சில் இருந்த காதலை ரசித்த வேதா,


" ஏன் விஷ்ணுக்கு தங்கச்சின்னு சொல்லுங்களேன்.."


" சொல்லலாம் ... ஆனா விஷ்ணு அடிக்க வருவான் ..." என வழக்கமாக குறும்பு கூத்தாட பேசியவர்


" ஏம்மா டல்லா இருக்க ... மூட்டு வலி எப்படி இருக்கு .... நான் லாக் டவுன் முடிஞ்ச கையோட கிளம்பி வந்துட்டேன்... விஷ்ணு உனக்கு ஏதாவது ஹெல்ப் பண்றானா ...மெய்ட்ஸ்(maids) எல்லாரும் வர ஆரம்பிச்சுட்டாங்களா.." என வழக்கம் போல் அக்கறையாக விசாரித்தவரிடம்


" இன்னைக்கு தான் அவா எல்லாம் வர ஆரம்பிச்சிருக்கா... இப்ப மூட்டுவலி எவ்ளோ பரவால்ல... விஷ்ணு தான் ஹோம் கிளீனிங்(home cleaning), வெசல் வாஷிங்(vessel washing) ஏன் தளிகைக்கு கூட ஹெல்ப் பண்ணினான் ... அவன் இல்லாம இவ்ளோ பெரிய ஆத்தை(வீடு) என்னால மெயின்டெயின் பண்ணி இருக்க முடியாதுன்னா..."


" அவ்ளோ செஞ்சானா அவன் ... நான் வீட்டுல இருக்கும் போது ஜிம்முல போய் 50 கிலோ வெயிட்டை தூக்குவான் வீட்டுல ஒரு ஸ்பூனை கூட தூக்க மாட்டானே... எப்படிம்மா செஞ்சான் ...."


" அதான் நீங்க நேக்கு ஹெல்ப் பண்றீங்கோ இல்ல... அதான் அவன் செய்யல...ஆனா உங்களை டெய்லி பார்க்கிறானோல்யோ... அதான் நீங்க இல்லாத அப்ப, அவன் ஹெல்ப் பண்றான் ..."


"ஓ.... இதுல இவ்ளோ பாலிடிக்ஸ் இருக்குதா ... நல்ல வேளை... சொன்னியே..
இல்லன்னா போனை போட்டு அவனை வாங்கு வாங்குன்னு வாங்கி இருப்பேன் ... உன்னை நம்பி என் பொண்டாட்டிய விட்டுட்டு போனா நீ நிறைய வேலை வாங்கி அவளைக் கஷ்டப்படுத்தி இருக்கேன்னு..."


" அவனை ஒன்னும் சொல்லாதீங்கோ.. குழந்தை நிறைய ஹெல்ப் பண்ணினான் ..."


" அவனுக்கு 28 வயசு ஆகுது இன்னும் நீ அவனை குழந்தைன்னு கொஞ்சிகிட்டு இருக்க ... கேட்க பொறாமையா இருக்கு ம்மா ..." என பெருமைப் பொங்க அவர் சிரிக்க,


" சரி உங்களையும் கொஞ்சிட்டா போச்சு ... எப்ப வரீங்கோன்னு சொல்லுங்கோ..."


" என்னம்மா எதை பத்தி பேசணும் .." என்றார் குரலில் தீவிரத்தை விதைத்து.


" அதான் ஐஜியா இருந்து ரிட்டயர்டு ஆயிட்டீங் கோ .... திரும்பவும் இந்த வேலை எல்லாம் எடுத்து செய்யனுமா ..."


" நான் ரிட்டையடு ஆனாலும் கவர்மெண்ட் என்னை கைவிடலையே மாசா மாசம் பென்ஷன் வாங்கறேனே...
என்னை மாதிரி ரிட்டையர் ஆன ஐஜி, டிஐஜின்னு , நாங்க கொஞ்சம் பேர் ப்ரஷ்ஷர்ஸ்க்கு ட்ரெய்னிங் (Freshers training) கொடுத்துக்கிட்டு இருக்கோம்... கூடிய சீக்கிரம் இந்த வேலை முடிஞ்சிடும்... இப்ப சொல்லு... என்ன பேசணும்மா ..."


" எல்லாம் உங்க பையன பத்தி தான் ..."


" அவனுக்கென்ன அவன் என்னை மாதிரியே நல்லவனாச்சே..." என்றார் மீண்டும் குறும்புடன் .


" நீங்க ஆத்துக்கு வாங்கோ தேவரே.. எல்லாத்தையும் சொல்றேன் ... " என்றவருக்கு
ஞாபகம் வர
" ஆமா வர்ஷாயிண்ட பேசினீங்களா..."


" ம்ம்ம், என் பேத்தியோட பேசாம இருப்பேனா... கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான், வித்யா, மாப்பிள்ளை ,
வர்ஷா குட்டியோட பேசி முடிச்சேன் ..."


" அதான பார்த்தேன் ... யாருக்கு போன் பண்றீங்களா இல்லையோ உங்க பேத்திக்கு மட்டும் கரெக்டா போன் பண்ணி பேசிடுவீங்களே ..." என்ற மனையாளின் வாய்மொழியை கேட்டு சிரித்தவர்


" சரிம்மா ...இன்னும் 2 வாரத்துல முடிஞ்சிடும்னு நினைக்கிறேன் ... சீக்கிரமே வந்துடறேன் .. ஞாபகமா வெளில போகும் போது மாஸ்க் போட்டுக்கிட்டு போ... உன்னோட இம்யூனிட்டி லெவல் ரொம்ப லோ... சரியா .. டேக் கேர் ...குட் நைட் ஸ்வீட் ஹார்ட் ..." என்று அழைப்பை துண்டித்தவர், அவரது மொபைல் போனின் கேலரிக்கு சென்று
முதன் முதலாக அவரும் அவரது காதல் மனைவி வேதாவும் "கேட்வே ஆஃப் இந்தியாவில் " எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ரசித்துப் பார்த்த போது
80களின் பசுமை மாறா நினைவுகள்,
அவர் மனதில் மையம் கொள்ள, உடன் அவரது உயிர் நண்பன் அப்துலை பற்றிய நினைவும் வர, அவரது மனப் பறவை பின்னோக்கி பறக்க ஆரம்பித்தது ..


வேதாவும் சுவற்றில் மாட்டியிருந்த, அவர்களது மூத்த மகள்
வித்யாவின் திருமணத்தின் போது
எடுத்த குடும்ப புகைப்படத்தை ரசித்துப் பார்க்க,


அதில் சால்ட் அண்ட் பெப்பர் சிகையுடன் விஷ்ணுவிற்கு அண்ணன் போல் கம்பீரமாக காட்சி அளித்த வெங்கடேஷை லயித்து பார்த்தவரின் மனமும் பின்னோக்கி செல்ல,


தன் அறையில் இருந்த விஷ்ணுவும்,
தன் காதல் மனைவி ஸ்ரீயை சந்தித்த நாட்களை அசை போட்டு பார்க்க ஆரம்பித்தான்.


80களின் மத்தியில் வேதவல்லி ருத்ர நாராயணன்
ஐயங்காருக்கும், வெங்கடேஷ் வாசு தேவருக்கும் அவ்வளவு எளிதாக திருமணம் நடந்துவிடவில்லை..


அவர்களது திருமணம் சமூகத்தையே புரட்டிப்போட்ட கால கட்டம் அது .



தகிப்பாள்

Over to srivilliputhur, Tamil Nadu


உங்களது கருத்துக்களை பெரிதும் எதிர்பார்க்கிறேன். மேற்கண்ட லிங்கில் உங்களது கருத்துக்களை பதிவிடவும்.

Thread 'அக்னி-ஸ்ரீ - கருத்து திரி' https://narumugai.ink/index.php?threads/அக்னி-ஸ்ரீ-கருத்து-திரி.98/
 
Last edited:
அத்தியாயம் 3

இடம் : வேதா நிவாஸ், ஸ்ரீவில்லிபுத்தூர்


" அம்மா.... இப்ப தான் நான் ஸ்நானம் பண்ணிட்டு வந்துட்டேனே.... இன்னிக்கு நான் தளிகை(சமையல்) பண்றேம்மா .." என்று தன் தாய் மரகதவல்லியிடம், வேதா கெஞ்சிக் கொண்டிருக்க,


"நீ தளிகை பண்ணினா, உன் அத்தையும் நானும் சாப்பிட மாட்டோம்னு நோக்கு தெரியுமில்ல ... எதுக்குடி காலையில படுத்தற... போ, காலேஜுக்கு கெளம்புற வழியை பாரு.. "

" பின்ன, எப்ப தாம்மா நான் தளிகை பண்ண கத்துகிறது..."

" முதல்ல நீ படிப்பை முடி ... அப்புறம் கல்யாணம் பண்ணிக்கோ ... அதுக்கப்புறம்
'சமாஸ்ரயணம்' பண்ணிக்கோ ... அப்புறம் நம்ம ஆத்துல நீ தளிகை பண்ணினா நாங்க எல்லாரும் சாப்பிடுவோம்...ச்சரியா ...உனக்கு நாழி ஆயிடுத்து... இப்ப காலேஜுக்கு கிளம்பு ... நேக்கு தளிகைக்கு ஹெல்ப் பண்ண பாக்கியம் மாமி வந்துவிடுவா..."

" கோடி ஆத்து பாக்கியம் மாமி தளிகை பண்ணினா சாப்பிடுவ... நான் பண்ணினா சாப்பிட மாட்ட ... கேட்டா இப்ப சொன்ன பதிலையே திருப்பி சொல்லுவ ... கொஞ்சம் கூட மாத்தி சொல்லவே மாட்டியா ம்மா..."

" ம்ஹூம்...." என்று இடவலமாக மரகதவல்லி தலையசைக்க, வேதா கல்லூரிக்கு செல்ல ஆயத்தமானாள்.

'வேதா நிவாஸ்' மூன்று அடுக்குகளைக் கொண்ட, கிட்டத்தட்ட ஒரு சிறிய அரண்மனை போல் கட்டப்பட்ட வீடு.

ஆச்சார, அனுஷ்டானங்களின் பிறப்பிடம் என்றே கூறலாம் . உருவத்தில் தன் தாயையே கொண்டு பிறந்த தன் அன்பு மகள், வேதாவின் பெயரை தன் இல்லத்திற்கு வைத்திருந்தார் நீதிபதி ருத்ர நாராயணன். இன்னும் சில வருடங்களில் பணி ஓய்வு பெறப் போகிறவர். திருக்குறளின் ரசிகன், தேசியத்தையும் தெய்வீகத்தையும் தன் இரு கண்களாகப் பார்த்த தெய்வப் பெருமகனார் முத்துராமலிங்க தேவரின் சிஷ்யன், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் சுப்ரமணிய பாரதியாரின் ஆன்ம பக்தன்.

வீட்டில் ஆச்சாரத்தை கடைப்பிடித்தாலும்,
வெளியில் தேசிய ஒருமைப்பாடு, சமூக ஒற்றுமையை நிலைநாட்ட, மாதத்திற்கு இரண்டு முறையாவது சமபந்தி போஜனத்தில் கலந்து கொள்ளுதல், மகாகவி சுப்பிரமணிய பாரதியின் வழியில் அனைத்து சாதியினருக்கும் பூணூல் போடுதல், அனைவருக்கும் வேதங்களை பயிற்றுவித்தல், உண்மையான அறத்தை போதித்தல் என சாதி மத வேறுபாட்டை இச்சமுதாயத்தில் இருந்து களைய தன்னால் இயன்ற தேச சேவையை செய்து வருபவர்.

சுருங்கச்சொன்னால் வார்த்தை வேறு வாழ்க்கை வேறு என்றில்லாமல் , நீதியையும் நேர்மையையும் தன் உயிர் மூச்சாகவே கருதி வாழும் ஒரு உன்னத மனிதர்.

மகாகவி சுப்பிரமணிய பாரதிக்கு ஒரு செல்லம்மா என்றால், ருத்ர நாராயணனுக்கு மரகதவல்லி. ஊருக்கே ருத்ர முகம் காட்டி, குரலை உயர்த்தாமல், தன் கருத்துக்களில் தெளிவாகவும் திடமாகவும் இருக்கும் ருத்ர நாராயணன், தழைந்து போகும் ஒரே இடம் அவரது மனையாள் மரகதவல்லியிடம் தான்.

அதற்காக மரகதவல்லி கோபக்காரரோ, குண மற்றவரோ கிடையாது ... மிகுந்த சாந்த சுபாவம்,
குழந்தையைப் போன்ற வெள்ளை மனம், பெருந்தன்மை, அனைவரையும் அனுசரித்துச் செல்லும் பாங்கு , அதி விரைவில் அனைவரையும் நம்பி விடும் அவரது மென்மையான குணமும் தான் ருத்ர நாராயணனை கட்டி நிறுத்திய ஆயுதம்.

மரகதவல்லி, பெரும் பணக்காரர், பிரபல வக்கீல் சக்கரவர்த்தி ஐயங்காரின் ஒரே மகள்.

ருத்ர நாராயணன் சிறுவயதிலேயே தந்தையை இழந்த, மிகுந்த ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர் . இரண்டு ஏக்கர் நிலத்திலிருந்து வந்த சொற்ப வருமானத்தில் தன் தாய் மற்றும் தமக்கையோடு வசித்து வந்தவர்,
சக்கரவர்த்தி ஐயங்காரிடம் , ஜூனியராக பணியில் சேர்ந்தார்.

ருத்ர நாராயணனின் புத்திக்கூர்மை, அவரது அயராத உழைப்பு, நேர்மை, ஒழுக்கம், மாநிறமே என்றாலும் அவரது உயரம் வாட்டசாட்டமான உடலமைப்பு, தீட்சண்யமான கண்கள் , களையான முகவெட்டு என அனைத்திலும் அம்சமாக இருந்தவரை தன் ஒரே மகளுக்கு மணம் முடித்து மாப்பிள்ளை ஆக்கிக்கொண்டார் சக்கரவர்த்தி ஐயங்கார்.

என்ன தான் மரகதவல்லியின் அழகில் மயங்கி ருத்ர நாராயணன் அவரை மணந்து கொண்டாலும், இன்று வரை அவரை மண்டியிடச் செய்வது மரகதவல்லியிடம் இருந்த குழந்தை மனமும், வெள்ளந்தி குணமும் தான்.

சுருங்கச்சொன்னால் ருத்ர நாராயணனின் மனதில் மரகதவல்லி என்றும் தேவதை தான் , அவர் அழகினால் அல்ல, அவரது சுயநலமற்ற தூய்மையான அன்பினால்.


அவருக்கு ருத்ர நாராயணன் சூட்டியிருக்கும் செல்லப் பெயர் 'மட்டி மரகதம் ' ... அதை அவரும் அறிவார் ..அவர் அறியாததும் ஒன்று உண்டு ... அது ருத்ர நாராயணன் அவர் மீது வைத்திருக்கும் கட்டுக்கடங்காத நேசம் ... அனைவரையும் பார்வையிலேயே தள்ளி நிறுத்துபவரின் பார்வை, பணியும் ஒரே இடம், அவரிடம் தான் என்பது.


ருத்ர நாராயணனின் தமக்கை ஆனந்தவல்லி, அவரது கணவன் சாரங்கன் அவரை விட்டு பிரிந்து சென்றுவிட,
குழந்தை இல்லாமல், தாயும் இறந்த நிலையில் தன்னந்தனியாக தவித்துக்கொண்டிருந்தவரை தன்னுடனேயே வசிக்கச் செய்தார் ருத்ர நாராயணன்.

திருமணமான புதிதில் சாரங்கன் மூன்று மாதம் ஆனந்த வல்லியோடு குடும்பம் நடத்தினால் , மூன்று வருடம் தேசாந்திரம் சென்று விடுவான்.
அவன் எப்பொழுது வருவான் எப்பொழுது போவான் என யாருக்குமே தெரியாது.

இது குறித்து பலமுறை சாரங்கனுக்கும் ருத்ர நாராயணனுக்கும் வாக்குவாதம் வந்தது உண்டு. ஒவ்வொரு முறையும் அவனும் ஏதாவது கூறித் தப்பித்துக் கொள்வான். ஆனந்தவல்லியும் தன் கணவனை விட்டுக் கொடுக்காமல் ஒத்து ஊதுவாள்.

கடைசியாக 10 ஆண்டுகளுக்கு முன்பு சென்றவன் இன்றுவரை வீடு திரும்பவில்லை.

போட்டி, பொறாமை ,புறம் பேசுதல் ,அடுத்தவரின் குடியை கெடுத்தல் என அனைத்து தீய குணங்களின் குத்தகையாக இருப்பவர் ஆனந்தவல்லி.
ஆனால் மேற்சொன்ன அவரது எந்த குணமும் அவ்வளவு சீக்கிரம் வெளிப்பட்டு விடாது என்பதால்,
அவரின் குணத்தை நன்கு அறிந்த ருத்ர நாராயணனை தவிர மற்றவருக்கு எல்லாம் அவர் புரியாத புதிராகவே இருந்தார்.

ஓரளவு சூது வாது உள்ள
மனிதர்களாலேயே கணிக்க முடியாத ஆனந்தவல்லியை, வெள்ளந்தி மனம் கொண்ட மரகதவல்லியால் புரிந்து கொள்ள முடியாமல் போனது ஒன்றும் வியப்பான விஷயம் அல்ல.

ஆனந்தவல்லிக்கு என்றுமே
மரகதவல்லியின் மீது ஒருவித பொறாமை உண்டு ... அவர் 'பார்ன் வித் சில்வர் ஸ்பூன்' என்று ஆங்கிலத்தில் கூறுவது போல் பிறந்ததிலிருந்து கவலை, கஷ்டம் என்ற வார்த்தைகளுக்கு அர்த்தமே தெரியாமல் செல்வச் செழிப்பில் வளர்ந்தவர் ..

மேலும் ருத்ர நாராயணன் ஒழுக்க சீலனாய் இருக்க, மரகதவல்லிக்கும் அவருக்கும் இடையே
இருக்கும் உயிருக்குயிரான பிணைப்பை பார்த்து உள்ளுக்குள் பொருமுவார்.

ஒருவருக்கு தீங்கு செய்ய காரணம் பெரிதாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை, சிறு பொறாமை உணர்வே, பாவத்தை கூட்டிக் கொள்ளவும் பகையை வளர்த்துக் கொள்ளவும் போதுமானது.

மரகதம் சூதுவாது அற்றவள் என ஆனந்தவல்லி நன்கு அறிந்தும், தன் தம்பி இத்தனை ஆண்டுகாலம் தன்னைக் காத்து நிற்கிறான் என்று தெரிந்தும், தன் பொறாமை உணர்வை தணித்துக்கொள்ள தன்னால் இயன்ற காரியங்களை ருத்ர நாராயணனின் குடும்பத்திற்கு எதிராக செய்து கொண்டுதான் இருந்தார்.


பார் கவுன்சில் உறுப்பினர்களின் இல்ல சுப நிகழ்ச்சிகளுக்கு தன் மனையாளுடன் செல்வதில் ருத்ர நாராயணனுக்கு அலாதி இன்பம்.

" மடிசாரை விட, ஆறு கஜ புடவையில கே .ஆர் விஜயா மாதிரி அழகா இருக்கடி .." என்பார் அம்மாதிரியான நிகழ்ச்சிகளுக்கு மரகதவல்லி சாதாரண புடவையில் வருவதைப் பார்த்து .

சிரித்த முகத்துடன் இருவரும் தம்பதி சமேதராய், சுபநிகழ்ச்சிகளுக்கு கிளம்பிவிட்டால், ஆனந்த வல்லிக்கு அடிவயிறு பற்றி எரியும் . அதனை முகத்தில் காட்டிக் கொள்ளாமல்,
இன்னைக்கு சந்திராஷ்டமம் என்பார், கிரகணம் என்பார், அமாவாசை என்பார், தலை சுற்றுகிறது என்பார்,
நெஞ்செல்லாம் வலிக்கிறது என்பார், கடைசியாக போலி கண்ணீர் விட்டு அழுவார்.

இவற்றையெல்லாம் கண்டு, ஒன்றுமே புரியாமல் மரகதவல்லி சற்று தயங்கினாலும்,

" அரை மணி நேரத்துல வந்துடுவோம் அக்கா ...பக்கத்தாத்து பட்டு மாமி ஆத்துல இரு ..." என்று அவரது நாடகத்தைக் கண்டு கொள்ளாமல் தன் மனைவியுடன் காரில் ஏறி சென்றுவிடுவார் ருத்ர நாராயணன்.

திரும்பி வரும் போது வீடு ராவண படுகளம் போல் காட்சியளிக்கும். எதையோ தேடினேன் என்பார், ஆனால் அனைத்தையும் கொட்டிக் கிளறி இருப்பார். என்னதான் வீட்டில் வேலைக்காரர்கள் இருந்தாலும், கடைசியில் மரகதத்தின் இடுப்பு ஒடிந்து விடும்.

அது மறைமுகமாக மரகதத்திற்கு தரும் தண்டனை என்று கூட அறியாமல், உடன் அவரும் அமர்ந்து ஆனந்த வல்லிக்கு ஆறுதல் சொல்லி உதவிகள் செய்வார்.

இவை எல்லாவற்றையும் விட, ஆனந்தவல்லியின் மன வக்கிரத்தின் உச்சக்கட்டம், சாதத்தில் தண்ணீர் ஊற்றுதல், குழம்பு, ரசத்தில் மிளகாய்ப்பொடி, உப்பை அள்ளி கொட்டுதல் என விழாவிற்கு சென்று வந்தவர்கள், வெறும் வயிற்றோடு தூங்குவதற்கான சூழ்நிலையை வீட்டில் உருவாக்கி வைத்திருப்பார்.

மரகதவல்லி வீட்டைத் தவிர வேறெங்கும் உணவு உட்கொள்ள மாட்டார். வெளியில் அவர் புசிப்பது பழங்களை மட்டுமே. இம்மாதிரியான சுபநிகழ்ச்சிகளுக்கு சென்றால் கூட வாழ்த்திவிட்டு வந்துவிடுவார்.

ருத்ர நாராயணன் வெளியில் சாப்பிடும் வழக்கம் உள்ளவர் என்றாலும், மனைவியுடன் சென்றால் வெளியில் உணவருந்த மாட்டார் என்பதை நன்கு அறிந்தே திட்டம் போட்டு காய் நகர்த்துவார் ஆனந்தவல்லி.

மரகதவல்லி வீட்டை விட்டு வெளியே செல்வதே மிக அரிது. வீட்டிற்கு வருபவர்களை நன்றாக உபசரிப்பாரே ஒழிய
அக்கம் பக்கத்து வீடுகளில் சென்று வம்பு பேசும் பழக்கம் இல்லாதவர். அவருக்கு நேர்மாதிரி ஆனந்தவல்லி.

அந்த அக்ரஹாரத்தில் அவரிடம் வம்பு பேசவும், வம்பு கேட்கவும் ஆட்கள் மிக அதிகம் .

அக்காவின் திரிசமனத்தை ருத்ர நாராயணன் நன்கு அறிந்திருந்தாலும் ,
ஏதும் அறியாத மரகதவல்லியிடம் அதனைக் கூறி குடும்பத்தில் குழப்பம் விளைவிக்க அவர் விரும்பவில்லை. அதே சமயத்தில் தன் அக்காவின் குயுக்தி திட்டங்களில் இருந்து மறைமுகமாக தன் குடும்பத்தையும் மரகதவல்லியையும் செவ்வனே காத்துகொண்டு வந்த அந்த நீதிபதிக்கு, பொய் சொல்வது எவ்வளவுக்கெவ்வளவு தவறோ அதே போல் உண்மையை மறைப்பதும் தவறு
என்று அவர் உணரும் பொழுது, விலையில்லா ஒன்று இவ்வுலகை விட்டே சென்றிருக்கும் என அறியாமல்
சிந்தித்து செயல்படுவதாக எண்ணி செயல்பட்டுக் கொண்டிருந்தார்.


அவருக்கு ரங்கநாதன் என்ற மகனும் வேதா என்ற மகளும் இருந்தனர் .
ரங்கநாதன் வேதாவை விட 3 வயது மூத்தவன் .

பெற்ற தாய் தந்தையை விட, அவனுக்கு அத்தையிடம் பிரியம் அதிகம். அத்தை கோண்டு. ஆனந்தவல்லி சொல்லும் அத்தனைக்கும் ஆடுவான்.
எடுப்பார் கைப்பிள்ளையாக இருந்தாலும், தாய், தந்தை, தங்கையின் மீது அதிகப் பற்றுடையவன். ஆனால் அவை வெகு சில சமயங்களில் மட்டுமே வெளிப்படும்.

என்ன தான் சட்டத்திற்கு சாட்சிகள் வேண்டுமென்றாலும், மனசாட்சியை அடிப்படையாக வைத்து தான் நீதி வழங்குவார் ருத்ர நாராயணன் என்ற அந்த நீதிமான்.

சில வழக்குகள் வக்கீல்களின் வாதத் திறமையால் ஜோடிக்கப்பட்டிருக்கிறது என்பதை தன் அனுபவ அறிவால் அறிந்துகொண்டால், மனசாட்சிக்கு விரோதமாக தவறான தீர்ப்பு வழங்காமல், அந்த வழக்கு முடியும் வரை, விடுப்பில் சென்று விடுவார்.

அவருக்கு அக்ரஹாரத்தை தாண்டி அனைத்து மக்களிடமும் செல்வாக்கு இருந்தது.

ருத்ர நாராயணனின் நட்பு வட்டம் சற்று விஸ்தாரமானது. அனைத்து மதங்களையும் , மதச் சடங்குகளையும் மதிப்பவர், நேசிப்பவர் என்பதால், சாதி மத பேதமில்லாமல்
அனைவரும் அவருக்கு நெருங்கியவர்களாகவே இருந்தனர் .

அவரது சமுதாயத்தை சேர்ந்த ராமானுஜம், முரளிதரன், தேசிகன் ஆகியோருடன் மிக நெருக்கமாக இருப்பது போல்
வாசு தேவர் ( வெங்கடேஷின் தந்தை) , மற்றும் இப்ராஹிம் ராவுத்தரும் அவரது மிக நெருங்கிய நட்பு வட்டம்.

வாசு தேவர், ஒரு காலத்தில் தலைசிறந்த வக்கீலாக இருந்தவர். அவருடைய இளம் வயதிலேயே அவர் மனைவி மறைந்து போக, பிறகு வேறு எதிலும் நாட்டம் இல்லாமல், தனது நட்பு வட்டத்தை சுருக்கிக்கொண்டு, இத்தனை ஆண்டுகளாக ஆத்ம திருப்திக்காக தன் 40 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருபவர்.

பெரும் வசதி படைத்தவராக இருந்தாலும் தெய்வக் பெருமகனார் முத்து ராமலிங்க தேவரய்யாவை பின் பற்றி மீதமிருக்கும் தன் வாழ்நாளை ஆன்மீகத்திலும் தேசியத்திலும் செலவழித்தபடி
தனக்குத் தானே சமைத்து சாப்பிட்டுக்கொண்டு ஒரு யோகி போல் வாழ்ந்து கொண்டிருப்பவர்.

அவர் மனைவி மறைந்ததும்
ஏழெட்டு வயதில் இருக்கும் அவரது ஒரே மகன் வெங்கடேஷை வளர்ப்பதற்காக வேண்டி,
அவரது உறவுகள், அவரை இரண்டாம் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்திய போது, அதற்கு இசைந்து கொடுக்காமல், வெங்கடேஷை உயர்தரப் பள்ளியின் விடுதியில் சேர்த்து படிக்க வைக்க எண்ணும் போது தான் பம்பாயில் வசிக்கும், ராணுவத்தில் பணியாற்றும் அவரது ஒன்று விட்ட தமையன், வெங்கடேஷை தன்னுடன் அழைத்துச் செல்ல கேட்க, அறிமுகமற்ற பள்ளி விடுதியில் தன் மகனை சேர்ப்பதற்கு பதிலாக
குழந்தை இல்லாத தன் தமையன் குடும்பத்தில், தன் மகன் வளர்வது
நல்லது என கருதி வெங்கடேஷை அவருடன் அனுப்பியதோடு ,அடிக்கடி சென்று பார்ப்பது, தன் மகனுடன் தங்குவது, என அந்த பிஞ்சுக் கொடி, புதிய கொழு கொம்பில் படரும் வரை , உறுதுணையாக இருந்தார்.

இப்ராஹிம் ராவுத்தர், ஸ்ரீவில்லிபுத்தூரில் இருக்கும் மர சாமான்கள்( கட்டில், பீரோ, சோபா, உணவு மேஜை ) செய்யும் கடைகள் பெரும்பாலும் இவருக்கு சொந்தமானது.

தினமும் தவறாமல் ஐந்து முறை தொழுகை செய்தல், ரமலான் மாதம் முழுவதும் நோன்பு இருத்தல் என தன் மதம் மற்றும் சடங்குகளின் மீது மாறா பற்று கொண்டவர். மிகவும் எதார்த்தமான மனிதர். நாட்டுபற்று மிக்கவர் , தேசியவாதி.

அவருக்கு மூத்த மகனும், இளைய மகளும் இருந்தனர். மகன் அப்துல், வெங்கடேஷின் பால்ய சினேகிதன். வெங்கடேஷை விட இரண்டு வயது சிறியவன் .
மகள் பர்வீன், வேதாவின் நெருங்கிய பள்ளி தோழி.

பொதுவாக, இரு வேறு மதத்தை அல்லது ஜாதியை சேர்ந்த இருவர் நீண்ட காலமாக நண்பர்களாக இருப்பது ஒன்றும் அவ்வளவு கடினமல்ல. ஆனால் மூவர், நீண்ட காலமாக ஆத்ம நண்பர்களாக இருப்பது எளிதான காரியமல்ல .

ருத்ர நாராயணன், வாசு தேவர், இப்ராஹிம் ராவுத்தர் இவர்கள் மூவரும் ஆத்ம நண்பர்களாக பரிமளித்ததற்கு ஒரே காரணம் அவர்களுக்கு இடையே இருந்த புரிதல் தான்.

எப்படி அன்னியோன்யமான தம்பதிகளுக்கிடையே புரிதல் அவசியமோ, அதே போல் ஆத்மார்த்தமான நட்புக்கும் புரிதல் அவசியம்.

மூன்றாம் நபர் இல்லாத பட்சத்தில் மற்ற இருவர் அவரை பற்றிய குறைகளைப் பேசாமல் நிறைகளை பேசுவதால் அவர்களது நட்பு விருட்சமாக வளர்ந்து இருந்தது.


சிறு வயதிலிருந்து வருடத்திற்கு மூன்று நான்கு முறையாவது ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வந்து , தான் பிறந்து வளர்ந்த மண், தன் தந்தை, உறவினர், தன் ஆத்ம நண்பன் அப்துல் ஆகியோருடன் நேரம் செலவழிப்பது வெங்கடேஷின் வழக்கம்.

வெங்கடேஷ் தன்னுடைய இருபத்தி மூன்றாவது வயதில், பொறியியல் முடித்து, ஐபிஎஸ் தேர்வுக்காக தயாராகிக் கொண்டிருந்த நேரத்தில் தான் 16 வயது பட்டாம்பூச்சியாய் வலம் வந்து கொண்டிருந்த வேதாவை முதன் முதலில் கோவிலில் பார்த்தார்.

கோவில் பிராகாரத்தில், வேகமாக புள்ளிகள் வைத்து, சுழன்று சுழன்று சிக்கு கோலம் போட்ட வேதா அவர் மனதில் கோலமிட்டு குடியேறியதும் அப்போதுதான். ஆனால் அப்போது அவர் ருத்ர நாராயணின் மகள் என்று அவருக்கு தெரியாது.

வேதாவை பிரம்மன் சிருஷ்டிக்கும் போது சௌந்தர்ய லஹரியை கேட்டுக் கொண்டே சிருஷ்டித்திருப்பான் போலும் ... அத்துணை அழகு ...
இடையை தாண்டும் நீண்ட கூந்தல், வேதாவின் கழுத்து திரும்பும் போதெல்லாம் காதில் கூத்தாடும், அழகிய சிறிய ஜிமிக்கி, மருதாணி இட்ட கைகளில் அவரது நிறத்தை ஒத்த மெல்லிய தங்க வளையல், கழுத்தில் தாமரைப்பூ பதக்கம், ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும் அசைந்தாடும் வெள்ளி கொலுசொலி என வேதாவின் அழகில் மயங்கிய வெங்கடேஷ்,

அவர் பாடிய கீர்த்தனை, அங்கிருந்த தன் வயதை ஒத்த தோழிகள், வயது குறைந்த சிறார்களுக்கு கணிதம், ஆங்கிலம், தமிழ் என
அனைத்தையும் கோவில் மண்டபத்தில் அமர்ந்து சொல்லிக்கொடுக்கும் பாங்கு, மொழிகளில் இருந்த புலமை என அனைத்துக்குமாய் ரசிகன் ஆகிப் போனார்.

பிறகு வேதாவை பற்றி தெரிந்து கொள்ள விழையும் போது தான் அவர் ருத்ர நாராயணனின் மகள் என்று அவருக்கு தெரிய வந்தது .
காலை மற்றும் மாலை வேளைகளில்
வேதா தன் தோழிகள் மற்றும் அண்டை வீட்டாரின் குழந்தைகளோடு கோவிலில் செலவழிக்கும் அந்த ஒரு மணி நேரம் வெங்கடேஷிற்கு வரப்பிரசாதம்.

அப்போது வேதாவிற்கு தெரியாமல் நூற்றுக்கால் மண்டபத்தில், மறைந்திருந்து அவரைப் பார்ப்பது, புகைப்படம் எடுப்பதை தொழிலாகவே வைத்திருந்தார் வெங்கடேஷ்.

வருடத்திற்கு 4 முறை, ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வந்து கொண்டிருந்தவர் அதனை 6 முறைகளாக உயர்த்திக் கொண்டார்.

இத்தனை மாற்றம் அவரிடம் நிகழ்ந்தும், அதனை தன் பெற்ற தந்தை , வளர்த்த தந்தை, தாய் மற்றும் உற்ற நண்பன் அப்துல் என யாரிடமும் அவர் பகிரவில்லை. அதற்கான காலத்திற்காக காத்துக்கொண்டிருந்தார்.

காலம் யாருக்காகவும் காத்திருக்காமல்,
தன் வேலையை செவ்வனே செய்ய, வெங்கடேசஷை வளர்த்த தாய் மற்றும் தந்தை காலமாகி விட, மும்பையில் அவர் ஏசிபியாக (ACP) பணியாற்றிக் கொண்டிருந்த நேரத்தில் தான், வாசு தேவரை
யாரோ அரிவாளால் வெட்டி விட்டதாகவும், அவரது தோளில் ஏற்பட்ட காயத்திற்கு மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருவதாக செய்தி அறிந்ததும் , சற்றும் தாமதிக்காமல், தன் வாழ்க்கையையே மாற்றப்போகின்ற பயணம் எனத் தெரியாமல் ஸ்ரீவில்லிபுத்தூரை நோக்கி பயணமானார் வெங்கடேஷ் .

ஒரு நாள் முன்பு நடந்தவை.


இப்ராஹிம் ராவுத்தரின் நெருங்கிய உறவினருக்கும்,
வாசு தேவரின் நெருங்கிய உறவினருக்கும் இடையே பணமோசடி மற்றும் நில அபகரிப்பு சம்பந்தமான வழக்கொன்று நடைபெற்று வந்தது.

ராவுத்தரின் அறிவுரையின் பேரில் அவர் தரப்பில் போடப்பட்ட வழக்கை, வாசுதேவர் வக்கீலாக பணியாற்றிக் கொண்டிருந்த காலத்தில் அவரிடம் ஜூனியராக பணிபுரிந்த ராமலிங்கம் ( தற்போது பெரிய வக்கீல் ஆகிவிட்டார்)வாசு தேவரின் உறவினருக்காக ஏற்று நடத்தினார்.

வாசுவும் ராமலிங்கமும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்ல ஒரு வகையில் உறவினர்களும் கூட.
அதனால் வாசு, சீனியர் வக்கீல் மற்றும் உறவினர் என்ற முறையில் ராமலிங்கத்திடம்,

" கேஸ் நிக்காது ...அவங்க சைடு தான் நியாயம் இருக்கு ஆதாரமும் இருக்கு ..பேசாம இந்த கேசை விட்டு நீ விலகிக் கோ ..." என பலமுறை அறிவுறுத்த, அவரது பேச்சை காதில் வாங்காமல், ருத்ர நாராயணனை சந்தித்து, இது குறித்து ராமலிங்கம் பேச என்பதை விட மறைமுகமாக மிரட்ட

" உங்களுக்கு என்னை பத்தி தெரியுமோல்யோ... எல்லாம் சட்டப்படி தான் நடக்கும் ...நீங்க இத பத்தி பேச இனிமே ஆத்துக்கு வர வேண்டாம் ...நீங்க இந்த மாதிரி என்னை அடிக்கடி தொந்தரவு பண்ணினேல்னா, நான் பார் கவுன்சில்ல உங்க மேல கம்ப்ளைன்ட் பண்ண வேண்டிய நிலைமை வரும் .." என கடுமையாக ராமலிங்கம் மற்றும் அவருடன் வந்திருந்த , அவரது சமுதாயத்தை சேர்ந்தவர்கள் மற்றும் வேறு அரசியல் கட்சியில் இருப்பவர்கள் என அனைவரையும் எச்சரித்து அனுப்பினார் ருத்ர நாராயணன்.

இந்நிலையில் வழக்கின் தீர்ப்பு இப்ராஹிம் உறவினருக்கு சாதகமாக அமைய, வழக்கு நிலுவையில் உள்ள போது நடந்த குற்றச் செயல்களுக்காக குற்றவாளிகளை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யவும் உத்தரவிட்டார் ருத்ர நாராயணன்.

மூன்று மணிக்கு வழக்கின் தீர்ப்பை கூறிவிட்டு, மற்ற வழக்குகளுக்கான பணியினை ஓரளவு முடித்துவிட்டு,
மாலை 4 மணிக்கு, அவர் தன் வீடு திரும்ப ஆயத்தமாகிக் கொண்டிருக்கும் போது, அவரை சந்திக்க வந்தார் வாசு தேவர்.

" என்னடா வாசு , திடீர்னு சேம்பர்க்கே வந்திருக்க .... என்ன சமாச்சாரம்..." என கேள்வி எழுப்பிய ருத்ர நாராயணனிடம்

" இல்லடா ருத்ரா ... மனசே சரியில்ல ஏதோ தப்பா நடக்க போகுதுன்னு தோணுது... அதான் உன்னை பார்க்க வந்தேன் ...வீட்டுக்கு கிளம்பிட்டியா .."

" ஆமா, வேலை முடிஞ்சிடுத்து...ஆத்துக்கு போக வேண்டியது தான் ..."

" சரி வா, நானும் இன்னிக்கு உன் கூடவே உன் கார்ல வரேன் ... " என்றவரை ருத்ர நாராயணன் புரியாமல் பார்க்க,

" வா ருத்ரா... போலாம்..." என்ற படி வாசுதேவர் ருத்ர நாராயணனுடன் காரில் பயணிக்க, கார் ஆள் அரவமற்ற விளைநிலங்கள் இருமருங்கிலும் அமைந்த சாலையில் பயணித்துக் கொண்டிருக்கும் போது , திடீரென்று ஒரு முதியவர் காரை நிறுத்துமாறு கையசைக்க,

" ரவி, காரை நிறுத்து ... யாரோ கை அசைக்கிறா பாரு ..." என ருத்ர நாராயணன் தனது டிரைவர் ரவியிடம் கூறிக் கொண்டிருக்கும் போது,

" நீ கார்லேயே இரு ருத்ரா ...நான் யாருன்னு பார்க்கிறேன் ..." என வாசு தேவர் காரை விட்டு இறங்கிய மாத்திரத்தில், எங்கிருந்தோ வந்த நான்கு முகமூடி அணிந்த நபர்கள், அவரைத் தாக்க ஆரம்பிக்க, சிலம்பம் கற்று தேர்ந்தவர் என்பதால், பதிலுக்கு வாசு தேவரும் அவர்களை விடாமல் தாக்க தொடங்க, நடப்பதை ஓரிரு நொடியிலேயே புரிந்துக்கொண்டு வாசுதேவரை காப்பாற்றுவதற்காக ருத்ர நாராயணன் வண்டியை விட்டு இறங்க,

" ருத்ரா ... நீ வண்டில போய் உட்காரு...போ..." என வாசு தேவர் பலத்த குரலில் அவருக்கு அறிவுறுத்தி கொண்டிருக்கும் போதே,
முகமூடி அணிந்த நபர், முதுகுக்குப் பின்னே மறைத்து வைத்திருந்த அரிவாளை கொண்டு, ருத்ர நாராயணனின் கழுத்தை சீவ பாயும் போது குறுக்கே வந்து அதனை தன் தோளில் வாங்கிக்கொண்டார் வாசு தேவர்.

அருவாள் வெட்டு ஆழமாக தோளில் பதிந்ததும், குபுகுபுவென ரத்தம் கொட்ட ஆரம்பிக்க, அதற்குள் அங்கிருந்த சில விவசாய மக்கள் அந்த இடத்தில் கூட,
கூட்டம் கூடுவதை அறிந்து , அந்த முகமூடி நபர்கள் மின்னல் வேகத்தில் தலைமறைய, ரத்த வெள்ளத்தில் இருந்த தன் உயிர் நண்பனை,
அந்த விவசாய பெருமக்கள் உதவியுடன் மருத்துவமனையில் கொண்டு சேர்த்தார் ருத்ர நாராயணன்.

இரண்டு மணி நேர சிகிச்சைக்கு பிறகு,
கண்விழித்த வாசு தேவரிடம் ,

" ஏண்டா வாசு, இப்படி பண்ண..
என் கழுத்துக்கு வந்த அருவாளை , நீ ஏன் உன் தோள்ல வாங்கிண்ட.." என்ற ருத்ர நாராயணனின் கேள்விக்கு பதில் ஏதும் கூறாமல், மந்தகாச புன்னகையோடு பார்த்தவரின் கண்ணில் நட்பு பெருக்கெடுத்து ஓட,
சற்று நேரம் இருவருக்குமிடையே ஒரு வித அமைதி நிலவ,

" சரி ஆத்துக்கு போய், நோக்கு சாப்பாடு அனுப்புறேன் ... இங்க கேண்டீன்ல கொடுக்கிறத சாப்டுடாத... ஏற்கனவே நேக்கு அல்சர் உண்டு... ச்சரியா ..." என கண் கலங்கியபடி அறிவுறுத்திவிட்டு விடை பெற்றார் .

கிருஷ்ணனுக்கு எப்படி பலராமனோ, ராமனுக்கு எப்படி லக்ஷ்மணனோ, அதே போல் தான் ருத்ர நாராயணனுக்கு வாசுதேவர்.


தற்போது :

தந்தையை காண பெரும் பரபரப்போடு மருத்துவமனைக்கு வந்த வெங்கடேஷ்,
அவர் எழுந்தமர்ந்துக்கொண்டு ராவுத்தர் மற்றும் அவரது மகன் அப்துல் உடன் உரையாற்றிக் கொண்டிருப்பதைப் பார்த்து,
நிம்மதி பெருமூச்சு விட்ட படி,

" ஐயா எப்படி இருக்கீங்க ... ரொம்ப பயந்தே போயிட்டேன் ..."

" நல்லா இருக்கேன் பா ... ...
நீ ஏன் இவ்ளோ பரபரப்பா இருக்க ...எனக்கு அவ்வளவு சீக்கிரம் ஒன்னும் ஆகாதுய்யா ..." என்றவரின் கரம் பற்றி வாஞ்சையாக தடவிக் கொடுத்த வெங்கடேஷை, அங்கிருந்த ராவுத்தர் மற்றும் அப்துல், நலம் விசாரிக்க, அவர்களுக்கு பதில் அளித்துக் கொண்டே அப்துலிடம் தனியாக பேச வேண்டும் என்பது போல் பார்வை பரிபாஷையை அவர் பகிர,

" வாப்பா, நீங்க ஐயா கிட்ட பேசிக்கிட்டு இருங்க ... நான் வெங்கடேசை கேண்டீனுக்கு கூட்டிகிட்டு போய் டீ வாங்கிக் கொடுத்து கூட்டிவரேன்..." என்று தன் தந்தை ராவுத்தரிடம் அப்துல் கூறிவிட்டு வெங்கடேஷுடன் வெளியேற

" சொல்லுடா, என்னடா நடந்தது ...யார் ஐயாவை வெட்டினது..." என்றதும் அப்துல் நடந்த அனைத்தையும் ஒன்றுவிடாமல் பகிர, அவருடன் இரு சக்கர வாகனத்தில் காவல் நிலையத்திற்கு சென்று வெங்கடேஷ் விசாரிக்க,

ஏற்கனவே ருத்ர நாராயணன் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகளை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளதை தெரிந்து கொண்டவர், காவல்துறை கண்காணிப்பாளரை தனியே சந்தித்து, வழக்கைப் பற்றி விசாரித்து , அதன் தற்போதைய நிலையைத் தெரிந்து கொண்டதோடு, தான் இன்னும் ஒரு வார காலம் இங்கு இருக்கப் போவதாகவும், குற்றவாளிகளை தேடி கண்டுபிடிக்கும் பணியில், உதவி தேவை என்றால் தன்னாலான உதவிகளை செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்துவிட்டு மருத்துவமனைக்கு திரும்பிய பின்னரே நிம்மதி பெருமூச்சு விட்டார் வெங்கடேஷ் .

பிறகு தன் தந்தையிடம், நடந்ததை கூறிக் கொண்டிருக்கும் போது,
வாசு தேவர் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையின் அறை கதவை திறந்து கொண்டு பெரிய உணவு கேரியருடன் நீல நிற பாவாடை , நீல ரவிக்கை மற்றும் வெள்ளை தாவணி அணிந்து வெண்ணிற தேவதை போல் வேதா உள்ளே நுழைய, சற்றும் எதிர்பார்க்காத தன் மனம் கவர்ந்தவளின் திடீர் பிரவேசத்தால், அவரது இதயத்துடிப்பு ஓங்கி ஒலிக்க, சிந்தை தடுமாற,பரவசத்தில் திக்குமுக்காடி போய் , பேச்சை பாதியிலேயே அவர் நிறுத்திவிட,

" வாம்மா... வேதா ..எப்படிம்மா இருக்க ..."
என்ற வாசு தேவரிடம்,

" நன்னா இருக்கேன்... உங்க உடம்பு எப்படி இருக்கு ... இப்ப வலி பரவாயில்லையா ..."

" பரவால்லைம்மா ..."

" இதுல மத்தியானம் சாப்பாடு இருக்கு ..அம்மா கொடுத்தனுப்பினா... நீங்க சாப்பிட்டதுக்கு அப்புறம், ரவி மாமா (டிரைவர்) வந்து பாத்திரத்தை எடுத்துண்டு போயிடுவேர்..." என வேதா வாசுதேவரிடம் பேசிக்கொண்டிருக்கும் போது,

" எப்படிம்மா இருக்க வேதா ... இந்த வாப்பாவை மறந்துட்டியா... பர்வின் இருக்கும் போது அடிக்கடி வீட்டுக்கு வருவ... ம்ம்ம்...பர்வீன் ஒழுங்கா
படிச்சிருந்தா இந்நேரம் உன் கூட காலேஜ் படிச்சிருக்கும்.. " என வாஞ்சையாக விசாரித்த இராவுத்தரிடம்,

" வாப்பா, பர்வீன் நன்னா இருக்காளா.."

" நல்லா இருக்காம்மா ...இப்ப அவ குழந்தைக்கு ஒரு வயசு ஆகப்போகுது..." என்றவர்

"நீ சின்ன புள்ளையா இருக்கும் போது அடிக்கடி தூக்கத்துல பயந்துக்குன்னு வயித்து வலி, ஜுரம்னு ரொம்ப சிரமப் படுவ... உங்க அம்மா அதிகாலைல நாங்க பள்ளிவாசல்ல துஆ ஓதி முடிச்சிட்டு வரும் போது , உனக்கு வந்து மந்திரிச்சுக்கிட்டு போவாங்க ...உடனே உனக்கு உடம்பு சுகமாயிடும்... திரும்ப மூணு, நாலு மாசம் கழிச்சு மறுபடியும் உடம்புக்கு சுகமில்லன்னு உன்னை கூட்டிகிட்டு வருவாங்க... இப்ப உன்னைப் பார்த்ததும், எனக்கு அதெல்லாம் ஞாபகத்துக்கு வருது ..இப்பவும் பயந்துக்கிறயா..." என்று அவர் கிண்டலாகக் கேட்க,
வேதாவின் முகம் வெட்கத்தில் அந்திவானமாய் சிவந்தது.

வேதா சிறு குழந்தையாக இருக்கும் போது , அவருக்கு உடல் நலம் சரியில்லை என்றால் அவர் தாயார் மரகதவல்லி அவரை பள்ளிவாசலுக்கு மந்திரிக்க அழைத்து செல்வது வழக்கம்.

அப்படி ருத்ர நாராயணனுடன் மடிசாரில் மரகதவல்லி குழந்தையோடு பள்ளிவாசல் வாயிலில் நிற்க,
இமாம் குழந்தை வேதாவிற்கு மந்திரிக்கும் காட்சி, காண்போரைக் கவரும்
மத நல்லிணக்கத்திற்கான அற்புத சான்றாக இருக்கும்.

" ஏண்டி மரகதம், ஆச்சாரம் அனுஷ்டானம் எல்லாம் பாக்கற... ஆனா குழந்தைக்கு ஒண்ணுன்னா பள்ளி வாசல் வந்து மந்திரிச்சுக்கிறயே அதான் புரியல ..." என ருத்ர நாராயணன் கேள்வி எழுப்பிய போதெல்லாம்,
" உங்களுக்கு எத்தனை தடவை சொல்றதுன்னா... காலம் காலமா செஞ்சுகிட்டு வர்றது தானே... குழந்தைக்கு திருஷ்டி அதிகமாயிடுத்துன்னா , இவாண்ட வந்து ஓதிண்டு போனா குணமாயிடறது...நீங்களும் தான் பார்க்கறேளே... அவா அவா வழக்கம் தான் வேறயே ஒழிய, எல்லா பெருமாளும் நல்லது தானேன்னா செய்வா...." என்ற விசாலமான பதிலை மரகதவல்லி அளிப்பது உண்டு.

இப்போது அதையெல்லாம் ராவுத்தர் நினைவு கூற, பதில் கூற முடியாமல் ஒருவித வெட்கத்தில் நின்றிருந்த
வேதாவிடமிருந்து பார்வையை விலக்காமல், முதன் முதலாய் தன் காதல் தேவதையை மிக நெருக்கத்தில் பார்க்கும் நிகழ்வில் வெங்கடேஷ் மூழ்கித் திளைத்துக் கொண்டிருக்க, மைந்தனின் முக மாற்றத்தை, அப்பொழுது தான் படுக்கையில் அமர்ந்தபடி கூர்ந்து கவனிக்கலானார் வாசு தேவர்.


வெங்கடேஷுக்கு அவர் சமூகத்தை சார்ந்தவர்கள் மற்றும் உறவினர்கள், நான், நீ என போட்டி போட்டுக் கொண்டு பெண் கொடுக்க தயாராக இருந்த நிலையில், அவர் இவ்வளவு காலம் பிடிகொடுக்காமல் இருந்ததற்கான காரணத்தை கண்டு உள்ளம் திடுக்கிட்டார்.

திருமண பேச்சை எடுக்கும் போதெல்லாம், தட்டிக் கழிக்கும் தன் மகனின் பார்வையில் தெரிந்த புதிய மாற்றத்தை கவனித்தவருக்கு ஏதோ புரிவது போல் தோன்ற,

" இன்னும் நாலஞ்சு மாசத்துல
வேதாவுக்கு படிப்பு முடிஞ்சதும், ருத்ரா கல்யாணம் பண்றதா இருக்கானாம்....போன வாரம் சொன்னான் " என ராவுத்தரிடம் கூறுவது போல் கீழ் கண்ணால் மகனின் முக மாற்றங்களை பார்த்தபடி அவர் கூறிய மாத்திரத்தில்,

வெங்கடேஷின் முகத்தில் தோன்றிய
கலக்கம், தவிப்பு , படபடப்பு, அவர் கண்களில் தோன்றிய ஒருவித அலைப்புறுதல், வலி, வேதனை என அனைத்தையும் படித்துக் கொண்டிருந்தவரின் மனதில் வெளியே சொல்லொண்ணா பாரம் ஏறியது.

கைகளை மார்பின் குறுக்கே கட்டிக்கொண்டு, சற்று பின்னோக்கி(வேதாவின் பார்வை வட்டத்துக்குள் வராமல்) பக்கவாட்டு சுவற்றில் சாய்ந்து நின்றிருந்த, கிட்டத்தட்ட 5 ஆண்டுகளாக
அவளையே நினைத்து உருகிக் கொண்டிருக்கும், ஒரு அப்பாவி ஜீவன், இந்தப் பூவுலகத்தில் மட்டுமல்ல, அந்த அறையில் இருப்பது கூட தெரியாமல்,

" நான் கெளம்பறேன்.. நாழி ஆயிடுத்து..." என மற்றவர்களை பொதுவாகப் பார்த்து கூறிவிட்டு வேதா வெளியேற,

" வாசு சாப்பிடு ... வெங்கடேஷ் நீயும் சாப்பிடு ப்பா ..." எனக் கேரியரை திறந்து ராவுத்தர் பரிமாற ஆரம்பித்தார்.

தன்னவள் அறையை விட்டு வெளியேறிய பின்னும் இயல்பு நிலைக்கு திரும்ப இயலாமல், ஏதோ ஒரு புது உணர்வில் கட்டுண்டிருந்த வெங்கடேஷ்,

" ரெண்டு பேர் சாப்பிடற மாதிரி, இவ்ளோ அதிகமா சாப்பாட்டை கொடுத்தனுப்பி இருக்காங்க... " என்று கேரியரில் இருந்த உணவின் அளவை பார்த்து சொல்ல ,

" ஐயர் வீட்டம்மா எப்பவுமே இப்படித்தான்.... புள்ளையார் சதுர்த்திக்கு கூட எங்க வீட்டுக்கு மட்டும் 20 பருப்பு கொழுக்கட்டையை கொடுத்தனுப்புவாங்க..." என அப்துல் கூற,

அனைவரையும் பொதுவாகப் ஒரு பார்வை பார்த்துவிட்டு,

" சாப்பாடு நல்லா இருக்கு இல்ல ..." என்ற வெங்கடேஷின் குழைவான பேச்சும் , அவர் முகத்தில் தெரிந்த புதுவித மென்மையும்,
எப்பொழுதுமே கம்பீரத்தோடு இருக்கும் தன் உற்ற நண்பன், கரைந்துருகிப் மெய் மறந்து அமர்ந்திருப்பதை முதன்முறையாக வித்தியாசமான பார்வையில் எதிர்கொண்ட அப்துல்
அவரை உற்று நோக்கி

" பசுந்தயிர், நெய், பாசிப்பருப்பு கூட்டு, தக்காளி பச்சடி, கீரை ,காய்கறி எல்லாம் முதல்ல ஒரு வாரம் சாப்பிட நல்லா தான் இருக்கும் ... வருஷம் முழுக்க சாப்பிட்டா வாயை அடக்கம் பண்ண வேண்டியது தான் ... உங்க ஐயாவுக்கு ஓகே ... உனக்கு எனக்கெல்லாம் செட்டாவாது ..." என்றான் ஏதோ ஒன்றைப் புரிய வைப்பது போல்.

அப்துல் குறிப்பாக உணர்த்தியது, புரிந்தது என்றாலும் , அதனை வெளி காட்டிக்கொள்ளாமல் உணவு அருந்துவதிலேயே கவனம் செலுத்தினார் வெங்கடேஷ் .

இந்த விஷயத்தை ருத்ர நாராயணன் அறிய நேர்ந்தால், அவரின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் எனத் தெரியாமல் குழம்பினார், தன் மைந்தனின் மனதை செவ்வனே தெரிந்துகொண்ட வாசுதேவர்.

ருத்ர நாராயணன் முற்போக்குவாதி மற்றும் ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்டவர் என்றாலும், ஆச்சார அனுஷ்டானங்களை குறையில்லாமல் அன்றாடம் கடைப்பிடிப்பவரும் கூட.

தன்னுடைய ஒரே மகளை மாற்று சமுதாயத்தில் மணமுடிக்க ஒத்துக் கொள்வாரா, அவர்களுக்கிடையே இருக்கும் 40 ஆண்டு கால தூய்மையான நட்பின் நிலை என்னவாகும்....போன்ற கேள்விகள் எல்லாம் வாசுதேவரின் மனதில் தோன்றி சஞ்சலத்தை உண்டாக்கின.

வழக்கம் போல் மாலையில், வேதாவை
நூற்றுக்கால் மண்டபத்தின் தூண்களுக்கு பின்னால் மறைந்திருந்த படி லயித்து பார்த்துக்கொண்டிருந்தார் வெங்கடேஷ் .

அப்போது ஒரு இளைஞன், வேதாவின் அருகில் வந்து, ஒரு கடிதத்தை கொடுக்க எத்தனிக்க ,

"என்னது இது முரளி ..."

" இதுல என் மனசை எழுதியிருக்கேன் வேதா ...."

" ஓ....லவ் லெட்டரா..."

" ஆமா வேதா...நல்ல முடிவா சொல்லு.." என்றவன் கூறிய மாத்திரத்தில், அவன் கையில் இருந்த கடிதத்தை பிடிங்கி சுக்குநூறாக கிழித்தெறிந்ததோடு, அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தவர்

" பத்தாங்கிளாஸ்ல பத்து தடவை கோட்டு அடிச்சிட்டு, லவ் லெட்டர் கொடுக்கிறியா .... நீ உன் ஆத்துக்கு போ... உன் அப்பாண்ட வந்து பேசறேன்.." என முகம் சிவக்க,
உடல் குலுங்க, கண்கள் படபடக்க கூறியவரை
பார்த்து ஆச்சரியத்தின் உச்சத்திற்கே சென்றார் வெங்கடேஷ்.


" ஆஹா ...இவ அக்ரஹாரம்னு பார்த்தா .... ஆர்மியா இருப்பா போல இருக்கே ... என்னா அடி..." என தனக்குள்ளே கூறிக்கொண்டே தானே அடி வாங்கியது போல், தன் கன்னத்தை தேய்த்து விட்டபடி

" ஆமா இவ, என் ஐயா கிட்ட வந்து என்ன பேசுவா..." என்று சிந்தனையை சுழல விட்டவருக்கு, அடி வாங்கியது தான் அல்ல வேறு ஒருவன் என்ற எண்ணம்
தோன்றிய போது அவரால் சிரிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை.

வெங்கி, நீ அக்யூஸ்ட்ட(Accused) கூட இப்படி அடிச்சதில்லையேடா...இன்னும் கொஞ்ச நாள்ல டிசி(DC) ஆக போற...

இந்த அடி வாங்கினா, உன் மானம் மரியாதை என்ன ஆகுறது ..." என்றெண்ணியவரின் மனதில் வேதாவின் முகச் சிவப்பும், கோபமும், அவர் பேசிய வார்த்தையும் மீண்டும் மீண்டும் வந்து போய், ஆர்வத்துடன் கூடிய ஆனந்தத்தைக் உண்டாக்க, அதனைப் பறைசாற்றும் விதமாக, இதழ் பிரியா புன்னகை அவர் முகம் முழுவதும் ஆக்கிரமிக்க,
வீடு வந்து சேர்ந்தவருக்கு, உறக்கம் தூரம் போனது.

தன் காதலை வேதாவிடம் எவ்வாறு வெளிப்படுத்துவது என உறக்கம் கொள்ளாமல் யோசித்துக்கொண்டிருப்பவருக்கு தெரியாது , நாளையே அந்த நிகழ்வு நடக்கப்போகிறதென்று.


தகிப்பாள்

உங்களது கருத்துக்களை பெரிதும் எதிர்பார்க்கிறேன் கீழ்க்கண்ட லிங்கில் உங்களது கருத்துக்களை பதிவு செய்யும்.

 
அத்தியாயம் 4


மறுநாள் வெங்கடேஷை அவரது இல்லத்தில் அப்துல் சந்திக்க, வெங்கடேஷ் இயல்பாகப் பேசுவது போல் ,


" ஐயர் பொண்ணு வேதா என்ன படிக்குது ...." என்றவரை மீண்டும் ஒரு வித்தியாசமான பார்வையில் எதிர்கொண்ட அப்துல்,


" அது பி.காம் படிக்குது.... என் தங்கச்சி பர்வீனோட கூட்டாளி தான்... என் தங்கச்சி பிளஸ் டூல ரெண்டு வருஷம் கோட் அடிச்சிருச்சு... ஆனா வேதா நல்லா படிக்கும் ... இப்ப யூனிவர்சிட்டி ஃபர்ஸ்ட் வந்திருக்குது ... "


" ஐயருக்கு ஒரு பையன் கூட இருக்கான் இல்ல... அவன் என்ன பண்றான்..."


" ரங்கநாதன் .... அவன் பி.இ சிவில் முடிச்சிட்டு, மெட்ராஸ்ல கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி வச்சு நடத்திக்கிட்டு இருக்கான் ..."
என்றவர் வெங்கடேஷின் முகத்தில் ஓடிய சிந்தனை ரேகையை கண்டு நேரடியாக


" நீ வேதாவை லவ் பண்றியா..." என்றார் ஆழ்ந்து நோக்கி.
சற்று திகைத்த வெங்கடேஷ், பிறகு


" ஆமா ...." என்றார் அழுத்தமாக.


" அது எப்படிடா அந்த பொண்ண பாத்த உடனே உனக்கு காதல் ..."


" உனக்கு என்னை பத்தி தெரிஞ்சும், ஏன் இப்படி கேக்குற டா ..."


" உன்னை பத்தி தெரிஞ்சதால தான் கேட்கிறேன்... இந்த மாதிரி செய்யற ஆள் இல்லையே நீ... அதான் எப்படின்னு கேட்கிறேன் ..." என்றவருக்கு தனது மனதில் ஐந்து வருட காலமாக பொத்தி வைத்திருந்த ஒரு தலை காதலை பற்றி முதன்முறையாக வெங்கடேஷ் மனம் திறக்க, அனைத்தையும் கேட்டு முடித்த அப்துல்,


" நீ பக்தி முத்தி போய் தான் சாமியை பார்க்க, ரெண்டு வேளை கோவிலுக்கு போறேன்னு நெனைச்சுக்கிட்டு இருந்தேன் கடைசியில நீ மாமியை பார்க்க போயிருக்க..." என்றவர் தொடர்ந்து


" நீ சொன்னதெல்லாம் சரி டா... உன் காதல் தூய்மையானது ...இப்ப அதைப் பத்தி கேள்வி இல்லை .... நான் பேசுறதையும் கொஞ்சம் கேளு... " என்ற பிடிக்கையோடு ஆரம்பித்தவர்


" சாப்பாட்டு விஷயம் சாதாரண விஷயம்னு நினைக்கிறோம் ஆனா அதுலயே உனக்கும் அதுக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் ... கல்யாணத்துக்கப்புறம் நீ மட்டன் பிரியாணியா அடியோடு மறந்து விட வேண்டியதுதான்... அதைக்கூட நீ இங்க வரும் போது என் வீட்டில இல்ல ஹோட்டல்ல
சாப்பிட்டுகலாம்னு வையி, தினமும் சமையல்ல வெங்காயம் வெள்ளைப்பூண்டு கூட வராது ... வெங்காய சாம்பாருக்கு கூட நீ சிங்கியடிக்கணும் டோய்....


சரி சாப்பாட்ட விடு ...
அவங்க ஆளுங்கள்ல மெஜாரிட்டி, குரல உசத்தி கூட பேச மாட்டாங்க ... ஆனா நீ முதல்ல அடிச்சுட்டு தான் பேசவே ஆரம்பிப்ப... உன்னை சொல்லி தப்பு இல்ல உன் வேலை அப்படி ... ஒரு வேளை வேதாவை நீ கல்யாணம் கட்டினேன்னு வை, கல்யாணத்துக்கு அப்புறம் உங்க ரெண்டு பேருக்குள்ள சண்டை வந்ததுன்னா, நம்ம ஆளுங்கள கட்டி இருந்தா நாம நிம்மதியா இருந்திருப்போம்னு ஒரு நிமிஷம் அந்த பொண்ணு நெனச்சா கூட அதுக்கு மேல உன் வாழ்க்கை நரகம் தான்....


இது எல்லாத்தையும் விட, இப்ப நான் சொல்ற போற விஷயம் ரொம்ப ரொம்ப முக்கியமானது, நீயும் அதுவும் வேற வேற சமுதாயத்தைச் சேர்ந்தவங்க...


ஐயர் தனிப்பட்ட முறையில நல்ல மனுஷன் தான்... ஆனா அவர் பொண்ணு விஷயத்துல என்ன முடிவு எடுப்பாருன்னு யாருக்குமே தெரியாது...


உங்க ஐயாவுக்கும் ஐயருக்கும் 40 வருஷம் சினேகிதம் ... உன் கிட்ட கூட, உங்க அப்பா பேசாம இருப்பாரு, ஆனா ஐயர் கூட மட்டும் பேசாம அவரால இருக்கவே முடியாது..
உன்னை விட உங்க அப்பாவை எனக்கு நல்லா தெரியும் ... பர்வீன் இருக்கும் போதெல்லாம் வேதா அடிக்கடி எங்க வீட்டுக்கு வரும் ..என்னை கூட அண்ணான்னு தான் கூப்பிடும் ... இத்தனை வருஷமா தாயா புள்ளையா பழகிக்கின்னு இருக்கோம் ...


இப்ப சொல்லு உன் பதிலை இதெல்லாம் தேவையா..." என்று முழு மூச்சாக காரணத்தை அடுக்கியவரிடம்


" நீயும் ஜாதி மதத்தை நம்பறயா டா..." என்ற கேள்வியை முன் வைத்தார் வெங்கடேஷ் தீவிரமாக .


" நான் ஒரு விஷயம் சொல்றேன் கேளு ... சின்ன வயசுலயே வேதா நல்ல பாட்டு பாடும் ...அத பாத்து என் தங்கச்சிக்கும் பாட்டு பாடணும்னு ஆசை வந்துடுச்சு .... அவங்க வீட்டில அவங்க அம்மா கிட்ட போய் பாட்டு கத்துக்குறேன்னு சொல்லிச்சு... முதல்ல எங்க வாப்பா யோசிச்சாரு... ஆனா நான் தான் என் வாப்பா கிட்ட சொன்னேன் பாட்டு கத்துகிறதுல என்ன தப்புன்னு... அப்புறம் போய் பாட்டு கத்துக்கிச்சு... பர்வீன் ரொம்ப நல்லா பாடும்... நான் கூட அடிக்கடி பஜன்ஸ பாட சொல்லி கேட்பேன் ... இத எதுக்கு சொல்றேன்னா, ஜாதி
மதங்கிறது பழக்க வழக்கம் தான் ... பிறந்த சிசுக்கு எந்த ஜாதி எந்த மதம் டா தெரியும்...


அவங்க வீட்ல வளர்ந்துச்சின்னா அவங்க முறைப்படி வளர போவுது... நம்ம வீட்டுல வளர்ந்துச்சின்னா நம்ம முறைப்படி வளர போகுது ... அவ்ளோதான் வித்தியாசம்...


அதாவது தண்ணிக்குள்ள இருக்கிற வரைக்கும் தான் மீனுக்கு பலம் தரையில இருக்கிற வரைக்கும் தான் மானுக்கு பலம் ...இரண்டும் இடம் மாறிச்சு அவ்ளோ தான் ... அவங்க அவங்களோட பழக்க வழக்கம் வாழ்வியல் முறை தான் ஜாதி மதம்னு சொல்றேன் ...


100ல ஒரு சதவீதமா ஒரு வேளை ஐயரே உங்க கல்யாணத்துக்கு சம்மதிச்சாலும், அவங்க ஆளுங்க அவரை சம்மதிக்க விட மாட்டாங்க ...
அவங்க சமுதாயத்துல மட்டுமில்ல எல்லா சமுதாயத்துலயும் இந்த மாதிரி ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்யுது ...
வெள்ளைக்காரன் விட்டுட்டு போன பிரித்தாளும் கொள்கையை, இப்ப ஜாதிய வச்சு, தெளிவா அரசியல் செஞ்சுக்கிட்டு இருக்கானுங்க ... ஜாதி, மதம் மட்டும் இல்லன்னா இந்தியாவுல அரசியலே செய்ய முடியாது...


ஜாதி மதத்துக்கு அரசியல் வேண்டாம், ஆனா அரசியலுக்கு ஜாதி மதம் வேணும் ... உங்க ரெண்டு பேரோட அப்பாவும் சம்மதிச்சு, உங்க கல்யாணம் நடந்தாலும் இந்த சமூகத்தோடு பார்வை வித்யாசமா தான் இருக்கும் ...இங்க
தன் சொந்த சமுதாயத்துக்கு பயந்து தான், பிள்ளைகளோட கல்யாணத்துல முடிவெடுக்க முடியாம நிறைய பெத்தவங்க திணறராங்க ...


உனக்கு தெரியாதது இல்ல இருந்தாலும் சொல்றேன் ...
வடநாட்டுல அசால்டா அந்நிய மொழி காரங்களை கூட கல்யாணம் கட்டிக்கிட்டு அமைதியா குடித்தனம் நடத்துவாங்க ... அதுவும் பாம்பே எல்லாம் சொல்லவே வேணாம்... மராட்டி குஜராத்தியை கல்யாணம் கட்டிக்கிறது, பெங்காலி பஞ்சாபியை கல்யாணம் கட்டிக்கிறதுன்னு எல்லாம் சகஜம்.... ஆனா இங்க தமிழ் நாட்டுல தமிழ் தமிழ்னு கூவிக்கிட்டு ஜாதி பேரை சொல்லி ஒருத்தனை ஒருத்தன் வெட்டிக்கிட்டு சாவானுங்க... ஜாதி பெருமையை பேசி கௌரவ கொலைகள சர்வ சாதாரணமா செஞ்சிட்டு அதை சரின்னு வேற நியாய படுத்துவானுங்க ...


இவனுங்க ஏன் இப்படி இருக்காங்கன்னா இங்க நடக்கிற அரசியல் அப்படி....


ஜாதியை ஒழிக்கிறேன்னு சொல்லி தேர்தல்ல நிக்கிறவன் அத்தனை பேரும் , தன் தொகுதிக்கு ஆள நிறுத்தும் போது எந்த ஜாதிக்காரன் அந்த தொகுதில அதிகமா இருக்கானோ அந்த ஆள நிறுத்தி ஓட்டு வாங்குவான்... அப்புறம் எப்படி ஜாதி ஒழியும் ... ஜாதியையும் மதத்தையும் பார்த்து ஓட்டு போடுறவங்க இருக்கிற வரைக்கும் தமிழ் நாட்டோட நிலைமை இதுதான்..."


என நடப்பு அரசியலை அப்துல் தெளிவாக புட்டு புட்டு வைக்க,


" எங்கய்யா அடிக்கடி சொல்லுவாரு... ராவுத்தர் பையன் அப்துல் ரொம்ப தெளிவான ஆளுன்னு... இப்பதான் டா புரியுது ஏன் அப்படி சொன்னாருன்னு ..." என்ற வெங்கடேஷ்


" நீ சொல்றது எல்லாம் சரிதான் ... இது எல்லாத்தையும் விட ரொம்ப முக்கியமான விஷயம் , வேதா கிட்ட என் காதலை இப்ப வரைக்கும் நான் சொல்லவே இல்ல ...அவ ஒத்துபாளான்னு கூட எனக்கு தெரியல... ஒரு வேளை அவங்க ஆளுங்கள தான் கல்யாணம் பண்ணனும்னு அவ நெனச்சா ..."
என்றவரின் குரல் இயல்புக்கு மாறாக கமர,


" அவங்க அத்தை தான், அக்ரஹார முதல் வீட்டில இருக்கிற கேசவனுக்கு, வேதாவை கட்டிக்கொடுக்க
போறோம்னு சொல்லிக்கிட்டு இருக்காங்க..


அந்த கேசவன் கூட திருச்சி RECல லெக்சரரா இருக்கானாம்..." என்ற அப்துலின் பேச்சை இடைவெட்டி


" ஒரு வேளை வேதாக்கும் இதுல சம்மதம்னா, நான் விலகிக்கிறதை தவிர வேற வழியே இல்ல டா ... எனக்கு அவ சந்தோஷம் தான் முக்கியம் ..."


" ச்சே ச்சே... அவங்க அத்தை தான் அப்படி அக்ரஹாரத்துல சொல்லிக்கிட்டு இருக்காங்களே ஒழிய, வேதாவுக்கு அந்த எண்ணம் எல்லாம் கிடையாது ...
அதுக்கு ஏதோ பங்குச்சந்தையை பத்தி நிறைய படிக்கணும்னு ஆசைனு அடிக்கடி பர்வீன் கிட்ட சொல்லுமாம்...
மற்றபடி அப்படி ஏதாவது இருந்திருந்தா நிச்சயம் பர்வீன் கிட்ட சொல்லி இருக்கும் .." என்ற பதிலை கூறி வெங்கடேஷ் வயிற்றில் பாலை வார்த்தார் அப்துல்.


" சரி உன் நிக்காஹ் எப்ப டா.."


" நான் தான் ஒரு டிகிரியை கூட ஒழுக்கமா முடிக்கல ... ஷர்மிளா நல்லபடிப்பா டா ... அது படிப்பை முடிக்க இன்னும் ஒரு வருஷம் இருக்கு ... அதுக்கப்புறம்தான் எங்க நிக்காஹ்..."


" நீ முன்ன மாதிரி அவங்க வீட்டுக்கு போறியா ..."


" இல்லடா ...வாணியம்பாடி போகணும்னாலே வாப்பா ஒரு மாதிரி பார்க்கிறாரு.... அவங்க வீட்டுல போன் கிடையாது... லெட்டர் போட்டா ஊரே படிக்கும் ...அதான் அடக்கி வாசிச்கிட்டு இருக்கேன்..." என்றார் புன்னகையோடு.


************************************


வழக்கு குறித்த விவரங்களைத் தெரிந்து கொள்வதற்காக, காவல் நிலையத்திற்கு, இருசக்கர வாகனத்தில் அப்துல் உடன் வெங்கடேஷ் பயணித்துக் கொண்டிருக்கும் போது ,
வேதா தன் தோழிகளுடன் பேருந்தில் ஏறி கல்லூரிக்கு செல்வதை பார்த்தும்
அந்த பேருந்தை வெங்கடேஷ் பின் தொடர,


" டேய் ஆரம்பிச்சிட்டியா ...இனிமே போன வேலை முடிஞ்சா மாதிரிதான்..." என்று அப்துல் கூறிக் கொண்டிருக்கும் போதே, பேருந்து பாதியில் நிறுத்தப்பட்டு அதிலிருந்த பாதிப்பேர் கூச்சலுடன் இறங்க, இதனைக் கண்டு துணுக்குற்ற வெங்கடேஷ், பிரச்சனையை அறியும் நோக்கில், பேருந்து அருகில் வண்டியை நிறுத்திவிட்டு, கூடியிருந்த கூட்டத்திற்குள் சென்று பார்த்தால்,
பிக்பாக்கெட் அடித்த ஒருவன்
பிடிபட்டிருக்க, அவனை வேதா குற்றம் சாட்டிக் கொண்டிருந்தார்.


உடனே கண்டக்டரை பார்த்து,


" என்ன பிரச்சனை ..." என்றார் வெங்கடேஷ்.


" யார் சார் நீங்க ...."


" நான் அசிஸ்டன்ட் கமிஷனர் ஆஃப் போலீஸ்... இப்ப சொல்லுங்க பிரச்சனை என்ன ...." என்றார் கெத்தாக.


" சார், இவன் இந்த அம்மாவோட பர்ஸ் அடிச்சதை இந்த பொண்ணு(வேதாவை காட்டி ) பார்த்த தா சொல்லுது சார்... ஆனா இவன் ஒத்துக்காம சண்டை போடறான் சார் ..." என கண்டக்டர் கூற


" டேய், பர்ஸ் அடிச்சியா ..."


" இல்ல சார் ..."


" பொய் சொல்றான் சார் ...நான் பார்த்தேன் சார், இவன் பர்ஸ் அடிச்சதை.." என்றார் வேதா அவசரமாக.


" சார் , இந்த பொண்ணு பொய் சொல்லுது சார் ... " என்றான் அந்த பிக்பாக்கெட் இடைபுகுந்து.


" நான் பொய் சொல்ல மாட்டேன் சார் .." என்று கலங்கிய குரலில் வேதா வெங்கடேஷின் முகத்தைப் பார்த்து முதன் முறையாக தீவிரமாக முறையிட, தன் காதல் தேவதை தன்னிடம், முதன் முதலாக நேரடியாக பேசியதை எண்ணி விண்ணில் பறந்து திளைத்தவர், பிறகு சுதாரித்துக்கொண்டு


" நீ பொய் சொல்ல மாட்டேன்னு எனக்கு தெரியும் ..." என்றவரின் குழைந்த பேச்சு புரியாமல், எப்படி என்பது போல் வேதா பார்த்து வைக்க,
" நீ தான் சொன்னயே பொய் சொல்ல மாட்டேன்னு அதான் ..." என்றவரின் பதில் வேதாவுக்கு புரிந்ததோ இல்லையோ, வெங்கடேஷின் பின்னே நின்றிருந்த அப்துலுக்கு தெளிவாக புரிய


" டேய் வழியாத டா..." என்று சன்னமாக அறிவுறுத்தும் போது தான் , அங்கு தன்னோடு தன் காதல் தேவதையை தவிர மற்றவர்களும் இருக்கிறார்கள் என்ற எண்ணமே வெங்கடேஷுக்கு உதயமாக,


" டேய், எடுத்த பர்ஸ நீயே கொடுத்துட்டா தப்பிச்ச... நானா கண்டுபிடிச்சேன்...நீ செத்த ...எப்படி வசதி... " என்று வெங்கடேஷ் முஷ்டியை மடக்கிக்கொண்டு விசாரணைக்கு இறங்கிய மாத்திரத்தில் அவரது தோற்றம் மற்றும் அவரது பணியை அறிந்தவன், அதிக வேலை வைக்காமல், இடுப்பில் மறைத்து வைத்திருந்த பர்சை எடுத்து நீட்ட, பர்சை பறிகொடுத்த பெண்மணி , வெங்கடேஷுக்கு நன்றி தெரிவித்துவிட்டு பர்சை பெற்றுக்கொண்டு செல்ல, பிரச்சனை முடிந்த நிலையில், கண்டக்டர் அனைவரையும் வண்டியில் ஏறுமாறு பணிக்க, இதுதான் தருணம் என வெங்கடேஷ் வேதாவை பார்த்து


" நீ ஸ்டேஷனுக்கு வந்து ஒரு கம்ப்ளைன்ட் கொடுத்தா இவனை உள்ள தூக்கி வைச்சிடலாம் ..." என்றார் ஆர்வத்தோடு.


" இல்ல சார், போலீஸ் ஸ்டேஷனுக்கெல்லாம் போனா எங்க அப்பா வைய்வா..."


" நான் போலீஸ் மா ..." என்றார் கம்பீரமாய் .


" நீங்க போலீஸ் நீங்க போலாம்.. நான் தான் போக கூடாதுன்னு எங்க அப்பா வைய்வா..." என்றவரின் பேச்சு, வெங்கடேஷுக்கு பொங்கிய சிரிப்பை வரவழைக்க, அவர் அதை மறைக்க முயன்று கொண்டிருக்கும் போது


" இதுக்கு மேல நீ இங்க இருந்த ...நான் அந்த பஸ்ல ஏறி போயிடுவேன் டா ..." என்று அப்துல் சன்னமாக வெங்கடேஷை மிரட்டும் போது தான், அவரைக் கண்ட வேதா,


" அண்ணா,உங்களுக்கு இவரை தெரியுமா... யார் இவர்..."


" நம்ப வாசு தேவரய்யாவோட மகன் ...வெங்கடேஷ் ...பம்பாயில ஏசிபியா இருக்காரு ...அவங்க அப்பாவை வெட்டிட்டாங்கயில்ல அதான் பார்க்க வந்திருக்கிறாரு.." என்றதும் ஆச்சரியத்தில் விழிகள் விரிய
வெங்கடேஷை முதன்முதலாக ஆழ்ந்து நோக்கினார் வேதா .


ஏற்கனவே தன் தந்தைக்கும் வாசு தேவருக்கும் இடையே இருக்கும் நட்பை அறிந்தவள், தற்போது அவர் தன் தந்தையின் உயிரை காப்பாற்றியிருக்கிறார் என்பதும் தெரியுமாதலால் , அவளது கண்ணில் ஒரு வித நட்புணர்வு தோன்றுவதை வெங்கடேஷால் உணர்ந்துகொள்ள முடிந்தது .


இவர்கள் இருவரின் பார்வை பரிமாற்றத்தை அப்துல் கண்டு கொண்டாரோ இல்லையோ , அந்த பிக் பாக்கெட் கண்டு கொண்டு இதுதான் தருணம் என்று


" சார் நான் கிளம்பலாமா சார்... அதான் எடுத்த பர்ஸை கொடுத்துட்டேனே சார் ..." என்றவனிடம்


" நீ எங்க வண்டியிலயே வா , போலீஸ் ஸ்டேஷனுக்கு தான் போறோம் ... அங்க நீ உன் பதிலை சொல்லிக்கோ..." என்ற வெங்கடேஷிடம் மலர்ந்த முகத்துடன்,


" நான் கிளம்புறேன் சார் .." என்று மிகுந்த நட்போடு தெரிவித்துவிட்டு, அப்துலிடமும் விடைபெற்றுக்கொண்டு பேருந்தில் ஏறினார் வேதா.


***************************************


மருத்துவமனையில் இருக்கும் வாசுதேவருக்கு இரவு உணவை கொடுத்துவிட்டு வேதா
வெளியேறும் போது ,


" வேதா" என்று யாரோ அழைத்தது போல் உணர்ந்தவள் திரும்பிப் பார்க்க,
வெங்கடேஷ் நின்றுகொண்டிருந்தார்.


அவரைப் பார்த்ததும், காலையில் நடந்த நிகழ்வுகள் அனைத்தும், அவர் மனக்கண் முன் ஓட, சிரித்த முகத்துடன் அவரை எதிர்கொண்டவளிடம்


" வேதா உன்கிட்ட கொஞ்சம் பேசணும் ..."


" சொல்லுங்கோ ..."


" நீ ஏன் நேத்து கோவில்ல அந்த பையனை அடிச்ச ..." என்றவரின் திடீர் கேள்விக்கு
பதில் சொல்ல முடியாமல் திணறியவர்


" அது வந்து ..... அவன் தப்பா பேசினான்...அதனால அடிச்சேன் ..." என்று வேதா சுதாரிக்க,


" அப்ப என்னையும் அடிப்பியா ..." என்றார் அவர் கண்ணோடு கண் நோக்கி.


" நீங்க போலீஸ் ... நீங்க அப்படி எல்லாம் பேச மாட்டீங்கோ ..." என்றவரின்
குழந்தை தனத்தில் ஒரு கணம் தன்னையே தொலைத்தவர்,


" ஏன் போலீஸ்க்கு லவ் வராதா... போலீஸ் லவ் பண்ண கூடாதா... உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு வேதா ...உன்னை நான் லவ் பண்றேன் ...." என்றார் வேதாவை ஆழ்ந்து நோக்கி .


காலையில் மட்டுமே சந்தித்த ஒரு நபர் மாலையில், இவ்வளவு உரிமையாக பேசுவதை கண்டு, வேதா திகைத்து நிற்க,


" நீ வழக்கமா இந்த கேள்விக்கு


உன் ஆத்துக்கு போ, உன் அப்பாண்ட வந்து பேசறேன் ...அப்படித்தானே சொல்லுவ... என் ஐயா உள்ள தான் இருக்காரு வந்து பேசுறியா ..."
என்றவரின் பேச்சு , வேதாவிற்கு நாணத்தோடு சிரிப்பையும் வரவழைக்க, தலைகுனிந்த படி
பதிலேதும் கூறாமல் நின்றிருந்தவரிடம்,


" அப்புறம் நான் பத்தாம் கிளாஸ்ல எல்லாம் ஃபெயில் ஆகல ... என்னோட இன்ஜினியரிங்கல கூட டிஸ்டிங்ஷன்ல பாஸ் பண்ணி இருக்கேன் ... உன்னை மாதிரி யுனிவர்சிடி ரேங்க் எல்லாம் கிடையாது... இப்ப நான் ஏசியா இருக்கேன்...
இன்னும் ஆறு மாசத்துல டிசி ஆயிடுவேன்...." என்றவரின் பேச்சில் மேலும் வெட்கியவர், அதற்கு மேல் ஒரு நொடி கூட அங்கு நிற்காமல்
கொலுசொலி சலசலக்க ஓடிச்சென்று காரில் ஏறி செல்ல, அதை தொலைவிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த அப்துல்,


" சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்திருக்க... இனிமே என்ன ஆகப்போகுதோ ..." என்றார் கவலையுடன்.


மறுநாள் காலை 10 மணி ஆகியும், வேதா காலை உணவுடன் வரவில்லை என்றதும்,


" வாயை வச்சுக்கிட்டு சும்மா இருந்தியா நீ ...ஐயர் வீட்டில இருந்து அருமையான சாப்பாடு வந்துகிட்டு இருந்தது ... இப்போ அதுக்கு ஆப்பு வச்சுட்ட... உங்க ஐயாவுக்கு ஏற்கனவே அல்சர் டா... ஹோட்டல் சாப்பாடு எல்லாம் ஒத்துக்காது ... " என்று புலம்பியவர்,
" சரி வேற வழி இல்ல, நான் வீட்டுக்கு போய் வாப்பா கிட்ட சாப்பாடு குடுத்து அனுப்புறேன் ...எங்க வீட்டு சாப்பாடு கொஞ்சம் காரமா தான் இருக்கும் ..." என்று அப்துல் பேசிக்கொண்டிருக்கும் போது, ருத்ர நாராயணன் வீட்டு டிரைவர் ரவி, உணவு கேரியருடன் வந்திறங்கினார்.


"போய் முதல்ல அய்யாவை சாப்பிட வச்சுட்டு வா ...அப்புறம் உன்கிட்ட பேசணும் ..." என்றார் அப்துல் வெங்கடேஷிடம் .


சற்று நேரத்திற்குப் பிறகு, வெங்கடேஷ் அப்துலை சந்திக்க,
" டேய், வேதாவுக்கு பிடிக்கல போல இருக்குடா... அதான் சாப்பாட்ட டிரைவர் கிட்ட கொடுத்தனுப்பியிருக்கு ..."


" இல்லடா ...இப்பதான் என் போலீஸ் மூளை சரியா வேலை செய்யுது... அவ ரொம்ப ஸ்டிரெயிட் பார்வர்டு ... அவளுக்கு பிடிக்கலைன்னா இந்நேரம் நேரடியா வந்து சொல்லி இருப்பா... இப்படி பதில் ஏதும் சொல்லாம மௌனமா இருக்க மாட்டா... அந்த மௌனத்தை நான் சம்மதம்னு எடுத்துக்கறேன் டா..."


" எனக்கு என்னமோ அது அவங்க அப்பாகிட்ட பேசி இருக்குமோன்னு தோணுது ..."


" அவ என்னடா அவங்கப்பா கிட்ட பேசுறது... நான் இன்னைக்கு அவங்க அப்பா கிட்ட பேச போறேன் ..." என்றவரிடம்


" அதுக்கு முன்னாடி, உன் அப்பாகிட்ட பேசு, அதுதான் சரி ..." என்று அறிவுறுத்தி விடைபெற்றார் அப்துல்.


அப்துல் கூறியது சரி என்று பட, உடனே வெங்கடேஷ், " ஐயா உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் ..." என்றார் வாசுதேவரிடம் .


" சொல்லுப்பா ..." என்றார், அவர் பேசப் போவதை பற்றி முன்பே அனுமானித்து .


" நான் ஐயரோட பொண்ணு வேதாவை விரும்பறேன் ப்பா.... அவளைக் கல்யாணம் பண்ணிக்கனும்னு
ஆசைப் படறேன்... " என்ற மைந்தனின் பேச்சு எதிர்பார்த்தது ஒன்று தான் என்றாலும், ஏனோ வாசு தேவருக்கு சிறு கலக்கத்தை உண்டாக்க, அதனை வெளிக்காட்டாமல்,


" வேதாவுக்கு உன்னை பிடிச்சிருக்கா.." என்ற முக்கிய கேள்வியை அவர் முன் வைக்க, தனது ஐந்து வருட ஒரு தலை காதல் மற்றும் முன் நாள் இரவு வேதாவுடன் பேசியதை பகர்ந்த வெங்கடேஷ்,


" அவளுக்கு என்னை நிச்சயம் பிடிக்கும் பா ... "


" சரி மேற்கொண்டு என்ன பண்றதா உத்தேசம் ..."


" ஐயர் கிட்ட பேசலாம்னு இருக்கேன் ..."


" ஒரு வேளை ருத்ரா இதுக்கு ஒத்துக்கலன்னா... "


" அவரைப் பொறுத்த மட்டில், வேற சமூகத்தை சேர்ந்தவங்கிறதை தவிர என்கிட்ட என்னய்யா குறை ..." என்ற மைந்தனின் கூற்றில் உண்மை இருந்தாலும்,


" ஒன்னு புரிஞ்சுக்கோ பா... நம்ப சமுதாய ஆளுங்களாவே இருந்தாலும், கேட்ட உடனே பொண்ணு கொடுக்கணும்னு அவசியமில்லையே ... எத்தனையோ பேரு உறவுல பையன் இருந்தும் சம்பந்தம் பண்ணிக்க பிடிக்காம வெளி ஆளுங்களுக்கு பொண்ணு கொடுத்திருக்காங்க பார்த்திருக்கிற இல்ல .... " என்றவருக்கு மைந்தனின் பக்கம் இருக்கும் நியாயம் புரிந்தது, அதே நேரத்தில் அவன் பிறப்பதற்கு முன்பே ஏற்பட்ட நீண்ட கால நட்பையும் விட மனமில்லை.


" ஒரு வேளை ருத்ரா சம்மதிக்கலன்னா.." என மீண்டும் அதே கேள்வியை அவர் முன் வைக்க


" நீங்க என் கூடவே பாம்பே வந்துடுங்க ...இனிமே நான் இந்த ஊருக்கு வரமாட்டேன் ... கடைசி வரைக்கும் நம்ம தேவரய்யா(முத்துராமலிங்க தேவர்) மாதிரியே என் வாழ்க்கையை ஓட்டிடறேன்..." என்ற மைந்தனின் வாய்மொழியில் இருந்த தீவிரத்தை
கண்டு மனம் கலங்கியவர்


" நம்ம பரம்பரைக்கே, நீ
ஒருத்தன் தாம்ப்பா வாரிசு .... என் குலம் விளங்கனும்னு எனக்கும் ஆசை இருக்காதா ..." என கண்களில் மெல்லிய நீர் திரையிட சொன்னவர்


"இதை ருத்ராகிட்ட நான் பேசறதை விட நீ பேசறது தான் சரியா இருக்கும் ... ஏன்னா அவன் உயிரைக் காப்பாத்தினதுக்காக அவன் பொண்ணை மருமகளாக்கி பார்க்கிறேன்னு.... அவன் சொல்ல மாட்டான் .. எனக்கு அவனை நல்லா தெரியும்... ஆனா அவனை சுத்தி இருக்கவங்க நிச்சயமா பேசுவாங்க ..."
என்றவர் வரவேற்பில் இருக்கும் தொலைபேசியை பயன்படுத்தி,
ருத்ர நாராயணனை தொடர்புகொண்டார் .


" சொல்லு வாசு... எப்படி இருக்க ... கை பரவால்லையா ... கார்த்தால சாப்பாடு வந்ததா..." என்று மடமடவென கேள்விகளை அடுக்கியவரிடம், எப்படி பேசுவது, என்று தயங்கிய வாசு, பிறகு குரலை செருமிக்கொண்டு ,


"ருத்ரா, என் மகன், உன்னைப் பார்த்து ஏதோ பேசணுமாம் ..." என்றதும்


" என்ன..." என்றார் ருத்ர நாராயணன் யோசனையாய்.


" பேசும் போது உனக்கே புரியும் ருத்ரா ...." என்றவர் சற்று தயங்கி
" உனக்கு என்னை பத்தியும் தெரியுமில்ல ..." என்றவரின் பூடகமான பேச்சு புரியாமல்,


" உன்னை பற்றி தெரியாதா வாசு..." என இயல்பாக சொன்னவர் தன்னை சந்திப்பதற்கான நேரத்தை சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தார்.


பிறகு வந்த அப்துலிடம், நடந்த அனைத்தையும் வெங்கடேஷ் பகிர,


" ஐயர் வீட்டுக்கு போகப் போறியா ..."


" ம்ச்...இல்லடா ... சிங்கத்தை அதனோட குகையில தான் சந்திக்கணும்... அதுதான் புத்திசாலித்தனம் .... கோர்ட்டுல அவர் சேம்பரில மீட் பண்ண போறேன் ...." என்றவர் ருத்ர நாராயணன் முன் அனுமதி கொடுத்திருந்த நேரத்திற்கு அவரை சந்திக்க தயாரானார்.


ருத்ர நாராயணனுக்கு வாசுவின் மகன் பம்பாயில் ஏசிபியாக இருப்பது தெரியும்.
ஆனால் வாசு எப்பொழுதுமே, 'என் மகன்', ' என் மகன்' என்றே குறிப்பிட்டு பேசியிருந்ததால் வெங்கடேஷின் பெயரை அவர் மறந்தே போயிருந்தார்.


" ஐயா உங்களை பார்க்க, வெங்கடேஷ் வந்திருக்காரு ..." என்ற உதவியாளரிடம்


" யார் வெங்கடேஷ்..." என்றார் யோசனையாக .


" பம்பாயில ஏசிபியா இருக்காரே... வாசு தேவரோட மகன் ... வெங்கடேஷ் வாசு தேவர்..."


" ஓ..." என்று நெற்றியை நீவிக் கொண்டவர்,
" பேரை மறந்தே போயிட்டேன் ..." என தனக்குத் தானே கூறிக் கொண்டு,


" அவரை உள்ள வர சொல்லுங்கோ ..." என்றார் ருத்ர நாராயணன்.


தகிப்பாள்


Dear friends,


அடுத்த எபிசோட் ரொம்ப பெருசு ... என்னால அதுல கத்திரி போட முடியாது .. அதனாலதான் இந்த எபிசோட கொஞ்சம் சின்னதா கொடுத்து இருக்கேன் ...


சில பிரண்ட்ஸ், (private , public comment boxல) கதையில் வரும் சமஸ்கிருத வார்த்தைக்கு அங்கங்க அர்த்தம் சொல்லுங்கன்னு கேட்டு இருந்தாங்க .... சரியான ஆலோசனை அது ...


நான் முதல் அத்தியாயத்தில் முதல் பத்தியிலேயே ' சமாஸ்ரயணத்தை' பற்றி சொல்லியிருந்ததால,போன அத்தியாயத்துல அதைப் பற்றி விளக்கம் சொல்லல... ( இன்னும் ஓரிரண்டு எபிசோடில் அது பற்றிய உரையாடல்கள் வரும்) Next time i will do it on the same sentence only.


Next episodeல வர்ற சமஸ்கிருத வரிகளுக்கு எனக்குத் தெரிஞ்ச எளிய தமிழ் வார்த்தைகளை பயன்படுத்தி விளக்கம் சொல்லி இருக்கேன் நட்புகளே ...
மத்தத நீங்கதான் சொல்லணும் ..???


ப்ரியமுடன்


ப்ரியா ஜெகன்நாதன்
 
அத்தியாயம் 5

வெங்கடேஷை சிறுவனாக தான் ருத்ர நாராயணனுக்கு நினைவு . அவர் பாம்பேவிற்கு சென்ற பிறகு,
விடுப்பில் வரும் நாட்களில், கூட இருவரும் சந்தித்துக் கொள்ளும் வாய்ப்பு அமைந்ததே இல்லை.

நீண்ட நாட்களுக்குப் பிறகு இளைஞனாக, வெங்கடேஷை இப்பொழுதுதான் சந்திக்கிறார் ருத்ர நாராயணன் .

அவரை உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை, அரை நொடிக்கும் குறைவான தருணத்திலேயே, ருத்ர நாராயணனின் கண்கள் தொழில் நுட்பத்தை விட வேகமாக ஆராய்ந்து

" எப்படி இருக்கீங்கோ..." என்றார் நட்பாக.

" நல்லா இருக்கேன் ..." என்றார் வெங்கடேஷ் , குரலில் இயல்பை கொண்டு வர முயற்சித்து.

" உங்க அப்பா இல்லன்னா, இப்ப நான் இல்ல ... உங்களுக்கு எல்லாம் தெரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்..." என்றவரின் தன்மையான பேச்சு , அடுத்து வெங்கடேஷ் பேச போகும் செய்திக்கு ஒரு வித சங்கடத்தை அளிக்க, அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவர் சுதாரித்துக் கொண்டிருக்கும் போதே,

" சொல்லுங்கோ, நான் என்ன பண்ணனும்..
ஏதாவது கேஸ் விஷயமா என்னை பார்க்க வந்தேளா..." என்றவரின் கேள்விக்கு ஓரிரு நொடிகள் எடுத்துக் கொண்டவர்,

" இல்ல....கொஞ்சம் பர்சனலா உங்க கிட்ட பேசணும் ..." என்ற வெங்கடேஷின் பதில் , ருத்ர நாராயணனை துணுக்குற செய்ய,

" சொல்லுங்கோ ..." என்றார் கண்ணில் ஆராய்ச்சி மற்றும் ஆர்வத்தை தேக்கி.

" எனக்கு உங்க மக வேதாவை பிடிச்சிருக்கு... கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைப்படறேன்..." என்றவரின் நேரடியான பேச்சு , ருத்ர நாராயணனின் மனதில் ஆழிப்பேரலையை சுழற்றி அடிக்க, அவரது சட்ட மற்றும் அனுபவ அறிவால், அதனை முகத்தில் காட்டாது, குரலை உயர்த்தாமல்,

" வேதா இதப்பத்தி என்னிண்ட எதுவுமே சொல்லலையே ..." என்று சகஜமாக கேட்டவரிடம், வெங்கடேஷ் தனது ஐந்து ஆண்டு கால ஒரு தலை காதல் மற்றும் முந்தின நாள் வேதாவிடம் பேசியது என அனைத்தையும் பகிர்ந்து

" வேதா இப்ப வரைக்கும் எனக்கு பதிலே சொல்லல ... ஆனா அவங்களுக்கு என்னை பிடிக்கும்னு எனக்கு தெரியும்... என்னை பிடிச்சதால தான் மௌனமா இருக்காங்க... என்னை பிடிக்கலைன்னா நேரடியா எப்பவோ சொல்லிட்டு இருப்பாங்க ..." என்றவருக்கு ருத்ர நாராயணனின் மதி நுட்பத்தை கண்டு பெரும் வியப்பே.

ஒரே கேள்வியில்,தன்னுடைய நடத்தை மற்றும் அவர் மகளின் நடத்தை, அவர்களுக்கு இடையே இருக்கும் உறவின் தற்போதைய நிலவரம், மற்றும் தன்னுடைய மன உறுதி என ஏறக்குறைய அனைத்தையும் தெரிந்துக்கொண்டவரை எண்ணி, மளைத்துத் தான் போனார்.

" எனக்கு ரெண்டு நாள் டைம் கொடுங்கோ..."

" நீங்க பொதுவா பொய் சொல்ல மாட்டீங்கன்னு எனக்கு தெரியும் .... அதுவும் வேதாவோட முடிவுல பொய் சொல்ல மாட்டீங்கன்னு நிச்சயமா நம்பறேன்... சப்போஸ் வேதாவோட முடிவு எனக்கு சாதகமா வரும் பட்சத்தில், நான் வேற சமுதாயத்தைச் சேர்ந்தவங்கிறத காரணம் காட்டி என்னை மறுக்க மாட்டீங்கன்னு நம்பறேன் ... என்னை வளர்த்த அம்மா, அப்பா ரெண்டு பேரும் இறந்து மூணு வருஷம் ஆகுது ...
இப்ப பாம்பேல தனியா தான் இருக்கேன் ...
எனக்கு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது .. என்னை பத்தி நீங்க எங்க வேண்டுமானாலும் விசாரிச்சிக்கலாம் ..."
என்றவரின் தெளிவான பேச்சுக்கு
ருத்ர நாராயணனின் மனம் ஆயிரம் மதிப்பெண்களை வழங்கியிருந்தது ...
அதுவும் வெறும் நூற்றுக்கு ஆயிரம் மதிப்பெண்கள்.

வெங்கடேஷ் நினைத்திருந்தால் அவர் தந்தையின் மூலம், இந்த சமாச்சாரத்தை கையாண்டிருக்கலாம்.
ருத்ர நாராயணனால்
மறுத்திருக்கவே முடியாது... அப்படி ஏதும் செய்யாமல் அவர் தந்தையை பற்றி ஒரு வார்த்தை பேசாமல், திருமணம் தனது தனிப்பட்ட விஷயம் தன்னைப் பார்த்து தான் பெண் கொடுக்க வேண்டும் என்ற அவரது உயரிய எண்ணம், அதே சமயம் வெங்கடேஷ் கண்ணில் இருந்த உண்மை, அவரது காதலில் இருந்த தீவிரம், அவரது காதல் கை கூடும் என்ற நம்பிக்கை, , எதிர்பார்ப்பு , அதிலிருந்த கண்ணியம் இது எல்லாவற்றையும் விட ருத்ர நாராயணன் என்ற சிம்மத்திற்கு எதிராக அமர்ந்து, அவரது மனதில் இருந்ததை நேர்மையாக ஆண்மையோடு நாகரீகம் தவறாமல் உரைத்த முறை என அனைத்தையும் நொடியில் பார்த்து படித்து மனம் லயித்துப்போனார் ருத்ர நாராயணன்.

வெங்கடேஷ் பேசிவிட்டுப் சென்ற பிறகு, ருத்ர நாராயணனுக்கு இரு முழு நாட்கள் தேவைப்பட்டது. பிறகு
மாலை சீக்கிரமே வீடு திரும்பியவர், வேதாவை அழைத்து

"வேதா, வர வாரம் உன்னை பொண்ணு பார்க்க வரா..." என்றவரின் எதிர்பாராத பேச்சில், ஆடி போன வேதா,

" அப்பா , நான் இன்னும் பி.காமே முடிக்கல.. அதுக்கப்புறம் எம்.காம் படிக்கணும்ப்பா..." என்றவரின் பேச்சில் தவிப்பு, தட்டிக்கழிப்பு, தடுமாற்றம் என்பன தெளிவாக தெரிய

" என் பால்ய சினேகிதனோட மகனுக்கு தான் உன்னை கல்யாணம் பண்ணி கொடுக்கலாம்னு இருக்கேன் ..." என்றதும் வேதாவின் மனதில் அவர்களது சமூகத்தை சேர்ந்த, அவர் தந்தையின் நண்பர்கள் அனைவரும் வந்து போயினர், வாசு தேவரைத் தவிர.

" இல்லப்பா நான் படிக்கணும் ..."

" அப்ப சரி, நான் வாசுதேவரிண்ட சொல்லிடறேன்... அவர் மகன் உன்னிண்ட ஏதோ கேட்டதுக்கு நீ சரியா பதில் சொல்லலையாம்... சரி, நான் இப்ப சொல்லிடறேன் நீ மேல படிக்க ஆசைபடறதா..." என்ற பதிலைக் கேட்டு ஆனந்த அதிர்ச்சியில் திக்குமுக்காடியவள்,

" நீங்க இவ்ளோ நேரம் வாசுதேவரை பத்தியா பேசினீங்கோ..."

" ஆமா ..." என்றதும் அதற்கு மேல் தயங்காமல் , தன் மனதில் இருப்பதை போட்டுடைத்தார் வேதா.

" உங்களுக்கு பிடிச்சிருந்தா... நேக்கும் பிடிச்சிருக்கு பா..."
என்றவரின் பேச்சு மட்டுமல்ல கண்ணில் தெரிந்த காதலும் ,அவரது முழு சம்மதத்தை பறைசாற்ற,

" நாளைக்கு தான் நான் உன் அம்மாண்ட இந்த விஷயத்தை பேச போறேன் ... அதுவரைக்கும் நீ இதை பத்தி யாரிண்டையும் பேசாதே ... காலேஜ்க்கு கூட போகாத ... ஆத்துலயே இரு... நான் உங்க பிரின்ஸ்பல்ண்ட பேசி பர்மிஷன் வாங்கி தரேன் ..."
என்றவருக்குத் தெரியாது
அதற்குள் ஒரு தாய், தன் மகளைப் பற்றி என்னவெல்லாம் கேள்வி படக்கூடாதோ, அது மொத்தத்தையும் மரகதம் கேட்க போகிறார் என்று.

ஏனென்றால் இவ்விருவரும் பேசிக் கொண்டிருப்பதை ஆனந்தவல்லி ஒட்டு கேட்டுவிட்டார்.

ஊரையே தன் கட்டுக்குள் வைத்திருக்கும் ருத்ர நாராயணனே, வீட்டில் தன் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறார், தன்னுடைய பேச்சுக்கு மட்டும் தான் தன் தம்பி செவிமடுப்பார் , என்றெல்லாம் அக்ரஹாரத்தில் பொய் பரப்புரை செய்து வந்தவர் ஒரு கட்டத்தில், வேதாவிற்கு வரன் பார்ப்பதையே தன் தம்பி தன்னை நம்பி தான் ஒப்படைத்து இருப்பதாக கூறி மேலும் தன் வறட்டு கௌரவத்தை உயர்த்திக் கொண்டார்....

அந்தக் இறுமாப்பில் தான், அக்ரஹாரத்தின் முதல் வீட்டில் இருக்கும் சுசீலா மாமியின் மகன் கேசவனுக்கு, வேதாவை மணமுடித்துக் கொடுக்க போவதாக, சுசீலாவை மட்டுமல்ல அனைவரையுமே நம்ப வைத்திருந்தார் ..
இப்போது ருத்ர நாராயணனின் பேச்சைக்கேட்டு, ஏறக்குறைய அதிர்ந்து போனவர், வேதாவின் திருமணம் மட்டும் ருத்ர நாராயணனின் எண்ணப்படி நடந்துவிட்டால், பிறகு அவர் கூறியது அனைத்தும் பொய் என்றும், அவர் ஒரு செல்லாக்காசு என்பதையும் அனைவரும் அறிய நேரும்.

எனவே இச் சூழ்நிலையைப் எப்படி கையாள வேண்டும் என்று ஆழ்ந்து யோசித்தவருக்கு இரண்டு வழிகள் தான் இருந்தன.

1. வேதா வெங்கடேஷ் திருமணத்தை நிறுத்துவது.

2. சீச்சீ இந்தப் பழம் புளிக்கும், என்று வேதாவை பற்றி, தானே வதந்தியை பரப்புவது.

இதில் இரண்டாவது வழி அவருக்கு கை வந்த கலை. மறுநாள் காலை சுசீலாவை சந்தித்து,

" சுசீலா, உன்னிண்ட ஒன்னு சொல்றேன்... நீ யாரிண்டயும் சொல்லிடாதே..." என்ற பீடிகையுடன் தொடங்கியவர்,

" என் தம்பி, என்னிண்ட வேதாவுக்கு நீதான் நல்ல வரனா பார்த்து வைக்கணும் சொல்லியிருந்தான்..
அதனால தான் , உன் மகன் கேசவனை முடிக்கலாம்னு ஆசைப்பட்டுண்டு இருந்தேன்... ஆனா இந்த வேதா அது எல்லாத்துலயும் மண்ணள்ளிப் போட்டுட்ட... அந்த வாசுதேவரோட பையன் கூட அவ சுத்தாத இடமே இல்லை ... அந்தப் பையனை தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு ஒரே அடம் வேற ... ஏதோ அவா ரெண்டு பேருக்குள்ள தப்பு நடந்து இருக்கும் போலிருக்கு...
அதனாலதான் என் தம்பி வேற வழி இல்லாம அவ பண்ற அழிச்சாட்டியத்தால , வாசுதேவரோட மகனுக்கே கல்யாணம் பண்ணி கொடுக்கலாம்னு முடிவு எடுத்திருக்கான்.... இதெல்லாம் தெரிஞ்சிண்ட நேக்கு, மனசே சரியில்ல ...
நல்ல வேளை, நம்ப கேசவன் தப்பிச்சான்னு தான் நாம சந்தோஷப்படணும்... வேதா என் தம்பி பொண்ணு தான் இருந்தாலும்,
நியாயம்னு ஒன்னு இருக்கோல்யோ...
அதான் மனசு கேட்காம உன்னிண்ட வந்து சொல்லிட்டேன்...என்னை தப்பா எடுத்துக்காத டி ம்மா ..."

" நீங்க ரொம்ப நல்லவா மாமி ... எவ்ளோ பெரிய விஷயத்தை சொல்லி என் குடும்பத்தையே காப்பாத்தி இருக்கேள்...இந்த முறை கேசவன் ஊருக்கு வரும் போது, உம்ம தம்பியை சந்திச்சு பேசலாம்னு இருந்தோம் ... நல்ல வேளை அதுக்குள்ள எல்லா விஷயத்தையும் சொல்லிட்டேள்..." என்று சுசீலா, ஆனந்தவல்லி எதிர்பார்த்தது போலவே, அவரை உயர்த்திப் பேச, அதற்கு மேல் வந்த வேலை முடிந்து விட்டது என்ற மன மகிழ்ச்சியில் அவர் நடையைக்கட்டினார்.

ஆனால் விஷயம் காட்டுத் தீ போல், அக்ரஹாரத்தில் ஆரம்பித்து அரசியல் கட்சிகள், ஜாதி சங்கங்கள், பத்திரிகைகள் என அனைவரையும் சென்றடைந்திருந்தது .

ஏனென்றால் ருத்ர நாராயணனும் வாசு தேவரும் சட்டத்துறையில் மட்டுமல்ல சமுதாயத்திலும் பலரால் அறியப்பட்டவர்கள் .

இதற்கிடையில் வாசு தேவரை தொடர்பு கொண்டு வேதாவின் சம்மதத்தை ருத்ர நாராயணன் தெரிவிக்க, மனமகிழ்ந்து போன வாசுதேவர் , திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்ய எண்ணி நகைகள், அவர்களது சமுதாயத்தின் சடங்குபடியான முகூர்த்த புடவை , அரக்கில் பெரிய தங்க ஜரிகை கொண்டு வெய்த மடிசார் புடவை என அனைத்தையும் வாங்கி குவிக்கலானார்.

வெங்கடேஷையும் தொடர்புகொண்டு பேசியவர்,

" என் பொண்ணுக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம்னு சொல்லிட்டா... நீங்க என்ன எதிர்பார்க்கறேள்னு சொல்லுங்கோ..."

" உங்க பொண்ணை மட்டும் எனக்கு கல்யாணம் பண்ணி கொடுங்க ...அது போதும் ..." என்றவரின் பேச்சில் அளவுக்கதிகமான உறுதி தெரிந்தது .
வழக்கமாய் ருத்ர நாராயணனின் பேச்சு தான் இறுதியாகவும் உறுதியாகவும் இருக்கும் . இம்முறை
வெங்கடேஷிடமிருந்து அது வெளிப்பட்டது .


இந்நிலையில் ருத்ர நாராயணனின் சேம்பரில் இருக்கும், பல சீனியர் வக்கீல்கள் கூட, வேதா- வெங்கடேஷ் திருமணத்தைப் பற்றி அவரிடமே நேரடியாக விசாரிக்க,

அப்போது தான் அவருக்கு புரிந்தது எங்கோ தப்பு நடந்திருக்கிறது என்று . வேதா-வெங்கடேஷ் திருமணத்தை பொருத்தமட்டில், அவரைத் தவிர விஷயமறிந்தவர்கள் ஐவர் மட்டுமே. வேதா, வெங்கடேஷ், வாசுதேவர், ராவுத்தர், அப்துல்.

மேற்கூறிய ஐவரும் விஷயத்தை முறையாக அறிவிக்கும் வரை, வெளியே வாய் திறக்க வாய்ப்பே இல்லை ... அப்படி என்றால் எப்படி விஷயம் கசிந்தது .... என்று அவர் எண்ணிக் கொண்டிருக்கும் வேளையில்,
வாசு தேவர் அவரைத் தொடர்புகொண்டு, இதே செய்தியைப் குறித்து பேச,

"யார் இந்த கல்யாணத்தை பத்தி பேசினாலும் ஆமான்னு சொல்லிடு வாசு .. அப்புறம் மத்ததை பார்த்துக்கலாம் ..." என்றவர் அறிவுறுத்த, அப்போது ராவுத்தர் ருத்ர நாராயணனை காண அவரது சேம்பர்க்கே வந்திருந்தார்.

" என்ன ராவுத்தர், இந்த பக்கம் திடீர்னு..."

" ஜட்ஜ்மெண்ட் காப்பியை பத்தி பேசிட்டு போலாம்னு வந்தேன்...." என்றவர் தயங்கிய படியே , வேதா வெங்கடேஷ் திருமணத்தைப் பற்றி அவரை சார்ந்தவர்கள் அவரிடம் விசாரித்ததாக பகிர,

" ராவுத்தர், இதுல வேற ஏதோ அரசியல் இருக்கிற மாதிரி நேக்கு தோன்றது ... ஆனா அது என்னன்னு தான் நேக்கு புரியல ..." என்று அவர் பேசிக்கொண்டிருக்கும் போதே , சில பத்திரிகையாளர்கள் ருத்ர நாராயணனை சந்திக்க வந்திருப்பதாக உதவியாளர் தெரிவிக்க , ஏற்கனவே பிரச்சனையில் குழம்பி இருந்த ருத்ர நாராயணனுக்கு இவர்களது திடீர் வரவு விந்தையாக இருக்க, காரணத்தை அறிந்து கொள்ள எண்ணியே முன் அனுமதி இல்லை என்றாலும் அவர்களை சந்திக்க விரும்பினார்.

வெவ்வேறு சித்தாந்தங்களை அடிப்படையாகக்கொண்ட பத்திரிகைகளை சார்ந்த பத்திரிகையாளர்கள் ஒரு குழுவாக உள்ளே வர , ராவுத்தர் ருத்ர நாராயணன் அருகில் அமர்ந்து கொள்ள,

" சொல்லுங்கோ, இப்ப எதுக்காக என்னை பார்க்க வந்திருக்கேள்..."

" கேள்விப்பட்டோம், உங்க மகளை , உங்க பால்ய தோழன் வாசுதேவரோட மகனுக்கு கல்யாணம் பண்ணி கொடுக்க போறீங்கன்னு ...இது உண்மையா ..."

" ஆமா உண்மைதான் ..."

" இப்படி பொசுக்குன்னு சொன்னா எப்படி சார்..... நாங்க செய்தி போட வேண்டாமா ..."

" நீங்க எதுக்காக என் வீட்டு செய்தியா பத்திரிக்கையில போடணும்...இது என் பொண்ணோட கல்யாணம் ..இதைப் பத்தி பத்திரிகையில எழுதி என்ன ஆகப்போற்து ..."

" அது எப்படி சார், நீங்க சாதாரண ஆளா... இந்த வட்டாரத்துலயே
பெரிய ஜட்ஜ், உங்க நண்பர் வாசு தேவரும் ஒரு காலத்துல பெரிய வக்கீல், இப்போ மிகப்பெரிய சமூக சேவகர், தேசியவாதி, இது எல்லாத்தையும் விட நீங்க ரெண்டு பேரும் வெவ்வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவங்க... உங்கள பத்தி நியூஸ் போடாம வேற யாரை பத்தி சார் நியூஸ் போடறது ..." என்றவர் கேள்வி களத்தில் இறங்கி

" இந்த கல்யாணம் எப்படி சார் முடிவாச்சு... ஒரு வேளை வாசுதேவர் உங்கள் உயிரை காப்பாத்தினதால இந்தக் கல்யாணம் முடிவாச்சா..."

" அப்படியும் வச்சுக்கலாம் ...உயிரைக் காப்பாத்துறது ஒன்னும் சின்ன விஷயம் இல்லையே... மேலும் அவர் என்னோட பால்ய சினேகிதன் ... நல்ல குடும்பம் ...அவரும் நானும் சம்பந்தம் பண்ணிக்கிறதுல தப்பு ஒன்னும் இல்லையே ... அன்னைக்கு நடந்த சம்பவத்துக்காக போலீஸ் குற்றவாளிகளை தேடிண்டு இருக்கா அதை பத்தி இப்ப பேச வேண்டாமே..." என்றார் ஊடகத்தை பற்றி தெளிவாக அறிந்ததால் வெங்கடேஷின் விருப்பம் மற்றும் வேதாவின் விருப்பத்தை சொல்லாமல் மறைத்து.

வேறொரு பத்திரிக்கையாளர்,

" நீங்க வர்ணாஸ்ரமத்தை தீவிரமா கடைப்பிடிக்கிற ஆச்சாரமான சமுதாயத்தை சார்ந்தவர்.. எப்படி இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சீங்க..." என நேரடி தாக்குதல் நடத்த, பத்திரிகையாளர் எதைப் பற்றி கேட்கிறார் என்பது தெளிவாக விளங்கினாலும், அவருக்கு நேரடியாக பதில் அளிக்க விரும்பாமல்

" வர்ணாஸ்ரமம்ன்னா என்ன ..." என்று ருத்ர நாராயணன் எதிர் கேள்வி கேட்க

" என்ன சார்..இப்படி பேசறீங்க...த கிரேட் ருத்ர நாராயணனுக்கு தெரியாத வர்ணாஸ்ரமமா..."

" வர்ணாஸ்ரமத்துல நேக்கு நம்பிக்கை இல்லை... இருந்தாலும் அது குறித்த ஒருவகையான புரிதல் நேக்கு உண்டு.. உங்களோட புரிதல தெரிஞ்சுக்கலாமேன்னு தான் இந்த கேள்வி கேட்டேன் ..."

"பிரம்மாவின் வாயிலிருந்து வந்தவன் பிராமணன், தோளில் இருந்து வந்தவன் சத்ரியன், தொடையில் இருந்து வந்தவன் வைசியன், பாதத்தில் இருந்து வந்தவன் சூத்திரன்னு வேதத்துல குறிப்பிட்டிருக்கே..." என்றவர் முடிக்க

"'நீங்க எந்த பத்திரிகையிலிருந்து வரேள்..."

"****"

" ஓ ... கடவுள் மறுப்பு தானே உங்க பத்திரிக்கையோடு முதல் கொள்கை ... அப்போ, நான் கொடுக்க போற விளக்கங்கள், உங்களுக்கு புரியுமான்னு நேக்கு டவுட்டா இருக்கு ....ஏன்னா நீங்களெல்லாம் ராமரையும் கிருஷ்ணரையும் கற்பனை கதாபாத்திரம்னு சொல்லுவேள்... திருக்குறளை ஏத்துக்க மாட்டேள், பாரதியாரை ஒத்துக்கவே மாட்டேள் ... நான் என்ன பண்றது ..
இதோ இவர் என்னோட பால்ய நண்பர் (ராவுத்தரை காட்டி)அவர் ஒரு மார்க்கத்தை பின்பற்றறார், நான் என்னோட மதத்தைப் பின் தொடர்றேன்... ரெண்டு பேருக்குமே கடவுள் நம்பிக்கை உண்டு ... ஆனா உங்களுக்கு எதுலயுமே நம்பிக்கை இல்லையே ... உங்களைப் பொறுத்த வரைக்கும் பகவத்கீதையா இருக்கட்டும், பைபிள், குரானா இருக்கட்டும் எல்லாமே கட்டுக்கதை தானே ...உங்களுக்கு தேவைன்னா எனக்கு தெரிஞ்சதிலிருந்து நான் விளக்கம் சொல்றேன்........"

" ஆனா பைபிள், குர்ஆன்ல வர்ணாஸ்ரமம் மாதிரியான கருத்துக்கள் இல்லையே சார்..."

" உங்கள பொறுத்த மட்டில் வேதம், கீதை ,ராமாயணம் , மகாபாரதம் எல்லாமே கட்டுக்கதைகள் தானே ... அப்ப வர்ணாஸ்ரமத்தையும் கட்டுக்கதைகளா நினைச்சு ஒதுக்கிட வேண்டியது தானே ,அதை மட்டும் ஏன் தூக்கி பிடிக்கிறீங்கோ... கான்ட்ரவர்ஷியலா இருக்கிறதாலயா..."

" அப்ப நீங்களே ஒத்துக்கறீங்க சார்... அது
கான்ட்ரவர்ஷியல்ன்னு..."

" இல்ல ... கான்ட்ரவர்ஷியல் ஆக்கிட்டான்னு சொல்றேன்.... விளக்கம் சொல்றேன் கேட்டுக்கோங்கோ...

முதல்ல அது வர்ணாஸ்ரமம் இல்ல, வர்ணாஸ்ரம தர்மம் ....
மேலும் வர்ணாஸ்ரம தர்மத்துல குறிப்பிடப்பட்டிருக்கிற நான்கு வர்ணங்களும் ஜாதிகள் இல்ல , குலங்கள் .

நீங்க புருஷ சூக்த்தத்தில் இருக்கிற இந்த ஸ்லோகத்தை பத்தி சொல்றேள்....

* "ப்ராஹ்மணோ(அ)ஸ்ய ** முக மாஸீத்,
பாஹு ** ராஜன்ய: க்ருத:*
* ஊரூ தத்ஸ்ய *
* யத்வைஸ்ய : பத்ப்யாக்ம்
சூத்ரோ அஜாயத " *

இதுக்கு என்ன அர்த்தம்ன்னா,

" பிராமணனுக்கு முகமே பலம்,
வேதம் ஓதும் பிராமணன் வாயால் நல்லாசி வழங்கவும், நல் உபதேசம் செய்யவும் நல் மந்திரம் உச்சாடனம் செய்யவும் முகமே துணையா இருக்கணும் ....

சத்ரியன் வாள் கொண்டு எதிரிகளிடம் நாட்டை காப்பாற்ற தோள் பலம் கொண்ட கரங்கள் தேவையா இருக்கணும் ....

வைசியன் உட்கார்ந்த நிலையில் வியாபாரம் செய்ய கணக்கு வழக்கு பார்க்க தொடை பலமா இருக்கணும் ...

சூத்திரன் உழவு செய்ய கால்கள் பலமா இருக்கனும் ....

ரெண்டு வரி தமிழ்ல இருக்கிற திருக்குறளுக்கே கோனார் விளக்கவுரை இல்லாம பொருள் சொல்ல முடியாத நிலைமையில சமஸ்கிருத மொழி அறிவு இல்லாம , அந்த ஸ்லோகத்துக்கு நம்ம விருப்பப்படி பொருள் சொல்றது மகா தப்பு ..

இதைத்தான் திருவள்ளுவர்
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்..." அப்படின்னு சொல்றேர்...
அப்படின்னா என்ன அர்த்தம்னு உங்க எல்லாருக்கும் தெரியும் ...இருந்தாலும் அதனோட அர்த்தத்தையும் சொல்றேன்...

பிறப்பினால் அனைவரும் சமம் ... அவரவர் செய்யும் தொழிலில், காட்டுகிற திறமையில் மட்டுமே வேறுபாடு அமையும் ..

பிராமணனுக்கு நீதி, நேர்மை, தர்மம், அறம் போதித்தல், சத்திரியனுக்கு நேர்மையான ரௌத்திரம் பழகுதல்,நாட்டைக் காத்தல், பெண்கள், குழந்தைகளை காத்தல்,
வைசியனுக்கு வாணிபம் செய்தல், கணக்கு பார்த்தல் ... சூத்திரர்களுக்கு பொருட்களை உற்பத்தி செய்தல்.. சேவை செய்தல்.. இதான் அவா அவாளுக்கு விதிக்கப்பட்ட தர்மம்( செயல்கள்)

இப்ப அந்தணர், அரசர், வைசியர், வேளாளர்ன்னு
எல்லா குலத்தை சார்ந்தவாளும் போதித்தல் என்ற ஆசிரியர் பணியில இருக்கா, சத்திரியர்களுக்கு நிகரா பிராமணர்களும் ராணுவத்துல சேர்ந்து நாட்டைக் காப்பாத்தறா... வைசியர்கள் மட்டுமில்ல எல்லாரும் கடல் கடந்து போய் பிசினஸ் பண்றா... எல்லாரும் விவசாயமும் பண்றா.... இப்ப சொல்லுங்கோ இதுல எங்க வர்ணாஸ்ரமம் வந்தது ...

வர்ணாஸ்ரமமே பிறப்பின் அடிப்படையிலானது அல்ல ... அது அவா அவா செய்யும் தொழிலுக்கு தேவையான குணம் மற்றும் திறமையின் அடிப்படையிலானது...

சத்ரியன் ஷாந்தமா இருந்தா நாட்டை காக்க முடியாது, பிராமணன் ரௌத்திரமா இருந்தா போதிக்க முடியாது ...

ராமன் பிறப்பால் ஷத்ரியன், ராவணன் பிறப்பால் பிராமணன், வர்ணாஸ்ரம படி ராவணனை தானே நாங்களெல்லாம் சேவிக்கணும், ஏன் இராமனை சேவிக்கிறோம்... காரணம் உங்களுக்கே தெரியும் ...ராமன் குணத்தில் சிறந்தவன் ஏகபத்தினி விரதன்...
வள்ளுவரும் இதை தான் சொன்னேர்...
பிறப்பால் யாரும் உயர்ந்தவர்கள் அல்ல ... அவரவர்கள் செய்யும் செயலினால் மட்டுமே உயர்வு தாழ்வு நிர்ணயிக்கப்படுகிறதுன்னு...

கிருஷ்ணர் பிறப்பால் யாதவர், அவன் சொன்ன கீதை எங்களுக்கு வேதம் ... வேதங்களை தொகுத்த, மகாபாரதத்தை எழுதிய வியாச மகரிஷி, மீனவப் பெண்ணுக்கு பிறந்தவர், ராமாயணத்தை எழுதிய வால்மீகி, சூத்திரர் வகுப்பைச் சார்ந்தவர் ...

விஸ்வாமித்திரர் ஒரு ஷத்ரியர், அவர் சக்தி வாய்ந்த மந்திரமான காயத்ரி மந்திரத்தை போதித்து பிராமண தர்மத்தை செய்தார் ...

துரோணர் பிறப்பால் பிராமணர், ஆனா அவர் கௌரவர்களுக்கு பயிற்சி அளிக்கும் படை தளபதியா இருந்து ஷத்ரிய தர்மத்தை செய்தார் ...

இப்ப புரியர்தா, வர்ணாஸ்ரமம் செயல்களின் அடிப்படையிலானது பிறப்பின் அடிப்படையிலானது அல்லன்னு... இன்னும் தெளிவா சொல்லனும்னா ஒவ்வொரு மனிஷாகுள்ளேயும் இந்த நாலு வர்ணமும் இருக்கு...

நான் என் குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் போது பிராமணனா இருக்கேன், அந்நிய ஷக்திகளிடம் இருந்து என் ஆத்தை காப்பாத்தும் போது சத்ரியனா இருக்கேன் ...
கணக்கு போட்டு என் குடும்பம் நடத்தும் போது வைசியனா இருக்கேன் ... என் குடும்ப ஷேமத்திற்காக என் ஆத்து வேலைகளை எல்லாம் செய்யும் போது நான் சூத்திரனா இருக்கேன்..."

என்று தெளிவாகக் கூறி முடிக்க,


" பொய் சொல்லாம சொல்லுங்க... அப்போ உங்க சமுதாயத்துல இருக்கிறவங்க, இந்த வர்ணாஸ்ரமத்தை அடிப்படையா வச்சி ஜாதி பார்க்கிறதே இல்லையா ..."

" மொத்தம் நான்கு வர்ணம் தான் இருக்கு... ஆனா நடப்புல 4000 ஜாதி இருக்கே எப்படி ... சரி....நீங்க எந்த சமுதாயத்தை சார்ந்தவர் ..."

" *****"

" அப்போ உங்க சமுதாயத்துல இருக்கிறவங்க அத்தனை பேரும் கடவுள் நம்பிக்கை இல்லாதவாளா...யாருமே ஜாதி பாக்கறது இல்லையா .."

" அது எப்படி சார் சொல்ல முடியும் ... சில பேர் என்னை மாதிரி , பல பேர் சாமி கும்பிடுவாங்க, ஜாதி பார்ப்பாங்க ..."

" அதே மாதிரிதான் ...எங்க சமுதாயத்துல சில பேர் என்னை மாதிரி.. பல பேர் நீங்க சொல்ற மாதிரி ...
மகாகவி பாரதியாரை விட சிறந்த பிராமணன் லோகத்துலேயே இல்லங்கிறது என்னோட ஆணித்தரமான கருத்து ...
அவர் 14 மொழிகள் தெரிந்த வித்தகர்,
அவர் படிக்காத மூலநூல்களே கிடையாது ... எல்லாத்தையும் நன்னா படிச்சு புரிஞ்சுண்டு தான்

'ஜாதிகள் இல்லையடி பாப்பா, குலம் தாழ்த்தி உயர்த்தி சொல்லல் பாவம்னு எழுதினேர்...'
உண்மைய சொன்ன ஒரே காரணத்துக்காக, அவர் வாழ்ந்த காலத்துல எங்க குலத்துல இருக்கிறவாளே அவரை பிராமணனே இல்லன்னு முத்திரை குத்தி ஒதுக்கி வச்சுட்டா... அவரை மனுஷனா கூட மதிக்கல... பாரதியாரோடு இறுதி ஊர்வலத்துல கலந்துண்டது வெறும் 14 பேர் தான்... நாளைக்கு இதே நிலைமை நேக்கும் வரலாம் ... ஆனா அதைப்பற்றி நேக்கு கவலையில்ல...

இந்த பாரத மண்ணுல நான் வாழ்ந்ததுக்கு அடையாளமா என்னால முடிஞ்ச சின்ன விஷயத்தை செய்துட்டு போறேன் ...
இங்க இருக்கிற யாருக்குமே மூலநூல்கள்ல இருக்கிற விஷயத்தை படிச்சு புரிஞ்சிக்கிற சமஸ்கிருத மொழி அறிவு இல்லை ... அதற்கான அக்கறையும் இல்லை..
அப்படியே புரிஞ்சிண்டாலும், முழுக்க முழுக்க சுயநலமா அவா அவா வசதிக்காக அதை நடைமுறைப் படுத்த விரும்பல ... இதுல பிராமண குலத்தை மட்டும் தப்பு சொல்லல அதுக்கு அடுத்து இருக்கிற எல்லா குலத்தையும் தான் சொல்றேன்.... இந்த சதுரங்கத்துல அதிகம் பாதிக்கப்பட்டது கடைசில இருக்கும் நான்காம் வர்ணத்தினர் தான்...
பாவம், அவாளுக்கு எதை நம்பறது , எதை நம்பக்கூடாது, எது உண்மை, எது பொய்னு எதுவுமே தெரியாம இன்னைய வரைக்கும் கஷ்டத்தை மட்டும் அனுபவிச்சிண்டிருக்கா... எல்லாரும் அவாளோட இந்த நிலைமையை மதமாற்றத்துக்காகவும் ஓட்டு அரசியலுக்காகவும் பயன்படுத்திண்டாலே ஒழிய,
அவாளுக்கு நல்ல வழி காட்டணும், சமுதாயத்துல இதைக்குறித்த புரிதல் ஏற்படுத்தணும்னு இன்னைய வரைக்கும் யாரும் அதற்கான முயற்சியை முன்னெடுக்கல...

சமஸ்கிருத மொழி அறிவே இல்லாம யார் யாரோ தங்களோட சுயநலத்துக்காக மூல நூல்களுக்கு எழுதின விளக்கவுரை, பொழிப்புரை போன்ற இடைச்சொருகலை படிச்சிட்டு அதன் அடிப்படையில ஒரு பொய்யான பிம்பத்தை ஏற்படுத்தி, அடுத்தவாளை நம்ப வச்சு
சொகுசா வாழ்ந்துண்டு இருக்கா அவ்ளோதான் .."என்றவரிடம் , விடாமல் வேறு ஒரு பத்திரிகையாளர்

" அப்போ சூத்திரர் என்ற நான்காம் வர்ணத்தினரை பற்றி உங்க கருத்து..."

" இவ்ளோ புரியும் படியா சொல்லியும் விடாம கேட்கறேளே ... சரி சொல்றேன்..
ஸ்ரீமத் பாகவதம் படிச்சிருக்கேளா.... அதுல நீங்க சொன்ன சோ கால்டு நான்காம் வர்ணத்தவரை பற்றி ரொம்ப தெளிவா சொல்லி இருக்கு ...
சமுதாயத்துல வேணுமானா முதல் வர்ணத்தினரான பிராமணர தர்மத்தை (செயல்கள்) உசத்தியா சொல்லி இருக்கலாம் .... ஆனா ஆன்மீகத்தை பொருத்தமட்டில் நான்காம் வர்ணத்தினரோட தர்மம் தான் உசத்தின்னு ஸ்ரீமத் பாகவதம் சொல்றது ...

மற்ற மூணு வர்ணத்தினரும் , கணக்குப் போட்டுத்தான் வேலை செய்வா, ஆனா நாலாம் வர்ணத்தினரோடது சேவை ...
சேவையை கணக்குப்போட்டு செய்யவே முடியாது ... லோகத்திலே எல்லா பணிகளை விட உசத்தியானது எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாம அடுத்த வாளுக்காக செய்யும் சேவை தான் ... அந்த சேவை தான் பகவானையே மயக்கும்...அவருக்கு உகந்ததும் கூட ... மருத்துவர்கள், விவசாயிகள் எல்லாம் இந்த பிரிவுல தான் வரா..
பிரம்மனின் பாதத்துல இருந்து
வந்தவானு மட்டமா எழுதி இருக்கிறதா சொல்றேளே,
பகவானோடு வாய், தோள், தொடையை விட பாதத்துக்கு தான் மரியாதை அதிகம் ...
"பாத தரிசனம் பாப விமோசனம் ",
பகவானோட பாதுகையான சடாரியை எல்லாரும் தலைகுனிஞ்சிண்டு வாங்கிக்கிறோம்....
அதைவிட பகவானோடு ஆஜானுபாகுவான சரீரத்தை அவரது தாமரைப் பாதங்கள் தான் தாங்கி நிற்கற்து.... அதனால தான் அதை தொட்டு சேவிக்கிறோம் .... அதே மாதிரி மகாலட்சுமியும் பகவானோடு பாதத்தை தொட்டபடி தான் அமர்ந்திருப்பா... தலைப்பக்கம் அமர்ந்திருக்க மாட்டா...நீங்க எல்லாம் பார்த்திருப்பேள்... இது எல்லாத்தையும் விட யாராவது காலமாயிட்டா,
உடனே என்ன சொல்றோம்,

அன்னாரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறோம் அப்படின்னு தானே ...
பகவானின் தோளையோ, முகத்தையோ குறிப்பிடலயே... பாதத்தைத்தானே குறிப்பிடறோம்...
ஸ்ரீமத் பாகவதத்தில் இன்னொரு ஸ்லோகமும் இருக்கு,

"ஜன்மநா ஜாயதே சூத்ர: சம்ச்காரேர் தவிஜ
உச்யதே வித்யயா யாதி விப்ரத்வம் த்ரிபி:
ச்ரோத்ரிய உய்ச்யதே..."

இந்த ஸ்லோகத்துக்கு பிறப்பால அனைவரும் நான்காம் வர்ணத்தினரேன்னு அர்த்தம்...
இவ்ளோ உசத்தியானது நாலாவது வர்ணம் ...
இதைப்பற்றி இதுவரைக்கும் யாரும் ஏனோ பேசினதே இல்லை ...
என்னைப் பொருத்தவரைக்கும் வர்ணாஸ்ரமம் வட்டமாக தான் இருந்திருக்கணும் ... அதை இடைக்காலத்துல வந்த யாரோதான் படி நிலைகளா மாற்றி பிரித்தாளும் கொள்கையை புகுத்தி அவா வசதிக்கு தகுந்தா மாதிரி விளக்கவுரை எழுதியிருக்கணுங்கிறது என்னோட நீண்டநாள் அபிப்பிராயம்..."
என தன் கருத்தை தீர்க்கமாக பதிவு செய்தவரிடம்,

" சார் இன்னொரு கேள்வி ...நீங்க இன்னும் கொஞ்ச வருஷத்துல ரிட்டயர்டு ஆகப் போறீங்க... ஒரு வேளை உங்க பொண்ணோட இந்த கல்யாணம்,
நீங்க அரசியல்ல களம் இறங்கறதுக்கு அடிப்படையா இருக்குமா..."

" புரியல ..."

" இல்ல சார் ...நடக்கப் போற இந்த கல்யாணமே ஒரு பொலிட்டிக்கல் ஸ்டன்ட்டுன்னு(political stunt) பேசிக்கிறாங்களே ..." என்ற பத்திரிகையாளரை பார்த்து சிரித்தபடி

" 1939ல மீனாட்சி அம்மன் கோவிலுக்கு பிற்படுத்தப்பட்ட மக்களை எல்லாம், அழைச்சிண்டு, பல எதிர்ப்புகளை மீறி முதன் முதல்ல முத்துராமலிங்க தேவர், வைத்தியநாதய்யர், ராஜாஜி ஆலயப் பிரவேசம் நடத்தினா...அப்பவும் இதே மாதிரி அதை பொலிட்டிக்கல் ஸ்டன்டுன்னு தான் சொன்னா ...
என்ன பண்ண சொல்றேள்... நேக்கு அரசியல்ல ஆர்வம் இல்லை..
பெருந்தலைவர் காமராஜரையே தோற்கடிச்ச மண்ணு சார் இது ... முத்துராமலிங்க தேவர் மேலயே அவதூறு சொன்ன மண்ணு இது ... நானெல்லாம் எம்மாத்திரம் ... நேர்மையா இருக்கிறவாளுக்கு அரசியல் என்னைக்குமே ஒத்து வராது..."

வந்திருந்த நிருபர்களுக்கு சப்பென்று ஆகிவிட்டது. சாதி பிரிவினையை தூண்டுவதற்காகவே வழக்கம் போல் தூக்கிபிடிக்கும் வர்ணாஸ்ரம ஆயுதமும் பலனளிக்கவில்லை என்றதும் தங்களது திட்டத்தை செயல்படுத்த முடியாமல் தடுமாறி தான் போயினர். அவர்களுக்கு வர்ணாஸ்ரம ஸ்லோகத்தைப் பற்றி புரிந்து கொள்ளும் ஆர்வமும் இல்லை, அதனுடைய உண்மையான விளக்கத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் அக்கறையும் இல்லை.

யாரோ ஒருவரின் உந்துதலால் எதையோ எதிர்பார்த்து வந்தவர்களுக்கு அவர்களை விட புத்திசாலித்தனமாக ருத்ர நாராயணன் நடந்துகொண்டது கோபத்தை மூட்ட, தாங்கள் வந்த வேலையை எப்படியாவது முடித்து விட வேண்டும் என்ற நோக்கில்,

" இப்ப எதுக்கு சார் திடீர்னு ஜாதிய ஒற்றுமை, தேசிய ஒருமைப்பாடெல்லாம் பேசுறீங்க, உங்க சூழ்நிலைக்கு தேவைன்னா..." என குரலில் அளவுக்கதிகமான எள்ளலை விதைத்து அந்தப் பத்திரிகையாளர் ஒருவித கிண்டல் கலந்த தொனியில் கேட்டு முடிக்க, பதிலை எப்படித் துவங்குவது என ருத்ர நாராயணன் யோசித்து கொண்டிருக்கும் போதே ராவுத்தர்

" தம்பி....ஐயரோட பொண்ணுக்கு கல்யாணம்னு தெரிஞ்சுகிட்டு வேகமா நோட்டு பேனாவை எடுத்துகிட்டு கேள்வி கேட்க கிளம்பி வந்தியே, ஐயரை பத்தி தெரிஞ்சுக்கிட்டு வந்தியா நீ .... இன்னைக்கு நேத்திக்கு இல்ல
ஐயரு இருபது வருஷமா பாரதியார் வேத பாடசாலைனு ஒன்ன நடத்திக்கிட்டு வர்றாரு... அதுல சேர்றதுக்கு, இறைபக்தி இருக்கணும், அசைவம் சாப்பிடக்கூடாது, நேரமா எந்திரிச்சு அஞ்சு மணிக்கெல்லாம் குளிச்சு முடிச்சு வந்துடனும், ரொம்ப ஒழுக்கமா இருக்கணும், இதெல்லாம்தான் அந்தப் பாடசாலைல சேர தகுதிகள், எல்லா ஜாதியினரும் சேரலாம்..., எல்லாரும் பூணூல் போட்டுக்கிட்டு வேதமும் கத்துக்கலாம்..."
என்றவரின் பதில் , கேட்டவரை அடித்தது போல் இருக்க,

" சார், கடைசியா ஒரு நேரடி கேள்வி , உங்க பொண்ணும் வாசு தேவரோட மகனும் ரொம்ப நாளா காதலிக்கிறதாகவும், இப்ப கல்யாணம் பண்ணியே ஆக வேண்டிய நிலைமையில தான் ( இந்த வரியில் ஏகப்பட்ட அழுத்தம் கொடுத்து) இந்த கல்யாணமே இப்ப நடக்கப்போறதாகவும் பேசிக்கிறாங்களே... இது உண்மையா சார் ..." என்ற வேறொரு பத்திரிக்கையாளரின் கேள்வி, ருத்ர நாராயணனின் கண்களை கோபத்தில் சிவக்க செய்ய ,தன் பெண்ணை பற்றிய தரம் தாழ்ந்த பேச்சை கேட்டு துடித்துப் போனவர், சடுதியில் அதனை மறைத்துக்கொண்டு, அதற்கு பதில் சொல்ல முற்படும் அதே நேரத்தில் அவர் அருகே அமர்ந்திருந்த ராவுத்தருக்கு கோபம் கரையை கடந்திருக்க, கோபத்தைக் காட்ட விருட்டென்று அவர் எழ எத்தனிக்கும் போது,
அவருடைய கரங்களை அழுந்தப் பற்றி,தடுத்த ருத்ர நாராயணன், சன்னமாக அதே சமயத்தில் அழுத்தமான குரலில்,

" இந்த கேள்விக்கு நான் பதில் சொல்லக்கூடாது ... காலம் பதில் சொல்லும் ... நீங்க எல்லாரும் கிளம்பலாம் ..." என பேட்டியை முடித்துக் கொண்டார்.

அன்றிரவு வெங்கடேஷை சந்தித்து, பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடந்ததை அப்துல் கூற, வெங்கடேஷுக்கு ரத்தம் கொதித்தது.

" வேதா ரெண்டு மாசம் கர்ப்பமாம்... அதனால தான் காதலிச்ச உனக்கே , வேற வழியில்லாம ஐயரு கட்டி கொடுக்கிறாராம்... அப்படின்னு அந்த தரம் கெட்ட பத்திரிக்கையில ஜாடைமாடையா வந்திருக்குன்னு பேசிக்கிறாங்க வெங்கி...." என்றார் அப்துல் சொல்ல கூச்சப்பட்டு கொண்டு மிகுந்த தயக்கத்தோடு .

வேதாவின் நிழலைக் கூட வெங்கடேஷ் தொட்டதில்லை... 3 நாட்களுக்கு முன்பு தான் வேதாவிடம் முதன்முறையாக 10 நிமிடம் தனியாக பேசி இருக்கிறார் என்ற நிலையில் அவரது ஆத்மார்த்தமான காதலுக்கு கிடைத்திருக்கும் அவப்பெயர் அவரை வருந்தச் செய்ய,

" ஓ காட் ...அன்னைக்கு நீ சொன்ன அரசியல் இப்பதாண்டா எனக்கு தெளிவா புரியுது ..."

" ஐயரு உங்க கல்யாணத்துக்கு ஒத்துக்க கூடாதுன்னு எப்படி எப்படியோ முயற்சி பண்ணிப் பார்த்தாங்க ... முடியலன்ன உடனே ... இப்ப வேதாவை பத்தி தப்பா பேச ஆரம்பிச்சுட்டாங்க... ஒருத்தர் வேற ஜாதிக்கு பொண்ணை கட்டி கொடுக்கிறாங்கன்னாலே, நம்ப ஆளுங்க வித்தியாசமா தான் யோசிப்பாங்க...
ஒன்னு அந்த பொண்ணு நடத்தை சரி இல்லம்பாங்க.... இல்ல அந்த குடும்பமே சரியில்லம்பாங்க... இவங்களுக்கு வேற மாதிரி நேர்மையா யோசிக்கவே தெரியாது ...
இதான் இங்க நடக்கற அரசியல்....." என்றவர் தொடர்ந்து

" ஐயரு அனாயாசமா, அவங்க கேட்ட எல்லாக் கேள்விக்கும் பதில் சொல்லிக்கிட்டே வந்தாராம் ...கடைசியா கேட்ட இந்த கேள்விக்கு தான் துடிச்சி போய்ட்டாருன்னு சொல்லி வாப்பா வருத்தப்பட்டாரு..." என்று முடித்தார் அப்துல்.

" எல்லாத்துக்கும் காலம் பதில் சொல்லும் டா..." என்றார் வெங்கடேஷ் அழுத்தமான கோபத்தோடு.

" டேய், இதே பதிலை தான் ஐயரும் சொன்னாராம் ...வாப்பா சொன்னாரு... எப்படிடா நீங்க ரெண்டு பேரும் ஒரே மாதிரி யோசிக்கிறீங்க ..." என வியந்தார் அப்துல்.

மகாபாரத காலத்திலிருந்து இன்று வரை ஒரு பெண்ணின் கற்பு நெறியை காட்சிப் பொருளாக்கி அரசியல் செய்வது தான் பல துரியோதனர்களின் அடிப்படை குணம் , அதற்கு வேதா மட்டும் விதிவிலக்கா என்ன ...

அன்று மாலையில் வெளியாகும் நாளிதழிலேயே,வேத வெங்கடேஷின் திருமண செய்தியை
உள்ளூர் செய்திகளில் தலைப்பு செய்தியாகவே பத்திரிக்கைகள் வெளியிட்டன.

பெரும்பாலான ஊடகங்கள் இன்று மட்டுமல்ல, என்றுமே பத்திரிக்கை தர்மமான நடுநிலை தன்மையை பின்பற்றியதே இல்லை...
சில பெரும் பத்திரிகைகள், தங்களது கற்பனை வளத்தை வேதா-வெங்கடேஷ் திருமண விஷயத்தில் இலை மறை காய் மறையாக எழுதிய நிலையில், சில மூன்றாந்தர பத்திரிகைகள், அருவருக்கத்தக்க வகையில் கட்டிப்புரண்டனர், காதல் செய்தனர் என கற்பனை குதிரையை தட்டிவிட்டு தங்களது பத்திரிக்கையின் விற்பனையை அதிகரித்து காசு பார்த்தனர் ..

நல்ல வேளையாக அம்மாதிரியான பத்திரிகைகள் குடும்பப் பெண்களின் கைகளுக்கு கிடைக்கவில்லை. ஆனால் அவற்றின் தாக்கம் மட்டும் ருத்ர நாராயணனையும், வெங்கடேஷையும் செவ்வனே சென்றடைந்திருந்தாலும் ,
அவர்களிருவரும் அதுகுறித்து ஒருவரோடு ஒருவர் பேசிக் கொள்ளவும் இல்லை.

செய்தித்தாள் செய்தியை பார்த்து ஒரு புறம் அக்ரஹாரம் திட்டித் தீர்க்க... மறுபுறம் அரசியல் கட்சிகள் பற்றி எரிந்தன ..

ருத்ர நாராயணனை பிராமண சங்கத்தில் இருந்து நீக்க வேண்டும் என ஒரு சாரார் கொடிபிடிக்க, ருத்ர நாராயணனின் சில பிராமண நண்பர்கள் மற்றும் அவர் கொள்கையை ஆதரிப்பவர்கள் அதற்கு எதிராக குரல் கொடுக்க, கோவில் மற்றும் பிராமண இல்லங்களில் நடைபெறும் எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் ருத்ர நாராயணனையும் அவரது குடும்பத்தையும் அழைக்கக்கூடாது , அவர்கள் குடும்பத்தோடு சம்பந்தம் வைத்துக் கொள்ளக்கூடாது என விவாதம் இரு தரப்புகளுக்கிடையே தீவிரமாக நடைபெற்றது .

மரகதம் மற்றும் வேதா இருவரும் வீட்டை விட்டு வெளியே செல்லவில்லை என்பதோடு செய்தித்தாள் வாசிக்கும் பழக்கமும் இல்லை என்பதால் அவர்களுக்கு செய்திகள்
ஆனந்தவல்லியின் மூலமே சென்றடைய வேதாவை விட துடித்துப் போனது மரகதவல்லி தான்.

ஆனால் அத்தகைய நிலையிலும், பத்திரிகை செய்தியை குறித்து, வேதாவிடம் நேரடியாக, ஒரு வார்த்தை அவர் பேசவில்லை. வழக்கம் போல் தன் கோபத்தை ஆழ்ந்த அமைதியிலேயே வெளிப்படுத்தினார்.

மரகதத்தை சென்றடைந்த செய்தி இதுதான். வேதாவும் வெங்கடேஷும் கடந்த மூன்று நான்கு ஆண்டுகளாக காதலிக்கின்றனர் . காடு கம்மாயிலிருந்து சினிமா டிராமா வரை சுற்றித் திரிகின்றனர் என்பதே.

முதல் தர பத்திரிகைகள் என்று சொல்லிக்கொள்ளும் பத்திரிகைகளில் வந்த செய்திகள் அரசல்புரசலாக வேதாவின் காதுகளுக்கு எட்டினாலும், அது குறித்து பெரிய வருத்தமோ, கோபமோ அவருக்கு தோன்றவில்லை ... காரணம் வதந்திகளுக்கு வாழ்க்கையில் வழி விடவோ வருத்தப்படவோ கூடாது.... நம் மனதிற்கு நாம் நேர்மையாக இருந்தால் போதும், மற்றவை கடவுளின் கையில் ...என்று சிறுவயது முதல் சொல்லி சொல்லி
வளர்த்த ருத்ர நாராயணனின் வளர்ப்புதான்.


நீதிமன்றத்திலிருந்து வீடு திரும்பிய ருத்ர நாராயணன் , காரிலிருந்து இறங்கியதும், அவசரமாக அவரை மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்ற ஆனந்தவல்லி

" ஏண்டா நோக்கு பித்து பிடிச்சு
போயிருக்கா ... ஏன் அப்படி பேப்பர்ல பேட்டி கொடுத்த... அக்ரஹாரமே காறி துப்பற்து... இதெல்லாம் உண்மையா டா ..."
என்றவரின் கண்களில் மருந்து அளவிற்குக் கூட கவலையோ கோபமோ இல்லை... மாறாக ஆனந்தம் கூத்தாடியது ... யாரையோ பழி தீர்த்து விட்டோம் என்ற பளபளப்பு தெரிந்தது ..
வினாடிக்கும் குறைவான இந்த மாற்றத்தை, ருத்ர நாராயணன் அறிந்து கொண்டதோடு, பிரச்சனையின் மூலமே தன் தமக்கை தான் என்பதையும் செவ்வனே புரிந்துகொண்டு

"அதெல்லாம் பொய் ... என் பொண்ணு நெருப்பு ... நேக்கு என் பொண்ண பத்தி நன்னா தெரியும் ..."

" அப்ப நல்லதா போச்சு... நம்ப அக்ரஹாரத்துலயே யாரையாவது பார்த்து கல்யாணம் பண்ணிடலாமே..."

" அப்ப மட்டும் அவ மேல சுமத்தின கலங்கம் போயிடுமா... கல்யாணத்துக்கப்புறம் தினம் தினம் என் பொண்ணு தீக்குளிப்பா..." என்றார் ஆனந்தவல்லி பரப்பி விட்ட வதந்தியினால் தானே இத்தனை பிரச்சனை என்பதை உணர்ந்து தீராத கோபத்துடன்.

" இருந்தாலும் நம்மளவா மாதிரி வராது...இவாலெல்லாம் வேத்து மனுஷா , நாளைக்கு கல்யாணம் பண்ணிண்டு நம்ம பொண்ணை விட்டுட்டு போயிட்டான்னா...."

" எப்படி உன் ஆத்துக்காரன் சாரங்கன் உன்னை விட்டுட்டு போனானே அது மாதிரியா... பிராமணன்னா தோளை சுத்தி பூணூல் இருந்தா மட்டும் போதாது, பிராமணனுக்கான தர்மம்னு சொல்லியிருக்கிற நேர்மை, நியாயம், ஒழுக்கம் இருக்கணும்..."

" என் ஆத்துக்காரருக்கு பட்டாளத்துல சேரணும்னு ஆசை அதனால போய் சேர்ந்துட்டேர்..."

" பொய் ...எத்தனை வருஷமா இதே பொய்யை எல்லாரிண்டையும் சொல்லுவ... மத்தவாளுக்கு வேணா உன் ஆத்துக்காரனை பத்தி தெரியாம இருக்கலாம்... நேக்கு எல்லாம் தெரியும்...
கல்கத்தாவுல பத்து பொண்ணுங்கள வச்சு பிராத்தல் பண்ணி போலீஸ்ண்ட மாட்டிண்டது...
பொண்ணுங்கள கடத்தினது, கஞ்சா கடத்தினதுன்னு அவன் மேல இல்லாத கேஸே கிடையாது...பிராமணனுக்கு பிள்ளையா பிறந்தா பிராமணன் ஆகிட முடியாது ... ஒழுக்கம் இருக்கணும் ...
அது அவனிண்ட துளிகூட கிடையாது...
ஊரை வேணா நீ ஏமாத்தலாம் ,உன் தம்பி என்னை ஏமாத்தவே முடியாது... எல்லாம் தெரிஞ்சுண்டு ஊருக்கே நீதி சொல்ற நேக்கு , என் ஆத்துல என்ன நடக்கிறதுன்னு தெரியாதா என்ன.."


" ஏன்டா அபாண்டமா பொய் சொல்ற...
உன் ஆத்துல உக்காந்து சாட்டுண்டு இருக்கேன்னு இல்லாத பொய் எல்லாம் சொல்லுவியா... அக்ரஹாரமே சபிச்சிடுத்துன்னா நாளைக்கு உன் பொண்ணு சுமங்கலியா வாழ மாட்டாளேங்கிற ஆதங்கத்துல தான் சொன்னேன் ..." என்றதும் ருத்ர நாராயணனின் கோபம் கரையை கடக்க,

" கொஞ்சம் வாய மூடறீயா... யாரோட சாபமும் அவளை ஒன்னும் பண்ணாது ...
அவளை பெத்தவன் நான் சொல்றேன்.. அவ தீர்க்க சுமங்கலியா சந்தோஷமா வாழத்தான் போறா... ஆனா உன்னை அக்ரஹாரமே தலையில தூக்கி வச்சு கொண்டாடறதே அப்ப நீ ஏன்க்கா அமங்கலியா இருக்க ..." என்றதும் ஆனந்தவல்லியின் முகம் பேயறைந்தது போல் மாற

" நான் அமங்கலியா... என்னடா உனக்கு பித்து முத்தி போயிடுத்தா..."

" அளவுக்கு அதிகமா குடிச்சிட்டு ரயில் முன்னாடி பாஞ்சி உன் ஆத்துக்காரன் உயிரை விட்டு நேத்தோட ஒரு வருஷம் ஆயிடுத்து ...
பட்டு மாமி ஆத்து அட்ரஸ்ல, உனக்கும் உன் ஆத்துகாரனுக்கும் லெட்டர் போக்குவரத்து இருக்குன்னு
நேக்கு தெரியாதா ... அவாத்து போனிலிருந்து நீ அடிக்கடி அவனோடு பேசறதும் நேக்கு தெரியும்.... " என்றதும்
ஆனந்தவல்லியின் கை கால்களில் ஒருவித நடுக்கம் ஏற்பட, உடனே அதனை சுதாரித்துக் கொண்டவர்,

" அப்ப, ஆத்துக்காரர் போயிட்டார்னு பொட்டு பூவைவெல்லாம் எடுத்துட்டு தலையை வழிசிண்டு மொட்ட பாட்டியா இருக்கணும்னு ஆசைப்படறியா..." என்றார் வன்மமாக.

" அப்படி நீ இருக்கணும்னு நான் ஆசைப்படாததால தான் இவ்ளோ தெரிஞ்சும் இத்தனை நாளா உன்னிண்ட கேட்டுகல ...அதுல நேக்கு உடன்பாடும் இல்ல... எம் பொண்ணை அப்படி சொல்லாதேன்னு சொல்ல வரேன்..."

" ருத்ரா, இந்தக் கல்யாணம் மட்டும் நடந்ததுன்னா, அக்ரஹாரமே உன்னை ஒதுக்கி வச்சிடும்டா... அப்புறம் ரங்கநாதனுக்கு கல்யாணமே ஆகாது உன்னிண்ட யாரும் சம்பந்தம் வச்சிக்க மாட்டா... ஏன் இந்த விஷப்பரீட்சை ...
வேற மாப்பிள்ளையே நோக்கு கிடைக்கலையா... அப்படி என்ன பெரிய தகுதி இருக்கு, வாசுவோட மகனுக்கு..."

" ஒரு பிராமணனுக்கான அத்தனை தகுதியும் அந்த பிள்ளையாண்டான் கிட்ட இருக்கு...
பிராமணன் நேர்மையா, உண்மையா, ஒழுக்கத்தோட இருக்கணுங்கிறதை விட , நேர்மையா உண்மையா ஒழுக்கத்தோட இருக்குற எல்லாருமே பிராமணன் தான் ... அந்த விதத்துல வாசுவோட மகன்ணின்ட அது எல்லாமே இருக்கு ...

இதை விட வேற என்ன தகுதி வேணும் ... நேக்கு மாப்பிள்ளையா வர...
எண்னிண்ட யார் சம்பந்தம் வச்சுக்கணும்னு பகவான் முடிவு பண்ணுவேர்...
எதுவும் என் கையில இல்ல ...
என் மனசுக்கு சரின்னு படறதை நான் பண்றேன் ..." எனக் கூறியவர் , தன் அப்பாவி மனையாள் ஏதும் புரியாமல் தவித்துக் கொண்டிருப்பாள் என்றுணர்ந்து விஷயத்தைக் கூற தன் அறை நோக்கி நடை போட்டார்.
மறுநாள் அவர் சந்தேகப்பட்ட, அவர் பெண்ணின் திருமணத்தை சுற்றி நடக்கும், அரசியல் சூழ்ச்சிகளை அறிந்து கொள்ளப் போவது தெரியாமல்.

அவர் போவதையே பார்த்துக் கொண்டு நின்றிருந்த ஆனந்தவல்லி,

"எப்படி உன் பொண்ணு கல்யாணத்த நடத்துறேன்னு நானும் பார்க்கிறேன்... நடத்த விட்டுடுவோமா நாங்க..." என வன்மத்தோடு சன்னமாக வாய்விட்டே குமுறியவர் அதற்கான திட்டத்தினை ஏற்கனவே சில அக்ரஹார ஆசாமிகளோடு அரசியல் கட்சி பிரமுகர்களுடன் இணைந்து தீட்டி விட்டே வந்திருந்தார் .






தகிப்பாள்
 
அத்தியாயம் 6


மரகதத்தை சந்திப்பதற்காக ஆவலுடன் வந்த ருத்ர நாராயணனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.


தான் வரும் நேரம் தெரிந்து எதிர்கொண்டு அழைக்கும் மனையாள் கண்ணில் படவில்லை என்றதுமே பிரச்சனையின் தீவிரம் அவரை எட்ட, இரவு உணவை கூட வேதா பரிமாறியதை வைத்தே மனையாளின் கோபம் , அவருக்கு தெள்ளத் தெளிவாக தெரிய,
எதுவும் பேசாமல் உணவு உட்கொண்டவர் தன் அலுவலக அறைக்குச் சென்று வழக்கம் போல் , சில கேஸ் கட்டுகளை எடுத்து படிக்க ஆரம்பித்தார்.


சற்று நேரத்திற்கெல்லாம், அவர் அறையின் வாயிலில் ஏதோ நிழலாடுவது போல் தெரிய, அவரது மனையாளே தான்...


மரகதம் அறையை அடைவதற்கு முன்பே, அவர் தலையில் சூடியிருந்த சம்பங்கி பூவின் வாசம், கஸ்தூரி மஞ்சளின் மணம், மெல்லிய கொலுசொலி என அனைத்தும் அவரது வருகையை பறைசாற்ற, மருதாணி இட்ட விரல்களால் மடிசாரின் முந்தானையை பற்றிக்கொண்டு தயங்கி நின்றவரை கீழ் கண்ணாலேயே நோட்டமிட்ட ருத்ர நாராயணன்,


" யாரது..." என்றார் வேண்டுமென்றே.. அவரது அலுவலக அறைக்கு அவர் அனுமதியின்றி மரகதவல்லியை தவிர வேறு யாருக்கும் வருவதற்கு துணிச்சலும் இல்லை, அனுமதியும் இல்லை என்பதை அறிந்தே.


" நான் தான் மரகதம் வந்திருக்கேன் ..." என்றார் வெள்ளந்தியாக.
இது தான் மரகதம் அவரது கோபம் கூட குழந்தைத்தனமாக தான் வெளிப்படும்.
அவ்வளவு நேரமாக மிகுந்த மன உளைச்சலில் இருந்த ருத்ர நாராயணனுக்கு அந்த குரலை கேட்டதும், ஒரு வித நிம்மதி, மென் சிரிப்பு என
அனைத்தும் போட்டி போட்டுக்கொண்டு எழ,


" என்னம்மா ..." என்றார் வாஞ்சையாக.


" நம்ம வேதாவை பத்தி பேப்பர்ல வந்ததெல்லாம் உண்மையான்னா.... " என மரகதம் கமரிய குரலில் கேள்வி எழுப்ப,


" நீ நம்பறியா ... அவளை வளர்த்தது நீயும் நானும் டி... நம்ம குழந்தையை பத்தி நமக்கு தெரியாதா..."


" பின்ன ஏன் என்ணின்ட கூட கலந்துக்காம அப்படி ஒரு பேட்டி கொடுத்தேள்..."


" உன்ணின்ட சொல்லனும்னு நினைச்சேன்ம்மா, அதுக்குள்ள என்ன என்னமோ ஆயிடுத்து... அதான் அப்படி பேட்டிக் கொடுக்க வேண்டியதா போயிடுத்து ..." என்றவர் நடந்தது அனைத்தையும் ஒன்றுவிடாமல் பகிர்ந்து,


" வேதாவுக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இருக்கக்கூடாதுன்னு பெருமாள வேண்டின்டு தான், அவ விருப்பத்தை கேட்டேன் ... அவ அதுக்கு பதில் சொல்றதுக்கு முன்னாடி, அவ கண்ணே ஒத்துண்டுடுத்து...


அப்புறம் இந்த கல்யாணத்துல அவளுக்கு இஷ்டம் இருக்கிறதா நேரடியாவும் சம்மதம் சொல்லிட்டா... நான் நினைச்சிருந்தா, வேதாயிண்ட எதையும் பேசாம, அந்தப் பையனிண்ட , என் பொண்ணுக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லைன்னு சொல்லிட்டானு பொய் சொல்லியிருக்கலாம்....


அவனும் வழக்கம் போல பாம்பே போயிட்டு இருப்பான் ...
ஆனா 'தன்னெஞ்சறிய பொய்யற்கனு..' திருவள்ளுவர் சொல்லியிருக்கேரோல்யோ ... பொய் சொன்ன பாவத்துக்கு காலத்துக்கும் என் மனசாட்சி என்னை கொன்னுண்டே இருக்கும் ..
அது மட்டும் இல்ல, வேதாவோட முடிவுல பொய் சொல்லமாட்டீங்கன்னு நம்பறேன்னு , என் மேல முழு நம்பிக்கை வச்சு சொன்ன அந்த பையனை நான் எப்படிம்மா ஏமாத்தற்து....


இது எல்லாத்தையும் விட , நம்ம பொண்ணு அவனுக்கு பதில் சொல்லலைன்ன உடனே, அவ பின்னாடி சுத்தாம, என்னை நேருக்கு நேர் சந்திச்சு பொண்ணு கேட்டான் பாரு..
அந்த தைரியம் நேக்கு ரொம்ப பிடிச்சிருந்தது ம்மா ...


மேடையில மூச்சுக்கு 38 தடவை 'சாதி வேறுபாடுகளை களைந்து சமூக நீதியை நிலை நாட்டுவோம்னு' பேசற நான் என் வாழ்க்கையில அதை கடைபிடிக்கணுமோல்யோ....
இல்லன்னா மேடைப்பேச்சு
மேடையோடு போச்சுன்னு ஆயிடும்...


ரெண்டு நாள் முழுக்க டைம் எடுத்துண்டு, அந்தப் பையனைப் பத்தி விசாரிச்சுப் பார்த்ததுல , அஞ்சு வருஷ சர்வீஸ்ல ஆறு ட்ரான்ஸ்வர் ... மத்திய பிரதேஷ்ல மூணு, மகாராஷ்டிராலயே மூணு ட்ரான்ஸ்வர் ...
கை சுத்தம், இத்தனை வருஷத்துக்குள்ள ஏகப்பட்ட சாதனை ...நேர்மை ... கண்ணுக்கு லட்சணமா, ஒழுக்கத்தோட நன்னா படிச்சு நல்ல உத்தியோகத்துல இருக்கிற அந்த பையனை..." என்று நிறுத்தியவர்,
'அவரை' வேணாம்னு சொல்ல என்ணின்ட காரணமே இல்லம்மா..." என முடித்தார்.


" உங்களை விட பெரிய பதவியோ..." என்ற மரகதத்தின் கண்ணில், வெகு சிறு பொறாமையும் நிறைய ஆர்வமும் தெரிய, அதைக்கேட்டு வாய்விட்டே சிரித்த ருத்ர நாராயணன்,


" என் பதவியும் அவர் பதவியும் கம்பேர் பண்ண முடியாது ... அவா குற்றவாளிகளை அரஸ்ட் பண்ணி கோர்ட்டுல நிறுத்தும் போது , நாங்க சொல்றதுதான் சட்டம் ... அதே மாதிரி ஏதாவது கலவரம்னா அவா எடுக்கிற முடிவுல கோர்ட்டு தலையிட முடியாது ....
மொத்தத்துல இந்த வயசுல அவர் இந்தப் பதவில இருக்கிறது பெரிய விஷயம் ..." என்றார் குழந்தைக்கு சொல்வது போல் .


" ஆனா நீங்க என்ன சொன்னாலும், நேக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்ல ... என்னப்பா நேக்கு கொடுத்த என் வைரத்தோடு வைர அடிக்கை எல்லாம் கொடுக்க மாட்டேன்..." என்று தன் அதிகபட்ச கோபத்தை , தன்னுடைய அதிகபட்ச அறிவை பயன்படுத்தி வெளிப்படுத்தினார் மரகதம் . சீப்பை மறைத்து வைத்தால் திருமணம் நின்று விடும் என்பது போல், வைரத்தோடு இல்லை என்றால் திருமணம் நடக்குமா என்பது தான் அவருடைய அடிப்படை கேள்வி.


" அது சரி, நீ என்னைக்கு ருத்ர நாராயணனோட ஆம்டியாளா இருந்திருக்க... சக்கரவர்த்தி ஐயங்காரோட பொண்ணா தானே இருந்திருக்க..." என்று குறும்பாக கூறிய ருத்ர நாராயணனை முறைத்துப் பார்த்தவர்


" உங்கணின்ட பேசும் போது எல்லாம் சரியா தான் படறதுன்னா... ஆனா அக்ரஹாரத்துல பேசிக்கிறதையெல்லாம் அக்கா சொல்லும் போது ரொம்ப வருத்தமா இருக்கு.... ஏனோ காலம் காலமா பெரியவா சொல்லிக்கொடுத்து வந்ததெல்லாம் நாம மாத்தறது சரியா படலன்னா..." என்றவரின் பேச்சில் ஆனந்தவல்லியின் சூழ்ச்சியை தெரிந்து கொண்டவர், அதனை வெளிக்காட்டாமல்


" பாரதியார் நம்மெல்லாரையும் விட பெரியவர் தானே... நீயும் படிச்சிருக்கயோல்யோ...
ஜாதிகள் இல்லையடி பாப்பான்னு சொல்லியிருக்கேர் இல்ல ...
அவர் சொன்னதை தான் நான் செய்றேன் சரியா ..." என்றவர்,


" ஒன்று மட்டும் நினைவுல வச்சுக்கோ... இப்ப நீ சுமங்கலியா நின்னுண்டு என்னிண்ட கேள்வி கேட்டுண்டு இருக்கேன்னா... அதுக்கு வாசு தான் காரணம் ..." என்ற பேச்சை கேட்டதற்கு பின்னும் கேள்வி எழுப்புவதற்கு மரகதத்திற்கு என்ன பைத்தியமா... எதுவும் பேசாமல் கண் கலங்கியவர், அதற்கு மேல் ருத்ர நாராயணனையே நிறைந்த பார்வை பார்த்துக் கொண்டு நிற்க


" நீ நிம்மதியா தூங்கு... நாளைய பொழுது நமக்கு நன்னாவே விடியும் பகவான் நம்ம கூடவே இருக்கேர் சரியா ..." என்று மனையாளுக்கு ஆறுதல் கூறுவது போல், தன் மனதினையும் தேற்றிக் கொண்டார் ருத்ர நாராயணன்.


****************************************


இடம் : முன்னாள் எம்.எல்.ஏ
வீர மாணிக்கம் இல்லம்.


" டேய், உங்களுக்கெல்லாம் கொஞ்சம் கூட கூறுங்கிறதே இல்லயாடா ... ஒரு நாலு நாள் ஊர்ல இல்லன்னா, இப்படித்தான் செஞ்சு வப்பீங்களா ...
எதுக்குடா ஐயர போட ஆள் அனுப்பனீங்க..." என வீர மாணிக்கம் கேள்வி எழுப்ப,


" தலைவரே, நாங்க ராமலிங்கத்தோட போயி, எவ்வளவோ பேசிப் பார்த்தும்,
வழக்கோட தீர்ப்ப ராவுத்தர் உறவு காரனுக்கு சாதகமா சொன்னதோட மட்டுமில்லாம, நம்ம ஆளுங்கள குண்டர் சட்டத்துல உள்ள தூக்கி வச்சுட்டான் அந்த ஐயரு...அதான் ..." என்றான் அந்த கட்சியின் தலைசிறந்த ரவுடி.


" டேய் ஏற்கனவே நாம ஆட்சில இல்லடா ... இப்ப அந்த ஐயரு மேல கைய வச்சிட்டதால, இந்த தொகுதில அந்த ஐயருக்கு இருந்த செல்வாக்கு இப்ப பல மடங்கு அதிகமாயி போச்சு ...
சும்மாவே அந்த ஆள் பேச்சைக் கேட்டு தான் இந்த தொகுதி மக்களே ஓட்டு போடுவாங்க ... இப்ப இருக்கிற நிலைமையில அந்த ஆள் சுயேட்சையாவோ இல்ல ஆளுங்கட்சில நின்னாலோ, நிச்சயமா அவன் தான் ஜெயிப்பான்..." என வீர மாணிக்கம் விளக்கிக் கொண்டிருந்த போது


" ஐயா, உங்களுக்கு உங்க பிரச்சனை எங்களுக்கு எங்க பிரச்சனை ..." என்றார் ஒரு குறிப்பிட்ட ஜாதி சங்கத்தின் தலைவர்.


" உங்களுக்கு என்னைய்யா பிரச்சனை. .. புரியல..." - வீர மாணிக்கம்.


" ஜாதி சங்கம் இருக்கறதால தான், ஜாதி கட்சி இருக்குது... அந்த ஐயரு கொடுத்த பேட்டியை பாத்தீங்களா...
வயிறு எரியுது ...
ஐயங்கார் பொண்ணை தேவர் கட்ட போறான்... அதை ராவுத்தர் கூட இருந்து அறிவிக்கிறான் ... இதே நிலைமை போச்சுதுன்னா ... நாங்களெல்லாம் ஜாதி சங்கத்தைக் களைச்சிட்டு,பழையபடி கடப்பால போய் கல்லு உடைக்க வேண்டியது தான் ...
ஜாதி சங்கத்தையே களைச்சிட்டா ஜாதி கட்சியை எப்படிய்யா நடத்தறது...
வனத்துல ஒண்ணா மேஞ்சாலும், இனம் இனத்தோடு தான் சேரணும் தலைவரே ...


ஜாதி விட்டு ஜாதி அவனவன் கல்யாணம் கட்டிகிட்டு போறதுக்கா நாங்க ஜாதி சங்கம் வச்சு நடத்திக்கிட்டு வர்றோம்...
எனக்கு தெரியாது இந்த கல்யாணம் நடக்கக் கூடாது தலைவரே ... இந்த செய்திய அரசல்புரசலா கேள்விப்பட்ட போதே ரொம்ப கடுப்பா ஆயிடுச்சு.. இப்ப பேப்பர்ல வேற அந்த ஐயரு பேட்டி கொடுத்துட்டான்... நாளைக்கு ஜாதி விட்டு ஜாதி கல்யாணம் பண்றவன் எல்லாம் இவனுங்கள முன்னுதாரணமா சொல்லுவானுங்க ..." என முகாரி ராகம் வாசித்தார் அந்த ஜாதி கட்சி தலைவர்.


"யோவ், உன்னை விட எனக்கு தான்யா நஷ்டம் அதிகம்...
இப்ப தமிழ்நாட்டுல சூழ்நிலையே சரியில்ல... இந்த தொகுதி எம்எல்ஏவும் இப்பவோ அப்பவோன்னு இருக்கான் ... ஒரு வேளை இடைத்தேர்தல் வரலாம், இல்ல ஆட்சியே கூட கலையலாம் ...
அந்த ஐயரும் இன்னும் கொஞ்ச நாள்ல ரிட்டையர் ஆக போறான் ... அவனுக்கு விருப்பம் இல்லன்னாலும், இப்ப இருக்கிற நிலைமையில இந்த தொகுதி ஜனங்க, அந்தாள வேலையை ராஜினாமா செய்ய வச்சு, அரசியல் களத்துல இறக்கி, ஜெயிக்க வச்சுடுவாங்க போல இருக்கு...
இப்படி என் அரசியல் வாழ்க்கைக்கு தான் ஆபத்துன்னு பார்த்தா ...என்னோட நீண்ட நாள் திட்டமும் வீணா போயிடுச்சு ...


நான் நேரடியா இந்த லேண்ட் (land)கேஸ்ல சம்பந்தப்படாம, ராமலிங்கத்தையும், அவன் சாதியை சேர்ந்த ஒரு நாலஞ்சு பேரை வச்சிதான் கேஸ் போட வச்சேன்...
கேஸ் ஜெயிச்சு இருந்தா, 10 லட்சம் போற அந்த இடத்தை, வெறும் பத்தாயிரம் கொடுத்து ராமலிங்கதோட ஆளுங்க கிட்ட இருந்து வாங்கி சாராய ஆலை கட்டலாம்னு இருந்தேன்... டாக்குமெண்ட் எல்லாம் ராவுத்தர் உறவுக்காரன் சைட்ல கரெக்டா இருக்குன்னு அவன் பக்கம் தீர்ப்பு ஆயிடுச்சு ....
அதோட நாம பகுத்தறிவு, சமூகநீதி, சாதி ஒழிப்பு, சமூக முன்னேற்றம்னு வெறும் வாயில வடை சுட்டு , அரசியல் செஞ்சுகிட்டு இருக்கோம் .... ஆனா அந்த ஐயரு சத்தம் இல்லாம செய்துகாட்ட போறான் ... இந்தக் கல்யாணம் மட்டும் நடந்தா என்னோட அரசியல் வாழ்க்கைக்கே மூடுவிழா நடத்த வேண்டியது தான்.... " என்ற வீர மாணிக்கம் ஓரிரு நொடி தீவிரமாக யோசித்து விட்டு,


" சாதாரணமா இந்த கல்யாணம் நிக்ககூடாது ... முதல்ல மதக் கலவரம் வெடிக்கணும், அதனால கல்யாணம் நிற்கணும் ... அந்த ருத்ர நாராயணன் கொடுத்த பேட்டி பொய்னு ஜனங்களை நம்ப வச்சு , மக்கள் மத்தியில அவனுக்கு இருக்கிற செல்வாக்கை அடியோட ஒன்னும் இல்லாம பண்ணனும் ... அதுக்கு ஒரே வழி தான் இருக்கு ...
நம்ம ஆளுங்களை வச்சு, ராவுத்தரை போட்டுட்டு, பழிய தூக்கி வாசுதேவனோட ஆளுங்க மேல போட்டுட்டா.... நாம எதிர்பார்த்த மதக் கலவரம் வெடிக்கும் ...எனக்கும் இந்த நிலம் விஷயத்துல அந்த ராவுத்தரை பழி தீர்த்தா மாதிரி ஆயிடும் ... ஏன்னா அந்த ராவுத்தர் தான் அந்த நிலம் சம்பந்தமா முழுக்க முழுக்க ஆதாரத்தை தாக்கல் பண்ணி, இந்த கேஸ் ஜெயிக்கிற வரைக்கும் போராடினான்...
அதுமட்டுமல்ல
வாசு தேவரோட உறவுக்காரன் சார்பா ஏற்கனவே கோர்ட்டுல ராமலிங்கம் ஆஜரானதால, நில வழக்குல தோத்த கோவத்துல , வாசுதேவன் சொல்லிதான் ராவுத்தரை போட்டுட்டாங்கன்னு ராமலிங்கத்தை வச்சு, வதந்தியை பரப்பினா, நாம எதிர்பார்த்த மத கலவரம் வெடிக்கும் , ஒருத்தன ஒருத்தன் வெட்டிக்கிட்டு சாவான் ...
இப்படித்தான் ஒரே கல்லுல மூணு மாங்கா அடிக்கணும்..." என வன்மத்தோடு முடித்தார் வீர மாணிக்கம்.


" சரி தலைவரே, கல்யாணம் எப்படி நிக்கும் ... அந்த வாசுவோட பையனை போட்டா தானே கல்யாணம் நிக்கும் ...." என ஆர்வத்தோடு அந்த ஜாதி கட்சி தலைவர் கேள்வி எழுப்ப


" உனக்கு ருத்ர நாராயணனை பத்தி தெரியாது ...இப்படி ஒருத்தனை ஒருத்தன் வெட்டிக்கிட்டு இருக்கும் போது அந்த சமுதாயத்துலயா தன் பொண்ணை கொடுப்பான்... நிச்சயமா கொடுக்க மாட்டான் ... நாம நினைச்ச மாதிரி கல்யாணம் நிக்கும்...
ருத்ர நாராயணன் கொடுத்த வாக்கை காப்பாத்தலன்னு நாம நம்ம சைடுல கிளறி விட்டா, அந்த ஆளுக்கு இருக்கிற செல்வாக்கு தானா குறைஞ்சு போயிடும் ... அது மட்டுமில்லாம லேண்ட் கேஸ்ல ராவுத்தருக்கு சாதகமா தீர்ப்பு சொன்ன காரணத்துக்காக ருத்ர நாராயணனை போட்டு தள்ள ஆளை ஏற்பாடு பண்ணினதோடு, அந்த அருவா வெட்ட தானே தன் தோள்ல வாங்கி தன்னை நல்லவனா காட்டிக்க முயற்சி பண்ணியிருக்கான் அந்த தேவன்னு மறுபடியும் வதந்தி பரப்பினா தேவரும் ஐயரும்
பிரிஞ்சிடுவானுங்க ...
அப்புறம் எப்ப எலக்சன் வந்தாலும் நாமதான் ஜெயிப்போம் ...


இத விட்டுட்டு நீ சொல்ற மாதிரி வாசு தேவனோட பையனை போட்ட கல்யாணம் தான் நிற்குமே ஒழிய, ராவுத்தர் சாகமாட்டான்,
அந்த ஐயரோட செல்வாக்கு இன்னும் அதிகம் தான் ஆகும் ...


யார போட்டா பவர் ஃபுல்லா கலவரம் வெடிக்கும்னு பார்த்து அந்த ஆளை போடணும்... அதுக்காகத்தான் ராவுத்தரை செலக்ட் பண்ணேன்...
இந்த சம்பவம் சாதாரணமா நடக்கக்கூடாது, தேவன் சொல்லித்தான்
தேவனோட ஆளுங்க ராவுத்தரை செஞ்சாங்கன்னு சொல்ல, சரியான சாட்சியை வச்சிகிட்டு செய்யணும் தெரியுதா .... முக்கியமா இதுக்கு பின்னாடி நாம இருக்கோம்னு யாருக்குமே தெரிய கூடாது... .." என்றவர் நக்கலாக


" சாதியை ஒழிப்போம் சாதியை ஒழிப்போம்னு சொல்லி இன்னை வரைக்கும் வெறும் பில்டப் அரசியல் தான் செஞ்சுகிட்டு இருக்கோம் ... அதை 100 வருஷம் ஆனாலும் இந்த முட்டாள் ஜனங்களால புரிஞ்சுக்க முடியாது.. நாடு அமைதியா இருந்தா நாம அரசியல் பண்ண முடியாது ... இவன் அவன் மதத்தை மதிச்சு நடக்கிறதும் அவன் இவன் மதத்தை மதிச்சு நடக்கிறதும் நடந்தா நாம எப்படி அரசியல் பண்றது.... அதனால தான் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் பிரிவினை பேசணும், கலவரத்தை தூண்டனும் ..
அதனாலதான் நான் பத்திரிக்கை நிருபர்களை அனுப்பி சாதி பிரச்சினையை தூண்ட பார்த்தா, அதை அந்த ஐயரு வேற மாதிரி
சமாளிச்சிட்டான்... வேற வழி இல்லாம எல்லா பத்திரிகைக்கும் பணம் கொடுத்து, தரக்குறைவா,
எழுத வச்சேன்... ஆனா அதுக்கும் அவன் அசையாம கல்லு மாதிரி இருக்கான்... பார்த்துடலாம் அவனா, நானான்னு...
ஆமா... கல்யாணம் எப்ப நடக்கப்போகுது ..." என யோசனையாய் வீர மாணிக்கம் கேள்வி எழுப்ப,


" தெரியல தலைவரே, பத்திரிகை அடிச்சு எல்லாரையும் கூப்பிட வேணாமா, இன்னும் ஒரு வாரத்துக்கு மேல ஆகும்னு நினைக்கிறேன்..." என்றார் இடை புகுந்து அவர் கட்சியில் ஒரு குறிப்பிட்ட பதவி வகிப்பவரும் அவரது வலது கையுமான பாண்டியன் .


" அப்படின்னா, நாம நம்ம காரியத்தை சிறப்பா செய்திடலாம் ..." என வன்மத்தோடு பதிலளித்த வீர மாணிக்கம் , உடனே பாண்டியனைப் பார்த்து,


" அது சரி, உன் பொண்ணுக்கு எப்ப கல்யாணம் ... அந்தக் கீழ் ஜாதி பையனோட அது பேர் அடிபட்டுச்சே... அந்தப் பையனும் எதோ பிரச்சனை பண்ணான்னு கேள்விப்பட்டேன்..."


" அந்த பையனோட கைய கால முறிச்சாச்சு தலைவரே ...
என் பொண்டாட்டி சொந்தத்துல பேசி முடிச்சிருக்கேன்.. அடுத்த மாசம் என் பொண்ணுக்கு கல்யாணம் ..."


" உன் பொண்ணு கல்யாணத்துக்கு ஒத்துக்கும்மா ..."


" அது யாரு ஒத்துக்கிறதுக்கு.... கைய கால கட்டி கல்யாணம் பண்ணிட மாட்டேன் .... எங்க குலதெய்வ கோவில்ல தான் கல்யாணம் வச்சிருக்கேன் தலைவரே... நேத்தே ஐயரைப் பார்த்து தேதி குறிச்சு கல்யாணத்துக்கு அட்வான்ஸையும் கொடுத்துட்டு வந்துட்டேன்...முகூர்த்த நாள் வேற... அந்த ஐயரு ரொம்ப ராசியானவரு... அவரு வேற ஏதாவது கல்யாணத்தை ஒத்துகிட கூடாதுன்னுதான் முன்கூட்டியே புக்கு பண்ணிட்டு வந்திட்டேன் ..."


" யோவ், மேடைக்கு மேடை சாதி மறுப்பு, சமூக நீதினு பேசுவ..." என வீர மாணிக்கம் எள்ளலாய் கேட்டு சிரிக்க


" தலைவரே, கொள்கை கோட்பாடு எல்லாம் ஊருக்கு தான் வூட்டுக்கு இல்ல.... சாதி மறுப்பு , சமூக நீதின்னு என் வூட்ல பேசினா என் பொண்டாட்டி என்னை தூக்கிபோட்டு மிதிப்பா... சமூகநீதி, சாதி மறுப்பு , பகுத்தறிவு எல்லாம் வயத்து பொழப்பு அரசியலுக்கு தான் ... வாழ்க்கைக்கு இல்ல தலைவரே ..நான் என்ன அந்த ஐயரு ருத்ரா மாதிரி மான ஈனம் இல்லாதவனா ... கீழ் சாதில பொண்ணை கொடுத்தா என் சாதிக்காரன் ஒருத்தன் கூட என் வீட்ல தண்ணி குடிக்க மாட்டான் தலைவரே... என் வீட்டு கழுதை காதலிச்சதுதான் காதலிச்சது மேல் சாதிகாரணை காதலிச்சிருந்தா, இந்நேரம் சாதியை வேரறுத்து சமூக நீதியை நிலைநாட்டுவோம்னு மேடை போட்டு பேசி கல்யாணத்தையே முடிச்சிருப்பேன்... என்னத்தை சொல்ல எல்லாம் தலையெழுத்து ..." என்று பாண்டியன் குமுற


" இத்தனை சாதி கட்டுப்பாடுகளையும் மீறி, அந்த ருத்ரா சொன்ன மாதிரி தன் பொண்ணு கல்யாணத்தை நடத்திட்டான்னா, அப்புறம் நாம பேசுற அரசியலுக்கு மக்கள் மத்தில மரியாதை இல்லாம போயிடும் பாண்டியா ..."


" தலைவரே, அப்படி அந்த கல்யாணத்தை நடத்த விட்டுடுவோமா... விஷயத்தை கேள்விப்பட்டதும் அக்ரஹாரத்துல இருக்கிற பாதி ஐயமாருங்களை கூப்ட்டு பேசிட்டேனில...
ருத்ரா தன் பொண்ணை தேவனுக்கு கட்டி கொடுத்தானா, நாளைக்கு மற்ற எல்லா சாதிகாரனும் உங்க வீட்ல வந்து பொண்ணு கேப்பான் பரவாயில்லையானு ஒரு குண்ட தூக்கி போட்டேன்.... அக்ரஹாரமே கொதிச்சு போயிருக்கு.... அது மட்டும் இல்ல அக்ரஹாரத்துல இருக்கிற பாதிப்பேர் நமக்கு நல்ல பழக்கம்... எங்க குடும்பத்துல நடக்கிற எல்லா பூஜை, கல்யாணம், காது குத்துன்னு பரம்பரை பரம்பரையா எல்லா விசேஷங்களையும் அவங்கதான் நடத்தி வைக்கிறாங்க... அதனால நான் சொன்னா கேட்டுகிடுவாங்க.. ஏற்கனவே அந்த ருத்ர நாராயணனை அங்க இருக்கிற ஒரு கோஷ்டிக்கு பிடிக்காது ... அவன் பாரதியார் பாடசாலைன்னு எல்லாருக்கும் பூணூல் போடுறான்... வேதம் சொல்லிக் கொடுக்கிறான்னு கடுப்புல இருக்காங்க ... அதையெல்லாம் அவன் பொண்ணு கல்யாணத்துல
தீர்த்துகிடுவாங்க... இது எல்லாத்தையும் விட முக்கியமா ருத்ர நாராயணனோட அக்கா ஆனந்தவல்லி மாமியை பார்த்து பேசிட்டேன் ... ருத்ரா தன் பொண்ணுக்கு கல்யாண ஏற்பாடு செய்ய ஆரம்பிச்ச உடனே எல்லா விவரத்தையும் தெரிஞ்சிக்கிட்டு நமக்கு சொல்ல சொன்னதோடு அதை எப்படி தடுத்து நிறுத்தனுங்கிற முதல் கட்ட திட்டத்தையும் சொல்லிட்டு தான் வந்து இருக்கேன் தலைவரே கவலைப்படாதீங்க ...


" யோவ், நீ என்னை விட அரசியல்ல பெரிய ஆளா இருக்க ... உன்கிட்ட நானே ஜாக்கிரதையா இருக்கணும் போல இருக்கே..." என்று பெருங்குரலெடுத்து
சிரித்த வீர மாணிக்கத்துக்கு வாசுதேவர் மேல் வெளியில் சொல்ல முடியாத வன்மம் ஒன்று உண்டு.


அது வாசு தேவர் மணந்துக்கொள்ள இருந்த வசந்தியை (வெங்கடேஷின் தாயார்) வீர மாணிக்கம் மணந்துகொள்ள ஆசைப்பட்டார்.


வாசு தேவரும் வசந்தியும் ஒரே சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் என்பதோடு, ஒருவகையில் வசந்தியை
மணந்து கொள்ளக் கூடிய உறவில் வாசுதேவர் வர, வீர மாணிக்கம் வேறு சமுதாயத்தை சேர்ந்தவர் என்றாலும் நேரடியாக வசந்தியின் தந்தையை சந்தித்து பெண் கேட்க, வீர மாணிக்கத்தின் அடிதடி அராஜக அரசியல் மற்றும் நடத்தை சரியில்லை என்பதை எல்லாம் காரணம் காட்டி வசந்தியின் தந்தை மறுத்து விட, சிறை எடுத்தாவது வசந்தியை மணந்து கொள்ள நினைத்தவருடன் மல்லுக்கு நின்று
வசந்தியை மணந்தார் வாசுதேவர்.


மறு மாதமே வேறு ஒரு பணக்காரப் பெண்ணை போட்டிக்காக வீர மாணிக்கம் மணந்து கொண்டதோடு ஒரு வருடத்திற்குள் மனம் ஒட்டாமல் குடும்பம் நடத்தி ஒரு ஆண் குழந்தைக்கும் தந்தையானார்.


காலம் வேகமாக சுழன்றாலும், வீர மாணிக்கத்திற்கு வாசுதேவர் மீது இருந்த வன்மம் மட்டும் அப்படியே தான் இருந்தது.


இந்நிலையில் வெங்கடேஷ் ஏழு வயதாக இருக்கும் போது ரத்தப் புற்று நோய் வந்து வசந்தி இறக்க, அன்று வாசுதேவர் துடித்து அழுததை கண்டதும் தான் வீர மாணிக்கத்தின் வன்மம் பாதியாக குறைந்தது.


அதன் பின் வாசுதேவர் தன் பதவியைத் துறந்து, நட்பு வட்டத்தை சுருக்கி, சமூகப்பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு யோகி போல் வாழ ஆரம்பிக்க, தன் கண் முன்னே அவர் துளித்துளியாய் கரைந்து காணாமல் போவதை கண்டதும் வீர மாணிக்கத்தின் மீதி வன்மமும் காணாமல் போனது.


பிறகு வீர மாணிக்கம் எம்எல்ஏவாக பதவி ஏற்றுக் கொண்டு, ஒரு பெண் குழந்தையையும் பெற்றுக் கொண்டு படாடோபமாக வாழ, அதையெல்லாம் கண்டு கொள்ளும் மனநிலையில் வாசுதேவர் இல்லை.


அவர் காலக் கடிகாரம் அவர் மனைவி வசந்தியோடு முடிந்து போயிருந்தது.
மகனைக் காரணம் காட்டி மறுமணம் செய்துகொள்ள உறவினர்கள் அவரை வற்புறுத்த
மனைவியிடத்தில் மற்றொரு பெண்ணை வைத்து பார்க்க மனமில்லாமல் மகனை தன் ஒன்றுவிட்ட தமையனுக்கு ஏறக்குறைய தத்து கொடுப்பது போல், அவருடன் அனுப்பி வைத்துவிட்டு தனிமையை துணையாக அழைத்துக் கொண்டு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தார் வாசு தேவர்.


வாசுதேவர் முற்றிலும் வாழ்க்கையில் தோற்று விட்டதாக, வீர மாணிக்கம்
திருப்தி அடைந்திருந்த நிலையில் தான் வெங்கடேஷின் காதல் விவகாரம் அவருக்கு தெரிய வர , வாசுதேவர் மேல் காணாமல்
போயிருந்ததாக கருதி இருந்த வன்மம், மீண்டும் தலை தூக்க ஆரம்பித்தது.


ஏய் வாசு, நான் கல்யாணம் கட்டிக்க ஆசைப்பட்ட பெண்ணை நீ எந்த சாதியை வச்சு கல்யாணம் கட்டிக்கிட்டயோ... இப்ப அதே சாதியை வச்சு உன் பையன் கல்யாணம் கட்டிக்க ஆசைப்படற பெண்ணை, கட்டிக்க முடியாம செய்றேன் பார்...


என்று வாசு தேவரின் மேலிருந்த குரோதத்தை மனதில் வைத்து, அதனை வெளியே சொல்லாமல், காய்களை கச்சிதமாக நகர்த்தினார் வீர மாணிக்கம்.


**************************************


அக்ரஹாரத்தில் மட்டுமல்ல, அந்த ஊரிலேயே வேதா - வெங்கடேஷ் திருமணம் பேசும் பொருளாகி போனது.


இதனை பலவிதங்களில் அறிந்துகொண்ட ருத்ர நாராயணன், அதற்கு கூடிய சீக்கிரம் முற்றுப்புள்ளி வைக்க முடிவு கட்டினார்.


ஆனால் அவரது மனம் மட்டும் ஒரு நிலையில் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தது, எங்கோ தவறு நடந்திருக்கிறது என அவரது உள்ளுணர்வு உணர்த்திக் கொண்டே இருக்க, உடனே வாசுதேவரை தொடர்புகொண்டு , அந்த நில வழக்கில் ராமலிங்கத்தின் பின்னால் இருந்து இயக்கியது யார் என்று கேட்ட போது, அவருக்கு கிடைத்த பதில் வீர மாணிக்கம் .


வீர மாணிக்கத்தைப் பற்றி ருத்ர நாராயணன் நன்கு அறிவர். வீர மாணிக்கம் தான் நினைத்ததை சாதிக்க எந்த எல்லைக்கும் செல்வார் என்ற எண்ணம் அவர் மனதில் ஓடிக்கொண்டே இருக்க,


மாலை சந்தியா வந்தனத்தை முடித்தவர், ஆதித்ய ஹ்ருதய ஸ்லோகத்தை, சூரியனைப் பார்த்து உச்சரித்து விட்டு, கிருஷ்ண பாதுகையின் மேல் அவரது பார்வை நிலைக்கும் போது அவரது சட்ட அறிவு மற்றும் கடவுள் அனுகிரகத்தால், அவருக்கு எதிராக திட்டமிட்டிருக்கும் செயல்கள் நிழலோவியமாய் மனக்கண் முன் வந்து போக, உடனே ராவுத்தரை
தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டவர்


" அம்மா சலீமா, நான் ருத்ர நாராயணன் பேசறேம்மா..."


" சொல்லுங்க அண்ணா ..."


" ராவுத்தர் எங்கம்மா ..."


" பள்ளிவாசல் போயிருக்காருண்ணா.."
என்றதும் எதிர்முனையில் ஆழ்ந்த அமைதி ..


" சரிமா ஆத்துக்கு வந்ததும் , அவனை ஆத்தை விட்டு வெளியில போகாம பாத்துக்கோ... நான் சொன்னேன்னு சொல்லு ... முக்கியமா வாசு தேவர் கூப்பிட்டு அனுப்பினாருன்னு யார் வந்தாலும் , ராவுத்தர் ஆத்துல இல்லன்னு பொய் சொல்லிடும்மா...
ஒரு ரெண்டு நாள் எங்கயும் போகாம அவனை பார்த்துக்கோ... ஆத்துக்கு வந்ததும் எனக்கு போன் பண்ண சொல்லும்மா...
ஆமா... அப்துல் எங்க..."


" அவன் பர்வீன் வீட்டுக்கு போயிருக்காண்ணா..."


" யார் ராவுத்தர தேடி வந்தாலும், அப்துல் தான் ஆத்துல இருக்கான்,ராவுத்தர் வெளில போயிருக்காருன்னு சொல்லிடும்மா..." என்று எச்சரித்துவிட்டு தொலைபேசியை தாங்கியில் பொருத்தினார்.


சற்று நேரத்திற்கெல்லாம் இராவுத்தர் வீடு திரும்ப,
"ஐயர் போன் பண்ணியிருந்தாரு, தேவர் ஆளுங்கன்னு யாரு வந்து கூப்ட்டாலும் உங்களை போவ கூடாதுன்னு சொன்னாரு...உங்களை வீட்டுக்கு வந்ததும் அவருக்கு போன் பண்ண சொன்னாரு..." என்று சலீமா தெரிவித்ததும், ஒன்றுமே புரியாமல் குழம்பியவர், ருத்ர நாராயணனை தொலைபேசியில் தொடர்புகொண்டு அனைத்தையும் தெரிந்து கொண்டார்.


சற்று நேரத்திற்கெல்லாம், தேவர் அனுப்பியதாக கூறிக்கொண்டு நான்கு பேர் ராவுத்தரின் இல்லத்திற்கு வந்து, அவரை விசாரிக்க, சலீமா ருத்ர நாராயணன் கூறியது போல் அவர்களிடம் தெரிவிக்க,


" அப்ப வாசல்ல இருக்குற செருப்பு யாரோடது ..." என்றான் அதிலிருந்த ஒருவன்.
முதலில் தடுமாறிய சலீமா, பிறகு தைரியத்தை வரவழைத்துக்கொண்டு


" ஆ... என் மகன் அப்துலோடது... தோட்டத்துல தான் இருக்கான் கூப்டட்டுமா ..." என்றார் இயல்பாக.


வந்தவர்கள் அதற்கு மேல் ஒரு நொடி கூட நிற்காமல் வீட்டு வாயிலை நோக்கிச் செல்ல,


" டேய், ராவுத்தர் வீட்டுக்குள்ளே நுழைஞ்சதை நான் பார்த்தேன் டா ..."


" இருக்காதுடா, அப்பனும் பிள்ளையும் ஒரே மாதிரி ஆறடி உசரத்துல இருப்பானுங்க ... நல்ல வேளை அவன் பையன் கிட்ட சிக்கல அவனுக்கு கையும் பேசும் வாயும் பேசும் ......" என்று அவர்களுக்கு இடையே நடந்த உரையாடல்கள், வீட்டின் மேல் அறையில் பதுங்கி இருந்த ராவுத்தரின் காதுக்கு எட்டியது.


பிறகு ராவுத்தரிடமிருந்து அனைத்தையும் கேள்விப்பட்ட, ருத்ர நாராயணன், அவர் எதிர்பார்த்ததுதான் நடக்கப்போகிறது, என்பதை உணர்ந்ததும், இதற்கு மேல் ஒரு நாள் தாமதித்தாலும், அவருடைய ஒரு நண்பரின் மேல் பழி விழும், இன்னொரு நண்பருக்கு உயிரே போகும்.... என்றதை உணர்ந்ததும் துரிதமாக செயல்பட்டவர், முதலில் வெங்கடேஷே தொடர்புகொண்டு, இயல்பாக நலம் விசாரித்துவிட்டு


" நீங்க எதுக்கும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்கோ..." என ருத்ர நாராயணன் சொல்ல,


" ம்ம்ம்...சரி..."என்றார் வெங்கடேஷ்.


இவரும் ஏன் என்று கேட்கவில்லை அவரும் எதற்காக என்று சொல்லவில்லை. இருவரும் எதையுமே பேசிக் கொள்ளாமலேயே சூழ்நிலையை உணர்ந்து புரிதலுடன் செயல்பட ஆரம்பித்திருந்தனர்.


மறுநாள் அதிகாலை, வேதாவின் அறைக்கு வந்த ருத்ர நாராயணன்,


" வேதா ,குளிச்சிட்டு நல்ல புடவையா உடுத்திண்டு கிளம்புமா..."


" எங்கப்பா ..."


" இன்னும் கொஞ்ச நேரத்துல, உனக்கும் வாசுதேவரோட மகனுக்கு கல்யாணம் ..." என்றதும் வேதாவின் முகத்தில் குழப்பம், தடுமாற்றம், இன்ப அதிர்ச்சி போன்ற கலவையான முகபாவங்கள் வந்து போக ,


" உன்னிண்ட என்னென்ன நகை எல்லாம் இருக்கோ, எல்லாத்தையும் போட்டுக்கோ...."


" என்னிண்ட இதெல்லாம் தான் இருக்கு மத்ததெல்லாம், அம்மா ரூம் பீரோல இருக்குப்பா ..."


" அம்மாவை டிஸ்டர்ப் பண்ணாத, அவளை சேவிச்சிண்டு கிளம்பு ... அம்மா நம்ம கூட வரல ..." என்றதும், தீவிர குழப்பத்தில் வேதா, ருத்ர நாராயணனை உற்றுநோக்கி


" எதுக்குப்பா இப்படி யாருக்கும் தெரியாம, ரங்கு, அம்மா யாரும் வராம..."


" உனக்கு சொன்னா புரியாது மா கல்யாணம் ஆனதும் எல்லோருக்கும் சொல்லிக்கலாம் ..." என்றவர்


ஆண்டாள் கோவிலில் இருக்கும் கிருஷ்ண பகவான் சன்னதியில், அவருடைய நெருங்கிய நட்புகளான முரளிதரன், ராமானுஜன் ,தேசிகன் ஆகியோரின் குடும்பங்கள், ராவுத்தரின் குடும்பம், வாசுதேவருக்கு நெருங்கிய ஓரிரு உறவுகள் சூழ திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.


முந்தின நாள் இரவு வாசுதேவர் ருத்ர நாராயணனிடம்,


" உங்க முறைப்படியே கல்யாணம் பண்ணிடு ருத்ரா...எனக்கு தான் மனைவி இல்ல, சபைல நிற்க முடியாது...."


" இல்ல வாசு... மரகதத்துக்கு இந்த கல்யாணத்துல இஷ்டமில்ல ... என் அக்கா ஆனந்தவல்லி, அவளிண்ட இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி குழப்பி வச்சிருக்கா... கூடவே இருக்கிற என் அக்கா செய்யற அரசியலையே அவளால புரிஞ்சுக்க முடியல...நம்மள சுத்தி நடக்கிற அரசியல புரிஞ்சிக்கிற அளவுக்கெல்லாம் அவளுக்கு அறிவு கிடையாது ... அவளுக்கு சொல்லி புரிய வைக்கிற அளவுக்கு இப்ப நேரமும் இல்ல... அது மட்டும் இல்ல என் மனைவிக்கு தெரிஞ்சா, நிச்சயம் ஆனந்தவல்லி காதுக்கு போகும் ...
அதுக்கு நாம நேரடியா
வீர மாணிக்கத்தையே கூப்பிட்டு சொல்லிடலாம்... என் வீட்டுலயே எனக்கு எதிரி இருக்கும் போது என்னால இதைத் தவிர வேற எதுவும் செய்ய முடியாது ...
ராமானுஜம் குடும்பத்தோட கல்யாணத்துக்கு வருவான், அவனிண்ட பேசி என் ஸ்தானத்தில , இருந்து என் பொண்ண கன்னிகாதானம் பண்ணி தர சொன்னா நிச்சயம் செய்வான்...


அதோட கல்யாணம் முடியிற வரைக்கும், என்னைத் தேடாதே ...
வேதாவை மரகதம் அருமை பெருமையா வளர்த்தா.. அவ பார்க்காத கல்யாணத்தை என்னால பார்க்க முடியாது ... அதுக்காக இங்கேயேயிருந்து கண்ணை கட்டிண்டு காந்தாரி மாதிரி அபசகுனமா என்னால உட்காரவும் முடியாது... நீ முன்னிருந்து கல்யாணத்தை நன்னா முடிச்சிடு ... நான் கோவில்லயே பெருமாள் சன்னதில இருக்கேன்... " என்றவரின் குரல் கமர, அவர் மனமறிந்த வாசுதேவர், தலையசைத்து ஆமோதித்திருந்தார்.


திருமணத்திற்கான ஏற்பாடுகள் கோவிலில் தயாராக இருக்க,
அரக்கு நிறத்தில் தங்க ஜரிகை வேய்த மடிசார் புடவையில், ஆண்டாள் கொண்டையுடன் வேதா அம்சமாக காட்சியளிக்க, அவருக்கு பொருத்தமாக பஞ்சகச்சத்தில் வெங்கடேஷ் கம்பீரமாக இருக்க,
ராமானுஜன் தம்பதிகள் முன்னிருந்து,
அனைத்து திருமண சடங்குகளையும் சிறப்பாக செய்ததோடு
தந்தையின் ஸ்தானத்தில் ராமானுஜரின் மடியில் வேதாவை அமர்த்தி, கன்னிகாதானம் செய்ய, வெங்கடேஷ் நின்றபடி, வேதாவின் கழுத்தில் மாங்கல்யம் பூட்டி, முப்பது முக்கோடி தேவர்கள் சாட்சியாக, அவரை தன் சரிபாதி ஆக்கிக்கொண்டார்.


ஜாதகர்மம், நாமகரணம் , ஜானவாசம், காசி யாத்திரை, ஊஞ்சல், பிடி சுத்தல் என அய்யங்கார் முறைப்படியான எந்த சடங்கு சம்பிரதாயங்கள் நடைபெறாமல் முக்கிய நிகழ்வான மாங்கல்யதாரணம் மட்டுமே சிறப்பாக நடந்தேறியது.


மாங்கல்யத்தை கழுத்தில் வாங்கிக் கொள்ளும் போது கூட வேதாவின் கண்கள் அவர் தந்தையை தேடி தேடி கலைத்தன.


அதன் பிறகு செய்தி காட்டுத்தீ போல் பரவ, வழக்கம் போல் பத்திரிகைகள் மொய்க்க, வேண்டுமென்றே மணமக்களோடு, வாசு தேவரையும் ராவுத்தரும் அருகருகே நிறுத்தி எடுத்த புகைப்படத்தை வெளியிட்டார் ருத்ர நாராயணன், வீர மாணிக்கத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில்.


விஷயத்தைக் கேள்விப்பட்டு துடித்து அழுதார் மரகதம்.
திருமணம் நடக்கப் போகிறது என்று தெரிந்திருந்தாலும், தனக்குத் தெரியாமல் நடைபெற்ற இந்த திடீர் திருமணம் அவ மனதை வெகுவாக பாதித்திருந்தது..


ஆனந்தவல்லிக்கு செருப்பில் அடி வாங்கியது போல் இருந்தது ...
அவரது வன்மம் கொழுந்துவிட்டு எரிந்தது. திருமணம் நடக்கப் போவது முன்பே தெரிந்திருந்தால் போட்டு வைத்திருந்த திட்டத்தை சரியாக செயல்படுத்தி குழப்பத்தை விளைவித்து திருமணத்தையே நிறுத்தி இருக்கலாமே. அதற்கெல்லாம் இடம் கொடுக்காமல் தன் தம்பி தெளிவாக காய் நகர்த்தியதை எண்ணி, மனம் குமைந்து போனார்.


"அப்பா, மாங்கல்யம் தாரணம் போது உங்களை தேடினேனே, நீ எங்க இருந்தேள்..."


" உங்க அம்மா பாக்காத கல்யாணத்தை என்னால பாக்க முடியாதும்மா ...." என்றவர் பெரும் மூச்செடுத்து மனதை சமன்படுத்தி,


" நீ இப்ப நம்ம ஆத்துக்கு வரவேண்டாம் .. உங்க அம்மா கோவத்துல இருப்பா ... நல்ல நாள் அதுவுமா அவ கோவத்துக்கு ஆளாக வேண்டாம்... அவ கோவம் நிச்சயமா நாளைக்கு குறைஞ்சிடும் ... ஏற்கனவே ரங்கநாதனுக்கு போன் பண்ணி சொல்லிட்டேன் ...நாளைக்கு வர்றதா சொல்லி இருக்கான் ... நீ நாளைக்கு நம்ம ஆத்துக்கு வந்தா போதும் ... இப்ப நீ இவாத்துக்கு ..." என்றவர்
" உங்காத்துக்கு கிளம்பு ..." என்று முடித்தார்.


தந்தையின் பேச்சில் இருந்த வித்தியாசம், தாய் இல்லாமல் நடந்த திருமணம், புதியவர்களின் இல்லத்திற்கு முதன்முதலாக செல்லப் போவது போன்றவை வேதாவின் மனதில் கலக்கத்தை விதைக்க,
முன் நாளே திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகள் செய்த பின்னும் ஆனந்தவல்லிக்கு அஞ்சியே, தன் தந்தை திருமணம் குறித்து முன்கூட்டியே தன்னிடம் சொல்லாமல் விட்டிருந்ததை கேள்விப்பட்டு மனம் நொந்து போனார் வேதா.


வாசுதேவரின் வீட்டுக்கு மண மக்களோடு சென்று, சற்று நேரம் இளைப்பாறி விட்டு, தன் வீட்டிற்குச் சென்ற ருத்ர நாராயணனுக்கு வரவேற்பு பலமாக இருந்தது.


வீடே 'ஓ' வென்று இருந்தது. ஆனந்தவல்லியை காணவில்லை . மரகதம் அவர்களது அறையை விட்டு வெளியே வரவில்லை .
இத்தனை வருட திருமண பந்தத்தில், மரகதத்திற்கு கோபம் வந்தால், குரலை உயர்த்திப் பேசியோ , சண்டையிட்டோ ருத்ர நாராயணன் பார்த்ததே இல்லை . பெரும்பாலும் மரகதத்தின் கோபம் ஆழ்ந்த அமைதியில் தான் வெளிப்படும் .. அந்தக் கோபத்திற்கும் ஆயுசு குறைவு ... அவரால் தன் அன்பு கணவருடன் பேசாமல் இருக்கவே முடியாது ... எனவே வழக்கம் போல், கூடிய விரைவில் நிலைமை சரியாகிவிடும் என்றெண்ணி
தன்னுடைய அலுவலக அறைக்கு சென்று கேஸ் கட்டுகளை பார்க்க ஆரம்பித்தார் ருத்ர நாராயணன்.


ஏற்கனவே அவர் ரங்கநாதனை தொடர்புகொண்டு, திருமணம் நடந்ததற்கான அனைத்து காரணங்களையும் தெரிவித்திருந்தாலும், மதில் மேல் பூனையின் சுபாவத்தைக் கொண்டிருந்த ரங்கநாதனுக்கு, பிரச்சனையின் ஆழம் புரியாமல் ஏனோதானோவென்று ஆமோதித்து வைத்திருந்தார்.


இந்நிலையை சரியாக பயன்படுத்திக் கொண்டார் ஆனந்தவல்லி.
அவரின் பிறவி குணமே, உடனுக்குடன் தன் எதிரிகளை பழி வாங்கியே தீருவது தான். ரங்கநாதனின் குணமும் ஓரளவிற்கு அறிந்தவராதலால், அவரை தொலைபேசியின் மூலம் தொடர்பு கொண்டு, வேதாவின் திருமணத்தைப் பற்றிய முன்கதை சுருக்கத்தை அச்சு பிசகாமல் ருத்ர நாராயணன் சொல்லி இருப்பது போலவே சொல்லியவர், கடைசியாக


" இந்த கல்யாணம் மட்டும் நடக்கலைன்னா நம்ம ஆத்துக்கே தலைகுனிவா போயிருக்கும் ... வேதா உண்டாகி இருக்கிறதால தான் அவசர அவசரமா உன் அப்பா இந்த கல்யாணத்தை நடத்தி வச்சிருக்கேர்னு ஊர்ல பேசிக்கிறா... சரி ...எது எப்படியோ, வேதா நன்னாயிருந்தா நமக்கு அதுவே போதும்..." என விருட்சத்தின் வேரில் விஷத்தை அழகாக தெளித்து, விரோதத்தை உண்டாக்கினார்.



வாசுதேவர் இல்லம்


வாசு தேவருக்கு ஒன்றுவிட்ட அத்தை முறை உறவான மங்களம் தான் , திருமணத்திற்கான அனைத்து சடங்குகளையும் முன்னின்று செய்து முடித்திருந்தார்.


உறவினர்கள் வீட்டிற்கு கூட அதிகம் போயிராத வேதாவுக்கு,
வயல் வெளிகள் மற்றும் தென்னம் தோப்பிற்கு நடுவே அழகாக, பெரியதாக அமைந்திருந்த வாசுதேவரின் இல்லமும்
அந்நியமாக தான் இருந்தது.


நேற்று இந்நேரம் நாளை உனக்கு திருமணம் என்று யாராவது கூறியிருந்தால் அவர், மருந்து அளவிற்குக் கூட நம்பி இருக்க மாட்டார் ... இந்த திடீர் திருமணம், மனதளவில் திருமணத்திற்கு தயாராகாமல் இருந்த அவரை வெகுவாக பாதித்திருந்தது .


அவருக்கு வெங்கடேஷை பிடித்திருந்தது .ஆனால் பெற்றோர்கள் பார்த்து நிச்சயித்த திருமணத்தில், ஒரு மணப்பெண்ணிற்கு கணவனின் மீது ஆரம்பத்தில் எந்த அளவிற்கு ஈர்ப்பு இருக்குமோ, அந்த அளவிற்கான நேசம் மட்டுமே இருந்தது.


ஆனால் வெங்கடேஷின் நிலையோ தலைகீழ்... கடந்த ஐந்து ஆண்டுகளாய் ஒரு தலை காதலில் கசிந்துருகியவருக்கு, அவரே எதிர்பாராமல் , காதல் கைக்கூடி கல்யாணத்தில் முடிந்தது, ஏதோ விண்ணையே வளைத்தது போன்ற உணர்வை ஏற்படுத்தியிருந்தது.


இப்படியான, இரு வேறுபட்ட மனநிலையில், இருவரும் திளைத்துக்கொண்டிருக்க, இரவு விருந்து உண்ணும் போது கூட மனையாளின் முகத்தில் குடிகொண்டிருந்த சிந்தனை, ஒருவித தயக்கம், அந்நியத்தன்மை போன்ற கலவையான முகபாவங்களை , ஆராய்ந்து கொண்டே உணவை,
தன் இணையோடு முடித்தார் வெங்கடேஷ்.


வீட்டின் மேல் தளத்தின் பெரிய அறையுடன் கூடிய பால்கனியில் , பௌர்ணமி நிலவு வெளிச்சத்தில், குளுகுளுவென்று வீசிய காற்றில் அசைந்த தென்னங்கீற்று, இரவில் மலர்ந்த ஆம்பலின் வாசம், பனியை பொழியும் பால் நிலா என அனைத்தையும் ரசித்தபடி நடை போட்டு கொண்டிருந்தார் வெங்கடேஷ்.


கதவு திறக்கும் சத்தம் கேட்டு வெங்கடேஷ் திரும்பி பார்க்க, கையில் பால் செம்புடன் வந்த வேதா, அதனை அங்கிருந்த மேஜையின் மேல் 'டொம்'மென்று வைத்து அவரது கோபத்தை பறைசாற்ற,
அவரது கோபத்திற்கான காரணம் புரியவில்லை என்றாலும் அவர் நடந்து கொள்ளும் முறை வெங்கடேஷிற்கு சிரிப்பை வரவழைக்க,


" அம்மாடியோ ... முதலிரவுல ஒரு பொண்ணு இப்படி கோவப்பட்டு இப்பதான் பார்க்கிறேன் ..."


" இதுவரைக்கும் எத்தனை பொண்ணை இப்படி பார்த்திருக்கீங்கோ..." என்ற மனையாளின் கேள்வியில் தான், தான் பேசிய வார்த்தையின் அர்த்தமே உணர்ந்தவர்,


" ஐயோ அந்த அளவுக்கெல்லாம் நமக்கு கெப்பாசிட்டி கிடையாதம்மா ...நான் ஏகபத்தினி விரதன் ...உனக்கு வெட்கப்பட தான் தெரியல ...அட்லீஸ்ட்
கோவப்படறதுக்கான காரணத்தை சொன்னா கொஞ்சம் உதவியாயிருக்கும் .."


" நீங்க யாரையும் கல்யாணம் பண்ணிக்க கூடாது ...உங்களையும் யாரும் கல்யாணம் பண்ணிக்க கூடாதுன்னு தான், நானே உங்களை கல்யாணம் பண்ணின்டேன்..." என்று கண்களில் கோபம் கொந்தளிக்க, துடிதுடித்த உதடு, படபடத்த விழியுடன் கூறிய மனையாளை பார்த்து


" ஆஹா ....என்ன ஒரு வில்லத்தனம்...
ஏம்மா இந்த நல்ல எண்ணம் உனக்கு ..." என்றார் சிரிப்பை கட்டுப்படுத்தி.


" நீங்க பெரீய்ய்ய போலீஸ் ஆபீசர்... ஆனா எங்கப்பாண்ட நம்ம கல்யாணத்துக்காக பேச உங்களுக்கு பயம் ... உங்கப்பா தான் என் அப்பாண்ட நம்ம கல்யாணத்துக்காக பேசியிருக்கேர், அப்புறம் வாய விட்டு நான் என் சம்மதத்தை சொன்னதால தான் இந்தக் கல்யாணமே நடந்தது.... நான் ஒன்னும் எங்கம்மா மாதிரி மட்டி இல்ல ... நேக்கு எல்லாம் தெரியும்..." என்றவரின் கடைசி வரி புரியாமல் அவரையே பார்த்துக் கொண்டிருந்த வெங்கடேஷை பார்த்து,


" பதில் சொல்லுங்கோ ..." என்று வேதா மிரட்ட


" நீ சொன்னது எல்லாம் புரிஞ்சது... ஆனா கடைசில மட்டின்னு என்னமோ சொன்னயே அப்படின்னா .." என்றார் கண்ணில் ஆர்வத்துடன் வேதாவின் பாஷை புரியாமல் .


" மட்டின்னா கொஞ்சம் வெள்ளந்தி...
எல்லாரையும் ஈஸியா நம்பிடுவா... " என்று தன்மையாக பதிலளித்த வேதா திடீரென்று தீவிரத்தை தத்தெடுத்து,


" எங்க அம்மா தான் அப்படி... ஆனா நான் மட்டி இல்ல..." என்று கண்களை உருட்டி சொன்னவரை பார்த்து, வாய்விட்டே சிரித்தவர்


" அப்ப, உங்க அம்மா மாதிரி நீயும் மட்டி தான்..." என்றவரை பார்த்து வேதா முறைக்க,


" இல்ல ....நீ உங்க அம்மா அளவுக்கு மட்டி இல்ல... கொஞ்சம் மட்டின்னு சொல்ல வந்தேன் ..." என்று சமாளித்தவர்


" என்னை காப்பாத்த நெனச்சு, எந்த இடத்துலயும் உங்க அப்பா என் பேரை சொல்லவே இல்ல ...
உனக்கு என்னையும் தெரியல... உங்க அப்பா, தி கிரேட் ருத்ர நாராயணனையும் தெரியல..." என்றவர் வேதாவின் முகத்தை ஆழ்ந்து நோக்கியபடி


"எங்க ஐயாவும், நீயும் பேசின உடனே பொண்ணு கொடுக்குற ஆளா அவரு..." என்றவர் அன்று சேம்பரில் நடந்த அவர்களது முதல் சந்திப்பை சொன்னதோடு, தன்னுடைய 5 ஆண்டு ஒரு தலைக் காதலையும் சொல்ல...
அனைத்தையும் கேட்டு ஆச்சரியத்தில்
வேதா விழிகள் செந்தாமரை போல் விரிய,


" நான் படிச்ச ஸ்கூல், காலேஜ் , எங்க டி.சி , ஐஜி வரைக்கும் விசாரிச்சிருக்காரு ...
ஐஜி எனக்கு போன் பண்ணி கேக்கறாரு, எப்பயா கல்யாணம்னு ...
அப்பதான் தெரிஞ்சது உங்கப்பா எவ்ளோ ஃபாஸ்ட் அண்ட் ஸ்மார்ட்ன்னு..."


" என்னை உங்களுக்கு அஞ்சு வருஷமா தெரியுமா ..."


" ம்ம்ம்ம்.." என்றவர் தன் சூட்கேஸில் இருந்த போட்டோ ஆல்பத்தை எடுத்து,
நீட்ட, வேதாவிற்கு தன் கண்களையே நம்ப முடியவில்லை.
அவ்வளவு அழகழகான புகைப்படங்களாக அவரை எடுத்து தள்ளி இருந்தார்.கோலம் போடும் போது, பாடம் நடத்தும் போது , பாடும் போது என ஒவ்வொரு நிகழ்வையும் அழகாக படமாக்கியிருந்தார் வெங்கடேஷ்.


அதுவரை சற்று விலகி இருந்து, பேசிக் கொண்டிருந்த வேதா திடீரென்று
வெங்கடேஷின் மிக அருகில் அமர்ந்துகொண்டு, ஆல்பத்தில் இருக்கும் ஒவ்வொரு புகைப்படத்தையும் ஆசையாக பார்த்ததோடு, அதில் அவர் அணிந்திருக்கும் பட்டுப்பாவாடை, தாவணி,கொலுசு, தோழிகள், அன்றைய நிகழ்வுகள் என ஒவ்வொன்றுக்கும் ஒரு கதை கூற ஆரம்பிக்க, அருகிலிருந்து தவித்துப் போனது வெங்கடேஷ் தான்.


பால் நிலாவிற்கு போட்டியான முகம், விண்மீன்களைக் ஒளியாகத் கொண்ட கண்கள்,
சந்தன பாலம் போல் நெற்றி, எள்ளுப்பூ நாசி , குழந்தையின் பிஞ்சு உதடு, வெண்பஞ்சு காது , சங்கு கழுத்து , அதில் காலையில் அவர் அணிவித்த , அவருக்கே அவள் உரியவள் என்ற உரிமையை பறைசாற்றும் மஞ்சள் கயிறு ...தலை நிறைய மல்லிகை சரம், பேசும் பொழுது அசைந்தாடும் ஜிமிக்கி, மருதாணியிட்டிருந்த வெண்டை விரல்கள் ... என அனைத்திலும் சிக்கி கிறங்கி தான் போனார் வெங்கடேஷ்.


அவர் வேதாவின் கரம் பற்றி அக்னியை வலம் வந்ததோடு சரி. இப்பொழுது கரம் பற்ற மனம் துடித்தாலும், அதற்கான நேரம் காலம் இதுவல்ல என்பதை உணர்ந்தவர், வேதா ஆல்பத்தை பார்த்து முடிக்கும் வரை காத்திருந்து விட்டு


" உனக்கு என்னை பத்தி எதுவுமே தெரியாது ...ஆனா எனக்கு உன்னை பத்தி ஓரளவுக்கு தெரியும்...
எனக்கும் கொஞ்சம் கோவம் வரும் ... அதுக்காக உன்னை மாதிரி
லவ் லெட்டர் கொடுத்ததுக்கு எல்லாம் புத்தூர் கட்டு போடற அளவுக்கு அடிக்க மாட்டேன் ..."


" அப்போ உங்களுக்கு லவ் லெட்டர் கொடுத்திருக்காளா..."


" ம்ம்ம்ம்"


" நீங்க என்ன பதில் சொன்னேள்..."


" எனக்காகவே ஒரு பொண்ணு, பிறந்து வளர்ந்து எங்க ஊர்ல காத்துகிட்டு இருக்கா ...அவளைத்தான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு சொன்னேன் ..."


" உங்க கூட ஒர்க் பண்றவாளா லவ் லெட்டர் கொடுத்தா..." என்றவரின் கேள்வியில் அளவுக்கதிகமான பொறாமையும், வெங்கடேஷ் மீதான உரிமை உணர்வும் தென்பட,


" சும்மா சொன்ன ...எனக்கு லவ் லெட்டர் கொடுக்கிற அளவுக்கு யாருக்காவது தைரியம் உண்டா என்ன ... " என்றபடி தன் மீசையை முறுக்கியவர்


" அதை விடு, முதல்ல நீ என்னை புரிஞ்சுக்கணும் ,நான் உன்னை தெரிஞ்சுக்கணும் ... அதுக்கு நம்ம ரெண்டு பேருக்கும் கொஞ்சம் டைம் வேணும் ...


என்னோட உலகம் தமிழ்நாடு மாதிரி சின்னது கிடையாது ... நம்ப இந்தியா மாதிரி ரொம்ப பெருசு ...
நான் வளர்ந்ததெல்லாம் ஆர்மி கன்டோன்மென்ட்ல தான்... இப்ப நம்ம வீட்டை சுத்தி மகாராஷ்டீரியன் குஜராத்தி, அசாமி, பஞ்சாபி, பெங்காலினு ஏறக்குறைய எல்லா ஸ்டேட்டை சார்ந்தவர்களும் வசிக்கிறாங்க...


சோ, எனக்கு எங்க குடும்பத்தோட சடங்கு சம்பிரதாயமும் தெரியாது, உங்க குடும்பத்தோட சடங்கு சம்பிரதாயமும் தெரியாது ...
நீ உன் கம்போர்ட் ஜோனை (Comfort zone)ஐ விட்டு வெளியே வர வேண்டாம் ... நீ உன் ஆச்சார அனுஷ்டானங்கள ஃபாலோ பண்ணிக்கோ....
அதோட நாம நாளைக்கே பாம்பே கிளம்பறோம் ... என்னோட எல்லா லீவும் முடிஞ்சு போச்சு ...உனக்கு புது இடம், மொழி எல்லாம் புரிய கொஞ்ச நாளாகும்...
மார்ச் மாசம் உனக்கு ஃபைனல் எக்ஸாம் இருக்கு இல்ல ... டைரக்டா நீ எக்ஸாம் எழுதறதுக்கு உங்க அப்பா பிரின்ஸ்பல் கிட்ட பர்மிஷன் வாங்கி இருக்கிறாரு...எல்லா வருஷம் மாதிரி இந்த வருஷமும் நீ யூனிவர்சிட்டி ஃபர்ஸ்ட் வரணும் ... அதான் என்னோட ஆசை ...அதுக்கு இன்னும் மூணு மாசம் தான் இருக்கு...
உன் எக்ஸாம் முடியட்டும், அப்புறம் நாம வாழ்க்கையை தொடங்கலாம்...." என்று படபடத்தவர் ஒரு நொடி வேதாவின் முகத்தை பார்த்து


"முக்கியமான கேள்வியை கேக்கவே மறந்துட்டேன்.. உனக்கு என்னை பிடிச்சிருக்கு இல்ல ..." என கண்ணில் ஆர்வத்தை தேக்கி வெங்கடேஷ் கேட்க


" உங்களை பிடிக்காமலா, என் அப்பாண்ட கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னேன்.." என்று நாணத்தோடு வேதா எதிர்க்கேள்வி கேட்க,


" அதான பார்த்தேன் ...மாமியா.. கொக்கான்னா.." என்று வாய்விட்டு சிரித்தவர்,
" சரி நீ தூங்கு, நாளைக்கு உங்க வீட்டுக்கு போயிட்டு பாம்பே கிளம்பணும்..." என்றவருக்கு , தன் மனம் கவர்ந்தவளோடு ஒரே அறையில் இருப்பதே , நிம்மதியை அளிக்க, கட்டிலின் மறு பக்கத்தில் சென்று படுத்தவர், நிம்மதியாக நித்திரையை தழுவ
இதுநாள் வரை இல்லாத புது வித உணர்வில் சிக்கித் தவிக்க ஆரம்பித்தார் வேதா.


தகிப்பாள்
 
அத்தியாயம் 7

தன் கணவரிடம் காலையில் நடைபெற்ற தங்கள் மகளின் திருமணத்தைப் பற்றி கேட்க மனம் துடித்தாலும், வழக்கம் போல் தன் கோபத்தை மௌனத்தின் மூலமே பறைசாற்றிக் கொண்டு கட்டிலின் மறு புறத்தில் அமர்ந்திருந்தார் மரகதம்.

மனையாளின் மனநிலையை செவ்வனே அறிந்தவர்,

" ஏம்மா, என் மேல கோவமா..." என்றார் நாராயணன் மென்மையாக.

அதற்கு மீண்டும் மௌனத்தையே பதிலாக தந்தவரிடம், தங்கள் பெண்ணின் திருமணத்தில் நடந்த அனைத்து அரசியலையும் குழந்தைக்கு கூறுவது போல், அவருக்கு புரியும் படியாக ருத்ர நாராயணன் விளக்கிக்கூற,

" நீங்க ராவுத்தர் உயிருக்கு ஆபத்துன்னு சொல்றேள்....
தேவர் மேல பழி வந்துடும்னு சொல்றேள்... நேக்கு அதெல்லாம் தெளிவா புரியற்து... ஆனா என்னை ஏன் கல்யாணத்துக்கு அழைச்சிண்டு போகல... அத சொல்லுங்கோ ..." என்ற மரகதத்தின் அழுகையினுடே வந்த கேள்விக்கு எப்படி பதில் சொல்வது எனப் புரியாமல் திணறியவர்,

" நோக்கு தான் இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லணுட்ட.. உன்னிண்ட சம்மதம் வாங்கி கல்யாணம் பண்ணுற அளவுக்கு நேக்கு நேரம் இல்லம்மா..." என்றார் ஆனந்தவல்லியை பற்றி சொல்லாமல் மறைத்து .

என்னதான் மரகதம் மனதளவில் குழந்தை என்றாலும், அவர் தன் மகளுக்கு தாய் என்பதை அடியோடு மறந்தே போனார் ருத்ர நாராயணன்.

ஆசையாசையாய் சுமந்து, அழகாய் பெற்றெடுத்து, அருமையாய் பேணி வளர்த்த மகளின் திருமணத்தை பற்றி முடிவெடுக்க ஒரு தாய்க்கு முழு அதிகாரம் உண்டு.

ஆனால் இங்கு அவர் அன்பு மகளின் திருமணம் அவருக்கு சொல்லாமலே நடந்தேறிவிட்டதால் அது அவர் மனதை பெருமளவில் பாதித்திருந்தது.

அதற்கு ருத்ர நாராயணன் கூறிய உப்புச்சப்பில்லாத காரணம் அதன் பாதிப்பை குறைக்காமல் கூட்டவே செய்ய,
அனைத்தும் அறிந்தவருக்கு தன் மனையாளின் மனம் புரியாமல் போனதுதான் விதியின் விளையாட்டு போலும்.

வழக்கம் போல், நடந்த நிகழ்வினை காலப்போக்கில் தன் மனையாள் மறந்து விடுவாள் என்றெண்ணிவருக்கு
இந்த நிகழ்வு ஏற்படுத்திய வடு அவர் மனையாள் மனதில் ஆறாத நெருப்பாய் காலம் முழுவதும் எரிந்து கொண்டிருக்கும் என்றும், அவரது காலம் முடிவதற்கும் இதுவே காரணமாக இருக்கும் என்றும் முன்பே தெரிந்திருந்தால் வேதாவின் திருமணத்தில் ஆனந்தவல்லி அடித்து ஆடிய ஆட்டத்தை மட்டுமல்ல நடந்த அனைத்தையுமே ஒன்றுவிடாமல் மலரைவிட மென்மையான மனம் படைத்த தன் மனையாளிடம் ஒப்பித்திருந்திருப்பார் ருத்ர நாராயணன்.

" ச்சரி என்னை விடுங்கோ...
அக்காவையாது கூட அழைச்ஷிண்டு போயிருக்கலாமோல்யோ..." என்றவரின் வாய்மொழியை கேட்டு
கிழிஞ்சுது போ என்று நாராயணனுக்கு தோன்ற

சற்று தயங்கி,

" உன்னை மாதிரி , அவளுக்கும் இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லன்னு நோக்கும் தெரியும் ...பின்ன எப்படி அவளை அழைச்ஷிண்டு போற்து..." என்று ஒருவாறு சமாளித்தவரிடம்

"ஏன்னா, நகை எதுவும் சரியா இல்லாம வைரத்தோடு கூட போடாம , எப்படி கல்யாணம் பண்ணேள்.."
என்றவரின் கேள்வி நாராயணனுக்கு சிரிப்பை வரவழைக்க ,

"நீ தான் உன் வைரத்தோடு அடிக்கை எல்லாம் கொடுக்க மாட்டேன்னுட்டயே..." என்றார் குறும்பாக .

" ஏன் ருத்ர நாராயணன்னின்ட பணமே இல்லையா... இல்ல ருத்ர நாராயணனுக்கு நகைக்கடை தான் தெரியாதா..." என கோபத்தை குரலில் தேக்கி கூறிய மனையாளை பார்த்து

" ஆத்துக்காரர் பேரை சொல்ல மாட்டேன்னுட்டு ரெண்டு தடவை சொல்லிட்டயே...." என கூறி வாய்விட்டு சிரித்தவர்

" மாப்பிள்ள எதுவும் வேண்டானுட்டேர், இருந்தாலும் என் பொண்ணுக்கு நான் செய்ய வேண்டிய கடமைன்னு ஒன்னு உண்டு ...அது நேக்கும் நன்னா தெரியும் ... அவருக்கு பணத்துக்குப் பஞ்சமில்லை ... நம்ம பொண்ணு வாய்விட்டு சொல்லன்னாலும், பொருளாதார ரீதியா அவ நன்னா இருக்காளான்னு தெரிஞ்சுக்க அவ போட்டுண்டு இருக்கிற பொன் நகையும் , நிம்மதியா சந்தோஷமா இருக்காளான்னு புரிஞ்சிக்க அவ முகத்துல இருக்கும் புன்னகையும் தான் ஆதாரம் ... அத தெரிஞ்சுக்க தான் இந்த தடவ நான் எதையுமே செய்யல ..."

" நீங்க எப்படி இவ்ளோ திடமா இருக்கேள்னு நேக்கு புரியல...நேக்கு இந்த கல்யாணத்தை மனசால ஏத்துக்கவே முடியலன்னா..." என மரகதம் கமரிய குரலில் கூற,

" எல்லாம் எதிர்பார்த்தது தானம்மா.." என்றவரின் பேச்சு புரியாமல் மரகதம் உற்று நோக்க,

" நம்ம பொண்ணு பொறந்த அன்னைக்கே உன் தோப்பனார் அவ ஜாதகத்தை கணிச்சு சொல்லிட்டேரே... என்ன... உன்னிண்ட சொல்லக் கூடாதுன்னு என்னிண்ட சொல்லி இருந்தேர்....
இதுதான் பிரம்ம லிபீன்னு (தலையெழுத்து) தெரிஞ்சதுக்கப்புறம், நேக்கு எல்லாம் பழகிடுத்து... பகவான் ஒருத்தரை சிருஷ்டிக்கும் போதே அவா தலையெழுத்தையும் எழுதி தானே அனுப்பறேர்....அதை மாத்தற ஷக்தி எந்த மனுஷாளுக்கும் கிடையாது..."
என்றவர்

" நாளை காலையில, நம்ம மாப்பிள்ளையும் பொண்ணும் இங்க வரா... நாளைக்கே அவா பாம்பே புறப்பட்டு போறா ... நோக்கு நான் சொல்லணும்னு அவசியம் இல்ல... நீயே புரிஞ்சு நடந்துப்பேன்னு நினைக்கிறேன்..." என்று இலை மறை காய் மறையாக, அறிவுரை கூறி முடித்தார்.


மறுநாள் காலை, விருந்திற்காக வந்திருந்த, வெங்கடேஷ், வேதாவை , அப்பொழுது தான் மெட்ராசில் இருந்து திரும்பிய ரங்கநாதன் ஏதோ எதிரிகளை பார்ப்பது போல் அளவுகடந்த வெறுப்போடு பார்த்துவிட்டு, வரவேற்காமல் கழுத்தைத் திருப்பிக் கொண்டு தன் அறை நோக்கி செல்ல,
அதனை பார்த்து மனம் குளிர்ந்த ஆனந்தவல்லியும் அதையே செய்ய,
மடிசார் முந்தானையை இழுத்துப் போர்த்தியபடி மரகதவல்லியும் ருத்ர நாராயணனும் அவர்களை இனிதாக வரவேற்று விருந்து படைத்தனர்.

அப்போது வாசு தேவரை வெட்டிய மர்ம நபர்களை கைது செய்திருப்பதாக செய்தி கிடைக்க , வெங்கடேஷ் காவல் நிலையத்திற்கு விரைந்து, விசாரணையில் ஈடுபட்டார்.

கைது செய்யப்பட்டவர்களில் நான்கு பேர் வீர மாணிக்கத்தின் ஆட்கள் என்றும் அன்றே அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட போவதாக தெரியவர ஒருவித நிம்மதி வெங்கடேஷை ஆட்கொள்ள, செய்தியை கேள்விப்பட்ட வாசுதேவர்,
" குற்றவாளி யாருன்னு தெரிஞ்சு போச்சு... இனிமே நாங்க எல்லாத்தையும் பார்த்துக்குறோம் நீ நிம்மதியா உன் கல்யாண வாழ்க்கைய
நடத்து யா..." என்றார் மைந்தனின் மனம் அறிந்து.

அன்று மாலை வழியனுப்ப ரயில் நிலையத்திற்கு வந்திருந்த ருத்ர நாராயணனின் முகத்தில் ஏதோ ஒரு அலைப்புறுதல் தெரிய , உடனே வெங்கடேஷ்,

" வேதா, அப்துல் சூட்கேசை நம்ம கம்பார்ட்மெண்டுல வச்சிக்கிட்டு இருக்காரு... அவருக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணு .... இதோ வந்துடறேன் ..." என்று பக்குவமாக கூறி வேதாவை, அவர்களுக்காக முன்பதிவு செய்யப்பட்ட முதல் தர ஏசி கம்பார்ட்மெண்டுக்கு அனுப்பி வைத்துவிட்டு, ருத்ர நாராயணனிடம் வந்து

" ஏதோ சொல்லனும்னு நினைக்கிறீங்க சொல்லுங்க ..." என்றார் அவர் மனதைப் படித்து.
வெங்கடேஷின் புரிதல் அவருக்கு ஆச்சரியத்தை கொடுக்க,

" நீங்கோ என் ஆத்துக்கு வந்து முறைப்படி பொண்ணு கேக்கல ... கோர்ட்டுல என் சேம்பர்ல வந்து தான் பொண்ணு கேட்டேள்... ஒரு நீதிபதியா என்ன செய்யணுமோ என் மனசாட்சிக்கு விரோதம் இல்லாம, சரியா செய்து முடிச்சிட்டேன்னு நினைக்கிறேன்... ஆனா பெண்ணைப் பெத்தவனா, நேக்கு ஒரு கலக்கம் இருக்கவே செய்யற்து...

அவ நேக்கு பொண்ணு மட்டும் இல்ல என்னோட அம்மாவும் அவ தான் ...என் ஆத்தோட மகாராணி அவ..." என்ற போது எதற்கும் அஞ்சாத அந்த சிம்மத்தின் குரல் கமர,

" என் வீட்டுக்கும் தான்.. கவலைப்படாதீங்க... நல்லா பாத்துப்பேன் ..." என்றார் வெங்கடேஷ் ஒரே வரியில் அவர் மனதைப் புரிந்து.

வாசு தேவருக்கும் ருத்ர நாராயணனுக்கும் இடையே இருந்த அதே புரிதல், இவர்களிடத்திலும் இயல்பாகவே அமைந்திருந்தது .

அதற்கு மேல் ரயில் புறப்பட ஆரம்பிக்க,
ருத்ர நாராயணனிடம் விடைபெற்றுக்கொண்டு பம்பாய் நோக்கி பயணமானார்கள்.

ஜாதி, மத, இன பேதமில்லாமல், அனைத்து மாநிலத்தவரும் ஒன்று கூடி வசிக்கும் பம்பாய் இந்த இளம் ஜோடியையும் அழகாக அரவணைத்து கொண்டது.

ஐபிஎஸ் அதிகாரிகளுக்கென்றே கட்டப்பட்டிருந்த காவலர் குடியிருப்பில், தனித்தனி வீடுகள், சிறிய தோட்டத்துடன் காம்பவுண்ட் வால் சூழ வரிசையாக அழகாய் அமைந்திருக்க,
வெங்கடேஷின் வருகை முன்பே தெரியப்படுத்தபட்டிருந்ததால், அவரது உதவியாளரும், டிரைவரும் ரயில் நிலையத்திற்கே வந்து வெங்கடேஷை வரவேற்றனர்.

அவர் புதிதாக திருமணம் முடித்து தன் மனைவியோடு வருகிறார் என்ற செய்தி பரவியதும், அந்த குடியிருப்பில் குடியிருந்த மற்ற அதிகாரிகளின் வீட்டுப் பெண்கள் ஆவலோடு வந்து ஆரத்தி எடுத்து வரவேற்க,

ஆண்கள், அவரை தழுவிக்கொண்டு "முபாரக் ஹோ வெங்கடேஷ் பாய் " என வாழ்த்துக்கள் கூறி மகிழ,

அவர் வீட்டிற்கு எதிர் வீட்டில் இருந்த வயதான குஜராத்தி பெண்மணி,

" அப்பாவுக்கு உடம்பு சரி இல்லன்னு ஊருக்கு போயிட்டு, அப்சரஸ் மாதிரி ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்திருக்கீங்களே .... என் தங்கச்சி பொண்ணை உங்களுக்கு கல்யாணம் பண்ணி கொடுக்கணும்னு நான் ப்ளான் பண்ணிகிட்டு இருந்தேனே... இப்படி ஏமாத்திட்டாங்களே ..."
என வெளிப்படையாகவே குமுற,
உடனே அந்தப் பெண்மணியின் கணவர்,

" இவ தங்கச்சி பொண்ணு இவள மாதிரிதான் இருப்பா ... நல்ல வேளை நீ தப்பிச்ச.... சவுத் இண்டியன் பியூட்டி ஹேமமாலினி, ஸ்ரீதேவி மாதிரி, பியூட்டிஃபுல் வைஃப் உனக்கு அமைஞ்ச பொறாமைல இவ இப்படி சொல்றா... இவ பேச்சையெல்லாம் பெரிசா எடுத்துக்காதே ..." என கூறியதை பார்த்து வெங்கடேஷ் குலுங்கி சிரிக்க,

" இந்த ஓல்ட் மேனுக்கு எப்ப பார்த்தாலும் ஜொள்ளு விடனும்..." என்று அந்தப் பெண்மணி அவர் கணவரின் தலையில் கொட்ட அனைவரும் குலுங்கி சிரித்தனர்.

அங்கிருந்த பெண்கள் வெவ்வேறு விதமாக புடவை கட்டியிருக்கும் பாங்கினை வைத்தே, வெங்கடேஷ் கூறிய பாரத விலாஸை வேதாவால் உணர்ந்துகொள்ள முடிந்தது.

வெங்கடேஷின் இல்லம் ,கீழ்தளத்தில் சமையலறை, கூடத்துடன் சேர்ந்து இரண்டு அறைகளும், மேல் தளத்தில் கூடம் மற்றும் பால்கனியுடன் கூடிய 2 பெரிய படுக்கை அறைகள் விஸ்தாரமாக இருக்க, வீட்டை பராமரிக்க, சமையல் வேலை, தோட்ட வேலை செய்ய அரசாங்கத்தால் உதவியாளர்கள் வழங்கப்பட்டிருந்தனர்.

நட்பு வட்டங்கள் கிளம்பியதும், சுற்றுமுற்றும் பார்த்த வேதா, வீட்டின் வாயில் கதவை தாழ்ப்பாள் போடாமல் சாத்தி விட்டு வெங்கடேஷை மிக நெருங்கி,

" அவா இவா தானா ..." என்றார் ரகசியம் பேசும் குரலில் கண்ணில் ஆர்வத்தை தேக்கி.

பயணத்திற்காக கட்டியிருந்த அடர் ஊதா நிற காட்டன் புடவை கசங்கி இருக்க,
கலைந்த தலை முடியில் கூட வேதா ரவிவர்மா ஓவியத்தின் நாயகியாகவே பளிச்சிட, மேலும் அந்த திடீர் நெருக்கத்தின் கிறக்கமும், வேதாவின் அழகிய முக பாவனையிலுமே மனம் லயித்த வெங்கடேஷூக்கு எதுவுமே காதில் ஏறவே இல்ல.

" சொல்லுங்கோ அவா இவா தானே ..." என மீண்டும் அதே கேள்வியை வேதா கேட்க, இம்முறை சுயம் உணர்ந்தவர்,

"எவா இவா..." என்றார் குறும்பாக.

" அதான் சொன்னேளே லவ் லெட்டர் கொடுத்தத பத்தி... அது...இவா தானே..." என பொறாமையுடன் கூடிய உரிமை உணர்வோடு வேதா தன் கண்டுபிடிப்பை கேட்க,

அந்த பெரியவர் ஆங்கிலம் கலந்து பேசியதால் வேதாவிற்கு அரைகுறையாக புரிந்திருக்கிறது என்பதை உணர்ந்துக்கொண்ட வெங்கடேஷ், நடந்த சம்பாஷனைகள் அனைத்தையும் விளக்கிவிட்டு,

" அந்த அங்கிள், ஆன்ட்டி ரெண்டு பேரும் என் கொலிக்(colleague) பிரபுவோட அம்மா அப்பா .... டெய்லி ஜாக்கிங் போகும் போது பார்ப்பேன் ... இன்னைக்கு தான் அவங்களோட முதன் முறையா பேசின ... அவங்க சொல்ற பொண்ணு யாருன்னு கூட எனக்கு தெரியாதும்மா ... எனக்கு அதுக்கெல்லாம் நேரமே இல்ல ..."

" ரொம்ப வருத்தப்படறீங்களோ..." என வேதா முறைக்க , அதனைக் கேட்டு வெங்கி வாய்விட்டே சிரித்தபடி

" நிச்சயமா இல்ல..." எனக்கூற
அவர் சிரிப்பையே இதழ் பிரியா புன்னகையோடு வேதா லயித்து பார்த்தபடி

" அப்ப சரி ...'
என அழகாக பெருமூச்சு விட , அப்போது அவர் காட்டிய முக பாவமும் , ஏறி இறங்கிய செழுமையும் வெங்கடேஷை சொக்க வைக்க,

நானே சும்மா இருந்தாலும், நீ சும்மா இருக்க விட மாட்ட போல இருக்கே மாமி ... என மனதுக்குள் புலம்பியவர்,

" வா குளிச்சிட்டு வந்து சாமி கும்பிடலாம் ..." என மனதை திசை திருப்பி மனையாளை அழைத்துச் சென்றார் .

மிக அழகாக பராமரிக்க பட்டிருந்த அந்தப் பெரிய வீட்டின் பூஜை அறையில் இருவரும் விளக்கேற்றி வழிபட,
உணவு மேஜையின் மேல் மதிய உணவு தயார் நிலையில் இருந்ததைப் பார்த்து

" வேதா, எனக்கு இவங்க சமையல் பழகிடுச்சு... உனக்கு இவங்க சமையல் பிடிச்சா சாப்பிடு, இல்லன்னா உனக்கு பிடிச்ச மாதிரி சமைச்சு சாப்பிடு..."

"இது வரைக்கும் நான் தளிகையே பண்ணனதில்ல... ஆனா போகப் போக கத்துப்பேன்...."

" தளிகைன்னா "

" சமையல் ..."

" ஓ .... ஆமா ...உங்க வீட்ல ஒரு தடவை கூடவா நீ சமைச்சது இல்ல... "

" ம்ஹூம்.... நான் தளிகை பண்ணினா என் அம்மா , என் அத்தை சாப்பிட மாட்டா..."

" ஏன் .."

" எனக்கு கல்யாணம் ஆகி, சமாஸ்ரயணம்(samasrayanam) ஆனா தான், என் கையால தளிகை பண்ணினா அவா சாப்பிடுவா..."

" இப்ப என்னமோ சொன்னியே, அப்படின்னா ..."

" சமாஸ்ரயணம்.. அப்படின்னா , என் கல்யாணத்துக்கு அப்புறம் ஆச்சாரியன் வெள்ளில பண்ணினா பெருமாள் கையில இருக்கிற மாதிரியான சின்ன சங்கு சக்கரத்தை, நெருப்புத் தணல்ல காட்டி என்னோட
ரெண்டு தோள்லயும் பதிச்சு எடுப்பா ...அந்த நெருப்பு சூடு ஆற்ரதற்கு ஒரு வாரம் ஆகும் ... அப்புறம் நான் தளிகை பண்ணா என் அம்மா சாப்பிடுவா..."

" நீ சமைச்சு உங்கம்மா சாப்பிடறதுக்கு இவ்ளோ பெரிய அக்கப்போரா ..." என்றதும் வேதா குலுங்கி சிரிக்க,

" சரி உங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்லைன்னா அப்ப யார் சமையல் பண்ணுவா ...." என ஆச்சரியமாக வெங்கடேஷ் கேள்வி எழுப்ப,

" கோடி ஆத்து பாக்கியம் மாமி பண்ணுவா, இல்லைன்னா ஆத்துல அப்பா, ரங்கு யாராவது இருந்தா தளிகை பண்ணுவா..."

" எப்டி எப்டி.. வித்தியாசமா இருக்கே.. அவங்க ரெண்டு பேருக்கும் சமைக்க தெரியுமா..." என ஆச்சரியத்திற்கு மேல் ஆச்சரியமாக வெங்கடேஷ் கேள்விகளை அடுக்க

" பூணூல் போடும் போதே ,ஜென்ஸ்கெல்லாம் சமாஸ்ரயணம் ஆச்சாரியன் பண்ணிடுவா... அதனால அப்ப இருந்து அவா தளிகை பண்ணுவா... லேடிஸ்க்கு தான் கல்யாணத்துக்கு அப்புறம் சமாஸ்ரயணம் நடக்கும்... அதான் எங்களுக்குத் சரியா தளிகை தெரியாது ..."

" அம்மாடியோ ....சாப்பாட்டுல இவ்ளோ பெரிய சட்ட சிக்கல் இருக்குதா.... ஏகப்பட்ட ரூல்ஸ் போல ..."

" இதுக்கே இப்படிங்கிறேளே...நான் அவா குழந்தைதான்னாலும், வெளியில ஸ்கூல், காலேஜின்னு போயிட்டு வந்தா என் அம்மா தன் மேல படக் கூடாதுன்னு சொல்லுவா... கை கால் சுத்தமில்லாம இருக்கும்னு ஆத்துக்கு போனதும் குளிக்கணும்னு சொல்லுவா ... காபி சாப்பிடும் போது உதடு டம்பளர்ல படக்கூடாது, தூக்கி சாப்பிடணும்னு சொல்லுவா ... முக்கியமா மறந்துபோய் வாயில கை பட்டுட்டா, எச்சில்ன்னு உடனே கை அலம்ப சொல்லுவா ..."

" யப்பா........இந்த ரூல்ஸ் எல்லாம் உனக்கு மட்டும்தானா... இல்ல உங்க அப்பாவுக்கும் உண்டா .."

" எல்லாரும் ஃபாலோ பண்ணி ஆகணும் ..."

" அப்ப நீ பொறந்ததெல்லாம் ஆக்சிடென்ட்ன்னு சொல்லு... இத்தன ரூல்ஸ்ல எப்படிம்மா ..."
என்று குலுங்கி சிரித்தவரின் பேச்சு புரியாமல் ஓரிரு நொடி வேதா விழிக்க, பிறகு அரைகுறையாய் அதன் அர்த்தத்தை உணர்ந்தவள் அருகில் இருந்த கரண்டியை கையிலெடுக்க,

" நோ வயலன்ஸ் வேதா... நீ மட்டின்னு தெரியும் ... ஆனா இவ்ளோ மட்டின்னு இப்பதான் தெரியுது ...உங்க அப்பா அவ்ளோ ஷார்ப்பான மனுஷன் ரெண்டு மட்டிகளை வச்சு எப்படி தான் சமாளிச்சாரோ.... " என பேச்சு போகும் போக்கு சரி இல்லை என்றுணர்ந்து, வெங்கடேஷ் திசை திருப்ப

" எங்காத்து ரகசியத்தை சொன்னது தப்பா போச்சு ... நான் ஒன்னும் மட்டி கிடையாது..."

" ஆமா பெரிய ராணுவ ரகசியம் ... நீ சொல்லலன்னாலும் நானே கண்டுபிடிச்சிட்டேன்... அன்னைக்கு அந்த பிக்பாக்கெட் கேஸ்ல உன்னை போலீஸ் ஸ்டேஷனுக்கு கூப்பிடும் போதே நீ சொன்ன பதிலை வச்சு நான் புரிஞ்சுகிட்டேன் ... என்ன ஒண்ணு அதுக்கு பேரு மட்டின்னு அப்ப தெரியல... நீ உங்க அம்மா அளவுக்கு இல்லேன்னாலும் உன்னை ஜூனியர் மட்டின்னு சொல்லலாம் ..." என்று குலுங்கி சிரித்தவரிடம்

" என்னை அப்படி எல்லாம் சொல்லாதீங்கோ...நான் ஜூனியர் மட்டி எல்லாம் இல்ல ..."

" அப்போ மிஸஸ் மட்டின்னு கூப்பிடறேன் ... பரவாயில்லையா ..." என்று சிரித்தவர்

" நேத்தே கேட்கணும்னு நினைச்சேன்... மறந்தே போயிட்டேன் உன்னோட ஹாபீஸ் (Hobbies) இன்ட்ரஸ்ட்(interest) பத்தி சொல்லு ..."

" எனக்கு பாட பிடிக்கும், நிறைய படிக்க பிடிக்கும் ..." என்று தயங்கியவரிடம்

" உனக்கு ஷேர் டிரேடிங்ல இன்ட்ரஸ்ட்ன்னு அப்துல் மூலமா தெரிஞ்சுக்கிட்டேனே..." என்றதும் ஆச்சரியத்தில் வேதா கண்களை அகல விரிக்க,

" உனக்கு என்னென்ன கத்துக்கணும்னு ஆசைப்படறியோ சொல்லு ... ஏற்பாடு பண்றேன் ..."

"கார் டிரைவிங், ஷேர் டிரேடிங் கத்துக்கணும்னு ஆசையா இருக்கு..."

" ஷேர் டிரேடிங்காக த்ரீ மந்த் கோர்ஸ்ல நாளைக்கே ஜாயின் பண்ணிடு... கார் கத்துக்க டிரைவிங் ஸ்கூல்ல ஏற்பாடு பண்றேன்... இதோட உன்னோட ஃபைனல் எக்ஸாம்க்கும் பக்காவா ப்ரிப்பேர் பண்ணு சரியா..." என்றவரிடம் தயங்கியபடி

" நான் தளிகை பண்ண கத்துக்கணும்... அதுக்கு சமைப்பது எப்படின்னு புக் வேணும் ... அப்புறம் துளசிச்செடி வேணும் ..."

" எவ்ளோ வேணும் ..."

" ஒரே ஒரு செடி இருந்தா போதும் ..." என்றார் சிரித்தபடி.

" சரி ...ஈவினிங் ஷாப்பிங் போலாம் எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு கிளம்பறேன்" என்று கிளம்பியவரின் மனம் ஒரு நிலையில் இல்லை .

தன் மனையாள் பல்கலைக்கழக தேர்வு எழுத இன்னும் மூன்று மாத காலம் இருப்பதால், கவனச்சிதறல் ஏற்படாவண்ணம் , அவர் மனதோடு தன் மனதையும் நேர் கோட்டில் பயணிக்க செய்யவே, மேற்கண்ட அட்டவணையை பின்தொடர முடிவெடுத்தார் வெங்கடேஷ்.

இத்தனை நாட்கள் கட்டை பிரம்மச்சாரியாய் காலம் கடத்தியவருக்கு,
காதலால் கசிந்துருகி கரம் பிடித்த கண்ணாட்டியின் அருகாமை வெகுவாகவே வாட்ட செய்தது.

முகூர்த்தப் புடவையை தவிர திருமணத்துக்கென்று புதிய ஆடைகள் வாங்கவில்லை என்றாலும் வேதாவிடம் இருந்ததெல்லாம் ஓரளவிற்கு விலை உயர்ந்த ஆடைகளே....

அவற்றில் பெரும்பாலும் பாவாடை தாவணிகளே.... புடவைகளை விரல் விட்டே எண்ணிவிடலாம்...

இயற்கையிலேயே இளமையும் அழகும் பொருந்திய மனையாள், இடைவரை கூந்தலுடன், பளிச்சென்ற வெண்ணிற இடை அசைய, பாவாடை தாவணிக்கே உரிய கவர்ச்சியில் வலம் வருவதை, அவரையும் மீறி அவரது கண்கள் ரகசியமாக ரசிக்கவே செய்ய, அதை தடுக்க சல்வார் வாங்கிக் கொடுக்க முடிவு செய்து , தன் மனையாளுடன் துணிக்கடைக்கு சென்ற பிறகு தான் ஒரு விஷயம் அவருக்கு தெளிவாக புரிந்தது.

பிரச்சனை வேதாவின் உடையில் அல்ல ... அவர் மனதில் தான் ...என்பது.

வாங்கிய புது சல்வார் அனைத்திலும் பேரழகியாக காட்சியளித்தவரை கண்டு
மனம் சொக்கி போனார் வெங்கடேஷ்.

அதற்கு மேல் அவரது உணர்வுகள் எவ்வகையிலும் வெளிப்படா வண்ணம் மறைத்து,
உன்னத காதலுக்கு அடையாளமாக, கட்டிய மனைவியே ஆனாலும், ஒரே வீட்டில் இருந்து கொண்டே கண்ணியமாக காதலிக்க தொடங்கினார்.

வேதா தன்னை, ஷேர் டிரேடிங் வகுப்புகள், கார் பயிற்சி வகுப்புகள், பல்கலைக்கழக தேர்வுக்கு தயாராவது,
சமையல் புத்தகத்தை பார்த்து சமையல் செய்வது, அந்த குடியிருப்பில் உடன் வசிக்கும் மற்ற குடும்பங்களுடன் நட்பு பாராட்டுவது என அனைத்திலும் ஈடுபடுத்திக்கொள்ள, வெங்கடேஷும் காலை பணிக்கு சென்றால் இரவு வீடு திரும்புவதை வழக்கமாக்கிக் கொண்டார்.

மனையாளின் சமையல் எப்படி இருந்தாலும், அவர் தயாரித்து பரிமாறுவதையே இரவு உணவாக உட்கொண்டார் .

முதலில் சில நாட்கள்,

" இன்னைக்கு தளிகைல பெரிய டிசாஸ்டர்(Disaster) ஆயிடுத்து... எதுவுமே நன்னாவே அமையல..." என
வருந்திய மனையாளிடம்

" நல்லா தான் பண்ணி இருக்க... டேஸ்டா இருக்கு... போக போக இன்னும் நல்லா டேஸ்டா பண்ண வரும் ..." என எந்த ஒரு குற்றத்தையும் கண்டுபிடிக்காமல், பாராட்டி ஊக்கம் கொடுத்தார்.

நாட்கள் நகர நகர, வேதாவின் உழைப்பு புத்திசாலித்தனம் அனைத்தும், அவர் சமையலில் மட்டுமல்ல, அந்த வீட்டின் உள் அலங்காரத்திலும் பிரதிபலித்தது .

அங்கு வசித்த எல்லாரிடமும், அரைகுறை ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் அவர் உரையாடினாலும் அவரின் சுறுசுறுப்பு, பெருந்தன்மை, எதையும் எளிதில் புரிந்து கொள்ளும் பாங்கு, மற்றவருக்கு மனமுவந்து உதவும் சுபாவத்தால் மொழி பேதமின்றி அனைவரும்
வேதாவிடம் ஆத்மார்த்தமாக நட்பு பாராட்ட ஆரம்பித்திருந்தனர்.

தன் ஸ்ரீவில்லிபுத்தூர் வீடு போல் இந்த வீட்டின் மீதும் வேதாவிற்கு ஒரு அந்நியோன்ய உறவு ஏற்பட்டிருந்தது.
அந்த வீட்டின் மேல் தளத்தில் இருந்த இரண்டு படுக்கையறைகளை தான் இருவரும் பயன்படுத்தி வந்தனர்.

வேதா அந்த வீட்டிற்கு வந்த அன்றே, தன் அறைக்கு நேர் எதிரில் இருக்கும் அறையை அவர் குளிக்க, உடைமாற்ற படிக்க , படுத்துறங்க என அனைத்துக்குமாய் ஒதுக்கினார் வெங்கடேஷ்.

வெங்கடேஷின் அறையிலிருந்த நூலகத்தை, பாரதியார், சுஜாதா, பாலகுமாரன், சிவசங்கரி அதிகமாக ஆக்கிரமித்திருக்க, சார்லஸ் டிக்சன், ஷேக்ஸ்பியர், லியோ டால்ஸ்டாய், எமிலி டிக்கின்சனும் அலங்கரித்திருந்தனர் .

திரை இசைப் பாடல்களில் இளையராஜா, எம்.எஸ்.வி, வாலி வைரமுத்து, கண்ணதாசன், கிஷோர் குமார், எஸ.பி.பியின்
ஒலிநாடாக்களே அதிகம் இருந்தன .

வீட்டின் பெரும்பாலான இடங்களில் விவேகானந்தர், பாரதியார், பசும் பொன் முத்துராமலிங்க தேவர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆகியோரின் புகைப்படங்கள் காட்சியளிக்க, பூஜை அறையில் சிவனும், முருகனும்
பிரதான தெய்வங்களாக அருள்பாளித்தனர்.

வைஷ்ணவ தெய்வங்களை வழிபட்டே பழகிய வேதா, சைவ கடவுள்களையும்
வழிபடத் தொடங்கினார்.

மனதைக் கட்டுப்படுத்த தெரியாமல் மனையாள் உடன் செலவழிக்கும் நேரத்தை வெகுவாக குறைத்துக்கொண்ட வெங்கடேஷ், தேவையானதற்கு மட்டுமே மனையாளுடன் வெளியே சென்று வந்தார்.

அதுமட்டுமல்ல கொலை, கொள்ளை, கற்பழிப்பு என ஏகப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை மும்மரமாக தேடி கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்ததால்
அவருக்கும் காவல் நிலையத்தில் கழுத்தை நெரிக்கும் வேலை இருக்கவே செய்தது.

வேதாவிற்கு தன் தாய் தந்தையுடன் வசித்ததற்கும் தற்போது கணவருடன் பம்பாயில் வசிப்பதற்கும் வித்தியாசம் அதிகம் இல்லை என்றே சொல்லலாம்.

தன் வீட்டில் இருந்த பாதுகாப்பு உணர்வு, நிம்மதி, சுதந்திரம் என அனைத்தும் கிடைக்கப்பெற, கழுத்தில் சரசரக்கும் புது மாங்கல்யம் மட்டுமே அவருக்கு திருமணமானதை அவ்வப்போது நினைவூட்டிக் கொண்டே இருந்தது.

என்னதான் மனையாளடமிருந்து விலகி நிற்க முயன்றாலும், வெங்கடேஷ் வீடு திரும்பும் போது, சிரித்த முகத்துடன் மான் குட்டியாய் துள்ளி குதித்து வரவேற்கும் மனையாளை காண அவர் மனம் தவியாய் தவிக்கும்.

தன் பல்கலைக்கழக தேர்வுக்குப் பின்னரே குடும்ப வாழ்க்கை தொடங்கப் போவது தெரிந்திருந்தாலும் , வெங்கடேஷின் விலகலை வேதா அதனோடு சம்பந்தப்படுத்தி பார்க்காமல்,
அது அவருடைய சுபாவம் என்றே கருதினார்.

அதே சமயத்தில் அவருடைய பொறுமை, புரிந்து செயல்படும் பாங்கு, பொறுப்புணர்வு, ஒழுக்கம் என அனைத்தும் அவர் மேல் மதிப்பை கூட்டியதோடு ஒரு வித ஈர்ப்பையும் பெண்ணவளின் மனதில் விதைத்திருந்தது.

நாட்கள் வேகமாக கடக்க, இரண்டு மாத பயிற்சியில், காரை நன்றாக ஓட்டி
பழகியிருந்தார் வேதா .

" வேதா, பாம்பே டிராபிக்கில் 15 கி.மீ ஸ்பீடுக்கு மேல போக முடியாது .... இருந்தாலும், நீ மத்தவங்க கார் மேல மோதினா பிரச்சனையே இல்ல புது காரையே வாங்கி கொடுத்திடலாம் ...
ஆனா ஆள் மேல மோதாம பாத்துக்கோ...
கை கால் போச்சு, இல்ல உயிரே போச்சுன்னா திரும்ப கிடைக்காது ...

பாம்பே மேப்ப (Map)கைல வச்சுக்கோ ... நம்ம ஏரியாவை விட்டு வெளில போகாது ... எங்கேயாவது உனக்கு ஏதாவது பிரச்சனைன்னா, என் நம்பருக்கு போன் பண்ணு இல்லன்னா கண்ட்ரோல் ரூமுக்கு போன் பண்ணு அவங்க எனக்கு கனெக்ட் பண்ணுவாங்க ... ஆல் த பெஸ்ட் " என தன்னம்பிக்கையுடன் கூடிய அறிவுரையும் கூறி ஊக்கப்படுத்தினார்.

வேதா பாம்பே வந்ததிலிருந்து,
ருத்ர நாராயணனுடன் அடிக்கடி தொலைபேசியில் உரையாடுவது வழக்கம். மரகதம் மட்டும் நான்கு முறை அழைத்தால் ஒரு முறை தொலைபேசி இணைப்பிற்கு வருவார், அப்படியே வந்தாலும் ஓரிரு வார்த்தை மட்டுமே பேசுவார், அதிலும் ஒருவித விலகல் தன்மை தெரியும். அவருக்கு மகள் மீது, கோபத்தை விட வருத்தம் அதிகமாக இருந்தது.

ருத்ர நாராயணனுக்கு, ரங்கநாதனை விட தன் தாயைப் போலவே பிறந்திருந்த தன் மகள் வேதாவின் மீது தான் பாசப்பிணைப்பு அதிகம் என்பதை அனைவரும் அறிவர்.

ரங்கநாதனுக்கும் தன் தந்தையிடம் அதிக ஒட்டுதல் இல்லை என்றாலும்,
அவர் மீது பயம் கலந்த மரியாதை இருக்கவே செய்தது.

ஆதலால் வேதாவின் விஷயத்தில் கூட தன் பிடித்தமின்மையை அவரிடம் நேரடியாக காட்டாமல், இயல்பை விட அதிக ஓதுக்கத்தை மேற்கொண்டதோடு வேதாவையும் தொடர்புக்கொண்டு அவர் பேசவில்லை.
அவ்வப்போது வீட்டிற்கு வந்தால் கூட, மரகதத்திடம் ஓரிரு வார்த்தைகளோடு நின்றுவிட்டு, அத்தை
ஆனந்தவல்லியிடம் மட்டுமே உரையாடி விட்டு செல்வதை வழக்கமாக்கிக் கொள்ள, ஆனந்தவல்லி எதிர்பார்த்தது செவ்வனே ஈடேற தொடங்கியிருக்க
நடந்த அனைத்தையும் அறிந்த வேதாவும் ரங்கநாதனை தொடர்பு கொள்ள முயற்சிக்கவில்லை. நடந்தது என்ன என்று கேட்டறியாமல் ஒரு தலைப்பட்சமாக முடிவெடுத்த ரங்கநாதனின் போக்கு அவருக்கு கோபத்தைக் கொடுத்திருந்தது.

வீட்டின் நிலைமை இப்படி இருக்க, இந்த மூன்று மாத காலத்தில் , அக்ரஹாரத்தில் வசிப்பவர்களும் வேதாவின் திருமணத்தை மறந்து விடவில்லை ...

அதில் ஒரு சிலர் ருத்ர நாராயணனை கடைத்தெரு, கோவில், என வெளியிடங்களில் சந்திக்க நேர்ந்தால் , வேண்டுமென்றே கழுத்தைத் திருப்பிக் கொண்டு, அவர் காதுபடவே அவரை தரக்குறைவாக பேசி விட்டு செல்வதும் நடந்து கொண்டுதான் இருந்தது .

வழக்கம் போல், 'சர்வம் கிருஷ்ணார்ப்பணம்' என்று பாரத்தை கடவுள் மீது சுமத்திவிட்டு, தன் வேலையை பார்க்க ஆரம்பித்தார் ருத்ர நாராயணன் .

இந்நிலையில் அவரின் நெருங்கிய நண்பரான தேசிகனின் தம்பி மகள் சுமித்ராவை ரங்கநாதனுக்கு மணம் பேசி முடித்தவர், திருமணத்திற்கு முந்தின நாள் நிச்சயதார்த்தம் வைத்துக் கொள்வதாக உறுதி கொடுத்துவிட்டு, தன் மகளையும் மாப்பிள்ளையையும் தொடர்புகொண்டு விஷயத்தை சொல்லி
வேதாவின் பல்கலைக்கழக தேர்வுக்கு முன்னரே திருமணம் நடக்கவிருப்பதால், திருமணத்திற்கு முன்கூட்டியே கிளம்பி வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.

ரங்கநாதனுக்கு திருமணம் நடக்கப் போவதை அறிந்த ஆனந்தவல்லி, வழக்கம் போல் உள்ளுக்குள் குமுறியபடி,

" டேய், ரங்கு .... நோக்கு சுமித்ராவை பிடிச்சிருக்கா ..."

" ம்ம்ம்.. " என்றார் ரங்கநாதன் ,ஏனென்றால் சுமித்ராவின் அழகு, அடக்கம் அப்படி.

" ம்ம்ம்ம், விதி யாரை விட்டது ... வியாபாரத்துல கொடி கட்டி பறக்கறா... நோக்கு கோடீஸ்வர பொண்ணுதான் அமைச்சிருக்கணும்... எல்லாம் உங்க அக்கா பண்ணின கூத்தால, சாதாரண குமாஸ்தா வீட்டு பொண்ணை கல்யாணம் பண்ணிக்க வேண்டிய நிலைமை நோக்கு ... உன்னோட தரம் இவ்ளோ தான்னு மத்தவா முடிவு பண்ணிட்டா... நோக்கு அழகு இல்லையா, திறமை இல்லையா , படிப்பில்லையா ...நேக்கு யாரை குத்தம் சொல்றதுன்னே தெரியல ..." என வழக்கம் போல் ஆனந்தவல்லி கொளுத்திப் போட்ட,

சுமித்ராவை முதல் பார்வையிலேயே ரங்கநாதனுக்கு மிகவும் பிடித்திருக்க, திருமணக் கனவில் மிதந்தவரின் மனதைக் கலைத்ததோடு, அவரது வாழ்நாள் முழுமைக்குமான நெருடலுக்கு முதல் விதையை செவ்வனே தூவி முடித்தார் ஆனந்த வல்லி.

நாட்கள் வேகமாக செல்ல, இன்னும் பத்தே நாட்களில மனையாளுடன் தன் சொந்த ஊருக்கு பயணிக்க இருந்த நிலையில்,

தன் அறையில் இருந்த பால்கனியில்,
பௌர்ணமி நிலவையும், நேர் எதிர் அறையில் இருந்த மனையாட்டியையும் ஒரு சேர ரசித்தபடி விவித பாரதியில்( சிலோன் ரேடியோ) திரையிசைப் பாடல்களை கேட்டக்கொண்டே நடைபயின்று கொண்டிருந்தார் வெங்கடேஷ்.

ரங்கநாதனின் திருமணத்துக்கு மறுநாளே வேதாவின் பல்கலைக்கழகத் தேர்வு தொடங்கவிருப்பதால் வேதாவின் கவனம் முழுவதும் படிப்பில் இருக்க, அறையில் வீசிய தென்றல் காற்று அவரது கூந்தலை வருடிய போது

குழல் வளர்ந்து அலையானதே
இரவுகளின் இழையானதே
விழியிரண்டும் கடல் ஆனதே
எனது மனம் படக்கானதே
இளம் பளிங்கு நகம் சேர்த்ததே
நிலவு அதில் முகம் பார்த்ததே ...

என்ற வைரமுத்து வரிகளை மலேசியா வாசுதேவன், இளையராஜாவின் இசையில் பாடிக்கொண்டிருக்க , ஏனோ வெங்கடேஷிற்கு , அந்த வரிகள் எல்லாம் அந்த
சூழ்நிலைகாகவே எழுதப்பட்டவை போல் தோன்ற, மெய் மறந்து
ரசித்துக்கொண்டிருந்தவருக்கு தன் மாமனாரிடம் பேசியது நினைவுக்கு வர, மறுநாளே அதனை செயல்படுத்த தன் மனையாளை நகை கடைக்கு அழைத்துச் சென்றார்.

" இதெல்லாம் ஏற்கனவே என்ணின்ட இருக்கு .... இந்த தடவை ஊருக்கு போகும் போது அம்மாண்ட கேட்டு எல்லாத்தையும் எடுத்துண்டு வந்துடறேன் ..."
என்றார் வேதா சகஜமாக ப்ளூ ஜாக்கர் வைரத்தோடு மற்றும் வைர அட்டிகையை பார்த்து.

" அது உங்க அம்மாவோடது. இது உனக்காக நான் வாங்குறது ...இனிமே உனக்கு எது வேணும்னாலும் என்கிட்ட தான் கேட்கணும் .... உங்க அம்மா, அப்பா கிட்ட கேட்கக்கூடாது புரிஞ்சுதா ..." என்றார் வெங்கடேஷ் உறுதியாக.

பொதுவாக வெங்கடேஷின் கோபம் வீட்டுப் படியை தாண்டித்தான் வெளிப்படும்.
வெகு சில நேரங்களில், அவர் காட்டும் திடம், கோபமா அல்லது உறுதியா எனப் பிரித்தறிய முடியாத அந்த குரலுக்கு, தன்னிச்சையாய் கட்டுப்படும் வேதா, இப்போதும்
கட்டுபட்டு வைரத்தோடு, மூக்குத்தி, வைர அட்டிக்கை சகிதமாக வீடு வந்து சேர்ந்தார் .

ஊருக்கு கிளம்பும் நாளும் வர, தன் குடியிருப்பில் இருக்கும் அனைவரிடமும்
விடைபெற்றுக்கொண்டு, இருவரும் தன் சொந்த ஊர் நோக்கி பயணமானார்கள்.

ரங்கநாதனின் திருமணத்திற்கு ருத்ர நாராயணன், அக்ரஹாரத்தில் தன்னையும், தன் கொள்கையையும் மதிக்கும் குடும்பத்திற்கு மட்டும் அழைப்பு விடுத்திருந்தார்.

வேதாவும், ரங்கநாதன் மணந்து கொள்ளப் போகும் சுமித்ராவும் சிறுவயதில் இருந்தே ஒருவரை ஒருவர் அறிந்தவர்கள், விருதுநகரில் வசிக்கும் சுமித்ரா, விடுமுறையில் தன் பெரியப்பா தேசிகனின் வீட்டிற்கு வரும் போதெல்லாம் வேதாவை பார்த்துப் பேசும் பழக்கமுண்டு.

திருமணத்திற்கு முந்தின நாள் நடக்கும் நிச்சயதார்த்த விழாவில்
சுமித்ரா மாம்பழ நிறத்தில் அரக்கு கரையிட்ட புடவையில் ஜொலி ஜொலிக்க, வேதா
'எம்.எஸ் ப்ளூ '(MS blue) என்றழைக்கப்படும் மறைந்த மதிப்பிற்குரிய கர்நாடக பாடகி திருமதி எம்.எஸ் சுப்புலட்சுமி அவர்கள் பிரத்தியோகமாக
பயன்படுத்திய நீல நிறத்தில் புடவை அணிந்து, அதற்குப் பொருத்தமாக நீலநிற ஜுவாலையுடன் மிளிரும், ப்ளூ ஜாக்கர் வைரத்தோடு, வைர மூக்குத்தி, வைர அட்டிகை மற்றும் தங்க ஒட்டியாணம் சகிதமாக, விண்ணுலக தேவதை போல் காட்சி அளிக்க, திருமணத்திற்கு வந்திருந்த ஒரு சிலரின் பார்வையோடு, ரங்கநாதனின் பார்வையும் வேதாவின் மீது ஆராய்ச்சியோடு படிந்தது.

காரணம் வேதாவிற்கு திருமணம் முடிந்து நான்கு மாதம் ஆன நிலையில், கிட்டத்தட்ட ஆறுமாத கர்ப்பத்துடன் காட்சியளிப்பார் என்றே நம்பியிருந்தவர்களுக்கு, ஒட்டிய வயிற்றின் சிற்றிடையில், அம்சமாக பொருந்தியிருந்த ஒட்டியாணம், அதற்கு பதிலடி கொடுக்க, ஆனந்தவல்லியின் அறிவுரையை நம்பி இருந்த ஆர்வலர்களுக்கு அது அதிர்ச்சியை ஏற்படுத்த

" அத்த, நீ வேதாவை பத்தி என்ன என்னமோ சொன்ன ... ஆனா பார்த்தா அப்படி தெரியலையே ..." என்றார் ரங்கநாதன் ஆனந்தவல்லியை தனியாக அழைத்து.

" ஒரு வேளை குழந்தையை கலைச்சிட்டாளோ என்னமோ ..." என்றார் ஆனந்தவல்லி தான் கூறிய வதந்தியை மெய்யாக்குவதிலேயே குறியாக இருந்து.

" வாய மூடு அத்த... நேக்கு வேதாவை நன்னா தெரிஞ்சும், நீ சொன்னதை நம்பினேன் பாரு ..என்ன சொல்லணும் ... குழந்தை உண்டானதால கல்யாணம் பண்ணின்டான்னு சொல்லிட்டு, இப்ப குழந்தையைக் கலைச்சிடான்னு பொய் மேல பொய் சொல்றயே.... நோக்கு வெட்கமா இல்ல ..." என்ற ரங்கநாதன் ஒருவித குற்ற உணர்வுடன்
ஆனந்தவல்லியை சாடி தீர்த்தார்.

ஆனந்தவல்லி கணக்குப் போட்டது இப்படிதான். எப்படியும் திருமணம் முடிந்ததும் ஓரிரு மாதத்தில் வேதா கர்ப்பம் தரிப்பாள். நான்கு மாதமாக இருந்தால் என்ன 6 மாதமாக இருந்தால் என்ன, வேதாவின் மெல்லிய சரீரத்திற்கு வயிறு தெரியவில்லை என கூறி தான் சொன்ன வதந்தியை உண்மையாக்கி விடலாம் என்று மனப்பால் குடித்துக் கொண்டிருந்தவரின் திட்டத்தில் ஒரு லாரி மண் விழுந்தது அவரே எதிர்பாராத திருப்பம்.

ரங்கநாதனின் ஏச்சுப் பேச்சை பொறுக்கமாட்டாமல்
உடனே அவர் கோபம் வேதாவின் மேல் திரும்ப, வழக்கம் போல் உடனுக்குடன் பழிவாங்கும் அவரது குணம் தலையெடுக்க, நிச்சயதார்த்தம் இனிதே நடந்து முடிந்த நிலையில் அனைவரும் இரவு உணவருந்த கிளம்பிக் கொண்டிருக்கும் போது, பெருங்குரலெடுத்து அனைவருக்கும் கேட்கும் படியாக,

" ஏண்டிம்மா வேதா,பம்பாய் எல்லாம் எப்படி இருக்கு ...." என்றார் மற்றவர்கள் அறிய.

" நன்னா இருக்கு அத்தை ..."

" நோக்கு மொழி புரியற்தா... தளிகை பண்ண கத்துண்டயா..."

" ம்ம்ம்ம், எல்லாரிண்டயும் ஓரளவுக்கு பேச ஆரம்பிச்சுட்டேன், தளிகை பண்ண கத்துண்டதோட , கார் ஓட்டக் கத்துண்டேன், ஷேர் டிரேடிங் பண்ண கத்துண்டேன் ..." என பெருமை பொங்க கண்களை விரித்து வெள்ளந்தியாக கூறிய வேதாவை பார்த்து, வன்மத்தோடு

" எல்லாம் சரிதான் ... கல்யாணம் ஆகி நாலு மாசம் ஆற்து... கோடி ஆத்து கோகிலாவுக்கு உனக்கு அப்புறம் தான் கல்யாணம் ஆச்சு... அவ உண்டாகி இருக்கா ... நோக்கு எந்த விசேஷமும் இல்லையே அதான் நேக்கு வருத்தமா இருக்கு ..." என ஆனந்தவல்லி பலர் அறிய வேதாவின் மூக்குடைக்க, அதற்கு பதிலளிக்க முடியாமல் வேதாவின் முகம் அனிச்சை மலராய் வாட,
அங்கிருந்த அனைவருக்கும் ஆனந்தவல்லியின் பேச்சிற்கு வேதாவின் முகபாவமே முழுவதையும் வெட்ட வெளிச்சமாக்க,

அனைத்தையும் கேட்டபடி தன் நெருங்கிய நட்பு வட்டத்துடன் நின்றுக் கொண்டிருந்த ருத்ர நாராயணன், உடனே அப்துல் அருகிலிருந்த வெங்கடேஷின் முகத்தை ஆராய,
அதில் ஒருவித நிம்மதியும் சாதித்த உணர்வும் தெரிந்தது.

வெங்கடேஷ் வேதாவிடம் அவரது படிப்பை காரணம் காட்டி தான், குடும்ப வாழ்க்கையை தள்ளிப்போடுவதாக சொன்னதெல்லாம் முக்கிய காரணங்களில் ஒன்று தானே ஒழிய
அதி முக்கிய காரணம், ஆனந்தவல்லியின் சித்து வேலை( வாசுதேவர் மூலம் அறிந்து கொண்டது) மற்றும் மூன்றாம் தர பத்திரிகையின் கதை புனைவை முறியடிப்பது தான்.

வழக்கம் போல் ஜூனியர் மற்றும் சீனியர் மட்டிக்கு, தன்னைச் சுற்றி நடப்பவைகள் விளங்காமல் போக,
புரிய வேண்டிய அனைவருக்கும் தெளிவாக புரிந்திருந்தது.

வேதா , வெங்கடேஷ் இருவரும் ஒருவரை ஒருவர் 3 ஆண்டுகளாக காதலிக்கின்றனர் என்ற வதந்தி மட்டுமே வேதா மற்றும் மரகதத்தை சென்றடைந்திருந்தது.
வேதாவை பொருத்தமட்டில் , அவருக்கு வெங்கடேஷை பிடித்திருந்ததால், அந்த வதந்தியில் பாதி உண்மை பாதி பொய் என்று அரைமனதோடு அதனை ஏற்றுக் கொண்டிருந்தார் .
மற்றபடி ஆனந்தவல்லி மற்றும் மூன்றாம் தர பத்திரிகையின் கைங்கரியங்கள் அவர்களைச் சென்றடையாததால் , மற்றவர்களின் முக மாற்றங்கள் இருவருக்குமே புரியவில்லை. ருத்ர நாராயணன் கூட வேதாவிடம் ஆனந்தவல்லி பாண்டியனை சந்தித்து ஆடிய அரசியல் ஆட்டத்தை மட்டும் கூறினாரே ஒழிய, அவர் வேதாவின் மீது சுமத்திய அபாண்டத்தை கூறவில்லை.

மறுநாள் அதிகாலையில் திருமணம் நடைபெறவிருக்கும் நிலையில், நிச்சயதார்த்தம் முடிந்ததும் அன்றிரவு வேதா வெங்கடேஷின் இல்லத்திற்கு
சென்றுவிட,

தனிமையில் ருத்ர நாராயணனுடன் , மரகதத்திற்கு பேச நிறைய இருந்தது .

" ஏன்னா நேக்கு மனசு ரொம்ப வருத்தமா இருக்கு ..."

" ஏம்மா... "

"வேதாவை பார்த்தா அவ சந்தோசமா இருக்கிற மாதிரியும் தெரியர்து... இல்லாதது மாதிரியும் தெரியர்து...
கல்யாணமான புதுசுல ஒருவித பூரிப்பு, பளபளப்பு, புதுசா கல்யாணமான களைன்னு சொல்லுவாளே...
ஏனோ அதெல்லாம் அவ முகத்துல நேக்கு தெரியவே இல்லன்னா..." என்ற மரகதத்தின் பேச்சிலேயே, தன் மகளின் திருமண வாழ்வில் என்ன நடந்திருக்கும் என்பதைத் தெளிவாக ஊகித்த ருத்ர நாராயணன்,

" நம்ம பொண்ணு இன்னும் நம்ப பொண்ணா தான் இருக்கா ..." என்றார் பூடகமாய் .

" என்ன சொல்றீங்கோ... புரியல ..." என கேட்ட மரகதத்திடம் பேச்சை மாற்றி,

" நீ அவளிண்ட ஏதாவது பேசினயா .."

" ம்ம்ம்ம், பேசினேன் ... நன்னா இருக்கேன்னு தான் சொன்னா... நேக்கு தான் மனசு நெருடலா இருக்குன்னா..
நான் மனசுல அவ மேல கோபப்பட்டதால அவ குழந்தை உண்டாகாம இருக்காளோன்னு பயமா இருக்கு... இன்னைக்கு பார்த்தேளா அக்கா குழந்தையை பத்தி கேள்வி கேட்கும் போது கூட அவ முகம் வாடி போச்சு... ஒரு வேளை அவா ரெண்டு பேருக்கும் நடுவுல ஏதாவது மனஸ்தாபம் இருக்குமோ ..." என்றவரின் வழக்கமான வெள்ளந்தி பேச்சை கேட்டுப் , மென் புன்னகை பூத்த ருத்ர நாராயணன்,

" என் மாப்பிள்ள தங்கம் டி... அது மட்டும் இல்ல அம்மாவோட கோபமெல்லாம் குழந்தைகளை ஒண்ணுமே பண்ணாது... கவலப்படாத வேதாவோட பரிட்சை முடியட்டும்... நீ எதிர்பார்த்த நல்ல செய்தி கூடிய சீக்கிரம் வரும் சரியா...." என்றவர்
அன்று பத்திரிகை பேட்டியில் சொன்ன 'காலம் பதில் சொல்லும்' என்ற வார்த்தை மெய்யாகி போனதை எண்ணி மனம் மகிழ்ந்து போனார்.

மறுநாள் அதிகாலை முகூர்த்தத்திற்கு, ஜோடியாக வந்திறங்கிய வேதா, வெங்கடேஷை , மணமேடையில் அமர்ந்திருந்த ரங்கநாதன் மரியாதை கலந்த பார்வையில் வரவேற்க,

வேதா அவர் பார்வையை வெடுக்கென்று தவிர்க்க, வெங்கடேஷ் , அண்ணன் தங்கைக்கு இடையே நடக்கும் மௌன போராட்டத்தை கண்டுகொள்ள, ருத்ர நாராயணனும் தன் பிள்ளைகளுக்கு இடையே நடக்கும் பனிப்போரை கண்டு கொண்டார்.

அடர் வாடாமல்லி நிற மடிசாரில் , இடை வரையான நீண்ட கூந்தலை அழகாகப் பின்னி குஞ்சலமிட்டு அதில் சரம் சரமாக மல்லிகை பூ சூடி , பிரத்தியேக அலங்காரத்தில் விண்ணுலக ரம்பைக்கு போட்டியாக காட்சியளித்த வேதாவுடன் பட்டு வேட்டி சட்டையில் ஆண்மைக்கு இலக்கணமாய் கம்பீரமாக நடந்து வந்த வெங்கடேஷின் ஜோடிப் பொருத்தம் வந்திருந்த அனைவரையும்
கவர்ந்திருந்தது.


ஆனந்தவல்லியின் நேற்றைய நேரடி தாக்குதலின் உபயத்தால்,
ரங்கநாதனின் பார்வையில் மட்டுமல்ல, திருமணத்திற்கு வந்திருந்த பெரும்பாலானோர், வேதா வெங்கடேஷை பார்த்த பார்வையில் ஒருவித மதிப்பு தன்மை கூடி இருந்ததென்றே சொல்லலாம்.

ஆனால் ரங்கநாதனின் மனதில் இருந்ததெல்லாம் இது தான்.
தங்கையை தவறாக எண்ணி விட்டோமே என்ற குற்ற உணர்வு இருந்ததே ஒழிய, மற்றபடி வேதா வெங்கடேஷின் திருமணத்தை ஏற்றுக்கொள்ளவோ அங்கீகரிக்கவோ அவரது மனம் இடம் தரவில்லை.

ரங்கநாதனின் பார்வையில் தெரிந்த மரியாதையை வேதா உணர்ந்து கொண்டாலும் அதற்கான காரணம் அவருக்கு விளங்கவில்லை. ஆனால் ஒன்று மட்டும் அவருக்கு தெளிவாக விளங்கியது தன் கணவருக்கான மரியாதையை ரங்கநாதன் இதுவரை ஒருமுறைகூட நேரடியாகவோ மறைமுகமாகவோ கொடுக்கவில்லை என்று.

அந்த கோவத்தை முகத்தில் காட்டியபடி , வேண்டுமென்றே ஆனந்தவல்லியையும் ஆழ்ந்து நோக்கிவிட்டு, ஒய்யாரமாய் வெங்கடேஷை வெகுவாய் உரசியபடி நடந்துவர, வெங்கடேஷூக்கு சபையினர் முன்னால் மனையாள் காட்டிய நெருக்கம் சிறு கூச்சத்தை கொடுக்க, அதையெல்லாம் பொருட்படுத்தாது வேதா அவர் கரம் பற்றி நடந்து மணமேடை ஏறி, தம்பதி சமேதராய் காட்சிகொடுக்க ,அதனை காண சகிக்காது உள்ளுக்குள் ஆனந்தவல்லி காந்த, அவர் முகமும் அதனை தெளிவாக பறைசாற்ற,

" கொஞ்சம் தள்ளி நிக்கறியா மாமி..." என வெங்கடேஷ் ஒரு வித கூச்சத்தோடு வேதாவிடம் கிசுகிசுக்க ,

" செத்த சும்மா இருக்கேளா ..." என அதுவரை கரம் மட்டுமே பற்றி இருந்தவர் இப்பொழுது வெங்கடேஷின் முழங்கையை பற்றிக்கொண்டு மேலும் ஒன்றி நிற்க, கடைசியில் இம்முறையும் வெட்கப்பட வேண்டியது வெங்கியின் முறை ஆகிப்போனது.


வேத மந்திரம் முழங்க, ரங்கநாதன் சுமித்ரா கழுத்தில்
மாங்கல்யம் அணிவிக்கும் போது, கடைசி முடிச்சான நாத்தனார் முடிச்சை வேதா தோரணையாக போட , அதற்கு மேல் அங்கு நிற்க மாட்டாமல் அந்த இடத்தைவிட்டே அகன்று விட்டார் ஆனந்தவல்லி.

ருத்ர நாராயணன் இல்லத்திலேயே திருமணம் நடைபெற்றதால், விருந்து முடிந்த கையோடு, தன் தந்தைக்கு சில பணிகளில் உதவுவதற்காக, வெங்கடேஷ் வாசுதேவருடன் சென்றுவிட,

அன்று மாலை ரயிலிலேயே அவர் பம்பாய்க்கு பயணபடவிருப்பதால், அவரைப் பிரிந்து எப்படி இருக்கப் போகின்றோம் என்ற எண்ணம் முதல்முறையாக வேதாவிற்கு தலை தூக்க ஆரம்பித்தது.


தன் இல்லத்திற்கு திரும்பிய வெங்கடேஷிற்கும் , மனையாளை பிரிந்து தனியே பம்பாய் செல்வது உவப்பாகவே இல்லை .

ஏதோ தன் விலை உயர்ந்த கைப்பொருளை பாதுகாப்பின்றி புதிய நபர்களிடம் கொடுத்து விட்டுச் செல்வது போன்ற உணர்வு எழ,
அவள் பிறந்து வளர்ந்த ஊர், அவள் தாய் தந்தை ,என்ற எண்ணம் எல்லாம் ஏனோ வெங்கடேஷுக்கு அடியோடு மறந்தே போனது.

இரண்டு நாட்களாக மனையாளுடன் கழித்த அதிக தருணங்கள், அவளின் அலங்காரம், அருகாமை, அவளுக்கே உரிய வாசனை, பேசி சிரித்த நிமிடங்கள் என அனைத்தும் பாடாய்படுத்த, இன்னும் ஒரு மாத காலம் அவளை விட்டு பிரிந்திருக்க வேண்டுமென்ற எண்ணமே, மனதில் பெரும் பாரத்தை ஏற்றி அவர் நிம்மதியை குலைத்திருந்தது .

தற்காலிக பிரிவு தான் என்றாலும் இருவருமே அந்தப் பிரிவு ஏற்படுத்தப்போகும் தாக்கத்தை வெகுவாகவே உணர ஆரம்பித்திருந்தனர்.

வெங்கடேஷ் தன் பயணத்திற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கும் போது, வாசுதேவர்,

"ஏம்பா ... இன்னும் ரயிலுக்கு இரண்டு மணி நேரம் கூட இல்ல .... ஐயர் வீட்டுக்கு போயி வேதாவை பார்த்து ரெண்டு வார்த்தை பேசிட்டு வந்திடுப்பா .." என்று அறிவுறுத்த,

இத்தனை நாட்களாக ,மனையாளின் அருகாமையில் கடும் பிரம்மச்சரிய தவத்தை கடைப்பிடித்து வந்தவருக்கு இந்த தற்காலிக பிரிவின் தாக்கம் அவர் மனதிலும் உடலிலும் பெரிய உணர்வு பேரலையை ஏற்படுத்தி அலைக்கழித்துக் கொண்டிருப்பதை செவ்வனே உணர்ந்தவர் , எங்கு
தன்னவளைக் கண்டால் தன் தவம் கலைந்து விடுமோ என்றஞ்சியபடி,

" போன்ல சொல்லிடறேன் ய்யா...."

" அது நல்லா இருக்காது பா .... உனக்காக வேதா காத்துகிட்டு இருக்கும் போய் நேர்லயே ரெண்டு வார்த்தை சொல்லிட்டு வந்திடு..."
என்று வற்புறுத்தி வேதாவின் இல்லத்திற்கு அனுப்பி வைத்தார் வாசுதேவர்.


திருமணம் நடந்து முடிந்த வீடல்லவா ... உறவினர்கள் அதிகம் இல்லை என்றாலும் கலகலப்பாகவே இருந்தது.
வேதாவால் தான், அந்த கலகலப்பில் பொருந்தி இருக்க முடியவில்லை.
மனதில் இனம் புரியாத தவிப்பு,வலி, வேதனை, கடைசியாக துக்கம் தொண்டையை அடைத்து, அழுகை வர எத்தனிக்கும் போது தான், இரு சக்கர வாகனம் சத்தம் கேட்க , ஏறக்குறைய வெளியில் ஓடிச்சென்று பார்த்தவருக்கு
கணவரைக் கண்டதும் கண் கலங்க தொடங்கியது.

கூடத்தில் உறவினர்கள் விசாரிப்புக்கு பதிலளித்துக் கொண்டிருந்த வெங்கடேஷை கைப்பற்றி இழுக்காத குறையாய்

" கொஞ்சம் தனியா வாங்கோ... பேசணும் ..." என்ற மனையாளின் சன்னமான கலங்கிய குரலை பின்பற்றி
வேதாவின் அறைக்குள் நுழைய, உடனே கதவை தாழிட்ட வேதா

" நான் உங்களோடயே பாம்பே வந்துடறேனே... நான் அப்புறம் எக்ஸாம் எழுதிக்கிறேன்னா..." என கண்ணீர் மல்க பேசியவரின் மொழி ஆனந்த
பேரலையை வெங்கடேஷ் மனதில் சுழற்றி அடிக்க,
ஒரு நிமிடம் அவருக்குமே அது சரி என்று தோன்ற, பிறகு சுதாரித்துக் கொண்டவர்,

" இன்னும் இருவத்தாறு நாள் தான்... எக்ஸாம்ஸ சரியா முடி .... நானே வந்து கூட்டிட்டு போறேன் ..."

" நான் இல்லாம நிம்மதியா இருக்கணும்னு ஆசைப்படறீங்கோ... இல்ல .." என்று கோபம் கொந்தளித்தபடி வேதா வசைபாட அவரது பேச்சும் செய்கையும் வெங்கடேஷுக்கு சிரிப்பை வரவழைக்க ,

அவர் பேச நினைத்தெல்லாம் அவர் மனையாட்டி பேச கேட்கும் போது அவர் மனம் இலவம் பஞ்சாய் மிதக்க , கைகளை மார்பின் குறுக்கே கட்டிக்கொண்டு, சற்று தள்ளி நின்றிருந்தவர்

" எனக்கு மட்டும் உன்னை இங்க விட்டுட்டு போகணும்னு ஆசையா என்ன... என்னாலயும் நீ இல்லாம இருக்க முடியாதும்மா..." என்றது தான் தாமதம், அவர் இரு கைகளையும் விலக்கி , கட்டியணைத்து அவர் மார்பில் முகம் புதைத்து, குலுங்கி அழ ஆரம்பித்த மனையாளை தேற்றும் வழிதெரியாமல் தன்னுடனேயே இறுக்கிகொண்டார் வெங்கடேஷ்.





தகிப்பாள்
 
அத்தியாயம் 8


பம்பாயில் ஒன்றாக இருந்த போது உணராத உணர்த்தாத காதலை, இப்போது தன் கணவனை இறுக்கி அணைத்து தேம்பி அழுது, அவருக்கு உணர்த்தியதோடு தானும் தன் காதலை உணர்ந்து கொண்டிருந்தார் வேதா


புரியாத பிரியம் பிரியும் போது புரியும்
என்ற வரிகளுக்கு ஏற்ப.


மனையாளின் பட்டு போன்ற மென்மையான சருமம் , அம்சமான அலங்காரம், வாளிப்பான இளமை,
ஏக்கம் கலந்த காதல் தோய்ந்த பேச்சு
என அனைத்திலும் கிறங்கி போனவரின் காதல் கட்டுப்பாட்டை இழந்து கரையைக் கடக்க
முற்படும் போது
மேஜையின் மேலிருந்த புத்தகம் காற்றில் படபடக்க, அப்போது தான் சுயம் உணர்ந்து சுதாரித்தவர்,


" பட்டும்மா , நான் முன்னாடியே சொன்ன மாதிரி, இந்த தடவையும் நீ யுனிவர்சிட்டி ஃபர்ஸ்ட் வரணும்... அதனால நல்லா படிச்சு எக்ஸாம் எழுது ... எக்ஸாம் முடிஞ்ச மறுநாளே , உன்ன நான் பாம்பேக்கு கூட்டிட்டு போறேன் சரியா...." என்றவரின் பேச்சில் இருந்த, அவர் முதல் முதலாக விளித்த செல்ல பெயரை கூட உணராமல் பதில் பேசாமல் தேம்பி கொண்டிருந்தவரிடம்,


" இப்பவே என் கூடவே உன்ன கூட்டிட்டு போயிடுவேன்... ஆனா ரெண்டு வருஷமா இந்த படிப்புக்காக நீ உழைச்ச உழைப்பு வீணாயிடும்மா ... இன்னும் ஒரே மாசம் தான்... நல்லா எக்ஸாம் எழுதி முடி ... நம்ம வீட்டுக்கு போயிடலாம் சரியா ..."


"....."


" பதில் சொல்லும்மா ..."


" அதான் தலையாட்டினேனே... எக்ஸாம் எழுதரேன்னு...." என சன்னமாக பதில் அளித்தவரிடம் சிரித்தபடி


" நீ இன்னும் அழறயோன்னு நினைச்சேன்.... எங்க என் முகத்தைப் பாரு ..." என்று தன் மார்பிலிருந்து வேதாவின் முகத்தை பிரித்தெடுத்து உச்சி முகர்ந்தவர்,


" சரி வா டைம் ஆச்சு நான் கிளம்பனும் ..." என்று பேசியபடி அறையை விட்டு வெங்கடேஷ் வெளியேற, அவரை உரசிக்கொண்டே அவர் கையை பற்றியபடி வேதா பின்தொடர,


அப்போது ருத்ர நாராயணன், மரகதம், ரங்கநாதன், சுமித்ரா ஆகியோர் பூஜை அறையில் இருந்து வெளிபட,


வேதாவின் அழுது வீங்கிய முகமும் அவர் வெங்கடேஷின் கரம் பற்றி பின் தொடர்ந்த பாங்கும், அனைவரின் கவனத்தையும் செவ்வனே கவர, உடனே மற்றவர்களின் பார்வையில் தெரிந்த மாற்றத்தை கண்டு, வெங்கடேஷ் தன் கையை,
வேதாவிடமிருந்து உருவிக்கொள்ள,


ருத்ர நாராயணன் ஒரு காலத்தில் வழக்கறிஞராக இருந்தவராயிற்றே அறையில் என்ன நடந்திருக்கும் என்பதை சரியாக அனுமானித்தவர்,


" எப்ப வந்தீங்கோ மாப்பிள்ள... நாங்க பூஜையில இருந்தோம் ... வேதாவோட எக்ஸாம்ஸ் முடிஞ்சதும் நானே அவளை பாம்பேல கொண்டுவிடறேன்..." என வெங்கடேஷுக்கு பதில் அளிப்பது போல் வேதாவுக்கு பதிலளிக்க,


" வந்து 10 நிமிஷம் ஆகுது ... ட்ரெயினுக்கு டைம் ஆச்சு ... நான் கிளம்புறேன் ... ." என வெங்கடேஷ் அனைவர் முகத்தையும் பார்த்து பொதுவாக கூறிவிட்டு விடைபெற, ரங்கநாதன் அமைதியாக நிற்க


" உங்களை வழியனுப்ப நானும் கூட வரேன் ..." என ருத்ர நாராயணன், அவருடன் புறப்பட்டு ரயில் நிலையத்திற்கு சென்றார்.


வழக்கம் போல் அப்துலும் உடன் வர, ரயில் புறப்பட 10 நிமிடங்களே உள்ள நிலையில், ருத்ர நாராயணன்


" மாப்பிள்ள, இந்த சின்ன வயசுல, என் குடும்பத்தோட பாரம்பரியம், என் பெண்ணோட மானம், உங்களோடு மரியாதை , உங்க குடும்பத்தோட கௌரவம், உங்க கல்யாணத்தோட கண்ணியம்னு எல்லாத்தையும் புரிஞ்சு நடந்துண்டிருக்கேள்...


நானே என் பொண்ணுக்கு, மாப்பிள்ளை தேடி இருந்தா கூட இப்படி ஒரு சம்பந்தம் அமைஞ்சிருக்காது...."
என உணர்ச்சிப்பெருக்கில் பேசிக்கொண்டே வெங்கடேஷின் இரு கரங்களையும் சேர்த்து தன் இரு கரங்களால் பற்றியிருந்தவரிடம்,


" நீங்க சொன்ன எல்லாத்தையும் விட,
என் மனைவியோட மானம் , மரியாதை எனக்கு ரொம்ப முக்கியம் ... அவளை எந்த சூழ்நிலையிலும் தலைகுனிய விடமாட்டேன் .... என் காதல் கண்ணியமானதுன்னு எல்லாருக்கும் புரிய வைக்க வேண்டிய சூழ்நிலை... அதான் ..."


" நீங்க உங்க கல்யாணத்தைப் பத்தி என்ணின்ட பேசும் போது, எந்த ஒரு நல்ல பாசமான தகப்பனுக்கும் வர சந்தேகமும் பயமும் நேக்கும் வந்தது ....
ஆனா எப்ப என் பொண்ணு எங்க எல்லாரையும் விட்டுட்டு உங்க கூட வரணும்னு ஆசைப்படறாளோ... அப்பவே நேக்கு புரிஞ்சிடுத்து... நீங்க அவளை அருமையா பார்த்துக்கிறேள்னு..."
என்றவர் மனமார
ஆசி கூறி வழி அனுப்பி வைத்தார்.


*****************************************


கல்யாணத்தில் ஆனந்தவல்லி பலர் அறிய வேதாவிடம் அநாகரீகமாக நடந்து கொண்டதைப் பற்றி ராவுத்தர்


" கல்யாணத்துல ரொம்ப அதிகமா பேசிடுச்சி அந்த ஆனந்தவல்லி... பாவம் வேதா முகமே மாறிடுச்சி... அத கூட வச்சுக்கிட்டு நம்ம ருத்ரா இன்னும் என்னென்ன கஷ்டப்பட போறானோ தெரியல ... நீ ஆனந்தவல்லியை பத்தி ருத்ரா கிட்ட கொஞ்சம் பேசக்கூடாதா வாசு..." என கேள்வி எழுப்ப,


" என்னத்த பேச சொல்ற ... ஏதாவது கேட்டா என் அம்மாவுக்கு கொடுத்த வாக்கு, நேர்மை, நியாயம், தர்மம்னு சொல்லுவான்... உனக்கு தெரியாதா... ருத்ரா ஏகத்துக்கும் நல்லவன்னு ... அதோட முன்ன மாதிரி இப்ப என்னால எதையும் பேச முடியாது டா ஏன்னா இப்ப சம்பந்தி ஆயிட்டேன்... நீதான்டா அவனுக்கு கொஞ்சம் எடுத்து சொல்லணும் ... " என ராவுத்தரிடம் பதிலளித்தவர் நினைவு வந்தவராய்


" ராவுத்தர், எனக்கு ஒன்னு புரியல டா, ஆனந்தவல்லி பேசினது ஒரு பக்கம் இருக்கட்டும், அதுக்கு ஏன் வேதா முகம் அப்படி சுருங்கிப் போவணும்...


கட்டினா அந்த புள்ளைய தான் கட்டுவேன்னு ஒத்த கால்ல நின்னு எம் மகன் கட்டிக்கிட்டான் ... கட்டிகிட்டா மட்டும் போதாது ... கூடி ஒன்னா பொழைக்கணுங்கிற கூறு அவனுக்கு இருக்குதா இல்லையான்னே எனக்கு தெரியல...


வேதா என்னவோ ஷேர் டிரேடிங் படிக்கிறேன், கார் ஓட்டுறேன்னு சொல்லுது... இவன் என்னடான்னா
கல்லுளி மங்கன் மாறி நின்னுக்கிட்டு இருக்கான் ... ஊருக்கு போவறதுக்கு முன்னாடி ஐயர் வீட்டுக்கு போய் வேதாவை பார்த்து சொல்லிட்டு போன்னு நான் சொல்ல வேண்டியதா இருக்குது டா... இவங்களுக்குள்ள என்ன நடக்குதுன்னே எனக்கு புரியல...
இவன் இந்த லட்சணத்துல இருந்தான்னா நான் பேர புள்ளைக்கு எங்க போவேன்......
இந்த விஷயத்தை பத்தி அவன்கிட்ட எப்படி பேசறதுன்னே தெரியல, தோளுக்கு மேல வளர்ந்த பய... பெரிய அதிகாரி வேற .... வேற வழி தெரியாம
இப்பதான் கோவிலுக்கு போயி ரெண்டு பேத்துக்குள்ள எந்த பிரச்சினையும் இல்லாம ஒன்னா பொழைக்கணும்னு வேண்டுதல் வச்சுட்டு வரேன் ..." என்று வாடிய முகத்தோடு நடையைக்கட்டினார் வாசு.


அன்றே ருத்ராவை சந்தித்து ராவுத்தர் ஆனந்தவல்லியை பற்றி பேச,


" என் அக்கா ஆனந்தவல்லி என் கல்யாணத்துல ஆடின ஆட்டம் நோக்கும் வாசுவுக்கும் தெரியாதாடா ...
என் கல்யாணம் நிச்சயம் ஆனதிலிருந்து கல்யாணம் நடந்து முடிகிற வரைக்கும் கல்யாணத்தை எப்படி எப்படி எல்லாம் நிறுத்தலாம்னு என்னென்ன பிளான் பண்ணினா...
எல்லாம் தெரிஞ்சும் அவளை என் ஆத்துல நான் வச்சிண்டு இருக்கேனா அதுக்கு ஒரே காரணம் என் அம்மாவுக்கு நான் கொடுத்த வாக்கு தான்...


என் அம்மா சாகும் போது என்ணின்ட


ருத்ரா, அவளுக்கு ஆத்துக்காரன் சரியில்ல, குழந்தை இல்ல, பத்து பேர் ஆத்துல பத்து பாத்திரம் தேய்ச்சு பொழச்சிக்கிற சாமர்த்தியம் இல்ல ....படு சோம்பேறி ...வாய் நீளம்.. போற இடத்துலயெல்லாம் வம்பு பேசி சிண்டு முடிஞ்சுவிட்டு சண்டை வழிஷிண்டு வருவோ... உன்னை விட்டா அவ பிச்சைதான் எடுக்கணும் ...
அவளுக்கு வேற நாதியில்லை ருத்ரா...


உன் கல்யாணத்துல அவ ஆடின ஆட்டம் நேக்கு தெரியும், அவ பொறாமை குணத்தை நம்மளால மாத்த முடியாது....
பகவான் எல்லாத்தையும் பார்த்துண்டு தான் இருக்கேர் ... அவ கெட்டவளாவே இருந்துட்டு போகட்டும் நாம நல்லவாளா இருக்கலாம்... உன்னை நம்பி அவளை விட்டுட்டு போறேன் டா எந்த சூழ்நிலையிலும் அவளை கைவிடமாட்டேன்னு நேக்கு சத்தியம் பண்ணு ... அப்படின்னு என் அம்மா பேசினது இப்ப வரைக்கும் என் காதுல ஓளிச்சிண்டே இருக்கு ராவுத்தர் ...


சத்தியம் பண்ணிக் கொடுத்து சங்கடத்துல மாட்டிண்டுடேன்.....


மரகதம் அவளைபத்தி புரிஞ்சுக்காம இருக்கிறது பகவான் நேக்கு கொடுத்த வரம்னு நினைக்கிறேன்... அதனாலதான் நானும் என் அக்காவை பத்தி எதுவும் அவளிண்ட சொல்றது இல்ல ...
மரகதம் இயல்புலயே ரொம்ப வெகுளி ...
அதனால தான் என் வண்டி ஓடிண்டு இருக்கு ... மரகதம் இடத்துல வேற யாராவது இருந்திருந்தா இந்நேரம் என் ஆம் ரெண்டு ஆயிட்டு இருக்கும்...
என் நிம்மதியும் போயிருக்கும் ... ஏதோ அந்த வகையில நான் ரொம்ப அதிர்ஷ்டசாலி டா.... மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்னு கண்ணதாசன் எனக்காகவே எழுதினது போல இருக்கு ..." என முடித்த ருத்ர நாராயணனிடம் மேற்கொண்டு என்ன பேசுவது என தெரியாமல் விடைபெற்றார் ராவுத்தர்.


இரண்டு நாட்களுக்குப் பிறகு வழக்கம் போல் நடந்த சந்திப்பில்,
" ருத்ரா, வேதா என்ன சொல்லுது ..." என்றார் மிகுந்த தயக்கத்தோடு வாசு தேவர்.


வாசுவின் கண்ணில் தெரிந்த அலைப்புறுதலை வைத்தே அவர் எதைக் கேட்டு எண்ணுகிறார் என்பதை உணர்ந்த நாராயணன்,


" அவ எங்க பேசறா ... எதையோ பறி கொடுத்த மாதிரி சுத்திண்டு இருக்கா... வேதாவுக்கு இங்க இருக்கவே பிடிக்கல டா...
அன்னைக்கு மாப்பிள்ள ஊருக்கு போகும் போதே கூடவே போகணும்னு ஒரே அழுகை...
கடைசில எக்ஸாம்ஸ முடி நான் வந்து அழைச்ஷிண்டு போறேன்னு அவர் சொல்லிட்டு போனதால வேற வழி இல்லாம இங்க இருக்கா ..." என்ற பதிலைக் கேட்டு மனம் குளிர்ந்தவர்


" என்னதான் அவன் என் மகனா இருந்தாலும், நம்ம வேதாவை அவன் நல்லபடியா வச்சுக்கணுமேன்னு ஒரு பயம் உள்ளுக்குள்ள இருந்துகிட்டே இருந்தது... இப்ப தான் மனசு நிறைஞ்சிருக்கு ருத்ரா ... சாதி விட்டு சாதி கல்யாணம் கட்டிக்கும் போது சுவாரசியமாத்தான் இருக்கும்.... ஆனா தாய் தகப்பன் வீட்டுல எந்த தரத்தோட அந்த புள்ள இருந்ததோ அந்த தன்மையோட காலம் ழுழுசும் வச்சி காப்பாத்தணும்... இல்லாட்டி போனா ஐயிரு சமுதாய சீர்திருத்தம் பண்றேன்னு வெளியாளுக்கு கட்டிக் கொடுத்தாரு இப்ப அந்த பொண்ணோட நிலைமையை பார்த்தியான்னு , அக்ரஹாரத்துல இருக்கிறவங்க பேசறதுக்கு முன்னாடி உன் அக்கா ஆனந்தவல்லி பேசிடும்...


எப்பவுமே காதல் கல்யாணம் கட்டிக்கிட்டவங்க, இந்த சமுதாயத்துக்கு முன்னுதாரணமா வாழ்ந்து காட்டணும் ... இல்லன்னா சாதியை தூக்கிப் பிடிக்கிறவங்க , கடைசி வரைக்கும் அவங்க வாழ்க்கைய சாட்சியா காட்டுவாங்க ...


நீ நல்ல கொள்கையோட வாழறவன் ருத்ரா.... உன் கொள்கை என்னைக்கும் ஜெயிக்கணும் .... அப்பதான் நீ ஆசைப்பட்ட சமுதாய மாற்றம் நடக்கும்...
அது என் புள்ளையும் உன் பொண்ணும்
ஒன்னா சேர்ந்து பொழைக்கிற பொழப்புல தான் இருக்கு... இது எல்லாத்தையும் நினைச்சு தான் ரெண்டு நாளா வெசன பட்டு கிட்டு இருந்தேன்... இப்போ ரொம்ப சந்தோஷமா இருக்குடா ..."
என வெளிப்படையாக வாசுதேவர் அகமகிழ,


" என் மாப்பிள்ள உன் மகன் டா ...
நீ யோசிக்கிறதுல பாதியாவது அவர் யோசிச்சிருப்பேர் இல்ல ..." என்று நாராயணன் புன்னகைக்க , உடன் வாசுதேவர் இணைந்துகொண்டார்.


*****************************************


பம்பாய் வந்து சேர்ந்த வெங்கடேஷுக்கு இருப்புக் கொள்ளவில்லை. கடக்கப்போகும் நாட்களை காலண்டரில் குறித்து வைத்தார் .


ஊருக்கு செல்லும் முன் தன் மனையாள் இட்ட கோலம் துளசி மாடத்தின் முன் கலையாமல் காட்சியளிக்க ,
தெய்வ விக்ரகத்திற்கு தொடுத்து சாற்றியிருந்த மாலை காய்ந்து தொங்க,
அவள் அறையிலிருந்த பாவாடை தாவணிகள், சல்வார் உடைகள், புத்தகங்கள், பயன்படுத்திய ஐ டெக்ஸ் சாந்து, கண் மை , ஒரு சில ஒட்டும் பொட்டுக்கள் ... ஒரே ஒரு தலை முடியுடன் காட்சியளித்த சீப்பு ...
போன்றவை திரும்பிய இடமெல்லாம் அவர் கண்ணாட்டியின் நினைவை அதிகரிக்க ,
மூன்றாவது முறையாக அனாதையான உணர்வை உணர்ந்தார் வெங்கடேஷ்.


அவரை பெற்றதாய், வளர்த்த தாய் இறக்கும் போது இருந்த வெறுமை உணர்வு
இப்போது தலை தூக்க ஆரம்பித்திருந்தது.


அவரை வளர்த்த தாய் தந்தையர் இறந்த பிறகு கடந்த 3 ஆண்டுகளாக
தனிமையை துணையாக்கிக் கொண்டு வெறுமையோடு வாழ்ந்து வந்தவருக்கு
மனையாள் உடன் கழித்த கடந்த நான்கு மாதங்கள் சர்க்கரை நிமிடங்களாய் தோன்றின.


அவர் தேவை அறிந்து செயல்படும் குணம், சைவ உணவே ஆனாலும் அவருக்குப் பிடித்ததை கேட்டுத்தெரிந்து கொண்டு அதனை பக்குவமாக சமைத்து பரிமாறும் விதம் என தாயின் பராமரிப்பில் பாசத்தில் திளைத்திருந்த குழந்தை போல் தன்னை முற்றிலுமாக தன் மனையாளிடம் தொலைத்திருந்தார் .


வேதாவின் நிலை அதைவிட மோசமாக இருந்தது.


சங்க இலக்கியங்களில் தலைவனை பிரிந்திருக்கும் தலைவிக்கு பசலை நோய் தாக்கியதாக பாடப்புத்தகங்களில் மட்டுமே படித்திருந்தவருக்கு , அந்த நோயின் தாக்கத்தை முழுவதுமாக இப்போது தான் உணர ஆரம்பித்திருந்தார்.


எந்த மகிழ்ச்சியிலும் முழுதாய் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள இயலாமல் மனத்துக்குள் பிரிவு ஆற்றாமையால் வருந்தினார்.


தான் பிறந்து, வளர்ந்து, படித்து, தன் தாய் தந்தையருடன் வாழ்ந்த ஸ்ரீவில்லிபுத்தூர் அன்னியமாக போக, 4 மாதத்திற்கு முன்பு வரை பரிச்சயமில்லாத கணவன்,
திக்கு திசை தெரியாத மாநிலம், அவள் மொழி அறியாத மக்களெல்லாம் இப்போது அவரது சொந்தங்கள் ஆகிப் போயினர்.


'ராமன் இருக்கும் இடம் தான் சீதைக்கு அயோத்தி ' என்ற வாக்கியத்தின் முழு அர்த்தத்தையும் அனுபவரீதியாக உணர ஆரம்பித்திருந்தார் .


தன் காதல் கணவரின் நினைவாகவே உறங்கி அவர் நினைவாகவே எழுந்தார்.


கடிகாரம் காட்டும் ஒவ்வொரு மணித்துளியோடும் தன் மணாளனின் செயல்களை நினைவுபடுத்திப் பார்த்தார்.


இப்ப தூங்கி எழுந்திருப்பேர்... இப்ப எக்சசைஸ் பண்ணிண்டு இருப்பேர்..... இப்ப பேப்பர் படிப்பேர்.... இப்ப ஸ்நானம் பண்ண போவேர்...இப்ப டியூட்டிக்கு கிளம்பிடுவேர்.... என வாய்விட்டே புலம்பலானார்.


ஓரளவிற்கு கடினப்பட்டு காலைப்பொழுதை கடத்தியவருக்கு மாலை 7 லிருந்து 9 மணியை கடப்பதற்குள் போதும் போதும் என்றாகி போனது.
இரவு உணவின் போது தன் நாயகனுடன் நடந்த, கெஞ்சல், கொஞ்சல், ஹாஸ்யம் எல்லாம் அவர் கண்முன் தோன்றி வெகுவாக அலைக்கழிக்கும்.


" இது என்னதுன்னு சொல்லுங்கோ பார்ப்போம்..." என வேதா தான் சமைத்த உணவு வகையை வெங்கடேஷிடம் காட்ட,


" வாவ் நைஸ் பாசுந்தி போல இருக்கு ... ஆமா... ஏன் கடுகு இருக்கு ... " என கூறிக்கொண்டே கண்ணிமைக்கும் நேரத்தில் ஆள்காட்டி விரலால் தொட்டு நாவில் ருசி பார்த்தவரின் முகம் எட்டு கோணலாகி போக,


" ச்சே...என்னம்மா இது புளிப்பும் காரமுமா இருக்கு ..."


" இது ஒன்னும் பாசுந்தி இல்ல ... மோர் குழம்பு ... என்னன்னு தானே சொல்ல சொன்னேன்... உங்களை சாப்பிட்டு பார்க்கவா சொன்னேன்... இப்படி நன்னா இல்லைன்னு பட்டுனு சொல்லிட்டேளே.." என்று வருந்தியவரிடம்


" ஏய்... இதை பாஸந்தின்னு மனசுல நினைச்சுகிட்டு சாப்பிட்டதால தான் ஏதோ மாதிரி இருந்தது ... இதை மோர் குழம்புன்னு மனசுல நினைச்சுகிட்டு சாப்பிட்டா நல்லா இருக்கும்... " என வெங்கி சமாதானப்படுத்த,


" ஆசை ஆசையா மொத முறையா மோர்க்குழம்பு பண்ணினேன் ... இப்படி நன்னா இல்லன்னுட்டேளே..."
என்ற வேதாவின் கண்களில் மெல்லிய நீர் திரையிட்டு , உதடுகள் துடிக்க


" இனிமே இந்த விஷப்பரீட்சையே வேண்டாம்மா... நீ எந்த டிஷ் செஞ்சாலும், அதுக்கு என்ன பேர் வச்சி இருக்கேன்னு முன்னாடியே சொல்லிடு... நான் சாப்பிட்டு பார்த்து அதனோட டேஸ்ட் எப்படி இருக்குன்னு மட்டும் சொல்றேன்... சரியா .."


" சரி, இப்ப சொல்லுங்கோ மோர் குழம்பா எப்படி இருக்கு ..."


" இது பாசுந்தியா தான் நல்லா இல்ல மோர் குழம்பா ரொம்ப நல்லா இருக்கு..." என்று கூறிவிட்டு வெங்கி மீண்டும் வாய்விட்டே குலுங்கி சிரிக்க,


" ஏன் இப்ப திடீர்னு சிரிக்கிறீங்கோ..." என வேதா முறைக்க


" நான் அக்யூஸ்ட்கள கூட இப்படி மிரட்டி கேட்டதே இல்லம்மா... " என்றவரின் முக பாவனையில் வேதாவும் உடன் குலுங்கி நகைத்தார் .


அன்றைய நினைவில் மூழ்கி
திளைத்தவருக்கு, உடனே தன் காதல் கணவருடன் பேசும் ஆசை வர, வீட்டு தொலைபேசிக்கு தொடர்பு கொண்டால் அது அடித்து அடித்து அடங்க,
அவர் இன்னமும் வீட்டிற்கு வரவில்லை
என்றறிந்தவர் மிகுந்த மனச்சோர்வோடு தொலைபேசியை தாங்கியில் பொருத்தினார்.


இரவில் உறக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்தார். காலண்டரில் எத்தனை முறை எண்ணினாலும் நாட்கள் நகராமல் அதே எண்ணிக்கையை காட்டின.
இத்தனைக்கும் இயல்பான தம்பதிகளுக்கிடையே இருக்கும் தாம்பத்திய உறவினை கூட இருவரும் அனுபவித்ததில்லை. சொல்லப்போனால் வெங்கடேஷ் ஊருக்கு கிளம்பும் போது வேதா கொடுத்த அணைப்பும், வெங்கடேஷின் நெற்றி முத்தமும் தான், அவர்களுக்கு இடையே நடந்த முதல் தொடுகை.


வேதாவை பொருத்தமட்டில் அவர் வீட்டில் இருந்த அனைவருமே, தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்க, தொலைவில் இருந்தவருடன் மானசீகமாக தொடர்பில் இருந்தார்.


பம்பாயில் வெங்கடேஷின் உயர் அதிகாரியும் நண்பருமான சீனிவாஸ் ஷர்மா ,


" ஏன்யா வெங்கி , ஏன் இப்படி இருக்க ... காலையிலிருந்து பார்த்துகிட்டு இருக்கேன் ரொம்ப கோவப்படற ... கொஞ்சம் வருத்தமா வேற தெரியற ...என்ன பிரச்சனை..." என சோக கீதம் பாடிய வெங்கடேஷின் முகத்தைப் பார்த்து அவர் மராட்டியில் துக்கம் விசாரிக்க


" ஒண்ணுமில்ல சார் ..." என்று வெங்கி தடுமாற,


" இல்லையே, திடீர்னு ஒருத்தர் இவ்ளோ எரிச்சல் படறாங்கன்னா யாரையோ மிஸ் பண்றாங்கன்னு அர்த்தம்... இப்பதானய்யா உனக்கு கல்யாணம் ஆச்சு... என்ன பிரச்சனை ..."


" அது வந்து ...என் வைஃப் ஊருக்கு போய் இருக்கா சார் ...."


" என்னய்யா , அதுக்குள்ள சண்டை வந்து கோவிச்சுக்கிட்டு அம்மா வீட்டுக்கே போயாச்சா ..."


" இல்ல சார்... எக்ஸாம் எழுத போய் இருக்கா..."


" ஓ... முதல்ல போய் உன் வைஃப்பை கூட்டிகிட்டு வா ...உன் முகத்தை என்னாலயே பாக்க முடியல ..." என்றவரின் பேச்சு வெங்கடேஷுக்கு ஆச்சரியத்தை அளிக்க,


எப்பொழுதாவது சந்திக்கும் இவருக்கே, தன் முக மாற்றமும் நடவடிக்கையும் பளிச்சென்று தெரிகிறதே.... எப்பொழுதுமே தன்னுடனேயே இருக்கும் தன் வீட்டு வேலை ஆட்கள், டிரைவர், தனக்கு கீழே பணிபுரியும் மற்றவர்களின் பார்வையில், நிச்சயம் தன்னிடம் ஏற்பட்டிருக்கும் மாற்றம் தெரிந்திருக்குமே ...என நினைத்துப் பார்த்து மனதுக்குள் சிரித்தபடி காவல்துறை ஜீப்பில் பவனி வந்தவர் எதேச்சையாக


தெருவோரத்தில் பூ விற்கும் பெண்மணியை பார்த்ததும், மீண்டும் மனையாளை பற்றிய நினைவுகள் துளிர்த்தெழ,


" இன்னைக்கு கொஞ்சம் சீக்கிரம் வாங்கோ ... வரும் போது பூ வாங்கிண்டு வரேளா... இங்க எல்லா இடத்திலும் சாமந்திப்பூ தான் கிடைக்கிறது ... நேக்கு மல்லிப்பூ வேணும் ..."


மனையாள் கேட்டதற்காக பூ வாங்க நினைத்தாலும் இயல்பிலேயே இருந்த கூச்ச சுபாவம் தடுக்க, அடுத்தவர்களை அழைத்து வாங்கித் தர சொல்லவும் மனமில்லாமல் தானும் வாங்க முடியாமல் தனக்குள்ளேயே திண்டாடி போனார்.


பொதுவாக எந்த ஒரு பரிபூரண ஆணும், தன் மனையாளுக்காக வாங்கும் பூவும், புடவையையும் தானே கடைக்கு சென்று வாங்க நினைப்பானே ஒழிய, அடுத்தவர்களை வாங்கித் தரச் சொல்ல மாட்டான், அவ்வாறு செய்தால் அவனது உள்ளுணர்வுக்கு அது ஒவ்வாததாகி விடும்.


அதே நிலையை அனுபவித்துக் கொண்டிருந்தவர், கடைசியில் பூ வாங்காமலே வீட்டுக்கு வர
அழைப்புமணி அழுத்தியதும் கதவைத் திறந்த மனையாளை பார்த்து சொக்கி தான் போனார்.


கல்யாணத்தின் போது பாரம்பரிய அரக்கு நிற மடிசார் புடவையில்,
பார்த்திருந்தவருக்கு, இப்போது அதே போல் காட்சியளித்தவரை உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை அணு அணுவாக ரசித்தபடி
ஏறக்குறைய அவரது மூச்சுக்காற்று அவர் மனையாட்டியின் முகத்தில் படும் அளவிற்கு நெருங்கிய போது


" நான் விரதத்துல இருக்கேன் ... என் மேல படாதீங்கோ.... மடி..." என வேதா பின் வாங்கும் போது தான் அவரது நெருக்கமே அவருக்கு உரைக்க,


தலையை அழுந்த கோதியவர், பெரும் மூச்செடுத்து மனதை சமன் செய்துக்கொண்டு,


" என்ன மாமி... கலக்குற இன்னைக்கு ..."


" காரடையான் நோன்பு ..."


" அப்படின்னா .."


" சத்தியவான் சாவித்திரி விரதம்னு சொல்லுவா..."


" ஓ... அதுவா...இதுக்கு தான் பூ கேட்டியா ..." என்றவரின் பார்வை அவர் வாங்கிக் கொடுத்திருந்த வைரத்தோடு மற்றும் வைர அட்டிகையின் மேல் விழ,


" எல்லாம் நல்லா இருக்கு மாமி ...ஆனா இந்த இடுப்புக்கு ஒரு ஒட்டியாணம் இருந்தா இன்னும் அம்சமா இருக்கும் ..."
என்றவரின் பார்வை போனயிடம் , வேதாவிற்கு ஒருவித கூச்சத்தை தர,


" நேக்கு நாழி ஆர்து... வாங்கோ பூஜைக்கு..." என்ற போது தான் பூஜையறையில் வரிசை கட்டி நின்ற புதிதாக சமைத்த உணவுகளைப் பார்த்து,


" இப்ப தான் எல்லாத்தையும் புதுசா சமைச்சிருக்க போல இருக்கு... காலையிலிருந்து நீ சாப்பிடலையா ..."


" இல்ல ... இன்னைக்கு நீங்க சாப்பிட்டதுக்கு அப்புறம் தான் நான் சாப்பிடுவேன் ...."


" என்னம்மா இது ... அல்சர் வந்திடும்மா..." என்றவரின் பேச்சை காதில் வாங்காமல்


" நீங்க கை கால் அலம்பிண்டு டிரஸ் மாத்திண்டு வாங்கோ... பூஜை ஆரம்பிக்கணும்..." என்றதும் மின்னல் வேகத்தில் தயாராகி வெங்கடேஷ் வர


"உருகாத வெண்ணையும், ஓரடையும் நான் நூற்றேன்...ஒருகாலும் என் கணவர் என்னை விட்டுப் பிரியாதிருக்க வேண்டும் ... "என கண்மூடி வேதா பிரார்த்திக்க,


" ஏன் மாமி ... இதை ஏன் சாமி கிட்ட கேக்குற... ஆசாமி எங்கிட்ட கேட்டாலே நானே சொல்லுவேனே... உன்னை விட்டு நான் எங்கம்மா போவேன் ..." என்றவரை முறைத்துப் பார்த்த வேதா
தட்டில் இருந்த மஞ்சள் சரடை, எடுத்துக்கொடுத்து கட்ட சொல்ல


" என்னென்னமோ செய்யற .. ஒண்ணுமே புரியல ..." என
புன்னகைத்தபடி
வேதாவின் கழுத்தில் மஞ்சள் சரடை கட்டியவரிடம்


" கிழக்க பார்த்து நில்லுங்கோ... நான் சேவிச்சுக்கணும்... தீர்க்க சுமங்கலி பவான்னு சொல்லுங்கோ ..."
என்றவர் வெங்கடேஷின் பாதம் பணிய,


" நான் நல்லா இருக்கறதுக்கு நானே ஏன் இண்டைரக்ட்டா சொல்லணும்..."
என்றவருக்கு மறுபடியும் ஒரு முறைப்பு பரிசாக வழங்கப்பட்டதை எல்லாம் தற்போது நினைத்துப் பார்த்தவர்


இங்க இருந்த நாலு மாசத்துல, அவ கேட்டது பூ ஒன்னு தான் ...அதைக் கூட வாங்கிக் கொடுக்காம விட்டுட்டயே டா வெங்கி .... என்ற எண்ணம் மீண்டும் மீண்டும் தோன்றி, அவர் மனதை பாரமாக்கியது.


அவர் கூறியது போல் மறுநாளே, அவர் மனையாளுக்கு ஒட்டியாணம் மற்றும் வேறு சில நகைகளையும் வாங்கிக் கொடுத்துவிட்டார் , அதைத்தான் ரங்கநாதனின் திருமணத்தில் வேதா அணிந்து கொண்டதும். ஆனால் வெங்கடேஷ் வாங்கி கொடுத்தது எல்லாம் அவர் ஆசைப்பட்ட பொருட்கள் தானே ஒழிய வேதா விருப்பப்பட்டது அல்ல .. என்ற எண்ணம் தான் அவரை அதிகமாக வருந்தச் செய்தது.


படிப்பில் கவனச்சிதறல் ஏற்படும் போதெல்லாம் வேதாவின் மனம்,
தன் கண்ணாளன் தன்னிடம் முதன்முதலாக கேட்டுக் கொண்ட, பல்கலைக்கழகத்திலேயே முதலாம் மாணவியாக வரவேண்டும் என்ற ஆசையை நிறைவேற்றியே தீர வேண்டும் என்ற வைராக்கியத்தோடு
வெகுவாக உழைக்க ஆரம்பித்தார்.


தேர்வு நுழைவுச்சீட்டு வாங்குவதற்காக கல்லூரிக்கு சென்றவரிடம், கல்லூரி முதல்வரிருந்து விரிவுரையாளர்கள், உதவியாளர்கள் வரை நலம் விசாரித்தாலும், அவர்களது பார்வையில் ஒருவித சந்தேகம் இருப்பதை வேதாவால் உணர்ந்துகொள்ள முடிந்தது.


உடன் பயின்ற மாணவிகளில் ஒரு சிலர், ஆழ்ந்த அன்போடு அவரது திருமணத்திற்கு வாழ்த்துச் சொல்ல,
வேறு சிலர், அவரது திருமணம் நடந்த முறையே தவறாக பேச, இன்னும் சிலர்


" உனக்கு என்னம்மா ...உங்கப்பா ஜட்ஜு ....உன் வீட்டுக்காரர் போலீஸ் ஆபீஸர் ... நீதித்துறை, காவல்துறை எங்களுக்கும் வந்து
வாய்க்குதே ...ம்ஹூம்.." என வெளிப்படையாகவே பொரும,


இவற்றுக்கெல்லாம் பதில் அளிக்க வேண்டியவளின் மனமோ பம்பாயிலேயே இருக்க, உடனிருந்தவர்கள் தான் கடைசிவரை பேசிப்பேசி களைத்து போனார்கள்.


டீக்கடை, பெட்டிக்கடை, கடைத்தெரு, பேருந்து நிலையம் என திரும்பிய இடமெல்லாம் இளையராஜாவின் பாடல்கள் ஒலிக்க, புரியாத பல வார்த்தைகளுக்கான அர்த்தங்கள் புரிய ஆரம்பித்து, இசையின் வரிகளில் லயிக்க ஆரம்பித்தார் வேதா.


மனையாளை பற்றிய நினைவுகள் வரும் போதெல்லாம் அவருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாட நினைப்பார் வெங்கடேஷ்.


வேதாவின் இல்லத்தில் தொலைபேசி கூடத்தில் இருக்கும் , தனித்துவமான பேச்சுக்கு வசதியும் இல்லை, அவர் தேர்வுக்கு படித்துக் கொண்டிருப்பதால்
அவ்வாறு பேசுவதற்கு வெங்கடேஷூக்கும் மனமில்லை.


இருப்பினும் வாரத்திற்கு இரண்டு மூன்று முறையாவது, வேதாவை தொடர்பு கொண்டு நலம் விசாரித்து, நன்றாக தேர்வு எழுதுமாறு ஊக்கப்படுத்தினார்.


வேதாவும் இரண்டு மூன்று முறை அவரை தொடர்புகொள்ள முயற்சித்திருந்தார், என்ன ஒன்று அவர் தொடர்பு கொள்ளும் நேரமெல்லாம், சொல்லி வைத்தாற் போல் வெங்கடேஷின் வேலைகள் உச்சத்திலிருக்கும்.


இவர்களுக்கிடையே இருக்கும் உரையாடலே இந்நிலையில் இருக்க ,
ஆனந்தவல்லி எப்பொழுதும் போல் தகிடு தத்த வேலையில் செவ்வனே தன்னை ஈடுபடுத்திக்கொண்டதற்கு அடையாளமாக,


கூடத்தில் தொலைபேசி ஒலிக்கும் போது அவர் எடுக்க நேர்ந்தால், மறுமுனையில் வெங்கடேஷ் என்று தெரிந்ததும் உடனே,
ரிசீவரை எடுத்து கீழே வைத்துவிடுவார்.
இது ஆனந்தவல்லியின் வேலைதான்
என வெங்கடேஷூம் அறிவார்.


இத்தனை ஆண்டுகளாக நிழல் உலக தாதா போல் செயல்பட்டு வந்த ஆனந்தவல்லி, சற்றும் யோசிக்காமல்
'ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு' என்ற பழமொழிக்கு எற்ப வேதாவை பழிவாங்குவதாக நினைத்து திருமணத்தில் அனைவரின் முன்பாக அநாகரீகமாக நடந்து கொண்டது அவரது ஆதரவாளர்களோடு அவரை அறிந்தவர்களுக்கும் அவரது குணத்தை அவரே வெட்ட வெளிச்சமாக்கி காட்டியது போலாகி போனது.


வீட்டில் ருத்ர நாராயணன் மட்டுமே அறிந்திருந்த அவரது குணம், தற்போது ரங்கநாதனுக்கும் வேதாவுக்கும் அத்துப்படியான நிலையில் முன்பு போல் அவரால் எந்த விஷயத்திலும் தன்னை நேரடியாக ஈடுபடுத்தி கொள்ள முடியவில்லை.


இருந்தாலும் தேனிலே தோய்த்து எடுத்தாலும் பாகற்காயின் கசப்பு மாறாதது என்பது போல் , அவரது உண்மை குணத்தை நேரடியாக வெளிக்காட்டாமல், இந்த மாதிரி
சிறுசிறு சில்மிஷங்களை செய்து தன்னுடைய இருப்பினை அடுத்தவர்களுக்கு உணர்த்திக் கொண்டே தான் இருந்தார்.


பலமுறை ரிசீவர் தொலைபேசியின் தாங்கியில் இல்லாமல், வெளியே இருப்பதைப் பார்த்து, வழக்கம் போல் மரகதம்,


" யாரோ தெரியாம கீழ
வச்சுட்டிருக்கா போல இருக்கு ..." என்று தனக்குத்தானே பேசியபடி, அதனை தாங்கியில் பொருத்திவிட்டு செல்வார்.


வெங்கடேஷ் அழைக்கும் போது , மரகதம் எடுக்க நேர்ந்தால்,
மாப்பிள்ளையிடம் மரியாதையாக நலம் விசாரித்துவிட்டு மகளை அழைத்து கொடுத்துவிடுவார்.


இம்மாதிரியான ஆனந்த வல்லியின் சித்து விளையாடல்கள் ருத்ர நாராயணனின் பார்வைக்கு வர,
அவர் தன் அலுவலக தொலைபேசியை பயன்படுத்திக் கொள்ளுமாறு, வெங்கடேஷிடம் தெரிவித்திருந்தார்.


ஒரே தொலைபேசி எண் என்பதால், வேதா வெங்கடேஷ் பேசிக் கொள்ளும் பொழுது, கூடத்தில் இருக்கும் தொலைபேசியை எடுத்து ஓட்டு கேட்க ஆரம்பித்தார் ஆனந்தவல்லி.
முதன்முறை பேசும் போது வெங்கடேஷிற்கு சந்தேகம் எழவில்லை,
ஆனால் அடுத்த முறை வேதா அழைப்பை துண்டிப்பதற்கு முன், மற்றொரு அழைப்பு துண்டிக்கப்படுவதை உணர்ந்தவர், அதிலிருந்து தொலைபேசியில் அழைப்பதையே நிறுத்திக்கொண்டார்.


தொலைபேசிக்கே இந்த நிலைமை என்றால் , கடிதம் எழுதினால் நிச்சயம் அது, வேதாவை சென்றடையாது என்பதை அறிந்து அதையும் நிறுத்திக்கொண்டார் .


வாசு தேவரின் வெட்டுக்காயம் ஓரளவு ஆறிக்கொண்டே வர, தேர்வு இல்லாத நாட்களில், தானே தன் மாமனார் இல்லத்திற்கு சென்று சாப்பாடு கொடுத்துவிட்டு வருவதை வழக்கமாக்கிக் கொண்டார் வேதா.


அவ்வாறு அவர் வரும் சமயங்களில்,
வெங்கடேஷ் தன் இல்லத்து தொலைபேசிக்கு தொடர்பு கொண்டு வேதாவுடன் உரையாடினார்.


நாட்கள் வேகமாக நகர
வேதாவின் தேர்வுகள் அனைத்தும் முடிந்த நிலையில், வெங்கடேஷுக்கு வேலைப்பளு காரணமாக அதிக நாட்கள் விடுப்பு எடுக்க முடியாத நிலையில், ரயில் பயணச்சீட்டும் சரியாக கிடைக்காத காரணத்தால், அவரின் ஸ்ரீவில்லிபுத்தூர் பயணம் கிட்டத்தட்ட பத்து நாட்கள் தாமதப்படுவதாக செய்தி கிட்ட, அது வேதாவை வெகுவாக வாட்டியது.


" ஏண்டி எக்ஸாம் இப்பதான முடிஞ்சது... ஒரு பத்து நாள் இந்த அம்மாவோட இருக்க கூடாதா நீ ... " என்றார் மரகதம் மிகுந்த சோகத்தோடு காட்சியளித்த வேதாவை பார்த்து.


" இல்லம்மா, அவர் அங்க தனியா இருக்கேர்... நான் எங்காத்துக்கு போகணும் மா ..." என்ற வரியில் இருந்த 'எங்காத்து' என்ற வார்த்தை மரகதத்தை வருத்தமுற வைக்க,


தாய் மற்றும் மகளுக்கு இடையே நடக்கும் சம்பாஷணையை, கண்டும் காணாதது போல் ஊஞ்சலில் அமர்ந்தபடி ருத்ர நாராயணன் கேட்டுக்கொண்டிருக்க, சிறு அமைதிக்கு பிறகு


"உன் கல்யாணத்துக்காக நான் சேர்த்து வச்ச நகையை எல்லாம் அப்படியே இருக்கு... இந்த தடவை ஊருக்குப் போகும் போது எடுத்துண்டு போறயா ..." என்று ஆவலோடு மரகதம் கேட்க


" வேண்டாம்மா ... அவர் கோவிச்சுபேர்...
அவர் நேக்கு வைரத்தோடு, வைர அட்டிக்கையிலிருந்து எல்லாம் நகையும் வாங்கி கொடுத்திருக்கேர்.... ரங்கு கல்யாணத்துல போட்டுண்டு இருந்தேனே .. பார்த்திருப்பேளே.... அவர் எதுவும் நம்மாத்துல இருந்து எடுத்துண்டு வர கூடாதுன்னு ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டேர்..." என்ற பதில், மரகதத்தை அடித்தது போலிருந்தது. வேதா இயல்பாகக் கூறியது தான், ஆனால் இது குறித்து முன்னவே மரகதம் தன் கணவரோடு உரையாடியது அவருக்கு நினைவு வந்து மேலும் வருத்தத்தை அளித்தது.


வேதா அவ்விடத்தை விட்டு அகன்றதும்,


" கேட்டேளா, உம்ம பொண்ணு பேசினத, எங்கான்றா, நகை வேண்டான்றா .... என்னன்னா நடக்கறது இங்க... இதுக்கெல்லாம் என்ன அர்த்தம் ..." என்றார் கண் கலங்கிய நிலையில்.


" ஏம்மா, இதுக்கு போய் வருத்தப்படறியே... நியாயமா நீ சந்தோஷப்படணும்... நம்ம பொண்ணு நம்ம ஆத்துல இருக்குறதை விட அவாத்துல சௌக்கியமா இருக்கான்னு அர்த்தம்....
மாப்பிள்ள அவளை நன்னா பார்த்துக்கறேர்னு அர்த்தம் ....


ஒரு பொண்ணு அழுதுண்டே புக்காத்துக்கு போறான்னா, புக்காத்து மனுஷா சரி இல்லன்னு அர்த்தம் ... ஆனா நம்ம பொண்ணு சந்தோஷமா போறான்னதும் நோக்கு புரிஞ்சியிருக்கணும் மாப்பிள்ள ரொம்ப நல்லவர்னு... அதனால அவ பேசினதை தப்பர்த்தம் பண்ணிக்காத ..." என்ற நீண்ட விளக்கம் அளித்து மரகதத்தை சமாதானப்படுத்தியவருக்கு,
வேதாவின் பம்பாய் பயணத்தைப் குறித்து , திடீரென்று ஒரு எண்ணம் உதயமாக,


ஏற்கனவே மெட்ராஸில் வசிக்கும் தன் மகன் ரங்கநாதன் இல்லத்திற்கு போக வேண்டிய கட்டாயம் இருந்த நிலையில், தன் மகள் வேதாவை உடன் அழைத்துச் சென்று, அங்கிருந்து விமானத்தின் மூலம் பம்பாய்க்கு பயணப்பட வைக்கலாமே .. என்ற சிந்தனை வந்ததும் அவர் வெங்கடேஷிடம் பகிர்ந்துகொள்ள ,


" சரி வேதாவால தனியா டிராவல் பண்ண முடியும்னா, அனுப்பி வைங்க... ஏர்போர்ட்ல நான் பிக் பண்ணிக்கிறேன் ..."


" நேக்கு மெட்ராஸ்ல கொஞ்சம் வேலை இருக்கு மாப்பிள்ள ... அதனால என்னால அவளோட பாம்பே வர முடியல ...அவ எல்லாத்தையும் கத்துக்கணும் ...நிச்சயமா அவளால தனியா டிராவல் பண்ண முடியும்... நான் அவளை அனுப்பி வைக்கிறேன் ..." என்றவர் சற்று தயங்கியபடி,


" நான் அவளுக்கு போட வேண்டிய நகையை கூட கொடுத்து அனுப்பலாம்னு நினைக்கிறேன் ..." என அவர் வார்த்தையை முடிக்கும் முன்,


" இதைப்பத்தி நாம முன்னாடியே பேசிட்டோம்னு நினைக்கிறேன் ... திரும்ப இதை பத்தி பேச வேண்டாமே..." என்ற பதிலை இறுதியாகவும் உறுதியாகவும் கூறி அழைப்பை துண்டித்தார் வெங்கடேஷ்.


ரங்கநாதன் இல்லத்தில் ஒரே ஒரு நாள் வேதா தங்க , ரங்கநாதன் அவருடன் இயல்பாக பேச எத்தனிக்க,


தன்னிடம் தன் திருமணம் குறித்து ஒரு வார்த்தை கேட்கவில்லை என்ற கோபமும், தன் கணவரிடம் ரங்கநாதன் முகம் கொடுத்துக் கூட பேசவில்லை என்ற வருத்தத்தை எல்லாம் மனதில் வைத்து
கேட்ட கேள்விக்கு பதில் என்ற நிலைப்பாடோடு தன் பாரா முகத்தை காட்டிய வேதா,சுமித்ராவிடம் மட்டும் நல்ல தோழியாக நட்பு பாராட்டினார்.


வேதா பம்பாய் செல்வதற்கான நாளும் வர, ருத்ர நாராயணன், மரகதம் ரங்கநாதன் , சுமித்ரா என அனைவரும் விமான நிலையத்திற்கு வந்து, அவரை வழியனுப்ப,


முதல் விமான பயணம், அவருக்குப் புத்துணர்ச்சி, சுவாரஸ்யம், சந்தோஷம் போன்ற கலவையான உணர்வை தர,உடன் தன் காதல் கணவரை
இன்னும் இரண்டரை மணி நேரத்தில் சந்திக்கப் போகின்றோம் என்ற எண்ணமே அவர் உள்ளத்தை குதூகலிக்க செய்ய , மிகுந்த எதிர்பார்ப்போடு பம்பாய் நோக்கி பயணமானார் .


காலை சுமார் 10 மணி அளவில், பம்பாய் விமான நிலையத்தை அடைந்தவர்,
அறிவிப்புகளை பின் தொடர்ந்து , தன் பெட்டிகளை எடுத்துக்கொண்டு,
காத்திருப்போர் பகுதிக்கு வந்து, காத்திருக்க, 15 நிமிடம் கழித்தும் தன்னவர் வரவில்லை என்றதும்,
மிகவும் எதிர்பார்த்திருந்தவரின் மனம்
கலக்கம் கொள்ள,


" என் பிளைட் லேண்ட் ஆற டைம் அவருக்கு நன்னா தெரியும் ... தெரிஞ்சும் ஏன் என்னை அழைச்ஷிண்டு போக வரல ..." என்று தனக்குத் தானே வாய்விட்டு புலம்பியபடி கண் கலங்கிய போது, வெங்கடேஷ் பிரத்யட்சமானார் .


அவரைக் கண்டதும் வேதா முகத்தை வெடுக்கென்று திருப்பிக்கொள்ள, சிரித்துக்கொண்டே அவர் அருகில் வெங்கடேஷ் நெருங்கி அமர


" ஏன் இவ்ளோ லேட் ..." என்றார் கண்களோடு மூக்கும் சிவந்து.


" நான் வந்து பத்து நிமிஷம் ஆகுது ...நீ சீரியஸா அழுதுகிட்டு இருந்தியா ...அதனால உன்னை டிஸ்டர்ப் பண்ண வேண்டாமேன்னு விலகி இருந்து வேடிக்கை பார்த்துகிட்டு இருந்தேன் ..." என்றதும், வேதா வெடுக்கென்று எழுந்து வாசலை நோக்கி பயணிக்க,


" ஏய்.... மாமி நில்லு ... ஒரு பேச்சுக்கு சொன்னா இப்படி கோவிச்சுக்கிறதா... சுத்தி முத்தி பார்க்கிற பழக்கமே இல்லையா ...நான் அங்கிருந்து உன்னை பத்து நிமிஷமா பார்த்து ஜொள்ளூ விட்டுகிட்டு இருந்தேன் பட்டும்மா.... நான் இங்க ஒரு மணி நேரத்துக்கு முன்னாடியே வந்துட்டேன் ....." என்று அவரை கெஞ்சி கொஞ்சி சமாதானப்படுத்தி ஒரு வழியாக இருவரும் வீடு வந்து சேரும் போது , வேதாவின் வரவை அறிந்து, வெங்கடேஷின் வீட்டு வாசலில் வழக்கம் போல் அக்கம் பக்கத்து குடியிருப்பு நட்பு வட்டங்கள் கூடி நின்று வரவேற்க,


" ஐயோ ராமா... இந்த கோஷ்டியை எப்படி மறந்து போனேன்.." என்று வெங்கடேஷ் தனக்குள்ளே புலம்ப,


வேதாவும் மிகுந்த ஆனந்தத்தில் அவர்களோடு உரையாடியபடி, அனைவரையும் தன் இல்லத்தில் வரவேற்று அமரச் செய்ய,


" இவ ஒரு ஜூனியர் மட்டி ..." என்று புலம்பியபடி வெங்கடேஷ் தன் படுக்கை அறைக்கு சென்று உடைமாற்ற,


" டியூட்டிக்கு கிளம்பிட்டேளா..."
என்று கேட்டுக்கொண்டே அவரைப் பின் தொடர்ந்த வேதா


" என்னோட டிரஸ், புக்ஸ் எல்லாம் இங்க வந்துடுத்தே..."


" இனிமே இதுதான் நம்ப ரூம் மாமி..." என்று வேதாவை பார்த்து ஒற்றைக்கண் சிமிட்டியவரிடம்


" இன்னைக்கு நீங்க லீவு போடலையா ..."


" ஒரு நாள் லீவு கிடைச்சது ...லீவு போட்டுட்டு சந்தோஷமா இருக்கலாம்னு நெனச்சேன் ... ஆனா ஹால்ல வந்திருக்கிற இந்த கோஷ்டி எல்லாத்தையும் பார்த்தா இப்பத்திக்கு போற மாதிரி தெரியல.. அதனால எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு முடிச்சிட்டு வந்துடறேன் ..."


" அவா எல்லாரும் என்ணின்ட நம்ம ஊர் புடவை, பால்கோவா, வளையல்னு எல்லாத்தையும் கேட்டு அனுப்பியிருந்தா... அதெல்லாம் வாங்கிண்டு வந்திருக்கேன் ... அதுக்காக தான் வந்திருக்கா ..."


"எப்ப பார்த்தாலும் சான்ஸ் கிடைச்சா கும்ப கூடி கும்மி அடிக்க வேண்டியது, சரி சீக்கிரம் பேசி முடிச்சு இந்த கோஷ்டியை பொட்டி கட்டி அனுப்புற வழியை பாரு ..."


" பிரதீப் சிங் ஆத்திலிருந்து , மீனாட்சி அம்மன் கோவில் பிரசாதம் வாங்கிக்க அந்த அங்கிள் வருவேர் அவரை பார்த்துட்டு கிளம்புங்கோ..."


" மாமி, நான் எல்லாரையும் பார்த்தாச்சு..
இன்னும் உன்னை தான் டி பார்க்கல..." என விரசமாக அவரது பார்வை படிய, வேதாவிற்கு அவரது மொழி புரியவில்லை என்றாலும் பார்வை புரிய, சுதாரித்த படி


" காப்பி போட்டு தரட்டுமா ..."


" இல்ல மாமி ...வந்து ஃபுல் மீல்ஸே சாப்பிடறேன் ..." என்று வெங்கடேஷ் குறும்பாக புருவத்தை உயர்த்தி கூற


" அப்ப தளிகை பண்ணட்டுமா ..."


" மட்டி மாமி... நீ ஒன்னும் பண்ண வேண்டாம் ... மௌசி(வீட்டு பெண் உதவியாளர்களை சித்தி என்ற உறவுமுறை கொண்டு விளித்தல் ) என்ன பண்றாங்களோ அதை சாப்பிட்டுக்கலாம்... " என்று வேதாவை நெருங்கி இடை பற்றி அணைத்தவர்,
அவர் கன்னம், காது என முன்னேறி கழுத்தில் முத்தம் பதிக்க, இருவரும் கிறங்கி இருந்த சமயத்தில், கூடத்தில் பேச்சு குரல் வலுவாக கேட்க,


" குரல் கேட்கற்து ... சிங் ஆத்திலிருந்து அந்த ஆன்ட்டி வந்திருக்கா போல இருக்கு ..." என கூறிக்கொண்டே விடை பெற முயன்றவரின் முந்தானையை பற்றி இழுத்த வெங்கடேஷ்


" ஏய் பட்டும்மா போகாத...புடவை தாண்டி அம்சமாவும் வசதியாவும் இருக்கு ..." என்றபடி வேதாவின் இடை பற்றி தூக்கி கிட்டத்தட்ட மூன்று நான்கு சுற்றுகள் சுற்ற


" விடுங்கோ என்னை..."


" மாமி நான் உன்னை கீழ இறக்கி விட்டு ரெண்டு நிமிஷம் ஆகுது ...நீதான் என்னை புடிச்சிகிட்டு இருக்க ..." என்ற போது தான் வேதாவிற்கு உண்மை உரைக்க, நாணத்துடன் அவரை விட்டு
விலகியவரின் முகம் பார்த்து,


" என்னிடம் மயக்கம்... அதை என்னிடம் சொல்ல ஏனடி தயக்கம் ..." என்று தன் புருவத்தை ஒன்றன்பின் ஒன்றாக உயர்த்தி, கண்ணோடு கண் நோக்கி கவி பாடிய வெங்கடேஷின் முகம் பாராமல் வெட்கத்தால் தலை குனிந்தபடி,


" அப்படி எல்லாம் ஒன்னுமில்ல ..." என வேதா நாணத்தோடு கூற


" ஏய் டுபாக்கூர் மாமி ... என்கிட்டயே பொய் சொல்றியா நீ..
ஒரு நாளைக்கு கேப்மாரி, மொள்ளமாரி , முடிச்சவிக்கி , ஃப்ராட்னு எத்தனை பேர பாக்கறேன்... ஆனா பொய்யை இவ்ளோ சாந்தமா அழகா சொன்ன ஒரே ஆளு நீதான் டி... அதான் உன்னை கொஞ்சணும் போல இருக்கு .." என்றவர்
" அப்ப அன்னைக்கு, என்னையும் பாம்பேக்கு கூட்டிண்டு போயிடுங்கோன்னு ... என்கிட்ட அழுதது யாரு"


" அது நான் இல்ல .." என்றபடி வேதா தன் சிவந்த முகத்தைத் திருப்பிக் கொள்ள


" அடிப்பாவி ...அப்ப நீ என் பொண்டாட்டி இல்லையா... அதான பார்த்தேன் ... இந்நேரம் என் பொண்டாட்டியா இருந்தா தள்ளி நின்னு பேசிகிட்டு இருக்க மாட்டாளே... நான் வேற யாரையோ ஏர்போர்ட்டில் இருந்து தப்பா கூட்டிட்டு வந்துட்டேன்னு நினைக்கிறேன் ..."


" சும்மா உளறாதீங்கோ... நான் உங்க ஆம்டியாதான்...." என கூச்சத்தோடு கூறியவரிடம்


" அத வந்து சொல்றேன் மாமி ..." என்று நெற்றியோடு நெற்றி மூட்டி
சென்றவரின் ரோமியோ அவதாரம் வேதாவிற்கு மிக மிகப் புதிது.


இரவு உணவு முடித்ததும், தனக்கான ஓரிரு அலுவலக பணியை செய்து முடித்தவர் ,


" பட்டும்மா , எங்க இருக்க ..." என்று மனையாளை தேடிக்கொண்டே தன் அறையிலிருந்து கூடத்திற்கு வந்தவரிடம்


" நான் இங்க ஆகாஷத்தை பார்த்துண்டு இருக்கேன்... பௌர்ணமி நிலா ரொம்ப அழகா இருக்கு... இங்க வாங்கோ..."


" இத்தனை நாளா அப்சரஸ் மாதிரி பொண்டாட்டிய வச்சுக்கிட்டு நானும் ஆகாஷத்தை தான் பார்த்துக்கிட்டு இருந்தேன் ..." என்றவர் வேதாவை நெருங்கி
" அந்த நிலாவை விட இந்த நிலா ரொம்ப அழகா இருக்கே..." என்றவர் தன் கண்ணாட்டியின் செழுமையான கன்னத்தை கிள்ளி கொஞ்சியபடி


" ஆகாஷத்தை பார்க்கிறத நிறுத்திட்டு அம்மா அப்பா ஆகுற வழியை பார்ப்போமா...." என்றள்ளிக் கொண்டவருக்கு


மனையாளின் பட்டு சருமம், காந்தமாய் இழுக்க,


அவள் பூவுடல் மேனிக்கு வலிக்காமல், அதன் மென்மைத் தன்மையை அறிந்து,
ஆண் என்ற கர்வம், கம்பீரத்தை தொலைத்து, மிருதுவான ஆளுமையோடு ஆட்கொண்டவரின் தேடல் மட்டும் நீண்டு கொண்டே செல்ல , கன்னியின் இசைவும் ஒத்துழைப்பும், அவரது நீண்ட கால காதலுக்கு வடிகாலாக அமைய,
தாழிட்ட கதவுகளுக்குப் பின்னால் தரமான தாம்பத்தியம் அரங்கேறியது.


தகிப்பாள்


இனிய சொந்தங்களுக்கு,


இந்நன்னாளில் இரக்கம், சகோதரத்துவம், நல்லிணக்கம், ஈகை குணம் மற்றும் தியாக உணர்வு மேலும் அதிகரிக்கட்டும் . அனைவரும் மகிழ்ச்சியாக வாழ இனிய பக்ரீத் நல்வாழ்த்துக்கள்.


ப்ரியமுடன்
ப்ரியா ஜெகன்நாதன்
 
அத்தியாயம் 9


அதிகாலை வேதாவிடம் அசைவு தெரிய, உடன் விழித்த வெங்கடேஷ், அவர் நெற்றியில் முத்தமிட்டு தன்னோடு மீண்டும் பிணைத்துக்கொள்ள,
சுய உணர்வு பெற்ற வேதா, தான் இருக்கும் நிலையை பார்த்து, வெட்கத்தில் போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டு, தன் மணாளனின் வெற்று மார்பில் அழுந்த முகம் புதைக்க, அவர் செய்கையை பார்த்து வாய்விட்டு சிரித்த வெங்கடேஷ்,


" ஏய்...பட்டும்மா, என் முகத்தைப் பாரு.." என்றவர் சீண்ட, அதற்கு வேதா மீண்டும் அவர் மார்பில் இறுக முகம் புதைத்தபடி சன்னமாக


" டியூட்டிக்கு நேரம் ஆகல ..."


" மாமி, இப்படி எல்லாம் நீ கேள்வி கேட்பேன்னு தெரிஞ்சுதான், போட்ட லீவை கேன்சல் பண்ணிட்டு நேத்து வேலை பார்த்துட்டு வந்திருக்கேன் ..." என்றவர் குலுங்கி சிரிக்க,


" கோடி ஆத்துல இருக்காளே , அந்த ரெண்டு பெங்காலி ஃபேமிலிசும், காலைல நம்ம அத்துக்கு வரேன்னு சொல்லி இருக்கா..."


" பேசாம வீட்டை மாத்திடலாம்னு இருக்கேன் ... இந்த கோஷ்டிங்க தொல்ல தாங்க முடியல ... உலகத்துலயே என் காதலுக்கு தான் வித்தியாசமான வில்லனுங்க... பொதுவா பொண்ணை பெத்தவங்க வில்லனா வருவாங்க ...ஆனா எனக்கு மட்டும் அரசியல்வாதியும் அடுத்த வீட்டுகாரனும் தான் வில்லனா வரான்..." என்றவரின் பேச்சைக் கேட்டு வேதா நாணத்தோடு சிரித்த படி,


" அவாளை வைய்யாதீங்கோ... அவா என்னை பார்க்கணும்னு தானே வரா ..." என தன்னை மறந்து வெங்கடேஷின் முகம் பார்த்து உரைக்க,


" மாட்டினயா மாமி... இதுக்குத்தான் காத்துகிட்டு இருந்தேன் ..." என்றவர் வேகமாக வேதாவின் இதழில் ஆரம்பித்து நேற்றிரவு எழுதிய காதல் கவிதையை மீண்டும்
அதே சுவாரசியத்துடன் அணுஅணுவாய், இம்முறை ஆண்மையின் கர்வம் கலந்த ஆளுமையோடு
அம்சமாக எழுதி முடித்தார்.


*****************************************


வேதா பம்பாய் வந்து சேர்ந்ததும், வெங்கடேஷை தொடர்பு கொண்டு நலம் விசாரித்த வாசுதேவர்
வேதா ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்த ஒரு மாத காலத்தில், ஆனந்தவல்லி அடக்கி வாசித்ததற்கான காரணத்தை அப்போது பகிர்ந்தார்.


ஆனந்த வல்லியின் ஆட்டம் அடங்கியது இப்படித்தான்.


நீதிபதி மீது கொலை முயற்சி, அதனை தடுக்க வந்த அவரது நண்பருக்கு
அருவாள் வெட்டு என பல பிரிவுகளில் வழக்கை பதிவு செய்து காவல்துறையினர் தீவிரமாக தேடி கடைசியாக வீர மாணிக்கத்தின் கட்சியை சார்ந்த 4 கட்சி ரவுடிகளை குற்றவாளிகள் என கைது செய்தனர்.


அவர்கள் நால்வரும் வெறும் அம்புதான்.. எய்தவன் யார் எனத் தெரிந்தும் வாக்குமூலம் வாங்குவதற்காக காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணையில் ஈடுபட , வேறு வழியில்லாமல் வீர மாணிக்கத்தின் வலது கையான பாண்டியனின் பெயரை நால்வரும் மொழிய, அதன் அடிப்படையில் காவல்துறையினர் பாண்டியனைக் கைது செய்ய,
அவரை ஜாமீனில் எடுக்க வந்த வழக்கறிஞர் அவரிடம் நடந்ததைப் பற்றி விசாரிக்கும் போது , ராவுத்தர் உறவினரின் நில அபகரிப்பில் இருந்து வேதா வெங்கடேஷ் திருமணத்தை தடுத்து நிறுத்த மதக்கலவரத்தை தூண்டுவதற்காக போடப்பட்ட திட்டம் வரை அனைத்தையும் பாண்டியன் ஆதியோடு அந்தமாக விளக்க, அதில் ஆனந்த வல்லியின் பெயரும் அடிபட ,
அந்த வழக்கறிஞர் ஒருவகையில் ருத்ர நாராயணனுக்கு கடமைப்பட்டவர் என்பதால், பாண்டியன் தன்னுடைய கட்சிக்காரர் என்பதையும் மீறி, ஆனந்தவல்லியும் அந்த சதித்திட்டத்தில் உடந்தை என்பதை அறிந்ததும் ருத்ர நாராயணனிடம் தெரிவித்துவிட்டார்.


அதனை அப்போதே ஆனந்தவல்லியிடம் கேட்டு விட வேண்டும் என்றெண்ணிக் கொண்டிருந்தவருக்கு கல்யாண வேலை கழுத்தை நெரிக்க, ரங்கநாதனின் திருமணம் முடிந்ததும் கேட்டுக்கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதுதான், ஆனந்தவல்லி பலர் அறிய வேதாவின் முக்குடைக்க, அதற்கு மேல் தாமதிக்காமல் மறுநாளே அவரை சாடி தீர்த்துவிட்டார் ருத்ர நாராயணன் .


எடுத்த எடுப்பில் ஆனந்தவல்லி, நாராயணனின் குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்ளவே இல்லை. பிறகு அவர் அதனை நிரூபிப்பதற்காக ஆனந்தவல்லியை
காவல்நிலையத்திற்கு அழைக்க, பலர் அறிய அங்கு செல்வது அவரது மரியாதைக்கு இழுக்கு என்பதால் வேறு வழியில்லாமல் உண்மையை ஒத்துக் கொண்டார் ஆனந்தவல்லி.


" என் குடும்பத்துக்கு இத்தனை நாளா நீ நல்லதே பண்ணினது இல்ல .. நானும் போனா போகட்டும்னு விட்டுட்டேன்...
ஆனா இனிமே அப்படி இருப்பேன்னு எதிர்பார்க்காத... நல்ல வேளை பாண்டியன் அவன் வக்கீலிண்ட வாக்குமூலம் கொடுத்தான், போலீஸிண்ட வாக்குமூலம் கொடுத்திருந்தா, உன்னையும் தூக்கி உள்ள வச்சிருப்பா...


பரம்பரை பயங்கரவாதி கூட இப்படி ஒரு திட்டத்தை போட்டிருக்க மாட்டான்.
நம்ம ஊர்ல மதக்கலவரம் நடந்திருந்தா எத்தனை உயிர் போயிருக்கும் தெரியுமா... உன்னால ஆத்துக்கு தான் ஆபத்துன்னு நினைச்சிண்டு இருந்தேன் ... இப்பதான் தெரியுற்து ஊருக்கே ஆபத்துன்னு...


பாண்டியன் அரசியல்வாதி அவனுக்கு அசிங்கம் கிடையாது ... இன்னைக்கு ஜெயிலுக்குப் போவான் நாளைக்கு சிரிச்ச முகத்தோட வெளில வந்துடுவான்... ஆனா நீ அக்ரஹாரத்து பொம்மனாட்டி, நீ அவா போட்ட திட்டத்துக்கு உடந்தைன்னு தெரிஞ்சாலே அக்ரஹாரமே காரித்துப்பும்... அப்புறம் உன்னால வெளில தலை காட்டவே முடியாது ... என் பொண்ணு எக்ஸாம்காக இன்னும் ஒரு மாசம் இங்க தான் இருக்கப் போற...
உன்னால அவளுக்கு ஏதாவது பிரச்சனைனு நேக்கு தெரியவந்தாலே நானே உன்னை பத்தி போலீசுக்கு தகவல் சொல்லிடுவேன் .. ஜாக்கிரதை ... இத்தனை நாளா என்னை நாராயணனா தான் பார்த்துண்டு இருக்க , ருத்ரனா பார்க்கணும்னு ஆசைப்பட்டுடாத... " என்று மிரட்டி வைத்திருந்தார்.


அந்த மிரட்டலுக்கு அஞ்சி தான் , வேதா தேர்வு எழுத இருந்த அந்த ஒரு மாத காலம் சிறு சிறு சில்மிஷங்களோடு நிறுத்திக்கொண்டு ஆனந்தவல்லி அடக்கி வாசித்ததாக நாராயணன் நினைத்துக்கொண்டிருக்க, அதுவும் பாதி தான் உண்மை என்பது பிறகுதான் தெரியவந்தது.


வேதா தேர்வு எழுதி முடித்துவிட்டு பம்பாய் சென்றதும், வாசு தேவர்
ருத்ர நாராயணனை சந்தித்து


" உன்கிட்ட ஒன்னு மறைச்சிட்டேன் டா..."


நாராயணன் "என்ன " என்று கேட்க,


" அன்னைக்கு என் மகன் ஊருக்கு போனதும், வேதா என்ன சொல்லுதுன்னு உன்கிட்ட விசாரிச்சேன் நியாபகம் இருக்கா ..." என வாசு கேட்க அதற்கு ருத்ரா ஆமாம் என்பது போல் தலையசைக்க,


" அதுக்கப்புறம் ஒன்னு நடந்தது ..."
என தொடர்ந்தார் வாசு.


தன் மகனின் திருமண வாழ்வு அமைதியாகவும் அன்பாகவும் சென்று கொண்டிருக்கிறது என்பதை தெரிந்து கொண்டதிலிருந்து வாசு தேவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.


ஆனால் ஆனந்தவல்லி பற்றி நினைக்கும் போது தான், அவருக்குள் ஒரு பய பந்து உருண்டோட, அப்பொழுது பார்த்து அவரைக் சந்திக்க ராவுத்தர், அவர் இல்லம் வர, அவரிடம் தன் மகிழ்ச்சியையும் மன சுமையையும் ஒருசேரப் பகிர்ந்தவர்,


" எனக்கு பயமா இருக்கு ராவுத்தர் ... இன்னும் வேதா ஒரு மாசம் இந்த ஊர்ல இருக்க போகுது ... எக்ஸாம் எழுத காலேஜ்க்கு வேற அது தனியா போய் ஆகணும் .... இந்த நிலைமைல நானும் கூட போக முடியாது.... இந்த ஆனந்தவல்லி என்னென்ன கூத்து பண்ணுமோன்னு ஒரே யோசனையா இருக்கு ..."


" எல்லா பரிட்சைக்கும் வேதாவை
அப்துல் கூட்டி போய் கூட்டி வருவான் ... நீ கவலப்படாத...."


" இருந்தாலும் இந்த ஆனந்தவல்லி விஷயத்துல ஏதாவது பண்ணியாகணும் டா..." என வாசு உறுதியாக கூற


" ருத்ரா கிட்ட ஆனந்தவல்லியை பத்தி பேசினேன்... நீ சொன்னதையே தான் சொன்னான்... அவங்க அம்மாவுக்கு கொடுத்த வாக்குன்னு... என்ன பண்ண சொல்ற...." என ராவுத்தர் கேள்வி எழுப்ப,


" ருத்ரா கிட்ட பேசினா இப்படி தான் சொல்லுவான் ... நாம ஆனந்தவல்லிக்கிட்டயே பேசினா .."


" ருத்ரா ஏதாவது சொல்ல போறான் டா ..." என ராவுத்தர் அஞ்ச


" இத்தனை நாள் வேதா அவன் பொண்ணு இப்ப என் மருமவ, என் மகன் என்னை நம்பி வேதாவை இங்க விட்டுட்டு போய் இருக்கான்... ருத்ரா தான் அவங்க அம்மாவுக்கு சத்தியம் பண்ணி கொடுத்திருக்கான்... நீயோ நானோ இல்ல... சரியா..." என்றவர்
அன்று மாலையே சுசீலா மாமி வீட்டில் வம்பு அளந்துவிட்டு திரும்பிக்கொண்டிருந்த ஆனந்த வல்லியிடம்,


" என்ன மாமி...எப்படி இருக்கீங்க..." என வாசு தேவர் மிடுக்காக பேச
அவர் பேச்சைக் காதில் வாங்காதது போல் ஆனந்தவல்லி கடந்து செல்ல,


" மாமி, கல்கத்தாவுல நடந்த ஒரு செய்தியை பத்தி உங்ககிட்ட பேசனும் ..
இப்படி கொஞ்சம் வரீங்களா ..." என்றதும் ' கல்கத்தா ' என்ற வார்த்தையில் ஆனந்தவல்லி ஆடிப்போய் நடை பயிலாமல் அதே இடத்தில் நிற்க,


" மாமி, இத்தனை நாள் வேதா உங்க வீட்டு பொண்ணு ... இப்ப என் வீட்டு மருமவ... என் மகன் ஆசைப்பட்டு கட்டி கிட்டு இருக்கான்...
இனிமே உங்களால அதுக்கு ஏதாவது பிரச்சனை வந்தது பார்த்துக்கிட்டு சும்மா இருக்க மாட்டேன் ..." என வாசு மிரட்டும் போது கூட


உன்னால என்னை என்ன பண்ண முடியும் ... என்பது போல் தெனாவட்டாக ஆனந்தவல்லி பார்த்து வைக்க,


" ஒன்னும் பண்ண மாட்டேன் மாமி ...
கல்கத்தாவுல வெளியான பத்திரிக்கை சேதியோட பேப்பர் கட்டிங் இதெல்லாம்...
உங்க வீட்டுக்காரு பட்டாளத்துல இருக்கிறதா, ஊர் பூரா சொல்லி வச்சிருக்கீங்க இல்ல ...
இந்த பேப்பர் கட்டிங்க ஜெராக்ஸ் போட்டு எல்லா வீட்டுக்கும் கொடுத்தேன் வையுங்க,
உங்க வீட்டுக்காரர் பண்ண மொத்த தகிடுதத்தமும் வெளிய வந்துடும்... கஞ்சா கடத்தினது... பொண்ணுங்கள கடத்தினது....பிராத்தல் பண்ணது... ஜெயில்ல இருந்தது ... கடைசில குடிச்சிட்டு ரயில் முன்னாடி பாய்ஞ்சி செத்துப் போனது வரைக்குமான எல்லா சேதியும் போட்டோவோட இந்த பேப்பர் கட்டிங்ல இருக்கு... இந்த சேதி மட்டும் அக்ரஹாரத்துல இருக்கிறவங்களுக்கு தெரிஞ்சது, அப்புறம் ஒரு பய உங்களை மதிக்க மாட்டான் ... உங்க வீட்டுக்காரரை பத்தி ஏகப்பட்ட பில்டப் கொடுத்து, எத்தனை பேர் வீட்டுல கட்டப்பஞ்சாயத்து பண்ணி இருப்பீங்க ... இனிமே அது நடக்காது ... இப்படி வீடு வீடா போய் நீங்க வம்பு பேசவும் முடியாது ... இப்ப சொல்லுங்க வசதி எப்படி ... " என்றபடி கல்கத்தாவில் தினசரி பத்திரிகைகளில் பிரசுரமான காகித வெட்டை வாசு நீட்ட, இதனை சற்றும் எதிர்பாராத ஆனந்தவல்லி அதிர்ச்சியில் உறைந்தேவிட்டார்.


வீட்டுக்காரர் பட்டாளத்தில் இருப்பதாக அனைவரையும் நம்ப வைத்து , இந்திய தேசத்தையே தூக்கி நிறுத்துவது தன் கணவர் தான் என போலி தம்பட்டம் அடித்துக்கொண்டு , நாளொரு மேனி பொழுதொரு வண்ணம் விதவிதமான புடவைகளை அணிந்தபடி , தலை நிறைய பூ, நெற்றி நிறைய குங்குமம் மஞ்சள், கழுத்து நிறைய நகை நட்டுகளோடு அக்ரஹாரம் முழுவதும் கம்பீரமாக பவனி வருபவரின் மிடுக்கான பிம்பம் உடைவதை துளிக்கூட அவர் விரும்பவில்லை என அவர் வெளிறிப்போன முகமே வெட்ட வெளிச்சமாக காட்ட


" நான் கல்யாணத்துல தப்பா ஒன்னும் பேசல ... வேதா இன்னும் குழந்தை உண்டாகலையேன்னு நேக்கு வருத்தம் அதான் அப்படி அவளிண்ட கேட்டேன் நீங்க அதை தப்பா எடுத்துக்காதீங்கோ..
இப்படி பிரிச்சு பேசாதீங்கோ... வேதா நம்மாத்து பொண்ணுன்னு சொல்லுங்கோ... நீங்க கவலையே படாதீங்கோ... உங்காத்து மாட்டுப்பொண்ணை நான் நன்னா பாத்துப்பேன் போதுமா..." என ஏகத்துக்கும் பணிந்து, மழுப்பி பதிலளித்தவரிடம்,


" ஒன்னு நல்லா நினைவுல வச்சுக்குங்க மாமி ....


வேதாவுக்கோ என் மகனுக்கோ உங்களால பிரச்சனைனு எனக்கு தெரியவந்துச்சின்னாலே,இந்த பேப்பர் கட்டிங் ஊர் முழுசும் பப்ளிஷ் ஆயிடும் ஜாக்கிரதை ...


ருத்ரா தான் கெட்டவனுக்கும் நல்லவன்... நான் நல்லவனுக்கு மட்டும் தான் நல்லவன்...


என்னா மாமி... வர்ட்டா ..." என்றபடி அவர் நடையைக் கட்ட, பல் பிடுங்கிய பாம்பு போல் பணிந்து செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டு வாயடைத்து நின்றார் ஆனந்தவல்லி .


அன்று நடந்த அனைத்தையும் வாசு கூற, நாராயணன் வாய்விட்டே சிரித்தார் .


" என் அக்காவை பத்தி நன்னா தெரிஞ்சிண்டு, எப்படி மடக்கணுமோ அப்படி மடக்கியிருக்க ... பாண்டியன் வாக்குமூலத்தை சொல்லி நான் மிரட்டினதால தான், அவ அடக்கி வாசிக்கிறான்னு நினைச்சிண்டு இருந்தேன்.. இப்பதான் புரியற்து உன் வக்கீல் மூளை சரியா வேலை செஞ்சிருக்குன்னு..."


" நீ தான்டா நீதிபதி .. . நான் வக்கீல் என் கட்சிக்காரர காப்பாத்த எந்த லெவலுக்கும் போவேன் ... ஆனந்தவல்லி மாதிரியான ஆளுங்களுக்கு அவங்க வழியிலயே போய் சொன்னாதான் புரியும் ..." என வாசு கூறி நகைக்க ருத்ரா இணைந்துகொண்டார்.


விஷயத்தைத் தெரிந்துகொண்ட வெங்கடேஷுக்கு ஏதோ ஒருவகையில் ஆனந்தவல்லி அடங்கியது, நிம்மதியை கொடுத்தது.


*****************************************
பம்பாயில்....


" இங்க பாருங்களேன் ..இந்த புடவையில நான் எப்படி இருக்கேன்...
நம்ப ஆத்துக்கு பக்கத்தாத்துல இருக்குற குஜராத்தி ஆன்ட்டி
நேத்து ஹல்தி குங்கும்காக அழைச்சு (மஞ்சள் குங்குமத்திற்காக) இந்த புடவையை கொடுத்தா...எப்படி இருக்கு ..." என்று குழந்தை போல் துள்ளலாய் கேட்டவரை, உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை, சுவாரஸ்யத்தோடு பார்த்துவிட்டு


" மாமி, உனக்கு எல்லா புடவையும் அம்சமா இருக்கு ...ஆனா இந்த புடவையே இல்லன்னா இன்னும் அம்சமா இருப்ப.." என ஒற்றைக் கண் அடித்து குறும்பாக கூறிய வெங்கியை பார்த்து,


" இங்க கிட்ட வாங்களேன்..."


" வரமாட்டேன் கிட்ட வந்தா நீ அடிப்ப..."


" நிச்சயமா இல்ல உங்கள கொஞ்சணும் போல இருக்கு ...."


" நேத்துதான் ஹல்தி குங்கும் வாங்கிட்டு வந்திருக்க, இப்ப ஆத்துக்கார அடிக்கிறது தப்புமா .." என அவர் தாவிக்குதித்து ஓட, வேதா பிடிக்க முயல,


ஒருவரை ஒருவர் பிடிக்க முயன்று, கடைசியில் ஒருவரிடம் ஒருவர் அடங்கியது தான் நடந்தது.


நாட்கள் வாரங்களாக, இருவரும் கணவன் மனைவி என்பதை விட காதலர்களாக பம்பாய் மாநகரம் முழுவதும் உல்லாசமாக சுற்றித் திரிந்தனர்.


கேட்வே ஆப் இந்தியா, ஜூஹூ பீச், மெரின் டிரைவ், சித்தி விநாயகர் கோவில், எலிபெண்டா கேவ்ஸ் போன்ற மிக முக்கியமான இடங்களில் நேரம் செலவழித்ததோடு, தமிழ் படம் திரையிடப்பட்டால், முதல் ஆளாக முன்பதிவு செய்து தன் மனைவியுடன் சென்று பார்ப்பதையும் வழக்கமாக்கிக் கொண்டிருந்தார் வெங்கடேஷ்.


மனையாளுக்கு பாந்தினி(குஜராத்) பைத்தனி (மகாராஷ்டிரா) , காஞ்சிபுரம், துசார், பகள்பூரி ,பனாரஸி புடவைகள், காக்ரா சோளி போன்ற அனைத்து விதமான
மாநிலங்களின் ஆடைகளையும் வாங்கிக்கொடுத்து அணியச் செய்து விதவிதமாகப் புகைப்படங்கள் எடுத்து ரசித்தார்.


ஒருமுறை 'நாயகன்' திரைப்படம் திரையிடப்பட, அந்தப் படத்திற்கு ஒரு சில இடங்களில் எதிர்ப்புகள் இருந்த நிலையில்,


" இவ்வளவு பிரச்சினைல இந்த படம் பார்க்கணுமா ..."


" நான் இருக்கேன் பட்டும்மா ...வா போலாம் .." என்று இருவரும் இரவு காட்சி பார்த்துவிட்டு வந்ததெல்லாம் மிகவும் அலாதியான அனுபவம்.


அப்போது வேதாவிற்கு ஓரளவு ஹிந்தி மொழி பரிச்சயமாகி இருந்தாலும், மராட்டி சற்று கடினமாகவே இருக்க,
யாரிடமாவது ஏதாவது சொல்ல அல்லது கேட்க வேண்டும் என்றால்


" ஐயரே, நான் சொல்றத அப்படியே சொல்லு ..." என்பார் டெல்லி கணேஷிடம் கமல் கூறுவது போல், அதனைக் கேட்டு வெங்கடேஷ் சிரித்தபடி


" எல்லாம் நேரம் மாமி... நான் சொல்ல வேண்டிய டயலாக் எல்லாம் நீ சொல்ற ..." என்பார்.


வேதாவிற்கு பாடிக்கொண்டே சமைக்க மிகவும் பிடிக்கும். அதுவும் இளையராஜாவின் பாடல்கள் என்றால் உயிர். வெங்கடேஷ் வீட்டில் இருந்தால் பாடல்களை தன்னுள்ளே முணுமுணுப்பார்... அவர் பணிக்கு சென்றுவிட்டால் வாய்விட்டே பாடுவது வழக்கம்.


ஒரு சமயம், தன்னை மறந்து வேதா வாய்விட்டு அருமையாக பாடிக்கொண்டே சமைக்க,


அவர் பாடிய பாடல்


அழகாக சிரித்தது அந்த நிலவு ...
அதுதான் இதுவோ...


அதில் அவர் சரணம் பாடிக் கொண்டிருக்கும் போதே, பின்புறமாக வந்து அணைத்த வெங்கடேஷ், பாடலில் ஆண்களுக்கான வரிகளை இணைந்து பாட, ஒருவழியாக இருவரும் அருமையாகப் பாடி முடித்தனர்.


" தேவரே கலக்கிட்டீங்கோ... இவ்ளோ நன்னா பாடுவேள்னு நான் எதிர்பார்க்கவே இல்ல ..." என கண்களை அகல விரித்து பாராட்டிய மனையாளை கிறக்கத்தோடு பார்த்துக்கொண்டே


" ஏன் மாமி நீங்க மட்டும் தான் பாடுவீங்களா நாங்க பாட மாட்டோமா ..." என்று கன்னம் கிள்ளி கொஞ்ச, அதற்கு மேல் சமையல் பாதியில் நின்று போனதும் சுவாரஸ்யமான கதை.


வழக்கமான தம்பதிகளுக்கிடையே வரும் பிரச்சனைகள் போல் இவர்களுக்கு இடையேயும் பிரச்சனைகள் வருவதுண்டு, ஆனால் காரணங்கள்தான் வேறு.


யார் அதிகம் அன்பு செலுத்துவது, யார் அதிகம் விட்டுக் கொடுப்பது, யார் அதிகம் புரிந்து நடப்பது, யார் அதிகம் அனுசரித்து செல்வது போன்றவற்றில் போட்டி, பொறாமை , ஊடல் ,கூடல் கோபம், தாபம் என அனைத்துமே வெளிப்படும்.


இந்நிலையில் வேதாவின் தேர்வு முடிவுகள் வெளியாக, வெங்கடேஷ் ஆசைப்பட்டது போல், பல்கலைக்கழகத்திலேயே முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றிருந்தார்.


ஏற்கனவே ஆனந்தவல்லி மற்றும் மூன்றாம் தர பத்திரிகைகள் வெளியிட்ட செய்திகள் அனைத்தும் வதந்தி என நிரூபிக்கப்பட்ட நிலையில், வேதாவின் இந்த தேர்வு முடிவுகள், அவர்கள் மீது சுமத்தப்பட்ட பழிகளை செவ்வனே துடைத்தெறிந்தது.


மேலும் ஓரிரு மாதங்கள் உருண்டோடிய நிலையில் ஒரு நாள்,


" என்னம்மா, திடீர்னு போன் பண்ணி இருக்கே ..."


" ஒரு முக்கியமான விஷயம் பேசணும்னா .."


" சொல்லுமா .."


" நீங்க முதல்ல ஆத்துக்கு வாங்கோ சொல்றேன் ..." என்றதும் தன் வேலைகளை ஓரளவிற்கு அரைகுறையாய் முடித்துக்கொண்டு
வீட்டுக்கு வந்த வெங்கடேஷுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.


" என்ன மாமி....." என ஆவலோடு கேட்டார் கதவைத் திறந்த மனையாளிடம்.


பதில் கூறாமல் வேதா வெட்கப்பட,
ஏற்கனவே சிவந்திருந்த முகம் அந்திவானத்திற்கு போட்டியாக மேலும் சிவக்க , அவர் நாணத்தோடு தலைகுனிவதை பார்த்து, வெகுவாக ரசித்தபடி முகத்தை கையில் ஏந்தி கொஞ்ச எத்தனிக்கும் போது, சுற்றம் நினைவு வர, வாசலில் டிரைவர், தோட்டத்தில் தோட்டக்காரர், சமையலறையில் உதவியாளர் என அனைவரும் இருப்பதை உணர்ந்து,


" மாமி... உள்ள வா..." என்றபடி தன் தலை தொப்பி மற்றும் காவல்துறை காலணிகளை கழற்றிவிட்டு, தன் அறைக்குச் சென்றவரை அவர் மனையாள் பின்தொடர, அறைக்குள் வந்த அடுத்த நொடி அவர் அணைப்பில் அவர் மனையாள் இருக்க,


" சொல்லு பட்டும்மா ...." என்றவர் கேட்டுக்கொண்டே முகம் முழுவதும் முத்த ஊர்வலம் நடத்த,


" இப்படி பண்ணா நான் எப்படி பேசற்து ..." என்ற மனையாளின் குரல் தடுக்க,


" சரி சொல்லு..." என்றார் அவர் கண்களை குறுகுறுப்போடு பார்த்தபடி.


" நாள் தள்ளி போய் இருக்கு ... தலை சுத்தற மாதிரி இருக்கு ...உடம்பு படுத்தற்துன்னா...
உண்டா இருக்கேன்னு தோன்றது..." என கேட்டதும் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போனவர்,
தன் மனையாளை தன்னோடு இறுக்கி அணைத்துக் கொண்டார்.


வெளியில் சொல்லவில்லை என்றாலும் நீண்ட நாட்களாக அவர் எதிர்பார்த்து காத்திருந்த ஒன்று, வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவிற்கு, ஒரு பூரணத்துவத்தை உணர்ந்தவரின் கண்ணில் மெல்லிய நீர் திரையிட,
ஏனோ அவருக்கு தன் தாயின் ஞாபகம் வர, மணித்துளிகளா, நிமிடங்களா என தெரியாமல் மனையாளை தன் அணைப்பில் வைத்திருந்தவர் சுயம் உணர
உடனே வேதாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்து, கர்ப்பத்தை உறுதி செய்ததோடு
தன் தந்தை மற்றும் மாமனாருக்கும் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தார்.


செய்தியைக் கேட்டு மகிழ்ந்து போன மரகதம்,


" ஏன்னா, வேதாவுக்கு ஒத்தாசை பண்ண நான் பாம்பே போகலாம்னு நினைச்சுண்டு இருந்தேன் ... ஆனா அக்கா போறேன்னு சொல்றா..." என கூறியதும், ருத்ர நாராயணனின் மனம் கோபத்தில் கொந்தளிக்க,


" நீ காலம் முழுக்க மட்டியாவே இருக்கணும்னு முடிவு பண்ணிட்டியா மரகதம்... என் அக்காவை நீ புரிஞ்சிண்டதே இல்லையா... நம்ப பொண்ணுக்கு நல்லபடியா பிரசவமாகி, குழந்தை நன்னா பொறக்கணுகிற எண்ணமே நோக்கு இல்லையா ... என் அக்கா என்னைக்குமே யாருக்குமே ஒத்தாசையா இருந்ததே இல்ல... அவ அங்க போனா உன் பொண்ணு குடி கெட்டுப் போயிடும் ...நினைவுல வச்சுக்கோ ..."


"அக்காவை திட்டாதீங்கோ... அவா வாழ்க்கையில ரொம்ப கஷ்டத்தை அனுபவிச்சவா..."


" முகம் தெரியாதவாளுக்கு கூட நல்லது பண்றவ நீ... ஆனா என் அக்கா உண்ட வீட்டுக்கே இரண்டகம் பண்ணினவ... இந்தப் பிறவில அவ படற மொத்த கஷ்டத்துக்கும் அவளோட பிறவி குணம் தான் காரணம்...அவ குணத்தை எப்ப மாத்திக்கிறாளோ அப்பதான் பகவான் அவளுக்கு நல்லதையே கொடுப்பேர்... நீ அவளைப் பத்தி யோசிக்காம நீ ஊருக்கு போற வழிய பாரு ..." என மனையாளிடம் கூறி , அவரது பயணத்திற்காக ருத்ர நாராயணன் ஏற்பாடு செய்து கொண்டிருக்கும் போது
கால் உடைந்ததாக நாடகமாடி, அழுது புலம்பி கடைசியில் மரகதத்தின் பம்பாய் பயணத்திற்கு தடை விதித்தார் ஆனந்தவல்லி.


வாசுதேவர் உடல்நிலை தேறிய நிலையில், அவர் மட்டும் பம்பாய்க்கு பயணம் செய்து பத்து நாட்கள், தங்கியிருந்து விட்டு வந்தார்.

வெங்கடேஷுக்கு பதவி உயர்வு கிடைத்த சமயம் அது. ஏற்கனவே வேலை பளுவின் காரணமாக
தாய்மை அடைந்த மனைவியுடன் நேரம் செலவழிக்க முடியாமல் இருந்த அந்த தருணத்தில்
பம்பாய் மாநகரில், மதக்கலவரம் குண்டுவெடிப்பு என ஒன்றன் பின் ஒன்றாக அரங்கேறிய நிலையில் அவர் பணிச்சுமை மேலும் வெகுவாக கூடியது.


ஆனந்தவல்லி நடத்திய நாடகம் முடியும் தருவாயில், மரகதம் மீண்டும் பம்பாய்க்கு பயணிக்கும் நிலையில், அங்குள்ள நிலைமையை சுட்டிக்காட்டி பயணத்தை தவிர்க்குமாறு வெங்கடேஷ் அறிவுறுத்த, அதைக்கேட்டு பூரித்துப் போன ஆனந்தவல்லிக்கு ,மறுநாளே
சுமித்ரா தாய்மை அடைந்திருக்கும் செய்தி தலையில் இடியை இறக்கியது.


பம்பாயில், வேலை விட்டால் வீடு, வீட்டிலும் வேதாவை சுற்றியே வெங்கடேஷின் வேத பாராயணம் நடந்து கொண்டிருந்தது.


யார் மடி சுமந்து தான் பிறந்தாலும் தாய் மடி மறந்து தலைவனை சேரும் பெண்ணென்னும் பிறப்பல்லவோ....


தாய் வழி சொந்தம் ஆயிரம் இருந்தும் தலைவனின் அன்பில் விளைவது தானே உறவென்னும் சாம்ராஜ்யம் .... என்ற வாலியின் வரிகளுக்கு ஒப்ப , அவர்களது இல்லறம் பூத்துக்குலுங்க,


இப்படியே ஆறு மாதங்கள் கடந்த நிலையில், தாய்மையின் பூரிப்பில்
சற்று பெருத்த வயிற்றோடு லானில் அமர்ந்து செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்த மனையாளிடம்


" என்ன மாமி ...பேப்பர்
படிச்சிகிட்டிருக்கீங்க போல ..."


" ஆமா, நாட்டு நிலவரத்தை நான் மட்டும் இல்ல, நம்ம குழந்தையும் படிச்சிண்டு இருக்கு ... அதனோட அறிவு விஷாலமா இருக்கணுமோல்யோ... அதான் ..."என தன் வயிற்றைக் சுட்டிகாட்டி கூறியவர்


" ஏன்னா, ஹால்ல இருக்கிற அந்த பேப்பரையும் கொஞ்சம் கொண்டு வாங்கோ... நான் படிக்கணும்...." என மிடுக்காக கூறியவரிடம்


" நான் டிசி (DC) மா.." என்றார் குறும்பாக.


" சோ வாட் , ஊருக்கு தான் நீங்க டிசி , ஆத்துல நான் தான் உங்களுக்கு டிசி ... போய் எடுத்துண்டு வாங்கோ..." என வேதா போலியாக மிரட்ட


" அது சரி ... நீ எனக்கு டிசி இல்ல டிஜிபி ..." என கண்ணாட்டியின் இரு கன்னத்தையும் பற்றி கொஞ்சியவரிடம்,


" கொஞ்சம் உங்களிண்ட பேசணும்னா ... அடுத்த மாசம் ஏழாம் மாசம் ... நேக்கு சீமந்தம் பண்ணி ஊருக்கு அழைச்சுண்டு போக போற்தா அம்மா சொன்னா .." என வேதா மென்மையாக சொல்ல கேட்டதும், துணுக்குற்ற வெங்கடேஷ்


" பட்டும்மா, உன்னை ஊருக்கு அனுப்பிட்டு என்னால இருக்க முடியாது.... நான் முன்னாடியே சொன்னது தான், எந்த சடங்கா இருந்தாலும் இங்க வந்து செஞ்சிட்டு போக சொல்லு... நான் உன்னை ஊருக்கு அனுப்பறதா இல்ல ... உனக்கு இங்க என்ன குறை ...உன்னை பாத்துக்க நர்ஸ் கூட போட்டிருக்கேன் ...இனிமே இதைப்பத்தி யாராவது பேசணும்னு நினைச்சா என்கிட்ட பேச சொல்லு .." என அவரது கோபத்தை காட்டும் திடமான குரலில் கூறிவிட்டு நகர்ந்தார்.


சீமந்தம் வெகு விமர்சையாக நடந்தது. சுமித்ரா தாய்மை அடைந்திருப்பதை காரணம் காட்டி ரங்கநாதன் மட்டும் கலந்து கொண்டு செய்யவேண்டிய சீரை செய்து விட்டு யாரிடமும் ஒட்டாமல் நடந்து கொண்டார். ஆனந்தவல்லி வரவில்லை. வாசுதேவர், ருத்ர நாராயணன், மரகதம், தேசிகன், சுந்தரம் (சுமித்ராவின் தந்தை) மற்றும் ராமானுஜம் அவர்கள் குடும்பத்துடன் வந்திருக்க, அப்துல், ராவுத்தர், வெங்கடேஷின் அலுவலக மற்றும் உடன் குடியிருப்போர் நட்பு வட்டங்கள் என அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.


அதன் பின் மரகதம் அங்கேயே தங்கி இருந்து வேதாவிற்கு சுகப்பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்து, அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பும் வரை உடனிருந்து சிறப்பாக கவனித்துக் கொண்டார்.


குழந்தையின் பெயர் சூட்டு விழாவிற்கு,
சீமந்தத்தின் போது வந்திருந்த அனைவரும் வந்திருக்க,
வேதாவைப் போலவே பிறந்திருந்த பெண் குழந்தைக்கு வித்யா என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர்.


அப்போது தான் சீமந்தத்தின் போது இருந்ததை விட
தற்போது ருத்ர நாராயணன் மிகவும் மெலிந்து, பலகீனமாக காணப்படுவதை மரகதத்துடன் வெங்கடேஷ், வேதாவும் கண்டு அதிர்ச்சியடைந்தனர். வழக்கம் போல் ஆனந்தவல்லி கடந்த மூன்று நான்கு மாதங்களில் தன் கைவரிசையை கட்டவிழ்த்து விட்டிருந்தார்.


சமையலுக்கு உதவும் பாக்கியம் மாமியிடம் சண்டை போட்டு அவரை நிறுத்திவிட்டு, தானும் நேரா நேரத்திற்கு சமைக்காமல், தான் மட்டும் பட்டு மாமி வீட்டிற்கு சென்று மூன்று வேளை சாப்பிட்டுவிட்டு ருத்ர நாராயணனுக்கு ஏதாவது ஒரு வேளை உணவு கொடுப்பதையே வழக்கமாக்கிக் கொண்டிருக்க, கோர்ட்டுக்கும் சென்று கொண்டு, சரியான உணவும் இல்லாமல் ருத்ர நாராயணனின் உடல்நிலை பின்னடைவை சந்தித்திருந்தது.

இதனை அறிந்த மரகதம் மறுநாளே ருத்ர நாராயணனுடன் கிளம்பிச் செல்ல,மூன்று மாதத்திற்கு பிறகு ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற
சுமித்ராவின் சீமந்தத்திற்கு , தங்கள் மூன்று மாத குழந்தையோடு வேதாவும் வெங்கடேஷும் கலந்து கொண்டனர்.


ரங்கநாதன் சுமித்ரா தம்பதியருக்கு, ஆண் குழந்தை பிறக்க, அதற்கு சீனிவாசன் என பெயரிட்டு மகிழ்ந்தனர்.


அதன் பிறகு நடைபெற்ற அப்துல் நிக்காஹ்வில் வெங்கடேஷ் தம்பதிகள் கலந்து கொண்டதோடு, தேவர் ஜெயந்தி விழா , சிவராத்திரி பூஜை என தன் புகுந்த வீட்டு பழக்கவழக்கத்தை ஒன்று விடாமல் கடைபிடித்தார் வேதா.


அடிக்கடி வருட விடுமுறைக்கு தன் தாய் வீட்டிற்கு வரும் வேதாவுடன் , மெட்ராஸில் வசிக்கும் சுமித்ராவிற்கு உறவுமுறை தாண்டி நல்ல நட்பு இருந்தது.


நாட்கள் உருண்டோட , கிட்டத்தட்ட 3 வருடங்கள் கழித்து, விஷ்ணுவை வேதா உண்டாகி இருக்கும் போது, ஸ்ரீராமை சுமித்ரா உண்டாகி இருந்தார்.
விஷ்ணு பிறந்து கிட்டத்தட்ட ஆறு மாத இடைவெளியில் ஸ்ரீராம் பிறக்க,
அதன் பின் ஏழு வருடங்கள் கழித்து சுமித்ராவுக்கு பிறந்தவள் தான் ஸ்ரீலட்சுமி.


ஸ்ரீனிவாசன், ஸ்ரீராம் இருவருக்குமே தங்கை ஸ்ரீ என்றால் உயிர் .
ஸ்ரீனி அதனை சாந்தமாக வெளிப்படுத்துவான், ஸ்ரீராம் அதனை அதிரடியாக வெளிப்படுத்துவான். ரங்கநாதனுக்கு ஸ்ரீ ,லக்கி சாம். (Lucky charm) ஏற்கனவே அவரது வியாபாரம் நல்லபடியாக நடந்து கொண்டிருந்தாலும், ஸ்ரீயின் பிறப்பிற்கு பிறகு நான்கு கால் பாய்ச்சலில் அவர் முன்னேறத் தொடங்கியது தான் அதற்குக் காரணம்.


சுமித்ராவின் மூத்தமகன் ஸ்ரீனி, வேதாவின் மூத்த மகள் வித்யாவை விட ஆறு மாதம் இளையவன்.
இருவருமே தானுண்டு தன் வேலையுண்டு என இருக்கும் இடம் தெரியாமல் இருப்பவர்கள்,


ஆனால் ஸ்ரீராமிற்கும் விஷ்ணுவிற்கும் ஏழாம் பொருத்தம் . காரணம் 'பகையாளியைப் உறவாடி கெடு' என்ற பழமொழிக்கேற்ப சிறுவயதிலிருந்தே மகாபாரத சகுனி போல், ஆனந்தவல்லி கோவக்காரனாக இருக்கும் ஸ்ரீராமிடம் , விஷ்ணு மற்றும் வித்யாவை பற்றி இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி, அவர்களுக்கு இடையே நட்பு நிலை நிலவாமல் பார்த்துக்கொண்டார் .


சீனிவாசன் எதையும் யோசித்து செயல்படுபவன், பொறுமைசாலி என்பதால் ஆனந்தவல்லியின் எண்ணம் அவனிடம் ஈடேறவில்லை.


ஒவ்வொரு விடுமுறைக்கு வரும் போதும் , ஸ்ரீராம் மற்றும் விஷ்ணுவிற்கு இடையே சண்டை வருவது சகஜம் ஆகிப்போனது.
ஆனால் எப்பொழுது ஸ்ரீ லக்ஷ்மி பிறந்தாளோ, அப்பொழுதிலிருந்து சண்டை மிக அதிகமாக வலுத்தது.


ஸ்ரீனிவாசனின் உபநயனத்தின் (பூணூல் அணிவிக்கும் விழா) போது இருவருக்குமிடையே சண்டை வர, வழக்கம் போல் , அவர்கள் இருவரையும் சமாதானப்படுத்துவதே சுமித்ரா மற்றும் வேதாவிற்கு வேலையாகிப் போனது .


அதன் பிறகு மூன்றாண்டுகள் கழித்து ஸ்ரீராம் மற்றும் விஷ்ணு, இருவருக்கும் ஒரு வார இடைவெளியில் உபநயனம் நடந்தது.


அப்போதுதான் சுருட்டை தலையும், செப்பு வாயும், கொழு கொழு கன்னங்களும் வெண்பஞ்சு பாதங்களுமாய் இருந்த 3 வயது குழந்தையான ஸ்ரீலக்ஷ்மியை பார்த்ததும் விஷ்ணுவிற்கு மிகவும் பிடித்து போயிற்று.


அவளை தூக்கி வைத்துக்கொண்டு கொஞ்சுவது, அவளுடன் விளையாடுவது என தன் நேரத்தை அவளுடன் செலவழிப்பதில் அலாதி இன்பம் கண்டான்.


இதனைக் கண்ட ஆனந்தவல்லிக்கு வழக்கம் போல் பொறுக்காமல்


" உன் தங்கை ஸ்ரீயை அவாத்துக்கு தூக்கிண்டு போய்விடுவான் ... ஜாக்கிரதையா பார்த்துக்கோ ..." என ஸ்ரீராமிடம் கொளுத்திப் போட , பத்தே வயது நிரம்பிய அந்த சிறுவனுக்கு விஷ்ணு வில்லனாகவே தென்பட்டான்.

அதிலிருந்து விஷ்ணு ஸ்ரீயுடன் விளையாடுவதை பார்த்துவிட்டால் போதும் ஸ்ரீராம் பொங்கி விடுவான்.
இருவரும் கட்டிப் புரண்டு சண்டை இடுவார்கள்.


வழக்கம் போல் சண்டையை விலக்குவதே வேதா மற்றும்
சுமித்ராவிற்கு தொழிலாகி போனது.


திருமணமாகி வந்த முதல் நாளே தன் மாமியார் மரகதத்தின் வெள்ளை மனம் மற்றும் ஆனந்தவல்லியின் திரிசமனத்தை சுமித்ரா புரிந்து கொண்டு விட்டதால், மரகதம் , வேதா மற்றும் சுமித்ராவிற்கு இடையே பகைமை மூட்ட வேண்டும் என்ற ஆனந்தவல்லியின் ராஜதந்திரங்கள் அனைத்தும் பலிக்காமல் போயின.


வருடா வருடம் கிடைக்கும் ஆண்டு விடுமுறையில், மெட்ராசில் இருந்து சுமித்ரா தன் குழந்தைகளோடும், பம்பாயிலிருந்து வேதா தன் குழந்தைகளோடும் ஸ்ரீவில்லிபுத்தூர் வருவது வழக்கம்.
ருத்ர நாராயணன் பணியிலிருந்து ஓய்வு பெற்றாலும், அவர் தன்னை பயனுள்ள பல வேலைகளில் ஈடுபடுத்திக்கொள்ள, வெங்கடேஷ் மற்றும் ரங்கநாதன் பணிச்சுமை காரணமாக ஓரிரு நாட்கள் மட்டும் தங்கி இருந்து விட்டு சென்று விடுவர்.


சுமித்ரா பாதி நாட்கள் தன் தந்தை ஊரான விருதுநகரிலும், பாதி நாட்கள் ஸ்ரீவில்லிபுத்தூரிலும் கழிப்பார். வேதாவும் உள்ளூரில் இருக்கும் தன் மாமனாரின் இல்லத்தில் பாதி நாட்கள் கழிப்பது வழக்கமாகிப் போனது.


அப்படித்தான் ஒரு முறை வாசு தேவரின் இல்லத்திற்கு, வேதா
தன் குழந்தைகளோடு செல்ல,உடன் சுமித்ரா ஸ்ரீ உடன் சென்றார்.


சற்று நேரம் அங்கு அளவளாவி விட்டு மாமனாருக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்துவிட்டு, வீடு திரும்பும் போது , ஸ்ரீராமிடம் ஆனந்தவல்லி பக்குவமாக பத்த வைத்திருக்க,


" நீ அவாளோட எங்க வேணாலும் போ...ஸ்ரீயை கூட அழைச்சிண்டு போகாத..." எனக் கட்டளை இடுவது போல் பேசிய ஸ்ரீராமிடம்


" நான் என்ன பண்ணனும்னு நீ சொல்ல வேண்டிய அவசியம் இல்ல...நேக்கு எல்லாம் தெரியும்..."


என்று சொல்லி பட்டென்று அவன் கன்னத்தில் சுமித்ரா அடிக்க,
அடி வாங்கியது என்னவோ ஸ்ரீராம் தான் ...ஆனால் அதனை அதிகமாக உணர்ந்தது ஆனந்தவல்லியே.


குழந்தைகளுக்கு இடையே நடக்கும் சண்டையை, ஆனந்தவல்லியை தவிர வீட்டில் யாருமே பொருட்படுத்துவதே இல்லை. இம்மாதிரியான குழந்தைகள் சண்டையை வீட்டுப் பெண்கள் யாரும் ஆண்களின் காதுகளுக்கு கூட எடுத்துச் செல்லவில்லை.


ஏற்கனவே வெங்கடேஷ் மற்றும் ருத்ர நாராயணனுக்கு ஆனந்தவல்லியின் அகங்காரம் அத்துபடி. வேதாவை பற்றி கூறிய பொய்யிலிருந்து ரங்கநாதனும் முன்பு போல் ஆனந்தவல்லியிடம் முகம் கொடுத்து பேசுவதில்லை, எனவே குழந்தைகள் மூலம், ரங்கநாதனுக்கு வெங்கடேஷுக்கும் இடையே பகைமையை உருவாக்கி தன் வன்மத்தை தீர்த்துக் கொள்ள பார்த்தார் ஆனந்தவல்லி.


வேதாவின் வாழ்க்கையை கெடுக்க நினைத்தது போல், அவள் மகன் விஷ்ணுவின் மனதிலும் விஷத்தைக் கலக்க எண்ணி, 14 வயது சிறுவனுக்கு ஓரளவுக்கு புரிதல் இருக்கும் என்றே தெரிந்து


" நீ பெரியவனானதும், ஸ்ரீயை கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசைப்பட்ட ,உன் மாமா ரங்கநாதன் மட்டுமில்ல நானும் அதுக்கு ஒத்துக்க மாட்டேன் ..." என அவன் மனதில் புதியதோர் விதையை விதைக்க, அதுவரை 7 வயது சிறுமியான ஸ்ரீயை குழந்தையாகத்தான் எண்ணி விளையாடிக்கொண்டிருந்தவனுக்கு ஆனந்தவல்லியின் பேச்சுக்கு பிறகு
அப்படி செய்தால் என்ன என்ற எண்ணம் அவன் மனதில் உருவானது.


ஆனந்தவல்லி தெரிந்தே செய்த காரியத்தை ஸ்ரீராம் மனமுதிர்ச்சி இல்லாமல் செய்து கொண்டிருந்தான் .


அவன் ஸ்ரீயிடம் சொன்ன,


விஷ்ணுவை பார்க்கக்கூடாது, பேசக்கூடாது, விளையாடக்கூடாது, பழககூடாது போன்ற ஏகப்பட்ட 'கூடாதுகள்' எல்லாம் கூடி விஷ்ணுவிடம் ஸ்ரீக்கு ஒரு தனி மயக்கத்தையே உண்டு பண்ணி இருந்தது.


காலம் உருண்டோட, வருடாவருடம் விடுமுறையில் ஏற்படும் சந்திப்புகள் எல்லாம் இரண்டு வருடம் மூன்று வருடங்களுக்கு ஒருமுறை ஆகிப்போக, வேதா மற்றும் சுமித்ராவுக்கிடையேயான உறவு மட்டும் தொலைபேசி தொடர்புகள் மூலம் தொடர, விஷ்ணுவுக்கும் ஸ்ரீயுடன் தொலைபேசியில் உரையாட ஆசை இருந்தாலும், ஏனோ காரணமே இல்லாத தயக்கம் அதனைத் தடுத்துக் கொண்டே இருந்தது.


பிறகு நடந்த சந்திப்புகளில் மன முதிர்ச்சியின் காரணமாக முன்பு போல், ஸ்ரீராம் , விஷ்ணு இருவரும் கட்டிப் புரண்டு சண்டை போடுவது இல்லை என்றாலும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளும் பார்வையில் அனல் பறந்தது.


ஸ்ரீனி சிஏ, ஸ்ரீராம் சிவில் இன்ஜினியரிங் முடித்துவிட்டு, இருவரும் தந்தை ரங்கநாதனுக்கு கட்டுமானத்துறையில் உதவியாய் இருக்க, விஷ்ணு எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் முடித்துவிட்டு, ஏசிஐஓ தேர்வுக்காக தன்னை தயார் படுத்திக் கொண்டிருக்க, வெங்கடேஷ் டிஐஜியாக பதவி உயர்வு பெற்று பணியாற்ற, வேதா தன்னுடைய வி அண்ட் வி ஷேர் டிரேடிங் கம்பெனியை மிகவும் லாபகரமாக நடத்திக்கொண்டிருந்தார்.


ஸ்ரீ வளர வளர, ரங்கநாதன் பல கோடிகளுக்கு அதிபதியாகி, இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் பல புதிய நிறுவனங்களுடன் ஒப்பந்தமிட்டு தன் வியாபாரத்தை மிகப்பெரிய அளவில் விரிவுபடுத்தியதோடு, தன் குடும்பத்தையும் இந்தியாவிலிருந்து துபாய்க்கு குடியமர்த்தினார்.


அச்சமயத்தில் தான், வெங்கடேஷின் நண்பரும் உயர் அதிகாரியுமான ஸ்ரீனிவாஸ் ஷர்மா, அமெரிக்காவில் மென்பொருள் துறையில் பணி புரியும் தன் மகன் விக்னேஷுக்கு வித்யாவை பெண் கேட்டு வர, ஜாதகப் பொருத்தத்தில் இருந்து மனப்பொருத்தம் வரை அனைத்தும் ஒத்துப் போனதால் வித்யாவின் திருமணம் வெங்கடேஷ் மற்றும் வேதாவின் பூர்வீகமான ஸ்ரீவில்லிபுத்தூரில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.


வித்யாவின் திருமணத்திற்கு ரங்கநாதனுக்கு பத்திரிக்கை அனுப்பியதோடு, தொலைபேசியில் சுமித்ராவை தொடர்பு கொண்டு, வேதா அழைக்கும் போது தான்
ஸ்ரீ பூப்பெய்தி விட்டாள் என்ற செய்தியும் கிட்டியது.


திருமணத்திற்கு முதல் நாள் திருமண மண்டபத்திற்கே நேரடியாக தனது பிஎம்டபிள்யூ காரில் குடும்பத்துடன் மிடுக்காக வந்திறங்கினார் ரங்கநாதன்.


டிஐஜி மற்றும் ஐஜி குடும்பத்திற்கு இடையே நடக்கும் சம்பந்தம் என்பதால் பாதுகாப்பு பணிகள் பலமாக இருந்ததோடு, மூத்த அதிகாரிகள் அரசியல்வாதிகள், அமைச்சர்கள் மற்றும் பல பெரும்புள்ளிகள் கலந்து கொள்ள, அவற்றையெல்லாம் கண்டும் காணாதது போல், உன்னிடம் அதிகாரம் இருக்கிறது என்றால் என்னிடம் பணம் இருக்கிறது என்பதை ரங்கநாதனின் தோரணை பறைசாற்ற,
வேதா, வெங்கடேஷ், விஷ்ணு , வாசுதேவர் , ருத்ர நாராயணன் ஆகியோர் அனைவரையும் வரவேற்பது போல் இவர்களையும் எதிர்கொண்டு வரவேற்க,
வழக்கம் போல் சுமித்ரா மற்றும் ஸ்ரீனி இயல்பாக நலம் விசாரிக்க ,
விஷ்ணுவின் கண்கள் யாருக்காக தவமிருந்ததோ, அவள் காரை விட்டு மெதுவாக இறங்கி வர,


பெண்மையின் முதல் படிநிலையில் இருந்தவள் தங்கச் சிலை போல்
தக தகவென மின்ன, அவளது பார்வையும் விஷ்ணுவை தேடி கலக்க,
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து காதலோடு புன்னகைத்துக் கொள்ள , ஸ்ரீராமின் காதுகளில் இருந்து புகை வந்தது.


அறைக்கு வந்தவன் "அம்மா" என்று அலற,


" என்னடா..." என்றார் சுமித்ரா .


" அந்த விஷ்ணு ஏம்மா ஸ்ரீ யை பார்த்து சிரிக்கிறான் ..."


" எல்லாரும் உன்னை மாதிரி கடுவன் பூனையா இருப்பாளா... மனுஷளா பொறந்தா சிரிக்க தெரியணும் ...
அவனுக்கு சிரிக்க தெரியற்து சிரிக்கிறான் ...நோக்கென்ன பிரச்சினை ..."


" இன்னொரு தடவ அவன் ஸ்ரீய பாத்து சிரிச்சான் அவன் பல்லை தட்டிடுவேன்..." என பொங்கியவன், அப்போது அறைக்குள் நுழைந்த ஸ்ரீயை அழைத்து,


" இங்க வா ...அவனோட பேச கூடாதுன்னு சொல்லி தானே உன்னை அழைச்சிண்டு வந்தேன் ..."


" நான் வேதா அத்தையைப் பார்த்து தான் சிரிச்சேன் ... அவா பின்னாடி அவர் நின்னுண்டு இருந்தேர்... உனக்கு அவரைப் பார்த்து நான் சிரிச்சா மாதிரி தோணிற்து..."


" பெரிய அவர் ..." என பற்களை நறநறவென்று கடித்தபடி ஸ்ரீயின் தலையில் ஸ்ரீராம் கொட்ட எத்தனிக்கும் போது,


" பாரும்மா அடிக்க வரான் ..." என ஸ்ரீ புகார் பத்திரம் வாசிக்க,


" டேய், இன்னும் ரெண்டு நாள் தான் இங்க இருக்க போறோம், அதுக்குள்ளே பெரிய ப்ராபகண்டா எதுவும் பண்ணாம உன் வேலைய மட்டும் பாரு போதுமா..." என்றவர்


" அப்படியே அப்பாவுக்கு பிள்ளை தப்பாம பொறந்திருக்கான்.... ரெண்டு பேரும் சரியான கடுவன் பூனைங்க..."
என புலம்பலானார்.


வழக்கம் போல் வெங்கடேஷ் மற்றும் ரங்கநாதன், இருவரும் ஒருவரை ஒருவர் பார்வையால் கூட சந்தித்துக் கொள்ளவில்லை.


வெங்கடேஷிடம் பல நல்ல குணங்கள் இருந்தாலும், அதில் வேதாவிற்கு மிகவும் பிடித்த குணம், வெங்கடேஷ் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும்
தன்னை எங்கும் முன்னிறுத்திக் கொள்ள விழைய மாட்டார்.


எங்கு சென்றாலும் தன்னை மற்றவர்கள் மதிக்க வேண்டும், தன்னை மட்டுமே விசாரிக்க வேண்டும்
என்றெல்லாம் எதிர்பார்க்க மாட்டார்.
என்னுடைய மரியாதை எனக்கு தெரியும். அதை நான் மற்றவர்களிடம் எதிர்பார்க்க வேண்டிய அவசியமில்லை என்ற தெளிவோடு இருப்பார்.


ரங்கநாதன் விஷயத்திலும் அதே நிலைப்பாடு தான்.இத்தனை ஆண்டுகளில் ஒரு முறை கூட ரங்கநாதன் நேரடியாக வெங்கடேஷிடம் பேசியதில்லை. வெங்கடேஷ் இருந்தாலே அந்த குழுவையே தவிர்த்து விடுவார் . ஆனால் வெங்கடேஷ், ரங்கநாதனுடன் நேரடியாக பேசவில்லை என்றாலும் , அவர் எங்கு இருந்தாலும் அவருக்கான மரியாதையை பொதுப்படையாக கொடுத்துவிடுவார்.


ரங்கநாதன் தன் பணம் மற்றும் பகட்டை காட்டிக்கொள்ள,
கிட்டத்தட்ட 100 சவரன் பெறுமானமுள்ள,
அனைத்து விதமான நகைகளை கொண்ட நகை பெட்டி மற்றும் விலை உயர்ந்த பட்டுப் புடவையை பலர் காண சபையில் தாய் மாமன் சீராக தன் மனைவி சுமித்ராவோடு தம்பதி சமேதராய் வித்யாவிடம் வழங்கினார்.


விமர்சையாக நடக்கும் வேதாவின் மகள் திருமணத்தை காண சகிக்காது, வழக்கம் போல் உடல்நலம் சரியில்லை என பொய் கூறிவிட்டு இல்லத்திற்கு சென்று விட்டார் ஆனந்தவல்லி.
மரகதத்திற்கு முன்பு போல் ஆனந்தவல்லியிடம் ஒட்டுதல் இல்லை. காரணம் அவர் பம்பாயில் இருந்த போது , ருத்ர நாராயணனின் உடல்நலத்தை ஆனந்தவல்லி சரியாக கவனித்து கொள்ளவில்லை என்பதுதான்.


ஆனந்தவல்லியிடம் மட்டுமல்ல ருத்ர நாராயணனிடமும் ஒருவித ஒட்டுதல் இன்றி தான் இருந்தார் மரகதம்.


அதற்குக் காரணம், தனக்குத் தெரியாமல், தன்னிடம் ஒரு வார்த்தை கூறாமல், தங்கள் மகளின் திருமணத்தை ருத்ர நாராயணன் மட்டும் முன்னின்று நடத்தியது தான்.
தானின்றி நடந்த திருமணத்தை பற்றி கேட்டு தெரிந்துகொள்ள அவர் தன்மானம் இடம் கொடுக்காததால், ஒருவித வைராக்கியத்தோடு, அவர் மனதில் இருக்கும் நெருடலை வெளியே சொல்லாமல் பற்றில்லாமல் காலம் கடத்தி கொண்டிருந்தார்.


மரகதத்தை பொருத்தமட்டில் வெங்கடேஷை அவர் மனமார மாப்பிள்ளையாக ஏற்றுக் கொண்டுவிட்டார் .
வெங்கடேஷ் வேதாவை தாங்கு தாங்கு என்று தங்குவதையும், பாச மழை பொழிவதையும் , அவர் பம்பாயில் இருந்த குறுகிய காலத்திலேயே உணர்த்தவராதலால், மாற்று சமுதாயத்தை சார்ந்தவர் என்ற சிறு உறுத்தல் கூட அவருக்கு இல்லாமலே போனது.


மறுநாள் அதிகாலை முகூர்த்தத்தில், திருமணம் அருமையாக நடந்தேற,
திருமணத்திற்கு முன்பான மற்றும் பின்பான ஒவ்வொரு சடங்குகளிலும்,
விஷ்ணுவின் பார்வை ஸ்ரீயிடமே இருக்க, ஸ்ரீயும் விஷ்ணுவை பார்த்தபடியே நிற்க, திருமணத்தில் மனம் லயிக்காமல் , விஷ்ணு மற்றும் ஸ்ரீக்கிடையே நடக்கும் பரிபாஷையை பார்த்து ஸ்ரீராம் பொருமிக் கொண்டிருக்க, அப்பொழுது அங்கு வந்த வெங்கடேஷுக்கு முதன்முறையாக விஷ்ணுவின் செய்கைகள் வித்தியாசமாக பட,
உடனே அவர் வேதாவை அழைத்து காட்ட, அவருக்கும் அது ஆச்சரியத்தோடு அதிர்ச்சியை தந்தது.


" என்னன்னா நடந்துண்டு இருக்கு இங்க ..." என தங்கள் அறைக்கு வந்ததும் வேதா கேட்க


" எனக்கும் ஒன்னுமே புரியலம்மா..."


" விஷ்ணு மனசுல இப்படி ஒரு தாட் (thought) இருக்கும்னு நான் கொஞ்சம் கூட எதிர் பார்க்கலன்னா ..."


" நான் உன்னை கல்யாணத்துக்கு முன்னாடி எப்படி பார்த்துக்கிட்டு இருந்தேனோ அதே மாதிரி விஷ்ணு ஸ்ரீயை பார்த்துகிட்டு இருக்கான்... இல்ல ..." என்று வெங்கடேஷ் குறும்பாக கூற


" ஆரம்பிச்சிட்டேளா.. இன்னைக்கு நம்ம பொண்ணுக்கு கல்யாணம், நமக்கு இல்ல.."


" மாமி, நீ இப்ப கூட அம்சமா தாண்டி இருக்க ... இதே மாதிரி ஒரு சடங்கையும் விடாம நாம மறுபடியும் கல்யாணம் பண்ணிக்கலாமா..." என வாலிபராய் வெங்கடேஷ் துள்ள


" தேவரே, உங்களுக்கு மீச நரைச்சாலும் ஆச நரைக்கல... அதான் அறுவதாம் கல்யாணம் பண்ணிக்கப் போறோமே..."


" ஆமா இல்ல ... நம்ம அறுவதாம் கல்யாணம் சூப்பரா நடக்கணும் பட்டும்மா..." என மீண்டும்
துள்ளியவரிடம்


" உங்களையும் உங்க பேச்சையும் பார்த்தா கல்யாண பொண்ணுக்கு அப்பா மாதிரியே தெரியல ..." என்றவர் திடீரென தீவிரத்தை தத்தெடுத்து,


" இந்த விஷயத்துல நாம கொஞ்சம் ஸ்டிரிக்டா இருக்கிற மாதிரி காட்டிப்போம்ன்னா..."


" ஏம்மா, அவன் ஆசை நியாயமானது தானே..."


" இருக்கலாம் தேவரே... ஏற்கனவே எனக்கும் ரங்குவுக்கும் ஆகாது ... அதுமட்டுமல்ல விஷ்ணு உங்கள மாதிரி அவன் கல்யாண விஷயத்துல சீரியஸா இருக்கானான்னு நான் தெரிஞ்சுக்கணும்... அவன் என் பையனாவே இருக்கட்டும் ... இருந்தாலும் இந்த காலத்து பசங்கள நம்ப முடியாது ..."


" ஒரு போலீஸ்காரனா சொல்றேன் விஷ்ணு கண்ணுல உண்மை இருக்கும்மா... அதில்லாம அவன் என் பையன், இந்த மாதிரியான விஷயத்துல எல்லாம் விளையாட மாட்டான்... ஏன் ...உனக்கு ஸ்ரீயை பிடிச்சிருக்கு தானே..."


" ஸ்ரீயை நேக்கு ரொம்ப பிடிச்சிருக்கு...
ஆனா நேக்கு ரங்குவை நன்னா தெரியும்.. அவன் என் கல்யாணத்தையே இன்னும் ஏத்துக்கல ..அதுமட்டுமல்ல இன்றைய தேதியில அவன் பெரிய பணக்காரன் ...நானும் ஒன்னும் இல்லாதவ கிடையாது , இருந்தாலும் அவன் நிச்சயம் ஸ்டேட்டஸ் பார்ப்பான் ... அதுக்கு நான் பதில் சொல்லணும்னா முதல்ல என் பையன் செட்டில் ஆகணும் ... அப்புறம் அவன் ஸ்ரீ விஷயத்துல ஸ்ட்ராங்கா இருக்கானான்னு நேக்கு தெரியணும்..."
என்றார் தீர்மானமாய்.


" நீ சொல்றதும் ஒரு விதத்துல சரிதாம்மா... ஸ்ரீயும் ரொம்ப சின்ன பொண்ணு தானே... இதெல்லாம் நடக்க இன்னும் ஏழேட்டு வருஷம் ஆகும் ... அதுவரைக்கும் நாம தெரிஞ்சிக்கிட்ட மாதிரி காட்டிக்க வேண்டாம் ..."
என்றவருக்குத் தெரியாது அதற்குள் விதி வேறு மாதிரியாக விளையாடப் போகிறதென்று.
அதோடு விஷ்ணு ஸ்ரீ இடையேயான காதல் பிணைப்பை வேறொரு
கண்ணும் கண்டு கொண்டது என்று.


தகிப்பாள்
 
அத்தியாயம் 10


மாலையில் திருமண மண்டபத்தில்
' விளையாடல்' சடங்கு ஆரவாரத்துடன் நடைபெற்றுக்கொண்டிருந்தது.


மணமக்களை உறவுக்காரர்கள் சூழ்ந்துக்கொள்ள, மணப்பெண் சார்பாக சிலரும், மணமகன் சார்பாக சிலரும் போட்டி போட்டுக்கொண்டு போட்டி பாடல்களை அந்தாக்ஷரியாக பாட,
மணமக்களுக்கு இடையே தேங்காய் உருட்டுதல், ஒருவர் தலையில் ஒருவர் அப்பளம் உடைத்தல் போன்ற கேளிக்கை
கச்சேரிகள் களை கட்டிக் கொண்டிருக்க அந்தக் கூட்டத்தில் ஸ்ரீயை பார்ப்பதற்காகவே,
விஷ்ணு அழகான ஷெர்வானியில் கிளம்ப, மாம்பழ மஞ்சள் நிற புடவையில் மாதுளை முத்துக்கள் நிற கரையிட்ட மடிசார் அணிந்து, கொண்டையின் நடுவில் சூரிய பிரபை பில்லையை பதித்து அதனை சுற்றி தாழம்பூ மற்றும் இருவாட்சி கலந்த சரத்தை சூடி, புடவையின் நிறத்திற்கு பொருத்தமாக கற்கள் இல்லா தங்க நகைகளை பூட்டி, மிக பொலிவோடு காணப்பட்ட மனையாளிடம்,


" என்ன மாமி ... ஜாங்கிரி கொண்டை எல்லாம் போட்டு ஜம்முனு இருக்க ..." என வேதாவின் அலங்காரத்தைப் வழக்கம் போல் வெங்கடேஷ் கேலி செய்வது போல் ரசிக்க,
அதற்கு பதில் ஏதும் கூறாமல் அவர் நாணத்தோடு சிரித்து வைக்க,


" ஏண்டி, நீ , உன் பையன் எல்லாம்
ஃபேஷன் ஷோக்கு போறா மாதிரி,
அட்டகாசமா கிளம்பி இருக்கீங்களே என்ன பத்தி யோசிச்சீங்களா..." என குழந்தை போல் அவர் கேள்வி எழுப்ப,


" தேவரே, ஏற்கனவே உங்களுக்கு தான் திருஷ்டி அதிகமா இருக்கு ... கல்யாணத்துக்கு வந்தவாளோட அத்தனை பேரோட பார்வையும் உங்க மேல தான் இருக்கு... உங்க சால்ட் அன்ட் பெப்பர் ஹேர் ஸ்டைல்க்கு டை
அடிச்சிருந்தீங்கன்னா, காலேஜ் கேர்ள்ஸ் எல்லாம் உங்க பின்னாடி தான் இருந்திருப்பா... யூ ஆர் லுக்கிங் சோ ஹாண்ட்சம் மேன் ..." என்ற மனையாளின் பாராட்டை பார்த்து,


" அப்படிங்கிற... நீ சொன்னா சரியாத்தான் இருக்கும் மாமி..." என்றபடி ஸ்டைலாக தன் மீசையை முறுக்கி விட்டுக்கொண்டு, தரையை தொட்டுக் கொண்டிருந்த பட்டு வேட்டியின் நுனியை, தன் காலை வலைத்து அனாயாசமாக கையிலேந்தி நகைத்தார்.


" வாங்கோ, நாழி ஆர்து... " என்ற மனையாளோடு அறையை விட்டு வெங்கடேஷ் வெளியேற, அவரைத்தேடி அங்கு அப்துல் வர , இருவரும் பேசி சிரித்தபடி 'விளையாடல்' சடங்கு நடக்கும் இடத்திற்கு செல்ல, வேதா சுமித்ராவோடு அவர்களை பின் தொடர்ந்தார்.


திருமணத்திற்கு வராமல் விளையாடல் சடங்கிற்கு மட்டும் வந்திருந்த ஆனந்தவல்லியின் விழிகளில் அப்போதுதான்
விஷ்ணு ஸ்ரீக்கு இடையே நிகழும் பார்வை பரிமாற்றம் விழ, தான் தூவிய விதை, விருட்சமாக வளர்ந்திருப்பதை பார்த்து உள்ளுக்குள் கொக்கரித்து போனார் .


அவர் விளையாடல் சடங்கிற்கு வந்திருப்பதை கவனிக்காமல், நடக்கும் கேளிக்கை நிகழ்ச்சியில், வேதாவின் மனம் லயித்திருக்க , அப்போது சுமித்ரா


" வேதா...., இன்னைக்கு காலைல மாங்கல்ய தாரணத்தின் போது , நம்ப வித்யா ஆண்டாள் கொண்டையோட மடிசார்ல , சாட்சாத் நம்ம ஊர் கோதை நாச்சியார் மாதிரியே அவ்ளோ அழகா இருந்தா... உண்மையிலயே அவ நம்ம எல்லாரையும் ஆட்கொண்ட ஆண்டாள் தான் ..
அவ உன் கருவுல லேட்டா தரிச்சு, உன் மேல படிஞ்ச கரையை தொடச்சிட்டாளே..." என தன்னை மறந்து கேளிக்கை நிகழ்ச்சிகளை பார்த்தபடி அரைகுறையாக அவர் உளறிக் கொட்ட, துணுக்குற்ற வேதா,


" என்ன சொன்னீங்கோ மன்னி... திரும்ப சொல்லுங்கோ..." என தீவிரத்தோடு கேட்க, அவர் முகத்தில் தெரிந்த மாற்றத்தை வைத்தே அவருக்கு ஒன்றுமே தெரியாது என்பதை அப்போதுதான் உணர்ந்த சுமித்ரா, ஏதேதோ காரணங்களை சொல்லி பேச்சை திசை திருப்ப முயல, விடாப்படியாக வேதா விஷயத்தைத் தெரிந்து கொள்ள போராட, கடைசியில் ஆனந்தவல்லி கூறிய அபாண்டத்திலிருந்து , மூன்றாம் தர பத்திரிகைகள் வேதா வெங்கடேஷின் காதலை தரைகுறைவாக எழுதியது வரை அனைத்தையும் ஒருவழியாக சுமித்ரா பகிர்ந்து முடிக்க( அவர் பெரியப்பா தேசிகன் மூலம் தெரிந்து கொண்டது) , தலைசுற்றி விழாத குறையாக கேட்டுக்கொண்டிருந்த வேதாவுக்கு கண்கள் கரித்துக்கொண்டு வர, அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் சுதாரித்தபடி
வேக வேகமாக அடுத்தடுத்து நடக்க வேண்டிய சடங்குகளை எல்லாம் முடித்து, தன் மகளை சோபன இரவிற்கு தயார் செய்து அனுப்பிவிட்டு, தன் அறைக்கு வந்து விழுந்தவருக்கு கண்ணீர் அணையை உடைத்துக் கொண்டு பெருக்கெடுக்க , அப்படியே அமர்ந்திருந்தவரின் அழுது சிவந்த முகத்தை பார்த்து பதறிப்போய்,


" என்ன பட்டும்மா... என்ன ஆச்சு...
ஏன் அழற ..." என்றார் அப்பொழுதுதான் அறையினுள் நுழைந்த வெங்கடேஷ் பதற்றத்தோடு.


சுமித்ரா கூறிய அனைத்தையும் வேதா கூறிவிட்டு


" உங்களுக்கு எல்லாம் தெரியுமில்ல தேவரே... நீங்க ஏன் என்ணின்ட சொல்லல ..." என பொங்கிய விழிகளோடு கேட்ட மனையாளிடம்,


" எப்பவோ நடந்தது ... இன்னைக்கு நம்ம பொண்ணுக்கே கல்யாணம் ஆயிடுச்சு..
இப்பவே நீ இவ்ளோ வருத்தப்படற... அன்னைக்கே தெரிஞ்சிருந்தா ரொம்ப துடிச்சி போயிருப்பம்மா ... அதனாலதான் சொல்லல...."


" நீங்க எப்படி இந்த விஷயத்தை அன்னைக்கு ஃபேஸ் பண்ணீங்கோ... மனசுக்கு கஷ்டமா இல்லையா..."


" மனசுக்கு கஷ்டமா தான் இருந்தது ... ஆனா அந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்க தான், மூணாம் நாளே உங்கப்பா நம்ம கல்யாணத்தை நடத்தி வச்சிட்டாரே... இதுல நான் கஷ்டப்பட்டத விட உங்கப்பா கஷ்டப்பட்டது தான் ரொம்ப அதிகம்... கல்யாணம் முடிஞ்ச கையோட நாம ரெண்டு பேரும் மும்பைக்கு போயிட்டோம் ஆனா உங்க அப்பா, இங்க எத்தனை பேரோட ஏச்சு பேச்ச நேரடியாவும் மறைமுகமாவும் ஃபேஸ் பண்ணி இருப்பாரு தெரியுமா...
கிரேட் மேன் ... நான் என் அப்பாவை விட ஒருபடி அதிகமா மதிக்கிற , பிரமிச்சு பாக்குற ஒரு நபர்னா அது உன் அப்பாதான் ... பொதுவா இந்த எண்ணம் எனக்கு எப்பவுமே உண்டு.. ஆனா இன்னைக்கு அதை ரொம்ப அதிகமா ஃபீல் பண்ணேன் ...


நம்ம பொண்ணு வித்யாவை, என் மடியில உட்கார வச்சு கன்னிகாதானம் பண்ணிக் கொடுக்கும் போது எனக்கு கிடைச்ச மன நிம்மதியும், நிறைவும் வார்த்தைகளால சொல்ல முடியாது ...
ஆனா உன்னை பெத்த தகப்பனா கன்னிகாதானமும் பண்ணிக் கொடுக்க முடியாம, நம்ம கல்யாணத்தையும் கண்குளிர பார்க்க முடியாம அன்னைக்கு உங்க அப்பா எவ்ளோ கஷ்டப்பட்டிருப்பாருன்னு அந்த நிமிஷம் தான் உணர்ந்தேன்....


இன்னைய வரைக்கும் தன் கொள்கையில எந்தவித சமரசமும் செஞ்சுக்காம சத்தியத்தோட வாழ்ந்து காட்டுற அந்த மனுஷனுக்கு நான் மாப்பிள்ளை ஆனதுக்கு நான் கோடி புண்ணியம் பண்ணியிருக்கணும்...." என்று சிலாகித்து, கண்ணில் மெல்லிய நீர் திரையிட கூறி முடித்த வெங்கடேஷ் குரலை செருமிக்கொண்டு,


" கோவில்ல வெறும் மூணு நாலு குடும்பத்தோட முன்னிலையில தான் நம்ம கல்யாணமே நடந்தது ... ஆனா இன்னைக்கு நம்ம பொண்ணோட கல்யாணத்தை இந்த ஊரையே கூட்டி பிரம்மாண்டமா செஞ்சு முடிச்சிட்டோம் ...
வந்தவங்க அத்தனை பேர் கண்ணுலயும் தெரிஞ்ச மரியாதையே,
நாம வாழ்ந்துகிட்டு வாழ்க்கைக்கு அர்த்தத்தை கொடுத்திருச்சு... "


" சின்ன வயசிலிருந்தே என் அத்தை பொறுப்பா இருக்கமாட்டா... எப்பவும் என் அம்மாவுக்கு ஏதாவது ஒரு வேலை சொல்லிண்டே இருப்பா... அப்பெல்லாம் அவாளோட எண்ணம் நேக்கு தெரியல... நம்ம கல்யாண பேச்சு எடுத்தவுடனே தான் அவாள நான் புரிஞ்சிக்கவே ஆரம்பிச்சேன்... ஆனா இவ்ளோ தரம் இறங்குவான்னு நான் கொஞ்சம் கூட எதிர் பார்க்கலன்னா..." என்ற வேதாவின் முகத்தில் துரோகத்தின் வலியும் ஏமாற்றத்தின் வடுவும் செவ்வனே தெரிய,


" நீ தான் அடிக்கடி சொல்லுவியே,


உண்மை நெருப்பு மாதிரி.. அது பகவானோட சொரூபம்... அதை மூடி வைக்க முடியாதுனு... அதுதான் இப்ப நடந்திருக்கு ...
நீ எதைப் பத்தியும் யோசிக்காம நிம்மதியா தூங்கு பட்டும்மா..." என்று
மனையாளின் தலை கோதி உறங்க வைத்துவிட்டு பால்கனிக்கு சென்று குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தவருக்கு,


தங்கள் திருமணத்தின் போது தான் சந்தித்த கலங்கத்தை, தன் மைந்தன் அவன் திருமணத்தின் போது சந்திக்கக் கூடாது என அவர் மனம் ஏனோ அப்போது ஆண்டவனிடத்தில் வேண்டுதல் வைத்தது.


மறுநாள் காலை உணவிற்கு முன்னதாகவே அவசர அவசரமாக தன் குடும்பத்தோடு ரங்கநாதன் கிளம்பி துபாய்க்கு பயணமாக,


ஸ்ரீ , விஷ்ணுவிற்கு இடையே இந்த திடீர் பயணம் ஒருவித ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில் ஆனந்தவல்லிக்கு வேறொரு வகையில் ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருந்தது.


அன்று மாலை வரை ரங்கநாதன் தன் குடும்பத்தோடு தங்கி இருக்க போவதாக நினைந்து, திட்டம் போட்டு குட்டி கலகத்தை தொடங்க அவர் எண்ணிக் கொண்டிருந்த நிலையில்
ரங்கநாதனின் இந்த அதிரடி பயணம், அவரது ஆசையை அடியோடு அழிக்க


இன்றில்லை என்றால் என்ன... போட்ட திட்டத்தை செயல்படுத்த ஒரு சந்தர்ப்பம் அமையாமலா போய்விடும்... என்றெண்ணி அந்த நாளுக்காக காத்திருக்கலானார்.


****************************************


மேலும் இரண்டு ஆண்டுகள் உருண்டோட,


திடீரென்று ஒரு நாள் ருத்ர நாராயணன்,


வெங்கடேஷ் மற்றும் ரங்கநாதனை தொடர்பு கொண்டு
ஒரு முக்கியமான விஷயம் பேச வேண்டும் எனக்கூறி ஒரு வாரம் விடுப்பு எடுத்துக் கொண்டு குடும்பத்துடன் வருமாறு பணித்தார்.


" ஏன்னா ஒரு மாதிரி இருக்கேள்..." என்ற வேதாவின் கேள்விக்கு, ருத்ர நாராயணன் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அழைத்ததை கூறியவர்,


" அவர் குரலே சரி இல்லம்மா... அவருக்கு ஏதோ உடம்பு சரியில்லைன்னு நினைக்கிறேன்... " என வருந்திய குரலில் வெங்கடேஷ் கூற


" ரெண்டு நாளைக்கு முன்னாடி கூட, அப்பா அம்மா ரெண்டு பேரிண்டையும் பேசினேனே... அவா எதுவுமே சொல்லலையே..."


" சரி ம்மா ... அதைப்பத்தி இப்ப பேச வேணாம் , ஆக வேண்டியதை பார்ப்போம்.... நான் ஒரு வாரம் லீவு போட்டுட்டு வந்துடறேன் ... விஷ்ணுவையும் லீவு போட்டுட்டு வர சொல்லு ... நாம இமெடியட்டா கிளம்பி போலாம்..." என்றவருக்கு ஏதோ விபரீதம் நிகழப்போகிறது என உள்ளுணர்வு உணர்த்த, உடனே வேதாவும் பயணத்திற்கான ஏற்பாடுகளை செய்துமுடித்தார்.


விஷ்ணு கிரேடு ஒன் இன்டலிஜென்ஸ் ஆபீஸராக தேர்வாகி , பயிற்சிக் காலம் முடிந்து, பதற்றமான பகுதிகள் எனக் கருதப்படும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பூஞ்ச் மாவட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த சமயம் அது.


அவனுக்கான விடுமுறைக்காலம் அருகில் இருந்ததால், எளிதாக அவனுக்கும் விடுப்பு கிடைக்க, ரங்கநாதன் குடும்பத்தோடு வருகிறார் என்ற செய்தியில், ஸ்ரீயை பார்க்கலாம் என்ற ஆவலில் துரிதமாக அவனும் கிளம்பி வர அனைவரும் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு பயணமானார்கள்.


ரங்கநாதன் என்ன தான் பணம் பகட்டு என்றிருந்தாலும், தன் தந்தையின் மீது என்றுமே ஒரு வித பக்தி, அளவுகடந்த மரியாதை அவருக்கு உண்டு. ஆதலால் தான் தன் தந்தையின் கொள்கைகள் பலது பிடிக்கவில்லை என்றாலும் அதனை நேரடியாக கூறி அவர் மனதை துயரப்பட வைக்க மாட்டார்.


இத்தனை ஆண்டுகால அனுபவத்தில் ஒருமுறை கூட, தன் தந்தை இவ்வாறு அழைத்ததில்லை என்பது அவர் மனதிலும் ஒரு உறுத்தலை ஏற்படுத்த, உடனே அவரும் தன் குடும்பத்தோடு ஸ்ரீவில்லிபுத்தூருக்கு பயணமானார்.


முதலில் ஸ்ரீவில்லிபுத்தூரை அடைந்தது வெங்கடேஷ் குடும்பம் தான். ருத்ர நாராயணன் மற்றும் மரகதம் , அவர்களை எதிர்கொண்டு மிகுந்த சந்தோஷத்தில் வரவேற்க, வழக்கம் போல் அவர்கள் இரண்டாவது தளத்தில் இருந்த வேதாவின் அறை , அதைத்தொடர்ந்து இருந்த மற்றொரு அறையை பயன்படுத்திக்கொண்டு பயணக் களைப்பு நீங்கி புத்துணர்வு பெற்று,


மதிய உணவை உண்டு கொண்டிருக்கும் வேளையில்,


" மாப்பிள, இன்னும் ஒரு மணி நேரத்துல ரங்கநாதன் அவன் குடும்பத்தோடு இங்க வந்துடுவான்,
நான் உங்க எல்லாறிண்டையும் , இன்னைக்கு சாயங்காலம் சரியா அஞ்சு மணிக்கு இதே கூடத்துல ஒரு விஷயம் பேசணும் ...நீங்க உங்க அப்பாவை பார்த்துட்டு இங்க அஞ்சு மணிக்கு வந்துடுங்கோ..." என்று எதிர்பார்ப்போடு கேட்டவருக்கு, சம்மதம் கூறிவிட்டு வேதா, வெங்கடேஷ், விஷ்ணு தங்கள் அறைக்கு வரவும், ரங்கநாதன் தன் குடும்பத்தோடு வீட்டு வாயிலில் வந்திறங்கவும் சரியாக இருந்தது.


அவர்கள் குடும்பம், வழக்கம் போல் கீழ்த்தளத்தில் இருந்த அறைகளைப் பயன்படுத்திக்கொள்ள, மதிய உணவிற்கு பிறகு ரங்கநாதனுக்கும் விஷயம் தெரிவிக்கப்பட, அவரும் வருவதாக ஒப்புக் கொண்டார்.


விஷ்ணு மட்டும் இருப்புக் கொள்ளாமல் மணி எப்பொழுது 5 அடிக்கும் என கடிகாரத்தையே பார்த்துக் கொண்டிருக்க, வேதாவும் வெங்கடேஷும் கண்டும் காணாதது போல் அவனை கண்காணித்துக் கொண்டிருந்தார்கள்.


கூடத்தில் இருந்த அந்தப் பழங்காலக் பெண்டுலம் கொண்ட கடிகாரம் , மணி ஐந்தை காட்டி ஐந்து முறை ஒலிக்க, அதற்கு முன்னரே பாக்கியம் மாமி, அனைவருக்கும் மாலை தேநீரை அவரவர் அறைக்கே கொண்டு வந்து கொடுத்திருந்தார்.


கூடத்தில் இருந்த அந்த பெரிய ஊஞ்சலில், சிம்மம் போல் வீற்றிருந்தார் ருத்ர நாராயணன்.


ரங்கநாதன் மட்டும் ஊஞ்சலுக்கு எதிரே இருந்த சோபாவில் அமர்ந்திருக்க , அவரருகில் சுமித்ரா மற்றும் ஸ்ரீனி நின்று கொண்டிருக்க,
ஸ்ரீலக்ஷ்மி பாட்டி மரகதத்தின் கையைப் பற்றிக்கொண்டு, சற்று தள்ளி நின்று பேசிக்கொண்டிருக்க,
அப்பொழுது வெங்கடேஷின் குடும்பம் ஒருவர் பின் ஒருவராக , படியிறங்கி கூடத்திற்கு வந்தது.


வெங்கடேஷை பார்த்ததும்


" உக்காருங்கோ மாப்பிள..." என தனக்கு பக்கவாட்டில் இருந்த சோபாவை ருத்ர நாராயணன் சுட்டிக்காட்ட, அவர் பின்னே வந்த விஷ்ணுவின் கண்கள் ஸ்ரீயை தேட,
சுமித்ராவின் அருகில் இல்லாமல், சற்று தள்ளி மரகதத்தின் அருகில் நின்று கொண்டிருந்தவளும் , அதே ஆவலுடன் விஷ்ணுவை நோக்கினாள்.


முழு 2 வருடங்களுக்கு பின்பான சந்திப்பல்லவா... தோற்ற மாற்றங்கள் இருவரிடத்திலும் ... மற்றவை எதுவும் மாறவில்லை.


2 ஆண்டுகளுக்கு முன்பிருந்த கல்லூரி மாணவனுக்கே உண்டான முதிர்ச்சியற்ற தோற்றம் எல்லாம் மறைந்து , பயிற்சி, பணி கொடுத்த கம்பீரம் அவனது நடை ,உடை பாவனையில் பளிச்சிட,
ஸ்ரீயிடம் குழந்தைத்தனம் சற்றே சற்று மறைந்து, பருவப் பெண்ணிற்கான பொலிவு கூறியிருந்தது.


ஒரு நிமிடத்திற்கும் குறைவான இந்தப் பார்வை பரிமாற்றத்தில், மற்றவர்கள் அனைவரும் மழுங்கிய நிலையில் காட்சி அளிக்க, அவர்கள் இருவரும் மட்டுமே தனித்து சஞ்சரித்துக் கொண்டிருந்த வேளையில்,


பேச்சை ஆரம்பிப்பதற்கு அடையாளமாக ருத்ர நாராயணன் குரலை உயர்த்தி செரும, அப்பொழுதுதான் இருவரும் சுயம் உணர,


" உங்க எல்லாரையும் இங்க நான் அழைச்சதுக்கு காரணம், நேக்கு வயசாயிண்டிருக்கு, இன்னும் எவ்ளோ நாள் இருப்பேன்னு தெரியல....


ஒரு அப்பாவா என்னோட கடமையை இதுவரைக்கும் நான் சரியா செய்து முடிச்சிட்டேன்னு நினைக்கிறேன் ...


என்னோடு சொத்துக்களை சரிபாதியா பிரிச்சு உங்க ரெண்டு பேர் மேலயும் உயில் எழுதி வச்சிருக்கேன் ...


இந்த ஆத்துக்கு வயசு கிட்டத்தட்ட 100 ...
என் மாமனார் நேக்கு கொடுத்தேர்... அவருக்கு அவர் மாமனார் கொடுத்தது...
இந்த ஆத்தை இவ்வளவு விஸ்தரிச்சு கட்டினது நான் தான்...
ஏன் இதெல்லாம் சொல்றேன்னா ....
சந்ததியை உருவாக்கலாம், ஆனா பாரம்பரியத்தையும் தலைமுறையையும் உருவாக்க முடியாது... அது தானா அமையணும்... அதுக்கு பகவானோட ஆசி இருக்கணும்...


நேக்கு தெரியும் நீங்க ரெண்டு பேருமே, இந்த சொத்தை எதிர்பார்க்கிற நிலைமையில இல்லன்னு ...
நீங்க எல்லாருமே ஃபினான்சியலி வெல் ஆப்னு....(financially well off)...


இருந்தாலும் உயில்ல நான் எழுதியிருக்கிறபடி
உங்க ரெண்டு பேர் பேர்ல இருக்கிற விவசாய நிலம் ,வீட்டு மனைகள இப்பவே நீங்க வித்துக்கலாம்...


ஆனா இந்த ஆத்தை மட்டும், இன்னும் ஒரு தலைமுறைக்கு நீங்க யாரும் விற்கக் கூடாதுன்னு நான் உங்க எல்லாரிண்டையும் கேட்டுக்கறேன்...
ஏன்னா நான் பார்த்த அடுத்த தலைமுறைக்கு இந்த ஆத்துல எல்லா நல்லதும் நடக்கணும்னு நேக்கு ஒரு ஆசை ..." என்ற போது அவர் குரல் தழுதழுக்க, சுதாரித்தவர்


" உங்க ரெண்டு பேருக்கும் ஏதாவது கேள்விகள் இருந்தா கேளுங்கோ..." என ரங்கநாதன் மற்றும் வெங்கடேஷ் தம்பதியினரை அவர் பொதுவாக ஒரு பார்வை பார்க்க, அனைத்தையும் வராண்டாவில் நின்றபடி யாருக்கோ வந்த விருந்து போல் ஆனந்தவல்லி கேட்டுக்கொண்டிருக்க,
அங்கு 5 நிமிடத்திற்கும் குறைவான தருணத்தில் பெரிய அமைதி நிலவ,


" நீங்க யாரும் எதையும் பேசாததால , நான் சொன்னதுல உங்க எல்லாருக்கும் சம்மதம்னு நான் எடுத்துக்கிறேன் ..." என்றவர் நடையை கட்ட, கூட்டம் இனிதே முடிந்தது.


விஷ்ணுவிற்கு தன் காதலி ஸ்ரீயை கண்டாலும் , வில்லன் ஸ்ரீராமை காணாமல் அவன் கண்கள் தேடி தேடி
களைக்க, ஒருவழியாக ஸ்ரீனியை அணுகி


" எங்க ஸ்ரீராம் ..." என்றான் குறும்போடு.


" ஏன் கட்டிப்புரண்டு சண்டை போட ஆள தேடறியா..." என்றான் ஸ்ரீனி அதே குறும்போடு.
இத்தனை ஆண்டுகளாக விஷ்ணுவிடம் ஸ்ரீனி பேசிய வார்த்தைகளை விரல் விட்டே எண்ணி விடலாம், அப்படி ஒரு சாந்த ஸ்வரூபியின் எதிர் கேள்வியில் மலைத்துப் போன விஷ்ணு,


" இதெல்லாம் பெருமையா... கடமை ...
அப்போசிஷன் பார்ட்டி இல்லாம சட்டசபை கலை கட்டாது இல்ல .." என்றவனின் பதிலைக் கேட்டு குலுங்கி சிரித்த ஸ்ரீனி,


" கவலைப்படாத, நாளைக்கு வந்திடுவான் கச்சேரி களை கட்டும் ..." என்றதும் இருவரும் இணைந்து நகைத்தனர்
நாளைய தினம் நிச்சயமாக கச்சேரி கலை கட்டப் போவது தெரியாமல்.


அறைக்கு வந்த வெங்கடேஷ்,


" எனக்கு என்னமோ உங்க அப்பா பேச வந்ததை பேசாம பாதியிலயே நிறுத்திட்டாரோன்னு தோணுது ..."


" என்னன்னா சொல்றீங்கோ... நேக்கு புரியல ..."


" மாமா, இந்த உயில் விஷயத்துக்காக மட்டும் நம்மல கூப்பிடல ... வேற எதுக்கோ கூப்பிட்டிருக்காருன்னு தோணுது... அது என்னன்னு தான் புரியல .." என்றவர் முடிக்கும் முன்பே உள் தொலைபேசி ஒலிக்க,


" மாப்பிள, நான் என் ஆபிஸ் ரூம்ல இருந்து பேசறேன்... கொஞ்சம் என் ரூமுக்கு வர முடியுமா ..."


" இதோ வந்துடறேன் மாமா .." என்றவர் தொலைபேசியை தாங்கியில் பொருத்தம் முன்


" எங்க அம்மாவை விட எங்க அப்பாவை நீங்க நன்னா புரிஞ்சு வச்சிண்டிருக்கேள்..." என்றார் வேதா அனைத்தையும் அருகில் நின்று கேட்டபடி.


" சொல்லுங்க ..." என்றார் வெங்கடேஷ் ருத்ர நாராயணனை ஆவலோடு பார்த்து.


சிறு அமைதிக்கு பின்


" நீங்க விஷ்ணுவோட கல்யாணத்தைப் பத்தி ஏதாவது முடிவு பண்ணி வச்சிருக்கேளா..." என்றதும் வெங்கடேஷ் துணுக்குற்று, பிறகு


" இல்ல ..." என்றார் யோசனையாய்.


" ஏன் கேக்கறேன்னா... நம்ப ஸ்ரீயை விஷ்ணுவுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு நேக்கு ஒரு ஆசை..." என்றவர் முடிக்கும் முன்பே, வெங்கடேஷுக்கு ஒருபுறம் மகிழ்ச்சி என்றாலும், மறுபுறம் குழப்பம் நிலவ,
இந்தப் பேச்சு இப்பொழுது எதற்காக,
என்ற முகபாவத்தை அவர் தன்னிச்சையாக வெளிப்படுத்த,


" இப்ப இந்த பேச்சு எதுக்காகன்னு யோசிக்கிறேளா... ஸ்ரீக்கு 16 வயசு தான் ஆற்து , ஒரு டிகிரி முடிச்சதும் 21 வயசுல தான் கல்யாணம் பண்ணனும்... ஆனா அவ்ளோ வருஷம் நான் உயிரோடு இருப்பேனான்னு நேக்கு தெரியல..
அதனால நாளை மறுநாள் முகூர்த்த நாள் , அவா ரெண்டு பேருக்கும்
நம்மாத்தோட நிச்சயதார்த்தத்திற்கு ஏற்பாடு பண்ணலாம்னு இருக்கேன்... அதுமட்டும் இல்ல நேக்கு ரங்கநாதன் மேல நம்பிக்கை கிடையாது ...அவன் அடிப்படையில நல்லவன் தான்.. ஆனா அவன் ஒரு வியாபாரி... வியாபாரம்னாலே பொய் சொல்லணும் ஏமாத்தணும்... அதை அவன் நன்னா செய்வான்னு நேக்கு தெரியும்... நிச்சயதார்த்தமே நடந்தாலும், நான் அவனை நம்ப தயாரா இல்ல... என் காலத்துக்குப் பிறகு நீங்கதான் முன்னிருந்து விஷ்ணு ஸ்ரீயோட கல்யாணத்தை முடிக்கணும்... உங்களை தான் மலை போல நம்பறேன்..."
என்ற பேச்சை கேட்டு, வெங்கடேஷ் ஒரு நிமிடம் ஆடிப் போக, பிறகு சற்று சுதாரித்து , மைந்தனின் மனமும் அறிந்தவர் அல்லவா,


" எனக்கு சம்மதம் ... நீங்க ரங்கநாதன் கிட்ட பேசுங்க ..." என்றார் ரங்கநாதனை பற்றி நன்கு அறிந்தவராய்.


ருத்ர நாராயணன் ரங்கநாதனிடம் அனைத்து விஷயத்தையும் பகிர,
அதனைக் கேட்டவர் கோபத்தில் தாம் தூம் என்று குதிக்க ஆரம்பித்தார்.


" யாரை கேட்டுப்பா முடிவெடுத்தீங்கோ... ஸ்ரீ என்னோட பொண்ணு ... அவ கல்யாணத்த பத்தி நான் தான் முடிவு எடுக்கணும்... நீங்க எடுக்க கூடாது..."


" ஏண்டா உன்னை பெத்து வளர்த்தது நான்... நோக்கு கல்யாணம் பண்ணி வச்சது நான்... என் பேத்தி கல்யாணத்த முடிவு பண்ண நேக்கு தகுதி இல்லையா ...இப்ப கல்யாணம் நடந்தா சட்ட ரீதியா அந்த கல்யாணம் செல்லாது... அதெல்லாம் நேக்கு தெரிஞ்சு தான் , நாளான்னிக்கு நிச்சயதார்த்தம் பண்ண முடிவெடுத்திருக்கேன்...
சட்ட ரீதியா கல்யாணம் இன்னும் ரெண்டு வருஷம் கழிச்சு தான் பண்ணனும் .... அதோடு ஸ்ரீ குறைந்த பட்சம் ஒரு டிகிரியாவது முடிக்கணும்... அதனால அவளோட 21வது வயசுல தான் கல்யாணம் பண்ணியாகணும் ... அதுவரைக்கும் என் பேரன் பேத்தியோட கல்யாணத்தைப் பார்க்க நான் உயிரோட இருப்பேனான்னு நேக்கு தெரியல... நான் இருக்கும் போதே அவாளோட கல்யாணத்துக்கான முதல் படியே எடுத்து வச்சிட்டு போயிடணும்னு முடிவெடுத்திருக்கேன் ..." என்றவர் பேசிக்கொண்டே போக, அதில் அவர் குறிப்பிட்ட பல விஷயங்கள் ரங்கநாதனுக்கு சாதகமாக அமைய, அவரின் வியாபார மூளை செவ்வனே வேலை செய்ய ஆரம்பித்தது.


இன்னும் மிஞ்சி போனால் இரண்டு அல்லது மூன்று வருடம் தான் தன் தந்தை உயிரோடு இருப்பார், அதற்குப்பின் நடக்கப்போவது நம் கையில் தான் என தன் தந்தைக்கு கால நேரம் குறித்தவருக்கு தெரியாது அதே நேரத்தில், காலனே அவர் தந்தைக்காக அங்கு வந்து அமர்ந்திருப்பது.


" ஸ்ரீ சின்ன குழந்தை ப்பா ... படிக்கிற பொண்ணுன்ட இந்த மாதிரியான விஷயத்தை எல்லாம் எப்படி பேசற்து ...
அவளிண்ட விஷ்ணுவை பிடிச்சிருக்கான்னு கேக்க சொல்றேளா ...." என ரங்கநாதன் தட்டிக்கழிக்க பார்க்க


" நீ எதுவுமே கேக்க வேணாம் என் பேத்திக்கு விஷ்ணுவை பிடிக்கும்னு நேக்கு தெரியும்..." என்றார் ஆணித்தரமாக.


" சரிப்பா உங்க இஷ்டம் ..." என்றார் ஒற்றை வரியில்.

தன் அறைக்கு திரும்பியவர், சுமித்ராவிடம் அனைத்தையும் பகிர,
கேட்டவருக்கோ தலை கால் புரியாத அளவிற்கு சந்தோஷ மழை உச்சந்தலையில் ஜில்லென்று பொழிய


ஆனால் அதில் கடுகளவு கசிந்தால் கூட, ரங்கநாதன் நெற்றிக்கண்ணைத் திறந்து விடுவார் என்றுணர்ந்து அவரும் கடினப்பட்டு, கஷ்டப்பட்டு துக்கப்பட்டு, துயரப்பட்டு முகத்தை சோகமாக வைக்க முயற்சி செய்து கொண்டிருந்தார்.


சுமித்ராவிற்கு வேதாவின் குடும்பத்தை எல்லா விதத்திலும் பிடிக்கும் ... அதிலும் விஷ்ணுவின்
துருதுரு சுபாவம், புத்திசாலித்தனம், ஒழுக்கம் , தோற்றம், அவன் ஸ்ரீ மேல் வைத்திருக்கும் பாசம் என அனைத்தையும் அறிந்தவறாதலால் அவர் மனம் மகிழ்ச்சியில் திளைக்க, இதை உணராமல் ரங்கநாதன்


" எங்க அப்பா இன்னும் ரெண்டு மூணு வருஷம் தான் உயிரோட இருப்பேர் ... போற ஆத்மா சந்தோசமா போகட்டுமேன்னு தான் இந்த ஏற்பாட்டுக்கு நான் ஒத்துண்டேன்... நான் இன்னும் என் அக்கா கல்யாணத்தையே ஏத்துக்கல... என் பொண்ணுக்கு எப்படி மாப்பிள்ளை பார்க்கணும்னு நேக்கு தெரியும் ...நம்பலவாள்லயே என்னை மாதிரி ஒரு மல்டி மில்லியனர பார்த்து முடிக்க போறேன் பார்..."
என்றவரின் பேச்சை பொறுக்கமாட்டாமல்


" எவ்ளோ பெரிய பதவில வேதாவோட ஆத்துக்காரர் இருக்கேர்... ஏறக்குறைய மும்பை சிட்டியே அவர் கண்ட்ரோல் தான் இருக்கு ... விஷ்ணுவும் நன்னா படிச்சிருக்கான்... நல்ல உத்தியோகத்துல இருக்கான்... ஒழுக்கமானவன்... அவாளுக்கும் பணத்துக்கு ஒன்னும் பஞ்சம் இல்ல.. ரெண்டு பெரிய வீடு இருக்கு மும்பைல..." என்ற சுமித்ராவை முறைத்துப் பார்த்த ரங்கநாதன்


" உனக்கு மில்லியனர்க்கும் , மல்டி மில்லியனர்க்கும் வித்தியாசம் தெரியாதா .... அவா மில்லியனர்... நான் மல்டி மில்லியனர்.... அது சரி ...உனக்கு இந்த வித்தியாசம் எல்லாம் தெரிஞ்சு இருக்கணும்னு எதிர்பார்க்கிறது தப்பு தான் என்னவா இருந்தாலும் நீ குமாஸ்தாவோட பொண்ணுதானே ..." என்றார் நக்கலாக, எதிர்த்துப் பேசிய ஒரே காரணத்திற்காக.


" என் தங்கை விஷயத்துல ஏமாந்த மாதிரி என் பொண்ணு விஷயத்துல ஏமாறுவேன்னு, நினைச்சான்னா அது அந்த வெங்கடேஷோட முட்டாள்தனம் ...
என் அப்பா அவர் பொண்ணு விஷயத்துல ஆடின அதே ஆட்டத்தை எம்பொண்ணு விஷயத்துலயும் ஆடணும்னு பார்க்கிறேர்... அது நடக்காது .... அவரா நானான்னு பார்க்கிறேன் .... பொம்மை கல்யாணம் மாதிரி இது பொம்மை நிச்சயதார்த்தம் அவ்ளோ தான்....


இதுவரைக்கும் தொழில்ல என் எதிரிங்க தான் என்னோட இன்னொரு முகத்தை பார்த்திருக்காங்க ... நிச்சயதார்த்தம் முடியட்டும் ... இந்த ரங்கநாதன் யாருன்னு எல்லாருக்கும் காட்டறேன்... அது வரைக்கும் நம்ப குழந்தைங்க யாரிண்டையும் எதையும் சொல்லாத ... நான் இந்த கல்யாணத்துக்கு ஒத்துண்டதாவே இருக்கட்டும் ...." என வன்மத்தோடு பேசிக்கொண்டிருந்ததை எதேச்சையாக
ஸ்ரீ கேட்டுவிட, அவள் தலையில் இடி இறங்கியது போலிருந்தது. ஒருபுறம் நடக்கப்போகும் நிச்சயத்தை எண்ணி மகிழ்வதா, இல்லை அதற்கு மேல் தன் தந்தை ஆடப்போகும் ஆட்டத்தை எண்ணி வருந்துவதா எனத் தெரியாமல் , இயல்பிலேயே மென்மையான சுபாவம் கொண்டவளுக்கு, கண்கள் பனிக்க, வந்து போன தடயம் தெரியாமல் தன் அறைக்கு சென்று விட்டாள்.


தன் அறைக்கு வந்த வெங்கடேஷ் , வேதாவிடம் அனைத்தையும் பகிர ,


" அப்பா இந்த மாதிரி முடிவெடுப்பேர்னு நான் கொஞ்சம் கூட எதிர் பார்க்கல... "


" இதுல ஒன்னு கவனிச்சியா ... விஷ்ணுவுக்கு ஸ்ரீயை பிடிக்குமான்னு ஒரு வார்த்தை கூட என்கிட்ட அவர் கேக்கவே இல்ல... ஒரு வேளை வித்யா கல்யாணத்துல இவன் ஸ்ரீயை 'ஆ'ன்னு பாத்துக்கிட்டு இருந்ததை உங்க அப்பாவும் பார்த்திருப்பாரோ..."


" நீங்க என்னை பார்த்த மாதிரியே, விஷ்ணு ஸ்ரீயை பார்த்துண்டு இருந்தான்னு சொல்வேளே ... அதையேன் மறந்துட்டீங்கோ... நீங்க இதயம் முரளி மாதிரி, லவ் சொல்லாம அஞ்சு வருஷம் என் பின்னாடி சுத்தினேள்... இப்ப உங்க பையனும் அதையேதான் செய்றான் ..." என குறும்பாக வேதா சீண்ட


" அந்த படத்தையே என்னை பார்த்து தான்டி எடுத்தாங்க ...." என்றதும் இருவரும் இணைந்து நகைத்தனர்.


மறுநாள் காலையில் வந்திறங்கிய ஸ்ரீராம்,
அனைத்தையும் கேள்விப்பட்டு
வழக்கம் போல் கோபத்தில் கொந்தளிக்க தொடங்கினான்.


" அம்மா... என்னம்மா நடக்கற்து இந்த ஆத்துல ..."


" ஏண்டா நோக்கு தமிழ் புரியாதா ..."


" அம்மா விளையாடாதீங்கோ... அவன் சின்ன வயசுல சொன்ன மாதிரி இப்ப ஸ்ரீயை கூட்டிண்டு போக போறான்..."


" ஆமாண்டா, கூட்டிண்டு போக போறான்... கடத்திண்டு போக போறான்னு முட்டாள்தனமா பேசாத ... கல்யாணம் பண்ணி அவாத்துக்கு அழைச்சிண்டு போகப்போறான்... சாரி ... போகப்போறேர்.... அவாம் ஒன்னும் செவ்வாய் கிரகத்துல இல்ல ... எப்படியும் ஸ்ரீ கல்யாணமாகி அடுத்த ஆத்துக்கு போக வேண்டியவ தானே... அது மட்டும் இல்ல கல்யாணமே அஞ்சு வருஷத்துக்கு அப்புறம்தான் நடக்கப்போற்து.... நாளைக்கு வெறும் நிச்சயதார்த்தம் தான் ..." என அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது தொலைபேசியில் பேசிய படி ரங்கநாதன் அறைக்குள் நுழைய, உடனே சுமித்ரா வாய்ப்பூட்டு போட்டுக் கொள்ள, ஸ்ரீராமால் தாங்க முடியாமல் ரங்கநாதனை பார்த்து


" அப்பா, கடைசில அத்தை பாட்டி(ஆனந்தவல்லி) சொன்னது தான் நடக்கப் போற்து ... சின்ன வயசுலயே விஷ்ணுக்கிட்ட கேட்டா, நீ பெரியவனானதும் ஸ்ரீய கல்யாணம் பண்ணிப்பையான்னு ....
அப்ப அமைதியா இருந்தான் ... இப்ப தான் அவனோட அமைதிக்கு காரணம் நேக்கு
புரியற்து..." என்று தன்னை மறந்து அவன் வாக்குமூலம் கொடுக்க, நடக்கும் பிரச்சனைக்கெல்லாம் மூல காரணம் ஆனந்தவல்லி தான் என ரங்கநாதனின் மனம் நிமிடத்தில் கணக்குப் போட்டு உறுதி செய்ய, வழக்கம் போல் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் ,


" போடா உன் வேலையை பார் ...நடக்க நடக்க நாராயணன் செயல் ..." என்றார் தனக்கு பிடித்தம் இல்லாத விஷயத்தை, பற்றிப் பேசும் போதெல்லாம் அவர் எப்போதும் பயன்படுத்தும் வரிகளை கூறி.


ஆமாம், நடக்கப்போவதை முடிவு செய்தது ருத்ர நாராயணன், அதனை நடத்தி காட்ட போவது விஷ்ணு நாராயணன் ... என்றார் சுமித்ரா மானசீகமாக.


அடிப்படையில் சுமித்ராவின் குடும்பம் ரங்கநாதனின் குடும்பத்தை விட பொருளாதார நிலையில் பல படிகள் கீழ். அதெல்லாம் சுமித்ராவை பெண் பார்க்கும் போது, ஒரு பொருட்டாகவே ரங்கநாதனுக்கு தோன்றவில்லை. எப்பொழுது ஆனந்தவல்லி வேதாவின் திருமணத்தோடு, சுமித்ராவின் பொருளாதார நிலையை சம்பந்தப்படுத்தி பேசி கொளுத்திப் போட்டாரோ அதிலிருந்து
இன்று வரை அவருக்கு அது ஒரு உறுத்தலான விஷயமாகிப்போனது.
என்றாலும் அவரது கோபம் தாபம் இரண்டையும் காட்டும் ஒரே இடம் சுமித்ரா தான் ...


மகன்களிடம் கூட மெயிலில் தான் பேசுவார் . மனைவியிடம் மட்டும் தான் மனம் விட்டு பேசுவார். சில சமயங்களில் அவரது நகர்வை சுமித்ராவால் கூட கணிக்க முடியாமல் இருந்திருக்கிறது..


ஸ்ரீனி , தாய் சுமித்ராவின் குணத்தை அப்படியே பிரதிபலிப்பவன். ஆனால் ஸ்ரீராம் தந்தையின் மறு பிம்பம்.


ஸ்ரீனி, ஸ்ரீராம் இருவருமே வியாபார புலிகள் தான். ஆனால் ஸ்ரீராம் அதிவிரைவில் உணர்ச்சிவசப்படுபவன்..
அவன் சிறுவயதிலிருந்தே தன் தங்கை ஸ்ரீலக்ஷ்மியிடம், 'ஸ்ரீ பாப்பா ஸ்ரீ பாப்பா' என அதிகம் அன்பு பாராட்டுவான்...


ஸ்ரீ லக்ஷ்மி தன் பாட்டி மரகதவல்லியின் மறுபதிப்பு . குணத்திலும் அழகிலும் .
ஆனால் மரகதவல்லியிடமிருந்த அந்தக்கால கட்டுப்பெட்டித்தனம் குறைந்து, இந்த காலத்திற்கே உரிய துடுக்குத்தனம் மட்டும் சற்றே அவளிடம் மேலோங்கியிருக்கும்.


ஸ்ரீராம் , விஷ்ணு இருவரையும் அருகருகே நிறுத்தினால் , அண்ணன் தம்பி என்று சொல்லும் அளவிற்கு உருவ ஒற்றுமைகள் இருக்கும் .. வேதாவின் சாயல் இருவரிடத்திலுமே காணப்படும்.


சிறுவயதிலிருந்தே விஷ்ணுவை பிடிக்காது என்பதால், ஸ்ரீயை திருமணம் செய்யப்போகும் அவனை இன்று வரை வில்லனாகவே பார்க்கிறான் ஸ்ரீராம்.


வயது மூப்பின் காரணமாக நித்திய சமையலுக்கு முழுக்க முழுக்க பாக்கியம் மாமியையே நம்பியிருந்தார் மரகதம்.
மறு நாள் நடக்கவிருக்கும் நிச்சயதார்த்தத்திற்கு தன் தாய் தந்தையை அழைப்பதற்காக சுமித்ரா ஸ்ரீயுடன் விருதுநகர் சென்றுவிட,


வீட்டில் அனைத்து உறவுகளும் வந்திருப்பதை அறிந்தும் வேண்டுமென்றே பாக்கியம் மாமியை பட்டு மாமியின் உடல்நிலையைக் காரணம் காட்டி அவருடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த
ஆனந்தவல்லியின் சூழ்ச்சிக்கு பின்னால் இருந்தது இதுதான்.


சுமித்ரா இருந்திருந்தால், அவர் முறையாக சமாஸ்ரயணம் பண்ணி கொண்டவர், அவர் சமைத்தால் அனைவரோடும் ஆனந்தவல்லியும் மரகதமும் சாப்பிடலாம், ஆனால் இப்போது அவர் இல்லாததால்
வேதா தான் சமைக்க வேண்டியநிலை. வேதா சமைத்தால் நானும் மரகதமும் சாப்பிட மாட்டோம் என்று கூறி, பிரச்சனையை பெரிதுபடுத்தி, வேதாவின் மனதை நோகடிக்க வழக்கம் போல் ஆனந்தவல்லி சூழ்ச்சி செய்ய, அவரது சூழ்ச்சியை அறிந்த ருத்ர நாராயணன்,


" அக்கா நீயும் மரகதமும் கோகிலா மாமி ஆத்துல போய் சாப்பிடுங்கோ... நாங்க எல்லாரும் வேதா தளிகையை தான் சாப்பிட போறோம்..." என்றார் பிரச்சனையின் மூலத்தை அறிந்து அதற்கு முடிவு கட்டும் விதமாக.


உடனே மரகதம்,


" நானும் வேதா தளிகையையே சாப்பிடுறேன்னா..." என்றார் ஏதோ உள்ளுணர்வு உணர்த்த.


மற்றவர்களுடன் ருத்ர நாராயணனுக்கும் மரகதத்தின் செயல்கள் ஆச்சரியத்தை விதைக்க, கடைசியில் பிரச்சினையை எதிர் பார்த்து காத்திருந்த ஆனந்தவல்லி, வேறு வழி இல்லாமல் வெளியேற, வேதா அருமையாக சமைத்து தன் தாய் தந்தை, தன் குடும்பம், ரங்கநாதன், ஸ்ரீனி , ஸ்ரீராம் என அனைவருக்கும் பரிமாறினார்.


மறுநாள் நடைபெறவிருக்கும் நிச்சயத்திற்காக , வேலைகள் மும்மரமாக நடந்து கொண்டிருக்க,


காலையிலிருந்து தொடர்ந்து பார்த்த வேலையால்
மூட்டு வலியின் காரணமாக வேதா தன் அறையில் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார்.


" என்னம்மா... கால் வலிக்குதா ... " என்றார் வெங்கடேஷ் அனுசரணையாக.


" ஆமான்னா... இவ்ளோ பேருக்கு தளிகை பண்ணி வழக்கமில்ல நேக்கு..
அதான் கால் ரொம்ப வலிக்கற்து ..."


" நம்ம வீடா இருந்தா நானும் உனக்கு ஹெல்ப் பண்ணி இருப்பேன் ..."
என்றபடி ஐயோடெக்ஸை தேடி எடுத்து வேதாவின் கால்களில் தேய்த்து விட்டுக் கொண்டிருக்கும் போது, ஒருக்களித்த கதவை திறந்துகொண்டு சுமித்ரா வர,
அங்கு அவர்கள் இருந்த நிலையைப் பார்த்து,


" சாரி..." என்றபடி அவர் வெளியேற எத்தனிக்க,


" மன்னி உள்ள வாங்கோ .." என்றார் வேதா.


" நீ பேசிக்கிட்டு இரும்மா நான் அப்புறம் வரேன் ..." என வெங்கடேஷ் வெளியேற,
அறைக்குள் வந்த சுமித்ரா, நாளை நடைபெறவிருக்கும் நிச்சயதார்த்தத்திற்கு அவர் தாய் தந்தையை அழைத்து வந்ததை பற்றி பேசியவர்,


" நீ ரொம்ப லக்கி வேதா ... உங்க அண்ணா, அதான் என் ஆத்துக்காரர், ஒரு நாள் கூட இப்படி அனுசரணையா நடந்துண்டதே இல்ல... தலை வலின்னு சொன்னா, ஆத்துல இத்தனை வேலைக்கார இருக்கும் போது நோக்கு எதுக்கு தலைவலி வர்றதும்பேர்...


ஏன் வேதா, வேலைக்காரளுக்கும் தலைவலிக்கும் சம்பந்தம் உண்டா என்ன... பொதுவா போலீஸ்காரா ரொம்ப ஸ்ட்ரிக்டா இருப்பான்னு கேள்விப்பட்டிருக்கேன்... ஆனா உன் ஆத்துக்காரர் அப்படி இல்ல போலிருக்கே ..." என சுமித்ரா வியக்க


" அவரோட வேலையை என்னைக்குமே அவர் ஆத்துக்கு அழைச்சிண்டு வந்ததே இல்ல ... வெளில அவர் படு டெரர் ... அது நேக்கும் தெரியும்...
ஆனா ஆத்துல அவர் நல்ல அப்பாவா நல்ல ஆத்துக்காரரா தான் இன்னைய வரைக்கும் நடந்துண்டு இருக்கேர்..." என்ற போது வேதாவின் முகத்தில் அளவுக்கதிகமான பெருமிதம் பிரதிபலித்தது.


மறுநாள் காலையில் முகூர்த்த நேரத்தில், நிச்சயதார்த்தத்திற்கான ஏற்பாடுகள் நடக்க ஆரம்பிக்க


எப்பொழுதும் போல் ருத்ர நாராயணனின் நெருங்கிய நண்பர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொள்ள,
அப்துலும் தன் குடும்பத்தோடு வந்திருக்க, விழா இனிதே தொடங்கியது.


ரோஜாப்பூ நிறத்தில் தங்க ஜரிகை இட்ட, பனாரஸி புடவையில் , புத்தம் புது ரோஜாவாய் ஸ்ரீ மிளிர, அவளருகே பட்டு வேஷ்டியில் கம்பீரத்தோடு அமர்ந்திருந்தான் விஷ்ணு.
பார்ப்பதற்கு மகாவிஷ்ணுவும் மகாலட்சுமியுமாய் ஜோடி பொருத்தம் பிரமாதமாக இருக்க,


தட்டு மாற்றிக்கொள்ள
விஷ்ணுவிற்காக வெங்கடேஷ் அமர்ந்தால், ஸ்ரீகாக ரங்கநாதன் அமர வேண்டும்.
ஆனால் ரங்கநாதனின் மனம் , இந்த கல்யாணத்தை பொறுத்தமட்டில் நிச்சயமாக நேர்மறையான எண்ணத்தில் இருக்காது என்பதை முன்கூட்டியே அனுமானித்த ருத்ர நாராயணன்,
மணமகன் சார்பாக விஷ்ணுவிற்கு அவன் தாத்தா வாசு தேவரை அமரச்செய்து, மணப்பெண் சார்பாக ஸ்ரீயின் தாத்தா என்ற முறையில் தானே அமர்ந்து,
முறைப்படி தட்டு மாற்றிக் கொண்டனர்.


அதற்கு முன் படித்த லக்ன பத்திரிகையில், 2021 ஆம் ஆண்டில் ஏதாவது ஒரு வளர்பிறை முகூர்த்தத்தில் திருமணம் நடத்தப்படும் என்று குறிப்பிட பட,


மணமக்களை மாலை மாற்றிக்கொள்ள சொல்லும் போது,( பொதுவாக நிச்சயதார்த்தத்தில் மாலை மாற்றிக் கொள்வது வழக்கத்தில் இல்லாதது)


விஷ்ணு மாலையைக் கையில் எடுத்து, ஸ்ரீ யின் கழுத்தில் போடுவதற்கு முன், அவன் கண்கள்
அவளது பார்வையை சந்திக்க , அது கலங்கி இருப்பதை கண்டு ஒரு கணம் திடுக்கிட்டு நின்றவனை, ருத்ர நாராயணன் ஊக்கி மாலையைப் போட செய்ய, அனிச்சையாய் ஸ்ரீயும், அவளது உயரத்திற்கு குனிந்து நின்ற விஷ்ணுவின் கழுத்தில் மாலை சாற்றினாள்.


ஊரும் உறவுக்கும் தான் லக்ன பத்திரிக்கை படி 2021ஆண்டில் திருமணமே தவிர, விஷ்ணுவைப் பொருத்தமட்டில் அவனுக்கு திருமணம் அந்தக் கணத்திலேயே, முப்பது முக்கோடி தேவர்கள் சாட்சியாக நடந்தேறிவிட்டது.


மாலை மாற்றும் போது அவன் மனதில் சிறு உறுத்தல் இருந்து கொண்டே தான் இருந்தது.
இவ்வளவு காலமான சந்திப்பில் ஸ்ரீயும், விஷ்ணுவும் ஒரு வார்த்தை கூட பேசிக் கொண்டதேயில்லை . வெறும் பார்வை பரிமாற்றம் மட்டும்தான்.
ஆதலால் ஸ்ரீயின் கலங்கிய விழிகளுக்கான காரணம் புரியாமல் தவித்துப்போனவனின் மனதில் ஒரு வேளை அவளுக்கு இந்த திருமணத்தில் பிடித்தம் இல்லையா ...
தாத்தாவின் வற்புறுத்தலின் பேரில் தான் ஒப்புக்கொண்டாளா போன்ற கேள்விகள் அலை மோதின.


நடந்த நிகழ்வுகள் அனைத்தும் ருத்ர நாராயணனின் அறிவுறுத்தலின் பெயரில், புகைப்படம் மற்றும் காணொளியாக
பதிவு செய்யப்பட்டது.


வழக்கம் போல் ரங்கநாதன் , ஸ்ரீராம் இருவரும் தணல் மேல் நிற்பது போல் நின்று கொண்டிருக்க, சுமித்ரா, ஸ்ரீனி, ருத்ர நாராயணன், மரகதம், வேதா, வெங்கடேஷ் , வாசுதேவர் ஆகியோரின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லாமல் போனது.


ஆனந்தவல்லியை பொருத்தமட்டில் பிள்ளையார் பிடிக்க குரங்காகி போன கதையாகி விட்டது.


அவர் போட்ட திட்டப்படி விஷ்ணுவும் ஸ்ரீயும் காதலில் விழ , அதுவரை தான் எழுதிய நீண்ட நாள் திரைக்காவியம் அச்சுபிசகாமல் அரங்கேறியதை எண்ணி இறுமாந்து போயிருந்தவருக்கு கதையின் அடுத்த கட்டமான உச்சக்கட்டத்தில் யாருமே எதிர்பாராத நிலையில் ருத்ர நாராயணன் அதிரடியாக களமிறங்கியது மரண அடியை கொடுத்திருந்தது.


வெங்கடேஷ் ஒருவேளை தன் மகனின் திருமணத்திற்கு சம்மதித்து இறங்கி வந்தாலும், தங்கையின் திருமணத்தையே ஏற்றுக் கொள்ளாத ரங்கநாதன் நிச்சயம் விஷ்ணு உடனான தன் மகளின் திருமணத்தை ஏற்றுக் கொள்ள மாட்டான். நீர் பூத்த நெருப்பாக இருந்த பகைமை இருவருக்கிடையே அனலைக் கக்கிக் கொண்டு வெடிக்கும் .. ஒருவரோடு ஒருவர் மல்லுக்கு நிற்பர் என்றெல்லாம் மனப்பால் குடித்துக் கொண்டிருந்தவருக்கு, தன் மகளின் திருமணத்தை எப்படி அதிரடியாக நடத்தி முடித்தாரோ, அதே போல் தன் பேத்தியின் நிச்சயதார்த்தத்தை ருத்ர நாராயணன் அடாவடியாக நடத்தி முடித்தது பெரும் அதிர்ச்சியை கொடுத்திருந்தது.


வேதாவின் வாழ்க்கையில் நடந்தேறியிருக்க வேண்டிய வில்லங்கம், விவகாரம், இப்போது விஷ்ணுவின் வாழ்க்கையில் நடத்திப் பார்க்க ஆவல் கொண்டிருந்தவருக்கு ஏமாற்றமே கிடைக்க, வேறு வழியில்லாமல் வேற வழியை கையாண்டு தன் பகையை தீர்த்துக்கொள்ள முடிவெடுத்தார்.


விஷ்ணுவிற்கு ஸ்ரீயை தனியே சந்தித்து, அவள் கலங்கியதற்கான காரணமும் அவளது அலைபேசி எண்ணையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தோன்ற, அதனை செயல்படுத்துவதற்கான சந்தர்ப்பத்திற்காக காத்துக் கொண்டிருந்தான்.


ஆனால் அவன் எதிர்பார்த்தது போல்,
அப்படி ஒரு சந்தர்ப்பம் சுலபமாக வாய்க்கவில்லை. வீட்டில் எங்கு பார்த்தாலும் ஆள் நடமாட்டம் இருந்து கொண்டே இருந்தது.


வீட்டுத் திண்ணையை ஒட்டிய சேமிப்பறை எனப்படும், வீட்டு கிடங்கில் வருட சேமிப்பு உணவுப் பொருட்களான விதை நெல், நெல், அரிசி, புளி ,கம்பு, சோளம் ஆகியவை சால் எனப்படும் ஆளுயர பானையில் சேமிப்பது வழக்கம்.
அந்த அறையின் பரணையில் பல பழங்கால பொருட்கள், அறையின் மூலையில்
வீட்டிற்கு தேவையில்லாத தட்டுமுட்டுச் சாமான்கள் போட்டு வைக்கப்பட்டிருக்க
எலி, பூனை, கரப்பான் ஆகியவற்றின் தொல்லையை கட்டுப்படுத்துவதற்காக அங்கு ஜீரோ வாட் வெளிச்சமுள்ள சிறிய பல்பு எப்பொழுதும் எரிந்து கொண்டிருக்கும்.

மாலை முடிந்து இரவு தொடங்கும் தருணத்தில், ஸ்ரீ கையில் வைத்து கொஞ்சிக்கொண்டிருந்த பூனை, தாவிக்குதித்து அந்த சேமிப்பறைக்குள் ஓட, ஸ்ரீ அதனை பிடிக்க பின் தொடர, சுற்றி முற்றி பார்த்த விஷ்ணு, கூடத்தில் யாரும் இல்லை என்று உறுதிப்படுத்திக்கொண்டதும், இதுதான் தருணம் என
ஸ்ரீயை பின் தொடர்ந்து அந்த அறைக்குள் நுழைந்தான்.


சற்று பெரிய அறை என்பதால், ஸ்ரீ பூனையைத் தேடிக்கொண்டே தட்டுமுட்டுச் சாமான்கள் இருக்குமிடத்தை நெருங்கும் போது ஆள் அரவம் கேட்க, திரும்பிப் பார்த்தவளுக்கு அங்கு விஷ்ணுவை கண்டதும் இன்ப அதிர்ச்சியில் அவள் உறைந்து நிற்க


அந்த ஜீரோ வாட் ஒளியில், பட்டுப்பாவாடை தாவணியில் தங்கசிலையாய் மின்னிய , தன் காதலியை பார்த்து உறைந்து நின்றவனின் இதயத்துடிப்பு ஓங்கி ஒலிக்க , அடி மேல் அடி எடுத்து அவளை நெருங்கும் போது,
திடீரென்று யாரோ அந்த ஜீரோ வாட் பல்பை அணைத்ததோடு, அறையின் வாயிற் கதவை வெளி தாழ்ப்பாள் போடும் சத்தம் கேட்க , துணுக்குற்றவன் திரும்பி கதவைப் பார்க்கவும், திடீரென விளக்கு அணைந்தால் இருட்டுக்கு பயந்து ஸ்ரீ கத்த ஆரம்பிக்கவும் சரியா இருக்க, உடனே கண்ணிமைக்கும் நேரத்தில் அவள் வாயை பொத்தியவனுக்கு புரிந்து போனது, வெளி தாழ்பாள் போட்ட நபர் யார் , அவரது உள்நோக்கம் என்ன என்று.


ஒரு சில நொடிகளில் , மேல் ஜன்னலிலிருந்து வெளிப்படும் பௌர்ணமி நிலவின் ஒளி கீற்று, அந்த அறை முழுவதும் ஆக்கிரமிக்க, இடது கையால் அவள் கழுத்தை பற்றி வலது கையால் அவள் வாயை பொத்தியிருந்தவனுக்கு,
அந்த நெருக்கம் மயக்கத்தை கொடுக்க, அவளது பஞ்சு போன்ற கன்னம் பலாச்சுளை போன்ற உதட்டின் மென்மையில், தன்னை மறந்து அவன் மேலும் நெருங்க, அவளும் கொஞ்சம் கொஞ்சமாக பின்னோக்கி நகர்ந்து சுவற்றில் மோதி நின்றவளின் கண்கள் விண்மீன்களாய் ஜொலிக்க


அதனைப் ரசித்து பார்த்தபடி கத்த கூடாது என்பது போல், இடவலமாக தலையசைத்தவன், அவள் வாயிலிருந்து கையை எடுத்துவிட்டு,
அவள் கன்னம் நோக்கி குனியும் போது , சுமித்ரா "ஸ்ரீ......"
என்று அறைக்கு வெளியே அழைப்பதை இருவரும் ஒரு சேர கேட்டதும் சுயம் உணர்ந்தவனுக்கு பிரச்சனையின் வீரியம் அப்போதுதான் புரிய ஆரம்பித்தது.


" ஒன்னும் பயப்படாதீங்கோ... கதவை தட்டினா திறக்கப்போறா... யாரோ நாம உள்ள இருக்கிற்து தெரியாம வெளில லாக் பண்ணிட்டிருக்கா போல..." என ஸ்ரீ வெள்ளந்தியாக சொல்ல


" சரி.... கதவு திறந்ததும், நீ எதுக்காக இங்க வந்தேன்னு கேட்டா என்ன பதில் சொல்லுவ..." என ஆர்வத்தோடு விஷ்ணு கேட்க


" பூனை புடிக்க வந்தேன்னு சொல்லுவேன் ..." என்றாள் குழந்தையாய்.


" என்னை எதுக்காக இங்க வந்தேன்னு கேட்டா நான் என்ன பதில் சொல்றது..."


" ஆமா... நீங்க எதுக்காக இங்க வந்தீங்கோ..." என அப்போது தான் அவன் வரவின் நோக்கத்தை அவள் அறிய முயல


" ம்ம்ம்ம், இப்பவாது கேட்டியே... உன் கிட்ட தனியா பேசணும்னு வந்தேன்.. பட் நவ் வி ட்ராப்புடு...(now we trapped...)"


" அப்படின்னா ..."


" எக்கச்சக்கமா மாட்டிக்கிட்டோம்னு அர்த்தம் ..."


" ஐய்ய... அது நேக்கு புரியர்து... எப்படி மாட்டிண்டுடோம்னு தான் கேக்கறேன்..."


"காலையில தான் நம்ம ரெண்டு பேருக்கும் நிச்சயதார்த்தம் நடந்திருக்கு... இப்ப ரெண்டு பேரும் இந்த ரூம்ல ஒன்னா தனியா இருந்தா பார்க்கிறவங்க என்ன நினைச்சுப்பாங்க..." என்றவனின் பேச்சு புரிந்ததும், சற்று நாணத்துடன் அவள் தலைகுனிய


" யப்பா... இப்பவாது புரிஞ்சதே... சுத்தமா குடும்பமே மட்டியா இருக்கும் போல இருக்கே ...ஜெனிடிக் இஷ்யூன்னு நினைக்கிறேன் ..." என்றவன் சுற்றி முற்றி பார்த்து விட்டு


" இப்ப நீ என்ன பண்ற, நீ இங்கேயே இருக்க ...நான் அந்த ஜன்னல் வழியா வழி ஏதாவது இருக்கான்னு பார்த்து குதிச்சு போனதுக்கு அப்புறம் நீ கதவை தட்ற ..."


" ஐயோ பெருமாளே , நேக்கு தனியா இருட்டுல இருக்க பயம்மா இருக்கு ... மூச்சு முட்றது.."


" உன்னோட இருட்டுல நான் தனியா இருந்தா எனக்கும் தான் மூச்சு முட்டுது ..." என்றான் குறும்பாய்.


" பேசாம ரெண்டு பேருமே போய் கதவை திறந்திடலாமே ... நீங்களும் என்னோட பூனை புடிக்க வந்ததா சொல்லிடலாம் ...எல்லாரும் நம்பிடுவா..."


" நீ சொல்லவே வேணாம் உன்னை பார்த்தாலே பூனை புடிக்க வந்த மாதிரி தான் இருக்குது....


ஆனா என்னை பார்த்தா பூனை புடிக்கிறவன் மாதிரியா இருக்கு... சரி அப்படியே சொன்னாலும் யாராவது நம்புவாங்களா ... அதுவும் உன் சின்ன அண்ணன் இருக்கானே, நான் புலி புடிக்க வந்ததா சொன்னா கூட நம்பிடுவானே ஓழிய பூனை புடிக்க வந்ததா சொன்னா நம்பவே மாட்டான் ...
அம்மா தாயே, உன்னை ஒன்னும் சொல்ல மாட்டாங்க ...என்னை தான் சொல்லுவாங்க... இங்க பார் முள்ளு மேல சேலை விழுந்தாலும், சேலை மேல முள்ளு விழுந்தாலும் .... ..." என்று நிறுத்தியவன்


"தர்ம அடி வாங்க போறதென்னவோ முள்ளு தான் ..."


" அப்படின்னா ..."


" இதை புரிஞ்சிக்கிற அளவுக்கு உனக்கு கெபாசிட்டி இருந்தா நீ ஏம்மா பூனை புடிக்க போற..."


" பூனை புடிக்கிறது குத்தமா ... " என்றாள் மிகுந்த வருத்தத்தில்.


" இல்லம்மா.... மகா புண்ணியம் ..."
என இருவரும் சன்னமாகப் சம்பாஷனை நடத்திக்கொண்டிருக்கும் போது, கூடத்தில் வேதா,சுமித்ரா, ஸ்ரீராம் ,மரகதம் என ஆளுக்கு ஒரு திசையில் அறை அறையாய் ஸ்ரீயை தேடிக் கொண்டிருக்க, விஷயம் புரியாமல் தெளிவான குரலில் வெங்கடேஷ்,


" என்ன வேதா என்ன பிராப்ளம்..."


" ஸ்ரீயை காணோம்னா... தேடிண்டு இருக்கோம்..."


" என்னது... ஸ்ரீயை காணமா..." என வெங்கடேஷ் எதிர் கேள்வி எழுப்ப,


" ஐயையோ ... என் அப்பாவுக்கு மட்டும் நாம இங்க இருக்கிறது தெரிஞ்சது சும்மா தங்கப்பதக்கம் சிவாஜி மாதிரி என்னை தட்டி தூக்கிடுவாரு..." என விஷ்ணு அலற


" ரஜினி படமா ..." என ஆசுவாசமாய் அவள் கேட்க


" தங்கப்பதக்கம் சிவாஜிங்கிறேன்... ரஜினி படமான்னு கேக்கற.. சினிமாவுலயும் நீ சைபர்கேஃப் தானா...
அம்மா பரதேவத, நீ ஞான பழம்னு ஊருக்கே தெரியும் ... அதனால உன்னை யாரும் ஒன்னும் சொல்ல மாட்டாங்க ... என்னை தான் என் அப்பா புழிஞ்சிடுவாரு... வளர்ந்த பையன்னு கூட பார்க்காம, விரட்டி விரட்டி வெளுத்துடுவாரு தாயே... நான் இப்பிடீக்கா எப்படியாவது அப்பீட் ஆயிடறேன்... நீ வந்த வழியே போய்டு ஆத்தா... "


" நான் இப்ப இங்க இருந்து வெளில போனா, இருட்டுல ஏன் பூனை புடிக்கப் போனேன்னு ஸ்ரீராம் தலையில கொட்டுவான் விஷு..." என உதடுகள் துடிக்க கண்கலங்கியபடி அவளது அதிகபட்ச கவலையை தெரிவிக்க , அதைக் கேட்டவனுக்கு முதலில் சிரிப்பு பொத்திக் கொண்டு வர, பிறகு அவள் முகத்தில் தெரிந்த பயத்தை பார்த்து,


" உன் பிரச்சினை உனக்கு... என் பிரச்சனை எனக்கு... அதோட இந்த பூனை புடிக்கிற பிரச்சனை வேற பெரும் பிரச்சனை ஆயிடுச்சு...சரி, பயப்படாத எதுவாயிருந்தாலும் சமாளிக்கலாம் ..."


" எப்படி ..."


" எப்படின்னு உடனே கேட்டா எப்படி பதில் சொல்றது... யோசிக்கனுமில்ல..."


என்றவனுக்கு,
முதன்முறையாய் வியர்த்துக் கொட்ட ஆரம்பித்தது.


" ஸ்ரீ எங்க போனா... கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கூடத்துல பார்த்தேனே..." என சிம்மக் குரலில் ருத்ர நாராயணன் கேட்க,


" ஐயையோ தாத்தா..." என சன்னமாக ஸ்ரீ அலற,
" ஓ மை காட் .... அப்பா, அம்மா, தாத்தாவை எப்படி நான் ஃபேஸ் பண்ண போறேன் ...." என விஷ்ணு தலையில் அடித்துக்கொள்ள,


இருவரின் இதயமும் 200 டெசிபலில்
ஓங்கி ஒலிக்க ஆரம்பித்தது...
திக்... திக்..... திக்...


தகிப்பாள்
 
அத்தியாயம் 11

விஷ்ணு.... யோசி டா, இப்ப என்ன பண்றது .... என தனக்குள்ளே புலம்பிக் கொண்டிருந்தவன் எதேச்சையாக விட்டத்தை பார்க்க, மின்னலென ஒரு எண்ணம் அவன் மனதில் மின்னியது.

ஆண்டு உணவுப்பொருட்களை சேமிக்கும் இம்மாதிரியான வீட்டு கிடங்கின் விட்டத்தில் இரு ஆட்கள் நுழையும் அளவிற்கு கதவுடன் கூடிய ஒரு திறப்பு எப்பொழுதும் பொருத்தப்பட்டிருக்கும்.

மொட்டை மாடியில், நெல், கேழ்வரகு , கம்பு போன்ற உணவு தானியங்கள் வெயிலில் காய வைத்திருக்கும் போது, எதிர்பாராத மழை அல்லது அளவுக்கதிகமான காற்றடிக்கும் நேரத்தில், உடனடியாக வீட்டு கிடங்கின் விட்டத்தில் இருக்கும் இந்த திறப்பின் வழியாக தான் காய வைத்திருந்த அந்த உணவு தானியங்கள் அனைத்தும் உட் செலுத்தப்பட்டு பாதுகாக்கப்படுவது வழக்கம்.

வெயில் காலம் என்பதால், அந்த மொட்டைமாடி திறப்பு அரைகுறையாக மூடப்படாமல் திறந்திருக்க,
சற்று தள்ளி சுவற்றில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த ஏணியை எடுத்து, அந்த திறப்பின் வாயிலில் பொருத்தியவனுக்கு மேலும் ஒரு எண்ணம் தோன்றியது.

இந்த சேமிப்பு அறையில் தட்டுமுட்டுச் சாமான்கள் அதிகமிருப்பதால் பொதுவாக யாரும் புழங்க மாட்டார்கள் என்ற எண்ணத்தில் தான் இது வரையில், யாரும் இந்த அறையை ஆய்வு செய்யவில்லை.
அதுமட்டுமல்ல கடந்த 15 நிமிடங்களாக ஸ்ரீயை காணவில்லை என்பதை அனைவரும் அறியும்படி செய்து விட்டுத்தான், இந்த அறையை பற்றி ஆனந்தவல்லி மூச்சே விடுவார் என்பதை அறிந்த விஷ்ணு,
கதவருகில் இருந்த பழைய ஆட்டுக்கல்லை நகர்த்தி,கதவு உடனே திறக்கப் படாமல் இருக்க உட்புறமாக முட்டுக் கொடுத்தான்.

ஆம் விஷ்ணுவின் கணிப்பு சரியே. இந்த நாடகத்தை செவ்வனே அரங்கேற்றி கொண்டிருப்பது ஆனந்தவல்லி தான்.

" ஸ்ரீ, முதல்ல நான் ஏணில ஏறி போறேன்... அப்புறம் நீ ஏறி வா ..."
என்றவன் அவளது பதிலுக்கு காத்திராமல், விறு விறுவென ஏறி,
விட்டத்தின் கதவை சத்தம் வராமல் மெதுவாக நகர்த்தி , சுவற்றில் கையூன்றி தாவி மொட்டை மாடியை அடைய,

" ஒரு வேளை ஸ்ரீ இந்த ரூமுக்குள்ள இருக்காளோ என்னவோ ..." - இது ஆனந்தவல்லி.

" இல்ல பாட்டி ...இங்க எல்லாம் அவ போகமாட்டா... பயப்படுவா..." - இது ஸ்ரீராம்.

" ஆத்துல எல்லா இடத்துலயும் தேடியாச்சு... இந்த ரூம் தான் பாக்கி ... ஒரு வேளை இங்க இருக்காளோ என்னமோ...ஓபன் பண்ணு ஸ்ரீராம்..."- இது வேதா.

இவர்களின் உரையாடல்கள் செவ்வனே
விஷ்ணு மற்றும் ஸ்ரீயின் காதுகளுக்கு எட்ட, ஸ்ரீ முந்தானையை இடுப்பில் அள்ளி முடிந்து கொண்டு, கண்களில் ஒரு வித பயத்தோடு, ஒவ்வொரு படியாக ஏறி திறப்பின் நுனியை அடைய , விஷ்ணு தன் இரு கரங்களை, ஸ்ரீயின் இரு தோள்களுக்கு கீழே கொடுத்து அலேக்காக அவளை தூக்குவதற்கும்,
கீழே மற்றவர்கள் கதவை திறப்பதற்கும் சரியாக இருந்தது .

" பாருங்கோ... எவ்ளோ இருட்டா இருக்கு இங்கெல்லாம் நிச்சயமா ஸ்ரீ இருக்க மாட்டா..." எனக்கூறி ஸ்ரீராம் நடையை கட்ட, கூட்டம் களைய,

" நில்லுங்கோ, லைட்டை போட்டு பார்ப்போம் .."
என்று விளக்கைப் போட்டு பார்த்த, ஆனந்தவல்லிக்கு குழப்பமே மிஞ்சியது .

" எங்க போயிருப்பா... ரெண்டு பேரும் ...."
என தனக்குள்ளே பேசிக் கொண்டவருக்கு, ஏணி சாய்ந்து நின்றதை பார்த்ததும், அவரது குயுக்தி புத்தி சரியாக வேலை செய்ய,

" ஒரு வேளை மொட்டை மாடில இருக்காளோ என்னவோ ..." என அடியெடுத்துக் கொடுத்தார் ஆனந்தவல்லி.

முழு நிலவொளியில் காதலியின் முகத்தை ஆசை ததும்ப பார்த்துக் கொண்டிருந்தவன், தன் மனதில் உள்ளதை அவளிடம் கேட்க நினைக்கும் போது , சற்றும் எதிர்பாராமல் இவ்வளவு நேரமாக ஸ்ரீ தேடிக் கொண்டிருந்த பூனை, திறப்பிலிருந்து தாவி குதிக்க, அருகில் நின்றிருந்தவள் பயத்தில் விஷ்ணுவை இறுக தழுவிக்கொண்டாள்.

குளிர்ச்சி தரும் நிலவொளியில், இளம் தென்றல் காற்றில் , காதலியின் முதல் ஸ்பரிசம், அவன் உடலின் உஷ்ணத்தை உச்சத்திற்கே கொண்டு செல்லும் போது,

" சரி பாட்டி, மொட்டை மாடில இருக்காளான்னு பார்த்துட்டு வரேன் ..." என்ற ஸ்ரீராமின் குரல் கேட்டதும்,

" ஐயோ... உன் அண்ணன் வரான்.. சோலி முடிஞ்ச்... ஒரே வழிதான் இருக்கு ...நீ தோட்டத்துக்குப் போ .." என்றான் சுயம் உணர்ந்து விஷ்ணு.

" நீங்கோ..."

" என்னை பத்தி கவலை படாத ...நான் பட்டு மாமி வீட்டு மாடிக்கு தாவி அங்கிருந்து பின் வழியா பைப்பை புடிச்சி கீழ இறங்கி , ரோடுக்கு போயிடுவேன்..."

" முடியுமா ... எங்கேயாவது விழுந்திட போறீங்கோ..."

" என் வேலையே இதுதான் ... இத்தனை நாள் ப்ரொபஷன்காக செஞ்சுகிட்டு இருந்தேன்... இப்ப பர்சனல்காக செய்யப்போறேன் அவ்ளோ தான்... விடு ஜூட் ..." என்றவன் குரங்குக்கே சவால் விடுவது போல் தாவி குதித்து தலை மறைவானான்.

உடனே மின்னல் வேகத்தில் ஸ்ரீ இறங்கி தோட்டத்திற்கு செல்லவும், மொட்டை மாடிக்கு செல்லும் முதல் படியை ஸ்ரீராம் நெருங்கவும் சரியாக இருக்க

" ஏய் ஸ்ரீராம், கீழே இறங்கி வாடா ...ஸ்ரீ இங்க தான் கொல்லையில இருக்கா..." என்ற சுமித்ராவின் பேச்சைக் கேட்டு,
பாதியில் திரும்பியவன்,

" அறிவிருக்கா ... எங்கடி போயிருந்த ...
ஆத்துல எல்லாரும் உன்னை தேடிண்டு இருக்கோம் ..."

" முல்லைப் பூ பறிக்க போயிருந்தேன் ..."

" ஆமா பூ பறிக்க போனேன்... பூனை புடிக்க போனேன்னு ... இதெல்லாம் ராத்திரில செய்ற வேலையா ..." என்றவனின் இயல்பான கேள்வியில்
ஸ்ரீ பதட்டமடைய,

" குழந்தையை வைய்யாத டா ...நீ வாம்மா ஸ்ரீ .." என சுமித்ரா அவளை அழைத்துச் செல்ல,

சற்று நேரத்திற்கெல்லாம், வீட்டு வாயிலில் இருந்து உள்ளே நுழைந்த விஷ்ணுவை சந்தேகக் கண்ணுடன் ஸ்ரீராம் நோக்க,

இன்னும் இந்த கடுவன் பூனை, உள்ள போகலையா .... விஷ்ணு 'டர்' ஆவாத டா ... என தனக்குத் தானே தைரியம்
அளித்துக்கொண்டு வந்தவனிடம்,

" ஸ்ரீ தோட்டத்துல இருந்து வரா... நீ வாசல்ல இருந்து வர... என்ன நடக்கற்து இங்க..." என்றான் துப்பறியும்
சாம்புவாக ஸ்ரீராம்.
உடனே விஷ்ணு தனது ட்ரேட்மார்க் புன்னகையுடன், கண்களில் குறும்பு மின்ன, கைகளை மார்பின் குறுக்கே கட்டிக்கொண்டு

" மச்சான் உன் மனசு புரியுது... ஆனா அதுக்கெல்லாம் இப்ப வாய்ப்பே இல்ல ராசா ... இன்னும் நாள் இருக்கு ... வருத்தப்படாத ....
உன் பிரச்சனை தான் என்ன ...
ரெண்டு பேரும் சேர்ந்து வரலன்னு வருத்தப்படறீயா....இல்ல ... தனித்தனியா வந்தோம்னு சந்தோஷப்படறீயா..."
என்றவனை கொலைவெறியுடன் பார்த்துவிட்டு ஸ்ரீராம் நகர்ந்ததும்,
இதுதான் தருணம் என நாலு கால் பாய்ச்சலில், தன் அறையை வந்தடைந்தவன்

" யப்பா ... கண்ணைக்கட்டிடுச்சி டா சாமி... நிஜமாவே இன்னைக்கு கச்சேரி கலை கட்டிடிச்சிடோய்..." என வாய்விட்டே கண்ணாடியை பார்த்து ஒருவித பெருமூச்சுடன் கூறியவனிடம் ,

" மிஸ்டர் இன்டலிஜென்ஸ் ஆபீசர் ..." என்றார் வெங்கடேஷ்.

"வா... வாங்கப்பா ..." என்றான் எதிர்பாராத அவரது வரவை கண்டு குரலில் இயல்பைக் கூட்டி .

" என்ன நடக்குது இங்க... நீ எங்க போய்ட்டு வர..."

" சும்மா போரடிக்குதேன்னு வாக்கிங் போயிட்டு வந்தேம்ப்பா..."

" பொய் சொல்லாத விஷ்ணு ...நான் உன் அப்பா மட்டும் இல்ல போலீஸ் காரனும் கூட..." என்றவரின் துளைத்தெடுக்கும் பார்வையைப் பார்த்ததும், நடந்த அனைத்தையும் விஷ்ணு பகிர,

" எல்லாம் சரிதான் ... கண்கட்டு வித்தை மாதிரி சிச்சுவேஷனை அம்சமாக ஹேண்டில் பண்ணியிருக்க...
ஆனா ஆதாரத்தை விட்டுட்டு வந்துட்டியே ..." என்றவர்
விஷ்ணுவின் வாட்சை தூக்கி காட்டிவிட்டு

" விஷ்ணு இந்த வாட்ச்சோட , கொஞ்சம் பூ இதழ்களும் இருந்தது ... ஸ்ரீராம் மேல போயிருந்தான்னா நிச்சயமா இதையெல்லாம் பார்த்திருப்பான்..." என்றவர்
" ஸ்ரீ முகத்துல அளவுக்கதிகமான பயம், உன் முகத்துல படபடப்பு, எல்லாத்தையும் கணக்குப் போட்டுப் பார்த்து தான் என்ன நடந்திருக்கும்னு முடிவு பண்ணி மொட்டை மாடிக்கு போய் பார்த்தேன் ... இந்த ஒரு காரணம் போதும், ரங்கநாதன் எல்லார் முன்னாடியும் உன்னை அசிங்கப்படுத்த ... " என்றார் அவனை ஆழ்ந்து நோக்கி.

" அப்பா, நான் எந்த தப்பான எண்ணத்துலயும் ஸ்ரீயை பார்க்க போல,
அவளுக்கு என்னைப் பிடிச்சிருக்கான்னு தெரிஞ்சுக்கணும்,
அவளோட போன் நம்பர் வாங்கணும்னு தான் போனேன் ..." என்றான் மீண்டும்.

" இதுவும் தப்பு விஷ்ணு ... ஸ்ரீ உனக்கு நிச்சயம் பண்ணியிருக்கற பொண்ணு அவ்ளோதான்... அவ உன் பொண்டாட்டி இல்ல ... ஒரு வேளை ஸ்ரீ உன் பொண்டாட்டியாவே இருந்தாலும் , அவ படிப்பு ரொம்ப முக்கியம் ... இந்த மாதிரி போன்ல பேசற எண்ணத்தை எல்லாம் முதல்ல நிறுத்து ...." என ஒரு நல்ல தந்தையாக, தப்பான எந்த வார்த்தைகளையும் பயன்படுத்தாமல், கண்ணியத்தோடு அறிவுரை கூற,
விஷ்ணு பதில் பேச தெரியாமல் தலைகுனிய, பிறகு தொடர்ந்தவர்

" சரி கேட்டியா, அவளுக்கு உன்னை பிடிச்சிருக்கா ..."

" கேக்க முடியலப்பா ...ஆனா அவளுக்கு என்னை நிச்சயமா பிடிக்கும் ப்பா ...." என்றதும் தன் தந்தை மற்றும் மாமனாரிடம் தான் கூறிய அதே பதிலை தன் மைந்தன் தன்னிடம் கூறியதை நினைத்து பார்த்து இதழ் பிரியாமல் புன்னகைத்தவர்

" சரி விஷ்ணு .... இனிமே இந்த மாதிரி நடக்காம பார்த்துக்கோ ... உன் தாத்தா, பாட்டி, உன் மேல அளவுக்கதிகமா நம்பிக்கையும் பாசமும் வச்சிருக்காங்க ... ஸ்ரீக்கு ஒண்ணுமே தெரியாதுன்னு எல்லாருக்குமே தெரியும்... இதெல்லாம் உன் அம்மாவுக்கு பிடிக்காது ... ஏற்கனவே நீ உன் காதல்ல ஸ்ட்ராங்கா இருக்கியாங்கிற டவுட் அவளுக்கு இருக்குது... இப்படி நடந்தது தெரிய வந்தா, அவ இதை காதலாவே கன்சிடர் பண்ண மாட்டா... பார்த்து நடந்துக்கோ ...ஹோப் யூ அன்டர்ஸ்டேன்ட் ... குட் நைட் ..." என்று விடைபெற்ற வெங்கடேஷ் ஒரு நொடி நின்று,

" இதை யார் செஞ்சிருப்பான்னு நினைக்கிற ..."

" அத்தைப் பாட்டி இல்ல ரங்கநாதன் மாமாவா இருக்கணும் ப்பா ..." என்றான் சிறு சந்தேகத்தோடு.

" இதை உங்க அத்தை பாட்டி தான் செஞ்சிருக்கணும்... ரங்கநாதன் ஆட்டம் வேற மாதிரி இருக்கும் .... அது எனக்கு தெரியும் ..." என்றபடி அறையை விட்டு வெளியேறினார்.

நாளை மறுநாள் ஊருக்கு செல்லவிருப்பதால், வேதா அதற்கான பயண ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்க , அவர் அறைக்கு வந்த மரகதம்,

" வேதா, உடனே ஊருக்குப் போய் ஆகணுமா ... இன்னும் ஒரு வாரம் இருந்துட்டு போயேன் டி ..."

" இல்லம்மா, நாளன்னிக்கே கிளம்பி ஆகணும்... எல்லா வேலையையும் போட்டது போட்டபடி பாதில விட்டுட்டு வந்திருக்கேம்மா..."

" நேக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு டி ...என் பேரன் பேத்தியோட நிச்சயதார்த்தத்தை கண் குளிர பார்த்துட்டேன்... உன் கல்யாணத்தை தான், என் கண்ணுலயே காட்டாம, உன் அப்பா மட்டும் முன்னிருந்து நடத்தி முடிச்சிட்டேரே...." என்றவரின் குரலில் அளவுக்கதிகமான கசப்பு தெரிய,

" என்னம்மா புதுசா பேசற.... நோக்கு யார் சொன்னது .... அப்பா என் கல்யாணத்தை முன்னிருந்து நடத்தினேர்னு.... அவர் என்னை கோவிலுக்கு அழைச்சிண்டு போனதோட சரி.... ராமானுஜம் மாமா தான் என்னை கன்னிகாதானம் பண்ணி கொடுத்தேர்...அப்பா கல்யாணம் நடந்து முடிகிற வரைக்கும்,
சபைக்கே வரல ...அப்புறம் கேட்டதுக்கு,
உன் அம்மா பார்க்காத கல்யாணத்தை நான் மட்டும் எப்படிம்மா பார்ப்பேனு சொன்னேர்.... நீ என் கல்யாண ஆல்பத்தையே பாக்கலையா .... எந்த ஃபோட்டோவுலயும் அப்பாவை நீ பார்த்திருக்கவே முடியாது ம்மா ... கல்யாணம் முடிஞ்சதுக்கு அப்புறம் தான், பெருமாள் சன்னதில இருந்து வந்தேர்...." என்ற மகளின் நீண்ட விளக்கம், அவர் நெஞ்சில் மிகுந்த அழுத்தத்தை ஏற்படுத்த, கண்கள் பனிக்க,

" வேதா நீ சொல்றதெல்லாம் நிஜமா ..." என்றார் உடல் குலுங்கி மனம் தளர்ந்து சன்னமாக.

" ஆமாம்மா ... நோக்கு அப்பாவை பத்தி தெரியுமோல்யோ... பார் கவுன்சில் மெம்பர் ஆத்து கல்யாணத்துக்கு கூட , உன்னை விட்டுட்டு
தனியா போக மாட்டேறே..."

" பின்ன ஏன் உன் கல்யாணத்தை மட்டும் என்ணின்ட சொல்லாம நடத்தினேர்...." என ஆற்றாமையோடு மரகதம் வினவ ,

அதற்கு வேதா, அந்த காலத்தில் ஆனந்தவல்லி ஆடிய ஆட்டத்தை புட்டுப்புட்டு வைக்க, அனைத்தையும் கேட்டு ஆடிப்போன மரகதத்திற்கு துக்கம் தொண்டையை அடைக்க ,

அளவுக்கு மீறிய வியர்வை, கைகளில் ஒரு வித நடுக்கம், பேச முடியாதபடி நாக்கு ஒட்டிக்கொள்ள , தாயிடம் தெரிந்த மாற்றத்தை கவனிக்காமல், தன் வேலையிலேயே வேதா மூழ்கியிருக்க,

ஆனந்தவல்லியை நம்பிய அளவிற்கு கூட ஆத்துக்காரரை நம்பவில்லையே என்ற குற்ற உணர்வு மரகதத்திடம் பல மடங்கு பல்கி பெருக,

" அம்மா, இன்னைக்கு ஏகாதசி ... நீயும் அப்பாவும் நிர்ஜலம் தானே... இன்னைக்கு நானே தளிகை பண்ணிடறேன் மா ..." என தலை குனிந்தபடி துணிகளை அடுக்கிக் கொண்டிருந்தவரிடம், பதில் சொல்லாமல், அடியெடுத்து வைத்து நடக்க கூட முடியாத நிலையில் சுவரை ஆதாரமாக பற்றிக்கொண்டு மெதுவாக அறையை விட்டு வெளியேறியவர்,
ஊஞ்சலில் பேப்பர் படித்துக்கொண்டிருந்த ருத்ர நாராயணனை பிரம்மிப்பாக பார்த்தபடி, தட்டித் தடுமாறி அவரை நெருங்கி,

" நான் செத்த இங்க உக்காரலாமா ..." என வெகு சன்னமாக கேட்க, மனையாளின் இத்தகைய மொழி அவருக்கு மிக புதிதாக இருக்க,

" நம்ப கல்யாணத்தின் போது, நீயும் நானும் ஒண்ணா ஊஞ்சல்ல உட்கார்ந்ததோட சரி... எத்தன தடவ என் பக்கத்துல இந்த ஊஞ்சல்ல உட்கார சொல்லி கேட்டிருப்பேன் ... இன்னைக்கு தான் ஞானோதயம் வந்துதா..." என குறும்பாக கேட்டவர்

" வாம்மா... வந்து உக்கார்..." என்றதும் மரகதம் அவரருகில் அமர்ந்துக்கொள்ள,
அப்பொழுது வீட்டு வாயிலிலிருந்து வந்துக்கொண்டிருந்த ஆனந்தவல்லி,

" வர வர என் தம்பிக்கு அறிவே இல்லாம போயிடுத்து.... ஆத்துல பொண்ணு மாப்பிள்ள, பையன் மாட்டு பொண்ணுன்னு குடும்பத்தோட எல்லாரும் வந்திருக்கும் போது, இது என்ன... என்னைக்கும் இல்லாத திருநாளா, ரெண்டு பேரும் ஜோடியா ஊஞ்சல்ல உட்கார்ந்துண்டு கொஞ்சிண்டு இருக்கிறது ..." என வயிற்றெரிச்சலை வாய்விட்டே சன்னமாகப் புலம்பியபடி கூடத்தை நோக்கி வர


அப்போது மரகதம் ருத்ர நாராயணனை
பெருமையோடு பார்த்து

" நீங்க என்ணின்ட 100 % உண்மையா இருந்திருக்கேள்னா...
ஆனா நான் தான் உங்களை தப்பா புரிஞ்சிண்டிருந்திருக்கேன்...

நேக்கு கண்ல காட்டாம நம்ம பொண்ணு கல்யாணத்தை நீங்க மட்டும் முன்னிருந்து நடத்தி முடிச்சுட்டேளேன்னு இத்தனை நாளா தப்பா நினைச்சிண்டிருந்தேன்... அதனால தான் , வேதா கல்யாணம் எப்படி நடந்ததுன்னு உங்களிண்ட இது வரைக்கும் ஒரு வார்த்தை நான் கேட்டதே இல்ல... என் மனசுல இருந்த வறட்டு வைராக்கியம்,உங்க மேல இருந்த கோபம் எல்லாம் என்னை பேச விடாம பண்ணிடுத்துன்னா... ஊருக்கெல்லாம் நியாயத்தோட நடந்துப்பேளே... பொண்ணைப் பெத்த அம்மா நேக்கு மட்டும் நீங்க நியாயம் பண்ணலையேனு ரொம்ப வருத்தப்பட்டேன் ...
இப்பதான் தெரியற்து நீங்களும் எனக்காக நம்ப பொண்ணோட கல்யாணத்தையே பார்க்கலன்னு...
அக்காவைப் பத்தியும் இப்பதான் புரிஞ்சுண்டேன்...
என்ன ஒண்ணு காலம் கடந்த புரிதல் ...

என்னை கைப்பிடிச்ச நாளிலிருந்து கை குழந்தை மாதிரி பார்த்துண்டிருந்திருக்கேள்... எல்லாரையும் போல நானும் கோவிலுக்கு போய் பெருமாள சேவிச்சிருக்கேன்....ஆனா பெருமாளோடையே வாழ்ந்துண்டு இருக்கேன்னு நேக்கு புரியாம போயிடுத்தேன்னா ...

அடிக்கடி சொல்வேள் என்னை மட்டின்னு... இப்பதான் புரியற்து நீங்க எவ்ளோ சரியா சொல்லியிருக்கேள்னு...

என்னை மன்னிச்சிடுங்கோன்னா..." என வார்த்தைகள் குழறியபடி , அளவுக்கதிகமான முக சிவப்போடு , உடல் தொப்பலாக வியர்வையில் நனைய, தள்ளாடிக்கொண்டே இரு கரங்களையும் கூப்பி மன்னிப்பு வேண்டி எழுந்து நின்றவர் அப்படியே சரிந்து ருத்ர நாராயணனின் பாதத்தில் விழ,

மனையாளின் வார்த்தைகள் மனதை சென்றடையும் முன்னே, அவர் மயங்கி விழுந்ததை பார்த்து பதறி எழுந்த ருத்ர நாராயணன், மரகதத்தை பற்றி தூக்க முயற்சிக்கும் பொழுது, அவரது உயிர் பறவை கூட்டை விட்டு பிரிந்ததை பறைசாற்றும் விதமாக அவர் கண்கள் நிலைகுத்தி நின்றன.

வாழ்க்கையில் சில கேள்விகளுக்கு பதில் தெரியாமலே இருப்பது நல்லது..
அதுவும் காலம் கடந்து அறியும் பதில்கள் காலனையே அழைத்துவிடும்
என்பதற்கு மரகதம் ஒரு சான்று.

நீண்ட காலமாக மனதில் ஊறிப் போயிருந்த ஆற்றாமை, கோபத்தின் தாக்கம் தான், திடீரென அளவுக்கு அதிகமான குற்ற உணர்வாக உருமாறி இப்படி ஒரு முடிவை தேடிக் கொடுத்திருந்தது.

கடவுளும் பல காரணங்களுக்காகத் தான் சிலவற்றை நமது பார்வையிலிருந்து மறைக்கிறார் ...

தன் பதில் தன் தாயின் வாழ்க்கைக்கே முடிவுரை எழுதும் என தெரிந்திருந்தால், வேதா நிச்சயமாக இப்படி ஒரு பதிலை சொல்லி இருக்கவே
மாட்டார் .

நிமிட நேரத்தில் ஊரும் உறவும் கூட,

மஞ்சள் , குங்குமத்தோடு தலை நிறைய பூவுடன் மடிசார் புடவையில் கூடத்தில் கிடத்தப்பட்டிருந்த மனையாளின் சாந்தமான முகத்தையே வைத்த கண் வாங்காமல் ருத்ர நாராயணன் பார்த்துக்கொண்டே அமர்ந்திருந்தார்.

அவர் அழவில்லை, கண்கலங்க வில்லை, யாரிடமும் ஒரு வார்த்தை பேசவில்லை ....

ஆனால் அவர் மனதில் ஓடிக்கொண்டிருந்தது எல்லாம் இதுதான்.

எல்லாரையும் நன்னா புரிஞ்சிண்டேன்னு நினைச்சிண்டு இருந்தேனே....

என்னோட அந்த கர்வத்துக்கு பகவான் கொடுத்த மரண அடி இது ...

ஊர் உறவை புரிஞ்சிண்ட நேக்கு, உன்னை புரிஞ்சுக்க முடியாம போயிடுத்தேம்மா....

நீதான் என்னை மன்னிக்கணும் ...

இதுதான் அவர் மனதில் திரும்பத் திரும்ப ஓடிக்கொண்டிருந்தது.

வேதாவின் மகள் வித்யா நிறைமாத கர்ப்பிணியாக இருந்ததால் அமெரிக்காவிலிருந்து வர முடியாமல் போக, மற்ற அனைவரும் அங்கேயே இருந்ததால் யாருக்காகவும் காத்திருக்காமல் செய்ய வேண்டிய அனைத்து கடமையையும் ரங்கநாதன் செய்து முடித்தார்.

ருத்ர நாராயணன் இதுவரை பொய்யுரைத்ததில்லை. ஒரே ஒரு உண்மையை மனையாளிடமிருந்து மறைத்திருந்தார்.

அவர் வேதாவின் திருமணத்தை பற்றி முன்கூட்டியே மரகதத்திடம் சொல்லாததற்கு அவர் அக்கா ஆனந்தவல்லிதான் காரணம் என்ற உண்மைதான் அது.

அந்த குற்ற உணர்வே, ருத்ர நாராயணனை அளவுக்கதிகமாக வாட்ட, மனையாள் இறந்த மூன்றாம் நாளே ,
அவரது ஆன்மாவும் இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற சென்றுவிட்டது.

ருத்ர நாராயணன் என்ற அந்த மாமனிதரின் இறப்பு, அவரது உற்றார் உறவினரை தாண்டி ஊரையே சோகத்தில் ஆழ்த்தியது.

ஒரு மனிதரின் இறப்புக்கு எத்தனை பேர் வருகிறார்கள் என்பதைக் காட்டிலும், எத்தனை பேர் ஆத்மார்த்தமாக அழுகிறார்கள் என்பதே
அந்த மனிதன் வாழ்ந்த வாழ்க்கைக்கு சாட்சி.

மரகதம் மற்றும் ருத்ர நாராயணனின் தொடர் இறப்பு அனைவரையும் பாதித்திருந்தாலும், வெங்கடேஷை வெகுவாக நிலைகுலையச்
செய்திருந்தது .

மாமனார் என்ற உறவைத் தாண்டி ஒரு மாமனிதனின் இழப்பை அவரால் எளிதாக கடந்து செல்ல முடியவில்லை.

தன்னுடைய இந்த உலக உறவானது கூடிய விரைவில் முடியப்போகிறது ,என்பதை உணர்ந்துதான் ருத்ர நாராயணன் அனைவரையும் ஒன்று சேர்த்து தன் பேரன் பேத்தியின்
நிச்சயதார்த்தத்தையும் முடித்தார் போலும்.

புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டுமே கடவுள் முன்கூட்டியே உணர்த்திடும் சூட்சமம் தான் அது.

ருத்ர நாராயணன் இறந்த இரண்டாவது நாள், அவர் எழுதிய உயில் மற்றும் சிறு கடிதமும் படிக்கப்பட்டது.

சொத்து விவரங்களை ஏற்கனவே அவர் கூறியது போல் பிரித்து எழுதப்பட்டிருக்க,
மரகதத்தின் நகைகள் மட்டும், பொதுவே விட்டுச் சென்றிருந்தார்.

அவர் எழுதியிருந்த கடிதத்தில்,

எங்களது காலத்திற்குப் பிறகு என் அக்கா ஆனந்தவல்லி உயிருடன் இருக்கும் வரை, இந்த வீட்டை யாரும் விற்கக் கூடாது.

ஆனந்தவல்லியின் மாதாந்திர செலவிற்காக வங்கியில் 10 லட்சம் இருக்கிறது.
அதில் கிடைக்கும் வட்டியை மாதாமாதம் அவர் பயன்படுத்திக் கொள்ளட்டும்.

மேற்கொண்டு தேவைப்பட்டால், ஆனந்தவல்லியின் மருத்துவச் செலவிற்கென்று ஒதுக்கப்பட்டுள்ள பணத்திலிருந்து எடுத்துக்கொள்ளலாம்.

ஆனந்தவல்லியின் காலத்திற்குப் பிறகு வங்கியில் உள்ள பணத்தை பிரித்து எடுத்துக் கொள்ளவும்
என்ற அறிவிப்பைக் கேட்டு ஆனந்தவல்லி ஆடிப்போனார்.

தன் தம்பி அவனது இறப்பிற்குப் பின்பு கூட, தான் யாரிடமும் எதற்காகவும் கையேந்த கூடாது என்ற ஏற்பாட்டினை செய்துவிட்டு சென்றதை எண்ணி மனம் நெகிழ்ந்தவர், முதன்முறையாக தான் தன் தம்பி குடும்பத்திற்கு இழைத்த அனைத்து அநீதிகளையும் நினைத்துப்பார்த்து கூனி குறுகிப் போனார்.

ஆனந்தவல்லி தன் வாழ்நாளில் எதற்காகவும் அழுததில்லை .
மரகதம் மற்றும் ருத்ர நாராயணனின் இறப்பிற்கு கூட சிறு துளி கண்ணீர் வடிக்கவில்லை.

இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல் என்ற குறலுக்கு ஏற்ப நன்னயம் செய்து விட்டுச் சென்ற தன் தம்பியை நினைத்து, முதன்முறையாக அவரது கண்கள் கண்ணீர் வடிக்கத் தொடங்கின.

பிறகு மரகதத்தின் நகைகளை பற்றி குறிப்பிடும் போது,

வேதாவின் திருமணத்திற்கென்று இது நாள் வரை, நான் எந்த நகையையும் கொடுத்ததில்லை.

என்னுடைய இரண்டு குழந்தைகளைப் பற்றியும் நான் நன்கு அறிவேன் என்று சூசகமாக முடித்திருந்தார்.

உடனே ரங்கநாதன் வெங்கடேஷை பார்த்து

" நேக்கு என் அம்மாவோட எல்லா நகையும் வேணும்.... உங்களுக்கு அந்த நகைக்கு ஈடா மூணு பங்கு பணத்தை கொடுத்துடறேன் ..."

" எனக்கு எந்தப் பணமும் வேண்டாம் நகையும் வேண்டாம்... " என்று உறுதியாக மறுத்துவிட்டார் வெங்கடேஷ்.

உறவினர்கள் அனைவரும் சென்று விட்ட நிலையில் பதினாறாவது நாள் காரியத்திற்காக ரங்கநாதன் மற்றும் வெங்கடேஷ் குடும்பம் காத்திருக்க ,

ரங்கநாதன் தன் ஆட்டத்தின் முதல் அடியை ஆரம்பிக்கும் விதமாக, அனைவரின் முன்பாக
ஆனந்தவல்லியை பார்த்து

" விருதுநகர் போறோம் ... 16ஆம் நாள் காரியத்துக்கு நானும் சுமித்ராவும் வந்துடுவோம் ... " என்றவர் ஒரு கணம் நிறுத்தி,

" என் பசங்க எல்லாரும் நாளன்னிக்கு துபாய் கிளம்பறா.... பிசினஸை இவ்வளவு நாள் பார்க்காம இருக்க முடியாது ... இன்னும் 10 நிமிஷத்துல கிளம்பிடுவோம்... போகும் போது போயிட்டு வரேன்னு சொல்லக்கூடாது அதனாலதான் ..." என பொத்தாம் பொதுவாகச் சொல்லி விட்டு, சென்றவரை ஸ்ரீயை தவிர அனைவரும் பின் தொடர, ஸ்ரீ அசையாமல் கண்களில் கண்ணீரோடு விஷ்ணுவையே பார்த்துக்கொண்டு நின்றாள்.

தாய் தந்தையரின் தொடர் இறப்பு வேதாவை வெகுவாக பாதித்திருக்க அழுதழுது களைத்துப் போயிருந்த வரை மடி தாங்கி இருந்தவனின் பார்வை ஸ்ரீயை நோக்க
இருவராலும் பேசிக்கொள்ள முடியவில்லை, இருவருக்கும் பேசவும் தோன்றவில்லை.

இதனைக் கண்டும் காணாமல் வெங்கடேஷ் அந்த இடத்தை விட்டு நகர,
அதற்கு மேல் ரங்கநாதனின் குடும்பம் காரில் புறப்பட்டு போன சத்தம் மட்டும் அவருக்கு கேட்டது.

மறுநாள் சுமித்ராவிடமிருந்து அழைப்பு வர, விஷ்ணு மற்றும் வேதாவிடம் பேசியவர்

" அவர் என்ன பிளான் பண்ணி இருக்கேர்னு நேக்கு தெரியல... ஆனா அவருக்கு நடந்த நிச்சயதார்த்ததுல துளிக்கூட இஷ்டம் இல்ல ... இப்ப அப்பாவும் அம்மாவும் வேற உயிரோட இல்ல... அதனால என்ன முடிவு எடுப்பேர்னு நேக்கு தெரியல... நாளைக்கு ஸ்ரீ ஸ்ரீராமோட துபாய் போறா.... நேக்கு பயமா இருக்கு... " என மனதில் இருப்பதை கொட்டி தீர்த்தார்.

உடனே விஷ்ணு,

" அப்பா, நான் இப்பவே போய் ஸ்ரீயை கூட்டிகிட்டு வரேன் ..."

" எங்க ... இங்கயா.. மும்பைக்கா..." என கோபத்தை அடக்கிக் கொண்டு வெங்கடேஷ் கேள்வி எழுப்ப,

" ஏன் ஜம்முக்கே என் கூட கூட்டிட்டு போறேன் ..." என அவன் சகஜமாக பதிலளிக்க

" ஓங்கி அடிச்சேன்னா பாரு....
முட்டாளா டா நீ .... உன் தாத்தாக்கு தெரியாத சட்டமா ...இல்ல எனக்கு தெரியாத சட்டமா .... 16 வயசு மைனர் பொண்ணை கடத்திட்டுப் போயிட்டான்னு ஈஸியா உன்னை உள்ள தூக்கி வச்சிடுவான் ரங்கநாதன்....

இப்பதான் நீ ட்ரெயினிங் முடிச்சு வேலைல சேர்ந்திருக்க... எனக்கு உன் கல்யாணம், கெரியர் ரெண்டும் முக்கியம்....அதைவிட உன் லைஃப் எனக்கு முக்கியம் டா...

ஸ்ரீயோட வயசு நமக்கு அட்வான்டேஜ் ...ரங்கநாதனால் இப்ப ஸ்ரீக்கு கல்யாணம் பண்ண முடியாது ..." என்றவர் விஷ்ணுவை உற்றுநோக்கி

"தெரியாமதான் கேக்கறேன்... 16 வயசு பொண்ணை கூட்டிட்டு போய் என்ன பண்றதா உத்தேசம்..." என்ற கேள்வியில் விஷ்ணுவின் முகம் அவமானத்தால் சிவக்க,

" உனக்கு கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசை வந்துடுச்சின்னா சொல்லு ... இன்னும் ஆறு மாசத்துல கல்யாணம் பண்ணி வைக்கிறேன் ... ஆனா ஸ்ரீயை கல்யாணம் பண்ணிக்கனும்னு நீ ஆசைப்பட்டா அவளுக்காக அஞ்சு வருஷம் காத்துகிட்டு இருந்துதான் ஆகணும் ... அதை விட்டுட்டு பொண்ண கூட்டிட்டு ஓடறேன்னு சொல்ற... வெக்கமா இல்ல ... பொண்ணை பெத்தவன் கிட்ட தைரியமா போய் நின்னு பொண்ணு கேட்டு கல்யாணம் பண்றதுல தான் டா ஆண்மையே இருக்கு "
என்ற வெங்கடேஷின் திடமான பேச்சில் விஷ்ணுவின் தலை தன்னிச்சையாக குனிய,

" ஏன்னா இப்படி எல்லாம் பேசறீங்கோ.."
என்று வேதா வருந்த,

" நீங்க ரெண்டு பேரும் ஒண்ணு புரிஞ்சுக்கணும் ... ரங்கநாதன் பூனை இல்ல யானை... தலை மேல ஏறி உட்கார்ந்து தான் அவனை அடக்கணும்... ஸ்ரீ தான் என் வீட்டு மருமக அதுல எந்தவித மாற்றமும் இல்லை...ஆனா அதுக்கு நாம கொஞ்ச காலம் வெயிட் பண்ணித்தான் ஆகணும் ... இவன் அஞ்சு வருஷம்
ஸ்ரீகாக வெயிட் பண்றதா வாக்கு கொடுக்கட்டும் ... அப்புறம் இவன் காதலுக்காக நான் களத்துல இறங்கறேன்... அதுவரைக்கும் ஸ்ரீயோட இவனுக்கு எந்த தொடர்பும் இருக்கக் கூடாது..."
என உறுதியாக வெங்கடேஷ் பேசி முடித்ததும், விஷ்ணு வெடுக்கென்று அந்த அறையை விட்டு வெளியேறினான்.

" நீங்க விஷ்ணுண்ட, ரொம்ப அதிகமா பேசிடீங்கோ..."

" எனக்கும் அவன் மனசு புரியுது ம்மா ... அவன் ஸ்ரீயை ஆழமா நேசிக்கிறான்..
நான் அமைதியா அட்வைஸ் பண்ணி இருந்தா அவன் நிச்சயமா என் பேச்சை கேட்டிருக்க மாட்டான் ... அதனாலதான் அவன் ஈகோவை ஹர்ட் பண்ற மாதிரி பேசினேன் ... இன்னும் கொஞ்ச நாள்ல அவனே எல்லாத்தையும் புரிஞ்சிப்பான்... அது மட்டுமில்ல உங்க அப்பா சாதாரண ஆள் இல்ல .... இந்த மனுஷ பிறவியிலயே பல சாதனைகள் செய்தவர் ... இப்ப தெய்வம் ஆயிட்டாரு ... அவர் கொடுத்த வாக்கை எப்பவும் காப்பாத்தறவரு... இதையும் காப்பாத்துவாரு.... கவலைப்படாத " என பொறுமையாக விளக்கினார் வெங்கடேஷ்.

கடைசி நாள் காரியம் முடிந்ததும்,
"கிளம்பறேன்..." என பொதுவாக அனைவரையும் பார்த்து சொன்ன ரங்கநாதன் வெங்கடேஷிடம்

" என் அப்பாகாக தான் இந்த நிச்சயதார்த்தத்துக்கு நான் ஒத்துண்டேன்... இப்ப அவரே போயிட்டேர்... இனிமே இந்த சம்பந்தம் தொடர்றதுல நேக்கு விருப்பமில்ல... "
என குரலை உயர்த்தாமல் , ஒருவித கர்வத்தோடு கூறி முடிக்க,

" அவசரப்படாதே...கல்யாணத்துக்கு இன்னும் அஞ்சு வருஷம் இருக்கு ... இது என் மாமனார் முடிவு பண்ணிட்டு போனது, நீயோ நானோ நினைச்சா மாத்த முடியாது ..." என திடத்தோடு உறுதியாக வெங்கடேஷ் கூறி முடிக்க,

அதற்கு மேல் அங்கே நிற்க பிடிக்காமல் தன் மனைவியை அழைத்துக் கொண்டு ஆனந்தவல்லியை திரும்பிக்கூடப் பார்க்காமல் காரில் ஏறி புறப்பட்டுச் சென்றுவிட்டார் ரங்கநாதன்.

ஆனந்தவல்லிக்கு முதன்முறையாக அனாதையான உணர்வு தலை தூக்க,
அவர் உணர்வுகளைப் புரிந்து கொண்ட வெங்கடேஷ்,


" நீங்க இந்த வீட்ல தனியா இருக்க வேணாம்... எங்க கூட வந்துடுங்க... என் மனைவி சமையலை நீங்க சாப்பிட வேண்டிய அவசியம் இல்ல ... நான் உங்களுக்காக சமைக்க ஆள் போடறேன் .." என்றவரின் கனிவான பேச்சில் ஆனந்தவல்லியின் கண்கள் கலங்க,
நேக்கு மாப்பிள்ளையா வர இதை விட என்ன தகுதி வேணும் ...என்ற ருத்ர நாராயணனின் வரிகள் அவரது காதுகளில் ஓங்கி ஒலிக்க,

" வேணாம் மாப்பிள ... நான் என்
புக்காத்துல இருந்ததைவிட, இந்த ஆத்துல தான் அதிக நாள் இருந்திருக்கிறேன்... என் சரீரம் இந்த ஆத்தோடயே அடங்கட்டும்... " என்றவருக்கு மரகதம் மற்றும் ருத்ர நாராயணனின் நினைவுகள் வந்து வாட்ட, இருபது நாட்களுக்கு முன்பு கூட தான் என்ற மமதையில் இறுமாந்து இருந்ததை எண்ணிப் வெட்கி போனார்.

மனித வாழ்வு எவ்வளவு சிறியது.
20 நாட்களுக்கு முன் இருந்தவர்கள் இப்போது இல்லை, என்றெல்லாம் நினைத்து வருந்தி கொண்டிருந்தவரிடம்

" லோக்கல் போலீஸ் ஸ்டேஷன்ல சொல்லிட்டு போறேன் ... டெய்லி ரெண்டு வேளை வந்து உங்களுக்கு ஏதாவது தேவையான்னு கேட்டுட்டு போவாங்க ...

உங்களுக்கு ஏதாவது உதவி வேணும்னா அவங்ககிட்ட கேளுங்க நிச்சயமா செய்வாங்க ...
எங்க எல்லாரோட போன் நம்பர் இதுல இருக்கு ... எப்ப வேணாலும் பேசலாம் ..." என்றார் வெங்கடேஷ்.

அக்ரஹாரத்தில் இங்கொன்றும் அங்கொன்றுமாய் இரண்டு மூன்று குடும்பங்கள் மட்டுமே தனித்திருந்த நிலையில், வேறு வழியில்லாமல் ஆனந்தவல்லியின் பாதுகாப்பிற்காக மேற்கூறிய ஏற்பாட்டினை செய்து முடித்திருந்தார் வெங்கடேஷ்.

ருத்ர நாராயணன், மரகதம் இறந்து ஒரு வருடம் கூட சரியாக முடியாத நிலையில், ஆனந்தவல்லியின் குற்ற உணர்வு அவரை மரண படுக்கைக்கே அழைத்து சென்றுவிட்டது.

ருத்ர நாராயணனும் மரகதமும் இருந்தவரையில் ஆனந்தவல்லிகென்று
பிரத்தியேகமான கவலையோ கஷ்டமோ இருந்ததில்லை ... மிகுந்த நிம்மதியோடும் பாதுகாப்போடும் சகல சந்தோஷங்களுடன் சௌக்கியமாக தான் இருந்தார்.

அவர்கள் மறைந்த முதல் மாதத்திலேயே ஒருவித வெறுமை உணர்வு தோன்ற, மாதங்கள் செல்லச் செல்ல.. அவர் மற்றவர்களுக்கு செய்த அட்டூழியமும் அராஜகமும் மனக்கண் முன் வந்து போய் குற்ற உணர்வை அதிகரிக்க செய்ய ...
ஒரு கட்டத்தில் தன்னால்தான் இரு உயிர்கள் போய்விட்டது ... தான் ஒரு கொலைகாரி .... என்ற எண்ணம் நித்தம் நித்தம் அவரை பாடாய்ப்படுத்தி கடைசியில் ஒருவழியாக மரண படுக்கையில் விழ வைத்தது .

ஒரு மனிதன் தன்னை உணர வேண்டுமானால் அதற்கு தனிமை வேண்டும். அது இப்போது தான் அவருக்கு கிடைத்திருந்தது.

அவரது உடல்நிலை சரியில்லை என்ற செய்தி கிட்டியதும் வேதாவும் வெங்கடேஷூம் துரிதமாக கிளம்பி வர,

" உங்க ரெண்டு பேரிண்டையும் மன்னிப்புக் கேட்காம, எங்க அனாதை பொணமா போயிடுவேனோன்னு நினைச்சிண்டு இருந்தேன்...
நல்ல வேளை , பகவான் நேக்கு கருணை காட்டிட்டேர்...
நேக்கு ஒரு மகன் இருந்திருந்தா, நிச்சயமா வேதாவை கல்யாணம் பண்ணி வைக்கணும்னு ஆசை பட்டிருப்பேன் ...

நீங்க நான் பெறாத மகன் ... வேதா தான் உங்களுக்கு எல்லா விதத்திலும் பொருத்தம் மாப்பிள்ள..

என்னை சுத்தி எல்லாரும் நல்லவளா தான் இருந்திருக்கா ,நேக்கு நல்ல வாழ்க்கை அமையாம போனதால , எல்லாரையும் பார்த்து பொறாமைப்பட்டு , எல்லா பாவத்தையும் சேர்த்துண்டுட்டேன்...

கீதையில பகவான் சொல்றேர்

கெட்டவனுக்கு கூட கெட்டது செய் , ஒரு விதத்துல அது தப்பில்ல... ஆனா நல்லவனுக்கு மட்டும் கெட்டத செய்யாத... அது பஞ்ச மகா பாவம்னு...

என் தம்பி, மரகதம், வேதா, விஷ்ணு, நீங்க, யாரும் நேக்கு கெட்டதே நினைச்சதில்ல ... ஆனா நான் உங்க எல்லாருக்கும் கெட்டதை தவிர வேற எதுவுமே நினைச்சதில்ல ...

இதே மாதிரி தான் போன பிறவியிலும் பாவம் செய்திருப்பேன் போலிருக்கு அதனாலதான், இந்த பிறவியில என் வாழ்க்கை நன்னாவே அமையாம போயிடுத்து ...
மறுபடியும் உங்க எல்லாருக்கும் கெட்டது பண்ணி மேலும் பாவ சூழல்ல மாட்டிண்டுட்டேன்... பேசாம வயசான காலத்துல ராமா கோவிந்தான்னு காசி ராமேஸ்வரம் போயி பெருமாள சேவிச்சுண்டு காலத்தை ஓட்டி இருந்திருக்கணும் ... பாவம் பண்ணும் போது பெருமாளோட நினைவு வராதுன்னு சொல்லுவா ... என் விஷயத்துல அது சரியா போயிடுத்து...

ஆனா ஒன்னு மட்டும் நிச்சயம், நீங்க யார் என்னை மன்னிச்சாலும் பகவான் மன்னிக்க மாட்டேர்... செய்யற பாவத்துக்கெல்லாம் மன்னிப்பு கிடைச்சுடுதுன்னா தப்பு பண்றவாளுக்கு தைரியம் வந்துடும் ...
அதனாலதான் பாவத்துக்கு மன்னிப்பு கிடையாது பிராயச்சித்தம் உண்டுன்னு நம்ப வேதம் சொல்றது... ஆனா நான் பண்ணின பாவத்துக்கு பிராயச்சித்தம் பண்ற அளவுக்கு பகவான் நேக்கு கால அவகாசம் கொடுக்கல .. ஒண்ணு மட்டும் நன்னா தெரியற்து...

நான் செய்ததுக்கெல்லாம் தண்டனை நேக்கு அதிகமா காத்துண்டு இருக்குன்னு...
நீங்க ரொம்ப நல்லவர் ... நீங்க வாழ்க்கையில எல்லா சந்தோஷத்தோட ரொம்ப நன்னா இருக்கணும் .... " என்றவரின் மனக்கண்ணில்

" அந்த வாசுதேவரோட பையன் கூட அவ சுத்தாத இடமே இல்ல ... அந்தப் பையனை தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு ஒரே அடம் வேற ... ஏதோ அவா ரெண்டு பேருக்குள்ள தப்பு நடந்திருக்கும் போலிருக்கு...
அதனாலதான் என் தம்பி வேற வழி இல்லாம அவ பண்ற அழிச்சாட்டியத்தால , வாசுதேவரோட மகனுக்கே கல்யாணம் பண்றதா இருக்கான் ..." என சுசீலா மாமியிடம் தூற்றிய காட்சியும்,

" ஒரு வேளை குழந்தையை கலைச்சிட்டாளோ என்னமோ ...." என ரங்கநாதனிடம் பேசிய காட்சியும் வந்து போக, துயரத்தின் எல்லைக்கே சென்று கண்கலங்கியவரின் பார்வையில் மங்கலாகத் தெரிந்த வேதா வெங்கடேஷை பார்த்து

" நான் எவ்ளோவோ உங்க ரெண்டு பேருக்கு கெடுதல் பண்ணியிருக்கேன் அதெல்லாம் தெரிஞ்சும் கூட, என்ணின்ட நீங்க ரெண்டு பேரும் தன்மையா நடந்துகிறேளே.... உண்மையிலேயே உங்க ரெண்டு பேருக்கும் ரொம்ப பெருந்தன்மை அதிகம்... என் தம்பி அவ்வளவு சீக்கிரம் எதையும் ஒத்துக்க மாட்டான் .. அவன் ஒரு விஷயத்தை ஒத்துண்டா அது 100% சரியா இருக்கும் ... உங்களை எதுக்காக அவனுக்கு பிடிச்சிருந்ததுன்னு இப்பதான் நேக்கு தெரியற்து ..." என்றவர் வாசுதேவர் மற்றும் ராவுத்தரை பார்த்து

" நீங்க ரெண்டு பேரும் ருத்ரா மேல வச்சிருந்த சினேகித பாசத்தை கூட
ஒரு சகோதரியா நான் அவன் மேல வெக்கல ... தேவர்க்கு வேதா மாட்டு பொண்ணு , அதனால அவளை பாதுகாக்கணும்னு நெனச்சேர்...
ஆனா உங்களுக்கு வேதா சினேகிதனோட மகள் அவ்ளோ தான்...
ஆனா அவளை பாதுகாக்க அவளோட ஒவ்வொரு பரிட்சைக்கும் உங்க மகனை துணைக்கு அனுப்பினேளே... உங்களை எல்லாம் பார்த்தா நேக்கு வெட்கமா இருக்கு ... ரொம்ப அவமானமா உணரறேன்..." என ராவுத்தரை பார்த்து பேசி முடித்தவர்

" எல்லாரும் என்னை மன்னிச்சுட்டேன்னு ஒரு வார்த்தை சொல்லுங்கோ... " என்று கதறி அழுதவரின் காலம் ஓரிரு நாட்களில் முடிய,

வெங்கடேஷ் மகன் ஸ்தானத்தில் இருந்து அனைத்தை சடங்கையும் செய்து முடிக்க, கடைசிவரை ரங்கநாதன் மட்டும் வரவேயில்லை .

அதன் பின் வாசு தேவரும் இரண்டு ஆண்டுகள் கழித்து காலமாக , பிறகு ஓராண்டு கழித்து ராவுத்தரையும் அல்லாஹ் அழைத்துக்கொண்டார்.





ருத்ர நாராயணனின் வீடு, வாசுதேவரின் தோப்பு வீடு, விவசாய நிலங்கள் ஆகியவை வெங்கடேஷின் தூரத்து உறவினர் சுப்பிரமணியம் மற்றும் ருத்ர நாராயணனின் கார் டிரைவர் ரவியால் இன்று வரை பராமரிக்கப்பட்டு வருகிறது.

இன்றும் நட்பிற்கு இலக்கணமாக திகழ்ந்து, வாழ்ந்து , மறைந்த ருத்ர நாராயணன் , வாசுதேவர், ராவுத்தரை பற்றி கதை கதையாக அந்த ஊர் மக்கள் கூறுவதுண்டு.

நீண்ட பாரம்பரியத்தோடும், பல தலைமுறைகளின் நினைவுகளோடும்
ருத்ர நாராயணன் என்ற சரித்திரம் வாழ்ந்த அந்த வீடு, காலங்களைக் கடந்தும்
இன்றும் தனியாக வாழ்ந்து கொண்டிருக்கிறது .



தகிப்பாள்
 
அத்தியாயம் 12


மும்பையில் ஒரு வார கால பணி முடிந்து கொடைக்கானல் வந்த அர்ஜுனின் மனதில்


'மலைகளின் இளவரசி கொடைக்கானல் உங்களை இனிதே வரவேற்கிறது'


என்ற பதாகையை பார்த்ததும்


இதைப் பார்த்து நாலு வருஷத்துக்கு மேல ஆச்சு இல்ல - என்ற எண்ணம் ஓடிக் கொண்டிருக்கும் போதே,


" ராஜா தம்பி, ஊருக்கு வந்து நாலு வருஷத்துக்கு மேல ஆகுது ... முன்னெல்லாம் வருஷத்துக்கு ஒரு தடவையாவது வருவீங்க ..." என்றார் பன்னீர்செல்வம்.


அர்ஜுனின் இல்லத்தில், இல்லை இல்லை அரண்மனையில்
பல வருடங்களாக ஓட்டுனராக பணி புரிந்து கொண்டிருப்பவர்.


70 வயதைக் கடந்தவர், பத்து மகிழுந்து ஓட்டுனர்கள் இருந்தாலும், அர்ஜுன் கொடைக்கானல் வரும் போதெல்லாம், இவர் தான் வண்டி ஓட்டுவது வழக்கம்.


அவர் சூசகமாக எழுப்பிய கேள்விக்கு பதில் கூறாமல், பார்வையை வெளியே பசுமை படர்ந்த மலைகளின் மீது செலுத்தியபடி அர்ஜுன் இருக்க , கார் எஸ்டேட்டுக்குள் பயணித்து , அதன் நடுவில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டிருந்த அரண்மனையின் முன் நின்றது.


சீருடை அணிந்த வேலையாள் அர்ஜுனுக்கு சல்யூட் அடித்துவிட்டு அவனது பெட்டி , பைகளை காரிலிருந்து எடுத்துக் செல்ல,


அந்த அரண்மனையை பராமரித்துக் கொள்ளும் கவர்னர் லட்சுமி அம்மாளின் அறிவுறுத்தலின் படி வழக்கம் போல் ஆரத்தி எடுத்து வரவேற்கப்பட்டான் அர்ஜுன் .


ராஜ பரம்பரை அல்லவா ... சிறு வயதிலிருந்தே இம்மாதிரியான பழக்க வழக்கங்களை பார்த்து, பழகி ஊறி, வெறுத்தே விட்டது அவனுக்கு .


அவனது தந்தையின் செயலாளர்
ராஜவர்மன் , அவன் தந்தையை விட ஐந்து வயது இளையவர், அவனை மரியாதையோடு அணுகி


" ராஜா தம்பி, உங்களை பார்த்து ரொம்ப நாளாச்சு ... எப்படி இருக்கீங்க ..."


" ம்ம், நல்லா இருக்கேன்...." என்றான் அழுத்தமாக.


" ராஜா தம்பி, அப்பா ஆடிட்டரோட பேசிகிட்டு இருக்காரு... உங்களுக்கு 10:30 மணிக்கு டைம் ஒதுக்கியிருக்காரு அதுக்குள்ள நீங்க ப்ரெஷ் ஆயிட்டு வந்துடுங்க..."


இதான் இந்த அரண்மனையின் நடைமுறை.


அவன் தந்தை மற்றும் தாய்க்கு தனித்தனி செயலாளர்கள், அரண்மனையின் வேலைக்காரர்களை நிர்வகிக்க கவர்னர், சிறுவயதிலிருந்து அவனை பராமரித்து வளர்க்க செவிலித்தாய்.


பெற்ற தாய் தந்தையை பார்ப்பதற்கு கூட கால நேரம் , முன்கூட்டியே ஒதுக்கப்பட வேண்டும்.


அவன் தாய் தந்தை, சிறுவயதிலிருந்து அவனுடன் நேரம் செலவழித்ததை காட்டிலும், வியாபாரம், சங்கம் , பார்ட்டி என நேரம் செலவழித்தது தான் அதிகம்.


இது நாள் வரையில் அவனைக் காட்டிலும், அவன் தந்தையுடன் அதிக நேரம் செலவழித்தவர் , அவன் தந்தையின் செயலாளர் ராஜவர்மன் தான். இது அவன் தாய்க்கும் பொருந்தும், அவரும்
தன் செயலாளர் சொர்ணவதியுடன் தான் உலா வருவார்.


அர்ஜுனின் அறை


ஸ்விஸ் பளிங்குத் தரை, திரும்பிய இடமெல்லாம் பெல்ஜியம் கண்ணாடிகள்... ஆங்காங்கே சிறிய பெரிய சாண்ட்லியர், விலை உயர்ந்த பூ ஜாடிகள், பிக்காசோ ஓவியங்கள், கிரேக்க மன்னனின் வெண்கல சிலை, ஆங்காங்கே வெவ்வேறு நாட்டு சிற்பக்கலை, நான்கு பேர் ஒரே நேரத்தில் தாராளமாக படுத்துப் புரள இலவம் பஞ்சு மெத்தை என திரும்பிய இடமெல்லாம் பணத்தின் செழுமை கொட்டிக்கிடந்தது .


என்ன ஒன்று எதுவுமே அவனது ரசனையோடு இது நாள்வரை பொருந்தியதில்லை.


அவனுக்கு அம்மாதிரியான அலங்கார பொருட்கள் பிடிக்குமா பிடிக்காதா தேவையா, தேவையில்லையா போன்ற கேள்விகளெல்லாம் எழுந்ததே இல்லை.


அலுவலகத்தில் எப்படி ஒரு பதவிக்கென்று சில சலுகைகள் வழங்கப்படுகிறதோ, அதே போல்
இவனது இளவரசன் பட்டத்திற்காக வழங்கப்பட்டவைகளே இவைகள்.


அந்த அறையிலும் அவனுக்கு பிடித்தமான ஒன்றே ஒன்று இருந்தது.
அதுதான் அவனை பேணி வளர்த்த செவிலித்தாய் அன்னபூரணி அம்மாளின் புகைப்படம்.


சுவரில் மாட்டியிருந்த , தெய்வீக கலையோடு காட்சியளிக்கும் அவரது ஆளுயர புகைப்படமே அவனுக்கு பல நேரங்களில் ஆறுதல்.


அவன் கைக்குழந்தையாக இருந்ததிலிருந்து கையிலேயே வைத்து வளர்த்தவர் அல்லவா, அவனுக்கு எது பிடிக்கும், எது பிடிக்காது, எதை விரும்புவான், எதை வெறுப்பான்,
என அனைத்தும் அன்னபூரணிக்கு அத்துபடி.


அவன் தன் தாய் தந்தையுடன் செலவழிப்பதே சொற்ப நேரம் தான் , அந்த நேரத்தில் கூட அவன் தாய் தந்தையுடன் எவ்வாறு பேசி பழக வேண்டும் என்று முன்கூட்டியே அவனுக்கு பயிற்றுவிக்கப்பட்டிருந்தது, கிட்டத்தட்ட அலுவலகத்தில் படிநிலை ஊழியர்கள் தலைமையிடம் நடந்துகொள்ளும் முறையை
பயிற்றுவிப்பது போல்.


அவன் இயல்பாக சுக துக்கங்களை பகிர்ந்து கொள்ளும் ஒரே இடம் அன்னபூரணி அம்மாள் தான்.


அவரின் மறைவிற்குப் பின்னர், இந்த ஊரில் இருக்க பிடிக்காமல் வெளி மாநிலங்களில் படிப்பை தொடர்ந்தவன் வருடத்திற்கு ஒரு முறை மட்டும் இங்கு வருவதை வழக்கமாக்கி கொண்டிருந்தான்.


அன்னபூரணி அம்மாள் மட்டும் இல்லை என்றால் இந்நேரம் அவன் குடிக்கு அடிமையாகி தறுதலையாக சுற்றித்திரிந்திருப்பான்.


மகிழ்ச்சி விலையில் இல்லை, அதன் தன்மையில் இருக்கிறது, பணத்தால் கிடைப்பது எதுவும் நிலைக்காது குணத்தால் கிடைப்பதே நிலைக்கும் என
சிறுவயதிலிருந்தே நேர்மையை போதித்து அவனை மிக ஒழுக்கமாக வளர்த்தார்.
அதனால் தான் என்னவோ குடித்துக் கூத்தடிக்கும் மற்ற எஸ்டேட் முதலாளிகளின் மகன்களோடு
அர்ஜுன் தோழமை பாராட்டியதே இல்லை.


அவன் தன் 24 ஆவது வயதில் ஐபிஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று பயிற்சியில் சேர்ந்து, பணியில் அமர்ந்த பின்னரும், வருடத்திற்கு ஒருமுறை என்ற நிலையை தொடர்ந்து கொண்டுதான் இருந்தான், கடந்த நான்கு ஆண்டுகளாக தான் இங்கு அவன் வருவதே இல்லை.


இவ்வளவு பணம், வளம் இருந்தும் அவன் வாழ்க்கையில் என்றுமே ஒரு வெறுமைதான். அவன் விரும்பிய எதுவும் அவனுக்கு கிட்டியதில்லை. அப்படியே கிட்டினால் அது நிலைத்ததில்லை, இது அவன் வாழ்வின் எல்லா காலகட்டங்களுக்கும் பொருந்தும், ஒன்றே ஒன்றை தவிர, அது அவனுடைய பதவி.


அவன் வாழ்நாளில் அவன் ஆசைப்பட்டு கிடைத்த ஒன்று என்றால் அது அவனுடைய பதவிதான்,
இன்று வரை அது தான் அவனை உயிர்ப்போடு நடமாட வைத்துக்கொண்டிருக்கிறது.


குளித்து முடித்து தயாராகி காலை உணவு உண்டு கொண்டிருந்தவனிடம்


" ராஜா தம்பி, நீங்க சாப்பிட்டு முடிச்சதுக்கு அப்புறம் அப்பாவை போய் பார்க்கலாம் .." - ராஜவர்மன்.


அவன் உண்டு முடித்ததும்,அந்த மாளிகையின் மூன்றாவது தளத்தில் இருந்த அவன் தந்தையின் அறைக்குச் சென்றான்.


" வாப்பா ராஜா, எப்படி இருக்க... பார்த்து ரொம்ப நாளாச்சு ..." என்ற அவனது தந்தை ரகு கிருஷ்ணாவின் குரல் மெலிந்து தளர்ந்திருந்தது.


ஒரு காலத்தில் இவர் குரலிலும், கர்வமும் கம்பீரமும் தாண்டவமாடும் ..
காலத்தின் கோலம், இப்போது சற்று தளர்ந்துள்ளது அவ்வளவே.


'கிருஷ்ணா' என்பது இவர்களது குடும்ப பெயர்,
ராஜா அர்ஜுன் கிருஷ்ணாவின் தந்தை ராஜா ரகு கிருஷ்ணா அவரது தந்தை ராஜா கோபால கிருஷ்ணா என பட்டியல் நீளும் ...


கடந்த ஐந்து தலைமுறைகளாக ஒரு ஆண் வாரிசு மட்டும் தான்.


ரகு கிருஷ்ணாவின் ஒரே தங்கை கோகிலாவின் மகள் தான் அக்னி.


அர்ஜுனின் தாய் ராணி மங்களேஸ்வரி நாச்சியார், கிட்டத்தட்ட நான்கைந்து பரம்பரைக்கு பின்பு பிறந்த ஒரே ஒரு பெண் வாரிசு. அவருக்கு மதன் என்ற ஒரு தம்பி.


அர்ஜுனின் தாய் தந்தையர் இருவரும் ராஜா வம்சம் என்றாலும், ரகு கிருஷ்ணாவின் குடும்பம், பொருளாதார நிலையில் பல படிகள் பின் தங்கியிருக்க, அதையே காரணமாக வைத்து அவரை வீட்டோடு மாப்பிள்ளை ஆக்கிக்கொண்டார் மங்களேஸ்வரி நாச்சியாரின் தந்தை .


மங்களேஸ்வரி நாச்சியாருக்கு , கோகிலாவை தன் தம்பி மதனுக்கு மணம் முடிக்க ஆசை.
ஆனால் மதன் குடிகாரன், செலவாளி பெண் பித்தன். எனவே கோகிலா அவனை மணக்க விரும்பாமல், மங்களேஸ்வரி நாச்சியாரை எதிர்த்துக் கொண்டு பட்டாளத்தில் பணிபுரியும் தன் அத்தை மகன் விஸ்வநாதனை, மணம் முடித்து ஹிமாச்சல பிரதேசம் சென்று விட்டார்.


ரகு கிருஷ்ணாவிற்கு தங்கை கோகிலா மேல் மிகுந்த பாசம் உண்டு. அக்னி பிறந்ததற்கு பிறகு, பிரிந்து சென்ற உறவு மீண்டும் தொடர ஆரம்பித்தது.
ரகுவிற்கு மதனை பற்றி நன்கு தெரியும் என்பதால் கோகிலா, தங்கள் அத்தை மகன் விஸ்வநாதனை மணந்து கொண்டதில் அவருக்கும் விருப்பமே.


மங்களேஸ்வரியின் வாழ்க்கையில் ரகு வந்த பிறகு தான், அவரது சொத்துக்கள் மேன்மேலும் பல்கிப் பெருகின.
கல்யாணமான புதிதில் மங்களேஸ்வரி அவரை மதிக்கவே இல்லை. ஆனால் ரகுவின் புத்திசாலித்தனம் மற்றும் உழைப்பால் அவர் தொழில் துறையில் வெற்றிக்கொடி நாட்டி காட்ட, அதன் பின்னரே பெட்டிப் பாம்பாய் அடங்கிப் போனார் மங்களேஸ்வரி.
இயல்பிலேயே அவர் ஊதாரி, ஊரை சுற்றுபவர் , வன்மம் நிறைந்தவர், தன் எதிரிகளை வாழ விடாதவர் , வரட்டு கவுரவம் பார்ப்பவர் போன்ற குணநலன்களால் அப்பகுதியில் அவர் மிகவும் பிரசித்தம்.


அக்குணங்கள் அவ்வப்போது தலை தூக்குவதும் உண்டு. ரகு கிருஷ்ணாவின் ஆளுமைக்கு கீழ் அனைத்தும் வந்ததிலிருந்து சற்றே சற்று அடக்கி வாசிக்கிறார் அவ்வளவே.


வருடாவருடம் விடுமுறைக்கு ரகுவின் தங்கை கோகிலா தன் மகள் அக்னியுடன் வரும் போதெல்லாம் ,
மங்களேஸ்வரி ஊரில் இருக்கமாட்டார் ஏதாவது ஒரு காரணம் சொல்லி வெளியூருக்கு சென்று விடுவார்.
அவர் இல்லாமல் இருப்பதும் ஒருவகையில் நன்மையே என்பதால் ரகுவும் அவரைக் கண்டு கொள்ளமாட்டார்.


கடந்த நான்காண்டுகளாக குடும்பத்தில் எதுவுமே சரியில்லை, ஒருவரோடு ஒருவர் முகம் கொடுத்து பேசுவதில்லை.
இந்த முறையும் மங்களேஸ்வரி அர்ஜுன் மற்றும் அக்னியின் வரவை அறிந்து தான் வெளி ஊருக்கு சென்றுவிட்டார்.


என்ன ஒன்று, முன்பெல்லாம் காரணம் வேறாக இருக்கும், கடந்த 4 ஆண்டுகளாக அவர் அர்ஜுனை தவிர்ப்பதற்கு அவனின்
கொலை வெறியும் கோபமும் தான் முக்கிய காரணம்.
மீண்டும் அவரை அர்ஜுன் பார்க்க நேர்ந்தால் அவருக்கு சாவு நிச்சயம் என்பதை உணர்ந்து தான், இம்முறை தலை மறைந்திருக்கிறார்.


" ராஜா, அக்னி அஷ்வதோட எஸ்டேட்டை சுத்தி பார்க்க போய் இருக்கா... இன்னைக்கு சாயங்காலம் உன்கிட்ட ஏதோ பேசணும்னு சொன்னா ...
அவ என்ன பேச போறான்னு எனக்கு தெரியாது .... ஆனா எதுவாயிருந்தாலும் கல்யாணத்தை மட்டும் நிறுத்திடாதப்பா... நம்ம பரம்பரையில அஞ்சு தலைமுறையா ஒரு ஆண் வாரிசு தான் , இப்ப நீ கல்யாணம் பண்ணிக்கலன்னா உன்னோட இந்த வம்சமே முடிச்சு போயிடும்பா... நாளைக்கு உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் நடந்தே ஆகணும் ... சரியா.. " என்றவர் ஓரிரு நொடி தாமதித்து,


" உன் அம்மாக்கு கோகிலாவையும் பிடிக்காது.. அக்னியையும் பிடிக்காது... அவ கோகிலா சாவுக்கு கூட வரல... இப்ப அஷ்வத்தையும்
பிடிக்கப்போறதில்ல..." என்றவரின் பேச்சை இடைவெட்டி


" எத்தனை தடவை சொல்லிருக்கேன் அவளை பத்தி என்கிட்ட பேச கூடாதுன்னு ... அவ என் அம்மா இல்ல... ரெண்டு கொலை செஞ்ச கொலைகாரி.... என் அம்மா அன்னபூரணி அம்மா தான்... அவங்க இறந்துட்டாங்க ..." என்றவன் அதற்கு மேல் அங்கு தங்காமல் வெடுக்கென்று வெளியேறினான்.


அறைக்கு வந்த அர்ஜுனின் மனதில் தேவையில்லாத நினைவுகள் தோன்றி அலைக்கழிக்க, குற்றவுணர்வு தலைதூக்க, நான்கு ஆண்டுகளாக மரத்துப் போயிருந்த வடுக்கள் புத்தம் புது ரணங்களாக மாறி, அதிலிருந்து பச்சை ரத்தம் வழிய ஆரம்பித்தது.


அக்னிக்கும் அர்ஜுனுக்கும் ஐந்து வயது வித்தியாசம். சிறுவயது முதலே மிகுந்த சுறுசுறுப்போடும் அழகும் புத்திசாலித்தனமும் கலந்து பேசும் அவளை அவனுக்கு மிகவும் பிடிக்கும்.
பொதுவாக அதிகம் பேசுபவர்கள் பொய் பேசுவார்கள் என்பார்கள்.
ஆனால் அவனைப் பொறுத்தவரையில் அக்னி ஒரு சுவாரசியமான கதாபாத்திரம். அவள் அஸ்ட்ரானமியில் இருந்து அரசியல் வரையிலான உண்மையை பேசுபவள். அவனுக்கு
அவள் குணம் பிடிக்கும் , அவள் உழைப்பு பிடிக்கும், அவள் பேச்சு பிடிக்கும், அவள் நடத்தை பிடிக்கும், மொத்தத்தில் அவளையே பிடிக்கும்.


அவன் இந்த இல்லத்தில் அக்னியை கடைசியாக சந்தித்துப் பேசியது 8 ஆண்டுகளுக்கு முன்புதான் . அப்போது அவளுக்கு திருமணம் ஆகவில்லை.


இந்த எட்டு வருட காலங்களில்,
மூன்றாண்டுகளுக்கு முன் நாசிக்கில் அவளது கணவன் அஜய் இறந்த போது கிட்டத்தட்ட பத்து மாத குழந்தையான அஷ்வத்துடன் அவளை சந்தித்திருக்கிறான் என்றாலும் , அது வெறும் சந்திப்பாக இருந்ததே ஒழிய இருவரும் பேசிக் கொள்ளும் நிலை அமையவில்லை ... அதுதான் அவர்களின் கடைசி சந்திப்பாக இருந்தது.
இப்போது இருவரையும் காலம் ஒன்றாக சேர்த்து வைக்கப் போகிறதென்று நினைக்கும் போது அழுவதா சிரிப்பதா என தெரியாமல் விழி பிதுங்கி நின்றான் அர்ஜுன்.


இப்படியே சிந்தனையில் மூழ்கியிருந்தவனுக்கு இரவு உணவு அறைக்கே வர, இயந்திரத்தனமாய் உண்டு முடித்தவன், அவன் அறையின் பெரிய பால்கனியில் வேறெந்த செயற்கை வெளிச்சமும் இல்லாமல் வளர்பிறை நிலவொளியில்
தென்னை மர கீற்றுகள் அசைந்தாட, எப்பொழுதும் பொழியும் குளிர் அவன் உடலில் ஒருவித நடுக்கத்தை ஏற்படுத்த, ஏதோ சிந்தனையில் நடை பயின்று கொண்டிருந்தவன் காலடி சத்தம் கேட்டு திரும்பி பார்த்து ஒரு நொடி துடித்துப்போய்விட்டான்.


அவன் அக்னி தான் நின்று கொண்டிருந்தாள்.


உடல் மிகவும் மெலிந்து, பலகீனமாக வெளிறிய நிறத்தில் காட்சியளித்தாள்.
என்றுமே அவள் பூசிய உடல் வாகை கொண்டவள் இல்லை என்றாலும், தற்போதைய மெலிவு, அவள் ஆரோக்கியமாக இல்லை என்பதை தெளிவாக எடுத்துரைத்தது.


அவன் பாதி வெளிச்சம் பாதி இருள் சூழ்ந்த பகுதியில் நின்று கொண்டிருக்க, அவள் அறையின் வெளிச்சத்தில் கருநீல நிற கையில்லா இரவு உடை அணிந்திருக்க, உடலோடு ஒட்டி இருந்த அந்த உடை, அவள் மெலிந்த கைகள் மற்றும் கழுத்து எலும்புகளை காட்டி, அவள் மெலிவை மேலும் உறுதிப்படுத்தின.


சந்தனமும் குங்குமமும் கலந்த நிறத்தில், பொலிவும் வசீகரமுமாய்,
இயற்கையிலேயே பேரழகிக்கான அனைத்து சாமுத்திரிகா
லட்சணங்களையும் கொண்டு பிறந்தவளின் முகம் தற்போது முற்றிலும் கலை இழந்து, கண்களில் ஒளி குன்றி காணப்பட,


தன் முகத்தில் எதையும் காட்டிக் கொள்ள விரும்பாமல், இதழ் பிரியா புன்னகையோடு நட்பாக தலையசைத்து வரவேற்றவனிடம்


" அர்ஜுன் " என விளித்தாள் அக்னி.


சிறு வயது முதல் அக்னி அர்ஜுனை 'அர்ச்சு அத்தான்', 'அத்தான்' என்று விளிப்பது தான் வழக்கம் . அதிலும்
பெரும்பாலும் மரியாதையுடன் அழைக்காமல் ஒருமையில் தான் விளிப்பாள். அப்படி ஒரு தோழமை இருவரிடத்திலும் இருந்தது.


அவனும் அவளை 'அம்மு' 'அனி' என்றே அழைப்பான் .
கடைசி இரண்டு சந்திப்பில் தான் அவன் 'அர்ஜுன்' ஆகிப் போனாதாக அவன் ஞாபகம் கூற,
அதற்கான காரணம் தான் இன்று வரை அவனுக்குத் தெரியவில்லை .


கடைசி இரண்டு சந்திப்புகளுமே மிகவும் உணர்வுபூர்வமான சந்திப்பு என்பதால் , இதனை பொருட்படுத்துவதற்கு கூட அப்போது அவனுக்கு நேரம் இல்லாமல் போயிருக்க, பழங்கதையிலேயே அவன் உழன்று கொண்டிருந்த நேரத்தில்


" மம்மா..." என்றழைத்தது அவள் பெற்ற இளந்தளிர், அவள் காலை கட்டிக்கொண்டு.
கிட்டத்தட்ட ஒரு வயதில் பார்த்த குழந்தையை இப்போது அதன் நான்கு வயதில் பார்க்கிறான்.


படிய வாரிய தலை, பால் போன்ற வெள்ளை நிறம், கொழுகொழு கன்னங்கள், மெல்லிய பூனை கண் கருவிழி, கன்னத்தில் குழி என
துருதுருக்கும் விழிகளோடு பார்த்துக் கொண்டே நின்றிருந்த குழந்தையை வாரி அணைத்து கொஞ்ச வேண்டுமென்ற எண்ணம் ஏழ அதை அவன் சிரமப்பட்டு கட்டுப்படுத்திக் கொண்டிருக்கும் போது,


" நாளைக்கு நடக்க போற நம்ம கல்யாணத்துக்கு என் சைடுல சில கண்டிஷன்ஸ் இருக்கு , அதைப்பத்தி உங்ககிட்ட பேசணும் அர்ஜுன் ...." என்றவளிடம் பதில் பேசாமல், பேச வேண்டியதை பேசு என்பது போல் அவன் பார்க்க, அதை புரிந்தவளாய்


" உங்களுக்கு அஜய்யை பத்தி தெரியும் இல்லையா ... நான் அவரை டீப்பா லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டதும் உங்களுக்கு தெரியும் .... அஜய்யோடையே என் லைப் முடிஞ்சிருக்கணும், அஷ்வத் இருக்கிறதால வேற வழி இல்லாம
ஐ அம் லீடிங் மை லைப் ...உங்களுக்கும் நாளைக்கு நமக்கு நடக்கப்போற கல்யாணத்துல விருப்பம் இருக்காதுன்னு எனக்கு தெரியும்..." என்றவளின் பேச்சு, ஏனோ அவன் தொண்டையை கனக்கச் செய்ய,
அதனை செருமி சரி செய்துக்கொண்டு பேச்சைக் தொடரு என்பது போல் அவன் பார்த்து வைக்க,


" நானும் மாமா சொன்னதால தான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சேன்..."
என்றவளின் விழியில் அப்பட்டமாக பொய் தெரிய, காவல்துறை அதிகாரியாக அதனை படிக்க முயன்று கொண்டிருக்கும் போது,


"இதெல்லாம் ஏன் சொல்றேன்னா,
கல்யாணத்துக்கப்புறம் என்னால இயல்பான மனைவியா உங்க கூட வாழ முடியாது ...
அஷ்வத்துக்கு நீங்க பயாலஜிக்கல் ஃபாதர் இல்லைங்கிறதால, அவனுக்காக உங்ககிட்ட நான் எதையும் எதிர்பார்க்க மாட்டேன் ...
இப்ப அவன் குழந்தை சொன்னா புரியாது...
கொஞ்சம் பெரியவனானதும் எல்லாத்தையும் சொல்லிடுவேன் ...
எனக்கும் என் மகனுக்கும் போதுமான அளவுக்கு நான் சம்பாதிக்கிறேன் ...
உங்களை நான் ஃபினான்சியலா எந்த வகையிலும் டிஸ்டர்ப் பண்ண மாட்டேன் ....


நீங்க நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் எப்படி வேணாலும் இருந்துக்கலாம் உங்களோட எந்த விஷயத்திலும் நான் தலையிட்டுக்க மாட்டேன் ..
உங்களுக்கு வேற யாரையாவது பிடிச்சிருந்தா அவங்களோட லிவ் இன் ரிலேஷன்ஷிப்ப ஏற்படுத்திக்கலாம்... ஏன்
அவங்களையே நீங்க இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டு உங்களுக்கு ஒரு வாரிசையும் பெத்துக்கலாம் ...


ஆனா உங்க கூடவே தான் நானும் அஷ்வத்தும் இருப்போம் ... எந்த நிலையிலும் என்கிட்ட டிவோர்ஸ் மட்டும் கேக்கக்கூடாது நானும் டிவோர்ஸ் கொடுக்க மாட்டேன்... இதெல்லாம் நான் முன்னாடியே சொல்றதுக்கு காரணம் உங்க வாழ்க்கை மேல எனக்கு இருக்கிற அக்கறை தான்...உங்களோட சில நியாயமான ஆசைகள் கூட இந்த கல்யாணத்துல நிறைவேறாது ... எல்லாத்தையும் யோசிச்சு முடிவெடுங்க...


இதுக்கெல்லாம் நீங்க ஓகேன்னா நாளைக்கு கல்யாணம் பண்ணிக்கலாம் ... "
என்றவளின் குரல் திடமாக நிபந்தனைகளை விதித்துக் கொண்டிருந்தாலும், அவளது பார்வை மட்டும் மண்டியிடாத குறையாக அவனை கெஞ்சிக் கொண்டிருந்தது
திருமணத்திற்கு சம்மதிக்கும் படி.


சிறுவயது முதலே வட மாநிலத்தில் பிறந்து வளர்ந்ததால், தமிழை அவள் வெறும் பேச்சு மொழியாகவே அறிவாள்.
ஆங்கிலம், ஹிந்தி ,மராட்டி அவளது பேச்சில், பெரும்பான்மையான தமிழோடு எப்பொழுதுமே அங்கம் வகிக்கும்.


அவளது பேச்சு வழக்கு சிறுவயது முதலே அவனுக்குப் பரிச்சயம் என்பதால், அவளது மொழியைக் காட்டிலும் அதிலிருந்த உணர்வுகளை அவனால் இயல்பாக புரிந்து கொள்ள முடிந்தது.


அவள் அந்த அறைக்கு வந்ததில் இருந்து இதுவரை அர்ஜுன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை, முதன் முறையாக அவள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்க எத்தனிக்கும் போது, குழந்தை அஷ்வத் துடுக்குத்தனமும் குறும்புமாய் , ஓடிச் சென்று அர்ஜுனின் கால்களைக் கட்டிக்கொள்ள, உடனே அக்னி அதிவேகமாக அர்ஜுனை நெருங்கி குழந்தையை பற்றி எடுத்து தூக்கிக் கொண்டவள்,


"சாரி " என்றாள் அவளது குழந்தை அவனுக்கு இடையூறு விளைவித்ததாக கருதி.


அப்பொழுது பார்த்து கதவு தட்டப்பட,
அர்ஜுன் "கம் இன்" என்றதும்,


அந்த வீட்டின் கவர்னர் லட்சுமி அம்மாள்,
அஷ்வத்தை உறங்க செய்வதற்காக அழைத்துச் செல்ல வந்திருந்தார்.


அந்த வீட்டில் தான் அனைத்துமே, நேரப்படி அலுவலகம் போல் நடக்குமே.
இதுவும் அதில் ஒன்று. அஷ்வத்தும் வேற்று முகம் தெரியாமல் அனைவரிடமும் போகும் குழந்தை என்பதோடு, காலையிலிருந்தே அவருடைய பராமரிப்பில் இருந்ததால்,
அவன் இயல்பாக அவரிடம் தாவிக் கொள்ள, அவர் சென்ற மறுநிமிடம், அவன் பதிலுக்காக அவள் விழிகள் காத்திருப்பதை எண்ணி, அவன் மனதில் எங்கோ ஒரு மூலையில் இம்மி அளவு சந்தோஷ உணர்வு துளிர்த்தது.


அவள் அவனுடைய ஆத்மார்த்தமான காதலி, விவரம் தெரியாத வயதிலேயே அவன் மனதில் குடி வந்தவள், இடையில் கொஞ்ச காலம் நாகரீகம் கருதி, தன் காதலை தன்னுள்ளே புதைத்து வைத்திருந்தான்.
அந்தக் காதலும் மரத்துப் மறைந்து தான் போயிருந்தது. சற்று முன் அவள் பேசிய பேச்சில் அது மீண்டும் உணர்வு பெற்று உலவ தொடங்க, அறையின் வெளிச்சத்தை விட்டு அரையிருளில் அவனை நெருங்கி நின்றிருந்தவளின்
முகத்தைப் பார்த்து,


" எனக்கு ஓகே நாம கல்யாணம் பண்ணிக்கலாம் ..." என அவன் கூறிய மாத்திரத்தில், பலத்த காற்றில் அசைந்து கொண்டிருந்த தென்னை மரத்திலிருந்து திடீரென்று இளநீர் ஒன்று கீழே விழுந்து தெறிக்க ,அந்த எதிர்பாராத சத்தத்தில், பயந்து போனவள், அர்ஜூனின் மார்பில் முகம் புதைத்து இறுகப் பற்றிக் கொண்டாள்.


நீண்ட நாட்களுக்குப் பின்பான பெண்மையின் ஸ்பரிசம் அல்லவா, அது அவன் ஆண்மையை அசைத்துப் பார்க்க, அப்பொழுதுதான் கட்டி
அணைத்திருந்தவளின் உடலில் தெரிந்த அளவுக்கு அதிகமான நடுக்கத்தை உணர்ந்தவனுக்கு, கிளர்ச்சியை தூண்டிய காதல் காணாமல் போக, அவளிடமிருந்து விலகி அவளைப்பார்த்து
" அக்னி ,ஆர் யூ ஓகே ..." என்றான் வாஞ்சையாக.


"நோ அர்ஜுன்... அஜய் போனதுக்கு அப்புறம், எல்லா விஷயத்துக்கும் நான் ரொம்ப பயப்படறேன்..." எனக் பொங்கிய விழிகளோடு கூறியவளின் விழிகளில் அவளுடைய அஜய் தெரிந்தான், அவன் மேல் அவள் வைத்திருந்த அளவுக்கதிகமான பாசமும் காதலும் பளிச்சிட்டது.


சிறுவயது முதலே அக்னியின் நெற்றியில் பொட்டில்லாமல் அவன் பார்த்ததே இல்லை...
அவளது திருமணத்திற்கு பின் நெற்றி பொட்டோடு வகுட்டு குங்குமத்துடன்,
மராட்டியர்களின் மங்களத்தை பறைசாற்றும் கருகமணி தாலி, பச்சை நிற வளையல்களோடு தான் அவளை
பார்த்திருக்கிறான்....(அதுவும் புகைப்படத்தில் மட்டுமே)


ஆனால் இப்போது காதில் சிறு வளையமும், மாசு மறுவற்ற அந்த முகத்தில், மூக்கின் இடது பக்கத்தில் வெண்ணிற ஒற்றைக்கல் சிறு மூக்குத்தி மட்டுமே. அவளை நன்கு அறிந்தவன் என்பதால், கணவனை இழந்த பெண் இவற்றையெல்லாம் அணிந்து கொள்ளக் கூடாது என்ற பத்தாம் பசலி தனத்தை அவள் கடைப்பிடிக்கவில்லை , அவளது அலங்காரம் எல்லாம் அவள் அஜய்யுடனேயே சென்று விட்டிருந்ததை தான் அவள் சொல்லாமல் சொல்லிக் கொண்டிருந்தாள்.


ஆர்மி ரெஜிமென்ட்டை நன்கு அறிந்தவள், குண்டு வெடிப்பும் துப்பாக்கிச்சூடும் தாலாட்டும் இசையாய் கேட்டு வளர்ந்தவள்,
தற்காப்புக் கலையில் வல்லவள் ..
துப்பாக்கி சுடுவதில் கை தேர்ந்தவள் ...
அதனை ரசனையாக லாவகமாக அனாயாசமாக கையாளத் தெரிந்தவளுக்கு , ஒரு இளநீரின் வீழ்ச்சி நடுக்கத்தைக் கொடுப்பதை எண்ணி உள்ளூர வருந்தியவன், அவள் கணவனின் மறைவு அவள் சுயத்தை முற்றிலுமாக இழக்கச் செய்து இருக்கிறது என்பதை மட்டும் தெளிவாக புரிந்து கொண்டான்.


முன்பு குளிரை உணர்ந்தவனும் அவளது அணைப்பிற்கு பின் கதகதப்பை உணர்த்தவனும் அவன் ஒருவனே...


குளிரோ கதகதப்போ அவளை எந்த உணர்வும் தாக்கவில்லை போலும் . அவளிடம் தெரிந்த ஒரே உணர்வு பிரிவு மட்டும் தான். அதிலும் அவன் அஜய் மட்டுமே தெரிந்தான்.


" வீ வில் மீட் இன் அவர் மேரேஜ் ...டேக் ரெஸ்ட் ..." என்று அவளை
வழியனுப்பி வைத்தவனுக்கு சிந்திக்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருந்தன.


அவள் பேசியதை எல்லாம் மீண்டுமொருமுறை அசை போட்டு பார்த்தவனுக்கு புரிந்தது எல்லாம் இதுதான்.


அவள் அவனிடம் எதிர்பார்ப்பதெல்லாம் பாதுகாப்பு மட்டும்தான்.


ஒரு ஆணின் பாதுகாப்பு அவளுக்கும் அவள் குழந்தைக்கும் தேவை, அதுவும் சிறுவயது முதலே அவளை நன்கறிந்தவன் என்பதால் நம்பிக்கையின் காரணமாக அவனை மணந்து கொள்ள எண்ணி இருக்கிறாள் ... அவ்வளவே ..


பெண்கள் விண்வெளிக்கே சென்றாலும் அவள் உடலைத் தாண்டி திறமையை பார்க்காத சமுதாயத்தில் தான் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
திருமணம் ஆகாத பெண்களை ஓரளவிற்கு அனுசரித்து செல்லும் இந்த சமூகம், கணவனை இழந்தவரையோ, விவாகரத்துப் பெற்றவரையோ எளிதாக கடந்து செல்லாமல் காமாலை கண்களோடு தான் பார்த்துக்கொண்டிருக்கிறது.


ஒரு ஆணாக, அதுவும் காவல்துறை அதிகாரியாக இத்தனை வருட அனுபவத்தில் பெண்களுக்கு எதிராக உடல் ரீதியாக மன ரீதியாக நடக்கும் எத்தனை வன்முறை வழக்குகளை சந்தித்து இருப்பான், அவை அனைத்தும் அவன் கண்முன் வந்து போயின.


அஜய் இறந்து ஒரு வருடம் ஆன நிலையில், அக்னியை மறுமணம் செய்து கொள்ளுமாறு அர்ஜுனிடம் அவன் தந்தை ரகு கிருஷ்ணா கூற, அக்னியின் மனநிலை அறிந்தவன் என்பதால் மறுமணத்தை பற்றி அப்போது பேச வேண்டாம் என்று தடை விதித்ததும் அவன் தான்.


அவளது 17 வயதில் தந்தையை இழந்தவள், பிறகு கணவன் அஜய்யை இழந்தவள், இப்போது தாயையும் பறி கொடுத்து தனி மரமாக நிற்பதால் தான் தன் துணை தேடுகிறாள் என்றவன் முடிவுக்கு வர நினைத்தாலும் அவனுடைய காவல்துறை அறிவு அதனை முழுமையாக நம்ப மறுத்தது.


மேம்போக்காகப் பார்க்கும் பட்சத்தில், அவளது பாதுகாப்பிற்கு தான் இந்த திருமணம் என எடுத்துக்கொண்டாலும், அதிலும் அவனுக்கு ஒருவித நெருடல் இருக்கவே செய்தது.
**************************************
கண்களில் கண்ணீர் பிரவாகமாக ஓடிக் கொண்டிருக்க, உறங்கிக் கொண்டிருந்த குழந்தையையே பார்த்துக்கொண்டிருந்தவள்,


" ஐ அம் சாரி அர்ஜுன் ... இந்த கல்யாணம் முழுக்க முழுக்க என்னோட சுயநலத்துக்காக தான் ....


நானும் என் குழந்தையும் பாதுகாப்போட வாழணுங்கிறதுக்காக உங்க வாழ்க்கைய நான் பணயம் வைக்க போறேன் ...


உங்ககிட்ட என் நிலைமையை சொல்லி ஹெல்ப் கேட்டா நிச்சயமா நீங்க ஹெல்ப் பண்ணுவீங்க, ஆனா என்னை சுத்தி என்ன நடக்குதுன்னே எனக்கே தெரியல .. எவ்ளோ நாள் உறவு ஏதும் இல்லாம உங்க பாதுகாப்ப நான் பயன்படுத்திக்க முடியும்... அப்படி ஒரு உறவு எனக்கு மட்டுமில்லை உங்களுக்கும் கௌரவத்தை கொடுக்காது ...


இந்த சமுதாயத்துல நான் கண்ணியமா வாழணும்னா, எனக்கு ஒரு துணை தேவை ... ஆனா அதைவிட இப்ப இருக்க சூழ்நிலையில என்னையும் என் மகனையும் சூழ்ந்து இருக்கிற பிரச்சனையிலிருந்து உங்க ஒருத்தரால தான் காப்பாத்த முடியும்னு அஜய் சொன்னதால உங்கள கல்யாணம் பண்ணிக்க போறேன் ...." என வாய்விட்டே புலம்பிக் கொண்டிருந்தவள் வழக்கம் போல் இன்சோம்னியாவுக்கு (Insomnia - மன அழுத்தத்தின் காரணமாக ஏற்படும் தூக்கமின்மை) எடுத்துக்கொள்ளும் தூக்கமாத்திரையை விழுங்கிவிட்டு உறங்கச் சென்றாள்.
*****************************************


" ஏண்டி நாளைக்கு நம்ப சின்ன ராஜாவுக்கு அக்னி அம்மாவுக்கும் கல்யாணம் தானே ..."


" ஆமா, சின்ன ராஜாவுக்கு முதல் கல்யாணம்... அக்னி அம்மாவுக்கு இரண்டாவது கல்யாணம்னு கேள்வி பட்டேன்...."


" அதெல்லாம் சரி... சின்ன ராஜா ஊருக்கு வந்தே நாலு வருஷத்துக்கு மேல ஆகுது...
அக்னி அம்மாவுக்கு முதல் கல்யாணத்துல பொறந்த அந்த குழந்தை சின்ன ராஜா மாதிரியே இருக்கு ... அதுக்கு கிட்டத்தட்ட மூன்றரை வயசிலிருந்து நாலு வயசு இருக்கும் இல்ல ... கூட்டி கழிச்சு பார்த்தா கணக்கு சரியா வர்ற மாதிரி இல்ல..."


" இப்படி எல்லாம் பேசிக்கிட்டு இருந்தா உன்னோட கணக்கு முடிச்சு அனுப்பிடுவாங்க ... அதோட இதை என்கிட்ட பேசி என் வேலைலயும் மண்ணள்ளி போடணும்னு முடிவு பண்ணிட்டியா ..
எனக்கும் குழந்தையை பார்த்ததும் அப்படித்தான் தோணுச்சு ... ஆனா இதையெல்லாம் நம்ப பேசினோம்னு வைய்யி, நம்ப வேலை காலி.... பெரிய இடத்து பொல்லாப்பு நமக்கு எதுக்கு ... உனக்கு ராணி அம்மாவை பத்தி தெரியுமில்ல...


வந்தமா வேலையை பார்த்தமா மூணு வேளை மூக்கைப் பிடிக்க சாப்பிட்டோமா சம்பளம் வாங்கினோமான்னு போய்க்கிட்டே இருக்கணும் ...
இத பத்தி இனிமே பேசாத ... அது நமக்கு நல்லதில்ல ..." என இரு அரண்மனை பணியாளர்கள் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டு விட்டு அந்த இடத்தை காலி செய்தனர்.



தகிப்பாள்
 
அத்தியாயம் 13

ஆலிவ் நிற பச்சையில் முழுக்க முழுக்க, தங்க நிற கம்பி ஜரிகை வெய்த, பஞ்சு போன்ற பட்டுப்புடவையில், மிக நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்டிருந்தாள் அக்னி.

ரகு கிருஷ்ணாவின் அரண்மனையில் நடைபெறும் இந்த திருமணத்திற்கு உறவு முறைகளை காட்டிலும் அவரது ஒரு சில நெருங்கிய நட்பு வட்டங்களே அதிகம் வந்திருந்தது.

அனைவரின் பார்வையிலும் கேள்விகள் .... ஒவ்வொருவரின் மனதிலும் ஒவ்வொரு விதமான கேள்விகள் தேங்கி இருந்தன.

அஷ்வத் பிறந்த போது மருத்துவமனையில் சென்று ரகு கிருஷ்ணா பார்த்ததோடு சரி. அதோடு கடந்த மாதம் அவர் தங்கை கோகிலாவின் மறைவின் போதுதான் அவனை ஓரளவு வளர்ந்த குழந்தையாக கண்டார். அவனின் முகவெட்டு முதலில் ஆச்சரியத்தை ஏற்படுத்த அதற்கான காரணங்களை ஆராய்ந்து ஆராய்ந்து களைத்துப்போனவரின் பார்வை இப்பொழுதும் ஆராய்ச்சியூடே அவனை
தொடர்ந்து கொண்டுத்தான் இருந்தது.

துணை இல்லாமல் வாழ்ந்து கொண்டிருந்த மைந்தன், அக்னியின் பெயரைக் கேட்டதும் திருமணத்திற்கு சம்மதித்ததற்கான காரணம் அஷ்வத்தாகவும் இருக்கலாம்.

எது எப்படியோ, இப்பொழுதுதான் பார்ப்பதற்கு குடும்பமும் குழந்தையுமாக
அவன் வாழ்வு செம்மை அடைந்துள்ளது என்றெண்ணி கடவுளுக்கு மானசீகமாக நன்றி கூறிய ரகு கிருஷ்ணா, அஷ்வத்தின் பிறப்பு ரகசியத்தை கூடிய விரைவில் அறிந்து கொள்ளவேண்டும் என்றும் மனதில் குறித்துக் கொண்டார்.


அலங்காரம் முடிந்து, நிலைக் கண்ணாடியில் தன்னை கண்டவளுக்கு, துக்கம் தொண்டையை அடைத்து, கண்கள் பொங்க ஆரம்பிக்க, நிலைமையை உணர்ந்தவள் உடல் நடுக்கம் குறைய, உணர்ச்சிவசப்படாமல் இருக்க, வழக்கம் போல் அவள் எடுத்துக் கொள்ளும் ஆச்சைட்டி நியூரோஸிஸ் (Anxiety neurosis)வியாதிக்கு ஆன்ட்டி டிப்ரசன்ட்(anti-depressant) மாத்திரைகளை விழுங்கிவிட்டு

" இதெல்லாம் தேவையா அஜய் ... இன்னும் கொஞ்ச நேரத்துல இன்னொருத்தருக்கு மனைவியாக போறேன் ... மனசு முழுக்க உங்களோட வாழ்ந்த நினைவுகள் மட்டும்தான் ... என் வாழ்க்கையில எந்த விஷயத்துலயும் சொல் ஒன்னு, செயல் ஒன்னா நான் இருந்ததே இல்லயே ... இப்படி ரெட்டை வேஷம் போட்ட வேண்டிய நிலைக்கு என்னை ஆளாக்கிட்டீங்களே ..." என்று சன்னமாக வாய்விட்டே புலம்பிக் கொண்டிருந்தவளை இலட்சுமி அம்மாளுடன் வந்த நான்கு பணிப்பெண்கள் மணமேடைக்கு அழைத்துச் வந்து,
அழகிய வெள்ளி ஜரிகை ஷெர்வானியில், தங்க நிற முண்டாசுடன் யாகத்தில் எரிந்துக்கொண்டிருக்கும் அக்னியின் முன்பு சிம்மாசனத்தில் கம்பீரமாக வீற்றிருந்த அர்ஜுனின் அருகில் அமர செய்ய, தாயைக் கண்டதும் துள்ளிக் குதித்து ஓடி வந்து அவள் மடியில் அமர்ந்த அஷ்வத்திற்கும் ஷெர்வானி அணிவிக்கப்பட்டு, தங்கநிற முண்டாசு கட்டப்பட்டிருக்க, எதையும் ரசிக்கும் மனநிலையில் அவள் இல்லை என்பதை அவளுடைய இலக்கற்ற கண்கள் மட்டும் சொல்லாமல் சொல்லின.

வேத மந்திரங்கள் ஓத, ராஜ பரம்பரையின் முறைப்படி மாலை மாற்றிக் கொண்டதோடு,
அவர்களின் பரம்பரையை பறைசாற்றும் விதமாக வைரக்கற்கள் கொண்ட கிருஷ்ண பாதுகை பதித்த மாங்கல்யத்தை எழுந்து நின்று, அர்ஜுன் அவளுக்கு அணிவிக்க முற்படும் போது, எதேச்சையாக தலை நிமிர்ந்தவள் அவன் முகத்தைப் பார்த்ததும் சுரீரென்று மின்சாரம் தாக்கிய உணர்வில் நிலைகுலைந்து போனாள்.

அங்கு அர்ஜுன் தெரியாமல் அவளது அஜய் தெரிந்தான்.

இது தன் மன உணர்வின் பிரதிபலிப்பா அல்லது நிஜமா ....
எப்படி இது சாத்தியம் ... மூன்றாண்டுகளுக்கு முன்பு மரணித்தவன் மாங்கல்யம் அணிவிக்க மட்டும் மீண்டும் வருவானா என்ன..
என விடை தெரியா கேள்வி கண்ணிமைக்கும் நேரத்தில் அவள் கண்மணிகளில் தோன்றி மறைய

அவளது விழி காட்டிய அதிர்ச்சி, ஆச்சரியம், ஆராய்ச்சி போன்ற படிநிலை உணர்வுகளை கணத்தில் படிப்படியாக படித்து முடித்தவன் அதற்கு மேல் சற்றும் தாமதிக்காமல் அவள் கழுத்தில் மாங்கல்யத்தை அணிவித்து அவளை தன்னவளாக்கி ஆக்கிக்கொண்டான்.

திருமணத்திற்கு பின்பான சடங்குகள் அனைத்திலும், அக்னியின் பார்வை அர்ஜுனை தொடர்ந்து கொண்டே இருந்தது.

இவ்வளவு நேர ஆராய்ச்சி பார்வைக்குப் பிறகு, ஒரு சில வித்தியாசங்கள் இருவருக்கும் இடையே இருப்பதாக அவளுக்கு தெரிந்தது.

இருவரையும் மனக்கண்ணில் ஒப்பிட்டுப் பார்த்தவளுக்கு சரும நிறம் மற்றும் அதன் தன்மை, முகவெட்டில் மூக்கு நுனி , நெற்றி, கன்னம், மோவாய் போன்ற பல இடங்களில் சிறுசிறு வித்தியாசங்கள் இருப்பதாக தோன்ற ஆரம்பித்தது.

முதலில் நிறம், அஜய் பொன்னிறம், அர்ஜுன் மாநிறம் .

அர்ஜுனை போல் மெல்லிய பூனைக்கண் இல்லாமல் கருத்த கருவிழி கொண்டவன் அஜய்.

அர்ஜுனிடம் காணப்படுவது ஆழ்ந்த கன்னக்குழி , அஜய்யின் முகத்தில் அழுத்தமான மோவாய் பள்ளம் இருக்கும்.

மற்றபடி உயரம், உடல் எடை, அகன்ற மார்பு என எதிலும் மாறுபாடுகள் இல்லை என்கின்ற நிலையில்,
இது அவளது அஜய் பற்றிய மன உணர்வல்ல, அர்ஜுனின் நிஜ தோற்றமே என்றவள் மனம் உறுதி செய்தது.

திருமணத்திற்கு பின்பான அனைத்து சடங்குகள் முடிந்ததும், விட்டால் போதும் என்ற மனநிலையில் தன் அறைக்கு ஓட்டமும் நடையுமாய் ஓடி வந்தவளுக்கு யோசிக்க நிறைய இருந்தது.

முன்பெல்லாம் வருடத்திற்கு ஒரே ஒரு முறை கொடைக்கானலுக்கு தன் தாயுடன் வருவாள் அதுவும் ஒரு வாரமே தங்கியிருந்து விட்டு சென்று விடுவாள்.

அப்போதெல்லாம் கல்லூரி இளைஞனுக்கே உரிய இளமையோடும் முதிர்ச்சியற்ற தன்மையோடும் காணப்பட்டவன், தற்போது இந்த வயதுக்கே உரிய முதிர்ச்சியோடு, சற்று எடையும் கூடி, வளர்ந்த ஆண் மகனுக்கே உரிய கம்பீரத்தோடு காட்சியளிக்கிறான்.

அதுவும் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு அஜய் அவள் வாழ்வில் வந்ததற்கு பிறகு ஒரே ஒரு முறை தான் அர்ஜூனை இந்த அரண்மனையில் சந்தித்திருக்கிறாள்.... அப்பொழுது கூட இவன் இப்படித்தான் இருந்தானா ... ஏன் எனக்கு இந்த உருவ ஒற்றுமை அப்போது தோன்றவில்லை ... என்ற எண்ணம்
உதித்த மாத்திரத்தில், அந்த கடைசி சந்திப்பு அரை இருட்டில் நடந்தது என்று அவளுக்கு அப்போது தான் உறைத்தது.

கொடைக்கானலில் நடந்த கடைசி சந்திப்பிற்கு பிறகு, புகைப்படத்தில் கூட அர்ஜுனை பார்த்ததாக அவளுக்கு நினைவில் இல்லை.

மூன்றாண்டுகளுக்கு முன்பு அஜய்யின் மறைவிற்கு அர்ஜுன் வந்திருந்தது கூட
அவள் நினைவில் ஏனோ நிலைக்காமலே போயிருந்தது.

எட்டு ஆண்டுகள் என்பது சற்று பெரிய கால அளவுதான் என்றாலும், காலம் ஏற்படுத்தியிருந்த தோற்ற மாற்றங்கள் இருந்தாலும் அடிப்படை முகவெட்டு நிச்சயம் மாறாதல்லவா ..

அர்ஜுன் அவள் மாமன் மகன், நல்ல தோழன் என்பதைத் தாண்டி வேறு எந்த இன கவர்ச்சியும் இதுநாள்வரை அவனிடம் இருந்ததில்லை. ஆதலால் அவனை இம்மாதிரி அணுவணுவாக அவள் உற்று நோக்கியதில்லை
என்றாலும் , அர்ஜுனின் முக அம்சங்களை அவள் நன்கு அறிவாள் ... அப்படி இருக்கும் பட்சத்தில் முதன்முதலில் அஜய்யை சந்திக்கும் போது நன்கு பரிச்சயமான முகமாக அவன் தோன்றினானே ஒழிய அர்ஜூனின் இந்த முகச் ஜாடையை ஏன் தன்னால் அவனிடம் உணர முடியாமல் போனது ... என்று ஆழ்ந்து யோசித்துக் கொண்டிருந்தவளுக்கு

நேற்று இரவு சந்திப்பில் கூட இதை ஏன் தான் உணரவில்லை ...
என்று எண்ணம் எழும் போது தான்
நேற்றிரவு சந்திப்பும் வெளிச்சத்தில் நிகழாமல் வெறும் நிலவொளியில் நிகழ்ந்தது அவள் நினைவுக்கு வர

வகை தொகையில்லாமல் ஏதேதோ கேள்விகள் விடை கிடைக்காமல் அவள் முன் வந்து விழ, யோசித்து யோசித்து கடைசியில் 'வின்'
'வின்' என்று அவளது தலை தெறிக்க ஆரம்பித்தது தான் மிச்சம்.


இந்த ஒரு வாரத்தில், அக்னி தொலைபேசி மூலம் நேர்காணலில் ஈடுபட்டு, தன் ஆத்மார்த்தமான கல்லூரி தோழி கீதா பணிபுரியும் மும்பை பாரன்சிக் லேபில், க்ரைம் லேப் அனாலிஸ்ட் பணியில் சேர்ந்திருந்தாள்.

தற்போதைய சூழ்நிலையில் அவளை நன்கு அறிந்தவள் அவள் தோழி கீதா மட்டுமே ... சில முக்கிய பணி நிமித்தம் காரணமாக அவளால் இந்த திருமணத்திற்கு வருகை தர முடியாமல் போக, சற்று முன்பு நடந்த திருமணத்திலும் மனம் ஒட்டாமல், தானும் தன் குழந்தையும் தனித்துவிடப்பட்ட உணர்வில் மிதந்து கொண்டிருந்தாள்.

இன்றைய தேதியில் அர்ஜுன் பல நூறு கோடிகளுக்கு ஒரே வாரிசு. அது அவனுடைய தந்தை ரகு கிருஷ்ணா அவருடைய மாமனாரின் பணத்தை சரியான முறையில் முதலீடு செய்து உழைத்து சம்பாதித்தது.

ஆனால் அக்னிக்கு , டெல்லியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இரண்டு அறைக்கொண்ட ஒரு சிறிய வீடு மட்டுமே சொந்தம். அஜய் அரசாங்க பணியில் இருக்கும் போதே மரணித்ததால் அவளுக்கு பாதி ஓய்வு ஊதியம் கிடைத்தது. கடைசியாக கிடைத்த பணிக்கொடையும் அஷ்வத்தின் எதிர்காலத்திற்காக வைப்புநிதியில் போட்டிருந்தாள்.

கணவனை இழந்தவள் என்ற ஒரே காரணத்திற்காக இந்த நவீன யுகத்திலும், ஆண் பெண் பேதமில்லாமல், அலுவலக அரசியல் , நட்பு வட்டம் என பல இடங்களில் பலரால் பலவிதமாக காயப்பட்டு இருக்கிறாள், இதற்கு அவள் அழகு மட்டுமல்ல அவளது புத்திசாலித்தனம், உழைப்பு, யாரையும் அருகில் அண்ட விடாத அவளது சுபாவம் போன்ற அனைத்துமே காரணமாக இருந்தது.

அந்த சூழ்நிலையில் கூட வேறு யாரையும் தன் இணையாக தேர்ந்தெடுத்துக்கொள்ள அவள் மனம் ஒப்பவில்லை, அதற்கான தேவையும் இருந்ததாக அவள் உணரவில்லை. ஆனால் இப்பொழுது அவளுக்கு ஒரு துணை தேவை. அவளை சூழ்ந்த சமுதாயத்திற்காக மட்டுமல்ல, அவளையும் அவள் குழந்தையையும் சூழ்ந்துள்ள பிரச்சனையிலிருந்து காப்பாற்றிக் கொள்ள, அதற்காகத்தான் சிறுவயது முதலே அவளை அறிந்தவனான அர்ஜுனை கரம் பிடித்தாள்.

இந்தத் திருமணம் முழுக்க முழுக்க தன் சுயநலத்திற்கானது, தன்னால் எந்த வகையிலும் அவன் சுகப்பட போவதில்லை என்பதை உணர்ந்து தான், பாதுகாப்பு என்ற ஒன்றை தாண்டி வேறு எந்த வகையிலும் அவனுக்கு பாரமாக இருக்கக் கூடாது என்பதை முடிவு செய்தே, தனக்கான பொருளாதார தேவையை தானே பூர்த்தி செய்துகொள்ள முன்கூட்டியே அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடித்திருந்தாள்.

திருமண சடங்கின் போது, அவளது கரம் பற்றி அக்னியை வலம் வந்தது , அவள் நெற்றியில் திலகமிட்டதெல்லாம் அர்ஜுனின் மனதில் ஒருவித ஆழிப்பேரலையை உருவாக்கியிருக்க, அவள் மனதில் வேறு எந்த உணர்வுக்கும் இடமில்லாமல் ஆராய்ச்சி ஆராய்ச்சி ஆராய்ச்சி மட்டுமே குடிக்கொண்டிருந்தது.
அவன் பார்வையும் அவள் முகத்திலேயே நிலைத்திருக்க, ஏனோ அவளால் அவன் பார்வையை இயல்பாக எதிர்கொள்ள முடியாமல் தவித்து போனாள்.

அவளுடைய திருமணத்திற்கான நிபந்தனைகள் அனைத்தும் தெரிந்தும்,
அவள் தன் அருகில் இருந்தாலே போதும் என்ற ரீதியில் நடைபெற்ற இந்த ஆத்மார்த்தமான பந்தம் பல நாட்களுக்குப் பிறகு அவனுக்கு ஆத்மதிருப்தியை கொடுத்திருந்தது.

அஷ்வத் அவன் வாழ்க்கையில் வந்திருப்பது, நீண்ட நாட்களுக்கு முன்பு தவறவிட்ட பொக்கிஷம், மீண்டும் அவன் கைகளில் கிடைக்கப்பெற்றிருக்கும் உணர்வைக் கொடுத்திருந்தது .

திருமணத்திற்கு பிறகு விருந்துண்டு முடித்ததும் ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல், அக்னி, அஷ்வத்தை அழைத்துக்கொண்டு மும்பைக்கு பயணமானான்.

மும்பையில் அவன் காவலர் குடியிருப்பில் இல்லாமல், தனி வீட்டில் வசித்து வர, அவன் இல்லத்தை அடைய இரவு 11 மணி ஆகிவிட்டது.

கொரோனா பாதிப்பு இருப்பதால் , வெளியில் உணவு ஏதும் உட்கொள்ளவில்லை என்பதால் வீட்டை அடைந்ததும், காரிலிருந்து பெட்டிகளை டிரைவரின் உதவியோடு அர்ஜுன் இறக்கி கொண்டிருக்கும் போதே அஷ்வத் "பசி" என்று அரைத்தூக்கத்தில் சிணுங்க ஆரம்பிக்க,
அதற்கு மேல் சற்றும் தாமதிக்காமல் வீட்டின் சமையலறையை தேடிச் சென்றவள்,
பிரிட்ஜை திறந்து பார்த்து அதிலிருந்த இரண்டு முட்டைகளை உடைத்து ஆம்லெட் செய்து, அரைத் தூக்கத்தில் இருக்கும் குழந்தைக்கு ஊட்டி முடிக்க,

" மேல உனக்கும் அஷ்வத்திற்கும் ரூம் இருக்கு..."- அர்ஜுன்.

" அவன் என் கூட தூங்கி தான் பழக்கம் ..." - அக்னி.

" சரி குழந்தையை கொடு.. மேல உன் ரூம்ல தூங்க வைக்கிறேன் ..." என்றவன் குழந்தையை மாடியிலிருந்த அவன் படுக்கையறைக்கு எதிர் அறையின் பஞ்சு மெத்தையில் கிடத்திவிட்டு
சமையலறையை சுத்தம் செய்து கொண்டிருந்த அக்னியிடம் தன் அறையில் இருந்து கொண்டுவந்த பிஸ்கட்டுகளை நீட்டி,

" நீயும் எதுவும் சாப்பிடல உனக்கும் பசிக்கும் சாப்பிடு..." என்று கொடுத்துவிட்டு உடன் தானும் பிஸ்கட்டுகளை உட்கொள்ள,

தன் குழந்தை உண்டு முடித்ததும் வேலை முடிந்துவிட்டதாக எண்ணியவளுக்கு, அவனது பேச்சு,
உடன் இருப்பவர்களை பற்றி கவலைப்படும் அடிப்படை நாகரிகம் கூட இல்லாமல் தான் சுயநலமாக செயல்பட்டதாக எண்ண வைத்தது.

அந்த வீடு, கீழே இரண்டு அறை, ஒரு கூடம், சமையலறை , மேலே கூடத்துடன் 3 அறைகளைக் கொண்டிருந்தது.

கீழிருக்கும் இரண்டு அறையில் ஒரு அறை விருந்தினர்கள் அறையாகவும் மற்றொன்று உடற்பயிற்சி கூடமாகவும் பயன்படுத்தப்பட, மேலிருக்கும் மூன்று அறையில், ஒன்று அவனது படுக்கை அறை, மற்றொன்று அலுவலக அறை ,
இன்னொன்று அவனது பயன்பாட்டுக்காக இருந்ததை தான் தற்போது அக்னிக்கு ஒதுக்கியிருந்தான்.

வழக்கம் போல் தூக்க மாத்திரையை உட்கொண்டுவிட்டு ,அறைக்கதவை லேசாக ஒருகளித்தபடி, தன் குழந்தையை அணைத்துக் கொண்டு படுத்தவளுக்கு, உறக்கம் எளிதாக வராமல் அலைக்கழிக்க, இறுதியில் மருந்தின் தாக்கத்தால், அவள் கண்கள் உறக்கத்தை நாடின.


விடியற்காலையில் விழித்தெழுந்த அஷ்வத் , தாயின் உறக்கத்தைக் கலைக்காமல் மெதுவாக படுக்கையிலிருந்து இறங்கி, திறந்திருந்த அர்ஜுன் அறைக்குள் நுழைய, காலை உடற்பயிற்சிக்காக ஷூ அணிந்து கொண்டிருந்தவனை பார்த்து,

"அங்கிள், ஆப் க்யா கர் ரஹே ஹோ...(என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க )"
என்றான் மழலை மொழியில்.

சிறியவனை ஆசையோடு பார்த்தவனுக்கு அவன் பேச்சை கேட்டதும்,

ச்சே...அப்பான்னு கூப்பிடாம அங்கிள்னு கூப்பிடறானே என்றிருந்தது ...

பிறகு இருவருக்கும் இடையே சுவாரசியமான சம்பாஷணைகள் நிகழ,
அவனது பேச்சில் ஆங்கிலம் , ஹிந்தி மராட்டி சரளமாக கபடி ஆட, தமிழ் தான் தடுமாறி நின்றது.

" இங்க பாரு கண்ணா ... நீ என்னை அர்ஜுன்னே கூப்பிடு சரியா ... " என்றான் 'அர்ஜுன்' என்ற அழைப்பு அதிக நெருக்கத்தை கொடுப்பதாக உணர்ந்து.

" நீங்க ரொம்ப எல்டர் ஆச்சே... ரொம்ப ஹய்ட்டா வேற இருக்கீங்க... ஹௌவ் கேன் ஐ கால் யூ பை நேம் ..." என்றான் பெரிய மனித தோரணையில்.

அவன் பேசிய அபிநயங்களை பார்த்து சிரித்தவன்,

" நான் உன்னோட ஃப்ரண்ட் ... உன் ஃப்ரண்டை நீ பேர் சொல்லி தானே கூப்பிடுவ... என்னையும் அப்படியே கூப்பிடு ... நீ என்னை அர்ஜுன்னு கூப்பிட்டா உனக்கு நிறைய ஐஸ் கிரீம் வாங்கி தருவேன்..." என அர்ஜுன் ஆசை வார்த்தை பேச , ஐஸ்கிரீமில் உருகியவன் அவனை அர்ஜுன் என்றே அழைக்க ஆரம்பித்தான்.

பிறகு அஷ்வத்தை முதுகில் வைத்துக் கொண்டு அவன் தண்டால் எடுத்தது, தம்புல்ஸை தவழவிட்டு விளையாட்டு காட்டியது என ஒருவாராக உடற்பயிற்சி முடிய,

பிறகு அவனுக்கு பல்துலக்கும் போது,

" திஸ் டூத் பேஸ்ட் ஈஸ் ஸ்பைசி(spicy)... ஐ வாண்ட் பேபி டூத் பேஸ்ட் ..." என்றவனை பார்த்து சிரித்தபடி

" அம்மா எழுந்து கட்டும், அப்புறம் பேபி டூத்பேஸ்ட் யூஸ் பண்ணிக்கலாம் சரியா .." என சமாதானம் கூறிவிட்டு
இருவரும் ஒன்றாக ஷவரை திறந்து பாத் டப்பில் ஆட்டம் போட்டு குளித்து முடித்து, உடைமாற்றிக்கொண்டு காலை உணவு உட்கொள்ளும் பொழுது அக்னிக்கு விழிப்பு வந்து அவர்களை உணவு மேஜையில் சந்தித்தாள்.

உணவு மேஜையின் மேல், இடுப்பில் துண்டு அணிந்தபடி குளித்த புத்துணர்வோடு உணவு உட்கொண்டிருந்த தன் மைந்தனை பார்த்து சிரித்துக்கொண்டே

"ஐ அம் சாரி ... புது இடம் லேட்டா தூங்கினதால சீக்கிரமா எழுந்திருக்க முடியல ... உங்களை ரொம்ப கஷ்டப் படுத்திட்டானா...." என குற்ற உணர்வோடு கூறியவள் அப்பொழுதுதான் காவல்துறை சீருடையில் இல்லாமல், சாதாரண பார்மல் ஷர்ட் பேண்ட்ல் இருந்த அர்ஜுனை வித்தியாசமாய் பார்க்க,

" அஷ்வத்தை ஸ்கூல்ல சேர்க்கணும் ... கெட் ரெடி சூன்... " என்று அவன் கூறியதும், மின்னல் வேகத்தில் தயாராகி வந்தவள், காலை உணவாக ஒரே ஒரு சப்பாத்தியை உட்கொண்டு விட்டு,
அஷ்வத்தை தயார் செய்து அழைத்து வர மூவரும் பெரிய பிரபல பள்ளியை அடைந்தனர்.

பள்ளியின் தாளாளர் அனைவரையும் இன்முகத்துடன் வரவேற்று அமரச் செய்துவிட்டு
" மிஸ்டர். ஏ.கே உங்களை பத்தி நிறைய ஆர்ட்டிக்கல் படிச்சிருக்கேன்... இப்பதான் உங்களை சந்திக்கிற சந்தர்ப்பம் கிடைச்சிருக்கு...
நாங்க அப்ப கல்கத்தாவுல இருந்த சமயம் ,
வெஸ்ட் பெங்கால் ரியாட்ட (Riot- கலவரம் )பக்காவாக ஹேண்டில் பண்ணீங்க ..." என்றவர் அக்னியின் முகத்தை கண்களை சுருக்கி உற்றுநோக்க, அதற்கான காரணம்
புரிந்த நிலையில் அர்ஜுன் உள்ளுக்குள் நொந்து கொண்டிருக்க

" உங்க சன்னுக்கு எங்க ஸ்கூல்ல அட்மிஷன் கொடுக்கிறதுல வி ஆர் வெரி ஹேப்பி... பட் ஒன் திங், கொரோனா ப்ராப்ளத்தால பார்ஷியல் ஸ்கூல் ரியோப்பனிங்னு கவர்மெண்ட் சொல்லி இருக்கு , சோ பெரிய கிளாஸ்ஸக்கு மட்டும்தான் வாரத்துல மூணு நான் ஸ்கூல் அனௌன்ஸ் பண்ணியிருக்கோம்... ஜூனியர் கேஜி கெல்லாம் ஜூம் கிளாசஸஸ் மட்டும்தான்... ஆனா நாங்க டே கேர் சென்டரை ரன் பண்றோம் ... ஒரு கிளாஸ்ல மாக்ஸிமும் 10 கிட்ஸ் அலவ்டு... இஃப் யூ விஷ் வி கேன் .... இட்ஸ் வெரி சேஃப்... " என்றவர்
அஷ்வத்தை பார்க்க அவனோ,
அங்கிருந்த சிறார்கள் விளையாடும் 'பில்டிங் பிளாக்ஸை' அனாயாசமாக கையாண்டு அழகான
வீட்டைக் கட்டி முடித்திருந்தான்.


" உங்க சன் லுக் அண்ட் ப்பீல்(look and feel) மட்டுமில்ல, ஆட்டிட்யூட்லயும் உங்கள மாதிரியே இருக்காரு ... என்ன ஃபாஸ்ட் அண்ட் ஸ்மார்ட்..." என்றதும் அக்னிக்கு ஒரு மாதிரி இருக்க,

அவர் குழந்தையை அழைத்து, அவனுடைய பெயரைக் கேட்டதும்,
" அஷ்வத் " என்றான் .

" ஓ... அஷ்வத் கிருஷ்ணா ...அப்போ ஜூனியர் ஏ.கேன்னு சொல்லுங்க... " என்றவர் , அர்ஜுன் மறந்திருந்த, அவன் வாழ்க்கையையே புரட்டிப்போட்ட அந்தக் கலவரத்தை நினைவு படுத்தியது அவனுக்கு உவப்பாகவே இல்லை, அதனை முகத்தில் காட்டாமல் அவன் திணறிக்கொண்டிருக்கும் போது,
" இந்த அட்மிஷன் ஃபார்மை ஃபில் பண்ணிக் கொடுங்க ..." என்றவர் நீட்ட,
அதனை அக்னியிடம் நகர்த்தியவன், கண்டும் காணாதது போல் கைப்பேசியை பார்த்தபடி கீழ் கண்ணால் ,அவள் படிவத்தை நிரப்புவதை பார்க்கலானான்.

குழந்தையின் பெயர் என்ற இடத்தில் அஷ்வத் என்று நிரப்பியவள் கடைசி பெயர் மற்றும் குடும்பப் பெயர் என்ற இடத்தில் ஆங்கிலத்தில் A என்று எழுதிவிட்டு அரை வினாடிக்கும் குறைவாகவே சிந்தித்தவள் அஜய் என எழுத ஆரம்பித்ததும் , பார்வையை வெளியே திருப்பிக்கொண்டான்.

முதன்முறையாக குழந்தையை பள்ளியில் சேர்க்கிறாள். அஷ்வத்தின் பிறப்புச் சான்றிதழில் தாயின் பெயர் அக்னி, தந்தையின் பெயர் அஜய் என்றிருக்க, அதையே அவள் படிவத்தில் நிரப்ப, ஏனோ அதெல்லாம் அர்ஜுனுக்கு உவப்பாகவே இல்லை.

படிவத்தை சரிபார்த்த தாளாளருக்கு முகம் சுருங்க, அக்னியை மீண்டும் ஒருமுறை உற்று நோக்கிவிட்டு, படிவத்தைப் பெற்றுக் கொண்டார்.

15 நிமிடத்தில் சேர்க்கை நடைபெற்று விட, பள்ளி அலுவலகத்தில், கிட்டத்தட்ட 50 ஆயிரம் ரூபாய் சேர்க்கைக்கான கட்டணத்தை செலுத்தி விட்டு, காரில் ஏறி புறப்படும் போது,

" எவ்ளோ ஆச்சுன்னு சொல்லுங்க... நான் மனி ட்ரான்ஸ்பர் பண்ணிடுறேன்..." என்றவளின் பேச்சு அவனை துணுக்குற செய்ய, பதில் பேசாமல், கையிலிருந்த ரசீதை மனம் கொள்ளா எரிச்சலுடன் அவன் காட்ட, வாங்கிப் பார்த்து
உடனே ஜிபே மூலம் பணத்தை அவன் வங்கி கணக்கிற்கு மாற்றியவள்,

" கிராஸரீஸ்க்கெல்லாம் எவ்ளோ ஆகும் ..." என்ற கேள்வியில் அர்ஜுனுக்கு கோபம் கொந்தளிக்க

இவ சாப்பிட்ட ஒரு சப்பாத்திக்கு மளிகை சாமானுக்கு பணம் கொடுக்கப் போறாளாம் ...என உள்ளுக்குள்ளே புலம்பியவனுக்கு ஆத்திரம் விண்ணை முட்ட,

அவளோட எல்லா நிபந்தனைகளுக்கும் ஒத்துகிட்டு தான் கல்யாணம் பண்ணி இருக்கே.. முதல் நாள்லயே பிரச்சினை பண்ணாத ... என்றவன் மனம் அறிவுறுத்த,

" சமையல் செய்யறவங்க கிட்ட எப்படி நாகரீகமா கேக்கணுமோ அப்படி கேட்டுக்கோ..." என்று வார்த்தைகளை கடித்து துப்பினான்.

அவன் வீட்டில் பணி செய்யும் சமையல்கார பெண்மணி, வீட்டை சுத்தம் செய்பவர், தோட்ட வேலை செய்பவர், டிரைவர் என அனைவரும் பார்த்த பார்வையில் யாதொரு வித்தியாசத்தையும் அவளால் காண முடியவில்லை.
இயல்பாக அவளிடம் நலம்
விசாரித்திருந்தனர் ... இம்முறை அர்ஜுன் மும்பைக்கு வந்து ஐந்து மாதம் ஆகிய நிலையில் அவனுடைய மனைவியும் குழந்தையும் வந்திருக்கிறார்கள் என்ற எண்ணமே அவர்கள் முகத்தில் குடி கொண்டிருந்ததால், அதற்கேற்றார் போல் பேசுமாறு மறைமுகமாக அறிவுறுத்தினான்.

எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அர்ஜுனுக்கும் அக்னிக்கும், இப்பொழுது இருப்பவர்களுக்கும் கிட்டத்தட்ட பத்து வித்தியாசங்களை வரிசைப்படுத்திவிடலாம்.

அப்பொழுதெல்லாம் விடாமல் அக்னி பேசிக்கொண்டே இருப்பாள், அர்ஜுனும் பேசுவான்... சில சமயம் அவள் பேச்சில் இருக்கும் உண்மையை ரசித்தபடி 'உம்' கூட்டிக் கொண்டேவும் இருப்பான் . அதன் பின்
இருவருக்குமே வாழ்க்கை கொடுத்த மரண அடி காரணமாக, மனமுதிர்ச்சி வர, தற்போது இருவருமே மௌனத்தை தத்து எடுத்துக் கொண்டு தவணை முறையில் பேசி வருகின்றனர்.

அமைதி இருக்கும் இடத்தில் ஆழம் அதிகம் இருக்கும்,

அது கடலோ, காதலோ , வாழ்க்கையோ....
ஆனால் அது மகிழ்ச்சியின் வெளிப்பாடு என்பதை விட துக்கத்தின் வெளிப்பாடாகவே தான் பெரும்பாலும் இருக்கும் ..... அதுதான் இங்கு இருவருக்குமிடையே விரவிக் கிடந்தது.

அவள் தன்மானத்திற்காக விட்டுக்கொடுத்து செல்ல நினைத்தவனுக்கு அவன் தன்மானம் அடிவாங்கும் போது மிகுந்த
ஆற்றாமையாக இருந்தது.

என் பொறுமைக்கும் எல்லை உண்டு ...
அந்த எல்லை வராம கடவுளே நீ தான் பார்த்துக்கணும்... அளவுக்கதிகமா சோதிக்கிறாளே... என்றவனுக்கு தெரியாது கூடிய விரைவில் அவள் விஷயத்தில் வேறொரு அவதாரம் அவன் எடுக்கப் போவது.

★★★★★★★★★★★★★★★★★★★


(கடந்த ஒரு வாரத்தில் மும்பையில், விஷ்ணுவின் வாழ்க்கையில் நடந்தவை.)

ஸ்ரீயை காவல்நிலையத்தில் சந்தித்ததை தன் தாயிடம் கூறியவன்
மறுநாள் காலை , அவளை காட்கோபர் காவல் நிலையத்திற்கு, வர சொல்லி குறுஞ்செய்தி அனுப்பி விட்டு, அவளுக்காக அங்கு காத்துக் கொண்டிருந்த போது

" கிஷோர்...(சப் இன்ஸ்பெக்டர்) என்னய்யா இது வித்தியாசமா,
கோஷம் போடறாங்க ..." என்றான் விஷ்ணு, வாசலில் விவசாய சங்கத்தை சார்ந்த மக்கள் பேரணியில் ஈடுபட்டிருந்ததை பார்த்து .

" இல்ல சார், அவங்க கோரிக்கைகளை அரசாங்கத்துக்கு வலியுறுத்தராங்க..."

" அப்படி என்னதான் கோரிக்கைகளா இருந்தாலும் இப்படியா கோஷம் போடறது.... நம் நாட்டுக்கு சாட்டிலைட் எதுக்கு, அணு ஆராய்ச்சி எதுக்குன்னு .... கொஞ்சம் கூட யோசிக்கவே மாட்டாங்களா ..."

" சார், நீங்கதான் புரியாம பேசுறீங்க... நான் ஒரு விவசாய குடும்பத்துல இருந்து வந்தவன், மத்ததெல்லாம் இல்லாம வாழலாம் சார் ,விவசாயம்... சாப்பாடு இல்லாம எப்படி சார் வாழறது ... "

" நானும் ஒரு விவசாய குடும்பத்துல இருந்துதான் வந்திருக்கேன், நான் விவசாயிகளை தப்பா சொல்லல... அவங்க பிரச்சனை அவங்க கவர்மெண்ட் கிட்ட பேசிக்கிறாங்க ...
ஆனா கொஞ்சம்கூட யோசிக்காம அணு ஆராய்ச்சி , எதுக்கு சாட்டிலைட் எதுக்குன்னு கேட்கிறார்களே, அது தான் வருத்தமா இருக்கு ...

ஒவ்வொரு சாட்டிலைட் தயார் பண்ண பல கோடி ரூபாய் செலவு, ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள் மாசக் கணக்கா , சரியா சாப்பாடு தண்ணி இல்லாம வேலை செய்யறாங்க ...
எதுக்கு நம்ம நாட்டோட பாதுகாப்புக்கு ..
இந்தியா அனுப்பின
RISAT , EMISAT ,INSAT இந்த சாட்டிலைட் ரேடார்ஸ் எல்லாம் நம் நாட்டோட பாதுகாப்புக்காக பயன்படுத்து...

தெரியாமதான் கேக்கறேன், உனக்கு ஒரு அஞ்சு ஏக்கர் நிலம் இருக்குதுன்னு வையி, அதுல எந்த பாதுகாப்பும் இல்லாம விவசாயம் நல்லா பண்ணிக்கிட்டு இருக்க, ஒருநாள் எவனாவது அந்நியன் உள்ள வந்து
உன்ன அடிச்சு வெளிய துரத்திட்டு உன்னோட அஞ்சு ஏக்கர் நிலத்தோட உன் வீட்டு பெண்டு பிள்ளைகளை அவன் கஸ்டடிக்கு கீழே கொண்டு வந்துட்டா என்ன பண்ணுவ ...

ஒரு நாட்டுக்கு விவசாயம் எவ்ளோ முக்கியமோ அதே அளவுக்கு விஞ்ஞானமும் முக்கியம் ... போலீஸ்காரனா இருந்துகிட்டு பாதுகாப்போட முக்கியத்துவம் தெரியாம பேசறியே ...
அதுவும் இந்தியா போன்ற வளமான நாட்டுக்கு பாதுகாப்பு ரொம்ப தேவை, வானத்தைப் பார்த்து மணி சொன்னவன் என் தாத்தன், ஆனா இப்ப வானமே நமக்கு சொந்தமில்லங்கிற நிலைமை வந்துகிட்டு இருக்கு...
இவ்ளோ ரேடார்ஸை பயன்படுத்தி தகவல் தொடர்பையும் பாதுகாப்பையும் அதிகப்படுத்தி கூட தீவிரவாதிகளை கண்டுபிடிக்க முடியாம மண்ட காஞ்சு போயிருக்கோம்...

நான் விவசாயிகளுக்கு எதிராவும் பேசலை அரசாங்கத்துக்கு ஆதரவாவும் பேசல ...
விவசாயிகள் அரசாங்கத்திடம் அவங்க கோரிக்கைகளை வைக்கிறது அவங்க உரிமை .... ஆனா தேவையில்லாம இந்த மாதிரி பொய் பிரச்சாரம் பண்ண கூடாதுன்னு சொல்ல வரேன்.... "

" அப்ப அரசாங்கம் கொண்டுவர திட்டம் எல்லாம் சரின்னு சொல்றீங்களா ..."

" எல்லாமே சரியா இருக்கும்னு சொல்ல முடியாது... அதே சமயத்துல எல்லாமே தப்பா இருக்கும்னும் சொல்ல முடியாது...
நீ 90S கிட் தானே, உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா ..."

" இல்ல ..."

" காரணம் நான் சொல்லவா ... இப்போ 90s கிட்ஸ்க்கு பொண்ணு கிடைக்கிறதே கஷ்டமா இருக்கு ... அதான்... ஏன் தெரியுமா ... 80sல அரசாங்கம் சொல்லிச்சு பெண் சிசுக்கொலை பண்ணாதீங்க பண்ணாதீங்கன்னு ... யாரு கேட்டா ...
பெண்ணு பொறந்துசின்னா அரசாங்கமா வந்து கல்யாணம் பண்ணி வைக்க போகுதுன்னு சொல்லி பெண் சிசுக்களை அழிச்சிட்டு ...
ஒன்னுக்கு ரெண்டு ஆம்பளை புள்ளைகளை பெத்துக்கிட்டாங்க...

இப்போ அந்த ரெண்டு பசங்களுக்கும் பொண்ணு கிடைக்காம கல்யாணம் பண்ண முடியாம தவிக்கிறாங்க....
கிட்டத்தட்ட ஒரு தலைமுறை ஆம்பளைங்களுக்கு கல்யாணத்துக்கு பொண்ணே கிடைக்கல ....

இதையெல்லாம் ஃபோர் காஸ்ட் பண்ணிதான் அன்னைக்கு அரசாங்கம் சொல்லிச்சு... அப்ப மக்கள் கேட்டாங்களா ... இல்லையே ... ஒரு விஷயத்தை எதிர்கணுங்கிற நோக்கத்துடனோ இல்ல ஆதரிக்கணுங்கிற நோக்கத்துடனோ செயல்படாம, அனாலிசிஸ் பண்ணா நமக்கு சரியான புரிதல் கிடைக்கும்னு சொல்ல வரேன்..."

" சார், நீங்க 90s கிட்டு தானே...உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா ..." என்றான் நக்கலாக கிஷோர்.

"ஆகப்போகுது ... " என்றவனை கிஷோர் பொறாமையாக பார்த்து வைக்க,

" ஏன்... உனக்கு பொறாமையா இருக்கா ..." ---- விஷ்ணு.

" இல்ல .."

" அப்ப சரி ..."

இருவருக்கும் இடையே நடந்த உரையாடல்களை கேட்டுக்கொண்டிருந்த சமீர் (ஈஸி பிளை கேப் டிரைவர்)

" சார், நீங்க சொன்ன மாதிரிதான் ரேடார் சாட்டிலைட்ன்னு ஏதேதோ பேசிக்கிட்டாங்க சார்... இப்பதான் ஞாபகத்துக்கு வருது..." என்றான் ஆவலோடு.

" நான் சொல்லல .... தீவிரவாதிங்க எல்லாம் நம்மள விட பாஸ்டா இருக்காங்கன்னு ... ஆனா நாம தான் இன்னும் சேட்டிலைட் எதுக்குன்னு சத்தம் போட்டுகிட்டு இருக்கோம்..." என்று விஷ்ணு கிஷோரிடம் சொல்லிக் கொண்டிருக்கும் போது , இன்ஸ்பெக்டர் யாதவ் வர அவர் பின்னே ஸ்ரீ கேப்பில் வந்திறங்க ,

" யாதவ், இவன் என்ன சொல்றான்னு கேட்டு வைங்க... ஏ.கே கிட்ட பேசி முடிவு பண்ணிக்கலாம் ..." எனச் சமீரை காட்டி கூறிவிட்டு ஸ்ரீயை நோக்கி விரைந்தவன் ,

" ஏண்டி , உனக்காக எவ்ளோ நேரமா காத்துகிட்டு இருக்கிறது... இப்படித்தான் ஆடி அசைஞ்சு அலங்காரம் பண்ணிக்கிட்டு வந்து சேருவியா..." என்றான் கடுப்பாக .

" இங்க பாருங்கோ... நான் உங்களை ஒன்னும் பாக்க வரல... நேக்கு என் வண்டி வேணும் ...அதான் வந்தேன் ..." என்று வீராப்போடு சொன்னவளின் நெற்றியில் அனாயாசமாக துப்பாக்கியை வைத்தவன்

" நீ அடங்க மாட்ட டி ... உன்னை முறையா கல்யாணம் பண்ணி வீட்டுக்கு கூட்டிகிட்டு போலாம்னு பார்த்தா... நீ வேலைக்கு ஆக மாட்ட ... உன்னை இப்படியே கடத்திக்கிட்டு போயிடுறேன் ...வா.."

" ஐயையோ ... இங்க பாருங்கோ நான் உங்களைப் பார்க்கத்தான் வந்தேன்...
இந்த மாதிரி கடத்தலங்கிற வார்த்தை எல்லாம் நேக்கு பயமா இருக்கு ... நான் என் அம்மாண்ட உங்களை மீட் பண்ணினதை பத்தி எல்லாத்தையும் சொல்லிட்டேன்... அம்மா ரொம்ப சந்தோஷ பட்டா...நேக்கும் உங்களை மீட் பண்ணதுல ஹாப்பின்னு அம்மாண்ட சொல்லிட்டேன்..." என்று
படபடத்தவளிடம் ,

" ஏய் மட்டி, முதல்ல அதை என்கிட்ட சொல்லணும்... அதை விட்டுட்டு உங்க அம்மா கிட்ட சொல்லி இருக்க... ஆமா நேத்து நைட் போன் பண்ணனே.. ஏன் எடுக்கல ..."

" தூங்கிட்டேன் ..." என்றாள் சன்னமாக.

" ஒன்பது மணிக்கே தூங்கிடுவியா... சுத்தம் ..."

" இங்க பாருங்கோ .... நாழி ஆர்து... நேக்கு வண்டி வேணும்..."

" அப்போ உங்க அப்பாவ கூட்டிகிட்டு வா ... தரேன் ..."

" ஐயையோ ... நான் மாட்டேம்பா..."

" அப்ப, ஸ்ரீராம கூட்டிகிட்டு வா..."

" ஐயையோ, அவன் இன்னும் டேஞ்சர் ..."

" அப்ப என்கூட என் வீட்டுக்கு வா ..."

" ஐயையோ, நான் வரமாட்டேன் பா.."

" என்னடி ...விளையாடுறியா... ஒரே ஷாக்கிங் எக்ஸ்பிரஷனா கொடுத்துக்கிட்டு இருக்க ... அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி நமக்கு நிச்சயதார்த்தம் ஆனது ஞாபகத்துல இருக்கா இல்லையா...

என்னை பாத்தா கேனையன் மாதிரி இருக்கா ... நாளைக்கு சரியா பதினோரு மணிக்கு உங்க அப்பாவ கூட்டிட்டு இங்க வர ... இல்ல நான் உன் வீடு புகுந்து உன்னை தூக்கிடுவேன் ... எப்படி வசதின்னு நீயே முடிவு பண்ணிக்கோ..."
என்று மிரட்டியவனைப்பார்த்து பயந்தபடி

" அம்மாவ அழைச்சிண்டு வந்தா ஒத்துப்பேளா...." என சன்னமாக கேட்டவளிடம்

" ம்ஹும்... உன் அப்பா தான் வரணும்... அப்புறம் நாளைக்கு வரும் போது மெச்சூர்டா ட்ரஸ் பண்ணிக்கிட்டு வர .... ஏற்கனவே கொழ கொழன்னு குழந்தை மாதிரி இருக்க ..
இப்படி பிங்க் கலர் டாப், பிங்க் கலர் ப்ரோச் , பிங்க் கலர் பொட்டு , பிங்க் கலர் மாஸ்குன்னு அஞ்சலி பாப்பா மாதிரி எல்லாம் வரக்கூடாது ...
பாரு, போற வர்றவன் எல்லாம் என்னை போக்சோ சட்டத்துல அரெஸ்ட் பண்ணனுங்கிறா மாதிரியே பார்த்துட்டு போறான்..." என்றான் தொலைவிலிருந்து பொறாமையோடு பார்த்துக்கொண்டிருந்த கிஷோரை பார்த்தபடி.

அப்பொழுது யாதவ்,

" விஷ்ணு சார், ஏ.கே லைன்ல இருக்காரு.... " என்று தன் செல்போனை அவனிடம் திணிக்க,

" விஷ்ணு, யாதவ் கிட்ட விசாரிச்சிட்டேன்... அந்த சமீர் இதுவரைக்கும் பெருசா எதையும் சொல்லலையாம்...அவனை அடையாளம் சொல்ல சொல்லி பாரன்சிக் ஆர்டிஸ்ட்ட வச்சு வரைஞ்ச கண்ணும் சரியாவே வரலயாம் ... கேட்டா அவனுக்கு எதுவுமே நினைவுல இல்லன்னு சொல்றானாம்... அவன் நம்ம கஸ்டடிக்கு வந்து கிட்டத்தட்ட ஒரு வாரத்துக்கு மேல ஆகுது ... எஃப்.ஐ.ஆர் வேற போடல... அவனை இன்டெஃபனெட்டா வச்சுக்கிட்டு இருக்கிறது தப்பு....அவனுக்கு ஒரு ஷேடோ போட்டு ரிலீஸ் பண்ண சொல்லி இருக்கேன்....வெளில ஒரு மாசம் அவன் நம்ம கண்காணிப்புல இருக்கட்டும் அப்புறம் ஒரு முடிவுக்கு வரலாம் ..." என்று அர்ஜுன் அழைப்பைத் துண்டிக்க,

" யாதவ், ஏ.கே சொன்னது போல செஞ்சுடுங்க... சமீர இப்ப விட்டுடுங்க ... ஆனா அவனை கண்காணிக்க நல்ல ஷேடோவா போடுங்க ..." என்று அறிவுறுத்தி விட்டு
ஒருவழியாக ஸ்ரீயை அவள் வீட்டு தெரு முனையில் இறக்கி விட்டு வீடு வந்து சேர்ந்தவனிடம்,

" கண்ணா விஷ்ணு, நேக்கு ஸ்ரீயை பாக்கணும் போல இருக்குடா..." என்றார் வேதா.

" முதல்ல உங்க அண்ணன் வந்து என்னை பாக்கட்டும்... அப்புறம் நீங்க ஸ்ரீயை பாக்கலாம் ..." என்றான் ரங்கநாதனை சந்திக்கும் ஆவலில்.

மரகதம் மற்றும் ருத்ர நாராயணனின் இறப்பிற்கு பிறகு, ஸ்ரீவில்லிபுத்தூரை விட்டு சென்ற ரங்கநாதன், முதலில் செய்த வேலை, துபாயில் தான் வசித்துக்கொண்டிருந்த இல்லத்தை மாற்றியது ... பிறகு வீட்டு தொலைபேசி எண் மற்றும் சுமித்ரா, ஸ்ரீயின் கைபேசி எண்களை மாற்றியது.

ஏற்கனவே அரண்மனை போன்ற அந்த வீட்டில் சிசிடிவி தொழில்நுட்பம் இருந்தாலும், மேலும் கண்காணிப்பு பணியை அதிகப்படுத்தியதோடு,
சுமித்ரா மற்றும் ஸ்ரீ சென்றுவரும் காரிலிருந்து அவர்கள் செல்லும் இடமெல்லாம் அவர்களை கண்காணிக்க ஆண் பெண் என்று இரு சாராரும் உள்ள நான்கு பேர் கொண்ட ஒரு குழுவையே அமைத்திருந்தார்.

எந்த வழியிலும் வெங்கடேஷ், வேதா , விஷ்ணுவுடன் தொடர்பில் இருக்கக் கூடாது என்று ஸ்ரீ மற்றும் சுமித்ராவை கடுமையாக மிரட்டி வைத்திருந்தார் ரங்கநாதன்.

தொலைபேசி அழைப்புகள், மின்னஞ்சல், ஃபேஸ்புக், ட்விட்டர் என அனைத்து சமூக வலைத்தளங்களிலும் ஸ்ரீ கண்காணிக்க பட்டாள். ஆதலால் ஸ்ரீயால் மட்டுமல்ல சுமித்ராவால் கூட வேதாவையோ விஷ்ணுவையோ தொடர்பு கொள்ள முடியாமல் போனது .

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பேச்சுவார்த்தை இல்லாமல் போன உறவு, ருத்ர நாராயணனின் விருப்பமோ அல்லது அந்த பரம்பொருள் நாராயணனின் ஆசியோ, ஏதோ ஒன்றால் இப்போதுதான் மீண்டும் துளிர்க்க ஆரம்பித்திருக்கிறது.


தகிப்பாள்
 
அத்தியாயம் 14


பிஎம்டபிள்யூ காரில் வந்த ரங்கநாதனுக்கு , அவரது உதவியாளர் அவருக்கு முன்னதாக காரிலிருந்து இறங்கி பின்பக்க கதவை திறந்து விட, ஸ்ரீ யுடன் பேசியபடி கம்பீரமாக காட்கோபர் காவல் நிலையத்திற்குள் நுழைந்தவரை, இன்ஸ்பெக்டர் யாதவின் அருகில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தபடி விஷ்ணு பார்த்துக்கொண்டிருக்க,


எதேச்சையாக அவனை பார்த்தவருக்கு, மின்சாரம் தாக்கியது போன்ற உணர்வு ஏழ, அதனை வினாடிக்குள் மறைத்து சுதாரித்தவரை
முகபாவம் எதுவும் காட்டாமல், விஷ்ணுவின் கண்கள் அளவெடுக்க,


" ஐ அம் ரங்கநாதன் .... சிஇஓ ஆஃப் ஸ்ரீ கன்ஸ்டிரக்ஷன்ஸ்... என் பொண்ணோட வண்டி விஷயமா வந்திருக்கேன் ..." என்று யாதவை பார்த்துக் கெத்தாக கூறியவரை, மிகுந்த மரியாதையோடு இருக்கையில் அமரச் சொன்ன யாதவ்,


" அஸ் பெர் த ரூல் ... நீங்க ஆர்டிஓ ஆபீஸ்ல தான் ஃபைனை கட்டிட்டு வண்டியை எடுத்துக்கிட்டு இருக்கணும்... ஆனா இவங்க இங்க கம்ப்ளைன்ட் கொடுக்க வந்ததால, உங்க டாட்டரோட வண்டி இங்கேயே இருக்கு..." என்றவனை இடைவெட்டி


" உங்க பொண்ணுக்கு வண்டி வாங்கி கொடுத்தா போதாது... முதல்ல லைசென்ஸ் எடுக்க சொல்லுங்க ...
ரோட் ரூல்ஸ்ஸ ஃபாலோ பண்ண கத்துக்கொடுங்க..." என்ற விஷ்ணுவின் பேச்சு மற்றும் முறைப்பை எதிர்கொண்டவர் பதிலேதும் பேசாமல்,


" எங்க சைன் பண்ணனும் ..." என்றார்.
" சைன் எல்லாம் வேண்டாம் சார் நீங்க வண்டியை எடுத்துட்டு கிளம்புங்க ..." என்று யாதவ் சொன்னதும், வெடுக்கென்று எழுந்து தன் காரை நோக்கி நடந்தவர்,
அருகில் வந்த ஸ்ரீயிடம் ,


" இவனைக் காட்ட தான் என்னை அழைச்சிண்டு வந்தியா .... முன்னாடியே தெரிஞ்சிருந்தா இங்கெல்லாம் வந்திருக்கவே மாட்டேன் ... காலணா பொறாத வண்டிக்கு, இவணின்ட எல்லாம் அட்வைஸ் கேட்க வச்சிட்டயே... ஒரே பொண்ணுன்னு செல்லம் கொடுத்து வளர்த்தது தப்பா போச்சு ...
இனிமே ஏதாவது சாக்கு வச்சு இவனைப் பார்த்த, நீ தொலைஞ்ச ...
இதோட எல்லாத்தையும் நிறுத்திக்கோ ..." என வசை பாடிக் கொண்டே சென்றது விஷ்ணுவின் காதுகளில் துல்லியமாக விழ, அவர்களுடன் வந்திருந்த மற்றொரு உதவியாளர் ஸ்ரீயின் ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு , அவர்கள் பயணிக்கும் காரை பின் தொடர்ந்தார்.


வீட்டிற்கு வந்த ரங்கநாதன் சுமித்ராவிடம்,
" இன்னைக்கு அந்த பயலை பார்த்தேன் டி..." என்றவர் யாரைக் குறிப்பிடுகிறார் என்று தெரிந்தே,


" யாரை சொல்றீங்கோன்னா..."என எதார்த்தம் போல் சுமித்ரா கேட்டு வைக்க


" அதான் அந்த விஷ்ணு ..." என நடந்த அனைத்தையும் பகிர்ந்தவர்,


" ஒரு முறை முறைச்சாண்டி... என் அப்பா ருத்ர நாராயணனையே பார்த்த மாதிரி இருந்தது.... ஒரு நிமிஷம் ஆடிப்போயிட்டேன்... உன் பொண்ணு கிட்ட சொல்லி வை, அவனை எந்த காரணத்தை கொண்டும் மீட் பண்ண கூடாதுன்னு..." என்றவரின் குரலில் அளவுக்கு அதிகமான கோபம் தென்பட்டது.


****************************************


" டேய் இன்னைக்கு ரங்குவை பாத்தியா... எப்படி இருக்கான்... என்ன சொன்னான்..." என வேதா ஆவலோடு கேட்க


" அதே கெத்து , அதே திமிரு ... என்னை தெரிஞ்சா மாதிரி அவர் காட்டிக்கல ... நானும் காட்டிக்கல ... ஆனா ஸ்ரீயை மட்டும் திட்டிகிட்டே போனாரு..."


" டேய் கண்ணா, நான் ஸ்ரீயை பார்க்கணும் டா .."


" போன் பண்ணா அவ எடுக்க மாட்டேங்குறா ... ஆனா நாளைக்கு மகாலட்சுமி கோவிலுக்கு வரா... அங்க அவளைப் பார்க்கலாம் ..."


" அது எப்படிடா போனை எடுக்கலங்கிற,
ஆனா அவ கோவிலுக்கு வர்றது மட்டும் நோக்கு எப்படி தெரிஞ்சது ... ஒரு வேளை அவ பேசுறதையும் வயர் டேப்பிங் பண்ணிட்டயோ.."


" அது எப்படிம்மா கரெக்டா கண்டுபிடிச்சீங்க ... நான் பேசிக்கலி வயர் டேப்பிங் எக்ஸ்பர்ட்டா இருந்தாலும் சொந்த விஷயத்துக்காக பயன்படுத்தக்கூடாதுன்னு கொள்கையோட இருந்தேன்... ஆனா அவ அவங்க அப்பாவுக்கு பயந்து போனை எடுக்க மாட்டேங்கறா... சோ வேற வழி இல்லாம , அவ பிரண்டோட பேசினதை ஒட்டு கேட்க வேண்டியதா போச்சு ...." என்றவன் மறுநாள் மாலை தன் தாய் வேதாவுடன், ஸ்ரீ காக மகாலட்சுமி கோவிலில் காத்துக் கொண்டிருக்க, ஸ்ரீ வராமல் ஆட்டம் காட்டினாள்.


" டேய் கண்ணா, இன்னும் எவ்ளோ நேரம் டா பொறுமையா காத்துண்டு இருக்கிறது ..."


" ஓராயிரம் ஆண்டுகள் ஆகட்டுமே... நம் பொறுமையின் பொருள் மட்டும் விளங்கட்டுமே ...
வரும் காலத்திலே நம் பரம்பரைகள் நாம் அடிமையில்லை என்று முழங்கட்டுமே ..." என்று புரட்சித் தலைவர் போல் முக பாவத்தோடு பாடி, கையை அசைத்துக் காட்டியவனிடம்


" எப்ப பார்த்தாலும் விளையாட்டுதான் டா நோக்கு ... இன்னும் எவ்ளோ நேரம்டா காத்துண்டிருக்கிறது... நான் இப்படி பண்றது என் ஆத்துக்காரருக்கு தெரிஞ்சா ரொம்ப கோவச்சிப்பேர்..."


" எப்டி எப்டி பட்டும்மா ஏன் இப்படி பண்ண ... சரி , நீ எது பண்ணாலும் அதுக்கு நிச்சயம் ஒரு ரீசன் இருக்கும் ...


இவ்ளோதான் உங்க ஆத்துக்காரர் உங்ககிட்ட கோவப்பட்டதே... என்னோட சர்வீஸ்ல இந்த மாதிரி எத்தனை சீன்ஸை பார்த்திருப்பேன்... மிஸ்டர் வெங்கி மும்பை சிட்டிக்கே டெரரா இருந்தாலும் உங்ககிட்ட எப்பவுமே லவ்வரா தான இருந்திருக்கிறாரு..." என்ற மைந்தனின் புரிதலான பேச்சில் வேதாவின் முகம் அந்திவானமாய் சிவக்க, உடனே பேச்சை மாற்ற எண்ணி,


" டேய் என்னமோ சொன்னையே டா...
மறந்துட்டேன் ... ஸ்ரீ வந்ததும் எதேச்சையா பார்க்கிற மாதிரி நான் போய் அவளை இடிக்கணுமா, இல்ல அவ என்னை இடிக்கிறா மாதிரி போய் நிக்கனுமா ..."


" ஐயோ அம்மா ... நீங்க தான் அவளை பார்க்காதது மாதிரி போய் இடிக்கணும் ... தப்பி தவறி கூட அவ உங்களை இடிச்சிட்டா உங்க சோலி முடிஞ்ச் , அப்புறம் உங்களை வாரி தான் வழிக்கணும்.... பீ கேர் ஃபுல் ..."


" ஏண்டா அவ்ளோ குண்டாவா இருக்கா.."


" பார்க்கத்தான போறீங்க..." என்றவன் சொல்லிக்கொண்டிருக்கும் போதே ஆரஞ்சு நிறத்தில் கருப்பு பார்டர் போட்ட காக்ரா சோளியில் ,பொருத்தமான ஆரஞ்சு நிற அணிகலன்களோடு கற்றை கூந்தல் காற்றில் பறக்க,தன் தோழிகள் புடைசூழ தேவதை போல் வந்தவளை, தன் தாயிடம் காட்ட,


" ச்சே , இவளையா குண்டுன்னு சொன்ன... சந்திரோதயம் ஜெயலலிதா மாதிரி குழந்தைதனமா ரொம்ப க்யூட்டா இருக்காடா ..."


" உங்க அண்ணன் பொண்ணாச்சே... பின்ன எப்படி பேசுவீங்க..."


" யாரோ என்ணின்ட சவால் விடுற மாதிரி சொன்னா என் ஆம்டியா தான் லோகத்துலயே பேரழகின்னு ..." என்று பதிலுக்கு வேதா வார, அதைக்கேட்டு வெட்கியவனிடம்


" சரி ...நீ லேட்டா வந்து ஜாயின் பண்ணிக்கோ.. நான் முன்னாடி போறேன்..." என்றபடி தாயார் சன்னதியில் கண்மூடி தியானித்து கொண்டிருந்தவள் அருகில் சென்று எதேச்சையாக இடிப்பது போல் வேதா இடித்து வைக்க , உடனே பக்கவாட்டில் திரும்பிப் பார்த்த ஸ்ரீ முதலில் ஆள் அடையாளம் தெரியாமல் தவித்து பிறகு
உணர்ந்து கொண்டதற்கு அடையாளமாக,


" அத்தை..... எப்படி இருக்கேள்... என்னை உங்களுக்கு அடையாளம் தெரியற்தா..." என்றாள் கண்களை அகல விரித்து.


நடக்கும் அனைத்தையும் பார்த்துக் கொண்டே தாயை நோக்கி வேட்டி சட்டையில் விஷ்ணு கம்பீரமாக வர,
அவனைப் பார்த்ததும், ஆச்சரியமும் காதலும் போட்டி போட்டுக்கொண்டு ஸ்ரீயின் கண்ணில் மின்ன


" நீங்க ...... நீ .... ஸ்ரீ இல்ல... எப்படி இருக்க மா ... நீ எங்க இங்க ... நீங்க எல்லாரும் துபாய்ல தானே இருந்தேள்...எப்ப இங்க வந்தீங்கோ... ஆத்துல எல்லாரும் சௌக்கியமா ..." என்று வேதா பேச்சை தொடங்குவதை பார்த்து,


மிஸஸ் வெங்கி, நடிப்புல நடிகையர் திலகத்தையே தூக்கி சாப்பிடறீங்க... கலக்குங்க ... என்றெண்ணியபடி, தாயை உரசி நின்றவனிடம்,


" விஷ்ணு, நம்ப ஸ்ரீ வந்திருக்கா இங்க பாரு ..." என்றார் முதன்முதலாக அறிமுகப்படுத்துவது போல்.


எதையுமே முகத்தில் காட்டாது, அவர்கள் இருவரையும் அவன் பின் தொடர, வேதா வழக்கமான நல விசாரிப்புக்கு பிறகு, ஸ்ரீயை பற்றிய தகவல்களை திரட்டுவதற்காக,


"நீ என்ன படிச்சிருக்க ..."


" பேஷன் டிசைனிங் அண்ட் கார்மெண்ட் டெக்னாலஜி..."


" இப்ப இங்க என்ன பண்ணின்டு இருக்க..."


" இவ்ளோ நாள் லாக்டவுன்ல இருந்ததால ,வேறெந்த கோர்ஸ்லயும் சேரல ... ஏற்கனவே பரதநாட்டியம் தெரிஞ்சாலும், இப்ப நாட்டியாலயால சேர்ந்திருக்கேன்... குக்கரி கிளாஸ், டிராயிங் கிளாஸ், டிரஸ் டிசைனிங் கோர்ஸ்ன்னு டைம் பாஸ் பண்ணிண்டு இருக்கேன் அத்தை ..." என்றதும் விஷ்ணுவின் சிந்தையில் தன்னவளை சந்திக்க நேரம் காலம் தெரிந்து கொள்ள வேண்டுமே
என்றெண்ணிக்கொண்டிருக்கும் போதே,


" நீ போற கிளாஸஸ் எல்லாம் எங்க இருக்கு எந்த டைம்ல போற..." என வேதா கேட்டதுதான் தாமதம், மடை திறந்த வெள்ளம் போல்,
பயிற்சிக்கான இடம், நேரம் என அனைத்தையும் வெள்ளந்தியாக ஸ்ரீ பகிர,
கேட்க வேண்டியவன் கனகச்சிதமாக கேட்டு முடித்தான்.


" நீங்க இந்த கோவிலுக்கு அடிக்கடி வருவேளா அத்தை ..."


" இல்லம்மா ... நாங்க செம்பூர் கோவிலுக்குத்தான் போவோம் ... இன்னைக்கு ஒரு ஸ்பெஷல் வேண்டுதல் அதனால இங்க வந்தோம் ..." என்றவர் விஷ்ணுவின் புறம் திரும்பி புரிஞ்சுதா என்பது போல் கண் ஜாடை காட்ட, மைந்தன் இதழுக்கிடையில் சிரிப்பை மறைத்து ஆமோதிப்பாக தலையசைத்து வைத்தான்.


அதற்குள் அவளது தோழிகள் வந்து விட, அனைவரும் ஒன்று சேர்ந்து, கோவில் பிராகாரத்தை சுற்றி முடித்து கிளம்பும் போது, வேதாவின் பின்னால் நின்று கொண்டிருந்த விஷ்ணுவை ஏக்கத்துடன் பார்த்த ஸ்ரீயின் பார்வையில்


என்கிட்ட ஒரு வார்த்தை பேசக்கூடாதா ... என்ற செய்தி தாங்கி நிற்க , அதனை துளிக்கூட உணராதது போல்,


" அம்மா வாங்க, கிளம்பலாம்..." என்றான் ரங்கநாதனுக்கு பயந்து அவள் போனை எடுக்காத காரணத்தை மனதில் வைத்து.


" அத்தை நீங்க செம்பூர்ல இருக்கேளா... ஒரு முறை ஆத்துக்கு ..." என்ற அந்த வாக்கியத்தை முடிக்க முடியாமல்
தயங்கி நின்றவளின் கண்ணில் ரங்கநாதனை பற்றிய பயம் மின்ன,


" நீ ஒரு முறை ஆத்துக்கு வா ... நாங்க செம்பூர்ல தான் இருக்கோம்..." என்று அவள் தயக்கத்தைக் உணர்ந்து, முந்திக் கொண்டார் வேதா.


மறுநாள் ஸ்ரீ ஓவிய வகுப்பை முடித்துக்கொண்டு, கார் பார்க்கிங்கில் அவளுக்காக காத்துக் கொண்டிருந்த காரில் ஏறி பயணிக்க எத்தனிக்கும் போது, அதே பிரம்மாண்ட கட்டிடத்தின் கார் பார்க்கிங்கில் தன் காரை விஷ்ணு நிறுத்திவிட்டு , அவளைக் கண்டும் காணாதது போல் இறங்கி நடந்தவனை நோக்கி ஏறக்குறைய ஓடிவந்தவள்


" விஷூ...."


" என்ன ..." என்றான் நடந்துகொண்டே.


" இங்க யாரை பார்க்க வந்தீங்கோ..."


" நிச்சயமா உன்னை பார்க்க வரல ... அவ்ளோ நான் வெட்டியா இல்ல ..." என்றவன் பேசிக்கொண்டிருக்கும் போதே அவனது அலைபேசி ஒலிக்க ,


" பதாவ் (சொல்லு) தாக்கூர் ..."


" ....."


" நெகட்டிவ்? ??.. ஓகே ..." என்றவன் அழைப்பை முடிப்பதற்குள் மேலும் ஒரு அழைப்பு வர,


" பதாவ் படேல்.."


" ......"


" ஒன்ஸ் அகைன் நெகட்டிவ்?? ...ஓ ஷிட்...ஓகே ..." என்று அழைப்பை துண்டித்தவனிடம்


" கொரோனா நெகட்டிவா ..." என குழந்தைத்தனமாக ஸ்ரீ கேள்வி எழுப்ப,


" ம்ச் ... நாங்க ரெண்டு பேரை ஒரு விஷயத்துல சஸ்பெக்ட் பண்ணோம்... அவங்க இல்லன்னு நியூஸ் வந்திருக்கு..."


" அப்ப நெஜமாவே, உங்க ஆபீஸ் வேலைக்கு தான் வந்தேளா..."


" என்னை பாத்தா உனக்கு கேன கிறுக்கன் மாதிரி தெரியுதா.... வேலை வெட்டி எல்லாத்தையும் விட்டுட்டு உன் பின்னாடி சுத்துறதுக்கு..."


" நமக்கு நிச்சயமானதாவது உங்களுக்கு ஞாபகம் இருக்கா ..." என ஸ்ரீ கமரிய குரலில் வினவ


" வாடி என் மாமன் மகளே, இப்பதான் உனக்கு எல்லாமே ஞாபகத்துக்கு வருதா... நல்ல வேளை செலக்டிவ் அம்னீசியாவோன்னு பயந்தே போயிட்டேன்...இப்படி பேசறவ ஏண்டி என் போனை எடுக்கல..."


"அப்பா உங்களண்ட பேசக்கூடாதுன்னு வைய்யறா..."


" அவர் உனக்கு அப்பான்னா நான் உனக்கு ஆத்துக்கார் ... அந்த எண்ணம் உனக்கு இருந்திருந்தா நீ நிச்சயமா என் போனை எடுத்திருப்ப..."


" இப்ப நான் என்ன தான் பண்ணனுங்கிறேள்..."


" உன் மனசுல நான் இருக்கேன்னா அன்னைக்கு எங்க அம்மா உன்னை வீட்டு கூப்பிட்டாங்க இல்ல... இப்ப என்கூட கிளம்பி என் வீட்டுக்கு வா போலாம் ..."


" ஐயய்யோ, டிரைவர் எனக்காக வெயிட் பண்ணிண்டு இருப்பார்...நான் ஆத்துக்குப் போகணும் ... இன்னைக்கு ஆத்துல ஸ்ரீராம் வேற இருக்கான் ..." என்றவளின் வாய்மொழியில் ஸ்ரீராம் என்ற பெயரைக் கேட்டதும் மேலும் கடுப்பானவன்,


" அப்ப நீ இப்பவே கிளம்பு ... இனிமே என் மூஞ்சிலயே முழிக்காத..."


" இப்படி கோவப்பட்டா நான் என்ன பண்றது ...நாளைக்கு வேணா வரட்டுமா .."


" என் வீட்டுக்கு இப்ப வந்தா வா இல்லைனா இனிமே வராத .." என்று பட்டு கத்தரித்தது போல் அவன் பேசி முடிக்க


" இப்படி சொன்னா நான் என்ன பண்ணுவேன் நேக்கு பொய் சொல்லி வழக்கமில்ல ஐடியா குடுங்கோ.." என்றவளின் பேச்சில் அவளவன் முகத்தில் லேசாக புன்னகை எட்டிப்பார்க்க,


" சரி , டிரைவர் கிட்ட போய், கிளாஸ் எக்ஸ்டெண்ட் ஆகுது ... ஒன் அவர்ல வந்துடுவேன்னு சொல்லு ... அப்படியே உங்க அம்மாவுக்கும் போன் பண்ணி சொல்லிடு..." என்றவன் கூறியது போல் அவள் செய்துவிட்டு விஷ்ணுவுடன் காரில் ஏறி பயணமானாள்.


பயணத்தின் போது அவன் பேசவில்லை என்றாலும், அவனுள் நீண்ட நாட்களுக்கு பிறகு
வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவிற்கு நிம்மதி, சந்தோஷம் ,
காதல் என அனைத்து உணர்வுகளும் கொட்டிக்கிடக்க,
அருகமர்ந்திருந்தவளை ஓர பார்வையால் அளந்தவன் அசந்து தான் போனான்.


வெண்பட்டு நிற சல்வாருக்கு பொருத்தமான காதணி ,கழுத்து செயின், கை வளையல்கள் என அனைத்துமே முத்துக்களால் அணிந்திருந்தவள், லேசான இளம் ரோஜா நிற உதட்டுச் சாயத்தில் ஜொலி ஜொலிக்க, காதுகளின் இரு பக்கங்களில் இருந்து பின் செய்யப்பட்ட அலை அலையான கூந்தல், அவள் மீது வீசிய பிரத்தியேக பர்ஃப்யூம் மணம் என அனைத்தும் அவனைக் கிறங்கச் செய்ய, காரை தன் கார் பார்க்கிங்கில் நிறுத்தி விட்டு, அவளோடு மின்தூக்கியில் நுழைந்து தன் தளத்து எண்ணை அழுத்துவிட்டு உடனே
நான்-ஸ்டாப் பட்டனையும் (Non stop)அழுத்தியவன், மின்தூக்கி செயல்பட ஆரம்பித்ததும்,
அவளை நெருங்கி கன்னத்தில் முத்தமிட எத்தனித்த போது,
அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள் ஸ்ரீ.


" நான் மட்டி தான்... உங்க அளவுக்கு புத்திசாலி இல்லன்னாலும், இதெல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடி தப்புன்னு நேக்கு நன்னா தெரியும்....
ஆத்துல நிஜமாவே அத்தை இருக்காளா... இல்ல என்ணின்ட பொய் சொல்லி என்னை அழைச்சிண்டு வந்தேளா..." என்று பொரிந்து தள்ளியவளிடம் ,


" ஏண்டி என்னை பொறுக்கின்னே முடிவு பண்ணிட்டியா...என்னோட நோக்கம் தப்பா இருந்திருந்தா, உன்னை என் வீட்டுக்கு கூட்டிட்டு வந்திருக்க மாட்டேன் ... அதுக்கு வேற இடம் இருக்கு ..."


" ஓ ...உங்களுக்கு அந்த மாதிரியான இடம் எல்லாம் அத்துபடியோ... எத்தனை தடவை அந்த மாதிரியான இடத்துக்கு போய் இருக்கேள்..." என்றவளின் பேச்சில் அவன் கோபம் கரையை கடக்க ,


" ஓங்கி அறைஞ்சன்னா தாங்க மாட்ட... முட்டாள் தனமா உலராத ...தேவுடா ஒரு ஐபி ஆபீசர்க்கு வந்த நிலைமைய பார்த்தியா...." என்றவன் பேசிக்கொண்டிருக்கும் போதே மின்தூக்கி தளத்தை அடைய, ஏற்கனவே ஸ்ரீக்கு தெரியாமல் அவர்களது வரவை குறுஞ்செய்தியாக வேதாவிற்கு அனுப்பி இருந்ததால், அவர் இயல்பாக இருவரையும் வரவேற்று உபசரித்து சிற்றுண்டி கொடுத்து, கீழ் தளம் முழுவதையும் சுற்றிக் காட்ட
ஸ்ரீ இயல்பாக இருக்க, சற்று முன் நடந்தது விஷ்ணுவை உறுத்திக்கொண்டே இருந்தது.


"நேக்கு தான் மூட்டு வலி ... நீ ஏண்டா சும்மா மோட்டுவளையை பார்த்துண்டிருக்க, இவளை அழைச்சிண்டு போய் மாடில இருக்கிற உன் ரூமை காட்டலாமோல்யோ..." என்று வேதா கூறிய மாத்திரத்தில்,
ஸ்ரீ விஷ்ணுவை பார்க்க, வேறு வழி இல்லாமல் மேல் தளத்திற்கு அழைத்துச் சென்றவன்,


" நான் உன்னை ஒன்னும் பண்ண மாட்டேம்மா... நீ நம்பி வரலாம் ..."


" நீங்க ஒன்னும் பண்ண மாட்டீங்கோன்னு நேக்கு தெரியும் ..."


" ஏன் இந்த திடீர் நம்பிக்கை ..."


" நம்பிக்கை எல்லாம் ஒன்னுமில்ல ... கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தானே அடி வாங்கி இருக்கேள்... அந்த நினைவு உங்களுக்கு இருக்கும்னு நேக்கு தெரியும்..."


" திமிரு தாண்டி உனக்கு... உன் கிட்ட எல்லாம் அடி வாங்கிட்டு சும்மா இருக்கேன் பாரு என்னை சொல்லணும் ..." என்றவன்


"நீ என்ன பண்ற ... குடுகுடுன்னு ஓடிப்போயி..." என்ற பேச்சை நிறுத்திவிட்டு அவளை ஏற இறங்கப் பார்த்து
" இந்த உடம்பை தூக்கிக்கிட்டு குடுகுடுன்னு எல்லாம் ஓடமுடியாது ... பேசாம உருண்டு போய் என் ரூமை சுத்தி பார்த்துட்டு உருண்டு வந்துடு... நான் இங்கேயே நிக்கறேன் ..."


" நீங்களும் வாங்கோ ..."


" வேணாம் தாயே... உன்னை மாதிரி தான் என் அம்மாவுக்கும்... " என நிறுத்தியவன்
" என் மேல நம்பிக்கை ஜாஸ்தி ..நான் இன்னும் பத்து நிமிஷத்துல கீழ போகலன்னா அவங்க மேல வந்திடுவாங்க ... இன்னும் ரெண்டு நிமிஷம் தான் டைம் இருக்கு மேல இருக்கிற ரெண்டு ரூமையும் சுத்தி பார்த்துட்டு வந்துடு, நாம கீழ போலாம் ..." என்றவன் சொல்லியதும் நிமிடங்கள் வேகமாக கரைய, ஸ்ரீ விடைபெறும் நேரமும் வர, வேதாவின் பாதம் பணிந்து ஆசி பெற்றதும்
தாம்பூலத்தில் பட்டுப் புடவை ஒன்றை
அவர் பரிசளிக்க,


" வேணாம் அத்த.... இதுவரைக்கும் அம்மாவுக்கு சொல்லாம எந்த விஷயமும் நான் பண்ணதில்ல... தெரிஞ்சா கோவிச்சிப்பா..."


" நேக்கு மன்னியை தெரியும் நீ கவலை படாதே... ஏதாவது சொன்னான்னா நேக்கு போன் பண்ணு, நான் அவாண்ட பேசிக்கிறேன்..." என்றபடி டசார் வகையை சார்ந்த கிரேப் வைய்ன் நிற புடவையை கொடுத்து அவளை வழி அனுப்பினார் வேதா.


பயணத்தின் போது இருவரும் பேசிக் கொள்ளவே இல்லை . செய்த தப்பு மறந்து, வாங்கிய அடி மட்டுமே விஷ்ணுவின் மனதில் நிலைபெற்றிருக்க, அவனை எப்படி சமாதானப் படுத்துவது என தெரியாமல்
குழம்பிய நிலையில் அவளது பயிற்சி வகுப்புகள் நடைபெறும் இடமும் வந்து சேர , அவள் காரை விட்டிறங்கியதும் திரும்பி பார்க்காமல், தன் பயணத்தை தொடர ஆரம்பித்தான் விஷ்ணு.


அவனது விலகல், பெண்ணானவள் மனதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்த, வேறு வழியில்லாமல் அவளும் தன் வீட்டுக்கு பயணமானாள்.


அதன்பின் வந்த இரண்டு தினங்கள்,
ஸ்ரீ, அவனை கைப்பேசியில் தொடர்பு கொள்ள முயல,
இயல்பாக அழைப்பை எடுத்து பேசவும் முடியாமல், பேசாமல் இருக்கவும் முடியாமல் , இருதலைக் கொள்ளி எறும்பு போல் துடித்துக் கொண்டிருந்தவனிடம்,


" விஷ்ணு, ஸ்ரீயை நம்மாத்துக்கு அழைச்சிண்டு வந்த நாளிலிருந்து , உன் முகமே சரியில்லையே.... என்ன பிரச்சனை ... இன்னும் ஒரு வாரத்துல உங்க அப்பா வந்துடுவேர்.... சொல்லு டா ..." என்றார் வேதா அவன் முகத்தை படிக்க முயன்று .


" ஒன்னுமில்லம்மா ..." என்றவன் பதிலளித்துக் கொண்டிருக்கும் போதே ,
அவனது அக்கா வித்யாவின் அழைப்பு வர,வேதாவிடம் இருந்து விலகி வந்து அவள் நலம் விசாரித்துவிட்டு , எப்பொழுதுமே தோழி போல் பழகும் தன் தமக்கையிடம் நடந்தது அனைத்தையும் அவன் மனம் விட்டு பகிர


" ஸ்ரீயை மன்னி நன்னா வளர்த்திருக்கா.. ... நோக்கு இதெல்லாம் வேணும் டா..." என்றாள் சற்று காட்டமான குரலில்.


" விது, இதுவரைக்கும் இதுல என்னோட தப்பு என்னன்னே எனக்கு புரியல... கன்னத்துல கிஸ் பண்ண நினைச்சது தப்பா ... இட்ஸ் எ டோக்கன் ஆஃப் அஃப்பெக்ஷன் ... தட்ஸ் இட்...." என்று தன் தரப்பு வாதத்தை திக்கித் திணறி வைத்தவனிடம்


" அது டோக்கன் ஆஃப் அஃப்பெக்ஷனா இருந்திருந்தா நீ நடு ரோட்டுலயே பண்ணி இருக்கலாமே... யாரும் இல்லாத லிப்ட்டுல ஏன் பண்ணனும்னு நெனச்ச...
அப்ப நோக்கே தெரியற்து நீ பண்றது தப்புன்னு.... இந்த விஷயத்துல ஸ்ரீ உன்னை அடிச்சதுல தப்பே இல்லடா ...


அப்பா அம்மாக்கு தெரிஞ்சா நிச்சயமா அவாளும் கோவப்படுவா... எல்லாத்துக்கும் ஒரு முறை இருக்குது விஷ்ணு .... நீ மும்பைலயே பிறந்து வளர்ந்ததால நோக்கு இதெல்லாம் தப்பா தெரியல... அவளோட பேசு, பழகு அவளை புரிஞ்சுக்கோ ... ஆனா இந்த மாதிரி கிஸ் பண்றது ஊரை சுத்தறதை எல்லாத்தையும் கொஞ்சம் நிறுத்திக்கோ...
நீ பண்ற லவ்க்கு ஒரு கண்ணியம் இருக்கணும்... உன்னோட மரியாதையே உன்னோட நடத்தையில தான் இருக்கு... அப்பா வந்ததும் அவரிண்ட பேசி உன் கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ண சொல்லு..." என்று தன் தமக்கை அறிவுறுத்தி முடிக்கும் போது தான், தன் தவறை
லேசாக உணர ஆரம்பித்திருந்தான் விஷ்ணு.


மறுநாள் காலை தனக்குள்ளே பெரிய வாத பிரதிவாதங்கள் நடத்தி ஒரு முடிவுக்கு வந்தவனாய் ஸ்ரீயை சந்திக்க அவளது நாட்டியாலயாவிற்கு சென்றான் .


கிட்டத்தட்ட நான்கு நாட்களுக்குப் பிறகான எதிர்பாராத சந்திப்பில், ஸ்ரீ திக்குமுக்காடிப் போய்
உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கியதே, அவனை மிகவும் தேடி இருக்கிறாள் என்பதை சொல்லாமல் சொல்ல,
அவளது முகத்தை விட்டு பார்வையை விலக்காமல் ரசித்து பார்த்துக் கொண்டிருந்தவனிடம்,


" நேக்கு பசிக்கற்து விஷு..." என்றவளை பதறிப் பார்த்தவன்,


" ஏண்டி, மணி 4 ஆக போகுது, இன்னுமா நீ லஞ்சு சாப்பிடல ...."


" கார்த்தால இருந்தே எதுவுமே சாப்பிடல ...."


" லூசாடி நீ ... ஏன் நான் பேசாததால சாப்பிடலையா..."


" அதுவும் ஒரு ரீசன் தான் ... ஆனா ஸ்ரீராம் இன்னிக்கு கோவத்துல தலையில கொட்டிட்டான் அதனால தான்..."


" என்னாது...... தலையில கொட்டினானா ஏன்..."


" நான் அன்னைக்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு ஒரு பொண்ணை அழைச்சிண்டு வந்தேனே ஞாபகம் இருக்கா... அவ கூட எஸ்எஸ்சி(ssc) படிக்கிறான்னு சொன்னேனே..."


" ஆமா... அவளுக்கு என்ன இப்போ ..." என்றான் அசுவாரசியமாக .


" அவ ரொம்ப நாழியா காம்படேடிவ்(competitive) எக்ஸாமுக்காக படிச்சிண்டு இருக்காளேன்னு அவ மேல பரிதாபப்பட்டு, அவளை அழைச்சுண்டு போய் ஷெட்டில் காக் விளையாடினேன்... அதுக்கு அவளோட அண்ணா ஸ்ரீராம் கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணிட்டான்..." என்றவள்
குற்றப்பத்திரிகை வாசித்துக் கொண்டிருக்கும் போது


அரை லூசு ... காம்படேடிவ் எக்ஸாம்க்கு படிக்கிற பொண்ண கூட்டிட்டு போயி விளையாடியிருக்க ... புத்தி இருக்கா உனக்கு ..
அந்த இடத்துல நான் இருந்திருந்தாலும் ஸ்ரீராம் செஞ்சதை தான் செஞ்சிருப்பேன் .... என்றெண்ணியவன்
அதனை வெளிப்படையாக சொல்ல எத்தனிக்கும் போது,


" படிக்கிற பொண்ணை அழைச்சிண்டு போய் விளையாடறியான்னு சொல்லி, தலையிலயே கொட்டிட்டான் அந்த துர்வாச முனி ...
அப்பதான் உங்களை நினைச்சுண்டேன்
நான் உங்களை அடிச்ச போது கூட நீங்க அமைதியா தானே இருந்தீங்கோ... ஆனா
ஸ்ரீராம் ரொம்ப பேட் .... உங்கள மாதிரி நல்லவன் கிடையாது... " என்ற திடீர் பாராட்டு மழையில் நனைந்தவனின் மண்டையில் பல்ப் எரிய, உடனே மனதில் நினைத்ததை மாற்றி,


" ச்சே ச்சே... விளையாடுறது தப்பேயில்ல... அவன் கிடக்கிறான் ஆங்கிரி பேர்ட்.... " என அவளுக்கு சாதகமாக பேசியவன்


" ஆமா அதுக்கு ஏன் சாப்பிடல ..."


" நான் கிச்சன்ல போய் சாப்பிடலான்னு தான் போனேன்... அங்க தான் ஏண்டி இப்படி பண்ணேன்னு கேட்டு என் தலையில கொட்டினான் ...
ஏதாவது நான் தெரியாம தப்பு பண்ணிட்ட, எப்பவுமே கிச்சன்ல தான் கொட்டுவான் ...
ஸ்ரீனி அண்ணா, அப்பா, அம்மா இவா முன்னாடி எல்லாம் கொட்ட மாட்டான் ... அவா எல்லாம் கோபப்படுவான்னு அவனுக்கு நன்னா தெரியும்... அதனால நான் தனியா இருக்கும் போது தான் தலையில கொட்டுவான்..." என பெரிய கொலை நடந்த சம்பவத்தை விளக்குவது போல், கவலை தோய்ந்த முகத்துடன், உதடுகள் துடிக்க, கண்கலங்கியபடி
கூறியவளைப் பார்த்து , அவனுக்கு சிரிப்பு பொத்திக்கொண்டு வர, அதனை சாதுரியமாக மறைத்தவன்,


" சரி...மதியம் ஹோட்டலுக்கு போயாவது சாப்பிட்டிருக்கலாம் இல்ல..."


" லஞ்ச் சாப்பிடலாம்னு நான் நினைச்சிண்டு இருந்தப்போ, ஸ்ரீராம் வந்து ஹோட்டலுக்கு போலாம்னு கூப்பிட்டான்... உடனே நேக்கு கோவம் வந்துடுத்து... நேக்கு பசி இல்லைன்னு சொல்லி அவனை திட்டி அனுப்பிட்டேன்.." என்றவள் விவரித்துக் கொண்டிருக்கும் போது


ஓ...இவன் பாசமலர் சிவாஜி மாதிரி பாசக்கார பயலா இருப்பான் போல இருக்கே....என ஸ்ரீராமை பற்றி எண்ணி மனதில்
சிரித்துக்கொண்டிருந்தவன்,


" சரி வா ... சப்-வேல ஏதாவது சாப்பிடலாம் ... " என அழைத்துச் சென்று, அவளுக்கு பிடித்தமான சீஸ் பர்கரை ஆர்டர் செய்து கொடுத்து அவளை உண்ணச் செய்தான்.


" நீங்க சாப்பிடலையா ..."


" ஐயையோ, இதெல்லாம் ஜங்க் ஃபுட் ... நான் சாப்பிட மாட்டேன் பா ...
என்னோட டின்னர் டைம் செவன் ஓ கிளாக்.... ஐ அம் வெரி ஸ்டீரிக்ட் இன் மை டயட்... இதையெல்லாம் சாப்பிட்டு உன்னை மாதிரி ரோடுரோலர் ஆக சொல்றியா ..." என்றவன் அவளது பஞ்சு போன்ற கையில், நீல நிற உடைக்கு பொருத்தமாக நீல நிறத்தில் பெரிய இதய வடிவ ஒற்றைக் கல் பதித்த பிரேஸ்லெட்
அணிந்திருந்ததைப் பார்த்து


" ஏண்டி, இது கையா.... பொறந்த குழந்தை கை மாதிரி ஷேப்பே இல்லாம மொழு மொழுன்னு இருக்கு... " என்றபடி அவள் கரத்தை ரசனையோடு பற்றியவனை பார்த்து,


" எப்ப பார்த்தாலும் என்னை குண்டு, ரோடு ரோலர்ன்னு சொல்றதே வேலையா போச்சு ...கையை எடுங்கோ..."


" கைய புடிச்சா என்னடி தப்பு ..."
என்றவனை ஸ்ரீ முறைத்துப் பார்த்துக் கொண்டிருக்கும் போது , திடீரென்று அவளது பார்வை மென்மையை தத்தெடுக்க, அவளது முக மாற்றத்தை உணர்ந்து, அவள் எதிரே அமர்ந்திருந்தவன், அவள் பார்க்கும் திசையை நோக்கித் திரும்பிப் பார்க்க,


அங்கு மூன்று குழந்தைகளுடன் ஒரு தாயும் தந்தையும் அமர்ந்து விளையாடியபடி அவர்களை சாப்பிட வைத்துக் கொண்டிருக்க,


" விஷூ, அங்க பாருங்களேன் ... ரெண்டு டுவின் பாய்ஸ், ஒரு கேர்ள் சைல்ட் ...அமேசிங்கா இல்ல ... நாம கூட
இப்படித்தான் மூணு குழந்தைகளை பெத்துக்கணும் ...." என்றவளின் கண்களில் கனவு மின்ன,


" பக்கத்துலயே வர விட மாட்டேங்குறா... இதுல 10 குழந்தை பெத்துக்க போறாளாம் ..." என்றவன் நக்கலடிக்க,


" அதெல்லாம் சமயம் வரும் போது நானே பக்கத்துல வருவேன்..." என்றவளின் பேச்சைக்கேட்டு ரசனையாய் சிரித்தவனுக்கு தெரியாது
பெரிய இடி தலையில் விழ காத்திருக்கிறதென்று.


" என் அப்பா இன்னும் ஒரு வாரத்துல ஊரிலிருந்து திரும்பிடுவாரு... அவர் வந்ததும் உங்க அப்பா கிட்ட பேச சொல்லி நம்ம கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ண சொல்றேன் ..."


" என் அப்பா ஒத்துக்கலன்னா..." என்று பயந்தவளின் கண்களைப் பார்த்து


" பயப்படாத.... என் அப்பா உங்க வீட்டுக்கே வந்து எல்லாத்தையும் நல்லபடியா பேசி முடிப்பாரு..." என்றான் மிகுந்த நம்பிக்கையோடு.


" உன் கார் எங்க ..."


" நான் இன்னைக்கு கார்ல வரல கேப்ல தான் வந்தேன்...."


" சரி வா, கிளம்பலாம்..." என்றபடி பணத்தை செலுத்தி விட்டு, அவளது பயணத்திற்காக கேபை ஏற்பாடு செய்தவன், அவளது கையைப் பற்றி ரோட்டை கடந்து செல்ல எத்தனிக்கும் போது ,
தன் காரில் சாய்ந்து நின்றபடி தொலைவிலிருந்து , மிகுந்த கோபம் கொந்தளிக்க அவர்கள் இருவரையும்
முறைத்துக் பார்த்து கொண்டிருந்தான் ஸ்ரீராம்.


தகிப்பாள்
 
அத்தியாயம் 15


அர்ஜுன், அக்னி இருவரும் மும்பைக்கு வந்து ஒரு வாரம் ஆன நிலையில்,
ஒரு நாள் மாலை, அக்னியுடன் பணியாற்றும் அவளது நெருங்கிய தோழி கீதா, தன் 6 வயது மகன் ரோகித் உடன்,
அக்னியை சந்திக்க அவளது இல்லம் வர,
கடந்த ஒரு வார காலமாக அலுவலகத்தில் இருவரும் சந்தித்துக் கொண்டாலும் பேச நேரம் கிடைக்காமல் போனதால் , அவளது இந்த திடீர் வரவு அக்னியை சந்தோஷத்தில் ஆழ்த்த,
மிகுந்த பூரிப்போடு அவளையும் அவளது மகனையும் வரவேற்றவளிடம்


" உன் கல்யாணத்துக்கு என்னால வர முடியல அக்னி ... அதான் உங்க ரெண்டு பேரையும் மீட் பண்ணி ஒரு சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுத்துட்டு போலாம்னு வந்திருக்கேன்...." என்ற கீதாவிடம்


" அர்ஜுன் ஜூம் கால்ல(zoom call) இருக்குறதா அஷ்வத் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் சொன்னான்... இப்ப வந்துடுவாரு..." என்றவள் சிற்றுண்டி கொடுத்து இருவரையும் உபசரிக்க,
பிறகு அஷ்வத், ரோகித் உடன் லானில் விளையாடிக்கொண்டிருக்க,
குழந்தைகளுக்கு அருகே அக்னியும் கீதாவும் அமர்ந்தபடி அளவளாவ ஆரம்பித்தனர்.


அரை மணி நேர உரையாடலுக்குப் பிறகு கீதா விடைபெறும் தருவாயில்,


" அக்னி, அடுத்த வாரம் நம்ம ஆபீஸ் கொலிக்(colleague) ஷோபனா மேரேஜ்க்கு நீ வருவ இல்ல..." என அவள் கேட்டுக்கொண்டிருக்கும் போது,
தன் பணி நிமித்தமான தொலைதூர காணொளி கலந்தாய்வை முடித்துக்கொண்டு மேல் தளத்தில் இருந்த தன் அலுவலக அறையை விட்டு பால்கனிக்கு வந்த அர்ஜுனின் காதுகளில் எதேச்சையாக அந்த கேள்வி விழ, துணுக்குற்றவன் , பால்கனியில் நின்றபடி கீழே லானில் உரையாடிக் கொண்டிருந்தவர்களின் பேச்சை செவிமடுக்க விழைந்தான்.


" இல்ல கீதா .... ஏற்கனவே நான் பழைய ஆபீஸ்ல பட்ட பேட் எக்ஸ்பீரியன்ஸ் உனக்கு தெரியுமில்ல .... அதனால எந்த ஒரு அஸ்பீஷியஸ் பங்க்ஷனையும் (auspicious - சுப) அட்டென்ட் பண்ண கூடாதுன்னு முடிவெடுத்திருக்கேன் ..."


" அதெல்லாம் ஆபீஸ் பாலிடிக்ஸ் அக்னி ... ஒரு பொண்ணோட திறமை, புத்திசாலித்தனத்தோட போட்டி போட முடியலன்னா , சில ஜென்ஸ் மட்டும் இல்ல சில லேடிசும் அந்தப் பொண்ணோட கேரக்டர அசாசினேட்( character assassinate - நற்பெயருக்கு கலங்கம் விளைவிக்க) பண்ண ட்ரை பண்ணுவாங்க ....
உன் விஷயத்துல நீ ஆள் அழகா இருந்தாலும் உன் பேர போலவே நெருப்பா இருந்ததால அவங்களால ஒன்னும் பண்ண முடியல ...
வேற வழி இல்லாம, ஹஸ்பண்டை இழந்து நிக்கிற உன் நிலைமையைப் பயன்படுத்திக்கிட்டு, நீ மணமேடையில நிக்கக்கூடாது, ஆரத்தி எடுக்கும் போது
தள்ளிப் போயிடணும்னு உன் காதுபடவே பேசி உன்னை கஷ்டப்படுத்தி இருக்காங்க அவ்ளோதான் ... இப்பதான் எல்லாம் மாறிப்போச்சே.... உன் ஹஸ்பண்ட் அர்ஜுன், உன் பையன் அஷ்வத் எல்லாரையும் கூப்பிட்டுகிட்டு சந்தோஷமா கல்யாணத்துக்கு வா அக்னி...." என்றாள் கெஞ்சாத குறையாக.


" எதுவுமே.... மாறல கீதா .... என்னைப் பார் என் கிட்ட ஏதாவது மாற்றம் தெரியுதா ..." என்றவள் சொல்லி முடிக்கும் முன்பே, கீதாவின் கண்கள் மட்டுமல்ல பால்கனியில் நின்றுகொண்டிருந்த அர்ஜுனின் கண்களும் அவளை ஆராய்ந்தன.


கையில்லா மரூன் நிற மேல் சட்டைக்கு நீண்ட கருப்பு நிற பாவாடை அணிந்திருந்தவள்
தன் நீண்ட கூந்தலை கொண்டை போல் உயர்த்தி முடிந்திருந்தாள்.


நேற்றைக்கும் இன்றைக்கும் அவள் அணிந்திருந்த உடை மட்டுமே வித்தியாசம்.


மற்றபடி நெற்றியில் பொட்டு இல்லை, கழுத்தில் அவன் அணிவித்த தாலி மட்டுமல்ல வேறு எதுவுமே இல்லை..... கையில் வளையல் இல்லை... காலில் மெட்டி இல்லை....
அவள் எப்பொழுதும் அலுவலகத்திற்கு பார்மல் ஷர்ட் அண்ட் பேண்ட், வெகு சில நேரங்களில் ஜீன்ஸ் அணிந்து செல்வது வழக்கம். மற்றபடி காதில் அதே சிறு வளையம் மற்றும் ஒற்றைக்கல் மூக்குத்தியை தவிர வேறேதுமே இல்லை.


பொதுவாக மும்பை போன்ற பெரு நகரங்களில் இவையெல்லாம் அணிந்து கொள்ளாமல், நாகரீகம் என்ற பெயரில் குடும்பம் நடத்தும் பெண்கள் அதிகம் தான் என்றாலும்
அக்னியை பொருத்தமட்டில்,
அவள் அஜய்யுடன் வாழ்ந்த நாட்களிலும் சரி அதற்கு முன்னரும் சரி பெண்களுக்கான அணிகலன்கள் இல்லாமல் அவள் இருந்ததேயில்லை.


தற்போது இருவருக்கும் திருமணமாகி இவ்வளவு நாட்கள் ஆன நிலையில், இப்பொழுதுதான் அவள் மாற்றம் ஏதும் இல்லாமல் இருக்கிறாள் என்பதையே உணர ஆரம்பித்திருந்தான் அர்ஜுன்.


" இதுதான் உன்கிட்ட இருக்கிற பிரச்சினையே அக்னி ... ஏற்கனவே ஆபீஸ்ல உன்னை பத்தின டாக்(talk) போய்கிட்டு இருக்கு தெரியுமா... சில பேர் என்கிட்ட நேரடியாவே வந்து உங்க ஃப்ரெண்டுக்கு கல்யாணம் ஆயிடுச்சான்னு கேக்கறாங்க.... சில பேர் டிவோர்ஸியான்னு கேக்கறாங்க... இது எல்லாத்தையும் விட அந்த வுமனைஸர்(womanizer)துருவ், உங்க ஃப்ரெண்ட் இதுக்கு முன்னாடி ரீஜினல் பாரன்சிக் ஆபீஸ் டெல்லில தானே வேலை செஞ்சாங்க...
அவங்களைப் பத்தி தெரிஞ்சுக்கலாம்னு அங்க விசாரிச்சதுல, அவங்க ஹஸ்பண்ட் இறந்துட்டாராமேன்னு எங்கிட்டயே துக்கம் விசாரிக்கிறான்.... அவன் ஒன்னா நம்பர் பொறுக்கி அக்னி....


சும்மா சொல்லக்கூடாது உன்னோடு ஸ்டன்னிங் பர்சனாலிட்டி.... பிரில்லியன்ஸ் ... எல்லாரையும் ஓரடி தள்ளியே நிறுத்தற உன் பார்வை ...எல்லாம் தான் இந்த மாதிரி மத்தவங்கள பேச வைக்குது...


நீ ஒரே ஒரு முறை ஷோபனா கல்யாணத்துக்கு அர்ஜுன் கூட வந்துட்டேன்னா உன்னைப்பத்தி ஒருத்தனும் பேசமாட்டான்... குறிப்பா உன் விஷயத்துல ரொம்ப சீரியஸா இருக்கற அந்த துருவ் பேசவே மாட்டான்...." என்ற கீதாவின் தீவிரத்தை பார்த்து,


" அர்ஜுன் என்னை கல்யாணம் பண்ணிகிட்டதே ரொம்ப பெரிய விஷயம் , இதுல கல்யாணத்துக்கு எல்லாம் கூப்பிட்டா வருவாரான்னு தெரியல ...
இங்க பாரு கீதா, உனக்கு உட்கார வச்சு செய்ய அண்ணன், தம்பி , அம்மா அப்பான்னு எல்லாரும் இருக்காங்க.... ஆனா எனக்கு என் பையனை தவிர வேற யாருமே கிடையாது.... அவன் வாழ்க்கைக்காக நான் நிறைய சம்பாதிக்கணும் ... அதனாலதான் எதையுமே கண்டுக்காம ரேஸ்லல ஓடுற குதிரை மாதிரி ஓடிக்கிட்டு இருக்கேன்... என்னைக்கு என் ஓட்டம் முடியும்னு கடவுளுக்குத்தான் தெரியும்... என்னோட இந்த மேரேஜ் உன்னோடது மாதிரி கிடையாது... முழுக்க முழுக்க அக்ரிமெண்ட் மேரேஜ் ...
என்னோட எல்லா கண்டிஷன்ஸ்க்கும் ஒத்து கிட்டதால தான் நான் அர்ஜுனை கல்யாணமே பண்ணிக்கிட்டேன்....
அது மட்டும் இல்ல எங்க ரெண்டு பேருக்கும் இடையே எந்தவித எதிர்பார்ப்பும் இல்ல .... உண்மைய சொல்லணும்னா.............. என்னால அஜய்யை மறக்க முடியல..." என குரல் உடைந்து கண் கலங்கியவளின் முழு வலியை மேலே நின்று கொண்டிருந்தவனும்
ஒரு சேர உணர, அவனது கண்களும் அவன் அனுமதியின்றி கண்ணீர் வடிக்க,


அனாதைன்னு சொல்லாம சொல்றாளே.... கடவுளே இன்னும் எவ்ளோ பிரச்சனையை தான் நான் பார்க்கப் போறேனோன்னு தெரியலயே ..
என்றெண்ணியவனுக்கு , கீதா குறிப்பிட்ட துருவ் பற்றிய நினைவு வர,


யாருடா நீ....எந்த டிவிஷன்ல வேலை செய்ற, கூடிய சீக்கிரம் உன்னை மீட் பண்ணி இந்த ஏ.கே ஸ்டைல்ல முடிவு கட்றேன் பாரு ... என் அக்னிக்கு பின்னாடி இந்த அர்ஜுன் இருக்கேன்னு உனக்கு புரிய வைக்கிறேன் .... என ஆழமாக யோசித்துக் கொண்டிருந்தவனுக்கு அலுவலகத்திலிருந்து அழைப்பு வர, அதற்கு மேல் உரையாடிக் கொண்டிருந்தவர்களின் பேச்சில் முழுவதுமாக அவனது கவனம் தவறிப் போக,


" டெல்லி ஆபீஸ்ல ரெண்டு மூணு பேர் இந்த மாதிரி தொல்லை கொடுக்கிறாங்க, என்விரான்மென்ட் சரியில்லனு தான் இங்க வந்த... இப்ப இங்கயும் பிரச்சனை பண்ண ஆரம்பிச்சுட்டாங்க ...உனக்கு இந்த ஆபீஸ் பிடிச்சிருக்கா அக்னி ..." என்று நயந்து கேட்ட கீதாவிடம்


சாரி கீதா, நான் ஆபீஸ்ல நடந்த பிரச்சனைக்காக டெல்லி வேலையை விட்டுட்டு இங்க வரல,
'அவன்' என்னை தேடி வரக்கூடாதுன்னு ஓடி தலைமறைவா வந்திருக்கேன்...
அதைப்பத்தி உன்கிட்ட சொல்ற நிலைமையில இப்ப நான் இல்ல...
என்று மனதிற்குள் பேசிக்கொண்டவள்,


" போர்க்களம் மாறலாம், போர்கள் மாறாதுன்னு படிச்சிருக்கிறேன்... இந்த மாதிரியான ஆளுங்களுக்கு பயந்து ஒவ்வொரு இடமா மாறிகிட்டே போக முடியாது... எல்லாத்தையும் ஃபேஸ் பண்ற மனநிலையை வளர்த்துக்கிட்டு என்னை நானே திடப்படுத்திக்கணும் கீதா... எல்லா இடத்துலயும் இந்த மாதிரி ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்யுது ..." என்று அவள் நினைத்ததை மாற்றி வேறு மாதிரி அவள் கூறி முடிக்க


" இங்க பாரு, உன் மனசை போட்டு குழப்பிக்காம, காத்தோட
கலந்தவரை மறந்துட்டு , இப்ப உன்னை கட்டிக்கிட்டவரோட நிம்மதியா வாழற வழியை பாரு... எனக்கு டைம் ஆயிடுச்சு... அர்ஜுனோட ஜூம் மீட்டிங் இன்னும் முடியலன்னு நினைக்கிறேன் .... இன்னொரு நாள் உங்க ரெண்டு பேரையும் மீட் பண்றேன் சரியா..." என கீதா அறிவுறுத்தி விடைபெற்றதும்,
அக்னியின் மனம் பழையவைகளை அசை போட்டு பார்க்க தொடங்க , உடனே கை கால்களில் நடுக்கம், பொங்கிய வியர்வை , அதிகரித்த இதயத்துடிப்பு என்பன போன்ற மாற்றங்கள் நிகழ,
உடனே சுதாரித்தவள்,


ஒரு சமயம் 'அவன்' என்னை தேடி வருவானோன்னு பயமா இருக்கு... ஒரு சமயம் இனிமே வரவே மாட்டாங்கிற நம்பிக்கையும் வருது... அப்படி
ஒரு வேளை 'அவன்' என்னை தேடி வந்தா, அர்ஜுன், உங்களைத் தவிர நிச்சயமா வேறு யாராலயும் என்னையும் என் குழந்தையையும் காப்பாத்தவே முடியாது.... ஒரு வேளை நான் ஆசைப்பட்ட மாதிரி அவன் வராமலே போய்ட்டா தேவையில்லாத குழப்பம் தானே... அதனாலதான் உங்க கிட்ட இப்போதைக்கு எதையும் சொல்ல வேணாம்னு இருக்கேன் ....
என அர்ஜுனிடம் பேசுவது போல் தனக்குத் தானே பேசி சமாதானம் அடைந்தவளுக்குத் தெரியாது
இவள் யாரைப் பற்றி எண்ணி கொண்டிருக்கிறாளோ, 'அவன்' அதிவிரைவில் அவளை நெருங்க போகிறான் என்று.


அஷ்வத் இரவு உணவுக்கு பிறகு உறங்கியதும், அவள் இரவு உணவு அருந்த மேஜைக்கு வர, அப்போது
அர்ஜுன் வரவும் சரியாக இருந்தது.


இருவரும் எதிரெதிரே அமர , அவனுக்கு நான்கு சப்பாத்தி, ஒரு கப் சாலட், தொட்டுக்கொள்ளும் கறிவகை என அனைத்தையும் பரிமாறிய பின் வழக்கம் போல் தனக்கு ஒரு சப்பாத்தி , ஒரு கப் சாலட்டோடு இரவு உணவு உட்கொள்ள ஆரம்பித்தவளை கண்டு
அவனது மனம் நிலை கொள்ளாமல் வேறொரு சிந்தனையில் மிதக்க, அவளது மனமும் சற்று முன் கீதாவுடன் பேசியதில் சிக்கி தவிக்க, ஒரு வழியாக
இருவரும் பேசிக்கொள்ளாமல் இரவு உணவு உண்டு முடிந்த நிலையில், மேல் தளத்தில் இருக்கும் தன் அலுவலக அறையை அடைந்தவனின் யோசனை நீள ஆரம்பித்தது.


அக்னி இந்த வீட்டிற்கு வந்து கிட்டத்தட்ட 10 நாட்கள் ஆன நிலையில் ஒருமுறை கூட, அவளது அறை, சமையலறை, கூடத்தை தாண்டி வேறு எந்த அறையையும் பயன்படுத்தியது மட்டுமல்ல பார்த்ததுகூட கிடையாது.
அவளது இந்த பழக்கத்தை அவள் கீதாவிடம் மனம் திறக்கும் முன்பு வரை இயல்பாகத்தான் கருதியிருந்தான். ஆனால்
அவள் தனக்கான உரிமை வட்டத்தை சுருக்கிக் கொண்டிருக்கிறாள் என்பதை இப்போதுதான் உணர ஆரம்பித்திருந்தான்.


அதே சமயத்தில், இன்று அவனது அலுவலக மேஜையின் மேலிருந்த பொருட்கள் , புத்தகங்கள் எல்லாம் தூய்மை செய்யப்பட்டு நேர்த்தியாக அடுக்கபட்டிருப்பதை பார்த்து அது அக்னியின் வேலை என்று தெரிந்து கொண்டான் ஏனென்றால் , அவனுடைய அலுவலக அறையின் தரையை சுத்தம் செய்ய மட்டும்தான் வீட்டுப் பணியாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதை எண்ணிப் பார்த்தவனுக்கு, திடீரென்று அவள் கீதாவிடம் மனம் விட்டுப் பேசியது மின்னல் போல் வந்து போக


அவளது அஜய்யை தவிர வேறு எந்த ஆண் மகனும் அவளை எவ்வகையிலும் நெருங்குவதை விரும்பவில்லை என்பதால் தான் அவளை சுற்றி ஒரு சீனப் பெருஞ்சுவரை ஏற்படுத்தி வைத்துக் கொண்டிருக்கிறாள் என்பதை உணர்ந்தவன்


என் மேல் நம்பிக்கை இருப்பதால் தான் என்னை மணந்து கொண்டிருக்கிறாள் அதே சமயத்தில் அவளைப் பொறுத்த மட்டில் நானும் ஒரு ஆண், ஆண்களுக்கே உரித்தான பலவீனம் எந்த ஒரு பலவீனமான சூழ்நிலையிலும் வெளிப்படலாம் என்றெண்ணியே தான் முன்பு போல் நட்பு பாராட்டாமல் தள்ளியே நிற்கிறாள்... என்று சரியாக அனுமானித்தவன்
அவர்களுக்கு நடந்த திருமணத்தை நினைவூட்ட விரும்பாமல்
அவளிடம்


அக்னி, உன்கிட்ட எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்ல ... நானும் உன்னை மாதிரிதான்... எனக்குன்னு யாரும் கிடையாது... நீயும் நானும் ஏன் முன்னை மாதிரி நல்ல ஃபிரண்ட்ஸ்ஸா இருக்கக்கூடாது ... என மனம் விட்டு பேசி அவளது மனதில் இருக்கும் பாரத்தை பகிர செய்து, எந்த சூழ்நிலையிலும் அவளுக்கு பக்கபலமாக இருப்பேன் என்ற நம்பிக்கையை கொடுத்தே ஆகவேண்டும் என்றெண்ணி கொண்டிருக்கும் போதே, அவன் அறைக்கு வந்தவள்,


" அர்ஜுன், குக்கிங் மெய்டு கிட்ட மந்த்லி கிரோசரீஸ் எவ்ளோ ஆகுதுன்னு கேட்டேன்... அவங்க அப்பிராக்ஸிமேட்டா ஒரு லிஸ்ட் கொடுத்திருக்காங்க .... அதுல 50% அமௌன்ட்டை எனக்கும் அஷ்வத்காகவும் உங்களுக்கு ஜிபே பண்ணிருக்கேன் ..." என்றவளின் கூற்றில் , அவனுள் தணிந்திருந்த கோபம் கொழுந்துவிட்டு எரிய,
அதனை காட்டிவிட
வேண்டுமென்று எத்தனிக்கும் போது தான் அவளது கலையிழந்த முகமும் சோகம் அப்பிய விழிகளும் , அதில் தெரிந்த அளவுக்கதிகமான நன்றி உணர்வும் அவளது நிலையை அவனுக்கு உரைக்க,


உன்னோட இழப்பு ரொம்ப பெருசு... அதே மாதிரியான ஒரு இழப்பை நானும் அனுபவிச்சிகிட்டு இருக்கேன்....
அதனால தான் உன் விஷயத்துல பொறுமையா இருக்கேன்.... அதே சமயத்துல
மறுபடியும் இதே மாதிரியான நன்றி உணர்வால இன்னொரு இழப்பை சந்திக்க நான் தயாரா இல்ல... கூடிய சீக்கிரம் இதுக்கெல்லாம் முடிவு கட்டுறேன்... என்று முடிவு செய்தவன் உடனே தன் முகபாவத்தை மாற்றி


" நீ கணக்குல வீக்கா .."


" ஏன் கேக்குறீங்க ..."


" இல்ல, 100 ரூபாய் குறையுதே அதான் ..." அவன் வங்கிக்கணக்கிற்கு அவள் அனுப்பிய பணமும் அந்தத் தாளில் குறிப்பிட்டிருந்த தொகையும் ஒப்பிட்டு வேடிக்கையாகக் கூறுவது போல் தன் வேதனையை மறைத்து கூறியவனிடம்


" சாரி, இப்ப ட்ரான்ஸ்வர் பண்ணிடறேன் ..." என்றவளின் மென் புன்னகை, நீண்ட நாட்களுக்குப் பின்பான அவளது அழகை பளிச்சிட்டு காட்ட
ஒப்பனை ஏதுமில்லாமல் மாசு மருவற்ற அந்த முகம் அவனை சுண்டி இழுக்க,


சிறிய கூர்மையான நாசி, மை இடாமலேயே கருத்த நீண்ட இரப்பைகளை கொண்ட கருவிழி,
கேள்விக்குறி போல் அழகாக வளைந்த சிவந்த காதுகள், ஆழ்கடல் சங்கு போல் நீண்ட கழுத்து .... அதற்கு மேல் பார்வையை கீழே இறக்குவது நாகரீகம் அல்ல என்றெண்ணியவனின்
மனம் வேறு திசையை நோக்கி பயணிக்க,


கையில்லாத பனியன், உருண்டு திரண்ட புஜங்கள், அகன்ற மார்பு , கதவை ஒரு கையால் பற்றியபடி நின்றிருந்த அவன் உடல் மொழி, ஏற்கனவே அவன் முக ஒற்றுமை என அனைத்திலும் அவள் அஜய்யே தெரிய, சற்று முன் அவள் முகத்தில் இருந்த இளக்கமான புன்னகை மறைந்து ஆராய்ச்சி பார்வையை தத்தெடுத்தவள்


எனக்கு மட்டும் இவனை பார்க்கும் போதெல்லாம் அஜய் மாதிரியே தோணுதே... இவனும் அஜய் மாதிரி தான் இருக்கான் ஏதோ கொஞ்சம் வித்தியாசம் அவ்ளோ தான்... என மீண்டும் எண்ணியவளின் பார்வையை புரிந்து கொண்டவன், உடனே பேச்சை திசை திருப்ப எண்ணி


" நீ கூட தான் எனக்கு ஃபுட் சர்வ் பண்ற... அன்னைக்கு சாய்(chai) போட்டு கொடுத்த... இதோ இன்னைக்கு என்னோட கப்போர்ட், டேபிள்ஸ் எல்லாத்தையும் கிளீன் பண்ணி வச்சிருக்க..." என அவனுக்கு பிடிக்காத, சிறுபிள்ளைத் தனமான பேச்சு என்று தெரிந்தே பேசியவனின் பேச்சை அவள் இடை வெட்டி


" கிளீனிங் மெய்டு, உங்க டேபிள் கப்போட்ஸ் கந்தாவா (குப்பையா) இருந்ததா ஃபீல் பண்ணாங்க.... என்கிட்ட சொன்னாங்க... அதனால செஞ்சேன் ... இதுக்கெல்லாம் சர்வீஸ் சார்ஜ் உண்டு ...கவலைப்படாதீங்க..." என்றாள் கன்னம் சிவந்து புன்னகைத்தபடி.


" ஜிஎஸ்டி உண்டா .." என்றான் அதே குறும்புடன்.


" நிச்சயமா ... தேங்க்ஸ் அ லாட்... குட் நைட் ..." என்று விடைபெற்றவளிடம் எதற்காக நன்றி தெரிவித்தாய் என அவனும் கேட்கவில்லை அவளும் சொல்லவில்லை .


மறுநாள் வேலை பெரிதாக இல்லாத நிலையில், மாலையில் அஷ்வத்தை பள்ளியில் இருந்து அழைத்து செல்ல பள்ளிக்கூட வாயிலில் காத்திருந்தான் அர்ஜுன்.


டே கேர் சென்டர் , பள்ளி வளாகத்தில் அதன் கட்டுப்பாட்டிலேயே இருந்ததால், காவல்துறை சீருடை இல்லாமல் சாதாரண உடையில் வந்தவனை வழிமறைத்த காவலாளி,


" நில்லுங்க சார்...... யார் வேணும் ..." என்று கேள்வி எழுப்ப, எப்பொழுதும் அஷ்வத்தை பள்ளியிலிருந்து அழைத்து வரும் டிரைவர் அர்ஜுனின் கார் அருகே நின்று கொண்டிருக்க


" அஷ்வத், ஜூனியர் கேஜி .... "


" நீங்க? ?..."


" அவனோட அப்பா ..."


அப்போது ஒவ்வொரு குழந்தையையும் அங்கிருந்த காப்பாளர்கள் அதன் பெற்றோர்களிடம் ஒப்படைத்துக் கொண்டிருக்க ,


'மம்மா' , 'பப்பா' என்று தாய் தந்தையர்களை பார்த்து கூவியபடி, தத்தம் பெற்றோரிடம் சரணடைந்த குழந்தைகளை அவர்கள் தூக்கிக்கொஞ்சியபடி, அழைத்துச் செல்லும் காட்சியை , ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்த அஷ்வத்,
வழக்கம் போல் டிரைவரை எதிர்பார்த்தபடி சோர்வான முகத்துடன் வந்தவன் அர்ஜுனை கண்டதும், சந்தோஷத்தில் கண்களை அகல விரித்து,


" வாவ்.... அர்ஜுன்..." என்று கூவிக்கொண்டே ஓடிச்சென்று அவனை அணைத்துக்கொண்டான்.


" அப்பான்னு சொன்னீங்க... அர்ஜுன்னு கூப்பிடறான்..." என சந்தேகமாக காவலாளி கேள்வி எழுப்ப,


" என் பேரு அர்ஜுன்.. அதான் கூப்பிடறான்..."


" அப்பாவை பேர் சொல்லியா கூப்பிடுவாங்க..."


" எங்கூர்ல அப்படித்தான் கூப்பிடுவாங்க ..." என்றான் சகஜமாக.


" எந்த ஊரு உங்க ஊரு ..."


" ம்ம்ம்ம், கோயம்புத்தூரு... தமிழ்நாடு ..."
என்றவன் பதிலளித்துக் கொண்டிருக்கும் போதே தாளாளர், அவனை நெருங்கி நலம் விசாரித்துவிட்டு செல்ல, காவலாளியின் முகத்தில் சந்தேகம் தெளிய, குழந்தையை அள்ளிக் கொண்டு ஐஸ்க்ரீம் பார்லர் நோக்கி பயணமானான்.


அஷ்வத் அர்ஜுனிடம் அதிகம் பேசினாலும் அதில் வாங்க போங்க தான் அதிகம் இருக்கும், பெயர் விளிப்போ, உறவு முறையோ அதிகம் இருக்காது .


வீட்டு பணியாளர்கள் மற்றும் டிரைவருக்கு கூட, அவன் எப்போதாவது விளிக்கும் 'அர்ஜுன்'
வித்தியாசமாக படாமல் போக,
அக்னி மட்டும் ஓரிருமுறை, அஷ்வத்தை அது குறித்து கண்டித்திருக்கிறாள், ஆனாலும் சில சமயங்களில் அவன் தன்னை மறந்து அர்ஜுனை பெயரிட்டு விளிப்பது வாடிக்கையாகிப் போயிருந்தது.
-------------------------------------------------------------------


அதே நாளில் அக்னியின் அலுவலகத்தில் மதிய உணவு வேளையில் அக்னியை சந்தித்த துருவ்


" ஹாய் அக்னி..." என்றான் தன் கட்டுக்கடங்காத கேசத்தை ஸ்டைலாக களைத்து விட்டபடி .


" எஸ் ...." என்றாள் முகத்தில் அந்நியத்தன்மை கூட்டி.


" பொதுவா ஒருத்தர் ஹாய் சொன்னா,
திரும்ப ஹாய், ஹலோ சொல்லுவாங்க ... நீ என்ன புதுசா எஸ்ன்னு சொல்ற... " என்றான் ஒருமையில் விளித்து .


" ஆக்சுவலி வாட் யூ வாண்ட் .." என்றாள் மீண்டும் பேச்சில் அவனை வெகு தொலைவில் தள்ளி நிறுத்தி.


" உனக்கு ஹெல்ப் பண்ணலாம்னு வந்திருக்கேன் ... நீ ஊருக்கு புதுசு ...
ஐ ஹவ் வ வெரி பிக் பிளாட் இன் பாந்த்ரா.... இஃப் யூ லைக் வி கேன் ஷேர் இட்...( எனக்கு பாந்த்ராவில் பெரிய வீடு உள்ளது நாம் இருவரும் அதில் தங்கிக் கொள்ளலாமா....) " என்றவனின் பேச்சு, அளவுக்கதிகமான கோபத்தை மூட்ட, அதனை வெளிக்காட்டாமல்


" தேங்க்ஸ் பார் யுவர் கன்சர்ன் ப்ரோ ..." என்ற பதில், அவன் முகத்தில் ஒரு வித சுணக்கத்தை ஏற்படுத்த, உடனே சமாளித்தவன்,


" ப்ரோன்னு கூப்டறதெல்லாம் ஆதாம்-ஏவாள் காலத்து டெக்னிக் அக்னி ..." என்று வாய்விட்டு சிரித்தவனின் துச்சாதன பார்வையில் அவளை துகில் உரித்துப் பார்க்கும் ஆர்வம் அப்பட்டமாய் தெரிய, அதற்கு மேல் அங்கு ஒரு உயிரினம் இருக்கிறது என்பதைக் கூட அவள் பொருட்படுத்தாமல் தன் பிரிவுக்கு சென்று விட்டாள்.


துருவ் இரண்டு நாட்களுக்கு முன்பு டெல்லியில் அக்னி பணியாற்றிய அலுவலகத்தில் பணியாற்றும் தன் நண்பனிடம் , அக்னியின் கணவன் இறந்த தகவல், இது நாள் வரை அவளது வாழ்க்கையில் வேறு ஆண்களே இல்லை என்பதை எல்லாம் கேட்டு தெரிந்து கொள்ள,


" நீதான் பெரிய ரோமியோவாச்சே... அவளை மடக்கி காட்டு பார்க்கலாம் ...
அவளுக்கு இங்க வேற பேரு ...அக்னி இல்ல ... அல்லிராணி..." என்று வேறு அவன் நண்பன் அவனை உசுப்பேத்தி விட்டிருந்தான்.


எத்தனை பொண்ணுங்க என் பார்வைக்காக தவம் இருக்காங்க தெரியுமா ... இந்த துருவ் கட்டம் கட்டின பொண்ணு அவனுக்கு கட்டுப்பட்டு தான் பழக்கம் ...
உன்னை என் பெட்ரூமுக்கு எப்படி வர வைக்கணும்னு எனக்கு தெரியும்டி... கூடிய சீக்கிரம் உன்னை கதறிகிட்டு வர வைக்கிறேன் பாரு ... என்றெண்ணிய படி வன்மத்தோடு வெளியேறினான்.


வீடு வந்து சேர்ந்தவள் இயந்திர கதியில் அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு, வழக்கம் போல் அவள் எடுத்துக்கொள்ளும் தூக்க மாத்திரையை ஒன்றுக்கு இரண்டாக விழுங்கிவிட்டு படுக்கையில் விழுந்தவளுக்கு அவள் எதிர்பார்த்தபடி உறக்கமே வரவில்லை.


ஏற்கனவே தாயை இழந்த துக்கத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீட்டெடுத்துக் கொண்டிருக்கும் வேளையில், இன்று மதியம் துருவ் உடனான சந்திப்பு, அவளை மேலும் துக்கத்திற்கு உள்ளாக்கியிருந்தது.


அஜய்யின் மறைவிற்குப் பிறகு துருவை போன்ற வக்கிரம் பிடித்த பல ஆண்களை வாழ்க்கையில் சந்தித்திருக்கிறாள், அம்மாதிரியான தருணத்தில் இந்த உலகத்தையே வெறுத்து ஒதுக்குபவள், கடைசியில் கோபப்பட்டு முறையிடும் இடம் அஜய் தான்.


நீங்க போகும் போது எங்களையும் உங்க கூடவே கூட்டிட்டு போய் இருந்திருக்கணும் அஜய்...
உங்களுக்கு ரொம்ப சுயநலம் ...
இங்க என்னால வாழவும் முடியாம சாகவும் முடியாம தினம் தினம் தீ குளிச்சுகிட்டு இருக்கேன் ....


என்று தலையணை நனையும் வரை கதறி அழுதவளுக்கு கீதா கூறியது ஞானோதயமாய் உதிக்க,


அர்ஜுனை கூட்டிகிட்டு ஷோபனா கல்யாணத்துக்கு போயிட்டு வந்தா, இந்த துருவ் மாதிரியான எண்ணத்துல இருக்கிற பல பேருக்கு பதில் சொன்ன மாதிரி ஆயிடுமில்ல... என்றெண்ணும் போதே,


எந்த மூஞ்சியை வச்சுக்கிட்டு, அர்ஜுனை கல்யாணத்துக்கு கூப்பிடுவ.....
உன்னைப் பொறுத்தவரைக்கும் அர்ஜுன் கிட்ட உறவு இல்ல, உரிமை இல்ல, எதிர்பார்ப்பும் இல்லன்னு சொல்லி தானே இந்த கல்யாணத்தையே பண்ணி இருக்க...


ஒருத்தனுக்கு பயந்து அர்ஜுனை கல்யாணம் பண்ணிக்கிட்ட , இப்ப இன்னொருத்தனுக்கு பயந்து உன் மனசு ஏத்துக்காத ஒரு உறவு முறையை இந்த உலகுக்கு காட்ட போறியா.... என்று அவளை சாடிய மனசாட்சி
கடைசியாய்


இத்தனை நாள் எப்படி சமாளிச்சயோ அதே மாதிரி இப்பவும்
சமாளி ... தயவு செஞ்சு உன் தன்னம்பிக்கையை இழந்துடாத ... நிலைமை கை மீறி போகும் போது அர்ஜுன் கிட்ட சொல்லிக்கலாம்...
என்றபடி அறிவுரையையும் ஆறுதலையும் கூறி சென்றது.


இரவு வெகுநேரம் கழித்து உறங்கியது மற்றும் மாத்திரைகளின் உபயம் எல்லாம் சேர்ந்து அவளது உறக்கம் காலை 9 மணியை தாண்டி தெளிய


வாரி சுருட்டிக் கொண்டு எழுந்தவள் அஷ்வத்தை தேட, அவன் உண்டு முடித்து தயாராகி அர்ஜுனுடன் டே கேர்க்கு சென்று விட்டான் என்ற செய்தி கிடைக்க, நிம்மதி அடைந்தவள்,


"ஐயோ, ரிப்போர்ட் சப்மிஷன் இருக்கு ..." என்றபடி துள்ளிக்குதித்து தயாராகி தன் அலுவலகம் நோக்கி பயணப்பட்டாள்.


*****************************************


விஷ்ணு கடைசியாக ஸ்ரீயை சப்-வேயில் சந்தித்ததோடு சரி, அதன் மறுநாளே முக்கிய பயிற்சிகாக கிட்டத்தட்ட ஒரு வார காலம் டேராடூன் சென்றுவிட
பயிற்சிக்கான கால நேரம் மிக கடுமையாக இருந்ததால், அவனால்
ஸ்ரீயை தொடர்பு கொண்டு பேச முடியவில்லை. ஓரிருமுறை வாட்ஸ் அப் மூலம் சேதி சொன்னான், ஆனால் அதற்கும் அவளிடமிருந்து பதில் இல்லை. பேச முயன்று பார்த்தால் எண் உபயோகத்தில் இல்லை என்ற செய்தி கிடைக்க, முதன்முறையாக எங்கேயோ ஏதோ சரி இல்லை என்றவன் புத்தி அடித்துச் சொல்ல, பயிற்சி முடிந்த கையோடு விமானத்தில் மும்பைக்கு வந்தவன் , அந்த அதிகாலை வேளையில் நேரடியாக சென்றடைந்தது ஸ்ரீயின் இல்லம் தான்.


கிட்டத்தட்ட 4 கிரவுண்டில், மிக நேர்த்தியாக புதுமையும் பழமையும் கலந்து கட்டப்பட்ட அழகான பங்களா .


காரை விட்டு இறங்கியவனின் முகத்தில் களைப்பு தெரிந்தாலும், தன் காதலியை காணத் துடித்த மனதைக் கட்டுப்படுத்த முடியாமல், கிட்டத்தட்ட பத்தடி உயரமுள்ள காம்பவுண்ட் சுவர் மற்றும்
கிரில் கேட் கொண்ட அந்த பங்களாவின் முன் புறத்தில் சிறு குடிலில் அமர்ந்திருந்த செக்யூரிட்டியிடம்,


" நான் ஸ்ரீராமை மீட் பண்ணனும் ..." என்றான் ஹிந்தியில்.


இருவருக்கும் உருவ ஒற்றுமை ஓரளவு இருந்ததால், உறவினர் என்றெண்ணி முன்னனுமதி பெறாமல், அவனை செக்யூரிட்டி அனுமதிக்க,


வீட்டு முன் தோட்டத்தில் மூன்று கார்கள் நின்ற நிலையில், அதனை டிரைவர்கள் சுத்தம் செய்து கொண்டிருக்க, தோட்டக்காரர்கள் இருவர் கர்ம சிரத்தையோடு தோட்ட வேலையில் ஈடுபட்டிருக்க,


வீட்டு வாயிலில், வேலைக்கார பெண்மணி ஒருவர் பெரிய கோலம் இட்ட நிலையில், சுப்ரபாதம் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்க, அப்போது வீட்டு முற்றத்தில் துளசி மாடத்திற்கு தீபாராதனை காட்டிக்கொண்டிருந்த சுமித்ரா எதேச்சையாக விஷ்ணுவை கண்டதும்


ஏற்கனவே மகள் மற்றும் தன் கணவரின் மூலம் விஷ்ணுவை பற்றி தெரிந்திருந்ததால் , முதலில் அடையாளம் தெரிந்துகொள்ள சற்று தடுமாறியவள் பிறகு
முகமலர்ச்சியோடு
" வா விஷ்ணு ..." என்றாள் மிகுந்த ஆச்சரியத்தில்.


சுமித்ராவை கண்டு சற்று இளகியவன்,
அவளது வரவேற்பை ஏற்று, வீட்டினுள் நுழைய எத்தனிக்கும் போது,


" நில்லு ..." என்ற ஸ்ரீராம் வியர்வையில் குளித்திருந்தது அவன் உடற்பயிற்சி முடித்துவிட்டு வருவதை பறைசாற்ற, சிறு துண்டால் முகத்தை துடைத்தபடி, விஷ்ணுவை நெருங்கியவன்


" உன்னை யாரு டா உள்ள விட்டது... போடா வெளிய ..." என்றான் கண்ணில் கனலுடன் .


" டென்ஷன் ஆகாத மச்சான் ... உன்னைப் பார்க்கணும்னு சொல்லித்தான் உள்ளயே வந்திருக்கேன்..." என்றவன் பதிலளித்துக் கொண்டிருக்கும் போதே
பேச்சு சத்தம் கேட்டு கையில் காலை தினசரியுடன் ரங்கநாதன் தன் அறையில் இருந்து வெளிபட , கையில் காபி குவளையோடு ஸ்ரீனியும் கூடத்தில் ஆஜராக, முற்றத்தின் ஒரு மூலையில் சாய்வு நாற்காலியில் 85 வயதை தொட்டுக் கொண்டிருக்கும் சுமித்ராவின் தாயார் ஸ்ரீ ராம நாமத்தை முணுமுணுத்துக் கொண்டே நடப்பது அனைத்தையும் சுரத்தையே இல்லாமல் கவனித்துக் கொண்டிருக்க,


" இப்ப நீ வெளியே போறியா இல்லையா .." என்றபடி ஸ்ரீராம் விஷ்ணுவின் சட்டையை கொத்தாகப் பற்ற, பதிலுக்கு அவனும் ஸ்ரீராமின் பனியனை கொத்தாகப் பற்றி


"நான் ஸ்ரீயை பார்த்துட்டு தான் போவேன்...." என்று கர்ஜித்தான்.


"ஸ்ரீராம்.... விஷ்ணு மேல இருந்து கையை எடு ... " என்று சுமித்ரா கண்டித்தபடி ஓடி வந்து இருவரையும் விலக்க முயல , அனைத்தையும்
கண்கள் சிவப்பேறி கோபத்தை உள்ளடக்கியபடி துளிக்கூட நகராமல் நின்ற இடத்திலிருந்தே கவனித்து கொண்டிருந்தார் ரங்கநாதன் .


" என் தங்கைய பார்க்க நீ யாரு டா ..."


" என்ன சொன்ன... ஸ்ரீ உன் தங்கையா ..."
என்றவன் வெறிபிடித்தது போல்,


" உங்க எல்லாருக்கும் ஒன்னு சொல்லிக்கிறேன் ... அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி எப்ப எங்க நிச்சயதார்த்தம் நடந்ததோ அப்பவே ஸ்ரீ எனக்கு பொண்டாட்டி ஆயிட்டா....


நானா விருப்பப்பட்டு, எங்க அப்பா வார்த்தைக்கு கட்டுப்பட்டு என் பொண்டாட்டியை இந்த வீட்டுல விட்டு வச்சிருக்கேன் அவ்ளோ தான்....


எப்ப எங்களுக்கு நிச்சயதார்த்தம் ஆச்சோ, அந்த நொடியிலிருந்து ஸ்ரீ என் கண்காணிப்புல தான் இருக்கா ...."


என தன்னை மறந்து அவன் வார்த்தையை விட, அதில் துணுக்குற்ற ரங்கநாதனுக்கு ஏதோ புரிவது போல் தோன்ற, அப்போதுதான் அவனது காதலின் தீவிரம் விளங்க ஆரம்பிக்க, அனைவரும் ஏறக்குறைய ஸ்தம்பித்து நின்ற நிலையில்


" ஸ்ரீயை உங்க வீட்டு பொண்ணுன்னு நீங்க எல்லாரும் தலையில தூக்கி வச்சு கொண்டாடினது போதும்... ஸ்ரீக்கு இந்த உலகத்துல இருக்கிற முதல் உறவு நான் தான்...
அப்புறம்தான் நீங்க எல்லாம் ....
எங்க தாத்தா பண்ணி வச்ச நிச்சயதார்த்தம் எந்த கொம்பனாலயும் மாத்த முடியாது ...


மைண்ட் இட் ...." என்றவன் சுமித்ராவிடம் வந்து


" மாமி, ஸ்ரீயோட ரூம் எங்க ..." என்றான் உரிமையாக.


"டேய் ...." என்று ஸ்ரீராம் எகிறி கொண்டு வர அவனை , சுமித்ரா மற்றும் ஸ்ரீனி பற்றி இழுத்து நிறுத்த,


" ஸ்ரீராம் .... அவர் மேல போகட்டும் விடு ..." என்றார் சுமித்ரா ஆழ்ந்த குரலில் ஆணித்தரமாக.


"அம்மா ...இவன் ..."


" நிறுத்து ஸ்ரீராம்... நம்மாத்துல பொன் குழந்தைகளோட கல்யாணத்தை புருஷா மட்டும் முடிவு பண்ணின காலம் எல்லாம் மலையேறிப் போயிடுத்து...
ஸ்ரீ நேக்கும் பொண்ணுதான் ... அவளைப் பெத்தவ நான்... உங்க எல்லாரையும் விட நேக்கு தான் அவ மேல உரிமை ஜாஸ்தி ... இப்ப சொல்றேன் எல்லாரும் கேட்டுக்கோங்கோ... இந்த ஆத்துக்கு மாப்பிள்ளையா வர உரிமையும் தகுதியும் இருக்கிற ஒரே ஆள் என் நாத்தனாரோட மகன் விஷ்ணு தான்... இதான் என்னோட முடிவு... இந்த விஷயத்துல நான் வேற யாரோட முடிவையும் ஏத்துக்கிறதா இல்ல ... " என்று சுமித்ரா முகம் சிவக்க உயர்ந்த குரலில் அழுத்தம் திருத்தமாக உரைத்துவிட்டு , ஸ்ரீராமை பார்த்து


" இந்த ஆத்து மாப்பிள்ளைய மரியாதை இல்லாம பேசாத ஸ்ரீராம் ... உன் ரூம்க்கு போ ..." என்று ஏறக்குறைய அரற்ற,
விஷ்ணுவை வன்மத்தோடு முறைத்துவிட்டு ஸ்ரீராம் தன் அறை நோக்கி நடக்க, இத்தனை நாட்களாக பேசா மடந்தையாக இருந்த மனையாள், உரத்த குரலில் தன் உரிமைகளை நிலைநாட்டி பேசியதை கண்டு
கோபத்திலும் அதிர்ச்சியிலும் ரங்கநாதன் உறைந்தே விட்டார்.


விஷ்ணு சுமித்ராவின் வழிகாட்டுதலின் படி ஸ்ரீயின் அறையை அடையவும், அவள் அப்போதுதான் குளித்து முடித்து வெறும் பூந்துவளையோடு வெளி வரவும் சரியாக இருந்தது.

அங்கு எதிர்பாராமல் விஷ்ணுவை பார்த்ததும், சந்தோஷத்தில் கண்களை அகல விரித்தவளிடம்,


" கிளம்பு, நம்ம வீட்டுக்கு போலாம்..."
என அவன் மும்மரமாக கூறிக் கொண்டிருக்கும் போதுதான் தன்னிலை உணர்ந்தவள் , மார்பில் கட்டியிருந்த பூந்துவளையை இறுகப் பற்றியபடி


" ஐயோ, வெளில போங்கோ ... பெல் அடிச்சுட்டு வரப்படாதா ..." என வெட்கத்தோடு அவள் அலறும் போதுதான் , அவள் இருந்த நிலையே அவனுக்கு உறைக்க,
உடனே அவன் பார்வை ரசனையாய் அவள் மீது படிந்து


" வாரே வா ... இவ்ளோ நேரம் இதை பார்க்க மறந்துட்டனே... காலங்கார்த்தால என்ன ஒரு தரிசனம்.... சும்மா சொல்லக்கூடாது கும்முனு இருக்க டி..."
என்றவனிடம் நெருங்கி,


" எப்படி உள்ள வந்தீங்கோ... கீழ என் அப்பா , ஸ்ரீராம் எல்லாரும் இருப்பாளே ..."
என்றவள் பயத்தில் வினவ,


" ரொம்ப கிட்ட வந்து பேசினா நடக்கப் போற எதுக்கும் நான் பொறுப்பில்ல.. அப்புறம் என்னை தப்பு சொல்லக்கூடாது .."
என்றவனின் பார்வை படிந்த இடத்தை கண்டு வெட்கியவளாய் , அருகில் இருந்த மாற்று உடையை எடுத்துக்கொண்டு குளியல் அறைக்குள் நுழைந்து மின்னல் வேகத்தில் உடைமாற்றி வந்தவள்,


" விஷூ, அன்னைக்கு நாம சப்-வேல சாப்டுட்டு வெளில வரும் போது, ஸ்ரீராம் பார்த்துட்டான்...


ஆத்துக்கு வந்ததும் என்னை ரொம்ப திட்டினான்.... என் போனையும் வாங்கி வச்சிண்டுட்டான் ..." என்று அழாத குறையாக முறையிட்டுக் கொண்டிருந்தவளை ஆழமாக ரசித்துக் கொண்டிருந்தவன்,


" இப்ப நீ என்னை அடிச்சாலும் பரவாயில்ல டி.... " என்று சன்னமாக சொல்லியடி அவளைப் பற்றி இழுத்து ,அவளது இரு கரங்களையும் அவளது முதுகுக்குப் பின்னால் தன் இரு கரங்களால் வளைத்துப் சிறைபிடித்து


" ஆமா, என்ன சோப்பு போட்டு குளிக்குற...வாசனை சும்மா அள்ளுது.. " என்றபடி முத்தமிட நெருங்க அவளும் முகத்தை வேறு புறம் திருப்பி திமிர, ஒருவழியாக அவள் கழுத்தில் முகம் புதைக்க முற்படும் போது அவன் கைபேசி ஒலிக்க, சுயம் உணர்ந்து, அதன் ஒலி திரையை பார்த்தவன்,


" ஐயோ அப்பா ..." என்றபடி காதுக்கு கொடுத்தான்.


" விஷ்ணு, இன்னும் அரை மணி நேரத்துல நீ வீட்ல இருக்க..." என்று வெங்கடேஷ் மிரட்ட,


" அப்பா ...அது வந்து.... நான்..."


" நீ ரங்கநாதன் வீட்ல இருக்கேன்னு எனக்கு தெரியும் ...."


" நீங்க எப்ப ஊரிலிருந்து வந்தீங்க ..."


" நான் வீட்டுக்கு வந்து 10 நிமிஷம் ஆகுது ... உனக்கு நான் கொடுத்த டைம்ல ரெண்டு நிமிஷம் முடிஞ்சிடுச்சு..." என்றபடி அவர் அழைப்பைத் துண்டிக்க,


" என்னாச்சு ..." என்றாள் ஸ்ரீ புரியாமல் .


" என் அப்பா ஊரிலிருந்து வந்துட்டாரு...
நான் இப்ப வீட்டுக்கு போகணும் ... கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் விசு பட கிளைமாக்ஸ் மாதிரி, உங்க வீட்டில இருக்கிற எல்லாரையும் கூப்பிட்டு பேசி முடிச்சிட்டேன்...நீ எதைப் பத்தியும் கவலைப் படாதே ... கூடிய சீக்கிரம் நம்ம கல்யாணம் நல்லபடியா நடக்கும் சரியா ..." என்றவன் பரபரத்த படி
அறையை விட்டு வெளியேற,
ஸ்ரீ உறைந்து நிற்க,


படியில் இறங்கி வந்தவனிடம் , சன்னமாக ரங்கநாதன்,


" உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் ..."
என்றார் உணர்ச்சியற்ற குரலில்.


" என்ன...." என்றான் ஆராய்ச்சியோடு.


" இங்க வேண்டாம் ... ஈவினிங் எங்க மீட் பண்ணலாம்னு லொகேஷன் ஷேர் பண்றேன் ..." என்றவரின் குரலில் கோபமா, ஆற்றாமையா எனப் பிரித்தறிய முடியாத ஏதோ ஒன்று தாண்டவமாட


" ஒன்னு மட்டும் நினைவுல வச்சுக்கோங்கோ... இந்த கல்யாணம் நிச்சயமா நடக்காது...." என்றவரின் பேச்சில் விஷ்ணுவின் கோபம் துளிர்க்க ,


" அதையும் பார்த்துடலாம் ...." என்றவன்


" நீங்கள் லொகேஷனை ஷேர் பண்ணுங்க... நாம மீட் பண்ணலாம் மாமனாரே..." என்றபடி, தந்தை கொடுத்த நேரத்தைக் கணக்கிட்டு தன் இல்லத்தை நோக்கி சிட்டாய் பறந்தான்.


தகிப்பாள்
 
அத்தியாயம் 16


மனையாள் பரிமாறி, காலை உணவை உண்டு முடித்த வெங்கடேஷ்,


" எத்தனை பைவ் ஸ்டார் ஹோட்டல்ல சாப்ட்டாலும் உன் கை பக்குவம் வராது பட்டும்மா...." என்றபடி வாஷ் பேசினில் கை கழுவிக்கொண்டு தன் அறைக்குச் சென்றவரை வேதா பின் தொடர்ந்து


" நெஜமாவா சொல்றீங்கோ..."


" ஆமா ... எந்த ஹோட்டல்ல மோர் குழம்பு, மோர் கீரை, வாழைத்தண்டு பச்சடி, கோஸ் பருப்பு உசிலி, புடலங்காய் கூட்டு கிடைக்குது ... பிரியாணி கூட கிடைக்கும் இதெல்லாம் கிடைக்காதம்மா ..." என்றபடி இயல்பாக அவர் பேசிக் கொண்டே செல்ல


" ஏன்னா, உங்களிண்ட கொஞ்சம் பேசணும் ..." என்றார் மென்மையாக மிகுந்த தயக்கத்தோடு.


" அதான் வந்ததிலிருந்து பார்த்துகிட்டு இருக்கேனே ஏதோ சொல்லணும்னு நினைக்கிற , சொல்ல மாட்டேங்குற ..
எப்பவும் நான் சாப்பிட்டு முடிச்சதுக்கு அப்புறம் தானே விஷயத்தை சொல்லுவ... அதான் காத்துகிட்டு இருக்கேன்.... சொல்லும்மா..." என்றார் புரிதலாக.


" அது வந்து ... நானும் விஷ்ணுவும் ..." என தொக்கி நிறுத்த,


" மாமி , கிட்ட வா... பக்கத்துல வந்து சொல்லு..." என்றவர் அழைத்தும் ஜன்னலை ஒட்டியே வேதா நிற்க


" நீ என் பக்கத்துல வரலன்னா... நான் அங்க வருவேன் ... உனக்கு தான் வயசாச்சு, நீ தான் வீக் பாடி ... எனக்கு ஆகல மாமி..." என்றவர் மீண்டும் அழைத்தும், வேதா தயங்கியபடி நின்ற இடத்திலேயே அசையாமல் நிற்க,


" இனிமே பேசி பிரயோஜனம் இல்ல ..." என்றவர் மனையாளை நெருங்கி வழக்கம் போல் அள்ளிக்கொண்டு ,
தன் இருக்கைக்கு வந்து தன் மடியில் அமர்த்தி,


" இப்ப சொல்லு மாமி ..." என்றார் அவர் கண்ணோடு கண் நோக்கி. அவரது செய்கை வேதாவின் முகத்தில் வெட்கத்தை கூட்டினாலும், சிறு பய உணர்வும் உடன் தலைதூக்க,


" அது வந்து ... விஷ்ணுவும் நானும் கோவிலுக்கு ..." என்றவரின் மென்மையான தயங்கிய பேச்சை இடைவெட்டி


"ஸ்ரீயை பார்க்க போயிருந்தீங்க... அப்புறம் உன் பையன் ஸ்ரீயை நம்ம வீட்டுக்கே கூட்டிட்டு வந்துட்டான்... சரியா..." என்றவரின் பேச்சில் கண்களை அகல விரித்தவர்,


" எப்படின்னா உங்களுக்கு இதெல்லாம் தெரியும் ..."


" நான் வேலையிலிருந்து தான் ரிட்டையர்டு ஆகி இருக்கேனே தவிர மத்தபடி ஐ அம் வெரி ஆக்டிவ்... மும்பை சிட்டில என்ன நடக்குதுன்னு எனக்கு அப்டேட் கிடைக்கும் போது நம்ப வீட்டுல என்ன நடக்குதுன்னு எனக்கு அப்டேட் கிடைக்காதா ..."

" நேக்கு நீங்க பேசறது துளிகூட புரியலன்னா ...."


" மாமி... எனக்கு தெரியாம நீ ஒரு புடவை கூட எடுக்க மாட்டியே டி ... எப்ப வருவீங்கோன்னு கேட்டு ஒன்னுத்துக்கு மூணு தடவை போன் பண்ணும் போதே நெனச்சேன் ... இந்த விஷயத்தை பத்தி பேசணும்னு தான் கூப்பிடுறேன்னு..." என்றவர் பேசிக்கொண்டிருக்கும் போதே கூடத்தில் கதவைத் திறக்கும்
சத்தம் கேட்க,


" இரு மாமி, விஷ்ணு வரான்..." என்றபடி வெங்கடேஷ் கூடத்துக்கு செல்ல, எதுவுமே புரியாமல் அவரை வேதா பின் தொடர,


" அப்பா ...." என்றான் விஷ்ணு தயங்கியபடி.


" சொல்லுப்பா, ஏன் இப்ப காலங்காத்தால ரங்கநாதன் வீட்டுக்கு போன.." என்றவரின் பேச்சில் குற்றம்சாட்டும் தொனி மேலெழுந்திருக்க, எதுவுமே புரியாமல் வேதா , கணவனையும் மைந்தனையும் மாறி மாறி ஒரு வித பயத்தோடு பார்த்து வைக்க, வேறு வழியில்லாமல் ஸ்ரீயை காவல் நிலையத்தில் சந்தித்ததிலிருந்து சற்று முன் ரங்கநாதன் வீட்டில் நடந்த அனைத்தையும் கூறியவன் கடைசியாக ரங்கநாதன் அவனை மாலையில் தனியே சந்தித்து பேச விரும்பியதை மட்டும் கத்தரித்து விட்டான்.( பேசி முடித்துவிட்டு சொல்லலாம் என்றெண்ணிக்கொண்டு )


" உங்க ரெண்டு பேருக்கும் ஒன்னு தெரியுமா ... இந்தியாவுல லாக் டௌன் அனௌன்ஸ் பண்றதுக்கு ஒரு மாசத்துக்கு முன்னாடியே ரங்கநாதன் குடும்பத்தோட மும்பைக்கு வந்துட்டான்.... " இதனைக் கேட்டு வேதா மற்றும் விஷ்ணுவின் முகத்தில் பலத்த அதிர்ச்சி.


" அது மட்டுமில்ல, ஸ்ரீவில்லிபுத்தூர்ல உங்க தாத்தா வாழ்ந்த வீட்டை, பழந்தன்மை மாறாம ஒரு சில இடத்துல மட்டும் ஆல்டர் பண்ணிக்கிட்டு இருக்கான்...


சுப்பிரமணி சித்தப்பாவும், டிரைவர் ரவி மாமாவும் அந்த வீடு , நம்ம தோப்பு வீடு ( வாசுதேவர் வீடு) , நிலங்களை எல்லாத்தையும் பராமரிச்சுகிட்டு வராங்கன்னு தெரிஞ்சுகிட்டு
அவங்க உதவியோட தான் வீட்டை ஆல்டர் பண்ணிக்கிட்டு இருக்கான் ரங்கநாதன் ...


அவன் ஸ்ரீவில்லிபுத்தூர் வந்து, எங்க அப்பா வாழ்ந்த வீட்டை கொஞ்சம் ஆல்டர் பண்ணனும் கேட்டதும், சுப்பு சித்தப்பா எனக்கு போன் பண்ணி சொன்னாரு...


என்ன உதவி வேணும்னாலும் ரங்கநாதனுக்கு கூட இருந்த செய்யுங்கன்னு நான் தான் சொன்னேன் ...


நடுவுல லாக் டௌன்ல நின்ன வேலை இப்ப மறுபடியும் தொடங்கி இருக்கு...


ரங்கநாதன் ஏன் திடீர்னு ஸ்ரீவில்லிபுத்தூர் வரணும்... அதுவும் ஏன் அந்த பழைய வீட்டை புனரமைக்கணும் ... இது எல்லாத்தையும் தெரிஞ்சுகிட்டு உங்க ரெண்டு பேர் கிட்டயும் சொல்லலாம்னு நெனச்சுக்கிட்டு இருந்தேன் நீ அதுக்குள்ள அவன் வீட்டுக்கே போயிட்ட ....( விஷ்ணுவை பார்த்து ஆழ்ந்து முறைத்தபடி) .


ஏண்டா நான் உன் அப்பன் டா ... உனக்கு வாக்கு கொடுத்திருக்கேன் ஸ்ரீயை உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேன்னு...


என்னைக்கு உங்க ரெண்டு பேருக்கும் நிச்சயதார்த்தம் முடிஞ்சதோ, அப்போதிருந்தே துபாய்ல ரங்கநாதனை மட்டுமல்ல ஸ்ரீயையும் கண்காணிக்க என் சம்பந்தியோட ( வித்யாவின் மாமனார்) தம்பி ,அவரும் அங்க கன்ஸ்ட்ரக்ஷன் பிசினஸ்ல இருந்ததால அவர் மூலமா ஆள் போட்டிருந்தேன் ...


ரங்கநாதன் நிச்சயமா துபாயை வைண்டு அப் பண்ணிக்கிட்டு வேற எங்கயாவது போயிடுவான்னு நினைச்சுதான் அவனையும் அவன் குடும்பத்தையும் கண்காணிக்க ஆள் போட்டிருந்தேன் ... ஆனா அவன் திடீர்னு மும்பைக்கே குடும்பத்தோட ட்ரான்ஸ்வர் ஆவான்னு நான் கொஞ்சம் கூட எதிர் பார்க்கல ...


இந்தியால மும்பையில தான் அவனுக்கு நிறைய பிஸினஸ். அது மட்டும் இல்ல இங்க நஷ்டத்துல ஓடிக்கிட்டு இருக்கிற ரெண்டு மூணு கன்ஸ்டிரக்ஷன் கம்பெனிஸ விலைக்கு வாங்கி
'ஆர்.ஆர் கன்ஸ்டிரக்ஷன்ஸ் ' ங்கிற பேர்ல இருந்து 'ஸ்ரீ கன்ஸ்டிரக்ஷன்ஸ்'னு மாத்தியிருக்கான்.....


அவன் மும்பைக்கு வந்ததும் லாக் டௌன் , சிவியர் கர்ஃபியூவால, எதையுமே என்னால தெரிஞ்சுக்க முடியல ... லாக் டௌன் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆனவுடனே, மறுபடியும் ரங்கநாதனை ஸ்ரீயையும் கண்காணிக்க ஆள் போட்டுட்டு தான், நான் ஹைதராபாத் போனேன்.... இன்னைக்கு காலையில நீ அவங்க வீட்டுக்குள்ள போன போட்டோ எனக்கு வந்தது... அதான் உனக்கு போன் பண்ணி வீட்டுக்கு வர சொன்னேன்....." என்றவரை வேதாவும் விஷ்ணுவும் பிரமிப்பாக பார்க்க,


" மிஸ்டர் இன்டலிஜென்ஸ் ஆபிஸர், என்னை நம்பாம உங்க காதலுக்காகவும் காதலிக்காகவும் ஏதாவது செஞ்சிருப்பீங்களே... சொல்லுங்க... கேப்போம்...." என்றவரின் புரிதலை மெச்சியபடி


" அப்பா, மிடில் ஈஸ்ட் (middle east) கன்ட்ரீஸ்
சிரியா, இஸ்ரேல், பாகிஸ்தான், இஸ்தான்புல் , துபாய்ல எங்க ரா(Raw) ஏஜென்ட்ஸ் நிறைய பேர் இருக்காங்க...


இதுல துபாய்ல ஏழு எட்டு வருஷமா ரா ஏஜென்ட்டா இஸ்மாயில் இருக்காரு... அவர் மூலமா தான் ஸ்ரீ என்னோட சர்வைலென்ஸ்ல இருந்தா ... ஆனா லாக் டௌன்க்கு
ரெண்டு மாசத்துக்கு முன்னாடி ஒரு அவசர வேலையா இஸ்தான்புல்க்கு
போனவரால துபாய்க்கு உடனடியா திரும்ப முடியல... அப்புறம் துபாய்க்கு வந்து விசாரிச்சதுல , ஸ்ரீ ஃபேமிலி இந்தியாக்கு ஷிப்ட் ஆகி இருக்காங்கன்னு தெரிஞ்சிகிட்டு என்கிட்ட சொன்னாரு ...


இந்தியான்னா தமிழ்நாடா இருக்கும்னு நெனச்சுக்கிட்டு இருந்தேன்ப்பா... ஆனா மும்பைக்கே ஷிப்ட் ஆவாங்கன்னு எதிர்பார்க்கல..." என்று தயங்கியபடி பதிலளித்தவனை பெருமையாக பார்த்தவர்,


" கிரேட் விஷ்ணு, யூ ஹேவ் டன் அ குட் ஜாப் ...என்ன ஒண்ணு இந்த அப்பாவை கொஞ்சம் நம்பியிருக்கலாம்... இருந்தாலும் பரவாயில்ல... ஐ அப்பிரிஷியேட் யுவர் எஃபாட்ஸ்(efforts) ..." என்றவரிடம்


" என்னன்னா, நேக்கு ஒண்ணுமே புரியல ...." என்றார் குழப்பத்துடன் வேதா.


" சொல்றேன் கேளும்மா, சீக்ரெட் சர்வீஸ் ஃபண்ட்னு (Secret service fund) ஒரு குறிப்பிட்ட தொகையை நம்ம நாடு செலவு செஞ்சு , நமக்கு எதிரி(போட்டி) நாடுகளா இருக்கிற சைனா, இஸ்ரேல், பாகிஸ்தான் , ரஷ்யான்னு
கிட்டத்தட்ட எல்லா நாட்லயும் நம்ம நாட்டுக்காக உளவு பாக்குறதுக்குன்னு, சில ஏஜென்ட்ஸ கல்டிவேட் பண்ணுவாங்க..


அவங்களோட வேலையெல்லாம், அந்த நாட்டுல இந்தியாவுக்கு எதிரா நடக்கிற திட்டங்களை தெரிஞ்சிகிட்டு நம் நாட்டுக்கு சொல்றது... பொதுவா இந்தியா அமைதியை விரும்பற நாடு .
அதனால எந்த நாட்லயும் கலவரத்தை உண்டு பண்ணாது ... ஆனா சில சமயங்கள்ல நம் நாட்டைக் காப்பாத்தவும் பிரச்சினைகளை திசை திருப்பவும் , உள்நாட்டு கலவரங்கள இந்த ஏஜென்ட்ஸ் மூலம் அங்க உண்டு பண்ணுவாங்க... இதெல்லாம் ஒரு வகையான ராஜதந்திரம் ...


இந்த உளவாளிகளை தான் ரா(Raw) ஏஜன்ட்ஸ்ன்னு சொல்றோம்...


இப்ப இவன் சொன்ன இஸ்மாயில், அங்க காலேஜ் ஸ்டுடென்ட்டாவோ, கடை வச்சுக்கிட்டோ இல்ல அந்த நாட்டோட உயர்ந்த பதவிலயோ இருக்கலாம்.


எந்த நாட்டுல இருக்காரோ அந்த மக்களோட மக்களா, அந்த நாட்டோட சம்பந்தப்பட்ட பேருல , அந்த நாட்டு பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டு , அந்த நாட்டு சட்டப்படி குழந்தைகளையும் பெத்துகிட்டு ஒரு வருஷம் ரெண்டு வருஷம், ஏன் ரொம்ப வருஷமா கூட தங்கி இருந்து, இந்தியாவுக்காக உளவு பார்த்துக்கிட்டு இருப்பாரு....


இந்த ரா ஏஜன்ட்டா போறவங்க ஒரு வேளை அந்த நாட்டுல மாட்டிக்கிட்டாங்கன்னா , நாங்க அனுப்பவே இல்ல, அவங்க யாருன்னே எங்களுக்கு தெரியாதுன்னு இந்திய அரசாங்கமே சொல்லிடும் ...


இவங்க இந்தியாவை விட்டு உளவு பார்க்கப் போகும் போதே இவங்க இந்திய பிரஜைங்கிற எல்லா டாக்குமெண்ட்ஸையும் இந்திய அரசாங்கம் அழைச்சிடும் ...


இவங்க அம்மா, அப்பா, பொண்டாட்டி யாருக்குமே இவங்க எங்க இருக்காங்க என்னவா இருக்காங்கன்னு கூட தெரியாது.... ஒருவேளை இவங்க அங்க இறந்து போனா அரசாங்க மரியாதை மட்டுமில்ல பொணம் கூட இந்தியா வராது ....


இந்தியா கொடுத்த ஆபரேஷனை சரியா செஞ்சு முடிச்சு , அவங்ககிட்ட மாட்டிக்காம திரும்பி வந்தா மாலை போடாத குறையா நம்ம அரசாங்கம் வரவேற்று நல்ல பதவி கொடுத்து அழகு பார்க்கும் ....


ரா ஏஜன்ட்ஸ் எல்லாம் நேரடியா பிரதமர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பேசலாம்... வேற யாரும் அவங்களை கட்டுப்படுத்தவும் முடியாது , அவங்களும் கட்டுப்பட மாட்டாங்க....


உன் பையன் ஐபில வேலை பாக்குறான்னு தான் பேரு....
ஆனா இவனுக்கு மத்த இந்தியன் இன்டலிஜென்ஸ் ஏஜன்ஸிஸ் RAW, NIA,CBIன்னு ஏகப்பட்ட இடத்துல காண்டாக்ட் வெச்சிருக்கான்... அதான் அவங்களை அரசாங்க வேலையோட தன் சொந்த வேலைக்கும் பயன்படுத்திக்கிட்டு இருக்கான் போல ...." என்று வேதாவுக்கு புரியும் அளவிற்கு
விளக்கிக் கூறியவர்,


" இருந்தாலும் விஷ்ணு நீ அவங்க வீட்டுக்குப் போய் இப்படி எல்லாம் பேசுனது தப்பு டா ..." என்று ஆழ்ந்து நோக்கியவர்


" உனக்கும் ஸ்ரீக்கும் கூடிய சீக்கிரம் கல்யாண ஏற்பாட்டை நான் பண்றேன் ... இதை யாராலயும் தடுக்க முடியாது ... ரொம்ப டயர்டா இருக்கே போய் தூங்கி ரெஸ்ட் எடு...
கேக்க மறந்துட்டேனே.... ஹொவ் வாஸ் த ட்ரெயினிங் ...."


" சூப்பர்ப் பா ..." என்றவனை பார்த்து புரிதலாய் தலையசைத்தார் வெங்கடேஷ்.


ஸ்ரீ , வேதாவின் வீட்டிற்கு வந்து சென்றதிலிருந்து,
வேதாவும் சுமித்ராவும் தொடர்பில் இருந்தாலும் இருவரும் தங்கள் கணவருக்கு தெரியாமல் உரையாடியதால் ஒரு சில கட்டுப்பாடுகளுடன் தான் உறவை வளர்க்க முடிந்தது.


" ஏன்னா, விஷ்ணு ஸ்ரீயை ஆத்துக்கு அழைச்சிண்டு வந்ததிலிருந்து நான் சுமித்ரா கூட போன்ல பேசிண்டு இருக்கேன் .... " என்றார் தைரியத்தை வரவழைத்து.


" எல்லாம் தெரியும் டி ... இன்னைக்கு காலையில உன் போனுக்கு பில் கட்டலாம்னு திறந்து பார்த்தா, டயல்டு நம்பர்ஸ்ல 'சுமித்ரா( ஸ்ரீ'ஸ் மாம்)' தெளிவா காட்டுது ... "


" அப்ப ஏன் என்ணின்ட எதுவுமே கேட்கல நீங்கோ...."


" உன்கிட்ட தான் ரகசியமே கிடையாதே அப்படியே இருந்தாலும் அதை மறைச்சு வைக்கவும் உனக்கு தெரியாது... கத்தரிக்காய் முத்தினா கடைத் தெருவுக்கு வந்து தானே ஆகணும், உன்னால என்கிட்ட எதையும் ஷேர் பண்ணாம இருக்கவே முடியாது அதனால தான் நீயா சொல்ற வரைக்கும் காத்துகிட்டு இருந்தேன்..."
என்றவரை வேதா காதலுடன் நோக்க,


" மாமி, நாம ரெண்டு பேர் மட்டும் , எங்கையாவது லாங் டிரைவ் போலாம் வர்றியா ..." என்று மனையாளை நெருங்கி வெங்கடேஷ் குறும்பாய் கேட்க,


" ஐய்ய, உங்களுக்கு இளமை ஊஞ்சலாடறதுன்னு நினைப்போ..."


" ஏண்டி, என் தலைக்கு மட்டும் கொஞ்சம் டை அடிச்சிட்டா, நீ நான்னு போட்டி போட்டுக்கிட்டு என்னை கல்யாணம் பண்ணிக்க பொண்ணுங்க க்யூ கட்டி நிற்கும் தெரியுமா ..." என்றார் சீண்டும் விதமாக .


" நீங்க ஒன்னும் அழகாகவோ கம்பீரமாவோ இல்ல......" என்றவரின் குரலில் கோபமும், கண்ணில் பொறாமையும் கூத்தாட, அவரின் முக பாவத்தை பார்த்து வாய் விட்டு சிரித்த வெங்கடேஷ்


" அப்ப ஏன் மாமி உன் கண்ணுல பொஸசிவ்னசும், பொறாமையும் பொத்துகிட்டு கொட்டுது..." என மீண்டும் வேதாவை சீண்ட, அவரோ முகத்தை தூக்கி வைத்துக் கொள்ள,


" ஒரு பேச்சுக்கு சொன்னேன் டி ... எப்ப ட்ரெய்னிங் முடியும்னு இருந்தது தெரியுமா ... ட்ரெய்னிங் முடிஞ்சதும் ஒருநாள் இருந்து உனக்காக ஷாப்பிங் பண்ணலாம்னு பார்த்தேன் ...ஆனா என்னால தாக்கு பிடிக்க முடியல அதனால தான் ஹைதராபாத் ஏர்போர்ட்ல உனக்கு புடவை வாங்கிட்டு வந்துட்டேன்..." என்று சமாதானம் சொல்லியும் வேதா இறங்கி வராமல்


" இந்த கலர் ஆல்ரெடி என்ணின்ட இருக்கு..." என்றார் புடவையை பார்க்காமலே வீராப்போடு.


" இல்ல பட்டும்மா ... இந்த கலர் இந்த டிசைன் உன்கிட்ட இல்ல ..." என்று தொடங்கியவர், தன் மனையாளிடம் இருந்த அனைத்து புடவையின் நிறம் மற்றும் டிசைனை ஒன்றுவிடாமல் நினைவு கூற, அதில் வாயடைத்துப் போனவர்


"இவ்ளோ நியாபகம் வச்சிருக்கீங்களா தேவரே ..."


" உன்னை மறந்தா தானே பட்டும்மா உன் சம்பந்தபட்ட எல்லாத்தையும் மறக்க முடியும்....
போராடி கிடைச்சவளாச்சே நீ... உன்னையும் உன் சம்பந்தப்பட்ட சிந்தனையையும் போற்றி பாதுகாக்காம விட்டுட முடியுமா என்ன ...


இன்னைக்கு பிளைட்ல வரும் போது
முதன் முதல்ல என் காதலை ஹாஸ்பிடல் வாசல்ல உன்கிட்ட சொன்னது... உங்க அப்பாவை சந்திச்சு பேசினதெல்லாம் ஏனோ மனசுல படம் மாதிரி ஓடிச்சி ....


அந்தக் காலகட்டத்துல சமுதாய கட்டமைப்பு மட்டுமில்ல... அரசியல்
வட்டத்திலும் என் காதலுக்கு எதிர்ப்பு ரொம்ப அதிகமா இருந்த நேரம் ....


உங்க அப்பா மட்டும் சமயோசிதமா நடக்காம சுயநலமா நடந்துகிட்டு இருந்தாருன்னா, ராவுத்தரை கொலை பண்ணி இருப்பாங்க ... பழி என் அப்பா மேல விழுந்திருக்கும்... ஊர்ல மதக் கலவரம் வெடிச்சு ஒருத்தரை ஒருத்தர் வெட்டிகிட்டு நிறைய உயிர் போயிருக்கும்... கடைசியா என் காதல் நிறைவேறாமலே போயிருந்திருக்கும்...


அதுக்கு மேல நான் என்ன ஆயிருந்திருப்பேன்னு என்னால இப்ப வரைக்கும் நினைச்சே பாக்க முடியல பட்டும்மா ....


உங்க அப்பாவை முதன்முதலில் சந்தித்து பேசும் போது , எங்க நம்ம கல்யாணத்துக்கு ஒத்துக்காம போய்டுவாரோன்னு பயம்.. உள்ளுக்குள்ள அப்படி ஒரு படபடப்பு ..
என் வாழ்க்கையோட கடைசி படில நின்னுகிட்டு பேசினேன் ... என் பொண்ணு கிட்ட கல்யாணத்தை பத்தி பேசிட்டு முடிவு சொல்றேன்னு சொன்னாரு....எனக்கு நம்பிக்கை இல்ல... ரெண்டு நாள் கழிச்சு என் பொண்ணு கல்யாணத்துக்கு சம்மதிச்சிட்டான்னு சொல்லும் போது புதையலே கிடைச்சா மாதிரி இருந்தது மாமி... அந்த நாளை இப்ப வரைக்கும் என்னால மறக்கவே முடியாது.. அவ்ளோ சந்தோஷமான நாள் அது.... " என்று இளைஞனாய் துள்ளியவர்,


"அப்புறம் நிறைய பிரச்சனை வந்தது ...
உங்க அப்பா ஒரே ஒரு முடிவ சரியான நேரத்துல எடுத்து அவ்ளோ பிரச்சனையையும் இல்லாம பண்ணிட்டாரு ...


அப்பேர்பட்ட மனுஷனுக்கு வாக்கு கொடுத்திருக்கேனே உன்னை ராணி மாதிரி பார்த்துப்பேன்னு....
ஏன் பட்டும்மா உன்னை நான் ஹேப்பியா வச்சிருக்கேனா..." என வெங்கடேஷ் வேதாவை நெருங்கி கண்ணோடு கண் நோக்கி கேட்க,


அவர் கண்களில் இருந்த நம்பிக்கை , கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு முன்பு
அவர் காதலை கூறும் போது அவர் கண்களில் மின்னிய எதிர்பார்ப்பை இப்பொழுதும் வேதாவிற்கு நினைவூட்ட
மெய்மறந்து அந்த விழி வீச்சில் திளைத்தவர்,


" தேவரே.... நான் ரொம்ப லக்கி ..." என்றார் மனம் சிலிர்த்து.


" நான் தான் லக்கி... எனக்கு எது பிடிக்கும் எது பிடிக்காதுன்னு பார்த்து பார்த்து செய்யற அருமையான பொண்டாட்டி நீ ... நீ என் வாழ்க்கைல வந்ததுக்கு அப்புறம் நான் தொட்ட உயரங்கள் ரொம்ப அதிகம்... நேத்து கல்யாணம் ஆன மாதிரி இருக்கு பட்டும்மா ....
முப்பது வருஷம் எப்படி போச்சுன்னே தெரியல .... நமக்கு பேத்தியும் பொறந்துட்டா ... இத்தனை வருஷ வாழ்க்கையில ஒரு கணம் கூட சலிப்பு தட்டல மாமி... என்ன ஒண்ணு சர்வீஸ்ல இருக்கும் போது உன் கூட ஆற அமர உட்கார்ந்து பேச கூட நேரம் இருக்காது....
இப்ப ரிட்டையர் ஆனதும் தான் அந்த நேரம் கிடைச்சிருக்கு ... அதாவது என்னோட ரெண்டாவது இன்னிங்ஸ் ஸ்டார்ட் ஆகியிருக்கு ... அத விட்டுடுவேனா ... அதனால தான் விட்ட சந்தோஷத்தை எல்லாம்
ஒண்ணு விடாம என்ஜாய் பண்ணலாம்னு முடிவெடுத்திருக்கிறேன் மாமி ...
விஷ்ணு கல்யாணத்தை முடிச்சிட்டா என் கடமை எல்லாம் முடிஞ்சு போச்சு...
சோ வீ ஹொவ் டு ஸ்டார்ட் அவர் லவ்
லைஃப் பேபி ...."
என்றபடி வேதாவின் நெற்றியோடு தன் நெற்றியை முட்டி அணைத்துக்கொண்டார்.


*****************************************
பொதுவாக காவல்துறை, இந்திய இன்டெலிஜென்ஸ் பிரிவுகளில் பணிபுரிபவர்களின் பணியானது ஒரே நேர்கோடாக திட்டமிட்டு அட்டவணையை பார்த்து செயல்படுவது போல் இருக்காது.
நேரத்திற்குத் தகுந்தாற் போல் வெவ்வேறு வழக்குகள் மற்றும் , திடீரென்று முளைக்கும் புது புது பிரச்சினைகளின் ஆழமறிந்து செயல்படுவதுதான் அதன் சிறப்பம்சமே .


அன்று முழுவதும் கழுத்தை நெறிக்கும் வேலை இருந்தாலும், ஏனோ அர்ஜுனின் மனம் அஷ்வத்திடமே இருக்க , மாலையும் நெருங்க , அஷ்வத்தை டே கேரிலிருந்து அழைத்து வந்து வீட்டில் விட்டு விட்டு மீண்டும் தன் பணியை தொடரலாம் என்றெண்ணி , டே கேர் சென்டரில் இருந்து அவனை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு கிளம்ப எத்தனிக்கும் போது, மிகுந்த சோகத்தோடு காட்சியளித்தவனிடம்


" ஏன் சோகமா இருக்க அஷ்வத்..." - அர்ஜூன்.


" முஜே பஹூத் ரோனா ஆ ரஹா ஹே.....( எனக்கு அழனும் போல இருக்கு ) " என்றான் பெரிய மனிதனை போல் ஹிந்தியில்.


அவனது தோரணை அர்ஜுனுக்கு சிரிப்பை வரவழைத்தாலும், அவன் பயன்படுத்திய வார்த்தையும் சோர்வான முகமும் அர்ஜுனை வாட்ட ,


" டெல் மீ ... வாட்ஸ் யுவர் ப்ராப்ளம் ..."


" அர்ஜுன்....எல்லாருக்கும் மம்மா, பப்பா ரெண்டு பேர் இருக்காங்க, ஆனா எனக்கு மட்டும் மம்மா தான் இருக்காங்க... பப்பா இல்லையே.... ஒய் .." என்று எதிர்பாராத அந்த மழலையின் கேள்வியில் ஆடிப் போனவனுக்கு சுதாரித்துக் கொள்ள ஓரிரு நொடிகள் தேவைப்பட,


" உனக்கு பப்பா இல்லைன்னு யார் சொன்னது ... நான் தான் உன் பப்பா ..." என்றான் தொண்டை கனத்து கண் கலங்கி எதையும் யோசிக்காமல் .


" நிஜமாவா அர்ஜுன் ..." என்று கண்களை அகல விரித்து ஆச்சரியத்தையும் ஆனந்தத்தையும் ஒரு சேர காட்டியவன்,
" அப்ப ஏன், நான் உங்களை அர்ஜுன்னு கூப்பிடறேன் ..." என்ற தெளிவான கேள்விக்கு அர்ஜுனிடம் பதில் இல்லை ,
சற்று யோசித்தவன்,


"ம்ம்ம்ம்...., இனிமே நீ என்னை பப்பான்னே கூப்பிடு..." என்றான் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக.


" நிஜமாவே நீங்க என் பப்பாவா ..." என்ற சிறியவனின் கேள்வி அவனை மேலும் உலுக்க, இத்தனை நாட்களாக இல்லாமல், முதன்முதலாக அவன் இப்படி கேள்வி எழுப்புவதற்கு காரணம் ,
டே கேர் சென்டரில் மற்ற குழந்தைகளை அவர்களது பெற்றோர்கள் அழைத்துச் செல்வதை பார்ப்பதால் தான் என்பதை உணர்ந்து,
இம்முறை அவனை அள்ளி எடுத்து தன் மடியில் வைத்து, தன் அலைபேசியில் ஒரு செல்பி எடுத்தவன்,


" இங்க பார், நீ என்னை மாதிரியே இருக்க... என்ன ஒன்னு நீ வெள்ளை வெளேர்ன்னு இருக்க, நான் அப்படி இல்லை ... மத்தபடி ரெண்டு பேருக்குமே லைட்டா கேட் ஐஸ், சிரிச்சா சீக்ஸ்ல விழற டிம்பிள், இந்த ஷார்ப் நோஸ்... எல்லாமே ஒரே மாதிரி இருக்கு ... பார் ... இப்ப சொல்லு நாம ரெண்டு பேரும் ஒரே மாதிரி தானே இருக்கோம்...."


" ஹாய்யா ...ஆமா இல்ல... " என்ற குழந்தையின் முகத்தில் சந்தேகம் மறைந்து சந்தோஷம் துளிர்க்க, வீடு வந்தவன், குழந்தையோடு தானும் இரவு உணவை முடிக்கவும், அக்னி அலுவலகத்திலிருந்து வரவும் சரியாக இருந்தது .


" எனக்கு வெளில கொஞ்சம் வேலை இருக்கு... வர லேட் ஆகும் ..." என்றவனை அவள் புரியாத பார்வை பார்த்து வைக்க, அதனை மனதில் வாங்காதவன், தலை கோதியபடி
தன் வாகனத்தை நோக்கி விரைந்தான்.


இரவு பதினோரு மணிக்கு மேல் வந்தவன், அக்னியின் அறைக்குச் சென்று பார்க்க, தாயும் மகனும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர்.


குழந்தையின் கையை பற்றியபடி ஒருக்களித்து உறங்கியவளின் முகத்தில் , ஏனோ நிர்மலமற்ற நிலை தோன்ற,
அறையும் சற்று வெப்பமாக இருப்பது போல் உணர்ந்தவன், ஏசியை அதிகப்படுத்தி விட்டு, தன் அறைக்குச் சென்று உறங்கலானான்.


மறுநாளும் அக்னிக்கு அலுவலகத்தில் முக்கிய பணி இருந்த காரணத்தால் , அவள் சற்று முன்னதாகவே கிளம்பி செல்ல,
ஏதோ ஒரு உள் உணர்வு உந்த, அஷ்வத்தை தானே பள்ளியில் இறக்கி விட்டவன், ஒரு வித மன உளைச்சலிலேயே தன் அலுவலகம் நோக்கி பயணமானான்.


முக்கிய கலந்தாய்வில் இருந்தவனின் அலைபேசி அமைதி நிலைக்கு தள்ளப்பட்டிருந்ததால், தொடர்ந்து வந்த அழைப்பு அவன் அறியாமலேயே அணைந்து போக, கலந்தாய்வு முடிந்ததும் புதிய எண்ணிலிருந்து ஐந்தாறு முறை அழைப்பு வந்திருப்பதை பார்த்து, தொடர்பு கொண்டவனுக்கு கிடைத்த செய்தி தலையில் இடி இறங்கியது போலிருந்தது.


அஷ்வத்தின் டே கேர் சென்டரிலிருந்து தான் அழைத்திருந்தார்கள்.


அவனுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்ததால், பள்ளிக்கு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக
செய்தி கிட்ட, உடனே பதறிக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தவன் , இடையில் அக்னியை தொடர்பு கொள்ளவும் மறக்கவில்லை.


அவளும் பணி நிமித்தம் காரணமாக, தொலைபேசியை அமைதி நிலைக்கு தள்ளி இருந்திருப்பாள் போலும், ஆதலால் அவளும் அழைப்பை எடுக்கவில்லை.


" சார், உங்க சன்னுக்கு ASD, அதாவது
(Atrial septal defect) ஏற்றியல் செப்டல் டிஃபெட்டால மூச்சுத் திணறல் வந்து மயங்கி விழுந்திருக்கிறார்.
லே மேனுக்கு புரியிற மாதிரி சொல்லணும்னா அவனோட இதயத்துல சின்ன ஓட்டை இருக்கு ... அதனால அதிகமான ரத்தம் நுரையீரலுக்கு பாயும் போது ,
இயல்பா சுவாசிக்க முடியாம மயக்கம் வந்திருக்கு ... இப்ப ட்ரீட்மென்ட் போய்கிட்டு இருக்கு ...
இன்னும் நிறைய டெஸ்ட்ஸ் எடுக்கணும்..." என்று மருத்துவர் பேசிக் கொண்டே போக, கண்மூடி படுத்திருந்த குழந்தையின் முகத்தில் சற்று நீல நிறமாக காட்சியளித்த உதடுகளை பார்த்து உள்ளுக்குள் உடைந்து போனவன்


" ரொம்ப சீரியஸா டாக்டர் ... என் பையன் எனக்கு கிடைச்சுடுவானில்ல..." என்று கேட்கும் போதே , அவனையும் மீறி அவனது குரல் தழுதழுக்க


"பொதுவா பிறந்த குழந்தைகளுக்கு இந்த மாதிரி பிரச்சனைகள் இருக்கிறது காமன்... 18 மாசத்துக்குள்ள தானாவே அந்த ஹார்ட் ஹோல் க்ளோஸ் ஆயிடும் ... ஆமா அஷ்வத்திற்கு நாலரை வயசு ஆகப்போகுது இல்லையா... எப்ப பொறந்தான்..." என்று இயல்பாக கேட்டவருக்கு, அஷ்வத்தின் பிறந்த தேதியை அர்ஜுன் சரியாகச் சொல்ல,


" சோ, ஆல்மோஸ்ட் நாலரை வயசு ஆகப்போகுது ... இனிமே சர்ஜரி பண்ணி தான் க்ளோஸ் பண்ண முடியும் ...


ஆல்ரெடி ஈசிஜி எடுத்து பார்த்துட்டோம் .. இன்னும் செஸ்ட் எக்ஸ்-ரே(chest x-ray) எக்கோ டயக்ராம்(echo diagram) எடுத்தா சைஸ் ஆஃ த ஹோல், அதனோட சிவியாரிட்டி தெரிய வரும் , அத வச்சு சர்ஜரி எப்ப பண்ணலாம்னு ஒரு முடிவுக்கு வரலாம் ....
ஆமா, இதுக்கு முன்னாடி இந்த மாதிரி வந்திருக்கா ..." என்ற கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் அர்ஜுன் திணற


" ஏன்னா சில குழந்தைகளுக்கு பிறந்த போதே இந்த மாதிரியான பிரச்சனை இருந்தா சிம்டம்ஸ் தெரிஞ்சிடும் .. சில குழந்தைகளுக்கு அஞ்சு வயசுக்குள்ள தெரியும் ... அதான் கேக்றேன் ..." என்றபடி மீண்டும் மருத்துவர் அர்ஜூனின் முகத்தையே பார்க்க,


" சாரி மேம், எனக்கு தெரியாது ..." என்றான் தயங்கியபடி.


" என்ன சொல்றீங்க மிஸ்டர் ஏ.கே .... தெரியாதா ..." என்ற மருத்துவரின் கேள்விக்கு தயங்கியபடி


" எஸ் மேம்... நான் இவனோட பயாலஜிக்கல் பாதர் கிடையாது ... இப்பதான் எங்களுக்கே .." என்றவன் அதற்கு மேல் பேச முடியாமல் திணற ,
தலைமை மருத்துவருடன் மற்ற 2 ஜூனியர் மருத்துவர்களும் துணுக்குற்று இம்முறை அவனையே ஆழ்ந்து நோக்க ,


" அஷ்வதோட அப்பா உங்களுக்கு உறவா....." என தலைமை மருத்துவர் சந்தேகத்துடன் வினவ,


" நோ... நோ மேம்...."


" ஓ....இட்ஸ் ஓகே ...இவங்க அம்மா எங்க ..."
என்றவரிடம், அக்னியை பற்றி சொல்ல ஆரம்பிக்கும் போதே, அவளிடமிருந்து அழைப்பு வர,
மருத்துவர் கூறியதை கூறாமல், அஷ்வத்திற்கு நடந்ததை மட்டும் அவன் தெரிவிக்க,


" ஏன் இப்படி திடீர்னு ஆச்சு... இதுவரை இந்த மாதிரி நடந்ததே இல்ல அர்ஜுன்..." என்று எதிர்முனையில் அவள் பதறி துடிக்க, அவளை ஒருவாறு சமாதானப்படுத்தியவன் மருத்துவரிடம்


" மேம், என் வைஃப் கிட்ட சாதாரண பிரச்சினைனு சொல்லிடுங்க ... சர்ஜரி பத்தியெல்லாம் சொல்லாதீங்க ப்ளீஸ்... ஏற்கனவே அவ ரொம்ப ஸ்ட்ரெஸ்ல இருக்கா ..." என்றான் அழைப்பை துண்டித்து விட்டு .


" இட்ஸ் ஓகே ஏ.கே, டோன்ட் வரி ...
டெஸ்ட் ரிசல்ட் வந்ததும் தான் நாமலே ஒரு முடிவுக்கு வரமுடியும்... இப்போதைக்கு அவங்களுக்கு எதுவும் தெரிய வேண்டாம்... குழந்தை ஒன் ஹவர்ல கண் முழிச்சதும், ஃபோர் டு ஃபைவ் ஹவர்ஸ் அப்சர்வேஷன்ல வச்சு பார்த்துட்டு நீங்க வீட்டுக்கு கூட்டிகிட்டு போகலாம்... ஒன் திங் ஏ.கே, இந்த சர்ஜரி எல்லாம் இப்ப ரொம்ப காமன் .... பயப்பட வேண்டிய அவசியம் இல்ல....சக்ஸஸ் ரேட் 100 %...."
என்றார் அவனுக்கு ஆறுதலாக.


அப்போதுதான் சுயம் உணர்ந்தவன்,
பொறுப்புணர்வோடு செயல்பட்டு குழந்தையை சரியான நேரத்தில் மருத்துவமனையில் அனுமதித்த பள்ளி நிர்வாகம் மற்றும் அதன்
காப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்து அனுப்பி வைக்கும் போது அக்னி வந்தாள்.


அவள் முகமும் கண்களும் ரத்த நிறத்தில் சிவந்திருக்க, அவள் மனம் பட்ட பாட்டை அவைகள் சொல்லாமல் சொல்ல, வேக நடையில் வந்தவள் அர்ஜுனின் கரம் பற்றி பொங்கிய விழிகளோடு ,


" அஷ்வத் எங்க அர்ஜுன் ... " என்றாள் தொண்டை அடைக்க லாபியில் நின்றிருந்தவனை பார்த்து .


பிரத்தியேக சிகிச்சையில் உட்படுத்தப்பட்டிருந்த குழந்தையை காட்டியவன், மருத்துவர் கூறியதை மேலேழுந்தவாறு கூற,
அதனைக் கேட்டு முதலில் துடித்து பின்பு ஓரளவு நிம்மதி உற்றவளாய் அங்கிருந்த இருக்கையில் சரிந்து அமர,
மருத்துவர் கூறியது போல் சற்று நேரத்திற்கெல்லாம் அஷ்வத் கண் விழிக்க, பிறகு அவனுக்கு ஐந்து மணி நேர மருத்துவ கண்காணிப்பு தொடர்ந்தது.


குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்ததிலிருந்து இருவரும் பச்சைத்தண்ணீர் கூட பல்லில் படாமல் அமர்ந்திருக்க,
சற்று நேரத்திற்கெல்லாம் அர்ஜுனை மருத்துவர் சந்திக்க விரும்புவதாக செவிலியர் தெரிவிக்க,


அக்னிக்கு ஆய்வக அறிவு அதிகம் என்பதால் குழந்தையின் மருத்துவ அறிக்கையை அவள் பார்ப்பதை தவிர்க்க


" இங்கயே வெயிட் பண்ணு அக்னி ... இதோ வந்துடறேன் ..." என்று கூறி சென்றவனை அவள் வித்தியாசமாக நோக்க,


" சார், குழந்தைக்கு எல்லா டெஸ்டும் எடுத்தாச்சு, இன்னும் ரெண்டு மூணு நாள்ல ரிசல்ட் கிடைச்சிடும்.... சர்ஜரியை பற்றி அப்புறம் பேசலாம்.... " என்றவர் குழந்தைக்கு கொடுக்க வேண்டிய மருந்து மாத்திரைகள், உணவு முறைகளை பற்றி அறிவுறுத்த, கேட்டுக்கொண்டு அறையை விட்டு வெளியேறியவனிடம், அனைத்தையும் கேட்டு தெரிந்துகொண்டு


" அர்ஜுன், என் லேப் அசிஸ்டென்ட் ஒருத்தருக்கு கொரோனா பாசிட்டிவ், சோ , ஐ நீட் டு பி டெஸ்டட்... என் கூட இருந்ததால நீங்களும் கோவிட் டெஸ்ட் பண்ணிக்கோங்க...." என்ற அக்னியின் பேச்சைக் கேட்டதும்,


ஆமா, நீயும் நானும் அப்படியே கட்டிப்புரண்டு ஒட்டி
உறவாடிட்டோம் ... இதுல உன் மூலமா எனக்கு கொரோனா வேற வருதாம்மா...
ரோஜா மலரே ராஜகுமாரி... பாட்டு மாதிரி நீ மலை மேல நின்னுகிட்டு இருக்க ... நான் அடிவாரத்துல நின்னுகிட்டு இருக்கேன்... இதுல நமக்கு கொரோனா வந்தா
கொரோனாக்கு தான் டி அசிங்கம் ....
என்று உள்ளுக்குள் குமுறியவன்,


" கம், லெட்ஸ் டு த டெஸ்ட் ..." என இருவரும் ஆய்வகத்திற்கு சென்று
தனித்தனியே கொரோனா பரிசோதனை செய்துக்கொள்ள,
அஷ்வத்திற்கு சிகிச்சை அளித்த இரு ஜூனியர் மருத்துவர்கள் புடைசூழ கீழ்க்கண்ட முறையில் அர்ஜுனுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.


ச்சீக் ஸ்வாப்(Cheek swab) என்ற முறையில் மிக மெல்லிய சற்று நீண்ட குழலின் நுனியில் இருந்த பஞ்சினை ( ஜான்சன் அண்ட் ஜான்சன் இயர் பட்ஸ் போலிருக்கும்) வாயிலுள்ள இரு உள் தாடைகளின் சுவற்றில் கிட்டத்தட்ட 5லிருந்து 10 நிமிடம் வரை இட வலமாக சுற்றி அந்த பஞ்சில் எச்சில் ஊறியதும், அதனை சோதனைக்கு உட்படுத்த சிறிய நீண்ட குப்பியில் போட்டு அடைத்ததோடு , சலைவா டெஸ்ட் (Saliva test)எனப்படும்
எச்சிலை சேகரித்து
மற்றொரு முறையிலும் பரிசோதனை செய்யப்பட்டது.


சோதனைகள் முடிந்து ஆய்வகத்தில் இருந்து திரும்பும் போது,


" அர்ஜுன், டெஸ்ட், ட்ரீட்மென்ட்க்கெல்லாம் எவ்ளோ செலவு ஆச்சுன்னு சொன்னீங்கன்னா ...
மனி ட்ரான்ஸ்ஃபர் பண்ணிடுவேன் ...." என்றவளின் பேச்சைக்கேட்டு
எரிமலையானவன் ,


" அம்மா தாயே, என் வாய கிளறாம வர்றியா... கோவத்துல ஏதாவது சொல்லிட போறேன்..."


" இல்ல அர்ஜுன், ஏற்கனவே உங்க வீட்டில நானும் என் பையனும் ஸ்டே பண்ணிட்டு இருக்கோம் ... இதுல இந்த செலவு வேற .." என்றவளின் பேச்சில் மேலும் கொதித்துப் போனவன்,


" என்னடி பிரச்சினை உனக்கு ...இப்பதான் குழந்தை எவ்ளோ பெரிய ஆபத்திலிருந்து மீண்டிருக்கான்... ஆனா இந்த நிலைமையிலயும் உன்னை பத்தி மட்டும் தான் யோசிக்கிற இல்ல...


இங்க பாரு ... உன்கிட்ட எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்ல ... நீ பயப்பட வேண்டாம் ..." என்றவனின் பேச்சு ஓங்கி அறைந்தது போல் இருக்க, முகம் சிவந்து தலை குனிந்தவளிடம்,


" கவலைப்படாத, நான் சாகுறதுக்குள்ள பணம் வாங்கிக்கிறேன் ..." என்றவன் முடிக்கும் முன்பே, அவன் முழங்கையை தன் இரு கரங்களால் அழுந்த பற்றிக்கொண்டு, தோளில் முகம் புதைக்காத குறையாய் குலுங்கி அழுதவள்


" ப்ளீஸ், அர்ஜுன் சாவ பத்தி மட்டும் பேசாதீங்க... பயமா இருக்கு ... முன்னெல்லாம் கிரைம் சீன் ஸ்பாட்டுக்கே போய் எவிடென்ஸை கலெக்ட் பண்ணுவேன் ... அஜய் போனதுக்கப்புறம், வெறும் லேப் ஒர்க்கு தான் ..." என்றவளை பார்ப்பதற்கே பாவமாக இருந்தது, தந்தை, கணவன் , தாய் என அனைவரையும் ஒருவர் பின் ஒருவராக பறிகொடுத்தவளுக்கு எஞ்சியிருக்கும் ஒரே உறவு அஷ்வத் மட்டும்தான் ...


எங்கு அவனையும் பறி கொடுத்து விடுவோமோ என்ற அச்சத்தில் பரிதவித்து கொண்டிருந்தவளிடம்,
அர்ஜுன் தன் சாவை பற்றி பேசியது,
அவளுள் இனம் புரியாத கலக்கத்தை
ஏற்படுத்தியிருப்பதை உணர்ந்தவன்,


" கொஞ்சம் கைய எடுக்கறியா ... நான் போய் குழந்தையை தூக்கிகிட்டு வரணும் ... வீட்டுக்கு போகணும் நேரமாச்சு ...." என்றபடி அவளை விலகி
நடந்து, அஷ்வத்தை தோளில் சுமந்து கொண்டு கார் நோக்கி விரைந்தவனை வேக நடையிட்டு பின் தொடர்ந்தாள் .


மருத்துவர் அறிவுறுத்தியது போல், இரவு உணவு , மாத்திரைகள் அனைத்தும் முடிந்தும் கூட அஷ்வத் , ஏனோ அர்ஜுனையே ஒன்றி கொண்டிருக்க,
ஒரு கட்டத்தில் அவன் தோளிலேயே தூங்கி வழிந்தவனை தன் அறைக்கே எடுத்துச் சென்று தன் படுக்கையில் கிடத்தியவனிடம்


" அர்ஜுன்.... அஷ்வத் என் கூடவே தூங்கட்டுமே ....பாதி தூக்கத்துல எழுந்து உங்களை கஷ்டப்படுத்திடுவான்.... " என்றாள் தயக்கத்துடன்.


" அதைப் பத்தி நீ கவலைப்படாதே, நான் அவனை பாத்துக்கிறேன்.... நீ நிம்மதியா போய் தூங்கு.... " என்றவனின் பதில் ஒரு விதத்தில் அவளுக்கு சாதகமாகவே இருந்தது. வழக்கம் போல் அவள் தூக்க மாத்திரையை உட்கொண்டு விட்டால் அவளால் பாதி இரவில் கண் விழித்தெழுவதென்பது இயலாத காரியம் , எனவே தூக்க மாத்திரை உட்கொள்வதா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருந்தவளுக்கு,
அவனது பதில் உதவியாக இருக்க, அன்று முழுவதும் ஏற்பட்ட மன உளைச்சல் அவளுக்கு நிச்சயம் உறக்கத்தை கொடுக்காது என்பதால் தூக்க மாத்திரை எடுத்துக் கொண்டு உறங்க சென்றாள் அக்னி.



****************************************


ரங்கநாதன் பகிர்ந்திருந்த ஐந்து நட்சத்திர விடுதியில், கேபின் அறையில் அவருக்காக காத்திருந்தான் விஷ்ணு.


ஒரு பத்து நிமிட இடைவெளியில், கோட் சூட் சகிதமாக மிகுந்த கம்பீரத்தோடு, மெல்லிய
குளிர் கண்ணாடி அணிந்தபடி வந்தவர்,
விஷ்ணுவின் எதிரில் கெத்தா அமர்ந்து,


" என்ன சாப்பாடறீங்கோ.." என்றார் சூழலையை இயல்பாக்க.


" காஃபி ..."


" ஏதாவது டின்னர் சாப்பிடலாமே... இது டின்னர் டைம் ...நேக்கு பசிக்கற்து..."


" ஆல்ரெடி என் டின்னர் முடிஞ்சு போச்சு ... நீங்க ஆர்டர் பண்ணிக்கோங்க...எனக்கு காபி போதும் ..." என்றவன் மறைமுகமாக பேச்சை ஆரம்பிக்குமாறு தெரிவிக்க,
உடனே ரங்கநாதன் தனக்கு தேவையானதை ஆர்டர் செய்து விட்டு


" போலீஸ் ஸ்டேஷன்ல பார்த்த அன்னைக்கே உங்களிண்ட இந்த விஷயத்தை பத்தி நான் பேசியிருந்திருக்கணும், ஆனா உங்களை நான் கொஞ்சம் மட்டமா எடை போட்டுடுட்டேன், இன்னைக்கு கார்த்தாலே நீங்க ஆத்துக்கு வந்து பேசும் போதுதான், உங்களோட சீரியஸ்னஸ் நேக்கு புரிஞ்சது, அதனால தான் தெளிவுபடுத்த வந்திருக்கேன்....
உங்களுக்கும் ஸ்ரீக்கும் நடந்த நிச்சயதார்த்தத்தை மறந்துடுங்கோ, இந்த கல்யாணம் நடக்காது ...."
என்றவரின் குரல் வெகு லேசாக தழுதழுத்தது போன்ற உணர்வில் இருக்க,


" நீங்க உங்க கூலர்ஸை கொஞ்சம் கழட்ட முடியுமா .. எதிர இருக்கிற லைட்டோட வெளிச்சம் அதுல பட்டு எனக்கு ரெப்லெக்ட் ஆகுது... ப்ளீஸ் " என்றான் அவர் குரல் தழுதழுத்ததை கண்ணிமைக்கும் நேரத்தில் கண்டுபிடித்து.


கண்கள்தான் உணர்வுகளின் பிரதிபலிப்பு மையங்கள், தன் உணர்வுகளை காட்டக் கூடாது என்பதற்காகவே குளிர் கண்ணாடி அணிந்து வந்தவரின் குரல் மற்றும் உடல்மொழியில் தெரிந்த மாற்றத்தை கண்டவன், அவர் மனதைப் படிப்பதற்காக வேண்டி அவ்வாறு கூற,
உடனே குளிர் கண்ணாடியை,
கழற்றியவரின் கண்கள் லேசாக சிவந்திருக்க,


" இந்தக் காலத்துல கூட ஜாதி பாக்கணுமா ... எங்க அப்பா எங்க அம்மாவை எவ்ளோ நல்லா பார்த்துக்கிறார் தெரியுமா ...
எங்க அப்பா ரொம்ப அருமையான மனுஷன் ... அவர் கிட்ட ஏதாவது குறை கண்டீங்களா.... எப்படியும் யாருக்கோ ஸ்ரீயை கல்யாணம் பண்ணி கொடுக்க போறீங்க ... ஏன் எனக்கு கல்யாணம் பண்ணி கொடுக்கக்கூடாது ... நாங்க எல்லாரும் ஸ்ரீயை ரொம்ப நல்லா பாத்துப்போம் ..."


" நான் ஜாதிய பத்தி யோசிக்கல ... ஸ்ரீயை டி.வி.ஆர் ஃபேமிலில கல்யாணம் பண்ணி கொடுக்கலாம்னு பேசியிருக்கேன் ... உங்களுக்கே தெரியும் அவா என்னை மாதிரியே மல்டி மில்லியனர்ன்னு ..." என்றவரின் குரல் அவரையும் மீறி கமற,


ஜாதியை பற்றி பேசியிருந்தாலோ அல்லது தனது தந்தையை பற்றி பேசி இருந்தாலோ ஏதாவது விளக்கம் கொடுத்திருக்கலாம் எப்பொழுது பொருளாதார நிலையை பற்றிய பேச்சு வந்ததோ அதற்கு மேல் பேசுவதற்கு ஒன்றுமில்லை என்கின்ற நிலையில்


" நான் உங்க அளவுக்கு ரிச் இல்ல.. சாதாரண மாச சம்பளக்காரன் தான் ... ஆனா ஸ்ரீ என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா தான் சந்தோஷமா இருப்பா .... நடந்த நிச்சயதார்த்தத்தை என்னால மறக்க முடியாது ... நான் அதை நினைச்சுகிட்டே வாழ்ந்திடுவேன்... அவளால மறக்க முடிஞ்சுதுன்னா நீங்க அவளுக்கு கல்யாணம் பண்ணி வைங்க ... எனக்கு ஸ்ரீ எங்க இருந்தாலும் சந்தோஷமா இருக்கணும்......
என்னால் ஸ்ரீக்கு எந்த பிரச்சினையும் வராது ... பயப்படாதீங்க .... நீங்க கோ அ ஹெட் நான் கிளம்புறேன் ...." என்று அவன் இருக்கையை விட்டு எழ,


" ஒரு நிமிஷம் ... நீங்களும் கல்யாணம் பண்ணிக்கணும் ..." என்ற போது ரங்கநாதனின் விழிகள் ஏறக்குறைய கலங்கியிருக்க


" என் கல்யாணத்தை பத்தி நீங்க அக்கறை பட வேண்டாம் ... எனக்கு தான் உங்க பெண்ணை குடுக்க மாட்டேன்னு சொல்லிட்டீங்க அப்புறம் அதை பத்தி ஏன் பேசுறீங்க...."


" உங்களுக்கு மட்டுமில்ல அவளை நான் வேற யாருக்குமே கல்யாணம் பண்ணி கொடுக்க முடியாது...." என்றபடி குரல் உடைந்து கண்கள் பொங்க லேசாக கதறி அழ ஆரம்பித்தார்.


தகிப்பாள்
 
அத்தியாயம் 17


ஏறக்குறைய கண்கள் பொங்க, லேசான கமரலோடு ரங்கநாதன் பேசிய வார்த்தைகள் , விஷ்ணுவை உலுக்க,


" மாமா, என்ன ஆச்சு... ஏன் அழறீங்க .." என்றான் அவன் வாழ்நாளில் முதன் முறையாக உறவுமுறையை சொல்லி அழைத்து.


ஓரிரு நொடியில் தன்னை சுதாரித்துக் கொண்டு, அருகில் இருந்த தண்ணீரை அருந்தி குரலை சமன் செய்தவர் ,


" நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளுங்கோ.... நீங்க என் தங்கைக்கு ஒரே பையன், நீங்க நன்னா கல்யாணம் பண்ணிண்டு உங்க வம்சம் விருத்தியாகணுங்கிறது தான் உங்களை பெத்தவாளோட ஆசை... என்னோட ஆசையும் அதுதான் ...


கல்யாணம் எதுக்கு பண்றா, நம்ப வம்சம் வாழையடி வாழையா தழைக்கணுங்கிறதுக்காக தான் ....
ஆனா நீங்க ஸ்ரீயை கல்யாணம் பண்ணிண்டா அது நடக்காது....
அவளால ஒரு குழந்தைக்கு தாயாகிறது ரொம்ப கஷ்டம்னு டாக்டர் சொல்லிருக்கா....


குறை இருக்குன்னு தெரிஞ்சும், நான் ஸ்ரீயை தெரியாதவாளுக்கே கல்யாணம் பண்ணி கொடுக்க மாட்டேன் .... நீங்க என் தங்கையோட ஒரே பையன் ... உங்களுக்கு எப்படி அவளை கல்யாணம் பண்ண ஒத்துப்பேன்.... என் தங்கை வேதாக்காக இதுவரைக்கும் நான் எந்த நல்லதையும் பண்ணினதே இல்ல...உங்கப்பா ரொம்ப நல்ல மனுஷன் ... என் பொண்ணை உங்களுக்கு கல்யாணம் பண்ணி கொடுத்து உங்க வம்சமே இல்லாம
பண்ண நான் தயாரா இல்ல...


அதனால தயவு பண்ணி, நீங்க வேற யாரையாவது கல்யாணம் பண்ணிண்டு சௌக்கியமா இருங்கோ .... நான் ஏதாவது தப்பா பேசி இருந்தா என்னை மன்னிச்சிடுங்கோ.... " என்றபடி அவர் இருக்கையை விட்டு எழ முற்பட,
அதிர்ச்சியில் அதுவரை உறைந்திருந்த விஷ்ணுவிற்கு அப்பொழுதுதான் சுயம் உறைக்க,


" இங்க பாருங்க... எத்தனையோ பேருக்கு நாட்டுல குழந்தை இல்ல... அவங்க எல்லாம் சந்தோஷமா இல்லையா .... "


" நீங்க சொல்ற அந்த எத்தனையோ பேர் தான் குழந்தை இல்லன்னு கடைசியா டிவோர்ஸ்க்கு போறா ... என் குழந்தைக்கு அந்த மாதிரியான ஒரு நிலைமை வந்திடக்கூடாது ...
அவ ஆள் தான் வளர்ந்து இருக்காளே ஒழிய அவ இன்னும் மனசளவுல சின்ன குழந்தைதான்... அவ பிறந்ததிலிருந்து இந்த நிமிஷம் வரைக்கும் கஷ்டம்னா என்னன்னு தெரியாமலே வளர்ந்திருக்கா... இப்படி ஒரு பிரச்சனை இருக்குன்னு அவளுக்கு மட்டும் இல்ல, எங்காத்துல வேற யாருக்குமே தெரியாது ..."


" சின்ன வயசிலிருந்தே ஸ்ரீ தான் என் மனைவின்னு என் மனசுல ஆழமா பதிஞ்சுபோச்சு... அது யாராலயும் மாத்த முடியாது, அது மட்டும் இல்ல... இது என் தாத்தா பண்ணி வச்ச நிச்சயதார்த்தம் ..." என்றவனின் பேச்சை இடைமறித்து,


" எங்கப்பா ஒரு மஹானுபாவுலு ... ரொம்ப நேர்மையான ஆன்மா .... பகவானுக்கு இணையானவர் ...
நான் அவரை ஏமாத்தனும்னு நினைச்சேன், அதான் அந்த பகவானே நேக்கு பெரிய பனிஷ்மென்ட் கொடுத்துட்டேர்..." என்றவரை விஷ்ணு புரியாமல் பார்க்க,


" நான் ஸ்ரீவில்லிபுத்தூர் வீட்டை ஆல்டர் பண்ணிண்டு இருக்கேன்னு உங்க அப்பா சொல்லி இருப்பேரே...."


" இன்னைக்கு காலையில தான் சொன்னாரு ..." என்றவனை ஆச்சரியமாக ரங்கநாதன் பார்க்க,


" நிஜம்மா, இன்னைக்கு காலையில தான் சொன்னாரு ..." என்றதும்


" என் அப்பா முதல் முதல்ல உங்க ரெண்டு பேரோட நிச்சயதார்த்தத்தை பத்தி என்ணின்ட பேசும் போதும் சரி , அவர் மரணப் படுக்கையில 2021ல ஸ்ரீ விஷ்ணுவோட கல்யாணம் இந்த ஆத்துல நடக்கணும்னு என்ணின்ட வாக்கு கேட்கும் போதும் சரி, நான் பொய்யா தான் வாக்கு கொடுத்தேன்.... அப்ப பணம், ஜாதி எல்லாம் என் கண்ணை மறைச்சிருந்தது.... எப்போ நான் அவரை ஏமாத்தனும்னு நினைச்சேனோ, அந்த பகவான் நேக்கு எங்க அடிச்சா வலிக்கும்னு தெரிஞ்சு, அங்க அடிச்சுட்டான்...


என் இரண்டு பசங்களும் ஓரளவுக்கு நன்னா பிஸ்னஸ்ல வளர்ந்துட்டா...
அதனால பிசினஸை அவான்ட ஒப்படைச்சிட்டு, நான், சுமித்ரா ஸ்ரீயோட என் கடைசி காலத்தை அந்த ஆத்துலயே தள்ளிடலாம்னு முடிவெடுத்திருக்கிறேன் ...
அதான் அந்த ஆத்துல சின்னச்சின்ன மாற்றங்கள் செய்ய சொல்லி இருக்கேன் .... வர வருஷத்துல என் அப்பான்ட சொன்ன மாதிரி உங்க ரெண்டு பேருக்கும் அந்த ஆத்துல கல்யாணம் தான் பண்ணி வைக்க முடியல அட்லீஸ்ட் , அந்த ஆத்துக்காவது குடி போயிடணும்னு நினைச்சிண்டிருக்கேன்... அப்பவாது என் அப்பாவோட ஆன்மா என்னை மன்னிக்காதான்னு ஒரு நப்பாசை ..."


" நீங்க ஒரு விஷயத்தை சரியா புரிஞ்சுக்கணும் ...நான் ஸ்ரீயை கல்யாணம் பண்ணிக்கலன்னா நான் கல்யாணமே பண்ணிக்க போறதில்ல, சோ எனக்கு வாரிசு இருக்கப் போறதில்ல.. அதுக்கு நான் ஸ்ரீயை கல்யாணம் பண்ணிக்கிட்டு வாரிசு இல்லாம இருந்துட்டு போறேனே... வர வருஷம் எங்க தாத்தா ஆசைப்பட்ட மாதிரி எங்களோட கல்யாணம் அந்த வீட்டுல நல்ல படியா நடக்கும் ..." என்று விஷ்ணு உறுதியாகக் கூற


" அவசரப்படாதீங்கோ.... வர்ற வாரம் ஸ்ரீயை ட்ரீட் பண்ணின டாக்டர் ஒரு மீட்டிங்காக துபாயிலிருந்து மும்பை வரா... அவாளை நீங்க மீட் பண்ணிட்டு முடிவெடுங்கோ..."


" டாக்டர் என்ன, கடவுளே வந்து சொன்னாலும் ஸ்ரீ தான் என் வைஃப்... அதுல எந்த மாற்றமும் இல்லை ... ஆனா டாக்டரை மீட் பண்ணி ஸ்ரீயை பத்தி தெரிஞ்சிக்கிறது , அஸ் எ ஹஸ்பன்ட் எனக்கு ரொம்ப ஹெல்ப் ஃபுல்லா இருக்கும் ... டெஃபைனட்லி ஐ வில் மீட் த டாக்டர் ... "


" நீங்க ஒருத்தர் மட்டும் முடிவெடுத்தா போறாது ... உங்க அப்பா அம்மாவும் அதுக்கு சம்மதிக்கணும்..." என்ற ரங்கநாதனை ஆழ்ந்து நோக்கி,


" இது என்னோட கல்யாணம் என்னோட முடிவு தான் முக்கியம் ..." என்றவன்


" எது எப்படி இருந்தாலும், நாம பேசினது நமக்குள்ளேயே இருக்கட்டும் வேற யாருக்கும் தெரிய வேண்டாம்..."
என்ற விஷ்ணுவிடம் பிறகு மருத்துவரை சந்திப்பதற்கான விவரங்களை அனுப்புவதாக கூறி விடைபெற்றார் ரங்கநாதன்.


பிறகு தொடர்ந்து வந்த நான்கைந்து நாட்கள், விஷ்ணுவிற்கு பணிச்சுமை அதிகமாக இருக்க, அதனால் அவன் ஸ்ரீயை தொடர்புகொண்டு பேசுவது ஒரு நாளில் வெறும் ஐந்தே நிமிடம் ஆகிப்போனது.
—-----—-——————————-—--————


அக்னி, மூன்று நாட்கள் தொடர் விடுப்பெடுத்து அஷ்வத்தை பார்த்துக்கொள்ள, அர்ஜுனுக்கு பணிச்சுமை அதிகமாக இருந்தாலும்,
அஷ்வத்துடன் நேரம் செலவிடுவதை மட்டும் அவன் கைவிடவில்லை.
மருத்துவமனையிலிருந்து வந்தது முதல் அஷ்வத் முன்பு போல் துருதுருவென்று அதிகம் பேசி விளையாட வில்லை என்றாலும் இரவில் அர்ஜுனுடன் உறங்குவதை மட்டும் வழக்கமாக்கி கொண்டிருந்தான்.


" அஷ்வத்.... வா அம்மா கூட தூங்கலாம் ..." என்றாள் அக்னி வாஞ்சையோடு.


" நோ மாம், நான் பப்பா கூட தூங்கறேன் ..." என்றவனின் பேச்சில் புதிதாய் முளைத்திருந்த 'பப்பா' என்ற வார்த்தையை முதன்முறையாக உணர்ந்தவளின் முகம் அதிர்ந்து கலங்கிப் போக, அஷ்வத்தின் அருகில் அவனை அணைத்தபடி படுத்துக்கொண்டு , அவளது முகபாவத்தை அணுவணுவாக அர்ஜுன் உள்வாங்கிக் கொண்டிருக்க ,


" ப்ளீஸ் அஷ்வத்... வாம்மா ..." என்றழைத்தவளின் குரலில் கோபம், துக்கம், ஆற்றாமை போன்ற உணர்வுகள் போட்டி போட்டுக்கொண்டு தலைதூக்க,


" நோ மாம் ... தும் யஹான் சோ ஜாவ்...( நீ இங்க தூங்கு ...) " என்றவனின் எதிர்பாராத அழைப்பில்,ஒரு கணம் தடுமாறியவள்


" நோ அஷ்வத் ... நீ அங்கயே தூங்கு ... குட் நைட் ..." என்றபடி விருட்டென்று அர்ஜுனின் அறையை விட்டு வெளியேறினாள்.


மறுநாள் மருத்துவமனையிலிருந்து அர்ஜுனுக்கு அழைப்பு வர, அஷ்வத்தை அழைத்துச் சென்றவன் பரிசோதனை முடிவுக்காக காத்திருக்க, அஷ்வத்தை பரிசோதித்துவிட்டு வந்த மருத்துவர் அர்ஜுனிடம்,


" ஹி ஈஸ் டூயிங் குட் நவ்.... மாடரேட் சைஸ்ல ஹோல் இருக்கு ... மத்தபடி ரிப்போர்ட்ஸ் ஆர் குட்... நாலு மாசத்துக்குள்ள குழந்தைக்கு சர்ஜரி பண்ணி ஆகணும்... நடக்கப்போற சர்ஜரிக்கு குழந்தையை தயார் பண்ணனும் ... அதனால இந்த டயட் அண்ட் மெடிசின்ஸை இனிமே ஃபாலோ பண்ணுங்க ..." என்றதும் நன்றி தெரிவித்துவிட்டு மருத்துவர் அறையிலிருந்து வெளியேறியவனிடம்


" சார், உங்க கொரோனா டெஸ்ட் ரிப்போர்ட் ரெடி ... கொஞ்சம் என்னோட லேப்க்கு வர முடியுமா ..." என்று அன்று கொரோனா டெஸ்ட் எடுத்த ஜூனியர் டாக்டர் அழைக்க ,
பின் தொடர்ந்தவனிடம்


" உங்களுக்கும் உங்க வைஃப்க்கும் கொரோனா டெஸ்ட் நெகட்டிவ் சார்...", என்றவர் தயங்கியபடி


" நீங்க எஸ்.பி ... இது உங்களோட பர்சனல் விஷயம்.... கேட்கலாமான்னு தெரியல... இருந்தாலும் கேக்கிறேன் ...
அன்னைக்கு நீங்க டாக்டர்கிட்ட சொன்னது உண்மையா சார் ... " என்று தயக்கத்தோடு கேள்வி எழுப்பிய ஜூனியர் மருத்துவரிடம்


" எதைப்பத்தி..."


சற்று தொலைவில் விளையாடிக்கொண்டிருந்த அஷ்வத்தை காட்டி,


" அந்த குழந்தைக்கு நீங்க பயாலஜிக்கல் ஃபாதர் இல்லன்னு சொன்னீங்களே... அதை பத்தி ..." என்றதும் துணுக்குற்ற அர்ஜுன்


" எஸ்.... ஹி இஸ் மை ஸ்டெப் சன் ..." என்றான் இயல்பாக.


" ஆனா அவன் உங்களை மாதிரியே இருக்கானே சார் ...." என்றதும் பதில் சொல்ல தெரியாமல் திணறியவன் ,


" மே பி ஃபேஷியல் ஃபீச்சர்ஸ்ல (facial features)சில இடத்துல சாயல் ஒத்துப் போகலாம் ..."


" சரி, சாயல் ஒத்துப் போகலாம் , டிஎன்ஏ கூடவா சார் ஒத்துப்போகும் .." என்றதை கேட்டதும் அதிர்ச்சி அடைந்தவனாய்,


" என்ன சொல்றீங்க ..." என்றான் ஏறக்குறைய அந்த ஜூனியர் டாக்டரை நெருங்கி.


" சார், எனக்கு ஜெனிடிக் இன்ஜினியரிங்ல இன்ட்ரஸ்ட் உண்டு...
நெக்ஸ்ட் இயர் அப்ராட் போய் படிக்கலாம்னு இருக்கேன் ... நீங்க அன்னைக்கு டாக்டர் கிட்ட பேசினதை கேட்டதும், எனக்குள்ள ஒரு டவுட் வந்துச்சு.. அதை எப்படி கிளியர் பண்ணிகிறதுன்னு யோசிச்சுகிட்டு இருக்கும் போதுதான் நீங்க கொரோனா டெஸ்ட் எடுக்க வந்தீங்க... கொரோனாக்கு சலைவா டெஸ்ட் எடுத்துட்டு அது கூடவே டிஎன்ஏ
டெஸ்ட்காக ச்சீக் ஸ்வேப்(cheek swab) டெஸ்ட்டும் எடுத்தேன் ... உங்களோட பர்மிஷன் இல்லாம எடுத்தது க்ரைம்...ஐ அம் சாரி சார்...
ஒரு வேளை ரிசல்ட் வேற வந்திருந்தா நிச்சயமா உங்க கிட்ட சொல்லி இருக்க மாட்டேன் சார்...
ஆனா ரிசல்ட்ல மோர் தேன் 70% டிஎன்ஏ மேட்ச் ஆகி வந்திருக்கு .... ஸ்ட்ராங்க் டிஎன்ஏ மேட்ச் ஸ்கோர்ன்னு சொல்லுவோம் .....
அந்தக் குழந்தையோட அப்பாவும் உங்களுக்கு உறவு இல்லன்னு சொல்றீங்க ... ஹவ் ஈஸ் இட் பாசிபுள் சார்... " என்றதை கேட்டதும்


ஏற்கனவே அர்ஜுனுக்கு இருந்த குழப்பம் இப்போது அதிகமானதே தவிர குறையும் வழிமுறையோ அல்லது தெளிவோ பிறக்கவில்லை.

" கேன் ஐ ஹாவ் த ரிப்போர்ட் ப்ளீஸ் ..."


" நோ ப்ராப்ளம் சார்...ஹவ் இட் ..."


" ஹொவ் மச், ஷுட் ஐ பே ஃபார் திஸ் ..."


" எனக்கு பணம் எல்லாம் வேண்டாம் சார் ...
நான் கேட்ட கேள்விக்கு பதில் தெரிஞ்சா சொல்லுங்க என்னோட ரிசர்ச்க்கு உதவியா இருக்கும் ..." என்றவனை ஒரு சங்கடமான முக பாவத்தோடு கடந்தான் அர்ஜுன்.


*****************************************


திருமதி. மாத்தூர் முன்பு விஷ்ணு மற்றும் ரங்கநாதன் அமர்ந்திருக்க,


" ஒன் மினிட் .. என்னோட ஹாஸ்பிடல் சர்வர்ல கனெக்ட் பண்ணி , ஸ்ரீயோட ரிப்போர்ட்ஸ் எடுத்துக்கிறேன் ... எவ்ளோ வருஷமானாலும் சில ரேர்(Rare) கேஸஸ்ஸோட மெடிக்கல் ரிப்போர்ட்ஸ் எங்க சர்வர்ல இருக்கும்... கேஸ் ஸ்டடீஸ்காக...(Case study)..." என்றவர் தன் மடிக்கணினியில் ஸ்ரீயின் மருத்துவ அறிக்கையை திறந்து வைத்துக்கொண்டு,


" வெல்... நீங்க ஸ்ரீயை கல்யாணம் பண்ணிக்க போறவர் ரைட் ... ரங்கநாதன் ஃபேமிலி துபாய்ல இருந்த வரைக்கும் ஸ்ரீக்கு நான்தான் டாக்டர் ..." என்ற பீடிக்கையோடு அவர் தொடங்கும் போதே ,


" நீங்க ரெண்டு பேரும் பேசிக்கிட்டு இருங்க... ஐ ஹேவ் எ கால் ..." என பாதியிலேயே ரங்கநாதன் கழன்று கொள்ள,


" ரங்கநாதன் உங்ககிட்ட என்ன சொல்லி இருக்காருன்னு எனக்கு தெரியாது,
முதல்ல நான் ஸ்ரீயோட கேஸ் ஹிஸ்டரியை எக்ஸ்பிளைன் பண்ணிடுறேன்... உங்களுக்கு டவுட்டு இருந்தா அப்புறம் கேளுங்க..." என்றவர்


" ஸ்ரீயோட பிரச்சினை பிறவி ஊனம்னு சொல்லலாம் ... யூட்ரஸ் (கர்ப்பப்பை) சரியா வளர்ச்சியில்லாம ஒரே ஒரு ஃபெலோப்பியன் டியூப்போட ( fallopian tube- கருமுட்டை குழாய்) பிறந்திருக்காங்க... இதுக்கு
யூனிகானுவேட் யூட்ரஸ்ன்னு (Unicornuate uterus)சொல்லுவோம்....


இந்த மாதிரியான யூட்ரஸ் உள்ளவங்க, கன்சீவ் ஆகறதே 50% சான்ஸ் தான்...


அப்படியே ஒரு வேளை கன்சீவ் ஆன , அது 6 மாசம் கூட தங்காது ... ஏன்னா யூட்ரஸ் அளவு சின்னது... குழந்தை வளர ஆரம்பிக்கும் போது அது விரிவடைய முடியாம போய் தானா ரப்ச்சர்( Rupture)ஆயிடும்... அதனால் நிறைய மிஸ்கேரேஜஸ்(Miscarriage - கருக்கலைப்பு ) ஏற்படும் அது அவங்க உடம்பை மட்டுமல்ல மனசையும் பாதிக்கும் ... சில நேரங்கள்ல உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தலாம் ...


சில கேஸ்ல , இந்த மாதிரி பிரச்சனை உள்ளவங்க கன்சீவ் ஆனா, ஆறு மாசத்துல ப்ரீ மெச்சூர் டெலிவரி (Premature delivery) ஆயிடும் ...
இந்த நிலைமைல பிறக்கிற அந்தக் குழந்தையைக் காப்பாத்தறது கஷ்டம்...
ஒரு வேளை என்.ஐ.சி.யுல வச்சு காப்பாத்தினாலும், அந்தக் குழந்தை ஆரோக்கியமா இருக்காது.... செரிபரல் பேலசி, ஆட்டிஸம், சீய்சர்ஸ்ன்னு ஏகப்பட்ட பிரச்சினையோட ஒரு ஸ்பெஷல் சைல்ட்டா தான் இருக்கும்...


பொதுவா இப்ப நான் சொன்ன விஷயம் எல்லாம், கல்யாணம் ஆனா தான் தெரியவரும் ...


ஆனா ஸ்ரீ கேஸ்ல, அவங்க பியூபர்ட்டி(Puberty-பருவமடைதல்) ஆனதிலிருந்தே , அவங்க மந்த்லி பீரியட்ஸ் அப்போ நிறைய பெய்ன்
வந்திருக்கு ... ஒரு சமயம் பெயின் கில்லர்க்கு கண்ட்ரோல் ஆகாம வலி ரொம்ப அதிகமாகி அவங்க மயக்கமாகி விழுந்திருக்காங்க...


அப்பதான் என் கிட்ட கூட்டிட்டு வந்தாங்க .... நான் அவங்களுக்கு எம்.ஆர்.ஐ பண்ணி பார்க்கும் போது தான் , அவங்களோட பிரச்சனையே எனக்கு புரிஞ்சது .... இந்த யூனிகானுவேட் யூட்ரஸ்க்குள்ளேயே ஹேமி-யூட்ரஸ்(Hemi-uterus) , உங்களுக்கு புரியிற மாதிரி சொல்லனும்னா ஒரு வகையான திசு வளர்ச்சின்னு சொல்லலாம் ... அது தான் அவங்களுக்கு மந்திலி பீரியட்ஸின் போது தீராத வலியை கொடுத்திருக்கு...
அதை நான் லேப்ராஸ்கோபிக் மூலமா ரிமூவ் பண்ணிட்டேன் ... இப்ப மந்த்லி பீரியட்ஸின் போது முன்ன மாதிரி இல்லாம ஒரு 20% பெயின் தான் இருக்கும்....


இப்படித்தான் ஸ்ரீ யோட பிராப்ளம் எங்களுக்கு தெரிஞ்சது ...


ஸ்ரீக்கு பிரச்சனை இருக்கறதால சப்போஸ் கல்யாணத்துக்கப்புறம் நீங்க சரோகஸிக்கு( surrogacy- வாடகைத் தாய்) போகணும்னு நினைச்சா, உங்க ஸ்பேமை (உயிரணு) செலுத்தி தாராளமா ஒரு சரோ கேட் மதர் மூலமா நீங்க குழந்தை பெத்துக்கலாம்...
ஆனா ஸ்ரீ யோட ஓவம்ஸ் ( கருமுட்டை)
புவர் குவாலிட்டியாயிருக்கு... சோ அவங்களோடத யூஸ் பண்ணி சரோகஸி செய்ய முடியாது ....


இன் ஷாட், ஸ்ரீயால எந்த வகையிலும் 80% தாயாக முடியாது... அது என்ன 80%ன்னு கேட்கறீங்களா....
20% அவங்களுக்கு குழந்தை பிறக்க சான்ஸ் இருக்கு...
ஆனா அதுக்கு அவங்க மனமும் உடலும் சம்மதிக்கணும்.... வெரி ஹை ரிஸ்க் பிரேக்ணன்ஸி... இதே பிராப்ளம் உள்ள என்னோட ரெண்டு மூணு ஃபேஷன்ட்டுக்கு குழந்தை பிறந்து, குழந்தையும் நல்லா இருக்கு .... ஆனா அவங்க எல்லாம் ரொம்ப ஸ்ட்ராங் அண்ட் மெச்சூர்டு.... ரெண்டு மூணு மிஸ்கேரேஜை தைரியமா சந்திச்சவங்க... ஆனா எனக்கு தெரிஞ்ச வரையில்,
ஸ்ரீ இஸ் நாட் மெண்டலி மெச்சூர்டு...
ஷீ இஸ் ஸ்டில் பேபி.... நீங்க அவங்கள மெண்டலி ஸ்டிராங் பண்ணிட்டீங்கன்னா , அப்புறம் சரோகஸில குழந்தை பெத்துக்கலாம்...


ஸ்ரீ யோட பிரச்சனை உங்களுக்கு கல்யாணத்துக்கு முன்னாடியே தெரிஞ்சிருச்சு இனிமே அவங்களை கல்யாணம் பண்ணலாமா வேண்டாமான்னு நீங்கதான் முடிவு எடுக்கனும் ..."


" நோ டாக்டர் ... ஐ வாண்ட் டு மேரி ஹர் ... ஐ லவ் ஹர் மோர், ஐ கேனாட் லிவ் வித்தவுட் ஹர்..." என்றான் அதுவரை வாய் திறவாமல் கேட்டுக்கொண்டிருந்த விஷ்ணு சற்று கமரிய குரலில்.


"அப்படின்னா அவங்க கன்சீவ் ஆக கூடாது , அப்படி ஆனா நான் சொன்ன எல்லா பிரச்சனையையும் அவங்க பேஸ் பண்ண வேண்டிவரும் ...

அதே சமயத்துல உங்க கல்யாண வாழ்க்கையில நீங்க ரெண்டு பேரும் இயல்பான தம்பதிகளா ரொம்ப சந்தோஷமா இருக்க முடியும் , அதுக்கு நீங்க ப்ரொடக்ஷன் யூஸ் பண்ணலாம், இல்ல அவங்களை பர்த் கன்ட்ரோல் பில்ஸ யூஸ்(கருத்தடை மாத்திரை) பண்ண சொல்லலாம் ...." என்றவரின் பேச்சில் இடை புகுந்து ,


" நோ மேம்... அதுல சைட் எஃபெக்ட் ஜாஸ்தின்னு கேள்விபட்டிருக்கேன் எனக்கு என்னோட சந்தோஷத்தை விட அவளோட ஹெல்த் ரொம்ப முக்கியம் ... அதோட அவளுக்கு இந்த விஷயம் தெரிய கூடாதுன்னு நான் விரும்புறேன்..."


" வெரி குட் மிஸ்டர் விஷ்ணு ..."


" அப்படின்னா, நீங்க அவங்களோட சேஃப் பீரியட்டுல(Safe period) மட்டும் சேர்ந்தீங்கன்னா எந்த பிரச்சினையும் வராது ... அது எப்படி கால்குலேட் பண்ணனும்னு உங்க கல்யாணத்துக்கு முன்னாடி நான் சொல்லி தரேன் ...


எதுக்கும் நீங்க கல்யாணத்துக்கு முன்னாடியே எல்லா பிரச்சினையும் சொல்லிடுறது நல்லது
ஏன்னா இன்னைக்கு அவங்களுக்கு நாலெட்ஜ் இல்லாம இருக்கலாம் ஆனா கல்யாணம் ஆனதுக்கப்புறம் பல கேள்விகள் வரும் உங்களால பதில் சொல்ல முடியாது ...."


" நோ டாக்டர் ... அவளுக்கு இந்த விஷயம் தெரிய வந்தா நிச்சயமா அவளால தாங்கிக்கவே முடியாது ... கல்யாணத்தையே நிறுத்திடுவா... எனக்கு குழந்தையே வேண்டாம்... என் ஸ்ரீ என்னோடு இருந்தாலே போதும் ..." என்றான் அன்று சப்-வேயில் அங்கிருந்த குழந்தைகளைப் பார்த்து அவன் கண்மணி பேசிய வார்த்தைகளை எண்ணி துடித்தபடி.


" அவங்க கிட்ட கொஞ்சம் கொஞ்சமா அவங்க பிரச்சினைகளை எடுத்து சொல்ல பாருங்க ... அதை ஏத்துக்கிற மனப்பக்குவத்தை உண்டாக்குங்க... ... அவங்க பிஃசிக்கல் ஹெல்த்துலயும் கவனம் செலுத்துங்க.... அப்பதான் தாழ்வு மனப்பான்மை இல்லாம சரோகஸி மூலமா குழந்தை பெத்துக்க ஒத்துப் பாங்க...
இதை எல்லாத்தை விட கடவுளை நம்புங்க.... உங்களுக்கு நல்லதே நடக்கும் ... ஆல் த பெஸ்ட் .." என்று வாழ்த்தி அனுப்பினார் மிஸஸ் மாத்தூர்.


ஸ்ரீயின் மருத்துவ அறிக்கைகளை மின்னஞ்சல் மூலம் பெற்றுக் கொண்டு, ஏதோ யோசனையிலேயே அறையை விட்டு வெளியே வந்தவனிடம்,


" என்னால டாக்டர் போல விலாவரியா, அவளோட பிரச்சனையை சொல்ல தெரியாது, அதனால தான் உங்களுக்கு இந்த ஏற்பாட்டை செஞ்சேன்... இப்ப அவளோட பிரச்சனை உங்களுக்கு நன்னா தெரிஞ்சிருக்கும்.... நடந்த எல்லாத்தையும் மறந்துட்டு, நல்ல பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணிண்டு சந்தோஷமா இருங்கோ..."


" ஐயோ மாமா, நான் கல்யாணத்துக்கு லீவு கிடைக்குமானு யோசிச்சிட்டு இருக்கேன்... நீங்க வேற எதையோ பேசிகிட்டு இருக்கீங்க...."


" ஒரு அப்பாவா அவளோட பிரச்சனையை என்னால சமாளிக்க முடியும் ... ஆனா அவளோட ஆத்துக்காரரா உங்களால வாழ்க்கை முழுக்க சமாளிக்கிறது ரொம்ப கஷ்டம் ..."


" ஏன் ஆத்துக்காரரா தான் இருக்கணுமா.. அப்பாவா இருந்து பார்த்துக்க கூடாதா ... நான் அவளை நல்லா பாத்துப்பேன் கவலைப்படாதீங்க..."


மனதை அடக்குவதென்பது பெரிய பெரிய ஞானிகளாலேயே முடியாத ஒன்று.
அதுவும் மனம் கவர்ந்த மனையாளை அருகில் வைத்துக்கொண்டு கால நேரம் பார்த்து கூடுவதெல்லாம் முடியாத காரியம் என்பதை காலம் உணர்த்தும் போது, கஷ்டங்கள் களைகட்ட தொடங்கியிருக்கும் என தெரியாமல்
வாக்குறுதியை வாரி வழங்கினான்.


" வாழ்க்கை உங்க ரெண்டு பேரோட மட்டும் முடிஞ்சிடறது இல்ல... உங்களுக்கு குழந்தை வேணும்.. அப்பதான் உங்க வம்சம் விருத்தியாகும்...." என்றார் தன் தங்கையின் மைந்தன் தன் மகளை கட்டிய ஒரே காரணத்திற்காக வம்சம் இன்றி இருந்துவிடக் கூடாதே என்ற பரிதவிப்போடு.


" தயவு செஞ்சு குழந்தையை பத்தி மட்டும் பேசாதீங்க ... இந்தப் பிரச்சினையை நான் பார்த்துக்கிறேன் ...நீங்க எனக்கு ஒரே ஒரு உதவி பண்ணனும் ... நாம பேசினது யாருக்கும் தெரிய வேணாம் எங்க அப்பா அம்மாவையும் சேர்த்து தான்..."


" வேணாம் ....தப்பா ஆயிடும்... நான் ஆதி காலத்திலயே உங்க கல்யாணத்தை எதிர்க்காம இருந்திருந்தா இப்ப பிரச்சினையே இல்ல... ஆனா இப்ப என் பொண்ணுக்கு குறை இருக்கிறதால தான், வேற வழியில்லாம உங்களுக்கு கல்யாணம் பண்ணிக் கொடுக்கறேன்னு நாளைக்கு வேதா சொல்லுவா ... அவளை சொல்லியும் தப்பில்ல...
அதுவும் ஒரு விதத்துல உண்மை தானே ... நான் எங்க அப்பா உட்பட உங்க எல்லாரையும் ஏமாத்தணும்னு தானே நினைச்சேன்.. அதான் என் மகளுக்கு இந்த நிலைமையை பெருமாள் கொடுத்துட்டேர் ...." என்றார் மீண்டும் குற்ற உணர்வோடு.


" நீங்க எதைப் பத்தியும் கவலைப்படாதீங்க... இந்த கல்யாணம் நிச்சயம் நடக்கும் .... எந்த சூழ்நிலையிலையும் ஸ்ரீயை கை விடமாட்டேன்... தயவு செஞ்சு ஸ்ரீயோட பிரச்சினையை யார்கிட்டயும் சொல்லாதீங்க ... நீங்க ஆக வேண்டியதை மட்டும் பாருங்க..."


முதன் முறையாக குரல் தழுதழுத்தபடி முகத்தில் ஒருவித தெளிவோடு,


" மாப்பிள்ள நெஜமாவா..." என்றார் விஷ்ணுவின் கரம்பற்றி.


" ஆமா மாமா, ஏற்கனவே எங்க நிச்சயதார்த்தம் முடிஞ்சிடுச்சு இருந்தாலும், நீங்க ஒரு கெட்டுகெதர்காக அப்பா, அம்மாவுக்கு ஃபோன் பண்ணி உங்க வீட்டுக்கு இன்வைட் பண்ணுங்க மத்ததெல்லாம் தானா நடக்கும் ..." என்றவனிடம் தயங்கியபடி


" ஸ்ரீ உங்க சர்வைலன்ஸ்ல இருந்தான்னு சொன்னீங்களே அது எப்படின்னு தெரிஞ்சுக்கலாமா ..." என்றவரிடம் தன் பதவி, மற்றும் தன் நண்பனும் ரா ஏஜன்ட்டுமான இஸ்மாயில் பெயரை குறிப்பிடாமல் அவர் செய்த உதவியை மட்டும் விவரித்தவன் ரங்கநாதனிடம் இனிதே விடை பெற்ற போது மனதின் ஒரு பாதியில் நிம்மதி சூழ்ந்தாலும், மறுபாதியில் தன் தாய் தந்தையிடமிருந்து முதன் முறையாக மிகப்பெரிய விஷயத்தை மறைக்க போகின்றோமே என்ற நெருடல் வியாபித்து தான் இருந்தது.


மறுநாள் முதன்முறையாக ஸ்ரீ விஷ்ணுவை தொடர்புகொண்டு,


" விஷூ, எங்கப்பா கல்யாணத்துக்கு ஒத்துண்டுட்டேர்....உங்கள பாக்கணும் போல இருக்கு .... மெரைன் டிரைவ்ல மீட் பண்ணலாம் வரீங்களா ..." என்றவளின் அழைப்பு அவன் எதிர்பார்த்ததுதான்.


கடவுளே இதே சந்தோஷத்தோட இவ எப்பவும் இருக்கணும் ... என்ற பிரார்த்தனையை மனதில் வைத்தபடி
" ஷ்யூர் ...." என்றான் நேரம் காலத்தைக் கேட்டு தெரிந்து கொண்டு.


வந்தவள் அவனிடம் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு,
"அப்பா உங்க வேலையை பத்தி எல்லாம் சொன்னேர்... அப்பதான் ஒரு விஷயத்தை நான் கண்டுபிடிச்சேன் ... நான் பேசினதையும் வயர் டைப்பிங் பண்ணி தெரிஞ்சிண்டு தானே , என்னை மீட் பண்றதுக்காக அத்தையோட கோவிலுக்கு வந்தீங்கோ..
அப்போ நாங்க பேசினது மொத்தத்தையும் நீங்க ஒட்டு கேட்டிருக்கேள்..." என்றாள் குற்றம்சாட்டும் தொனியில்.


" ஆமா... நீயும் உன் கோஷ்டியும் பெரிய இஸ்ரேல் மொசாத் உளவாளி, பாகிஸ்தான் ஐஎஸ்ஐஸ் தீவிரவாதிகளோட பேசறீங்க , நாங்க அதை ஓட்டு கேக்கறோம்...


ஏண்டி எவ்ளோ நேரம் தான் ஒரே இத்துப்போன விஷயத்தை பேசுவீங்க.... என் வாழ்க்கைலயே நான் ஓட்டு கேட்ட ரொம்ம்ம்ம்ப கேவலமான விஷயம்னா அது நீங்க பேசுனதா தான் இருக்கும் ....
இந்த லட்சணத்துல கான்ஃபரன்ஸ் கால் வேற .....


இப்ப நான் போட்டிருக்கிற சட்டையை கூட ஒரு முறை பார்த்தா தான் என்ன கலர் போட்டிருக்கேன்னே எனக்கு தெரியுது... ஆனா உன் ஃப்ரெண்ட்ஸ்ல ஒரு லூசு மூணு நாளைக்கு முன்னாடி நீ போட்டிருந்த சுடிதாரோட உன் லிப்ஸ்டிக் மேட்ச் ஆகலன்னு சொல்றா...நீயும்,
அது மேப்பிலின் இல்ல அதனால மேட்ச் ஆகல லேக்மியா இருந்தா மேட்சாயிருக்கும்னு சொல்ற ... " என்றான் அவர்களைப்போலவே உரையாடிக் காட்டி.


" அப்போ.... ஒன்னு விடாம எல்லாத்தையும் கேட்டீங்களா ..." என்றாள் வியப்பாய் .


" ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோயில் ஆண்டிங்கிறா மாதிரி, நீங்க எல்லாரும் டார் டின் சைஸ்ல இருந்துகிட்டு டெய்லர் சரியா துணி தைக்கலன்னு அவனை அரைமணி நேரமா கழுவி ஊத்தினதையும் கேட்டேன் ....


ஏண்டி, நீங்க எல்லாம் பாக்குறதுக்கு காட்டு பன்னி மாதிரி இருந்துகிட்டு மனசுல கடல்கன்னின்னு நினைப்பு....
பொண்ணுங்க மாறியாடி இருக்கீங்க, பொறி உருண்டை மாறி இருக்கீங்க... அவன் இருக்கிற துணியை வச்சு கஷ்டப்பட்டு அட்ஜஸ்ட் பண்ணி உங்களுக்கெல்லாம் துணி தைக்கிறதே ரொம்ப பெரிய விஷயம் ... அதுக்கே அவனுக்கு ஆஸ்கர் அவார்டு கொடுக்கணும்... அதை விட்டுட்டு அவனை திட்டோ திட்டுன்னு திட்டுறது எந்த விதத்துல நியாயம் ... நானும் எவ்ளோ நேரம் தான் பொறுமையா அதையெல்லாம் ஒட்டு கேட்கிறது... ரொம்ப போர் அடிச்சிருச்சு கடைசில ரெக்கார்டு போட்டுட்டு தூங்கிட்டேன்... அப்புறம் ஓட விட்டு கேட்டவுடனே தான் நீ கோவிலுக்கு வர்றதே தெரிஞ்சது .... பசங்க நாங்க எல்லாம் போன் எடுத்தா எங்கடா மீட் பண்ணலாம் எருமை ... அவ்ளோ தான்... பாயிண்ட்டா பேசிட்டு வச்சுடுவோம் .... நேர்ல பார்த்தாலும் இதையே தான்டி பேசுறீங்க....போன்ல இதையே தான் பேசுவீங்களா...."
என்றவனின் பேச்சைக் கேட்டதும் ஸ்ரீ கண் கலங்க


" ஏய்...... உங்களை எல்லாம் காட்டு பன்னின்னு சொன்னேனே அதுக்காக கதறி அழறியா..."


" ம்ஹூம்.... இது ஆனந்தக் கண்ணீர் ...."


" எதே ஆனந்தக் கண்ணீரா... ஆனந்தக் கண்ணீர் வர்ற அளவுக்கு நான் அப்படி என்ன சொன்னேன் ..."


" இல்ல... என்னை பாக்கணுங்கிறதுக்காக எவ்ளோ மூளை செலவழிச்சு பிளான்
போட்டிருக்கீங்கோ ... அதை நினைச்சேன் ஆனந்தக் கண்ணீர் வந்துடுத்து... " என்றவள் அவன் கண்ணுக்கு காதலியாக புலப்படாமல் கள்ளம் கபடமற்ற குழந்தையாய் தெரிய,


" நீ பரவாயில்ல...என் பாட்டி, அம்மா மாதிரி இல்லாம, மட்டி தனத்துல மாஸ்டர் டிகிரி வாங்கி இருக்க..."


" அது என்ன உங்க பாட்டி ... என் பாட்டி.."


" இருந்ததே ஒரே பாட்டி ... உனக்கு முன்னாடி நான் பொறந்ததால எனக்கு தான் அவங்க முதல்ல பாட்டி... " என்றதும் ஸ்ரீ முறைத்துப் பார்க்க,


" கவலைப்படாத, மரகதம் பாட்டியோட மினி க்ளோனிங் தான் நீ .."
என கண்ணில் பாசம் வழிய அவள் கன்னத்தை பற்றி கிள்ளி கொஞ்சியவனிடம்


" இப்ப ஆத்துக்கு வரலாமே ..."


"இல்ல இன்னொரு நாள் வரேன்.. நீ இப்ப கேப்புல கிளம்பு..." என்றவன் அதற்கான ஏற்பாட்டை செய்து தன் மனையாளை அவள் இல்லத்திற்கு அனுப்பி வைத்தான்.


***************************************


" அர்ஜுன், உன்னை பார்த்து பேசணும் எங்க இருக்க ..." - விஷ்ணு.


" என் ஆபீஸ்ல டா ...."


" நான் இப்ப உன்னை மீட் பண்ண முடியுமா அர்ஜுன் , ஒரு முக்கியமான விஷயம் பேசியே ஆகணும் ..."


" நீ டிராபிக்ல என் ஆஃபீஸ்க்கு வந்து சேர ஒன் ஹவர் ஆயிடும்... அதுக்குள்ளே என் மீட்டிங்கும் முடிஞ்சிடும்.....சரி வா ... ஐ அம் வெயிட்டிங் ..." என்றான் அர்ஜுன் .


அர்ஜுன் கூறியது போல் அவனது கலந்தாய்வு முடிவதற்கும், விஷ்ணு அர்ஜுனின் அறையை அடைவதற்கும் சரியாக இருந்தது.


" ஜெய்ஹிந்த் ..." என்று இருவரும் வழக்கம் போல் ஒருவரை ஒருவர் பார்த்து கைகுலுக்கிக் கொண்டதும்,


" சொல்லு விஷ்ணு ... எப்படி இருக்க ..."


" நல்லா இருக்கேன் சீனியர் ... எனக்கு மேரேஜ் பிக்ஸ் ஆயிருக்கு.." என்றான் லேசான வெட்கத்துடன்.


" வாவ் கங்கிராஜுலேசன்ஸ்... பொண்ணு யாரு அந்த ஹோண்டா ஆக்டிவா வா ..." என்றதை கேட்டதும் விஷ்ணு குலுங்கி சிரித்தபடி,


" ஆமா அவளேதான் ..."


" அதுக்குள்ள எப்படி டா ... அன்னைக்கு ஏகப்பட்ட முன்கதை சுருக்கம்னு சொன்ன ..." என்ற அர்ஜுனிடம்
ஓரளவிற்கு மேல் எழுந்தவாறு ஸ்ரீக்கும் தனக்குமான குடும்ப உறவை விஷ்ணு உரைக்க,


" ஓ, அப்ப பப்பி லவ்ன்னு சொல்லு ..."
என்றவனிடம் வெட்கத்தோடு ஆமோதித்தவன்


" அண்ணி, அஷ்வத் எப்படி இருக்காங்க..."


" ரொம்ப நல்லா இருக்காங்க..."


" அர்ஜுன், அந்த கேப் டிரைவருக்கு ஷேடோ போட்டும் வேஸ்ட் , ஒரு நியூசும் உருப்படியா இதுவரைக்கும் கிடைக்கல ..." என்றான் அவன் பேச வந்த விஷயத்தை ஆரம்பித்து.


" ஒரு வேளை அது ஹோயக்ஸா (Hoax-புரளி) கூட இருக்கலாம் ...."


" இல்ல அர்ஜுன், நமக்கு முதன் முதல்ல இந்த நியூஸை கொடுத்தது ஆண்டனி ... நேத்தும் ஆண்டனி மூலமா நியூஸ் கிடைச்சது....


ஏதோ, மிஷன்-ஐ ( Mission -l) பிளான் பண்ணி இருக்காங்களாம் ....
'மிஷன்-ஐ' ன்னா என்னன்னு தெரியல.... அது மட்டும் இல்ல மும்பையில பாம் ப்ளாஸ்ட்டும் நடக்க போறதா நியூஸ் கிடைச்சிருக்காம்.... ஒரு வேளை
இது ரெண்டும் நடக்கப்போகுதா இல்ல ஏதாவது ஒன்னு நடக்கப் போகுதான்னு
அவருக்கே கிளியர் பிக்சர் இல்ல ... ஆனா வர்ற ஆகஸ்ட் மாசத்துக்குள்ள நடக்கப் போறதா தகவல் கிடைச்சிருக்காம்..."


" யாரு ஆண்டனி..." என்றான் அர்ஜுன் யோசனையாக.


" ஓ.... சாரி... நம்ம ஆண்டனி தான் அசாருதீனா பாகிஸ்தான்ல 13 வருஷமா இருக்காரு... இதுவரைக்கும் அவர் கொடுத்த நியூஸ் 100% உண்மையா இருந்திருக்கு.... அந்த கேப் டிரைவரும் ஏறக்குறைய இதே விஷயத்தை தான் அன்னைக்கு சொன்னான் ....
அதான் என்னால இந்த விஷயத்தை சாதாரணமா எடுத்துக்க முடியல ..." என்றான் விஷ்ணு குழப்பத்துடன்.


" ஏற்கனவே மும்பை சிட்டியை அலர்ட் பண்ணியிருக்கோம்.... இப்ப முக்கியமா மிஷன்-ஐ' ன்னா என்னன்னு கண்டுபிடிக்கணும்...


ஒரு வேளை 'ஐ' ரெப்பிரசன்ஸ் , யாரோட பேரா இல்ல பதவியா ....
ஒண்ணுமே புரியல ... ஆனா, இப்போதைக்கு இந்த லெட்டர் ' ஐ' தான் நமக்கு கிடைச்சிருக்கிற ஒரே துருப்பு சீட்டு .... சோ, அடுத்த நியூஸ் ஆண்டனி கிட்ட இருந்து வர்றதுக்குள்ள, நாம நம்ம சைடுல, இதைக் கண்டுபிடிக்க ட்ரை பண்ணனும் ..." என்றவன் பேசிக்கொண்டிருக்கும் போதே ,


" ஐயா, உங்களை பார்க்க ஒரு பொண்ணு வந்திருக்கு ..." என்றார் உதவியாளர் அர்ஜுனிடம்.


" யாரு ...." - அர்ஜுன்.


" பேரு ஜானவின்னு சொன்னாங்க ..." என்றதும், அர்ஜுனின் முகத்தில் சோடியம் வேப்பர் லைட் மின்ன,


" வர சொல்லுங்க ..." என்றதும் அடுத்த ஓரிரு நொடியில்


" ஹல்ல்ல்ல்லோ ...." என்ற குதூகல குரலோடு
இளம்பெண் ஒருத்தி, அர்ஜுனை நோக்கி மிகுந்த ஆர்வத்தோடு வர, அவளைக் கண்டதும் தன்னையறியாமல் மலர்ந்த முகத்தோடு அர்ஜுன் எழுந்து நிற்க,


வந்தவள் அவனை அணைத்துக்கொண்டு " ஹவ் ஆர் யூ... என்றாள்.


" ஃபைன்... ஹவ் ஆர் யூ ..." என்றவன்
" 2 நாளா போன் பண்றேன் நீ எடுக்கவே இல்ல .... வாட் எ சர்ப்ரைஸ்.... இன்னைக்கு நேர்லயே வந்துட்ட.." என்றான் அதே குதூகலத்தோடு.


" நேர்ல வந்து சர்ப்ரைஸ் கொடுக்கணுங்கிறதுக்காக தான் போனை எடுக்கலை ஜி... எனக்கு வேலை கிடைச்சிருக்கு ... இனிமே நான் மும்பையில தான் இருக்க போறேன் ..."


" கங்கிராஜுலேசன்ஸ் ஜானும்மா ... ஆமா எப்ப மும்பை வந்த, இப்ப எங்க தங்கியிருக்க... தம்பி எப்படி இருக்கான் ..." என்று அர்ஜுன் கேள்வி மேல் கேள்வி அடுக்க,


" நேத்து தான் மும்பை வந்தேன் ஜி... என் பிரண்டோட தங்கியிருக்கேன் ... இன்னும் ரெண்டு நாள்ல கம்பெனி குவாட்டர்ஸ் கிடைச்சிடும் ... தம்பி ஐஐடி எக்ஸாம்காக பிரிப்பேர் பண்ணிக்கிட்டு இருக்கான்...."


" வெரி குட் .." என்ற அர்ஜுன் கண்களில் பெருமிதம் பொங்கி வழிந்தது.


ஜானவி ஏறக்குறைய ஸ்ரீ வயதில் இருந்தாள்.


மெல்லிய உடல் வாகு, பளபளக்கும் கோதுமை நிறம் , இடை தாண்டும் கூந்தல், துரு துரு கண்கள், கலையான முக லட்சணம் , எளிமையாக அதே நேரத்தில்
மிகுந்த கண்ணியத்தோடு நாகரீகத்தை பறைசாற்றும் வகையில் சுடிதார் அணிந்திருந்தவள்,
அர்ஜுனுடன் ஏறக்குறைய ஆங்கிலம் மற்றும் ஹிந்தி கலந்து பேசினாலும்,
ஆங்காங்கே பெங்காலியும் எட்டிப்பார்த்தது.


அவர்களுக்கு இடையேயான உரையாடல்களை விஷ்ணு சுவாரசியமாக பார்த்துக்கொண்டிருக்க,


" உன்கிட்ட நிறைய பேசனும் ஜானு... ஆனா வீட்ல சூழ்நிலை சரியில்ல... உன்னை என்னால இப்போதைக்கு வீட்டுக்கு கூட்டிட்டு போக முடியாது... ஐ அம் சாரி ..."


" இட்ஸ் ஓகே ஜிஜாஜி( அக்காவின் கணவரை அழைக்கும் முறை) ... நானும் உங்க கிட்ட நிறைய பேசணும் ..
இன்னைக்கு நைட்டு ரெண்டு பேரும் டின்னர்க்கு போவோமா ... டீரீட் என்னோடது ..." என்றாள் கண்ணில் சந்தோசம் வழிய ,


" ஐ அம் சாரி ஜானு... எனக்கு கொஞ்சம் வெர்க்லோடு அதிகமா இருக்கும்மா ... இன்னும் ரெண்டு மூணு நாள் கழிச்சு மீட் பண்ணலாம் .. நீ எங்க தங்கியிருக்க... எந்த கம்பெனில வேலை கிடைச்சிருக்கு...எல்லா இன்ஃபர்மேஷனையும் எனக்கு மெசேஜ் பண்ணு..."


" ஓகே ஜிஜாஜி ... ஐ வில் மெஸேஜ் யூ ...இன்னைக்கு தான் ஜாயின் பண்ண போறேன் ...உங்களை பார்த்துட்டு போய் ஜாயின் பண்ணலாம்னு ...அதான் வந்தேன் ... " என்றவள் குனிந்து அர்ஜுனின் பாதம் தொட்டு ஆசி பெற்றுக்கொண்டு மிகுந்த மகிழ்ச்சியோடு விடைபெற,


" யார் இது அர்ஜுன் .." வருங்காலத்தில் உறவாக போகிறாள் என தெரியாமல் விஷ்ணு கேள்வி எழுப்ப,


" என் வைஃப் ஓட தங்கச்சி ..."


" பெங்காலில பேசுறாங்க ... அக்னி
அண்ணி பெங்காலியா ...."


" இல்ல....." என்று இடவலமாக தலையசைத்தவன்


" இது என் ஃபர்ஸ்ட் வைஃப் சுபத்ராவோட தங்கை ..."


" ஃபர்ஸ்ட் வைஃப்பா...அவங்க இப்ப எங்க இருக்காங்க ..." என ஆச்சரியமும் அதிர்ச்சியுமாய் விஷ்ணு வினவ


" ஷீ ஈஸ் நோ மோர் ...." என்றதை கேட்டதும் அதிர்ச்சி அடைந்தவன்


" என்னாச்சு ..."


" வெஸ்ட் பெங்கால்ல நடந்த கலவரத்துல இறந்துட்டா...."


தகிப்பாள்


Over to North Parganas, West Bengal
 
அத்தியாயம் 18

ஜாம்ஷெட்பூரில் நடந்த நண்பனின் திருமணத்தில் கலந்துக்கொண்டு விட்டு , மேற்கு வங்காளத்தில் உள்ள 'நார்த் 24 பர்கனா' என்னும் மாவட்டத்திற்கு , மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளராக பதவி ஏற்றுக் கொள்வதற்காக இரவு ரயிலில் முதல் வகுப்பில் பயணமானான் அர்ஜுன்.

அதிகாலை மணி மூன்றை கடந்திருக்க, முதல் வகுப்பில் இவனுடன் ஒரு வயதான பெண்மணியும், ஒரு இளம்பெண்ணும் பயணிக்க,
அவர்களுக்கு ஏதாவது தேவையா என்று தெரிந்துக்கொண்டு, ரயில் நின்ற அந்த ஸ்டேஷனில் இறங்கி வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்.

அவனுக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் இல்லாததால், புகை பிடிப்பவர்களை சற்று தள்ளி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டே மனதில் எந்த இலக்கும் இல்லாமல் அந்த உறையும் குளிரில் தன் கைகளை ஜெர்கினில் விட்டபடி உலாவிக் கொண்டிருந்தான்.

அவன் நினைத்திருந்தால் தனி விமானத்திலேயே பயணித்திருக்கலாம், ஏனோ அவனுக்கு மனதை வேறெங்கோ செலுத்த வேண்டும் என்ற எண்ணத்தால் தான் இந்த ரயில் பயணம்.

மனம் முழுவதும் அக்னியின் நினைவுகள்.
எப்பொழுதுமே அவனுக்கு அவளின் நினைவுகள் தான், ஆனால் அன்று அதிகமாக இருந்ததற்கு காரணம், அவளுக்கு திருமணம் முடிந்து அன்றோடு ஓராண்டு நிறைவு பெறுகிறது.

அவள் எப்பொழுதாவது வைக்கும் ஸ்டேட்டஸில் இருந்து, எப்பொழுதும் இருக்கும் அவளது வாட்ஸ் அப் ப்ரொபைல் பிக்சர் வரை, அவன் அடிக்கடி பார்ப்பதுண்டு.

அவன் நினைத்தால் அவளிடம் பேசலாம் , அவளும் பேசுவாள் .... ஆனால் ஏதோ ஒன்று அவளிடம் பேச முடியாமல் செய்தது, நிச்சயமாக அது அவள் மேல் கொண்டிருந்த காதல் தான்.

அவர்களுக்கு இடையே இருந்த உறவிற்கு நட்பு என்கின்ற வார்த்தையை பயன்படுத்த அவன் என்றைக்குமே எண்ணியதில்லை.

அவன் அவளை கடைசியாக சந்தித்தது, நான்காண்டுகளுக்கு முன்பு, அவனது கொடைக்கானல் இல்லத்தின் அவன் அறையின் பால்கனியில்.

அப்போது அவளுக்கு 19 வயது. கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தாள்.

அவனுக்கு அப்போது 24 வயது. படிப்பை முடித்துவிட்டு, ஐபிஎஸ் பயிற்சிக்கு தேர்வாகி இருந்தான்.

அவள் எப்பொழுதும் போல் ஒரு வார விடுமுறையில் கொடைக்கானல் வர,
ஐபிஎஸ் பயிற்சிக்கான முன்னேற்பாடுகள் காரணமாக அவளுடைய விடுமுறையின் கடைசி தினத்தன்று தான் அவனால் அவளை சந்திக்க முடிந்தது.

அவன் இரவு உணவு முடித்து விட்டு அறையின் பால்கனியில் நடந்துகொண்டிருக்க,

" அர்ஜுன்..... உங்கிட்ட ஒன்னு சொல்லணும் ..." என்றழைத்தபடி குதூகலத்தோடு வந்தவளின் 'அர்ஜுன்' என்ற அழைப்பு அவனுக்கு மிகப் புதிது.
அவளது அழைப்பில் தெரிந்த விலகலில் அவனால் முன்பு போல அவளை 'அம்மு' என்றழைக்க முடியாமல் போனாலும்
அவனுக்குமே அவளிடம் பேச நிறைய இருந்தது. அவனுடைய நீண்ட நாள் காதலை அவளிடம் சொல்ல வேண்டிய கட்டத்திற்கு வந்துவிட்டான் அல்லவா ....

ஆம் அவன் அக்னியை நன்கறிவான்.
இத்தனை நாள் அவன் ரகு கிருஷ்ணாவின் மகன் மற்றும் ,
' கிருஷ்ணா ' குடும்பத்தின் ஒரே வாரிசு.
அதுதான் அவனது முழு அடையாளமாக இருந்தது.

அந்த அடையாளத்தில் ஏனோ அவளுக்கு பிடித்தம் இல்லை.
பொதுவாக அக்னி பணத்திற்கோ, பகட்டிற்கோ மரியாதை கொடுப்பவள் அல்ல ....

ஆங்கிலத்தில் செல்ஃப் மேட் மேன் (Self made man) என்ற வார்த்தையை பயன்படுத்துவார்கள் ... அதற்கு வெற்றியோ தோல்வியோ தனக்கென ஒரு பாதையை தேர்ந்தெடுத்து யாருடைய உதவியும் இல்லாமல் தன்னைத்தானே செதுக்கிக் கொண்டு
நேர்மையோடு பயணிப்பவர் என்று பொருள்.

அது போன்ற மனிதர்களை தான் அவளுக்கு மிகவும் பிடிக்கும். அக்னி ராஜ வம்சத்தில் பிறந்திருந்தாலும், பொருளாதார நிலையில் அர்ஜுனை விட பல படிகள் கீழ்நிலையில் உள்ளவள்.

கன்டோன்மென்ட் ஏரியா எனப்படும் அனைத்து மாநிலத்தவரும் வசிக்கும் ராணுவ முகாமில் தான் அவள் பிறந்து வளர்ந்தது எல்லாம்.

அவளுக்கு தான் பிறந்த தேசமான இந்தியாவை மிகவும் பிடிக்கும், அதை விட இந்தியர் என்ற உணர்வு மிகவும் பிடிக்கும் . தெய்வ பக்தியை விட அதிக
தேச பக்தி கொண்டவளுக்கு
அர்ஜுனுடன் அடித்துப் பேசி ஓடி விளையாடும் அளவிற்கு நெருக்கம் இருந்தது .

அவள் ஒவ்வொரு விடுமுறைக்கு வரும் பொழுதும், அந்த அரண்மனையின் கவர்னர் இலட்சுமி அம்மாளின் மூலம்
புத்தாடைகள் புதிய வகை ஆபரணங்கள் என அனைத்தையும் கொடுத்து அவளுக்கு அணிவித்து அழகு பார்ப்பார் ரகு கிருஷ்ணா.

அடர் நிற பட்டுப் பாவாடை தாவணியில் ஒட்டியானம் சகிதமாக, ராக்குடி வைத்து பின்னிய நீண்ட கூந்தலோடு ஒரு பேரரசின் மகாராணியாகவே காட்சியளிப்பாள்.

அவளுடைய புத்திசாலித்தனம், போராட்ட குணம், எதனையும் அதிவிரைவில் புரிந்து கொண்டு செயலாற்றும் மதிநுட்பம், தவறு என்று அவள் பார்வைக்கு தெரிய வந்தால் தட்டிக்கேட்கும் துணிச்சலான சுபாவம் ஆகிய அனைத்துமே அவளை ஒரு ராஜபுத்திர குலக்கொடியாகவே அடையாளம் காட்டின.

கொடைக்கானல் வரும் போதெல்லாம் அர்ஜுனை விட்டு, இம்மியளவும் நகர மாட்டாள். சிறுவயதில் அர்ஜுனை 'அர்ஜு', 'அர்ஜு' என்றுதான் விளிப்பாள்.

ஒருமுறை ரகு கிருஷ்ணா முன்பாக அவள் அப்படி இயல்பாக விளிக்க, அப்போது
" அர்ஜு அத்தான்னு கூப்பிடு இல்ல அத்தான்னு கூப்பிடு..." என்று தன் தங்கை மகளுக்கு சொல்லிக்கொடுத்தார்.

அவர் அப்படிக் கூறியதற்கு காரணமும் இருந்தது. தன் தங்கை மகள் அக்னியை தனது மருமகள் ஆக்கிக் கொள்ள வேண்டும் என்பது அவரது நீண்டநாள் விருப்பம்.

ஆனால் அக்னியின் தந்தை விஸ்வநாதனுக்கு மங்காளாவை பற்றி நன்கு தெரியும் என்பதால் அவருக்கு
இம்மாதிரியான சம்பந்தங்களில் உடன்பாடு இல்லை. கோகிலாவிற்கும் தான் . அதனை அவர்கள் நேரடியாக சொல்லவும் இல்லை ரகு கிருஷ்ணா நேரடியாக பெண் கேட்கவும் இல்லை...

இருவருக்குமே அடுத்தவர் மனது தெள்ளத் தெளிவாகத் தெரியும் என்பதால்
காலம் எடுக்கும் முடிவிற்காக காத்திருக்க தொடங்கினர்.

காலங்கள் சுழன்றோட, அக்னி பூப்படைய, அவளது பருவ மாற்றங்கள் அர்ஜுனின் பார்வையில் பட்டாலும்,
முன்பு போல் அடித்து, ஓடிப்பிடித்து விளையாடும் போக்கெல்லாம் நின்றிருந்தாலும், இயல்பான நட்பு மட்டும் இருவருக்குமிடையே தொடர்ந்துகொண்டுதான் இருந்தது.

ஒரு முறை அக்னி எஸ்டேட்டை சுற்றிப் பார்த்து விட்டு திரும்பும் பொழுது, 2 குடிகார காலிப் பயல்கள் அவளை வம்பிழுக்க,
அவர்களை வர்ம கலையையும் கராத்தே கலையையும் சரிவிகித சமானமாக கலந்து பின்னி எடுத்து ஓட விட்டிருந்தாள். அதனை அறிந்த அர்ஜுன்

" ஏண்டி, என்னை கூப்பிட்டா நான் வந்திருக்க மாட்டேனா..."

" வேணா அத்தான், உன்னால அவங்களை சமாளிக்க முடியாது நான் தான் பிளாக் பெல்ட் ..." என்று குறும்பாக கூறிவிட்டு அவள் ஓட, அவன் அவளைத் துரத்த , வேகமாக புங்கை மரத்தின் மீது ஏறியவள், கீழிறங்க தெரியாமல் தடுமாற,

" அர்ஜு அத்தான் ப்ளீஸ்... என்னை கீழ இறக்கி விடு..." என அவள் கெஞ்ச,

" ஏண்டி, அங்க பறந்து பறந்து அடிச்ச இல்ல... இப்ப நீயே கீழ இறங்கி வா ..." என்றான் வம்படியாக.

" ப்ளீஸ் அத்தான்... எனக்கு ரொம்ப பயமா இருக்கு ..." என்றவளை பார்த்து குறுநகை புரிந்தபடி அவள் கைகளைப் பற்றி, அவள் இடையில் கரம் பதித்து, மார்போடு ஒட்டி அவளைக் கீழே இறக்கியவனுக்கு
முதன்முறையாக நட்பைத் தாண்டி ஆயிரமாயிரம் ரசாயன மாற்றங்கள். ஆனால் அவள் முகத்தில் அதற்கான பிரதிபலிப்பு துளிக்கூட
இல்லை.

இறக்கிவிட்ட மறுநொடி "ஏமாந்தீங்களா.." என்று கூறிவிட்டு
மான்குட்டி போல் துள்ளிக் குதித்து ஓடிவிட்டாள்.

அதன் பிறகு அவளது தந்தை மேஜர் விஸ்வநாதன் இந்திய ராணுவத்தில், ஒரு தீவிரவாத தாக்குதலில் உயிர் துறக்க, வழக்கம் போல் ஒவ்வொரு வருடமும் அர்ஜுனின் தந்தை ரகுவின் அழைப்பிற்கிணங்க தன் தாய் கோகிலாவுடன், அவள் கொடைக்கானலுக்கு விடுமுறையில் வருவது வாடிக்கையாகி போயிருக்க,
இந்நிலையில் அர்ஜுன் தனக்கான அடையாளத்தை உருவாக்கிக் கொண்டு விட்டதால், அவளிடம் தன் ஆத்மார்த்தமான காதலை கூற காத்துக் கொண்டிருக்கும் போது தான், அவளும் அவனிடம் ஏதோ சொல்ல வேண்டும் என்று வந்தாள்.

" சொல்லு அக்னி ..." என்றான் நிலவொளியின் அரை வெளிச்சத்தில்.

" அது வந்து ... " என்றவள் தலைகுனிந்தபடி அவனை நெருங்க,
அதில் வெட்கமும் தயக்கமும் போட்டி போட்டுக்கொண்டு நர்த்தனமாட,

நான் அவளை நேசிக்கிற மாதிரி ஒரு வேளை அவளும் என்னை நேசிக்கிறாளா.... அதனாலதான் இந்த தயக்கமா .... என்றெண்ணிய போதே வார்த்தையால் விவரிக்க முடியாத அளவிற்கு ஆனந்தம், வயிற்றில் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பற பறக்கும் கூச்சம்,
உடல் முழுவதும் மெல்லிய மின்சாரம், என ஒருவித மோன நிலையில் இருந்தவனிடம்

" அர்ஜுன்.... நான் என்னோட காலேஜ் சூப்பர் சீனியர் அஜய்யை ஒரு 6 மன்ஸ்ஸா லவ் பண்றேன் .... இட்ஸ் அ ஒன் சைடட் லவ் ... இப்ப ஊருக்கு வர்றதுக்கு முன்னாடி தான் அவர்கிட்ட டைரக்டா ப்ரொபோஸ் பண்ணேன்....
யோசிச்சு சொல்றேன்னு சிரிச்சிக்கிட்டே பதில் சொன்னவர், நேத்து போன் பண்ணி, அவர் ' சிவில் சர்வீஸ் எக்ஸாம்'ல பாஸ் பண்ணிட்டதா சொன்னாரு...

இப்ப கூட அவர் என்னோட லவ்வ ஒத்துக்கல .... ஆனா என்கிட்ட அந்த குட் நியூஸை ஷேர் பண்ணனும்னு தோணுச்சுன்னு சொன்னாரு... ஐ அம் இன் செவன் ஸ்கை அர்ஜுன் ....

என் வாழ்க்கைல நான் எதையுமே ஆசைப்பட்டதில்ல.... முதல் முறையா ஆசைப்பட்ட ஒன்னு நடக்கப் போகுதுன்னு நினைக்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு .... என் அம்மா,
என் ஃபிரண்ட் கீதாவுக்கு தெரியும், இப்ப உங்களுக்கு சொல்றேன் ...."
என்று மரமல்லி , சம்பங்கி மலர்கள் சூழ்ந்த கொடிகளை பற்றிக்கொண்டு
பௌர்ணமி முடிந்து 2 நாட்கள் கழிந்த நிலையிலும் பால் போல் பனிப்பொழியும் அந்த நிலவினை ரசித்தபடி அவள் கூறிக் கொண்டே செல்ல,

பொங்கிய பாலில் தண்ணீரை ஊற்றியது போல், சற்று முன் அவன் மனதில் தோன்றிய ஆனந்த பேரலை அடியோடு அஸ்தமிக்க, துக்கம் தொண்டையை அடைக்க, அந்த ஆறடி ஆண்மகனை அசைத்துப் பார்த்து மௌன கண்ணீர் வடிக்க செய்தது காதல் ....

நல்ல வேளை பாதி இருள் பாதி ஒளி என்பதால், அவனது முகம் மாற்றம் அவளை எட்டாமல் போக,

ஆண் மகனே ஆனாலும் வாழ்க்கையில் பெரிய அனுபவம் எதையும் நோக்கா சிறிய வயது, படிப்பை முடித்திருக்கிறான் அவ்வளவுதான் ...

அர்ஜுனும் அக்னியைப் போல தான், அவனது நட்பு வட்டம் மிக மிகச் சிறியது ...

அக்னியிடம் அவனுக்கிருக்கும் ஆத்மார்த்தமான காதலை இதுவரை அவன் யாரிடமும் பகிர்ந்ததில்லை, அப்படியே பகிர நினைத்தாலும் , அதனைக் கேட்கும் அளவிற்கு அந்த வீட்டில் யாரும் இல்லை ....

அவனுக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து, நிம்மதியாக சந்தோஷமாக இருந்திருக்கின்றானா என்று கேட்டால் அதற்கு இல்லை என்ற பதில் தான் வரும்....

ஏனோ இதுகாலம் வரை அவனது வாழ்க்கையில் வெறுமையே அதிகமாய் வியாபித்திருந்தது போன்ற ஒரு உணர்வு.... அதற்கு பெரிதாக காரணம் ஏதும் இல்லை என்றாலும் அன்னபூரணி அம்மாளின் மறைவுக்குப் பிறகு தான், அப்படி ஒரு உணர்வு என்ற எண்ணம் மட்டும் அவனுக்கு உண்டு ...

அன்னபூரணி அம்மாளுக்கு பிறகு அக்னி தான் எல்லாமே என்றெண்ணிக் கொண்டிருந்தவனுக்கு, சற்று முன்பான அவளது பேச்சு , அவன் நெஞ்சத்தில் பாரம் ஏற்ற, எங்கு பேசினால் குரல் தழுதழுத்து தன் மனதை காட்டிக் கொடுத்து விடுமோ என்று பயந்தவன்,

" ஆல் த பெஸ்ட், உனக்கு எல்லாமே நல்லதே நடக்கும் அக்னி ..." என்றவன் அவசரமாக முடிக்கவும் கோகிலா வரவும் சரியாக இருந்தது.

அக்னிக்கும் அர்ஜுனின் பேச்சில் சந்தேகம் எழ வில்லை ஏனென்றால் எப்பொழுதுமே, அவன் ஓரிரு வரிகளில் மட்டும் தான் பதிலளிப்பான். அவள் தான் அதிகம் உரையாடுவாள்.

'அர்ஜு அத்தான்' , 'அர்ஜுன்' ஆகிப்போன கதை இப்படித்தான்.

முதன் முதலில் அஜய்யை பற்றி அக்னி தன் தாய் கோகிலாவிடம் பகிரும் போது
அவருக்கு ஆச்சரியத்துடன் அதிர்ச்சியும் ஒரு சேர எழ

" நீ அர்ஜுனை தான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு நெனச்சுக்கிட்டு இருந்தேன் ... ஆனா இப்போ ..." என அவர் தொக்கி நிறுத்த

" ஏன் இப்படி பேசறீங்க ..."

" இல்ல, எப்பவுமே அத்தான் அத்தான்னு கூப்பிட்டுக்கிட்டு அவன் பின்னாடியே சுத்திகிட்டு இருப்பியே அதனால தான்...."

" ஏன் அத்தான்னு கூப்பிட்டா கல்யாணம் பண்ணிக்கணுமா என்ன.."

" ஆமா.... எங்க காலத்துல எல்லாம் அப்படி தான் சொல்லுவோம்... ஏன் உன் மாமாவும் அப்படித்தான் நினைச்சுகிட்டு இருக்காரு ....என்கிட்டயே பலமுறை ஜாடைமாடையா உங்க ரெண்டு பேரோட கல்யாணத்தைப் பத்தி பேசி இருக்காரு ..."

" ஓ, அத்தாங்கிற வார்த்தையில இத்தனை விஷயம் இருக்குதா..." என அவள் வியக்க

"நீ அர்ஜுனை கல்யாணம் பண்ணிக்காம இருக்கிறதும் ஒரு விதத்துல நல்லது தான்... ஏற்கனவே மங்களா அண்ணிக்கு என்னை கண்டாலே பிடிக்காது ... நான் அவங்க தம்பியை கல்யாணம் பண்ணிக்கலன்னு அவங்களுக்கு கோவம் ...
நீ ஒரு வேளை அர்ஜுனை கல்யாணம் பண்ணிக்கிறதா இருந்திருந்தா நிச்சயம் அவங்களோட பணத்துக்காக தான் நீ அர்ஜுனை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு திட்டித்
தீர்த்திருப்பாங்க ....."
என்றவரின் பேச்சில் இடைபுகுந்து

" இனிமே அர்ஜுனை பேர் சொல்லித்தான் கூப்பிட போறேம்மா.." என அப்போது சொன்னவள் தான்,
அதற்குப் பின்பான இந்த சந்திப்பில் இருந்து அவனை பெயரிட்டே அழைக்க ஆரம்பித்தாள்.


மறுநாள் காலையில் தாயும் மகளும் டெல்லிக்கு பயணமாக,
அதன் பின்பு அவள் கொடைக்கானல் வரவில்லை ... அர்ஜுனிடம் கிட்டத்தட்ட ஏழெட்டு முறையாவது தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசியிருப்பாள்.

அவன் காவல்துறையில் அதிகாரியாக இருக்கிறான் என்பதை தெரிந்து கொண்டு வாழ்த்தவும் செய்தாள்.
பேச்சுக்கள் பெரும்பாலும் அவனைப்பற்றிய கேள்விகளாக இருக்கும் அல்லது அவளது அஜய்யை பற்றிய செய்திகளாக இருக்கும்.

அதன் பிறகு ஓராண்டுக்கு முன்னர் அவளது திருமண பத்திரிகையை, அவனுக்கு அனுப்பியிருந்தாள் .
அவனுக்கு போக மனம் இல்லை ....
போகவில்லை ....

வழக்கம் போல் மங்களேஸ்வரி ஏதோ ஒரு காரணத்தை சொல்லி அக்னியின் திருமணத்திற்கு செல்ல மறுக்க, கடைசியில் கண் அறுவை சிகிச்சை செய்துகொண்ட நிலையில், தனி விமானம் மூலம் தன் செயலாளர் ராஜவர்மனோடு ரகு கிருஷ்ணா மட்டும்
தாய் மாமன் என்ற முறையில் திருமணத்தில் தலை காட்டி செய்யவேண்டிய சீரை சிறப்பாக செய்துவிட்டு, முழுதாக இரண்டு மணி நேரம் கூட செலவழிக்காமல் திரும்பி வந்துவிட்டார்.

அவருக்கு அக்னி அர்ஜுனை மணந்து கொள்ளவில்லையே என்ற வருத்தம் இருக்கத்தான் செய்தது. ஆனால் சம்பந்தப்பட்ட இருவருக்குமே விருப்பமில்லை என்கின்ற நிலையில் கட்டாயப்படுத்த அவருக்குமே மனமில்லை.

இதோ அவளது திருமணம் முடிந்து ஓராண்டு நிறைவு ஆகிறது . ஆறு மாதத்திற்கு முன்பு கர்ப்பம் தரித்திருக்கிறேன் என்ற செய்தியை மிக சந்தோஷமாக பகிர்ந்தாள். அதோடு அவள் தொடர்பு கொள்ளவில்லை .

இவன் மட்டும் இன்னும் அவளது நினைவுகளோடு...

ரயில் புறப்பட ஆரம்பித்து ஏறக்குறைய, பெரும்பகுதி ரயில் பெட்டிகள் கடந்து சென்ற நிலையில் தான், தலையைக் குலுக்கிக் சுயம் உணர்ந்தவன்,

அடுத்த ஸ்டேஷனில் இறங்கி தன்னுடைய முதல் வகுப்பிற்கு சென்று விடலாம் என்றெண்ணி,
ஓடிச்சென்று கிடைத்த ரயில் பெட்டியில் ஏற, அது
இரண்டாம் தர வகுப்பு பெட்டி.

அவன் ஏறி வெறும் 15 நிமிடங்கள் கடந்த நிலையில், யாரோ ஒரு பெண்ணின் பலத்த கதறல் சத்தத்தோடு, வேறு சில ஆண்களின்
மிரட்டும் குரல்கள், சண்டையிடும் சப்தங்கள் என அனைத்தும் போட்டி போட்டுக்கொண்டு அந்த ரயில் சப்தத்தோடு பூதாகரமாக ஒலிக்க ,

பெட்டிகளுக்கு நடுவே இருக்கும் இணைப்பு பாதையின் வழியாக, சத்தம் வரும் இடத்தை நோக்கி வேகமாக நடந்தவன், இரண்டு பெட்டிகளுக்கு பிறகு ,

நான்கு முகமூடி கொள்ளையர்கள், கையில் கத்தியோடு அந்தப் பெட்டியில்
உள்ள ஆண் பெண் அனைவரிடத்திலும் நகை மற்றும் பணம் வசூலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தை பார்த்தான்.

ஒத்துழைக்காதவர்களை மிரட்டி அடித்து பணம் பெறுவதிலேயே அவர்கள் குறியாக இருந்த போது,

' யஹான் க்யா ஹோ ரா ஹ' ( என்ன நடக்குது இங்க ...) என்று கர்ஜித்தபடி அர்ஜுன் வேகமாக உள்ளே நுழைய,
அவனது உடல் மொழி மற்றும் சிகையை வைத்தே அவன் காவல்துறையை சார்ந்தவன் என்பதை உறுதிப்படுத்திக்கொண்ட அந்த கொள்ளையர்களில் ஒருவன்,சிறிய உடை வால் போன்ற கத்தியை கொண்டு அர்ஜுனை தாக்க முயல, உடனே சமயோசிதமாக தலையை பக்கவாட்டில குனிந்து,
கொள்ளையனின் இடுப்பை பற்றி அலேக்காக தூக்கி வீசியபடி , அர்ஜுன் மேலும் முன்னேற,

அவனது ருத்ர தாண்டவத்தை கண்டு, அவன் மேல் மற்ற இரண்டு கொள்ளையர்களும் ஒன்றாக பாய,
இதுதான் தருணம் என முதலில் அர்ஜுனிடம் அடி வாங்கிய அந்த கொள்ளையன், ரயில் பெட்டியின் சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்த முயன்றதோடு, அருகிலிருந்த 13 வயது இளம் சிறுமியையும் தன்னோடு இழுத்து செல்ல விழைந்தான்.

அதுவரை அமைதியாக இருக்கையின் அருகே நின்றிருந்த கிட்டத்தட்ட 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண்,அந்த 13 வயது சிறுமியின் கதறலை கண்டு அவளைக் காப்பாற்றுவதற்காக, அந்த சிறுமியின் கையை பற்றி தன்னை நோக்கி இழுக்க, பதிலுக்கு அந்த கொள்ளையன் அந்த இளம்பெண்ணின் கன்னத்தில் அறைந்து அவளை கீழே தள்ளிவிட்டு அந்த சிறுமியோடு ,மற்றொரு கொள்ளையனையும் கூட்டிக்கொண்டு தப்பியோட முயல , அந்த இளம் பெண் அவ்வளவு வலியையும் தாங்கிக் கொண்டு அந்த சிறுமியின் கையை பற்றி மீண்டும் தன்னோக்கி இழுக்க , அங்கிருந்த ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் பயத்தில் உறைந்து வேடிக்கை பார்த்தனரே ஒழிய ஒருவரும் அந்த சிறுமியையோ அல்லது அந்த இளம் பெண்ணையோ காக்க முன் வரவில்லை ...

ஓரிருவர் மட்டும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, அந்த முகமூடிக் கொள்ளையர்களை மறைத்து வைத்திருந்த அலைபேசியில் காணொளிப் படுத்திக் கொண்டிருந்தனர்.

இரு கொள்ளையர்களையும் சமாளித்து அர்ஜுன் முன்னேறுவதற்குள், அந்த சிறுமியை பற்றிக் கொண்டிருந்த கொள்ளையனின் முகத்தில், அவன் சற்றும் எதிர்பாராத போது ஓங்கி அறைந்து விட்டு சமயோசிதமாக அந்த இளம்பெண் அந்த சிறுமியை அழைத்துக் கொண்டு, ரயில் பெட்டியில் உள்ள கழிப்பறைக்குள் புகுந்து தாழிட்டுக் கொள்ள, ரயிலும் குலுங்கி நிற்க, அதற்கு மேல் அங்கிருந்தால் ஆபத்து என்றுணர்ந்த கொள்ளையர்கள், கையில் கிடைத்ததை சுருட்டிக்கொண்டு தாவி குதித்து தப்பிக்கும் போது, அந்த இளம் பெண்ணிடம் அடி வாங்கிய அந்த கொள்ளையன், அந்த இளம்பெண்ணின் உடை கதவிடுக்கில் சிக்கி வெளியே தெரியவதை பார்த்ததும் அதற்கு சிகரெட் லைட்டரின் மூலம் தீ வைத்து விட்டு பெங்காலியில் ஏதோ அவனது கூட்டாளிகளை பார்த்து கத்திக்கொண்டே
அந்த இருட்டு பகுதியில் இறங்கி தலைதெறிக்க ஓட ,அவனை அவனது கூட்டாளிகள் பின் தொடர்ந்து ஓட்டம் பிடித்தனர்.

அந்த இளம்பெண்ணின் உடை பாலியஸ்டர் வகையை சார்ந்தது என்பதால் விருவிருவென தீ பரவ,
அவள் அணிந்திருந்த சுடிதாரின் தொடைப் பகுதியில் தீ சுடும் போதுதான், அதனை உணர்ந்தவள் தன் உடை முழுவதும் வேகமாக களைய,கழிப்பறையின் இடம் மிகச் சிறியது என்பதால் சிறுமியின் உடையும் தீப்பிடிக்க, அவளும் ஆடையை வேகமாகக் களைய, உடனே இருவரும் இணைந்து, சங்கிலி கொண்டு கட்டப்பட்டிருந்த கழிப்பறையில் பயன்படுத்தும் குவளையை பயன்படுத்தி தண்ணீரை தெளிக்க ஆரம்பிக்க, ஒருவரே நிற்பதற்கு சொற்ப இடமாக இருக்கும் அந்த கழிப்பறையில் இருவரும் இணைந்து நின்று, தண்ணீரைப் பயன்படுத்தி தீயை அணைப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.

கழிப்பறையில் இருந்து வந்த கூச்சல் மற்றும் புகையை பார்த்து பயந்த அந்த சிறுமியின் பாட்டி கம்பை ஊன்றிக்கொண்டு அனைவரின் உதவியை கேட்டபடி
அதை நோக்கி வேகமாக நடக்க,
கொள்ளையர்கள் சென்றதும், அங்கிருந்தவர்கள் கழிப்பறையை சூழ்ந்து கொண்டு கதவைத் திறக்குமாறு தட்ட, சூழ்நிலையை புரிந்து கொண்ட அர்ஜுன்

" ஆல் ஆஃப் யூ கெட் அவுட் ஆஃப் திஸ் ப்ளேஸ் ....." என கம்பீரமாக கட்டளையிட,

அதற்குள் செய்தி ஸ்டேஷன் மாஸ்டர் மற்றும் ரயில்வே போலீசுக்கு தெரியவர, அடுத்த ஸ்டேஷன் பத்து நிமிடத்தில் வரவிருப்பதால் , பாதி கூட்டம் இறங்கி ஸ்டேஷனை நோக்கி நடைபோட்ட நிலையில்,

அனைவரும் விலகிச் சென்றதும், அந்த சிறுமியின் பாட்டி மட்டும் அர்ஜுனுடன் நின்றுகொண்டிருக்க,

" ஓபன் த டோர் ..." என்றான் கழிப்பறையின் கதவை தட்டி.

பதில் வராமல் மறுபுறம் பெண்ணின் அழுகுரல் மட்டுமே கேட்க, ஆங்கிலம் புரியவில்லை போலும் என்றெண்ணி

" தர்வாஜா கோலோ...(கதவைத் திற) " என்று ஓங்கி ஒலித்த அவனின் குரலுக்கு

" எங்க ரெண்டு பேரோட ட்ரஸ் மொத்தம் எரிஞ்சு போச்சு ... நிற்கவே முடியல... எல்லா இடமும் கொதிக்குது..." என்று சன்னமாக அந்தப்பெண் ஹிந்தியில் பதிலளிக்க,
ரயில் பெட்டி முழுவதும் இரும்பால் செய்யப்பட்டதால் வெப்பம் கடத்தப்பட்டு உள்ளது என்பதை உணர்ந்தவன்

" பயப்படாத இங்க யாரும் இல்ல ... கதவை திற, நான் என் கோட்டையும் சட்டையையும் தரேன் ..." என்றதும் கதவு சிறிதாக திறக்கப்பட, நீட்டிய அந்த இளம் பெண்ணின் கையில் அர்ஜுன் முதலில் தன் ஜெர்கினை கொடுத்துவிட்டு
பிறகு தன் மேல் சட்டையை கழற்றி அந்த சிறுமிக்காக கொடுத்தான் .

இருவரும் உடை மாற்றிக்கொண்டு வெளியேற, அர்ஜுனின் சட்டை அந்த சிறுமிக்கு முழங்காலை தாண்டி போர்த்தியது போல் இருக்க,
அந்த இளம் பெண்ணிற்கு அர்ஜுனின் ஜெர்கின், பாதி தொடை பகுதியை மறைத்திருந்தது அவ்வளவே...

அதுவரை அனைத்தும் சரியாகத்தான் நடந்து கொண்டிருந்தது , ரயில்வே போலீஸ் உள்ளே நுழையவும், காட்டுத்தீ போல் செய்தி பரவியதால், மற்ற ரயில் பெட்டிகளில் இருந்த மக்கள் வேடிக்கை பார்க்க அங்கு வர,
ஓரிரு ஊடகவியலாளர்களும் அதில் இருக்க, சமூக வலைத்தளங்களில் முட்டை பரோட்டா சாப்பிட்டதை கூட பதிவாகப் போடும் வலைதள வாசிகளில் சிலர் அவர்கள் மூவரையும் புகைப்படம் எடுக்க விழைய,

அரைகுறை ஆடையிலிருந்த பெண்களை புகைப்படம் எடுப்பதை அவன் விரும்பாததோடு,
ஊடகத்தை பற்றியும் நன்கறிந்தவன் என்பதால் , கண்ணிமைக்கும் நேரத்தில்
பாட்டி அணிந்திருந்த பருத்தி புடவையின் சிறு முந்தானையை கொண்டு, அந்த சிறுமியின் முகம் மறைத்தவன், அந்த இளம் பெண்ணின் கழுத்தில் கைபோட்டு, அவளது முகத்தைத் தன் மார்பில் புதைத்து மறைத்தான்.

ஊடகவியலாளர்கள் , சமூக ஊடக ஆர்வலர்களை கட்டுப்படுத்துவதென்பது கடினமான ஒன்று ... அவர்களில் பலர், வெறும் பனியனில் திரண்ட புஜத்தோடு , அந்த இளம்பெண்ணை தன் மார்போடு அர்ஜுன் புதைத்திருந்த காட்சியை பல கோணங்களில் புகைப்படம் எடுக்க,
அப்போது அந்த இளம் பெண் அணிந்திருந்த கருப்பு நிற ஜெர்கின் மேலும் சற்று மேலேறி அவளது தங்கநிற தொடை பளபளக்க , அதனை கண்டு கொதித்துப் போய்

" ஆல் ஆஃப் யு அவுட் ஐ சே... ப்ளீஸ் டோன்ட் டேக் பிக்சர்ஸ் நவ்.... " என்று அலறியவன், ரயில்வே போலீசிடம் தன்னை பற்றி மொழிய, அவன் அந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக பதவி ஏற்றுக் கொள்ளப் போகிறான் என தெரிந்ததும், அவர்களின் வேலையில் இன்னும் வேகம் தெரிய, அங்கிருந்த பெண்களில் ஒருவர் தன் பையிலிருந்த உடையை அந்த இளம் பெண்ணிற்கு அணியக் கொடுக்க, அந்தப்பெண் அதனைப் பெற்றுக்கொண்டு மற்றொரு கழிப்பறையில் சென்று மாற்றிக்கொள்ள எத்தனிக்கும் போதே சில விஷமிகள், அந்தப் பெண்ணை சுற்றி சுற்றி வெவ்வேறு கோணங்களில் புகைப்படம் எடுத்து முடித்திருந்தனர்.

அதற்குள் அர்ஜுன் அங்கிருந்த ரயில்வே காவல் துறையினரின் உதவியுடன் அவர்களை எல்லாம் அகற்றிய பின் , நடந்த அனைத்தையும் புகாராக எழுதிக் கொடுத்தவன், ரயில்வே போலீஸ் போர்ஸின் (RPF)
கையாலாகாத தனத்தையும், பொறுப்பற்ற செயல்பாடுகளையும் கண்டித்து, ஏழு பேர் கொண்ட அந்த குழுவை தற்காலிக பணி நீக்கம் செய்யப் பரிந்துரை தான்.

மேலும் கொள்ளையர்கள் இருட்டில் அதிக தூரம் சென்றிருக்க முடியாது என்பதால் அவர்களை தேடும் பணியை முடுக்கி விட்டதோடு, கொள்ளையர்களின் கத்தி அவன் கையைப் பதம் பார்த்திருந்ததால், அவனுக்கும்
அந்தப் இளம் பெண் மற்றும் சிறுமிக்கு மருத்துவ முதல் உதவி தேவை என்பதால் தன் பெட்டிகளோடு அந்த ஸ்டேஷனிலேயே அவர்களோடு இறங்கிக் கொண்டான்.

கொள்ளையர்களை காணொளி எடுத்தவர்கள், அந்த காணொளியை ரயில்வே காவல்துறையினர் மற்றும் அர்ஜுனிடம் பகிர, விசாரணைக்கு தேவைப்படும் என்று தன்னுடைய அலைபேசியில் ஒரு நகலை சேமித்து கொண்டான்.


விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் பணத்தை பறிகொடுத்தவர்கள் ரயில்வே போலீசிடம் புகார் கொடுக்க, அரை மணி நேர கூச்சல் குழப்பத்திற்கு பிறகு, ரயில் புறப்பட, இப்பொழுது கூட்டம் வெகுவாக குறைந்து போயிருந்தது.

விடிகாலை கிட்டத்தட்ட 4 மணி,

அனைத்தும் அடங்கியதும்,
அர்ஜுன் முதலில் அந்த சிறுமியின் பாட்டியிடம் விசாரிக்க,
அவர் தன் மகனுக்கு தகவல் சொன்னால், வந்து அழைத்துச் சென்று விடுவான்,
அடுத்த ஸ்டேஷன் தான் தான் இறங்க வேண்டிய இடம் என்று தெரிவித்ததும்,
அவர் கூறியது போல் அவர் மகனை தொடர்புகொண்டு விஷயத்தை சொன்னதும், அரை மணி நேரத்தில் வருவதாக கூறினார் அந்த பாட்டியின் மகன் .

பிறகு அந்த இளம்பெண்ணிடம் அதே போல் அர்ஜுன் விசாரிக்க, பதில் சொல்லாமல் அவள் அமைதி காக்க,

" சொல்லுமா ... உனக்கு அண்ணா தம்பி அப்பா யாராவது இருக்காங்களா... இப்ப போன் பண்ணா வந்து கூட்டிட்டு போவாங்களா...." என்றான் ஹிந்தியில் முதன்முதலாக அவளது முகத்தை ஆழ்ந்த நோக்கி.

ஆரோக்கியமற்ற வெளிரிய நிறம், மெல்லிய உடல் வாகு, கவிதை பேசும் கண்கள், இடையைத் தாண்டி நீண்ட அடர்த்தியான செம்பட்டை நிற கூந்தல், ஒற்றைக்கல் மூக்குத்தி, காதில் பிளாஸ்டிக் தோடு,
மல்லிகைப்பூ மொக்கு போல் சிறிய மூக்கு, மெல்லிய சிறிய தாமரை இதழ்கள், ஐந்தரை அடி உயரம் .... ஆக மொத்தம் இயல்பிலேயே சர்வ லட்சணங்கள் பொருந்திய அழகி தான் ஆனால் அதையும் தாண்டி அவளது ஏழ்மை பளிச்சிட்டது.


" அண்ணன் இல்ல சார், தம்பி ரொம்ப சின்னவன் ஸ்கூல் படிக்கிறான்.... அப்பா கிட்ட மட்டும் தான் போன் இருக்கு... ஆனா போன் பண்ணா வர மாட்டாரு சார்..."

ஏன் என கேட்க நினைத்தவன் உடனே,

" உன் பேர் என்ன ... நீ எந்த ஸ்டேஷன்ல இறங்கணும் ..." என அவளைப் பற்றிய தகவல்களை திரட்ட முயன்றான் .

" என் பேரு சுபத்ரா ..."
என்றவள்
அவன் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக பதவியேற்றுக் கொள்ள போகும் நார்த் பர்கானா மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமமான ஷிம்பல் பூர் தான் அவளது கிராமம் என்றும், ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை தான் போக்குவரத்து வசதி என்றும், அந்த கிராமத்தின் அருகே ஒரு நகராட்சியின் பெயரைச் சொல்லி அங்குள்ள கல்லூரியில் இறுதியாண்டு படித்துக் கொண்டிருக்கிறாள் என்றாள்.

" ஆமா இப்ப எங்கிருந்து வர ..."

" ஃபைனல் எக்ஸாம்காக ஸ்டடி ஹாலிடேஸ் விட்டிருந்தாங்க சார்...
எக்ஸாம் பீஸ் கட்ட பணம் வேணும், கராக்பூர்ல எங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கு குழந்தை பிறந்து இருக்கு சார், அவங்களுக்கு ஒத்தாசை பண்ண கூப்பிட்டாங்க , 20 நாள் அவங்க வீட்ல இருந்து ஒத்தாசை பண்ணிட்டு பணம் வாங்கிட்டு வந்தேன் ... அதை தான் அந்த திருடங்க பிடுங்கிட்டாங்க சார் ..." என்று முடித்தாள் வருத்தத்துடன்.

முதலில் சாதாரண விசாரணையில் இறங்கியவனுக்கு , அவளது பேச்சின் ஆழம் அவன் உள்வரை செல்ல,

" எவ்ளோ பணம் மா கட்டணும்... நான் வேணா கொடுக்கிறேன் ..."

" வேண்டாம் சார் ... நான் எப்படியாவது பணம் கட்டி எக்ஸாம் எழுதிடுவேன் ..." என்றவள் மறுக்கும் போது அதில் 100% மறுப்போடு தன்மானம் தெளிவாக தெரிந்தது.

" அந்த பணத்தை உன்கிட்ட இருந்து பிடுக்கும் போது தான் ,அந்த திருடங்க கூட நீ சண்டை போட்டயா..." என ஆர்வத்தோடு அவன் கேள்வி எழுப்ப

" இல்ல சார், அவங்க கத்தி காட்டி மிரட்டும் போதே என்கிட்ட இருந்த 5000 ரூபாய் பணத்தை கொடுத்துட்டேன் சார் ...ஆனா அவங்க அந்த சின்ன பிள்ளையை கைய பிடிச்சு இழுத்து கூட்டிட்டு போக பார்த்தாங்க .. அப்பதான் எனக்கு கோவம் வந்துடுச்சு சார்..."
என்ற போதுதான், அவள் தனக்காக களத்தில் இறங்கவில்லை அந்த சிறுமிக்காக தான் சிரமப்பட்டிருக்கிறாள் என்று தெரிந்ததும் அந்தப் பெண்ணின் மீது அவனுக்கு ஒருவித மரியாதை எழ,

சற்று முன் அனைவருக்கும் முதல் உதவி நடந்த நிலையில், அவள் தொடையில் ஏற்பட்ட தீக்காயத்திற்கு, வலி நிவாரணி உட்கொண்ட நிலையிலும் ,
வலி அடங்காமல் அதன் சுவடுகள் அவள் முகத்தில் தெரிய, யாரோ கொடுத்த சுடிதார், அவளுடைய மெல்லிய தேகத்திற்கு தொளதொளவென பெரிதாக காட்சியளிக்க ,
கடும் குளிரின் காரணமாக கைகளை மார்பின் குறுக்கே கட்டிக்கொண்டு இருந்தவளை பார்த்து, அவள் திருப்பிக் கொடுத்த அவனுடைய ஜெர்கினை அவளிடமே கொடுத்து ,

" குளிர் பலமா இருக்கு நீ இதை போட்டுக்கோ, என் கிட்ட வேற இருக்கு..." என்றான்.

நன்றியோடு பார்த்துவிட்டு, அவனது ஜெர்கினை அவள் அணிந்து கொண்டு

" சார், என்னோட பேக் எப்ப கிடைக்கும் ..."

" ஏன்மா ..."

" அதுல என்னோட மூணுசெட் சுடிதார், எக்ஸாம்காக நான் எடுத்த நோட்ஸ், புக்ஸ் எல்லாம் இருக்கு சார்..." என்றவளின் கண்களில், முதன்முதலாக ஒருவித கலக்கம் தெரிய,

" என்ன படிக்கிற, நல்லா படிப்பியா ..." என்றான் வாஞ்சையாக .

" பிஎஸ்சி மேத்ஸ் சார்... போன வருஷமும் யூனிவர்சிட்டி ஃபர்ஸ்ட் சார்..." என்ற போது தான் அவளது பதட்டமே அவனுக்கு விளங்க ஆரம்பித்தது.

இதற்கு இடையில், அந்த பாட்டியின் மகன் வந்து, அர்ஜுனுக்கு நன்றி தெரிவிக்க,

" எனக்கு சொல்லாதீங்க...இவங்களுக்கு சொல்லுங்க ... இவங்க தான் உயிரை பணையம் வச்சு உங்க பொண்ண காப்பாத்தினாங்க.." என்று சுபத்ராவை காட்டி கூறி அவர்களை வழி அனுப்பி வைத்தான்.

இப்பொழுது ஸ்டேஷன் மாஸ்டர், சுபத்ரா, அர்ஜுன் இன்னும் இரண்டு மூன்று பேரைத் தவிர ஸ்டேஷன் வெறிச்சோடி போயிருக்க,

" சார் , நீங்க யார் சார் .." என்றாள் சற்று தயக்கத்துடன். நடந்த களேபரத்தில் அவன் பேசியது அவளுக்கு புரியவில்லை போலும் என்றுணர்ந்தவன்,

" எஸ்.பி ஆஃப் நார்த் 24 பர்கனா ..."
என்றவன், அன்று காலை 10 மணி அளவில் பதவி ஏற்றுக் கொள்ளப் போவதையும் உடன் கூற, அவனது பதவியின் உயரம், அவளது முகத்தில் வியப்பைக் கூட்ட,

" அப்ப என் பேக் கிடைச்சுடும் இல்ல சார் ..." என்றாள் மீண்டும் எதிர்பார்ப்பை கண்களில் தேக்கி.

" வேற டிரஸ், புக்ஸ் வாங்கிட்டா போகுதும்மா..."

" டிரெஸ்ஸ பத்தி கவலை இல்ல சார்... ரெண்டு செட் வீட்ல வச்சிருக்கேன் சார் ,
நான் எடுத்த நோட்ஸ் போயிடுச்சு சார் அதான் வருத்தமா இருக்கு ...
புக்கு கூட லைப்ரரில கிடைக்கும் சார்..."

" உனக்கு படிப்புன்னா அவ்ளோ பிடிக்குமா ..."

" கணக்கு பாடம் ரொம்ப பிடிக்கும் சார், நான் படிச்சு நல்ல வேலைக்கு போனா தானே என் தங்கையும் தம்பியும் நல்லா படிக்க வைக்க முடியும் ..."

" உங்க அப்பா என்ன பண்றாரு ..." என்றான் முதலில் கேட்க மறந்த கேள்வியை தற்போது கேட்டு.

" அஞ்சு ஏக்கர் நிலம் இருக்கு சார் அதுல விவசாயம் பண்றேன்னு சொல்லுவாரு இன்னைய வரைக்கும் அவர் விவசாயம் செய்து நான் பார்த்ததே இல்லை ... அதுல பாதி நிலத்து மேல கடன் இருக்கு... மீதி பாதி குத்தகையில இருக்கு சார்... அதுல தான் எங்க குடும்பமே ஓடுது ... எங்க அப்பா எப்பவும் உலக அரசியல்ல இருந்து உள்ளூர் அரசியல் வரைக்கும் பேசுவாரு சார்... டிவி பார்ப்பாரு, பேப்பர் படிப்பாரு... சீட்டு விளையாடுவாரு, குடிப்பாரு, குடிச்சிட்டு அரசியல் பேசி வம்பு இழுத்துகிட்டு வருவாரு .... ஆக மொத்தம் அவர்கிட்ட இல்லாத கெட்ட பழக்கமே இல்லை... மத்தபடி வீட்டுல என்ன நடக்குது, எங்க கஷ்டம் எதுவுமே அவருக்கு தெரியாது சார்...
இப்ப கூட நான் வர்றது அவருக்கு தெரியும், ஆனா இவ்ளோ நேரம் ஆச்சே பொண்ணு வரலையேன்னு வருத்தப்பட்டெல்லாம் தேடி வர மாட்டாரு சார்... "

" ஒரு வேளை நீ தைரியமான பொண்ணு நிச்சயமா வீடு வந்து சேர்ந்திடுவேங்கிற நம்பிக்கையா கூட இருக்கலாம் ..."

" சார், நம்பிக்கைக்கும் அக்கறைக்கும் வித்தியாசமுண்டு... அவர் என்னைக்குமே எங்களைப் பத்தி அக்கறை பட்டதே இல்லை....
நான் கரக்பூர் போகும் போது வீட்ல சும்மா தான் இருந்தாரு, ஆனா ட்ரெயின் ஏத்தி விடக் கூட வரல சார்... அவருக்கு அவர் சுகம் தான் முக்கியம் அதுல எதுவும் குறையக்கூடாது ...
எவ்ளோ நாள் உயிரை கையில பிடிச்சுகிட்டு இருட்டுல வீட்டுக்கு தனியா போயிருக்கேன் தெரியுங்களா...
நான் கொண்டு வர பணம் மட்டும் தான் அவர் கண்ணுக்கு தெரியும் ...
நாங்க எல்லாரும் எவ்ளோ கஷ்டப்படறோம்னு இன்னைய வரைக்கும் அவருக்கு தெரியாது ...."

" உன் வீட்டில் மத்தவங்க எல்லாம் எப்படி ..."

" என் அம்மா ரொம்ப நல்லவங்க ... ஆனா முதுகெலும்பு இல்லாதவங்க...
அளவுக்கதிகமான அவங்களோட பொறுமை, சில சமயம் என்னை கோவப்படுத்தும்... எங்க அப்பாவை பார்த்தா பயந்து நடுங்குவாங்க...

என் தங்கச்சி, தம்பி இரண்டு பேருமே என்னை மாதிரியே சார், நல்லா படிப்பாங்க ....."
என்றவள் பேசப்பேச, அவன் மனதில் குடிகொண்டிருந்த வெறுமை வெகுவாக குறைந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சம் பிறக்க ஆரம்பித்தது.

ஏழ்மையிலும் ஈகை என்று படித்திருக்கிறான் இப்பொழுதுதான் பார்க்கிறான்,
தன்னுடைய பணம் பறிபோகும் போது கூட தடுக்காதவள், ஒரு சிறுமிக்காக உயிரை பணயம் வைத்திருக்கிறாள், இவ்வளவு சிரமத்திலும் நன்றாகப் படித்து தம்பி தங்கையை காப்பாற்றவேண்டும் என்ற அவளது பொறுப்புணர்ச்சி , இந்த சிறு வயதில் வயதுக்கு மீறிய வேலைகளை செய்துகொண்டு எப்படியும் வாழ்க்கையில் ஜெயித்து விடலாம் என்ற விடாமுயற்சி, எதிர்நீச்சல் போடும் அவளது தன்னம்பிக்கை, தைரியம் அதைவிட அவளது தன்மானம் என அனைத்தும் ஒரு நொடியில் அவளை இமய மலைக்கு நிகராக உயர்த்திக் காட்டியது.


தொட்டதற்கெல்லாம் குறை கூறும், எதிர்மறையாகப் பேசும் இன்றைய இளைய சமுதாயத்தில் நேர்மை,
ஒழுக்கம் , உழைப்பு , தன்னம்பிக்கை, விடாமுயற்சி, பொறுமை ஆகியவற்றை வெறும் வார்த்தைகளாகவே பார்க்கும் வர்க்கங்களுக்கு நடுவே அவற்றை வாழ்க்கையாகவே கொண்டு வாழும் அவள், அவனுக்கு தேவதையாகவே தென்பட்டாள்.

அனைவருக்கும் வாழ்க்கையில் ஏதோ ஒரு குறை உண்டு, ஆனால் அவளுக்கு வாழ்க்கையில் நிறை என்ற ஒன்றே இல்லை, எனினும் அவள் வாழ்க்கையின் மீது வைத்துள்ள அசாத்திய நம்பிக்கை அவனை அசைத்துப் பார்த்தது.

ஒரு ஆண்மகன், நினைத்ததை சாதிக்கும் பண வசதி படைத்தவன்,
பெரிய பாரம்பரிய குடும்பத்தை சார்ந்தவன்,
உயர் பதவி வகிப்பவன்,
ஆனால் அவனிடம் இல்லாத நிறைவும் வாழ்க்கையைப் பற்றிய புரிதலும் அவளிடம் கொட்டிக் கிடந்தன...

" சரி , உங்க அப்பாவுக்கு போன் போட்டு பார்க்கலாம் ..." என்றவன் அவளது தந்தையை தொடர்பு கொள்ள முயல, அவள் கூறியது போல், தொடர்பு எடுக்கபடாமல் போக,

" சரி, எனக்கு கார் வரும், அதுல நான் உன்னை டிராப் பண்ணுறேன் ..." என்றவனுக்கு தெரியாது அவன் பயந்தது போல் ஊடகங்கள் தங்கள் வேலையை காட்ட போவதும், அதனால் அவனது ஆயுள் முழுமைக்குமான பிரச்சனையை சந்திக்கப் போவதும்.


தகிப்பாள்
 
அத்தியாயம் 19


காலை 6:00 மணி அளவில் அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்த காரில்,
அர்ஜுனும் சுபத்ராவும் பின் இருக்கையில் அமர, அவர்களது பயணம் தொடங்கியதிலிருந்து, அவனுக்கு தொடர்ச்சியான அலைபேசி அழைப்புக்கள் மற்றும் வாழ்த்துக்கள் வந்த வண்ணம் இருந்தன.

முதலில் ரயில்வே துறை அமைச்சர் தொடர்பு கொண்டு நடந்ததை விசாரித்து வாழ்ந்து தெரிவிக்க , அவரை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர்கள், இன்னும் பிற உயர் அதிகாரிகள் என ஒருவர் பின் ஒருவராக தொடர்பு கொண்டு வாழ்த்துக்களை வாரி வழங்கினர்.

அவனது இடப்பக்கத்தில் அமர்ந்திருந்தவள் அயர்ச்சியின் காரணமாக ஆழ்ந்த உறக்கத்திலிருக்க,
அவளை ஆழ்ந்து நோக்கியவனுக்கு,
இவளுக்கு ஏதாவது நன்மை செய்தே ஆக வேண்டும் என்ற எண்ணம்
அடிமனதில் ஆழமாக தோன்றிய போது பசி வயிற்றை கிள்ள

" சுபா...." என்றழைத்தான் மென்மையாக . அவளிடம் அசைவே இல்லை.இருமுறை அழைத்தவன் கடைசியாக அவளது தலையை தொட்டு, அழைத்ததும் விருட்டென்று விழித்துக் கொண்டவளுக்கு
சுயம் உணர அரை நொடிக்கும் குறைவான தருணம் தேவைப்பட

" சார்..." என்றாள் .

" வா, ஏதாவது ஹோட்டல்ல சாப்பிடலாம் ...."

" வேண்டாம் சார் ..." என அவள் கூச்சத்தோடு மறுக்க,

" எனக்கு பசிக்குது, உன்னை விட்டுட்டு என்னால சாப்பிட முடியாது..."

என்றவனின் பேச்சால் வேறு வழி இல்லாமல் உடன் சென்று உண்ண ஆரம்பித்தவளுக்கு தெரியாது, அவளது அடுத்த வேளை உணவும் அவனது உபயத்தால் தான் என்று.

ஏற்கனவே நன்றாக உணவு உண்ணும் பழக்கம் கொண்டவன் இப்பொழுது பசியின் காரணமாக வழக்கத்தை விட அதிகமாகவே உண்டு முடிக்க,
அவள் சாப்பிட்டது மிகக் குறைவு தான் என்றாலும், அதில் அவள் காட்டிய வேகம் அவளது பசியை அவனுக்கு தெளிவாக உணர்த்தின.

அவர்கள் இருவரும் கிட்டத்தட்ட ஒன்பது மணி அளவில் அவளது கிராமத்தை வந்தடைய, அதற்கு முன்பாகவே முன்நாள் இரவு ரயிலில் நடந்த கொள்ளை சம்பவம், பத்திரிகைகள், செய்தி சேனல்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக மக்களை சென்றடைந்திருந்தது.

நடந்ததை நடந்த மேனியாக ஒளிபரப்பியது ஓரிரு ஊடகங்களே. மற்றதெல்லாம் பார்வையாளர்களை அதிகரிக்க செய்ய கட்டுக் கதைகளை கண்டமேனிக்கு கட்டவிழ்த்து விட்டிருந்தன.

சமூக வலைத்தளங்களில் பதிவு போடும் பெருந்தகைகள், ஏதோ பக்கத்திலிருந்து பார்த்தது போல் ,
கற்பனை குதிரைகளைத் தட்டி விட்ட வண்ணம்
புதினம் புனையாத குறையாக, திரைக்கதை எழுதியிருக்க ,
திரண்ட புஜத்தோடு
பனியனில் இருந்த அர்ஜுனின் மார்பில் சுபத்ரா முகம் புதைந்திருந்த முழு புகைப்படத்தை வெளியிட்ட வள்ளல்கள், உடன் வெவ்வேறு கோணங்களில் தெளிவாக எடுக்கப்பட்டிருந்த சுபத்ராவின் முகத்தையும் வெளியிட்டிருந்தனர்.

கொள்ளையர்களிடமிருந்து சிறுமியை காப்பாற்ற சென்று, பின் அவர்களால் ஆடைக்கு தீ வைக்கப்பட்டு, உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஆடைகளை களைந்து,
பின் அர்ஜுன் வழங்கிய அரைகுறை ஆடையை தரித்து வந்ததை ,
நான்கு மிருகங்களால் வன்புணர்வு செய்யப்பட்ட பெண்ணை காவல்துறை கண்காணிப்பாளர் காப்பாற்றிய சம்பவம் என்று திரித்து எழுதியிருந்தது ஊடகங்கள்.

சிறுமியை பற்றிய செய்திகள் ,தீவிபத்து உட்பட அனைத்தும் சிந்தாமல் சிதறாமல் மறைக்கப்பட்டு,

ரயிலில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களால், கற்பை இழந்த இளம் பெண், காப்பாற்றிய கண்காணிப்பாளர்
என்று எதுகை மோனையாக தலைப்புச்செய்திகள் பரவியிருந்தது.

அப்படியே கொள்ளைச் சம்பவம் நிகழ்த்திய நான்கு மிருகங்களால் ஒரு பெண் வன்புணர்வு செய்யப்பட்டிருந்தாலும் பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணின் புகைப்படத்தை விடுத்து அந்த கயவர்களின் புகைப்படத்தை அல்லவா ஒளிபரப்ப வேண்டும்....

மனதாலும் உடலாலும் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் புகைப்படத்தை மீண்டும் மீண்டும் ஒளிபரப்புவதால்
பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நீதி கிடைக்கிறதோ இல்லையோ,
நிச்சயமாக அவள் சமுதாயத்தால் புறக்கணிக்கப்படுகின்றாள் என்பதுதான் முற்றிலும் உண்மை.

சமுதாயத்தின் பார்வையில் ஏனோ அவள் வேண்டுமென்றே அந்த நான்கு நபர்களுடன் உல்லாசமாக உறவாடி விட்டு வந்திருக்கிறாள் என்ற எண்ணமே தோன்றி பரிதாபத்திற்குரியவள் பரிகாசத்திற்கு ஆளாகிறாள்.

ஆண் வர்க்கம் பெண்களைப் பற்றி இம்மாதிரியான சம்பவங்களில் இழிவாக பேசுவதும் எழுதுவதும் ஒரு புறம் இருந்தாலும், ஒரு பெண்ணின் உடலை அவளது விருப்பம் இல்லாமல் வன்புணர்வு செய்யும் போது அவள் அடையும் வேதனைகள் பற்பல என்பதை பெண் வர்க்கத்தில் பிறந்த பல பிசாசுகள் கூட புரிந்து கொள்ளாமல் இழிவாகப் பேசுவது தான் அநீதியின் உச்சக்கட்டம்.

இம்மாதிரியான ஊடகங்களும் பெண்களும் ஆண்களும் இருக்கும் பட்சத்தில் ஆயிரம் முண்டாசுக் கவிஞனும் ஆயிரம் நேதாஜிக்கள் வந்தாலும் பெண் விடுதலை என்பது ஏட்டளவிலேயே தான்.

பெண்களின் கற்பு அவர்களின் தொடைக்கு நடுவே உள்ளது என்ற சித்தாந்தம் என்று உடைபடுகிறதோ,
அன்று தான் , அவள் காட்சிப் பொருளாகவோ போகப் பொருளாகவோ
பார்க்கப்படுவது முற்றிலும் நிறுத்தப்படும்.


ஷிம்பல் பூரை சார்ந்த பெண்
என்று உள்ளூர் ஊடகங்களில் மணிக்கு ஒரு தடவை ஒளிபரப்பப்பட்டதால், உள்ளூர் ஆசாமிகள் தீவிரமாக செய்தியை கண்காணித்திருக்க , மேலும்
சம்பவம் நடந்த இடமும் கிட்டத்தட்ட 2 மணி நேர பயண தொலைவில் இருந்ததால் , விஷயம் காட்டுத் தீ போல் பரவி இருந்தது.

கார் சுபத்ராவின் வீட்டு வாசலை அடைய, உள்ளூர் ஆசாமிகள் ஆர்வத்தோடு கூட்டம் கூட, சுபத்ரா அணிந்திருந்த ஜெர்கின் மற்றும் தொள தொள ஆடையே, அது அவளுடையது அல்ல என்பதை தெளிவாக பறைசாற்ற,
உடன் ஒரு திடகாத்திரமான இளைஞனும் வந்திறங்கிய நிலையில்,
ஒன்று + ஒன்று = இரண்டு என்று தாங்களே தங்களுக்குள் கணக்கிட்டு வழக்கை விசாரிக்காமலேயே தீர்ப்பு வழங்கினார்கள் அந்த ஊர் நாட்டாமைகள்.

அவர்களில் பாதிப்பேர் அவளைப் பாவமாக பார்க்க, மீதிப்பேர் அவளை அருவெறுப்பாக பார்த்து வைக்க,
சுபத்ராவால் இதையெல்லாம் உணர முடியாமல் போனாலும் அர்ஜுனால் உணர்ந்துகொள்ள முடிந்தது ஏதோ சரியில்லை என்று.

அவர்கள் இருவரும் பயணத்தில் இருந்ததால், ஊடகச் செய்திகள் அவர்களின் காதுகளை எட்டவில்லை.
அர்ஜுனிடம் விசாரித்தவர்கள் கூட,
நடந்ததைக் கேட்டு தெரிந்துகொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தார்களே ஓழிய,
ஊடகச் செய்தியை பற்றி வாய் திறக்கவில்லை.

சந்திரநாத், சுபத்ராவின் தந்தை, வீட்டு வாயிலில் செய்தித்தாளும் கையுமாக வந்து நிற்க,
அவர் பின்னே அவளது தாயார் இந்திரா, வழக்கம் போல் அஞ்சி நடுங்கிய படி பார்வையால் அவளை வரவேற்க, அவளது தங்கையும் தம்பியும் ஓடி வந்து அவள் கரம்பற்றி,

" உனக்கு ஒன்னும் ஆகலையே, நீ நல்லா இருக்க இல்ல தீதி ...." என்றனர் ஆதரவாக.

தன்னைக் காப்பாற்றிக் இத்தனை தூரம் அழைத்து வந்தவனை , மரியாதை நிமித்தமாக வீட்டிற்குள் அழைக்க வேண்டும் என்ற எண்ணம் அவளுக்குள் துளிர்த்தாலும், தேநீர் தயாரிக்க கூட வழியற்ற அந்த வீட்டில் , அவனை உபசரித்து என்ன கொடுப்பதென்று அவள் தடுமாறி கொண்டிருக்கும் போதே, அவளது வீடு, குடும்பத்தினர், சுற்றம் என அனைத்து இடத்திலும் ஏழ்மை தாண்டவதை பார்த்து அவளது மன ஓட்டத்தை உணர்ந்த படி

" நான் கிளம்புறேன் மா, ஆல் த பெஸ்ட் நல்லா படிச்சு எக்ஸாம் எழுது... ஏதாவது உதவி தேவைன்னா போன் பண்ணு ..." என்று கூறி விடைபெற்றவன் ஏற்கனவே
அவளது படிப்பிற்கு ஏதாவது ஒருவகையில் உதவ வேண்டும் என்று நினைத்து அவளிடம் தன் பயன்பாட்டிற்கு மட்டும் பயன்படுத்தும் அலைபேசி எண்ணை கொடுத்து வைத்திருந்தான்.

வீட்டிற்குள் வந்ததும் தான் ஊடக விஷயங்கள் அவளை சென்றடைய,
தொடையில் மட்டும் ஏற்பட்டிருந்த தீப்புண்ணின் வலியும் எரிச்சலும், தற்போது அவளது உடல் முழுவதும் தோன்றி துடித்துப் போனாள் சுபத்ரா.

இவ்வளவு தெரிந்திருந்தும் அவளது தந்தையின் முகம் வழக்கத்திற்கு மாறாக அமைதியாக இருப்பதை
எண்ணி முதன் முறையாக அவளுக்கு சந்தேகம் பிறந்தது, அவரது அமைதிக்கான காரணம் அடுத்த 6 மணி நேரத்தில் வெட்ட வெளிச்சமாக போவது தெரியாமல்.

அதற்குள் அர்ஜுனுக்கும் ஊடக செய்திகள் சென்றடைய, துடித்துப் போனவன் பதவியேற்றுக் கொண்ட கையோடு, பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்தி, ஊடகங்களுக்கு அது குறித்த ஒரு பேட்டியை தெளிவாகப் வழங்கினான்.

கொள்ளையர்கள் சிறுமியை கடத்திச் செல்ல பார்த்தது, சுபத்ரா அவர்களைத் தடுத்தது, பிறகு அவளது ஆடைக்கு தீ வைத்தது, இவன் ஜெர்கின் கொடுத்து காப்பாற்றியது என அனைத்தையும் பொறுமையாக, ஒரு பெண்ணின் வாழ்வை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் கூறி முடிக்க,

அவன் கொடுத்த பேட்டியானது கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களிலும்
ஒளிபரப்பப்பட்டாலும் , எதையும் அலசி ஆராய்ந்து பிரித்து உணரும் பகுத்தறிவு இல்லாத கூட்டங்கள், இயல்பிலேயே தீவிரவாத சிந்தனைகளோடு மன வக்கிரம் படைத்த ஜென்மங்கள் எல்லாம், வழக்கம் போல் அரசாங்கமும் அதிகாரிகளும் சொல்வது பொய் என்றும், முதலில் வந்த செய்தியே உண்மை என்று மீண்டும் மீண்டும் வதந்தியை பரப்ப தொடங்கினார்கள்.

அந்நிலையில் அர்ஜுனின் உயரதிகாரி அவனிடம்,

" பேசாம அந்த பொண்ணையும், அந்த சின்ன பொண்ணையும் கூப்பிட்டு பேட்டி கொடுக்க வச்சுட்டா பிரச்சனை முடிஞ்சிடும்னு நினைக்கிறேன்.." என்றார் தீவிரமாக.

" வேண்டாம் சார்.... ஏற்கனவே அந்த பொண்ணோட போட்டோ எல்லா இடத்திலும் பரவிடுச்சி...
அந்த பொண்ணு ரொம்ப பாவம் சார் ...
அவளோட முகம் எந்த மீடியாலயும் வரக்கூடாதுன்னு தான் நான் அந்த பொண்ணோட முகத்தை மறைச்சேன் ...
ஆனா எப்படியோ ஏகப்பட்ட போட்டோஸ் எடுத்துட்டாங்க ... சோசியல் நெட்வொர்க் ஃபுல்லா இதே பேச்சு தான் , அந்த பொண்ணோட போட்டோ தான் ...

இவங்க எல்லாம் உண்மைய தெரிஞ்சுக்கணுங்கிற எண்ணத்தை விட , பொய்ய வேகமா பரப்பணுங்கிற நோக்கத்தோடுதான் செயல்படுறாங்க...
சம்பவம் நடக்கும் போது கூட இருந்த என்னோட பேட்டியையே பொய்ன்னு சொல்றவங்க... அந்த பொண்ணு சொன்னா மட்டும் நம்பவா போறாங்க ...
அசிங்க அசிங்கமா கமெண்ட்ஸ் போட்டு அந்த பொண்ணை சாகடிச்சிடுவாங்க சார்..... ப்ளீஸ் வேண்டாம்...." என்று தன் மனக்குமுறலை வெளிப்படுத்தியிருந்தான் அர்ஜுன் .

காலையில் அர்ஜுனுடன், சுபத்ரா உணவருந்தியதோடு சரி, அதற்கு மேல் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக, பசி மறந்து போயிருக்க,

மாலை சுமார் 8 மணி அளவில் , இரவு உணவு உண்ண அவள் எண்ணிக் கொண்டிருக்கும் போதே, வெளியில் இருந்து வீடு திரும்பிய சந்திரநாத் குடிபோதையில், வழக்கம் போல் தன் மனைவியிடம் தாம்தூம் என்று எகிறிக் கொண்டிருந்தார்.

அவருக்கு யார் மீது கோபம் இருந்தாலும் காட்டும் ஒரே இடம் அவரது மனைவிதான்.

ஓங்கி ஒலித்த அவரது குரலைக் கேட்டு,
சுபத்ரா, அவளது தங்கை ஜானவி, தம்பி சோம்நாத் என அனைவரும் கூடத்திற்கு வர,

" எல்லாம் போச்சு .... எவ்ளோ ஆசையா இவளுக்கு( சுபத்ராவை பார்த்து) கல்யாணம் பேசி வச்சிருந்தேன் தெரியுமா.... எல்லாத்துலயும் இப்படி மண்ணள்ளி போட்டுட்டாளே....உன் பொண்ணு பண்ணின கூத்தை பார்த்துட்டு , சோரம் போன பொண்ணை கட்டிக்க மாட்டேன்னு அந்த அருண் கல்யாணமே வேண்டாம்னு சொல்லிட்டான் ...."

" எந்த அருண் ..." என்றார் அவளது தாய் முதன்முறையாக வாய் திறந்து.

" நம்ம ஊர்ல ஃபைனான்ஸ்க்கு பணம் கொடுக்கிறானே அந்த அருண் ..." என்ற போது, கேட்டுக்கொண்டிருந்த அனைவரின் தலையில் இடி இறங்கியது போலிருந்தது .

அவர் கூறிய அந்த பைனான்சியர் அருணுக்கு கிட்டத்தட்ட 50 வயது இருக்கும். முதல் மனைவி தற்கொலை செய்து கொண்டாள். ஏன் செய்து கொண்டாள் என்ற காரணம் இதுவரை யாருக்கும் தெரியாது. இரண்டாவது மனைவி விவாகரத்து பெற்று சென்று விட்டாள், அதற்கும் யாருக்கும் காரணம் தெரியாது.
இந்த நிலையில் இருபத்தியோரு வயது ஆகப்போகும் ஒரு இளம் பெண்ணிற்கு அவளது வயதைப் போல இரண்டு மடங்கிற்கு மேல் வயதுள்ள அந்த அயோக்கியனை மணம் பேசி இருப்பதென்பது எவ்வளவு பெரிய அபத்தம்.

காலையில் இவ்வளவு நடந்தும் அவர் அமைதியாக இருந்ததற்குக் காரணம்,
அருணுடன் நடக்க போகும் திருமணத்திற்கு சுபத்ராவை சம்மதிக்க வைப்பதற்காக தான். இப்போது திருமணம் நடக்காது என்று தெரிந்ததும் தன்னுடைய அடிப்படை குணத்தை காட்ட ஆரம்பித்திருந்தார்.

அருணிடம் இருக்கும் பணத்திற்கு ஆசைப்பட்டு தான், சந்திரநாத் இந்த ஏற்பாட்டை செய்திருக்கிறார் என்பதை அறிந்து, பொங்கி எழுந்த ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு அனைவரும் அமைதியாக நிற்க,

"உனக்கு யோக்கியமா கல்யாணம் பண்ணி வைக்கணும்னு பார்த்தா , நீ கொழுப்பெடுத்து போய் 4 நாலு பேரோட படுத்துட்டு வந்திருக்க .... " என்ற சந்திர நாத்தின் எதிர்பாராத பேச்சு அவளை அமிலத்தில் காய்ச்சி எடுத்தது போல் இருக்க, அதில் அப்படியே துடித்துப் போய் நின்றவளிடம்

" இந்த நாலு பேர் மட்டும்தானா, இல்ல கரக்பூர் போனையே அங்கேயும் இதே வேலை செஞ்சு தான் பணம் சம்பாதிச்சிட்டு வந்தியா... ஆமா உன் கூட ஒரு தடியன் வந்தானே ...யாரவன்... அவனை
எங்க புடிச்ச .... "

என திருமணம் நின்று போன கோபத்தில் வாய்க்கு வந்தபடி சந்திரநாத் பேசிக் கொண்டே செல்ல,
தனது தாய் , தம்பி , தங்கை முன்பு கொஞ்சம் கூட இங்கிதம் இல்லாமல்
எதிரிகளே எளிதாக பயன்படுத்த தயங்கும் வார்த்தைகளை, தந்தை என்ற ஸ்தானத்தில் இருந்த அந்த கயவன் பேசியது , அவளது மனதை சுக்குநூறாக உடைத்தெறிய,
இத்தனை நாட்களாக ஒட்டிக்கொண்டிருந்த ஏதோ ஒன்று முதன் முதலாக உள்ளுக்குள் அறுந்தது போன்ற உணர்வினை பெற்றவள்,
தன் தாயின் முகத்தை பார்க்க,
வழக்கம் போல் அதில் பயமும், பதட்டமும் மண்டிக் கிடக்க

ஒரு வார்த்தை, ஒரே வார்த்தை தந்தை என்ற போர்வையில் இருக்கும் அந்த மிருகத்திடம் எதிர்த்துப் பேசாத , அந்த முதுகெலும்பில்லாத ஜென்மத்தை
வெறித்துப் பார்த்தவள், அதற்குமேல் யாரிடமும் எதையும் பேசாமல், படுக்கையறைக்கு சென்று முடங்கினாள்.

" இவளால எனக்கு எந்த லாபமும் இல்ல பேசாம இவ செத்து தொலையலாம்..." என்று அகங்காரத்தில் அரற்றிக் கொண்டிருந்தவரின் குரல் மட்டும் மெலிதாக அவளை சென்றடைய, அதற்குமேல் அவர் பேசியது அவளை சென்றடையவில்லை.

முடிவெடுத்து விட்டு பேசுபவர்களிடம் விளக்கம் சொல்வது வீண் என்பதால் தன் பக்கம் இருக்கும் நியாயத்தை கூறாமல் நகர்ந்து வந்து விட்டாள்.

காதல் மட்டுமல்ல அன்பு,பாசம் , நட்பு என அனைத்து உணர்வுகளும்
ஒரே ஒரு நல் வார்த்தையில் தொடங்கி, ஒரே ஒரு நயமில்லா வார்த்தையில் முடிவடைகின்றன.

இங்கும் அதே தான் நடந்து முடிந்திருந்தது.

அப்படியே களைப்பில் அயர்ந்து உறங்கி போனவளுக்கு , நள்ளிரவுக்கு மேல் விழிப்பு வர , சந்திர நாத் பேசிவிட்டுச் சென்றது மீண்டும் மனக்கண் முன் திரைப்படமாக ஓட, அவளால் முடிந்த வரையில் வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டு பார்த்து விட்டாள், ஆனால் அனைத்து வழிகளும் மூடப்பட்ட நிலையில் அவளால் என்னதான் செய்ய முடியும்.

ஒரு சிறுமியின் மானத்தையும் உயிரையும் காப்பாற்றியதற்கு அவளுக்கு கிடைத்த தண்டனை தான் இந்த ஏச்சுகளும் பேச்சுகளும் .

அவளிடம் என்ன நடந்தது என்று சந்திர நாத் ஒரு வார்த்தை கேட்கவில்லை .
அப்படியே ஊடகங்கள் கூறியது போல், அவளுக்கு அநீதி நடந்திருந்தாலும், ஆதரவாகப்
அரவணைத்து பேசுவது ஒரு தந்தையின் கடமை அல்லவா.

நியாயப்படியும் தர்மப்படியும் பார்த்தால் ஒரு தந்தையாக தன் மகளுக்காக அவர் குரல் கொடுத்திருக்க வேண்டும், போராடியிருக்க வேண்டும், ஆனால் அதை எல்லாம் விடுத்து தன் நோக்கம் நிறைவேறவில்லை என்ற ஒரே காரணத்திற்காக அவளை
சகட்டுமேனிக்கு வசைபாடுவது அவருடைய கையாலாகாத்தனத்தையும் சுயநலத்தையுமே காட்டியது .

சந்திர நாத் இன்று வரை , யாருடைய உணர்வையும் புரிந்து கொள்ள முயன்றதில்லை. தன்னுடைய கோபமும் தன்னுடைய தேவையுமே எப்பொழுதும் அவருக்கு பிரதானம்.


இந்த உலகத்தில் அவள் வாழ ஆதாரமாக இருந்தது அவளது குடும்பம் தான்... இப்பொழுது ஏனோ அதுவும் அவளை விட்டு விலகி சென்றது போன்ற பிரம்மை தோன்ற, இனி வாழ்க்கையில் எதுவுமே இல்லை வாழ்வதற்கும் விருப்பமில்லை, என்ற விரக்தியான மனநிலையில் தற்கொலை எண்ணம் உதிக்க, அதனை எவ்வாறு செயல்படுத்துவதென்று இவள் இங்கு திட்டமிட்டுக் கொண்டிருக்கும் போது,

அங்கு அயர்ந்த உறக்கத்திலிருந்த அர்ஜுனுக்கு தூக்கிவாரிப் போட்டு எழுந்தமர,

" சுபா.... உனக்கு ஏதாவது பிரச்சனையா ... எனக்கு ஏன் தப்பு தப்பா கனவு வருது ...." என்று வாய்விட்டு தனக்குத் தானே பேசிக் கொண்டவன், ஜாடியில் இருந்து தண்ணீர் எடுத்து பருகிவிட்டு,

" கடவுளே, எந்த பிரச்சனையா இருந்தாலும் அவளை காப்பாத்து...அவ ரொம்ப நல்லவ ...." என்று மனமுருகி தனது குலதெய்வமான கிருஷ்ண பகவானிடம் வேண்டுதல் வைத்து விட்டு, அதற்கு மேல் உறக்கம் வராமல்,
படுக்கையை விட்டு எழுந்து காலாற
நடக்க ஆரம்பித்தான்.

தன் வீட்டின் பின்புறத்தில் இருக்கும் கிணற்றில் விழுந்து உயிரை மாய்த்துக் கொள்ளலாம் என்று திட்டமிட்டுவிட்டு , அதனை செயல்படுத்த சுபத்ரா விழையும் போது,

" தீதி.. எங்க போற ..." என்றாள் ஜானவி , வீட்டின் பின்புறத்தை நோக்கி சென்றவளை பார்த்து.

திடீரென்று கேட்ட அந்த குரலுக்கு பதில் கூறத் தெரியாமல், கண் கலங்கி நின்றவளிடம்,

" தீதி, உன்னால தான் இப்ப அந்த சின்ன பொண்ணு உயிரோடு இருக்கு ....
நீ உயிரோட இருந்தா தானே என்னையும் தம்பியையும் காப்பாத்தி கரை சேர்க்க முடியும் ....
உன்னை பார்த்து தான் நானும் தம்பியும் தைரியமா இருக்கோம்... உனக்கு பிடிக்கலைன்னா இந்த வீட்டை விட்டு கூட போயிடு, ஆனா செத்து மட்டும் போயிடாத தீதி..." என்ற தங்கையின் பேச்சில் தன்னை தொலைத்தவள்,
அவளைக் கட்டியணைத்துக் கொண்டு கதறி அழுதாள்.

ஒருவழியாக
தானும் சமாதானமாகி தங்கையையும் சமாதானப்படுத்தி, அவள் உறங்கும் வரை காத்திருந்தவளுக்கு, அப்போது தான்
அர்ஜுனின் நினைவு வர, அவன் கொடுத்த ஜெர்கின் பாக்கெட்டில் தேடிப் பார்த்தவளுக்கு, அவனது அலுவலக முகவரி, கைபேசி எண்ணும் கிட்ட,
அவளது வரவிற்காக அவனது ஆன்மா வழிமேல் விழி வைத்து காத்துக்கொண்டிருக்கிறது என தெரியாமலேயே அவனை நோக்கி பயணமானாள்.

விடித்ததிலிருந்து ஏனோ அர்ஜுனுக்கு
சுபாவின் நினைவுகளே...

ஒரு ஆண்மகன், அதுவும் காவல்துறை அதிகாரியாக பயிற்சி எடுத்தவன்,
நிறைய கொலைகாரர்கள் மற்றும் கொள்ளைகாரர்களை கண்டவன்,
அவனுக்கே நேற்றைய சம்பவம் சவாலாகத்தான் இருந்தது .

அவனை விட ஏழெட்டு வயது சிறியவள்,
ஆரோக்கியமற்ற மெலிந்த தேகம்,ஆனால் அவளுக்குள் இருந்த மனிதநேயமும், துணிவும், அங்கிருந்த ஒருவருக்குக் கூட இல்லை என்றெண்ணிவன்,

உன்கிட்ட பேசணும் போல இருக்கு சுபா... ஆனா உன்கிட்ட போன் கூட இல்லையே ...
உனக்கு சுபத்ரான்னு பேர் வைக்கிறதுக்கு பதிலா
தைரியலட்சுமினு பேரு வச்சிருக்கணும்....

ஏன்னா எனக்கே வாழ்க்கைய, எந்த சூழ்நிலையிலும், தைரியமா தன்னம்பிக்கையோட ஃபேஸ் பண்ணனும்னு சொல்லி கொடுத்தவளாச்சே....

என்று வாய்விட்டு புலம்பியபடி, அலுவலகம் வந்தவனுக்கு ஏகப்பட்ட வேலைகள் காத்திருக்க, புதிதாகப் பதவி ஏற்றுக் கொண்டதால், அவனுக்கு அந்த மாவட்டத்தைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் ஏராளமாக இருந்த நிலையில்,

" சார், உங்களை பார்க்க ஒரு பொண்ணு வந்திருக்கு ..."

" யாரு ..."

" நேத்து நடந்த ட்ரெயின் ராபரில, அந்த சின்னப் பெண்ணை காப்பாத்தின பொண்ணு சார் ..."

அவனது எண்ணத்தின் நாயகியை பற்றித்தான் கூறுகிறார் , என்று தெரிந்ததும், சந்தோஷத்தில் தலைகால் புரியாமல்

" அந்த பொண்ணை அனுப்புங்க ..."
என்றான் ஆர்வத்தோடு.

ஓரிரு நொடியில் அவள் வர,

" வா சுபா, உக்காரு ..."
என்றவனின் கண்களுக்கு நேற்றை விட
மிகுந்த சோகமாக காட்சி அளித்தாள்.

இன்று அவள் அணிந்திருந்த சுடிதார் அவளது உடல் அமைப்பிற்கு சரியாக பொருந்தியிருக்க , அவளிடம் இருந்த ஆடைகளிலேயே, அதுதான் ஓரளவிற்கு
நல்ல உடை போலும் . ஆனால் அதுவுமே மிக மங்கிய நிலையில் தான் இருந்தது.

அதனை அவள் அணிந்திருந்த பாங்கு மிக கண்ணியமாக இருக்க, கையில் பாலித்தீன் பை, காலில் ஹவாய் செப்பலோடு வந்தவளின் கண்கள்,
அவனைக் கண்டதும், உணர்ச்சிப் பிழம்பாக பொங்க ஆரம்பிக்க, ஏதோ ஒரு பெரிய மன உளைச்சலில் இருக்கிறாள் தன் தைரியலட்சுமி என்று உணர்ந்தவன், உடனே தன் உதவியாளரை அழைத்து,

" இன்னும் ஒரு ஹாஃப் அன் ஹவர்க்கு யாரையும் உள்ள விடாதீங்க... ஐ அம் இன் இம்பார்ட்டண்ட் மீட்டிங்...." என்றவன்

" சொல்லு சுபா.. என்ன பிரச்சனை ..."
என வாஞ்சையாக கேட்டதும்,

அதுவரை அழுகையை அடக்கி
வைத்திருந்தவள் , வாய்விட்டே அழ ஆரம்பிக்க,
அவளது அழுகையே சொல்லியது அவள் மிகவும் காயப்பட்டிருக்கிறாள் என்று .

வாழ்க்கையை எந்த சூழ்நிலையிலும் தன்னம்பிக்கையோடு எதிர் கொள்பவள், இப்படி துடித்த அழுகிறாள் என்றால், ஏதோ அவளைப் பெரிதாக பாதித்திருக்க வேண்டுமென்றுணர்ந்தவன், அவளது மனச்சுமை அழுகையாய் வடியும் வரை காத்திருந்துவிட்டு,

" சொல்லுமா ..." என்றான் மென்மையாக .

முதலில் ஊடக விஷயங்களை பகிர்ந்தவள், பிறகு அவளது தந்தை பேசியதை மிகுந்த நாகரிகத்தோடு மேலெழுந்தவாறு திக்கித் திணறி கூறி முடிக்க,

அவளது வார்த்தைகள் நாகரீகமாக விழுந்தாலும்,
அவளது பார்வையில் தெரிந்த வலியே அவள் கேட்ட வார்த்தைகளின் அசலை அவனுக்கு சொல்லாமல் சொல்ல

அவனுடைய இத்தனை வருட காவல்துறை அனுபவத்தில் ஒரு பெண்,
எப்படிப்பட்ட வார்த்தைகளால் தாக்கப் படுவாள் என்பதை அறியாதவனா...
அவள் சொல்லாமல் விட்ட வார்த்தைகளெல்லாம் அவனுக்கு தன்னிச்சையாகவே புரிய, கடைசியாக அவள் தற்கொலைக்கு முயன்றதையும்
வெள்ளந்தியாக தெரிவித்த மாத்திரத்தில், அது அவனுள்
ஆழிப்பேரலையை சுழற்றி அடித்தது போன்ற உணர்வினை தர, ஏதோ ஒரு உள்ளுணர்வு அந்நிகழ்வை எண்ணிக் பார்ப்பதைக் கூட தடுக்க, நெஞ்சில் பாரம் ஏறிய நிலையில்,

" சாப்பிட்டியா ..." என்றான் பேச்சை மாற்ற முயன்று.

" இல்ல சார், ஆனா பசி இல்ல..."

" ஆனா எனக்கு பசிக்குது, நான் பிரேக்பாஸ்ட் சாப்பிடல ... வா ரெண்டு பேரும் சாப்பிடலாம் ..." என்றவன் உதவியாளரை அழைத்து, காலை உணவுக்கான பொட்டலங்களை வாங்கி வரச் சொல்ல, உணவு வந்ததும், அவளை சாப்பிட வைத்து உடன் தானும் உண்டு முடித்தவன் ,

" நான் வேணா உன் அப்பா கிட்ட வந்து பேசட்டுமா ..."

" வேணாம் சார், எனக்கு அந்த வீட்டுக்கு போகவே பிடிக்கல ..." என்றவளின் பேச்சில் தீவிரம் தெரிய, அவனுக்குமே
அவள் தற்கொலைக்கு முயன்று, பின்பு அதனை கைவிட்டநிலையில் ஏதோ ஒரு உந்துதல் காரணமாக வேறு எங்கும் செல்லாமல் தன்னைத் தேடி
வந்திருப்பதே பெரும் நிம்மதியை அளிக்க, மீண்டும் அவள் வீட்டிற்கு சென்றால் அவளது உயிருக்கு உத்தரவாதம் இல்லை.

தன் கண்காணிப்பிலேயே இருப்பதுதான் பாதுகாப்பு என்றெண்ணியவனுக்கு தெரியாது அவளுக்கான நாள் குறிக்கப்பட்டது குறிக்கப்பட்டது தான்.
மிஞ்சிப்போனால் இவ்வுலகில் அவள் வாழப்போவது அதிகபட்சம் 3 மாதங்கள் என்று.


" சரி இப்ப என்ன பண்ணலாம் சொல்லு ..." என்றான் ஆர்வமாக.

" எனக்கு வேலை வேணும் சார் ..."

" நீ இன்னும் படிப்பையே முடிக்கல, அடுத்த மாசம் ஃபைனல் எக்ஸாம் எழுதி முடிச்சாதான் உன் படிப்பே முடியுது இப்ப உனக்கு என்ன வேலை கிடைக்கும் ..."

" என் படிப்புக்கேத்த வேலை வேணும்னு நான் கேட்கல சார், உங்க வீட்ல ஏதாவது வேலை இருந்தா கூட நான் செய்வேன் சார் .." என்றவளை பார்க்க பாவமாக இருக்க,

" என் வீட்ல உனக்கு நான் என்ன வேலை கொடுக்குறது..." என்று நெற்றியை நீவிவிட்டவனைப் பார்த்து

" ஏன் சார் உங்க வீட்டம்மா, ஒத்துக்க மாட்டாங்களா ... கோவப்படுவாங்களா..." என்றவளை பார்த்து புன்னகை பூத்தபடி

" அவ கோவப்படுவாளா, பொறுமைசாலியான்னு எனக்கு தெரியாது ..."

" ஏன் சார் ..." என்ற சந்தேகத்தோடு அவள் கேள்வி எழுப்ப,

" கல்யாணமாகி இருந்தா தானே வீட்டம்மா இருப்பாங்க ... எனக்கு தான் கல்யாணமே ஆகலையே... அதனாலதான் உன்னை என் வீட்டுக்கு கூட்டிட்டு போக முடியல ..." என்றவன் துரிதமாக யோசித்து, அவள் தங்குவதற்காக உயர்தர மகளிர் விடுதியை ஏற்பாடு செய்ததோடு, , அவளுக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்காக அரைநாள் விடுப்பு எடுத்துக்கொண்டு அவளோடு பயணமானான்.

முதலில் அவன் அவளை அழைத்துச் சென்ற இடம் அலைபேசி விற்குமிடம்.
அவள் தீவிரமாக வாங்க மறுக்க ,

"நான் உன்னோட காடியன், உன்னை நான் கான்டெக்ட் பண்ண உன்கிட்ட போன் இருக்கணும் ... அதனால தான் வாங்கறேன் ..." என கூறி விலை உயர்ந்த அலைபேசியை வாங்கிக் கொடுத்துவிட்டு, அடுத்து அவளை அவன் அழைத்துச் சென்ற இடம் பெண்களுக்கான உலகம்.

அங்கு பெண்களுக்கான துணிமணி, உள்ளாடைகள், அலங்காரப் பொருட்கள், ஆபரணங்கள், விதவிதமான கைப்பைகள், செருப்புகள் என அனைத்தும் குவிந்து கிடக்க,
ஒரு பெண் உதவியாளரை அவளுக்கு நியமித்து, அவளுக்கு தேவையானதை உடனிருந்து தேர்ந்தெடுக்குமாறு பணித்தான் .

உள்ளாடையில் இருந்து கைப்பை செருப்புகள் வரை, அனைத்தையும் வாங்கிக் கொடுத்தவன், கடையிலேயே ஒரு நல்ல ஆடையை தேர்ந்தெடுத்து அவளை அணிய செய்து , புத்தக கடைக்கு அழைத்துச்சென்று அவளுக்கு தேவையான புத்தகங்களை வாங்கி கொடுத்துவிட்டு, கடைசியாக அவளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மகளிர் விடுதியில்
அவளை சேர்த்து விட்டுச் ஒரு வித மனநிம்மதியோடு தன் இல்லம் சென்றான்.

மூன்று நாட்கள் இருவரும் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள முயலவில்லை ...

அவனுக்கு அம் மாவட்டம் புதிது
என்பதால், பகல் நேரம் போதாமல் இரவு நேரமும் அவன் பணிக்காக செலவிட,
அவளுக்கு இன்னும் 10 நாட்களில் தேர்வு இருப்பதால், அவளது எண்ணமெல்லாம் படிப்பிலேயே இருக்க,

அப்படியே அவனிடம் பேச நினைத்தாலும் நன்றி என்ற வார்த்தையை தவிர வேறு எதுவும் அவள் பேசப்போவதில்லை ...

ஏற்கனவே அவன் செய்த உதவிக்கு அவள் இரண்டு மூன்று முறை நன்றி
தெரிவித்து விட்டாள் அவனும் ஏற்றுக்கொண்டு விட்டான் என்கின்ற நிலையில்
இருவரும் தத்தம் பணிகளில்,
கர்ம சிரத்தையாக ஈடுபட்டுக் கொண்டிருந்த போது,

நான்காவது நாள் காலையில்,

" சுபா உன் கிட்ட கொஞ்சம் பேசணும் ...
ஈவினிங் வெளில போலாம் வரியா..." என்று கேட்ட அர்ஜுனின் குரலில், ஒருவித அவசரத்தோடு தயக்கமும் கலந்திருந்தது.


தகிப்பாள்
 
அத்தியாயம் 20


மகள் வீட்டை விட்டு சென்று இரண்டு நாட்கள் ஆன நிலையிலும், விட்டது தொல்லை, செலவு மிச்சம் என்ற மனோநிலையில் இருந்த
சந்திர நாத்தை
பைனான்சியர் அருணை விட ஆயிரம் மடங்கு அயோக்கியன் ஒருவன் அணுகி, சுபத்ராவை மணந்து கொள்ள கேட்டதோடு, பணம் கொடுப்பதாகவும் சொல்ல, அப்போதுதான் பொன் முட்டை இடும் வாத்தை ஒரே நாளில் அறுத்தெறிந்து விட்டோமே என்ற எண்ணத்தில் சுபத்ராவை தேடி கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டார் சந்திரநாத்.

சுபத்ராவின் தாயார் இந்திரா மட்டும்,
மகள் வீட்டை விட்டு சென்ற கவலையை வாய்விட்டு சொல்ல கூட முடியாத நிலையில் மௌன கண்ணீர் வடித்துக் கொண்டிருக்க, ஜானவி தான்,
அக்கா எங்கிருந்தாலும் நன்றாக இருப்பாள்,
என தன் தாய் மற்றும் தம்பிக்கு ஆறுதல் கூறி தேற்றியிருந்தாள்.

தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கை ஊடகங்களில், அர்ஜுன் கொடுத்த பேட்டியை பார்த்த சந்திரநாத்,
அன்று தன் மகளுடன் காரில் வந்து இறங்கியவன் இவன்தான் என அறிந்து , அவனது அலுவலகத்தை தெரிந்து கொண்டு அவனை சென்று சந்தித்தார்.


" என் பொண்ணை எங்க வச்சிருக்க ..." என்றார் எடுத்த எடுப்பில் ஏக வசனத்தில்.

" உங்க பொண்ணு சேர வேண்டிய இடத்துக்கு வந்து சேர்ந்துட்டா... நீங்க கிளம்பலாம் ...."

" யார் பொண்ணை யார் உரிமை கொண்டாடறது... அவளை எங்கடா வச்சிருக்க ...."

" சுபாவோட அப்பான்னு பாக்கறேன்... இல்ல உன் மூஞ்ச பேத்துடுவேன்... பொண்ணு வீட்டை விட்டு வந்து ரெண்டு நாளைக்கு மேல ஆகுது, இப்ப தான் உனக்கு பொண்ணை தேடணுங்கிற எண்ணமே வந்ததா ...." என்றான் நக்கலாக.

" பொண்ணு அழகா இருக்காளேன்னு வச்சுக்கிட்டயா..."
என்ற சந்திரநாத்தின் மன வக்கிரத்தை பார்த்து ,

" ஓங்கி அறைஞ்சேன்னா, தாங்க மாட்ட,
பெத்த பொண்ணையே தப்பா பேசுறியே உனக்கு வெக்கமா இல்ல... உனக்கு எப்படியா , அப்படி ஒரு அருமையான பொண்ணு பொறந்துச்சு .."

" இங்க பாரு எனக்கு என் பொண்ணு வேணும் ..." என்றார் சந்திர நாத் விடாமல்.

" ஏன் வேற எவனுக்காவது அவளை மறுபடியும் விலை பேசிட்டு வந்திருக்கியா ..." என்று அர்ஜுன் உண்மையை உடைத்து கேட்க

" அவ என் பொண்ணு டா, அவளுக்கு கல்யாணம் பண்ணுவேன், இல்ல அவளை வச்சு வியாபாரம் பண்ணுவேன் அதைக் கேட்க நீ யாரு...." என்று கூறிக்கொண்டே அவன் மீது பாய்ந்து அவனது சட்டையை சந்திர நாத் பிடிக்க,

" இந்த ஒரு காரணம் போதும் உன்னை தூக்கி உள்ள வச்சி லாடங் கட்டுறதுக்கு ...ஒழுங்க ஓடிப் போயிடு... இல்ல உன்னை கொன்னு புதைச்சிடுவேன்...."

" நான் இந்த விஷயத்தை சும்மா விடமாட்டேன் ... இப்பவே ஐஜி ஆபிசுக்கு போறேன்..."

" போ, எங்க வேணாலும் போ... உன்னால என்னை ஒன்னுமே பண்ண முடியாது..." என
சந்திரநாத்தை விரட்டியடித்தவனுக்கு,
அடுத்த அடி எப்படி எடுத்து வைப்பது எனத் தெரியாமல் யோசித்து யோசித்து கடைசியில் அதனை கைவிட்டு தன் பணியில் மூழ்கிப் போனான்.

அடுத்த 4 மணி நேரத்தில் அவன் எதிர்பார்த்தது போல் ஐஜியிடமிருந்து அழைப்பு வர,

" என்ன ஏ.கே ... அங்க என்ன நடக்குது... அந்த பொண்ணோட அப்பா ஏதேதோ வந்து சொல்றான்..." என்றவரிடம் நடந்த அனைத்தையும் பகிர்ந்த அர்ஜுன்,

" அந்த ஆளு பேருக்கு தான் அவளோட அப்பா ... ஆனா அவன் நல்லவன் கிடையாது சார்... அந்தப் பொண்ணை பணத்துக்காக யாருக்கோ விற்க பார்க்கிறான் சார்... அந்த பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணு ... அவளுக்கு நல்ல வாழ்க்கையை அமைச்சு கொடுக்கணும்னு போராடிக்கிட்டு இருக்கேன் சார்..."

" சொல்றேன்னு தப்பா எடுத்துக்காத,
அந்த பொண்ணு மேல உனக்கு எந்த உரிமையும் இல்லாம அந்த பொண்ணோட அப்பாவை எதிர்த்து உன்னால என்ன செய்ய முடியும் ...
ஊர் உலகம் மட்டுமல்ல சட்டமும் அவன் சொல்றத தான் நம்பும், நீ சொல்றத நம்பாது... இவ்ளோ அந்த பொண்ணுக்காக யோசிக்கிறயே
உனக்கு அந்த பொண்ணை பிடிச்சிருந்தா , நீயே அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டு அவளுக்காக போராடலாமே ... அப்ப உனக்கு மட்டும் தான் அந்தப் பொண்ணு மேல முழு உரிமை இருக்கும் ...இத நான் சொல்லி தான் உனக்கு தெரியணுங்கிறதில்ல ஏ.கே..." என்றவருக்கு பதில் சொல்லத் தெரியாமல் திணறியவன்,

" நான் அந்த அங்கில்ல(angle)யோசிக்கவே இல்ல சார்..." என்றான் உண்மையாய்.

" அந்த பொண்ணோட அப்பா மீடியாவுக்கு போனா பெரிய பிரச்சனை ஆயிடும்... அப்புறம் அந்த பொண்ணு பேர் மட்டுமில்ல உன் பேரும் கெட்டுப் போகும் ... இன்னைய வரைக்கும் உன் பதவில எந்த பிளாக் மார்க்கும் வாங்காதவன் நீ... அதனால தான் சொல்றேன் ..."

" சரிங்க சார், கூடிய சீக்கிரம் ஒரு நல்ல முடிவு எடுக்கிறேன் ..." என்று பேசி முடித்தவனுக்கு மனதில் ஆயிரம் ஆயிரம் சிந்தனைகள்.

சுபா அடிப்படையில் பொறுமைசாலி, உழைப்பாளி, மனிதநேயம் கொண்டவள் ,தைரியமானவள், நேர்மையானவள் , அழகியும் கூட. ஆனால் இவைகள் மட்டும் ஒரு திருமணத்திற்கு போதுமானவையா என்றால் அவனைப் பொருத்தமட்டில் இல்லை என்ற பதில் தான் வரும்.

திருமணத்திற்கு அடிப்படையே ஈர்ப்பு, பிறகு காதல், அதன்பின் திருமணம், தாம்பத்தியம் கடைசியில் குடும்பம் இதுதான் திருமணத்தைப் பொறுத்த மட்டில் அவனது நிலைப்பாடு.

திருமணத்திற்கு அடிப்படையான ஈர்ப்பே இதுவரையில் அவனுக்கு அவளிடம் ஏற்பட்டதில்லை...
பின்பு மற்றதெல்லாம் எப்படி ...
அதுமட்டுமல்ல இருவருக்குமிடையே கிட்டத்தட்ட 7 வயது வித்தியாசம் வேறு...

ஆனால் ஒன்று மட்டும் உண்மை , அவன் கண்டவர்களில் 90% பேர் இரு முகம் கொண்டவர்கள்.
கொள்கை என்ற ஒன்று துளிகூட இல்லாமல் பணத்திற்காகவும் பதவிக்காகவும் வில்லாய் வளைந்து கொடுக்கும் வேடதாரிகள்.
தான் வாழ வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக எந்த அளவிற்கும் சென்று அடுத்தவர்களின் குடியை கெடுப்பதில் வல்லுனர் பட்டம் பெற்றவர்கள்.
அவர்களுக்கு தெய்வம் என்ற ஒன்றும் கிடையாது , மனசாட்சி என்று ஒன்றும் கிடையாது . அவர்களை பொறுத்த மட்டில் பணம், பணம் , பணம் தான் வாழ்க்கை.
இப்படிப்பட்ட கலியுகத்தில் யாதொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் அடுத்தவர்களுக்காக உயிரையே பணையம் வைத்து உழைக்கும் சுபா போன்றவர்களை பார்ப்பதே அரிது என்பதால் தான் அவளுக்காக போராடிக் கொண்டிருக்கின்றான்,

பணத்தைக் கொடுத்து எல்லாவற்றையும் வாங்கி விடலாம் ஆனால் உண்மை, நேர்மை, விசுவாசம் மனிதநேயம் இவையெல்லாம் கோடிகளை கொட்டிக் கொடுத்தாலும் கிடைப்பது அரிது....

அவனது பணத்திற்காகவும் பதவிக்காகவும் பல்லிளித்த பெண்கள் ஏராளம் . ஆனால் சுபா அவனது பதவியை அறிந்து கொண்டதிலிருந்து அவள் கண்ணில் ஒருவித பயமும் மரியாதையும் மட்டுமே தெரிய

கடைசியாக அவள் அவனுக்கு நன்றி கூறி விட்டு கிளம்பும் போது கூட, யாதொரு உறவும் இல்லாத ஆண்மகனின் பணம் தனக்கெதற்கு என்ற நிலையில்

" நான் வேலைக்கு போன உடனே இந்த பணத்தை எல்லாம் திருப்பி கொடுத்திடறேன் சார்..." என்றவளின் பேச்சில் தெரிந்த நேர்மையும் நாணயமுமே அவனது ராஜ வம்சத்தை கட்டி பரிபாலனம் செய்ய தேவையான அத்தனை தகுதியும் அவளிடம் இருப்பதாக சொல்லாமல் சொல்லின.

ஆனால் அதே நேரத்தில்
அவளை மணந்து கொண்டு ஒரு கணவனாக அவளை நெருங்க முடியுமா ...
என்ற கேள்வியே அவன் முன்னிருக்கும் சவாலாகி போக,
பச்சிளம் குழந்தைகள் என்றும் பாராமல் தன் வேட்கையைத் தணித்துக் கொள்ளும் மனித மிருகங்களுக்கு மத்தியில்
100 சதவீதம் நேர்மையான ஆண்மை கொண்ட அந்த ஆண்மகனின் மனதில் காதல் துளிர்க்காமல் காமம் பிறக்காது
என்ற ஆழமான சித்தாந்தமே
அவளிடமிருந்து அவனை தள்ளி நிறுத்தியது.

அவனுக்கு அவள் மேல் ஈர்ப்பு தான் இல்லையே ஒழிய அன்பும் அக்கறையும் அளப்பறியா இருந்தது .. எப்பொழுது அவளது தந்தையை பற்றி தெரிந்து கொண்டானோ அப்பொழுதே அவள் விடுதியில் இருப்பதைவிட அவன் வீட்டில் இருப்பது தான் பாதுகாப்பு என்று முடிவெடுத்தவனுக்கு ஒன்று மட்டும் உறுதியாகத் தெரிந்தது.

இத்தனை நாட்களாக அக்னியை மறக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தவனுக்கு கடந்த 3 நாட்களாக அக்னியின் நினைவே இல்லை, அதுமட்டுமல்ல
சுபாவின் வீட்டில் அவளுக்கு ஒரு பிரச்சனை என்ற போது, அவனது உள்ளுணர்வுக்கு அது உறைத்து ஏன் கனவாக வரவேண்டும் .... என்ற கேள்வியும் உடன் எழாமலில்லை.

அவளுக்கும் எனக்கும் ஏதோ விட்ட குறை தொட்ட குறை, அதனால்தான் என் உள்ளுணர்வால் அவளைப் புரிந்துகொள்ள முடிகிறது, ஒருவேளை
எங்கள் திருமணத்திற்கு பிறகு நாளடைவில் அவள் மீது எனக்கு ஈர்ப்பு ஏற்படுமோ... என்ற நப்பாசையும் உடன் ஏழ, சுபாவை சந்தித்த நொடியிலிருந்து இந்த நொடி வரை அவன் மனதில் ஏதோ இனம் புரியாத நிம்மதி உலவுவதை உணர்ந்தவனுக்கு
அவனுடைய நீண்ட கால மன அழுத்தத்திற்கு மருந்தாக
இருப்பாள் என்ற நம்பிக்கை மெல்ல மெல்ல துளிர் விட ஆரம்பிக்க,
அவள் வாழ்க்கை துணையாக வந்தால் நிச்சயம் அவன் எதிர்பார்த்த நிம்மதி நிலைக்கும் என்றுணர்ந்து, ஒரு வழியாக அவளுடனான திருமணத்திற்கு தயாரானவனுக்கு தெரியாது, எந்த நற்குணங்களை அடிப்படையாக வைத்து அவளை மணக்க விரும்பினானோ, அதே நற்குணங்களே அவளது இறப்பிற்கும் காரணமாகப் போகிறதென்று.


பிறகு தான் அவளை தொடர்பு கொண்டு, மறுநாள் மாலை சந்திப்பதை பற்றி பேசினான்.

தற்போது அவளை சந்திக்க அவளது விடுதிக்கு சென்று கொண்டிருந்தவனின் மனம் ஒரு நிலையில் இல்லை . அவன் காவல்துறையில் பணிபுரிய தொடங்கிய நாளிலிருந்து இன்று வரை,
இப்படி ஒரு உணர்வை அவன் உணர்ந்ததே இல்லை. எந்த சூழ்நிலையையும் அளவுக்கு மீறிய தைரியத்துடன் சந்திக்கும் அவனுக்கு, இந்தப் படபடப்பு புதிதாக தான் இருந்தது.

விடுதியின் லாபியில் அவன் வரவிற்காக அவளும் காத்துக் கொண்டிருக்க, புதுவித மனநிலையோடு வந்தவன் அவளைப் பார்த்ததும் அசந்து தான் போனான்.

மூன்று நாட்களுக்கு முன்பு, அவன் விட்டுச் சென்ற பெண்ணா இது,
என்றிருந்தது அவனுக்கு ....

அவன் வாங்கிக் கொடுத்த, அடர் ஊதா நிற சல்வார், கனகச்சிதமாக அவளுக்கு பொருந்தியிருக்க, மேலும் பொருத்தமான அணிமணிகள் மற்றும் கைப்பை சகிதமாக அம்சமாக காட்சியளித்தாள் .

கடந்த மூன்று நாட்களாக மன உளைச்சல் ஏதும் இல்லாமல் இருந்ததால், முகத்தில் கூட அப்படி ஒரு தெளிவு.

அவளது மாசு மருவற்ற முகத்தில் வெளிறிய நிறம் மறைந்து, சந்தன நிறத்தோடு மெல்லிய சிவப்பும் கூடியிருந்தது.

அவளும் அவனை இப்பொழுதுதான் கூலர்ஸ் மற்றும் டீசர்ட் ஜீன்ஸில் பார்க்கிறாள்.
அவனுக்கு அது வெகு பொருத்தமாகவே இருப்பது போல் அவளுக்கும் தோன்றத்தான் செய்தது.

வழக்கமான விசாரிப்புகளுக்கு பிறகு
அவளது தந்தையுடனான சந்திப்பைப் பற்றி கூறி சற்றே தணிந்திருந்த அவளது மன உளைச்சலை மீண்டும் அதிகப்படுத்த விரும்பாமல்,

" இனிமே நீ வெளியில போகணும்னா, சொல்லு, ரெண்டு செக்யூரிட்டிய அரேஞ்ச் பண்றேன்... "

" ஏன்..." என்றாள் ஒருவித பயத்துடன்.

" இல்லம்மா, அந்த கொள்ளையர்கள இன்னும் அரெஸ்ட் பண்ணல....அவங்களால உனக்கு ஏதாவது பிரச்சனை வரலாம் அதுக்காக தான்..."

சுற்றி முத்தி பார்த்தவள்,

" அந்த செக்யூரிட்டி எல்லாம் எங்க இப்போ ..."
என்றவளின் குழந்தைத்தனமான பேச்சை கேட்டு குலுங்கி சிரித்தவன்,

" ஏன் உன்னை நான் காப்பாத்த மாட்டேனா ... அஞ்சாறு பேரை நான் ஒருத்தனே அடிப்பேம்மா பயப்படாத ...
நான் உன்கூட இல்லாதப்ப தான் அவங்க உன் கூட வருவாங்க... சரியா ..."
என்றான் அவள் கண்களை குறும்பாக நோக்கி.


அவளும் ரயிலில் நடந்த கொள்ளைச் சம்பவத்தில் அவனுடைய வீர தீர பராக்கிரம செயல்களை பார்த்தவள் அல்லவா ... அதனை நினைத்து பார்த்து நாணத்தோடு சிரித்தவளை அவன் அழைத்துச் சென்றது ஒரு பெரிய நட்சத்திர உணவகத்திற்கு.

அவளது விடுதியிலிருந்து பத்து நிமிட பயணத்திலருந்த அந்த உணவகத்திற்கு, பயணப்படும் போது இயல்பான நல விசாரிப்புகள் தாண்டி இருவரும் வேறு எதுவும் பேசிக் கொள்ளவில்லை.

பெரிய லானில் ஆங்காங்கே குடில் போல் ஒரு குடை கீழ் தனித்தனியே அமைக்கப்பட்டிருந்த
உணவு மேஜையில்
இருவரும் சென்று அமர்ந்ததும்,

" எக்ஸாம் பிரிபரேஷன்ஸ் எல்லாம் எப்படி போய்கிட்டு இருக்கு ..."

" முன்னெல்லாம் ஃபர்ஸ்ட் ரிவிஷன் முடிக்க ஒரு வாரம் ஆகும், இப்ப ஹாஸ்டல்ல வேலை எதுவும் இல்லாததால இந்த த்ரீ டேஸ்லயே ஃபர்ஸ்ட் ரிவிஷன் முடிச்சிட்டேன் ..." என்றவளின் கண்ணில் சந்தோஷம் மின்ன,

" குட், என்ன சாப்பிடறா..."

" நீங்களே ஆர்டர் பண்ணிடுங்க..." என்றாள் எதை எப்படி ஆர்டர் செய்வது என தெரியாமல்.

அவளது மிரட்சியான பார்வையிலிருந்தே அவளது மனதை படித்தவன்,

" கார்லிக் நான், பாலக் பன்னீர்..." என்றவன்
" இது எனக்கு பிடிக்கும் அதனால உனக்கும் ஆர்டர் பண்றேன் ..." என்றவன் ஸ்டார்ட்ஸில் சூப் மற்றும்
கோபி மஞ்சூரியனும் ஆர்டர் செய்தான்.

அவன் அவளது விடுதியின் வசதியைப் பற்றி விசாரிக்க, அதற்கு பதிலளித்தவள், அவனுடைய பணியைப் பற்றி விசாரித்தாள் .
இவ்வாறாக இருவரும் பேசிக்கொண்டே ஒருவாறு சாப்பிட்டு முடிக்க,

" ஏதோ பேசணும்னு சொன்னீங்களே .." என்றவளின் கண்களில் தயக்கம் மின்ன

" பேச தான் வந்திருக்கேன் ... வா அந்த கார்டன்ல போய் பேசலாம் ..." என்றழைத்துச் சென்றவன், மேல்பூச்சு எதுவுமில்லாமல் நேரடியாக

" என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா..." என்றான் குரலில் இயல்பை கூட்டி.

அவள் அவனை அதிர்ந்து பார்த்த பார்வையிலேயே, இந்தக் கேள்வியை அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை
என்றுணர்ந்தவன், அவளது முக உணர்வுகளை படித்தபடியே அமைதியாக இருக்க,

" நான் கொஞ்சம் யோசிக்கணும் ..." என்றாள் தயக்கத்தோடு தீவிரமாக .
அவளது இந்த பதில், அவனுக்கு வியப்பை தர,

" காரணம் எதுவா இருந்தாலும் சொல்லு...
நான் ஆறு அடிக்கு மேல உயரம், நீ அஞ்சரை அடி உயரம் ...
நீ நல்ல கலரா இருக்க, நான் மாநிறம்தான் ... கொஞ்சம் பார்க்க முரடனாவும் தெரியறேன்..
பத்தாததுக்கு போலீஸ்காரன் வேற...
இதெல்லாம் உனக்கு பிடிக்கலைன்னா பிடிக்கலைன்னு நேரடியாவே சொல்லலாம் ...
ஏன்னா கல்யாணம் உன்னோட தனிப்பட்ட விஷயம், அதுல முடிவெடுக்க உனக்கு முழு உரிமை உண்டு.... " என அவள் மனமுதிர்ச்சி தெரியாமல், இயல்பான கல்லூரி மாணவியிடம் பேசுவது போல் அவன் கேட்டு வைக்க,

வயது என்றைக்குமே தாமாக முன்வந்து மன முதிர்ச்சியை கொடுத்து விடாது ...
வாழ்க்கையில் பட்ட அனுபவமும் வலியும் தான் மன முதிர்ச்சியை கொடுக்கும் என்பதை நிரூபிக்கும் விதமாக தயக்கத்தோடு பார்த்தவள்,

" சார், என்னை கல்யாணம் பண்ணிக்கிறியான்னு நீங்க கேட்டதுக்கு ஒரே ஒரு காரணம் தான் இருக்க முடியும்...

அது என்னோட ஏழ்மை தான் ... நீங்க என்னோட ஏழ்மையை போக்கணும்னு நினைச்சு தான் இப்படி கேட்டிருக்கீங்கன்னு எனக்கு தோணுது ...

மூணு நாளைக்கு முன்னாடி, பார்த்ததுக்கும், இப்ப என்னை பாக்குறதுக்கும் உங்களுக்கு நிறைய வித்தியாசம் தெரிஞ்சிருக்கும் ... நீங்க என் கார்டியனா இருக்கும் போதே இவ்ளோ வித்தியாசம்....ஒரு வேளை நான் உங்களை கல்யாணம் பண்ணிக்கிட்டா நிச்சயமா,
என்னோட இந்த நிலைமை ரொம்ப நல்ல படியா மாறிடும்...

ஆனா நீங்க எதை பார்த்து என்னை கல்யாணம் பண்ணிக்க நினைச்சீங்களோ கல்யாணத்துக்கு அப்புறம் அதுவே இல்லாத போது, அதுக்கு மேல நம்ம வாழ்க்கை எப்படி இருக்கும் ..."

என்றவளின் கேள்வியில் அவளது மன முதிர்ச்சியை கண்டு, அதிசயத்து தான் போனான்.

அவள் சுற்றிவளைத்து கேட்ட கேள்வியின் சாராம்சம் இதுதான்.
கல்யாணத்துக்கு அடிப்படை காதலாக இருக்க வேண்டுமே ஒழிய பரிதாபமாக இருக்கக்கூடாது என்கின்ற மறைமுக செய்தியை அதில் சொல்லாமல் சொல்லி இருந்தாள்.

அவளது புரிதலில் ஒன்று சரி ஒன்று தவறு.
அவன் அவளை காதல் இல்லாமல் மணக்க நினைத்தது சரி, ஆனால் அந்த முடிவு அவளது ஏழ்மையைப் பார்த்து இல்லை அவளது குணத்தை பார்த்து என்பதுதான் அவளுக்கு தெரியவில்லை.

அதே போல் இல்லாத காதலையும், ஈர்ப்பையும் இருப்பதாகச் சொல்ல அவன் மனமும் ஒப்பவில்லை, ஆதலால்

" என் முடிவுக்கு காரணம் உன் ஏழ்மை இல்ல உன் குணம்.... உன்னோட தைரியம் , மனிதநேயம் , பொறுமை , உழைப்பு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ..
அதனாலதான் கேட்டேன் ..." என்று கவனமாக வார்த்தைகளை பிரயோகித்தான்.

வாழ்க்கையில் பெரும்பாலும் பொருளாதாரத்தின் அடித்தட்டு நிலையையே சந்தித்து வாழ்ந்தவளுக்கு, அவனது இந்த விளக்கம் ஏற்பதற்கு உரியதாய் இல்லை.

" சார், எங்கிட்ட பணம் இல்ல, படிப்பு இல்ல , பதவி இல்ல ....எதுவுமே இல்லை ... என் குடும்பமும் எனக்கு ஆதரவா இல்ல ... இந்த நிலையில என் குணத்தை பார்த்து கல்யாணம் பண்ணிக்கிறேன் சொல்றீங்களே என்னால நம்ப முடியல சார்..." என்றாள் வெளிப்படையாக.

" நிச்சயமா எனக்கு உன் குணம் பிடிச்சிருக்கு ...." என்றவன் ஒரு பேச்சுக்காக கூட, உன்னை முதல் முதலில் பார்த்த போதே எனக்கு பிடித்திருந்தது என்பன போன்ற வார்த்தைகளை எல்லாம் லாவகமாக தவிர்த்தான்,
ஏனோ அவனுக்கு, பொய் சொல்வதில் உடன்பாடு இல்லை.

அதற்கு மேல் இருவரும் பேசிக்கொள்ளாமல், விடைபெற
இடையில் ஒரு நாள் கழிய, யார் முதலில் அடுத்தவரை தொடர்பு கொள்வது என்பதில் இருவருக்குமே ஒருவித தயக்கம் இருக்க,
நாய்க்கு முழுத் தேங்காய் கிடைத்தது போல் தனக்கு கிடைக்கப்போகும் வாழ்வை எண்ணி, மகிழ்வதா அல்லது அச்சம் கொள்வதா என தெரியாமல் தவித்துப் போனாள் .

அவளது கண்ணில் தெரிந்த மருட்சியையும் பயத்தையும் சரியாகப் புரிந்து கொண்ட அர்ஜுன்,
அவளிடம் தன் குடும்பத்தைப் பற்றி சொல்லாமல் தள்ளிப் போட எண்ணினான்.

அவனுடைய பதவியையே பிரமித்துப் பார்த்துக்கொண்டிருப்பவளுக்கு , அவன் ராஜ வம்சத்தை சார்ந்தவன், தற்போதும் அவனது குடும்பம் குறுநில மன்னர்களைப் போல் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்றெல்லாம் தெரியவந்தால் , அவள் நிச்சயம் இந்த திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்க மாட்டாள் என்பதை உணர்ந்தே அப்படி செய்தான்.

ஒரு நாள் கழித்து, அர்ஜுனை கோவிலில் சந்தித்து, திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தவள்,

" சார் , நம்ப கல்யாணம் எப்ப நடக்கப்போகுது ..."

" சார்னு, கூப்பிடாத என்னவோ மாதிரி இருக்கு ...." என்றவன்,

" வர வெள்ளிக்கிழமை ..."

" அப்ப என் எக்ஸாம் ..."

" கல்யாணம் பண்ணிக்கிட்டு, நிம்மதியா எக்ஸாம் எழுது, மத்ததெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம் ..." என்ற ஒரே வரியில்,
அவளுக்குத் தேவையான பதிலை கூறியவனிடம்

" என் தங்கச்சி ..." என்று ஆரம்பித்தவள் அதற்கு மேல் பேச முடியாமல் திணற,

" உன் தங்கச்சியை எல்லாம் என்னால கல்யாணம் பண்ண முடியாது உன்னை மட்டும்தான் கல்யாணம் பண்ணிக்க முடியும் ... அதுக்குதான் சட்டத்துலயும் இடம் இருக்கு...." என முகத்தை தீவிரமாக வைத்தபடி கண்களில் மட்டும் குறும்பை கூட்டி சொன்னவனை பார்த்து,

குலுங்கி சிரித்தவள்,

" இல்ல ஜி....என் தங்கையும் தம்பியையும் நல்லா படிக்க வைக்கணும் .... அதுக்கு நான் வேலைக்கு போகணும் ..."

" நீ வேலைக்குப் போ.... அது ஒரு பிரச்சினையே இல்ல ... இனிமே உன் தம்பியும் தங்கையும் என் தம்பி தங்கச்சி மாதிரி , அவங்க படிப்பு செலவை நான் பார்த்துக்கறேன் போதுமா ..." என்றவனை அவள் நன்றியோடு பார்க்க,

" ஒரு விஷயத்தை நீ நல்லா புரிஞ்சுக்கணும், நீ என் மனைவின்னு நான் சொல்லிட்டேனா, அவ்ளோதான் ... அதை மாத்துற சக்தி எந்த ஒரு சடங்கு, சட்டம், சம்பிரதாயத்துக்கும் கிடையாது ....
இந்த கல்யாணமே நம்ப உறவை இந்த சமுதாயம் மதிக்கணுங்கிற ஒரே காரணத்துக்காக தான்....
மற்றபடி யாரும் என்னை எந்த விதத்திலும் கண்ட்ரோல் பண்ண முடியாது ... நான் முடிவு எடுத்தா எடுத்தது தான் .... அதனால இனிமே கோவிலுக்கு எல்லாம் கூட்டிட்டு வந்து சாமியை காட்டி என்னை பயமுறுத்தணும்னு நினைக்காத ... என் முடிவு எப்பவுமே என் மனசாட்சியோட சம்பந்தப்பட்டது... சரியா ..." என்றவனின் பேச்சு அவளுக்கு சிரிப்பை வரவழைக்க,

" நான் உங்களை பயமுறுத்த இங்க கூட்டிட்டு வரல, நான் என் வாழ்க்கையில எடுக்க போற முடிவு சரியா இருக்கணுமேன்னு பயந்து போய் இங்க வந்திருக்கேன் ..." என்றவள்

" என் அப்பாவுக்கு தெரிஞ்சா பெரிய பிரச்சனை ஆயிடும், அதனால இந்த கல்யாணம் எங்க வீட்டுக்கு தெரிய வேண்டாம் ..." என்று சரியாக அவள் தந்தையை கணித்து கூறியவளிடம் ,

" சரி ..." என்றான்.

" உங்க அம்மா அப்பா நம்ம கல்யாணத்த ஒத்துபாங்களா..." என்றவளின் கண்ணில் ஆர்வம் அதிகமாக இருக்க,

" ஒத்துபாங்களாங்கிற கேள்விக்கே இடமில்ல ... அவங்க ஒத்துகிட்டு தான் ஆகணும் ....கல்யாணத்துக்கு கூப்பிடுவோம் ... வந்தா சந்தோஷம்..."
என்றவனை வித்தியாசமாக பார்த்தவள்,
அவன் குடும்பத்தைப் பற்றி விசாரிக்க,
அதற்கு மேலெழுந்தவாறே, பதில் சொல்லி வைத்தான்.

அவன் அவளிடம் மறைத்த இரண்டு உண்மைகள் .

ஒன்று அவள் தந்தையுடன் உரையாடியது, இரண்டு அவன் பெரிய பணக்கார ராஜ வம்சத்தை சார்ந்தவன் என்பது.

அதுமட்டுமல்ல அவன் அவளிடம் மறைமுகமாக சொன்ன ஒரே ஒரு உண்மை,

அவளை அவள் குணத்திற்காக தான் அவனுக்கு பிடித்திருக்கிறது, வேறு எந்த ஈர்ப்பும் இல்லை என்பது.

ஆக மொத்தம் அவன் மறைத்த ரெண்டு உண்மையும், மறைமுகமாக சொன்ன ஒரே ஒரு உண்மையும் சேர்ந்து அவன் வாழ்க்கையே ஒன்றுமில்லாமல் செய்யப்போகிறது என்பது தெரியாமல், அவர்களது திருமணத்திற்கான ஏற்பாட்டை செய்ய தொடங்கினான் அர்ஜுன்.

ஏற்கனவே அர்ஜுன், ரயில் கொள்ளையர்களிடமிருந்து, சுபத்ராவை காப்பாற்றிய செய்தி,
வடநாட்டில் விரிவாக விவாதிக்கப் பட்டாலும், தமிழ்நாட்டில் ஆங்கிலப் பத்திரிகையில் ஏதோ ஒரு மூலையில் மட்டும் பெட்டி செய்தியாக வெளிவந்தது.

மேலும் ஆங்கில செய்தி சேனல்களில் மட்டுமே அந்த செய்தியும் ஒளிபரப்பப்பட்டதால், மேல்தட்டு மக்களைத் தாண்டி, மற்றவர்களை செய்தி சென்றடையவில்லை.

இந்நிலையில், சுபத்ரா உடன் நடக்கவிருக்கும் அவனது திருமணத்தை கூட காவல்துறை
வட்டாரம் மற்றும் அவனுடைய நெருங்கிய நட்பு வட்டங்களுக்கு மட்டுமே தெரியப்படுத்தியிருந்தான்.

ஏனென்றால் ஒரு சாரார் ரயில் கொள்ளை சம்பவத்தில் ஊடகங்கள் சொன்னதை
உண்மையென்று நம்பியும், ஒரு சாரார்
அரசாங்கம் சொன்னதை உண்மை என்று நம்பியிருந்த நிலையில், மற்றவர்கள் பார்வையில்
அவன் தியாகியாகவும், அவனது மனைவியை பரிதாபத்திற்குரியவளாகவும் பார்க்கப்படுவதில் அவனுக்கு துளிக்கூட உடன்பாடு இல்லை என்பதால் அப்படி ஒரு ஏற்பாட்டினை செய்திருந்தான்.

அக்னியை தொடர்புகொண்டு , அவன் திருமணத்தைப் பற்றி கூற, ரயில் கொள்ளை சம்பவத்தில்
அர்ஜுன் சுபத்ராவை காப்பாற்றியதை செய்திகளில் பார்த்ததாகச் சொல்லி சிலாகித்துப் பேசியவள், " லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்டா.... சூப்பர்ப் அர்ஜுன்..."
என்று ரசித்துக் கூறி அர்ஜுனுக்கு வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்தாள்.

மேலும் அவள் கருவுற்று இருக்க, அஜய்யும் வெளிநாடு சென்று இருப்பதால், அவளால் திருமணத்திற்கு வர சாத்தியப்படாது என்பதையும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொண்டாள்.

ரகு கிருஷ்ணாவின் வியாபார நட்பு வட்டம், இந்தியா மற்றும் உலக நாடுகள் முழுவதும் பரவி இருந்ததால்,
அர்ஜுனின் திருமணம் குறித்த செய்தி,அவன் கூறும் முன்பே,
அவரது நட்பு வட்டங்கள் மூலம் அவரை செவ்வனே சென்றடைந்திருக்க,

இந்நிலையில் அர்ஜுனும் அவரைத் தொடர்புகொண்டு, திருமணத்தைப் பற்றி கூற, வேண்டாவெறுப்பாக கேட்டுக்கொண்டிருந்த ரகு கிருஷ்ணா,
அழைப்பைத் துண்டிப்பதற்கு முன் கேட்ட ஒரே கேள்வி,

" உன்னோட கல்யாணத்தைப் பத்தி மீடியாக்கு நியூஸ் கொடுக்க போறியா ..."

" நோ வே.... என் கூட ஒர்க் பண்றவங்க, என்னோட ஃப்ரெண்ட்ஸ்ஸ மட்டும் தான் கல்யாணத்துக்கே இன்வைட் பண்ணியிருக்கேன் ..."
என்றதும், பெருத்த நிம்மதியோடு அழைப்பைத் துண்டித்தார்.

பிறகு தாயை தொடர்பு கொண்டு , அவன் திருமணத்தை பற்றி கூற, அவனுடைய தந்தைக்கு சற்றும் குறைவில்லாமல் அவரும் பட்டும் படாமல் கடமைக்காக காதில் வாங்கிக் கொண்டார்.

( ஏதாவது பேச வேண்டும் என்றால் மரியாதை நிமித்தம் காரணமாக இருவரையும் தனித்தனியே அவர்களுடைய பிரத்தியேக அலைபேசிக்கு அழைத்துப் பேச வேண்டும் என்ற ராஜ வம்சத்தின் பாரம்பரியத்தை சிறுவயதிலிருந்தே கற்பிக்கப்பட்டு வளர்க்கப்பட்டதால் அதே நடைமுறையை இப்போதும் பின்பற்றினான் )


" ஊர் நாட்டுல பத்திரிக்கை அடிச்சு, நிச்சயமான கல்யாணத்துக்கு கூப்பிடுவாங்க, ஆனா உங்க பையனோட கல்யாணமே பத்திரிக்கை மூலமாத்தான் நிச்சயம் ஆகியிருக்கு...

போயும் போயும் அந்த சோரம் போன பொண்ணையா கல்யாணம் பண்ணிக்க போறான் .... இவனுக்கு வேற பொண்ணே கிடைக்கலையா ....
இவனுக்கும் அக்னிக்கும் கல்யாணம் நடக்கலைன்னு சந்தோஷப்பட்டுகிட்டு இருந்தேன் ... அதுல மண்ணள்ளிப் போட்டுட்டானே ....

இவனுக்கு நம்ம அந்தஸ்துக்கு தகுந்த மாதிரி பொண்ணு பார்க்கணும்னு நெனைச்சுக்கிட்டு இருந்தேன்.... இப்ப அதுவும் முடியாம போயிடுச்சு ..

நம்ம குடும்பத்தோட ஸ்டேட்டஸ் என்ன ... ஃப்ரெண்ட்ஸ் சர்க்கிள் என்ன ...
எல்லார் முன்னாடியும் மானத்தை வாங்கறானே..." என்று கோபத்தில் கொந்தளித்துக் கொண்டிருந்த மங்களேசுவரியிடம் ,

" நீ என்ன சொன்னாலும் அவன் நம்ம பேச்சை கேட்க போறதில்ல , அதனால நாம அந்த கல்யாணத்துக்கு போக வேண்டாம் ... அவன் மீடியாவுக்கு நியூஸ் கொடுக்கப் போறதில்லையாம் ...
அந்த விதத்துல வி ஆர் லக்கி... அதோட தமிழ்நாட்டுல என்னோட க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ் தவிர வேறு யாருக்கும் இவன் கல்யாணம் பண்ணிக்க போறது தெரியாது ... அதனால ஜஸ்ட் லீவ் இட் நவ்... அப்புறம் பாத்துக்கலாம் ..."என்றார் நிம்மதியாக.


அர்ஜுனுடன் பணிபுரிந்த மற்றும் தற்போது பணிபுரியும் காவல்துறை நட்பு வட்டங்கள், அவர்களது குடும்பங்கள் புடைசூழ அழகாக அரங்கேறியது அர்ஜுன் - சுபத்ரா திருமணம்.

என்னதான் கட்டுக்கோப்புடன் நடந்த திருமணம் என்றாலும், அந்த மாவட்டத்தில் குறுகிய காலத்தில் ஏகப்பட்ட சாதனைகள் செய்து பிரபலம் அடைந்திருந்த அர்ஜூனின் திருமணம், அரசல்புரசலாக மேற்குவங்கம் முழுவதும்
சென்றடைந்து தான் இருந்தது.

பெங்காலி முறையில் அவர்களது திருமணம் இனிதே நடைபெற,

யாககுண்டத்தில் எரிந்துகொண்டிருந்த அக்னியின் முன்பு மணமகனும் மணமகளும் அமர்ந்த நிலையில் வேத மந்திரங்கள் முழங்க,
வைதீக முறையில் தொடங்கிய திருமணத்தில் ' சம்ப்ரதான்' என்ற நிகழ்வு நடந்தேறியது.

தமிழ்நாட்டில் இந்துக்கள் திருமணத்தில் மணப்பெண்ணின் தந்தை
கன்னிகாதானம் செய்வதற்கு இந்த நிகழ்வு ஒப்பாகும்.

இதனை மணப்பெண்ணின் தந்தை ஸ்தானத்திலிருந்து செய்தவர், சுபத்ராவை மணந்துக்கொள்ள சொல்லி அர்ஜுனிடம் அறிவுறுத்திய ஐஜி சக்ரபோர்த்தி தான்.

பிறகு மணப்பெண்ணின் முந்தானை மணமகனின் அங்கவஸ்திரத்தோடு முடிச்சிடப்பட்டதும், ஏழு வெற்றிலைகள் ஒன்றன் பின் ஒன்றாக யாக குண்டத்தை சுற்றி பரப்பப்பட்டிருக்க , மணப்பெண் ஒவ்வொரு வெற்றிலையின் மீதும் ஒவ்வொரு அடி எடுத்து வைத்து மணமகனை பின் தொடர வேண்டும் . இந்த சடங்கே சப்தபதியாக கருதப்பட்டது.


மற்ற ஆபரணங்களோடு சங்கு வளையல்கள் ஒரு ஜோடி மற்றும் பவளத்தால் ஆன சிவப்பு நிற வளையல்கள் ஒரு ஜோடி( திருமணத்திற்கு மிக மிக முக்கியமானவை) போன்றவை மணப்பெண்ணிற்கு அணிவித்து, சிவப்பு நிற புது புடவையால் மணப்பெண்ணின் முகம் மூடப்பட்டிருக்க ,

தமிழ்நாட்டு இந்துக்களின் சடங்கு போல் மங்கல்யதாரணம் எனப்படும் மாங்கல்யம் தரிக்கும் முறை நிகழாமல்
மூடப்பட்டிருந்த மணப்பெண்ணின் சிவப்பு நிற துணியை விலக்கி, அவளது வகுட்டு நெற்றியிலிருந்து உச்சிவரை , சிந்தூர் எனப்படும் குங்குமத்தை மணமகன் இடுவதே திருமணத்தின் முக்கிய நிகழ்வாக கருதப்படும் சிந்தூர் தான்(Sindhoor dhan) ஆகும்.

இந்த நிகழ்விற்கு பிறகு தான் அந்த மணப்பெண், அந்த மணமகனுக்கு சொந்தமாகிறாள் .

அவர்களது திருமணம் முடிவு செய்யப்பட்ட நாளிலிருந்து தான், சுபத்ரா அர்ஜுனை ஆழ்ந்து நோக்க ஆரம்பித்தாள்.

ராஜ வம்சத்தில், பிறந்து வளர்ந்தவனுக்கு , கம்பீரம், தோரணை ஆளுமை எல்லாம் உடன்பிறப்புகளாய் உடன் இருக்க,
அவனுடைய பேச்சு, நடை, உடை பாவனை, உடல் மொழி ஆகியவை இயல்பாகவே அவனை மற்றவர்களிடமிருந்து தனித்துக் காட்ட,
ஒரு அரசனுக்கே உரிய பெருந்தன்மையும் , நெஞ்சுரமும் , நேர்மையும் அவனிடத்தில் ஏராளமாக கொட்டிக் கிடக்க,

அவையெல்லாம் அவளுக்குள் அளவுகடந்த மரியாதையையும், நன்றி உணர்வையும் அவன் பால் உண்டாக்கியிருக்க, கூடவே காதலும் உண்டாகியிருந்தது ஆனால் கடைசியாக இருந்தது.

ஈர்ப்பு இல்லாமல் தொடங்கிய திருமணத்தில், சிந்தூர்தான் எனப்படும் சுபத்ராவின் வகிட்டில் குங்குமம் இடும் நிகழ்வில் தான், தன்னை மறந்து, அவன் உடலில் ஒரு வகை மின்சாரம் பாய்ந்தது போன்ற உணர்வு ஏற்பட, அதன்பின் நடைபெற்ற மற்ற திருமண சடங்குகளில் தன்னை மறந்து ஒன்றிப் போனான் அர்ஜுன்.

தன் தாய், தங்கை , தம்பி இல்லாமல் நடைபெற்ற திருமணம் , அவளுக்கு வருத்தத்தை அளித்திருந்தாலும்,
நிதர்சனத்தை உணர்ந்து சுதாரித்துக் கொண்டவளை, அர்ஜூனின் கண்கள் அறிந்து கொண்டன.

அவனுக்கென்று இவ்வுலகில் யாரும் இருப்பதாக அவன் உணர்ந்ததில்லை , ஆதலால் எந்த ஒரு உறவிடமிருந்தும் அவனுக்கு எதிர்பார்ப்பு இல்லை.

ஆனால் சுபத்ரா, அவளது தாய், தம்பி, தங்கை, அனைவரையும் அளவுக்கு அதிகமாக நேசிப்பவள் என்பதால்தான்
இந்த முக மாற்றமே என்பதனை நொடிப்பொழுதில் புரிந்துகொண்டான்.

திருமணத்திற்கு முந்தைய தினமே,
சுபத்ராவின் பொருட்களெல்லாம் விடுதியிலிருந்து, அர்ஜுனின் இல்லத்திற்கு மாற்றப்பட்டு அவளுக்கென்ற அறையில் வைக்கப்பட, தற்போது திருமண சடங்குகளும் இனிதே முடிவடைந்த நிலையில், முதன்முறையாக அர்ஜுனின் இல்லத்திற்கு பயணமானாள்.

அரசாங்கத்தால் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கென்று ஒதுக்கப்பட்ட காவலர் குடியிருப்பில், அவனது இல்லம் இருந்தது.

சிறிய தோட்டத்துடன் கூடிய அந்தத் தனி வீடே,
அவளுக்கு தேவலோகமாக தென்பட்டது .

அவர்களின் முறைப்படி, ஒரு பெரிய தாம்பாளத்தில் பால் ஊற்றி, அதில் குங்குமம் மஞ்சள் கலந்து ஆரத்தி போல் தயார் செய்து, வீட்டு வாயிற்படியில் வைக்க, மணமகள்
தன் இரு பாதங்களையும் அதில் தோய்த்து நின்றபடி அனைவரிடத்திலும் ஆசிபெற்ற
பிறகு, அதிலிருந்து பாதங்களை மெல்ல வெளியே பதித்து சிவப்பு நிற பாதச்சுவடுகள் படிந்த படி வீட்டிற்குள் அடி எடுத்து நுழைவதென்பது மரபு.

சக்ரபோர்த்தியின் குடும்பத்தினர் முன்னிருந்து, திருமணத்திற்கான அனைத்து சடங்குகளையும் ஏற்பாடு செய்திருக்க,
சுபத்ரா தன் பாதத்தை, தாம்பாளத்தில் பதித்து, மெதுவாக வெளியே எடுத்து வைத்து ஈரடி நடக்கும் முன்பே,
புடவை சிக்கி பாதம் வழுக்க, இடறி விழ போனவளை அருகில் இருந்த அர்ஜுன்,
தன் இருக்கரங்களில் அள்ளிக்கொள்ள,அங்கு வேடிக்கைப் பேச்சும் , சிரிப்பு சத்தமும் விண்ணைப் பிளந்தது.

கீழே விழப் போனவளின் இடையில் கரம் பதித்தல்லவா, அவன் அவளை அள்ளிக் கொண்டான், முதல்முறை ஒரு ஆணின் ஸ்பரிசம், அவள் உயிர் நாடி வரை சென்று தாக்க, பாவம் அவனிடம் தான் எந்த பிரதிபலிப்பும் இல்லை.

அவனுடைய உணர்வுகள் அனைத்தும் தான் அக்னியிடம் அடகு வைக்கப்பட்டிருக்கிறதே... பிறகு எப்படி மனதாலும் உடலாலும் அதை உணர்வான் ....

மேற்கொண்டு செய்ய வேண்டிய மற்ற சடங்குகள் முடிந்த நிலையில் சக்ரபோர்த்தியின் குடும்பம் விடைபெற,
அவளுக்கான அறையை காட்டியவன்,

" இன்னும் எக்ஸாம்க்கு 4 நாள் தான் இருக்கு நிம்மதியா படி ..." என்று அறிவுறுத்தி விலகிச் சென்றான்.

இரவு உணவு வேலைக்காரர்களால் தயார் செய்து வைக்கப்பட்டிருக்க
அவனுக்கு பரிமாறி விட்டு தானும் உண்டவளுக்கு , அந்த உணவு அமிர்தமாய் தொண்டையில் இறங்கியது.

அவளுக்கு ஓரளவு சமையல் தெரியும்.
அவள் விரும்பி சாப்பிடுவதும் அவளது அன்றாட உணவில் ஓர் அங்கமாய் இருப்பதும் மீன் தான். மேற்கு வங்கத்தில் கடல் இருந்தாலும், அங்கு கங்கையாற்றில் பிடிக்கப்படும் மீனுக்கு தான் சுவை அதிகம்.

அப்படி பிடிக்கப்பட்ட மீன்களைக் கொண்டு மிக சுவையாக தயாரிக்கப்பட்டிருந்த உணவு வகைகள் தான் , அன்றிரவு அவள் உண்டதும்.

அசைவத்தில் மீனை தவிர, வேறு எதையும் உண்ணாதவளுக்கு , அங்கிருந்த உணவு வகைகள் அனைத்தும் மீன் கொண்டு செய்யப்பட்டிருந்தது ஆச்சரியத்தைக் கொடுத்தது.

அந்த வீட்டின் தோட்டம், கூடம், சமையலறை, படுக்கையறை, கழிப்பறை என அனைத்தின் உள் அலங்காரத்தையும் கண்டு பிரமித்து தான் போனாள்.

கூடத்தில் இருந்த சோபா செட்டில் இருந்து, ஜன்னலுக்கு போடப்பட்டிருந்த திரைச்சீலைகள் வரை, அனைத்தும் தூய்மையோடு அழகும் நேர்த்தியுமாய் இருந்தது அவளது கவனத்தை வெகுவாக கவர்ந்தது.

அந்த வீடு அரசாங்கத்தால் அவனது பதவிக்காக வழங்கப்பட்டிருக்கிறது அவ்வளவே. ஒருவித தாழ்வு மனப்பான்மையோடு பிரமிப்பும் கலந்து 2000 சதுர அடியில் அமைந்திருந்த அந்த வீட்டையே, ஏதோ திருமலை நாயக்கர் மஹாலை பார்ப்பது போல் பார்த்துக் கொண்டிருப்பவளுக்கு , அவனுக்கே உரித்தான அவனது கொடைக்கானல் எஸ்டேட்டுக்கு நடுவில் 3 ஏக்கரில் கட்டப்பட்டிருந்த அரண்மனையை பற்றி தெரிய வந்தால், அவளது மன உணர்வுகள் எப்படி இருக்குமோ என்றெண்ணியவனுக்குத் தெரியாது கூடிய விரைவில், அதனைப் பற்றி தெரிந்து கொண்டு அவள் எடுக்கப்போகும் விபரீத முடிவு.


தகிப்பாள்
 
அத்தியாயம் 21

உண்டு முடித்து, தோட்டத்தில் நடை பயின்று கொண்டிருந்தவளின் மனதின் ஒரு ஓரத்தில் இனம் புரியாத வலி , வேதனை, மறு புறத்தில் மகிழ்ச்சி , நிம்மதி, பிரமிப்பு என இரு வேறு கலவையான மனநிலையில் சிக்கி தவித்துக் கொண்டிருந்தாள்.

ஒரே நாளில் யானை மாலையிட்டு மகாராணி ஆக்கிய கதை போல், தன் நிலைமை ஒரே நாளில் உயர்ந்ததை எண்ணி மகிழ்ச்சியை விட பயமே அவளிடம் அதிகமாக மண்டியிருந்தது.

பிறந்ததிலிருந்தே பணப்பற்றாக்குறையால் 'இல்லை' என்ற வார்த்தையை தவிர வேறெதையும் கேட்டறியாதவள், மிகுந்த நேர்மையோடும் தன்மானத்தோடும் பணத்தை தேடும் பணியில்,
ஈடுபட்டிருந்தவளுக்கு , மனித மனங்களை அறியும் சூழ்நிலையும் அவகாசமும் இல்லாமல் போனதால்
குடும்ப கஷ்ட நஷ்டங்களை அறிந்து பொறுப்புணர்வோடு நடப்பது , சகோதர சகோதரிகளிடம் அளவு கடந்த பாசத்தோடு இருப்பது, யார் என்றே தெரியாத மனிதர்களுக்கு கூட மனமுவந்து உதவுவது போன்ற அவளது நற்குணமெல்லாம் சுவாசிப்பது போன்று இயல்பான ஒன்றாகவே தெரிந்தது.

ஆனால் பணத்தோடு பிறந்து பணத்தோடு வளர்ந்தவனுக்கு அன்பை மட்டுமே பொழிந்த அன்னபூரணி அம்மாளையும் அக்னியையும் தாண்டி உலகமே இல்லை என்றிருந்த நிலையில் விதி வலுக்கட்டாயமாக அவர்களை அவனது வாழ்விலிருந்து அப்புறப்படுத்திய பின், மீண்டும் வெறுமையில் சிக்கித் தவித்தவனுக்கு மறுவாழ்வு அளித்தவள் இவள் என்றால் மிகையாகாது .

அவனைப் பொருத்தமட்டில் அவன் வாழ்வில் சந்தித்த சுயநல மனிதர்கள் ,உடன் இருந்து கொண்டே உதவாத உத்தமர்களுக்கு மத்தியில், ஊர் பேர் தெரியாத ஒருவருக்காக உயிரை கொடுத்து உதவும் இந்த உத்தமி உயர்ந்தவளாகத்தான் தெரிந்தாள்.

பணமிருந்தும் பண்போடு நடந்து கொண்டவனிடம் அவளுக்கு மரியாதையோடு
நன்றி உணர்வு துளிர்த்திருக்க,
பணம் இல்லை என்றாலும் பாசமும் மனித நேயமும் கொட்டிக்கிடக்கும் அவளிடம் அவனுக்கு அன்பும் அக்கறையும் மலர்த்திருக்க,
கடைசியில் கல்யாணத்திற்கு தேவையான காதல் கால் பங்கு அவளிடம் இருக்க, அதுகூட அவனிடம் காணாமல் போனது விதியின் சதி.

ஏனோ தன் தாய் , தங்கையிடம் பேச வேண்டும் என்ற எண்ணம் உதிக்க,
அதனை எப்படி செயலாற்றுவது என தெரியாமல் தவித்து போனாள்.

அப்பொழுது யாருடனோ அலைபேசியில் பேசியபடி நடந்து கொண்டிருந்த அர்ஜுனை பார்த்தவளுக்கு அவன் தேவதூதனாகவே காட்சி அளித்தான்.

அவனுடைய கம்பீரம், அழகு , ஆளுமை பதவி, பணம் அனைத்திற்கும் தான் தகுதியானவளா ... என்ற எண்ணம் மீண்டும் மீண்டும் தோன்றி அலைக்கழிக்க , ஏனோ அவளால் அந்த இல்லத்தில் பொருந்தி இருக்க முடியாமல், மூச்சு முட்டி போனாள்.

அவன் அவளை மணந்து கொண்டதற்கு, அவளது நற்குணத்தை காரணமாக கூறினாலும், ஏனோ அவளால் அதனை ஒரு காரணமாகவே எடுத்துக்கொள்ள முடியவில்லை .

அவளது மனம் தன்னையும் அவனையும் தராசில் நிறுத்தி பார்க்க,
எல்லா வகையிலும் அவனது எடை தட்டே கனம் கூடி தாழ்ந்திருந்தது.

இவன் மட்டும் இல்லை என்றால் என் வாழ்க்கை எப்படி எப்படியோ திசை மாறிப் போயிருக்கும் ....
சரியான நேரத்தில் கடவுளைப் போல் அல்லவா, என்னை ஆட்கொண்டு காப்பாற்றினான் ...
நான் பட்டிருக்கும் நன்றிக் கடனை எப்படி திரும்பச் செலுத்த போகின்றேனோ தெரியவில்லை .... என்றெண்ணி கொண்டே வானத்தை வெறித்துக் கொண்டிருந்தவளை , அலைபேசியில் பேசியபடியே பல முறை அவள் அறியாமல் பார்த்து அவள் மன உணர்வுகளை படித்தவன் ,

" உன்னை ஹாஸ்டல்ல சேர்த்த அன்னைக்கே, உன் பிரின்ஸ்பல் கிட்ட பேசிட்டேன் .... நாளைக்கு காலையில காலேஜ்க்கு போய் ஃபீஸ் கட்டிட்டு,
ஹால் டிக்கெட் வாங்கிட்டு வந்திடலாம்..." என்றான் அவளை நெருங்கி.

திருமணத்திற்காக செய்யப்பட்டிருந்த சிகை அலங்காரங்கள் எல்லாம் கலைக்கபட்டு
குற்றால அருவி போல் இருந்த நீண்ட கூந்தலை, தாழ்த்தி குதிரைவாலிட்டு,
வடநாட்டில் மங்களமாக கருதும், மெரூன் நிறம் கலக்காத சிவப்பு நிற பொட்டுடன், திருமணத்தின் போது அவன் அவள் வகுட்டில் இட்ட சிந்தூர் , கைகளில் மற்ற வளையல்கள் எல்லாம் கலைந்து, திருமணமானதை பறைசாற்றும் விதமாக
தந்தம் மற்றும் சிவப்பு நிற பவழ வளையல்களோடு இயல்பாக இளம் சிவப்பு நிற சல்வாரில் அழகாக காட்சியளித்தவளின் கண்களில்
அளவுக்கதிகமான மரியாதையும், நன்றி உணர்வும் கொட்டிக்கிடக்க,

அதை உணர்ந்தவன்,

" குட் நைட் ..." என்று கூறி விடைபெற்றான்.

மறுநாள் காலை இருவரும் அவளது கல்லூரிக்கு செல்ல, அவளிடம் தோன்றியிருந்த மாற்றத்தை கல்லூரி காவலாளியிலிருந்து, கல்லூரி முதல்வர் வரை, கூர்ந்து கவனித்தனர்.

அவள் அணிந்திருந்த ஆடை, அணி மணிகள், காலணி, கைப்பை, அவள் கையில் இருந்த வளையல்கள், மற்றும் மெருகேறிய முகம் அவள் புதிதாய் மணமானவள் என்பதை பறைசாற்ற,

உடன் அர்ஜுனும் வர, அவனைப் பற்றிய அறிமுகம் தேவை இல்லாததால், கல்லூரி முதல்வர்
மலர்ந்த முகத்தோடு வரவேற்று அவர்களை அமரச் செய்து , நலம் விசாரித்தோடு
கட்டணத்தை பெற்றுக் கொண்டு, கல்லூரி அலுவலகத்திலிருந்து தேர்வு நுழைவுச் சீட்டை வரவழைத்து தானே தன் கையாலே வழங்கியவர்,

" உங்க வைஃப், வெரிகுட் ஸ்டுடென்ட் ...நிறைய ஹார்ட் வொர்க் பண்ணி ரெண்டு வருஷமா யூனிவர்சிட்டி ஃபர்ஸ்ட் வந்து எங்க காலேஜ்க்கு பெருமை சேர்த்திருக்காங்க ..." என்றவர் அர்ஜுனிடம் இருந்து பார்வையை திருப்பி,

" சுபத்ரா, இந்த வருஷமும் நீ, யூனிவர்சிட்டி ஃபர்ஸ்ட் வரணும் ... ஆல் த பெஸ்ட் ..." என்று வாழ்த்தி வழியனுப்பினார் .

காரில் அமரும் போது தான் அவள் முக மாற்றத்தை கவனித்தவன்,

" சுபா , ஏன் ஒரு மாதிரி இருக்கே ..." என்றான் எப்பொழுதும் போல் வாஞ்சையாய்.

" இந்த பிரின்சிபல் மேடம், எத்தனை முறை என்னை தரக்குறைவா பேசி இருக்காங்க தெரியுமா ....

பீஸ் கட்ட முடியலைன்னா எதுக்கு படிக்க வர.... அப்படி படிச்சு என்ன கிழிக்கப் போற ... பீஸ் கட்டாம உனக்கு ஹால் டிக்கெட் கொடுக்க முடியாது ....வெளிய போன்னு ரொம்ப அசிங்கமா விரட்டியிருக்காங்க...

இன்னைக்கு நீங்க என்கூட இருக்கும் போது எனக்கு கிடைச்ச மரியாதையே வேற ... இவங்களுக்கு இப்படி கூட பேச தெரியும்னு இன்னைக்கு தான் தெரிஞ்சுகிட்டேன் ..." என்று கண் கலங்கியவளைப் பாசமாய் பார்த்தவன்,

" நீ ரெண்டு வருஷம் யூனிவர்சிட்டி ஃபர்ஸ்ட் வந்ததையும் சொல்லி புகழ்ந்தாங்க இல்ல ... என்னால உனக்கு மரியாதை கிடைக்கல, உன் படிப்பும், உன் ஹார்ட் வொர்க்கால தான் இந்த மரியாதையே கிடைச்சது..." என்றான் அவளை சமாதானப்படுத்தும் விதமாக.

" இல்ல ஜி, நான் ரெண்டு முறை யூனிவர்சிட்டி ஃபர்ஸ்ட் வந்திருக்கேன் ஒருமுறை கூட என்னை இந்த மாதிரி அவங்க புகழ்ந்ததே இல்ல..
எல்லாத்துக்கும் பணம் பதவி தான் காரணம்..." என்றவளின் பதிலில் விரக்தி விரவி வழிய,

" எல்லாரும் பணத்துக்கு மரியாதை கொடுக்க மாட்டாங்க சுபா .." என்றவன் பேசிக்கொண்டிருக்கும் போதே அவனது அலைபேசி ஒலிக்க,
எடுத்து இரண்டு நிமிடம் பேசிவிட்டு,

" உன்னை வீட்ல டிராப் பண்றேன்... எனக்கு கொஞ்சம் முக்கிய வேலை இருக்கு..." என்றவனின் சிந்தனையில் அன்றைக்கான பணி ஆக்கிரமிக்க , அவளிடம் மண்டிக் கிடக்கும் அளவுக்கதிகமான தாழ்வு மனப்பான்மையை கலைய நினைத்தவன் கடைசியில் மறந்தே போனான்.

வீடு வந்து சேரும் வரை இருவரிடத்திலும் அமைதியே நிலவி இருக்க,
அவன் அலுவலகம் சென்றதும் மொட்டை மாடியில் ஏதோ நினைவுகளோடு வலம் வந்து கொண்டிருந்தவளின் சிந்தனையை

" ஏ குக்கி, அந்த வழியை சுத்தம் பண்ணு ...." என்ற குரல் தடுத்து நிறுத்த, அனிச்சையாய், அழைப்பு வந்த திசையை பார்த்தவளுக்கு சற்று தொலைவில் , தோட்டவேலை நடந்துகொண்டிருக்க, அங்கு
தோட்டக்காரன் ஒரு சிறு பெண்ணை வேலை வாங்கிக் கொண்டிருந்தான்.

போன மாதம் வரை, அவள் வேலை செய்த வீடுகளில், அவளையும் 'குக்கி'( சின்னப்பொண்ணு என்ற அர்த்தத்தில் ) என்று தான் விளிப்பார்கள்.

அந்த சிறு பெண்ணின் நிலையிலிருந்து, இன்று தன் நிலை உயர்ந்திருப்பதை எண்ணிப் பார்த்தவளுக்கு, அர்ஜுன் ஏன் தன்னை மணந்து கொண்டான் என்ற கேள்வியே
மீண்டும் மீண்டும் தோன்றி அலைக்கழித்தது.

கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக,
அர்ஜுனை அறிவாள்.

இதுவரை அவன் பார்வையில் கனிவை மட்டுமே கண்டிருக்கிறாள்... சிறு சந்தர்ப்பத்தில் கூட காதலையோ, ஈர்ப்பையோ கண்டதேயில்லை ....
அவளைப் பொறுத்த மட்டில் அவள் பேரழகியும் இல்லை.

திருமணத்திற்கான அடிப்படை தகுதிகள் என்று சொல்லப்படும்
பணம், படிப்பு, பதவி, நல்ல குடும்பப் பின்னணி போன்ற எதுவும் அவளிடத்தில் இல்லை.

இந்நிலையில் அர்ஜுன் அவளை மணந்துக்கொண்டதற்கு, வேறு ஏதோ அசைக்கமுடியாத காரணம் இருக்க வேண்டும் , அது நிச்சயமாக அவன் கூறிய அவளது நற்குணங்கள் அல்ல என்ற முடிவுக்கே வந்திருந்தாள்.

சிறுவயதிலிருந்தே ஊறிப்போயிருந்த , அளவுக்கதிகமான அடிமை உணர்வும், தாழ்வுமனப்பான்மையும், பணக்காரர்கள் மற்றும் பதவி வகிப்பவர்களிடம் இருந்த மரியாதையும் பயமுமே இம்மாதிரி அவளை சிந்திக்க வைக்க,

தேர்வுக்காக இம்மாதிரியான சிந்தனைகளை முற்றிலும் ஒதுக்கி வைத்துவிட்டு தயாரானவள் அர்ஜுனிடம்,

" நாளைக்கு எக்ஸாம் ஸ்டார்ட் ஆகுது ... நான் எப்பவுமே, எக்ஸாம் எழுதறதுக்கு முன்னாடி கோவிலுக்குப் போறது வழக்கம் ஜி... அதே மாதிரி எக்ஸாம் முடியும் கடைசி நாளும் கோவிலுக்கு போ ..." என பேசிக்கொண்டே சென்றவளுக்கு அவன் கோவிலில் கூறியது நினைவுக்கு வர, உடனே கண்ணில் ஒரு வித பயத்தோடு பேச்சை பாதியில் நிறுத்தியவளின் பார்வையிலிருந்தே அதனை உணர்ந்து சிரித்தவன்,

" பயப்படாத நான் ஒன்னும் ஏத்திஸ்ட் இல்ல... எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு ...நீ என்னை 100% நம்பனுங்கிறதுக்காக சொன்ன வார்த்தைகள் அது... வா போலாம் ..."
என்றழைத்துச் சென்றான்.


அர்ஜுனுக்கு அவள் மீது இத்தனை நாட்களில் பெரிதாக ஈர்ப்பு ஏற்படவில்லை என்றாலும், அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு செல்ல வேண்டும், அவளோடு இருக்க வேண்டும், அவளுடன் பேச வேண்டும் என்ற எண்ணமெல்லாம் மெலிதாக அரும்ப ஆரம்பித்திருந்தது.

ஜடமாய் வேலைக்குப் போவதும் திரும்புவதும், சோர்ந்துபோன எந்திரமாய் வெறுமை சூழ்ந்த உலகில் வாழ்ந்து கொண்டிருந்தவனுக்கு அவன் கூறும் முன்பே மனம் அறிந்து
பணிவிடை செய்துகொண்டு,அவன் சொன்னதை செய்து கொடுத்து அவனுக்கு எல்லாமுமாய் மாறிப்போயிருந்தாள் சுபா.

அவனுக்கு எந்த நேரம் எது தேவை என்று அவளுக்கு நன்றாக தெரியும் ...'ஜி'யை தாண்டி ஒரு வார்த்தை வராது ...

மற்றபடி அவள் அறையில் அவள், அவன் அறையில் அவன்....

எப்பொழுதாவது சிரிப்பாள் ...சிரித்தால் அத்தனை அழகாக இருக்கும் ...
சிரிப்பதற்கு முன்பு சிரிக்கலாமா வேண்டாமா என்று பலமுறை யோசித்து விட்டுத்தான் சிரிப்பாள்...

சில சமயம் அவளே உணவுகளை சமைத்து பரிமாறுவாள். எப்பொழுதும் போல் மீன் அவள் சமையலில் முக்கிய அங்கம் வகிக்கும். விதவிதமான மீன்களை கொண்டு விதவிதமாக சமைப்பாள். அதில் குறிப்பாக 'கோய் மச்' என்னும் உணவு வகை கடுகு எண்ணெயில் மீனை பொரித்து செய்வது.

அதனை உண்டுவிட்டு அவன் கூறும்
"பாஹூத் ஸ்வாதிஷ்ட்...(ருசியா இருக்கு) " என்ற ஒரு வார்த்தையில் அவள் முகம் தாமரை பூவாய் மலரும்.

இந்த குறைந்த நாட்களில் வேலைக்காரர்கள் சமையலுக்கும் வீட்டு அம்மாவின் சமையலுக்குமான வித்தியாசத்தை உணர்த்திருந்தான். அவனவளின் அன்னத்தில் ருசியை விடவும் அன்பும் அக்கறையுமே அதிகமாக ஆட்சி செய்ய,
உண்டவனின் வயிறு மட்டுமல்ல மனமும் நிறைவை கண்டிருந்தது.

அவர்களின் திருமணத்திற்கு முன்பே, திருமணமான பெங்காலி பெண்கள் அவர்கள் முறைப்படி அணியும் அனைத்து ஆபரணங்களையும் சுபத்ராவிற்கு வாங்கிக் கொடுத்திருந்தான். அதில் குறிப்பாக
'நத்' என்னும் மூக்கில் அணிந்துக்கொள்ளும் வளையம், விரல் மோதிரங்களை சங்கிலி கொண்டு கையில் அணியும் பிரேஸ்லெட்டோடு இணைக்கும் வகை ஆபரணங்கள் போன்றவை மிகவும் முக்கியமானது.

அவனுக்கு கடவுள் நம்பிக்கை உண்டு.
அதே சமயத்தில் பெரிதாக பூஜை புனஸ்காரங்கள் செய்வதற்கு
தெரியாததோடு நேரமும் இருந்ததில்லை.

ஆனால் அவளை நன்கு அறிவான். அவளுக்கு பக்தி அதிகம். ஆதலால் திருமணத்திற்கு முன்பே அவளது விருப்பத்திற்கு ஏற்ப
துர்க்கை அம்மன் சிலையையும் மகா லக்ஷ்மி சிலையையும் வாங்கி
பரிசளித்திருந்தான்.

அவள் அந்த வீட்டில் அடியெடுத்து வைத்ததிலிருந்து அன்றாட பூஜைகள் நைவேத்தியங்களால் வீடே பக்தி மணம் கமழ்ந்திருந்தது.

முன் பக்கம் மிக படர்ந்த கொசுவம் வைத்து,
இடப்புற தோளில் இருந்த நீண்ட முந்தானை நுனியை, கழுத்தை சுற்றி வலப்புறத்தை தொடுவது போல் அணிவது பெங்காலி முறைப்படி புடவை அணியும் முறையாகும்.

கராட், டந்த், டசார் போன்ற பெயர்களைக் கொண்ட அப்புடவைகள் பெரும்பாலும் வெண் பட்டு நிறமும் அடர் நிற சிவப்பு பார்டரும் கொண்டவைகள்.

சில முக்கிய திதிகளில் அவர்கள் முறைப்படி புடவை அணிந்து, ஆபரணங்கள் தரித்து அதற்கேற்றார்போல் நீண்ட கூந்தலை கொண்டையிட்டு , அடர் சிவப்பு நிற திலகத்தோடு அவள் பூஜை செய்வது வழக்கம்.

அந்த அலங்காரத்தில் அவளை பார்ப்பதற்கு அத்தனை அழகாகவும் நேர்த்தியாகவும் இருக்கும், ஆனால் அதனை சொல்ல நினைக்கும் போது ஏனோ அவனது வாய் தன்னிச்சையாக பூட்டு போட்டுக்கொள்ளும்.

இந்நிலையில் ஒரு நாள் புதிய எண்ணிலிருந்து சுபத்ராவிற்கு அழைப்பு வர, அர்ஜுன் மட்டுமே அறிந்திருந்த அலைபேசி எண்ணிற்கு புதிய அழைப்பு எப்படி என்ற சந்தேகத்தோடு அழைப்பை ஏற்றவளிடம்

" தீதி, எப்படி இருக்க ... " என்ற தங்கை ஜானவியின் குரலை கேட்டு அகம் மகிழ்ந்தவள்

" நான் நல்லா இருக்கேன்..
நீ எப்படி இருக்க... எப்படி உனக்கு என் நம்பர் தெரிஞ்சது ...." என்று ஆர்வத்தோடு அவள் கேள்விக் கணைகளைத் தொடுக்க,

" ஜிஜாஜி தான், ஒருத்தர் மூலம் இந்த போனை எனக்கு வாங்கி கொடுத்தனுப்பியிருந்தாரு... அப்புறம் அவரும் என் கூட பேசினாரு... உன் நம்பர் கொடுத்து உன் கூட பேச சொன்னாரு ..." என்றவளின் பேச்சிலேயே அவள் அனைத்தையும் அறிந்து கொண்டிருப்பது தெரிய வர,
மனம் மகிழ்ந்தவள் தங்கை , தம்பி ,தாய் என அனைவருடனும் உரையாடி மகிழ்ந்தாள்.

தந்தை இல்லா சமயத்தில் தான் தங்கையும் அழைத்திருக்க, அளவளாவி முடித்ததும், அவர்களுக்கு இடையே ஆன தொலைபேசித் தொடர்பை அவர் தந்தைக்குத் தெரியாமல் தொடர முடிவெடுத்தனர்.

மாலை அர்ஜுனுடைய வாகன சத்தம் கேட்டு ஏறக்குறைய ஓடி வந்தவள்,
அவனை வெகுவாக நெருங்கி,

" தேங்க்ஸ் ஜி... " என்றாள் கண்ணில் லேசாக நீர் திரையிட்டு.

" முன்னாடியே இந்த ஏற்பாட்டை செஞ்சிருக்கணும் ....கொஞ்சம் வேலை அதிகம் ......." என்றவனும் பாசத்தோடு அவள் விழிகளை நோக்க, அவள் நேத்திரத்தில் அளவு கடந்த மரியாதை தெரிய,

" உங்க அம்மா அப்பா கிட்ட பேசினீங்களா ..." என்றாள் அவன் தாய் தந்தையரை பற்றி தெரிந்து கொள்வதற்காக .

" பேசின..."

" நம்ம கல்யாணத்த பத்தி என்ன சொன்னாங்க ..." என ஆவலோடு கேட்டவளிடம்

" பெருசா ஒன்னும் சொல்லல ..." என்றவனின் விட்டேத்தியான பதில்களே, அது குறித்துப் பேச அவனுக்கு விருப்பம் இல்லை என்பதை தெள்ளத் தெளிவாக சொல்ல, அதற்கு மேல் எதுவும் பேசாமல் அமைதி காத்தவளிடம்,

" எக்ஸாம் எப்படி எழுதி இருக்க ... இன்னும் எத்தனை எக்ஸாம் இருக்கு ..." என்றான் பேச்சை மாற்றும் விதமாக.

" எல்லா எக்ஸாம்சும் நல்லா எழுதி இருக்கேன் ஜி.... நாளைக்கு தான் லாஸ்ட் எக்ஸாம்..." என்றவளின் முகத்தை அவன் குறும்பாக நோக்க, காரணம் புரியாமல் நின்றவளிடம்

" கொஞ்சம் வழி விட்டீங்கன்னா, நான் குளிச்சிட்டு டிரஸ் மாத்திட்டு வந்துருவேன் ...." என்ற போது தான், வந்தவனை வாயிலிலே
வழிமறித்து, வெகு நெருங்கி நின்றபடி பேசிக் கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்தவள், ஒருவித நாணத்தோடு விலகி நிற்க, இதுநாள் வரை மரியாதையும் நன்றி உணர்வையுமே பிரதிபலித்த அவளது விழிகளில் முதன் முறையாக தோன்றிய சிறு வெட்கம் , அவனுக்குள் ஒரு வித ஈர்ப்பை ஏற்படுத்தின.

அதற்குள் சந்திரநாத் ஐஜி அலுவலகம் சென்று, அவரது மகளை அர்ஜுன் மணந்துக்கொண்டதை தெரிந்துக்கொண்டதோடு, சுபத்ராவும் அர்ஜுனின் இல்லத்திலிருந்து தக்க பாதுகாப்போடு கல்லூரிக்கு சென்று வருவதை, அவன் வீட்டு தெருமுனையில் பலநாள் வேவு பார்த்துத் தெரிந்து கொண்டு மீண்டும் அர்ஜுனை சந்தித்தார்.

" என் பொண்ணு எனக்கு வேணும் ..." இம்முறை வார்த்தைகள், மரியாதையுடன், குரல் உயர்த்தாமல் பொறுமையோடு வந்து விழ

" அவ உன் பொண்ணு இல்ல, என் பொண்டாட்டி .... நீ கிளம்பலாம்... இனிமே இது விஷயமா பேசிகிட்டு எங்கயும் சுத்திக்கிட்டு இருக்காத..." என்றவனின் தெனாவட்டு, ஏற்கனவே மிருகமாகிப் போயிருந்தவரின் மனதில்
மேலும் வன்மத்தை கிளப்ப,
அர்ஜுனை உற்றுப் பார்த்துக்கொண்டே

கூடிய சீக்கிரம் அந்த ஓடுகாலிய
உன்கிட்ட இருந்து பிரிச்சு கூட்டிட்டு போறேன்... பாரு .... என உள்ளுக்குள் சூளுரைத்த படி இடத்தை காலி செய்தார்.

சுபத்ரா கடைசி தேர்வு எழுதி முடித்த அன்று,

" எக்ஸாம் முடிஞ்ச அன்னைக்கும் கோவிலுக்கு போகணும்னு சொன்னியே... வா போலாம்..." என்றவனை ஒரு வித சங்கடத்தோடு பார்த்தவள்,

" இன்னும் ஒரு மூணு நாள் போகட்டுமே அப்புறம் போலாம் ..." என்றாள் தலைகுனிந்தபடி.

உடனே " ஏன் ...." என்றவன் " ஓ..." என்று ஏதோ புரிந்தது போல் முடித்தான்.

சுபத்ராவிடம் கூறியது போல், அர்ஜுன் தன் தந்தையை தொடர்புகொண்டு திருமணம் நடந்ததை பற்றி தகவல் தெரிவித்திருந்தான்.

திட்டவும் இல்லாமல் வாழ்த்தவும் இல்லாமல், யாரோ யாரையோ மணந்து கொண்டது போல் , கதைக்கேட்டு முடித்த ரகு கிருஷ்ணா ,

" உன்னை உன் அம்மா பார்க்கணும்னு சொன்னா ...நீ மட்டும் எப்ப ஊருக்கு வர ராஜா ..." என்ற கேள்வியில் கொதித்துப் போனவன்

" சுபாவை கூட்டிக்கிட்டு மூணு மாசம் கழிச்சு வரேன் ...."

" அப்ப நீ இங்க வரவே வேண்டாம் ...."

" சரி, நான் அங்க வரலை ..." என்று அழைப்பை துண்டித்திருந்தான்.

அர்ஜுன் சுபத்ராவை சந்தித்து கிட்டத்தட்ட மூன்று வாரங்களே ஆன நிலையில், ஏதோ முப்பது வருடங்கள் பழகியது போன்ற உணர்வை அது தந்திருக்க,

அவள் மீதான அவனது ஈர்ப்பானது நான்கு கால் பாய்ச்சலில் ஏறவில்லை என்றாலும், நடந்த நிலையில் ஏறிக் கொண்டுதான் இருந்தது.

ஆனால் சுபத்ராவிற்கோ அவன் மேல் கட்டுக்கடங்காத காதல் பெருக்கெடுத்திருந்தது. இயல்பான மனைவிக்கே உரிய ஆசைகளான
தன் மணாளனின் கரம் பற்றி நடத்தல், அவன் தோள் சாய்தல், அவன் கை
வளைவிற்குள் சிறை படுதல் போன்ற எண்ணங்கள் துளிர்க்க ஆரம்பிக்க,
ஏற்கனவே தாழ்வு மனப்பான்மையும்
தன்னம்பிக்கை அற்ற நிலையும் மண்டிக்கிடக்கையில்
கொண்டவனின் பார்வையிலும் சிறு ஈர்ப்புக் கூட வெளிப்படாமல் போக
அவனுடைய பதவியும் பணமும் பூதாகரமாய் பயமுறுத்த,

என் நிலைமை என்ன... அவர் அந்தஸ்து என்ன ... ... அவர் என்னை மனைவியாக ஏற்றுக் கொண்ட ஒரே காரணத்திற்காக இதற்கெல்லாம் ஆசைப்படலாமா ...

மோசமான நிலையிலிருந்து என்னைக் காப்பாற்றி கரை செய்ததற்கே நான் காலம் முழுவதும் நன்றிக்கடன் பட்டிருக்க வேண்டும் ...
அதற்கு மேல் மனைவிக்கான உரிமையைப் பற்றி நினைப்பதெல்லாம் பேராசை என்று தனக்குத் தானே தடை விதித்துக்கொண்டதோடு
அவனை விலகி இருந்தே பார்க்க மட்டும் தான் விதித்திருக்கிறது போலும் என தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொண்டாள்.

சுபத்ரா கூறியது போல் நான்கு நாட்கள் கழித்து, கோவிலுக்கு அழைத்துச் சென்றவனுக்கு , அவளது அருகாமை இனம்புரியாத நிம்மதியை தர,
கோவிலுக்கு வந்திருந்த ஒரு அழகான குடும்பத்தில் தவழ்ந்து விளையாடிக்கொண்டிருந்த குழந்தையை தூக்கி கொஞ்சியவளை
பார்த்த பின்புதான்,
தனக்கான குடும்பத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணமே எழ, வீடு திரும்பியவனின் பார்வை
முதன்முறையாக தன்னவளின் அங்க லாவண்யங்களை ரசனையோடு மொய்க்க, சற்று தொலைவில் இருந்தாலும் அவனது பார்வை தீட்சண்யத்தை அவன் முகம் பாராமலேயே உணர்ந்தவளின் கன்னக்கதுப்புகள் செம்மையுற
அவளுக்கும் தன்னிடம் ஈர்ப்பு இருக்கிறது என்பதை உணர்ந்தவனுக்கு அளவில்லா ஆனந்தம் கூட, அவளை நெருங்கி முகம் பார்த்து பேச வேண்டும் என்றெண்ணி கொண்டிருக்கும் போதே
அவனது கைபேசி ஒலிக்க,
வந்த செய்தி அவனை விசனத்தில் ஆழ்த்தியது .

மேற்கு வங்கத்தில் கலவரத்திற்கு பஞ்சமில்லை. நடந்து முடிந்த தேர்தலில்
முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் ஆளும் கட்சிக்கும் எதிர்க் கட்சிக்கும் இடையே நடந்த மோதலில் கலவரம் வெடிக்கத் துவங்கியிருந்தது.

அதுதான் அவனுக்கு கைப்பேசியில் தகவலாக வர, கலவரங்கள் கைமீறி கொண்டிருக்கிறது என்று தெரிந்ததும்,
தன்னவளை பாதுகாப்போடு தன் இல்லத்தில் சேர்த்துவிட்டு கலவரம் நடக்கும் இடத்திற்கு விரைந்தான்.

இரண்டு நாட்கள் தொடர்ந்து நடந்த கலவரத்தில், பொது சொத்துக்கள் ஏகமாய் சூறையாடப்பட , கலவரம் நடந்த இடத்தில் இருந்து மக்களைக் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்ததில் இருந்து, பல்வேறு பகுதி காவல்துறையினரின் ஒத்துழைப்போடு இரவு பகல் பாராமல் கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வருவதற்குள்
அர்ஜுனுக்கு போதும் போதும் என்றாகிவிட்டது.

கிட்டத்தட்ட இந்த ஒருவார பரபரப்பில், தன்னவளோடு ஒரே வீட்டில் இருந்தாலும், அதிகாலை 6 மணிக்கு செல்வதும் நள்ளிரவுக்கு மேல் வீடு திரும்புவதும் சில நேரங்களில் திரும்பாமல் போவதும் தொடர்கதையாகி போயிருந்தது.

ஒருவாறு கலவரங்கள் நடந்து முடிந்த நிலையில், கலவரத்தில் ஈடுபட்டவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதும், பலத்த புயல் அடித்து ஓய்ந்தது போன்ற உணர்வினை பெற்றவன் சற்று சீக்கிரமாக வீடு திரும்பி, இரவு உணவு முடித்து,
பெட்டியில் துணிகளை அடுக்கிக்கொண்டே தன் அறையில் இருந்தபடி,

" சுபா, என்னோட மொபைல கொண்டு வா ..." என்றான் பரபரப்போடு.

அலைபேசியை அவனது அறைக்கு கொண்டு வந்தவள், அவன் இருந்த நிலையைப் பார்த்து,

" எங்க கிளம்பறீங்க..." என்றாள் மென்மையாக .

" கொல்கத்தால ஒரு வேலை இருக்கு ...
ஒன் நைட் அங்க ஸ்டேட் பண்ணனும் ..." என்றவன் வேண்டுமென்றே அவள் முகம் பார்க்காமல், காரியத்திலேயே கண்ணாக இருக்க,

அப்ப நான் இங்க தனியா இருக்கணுமா...
என்னை விட்டுட்டு நீங்க மட்டும் போகப் போறிங்களா ... போன்ற கேள்விகள் அவள் மனதில் உருவெடுத்தாலும், அதற்கு மொழி வடிவம் கொடுப்பதற்கு அவளுக்கு அச்சமாகவே இருந்தது.

ஒருவகையில் அச்சம் தான் என்றாலும் தாழ்வு மனப்பான்மையும் இடை புகுந்து உரிமையாய் கேள்விகளை கூட கேட்க முடியாமல் தடுக்க,
துக்கம் தொண்டை அடைக்க நின்றிருந்தவளிடம்

" என்கூட இப்ப வொர்க் பண்ற சில ஆபீஸர்ஸ் , என்கூட ஐபிஎஸ் ட்ரைனிங் எடுத்தவங்க எல்லாம் அவங்க ஃபேமிலியோட ஒரு சின்ன கெட் டு கெதர்க்காக வராங்க ...சோ போயாகணும் ...." என வேண்டுமென்றே மீண்டும் அவள் முகம் பாராமல் அவன் கூறி முடிக்க, அதற்கு மேல் அங்கு நிற்க மாட்டாமல், தன் அறைக்கு வந்தவளின் கண்கள் பொங்க, ஓரிரு நிமிடத்திற்கு பிறகு அவள் அறைக்கு அவன் வர,
எங்கு தலை நிமிர்ந்து பார்த்தால் கண் கலங்கியது தெரிந்து விடுமோ என்றஞ்சி, தலைகுனிந்தபடி நின்றிருந்தவளிடம்

" நீ ஏன் உன் திங்சை இன்னும் பேக் பண்ணல ..." என்றான் குறும்பாய்.

அவனது இந்த திடீர் கேள்வியில், கண்களைத் துடைத்துக் கொண்டு நிமிர்ந்து பார்த்தவள்,

" என்னையும் உங்க கூட கூட்டிட்டு போறீங்களா ...."

" ஆமா... என்ன கேள்வி இது... கல்யாணமான அத்தனை பேரும் அவங்கவங்க ஃபேமிலியோட வரும் போது நான் மட்டும் நீ இல்லாம எப்படி போவேன்... நீதானே என் ஃபேமிலி ..." என்றவன் கூறி முடிக்கும் போது இருவரின் பார்வையும் ஒன்றோடு ஒன்று காதலாய் கலக்க, முதன்முறையாக அவளிடம் தன் மனதை சொல்ல வேண்டும் என்று எண்ணிக் கொண்டே அவளை நெருங்கும் போது மீண்டும் அவன் அலைபேசி
சிவ பூஜையில் கரடியாய் ஒலிக்க,
அழைத்திருந்தது அவனது தந்தை என்றதும் அவள் அறையை விட்டு வெளியேறியவன்,

" சொல்லுங்க..." என்றான் வேண்டாவெறுப்பாக.

அதனைக் கண்டுகொள்ளாதது போல் நலம் விசாரித்த அவன் தந்தை,

" நீதான் இங்க வர மாட்டேங்குற ... அதனால உன்னை பார்க்க உங்க அம்மா அங்க வர்றதா இருக்கா .." என்றதும் கேட்டவனுக்கு தூக்கி வாரிப்போட்டது.

அவன் தாயைப் பற்றி நன்கறிவான்.
அந்தஸ்து, கௌரவம் ,ஏற்றத்தாழ்வு என அனைத்தும் பார்ப்பவர் ... ஏற்கனவே தனக்கும் தன்னவளுக்கும் இடையே புரிதல் இல்லை என்பதை விட, புரிந்துக்கொள்ள நேரமில்லை என்கின்ற நிலையில், இயல்பான மனைவியாக கணவனிடம் கேட்க வேண்டிய சாதாரண கேள்வியையே கேட்க அஞ்சும்
அவனவளை பற்றி அறிந்தவனுக்கு, அவனது தாயின் தீடீர் வருகை ஒருவித அச்சத்தையே உண்டு செய்ய,

" அவங்க ஏன் இங்கு வரணும் ..." என்றான் சற்று கோபமாக.

" ஏன் உன்னை பார்க்க, உங்க அம்மா வரக்கூடாதா.."

" ஏன் இத்தனை நாளா வந்ததில்லையே..."

" இத்தனை நாளா நீயும், அங்க வராம இருந்ததில்லையே...."

" இப்ப வர்றவங்க, ஏன் என் கல்யாணத்துக்கு வரல..."

" அவளுக்கு உன் கல்யாணத்துல இஷ்டமில்லை, மற்றபடி அவ ஒன்னும் உன் கல்யாணத்தை எதிர்கலையே..." என்று திட்டவட்டமாக ரகு வாதாட, வேறு வழியில்லாமல் அவன் அமைதி காக்க,

" அடுத்த வாரம் அங்க வரபோறா... அப்படி வந்தா ஒரு வாரம் இல்ல பத்து நாள் தங்க போறா ... அதுக்கு ஏம்பா தயங்குற ..." என்றார் இல்லாத மென்மையை கூட்டி.

அவன் தாய் அங்கு இருக்கப்போகும் சில நாட்களிலேயே, அவன் வாழ்க்கையே சூனியம் ஆகப் போகின்றது என தெரியாமல், பத்து நாட்கள் தானே என அசுவாரசியமாக அவன் எடுத்துகொண்டாலும், ஏதோ ஒன்று அன்று இரவு முழுவதும் அவனை உறங்கவிடாமல் செய்ய, காரணம் புரியாமல் குறுக்கும் நெடுக்குமாக நடை பயின்றவன், கடைசியில் மிகுந்த களைப்பில் உறங்கிப் போனான்.


மறுநாள் பிற்பகலில் சொந்த காரில் கொல்கத்தாவிற்கு கிளம்பியவன் , கிட்டத்தட்ட 45 நிமிடத்திற்குள்ளாகவே, தன் நண்பர்களை சந்திப்பதற்காக முன்னேற்பாடாக ஒதுக்கப்பட்டிருந்த ரிசார்ட்டை வந்தடைந்தான்.

அர்ஜுனை கண்டதும், அவனது ஒரு சில நட்பு வட்டங்கள் சூழ்ந்துகொண்டு நலம் விசாரிக்க, அவனும் பதிலுக்கு நலம் விசாரிக்க , பேச்சு ஆரவாரத்துடன் அற்புதமாய் தொடங்கியது.
பாதி நண்பர்கள் மட்டுமே வந்திருக்க , மீதி பேர் அன்றிரவு அல்லது மறுநாள் அதிகாலையில் கலந்துகொள்வதாக செய்தி வந்திருக்க , ஐஜி சக்கரபோர்த்தியும் மறுநாள் அதிகாலை வருவதாக செய்தி அனுப்பியிருந்தார்.


அங்கிருந்த மேல்தட்டு மக்கள், உயர் அதிகாரிகள், அவர்களின் தோரணை, இயல்பான கலந்துரையாடல், நொடிக்கு ஒருமுறை கேட்கும் பலத்த சிரிப்பு சத்தம், மற்றும் அவர்கள் துறை சார்ந்த பேச்சுக்கள் என அனைத்தும், சுபத்ராவின் முகத்தில் ஒருவித கலக்கத்தை ஏற்படுத்த,
அவளை நன்கறிந்தவனாதலால், தங்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த அறையில் அவளை ஓய்வெடுக்கச் சொல்லி விட்டு, மாலையில் தயாராகி இரவு உணவிற்கு செல்லலாம் என அறிவுறுத்தி அர்ஜுன் சென்றுவிட,

கட்டின கணவனிடமே சரியாக பேசாதவளுக்கு , அந்த ஐந்து நட்சத்திர விடுதி, அவளைச் சூழ்ந்திருந்த மக்கள், அங்கிருந்த சூழ்நிலை அனைத்துமே ஒருவித பதற்றத்தையே தர,
சிந்தித்து சிந்தித்து சிறு நித்திரையில் ஆழ்ந்தவள், இரவு உணவிற்காக குளித்துமுடித்து புத்துணர்வு பெற்று,
அடர் நீல நிற சல்வாரில் அம்சமாக தயாராகி இருக்க, அப்போது அறைக்கு வந்தவனின் புருவங்கள் ஆச்சரியத்தில் வில்லாய் வளைய,
அவன் பார்வையில் தெரிந்த மாற்றத்தைக் கண்டு
இதழ் பிரியாமல் அவள் சிரிக்க, அதனை ரசித்தபடி குளியலறைக்கு சென்றவன் குளித்துமுடித்து, கேஷுவல் பிளேசரில் தயாராகி வந்தான்.

இடையை தாண்டிய பஞ்சு போன்ற கூந்தல், ஆடம்பரமில்லாத அழகு,
அதிக ஒப்பனை இல்லாத நேர்த்தியான அலங்காரம், கண்ணியத்துடன் கூடிய கம்பீரமான தோற்றம் என அனைத்தும் அவளை பேரழகியாய் காட்ட,

இரவு உணவு பஃபே முறையில் இருக்க,
அங்கிருந்தவர்கள் தங்களுக்கு பிடித்தமான உணவினை தட்டிலிட்டு எடுத்துக்கொண்டு சிறு சிறு குழுக்களாக பிரிந்து நின்று பேசி மகிழ,

தன் குழுவிற்கு தானாக வந்து பேசி மகிழும் நட்பு வட்டங்களுக்கு தன் மனைவியை அர்ஜுன் அறிமுகப்படுத்த,
அனைவரின் பார்வையிலும் சொல்லி வைத்தாற் போல் ஒருவித ஆச்சரியம் தோன்றிய நிலையில், திடீரென

"ஹேய் ஏ.கே சொல்லிட்டு கல்யாணம் பண்ணனும்னு உனக்கு தெரியாதா ..."
என்றாள் உரிமையாய் அவன் முதுகில் தட்டி ஷிவானி ஷிண்டே.

மேற்கு வங்கத்தில் உள்ள பேங்குறா மாவட்டத்தின் காவல்துறை கண்காணிப்பாளராக பதவி வகிப்பவள்.

"ஏன் சொல்லணும் ..." என்றான் அவளை கண்களால் வரவேற்று குலுங்கி சிரித்த படி.

"நான் நம்ப ட்ரெயினிங் டைம்லயே உன் கிட்ட பிரப்போஸ் பண்ணேன் ...
அப்ப நோ சொல்லிட்ட... இப்பதான் பக்கத்துல வந்துட்டயே
உன்னை கல்யாணம் பண்ணிக்கலாம்னு பிளான் பண்ணி இருந்தேன்... இப்பவும் ... நோ லக்.... ஊருக்கு போயிருந்தேன் அதனால உன் கல்யாணத்துக்கு வர முடியல ..." என்று உதட்டைப் பிதுக்கியவளிடம்

" உனக்கு கல்யாணம் ஆகி இருக்கும்னு நினைச்சேன் ...." என்றான் குறும்பாக.

" உன்னை மாதிரி கேட் ஐஸ், கன்ன குழியோட யாரையாவது பார்த்து இருந்தா நிச்சயமா கல்யாணம் பண்ணியிருப்பேன் ..." என்றவள் அவன் புஜத்தோடு தன் புஜத்தை இடித்தபடி கூற,

" ஏம்மா ட்ரெய்னிங் டைம்லயே நீ எனக்கு டஃப் கொடுத்தவ...
உன்னை சமாளிக்க நான் பட்ட பாடு எனக்குதான் தெரியும் ... உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு வீட்டுலயும்
டஃப் கொடுக்க சொல்றியா ..." என்றவனின் குறும்பு பேச்சு சுற்றி நின்ற அனைவரிடத்திலும் சிரிப்பும் கைதட்டலையும் ஏற்படுத்த,
பேச்சில் மனம் லயித்தவன் அப்போதுதான் மனையாளின் முகத்தைப் பார்க்க, அதில் தெரிந்த கலக்கமும் சாந்தமும், அவன் தவற்றை தலையில் குட்டி சொல்ல, உடனே

" ஷிவானி , என் வைஃப் சுபா ..." என்றவன் அறிமுகப்படுத்த

" ஓ .... தெரியுமே..."என்றவளின் முகத்தில் மின்னல் வேகத்தில் நிறம் மாறி மறைய,

" இப்பதான் தெரியுது ஏ.கே... நீ எப்படி குப்புற விழுந்தேன்னு....." என்றவள் பார்வையை சுபாவிடம் திருப்பி

" ஏ.கே பயங்கர அதிரடி ஆசாமி ... நீங்க அளவுக்கு அதிகமா சாந்தமா இருக்கிறதால தான் ஐயா உங்ககிட்ட சரண்டர் ஆயிட்டாரு போல இருக்கு ..."
என்றதற்கு பதில் கூறாமல் சுபா மென்மையாக சிரித்து வைக்க,
பிறகு பேச்சு, அந்த மாநில மாவட்ட துறை சார்ந்த பிரச்சினைகளை நோக்கி செல்ல, இரவு உணவும் இனிதே முடிந்த நிலையில், நாளை சந்திப்பதாகச் சொல்லி அனைவரும் தங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட அறையில் சென்று முடங்கினர்.

திருமணத்திற்கு பிறகு முதன் முறையாக இருவரும் ஒரே அறையில் தங்க வேண்டிய சூழல்.

இருவரும் இரவு உடைக்கு மாறி இருந்தனர்.
அவன் கையில்லா பனியன், ஷாட்ஸ், அவள் கருத்த ஊதா நிற நைட்டியில், ஒரு தலையணை இடைவெளியில் இருவரும் படுத்திருக்க,
அவனைப் பொருத்தமட்டில் அவர்களது உறவின் அடுத்த படி நிலைக்குச் செல்ல ஆவல் இருந்தாலும், அதனை எப்படி துவங்குவது என யோசித்துக் கொண்டிருக்கும் போதே, அவன் புறமாக அவள் ஒருக்களித்து படுக்க,
ஏதோ பேச விழைக்கிறாள் என்பதை உணர்ந்தவன் ஆவலுடன் அவள் முகம் பார்த்தபடி அவனும் ஒருக்களித்து படுக்க

இரவு விளக்கு ஒளியில், இருவருக்குமிடையே இருந்த குறைந்த இடைவெளியில், அவளது மென்மையான முகம் தங்கமாய் மின்ன, அவளது கண்கள் இரண்டும் வைரத்திற்கு ஒப்பாய் ஜொலிக்க ,

" யார் அவங்க..." என்றாள் மென்மையாக.
யாரைப் பற்றி கேட்கிறாள் என்பதை தெரிந்துகொண்டே, அந்த நபரை விடுத்து மற்றவர்களை பற்றி அர்ஜுன் பேசிக்கொண்டே செல்ல,

" நான் அவங்களை எல்லாம் கேட்கல... ஷிவானின்னு சொன்னிங்களே அவங்களை பத்தி கேட்கிறேன்..."

" ஓ அவளா ... இங்க பேங்குறா எஸ்பியா வொர்க் பண்றா ... நானும் அவளும் NPAல(National police academy) ட்ரெய்னிங்ல ஒரே பேட்ச்....ரொம்ப ஜாலியா பேசுவா அவ்ளோ தான்..." என தன்னிலை விளக்கம் அளித்தவனிடம்

" அவங்க ப்ரொபோஸ் பண்ணினதுக்கு, நீங்க ஏன் அக்செப்ட் பண்ணல ..." என்ற திடீர் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திகைத்தவனுக்கு தெரியும்
காரணம் அக்னி தான். ஆனால் இப்பொழுது தான் கடினப்பட்டு அவளை மறந்த நிலையில் இருக்கின்றான் .. அடிப்படையில் அக்னியும் அவனும் காதலர்களும் அல்ல ... அதோடு இப்போது அக்னி வேறு ஒருவருடைய மனைவி... ஆதலால் அவளை பற்றி பேசி ஒன்றும் ஆகப்போவதில்லை ஏற்கனவே கணவன் மனைவிக்கிடையே ஆன உறவு முறையில் புரிதல் தேவைப்படும் நிலையில், அக்னியை பற்றி பேசி மனையாளின் மனதில் தேவையில்லாத குழப்பத்தை உண்டாக்க விரும்பாமல்,

"அதான் அவளே ரீசனை தெளிவா சொன்னாளே... எனக்கு ரெபலியஸ் கேர்ள்ஸ்ன்னா அலர்ஜின்னு..." என்றவன் பேச்சை மாற்ற முயல,

" அழகு, படிப்பு, பதவி, பணம்னு எல்லா விதத்திலும் அவங்க தான் உங்களுக்கு பொருத்தமா இருப்பாங்கன்னு தோணுது ..." என்றவளின் குரல் அவளையும் மீறி தழுதழுக்க,
அது அவன் மனதை உருக்க,

" நீ சொல்ற எல்லாமே அவ கிட்ட இருந்தாலும், எனக்கு அவளை பிடிக்கணும் இல்லையா ....
ஒருத்தர பிடிக்கிறதுக்கு நீ சொல்ற அழகு, படிப்பு , பதவி, பணம் தாண்டி வேறு ஏதோ ஒன்னு இருக்கணும் .... அது இல்லாம பிடித்தம் வராது ...அது பர்சன் டு பர்சன் நிச்சயமா மாறுபடும் ..." என்றான் உண்மையாய்.


" சரி... அப்படி எங்கிட்ட என்ன இருக்கு ..." என்றாள் விரக்தியின் உச்சத்தில்.
பேச்சு போகும் திசையை மாற்றியே ஆகவேண்டும் என்ற எண்ணத்தில்

" சொல்லட்டுமா .." என்றான் அவள் முகத்திலிருந்து பார்வையை விலக்காமல் காதலுடன் ஆழ்ந்து நோக்கி.

அவன் பார்வை தாக்குதல் அவளுக்கு வெட்கத்தை அளிக்க , தன் கைகளால் முகத்தை மூடிக்கொண்டவள்,

" இப்ப சொல்லுங்க...." என்றாள் .

அவள் நாணத்தைப் பார்த்து குலுங்கி சிரித்தவன் ,

" எனக்கு ரொம்ப நாளா இண்டக்ரல் கால்குலஸ், டிஃபரண்ஷியல் கல்குலஸ சூப்பரா சால்வ் பண்ற பொண்ண கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசை..."
என்றவனின் முகபாவம் ஏமாந்தியா என்பது போல் குறும்போடு ஒற்றைக் கண் சிமிட்டலில் வெளிப்பட

அவன் பதிலில் தெரிந்த குறும்பை கண்டு வாய்விட்டு சிரித்தவள்

" நான் கால்குலஸ் நல்லா போடுவேன்னு, கல்யாணத்துக்கு அப்புறம் தான், அதுவும் எக்ஸாமுக்கு பிரிப்பேர் பண்ணும் போது தான் பார்த்து தெரிஞ்சுக்கிட்டீங்க... அதுக்கு முன்னாடி எப்படி என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க ..."

" நீ தான் ரயில்வே ஸ்டேஷன்ல சொன்னியே உனக்கு மேத்ஸ் ரொம்ப பிடிக்கும்...
ரெண்டு தடவை யூனிவர்சிட்டி ஃபர்ஸ்ட் வந்திருக்கேன்னு ...எனக்கு மேத்ஸே வராது... கணக்கு டீச்சர பார்த்தாலே காத தூரம் ஓடற ஆளு நான்....எனக்கு வராத மேத்ஸ் உனக்கு வருதா...அதான் மயங்கிட்டேன்...." என்றவனின் எதிர்பாராத விஷமான பதிலில் மனம் லயித்து சிரித்தவளின் சிரிப்பு வெட்கம், காதல் , நாணம் ,குறும்பின் கலவையோடு காட்சியளிக்க, அதில் மெய்யாகவே மயங்கி தான் போனான்.

அவள் குணத்தை பார்த்துதான் அவளை மணக்க விரும்பியதை ஏற்கனவே
தெளிவுபடுத்தியிருந்தாலும், மீண்டும் அதையே கூறி விளக்கம் கொடுத்தால்,
ரயிலில் நடந்ததிலிருந்து அவளுடைய தந்தையின் பேச்சு வரை, மறுபடியும் அவள் கண்முன் வந்து போகும்,
அதைத் தவிர்க்கவே அவள் மனதை மாற்றும் முயற்சியாக இவ்வாறு பதில் அளித்தவனுக்கு அப்போதுதான் ஒன்று தெளிவாக புரிந்தது.

அவன் அவளிடமிருந்து விலகி இருக்கும் ஒவ்வொரு நொடியும் அவளது தாழ்வு மனப்பான்மையும், அவர்களது திருமணத்தின் மீதான நம்பிக்கையின்மையும் உயர்ந்து கொண்டே செல்கிறது என்பதை செவ்வனே உணர்ந்தவன் தன்னையே கொடுத்து தன் மனையாளை தன்னவளாக்கி கொண்டால் தான் அவளது தன்னம்பிக்கை கூடும் என்று முடிவெடுத்து, அருகில் அமைதியாய்
படுத்திருந்தவளை நெருங்கி அணைத்துக்கொள்ள, ஏதோ சிந்தனையில் இருந்தவளுக்கு, அந்த திடீர் நெருக்கம் வியப்பை தர, அவள் பார்வை அவன் பார்வையோடு கலக்க ,

அவள் நெற்றியில் மென்மையாய் முத்தமிட்டவன், பிறகு காது மடல், கழுத்து என முன்னேற, ஏற்கனவே அவன் மீதான ஏக்கத்திலும் காதலிலும் கசிந்துருகி கொண்டிருந்தவளுக்கு
தன் ஒட்டுமொத்த அன்பையும் காதலையும் அவன் கொட்டிக் கொடுக்க, அவளும் அதற்கு சற்றும் சலிக்காமல்
தன் ஆழ்மனதின் அரவணைப்பை
அருமையாய் வாரி வழங்க, வெவ்வேறு வகையில் காயப்பட்ட அந்த ஈருடலின் மனங்கள் ஒன்றோடு ஒன்று கலந்து காதலின் தேடலில் ஓர் உடலாகி, காட்டாற்று வெள்ளம் போல் காமம் கடந்து , கடைசியில் ஒருவருக்குள் ஒருவர் கரைந்து காணாமல் போயினர்.


தகிப்பாள்


இனிய சொந்தங்களுக்கு,


அனைவருக்கும் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.


ப்ரியமுடன்
ப்ரியா ஜெகன்நாதன்.
 
அத்தியாயம் 22

மறுநாள் அதிகாலை, வழக்கம் போல் சுபாவுக்கு விழிப்பு வர, மெல்ல விழி மலர்த்தி பார்த்தவளின் கண்களில்
விட்டத்தில் மாட்டியிருந்த சாண்டிலியர்
தெரிய, அப்பொழுதுதான் அவள் இருக்குமிடம், நேற்றிரவு நடந்தது எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக நினைவுக்கு வர, இதழ் பிரியாமல் புன்னகை பூத்தவள், திரும்பி தன்னை இறுக்கி அணைத்தபடி உறங்கிக்கொண்டிருந்த கணவனின் முகத்தை ஆசை தீர பார்த்தாள்.

மழையில் நனையும் கோழிக்குஞ்சு,
தாய்க்கோழியின் சிறகுகளுக்குள் தஞ்சம் அடைந்திருப்பது போல், தன்னை பெரும்பாலும் அவனுக்குள் சுருட்டி வைத்தபடி உறங்கிக்கொண்டிருந்தவனின் கூர்மையான நாசி, அடர்ந்த மீசை ஆகியவை வழக்கம் போல் அவளைக் கவர்ந்திழுக்க, அதில் முத்தம் பதிக்கும் எண்ணம் உதிக்க, பிறகு அது அவன் உறக்கத்தை கலைத்து விடுமோ என்றஞ்சியவள், இன்று விடுப்பில் இருப்பதால் இவ்வளவு நேரம் உறங்குகின்றான் இல்லையென்றால் காலில் சக்கரம் கட்டாத குறையாக கிளம்பி சென்றிருப்பான் என்றெண்ணியபடி அவன் உறக்கத்தை கலைக்க விரும்பாமல் அவன் இறுகிய பிடியிலிருந்து வெளி வர எத்தனித்தவளால் ஒரு இன்ச் கூட நகர முடியாமல் போக,
அவன் உடல் கனமும் ஆளுமையும் பெரும்பாலும் அவள் மீது திணிக்கப்பட்டிருக்க, மெதுமெதுவாக
அவன் உறக்கம் கலையா வண்ணம்
தன்னை பிரித்தெடுத்தவள், குளியலறைக்குச் சென்று குளித்து முடித்து புது புடவை அணிந்து தயாராகி முடிக்கும் போது
அர்ஜுனின் அலைபேசி சிணுங்கியது.

அரைத்தூக்கத்திலேயே தலையணைக்கு அடியில் இருந்த அலைபேசியை எடுத்து காதுக்கு கொடுத்து

" ஓகே ...ஓகே ...ஐ வில் அப்புரு இட்....
நவ் ஐ அம் அவுட் ஆப் ஸ்டேஷன்..." என்று ஏதேதோ பேசி அழைப்பைத் துண்டித்தவன், அப்பொழுது தான்
குளித்து முடித்து புதிதாய் பூத்த மலர் போல் புத்துணர்வோடு காணப்பட்ட மனையாளை பார்வையால் வருடி
இரு புருவத்தையும் உயர்த்தி கண்களால் அவள் அழகை பாராட்ட,
வழக்கம் போல அவள் இதழ் பிரியா புன்னகை பூக்க,

" டென் மினிட்ஸ்... ஐ வில் ஆல் சோ கெட் ரெடி ..." என்றபடி குளியலறைக்குள் சென்று மறைந்தான்.

அவன் கூறியது போல் பத்தே நிமிடத்தில் தயார் ஆகி வர,
இருவரும் கேளிக்கை நிகழ்ச்சிகளுக்காக ஒதுக்கப்பட்டிருந்த அந்த டார்மேட்டரியை அடைய
அப்போது ஐஜி சக்கரபோர்த்தியும் , தன் மனைவி, இரண்டு மகள்கள் மற்றும் மகனோடு அந்த கெட்-டு-கெதர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவதற்காக
அங்கு வர, இரு குடும்பமும் ஒருவரையொருவர் நலம் விசாரித்தபடி நட்பு வட்டங்கள் குழுமியிருந்த கூட்டத்திற்குள் கலந்தனர்.

இப்போது அனைவரின் வருகையால், அந்த டார்மேட்டரி முழுவதும் ஆரவாரத்துடன் கலகலக்க
வந்திருந்த 30 குடும்பங்களில், பெரும்பாலானோர் மணமானவர்கள்.

ஏறக்குறைய அனைவரும் அனைவருக்கும் அறிமுகமானவர்கள் என்பதால்,
தங்கள் குடும்ப உறுப்பினர்களை மற்றவர்களுக்கு அறிமுகப் படுத்துவதிலும், நலம் விசாரிப்பதிலும் நேரம் துவங்க,

பிறகு ஸ்டாண்ட் அப் காமெடி, அந்தாக்ஷரி, விடுகதைகள், டக் ஆஃப் வார் (tug of war) என்னும் கயிறு இழுத்தல் போட்டி, புஷ் அப்ஸ் எனப்படும் தண்டால் எடுக்கும் போட்டி என ஒன்றன்பின் ஒன்றாக அரங்கேற,
வெற்றி தோல்வியை பற்றி கவலைப்படாமல், குழந்தைகளைப் போல் அனைவரும் பங்கேற்று மகிழ்ந்தனர்.

இதெல்லாம் சுபாவுக்கு மிகப் புதிது.
அவள் வாழ்க்கையில் வேலை செய்வதையும் படிப்பதையும் தவிர, இம்மாதிரியான பொழுது போக்குகளில் அவள் ஈடுபட்டதே இல்லை....

அவளுக்கு ஆங்கிலம் நன்றாக புரியும் எழுதப் படிக்கத் தெரியும் ஆனால் சரளமாகப் பேசத் வராது ...
ஆங்கிலம் மற்றும் இந்தியில் நடைபெற்ற ஸ்டாண்ட் அப் காமெடிகளை ரசித்து தன்னை மறந்து சிரித்தாள்.

நேற்றிரவு அவன் அவளிடம் காட்டிய நெருக்கம், அவளுள் தன்னம்பிக்கையை விதைத்திருக்க, நேற்றை காட்டிலும் அந்த கூட்டத்துடன் அவள் இயல்பாக ஒன்ற, அவளிடம் தெரிந்த அந்த சிறு மாறுதலை அறிந்து கொண்டவனுக்கு, பெரும் நிம்மதி பிறந்தது.

சமீபகாலமாக பளபளக்கும் அவளது கோதுமை நிறத்திற்கு எடுப்பாக
மரகதப் பச்சை நிறத்தில் மெல்லிய தங்க நிற கோடுகளோடு, கருப்பு நிற பார்டர் கொண்ட பனாரஸி சில்க் புடவையை , தழையத் தழைய
4 பட்டை எடுத்து, வெகு நேர்த்தியாக அணிந்து, அதற்குப் பொருத்தமாக திருமணத்தின் போது அவன் வாங்கிக் கொடுத்த முத்துக்களோடு மரகதக் கற்கள் பதித்த தாமரை பதக்கம் கொண்ட நெக்லஸ் மற்றும் அதே கற்களாலான ஜிமிக்கி சகிதமாக,
நீண்ட கூந்தல் இடை தாண்டியிருக்க , புதிதாக கூடியிருந்த பூரிப்பு பொலிவைக் கூட்டி காட்ட, ஆடம்பரம் இல்லாத அந்த ஆடையிலேயே அம்சமாக காட்சியளித்தாள் சுபத்ரா.

அவள் அணிந்திருந்த புடவையின் கருப்பு நிற பார்டருக்கு , பொருத்தமாக அவனும் கருப்பு நிற டீசர்ட் மற்றும் நீல நிற ஜீன்ஸில் கலக்க, அவளது மெல்லிய சரீரத்தை அந்த பனாரஸி புடவை சற்று பூசிய வனப்போடு காட்டியது .

கயிறு இழுக்கும் போட்டி மற்றும் தண்டால் எடுக்கும் போட்டியில் அர்ஜுன் வெற்றி வாகை சூட, புதிதாய்
மணமானவன் என்ற தகுதியும் சேர்ந்துகொள்ள, நட்பு வட்டங்களுக்கே உரித்தான கேலி கிண்டல் பேச்சுக்கள், , பாராட்டு மழை, விசில் சத்தம், பரிசுப் பொருட்கள் என அனைத்தையும் வழங்கி அந்தக் கூட்டம் புதுமணத் தம்பதியை திக்குமுக்காட செய்ய,

" சரி தண்டால் எடுத்த, எப்ப வெயிட் லிப்ட் பண்ணுவ ..." -- இது அர்ஜுனின் நெருங்கிய நண்பன்.

" இது என்ன ஆணழகன் போட்டியா ...
சரி எங்க வெயிட்டு இருக்கு ..."

" ஏன்.... உன் வைஃப்ப தூக்கு ஏ.கே..." ---- இது ஷிவானி ஷிண்டே.

" எனக்கு ஒன்னும் ப்ராப்ளம் இல்ல...
அவ என் வெயிட்ல பாதிதான் ..." என்றவன் பேசிக்கொண்டே அருகில் நின்றிருந்த சுபாவை அலேக்காக தூக்கி, தட்டாமலை சுற்ற,
எதிர்பாராத சுற்றலில் தலைசுற்றி போனவள், வெட்கத்துடன் அவன் மார்பில் முகம் புதைக்க,
ஏறக்குறைய ஆரவாரம் அடங்க, இரண்டு மூன்று நிமிடங்கள் ஆனது .

கூட்டம் சக்கரபோர்த்தியைப் பார்க்க ,
அவர் முந்திக்கொண்டு,

" வாழ்க்கையில அர்ஜுன் எடுத்த ரிஸ்க்கை நானும் எடுத்திருக்கேன்... ஆனா இப்ப வயசான காலத்துல விபரீதம் வேணான்னு பாக்குறேன் ..." என அவரை விட மூன்று மடங்கு
தண்டியாய் இருந்த மனைவியை பார்த்து கூற, அவர் மனைவி முறைத்து வைக்க , மீண்டும் சிரிப்பு சத்தம் அலைமோத, அவர் குடும்ப உறுப்பினர்கள் ஒருவரோடொருவர் சிரித்து பேசி மகிழ்வதை ஏக்கத்தோடு தன்னை மறந்து பார்த்துக் கொண்டிருந்தவளை
எதேச்சையாக கவனித்தவன்
தன் தாய் , தங்கை, தம்பியை எண்ணி ஏங்குகிறாள் என்பதை நொடிப்பொழுதில் உணர்ந்துகொண்டு
அவளை நெருங்கி, தோள் மீது கை போட்டு இயல்பாக தன்னோடு அணைத்துக் கொண்டவனின்
அணைப்பு உனக்கு எல்லாமுமாய் நான் இருக்கிறேன் என்ற செய்தியை அவளுக்கு சென்று சேர்த்தது.

பிறகு மதிய உணவு பஃபே முறையில் தொடங்க,
சக்ரபோர்த்தி குடும்பம் அர்ஜுனுடன் மதிய உணவில் கலந்து கொள்ள, கலகலப்பாக பேச்சு சென்று கொண்டிருக்கும் போது,

அர்ஜுன் தனக்கு தேவையான உணவினை எடுத்துக் வருவதற்காக மேஜையை விட்டு வெளியேற,
சக்ரபோர்த்தி இயல்பாக,

" முந்தாநாள் அர்ஜுனுக்கு போன் பண்ணி சொன்னேம்மா, பழக்க தோஷத்துல கெட்-டு-கெதர்க்கு நீ மட்டும் தனியா வந்திட போற, எல்லாரும் ஃபேமிலியோட வரோம், நீ உன் வொய்ஃப் சுபா கூட தான் வரனும்னு... அதுக்கு
பதில் சொல்லாம சிரிச்சான்... ஆனா எனக்கு முன்னாடியே உன்னை இங்க கூட்டிகிட்டு வந்திருப்பான்னு நான் கொஞ்சம் கூட எதிர் பார்க்கல .... ஸ்மார்ட் பாய் ..." என்றவரின் பேச்சு சுபத்ராவை சம்மட்டியால் அடித்தது போல் இருக்க ,

" நான் மட்டும் நீ இல்லாம எப்படி போவேன்... நீதானே என் ஃபேமிலி..." என்ற அர்ஜுனின் பேச்சில் சக்கரபோர்த்தியின் வார்த்தைகள் தான் பிரதிபலித்திருக்கிறது என்பதை உணர்ந்ததும், உள்ளுக்குள் துடித்துப்போனாள்.

"அர்ஜுன் இவ்ளோ சந்தோஷமா இருப்பான்னு நான் கொஞ்சம் கூட நினைக்கலம்மா .... இன்னும் மூணுமூணு வருஷத்துல ரிட்டையர் ஆகப் போறேன் .... ஒரு நல்ல பையனுக்கு ஒரு நல்ல பொண்ணை கல்யாணம் பண்ணி வச்ச சந்தோஷம் எனக்கு...
உங்க அப்பா எங்க ரெண்டு பேரோட ஆபீசுக்கு வந்து பெரிய பிரச்சனை பண்ணிட்டாரும்மா..... அர்ஜுன் சொல்லியிருப்பானே..."

" ம்ம்ம்ம்..." என்றாள் நடந்ததைத் தெரிந்து கொள்ள எண்ணி தயக்கத்தோடு தலை அசைத்து.

"என் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணனும் , மாப்பிள்ளை பார்த்து வச்சிருக்கேன் ஆனா, என் பொண்ணை கடத்தி வச்சிருக்கான் அந்த அர்ஜுன் ..போலீஸ்னா என்ன அராஜகம் வேணும்னாலும் பண்ணுவீங்களா ... நான் இப்பவே மீடியாவுக்கு போறேன்னு... அர்ஜுன் மேல ஏகப்பட்ட அலிகேஷன்ஸ் வச்சாரு ... அவரை சமாளிச்சு அனுப்பறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சு....

அப்புறம் நான் அர்ஜுன் கிட்ட இதப்பத்தி பேசினேன் ...
அதுக்கு அந்த பொண்ணு ரொம்ப நல்லவ சார் ... அவங்க அப்பா கூட அனுப்பினா அந்த பொண்ணோட லைஃபே ஸ்பாயில் ஆயிடும்...
அதனாலதான் அந்த பொண்ணுக்காக போராடிக்கிட்டு இருக்கேன்னு சொன்னான்...

அதுக்கு நான், அந்த பொண்ணு மேல எந்த உரிமையும் இல்லாம நீ அவளுக்காக போராடறது உங்க ரெண்டு பேருக்கும் அதிக பிரச்சினையை தான் கொடுக்கும் ..
நீ ஏன் சுபாவ கல்யாணம் பண்ணிக்க கூடாதுன்னு கேட்டேன்.... முதல்ல எனக்கு அந்த மாதிரியான ஐடியா இல்லன்னு சொன்னான்....

அப்புறம் ரெண்டு நாள் கழிச்சு நாங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கப் போறோம் நீங்க தான் எங்க கல்யாணத்தை நடத்தி வைக்கனும்னு சொன்னான்....

ஏதோ சந்தர்ப்ப சூழ்நிலையால தான் இந்த கல்யாணத்தை பண்ணிக்கறான்னு நெனச்சேன்... ஆனா இப்ப புரியுது அவன் விரும்பி தான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு இருக்கான்னு ... உங்க ரெண்டு பேரையும் இப்படி பாக்குறதுக்கு மனசுக்கு நிறைவா ரொம்ப சந்தோஷமா இருக்கு மா... ...." என்று தன்னிச்சையாக பேச்சைத் தொடர்ந்து சக்கரபோர்த்தி முடிக்க , சற்று தொலைவில் அர்ஜுன் உணவுத் தட்டுடன் ஷிவானியிடம் பேசிக்கொண்டிருப்பதை பார்த்தவளுக்கு தொண்டை கனத்து கண்கலங்க துவங்கியது .

நேற்றிரவை நினைத்து அவளுக்கு அவள் மீதே கோபம் வந்தது .
உறவை தொடங்கியதும் முடித்ததும் அர்ஜுன் என்றாலும், அதற்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது அவள் அல்லவா ...
ஒருமுறை உன் குணம் பிடித்திருக்கிறது என்றான், மறுமுறை வேறு ஏதோ காரணம் சொன்னான்... ஆனால் ஒரு முறை கூட நேரடியாக
உன்னை பிடித்திருக்கிறது என்ற வார்த்தையை அவன் சொன்னதே இல்லை என்பதை அப்போதுதான் உணர ஆரம்பித்திருந்தாள் .

அவளை திருமணம் செய்து கொள்வதற்காக, அவன் சொன்ன காரணங்கள் எல்லாம் யார் வேண்டுமானாலும் யாரை பார்த்தும் கூறலாம்....

ஆனால் ஒரு திருமணத்திற்கு அடிப்படை ஈர்ப்பு அல்லவா, உன்னை பிடித்திருக்கிறது என்ற வார்த்தை அல்லவா ... என்னை மோசமான திருமணத்திலிருந்து காப்பாற்றுவதற்காக நடந்த திருமணத்தில் ஈர்ப்பு எங்கிருக்கும்... காதல் எங்கிருக்கும் ....ஆதலால் தான் பாவம் காரணம் சொல்ல முடியாமல் திணறி இருக்கின்றான் போலும் ...
இப்போது அவன் அவளை மணந்து கொண்டதற்கான காரணம் கிடைத்துவிட்டது .... ஆனால் அது அவள் அடி மனதை கரையான் அரிப்பது போலல்லவா அரித்து
கொல்லாமல் கொன்று கொண்டிருக்கிறது.

" ஒருமுறை நீங்க இரண்டு பேரும் என் வீட்டுக்கு லஞ்ச் சாப்பிட வாங்க ..." என சக்ரபோர்த்தி வந்தமர்ந்த அர்ஜூனை பார்த்து சொல்ல,
அதற்கவன் பதிலளிக்கும் முன்னே,
உணவு எடுத்துக் வருவது போல், அந்த இடத்தை விட்டு விலகியவள், சாப்பாட்டுத் தட்டை அங்கிருந்த குப்பைத்தொட்டியில் இட்டுவிட்டு, கை கழுவச் சென்றாள்.

கண்ணீரை வெளிக்காட்ட விரும்பாமல் முகம் கழுவிக் கொண்டிருந்தவளுக்கு எதேச்சையாக தடுப்புக்கு பின்னால் யாரோ பேசுவது கேட்க,

" ஷிவானி....ஏ.கே வொய்ஃப்பை (wife) எங்கையோ பார்த்த மாதிரி இல்ல ..." என்பதில் சுபா உறைந்து நிற்க,

" அந்த ட்ரெயின் ராப்பரில காப்பாத்தின பொண்ண தான் கல்யாணம் பண்ணி இருக்காரு ..." என ஷிவானி, அந்த யாரோ ஒரு பெண்மணிக்கு பதிலளிக்க,

" ஓ அதானா... பட் ஷீ ஈஸ் ஆல்சோ எ ரேப் விக்டிம் ரைட் .... ( அவள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட பெண்ணல்லவா ) --- அந்த பெண்மணி.

" ஏ.கே வெறும் ராபரி தான் நடந்ததுன்னு பிரஸ்மீட்ல சொன்னாரு... ஆனா சோசியல் மீடியா எல்லாம் அங்க ரேப் நடந்ததா சொல்றாங்க .... எது உண்மைனு யாருக்கும் தெரியாது...." --- ஷிவானி .

" அதோட அவர் வொய்ஃப் பேமிலி பேக்ரவுண்ட் ரொம்ப புவர்னு பேப்பர்ல படிச்சேன் ... இந்த மாதிரி ஒருத்தவங்கள கல்யாணம் பண்ணிக்க ரொம்ப பெரிய மனசு வேணும் .... ஏ.கே நாட் ஒன்லி எ குட் போலீஸ் ஆபீசர் ...ஹி இஸ் எ குட் ஹுமன் பீயிங் டூ....( ஏ.கே சிறந்த போலீஸ்காரர் மட்டுமல்ல நல்ல மனிதரும் கூட) ---- அந்தப் பெண்மணி.

" இதுக்கே இப்படி சொன்னா எப்படி ...
ஏ.கே ரொம்ப பெரிய பணக்காரர் ... அண்ட் ஆல் சோ பில்லாங்ஸ் டு அ ராயல் ஃபேமிலி ..... ( அரச வம்சத்தை சார்ந்தவர்)
கிருஷ்ணா குரூப் ஆஃப் கம்பெனிஸ் கேள்விப்பட்டிருக்கீங்களா.... எல்லாம் அவரோடது தான் .... அவரோட பேஷன்(Passion) தான் இந்த போலீஸ் வேலையே...மற்றபடி அவர் இவ்ளோ கஷ்டப்படணும் நேசசிட்டியே இல்ல..."

என்றதில் ஏற்கனவே இடி விழுந்திருந்த சுபாவின் இதயம் இப்போது சுக்கு நூறாய் வெடித்துச் சிதற, சற்று முன்
தெரிந்துகொண்ட உண்மைகளோடு இவைகளும் சேர்ந்து அவளைக் கொல்லாமல் கொல்ல ஆரம்பித்தன.

சமுதாயத்தின் முன்பு கற்பழிக்கப்பட்டவளாக காட்சி தருகிறாள் என்பதே அமிலத்தில் குளித்தது போன்ற உணர்வை தந்திருக்க, உடன் ராஜ வம்சத்தை சார்ந்தவன், பெரும் பணக்காரன் என தெரியாமல் அவனை மணந்து கொண்டதை எண்ணி உலகமகா பிழை இழைத்தது போல் சொல்லவொண்ணா சித்திரவதைக்கு உள்ளானாள்.

அர்ஜுனின் நண்பர் ஒருவரின் வாகனம் பழுதானதால் அவரும் இவர்களோடு பயணிக்க, கொல்கத்தாவிலிருந்து திரும்பும் போதும் அவளால் அர்ஜுனிடம் எதுவும் பேச முடியாமல் போனது.

தன் தந்தை அவனை சந்தித்து சண்டையிட்டது,
அவன் பணக்கார குடும்ப பின்னணியை சார்ந்தவன் என்பதை எல்லாம் திருமணத்திற்கு முன்பே ஏன் கூறவில்லை .... என்ற கேள்வியே அவள் மனம் முழுவதும் வியாபித்திருக்க, இத்தனை நாட்களாக தேவதூதனாக காட்சி அளித்தவன், இப்போது தெய்வமாகவே காட்சியளிக்க , அவனிடம்
நேரடியாக கேட்பதற்கு தயக்கமும் இருந்த நிலையில் , படுக்கை அறையின் ஜன்னல் வழியே தொலைதூர நட்சத்திரத்தை பார்த்தபடி
தன்னுள்ளே போராடிக்கொண்டிருந்தவளை , பின்புறமாக இறுக்கி அணைத்து, அவள் பின் கழுத்தில் முத்தமிட்டு முன்னேறிய அவளவன் அவள் காதில்
'ஐ நீட் யூ மேட்லி' என கிசுகிசுக்க,
அதற்கு மேல் விவாதிப்பதற்கான நேரம் இதுவல்ல என்பதை உணர்ந்து தன்னையே தாராளமாக கொடுத்தவள்
தன்னுள்ளே சுனாமி போல் அவனை சுருட்டிக் கொள்ளவும் தவறவில்லை.

அன்று ஆரம்பித்தது அதன் பின் தொடர்கதையாகி போனது..
சுபாவை சந்தித்ததிலிருந்தே அக்னி அவன் நினைவிலிருந்து அஸ்தமித்திருந்தாள் . அர்ஜுனுக்கு திருமணத்தின் போது ஏற்பட்ட லேசான ஈர்ப்பு, இத்தனை நாட்களில் காதலாகவே மாறியிருந்தது. ஆனால் அதனை வெளிப்படுத்த தெரியாமல் தான் ஒரு கணவனாக அவளை அதிகம் நாடினான். அவன் மனையாளின் தாழ்வு மனப்பான்மையைப் போக்குவதற்கும், அவர்களது திருமண பந்தத்தை பலப்படுத்துவதற்கும் அந்த உறவே பேருதவியாக இருந்தது.

இவ்வாறு ஒரு வாரம் கடந்த நிலையில்,
ஒரு நாள் அர்ஜுன்,

" ரெண்டு நாளைக்கு முன்னாடி ஜானவி சோம்நாத்தோட பேசினேன் ...
ரெண்டு பேருமே எஸ்.எஸ்.சி,(ssc) ஹெச்.எஸ். சி(hsc) எக்ஸாம்ஸ் ரொம்ப நல்லா எழுதி இருக்காங்களாம்...
சோம்நாத்க்கு மத்திய பிரதேஷ் போபால்ல 'ஆர்.கே வித்யாலயா ' ஸ்கூல்ல ஹெச்.எஸ். சிக்கு இடம் கிடைச்சிருக்கு ...
ஜானவி ஆர்க்கிடெக்ட் ஆகணும்னு ஆசை படுறா.... அவளுக்கும் போபால்லயே 'MMA' காலேஜ்ல, மேனேஜ்மென்ட் சீட்ட பேசி வச்சிருக்கேன் ... இங்க இருந்தா உங்க அப்பா பிரச்சனை பண்ணிக்கிட்டே இருப்பாரு அதனால தான் அவங்களை மத்தியபிரதேஷ் அனுப்பறேன் ...
ரெண்டு பேருக்கும் ரொம்ப சந்தோஷம்... ரெண்டு முணு நாளா இதைப் பத்தி தானே யோசிச்சுகிட்டு இருந்த சுபா...." என்றபடி அவள் நெற்றியோடு தன் நெற்றியை முட்டி அவன் கேட்க, அவள் நினைத்துக் கொண்டிருந்த விஷயம் வேறு அவன் செயலாற்றி வந்த விஷயமே வேறு என்பதை எப்படி சொல்லுவாள்,

" இன்னும் ரிசல்ட்டே வரல ... வேற ஸ்டேட்க்கு போய் படிக்கனும்னா ...." என்றவள் தொக்கி நிறுத்த,

" நீ வேற எதை பத்தியும் கவலைப்படாத... எனக்கு நம்பிக்கை இருக்கு ...ரெண்டு பேருமே நல்ல பர்சன்டேஜ்ல பாஸ் பண்ணிடுவாங்கன்னு...அதனால தான் முன்னாடியே சீட்ஸ்ஸ பிலாக் பண்ணி வச்சிருக்கேன்.... இன்னும் பத்து நாள்ல அட்மிஷன்ஸ் தொடங்கறதால, இன்னும் ஒரு வாரத்துல அவங்க ரெண்டு பேரும் மத்திய பிரதேஷ் கிளம்பிடுவாங்க ... அங்க என் ஃப்ரெண்ட் பேமிலி இருக்கு அவங்க எல்லாத்தையும் பாத்துப்பாங்க .. ஹாஸ்டல் ஏற்பாடும் பண்ணியிருக்கேன் ... ஊருக்கு போறதுக்கு முன்னாடி உன்னை இங்க வந்து பார்த்துட்டு போவாங்க சரியா ...."
என்றவனின் பேச்சு அவள் நெஞ்சை அழுத்தி கண் கலங்கச் செய்தது.

இரவானால் சட்டையை மாட்டிக்கொண்டு வெளியே செல்லும் தந்தை, அதனை கண்ணீர் மல்க பார்த்துக் கொண்டே நிற்கும் தாய்,
வயது வந்த பெண்ணிற்கு தந்தை இந்நேரத்தில் எங்கு செல்கிறார் என்று கூடவா அனுமானிக்க முடியாது ...

அப்படிப்பட்ட ஆண்கள் வசிக்கும் இந்த பூமியில், என்னை மணந்து கொண்ட நாளிலிருந்து என் முக உணர்வுகளை வைத்தே என் தேவையை பார்த்து பார்த்து செய்வதே அவனது சேவையாக வைத்திருக்கிறானே... இத்தனை நாட்கள் எனக்கு உதவியவன் இனிமேல் என்னுடைய தங்கை தம்பிக்கும் உதவ போகின்றான் ....

எப்படி எப்படியோ வாழ வேண்டியவன்
யாரோ சொல்லி, சந்தர்ப்ப சூழ்நிலையால் என்னை மணந்து கொண்டதோடு என் மேல விழுந்த பழியையும் தூக்கி சுமந்து கொண்டல்லவா இருக்கிறான்.... என்று தனக்குள்ளே வாதித்து கொண்டிருந்தவள், சற்று தைரியத்தை வரவழைத்துக்கொண்டு
அவள் மனதில் இருந்த இரண்டு கேள்விகளை கேட்டு முடிக்க,
அதனைக் கேட்டு சிரித்தவன்,

" என்னைக்குமே நான் என் குடும்ப பாரம்பரியத்தையோ பணத்தையோ பெருசா நெனச்சதே இல்ல... அதெல்லாம் என் தாத்தா அப்பாவோட சம்பாத்தியம் .... இந்த வேலை தான் என் திறமையால கிடைச்சது.... எனக்கும் என் அப்பா அம்மா மேல பெருசா பாசம் கிடையாது , அவங்களுக்கும் என் மேல கிடையாது அதனால இத பத்தி நான் உன் கிட்ட சொல்லல....

கம்மிங் டு யுவர் நெக்ஸ்ட் கொஸ்ஷன் ,
உங்க அப்பா பிரச்சனை பண்ணாரு இல்லன்னு சொல்லல,ஆனா அதுக்கு முன்னாடியே உன் குணம் எனக்கு பிடிச்சிருந்தது ... அதனாலதான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டேன் ...
நீ எத்தனை தடவை கேட்டாலும் இது தான் என் பதில் சரியா ...." என்றவனின் அலைபேசி சிணுங்க, நட்பாய் பார்த்து புன்னகைத்துவிட்டு விலகி நடந்தவனின் பதில்கள் ஏனோ அவளை திருப்தி படுத்தவில்லை என்றாலும் அது குறித்து அவனிடம் மீண்டும் பேச அவளுக்கும் விருப்பமில்லை .

அர்ஜுனின் நாள் பொதுவாக அதிகாலை 6 மணிக்கு தொடங்கும் ..
உடற்பயிற்சி, செய்தித்தாள் வாசித்தல், உயர் அதிகாரிகளிடம் தொலைபேசி உரையாடல் பிறகு குளித்துமுடித்து அலுவலகம் சென்றால், அவன் வீடு திரும்ப இரவு பதினோரு மணிக்கு மேல் ஆகிவிடும் .

அவனுடைய பணிச்சுமை இங்கு பொதுவாகவே அதிகம் என்பதால் பகலில் அவளுடன் உரையாடுவதே அபூர்வம் தான்...

இரவில் உறவாடுவதை மட்டும் அவன் நிறுத்தவேயில்லை .... வெகு சில நாட்களில் அவன் நேரம் கடந்து வந்து, அவள் உறக்கத்தில் இருந்தால், உறக்கத்தை கலைக்க விரும்பாமல் விலகிப் படுத்துக் கொள்வான் அவ்வளவே ..
மற்றபடி அவள் மனதில் உறுத்தல் இருந்தாலும் நிற்க நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் அந்த மனிதனிடம், கேட்ட கேள்வியையே திரும்ப கேட்க விரும்பாமல் மௌனம் காக்க எண்ணினாள்.

நாட்கள் நகர நகர சுபாவிற்கு அவன் மேல் காதலும் பாசமும் போட்டி போட்டுக்கொண்டு பெருக,
காற்றாடி போல கால நேரமில்லாமல் சுழன்று கொண்டிருப்பவனை
கட்டிலில் இருக்கும் தருணத்தில் மட்டும்
தன்னிடமே கட்டிப் போட்டிருந்தாள்.

மூன்று நாட்கள் கழிந்த நிலையில்,
அவள் மாடித் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சி கொண்டிருக்கும் போது , ஏதோ பேச்சு சத்தம் கேட்க,
வீட்டின் பக்கவாட்டு மதில் சுவரை ஒட்டிய மரத்தடியின் கீழ் தோட்டக்காரன், அர்ஜுனின் வாகன ஓட்டி ,அர்ஜுனின் அலுவலக உதவியாளர் ஆகியோர் பேசிக்கொண்டிருந்தனர்.

அதில் தன் கணவரின் பெயர் அடிபட,
அவர்கள் பேச்சை செவிமடுக்க ஆரம்பித்தவளுக்கு, பூமி இரண்டாகப் பிளந்து உயிருடன் புதையுண்டு விட மாட்டோமா என்ற எண்ணம் தோன்றி துடிதுடித்த அழ ஆரம்பித்தாள்.

அவர்கள் பேசிக்கொண்டது இதுதான்.

டிரைவர் : ஏன் , ஐயா மூணு நாளா கோவமா இருக்காரு ...

உதவியாளர் : ஐயா, மூணு நாளைக்கு முன்னாடி, நடந்து முடிஞ்ச கலவரம் சம்பந்தமா ஒருத்தனை கைது பண்ணி விசாரணை நடத்திக்கிட்டு இருந்தாரு...
அவன் ஆளுங்கட்சி ரௌடி.
அப்ப அவன் நாலு பேரு சாப்பிட்டு போட்ட எச்சில் இலையை தானே நீ கட்டி இருக்கேன்னு சொல்லிட்டான்....
அவன் அப்படிக் கேட்டது தான் தாமதம்.... ஐயாவுக்கு ஒரு கோவம் வந்துச்சு பாரு.... அடிச்சி பொளந்துட்டாரு....

தோட்டக்காரன்: ஆமா நானே கேட்கணும்னு நினைச்சேன் .... அப்படி ஏதாவது நெஜமாவே நடந்துச்சா....

டிரைவர் : ஒவ்வொருத்தவங்க ஒவ்வொரு மாதிரி பேசிக்கிறாங்க எது உண்மைனு யாருக்குமே தெரியல....

உதவியாளர்: ஆனா ஐயாவை எல்லாரும் பரிதாபமா தான் பார்க்கிறாங்க ... ரொம்ப பாவம்னு வேற பேசிக்கிறாங்க .... ரொம்ப பெரிய பணக்கார குடும்பத்தை சேர்ந்தவராம்...
யாரைச் சொல்லி என்ன ... தலை விதி என்னவோ அதுதானே நடக்கும் ....

என்று பேசி முடித்துவிட்டு அவர்கள் கலைந்து செல்ல, அதனைக் கேட்டு துடித்தவளின் கண்களிலிருந்து வற்றாத ஜீவ நதியாய் கண்ணீர்.

ஏற்கனவே ஒரு முறை கொல்கத்தாவில் கேட்டது தான் என்றாலும், கேவலம் குற்றவாளிகள் கூட அவன் குடும்ப வாழ்க்கையை விமர்சிக்கும் நிலை எண்ணி மனம் நொந்து அழுதாள்.

பொதுவாக அவன் வீட்டில் இருக்கும் நேரம் குறைவு. அதுவும் கடந்த மூன்று நாட்களாக எப்போது வீடு திரும்புகிறான் , எப்போது அலுவலகம் செல்கிறான் என்று அவளால் கூட அனுமானிக்க முடியாத நிலை. ஏதோ சிந்தனையில் அவன் சதா உழன்று கொண்டிருப்பது போல அவளுக்கு தோன்றியிருந்த வேளையில் , இவர்களுக்கிடையேயான உரையாடல்கள் அதற்கான காரணத்தை அவளுக்கு எடுத்துரைத்து விட்டதாக கருதினாள்.

அவனைப் போன்று சமுதாயத்தில் நல்ல அந்தஸ்தோடு உயர் பதவி வகிக்கும் ஒரு ஆண்மகனுக்கு இம் மாதிரியான பேச்சுக்களை கேட்பது நிச்சயம் மன உளைச்சலைக் கொடுத்திருக்கும்....
என்னால் எவ்வகையிலும் அவனுக்கு இலாபமில்லை....
என் தரித்திரத்தை போக்குவதற்காக திருமணம் செய்து கொண்ட ஒரே காரணத்தால், மற்றவர்களின் பரிதாபத்திற்கும் பரிகாசத்திற்கும் அல்லவா ஆளாகியிருக்கின்றான்.... என்றெண்ணி மேலும் மன நிம்மதியை தொலைத்தாள் .

கிட்டத்தட்ட இந்த 2 மாத உறவில், இருவரும் பேசிக் கொண்டதை ஒரு சிறு டைரியின் ஒரு பக்கத்தில் எழுதிவிடலாம்... அதிலும் அவனது வாக்கியங்களே அதிகம்.... அவள் பயன்படுத்துவது பெரும்பாலும் "ஹான் ஜி..." என்ற வார்த்தை மட்டுமே ...

சிறு வயது, மனமுதிர்ச்சி இல்லாமை, கடந்து வந்த வாழ்க்கையில் அதிக மக்களை படிப்பதற்கான சந்தர்ப்பம் அமையாமை இவைகளெல்லாம் சேர்ந்து அவளால் அவனை சரியாக புரிந்து கொள்ள முடியாமல் போக,
அவனின் வயது முதிர்ச்சி, பணி கொடுத்த அனுபவம் , சந்தித்த மக்களிடமெல்லாம் கற்ற பாடம்
அவன் மன திடத்தை மட்டுமல்ல,அவன் உலகத்தையே பார்க்கும் பார்வையை முற்றிலுமாக மாற்றியமைத்திருந்தது.

அதனால்தான் அன்று கோவிலில்,
திருமணம் ஒரு சடங்கு அவ்வளவே ...
தெய்வம் கூட இரண்டாம் பட்சம்தான் ..
என் மனசாட்சியை சாட்சியாக வைத்து தான் உன்னை மனையாளாக்கி கொள்கிறேன்....
மற்றவர்களின் சிந்தனைகள், கூற்றுகள், சித்தாந்தங்கள், செயல்கள் எதுவுமே என்னை பாதிக்காது என்பதை அவளிடம் என்றோ தெளிவுபடுத்தி விட்டான் ... அவள் அன்றும் அதை உணரவில்லை இன்றும் அதனை பொருத்திப் பார்க்கவில்லை ....

கடந்த மூன்று நாட்களாக அவன் மன உளைச்சலுக்கும் சதா சிந்தனைக்கும் உண்மையான காரணம் இதுதான்.

" பாசந்தி ஹய்வேல(basanti highway) , திடீர்னு மீனவர்களும் விவசாயிகளும் ஒண்ணு கூடி போராட்டம் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க சார்...

மீனவர்கள் தோல் பதனிடும் தொழிற்சாலையில இருந்து , அதிக ரசாயனம் கலந்த நீர்,
சுத்திகரிப்பு செய்யாமலே சப்தமுகி அறுல கலக்குறதால அளவுக்கதிகமான மீன்களும், இறால்களும் செத்து மிதக்குதுன்னு போராட்டம் பண்ண,

விவசாயிகளும் அந்த ஆற்று தண்ணியை பயன்படுத்தி விவசாயம் பண்ண முடியல... பயிர்கள் வதங்கிப் போகுது, சுற்றுப்புற சூழல் அதிகமா பாதிக்குது, குழந்தைகளுக்கும் வயசானவங்களுக்கும் உடம்பு சரி இல்லாம போகுதுன்னு சொல்லி உடனே அரசு நடவடிக்கை எடுத்து, சட்டவிரோதமா இயங்கும் தோல் பதனிடும் தொழிற்சாலைகளை மூடியே ஆகணும்னு கோஷம் போட்டுக்கிட்டு இருக்காங்க ...
அந்த ஏரியா ஃபுல்லும் ஹெவி ட்ராபிக் பிளாக்டு ....எப்படி எல்லாரும் திடீர்னு ஒண்ணா கூடினாங்கன்னு ஒண்ணுமே புரியல சார் ..." என்றார் துணை கண்காணிப்பாளர் டேனியல்.

" அந்த ஏரியால தோல் பதனிடும் தொழிற்சாலை ரொம்ப வருஷமா நடந்துக்கிட்டு இருக்குது ... ஏன் இத்தனை வருஷமா இல்லாம இப்ப பிரச்சனை பண்றாங்க ...." என்று அர்ஜுன் கேள்வி எழுப்ப

" கடந்த 5 வருஷமா அவங்க ஆளும் கட்சியா இருந்தாங்க சார் ... இப்ப எதிர்க்கட்சி ஆயிட்டாங்க ... அதனால இப்ப பிரச்சினை பண்றாங்க ...
ஆனா ஒண்ணு மட்டும் உண்மை சார் ...
அந்த ஆத்துல சுத்திகரிக்கப்படாத தண்ணி கலக்கிறதால மக்களும் விலங்குகளும் அதிக பாதிக்கப்படறாங்க .... கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் இல்லாம சட்டவிரோதமாக இயங்கும் அத்தனை தோல் பதனிடும் ஆலைகளை மூடனும்னு ஏற்கனவே கோர்ட் ஆர்டரும் இருக்கு சார் ...

அவங்க ஆளும் கட்சியா இருந்ததால் இத்தனை நாள் அதைச் செயல்படுத்த விடாம கலெக்டர் பானர்ஜியை மிரட்டி வச்சிருந்தாங்க ... இப்ப எதிர்க்கட்சி ஆனதால அந்த கோர்ட் ஆர்டர் உடனே செயல்படுத்தணும்னு அவங்க கட்சிக்காரங்களோட பொதுமக்களையும் தூண்டிவிட்டு கூட்டி வந்து போராட்டம் நடத்துறாங்க .... இதுக்குள்ள இவ்ளோ பாலிடிக்ஸ் இருக்குதுன்னு தெரிஞ்சுக்காம பொதுமக்களும் தங்கள் வாழ்வாதாரத்துக்கு ஏதாவது ஒரு விடிவு வராதான்னு ஆசைப்பட்டு இந்த அரசியல் கட்சியோட களமிறங்கி இருக்காங்க ..." என்று முடித்தார் டேனியல்.

போராட்டத்தின் முதல் மற்றும் இரண்டாவது தினத்தின் காட்சிகள் தான் இவை. மூன்றாவது தினத்தன்று யாருமே எதிர்பார்க்காத திருப்பம் நிகழ ஆரம்பித்திருந்தது.

மூன்று மாதங்களுக்கு முன்பு, பானர்ஜிக்கு பதிலாக வடக்கு பர்கானா மாவட்டத்தின், மாவட்ட ஆட்சியராக அஹமத் பொறுப்பேற்க, கிட்டத்தட்ட
2 மாதத்திற்கு முன்பு அர்ஜுன் மாவட்ட கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக் கொண்டிருந்த நிலையில் , இருவரும் மிகவும் நேர்மையானவர்கள் என்பதால், இந்த போராட்டம் குறித்த செய்தி அவர்கள் காதுகளை எட்டியதும்
மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த முடிவெடுத்தனர்.

ஆளும் கட்சிக்கு குடைச்சல் கொடுப்பதற்காகவே இந்த விவகாரத்தை கையில் எடுத்து இருந்திருந்தது எதிர்க்கட்சிகள்.

ஆளும் கட்சியின் அதிகாரத்தை மீறி அதிகாரிகள், நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த மாட்டார்கள் என்று முழுமையாக நம்பிக் கொண்டிருந்தவர்களுக்கு, அஹமத் மற்றும் அர்ஜூனின் அதிரடி நடவடிக்கை அச்சத்தைத் தர

அதிகாரிகள் மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற போகிறார்கள் என்று தெரிந்ததும் சட்டவிரோதமாக இயங்கும் தோல் பதனிடும் ஆலையில் பாதி ஆளும் கட்சிக்கும் பாதி எதிர்க்கட்சிக்கும் சொந்தமானது என்பதால், அவர்களுக்கு இடையே ஏற்பட்டிருந்த அரசியல் பூசலை களைந்து,
இருவரும் ஒன்று கூடி, அந்தப் போராட்டத்தில் இருந்து பின்வாங்க,
அரசியல் கட்சியினர் பின் வாங்கினாலும் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் செய்தனர்.

இந்த நிலையில் அதிகாரிகள் , எப்படியும் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தி விடுவார்கள் என தெரிந்ததும், ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி சார்ந்தவர்கள் சிலர் ஒன்று கூடி,
ஆலை மூடினால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என
மற்றொரு போராட்டத்தை முன்னெடுத்தனர் .

இதனால் பொதுமக்களுக்கும் அரசியல் கட்சியை சார்ந்தவர்களுக்கும் இடையே சலசலப்பு ஏற்பட தொடங்கியிருந்தது.

"ஆளும் கட்சியா இருந்தா என்ன... எதிர்க்கட்சியா இருந்தா என்ன... அரசியல்வாதிங்க அவங்க அடிப்படை புத்திய காட்டிடறாங்க... மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாம எதையாவது ஒன்னை வச்சு திசை திருப்பும் அரசியல் பண்ணுறதிலேயே குறியா இருக்காங்க... கோர்ட் ஆர்டர் இருந்தும் இத்தனை நாளா
எந்த அதிகாரிகளையும் நடவடிக்கை எடுக்க விடாம, அவங்க வீட்டுக்கு முறைவாசல் செய்ய மட்டும் வச்சுக்கிட்டு இருந்திருக்காங்க ..." என தன் உள்ளக் குமுறலை கக்கினான் அர்ஜுன்.

இந்நிலையில் எப்போது வேண்டுமானாலும் கலவரம் மூளும் அபாயம் இருந்ததால் , அதற்கு முன்பே ஆலைகளை மூடவேண்டும், கலவரம் செய்வோரை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்பன போன்ற சவால்கள் அவன் முன்னிருந்த நிலையில், அவன் சிந்தனைகள் அதை நோக்கியே சுழல ஆரம்பிக்க,
அவன் அலுவலகப் பணிச்சுமையை புரிந்துகொள்ளாமல் அவளது சிந்தனை வேறு திசையை நோக்கி பயணிக்க,

ஒரு விஷயத்தை சுபமாகவும் முடிக்கலாம் அசுபமாகவும் முடிக்கலாம்.
ஆனால் முடிவுக்கு வரவேண்டிய நேரத்தில் கட்டாயம் அது முடிந்து விடும் .
அதனை முடித்து வைப்பதற்காக தான் மங்களேஸ்வரியும், சொர்ணாவதியும்
ஒரு அசுபயோக அசுபதினத்தில் மேற்கு வங்கத்தில் அடியெடுத்து வைத்தனர் .



தகிப்பாள்


இனிய சொந்தங்களுக்கு,

எல்லா செயல்களின் துவக்கம் அவன்
தமிழ் கடவுளின் தனயன் அவன்
தாய் தந்தையை உலகம் ஆக்கியவன்
அனைத்துக் கவலைகளையும் அகற்றுபவன்
வினை தீர்க்கும் நாயகன் விக்னேஸ்வரன்.

அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.

ப்ரியமுடன்
ப்ரியா ஜெகன்நாதன்.
 
அத்தியாயம் 23


மேலும் ஒரு நாள் கழிந்த நிலையில், ஜானவியும் சோம்நாத்தும் சுபத்ராவை சந்திக்க வர, எதிர்பாராத அவர்களின் வரவு, அவளை திக்குமுக்காடச் செய்ய

" ஹேய் ,உங்க ரெண்டு பேரையும் நான் எதிர்பார்க்கவே இல்ல ... அவர் ஆபிஸ்க்கு போய் இருக்காரு..."

" தீதி , உனக்கு சர்ப்ரைஸ்
கொடுக்கிறதுக்காக இந்த விசிட்டை பிளான் பண்ணினதே ஜிஜாஜி தான். இன்னைக்கு ஈவினிங் நாங்க ரெண்டு பேரும் போபால் கிளம்பறோம் ...
எல்லா ஏற்பாட்டையும் ஆல்ரெடி ஜிஜாஜி செய்துட்டாரு.... இன்னைக்கு காலையில ஷாப்பிங் முடிச்சுட்டு, அவரை ஆபிஸ்ல போய் பார்த்தோம், பிஸியா இருந்ததால, ரெண்டு வார்த்தை பேசிட்டு உன்னை பார்க்க அனுப்பி வச்சாரு...

" சரி, அப்பா என்ன சொன்னாரு ..."

" வழக்கம் போல பிரச்சனை பண்ணாரு ... ரெண்டு பேரும் எங்க போய் படிக்க போறீங்க... இதுக்கெல்லாம் பணம் ஏது... அப்படி இப்படினு ஏகப்பட்ட கேள்வி கேட்டாரு ...
ஸ்காலர்ஷிப் கிடைச்சிருக்குன்னு சொல்லி ஒரு வழியா நானும் தம்பியும் சமாளிச்சிட்டோம்... என்ன ஒன்னு அம்மாக்கு தான் உடம்பு சரியில்ல அவங்களை விட்டுட்டு போக தான் கஷ்டமா இருக்கு..."

" ஏன் அம்மாவுக்கு என்ன ஆச்சு ..." என சுபா பதற

" லேசா நெஞ்சுவலின்னு சொன்னாங்க மூச்சு விட கஷ்டப்பட்டாங்க.... இரண்டு நாள் கவர்மெண்ட் ஹாஸ்பிடல்ல இருந்தாங்க .... இப்ப பரவாயில்ல ..."

அர்ஜுன் இருவருக்கும் விதவிதமான ஆடைகள், பயணத்திற்கான பைகள், காலணிகள் , அலைபேசி என அனைத்தையும் வாங்கித்தர தன் உதவியாளரிடம் பணம் கொடுத்து அனுப்பியதோடு உடனிருந்து உதவுமாறும் பணித்திருந்தான்.

அனைத்தையும் கேட்டு தெரிந்து கொண்டவளுக்கு, வழக்கம் போல் கண்கள் பனிக்க, அதனை வெளிக்காட்டாமல் சமாளித்துக் கொண்டு, தன் வீட்டின் பொருளாதார நிலையை அறிந்தவளாதலால், தன் கையாலேயே
வித விதமாக சமைத்து போட்டு அவர்களை சாப்பிட வைத்து மகிழ்ந்து போனாள்.

மூவரும் சேர்ந்து உரையாடி உண்டு மகிழ்வது அன்றோடு கடைசி எனத் தெரியாமல், எல்லையற்ற மகிழ்ச்சியில் ஏகோபித்து சிரித்து மகிழ்ந்தனர்.

அன்று மாலை அவர்கள் மனநிறைவோடு விடை பெற்றதும் , ஒருவித வெறுமை சூழ,
இரவு பதினொன்றை கடந்தும் உறக்கம் வராமல் தவித்துப்போனாள்.

அப்போது வெளியில் வாகன சத்தம் கேட்க, ஓடோடி சென்று பார்த்தவளிடம் ,

" என்னமா இன்னும் தூங்கலையா ..."
என்றவனின் முகத்தில் அதீத களைப்பு. கேட்பதற்கும் சொல்வதற்கும் அவளுக்கு ஆயிரம் விஷயங்கள் இருந்தாலும் அப்போது அவனது உறக்கமே பிரதானமாக தெரிய,

" சாப்பிட்டீங்களா ... ஏதாவது சாப்பிடறீங்களா...."

" எட்டு மணிக்கே சாப்டாச்சு...
அன் டைம்ல எதுவும் வேணாம் ... என்ன உன் தம்பி தங்கை எல்லாம் ஊருக்கு போயாச்சா ...." என்றான் புன்னகை பூத்தபடி.

" ஹான் ஜி...." என்றவள், ஓரிரு நொடிக்கு பிறகு " தேங்க்ஸ்..." என்றாள். அவள் விழிகள் ஏதோ சொல்ல விழைவதை உணர்ந்து நெருங்கியவன், நெற்றியில் அழுந்த முத்தமிட்டு,

" போய் தூங்கு ... எனக்கு கொஞ்சம் லீகல் வொர்க்ஸ் இருக்கு ... நாளையிலிருந்து மூணு நாளைக்கு ரொம்ப ஹெக்டிக் ... நான் வீட்டுக்கு வர்றதே கஷ்டம்னு நினைக்கிறேன்.... பார்க்கலாம் ... " என்றபடி அவன் அலுவலக அறைக்கு செல்ல, தன் அறைக்கு வந்தவள், சற்று நேரம் உறக்கம் வராமல் தவித்து பிறகு உறங்கிப் போனாள்.

மறுநாள் காலை ஏழு மணிக்கு, அவன் அலுவலகம் கிளம்பி கொண்டிருக்கும் போது , இரு ஏழரைகள் அவன் வீட்டில் அடியெடுத்து வைத்தன.

மங்களேஸ்வரி மற்றும் சொர்ணாவதியின் குறித்த காலத்திற்கு முன்பான இந்த திடீர் வரவு , அவனை பேச்சிழக்க வைக்க, முதலில் திணறி, பிறகு சமாளித்தபடி

" வாங்க ... எப்படி இருக்கீங்க .." என்றான் இருவரையும் பொதுவாகப் பார்த்து உதட்டில் புன்னகையை ஒட்ட வைத்தபடி.

வழக்கம் போல் மங்களேஸ்வரி தனது கெத்திலிருந்து சற்றும் குறையாமல்,
ஏதோ குப்பை மேட்டை பார்ப்பது போல், அந்த வீட்டைப் பார்த்து வைக்க,
சொர்ணாவதி மலர்ந்த முகத்தோடு ,
அவர்களது பெட்டிகளை , அந்த வீட்டின் வேலைக்காரர்கள் உதவியோடு, காரிலிருந்து இறக்கி, உறவினர்கள் அறையில் வைத்துக்கொண்டிருந்தாள்.

பொதுவாக மங்களேஸ்வரி ஓரிடத்திற்கு பயணப்பட வேண்டும் என்றால்,
வெறும் ஒரு வாரமேயானாலும் , அவள் தங்கவிருக்கும் இடத்தில் சோபா செட்டில் இருந்து திரைச்சீலை வரை எந்த நிறத்தில் எப்படி இருக்க வேண்டும் என்ற அளவிற்கு முன்னேற்பாடுகள் நடக்கும்.

தன்னுடைய அரண்மனை மற்றும் ஐந்து நட்சத்திர விடுதிக்கு குறைவான தரத்தில் அவள் தங்கியதே இல்லை என்கின்ற நிலையில், அவளது ஆஸ்தான வேலைக்காரர்கள் யாரும் இல்லாமல், முன்னேற்பாடுகள் ஏதும் நடக்காமல் வெறும் தனது செயலாளர் சொர்ணாவுடன் வந்திருப்பது, அவனுக்கு வித்தியாசமாகப் பட்டது.

வந்து 10 நிமிடம் ஆகியும், அவனது திருமணத்தைப் பற்றியோ அவனது மனைவியைப் பற்றியோ ஒரு வார்த்தை கேட்காமல்,ஏதோ அந்தக் கூடத்தை அளவெடுப்பது போல் சுற்றி முற்றி மங்களேஸ்வரி பார்த்துக் கொண்டு நிற்க, சொர்ணா , தந்திர சிரிப்பை வரவழைத்துக்கொண்டு,

" உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சுன்னு கேள்விப்பட்டேன் ராஜா, அவங்க எங்க ..." என பார்வையில் இல்லாத ஆர்வத்தைக் கூட்டி கேட்டுக் கொண்டிருக்கும் போதே,

மெரூன் நிற புடவை அணிந்து, முந்தானையால் தலை கொண்டையை
போர்த்தியபடி, கையிலிருந்த ஆரத்தி தட்டில் தீபம் ஒளிர்ந்து கொண்டிருக்க,
பூஜை அறையிலிருந்து தக தகத்தபடி வெளி வந்த சுபாவை பார்த்து இருவருமே வாய் அடைத்து நின்றனர்.

எல்லோரா ஓவியம் எழுந்து வருவது போல், உயரம், நிறம், முக லட்சணம்,
அதில் தவழும் ஏகோபித்த சாந்தம் என
உளி கொண்டு செதுக்காத யுவதியின் அழகில் திகைத்ததோடு
புகைப்படத்தில் பார்த்ததை விட பன்மடங்கு வனிதையாய் காட்சியளித்தவளை கண்டு,அவர்களது திட்டம் நிறைவேறுமா என்ற எண்ணம் இருவருக்குமே தோன்ற,

" சுபா, இவங்க என் அம்மா.... அவங்க அவங்களோட செக்ரட்டரி ..." என இருவரையும் ஒருசேர அவன் அறிமுகப்படுத்த,
மங்களேஸ்வரியின் ஆளுமையும் கம்பீரத்தையும் கண்டு அசந்து தான் போனாள் சுபா .

இந்த வயதிலும் மங்களேஸ்வரியின் கருகரு கூந்தல், துளிக்கூட சுருக்கம் இல்லா பளபளத்த சருமம் , அணிந்திருந்த நகைகள் சிறிதேனும் அவற்றில் அளவுக்கதிகமாக மினுமினுக்கும் வைரங்கள், தோரணையான பார்வை , மிதமிஞ்சிய மிடுக்கு என அனைத்தும் ஒருவித அச்சத்தை விதைத்த நிலையில்,

" நமஸ்தே ...." என்றவள், கையில் இருந்த ஆரத்தி தட்டை பொதுவாக நீட்ட, சொர்ணா அதிலிருந்து
குங்குமப் பிரசாதத்தை எடுத்துக் கொண்டதோடு, நைவேத்தியத்திற்கு வைத்திருந்த பாலில் செய்த இனிப்பு வகையை இயல்பாக எடுத்து வாயில் போட்டுக்கொள்ள, பிறகு மங்களேஸ்வரியின் முறை வந்த போது
எதையும் முகத்தில் காட்டிக் கொள்ளாமல், தீபத்தைத் தொட்டு வணங்கி குங்குமப் பிரசாதத்தை மட்டும் எடுத்துக் கொண்டவர், கொடுத்தவளின்
முகத்தை கூட சரியாக பார்க்காமல், அவள் அப்போது கூறிய
'நமஸ்தே' விற்கு வேண்டா வெறுப்பாக தலையசைத்து வைத்தார்.

பிறகு அவர், அர்ஜுன் சொர்ணாவோடு காலை உணவை முடிக்க
" போயிட்டு வரேன் .." என பொதுவாக கூறிவிட்டு, பரபரப்போடு அலுவலக வாகனத்தில் அர்ஜுன் பயணமாக,
அதற்காகவே காத்துக் கொண்டிருந்தது போல் அவர்களது திட்டத்தின் அடுத்த அடியை அழுத்தமாகவும் அதே சமயத்தில்
சரியாகவும் எடுத்து வைக்க எண்ணினர் மங்களேஸ்வரியும் சொர்ணாவதியும்.

இரண்டு நாட்களுக்கு முன்பே இருவரும் மேற்கு வங்கத்தை வந்தடைந்து தங்களின் முக்கிய வியாபார பிரமுகரின் மூலம், சந்திரநாத்தை தொடர்பு கொண்டு நடந்ததை பேசி தெரிந்து கொண்டதோடு இனி நடக்கப் போவதையும் திட்டம் தீட்டி விட்டுத்தான் அர்ஜுனின் இல்லத்திற்கே வந்திருந்தனர்.

அதற்கு முன்பே சந்திரநாத் தன் மகள் ஜானவி, மகன் சோம்நாத் இருவரும் அவர்களது படிப்பிற்காக அர்ஜுன் செய்திருந்த ஏற்பாட்டை பற்றி பேசி கொண்டிருந்ததை வீட்டு வாயிலில் நின்று செவிமடுத்து கொதித்துப் போனார்.
எப்படியாவது அர்ஜுனுக்கு எதிராக செயலாற்றிய தீரவேண்டும் என அவர் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கும் போதுதான் சொர்ணாவதியின் அழைப்பு வந்தது.

பிறகு நடந்ததை அவரிடம் கேட்டு தெரிந்து கொண்ட சொர்ணா,

" உன் பொண்டாட்டிக்கு உடம்பு சரியில்லனு வைத்தியம் பார்க்க ரெண்டு லட்சம் வேணும்னு கேக்கிற...
அதைப்பத்தி நீ கவலைப் படாத ...
ரெண்டு லட்சம் இல்ல 20 லட்சம் தரேன் ...
உன் பொண்ணு எங்க ராஜாவோட இருக்கக் கூடாது....
அந்த வீட்டை விட்டு வெளியே போயிடனும்... எந்த சந்தர்ப்பத்துலயும் அவ எங்க இருக்கான்னு எங்க ராஜாவுக்கு தெரியக்கூடாது ....

அவளே அந்த வீட்டை விட்டு வெளியே போற மாதிரி, நான் அவளை தயார் பண்ணி வைக்கிறேன்....நீ வந்து கூப்ட்டுக்கிட்டு போ.... உனக்கு தேவையான பணத்தை இப்பவே கொடுக்கிறேன் ...அதுவரைக்கும் விஷயம் ரகசியமா இருக்கட்டும் ..." என பேசி முடித்திருந்தாள்.

ஏற்கனவே மூத்த மகள் வீட்டை விட்டு சென்று வேறு ஜாதிக்காரனான அர்ஜுனை மணந்துக்கொண்ட நிலையில், இப்போது மற்ற இரு பிள்ளைகளும் அவன் நிழலில் பாதுகாப்பாக இருக்க தொடங்கியது அவருக்கு துளிக்கூட பிடிக்காமல் போக ....
தன் மூன்று பிள்ளைகளின் வாழ்வும் ஏதோ ஒருவகையில் சீர் அடைந்ததை ஒட்டி தன் மனைவியும் முன்பு போல் தன்னிடம் அஞ்சி நடுங்குவதில்லை.... என்பதை எல்லாம் மனதில் வைத்து அர்ஜுனை பழி வாங்கியே தீர வேண்டும் என்ற வன்மத்தில் சொர்ணாவின் திட்டத்திற்கு இசைந்தார் சந்திரநாத்.

அர்ஜுன் சுபாவை தன் வீட்டில் பலத்த பாதுகாப்போடு வைத்திருக்கிறான் ...
அந்த வீட்டிலிருந்து அனைத்து பாதுகாப்புகளையும் மீறி அவள் தனியே வெளியேறுவதென்பது நடவாத காரியம்.... என்பதை சந்திரநாத் மூலம் அறிந்துக்கொண்டு, அதனை நிகழ்த்திக் காட்டும் திட்டத்தோடு தான் வந்திருந்தாள் சொர்ணா.


" என்னோட தராதரத்துக்கு அந்த பொண்ணோட பேச நான் தயாராயில்ல ...." என கண்ணில் மிதமிஞ்சிய வெறுப்போடு மங்களேஸ்வரி கூற

" வேணாம் மேடம்...நீங்க அவ கிட்ட பேச வேண்டாம்... நான் பேசிக்கிறேன்
அந்த பொண்ணு பார்க்க புத்திசாலியா மட்டுமில்ல பொறுமைசாலியாவும் தெரியறா.... நீங்க ஏதாவது பேசி அது ராஜா காதுக்கு போச்சுன்னா நம்ம திட்டம் அம்பேல் ...

ஏழையா இருந்தாலும் அவகிட்ட ஒரு வித நிமிர்வு தெரியுது ..... அதை விட முக்கியமா ரொம்ப நல்லவளா தெரியறா...
அவளோட பேசி,
அவளுக்கு தெரியாமலே அவ மனச களைச்சு,
அவ தன்னம்பிக்கைய உடைச்சு, தாழ்வு மனப்பான்மையை அதிகப்படுத்தி, அர்ஜுனுக்கு மட்டும் இல்ல நம்ம பரம்பரைக்கே அவ பொருத்தம் இல்லன்னு முடிவெடுக்க வச்சு... அவளே இந்த வீட்டை விட்டு போற மாதிரி செய்யணும் மேம்...

அதுக்கு நான் அவ கூட இயல்பா பழகி, அவள புரிஞ்சிக்கணும் ...
சில பேர் பார்க்க சாதுவா தெரிவாங்க ...
மன தைரியம் அதிகமாயிருக்கும் ...சில பேர் பாக்க அதிரடியா இருப்பாங்க ... உள்ளுக்குள்ள ரொம்ப பூஞ்சையா இருப்பாங்க ...
சோ மொதல்ல அவளை நல்லா புரிஞ்சுகிட்டு தான், அடுத்த காயை நகர்த்தனும் மேம் ...." என தன் திட்டத்தை சொர்ணா விளக்க

" எதையாவது செய், ஆனா இதுல என் கை இருக்குன்னு மட்டும் ராஜாவுக்கு தெரியக்கூடாது ... அவளா வீட்டை விட்டு போனதா இருக்கணும்.... வேலை முடிஞ்சதும் வழக்கம் போல உனக்கு வந்து சேர வேண்டியது வந்து சேர்ந்திடும்...." என்றதை கேட்டு பூரிப்படைந்தவள்

" என்கிட்ட விட்டுட்டீங்க இல்ல... இன்னும் ஒரே வாரத்துல இந்த வேலையை பக்காவா முடிச்சு காட்டுறேன் ..." என்றவளுக்குத் தெரியாது, ஏற்கனவே தாழ்வுமனப்பான்மையிலும் குற்ற உணர்விலும் தவித்துக் கொண்டிருப்பவளை தான், அவள் தட்டி வீழ்த்த போகிறாள் என்றும் , அதுவும்
வெகு சுலபத்தில் மூன்றே தினங்களில் நிறைவேற போகிறதென்றும்.

சுபத்ரா, அவர்கள் இருவருக்கும் மதிய உணவு பரிமாறி, அவர்கள் சாப்பிட்டு முடித்ததும், தானும் உண்டு முடித்து மாடித் தோட்டத்தை கண்காணிக்க சென்ற போது, எதேச்சையாக பின் தொடர்வது போல் சொர்ணா பின் தொடர்ந்து பேச்சு கொடுத்தாள்.

முதலில் எதுவுமே தெரியாதது போல் சுபாவின் குடும்பத்தை பற்றி கேட்டு தெரிந்து கொண்டவள், பிறகு சுபா அர்ஜுனை சந்தித்தது, அவர்களது திருமணம் என அனைத்தையும் மிகுந்த உற்சாகத்துடன் கேட்டு மகிழ்வது போல் ஒருவித நட்போடு காட்டிக்கொண்டாள்.

சொர்ணா பேச்சில் படு கெட்டிக்காரி .
எதிராளியின் மனதை எளிதில் புரிந்து கொண்டு அவர்களுக்கு ஏற்றார் போல் பேசி, அவர்கள் மனதில் இடம் பிடித்து விடுவாள்.

சுபாவின் பேச்சில் தாழ்வு மனப்பான்மை தெள்ளத்தெளிவாக தெரிய,
அர்ஜுன் தன் தம்பி தங்கைக்கு செய்யும் நன்மைகள், இன்னும் மூன்று நாட்கள் பணி நிமித்தம் காரணமாக அவன் வீடு வருவதே அரிது என்பதையெல்லாம் அவள் வெள்ளந்தியாய் உளறிக் கொட்ட, அதில் சொர்ணாவுக்கு தேவையானது பிடிபட்டு போக , அதை வைத்தே அடுத்த காய் நகர்த்த முடிவு செய்தவள்,

" ராஜா ரொம்ப நல்லவரு ... சின்ன வயசிலிருந்தே அவர் அடுத்தவங்களுக்கு உதவி தான் பழக்கம்...." என்று வெறும் வாய் வார்த்தையில் சொல்லாமல்,
அர்ஜுன் குடும்பத்தின் பரம்பரை புகைப்பட ஆல்பத்தை காட்டி( முழுக்க முழுக்க அவன் அரண்மனையை சுற்றி எடுக்கப்பட்ட புகைப்படங்கள்) அவனின் சிறு வயது தோற்றங்கள், தேயிலைத் தோட்ட தொழிலாளர்களோடு அந்த ஊர் மக்களுக்கு அவன் செய்த நன்மைகள், கல்லூரி கால மற்றும் அக்னியுடன் எடுத்துக் கொண்ட எண்ணற்ற புகைப்படங்கள் என அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக காட்டி அதற்கு ஒரு கதையும் கூறிக்கொண்டே சென்றவளுக்கு அவள் எதிர்பார்த்த மாற்றங்கள் சுபாவின் முகத்தில் செவ்வனே நடந்தேறுவதை எண்ணி
அகம் மகிழ்ந்து போனாள்.

அக்னிக்கு திருமணமானதை முற்றிலும் மறைத்து, பொய் உரைப்பதாக எண்ணிக்கொண்டு, அர்ஜுன் அக்னியை காதலித்ததாக சொன்னவள், தற்போது
அக்னி அமெரிக்காவில் ஆராய்ச்சி படிப்பு படிப்பதாகவும் அவளுக்கும் அர்ஜுனுக்கு
இன்னும் மூன்று மாதத்தில் திருமணம் நடைபெறவிருந்த நிலையில்,
சந்தர்ப்ப சூழ்நிலையால் உன்னுடன் திருமணம் நடந்தேறி விட்டதாக கூறி இயல்பாக பேச்சை முடித்தவள், சுபாவின் கண்கள் லேசாக கலங்கியிருப்பதை பார்த்து மனதிற்குள் கொக்கரித்து போக,
அந்த சமயம் பார்த்து மங்களேஸ்வரியிடமிருந்து அலைபேசியில் அழைப்பு வர,
சொர்ணா விடை பெற்று சென்றதும்
சுபாவின் சிந்தனைகள் வேகமாக செயல்பட தொடங்கியது.

அர்ஜுன் பெரும் பணக்காரன் என்று கேள்விப்பட்டே உடைந்து போயிருந்தவளுக்கு, சொர்ணா காட்டிய புகைப்படங்கள் அவனது பொருளாதார வளமையை பறைசாற்றியதோடு , அக்னியின் மீதான அவனது ஈர்ப்பையும் காதலையும் தெள்ளத் தெளிவாக காட்ட, துடித்து அழ ஆரம்பித்தாள் .

பதின் பருவத்தில் இருந்து மூன்றாண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை அவன் அக்னியோடு எடுத்துக்கொண்ட அனைத்து புகைப்படமும் அவள் மீதான அவன் ஆழமான காதலை அழகாக காட்டியிருக்க,

பாவம் எத்தனை காதலை சுமந்துகொண்டு அவளருகில் நிற்கின்றான் ... அவை அனைத்தும் ஒரு நொடியில் தன் தந்தையின் தான்தோன்றிதனத்தால் ஒன்றுமில்லாமல் ஆகிவிட்டதே என்றெண்ணி தவித்துப் போனாள்.

அர்ஜுன் திருமணத்தின் போது அவளை காதலிக்க வில்லை என்பது உண்மைதான்
ஆனால் இப்போது அவளை முழுவதுமாய் நேசிக்கிறான்.
அவனது மனம் எனும் சிம்மாசனத்தில் இக்கணத்தில் சம்மணமிட்டு ஆட்சி செய்வது அவள் தான்.
அதனை அவளிடம் சொல்லாலும் செயலாலும் உணர்த்துவதற்கு தான் பாவம் அவனுக்கு நேரமில்லை.

பொதுவாக கட்டிலில் காட்டப்படும் காதலை கண்ணாட்டிகள் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை.
அவர்களுடன் கொஞ்சி பேசி விளையாடும் தருணங்களை தான் காதலின் பொக்கிஷங்களாக நினைத்துப் பார்ப்பதுண்டு.

இந்த 2 மாத திருமண பந்தத்தில் அப்படி ஒரு தருணம் இருந்ததாக அவளுக்கு நினைவில் இல்லை.

அவளது அதிகபட்ச ஆசையே,
யாதோரு இடையூறும் இல்லாமல் அவனோடு இருக்க வேண்டும் ...
அவன் கைப்பற்றி நடக்க வேண்டும்...
அவளுக்கு பேச தெரியாது என்பதை விட பேச வராது.. ஆதலால் அவன் குறும்பாக பேசுவதை கேட்டு ரசித்து சிரிக்க வேண்டும். ஆனால் இவற்றையெல்லாம் நடைமுறைப்படுத்த முதலில் நேரம் வேண்டும் ... அப்படி ஒரு நேரத்தை அவன் அல்லவா உருவாக்கிக் கொள்ள வேண்டும் ...

கொல்கத்தாவில் மற்றவர்களின் முன் அவன் அவளை தூக்கி சுற்றி, சிரித்து மகிழ்ந்தது கூட சபைக்காக நடந்த நாடகமோ என்ற எண்ணமே இப்போது தோன்ற ஆரம்பித்தது.

மற்றபடி தன்னை ஒரு மோசமான திருமணத்திலிருந்து காப்பாற்ற எண்ணி தான் மணந்து கொண்டுள்ளான்.

அக்னியின் மீதான காதலால் சிறிது காலம் விலகி இருந்தவன், அந்த விலகலே தன்னை வாட்டுகிறது என்பதை புரிந்து கொண்டதும் தான் திருமண உறவை ஏற்படுத்திக் கொண்டான் .

தற்போது தன் தம்பி தங்கைக்காக பார்த்து பார்த்து செய்வது கூட இயல்பாகவே அவனிடம் கொட்டிக்கிடக்கும் பொறுப்புணர்வும் பெருந்தன்மையாலும் தான். மற்றபடி தன் மீதான காதலில் அல்ல என்று முடிவுக்கே வந்திருந்தாள்.

திருமணத்தைப் பற்றிய அவன் கோட்பாடுகளை எல்லாம் காற்றில் பறக்க விட்டவள், அர்ஜுனை போன்ற நேர்மையான ஆண்மகன், ஆத்மார்த்தமான காதலியின் காதலில் மூழ்கி திளைத்து, திருமணம் நடைபெறவிருக்கும் நிலையில், எத்தகைய இக்கட்டான சூழ்நிலையானாலும் வேறொருத்தியிடம் மணம் புரிந்துக்கொள்ள கேட்பானா, என்ற அடிப்படை அறிவு கூட வேலை செய்யயாமல் போனதுதான் துரதிர்ஷ்டத்தின் உச்சக்கட்டம் .

இரவு உணவு உண்ண பிடிக்காமல் படுக்கையில் விழுந்தவள், நீண்ட மனப் போராட்டத்திற்கு பின் கண் அயர்ந்து போனாள்.

ஏற்கனவே சட்டவிரோதமாக இயங்கும் தோல் பதனிடும் ஆலையை மூடக்கோரி போராடும் மக்கள் மற்றும் அதனை செயல்படுத்த போகும் அதிகாரிகளை எதிர்த்து, அரசியல் கட்சியினரின் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், அதனை ஒருவாறு சமாளித்து இரவு ஒரு மணிக்கு வீடு வந்த அர்ஜுன், அயர்ந்து உறங்கும் மனையாளின் தலை கோதி விட்டு, தள்ளி படுத்துறங்கியவன், அதிகாலை ஆறு மணிக்கெல்லாம் புறப்பட்டு சென்று விட்டான்.

அலுவலகம் சென்று சட்டரீதியாக செயல்பட வேண்டிய கோப்புகளை தயார் செய்துவிட்டு, போராட்டக் களத்தை பார்வையிட சென்றவனுக்கு
அங்கு நேற்றை விட மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பது தெரியவர அரசியல் கட்சியினர் கடற்கரையோரப் பகுதியில் வசிக்கும் , மற்ற கிராமங்களைச் சேர்ந்த மக்களிடம்
பணம் கொடுத்து அவர்களை இறக்குமதி செய்து, தங்களது பலத்தை காட்ட முழுவீச்சில் முயன்று கொண்டிருப்பது தெள்ளத் தெளிவாக தெரிய வந்தது.

மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் நீதிமன்ற ஆணையை நிறைவேற்றும் பொருட்டு மறுநாள் மதியம் 1 மணிக்கு, தகுந்த பாதுகாப்போடு சட்ட விரோதமாக இயங்கும் அனைத்து தோல் பதனிடும் தொழிற்சாலைகளை மூடப்படும் என்ற செய்தியை மற்ற அதிகாரிகளுக்கு பிறப்பித்து விட்டு, அரசு வாகனத்தில் ஏறி அமர்ந்தவனின் கண்ணில், ஒரு நிறை மாத கர்ப்பிணி சாலையை கடந்து செல்வதை கண்டதும் , மனையாளின் நினைவு வர,
அவர்களது திருமண வாழ்வு தொடங்கிய நாளிலிருந்து, இன்று வரை கணக்கிட்டு பார்த்தவனுக்கு, அவன் மனைவியாள் இந்த மாதம் மாதவிலக்குக்காக ஒதுங்கவில்லை என்ற செய்தி கிட்ட,
ஏனோ உள்ளுக்குள் ஒருவித உற்சாகமும், வெளியே சொல்ல முடியாத ஆனந்தமும் கூடி அவனை ஆட்டிப் படைத்தது.

இது குறித்து அவளிடம் கேட்க வேண்டும் என்றெண்ணி கொண்டிருந்தவனுக்கு தெரியாது, கையில் கிடைத்ததை தொலைத்து விட்டு அனைத்தும் சூனியமான நிலையில் தான், அது குறித்து அவளிடம் கேட்கப் போகின்றான் என்று.

சாலையின் மறுபுறம் பார்த்தவனின் கண்களில்
இரு சக்கர வாகனத்தில் ஜோடியாய் பறக்கும் ஜோடி புறாக்கள்,
கை கோர்த்து தோள் சாய்ந்து நடக்கும் காதலர்கள், உலகை மறந்து சிரித்து பேசும் சின்னஞ்சிறுசுகள் பட, அவனது ஏக்கம் இன்னும் அதிகமாகி போனது.

இங்கிருந்தால் தான் எதிர்பார்க்கும் நேரமும் நிம்மதியும் கிட்டாது என்பதை உணர்ந்துக்கொண்டவன்
நான்கைந்து நாட்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு, டார்ஜிலிங்கில் இருக்கும் தனது எஸ்டேட்டுக்கு மனையாளோடு தேனிலவு செல்ல முடிவு செய்தான்.

ஆற அமர அவளது வெட்கத்தை ரசிக்க வேண்டும், அத்தி பூத்தாற் போல் அவள் உதிர்க்கும்
நாணம் கலந்த சிரிப்பில் மனம் தொலைக்க வேண்டும்... அவளை அதிகம் சீண்டி விளையாடி சாந்தமான அந்த முகத்தில் கோபத்தை வரவழைக்க வேண்டும்.. என்பன போன்ற ஆசைகள்
துளிர்க்க,

மனித மனங்கள் போடும் திட்டங்கள் என்றுமே நிறைவேறுவதில்லை ... தெய்வ சித்தம் இல்லாதிருக்கும் வரை

என்பதை உணராமல் இந்த வார இறுதியில் அதற்கான ஏற்பாட்டினை செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தான்.

அர்ஜுன் வீடுக்கு வந்து போனது தெரியாத நிலையில், காலை 7 மணிக்கு மேல் கண்விழித்தவளுக்கு, தலை 'வின் வின்' என்று தெறிக்க, படுக்கையை விட்டு எழ முடியாமல் எழுந்து குளித்து முடித்து உடை மாற்றும் போது, வயிற்றில் எதுவுமே இல்லாத நிலையில் குமட்டிக் கொண்டு வர,
மீண்டும் குளியலறைக்குச் சென்று வாந்தி எடுத்து, முகம் கழுவிக்கொண்டு வந்தவளுக்கு ஊர்ஜிதம் ஆகிப்போனது குட்டி அர்ஜுன் உதித்து விட்டான் என்று.

அந்த சிறு வயதிலேயே எத்தனை மசக்கைக்கும் , எத்தனை பிள்ளை பேறுக்கும் உடனிருந்து ஒத்தாசை செய்ததன் அனுபவம், அதை தெளிவாக உணர்த்த, அவள் ஆல்பத்தில் பார்த்த அர்ஜுனின் சிறுவயது தோற்றங்கள் கண் முன் காட்சியாய் ஒன்றன்பின் ஒன்றாக விரிய, அளவில்லா ஆனந்த கண்ணீருடன் பூரிப்பும் சந்தோஷமும் கலந்து கொண்டு, வார்த்தையில் விவரிக்க முடியாத தாய்மை உணர்வில் சிக்கித்
தவித்தவளுக்கு, உடனே தன் கணவனை தொடர்பு கொண்டு சொல்ல வேண்டும் என்று எண்ணம் உதிக்கும் போது
சொர்ணா நலம் விசாரித்தபடி அவள் அறைக்கு வர, ஓரிரு நிமிட பேச்சிற்கு பிறகு
மீண்டும் சுபாவுக்கு குமட்டிக் கொண்டு வர வாயை பொத்திக்கொண்டு குளியல் அறைக்குச் சென்றவளை வித்தியாசமாக பார்த்தாள் சொர்ணா .

அவள் களைத்த தோற்றத்தோடு வெளி வரும் போதே அனைத்தையும் கணக்கிட்டிருந்தவள் ,

" மாசமா இருக்கியா ...." என்றாள் உள்ளுக்குள் கொப்பளிக்கும் வன்மத்தை மறைத்து, கண்ணில் சாந்தத்தை கூட்டி.

" அப்படின்னு தான் நினைக்கிறேன் ..." என்றவளின் வெட்கத்தைப் பார்த்து,
மேலும் கொதித்தவள், அதனை வினாடி நேரத்தில் மறைத்து,

" நினைக்காத அதான் உண்மை ..." என்று கருவியடி

" ராஜாக்கு தெரியுமா ..."

" தெரியாது .... இனிமே தான் சொல்லணும். .." என்றவளின் மென்மையில் சொர்ணாவின் அகங்காரம் கூட, இனியும் தாமதித்தால், தான் தோற்றக்க போவது உறுதி, என்ற எண்ணம் முளைத்ததும், கடைசி அஸ்திரத்தை பயன்படுத்த நினைத்து

"ராஜா உன்னை, அந்த ட்ரெயின் ராபரில காப்பாத்தினது நார்த் இந்தியால பெரும்பாலும் எல்லாருக்கும் தெரியும் ... ஆனா உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டது இந்த ஸ்டேட்ல இருக்கிறவங்கள தவிர வேற யாருக்கும் தெரியாது ...

அந்தஸ்து குறைவா இருக்கிற பொண்ணை ஏத்துக்க, ராஜா குடும்பம் தயாரா இருக்கு ஆனா,
அடுத்தவன் குழந்தையைச் சுமந்துகிட்டு இருக்கிற பொண்ணை ஏத்துக்க தயாராயில்லை ...." என்ற வார்த்தையில் நெருப்பை மிதித்ததை போல் உணர்ந்தவள், சொர்ணாவை எரித்து விடுவது போல் பார்க்க,

" இங்க பார் ... கோவப்படாத ... எங்களுக்கு தெரியும் இது ராஜாவோட குழந்தை தான்னு... ஆனா போன மாசம் நடந்த ட்ரெயின் ராபரில நீ ரேப் விக்டிம்னு செய்தி வந்திருக்கு ....
அது பொய்யின்னு எங்களுக்கும் தெரியும்... ஆனா இந்த உலகம் நம்பாது ... அந்த நாலு பேர்ல யாரு அப்பான்னு தான் யோசிக்கும் .... இந்த காலத்துல டிஎன்ஏ டெஸ்ட் எடுத்துப் பார்த்துடுலாம் ஆனா அதையெல்லாம் எடுத்துக்கிட்டு போய் அவதூறு பரப்பரவங்க கிட்ட காட்டிக்கிட்டா இருக்க முடியும்... இல்ல நாள் கணக்கை காட்டி
விவரிச்சிக்கிட்டு இருக்க முடியுமா ...

உன்னை காப்பாத்தறதுக்காக அவரு சின்ன வயசிலிருந்து லவ் பண்ண அவர் அத்தை பொண்ணு அக்னியை கல்யாணம் பண்ணாம உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு இருக்காரு, ராஜாவுக்கு கல்யாணம் நடந்தது இப்ப வரைக்கும் அக்னிக்கு தெரியாது அடுத்த வாரம் வரப்போறா ....
என்ன பதில் சொல்லி சமாளிக்க போறாறோ ....தெரியல

அதோட நீயே சொன்ன மாதிரி உன் தம்பி தங்கையோட படிப்பு செலவை வேற ஏத்துகிட்டு இருக்காரு ....

இவ்ளோ உனக்காக செஞ்சவருக்கு, நீ ஒன்னே ஒன்னு செஞ்சிடு.... நீ குழந்தை உண்டாகியிருக்கிறதை அவர் கிட்ட சொல்லாத ..... அவருக்கு தெரியாமலே இந்த குழந்தையை கலைச்சிடு... அப்புறம் ஆறு மாசமோ, இல்ல ஒரு வருஷம் கழிச்சோ வேற ஒரு குழந்தையை பெத்துக்கோ.... இப்ப இந்த குழந்தை பொறந்தா, மத்தவங்க ராஜாவை ஒரு மாதிரி பார்ப்பாங்க அவருக்கு தான் அசிங்கம்.... நீ வீட்ல இருக்க உனக்கு இதெல்லாம் தெரிய வராது .... ஆனா வெளியுலகத்தை ராஜா தானே ஃபேஸ் பண்றாரு .... அதனாலதான் ...." என்றவளின் பேச்சு அதீத துக்கத்தை கொடுத்தாலும்,
அதில் உண்மை இருப்பது போலவே அவளுக்கு தெரிந்தது.
ஏற்கனவே சமுதாயத்தில் உயர் மட்டத்தில் இருப்பவர்கள் முதல் கடைநிலை கட்சி ரவுடிகள் வரை அர்ஜுனை பரிகாசித்தது அவளும் அறிவாள் அல்லவா ....
அன்று அந்த செய்தியை தெரிந்து கொண்டதிலிருந்து டிரைவர் தோட்டக்காரன், மற்றும் அந்த வீட்டின் மற்ற பணியாளர்கள் அவளை பார்க்கும் பார்வையில் வித்தியாசம் தெரிவது போன்ற உணர்வை, பெற்றிருந்தவளுக்கு , அவர்கள் முன் இந்த குழந்தையை சுமப்பது அர்ஜுனுக்கு இழுக்கு என்றே பட்டது .

ஆனால் அதே சமயத்தில் முதன் முதலில் அவன் உயிர் நீரில் உருவான அந்த அணுவை அழிக்கவும் மனமில்லாமல் அவள்
தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கும் போதே அவள் தங்கை ஜானவியிடமிருந்து அழைப்பு வர,
எடுத்த எடுப்பில்

" தீதி, அம்மா கிட்ட பேசணும்னு பக்கத்து வீட்டு ஆன்ட்டிக்கு போன் பண்ணி இருந்தேன்.... அம்மாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்து SS ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி இருக்காங்கன்னு ... அவங்க சொன்னாங்க..

ரெண்டு நாளா ஹாஸ்பிடல்ல இருக்காங்களாம் , இப்ப கொஞ்சம் பரவால்லனு சொன்னாங்க ... அப்பாவுக்கு போன் பண்ணா அவரு போனை எடுக்க மாட்டேங்கிறாரு....... இப்ப என்ன பண்றதுன்னு தெரியல..." என அழாத குறையாய் கேட்டவளிடம்,

" நான் அப்பா கிட்ட பேசறேன்... நான் அம்மாவை போய் பாக்கறேன் ....நீ கவலை படாத ..."
என ஆறுதல் கூறி அழைப்பை துண்டித்தவளிடம் நடந்ததை விசாரித்து தெரிந்துகொண்ட சொர்ணாவிற்கு அளவில்லா மகிழ்ச்சி.

சுபாவை அவர்கள் போட்ட திட்டத்திற்குள் எப்படி
கொண்டு வருவது என இரண்டு நாட்களாக குழம்பித் தவித்தவளுக்கு, பருத்தியே புடவையாய் காய்த்தது போல் ஜானவியின் அழைப்பு இருக்க,
இனி மேல் வெற்றிக்கனி வெகு தொலைவில் இல்லை என்று மனதுக்குள் குதூகலித்த படி


" உன் தங்கை சரியான நேரத்துல தான் போன் பண்ணி இருக்கா ...உங்க அம்மா உயிருக்கு போராடிட்டு இருக்காங்க முதல்ல அவங்களை காப்பாத்தணும்.... ஒரிசால இருக்கிற புவனேஸ்வர்ல என் பிரண்டோட பெஸ்ட் கார்டியாக் ஹாஸ்பிடல் இருக்கு ... இப்பவே
உங்க அம்மாவ அங்க சேர்க்கிறதுக்கான ஏற்பாட்டை செய்றேன்.... இன்னொரு முக்கியமான விஷயம், அது வேற ஸ்டேட்... உங்க மேரேஜை பத்தி அங்க தெரிஞ்சிருக்க வாய்ப்பு இல்லாததால நீ குழந்தையை கலைக்க வேண்டிய அவசியமும் இல்லை ...

ஏற்கனவே ராஜா ரொம்ப பிசியா இருக்காரு... இன்னைக்கு நைட் வீட்டுக்கு வர கூட வாய்ப்பு இல்லன்னு நீதான சொன்ன ... அதனால இப்ப எதையும் அவர் கிட்ட சொல்லாத ...
அவர் ஒத்துக்கவும் மாட்டாரு....
உங்க அப்பாவுக்கு போன் பண்ணி வர சொல்லு ... நாளைக்கு காலையில அவரோட நீ கிளம்பி போயிடு....
ராஜா வந்ததும் நான் சொல்லிக்கிறேன் ...

நிச்சயமா உன்கிட்ட பேசுவாரு... உன்னை தேடி வருவாரு... அப்ப இந்த காரணத்தை சொல்லு .... அங்கேயே குழந்தையும் பெத்துக்கோ ... ஒரு வருஷம் கழிச்சு சவுத்க்கு ட்ரான்ஸ்பர் வாங்கிட்டு வந்து நிம்மதியா வாழுங்க... அங்க யாருக்கும் எதுவும் தெரியாது.. " என்றவளின் பேச்சு
100% சரி என்றே சுபாவிற்கு பட,
ஒரு சின்ன உறுத்தலோடு,

" அக்னி ...." அதற்கு மேல் பேச முடியாமல், சுபா துக்கத்தில் திக்கித் திணற ,

" அக்னி அடுத்த வாரம் வரப்போறா... அவ அமெரிக்கா போயி கிட்டத்தட்ட மூணு வருஷம் ஆகுது ...
ராஜா அக்னியை பார்த்தா மனசு மாற மாட்டாருன்னு நம்பறேன் .... இருந்தாலும் ஒரு வருஷம் ரெண்டு வருஷமில்ல பத்து வருஷ காதலாச்சே.... அதான் டவுட்டா இருக்கு ..." என்றவளின் பதில் சுபாவின் மனதில் பாரம் ஏற்றி தொண்டையை கனக்கச் செய்தது.

பிறகு தன் தந்தையை அலைபேசியில் தொடர்பு கொண்டவளுக்கு, என்றும் இல்லா வாஞ்சையோடு
அன்பொழுக பேசியவரின் வார்த்தைகள் மிக மிகப் புதிதாக பட,

அதோடு மட்டுமில்லாமல் சொர்ணா கூறியதை கூறும் போதும் , எதிர்ப்பு ஏதும் தெரிவிக்காமல், அனைத்திற்கும் சம்மதம் தெரிவித்ததோடு , மறுநாள் வந்து அவளை அழைத்து செல்வதாக கூறிய விதம் அதைவிட புதிதாக பட்டது .

இதையெல்லாம் அவள் உணர்ந்தாலும்,
அவள் மனம் இரு விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்த துவங்கியிருந்தது.
ஒன்று அவளைப் பெற்றவளை காப்பாற்ற வேண்டும்
இரண்டு அவளுக்குப் பிறக்கப் போவதை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் ...
என்ற ரீதியிலேயே யோசித்ததால் மற்றவைகள் அவள் மனதை விட்டு மறைந்தே போய்விட்டிருந்தன.

சொர்ணாவின் மூலம் விஷயத்தை கேள்விப்பட்ட மங்களேஸ்வரி அதிர்ந்து போய் ,

" நல்ல காரியம் செஞ்ச ... ராஜாவுக்கு மட்டும் அவ மாசமா இருக்கிற விஷயம் தெரிய வந்தா.. அவளை இப்படி அப்படி நகர விடமாட்டான் ...
அதுக்கு மேல நாம போட்ட பிளான் எல்லாம் வீணா போயிடும் ..." என்றவர் தன் நெற்றியை நீவி விட்டபடி,

" எனக்கு ஒரு டவுட் ... உன்கிட்ட சொல்ல மாட்டேன்னு சொல்லிட்டு, ஒரு வேளை ராஜாவை பார்த்ததும் சந்தோசத்துல அவ மாசமா இருக்கிறத சொல்லிட்டான்னா என்ன பண்ணுவ ...
அவ தம்பி தங்கை படிப்புக்கு செலவு செய்ற என் மகன், அவங்க அம்மாவை நல்லா ஹாஸ்பிடலில் சேர்த்து செலவு செஞ்சு காப்பாத்த மாட்டானா ... அவ ராஜாகிட்ட சொல்லவே மாட்டான்னு ஸ்ட்ராங்கா சொல்ற அளவுக்கு அவகிட்ட உனக்கு என்ன ஹோல்டு இருக்கு ....

இன்னைக்கு நைட் ராஜா வீட்டுக்கு வரலன்னா பிரச்சனை இல்ல...ஒரு வேளை வந்துட்டான்னா ... என்ன பண்ணுவ ...
ஏன்னா இன்னைக்கு ஒரு நாள் நைட் ரொம்ப க்ருசியல்... நாளைக்கு அவங்க அப்பா கூட அந்த பொண்ணு போற வரைக்கும், ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும் .... சின்ன சந்தேகம் ராஜாவுக்கு வந்தாலும் நாம ரெண்டு பேரும் மாட்டுவோம்... பீ கேர் ஃபுல் ..." என்றார் மங்களேஸ்வரி.

சொர்ணா சொன்னதால் தான், சுபா ஒத்துக் கொண்டிருக்கிறாள், என்றெண்ணி கொண்டிருப்பவருக்கு தெரியாது அவள் ஏற்கனவே அவர்களது திருமணத்தால் அர்ஜுன் பட்ட அவமானத்தை உணர்ந்துதான்
சொர்ணாவின் யோசனைக்கு செவி சாய்த்திருக்கிறாள் என்று.

இரவு உணவை அவர்களுக்குப் பரிமாறி முடிப்பதற்குள் சுபாவிற்கு போதும் போதும் என்றாகிபோனது.

மீனைத் தவிர வேறு எந்த அசைவத்தையும் உண்ணாதவளுக்கு,
கோழிக் கறி வறுவலும் , கோழி குருமாவும் குமட்டிக் கொண்டு வர, ஒரு வழியாக அவர்களுக்கு பரிமாறி விட்டு ஏதும் உண்ணாமல் தன் அறையில்
மணி பதினொன்றை கடந்தும் உறக்கம் வராமல் இடவலமாக நடந்துகொண்டிருந்தவளை வரவழைக்கப்பட்ட புன்னகையோடு
சந்தித்த சொர்ணா மென்மையாக

" சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காத .... உன்னை பொருத்தவரைக்கும் இது உனக்கும் ராஜாவுக்கும் பிறக்கப் போற குழந்தை அவ்ளோதான் ....
ஆனா எங்களைப் பொறுத்தவரைக்கும் இது 'கிருஷ்ணா' ஃபேமிலியோட வாரிசு ..... பல கோடி ரூபாய் சொத்துக்கு அதிபதி ....அதனால இந்த குழந்தையோட பிறப்புல எந்தவித சந்தேகமும் யாருக்கும் வரக்கூடாது....
அப்படி வந்தா அது 'கிருஷ்ணா' பேமிலியோட கௌரவத்தை ரொம்ப பாதிக்கும் .... அதனால நீ எனக்கு வாக்குக் கொடுத்த மாதிரி நீ மாசமா இருக்கிறத ராஜாகிட்ட இன்னைக்கு சொல்லவே கூடாது ... ஏன்னா ராஜாவுக்கு பிடிவாத குணம் ஜாஸ்தி அவர் ஊர் உலகத்தை எல்லாம் என்னைக்குமே மதிச்சதில்ல .... யார் என்ன சொன்னாலும் என் குழந்தை இந்த ஊருல தான் பிறக்கும்னு ஸ்ட்ராங்கா சொல்லிட்டாருன்னா அப்புறம் அவமானம் எங்களுக்கு தான் ... ஏன்னா இந்த ஸ்டேட்லதான் கிருஷ்ணா குரூப் ஆஃப் கம்பெனிஸோட பார்ட்னர்ஸ் அதிகம்..." என இயல்பாக முடித்த சொர்ணா, பிறகு கண்ணில் வன்மத்தை கூட்டி,

" உன் ரூம்ல ஒரு இடத்துல ஸ்பீக்கர் வச்சிருக்கேன்....நீ ராஜாகிட்ட என்ன பேசினாலும் எனக்கு கேட்கும் ...சொல்ல மாட்டேன்னு சொல்லிட்டு நீ அவர்கிட்ட விஷயத்தை சொன்ன.. அடுத்த நிமிஷம் உங்க அம்மா, தம்பி, தங்கச்சி யாரும் உயிரோட இருக்க மாட்டாங்க ...
ஜாக்கிரதை ... எங்களால ஆக்கவும் முடியும் அழிக்கவும் முடியும் எங்க பரம்பரை அப்படி ... எங்க குடும்ப கௌரவத்துக்காக நாங்க எந்த அளவுக்கும் போவோம்... ஞாபகத்துல வச்சுக்கோ ... " என்றவளின் திடீர் தீவிரத்தை உடல் நடுங்க திகிலோடு சுபா பார்த்து வைக்க, உடனே நிலைமையை உணர்ந்து தன்மையாக முகம் மாற்றியவள்,
" பயப்படாத ... இந்த விஷயத்துல நாங்க எவ்ளோ சீரியஸா இருக்கோம்னு உனக்குத் தெரியப்படுத்த தான் இப்படி சொன்னேன்... உனக்கு இந்த வீட்டுல இருந்து என்ன வேணுமோ அது மொத்தத்தையும் எடுத்துட்டு போ ..."
என சகஜமாக சொல்வது போல் சொர்ணா முடிக்க

அவன் மணாளனையே வாரி சுருட்டி வயிற்றில் அல்லவா எடுத்து செல்கிறாள்.... வேறென்ன வேண்டும் அவளுக்கு ...
பதில் கூறாமல் இடவலமாக எதுவும் வேண்டாம் என்பது போல் தலையசைத்து வைத்தவளுக்கு

தன் கண்ணாளனை காணாமலயே ஊருக்கு சென்று விடுவோமா ...
தன்னைத் தேடுவானா ...
அக்னியின் வரவு அவன் மனதை மாற்றுமா .... என்பன போன்ற
யோசனையில் மூழ்கியவள் கடைசியில்
அர்ஜுனின் கௌரவத்திற்கு எந்த இழுக்கும் வராமல் அவனும் வேண்டும் அவன் குழந்தையும் வேண்டும் என முடிவெடுத்து, மறுநாள் பயணத்திற்கு மனதளவில் தயாராகிவிட்டு உறங்கிப் போனாள்.

சற்று நேரத்திற்கெல்லாம் ஏதோ அரவம் கேட்க, கண்விழித்து பார்த்தவளுக்கு, இரவு ஒளியில் அர்ஜுன் உடை மாற்றிக் கொண்டிருப்பது தெரிய, அவனின் இந்த எதிர்பாரா வரவு, சொல்லவொண்ணா ஆனந்தத்தை கொடுக்க, உடனே எழுந்தமர்ந்தவளிடம்

" ஏய் சுபா... எதுக்கு எழுந்துக்குற ... தூங்கு .." என்றபடி அவனும் அவள் அருகில் படுத்துக்கொண்டான்.

நாளைக்கு இந்நேரம் ஊரை விட்டே போயிருப்பேன் ... திரும்ப உங்களை எப்ப பார்க்க போறேனோ தெரியல ... என்னை தேடி வருவீங்க இல்ல ஜி...
என்றெண்ணியபடி இரவொளியின் வெளிச்சத்தில் அவன் கண்ணோடு கண் நோக்கி உள்ளுக்குள் தளும்பியவளுக்கு

ஊரை விட்டல்ல உலகத்தை விட்டே போகப்போற ... என்ற விதியின் பேச்சு காதில் விழாமல் போக,

" என்னடாம்மா, ஏன் ஒரு மாதிரியா இருக்க ...உடம்பு சரி இல்லையா ...." என்று அனுசரணையாக பேசியபடி தலை கோதியவனை இறுக்கி அணைத்து அவன் மார்பில் முகம் புதைத்து குலுங்கி அழ ஆரம்பித்தாள்.

அவள் வீட்டை விட்டு வந்த அன்று அவன் அலுவலகத்தில் இம்மாதிரி குமுறி அழுதிருக்கிறாள்... அதற்கு மேல் அவளிடம் தெரிந்ததெல்லாம் நேர்மறை எண்ணங்களும் செயல்களும் தான் ...
இப்போது மீண்டும் அவள் இம்மாதிரி அழுவது, ஒருவித கலக்கத்தை அவனுள் விதைக்க,

பொதுவாக ஒன்றுமில்லா விஷயத்திற்கெல்லாம் ஊரைக்கூட்டி கண்ணீர் விடும் காரிகை அல்ல அவள்,
என அவள் மன திடத்தை சரியாக அறிந்திருந்தவனுக்கு, அவள் அழுகைக்கு காரணம் அவள் மனதில் மண்டிக்கிடக்கும் அளவுக்கதிகமான தாழ்வு மனப்பான்மையே என உறைக்காமல் போக,
யோசித்தவனின் சிந்தையில் புதிய காரணம் ஒன்று தோன்றியது.

" ஜானவியும் சோம்நாத்தும் ரொம்ப தூரமா போயிட்டாங்கன்னு வருத்தப்படறியா சுபா ... கவலைப்படாத... ஒரு மாசம் நாம போய் அவங்கள பார்க்கலாம் ... ஒரு மாசம் அவங்க இங்க வரட்டும்... சரியா..." என தன் தங்கை, தம்பியை நினைத்து பாசத்தில் அழுகிறாள் என்றெண்ணி சமாதானம் கூறியவனின் முகம் பார்த்தவளின் கண்கள் மேலும் பனிக்க,

அக்னியைப் பார்த்தா மனசு மாறிடுவீங்களா ஜி... ஆனா என்னால உங்களை யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது .... என்று தனக்குள்ளே பேசிக்கொண்டவள், யாரோ அவனை அவளிடமிருந்து பறிப்பதாக எண்ணிக்கொண்டு அவள் உடலின் அனைத்து சக்திகளையும் ஒன்று திரட்டி அவனை வன்மையாக கட்டியணைக்க,

இதுநாள் வரை இல்லாத அந்தத் தளிர் உடல் கொடுத்த நூதன அணைப்பு
ஒருவித சந்தேகத்தை எழுப்ப,

" அம்மா ஏதாவது சொன்னாங்களா ...."
என்றான் துணுக்குற்று.

"ம்ஹூம்...." என அவன் மார்பிலிருந்து முகம் எடுக்காமல் இடவலமாக அவள் தலையசைக்க,

"அவங்களுக்கு இங்கிலீஷ் மட்டும் தான் தெரியும்.... ஹிந்தி தெரியாது... அதனால உன்கிட்ட பேசி இருக்க மாட்டாங்க ...."
என்றவன் சொர்ணா ஐந்து மொழிகளை அம்சமாகப் பேசுவாள் என்பதை அடியோடு மறந்தே போயிருந்தான்.

அக்னி தான் உங்களுக்கு எல்லா வகையிலும் பொருத்தம்...கொஞ்ச நாள் பழகின என்னாலயே உங்களை மறக்க முடியல ... பாவம் அக்னி பத்து வருஷமா உங்களை உருகி உருகி காதலிச்சிருக்காங்க... ஏன் நீங்களும் தான்... பாதில வந்த நான் பாதிலயே போயிடறது தான் சரி ... நீங்க என்னை தேடி வரலைன்னாலும் உங்கள தப்பா நினைக்க மாட்டேன் ஜி.... என அதீத நற்குணங்களை கொண்ட அவளது மனம் மானசீகமாக இப்போது அக்னி மற்றும் அர்ஜுனுக்காக பரிந்து பேச,

மனையாளின் செய்கைக்கு காரணம் புரியவில்லை என்றாலும், ஏதோ உள்ளுணர்வு உரைக்க , அவன் கண்களும் கலங்க,

கொல்கத்தாவிலிருந்து திரும்பி வந்தது முதல் அவனால் அவளுடன் நேரம் செலவழிக்க முடியாமல் போனதை எண்ணி தான் வருந்துகிறாள் போலும் ...

தன்னை அதிகம் தேடுகிறாள் ....

அவனும் அவளை அதிகம் தேடுகிறான் அல்லவா ....

அவனை மொய்க்கும் பணிச்சுமை காரணமாக இயல்பான உணர்வுகளை கூட அவளுக்கு உணர்த்த முடியாமல் போனதால் அதையெல்லாம் நினைத்து வருந்துகிறாள் போலும் என
தன்னிச்சையாக காரணத்தைக் கண்டறிந்து

"அழாதம்மா ... இங்க பாரு நாளையோட இந்தப் பிரச்சினை முடிஞ்சிடும் ... லீவு போட்டுட்டு வரேன் ...எங்கேயாவது 4 நாள் போய் நிம்மதியா இருந்துட்டு வரலாம் சரியா....." என்றவன் தன் மார்பிலிருந்து அவள் முகத்தை பிரித்தெடுத்து கையிலேந்தி கூறிக் கொண்டிருக்கும் போதே குயிலோசை சத்தத்துடன் அவனது அலைபேசிக்கு குறுஞ்செய்தி வர, அதில்
இவன் கேட்டிருந்த விவரங்கள் மற்றும் வரைபடத்தை அனுப்பியிருந்தார் துணை கண்காணிப்பாளர் டேனியல்.

அதனைத் திறந்து பார்த்தவனின் சிந்தையில் அவன், துணை கண்காணிப்பாளர் டேனியல், மாவட்ட ஆட்சியர் அஹமத் சேர்ந்து நாளைய தினத்திற்காக தயார் செய்திருந்த பத்மவியூகம் மனக்கண் முன் வர, அலுவலகத்தில் நடைபெறும் சாதாரண கலந்தாய்விற்கே சிந்தனை சிதறும் நிலையில், மறுநாள் நடைபெறப்போகும் சம்பவம் இந்திய வரலாற்றில் நிச்சயம் பொறிக்கப்படும்
நிகழ்வாக அமையும் என்பதால் அது குறித்த எண்ணங்களில், அவன் மனம் சிக்கித் தவித்தபடி
அவள் இடையில் கரம் பதித்து தன்னோடு இறுக்கி அணைத்து அவள் கன்னத்தில் ஆழ்ந்த முத்தம் பதித்தவனுக்கு தாய்மையின் முதல் படியில் இருக்கும் தளிர் சருமம் மலரின் மென்மையை நினைவூட்ட, பிறகு நெற்றியில் முத்தமிட்டவனின் கரம் மீண்டும் அவள் இடையை பற்றிய போது , குழந்தை பற்றிய சிந்தனை அவள் மனதில் துளிர்த்தெழ, உதட்டை கடித்து உணர்வை மறைத்தவள், தொண்டை வரை வந்த துக்கத்தை விழுங்கிவிட்டு, அவன் முகம் முழுவதும் மென்மையாக முத்தமிட்டு மீண்டும் அவன் மார்பில் முகம் புதைத்துக் கொண்டாள்.

அவளுடைய செய்கைகள் அனைத்தும் புதிதாக இருந்தாலும், இத்தனை நாட்கள் இல்லாமல் அவள் காட்டிய நெருக்கம் ஒரு வித புத்துணர்வை கொடுக்க,
அவளைத் தன் இடப்பக்க மார்பின் மேல் படுக்க வைத்துக் கொண்டவன், தலைகோதி தூங்க வைத்துவிட்டு தானும்
உறங்கிப் போனான், எத்தனை ஆயிரம் கோடிகள் கொடுத்தாலும் அந்த இரவு மீண்டும் வரப்போவதில்லை என தெரியாமல்.

தகிப்பாள்
 
அத்தியாயம் 24


முன் நாள் இரவு வீடு திரும்புவதற்கு முன் அர்ஜுன் ஆற்றிய பணிகள்.


அன்று காலை வரை இயல்பாக நடந்த போராட்டம் , மதியத்திற்கு மேல் தீவிரமடைந்து இங்கொன்றும் அங்கொன்றுமாய் வன்முறைகள் வெடிக்க ஆரம்பித்த நிலையில், கள நிலவரத்தை தெரிந்துக்கொண்டு
முக்கிய முடிவு எடுப்பதற்காக மாவட்ட ஆட்சியர் அஹமத்தை , துணை மாவட்ட கண்காணிப்பாளர் டேனியலுடன்
சந்தித்தான் அர்ஜுன்.


" இவங்க ப்ரோடஸ்ட் (Protest- போராட்டம்) பண்ண முதல்ல யார் பர்மிஷன் கொடுத்தது..." என மாவட்ட ஆட்சியர் அஹமத் கேள்வி எழுப்ப


" லோக்கல் போலீஸ் ஸ்டேஷன்ல தான் சார் NOC வாங்கி இருக்காங்க ... அந்த (ஜூரிஸ்டிக்சன்ல) ரெண்டு போலீஸ் ஸ்டேஷன் இருக்கு ....
ஒரு போலீஸ் ஸ்டேஷன்ல ஆலைய மூடணும்னு போராடற விவசாய மீனவ மக்கள் வாங்கி இருக்காங்க ....
இன்னொரு போலீஸ் ஸ்டேஷன்ல ஆலைய மூடக்கூடாதுன்னு போராட்டம் பண்ற அரசியல் கட்சி கூட்டம் வாங்கி இருக்கு ..."------என்றார் துணை மாவட்ட கண்காணிப்பாளர் டேனியல்.


" இப்ப போராட்டக் களத்துல நிலவரம் எப்படி இருக்கு டேனியல் ...." --- அஹமத்.


" இன்னைக்கு மதியம், இந்த அரசியல் கட்சி கூட்டத்துக்கும் , விவசாய மீனவ மக்களுக்கும் இடையே பெரிய பிரச்சனையாகி ஒருத்தரை ஒருத்தர் அடிச்சுகிட்டு , வெட்டிக்கிற அளவுக்கு போய்ட்டாங்க சார் .....அதுலயும் இந்த அரசியல் கட்சி ரவுடிங்க அராஜகம் தாங்க முடியல ... தடுக்கப் போன போலீஸ்க்கு எல்லாம் சரியான அடி...
கிட்டத்தட்ட பதினைஞ்சு பேர் ஹாஸ்பிடல் இருக்காங்க சார் ...
வெறும் டியர் கேஸ்க்கு மட்டும் தான் நீங்க பர்மிஷன் கொடுத்திருந்தீங்க ...
லத்தி சார்ஜ்க்கு கூட பர்மிஷன் கொடுக்கல ... அதனாலதான் இந்த நிலைமை ......
ரோடை வழி மறச்சு ஹெவி ட்ராபிக் ஜாம் உண்டு பண்ணி, பப்ளிக்க ரொம்ப கஷ்டப் படுத்திட்டாங்க சார்..." என டேனியல் முடிக்க


" இந்த லட்சணத்துல
நாளைக்கு காலையில 11 மணிக்கு அமைதிப் பேரணி வேற நடத்த போறாங்களாம்.. அதுக்கு யார் சார் பர்மிஷன் கொடுத்தது .... " என அர்ஜுன் அஹமத்தை பார்த்து கேட்க,


" ஏற்கனவே எந்த லோக்கல் போலீஸ் ஸ்டேஷனும் பேரணிக்கு பர்மிஷன் கொடுக்கக்கூடாதுன்னு ஆல்ரெடி அலர்ட் பண்ணினதால, டிஸ்ட்ரிக்ட் மாஜிஸ்ட்ரேட் பர்மிஷன் வாங்க எங்கிட்ட தான் வந்தாங்க ஏ.கே ... நமக்கே ஆல்ரெடி தெரியும் இவங்க பிரச்சனை பண்ண தான் பேரணி நடத்த போறாங்கன்னு ...
நீங்களும் கிளியரா கொடுக்கக் கூடாதுன்னு முன்கூட்டியே சொல்லி இருந்ததால நான் பர்மிஷன் கொடுக்கல ....
அப்புறம் கோர்ட்டுல அமைதிப் பேரணி நடத்த போறோம்னு பெட்டிஷன் ஃபைல்(petition file) பண்ணி ரிட் (writ)வாங்கி இருக்காங்க ...
சோ கோர்ட் பர்மிஷன் கொடுத்ததால நாளைக்கு அமைதிப் பேரணி 11 மணிக்கு போகப் போறாங்களாம் ..." என அஹமத் முடிக்க


"ஓ காட் .. சட்டத்துல தான் எத்தனை ஓட்ட.. நாம ஒரு சட்டம் போட்டு கலவரத்தை தடுக்க பார்த்தா, அவங்க வேற ஒரு சட்டம் மூலமா செயல்படுத்த பார்க்கிறாங்க.... சரி...எந்த ஏரியால அமைதிப் பேரணி நடத்த போறாங்களாம்" ------ அர்ஜுன்.


" சட்டவிரோதமா இயங்கிற ஆலைகள் உள்ள இடத்தை தான் சூஸ்(choose) பண்ணி இருக்காங்க சார் ... அதுவும் பத்து கிலோமீட்டர் தூரம் பேரணி..." என்றபடி
நீதிமன்றக் கோப்புகளை அர்ஜுனிடம் காட்டிய டேனியல்


" எனக்கு என்னவோ, அவங்க ஏதோ பெருசா ப்ளான் பண்ணி இருக்கிற மாதிரி தோணுது .... நாளைக்கு லத்தி சார்ஜ்க்கு பர்மிஷன் கொடுக்கணும் சார்... இல்லன்னா நிலைமை ரொம்ப மோசம் ஆயிடும் ..." என அஹமத் அர்ஜுன் இருவரையும் பார்த்து கூற


" லத்தி சார்ஜ் என்ன பயரிங் ஆர்டரே கொடுக்கலாம் ... ஆனா அதுக்கு கொஞ்சம் வெயிட் பண்ணனும் ... மீடியாவை பார்த்தீங்களா ...


மக்களின் வாழ்வாதாரத்தை வஞ்சிக்கும் அதிகாரிகள் ....
அதிகாரிகளின் அராஜகப் போக்கு ...
அப்படி இப்படின்னு அரசியல் கட்சிகளுக்கு சாதகமாகவே செய்தி சொல்லிக்கிட்டு இருக்காங்க ... ஏதோ ஒன்னு ரெண்டு மீடியா தான் கொஞ்சம் நடுநிலையா இருக்காங்க ... முதல்ல போராட்ட களத்துல இருக்குற பாதி பேரு இந்தியன்ஸே இல்ல இறக்குமதி செய்யப்பட்டவங்கன்ற உண்மைய ப்ரூவ் பண்ணனும் ..." என்றான் அர்ஜுன் தீவிரமாக யோசித்து.


" வெல் செட் சார்.... நிறைய பேர்கிட்ட ஆதார் கார்டு இல்ல , சரியான ப்ரூஃ இல்ல சார்... கிட்டத்தட்ட பாதி பேர் பங்களாதேஷ்ல இருந்து வந்திருக்காங்க ...." --- டேனியல்.


" நான் ஒரு விஷயத்தை எதிர்பார்க்கிறேன் ... அது நிச்சயமா 100% நாளைக்கு நடக்கும் ... அதுக்கப்புறம் ஸ்ட்ரைட்டா பயரிங் ஆர்டர் தான் ... நானும் களத்துல இறங்கிறதா இருக்கேன்..." என்றான் அர்ஜுன் தீவிரமாக.


" சார் முன்கூட்டியே செக்ஷன் 144 போட்டா நடக்கப்போற கலவரத்தை தடுக்கலாமே சார் .. ...." --- இது டேனியல்.


"போடலாம் ... ஆனா அதுக்கு நமக்கு சாதகமா பல தகவல்கள் வேணும் ... சார்( அஹமத்தை காட்டி ) பேரணி நடத்த பர்மிஷன் கொடுக்காததால்
அவங்க கோர்ட்ல கொடுத்த பெட்டீஷன்ல
ஜனநாயகத்தின் கைகள் முறிக்கப்பட்டுள்ளதுன்னு, குறிப்பிட்டு இருக்காங்க ....இப்ப பிரச்சனை ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே 144 போட்டா அதுக்கும் பிரச்சினை பண்ணுவாங்க ... சோ அவங்கள ஆடவிட்டு தான் அடக்கணும் ... ஏன்னா நாம எதிர்க்கட்சியை மட்டுமல்ல ஆளும் கட்சியையும் பகைச்சிகிட்டு இருக்கோம்... நிச்சயமா நம்மள எதுலயாவது மாட்டா வைக்கணும்னு அவங்க காத்துக்கிட்டு இருப்பாங்க .... சோ வி ஹேவ் டு பீ வெரி கேர் ஃபுல் ..." என்றவன் தன் மீசையை நீவி விட்டு பிறகு முறுக்கியபடி,


" நியாயமா விவசாய மீனவ மக்கள்தான் ராலி (Rally - பேரணி )நடத்தணும் ... இங்க தலைகீழா அரசியல் ரவுடிகள் தொழிலாளர்கள்னு தங்களை அடையாளப்படுத்திக் கிட்டு வாழ்வாதாரம் பாதிக்குதுன்னு பொய் சொல்லி ராலி நடத்துறாங்க ....
இவங்க பர்மிஷன் வாங்கின ஆளுங்கள விட போராட்டக்களத்துல ஆளுங்க வேற அதிகமா இருக்காங்க...
ஒன்னு பண்ணுங்க டேனியல், இப்ப போராட்டகளத்துல இருக்கிறவங்களோட முகங்களை க்ளோஸா ஜூம் பண்ணி வீடியோ கவரேஜ் பண்ண சொல்லுங்க ... ஃபேஸ் ரெகக்னிஷன் சாஃப்ட்வேர் வச்சு ஆல்ரெடி அக்யூஸ்ட் லிஸ்ட்ல இருக்கிறவங்களோட முகத்தோட மேட்ச் ஆகுதான்னு பார்த்து அவங்க ஹிஸ்டரியை எடுங்க...."


" அதை இப்ப எடுத்து நாம என்ன சார் பண்ண போறோம் ...." ---டேனியல்


" சில பேரை அரசாங்கத்துக்கு கணக்கு காட்டணும், சில பேரோட கணக்க முடிக்கணும் அதுக்காக தான்...." என்ற
அர்ஜுனின் பேச்சில் மற்ற இருவரும் துணுக்குற,


"ஏற்கனவே குற்றப்பின்னணி அதிகமா இருக்குறவங்கள கணக்கு முடிக்கணுங்கிற லிஸ்டுல சேர்த்துடுங்க....
ஏதோ ஒன்னு ரெண்டு சாதாரண கேஸ்ல சிக்கினவங்களை கணக்கு காட்டணுங்கிற லிஸ்ட்ல சேர்த்திடுங்க... மத்தத களத்துல பார்த்துக்கலாம்....
இவங்க பேரணி போற கோஸ்டல் ஏரியா சவுக்கு தோப்ப ஓட்டின பகுதி ....
அங்க வீடேல்லாம் கிடையாது ஆனா ஒன்னு ரெண்டு ரிசார்ட் மட்டும் இருக்குது அதனோட சிசிடிவி கேமரா மட்டும் ஒர்க் பண்ணா போதும் ...." என்றவன் குறும்போடு அஹமத்தை பார்த்து,


" சார்... நாளைக்கு பயரிங் ஆர்டர் கொடுப்பீங்க இல்ல ... "


" கொடுத்துட்டா போச்சு ... என்ன ஒன்னு, இதுவரைக்கும் 8 ட்ரான்ஸ்பர் பார்த்திருக்கேன் 9ஆவது டிரான்ஸ்பர்க்கு ரெடி ஆகணும் அவ்ளோ தான் ....


என் வீட்ல நான் ஒன்னு சொல்றேன்னாலே என் மனைவி டென்ஷன் ஆயிடுவாங்க...
திரும்பவும் டிரான்ஸ்பரானு கேப்பாங்க.. ..." என்று வெள்ளையாக சிரித்தவருடன் அர்ஜுன், டேனியல் இணைந்துகொண்டதோடு
மறுநாளைய பணிக்கான திட்டமிடுதலை பிசகு ஏதுமில்லாமல் செவ்வனே செய்து முடித்தனர்.


பிறகு தன்னவள் தன்னை காண துடித்துக் கொண்டிருப்பதை உள்ளுணர்வு உணர்த்திய தருணம் சற்றும் தாமதிக்காமல் தேடி ஓடி வந்தான் அதுதான் கடைசி இரவு தன் கண்மணியோடு அவன் கழிக்க போவது என தெரியாமல்.


மறுநாள் அதிகாலையிலேயே குளித்து முடித்து காவல்துறை உடுப்புக்கு மாறியவன், பரபரப்பாக தன்னுடைய (9mm pistol )பிஸ்டலுடன்( இந்திய தயாரிப்பு) (GLOCK 17) பிஸ்டல் (ஆஸ்திரிய தயாரிப்பு) இரண்டையும் தயார் செய்து வைத்துக் கொண்டிருக்கும் போது, அரவம் கேட்டு உறக்கம் கலைந்தவள்,
அவனை காவல்துறை சீருடையில் கண்டதும், மசக்கை வாட்டினாலும், பொருட்படுத்தாமல் வேக நடையிட்டு நெருங்கினாள்.


தலைமுடி கலைந்து களைப்புடன் காணப்பட்டாலும், புதுப்பொலிவோடு
நெருங்கியவளின் நெற்றி முடியை விலக்கி,விழியோடு விழி நோக்கி,
" என்னம்மா, ஆர் யூ ஆல்ரைட் நவ் ..."
என்றவனின் மென்மையில் அவள் கண்களை பனிக்க , நேற்றிரவு போல் குலுங்கி அழாமல், விழிகளில் மெல்லிய நீர்க்கோளங்களோடு ,
குதிகாலில் நின்று,அவன் உயரத்திற்கு எம்பி தன் இரு கரத்தை அவன் கழுத்தில் மாலையாக்க, அவனும் ஒத்துழைத்து அவள் முகம் நோக்கி குனிய, ஆர்ப்பரிக்கும் ஆசையோடு அவன் முகம் எங்கும் முடிந்தவரை முத்த ஊர்வலம் நடத்தி முடித்து கடைசியாக இறுக தழுவிக்கொண்டாள்.


இந்த இரண்டு மாத பந்தத்தில் அவளாக அவனை நெருங்கியதில்லை. அதுவும் சீருடையில் இருந்தால் அதற்கு மதிப்பளித்து மேலும் விலகி நிற்பவள்,இன்று தானே வந்து தழுவிக் கொண்டது அவனை வியப்பில் ஆழ்த்த,


எங்கு அவனை விட்டு விலகினால்
காலன் தன்னைக் கவர்ந்து சென்று விடுவானோ என்ற உள்ளுணர்வு தந்த தாக்கத்தால் தான் தன்னவள் தன்னைப் தழுவி கொண்டாளோ என்பதை அவன் உணர வரும் போது காலம் கடந்திருக்கும் என தெரியாமல்


அவளின் மென்மையான சருமமும் ஆர்ப்பரிக்கும் அணைப்பும், அவனை இளகச்செய்ய , அவள் கழுத்து, காது கன்னங்களில் சற்று அழுந்த முத்தமிட்டவன் கடைசியில் நெற்றி முத்தத்தோடு நிறுத்திக் கொண்டான்.


அவனுக்மே அவளை விட்டுப் பிரிந்து செல்ல துளிக்கூட விருப்பமில்லை ...
இயல்பான நாளாக இருந்திருந்தால் நிச்சயம் விடுப்பெடுத்து அவளோடு தங்கி இருப்பான். ஆனால் இன்றோ அவன் ஆற்ற வேண்டிய கடமைகள் ஏராளம் அதே வேளையில் தன் மனையாளின் மனம் அறியும் ஆசையும் உடன் எழ, அதை செயல்படுத்த விழையும் போது டேனியலின் அழைப்பு வந்தது.


" ஐ அம் ரெடி டேனியல்... ஐ வில் பி தேர் இன் நெக்ஸ்ட் 15 மினிட்ஸ் ..." என்று அழைப்பை துண்டித்து விட்டு
" முக்கியமான வேலை இருக்கும்மா... நைட் பேசலாமா ..." என்றபடி வேக நடையிட்டு விடை பெற்றவனின் கர நுனியை மட்டும் விட்டு விடாமல் அவள் பற்றி இருக்க, அதைக்கண்டு ஒரு வித புன்னகையோடு மீண்டும் நெருங்கி அவள் கன்னத்தில் மென்மையாக தட்டிவிட்டு விடைபெற்றவனுக்கு தெரியாது
இனி மேல் அவளை குற்றுயிரும் கொலை உயிருமாக தான் பார்க்கப் போகிறான் என்று.


ஒரு நொடி அவளை பேச வைத்து கேட்டிருக்கலாம், ஆனால் அவள் உணர்வுப்பூர்வமாக பேச ஆரம்பித்தால்
அதில் பெரும்பான்மை ஹிந்தி இடம் பெற்றாலும் குறைந்தபட்சம் அவளது தாய்மொழியான பெங்காலியும் இருக்கும் ...
அவனுக்கு பெங்காலி மேம்போக்காக தான் புரியும், சில நேரங்களில் அவள் முக உணர்வுகளை உள்வாங்கி தான் அதன் அர்த்தத்தை உணர்ந்து கொள்வான் ...வேறு வழியில்லாமல் நேரப் பற்றாக்குறையால் துரிதமாக விடைபெற்றுச் சென்றவனுக்கு வீதியெங்கும் மனையாளின் நினைவுகளே.


அர்ஜுன் அரசு வாகனத்தில் கிளம்பிச் செல்வதை ஆசை தீர பார்த்த
சொர்ணா உடனே சந்திரநாத்தை தொடர்பு கொண்டு


" எதை எதையோ சொல்லி கஷ்டப்பட்டு உன் பொண்ணை தயார் பண்ணி வச்சிருக்கேன் ... சீக்கிரம் வந்து கூட்டிகிட்டு போ ...
எந்தக் காலத்துலயும் அவ இருக்கிற இடம் ராஜாவுக்கு தெரியக்கூடாது ....
அவளை ஊரை விட்டு அனுப்புவியோ... உலக நாட்டுக்கு அனுப்புவியோ எனக்கு தெரியாது... இன்னொரு தடவ ராஜா வாழ்க்கைக்குள்ள அவ வரக்கூடாது ... அதுக்காக தான் உனக்கு இவ்ளோ பணம் கொடுத்திருக்கேன்... ஏதாவது ஒரு சந்தர்ப்பத்துல உன் பொண்ணை மறுபடியும் ராஜா சந்திச்சா அன்னைக்கு நீ உயிரோட இருக்க மாட்டா....ஞாபகத்துல வச்சுக்கோ ..."
என்று மிரட்டி அழைப்பை துண்டித்தவள் உடனே சுபாவை சந்தித்து ,


" யூ ஆர் கிரேட் சுபா ... கொடுத்த வாக்கை காப்பாத்திட்டயே... நேத்து ராஜா அவ்ளோ கேட்டும் நீ பதிலே சொல்லலையே... குட் ..." என்றளை அருவெறுப்பாக பார்த்தாள் சுபா.


கணவன் மனைவி தனிமையில் பேசிக்கொள்வதை ஒட்டு கேட்பது எவ்வளவு தரங்கெட்ட தனம் ...
இவளுடைய வார்த்தைக்கும் மிரட்டலுக்கும் அவள் அஞ்சவில்லை. அவள் நினைத்திருந்தால், ஒரு வார்த்தை பேசாமல், சொர்ணா மிரட்டியதை அர்ஜுனிடம் எழுதி காட்டியிருக்க முடியும் ... ஆனால் இந்தக் குழந்தையினால் அவள் கணவனுக்கு இழுக்கு வரக்கூடாது என்கின்ற எண்ணமும் , அவன் விரும்பிய அக்னியோடு வாழட்டும் என்கின்ற முடிவும் தான் அவள் வீட்டைவிட்டு செல்ல காரணம் என புரிந்து கொள்ளாமல் ஏதோ சாதித்த உணர்வில் பேசிக்கொண்டிருந்தவளை அவள் வெறுப்போடு பார்த்து வைக்க, அதனைக் கண்டு கொள்ளாமல் சொர்ணா


" உனக்கு என்ன வேணுமோ பேக் பண்ணிக்கோ... ஆமா உங்க அப்பா எப்ப வரேன்னு சொன்னாரு ...." என புதிதாய் கேட்க


" இன்னும் அரை மணி நேரத்துல .." என்றவள் அவள் திருமணப் புடவை, அவர்களது திருமண புகைப்படம், கன்னக்குழி தெரிய சிரித்தபடி மிக அருகில் எடுக்கப்பட்டிருந்த அவள் கண்ணாளனின் தனி புகைப்படம் ஆகியவைகளை மட்டும் எடுத்து வைத்துக்கொண்டு அவள் தந்தைக்காக காத்திருக்க, சிரித்த முகத்துடன் சந்திரநாத் வர,
வீட்டுவாயிலில் பாதுகாப்பிற்காக இருந்த காவலர்கள் அவரை விசாரிக்க, அதைப் பார்த்துவிட்டு வேகமாக வந்து தன் தந்தை என அறிமுகப்படுத்தி அழைத்துச் சென்றாள் சுபா.


சுபாவின் முன்பு சந்திரநாத்தும் சொர்ணாவும் புதிதாக சந்திப்பது போல் ஒருவரை ஒருவர் அறிமுகப்படுத்திய படி நலம் விசாரிக்க, அங்கு பொருந்தியிருக்க முடியாமல் தன் அறைக்கு வந்தவளுக்கு, திரும்பிய இடமெல்லாம் அவள் மணாளனின் மணமே வீச, துக்கம் தொண்டையை அடைக்க, காவல்துறை சீருடையில் கம்பீரமாக காட்சியளித்தவனின் புகைப்படத்தை நெருங்கி,


" எனக்கு உங்களை விட்டுப் போக மனசே இல்ல ஜி .... எனக்காகவும் என் குடும்பத்துக்காகவும் நிறைய செஞ்சுடீங்க ... இப்ப கூட உங்க வீட்டு ஆளுங்கதான் எங்க அம்மா வைத்தியத்துக்கு உதவி பண்றாங்க ...
உங்களுக்கு இது வரைக்கும் நான் எதுவுமே செஞ்சதில்ல .... ஒரு வேளை நீங்க என்னை தேடி வந்தீங்கன்னா நம்ம குழந்தையை பத்தி சொல்லுவேன்... இல்லன்னா அக்னியோட உங்க வாழ்க்கை சந்தோஷமா அமையனும்னு கடவுளை வேண்டிபேன் ...." என்று வாய் விட்டே பேசியவளின் குரல் உடைய, சிறு கேவல் கூட வெளிப்பட,
சொர்ணாவின் 'சுபா' என்ற அழைப்பு அனைத்தையும் தடுத்து நிறுத்த,
அவன் புகைப்படத்தை மீண்டும் ஒரு முறை வேகமாக வருடிவிட்டு தன் கைப்பையோடு வெளிப்பட்டவளிடம் ,


" ஹாஸ்பிடல் பத்தின எல்லா டீடெயில்சும் உன் அப்பா கிட்ட பேசிட்டேன் ...
நிறைய பணமும் கொடுத்திருக்கேன்...
உங்கம்மா இதே ஊர் SS ஹாஸ்பிடல்ல தான் இருக்காங்களாம் ... இன்னைக்கே புவனேஸ்வர் ஹாஸ்பிடலுக்கு ஷிப்ட் பண்ண ஏற்பாடு பண்ணிட்டேன் ... சரியா ...." என்று வாஞ்சையாக சொல்வது போல் அவளை வீட்டை விட்டு வெளியேற்றும் பணியில் சொர்ணா முனைப்பாக இருக்க , அனைத்தையும் தன் அறையில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த மங்களேஸ்வரி கடைசிவரை அறையை விட்டு வெளியே வரவில்லை.


*****************************************


"டேனியல், செக்யூரிட்டி மேஷர்ஸ் எல்லாம் பக்காவா இருக்கு இல்ல....
ஏன்னா அவங்க ஃபர்ஸ்ட் டார்கெட் போலீஸ் தான்... அப்புறம்தான் பொதுமக்கள் ...
ஏற்கனவே அவங்களே போலீஸ் ப்ரொடக்ஷன் கேட்டதால , நம்ம ஆளுங்களை எல்லா இடத்துலயும் குவிச்சிடுங்க....
நடுநிலையா இருக்கிற ஒரு சில மீடியாவை தவிர , மீதிய அண்ட விடாதீங்க....
நேத்து நான் சொன்ன அந்த ரெண்டு லிஸ்ட்டை எடுத்து வச்சுருக்கீங்க இல்ல... " என படபடத்த அர்ஜுனிடம்


"எஸ் சார்..."


" பேரணியை 11 மணிக்கு தொடங்க கோர்ட் ஆர்டர் கொடுத்திருக்கு ... பத்து கிலோமீட்டர் தூரம் ஒன்றரை மணி நேரத்ததுல முடிச்சிடும்னு நினைக்கிறேன் ... அப்புறம் 1 மணிக்கு அதிகாரிகளைப் வச்சு சட்டவிரோதமா செயல்படுகிற ஆலைகளை அஸ் பேர் கோர்ட் ஆர்டர் சீல் வச்சிடலாம்.... நேத்து மாதிரி ஏதாவது வன்முறை தலைதூக்க ஆரம்பிச்சா இந்த பிளான்ல சில சேஞ்ச்ஜஸ் ஸ்பாட்ல பண்ணிக்கலாம் ...." என்றவனிடம்
" எஸ் சார்..." என சல்யூட் அடித்துவிட்டு விடைபெற்றார் டேனியல்.


9 மணி வரை அனைத்தும் சரியாக சென்று கொண்டிருந்த நிலையில், திடீரென்று ஒன்பதரை மணிக்கே பேரணி துவங்க, காவல்துறையினர் சரியாக குவிக்க படாத நிலையில், பேரணியை கட்டுப்படுத்த முயன்றும்,
மக்கள் வெள்ளத்தால் முடியாமல் போக,
அங்கிருந்த காவலர்கள் பாதுகாப்பு கவசத்தோடு அவசர அவசரமாக குவிந்து, பேரணியில் இருமருங்கிலும் வழிநடத்த, முதல் அரைமணி நேரம் சரியாக சென்றுகொண்டிருந்த நிலையில் திடீரென்று, ஒருவரோடு ஒருவர் கட்டிப்புரண்டு சண்டையில் ஈடுபட, அதனை தடுக்க முயன்ற காவலர்கள் மீது தாக்குதல்கள் தொடங்க, மற்ற போராட்டக்காரர்கள் இதுதான் தருணம் என காவல் துறையினர் மற்றும் பொதுமக்கள் மீதும் தாக்குதல் தொடுக்க , சிறு வன்முறையில் தொடங்கி பெரும் கலவரமாக வெடிக்க ஆரம்பித்தது .


உடனே டேனியல் கள நிலவரத்தை அர்ஜுனுக்கு தெரிவிக்க,கண்ணீர் புகை(tear gas) மற்றும் லத்தி சார்ஜ்க்கு உத்தரவிடப்பட்டது .


திட்டமிடப்பட்டிருந்த படி காவல்துறையினர் சரியாக குழும முடியாமல் போனதால் ஆயிரத்திற்கும் மேலானவர்களை கட்டுப்படுத்த முடியாமல் காவல் துறையினர் திணற, கல்லெறிவது, அரிவாள் வீச்சு , ஓரிரு கள்ளத் துப்பாக்கிகள் வெடிக்க கலவரம் உச்சநிலையை அடைந்து கொண்டிருக்கும் போது,
போராட்டக்காரர்களின் ஒரு குழு இந்திய தேசியக் கொடியை கொளுத்த,
அதனை நேரடி ஒளிபரப்பாக செய்தி சேனல்களில் பார்த்துக்கொண்டிருந்த அர்ஜுன் அஹமத்திடம் ,


" இதை தான் சார் எதிர்பார்த்தேன் ...
இவங்க கட்சி கொடி, கட்சி தலைவரோட படம், இல்ல உயர் பதவில இருக்கிறவங்களோட உருவப்படத்தை கொளுத்தி இருந்தா கூட தப்பே இல்ல .. ஏதோ அவங்க கோபத்தை காட்டுறாங்கனு விட்டுட்டலாம் ... எப்ப இந்திய தேசியக்கொடிய எரிச்சங்களோ,இவங்க இந்தியர்களே இல்ல தேசத்துரோகிகள்... இனிமே இவங்கள நாய போல சுட்டா கூட தப்பே இல்ல... இப்பவே நான் களத்துல இறங்கறேன் சார்.." என்றவன் தன் துப்பாக்கியோடு தனக்கான பாதுகாப்புக் கவசத்தை அணிந்துகொண்டு டேனியலை தொடர்பு கொண்டு


" டேனியல், பயரிங் ஆர்டர் கிடைச்சிருச்சு.... இமெடியட்டா டீம் Aவை கணக்கு முடிக்க வேண்டியவங்களை மட்டும் ,
சவுக்குத் தோப்ப நோக்கி துரத்திக்கிட்டு போக சொல்லுங்க ...


டீம் Bயை
கணக்கு காட்ட வேண்டியவங்களோட முட்டிக்கு கீழ சுட சொல்லுங்க....


வித்தின் டென் மினிட்ஸ் நான் ஸ்பாட்டுல இருப்பேன் ...." என்று பரபரத்தான் .


****************************************


சந்திரநாத், சுபாவுடன் அவளது தாய் இந்திரா சேர்க்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு காரில் பயணமாக,
என்ன தான் மனைவியை மருத்துவமனையில் 2 நாட்களுக்கு முன்பாகவே சேர்த்திருந்தாலும், சந்திரநாத் அவர் சார்ந்திருந்த கட்சி நடத்தும் போராட்டத்திற்காகவும் பேரணிகாகவும் தான் முழு வீச்சில் உழைத்துக் கொண்டிருந்தார்.
அப்போதுதான் சொர்ணாவிடமிருந்து அழைப்பு வர, பிறகு சுபாவும் அழைக்க ,
ஒரே கல்லில் மூன்று மாங்காய் எனக்கருதி அவரது நீண்டநாள் ஆசையை நிறைவேற்றும் பொருட்டாக சுபாவை அழைத்துக் கொண்டு வந்துவிட்டார்.


" அப்பா மெதுவா போக சொல்லுங்க... தலை சுத்துற மாதிரி இருக்கு...." என்றாள் சுபா உடல் மற்றும் மனம் களைத்து.


"ஏன் ..." என்றார் புரியாமல்.


" நான் உண்டா இருக்கேன் பா ..." என்று மென்மையாக லேசான வெட்கத்தோடு கூறியவளை கண்டு உள்ளுக்குள் வன்மத்தோடு கொதித்துப் போனார் சந்திர நாத்.


இந்த செய்தி அவருக்கு புதிது. சொர்ணா கூட அவரிடம் பகிரவில்லை.
சந்திரநாத்தின் பணத்தாசை தெரியுமாதலால் கர்ப்பம் தரித்திருக்கும் தன் மகளை காரணம் காட்டி எங்கு சந்திரநாத் கடைசி வரை அர்ஜுனின் இல்லத்தில் ஆடம்பர வாழ்க்கை நடத்தி விடுவாரோ என்றஞ்சி தான் சொர்ணா இந்த செய்தியை மறைத்திருந்தாள்.


ஆனால் சொர்ணா அறியாததும் ஒன்று உண்டு. சந்திரநாத் சொர்ணாவின் கணக்கிற்கெல்லாம் அப்பாற்பட்டவர் என்று.


பணத்தாசை இருப்பவன் கூட சில இடங்களில் பணிந்து போய் விடுவான்.
ஆனால் குரோதம், வன்மம், சுயநலம், தான் என்ற அகங்காரம் உள்ள ஒருவன் எந்நிலையிலும் தன் குணத்தை மாற்றிக் கொள்ள மாட்டான்.


சந்திரநாத் அர்ஜுனை பற்றி தப்புக்கணக்கு போட்டு வைத்திருந்தார்.
தன் மகளிடம் பதவி இல்லை, பணம் இல்லை, வெறும் அவள் அழகில் மயங்கி தான் மணம் முடித்திருக்கிறான். ஓரிரு மாதம் குடும்பம் நடத்தி விட்டு, மோகம் தீர்ந்ததும் விரட்டி அடித்து விடுவான் பிறகு வேறு வழி இல்லாமல் தன் மகள் தன்னிடம் தான் தஞ்சமடைவாள், அப்போது தன்
மனைவியை காட்டி மிரட்டி அல்லது வேறு ஏதாவது காரணம் சொல்லி மகளின் மனதை மாற்றி தான் எண்ணியபடி, அந்த மும்மடங்கு அயோக்கியனுக்கு மணம் முடித்து வைத்து , அவர் ஜாதி சனத்தை சேர்ந்த கிராமத்து மக்களிடம் இழந்திருந்த மரியாதையை தூக்கி நிறுத்தலாம் என்று மனப்பால் குடித்துக்கொண்டிருந்தவரின் திட்டத்தில் , சுபாவின் பேச்சு ஒரு மூட்டை மண்னை அள்ளி வீச,
எப்போது கர்ப்பம் தரித்துவிட்டாளோ கணவன் மனைவி உறவு திடமாக இருக்கும் நிலையில் இனி இவள் எங்கு சென்றாலும் அர்ஜுன் தேடி வருவான்
என்பதை அதிவிரைவில் அனுமானித்தவரின் செவியில்,
சொர்ணா கூறிய வரி எதிரொலிக்க ஆரம்பித்தது.


அவள ஊரைவிட்டு அனுப்பறியோ... இல்ல உலக நாட்டுக்கு அனுப்பறியோ...எனக்கு தெரியாது அர்ஜுன் அவளை மறுபடியும் சந்திக்க கூடாது ... அப்படி சந்திச்சா நீ உயிரோட இருக்க மாட்ட...


என்பதை நினைத்து பார்த்தவர்,


இவ்வளவு பணத்தை செலவழித்து இவளை உலக நாடுகளுக்கு அனுப்புவதற்கு பதிலாக உலகத்தை விட்டே அனுப்பினால் என்ன என்ற குரூர புத்தி தோன்ற,


தன் திட்டத்தை கெடுத்து, ஊர் மக்களுக்கு முன்பு அசிங்கப்படுத்தி , வேறு ஜாதிக்காரனை மணந்து கொண்டதோடு மட்டுமல்லாமல் மற்ற மகன் மகளையும் தன்னிடமிருந்து பிரித்து, மனைவியும் முன்பு போல் மதிக்காமல் இருக்க செய்தது இவள் அல்லவா ...


இனி மேல் இவள் எவ்வகையிலும் தனக்கு பயன்பட மாட்டாள்....
தன்னால் அர்ஜுனை தான் பழி வாங்க முடியவில்லை, அவன் மனைவியையும் குழந்தையும் சிதைத்து விட்டால் என்ன ... என்ற வன்மம் அவர் மனதில் உதிக்க ஆரம்பித்ததும், கார் ஓட்டுனரிடம் தன் மனைவி சேர்க்கப்பட்டிருக்கும் மருத்துவமனைக்கு செல்லாமல் பேரணி நடக்கும் பகுதியான கோஸ்டல் ஏரியாவிற்கு காரை செலுத்த பணித்தார்.


எந்த ஒரு நல்ல தந்தையும், மகள் கர்ப்பம் தரித்திருக்கிறாள் என்ற செய்தி கேட்டால், பூரிப்பு அடைவார்கள்.


ஆனால் சந்திரநாத்தோ
'நீ கர்ப்பம் தரித்ததால் எனக்கென்ன லாபம்' , 'யாருக்கோ வந்த விருந்து' என்பன போன்ற முக மாற்றத்தோடு எதுவும் பேசாமல் அமைதி காக்க, அப்படி காட்சியளித்தவரை கவனிக்க தவறியது தான் சுபா செய்த முதல் பிழை ஆகிப்போனது.


ஏற்கனவே மிகுந்த களைப்பில் அரைத்தூக்கத்தில் இருந்தவள், வண்டி போகும் திசை கூட தெரியாமல் உடன் பயணிக்க,


" சார் , இங்கிருந்து ஒரு தெரு தள்ளி போனா கோஸ்டல் ஏரியா சார்... அங்க இப்ப பேரணி நடக்குது, ஏதோ கலவரம்னு டிவில வேற காட்டுறாங்க அதனால இங்கயே நிறுத்துகிறேன் சார்... " என்ற டிரைவரின் பேச்சு கூட அவள் காதில் எட்டவில்லை.


காரை விட்டு இருவரும் இறங்க, அங்கு கிட்டத்தட்ட அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்த நிலையில், ஒரு கடையின் முன்பிருந்த திட்டில்,


" சுபா, ஒரு நிமிஷம் இங்கயே உட்காரு இதோ வந்துடறேன் ...." என்றவரின் கண்கள் அளவுக்கதிகமாக பளபளக்க, கவனிக்க வேண்டியவளின் மனம் முழுவதும் அவள்
மணாளனின் நினைவுகளே மாருதமாக வீசிக்கொண்டிருக்க,


" சரிப்பா...." என்றாள் எங்கோ பார்த்து.

அவள் அமர்ந்திருந்த தெருவிலிருந்து அடுத்த தெருவுக்குப் வேகமாக பயணித்து, தான் சார்ந்த கட்சியின் தலைமை ரவுடியை தொடர்பு கொண்டவர், தன் மகள் எனக் கூறாமல்,


" அந்த புது எஸ்.பி ஏகேவோட பொண்டாட்டி இங்க தனியா உட்கார்ந்துகிட்டு இருக்கா ... நீ இங்க ஆள அனுப்பி கலவரத்தோட கலவரமா அவளை தீர்த்துடு..." என்றார் அவள் அமர்ந்திருந்த தெருவின் பேரை குறிப்பிட்டு.


பக்கத்திலேயே இருந்ததால் பத்தே நிமிடத்தில் 4 ரவுடிகள், உருட்டுக் கட்டையோடு அவளை நெருங்க,
அப்போதுதான் சுயம் உணர்ந்தவள், நடக்கப் போவதை அனுமானித்து
பெரும் பயத்தில் கலங்கியபடி எழுந்து நிற்க , அதில் ஒருவன்,


" ஏய், நீதான் அந்த எஸ்.பியோட பொண்டாட்டியா... அன்னைக்கு
ட்ரெயின்ல நீ தான அந்தச் சின்னப் பொண்ணை என் கிட்ட இருந்து காப்பாத்த என் மூஞ்சில அடிச்சிட்டு ஓடிப்போன.... உன்னைக் கொல்லாம விடமாட்டேன்டி..." என்றபடி அவள் பயத்தோடு பற்றியிருந்த வயிற்றை நோக்கி அவன் குறி வைக்க,


" ப்ளீஸ் என் வயத்துல மட்டும் அடிச்சிடாதீங்க...
நான் சாகறதுக்கு முன்னாடி என் குழந்தை சாகறத விரும்பல...."
என்று கதறியபடி தன் வயிற்றை
பற்றிக்கொண்டு குனிந்து அவள் மண்டியிட


" அந்த எஸ்பியோட குழந்தையா இது...
அப்ப அதை போட்டுட்டு தான் மறு வேலை..." என்றவன் அவள் முதுகு தண்டில் ஓங்கி அடிக்க, வலி பொறுக்க முடியாமல் கீழே அவள் சுருண்டு விழ, கதறித் துடித்தவளின் வயிற்றில் மீண்டும் உருட்டுக்கட்டையால் அந்த கயவன்
தாக்கவும், கலவரக்காரர்களை துரத்திக்கொண்டு சைரன் சத்தத்தில் காவல் துறை வாகனம் அந்த தெருவிற்கு வரவும் சரியாக இருக்க, சைரன் சத்தத்தில் சுதாரித்த அந்த கலவரக்காரர்கள் கோஸ்டல் ஏரியாவை நோக்கி ஓடினர்.


அங்கு ஒரு பெண் ரத்த வெள்ளத்தில் கதறிக் கொண்டிருப்பதை பார்த்தும் பேட்ரோல் காரில் இருந்து இறங்கிய டேனியல்,


" இந்த பொண்ணு யாருன்னு தெரியல.... ஷி நீட் இமீடியட் மெடிக்கல் எமர்ஜென்சி.... நாங்க ஹாஸ்பிடல் கூட்டிட்டு போறோம் ... இந்த ரவுடிங்க கோஸ்டல் ஏரியாவை விட்டு வெளில போக மூணே இடம் தான் இருக்கு... எல்லா வே-அவுட்டையும் நான் அலர்ட் பண்ண சொல்லிடறேன்.... அவங்களை விடாதீங்க சவுக்கு தோப்ப நோக்கி
சேஸ்(chase) பண்ணுங்க... " என்று ஆக்ரோஷமாக கட்டளையிட்டவன் உடனிருந்த இரண்டு காவல் துறையினரின் உதவியோடு சுபாவை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு அவளைப் பற்றி தகவல் தெரிந்து கொள்வதற்காக, அவளிடமிருந்த பையை திறந்து பார்த்ததும் அதிர்ச்சியில் உறைந்தே போனார்.


" ஓ காட் , ஏ.கே சார் வைஃப் ..." என்று வாய் விட்டு அலறியவர் உடனே அர்ஜுனை தொடர்பு கொண்டு,


" சார், நீங்க கொஞ்சம் ஹாஸ்பிடலுக்கு வர முடியுமா ..." என்றார் தவிப்போடு மருத்துவமனையின் பெயரை சொல்லி .


" என்ன டேனியல், இப்ப நான் எதுக்கு அங்க வரணும் ..." என்றவனிடம் நடந்த அனைத்தையும் பகிர, கேட்டு பதறியவன் , அடுத்த பத்தாவது நிமிடத்தில் மருத்துவமனை வந்து சேர்ந்தான்.


" சார், உள்ள அவங்களுக்கு ட்ரீட்மென்ட் போய்கிட்டு இருக்கு... போட்டோ பார்த்ததும் தான் உங்க வைஃப்னு ஞாபகம் வந்தது ...." என்றவர் சுபா கொண்டு வந்திருந்த பையை அவனிடம் காட்ட , அவர்களது திருமண புகைப்படம், திருமணப் புடவை, அவனது தனி புகைப்படம் ஆகியவற்றைக் கண்டு குழம்பிப் போனான்.


அவன் மனதில் ஏகப்பட்ட கேள்விகள்.
வீட்டில் இருந்தவள் எதற்காக இங்கு வந்தாள்... யார் இவளை அழைத்து வந்தது.... ஏன் இந்த மூன்றைத் தவிர வேறு எதுவுமே இவள் பையில் இல்லை... என்ற சிந்தனையில் சுழன்ற படி


" டேனியல், இந்த சம்பவம் நடந்த இடத்துல ஏதாவது சிசிடிவி கேமரா இருந்தா இமீடியேட்டா அதனோட ஃபுட்டேஜ் வேணும் ..." என்று படபடத்தவன் உடனே தன் இல்லத்து பாதுகாவலரை தொடர்புகொண்டு விசாரிக்க,


" மேடம், அவங்க அப்பாவோட கிளம்பி போனாங்க சார் ..." என்றதை கேட்டு அதிர்ச்சியில் ஆழ்ந்தான் . உடனே அந்த சிசிடிவி ஃபுட்டேஜை அனுப்பச் சொல்லி பார்த்தவனுக்கு குழப்பம்தான் மிஞ்சியது.


அதில் சுபா வெகு இயல்பாக அவள் தந்தையுடன் வீட்டை விட்டு வெளியேறுவதை கண்டவனால் எந்த ஒரு முடிவுக்கும் வர முடியவில்லை.
நேற்று இரவும் , இன்று காலையும் அவள் காட்டிய நெருக்கமெல்லாம் ஒரு கணம் வந்து போக, செய்வதறியாது துடித்துப் போய் சரிந்தமர்ந்தான்.


ஓரிரு நொடிக்கு பிறகு ஏன் இந்த சம்பவத்தில் தன் தாயின் கை இருக்கக் கூடாது.... எப்பொழுதுமே வராதவர், சொல்லிய தேதிக்கு முன்னரே வந்தது மட்டுமல்லாமல், வந்த மூன்றாம் நாளில் இப்படி ஒரு நிகழ்வு அரங்கேறுவது என்றால் அது முழுக்க முழுக்க அவரது திட்டமாகத் தான் இருக்கும் என்றெண்ணி கொண்டிருக்கும் போதே


துரிதமாக செயல்பட்டு சம்பவம் நடந்த இடத்தின் எதிர்ப்புற கடை வாயிலில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சியை டேனியல் பகிர, அதில் சுபாவை அவள் தந்தை அமரும் படி சொல்லிவிட்டு செல்வது, அந்த ரவுடியிடம் அவள் வயிற்றைப் பற்றிக் கொண்டு பதறிய படி பேசுவது , அவனும் அவளிடம் ஏதோ ஆக்ரோஷத்துடன் பேசுவது, கடைசியில் அவளை தாக்குவது என அனைத்தையும் கண்டு கண்களில் ரத்த வராத குறையாக கலங்கி துடித்தான்.


அவன் பணியில் எத்தனையோ கோர சம்பவங்களை, சாதாரணமாக சந்தித்திருந்தவனுக்கு, உதிர வெள்ளத்தில் கிடந்த அவன் மனையாளின் துடிப்பு அவன் குருதியை உறைய செய்ய, ஒருவித மனம் பேதலித்த நிலையில் தேங்கிப் போனவன், மெதுவாக சுயம் உணர, சிந்தை செயல்பட துவங்கியதும் தான் கலவரக்காரர்கள் என்றால் எடுத்த எடுப்பில் தாக்கி இருப்பார்கள் அதைவிடுத்து தன்னவளுடன் அந்த ரௌடி பேசுவதும் ,அவளும் வயிற்றைப் பற்றிக் கொண்டு ஏதோ சொல்வதும்
வித்தியாசமாக பட, அதில் இருந்த நபர்களின் உடல் மொழி அவனுக்கு சந்தேகத்தை கொடுக்க , உடனே ரயில் கொள்ளையின் போது எடுக்கப்பட்ட காணொளியை ஓட்டிப் பார்த்தவனுக்கு
ஏதோ புரிவது போல் தோன்ற, அடுத்த நொடியே
இந்த இரு காணொளிகளில் இருக்கும் நபர்களின் பக்கவாட்டு தோற்றம் , உருவ அமைப்பை ஒப்பிட்டு உறுதி செய்ய, அதனை வீடியோ பாரன்சிக்கு அனுப்பி வைத்தான் .


" சார், அவங்க அப்டமன் கம்ப்ளீட்லி இன்ஜோர்டு.... பிளட் வெசல்ஸ் எல்லாம் சிவியர்லி டேமேஜ்டு.... பேக் போன் ஆல்சோ ரப்ச்சர்டு ... " என்ற மருத்துவரின் தகவலைக் கேட்டு துடித்துப் போனவனிடம்,


" அதுமட்டுமல்ல அவங்க பிரெக்னெண்டா இருந்திருக்காங்க ...
வயித்துல ஏற்பட்ட அடியால கரு கலைஞ்சு , இன்டர்ணல் பிளீடிங் ஆரம்பிச்சு , ஹெவி பிளட் லாஸ் ... எங்களால இன்டர்ணல் பிளீடிங்க ஸ்டாப் பண்ண முடியல ... முடிஞ்ச வரைக்கும் மேனேஜ் பண்ணி இருக்கோம் ...ஆனா
அவங்க பொழைக்கிறது கஷ்டம் ....
பல்ஸ் கொஞ்சம் கொஞ்சமா டவுன் ஆயிட்டே வருது .... அவங்க உறவுக்காரங்க யாருன்னு விசாரிச்சு தகவல் சொல்லிடுங்க ...." என்றதை கேட்டதும்,


" அவ என் வைஃப் டாக்டர்...." என்றான் வார்த்தைகள் குழறி கண் கலங்கி.


இதனைக் கேட்டதும் பதறிய அந்த மருத்துவர்,


" ஐ அம் சாரி சார், அவங்க உடம்புல கொஞ்சம் அசைவு தெரியுது... நீங்க வந்து பாருங்க ... ஒருவேளை நினைவு இருந்தா பேசுவாங்க .." என்றவரை
பின் தொடர்ந்தவனுக்கு, தன் மனையாளை அந்த நிலையில் கண்டதும் அவன் உயிர் அவனைவிட்டு பிரிந்து போனது போல் உணர
அன்னபூரணி அம்மாளின் மறைவுக்கு பிறகு கண்ணீரை காணாத அவன் கண்கள், நிரம்பி வழிய ஆரம்பித்தன.



கண்மூடி சயனித்திருந்தவளின் தோற்றம் அவன் மனதைப் பிசைய, தளர் நடையில் நெருங்கியவன்,
அவள் வலக்கரத்தை அழுந்த பற்ற,
அந்நிலையிலும் அவன் ஸ்பரிசத்தை உணர்ந்தவளின் விழிகளுள் அசைவு தெரிய, மெல்ல நேத்திரம் மலர்த்தியவளின் பார்வையில் அவனைப் புரிந்து கொண்டதற்கு அடையாளமாக
ஒருவித ஆச்சரிய மின்னல் தோன்றி மறைய , முதலில் காவல் அதிகாரியாக அவளது வாக்குமூலத்தை பதிவு செய்ய எண்ணி தன் கைபேசியின் காணொளியை துவக்கினான்.


" எப்படி இங்க வந்த ...என்ன நடந்தது ..." என கேள்விகள் கமரிய குரலில் அவனிடமிருந்து வந்து விழ,


" அப்பா கூட வந்தேன் ..." என அளவுக்கு மீறிய களைப்பில் திக்கித் திணறி கூறியவளின் கண்களை ஆழ்ந்து நோக்கி
" ஏண்டி சொல்லல ..." என்றான் அவள் வயிற்றை பார்த்தபடி பொங்கிய கண்கள் சிவக்க.


அவன் கேட்க நினைப்பதை புரிந்துகொண்டு,


" உங்களுக்கு என்னாலயும் நம்ம குழந்தையாலயும் எந்த பிரச்சினையும் வரக்கூடாது... " என்றவள் பேச முடியாமல் தளர,


" என்ன பிரச்சினை ..." என்றான் முற்றிலும் புரியாமல்.


" அன்னைக்கு ஸ்டேஷன்ல, உங்ககிட்ட ... அந்த ரவுடி...நம்ம கல்யாணத்த பத்தி....என்னை பத்தி ....." என தொடர்ந்து பேச முடியாமல் விட்டு விட்டு அவள் கண் கலங்க,


" ஓ காட் .... அதெல்லாம் ஒரு விஷயமே இல்லடி... பைத்தியகாரி... உனக்கு அறிவு இருக்கா ... படிச்சவ தானே நீ ...
நான் யாரை பத்தியும் கவலை பட மாட்டேன் ... என் மனசாட்சிக்கு மட்டும்தான் பயப்படுவேன்னு சொல்லி இருக்கேனில்ல... எவனோ எதையோ சொன்னான்னு உங்க அப்பா கூட போக முடிவு பண்ணிட்டியே .... நீ என்னை புரிஞ்சிக்கவே இல்லையா சுபா ...." என்றவனின் குரல் உடைந்து, முதன்முதலாக அவன் கோபத்தையும் காட்ட
" சரி... ஸ்டேஷன்ல நடந்த விஷயம் எப்படி வீட்டுக்கு வந்தது ...." என்றவனின் குரலில் அதீத ஆத்திரம் வெளிப்பட ,
பதில் சொல்ல முடியாமல் அவள் மூச்சு திணறுவதை கண்டு,


"நம்ம வீட்டுல வேலை செய்யறவங்க, யாராவது பேசிக்கிட்டாங்களா.." என கேள்வி எழுப்பி அவள் சுலபமாக பதிலளிக்க உதவ, அதற்கு
ஆம் என்பது போல் தலையாட்டினாள்.


" சுபா, உன்னை உனக்காகவே லவ் பண்ணினேன் டி... உன் நிறம் அழகு எதுவுமே என் மனச தொடல ...
கறந்த பாலை விட சுத்தமான உன் மனசு தான் என் மனச தொட்டது ... என் கூட இருந்த ஒரு கணத்துல கூட நான் உன் மேல வச்சிருந்த காதல் உனக்கு புரியலையா.... " என்றவனின் குரல் உடைய, அதனைக் கேட்டுக் கொண்டிருந்தவளின் கண்ணில் எதையோ சாதித்த உணர்வு தெரிய,
ஒருவித நிம்மதியும் உடன் பரவ,


யாருடைய தலையீடும் இல்லாமல் குறிப்பாக தன் தாயின் தலையீடு இல்லாமல் தானாகவே முடிவு எடுத்து தான் வீட்டைவிட்டு வெளியேறி இருக்கிறாள் என்றெண்ணி கொண்டவன்,


" யார் அந்த ரவுடிங்க உன்கிட்ட என்ன பேசினாங்க..." என மனதைக் கல்லாக்கிக் கொண்டு விசாரணை அதிகாரியாக தொடர


" அந்த ட்ரெயின் ராபரில ...." என்றவள் அதற்கு மேல் மூச்சு திணற, அவன் அனுமானித்தது சரியே, அந்த ரயில் கொள்ளையர்களின் வேலைதான் என உறுதி செய்தவனுக்கு, உடன் அவள் தந்தை குறித்து சந்தேகங்கள் எழ,


திடீரென்று அவளது உடல் வெட்டி வெட்டி இழுக்க , மூச்சுத்திணறல் அதிகமாக, அவள் நிலை கண்டு பதறியவன் மருத்துவரை அழைக்க,


தன் ஆயுள் முடியப் போவதை உணர்ந்தவள், அவன் கையை இறுகப்பற்றி,


" அக்னி.... ரொம்ப அழகா..... இருக்காங்க ஜி ... அவங்கதான்..... பொருத்தம் ..." என்று தழுதழுத்த குரலில் , க்ளுகோஸ் ஏறிக் கொண்டிருந்த தன் இட கையை மெல்ல அவனை நோக்கி உயர்த்தி காட்டியவளின் கண்களில் விழி நீர் வழிந்தோட,
பார்வை அவன் பார்வையை உரசி நிற்க, பெருத்த கடைசி இழுப்பில் அவள் ஜீவன் மெதுவாக அடங்க, விழிநீர் தொடர்ந்து வழிந்தபடி இருக்க, பார்வையின் உயிர்ப்பு மட்டும் காணாமல் போயிருந்தது.


தகிப்பாள்
 
அத்தியாயம் 25


மனையாளின் ஜீவன் அடங்கியதும், உறைந்து நின்றவனின் விழிகளில்,
கண்ணீர் பிரவாகமாய் புரண்டோட ,

உயிர்ப்பில்லா நிலைகுத்தி நின்ற அந்த விழிகள், அவள் சடலம் ஆகிவிட்டதை உணர்த்தினாலும், ஒரு கணம் முன்பு வரை உரையாடிக் கொண்டிருந்தவள் காற்றோடு கலந்து விட்டாள் என்பதை அவன் மனம் நம்ப மறுத்தது .

மனித வாழ்வில் மாற்றவும் முடியாது மறுக்கவும் முடியாத ஒன்று உண்டென்றால் அது மரணம் தான்.
சகல சாகசங்கள் செய்து, உலகில் ஜீவன்களை உருவாக்கத் தெரிந்த மனித இனத்தால் மரணத்தை மட்டும் வெற்றி காண முடியவில்லை.

பணம், அதிகாரம், உலகையே ஆட்டிப் படைக்கும் வல்லமை எல்லாம் மனித குலத்திற்கு கொடுத்த கடவுள் மரணத்தை மட்டும் தன் பிடியிலேயே வைத்துக்கொண்டார், மனிதனின் பேராசையை உணர்ந்துதான் போலும்.

அவனால் அவள் மரணத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

சுபா ...........சுபா........பேசுடி ... உனக்கு அக்னியை பத்தி யாரு சொன்னா.... நாங்க ரெண்டு பேரும் லவ்வர்ஸ் இல்லடி.... நான் தான் அவளை லவ் பண்ணேன் .. அவ என்னை லவ் பண்ணல... அவ விரும்பினவனை கல்யாணம் பண்ணிக்கிட்டு அவ சந்தோஷமா இருக்கா..... இதை ஏன் நீ முன்னாடியே என்கிட்ட கேட்கல... எந்த சூழ்நிலையிலும் வாழணும்னு வாழ்ந்து காட்டினவ டி நீ.... இப்படி என்னை நிராதரவா நிறுத்திட்டு போயிட்டயே... இப்ப தானடி உன் கூட நிம்மதியா வாழ ஆரம்பிச்சேன்...
நீ என் வாழ்க்கையில வந்ததுக்கப்புறம் நான் அக்னியை மறந்தே போயிட்டேன் ..
என் ஒவ்வொரு அணுவுலயும் நீ மட்டும் தாண்டி இருக்க ... என்றவன் மனம் குமுறிபடியே மீண்டும் அவள் முகம் பார்க்க, உயிர்பில்லா நேத்திரத்தில் கண்ணீர் மட்டும் தேங்கி இருக்க,
கடைசியாக அக்னியை மணந்து கொள்ளுமாறு அவள் உதடுகள் உச்சரித்தாலும், அவள் பார்வையில் மட்டும் அவன் மீது கொண்டிருந்த தீரா காதல் செம்மையாக வெளிப்பட்டதை மீண்டும் ஒருமுறை
மனதில் நிறுத்தி பார்த்தவன்,

இப்படியெல்லாம் நடக்கும்னு தெரிஞ்சுதான், காலையில என்னை விடாம அணைச்சிக்கிட்டயா.... என்றவனின் குரலில் வெதும்பலும் கதறலும் வெளிபட்டது .

அக்னி அவனை நேசிக்கவில்லை, என்று தெரிந்ததிலிருந்தே நாகரீகம் கருதி அவளிடமிருந்து எல்லா வகையிலும் விலகி இருந்தவன், அவளது திருமணத்திற்குப் பிறகு,
அவள் சம்பந்தப்பட்ட ஒரு சிறு புகைப்படத்தை கூட அவன் தன்னிடம் வைத்துக் கொள்ளவில்லை. இந்நிலையில் சுபா அக்னியை புகைப்படத்தில் பார்த்து இருக்கிறாள் என்றால், அது நிச்சயம் தன் தாயின் வேலைதான்.

ஏற்கனவே சுபாவின் மனதில் மண்டியிருந்த தாழ்வு மனப்பான்மையும், குற்ற உணர்வையும் தன் தாயும், சந்திர நாத்தும் தங்கள் தேவைக்காக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்
என்பதை சரியாக அனுமானித்தவன்
உயிர்ப்பில்லா அவள் கண்களை மூடி ,
கண் தானத்துக்கு ஏற்பாடு செய்தான்.

உயிரோட இருக்கும் போது ஊருக்கே ஓடி உழைச்சவ டி நீ... இப்ப உன் கண்ணு இந்த உலகத்தைப் பார்க்க ஆசைப்படறவங்களுக்கு பயன்படட்டும்னு தான் இந்த ஏற்பாடு ... சுபா ... என்றவனின் குரல் மீண்டும் தழுதழுக்க,
உடனே சுதாரித்தவன்,

இனிமே தான் நான் செய்ய வேண்டிய வேலை நிறைய இருக்கு சுபா .... என வன்மத்தோடு குமுறியபடி
முடிக்க வேண்டியவர்களின் கணக்கை மனதிற்குள் வரிசை படித்திக்கொண்டிருக்கும் போது ,

" எல்லாம் முடிஞ்சு போஸ்ட்மார்ட்டம் ஆனதுக்கப்புறம் தான் , பாடியை உங்ககிட்ட கொடுப்போம்... கொஞ்சம் லேட் ஆகும் சார்...." என்ற மருத்துவரிடம்

" டேக் யூவர் ஓன் டைம்..."
என்ற போது டேனியலிடமிருந்து அழைப்பு வர,

" சார், மேடம் எப்படி இருக்காங்க...."

" எல்லாம் முடிஞ்சிடுச்சி டேனியல் ..." என்றவனின் தழுதழுத்த குரலே அனைத்தையும் கூற,

" ஐ அம் சாரி சார் ...." என்றவனிடம் தொண்டையை கமரியபடி குரலில் கம்பீரத்தை கொண்டு வந்து,

" என்ன சொல்லுங்க ..."

" பாரன்சிக்லிருந்து ரிப்போர்ட் அனுப்பி இருக்காங்க சார் நீங்க கேட்டிருந்தீங்களாம்.... நீங்க சஸ்பெக்ட் பண்ண மாதிரி இந்த நாலு பேரும் அந்த ட்ரைன் ராபரில சம்பந்தப்பட்டவங்க தான்னு ரிப்போர்ட் தெளிவா சொல்லுது .... அந்த நாலு பேரோடு சேர்த்து மொத்தம் 9 பேர் சவுக்கு தோப்புக்குள்ள பதுங்கி இருக்காங்க...
அவங்களும் கணக்கு முடிக்கிற லிஸ்டுல வர்றவங்க தான் சார் ... கொலை, கொள்ளை, கற்பழிப்பு, குண்டு வைக்கிறதுன்னு
செய்யாத தப்பே இல்லை ... இன் ஃபேக்ட் போலிஸ் ரெக்கார்ட்ல வான்டட் லிஸ்ட்ல இருக்கிறவங்க ....இப்ப அவங்க பதுங்கி இருக்கிற 5 ஏக்கர்
சவுக்குத் தோப்பை சுத்தி வளைச்சிட்டோம் ..."

" இப்ப ராலி நடக்கிற இடத்துல நிலைமை என்ன டேனியல் ..."

" சார் , ராலி பாதியிலேயே முடிஞ்சிடுச்சு ... அவங்க பிரச்சினை பண்ண ஆரம்பிச்சதிலிருந்து தேசியக் கொடியை எரிச்சது வரைக்கும் லைவ்வா டெலிகாஸ்ட் ஆனதால, எதிர்க் கட்சிகள் நடத்தும் மீடியாவால ஒன்னும் பண்ண முடியல .... நிலைமை கை மீறிப் போனதாலதான் பயரிங் ஆர்டர் கொடுத்திருக்காங்கன்றதும் ப்ரூவ் ஆயிடுச்சு ....
நம்ம ஆளுங்கள்ல சில பேருக்கு கொஞ்சம் அடி, மத்தபடி அவங்களையெல்லாம் லத்தி சார்ஜ், பயரிங்ன்னு டின்னு கட்டிட்டோம் சார்..."

" குட் ஜாப் டேனியல் ..." எனப் பாராட்டியவன்
சுபாவின் அலைபேசியில் இருந்து சந்திர நாத்தின் எண்ணை பகிர்ந்து,

" இந்த ஆள்(சந்திரநாத்) எங்க இருக்கான்னு செல்போன் சிக்னல்ல வச்சு கண்டுபிடிங்க...
அதுமட்டுமல்ல அந்தாளோட கால் லிஸ்ட்ட எடுத்து பார்த்தா அதுல சவுக்கு தோப்புக்குள்ள பதுங்கி இருக்கிற அந்த ஒன்பது பேருல யாராவது ஒருத்தர் ரெண்டு பேரோட நிச்சயமா இந்த ஆள் பேசி இருப்பான் ...
அவங்க போன்ல இருந்து இந்த ஆளை சவுக்கு தோப்புக்கு கூப்பிடுற மாதிரி செய்துட்டு .... அப்புறம்
நம்ம ஆளுங்க ரெண்டு பேரை மஃப்டில அந்த ஆள் சார்ந்த கட்சிக்காரங்க மாதிரி அவன் கூட பேச்சுக் கொடுத்து கூடவே இருந்து சவுக்கு தோப்புக்கு கூட்டிட்டு வர சொல்லுங்க ..."

" சார், இவ்ளோ தலையை சுத்தி காதை தொடணுமா.... பேசாம டவர் லொகேஷனை வச்சு, அந்தாளு இருக்கிற இடத்தை கண்டுபிடிச்சு , அந்தாள போட்டுட்டா என்ன சார் ..."

" இல்ல டேனியல், எது செஞ்சாலும் ரெக்கார்டோட தான் செய்யணும் ....
நாம எதிர்க் கட்சியை மட்டும் இல்ல ஆளும் கட்சியையும் பகைச்சுகிட்டு செய்றோம்.... விழ போற ஒவ்வொரு பொணத்துக்கும் ரிப்போர்ட் கொடுத்தாகணும் ...நான் சொல்றபடி செய்ங்க... ஐ வில் பி தேர் இன் 10 மினிட்ஸ் ...."

அர்ஜுன் கூறியது போல் , சந்திரநாத் தொடர்பு கொண்டு பேசிய எண்களை கால் லிஸ்ட்ல் எடுத்து, ஒவ்வொன்றுக்கும் அழைப்பு விடுத்தால், கிட்டத்தட்ட அழைப்பின் ரீங்காரம் அந்த சவுக்கு தோப்பு குள்ளேயே ஒலிக்க, செல்போன் ரீங்காரத்தை வைத்தே காவல் துறையினர் சக்கர வியூகம் போல்
கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் வட்டத்தை சுருக்கிக் கொண்டே
அங்கு பதுங்கி இருந்தவர்களை நெருங்கவும் அர்ஜுன் அங்கு வரவும் சரியாக இருந்தது.

சவுக்குத் தோப்பில் பிடிபட்ட தலைமை ரவுடியிடம் அவன் கைபேசியில் இருந்து சந்திரநாத்தை அழைக்குமாறு அர்ஜுன் மிரட்ட, உயிருக்கு பயந்து அவன் அதை செய்ய,
செய்து முடித்த அடுத்த தருணம், அவர்கள் அனைவரையும் அர்ஜுன் கள்ளத் துப்பாக்கியை கொண்டு சுட ஆரம்பிக்க, பதிலுக்கு அவர்களும் எதிர் தாக்குதல் நடத்த, அதில் காவல்துறையினரில் இருவருக்கு தோள் மற்றும் காலில் குண்டு பாய, அர்ஜுன் விடாமல் தன் அங்கீகரிக்கப்பட்ட துப்பாக்கியை பயன்படுத்த வேண்டிய இடத்தில் பயன்படுத்தியதோடு , மற்ற இடங்களில் கள்ளத் துப்பாக்கியை பயன்படுத்தி கணக்கு முடிக்க வேண்டியவர்களின் கதையை முடிக்கும் போது சந்திரநாத் அங்கு வந்து சேர சரியாக இருந்தது.

சந்திரநாத் அர்ஜுனைக் கண்டதும், வந்த வழியிலேயே திரும்பி தலைதெறிக்க ஓட ஆரம்பிக்க, டேனியலுடன் கூடிய 6 பேர் கொண்ட அந்த காவல்துறையினர் குழு, ( அதில் இருவருக்கு குண்டடிபட்டிருக்க ) லாவகமாக சுற்றி வளைக்க, இனிமே உயிர் பிழைப்பது நடவா காரியம் என்றுணர்ந்து,

"ஏய், என்னை சுடப் போறியா ... சுடு
நான் ஆசை தீர வாழ்க்கையை ஆண்டு அனுபவிச்சிட்டேன் .... என்ன ஒண்ணு... உன் வீட்டு ஆளுங்க கொடுத்த பணத்தை அனுபவிக்காம போறேன் அதான் கொஞ்சம் வருத்தமா இருக்கு ... மற்றபடி உன்கிட்ட போட்ட சவால்ல ஜெயிச்சுட்டேன்... அந்த ஓடுகாலி அதான் உன் பொண்டாட்டி எங்க இருந்தாலும் நீ போய் கூட்டிட்டு வந்துடுவேன்னு தெரிஞ்சுதான், அவளை திரும்பி வராவே முடியாத இடத்துக்கு அனுப்பிட்டேன்.... முதல்ல அவளைப் போட்டுத்தள்ள எங்க ஆளுங்கள நான் கூப்பிட்ட போது யோசிச்சாங்க, உன் பொண்டாட்டின்னு சொன்னதும் தான், வேகமா வந்து அவளை போட்டுத்தள்ளினாங்க...
கூடவே போனஸ்ஸா உன் குழந்தையும் போயிடுச்சு போல..." என்றவன் நக்கல் அடிப்பது போல் பேசியது தான் தாமதம் அர்ஜுனின் துப்பாக்கி குண்டுகள் சரமாரியாக அவன் உடம்பை சல்லடையாக துளைத்து முடித்திருந்தன.

உடனே அர்ஜுனின் அறிவுறுத்தலின் பேரில், அங்கு இறந்திருந்த ரவுடிகளிடமிருந்து துப்பாக்கிகளை எடுத்து தங்களுக்குள் அவர்கள் மாறிமாறி சுட்டுக் கொண்டது போல் காட்சிகள் அமைக்கப்பட்டு விட்டு பிறகு
காயமடைந்த இரு காவல் துறையினரையும் மருத்துவமனையில் அனுமதித்ததோடு , திட்டமிட்டிருந்த படி நீதிமன்ற ஆணையை செயல்படுத்தி கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் இல்லாத சட்ட விரோதமாக இயங்கும் தோல் பதனிடும் ஆலைகளுக்கும் சீல் வைத்து முடித்தனர்.

இவை அனைத்தும் முடித்த பிறகு அர்ஜுனுக்கு செய்ய வேண்டிய அதி முக்கிய காரியம் ஒன்று மிச்சமிருக்க, அதை முடிப்பதற்காக வேண்டி வீடு நோக்கி பயணமானவன் முதல் வேலையாக
அவன் வீட்டில் பணிபுரியும் அனைத்து
ஊழியர்களையும், வாசலில் காவல் காக்கும் செக்யூரிட்டி உட்பட, அனைவரையும் கைப்பேசியின் வழியாக தொடர்புகொண்டு உடனே மூன்று நாட்கள் விடுப்பில் செல்லுமாறு ஆணை பிறப்பித்தான்.

அர்ஜுன் , தன் தாய் மங்களேசுவரியை நன்கு அறிவான்.
தன் அந்தஸ்திற்கு சற்றே கீழ் இருந்தால் கூட அவர்களிடம் நின்று பேசமாட்டார்.
ஆங்கிலம், தமிழை அற்புதமாகப் பேசத் தெரிந்தவருக்கு ஹிந்தி பேசத் தெரியாது, ஆனால் புரிந்து கொள்வார். இதையெல்லாம் யோசித்தவன்
சுபாவிடம் நிச்சயம் அவர் நேரடியாக பேசி இருக்க மாட்டார், சொர்ணாவின் மூலமாகத்தான் தன் காரியத்தைச் சாதித்துக் கொண்டிருப்பார் என்றதை
உறுதி செய்துக்கொண்டு தன் வீட்டை அடைந்ததும் சொர்ணாவின் அறைக்குள் நுழைந்து
அதிரடியாக அவள் நெற்றியில் துப்பாக்கியை வைத்து

" சுபா ஹாஸ்பிடல்ல சாகறதுக்கு முன்னாடி , நீ அவகிட்ட பேசின எல்லாத்தையும் வாக்குமூலமா கொடுத்துட்டா .... அவ சொல்லித்தான் சந்திரநாத்தை கலவரத்துல போட்டோம் ...
இன்னும் நீ மட்டும்தான் பாக்கி ... "
என்றவனின் ரௌத்திர மிரட்டலில் பதறிப் போனவள் நடுங்கியபடி,

" உங்க அம்மா சொல்லித்தான் எல்லாம் செஞ்சேன் .... என்னை ஒன்னும் பண்ணிடாதீங்க ராஜா....
சுபா சாகணுங்கிறது எங்க நோக்கம் இல்ல ... அவ உங்க வாழ்க்கையில இனிமே வரக்கூடாதுன்னுங்கிற எண்ணத்துல தான் செஞ்சோம் ..." என்றவள் , சுபா அனைத்தையும் கூறி இருப்பாள் என்றெண்ணி நடந்த அனைத்தையும் ஒன்றுவிடாமல் கூறி முடிக்க, கேட்டுக்கொண்டிருந்தவனுக்கு கூடை நெருப்பை தலையில் கொட்டியது போன்ற உணர்வு எழ, அதில் அவன் உடம்பும் பற்றி எரிய,

அன்று மதியம் வியாபார விஷயத்திற்காக மேற்கு வங்கம் வந்திருந்த அர்ஜுனின் தந்தை ரகு கிருஷ்ணாவோடு தாய் மங்களேஸ்வரி வெளியே எங்கோ சென்றுவிட்டு வீடு திரும்ப, அவர்கள் இருவரும் வீட்டில் நுழைந்ததும்,
வீட்டு வாயிற் கதவை இழுத்து மூடியவன், வேகமாக தோட்டத்திற்கு சென்று காய்ந்த இலை தழைகளை எரியூட்டுவதற்காக வைத்திருந்த மண்ணெண்ணெயை எடுத்து வந்து கண்ணிமைக்கும் நேரத்தில் மங்களேஸ்வரி மற்றும் சொர்ணாவின் தலையில் ஊற்றி,

" இன்னையோட செத்து தொலைங்க டி.... நாளைக்கு தான் என் பொண்டாட்டிக்கு கொள்ளி வைக்க போறேன் ... அதுக்கு முன்னாடி உங்க ரெண்டு பேருக்கும் உயிரோட கொள்ளி வச்சிடறேன் ...." என்றபடி வத்திபட்டி எடுப்பதற்காக அவன் பூஜை அறைக்குள் நுழைய,

இதற்கெல்லாம் அசருவேனா என்பது போல் மங்களேஸ்வரி பார்த்துக்கொண்டே நிற்க, சொர்ணாவும் ரகுவும் வேண்டாமென பதற, அதையெல்லாம் பொருட்படுத்தாது அர்ஜுன்
வத்திப்குச்சியை கொளுத்த முயலும் போது,

" ராஜா, நீ அதை செஞ்சா நான் இதை செய்வேன் ...." என உணவு மேஜையின் மீது இருந்த கத்தியை தன் கழுத்தில் வைத்தபடி ரகு கிருஷ்ணா மிரட்ட,

" இதுக்கு நீங்களும் உடந்தையா ப்பா ..." என்று சந்தேகத்தோடு கேட்டவனிடம்

" ராஜா ... நானும் அந்தஸ்து கௌரவம் எல்லாம் பார்க்கிறவன் தான் இல்லன்னு சொல்லல ... ஆனா என்னோட அந்தஸ்தை விட உன்னோட ஆசை எனக்கு முக்கியம் பா... சத்தியமா இந்த மாதிரியான விஷயத்துக்கு நான் துணை போக மாட்டேன் ... உன் அம்மா சுபாவை இந்த வீட்டை விட்டு வெளியேத்த போட்ட அத்தனை திட்டத்தையும் என்கிட்ட சொல்லிட்டா... இப்ப நீ சொல்லு என்ன நடந்ததுன்னு ...." என்றவரிடம் சுபா வீட்டை விட்டு சென்ற பிறகு நடந்தவைகள் மற்றும் சந்திர நாத்தின் இறப்பு என அனைத்தையும் கூறியவன்,

" உங்க ரெண்டு பேரையும் வெட்டி போட்டா கூட என் ஆத்திரம் அடங்காது டி.... அது என்ன, என் பெட்ரூம்ல நானும் என் பொண்டாட்டியும் என்ன பேசிக்கிறோம்னு கேக்கிறதுக்கு ஸ்பீக்கர் வைக்கிறது... பேசாம கேமரா வச்சிருந்தா இன்னும் காட்சிகள் தெளிவா தெரிஞ்சிருக்குமே....ச்சே இதையெல்லாம் பேசவே அருவருப்பா இருக்கு ... உடம்பெல்லாம் எரியுது ...
ஆனா உங்களுக்கு மட்டும் உறைக்கவே இல்லை இல்ல ...." என்றவன் கொந்தளிக்கும் போது தான் நடந்த நிகழ்வின் தீவிரம் ரகுவை தாக்க, மங்களா மற்றும் சொர்ணாவை புழுவை பார்ப்பது போல் அவர் பார்த்து வைக்க,

" இப்ப தெரியுதா... எதுக்காக இவளுங்க ரெண்டு பேரையும் உயிரோட கொளுத்தணும் சொல்றேன்னு .." என ரகுவை பார்த்து கர்ஜித்தவன்,

" வந்து மூணு நாள் கூட ஆகலயே டி... அதுக்குள்ள என் பொண்டாட்டிய பொணம் ஆக்கிட்டீங்களே டி..." என்றபடி அதற்கு மேல் தாமதிக்காமல், எரியும் தீக்குச்சியோடு அவர்களை நெருங்க முயலும் போது ,

" உன் பொண்டாட்டி சாவுக்கு அவங்க ரெண்டு பேர விட நீ தான் முக்கிய காரணம் ..." என்றார் அர்ஜுனை தடுத்து நிறுத்த வழி தெரியாமல்.

" என்னது நானா ..."

" ஆமா.... உன் அம்மா சுபாவோட அந்தஸ்தை மனசுல வச்சி அவளை வீட்டை விட்டு மட்டுமில்ல , உன் வாழ்க்கையை விட்டே அனுப்பனும் முடிவு பண்ணி அனுப்பினா .... ஒத்துக்குறேன் ... ஆனா சுபாவை அவ அப்பா கூட தானே அனுப்பினா... அதுவும் அவங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்லைன்னு தெரிஞ்சு பணம் கொடுத்து, அவங்க அம்மா உயிர காப்பாத்த அனுப்பியிருக்கா...

அவ அப்பன் பெரிய அயோக்கியன், ரவுடிகளை கூப்பிட்டு பெத்த பொண்ணையே கொலை செய்வான்னு இவ கனவா கண்டா...

அந்த ரௌடிகளும் உன் பொண்டாட்டின்னு தெரிஞ்சதும் தான்,
அவளை போட்டு தள்ளனும்னு வந்ததா சந்திரநாத் சொன்னான்னு இப்பதான் நீயே சொன்ன....

வீட்டை விட்டு அனுப்பினது இவ, அவளைக் கொல்ல சொல்லி கொலைகாரனை அனுப்பினது அவ அப்பன், உன் பொண்டாட்டினு தெரிஞ்சதும் தான் அந்த ரவுடிங்க சுபாவை போட்டு தள்ளி இருக்காங்க....

அது மட்டும் இல்ல உன் பொண்டாட்டிய யாரும் தரதரன்னு இழுத்துகிட்டு போய் இந்த வீட்டை விட்டு வெளியே அனுப்பல ... அவளா தான் அவ அப்பா கூட வீட்டை விட்டு வெளிய போய் இருக்கா ........ இப்ப சொல்லு அவ சாவுக்கு யார் காரணம்னு ..." என்று ஆக்ரோஷமாக வாதிட்டவர், பிறகு தன்மையாக,

"இவங்களை கொலை செஞ்சு உன் கைய கரியாக்கிக்காத ராஜா....
உனக்கு கடமைகள் நிறைய இருக்கு,
புவனேஸ்வர் ஹாஸ்பிடலுக்கு ஷிப்ட் பண்றதா இருந்த சுபாவோட அம்மாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு ரெண்டு மணி நேரத்துக்கு முன்னாடியே இறந்து போயிட்டதா சொர்ணாவுக்கு போன் வந்துடுச்சு ... இந்த ஊர்ல எஸ்.எஸ் ஹாஸ்பிடல்ல தான் அட்மிட் ஆகி இருந்தாங்க ...

தாய் தகப்பன் ரெண்டு பேருமே இறந்து போயாச்சு ... உறுதுணையா இருந்த அக்காவும் போயாச்சு ... இனிமே சுபாவோட தங்கை ,தம்பிக்கு எல்லாமே நீ தான் ராஜா .... அவங்களுக்கு நல்ல வாழ்க்கையை அமைச்சு கொடுக்கிற வழியை பாரு ..." என்றவரின் பேச்சு,
அவனை சற்று ஆசுவாசப்படுத்த,


" இப்ப நீ சொல்றதுக்காக இவளுங்கள உயிரோட இந்த முறை மட்டும் விடறேன் ... இனிமே இவுளுங்க ரெண்டு பேரையும் என் வாழ்க்கைல நான் பாக்கவே கூடாது .... அப்படி பார்க்கிறா மாதிரியான சந்தர்ப்பம் வந்தா அன்னைக்கே இவளுங்க ரெண்டு பேரோட கதையும் முடிச்சிடுவேன்.... உனக்கு என்னை பத்தி தெரியுமில்ல ....இப்பவே உன் பொண்டாட்டியை கூட்டிகிட்டு இங்கிருந்து ஓடிப் போயிடு ...
இவ இங்க இருந்தான்னா எப்ப என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது ...." என்று ரகுவை பார்த்து மிரட்டிய அர்ஜுன், மங்களேஸ்வரியை உற்று பார்த்து,

" எந்தப் பணத்தையும் அந்தஸ்தையும் காரணம் காட்டி என் மாசமான பொண்டாட்டிய வீட்டை விட்டு அனுப்பினையோ, இனிமே அந்த அந்தஸ்தும் பணமும் கௌரவமும் வம்சமும் என்னோட முடிஞ்சதா இருக்கட்டும்....

என் வாழ்க்கையில இனிமே கல்யாணங்கிறது கிடையாது ...
சொத்தையும் வம்சத்தையும் காப்பாத்த ஊர்ல அவனவன் பிள்ளையை தத்து எடுத்துப்பான்.... நீ பேரனை தத்தெடுத்துக்கோ....." என்றவனின் பேச்சில் அவ்வளவு நேரம் பேசாமல் தெனாவட்டுடன் முறைத்துக் கொண்டிருந்த மங்களேஸ்வரி பொங்கி எழந்து,

" ஆமாண்டா, நீ இது மட்டும் இல்ல இதுக்கு மேலயும் பேசுவ...." என்று கோபத்தில் ஏதோ வசைபாட தொடங்கும் போதே , ரகு பதறியடித்துக்கொண்டு பிரச்சினையை மேலும் வளர விடாமல் தடுக்க எண்ணி,

" மங்களா, கிளம்பு .... இனிமே இந்த வீட்டில இருக்க உனக்கு எந்த உரிமையும் கிடையாது .... ம்ம்ம்ம் கிளம்பு.... " என்று அறிவுறுத்தி அடுத்த அரை மணி நேரத்தில் துரிதமாக அவ்வீட்டை விட்டு மூவரும் வெளியேறினர்.


உடனே எஸ்.எஸ் ஹாஸ்பிடலை தொடர்பு கொண்டு நிலவரத்தை கேட்டறிந்து, மறுநாள் சுபாவின் தாய் உடலை பெற்றுக் கொள்வதாக கூறி அழைப்பை துண்டித்தவன், உடனே ஜானவியையும் சோம்நாத்தையும் தொடர்புகொண்டு, நடந்ததை மேம்போக்காக கூற,
தாய், தந்தை , தமக்கை ஒரு சேர ஒரே நாளில் பறிகொடுத்ததை கேட்டு துடித்து அழுதனர் அந்த இளம் நெஞ்சங்கள்.

ஆறடி ஆண்மகன், உலகம் அறிந்தவன், உயர் பதவி வகிப்பவன் அவனையே அந்த பேசாமடந்தை பேச்சற்றவனாக
ஆக்கி தாயை இழந்த பிள்ளையாய் தவிக்க விட்டு சென்றிருந்த நிலையில்,
பாவம் ஜானவியும் சோம்நாத்தும்... வயதில் சிறியவர்கள்... உலகம் அறியாதவர்கள் ... தாய் தந்தையை விட தமக்கையே ஆதாரம் என்று நம்பியிருந்தவர்களின் நிலை சொல்லில் அடங்காதது .

ஆறுதல் கூறி தேற்ற வேண்டியவனுக்கே தேற்றுவார் தேவைப்பட்ட நிலையில் , ஆதாரம் இல்லாமல் அனாதையாக நிற்கும் அந்த அன்பு நெஞ்சங்களின் மனநிலை அவன் அடிமனதை ஆழமாக பிசைய, தமக்கையின் கணவனாக இல்லாமல், தந்தையின் இடத்தை தத்து எடுத்துக்கொண்டவன் ஆறுதல் கூறி தேற்றி, அடுத்த ஆற்ற வேண்டிய கடமைக்காக அவர்களை மனதளவில் தயார் செய்ததோடு
மறுகணமே அவர்கள் மேற்கு வங்கம் வருவதற்கான ஏற்பாட்டினை செய்து முடிக்கும் போது ரகு கிருஷ்ணாவிடமிருந்து அழைப்பு வர,
அளவு கடந்த எரிச்சலோடு வேண்டா வெறுப்பாக காதுக்கு கொடுத்தவனின் காதில் தேன் வந்து பாய்ந்தது போன்ற செய்தி செவிப்பறையை எட்டியது.
கடவுள் என்றுமே அன்புக்கு மட்டுமே கட்டுப்பட்டவன்...
அவன் சன்னிதானத்தில் பாரபட்சமில்லாமல் செய்த பாவ புண்ணியத்திற்கு ஏற்ப தண்டனையும் பரிசுகளும் வழங்கப்படுவது தான் வழமை .

வழக்கறிஞராக அழகான வார்த்தை கோர்ப்புகளோடு வெகு திறமையாக வாதாடி சொர்ணாவையும் மங்களேஸ்வரியையும் அர்ஜுனிடம் இருந்து காப்பாற்றிய
ரகு கிருஷ்ணாவால் ஆண்டவனிடம் இருந்து காப்பாற்ற முடியாமல் போனது தான் செய்தி.

ஆம், சொர்ணா, மங்களேஸ்வரி, ரகு கிருஷ்ணா ஆகியோர் பயணித்த கார் விபத்துக்குள்ளாகி, ஓட்டுனரும், அவர் அருகில் அமர்ந்திருந்த சொர்ணாவும்
விபத்து நடந்த இடத்திலேயே மரணிக்க,
ஆபத்தான கட்டத்தில் மங்களேஸ்வரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், சிறு அடியோடு தப்பிய ரகு கிருஷ்ணா , அர்ஜுனுக்கு அந்த சங்கதியை சொல்லிக்கொண்டிருந்தார்.

அர்ஜுன் ஒரே ஒரு முறை சொர்ணாவை மன்னித்து விட்டாலும் , மரணம் மன்னிப்பதாய் இல்லை போலும் ...
மங்களேஸ்வரியின் ஆட்டத்திற்கு அம்பாய் செயல்பட்டவள் அல்லவா...
அவள் ஆடிய ஆட்டம் ஆண்டவனுக்கே அடுக்காமல் அதிரடியாக செயல்பட்டு விண்ணுலகம் அழைத்துச் சென்றுவிட்டார்.

பொதுவாக மரணம் என்பது உலக வாழ்விலிருந்து விடுதலை என்றாலும்,
நல்லவர்களுக்கு அவர்கள் இப்பூவுலகில் பட்ட துன்பத்திலிருந்து விடுதலை ...
கெட்டவர்களின் இறப்பினால் அவர்கள் செய்யும் துன்பத்திலிருந்து மற்றவர்களுக்கு விடுதலை ...
இது தான் இறப்பின் சாராம்சம்.

அம்பு தான் சொர்ணா... எய்தது மங்களேஸ்வரி அல்லவா ...அம்பு இறந்துவிட, எய்த்தவளின் நிலை கவலைக்கிடமாக இருப்பதை தெரிந்து கொண்ட அர்ஜுன்

" இனிமே இதப்பத்தி என்கிட்ட எதுவும் பேசாத ... எவ வாழ்ந்தா என்ன... எவ செத்தா எனக்கென்ன... அப்படி ஏதாவது ஒரு நல்ல காரியம் நடந்தா கொள்ளி போடற வேலை எல்லாத்தையும் நீயே செய்து முடிச்சிடு..." என்றவனுள் ஏதோ ஒருவித அமைதி வெகு மெலிதாகப் பரவ,

இரவு மணி ஒன்பதை கடந்திருக்க , ஆங்காங்கே வெளிச்சமும் இருட்டுமாய் வீடு முழுவதும் மயான அமைதியோடு வெறுமையும் கருமையும் மாறி மாறி சூழ்ந்திருக்க,
அவன் உடலின் ஒட்டு மொத்த உணர்வுகளும் வற்றி உயிர் மட்டும் ஒட்டியிருப்பது போன்ற நிலையில் வாய்விட்டு சொல்ல வொண்ணா துயரத்தில் தோய்ந்தமர்ந்தான்.

அவர்களுக்கு திருமணம் முடிந்து நேற்றோடு இரண்டு மாதம் 20 நாட்கள் ஆகின்றன.

அவள் அவன் இல்லம் வந்த நாளிலிருந்து, வீடு முழுவதும் வெளிச்சம் வியாபித்திருக்கும்,
பூஜை அறையில் விளக்கொளியும் சாம்பிராணி புகையும் காலையும் மாலையும் மணக்கும் .

அவனிடம் 'ஜி' என்ற வார்த்தையை தாண்டி அதிகம் பேச மாட்டாள், அதே நேரத்தில் அவன் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பினால் போதும், பூனைக்குட்டி போல் அவன் எங்கெல்லாம் இருக்கின்றானோ அங்கெல்லாம் இருப்பாள்
அவன் கண்களை உறுத்தாமல் அவனுடைய சேவைக்காக மட்டும்.

அவன் வாழ்வின் மூன்று முக்கிய தருணங்களில் மட்டும்தான் அவள் மூன்று நான்கு வரிகள் தொடர்ந்து பேசி இருக்கிறாள்.

ஒன்று, அவன் அவளை மணக்க கேட்ட போது, ரெண்டு
ஆத்மார்த்தமாக தொடங்கிய அவர்களின் அந்நியோன்னிய இரவின்
போது, மூன்றாவது அவள் உயிர் பிரியும் கடைசி தருணம் .... இவைகளைத் தாண்டி அவள் அவனிடம் உரையாடிய நினைவுகளும் இல்லை அதற்கான நேரமும் இருந்ததில்லை .

எங்கு திரும்பினாலும் அவளது நினைவுகளும் பிம்பங்களுமே வாட்ட,
படுக்கை அறைக்கு செல்ல எத்தனித்தவனுக்கு அதற்கான தைரியம் வராமல் ஓய்ந்துபோனான். அவர்கள் இருவரும் அதிக நேரம் செலவழித்த இடம் அல்லவா அது.

அதோடு அவனது உணர்ச்சிகளை விட உணர்வுகள் சங்கமித்த இடம் அது.

அவர்களின் உறவு தொடர்கதையான நாளிலிருந்து, ஏதோ ஓரு சில நாட்களை தவிர்த்து பார்த்தால், மற்ற தினங்கள் அனைத்தும் அவளை அணைத்தபடி தான் அவன் உறங்கி இருக்கின்றான்.

ஒரு வழியாக அவள் ஸ்பரிசம் உணர படுக்கையறைக்கு வந்த போது ,
அவள் அன்று காலை வரை அணிந்து கழற்றி போட்டிருந்த இரவு உடை அவனை வரவேற்க, அதனை எடுத்து தழுவிக்கொண்டவனுக்கு தலையே வெடித்துவிடும் போலிருந்தது.

அவளுக்கே உரித்தான வாசம் அவனை ஆட்டிப் படைக்க, அதிகம் பேசாதவளின் ஆதிக்கம் அவனிடம் அப்பட்டமாய் தெரிய, அவள் பயன்படுத்தும் தலையணையை தடவிப் பார்த்தவனுக்கு, நேற்றிரவு திரும்பவும் வராதா என்ற ஏக்கம் தோன்றி உன்மத்தம் நிலைக்குத் தள்ளியது.

நேற்றிரவு தன்னை தழுவிக்கொள்ளும் போது அவள் மனதில் எத்தனை காயங்கள் இருந்திருக்கும் .... ஏதும் அறியாமல் தன்னைத் தேடுகிறாள் என்றல்லவா எண்ணியிருந்தேன் ... என்றெண்ணியவனால் அதற்கு மேல் பொறுக்க மாட்டாமல் வாய்விட்டு கதறி அழ ஆரம்பித்தான் .

இந்தக் கணத்தில் நினைத்ததை வாங்கும் அளவிற்கு பணம், பதவி, சர்வ வல்லமை படைத்தவனுக்கு, தன்னோடு உறைந்து போனவளின் உடலில் மட்டும் உயிரை வாங்க முடியாமல் உருக்குலைந்தான்.

நேற்றிரவு அவன் கை வளைவில் இருந்தவள் இன்று பிணக் கிடங்கில் அல்லவா இருக்கிறாள்.....

மெல்ல நடந்து அவள் அலமாரியை திறந்து பார்த்தவனை வரவேற்றது நகைப்பெட்டி.

அவன் வாங்கிக் கொடுத்த அனைத்து நகைகளும் அதன் பிரத்தியேக இடத்தில் பொருத்தப்பட்டிருக்க,
அப்பொழுதுதான் எந்த நகையையும் அவள் அணிந்து செல்ல வில்லை என்பது
அவன் நினைவினை எட்ட,

நான் வேணாம்... நான் வாங்கி கொடுத்த நகை வேண்டாம் ... ஆனா என் குழந்தை மட்டும் வேணும் இல்ல ... என்று வாய்விட்டு புலம்பியவனுக்கு
அவள் அதையெல்லாம் அக்னிக்காக விட்டுச் சென்றிருக்கிறாள் என்ற எண்ணமும்
உடன் தோன்றி மேலும் அவனைக் கொல்லாமல் கொன்றது.

"எங்க நான் என் காதலை உனக்கு புரிய வைக்கலன்னு எனக்கு தெரியல சுபா...
உன்னை உனக்காக நேசிச்சேன் டி.... உன் குணத்துக்காக நேசிச்சேன்... உன் ஆசைகளை நேசிச்சேன்.. உன் லட்சியத்தை நேசிச்சேன்.... எனக்குன்னு குடும்பமே இல்ல... அப்படி இருக்குன்னு நான் உணர்ந்ததும் இல்லை .... உன் குடும்பத்தை தானே டி என் குடும்பமா நினைச்சேன் ...
நான் எங்கடி தப்பு பண்ணேன்....
எனக்கு கிடைச்ச நேரத்துல, என் காதலை புரிய வைக்க எவ்வளவோ முயற்சி பண்ணேனே....

நான் என் பரம்பரையை பத்தி உன்கிட்ட சொல்லாம விட்டதுக்கு காரணம் அது உன் தாழ்வு மனப்பான்மையை இன்னும் கூட்டும்னு தான்...

அக்னி என் வாழ்க்கையில இருந்தா... ஆனா அவ வாழ்க்கையில நான் இல்ல டி ... அதுவும்
நீ வந்ததுக்கு அப்புறம் அவ நினைவே இல்ல டி , அதனால தான் உன் கிட்ட சொல்லல...

நீ என்கிட்ட வந்த நாள்ல இருந்து ஏதோ ஒரு உள்ளுணர்வு உன் அப்பாவால தான் உனக்கு பிரச்சனை வரும்னு உணர்த்திக்கிட்டே இருக்கும்.... அதனாலதான் உன்னை இவ்ளோ பாதுகாப்போட காப்பாத்தி கிட்டு இருந்தேன் ....

யாரோ ஏதோ சொன்னாங்கன்னு என்னை விட்டு போயிட்டியே ...
அப்படியே அந்த நாலு மிருகம் உன்னை தீண்டியிருந்தாலும் தப்பு ஒன்னோடது இல்லையே டி....

இப்ப கூட இந்த ரூம்ல நீ எங்கேயோ இருக்கேன்னு எனக்கு தோணுது...
என்னால உன் இருப்பை உணர முடியுது சுபா....

உன் சாவுக்கு காரணமான அத்தனை பேரையும் போட்டு தள்ளிட்டேம்மா...
சொர்ணாவை அந்த ஆண்டவனே போட்டு தள்ளிட்டான் .... இன்னும் அந்த ராட்சசி மட்டும் தான் பாக்கி ...

இப்ப எனக்குன்னு இந்த உலகத்துல யாருமே இல்லை...
நான் ஆசைப்பட்டது எதுவுமே கிடைச்சதில்ல... அப்படியே கிடைச்சாலும் நிலைச்சதில்ல... என் விதியோட போராடி போராடி நான் வெறுத்து போயிட்டேன் .... இனிமே நான் வாழ விரும்பல உன்னோடயே வந்துடறேம்மா ...." என்றவன் வேகமாக பக்கவாட்டு மேஜையின் இழுபறையில் இருந்து துப்பாக்கியை எடுக்கும் போது திடீரென்று வீட்டில் எரிந்து கொண்டிருந்த அனைத்து விளக்குகளும் அணைய, ஏற்கனவே மேகம் கருத்து மழை வர தயாராக இருந்த நிலையில் தற்போது, ஒருவித ஊத காற்றும் இணைத்துக்கொள்ள,
திறந்திருந்த படுக்கை அறை ஜன்னல்கள் படபடக்க, வீட்டை சுற்றி இருந்த மரங்கள் வேகமாக அசைய,
யாரோ காய்ந்த இலைகளின் மேல் பாதம் பதித்து நடந்து வருவது போன்ற சரக் சரக் சப்தம் கேட்க,
ஒரு நொடி தன்னை சுற்றி நடக்கும் மாற்றங்களை அவன் ஆழ்ந்து நோக்கி கொண்டிருக்கும் போதே

" ஜி....., நீங்க நல்லா இருக்கணும்னு தானே உங்கள விட்டு கிளம்பி வந்தேன் .... அக்னி .... க்ர்ரரரர.... வருவாங்க ....க்ர்ரரரரர அவங்களை ............ க்ரர்ர்ர்ர்....க்ரரர்ர்ர்ரர் பொருத்தம் ... என் தங்கையும் தம்பியும் உங்களை நம்பி தானே விட்டுட்டு வந்திருக்கேன்.... என்னோட கர்மா முடிஞ்சு போச்சு .... உங்களோட வாழ்ந்த
சந்தோஷமான நினைவுகளை சுமந்துகிட்டு போறேன் .... ஜி ....ஜி.."
என்ற குரல் முழுக்க முழுக்க அவனுடைய சுபாவின் குரல் தான் ....
சில இடங்களில் தேம்பித் தேம்பி அழுவது போலவும் , சில இடங்களில் கரகரப்பாகவும், சில இடங்களில் அவளது வார்த்தைகள் அவனை சென்றடையாமல் சமிஞ்ஞைகள் சரியாக இல்லாதது போன்ற நிலையும்
உணர்ந்தவன், கலங்கி துடித்தபடி

" உயிரோட இருக்கும் போதே அதிகம் பேச மாட்ட.... இப்ப தெய்வமாயிட்ட...
நடந்ததும், இனிமே நடக்கப் போறதும் இப்ப உனக்கு தெரிய வந்திருக்கும் .... ஏதோ எனக்கு சொல்லனும்னு ஆசைப்படற, அந்த தேவ ரகசியத்தை நான் தெரிஞ்சிக்க கூடாதுன்னு, நீ சொல்ற வார்த்தைகள் என்னை வந்து சேராம என் விதி தடுக்குது.... கவலைப்படாத... உனக்கு கொடுத்த வாக்கை நிச்சயம் காப்பாத்துவேன் ... இனிமே உன் தம்பியும் தங்கையும் தான் நம்ம குழந்தைங்க... அவங்க ரெண்டு பேரையும் நல்லபடியா படிக்க வெச்சு அவங்க வாழ்க்கைய நல்ல படியா அமைச்சு கொடுக்கிறது என் கடமை ...." என்றவன் பேசி முடிக்கவும் அணைந்திருந்த விளக்குகள் ஒளிரவும், வெளியே அடை மழை பெய்யவும் சரியாக இருந்தது.

பிறகு சொர்ணா தன் அறையில் பொருந்தியதாக சொன்ன ஸ்பீக்கரை
படுக்கைக்கு மிக அருகில் இருந்த சிறு கடிகாரத்தின் பின்புற அலாரத்தின் மீது கண்டெடுத்தவன்,
அதனை சுக்குநூறாக உடைத்து படுக்கை அறையின் ஜன்னல் வழியே தூக்கி எறிந்துவிட்டு , ஒரு வகையான மயக்க நிலையில் கண்ணயர்ந்து போனான்.

மகாபாரதப் போரின் போது , செய்வதறியாது, மனம் தளர்ந்து, தன்னம்பிக்கை இழந்த நிலையில் இருந்த அர்ஜுனனுக்கு அவனது தேரோட்டியான அந்த பரமாத்மா கிருஷ்ணன் மன அழுத்தத்தை குறைப்பதற்காக 40 நிமிடம் மொழிந்த வார்த்தைகளே கீதை .

அதே கீதையை இந்த அர்ஜுனனின் நிலை கருதி நான்கு நொடியில் விதி இயம்பியது. ஆனால் அதன் வார்த்தைகள் தான் அவன் செவியை சென்றடையவில்லை .

அர்ஜுனா.... இந்த வாழ்க்கையில் காரணங்கள் இல்லாமல் காரியங்கள் இல்லை ... எதேச்சையாக நடப்பது போல் தோன்றும் அனைத்துமே திட்டமிடப்பட்டு கனக்கச்சிதமாக நடப்பதுதான் ... ஒவ்வொரு கடினமான காலமும் ஏதோ ஒன்றுக்கு நம்மை தயார் படுத்துவதற்காக தான் ...

துன்பங்கள் மட்டுமே வாழ்க்கை இல்லை ... உனக்காக இன்பமயமான நாட்கள் காத்துக்கொண்டிருக்கிறது ... உன் கர்மா முடியும் வரை உன் வாழ்க்கையை உன்னால் மட்டுமல்ல வேறு எவராலேயும் முடித்து வைக்க முடியாது ...
நீ இந்த நாட்டுக்கும் , நாட்டு மக்களுக்கும் ஆற்ற வேண்டிய பணிகள் ஏராளம் ...
உன் வாழ்க்கையில நீ தொலைத்த பொக்கிஷங்கள் உன்னை தேடி வரப்போகின்றது ...
இதுவரை நீ துன்பங்களை அனுபவித்தது எத்தனை சத்தியமோ அதே அளவு இன்பத்தை அனுபவிக்க வேண்டியதும் கர்மாவின் கட்டாயம் ...
நல்லதை விதைத்தால் நல்லதை அறுவடை செய்தே தீர வேண்டும் இதுதான் உலக நியதி ... என முடித்தது.


மறுநாள் காலை சற்று தாமதமாக உறக்கம் விழித்தவனை மீண்டும் வெறுமையே ஆட்கொள்ள, அவன் மனையாளின் இழப்பு பெரிதாக கண் முன் நிற்க,

எங்கு காணினும் அவளின் பிம்பங்களே....
அவளின் ஒற்றைச் சொல்லான 'ஜி' என்ற அழைப்பின் பிரதிபலிப்புகளே...

' ஜி ' என்பது அவனைப் பொருத்தமட்டில் அழைப்பு அல்ல... அவளின் உணர்வு ..

திருமணமாகி முதன் முதலாக அந்த வீட்டில் அவள் அடி எடுத்து வைக்கும் பொழுது இடறி விழ போனவளின் இடைபற்றி தூக்கிச் சென்றது,
தோட்டத்தில் அவள் செடிக்கு தண்ணி ஊற்றுவது, பூஜையறையில் தீபத்துடன் கண் மூடி தியானிப்பது , வாசலில் முதன்முறையாக அவனை அவள் ஓட்டி நின்றது போன்ற நினைவுகள் அவன் மனக்கண்முன் தோன்றி அலைக்கழிக்க,

அவள் தான் திரும்பி வர முடியாத இடத்திற்கு சென்று விட்டாள் , ஆனால் அவன் அவளிடம் செல்லலாம் அல்லவா என்ற எண்ணம் மீண்டும் அவன் மன அழுத்தத்தை அதிகரித்து தற்கொலை எண்ணத்தை தூண்ட

சுபா நீ என் வாழ்க்கையில வராமலே போயிருக்கலாம் .... இப்ப நான் எப்படி நாட்களை கடத்த போறேன்னே தெரியல டி.... என்றவன் குளித்து முடித்து சீருடை அணியும் போது,
மீண்டும் மனையாளின் நினைவே வாட்ட,

நேற்று இதே நேரத்தில் இதே உடையில் இதே இடத்தில் அவனை அவள் கட்டி அணைத்துக் கொண்டது நினைவுக்கு வந்து, கண் கலங்க செய்ய,

வாழ்க்கையில் போனால் கிடைக்காதது ரெண்டு . ஒன்று காலம் , இன்னொன்று உயிர்.

அவனைப் பொருத்தமட்டில் அது இரண்டுமே போய்விட்டது. எத்தனை ஆயிரம் கோடிகள் கொடுத்தாலும் நேற்றைய இந்நேரத்தை அவனால் மட்டுமல்ல எவராலும் வாங்க முடியாது என்ற நிதர்சனத்தை அவன் மண்டையில் காலம் குட்டி உணர்த்திக்கொண்டிருக்கும் போது டேனியலிடமிருந்து அழைப்பு வந்தது.

" சார், நேத்து நடந்த என்கவுன்டர்காக ஹுமன் ரைட்ஸ் கமிஷன் நம்ம ரெண்டு பேரையும் ஒரு என்கொயரிகாக கூப்பிட்டு இருக்காங்க ..."

அர்ஜுன் இதை எதிர்பார்த்ததுதான்.

" யார் ஹுமன் ரைட்ஸ் கமிஷனுக்கு கம்ப்ளைன்ட் பண்ணாங்களாம்..."

" யாரும் கம்ப்ளைன்ட் பண்ணலயாம்... அவங்களே சு மோடோவா ( Suo moto - தானாக, தன்னிச்சையாக) ஆக்ஷன் எடுத்திருக்காங்களாம் சார்..."

" இது வழக்கமா சொல்றது தானே... இதுக்கு பின்னாடி யார் இருக்காங்கனு எனக்கு தெரியும்... நான் சொன்ன மாதிரியே நீங்களும் ஹாண்டில் பண்ணுங்க ... ஐ வில் பி தேர் இன் டென் மினிட்ஸ் ..." என்றவனிடம் தயங்கியபடி

" ஏ.கே சார் வைஃப்பும் இந்த ரியாட்ல இறந்துட்டதா பேசிக்கிறாங்க ... இது உண்மையான்னு ஒரு மீடியா பர்சன் என்கிட்ட விசாரிச்சாரு சார்... அப்படி எதுவும் நடக்கலன்னு சொல்லி இருக்கேன்... ஆம் ஐ ரைட் சார்..."

" வெல் செட் டேனியல் ... யார் கேட்டாலும் அதெல்லாம் பொய் ... அப்படி எதுவும் நடக்கலன்னு ஒரேடியா அடிச்சிடுங்க... ஏற்கனவே மீடியாவால தான் அவ உயிரே போயிருக்கு... நம்ம டிபார்ட்மெண்ட்க்கு மட்டும் உண்மை தெரிஞ்சா போதும்... ஹுமன் ரைட்ஸ் கமிஷன் கிட்ட இந்த விஷயத்தை எப்படி சொல்லணுமோ அப்படி நான் சொல்லிக்கிறேன் ..."
என்றான் உறுதியாக.

தகிப்பாள்
 
அத்தியாயம் 26

மனித உரிமை ஆணையம் சார்பாக ஒரு பெண் உட்பட ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டிருக்க,
அவர்கள் முன் கம்பீரமாக வீற்றிருந்தான் அர்ஜுன்.

" நேத்து நடந்த என்கவுன்டர்ல பத்து பேரை போட்டு தள்ளி இருக்கீங்க ...
நாங்க எங்க டீமோட, இன்வெஸ்டிகேஷன் டீம், ஃபாரன்சிக் மெடிகல் எக்ஸ்பர்ட்ஸை(forensic medical experts) அனுப்பி சம்பவம் நடந்த இடத்துல ஆய்வு செஞ்சோம் .... இறந்து போனவங்களோட ஃபாரன்சிக் ரிப்போர்ட்ஸ் இன்னும் 15 மினிட்ஸ்ல வந்துடும் .... அதுக்கு முன்னாடி ஒரு சின்ன என்கொயரி...

லா(Law) எல்லாருக்கும் பொதுவானது மிஸ்டர் ஏ.கே ... ஏன் இந்த மாதிரி ஃபேக் என்கவுன்டர்ஸ் பண்றீங்க ..." என கடுமையாக கேள்வி எழுப்பினார் நடுநிலையாக வீற்றிருந்த பெண்.

"மேம், ஃபர்ஸ்ட் ஆஃப் ஆல் இது என்கவுன்டரே கிடையாது ....
லாஸ்ட் 3 டேஸா ப்ரோட்டஸ்ட் (protest-போராட்டம் ) நடந்துகிட்டு இருக்கு ... ஒரு சில இடத்துல வன்முறையும் நடந்துகிட்டு இருந்தது ...

இந்தப் ப்ரோட்டஸ்ட்டோட கிராஸ் ரூட் தெரிஞ்சதால தான் அவங்க ராலி(Rally - பேரணி) நடத்தணும்னு பர்மிஷன் கேட்கும் போது லோக்கல் போலீஸ் ஸ்டேஷன் மட்டுமில்ல, கலெக்டரும் பர்மிஷன் கொடுக்கல ... அப்புறம் அவங்க கோர்ட்ல ராலி நடத்த பர்மிஷன் வாங்கிட்டு வந்தாங்க...
பதினோரு மணிக்கு தான் ராலி தொடங்கணும்னு கோர்ட் ஆர்டர்ல சொல்லி இருக்கு... ஆனா அவங்க போலீஸ் ப்ரோட்க்ஷன் கொடுக்கறதுக்கு முன்னாடியே ஒன்பது மணிக்கே தொடங்கிட்டாங்க...எங்களால கூட்டத்த கண்ட்ரோல் பண்ண முடியல ...முதல்ல வன்முறைல ஆரம்பிச்சது பிறகு கலவரமாக மாறி போச்சு ...
அதுக்கப்புறம் தான் கலெக்டர் ஃபயரிங் ஆர்டர் கொடுத்தாரு.... "

" அப்ப நீங்க அவங்க முட்டிக்கு கீழ தானே சுட்டு இருக்கணும் ... அதை விட்டுட்டு 9 பேரை சவுக்கு தோப்புக்குள்ள பிளான் பண்ணி என்கவுன்டர் பண்ணி இருக்கீங்க..." என மற்றொரு அதிகாரி கேள்வி எழுப்ப

" எப்படி சார், 9 பேரை சவுக்கு தோப்புக்குள்ள நாங்க கூட்டிட்டு போக முடியும் .... அவங்களே அதை நோக்கி ஓடினாங்க... அவங்களை நாங்க துரத்தினோம் ....அவங்க எங்களை எதிர் தாக்குதல் நடத்தினாங்க... நாங்களும் பதிலுக்கு தாக்குதல் நடத்தினோம்...
எங்க சைட்ல ரெண்டு பேர் சிவியர்லி இன்ஜோர்டு அண்ட் அட்மிட்டெட் இன் ஹாஸ்டல் ... இப்ப உயிருக்குப் போராடிக்கிட்டு இருக்காங்க... "

" அது எப்படி அந்த ஒன்பது பேரும் சொல்லி வச்ச மாதிரி போலிஸ் வான்டட் லிஸ்ட்ல தேடப்படற குற்றவாளியாவே இருக்காங்க மிஸ்டர் ஏ.கே ..." என இன்னொரு அதிகாரி கேள்வி எழுப்ப ,


" நீங்களே சொல்லிட்டீங்க அவங்க போலீசாரால தேடப்படற குற்றவாளிகள்னு... அப்ப அவங்க கலவரம் செய்யறது ஒன்னும் புதுசு இல்லையே சார் ..."

" ரொம்ப புத்திசாலித்தனமா பேசுறதா நினைப்பா மிஸ்டர் ஏ.கே..." ---- வேறொரு அதிகாரி .

" சார், லேட் மீ எக்ஸ்பிளைன், அவங்க ஒன்பது பேர்ல கொஞ்சம் பேர் ஆளுங்கட்சி, கொஞ்சம் பேர் எதிர்க்கட்சி சார்... கோஷ்டி பூசல் ஏற்பட்டு அவங்க ஒருத்தரோட ஒருத்தர் சுட்டுக்கு ஆரம்பிச்சாங்க ... அதைத் தடுக்கப் போன போலீஸ் டீமை நோக்கி சுட ஆரம்பிச்சாங்க... நாங்க அவங்கள கைது செய்யறதுக்காக துரத்த, அவங்க சவுக்குத் தோப்புக்குள்ள பதுங்கிக்கிட்டு மறுபடியும் ஒருத்தரோட ஒருத்தர் சண்டை போட ஆரம்பிச்சு சுட்டுகிட்டாங்க... அவங்களை சுத்தி வளச்சு நாங்க நெருங்கும் போது தான், எங்கள நோக்கியும் துப்பாக்கிச்சூடு நடத்தினாங்க.... பதிலுக்கு நாங்களும் நடத்தினோம் ...
கொஞ்ச நேரம் கழிச்சு எந்த சவுண்டும் இல்ல, போய் பார்த்தா ஒருத்தரோட ஒருத்தர் சுட்டுகிட்டு எல்லாரும் இறந்திருக்காங்க ..."

" நீங்க சொல்றது சின்ன குழந்தை கூட நம்பாது ஏ.கே...." என்றார் இந்தப் பெண்மணி நக்கலாக.

" மேம் ,இதான் என்னோட பிஸ்டல்.... மொத்தம் நாலு புல்லட்ஸ் ஃபயர் ஆயிருக்கு ... எல்லார் கையிலும் இந்த காலத்துல வெப்பன்ஸ் இருக்கு...
இன் ஃபேக்ட் நாங்க யூஸ் பண்றதை விட ரொம்ப அப்டேட்டட் டைப் யூஸ் பண்றாங்க ....
எப்படியும் கொஞ்ச நேரத்துல ஃபாரன்சிக் மெடிக்கல் ரிப்போர்ட்ஸ் வந்துடும் அப்ப நான் சொல்றது உண்மைன்னு உங்களுக்கே தெரிய வரும்... "

" சரி, அந்த ஒன்பது பேர் வான்டட் லிஸ்ட்ல இருக்கிறவங்க... ஓகே...அந்த பத்தாவது ஆள் என்ன பண்ணாரு ... அவர் போலீஸ் வான்டட் லிஸ்ட்லயே இல்லாதவராச்சே..."
என்றபடி அந்த பெண்மணி அர்ஜுனை உற்று நோக்க, அவர் சந்திர நாத்தை தான் குறிப்பிடுகிறார் என்பதை புரிந்துகொண்ட அர்ஜுன், சற்று தயங்க

" நீங்க பதில் சொல்ல மாட்டீங்க ஏ.கே நான் சொல்றேன் .... அவர் உங்க மாமனார் ... அவரோட விருப்பம் இல்லாம அவர் பொண்ணை நீங்க கல்யாணம் பண்ணி இருக்கீங்க ...
அதனால உங்களுக்கும் அவருக்கும் ஆகாது ... கோஸ்டல் ரோடுல கலவரம் நடக்குதுன்னு தெரிஞ்சே அவரு உங்க மனைவிய கூட்டிட்டு போய் கலவரத்தோட கலவரமா ஆள வச்சி தீர்த்திருக்காரு... சோ அந்த வென்ஜென்ஸ மனசுல வச்சு இந்த கலவரத்தைப் பயன்படுத்தி அவரை நீங்க முடிச்சிட்டீங்க... அம் ஐ ரைட் ..." என்று தெளிவாக அந்தப் பெண்மணி கேள்வி எழுப்ப

"மேம், ஒரு நிமிஷம் .... லெட் மீ எக்ஸ்பிளைன் .... முதல்ல என் மாமனாருக்கு நாங்க கல்யாணம் பண்ணிக்கிட்டது பிடிக்கல... ஆனா அப்புறம் எல்லாருமே ராசி ஆயிட்டோம்...
என்னோட பிரதர்-இன்-லா
சிஸ்டர்-இன்-லா என் வீட்டுக்கு வந்திருக்காங்க.... ஏன் என் மாமனாரும் என் வீட்டுக்கு வந்திருக்காரு பாருங்க ...
எங்க உறவு சரி இல்லன்னா அவர் எப்படி என் வீட்டுக்கு வருவாரு...." என தன் அலைபேசியில் அவன் வீட்டில் பதிவான சிசிடிவி கேமரா ஃபூட்டேஜை காட்டினான்.

" அப்போ மிஸ்டர் சந்திரநாத், சவுக்கு தோப்புக்குள்ள ஏன் வரணும் ...."

" என் மாமனாருக்கு கொஞ்சம் அரசியல்ல இன்ட்ரஸ்ட் உண்டுன்னு எனக்கு தெரியும் ... ஆனா கடந்த மூணு நாளா இங்க நடக்கிற ப்ரோட்டஸ்ட்ல ஆளுங்கட்சி சார்பா அவர் கலந்துகிட்டு இருந்திருக்காருன்னு எனக்கு தெரியாது ... என் மாமியாருக்கு உடம்பு சரியில்ல, அவங்களை எஸ்.எஸ் ஹாஸ்பிடல்ல சேர்த்திருந்தாங்க... என் மனைவி அவங்க அம்மாவை ஹாஸ்பிடல்ல போய் பார்க்கணும்னு சொன்னாங்க ...
சரி போய்ட்டு வான்னு நான் தான் சொன்னேன்... நேத்து என் மாமனார் என் மனைவியை ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போக என் வீட்டுக்கு வந்திருந்தாரு... " என்றவனின் பேச்சை இடைவெட்டி

" அப்போ சந்திரநாத் இண்டென்ஷனலா எதுவும் பண்ணலன்னு சொல்ல வரிங்க ... ஐ மீன் உங்க காதலை பிடிக்காததால கௌரவக்கொலை மாதிரி உங்க மனைவிய கலவரத்துல முடிக்கணுங்கிற நோக்கத்தோட அவர் கூட்டிட்டு போகலன்னு சொல்ல வரீங்க..."

" எஸ் மேம் ... யூ ஆர் ரைட் ... என்னதான் பொண்ணு மேல கோவம் இருந்தாலும் எந்த அப்பாவாவது அப்படி செய்வாங்களா மேம் ... அதோட இது சந்திர நாத்தோட போன் நம்பர், இது அவரோட கால் லிஸ்ட் ... இத பார்த்தாலே உங்களுக்கு எல்லாம் புரிய வரும் ..." என்றவனிடம் இருந்து வாங்கிய ஆதாரத்தை பத்து நிமிடத்துக்கு மேல் ஆய்வு செய்துவிட்டு,

" நீங்க குடுத்த 2 எவிடன்ஸையும் கம்பேர் பண்ணி பார்த்தாலே தெரியுது நீங்க சொல்றது பொய்யின்னு... உங்க வீட்டு சிசிடிவி கேமரால பதிவான உங்க மனைவி அவங்க அப்பாவோட போன அந்த நேரம், உங்க வீட்டிலிருந்து கோஸ்டல் ஏரியா ஏறக்குறைய 25 மினிட்ஸ் ... அதுக்கப்புறம் சந்திரநாத் அந்த அக்யூஸ்ட்க்கு போன் பண்ண நேரமும்
ஏறக்குறைய 5லிருந்து 10 நிமிஷம் தான் வித்தியாசம் இருக்கு ... கூட்டி கழிச்சு பாருங்க கணக்கு சரியா வரும் ... தட் மீன்ஸ் உங்க மனைவிய அவர் இண்டென்ஷனலா கூட்டிகிட்டு போயி
அந்த ரவுடிகளை வச்சு கொலை பண்ணதால, அந்த அக்யூஸ்ட்களோடு சேர்ந்து அவரையும் நீங்க என்கவுன்டர் பண்ணிட்டீங்க...இதுதான் நடந்தது ..." என திட்டவட்டமாக அவர் மீண்டும் அடித்துக் கூற

" மேம், இப்ப நீங்க தான் கதை சொல்றீங்க... சந்திரன்நாத்தோடு கால் லிஸ்ட்ட சரியா பாருங்க... அவரு அந்த
ப்ரோடஸ்ட்ல கலந்துகிட்ட மூணு நாளாவே அந்த அக்யூஸ்ட்டோட மட்டுமில்ல இன்னும் சில ரவுடிகளோடையும் பேசிக்கிட்டு இருந்திருக்காரு ... அவரு சாகறதுக்கு 15 நிமிஷத்துக்கு முன்னாடி அந்த அக்யூஸ்ட் கிட்ட இருந்து அவருக்கு கால் வந்திருக்கு ... ஒருவேளை அவன் கூப்பிட்டு தான் இவரு அந்த சவுக்கு தோப்புக்கு வந்திருக்கணும்
அது மட்டும் இல்ல,
அவங்களுக்குள்ள ரொம்ப நாள் பிரண்ட்ஷிப் இருந்திருக்கும் போல...ஒரு ஆறு மாசமா அவங்க ரெண்டு பேரும் தொடர்புல இருந்ததா கால் லிஸ்ட் காட்டுது மேம் ... சீ திஸ் ..." என்று ஆதாரத்தை நீட்டியவன்


"ஃபயரிங் முடிஞ்சதுக்கு அப்புறம் தான் எங்களுக்கு எல்லாமே தெரிய வந்துச்சு... இறந்தவங்களோட இவரை பார்த்ததும் முதல்ல ஒண்ணுமே புரியல..
அப்புறம் அவரோட போன் நம்பர் வச்சு தான், அவர் ஏன் அங்க வந்தாருன்னு தெரிஞ்சிகிட்டோம்..." என்றவனை ஆழ்ந்து நோக்கி


" இதெல்லாம் எப்ப தெரிஞ்சது ... உங்க மனைவி இறந்த பிறகா..."

" எஸ் மேம்..."

" அப்ப உங்களுக்கு சந்திரநாத் மேல கோவம் இல்லையா ... அவரால தானே உங்க மனைவி இறந்து போனாங்க ..."

" கோவம் இல்லாம இருக்குமா மேம்...
இறந்தது என் மனைவியாச்சே....
என்ன ஒண்ணு, அவரு இண்டென்ஷனலா செய்யல அதோட இரண்டு பேருமே இறந்ததுக்கு அப்புறம் தான் எனக்கு விஷயமே தெரிஞ்சது... கோஸ்டல் ரோட்ல நடக்குற பேரணியை பாத்துட்டு ஹாஸ்பிடல் போகலாம்னு முடிவு பண்ணி தான் என் மனைவியைக் கூட்டிட்டு போய் இருக்காரு போல ....அங்க அவருக்கு ஏதோ ஒரு சின்ன வேலை இருந்திருக்கு... அதை அவர் முடிச்சுட்டு வர்றதுக்குள்ள அந்த ட்ரெயின் ராப்பரில சம்பந்தப்பட்ட அந்த ரவுடி குரூப் என் மனைவியை அடையாளம் கண்டுகிட்டு அவங்களை தாக்க, அங்க போலீஸ் வர , ரத்த வெள்ளத்துல என் மனைவியை அப்படியே விட்டுட்டு அவங்க ஓடிட்டாங்க... மிஸ்டர் டேனியல் தான் என் மனைவியை ஹாஸ்பிடல்ல சேர்த்தாரு...
அப்புறம் என் மாமனார் என் மனைவியை தேடி இருக்காரு... அந்த டைம்ல தான் இந்த ஆளுங்கட்சி ரவுடி கிட்ட இருந்து போன் வந்திருக்கும் போல ... அந்த ரவுடியை பார்க்கதான் அவரு சவுக்கு தோப்புக்கு போயிருக்காரு... இதான் என் வைஃப் கடைசியா பேசின வீடியோ வாக்குமூலம் ... இதுல அவங்களே சொல்லி இருக்காங்க ட்ரெயின் ராபரில சம்பந்தப்பட்ட ரவுடிகள் தான் தாக்கினாங்கன்னு..."

என ஒரே அடியாக பொய் என்று தெரிந்தும், சட்டத்திற்குப் புறம்பானது என்று தெரிந்தும் தர்மத்தையும் மனசாட்சியையும் மட்டும் அடிப்படையாக வைத்து அவன் பதிலளிக்கவும், ஃபாரன்சிக் மெடிக்கல் ரிப்போர்ட் வரவும் சரியாக இருந்தது.

அவன் கூறியது போல், அவனுடைய துப்பாக்கி குண்டுகள் நான்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்க,
அதுவும் குற்றவாளிகளின் தோளிலும் காலிலும் படும்படியாக தான் இருந்தது.

சுபாவை சந்திரநாத் அந்த கடையின் முன்புற திட்டில் அமரச்சொல்லி விட்டுச் சென்றது,
அந்த ரவுடிகள் சுபாவை தாக்கிய காணொளியை கச்சிதமாக ஆணையத்திடமிருந்து மறைத்திருந்தான்.

சந்திரநாத்தின் உடம்பில் இருந்து எடுக்கப்பட்ட குண்டுகள் அனைத்தும்,
வேறொரு துப்பாக்கி ரகத்தை சார்ந்திருக்க , டேனியலுடன் கூடிய அந்த ஆறு பேர் கொண்ட குழுவின் துப்பாக்கி குண்டுகளின் எண்களை சரிபார்க்க, அதுவும் அர்ஜுனுக்கு சாதகமாக வந்திருந்தது.

அதுமட்டுமல்லாமல், சவுக்கு தோப்பை நோக்கி குற்றவாளிகள் ஓடும் போது அவர்களை காவல்துறையினர் துரத்திச் சென்றதற்கான ரிசார்ட்டில் பொருத்தப்பட்டிருந்த காணொளியும் ஆதாரமாக வழங்கப்பட, அவர்களால் மேற்கொண்டு பேச முடியாமல்
அமைதி காத்தனர்.

அதுவரை தன் பக்கத்து நியாயங்களை ஆதாரத்தோடு, தெளிவாக கம்பீரத்துடன் எடுத்துரைத்தவன்

" சார், என் வைஃப்க்கு நான் கடைசியா செய்ய வேண்டிய சில சடங்குகள் இருக்கு.... அவங்க டெட்பாடி மார்ச்சரில இருக்கு... இஃப் யூ பர்மிட் மீ , நான் அவங்களுக்கு கொல்லி வைக்கணும் சார் ...." என்றான் அவனையும் மீறி தழுதழுத்த குரலில்.

அங்கிருந்தவர்கள் எல்லாம் இரும்பால் ஆனவர்களா, அவர்களும் மனிதர்கள் தானே... அவர்களுக்கு தேவையான ஆதாரங்கள் கிடைத்து விட்டதால்,

" சாரி ஏ.கே.... ப்ளீஸ் கோ அ ஹெட் ..."
என்றனர் அவன் முகம் பார்க்க முடியாமல்.


அதற்குள் சோம்நாத்தும், ஜானவியும் வந்துவிட,
குளிரூட்டப்பட்ட பிணவறையில் இரும்பினாலான பெரிய அலமாரிகளின் ஒன்றிலிருந்து முகம் மட்டும் தெரிந்த நிலையில் போஸ்ட்மார்ட்டம் செய்யப்பட்டு வெள்ளைத்துணியில் பொட்டலமாக சுற்றப்பட்டிருந்த சுபாவின் பிணம் இருந்த இழுப்பறையை ஊழியர் இழுத்து திறந்து காட்ட , தமக்கையை அப்படி பார்த்ததும் ஜானவியும் சோம்நாத்தும்
வாய்விட்டு கதறித் துடித்தனர்.

தமக்கையை உயிரற்ற ஓவியமாய் காண சகிக்காது அலறித் துடித்த
அந்த பிஞ்சு நெஞ்சங்களின்
அன்பையும் ஆற்றாமையையும் அறிந்தவன் தேற்ற வழியற்று இருவரையும் தன் இரு கரங்களால் சுற்றி வளைத்து தன் மார்போடு அணைத்துக் கொண்டு அவனும் மௌனக் கண்ணீர் வடித்தான்.

ஐஜி சக்கரபோர்த்தி தன் மனைவியுடன் வந்திருந்தார்.

" எனக்கு ராசி இல்ல அர்ஜுன் ... நான் பண்ணி வச்ச கல்யாணம்
இப்படி ரெண்டே மாசத்துல முடிஞ்சு போகும்னு நான் கொஞ்சம் கூட எதிர் பார்க்கல... என்னை மன்னிச்சிடு ப்பா..." என குலுங்கி அழுதார்.

" எனக்கு தான் சார் அவளோட வாழ அதிர்ஷ்டம் இல்லை ... என் விதி அப்படி ..இதுக்கு நீங்க என்ன சார் பண்ணுவீங்க ..." என்றான் விரக்தியாக.

பிறகு தன் தாயின் உடலை மருத்துவமனையில் இருந்து பெற்று, அதனை எரியூட்டியதோடு ,
தன் தந்தையின் உடலுக்கும் தீ மூட்டினான் சோம்நாத் .

அவர்கள் இருவருக்கும் தங்கள் தாய் தந்தையரின் இறப்பை காட்டிலும்
தமக்கையின் இழப்பே பெரிதாக தெரிய,
ஒரு கணவனாக இருந்து செய்ய வேண்டிய அத்தனை சடங்குகளையும் செய்து முடித்து, கடைசியில் அவளது உடலுக்கு தீ மூட்டியவனின்
மனதில் அவசர கதியாக அவளை சந்தித்த நாளிலிருந்து அவன் வாழ்க்கையில் நடைபெற்ற அனைத்து நிகழ்வுகளும் மனக்கண் முன் படக்காட்சிகளாக விரிய,
அதற்கு மேல் அங்கு நிற்க மாட்டாமல் துடித்துப்போய்விட்டான் அர்ஜுன்.

நாட்கள் வேகமாக செல்ல, சுபா இறந்து ஒரு மாதம் ஆன நிலையில், அவளுடைய தேர்வு முடிவுகள் வெளியாக, வழக்கம் போல் பல்கலைக்கழகத்திலேயே முதலாம் மாணவியாக தேர்வாகியிருந்தாள்.

இன்டகரல் கால்குலஸ், டிஃபரண்டஷியல் கால்குலஸ் சால்வ் பண்ண தெரிஞ்ச பொண்னை தான் கல்யாணம் பண்ணனும்னு ஆசைப்பட்டேன் .... என்றவன் சொன்னது நினைவுக்கு வர,
அன்று நடந்த நிகழ்வுகளில் மூழ்கி இருந்தவனிடம்

ஜி, உங்களுக்கு பிடிச்ச மாதிரி நான் மேத்ஸ்ல நிறைய மார்க் எடுத்திருக்கேனா ... என்ற குரல் அசரீரி போல் மெலிதாக அவன் காதுகளில் விழ, மேஜையின் மேலிருந்த அவளது மதிப்பெண் பட்டியல் காற்றில் படபடத்தது.

" ஆமாம்மா ....." என்றான் கண்கள் குளமாக.
பிறகு நான்கு மாதங்கள் கடந்த நிலையில், ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என பாராமல் நீதிமன்ற ஆணையை எந்த ஒரு மிரட்டலுக்கும் அஞ்சாமல் சிறப்பாக நிறைவேற்றியமைக்கு அவனுக்கும், துணைக் கண்காணிப்பாளர் டேனியல் மற்றும் மாவட்ட ஆட்சியர் அஹமத் ஆகியோருக்கு விருது வழங்கி கௌரவித்தார் பிரதமர்.

இம் மூவரைப் பற்றி சிறப்புக்கட்டுரைகள் பத்திரிகைகளில் வெளியாகி மக்கள் மனதைக் கவர்ந்தன.

ஏற்கனவே ஜானவி, சோம்நாத்தை தன் உடன் பிறந்தவர்களாக பாவித்து அவர்களுக்கான தேவையை பார்த்து பார்த்து பூர்த்தி செய்து வந்தவன் சுபாவின் மறைவுக்குப் பின்னர் அவர்களை மானசீகமாக தன் மழலைகளாகவே தத்தெடுத்துக் கொண்டான்.

அவர்களது படிப்பிற்கு தேவையான பணத்தோடு கை செலவிற்கு தேவையான பணத்தையும் வங்கிக்கணக்கில் தவறாமல் செலுத்துவது, ஒவ்வொரு விடுமுறைக்கும் தன் இல்லத்திற்கு அழைத்து வந்து அவர்களுடன்
கோவில், கடைத்தெரு, சுற்றுலா சென்று வருவது,
கிரிக்கெட் விளையாடுவது ,
என மன பூர்த்தியாக பொழுதைக் கழித்தான்.

அவன் அவர்களை நன்கு அறிவான், யாதோன்றையும் அவர்களாக கேட்டு பெறவே மாட்டார்கள் அவனாக செய்தால் தான் உண்டு. ஆதலால்
பணி நிமித்தம் காரணமாக நேரமில்லை என்றாலும் இரண்டு நாட்களுக்கு ஒருமுறையாவது தொடர்பு கொண்டு தேவையானதை கேட்டு தெரிந்து கொண்டு செய்து கொடுப்பான்.

படிப்பில் அவர்கள் வாங்கும் மதிப்பெண்கள், மற்றும் அந்த மாதச் செலவுகளைக் கூட உடனுக்குடன் அவனுக்கு அவர்களாகவே முன்வந்து தெரிவித்து விடுவார்கள். அந்த நேர்மையே அவர்களுக்கு பார்த்துப்பார்த்து மேலும் நல்லவைகள் அனைத்தையும் செய்ய அவனை தூண்டியது.

ஜானவியும் சோம்நாத்தும் 'ஜிஜாஜி' என்றே அழைத்தாலும், நட்பு வட்டம் மற்றும் வீட்டு ஊழியர்களிடம் அவர்களைப் பற்றி கூறும் பொழுது தன் 'மகன்' 'மகள்' என்றே உறவுமுறை பாராட்டுவான் அர்ஜுன்.

அவனைப் பற்றி தெரியாதவர்கள்
கிட்டத்தட்ட 30 வயதே நிரம்பிய ஆண்மகனுக்கு, எப்படி பதினெட்டு, பதினாறு வயதுள்ள மகள், மகன் இருக்க முடியும் ... என்ற எண்ணம் எழுந்து, அவர்களுக்கு இடையே ஆன உண்மையான உறவினை மற்றவர்களிடம்
கேட்டுத் தெரிந்து கொள்வதும் உண்டு.

ஜானவி கொஞ்சம் பேசுவாள், ஆனால் சோம்நாத் பார்ப்பதற்கும் பழகுவதற்கும் முழுக்க முழுக்க சுபாவே.

ஒரு வார்த்தை பேச வேண்டும் என்றால் பத்துமுறை யோசிப்பான் ... அதனால் தானோ என்னவோ சோம் நாத்தின் மீது ஒருபடி பாசம் அர்ஜுனுக்கு அதிகம்.

எப்பொழுதுமே அவன் இல்லத்தின் கூடத்தில் பிரதானமாக சுபத்ராவின் புகைப்படம் பெரிதாக மாட்டப்பட்டிருக்கும்.

ஜானவியும் அடிக்கடி நினைப்பதுண்டு. தன் தமக்கையின் மறைவுக்குப் பிறகு, ஏன் தனக்கென ஒரு வாழ்க்கையை அர்ஜுன் அமைத்துக் கொள்ளவில்லை என்று. ஆனால் அதனை நேரடியாகக் கேட்பதற்கு அவளுக்கு ஏகப்பட்ட தயக்கம்.
அவளைப் பொறுத்த மட்டில் பெண்ணாக பிறந்து வளர்ந்த இந்த பூமியில், காணக் கிடைக்காத ஒரு அரிய ஆண்மகன் ஒருவன் உண்டு என்றால் அது அர்ஜுன் தான்.

அவன் பார்வையில் , செய்கையில் என்றுமே சலனமோ, குழப்பமோ இருந்ததில்லை. எப்பொழுதுமே மற்றவர்கள் நெருங்க முடியாத நெருப்பாக இருந்தாலும்,
ஜானவி மற்றும் சோமநாத்திற்கு மட்டும் அவன் என்றுமே தாயுமானவன் தான். அவன் அவர்களிடம் நடந்து கொள்ளும் முறையே அவன் சுபாவின் மீது வைத்திருந்த காதலையும் பாசத்தையும் , அவர்களுக்கிடையேயான அன்னியோன்யத்தையும் தெளிவாக பறைசாற்ற, இவற்றையெல்லாம் உணர்ந்த ஜானவிக்கு
அற்புதமான கணவனைக் தன் அக்காளுக்கு கொடுத்த ஆண்டவன், அவளுக்கு
ஆயுளை மட்டும் கொடுக்காமல் விட்டு விட்டானே என்ற வருத்தம் வெகுவாகவே உண்டானது.

நாட்கள் செல்ல, அதற்கு மேல் அங்கு இருக்கப் விரும்பாமல் மும்பைக்கு மாற்றலாகி கொண்டான்.

சுபா இறந்து கிட்டத்தட்ட பத்து மாதங்கள் ஆன நிலையில், அவளை முதன் முதலாக சந்தித்த தினம் வர,
ஏனோ எழுந்ததிலிருந்து அவன் மனம் முழுவதும் ஒரு வித பாரம் ஆக்கிரமித்திருக்க, கடமைக்காக ஒரு கலந்தாய்விற்கு கலந்துகொள்ள சென்றவன் அன்றைய பணி முடித்து இரவு வீடு திரும்பும் போது

போன வருஷம் இந்த டைம்ல தான் உன்னை ட்ரெயின்ல சந்திச்சேன் சுபா..
மின்னல் மாதிரி வந்துட்டு போயிட்டியே டி ... என அவள் அருகில் இருப்பது போல் அவன் பேசியபடி காரை செலுத்திக் கொண்டிருக்கும் போது,
எதிரே வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து மோத வர, கண்ணிமைக்கும் நேரத்தில் அதை உணர்ந்து வண்டியை ஓடித்து திருப்பியவன், சாலையின் மருங்கிலிருந்த மரத்தின் மீது மோதி மயக்கமானான்.

அலுவலக வாகனம் மற்றும் காவல்துறை சீருடை இல்லாமல் அவனது சொந்த வாகனத்தில் பயணித்ததால், அவனது அடையாள அட்டையை பயன்படுத்தி அவனை அறிந்து கொண்டு மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கிருந்த மக்கள்.

ஒரு நாள் முழுவதும் தீவிர சிகிச்சையில் இருந்தவன், பிறகு தான் கண்விழித்தான் . கார் மரத்தின் மீது மோதியதால், வலப்பக்க நெற்றியில் பெருத்த காயம், வலது கை முட்டியில் பலத்த அடி .

நினைவு திரும்பியும் கை அசைப்பதற்கு இரண்டு நாட்கள் ஆகின. என்னதான் ஜானவியும் சோமநாத்தும் அனுதினம் அவனை தொடர்பு கொண்டாலும் அவர்களை உதவிக்கு அழைக்க அவன் விரும்பவில்லை.
ஆதலால் தன் நிலையை அவர்களிடம் கூறவில்லை.

கிட்டத்தட்ட பத்து நாட்கள் விடுப்பில் இருந்தான். அவனுக்கும் ஏதோ ஒரு வகையில் அந்த விடுப்பு பிடித்தே இருந்தது .

வலது நெற்றியில் பட்ட காயம் மட்டும் ஆறாமல், பெருத்த பிளாஸ்திரி போடப்பட்டிருக்க, முகமும் சற்று வீக்கத்துடனே காணப்பட, 10 நாட்கள் சவரம் செய்யாமல் முகத்தில் மண்டியிருந்த தாடி , தலை கொள்ளாத கேசம் அவனுக்கே அவனை அடையாளம் தெரியாமல் மேலும்
சோகத்துடன் காட்ட,

இடது கரத்தைப் பயன்படுத்தி சவரம் செய்யலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கும் போதே
கோகிலாவிடமிருந்து திடீரென்று அழைப்பு வர,

" அர்ஜுன்.... அக்னியோட ஹஸ்பண்ட் அஜய் ஹார்ட் அட்டாக்ல இறந்து போயிட்டாருப்பா ... அண்ணனுக்கு போன் பண்ணி சொன்னேம்பா... முதல்ல வரேன்னு சொன்னாரு ... மறுபடியும் போன் பண்ணி அண்ணிக்கு உடம்பு சரியில்லம்மா... இப்ப வர முடியலன்னு சொல்லிட்டாருப்பா... " என்றவரின் குரல் உடைய, கேட்ட செய்தி அவனை உறையச் செய்ய, அந்த அதிர்ச்சியிலிருந்து போராடி ஓரிரு நொடிக்கு பிறகு தன்னிலை உணர்ந்தவன், கண்ணிமைக்கும் நேரத்தில் தன் தாய் என்னும் பேயின் நாடகத்தை உணர்ந்து கொண்டு உடனே

" அத்தை, எங்க வரணும், நீங்க இப்ப எங்க இருக்கீங்க..." என அர்ஜுன் பட படக்க

" இங்க நாசிக்ல.... மாப்பிள்ளையோட
சுலபா வைன்யார்டு,(Sulabha vineyards)
இருக்கு ... அதுல அவரோட பண்ணை வீட்டுல தான் இருக்கோம்...." என்றவரின் குரல் ஓயாமல் குலுங்கிக் கொண்டிருக்க, அவரிடம் மேற்கொண்டு எதையும் கேட்க மாட்டாமல்

" இதோ வந்துடறேன் ...இன்னும் ஃபோர் ஹவர்ஸ்ல அங்க இருப்பேன் அத்தை ..." என்றவன் கூறியது போல் அடுத்த 4 மணி நேரத்தில் தன் டிரைவரின் உதவியோடு அங்கு சென்றான்.

அக்னியை அவன் கடைசியாக சந்தித்தது , கொடைக்கானலில் அவனது இல்லத்தில் அஜய்யை விரும்புவதாக அவள் கூறிய தினத்தன்றுதான்.

அதன் பிறகு அவளை சந்திக்கும் வாய்ப்பை அவன் ஏற்படுத்திக் கொள்ளவே இல்லை அவளது திருமணத்திற்கும் செல்லவில்லை.

இப்பொழுதுதான் அவளைச் சந்திக்கப் போகிறான். அதுவும் அவன் பார்க்க விரும்பாத , பார்க்கப் பிடிக்காத கோலத்தில்.

வெல்கம் டு சுலபா வைய்ன் யார்டு (Welcome to sulabha vineyard) என்ற பதாகை வரவேற்க,
கிட்டத்தட்ட 6,000 ஏக்கரில் அமைந்திருந்த அந்தத் திராட்சைத் தோட்டம்
அவ்வளவு நேர்த்தியாகவும் அழகாகவும் பராமரிக்கப்பட்டிருந்தது.

அந்த திராட்சைத் தோட்டத்தின் மத்தியில், அமைந்திருந்தது வைய்ன் தயாரிக்கும் தொழிற்சாலை . இந்தியாவில்
தூய திராட்சை ரசத்தால் வைன் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கெல்லாம் ஏற்றுமதி செய்யும் பெரிய வைன் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் இதுவும் ஒன்று.

அந்த தொழிற்சாலையில் இருந்து சற்று தள்ளி அமைந்திருந்தது தான், அஜய்யின் பண்ணை வீடு .

அதை பண்ணை வீடு என்று சொல்ல முடியாது, மினி பங்களா என்றுதான் சொல்ல வேண்டும். அவ்வளவு நேர்த்தியாக பளிங்குக் கல்லால் பார்த்துப் பார்த்து செதுக்கப்பட்டு,
பணத்தைக் கொட்டி வடிவமைக்கப்பட்டிருந்தது.

அர்ஜுனின் கார் பண்ணை வீட்டை நெருங்க நெருங்க, தொழிற்சாலை மற்றும் திராட்சைத் தோட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் கூட்டம் மற்றும் உறவினர்களின் கூட்டம் அலைமோத, காரை கார் பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு, அந்தக் கூட்டத்தை வேகமாக கடந்து, பண்ணை வீட்டின் வாயிலை அடையும் போது,
சோகமே உருவாய் கண்ணீர் விட்டபடி அமர்ந்திருந்த கோகிலா முதலில் கண்ணில் பட, அவரை நெருங்கியவனை அணைத்துக்கொண்டு வாய்விட்டு குமுறி அழ ஆரம்பித்தார் கோகிலா.

நடந்ததைக் கேட்டு அறிந்து கொண்டு அவருக்கு ஆறுதல் கூறித் தேற்றியவன்,
சற்று நகர்ந்து உள்ளே சென்று பார்க்க, அந்த பிரம்மாண்ட
கூடத்தின் நடுவில் அஜய்யின் சடலம் கிடத்தபட்டிருக்க, அருகில் வெண்ணிற சல்வாரில் தலைவிரி கோலமாய் இலக்கின்றி பார்த்த விழிகளோடு கவலை படர்ந்த முகமாய் தன் மாமியாரோடு அமர்ந்திருந்தாள் அக்னி.

சடலமாக இருந்த அஜய், ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்ந்திருப்பது போல் தோற்றமளிக்க,
அந்த நிலையில் அஜய் மற்றும் அக்னியை கண்டவனின் மனம் சுக்குநூறாய்
நொறுங்கி துடித்தது.

அக்னியின் பார்வை யாரிடமும் நிலைக்கவில்லை. அழுகை இல்லை, கலங்க வில்லை ஏதோ பிரம்மை பிடித்தவள் போல் , சுற்றுப்புறம் உணராமல் தன்னை மறந்து என்பதைவிட தன்னை தொலைத்து அமர்ந்திருந்தாள்.

அப்போது தான் கிட்டத்தட்ட பத்து மாதம் ஆன அவளது குழந்தை அஷ்வத், நடை பயில ஆரம்பித்திருந்தான்.

அங்கிருந்த சுவர், சோபா, நாற்காலிகள்
என ஒன்று மாற்றி ஒன்று பற்றியபடி
தளர் நடையிட்டு வந்த குழந்தை , கூடத்து தூணில் சாய்ந்தபடி வேறு எங்கோ வெறித்துக் கொண்டிருந்த அர்ஜுனின் கால்களைக் கட்டிக் கொள்ள, திடீரென்று கிடைத்த பஞ்சு போன்ற ஸ்பரிசத்தில் தன்னிலை உணர்ந்தவன், குழந்தையைக் கண்டதும் இடது கையைப் பயன்படுத்தி வாரி அணைத்து ஏந்திக் கொண்டான்.

அஷ்வத் அக்னியின் அணுவிலிருந்து அவதரித்தான் என்ற ஒரு காரணமே அவனை நேசிக்க அர்ஜுனுக்கு போதுமானதாக இருந்தாலும், சுபாவோடு அவன் குழந்தை மறைந்த தினத்தில் அஷ்வத் அவதரித்திருந்தது , தன் மகனே மீண்டும் பிறந்தது போல் கூடுதல் ஒட்டுதலை தந்திருந்தது .

கலவரம் நடந்த அன்று, சுபாவின் மறைவிற்கு பிறகு அர்ஜுன் மருத்துவமனையில் இருந்த போதுதான் கோகிலாவிடம் இருந்து அழைப்பு வந்தது அஷ்வத் பிறந்திருக்கிறான் என்ற செய்தியை தாங்கி.

செய்தி கேட்டவன் தன்னிலையை அவருக்குச் சொல்ல, துடித்துப்போனார் கோகிலா.

" இப்பதான் அக்னிக்கு குழந்தை பொறந்திருக்கு ... அவ பிசிகல் அண்ட் மெண்டல் ஹெல்த் ரொம்ப இம்பார்ட்டெண்ட் ... அதனால இப்போதைக்கு எதையும் அவ கிட்ட சொல்லாதீங்க... கொஞ்சநாள் போனதுக்கப்புறம் சொல்லுங்க ..." என்று கோகிலாவிடம் அர்ஜுன் கேட்டுக்கொள்ள, அதேபோல் அவரும் குழந்தை பிறந்து மூன்று மாதத்திற்கு பிறகு தான் அர்ஜுன் வாழ்வில் நிகழ்ந்த சோகத்தை அக்னியிடம் கூற, கேட்டுத் துடித்தவள் கதறி அழுதாள்.

அர்ஜுனை ஒன்றுக்கு 3 முறை தொடர்பு கொண்டு கண்ணீர் சிந்தி கரைந்தாள்.

" ஐ அம் சாரி அர்ஜுன் ... நீங்க ஏதோ ட்ரெய்னிங் போய் இருக்கிறதால தான் என் குழந்தையோட நேமிங் செரிமணிக்கு(naming ceremony) வரலைன்னு அம்மா சொன்னாங்க ... நானும் அதை நம்பினதால உங்களை கான்டக்ட் பண்ணல ... இப்பதான் அம்மா எல்லாத்தையும் சொன்னாங்க ...
எவ்ளோ ஆசை ஆசையா லவ் பண்ணி சுபத்ராவை கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க... இப்படி ஆகும்னு கொஞ்சம் கூட எதிர் பார்க்கல ... " என்று வெடித்து அழுபவளை
தேற்றுவதற்குள் அவனுக்கு போதும் போதும் என்றாகி போனது.

அப்போது குழந்தையின் பெயரை மட்டும்
அறிந்திருந்தவன் இப்போதுதான் அவனை அணைத்துக் கொண்டு உள்ளான்.

அஜய்க்கு கூடப்பிறந்தவர்கள் யாரும் இல்லை என அவன் அறிவான்.
தந்தை சிறு வயதில் இறந்ததால்,
தாய் சுலபாவின் அன்பும் அரவணைப்பிலும் வளர்ந்தவன் என்பதையும் கேள்விப்பட்டு உள்ளான்.

அஜய்யின் தாய் சுலபா, இயல்பிலேயே கம்பீரமானவர் என்றாலும் அவரும் உடைந்து தான் போயிருந்தார்.

அப்போது தான் ஒன்றை கவனித்தான்.
அங்கு ஒல்லியான தேகம், நல்ல உயரம் கொண்ட ஒரு இளைஞன், யாருடைய முகமும் பாராமல் பரபரப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்தான். அவ்வப்போது சுலபா மற்றும்
கோகிலாவிடம் ஆலோசனை கேட்பது, அங்கு வந்திருந்த உயர் அதிகாரிகள் மற்றும் உயர் அந்தஸ்தில் உள்ளவர்களுக்கு
தேவையான ஏற்பாடுகளை செய்வது,
அஜய்யின் மேல் போடப்பட்ட மாலைகளை அகற்றுவது, புதிதாய் வருபவர்களிடம் இருந்து மாலைகளைப் பெற்று சவத்தின் மீது சாற்றுவது என்பன போன்ற அனைத்து பணியிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு பம்பரமாக சுழன்று கொண்டிருந்தான்.

கோகிலாவிடம் அவனைப் பற்றி விசாரிக்கும் போதுதான்,

அவன் அஜய்யின் சித்தப்பா மகன் ,
தாய் தந்தையை இழந்தவன், அஜய்யின் தாய் அரவணைப்பில் அவர்கள் இல்லத்திலேயே வளர்ந்தவன் என்ற தகவல்
அர்ஜுனுக்கு கிட்டியது.

அங்கு வந்திருந்த பெரும்பாலான காவல்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியரை அர்ஜுன் நன்கு அறிவான்.
அவர்களுடன் அவன் சில வார்த்தைகள் பேச , அவர்களும் பதிலுக்கு அஜய்யை பற்றி பேசியதோடு , அர்ஜுனுக்கு நடந்த விபத்தைப் பற்றியும் விசாரிக்க, அதற்கு பதிலளித்தவனுக்கு அப்போதுதான் அஜய்யின் இறப்பைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உதிக்க,
அஜய் இறந்துவிட்டதாக உறுதி செய்த அதே ஊரில் வசிக்கும் அவன் குடும்ப மருத்துவரை அணுகினான்.

" நான் தான் அஜய்யோட டெத்தை கன்ஃபார்ம் பண்ணேன். மார்னிங்ல சிவியர் அட்டாக் வந்திருக்கு அதனால தூக்கத்துலயே உயிர் பிரிஞ்சிடுச்சு... "
என்ற மருத்துவரிடம் மேலும் கேட்க எதுவும் இல்லாமல் போக, நன்றி தெரிவித்து விட்டு அஜய்யின் பண்ணை வீட்டிற்கு கனத்த மனதுடன் வந்து சேர்ந்தான் அர்ஜுன்.

அஜய் ஆற்றிய சிறந்த பணிக்காக மத்திய அரசோடு மாநில அரசும் இணைந்து காவல்துறை மரியாதை செலுத்த முடிவெடுத்திருந்தனர்.

வீட்டில் செய்ய வேண்டிய சடங்குகள் செய்து முடித்ததும், மின் மயானத்திற்கு அஜய்யின் உடல் கொண்டு செல்லப்பட , பிரம்மை பிடித்தது போல் இருந்த அக்னியை சுலபா மற்றும் கோகிலா கரம் பற்றி அழைத்து செல்ல,
அஷ்வத்தை தன்னுடனேயே அணைத்தபடி உடன் சென்றான் அர்ஜுன்.

மயானத்தில் செய்ய வேண்டிய சடங்குகள் முடிந்ததும், அரசு சார்பாக காவல்துறை உயர் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் என அனைவரும் மலர்வளையம் வைத்து காவல்துறை மரியாதை செலுத்தப்பட்டது.

உதவி ஆணையர் தலைமையில் இன்ஸ்பெக்டர், ஒரு தலைமை காவலர், 3 பிகிலர், ஐந்து பேராக இரண்டு வரிசையில் காவல்துறையினர் நின்று துப்பாக்கிகளை தரையில் தாழ்த்தி கார்டு ஆஃப் ஹானர் ( தலைகுனிந்து அஞ்சலி) செலுத்தினர்.

பின்னர் இன்ஸ்பெக்டர் ஆணைக்கிணங்க காவலர்கள் தங்கள் இடுப்பிலிருந்த குண்டுகளை துப்பாக்கியில் செலுத்தி வானை நோக்கி மூன்று முறை என 30 குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தினர்.

அதன் பிறகு பிகிலர்கள் இசையுடன் காவல்துறையினர் சல்யூட் அடித்து மரியாதை செய்ததோடு இரண்டு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

காவல்துறையினர் அகன்றதும், மீதமுள்ள சடங்குகளை அஷ்வத்தின் கரம் பற்றி அர்ஜுன் செய்து முடிக்க,
அஜய்யின் உடல் தகனத்திற்கு எடுத்துச் செல்லும் போது , இலக்கில்லா வெறித்துக் கொண்டிருந்த அக்னியின் பார்வையில் மின்னலென அதிர்ச்சித் தோன்ற, அஜய்யின் முகத்தை கடைசியாக வருடியபடி வழியனுப்ப எழுந்து நின்றவள் அப்படியே மயங்கி சரிய, கோகிலாவும் சுலபாவும் அவளைத் தாங்கிப் பிடித்தனர்.

மின் தகன மேடையில் கிடத்தப்பட்டிருந்த அஜய்யின் பாதத்தை தொட்டு குழந்தை அஷ்வத்தின் கண்ணில் ஒற்றி எடுத்த அர்ஜுன் துக்கம் தொண்டை அடைக்க
கடைசி முறையாய் அஜய் முகம் பார்க்க, பிறகு
நெருப்பு கோளத்திற்குள் சடலம் தள்ளி தகனம் செய்யப்பட்டது.

ரோஜாப்பு குவியலாய் இருந்த அஷ்வத்,
அவன் கோவை இதழ்களில் உமிழ் நீர் வழிய, கட்டை விரலை குதப்பிக்கொண்டு, 'மம்மா', 'ப்பா' என்று ஏதேதோ சொல்லிபடி, அர்ஜுனின் முகம் பார்த்து சிரிக்க, குழந்தை என்பதால் அதுக்கு இழந்த இழப்பு தெரியாமல், நடப்பது புரியாமல் அனைத்தும் புதுமையும் விளையாட்டுமாய் தெரிய,
' பப்பா பப்பா' என்றே அஜய்யின் உடல் எரியூட்டப்பட்ட அந்த மின் மயானத்தை காட்டி
சொல்லிய குழந்தையை பார்த்து மனம் குமுறி கண்கலங்கி தன்னோடு இறுக்கி அணைத்துக் கொண்டான்.

எப்பொழுதுமே அக்னி நன்றாக இருக்க வேண்டும் என்ற பிரார்த்தனை அவனுக்கு உண்டு. அதுவும் அவன் சுபா இறந்ததிலிருந்து, அமைதியாக சென்று கொண்டிருந்த அக்னியின் வாழ்வுதான் அவனுக்கு இருந்த ஒரே ஆறுதல். இப்போது அதிலும் மண் விழுந்து விட்டதை எண்ணி மனம் துடித்து போனான்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அக்னி , இரண்டு நாட்கள் தொடர்ந்து கோமா நிலையில் இருக்க, பெரும்பாலும் அஷ்வத்தை அரவணைத்து பார்த்துக்கொண்டது
அர்ஜுன் தான்.

அக்னிக்கு சிகிச்சையளித்த மருத்துவர்,

"பொதுவா லவ்வர்ஸ் ஒருத்தரை ஒருத்தர் பார்த்து சொல்லுவாங்க....
என்னை மறந்தாலும் உன்னை மறக்க மாட்டேன்னு....
இப்ப அதுதான் அக்னியோட நிலைமை...

அக்னி, அவங்களை மொத்தமா மறந்துட்டாங்க ...இப்ப வெறும் அஜய்யோட நினைவுகள் மட்டும்தான்
அவங்க மனசுல இருக்கு ... பட் ட்ரீட்மெண்ட்க்கு நல்லா ரெஸ்பாண்ட் பண்றாங்க ...
நாளைக்கு கண் முழிச்சிடுவாங்கன்னு நம்பறோம்.... அவங்க கணவரோட திடீர் மரணத்தை அவங்க மனசு ஏத்துக்க முடியாம தவிக்குது .... அதான் அது ஸ்தம்பிச்சு போய் இருக்கு... இதே நிலைமை நீடிச்சுதுன்னா அவங்களை காப்பாத்துறது ரொம்ப கஷ்டம் ... முதல்ல அவங்க உடைஞ்சு அழனும்... அதுதான் இப்ப இருக்கிற பிரச்சினைக்கு ஒரே தீர்வு ..." என அர்ஜுன் , கோகிலா, சுலபா ஆகியோரை பொதுவாகப் பார்த்து அறிவுரை கூறி சென்றார் .

அஜய் அக்னியோடு பேசி சிரித்த காணொளிகள் ஏதாவது இருக்கிறதா என அவள் கைபேசியில் அர்ஜுன் தேடிப்பார்க்க,

அதில் அஜய் டிஐஜியாக பதவியேற்ற பின்பு நடந்த ஒரு நண்பர்கள் கூட்டத்தில் பேசும் காணொளி ஒன்று கிடைத்தது.

" இங்க எல்லாரும் சொன்னாங்க... என்னை சூப்பர் ஸ்ட்ராங் டெரர், எதிரிகளுக்கு சிம்ம சொப்பனம், அயன் மேன் ...அப்படி இப்படின்னு ... ஆனா
இரும்பு உருகுற இடம் நெருப்புதான்...
ஐ மீன் இந்த அயன் மேன் உருக்கிற இடம் என் அக்னி தான் ...

மை வைஃப் மிஸஸ் அக்னி அதுல்கர் ..." என்று அருகில் நின்றிருந்த
அக்னியின் கரம் பற்றி இழுத்து அவள் கழுத்தின் மீது கை போட்டு தன்னோடு அணைத்து நிறுத்திய அஜய்,

" என் அம்மாவுக்கு சமமா ஒரு பொண்ணை நான் நேசிக்கிறேன்னா அது என் மனைவிதான்... ஹி இஸ் எ ஒன்டர்புல் ஹியூமன் பீயிங்... வெரி லவ்வபுல் பேர்சன் அண்ட் ஸ்ட்ராங்க் வுமன்... எங்க கல்யாணத்துக்கு முன்னாடி என்னை சுத்தி சுத்தி வந்தவங்க, எங்க கல்யாணத்துக்கு அப்புறம் என்னை அவங்க பின்னாடி சுத்தி வர வச்சுட்டாங்க... என் ஜர்னில எவ்ளோ பேரே மீட் பண்ணி இருக்கேன்... பட் நன் ஆஃப் தெம் ஏபுல் டு ஸ்டீல் மை ஹார்ட் .... ஒன்லி மை ஏஞ்சல் கேன் டு தட் ..." என்று பலர் முன்னிலையில் அக்னியின் நெற்றியோடு தன் நெற்றியை முட்டி அஜய் உற்சாகத்தோடு கூற, பலத்த கரவொலி சத்தம் எழுந்து எதிரொலித்தது.

மற்றொரு காணொளியில் , ஒரு திருமணத்தில் 'சங்கீத்' விழாவின் போது பெரும்பாலான தம்பதிகள் இணைந்து ஆடும் 'டூயட்' நடனத்தில்
ஊதா நிற காக்ரா சோளியில் அக்னியும் அதற்குப் பொருத்தமாக அதே மெல்லிய நிற பிளேசரில் அஜய்யும் தம்பதியருக்கான நடனத்தை இசைக்குப் பொருத்தமாக அற்புதமான
அபிநயத்துடன் வழங்கியதோடு பல இடங்களில் குழந்தை அஷ்வத்தை கையில் ஏந்திக்கொண்டு
தன் மனையாளோடு ஆரவாரமாக
குதூகலித்திருந்தான் அஜய்.

மற்றொரு காணொளியில் ஒரு காலா பார்ட்டியில் (Gala party) துப்பாக்கி சுடும் போட்டியில், சுழன்று கொண்டே இருக்கும் இலக்குப் பலகையின் மையப்புள்ளியை குறிப்பார்த்து பிரவுனிங் ஹை பவர் 9 எம்.எம் கேலிபர் கன்னை( Browning Hi power 9mm caliber gun) அனாயாசமாக பயன்படுத்தி சரியாக தொடர்ந்து 3 முறை இலக்கை நோக்கி சுட்டவளை ஆர்ப்பரித்தபடி தன் கரங்களில் ஏந்திக்கொண்டு விழாவில் கலந்து கொண்ட பலரது முன்னிலையில்

" யாஹு ... மேரா பில்லு...." என அக்னியை அவன் உரக்க கொஞ்சி மகிழ்ந்த தருணங்கள் காணொளி ஆக்கப்பட்டிருக்க, அதை எல்லாம் அவள் காதருகே பலமுறை ஓடவிட்டான்.

பெரும்பாலான காணொளிகள் கிட்டத்தட்ட 10 நாட்களுக்கு முன்பு எடுக்கப்பட்டவையாகவே இருந்தன.
அனைத்து காணொளியிலும், அஜய்யை உற்று நோக்கியவனால் அவன் இப்பூவுலகில் தற்போது இல்லை என்ற உண்மையை ஏற்றுக்கொள்ள முடியாமல் துடித்துப் போனான்.

அவனது முயற்சியின் பலனாக, மறுநாள் அந்தி சாயும் வேளையில் அக்னி மிகவும் கடினப்பட்டு மெதுவாக விழி மலர்த்தி பார்க்க , அப்பொழுதும் அந்த காணொளி ஓடிக்கொண்டே இருக்க,
முதன் முறையாக அவள் கண்களிலிருந்து கண்ணீர் பொங்க ஆரம்பித்தது.

இழப்பின் வலியை அறிந்தவன் அல்லவா, அவளை உற்று நோக்கியவனின் கண்களிலும் கண்ணீர் பெருகியது .

மெதுவாக, " அர்ஜுன் " என்றவளின் முகத்தில் ,

என் நிலைமை இப்படி ஆயிபோச்சு பார்த்தியா .... என்ற செய்தி தாங்கியிருக்க, அதைப் பார்த்ததும்
அவனும் உடன் உடைந்து கண் கலங்கினான்.

அப்பொழுது ஆரம்பித்த அவளது கண்ணீர், இரண்டு நாட்கள் ஆகியும் தொடர்ந்தது.

மருத்துவரின் அறிவுரையால்
அர்ஜுன் உட்பட யாரும் அவளை சமாதானப்படுத்த விழையவில்லை.

விபத்து காரணமாக அர்ஜுன் விடுப்பெடுத்து கிட்டத்தட்ட ஒரு மாதமான நிலையில், பணியில் சேர வேண்டிய நிலைமை ஏற்பட,
மும்பைக்கு கிளம்ப எத்தனித்தவனை
சுலபாவும் , கோகிலாவும் இன்னும் சற்று நாள் உடன் இருக்கும் படி அறிவுறுத்த,

ஏற்கனவே சுபாவின் பிரிவில் தத்தளித்துக் கொண்டிருந்தவனுக்கு அக்னியின் நிலைமை அதிக ஆதங்கத்தை தர, ஓரளவு அவள் தன்னை உணர்ந்து விட்டாள் என்பதை அறிந்தவன், அவள் மனக் காயம் ஆறும் வரை தள்ளி நிற்க எண்ணி மும்பை நோக்கி பயணமானான்
அதுதான் அவன் செய்த மிகப்பெரிய பிழை என்று எதிர்காலத்தில் வருந்தப் போவது தெரியாமல்.

அக்னி, அஷ்வத் இருவரையும் தன்னுடனேயே அழைத்துச் சென்று விடலாமா என்ற எண்ணம் ஒரே ஒருமுறை அவன் மனதில் துளிர்த்தது உண்மைதான்.

ஆனால் எந்த உரிமையும் இல்லாமல், கணவனை இழந்த பெண்ணை உறவுமுறையை மட்டும் காரணம் காட்டி உடன் அழைத்துச் செல்வது சரி வராது. இந்த சூழ்நிலையில் அவளைப் பேணிக்காக்க அவள் தாயும் மாமியாரும் இருக்கிறார்கள்... அதோடு இந்நிலையில் அவளும் தன்னுடன் வர சம்மதிக்கவும் மாட்டாள்... என்பதை எல்லாம் கருத்தில் கொண்டு அந்த எண்ணத்திற்கு அதோடு முற்றுப்புள்ளி வைத்தான்.

அஜய் இறந்த பின் தன் தாயோடு டெல்லிக்கு திரும்பியவள், வேறு ஒரு புது வீட்டிற்கு குடிபெயர்ந்து அங்கிருந்து தன் பணிக்கு சென்று வந்தாள் .

அஜய்யின் மறைவிற்குப் பிறகு அர்ஜுனால்
அக்னியோடு இயல்பாக பேச முடியவில்லை. அவளும் முன்பு போல் அவனை தொடர்பு கொள்ள முயலவில்லை.

எப்பொழுதாவது கோகிலா அர்ஜுனை தொடர்பு கொண்டு பேசுவார் அவ்வளவுதான். மற்றபடி அஜய்யின் இறப்போடே அக்னியின் பேச்சும் முடங்கிப் போனது. தனக்கென்று வேலி அமைத்துக் கொண்டு தன்னை மிகவும் கடினம் ஆக்கிக் கொண்டாள். கோகிலா உட்பட யாராலும் அவளை நெருங்க முடியவில்லை. பெயருக்கு ஏற்றார் போல் உட்புறமும் வெளிப்புறமும் எப்பொழுதும் கொழுந்து விட்டே எரிந்து கொண்டிருந்தாள்.

இப்படியே ஒரு வருடம் கடந்த நிலையில் ரகு அர்ஜுனை தொடர்பு கொண்டு,
அக்னியை மறுமணம் செய்துகொள்ள கேட்க,

" வேணாம்பா.... முழுசா மூணு மாசம் கூட நான் சுபாவோட வாழல... என்னால அவளையே இன்னும் மறக்க முடியல ...
மூணு வருஷம் ஆசையாசையா அஜய்யை லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டா அக்னி .... அவளால
அவ்ளோ சீக்கிரம் அவனை மறக்க முடியாது ....
இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் ப்பா ... இப்ப அத்தை கிட்ட கூட இந்த விஷயத்தை பத்தி பேசாதீங்க .. அப்புறம் பாத்துக்கலாம்...." என்று அதற்கும் முற்றுப்புள்ளி வைத்தான்.

அதன் பின் காலம் யாருக்காகவும் காத்திராமல் சுழல, மும்பையிலிருந்து பணி மாற்றலாகி லக்னோவில் இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்தவன் மீண்டும் மும்பைக்கு மாற்றலாகி வர,
கோகிலாவின் எதிர்பாராத மரணமும் நிகழ, அதன் பின் அவன் வாழ்வில் மட்டுமல்ல அக்னியின் வாழ்வில் இருந்த சூனியத்தை அகற்ற
அக்னியை மணந்துக்கொண்டான் அர்ஜுன்.

நடந்து முடிந்த அனைத்தையும் மற்றொரு முறை மனக்கண்ணில் ஓட்டிப் பார்த்தவனின் விழிகளில் கண்ணீர் குளம் கட்ட

அவன் கையில் இருந்த சுபாவின் புகைப்படத்தை பார்த்து,

" நான் உன்னை கல்யாணம் பண்ணலைன்னா நீ இந்நேரம் உயிரோடு இருந்திருப்ப சுபா....
இந்த குற்ற உணர்வு எனக்கு எப்பவும் உண்டு ....

நான் உன் நினைப்பிலிருந்து , கொஞ்சம் கொஞ்சமா மருந்து மாத்திரைகள் உதவியோட வெளிய வந்து வாழ பழகிக்கிட்டேன் .... ஆனா அக்னியால அஜய்யோட நினைவிலிருந்து வெளியவே வர முடியல... காலம் எல்லாத்தையும் மாத்தும்னு நம்பறேன்....

ஆனா ஒன்னு , நீ ஆசைப்பட்டத நடத்தி வச்சிட்ட சுபா ... " என்றான் கண்ணீர் வழிய கமரிய குரலில்.



தகிப்பாள்
 
அத்தியாயம் 27


விஷ்ணு ரங்கநாதனிடம் பேசிவிட்டு வந்த மறுநாள் சுமித்ரா மிகுந்த மகிழ்ச்சியோடு வேதாவை தொடர்பு கொண்டு ,


" ரொம்ப சந்தோஷமா இருக்கு வேதா... விஷ்ணு எங்காத்துக்கு வந்து போட்ட போடுல என் ஆத்துகாரர்
ஆடிப்போயிட்டேர்னு நினைக்கிறேன்...
ஸ்ரீயை விஷ்ணுவுக்கே கல்யாணம் பண்ணி கொடுக்கலாம்னு நேத்து ராத்திரி தான் சொன்னேர்... என்னால என் காதயே நம்ப முடியல ... ரெண்டு மூணு தடவ அவரிண்ட திருப்பித் திருப்பி கேட்டு திட்டு கூட வாங்கிண்டேன்னா பாத்துக்கோ ..."


" ரொம்ப சந்தோஷம் மன்னி.... நானே இதைப் பத்தி எப்படி பேசுறதுன்னு யோசிச்சிண்டு இருந்தேன்.... ஒரு வழியா எல்லாம் நல்லபடியா நடக்க போற்து...."


" ஸ்ரீயோட அப்பா
உங்க ஆத்துக்காரிண்ட இந்த கல்யாணத்தை பத்தி பேசலாம்னு இருக்கேர்.... முறைப்படி உங்களை ஆத்துக்கு கூப்பிடனுமோல்யோ..." என்றவரின் பேச்சில் அப்படி ஒரு பூரிப்பு.


பிறகு ஒரிரு நிமிடம் தொடர்ந்த பேச்சு, ஒரு சமயத்தில் முடிவுக்கு வர,
தொலைபேசி அழைப்பை துண்டித்து விட்டு, விவரத்தை வேதா வெங்கடேஷிடம் பகிர, கேட்டு மனம் மகிழ்ந்தவர்,


" இதெல்லாம் என்ன ஃபார்மாலிட்டீஸ் ...
என்கிட்ட ரங்கநாதன் இதைப்பத்தி பேசணும்னு அவசியமேயில்லம்மா.... இப்பதான் உன் கிட்ட உங்க அண்ணி சம்மதம் சொல்லிட்டாங்கயில்ல அப்புறம் என்ன... ஏற்கனவே நிச்சயதார்த்தம் முடிஞ்சு போச்சு... இனிமே கல்யாணம் தானே ..."


" செத்த பேசாம இருக்கேளா.... நம்ம கல்யாணத்தப்ப ரங்கு உங்களுக்கு மரியாதையே கொடுக்கல ... அட்லீஸ்ட் அவன் பொண்ணு கல்யாணத்துலயாவது அவன் மரியாதை கொடுத்தே ஆகணும் ..." என்ற வேதாவின் தீவிரத்தைப் பார்த்து


" ஏம்மா, மரியாதைங்கிறது உறவு முறையைப் பார்த்தோ, பதவியை பார்த்தோ, பணத்தை பார்த்தோ வரக்கூடாது... அது ஒருத்தரோட குணம் திறமை, உழைப்பை பார்த்து வரணும் ...
ரங்கநாதன் எனக்கு மரியாதை கொடுத்தாலும் கொடுக்கலன்னாலும் எனக்கு ஒன்னும் குறைஞ்சிட போறதில்ல... என்னோட மரியாதை எனக்கு தெரியும் .... அதுமட்டுமல்ல விஷ்ணுவும் ஸ்ரீயை லவ் பன்றான் அதை நல்லா புரிஞ்சிக்கோ... இந்த மாமியார் கெத்து, சம்பந்தி கெத்து, நாத்தனார் கெத்தெல்லாம் காட்டாத சரியா ...." என்று குலுங்கி சிரித்தவரின் உயரத்திற்கு எம்பி அவர் காதை பிடித்து திருகினார் வேதா.


மறுநாள் ஸ்ரீ விஷ்ணுவை தொடர்புகொண்டு, ஒரு பூங்காவின் பெயரைச்சொல்லி அங்கு வரச்சொல்ல,
காதலியை சந்திக்கும் ஆர்வத்தில் வேகவேகமாக வேலையை முடித்துவிட்டு பஞ்சாய் பறந்து வந்தான் விஷ்ணு.


வந்தவன் எதுவும் பேசாமல் அவள் முகத்தையே ஆழ்ந்து நோக்க,


" அன்னைக்கு நான் குளிச்சுட்டு டவளோட வரும் போது நீங்க என்னை கட்டிண்டதால நேக்கு வெக்கம் வந்துடுத்து ... அதனால தான் கோவப்பட்டேன்... உங்களுக்கு வெக்கம் வரலையா ..." என்றபடி அவன் முகத்தையே ஆராய்ச்சி பார்வை பார்த்தவளை பார்த்து குலுங்கி சிரித்தவன்


" ஏய் லூசு ... எனக்கு எதுக்குடி வெக்கம் வரணும் ...இன் ஃபேக்ட் அந்த டவல் கூட இல்லாம சின்ன வயசுல உன்னை பார்த்திருக்கிறேன் தெரியுமா ...ஐ வாஸ் சோ ஹேப்பி ஆன் தட் டே யூ நோ ..." என்றவன் அவளது மூக்கை பற்றி இட வலமாக ஆட்ட,


" அப்ப ஏன் லாஸ்ட் டைம் மீட் பண்ணு போது ரொம்ப கோவப்பட்டேள்..." என்றபடி அவனை உரசிக்கொண்டு நெருங்கி அமர்ந்தவளிடம்


" தள்ளி உட்காரு டி... எதுக்கு இப்படி உரசற...."


" ஓ.... அப்போ அதுக்கு கோவம் இல்லன்னா அதுக்கு முன்னாடி நீங்க முத்து குடுக்கும் போது அச்சி பண்ணினேனே... அதனாலதான கோவம்.... யோசிச்சுப் பார்த்தேன் நேக்கும் ரொம்ப வருத்தமாயிடுத்து..."


" ஏன் ஒரே அடியோட நிறுத்தினதால வருந்தபடறியா...."


" இல்ல்ல்ல்லப்பா ....நான் வேணா இப்ப முத்து குடுக்கட்டுமா...."


" அதெல்லாம் ஒன்னும் வேணாம் டி ..."


" ம்ச்....நீங்க கோவத்துல இருக்கீங்கோ... அதான் இப்படி பேசுறீங்கோ... " என்றவள் திடீர் யோசனையாய்,


" விஷூ, உங்களுக்காக நான் ஒன்னு கொண்டு வந்திருக்கேன்..."


" எது, கடலமிட்டாயா...."


" எப்படி கண்டுபிடிச்சீங்கோ...." என்றாள் கண்களை விரித்து .


" ஆ... இதை கண்டுபிடிக்க நாசா விஞ்ஞானியாவா இருக்கணும்...
இத விட்டா உனக்கு வேற என்ன தெரியும் ..."


" இது கடல மிட்டாய் தான் ... ஆனா டிரை ப்ரூட்ஸ் எல்லாம் போட்டு குக்கரி கிளாஸ்ல புதுசா சொல்லிக் கொடுத்ததை பண்ணியிருக்கேன் ..." என்றவள் டப்பாவை திறந்து எடுக்க,


" இது என்ன டி ஜியோமெட்ரிக் பாக்ஸ் மாதிரி இருக்கு ..."


" மெஷர்மென்ட் பாக்ஸ் ...."


" சுத்தம் ... எப்ப பார்த்தாலும் அரைச்சுகிட்டே இருப்பியா ...." என்றவன் அதிலிருந்ததை தானாக எடுத்து வாயில் போட்டுக் கொண்டான்.
சுவை அருமையாக இருக்க,


" ம்ம்... நல்லா தான் பண்ணியிருக்க..." அந்தப் பாராட்டில் சிலிர்த்தவளாய்,


" விஷூ, இன்னும் ஒன்னு கொண்டு வந்திருக்கேன்.." என்றாள் கண்களில் ஆர்வத்தோடு.


" என்ன கமர்கட்டா... ஏண்டி உனக்கு என்னை பார்த்தா என்ன மாதிரி தெரியுது... ஆபீஸ்ல அதிரிபுதிரியா வேலை செஞ்சுகிட்டிருந்தவனை கூப்ட்டு கடல மிட்டாய், கமரகட்டுன்னு கொடுத்துக்கிட்டு இருக்க..."


" நீங்க எப்பவுமே இப்படித்தான் தப்பு தப்பா புரிஞ்சிகிறீங்கோ..."


" ஏன் கமரகட்டு இல்லையா, காஜு கத்லியா...."


" ஐயோ விஷூ, நான் எடுத்துட்டு வந்திருக்கிற விஷயமே வேற..." என்றவள் குழல் போன்ற நீண்ட டப்பாவில் சுற்றி வைக்கப்பட்டிருந்த வரைபடத்தை திறந்து காட்ட, அதிலிருந்த ஓவியத்தைக் கண்டு முதலில் அசந்து போனவன், பிறகு நிலைமையை உணர்ந்து சுதாரிக்க எண்ணும் போது அவன் தொண்டை கனத்தது.


அச்சு அசலாக விஷ்ணுவையே குழந்தை கிருஷ்ணனாக வரைந்திருந்தாள்.


" எப்படி .... அடுத்த வருஷம் இவன் நம்ம கூட இருப்பான் ... " என்று ஆவலாய் கூறியவளிடம்


"ஏன் கல்யாணம் ஆன உடனே குழந்தை பெத்துகிட்டே ஆகணுமா என்ன... கொஞ்ச நாள் ஜாலியா இருப்போமே மா ..." என்றான் கமரிய குரலில்.


" குழந்தைங்கிறது அழகான விஷயம் விஷூ.... அது நமக்கே நமக்கானது ...விளையாடும், சிரிக்கும், பேசும் , அழும் எப்போதும் நம்மளோடவே இருக்கும் ... ஒரு குழந்தை பிறக்கும் போது ஒரு தாயும் பிறக்கிறான்னு படிச்சிருக்கேன்...
ஒரு பெண்ணோட வாழ்க்கை முழுமை ஆகிறதே அவ அம்மா ஆகும் போது தான் .." என்று ஸ்ரீ லயித்து கூற, ஏனோ அதை கேட்க முடியாமல் துடித்து போனவன்,


உன்னை குழந்தைலயும் சேர்க்க முடியல.... குமரியாவும் பாக்க முடியல இரண்டாங்கட்டானா இருக்கியே ... எப்படிப் புரிய வைக்க போறேனோ.... என்று நினைத்தவன்,


" இங்க பார் ஸ்ரீ, தாய்மைங்கிறது பெண்களுக்கான உணர்வு மட்டும் கிடையாது... அது பொதுவானது ஆண்களுக்கும் பொருந்தும் ... என்ன ஒண்ணு, கடவுள் குழந்தையை சுமக்கிற தகுதி உங்களுக்கு மட்டும் கொடுத்திருக்கிறார் அவ்ளோ தான்..." என்றவனிடம்


" அப்போ நாம எப்ப குழந்தை பெத்துகற்து..."


" இப்பதான் உனக்கு 21 வயசு ஆகுது, 25 வயசுல பெத்துக்கலாம் ...சரியா..."


" அப்ப நான் ஒன்னு சொல்லட்டுமா ...
நாம என்னோட 25 வயசுல கல்யாணம் பண்ணிக்கலாமா..."


" மட்டி மட்டி ... உளராத முட்டாள் மாதிரி..." என்று முதலில் கோபத்தில் அரற்றியவன், அவள் முகம் ரத்த நிறத்தில் துக்கத்தால் சிவப்பதை கண்டு,


" ஏய் ... சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னேன் டி... ஒரு வருஷம் கழிச்சு உன்னை மாதிரியே சொட்ட மூக்கா
ஒரு பெண் பாப்பாவ பெத்துக்கலாம் சரியா..." என்றவனை கலங்கிய விழிகளோடு


" ம்ஹூம்... உங்களை மாதிரியே ஷார்ப் நோஸ், பிக் ஐஸ்ல ஒரு ஆண் பாப்பாவை பெத்துக்கணும்..." என்றவளை ஆசையோடு பார்த்தவனிடம்
அவள் ஏதோ பேச எத்தனிக்க, உடனே பேச்சை திசை மாற்ற எண்ணி,


"ஏய் ஸ்ரீ... எப்படி இவ்ளோ அழகாக என்னையே வரைஞ்சு இருக்க ... நாம ரெண்டு பேரும் ஒரு செல்ஃபி கூட எடுத்துக்கலையே டி... "


" ம்ம்ம், உங்க முகம் எப்பவுமே என் மனசுல இருக்கும்... உங்க கண்ணை போலீஸ் ஸ்டேஷன்ல பார்த்தேன் இல்ல... அதை வச்சு தான் இப்படி வரைஞ்சேன்... என்னால ஒருத்தரோட கண்ணை மட்டும் வச்சு அவாளோட முழு முகத்தையும் பக்காவா வரைய முடியும்..."


" வாவ்... சூப்பர்ப்..." என்றவன் அவள் மனதை குளிர்விப்பதற்காக
திருமணப் பேச்சை எடுத்தான்.


"ஸ்ரீ....நம்ம கல்யாணத்துக்கு 2 போட்டோகிராஃபர புக் பண்ணலாம்னு இருக்கேன் ..."


" ஏன் ..."


"எப்படியும் நீ ஒரு போட்டோ பிரேம்குள்ள ஃபிட்டாக மாட்ட..
அதனால தான் 2 போட்டோகிராஃபர தனித்தனியா நம்ப ரெண்டு பேரையும் போட்டோ எடுக்க வச்சு அப்புறம் நம்ப ரெண்டு பேரோட போட்டோவையும் வெல்டிங் பண்ணலாம்னு இருக்கேன் ...."


என்றவனை பார்த்து அவள் முறைக்க,
அதற்கு மேல் ஓரிரு நிமிடம் அவளிடம் கெஞ்சி கொஞ்சி விளையாடியவன்
அவளை கேபில் ஏற்றி வீட்டுக்கு அனுப்பிய பின், அவள் மன நிலையை மாற்றியே ஆக வேண்டும் என்று உணர்ந்து கொண்டவன் அதற்கான முக்கிய வேலையில் ஈடுபட எண்ணினான்.


சுமித்ரா சொல்லியது போல், ரங்கநாதன் வெங்கடேஷை தொடர்பு கொண்டு,


" எப்படி இருக்கீங்கோ மாப்பிள...." என்றார் முதன் முறையாக மரியாதையோடு மிகுந்த தயக்கத்துடன்.


" ம்ம்ம், நல்லா இருக்கேன்... நீங்க எப்படி இருக்கீங்க ....."


" ம்ம்ம், நன்னா இருக்கேன் ..."
என்றவரின் பதிலில் ஏதோ ஒரு விரக்தி.


" எங்க அப்பா சொன்ன மாதிரி இந்த வருஷம் ஸ்ரீ- விஷ்ணுவோட கல்யாணத்தை நடத்தி பாக்கணும்னு ஆசையா இருக்கு ...." என்றவரின் குரலில் சற்று முன் இருந்த விரக்தி மறைந்து ஒருவித சந்தோஷமே தெரிய


" கல்யாணம், எங்கப்பா ஆசைப்பட்ட மாதிரி அவர் வாழ்ந்த அந்த ஸ்ரீவில்லிபுத்தூர் வீட்லதான் நடக்கணும்னு நேக்கு ஆசை ... நீங்க என்ன சொல்றீங்கோ..." என்ற கேள்வியில் முடித்தார்.


" அவர் உங்களுக்கு மட்டும் அப்பா இல்ல எனக்கு மாமனாரும் கூட .... அவரோட விருப்பத்தை நிறைவேத்துறது என்னோட கடமையும்...." என்ற வெங்கடேஷின் பதிலில் அறை வாங்கிய உணர்வை பெற்றார் ரங்கநாதன்.


தன் தந்தைக்கு வாக்கு கொடுத்த
போது அவரை ஏமாற்ற நினைத்த தனக்கும், அன்றிலிருந்து இன்று வரை கொடுத்த வாக்கிலிருந்து இம்மி மாறாமல் இருக்கும் வெங்கடேஷூக்கும்
இடையேயான வித்தியாசத்தை உணர்ந்தவர், அத்தனை எதிர்ப்புகளையும் மீறி வேதாவை எதற்காக வெங்கடேஷ்க்கு தன் தந்தை மண முடித்துக் கொடுத்தார் என்பதை எப்பொழுதையும் விட அதிகமாகவே உணர்ந்தார்.


மாப்பிள்ளையாக வெங்கடேஷூக்கு தன் தந்தை மீது இருக்கும் பாசமும் மரியாதையும், மகனான தனக்கு இல்லாமல் போய்விட்டதே என்று நொந்து கொண்டவர்,


" வர வெள்ளிக்கிழமை நீங்க எல்லாரும் குடும்பத்தோட எங்காத்துக்கு வரணும் ..."


" நிச்சயமா வர்றோம்..." என்றவர் அழைப்பை துடிக்கும் போது
ரங்கநாதனின் நோக்கம், பேச்சு , செயல் எல்லாம் சரியாக இருந்தாலும் ஏதோ ஒரு வித நெருடல் அதில் இருப்பதாகவே வெங்கடேஷ்க்கு பட்டது.

சற்று நேரத்திற்கெல்லாம் வீடு திரும்பிய விஷ்ணுவிடம், ரங்கநாதன் அழைத்ததை பற்றி வெங்கடேஷ் பேச,
அவனோ தந்தையின் முகத்தை நேருக்கு நேர் பார்க்காமல் வேறு எங்கோ பார்த்தபடி பதில் அளித்துக் கொண்டிருந்தான்.


அவனுள் இருக்கும் குற்ற உணர்வு அவ்வாறு செய்ய வைக்க, இத்தனை ஆண்டு காலம் காவல்துறை அதிகாரியாக பணியாற்றியதோடு, மனித மனங்களை அதிகம் படித்தவரின் வயது, அனுபவம் , தன் மைந்தனிடம் தெரியும் மாற்றங்கள் என அனைத்தையும்
ஒப்பிட்டுப் பார்த்தவருக்கு, ஏதோ ஒன்று சரியில்லை என்றே தோன்றியது ...
ஆனால் அது என்ன என்று தான் அவரால் அனுமானிக்க முடியவில்லை.


விஷ்ணு ரங்கநாதன் வீட்டிற்கு சென்று பிரச்சனை செய்துவிட்டு வந்த மறுநாளே இப்படி ஒரு நேர்மறையான மாற்றத்தை அவர் எதிர்பார்க்கவில்லை.
அதே சமயத்தில் இது குறித்து தற்போது தன் மகனிடமோ மனைவியிடமோ பேச மனமில்லாமல் அமைதி காக்க எண்ணினார்.


வெள்ளி அன்று காலை, ஏழு மணியிலிருந்தே விஷ்ணு தயாராகிக் கொண்டிருக்க, அவனுடைய செய்கைகளையும் சேட்டைகளையும்,
கவனிக்காதது போல் கவனித்துக் கொண்டிருந்த வெங்கடேஷ் ஒரு கட்டத்தில்,


" டேய், சும்மா கெட்-டு-கெதர்காக தான் அவங்க வீட்டுக்கு போறோம் ... பொண்ணு பாக்க போறதா நினைப்போ... முன்ன பின்ன ஸ்ரீயை நீ பார்த்ததே இல்லையா... இதுக்கு ஏன்டா காலையிலிருந்து ஒரே அலப்பறை ..." என்றார் குறும்போடு.


" அப்பா, நிஜமாவே நான் பொண்ணு பாக்க தாம்பா போறேன் ... பொண்ணு பார்க்க போறதே ஒரு கிக்கு தான்... அதெல்லாம் அனுபவிச்சாதான் தெரியும் ..."


" ஆமாண்டா, என் வாழ்க்கைல தான் அப்படி ஒரு சம்பவமே நடக்கலையே..."
என்றார் வேதாவை வம்புக்கு இழுக்கும் தொனியில்.


" கல்யாணம் பண்ணின்டா என்னைதான் பண்ணிப்பேன்னு எங்க அப்பாண்ட ஒத்த கால்ல நின்னது யாரு..." என வேதா ரோஷத்துடன் புதிர் போட


" டேய் விஷ்ணு ... யாருடா அது உங்க அம்மாவ கல்யாணம் பண்ணிக்கனும்னு ஒத்த கால்ல நின்ன பய ..." என வெங்கடேஷ் கேட்டதுதான் தாமதம், அவர் தலையில் நச்சென்று வேதா ஒரு குட்டு வைத்து,


" இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல..." என்றவர் கழுத்தைப் பக்கவாட்டில் திருப்பி, தோளை தன் மோவாயில் இடித்துவிட்டு செல்ல, தாய் தந்தைக்கு இடையே நடக்கும் உரையாடல்களை பார்த்து விஷ்ணு சிரிக்க, உடன் வெங்கடேஷூம் இணைந்துகொண்டார் .


சற்று நேரத்திற்கெல்லாம் விஷ்ணு மரூன் நிற ஃபார்மல் ஷர்ட் பிளாக் பேண்ட்டில் கம்பீரத்தோடு தயார் ஆகி வர, எப்பொழுதையும் விட தாய் தந்தையரின் கண்ணுக்கு கந்தர்வனாகவே காட்சியளித்தவனை
வெங்கடேஷ் ஒரு நண்பனைப் போல
கிண்டல் செய்து உற்சாகம் ஊட்டியதோடு, தன் அறைக்கு வந்து மனதிற்கினிய மனையாளை பார்த்து,


" என்னடி, உன் அலங்காரம் எல்லாம் வழக்கத்துக்கு மாறா சும்மா அள்ளுது ... ஸ்ரீயை விஷ்ணு பொண்ணு பார்க்க போறான்.... உன்னை யாரும் பொண்ணு பாக்க வரல ... கொஞ்சம் அடக்கி வாசிக்கிறயா...."


" ஏன் .... நான் ஏன் அடக்கி வாசிக்கணும் என் மகனோட கல்யாணமாக்கும் ..." என்றார் வேதா மிடுக்காக.


" அதையே தாண்டி நானும் சொல்றேன் ... உன் மகனுக்கு தான் கல்யாணம்னு..." என்று அழுத்தம் கொடுத்து கூறியவரை வேதா முறைக்க,


" நமக்கு அறுபதாம் கல்யாணமே முடிஞ்சு போச்சு டி ...."


" அதனால என்ன ..."


" நீ பாட்டி ஆயிட்ட டி ..."


"சோ வாட் ..."


"விஷ்ணுவோட கல்யாணத்துக்கப்புறம் மறுபடியும் பாட்டி ஆயிடுவ டி...."


" அதுக்கு என்ன இப்போ ..."


" விஷ்ணுவோட கல்யாணப் பேச்சை எடுத்ததிலிருந்து உன் அட்ராசிட்டி அதிகமா தான் இருக்கு .. ஜிலேபி கொண்டை போடற... ஜிகினா புடவை கட்டற... மாமி... நீ ஒரு மார்க்கமாக தான் டி இருக்க ..." என்றபடி பின்புறமாக அவரை அணைக்க முயல,


" பொண்ணு பார்க்க போறோம் கொஞ்சம் தள்ளி நில்லுங்கோ... " என்றவர் அப்பொழுதுதான் வெங்கடேஷின் உடையைக் கவனிக்க, எப்பொழுதையும் விட பத்து வயது குறைந்து மேலும் கம்பீரமாக காட்சியளித்தவரிடம்


" தேவரே, வயசானாலும் உங்க கம்பீரமும் ஸ்டைலும் உங்களை விட்டு போகல ..."


" தேங்க்யூ தேங்க்யூ தேங்க்யூ ... கூடவே பொறந்தது என்னைக்கும் போகாது ..."என்றார் மனையாளின் பாராட்டு மழையில் மனம் மகிழ்ந்து. பிறகு ஆராய்ச்சி பார்வை பார்த்தவர்


" என்ன இருந்தாலும் மாமி, உன் பக்கத்துல நான் கொஞ்சம் டல்லா தான் தெரியறேன்... நான் உனக்கு அப்பா மாதிரி இல்ல இல்ல... ஆத்துக்காரர் மாதிரி தானே இருக்கேன் ..." என்று சந்தேகத்தை எழுப்பியவரின் காதை
எம்பி பற்றி திருகினார் வேதா.


ஸ்ரீயின் இல்லம்
----------------------------


" ஸ்ரீராம்....விஷ்ணு இன்னைக்கு நம்ம ஆத்துக்கு வர்றேர்.... உனக்கு விஷ்ணுவை பிடிக்காதுன்னு நேக்கு தெரியும்... ஆனா நேக்கு விஷ்ணுவை தவிர வேற யாரையும் பிடிக்காது...." என்று கமரிய குரலில் கூறிய தங்கையின் தோள் மீது கை போட்டவன்,


" விஷ்ணு நல்லவன் தான் ஸ்ரீ ... என்ன ஒண்ணு சின்ன வயசிலிருந்து நேக்கும் அவனுக்கும் ஆகாது அவ்ளோதான்... நோக்கு அவனை தான் பிடிச்சிருக்குன்னும் போது, நாளடைவுல நேக்கும் அவனை பிடிக்கும்... பயப்படாத ...." என்ற ஸ்ரீராமை பார்த்து


" நெஜமாவா ..." என்று கண்ணில் கண்ணீரோடு கேட்ட தங்கையை தன் தோள் மீது சாய்த்துக் கொண்டு


" 100% ஷ்யூர்....." என்று ஸ்ரீராம் மொழிந்து கொண்டிருக்கும் போது ,
ஸ்ரீயின் அறைக்கு வந்த சுமித்ரா,


" ஆரம்பிச்சிட்டியா டா ... அவா இன்னைக்கு தான் முதல்முறையா ஆத்துக்கே வரா... அதுக்குள்ள நீ பண்ற இம்சை உலகமகா இம்சை டா... உன் தங்கை எங்கயும் போக போறதில்ல ரெண்டு மணி நேர தூரத்துல தான் இருக்கப் போறா.... " என்றவரின் அங்கலாய்ப்பை கேட்டு இருவரும் நகைக்க, அப்போது விஷ்ணுவின் கார் போர்ட்டிக்கோவை அடைய,


" அவா வந்துட்டா..
ஹாப்பியா இரு ஸ்ரீ... கண்ணை தொடைச்சுக்கோ..." என்றபடி விடைபெற்ற ஸ்ரீராமை பாசத்தோடு பார்த்தாள் ஸ்ரீ .


வெங்கடேஷின் குடும்பத்தை வாசலிலிருந்தே , ரங்கநாதன் குடும்பத்தினர் அனைவரும் (ஸ்ரீயை தவிர) வரவேற்க,


தன் தாய் தந்தையரின் பிரிவுக்குப் பிறகு, இப்பொழுது தான் தன் தமையனை சந்திக்கிறாள் வேதா...
இந்த உலகில் அவளுக்கென்று இருக்கும் ஒரே ஒரு பிறந்த வீட்டு சொந்தம் அல்லவா என்ற நினைப்பில் லேசாக கண்கள் பனிக்க,
அதையேதான் ரங்கநாதனும் உணர்ந்தாரோ என்னவோ....அவர் கண்களும் பனிக்க,
எதுவும் பேசாமல் வேதாவின் கரம் பற்றி அழைத்து வந்து அந்த வீட்டின் நடுநிலையாக இருக்கும் நாற்காலியில் அமரச் செய்தார்.


பிறகு ஓரிரு நொடி அமைதியாய் கழிய,
அப்பொழுதுதான் சுமித்ராவின் தாயார்
கூடத்தை ஒட்டிய பகுதியில் சாய்வு நாற்காலியில் அமர்ந்தபடி கையில் ஜெபமாலையை வைத்துக்கொண்டு ஸ்ரீராம நாமத்தை முணுமுணுத்துக் கொண்டிருந்தவரை கண்டதும் தன் தாயாரின் நினைவு வர, உடனே அவர் பாதம் பணிந்து ஆசீர்வாதம்
பெற்றுக்கொண்டார் வேதா.


பிறகு இயல்பான நலம் விசாரிப்புக்கள் முடிந்ததும், சுமித்ரா ஸ்ரீயை அழைத்து வர , மாம்பழ நிற காஞ்சி பட்டில் , தங்க நிற ஜரிகையோடு வாடாமல்லி நிற பார்டரில், கரங்களில் தாமரை இல்லாத மகாலட்சுமியை போல் காட்சி அளித்தவளை கண்டு மயங்கித்தான் போனான் விஷ்ணு.


பிறகு வெங்கடேஷ் குடும்பத்தினருக்கு சிற்றுண்டி வழங்கப்பட, அனைவரும் இயல்பாக பேசி மகிழ்ந்த நிலையில், ஸ்ரீராம் மட்டும் சோகமே உருவாய் நிற்க, அவன் பார்வை ஒரே ஒரு முறை விஷ்ணுவை சந்திக்க, சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தி கொண்ட விஷ்ணு அவனை பார்த்து ஒற்றைக் கண் சிமிட்டி கண்ணடித்தான்.


அவன் செய்கையை கண்டு இம்முறை ஸ்ரீராமுக்கே சிரிப்பு வர, அவர்கள் பார்வை மாற்றத்தை கண்டு ஸ்ரீனி குபீரென்று சிரித்து விட்டான்.


அனைவரும் வீட்டை சுற்றிப் பார்த்துக் கொண்டிருக்கும் போது , ஸ்ரீனி சன்னமாக


" நீ ஸ்ரீயை பார்த்து கண்ணடிச்சிருந்தா பரவால்ல, ஆனா ஸ்ரீராமை பார்த்தில்ல கண்ணடிச்ச... ஏற்கனவே அவன் ஆங்கிரி பேர்ட்... " என்றவனிடம் விஷ்ணு பொங்கி சிரிக்க , அப்போது
ஸ்ரீ தன் அறையை சுற்றிக்காட்ட விஷ்ணுவை அழைக்க, அவர்களுக்கு தனிமையை கொடுத்து வெளியேறினான் ஸ்ரீனி.


அவளது அறையை அருமையாக வைத்திருந்தாள் ஸ்ரீ.


அவ்வளவு நேர்த்தி, அழகு, சுத்தம்.


ஸ்ரீராமின் காதை திருகியபடி முக்காலியின் மீது ஸ்ரீ நின்றுகொண்டிருந்த புகைப்படத்தில்
'பிரதர் பார் சேல்' (Brother for sale) என்றும்
ஸ்ரீராம் மற்றும் ஸ்ரீனி நடுவில் ஸ்ரீ நின்றுகொண்டிருந்த மற்றொரு புகைப்படத்தில்
'பிரதேர்ஸ் ஆர் ஜஸ்ட் பார்ன் டு டிஸ்டர்ப் சிஸ்டர் ' (Brothers are just born to disturb sister ')
என்ற வாசகம் எழுதி ஒட்டப்பட்டிருக்க , அதனைப் பார்த்து மனம் விட்டு சிரித்தபடி
அனைத்தையும் ஆனந்தத்தோடு பார்த்து வந்தவன்,
சுவற்றில் மாட்டியிருந்த ஓவியங்களைப் பார்த்து அதிர்ந்து தான் போனான்.


அது கார்ட்டூனாக இருக்கட்டும், தனி படமாக இருக்கட்டும் , கடவுள் படமாக இருக்கட்டும் எதிலும் குழந்தை எங்கும் குழந்தை .


"என்ன விஷூ, என் பெயிண்டிங் எல்லாம் எப்படி இருக்கு ..."


"ம்ம்ம், ரொம்ப நல்லா இருக்கு ..." என்றான் ஒட்டாமல்.


இரண்டு நாட்களுக்கு முன்பு அவனிடம் காட்டிய ஓவியத்தை சட்டமிட்டு மாட்டி இருந்தாள்.


இவையெல்லாம் அவனுக்கு உணர்த்தியது ஒன்றே ஒன்றுதான் அது தான் குழந்தையின் மீதான அவள் பற்று.


பொதுவாக பெரும்பாலான குழந்தைகள் தன் வயதை ஒத்த குழந்தைகளுடன் தான் விளையாடும் ...
ஆனால் வெகு சில குழந்தைகள் தன்னை விட வயது சற்று கூடியவருடன் விளையாடும்...
அம்மாதிரியான குழந்தைகளுக்கு இயல்பிலேயே தன் வயதை விட மனமுதிர்ச்சி அதிகமாக இருக்கும்.
ஆனால் ஸ்ரீ போன்ற சில குழந்தைகள் சிறுவயதில் இருந்தே தன்னை விட வயதில் சிறியவருடன் விளையாடும் பழக்கமுடையவர்கள். காரணம்
அவர்களின் மன முதிர்ச்சி அந்த சிறியவர்களுடன் தான் ஒத்துப்போகும்.
இப்போது அவளிடம் மண்டிக்கிடக்கும் குழந்தை ஆசையும் அதே போல் ஒன்றுதான் என்பதை உணர்ந்தவன்
இயல்பான நாள் என்றால் அந்த தனிமையில், அழகோவியமாயிருக்கும் காதலிக்கு, நிச்சயம் ஒரு அட்சாரத்தையாவது கொடுத்திருப்பான் ...


ஆனால் இப்பொழுது இருக்கும் மனநிலையில், வருங்காலத்தை பற்றிய சிந்தனையில் சிக்கித் தவித்தவனுக்கு அந்த காதல் உணர்வுகள் எல்லாம்
காற்றில் கரைந்த கற்பூரமாய் காணாமல் போயிருக்க


கூடிய விரைவில் அவளது மனதை வேறு திசையில் செலுத்துவதற்கான எத்தனத்தை மேற்கொள்ளுவதோடு,
குழந்தை மற்றும் தாய்மை பற்றிய அவளது சிந்தனையை மாற்றியே ஆக வேண்டும் என்று முடிவு கட்டினான்.


*****************************************
அர்ஜுன் இல்லம்
-----------------------------


அலுலகத்தில் இருந்து திரும்பி வந்த அக்னி, ஏதோ பேச்சுக் குரல் கேட்டு லான் நோக்கி செல்ல,


" பப்பா, கித்னா டைம் லகேகா...(இன்னும் எவ்ளோ நேரம் ஆகும்...)"


" அம்மா வர்றதுக்குள்ள ஹோம் வொர்க்கை முடிக்கணுங்கிற... என்னை மாதிரி எழுதினா வேகமா எழுதுவேன் ... உன்னை மாதிரி இல்ல எழுதறேன் அதனால மெதுவாதான் முடியும் ..."
என இருவரும் கர்ம சிரத்தையோடு வீட்டுப்பாடம் எழுதும் வேலையில் ஈடுபட்டிருக்க ,


" ஹாய்... மாட்டினீங்களா ரெண்டு பேரும் பக்கா ஃபிராடு ... திருட்டுத்தனமா பண்றீங்க ..." என்ற எதிர்பாராத தாயின் வரவில் மைந்தன் பேந்தப் பேந்த விழித்தவன் உடனே சுதாரித்துக் கொண்டு


" நோ மம்மா, ஃபர்ஸ்ட் நான் தான் என் ஹோம்வொர்க்கை ரைட் பண்ணிக்கிட்டு இருந்தேன்... ப்பா தான் நீ ரொம்ப கஷ்டப் படுற, ஐ வில் ஹெல்ப் யூ அவுட்ன்னு சொல்லி, ஹோம் ஒர்க் எழுதி தரேன்னு சொன்னாரு.... அப்பகூட
நக்கோ(வேண்டாம் ) பப்பா, ஐ வில் ரைட் ஆன் மை ஓன்னு சொன்னேன் .... பட், அகைன்
பப்பா தான் ஹோம் ஒர்க் எழுதி ரொம்ப நாளாச்சுனு சொல்லி, ஹி ஸ்டாட்டர்டு ரைட்டிங்..." என்று திணறி திணறி பலமொழி கலப்போடு மழலை மொழியில் அவன் கூறி முடிக்க,


" அடேங்கப்பா நான் தான் ஃபிராடுனு நினைச்சுக்கிட்டு இருந்தேன் ... நீ என்னை விட டுபாக்கூரா இருக்கியேடா... மற்ற எல்லாத்தையும் கூட ஒத்துப்பேன்... அது எப்படி ஹோம்வொர்க் எழுதி ரொம்ப நாளாச்சுன்னு நானே உன் ஹோம்வொர்க்கை வாங்கி எழுதினேன்னு சொன்ன பாத்தியா...
அதை தாண்ட என்னால தாங்கிக்கவே முடியல ...." என அர்ஜுன் கூறி முடிக்கும் முன்பே அஷ்வத் ஓட்டம் எடுத்திருக்க,
அவனை நொடியில் பிடித்து தூக்கி சுற்றியவன்,


" கீழ போட்டுடுவேன்...." என பயம் காட்ட,


" நோ பப்பா..." என மைந்தன் அவன் கழுத்தை
கட்டிக்கொண்டு செல்லம் கொஞ்ச , உச்சி முகர்ந்து கீழே இறக்கி விட்ட நொடி,


" அஷ்வத், இவரைப் 'பப்பா'ன்னு கூப்பிட கூடாதுன்னு எத்தனை முறை சொல்லி இருக்கேன் ...." என்றவளின் பேச்சில்
முகம் சுருங்கிப் போன குழந்தை, அதற்கு மேல் அங்கு நிற்காமல்
அறைக்குள் ஓடி மறைய
அஷ்வத் சென்றதை உறுதிப்படுத்திக்கொண்டு,


" அர்ஜுன், இனிமே அவன் 'பப்பா'னு கூப்பிட்டா ரெஸ்பாண்ட் பண்ணாதீங்க ப்ளீஸ் ..." என்றது தான் தாமதம், அவளைப்பற்றி சுவற்றில் சாய்த்து தன் மூச்சுக்காற்று படும் அளவிற்கு நெருங்கியவன்,


" என்ன டி பிரச்சனை உனக்கு ... சின்ன குழந்தை, அதனோட முகம் எவ்ளோ வாடி போச்சு பாத்தியா....
எனக்கு குழந்தை இல்ல, அவனுக்கு அப்பா இல்ல, நாங்க ரெண்டு பேரும் இப்படி இருக்குறதுல உனக்கு என்ன பிரச்சனை.... அவன் என் குழந்தை தான்..." என ஆணித்தரமாக கூறியவனிடம்


" அவனுக்கு அம்மாவா மட்டுமில்ல அப்பாவாவும் நானே இருக்க விரும்பறேன்... அப்பாங்கிற பிம்பத்தை
எந்த ஆண் மூலமாவும் நான் காட்ட தயாரா இல்ல ... ப்ளீஸ் .." என்று கமரியவளிடம்


" அவன் எப்பவோ எனக்கு அப்பாங்கிற
உணர்வையும் ஸ்தானத்தையும் கொடுத்துட்டான்... இனிமே உன்னால அவனை என் கிட்ட இருந்து பிரிக்கவே முடியாது ..."


" ப்ளீஸ்.. என் குழந்தையை விட்டுடுங்க... எனக்குன்னு இருக்கிறது அவன் மட்டும்தான் ..."
என்றவளின் அழுகை குரலில் ஆடிப்போனவன்


" குழந்தையை வச்சு உன் மேல அட்வான்டேஜ் எடுத்துபேன்னு நினைக்கிறயா..." என்றபடி சுவற்றில் சாய்ந்து நின்றிருந்தவளின் இருபுறமும் தன் கைகளை ஊன்றி அவள் கண்ணோடு கண் நோக்கி கேள்வி எழுப்ப,


அதற்கு பதிலளிக்காமல் தலைகுனிந்தபடி அவள் மௌனித்து நிற்க, அதுவே மறைமுகமாக அவள் ஆமோதிப்பதை சொல்லாமல் சொல்ல,


யாதொரு குற்றமும் செய்யாமல் குற்றவாளி கூண்டில் அவனை நிற்க வைத்ததோடு, அதற்கும் மேல் விசாரணை என்ற ஒன்றே இல்லாமல் நேரடியாக குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டது போல் உணர்ந்தவன்
உள்ளுக்குள் துடித்தபடி


" என் தப்ப எனக்கு சரியா புரிய வச்சிட்ட டி... உன்கிட்ட புருஷங்கிற என் உரிமையை நிலைநாட்டாம, எப்படி நான் அஷ்வத்துக்கு அப்பாவா ஆகுறது..." என்றவன் அவள் கழுத்தில் முகம் புதைக்க எத்தனிக்கும் போது


" ப்ளீஸ் ..." என்று கண்ணீர் மல்க கேட்டவள், அதற்கு மேல் அவன் முகம் பாராமல் பொங்கி வழியும் கண்ணீரை மறைக்க, எண்ணி முகத்தை திருப்பிக் கொள்ள,


அவள் கலங்கி பார்த்த பார்வையில்,
ச்சே... நீயும் இவ்ளோ தானா ...என்ற வெறுப்பும் பயமும் மண்டிக் கிடக்க,


தன் நீண்ட நாள் ஆசையா அல்லது அந்தத் தருணத்தின் ஆதங்கமா என பிரித்தறிய முடியாத நிலையில்,
எல்லா பலவீனமான ஆண்களை போல் தானும் அவளது மன உணர்வுக்கு முக்கியத்துவம் அளிக்காமல், உடல் வலிமையை பயன்படுத்த எண்ணியது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்றவனின் மூளை
அடித்து உரைக்கும் போது தான்,
தவறை உணர்ந்தவன்
சுதாரித்த படி
"ஒரு விஷயத்தை சரியா புரிஞ்சுக்கோ.. குழந்தையை வச்சுதான் உன்னை நெருங்கனும்னு எனக்கு அவசியமில்ல டி... ஏன்னா நீ என்னோட லீகலி வெட்டர்டு வைஃப் ...நான் நினைச்சா நேரடியாவே உன்னை நெருங்கலாம்... என்னை யாரும் தடுக்க முடியாது ... ஆனா நீ பேசின வார்த்தை என் பொறுமையை அளவுக்கு அதிகமா சோதிச்சிடுச்சு... என்னோட கண்ணியத்தையும் தான் ... அதனால தான் அப்படி பேசி நடந்துகிட்டேன்.. ஐ அம் சாரி .." என்று கனத்து குரலோடு தனது நிலையை எடுத்துக் கூறி விட்டு வெடுக்கென வெளியேறினான் அர்ஜுன்.


அன்று சனிக்கிழமை , அர்ஜுன் வழக்கம் போல் அஷ்வத்தோடு காலை உடற் பயிற்சி செய்து, குளித்து முடித்து
காலை உணவு உட்கொண்ட பின்னும் அக்னி தன் அறையிலிருந்து வெளிவராமல் இருக்க, அலுவலக பணி நிமித்தமாக வெளியே செல்ல எத்தனித்தவனுக்கு ஏதோ உள்ளுணர்வு உணர்த்த, ஒருக்களித்திருந்த அவள் அறை கதவை திறந்து பார்த்தவனுக்கு , ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பது போல் அவள் படுத்திருக்க, ஏதோ சரி இல்லை என்ற உணர்வு மீண்டும் எழ, அவளை நெருங்கி கரம்பற்றி,


" அக்னி ..." என்றான்.


அவளிடம் அசைவு இல்லை. மறுபடியும் மறுபடியும் அவள் பெயரை இரண்டு மூன்று முறை அழைத்தும் , அவள் தாடையைத் தொட்டு எழுப்பியும் அவளிடம் அசைவில்லை என தெரிந்ததும், அவள் கரம் பற்றி நாடி பார்த்தான்.


அதில் உணர்வே இல்லை என்பது போல் தெரிய, அப்போது தான் அவள் அருகில் இருந்த மாத்திரை அட்டையை பார்த்தான்.


நான்கு மாத்திரைகள்
உட்கொள்ளப்பட்டிருந்தது. உடனே அந்த மாத்திரையின் பெயரை கூகுளில் தேடினான். அது தூக்க மாத்திரை, மிகவும் அபாயகரமானது, மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எடுத்துக்கொள்ளக் கூடாது என்ற செய்தி கிட்ட, உடனே தன் வீட்டில் இருந்த வேலையாட்களிடம் ஆளுக்கு ஒரு வேலையை சொல்லி வெளியேற்றியவன், விஷ்ணுவை தொடர்பு கொண்டான்.


" என்னது, அண்ணி தூக்க மாத்திரை சாப்பிட்டாங்களா ... உனக்கும் அவங்களுக்கும் ஏதாவது பிரச்சனையா அர்ஜுன் ..." என்றான் விஷ்ணு பதட்டத்தில்.


" எல்லாத்தையும் அப்புறம் சொல்றேன் விஷ்ணு ... இப்ப எனக்கு மெடிக்கல் எமர்ஜென்சிக்கு ஃபர்ஸ்ட் கிளாஸ் ஹாஸ்பிடல் வேணும் .... ட்ரீட்மென்ட் எல்லாம் ரொம்ப சீக்ரெட்டா இருக்கணும் அப்படி ஒரு ஹாஸ்பிடல் ஏற்பாடு பண்ண முடியுமா ..."


" ஷ்யூர் அர்ஜுன் .... அப்பாவோட ஃபிரண்ட் ஹாஸ்பிடல் இருக்கு... நான் லொகேஷன் ஷேர் பண்றேன்... நானும் 15 மினிட்ஸ்ல அங்க இருப்பேன் ..."


உடனே அக்னியை தன் காரின் பின் பக்கத்தில் கிடத்திவிட்டு , அஷ்வத்தோடு விஷ்ணு பகிர்ந்த முகவரிக்கு அர்ஜுன் போய் சேரவும் விஷ்ணு அங்கு வரவும் சரியாக இருந்தது.


வெங்கடேஷ் , தலைமை மருத்துவரோடு பேசி தேவையான ஏற்பாடுகளை முன்பே செய்து வைத்திருக்க, அர்ஜுன் மருத்துவமனைக்கு வந்ததும் மருத்துவர் குழு அக்னியை சூழ்ந்துகொண்டு சிகிச்சை அளிக்க தொடங்கினர்.


அஷ்வத் , "பப்பா, மம்மா கோ க்யா ஹூவா....( அம்மாக்கு என்னாச்சு ...) .." என்றான் கண்கலங்கிய படி.


" தெரியலடா ....." என்று கண் கலங்கியவன் உடனே சுதாரித்துக் கொண்டு,
" அம்மாவுக்கு ஃபீவர் ..." என்றான்.


ஏதோ கணவன் மனைவிக்கிடையே பிரச்சனை போலும் ... அதனால் தான் அர்ஜுனின் மனைவி தூக்க மாத்திரையை உட்கொண்டு விட்டார்
என்றெண்ணிய விஷ்ணுவுக்கு அதனை நேரடியாக கேட்க தயக்கம்.


மிஞ்சிப்போனால் நான்கு மாதமே ஆன நட்பு. கைபேசியில் அர்ஜுன் உதவி கேட்கும் போது தன்னை மறந்து உனக்கும் அண்ணிக்கும் ஏதாவது பிரச்சனையா என்று கேட்டு விட்டான் தற்போது நேரடியாக கேட்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கும் போது,


" ஒய் ஆர் யூ ஸ்டாண்டிங் அங்கிள், யாஹான் பைட்டியே..." என விஷ்ணுவைப் பார்த்து அஷ்வத் தோரணையோடு கூற, அவன் கம்பீரமான பேச்சில் தன்னை மறந்தவன்,


" சீனியர், உங்க பையன் உங்களையே உரிச்சுக்கிட்டு பொறந்திருக்கான் ...
லுக் அண்ட் ஃபீல் மட்டுமில்ல வே ஆஃப் ஸ்பீச் கூட உங்களை மாதிரியே இருக்கு ..." என்றவன் சிலாகித்துக் கொண்டிருக்கும் போது மருத்துவர் வர


" பயப்பட ஒன்னும் இல்ல ...
இன்னும் டூ ஹவர்ஸ்ல கண்ணு முழிச்சிடு வாங்க.... கொஞ்சம் செடிஷன்(மயக்கம்) ஜாஸ்தியா ஆயிருக்கு.... அவ்ளோ தான்"


" டாக்டர் , அந்த டேப்லெட்ஸ்.... ஃபோர் டேப்லட்ஸ் ... " என அர்ஜுன் நினைத்ததை கேட்க முடியாமல் தயங்க, ஏற்கனவே வெங்கடேஷ்
அக்னியின் நிலை குறித்து
மேலெழுந்தவாறு மருத்துவரிடம் தெரிவித்திருந்ததால், அவன் தயக்கத்தை புரிந்து கொண்டவர்,


" பயப்படாதீங்க... அவங்க சூசைட் அட்டெம்ட் பண்ணல.... இன்னும் எக்ஸ்ட்ராவா நாலு மாத்திரை சாப்பிட்டு இருந்தாங்கன்னா அவங்களைக் காப்பாத்துறது கஷ்டம்...
ஏதோ ஸ்டெரஸ் அதிகமா இருந்திருக்கும் போல, ஏற்கனவே இரண்டு மாத்திரை போட்டும் தூக்கம் வராததால மேற்கொண்டு இரண்டு மாத்திரை போட்டிருக்காங்க அவ்ளோ தான்...." என்றதும் தான் அர்ஜுனுக்கு
உயிரே வந்தது. அவள் குணமறிந்தும் மனமறிந்தும் நேற்று தான் சற்று அதிகப்படியாக பேசி விட்டோமோ என்ற குற்ற உணர்வில் சிக்கி தவித்தவனுக்கு மருத்துவரின் பதில் ஆறுதலை தர,


" இது ரொம்ப டேஞ்சரஸான ட்ராக் எவ்ளோ நாளா எடுத்துக்கிட்டு இருக்காங்க..."


" தெரியாது டாக்டர் ...." என்றவனை மருத்துவர் புரியாமல் பார்க்க,


" இது அவளோட மெடிக்கல் ஃபைல் ..." என அஷ்வத்தின் மருத்துவ கோப்புடன் வைக்கப்பட்டிருந்த அவளது மருத்துவ
கோப்பை அவன் நீட்ட,


" ஒன் மினிட் ..." என்றபடி அதனைப் பெற்றுக்கொண்டு மருத்துவர் விடைபெற்றதும்,


" என்ன அர்ஜுன் , என்ன நடந்தது ..." என்றான் விஷ்ணு ஒன்றுமே புரியாமல்.


" நான் ஆபீஸ் கிளம்பி கிட்டு இருந்தேன் டா... காலைல ஒன்பது மணி ஆகியும் அவ எழுந்துக்கவே இல்ல ...
அவ ரூம்க்கு போய் பார்த்தா ... தூங்கிக்கிட்டு இருந்தா ... தட்டி எழுப்பினா கூட எழுந்துக்கல..."
என்றவனின் பேச்சை விஷ்ணு இடைவெட்டி,


"என்னது....அவங்க ரூம்ல தூங்கிகிட்டு இருந்தாங்கன்னா என்ன அர்த்தம் அர்ஜுன் ..." என்ற முக்கிய கேள்வியை அவன் முன் வைக்க,


" அது வந்து ..."


" சொல்லு அர்ஜுன், உனக்கும் அண்ணிக்கும் நடுவுல என்ன போய்கிட்டு இருக்கு ..." என்றான் ஆராய்ச்சிப் பார்வையோடு .


வேறு வழியில்லாமல், அவன் சிறுவயதிலிருந்து நேற்று மாலை வரை
நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் பகிர, கேட்டுக்கொண்டிருந்த விஷ்ணுவிற்கு அதிர்ச்சியும் ஆச்சரியமும் போட்டிப் போட்டுக்கொண்டு தலைக்கேற,


" அப்போ அஷ்வத் ...."


" அஜய்யோட குழந்தை ....." என பதில் அளித்துக் கொண்டிருக்கும் போது மீண்டும் மருத்துவர் வர,


" இந்த ட்ரக் ரொம்ப டேஞ்சரஸ்,
இது அண்டி-டிபிரசன்ட், இன்சோம்னியா ( தூக்கமின்மை) இரண்டுக்காகவும் எடுத்துக்கிறது ...
டாக்டர்ஸ் ஒரு குறிப்பிட்ட மாசம் தான் இதை சாப்பிட சொல்லி பிரஸ்க்ரைப் பண்ணுவாங்க.... அதுவும் ஹாஃப் இல்ல ஒன் டேப்லட் தான் எடுத்துக்க சொல்லுவாங்க... பேஷண்ட்ஸ் மருந்து சீட்டை காட்டி அடிக்கடி வாங்க கூடாதுங்கிறதுக்காக டாக்டர் பிரிஸ்கிரிப்ஷனை மெடிக்கல் ஷாப்ல வாங்கிக்கிட்டு தான் இந்த மருந்தையே கொடுப்பாங்க...
ஆனா இவங்க வேற வேற
டாக்டரஸ் கிட்ட போயி, இதே கன்டென்டுள்ள மாத்திரைகளை வாங்கி இவ்ளோ வருஷம் சாப்பிட்டிருக்காங்க...
மெடிக்கல் ப்ரிஸ்க்ரிப்ஷன் இல்லனாலும், நிறைய டாக்டர்ஸ்கிட்ட கன்சல்ட் பண்ணின பேப்பர்ஸ் இதுல இருக்கு ...


முதல்ல இவங்க கண் முழிக்கட்டும்...
அப்புறம் என்ன காரணத்துக்காக இந்த மாத்திரை சாப்பிட்டாங்கன்னு கேட்டு தெரிஞ்சிக்கலாம் ..." என்று சொல்லி மருத்துவர் விடை பெற்றதும்,


" அண்ணிக்கு, நேத்து நைட் ஏன் அவ்ளோ ஸ்டிரஸ்(stress)...." என்ற விஷ்ணுவின் கேள்வி அர்ஜுனை யோசிக்க வைக்க, ஓரிரு நொடி யோசித்தவனுக்கு உடனே மின்னல் வேகத்தில் அதற்கான விடையும் வந்து விழ,


" இன்னைக்கு தான் அஜய் அக்னியோட லவ்வ அக்செப்ட் பண்ண டே...
இந்த நாளா என்னாலயும் மறக்கவே முடியாது ... ஏன்னா நான் சொல்லி தானே அவன் அக்னியோட லவ்வ அக்செப்ட் பண்ணான்...அக்னிக்கு நிச்சயமா இந்த நாள் அவ கல்யாண நாள் மாதிரி அவ்ளோ ஸ்பெஷல் ... அதே சமயம் அவனோட இழப்பையும் அவளால இன்னும் எத்துக்கவே முடியல ...சுபாவோட திடீர் இழப்பு என்னை எவ்ளோ பாதிச்சிருக்கோ, அதே அளவு அஜயோட இழப்ப அவள பாதித்திருக்கு.... அதனால தான் என்னால அவளை முழுசா புரிஞ்சுக்க முடியுது .
அஜய் ரொம்ப நல்ல கேரக்டர் ...
அடிப்படையில ரொம்ப நல்லவன் ...
அவ்ளோ சீக்கிரம் அவளால அவனை மறக்க முடியாதுன்னும் எனக்கு தெரியும் ..."


" உனக்கு அஜய்யை தெரியுமா அர்ஜுன்..." என்றான் ஆச்சரியத்தோடு.


" ம்ம்ம்ம், என்னோட க்ளோஸ் ஃப்ரெண்ட் ... கொஞ்ச நாள் தான் பழகினோம் ... ஆனா எங்க ரெண்டு பேருக்குள்ள அப்படி ஒரு புரிதல் உண்டு .... "


" எங்க சந்திச்ச அஜய்ய, காலேஜ்லயா இல்ல போலீஸ் டிபார்ட்மென்ட்லயா..."


" ம்ஹும்.... இரண்டுமே இல்ல... நாங்க ரெண்டு பேரும் ஐபிஎஸ் ட்ரைனிங்ல சந்திச்சோம் ....
லால் பகதூர் சாஸ்திரி நேஷனல் அகடமி ஆஃப் அட்மினிஸ்ட்ரேஷன், முசோரி ... பவுண்டேஷன் கோர்ஸ்ல..."


" அண்ணிக்கு தெரியுமா நீயும் அஜய்யும் ஃப்ரண்ட்ஸ்ன்னு..."


" ம்ஹூம்.... நான் அஜய்யை பத்தி எதுவுமே சொன்னது இல்ல..."
என்றவனின் பதிலில் அஷ்வத்தை பார்த்தபடி ,


" அப்ப நீங்க ரெண்டு பேரும் ...." என விஷ்ணு முடிக்கும் முன்பே


" பார்க்க ஏறக்குறைய ஒரே மாதிரி இருப்போம் ...லுக் அலைக்....( look-alike)"
என்ற அர்ஜுனின் பதில், அவனுக்கு மேலும் சுவாரசியத்தை கூட்ட,


" அஜய் எங்க வொர்க் பண்ணாரு மும்பையா, டெல்லியா...."


" எனக்கு தெரிஞ்சு அவன் 99% இந்தியாவுல வொர்க் பண்ணவே இல்ல... அவன் சாகறதுக்கு கிட்டத்தட்ட ரெண்டு வாரத்துக்கு முன்னாடி தான் டிஐஜியா முதல் முதல்ல டெல்லில பதவியேத்துக்கிட்டான்...


கேள்விப்பட்டிருப்பியே ...
அஜய் அதுல்கர்(Ajay Athulkar) , தி மோஸ்ட் பவர்ஃபுல் பிரில்லியன்ட் ரா ஏஜன்ட் ....(The most powerful brilliant RAW Agent) ..."


தகிப்பாள்
 
அத்தியாயம் 28


இடம் : லால் பகதூர் சாஸ்திரி தேசிய மேலாண்மை பயிற்சி நிறுவனம் (Lbsnaa) - அனைத்து ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கான முதல் மூன்று மாத ஃபவுண்டேஷன் பயிற்சி.


" நில்லுங்க .... எப்படி நீங்க ரெண்டு பேரும் பார்க்க ஒரே மாதிரி இருக்கீங்க... ஒரே ரூம் வேற கொடுத்திருக்காங்க..." என்றார் ஆச்சரியத்தோடு அந்த பேட்ச்சில்(batch) இவர்களுக்கெல்லாம் பயிற்சி தரும் ஃபேக்கல்டி(faculty) ஒருவர்.


" மே பி, எங்க ரெண்டு பேரோட பேரும் அல்ஃபாபெடிகல் ஆர்டர்ல அடுத்தடுத்து வந்ததால கொடுத்திருக்கலாம் சார்..." என்றான் குறும்போடு அஜய்.


அஜய் பார்ப்பதற்கு அர்ஜுனைப் போலவே இருப்பான். இருவரையும் அருகருகே நிறுத்தினால் நிச்சயம் சில வித்தியாசங்கள் தெரிய வரும்.
அதில் மிகவும் முக்கியமானது
நிறம். அஜய் பொன்னிறமானவன். அர்ஜுன் மாநிறம். அஜய்க்கு மோவாயில் அழுந்த பள்ளம் இருக்கும். அர்ஜுனுக்கு லேசான பூனை கண்கள் உண்டு. சிரித்தால் கன்னத்தில் குழி விழும் .
இது தான் இவர்களுக்கிடையே இருக்கும் அதிகபட்ச வித்தியாசம். மேலும் சில நுண்ணிய வித்தியாசங்களும் உண்டு. மூக்கு நுனி, நெற்றி பிறை போன்ற இடங்களில்.
எனினும் இருவரையும் தனித்துப் பார்க்க நேர்ந்தால் இருவரில் யாரென்று அடையாளம் அறிவது சற்று சிரமமே.


அஜய் உழைப்பாளி, திறமைசாலி, அதிரடியானவன், துணிச்சல்காரன். ஆனால் இவை எல்லாவற்றையும் விட அவனிடம் மேலோங்கிக் காணப்படும் தேசபக்தியே மற்றவர்களிடமிருந்து அவனை தனித்துக் காட்டும்.


மற்றவர்களுக்கு இந்தியா வாழும் தேசம் என்றால், அவனுக்கு அதுதான் சுவாசம்.
மொத்தத்தில் நம் இந்திய தேசத்தை பிடித்தவர்களுக்கு அஜய்யை பிடிக்கும் .


பயிற்சியின் முதல் நாளில் நடைபெற்ற அறிமுகப் படலத்திலேயே , இவர்களில் உருவ ஒற்றுமையை பார்த்து குழுவே ஆச்சரியத்தில் ஆழ்ந்தது.


பெயரின் அகர வரிசையின் படி இருவருக்கும் ஒரே அறையும் ஒதுக்கப்பட, முதல் நாளில் இருந்தே அவர்களுக்கு இடையேயான ஆழமான நட்பிற்கு அது அடிகோலியது.


பழகிய இரண்டு மூன்று நாட்களிலேயே புரிதல், நட்பு, பாசம் என அனைத்து நேர்மறையான உணர்வுகளும் இருவருக்கும் இடையே இயல்பாகவே வேர்விட்டு வளர ஆரம்பித்தது.


பொதுவாக இவர்களுக்கான பயிற்சிகள் காலை 5 மணியிலிருந்து தொடங்கும்.


அதில் மிகவும் முக்கியமானது, காலை 5:15 மணிக்கு தினமும் நடக்கும் பிசிகல் ட்ரைனிங் (PT)எனப்படும் உடற்பயிற்சி வகுப்புதான்.


பயிற்சியில் ஈடுபடும் பயிற்சியர்கள் சில சட்டதிட்டங்களை பின் தொடர்ந்தே ஆக வேண்டும் என்பது மரபு.
அதில் குறிப்பாக,


ஆண்கள் , பெண்கள், ஒவ்வொரு பயிற்சிக்கு ஏற்றார் போல் கண்ணியமான உடை அணிய வேண்டும்.


ஆண்கள் தினமும் முகச்சவரம் செய்திருக்க வேண்டும். வேண்டுமானால் அளவான மீசையை மட்டும் அழகாக வைத்துக்கொள்ளலாம்.


பாட பயிற்சியின் போது( காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணி வரை) கழுத்து டை இல்லாமல் , பயிற்சி வகுப்பிற்கு வரக்கூடாது.


முக்கியமாக கால நேரத்தை சரியாக பின்பற்ற வேண்டும் என்பன போன்ற கடுமையான விதிமுறைகள் நடப்பில் இருந்தன.


ஒருநாள் அர்ஜுன், முகச்சவரம் செய்ய மறுத்ததோடு கழுத்து டை அணியவும் மறந்துவிட, உடனே ஃபேக்கல்டி அவனுக்கு மறு நாள் பீனல் பீட்டிக்கு (Penal PT) பரிந்துரை செய்து விட்டார்.


மறுநாள் காலையில நான்கு மணிக்கு கொட்டும் பனியில், விளையாட்டு மைதானத்தை 10 முறை சுற்றி வர வேண்டும் என்பது தான் தண்டனை.


ஆனால் மறுநாள் அர்ஜுனால் படுக்கையை விட்டு எழவே முடியவில்லை. உடல்நிலை சரியில்லாத காரணத்தால் உடல் சோர்வு அவனை ஆக்கிரமிக்க, விழிப்பு ஏற்பட்டாலும் படுக்கையை விட்டு எழவே முடியாமல் ஒருவித மயக்க நிலையில் கிடந்த போது,
எங்கோ வெளியே சென்றுவிட்டு அப்போதுதான் அறைக்கு திரும்பிய அஜய்யை பார்த்து


" இவ்ளோ சீக்கிரமா எந்திரிச்சு எங்க போன ..."


" உனக்காக கிரவுண்ட்ட பத்து ரவுண்ட் அடிச்சுட்டு வர்றேன் டா ..."


" எப்படி ..." என்றான் அர்ஜுன் மிகுந்த ஆச்சரியத்தோடு.


" நாம ரெண்டு பேருமே பார்க்க ஒரே மாதிரி தான் இருக்கோம்... ஹைட், வெயிட் , ஃபேசியல் பீச்சர்ஸ்(Facial features) எல்லாமே 90% சேம் ...
என்ன ஒண்ணு, நான் உன்னை விட மூணு ஷேடு கலர் ஜாஸ்தி ....உனக்கு கேட் ஐஸ் உண்டு எனக்கு கிடையாது.. அதனால லென்ஸ் யூஸ் பண்ணிக்கிட்டு போனேன்....
மத்தபடி ஃபுல் ஜெர்கின், மப்ளர், கேப் எல்லாம் யூஸ் பண்ணதால, அவங்களால கண்டுபிடிக்கவே முடியல ... அதிகாலை இருட்டு வேற ...எப்படி ... இப்பவே நான் ரா ஏஜன்ட்டா ஆயிட்டேனா..." என்று சிரித்தான்.


" ஏண்டா, உனக்கு எதுக்கு இந்த தேவையில்லாத கஷ்டம் ..."


" இன்னைக்கு நீ போகலைன்னு தெரிஞ்சா நாளைக்கு இதே மாதிரி ரெண்டு மடங்கு பனிஷ்மென்ட் உனக்கு கிடைக்கும் அதனால தான் நான் போனேன் ..." என்றவனின் கண்ணில் அப்படி ஒரு பாசம்.


பிறகு , வார இறுதியில் ட்ரெக்கிங்(trekking) எனப்படும் மலையேறும் பயிற்சியில் இருவரும் கலந்து கொள்ள,
பாசி படிந்த ஒத்தையடிப் பாதையில் தொடர்ந்து பெய்துக்கொண்டிருந்த லேசான மழையால் அர்ஜுனின் கால் இடற , எதிர்பாராமல் ஏற்பட்ட வழுக்கலால் பற்றுக்கோல் ஏதுமில்லாமல் உருண்டு கொண்டே சென்று கிட்டத்தட்ட பள்ளத்தாக்கில் விழும் நிலைக்கு தள்ளப்பட்டான்.


வெளியே தெரிவது போல் வளர்ந்திருந்த ஒரு மரத்தின் வேர்களைப் பற்றிக்கொண்டு அவன் உயிருக்கு போராடிக் கொண்டிருக்க,
அவனுடன் வந்த மற்ற பயிற்சியர்கள் அவனை காப்பாற்ற நினைத்தாலும், மிகவும் குறுகிய வழுக்கலான ஒத்தையடி பாதை என்பதால், தங்கள் உயிரைக் கருத்தில் கொண்டு அவர்கள் அஞ்சி நடுங்க, அஜய் சற்றும் யோசிக்காமல் தான் கொண்டுவந்த கயிற்றின் ஒரு நுனியை அங்கிருந்த பெரும்பாறை ஒன்றின் கழுத்து போன்ற சற்று வளைவான பகுதியில்
முடிச்சிட்டு விட்டு, அதன் மறு பகுதியை தன் இடுப்பில் கட்டிக்கொண்டு, அந்த குறுகலான பாதையில் வழுக்காமல் மிகுந்த கவனத்தோடு பயணித்து,
மரக்கிளையை பற்றிக்கொண்டு தொங்கும் அர்ஜுனை மிகுந்த போராட்டத்திற்குப் நடுவில் நெருங்கி கரம் கொடுத்து தூக்கி தன்னோடு இணைத்துக் கொண்டு ,பிறகு கயிற்றைப் பற்றியபடி , மெல்ல ஏறி நடந்து ஒருவர் பின் ஒருவராக இருவரும் ஒத்தையடிப்பாதையை அடைந்தனர் .


இந்த எதிர்பாராத சம்பவத்தால் அர்ஜுனின் இரு கரங்களிலும் பெரும் சிராய்ப்பு மற்றும் சுளுக்கும் ஏற்பட,
பிறகு வந்த ஒரு வாரம் முழுவதும்
அவனுக்கு உணவு ஊட்டுவது, ஆடை அணிய உதவுவது, முகச்சவரம் செய்து விடுவது, அவனுக்கென்று வழங்கப்பட்ட பயிற்சி அறிக்கையை தயார் செய்வது என அனைத்தையும் மனமுவந்து செய்தான் அஜய்.


அதன் பின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும்
தன் உடம்பில் உயிர் இருப்பதற்கு ஒரே காரணம் அஜய் தான் என்கின்ற எண்ணமே, அவன் மீது கொண்டுள்ள நட்பை வேறு நிலைக்கு உயர்த்த அர்ஜுனுக்கு உதவியாய் இருந்தது.


பிறகு வந்த நாட்களில், அவர்களின் இணை பிரியாமையைப் கண்டு அந்தக் குழுவில் உள்ள பயிற்சியர்கள் இருவரும் இரட்டை பிறவிகளா என்ற ஆராய்ச்சியை மேற்கொண்டனர்.


அஜய் மகாராஷ்டிராவிலுள்ள நாசிக்கிலும்,
அர்ஜுன் தமிழ்நாட்டிலுள்ள கோயம்புத்தூரிலும், ஒரே ஆண்டு, ஒரே தேதி (26) என்றாலும், அவன் ஜனவரி மாதத்திலும் அர்ஜுன் நவம்பர் மாதத்திலும் அவதரித்திருந்தனர். அதாவது ஒரே ஆண்டில் அஜய் பிறந்து பத்து மாதம் கழித்து அர்ஜுன் பிறந்திருந்தான்.


அஜய்யின் தாயார் கருவுற்றிருக்கும் போதே, இந்தியா ராணுவத்தில் மேஜராக பணிபுரிந்து கொண்டிருந்த அவனது தந்தை தீவிரவாத தாக்குதலில் இறந்துவிட்டார்.


இவற்றையெல்லாம் ஆராய்ந்து, கடைசியாக ஒருவரைப் போன்று மற்றொருவர் உருவ ஒற்றுமையில் ஒன்றாக இருக்கும்
'லுக் அலைக்' (look-alike) என்ற முடிவுக்கு வந்தனர் உடன் பயிலும் பயிற்சியர்கள்.


அப்போது அஜய்,


" நான் என் அப்பாவை போட்டோல தான் பார்த்திருக்கேன்... நான் முழுக்க முழுக்க உடல் வாகு, உயரம் , முக ஜாடை எல்லாம் அப்பாதான்... ஆனா கலர் மட்டும் என் அம்மா மாதிரி ... அப்பா மாநிறம்தான் ... நீ உங்க அப்பா மாதிரியா... இல்ல அம்மா மாதிரியா ..." என கேள்வி எழுப்ப, அதற்கு தன் தாய் தந்தையின் முக ஜாடையை முதன்முறையாக தன்னோடு மனதில் ஒப்பிட்டு பார்த்தவனால் எந்த ஒரு முடிவுக்கும் வர முடியாமல் போக,


" நான் என் அப்பா அம்மா ரெண்டு பேர் மாதிரியும் தான் இருக்கேன்னு நினைக்கிறேன்... உன்னை மாதிரி என்னால தெளிவா சொல்ல முடியல அஜய் ..." என்றான் அர்ஜுன்.


உடனே அஜய்


" இந்த உலகத்துல ஒருத்தரை மாதிரியே 7 பேர் இருப்பாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன் ... என்னை மாதிரியே இருக்கிற நீ இப்ப என்கூட இருக்க, நம்மள மாதிரியே இருக்கிற மீதி அஞ்சு பேர் எங்கடா இருப்பானுங்க ..." என்று குறும்புடன் கேள்வி எழுப்ப,


" கவலைப்படாத, ராஸ் ட்ரைனிங் (RAS Training) பார்ப்ப...." என்றான் அர்ஜுன் அதே குறும்போடு.

இந்நிலையில் ஒருநாள் அஜய்யின் கைப்பேசி தொடர்ந்து அடித்துக்கொண்டே இருக்க, அருகில் இருந்தும் அவன் அதை எடுக்காமல் பயிற்சி சம்பந்தமான அறிக்கையை தயார் செய்வதில் முனைப்பாக இருக்க
அக் கைபேசியின் ஒளிர் திரையை பார்த்த அர்ஜுன் ,


"யாருடா இது ஃபயர்(Fire)...ஏண்டா போனை எடுக்க மாட்டேங்குற ..."


"என் ஸ்வீட் ஹார்ட் ... அவ என்னை லவ் பண்றா .... நான் அதைவிட அதிகமா அவளை லவ் பண்றேன் ... ஆனா அதை இது வரைக்கும் சொன்னதே இல்ல... அதான் என்னை விடாம துரத்திக்கிட்டே
இருக்கா..."


"ஏன், என்ன பிரச்சனை ..."


"உனக்கு தெரியுமில்ல... ரா ஏஜன்ட்டா ஆகிறது தான் என்னோட ஆம்பிஷனேன்னு...
ஒரு ரா ஏஜென்ட்டோட லைஃப் எவ்ளோ கஷ்டம்னு உனக்குத் தெரியும் ....


டிஃபன்ஸ்ல ஒர்க் பண்றவங்க மாதிரி லீவு கூட கிடையாது ... எப்ப வேணாலும் எது வேணாலும் நடக்கலாம்... வருஷக்கணக்குல வேற நாட்ல போய் இருக்கணும்.... என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா அவளுக்கு எந்த சுகமும் கிடையாது டா ... அதை அவகிட்ட பலமுறை சொல்லிட்டேன்... கேக்கவே மாட்டேங்குறா....அதான் ஃபோனை எடுக்காம இருக்கேன் ... நான் ஃபோனை எடுக்கலைன்னா அவ நிச்சயம் வருத்தப்படுவா, அதை நினைச்சு தான் ரொம்ப கஷ்டமா இருக்கு ...." என்று மெலிதாக கண் கலங்கினான்.


உடனே அர்ஜுனுக்கு தன்னுடைய ஒருதலைக்காதல் நினைவுக்கு வர,


"இங்க பாரு அஜய், நீ ஆத்மார்த்தமா விரும்பற நபர் உன்னை அதே ஆத்மார்த்ததோட விரும்பறது பெரிய விஷயம் ....
அது உன் வாழ்க்கையில அழகா நடந்திருக்கு ... வீணா உன் லட்சியத்தையும் காதலையும் போட்டு குழப்பிக்காத.... உன்ன உள்
அன்போடு நேசிக்கிற ஒரு ஜீவன் இந்த உலகத்துல இருக்கிறதே சந்தோஷமான விஷயம் ...
தயவு செஞ்சு அதை இழந்துடத...


நாம நேசிக்கிற ஒருத்தர், நம்மை நேசிக்காம இருக்கிறது, எவ்ளோ பெரிய கஷ்டம்னு எனக்கு நல்லா தெரியும் ...." என்ற அர்ஜுனின் கமரிய குரல், ஏதோ அஜய்க்கு உணர்த்த,


" சொல்லு யார் அந்த பொண்ணு ஏ.கே ... நீ பேசறது இயல்பா மத்தவங்களுக்கு அட்வைஸ் பண்ற மாதிரி இல்ல.. உள் பூர்த்தியா உணர்ந்து சொல்ற மாதிரி இருக்கு ... சொல்லு ..." என்றான் விடாமல்.


" நான் என் அத்தை பொண்ணை சின்ன வயசுல இருந்து ரொம்ப லவ் பண்ணேன் ... ஆனா அவ என்னை விரும்பல..." என்றான் மேம்போக்காக.


"நான் ஒன்னு சொல்லட்டுமா ... நீ ஆசைப்படற அந்த பொண்ணு நிச்சயமா உன்னை தேடி ஒரு நாள் வருவா ... உன் காதல் உண்மையானது ஏ.கே ... இது சத்தியமா நடக்கும் பாரு...." என்றவன் பேசிக்கொண்டிருக்கும் போதே வானில் தெரிந்த ஒரு வால் நட்சத்திரம் தரை நோக்கி விழ,


" பாத்தியா, இந்தப் பிரபஞ்சமே நான் சொன்னதை சரின்னு சொல்லுது ..." என்றான் அதை காட்டி.


உடனே குலுங்கி சிரித்த அர்ஜுன் ,


" இதையெல்லாம் கூட நீ நம்புவியா..."


" இதெல்லாம் சூப்பர்சீஷீயஸ்ஸா இருந்தாலும், சில சமயம் எமோஷனலா இருக்கும் போது ரொம்ப சப்போட்டிவ்வா இருக்கும் ஏ.கே ..." என்றான் ஒற்றைக் கண் சிமிட்டி.

" சரி, என் கதையை விடு ... உன் ஆள் கிட்ட உன் லவ்வ சொல்ற வழியை பாரு ... உன் ஆள் பேர் என்ன...
ஃபயரா.... என்னடா பேரு இது... புதுசா இருக்கு...." என அர்ஜுன் இயல்பாக கேள்வி எழுப்ப,


" அவ நெருப்பா இருப்பா ... அதான் அந்த பேரு வச்சிருக்கேன் .. அவளும் மதராஸி தான் ..
அவங்க அப்பாவும் என் அப்பா மாதிரி
ஆர்மில மேஜரா இருந்தப்ப ஒரு டெரரிஸ்ட் அட்டாக்ல இறந்து போயிட்டாரு ... அவ பே..." என்றவன் சொல்ல வரும் போது அவனது கைபேசி மீண்டும் ஒலிக்க, அதன் ஓளிர் திரையில் ஃபயர் என காட்ட,


" போ, போயி உன் லவ்வ சொல்லு ..." என்று அர்ஜுன் தள்ள, நட்புடன் சிரித்தபடி கைப்பேசியோடு வெளியேறினான்.


பொதுவாக அங்கு மாலையில் நடக்கும் கேளிக்கை நிகழ்ச்சிகளில் ஆண் பெண் பேதமில்லாமல் அனைவரும் பங்கெடுத்துக் கொண்டு பேசி விளையாடி மகிழ்வது வழக்கம். அதில் எப்பொழுதுமே அஜய் அர்ஜுன் இருவருமே பெண்களிடம் மட்டும் ஒருவித ஒதுக்கத்தைக் கடைப்பிடித்தனர்.


அர்ஜுனாவது கேட்ட கேள்விக்கு பதில் அளிப்பான், ஒரு சில ஹாசியங்களில் கலந்து கொள்வான். ஆனால் அஜய் எட்டடி தள்ளி நிற்பதோடு, பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் இருக்கும் பட்சத்தில் புன்னகையோடு கடந்து விடுவான்.


" ரா ஏஜன்ட் ஆகணும்னு நினைக்கிற... ஜேம்ஸ்பாண்ட் லைஃப் வாழப்போற...
இப்படி பொண்ணுங்களை பாத்து தெறிச்சு ஓடினன்னா சரியா மாட்டுவ ... " என நெருங்கிய நட்பு வட்டத்தோடு அர்ஜுனும் இணைந்துகொண்டு கேலி பேச


" அது மட்டும் ஏனோ எனக்கு செட் ஆகல டா என் ஸ்வீட் ஹார்ட்க்கு துரோகம் பண்ற மாதிரியே ஒரு ஃபீல்..."
என்றவனின் பேச்சு தன் மன உணர்வோடு ஒத்துப்போவதை எண்ணி வியந்தவனுக்குத் தெரியாது
இருவரின் இதயத்திலும் வாழ்வது ஒரே தேவதை தான் என்று.


அதன் பின்வந்த நாட்களில் கிடைக்கும் நேரமெல்லாம் அஜய் அக்னியுடன் கைபேசியில் செலவிட, அர்ஜுன் மற்ற பயிற்சியரோடு தன் நேரத்தை செலவிட ஆரம்பித்தான்.


அஜய்க்கு கால் பந்தாட்டாம் என்றால் உயிர் . ஒரு நாள் அஜய், அர்ஜுன் இரு அணிகளாகப் பிரிந்து கால் பந்தாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது, அர்ஜுன் பூந்துவளையை எடுப்பதற்காக பெவிலியனுக்கு செல்ல, அங்கு அஜய்யின் கைபேசி சிணுங்கி கொண்டிருக்க ,ஒளிர் திரையைப் பார்த்தவன், உடனே கால்பந்தாட்ட மைதானத்திற்கு ஓடி வந்து,


" அஜய்.... ஃபோன் ஃபிரம் ஃபயர் ....(Phone from fire)..." என்று சிரித்தபடி ஆரவாரத்தோடு அழைக்க,
அதுவரை விளையாட்டில் அஜய் காட்டிய தீவிரம், கடுமை எல்லாம் காணாமல் போய், வெட்கம் கலந்த புன்னகை அவன் முகத்தில் எட்டிப்பார்க்க
அதனைப் பார்த்து ரசித்தபடி,


" ஃப்ரெண்ட்ஸ் மேட்ச் முடிஞ்ச் ...எல்லாரும் கிளம்புங்க... இனிமே கேப்டன் ரொம்ப பிசி ..." என கேலி பேசியவனின் முதுகில் சிரித்தபடி ஓங்கி தட்டி விட்டு நடையை கட்டினான் அஜய்.


அதன் பின் ஓரிரு வாரம் கழித்து, மதிய உணவின் போது ,


" என்ன...., உன்னோட ஃபயர் என்ன சொல்றாங்க ..." என்று குறும்போடு கேட்ட அர்ஜுனை பார்த்து,


" அவ சின்ன பெண்ணுடா... இன்னும் படிப்பைக் கூட முடிக்கல.... இப்போதைக்கு ஒரு விஷயத்தை மட்டும் கிளியர் பண்ணியிருக்கேன் ...


மொதல்ல ஒரு வருஷம் ரா ட்ரெய்னிங் ... அதுக்கப்புறம் ஏதாவது ஒரு நாட்டுல ரெண்டு வருஷமோ, நாலு வருஷமோ என் தாய் நாட்டுக்காக , அதனோட பாதுகாப்புக்காக உளவு பார்த்துட்டு திரும்பி வந்து தான் கல்யாணம்னு சொல்லி இருக்கேன்...


இதுக்கு நடுவுல உன் வாழ்க்கையில வேற யாராவது வந்து உன் மனசுக்கு பிடிச்சிருந்தா நீ கல்யாணம் பண்ணிக்கலாம் ...எனக்காக காத்துக்கிட்டு இருக்கனும்னு அவசியமில்ல.... ஏன்னா என்னோட லைஃப் நிரந்தரம் இல்ல.... உன்னோட படிப்பு தான் உனக்கு நிரந்தரம் முதல்ல அதை முடின்னு சொல்லி வச்சிருக்கேன் டா ... சரின்னு சொல்லி இருக்கா பார்க்கலாம் ..." என்றான் எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனையில்.


பிறகு வந்த தினங்களில் பயிற்சியின் தீவிரம் அதிகரிக்க, அன்றாட பயிற்சி நேரம் முடிந்ததும் , அவரவர்களுக்கென ஒதுக்கப்பட்ட பணிகளை செய்து முடிக்கவே நேரம் சரியாக போக, ஒரே அறையில் இருந்தாலும் பாடத்தைப் பற்றிய பேச்சுக்கள் மட்டுமே அவ்விருவரால் பேச முடிந்த நிலையில், தேர்வுகளும் வர முழுக்க முழுக்க
கவனம் அதில் சென்று விட்டது.


பயிற்சி முடிந்த கடைசி நாள், ஏதோ கல்லூரி கால நட்பு போல் இருவருக்குமே அந்த பிரிவு உவப்பைத் தரவில்லை.


அது தான் அஜய்யை உயிருடன் நேரடியாக பார்க்கும் கடைசி தருணம் என உள்ளுணர்வு உணர்த்தியதோ என்னவோ, அவனை கட்டி அணைத்து துக்கம் தொண்டையை அடைக்க பிரியா விடை கொடுத்தான் அர்ஜுன்.


பிறகு அர்ஜுன் சர்தார் வல்லபாய் பட்டேல் நேஷனல் போலீஸ் அகாடமியில்
ஐபிஎஸ் டிரைனிங்கை தொடர, அஜய் RAS (Research Analysis service) தேர்வு எழுதி நேரடியாக ரா ஏஜென்டு பயிற்சிக்காக தேர்வானான்.


ஒன்றரை வருடம் நடக்கும் ரா பயிற்சி, மிகவும் கடுமையானது. கொடுக்கப்படும் பயிற்சி மட்டுமல்ல, பயிற்சியர்கள் தன் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் எவ்வித தொடர்பிலும்( no electronic gadgets and social media) இருக்கக்கூடாது என்பது விதி.


ஆதலால் பயிற்சியில் சேருவதற்கு முன்பு ஒருமுறை அர்ஜுனை தொடர்பு கொண்டு பேசிய அஜய், பயிற்சி முடிந்த பிறகு மீண்டும் ஒரு முறை பேசினான்.


அதன் பிறகு கிட்டத்தட்ட 2 ஆண்டு காலம் இந்திய அரசாங்கத்திற்காக பாகிஸ்தானுக்கு சென்று உளவு பார்த்து விட்டு வந்தவன், அர்ஜுனை தொடர்பு கொண்டு பேசியதோடு தன் திருமண பத்திரிகையையும் வாட்ஸ் அப்பில் பகிர்ந்தான்.


அப்போது ஒருவரை ஒருவர் முகம் பார்த்து பேச எண்ணி வாட்ஸ்அப் வீடியோ காலில்,( தனிப்பட்ட ரகசிய பிரத்தியேக எண்ணில்)
தொடர்பு கொண்டு பேசும் போது அஜய்யை பார்த்து அசந்து தான் போனான் அர்ஜுன் .


முழுக்க முழுக்க தோற்ற மாற்றங்கள்,
உடல் எடை கூடியிருந்ததோடு, முகம் கொள்ளாத
தாடியுடன் மீசையும் தலை நிறைய முடியுமாய் காணப்பட்டான்.


அடர்த்தியான தலை முடியை அள்ளி குதிரை வால் போட்டிருந்தவனின் தோற்றம் முற்றிலும் மாறுபட்டிருந்தது.


" ஏண்டா, ஐபிஎஸ் ட்ரெயினிங்கு முன்னாடிதான் ஏகப்பட்ட கெட்டப் மாத்திக்கிட்டே இருந்தா... இப்ப உன் கல்யாணத்துலயாவது,
எந்தவித சேட்டையும் பண்ணாம
கிளீன் ஷேவ், ப்ராப்பர் ஹேர்கட்டோட இருக்கக் கூடாதா ..."


" இல்ல ஏ.கே .... ரா ஏஜன்ட்டா போனதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சது, மினிஸ்டர்ஸ், ஐஏஎஸ், ஐபிஎஸ் ஐஎஃப்எஸ்னு நம் நாட்டுல கீ போஸ்ட்ல இருக்கிற நிறைய பேரோட இன்னொரு முகம் ...
பணத்துக்காக நாட்டையே காட்டிக்கொடுத்துகிட்டும் கூட்டி கொடுத்துகிட்டும் இருக்கானுங்க
***** **** .... வாழற நாட்டுக்கு விசுவாசமா இல்லாதவங்கள வெட்டி வீழ்த்தனாலும் தப்பில்ல டா.... ஒரு கப்பல் சுத்தி இருக்கிற கடல் தண்ணியால மூழ்காது ... ஆனா அதே தண்ணி ஒரு சின்ன ஓட்டை வழியா கப்பலுக்குள் வந்தா நிச்சயம் மூழ்கிடும் ... அதுமாதிரிதான் எதிரியைவிட நம்ம கூட இருக்கிற துரோகி ரொம்ப ஆபத்தானவன் , முதல்ல எதிரிகளை அழிச்சுட்டு வந்து, இங்க இருக்கிற துரோகிகளுக்கு முடிவு கட்டறேன் பார்.. நரவேட்டை செஞ்சா தான் களை எடுத்து நாட்டை காப்பாத்த முடியும் ... " என்று ஒருவித தீவிரத்தோடும் வன்மத்தோடும் பேசியவன்


" இன்னும் எந்தப் புத்துல எந்தப் பாம்பு இருக்குதோ தெரியாது... ஒரு பெரிய மிஷன் பாக்கி இருக்கு.... இன்னும் மூணு மாசத்துக்கு அப்புறம் திரும்ப போயாகணும், அதனாலதான் எனக்கு இந்த கெட்டப் தேவைப்படுது... அதோட
ரொம்ப நாள் என் ஃபயரையும் காக்க வைக்க முடியல டா... அதான் கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு எடுத்திட்டேன்... " என்றவன் வேறு சில விஷயங்களைப் பேசி விட்டு அழைப்பைத் துண்டிக்க,
அப்போது அக்னியும் தனது திருமண பத்திரிகையை அனுப்பிவைக்க , இரண்டையும் வைத்துப் பார்க்கும் போது தான் பல விஷயங்கள் அவனுக்கு புரிய வர அதிர்ச்சியின் எல்லைக்கே போனான் அர்ஜுன்.


நண்பனின் காதல் நிறைவேறினால் போதும், அவன் காதலியை பற்றிய தகவல்கள் தனக்கு எதற்கு என்றெண்ணியவனுக்கு அவளை பற்றி கேட்டு தெரிந்துகொள்ள சந்தர்ப்பமும் இல்லை நேரமும் அமையவில்லை.


அதே போல் அக்னியிடமும் தன்னைப் பற்றி குறிப்பிடும் போது ஏ.கே என்றும் மதராஸி என்றும் தான் அஜய் குறிப்பிட்டிருப்பான் என சரியாக அனுமானித்தவனுக்கு


ஒருபுறம் அவன் உயிரை காப்பாற்றிய உயிர் நண்பன் மறுபுறம் அவன் உயிருக்குயிராய் காதலிக்கும் அவன் காதலி, அவர்கள் இருவரும் மணந்து கொள்ளப் போகிறார்கள் என்ற செய்தி நிம்மதி அளித்தாலும் மறுபுறம்
அவனுக்கு உவப்பாகவே இல்லை.


எதிர்மறை எண்ணங்கள் ஆக்கிரமித்து இருந்ததால், முழுமனதோடு ஆசி வழங்க முடியாது என்ற நிலையில் அவர்களின் திருமணத்திற்கு அவன் செல்லவில்லை.


அதே சமயத்தில் அவர்கள் இருவரும் நீண்ட நெடுங்காலம் மிகுந்த மகிழ்ச்சியோடு வாழ வேண்டும் என்ற பிரார்த்தனையையும் அவன் கை விடவில்லை.


அக்னியின் திருமணம் முடிந்து முதலாம் ஆண்டு நிறைவின் போது தான், சுபாவை சந்தித்தான்.


பிறகு நடந்த கலவரம், சுபாவின் இழப்பு , அஷ்வத்தின் பிறப்பு , அர்ஜுனுக்கு நடந்த விபத்து, அஜய்யின் இறப்பு என இருவர் வாழ்விலும் வெவ்வேறு நிகழ்வுகள் ஒன்றன் பின் ஒன்றாக அரங்கேற, கடைசியில் ஊரெல்லாம் சுற்றிய தேர் நிலைக்கு வந்தது போல்,
இருவரும் வாழ்க்கையில் பார்க்கக் கூடாது துன்பங்கள் அனைத்தையும் பார்த்த நிலையில் விதி, தற்போது இருவரையும் திருமணம் என்ற பெயரில் இணைத்து வைத்துள்ளது .


அன்றைய நினைவிலிருந்து மீண்டவன்,


" எந்தெந்த கோலத்துல யார் யாரை பார்க்க கூடாதுன்னு நினைச்சேனோ அந்தந்த கோலத்துல பார்க்க வச்சிட்டான் ஆண்டவன்.... " என்று விரக்தியில் மொழிந்தவனிடம்,


" நீ ஏன் அண்ணிகிட்ட உனக்கும் அஜய்க்கும் இருந்த பிரண்ட்ஷிப்பை பத்தி சொல்லல ..."


" நான் அவனை மாதிரி இருக்கிறது எனக்கு அட்வான்டேஜ் இல்ல விஷ்ணு... டிரா பேக் தான் ... நான் அவனை பத்தி அக்னிகிட்ட சொல்லணும்னா , எல்லாத்தையும் சொல்லியாகணும்... அவன் என் உயிரை காப்பாத்தினது வரைக்கும் .... அதான் நியாயமும்... அப்புறம் என்னைப் பார்க்கும் போதெல்லாம் அவன் நியாபகம் தான் அவளுக்கு வரும் ... இன்னும் அவன் மேல காதல் கூடுமே ஒழிய குறையாது ... ஏற்கனவே
காத்தோட கலந்து காணாம போனவனோட கற்பனைல வாழ்ந்துகிட்டு இருக்கா... அதனால தான் அவன் சம்பந்தமான எந்த நினைவுகளும் அவளுக்கு வரக்கூடாதுங்கிறதுல நான் உறுதியா இருக்கேன் .... அதான் மொத்தமா மறைச்சிட்டேன்....நானும் அவனும் உருவத்துல ஒன்னா இருந்தாலும் அவனோட சுபாவம் வேற என்னோட குணாதிசயம் வேற ... அதனால அவ மனசுல இருக்கிற அஜய்யோட நினைவுகளை மொத்தத்தையும் அழிச்சிட்டு அர்ஜுனா தான் குடியேற ஆசைப்படறேன் .... எந்த சூழ்நிலையிலும் அவனை நினைச்சுகிட்டு அவ என்னை பாக்குறதுல எனக்கு விருப்பமில்ல... நான் நானா தான் அவளுக்கு தெரியணுங்கிறதுக்காக தான் இத்தனை பொறுமை, இத்தனை போராட்டம் ......"


" அண்ணிக்கு அஜய்யை பார்க்கும் போது உன் ஞாபகமே வரலையா... இல்ல உன்னை பாக்கும் போது ஆஜய்யோட ஞாபகம் வந்ததா சொல்லலையா ... "


" அக்னி அஜய்யை சந்திச்சதுக்கு அப்புறம் ஒரே ஒரு தடவ தான் என்னை மீட் பண்ணியிருக்கா... அதுவும் பாதி இருட்டுல .... அதுக்கப்புறம் எட்டு வருஷம் நாங்க சந்திக்கலன்னு தான் சொல்லணும்...
மூணு வருஷத்துக்கு முன்னாடி அஜய்யோடு சாவுக்கு நான் போயிருந்த போது அவ யாரையுமே புரிஞ்சுக்கிற மனநிலைல இல்ல... எனக்கும் அப்ப ஆக்சிடென்ட் நடந்து இருந்ததால, முகத்துல அடி, வீக்கம் , பத்து நாள் ஹாஸ்பிடல் வாசம், முகம் முழுசும் முடி எனக்கே என்னை அடையாளம் தெரியாத நிலை ..


அது மட்டும் இல்ல அஜய் காலேஜ் முடிச்சதுக்கு அப்புறம் சிவில் சர்வீஸ் எக்ஸாம்காக பிரிப்பேர் பண்ணிக்கிட்டு இருக்கும் போதே எப்பவுமே கெட்அப் மாத்திகிட்டே இருப்பானாம்.. அப்ப தான்
அக்னியை ஃபர்ஸ்ட் டைம் மீட் பண்ணி இருக்கான்...
சில சமயம் தாடி மீசையோட, சில சமயம் மொட்டை அடிச்சிகிட்டு மீசையில்லாம தாடியோட, அடிக்கடி டிஃபரண்ட் கலர்ஸ் லென்ஸ் கண்ணுக்கு யூஸ் பண்றது, சில சமயம் அளவுக்கு அதிகமா தலை முடி வளர்த்து போனி டெயில் போட்டுகிறதுன்னு அவன் ரா ஏஜன்ட்டா ஆகணுங்கிற ஆசையால அவன் முகம் யாருக்கும் ரெஜிஸ்டர் ஆக கூடாதுன்னு அப்படி ஒரு தொழில் பக்தி...


ஃபுட்பால்ல எக்ஸ்பர்ட்டைஸ் ..ஸ்டேட் லெவல்ல செலக்ட் ஆகியும் அவன் ஃபேஸ் ஃபேமிலியரிஸ் ஆகக்கூடாதுன்னு கடைசி வரைக்கும் விளையாடலயாம்...
அவன் என் கூட இருந்த அந்த மூணு மாசம் அஸ் பர் த ட்ரெய்னிங் ரூல்,
கிளீன் ஷேவ், புரோபர் ஹேர்கட்டோட இருந்ததால நாங்க ரெண்டு பேரும்
மத்தவங்க கண்ணுக்கு டுவின்ஸா தெரிஞ்சோம்.... கடைசியில பாகிஸ்தான்ல இருந்து திரும்பி வந்து டிஐஜி பொறுப்பேற்றுகிட்டதுக்கு அப்புறம் கிளீன் ஷேவ், போலீஸ் கட்னு
இருந்ததால,இப்ப எங்க உருவ ஒற்றுமை அக்னிக்கு தெரியுது ...


அஜய்யோட மறைவுக்கு அப்புறம் என்னோட மட்டும் இல்ல வேற யாரோடையும் அவ பேசறதே இல்ல..
அப்படியே அவ தேவைக்கு பேசினாலும் முகத்தை பார்த்து பேச மாட்டா...
எங்க கல்யாணத்துக்கு அப்புறம் எப்பவாது ஒருசமயம் ரெண்டு பேரும் பேசும் சந்தர்ப்பம் அமையும் போது அவகிட்ட ஒரு ஆராய்ச்சி பார்வை தெரியும் ... அந்த மாதிரி நேரத்துல அவ ஏதாவது சொல்றதுக்கு முன்னாடி நானே பேச்சை மாத்திடுவேன்..."
என்றவனின் பேச்சை இடைவெட்டி


" நீ பார்க்க ஏறக்குறைய அஜய் மாதிரியே இருக்க,
அப்ப உன்னை பார்க்கும் போது அஜய்யை பத்தின ஞாபகங்கள் அண்ணிக்கு வர்றது சகஜம் தானே...."


" அதாண்டா என் பிரச்சனையில இருக்கிற பெரிய சேலஞ்சே ... .... அஜய் அக்னியோட லவ்வ ஐபிஎஸ் ட்ரெய்னிங்கில் இருக்கும் போதுதான் அக்சப்ட் பண்ணினான் ...
பவுண்டேஷன் கோர்ஸ் முடிஞ்சதும் கேம்பஸ்ல RAS எக்ஸாம் எழுதி செலக்ட் ஆகி ரா ஏஜென்ட்டா ட்ரெய்னிங் போய்ட்டான்...


அந்த ட்ரெய்னிங் கிட்டத்தட்ட ஒன்றரை வருஷம்.


ட்ரெய்னிங் முடிஞ்சு வந்ததும், அவனுக்கு பாகிஸ்தானுக்கு போகணும்னு அசைன்மென்ட் கொடுத்திருந்தாங்க...
அந்த நாட்டோட மொழி, கலாச்சாரம் ,அரசியல், மக்களோட மனநிலை, கிளைமேட்னு எல்லாத்தையும் தெரிஞ்சிகிறதுக்காக
இந்தியால மூணு மாசம் ட்ரெய்னிங்ல இருந்தான்.
அப்புறம் பாகிஸ்தான் போயி கிட்டத்தட்ட ரெண்டு வருஷம் கழிச்சு திரும்பி வந்து தான் அக்னியை கல்யாணம் பண்ணிகிட்டான். ஒரு மூணு மாசம் அவளோட இந்தியாவுல இருந்தான் அவ்ளோ தான். அஷ்வத்தை அக்னி ப்ரெக்னன்ட்டா இருக்கும் போதே
மறுபடியும் ஒரு அசைன்மென்ட்காக பாகிஸ்தானுக்கு போயிட்டான்...
அப்புறம் அஷ்வத் பொறந்து பத்து மாசம் கழிச்சு , இந்தியாவுக்கு வந்து
டெல்லில டிஐஜியா பதவி ஏத்துகிட்டான்... பதவி ஏத்துக்கிட்ட இரண்டு வாரத்துலயே ஹார்ட் அட்டாக்ல இறந்து போய்ட்டான்...


அதனால அஷ்வத்தை பொருத்தமட்டில் அஜய் பத்தின ஞாபகங்களே கிடையாது ...
அக்னி அஜய்யோட வாழ்ந்தத விட அவனை நினைச்சுக்கிட்டு வாழ்ந்தது தான் அதிகம்...


அவன் நினைவுகளோடு வாழறதால தான் அவன் இறந்து போயிட்டான்னு அவளால உணரவே முடியல...
இந்த உலகத்துல ஏதோ ஒரு நாட்டுல வாழ்ந்துகிட்டு இருக்கான்னு அவ நம்பறா... அவன் இந்த உலகத்துலயே இல்லங்கிறதை அவளுக்கு உணர்ந்திட்டா, அவனோட ஞாபகங்கள் அவளை விட்டு தன்னால போயிடும்னு தோணுது .."


" அஜய் இந்தியாவுக்கு வரும் போதெல்லாம் உனக்கு போன் பண்ற பழக்கம் உண்டா ப்ரோ ...."


" அவன் ரா ட்ரெய்னிங் முடிச்சுட்டு வந்த போதும், பாகிஸ்தான்ல இருந்து இந்தியா திரும்பும் போதும் சீக்ரெட் நம்பர்ல இருந்து எனக்கு போன் பண்ணி பேசுவான் ...


கடைசி தடவை அவன் போன் பண்ணும் போது நான் ஒரு மீட்டிங்ல இருந்ததால என்னால அந்த கால அட்டென்ட் பண்ண முடியல...
சரி திரும்ப கூப்பிடுவான்னு நினைச்சுக்கிட்டே இருந்தேன்...
கடைசியில திரும்பி வர முடியாத இடத்துக்கே போய்ட்டான்...."


என்றவன் முடிக்கவும் மருத்துவர் வரவும் சரியாக இருந்தது.


" ஏ.கே உங்க வைஃப் இன்னும் ஒன் ஹவர்ல கண் முழிச்சிடுவாங்க...
இன்னைக்கு நைட் இங்க ஸ்டே பண்ணட்டும் ... நாளைக்கு மார்னிங் கிளினிக்கல் சைக்காலஜிஸ்ட் கம் சைக்கியாட்ரிஸ்ட் மிஸஸ் சேஷாத்ரி மேம் வராங்க ... அவங்க ஆன்சைட்டி நியூரோசிஸ் எக்ஸ்பர்ட் ...
உங்க வைஃப் அந்த பிரச்சனைக்காக தான் இந்த மாத்திரை சாப்பிடறாங்க... சோ அதப்பத்தி அவங்க கிளியர் பிக்சர் கொடுப்பாங்க ..." என்று கூறி அர்ஜுனின் சம்மதத்தை பெற்றுக்கொண்டு அவர் வெளியேற, மருத்துவர் கூறியது போல் சற்று நேரத்திற்கெல்லாம் அக்னி கண் விழிக்க ,


" அர்ஜுன், நான் எங்க இங்க ...." என்றாள் பயத்தோடு .
முதலில் தடுமாறியவன் பிறகு சுதாரித்துக்கொண்டு


" நீ மயங்கி விழுந்துட்டம்மா... அதான் உன்னை ஹாஸ்பிடல்ல சேர்க்க வேண்டியதா போச்சு ..."
உடனே கண்ணில் பரபரப்பும் பயத்தோடும்


" அஷ்வத் எங்க...."


" வெளியில விஷ்ணுவோட விளையாடிக்கிட்டு இருக்கான் ..." என்றவன் முடிக்கும் போதே விஷ்ணு
அஷ்வத்துடன் உள்ளே வந்து


" அண்ணி, எப்படி இருக்கீங்க ..." என்றான் இயல்பாக.


ஏனோ அவனுடைய அண்ணி என்ற அழைப்பு அவளுக்கு திகிலை கொடுக்க, அருகில் நின்றிருந்த அர்ஜுனின் கரம் பற்றி இழுத்து நிறுத்தி அவன் இடையோடு ஓன்றிக்கொண்டு ,


" யார் இது அர்ஜுன் ...." என்றாள் கலக்கத்தோடு .


" என் பிரண்ட் விஷ்ணு மா ... இன்டலிஜென்ஸ் ஆபீசரா இருக்கான் ...." என்று விளக்கியும் அவள் கண்ணில் ஒருவித பயம் தெரிய
ஏதோ அவள் மனதில் பிரச்சனை இருக்கிறது என்பதை உணர்ந்து விஷ்ணு வெளியேற, உடன் வந்த அர்ஜுனிடம் ,


" நான் கிளம்புறேன் சீனியர் ..."


"விஷ்ணு... ரொம்ப நாளைக்கு அப்புறம் மனசுல ஏதோ ஒரு சின்ன பயம் ... சுபாவை ஹாஸ்பிடல்ல பார்த்த மாதிரியே இருக்கு இப்ப அக்னியை பார்க்கும் போது .. நாளைக்கு இங்க வர முடியுமா......" என்றவனின் உள்ளுணர்வு சரியாகத்தான் கூறியிருந்தது
அவன் கனவிலும் நினைத்துப் பார்க்காத பிரச்சனையில் அவன் கண்மணி தவித்துக் கொண்டிருக்கிறாள் என்று தெரிய வரும் போது.


" ஷ்யூர் அர்ஜுன்... அஷ்வத்தை நான் வீட்டுக்கு கூட்டிட்டு போகட்டுமா "


" வேணாம் டா ... நாங்க தங்குறதுக்கு ரூம் இருக்கு நான் பார்த்துக்கிறேன் ..." என்றவனை
நட்போடு பார்த்து விட்டு கிளம்பினான்.


வீட்டிற்கு வந்த விஷ்ணுவிற்கு, ஸ்ரீயிடம் பேச வேண்டிய விஷயங்கள் பல இருந்தன.


இரவு 8 மணிக்கு அவளை தொடர்பு கொண்டவனிடம்,


" விஷு, நானே உங்களண்ட பேசணும்னு காத்துண்டிருந்தேன் நீங்களே போன் பண்ணிட்டீங்கோ..." என்றவளின் ஆவலில் தன்னை மறந்தவன், பிறகு சுதாரித்துக்கொண்டு திருமண ஏற்பாடுகளைப் பற்றி மேலோட்டமாக பேசிவிட்டு,


" ஸ்ரீ, நம்ம கல்யாணத்துக்காக நாம தமிழ்நாடு போனவுடனே, முதல்ல போய் பார்க்க வேண்டியவங்க
' நூரி அம்மா ...' "


" யார் அவங்க ..."


" அவங்க பேரு நூரி சலீம்... அவங்க ஒரு ட்ரான்ஸ் ஜெண்டர் ... "


" அப்படின்னா ..."


" திருநங்கை ... இந்தியாவிலேயே 1987ல இரண்டாவது எச்ஐவி நோயாளியா அறிவிக்கப்பட்டவங்க ...
இப்ப அவங்க தன்னைப் போலவே
எச்ஐவியால பாதிக்கப்பட்ட 45 மனநலம் குன்றிய குழந்தைகளை
' எஸ்ஐபி மெமோரியல் டிரஸ்ட்' மூலமா பாதுகாத்து வளர்த்துட்டு வராங்க ..."


" எக்சலெண்ட், இன்ஸ்பிரிங் வுமன் ...
ஆனா நாம ஏன் அவங்களை போய் பாக்கணும் , அதுவும் நம்ம கல்யாணத்துக்கு முன்னாடி..."
என்றவளின் கேள்வி அவளைப் பொருத்தமட்டில் மிகச் சரியானது ,
என்பதை உணர்ந்தவன்


" ஸ்ரீ.... 100 கோவில், 100 சர்ச், 100 மசூதி செய்ய முடியாத விஷயத்தை, இந்த நூரி அம்மா மாதிரியானவங்க மனசால வாழ்த்தின நிச்சயம் நடக்கும் ...
வாழ்க்கை தனக்கு எத்தனை சந்தோஷத்தை கொடுத்திருந்தாலும் சான்ஸ் கிடைக்கும் போதெல்லாம் அடுத்தவங்களுக்கு கெட்டது நினைக்கிற, செய்யற மக்களுக்கு மத்தில,


அவங்க ஒரு திருநங்கை, ஆரம்பத்துலயே அடி மடியில ஆண்டவன் அடிச்சிட்டான்... அதுக்கப்புறம் எச்ஐவி பாஸிடிவ் பர்சன் வேற ... ரொம்ப ஏழ்மையான குடும்பம் , எட்டு வயசிலிருந்து நிறைய கொடுமைகளை அனுபவிச்சு சாப்பாட்டுக்கே ரொம்ப கஷ்டப்பட்டிருக்காங்க ...
அவங்களுக்கு வாழ்க்கை எந்த ஒரு நல்ல விஷயத்தையும் கொடுக்கல, நானே நல்லா இல்ல, கஷ்டப்படறேன்... நான் ஏன் அடுத்தவங்களுக்காக இவ்ளோ கஷ்டப்படணும்னு நினைக்காம, தான் வாழ்க்கையில சந்திச்ச பிரச்சனைகள் அடுத்தவங்க சந்திக்கக்கூடாதுன்னு அவங்களுக்கு ஆதரவா இருக்காங்க பாரு அதுக்காக தான் ...
அவங்க ஒரு குழந்தைக்கு தாயாக முடியலன்னாலும் இன்னிக்கு 45 குழந்தைங்க அவங்களை 'அம்மா' னு ஆசையா கூப்பிடுது ... இவங்களை பார்த்து நாம ஆசிர்வாதம் வாங்கிக்கிட்டோம்னா , நம்ம கல்யாண வாழ்க்கையில எந்த குறையும் இல்லாம நல்லா இருப்போம்னு என் மனசு நம்புது
ஸ்ரீ ...." என்று முடித்தான் கமரிய குரலில்.


" நிச்சயமா விஷூ, எங்கெல்லாம் நல்ல விஷயங்கள் இருக்கோ, அங்கெல்லாம் நான் இருப்பேன்னு பகவான் கிருஷ்ணர் சொல்லியிருக்கேரே.... அவாளோட ஆசிர்வாதம் இருந்தா நாம ஆசைப்பட்ட மாதிரி மூணு குழந்தை பொறக்கும் ... அவா பெரியவளானதும், அவாளுக்கு கல்யாணம் பண்ணி பேரன் பேத்தி எல்லாம் பார்க்கலாம்... " என்றவளின் பேச்சு தலையில் அடித்துக் கொள்ள வேண்டும் போல் இருக்க ,


இங்க ஒன்னுக்கே வழியக் காணோம்...
கடவுளே எங்க சுத்தினாலும் குழந்தை கிட்ட வந்து நிற்கிறாளே ... என்றவன் எண்ணிக்கொண்டிருக்கும் போதே, ஸ்ரீ
உற்சாகத்தோடு


" நம்ம கல்யாணத்துக்கு தை மாசத்துல நாள் பார்க்கணும்னு அம்மா சொல்லிண்டு இருக்கா..." என்றதை கேட்டு துணுக்குற்றவன்,


" உன்னோட த்ரீ டேஸ் முடிஞ்சு போச்சா ..."


" என்ன த்ரீ டேஸ் ..."


" மட்டி ..."


" ஓ... அதுவா .. இன்னும் அதுக்கு ஒரு வாரம் இருக்கு ..." என்றாள் சிறு வெட்கத்தோடு மென்மையாக .


" அப்போ, அதுக்கப்புறம் மேரேஜ் டேட் ஃபிக்ஸ் பண்ணிக்கலாம்... சரியா..." என்றவனின் மனது வேகமாக கணக்கிட்டது.
திருமண தேதிக்காக ஜோசியரை சென்று பார்ப்பதற்கு முன் மருத்துவரை சென்று பார்க்க வேண்டும் என்று குறித்துக்கொண்டவன்


" ஸ்ரீ, நீ வெறும் பேச்சிலர் டிகிரி தானே, மாஸ்டர்ஸ் ஏதாவது படியேன் ..." என்றவனின் பேச்சில் ஆடி போனவள்,


" ஐய்யய்யோ ,எனக்கு படிப்புன்னாலே அலர்ஜி... எப்படியோ கஷ்டப்பட்டு யுஜி பாஸ் பண்ணிட்டேன்.. இப்ப பிஜி படிக்கனுமா.... ம்ஹூம்... நான் மாட்டேன் பா... ஆமா நான் எதுக்கு இப்ப படிக்கணும் ...."


" அறிவை வளர்த்துக்க தான்..."


" அது என்ணின்ட நிறையவே இருக்கு ..."


" அதான் பார்க்கும் போதே தெரியுதே... காது வழியா கசியுதே...
நானும் யுஜி தான்...அட்லீஸ்ட் நீ பிஜி படிச்சா நான் ரொம்ப சந்தோஷப்படுவேன் ... எம் எஃப் எம் (MFM) படிக்கிறியா ... அதுக்கான ஏற்பாடு செய்யறேன் ..."


" ஒரு வேளை நான் கல்யாணத்துக்கப்புறம் குழந்தை உண்டாகிட்டா, எப்படி படிப்பேன் எப்படி எக்ஸாம்க்கு போவேன் ..."


" உண்டான தானே ..."


" என்னது ..."


" இல்ல உண்டாகிட்ட போக வேணாம்னு சொல்ல வர்றேன்.... சரியா அதுவரைக்கும் படி ..." என்று ஆற்றாமையோடு முடித்துக்கொண்டான்.


தகிப்பாள்
 
அத்தியாயம் 29

மறுநாள் திருமதி. சேஷாத்திரி முன்பு அர்ஜுன் அமர்ந்திருக்க, அவன் முகத்திலிருந்தே இந்த சூழ்நிலையும் நடப்பவைகளும் அவனுக்குப் புதிது என்பதை உணர்ந்தவர்

" வெல், உங்க வைஃப் எதுக்காக இந்த ரெண்டு டிராக்ஸ்ஸ எடுத்துக்கிறாங்கனு தெரியுமா ஏகே சார் ..."

" சரியா தெரியல மேம்... ஏதோ ஆங்சைட்டி..." என்றவன் இழுக்க

" அவங்களுக்கு ஆங்சைட்டி நியூரோசிஸ்ன்னு ஒரு டிசீஸ் இருக்கு.
இந்த வியாதி இருக்கிறவங்களுக்கு தூக்கமே வராது ... தூங்குறதுக்காக இந்த முதல் மாத்திரை, பகல்ல முழிச்சுகிட்டு இருக்கிற நேரத்துல மன அழுத்தம் அதிகமா இருக்கும், எதையோ ஒரு விஷயத்தை நினைச்சு அவங்க மனசு பயந்துகிட்டே இருக்கும் ... அதனால எதுலயும் அவங்களால கான்சன்ட்ரேட் பண்ண முடியாது ஒரே படபடப்பா இருக்கும் ... அதுக்காக இந்த ரெண்டாவது மாத்திரை மோஸ்ட் பவர்புல்
ஆன்ட்டி டிப்ரசன்ட் டேப்லட் ...
சரி, எவ்ளோ வருஷமா இந்த டேப்லெட்ஸ எடுத்துக்கிறாங்க ..."

" தெரியாது மேம்..." என்ற அர்ஜுனின் பதில் அவரை கோபம் கொள்ள செய்ய,

" பெரிய எஸ்.பி நீங்க.. நாட்டுல என்ன நடக்குதுன்னு தெரிஞ்ச உங்களுக்கு, உங்க வீட்ல என்ன நடக்குதுன்னு தெரியலயே சார்...

நம்ம நாட்டுல மட்டும் தான் சார், ஸ்ட்ரஸ், ஆங்சைட்டி எல்லாம் ஒரு வியாதியாவே பாக்குறது இல்ல... கண்ணுக்கு தெரிஞ்ச ரணத்துக்கும் வலிக்கும் மட்டும் தான் நாம மரியாதை கொடுக்குறோம் .... மனசுன்னு ஒன்னு இருக்குங்கிறதையே நாம மறந்து போயிடறோம்...

எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்னு சொல்லுவாங்க... எங்களை கேட்டா நாங்க மனசே பிரதானம்னு சொல்லுவோம்....

ஒரு மனுஷனுக்கு எல்லாம் இருந்தும் மனசு மட்டும் சரி இல்லைன்னா அது அவன் உடம்ப மட்டும் இல்ல அவனோட வாழ்க்கையையே ஒன்னும் இல்லாம பண்ணிடும் ...

அதே சமயத்துல
மனசு ஆரோக்கியமா சரியா இருந்ததுன்னா, அது அவன் உடல்நலத்தையும், வாழ்க்கையையும் ரொம்ப சந்தோஷமா மாத்திடும்...

நம்ம மூளையே பலவித ரசாயனத்தால ஆனது தான்.ஒருத்தர் ஏதாவது பெரிய பிரச்சனையில சிக்கி தவிக்கும் போது ஹேப்பி ஹார்மோன்ஸ்னு சொல்ற செரோடோனின், டோபோமைங்கிற ரசாயனம் வெகுவா குறைஞ்சிடும்...
அப்ப மனஅழுத்தம்,உடல் நடுக்கம், தூக்கமின்மை அதிகமாகும்...அதை சரி செய்யறதுக்காக தான் நாங்க சில டேப்லெட்ஸ்ஸ பிரிஸ்கிரைப் பண்ணுவோம்... அதை ஒரு குறிப்பிட்ட கால அளவு தான் எடுத்துக்கணும், அதுவும் குறிப்பிட்ட டோஸேஜ் தான் எடுத்துக்கனும்... ஏன்னா அதுக்கு சைடு எபெக்ட்ஸ் ரொம்ப அதிகம்...

உங்க ஒய்ஃப்
இன்னும் ஆறு மாசம் இந்த மாத்திரையை இப்படியே சாப்பிட்கிட்டு இருந்திருந்தாங்கன்னா , கண் பார்வை மங்கி , கை கால் நடக்க முடியாம போயி, பிரைன் டியூமர், கிட்னி ஃபெயிலியர்ல கொண்டு போய் நிறுத்தி இருக்கும் .. கிட்டத்தட்ட மூணு நாலு வருஷமா சாப்டுகிட்டு இருந்திருக்காங்க சார் ... அதோட பிரஸ்கிரைப்டு டோசேஜை விட ரொம்ப அதிகமா வேற எடுத்துக்கிட்டு இருந்திருக்காங்க ..."
என்றவரின் பதிலை கேட்டு ஆடிப்போனவன், மேம்போக்காக தன் முன் கதைச் சுருக்கத்தை கூற,

" ஓ... அஜய்யோட இழப்பு அவங்களை ரொம்ப
பாதிச்சிருக்கு ... அவங்கள ட்ரீட் பண்றதுக்கு முன்னாடி அவங்க பிரச்சனையை தெரிஞ்சிக்கலாம்னு தான் உங்க கிட்ட பேசினேன் ... நான் அவங்களை மீட் பண்ணிட்டு அப்புறம் உங்களை மீட் பண்றேன் ..." என்றவர் அக்னியுடன் 30 நிமிடம் தனிமையில் பேசிவிட்டு மீண்டும் அர்ஜுனிடம்,

" எனக்கு கொஞ்சம் சந்தேகமா இருக்கு ... அவங்க எதையோ மறைக்கறாங்களோன்னு தோணுது...
அஜய்யோட இழப்பு மட்டும் அவங்களோட பிரச்சனைக்கு காரணமில்ல... வேற எதுக்கோ அவங்க பயப்படுறாங்க... அந்த ஃபியர் ஃபோபியா எதுன்னு கண்டு பிடிச்சா தான் ட்ரீட் பண்ண முடியும் ... அதுக்கு அவங்களுக்கு ஹிப்னோதெரபி பண்ணனும் ...."

" அப்படின்னா ..."

" ஹிப்னாஸிஸ்ன்னு கேள்விப்பட்டிருப்பீங்க ... ஒருத்தரோட செய்கைகள், பயம், தோல்வி உடல்நிலை எல்லாத்துக்கும் அவங்க ஆழ் மனசுல இருக்கிற சில சம்பவங்கள் தான் காரணம் ... அது என்னன்னு கண்டுபிடிச்சி அதை ட்ரீட் பண்ணனும் ...

இப்ப அக்னிக்கு நல்லாவே தெரியும் அவங்க எதுக்காக பயப்படுறாங்கன்னு ஆனா அதை ஏன் வெளியே சொல்ல மாட்டேங்குறாங்கன்னா , அவங்க மனசு திரும்பவும் அந்த சம்பவத்தை நினைச்சு பார்க்க பயப்படுது, அதனால அத பத்தி பேச பயப்படறாங்க ..

ஹிப்னோதெரபி வழியா அவங்களை தன்னை மறந்த நிலைக்குக் கொண்டு போய், அதாவது டிரான்ஸ் ஸ்டேட்னு(Trance) சொல்லுவோம்... அப்ப அவங்க ஆழ் மனசோட பேசும் போது கேள்வி கேட்டா அன் கான்ஷியஸ் ரெஸ்பான்ஸ் வரும் ...
அதை முறையா வழிநடத்தி அவங்க தன்னை மறந்து கொடுக்கிற பதில்களை வச்சு பிரச்சனையை தெரிஞ்சுக்கிட்டு அதற்கான தீர்வையும் அங்கேயே சொல்லிட்டா அது அவங்க ஆழ் மனசுல பதிஞ்சிடும்....

அப்ப கூட ஆழ் மனசோட கண்ட்ரோல் அவங்க கிட்ட தான் இருக்கும்....
சில சமயம் அவங்க பயப்படுற விஷயத்தை பத்தி பேசாம கூட பின் வாங்களாம்... அந்த மாதிரி அவங்க வித்டிரா பண்ணும் போது , அப்ப இந்த ஹிப்னோ தெரபியை டெம்ப்ரவரியா டெர்மினேட் பண்ணிடனும் .. அன்னைக்கு அதுக்கு மேல தொடரக்கூடாது அது அவங்களுக்கு பெரிய ஆபத்தை கொடுக்கும்...."

" இந்த தெரபியை எப்ப பண்ணனும் மேம்..."

" அக்னியை அந்த தெரபிக்காக தயார் பண்ணனும்... அதனால இன்னும் 1 ஹவர் கழிச்சு தான் தொடங்க முடியும் ..." என்றவர் விஷ்ணுவை உற்றுநோக்கி,

" இவரு ..."

" என் க்ளோஸ் ஃப்ரெண்ட் ..பேரு விஷ்ணு ... என் தம்பி மாதிரி மேம்..."

" ஓகே தென்.... ஒன் ஹவர் கழிச்சு அக்னியை நான் கிளாஸ் ரூமுக்கு(Glass room) கூட்டிட்டு போறேன் ... வெளியில இருக்கிற உங்களால அவங்களை பார்க்க முடியும் ஆனா இந்த ஹெட்போனை போட்டுக்கிட்டா தான் அவங்க பேசுறதை கேட்க முடியும். நீங்க ஏதாவது என்கிட்ட கேட்கணும்னா இந்த இன்டர்காம் வழியா கேக்கலாம் ...." என்று இரு ஹெட் போன்ஸை எடுத்து அவர்களிடம் நீட்டிவிட்டு வெளியேறினார்.

ஒரு மணி நேரத்திற்குப் பிறகு , மருத்துவர் அக்னியை மெலிதான இருளும் ஒளியும் கலந்த மிக சிறு விளக்கொளி உள்ள கண்ணாடி அறைக்குள் அழைத்துச் சென்று, சாய்வு படுக்கையில் படுக்க வைத்து, சில புகைப்படங்களோடு ஒரு வித கண்ணாடியில் செய்யப்பட்ட சிறிய மங்கிய பந்து போன்ற உருளையை அவள் கண்களுக்கு அருகே அடிக்கடி காட்டியபடி
சில வரிகளை மீண்டும் மீண்டும் உச்சாடனபடுத்தி, கொஞ்சம் கொஞ்சமாக அவளை தன் நிலை மறக்கச் செய்து கண்களை மூடி உறக்க நிலையில் ஆழ்த்தி, அவள் ஆழ்மனத்தை மட்டும்
மிகுந்த கவனத்துடன் ஒருமுகப்படுத்தி அதனுடன் பேசத் துவங்கினார்.

கண்ணாடி அறைக்கு வெளியே நின்று அனைத்தையும் ஹெட்போனில் கேட்டபடி பார்த்துக் கொண்டிருந்தனர் அர்ஜுன் மற்றும் விஷ்ணு.

மருத்துவர் முதலில் அக்னியின் இளம்பிராயத்தை பற்றி பேச ஆரம்பிக்க, அதற்கு பதிலளித்தவள்
தொடர்ந்து தன் தந்தையின் இறப்பு வரை கூறி முடித்து, கண்கள் மூடிய நிலையிலேயே கண்ணீர் வடிக்க,

" சரி அக்னி, அதை விடுங்க , அஜய்யை எப்ப சந்திச்சீங்க..."

அஜய் என்ற பெயரைக் கேட்டதும் அவள் முகத்தில் ஆயிரம் சோடியம் நீராவி விளக்குகள் ஒளிர,

" அஜய்....என்னோட அஜய் ...
ஒரு ரிபப்ளிக் டேல சந்திச்சேன்.... அன்னைக்கு அவரோட பர்த்டே ... என் காலேஜ் சூப்பர் சீனியர் ... அட்வென்சரஸ், பேட்டரியாட்டிசம் , பிரில்லியன்ஸ் , கேரிங் பார் அதர்ஸ், ஹெல்பிங் நேச்சர்னு
எல்லாதோட கம்பினேஷன் தான் என் அஜய்....." என்றவளின் பேச்சை இடைவெட்டி

" எப்ப நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க..."

" கல்யாணம் ....எங்க கல்யாணம் ரொம்ப அழகா நடந்தது ... ( மெலிதாக சிரிக்கிறாள் ..)
பெரிய போராட்டத்துக்கு அப்புறம் அஜய்யோட மனசை மாத்தி கிட்டத்தட்ட மூணு வருஷம் கழிச்சு நடந்தது ... அஜய் ட்ரெய்னிங் முடிச்சிட்டு பாகிஸ்தான் போயிட்டு வந்ததுக்கப்புறம் ...."

" கல்யாணத்துக்கு அப்புறம் உங்க ரெண்டு பேரோட வாழ்க்கை எப்படி இருந்தது ..."

" ரொம்ப ....ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருந்தது ..." ( தன்னை மறந்து வாய்விட்டு அகலப் புன்னகை பூக்கிறாள்...)

" கல்யாணமாகி ரெண்டு பேரும் எவ்ளோ நாள் ஒன்னா இருந்தீங்க ..."

" த்ரீ மன்த்ஸ்..."

" அந்த டைம்ல ரெண்டு பேருக்குள்ள சண்டையே வந்ததில்லையா ..."

"ம்ம்ம்ம், வந்தது ... நான் குழந்தை வேணும்னு ஆசைப்பட்டேன் ...அஜய்க்கு அதுல விருப்பமில்ல ...
எனக்கு எப்ப வேணாலும் என்ன வேணாலும் நடக்கலாம் ...
ஏற்கனவே எங்க பரம்பரை ஜோசியர் எனக்கு அல்ப ஆயுசுன்னு சொல்லி இருக்காரு.. என் வாழ்க்கைக்கு அப்புறம் உனக்கு ஒரு வாழ்க்கை இருக்கு பில்லு ...அதை நீ அமைச்சிக்க குழந்தை ஒரு தடையா இருக்கக்கூடாது அதனாலதான் குழந்தை வேணாம்னு சொல்றேன்னு சொல்லிக்கிட்டே இருந்தாரு... அவர் அப்படி பேசுறதை கேட்க எனக்கு கோவம் கோவமா வரும் அதனால அடிக்கடி சண்டை வந்தது ... நெகட்டிவா பேசாதீங்கனு சொல்லுவேன்.... நிதர்சனத்தை பேசுறேன்னு சொல்லுவாரு... அவருக்கு அப்புறம் நான் உயிரோட இருக்க வேண்டிய அவசியமே இல்ல ஏன்னா எனக்கான கடமைன்னு இந்த உலகத்துல எதுவுமே இல்லன்னு நான் புரிய வச்சதும் தான் நான் வாழனுங்கிறதுக்காக பொறந்தவன் அஷ்வத் ..."

" அஜய் கிட்ட பிடிச்சது என்ன ..."

" அஜய்யை மொத்தமா ரொம்ப பிடிக்கும் ... இதுல தனியா பிடிச்சதுன்னு சொல்லனும்னா .... அவரோட கேரக்டர் ( வெட்கத்தால் அந்திவானமாய் அவள் முகம் சிவந்தது)

எங்க கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு முறை,

ஏன் ரா ஏஜென்ட் கல்யாணமே பண்ணிக்க கூடாதான்னு கேட்டேன்...
அதுக்கு அப்படியெல்லாம் எந்த சட்டமும் கிடையாது, அவங்கவங்க மனசை பொறுத்ததுன்னு சொல்லிட்டு,
நான் ரெட்ட வாழ்க்கை இல்ல, நாலஞ்சு வாழ்க்கை வாழப் போறவன், என்னோட இந்த தேசத்தை தவிர வேற யாருக்கும் நான் உண்மையா இருக்க மாட்டேன்... இருக்கவும் போறதில்ல...
நான் பாகிஸ்தான் போனா அங்க இருக்குறவங்கள நம்ப வச்சு நம் நாட்டுக்காக உளவு பார்க்கிறதுக்கு அங்க ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிகிட்டு நாலஞ்சு குழந்தை பெத்துகுவேன்... அதே மாதிரி
சைனாக்கு போனா அங்க ஒரு கல்யாணம் பண்ணிகிட்டு ரெண்டு குழந்தை பெத்துக்குவேன்... கல்யாணங்கிற பந்தத்துக்கே நான் தகுதி இல்லாதவம்மா... ஒருத்தனுக்கு ஒருத்திங்கிற இந்திய கலாச்சாரத்தை என்னால காப்பாத்த முடியாது .. அதனால தான் சொல்றேன்னாரு....

நீங்க எந்த நாட்டுக்கு போய், எத்தனை கல்யாணம் பண்ணி எவ்ளோ குழந்தையை பெத்துகிட்டாலும்,
எனக்கும் உங்களுக்கும் பொறக்கக்கூடிய குழந்தை தான் உங்களோட அசல் வாரிசு அது உடம்புல மட்டும் தான் இந்திய ரத்தம் ஓடும் ... அதுக்குதான் உங்களை போலவே தேசபக்தியும் இருக்கும்னு சொன்னேன் ....

உன்கிட்ட பேசி ஜெயிக்க முடியாதுன்னு சொன்னாரு....(வெட்கத்தோடு மீண்டும் ஒரு புன்னகை ...)

" சரி, அஜய் எப்படி இறந்தாரு..." என்ற மருத்துவரின் கேள்வி திடீரென்று அவள் முகத்தை இருட்டு அடைய செய்ய,

" அது வந்து .... அஷ்வத்தை நான் பிரக்னண்டா இருக்கும் போதே பாகிஸ்தான் போயிட்டாரு ... அவன் பிறந்ததுக்கு கூட அஜய்யால வர முடியல ... அவர் பிளான் பண்ணி வச்சிருந்த மிஷனை பாகிஸ்தான்ல சரியா முடிச்சிட்டு, இனிமே ரா ஏஜன்ட்டா தொடர வேணாம் போலீஸ் டிபார்ட்மென்ட்க்கு மாறிக்கலாம்னு முடிவெடுத்து, அவர் இந்தியா வந்தாரு... அப்ப நாங்க டெல்லில இருந்தோம் ... டெல்லில
டிஐஜியா ஜார்ஜ் எடுத்துகிட்டாரு .... அதுக்கப்புறம் கிட்டத்தட்ட ரெண்டு வாரம் ரொம்ப சந்தோசமா போச்சு... அப்பதான் ஒரு நாள் அவங்க அம்மாகிட்ட இருந்து போன் வந்தது ...

நம்ம 'சுலபா வைன்யார்டு'க்கு
இந்தியன் பெஸ்ட் வைன் அவார்ட்ஸ்ல கோல்ட் மெடல் கிடைச்சிருக்கு ... இத்தனை நாள் நீ இங்க இல்ல இப்ப சரியான நேரத்துல தான் வந்து இருக்கே... நாளைக்கு மார்னிங் சன்ரைஸ்ல இருந்து வீடியோ சூட் பண்ண கமிட்டி மெம்பர்ஸ் வராங்க... நீ இங்க இருக்கணும்னு நினைக்கிறேன்... இந்த அவார்டை நீ ரிசீவ் பண்ணனும்னு ஆசைப்படறேன்னு கூப்டாங்க ...
இவரும் இமீடியட்டா கிளம்பி போனாரு.." என முடித்தவள் அதற்கு மேல் பேச முடியாமல் திணற,

" சரி நீங்க ஏன் கூட போகல...."

" அது வந்து ... வந்து ... ஒரு முக்கியமான க்ரைம் சீனுக்கு ரிப்போர்ட் ப்ரிப்பேர் பண்ணனும் ... அதனால ரெண்டு நாள் கழிச்சு நான் நாசிக் வர்றதா சொல்லி அஜய்யை மட்டும் அனுப்பினேன் ..."

" சொல்லு அக்னி, அப்புறம் என்ன ஆச்சு...."

"........................"

" சொல்லுமா ..."

" சொல்லுமா ..."

(குரல் தழுதழுக்க, மூடிய கண்களில் இருந்தும் கண்ணீர் வடித்தபடி )

" மறுநாள் காலையில எங்க அம்மா அஷ்வதோட என் ஆபீஸ்க்கு வந்து,
அஜய்க்கு உடம்பு சரியில்லன்னு சொல்லி நாசிக் கூட்டிட்டு போனாங்க ...
அங்க போனதும் தான் தெரிஞ்சது என் அஜய் ........."

பேச முடியாமல் குரல் உடைய, விக்கி விக்கி அழ ஆரம்பித்தாள்.

ஒரிரு நிமிடம் கழித்து,

" சரி, அஜய் இறந்ததுக்கு அப்புறம் என்ன ஆச்சு ...."

" அஜய்க்கு எல்லாம் முடிஞ்சது.... இனிமே அஜய் என் வாழ்க்கையில இல்லன்னு ஆயிடுச்சு.... 16ம் நாள் காரியம் முடிஞ்ச அன்னைக்கு ராத்திரி ...... அவன் வந்தான் ....
அவன் கூட இன்னொரு ஒருத்தன் வந்தான் ...

நோ.....நோ..... கொன்னுடுவேன் ...
கிட்ட வராத ....
................. நோ.........நோ.........

.....................

செத்து தொலைங்கடா ....."

( முகம் ரத்த நிறத்தில் சிவந்து மூச்சுத்திணறல் அதிகமாகி... மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க ....)

" அவன் ...... அவன் ..." என அவள் தடுமாற

( திரும்பவும் மூச்சுத் திணறல் அதிகமாக, அவள் உடம்பு வெட்டி வெட்டி இழுக்க....)

" ஹோ.... இட்ஸ் ஓகே ...ரிலாக்ஸ் அக்னி ரிலாக்ஸ் .... சரி அத பத்தி நாம இப்ப பேச வேணாம்... " என்று நிறுத்தியவர் சில நிமிடத்திற்கு பிறகு,

" அக்னி, ஆர் யூ ஓகே நவ்.... "

" ம்ம்ம்..."( பெருமூச்சுடன் ...)

" ஆமா, ஏன் நேத்து திடீர்னு ஸ்ட்ரெஸ் உங்களுக்கு ... எதுக்காக தூக்க மாத்திரை போட்டும் உங்களுக்கு தூக்கம் வரல ..."

மருத்துவர் மெலிதாக அவள் தலை கோத,
ஒரு நிமிடத்திற்கு பிறகு , மெல்லிய குரலில்,

" அஜய் நேத்து என்னை பார்க்கவே வரல அதான் ..."

என்றதை கேட்டதும் மூவரின் முகமும் வெளிறிப் போக,

" அஜய் , உங்க கூட இப்பவும் பேசுவாரா..."

" ம்ம்ம்...."

" எப்படி..... எப்படி பேசுவாரு...."

" அது வந்து .... அவர் என் ரூம்க்கு வந்தாலோ, என் பக்கத்துல நின்னாலோ என்னால அவரை உணர முடியும் ... நேரடியா பேசமாட்டாரு.... என் மனசுல ஏதாவது கேள்வி இருந்தாலோ, இல்ல நான் அதிகம் வருத்தப்பட்டாலோ , ஏதாவது ஹோடிங்ஸ்(hoardings) , போர்ட்ஸ்ல(boards) இருக்கிற வாசகங்கள் மூலமா ஆறுதல் சொல்லி வழிகாட்டுவாரு... இல்ல வேறு யாராவது மூலமா அவர் பேசுவாரு.."
என்றவளின் பதிலில் அனைவரும் உறைந்து நிற்க,

" குட் ...
இப்ப எப்படி இருக்கு உங்க லைஃப் ...."

" நல்லாயிருக்கு.... ஓரளவு நிம்மதியா இருக்கேன்...."

" இப்ப நீங்க எங்க இருக்கீங்க.. ..."

" நானும் அஷ்வத்தும் மும்பைல இருக்கோம்...."

" உங்க கூட வேற யாரெல்லாம் இருக்கா ..."

" அது வந்து ...( நீண்ட யோசனை) ...
வந்து ... என் கசின் இருக்காரு ..."
என்றதை கேட்டதும் மருத்துவர் அர்ஜுனை புரிதலாக பார்க்க,

" அவர் எப்படி ..."

" ஜெ....ஜென்டில்மேன் ... அவரால எந்த பிரச்சினையும் இல்ல ... ஒரு ஹவுஸ் மேட் மாதிரி...."

உடனே விஷ்ணு அருகிலிருந்த இன்டர்காம் வழியாக மருத்துவரை தொடர்பு கொண்டு,

" மேம், அந்த 'அவன்' யாருன்னு மறுபடியும் கேளுங்க ப்ளீஸ் ..."

" நோ விஷ்ணு, நோ ...அவங்க ஆல்ரெடி ஒரு முறை வித்டிரா பண்ணிட்டாங்க ... திரும்பவும் ஸ்டிரஸ் பண்ணா அவங்களுக்கு ரொம்ப ப்ராப்ளம் ஆயிடும் ....
சோ, டுடே லெட் மீ ஸ்டாப் ஹியர், தேவைன்னா அடுத்த சிட்டிங்ல பார்த்துக்கலாம் ...." என்று பதிலளித்தவர்,

அக்னியின் மனநிலையை தளர்த்தி ஒய்வெடுக்க செய்துவிட்டு மெல்லிய இசையை ஓட வைத்துவிட்டு அர்ஜுனை நோக்கி வந்தார் .

அர்ஜுனுக்கு அந்த முகம் தெரியாத இரு மிருகத்தின் மீது கொலை வெறி ஏற்பட்ட போது தான் தன் தவற்றையும் ஒருங்கே உணர்ந்தான்.

சிறுவயது முதலே அவன் அக்னியை நன்கு அறிவான்.

அவளது சொல்லும், செயலும் சிந்தனையும் எப்பொழுதும் ஒரே நேர்கோட்டில் இருக்கும்.
ஆர்மி கன்டோன்மென்ட்ல் எந்த ஒரு ஆடம்பரத்திற்கும் வழி இல்லாமல்,
சாதாரண மத்திய தர வசதி வாய்ப்புகளிலேயே பிறந்து வளர்ந்திருந்தாலும் , அர்ஜுனின் ஆடம்பர வாழ்வு என்றுமே அவளை கவர்ந்ததில்லை.

அதே போல் அவளுடைய தாய் கோகிலாவிற்கு அவருடைய தமையன் ரகு கிருஷ்ணா அக்னியை தன் மருமகளாக்கிக் கொள்ள விரும்புகிறார் என்று நன்கு தெரிந்தும் அவரும் அவரது கணவர் மேஜர் விஸ்வநாதனும் அதில் ஆர்வம் காட்டியதே இல்லை.

அர்ஜுனின் இளம் பிராயத்திலிருந்தே அவனது வம்சத்திற்காகவும் பணத்திற்காகவும் பல்லிளித்தவர்கள் ஏராளம்.

தூரத்து உறவினர்களிலிருந்து நண்பர்கள் கூட்டம் வரை சொல்லி வைத்தாற் போல் அவன் புகழ் பாடுவதும், அவனுக்கு மரியாதை செலுத்துவதையும் கண்டு அலுத்து போனவனுக்கு , அவன் தவறிழைத்தால்
தட்டிக்கொடுத்து உரிமை உணர்வோடு திருத்தும் அன்னபூரணி அம்மாளும்,
அவனிடம் யாதொன்றையும் எதிர்பார்க்காமல் இயல்பான நட்போடு மட்டும் பழகிய அக்னியும் தனித்து தெரிந்தனர்.

அவளது இந்த இரு முகங்களற்ற தன்மையே அவன் காதல் வயப்பட முக்கிய காரணமாக இருந்ததென்றே சொல்லலாம். பிறகு தான் அவளது வைராக்கியம் ,புத்திசாலித்தனம், மனோதிடம், அழகு எல்லாம்.

ஆனால் இப்போதெல்லாம் எதற்கெடுத்தாலும் கண்ணீர், பயம் ,ஒருவித அந்நியத் தன்மை .

அதன் காரணம் இப்போது அல்லவா அவனுக்கு தெரிகிறது. அவன் கண்மணியின் அகமும் புறமும் ரணங்களால் நிறைந்திருக்கிறதென்று .
அதனை அறியாமல் சூடுபட்ட பூனையாய் ஆண்களைக் கண்டாலே அஞ்சி நடுங்குபவளிடம் தன் ஆண்மையை நிரூபிக்க எத்தனித்தது எவ்வளவு பெரிய பிழை என்றெண்ணி துடித்துப் போனான்.

அவனுக்கு சுபாவின் மறைவு மன அழுத்தத்தையும் வெறுமையும் மட்டுமே கொடுத்திருந்தது. ஆனால் அவளுக்கு அஜய்யின் மறைவு மனஅழுத்தம், வெறுமையோடு சமுதாயத்தின் சில்லரை தனங்களை சகித்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தையும் கொடுத்திருக்கிறதென்று இப்போதுதான் விளங்கியது.

என்னதான் காலங்கள் கணினிக்கு மாறினாலும், துணையை இழந்த ஆணுக்கும் பெண்ணுக்குமான வித்தியாசத்தை மட்டும் இந்த சமுதாயம் மாற்றிக் கொள்ளவே இல்லை.

அவளைப் பார்த்து பரிகாசித்தவர் சிலர், பரிதாபபட்டவர் சிலர், பண்டிகை காலங்களில் பாகுபடுத்தியவர் சிலர் ,படுக்கைக்கு அழைத்தவர் சிலர் என அனைவரையும் சகித்துக்கொண்டு உணர்வற்றவளாய் குழந்தைக்காக உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு எதிர்நீச்சல் அல்லவா போட்டுக்கொண்டிருந்திருக்கிறாள்.

அழகும் திறமையும் இணைவதே சிறப்பு, அதனோடு நேர்மையும் வைராக்கியமும் இணைய பெற்றால் சொல்லவா வேண்டும், நிமிர்ந்த மரங்கள் தான் அதிகம் வெட்டப்படும் என்னும் சாணக்கிய நீதி போல்
வாழ்க்கையின் எல்லா நிலையிலும்
பிரச்சினையை சந்தித்திருக்கிறாள்
என்றெண்ணியவனுக்கு எங்கோ ஒரு மூலையில் இருந்த காதல் இப்பொழுது இதயம் முழுவதும் இடம்பெயற, கண்ணாடியின் ஊடே தன்னை மறந்திருந்தவளிடம் முன்பை காட்டிலும் பாசம் பெருக்கெடுத்தோடியது.


" ஏகே சார் உங்க வைஃப் பேசினது எல்லாம் கேட்டீங்க இல்ல ... உங்களுக்கு என்ன புரிஞ்சது ..."

" அவ மனசுல நான் கணவனா இல்லங்கிறது புரிஞ்சது ..." என்றான் கமரிய குரலில்.

"ம்ச்... மிஸ்டர் ஏகே.... அதை பத்தி கடைசியா பேசுவோம் ... அவங்க தன்னை மறந்து மூணு விஷயத்த ஷேர் பண்ணி இருக்காங்க ... நான் அதை கேக்கிறேன் ...."

" யாரோ ரெண்டு பேருக்கு பயப்படுறா... அது யாருன்னு தான் தெரியல ..."

" எஸ்.... யூ ஆர் ரைட் ...
அவங்க பேசினதிலிருந்து
1. அஜய்யோட மரணத்துல எனக்கு சந்தேகம் வருது.
2. அஜய் இறந்து 16ஆம் நாள் காரியத்தன்னைக்கு ஏதோ நடந்திருக்கு ... அக்னி யாரோ ரெண்டு பேர் வந்ததா சொல்றாங்க... யார் அவங்கன்னு சொல்ல முடியாம தவிக்கிறாங்க ...
3. அதோட அஜய் இறந்து இத்தனை வருஷம் ஆன நிலையில அக்னியால அவரோட இருப்பை உணர முடியுது... " என்று முடித்த மனநல மருத்துவரை பார்த்து

" யூ மீன் அஜய்'ஸ் டெத் ஈஸ் அ மர்டர் ..." என்று அர்ஜுன் கேள்வி எழுப்ப, அதற்கு
இல்லை என்பது போல் இடவலமாக தலையசைத்தவர் ,

" மர்டர் இல்ல அசாசினேஷன்னு (assassination) சொல்றேன் ..." என்றவரின் பேச்சு புரியாமல் இருவரும் நோக்க ,

" உங்களுக்கு தெரியாதது இல்ல... மர்டர்ன்னா ஏதோ ஒரு காரணத்துக்காக கொலை பண்றது... ஆனா அசாசினேஷன்னா முழுக்க முழுக்க அரசியல் காரணங்களுக்காக திட்டமிடப்பட்டு படுகொலை செய்யப்படறது... அஜய்யோட மரணத்துக்கு பின்னாடி அப்படி ஒரு பெரிய சதி இருக்குமோன்னு எனக்கு தோணுது ..."

" நோ மேம்.... இட்ஸ் நாட் அட் ஆல் பாஸிபிள்.... ஏன்னா அஜய்யோட டெத்துக்கு நானும் போயிருந்தேன் ...
அதிகாலைல ஏற்பட்ட ஹார்ட் அட்டாக்குன்னு டாக்டர் சொன்னாரு..."

" இல்ல ஏகே , டாக்டரை அப்படி சொல்ல வச்சிருக்காங்க... அஜய் சாகும் போது அவருக்கு வயசு 30க்குள்ள இருக்குமா..."

" எஸ் மேம் ..."

" பின்ன அந்த வயசுல ஏன் ஹார்ட் அட்டாக் வந்தது, எப்படி வந்ததுன்னு யாருமே கேக்கலையா... எப்படி அக்னி ஒத்துக்கிட்டாங்க .... சரி... அஜய்க்கு கூட பிறந்தவங்க யாராவது இருக்காங்களா .."

" இல்ல மேம்...அவன் ஒன்லி சைல்ட்.
அவன் டெத் அப்ப அவங்க அம்மாவை பார்த்தேன் ... அவனோட அப்பா கூட சின்ன வயசுலயே இறந்து போய்ட்டதா சொல்லி இருக்கான்... "

" உங்களுக்கு அஜய்யை தெரியுமா..."

அர்ஜுன் தனக்கும் அஜய்க்குமான நட்பை பற்றி கூறியதோடு
அதனை அக்னியிடம் கூறவில்லை என்பதையும் தெரிவித்தான்.

" சரி, அவங்க அம்மா எங்க இருக்காங்க ..."

" தெரியல மேம்... மே பி நாசிக்ல தான் இருக்கணும்...ஏன்னா அவங்களுக்கு சொந்தமான பெரிய திராட்சை தோட்டம் அங்க தான் இருக்கு..." என்றவன் அஜய்யின் தாயை பற்றி அவன் அறிந்த விவரங்களை பகிர்ந்தோடு, அஜய் இறப்பின் போது தன்னிலை மறந்திருந்த அக்னியை பற்றியும் கூறி முடித்தான்.


" அப்போ நான் சொன்னது தான் கரெக்ட் ... அஜய்க்கு நடந்தது அசாசினேஷன் தான்... ஏன்னா சொத்து தகராறுக்கு வாய்ப்பு இல்ல..அது மட்டும் இல்ல, ஏதோ ஒரு காரணத்துக்காக பலவந்தமா கொல்லப்பட்ட அந்த ஆன்மா பித்ரு லோகத்துக்கு போக முடியாம தவிச்சுகிட்டு இருக்கு... அதனால தான் அக்னியால அஜய்யோட இருப்பை உணர முடியுது ....

பொதுவா நம்ம நாட்டுல பெரிய அரசியல் தலைவர்கள், அதிகாரிகள் மர்மமான முறையில இறந்து போறது ஒன்னும் புதுசு இல்ல....

எக்ஸாம்பிள் சொல்லனும்னா நிறைய பேரை சொல்லலாம் ... அதுல ரொம்ப முக்கியமானவங்க ரெண்டு பேரு

1 .நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
2. லால்பகதூர் சாஸ்திரி

லால் பகதூர் சாஸ்திரி தாஷ்கன்ட்ல (Tashkent) இந்தியா பாகிஸ்தான் போரை நிறுத்த அப்ப பாகிஸ்தான் அதிபரா இருந்த அயூப் கானோட அமைதி உடன்படிக்கைக்கு கையெழுத்து போட்டாரு... மறுநாளே அவர் அதிகாலையில ஏற்பட்ட ஹார்ட் அட்டாக்ல இறந்து போயிட்டதா செய்தி வந்தது ...


ஆனா அவரோட ஃபேமிலி மெம்பர்ஸ் அதை ஒத்துக்கல ... சாஸ்திரி ரொம்ப ஸ்ட்ராங் அண்ட் ஹெல்தி பர்சன்னு சொன்னாங்க ... அதோட
அவர் உடம்புல ரெண்டு மூணு இடத்துல வெட்டுக்காயங்கள் இருக்கு ..
பாடியே நீலநிறமா இருக்கு ... அதனால போஸ்ட்மார்ட்டம் பண்ணனும்னு கேட்டாங்க ஆனா அப்ப பெரிய ஆளுமையில இருந்த ஒரு நபர் கடைசி வரைக்கும் போஸ்ட்மார்ட்டம் செய்ய ஒத்துக்கவே இல்ல ... அதற்கான சந்தர்ப்பத்தையே அமைய விடாம தடயத்தை அழிக்கணுங்கிற நோக்கத்துல வேகவேகமா அரசு மரியாதை செலுத்தி அவரோட உடலை எரிச்சிட்டாங்க ...

அதோட அவரோட உதவியாளரையும், டாக்டரையும் விசாரணைக்கு கூப்பிட்டிருந்தாங்க ... ஆனா ரெண்டு பேரும் சொல்லி வச்சா மாதிரி அன்னைக்கே கார் ஆக்சிடெண்டுல இறந்து போயிட்டாங்க ...ஒரு பிரைம் மினிஸ்டர்கே அந்த நிலைமைன்னா, அஜய் போல ஒரு ரா ஏஜன்ட்க்கு என்ன வேணாலும் நடந்திருக்கலாம் ....
சரி... அவங்க அம்மாவை பத்தி என்ன நினைக்கறீங்க..."

" அசாசினேஷன்னு சந்தேகபட்டுட்டு கூடவே அவங்க அம்மாவையும் சந்தேக படறீங்களே மேம்..." என்ற விஷ்ணுவை புதுமையாய் நோக்கிவிட்டு,

" என்ன குழந்தை மாதிரி பேசுறீங்க விஷ்ணு... அரசியல் காரணங்களுக்காக பெத்த மகனையே போட்டுத் தள்ளின அம்மாவும், பதவிக்காக அப்பாவையே போட்டுத்தள்ளின மகனும் இந்திய அரசியல்ல ரொம்ப சகஜம் ....

அஜய்யோட அம்மா தான் போன் பண்ணி கூப்பிட்டிருக்காங்க... மறுநாளே அஜய் ஹார்ட் அட்டாக்ல இறந்து போயிருக்காரு ... அக்னி தான் சுயநினைவு இல்லாம இருந்திருக்காங்க ... அவங்க அம்மா சுயநினைவோட தானே இருந்தாங்க ...
அதோட அந்த வைன்யார்டோட (Vineyard) எம்.டி அண்ட் ஆல் சோ ஒன் ஆஃப் த போர்டு டைரக்டர்ஸ் ... இவ்ளோ ஆளுமையான ஒரு லேடிக்கு, தன் மகனோட திடீர் மரணத்துல சந்தேகமே வரலையா... " என்ற சேஷாத்ரியின் கேள்வியில் அதிர்ந்துபோன அர்ஜுன் முதன்முறையாக அஜய்யின் தாய் முகத்தை மனதில் நிறுத்திப் பார்த்து
யோசித்தவனால் ஒரு முடிவுக்கு வரவே முடியாமல் போக

" ஏகே....பெரிய அரசியல் தலைவர்கள் ஆளுமைமிக்க மனிதர்கள் எல்லாம் விழுந்தது எதிரிகளால இல்ல துரோகிகளால தான்...

துரோகிகள்னாலே வெளி ஆளா இருக்க முடியாது .. வீட்ல இருக்கிறவங்களா இருக்கணும் இல்லன்னா நண்பர்களா இருக்கணும் ...

எதிரிகளுக்கு நம்ப பலம் மட்டும் தான் தெரியும் ஆனா துரோகிகளுக்கு நம்ம பலவீனமும் அடுத்த கட்ட நடவடிக்கையும் தெளிவா தெரியும் ..." என்று திட்டவட்டமாக சேஷாத்ரி முடிக்க

" அப்போ அஜய்யோட ஆன்மாவுக்கு ஏதோ ஒரு உள் நோக்கம் இருக்குன்னு சொல்லவரீங்களா.." என அர்ஜுன் கேள்வி எழுப்ப,


" நிச்சயமா .... அஜய் இந்த பூமில செய்து முடிக்க வேண்டிய காரியம் ஏதோ இருக்கு.. அக்னியை எதிலிருந்தோ காப்பாத்துனுங்கிற நோக்கத்துல தான் அந்த ஆன்மா இன்னும் அலைஞ்சிகிட்டு இருக்கு... அதோடு மட்டுமில்லாம இயல்பிலேயே தேச பற்று மிக்கவர்னு சொல்லி இருக்கீங்க, ரா ஏஜன்ட் வேற, அதனால நம் நாடு சம்பந்தப்பட்ட ஏதோ ஒரு முக்கியமான ரகசியம் அவருக்கு தெரிஞ்சிக்கலாம், அதனாலயும் அவர் கொல்லப்பட்டிருக்கலாம்...ஏதோ ஒரு நோக்கத்தோடதான் அந்த ஆன்மா சுத்திக்கிட்டு இருக்கு அந்த வேலை முடிஞ்சிட்டா தானாவே பித்ரு லோகத்துக்கு போய்டும்...
எனக்கு இதுக்கு மேல இந்த விஷயத்துல நாலெட்ஜ் கிடையாது...

நீங்க மாதவ் ஆச்சாரியாவை போய் பாருங்க ... அவர் ஃபேமஸ் அமெரிக்கன் சைக்கியாட்ரிஸ்ட் மிஸ்டர் பிரைன் வைய்ஸோட (Brian weiss)ஸ்டுடென்ட் ...
ரிஇன்கார்னேஷன் (reincarnation) அண்ட் பாஸ்ட் லைஃப் ரெக்கிரஷன்ல(past life regression ) ஏகப்பட்ட ரிசர்ச் பண்ணவரு... சியன்ஸ்ல (Seance) எனக்கு தெரிஞ்சு இந்தியால இருக்கிற ஒரே எக்ஸ்பர்ட் அவர் தான் ... மூணு வருஷத்துக்கு முன்னாடி இந்த மாதிரி ஒரு கேசை சக்சஸ் ஃபுல்லா ஹேண்டில் பண்ணி இருக்காரு ... ஆனா இந்த கான்சப்ட்டை எல்லாம் மெடிகல் சயின்ஸ் இன்னும் ஏத்துக்கல... எனக்கு இதுல நம்பிக்கை இருக்கிறதால உங்களுக்கு பிரிஸ்கிரைப் பண்றேன்..."


" மேம்.. சியன்ஸ்ன்னா...?" என்றான் அர்ஜுன் இடைவெட்டி.

" இறந்தவர்கள் ஆன்மாவோட பேசுறதுன்னு அர்த்தம் ... ஆச்சார்யாவுக்கு அப்பாயிண்ட்மெண்ட் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம் ... நான் ரெக்கமெண்ட் பண்ணி அவரை சீக்கிரம் மீட் பண்ண ஏற்பாடு பண்றேன் ...
அவர் உங்களுக்கு இதப்பத்தி கிளியர் பிக்சர் கொடுப்பாரு...

அஜய் இறந்து 16ம் நாள் ராத்திரி என்ன நடந்ததுன்னு அக்னி சொன்னாதான் ஒரு ஐடியா கிடைக்கும் ...
மே பி செகண்ட் சிட்டிங்ல இத பத்தி சொல்ல வைக்க ட்ரை பண்ணலாம் ..."
என்றவருக்குத் தெரியாது அதற்கெல்லாம் அவசியபடாமல் அவளே அனைத்தையும் சொல்லப்போகின்ற நிலைமை வரப்போகிறதென்று.

" அட்லாஸ்ட் கமிங் டு யுவர் பாயிண்ட் ...

ஒரு பொண்ணு ஒரு ஆணை ஜென்டில்மேன்னு சொல்றது ரொம்ப நல்ல விஷயம்... ஆனா கணவரை அப்படி சொல்ல கூடாது ... என் ஹஸ்பண்ட் ரொம்ப கேரிங், லவ்வபுல் பர்சன், ரொமான்டிக் பர்சன்னு சொல்லணும் ...

அக்னி உங்களை ஜென்டில்மேன்னு சொன்னது கூட ஒருவிதத்துல நல்ல விஷயம்னு வச்சுப்போம் ... ஆனா ஹவுஸ்மேட்னு சொன்னாங்க பாருங்க அங்க தான் நீங்க தப்பு பண்ணி இருக்கீங்க ....

சரி தெரியாம தான் கேட்கிறேன், ஏன் அவங்களை கல்யாணம் பண்ணிகிட்டீங்க ... யாராவது ஃபோர்ஸ் பண்ணாங்களா, இல்ல அவங்க நிலைமையை பார்த்து பரிதாபப்பட்டு கல்யாணம் பண்ணிகிட்டீங்களா..."

" நோ மேம், ஐ அம் லவிங் ஹர் ஃப்ரம் த பாட்டம் ஆப் மை ஹார்ட் ..."

" அப்படி தெரியலையே ஏகே, நீங்க நெஜமாவே அவங்களை லவ் பண்றீங்கன்னா இப்படி கண்டுக்காம தனியா விட்டு வச்சிருக்க மாட்டீங்க.... அவங்க மனசை மாத்த முயற்சி பண்ணி இருப்பீங்க... அவங்களோட சேர்ந்து வாழ ஆசைப்பட்டிருப்பீங்க.. அதனால அவங்களை சீண்டிக்கிட்டே இருந்திருப்பீங்க..."

" அது வந்து மேம்... அவளுக்கு கோவம் வரும்னு தான் அந்த மாதிரி எல்லாம் நான் எந்த ஸ்டெப்பும் எடுக்கல..."

" நீங்க சொல்றது கரெக்ட். நிச்சயமா அவங்களுக்கு கோவம் வரும்...
ஏன்னா அவங்க மனசுல அவங்க பையனைத் தவிர வேறு யாருக்கும் இடமில்ல...

பசி, தூக்கம், தாகம் , விழிப்பு மாதிரி மோகம் , காதலுங்கிறதும் ஒரு வித உணர்வு தான் ... தூக்கமும் விழிப்பும் ஒரு மனுஷனுக்கு இயல்பா வரவேண்டியது அதுக்கே அவங்க டேப்லெட்ஸ் எடுத்துக்கிறாங்க ... அந்த ட்ரக்ஸோட சைட் எஃபெக்ட்ஸ் ரொம்ப அதிகம் ... அது அவங்க மொத்த உணர்வுகளையும் சாகடிச்சிடும்...
பசி எடுக்காது, கை கால்ல நடுக்கம் இருக்கும், கண் பார்வை மங்கலாகும்,
அவங்களோட பீரியட்ஸ் ரெகுலரா இருக்காது, உடம்பு ரொம்ப பலகீனமா இருக்கும் ....
சரியா சொல்லனும்னா எந்த ஒரு உணர்வும் இல்லாம மகனை காப்பாத்தனுங்கிற கடமைக்காக மட்டும் ஒரு ரோபோ மாதிரி வாழ்ந்துகிட்டு இருக்காங்க ....

நீங்களும் இப்படி அவங்க கிட்ட இருந்து விலகி இருந்தீங்கன்னா, அவங்களுக்கு இருக்கிற கொஞ்ச நஞ்ச உணர்வுகளும் கூடிய சீக்கிரம் அஸ்தமிச்சிடும்...

நீங்க அவங்களை கல்யாணம் பண்ணிக்கிட்டது அவங்க சப் கான்ஷியஸ் மைண்ட்ல ரெஜிஸ்டரே ஆகலை....உங்களை கசினா தான் இன்னும் அவங்க கன்சிடர் பண்றாங்க... நீங்க அவங்க கூட இருக்கிறதையே யோசிச்சு தான் சொல்றாங்க ...

உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆயிடுச்சுன்னு சொல்லாலும் செயலாலும் அவங்களுக்கு உணர்த்தியே ஆக வேண்டிய கட்டாயத்துல இருக்கீங்க ஏகே...

அதுக்கு முதல்ல அவங்க இந்த மாத்திரைகள் எல்லாத்தையும் நிறுத்தனும் ...ஒரே நாள்ல முடியாது... அட்லீஸ்ட் குறைக்கணும்...

ஃப்ரூட்ஸ் வெஜிடபிள்ஸ் அதிகமுள்ள பேலன்ஸ்டு டயட் சாப்பிடனும், நல்லா எக்சர்சைஸ் பண்ணனும், முக்கியமா யோகா மூச்சுப்பயிற்சி பண்ணனும் ...
அது மன அழுத்தத்தை வெகுவா குறைக்கும்....
இந்த மாதிரியான ஆரோக்கியமான வழிமுறைய டூ மந்த்ஸ் கண்டின்யு பண்ணாங்கன்னா,
அவங்க பீரியட்ஸ் ரெகுலராகும், மாத்திரைகள் இல்லாம
நல்லா தூங்க ஆரம்பிப்பாங்க,
காலையில ஸ்டிரெஸ் இல்லாம எழுந்து பாங்க....
தூக்கமும் விழிப்பும் தானா வந்தா பசி தானா எடுக்கும் ... அவங்க
வயசுக்கே உண்டான எல்லா உணர்வுகளும் தானா வரும் ...
அது அவங்க லைஃப்ப மாத்த ஹெல்ப் பண்ணும்....
உடல் ஆரோக்கியமும் மன ஆரோக்கியமும் ஒண்ணுக்குள்ள ஒண்ணு... இதுல ஏதாவது ஒண்ணு சரியா இருந்தா மற்றதும் சரியா இருக்கும் ... அதனால அவங்க மனதிடம் அதிகமாகும்... அப்புறம் எந்த ஒரு பயமும் இல்லாம
தைரியமா எல்லா பிரச்சினைகளையும் உங்ககிட்ட ஷேர் பண்ணுவாங்க ..."
என்றதை கேட்டதும் அர்ஜுன்,
தன்னுடைய திருமணத்திற்கு முன் அக்னி போட்ட நிபந்தனைகளை பற்றிக் கூற,

" என்ன பெரிய கண்டிஷன்ஸ் வெங்காய கண்டிஷன்ஸ்.... உங்களுக்கு அவங்க முக்கியமா இல்ல அவர்களுக்கு கொடுத்த வாக்கு முக்கியமா ..."

" அக்னி தான் முக்கியம் ..."

" பின்ன என்ன ... அக்னி ரொம்ப நேர்மையானவங்க பொய் சொல்ல மாட்டாங்க..ரைட் ..."

" எஸ் மேம்..."

" அப்ப கிஸ் பண்ணிடுங்க ...."

" வாட்...." என்று அர்ஜுன் அதிர, விஷ்ணு குலுங்கி சிரிக்க,

" ஐ அம் டாக்கிங் சீரியஸிலி ஏகே...
கிஸ் பண்ண தெரியுமில்ல ... உங்க ஃபர்ஸ்ட் ஒய்ஃப்ப கிஸ் பண்ணியிருப்பீங்க ... கிஸ் பண்ணுங்க .. பிரச்சனை பண்ணுவாங்க ... உங்களுக்கும் அவங்களுக்கும் சண்டை வரும்...
அது உங்களைப் பத்தின நினைவும் உங்களோட நடந்த கல்யாணத்தையும் அவங்களுக்கு ஞாபகப்படுத்திக்கிட்டே இருக்கும் ....
அப்படியே கோவப்பட்டு போலீஸ் ஸ்டேஷன், வக்கீல்னு போனாலும் அங்க போய் என்ன சொல்லுவாங்க ....
என் ஹஸ்பன்ட் என்னை கிஸ் பண்ணிட்டாருன்னா ...எல்லாரும் சிரிப்பாங்கன்னு அவங்களுக்கும் தெரியும்... கடைசியா வேற வழி இல்லாம கொஞ்சம் கொஞ்சமா புரிதல், ஈர்ப்பு, காதல்னு படிப்படியா உணர ஆரம்பிச்சு உங்க வட்டத்துக்குள் அவங்களே தானா வந்துடுவாங்க....

இது எல்லாத்தையும் விட அவங்க மெண்டலி ரொம்ப இன் செக்யூர்டா இருக்காங்க.... புட் ஆல் யூர் பிராப்ளம்ஸ் ஆன் மை ஷோல்டர்ஸ் , ஐ அம் ரெடி டு கேரின்னு புரிய வையுங்க ... ஒரு நல்ல நண்பனா, காதலனா நடந்து கல்யாணத்தோட உன்னதத்தை உணர்த்துங்க... முக்கியமா அஜய்யை ஞாபகப்படுத்தற எந்த ஒரு விஷயத்தையும் கொஞ்சம் கொஞ்சமா அவங்களுக்கே தெரியாம அவங்க கிட்ட இருந்து இராடிகேட் பண்ண பாருங்க ...

சரி , நீங்க அவங்களை லவ் பண்றீங்க அதனால கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க , அவங்க ஏன் உங்களை கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க ... எனி ஸ்பெஷல் ரீசன்ஸ் லைக் பைனான்சியல் பிராப்ளம்ஸ்..."


" நோ மேம்... ஷி இஸ் பைனான்சியலி இன்டிபென்டன்ட்... பாரன்சிக் டிபார்ட்மென்ட்ல க்ரைம் லேபரேட்டரி அனலிஸ்ட்டா ஒர்க் பண்றாங்க...மே பி அவங்க சோசியல் செக்யூரிட்டிகாக என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு இருக்கலாம்னு நினைக்கிறேன்..."

"ஓ... அக்னி ஃபாரன்ஸிக் டிபார்ட்மெண்ட்ல க்ரைம் லேபரேட்டரி அனலிஸ்ட்டா...
அப்ப அவங்க அஜயோட பாடியை டெஸ்ட் பண்ணியிருந்தாலே உண்மை தெரிஞ்சிருக்குமே.."

" இல்ல மேம்... " என்றவன் அஜய் இறந்த போது அக்னி இருந்த மன நிலையை அவருக்கு மீண்டும் நினைவு கூற,

" ஓ... இது தான் விதிங்கிறது... படிச்ச படிப்பு, பார்த்த வேலை சரியான நேரத்துல உதவாம போயிடுச்சி பாருங்க...ஆமா அஜய் ஐபிஎஸ் தானே...?.."


" எஸ் மேம்..."

" ஒரு வேளை அது கூட காரணமா இருக்கலாமா... ஐ மீன் உங்க ஜாப் அவங்களுக்கு செக்யூரிட்டி தரும்னு..."
என்ற மருத்துவரின் பேச்சில் இடைப் புகுந்த விஷ்ணு,

" அஜய்யும் அர்ஜுனும் லுக்-அலைக் மேம்...."

" ஈஸ் இட் ... ஹவ் இட்ஸ் பாஸிபிள்..."
என்று ஆச்சரியத்தில் மொழிந்தவர் ,

" அஜய்யோட போட்டோ இருக்குமா ..."

தன் மொபைலில் இருந்து, ஐபிஎஸ் பயிற்சியின் போது அவர்கள் இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை அர்ஜுன் காட்ட,

" வாவ் ... கலர் தான் மேஜர் டிஃபரன்ஸ் ...
மத்தபடி நீங்க ரெண்டு பேரும் சேமா தான் இருக்கீங்க..." என்றவர் அனைத்தையும் விசாரித்துவிட்டு, வீரியம் குறைந்த மருந்துகளை எழுதிக் கொடுத்ததோடு , மாதவ் ஆச்சார்யாவின் முன் அனுமதி வாங்கித் தருவதாகக் கூற, அவரிடமிருந்து விடை பெற்று அவர்கள் இருவரும் அறைக்கதவை நெருங்கும் போது,

" ஒரு நிமிஷம் ஏகே, இப்பதான் ஒரு விஷயம் தோணுச்சி ...

நான் சொல்ல போறது 90% நடக்க வாய்ப்பே இல்ல, இருந்தாலும் நீங்களும் அஜய்யும் லுக்-அலைக்ங்கிறதால ஒரு ப்ரிகாஷன்காக சொல்றேன்...

ஏற்கனவே அக்னி தீவிர மனக்குழப்பத்துல இருக்காங்க...
ஏதாவது ஒரு சந்தர்ப்பத்துல உங்கள அஜய்னு நெனச்சு நெருங்கிட போறாங்க... அந்த
மாதிரி நடந்தா அது அக்னியோட மன நிலையை இன்னும் சிக்கலாக்கிடும்...
நான் எதை சொல்றேன்னு உங்களுக்கு புரிஞ்சிருக்கும் .. எந்த ஒரு சந்தர்ப்பத்துலயும் நீங்க அர்ஜுன்னு அவங்களுக்கு உணர்த்திக்கிட்டே இருங்க... நீங்களும் அஜய்யும் ஃப்ரெண்ட்னு சொல்லாம விட்டது தான், அவங்க விஷயத்துல நீங்க செஞ்ச ஒரே நல்ல காரியம் ... ஆல் த பெஸ்ட் . ...." என்று பேச்சை முடித்தார் மனநல மருத்துவர் சேஷாத்திரி.


அனைத்தையும் தெரிந்து கொண்டவனுக்கு, தன்னவளை சூழ்ந்திருக்கும் மர்மம் அதிர்ச்சியையும் ஆதங்கத்தையும் ஒருங்கே கொடுக்க,
அவன் அறிந்துக்கொண்டது வெறும் 10% தான் என தெரியாமல், மனையாளை நினைத்து உள்ளுக்குள் உருகித் தவித்தபடி அவளை காணச் சென்றான்.



தகிப்பாள்
 
அத்தியாயம் 30


மருத்துவரின் அறையிலிருந்து வெளியேறி, அந்த மருத்துவமனையின் வளாகத்தில் இருந்த மரத்தடியில் சற்று இளைப்பாறிய பின்னர்


" என்ன அர்ஜுன், ஒரே யோசனையா இருக்க ... மருத்துவ முத்தம் குடுக்கலாமா, இல்ல டைரக்டா இரண்டாவது குழந்தைக்கு ஏற்பாடு பண்ணலாமான்னு யோசிக்கிறயா...."
என்ற விஷ்ணுவைப் பார்த்து குறும்போடு


" கூடிய சீக்கிரம் புது மாப்பிள்ள
ஆக போறல்ல அதான் இப்படி பேசற...
குழந்தை ஆசை யாரை விட்டது ..." என்ற பேச்சு விஷ்ணுவை சோகத்தில் அழ்த்த, அந்த விரக்தியை வெளிக்காட்டாது,
மெலிதாகப் புன்னகைத்தவனை பார்த்து,


" மொத்த உணர்வுகளையும் தொலைச்சிட்டு, உயிர்ப்பே இல்லாம இருக்கிறவளுக்கு முத்தம் கொடுக்கிறது பலாத்காரத்துக்கு சமம்னு நினைக்கிறேன் ..


பிரவுனிங் ஹை பவர் 9mm கேலிபர் கன்ணை, ரோலிங் டார்கெட்ல குறி பார்த்து மிடில் பாயிண்ட்ட மூணு தடவ கன்டினியூவஸ்ஸா ஃபயரிங் பண்ணி சாதனை பண்ணவ டா ... அவ்ளோ போக்கஸ்டு கன்சன்ட்ரேஷன், ஷார்ப் ஐ சைட், மாஸ்டர் கிரிப்போட கன்ணை ஹேண்டில் பண்ணவ, இன்னிக்கு குக்கரை கூட தூக்க முடியாம கஷ்டப்படறா ... அன்னைக்கு நான் ஆபீஸ்க்கு கிளம்பி கிட்டு இருக்கும் போது கிச்சன்ல மெதுவா குக்கரை தூக்கி வச்சுக்கிட்டு இருந்தா...
ஏதோ செய்யறான்னு கண்டுக்காம கிளம்பி போயிட்டேன் டா... இப்ப புரியுது
அவளுக்கு கை நடுக்கம் இருக்கிறதால கஷ்டப்பட்டு தூக்க முடியாம தூக்கிட்டு இருந்திருக்கான்னு...


அவ பிரச்சனையை டாக்டர் சொல்லிட்டாங்க ...
இனிமே என்னோட ஸ்ட்ராடர்ஜியை யூஸ் பண்ணி அவளை எப்படி என் வழிக்கு கொண்டு வர்றதுன்னு எனக்கு தெரியும் ... நான் அவளுக்கு கொடுக்கப் போற முதல் முத்தம் என்னை விட அவ அதிகமா உணரனும்னு ஆசைப்படறேன் டா ..." என கண்ணில் காதல் வழிய கூறியவன் திடீரென தீவிரத்தை தத்து எடுத்துக்கொண்டு சுற்றி முற்றி பார்த்தபடி உரத்த குரலில்,

" டேய் அஜய்.... எங்கடா இருக்க ... மகனே , நீ மட்டும் என் கண்ணெதிர இருந்த உன்னை போட்டு தள்ளிடுவேன் ....
நீ சாகும் போதே அவளையும் கூட கூட்டிட்டு போயிருக்கலாமில்ல... இப்படி வாழவும் விடாம சாகவும் விடாம கொஞ்சம் கொஞ்சமா அவளை சித்திரவதை பண்றயேடா ....சாப்பாடு தூக்கம் இல்லாம தினம் தினம் துடிக்கிறாடா ... அவளை பைத்தியக்காரியா ஆக்கி வச்சிருக்கியேடா..." என்றபடி தன்னுடைய சைலன்ஸர் பொருந்திய கைத்துப்பாக்கியை எடுத்து வெறி கொண்டவன் போல் ட்ருகரை அழுத்தி தரையில் இரண்டு முறை சுட்டுவிட்டு
தன் தலையை அழுந்த கோதி
பெருமூச்சு எடுத்து மனதை சமன் செய்தவன்,


" இனிமே ஹீரோவா இருந்து பிரயோஜனமே இல்ல ஆன்ட்டி ஹீரோ ஆனா தான் வேலைக்கு ஆகும்னு தோணுது... அவளுக்கே தெரியாம உள்ளடி வேலை செஞ்சா தான் அவளை காப்பாத்த முடியும்ன்னா அதை செய்ய நான் தயார்....
இத்தனை நாள் ஆபீஸ்ல மட்டும் தான் ஏகேவா இருந்தேன்... இனிமே வீட்டிலயும் ஏகேவா இருந்தா தான் வேலைக்கு ஆகும் போல இருக்கு ... அர்ஜுனா நேர்மையா இருந்தா இவ விஷயத்துல சாதிக்க முடியாதுன்னு புரிஞ்சுகிட்டேன் ...


ஆனா எங்கிருந்து ஆரம்பிக்கிறது எப்படி ஆரம்பிக்கறதுன்னு தெரியாம தவிச்சுகிட்டு இருக் ..." என்றவன் பேசி முடிக்கும் முன்னரே திடீரென்று சுழல் காற்று ஏற்பட,
ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் காகிதங்கள், இலைதழைகள் நெகிழிகள் என கூட்டமாக சேர்ந்து மண் புகையை கிளப்பியபடி வட்டமாக சுழல் காற்றில் சிக்கிக்கொண்டு
கொஞ்சம் கொஞ்சமாக அந்த இடத்தை விட்டு நகர, அதனைப் பார்த்ததும் அர்ஜுனுக்கு ஏதோ புரிவது போல் தோன்ற,


" இரு விஷ்ணு இதோ வந்துடறேன் ..."
என்றபடி அந்த குப்பையுடன் கூடிய சுழல் காற்றை அவன் பின் தொடர , இரண்டு நிமிட வேக நடை பயணம் வரை ஐந்தாறு அடிகளில் மிதமான உயரத்தில் இருந்த அந்த சுழல் குப்பை,ஒரு குறிப்பிட்ட இடத்தில் திடீரென்று வேகமாக மேலே மேலே உயர, அதன் உயர்வு விசித்திரமாக இருக்க, பார்வையை அதன் உயரத்திற்கு உயர்த்தியவன் அப்போது தான் அந்த பெரிய பதாகையை கவனித்தான்.


அதில்


" Gift her new mobile for celebration"
( கொண்டாட்டத்திற்காக புதிய அலைபேசியை அவளுக்கு பரிசளியுங்கள் ) என்ற வரிகளோடு ஒரு பெரிய அலைபேசி நிறுவனத்தின் பெரிய விளம்பர பதாகை இருக்க ,
அதைப் படித்தவனுக்கு அக்னி அஜய்யை பற்றி சொன்னது நினைவுக்கு வர,
அவன் கண் கலங்கி கொண்டிருக்கும் போது , விஷ்ணு அவன் தோளை தொட , அந்த பதாகையை பார்த்தபடி


" தேங்க்ஸ் அஜய் ... ஐ அம் சாரி உன்னை தப்பா புரிஞ்சுகிட்டேன் டா ... இனிமே அவ உன் அக்னி இல்ல என் அக்னி ... எனக்கு அவ வேணும்டா ..." என்று தழுதழுத்தவனை புரியாமல் விஷ்ணு


" என்ன பையா(Bhaiya)...யார் கிட்ட பேசிகிட்டு இருக்க ... ஒன்னுமே புரியல ..." என்ற விஷ்ணு சுற்றி முற்றி பார்க்க,


" அஜய் வந்திருந்தான் டா ..."


" எங்க... எப்படி ..."


" அக்னி சொன்ன மாதிரி, என் கேள்விக்கு ஹோடிங்ஸ் மூலமா பதில் சொல்லிட்டு போயிருக்கான்... எங்க ஸ்டார்ட் பண்றதுன்னு தெரியலன்னு சொல்லிக்கிட்டு இருந்தேனில்ல, அவளோட மொபைல்ல இருந்து ஸ்டார்ட் பண்ணுன்னு சொல்லிட்டு போய் இருக்கான் ..."


" வாவ் மார்வலஸ்,
அன் இமேஜினபுள்..."


" எனக்கு பொண்டாட்டி ராசியே இல்லடா... என்னை கல்யாணம் பண்ண ரெண்டே மாசத்துல சுபா செத்து போயிட்டா... இவ செத்துகிட்டு இருக்கா... ஆனா இந்த முறை என் விதி கிட்ட நான் ஏமாற தயாராயில்ல ... எப்படியும் அதோட போராடி என் அக்னியை மீட்டே தீருவேன் ...." என்றவனின் கமரிய குரல் விஷ்ணுவை தாக்க , அர்ஜுனின் மனநிலையை மாற்ற எண்ணி


" சீனியர், சும்மா சொல்லக்கூடாது, பொண்டாட்டிக்கு முத்தம் கொடுக்கணுங்கிறதையே சைக்கியாட்ரிஸ்ட் கிட்ட போய் தெரிஞ்சுக்கிட்டு வந்த ஒரே ஆள் நீங்களா தான் இருப்பீங்க ..." என்றவன் நக்கலடிக்க,


" டேய், இன்னைக்கு நீ ஒதை வாங்காம வீடு போய் சேரமாட்டேன்னு நினைக்கிறேன் ..."


" இது எல்லாத்தை விட அண்ணி ஒரு பாய்ண்ட் சொன்னாங்க பாருங்க அதான் ஹைலைட்டே ... எப்டி எப்டி ஹவுஸ் மேட்டா... உங்களை ஸ்டேஞ்சர்ன்னு சொல்லாம விட்டாங்களே..."


" டேய் , கையில என்ன இருக்குன்னு பார்த்த இல்ல , ஒரே போடா போட்டுடுவேன்... என்னடா ஓவரா கலாய்ச்சுகிட்டு இருக்க ..." என்று போலி மிரட்டல் விடுத்தபடி விஷ்ணுவுடன் இணைந்து நகைத்தவன் அஜய் கூறியதை செயல்படுத்த எண்ணி காவல் ஆய்வாளர் பங்கஜை தொடர்பு கொண்டு


"பங்கஜ், எனக்கு ஸ்கில்டு ஹேக்கர் வேணும் ..."


" எஸ் சார், நம்ப சைபர் கிரைம் பிரான்சில் இருந்து உடனே அனுப்ப சொல்றேன் .."


" நோ பங்கஜ், எனக்கு நம்ப ஆளுங்க வேண்டாம் ... பிளாக் ஹாட் ஹேக்கர்ஸ்(black hat hackers) வேணும் ... அதுவும் நாளைக்கு ராத்திரி பதினோரு மணிக்கு என் வீட்டுக்கு வரச் சொல்லு ..." என்று அழைப்பை துண்டித்தவனிடம்,


" ஏன் அர்ஜுன், என்ன பிளான் ..."


" எனக்கு தெரிஞ்சு அக்னி மொபைல் மட்டும் தான் வச்சிருக்கா.. அவகிட்ட லேப்டாப் கூட இல்ல ... சோ அவ
மொபைல்ல ஏதோ இருக்கு அதை தான் அஜய் சொல்லி இருக்கான்... அதை கம்ப்ளீட்டா ஹேக் பண்ணி ஆகணும் ..
பிளாக் ஹாட் ஹேக்கர்ஸ் தான் இந்த மாதிரியான இல்லீகல் வேலைய பக்காவா செய்வாங்க ... அதுக்காக தான் கூப்பிட்டிருக்கேன்..." என்றவனுக்கு மருத்துவரிடமிருந்து அழைப்பு வர, உடனே மருத்துவமனையில் சிறுவர் விளையாட்டு மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த அஷ்வத்தை அழைத்துக்கொண்டு அக்னியை பார்க்க விரைந்தனர்.


" அண்ணி, எப்படி இருக்கீங்க ..." என்ற விஷ்ணுவின் இயல்பான விசாரிப்புக்கு நேற்று போல் அஞ்சாமல், அவன் முகத்தை உற்று நோக்கியவள் அதில் தெரிந்த கண்ணியத்தில் சகஜமாக


" ஐ அம் ஃபைன் ..." என்றாள்.


மருத்துவமனைக்கான பணத்தை செலுத்தி விட்டு அக்னியை கைத் தாங்கலாக பற்றியபடி அர்ஜுன் முன்னே நடந்து காரை அடைய, அஷ்வத்தை தூக்கிக்கொண்ட விஷ்ணு
அவர்களது பயணத்திற்கான ஏற்பாட்டை செய்து வழி கூட்டி அனுப்பிவிட்டு தன் இல்லம் நோக்கி பயணமானான்.


வீட்டை அடைந்ததும் அர்ஜுனை பார்த்து,


" நீங்க ஆபீஸ் போகலையா ..." என இயல்பாக அக்னி வினவ


" இல்லம்மா ... நாளைக்கும் லீவு
போட்டிருக்கேன் ... உனக்கும் நாளைக்கு லீவு சொல்லி இருக்கேன் ..."


" ரொம்ப கஷ்டப் படுத்தறேன் இல்ல...எப்படி மயங்கி விழுந்தேன்னே தெரியல ... ஹாஸ்பிடல் போனது கூட ஞாபகத்துல இல்ல..." என்றவளின் பேச்சில் அளவுக்கதிகமான குற்ற உணர்வு வெளிப்பட,
" அஷ்வத்தை எப்படி தனியா சமாளிச்சீங்க... " என்ற கேள்வியில் களைப்பு தெரிய,


" எனக்கு ஒரு கஷ்டமும் இல்ல.. அவன் ரொம்ப சமத்தா இருந்தான் ... நீ நிம்மதியா தூங்கி ரெஸ்ட் எடு, எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்.." என்றபடி அவளுக்கு மதிய உணவை கொடுத்து ஓய்வெடுக்க அனுப்பி வைத்தான்.


இரவு உணவை மூவரும் ஒன்றாக அமர்ந்து உண்டு முடித்ததும் , வழக்கம் போல் அஷ்வத் உறங்கச் சென்று விட,


" அர்ஜுன், நான் தூங்கணும் ... நான் எப்பவும் சாப்பிடற டேப்லெட்ஸ் வேணும் ..."


" அது உன் உடம்புக்கு நல்லதில்ல நிறைய சைட் எஃபெக்ட்ஸ்னு சொல்லி டாக்டர் இந்த மாத்திரையை எழுதி கொடுத்திருக்காங்க... இனிமே நீ இந்த மாத்திரையை தான்
எடுத்துக்கணும்னு சரியா .."


" இதை சாப்பிட்டா தூக்கம் வருமா..."


" நிச்சயமா வரும் ... இல்லன்னா நான் உனக்கு ஒரு ஆயுர்வேதிக் மெடிசன் தரேன்... அது நல்ல தூக்கத்தைக் கொடுக்கும் சரியா..." என்றவன் சுபாவின் இறப்பிற்கு பிறகு ஏற்பட்ட மன அழுத்தத்தை குறைப்பதற்காக அவன் எடுத்துக்கொண்ட
ஜடாமான்சி(Jatamansi) என்ற வேரிலிருந்து செய்யப்பட்ட மாத்திரையை
தேனுடன் கலந்து அவளை உட்கொள்ள செய்து,


" இங்க பார்... என்னை எவ்ளோ வருஷமா உனக்கு தெரியும்...." என அவள் கண்ணோடு கண் நோக்கினான்.


" ரொம்ப சின்ன வயசிலிருந்தே தெரியும் ..." என்றாள் சன்னமாக.


" சின்ன வயசிலிருந்தே உனக்கு ஏதாவது பிரச்சனைன்னா ஹெல்ப் பண்ண முதல்ல நிற்கிறவன் நான் ....
என்ன பிரச்சினையா இருந்தாலும் நான் பார்த்துக்கிறேன் ... எனக்கு நீயும் அஷ்வத்தும் நிம்மதியா இருக்கணும்... அதுக்காக எதை வேணும்னாலும் செய்ய தயாரா இருக்கேன் ..." என்றபடி அவள் தலை கோத முனைய , முதலில் அவன் தொடுகையை உணர்ந்து சற்று விலகியவள், அவன் கண்ணில் தெரிந்த அளவுக்கதிகமான நட்பில் திளைத்து தன்னை மறந்து அதனை ஏற்றாள்.


அவன் பேசிய வார்த்தைகளின் தாக்கமா அல்லது அவள் அருந்திய மருந்தின் வீரியமா, ஏதோ ஒன்று அவளுக்கு நிர்மலமான ஆழ்ந்த உறக்கத்தை கொடுக்க,
காலையில் புத்துணர்வோடு எழுந்து சமையலறைக்குச் சென்றவள் அங்கு சமைத்துக் கொண்டிருந்த அர்ஜுனை பார்த்து,


" மௌஸி எங்க ...வரலையா..."


" அவங்க பையனுக்கு உடம்பு சரியில்லன்னு லீவு போட்டு இருக்காங்க ..."


" ஓ..." என்றவளுக்கு காலை உணவோடு அவன் தேனீர் வழங்க,


"தேங்க்ஸ் அண்ட் சாரி அர்ஜுன் ..."


" தேங்க்ஸ் சாரி எல்லாம் வேணாம்... நீ ஒழுங்கா சாப்பிடு அதுவே போதும் ..." என்றவன் அஷ்வத்தை உண்ணச் செய்து டே கேர் சென்டருக்கு அனுப்பி வைத்தான் சற்று நேரம் விளையாடிவிட்டு வரட்டும் என்று .


நீண்ட நாட்களுக்கு பிறகு, காலை உணவான நான்கு இட்லியையும் அவள் சாப்பிட்டு முடித்திருக்க,


" குட் ..." என்றவனிடம்


" எனக்கு இன்னும் கொஞ்சம் தூங்கணும் போல இருக்கு அர்ஜுன் ..."
என்றவளை ஆழ்ந்து நோக்கியவன்,


" போய் நிம்மதியா தூங்கு ... நான் எல்லாத்தையும் பார்த்துக்குறேன்... ஓகே .." என்றவனுக்கு ஒன்று தெளிவாக விளங்கியது.
அவன் கொடுத்த மாத்திரையை விட அவன் பேசிய ஆதரவான வார்த்தைகளும், அவள் மனதை அழுத்திக் கொண்டிருந்த விஷயத்தை மருத்துவரிடம் அரைகுறையாக கொட்டித்தீர்த்தனால் ஏற்பட்ட நிம்மதியும் தான் தற்போது அவளுக்கு
அருமருந்தாகியிருக்கிறதென்று.

இந்த பூமியின் சிறப்பம்சமே படைக்கப்பட்ட ஒவ்வொன்றும் மற்றொன்றை சார்ந்து வாழ்வது தான்.
அது மனித குலத்திற்கு அதி முக்கியமாக பொருந்தும்.
உடலாலும் மனதாலும் அடுத்தவர்களை சார்ந்து வாழ்வது தான், இயல்பான வாழ்க்கை அதுதான் சரியானதும் கூட.
இத்தனை ஆண்டு காலம் பாதுகாப்பற்ற சூழலில், தனக்குத்தானே வேலி அமைத்துக் கொண்டு யாரையும் சார்ந்து வாழாமல், எப்பொழுதும் உள்ளுக்குள் அஞ்சி நடுங்கிய படி
தனித்துப் போராடிக் கொண்டிருந்தவளுக்கு அர்ஜுனின் வாய்மொழி தன்னம்பிக்கையோடு பாதுகாப்பு உணர்வையும் கொடுத்திருக்க, அவளே அறியாமல் அவளுள் மாற்றங்கள் நிகழ அது பேருதவியாக இருந்தது.


மாலையில் அஷ்வத்தோடு நேரம் செலவழித்தவன் இரவு உணவை தயார் செய்து கொண்டிருக்கும் போது கூட
அக்னி உறக்கம் விழிக்கவில்லை .


இத்தனை நாட்களாக தீவிர மன அழுத்தத்தில் மாத்திரைகளுக்கு அடிபணிந்து 8 மணி நேர அலுவலகப் பணி போல் உறங்கிக்கொண்டிருந்த மனது, இப்போதுதான் குழந்தைப் போல் எந்த ஒரு மன கலேசமும் இல்லாமல், நிர்மலமாக உறங்க ஆரம்பித்திருக்க, அதுவே
அவளது நீண்ட நாளைய மன உளைச்சலுக்கு வடிகாலாகிப் போய் இருந்தது .


உறக்கம் விழித்தவள் இரவு உணவை பாராட்டிய படி ஓரளவு நன்றாகவே உண்டு, அஷ்வத்தோடு சற்று நேரம் அளவளாவி விட்டு, பிறகு இருவரும் உறங்கச் சென்று விட
அவள் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதை உறுதிப்படுத்திக்கொண்டு அவளது கைபேசியை அர்ஜுன் கையகப்படுத்தி கொண்டிருக்கும் போது பங்கஜ் ஹேக்கரோடு (Hacker)
வந்திறங்கினான்.


" சார், இந்த மொபைல்ல இருக்கறதை எல்லாம் பார்த்தா இது டெரரிஸ்ட்டோ மொபைல் மாதிரி தெரியல சார்... யாரோ ஒரு பொண்ணோடது மாதிரி இருக்கு..." என்றான் ஹேக்கர் ஆர்வமாக.


" அது எங்களுக்கு தெரியும்... சொன்ன வேலையை மட்டும் சரியா செய் ..." -- பங்கஜ்.


" இந்த மொபைல் கம்ப்ளீட்டா ஹேங் ஆகணும்... ஆனா இப்ப ஆகக்கூடாது, ஏதாவது ஒரு
மாலிசியஸ் மெயில், இல்ல மெஸேஜஸ்
அனுப்பி, நாளைக்கு சம்பந்தப்பட்டவங்க அதை ஓபன் பண்ணி பார்க்கும் போது, கம்ப்ளீட்டா ஹேங் ஆகி, ரீஸ்டார்ட் கூட பண்ண முடியாம போயிடணும்...


மொபைல் சிப்ல இருக்கிற போட்டோஸ் வரை எல்லாம் டெலிட் ஆயிடணும்...
ரெக்கவரி போட்டா கூட வரக்கூடாது....
சரியா சொல்லணும்னா இந்த போன் அதுக்கு மேல எதுக்குமே யூஸ் ஆகாம போயிடணும்.... " என அர்ஜுன் தெளிவுபடுத்தினான் மீண்டும் ஒரு முறையாக.


அரை மணி நேரத்திற்கு பிறகு,


" சார், நீங்க சொன்னதை செஞ்சுட்டேன் சார் ... இந்த மொபைலை யூஸ் பண்றவங்க நாளைக்கு காலையில மொபைல திறந்ததும் ஒரு மாலிசியஸ் மெயிலும், ஒரு மாலிசியஸ் வாட்ஸ்அப் மெசேஜும் பாப் அப் ஆகும் ...இதுல அவங்க எதை செலக்ட் பண்ணி ஓபன் பண்ணாலும் டோட்டல் சிஸ்டமே ஹேங்க் ஆயிடும்... அதுக்கு மேல நீங்க சொன்ன மாதிரி இந்த மொபைலே யூஸ் ஆகாம போய்டும்..." என்றவனுக்கு பணத்தைக் கொடுத்து அனுப்பிவிட்டு,
எடுத்த இடத்திலேயே அவளது கைப்பேசியை வைத்துவிட்டு உறங்கச் சென்று விட்டான் அர்ஜுன்.


அக்னியின் கைபேசியை அர்ஜுன் ஆராய்ந்ததில், அஜய் சம்பந்தப்பட்ட ரகசியங்கள் ஏதுமில்லை என்றாலும், காலை அலாரமாக
" குட்மார்னிங் பில்லு..." என்ற அஜய்யின்
வாய்மொழியில் தொடங்கி, அவனுடன் பேசிய வாட்ஸ்அப் செய்திகள்,
மெயில்கள், அவனின் சிறுவயது புகைப்படங்கள் முதல் அவர்களது திருமண புகைப்படங்கள், அவன் அவள் மன ஆறுதலுக்காக பேசிய உணர்வுபூர்வமான பேச்சுக்கள், அவர்கள் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், காணொளிகள்,
என அனைத்தையும் தான் அது
தன்னகத்தே கொண்டிருந்தது.


ஒருவரை பற்றிய நினைவுகளை அழிக்க வேண்டும் என்றால் அவர்கள் சம்பந்தப்பட்ட உடைமைகளை அழிக்க வேண்டும், அதைத்தான் அஜய் அர்ஜுனுக்கு உணர்த்தியிருக்க, அதனை செவ்வனே செய்து முடித்திருந்தான் அர்ஜுன் .


மறுநாள் காலையில் அக்னியில் அறையிலிருந்து தெளிவாக விசும்பல் சத்தம் கேட்க, அதைத்தான் எதிர்பார்த்து காத்திருந்தான் அர்ஜுன்.


" அர்ஜுன்... மார்னிங் மொபைலை சார்ஜ் போடலாம்னு ஓபன் பண்ணி பார்த்தா, ஏதோ புது நம்பர்ல இருந்து வாட்ஸ்-அப் மெசேஜ் வந்திருந்தது ... அதைத் திறந்து பார்த்ததும்,மொபைல் ஹேங்க் ஆயிடுச்சு ... இவ்ளோ நேரமா ஆன் பண்ண ட்ரை பண்றேன் ஆன் ஆகவே மாட்டேங்குது..." என்று கண்கள் பொங்க ஏறக்குறைய கதறியவளைப் பார்த்தவனுக்கு உள்ளுக்குள் ஆனந்தம் ...
ஏதோ சாதித்த உணர்வும் உடன் எழ,
ஒருவித குரூர திருப்தியோடு அவள் அழுகையை ரசித்தபடி பார்த்துக் கொண்டிருந்தவனிடம் ,


" இதுலதான் அஜய்யோட வாய்ஸ் மெயில்ஸ், போட்டோஸ், வீடியோஸ் எல்லாமே வச்சிருந்தேன் அர்ஜுன்...
இப்ப எல்லாமே போயிடுச்சு ... கொஞ்சம்
மெயில்ஸையும் போட்டோஸயும் கூகுள் ஐடியில் இருந்து எடுத்துக்கலாம், ஆனா வாட்ஸ்அப் மெஸேஜஸ் ,போனது போனதுதானே ..." என்றவளின் பேச்சைக்கேட்டு துணுக்குற்றவன்


" உன்னோட ஜி மெயில் ஐடி சொல்லு .." என்றவனை அவள் தலை நிமிர்த்தி ஆராய்ச்சி பார்வை பார்க்க, உடனே சுதாரித்துக் கொண்டவன் கண்களில் நட்பை தேக்கி ,


" உன்னோட மெயில் ஐடியை வச்சு,
ரெக்கவர் பண்ண தான் ...என்ன ஐடி " என்றான் இல்லாத இயல்பை குரலில் கூட்டி.


" Agni.athulkar@gmail.com ..." என்றதும் ஏற்கனவே இருந்த கோபத்தோடு, இதுவும் இணைந்துகொள்ள, அவன் செய்து முடிக்க வேண்டியவைகளை இன்னும் ஏராளம் என்றுணர்ந்து
" ஒரு நிமிஷம்.." என்றவன் தன் கைப்பேசியை எடுத்து அதில்
அக்னி கூறிய மெயில் ஐடியை , பங்கஜிற்கு அனுப்பி,


' இந்த ஐடியே இருக்கக்கூடாது, இல்ல இந்த ஐடியில எதுவும் இருக்கக்கூடாது...'


அரை மணி நேரத்திற்குள் வேலையை முடிக்குமாறு செய்தி அனுப்பிவிட்டு,
கண்களில் கண்ணீர் புரண்டோட,
கைப்பேசியோடு கலவரத்தில் ஈடுபட்டிருந்தவளிடம்,


" உன் மொபைல் சரி பண்றதுக்கு ... சைபர் கிரைம் ப்ரான்சோட ஹெல்ப் கேட்டு டெக்ஸ்ட் பண்ணியிருக்கேன் .. சரியா...."


" தேங்க்ஸ் அ லாட் அர்ஜுன் ...
என் லைஃப்ல எனக்குன்னு இருக்கிறது அஜய்யோட பேசின, வாய்ஸ் மெயில், அவரோட எடுத்துக்கிட்ட போட்டோஸ், வீடியோஸ் மட்டும்தான் ... என் லேப்டாப்ல ஒரு காப்பி வச்சு இருந்தேன் ஆனா டெல்லியிலிருந்து மும்பைக்கு ஷிப்ட் ஆகும் போது ட்ராவல்ல வெயிட் அதிகமா இருந்ததால தூக்க முடியாம எங்கேயோ மறந்து வச்சிட்டேன் கடைசில தொலைஞ்சிடுச்சு ... எனக்கு வேற எந்த சோஷியல் நெட்வொர்க்லயும் அக்கவுண்டும் கிடையாது... என் மொபைல் சரியாயிடுமில்ல அர்ஜுன் ..." என்று கேட்டு துடித்து அழுதவளை பார்க்கப் பார்க்க, அவனிடம் இருந்த குரூரம் மறைந்து பரிதாப உணர்ச்சி தலை தூக்க ஆரம்பித்தது.


அவன் வாழ்வில் வானவில் போல் சடுதியில் வந்து போன சுபாவையே ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் நினைவுகூர்ந்து இன்று வரை மறக்க முடியாமல் தவிக்கிறான். அவளும் அவன் மனதில் ஏதோ ஒரு மூலையில் இன்னமும் அமர்ந்துகொண்டு ஆட்சி செலுத்திக் செய்து கொண்டு தான் இருக்கிறாள் ... இந்நிலையில் தனக்கு இருக்கும் அதே உணர்வுதான் இவளுக்கும் இருக்குமல்லவா ...என்ற எண்ணம் உதிக்க,


முன்பு விதி அஜய்யை இவளிடமிருந்து பிரித்தது.... இப்போது இவனின் சதி அல்லவா அவன் நினைவுகளை இவளிடமிருந்து பிரிக்க முயல்கிறது என்றெண்ணி குற்ற உணர்வில் குமைந்தவனின் கண்களிலும் கண்ணீர் பெருக்கெடுக்க, அவன் கைகளைப் பற்றிக்கொண்டு அழுது
கொண்டிருந்தவளை சட்டென்று தன்னோடு இறுக்கி அணைத்து அவனும் மௌன கண்ணீர் வடிக்க, அடித்த தாயிடமே தஞ்சம் புகும் சேய் போல் அவளும் அழுத்தமாக ஒன்றிக் கொள்ள


ஐ அம் சாரி அம்மு ... நான் வாழனும் அதுக்கு நீ வாழ்ந்தாகணும்... விதி வசத்தால ஒரு முறை உன்னை இழந்தேன், சுபாவை முழுசா இழுந்துட்டேன்... இனிமே என் வாழ்க்கையில இழக்க எதுவுமேயில்ல, ஆனா போராடி அடைய நீ இருக்க ... அதுக்கான போராட்டம் தான் இது... என்ற எண்ணம் ஓடிக்கொண்டிருக்கும் போதே வாட்ஸ் அப்பில் மெசேஜ் வந்ததற்கான குயில் சத்தம் கேட்க,


அவளை தன்னிடமிருந்து பிரித்து நிறுத்தி செய்தியை பார்த்தவனுக்கு


" டன் (Done) " என்ற பதில் பங்கஜ்யிடமிருந்து வந்திருக்க
அதைப் பார்த்து நிம்மதி அடைந்தவன்,


" மொபைல என் கிட்ட கொடுத்துட்டு போ... இன்னும் ஒரு வாரத்துல சரி செய்துடலாம்னு மெசேஜ் அனுப்பி இருக்காங்க... " என்றான் ஏதும் தெரியாதது போல்.


அதனை கேட்டு மனம் மகிழ்ந்தவள், அவளே அவனை இறுக்கி அணைத்து,


" தேங்க்ஸ் அர்ஜுன் ..." என்று கூறி கைப்பேசியை அவன் கையில் திணித்து விட்டு அலுவலகத்திற்கு தயாராக தன் அறைக்கு விரைந்தாள்.


அவள் கொடுத்த அணைப்பு
அவனுக்கானதல்ல அஜய்க்கானது என்ற நிதர்சனம் அவன் நெஞ்சை
பிசைந்தாலும், ஒருநாள் அவனுக்கே அவனுக்கான அணைப்பு அவளிடமிருந்து கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு அலுவலகம் வந்தவனுக்கு, அக்னியை சந்தித்தே ஆகவேண்டும் என்ற எண்ணம் உதிக்க
உடனே


" அந்த தானே(Thane) ரேப் கேஸ்ல பாரன்சிக் ரிபோட் வந்துடுச்சா பங்கஜ் ..."


" இல்ல சார், தன் தங்கச்சிய அந்த ரெண்டு பேர் ரேப் பண்ணி கொலை பண்ணிட்டதால அவங்களை கை வேற, கால் வேறையா வெட்டி பாலத்துக்கு கீழ பாதியும் குப்பைமேட்டுல பாதியும் புதைச்சு வச்சிருக்கிறதா அந்த அக்யூஸ்ட்டே ஒத்துகிட்டு ஸ்டேட்மெண்ட் கொடுத்துட்டான் ... அதனால ரிப்போர்ட்காக நாங்க வெயிட் பண்ணாம வி ஆர் ப்ரோஸிடிங் சார்..." என்றார் பங்கஜ்.


" நீங்க தானே அந்த கேச்சோட இன்வெஸ்டிகேஷன் ஆபீசர், பாலத்துக்கு கீழயும் குப்பை மேட்டிலயும் கிடைச்ச பாடி பார்ட்ஸோட சாம்பிள்ஸை கலெக்ட் பண்ணி பாரன்சிக் லேபுக்கு உடனே அனுப்பிட்டீங்க இல்ல.."


" எஸ் சார் , அனுப்பி இரண்டு நாள் ஆகுது... இன்னும் ரிப்போர்ட் வரல .."


" சரி நான் வாங்கிட்டு வந்துடறேன் ..."


" சார் நீங்க போகணுமா ...மெயில்ல வந்துடும் சார் ..."


" அங்க எனக்கு ஒரு வேலை இருக்கு ....நேர்லயே பார்த்து வாங்கிட்டு வந்துடறேன்..." என்றவன் திருமணத்திற்கு பின்பு முதன் முதலாக தன் மனையாளுக்கு வாங்கிக் கொடுக்க போகும் பரிசை தரமாக தேர்ந்தெடுத்து வாங்கிக்கொண்டு அக்னியின் அலுவலகத்திற்கு விரையும் போது விஷ்ணுவிடம் இருந்து அழைப்பு வர,


" என்ன பையா, அண்ணி எப்படி இருக்காங்க ...."


" இப்ப பரவால்ல டா.. அவளை பார்க்க தான் போய்கிட்டு இருக்கேன்..."


" பாரன்சிக் லேப்க்கா..."


" ஆமா...."


" சோ நம்ம ஏரியால தான் இருக்கேன்னு சொல்லு, எனக்கும் லஞ்ச் டைம் தான் நானும் வரேன் ..."


" சரி, லேபை ரீச் பண்ணிட்டேன் .... நீயும் வா .."


என்றவன் தன் காவல்துறை வாகனத்தில் இருந்து இறங்கி, ஆயுதம் தாங்கிய
காவலாளியிடம்


"லேப் அனாலிஸ்ட் அக்னியை பாக்கணும் ..." என்றான் தோரணையாக.


ஒரு வித பயம் கலந்த மரியாதையோடு,


" சார், அவங்க சர் நேம் ( Surname) சொல்லுங்க..."
என்றதும் துணுக்குற்றவனுக்கு ஏனோ பதில் சொல்ல பிடிக்காமல் யோசிப்பது போல் பாவனை செய்ய அதற்குள் தேடி கண்டுபிடித்த காவலாளி,


" ஓ.... மிஸ்ஸஸ் அத்துல்கரா, புதுசா வந்திருக்காங்க இல்ல சார் பேர் நினைப்புல இல்ல.." என்பதைக் கேட்டதும் தான், கைபேசியை மாற்றினால் போதாது, அவள் பெயரோடு ஒட்டிக் கொண்டிருக்கும் அஜய்யின் குடும்ப பெயரையும் மாற்ற வேண்டும் என்று நடு மண்டையில் யாரோ 'நச்' சென்று கொட்டியது போல் உரைக்க , அதற்கான ஏற்பாட்டை அப்பொழுதே செய்ய முடிவெடுத்து, வழக்கறிஞர் மற்றும் சார் பதிவாளரை தொடர்பு கொண்டு பேசி முடித்தான்.


அங்கிருந்து வரவேற்பறைக்கு சென்றவன், வழக்கின் பெயரைச்சொல்லி , காவலாளியிடம் குறிப்பிட்டது போல் அக்னி என்ற பெயரை மட்டும் குறிப்பிட, அங்கிருந்த 2 பெண் வரவேற்பாளர்களில் ஒரு பெண்,
ஆர்வத்தோடு அர்ஜுனை அமர சொல்லிவிட்டு, உள் தொலைபேசி வழியாக அக்னிக்கு செய்தி சொன்னாள் .


10 நிமிடம் கழித்து, பரபரப்பாக வந்த விஷ்ணு வழக்கம் போல் ஜெய் ஹிந்த் என்று கைகுலுக்கிவிட்டு, அர்ஜுனிடம் நலம் விசாரிக்க, ஓரிரு நொடி இருவரும் அளவளாவிய நிலையில்


"டேய், அந்த பொண்ணு ரொம்ப நேரமா என்னையே உத்து உத்து பார்த்துக்கிட்டு இருக்குதுடா... ஒரு வேளை என்னைய மாதிரியே வேற யாராவது அதுக்கு தெரிஞ்சு இருக்குமா ..." என்றான் அர்ஜுன் பெண் வரவேற்பாளர்களில் ஒரு பெண்ணைக் மட்டும் மறைமுகமாக சுட்டிக் காட்டி.


" ப்ரோ.... உனக்கு உன் லுக்-அலைக் (look-alike) பிரச்சனையை விட்டா வேற பிரச்சனையே தெரியாதா...அதுக்காக எல்லாம் அது பாக்கல .. ஆள் வானளாவி வளர்ந்துருக்கியே வெவரமா இருப்பியோன்னு பார்க்குது...
பாவம், அதுக்கு தெரியாது நீ கட்டின பொண்டாட்டியே கரெக்ட் பண்ண தெரியாம இங்க வந்து குந்திக்கிட்டு இருக்குறது ... சம்சாரத்துக்கு முத்தம் கொடுக்கிறதுக்கு கூட சைக்கியாட்ரிஸ்ட் சஜஸ்ட் பண்ண வேண்டிய நிலையில் இருக்கிற ஒரே ஆள் நீதாங்கிற உன் எஸ்டிடி மட்டும் தெரிஞ்சுது தெறிச்சு ஓடிடும் ...."


" டேய், நிஜமாவே நீ வாங்க போற டா... என்ன இருந்தாலும்
சைக்கியாட்ரிஸ்ட் சைக்கியாட்ரிஸ்ட் தான் ...
நேத்தே அந்த மேடம் கேட்டாங்க, இவனை உள்ள உட்கார விடலாமான்னு... நான் தான் உன்னை நல்லவன்னு சொல்லி உள்ளே உட்கார வச்சேன் ... இப்ப அனுபவிக்கறேன்..."


" சரி.... இன்னும் 'சிட்டி'ய மீட் பண்ணலையா ..."


" யாரு சிட்டி..."


" சிட்டி, தி ரோபோட் ...வேற யாரு அண்ணி தான் ..."


" அடப்பாவி, ஏண்டா திடீர்னு இப்படி ஒரு பேரு ..."


" அதான் டாக்டர் சொன்னாங்க இல்ல ரோபோ மாதிரி வாழ்ந்துகிட்டு இருக்காங்கன்னு ..."


" அவளை ஸ்ரீன்னு நினைச்சியா... விவரம் இல்லாம இருக்கிறதுக்கு ... டெல்லில ஒரு ஆசிட் அட்டாக் கேஸ்ல
அந்த ஏரியா எம்எல்ஏவையே பகைச்சிகிட்டு
ரிப்போர்ட்டை ஸ்ட்ராங்கா கொடுத்து அதிரி புதிரி பண்ணவா ...
அவளுக்கு அங்க வேற பேரு தெரியுமா ..." என்றான் மனையாளை விட்டுக்கொடுக்காமல்.


" என்ன மாணிக் பாஷியா..."


"டேய் கட்டதுரை , உனக்கு கட்டம் சரியில்ல... இவ்ளோ நேரமா என்னைய கலாய்ச்சிகிட்டு இருந்த, இப்ப என் பொண்டாட்டியை கலாய்க்க ஆரம்பிச்சுட்டியா.... பார்த்து அவ ஒரு மாதிரி... போட்டு தள்ளிட்டு போய்ட்டே இருப்பா..."


" அதான் தெரியுதே என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டே எட்டு அடில எட்ட நிற்கும் போது நானெல்லாம் எம்மாத்திரம் ..." என்றவன் பேசிக்கொண்டிருக்கும் போதே பாலித்தீன் கவரால் செய்யப்பட்ட டைவிக் சூட் (Tyvek suit ) எனப்படும் பாதுகாப்பு உடையை தன் ஆடையின் மீது அணிந்து, கை கால்களில் கையுறை காலுறை சகிதமாக கம்பீரமாக வந்தவளின் கண்களில் அப்படி ஒரு ஆச்சர்யம்.


" வாட் எ சர்ப்ரைஸ் ... எஸ்.பி வந்திருக்காங்கன்னு கூப்பிட்டாங்க நீங்களா இருப்பீங்கன்னு கொஞ்சம் கூட எதிர்பார்க்கல..." என்றவளின் பார்வையிலும் மொழியிலும் மகிழ்ச்சி தளும்பி வழிந்த மறுநொடி தீவிரமும் பதட்டமும் சூழ,


" அஷ்வத்துக்கு ஒன்னும் இல்லையே ..." என்றாள் பயத்தோடு.


" நோ... நோ...ஹி ஈஸ் டூயிங் அப்சல்யூட்லி பைன் ..."
என்றான் அர்ஜுன் மெல்லிய புன்னகையோடு.


கேட்டு நிம்மதியுற்றவளாய்,


" நீங்க என்னை பார்க்க வந்திருப்பீங்கன்னு கொஞ்சம் கூட எதிர் பார்க்கல..." என்றாள் மீண்டும் ஒரு முறை அவள் மனமகிழ்ச்சியை பறைசாற்றும் விதமாய்.


அர்ஜுன் பதில் பேசாமல், அவள் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியை மட்டும் ரசித்துக்கொண்டே நிற்க,


" ஏதாவது கேஸ் விஷயமா வந்தீங்களா .." என்றவளின் முகத்தில்
சிறு சோகம் மின்னி மறைய


" கொஞ்சம் ஆபீஷியல்.... நிறைய பர்சனல் ..." என்றவன் தன் கையில் இருந்த தங்க நிற காகிதம் சுற்றிய சிறு பெட்டியை அவளிடம் நீட்ட


அதன் முகப்பில் பெறுநர்


'திருமதி அக்னி அர்ஜுன் கிருஷ்ணா' என்று எழுதப்பட்டிருக்க,

" என்னது இது ..." என்றாள் யோசனையாக.


" நியூ மொபைல் போன் ..."


"ஏன் .."


" உன் போன் ரிப்பேர் ஆக இன்னும் ஒரு வாரம் ஆகுமாம்... அதனாலதான் இது வாங்கினேன் .. இதோட நியூ சிம்மும் இருக்கு..."


" நியூ சிம் ...?"


" உன் டேட் ஆப் பர்த் வர்ற மாதிரி விஐபி ஃபேன்சி நம்பர மொபைல் நம்பரா வாங்கி இருக்கேன் ..." என்றதை கேட்டு அவள் கண்கள் ஆச்சர்யத்தில் விரிய , உடனே விஷ்ணு அந்த சிறு பெட்டியின் மேல் இருந்த கைபேசி எண்ணை பார்த்து மகிழ்ச்சியில்


" வாவ்...மிஸஸ் அர்ஜுன் , என்னோட மொபைல் நம்பரும் இதேதான்... ஒரு வருஷம் நான் உங்களை விட பெரியவன் ... அதனால கடைசி ஒரே ஒரு நம்பர் மட்டும் மாறி இருக்கு... நானும் என் டேட் ஆஃப் பர்த் வர்ற மாதிரி விஐபி ஃபேன்சி நம்பர தான் யூஸ் பண்றேன் ... " என அந்த அலைபேசி எண்ணை பார்த்தபடி அவன் இயல்பாக ஆர்ப்பரிக்க ,
அவன் அழைப்பு அவளுக்குள் இதத்தை விதைத்தாலும்
அதனை வெளிக்காட்டாமல், அர்ஜுனோடு தானே(thane)இரட்டைக் கொலை வழக்கு பற்றி அவள் பேச ஆரம்பிக்க,


" மிஸஸ் அர்ஜுன், எங்களுக்கு அந்த கேஸோட பாரன்சிக் ரிப்போர்ட்ட கொஞ்சம் சீக்கிரமா கொடுக்க முடியுமா..." என்றவனின் இரண்டாவது அழுத்தமான அழைப்பு, அவளுள் பரவியிருந்த இதத்தை மேலும் அதிகப்படுத்த, அதனை ஏற்க மனமில்லாமல சிறு கோபத்தை வேண்டுமென்றே தற்காலிகமாக உருவாக்கிக்கொண்டு


" உங்களுக்கு வேற மாதிரி என்னை கூப்பிடவே தெரியாதா ..." என்றாள்.


" மிஸ்டர் வசீகரன், சிட்டிக்கு கோவம் வருது ... ஃபீலிங்ஸ் இருக்குது .."
என்றவனின் சன்னமான பேச்சை கண நேரத்தில் புரிந்துகொண்ட அர்ஜுன்,


" டேய்...கொஞ்ச நேரம் சும்மா இரேன் டா..." என கெஞ்ச , அது புரியாமல் அக்னி
விஷ்ணுவையே முறைத்து பார்க்க,
இதற்கெல்லாம் அசருவேனா என்பது போல் விஷ்ணு,
அவள் கோபத்தை துளிக்கூட சட்டை செய்யாமல்,


" யக்கா , நேரமாச்சு ... லஞ்ச் சாப்பிட போவணும் ...கொஞ்சம் பெரிய மனசு பண்ணி ரிப்போர்ட் கொடுத்துடு யக்கா ..." என்ற குசும்பான அழைப்பு, மற்ற இருவருக்கும் குபீரென்று சிரிப்பை வரவழைக்க,


" இதுக்கு முதல்ல கூப்பிட்டதே நல்லா இருந்தது ..." என்றாள் இதழக்கிடையே புன்னகையை மறைத்து.


அப்படி வா வழிக்கு ... என்று அர்ஜுன் நினைக்க, அதையே நினைத்த விஷ்ணுவும்,


" தேங்க்ஸ் மிஸ்ஸஸ் அர்ஜுன் ..ப்ளீஸ் ப்ரோஸிட்..." என்றான் கண்ணில் குறும்போடு .


பிறகு அவளே, அந்த வழக்கிற்கான தடவியல் அறிக்கையை வரவழைத்து அவனிடம் கொடுக்க,


இரண்டு நகல்கள் உள்ள அறிக்கையை மேலெழுந்தவாறு இருவரும் வாசிக்க


" அண்ணி, மர்டர் வெப்பனா ரெண்டு நைஃப்பை (கத்தி) பாடி கிடைச்ச இடத்திலருந்து எடுத்திருக்காங்க ... இரண்டுலயும் கொலையாளியோட ஃபிங்கர் ப்ரிண்ட்ஸ் இருக்கு... ஆனா எப்படி முடிவு பண்ணீங்க இந்த ஒரே ஒரு நைஃப் தான் கொலைக்கு யூஸ் பண்ணி இருக்காங்கன்னு ..."


"வெரி சிம்பிள் ... இந்த ரெண்டு நைஃப்போட விட்த்(Width) சேம் தான்.. ஆனா லென்த்தை(length) பாருங்க ... ஒன்னு 13.5 செ.மீ,
இன்னொன்னு 9.5 செ.மீ ...


பாடியோட அப்டமன்ல (வயிற்றுப்பகுதி) மல்டிபிள் ஸ்டாபிங் நடந்திருக்கு... ஒவ்வொரு கத்திக்குத்தின் ஆழத்தை மெஷர் பண்ணா அதிகபட்சம் 9 சென்டிமீட்டர காட்டுது... அதுமட்டுமில்லாம இந்த ரெண்டு நைஃப்போட முனைய மைக்ரோஸ்கோப்ல பார்த்தா, இந்த 9.5 செ.மீ நைஃப்போட முனை தான் தேய்ஞ்சு இருக்கு... அதனால தான் இந்த நைஃப்பை மர்டர் வெப்பன்னு கன்குளூட் பண்ணேன்..." என்றவளின் பதிலைக் கேட்டு வியப்பின் உச்சத்தில் விஷ்ணுவின் புருவம் வில்லாய் வளைந்த படி அர்ஜுனை நோக்க,
பெருமிதத்தோடு அதை எதிர்கொண்ட அர்ஜுன், வேறு செயலில் ஈடுபட்டிருந்த அக்னியை காதலோடு பார்க்க, அப்போதுதான் அவள் கழுத்தில் மாட்டி இருந்த அடையாள அட்டை அவன் கண்ணில் பட
" அதில் 'அக்னி அஜய் அத்துல்கர்' என்று அச்சிடப்பட்டிருக்க, உடனே தணிந்திருந்த ஏதோ ஒன்று தலைக்கு ஏறியது போல் தோன்ற,


இனிமே நீ
' அக்னி அர்ஜுன் கிருஷ்ணா' டி.....
கூடிய சீக்கிரம் எல்லாத்தையும் மாத்தறேன்... என்றவன் உள்ளுக்குள் குமறிக்கொண்டிருக்கும் போது


" சூப்பர் அண்ணி... சான்சே இல்ல... எவ்ளோ அழகா கன்குளூட் பண்ணி இருக்கீங்க..." என்றவனின் பாராட்டை லேசாக தலையசைத்து அவள் ஏற்க,


" நீங்க ரெண்டு பேரும் பேசிக்கிட்டு இருங்க ... எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு இதோ வந்துடறேன் ..." என்ற அர்ஜுன் அடுத்து பார்க்கச் சென்றது துருவை.


"சார், துருவ் டிஎன்ஏ டிவிஷன்ல வொர்க் பண்றாரு..." என்றாள் அந்தப் பெண் வரவேற்பாளர்.


" நான் கேண்டீன்ல வெயிட் பண்றேன் ...அவரைக் கொஞ்சம் வர சொல்லுங்க ..." என்று கம்பீரமாக கூறி விட்டு அவன் கேண்டீனுக்கு சென்றுவிட, அடுத்த பத்தாவது நிமிடத்தில் அவன் முன் அமர்ந்திருந்தான் துருவ்.


அர்ஜுனின் பதவி, தோரணையை பார்த்து, உள்ளுக்குள் உதறல் இருந்தாலும், அதனை வெளிக்காட்டாமல் கெத்தாக,


" சார், நான் தானே(thane) கொலை வழக்குல ரிப்போர்ட் கொடுத்தது கொடுத்ததுதான் ... அதுல எதையும் மேனுப்புளேட் பண்ண முடியாது...
அந்த மாதிரியான ஐடியாவுல வந்திருந்தீங்கன்னா, தயவு செய்து கிளம்பலாம்..." என்றான் யோக்கியன் போல்.


" அதை பத்தி அப்புறம் பேசலாம்...நான் அக்னியை பத்தி பேசலாம்னு வந்திருக்கேன்...." என்றவனின் இயல்பான பேச்சில், நடுக்கம் குறைந்து
உல்லாச மனநிலைக்கு வந்த துருவ்,


" ஓ...உங்களுக்கும் அவளைப் பிடிச்சிருக்கா... ரொம்ப தான் சீன் போடறா....பட் கூடிய சீக்கிரம் அவளை தட்டி காமிக்கிறேன்.... என்கிட்ட மடியாத ஃபிகரே கிடையாது ...என்ன... கொஞ்சம் பணம் அதிகமா எதிர்பார்ப்பான்னு நினைக்கிறேன்.... பட் ஷி வொர்த் இட்...
எனக்கு மடிச்சதுக்கு அப்புறம் சொல்லி அனுப்புறேன் ...." என்றவனின் பேச்சு
அருவருப்பையும், கோபத்தையும் அர்ஜுனின் மனதில் கொழுந்துவிட்டு எரியச்செய்ய, சுற்றி முற்றி பார்த்தவன்


" ஒரு நிமிஷம் அப்படி போய் பேசலாமா ..." என்றவன் சற்று மறைவான பகுதிக்கு துருவை அழைத்துச் சென்று, எதிர்பாராத நேரத்தில் அவன் இரு கன்னத்திலும் மாறி மாறி இடியை இறக்க, அதில் நிலைகுலைந்தவனின் கழுத்தை பற்றி தரையிலிருந்து கிட்டத்தட்ட ஓர் அடி உயரத்திற்கு தூக்கிப் பிடிக்க, வலியில் செய்வதறியாமல் மூச்சுத்திணறலில் துருவ் துடிக்க, அரை நொடிக்கும் குறைவான தருணத்தில் தரை இறங்கியவன்


" ***** *** எல்லா பொண்ணும் பணம்னா பல்லை இளிச்சிக்கிட்டு
**** வந்திடுவான்னு நெனப்பா.... யாரைப் பத்தி யார் கிட்ட பேசற.... அவ பேர் மாதிரியே அவ நெருப்புடா...
அங்கேயே உன்னை பொளந்திருப்பேன்... ஆதாரமே இல்லாம செய்யறது தான் இந்த ஏ.கேவோட ஸ்டைல் ... அதான் சிசிடிவி இல்லாத இடமா கூட்டி வந்து நாலு சாத்து சாத்தினேன்...இப்ப அங்க போய் பேசலாமாடா பரதேசி ...." என்றவனை
வலியில் துடிதுடித்த படி கழுத்தை பற்றிக்கொண்டு, மெதுவாக பின்தொடர்ந்தான் துருவ்.


எதிரில் அமர்ந்தவனை ஆழ்ந்து நோக்கிய அர்ஜுன்,
" என்ன சொன்ன ரிப்போர்ட்டை மேனுப்புலேட் பண்ணி கொடுக்க முடியாதா... பெரிய யோக்கியன் மாதிரி பேசற ...
உன்னைப் பத்தி எல்லாம் தெரிஞ்சுகிட்டு தான் இங்கு
வந்திருக்கேன் டா.... நவி மும்பை ரேப் அண்ட் ஆசிட் அட்டாக்ல அக்யூஸ்ட் கிட்ட பணம் வாங்கிகிட்டு ரிப்போர்ட்டை மாத்தி கொடுத்தவன் தானே நீ..." என்றவனின் அனல் கக்கும் பேச்சில், துருவ்க்கு வலியோடு வியர்வையும் உடைப்பெடுக்க,
கை கால்களில் நடுக்கம் ஏற்பட்ட நிலையில் அதனை மறைத்தபடி


" சார், அது என் டிபார்ட்மெண்ட்ல வேற யாரோ பண்ண தப்பு சார் ... விக்டிம்க்கு சாதகமா மறுபடியும் ரிப்போர்ட் கொடுத்துட்டோம் சார்..." என்றான் மிகுந்த பயத்துடன் ஒருவித நடுக்கத்தோடு.


"அது இருக்கட்டும் ... அக்னி யார் தெரியுமா ...ஷீ ஈஸ் மை வைஃப் ...
இன்னொரு தடவ, நீ அவ விஷயத்துல தலையிட்டேன்னு தெரிஞ்சது,
அப்புறம் உன்னோட பாரன்சிக் ரிப்போர்ட்காக உன் அம்மா அப்பா காத்திருக்க வேண்டிய நிலைமை வந்துடும் ...நான் யாருன்னு தெரியுமில்ல... ஏ.கே .... போடணும்னு முடிவு பண்ணிட்டேன் ஆதாரத்தை கிரியேட் பண்ணிட்டே உன்னை போட்டுடுவேன் ..." என்றவன் அங்கிருந்து விருட்டென்று எழுந்து
வரவேற்பு கூடத்திற்கு வர, அங்கு விஷ்ணுவுடன் பேசிக்கொண்டிருந்த அக்னி,


" எங்க போயிருந்தீங்க .."என்றாள் இயல்பாக.


" ரொம்ப நாள் மீட் பண்ணனும்னு நினைச்சுகிட்டு இருந்த ஒரு புது ஃப்ரெண்ட்ட இப்பதான் பார்த்து 'விசாரிச்சுட்டு' வரேன் ..." என்றவன்
அவளை வெகுவாக நெருங்கி,


" நான் உன் ஹவுஸ் மேட் மட்டுமில்ல...
உனக்கு எல்லாமே நான்தான் ... நினைவுல வச்சுக்கோ..." என்றவள் காதுகளில் கிசுகிசுத்து விட்டு
விஷ்ணுவை அழைத்துக்கொண்டு விடைபெற்றான்.


தகிப்பாள்
 
அத்தியாயம் 31


அர்ஜுன் கடைசியாக பேசி விட்டுச் சென்றது, புரியவில்லை என்றாலும், ஏனோ அவள் மனதிற்கு அவனின் வரவு இதத்தை கொடுத்திருந்தது.


அன்றிரவு உணவு உண்ணும் போதும்,


" இந்த ஒரு சப்பாத்தி சாப்பிடறதெல்லாம் நிறுத்து... இனிமே நைட் 3 சப்பாத்தி சாப்பிடற... இந்த ஃபுல் கப் சாலட் சாப்பிடுற... உனக்கு ரொம்ப பிடிக்குமேன்னு நாளைக்கு பிரேக்பாஸ்ட்க்கு சிக்கன் சூப் செய்ய சொல்லி இருக்கேன் ... அதே மாதிரி ட்ரை ஃப்ரூட்ஸ் மில்க் ஷேக்கும் குடிக்கிற ... உனக்கு நான் பேலன்ஸ்டு டயட் சார்ட் ப்ரிபேர் பண்ணியிருக்கேன் ... அதை தான் இனிமே நீ ஸ்ட்ரிக்டா ஃபாலோ பண்ணனும் ..." என்றவனை நூதனமாக பார்த்தவள்,


" இவ்ளோ எல்லாம் என்னால சாப்பிட முடியாது... இது ரொம்ப ஹெவி... சரி நான் ஏன் இவ்ளோ சாப்பிடணும் .. எதுக்காக திடீர்னு பேலன்ஸ்டு டயட்ட ஃபாலோ பண்ணனும் ..."


" ஏன்னா நான் வீக்கா இருக்கேன் .." என்றவனின் பதிலில் , வெகு நாட்களுக்குப் பிறகு குலுங்கி சிரித்தவள்


" என்னது நீங்க வீக்கா இருக்கீங்களா..." என்றவளிடம்
நான்கு சப்பாத்தியை சாப்பிட்டு முடித்துவிட்டு, காய்கறி சாலடை வாயில் மென்றுகொண்டே,


" பார்த்தா தெரியாது ... ஆனா டாக்டர் அப்படித்தான் சொன்னாரு..." என்றான் சிரிக்காமல் கண்ணில் மட்டும் குறும்போடு.


" சரி, நீங்க வீக்கா இருக்குறதுக்கு நான் ஏன் சாப்பிடணும் ..."


" குட் கொஸ்டின் ... நீயும் நானும் பிரேக் ஃபாஸ்ட் அண்ட் டின்னர் ஒன்னாதான் சாப்பிடறோம்... நான் மட்டும் உன்னை பார்க்க வச்சு இவ்ளோத்தையும் சாப்பிட்டா எனக்கு வயிறு வலிக்குமில்ல... அதனால ஒரு முன்னேற்பாட நீயும் கூட சாப்பிடற.."


" உங்க அளவுக்கு என்னால சாப்பிட முடியாது ..."


" பரவால்ல பாதி சாப்பிடு ...அது மட்டும் இல்ல டாக்டர் எனக்கு நைட் வாக்கிங் மார்னிங் யோகா செய்யச் சொல்லியிருக்காரு... தனியா செஞ்சா எனக்கு போர் அடிக்கும் ஒரு மோட்டிவேஷன்காக இனிமே நீயும் என்னோட ஜாயின் பண்ணிக்கிற ... அஷ்வத் ஏற்கனவே பேலன்ஸ்டு டயட் ல தான் இருக்கான்... இனிமே அவனும் நம்மளோட யோகா பண்ண ஜாயின் பண்ணிப்பான் சரியா ..." என்றவன் அவள் பதிலுக்காக காத்திருக்காமல்


" சரி ஒன் ஹவர் கழிச்சு வாக்கிங் போலாம் எனக்கு இப்ப கொஞ்சம் வேலை இருக்கு..." என்றபடி உணவு மேஜையை விட்டு வெளியேறினான்.


அதன் பின் வந்த வாரத்தில் அவனின் புது முயற்சிகள் ஏறக்குறைய நற்பலன்களை கொடுக்க ஆரம்பிக்க,
இருவருக்கிடையே இருந்த இரும்புத்திரை உடைந்து, ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளும் அளவிற்கு கண்ணாடி திரை மட்டுமே நிலுவையில் இருந்தது.


கடந்த அந்த ஒரு வார காலத்தில் ஆங்கில மாத்திரை இல்லாமல் தூங்க முயற்சித்து, அதில் ஓரளவு வெற்றியும் கண்டிருந்தாள்.
தேவை என்றால் அவ்வப்போது ஜடமான்சி ஆயுர்வேத மாத்திரையை பயன்படுத்திக்கொண்டாள்.
இருவரின் அலுவலகத்திலும் நடந்த நிகழ்வினை, இரவு நடைபயிற்சியின் போது இருவருமே பகிர்ந்து கொள்ள, அம்மாதிரியான பேச்சுக்கள் அவர்களுக்கிடையே மீண்டும் நட்பை வேர்விட்டு வளர உறுதுணையாய் இருந்தது.


எட்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்த நட்பு போல் தெளிந்த நீரோடையாக இல்லை என்றாலும், இந்த புதிய நட்பு மன முதிர்ச்சியோடு கூடிய புரிதலைக் கொடுத்திருந்தது என்றே கூறலாம்.


இயல்பான பெண்களைக் காட்டிலும் சற்று அதிகமான மனதிடம் கொண்டவள் தான் அக்னி... ஆனால் அவள் வாழ்க்கையில் எதிர்பாராமல் விழுந்த அடி மேல் அடி, அவள் உடலோடு மனதையும் உருக்குலைய செய்திருந்த நிலையில், தற்போது இந்த ஒரு வார காலத்தில் உடல் மற்றும் மன ஆரோக்கியம் சரியாக பேண ஆரம்பித்ததன் எதிரொலி, தன் கூட்டில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளி வர ஆரம்பித்திருந்தாள்.


அர்ஜுன் உடனான பேச்சு, அவன் காட்டும் அக்கறை, நட்பு , அவனிடம் அவள் உணர ஆரம்பித்திருக்கும் பாதுகாப்பு உணர்வு என அனைத்துமே அவள் மனதில் நேர்மறை எண்ணங்களை விதைக்க ஆரம்பித்திருக்க, அவைகள் அவள் உடல் மற்றும் முக அழகிலும் பிரதிபலித்து
அவளை மேலும் பேரழகி ஆக்கிக்கொண்டிருக்க,
மனையாளின் இந்த தோற்றப்பொலிவு,
ஏற்கனவே காதலால் கசிந்துருகி கொண்டிருந்தவனின் மனதை காந்தம் போல் கவர்ந்திழுக்க,
அவள் கண்ணில் தனக்கான அழைப்பு இன்னும் இல்லை என்பதை உணர்ந்தவன் அந்த தருணத்திற்காக காத்திருக்க எண்ணி கண்ணியம் காக்க ஆரம்பித்தான்.


அந்த ஒரு வார காலத்தில் வேறொரு முக்கிய பணியையும் செய்து முடித்திருந்தான்.


" அக்னி, இன்னும் ஆறு மாசத்துல, ஒரு கேஸ்காக நான் அப்ராட் போகனும்...
நீயும் அஷ்வத்தும் என்னோட ட்ராவல் பண்ணனும்னா, நேம் சேஞ்ச் பண்ணி நியூ பாஸ்போர்ட் எடுக்கணும் ...
அதுக்கு நம்ம மேரேஜை ரிஜிஸ்டர் பண்ணியாகணும் ..." என்று தெளிவாக காய் நகர்த்தினான்.


ஒரு வினாடிக்கும் குறைவான நேரத்தில் யோசித்துவிட்டு,


"ம்ம்ம்ம்" என்றாள்.


உடனே மின்னல் வேகத்தில் அதற்கான ஏற்பாடுகளை செய்ததோடு வழக்கறிஞரை சந்தித்து அபிடவிட் பெற்று பெயர் மாற்றம் செய்து,
அஷ்வத்தின் பள்ளியிலும்
'அஷ்வத் அர்ஜுன் கிருஷ்ணா' என்று
பெயர் மாற்றம் செய்து முடித்தான்.


இந்நிலையில் ஒருநாள் அர்ஜுன் தன் அலுவலக அறையில், கணினி முன் அமர்ந்தபடி எதையோ தீவிரமாக சிந்தித்து தகவலை ஆவணம் செய்து கொண்டிருக்கும் போது அறையின் வாயிலில் ஏதோ நிழலாட


" அஷ்வத், என்னமா வேணும் .." என்றான் கணினியை விட்டு பார்வையை விலக்காமல்.


" அஷ்வத் இல்ல அக்னி வந்திருக்கேன் ..." என்றவளின் குழந்தைத்தனமான பதிலில் மனம் லயித்தவன், அதனை வெளிக்காட்டாது


" என்ன வேணும் ..." என்றான் கெத்தாக.


" அர்ஜுன், உங்க ஜிம் ரூம்ல இருக்கிற
மேல் ஸ்லேப்ல , அஷ்வத் பாலை(Ball) தூக்கி அடிச்சிட்டான் ...
என்னால எடுக்கவே முடியல .... ரொம்ப உயரமா இருக்கு ... ஸ்டூல் போட்டு ஏறினாலும் கை எட்டல... ப்ளீஸ் வந்து எடுத்துக் குடுங்க ..." என்றவள் தயங்க

பரணை மேல பந்து விழுந்ததும் தான் வீட்ல ஒரு பரதேசி 6 அடிக்கு மேல இருக்கன்னே உனக்கு தெரியுது இல்ல ...


என்னையா ஹவுஸ் மேட்னு சொன்ன... தோ வரேண்டி... வந்து ...நான் யாருன்னு காட்டறேன் ... என்று மனதிற்குள் குமுறிய படி அர்ஜுன்
உடற்பயிற்சி அறைக்குள் நுழைய, இவனை உதவிக்கு அழைத்தவள் வழக்கம் போல் தானும் தன் முயற்சியை கைவிடாமல் நாற்காலி மேல் ஏறி நின்று, தன்னால் இயன்றவரை மேலிருந்த தடுப்புக்குள் சென்ற பந்தை கை விட்ட படி தேடிக்கொண்டிருக்க,


வைன் நிற கையில்லா சட்டை மற்றும் முழங்கால் வரையிலான மெரூன் நிற பாவாடை
அணிந்திருந்தவள் , கர்ம சிரத்தையோடு பந்தை தேடும் பணியில் ஈடுபட்டிருக்க, அவளுடைய மேல் சட்டை, சற்று மேலே தூக்கிக்கொண்டு வெண்ணிறப் பஞ்சு போன்ற இரண்டு இன்ச் இடுப்பு
பளபளப்பாக காட்சியளித்து அவனைக் கவர்ந்திழுக்க,


பின்புறமாக நெருங்கியவன் அவள் தொடைகளை தன் இரு கரங்களால் சுற்றி வளைத்து உயர்த்திப் பிடிக்க, திடீரென்ற அவன் ஸ்பரிசத்தில்,


"என்ன அர்ஜுன், என்ன பண்றீங்க ...." என்றாள் ஒரு வித பயத்தோடு.


" ம்ம்ம்ம், உனக்கு எல்லா வேலையும் நீயே செஞ்சு தானே பழக்கம்.... அதான் ஹெல்ப் பண்றேன் .... மேல சரியா தேடு கிடைக்கும் ..." என்றவன் லாவகமாக அவளது பின்புறத்தில் இருந்து முன் புறத்திற்கு வந்து அவளை மேலும் உயர்த்திப் பிடிக்க,


" என்னால முடியல பந்து கிடைக்கல..."


" சரியா தேடுடி கிடைக்கும் ..." என்றான் மிகுந்த சன்னமாக குழைவான குரலில் .


ஓரிரு நொடிக்கு பிறகு


" கிடைச்சிடுச்சி அர்ஜுன் ...." என்றபடி பந்தியிலிருந்து தூசியை தட்டுவதிலேயே அவள் குறியாக இருக்க,
அவளைத் சுமந்துக் கொண்டிருந்தவனின் மனமோ தறி கெட்டு அலைய, நாடி நரம்புகள் அனைத்திலும்
மின்சாரம் பாய்ந்தது போலான உணர்வு செறிவுகளில் சிக்கித்தவத்தவனின்
உதடுகள் ஏறக்குறைய அவள் இடையை உரசி செல்ல, மிக மெதுவாக
தன்னோடு ஒற்றி எடுத்த படி, படிப்படியாக அவனது கரங்கள் அவளை அணைத்தபடியே மேல் நோக்கி முன்னேற, அவள் பாதங்கள் மெதுவாக தரையை நோக்கி பயணமாக,
அவள் மென்மையான வனப்புகளில் முகம் உரசியவன் கள்வெறி கொண்டு மோன நிலையில் இருந்த போது,


" ஸ்ஸ்ஸ்ஸ், அர்ஜுன் வலிக்குது ..." என்ற குரலில் சுயம் உணர்ந்தவன்
அவள் இடுப்பை அழுந்தப் பற்றிக் கொண்டிருப்பதை அறிந்து விருட்டென்று அவளை விட்டுவிட்டு விலகி நின்றான்.


அவள் வலியில் இடுப்பைத் தேய்த்துவிடும் போது தான், அது கன்றி சிவந்திருப்பதைக்கண்டு ,


" ஐ அம் சாரி, நீ கீழ
விழுந்திடகூடாதேன்னு அழுத்தி பிடிச்சிட்டேன் ..." என்றவன் உடனே இன்னதென்று பிரிக்க முடியாத குரலில்


" ஹவுஸ் மேட் எல்லாம் இப்படி அவசரத்துக்கு ஹெல்ப் பண்ண மாட்டாங்க புரிஞ்சுதா ..." என்றபடி
இடத்தை காலி செய்ய


இவனுக்கு என்ன பிரச்சனை ... ஏன் சம்பந்தா சம்பந்தம் இல்லாம போன வாரத்திலிருந்து எதையோ உளறிட்டு போறான் .... யார் இப்ப ஹவுஸ் மேட்டை பத்தி பேசினா... ஒரு வேளை ஹவுஸ்மேட்டால ரொம்ப பாதிக்கப்பட்டிருப்பானோ... என்று தனக்குத்தானே பேசியபடி அஷ்வத்தை நோக்கி செல்லலானாள்.


**************************************


இந்த ஒரு வார காலத்தில், பெரும்பாலும் விஷ்ணு, ஸ்ரீயை தொலைபேசியில் மட்டும்தான் தொடர்பு கொண்டிருந்தான். அதற்கு அதிகமாக இருக்கும் அவன் அலுவலகப் பணியும் ஒரு காரணம்.


இந்த நிலையில் இருவரும் ஒரு பூங்காவில் சந்திக்க,


"போங்கோ விஷூ, இன்னும் கொஞ்ச நாள்ல கல்யாணத்த வச்சுசிண்டு நான் மட்டும் என்ட்ரன்ஸ்க்கு ப்ரிப்பேர் பண்ணிண்டு இருக்கேன் ... இது கொஞ்சம் கூட நன்னாவே இல்ல... "


" என்ட்ரன்ஸ்ல கிளியர் பண்ணாதான் அந்த காலேஜ்ல சீட்டு கிடைக்கும் டி ..."


" இப்ப நான் எதுக்கு படிக்கணும் விஷூ..."


" உனக்கு எத்தனை தடவைடி சொல்றது, ஒரு மாஸ்டர் டிகிரி படிக்கிறதுல என்ன தப்பு... படி .."


" சப்போஸ், நான் என்டிரன்ஸ்ல ஃபெயில் ஆயிட்டா..."


" ஒன்னும் பிரச்சனை இல்ல, மேனேஜ்மென்ட் சீட்டு வாங்கி தரேன் .."


" விஷூ, ரெண்டு நாளா என்ட்ரன்ஸ்க்கு ப்ரிப்பேர் பண்ணிண்டு இருக்கேன்... நேக்கு டைரக்ஷன்ஸ் ப்ராப்ளம்ஸ் ரொம்ப கஷ்டமா இருக்கு ..."


" எங்க சொல்லு ..."


" ஒருத்தன் அவன் ஆத்திலிருந்து கிளம்பி ஃபைவ் கி.மீ தூரம் ஈஸ்ட்ல டிராவல் பண்றான் ... அங்கிருந்து லெஃப்ட்ல திரும்பி ஃபோர் கி.மீ டிராவல் பண்றான் ...கடைசியா அங்கிருந்து மறுபடியும் லெஃப்ட்ல திரும்பி ஃபோர் கி.மீ டிராவல் பண்றான் ... இப்போ அவன் ஆத்திலிருந்து எவ்ளோ டிஸ்டன்ஸ்ல இருப்பான், எந்த டைரக்ஷன்ல இருப்பான்...? இதான் கொஸ்ஷன்...எங்க ஆன்சர் சொல்லுங்கோ ..."


" சரி நீ சொல்லு ...உன்னோட ஆன்சர ..."


" எப்படி போட்டாலும், அவன் ஆத்துக்குள்ளயே இருக்கிற மாதிரிதான் நேக்கு ஆன்சர் வர்து..."


" ம்ம்ம்ம், அவன் குளத்துக்குள்ள இருப்பான் ... ஏண்டி மட்டி ...எப்படி இப்படி ஒரு ஆன்சர் உனக்கு மட்டும் வந்தது... சொல்லு ..."
என்றவனிடம் அவள் தன் தனி திறமையை பயன்படுத்தி விளக்கிக் கூற,


"அடிப்பாவி, உனக்கு ஈஸ்ட் எது வெஸ்ட் எதுன்னு கூட தெரியாதா..."


" நேக்கு டைரக்ஷன்ஸ் புரியவே இல்ல..."


" சூரியன் உதிக்கிற கிழக்கு திசையைப் பார்த்தபடி நின்னுகிட்டு , நம்ம ரெண்டு கையையும் அகலமா பக்கவாட்டுல நீட்டி நின்னா, நம்ம இடக்கைப் பக்கம் வடக்கு, வலக்கை பக்கம் தெற்கு... நமக்கு நேர் பின்னாடி இருக்கிறது மேற்கு அவ்ளோதான்... இப்ப நீ கேட்ட கேள்விக்கு ஆன்சர், அவன் நார்த் டைரக்ஷன்ல இருப்பான்...
ஃபோர் கிலோமீட்டர் ப்ரம் ஹிஸ் ஹவுஸ் ..." என்றவனை சாலை என்றும் பாராமல் அவள் அணைத்துக்கொண்டு,


" எவ்ளோ புத்திசாலி நீங்கோ ...பேப்பர் பேனா எதுவும் இல்லாம சட்டுனு ஆன்சர் சொல்றேளே..
நம்ம குழந்தை என்னை மாதிரி மட்டியா, பொறக்காம உங்களை மாதிரி புத்திசாலியா பொறக்குமில்ல.." என்றவளின் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் திணறியவன்,


" ம்ம்ம், உன்னை மாதிரியே அறிவே இல்லாம க்யூட்டா பொறந்தாலும் எனக்கு ஓகே தான் ..." என்றான் தன் விரக்தியை மறைத்து அவள் அழகான கன்னத்தை தட்டியபடி.


பிறகு அங்கு விளையாடிக் கொண்டிருந்த ஒவ்வொரு குழந்தையின் மீதும் அவளது கவனம் செல்ல, கிட்டத்தட்ட அனைத்து குழந்தைகளோடு அவள் விளையாடி மகிழ, கடைசியில் தப்பான இடத்தை தேர்வு செய்ததை எண்ணி தன்னைத்தானே நொந்து கொள்வதைத் தவிர அவனுக்கு வேறு வழி தெரியவில்லை.


*************************************
திருமதி சேஷாத்ரி, அர்ஜுனை தொடர்பு கொண்டு, மாதவ் ஆச்சாரியாவை சந்திப்பதற்கான தேதி கிடைத்திருப்பதை கூற, முதலில் மகிழ்ச்சி அடைந்தவன், பிறகு அக்னியிடம் என்ன சொல்லி அழைத்து செல்வது என்ற யோசனையில் ஆழ்ந்தான்.


மாதவ் ஆச்சாரியாவை பற்றி அக்னியிடம் மேலெழுந்தவாறு கூறியவனிடம் ,


" சரி அர்ஜுன், நான் எதுக்காக அவரைப் போய் பார்க்கணும் ..."


பதில் சொல்ல தெரியாமல் சற்று தடுமாறியவன் பிறகு


" நீ அஜய் பேசலன்னு ரொம்ப வருத்தப்பட்ட இல்ல , அதுக்காக தான் ..."


" நான் இதெல்லாம் எப்ப சொன்னேன் .." என்றாள் ஆச்சரியத்தோடு சந்தேகமாய் .


" அன்னைக்கு டாக்டர் மிஸஸ் சேஷாத்ரி கிட்ட சொன்ன..."


" நானா டாக்டர் கிட்ட சொன்னேன் ... எனக்கு எல்லாமே மறந்து போச்சு அர்ஜுன் ... இப்பெல்லாம் முன்ன மாதிரி அஜய்யும் என் கூட பேசறது இல்ல ..." என்றவளை ஆராய்ச்சிப் பார்வை பார்த்தவன்,


உன் கூட எப்படி பேசுவான்... அவன் தான் என் கூட பேச ஆரம்பிச்சுட்டானே... என்று உள்ளுக்குள் உடைத்துப் பேசியவன்,
அவளையும் அஷ்வத்தையும் அழைத்துக் கொண்டு ஆச்சார்யாவை பார்க்க பயணமானான்.


மும்பையிலிருந்து கிட்டத்தட்ட அறுபது கிலோ மீட்டர் தொலைவில் பசுமை நிறைந்த மலையடிவாரத்தில் 'தபோவன்' என்ற பெயரில் 100 ஏக்கரில்
ஆங்காங்கே சிறு சிறு குடில்கள் அமைக்கப்பட்டு, விவசாயம், காய்கனி பயிரிடுதல், தென்னை மரம் வளர்த்தல் தேனீ வளர்ப்பு என இயற்கை சூழ் கிராமமாகவே காட்சியளித்தது, மாதவ் ஆச்சார்யாவின் அமைதி நிலையம்.


காரை விட்டிறங்கிய மூவருக்குமே அந்த அமைதியான இயற்கையான சூழ்நிலை மனதிற்கு இதமளிக்க,
இம்மாதிரி குழந்தையோடு வரும் பெற்றோர்களுக்காக,குழந்தைகள் விளையாட ஒரு தனி குடிலே அமைக்கப்பட்டிருக்க,
அஷ்வத்தை கண்டதும் அங்கிருந்த காப்பாளர், அவனிடம் வாஞ்சையோடு பேசி விளையாடிய படி அந்த குடிலுக்கு அழைத்துச் செல்ல, அடுத்த பத்தாவது நிமிடத்தில் தாய் தந்தையர் இருவரும் ஆச்சார்யா முன்பு அமர்ந்திருந்தனர்.


மாதவ் ஆச்சாரியா, கிட்டத்தட்ட 70 வயது , நடுத்தர உயரம், சிவந்த நிறம்,மெல்லிய தேகம், நெற்றியில் மெல்லிய மஞ்சள் நிற நீண்ட ஸ்ரீ சூரண திலகம், தீட்சண்யமான கண்கள், சாந்தமான முகம், நெஞ்சைத் தொடும் வெண்ணிற தாடி, வெண்ணிற குர்தா மற்றும் வேட்டி அணிந்திருந்தவர் தலைமுடியை பின்புறமாக இழுத்து வாரி அள்ளி முடிந்திருந்தார்.


எதிரே அமர்ந்திருந்த அக்னி மற்றும் அர்ஜுனை ஆழ்ந்து நோக்கியவர், ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் சரளமாக உரையாட ஆரம்பித்து


"எனக்கு தமிழ் ஓரளவு தெரியும், இருந்தாலும் ஐ அம் கம்போர்ட்புள் இன் ஹிந்தி அண்ட் இங்கிலீஷ் ... "


" இட்ஸ் ஓகே ஜி... ப்ளீஸ் புரோசீட்..." என்ற அர்ஜுனை இயல்பாக நோக்கி


"சேஷாத்ரி மேம் எல்லாம் சொன்னாங்க ..." என்றவர் அக்னியிடம் கேட்டது இரண்டே கேள்விகள் தான் அதுவும் மிகச் சாதாரணமானவை.


இப்ப எப்படி இருக்கீங்க..? எப்பவும் போல அஜய் உங்களோட பேசறாரா...? என்பவைகள் தான் அது. அதற்கு அக்னி தெளிவாக பதிலளிக்க,


" சரி, நீங்க போய் உங்க குழந்தையோட விளையாடிகிட்டு இருங்க ... அப்புறம் கூப்பிடறேன் ..." என்று நாசுக்காக அவளை வெளியேறியவர்,
அர்ஜுனை பார்த்து


" இங்க பாதிப்பேர் பிரச்சனை இருக்கிறவங்க கிட்ட உண்மைய சொல்லி கூட்டிக்கிட்டு வர்றது இல்ல அதனால தான் இந்த ஏற்பாடு ..." என்றார் அவனின் பார்வைக்கு பதிலளிக்கும் விதமாய்.


" ஜி, எனக்குள்ள நிறைய கேள்விகள் இருக்கு ..."


" சொல்லுங்க அர்ஜுன் ..."


" இந்த மறுபிறப்பு , பூர்வ ஜென்மம் இதெல்லாம் உண்மையா ..."


" 100% உண்மை ... பொதுவா பெரும்பாலான இந்தியர்களைப் பொருத்தமட்டில்
உடல் அழியக்கூடியது, ஆன்மா அழிவில்லாததுங்கிற தாத்பரியத்துல நம்பிக்கை உள்ளவங்க...
அதனால தான் இங்க அதிகமானோர் இறந்த உடல்களை எரியூட்டும் பழக்கத்த வச்சிருக்காங்க ...


அதுல அறிவியல் ரீதியா பல நன்மைகளும் இருக்கு ...
இறந்தவங்க உடல்ல இருக்கிற கிருமிகள் மத்தவங்களுக்கு தொற்றாம அடியோடு அழிக்க கூடிய ஆற்றல் நெருப்புக்கு உண்டுங்கிறதால....


ஆனா நம்மளோட தாத்பரியத்தை கொஞ்சம் கூட நம்பாத அமெரிக்கன்ஸையே நம்ப வச்சிருக்காரு என்னோட குரு
மிஸ்டர் பிரைன் வைய்ஸ்....


பொதுவா புதைக்கப்பட்ட உடல் ஒருநாள் உயிர்த்தெழுங்கிற (resurrection) நம்பிக்கை தான் அவங்க கிட்ட அதிகம் ... ஆன்மா, மறுபிறப்பு, பூர்வஜென்மம் எதுலயுமே அவங்களுக்கு நம்பிக்கை கிடையாது ... அதுக்காக ஹி ஹஸ் டன்
லாட் ஆப் ரிசர்ச் இன் ரீ-இன்கார்னேஷன் அண்ட் பாஸ்ட் லைஃப் ரெக்ரேஷன் ... அதன் மூலம் நிறைய பேரை குணப்படுத்தி , அதனை ப்ரூவ் பண்ணி காட்டினாரு... இப்ப தான் 40 லிருந்து 50 சதவீத அமெரிக்கன்ஸ் இதை நம்ப ஆரம்பிச்சிருக்காங்க .."


" ரி இன் கார்னேஷன்(reincarnation) - மறுபிறப்பு ஓகே ...
அதென்ன பாஸ்ட் லைஃப் ரெக்ரேஷன் (past life regression) ..." என்று அர்ஜுன் ஆர்வமாய் கேள்வி எழுப்ப


"பொதுவா இந்த பிறவில நடந்த சில வருந்தத்தக்க , வெறுக்கத்தக்க விஷயங்கள் நம்ம ஆழ் மனசை பாதிச்சிருக்கும்... நம்ம மனசு அதை மறுபடியும் நினைச்சு பார்க்க பயப்படும்... அந்த மாதிரியான சம்பவங்களால பாதிக்கப்பட்டவங்க அத வெளில சொல்லிக்க முடியாம வெளியுலகத்துல வித்தியாசமா நடந்துப்பாங்க....
ஹிப்னோ தெரபி மூலம்
இந்தப் பிறவியிலயே அவங்க வாழ்க்கையில ஏதோ ஒரு காலகட்டத்துல நடந்த அந்த சம்பவங்களை
அவங்க ஆழ் மனசோட பேசி தெரிஞ்சுக்கிட்டு அதற்கான தீர்வையும் அங்கேயே சொல்லி, அவங்களை குணப்படுத்த முயற்சி செய்யறது
தான் சேஷாத்ரி மேடம் அன்னைக்கு அக்னிக்கு கொடுத்த ஹிப்னோதெரபி.


பாஸ்ட் லைப் ரெக்ரேஷங்கிறதும் ஒரு வகையான ஹிப்னோதெரபி தான் ...
ஆனா அது ஒரு படி மேல போயி, உங்க போன பிறவிலயோ இல்ல அதுக்கு முந்தின பிறவிலயோ நடந்த சம்பவங்களால உங்க ஆன்மா அதிகமா பாதிக்கப்பட்டிருக்கும் ...
அது என்ன, ஏதுன்னு கண்டுபிடிச்சு அதற்கான தீர்வை ஏற்படுத்திக் கொடுக்கிறது தான். "


" போன பிறவில நடந்த விஷயம் கூட ஞாபகம் இருக்குமா ஜி ..." என்றவனின் நம்பகமற்ற கேள்வியில் மென்மையாகப் புன்னகை சிந்தியவர் ,


" சரி, நான் சில விஷயத்தை உங்களுக்குச் சொல்றேன்... இதை நீங்க உணர்ந்திருக்கீங்களா , இல்லையானு நீங்களே சொல்லுங்க....


இந்த பூமில கோடான கோடி மக்கள் இருக்காங்க ஆனா எல்லோராலும் எல்லாரையும் சந்திச்சிட முடியாது ...


நீங்க முற்பிறவில யாரை எல்லாம் சந்திச்சீங்களோ , அவங்களை மட்டும் தான் இந்த பிறவில உங்களால சந்திக்க முடியும்....

அதனால தான் சில பேரை பார்த்தும் உடனே நமக்கு பிடிச்சிடும்.... அதே மாதிரி சில பேரை பார்த்ததும் நமக்கு பிடிக்கவே பிடிக்காது, காரணம் என்னன்னு நமக்கே தெரியாது...


சில புதிய இடங்களுக்கு போனதும் ரொம்ப நாள் பழங்கின ஒரு உணர்வு வரும்....


சில சமயம் சில நாள்ல நடக்கிற ஏதோ ஒரு சம்பவம் எப்பவோ நம்ப வாழ்க்கையில நடந்த மாதிரியான ஒரு உணர்வு வரும் ...


சில சமயம் ஏதோ தப்பா நடக்க போகுதுன்னு முன்கூட்டியே நம் உள்ளுணர்வு நமக்கு எச்சரிக்கை விடுக்கும் ... அதை எல்லாம் உணர்ந்திருக்கீங்களா..."


" எஸ் ஜி ..."


" இன்னும் தெளிவா சொல்லனும்னா,
உங்க மொபைல் போன் தான் உங்க உடம்புன்னு வச்சுக்குங்க, அதுல நாம போடற மெமரி கார்டு தான் உங்களோட ஆன்மா....டோன்ட் டேக் லிட்ரல் மீனிங் உங்களுக்கு புரியறதுக்காக சொல்றேன் ....


கொஞ்ச நாள் யூஸ் பண்ணினதுக்கு அப்புறம் உங்க மொபைல் போன் பழசானதும், புது மொபைல் வாங்கி அதுல, பழைய மொபைலோட மெமரி கார்டு போடுவோமில்லயா... அதுதான் மறுபிறப்புங்கிற ரீ இன்காரனேஷன்...


புது மொபைல், பழைய மொபைலை விட பெருசா இருக்கலாம் சின்னதா இருக்கலாம் கருப்பு கலர்ல இருக்கலாம் வெள்ளை கலர்ல இருக்கலாம், நிறைய கேமராஸ் இருக்கலாம் ஆனா அது எப்படி இருந்தாலும் மெமரி கார்டுல இருக்குற கண்டெண்ட் சேம் தான் சரியா ....


அதே மாதிரி தான் பிறவி தோறும் உடல்கள் தான் வேறுபடுமே ஒழிய ஆன்மாக்கள் மாறுபடாது....


ஒவ்வொரு ஆன்மாலயும், அதனோட தனித்திறமைகள், சுபாவங்கள்,
மனதிற்கு இனிமையான நிகழ்வுகள், வெறுத்து ஒதுக்க கூடிய சம்பவங்கள்னு ஏகப்பட்டது பதிவாகி இருக்கும்...


கேள்விப்பட்டிருப்பீங்க, சில குழந்தைங்க 3 வயசுலயே நல்ல டான்ஸ் ஆடுறாங்க ... நல்ல பாடுறாங்கன்னு ...
அதை இன்பான் டேலண்ட்னு சொல்லுவோம்.... இதுக்கெல்லாம் காரணம் அவங்க அன்மாக்களோட நினைவுகள்தான் ....ஏதோ பிறவில கத்துகிட்டு சாதனை செஞ்சது இப்ப இந்த பிறவில தொடருது ...


அதைத்தான் திருவள்ளுவர்,


ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப் புடைத்து.


ஒரு பிறப்பில் கற்ற கல்வியானது, அப்பிறப்போடு நில்லாமல் ஏழு ஏழு பிறவிக்கும் தொடரும்...


(திருக்குறள் சமஸ்கிருதத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளதால் அதனை சமஸ்கிருதத்தில் மொழிந்து, அதற்கான விளக்கத்தை ஆங்கிலம் கலந்த ஹிந்தியில் விளக்குகிறார்)


நம்ம நாட்டுல ஏகப்பட்ட கலைகள் இருக்குது ... சிலருக்கு சில கலைகள் மேல அபரிமிதமான ஆர்வம் இருக்கும் ... அதை தெரிஞ்சுக்கணுங்கிற எண்ணத்துல
அதை நோக்கி அவங்க மனசு பயணப்படும் ... இதுக்கெல்லாமும் அவர்களோட பூர்வ ஜென்ம ஞாபகம் தான் காரணம் ...
அதே போல சிலருக்கு உயரம்னா பயம், தண்ணில மூழ்கிடுவோமோன்னு நீச்சல் கத்துக்க பயம் ... இருட்டுன்னா பயம்...
கார் , டூவீலர் கத்துக்க பயம் ...
இந்த பயமெல்லாம் அவங்க பூர்வ ஜென்மதோட தொடர்புடையது....மே பி அதனால கூட அவங்களுக்கு அந்த பிறவில மரணம் நிகழ்ந்திருக்கலாம் ...
இதையெல்லாம் தெரிஞ்சுகிட்டு, அவங்கள குணப்படுத்துறது தான் பாஸ்ட் லைஃப் ரெக்ரேஷன்னு நாங்க சொல்றோம்..."


" ஆனா அஜய் அக்னியோட பேசறதுக்கு என்ன காரணம் இருக்க முடியும் ...
இப்ப கொஞ்ச நாளா அக்னியோட பேசறதயும் நிறுத்திட்டு அதே ஹோடிங்ஸ்ல இருக்கிற வாசகங்கள் மூலமா என்னோட பேச ஆரம்பிச்சிருக்கான்... அதான் எனக்கு புரியல ..." ------ அர்ஜுன்.


" இப்ப கூட நம்ப ரெண்டு பேருக்கு இடையில இருக்கிற இந்த ஒரு அங்குல இடைவெளில பல ஆன்மாக்கள் நிறைஞ்சிருக்கும்... யாரு கண்டா அஜய்யே கூட இங்க நின்னுகிட்டு நாம பேசிக்கிட்டு இருக்கிறதை கேட்டுகிட்டும் இருக்கலாம் ...


அக்னி பேசினத சேஷாத்ரி மேம் ரெக்கார்ட் பண்ணி அனுப்பி இருந்தாங்க ... அதுல அக்னி, யார் மூலமாவது அஜய் என் கூட பேசுவாருன்னும் சொல்லி இருந்தாங்க...
சில ஆன்மாக்கள் தன் தேவைக்காக வேற ஒரு உடம்ப பயன்படுத்திக்கும்.. இதைத்தான் நம்ம கிராமத்துல எல்லாம் பேய் பிடிக்குதுன்னு சொல்லுவாங்க....


இது எப்படி நடக்குதுன்னா,


ஒருத்தர் ரொம்ப பயந்த நிலையில இருக்காங்கன்னா , அப்ப அவங்க உடல்
தன் ஆன்மாவை சுருக்கிக்கும் .. அப்ப அந்த உடம்புல சில பாகங்கள் வெற்று தன்மையாயிடும்(Empty), அப்பதான் நம்மள சுத்தி இருக்கிற கெட்ட ஆவிகள் அந்த உடலுக்குள் பாய்ஞ்சிடும்..


தைரியமானவங்களுக்கு அந்த வெற்றிடம் இருக்காது... அதனால அந்த ஆவியால அவங்களை அடைய முடியாது...


பொதுவா இறந்த ஆத்மாக்களை ரெண்டு வகையா பிரிக்கலாம் ...
பாவ ஆத்மாவை ப்ரேதாஸ்ன்னும் (Pretas) , புண்ணிய ஆத்மாவை தேவாஸ்ன்னும்(Devas) நாங்க சொல்லுவோம் ...


புண்ணிய ஆத்மாக்கள் எப்போதும் மேலான உயர்ந்த நிலையில தான் உலவிக்கிட்டு இருக்கும் ...


அது வேற ஒரு உடம்புக்குள்ள போகணும்னு ஆசைப்பட்டா கூட அந்த உடலுக்கானவங்க உயர்ந்த சிந்தனையோட நல்ல எண்ணத்துல இருந்தா தான், அந்த உடம்பையே தேர்ந்தெடுக்கும் ... அதுவும் ஒரு நல்ல செயலுக்காக தான் இருக்கும்.


ஆனா பாவ ஆன்மாக்கள், யாரையாவது பழி வாங்கணும், இல்ல சிற்றின்ப ஆசைல மூழ்கிக்கிட்டு அதை அனுபவிக்க உடம்ப தேடிகிட்டு இருக்கும் ... அதுக்கு தன் ஆசையை மனித ரூபத்துல நிறைவேத்திக்க ஒரு உடம்பு கிடைச்சா போதும் அதுக்கு வேற எந்த வரையறையும் கிடையாது ...


ஏன் இவ்ளோ சொல்றேன்னா,


அஜய் புண்ணிய ஆத்மா ...
இயல்பிலேயே அக்னி மேல இருக்கிற காதல், நம்ம நாட்டு மேல இருக்கிற தேசப்பற்று தான் இப்படி எல்லாம் அவரை வழிநடத்துது...
அவருக்கு அனுபவிக்க உடம்பு வேண்டாம் ...
ஏதோ ஒரு காரணத்துக்காக தான் அந்த ஆன்மா உலவிகிட்டு இருக்கு ...


அஜய் உங்களைத் தேர்ந்தெடுத்ததுக்கு காரணம் அவர் விட்டுட்டு போன கடமையை உங்களால தான் சரியா செய்ய முடியும்னு அவர் நம்பறாரு...
எந்த சூழ்நிலையிலும் அக்னியை காப்பாத்திடுவீங்கன்ற நம்பிக்கை வந்ததால தான் நேரடியா அக்னியோட பேசி அவங்களை கைட் பண்றதுக்கு பதிலா உங்களோட பேச ஆரம்பிச்சிருக்காரு....


அக்னிகிட்ட தன் ஆசையை தீர்த்துக்கணும்னா , அவர் உங்க உடம்பயே கூட பயன்படுத்திகிட்டு இருக்கலாம் ... ஆனா அவர் அக்னி மேல ஆழ்ந்த காதல் வச்சிருக்காரு... உங்களோட அக்னி சந்தோஷமா வாழனும்னு ஆசைப்படறாரு...


பொதுவா அவரை மாதிரியான புண்ணிய ஆத்மாக்கள், பலவந்தமாக கொல்லப்பட்ட பிறகும் தான் செய்து முடிக்க வேண்டிய வேலைகளை ஒரு நல்ல மனிதரை தேர்ந்தெடுத்து செஞ்சு முடிச்சிட்டு ஜீவாத்மாங்கிற கடவுள்,
அதாவது நிலையான பிரபஞ்சத்தோடு ஐக்கியம் ஆயிடும் ... ஆனா பாவ ஆத்மாக்கள் தங்களோட சிற்றின்ப ஆசையை தீர்த்துக்க பாவங்கள் செஞ்சுகிட்டே இருக்கிறதால
துர் ஆத்மாவாவே கடைசி வரை அலைஞ்சு
மோட்சங்கிறதை நெருங்கவே முடியாம மறுபடி மறுபடி பிறப்பு எடுத்துக்கிட்டே இருக்கும் ... அதுக்காக எல்லா ஆத்மாக்களாலும் பழிவாங்க முடியாது .. அப்படி நடக்க ஆரம்பிச்சுட்டா கோர்ட், கேசு குற்றவாளிகளே இருக்கமாட்டாங்களே நாட்டுல... " என்றவரிடம் தன் முதல் மனைவி சுபாவை சந்தித்தது முதல் அவள் இறந்தது வரை கூறிய அர்ஜுன்,


" ஜி, என் ஃபர்ஸ்ட் வைஃப் இறந்ததும், முதல் மூணு மாசம் அடிக்கடி பேசுவாங்க, அவங்க பேசுறது எனக்கு நல்லா கேட்கும்... அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா பேசுறது குறைஞ்சு முதல் ஒரு வருஷம் ஆனதுக்கு அப்புறம் கம்ப்ளீட்டா அவங்க பேசுறது நின்னே போச்சு ....அது ஏன்...?அதுமட்டுமில்லாம சில சமயம் அவங்க பேசுறது நல்லா கேக்கும், ஆனா சில சமயம் அவங்க ஏதோ சொல்ல வரும் போது நிறைய டிஸ்டர்பென்ஸஸ் இருக்கும் ...அவங்க என்ன சொல்ல வராங்கன்னே எனக்கு புரியாது ... அது ஏன் ...?" என கேள்விகளை அடுக்கினான்.


" கருட புராணத்துல ஒவ்வொரு மனிதரோடு ஆன்மாவும் அவங்க கட்டை விரல் அளவுக்கு தான் இருக்கும்னு சொல்லி இருக்கு ...


அதே போல இறந்த ஒவ்வொருத்தரோட ஆன்மா , அவங்க உடம்பு எரியூட்டும் போது குறிப்பா அவங்க முகம் எரிஞ்சு முடியுற வரைக்கும், சாவுக்கு வந்தவங்களோட கண்களுக்கு படாம சப்டில் பாடி (subtle Body) என்கிற சூக்ஷம சரீரத்தில் இருந்த படி வேடிக்கை பார்க்குமாம் ....


அப்ப தன்னை சுற்றி இருக்கிறவங்க தனக்கு தெரிஞ்சு தெரியாம செய்த நன்மை தீமைகள் எல்லாம் அதுக்கு தெரியவரும் ....


யாரு உண்மையா நல்லவங்க.. யாரு கெட்டவங்கன்னு அதுக்கு புரியும்...


நீங்க சொல்றத வச்சு பார்த்தா உங்க மனைவி அவங்க வாழ்க்கையிலயே,
சந்தோஷமா இருந்தது உங்களோட வாழ்ந்த அந்த ரெண்டு மாசம் தான்...
உங்களோட வாழ்ந்த நாட்களை விட,
அவங்க இறந்ததும் உங்கள பத்தி அதிகமா தெரிஞ்சு கிட்டு இருப்பாங்க ...


உங்க மேல இன்னும் பாசம் அதிகமாயி இருக்கும் அதனால தான் அந்த முதல் ஒரு வருஷம் உங்களையே சுத்தி சுத்தி வந்திருக்காங்க ....


அந்த நிலையில உங்க வாழ்க்கையில இனிமேல் நடக்கப் போற எல்லா விஷயங்களும் அவங்களுக்கு தெரிய வந்திருக்கும்...
ஆனா எல்லா விஷயத்தையும் அவங்களால பகிர்ந்துக்க முடியாது எதையெல்லாம் சொல்ல பரம்பொருள் அனுமதி வழங்கியிருக்கோ அது மட்டும் சொல்ல முடியும்...


அதையும் மீறி அவங்களுக்கு தெரிஞ்ச தேவ ரகசியத்தை உங்களுக்கு சொல்லணும்னு ஆசைபட்டா, உங்க கர்மாவை அடிப்படையா வச்சு, அந்த செய்தி உங்க காதுகள சென்றடையாம பரம்பொருள் தடுத்திடும்....."
என்றவரின் பேச்சை இடைவெட்டி


" 100% உண்மை ஜி... அவ ஏதோ அக்னியை பத்தி என்கிட்ட சொல்ல வந்தா.. ஆனா அப்ப அது என் காதுல துளிகூட கேட்கல ... நிறைய டிஸ்டர்பென்ஸ் ... அப்புறம் கிட்டத்தட்ட ஒரு வருஷம் கழிச்சு, அஜய் இறந்து போறான், நான் மறுபடியும் அக்னியை என் வாழ்க்கையில மீட் பண்றேன் ... அதுக்கப்புறம் கொஞ்ச வருஷம் கழிச்சு எங்களுக்கு கல்யாணம் நடக்குது ...
ஒருவேளை இதை எல்லாம்தான் தான் சுபா அன்னைக்கு என்கிட்ட சொன்னாளோன்னு இப்ப தோணுது..."


" நிச்சயமா இதைத்தான் உங்களுக்கு முன் கூட்டியே சொல்லனும்னு சொல்லி இருக்காங்க... ஆனா அது தேவரகசியங்கிறதால உங்க காதுகளுக்கு அப்ப எட்டல.. அவ்ளோ தான்.... உங்க மனைவியை பொறுத்தமட்டில் அவங்களை யார் யாரெல்லாம் கொடுமைப்படுத்தினாங்களோ அத்தனை பேரையும் நீங்க பழி வாங்கிட்டீங்க... அவங்க தங்கையும் தம்பியையும் ஒரு தந்தை போல பார்த்துக்கறீங்க... அதனால அல்ப ஆயுசில இறந்து போனாலும் அவங்க நிம்மதியா போயிட்டாங்க...


அது மட்டும் இல்ல முதல் வருஷ திதியை நீங்க காசில சிறப்பா செய்து முடிச்சிருக்கீங்க... அவங்க ஆன்மா நிம்மதி அடைய இதெல்லாம் போதுமானது ... ஆனா அஜய் விஷயம் முற்றிலும் வித்தியாசமானது ...
அவர் தன் மனைவி, குழந்தைய நிராதரவா விட்டுட்டு போயிருக்காரு ... ஏதோ ஒரு பிரச்சினையில அவங்க ரெண்டு பேரும் சிக்கிக்கிட்டு இருக்காங்க அவங்கல காப்பாத்த வேண்டிய கடமையும் அவருக்கு இருக்கு...
அதோடு ஏதோ ஒரு பெரிய விஷயத்திற்காக அஜய் கொல்லப்பட்டிருக்கிறாரு...
அந்த விஷயத்தை நாட்டுக்கு சொல்லணும் ... நம் நாட்டைக் காப்பாத்தணுங்கிற எண்ணமும் அவருக்கு இருக்கு.... அதனாலதான் அவரோட ஆன்மா சுத்திக்கிட்டு இருக்கு ...


பொதுவா பேச விரும்பாத, வராத ஆன்மாக்களைத் தான் நான் மீடியத்தை பயன்படுத்தி கூப்பிட்டு பேசணும் ...
ஆனா அஜய் விஷயத்துல நான் செய்ய வேண்டியதுன்னு எதுவுமே இல்ல ... அவர் நினைச்சதை நிறைவேத்த உங்களால தான் முடியும்னு அவரே உங்களை தேர்ந்தெடுத்து உங்களை கைடும் பண்றாரு.... பரம்பொருள் எந்த விஷயத்தை எல்லாம் உங்களுக்கு தெரிவிக்க அனுமதி வழங்கியிருக்கோ அது எல்லாம் நிச்சயம் சொல்லி உங்களை வழி நடத்தி உங்க மூலம் அவர் சாதிக்க நினைச்சதை சாதிச்சுக்குவாரு...."


" எனக்கு ஒரு விஷயம் புரியல டாக்டர், அஜய் இறந்து மூணு வருஷத்துக்கு மேல ஆகுது, இத்தனை வருஷமா இல்லாம இப்ப ஏன் அஜய் என்னை தேர்ந்தெடுத்து வழி நடத்தணும்... அவன் நினைச்சா அவன் மரணத்துல நடந்த எல்லா உண்மைகளையும் என்கிட்ட சொல்லிடலாமே ஏன் சொல்ல மாட்டேங்குறான்...."


" இனிமேல் நடக்கப் போற சம்பவத்துக்கும் அவன் மரணத்துக்கும் ஏதோவொரு வகையில தொடர்பு இருக்கலாம் .... அதுக்காக தான் இப்ப அஜய் தீவிரமா களத்துல இறங்கியிருக்கார்...அது மட்டும் இல்ல உங்களுடைய கர்மான்னு ஒன்னு இருக்கு இல்லையா....


பகவத் கீதை சொல்றது இதுதான் ..


நீ போன பிறவில செஞ்ச நன்மைகள் தீமைகள் அடிப்படையில்தான் இந்த பிறவியே உனக்கு அமைஞ்சிருக்கு...
அதே போல இப்ப நீ செய்யற நன்மை தீமைகள் தான் உன்னோட அடுத்த பிறவியை நிர்ணயிக்குது......
இதுல உன்னை மன்னிக்கவோ, தண்டிக்கவோ எனக்கு மட்டுமில்ல யாருக்குமே அதிகாரம் வழங்கப்படல...
உனக்கு நிகழும் அத்தனை நன்மைகளுக்கும் தீமைகளுக்கும் நீ மட்டுமே பொறுப்பாளி... அதாவது உன்னுடைய செயல்கள் தான் முழு பொறுப்பேற்கிறது ...


நீ செய்யற நன்மை தீமைகளை சாட்சி பூதமாக இருந்து நான் கவனிச்சுக்கிட்டு இருக்கேன் அவ்ளோ தான்... நான் உன்னை கவனிக்கிறேன்னு தெரிஞ்சாலே , நீ நல்லதைத் தவிர வேற எதையும் மத்தவங்களுக்கு செய்யமாட்ட... இந்த ஒரே ஒரு உறவு தான் உனக்கும் எனக்கும் இடையே இருக்கிற உறவுன்னு மனித பிறவியை குறித்து கிருஷ்ணர் சொல்றார்...


இதை ஏன் சொல்றேன்னா, நடக்கப்போறதை முன்னாடியே நீங்க தெரிஞ்சிக்கிட்டா உங்க விதியை நீங்க ஈசியா ஜெயிச்சிடலாம்...


ஆனா விதியை ஜெயிக்கிற சக்தி இங்க யாருக்குமே கிடையாது ...
நீ கஷ்டப்படணும்னு கர்மா இருந்தா கஷ்டப்பட்டு தான் ஆகணும் ....அதனால அஜய் நடந்ததை உங்களுக்கு சொல்லனும்னு ஆசைப்பட்டா கூட அதுக்கு உங்க கர்மால வழி இல்லேன்னா , அவனால உங்களுக்கு எல்லாத்தையும் சொல்லி வழிகாட்ட முடியாது அப்படியே அவன் சொன்னாலும் அது உங்களுக்கு கேட்காது, கேட்டாலும் உங்க புத்திக்கு புரியாது... விதி உங்க கண்ணை மறைச்சிடும்... உங்க மூளையை சமயோஜிதமா வேலை செய்யவிடாம செஞ்சிடும்... எது உங்களுக்கு தெரிவிக்கப்படணும்னு விதி இருக்கோ அதை மட்டும் தான் அவனால உங்களுக்கு சூட்சமமா உணர்த்த முடியும் ...
இதுதான் இந்த பிரபஞ்சத்தோடு அமைப்பு..." என்று முடித்தவர்


" ஒரு சின்ன விஷயம் உறுத்துது , சின்ன வயசிலிருந்தே அக்னி இப்படித்தான் இருப்பாங்களா ...."


" புரியல ஜி ...."


" நெத்தியில பொட்டு இல்லாம, கைல வளையல் இல்லாம , எந்த அலங்காரமுமே இல்லாம இப்படித்தான் இருப்பாங்களா...."


" இல்ல ஜி....
சின்ன வயசுல கையில வளையல், நெத்தியில பொட்டு இல்லாம இருக்கவே மாட்டா.... அஜய் அவ வாழ்க்கையில வந்ததுக்கு அப்புறம் நெத்தியில சிந்தூர் இல்லாம அவளைப் பார்க்கவே முடியாது ... ஷி வாஸ் சோ ட்ரெடிஷனல்.. ஆனா அவன் மறைவுக்கு அப்புறம் தான், இதெல்லாம் அவளுக்கு பிடிக்காம போயிடுச்சு ...."


" அர்ஜுன்... உடைக்கும் உளவியலுக்கும் நிறைய சம்பந்தம் இருக்கு... அதே போல அலங்காரத்துக்கும் ஆழ் மனசுக்கும் நிறைய சம்பந்தம் இருக்கு... அதனால தான் அரசாங்கம் கூட ஒரு குறிப்பிட்ட பணிக்கு இப்படிதான் ஆடை அணியணும், இப்படித்தான் அலங்காரம் பண்ணனும்னு சொல்லுது.... நான் இங்க குறிப்பிடறது டிரஸ் கோட(dress code)... எந்த மதமானாலும் உண்மையான சன்யாசிங்க அவங்க மதம் சொல்ற துறவறதுக்கான ஆடைகளை தான் அணிவாங்க...அப்படி அவங்க அணியும் ஆடை ஒரு பற்றற்ற நிலையை கொடுக்கும்னு ஒரு நம்பிக்கை.... இதை ஏன் சொல்றேன்னா இயல்பான ஒரு பொண்ணுக்கு நகை, புடவை அலங்காரத்துக்கு மேல ஆசை இருக்கணும் ... அது எப்ப இல்லையோ அவங்ககிட்ட மனோ ரீதியா ஏதோ பிரச்சனை இருக்குன்னு அர்த்தம் ... பெரிய அலங்காரம்னு இல்லைனாலும் பழைய மாதிரி
உங்க மனைவியை பொட்டு வைக்க சொல்லுங்க, அப்புறம் சிந்தூர் வைக்க சொல்லுங்க .... அப்படி கொஞ்சம் கொஞ்சமா பழக்கினா, நமக்கு கல்யாணம் ஆகிடுச்சு, இன்னும் நமக்கு வயசு இருக்கு, வாழ்க்கை இருக்குங்கிற எண்ணமெல்லாம் அவங்க மனசுல துளிர்க்க ஆரம்பிக்கும் ...


ஆனா ஒன்னு மட்டும் நிச்சயமா சொல்றேன்... நாம எதிர் பார்க்கிற இந்த மாற்றம் அவ்வளவு சீக்கிரம் அவங்க கிட்ட நிகழும்னு எனக்கு தோணல , ஏன்னா இங்கிலீஷ்ல சொல்லுவாங்க அவுட் ஆஃப் சைட் அவுட் ஆஃப் மைண்ட்னு, அதாவது கண்ணுல படாதது கருத்துல நிலைக்காதுன்னு... ஆனா அக்னி கேஸ்ல, அவங்க அஜய்யோட சேர்ந்து வாழ்ந்த நாட்களை விட அஜய்யை நெனச்சிகிட்டு தனியா வாழ்ந்த நாட்கள் தான் அதிகம் அதனால தான் அவர் இந்த உலகத்துல இல்லங்கிற நிதர்சனத்தை அவங்களாலே இன்னும் சரியா உணரவே முடியல ....


இப்ப வரைக்கும் உங்களுக்கும் அவங்களுக்கும் இடையே இருக்கிற உறவு தெளிந்த நீரோடை மாதிரி இருக்கு ... ஆனா
நீங்க அவங்களை நெருங்க நெருங்க அஜய் பத்தின ஞாபகம் அவங்களுக்கு கொஞ்சம் கொஞ்சமா குறைய ஆரம்பிக்கும் ... ஒரு கால கட்டத்துல அவங்களுக்கு குழப்பத்தோட குற்ற உணர்வு ஏற்படும், தட்ஸ் த பிரேக்கிங் பாயின்ட் ... அப்ப உங்க கிட்ட காரணமே இல்லாம கோவப்படுவாங்க, பேச மாட்டாங்க, எரிச்சல் படுவாங்க, ஏன் அழக்கூட செய்வாங்க , அதையெல்லாம் பொருட்படுத்தாம நீங்க எப்பவும் போல அவங்க கிட்ட அன்பா அக்கறையா இருந்தா, அவங்க வாழ்க்கையோட உங்க வாழ்க்கையையும் சீக்கிரமே மீட்டெடுத்திடலாம் .... உங்களை மனசாலயும் உடம்பாலயும் அவங்க எவ்ளோ சீக்கிரம் ஏத்துக்கறாங்களோ, இல்ல நீங்க ஏத்துக்க வைக்கிறீங்களோ அவ்வளவுக்கவ்வளவு அவங்களுக்கு நல்லது ... அட் த சேம் டைம் எந்த விஷயத்திலயும் அவங்கள பலவந்தப்படுத்திடாதீங்க... அவங்களுக்கே தெரியாம அவங்க மனச நீங்க ஜெயிக்கணும் ... உங்க மேல நம்பிக்கையும் காதலும் வந்துட்டாலே ஷீ வில் பி கம்ப்ளீட்லி அவுட் ஆஃப் மெடிசன்ங்கிற ஸ்டேஜ்க்கு வந்திடுவாங்க ...அது தான் அவங்க மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்துக்கு ரொம்ப நல்லது... நான் சொல்றது உங்களுக்கு புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்... ..."


" ஜி, அது என்ன குற்ற உணர்வு, நீங்க சொல்றது எனக்கு ஒண்ணுமே புரியல...."


" உங்களுக்கு இப்ப சொன்னா புரியாது ...
கூடிய சீக்கிரம், உங்க மனைவி அந்த ஸ்டேஜுக்கு வரும் போது உங்களுக்கே புரியும் ...


ஒன்றிருக்க ஒன்று வந்தால் என்றும் அமைதியில்லை ...


இப்படி எழுதினது
உங்க தமிழ் கவிஞன் கண்ணதாசன் தானே..." என்றவரை புரியாமல் பார்த்தபடி தலையசைத்து ஆமோதித்தவன்,


"ஒன் இம்பார்ட்டெண்ட் கொஸ்டின் ஜி.., அஜய் இறந்த 16ஆம் நாள் அன்னைக்கு நடந்த பிரச்சனைய
ஏன் அஜய்யால தடுக்க முடியல ... அதனால தானே அக்னி இப்ப இவ்ளோ கஷ்டப்பட்றா..." என்றான் வேறு பல முக்கிய காரணங்கள் இருப்பது தெரியாமல்.


" அதான் சொல்றேனே... அக்னி அஜய்யால அன்று காப்பாற்றப்படணும்னு அக்னியோட கர்மால இருந்திருந்தா நிச்சயம் அது நடந்திருக்கும்... நம்மள சுத்தி இருக்கிற புண்ணிய, பாவ ஆத்மாவோட நன்மை தீமையை நாம உணரனும்னா, அதுக்கும் நம்ப கர்மால இடம் இருக்கணும் ... அதோட அன்னைக்கு என்ன நடந்ததுன்னு நமக்கு சரியா தெரியாது... அது முழுசா தெரிய வரும் போது தான் அஜய்யோட பங்கு அதுல என்னன்னு நமக்கு தெரியவரும் ...."


" லாஸ்ட் கொஸ்டின்... சேஷாத்ரி மேடம், அஜய்யோட அம்மாவை சந்தேகப்படறாங்களே..."


" அதுல ஒண்ணும் தப்பில்லயே ... அதுக்கு நிறைய முகாந்திரம் இருக்கிறதால அதை நானும் ஆமோதிக்கிறேன் ...


நம்பர் 1. அஜய் பாகிஸ்தான்ல ஒரு வருஷத்துக்கு மேல இருந்துட்டு டெல்லி திரும்பியதும், கிட்டத்தட்ட ரெண்டு வாரம் டெல்லில இருந்திருக்கிறாரு ..
அவருக்கு ஏன் அவங்க அம்மாவ நாசிக்ல போய் பார்க்கணும்னு தோணல...


நம்பர் 2.


அவங்க அம்மா போன் பண்ணி கூப்பிட்டு தான் இவரு போயிருக்காரு ... போன மறுநாளே ஹார்ட் அட்டாக்ல இறந்துட்டதா செய்தி வந்திருக்கு... சோ எல்லாமே வீட்ல தான் நடந்திருக்கு...


நம்பர் 3 : இவ்ளோ நாளா ஏன் அவங்க அக்னியையும் அஷ்வத்தையும் வந்து பார்க்கல.... அவங்களோட தொடர்புல இல்ல ... இதெல்லாம் வச்சு பார்த்தா, அந்த கேரக்டர் ஏதோ சஸ்பிஷியஸ்யாவே தெரியல...
அதான் சேஷாத்திரி மேம் அப்படி சொல்லி இருக்காங்க...
இப்ப அஜய்யோட அம்மா எங்க இருக்காங்கன்னு கண்டுபிடிச்சு அவங்ககிட்ட விசாரிச்சா ஓரளவு ஐடியா கிடைக்கும்னு தோணுது...


அதே சமயத்துல அக்னிக்கு சேஷாத்ரி மேடம் கிட்ட பேசினது எதுவும் நினைவுல இல்ல ...
பட் பேசிகலி அக்னி ரொம்ப ஸ்ட்ராங் பர்சனாலிட்டி ...
அவங்க உடம்புலயும் மனசுலயும்
தெம்பு வர வர, தைரியமா நடந்தத அவங்களே ரிவீல் பண்ணுவாங்க...
நாசிக்ல நடந்ததை நினைச்சு பார்த்து வெளியே சொல்றதுக்கு அவங்களுக்கு ஸ்ட்ரென்த் தேவைபடுது ...ப்ளீஸ் கிவ் ஹர் சம் டைம்...
டோன்ட் வரி, ஆல் த பெஸ்ட்
உங்களுக்கு வேற ஏதாவது கைடன்ஸ் தேவைப்பட்டா, சொல்லுங்க நிச்சயமா உதவி செய்றேன் ..."


என்றபடி அர்ஜுனுக்கு அவர் விடைகொடுக்க, இன்னும் ஓரிரு தினங்களில் ஆச்சார்யா சொன்னது போலான சந்தர்ப்பம் அமையப் போவது தெரியாமல்,
பல விடை தெரியாத விஷயங்களைப் புரிந்துகொண்ட திருப்தியில் விடைபெற்றான் அர்ஜுன்.


Sources: Bhagavad geeta,
'அறிந்தவைகளுக்கு அப்பால்' by ஓஷோ ,
'Many lives, Many Masters' and
'Messages from the Masters'
by Dr. Brian Weiss and garuda puranam.


தகிப்பாள்


முகமறியா, முகவரியறியா யாதொரு எதிர்பார்ப்பும் இல்லா எனக்கே எனக்கான சொந்தங்களாகிய உங்களது ஆத்மார்த்தமான பிறந்தநாள் வாழ்த்துகள் எங்கள் மகன் அவன் வாழ்வில் பல மேன்மைகளை அடைய நிச்சயம் உறுதுணையாக இருக்கும்.


பொது பின்னூட்டத்தோடு, தனி பெட்டியிலும் வந்து குவிந்த பிறந்தநாள் வாழ்த்துகளை நான் படித்துக்காட்டியதில்
என்னைவிட அந்த இளம் தளிர் தான்
அதிக மனம் மகிழ்ந்தது.


உங்கள் எல்லோருடைய வாழ்த்துகளோடு தொடங்கிய அன்றையதினம்
கடவுள் ஆசியோடு அதி அற்புதமாக
கழிந்ததற்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் நட்புகளே ..


ப்ரியமுடன்
ப்ரியா ஜெகன்நாதன்
 
அத்தியாயம் 32


அதிக மன உளைச்சல் காரணமாக தாமதமாக உறங்கியதால், மறுநாள் காலை மணி எட்டை கடந்து எழுந்தவன், அருகில் படுக்கை காலியாக இருப்பதை பார்த்து

" அஷ்வத் எங்க .." என தனக்குள்ளே பேசியபடி காலைக்கடன்களை முடித்துவிட்டு
குளியலறையிலிருந்து வெளி வரும் போது

" பப்பா , கம் ஹியர் ... மம்மா டூயிங் மஸ்தி ..." என்ற மைந்தனின் ரகசிய அழைப்பைக்கேட்டு குலுங்கி சிரித்தபடி

" அப்படி , என்னடா அம்மா மஸ்தி பண்றா..." என்று கூறிக்கொண்டே மகனை பின் தொடர்ந்து உடற்பயிற்சி அறையை அடைந்தவனுக்கு, அக்னி தன் உடலை எட்டாய் வளைத்து வித்தை காட்டிக் கொண்டிருந்தது விந்தையாக தெரிய,

" ஏய்......என்ன பண்ற... ஏன் இப்படி தோளை வளைக்கிற..."

" தோள்ல ஸ்பிரேய்ன் ஆயிடுச்சு...கைய தூக்க முடியல ..."

"எக்சசைஸ் ஸ்டார்ட் பண்றதுக்கு முன்னாடி ப்ராப்பரா வாம்-அப் பண்ணியா ... "

" ம்ம்ம்ம்.." என்றாள் வலியோடு.

" அப்ப முடிக்கும்போது ப்ராப்பரா ஸ்டிரெச் பண்ணியா ..."

" ம்ம்ம்ம்..." என்றவள் கலங்கியபடி கை தூக்க முடியாமல் சிரமப்பட,
அவளை நெருங்கியவன், அவள் இரு தோள்களை பற்றி நேராக நிறுத்தி, தன்
வலக்கரத்தால் அவள் இடது தோளை மென்மையாக அதே சமயத்தில் அழுத்தம் கொடுத்து பற்றி,இடது கரத்தை அவள் தோளுக்கு அடியில் முட்டுக் கொடுப்பது போல் கொடுத்து சற்று மேல்நோக்கி திருப்ப, முதலில் அவள் வலியில் துவண்டு அலறினாலும், அடுத்த நொடி அவள் கையும் தோளும் இயல்பு நிலைக்கு திரும்ப, அந்த சந்தோஷத்தில் திளைத்திருந்தவளை நெருங்கியவன், தாமரை பூவாய் சிவந்திருந்த கன்னங்களை பார்த்ததும்

" முத்தம் கொடுக்கணும் போல இருக்கு ஆனா கொடுத்தா நீ அடிப்பா... கொடுக்கலன்னா டாக்டர் திட்டுவாங்க ...என்ன பண்ணலாம்..." என தன்னுள்ளே சா பூ த்ரி போட்டபடி அரை கணத்திற்கும் குறைவான தருணம் வரை போராடியவன்

உன் பக்கத்துல நான் தாண்டி மெழுக உருகறேன் ... நீ உணர்ச்சி இல்லாம இரும்பு மாதிரி இருக்க .... என்று மனம் குமைந்து கொண்டிருக்கும் போது அவன் அலைபேசி சிணுங்க, அழைத்தது விஷ்ணு என தெரிந்துகொண்டு,

" சொல்லுடா .." என்றான் ரகசியமாக.

" ப்ரோ நீ அங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்க ..." என்றவனின் கேள்வியில் குறும்பு கொந்தளிக்க, சுற்றி முற்றி பார்த்தவன்

" நீ எங்கடா இருக்க ..."

" அப்ப கன்ஃபார்ம் நீ ஏதோ அங்க விஷமம் பண்ணிக்கிட்டு இருக்க.."

"எதுக்குடா போன் பண்ண..."

" முத்தம் கொடுக்க ட்ரை பண்ணிக்கிட்டு இருக்கியா...அண்ணி எங்க இருக்காங்க ..." என்றதும் சட்டென்று அக்னியை விட்டு விலகி

" எல்லாரும் இங்கதான் இருக்காங்க .." என்றான் பொதுப்படையாக.

" அப்ப என் கண்டுபிடிப்பு கரெக்ட் தான்.."

" இப்ப எதுக்குடா காலங்கார்த்தால கழுத்த அறுகிற ...."

" இஸ் இட் ரைட் டைம் டு டாக் டு யு சீனியர் .."

" இத போனை எடுத்த உடனே கேட்டிருக்கணும்... இப்ப கேக்கற... சரி சொல்லு..."

"ப்ரோ, இஸ்ரேல் பிரைம் மினிஸ்டர்
வர்ற ஆகஸ்ட் மன்த் இந்தியா வந்து நம்ம பிரைம் மினிஸ்டர மீட் பண்ண போறதா நியூஸ் வந்திருக்கு ...நம்ம பிரைம் மினிஸ்டரோட விசிட் டேட், அஜெண்டா, ஸ்கெடுயூல், டிஃபன்ஸ் டீல்,
மீட்டிங் சிக்னிபிகன்ஸ்னு ஏகப்பட்ட பிளான் நடந்துக்கிட்டு இருக்கு... கூடிய சீக்கிரம் ப்ரோபர் அப்டேட்ஸ் கிடைக்கும்னு நினைக்கிறேன்...
இதுல நாம முக்கியமா கவனிக்க வேண்டியது ரெண்டு தான்.
மிஷன்-I ரெப்பிரசன்ஸ் இஸ்ரேல் பிரைம் மினிஸ்டரா இருக்கலாம் இல்ல இண்டிபெண்டன்ஸ் டே வா இருக்கலாம்னு தோணுது ..."

" நீ சொல்ற மாதிரி மிஷன்-I ரெப்பிரசன்ஸ் இஸ்ரேல் பிரைம் மினிஸ்டர்னே வச்சுப்போம்... எதுக்கு அந்த மிஷன்-I ய இந்தியாவுல பிளான் பண்ணனும்..."

" இல்ல அர்ஜுன் ... இதுல வேர்ல்டு கிளாஸ் பிளான் இருக்கு ... இஸ்ரேல் இந்தியாவோட நட்பு நாடு, பல முறை பாகிஸ்தானை பகைச்சுகிட்டு இந்தியாவுக்கு உதவி செஞ்சிருக்கு...
எதிரியோட நண்பன் எதிரிங்கிற மாதிரி
பாகிஸ்தான் காய் நகர்த்துன்னு நினைக்கிறேன்..."

" இத யார் சொன்னது ... பாகிஸ்தான்ல இருக்கிற அசாருதீனா..."

" இல்ல நம்ம பிரைம் மினிஸ்டர் பிளான் ஸ்கெடுயூலோட அப்பாயின்ட்மெண்ட்ஸ் எங்களுக்கு வந்திருக்கு ..."

" ஓ... சோ ,எது எப்படி இருந்தாலும் ஆகஸ்ட் மந்த் தான் டார்கெட் ... அப்ப ஸ்டேட் வைடு செக்யூரிட்டி போட்டே ஆகணும் ... சரி விஷ்ணு , ஐ நீட் மோர் இன்பர்மேஷன் ரிகார்டிங் திஸ்... "

" எஸ் ப்ரோ ... தகவல் கிடைச்சா உனக்கு உடனே அப்டேட் பண்றேன்..." என்றவன் குறும்பாக

" உலகத்துலயே கிஸ் பண்ணலன்னு திட்டு வாங்கின ஒரே ஆள் நீதான் ப்ரோ....நீ கிஸ் பண்றத கன்டினியூ பண்ணு ... இல்லன்னா பியூச்சர்ல இன்னும் டிசைன் டிசைனா திட்டு வாங்குவ.."

" டேய்...நக்கலா... வை டா போனை ... கையில கிடைச்ச கைமா தான் ..." என்றவனின் கடுப்பைக் கேட்டு ரசித்து சிரித்தபடி அழைப்பை துண்டித்தான் விஷ்ணு.

மனையாள் மற்றும் மகனின் குரல் பூஜை அறையிலிருந்து கேட்க, விஷ்ணு கூறிய விஷயத்தை பற்றி சிந்தித்த படி குளியலறையை நோக்கி நடந்தான் .

அதன் பின் இரண்டு நாட்கள் கழித்து அக்னி, தனக்கும்
அஷ்வத்திற்கும் உடை மற்றும் புத்தகங்கள் வாங்குவதற்காக ஒரு பெரிய மாலுக்கு சென்றிருந்தாள்.

அனைத்தையும் வாங்கி முடிக்கும் போது , மாலை மணி எட்டை தாண்டி இருக்க,

"மம்மா, பூக் லகீ ஹ...( எனக்கு பசிக்குது ..).." என அஷ்வத் கூற, அவனை 20 மாடி கொண்ட அந்த மாலின், ரூப் டாப் ரெஸ்டாரன்ட் எனப்படும் மொட்டை மாடி திறந்தவெளி உணவகத்திற்கு அழைத்துச் சென்றாள்.

இரவு விளக்கு ஒளியில், ஆங்காங்கே மின்னும் நட்சத்திரங்கள் போல் விதவிதமான வெவ்வேறு நிறங்களில் செயற்கை வெளிச்சங்கள், கண்ணாடியிலான மேஜை நாற்காலிகள், செயற்கை நீரூற்றுகளோடு பிரம்மாண்டமாக அமைந்திருந்தது அந்த உணவகம்.

அஷ்வத்திற்கு தேவையானதை வாங்கிக் கொடுத்துவிட்டு, அவளுக்கு எதுவும் உண்ண பிடிக்கவில்லை என்பதால், காலாற நடந்தபடி கிட்டத்தட்ட முழு மும்பை மாநகரின் அழகை ,பருந்துப் பார்வையால் பார்த்துக் கொண்டே இருந்தவளுக்கு ஏதோ உள்ளுணர்வு உணர்த்த, உணவகத்தின் உள்கட்டமைப்பை பார்ப்பது போல் , அவள் பார்வையை உலவ விடும் போது, வாயிலை ஒட்டிய மேஜையில் அரை விளக்கொளியில் அமர்ந்துகொண்டு அவளையே கழுகு பார்வையால் துளைத்துக் கொண்டிருந்தான் அந்த 'அவன்'.

யாரை எண்ணி இத்தனை நாட்களாக அச்சம் கொண்டிருந்தாளோ, அவனே
அவளை மட்டும் அணுவணுவாக பார்த்தபடி, அமைதியாக அமர்ந்திருக்க,
பிணங்களை கொத்தி தின்னும் 100 கழுகுகளின் பார்வையில் இருந்த
பசியும் வெறியும் அதில் இருந்தது.
அந்தப் பார்வை அவள் முதுகுத்தண்டில் ஜில்லென்று ரத்தம் பாய்ந்த உணர்வை ஏற்படுத்த , கை கால்கள்
நடுங்க ஆரம்பிக்க, அளவுக்கதிகமான வியர்வை உடைப்பெடுத்து ஓட,
ஒரு நிமிடம் செய்வதறியாது உறைந்து போயிருந்தவளை அஷ்வத்தின் குரல் தன்னிலை உணரச் செய்ய,

" மம்மா, ஐ வாண்ட் மேங்கோ மில்க் ஷேக் ..." என்றவனுக்கு அதனை வரவழைத்துக் கொடுத்துவிட்டு, அடுத்து என்ன செய்யலாம், எப்படி தப்பலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கும் போது அர்ஜுனின் நினைவு வர, அவனை அழைக்கலாமா வேண்டாமா என்ற பட்டிமன்றத்தை 10 நிமிடத்திற்கு மேல் நடத்தி முடித்தவள்,
தன்னால் இங்கிருக்கும் நிலைமையை தனியே சமாளிக்க முடியாது என்ற முடிவுக்கு வந்ததும்,
அவனைத் தொடர்பு கொள்ள, அவன் அலைப்பேசியோ எடுக்கப்படாமல் அடித்து அடித்து அடங்க
இரண்டு மூன்று முறை தொடர்ந்து அழைப்பு விடுத்துவிட்டு
ஒருவித சலிப்போடு கைபேசியை கைப்பைக்குள் திணிக்கும் போது தான், எதிரே இருந்த அறிவிப்புப் பலகையை பார்த்தாள்.

9 மணிக்கு உணவகம் மூடப்படும்
என்றதில் தெரிவிக்கப்பட்டிருக்க , மணி 8:30ஐ கடந்திருக்க, மகனை அழைத்துக்கொண்டு பணம் செலுத்தி விட்டு கிளம்பி விடலாம் என்ற எண்ணத்தில், அஷ்த்தின் கரம் பற்றி அவள் எழும் போது , 'அவனும்' , அவன் அருகில் அமர்ந்திருந்த இருவரும் அவளைப் பார்த்தபடியே இருக்கையிலிருந்து எழ,
அப்பொழுதுதான் பிரச்சனையின் தீவிரத்தை மிக மிக அதிகமாக உணர ஆரம்பித்தாள்.

அவள் அந்த உணவகத்தில் இருக்கும் வரை தான் பாதுகாப்பு என்றுணர்ந்தவள், மீண்டும் அர்ஜுனை தொடர்பு கொள்ள, இம்முறையும் அவனது கைப்பேசி எடுக்கப்படாமல் போக
அவள் அங்கு அஷ்வத்துடன் வந்திருப்பது கூட அவனுக்கு தெரியாத நிலையில், இவ்வளவு குறைவான நேரத்தில் எப்படி வருவான் எங்கு வருவான் அவளை காப்பதற்கு ....
அவனை விட்டால் அவளுக்கு உதவ வேறு யாரும் முன் வர மாட்டார்கள் என்கின்ற நிலையில்
மனம் துடித்தவள்
கடவுளே எங்களைக் காப்பாற்று, அப்படி முடியவில்லை என்றால் என் குழந்தையை மட்டுமாவது காப்பாற்று ....என்று உள்ளுக்குள் பிரார்தித்து கொண்டிருக்கும் போது , திடீரென்று மின்னல் போல் விஷ்ணுவின் நினைவு வர,
உடனே அவன் கூறிய அவனது கைபேசி எண்ணும் மனதில் வர, எண்கள் சரியாக இருக்க வேண்டுமென்று வேண்டுதல் வைத்தபடி அவளுடைய கைபேசி எண்ணின் கடைசி ஒரு இலக்கத்தை மட்டும் மாற்றி
அவனைத் தொடர்பு கொள்ள, அழைப்பு தொடங்கிய அரை நொடிக்குள் தொடர்பில் வந்தவன்

" அண்ணி சொல்லுங்க ..." என்றான் பரபரப்போடு.
அவன் அழைத்த விதத்தில் ஒரு வித உரிமை தெரிய, அரை நொடி தயங்கியவளிடம்

" சொல்லுங்க அண்ணி ..." என்றான் மீண்டும் ஆதரவாக.

" விஷ்ணு , ஐ அம் ட்ராப்டு..( I am trapped)..." என்றவளின் பதட்டத்தில்
ஒன்றுமே புரியாமல்,

" சொல்லுங்க அண்ணி... எங்க இருக்கீங்க...எப்படி ட்ராப்பாணிங்க..."

உடனே அவள் வந்திருந்த மால் மற்றும் உணவகத்தின் பெயர், அதனை மூடும் நேரம் என அனைத்தையும் சொன்னவள்,
அங்கு ஒருவன் அவளுக்காக காத்து கொண்டிருப்பதையும் கூறி முடித்தாள்.
அதற்கு மேல் அவளிடம் அதிக கேள்வி கேட்காமல் , பிரச்சனையின் தீவிரத்தை சரியாக உணர்ந்தவன்

" அண்ணி, எவ்ளோ நேரமானாலும் ரெஸ்டாரன்ட்டை விட்டு வெளிய போயிடாதீங்க ... நான் டிரைவிங்ல தான் இருக்கேன் இன்னும் 15 நிமிஷத்துல வந்துடறேன் ... அண்ணனுக்கு போன் பண்ணீங்களா ..."

" அவர் எடுக்கல விஷ்ணு அதுக்கு தான் உனக்கு போன் பண்னேன் ..."

" சரி, நான் எப்படியாவது இன்ஃபர்மேஷனை அண்ணனுக்கு பாஸ் ஆன் பண்ணிடறேன் ... பயப்படாதீங்க... தைரியமா இருங்க ..."

" விஷ்ணு, இங்க நாங்க 2 ஃபேமிலி மட்டும் தான் இருக்கோம்...
மற்ற சேர்ஸ் அண்ட் டேபிள்ஸ் எல்லாம் அடுக்க ஆரம்பிச்சுட்டாங்க .... ரெண்டு மூணு பேரை தவிர மத்த ஸ்டாப்ஸ் எல்லாம் டிரஸ் மாத்திகிட்டு கிளம்ப ஆரம்பிச்சுட்டாங்க ..டைம் 9 ஆயிடுச்சு ..." என்றவளின் படபடப்பில், அங்கிருக்கும் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்தவன்,

" ஒன்னு பண்ணுங்க அண்ணி, உங்க ஹேண்ட் பர்ஸ் தொலைஞ்சு போச்சுன்னு அங்க இருக்கிற கேஷ் கவுண்டர்ல போய் சொல்லுங்க ..."

" ஏன் விஷ்ணு, எதுக்காக அப்படி சொல்லணும் ... என் பர்ஸ் என்கிட்ட இருக்கு ..."

" நீங்க அப்படி சொன்னீங்கன்னா எல்லாரோட பார்வையும் உங்க மேல தான் இருக்கும்.... அது மட்டும் இல்ல
உங்க பர்ஸை கண்டு பிடிக்கிற வரைக்கும்
ரெஸ்டாரன்ட்ட மூட மாட்டாங்க ... அதுக்குள்ள நான் வந்துடுவேன் ... போங்க ...போய் நான் சொன்ன மாதிரி சொல்லுங்க ...."

" எங்களோட பில் ரொம்ப கம்மி விஷ்ணு ... வெறும் 800 ருபீஸ் தான் ...ஒரு வேளை பணம் வேண்டாம் கிளம்புங்கன்னு சொல்லிட்டா..."

" நீங்க அமௌன்ட்ல கான்சன்ட்ரேட் பண்ணாதீங்க அண்ணி ...உங்க ரெஸ்டாரண்ட் வந்ததுக்கு அப்புறம்தான் என் பர்ஸ் தொலைஞ்சு போச்சு ... அதுல என்னோட ஐடி கார்டு, பாஸ்போர்ட் எல்லாம் இருக்கு ...ஐ வாண்ட் மை பர்ஸ் பேக்னு... ஏதாவது சொல்லி எல்லாரோட கவனத்தையும் உங்க மேலயே திருப்புங்க... நான் உடனே வந்துடறேன் .." என்றவன் அர்ஜுனை தொடர்பு கொள்ள, அவன் அலைபேசி எடுக்கப்படாமல் போக, உடனே அவனது அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு அவன் உதவியாளரிடம் விசாரித்ததில்
ஏதோ ஒரு முக்கிய கலந்தாய்வில் இருப்பது தெரியவர , உடனே
அக்னி கூறிய மாலின் முகவரியைக் கொடுத்து அர்ஜுனை அங்கு அவசரமாக வர சொல்ல சொன்னதோடு, தன் பெயரையும் சொல்லி
தொடர்புகொள்ள அறிவுறுத்தி விட்டு அழைப்பை துண்டித்தான்.

சரியாக பத்து நிமிடம் கழித்து அர்ஜுனிடமிருந்து அழைப்பு வர ,

" என்ன விஷ்ணு, என்ன பிராப்ளம்..." என்று படபடத்தவனிடம்
அக்னி பேசியதை அவன் ஒன்றுவிடாமல் கூற,

" விஷ்ணு, ஒருவேளை அந்த 'அவன்' இவனா இருப்பானோ ..." என்ற கேள்வியில் விஷ்ணுவும் துணுக்குற,

" இருக்கலாம் சீனியர், அதுக்கு தான் அண்ணி பயப்படுறாங்க போல ...நீ எங்க இருக்க ..."

" நான், ஆன் த வே டு த மால்.... ட்ராபிக் அதிகமா இருக்கறதால ஃப்ரெண்டோட பைக்ல வந்துகிட்டு இருக்கேன் டா ..."

" குட் ஜாப் அர்ஜுன், இன்னும் 5 மினிட்ஸ்ல நான் மால ரீச் பண்ணிடுவேன்... நான் பாத்துக்குறேன் நீ ஜாக்கிரதையா வா ..." என்றவன் அழைப்பை துண்டித்ததும்,
அர்ஜுன் அக்னியை தொடர்புகொள்ள,
அத்தனை பதற்றத்திலும் தன்னவனின் குரல் கேட்டதும் , பயத்தில் இறுகிப் போயிருந்தவளின் குரல் தழுதழுக்க ஆரம்பிக்க, அதை கூட உணர்ந்து கொள்ளாமல்

" அர்ஜுன், எனக்கு ரொம்ப பயமா இருக்கு... " என்றாள் அழாத குறையாக மிகுந்த பதட்டத்தோடு.

" டோன்ட் வரி ...விஷ்ணு ஆன் த வே .. நான் இன்னும் டென் மினிட்ஸ்ல ரீச் ஆயிடுவேன்... பி ஸ்ட்ராங்க் ... விஷ்ணு சொன்னதை அப்படியே செய் ..."

உடனே அக்னி விஷ்ணு கூறியதுபோல் உணவகத்தின் மேனேஜரிடம் தன் பர்ஸ் தொலைந்து விட்டதாக புகார் அளிக்க,

" நோ மேடம், அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்ல... நீங்க சரியா உங்க பேக்ஸ செக் பண்ணி பாருங்க..."

" நோ சார், ஐ ஹேவ் டன் இட் ..." என்றாள் லேசான பதற்றத்தை மட்டும் வெளி காட்டி.

உடனே அந்த மேனேஜர், அக்னியின் மேஜைக்கு உணவு வழங்கிய, அந்த இளைஞனை கூப்பிட்டு விசாரிக்க,
அந்த இளைஞனோ, கண்ணீர் வராத குறையாக பதில் கூற,
பார்ப்பதற்கு மிகவும் பரிதாபமாக இருந்தது.

தன்னையும் தன் மகனையும் காப்பாற்றிக் கொள்வதற்காக சொல்லும் பொய், ஒரு இளைஞனின் குடும்பத்தையும் அவன் நேர்மையையும் பாதிக்கிறதே என்று வருந்தியவளிடம்

" மேம், சிசிடிவி புட்டேஜை பார்த்தா கிளியர் ஆயிடும் ... ஆனா இப்ப தான் அந்த ஸ்டாப் வீட்டுக்கு போனாரு ..நீங்க நாளைக்கு வந்து கூட பணம் கொடுங்க மேம்... பிரச்சனை இல்ல... நீங்க எங்க ஒர்க் பண்றீங்கன்னு டீடைல் கொடுத்துட்டு போங்க .."

" சார், பணத்தை பத்தின பிரச்சினையே இல்லை சார்... நான் உங்களுக்கு மொபைல்ல ஜிபே கூட பண்ணிடுவேன்... என்னோட அமெரிக்கன் விசா ஸ்டாம்ப்டு பாஸ்போட் இஸ் மிசிங் ... அப்புறம் சில இம்பார்ட்டெண்ட் டாக்குமெண்ட்ஸ் ஆல்சோ மிஸ்ஸிங் ..." என்று வாய்க்கு வந்த கதைகளை அவள் கட்டவிழ்த்து விட, காதலர்கள் போன்றிருந்த இளம் தம்பதியோடு,
அந்த மூவர் மட்டும் அசையாமல் ஆடாமல் அதே இடத்தில் அமர்ந்தபடி நடப்பதை குறுகுறுவென்று கவனித்துக் கொண்டிருக்க,

" மேம், டைம் ஆயிடுச்சு ... ரெஸ்டாரென்ட்ட கிளோஸ் பண்ணனும்... இதுக்கு மேல ரெஸ்டாரண்ட்ட திறந்து வச்சிருந்தா நாங்க நிறைய லீகல் பிரச்சனையை ஃபேஸ் பண்ண வேண்டி வரும் ...
நீங்க உங்க அட்ரஸ் கொடுத்துட்டு போங்க மேம்.. நான் நாளைக்கு சிசிடிவி புடேஜ்ஜை பார்த்துட்டு உங்களுக்கும் அனுப்பறேன்.. மத்த ஸ்டாப்ஸையும் விசாரிக்கிறேன்... ப்ளீஸ் மேம் .." என்று அந்த உணவகத்தின் மேனேஜர் கெஞ்சாத குறையாக கேட்க,

அதற்கு மேல் என்ன பேசி நேரத்தைக் கடத்துவது என தெரியாமல், உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு அக்னி தடுமாறிக் கொண்டிருக்கும் போது
விஷ்ணு மின்னல் வேகத்தில் மின்தூக்கியிலிருந்து வெளி வர, தாய் ஏதோ பிரச்சனையில் இருக்கிறாள் என்பதை மட்டும் உணர்ந்து கொண்டு ஒரு வித பயத்தோடு, அக்னியின் கரம்பற்றி நின்றுகொண்டிருந்த அஷ்வத் விஷ்ணுவை கண்டதும் ஓடிச்சென்று அவன் காலைக் கட்டிக் கொள்ள, குழந்தையை தூக்கிக்கொண்டு அக்னியிடம் வந்தவன், எதுவுமே தெரியாதது போல் நடந்ததை அக்னியிடமிருந்து கேட்டறிந்து கொண்டு, பிரச்சனையை முடிக்கும் பாங்கில்

" அண்ணி, கிளம்பலாம் வாங்க ...எங்க தேடியும் கிடைக்கலன்னும் போது என்ன பண்ண முடியும் ... பாஸ்போர்ட் தொலைஞ்சிடுச்சின்னு போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்துக்கலாம்.... " என்றவன் உணவிற்கான பணத்தை செலுத்திக் கொண்டே அந்த 'அவனை' பார்க்க முற்படும் போது, அர்ஜுன் உள்ளே வர,

என்ன தான் விஷ்ணு உடனே வந்து உதவி செய்தாலும், அர்ஜுனை கண்டதும் தான் அக்னிக்கு உயிரே வர ,
வேக நடையிட்டுச்சென்று , அவன் கரம் பற்றிக் கொண்டாள்.

விஷ்ணு வந்த பின்னரும், அந்த மூவர் குழு கெத்தாகவே அமர்ந்திருந்த நிலையில்,
அர்ஜுனைக் கண்டதும்
ஏதோ பேயை கண்டது போல் ,
உதறல் எடுத்தவர்கள்,
அவன் அவர்களை பார்ப்பதற்கு முன்னே சாப்பிட்டதற்கான பணத்தை பில் புக்கில் வைத்துவிட்டு
அவன் கண்ணில் படாமல் நடையைக்கட்டினர்.

பிறகு அர்ஜுன் தன்னை, அந்த உணவக மேனேஜரிடம் அறிமுகப்படுத்திக்கொண்டு

" சாரி பார் தே இன்கன்வீனியன்ஸ் காஸ்ட்... ஷீ ஈஸ் மை வைஃப்...
பாஸ்போர்ட் தொலைஞ்சதால கொஞ்சம் பதட்டப்பட்டுட்டாங்க.... " என சமாதானம் கூறும் பாணியில் பேசி முடித்துவிட்டு, அந்தப் பெரிய உணவகம் முழுவதும் பார்வையைச் சுழல விட்டவனுக்கு, அவன் தேடி வந்தவர்கள் அங்கு இல்லை என்று உணர்ந்ததும்,

" எனக்கு இன்னைக்கு ஈவினிங் 7:30லிருந்து இப்ப 9:30 வரையிலுள்ள சிசிடிவி புட்டேஜ் வேணும்.." என்று விசாரணையில் இறங்கியவனிடம்

" சார், அந்த ஸ்டாப் இப்பதான் வீட்டுக்கு போனாரு... நாளைக்கு மார்னிங் உங்க மொபைல்க்கு அனுப்பிடறேன் சார் ..."
என்றதும் அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு கிளம்பும் போது ,

" அர்ஜுன், நீ ஃபேமிலியோட இருக்க ,என் கார் எடுத்துட்டு போ , நான் பைக் எடுத்துட்டு போறேன்..."

" வேணாண்டா, நாங்க பைக்லயே கிளம்பறோம்... குட் நைட் ... தேங்க்ஸ் ஃபார் யுவர் டைம்லி ஹெல்ப் மிஸ்டர் இன்டல்லைஜன்ஸ் ஆபீசர்...." என ஆத்மார்த்தமாக அவனை கட்டியணைத்து விடுவித்தவன் இரு சக்கர வாகனத்தில் தன் மனைவி மகனோடு இல்லம் நோக்கி பயணமானான்.


வீடு வந்து சேர்ந்ததும் ஏற்கனவே உணவு உண்டிருந்ததால் அஷ்வத் உறங்கச் சென்றுவிட ,

அவள் இரவு உணவு உண்ணவில்லை என்பதை தெரிந்து கொண்டு அவளோடு இணைந்து உணவு உண்டவன் எதைப்பற்றியும் விசாரிக்காமல் அவள் உண்டு முடிக்கும் வரை அமைதி காத்தான்.

உணவு உண்ணும் போது அவள் கைகளில் நடுக்கம், மிகவும் சிரமப்பட்டே ஒரே ஒரு சப்பாத்தியை சாப்பிட்டு முடித்தவள், அர்ஜுனின் அறைக்குச் சென்று,

" அர்ஜுன் ப்ளீஸ், எனக்கு தூக்கம் வரல மாத்திரை வேணும் ... அந்த ஆயுர்வேதிக் மெடிசன் ஒர்க் பண்ணும்னு தோணல.. ஐ நீட் இங்கிலீஷ் மெடிசன் ..."

" ஏன்..." என்றான் அனைத்தும் தெரிந்து கொண்டே.

" எனக்கு தூக்கம் வராதுன்னு தோணுது பயமா இருக்கு ..."

திருமணம் என்ற வார்த்தையை மட்டும் கனகச்சிதமாக தவிர்த்துவிட்டு

" அஷ்வத்துக்கு நாம வேணும்... எனக்கு நீங்க ரெண்டு பேருமே வேணும் ...
எந்த பிரச்சனையா இருந்தாலும் சொல்லும்மா... நான் இருக்கேன்...
எந்த சூழ்நிலையையும் உனக்காக ஃபேஸ் பண்ண தயாரா இருக்கேன் ...
தயவு செஞ்சு மனசு விட்டு பேசு அக்னி ... ப்ளீஸ் .... இன்னைக்கு ஹோட்டல்ல யாரையோ பார்த்து பயந்தியே யாரது ..." என்றவனின் கேள்வி ஏற்கனவே முகம் வெளிறி
கை நடுக்கத்தில் இருந்தவளுக்கு
கண்கள் சிவப்பேறி கலங்க செய்ய,

" நோ.... நோ .... நோ அர்ஜுன் ..எனக்கு அதை எல்லாம் நினைச்சு பார்த்தா ஏதோ ஆயிடுமோன்னு பயமா இருக்கு...." என்று தடுமாறியவளின் கரம் பற்றி இழுத்து தன் மார்பில் சாய்த்தபடி அவன் தலை கோத, வழக்கம் போல் அவள் உடலும் மனமும் ஒரு நேர்க்கோட்டில் பயணிக்காமல் போக,
அவள் புறத்தை ஆக்கிரமித்திருக்கிறான் என்பதைக் கூட உணராமல் அவள் உடல் நடுக்கத்திற்கும் உள்ள படபடப்பிற்கும்
அவன் உடல் வலிமையும் கதகதப்பும் பாதுகாப்பு அரணாக அவள் உணர ஆரம்பிக்க

" இங்க பார், சின்ன வயசுல எல்லா விஷயத்தையும் ஷேர் பண்ணுவியே அக்னி , இப்ப ஏன் என்கிட்ட பேசவே தயங்குற .... உனக்கு ஒன்னும் ஆக விடமாட்டேன்... நீ எவ்ளோ ஸ்ட்ராங் லேடி தெரியுமா...
இப்ப மட்டும் ஏன் பயப்படற... உன் மனசுக்குள்ளேயே அந்த சம்பவத்தை புதைச்சுகிட்டு இருக்கிறதால தான் உனக்கு அந்த பயம் இருக்கு... நீ வெளிய சொல்லிட்டா அந்த பயம் தானா போயிடும்... சொல்லுமா ..." என்றான் ஆதரவாக.

அந்த குளுகுளு அறையில் கூட, வியர்வைத் துளிகள் அவள் முகத்தில் முத்துக்களாய் மின்ன, அவள் உடம்பு மேலும் நடுங்க, முகம் ரத்த நிறத்தில் சிவக்க, மாற்றங்களை கண்டவன் அவளை தன்னோடு இறுக்கி அணைத்துக் கொண்டு, ஓரிரு நொடி கழித்தப்பின், அவளை அள்ளி தன் மடியில் வைத்துக்கொண்டு, அவள் முகம் பார்த்துக் கொண்டே

" சொல்லு மா.. ஐயம் தேர் ஃபார் யூ..."

என்று அவளை துவக்கினான்.


அஜய் இறந்து 16 ஆம் நாள் காரியம் முடிவடைந்த நிலையில்,
அஷ்வத் மட்டும் இல்லையென்றால் தன் வாழ்வை அஜய் உடனேயே முடித்துக் கொண்டிருக்கலாம் என்றெண்ணியபடி
நாசிக்கில் அவனுக்கு சொந்தமான அந்த மிகப்பெரிய திராட்சைத் தோட்டத்தின் மத்தியில் பிரம்மாண்டமாய் அமைந்திருந்த அவனது பண்ணை வீட்டில் அழுது அழுது ஓய்ந்து விட்டத்தை வெறித்துக் கொண்டிருந்தாள் அக்னி.

அவனது இறப்பும் அங்கேயே சம்பவித்து இருந்ததால், அவன் உடலை தகனம் செய்ததிலிருந்து காரியம் முடியும் வரை அங்கேயே தன் தாயுடன் தங்கிவிட்டாள்.

அஜய்யின் பூர்வீகம் நாசிக் தான். இங்கு தான் அவர்களின் பரம்பரை பங்களா இருக்கிறது . அஜய்யின் தாய் வழி தாத்தா பராமரித்து வந்த திராட்சைத் தோட்டத்தை, தனது ஒரே மகள் சுலபாவிற்கு திருமண சீராக கொடுத்தார்.

வெறும் 2,000 ஏக்கரில் இருந்த திராட்சைத் தோட்டத்தை அஜய்யின் தாய் சுலபா தன் அயராத உழைப்பால் ஆறாயிரம் ஏக்கராக உயர்த்தியதோடு உடன் வைன் தயாரிக்கும் தொழிற்சாலையையும் அமைத்து உலகத்தரத்திற்கு ஏற்றுமதி செய்து, வியாபாரத்தில் கொடி கட்டி பறந்தார்.

திராட்சைத் தோட்டத்திற்கு நடுவில் சாதாரணமாக அமைந்திருந்த இந்த வீட்டை,
பளிங்கு கற்களை கொண்டு பெரிய பண்ணை வீடாக மாற்றியதெல்லாம் அவரது உழைப்பு தான் .
இந்தப் பண்ணை வீட்டிற்கு அக்னி வருவது இது இரண்டாவது முறையாகும். முதல் முறை அவளது திருமணம் முடிந்த கையோடு ,
அவர்களது சோபன இரவை கொண்டாடுவதற்காக அவளும் அஜய்யும் அங்கு வந்திருந்தனர்.

அப்பொழுது வெறும் இரண்டே நாட்கள் தங்கியிருந்து விட்டு, முக்கிய பணி காரணமாக இருவரும் டெல்லிக்கு சென்று விட்டனர்.

அதன் பின் அவள் சற்றும் எதிர் பார்க்காத அஜய்யின் மரணம் , இந்த மலை அடிவாரத்தில் அமைந்திருந்த 6000 ஏக்கர் திராட்சை தோட்டத்திற்கு மத்தியில் இருந்த அந்த பிரம்மாண்ட பண்ணை வீட்டில் நிகழ்ந்திருப்பதால்
இந்த முறை வருகை தந்திருக்கிறாள்.

ஓர் அடிக்கும் உயரமான கொரியன் கிராசும், அடர்ந்த கிளைகளோடு கூடிய மரங்களும் செழித்து சூழ்ந்த அந்த பெரிய பண்ணை வீடு , வெறும் இரண்டு தளங்களை கொண்டிருக்க,
கோகிலா அவளை வழக்கம்போல் கீழ்த்தளத்தில் தன்னோடு உறங்க அழைக்க,
அவளோ முதன் முதலில் அஜய்யுடன் திருமண வாழ்வை தொடங்கிய, அந்த பிரம்மாண்ட படுக்கையறையில்
உறங்க நினைக்க, எவ்வளவோ கோகிலா எடுத்து கூறியும் கேளாமல் செயல்படுத்த எண்ணும் போது, பலத்த காற்று வீசி
கூடத்தில் மேசையின் மீது அடுக்கி வைக்கப்பட்டிருந்த தினசரிகளில் இருந்து, ஒரு ஆங்கிலப் பத்திரிகை வேகமாக பறந்து வந்து அவள் காலடியில் விழ, அதில்

Stop moving Kashmiri pandits out of kashmir ( காஷ்மீரி பண்டிட்கள் காஷ்மீரை விட்டு வெளியேறுவதை நிறுத்துங்கள்..) என்ற பெரிய வாசகம் தலைப்புச்செய்தியாக இருந்தது.

ஏற்கனவே ஏகப்பட்ட துக்கத்திலும் மனக்குழப்பத்திலும் இருந்தவளால்,
அதனை தன் நிலையோடு பொருத்திப் பார்க்க முடியாமல்
அஷ்வத்தை தன்னுடனேயே அழைத்துச் சென்று உறங்க வைத்துவிட்டு, அரசர்களின் படுக்கையை போல் வெள்ளை நிற வெல்வெட்டால் ஆன மயில் இறகை விட மென்மையான அந்த படுக்கையின் மத்தியில்
அமர்ந்து, பார்வையை எதிரே மாட்டி இருந்த அவர்களின் பெரிய திருமண புகைப்படத்தின் மீது நிலைத்தபடி உயிரற்ற உடலாய் கிடந்தாள்.

அந்தப் படுக்கை அறையின் தரை முழுவதும், சிவப்பு வெல்வெட்
கார்பெட்டால் அலங்கரிக்கப்பட்டிருக்க, அந்த அறையை சூழ்ந்திருந்த நான்கு பக்கச் சுவர்களும் உயர்தர கண்ணாடியால் வடிவமைக்கப்பட்டிருந்தது.

அந்தப் படுக்கை அறையில் வெண்கல கிரேக்க சிற்பங்கள், அழகழகான ஓவியங்கள்,
தந்த வேலைப்பாடுகள் நிறைந்த நுட்பமான பொருட்கள், நான்கு மூலையிலும் உள்துறை தாவரத் தொட்டிகளில் வண்ணமிகு பூக்களைக் கொண்ட செடிகள், அவள் உயரத்தை விட சற்றே குறைவான உயரத்தில், வண்ணமயமான மெழுகுவர்த்திகள் கொண்ட கண்ணாடி தாங்கிகள் என நாற்புறங்களிலும் செய்யப்பட்டிருந்த உட்புற கட்டமைப்பு அதன் பிரம்மாண்டத்திற்கு மேலும் அழகை கூட்டியிருந்தது .

அவர்களது சோபன இரவில்

அந்த பிரம்மாண்ட படுக்கையறை மேலும் பிரத்யேகமாக தயார் செய்யப்பட்டிக்க,

அவளை தன் கைகளிலேயே அந்த அறைக்கு சுமந்து வந்த அஜய், அவள் கண்ணோடு கண் நோக்கி,

" பில்லு... எப்படி போனேனோ அப்படியே வந்துட்டேன் ..." என்று அவள் நெற்றியோடு தன் நெற்றியை முட்டி கூறியவன், அவள் மூக்கு நுனியில் மென்மையாக முத்தமிட்டு அவள் இதழை தன் இதழால் முதன்முறையாக வசப்படுத்திய நிகழ்வில் மூழ்கி இருந்தவளுக்கு
அந்த வீட்டை சுற்றியிருந்த மரங்கள் வித்தியாசமாக அசைந்தாடிய படி எழுப்பிய ஊதக்காற்று சுயத்தை கொடுக்க , இனிமேல் அஜய் அவள் வாழ்க்கையில் இல்லை என்ற உண்மையும் உறைக்க, வெளியில் சொல்ல முடியாத துக்கம் நெஞ்சை கிழித்தெறிந்ததில் நிலைகுலைந்து போனாள்.

ஏற்கனவே அங்கு இருக்கும் சீதோசன நிலை குளுமையாக இருக்க, மழை பெய்ய வாய்ப்பு போல் லேசாக குளிர் காற்றுடன் வானத்தில் கொடி மின்னல்கள் மின்னி மறைய,
திடீரென்று மின்வெட்டு ஏற்படத்தும் உணர்வு வந்தவளாய் சுவற்றின் திரைச்சீலையை விலக்கி பார்த்தாள்.

கிட்டத்தட்ட கண்ணுக்கெட்டும் தூரம் வரை, மென்மையான நிலா வெளிச்சத்தைத் தவிர வேறு எந்த ஒளியும் தெரியாமல் அந்த நிலப்பகுதியே ஏறக்குறைய இருளில் மூழ்கி இருக்க
அது மலையடிவாரம் என்பதால் அந்த பண்ணை வீட்டிற்கு எப்பொழுதுமே, மின்வெட்டு ஏற்படும் சமயத்தில் இன்வெர்ட்டர் தொடர்பு உண்டு.

இன்று ஏன் அது பணி செய்யவில்லை என்றெண்ணிக் கொண்டிருந்தவள், வேறு வழியில்லாமல் அங்கு தாங்கியில் இருந்த மெழுகுவர்த்தியை ஏற்றவும், அவளது அறை கதவு தட்டப்படவும் சரியாக இருந்தது .

" யாரா இருக்கும் ... இந்நேரம் அம்மா கூட தூங்கி இருப்பாங்களே ..." என தனக்குத் தானே பேசியபடி கதவைத் திறந்தவளுக்கு, அங்கு நின்றிருந்த இருவரை பார்த்ததும் பேரதிர்ச்சி.

அதில் ஒருவனை அவள் நன்கு அறிவாள், அவன் தான் கௌரவ் ,
அஜய்யின் சித்தப்பா மகன்.
அஜய் இறப்பின் போது ஏறக்குறைய அனைத்து வேலைகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவன். மற்றொருவனின் முகம் அவள் மனதில் நிலைக்கவில்லை , காரணம் அங்கிருந்த இருட்டு மட்டுமல்ல அவன் முகம் முழுவதும் மண்டிக்கிடந்த தாடியும்.

கௌரவ்வின் நடையில் தெரிந்த தள்ளாட்டம், அவன் மீது வீசிய அருவருக்கத்தக்க மது வாடை, அவன் நிதானத்தில் இல்லை என்பதை உணர்த்த,

இருவருமே தள்ளாடியபடி அக்னியை நோக்கி அடியெடுத்து வைக்க, அவள் பின்னே நகர,

" ஏய் அக்னி..." என்றான் குழறலாய்.

அத்தனை நாட்களாக அண்ணி என்றழைத்தவன் அன்று அக்னி என்று அழைக்க, அவன் வந்திருந்த நிலையும் அழைத்த விதமும் அவன் மன வக்கிரத்தை பறைசாற்ற,

"வெளிய போடா ..." என்றாள் ஆக்ரோஷமாய்.

" நான் எதுக்கு வெளிய போகணும்.. இது நான் பொறந்து வளர்ந்த இடம் ...அது மட்டும் இல்ல இது என் அண்ணனுக்கு சொந்தமான பூமி ...இனிமே இது எனக்கு சொந்தம் ...
இந்த பூமி மட்டும் இல்ல என் அண்ணனுக்கு சொந்தமான நீயும்தான் ..." என்றான் அவளை உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை விரசமாய் பார்த்து.

" ச்சீ... நீ எல்லாம் அவருக்கு தம்பி... உன்னைப் பார்க்கவே அருவருப்பா இருக்கு ... அவர் இறந்து ஈரம் கூட காயலை, அவரோட மண் , மனைவி எல்லாம் வேணும்னு வந்து நிக்கறியே வெக்கமாயில்ல ..."

" எப்படியும் இந்த உலகம் உன்னை சும்மா விட போறதில்ல ... உன் அழகு அப்படி ... ஒரு குழந்தைக்கு அம்மா மாதிரியா இருக்க ... அப்சரஸ் மாதிரி இருக்க ...
அதோட இவ்ளோ பெரிய திராட்சைத் தோட்டத்துக்கே சொந்தக்காரி நீதான் ..
இதையெல்லாம் தெரிஞ்ச எவனாவது
உன்னை சும்மா விட்டு வைப்பானா ...
நீ சும்மா ஒன்னும் என் கூட இருக்க வேணாம் நான் உன்னை கல்யாணமே பண்ணிக்கிறேன் ...."

" வெளிய போடா நாயே ...
என்னை கல்யாணம் பண்ணிக்கோன்னு நான் உன்னை கேட்டேனா ..."

" சரி என்னை கல்யாணம் பண்ணிக்காத ...இவனை கல்யாணம் பண்ணிக்கோ ... நீ எங்க ரெண்டு பேர்ல யாரை கல்யாணம் பண்ணிகிட்டாலும் எங்களுக்கு ஒன்னு தான்... இல்ல மச்சி ..." என்றான் அருகில் இருந்தவனை பார்த்து.

" ச்சீய்.... " என்றாள் மிகுந்த அருவெறுப்போடு.

" என்னா ச்சீய்... கல்யாணம் பண்ணாமயே ஒன்னைய ஆட்டையை போட நாங்க ரெடி .... ஆனா உன் மாமியார் எழுதி வச்ச உயில் தான் இப்ப பிரச்சனையே....

இந்த மொத்த சொத்துக்கும் நீயும் உன் பையனும் மட்டும் தான் வாரிசாம்... இவ்ளோ நாளா இந்த திராட்சை தோட்டத்துக்கு உழைச்ச எனக்கு வெறும் 500 ஏக்கர் எழுதி வச்சிருக்கா..
உனக்கோ, உன் பையனுக்கோ இல்ல உங்க ரெண்டு பேருக்குமோ ஏதாவது ஆச்சுன்னா சொத்து ஆட்டோமேட்டிக்கா இந்தியன் ஆர்மி வெல்ஃபேர்க்கு போய் சேர்ந்திடும்னு
தெளிவா உயில் எழுதி வச்சிருக்கா அந்த கெழவி ...
அதனாலதான் உன்னை நாங்க லீகலா கல்யாணம் பண்ணனும்னு பார்க்கிறோம் ....நீ எங்க ரெண்டு பேர்ல
யாரையாவது ஒருத்தரை கல்யாணம் பண்ணிக்கோ ... அப்புறம் விருப்பம் இருந்தா எங்களோட இரு இல்ல வேற யார் கூடயாவது இரு உன்னை யாரு கேக்க போறா ..." என்றதை கேட்டு கொதித்துப் போனவள்
பக்கவாட்டு மேஜையின் மேல் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்த அலங்கார பொருட்களை எடுத்து அவர்கள் மீது வீச ஆரம்பித்தாள்.

அஜய் இறந்த தினத்திலிருந்து இன்று வரை ஒரு வேளை உணவு கூட சரியாக உட்கொள்ளாமல் உயிர் வாழ்ந்து கொண்டிருப்பவள் தன் சக்தியை எல்லாம் திரட்டி தன்னைக் காத்துக் கொள்ள கையில் கிடைத்த அனைத்தையும் ஆயுதமாக பயன்படுத்த,
அதையும் மீறி கௌரவ் அவளை வேகமாக நெருங்க முற்படும் போது
தான் அணிந்திருந்த வெள்ளை நிற சுடிதாரின் துப்பட்டாவை அங்கு எரிந்து கொண்டிருந்த மெழுகுவர்த்தியில் காட்டி அவள் பொசுக்க, அவளது அந்த திடீர் செய்கையில் அரண்டவன்,

" ஏய்....ய்ய்...என்ன பண்ற.... நிறுத்து..."

" கிட்ட வந்த, இதே மாதிரி என் உடம்புல தீய வச்சுப்பேன் ....

நான் ராஜபுத்திரி... என் கணவர் இறந்ததும் கண்டவனோட பேச்சுக்கும் பார்வைக்கும் ஆளாகாம, அவர் கூடவே 'சதி' ஏறி இருக்க வேண்டியவ....

என்னோட மகனுக்காக இத்தனை நாளா உயிரோட இருந்தேன் ... இனிமே நான் உயிர் வாழ விரும்பல ... இப்பவே என் குழந்தைக்கு தீய வச்சுட்டு , நானும் தீய வச்சுக்க போறேன் பாரு...

நெருப்பு என்னை ஒன்னும் பண்ணாது... உன்கிட்ட இருந்து என்னை காப்பாத்தும், ஏன்னா என் பேரே அக்னி..." என்றவள் அஷ்வத்தை நோக்கிச் செல்ல,

" ஏய்....நிறுத்து ...எதையாவது பண்ணி என் திட்டத்துல மண்ணள்ளிப் போட்டுடாதே ... " என்று கௌரவ் சமாதானம் பேசிக்கொண்டிருக்கும் போதே அருகில் இருந்தவன் , அந்த மெழுகுவர்த்தியை ஊதி அணைத்து விட்டு அக்னியின் மீது பாய, அதுவரையில் அவளுக்குள் இருந்த தைரியம் படிப்படியாக குறைந்து , பயத்தினால் அவளது ஆன்மா
சுருங்க ஆரம்பிக்க , அவள் உடலின் பல பாகங்கள் வெற்றுத் தன்மை அடைய,
அந்த வெற்றிடத்தை அழகாக
பயன்படுத்திக்கொண்டு அவள் உடலில் இறங்கினான் அஜய்.

அதுவரையில் பெண்மைக்குரிய தைரியத்தோடும் வலிமையோடும் மட்டுமே போராடிக்கொண்டிருந்தவளின் உடம்பில் திடீரென்று ஆண்மையின்
அதிரடியும் வலுவும் ஆக்கிரமிக்க
மறுநொடி அங்கிருந்த
வெண்கல கிரேக்கச் சிலையின் போர்வாளை உருவி எடுத்தவள் அந்த தாடி மனிதனை ஓங்கி அடிக்க அது அவன் தோளை பதம் பார்க்க, ரத்தம் பீறிட, வலி தாங்காமல் அவளிடமிருந்து அவன் விலகி ஓட,
அதே ஆயுதத்தைப் பயன்படுத்தி கௌரவ்வை தாக்கியதோடு, அந்த வெண்கலச் சிலையை தூக்கி அடித்து,
அந்த அறையின் கண்ணாடி சுவரை உடைத்தாள்.

எத்துணை தரம் வாய்ந்த கண்ணாடியாக இருந்தாலும் அவளது(அவனது) ஆக்ரோஷத்திற்கு முன்பு ஈடுகொடுக்க முடியாமல் சுக்கு நூறாக
உடைந்து சிதற, இந்த போராட்டத்தில் அவளது குழந்தை விழித்துக்கொண்டு அழ, ஒரு கணம் திரும்பி குழந்தையை பார்த்தாலும், வீழ்த்த படுவோம்....
என்றுணர்ந்தவள், மீண்டும் அவள் கையிலிருந்த போர் வாள் போன்ற ஆயுதத்தை கொண்டு சரமாரியாக அந்த இருவரையும் தாக்க, (போர்வாள் போன்று இருந்தாலும், அலங்காரத்திற்காக வைக்கப்பட்டிருந்ததால் கூர்மை இல்லாமல் இருந்தது) அதில் அந்த தாடி மனிதன் உடைந்த கண்ணாடி சுவர் வழியாக வெளியே குதிக்க, அவ்வளவு வலியிலும் கௌரவ் மட்டும் குதிக்க மனமில்லாமல் சற்று தயங்கி நிற்க,
மீண்டும் அக்னி அவனை தாக்க முயலும் போது வேறு வழியில்லாமல்
அவனும் அவ்வழியே தரை தளத்தில் வளர்ந்திருந்த கோரியன் கிராஸின் மீது குதித்து விட,

" செத்து தொலைங்கடா ...." என ஆக்ரோஷமாக மொழிந்தவளுக்கு நீண்ட போராட்டத்தின் காரணமாக அயர்ச்சி ஏற்பட, அப்படியே சரிந்து விழுந்தாள்.

சற்று நேரம் கழித்து குழந்தையின் அழுகுரல் பலமாக கேட்க, ஓடிச்சென்று அணைத்துக் கொண்டவள்
அமுதூட்ட நினைக்கும் போது தான் நீண்ட மன போராட்டம் மற்றும் உடல் போராட்டத்தின் காரணமாக தாய்ப்பால் வற்றி போயிருக்க, பால் பொடியை கொண்டு பால் தயாரித்து குழந்தைக்கு புகட்டி உறங்கச் செய்தவள் கடைசிவரை உறக்கமில்லாமல் அந்த இரவை பயத்தோடு நெட்டித் தள்ளி, பொழுது புலர்ந்ததும் தன் தாயை அழைத்துக்கொண்டு டெல்லிக்குப் புறப்பட தயாரானாள்.

தன் மாமியாரிடம் விடைபெற்றுச் செல்ல நினைத்து, அவரைப் பார்க்கச் சென்ற போது, வீட்டின் லானில் அமர்ந்தபடி கணக்கு வழக்குகளில் மூழ்கியிருந்தவரின் அருகில் கை , தோள் , நெற்றி என அனைத்து இடத்திலும் கட்டு போட்டுக்கொண்டு மிகுந்த பவ்யமாக உதவி செய்துகொண்டிருந்தான் கௌரவ்.

அங்கு அக்னியை பார்த்ததும், நேற்றைய இரவின் எண்ணத்திலேயே அவன் நோக்க, அவளும் அஞ்சாமல் அவனை ஆக்ரோஷத்தோடு பார்த்துக்கொண்டே

" மம்மி ஜி..." என்றாள் தயக்கத்தோடு.

" சொல்லுமா ..." என அஷ்வத்தை அவள் கையிலிருந்து அள்ளிக்கொண்டு
வாஞ்சையாக கேட்டார்.

" நானும் அம்மாவும் டெல்லி கிளம்பறோம்...." என்றதும் அதிர்ச்சி அடைந்தவர்

" ஏம்மா, உனக்கு என் கூட இருக்கிறதுல என்ன கஷ்டம் .... அஜய்யும் போய் சேர்ந்துட்டான்... இனி நீயும் என் பேரனும் தானே என்னோட உலகம்...
என்னால இந்தத் தோட்டத்தை விட்டுட்டு வந்து உன்கூட டெல்லில இருக்க முடியாது...
என்னை தனியா விட்டுட்டு போறேன்னு சொல்றியே...." என்றவரின் குரல் கமற,
நேற்றிரவு நடந்த சம்பவத்தை அவள் சொல்ல எத்தனிக்கும் போது,
அப்பொழுது வீசிய பலத்த காற்றினால்,
மேசையின் மேல் இருந்த தாள்கள் பறந்து சிதற, உடனே அனைத்தையும் வேகவேகமாக சேகரித்து மிகுந்த மரியாதையோடு,

" மம்மா, இதாங்க ...." என்றபடி மேஜையின் மேல் கொளரவ் அடுக்க,
அவனின் இன்னொரு முகத்தை
அவள் அதிர்ச்சியோடு பார்க்க,

" என்ன அக்னி, இவனை இப்படி பாக்குற... பொறந்ததிலிருந்து அஜய் என் கூட இருந்ததை விட இவன் தான் என் கூட அதிகமா இருந்திருக்கான்... என்னதான் என் வீட்டுக்காரரோட தம்பி மகன்னாலும்,
இவனும் எனக்கு மகன் தானே .... என் வீட்டுக்காரர் நான் அஜய்யை மாசமா இருக்கும் போதே இறந்துட்டாரு... அப்புறம் இவனோட அம்மா அப்பாதான் இத்தனை வருஷமா இவ்ளோ பெரிய திராட்சை தோட்டத்தை கட்டி காப்பாத்த உறுதுணையா இருந்தாங்க.... அவங்களும் இறந்து இப்ப பத்து வருஷத்துக்கு மேல ஆகுது .... இப்ப
இவனில்லாம இந்த வைய்ன் யார்டுல ஒரு வேளையும் நடக்காது.... அவ்ளோ பெரிய உழைப்பாளி ... நேத்து ராத்திரி கூட பவர் கட்டானதும், மறுநாள் காலையில தண்ணி பாய்ச்சனுமேன்னு
டூவீலர்ல ட்ரான்ஸ்ஃபார்மரை செக் பண்ண போயிருக்கான்... திடீர்னு பெய்ஞ்ச மழையால வண்டி ஸ்கிட் ஆகி கிழ விழுந்து மலையடிவார பாதையில உருண்டு கிட்டுப்போய் இப்படி ஏகப்பட்ட இடத்துல அடி பட்டுகிட்டு வந்து நிக்கறான் .... அதோட நேத்து ராத்திரி அடிச்ச புயல் காத்தால , மரக்கிளைகள் விழுந்து மேல் தள கண்ணாடி சுவர் உடைஞ்சி போயிருக்காம் அதை வேற சரி செய்யணும்னு சொல்றான்... இப்ப கூட போய் ரெஸ்ட் எடுத்துக்கோன்னு சொன்னா கேக்க மாட்டேங்கிறான்... காலையிலிருந்து வழக்கம் போல எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கிட்டு செஞ்சுகிட்டு இருக்கான் ...." என்றதை கேட்டு வாயடைத்து போனாள் அக்னி.

ஒரு மருமகளாக அக்னியை கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கும் குறைவான காலமே அஜய்யின் தாயார் அதாவது அவளது மாமியார் சுலபா அறிவார்.

ஆனால் இங்கு கௌரவ் மற்றும் அவன் குடும்பத்தினர் பல வருடங்களாக விஸ்வாசம் என்னும் விதையை விதைப்பது போல் நடித்திருக்கின்றனர் ... அது இப்போது விருட்சமாக மட்டுமில்லாமல் பல விருட்சங்களை கொண்ட தோப்பாகவே மாறி இருக்கிறது ...

இந்நிலையில் நேற்றைய இரவின் நிகழ்வை அவள் விளக்கினாலும், அதனை யாரும் உண்மை என்று ஏற்றுக் கொள்ளப் போவதில்லை.
ஒரு வேளை அவள் பேச்சை நம்பி அவள் மாமியார் கௌரவை இனம் கண்டதாக காட்டிக்கொண்டு விசாரிக்க நேர்ந்தால், அதுவே அவர் உயிருக்கு கூட ஆபத்தை விளைவிக்கும்.
அதுமட்டுமல்ல அங்கு பணியாற்றும் ஊழியர்களிலிருந்து ஊர் மக்கள் வரை அவன் கட்டுப்பாட்டில் தான் இருக்கின்றனர் என்பதை கணத்தில் உணர்ந்துகொண்டவள்
தன் மானத்தையும் குழந்தையையும் காப்பாற்றிக் கொள்ள முடிவெடுத்து,

" மம்மி ஜி, உடனே வேலையை விட முடியாது .... மூணு மாசம் நோட்டீஸ் கொடுக்கணும் ... டெல்லில போட்டது போட்டபடியே இருக்கு... சோ நான் போய் வைண்ட் அப் பண்ணிட்டு வந்துடறேன்..." என தப்பித்துக் கொண்டால் போதும், என்ற நிலையில் அவள் பேசி முடிக்க, அவள் முகத்தில் காட்டாத பயத்தை அவளது பேச்சில் உணர்ந்த கௌரவ் , அவளை நமுட்டுச் சிரிப்போடு பார்த்து வைக்க,

" ஓகே மா, நீ கிளம்பு... கௌரவ் உன்னை ஏர்போர்ட்ல டிராப் பண்ணுவான் சரியா ..." என்றதும் நெருப்பை மிதித்தவள் போல் உணர்ந்தவள்,

" நோ மம்மி ஜி, நான் ஏற்கனவே கேப்க்கு புக் பண்ணிட்டேன் ... கேப் வந்துகிட்டு இருக்கு ..." என்றாள் வேகமாக மறுத்து .

அஜய்யின் தாயாரை கடைசியாக பார்க்கும் தருணம் அது தான் என தெரியாமல் அவரை அணைத்து கொண்டவளுக்கு உண்மையை கூறி
உடன் கூட்டிச்செல்ல வகையும் இல்லாமல் , அவரை அங்கு விட்டுச் செல்லவும் முடியாமல் தவித்துப் போனாள் .

தகிப்பாள்
 
அத்தியாயம் 33

அன்றைய நினைவிலிருந்து மீள முடியாமல், கண்ணீர் கரைபுரண்டோட கதறி அழுதவளை,
தேற்றும் வழியற்று நின்றவன்,
கடைசியில் அவள் கையில் காபி குவளையை திணித்து,

" காஃபி குடி.... கொஞ்சம் ரிலாக்ஸ்ஸா ஃபீல் பண்ணுவ ...." என்றதும் அவளுக்குமே அது தேவையாக இருந்தது போலும் உடனே வாங்கிப் பருகியவளின் தொண்டையில் அதன் மெல்லிய கசப்பு, இதமான இனிப்பு, ஆவி பறக்கும் சூடு என அனைத்தும் இறங்கி ஆசுவாசப்படுத்த,

" சரி, இப்ப சொல்லு, அதுக்கப்புறம் அந்த கௌரவை இன்னைக்கு தான் ஹோட்டல்ல பார்த்தியா..." என்றான் விசாரணை அதிகாரியாக.

" இல்ல, கிட்டத்தட்ட மூணு மாசத்துக்கு முன்னாடி டெல்லிக்கு வந்திருந்தான் ...

அஜய் இறந்ததுக்கு அப்புறம் நான் நாசிக்கிலிருந்து டெல்லிக்கு போனதுமே அவன் என்னை தேடி வருவான்னு நான் பயந்துகிட்டே இருந்தேன் .... அதனாலதான் டெல்லில நாங்க இருந்த பழைய வீட்டை வித்துட்டு வேற இடத்துல புது வீடு வாங்கிக்கிட்டு ஷிப்ட் ஆனோம்....
ஆனா அவன் என்னை தேடி வரவே இல்ல ...

என்னோட ஆபீசும் வேற விங்குக்கு ஷிப்ட் ஆனதால நாளடைவுல அவனைப் பத்தின சிந்தனையே மறந்து போச்சு ... திடீர்னு ஒருநாள் வீட்டுக்கு வந்தான், எதிர்பாராம அவனை பார்த்ததும் என் பாதி உயிரே போயிடுச்சு... உள்ளுக்குள்ள ஏகப்பட்ட நடுக்கம்... என்ன சொல்ல போறானோனு நினைச்சுகிட்டே இருக்கும் போது,

நான் அவனை கல்யாணம் பண்ணிக்கிட்டே ஆகணும்னு வற்புறுத்தினான்... நானும் அஷ்வத்தும் அவனுக்கு வேணும்னு சொல்லி கெஞ்சினான் ....
அவனோட பேச்சு செயல் எல்லாம் ரொம்ப வித்தியாசமா இருந்தது ... ஆனா அவன் பார்வை மட்டும் சரியாவே இல்ல... அஜய் இறந்த 16 ஆம் நாள் அன்னைக்கு நாசிக்ல நடந்த விஷயத்துக்காக மன்னிப்பும் கேட்டான் .. அவன் அப்படி பயந்து நயந்து பேசறதை பார்த்து ஒண்ணுமே புரியல...

அந்த வைன் யார்டை உன் பேர்லயே எழுதி வச்சிடறேன் என்னையும் என் குழந்தையும் விட்டுடுன்னு நான் எவ்ளோ சொல்லியும், காதுலயே
வாங்கிக்காம சொன்னதையே சொல்லிக்கிட்டு இருந்தான் ...
அப்புறம் எனக்கு ரெண்டு மாசம் டைம் கொடுக்கிறதா சொல்லிட்டு கிளம்பிப் போய்விட்டான் ...

அவன் வந்து பேசினதும் தான் நாசிக்ல நடந்த விஷயம் என் அம்மாவுக்கு தெரிய வர , ஏற்கனவே உடம்பு சரி இல்லாதவங்க அவனால எனக்கு ஏதாவது ஆபத்து வருமோன்னு வருத்தப்பட்டே அன்னைக்கு ராத்திரியே ஹார்ட் அட்டாக்ல இறந்து போயிட்டாங்க...
எனக்குன்னு இருந்த சொந்தமும் கடைசியில என்னை விட்டுப் போயிடுச்சு ...

அதுக்கு மேல எனக்கு டெல்லில இருக்க பிடிக்கல... என் ஃப்ரெண்ட் கீதா மும்பைல இருக்கறதால நானும் என் ஜாப்பை ரிசைன் பண்ணிட்டு மும்பைக்கு கிளம்ப தயாரா இருந்த போது தான் மாமா நம்ம கல்யாணத்தைப் பத்தி பேசினாரு ...
அதுக்கப்புறம் நடந்தது உங்களுக்கே தெரியும் ..." என்றவளின் பேச்சில்

உனக்கும் எனக்கும் கல்யாணம் ஆயிடுச்சுங்கிற நினைப்பாவது வந்ததே...தேங்க் காட் ... என்று மனதில் புலம்பியவன்,

" அஜய் டெத்துக்கு அப்புறம் நீ டெல்லிக்கு போனதும் அஜய் அம்மாவை கான்டக்ட் பண்ணி கௌரவை பத்தி சொன்னையா..."

" நாசிக்கிலிருந்து டெல்லிக்கு வந்ததும் நானே அவங்களுக்கு போன் பண்ணி கௌரவ்வை பத்தி சொல்லனும்னு நினைச்சுகிட்டு இருந்தேன்... ஆனா டெல்லி வந்ததும் அஷ்வத்துக்கு ரொம்ப உடம்பு சரியில்லாம போயிடுச்சு... நிறைய நாள் லீவு எடுத்ததால ஆபிஸ்லயும் நிறைய பிரச்சனை ஆயிடுச்சு.. அதோட மம்மி ஜி கிட்ட எப்படி கௌரவ பத்தி சொல்றதுங்கிற தயக்கமும் இருந்தது...
அஜய்க்கு என்னை பத்தி நல்லா தெரியும்... ஆனா அவங்க அம்மாவுக்கு
என்னை பத்தி ரொம்ப தெரியாது அதனால நான் சொல்லறதை நம்புவாங்களா மாட்டாங்களாங்கிற சந்தேகம் வேற இருந்தது ... சொத்துக்காக உறவை பிரிக்க பாக்குறேன்னு ஒருவேளை தப்பா எடுத்துகிட்டாங்கன்னா என்ன பண்றதுன்னு யோசிச்சுக்கிட்டு இருக்கும் போது அவங்களே போன் பண்ணி ரொம்ப படபடப்பா பேசினாங்க ...

எடுத்தவுடனேயே, நான் பேசறத முதல்ல கேளு ... குறுக்க பேசாதேன்னு சொல்லிட்டு தான் பேசவே ஆரம்பிச்சாங்க ...

வைன் யார்ட பாட்டீயாங்கிறவர்(Bhatia) கிட்ட அஞ்சு வருஷத்துக்கு லீசுக்கு(lease) அக்ரிமெண்ட் போட்டு இருக்கிறதா சொன்னாங்க ...
அந்த லீஸ்ல கிடைச்ச பணத்தை எங்க ட்ரஸ்ட்ல சேர்த்து ,என்னை அந்த ட்ரஸ்ட்டோட பிரசிடெண்ட்டா அப்பாயின்ட் பண்ணியிருக்கிறதா சொன்னவங்க பேப்பர்ஸ் அனுப்பறேன் சைன் பண்ணி அனுப்புன்னு சொன்னாங்க...
யார் உன்னை வற்புறுத்தினாலும் அந்த லீஸ் அக்ரிமெண்ட் முடியிற வரைக்கும் உன்னால அந்த வைன் யார்ட விற்க முடியாதபடி பாட்டீயா , அவரோட மகன் கிட்ட நான் அக்ரிமெண்ட் போட்டு இருக்கேன்...
அந்தத் தோட்டம் அவங்க கையில இருக்கிறது தான் இப்போதைக்கு சேஃப் அதனாலதான் இந்த ஏற்பாடு செஞ்சிருக்கேன்.... அதில்லாம அந்த பாட்டீயாவும் நம்ம ட்ரஸ்ட்ல ஒரு மெம்பர் தான் ஞாபகம் வச்சுக்கோனு சொன்னவங்க, நான் எப்ப கூப்பிடறேனோ அப்ப நீ நாசிக் வந்தா போதும்னு சொல்லிகிட்டு இருக்கும் போதே, அவங்களோட லைன் கட்டாயிடுச்சு ...
அதுக்கப்புறம் எவ்வளவோ ட்ரை பண்ணினேன் ... என்னால அவங்களை காண்டாக்ட் பண்ணவே முடியல .... ஆனா அஜய் அம்மா பேசினதிலிருந்து அவங்களுக்கு ஏதோ கௌரவை பத்தி தெரிஞ்சிருக்குனு மட்டும் எனக்கு தோணுச்சு ..." என்றவளின் பேச்சை இடைவெட்டி,

" இப்ப அவங்க எங்க இருக்காங்க ..." என்று அவன் ஆர்வமாக கேட்க, அதற்கு அவள் அமைதி காக்க,

" சொல்லு அக்னி, இப்ப அவங்க நாசிக்லயா இருக்காங்க ..."

" ஷி இஸ் நோ மோர் அர்ஜுன் ..." என்றதை கேட்டதும் அதிர்ச்சியில்

" வாட்...." என்றான் உறைந்து போய்.

" எஸ் .... அவங்க என் கிட்ட பேசின மறுநாளே ஹார்ட் அட்டாக்ல இறந்துட்டாங்கன்னு நியூஸ் வந்தது ..."

" உனக்கு எப்படி தெரிஞ்சது ..." என்றான் அதிர்ச்சியிலிருந்து விடுபடாமல்.

" நான் ட்ரஸ்ட்டோட பிரசிடென்ட்டுங்கிறதால, செக்கரட்டரி எனக்கு போன் பண்ணி சொன்னாரு.... அத கேட்டதும் ஆடிப்போயிட்டேன்... எனக்கு அந்த வைன் யார்டுல இருந்த ஒரே ஆதரவு மம்மி ஜி தான்... அவங்களே இறந்துட்டாங்க ...
இனிமே நான் அங்க போறது நல்லது இல்லன்னு நெனச்சு, குழந்தைக்கும் அம்மாவுக்கும் உடம்பு சரி இல்லாததால என்னால வர முடியாது... நீங்களே மற்ற பார்மாலிட்டீஸை செய்து முடிச்சிடுங்கனு சொல்லிட்டேன்...
எல்லாம் முடிஞ்ச மறுநாள் எனக்கு
பாட்டீயா, கால் பண்ணி பேசினாரு... மம்மி ஜி சாவுக்கு ஏம்மா நாசிக்கு வரலனு கேட்டு ரொம்ப வருத்தப்பட்டாரு... வேறு வழியில்லாம செக்கரட்டரி கிட்ட சொன்ன பொய்யையே சொல்லி ஒரு வழியா சமாளிச்சேன்... அப்ப அவரு தான் சொன்னாரு கௌரவ தான் எல்லா சடங்கும் செஞ்சி தகனம் பண்ணான்னு..."

" இப்ப பாட்டீயா எங்க இருக்காரு..." என்று இடைவெட்டி கேள்வி எழுப்பியவன் பதிலை எதிர்பார்த்து காத்திருக்க, அவளோ தலை குனிந்தபடி அமைதியாக நிற்க,

" சொல்லு அக்னி, பாட்டீயா நாசிக்ல தானே இருக்காரு ..."

" நோ அர்ஜுன்... ஹீ இஸ் ஆல்சோ நோ மோர் ..." என்றவளின் கண்ணில் அப்படி ஒரு பயம்,

"வாட்.... ஆர் யூ சீரியஸ் ..." என்றான் அதிர்ச்சியில்.

" எஸ், பாட்டீயாயும் ஹார்ட் அட்டாக்ல இறந்துட்டாரு... அவர் ட்ரெஸ்டோட மெம்பர்ங்கிறதால அவரோட சன் ஆகாஷ் எனக்கு பெர்சனல் மெயில் போட்டிருந்தாரு ... அவர் லண்டன்ல இருந்து பிரைவேட் ஜெட்ல வந்து பாட்டீயாவோட உடலை தகனம் செய்துட்டு அன்னைக்கே திரும்பிப் போய்ட்டதா ட்ரஸ்டோட செக்கரட்டரி அப்புறம் எனக்கு போன் பண்ணி சொன்னாரு... இப்ப ஆகாஷ் கண்ட்ரோல்ல தான்
அந்த வைன் யார்டு இருக்கு ......"

" பாட்டீயா எப்ப இறந்தாரு..."

" என்னை காண்டக்ட் பண்ணி பேசின ரெண்டாவது நாள்...." என்றாள் நடுங்கிய குரலில்.

" ஓ மை காட் ...என்ன நடக்குது இங்க ... எப்படி அஜய், அவங்க அம்மா, பாட்டீயா எல்லாரும் சொல்லிவச்ச மாதிரி உன்கிட்ட பேசினதுக்கப்புறம்
இறந்து போயிருக்காங்க ...அதுவும் ஹார்ட் அட்டாக்ல ...சரி உனக்கு ஏன் அஜய்யோட டெத்ல சந்தேகம் வரல ......" என்றான் திருமதி சேஷாத்திரி சொன்னதை நினைத்து.

"அஜய் ஹார்ட் அட்டாக்குல
இறந்துட்டாருன்னு நியூஸ் வந்ததும் மொதல்ல எனக்கு துளி கூட சந்தேகம் வரல...
ஏன்னா அதுக்கு ஒரு முக்கிய காரணம் இருந்தது ...

ஒரு டெரரிஸ்ட் அட்டாக்ல அஜய்யோட இடது தோளுக்கு கீழ இதயத்துக்கு மேல, புல்லட் பாய்ஞ்சு கிட்டத்தட்ட ஒரு மாசம் படுத்த படுக்கையா இருந்து கஷ்டப்பட்டிருக்காரு... கடைசி வரைக்கும் டாக்டர்ஸ்சால அந்த புல்லட்டை ரிமூவ் பண்ணவே முடியல பண்ணா நிறைய பிராப்ளம் வரும், அதைவிட எவ்ளோ நாள் அதோட அவரால மேனேஜ் பண்ண முடியுமோ பண்ணிட்டு போகட்டும்னு சொல்லி விட்டுட்டிருக்காங்க ... நாசிக் போகுறதுக்கு முன்னாடி என்கிட்டயே ரெண்டு மூணு தடவை இடது மார்புல வலி இருக்குன்னு சொல்லி இருக்காரு... அதனாலதான் அஜய்க்கு ஹார்ட் அட்டாக்னு சொன்னதும் நம்பிட்டேன்... அதோட அந்த விஷயம் அவங்க அம்மாவுக்கும் தெரியும் ... அஜய்க்கு டெல்லில மீட்டிங் இருந்ததால அத முடிச்சுட்டு அவங்க அம்மாவை மீட் பண்ண நாசிக் போகலாம்னு பிளான் வச்சிருந்தோம் ... அதுக்குள்ள அவங்க அம்மாவே போன் பண்ணி இம்பார்ட்டெண்ட்னு கூப்பிட்டதால அஜய் போக வேண்டியதாயிடுச்சு...

அவர் இறந்து போய் கிட்டத்தட்ட ஒரு மாசத்துக்குள்ள மம்மி ஜியும் ஹார்ட் அட்டாக்ல இறந்து போக அப்பதான் முதல் முறையா எனக்கு சந்தேகம் வந்துச்சி ... எப்ப பாட்டீயாவும் அதே மாதிரி இறந்து போனாரோ அப்பதான்
அஜய்யோட டெத் ஏன் அசாசினேஷனா இருக்கக்கூடாதுன்னு என் சந்தேகம் வலுத்துச்சி... ..."

அவன் மனதில் இருந்த கேள்வியை அவளும் யோசிக்கிறாள் என்ற நிலையில்,பார்வையை கூர்மையாக்கி சுவாரஸ்யத்தோடு அவளை நோக்கியவன்,

" ஏன் உனக்கு அஜய் டெத்ல கௌரவ் மேல டவுட் வராம, அசாசினேஷன்னு டவுட் வந்தது .." என்ற முக்கிய கேள்வியை முன் வைத்தான்.

" எனக்கு தெரிஞ்ச வரை அஜய்க்கு ப்ரெண்ட்ஸ் ரொம்ப கம்மி ... ஏன் ஃப்ரெண்ட்ஸே இல்லன்னு கூட சொல்லலாம்... ஐபிஎஸ் ட்ரைனிங் டைம்ல ஒரு மதராசி ரொம்ப க்ளோஸ் ஃப்ரெண்ட் ஆனாருன்னு சொன்னாரு... அவர் நம்ம கல்யாணத்துக்கு வரும் போது உனக்கு ஒரு சர்ப்ரைஸ் காத்துக்கிட்டு இருக்குன்னு சொன்னாரு ... கடைசில அந்த ஃபிரண்ட் கல்யாணத்துக்கே வரல... அதுக்கு மேல அவர பத்தி பேச சந்தர்ப்பம் அமையாமையே போயிடுச்சு ...( தன்னைத்தான் கூறுகிறாள் என்று புரிந்துகொண்டு அர்ஜுன் நோக்க) நாசிக்ல முஸ்தபா பாய்னு ஒருத்தர் இருக்காரு ... ஏறக்குறைய அஜய் வயசுதான் ...அஜய் பாகிஸ்தானுக்கு அண்டர் ஏஜென்ட்டா போனதுக்கு அவர்தான் ட்ரெய்னிங் கொடுத்தாரு... அஜய் படிச்சது , வளர்ந்தது எல்லாம் டெல்லிங்கிறதால ரெண்டு பேருமே நாசிக்கை சார்ந்தவங்கன்னாலும் அதிகம் பரிச்சயம் கிடையாது... ரா ஏஜென்ட்டா ஆனதுக்கு அப்புறம் தான் அவரோட அறிமுகமே அஜய்க்கு கிடைச்சது..."

" அஜய்யோட டெத்துக்கு அவர் வந்திருந்தாரா..." என்றான் அன்றைய நினைவை அசை போட்டுப் பார்த்து.

" வந்திருந்தாருனு அம்மா சொன்னாங்க... என்கிட்ட பேசணும்னு கூட அம்மாகிட்ட சொன்னாராம் ... ஆனா நான் அன்னைக்கு பித்து பிடிச்ச மாதிரி இருந்ததால, அவரால எதையும் பேச முடியாம போயிட்டாராம்.... அம்மாவையும் அவருக்கு தெரியாதுங்கிறதால எதையுமே சொல்லாமலே போயிட்டிருக்காரு ... வைன் யார்டு புரோபர்டி சம்பந்தமா
அஜய் கொல்லப்பட்டிருக்கலாம்னு கௌரவ மேல எனக்கு சந்தேகம் இருந்தாலும், முஸ்தபா பாய் எதுக்காக வந்திருந்தாருன்னு தெரிஞ்சுக்க ஆசைப்பட்டேன்..."

" இப்ப அவரை மீட் பண்ணா ஏதாவது தகவல் கிடைக்குமா ..." என்றான் ஆவலோடு.

ஏற்கனவே வழிந்து கொண்டிருந்த வியர்வையோடு, மேலும் வியர்வைத் துளிகள் அவளது அதீத சிவந்த முகத்தை ஆக்கிரமிக்க, ஒரு வித விரைப்புத்தன்மை அவள் உடலில் தெரிய, என்ன சொல்ல வருகிறாள் என அனுமானித்தவன் உடனே முகமெல்லாம் வெளிறி போய்,

" ஆர் யூ ஷ்யூர்..."

" எஸ் அர்ஜுன், ஹி இஸ் ஆல்சோ நோ மோர் ...." என்பதைக் கேட்தும் அவன் முதுகுத்தண்டில் ஜில்லென்று ரத்தம் பாய,

" முஸ்தபா மட்டுமில்ல அவரோட மனைவி கதீஜாவும் ஹார்ட் அட்டாக்குல இறந்துட்டாங்களாம்..."

" ஓ ஷிட்.., சுத்தி சுத்தி இத்தனை பேர் ஹார்ட் அட்டாக்ல இறந்திருக்காங்க...
எல்லாரோட சாவையும் இயற்கையானதுன்னு டாக்டர் சர்டிஃபை பண்ணி இருக்காங்க அது எப்படி பாஸிபுல்...
சரி, அஜய், அஜயோட அம்மா, பாட்டீயா மூணு பேரும் வைன் யார்டு புரோபர்டி சம்பந்தப்பட்டவங்க... இவங்க விஷயத்துல கௌரவ் கொலையாளின்னே வச்சுக்குவோம்...
எதுக்காக முஸ்தபா அவங்க மனைவி கதீஜா சாகணும் ... அதுவும் உன்னை பார்த்து ஏதோ பேசணும்னு வந்தவரு மறு நாளே ஹார்ட் அட்டாக்ல இறந்து போயிருக்காரு கூடவே அவங்க மனைவியும் ஹார்ட் அட்டாக்ல இறந்து போய் இருக்காங்க ...அவருக்கும் ஏறக்குறைய அஜய்யோட வயசுன்னு தான் சொல்ற...

எனக்கு என்னமோ இது வைய்ன் யார்டு புரோபர்டியை தாண்டி வேற ஏதோ ஒரு காரணம் இருக்குமோன்னு தோணுது .... கௌரவ் மட்டுமில்ல வேற யாரோவும் இதுல சம்மந்தப்பட்டிருக்காங்க....
இவங்க எல்லாரும் நிச்சயமா ஒரே காரணத்துக்காக கொல்லப்படல.. அது மட்டும் நல்லா தெரியுது ... சரி முஸ்தபா இறந்து போனது உனக்கு எப்படி தெரியும் யார் சொன்னா ..."

" என் ப்ரெண்ட் கீதாவோட நேட்டிவ் நாசிக் தான்... அவளுக்கு முஸ்தபா பாய நல்லா தெரியும்... பாட்டீயா இறந்ததுக்கு அப்புறம் நான் முஸ்தபா பாய நிறைய தடவை கான்டெக்ட் பண்ண முயற்சி பண்ணேன் ... ஆனா முடியல ... அப்புறம் கீதா தான் விசாரிச்சு சொன்னா, அஜய் இறந்த மறுநாளே முஸ்தபா பாய் , அவங்க மனைவி கதீஜா ஹார்ட் அட்டாக்ல இறந்துட்டாங்களாம்... பாரின்ல இருந்து வந்திருந்த முஸ்தபா பாயோட தம்பி அவங்களோட ஒரே மகனை கூட்டிகிட்டு வீட்டையும் வித்துட்டு எங்கேயோ போயிட்டாருன்னு..."

" சரி, அஜய்யோட டெத் எப்படி அசாசினேஷன்னு சொல்ற..." என்றான் மீண்டும் அதே கேள்வியை முன்வைத்து.

" முஸ்தபா பாய், அஜய்யோட ட்ரெயினர் மட்டும் இல்ல, அவரும் ஒரு ரா ஏஜென்ட் ..." என்றதைக் கேட்டதும் அர்ஜுன் உறைந்தே போனான்.


அன்று:

அஜய் அர்ஜுனுடன் (Lbsnaa)வில் பவுண்டேஷன் கோர்ஸ் முடித்துவிட்டு, RAS(Research Analysis Service) தேர்வின் மூலம் ரா ஏஜென்டாக நேரடியாக தேர்வாகி அதற்கான பயிற்சியை மேற்கொண்டான்.

ரா பயிற்சியை பற்றிய துணுக்குகள் :
(அஜய் மேற்கொண்ட பயிற்சிகள் )
----—--——————----—-------—---—--------
இந்திய ராணுவம்,
இந்திய உள்நாட்டு உளவுபிரிவு (IB),
இந்திய காவல்துறையில் பணிபுரியும் சிறந்த அதிகாரிகள்(IPS), சில சமயம் ரா ஏஜென்டாக தேர்வு செய்யப்படுவர்.

ஓராண்டில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்குள்ளானது ரா ஏஜண்ட்டுக்கான பயிற்சி.

மிகவும் கடுமையான பயிற்சி. இந்த பயிற்சியின் போது, எந்த ஒரு மின்னணு மற்றும் தகவல் தொடர்பு கேட்ஜெட்கள் பயன்படுத்துவதற்கு முற்றிலும் தடை.

பேசிக் ட்ரெய்னிங் (basic training) எனப்படும் முதல் பத்து நாட்கள் நடைபெறும் அடிப்படை பயிற்சியில்
நிதி பொருளாதார பகுப்பாய்வு (Financial economic analysis) விண்வெளி தொழில்நுட்பம்(space technology) , தகவல் பாதுகாப்பு(information security) , ஆற்றல் பாதுகாப்பு (energy security) எனப் பல பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படும்.

நமது போட்டி நாடுகளின் மொழிகளை கற்கவும், அமெரிக்கா (CIA) பாகிஸ்தான் (ISI) இஸ்ரேல் (MOSSAD) போன்ற நாடுகளின் உளவுத்துறையில் இருந்து , அந்த நாடுகள் ஏற்கனவே மேற்கொண்டுள்ள
கேஸ் ஸ்டடீஸ்(Case studies) எனப்படும் வழக்கு ஆய்வுகளின் மூலம் அந்த நாட்டின் உளவுத்துறையின் திறமை, உளவு புரியும் முறை என அனைத்தும் பயிற்றுவிக்கப்படும்.

பிறகு அட்வான்ஸ் ட்ரைனிங் (advanced training) எனப்படும் மேம்பட்ட பயிற்சியை அவர்கள் மேற்கொள்வர்.
மிகுந்த குளுமையான பகுதி, மிகுந்த வெம்மையான பகுதி, அடர்ந்த காடுகள்,
உயர்ந்த மலைப் பிரதேசங்கள் என அனைத்து விதமான இடங்களிலும் சூழ்நிலைக்கு ஏற்ப உடல் சீதோஷண நிலையை தாங்கிக்கொள்ள சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படும்.

ஒரு குறிப்பிட்ட நாட்டிற்கு உளவு வேலை பார்க்கச் செல்ல வேண்டுமென்றால்,
அந்த நாட்டின் நிதி நிலைமையில் இருந்து ராணுவ பாதுகாப்பு வரை முன்கூட்டியே அக்குவேறு ஆணிவேராக அறிந்துகொள்ள பயிற்சி அளிக்கப்படும்.

அந்த நாட்டின் குடிமகன் ஆவதற்கும் , அந்த அரசாங்கத்தின் முக்கிய பதவிகளில் அமர்வதற்கும் பயிற்சி அளிக்கப்படுவதோடு , அவர்களிடம் மாட்டிக் கொள்ளாமல் அந்த அரசாங்கத்தின் செயல்பாடுகளை இரகசியமாக கண்காணித்து நமது நாட்டிற்கு உளவு சொல்வது, ஒருவேளை துரதிர்ஷ்டவசமாக மாட்டிக்கொண்டு விட்டால் அவர்களிடமிருந்து எப்படி தப்புவது
போன்ற அனைத்தும் பயிற்றுவிக்கப்படும்.

முக்கியமாக உளவியல் பிரிவுகளில்(psychological division) சிறப்பு பயிற்சி வழங்கப்படும்.

இது உடன் பழகும் எதிரி நாட்டினரின் மனநிலையை பழகிய மாத்திரத்தில் அறிந்துகொள்ள பயன்படுவதோடு ஏதாவது ஒரு முக்கிய சந்தர்ப்பத்தில் அவர்கள் எம்மாதிரியான முடிவை எடுப்பார்கள் என முன்கூட்டியே அனுமானித்து அதற்கேற்றார் போல் நமது நாட்டின் அடுத்த நகர்வுகளை திறம்பட மேற்கொள்ள அந்த பயிற்சி உதவும்.

மிக முக்கியமாக அவர்களுக்கு உளவியல் போர் எனப்படும் சைக்கலாஜிக்கல் வார்ஃபேரில் (Psychological warfare) சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்.

குற்றவாளிகள் அல்லது எதிரி
நாட்டினரிடமிருந்து அவர்களின் நோக்கம், நம்பிக்கை, அவர்கள் இந்தப் பணியில் ஈடுபட்டிருப்பதற்கான காரணங்கள் அறிய அவர்களிடம் இயல்பாக பழகுவது போல் பழகி உணர்ச்சிவசப்பட செய்து அவர்களையே ஒப்புதல் வாக்குமூலம் கொடுப்பதற்கு உளவியல் ரீதியாக தயார் செய்தல்.

பல சமயங்களில் ஃபால்ஸ் பிளாக் (False flag) எனப்படும் முறையை பயன்படுத்தி, அந்த நாட்டின் அரசாங்கம் அல்லது ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சி, அல்லது ஒரு தனிப்பட்ட நபரின் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை அந்த உள்நாட்டின் நக்சல் அமைப்புகளுடன் சேர்ந்து கொண்டு, எல்லா வகையான ஊடகங்களிலும் திரும்பத்திரும்ப ஒளிபரப்பப்பட்டு , அந்த நாட்டு மக்களை நம்ப வைப்பது.

அதுமட்டுமல்ல இவர்களே ஒரு தீவிரவாத தாக்குதலை திட்டமிட்டு நடத்திவிட்டு அதனை, அந்த எதிரி நாட்டின் அரசாங்கம் அல்லது தனிப்பட்ட நபர் , அல்லது ஒரு குறிப்பிட்ட நிறுவனம் அல்லது அந்த நாட்டை காக்கும் ஏதாவது ஒரு துருப்புகளின் மீது பழி சுமத்திவிட்டு, அந்த நாட்டிலுள்ள மக்கள் மற்றும் பல்வேறு தரப்பினருக்கு இடையே உள்நாட்டுக் கலவரங்களை தூண்டி அந்த நாட்டின் சட்டம் ஒழுங்கு மற்றும் அமைதியை சீர்குலைக்க செய்வது போன்றவையே
ஒரு ரா ஏஜன்டின் பிரதான வேலையாகும் .

ரா வின் பணியை பொருத்தமட்டில்,
ஏறக்குறைய சினிமாவில் காட்டப்படும் ஜேம்ஸ்பாண்ட் போன்றதுதான்.

ஆடுதல்,பாடுதல், லஞ்சம் கொடுத்தல், குடித்தல், சீட்டு விளையாடுதல், காதலித்தல், திருமணம் செய்துக்கொண்டு குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளுதல், என அந்த நாட்டினரை நம்ப வைப்பதற்காக எது வேண்டுமானாலும் செய்யலாம்,
அந்த வேலையில் எந்த ஒரு வரையறையும் கிடையாது ஆனால்
நம் நாட்டை காப்பதற்கு தேவையான உளவுத் தகவல்களை எப்படியாவது சேகரித்து இந்திய உள்நாட்டு உளவுத்துறைக்கு வழங்குவதே அவர்களின் முக்கிய கடமையாகும்.

ஆனால் இதே போல் எப்பொழுதும் வாழ்க்கை மிக இலகுவாகவும் இருக்காது. பல சமயங்களில் அடுத்த உத்தரவு வரும் வரை நீர்மூழ்கி கப்பலின் மிகக்குறுகிய பதுங்கு அறையில் எந்த ஒரு தொழில் நுட்ப வசதியும் இல்லாமல் மாதக்கணக்கில் தங்க வேண்டிய நிலைமையும் ஏற்படும்.

அதேபோல் வெம்மை கக்கும் பாலைவனங்கள், உடலின் குருதியை உறையச் செய்யும் குளிர் பிரதேசங்கள்,
வானுயர்ந்த மரங்களைக் கொண்ட மலைக்காடுகளில் மாதக்கணக்கில் சிலசமயம் வருடக்கணக்கில் கூட தங்கி உளவு பார்க்க வேண்டிய நிலைமை உண்டு.

அவர்களுக்கான நமது அரசாங்க உத்தரவு ஒவ்வொரு முறையும் வெவ்வேறு வகையில் அவர்களை சென்றடையும்.

டீ ஷர்ட்டில் இருக்கும் வாசகங்கள், சிறு சிறு துண்டு சீட்டுகள் பரிமாற்றம், வெகு சில நேரங்களில் தகவல் தொடர்புத்துறை மூலம் உத்தரவுகள் பிறப்பிக்கப்படும்.

இந்த பணி ஒன் மேன் ஆர்மி எனப்படும் தனிக்காட்டு ராஜ்யம்தான்.

அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உத்தரவு அல்லது அந்த எதிரி நாட்டின் அரசாங்க செயல்பாடுகளில் நேரத்திற்குத் தகுந்தாற் போல் முடிவெடுத்து
சிறப்பாக செயலாற்றி, கொடுத்த மிஷனை சிறப்பாக முடித்து வெற்றி வாகை சூடி தாயகம் திரும்புவோருக்கு சிவப்புக் கம்பளம் விரித்து இந்தியா வரவேற்கும்.

ஒருவேளை சூழ்நிலை சரியில்லாமல்
உளவாளிகள் என அந்த எதிரி நாட்டின் ராணுவம் மற்றும் உள்துறையால் கண்டறியப்பட்டால் ,
அவர்களது உயிர் மட்டுமல்ல உடல்கூட தாயகம் திரும்பாது.

ராணுவத்தில் உயிர் துறக்கும் வீரர்களுக்கு வழங்கப்படும் அரசாங்க இறுதி மரியாதை கூட இவர்களுக்கு கிட்டாது என்பது குறிப்பிடத்தக்கது.

ரா ஏஜென்டாக இருப்பவர்கள் யாருக்கும் கட்டுப்பட வேண்டிய அவசியமில்லை. பிரதமருக்கும் பிரதமர் அலுவலகத்திற்கும் மட்டுமே பதில் அளித்தால் போதுமானது.
இவர்கள் எந்த ஒரு இடையூறும் இல்லாமல் பிரதமர் அலுவலகத்தை நேரடியாக தொடர்பு கொண்டு பேசலாம்.
- —------—-------------------------------------------------

" ஹேய் அக்னி, உன் ஆள் ட்ரெய்னிங் முடிச்சிட்டு வந்தாச்சு... இப்பதான் அவரை மசூதி வாசல்ல பார்த்தேன்... விசாரிச்சதுல மனுஷன் 2 மாசமா நாசிக்ல தான் இருக்காருன்னு நியூஸ் கிடைச்சிருக்கு டி ..." என கீதாவின் செய்தி கிட்டியதும் மறுநாளே நாசிக்கில் இருந்தாள் அக்னி.

மசூதி வாசலில்
" ஹலோ மதம் மாறிட்டீங்களா..." என்ற பேச்சைக் கேட்டு துணுக்குற்று திரும்பிப் பார்த்தவனுக்கு ஆச்சரியத்தில் ஆச்சரியம்.

அவன் சற்றும் எதிர்பார்க்காத அவனது ஆத்மார்த்தமான காதலி அல்லவா, அங்கு நின்று கொண்டிருப்பது,
மெய் மறந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தவனிடம்,

" ட்ரெய்னிங்ல இருந்து எப்ப வந்தீங்க ஹீரோ ... சொல்லவே இல்ல ... எனக்கு வாக்கு கொடுத்தது மறந்து போச்சா ..." என அக்னி அஜய்யை வழி மறைக்க ,

" இப்படி கடன்காரி மாதிரி என்னை தேடி வருவேன்னு நான் கொஞ்சம் கூட எதிர் பார்க்கல ..." என்றான் பொய் கோபத்துடன்.

" என் மனசையே கடனாயில்ல கொடுத்திருக்கேன், பின்ன தேடி வராம என்ன பண்ணுவேன்.... ட்ரெய்னிங் முடிச்சுட்டு திரும்பி வந்துட்டேன்னு ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாமே...." என்றவளின் கண்கள் கண்ணீரில் பளபளக்க, எங்கு அவளது கண்ணீர் தன் மனதிடத்தை உடைத்து விடுமோ என்ற பயத்தில்

"உன் கூட பேசிக்கிட்டு இருக்க நேரமில்ல, எனக்கு நிறைய வேலை இருக்கு...." என்றவனை உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை பார்த்துவிட்டு

" நானும் மதம் மாறி உங்களை கல்யாணம் பண்ணிக்க தயாரா இருக்கேன் ...." என்றவளின் பேச்சைக் கேட்டதும் அவனுக்கு ஐயோ என்றிருக்க,

" இங்க எல்லாத்தையும் பேச முடியாது... நாளைக்கு உன் கூட பேசறேன் ..." என்றவன் பட்டும் படாமல் விடைபெற்றான்.

முஸ்தபா பாய் வீட்டில் பரந்து விரிந்த பெரிய மொட்டைமாடியில், அஜய் தொழுகையை செய்துமுடிக்க ,


" எக்சல்லெண்ட் அஜய், நீ எக்ஸ்பர்ட் ஆயிட்ட, உன்னோட நமாஸ்ல வித்தியாசமே கண்டுபிடிக்க முடியல ...
ஏன்னா இஸ்லாத்தில் சலத்(salah-(Salat)-தொழுகை) நடத்தும் போது ரீஜினல் வேரியேஷன்ல வித்தியாசப்படும்... பக்காவா பாகிஸ்தானீஸ் மாதிரியே இருக்கு ...
எனக்கு தெரிஞ்சதெல்லாம் உனக்கு சொல்லிக் கொடுத்திட்டேன் ...
இன்னும் நீ சுன்னத் பண்ணிக்கணும் ...
அதோட உன் காதுல காது குத்தின தடம் தெரியுது ... பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணி அதை மறைச்சிடு...

மறந்து கூட மராட்டில பேசிடாதே ... பஞ்சாபி, சிந்தி, உருதுல பேசு .... ரொம்ப ஜாக்கிரதையா இரு ... உனக்கு தயிர்சாதம் ரொம்ப பிடிக்கும்னு தெரியும் ... பட் டோன்ட் டச் இட் ...

பாகிஸ்தானீஸ் எல்லாரும் எமோஷனலி, மாரலி, பொலிடிகலி நம்மள மாதிரி திங்க் பண்ண மாட்டாங்க... இந்தியன்ஸ் மாதிரி பொறுமையும் கிடையாது, பெருந்தன்மையும் கிடையாது ...

பாக்கத்தான போற ...அவங்க நடை உடை பாவனை காரு, பங்களானு எல்லாத்துலயும் காட்டற கெத்தை...
அதுவும் நீ மீட் பண்ணப் போற பர்சன்ஸ் எல்லாம் பயங்கர ரிஜிட்.....

என்னால அங்க கிளரிக்கல் வேலை தான் பார்க்க முடிஞ்சது... அது மட்டும் இல்ல என்னோட நிறம் இந்திய நிறம்...
அதனாலயே என்னை பார்த்ததும் ஒருவித சந்தேகம் அவங்களுக்கு வந்திடும் ....

நீ அப்படி இல்ல சும்மா தங்கம் மாதிரி ஜொலிக்கிற... உன் கண்ணுல மட்டும் மெல்லிசா ப்ளூ லென்ஸ் போட்டுக்கோ ...சின்ன சந்தேகம் கூட வராம உன்னால தலைமையை ஈசியா நெருங்க முடியும் ...

எல்லாரும் அந்த தலைமையா 'அபூ'ன்னு சொல்லுவாங்க... அவன் முழு பேரு அபூஅப்துல்லாவா, அபூபக்கரான்னு தெரியல...
அவன் முகத்தையும் இதுவரைக்கும் யாரும் பார்த்தது கிடையாது ... வெறும் கண்ணு மட்டும் தெரியற மாதிரி தான் உடுப்பு உடுத்துவான் ... எனக்கு தெரிஞ்சு அவன்தான் எல்லா தீவிரவாத குழுக்களையும் வழி நடத்தறான்..
அவனை மட்டும் போட்டுட்டா உலக நாட்டுல இருக்கிற பாதி பிரச்சனை குறைஞ்சிடும்....

என்னால அவனை நெருங்க முடியல... நிச்சயம் உன்னால, உன் புத்திசாலித்தனத்தால அவனை நெருங்க முடியும் ....

அவனை என் கையாலயே போடணும்னு தான் எனக்கு ஆசை ...
ஏன்னா என் கண் முன்னாடியே பாகிஸ்தான்ல என் பிரண்ட் கௌசிக்கை துடிக்க துடிக்க வெட்டிக் கொன்னுட்டான் டா... என்னால ஒண்ணுமே பண்ண முடியல ..." என்று கண் கலங்கியவர்

" எங்க குடும்பம் அழிஞ்சதுக்கும் அவன் தான் காரணம்... நவம்பர் 26 2008ல நடந்த மும்பை தீவிரவாத தாக்குதல்ல என் அம்மா, அப்பா, தங்கச்சி எல்லாருமே இறந்து போயிட்டாங்க ... நானும் என் தாத்தாவும் நாசிக்ல இருந்ததால தப்பிச்சோம்... சின்ன வயசிலயே என் தம்பிய ஃபாரின்ல இருக்கிற எங்க சித்தப்பாவுக்கு தத்து கொடுத்ததால அவன் தப்பிச்சிட்டான்... என் அம்மா, அப்பா, தங்கச்சி எல்லாரும் மும்பையில ஒரு கல்யாணத்த அட்டெண்ட் பண்ணிட்டு நவம்பர் 26 2008 மும்பையிலிருந்து நாசிக் வரத்துக்காக சத்ரபதி சிவாஜி டெர்மினஸ்ல ட்ரெயின்காக காத்துக்கிட்டு இருந்தாங்க... திடீர்னு எங்கிருந்தோ வந்த அஜ்மல் கசாப் , இஸ்மாயில் கான்னு ரெண்டு பேரு டெர்மினஸ்குள்ள நுழைஞ்சு கண்ல படறவங்க எல்லாரையும் நாய சுடற மாதிரி சுட்டிருக்காங்க...
ஒரு இடம் ரெண்டு இடம் இல்ல மொத்தம் 12 இடத்துல ஒரே நேரத்துல தொடர் குண்டு வெடிப்பு, துப்பாக்கி சூடு நடந்தது... மும்பையே ரத்தவெள்ளத்துல மிதந்தது . எங்க திரும்பினாலும் மரண ஓலம்... அந்தத் தாக்குதல்ல எங்க குடும்பம் மாதிரி எத்தனையோ குடும்பம் செத்துப்போச்சு ... எங்க பார்த்தாலும் ரத்தம், அழுகை, பொணம் ...
பைத்தியம் பிடிக்கிற மாதிரி ஆயிடுச்சு ... மறுநாள் பேப்பர்ல
'லஷ்கர்-இ-தொய்பா ' என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேத்துக்கிட்டு இருக்குனு நியூஸ் வந்தது .... இந்தியா மாதிரி ஒரு பாதுகாப்பான நாடு எப்படி ஈரான் ஈராக் ஆப்கானிஸ்தான் மாதிரி மாறிடுச்சுனு ரொம்ப வருத்தப்பட்டேன்... அதுக்கப்புறம் நடந்த தீவிரவாதத் தாக்குதலைப் பத்தி செய்திகள தேடினா ஒண்ணுமே பெருசா கிடைக்கல ...

அப்புறம் தான் இந்த தீவிரவாத அமைப்புகளை பத்தி தேடித்தேடி படிக்க ஆரம்பிச்சேன்....

லக்ஷர்-ஈ- தொய்பா ,அல்-காய்தா தாலிபான், அல்-உம்மா, அல் நுஸ்ரா முன்னணினு ஏகப்பட்ட தீவிரவாத அமைப்புகள் .... வேற வேற பேரோட தனித்தனியா செயல்பட்டுகிட்டு இருந்தாலும் ஏதோ ஒரு கண்ணுக்குத்தெரியாத புள்ளில அவங்க எல்லாம் ஒன்னா சேர்ந்து இருக்க மாதிரி ஒரு உணர்வு...

அப்ப காலேஜ் படிச்சுக்கிட்டு இருந்தேன் ஐபிஎஸ் ஆகணுங்கிற கனவோட. அந்த சம்பவம்தான் என் வாழ்க்கையோட டர்னிங் பாயிண்ட் ... இனிமே என்னை மாதிரி யாரும் குடும்பத்தை இழக்க கூடாதுன்னு நெனச்சேன் ... என் தாத்தா வெளிநாட்டுல இருக்கிற என் தம்பிய தவிர எனக்குன்னு அப்ப யாரும் இல்ல...

ஒரு தனி மனிதனா என்ன செய்யமுடியும்னு யோசிச்சேன் முடியும்னு முடிவெடுத்தேன்....
அந்த மும்பை டெரரிஸ்ட் அட்டாக்ல ஏறக்குறைய எல்லா மதத்தை சார்ந்தவர்களும் இறந்து போனாங்க... சோ அவங்களோட நோக்கம் இந்தியர்களை கொல்லனும் இந்தியாவுல இருக்குறவங்களை கொல்லனும்... அவ்ளோதான் ...

நான் எப்பவும் என்னை இந்தியனாதான் முன் நிறுத்திப்பேன்..... ஜாதி மதம் இனம் மொழி எல்லாம் அப்புறம்தான் ... சோ நேஷன் ஃபர்ஸ்ட்னு முடிவு பண்ணேன் ... தீவிரவாதம் எந்த வகையில தலை தூக்கினாலும் வேரோடு அழிக்கப்படணும்...

அவங்க நம்மல இந்தியங்கிற ஒரே காரணத்துக்காக தானே அழிக்கிறாங்க... நான் அவங்கள பாகிஸ்தானின் தீவிரவாத அமைப்புங்கிற ஒரே காரணத்துக்காக அழிக்க களத்துல இறங்கினேன்...

இவனுங்கள போடணுங்கிறதுக்காகவே ரா ஏஜன்ட்டா போகணும்னு முடிவு பண்ணி, ஐபிஎஸ் கிளியர் பண்ணி ரா ஏஜெண்ட்டாவும் போனேன் ....
எனக்கு இந்தியா கொடுத்த எல்லா ஆப்பரேஷனையும் அங்க சுலபமா முடிச்சிட்டேன் , ஆனா அந்த அபூவை மட்டும் என்னால முடிக்க முடியல....

இந்த தடவையும் நானே போகணும்னு தான் ஆசைப்பட்டேன் ... ஆனா என்னை விட நீதான் இந்த வேலைக்கு ரொம்ப பொருத்தம்னு உன்னை தேர்ந்தெடுத்திருக்காங்க ... அதுவும் ஒரு விதத்துல நல்லதுதான் எனக்கும் இப்பதான் கல்யாணமாகி என் மனைவி மாசமா இருக்கா .. " என்று மென்மையாக பேசிக்கொண்டிருந்தவர் திடீரென

" ஷியா,அகமதி,பாகிஸ்தானிய இந்துக்கள்னு இவங்க எல்லாரையும் மாற்றாந்தாய் பார்வையிலதான் அங்க நடத்துவாங்க....
அவங்கள கீழ் மட்டத்துலயே வச்சுக்கணும் ஆசைப்படுவாங்க ... உயர விடமாட்டாங்க......பார்க்க தானே போற... " என்றார் அறிவுரையாக.

" அந்த அபூ ரொம்ப வயசானவனா... என்ன வயசு இருக்கும்..."

" ம்ஹூம்.... உன் வயசுல தான் இருப்பான்னு நினைக்கிறேன் .... குரல் கூட கொஞ்சம் வித்தியாசமா இருக்கும் ... " என்றவர்

" சொல்ல மறந்துட்டேனே, நாளையிலிருந்து உன் சம்பந்தப்பட்ட எல்லா ஐடென்டிட்டியையும் இந்திய அரசாங்கம் டேட்டாபேஸில் இருந்து அழிக்க ஆரம்பிச்சிடும்.... நீ பொறக்கும் போது முனிசிபாலிட்டில கொடுத்த பர்த் சர்டிபிகேட்ல இருந்து உன் ஆதார் கார்டு வரைக்கும் உன் சம்பந்தப்பட்ட எல்லா டாக்குமெண்ட்ஸையும் அழிச்சிடும் .... நீ மாட்டிகிட்டா உலக அளவுல இந்தியாவோட பேர் கெட்டுப் போயிடும் அதனால தான் இந்த ஏற்பாடு....

நீ பாகிஸ்தான் கராச்சில பிறந்து வளர்ந்து படிச்சதற்கான எல்லா டாக்குமெண்ட்ஸையும் தயார் பண்ணிட்டு இருப்பாங்க.... அதுதான் இனிமே உன்னோட ஐடென்டிட்டி ...

உனக்கு தேவையான ஃபண்ட்ஸ்(Fund) சீக்ரெட் சர்வீஸ் ஃபண்ட்ஸ் மூலமா உன்னை வந்து சேரும் ....

நம்ம ஆளுங்க அங்க நிறைய பேர் இருக்காங்க .... எப்ப யாரை உனக்கு அறிமுகப்படுத்தனும்னு நம்ம அரசாங்கம் நினைக்குதோ அப்ப தானா அந்த நபர் வந்து உன்னை சந்திப்பாங்க சரியா..... " என்றவர் பேசி முடிக்கவும்,
மொட்டை மாடி கதவின் பின்புறத்திலிருந்து அக்னி, கதீஜாவின்
கரம் பற்றியபடி எட்டிப்பார்க்க,

எதிர்பாராத அவளின் வரவால், முதலில் லேசாக அதிர்ச்சிக்குள்ளானவன் பிறகு கண்ணில் காதலை தேக்கி ஆச்சரியத்தோடு பார்க்க,

அஜய்யின் முக மாற்றத்தை படித்த முஸ்தபா, சிரித்தபடி,

" ஓ .... இவங்க தான் உன் ஃபயரா.... நீ சொன்ன மாதிரியே உன்னை தேடி வந்துட்டாங்க போல...." என்றதும் அவன் திருட்டு முழி முழிக்க,

" சரி பேசிக்கிட்டு இருங்க... இதோ வந்துடறோம்...." என தன் மனைவியோடு முஸ்தபா வெளியேற,

" என் கிட்ட கடன் வாங்கினத எல்லார்கிட்டயும் சொல்லி இருக்கீங்க போலிருக்கு..." என்றவளை பார்த்து குறும்பாக சிரித்தவன்,

" இப்பவும் சொல்றேன் ட்ரெய்னிங் முடிச்சதும் உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு நான் சொல்லவே இல்ல... நம் நாட்டுக்காக எதிரி நாட்டுல உளவு பார்த்துட்டு, என்னால முடிஞ்ச உதவிய நம்ம நாட்டுக்கு செஞ்சிட்டு தான் கல்யாணம் பண்ணிப்பேன் சொல்லி இருக்கேன் ....

முஸ்தபா பாய் பேசினத கேட்டிருப்பேன்னு நினைக்கிறேன்....

என் வாழ்க்கை நிலை இல்ல அக்னி, ஒரு வேளை நான் திரும்பாமலே போயிட்டா, உனக்கு தான் கஷ்டம் ...
நான் ரெட்ட வாழ்க்கை இல்ல, நாலஞ்சு வாழ்க்கை வாழப் போறவன், என்னோட இந்த தேசத்தை தவிர வேற யாருக்கும் என்னால உண்மையா இருக்க முடியாது ... நான் இருக்கவும் போறதில்ல...
நான் பாகிஸ்தான் போனா அங்க இருக்குறவங்கள நம்ப வைக்க, என் நாட்டுக்கு உளவு பார்க்கிறதுக்காக அங்க ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிகிட்டு நாலஞ்சு குழந்தை பெத்துகுவேன்... அதே மாதிரி
சைனாக்கு போனா அங்க ஒரு கல்யாணம் பண்ணிகிட்டு ரெண்டு குழந்தைகளை பெத்துக்குவேன்... கல்யாணங்கிற பந்தத்துக்கே நான் தகுதி இல்லாதவம்மா... அதனால தான் சொல்றேன்.... "

" ஏன் என்னைப் பிடிக்கலையா ..." என்றாள் கமரிய குரலில் .

"ஓ காட் .... உன்னை அளவுக்கு அதிகமா பிடிச்சதால தான் பிரச்சினையே... என்னை மாதிரியே நினைச்ச விஷயத்துல ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்க.... உன்னை மாதிரி ஒரு கேர்ள் லைஃப் பார்ட்னரா கிடைக்கிறது ரொம்ப கஷ்டம் ... நீ முதல்ல எனக்கு லவ் ப்ரொபோஸ் பண்ணும் போது, ஏதோ சின்ன பொண்ணு கொஞ்ச நாள்ல மறந்துடுவ ...நான் கொஞ்சம் ஹாண்ட்சமா இருக்கேன்னு பின்னாடி வர்றேனு நினைச்சேன்....( ஒற்றைக் கண் சிமிட்டி)
பட் நீ வேறன்னு ப்ரூவ் பண்ணிட்ட...யூ ஆர் அமேசிங் ..." என்றான் அவளை நெருங்கி கண்ணில் காதலோடு.

"நீங்க எந்த நாட்டுக்கு போய், எத்தனை கல்யாணம் பண்ணி, எவ்ளோ குழந்தையை பெத்துகிட்டாலும்,
எனக்கும் உங்களுக்கும் பொறக்கக்கூடிய குழந்தை தான் உங்களோட அசல் வாரிசு அது உடம்புல மட்டும் தான் இந்திய ரத்தம் ஓடும் ... அந்த குழந்தைக்கு தான் உங்களை போலவே தேசபக்தியும் இருக்கும்..." என்றவளைத் தன்னை மறந்து நெருங்கியவன், அவள் இடை பற்றி இழுத்து இதழ் முத்தம் பதிக்க என்னும் போது, ஏதோ ஒரு உள்ளுணர்வு தடுக்க,
அவள் நெற்றியில் ஆழ்ந்த முத்தமிட்டு விடுவித்தான்.

பிறகு காதலியிடமிருந்து பிரியா விடை பெற்று இந்திய அரசாங்கத்தின் 'ஆப்பரேஷன் பிளாக்கை' (Operation black) நிறைவேற்ற பாகிஸ்தானுக்கு பயணமானான்.



தகிப்பாள்
 
அத்தியாயம் 34

பாகிஸ்தானில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்து விட்டு இந்தியா திரும்பிய அஜய்
அக்னியை டெல்லியில் திருமணம் செய்துக்கொண்டான்.

அவர்களது திருமணம் வெகு கோலாகலமாக மராட்டி முறைப்படி நடைபெற்றது.

பின் கொசுவம் வைத்து கட்டிய சிவப்பும் பச்சை நிறமும் கலந்த பைத்தனி 9 கஜ பட்டும், பிறை நிலா போன்ற முத்துக்களாலான 'நத்'( மூக்குத்தி) , நெற்றியில் செந்நிற பிறைநிலா திலகம், கழுத்து நிறைய சந்திரஹாரம், காதில் பின் மாடல் சகிதமாக பெரிய ஜிமிக்கி, கொண்டை பில்லையில் முத்துக்கள் பதியப்பட்டு அதனைச்சுற்றி மல்லிகை பூச்சரத்தை சூடிய நிலையில்
மராட்டிய நங்கையாகவே மங்கையவள் காட்சியளிக்க,
அவளுக்கு பொருத்தமாக மெல்லிய சிவப்பு மற்றும் தங்கநிற ஷெர்வானியில், காவி நிற தலைப்பாகையோடு(மராத்தி ஃபேட்டா) ஆண்மைக்கே உரிய கம்பீரத்தில் மன்னவன் அருகிருக்க ,
திருமணத்திற்கு வந்திருந்தவர்களின் கண்களுக்கு அவர்கள் தேவனும் தேவியுமாய் காட்சிதர , வேள்வியின் முன் ஐயர் மந்திரம் ஓதிய நிலையில்
கருகமணி தாலியை அக்னியின் கழுத்தில் பூட்டி தன்னவள் ஆக்கிக் கொண்டான் அஜய்.

வழக்கம் போல் மங்களேஸ்வரி ஏதோ ஒரு உப்பு பெறாத காரணத்தைக் கூறி திருமணத்திற்கு வர மறுக்க, வேறு வழி இல்லாமல் கண் அறுவை சிகிச்சை செய்துகொண்ட நிலையில் ரகு கிருஷ்ணா தன் செயலாளர் ராஜவர்மனோடு தனி விமானத்தில் பயணித்து,
வெறும் இரண்டு மணி நேரத்தில் துரிதமாக தாய்மாமன் ஸ்தானத்திலிருந்து செய்து முடிக்க வேண்டிய அனைத்து சீர்களையும் செவ்வனே செய்து முடித்து விட்டு கொடைக்கானலுக்கு திரும்பிவிட்டார்.

பிறகு திருமணம் முடிந்த கையோடு, சோபன இரவினை கொண்டாட புதுமண தம்பதிகள் நாசிக்கில் இருக்கும் அஜய்யின் பண்ணை வீட்டிற்கு பயணமானார்கள்.

அஜய்யின் தாயார் சுலபாவிற்கு அக்னியை மிகவும் பிடித்திருந்தது.
வசதி வாய்ப்பில் அக்னியின் குடும்பம் மிகச் சாதாரணமானது என்றாலும், தன் கணவரைப் போலவே அவளது தந்தையும் இந்திய ராணுவத்தில் மேஜராக பணிபுரிந்து கொண்டிருக்கும் போது நடந்த ஒரு தீவிரவாத தாக்குதலில் இந்த தேசத்திற்காக உயிர் துறந்தவர் என்ற ஒரு காரணமே அவருக்கு அக்னியை பிடிக்க போதுமானதாக இருக்க,
பிறகுதான் அவளது அழகு, புத்திசாலித்தனம், திறமை ,தைரியம் எல்லாம் அவர் கண்ணை மட்டுமல்ல கருத்தையும் கவர்ந்த ஒன்றாகி போனது.

அந்த பண்ணை வீட்டில் இருந்த அஜய்யின் பிரம்மாண்ட படுக்கையறை அவர்களது சோபன இரவிற்காக பிரத்யேகமாக தயார் செய்யப்பட்டிக்க,

தன்னவளை தன் கைகளிலேயே அறைக்கு சுமந்து வந்த அஜய், அவள் கண்ணோடு கண் நோக்கி,

" பில்லு... எப்படி போனேனோ அப்படியே வந்துட்டேன் ..." என்று அவள் நெற்றியோடு தன் நெற்றியை முட்டி கூறியவன், அவள் மூக்கு நுனியில் மென்மையாக முத்தமிட்டு அவள் இதழை தன் இதழ் கொண்டு முதன்முறையாய் வசப்படுத்தினான்.

ஓரிரு நொடிகள் தேனாய் கரைய,
அவளை இறக்கி விட்டு விலகியவன்,
பார்வையை மட்டும் அவள் முகத்திலிருந்து விலக்காமல் இரு புருவங்களையும் ஒன்றின் பின் ஒன்றாக உயர்த்தி 'என்ன' என்பது போல் வினவ ,

" நீங்க சொன்னது உண்மையா ..." என்றாள் மங்கையவள் நாணத்தோடு .

" இது உனக்கே தெரிஞ்சிருக்குமே... ஏன் என்கிட்ட கேக்குற ... உன் மனசை தான் எனக்கு கடன் கொடுத்திருக்கியே ... அது சொல்லலையா ..." என்றான் அவளைக் காதலோடு நோக்கி.

அதனை அவள் மெல்லிய புன்னகையோடு ஆமோதிக்க,

" நிறைய அழகான பொண்ணுங்கள கல்யாணம் பண்ணிக்க கேட்டாங்க ... ஏனோ
யார பார்த்தாலும் எதுவுமே தோணல... ஒரு கட்டத்துல என்னை 'கே'னு கூட (Gay)சந்தேகப்பட ஆரம்பிச்சிட்டாங்க பில்லு..."

என்றவனின் குறும்பான பேச்சில், மனம் லயித்து சிரித்தாள் மனையாள்.

" இப்ப உன்னை பார்த்ததும் என்னென்னமோ தோணுதே ..." என்று ஒற்றைக் கண் சிமிட்டியபடி விஷமமாக பார்த்துக்கொண்டே அவள் பூவுடலை பாந்தமாக அள்ளி படுக்கையில் கிடத்தி முழுமையாய் ஆக்கிரமித்தவன்
மழைபோல் தன் நீண்ட நாள் காதலை
மங்கையவள் மனம் குளிர வாரி தெளித்து, அகமும் புறமும் ஆத்மார்த்தமான காதலை அனுபவித்து அவளை முழுவதுமாய் ஆட்கொண்டான்.

இரண்டு நாட்கள் அங்கு தங்கியிருந்து விட்டு டெல்லி திரும்பிய அஜய் அக்னியின் வாழ்வில் தேனும் பாலும் வழிந்தோடியது என்றால் மிகையாகாது.

கோகிலா தன் மகளின் வாழ்க்கை சிறப்பாக அமைந்ததை எண்ணி மனம் நிறைந்து போனார் . அஜய் அக்னிக்கு இடையேயான அந்நியோன்யமும், அமைதியான வாழ்க்கையுமே அவருக்கு நிம்மதியை கொடுத்திருந்தது.

அஜய் அக்னியுடன் கழிக்கப்போவது மிஞ்சிப்போனால் மூன்று மாத காலம் தான், பிறகு அவனுக்கான அழைப்பு இந்திய அரசாங்கத்திடமிருந்து வந்துவிடும் என்று தெரிந்தே தொடங்கிய அவர்களது திருமண வாழ்வில் ஒவ்வொரு நொடியிலும் ஒவ்வொரு கணத்திலும் காதல் பொங்கி வழிந்தது.

அக்னி அலுவலகத்திற்கு விடுப்பு எடுத்து அவனுடன் அதிக நேரம் செலவிட்டாள்.

குழந்தை விஷயத்தில் அஜய்யின் மனம் அறிந்தே மணந்து கொண்டாலும், திருமணத்திற்கு பிறகு அதனை மாற்றும் நடவடிக்கையில் அவள் ஈடுபட மறக்கவில்லை.

ஒருநாள் அது குறித்த சிறு வாக்குவாதத்தில்,

" பில்லு, ஐ அம் கவுண்டிங் மை டேஸ்....
என் வாழ்க்கை நிரந்தரமில்ல... வேற வழி இல்லாம நீ என் மேல வச்சிருக்குற லவ்காக தான் கல்யாணமே பண்ணிக்கிட்டேன் ... அஃப்கோர்ஸ் ஐ லவ் யூ மோர் தேன் தட் ... பட் எனக்கு அப்புறம் உனக்குன்னு ஒரு லைஃப் இருக்கும்மா...
அதை நீ அமைச்சிக்க குழந்தை ஒரு தடையா இருக்க கூடாது ....ப்ளீஸ் .."

" அஜய் ... உங்களுக்கு அப்புறம் நான் உயிர் வாழவே விரும்பல... இதுல வேற ஒரு கல்யாணம் ... நோ வே ...
உங்களுக்கு அப்புறம் எனக்குன்னு இந்த உலகத்துல செய்து முடிக்க எந்த வேலையுமே இல்ல...சோ நானும் உங்க கூடவே வந்துடுவேன் ..." என்றவளின் கமரிய பேச்சில் தன்னைத் தொலைத்தவன், அன்றிலிருந்து முழுவதுமாக அவளிடம் தன்னை தொலைக்க ஆரம்பித்தான்.

வீட்டில் இருக்கும் நேரமெல்லாம், ஏறக்குறைய அவள் துப்பட்டாவை பற்றி கொண்டே சுற்றி திரிவான் ..

அவனுக்கு தென்னிந்திய உணவுகளில் இட்லி சாம்பார் என்றால் உயிர். அதுவும் அக்னியின் கைப்பக்குவத்தில் அதனை ரசித்து ருசித்து உண்பான்.

" பில்லு, இட்லி சாம்பார் எப்படி செய்யறது... "

" ஏன் .."

" பிகாஸ் யூ ஆர் ப்ரிப்பேரிங்
ஆத்தன்டிக் சௌத் இந்தியன் சம்பார்... வெரி டேஸ்டி ..." என்று சப்பு கொட்டிய படி கேட்டவனிடம்
" மோஸ்ட் பவர்ஃபுள் பிரில்லியன்ட் ரா ஏஜென்ட் ... ஆனா இட்லி சாம்பார் வைக்க தெரியலையே ..." என்றாள் அவனது கூறிய நாசியை பிடித்து திருகி.

" அதெல்லாம் ராஸ் ட்ரெயினிங்ல சொல்லிக் கொடுக்கலம்மா..." என்றவன் அவள் இடை பற்றி
இழுத்தணைத்து முத்தமிட்டு முன்னேற,

" இத மட்டும் சொல்லிக் கொடுத்தாங்களா ..." என்றவளின் காதுகளில், அவன் ஏதோ கூற, அதில் பாவையின் முகம் செவ்வானமாய் சிவந்து போனது.

மற்றொரு நாள்

" ஏன் பில்லு, கல்யாணத்துக்கு முன்னாடி எப்பவுமே ஜீன்ஸ் அண்ட் ஸ்கர்ட்ல இருப்ப... இப்ப எல்லாம் எப்ப பார்த்தாலும் சல்வார் அதுவும் கிரீன் கலர் சல்வார் போடறியே ஏன் ..." என்றான் வழக்கம் போல் அவள் துப்பட்டாவை பற்றிக்கொண்டு.

அவன் அவள் மனதில் குடியிருக்கவில்லை, அவளது மனமே அவனுடையது தான்.

திருமணத்திற்கு பிறகு அவள் செய்யும் சுமங்கலி பூஜை, துர்கா பூஜை , சத்தியவான் சாவித்திரி விரதம் என அனைத்துமே பெண்கள் சம்பந்தப்பட்ட பூஜைகளாகவே இருக்க,
அவன் நீண்ட நாட்கள் இப்பூமியில் வாழ வேண்டும் என்பதற்காகத்தான் இந்த முழுநேரப் பிரார்த்தனைகளும் பூஜைகளும் புனஸ்காரங்களும் என அறியாதவனா அவன்.

அவனது வாழ்க்கை நிரந்தரமல்ல என்று தெரிந்தே மணந்து கொண்டாலும், பெண்ணவளின் மனம் மட்டும் தன் மாங்கல்யத்தை காப்பாற்றிக்கொள்ள
இம்மாதிரி பூஜைகளில் ஈடுபடுவதை நிறுத்தவில்லை. அதோடு மராட்டியர்களின் மங்களத்தை பறைசாற்றும் விதமாக பச்சை நிற உடை , பச்சை நிற கண்ணாடி வளையல்கள், கருகமணி தாலி, வகுட்டில் சிந்தூர், தலை நிறைய மல்லிகைப்பூ என்று தன் அலங்காரத்தின் மூலமும் தன் பிரார்த்தனையை தினமும் கடவுளுக்கு முன் வைத்தாள்.

அவளது மனமே அவனாகி போன நிலையில், இவையெல்லாம் அறியாமலா இருப்பான் ... அவள் வாய்விட்டு கூறவில்லை என்றாலும் அவள் ஆழ்மனதின் பயத்தை அவனால் உணர்ந்து கொள்ள முடிய, நேரடியாக அறிவுரை கூற மனமில்லாமல் தான் இப்படி ஒரு கேள்வியை அவன் முன்வைக்க

" நான் எப்பவும் இப்படியே இருக்கணும் ... இதுதான் என்னோட பிரார்த்தனை அஜய் ... " என்றவளின் கண்கள் பனிக்க, அவள் சொல்லாமல் விட்டவைகள் அனைத்தும் அதில் வெட்டவெளிச்சமாக தெரிய, அவன் பிரிவை அவள் தாங்குவது கடினம் என அது சொல்லாமல் சொல்ல,

" ஆபீஸ்ல படு டெரர் ... எம்எல்ஏவுக்கே கல்தா கொடுத்த ஆளு...ஸ்ட்ராங்க் லேடி ... ப்ளா ப்ளா ப்ளானு (Blah..blah..)
பேரெடுத்த என் பில்லுவா இதை எல்லாம் நம்பறா..." என்றான் தன் கமரிய குரலை மறைத்து இயல்பை கூட்டி.

" அது வேற இது வேற அஜய் ... என் மன திருப்திக்கு இதெல்லாம் நான் செய்றேன். ..படிப்பு பதவி எல்லாம் எமோஷன்ஸோட சம்மந்தப்பட்டதில்ல... உள்ளுக்குள்ள பயம் வரும் போது எல்லா சடங்கு சம்பிரதாயத்துலயும் நம்பிக்கை தானா வரும் ..." என்றவளின் கண்கள் கலங்க

" இதெல்லாம் செஞ்சா நான் எவ்ளோ நாள் உயிரோட இருப்பேன் பில்லு ..." அவளை ஆழ்ந்து நோக்கி அவன் கேள்வி எழுப்ப , அதனைக் கேட்க பிடிக்காமல் எம்பி அவன் வாயை பொத்தி குலுங்கி அழுதவள்

" உங்களுக்கு ஒன்னும் ஆகாது ... அப்படியே ஆனாலும் உங்க உடம்புக்கு தான் மரணம்.. உங்க ஆன்மாவுக்கு கிடையாது ... அது எப்பவும் என் கூடவே இருக்கும் .. அதை என்கிட்ட இருந்து யாராலயுமே பிரிக்கவே முடியாது ... உங்க மனசு என்கிட்ட தான் இருக்குது ... உங்க உடம்பு மட்டும் தான் பாகிஸ்தான் போக போகுது ..." என்றபடி கதறித் துடித்து அழுதவளிடம் மேற்கொண்டு பேசினால் எங்கு அழுது விடுவோமோ என்றஞ்சி
அவளை இழுத்து தன்னோடு இறுக தழுவிக் கொண்டான்.

அதிலிருந்து அவர்கள் வெளியே செல்லும் பொழுது கண்ணாடி வளையல்கள் கொண்ட தள்ளு வண்டியை பார்த்தால் போதும், பெரிய மால்களில் கூட கிடைக்காத கண்ணாடி வளையல்கள் அங்கு கிடைக்கும் என்பதால், காரினை நிறுத்திவிட்டு
அவளுக்குப் பிடித்த அடர்பச்சை, பிஸ்தா பச்சை , கிளிப்பச்சை என அனைத்து வகையான பச்சை நிறங்களிலும் வளையல்களை வாங்கிக் கொடுப்பான் அவனுக்கு அதில் நம்பிக்கை இல்லை என்றாலும் அவள் நம்பிக்கையை உடைக்க விரும்பாமல்.

நாட்கள் பஞ்சாய் பறக்க, அவள் விஷயத்தில் அவள் உடலையும் மனதையும் தேற்றுவதைத் தவிர செய்வதற்கு ஒன்றுமில்லை என்று உணர்ந்தவன், அவளுக்கு தற்காப்பு கலை, துப்பாக்கி சுடுதல், அவன் இருந்தாலும் இறந்தாலும் வாழ்க்கையை தனியே எவ்வாறு சமாளிப்பது என்பனவற்றை ஆசிரியராக இருந்து பயிற்றுவித்தான்.

இயல்பிலேயே கற்கும் ஆர்வம் , தைரியம், ஆளுமையை சீதனமாகக் கொண்டவளாதலால், அனைத்தையும்
சிறந்த மாணவியாகவே கற்றுத்தேர்ந்தாள்.

ஒரு நாள் அவளை ஆள் அரவமில்லாத மலையடிவாரத்திற்கு அழைத்துச்சென்று, சுழலும் இலக்கின் மத்தியில் குறிப்பார்த்து துப்பாக்கி சூடு நடத்துவதை அவன் பயிற்றுவித்து கொண்டிருக்கும் போது, தடுமாறியவள் தலையை பிடித்துக்கொண்டு மயக்கம் வருவதாகக் கூறி அவன் மார்பில் முகம் புதைக்க, ஒரு கணம் எதையோ யோசித்தவன்

" வா பில்லு ... போய் டாக்டரை பார்த்துட்டு வந்துடலாம் ..." என்றான் ஆர்வமாக.

" வேணாம் அஜய் ... வெயில் அதிகமா இருக்கிறதால மயக்கம் வர்ற மாதிரி ஆயிடுச்சு ... நவ் ஐ அம் ஓகே .." என்றாள் தண்ணீர் பாட்டிலில் இருந்த தண்ணீரில் முகம் கழுவிவிட்டு கொஞ்சம் பருகி.

அவன் கணக்கிட்டது ஒன்று. ஒருவேளை அது இல்லாமல் போனால், அவள் மனம் நிச்சயம் சஞ்சலம் அடையும் என்பதால், அவன் எண்ணியதை வெளி கூறாமல் மருத்துவரிடம் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றான்.

பரிசோதித்த மருத்துவர், அஜய் எண்ணியதையே கூற மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போனவள்,
சூழ்நிலையை பற்றி சிறு சிந்தனையும் இல்லாமல் மருத்துவரின் முன்பே
அவன் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டாள்.

அவர்களின் இயல்பான அன்பு பரிமாற்றம், கடைசியில் மருத்துவரை தான் வெட்கம் கொள்ள செய்தது.

அக்னியின் ஆசைதான் நிறைவேறியிருந்தது. அதுதான் அஜய் எண்ணியதும் கூட.

ஆம் அக்னி கர்ப்பம் தரித்திருந்தாள்.

குழந்தையே வேண்டாம் என்றிருந்தவனுக்கு, தன் உயிர் தன்னவளிடம் உருவாகியிருக்கும் செய்தி மகிழ்ச்சியில் திளைக்க வைக்க,
முதன்முறையாக தன் பயணத்தை எண்ணி வருத்தம் கொண்டான்.

அன்றைய இரவின் தனிமையில்,

" அஜய், எப்படி கண்டுபிடிச்சீங்க ..." என்றாள் ஆர்வமும் வெட்கமுமாய்.

நீ சொன்னதுதான், உன் உடம்பு மட்டும்தான் தனியா இருக்கு .. உன் ஆன்மா என்னுள்ள தான் இருக்கு ...
அதான் உன் உடம்புல ஏற்பட்ட மாற்றங்கள் உனக்கு புரியறதுக்கு முன்னாடி எனக்கு புரிஞ்சிடுச்சு ..." என்றவனுக்கு இருந்த ஒரே ஆறுதல் இந்த சூழ்நிலையில் அக்னியின் தாய் கோகிலா அவளுடன் இருப்பது தான்.

கர்ப்ப காலத்தில் ஒவ்வொரு மாதமும் மனையாளிடம் தோன்றும் மாற்றங்களை அருகிருந்து பார்க்கும் அதிர்ஷ்டம் இல்லாமல் பிரிந்து செல்லப் போகிறோமே என்றெண்ணி மனதிற்குள் மௌனக் கண்ணீர் வடிக்க ஆரம்பித்தான்.

ஏற்கனவே அவளை இம்மியளவு பிரியாதிருந்தவன், இப்போது அவளை கை வளைவிலேயே கைகுழந்தையாய் பொத்தி பொத்தி வைத்துக்கொண்டான்.

அந்த சந்தோஷம் சரியாக ஒரு வாரம் தான் நிலைத்தது. அவனுக்கான அழைப்பு அரசாங்கத்திடமிருந்து வர, எப்பொழுதுமே உற்சாகமாய்
கிளம்புபவன்
முதன்முறையாக பணிக்குச் செல்வதில்
மனம் ஒட்டாமல் போக, வேறு வழியின்றி எடுத்துக்கொண்ட
கடமையை தாய் நாட்டிற்காக சிறப்பாக செய்து முடிக்க எண்ணி தயாரானான்.

விடிந்தால் அவனது பாகிஸ்தான் பயணம். ஒருவேளை அவன் இந்திய அரசாங்கத்தால் அனுப்பப்பட்ட உளவாளி என்று தெரிய நேர்ந்தால்,
அவன் உயிர் மட்டுமல்ல உடலும் தாயகம் திரும்பாமலே போய்விடும்.

இவை அனைத்தையும் அறிந்து தான் இந்தப் பணியை தேர்வு செய்திருந்தான்.
ஆனால் தற்போதைய திருமண பந்தம்,தனக்கான குடும்பம் , தன் உயிரின் வரவு போன்றவற்றால் அவன் மனம் சலனம் கொள்ள, பணிக்கு செல்லவும் முடியாமல் மனையாளோடு இருக்கவும் முடியாமல் , இருதலைக் கொள்ளி எறும்பாய் துடித்துப் போனான்.

அவள் கைபேசியில் ஒலிப்பதிவை துவக்கி விட்டு,

" இங்க பார் பில்லு... நான் இருந்தாலும் இல்லன்னாலும் நீ வாழனும் ...
நம்ம குழந்தை இந்த உலகத்துக்கு வரும் போது நிச்சயமா உன் கூட நான் இருக்க மாட்டேன் ... ஆனா இந்த உலகத்துல ஏதோ ஒரு மூலையில் உன்னையும் நம் குழந்தையையும் நெனச்சுக்கிட்டு இருப்பேன்...பி பாசிட்டிவ் அண்ட் பி ஸ்ட்ராங்க் மைடியர் ஸ்வீட்டி ... யூ ஆர் அன் அமேசிங் வுமன்..
உன்னால எல்லாத்தையும் சாதிக்க முடியும் நான் உன் மனசிலயே இருப்பேன் ..." என்று அவன் உறுதி கூறியது ஒலிப்பதிவோடு அவள் மனதிலும் கல்வெட்டாய் பதிந்து போனது.

மறுநாள் அவன் கிளம்பும் தருவாயில்
விடாமல் அணைத்துக் கொண்டு கதறி அழுதாள்.

ஆனால் அவளைத் தேற்ற தான் அவனிடம் வார்த்தைகள் இல்லை.

"ஒருவேளை நான் நம்ம குழந்தைய பார்க்காமலே போயிட்டா.... " என தன்னை மறந்து அவன் வார்த்தைகளை விட,

"நீங்க நிச்சயம் திரும்பி வருவீங்க அஜய்... எனக்கு நம்பிக்கை இருக்கு ..
எங்க அம்மா அடிக்கடி என்கிட்ட சொல்லுவாங்க,
உங்க அப்பாவோட வாழ்ந்த வாழ்க்கையை நினைச்சு நான் ரொம்ப பெருமைபடறேன்னு... இப்பதான் நான் அதை என் வாழ்க்கையில உணர்றேன் ...

பாகிஸ்தான் போயிட்டா உங்களால என் கூட பேச முடியாது, என்னை பார்க்க முடியாது, ஆனா நான் உங்களைப் பார்ப்பேன் ..எப்படின்னா நம்ம இந்திய தேசியக்கொடியை பார்க்கும் போதெல்லாம் அதுல இருக்கிற அசோகச் சக்கரத்துல உங்க முகம் தான் எனக்கு தெரியும்...

தேசபக்தியை தெரிஞ்சிக்க நேதாஜி, பகத்சிங்கை படிச்சிருக்கேன்... இப்ப அந்த மாதிரி ஒரு ஆன்மா கூட வாழறதுக்கு ரொம்ப பெருமைபடறேன்... " என்று கண்கள் பனிக்க பேசியவள் அவன் கன்னத்தில் மாறி மாறி முத்தமிட்டு பிரியாவிடை கொடுத்தாள்.

அதன் பின் மாதங்கள் ஆக ஆக தாய்மையின் பூரிப்பு கூடக்கூட தன்னவனை பற்றிய சிந்தனைகளிலேயே மூழ்கிப் போனாள்.

அலுவலகம் சென்று வருவதோடு சரி.
இரவானால் தன்னறையில் , தன்னவன் உடன் இருப்பது போல் , அன்றைய நிகழ்வுகள், அவள் உடல் உபாதைகள்,
குழந்தையின் அசைவு, மருத்துவரின் அறிவுரை என அனைத்தையும்
வாய்விட்டே பேசுவாள் ...

அதேபோல் அவன் பதிவு செய்து விட்டுச் சென்ற பல ஒலிப்பதிவுகளை மீண்டும் மீண்டும் கேட்க கேட்க அவன் உடனான இருப்பை அதிகம் உணர ஆரம்பித்தாள்.

ஒரே ஒரு முறை அவள் தாய்மையின் ஐந்தாம் மாதத்தில் இருக்கும் பொழுது, மூன்றே நிமிடம் அவளை தொடர்புகொண்டு அவசர அவசரமாக உரையாடிவிட்டு, அவளது அப்போதைய புகைப்படத்தை பகிர சொல்லி கேட்டவன் மனையாளின் மேடிட்ட வயிற்றை பார்த்துப் பூரித்துப் போனான்.

வார்த்தைகளால் விவரிக்க முடியாத உணர்வில் சிக்கித்தவித்தவனின் தொண்டை கணக்க, ஒரு கணம் அனைத்தையும் உதறிவிட்டு தன் தாயகம் திரும்பி விடலாமா என்ற எண்ணம் கூட தோன்ற, பிறகு அதிக நேரம் தன் மனதோடு உரையாடி அதனை ஒருமுகப்படுத்துவதற்குள் அவனுக்கு போதும் போதும் என்றாகி போனது .

எப்பொழுதெல்லாம் இந்திய தேசியக்கொடியை பார்க்கின்றாளோ, அதில் தெரியும் அசோகச் சக்கரத்தில் அவள் அஜய் சிரிப்பான். அவனுக்குமே
நம் தேசிய கொடியை மனதில் நினைத்தால் மனையாளின் அன்றைய பேச்சு தான் நினைவுக்கு வரும்.

அவன் ஒரே ஒரு முறை தொடர்பு கொண்ட அந்த ரகசிய எண்ணிற்கு அழைப்பு விடுக்கலாமா என்ற எண்ணம் அவள் மனதில் உதிக்கும் போதெல்லாம், அவனும் அவன் நடவடிக்கைகளும் முற்றிலும் கண்காணிக்கப்படும் நிலையில், இவளுடைய அழைப்பே அவனுக்கு எமனாகிவிட்டால் என்றஞ்சியே மனதினை அடக்கி விடுவாள்.

பிறகு அவள் தாய்மையின் எட்டாவது படி நிலையில் இருக்கும் பொழுது ஒருமுறை அழைப்பு விடுத்து இரண்டு நிமிடம் பேசிவிட்டு அவள் புகைப்படத்தை பகிர சொல்லி கேட்டு, பார்த்து மகிழ்ந்து போனான்.

அதோடு அஷ்வத் பிறந்து பத்தாவது நாள், குழந்தை பிறந்திருக்கும் என்றெண்ணியே தொடர்பு கொண்டு பேசியவனுக்கு, அவன் எதிர்பார்த்த பதில் கிட்ட பூரித்துப் போனான், மைந்தனின் பிறப்பை அறிந்து.

" பில்லு ... எனக்கு கொடுத்த வேலையை ஓரளவுக்கு முடிச்சுட்டேன்.. மாட்டிக்காம உயிரோட இருந்தா எப்படியும் ஒரு வருஷத்துல ஊருக்கு வந்துடுவேன் ...ஒரு வருஷம் கழிச்சி என்னைப் பார்க்கும் போது குழந்தைக்கு அடையாளம் தெரியுமா ..." என்றான் ஆவலோடு.

" நிச்சயமா அஜய் ... உங்களை அறிமுகப்படுத்த வேண்டிய அவசியமே இருக்காது ... என் பார்வை வழியாத்தான் அவன் உங்களைப் பார்த்துகிட்டும் உணர்ந்துகிட்டும் இருக்கானே...." என்றவளின் குரலில் அப்படி ஒரு பூரிப்பு.

அதன்பின் அவனுக்கு கொடுத்த அனைத்து வேலைகளையும் செவ்வனே முடித்துவிட்டு இந்திய அரசாங்கத்தின் அழைப்பிற்காக காத்துக் கொண்டிருந்த நிலையில், ஒரு முறை ஏதோ ஒரு பணிக்காக ஒரு நபரை சந்திக்க சென்றிருந்த போது, அங்கிருந்த துர்கா மாதா கோவிலை எதேச்சையாக அவன் உற்றுநோக்க, அங்கிருந்த சாது போல் காட்சியளித்த நபர் அவனை அழைத்து,

" நீ இந்து , இந்தியன் தானே..." என்றார் தெளிவாக.

" இல்ல, நான் பாகிஸ்தானி முஸ்லிம் கராச்சில பொறந்து வளர்ந்தவன்..." என்றான் அவசரமாக.

" இல்ல, நீ இந்த கோவிலை பார்க்கும் போது உன் கண்ணுல ஒரு லயிப்பு தெரிஞ்சது... தெய்வீகம் தெரிஞ்சது ...
அது இங்க இருக்கும் பாகிஸ்தானீஸ் இந்துக்கள் கண்ணுல கூட தெரியாது ... உண்மையை ஒத்துக்கோ..." என்றவரிடம் அவன் அமைதி காக்க,

" நீ உன் தாய் நாட்டுக்கு சீக்கிரம் திரும்பிப் போய்டு...
நீ இன்னும் இந்த பூமியில வாழ போறது கொஞ்ச நாள்தான் ... இங்க நேரத்தைக் கடத்தாம உன் மனசுக்கு பிடிச்சவங்களோட கொஞ்ச நாளாவது செலவழி போ ..." என்றபடி அவர் முகத்தில் எந்த ஒரு பாவத்தையும் காட்டாமல் , குரலையும் உயர்த்தாமல்,
சொல்ல வேண்டியதை மட்டும் தெளிவாக சொல்லி முடிக்க, மறுநாளே இந்திய அரசாங்கத்திடமிருந்து திரும்பி விடுமாறு செய்தியும் கிட்ட, மனதில் மனையாளையும் மகனையும் சுமந்துகொண்டு தாயகம் திரும்பினான்.


இரவு எட்டு மணி இருக்கும், வீட்டு வாயிலில் அழைப்பு ஒலி கேட்க,

ஏதோ சிந்தனையில், இந்நேரம் யாராக இருக்கும் என்று எண்ணியபடி கதவைத் திறந்தவளுக்கு, அவள் பிராண நாதனின் பிரத்யட்சம் ஆச்சரியத்தை வாரி இறைக்க, கண்கள் பனிக்க, வார்த்தை வராமல் தடுமாற, அப்படியே அவன் முகம் பார்த்தவள் லயித்து நின்றது ஓரிரு நொடிதான், பிறகு தாவி அணைத்து தழுவிக்கொண்டு மனச்சுமை குறையும் வரை அழுது தீர்த்து விட்டாள்.


சற்று நேரத்திற்கெல்லாம் கொலுசொலி சத்தத்துடன் அவன் மழலை, தாயைத் தேடி அங்கு வர,

மனையாள் கர்ப்பம் தரித்த மறுவாரம் பிரிந்து சென்றவன், குழந்தை பிறந்து பத்தாம் மாதம் ஆன நிலையில் தான் வீடு திரும்பும் வாய்ப்பு அமைந்திருக்க, மெதுவாக சுற்றியிருந்த பொருட்களை பற்றிய படி நடந்து வந்து தாயின் காலை கட்டிக்கொண்ட குருத்தை
கண்ணீர் மல்கப் பார்த்தவன்,
வாரியெடுத்து முகமெங்கும் முத்த மழை பொழிந்து முடித்தான்.

இந்திய அரசாங்கம் கொடுத்த பணியை சிறப்பாக செய்து முடித்து விட்டு வந்ததால் அவன் விரும்பிய டெல்லியிலேயே டிஐஜியாக பதவி கொடுத்து நம் தேசம் அழகு பார்க்க,
அதன் பின்பு வந்த நாட்கள், இருவருக்கும் இடையே அன்பு அன்னியோன்யம் ஆசை என அனைத்தும் பல மடங்கு கூடி அவர்களது திருமண வாழ்வை சிறப்புக்குள்ளாக்கியது.

தாம்பத்திய வாழ்க்கையில் எந்த ஒரு குற்ற உணர்வும் இல்லாமல் மனையாளுடன் அனுதினமும் கூடி மகிழ்ந்தான்.

அவனுடைய அலுவலகப் பணி முடிந்தால் போதும், மனையாளை தேடி வீட்டிற்கு ஓடோடி வந்து விடுவான்.
அவனைப்போலவே அவன் மகனும், அவள் துப்பட்டாவை பற்றிக்கொண்டு
எழுந்து நிற்க முயற்சி செய்வதை பார்த்து பூரித்துப் போனவனிடம்,

" பாருங்க, உங்கள மாதிரியே இருக்கான் ....எப்ப பாத்தாலும் என் துப்பட்டாவை பிடிச்சிக்கிட்டே இருக்கணும் இவனுக்கு ..." என்று மனையாள் பெருமை பேச, அதனை மெய் மறந்து ரசித்தான்.

காலா பார்ட்டிகள்(gala) , திருமண நிகழ்ச்சிகள் என அனைத்திலும் மனையாள் மகனோடு கலந்துகொண்டு
அவன் ஆழ் மனதின் நீண்ட நாள் ஏக்கத்தினை பூர்த்தி செய்தான்.

டெல்லியில் அவளுடன் கழித்த கடைசி நாள் இரவின் தனிமையில்,

" பில்லு ... ஒரு டெரரிஸ்ட் அட்டாக்ல என் லெஃப்ட் ஷோல்டர்ல புல்லட் பாஞ்சிடுச்சி... ஒரு மாசம் படுத்த படுக்கையா இருந்தேன் ... முதல்ல டாக்டர் உயிர் பிழைக்கிறதே கஷ்டம்னு சொன்னாரு... எங்க பாகிஸ்தான்லயே செத்து போய்டுவேனோன்னு பயந்தே போய்ட்டேன்... எப்படியோ உடம்பு தேறி
எனக்கு கொடுத்த ஆப்பரேஷனை சரியா செய்து முடிச்சிட்டு இந்தியா திரும்பினதும் தான் நிம்மதியே வந்தது ..
என் கடைசி மூச்சு என் தேசத்துல தான் இருக்கணும்னு ஆசைப்பட்டேன்...இனிமே அது நிறைவேற எந்த தடையும் இல்ல..." என்றவனின் வாயை அவள் பொத்த

" இல்லம்மா, நான் என்ன சொல்ல வர்றேன்னா, இனிமே நான் இந்தியால தானே வொர்க் பண்ண போறேன்.. இன்னும் 60 வருஷம் கழிச்சு நான் செத்துப் போனாலும் நான் கடைசியா சுவாசிக்க போறது இந்திய காற்ற தான் ..." என்றவனுக்கு ஏனோ பாகிஸ்தானில் அந்த சாது கூறியது ஞாபகத்துக்கு வர, அதனை மனையாளிடம் கூறலாமா வேண்டாமா என்றெண்ணி கொண்டிருக்கும் போதே

" அஜய் ப்ளீஸ் இனிமே எந்தவிதமான பிரிவை பத்தியும் பேசாதீங்க... வாழ்க்கையில இப்ப தான் நான் சந்தோஷமா இருக்கேன் ..." என்றவளை தன்னோடு பிணைத்துக் கொண்டவனுக்கு தெரியாது அதுதான் தன் மனையாளுடன் கழிக்கும் கடைசி இரவு என்று.

மறுநாள் அவன் தாயிடமிருந்து அழைப்பு வர, நாசிக் சென்றவன், அவன் ஆசைப்படி கடைசியாக சுவாசித்தது மட்டுமல்ல, மண்ணோடு மண்ணாக கலந்ததும் அவன் நேசித்த பாரத தேசத்தில் தான்.



தகிப்பாள்
 
அத்தியாயம் 34


பாலுக்கு அழும் பிள்ளையாய் காலஞ்சென்றவனை எண்ணி
கதறி அழுபவளை தேற்றும் வழியற்று தவித்து நின்றவனுக்கு ஒன்று மட்டும் தெளிவாய் புரிந்தது, அவன் அக்னி சுக்கு நூறாய் உடைந்து இருக்கிறாள் என்று.


சிறுவயதிலிருந்தே அவன் அக்னியை நன்கு அறிவான். வாய்க்கொள்ளா பேச்சு, இதழ் கொள்ளா சிரிப்பு , எதையும் எளிதில் கிரகித்துக்கொள்ளும் புத்திசாலித்தனம், தைரியம், துடுக்குத்தனம், துருதுரு பார்வையோடு வலம் வந்தவளின் வாழ்வில் அஜய் காலடி எடுத்து வைத்ததிலிருந்து இந்த நிமிடம் வரை அவள் சந்தித்து கொண்டிருப்பதெல்லாம் பிரிவு, துக்கம்,ஏக்கம், ஆற்றாமை, அழுகை மட்டுமே.


அக்னி மீது அர்ஜுனுக்கு இருக்கும் காதல் ஆத்மார்த்தமானது. ஆன்மாவோடு தொடர்புடையது. அஜய் இப்பூவுலகில் எங்கேனும் உயிரோடு மட்டும் இருந்திருந்தால், இவன் உயிரைக்கொடுத்தேனும் அவனை மீட்டிருப்பான்...


ஆனால் காலனோடு காலஞ்சென்றவனை மீட்டுக் கொண்டு வர முடியுமா என்ன ..


வெறும் ஐந்து நிமிடத்திலிருந்து பத்து நிமிடம் வரை மட்டுமே அக்னியோடு உரையாடிய மாதவ் ஆச்சார்யா சொன்னது எவ்வளவு சத்தியமான வார்த்தை என்று அப்பொழுதுதான் அவனுக்கு விளங்க ஆரம்பித்தது.


அக்னி அஜய்யை தேசப்பற்றின் மொத்த உருவாகவே காண்கிறாள்.
இயல்பிலேயே வைராக்கியம், தைரியம், ஆளுமை , தேசப்பற்று நிறைந்தவளிடமிருந்து, அவள் தேசப்பற்றின் உருவாய் காணும் அஜய்யின் நினைவுகளை அழிப்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல.


அவன் சுபாவின் நினைவுகளிலிருந்து சற்று சுலபமாக வெளியேறியதற்கு காரணம், அவள் மரணத்திற்கு காரணமான அனைவரையும் பழி தீர்த்து விட்டான். அதோடு அவள் விட்டுச் சென்ற கடமையான அவள் தங்கை தம்பியை தன் சொந்த மகள் மகனாகவே பார்த்து பார்த்து வளர்க்கின்றான். எனவே அவனைப் பொருத்தமட்டில் அவன் நினைவடுக்குகளில் சுபாவை பற்றிய காயங்கள் ஆறிவிட்டன வடுக்கள் மட்டுமே இருக்கின்றன .


ஆனால் அக்னியின் நிலை முழுக்க முழுக்க வித்தியாசமானது.


அஜய்யின் மரணத்தில் இருக்கும் மர்மத்தை கண்டறிய முடியாத குற்ற உணர்வு , அவன் மரணத்தை தொடர்ந்து மேலும் 4 மர்ம மரணங்கள், அதோடு அவளை துரத்தும் கௌரவ் என்னும் மர்மம், இதில் துருவ் போன்ற கயவர்களின் காம ஆசை இவற்றையெல்லாம் கையில் சிறு குழந்தையுடன் வெறும் அஜய்யின் நினைவுகளை மட்டும் துணையாய் கொண்டு எதிர்த்து போராடி, வைராக்கியத்தோடும் தன்மானத்தோடும் வாழ்ந்து கொண்டிருக்கும் அவனைவிட ஐந்து வயது குறைவான அந்த சிறிய பெண்ணின் முன்பு தன் ஆண்மை, அதிகாரம், அதிரடி ,ஆளுமை அனைத்தும் ஒன்றுமே இல்லை என்றே அந்த ஆறடி ஆண்மகனுக்கு தோன்றியது.


அவளே மறக்க முயன்றாலும், அவள் நினைவடுக்குகளில் இருந்து அஜய்யை பற்றிய காயத்தை ஆறவும் விடாமல், அகலவும் விடாமல் ஒவ்வொரு நிகழ்வும் வெந்த புண்ணில் அல்லவா வெந்நீரைப் பாய்ச்சி கொண்டிருந்திருக்கிறது
என்றெண்ணியபடி அவன் அக்னியை பார்த்த பார்வையில் பாசம், காதல், நேசம் போன்ற உணர்வுகளைத் தாண்டி பிரமிப்பே அதிகமாக இருந்தது.


காதல் கணவரை இழந்து முழுதாய் இருபது நாட்கள் கூட முடியாத நிலையில் நாசிக்கில் நடந்த அந்தக் கசப்பான சம்பவம் அவள் ஆழ் மனதை வெகுவாக பாதித்திருக்க,
பெற்ற தாயிடம் கூட சொல்லாமல் மறைத்திருந்ததை யாருக்கு பயந்து நாசிக்கில் இருந்து தப்பி வந்தாளோ
அவனே கூற, அதுவே அவள் தாய்க்கு எமனாகிப் போனது.


அவள் தாயின் எதிர்பாராத திடீர் மரணம், ஏற்கனவே ஆறாமல் இருந்த புண்ணில் அமிலம் ஊற்ற,அது அவளை மேலும் உன்மத்தம் நிலைக்குத் தள்ள, வாழ்ந்தாக வேண்டிய காலத்தின் கட்டாயத்தால், அனைத்து கசப்பான நிகழ்வினையும் ஆழ் மனதின் ஆழத்தில் குழி தோண்டி புதைத்துவிட்டு நடைப்பிணமாய் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தவளுக்கு எதிர்பாராத
கௌரவின் வரவு அனைத்தையும் நினைவுபடுத்த, அது அவளை முற்றிலும் அசைத்துப் பார்க்க, ஆடிப்போய் விட்டாள் மங்கையவள்.


அவளின் இந்நிலை கண்டு கொதித்துப் போனவனுக்கு
ஒன்று மட்டும் நிச்சயம் தன்னவளை காத்தே ஆக வேண்டும் என்கின்ற லட்சியம் மட்டும் அவன் மனதை முழுவதுமாய் வியாபிக்க , அதற்கு அவள் நினைவில் இருந்து அஜய் பரிபூரணமாக அகற்றப்பட வேண்டும்... அதன் பின் தான் அவன் அக்னி அவனுக்கு மீண்டும் கிட்டுவாள்.... என்ற எண்ணம் தெள்ள தெளிவாக துளிர்தெழ ஆரம்பித்தது .


சற்றுமுன் பயத்தால் உடல் நடுங்கிய நிலையில் தன்னை மறந்து அவனது அணைப்பை ஆதாரமாக பற்றிய படி அழுது கரைந்து கடந்த கால கசடுகளை கக்கியவளின் முகத்தில் தற்போது தெளிவு பிறந்திருக்க , சில கணங்களே ஸ்பரிசித்த அவள் பட்டு சருமத்தின் மென்மை அவனை ஏக்கம் கொள்ள செய்ய, அவளோ வழக்கம்போல் உணர்வற்ற நிலைக்கு திரும்பியிருந்தாள்.


மனம் முழுவதும் காதலோடு காத்து நிற்பவனை விடுத்து, மண்ணோடு மண்ணாக மறைந்து போனவனை எண்ணி துடிப்பவளை பார்த்து அவன் மனம் ஜுவாலையாய் எரிய,


உலகை விட்டு போனவனையே சிந்தித்துக் கொண்டிருக்கிறாயே... உயிரும் உடலுமாக உன்னருகில் இருப்பவனின் உணர்வுகள் உன்னை எட்ட வில்லயா... என அவன் மனம் கேட்டு தவியாய் தவிக்க...


அஜய் இறந்த காலம் , நான் தான் நிகழ் காலம், எதிர்காலம் என்பதை புரிய வைத்தே ஆக வேண்டும், என்றெண்ணி கொண்டிருந்தவனுக்கு காவல் அதிகாரியாக திடீர் யோசனை தோன்ற ,


" அஜய்யோடது ஏதாவது லப்டாப் மொபைல் போன்ஸ் உன்கிட்ட இருக்கா ..."


உடனே அவள் கண்ணில் சிறு மின்னல் எட்டிப்பார்க்க,


" ம்ம்ம், அவரோட லேப்டாப், அவர் பயன்படுத்தின டிரஸ்ஸஸ் எல்லாம் அந்த டிராவல் பேக்ல இருக்கு ... நாசிக் போகும் போது
மூணு செட் மட்டும்தான் எடுத்துட்டு போனாரு... அவரோட லேப்டாப் கம்ப்ளீட்லீ லாக்டு...
எனக்கு பாஸ்வேர்ட் தெரியல ... மே பி ஃபேஸ் ரெகக்னீஷன் யூஸ் பண்ணி இருக்கலாம்... இல்ல தம்பு பிரண்ட் யூஸ் பண்ணி இருக்கலாம் ... எனக்கு அவர் லேப்டாப் ஓபன் பண்ணனுங்கிற எண்ணம் இருக்கு ... ஆனா யாரை நம்பி கொடுக்கிறதுன்னு தெரியல அதனாலதான் பத்திரப்படுத்தி வச்சிருக்கிறேன்... எனக்கு யார் மேலயும் நம்பிக்கை இல்ல அர்ஜுன் ...
உங்களால அதை ஓபன் பண்ண முடியுமா..." என்றவளின் கண்ணில் பளபளத்த பாசத்தை கண்டவன்,


ஓ காட், நிச்சயமா லேப்டாப்புல இவளை பத்தி எதையாவது வச்சிருப்பான்...
இன்னும் நான் மொபைல் நாடகத்தையே முடிக்கல ... இதுல லேப்டாப்பை வேற ஓபன் பண்ணா
முடிஞ்ச் ... என்றெண்ணிவனின் காவல்துறை அறிவு மட்டும் சும்மா இல்லாமல் மீண்டும் தலை தூக்க,


" அஜய்யோட மொபைல்..."


" இல்ல, நாசிக்ல எவ்வளவோ தேடிப் பார்த்துட்டேன்... அது கடைசி வரைக்கும் கிடைக்கல... ஆமா.... என்னோட மொபைல் எப்ப கிடைக்கும் ..." என்ற போது தான் அவன் மனம்


வாயை வச்சுக்கிட்டு சும்மா இரு டா ...
எப்பவுமே காப்பாவே (cop) திங்க் பண்ணாம கொஞ்ச நேரம் காதலனா திங்க் பண்ணு தம்பி... அப்பதான் உன் காதலை காப்பாத்த முடியும் ... என்று அறிவுறுத்திய மாத்திரத்தில்


" அது இன்னும் ரெண்டு நாள்ல சரி பண்ணிக் கொடுத்துடுவாங்க ..."


" அர்ஜுன், எனக்கு வாழ்க்கையில இருக்கிற ஒரே பிடிப்பு அந்த
மொபைல்ல இருக்கிற அஜய்யோட வாய்ஸ் அண்ட் வீடியோஸ் தான்... நான் இருக்க போற கொஞ்ச நாளைக்கு எனக்கு அது வேணும் ..."


உன்னை அப்படிப் போகவிடறதுக்கா டி இத்தனை போராட்டம்... என மனதுக்குள் தொண்டை கணத்து பேசியவன்,


" இப்படி கிராஷ்ஷான ஒரு மொபைலை அவங்க பார்த்ததே இல்லையாம்.. அதனால தான் ரெக்கவர் பண்ண ரொம்ப டஃப்பா இருக்குன்னு சொன்னாங்க ..."


" உங்களுக்கு ஒன்னு தெரியுமா ...என் கூகுள் ஐடி வரைக்கும் காணாம போயிருக்கு ... "


"அப்படியா ..." என்றான் அப்பாவி போல்.


"எனக்கு தெரியும் இது யார் செஞ்ச வேலைனு ..."


" யாரு ..." என்றான் பதட்டத்தோடு.


" என்னை நல்லா தெரிஞ்சவங்க.. என் கூட இருக்கிறவங்க தான் இதை செஞ்சிருக்காங்க ..."


ஐய்யய்யோ கண்டுபிடிச்சிட்டாளா ... மாட்டின டா மகனே ...


" யாரை நீ சஸ்பெக்ட் பண்ற ..." என்றான் முகத்தை அப்பாவியாக வைத்து, கபடத்தை மறைத்து .


" உங்களுக்கு தெரியாது அவன் பேரு துருவ்... என்னோட ஆபீஸ்ல வொர்க் பண்றான் ... அவன் தான் இப்படி செஞ்சிருக்கணும் ... முன்னெல்லாம் ரொம்ப தொல்லை கொடுத்துக்கிட்டு இருந்தான்... இப்ப கொஞ்ச நாளா என் பக்கமே வர்றதில்ல... அப்பவே சந்தேகப்பட்டேன்... இப்ப தான் புரியுது ... இது அவனோட வேலைதான்னு ..."


" ஓ....." என்ற நிம்மதிப் பெருமூச்சு விட்டவனுக்கு தெரியாது,
அஜய்யின் லேப்டாப் தான், அவன் தேடிக் கொண்டிருக்கும் மாபெரும் ரகசியத்தை பூதம் காப்பது போல் காத்துக்கொண்டிருப்பது.


" நான் முன்ன மாதிரி இருந்தா அவனை அடி அடி அடினு அடிச்சிருப்பேன்... இப்ப கொஞ்சம் வீக்கா இருக்கேனா அதனாலதான் அவனை அடிக்கல ..." என்றவளின் முகத்தில் குழந்தைகளின் கோபம் கொப்பளிக்க,


" அப்படியா நீயா வீக்கா இருக்க ... நான் தான் வீக்கா இருக்கேன்னு டாக்டர் சொன்னாரு... எங்க பார்ப்போம்..கிட்ட வா ..."


" நீங்களா வீக்கா இருக்கீங்க ..." என்றவள் கண்களை ஆச்சரியத்தில் அகல விரிக்க, அருகில் நின்றிருந்தவளின் கரம்பற்றி இழுத்து
அவள் கையோடு தன் கையை பிணைத்து,


"இப்ப யாரு ஜெயிக்கிறான்னு பார்ப்போம் ...." என்றவன் உண்மையாகவே தோற்றுக் கொண்டிருந்தான் அவள் மென்மையான ஸ்பரிசத்தில்.


" பாருங்க ஐ வன் தி கேம் ..." என்று அவள் பெருமை பேச,


" அதான் சொன்னேனே ... ஐ அம் வீக்... யூ ஆர் ஸ்ட்ராங்க் ..." என்றவனின் கண்ணில் குறும்பு கூத்தாட,


" யு சீட்டர் (cheater)பாய் ..." என்றவள் பொங்கி சிரிக்க


அவளது காயம் புறத்தில் அல்ல அகத்தில். ஆதலால் கண்ணாடிப் பாத்திரத்தைக் கையாளுவது போல்
கையாண்டு, அவளுக்கே தெரியாமல்
அவள் மனதை ஆக்கிரமித்து, அவள் வாழ்விற்கு அவன் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தியே தீரவேண்டும் என்று அவளைப் பார்த்தபடி மானசீகமாக சங்கல்பம் செய்து கொண்டான் மன்னவன்.

பிறகு லேப்டாப் மற்றும் மொபைல் போன் பற்றிய பேச்சில் இருந்து தப்பினால் போதும் என்ற எண்ணத்தில் அதை அறவே தவிர்த்தவனுக்கு, ஏனோ விஷ்ணுவின் நினைவு வர,


இந்நேரம் அவன் இங்கிருந்தா என்ன பேசியிருப்பான்...


'அண்ணிகிட்ட பேசினதுக்கப்புறம் அதிகபட்ச ஆயுளோட இருக்கிற ஒரே ஆள் நீதான் அண்ணாத்தை ....' என்றவனின் கிண்டலான குரல் மன குரலாக ஒலிக்க,


சற்று நேரம் உள்ளுக்குள் அதை ரசித்து சிரித்தவனிடம்,


" அர்ஜுன் நான் உங்க ரூம்ல தூங்கட்டுமா .." என்ற எதிர்பாராத கேள்வியில் ஆடி போனான்.


ஏற்கனவே உன் விஷயத்துல ஆன்ட்டி ஹீரோவா உள்ளடி வேலை செஞ்சுக்கிட்டு இருக்கேன் ... நீ என்னை வில்லனா மாத்தாம விட மாட்ட போல இருக்கே ...


" என் ரூம்ல இருக்கிற திவான் சரி இல்ல உன்னால நிம்மதியா தூங்க முடியாது ..." என்றவன் தட்டிக்கழிக்க


" சரி நான் திவான்ல தூங்கல... உங்க காட்லயே(Cot) தூங்குறேன் ..."


ஐய்யய்யோ சோதிக்கிறாளே...


" என் காட்ல உனக்கு இடம் பத்தாது ஏற்கனவே நானும் அஷ்வத்தும் தூங்கறோமில்ல...'


" நான் அஷ்வத் பக்கத்துல கொஞ்சமா ஒட்டி படுத்துகிறேனே ... அஷ்வத்தும் இப்பெல்லாம் என்கூட தூங்குகிறதில்ல, இன்னைக்கு ஏதோ ஒரு இனம் புரியாத பயம் ...அதனால தனியா தூங்க பயமா இருக்கு ..."


" ம்ம்ம்ம்..." என மென்மையாக மொழிந்தவனிடம் ,


" பெட்ரூம் டோரை லாக் பண்ணிடுங்க..." என்றவளை அவன் வித்யாசமாக பார்க்க,


" எனக்கு பயமா இருக்கு யாரோ உள்ள வந்துடுவாங்களோனு தோணுது..." என்றவளின் பதிலில்


திருட்டு பூனை டா நீ ... உன் புத்தி நேராவே யோசிக்காதே... என அவன் மனம் அவன் தலையில் கொட்ட, அவள் கூறியபடி செய்துவிட்டு அவன் படுக்கைக்கு வரும் போது,


தாயின் ஸ்பரிசத்தில் ஒட்டிக்கொண்டு அவள் கரம்பற்றிபடி அஷ்வத் உறங்கியிருக்க,


கரம் பற்றி உறங்க பயிற்றுவித்திருப்பாள் போலும் ....
என்றெண்ணிவனுக்கு இத்தனை நாட்களாக கிட்டிய குழந்தையின்
ஸ்பரிசம் பறி போன வருத்தம் அளித்தாலும், அவன் வாழ்க்கையில் அவன் ஆசைப்பட்ட இரவாக அது அமைந்தது.


நீண்ட நாள் மனக்குமுறல்களை வெளி கொட்டியதாளோ என்னவோ
தன்னை மறந்து ஆழ்ந்த உறக்கத்தை மேற்கொண்டவளுக்கு அதிகாலையிலேயே விழிப்பு ஏற்பட,
அவளுக்கு முன்பே உறக்கம் கலைந்தவன் உடற்பயிற்சி அறையில் வியர்வை சொட்ட சொட்ட வேலை செய்து கொண்டிருந்தான்.


" அர்ஜுன் வாக்கிங் போலாம் வர்றீங்களா ..." என்றாள் பளீர் என்ற நீல நிற ஜாகிங் உடையில்.


அது அவள் உடலில் கச்சிதமாக பொருந்தி, அங்க லாவண்யங்களை அழகாக காட்ட, அணுவணுவாக ரசித்தவன்


" இத முடிச்சுட்டு வந்துடுறேன் ..." .


பத்து நிமிடம் கழித்து அவளோடு நடைப்பயிற்சி மேற்கொண்டவன்


" நேத்தே கேட்கணும்னு நினைச்சேன் ...கௌரவ் உன்கிட்ட டெல்லில பேசும்போது எதுக்கு அஷ்வத் வேணும்னு கேட்டான்..."


" அதுதான் எனக்கும் புரியல ... நான் வைன் யார்டையே அவனுக்கு எழுதிக் கொடுக்கிறேன்னு சொன்னதை கூட காதுல வாங்காம, எனக்கு நீயும் அஷ்வத்தும் வேணும், நாம கல்யாணம் பண்ணிக்கலாம்னு ஏன் கேட்டான்னு புரியல....."


" உன்னை எதுக்கு கேட்டானு எனக்கு தெரியும், அஷ்வத்தை ஏன் கேட்டான்னு தான் புரியல ..." என குறும்பாக கூறியவனை அவள் புரியாமல் பார்க்க,


" நீ எவ்ளோ அழகா இருக்க தெரியுமா ... .." என்றான் தானே பதில் அளித்து.


இத்தனை நாட்களாக இரும்பாய் இறுகிப்போயிருந்தவளுக்கு, ஏனோ அதனைக் கேட்டதும் முகம் அந்திவானமாய் சிவக்க,
அதற்கு மேல் இருவரும் பேசிக்கொள்ளாமல் நடைப்பயிற்சி முடித்துவிட்டு தங்கள் அலுவலகங்களுக்கு கிளம்பினர்.


அப்போது ரெஸ்டாரன்ட் ஊழியரிடமிருந்து அர்ஜுனின் கைப்பேசிக்கு சிசிடிவி ஃபுடேஜ் வர,
திறந்து பார்த்தவன் அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றான்.


கௌரவை பற்றி அக்னி கூறிய தகவல்களால் மட்டுமே அறிந்திருந்தவனுக்கு, காணொளியில் அவன் முகம் பார்த்ததும் தான், அஜய் இறப்பின் போது அவன் வேக வேகமாக பணியாற்றியது நினைவுக்கு வர
உடனே அந்த காணொளியை விஷ்ணுவிற்கு பகிர,


" அர்ஜுன், அண்ணி சொல்லி உனக்கு இவனை தெரியும் ... ஆனா அவனுக்கு எப்படி உன்னை தெரியும் ... நீ ரெஸ்டாரன்ட்குள்ள வந்ததைப் பார்த்ததும் அவன் ஏன் 'எஸ்' ஆனான் ..."


" வெரி சிம்பிள், நான் அஜய் மாதிரியே இருக்கேனில்ல அதான் ..."


" ஓ....அதை நான் மறந்தே போயிட்டேன் ... ஆனா அஜய் டெத்துக்கு நீ போயிருந்த இல்ல, அப்ப அங்க யாருக்குமே நீ அஜய் மாதிரியே இருக்கேன்னு தோணவே இல்லையா..."


" நான் தான் சொன்னேன் இல்ல, எனக்கு அப்ப ஆக்சிடென்ட் ஆயிடுச்சுனு... 15 நாள் ஹாஸ்பிடல்ல இருந்து, வலது பக்கம் முகம் மொத்தம் வீங்கி போய், ஏறக்குறைய நெத்தி, கண்ணெல்லாம் பிளாஸ்டரோட , ஹேர் கட், ஷேவ் எதுவுமே பண்ணாம எனக்கே என்னை அடையாளம் தெரியாத மாதிரி தான் இருந்தேன் ... அதனால அவங்களால என்னை சரியா பார்த்திருக்க முடியாது..அது இல்லாம அப்ப சூழ்நிலையும் சரி இல்ல .."


" இவனை கூடிய சீக்கிரம் கண்டுபிடிச்சு உள்ள வச்சு லாடம் கட்டினா, எல்லா விஷயத்தையும் கக்கிடுவான்னு தோணுது அர்ஜுன் ..."


" இவன் மேல எந்த கேசும் இல்லாததால இவனை நேரடியா தேடவும் முடியாது அரஸ்ட் பண்ணவும் முடியாது .... ஐ ஹொவ் டு ப்ரிபேர் எ சீக்ரெட் டீம் டு தட் ..." என்றான் வன்மத்தோடு அர்ஜுன்.


" அர்ஜுன் ஒன்னு கவனிச்சியா .... ரெஸ்டாரன்ட்ல அண்ணிக்கு உன்னை பார்த்ததும் தான் உயிரே வந்துச்சு போல, ஓடி வந்து உன் கைய பிடிச்சு கிட்டாங்க ..." என்றவன் சந்தோஷத்தில் கூற,


" இல்லடா ... நீ அந்த சிசிடிவி ஃபுட்டேஜை சரியா பாக்கலன்னு நினைக்கிறேன்... அவ அந்த கௌரவை பார்த்த உடனே எனக்கு போன் பண்ணல, 10 நிமிஷம் போன் பண்ணலாமா வேணாமானு யோசிச்சு தான் கடைசில செஞ்சிருக்கா...


அவளுக்கு என் மேல நம்பிக்கையும் இல்ல இன்னும் காதலும் வரல ... இங்க என்னைத் தவிர வேற யாரையும் அவளுக்கு தெரியாது ,அதனால அப்படி நடந்துகிட்டா... ஃபாரின்ல நம்ம ஊரு ஆளுங்களை பார்த்தா தானா போய் இன்டரடியூஸ் பண்ணிக்கிட்டு பேசுவோமில்ல அந்த மாதிரியான உணர்வு அது ... அவ்ளோதான் டா... "


" இல்ல சீனியர், உன்கிட்ட கௌரவ பத்தி அவங்க சொன்னதில்ல... இல்லையா ... அதனால உன்னை எப்படி கூப்பிடுறதுன்னு யோசிச்சிருப்பாங்க... கடைசில ரெஸ்டாரன்ட் மூட கொஞ்ச நேரம் தான் இருக்குன்னு தெரிஞ்சதும்,
உன்னை கூப்பிட்டிருக்காங்க..." என்றான் அக்னியின் அன்றைய மனோநிலையை சரியாக அனுமானித்து.


" நீ சொல்ற படியும் இருக்கலாம் ..ஆனா ஒவ்வொரு முறையும் அவ அஜய்காக அழும் போது என் மனசு நெருப்பா எரியும் டா...


நான் அவளோட புருஷங்கிற உறவும் புரியல .... நான் அவளை ஆத்மார்த்தமா லவ் பண்றேங்கிற உணர்வும் தெரியல .... அவ சேஷாத்ரி மேம் கிட்ட சொன்ன மாதிரி இன்னும் அவ மனசுல நான் கசினா தான் இருக்கேன், எப்ப கணவனாவேன்னு தெரியல...


கடவுள், காதல், காற்று இந்த
மூணுத்தையும் ஒருத்தர் தன்னால உணரனும்..
யாரும் சொல்லி புரிய வைக்க முடியாது ... அப்படி புரிய வச்சா அது நல்லாவும் இருக்காது...நிலைக்கவும் நிலைக்காது ...


அஜய் ரொம்ப நல்லவன், ஆனா என்னால அக்னியோட மனசை ஜெயிக்க முடியலன்னும் போது அவன் எனக்கு வில்லனாவே தெரியறான் டா...


உடம்புல இருக்கிற காயத்தை ரொம்ப சீக்கிரம் மருந்திட்டு ஆத்திடலாம்...
ஆனா மனக்காயம், அது ஆற மாச கணக்காகும்... ஏன் வருஷங்கள் கூட ஆகலாம் ....என்னால அக்னியை புரிஞ்சிக்க முடியுது ...சுபா விஷயத்துல, ஒரு காலத்துல நான் இருந்த நிலைமையில தான் இப்ப அவ இருக்கா ... நான் ட்ரீட்மென்ட் எடுத்துக் கொஞ்சம் கொஞ்சமா அதிலிருந்து வெளிய வந்துட்டேன் ...இப்ப அக்னியும் ட்ரீட்மென்ட்ல தான் இருக்கா...காலமும் நிச்சயமா அவ மன காயத்தை ஆத்தும்னு நம்பறேன்..." என்றவன் ஒரு நொடி நிறுத்திவிட்டு


" ஏதேதோ பேசி போர் அடிச்சுட்டேன்னு நினைக்கிறேன் ..." என்று தன் உணர்வுகளை கொட்டியதை எண்ணி குற்ற உணர்வை வெளிப்படுத்த,


" இல்ல அர்ஜுன், அண்ணிய நீ ரொம்ப சரியா புரிஞ்சுகிட்டு இருக்க ... கூடிய சீக்கிரம் உன் வாழ்க்கை ரொம்ப நல்லா இருக்கும் ...அண்ணி ரொம்ப நல்லவங்க ..." என்று உணர்வுபூர்வமாக மட்டும் பேசி பேச்சை முடித்திருந்தால் அவன் விஷ்ணு அல்லவே ,


" சேஷாத்ரி மேடம் கிட்ட அண்ணி உன்னை ஹவுஸ் மேட்னு சொன்னது கொஞ்சம் வருத்தமா தான் இருந்தது... ஆனா அன்னைக்கு அண்ணியோட ஆபீஸ்க்கு போயிருந்தோமில்ல, உன்னை பார்த்ததும் ரொம்ப சந்தோசபட்டங்க ...
நீ அவங்களை தேடி வருவேன்னு எதிர்பார்க்கலன்னு ரெண்டு தடவை சொன்னாங்க ... அப்பதான் ஒண்ணு தெளிவா புரிஞ்சது..." என்றவன் நிறுத்த, உடனே அர்ஜுன் ஆவலாக


" என்னடா புரிஞ்சுது... சொல்லுடா..." என்றான் கல்லூரி பருவத்து இளைஞன் போல் ஆசையாய்.


" நீ ஹவுஸ் மேட்டிலிருந்து ரூம் மேட்டா கூடிய சீக்கிரம் ப்ரமோட் ஆயிடுவேன்னு புரிஞ்சது..."


" அட ச்சீ ... போனை வைடா ..."


" போன் பண்ணது நீ அர்ஜுன், வை ஃபோனை..." என்று கெத்தாக கூறி சிரித்தபடி அழைப்பை துண்டித்தான் விஷ்ணு.


அழைப்பை துண்டித்ததும், தனக்குத் தானே ,
நேத்து ஒரு நாள் ரூம் மேட்டா தான் இருந்தேன் ...இதே நிலைமை தொடருமா தொடராதுன்னு கடவுள் தான் சொல்லணும் ... என வாய்விட்டு தன்னை மறந்து பேசி சிரித்தான் அர்ஜுன்.


அவன் அறியாததும் ஒன்று இருக்கவே செய்தது. அஜய்யின் மறைவிற்குப் பிறகு அர்ஜுனிடம் இருந்து முற்றிலுமாக விலகி இருந்தவள்,


கடந்த 10 நாட்களாக தான் முன்பு போல் அவனுடன் தோழமை பாராட்ட ஆரம்பித்திருந்தாள்.
ஆனால் நேற்றைய தினம் அவன் அணைப்பில் இருந்த படி, மனச் சுமைகளை கூறி கண்ணீர் வடித்த போது தான் அவளே அறியாமல் அவள் மனதில் அவன் காதலனாக பதவி உயர்வு பெற்றுவிட்டான் என்பதுதான் அது.


அஜய்யின் மறைவிற்குப் பிறகு, மற்றவர்களிடமிருந்து விலகி ஒருவித இறுக்கத்துடனேயே வலம் வந்தவள், உடைந்து அழுதது அவள் தாய், அதன்பின் அர்ஜுனிடம் மட்டுமே.


யாரும் யாரிடமும் சிரித்துப் பேசலாம், பழகலாம் ஆனால்
மனதிற்கு மிக நெருக்கமானவர்களுடன் மட்டும் தான் உள் உணர்வுகளை வெளிப்படுத்த முடியும் என அவளும் உணரவில்லை, அதனால்தான் தன்னிடம் பகிர்ந்திருக்கிறாள் என அவனும் உணரவில்லை.


தன்னுள் காதல் துளிர்க்க ஆரம்பித்திருப்பதை அவளும் உணராமல், அதை உணரும் போது , அவனுக்கு உணர்த்த தெரியாமல் அவள் திண்டாட போவதும் , அவள் மாற்றங்களைக் கண்டு அவன் தடுமாற போவதும் தான் இனி விதி நடத்த போகும் நாடகம் போலும்.


மறுநாள் இரவு கைப்பேசி நாடகத்தை கச்சிதமாக முடிவுக்கு கொண்டுவர எண்ணியவன், அவள் உணவு உண்டு முடிக்கும் வரை காத்திருந்தான்.


பிறகு அவனுக்கு அழைப்பு வந்தது போல் பாசாங்கு செய்தபடி, லானில் பத்து நிமிடம் இடவலமாக கைப்பேசியோடு வலம் வந்தவன்,
அவளைப் பின் தொடர்ந்து மேல் தளத்தின் பால்கனியை அடைந்ததும்,


" அக்னி...."


" சொல்லுங்க அர்ஜுன் ..." என்றாள் அவன் முகம் பார்த்து ஆவலோடு.


அவள் முகத்தில் தெரிந்த சாந்தம், எதிர்பார்ப்பு, மெல்லிய புன்னகை எல்லாம் சற்று நேரத்தில் மறையப் போகிறது என்றெண்ணும் போது அவன் மனம் கலங்கினாலும்,


கோ அஹெட் அர்ஜுன் வேற வழியே இல்ல .... என அவன் மனம் வழிநடத்த,


" கிட்ட வா .... " என்று வாஞ்சையாக அழைத்தவன் , அவள் அருகே வந்ததும் நிலவொளியில், அவள் கண்களை ஆழ்ந்து நோக்கியபடி


" நீ ரொம்ப ஸ்ட்ராங் இல்ல ... "


" அப்படின்னா ..."


" மெண்டலி சொன்ன ம்மா..."


" ஓ.... ஆமா ..." என்றாள் பெருமையாக.


" நம்ம வாழ்க்கையில எது நடந்தாலும் அது நம்ம நல்லதுக்கு தான் ...


அதுக்காக வாழ்க்கையில நடக்கிறது எல்லாம் நல்லதாக நடக்கும்னு சொல்லல ... ஆனா நடக்குறதுல நிச்சயமா ஏதோ ஒரு நல்லது இருக்கும் ... அதுக்கு பேரு தான் பாசிட்டிவிட்டி...." என்றவனின் திடீர் தத்துவப் பேச்சு புரியாமல் அவள் விழிக்க,


" உனக்கு அஜய்யை எவ்ளோ பிடிக்கும் ..."


" ரொம்ப ரொம்ப பிடிக்கும் ..." என்ற பதில் அவனுக்கு உவப்பாகவே இல்லை ,
அதனை முகத்தில் காட்டாது, தொடர்ந்தவன்


" அஷ்வத்தை எவ்ளோ பிடிக்கும் ...."


" ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் ... ஏன் குழந்தைங்க கிட்ட கேக்குற மாதிரி கேள்வி கேட்டுக்கிட்டு இருக்கீங்க..."


" சோ, அஜய் பாஸ்ட் ஒத்துகிறயா ... அஷ்வத் தான் உன்னோட பிரசெண்ட் அண்ட் ஃப்யூச்சர் கரெக்ட் ..."


" எஸ் ...." என புரியாத பார்வையிலேயே அவள் ஆமோதித்து வைக்க,


" நான் அன்னைக்கு சொன்ன மாதிரி,
எனக்கு நீங்க ரெண்டு பேருமே வேணும் ...
அஷ்வத்துக்கு நாம ரெண்டு பேருமே வேணும் சரியா... "


" ம்ம்ம்...."


" நாம ரெண்டு பேரும் அஷ்வத்துக்காக வாழ்ந்தாகணும்... அதனால எல்லா விஷயத்தையும் போல்டா ஃபேஸ் பண்ணியாகணும் சரியா ..." என்றவனின் பீடிக்கை சரியாக வேலை செய்து, ஏதோ ஒன்று தவறுதலாக நடந்திருக்கிறது, அதைத்தான் தன்னிடம் கூறப் போகின்றான் என்ற எதிர்பார்ப்போடு கூடிய மனதிடம் சற்றே அவளிடம் தோன்ற ஆரம்பித்திருக்க,


" சொல்லுங்க அர்ஜுன், எதுவா இருந்தாலும் பரவால்ல ... " என்ற பதிலுக்காகவே காத்து இருந்தது போல்,


" இப்பதான் போன் வந்தது சைபர் செக்யூரிட்டில இருந்து, உன் மொபைல அவங்களால ரெக்கவர் பண்ண முடியலயாம் ... எவ்ளோ ட்ரை பண்ணாங்களாம்... அந்த மொபைலை ரெக்கவர் மட்டுமில்ல இனிமே யூஸே பண்ண முடியாதுன்னு சொல்லிட்டாங்க..." என்றான் உள்ளுக்குள் பயந்தபடி, இயல்பான முகத்தோடு.


அதனைக் கேட்டவளின் முகத்தில் அப்படி ஒரு அதிர்ச்சி....
ஆனால் அன்று போல் கதறி அழவில்லை, மாறாக கண்களில் கண்ணீர் கரைபுரண்டோடியது ....


அர்ஜுனின் திட்டமிட்ட முயற்சியால்,
அஜய்யின் குரல் கேட்காமல் கிட்டத்தட்ட பத்து நாட்களுக்கு மேலாக அவள் வாழப் பழகிக் கொண்டதோடு, உடன் அர்ஜுனின் நட்பும், அக்கறையும் அவளிடம் பழைய நிமிர்வை விதைத்திருந்ததால் அன்றைய கலக்கம் இப்போது இல்லாமல் போக


" என் வாழ்க்கையில நான் ஆசைப்பட்டது எதுவுமே கிடைச்சதில்ல... அப்படியே கிடைச்சாலும் அது நெலைச்சது இல்ல.... என் விதியோட போராடிப் போராடி நான் டயர்டாயிட்டேன் அர்ஜுன் ...


எப்பவாது தோக்கறவங்களுக்கு தான் வருத்தம் வரணும் ... எப்பவுமே தோத்து போற எனக்கு அதெல்லாம் வரவே கூடாது .... நான் பழகிக்கணும் ... இட்ஸ் ஓகே அர்ஜுன் ...பாய் குட் நைட் .." என்றபடி தன் அறை நோக்கி சென்றவளின் விரக்தி பேச்சு அவன் மனதைப் பிசைய ,


தான் உறங்கிய பிறகு, அவள் ஏதாவது செய்து கொண்டால், என்ற எண்ணம் துளிர்த்ததும், அவன் உடம்பில் அவனை அறியாமலேயே ஒரு விரைப்புத்தன்மை
ஏற்பட, உடனே அவள் கரம் பற்றி இழுத்து தன்னோடு நிறுத்தியவன்,


" அக்னி, உனக்கு என் லைஃப்ல நடந்தது தெரியுமில்ல ... எனக்குன்னு யாரும் கிடையாது ... உங்க ரெண்டு பேரால தான் கொஞ்ச நாளா நிம்மதியா இருக்கேம்மா ... " என்றவனின் குரல் உடைந்து கண்கலங்க,


அவன் கண் கலங்கியதற்கான காரணங்களில் ஒன்று குற்ற உணர்வு, மற்றொன்று அவளை இழந்து விடக்கூடாதே என்கின்ற ஆதங்கம், ஆனால் அவள் புரிந்து கொண்டது
சுபாவை நினைத்து கலங்குகிறான் போலும், என்றெண்ணிவளுக்கு ஏனோ சிறுவலி தோன்றி மறைய, அதற்கான காரணம் அறியாதவள்,


" நம்ப ரெண்டு பேரோட வாழ்க்கையை நினைச்சு சிரிக்கிறதா அழறதான்னு தெரியல.... சரி குட்நைட் ..." என மீண்டும் விலகி நடக்க முயன்றவளிடம்


" ஒரு நிமிஷம், இன்னைக்கும் நீ என் ரூம்ல தூங்குறயா, எனக்கு தனியா தூங்க கொஞ்சம் பயமா இருக்கு ..." என்றவனின் பேச்சு, சற்றுமுன் அவள் பார்வையில் இருந்த அழுகையை கலைந்து ஆச்சரியத்தைக் கூட்ட,


" ஏய் ...அர்ஜுன்... வாட்ஸ் திஸ் ..." என்றாள் நம்பமுடியாமல் கிண்டலாக.


" ஏன் உனக்கு மட்டும் தான் பயம் வருமா எனக்கு வராதா ..." என குறும்பாக கேட்டவன்


" கம் லெட்ஸ் கோ அண்ட் ஸ்லீப் ..." என அவன் முன் செல்ல, அவளும் காரணம் தெரியாத லேசான மன நிலையில் அவனை பின்தொடர, கதவை அடைத்து தாழிட்டவன், அவன் அறையை ஒரு முறை சுற்றிப் பார்த்துவிட்டு, நிம்மதி பெருமூச்சை விட்டபடி


" குட்நைட்..." என்றான் சிரித்த முகத்தோடு.


உறங்கச் சென்றவளுக்கு உறக்கம் வராமல், ஏனோ அவன் கண் கலங்கியது அவள் மனக்கண்ணில் மீண்டும் மீண்டும் அலைமோத,
தனக்கு அஜய்யின் நினைவுகள் போல் அவனுக்கு சுபாவின் நினைவுகள் போலும், அவளை மறக்க முடியாமல் தவிக்கிறான் என்றெண்ணியவளுக்கு
கைபேசி சம்பந்தமான கவலைகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு இன்னதென்று பிரித்தறிய முடியாத புதுவிதமான உணர்வு தோன்றி அலைக்கழிக்க ஆரம்பித்திருந்தது.


கௌரவை பற்றி அறிந்ததிலிருந்து அவனை ரகசியமாக தேடும் பணியில் அர்ஜுன் ஈடுபட்டதோடு அக்னி மற்றும் அஷ்வத்திற்கு மிகுந்த பாதுகாப்புடன் அலுவலகம் மற்றும் டே கேர் சென்று வர ஏற்பாடும் செய்திருந்தான்.


இந்நிலையில் ஒருநாள், அர்ஜுனும் , அஷ்வத்தும் எங்கோ வெளியே சென்றுவிட்டு வீடு திரும்ப, லானில் அமர்ந்துகொண்டு தன் மடிக்கணினியில் எதையோ
படித்துக் கொண்டிருந்தவள், அவர்கள் இருவரையும் கண்டு ஆச்சரியத்தில்
தன்னை மறந்து எழுந்து நின்றாள்.


இருவரின் சிகையும் ஒரே மாதிரி வெட்டப்பட்டிருந்ததோடு, அவர்களது உடையும் ஒரே வண்ணத்தில் அமைந்திருப்பதைக் கண்டு அசந்து போனவளுக்கு, மின்னல் போல் இத்தனை நாட்கள் தோன்றாத சிந்தனை ஒன்று பளீரென்று தோன்றியது.


அஜய்க்கு அர்ஜுனுக்கும் உருவ ஒற்றுமைகள் பெரும்பாலும் பொருந்தி இருப்பது தெரிந்த ஒன்றுதான் என்றாலும், அஷ்வத் நிறத்தைத் தவிர மெல்லிய
பூனைக்கண், கன்னக்குழி என அனைத்திலும் கிட்டத்தட்ட 99%
அர்ஜுனோடு பொருந்தி இருப்பது
அப்போதுதான் அவளுக்கு உறைக்க,


" ரெண்டு பேரும் ஒரே மாதிரி ஹேர்கட் ஒரே மாதிரி டிரஸ்... என்ன இது ..." என ஆச்சரியத்தோடு அவள் வினவ


" என்னை மாதிரியே போலீஸ் ஹேர் கட் பண்ணிக்கனும்னு சொன்னான் அதனாலதான்... நானும் அவனும் ஒரே சலூன்ல பண்ணிக்கிட்டு வந்தோம்.." என்றவன் இயல்பாக


" என்ன புது மாதிரியா ஸ்மல் வருது ..." என்றான் யோசனையாக.


" காலையில ஆபீஸ்க்கு போகும் போதே அஷ்வத் ரசம் வேணும்னு கேட்டான்... அவனுக்கு ரசம் ரொம்ப பிடிக்கும்.. அதான் இப்ப தக்காளி ரசம் வச்சேன்..."


" எனக்கும் பிடிக்கும் வா சாப்பிடலாம் ..."
என்றவன் கூறும் போது தான் அவன் சிறுவயது ஞாபகம் அவளுக்கு வர


" வாங்க .." என்று அழைத்துச் சென்று சாதம், தக்காளி ரசம், உருளைக்கிழங்கு பொரியல் வகையறாக்களை பரிமாறியது தான் தாமதம், இருவரும் சாப்பிடுவதற்கு மட்டும் வாயை திறந்தோடு கண்ணும் கருத்துமாக சாப்பிட்டு முடிக்க, அதனை ஒரு வித திருப்தியோடு பார்த்துக் கொண்டிருந்தவளிடம்


" அன்னபூரணி அம்மா ரசம் வெச்சா இப்படித்தான் இருக்கும்..." என்றவன் பாராட்டி விட்டு கைகழுவ செல்ல, உடன்
உண்டு முடித்த அஷ்வத் உறங்கப் போவதாக கூறிவிட்டு சென்றதும்,


" தேங்க்ஸ், ரொம்ப நாள் கழிச்சு,
இன்னைக்கு தான் திருப்தியா சாப்பிட்டேன் ..." என்றவனை நோக்கியவளின் பார்வை இலக்கில்லாமல் ஏதோ கனவுலகில் சஞ்சரிப்பது போல் மயக்கத்தில் மிதக்க,
அவன் இரு பக்க தோள் மீது கை வைத்து ஆசையாக அவள் நெருங்க,
அவள் கண்ணில் தெரிந்த காதலில் காளையானவன் கட்டுண்டு தன்னை மறந்த நிலையில் திடீரென்று மின்னல் போல் மருத்துவர் கூறியது அவன் நினைவில் ஒளிர,


இந்த நெருக்கமும் காதலும் அவனுக்கானது அல்ல. அவள் கடைசியாகப் பார்த்த அஜய்யின் சிகை அலங்காரத்தில் அவன் இருப்பதால், உருவ ஒற்றுமை மேலும் ஒத்துப்போக,
முன்பெல்லாம் இவன் முகத்தையே ஏறெடுத்துப் பார்க்காதவள், கடந்த சில நாட்களாக உற்று நோக்குவதால் ஏற்பட்ட மாறுதல் தான் இது என்று நொடியில் கணித்தவன், அவளது பார்வையும் நெருக்கமும் அவனை கிறங்டித்தாலும் அதனைப் புறம்தள்ளி,


" அக்னி, என்ன ..." என்று அவள் கன்னத்தில் லேசாக தட்ட,
சுயம் உணர்ந்தவளின் முகம் அளவுக்கதிகமாக செம்மையுற, விருட்டென்று விலகியவள்


" சாரி ...." என்று மொழிந்து விட்டு
வேகநடை விட்டு தன் அறைக்கு சென்று மறைந்தாள்.


**************************************
விஷ்ணு ஸ்ரீயிடம் பேசி அவளது மாதவிலக்கான நாட்களைத் தெரிந்து கொண்டு, மருத்துவரை அணுகி
பாதுகாப்பான தினங்களை கண்டறியும்
முறையை அறிந்து, அவரது அறிவுரைக்கு ஏற்ப திருமண நாளை அவனே முடிவு செய்து, ரங்கநாதனிடம் கூற, எதார்த்தமாக அவன் தேர்ந்தெடுத்த இரண்டு தினங்களில் ஒன்று முகூர்த்த தினமாக அமைந்து போக, அந்த தேதியையே ரங்கநாதன் வெங்கடேஷ் - வேதாவிடம் தான் ஜோசியரை அணுகி திருமணத் தேதியை குறித்து வந்ததாக கூற,
அனைவருக்கும் அந்த தேதி ஒத்து போக
திருமண நாள் முடிவு செய்யப்பட்டு பத்திரிகை அடிக்க கொடுக்கப்பட்டது.


இரு குடும்பமும் இணைந்து திருமணத்திற்கு புத்தாடைகள் வாங்க கடைக்குச் சென்ற போது கூட
சுமித்ரா, வேதா , ஸ்ரீ , ஸ்ரீனி ஏன் ஸ்ரீராம் கூட ஒருவித மன மகிழ்ச்சியோடு உடைகளை தேர்ந்தெடுப்பதில் ஆர்வம் காட்டிய நிலையில், விஷ்ணு தன் உடைகளோடு ஸ்ரீக்கு புடவைகள், புது விதமான ஆடைகள் , அணிமணிகள் என அனைத்தையும் பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தாலும் அவன் முகத்தில் சதா ஒரு சிந்தனை ரேகை ஓடிக்கொண்டிருப்பதை வெங்கடேஷால் உணர்ந்துகொள்ள முடிந்தது .


அதேபோல் ரங்கநாதன் முகமும் ஒருவித பதட்டம், பரபரப்பு, சோகம் என தனித்தனியே விவரிக்க முடியாத வித்தியாசமான உணர்வுகளின் கலவையாக காட்சியளிப்பதை கண்டுகொண்ட வெங்கடேஷின் காவல்துறை கண்களுக்கு
ஏதோ சரியில்லை என்று உணர
இப்போது அதை மனைவியிடம் கூட பகிர வேண்டாம் என முடிவெடுத்து மௌனமானார்.


பிறகு மூன்று நாட்கள் கழித்து, ஒரு மாலை வேளையில் அர்ஜுனிடம் வீட்டு முகவரியை தெரிந்து கொண்டு அவன் இல்லம் வந்த விஷ்ணு,


" அண்ணி, எனக்கு கல்யாணம் ஃபிக்ஸ் ஆயிருக்கு.... வர்ற ஜனவரி மாசம் கல்யாணம் ... நீங்க மூணு பேரும் அவசியம் வரணும் ... ஆனா கல்யாணம் இங்க இல்ல, ஸ்ரீவில்லிபுத்தூர் தமிழ்நாடு ... கல்யாண பத்திரிகைய அப்புறம் கொடுக்கிறேன் " என்றவன் அர்ஜுனை பார்த்து


" சீனியர் இங்க வாங்க, நீங்களும் அண்ணியும் வர டிசம்பர் தர்ட்டி ஃபர்ஸ்ட் நைட் நியூ இயர் செலிபரேட் பண்ண ஸ்ரீ வீட்டுக்கு வரீங்க ..." என்றவனின் அழைப்பை ஒருவித தடுமாற்றத்தோடு மறுக்காமல் ஏற்றவள்


" யாரு ஸ்ரீ ..." என்றதும் ,கண்ணில் காதல் மின்ன


" நான் கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு அண்ணி, என் மாமா பொண்ணு தான் ..."


" ஏன் நியூ இயர வீட்டுல தான் செலிபரேட் பண்ணுவீங்களா, பப்ஸ் ஹோட்டல்ஸ் போக மாட்டீங்களா..."


" யூஷ்வலாவே , நாங்க நியூ இயர வெளியில போய் செலிபரேட் பண்ண மாட்டோம் ஏன்னா அம்மாக்கு பிடிக்காது... இப்ப அன்னைக்கு நைட் 11 ஓ க்ளாக் மேல கோவிட்காக கர்பியூ வேற ஸ்டார்ட் ஆகுது... சோ நோ வே... நானும் அப்பாவும் ஊர்ல இருந்தோம்னா நிச்சயமா அன்னைக்கு நைட் அம்மா பூஜை பண்ணுவாங்க அப்புறம் எல்லாரும் அந்தாக்ஷரி, சீட்டு விளையாடறது, லுடோ ...அப்டின்னு ரொம்ப ஜாலியா இருப்போம் ..."


" உங்க அம்மான்னா உனக்கு பயமா..."


" பயம் ...எல்லாம் இல்ல ... ஒரு மரியாதை ..."


" உங்க அப்பா ..."


" அவருக்கு பயம் தான்..." என்றதை கேட்டு குலுங்கி சிரித்தவள்


" ஏன் உங்க அம்மா ரொம்ப கோவப்படுவாங்களா...."


" ச்சே, ச்சே... ஜோவியல் டைப் தான் ... எனக்கு தெரிஞ்சு என் அம்மாவும் அப்பாவும் ஒருத்தரோட ஒருத்தர் சண்டை போட்டு நான் பார்த்ததே கிடையாது ....
ரெண்டு பேரும் லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டவங்க ... இப்ப வரைக்கும் லவ்வர்ஸ் மாதிரி தான் இருப்பாங்க ...
அவங்க ரெண்டு பேர் மேலயும் எனக்கு ஒரு தனி மரியாதையே உண்டு ... அவங்க என்னோட அப்பா அம்மாங்கிறத்துக்காக இல்ல, அவங்க ரெண்டு பேரும் ஒருத்தர் மேல ஒருத்தர் வச்சிருக்க லவ் , ட்ரஸ்ட் அவங்க ரிலேஷன்ஷிப்ப அழகா மெயின்டெய்ன் பண்ற விதம் இது எல்லாம் தான் காரணம் ...
அதனால தான் என் அப்பா எப்பவுமே எனக்கு ஹீரோ...."


" வாவ் இன்ட்ரஸ்டிங் ...அந்தக் காலத்துல லவ் மேரேஜ்ன்னா ரொம்ப பிரச்சினை ஆயிருக்கும் இல்ல ..."


" அதை ஏன் கேக்குறீங்க அண்ணி... பேப்பர்ல எல்லாம் வந்து பெரிய பிரச்சனை ஆயிடுச்சாம்..."


" கல்யாணத்துக்கு யார் வீட்ல ஒத்துக்கல, உங்க அம்மா வீட்லயா..... இல்ல உங்க அப்பா வீட்லயா..." என்றாள் வெகு ஆர்வமாக.


" அண்ணி அங்குதான் ட்விஸ்டே... ரெண்டு பேரோட அப்பாவும் அதாவது என் ரெண்டு தாத்தாவும் ஃபிரண்ட்ஸ்... எங்க அம்மா ஐயங்கார், எங்க அப்பா தேவர் ....
பெரியவங்க ரெண்டு பேருமே கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டாங்களாம் .... அப்ப இருந்த சொசைட்டியும், ஒருசில பொலிட்டிக்கல் பார்ட்டியும் ரொம்ப பிரச்சனை பண்ணினதா சொல்லுவாங்க..."


" வெரி இன்ட்ரஸ்டிங் ... அப்ப நிஜமாவே உங்க அப்பா ஹீரோன்னு சொல்லு ...."


" எங்க அப்பாவை விட, சரியான நேரத்துல சரியான முடிவெடுத்த என் தாத்தா தான் ஹீரோ அண்ணி ...அது ஒரு பெரிய கதை ... இப்ப சொன்னா உங்களுக்கு புரியாது ....நீங்க ஸ்ரீவில்லிபுத்தூர் வாங்க நான் சொல்றேன் .... இப்ப கூட அந்த ஊர்ல எங்க அப்பா அம்மாவோட கல்யாணம் நடந்த கதை எல்லாருக்கும் தெரியும் ... ஊருக்கு போனா விசாரிப்பாங்க ..." என விஷ்ணு பெருமிதமாக பேசிக்கொண்டிருக்க


நீண்ட நாட்களுக்கு பிறகு தன் கூட்டை விட்டு வெளியே வந்து, கதைத்துக் கொண்டிருந்தவள்


" சரி கல்யாணம் எப்போ ... ஷாப்பிங் எல்லாம் முடிச்சாச்சா ..." என கேட்டு அவள் பேச்சை தொடர


தன்னவளின் வெகு இயல்பான பேச்சு அர்ஜுனை ஆச்சரியத்தில் ஆழ்த்த,


" முன்னாடியே ஷாப்பிங் எல்லாம் முடிச்சாச்சு அண்ணி ... கல்யாண பத்திரிக்கையும் ப்ரிண்ட் பண்ண கொடுத்தாச்சு ... ஏன்னா அம்மா ரொம்ப ஆர்தொடாக்ஸ் மார்கழி மாசம் எதுவும் செய்ய மாட்டங்க... மேரேஜ் ஜனவரி 29 ...ஸ்ரீவில்லிபுத்தூர்ல எங்க பாரம்பரிய வீட்டுல... கட்டாயமா நீங்களும் அண்ணனும் மூணு நாள் லீவு போட்டுட்டு எங்களோட வரிங்க சரியா ..." என்றவன் அதற்கு மேல் அஷ்வத் உடன் சிறிது நேரம் விளையாடிவிட்டு, அக்னி தயார் செய்த தேநீரை பருகி விடைபெற்றான்.


நீண்ட நாளைக்குப் பிறகு அவள் முகம் மற்றும் பேச்சில் ஒருவித இறுக்கம் தளர்ந்திருப்பதை உணர்ந்தவன்,


" அக்னி, ஸ்ரீ வீட்டுக்கு போலாமில்ல..." என புன்னகையோடு கேட்டவனிடம்


" நிச்சயமா அர்ஜுன், அன்னைக்கு ரெஸ்டாரென்ட்ல கௌரவை பார்த்து நான் பயந்து கூப்பிட்டதும் ஓடி வந்து விஷ்ணு ஹெல்ப் பண்ணினதை என்னால மறக்கவே முடியாது ... எனக்கு ஒரு பிரதர் இருந்திருந்தா இப்படி தான் கூப்பிட்ட வேகத்துல ஓடோடி வந்து ஹெல்ப் பண்ணி இருப்பான்னு அப்ப தான் ஃபீல் பண்ணேன் .... " என்றவளின் கண்களில் நீண்ட நாட்களுக்குப் பிறகு
அப்படி ஒரு உயிர்ப்பு.



தகிப்பாள்
 
அத்தியாயம் 36

பிறகு வந்த நாட்களில், அர்ஜுனின் பணிச்சுமை அதிகரித்தாலும் , சிசிடிவி பதிவிலிருந்து கௌரவின் புகைப்படத்தை தன் ரகசிய குழுவிற்கு அனுப்பி அவனை தேடும் பணியை மட்டும் நிறுத்தவேயில்லை.

விசாரித்துப் பார்த்ததில் அஜய்யின் தாய் சுலபாவின் மறைவிற்கு பிறகு 'சுலபா வைன் யார்ட்'
பாட்டீயாவிற்கு கை மாறியதும்,
காணாமல் போனவன் போனவன் தானாம். இன்று வரை நாசிக்கில் அவனது நடமாட்டம் இல்லை என்ற செய்தி தான் அர்ஜுனை எட்டியது.

அஜய்யின் தாய் இறந்ததற்கு பிறகு காணாமல் போனவன், கிட்டத்தட்ட மூன்று மாதத்திற்கு முன்புதான் அக்னியை டெல்லியில் சந்தித்திருக்கிறான். அதன்பின் அக்னி மும்பையில் வசிப்பதை எப்படியோ தெரிந்து கொண்டு அவளை பின் தொடர்ந்து அன்று ரெஸ்டாரன்ட் வந்திருக்கிறான்.

ஏன் அஜய்யின் தாய் மறைவிற்குப் பிறகு அவன் டெல்லியில் சென்று அக்னியை சந்திக்கவில்லை.அதாவது
இடைப்பட்ட இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் எங்கு சென்றிருந்தான் ... ஏன் இப்போது
மூன்று மாதத்திற்கு முன்பிலிருந்து அக்னியை மோப்பம் பிடிக்கின்றான்..

வைன் யார்டை அவன் பெயரிலேயே எழுதி வைத்து விடுகிறேன் என்று அக்னி கூறியும், அதனைப் பொருட்படுத்தாமல் அவளும் அஷ்த்தும் வேண்டும் , திருமணம் செய்து கொள்ளலாம் என்று கெஞ்சியதற்கு காரணம் என்ன ....
என்பன போன்ற கேள்விகள் அர்ஜுனின் மனக்கண்முன் வரிசையாய் வந்து குவிய,
பதில் தேடி தீவிர சிந்தனையில் ஈடுபட்டு கொண்டிருந்தவனுக்கு, மின்னல் வேகத்தில் யோசனை ஒன்று வந்து விழுந்தது.

அதாவது அக்னி கூறிய அனைத்தையும் மீண்டும் ஒரு முறை அசைபோட்டுப் பார்த்தவனுக்கு, வைன் யார்ட் சம்பந்தப்பட்ட ஒரே ஒரு கதாபாத்திரம் இன்னமும் உயிரோடு இருக்கிறது ஆனால் அது இருட்டடிப்பு செய்யப் பட்டிருக்கிறதோ என்ற எண்ணம் தோன்றியது.

அது வேறு யாருமல்ல, பாட்டீயாவின் மகன் ஆகாஷ் பாட்டீயா தான். தந்தை இறந்த செய்தி எட்டியதும் அன்றே பிரைவேட் ஜெட் விமானத்தில் நாசிக்கிற்கு பயணித்ததோடு, அன்றே ஈமச்சடங்கையும் முடித்து விட்டு லண்டன் திரும்பியது தான் அந்தக் கதாபாத்திரத்தின் மீது சிறு நெருடல் ஏற்படுத்த , உடனே அக்னியை தொடர்பு கொண்டு வைன் யார்ட் செக்ரேட்டரியிடமிருந்து ஆகாஷ்
பாட்டீயாவின் கைபேசி எண்ணை பெற்று அழைப்பு விடுத்தான்.

ஆகாஷ் பாட்டீயாவின் செக்ரேட்டரி, நுனி நாக்கு ஆங்கிலத்தில், அழகாக அர்ஜுனை பற்றிய தகவல்களை சேகரித்துக்கொண்டு,

" சார், இன்னும் 20 டேஸ்க்கு பாஸ்ஸோட அப்பாயிண்ட்மெண்ட் ஃபுல். அவரோட அப்பாயிண்ட்மெண்ட் டேட் அண்ட் டைமிங்க உங்க கான்டக்ட் நம்பர்க்கு மெசேஜ் பண்றேன் அன்னைக்கு நீங்க அவரோட பேசலாம் ..."

" மேம்... உங்க பாஸ் கிட்ட அக்னி, சிஇஓ அண்ட் பிரசிடெண்ட் ஆஃப் சுலபா வைன் யார்ட் அண்ட் டிரஸ்ட் , பேசணும்னு சொன்னாங்கனு சொல்லுங்க ...
அப்புறம் அவர் முடிவு எடுக்கட்டும் .." என்றான் தன் காவல்துறை அறிவை சரியாக பயன்படுத்தி.

அடுத்த பத்தாவது நிமிடம் , சுவற்றில் அடித்த பந்து போல் ஆகாஷ் அர்ஜுனின் இணைப்பிற்கு வந்து

" ஹலோ அக்னி ஹவ் ஆர் யூ .." என்றான் உற்சாகமாய்.

" ஹலோ ..." என்ற அர்ஜுனின் அமர்த்தலான குரல் , அவன் உற்சாகத்தை வடிய செய்ய

" திஸ் இஸ் ஆகாஷ் பாட்டீயா ... மே ஐ நோ ஹூ இஸ் ஆன் த லைன் .." என்றான் அப்போதுதான் பிரைவேட் எண்ணிலிருந்து அழைப்பு வந்திருப்பதைப் பார்த்து .

" அர்ஜுன் கிருஷ்ணா, எஸ்.பி ஆஃப் ஸ்டேட் இன்டெலிஜென்ஸ் டிபார்ட்மென்ட், மும்பை ..." என்றதும் எதிர்முனையில் மயான அமைதி.

அரைநொடிக்குப் பிறகு,

" ஹவ் கன் ஐ ஹெல்ப் யூ சார்..." என்றான் பணிவை கூட்டி பதற்றத்தை மறைத்து .

" ஐ ஹேவ் சம் க்வரீஸ்.. கேன் யூ
கோ-ஆப்பரேட் வித் மீ ..." என்பதை காதில் வாங்காதது போல்,

" ஹொவ் டு யு நோ அக்னி .." என ஏறக்குறைய அதிர்ச்சியோடு ஆகாஷ் எதிர்க் கேள்வி எழுப்ப ,

" ஷீ ஈஸ் மை வைஃப் ..." என்று அர்ஜுன் பதிலளித்த மாத்திரத்தில் எதிர்முனையில் ஏதோ உடைந்தது போன்ற பலத்த சத்தம் கேட்க, இந்த முறை ஓரிரு நொடிக்கு பிறகே தொடர்பில் வந்தவன்

" அக்னிக்கும் உங்களுக்கும் எப்ப கல்யாணம் ஆச்சு ..." என்றான் வெகு சிரமப்பட்டு அதிர்ச்சியை மறைத்து.

" த்ரீ மந்த்ஸ் பிஃபோர் ..." என்றதும் மீண்டும் ஓரிரு நொடி அமைதி நிலவ,

" கேன் வி டாக் நவ் ...." என காரியத்தில் கண்ணாக அர்ஜுன் கேள்வி எழுப்ப,
எதிர்முனையில் குரலை செருமிய படி சுதாரித்த ஆகாஷ்,

" கோ அ ஹேட் சார்...." என்றான் லேசான பவ்யத்துடன்.

" உங்கப்பா மிஸ்டர் ஆதித்ய பாட்டீயா இறந்த நியூஸை உங்களுக்கு முதல்ல யார் சொன்னது ..."

" ட்ரஸ்ட் செக்ரேட்டரி தான் போன் பண்ணி சொன்னாரு....அப்புறம் எங்க கம்பெனியோட மேனேஜர் சொன்னாரு..."

" உங்க அப்பா திடீர்னு இறந்தது அதிர்ச்சியா இல்லையா, அவர் மரணத்துல உங்களுக்கு டவுட் வரலையா..."

" அதிர்ச்சியா இருந்தது ...ஆனா, அவரோட டெத் ஏறக்குறைய எதிர்பார்த்த ஒன்னுதான்... ஏற்கனவே இரண்டு முறை சிவியர் அட்டாக் வந்து ஹாஸ்பிடல்ல சேர்ந்து உயிர் பொழைக்கிறதே கஷ்டங்கிற நிலைமைக்கு போய் திரும்பி வந்தவரு... நானும் பல தடவை சொல்லிட்டேன் ... என் கூடவே லண்டன்லயே இருங்கனு... ஆனா அவரு தான் என் பேச்சை கேக்கல..."

" அவர் நாசிக்கில் தங்கினதுக்கும், சுலபா வைன் யார்டை லீஸ்க்கு எடுத்ததுக்கும் எனி பர்ட்டிகுலர் ரீசன்...." என்றான் அர்ஜுன் இடைவெட்டி.

"நாசிக் என்னோட ஹோம் டவுன்... எங்களுக்கு ஜாம் ,ஃப்ரூட் ஜூஸ் தயாரிக்கிற
' பாட்டீயா ப்ராடக்ட்ஸ் லிமிட்டட் ' ங்கிற கம்பெனி அங்க இருக்கு ... என் அப்பாவுக்கு லண்டன்ல இருக்க பிடிக்கல... நம்ப கம்பெனியை பார்த்துகிட்டு கடைசி காலத்த சொந்த ஊரான
நாசிக்லயே கழிச்சிடறேன்னு சொல்லிட்டுதான் அங்க போனாரு... அங்க போய் மூணு மாசத்துல இறந்து போய்ட்டாரு...."

" அவர் ஹார்ட் அட்டாக்ல இறந்ததா யார் உறுதிப்படுத்தினாங்க..."

" நாசிக்ல எங்க ஃபேமிலி டாக்டர் இருக்காரு ... அப்பாவுக்கு சிவியர் அட்டாக் வந்து தூக்கத்துலயே உயிர் பிரிஞ்சிட்டதா அவர்தான் சர்ட்டிஃபை பண்ணாரு ... எங்களுக்கு உறவுக்காரங்கனு யாரும் இல்ல... எனக்கும் அவர் டெத்ல சந்தேகம் இல்லாததால அன்னைக்கே தகனத்தை முடிச்சிட்டு நான் லண்டன் திரும்பிட்டேன்..." என்றவனின் பேச்சு முழுதாக நம்பவும் முடியாமல் நம்பாமல் இருக்கவும் முடியாமல் இருக்க, உடனே லண்டனில்
பாட்டீயாவிற்கு இரண்டு முறை மாரடைப்பு வந்தபோது சேர்க்கப்பட்ட மருத்துவமனை பற்றிய விவரத்தை அர்ஜுன் கேட்க, எந்த வித தங்கு தடையுமின்றி, அந்த புகழ்பெற்ற மருத்துவமனை பற்றிய தகவல்களை பகிர்ந்தவன்,

" எதுக்காக இத்தனை வருஷம் கழிச்சு, திடீர்னு என் அப்பா டிமைஸ்ல(demise) உங்களுக்கு டவுட் ..."

" அப்புறம் சொல்றேன் ... ஒரு முக்கியமான இன்வெஸ்டிகேஷன் போய்கிட்டு இருக்கு ..."

" சார் , எனக்கு ஒரு இம்போர்ட்டண்ட் மீட்டிங் இருக்கு , கேன் ஐ மேக் அ மூவ்..." என்றவன் உடனே நினைவு வந்தவனாய்
"அக்னி எப்படி இருக்காங்க ..." என்றான் இல்லாத இயல்பைக் கூட்டி.

" ஷி ஈஸ் பைஃன்...."

" கேட்டதா சொல்லுங்க ..." என்று அழைப்பை துண்டித்தவனின் குரலில்
இன்னதென்று பிரித்தறிய முடியாத கலவையான உணர்வு இருந்தது போல் ஒரு பிரம்மை தோன்ற, உடனே அவன் கொடுத்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, லண்டனில் பாட்டீயாவிற்கு மருத்துவம் பார்க்கப்பட்டதாக சொன்ன மருத்துவமனையில் விசாரித்தவனுக்கு, ஆகாஷ் சொன்னது
நூற்றுக்கு நூறு உண்மை என்று தெரிய வர,

பாட்டீயாவை பற்றி அவன் சொன்னது முற்றிலும் உண்மை என்றாலும் அக்னி விஷயத்தில் மட்டும் ஏதோ ஒரு நெருடல் இருப்பது போல் தோன்ற,
அது குறித்து மேலும் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்று மனதில் குறித்துக் கொண்டான்.



இதற்கிடையில் அர்ஜுன் ஜானவியை சந்தித்து தான் மறுமணம் செய்து கொண்டதை தெரிவிக்க வேண்டும் என்றெண்ணிக் கொண்டிருக்கும் போதே, அவளே அவனை அழைத்து 4 மாத பயிற்சிக்காக மலேசியாவிற்கு செல்வதாக
கூறினாள்.

தான் செய்துகொண்ட மறுமணத்தை பற்றி கூறுவதற்கு, ஒரு சில தயக்கங்கள் அவனுக்கு இருக்கவே செய்தது.
காரணம் ஜானவி மற்றும் சோம் நாத்திற்கு அவன் காப்பாளராக பொறுப்பேற்றுக்கொண்ட நாளிலிருந்து, இந்த நிமிடம் வரை அவனாகவே தான் அவர்களுக்கு படிப்பு, உறைவிடம், உடை மற்றும் இதர செலவுகளை பார்த்து பார்த்து செய்து வருகிறான் .

இருவருமே சிறந்த படிப்பாளிகள் என்பதால் உபகாரச் சம்பளம்(Scholar ship) பெற்று படித்த வரும் நிலையில்,
அவர்களாக அவனிடம் இன்றுவரை எதையுமே எதிர்பார்த்ததில்லை.

ஒரு நாள் இதுகுறித்த விசாரணையில் அவன் ஈடுபடும் போது, இருவரும் ஒரு சேர " ஜிஜாஜி , நீங்களே எங்களுக்கு எது தேவைன்னு பார்த்து பார்த்து செய்யும் போது, உங்ககிட்ட கேக்குறதுக்கு எதுவுமே இல்ல... அது மட்டும் இல்ல அக்கா உயிரோட இருந்திருந்தா எங்களுக்கு எந்தவித நெருடலும் இருந்திருக்காது ..
அவளும் இப்ப இல்ல, அதான் ..." என வெளிப்படையாக அவர்கள் தடுமாற,

" உங்க அக்கா மூலம் இந்த உறவு ஏற்பட்டது உண்மைதான், ஆனா அவ உயிரோட இருந்திருந்தாலும் இல்லைன்னாலும் இந்த உறவு தொடரும்... ஏன்னா சுபா கூட நான் வாழ்ந்த வாழ்க்கை பொய் இல்லையே... அதோட என்னை உங்க அக்கா புருஷனா பார்க்காம உங்க அப்பாவா பாருங்க... எல்லா உரிமையும் தானா வரும் ..." என்றே அறிவுறுத்தியிருந்தான் .

ஏற்கனவே தங்கள் அக்காளின் மரணத்தை காரணம் காட்டி அவனிடமிருந்து தள்ளி நிற்பவர்கள் , தற்போது அவனது மறுமணத்தை கேள்விப்பட்டால் , முற்றிலுமாக விலகிச் சென்று விடுவார்கள் என்று அஞ்சியதோடு
தன் முதல் மனைவி சுபாவிற்கு கொடுத்த வாக்குப்படி
அவர்கள் இருவரையும் நன்கு படிக்க வைத்து, பணியில் அமர்த்தி , மணம் முடித்துக் கொடுக்கும் வரை அவனுக்கான கடமை இருக்கிறது
என்பதால் அதுகுறித்து பொறுமையாக எடுத்துரைக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டான்.

கடந்த சில நாட்களாகவே அக்னியின் அலுவலக பணிச்சுமை அதிகரித்ததால் அவளால் முன்பு போல்
மகனுடன் நேரம் செலவழிக்க முடியாமல் போக, அந்த தருணத்தை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு இரண்டு முறை அவளுக்கு தெரியாமல், அஷ்வத்தை மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் சென்றவனிடம்
குழந்தை அஷ்வத்தின் உடல்நிலையில் முன்னேற்றம் தெரிகிறது 3 மாதத்திற்கு பிறகு அறுவை சிகிச்சை வைத்துக்கொள்ளலாம், அதுவரை பரிந்துரைக்கப்பட்ட சத்து மாத்திரைகள் மற்றும் டானிக்களை தொடருமாறு மருத்துவர் அறிவுறுத்த, அறுவை சிகிச்சைக்கு முன்பு அக்னியிடம் சொல்லிக்கொள்ளலாம் என அமைதி
காக்கலானான்.

ஒரு நாள் பௌர்ணமி இரவு ஒளியில் லானில் அமர்ந்துக்கொண்டு மடிக்கணினியில் வேலை செய்துகொண்டிருந்த அக்னியை நோக்கி அர்ஜுன் வர,

" அர்ஜுன் உங்ககிட்ட அன்னைக்கே கேட்கணும்னு நினைச்சேன் இப்பதான் ஞாபகத்துக்கு வருது... எதுக்காக ஆகாஷோட நம்பர செகரேட்டரி கிட்ட இருந்து வாங்கித்தர சொன்னீங்க ..."

" வைன் யார்டு புரோபர்டி சம்பந்தப்பட்டவங்கள்ல அஜய்யும் அஜய்யோட அம்மாவும் இப்ப உயிரோட இல்ல... கௌரவும் தலைமறைவா இருக்கான்னு நினைச்சுகிட்டு இருக்கும் போதுதான், திடீர்னு ஆகாஷோட ஞாபகம் வந்தது ... பாட்டீயா இறந்ததை கேள்விப்பட்டதும் அன்னைக்கே அவன் லண்டன்ல இருந்து நாசிக் வந்து பாட்டீயாவோட இறுதி சடங்கு செஞ்சிட்டு போனதா நீ சொன்ன இல்லையா... சோ அவன்கிட்ட பேசினா ஏதாவது கிடைக்குமானு தான் அவனோட நம்பர கேட்டேன் ..." என்றவன் அவனுக்கும் ஆகாஷுக்கும் இடையேயான சம்பாஷனைகள் அனைத்தையும் கூறி

" நீ ஆகாஷை மீட் பண்ணி இருக்கியா ..."

" ம்ஹூம்... நான் மீட் பண்ணினதே இல்ல ... இன் ஃபேக்ட் அவரை பார்த்ததுகூட கிடையாது ...ஆனா எங்கிட்ட ரெண்டு முறை போன் பண்ணி பேசியிருக்காரு...

முதல் முறை, வைன் பிராண்ட்ஸ கஸ்டமர்ஸ்க்கு சாம்புல்(Sample) கொடுக்க வைன் யார்டுல ஓபன் பார்க் அமைக்கணும்னு கேட்டாரு ...
கோ ஹா ஹேட்னு சொன்னேன் ..

அப்புறம் ஒரு ஆறு மாசம் கழிச்சு, மறுபடியும் பேசினாரு... அவருக்கு அந்த தடவை லாபம் அதிகமா வந்ததாம் ... அதனால அக்ரிமெண்ட்ல போட்ட பர்சன்டேஜ் விட அதிகமா கொடுக்க ஆசைப்படறதா சொன்னாரு...
ட்ரஸ்ட்ல சேர்த்துடுங்கனு சொல்லிட்டேன்....

அப்ப நான் அவர்கிட்ட எதைப்பத்தியும் அதிக விவரம் கேட்கல.... பிகாஸ் ஐ வாஸ் கம்ப்ளீட்லீ ஸ்டெரஸ்டு... அப்புறம் அவரும் என்னை காண்டாக்ட் பண்ணல ... கௌரவ் வந்துட்டு போனதுக்கப்புறம், என் அம்மா இறந்து போக, நான் என் டெல்லி வேலையை ரீசைன் பண்ணினது, போன் நம்பர் மாத்தினது , மும்பைக்கு ஷிப்ட் ஆனதெல்லாம் என் பிரெண்ட் கீதாவை தவிர வேற யாருக்கும் தெரியாது ... குறிப்பா வைன் யார்ட் செகரேட்டரி கோபால் சார் கிட்ட கூட நான் ஷேர் பண்ணிக்கல ...
அன்னைக்கு நீங்க கேட்டதால அவருக்கு போன் பண்ணி ஆகாஷோட நம்பர் கேட்கும் போதுதான், அவர் என்னை கிட்டத்தட்ட 2 மாசமா தேடிக்கிட்டு இருந்ததா சொன்னாரு... ஏன்னு கேட்டதுக்கு ஆகாஷ் என்கிட்ட பேசணும்னு என் பழைய நம்பருக்கு ட்ரை பண்ணி இருந்தாராம்.... அது வொர்க் பண்ணலைன்னு தெரிஞ்சதும் இவரை காண்டக்ட் பண்ணி சொன்னாராம்... ஏம்மா நம்பரை மாத்தினா சொல்றது இல்லையாம்மானு வருத்தப்பட்டாரு..."
என அவள் முடிக்க,

" எதுக்காக ஆகாஷ் இவளை தேடனும் ...." என்ற கேள்வி அர்ஜுனின் மனதில் அதிரடியாக உதிக்க, அதனை சிந்தித்தபடி அவளை
நோட்டமிட்டவனுக்கு
வழக்கம் போல் அணியும் சட்டை மற்றும் நீள பாவாடை
அணிந்து, அதற்கு மேல் இளம் பட்டு ரோஜா நிற ஸ்வெட்டரில் அவள்
அழகாக இருக்க, கொடைக்கானல் குளிர் உடலை வருத்திய போது கூட எந்த ஒரு உணர்வும் இல்லாமல் கையில்லா உடையில் வலம் வந்தவளுக்கு, மும்பை குளிர் உடலைப் வருத்துவதை எண்ணி
லேசான ஆச்சரியத்துடன்

" ஏய்... குளிருதா..." என்றான் அவன் சூடேறி.

" ம்ம்ம்ம்...." என்று மென்மையாக புன்னகைத்தவள், தன் கைகளை பரபரவென ஒன்றோடு ஒன்று உரசி,
தன் கன்னத்தில் வைத்துக்கொண்டு,

" உங்களுக்கு குளிர்லயா ..."

குளிருது தான் என்ன பண்ண சொல்ற... என உள்ளுக்குள் உளறியவன்

" ம்ம்ம்ம்..." என்று தலையசைத்தபடி அவளை விழுங்கி விடுவது போல் பார்த்து வைக்க,

" கம் லெட்ஸ் கோ அண்ட் ஸ்லீப் ..."என்றபடி அவள் அறை நோக்கி முன்னேற,

தனித்தனியா தூங்குறதுக்கு எதுக்கு 'லெட்ஸ் கோ அண்ட் ஸ்லீப்' என வார்த்தை இல்லாமல் புலம்பியபடி அவளைப் பின் தொடர்ந்தான்.



டிசம்பர் 31 காலை,

" அக்னி, கம் லெட்ஸ் கோ பார் அ ஷாப்பிங் ..."

"ஏன் திடீர்னு ..."

" ஃபர்ஸ்ட் டைம் விஷ்ணு, ஸ்ரீயோட ஃபேமிலியை மீட் பண்ண போறோம்...ஏதாவது கிப்ட் வாங்கிட்டு போக வேண்டாமா அதுக்காகத்தான் ..." என்றவன் அவளது பதிலுக்காக காத்திராமல், அவளையும் அஷ்வத்தையும் துரிதப்படுத்தி அங்கிருக்கும் பெரிய ஷாப்பிங் மாலிற்கு அழைத்துச்சென்றான்.

கிட்டத்தட்ட அரைமணி நேரத்தில் அவர்கள் மூவருக்கும் தேவையான துணிமணிகளை அவன் வாங்கிக் குவிக்க, அவளோ அஷ்வத்துடன் அவனுக்குத் தேவையான கலர் பென்சில், காமிக்ஸ் புக்ஸ், பொம்மைகளை வாங்கிக் கொண்டிருந்தாள்.

ஒருவழியாக தங்களுக்கு தேவையானதை முடித்துக்கொண்டு,
24 ct தங்கத்தில் செய்யப்பட்ட சிறிய ராதா கிருஷ்ண விக்ரஹத்தை
விஷ்ணு ஸ்ரீ ஜோடிக்கு பரிசளிப்பதற்காக வாங்கியவன், அதனை அக்னியிடம் காட்ட,
அவனின் ரசனையை கண்டு லயித்து போனாள்.

பிறகு வீடு வந்து சேர்ந்தவர்கள் மாலை நான்கு மணிக்கெல்லாம் ஸ்ரீயின் இல்லத்திற்கு கிளம்ப தயாராகிக் கொண்டிருக்கும் போது,

" அக்னி, உனக்காக இந்த 3 செட் சல்வார், 2 சாரி வாங்கி இருக்கேன்... ஏதோ எனக்கு பிடிச்ச மாதிரி செலக்ட் பண்ணி இருக்கேன் ... இதுல ஏதாவது ஒன்னு போட்டுகிட்டு கிளம்பு..." என்றவன் அவள் மறுப்பு தெரிவித்துவிட இடமளிக்காமல் இடத்தை காலி செய்தான்.

அவன் வாங்கி வந்த அனைத்து ஆடைகளையும் அலசிப் பார்த்தாள்.
அனைத்தும் விலை உயர்ந்ததோடு அழகிய வண்ணங்களில்,
வெவ்வேறு தோற்றங்களில் மிக நேர்த்தியாக இருந்தது.

அஜய்யின் மறைவிற்குப் பிறகு , வீட்டில் இலகுவாக அணியும் ஆடைகள் மற்றும் உள்ளாடைகளை தவிர தனக்காக எதையுமே அவள் வாங்கிக் கொண்டதில்லை. குறிப்பாக துப்பட்டாவை பார்க்கும் போதெல்லாம் அஜய்யின் நினைவு வருவதால், சல்வார் அணிவதையே முற்றிலுமாக தவிர்த்திருந்தாள்.

தற்போது அர்ஜுன் வாங்கி வந்திருந்த புடவைகளில் மத்திய பிரதேசத்தில் தயாராகும் குங்கும நிறத்தில் இருந்த 'சந்தேரி' புடவை, அவள் கருத்தை கவர,
அதனை வருடி பார்த்தவளுக்கு, அதனை உடுத்திக் கொள்ளும் எண்ணமும் பிறந்தது.

ஆனால் அவள் வாழ்வில் அவள் புடவை அணிந்ததை விரல் விட்டே எண்ணி விடலாம். காரணம் அவளுக்கு நேர்த்தியாக உடுத்திக்கொள்ள தெரியாது, ஒருவேளை தப்பும் தவறுமாக உடுத்திக்கொண்டாலும் அதனை உடம்பில் கட்டிக் காப்பதென்பது பெரும் வேலை என்பதால் உடுத்திக் கொள்ளலாமா வேண்டாமா என்ற சிந்தனையில் இருந்தவளின் சிரத்தில் திடீரென்று ஏதோ ஒன்று அழுத்த, சற்று முன் வருடிய புடவையை தூக்கி எறிந்தாள்.

" அஜய், நீங்க நம்ம நாட்டுக்காக தான் உயிரை விட்டிருக்கீங்க ... அது மட்டும் நிச்சயம் ...ஏற்கனவே உங்க டெத்ல இருக்கிற மர்மத்தை என்னால கண்டு பிடிக்க முடியலங்கிற குற்ற உணர்வுல கஷ்டப்பட்டுகிட்டு இருக்கேன்... இதுல அர்ஜுனை கல்யாணம் பண்ணிகிட்டது தப்போன்னு இப்பெல்லாம் தோண ஆரம்பிச்சிருக்கு...
ரொம்ப சுயநலமாயிட்டேன்னு நினைக்கிறேன் ... நிறைய குழப்பமா இருக்கு ... எனக்கே என்னை பிடிக்கல அஜய் . ..." என்று சன்னமாக வாய்விட்டே பேசியபடி கதறி அழுதவளுக்கு அர்ஜுனிடமிருந்து

"கெட் ரெடி சூன் ... " என்ற குறுஞ்செய்தி அவளது கைபேசிக்கு வர, அதனைக் கண்டதும் துரிதமாக முகம் துடைத்துக் கொண்டவள்,

அவன் வாங்கி வந்திருந்ததில் அடர் ஊதா நிறமும் மெருன் நிறமும் கலந்த ஜமிக்கி வேலைப்பாடுகள் நிறைந்த சல்வார் அவளுக்கு கச்சிதமாகவும் நேர்த்தியாகவும் பொருந்தி இருக்க,
வழக்கம் போல தனது நீண்ட கூந்தலை
இடைவரை பின்னலிட்டு முடித்தவள், கைப்பையை எடுத்துக் கொண்டு கிளம்பும் தருவாயில், அவள் கதவை தட்டிவிட்டு உள்ளே நுழைந்த அர்ஜுன்

" இதெல்லாம் உன்கிட்ட இருக்காதுன்னு தெரியும் ... அதான் வாங்கிட்டு வந்தேன் .." என்று நீட்டியது
பெண்கள் நெற்றியில் வைத்துக் கொள்ளும் பொட்டுகள் கொண்ட அட்டைகள் மற்றும் வெவ்வேறு நிறங்களில் அழகழகான வளையல்கள்.

வெவ்வேறு நிறங்கள் கொண்ட கற்கள், முத்துகள் பதித்த பொட்டுகள், வெறும் மெரூன் நிற பொட்டுக்கள் என வெவ்வேறு அளவுகளில் வெவ்வேறு ரகங்களில் வாங்கி குவித்திருந்தவன் அவளை சரியாகத்தான் அனுமானித்திருந்தான்.

அஜய்யின் மரணத்தோடு அனைத்தையும் தலை முழுகியிருந்தவள் , தற்போது அதனை தரித்துக் கொள்ள தடுமாற,

புடவையில் தயாராகி இருப்பாள் என்ற ஆவலில் வந்தவனுக்கு அவளது உடை ஏமாற்றத்தை தர, அவளது இந்த தடுமாற்றமும் அவன் மனதை சுட்ட நிலையில்

" நீ இப்படி இருக்குறது எனக்கு பிடிக்கல ... அஜய் உன் லைஃப்ல வர்றதுக்கு முன்னாடியே
இதெல்லாம் உன் லைஃப்ல இருந்தது தானே ... இதெல்லாம் உனக்கு ரொம்ப அழகா இருக்கும் ..." என்றவன் இடம் விட்டு நகராமல் அவளையே பார்த்துக் கொண்டிருக்க, வேறு வழியில்லாமல் அந்த அட்டையில் இருந்து மெரூன் நிற பொட்டை நெற்றியில் வைத்துக்கொண்டதோடு , அதே நிற வளையலை அவள் அணிந்து கொள்ளவும், புதிய ஆடையில் தயாராகி வந்த அஷ்வத் அவளை தாவி அணைத்துக் கொள்ளவும் சரியாக இருந்தது.

அஷ்வத்தை புதிய ஆடையில் கண்டவள்,
" ஹேய் , யு ஆர் லுக்கிங் சோ ஹாண்ட்சம் பேபி..."
என அவன் அணிந்திருந்த ஜீன்ஸ் பேண்ட் மற்றும் டி-ஷர்ட்டை பார்த்து குதூகலித்தவளிடம்

" மம்மா, லுக் பப்பா'ஸ் டிரஸ் ...." என்ற போது தான் அர்ஜுனின் ஆடையை கவனித்தவளுக்கு இருவரும் ஏறக்குறைய, ஒரே நிறம் ஒரே மாதிரியான உடையை அணிந்திருக்க,

" வாவ்..." என்றாள் .

" ஏன் எனக்கு ஹேண்ட்சம் சொல்ல மாட்டியா ..." என்றவனின் குழந்தைத்தனமான எதிர்பார்ப்பில் குலுங்சி சிரித்தவள்,

" லுக்கிங் ஸ்மார்ட் அண்ட் ஹாண்ட்சம் ..." என்றாள் அவன் கண்களைப் பார்த்து.

பிறகு அஷ்வத்தை அழைத்துக்கொண்டு அர்ஜுன் முன்னே செல்ல,

குழந்தைக்கு மட்டுமல்ல தனக்கும், மிக
சரியான அளவில் அவன் தேர்ந்தெடுத்திருந்த சல்வாரை வியந்து கொண்டிருக்கும் போது, அஷ்வத்தின் அழைப்பு வர, வேகமாக சென்று காரின் முன்புறத்தில் அர்ஜுனின் அருகில் அமர்ந்தாள்.

பயணம் தொடங்கி ஐந்தாவது நிமிடத்தில் தன் அலைபேசியில் திரை இசை பாடலை அவன் தேர்வு செய்ய, அது காரின் இசைபெருக்கியோடு இணைக்கப்பட்டிருந்ததால், இசை அனைவரின் காதுகளையும் அழகாக சென்றடைந்தது.

அருகினில் உள்ள தூரமே
அலைகடல் தீண்டும் வானமே
நேசிக்க நெஞ்சம் ரெண்டு போதாதா போதாதா நீ சொல்லு ....

நேசமும் ரெண்டாம் முறை வாராதா கூடாதா நீ சொல்லு ...

வா வந்து என்னை சேர்ந்திடு ...
என் தோள்களில் தேய்ந்திடு....
சொல்ல வந்தேன் சொல்லி முடித்தேன்... வரும் திசை பார்த்து இருப்பேன் நாட்கள் போனாலும் ....

என்ற திரையிசைப் பாடல் வரிகள் அவனுக்காகவே எழுதியது போல் அவன் மனதை அழகாக எடுத்துரைக்க,

புரிய வேண்டியவளுக்கும் புரியவே செய்தது. பொதுவாக திரைப்படங்கள் பார்க்காதவள், திரையிசை பாடல்களை கேட்காதவள்,
அப்படியே கேட்டாலும் ஹிந்தி மற்றும் மராத்தி மொழியில் அமைந்த ஒரு சில பாடல்களை மட்டும் கேட்டே பழகியவளுக்கு, இந்தப் பாடலின் அர்த்தமும் மென்மையான இசையும் அவளே அறியாமல் அவள் மனதை ஆட்கொள்ள,
கிட்டத்தட்ட அரைமணி நேர பயணத்தில், ஸ்ரீயின் இல்லத்தை வந்தடைந்தவர்களுக்கு வரவேற்பு பலமாக இருந்தது.

விஷ்ணுவின் குடும்பத்தினரோடு ஸ்ரீயின் குடும்பத்தினரும் வீட்டு வாயிலுக்கே வந்து சிறப்பான வரவேற்பளித்தனர்.

" வாப்பா, எப்படி இருக்க...." என்றார் வெங்கடேஷ் வெகு இயல்பாக இதுதான் அவர்களது முதல் சந்திப்பு என்பதையே மறந்து.

அர்ஜுன் அக்னிகாக அவரிடம் ஒரே ஒரு முறை மருத்துவ உதவியை நாடி இருக்கிறான் அதுவும் விஷ்ணு மூலமாகத்தான். அதன் பின் இப்போதுதான் இருவரும் நேரடியாக சந்திக்கும் வாய்ப்பு அமைந்திருக்க, அவரின் இயல்பான பேச்சு, கண்ணில் தெரிந்த வாஞ்சையை கண்டவன்,

" நல்லா இருக்கேன் பா .." என்றான்.

உடனே விஷ்ணு இடைபுகுந்து, அனைவரையும் அறிமுகப்படுத்தி வைக்க,
எல்லோரது கண்களிலும் ஒருவித தோழமையும், அன்பையுமே அக்னியால் காண முடிந்தது.

விஷ்ணு அர்ஜுனை புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்காக ஸ்ரீயின் இல்லத்திற்கு வரவேற்ற கையோடு அர்ஜுன் மற்றும் அக்னியின் முன் கதை சுருக்கத்தை மேலெழுந்தவாறு தன் தாய் வேதாவிடம் சொல்ல,
வழக்கம் போல் அது வேதாவிடமிருந்து வெங்கடேஷ் காதுக்கு எட்டியிருந்தது.

வேதாவிற்கு வெங்கடேஷ் தான், தோழன், காதலன், கணவன் ஏன் கடவுளும் கூட . வேதாவின் சிந்தை மற்றும் செவியை எட்டிய எந்த செய்தியாக இருந்தாலும், தன் காதல் கணவர் வெங்கடேஷிடம் பகிராமல் இருக்க மாட்டார். அதே சமயத்தில்
அவர்களது குழந்தைகளுக்கு பகிர வேண்டிய செய்தியாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே அதுகுறித்து குழந்தைகளுடன் பேசுவார், மற்றபடி எந்த செய்தியும் வேதா மற்றும் வெங்கடேஷை தாண்டி வெளியே செல்லாது.

விஷ்ணுவைப் பொருத்தமட்டில் ஸ்ரீ ஒரு வளர்ந்த குழந்தை. அவளுடைய உலகம் என்றுமே இனிமை நிறைந்ததாக இருக்க வேண்டும் என்பதே அவனுடைய ஒரே குறிக்கோள்.
அக்னி அர்ஜுனின் முன் கதை சுருக்கத்தை செல்லாமல், தன்னுடைய நெருங்கிய நட்பு வட்டம் , மூத்த சகோதரரை போன்றவர் என்றே
ஸ்ரீ யிடம் சொல்லி வைத்திருந்தான்.

ஆனால் வாழ்க்கை எப்பொழுதுமே,
தெளிந்த நீரோடையாக சலனம் இல்லாமல் சென்றுக் கொண்டிருக்காதே.
கரடுமுரடான கற்பாறைகள், மேடு பள்ளங்கள், எதிர்பாராத சுழல் காற்றுகளை சந்தித்து தானே தீரவேண்டும்.

அம்மாதிரியான ஒரு சந்தர்ப்பம், ஸ்ரீயின் வாழ்வில் இதுவரை வந்ததே இல்லை. பிறந்ததிலிருந்து பொன் கரண்டியால் உணவூட்டி வளர்க்கப்பட்டவளுக்கு, வாழ்க்கையின் நிதர்சனம் புரிய வரும் போது, தம்பதிகளுக்கு இடையே பெரும் பிரச்சனை வெடிக்க போவதும் அதனால் அவளது குழந்தைத்தனம் ஓரளவிற்கு களைய போவதும், அதற்கு அவனே காரணமாக இருக்கப் போவதும் தெரியாமல் சந்தோஷத்தில் திளைத்திருந்தான் ஸ்ரீயின் மன்னவன்.


ஸ்ரீனி வழக்கம் போல் , 'நமஸ்தே' என்று பொதுப்படையாக இருவரையும் பார்த்து கூறிவிட்டு சற்றே தயங்கி நிற்க , 'ஆங்கிரி பேர்ட்' ஸ்ரீராம் அர்ஜுனின் கரங்களிலிருந்து 'துரு துரு' அஷ்வத்தை அள்ளிக் கொண்டு கொஞ்சி மகிழ
உடனே சுமித்ரா, அவனிடமிருந்து அஷ்வத்தை வாங்கிக் கொண்டு பேசி சிரிக்க, பிறகு அஷ்வத், வேதா, வெங்கடேஷ் , விஷ்ணு என அனைவரிடமும் கைமாறி கடைசியில் ஸ்ரீயை வந்தடைந்தான்.

ஸ்ரீ முகத்தில் பொங்கி வழிந்த அளவில்லா மகிழ்ச்சியை கண்ட விஷ்ணுவிற்கு
அனிச்சையாய் விரக்தி தலைதூக்க மற்றவர்கள் காணும் முன் அதனை சடுதியில் மறைக்க முயன்றான்.

அஷ்வத்தை கையில் ஏந்தியபடி

" அக்கா, அத்திம்பேர் வாங்கோ..." என்று ஆசையாக அக்னி மற்றும் அர்ஜுனை விளித்த ஸ்ரீயின் குழந்தைத்தனம் மற்றும் எதார்த்தத்தில்
இருவருமே மகிழ்ந்தனர்.

ராஜ வம்சத்தை சார்ந்தவன், பல கோடிகள் வர்த்தகம் நிகழும் வியாபார சாம்ராஜ்யத்தின் ஒரே வாரிசு என்ற அடைமொழி ஏதும் அறியாமல் அவனை அவனாக ஏற்றுக் கொண்ட அந்த குடும்பத்தை அர்ஜுனுக்கு மிகவும் பிடித்துப் போனது.

எப்பொழுதும் விஷ்ணுவின் முகத்தில் முந்தும் சுட்டி தனத்திற்கும், ஸ்ரீயின் முகத்தில் தவழும் குழந்தை தனத்திற்கும் இப்படிப்பட்ட குடும்பப் பின்னணியே காரணம் என்றுணர்ந்து லயித்தவன்,
வேதாவும் சுமித்ராவும் அக்னியிடம் காட்டிய சிறப்பான அக்கறையையும் கவனிக்கத் தவறவில்லை .

வாழ்க்கையில் தடுக்கி விழும் தருணங்களில் மடி தாங்க தாயும், தூக்கிப் பிடிக்க தந்தையும் இருந்துவிட்டால், எந்த ஒரு குழந்தையுமே சாதனை குழந்தைதான் என்பதை பறைசாற்றும் விதமாக
தோழமையோடு பழகினாலும் கண்டிக்க வேண்டிய இடத்தில் கண்டித்து தன் மக்களை சிறப்பாக வழி நடத்தும் அப்பாயின்மென்ட் இல்லாத அப்பாக்களான வெங்கடேஷ் மற்றும் ரங்கநாதனை பார்த்து அவனுக்கு அளவுக்கதிகமான மரியாதையே வந்தது எனலாம்.

ரங்கநாதன் வெங்கடேஷை போல கலகலப்பானவர் இல்லை என்றாலும், அவரும் இந்த வரவேற்பில் கலந்து கொண்டு, அர்ஜுன் அக்னியை நன்றாகவே உபசரித்தார் .

வாசலில் போடப்பட்ட பளீர் கோலம் இருவரையும் வரவேற்க,
வீட்டு வாயிலில் இருந்த துளசி செடியில் இருந்து, வீட்டை சுற்றி இருந்த லான் மற்றும் பின்புறம் இருந்த பலாச் செடி பூ பூத்திருப்பது வரை அனைத்து தகவல்களை ஒன்றுவிடாமல் இருவரையும் அழைத்து காட்டியபடி பேசிக்கொண்டிருந்தாள் ஸ்ரீ.

அதன்பின் புதுமையும் பழமையும் கலந்து கட்டப்பட்ட அந்த வீட்டின் மேல்தளம் கீழ்த்தளம் என அனைத்தையும் அவள் சுற்றிக் காட்டித்தோடு , முற்றத்தில் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்த தனது பாட்டியையும் அறிமுகப் படுத்தி வைத்தாள்.

இதற்கிடையே அஷ்வத்,வீட்டில் இருந்த அனைத்து ஆண்கள் மற்றும் பெண்களிடமும் தன் துடுக்குத் தனத்தையும் துருதுரு பேச்சையும் காட்டி மயக்கி இருக்க, அவனை அள்ளிக்கொண்ட வெங்கடேஷ் வேதாவை காட்டி

"இவங்க யாரு ..." என்றார் கண்ணில் குறும்போடு.

" பாட்டி ...." என்றான் பேரன் வெள்ளந்தியாக.

" வெரி குட் ...நான் யாரு... அங்கிள் தானே..." என்றார் ஆசையோடு.

" இல்ல.....
தாத்தா ... " என்ற பதிலில் ரங்கநாதன் உட்பட அனைவரும் குலுங்கி சிரிக்க

" ஏன்பா நான் மட்டும் தாத்தா, விஷ்ணு மாதிரி நானும் உனக்கு அங்கிள் தானே..." என்றார் அப்பாவியாக முகத்தை வைத்து.

" நோ ... யூ ஹவ் லாட் ஆஃ க்ரே ஹேர்... சோ யூ ஆர் தாத்தா ..." என்றான் பேரன் தன் மழலை மொழியில் காரணத்தோடு.

" அப்படி போடுடா சமத்து குட்டி ...
இந்த வயசுல ஆசைய பாரு ... அங்கிளாமில்ல அங்கிள்...." என்று வேதா அஷ்வத்தை அள்ளிக்கொள்ள,

" எனது ராஜ தந்திரம் பலிக்கவில்லையே.... இன்னும் பயிற்சி வேண்டுமோ ..." என்ற
வெங்கடேஷின் பேச்சு மீண்டும் சிரிப்பலையை ஏற்படுத்த,

அன்னியோன்யமான தம்பதிகளுக்கே உரிதான ஊடல், உரையாடல், புரிதல், ஹாஸ்யம் அதன் ஊடே மறைந்திருந்த ஆத்மார்த்தமான காதல் என அனைத்தையும் இந்த ஒரு நிகழ்வே பறைசாற்ற,

கணவன் மனைவியுடனோ மனைவி கணவனுடனோ பேசுவதற்கு மூன்றாம் நபரை தூது விடுவது, அதற்கு ஒரு நேரம் குறிப்பது, குடும்பத்தில் இருப்பதே மொத்தம் மூன்று நபர் தான்... அவர்கள் கூடி பேச வேண்டும் என்றால் அலுவலக கலந்தாய்வு போல் முன்னேற்பாடுகள் நடக்கும் தன் இல்லத்தையும் தன் தாய் தந்தையரையும் மனக்கண்ணில் ஒப்பிட்டு பார்த்தவனுக்கு தன் குடும்பத்தில் ஜீவன் என்ற ஒன்றே இல்லை என்பதை உறுதிப்படுத்தினான்.

பிறகு அர்ஜுன், விஷ்ணு மற்றும்
ஸ்ரீயை அழைத்து , தான் வாங்கி வந்திருந்த பரிசுப் பொருளை கொடுக்க,

" ஏன் பையா, இவ்ளோ காஸ்ட்லியா..." என விஷ்ணு கேள்வி எழுப்ப,

" இதுல என்னடா இருக்கு ...பார்த்தேன் புடிச்சிருந்தது... வாங்கினேன் ... உனக்கு பிடிச்சிருக்கு இல்ல மா ..." என்றான் அர்ஜுன் ஸ்ரீயை பார்த்து.

" ம்ம்ம்ம், ரொம்ப நன்னா இருக்கு ..." என்றாள் வழக்கம் போல் வெள்ளந்தியாய்.

அப்போது சுமித்ராவின் மடிசார் முந்தானையை பற்றிக்கொண்டு அவருடனேயே நடந்து கொண்டிருந்த அஷ்வத்திற்கு தன் பாட்டி கோகிலாவின் நினைவு வர, அவன் முகத்தில் இருந்தே அதை உணர்ந்த அக்னி, அவனை நோக்கி வரும் போது

" சின்ன வயசுல ஸ்ரீயும் ஸ்ரீராமும் இப்படித்தான் அவா பாட்டி
மடிசாரை பிடிச்சுண்டு சுத்திண்டு இருப்பா.. இப்ப இவன் செய்யும் போது அதெல்லாம் நேக்கு நினைவு வந்துடுத்து ... " என்று அக்னியிடம் பெருமை பேசியவர்,

" எல்லாரும் வாங்கோ, பூஜைக்கு நாழி ஆயிடுத்து ...." என அனைவரையும் பொதுப்படையாக பூஜை அறைக்கு அழைத்து , சிறப்பாக தயார் செய்திருந்த
நைவேத்தியத்தை பெருமாளுக்கு சமர்ப்பித்தவர் , ஸ்லோகங்கள் கூறி பாராயணம் முடித்து கற்பூர ஆரத்தியை பெருமாளுக்கு காட்டிய பின் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்த தன் தாயிடம் காட்ட, அவர் அதை கண்ணில் ஒற்றிக் கொண்ட பின்புதான் மற்ற அனைவரிடமும் ஆரத்தி தட்டினை காட்டினார்.

அனைவரையும் தரையில் மனையிட்டு அமரச்செய்து , வாழை இலையில் உணவு பரிமாறியதோடு அர்ஜுன் மற்றும் அக்னியை அருகருகே அமர்த்தி விருந்து பரிமாறி மகிழ்ந்தனர் வேதாவும் சுமித்ராவும்.

அரச பரம்பரையில் பிறந்து அன்றாடம் ராஜ விருந்தை உண்டு வளர்ந்தவனுக்கு அந்த சாதாரண சைவ உணவு தேவாமிர்தமாக தொண்டையில் இறங்க, அஷ்வத் ஸ்ரீராம் மற்றும் ஸ்ரீனிக்கு இடையே பெரிய மனித தோரணையில் அமர்ந்துக்கொண்டு தானே உணவைப் பிசைந்து உண்ண, அக்னிக்கு அர்ஜுன் அருகில் அமர்ந்து விருந்துண்டது வித்தியாசமான மனநிலையை தோற்றுவித்திருக்க , விஷ்ணுவிற்கு ஸ்ரீ அருகில் அமர்ந்து உண்டது அளவில்லா சந்தோஷத்தை கொடுத்திருந்தது.

குடும்ப உறவுகளே அதிகமில்லா சூழ்நிலையில் வளர்ந்த அர்ஜுன் அக்னிக்கு
உறவின் உன்னதத்தை பறைசாற்றும்
அந்தக் குடும்பம் ஒரு பல்கலைக்கழமாகவே தெரிந்தது .

எத்தனை அயல்நாட்டு கலாச்சாரங்கள் தலை தூக்கினாலும் நமது குடும்ப பாரம்பரியத்தை விட்டுக்கொடுக்காமல்
வாழ்ந்து வரும் இத்தகைய குடும்பங்கள் தான் அடுத்த தலைமுறைக்கு சிறந்த வழிகாட்டி
என்ற எண்ணம் அவன் மனதில் வித்திட்டது.

வேலையாட்கள், அலங்காரம், ஆடம்பரம் நிறைந்த அவன் அரண்மனையில் இல்லாத
தெய்வீகம், நிம்மதி, பாசம், அன்பு , அக்கறை, புரிதல் என அனைத்து நேர்மறை எண்ணங்களும் கிட்டதட்ட 20 கோடி பெறுமானமுள்ள இந்த சின்ன பங்களாவில் கொட்டிக் கிடப்பதை வந்த கணத்திலிருந்து ஒவ்வொரு நிகழ்விலும் உணர தொடங்கியிருந்தான் .

ஆக மொத்தம் அந்த மனையில் இருந்த அனைவருக்குமே ஏதோ ஒரு வகையில் நிம்மதியும் சந்தோஷமும் கூடியிருந்ததென்றே சொல்லலாம்.

சற்று நேரம் அனைவருடனும் அளவளாவி விட்டு கிளம்பும் போது வேதா -வெங்கடேஷ் மற்றும் சுமித்ரா- ரங்கநாதன் தம்பதியினர் ஆசி வழங்கி
தாம்பூலத்தில் மாம்பழ மஞ்சள் நிற பனாரஸி பட்டுப்புடவையை
அர்ஜுன் தம்பதியினருக்கு கொடுக்க, அதனைப் பெற்றுக் கொண்டவர்கள்
சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தபடி ராமநாமத்தை முணுமுணுத்தபடி மெல்லிய தேகத்தில் அதீத முதுமையில் காட்சியளித்த பாட்டியின் பாதம் பணிய எத்தனிக்கும் போது, உடனே பாட்டி சுமித்ராவிடம் ஏதோ சைகை செய்ய, அவர் அட்சதையும் குங்குமத்தையும் தாம்பூல தட்டில் வைத்து பாட்டியிடம் கொடுக்க, இருவருக்கும் அட்சதையை தூவி நெற்றியில் மஞ்சள் குங்குமத்தை வைத்து

அர்ஜுனை பார்த்து "மகராஜனாயிரு..." என்று வாழ்த்தியவர், அக்னியை பார்த்து " "சௌபாக்கியவதியா இரு " என சன்னமாக தளர்ந்த குரலில் ஆசி வழங்கினார்.

பிறகு அக்னியிடம் ,
" செத்த இப்படி உக்கறியா உன்ணின்ட பேசணும் ..." என்றவரின் மென்மையான பேச்சு அனைவரையும் ஆச்சரியத்தோடு உற்றுநோக்க செய்ய,

" பேர் என்ன ..." என்றார் வாஞ்சையாக.

" அக்னி ..." என்றாள் மென்மையாக.

" சாட்சாத் மகாபாரத திரௌபதியோட பேரு...
திரௌபதி மாதிரியே கண்ணுக்கும் லட்சணமா இருக்க....
நோக்கு ஏன் இந்த குழப்பம்... பகவான் சதா கஷ்டத்தை மட்டுமே கொடுத்துண்டே இருக்க மாட்டேர்....
உனக்கான சந்தோஷத்தை அனுபவிக்க வேண்டிய காலம் வந்துடுத்து....
வாழ்க்கையில அளவுக்கதிகமா கஷ்டத்தைப் பார்த்துட்ட, இனிமே நோக்கு கஷ்டமே இல்ல... நீயே இனிமே வேண்டான்னாலும் நீ செய்த புண்ணியத்தை அனுபவிக்க வேண்டிய நேரம் வந்துடுத்து... தீர்க்க சுமங்கலியா நிறைய குழந்தை குட்டிகளோட சந்தோஷமா இருக்கத்தான் போற ... " என்று அருகில் மண்டியிட்டு
அமர்ந்திருந்த, அக்னியின் தலை தொட்டு அவர் கூறி முடிக்க,
கேட்டுக்கொண்டிருந்தவளின் கண்களோ பனிக்க,

" கலங்காத, நீ யாருக்கும் எந்த கெட்டதும் நெனச்சதில்ல நோக்கு நல்லதே தான் நடக்கும் ..." என்றவர்
மறுபுறம் மண்டியிட்டு அமர்ந்திருந்த அர்ஜுனை பார்த்து
" ஆயுஷ்மானு பவா..." என மனதார வாழ்த்தினார்.

பிறகு குடும்பத்தினர் அனைவரும், அவர்களை வழி கூட்டி அனுப்ப வாயிலுக்கு வர, ஸ்ரீ மற்றும் சுமித்ரா அக்னியை சூழ்ந்துகொண்டு அனைவர் முன்பாக

" எங்களுக்கு எல்லாம் ரொம்ப ஆச்சரியமா இருக்கு... ஏன் தெரியுமா ... என் அம்மா பேச்சை நிறுத்தி கிட்டத்தட்ட எட்டு வருஷமாயிடுத்து... அவாளுக்கான வேலையை அவாளே செய்துப்பா... ஏதாவது தேவைன்னா சைகை செய்வா.. மத்தபடி ராம நாமத்தை மட்டும் ஜெபிச்சிண்டே இருப்பா ...

சாப்பாடு கூட ஒரு நாளைக்கு ஒரு வேளை தான் சாப்பிடுவா ... ராத்திரி வெறும் பால் மட்டும் தான் ... இப்படித்தான் கிட்டத்தட்ட அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி ரிஷிகேஷ் போயிருந்த போது
அங்க ஒரு அம்மா, தன் 16 வயசு பொண்ணோட வந்திருந்தா...
அப்பவும் இப்படி தான் அந்த 16 வயசு பொண்ண கூப்பிட்டு பேசினா,

நோக்கு எல்லாம் வியாதியும் போயி நன்னாயிடுவ... கூடிய சீக்கிரம் நீ ஆசைப்பட்ட படிப்ப படிக்க தான் போறேன்னு அந்த பொண்ணுன்ட என் அம்மா சொன்னா ....
எங்களுக்கு எதுவுமே புரியல .. அப்புறம் அவா அம்மாண்ட
விசாரிச்சுதுல அந்த பொண்ணுக்கு வலிப்பு வியாதியாம்... அப்புறம் அந்த பொண்ணோட அம்மா அட்ரஸ் கேட்டா நாங்க துபாய் அட்ரஸ கொடுத்துட்டு வந்துட்டோம்...ஆறு மாசம் கழிச்சு அந்த பொண்ணுக்கு உடம்பு நன்னா ஆயிடுத்து... அந்த பொண்ணு ஆசைப்பட்ட மாதிரி ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் படிக்கறான்னு லெட்டர் எழுதி இருந்தா... அதுக்கப்புறம் இன்னைக்கு தான் உன்னோடு என் அம்மா பேசியிருக்கா ... அவா சொன்ன மாதிரி நீ இன்னும் சௌக்கியமா இருக்க போற ..." என சுமித்ரா ஆத்மார்த்தமான சந்தோஷத்துடன் பேசி முடிக்க,
அப்போது தான் மனையாளின் நெற்றியில் இருந்த மஞ்சள் குங்குமத்தை அர்ஜுன் ஆழ்ந்து நோக்க

அது அவளுக்கு அழகுடன், புது பொலிவை கொடுத்திருந்ததை மெய்மறந்து ரசித்தவனின் முதுகில் விஷ்ணு ஓங்கி தட்டி

"அண்ணே, என்ன நடக்குது இங்க .." என்றான் அர்ஜுனின் பார்வையை அறிந்து.

" ஒன்னும் இல்லடா..." என்றான் சிறு வெட்கத்தோடு.

உடனே விஷ்ணு
" அண்ணனுக்கு ஒரு கர்ச்சீப் பார்சல் ..." என சத்தமாக கூற,

" டேய் வாய மூடுடா , ஏன்டா ..." என்றான் சன்னமாக.

" வழியறதை தொடச்சிக்க தான்..."

" நீ வாங்க போற விஷ்ணு ..." என்றான் குலுங்கி சிரித்தபடி.

பிறகு இருவரும் மௌனமாக வீடு நோக்கி பயணப் பட்டாலும், அவர்கள் மனதில் பாட்டியின் வார்த்தைகள் மட்டும் மீண்டும் மீண்டும் வித்தியாசமான அலைவரிசையில் அலைமோதிக் கொண்டிருந்தன.

அவர்கள் வீட்டை அடையும் பொழுது மணி பதினொன்றை தொட்டிருக்க,
அஷ்வத் அதிகம் விளையாடி, உண்டு, களைத்ததால் காரின் பின் இருக்கையிலேயே உறங்கிவிட,
அவன் உறக்கம் கலைக்காமல் தோளில் சுமந்து கொண்டு, அர்ஜுனின் அறைக்குச் சென்று கிடத்தியவளுக்கு, ஏனோ உடன் படுத்துறங்க என்றுமில்லாத தயக்கம் ஏற்பட, விறுவிறுவென்று தன் அறைக்குச் சென்று விட்டாள்.

அர்ஜுன் காரை போர்டிகோவில் நிறுத்திவிட்டு, படிகளில் ஏறிக் கொண்டிருக்கும் போது அவனது தொலைபேசி சிணுங்க, உயர் அதிகாரிகள் மற்றும் நண்பர்களிடமிருந்து புது வருடத்திற்கான வாழ்த்துச்செய்திகள் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்க, ஒருவழியாக அவர்களிடம் பேசி முடித்துவிட்டு, தன் அறைக்குச் சென்றவன் அஷ்வத் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதை கண்டதும் , இரவு விளக்கை எரிய விட்டு,புத்துணர்வு பெற குளியலறைக்கு செல்ல எத்தனிக்கும் போதுதான்
அக்னியை பற்றிய நினைவு வர

கௌரவை சந்தித்ததிலிருந்து அவன் அறையில் உறங்குவதையே வழக்கமாக்கிக் கொண்டிருந்தவள் , தற்போது அறையில் இல்லை என்றதும் துணுக்குற்றவன், அவள் அறைக்குச் செல்ல முற்படும் போது, அவன் மனம் தடை விதித்தது. காரணம் மாலையிலிருந்தே அவன் மனம் அவன் கட்டுப்பாட்டில் இல்லை என்பதை அது உணர்த்த , சில நிமிடங்கள் தனக்குள்ளே போராடியவன், பிறகு பின்வாங்க மனமில்லாமல் அவள் அறைக்குச் சென்றான்.

கொட்டும் பனியில், பால்கனியின் ஒரு ஓரத்தில் , வெந்தய நிற கையில்லா சட்டை மற்றும் அதே வண்ணத்தில் சிறு சிறு கரும் பூக்களிட்ட முழங்கால் வரையிலான பாவாடையில், தன் நீண்ட கூந்தலை காற்றில் பறக்க விட்டபடி பால் நிலாவை இலக்கில்லா பார்வையால் பார்த்துக்கொண்டே நின்றிருந்தவளின் அருகில் சென்றவன், அப்போது தான் ஒன்றை கவனித்தான்.

சற்று முன் அவள் நெற்றியில் இருந்த பொட்டும், குங்குமமும் இப்பொழுது துடைத்தெறியப்பட்டிருக்க, அதனை கண்டதும் அவன் கோபம் கட்டுக்கடங்காமல் கொப்பளிக்க,

" உனக்கு பொட்டு வச்சிக்கிறதுல என்னடி பிரச்சனை ... இனிமே நீ பொட்டு வச்சிக்கிற....பொட்டு மட்டும் இல்ல வகுட்டுல சிந்தூரும் வச்சிக்கிற...
முக்கியமா எனக்காக வச்சிக்கிற ...
இனிமே உன்னை இப்படி வெத்து நெத்தியா பார்த்தேன்னா..." என்றவன் அவளை முரட்டுத்தனமாக அணைக்க,
அதில் சிலிர்த்து தலை நிமிர்ந்தவளின் பின் கழுத்தை இடக்கரத்தால் அழுந்த பற்றி அவள் நெற்றியோடு தன் நெற்றியை ஒற்றி
தன் நெற்றி குங்குமத்தை அவள் நெற்றிக்கு இடம் மாற்றியவன், அப்போதுதான் அவள் கண்களைக் கவனித்தான்.

அதில் கண்ணீர் பளபளக்க, தயக்கம், தவிப்பு, குற்ற உணர்வு,
ஆற்றாமை என எல்லாவிதமான எதிர்மறை எண்ணங்கள் வியாபித்திருக்க, அப்போதுதான் ஆச்சாரியா சொன்னது நினைவிற்கு வந்தது.

இத்தனை நாட்களாக அஜய் மட்டுமே குடியிருந்த அவள் மனதில், அவனை
வம்படியாக நகர்த்திவிட்டு அர்ஜுன் சிம்மாசனம் போட்டு அமர ஆரம்பித்ததால் ஏற்பட்ட மனச் சலனம், குழப்பமெல்லாம் குற்ற உணர்வாக
குமிய ஆரம்பித்ததையே பாவையின் கண்கள் பிரதிபலிக்க, முதன்முதலாக அவள் பூவுடல் மேனியில் ஆழ்ந்து புதைந்திருந்தவனின் பார்வை
அவள் பார்வையோடு சங்கமிக்க, துக்கத்தால் உதடு துடித்தவள் தன் பார்வையை விலக்கிக் கொண்டு விலக எத்தனிக்க, அதனை செயல்படுத்த விடாமல் மேலும் இறுக்கி அணைத்தோடு அவள் கண்களில் இதழ் ஒற்ற நினைத்து குனியும் போது,

அதிரடியாக வானவெளியில் காணும் திசையெங்கும் ஜொலிக்கும் வண்ணங்களில் மத்தாப்புகளாய் வெடி நட்சத்திரங்கள்
வெடித்து ஒளிர, அதன் திடீர் வெளிச்சத்திலும், சப்தத்திலும் அனிச்சையாய் இருவரின் பார்வையும் ஒரு சேர வானில் தோன்றிய வான வேடிக்கையை பார்க்க,
'ஹாப்பி நியூ இயர்' என்ற வாழ்த்து வெவ்வேறு தோற்றங்களில் ஒளிர்ந்து மிளிர, ஒரு நொடிக்கும் குறைவான அந்த வெளிச்சம், அதுவரையில் அவள் மனதில் மண்டிக்கிடந்த துன்பம் என்னும் காரிருளை சற்றே அகற்ற,
புதிதாய் தோன்றிய அந்த சிறு மாற்றத்தை கண்ணீரோடு கண்களில் தேக்கியபடி திரும்பியவளின் கண்களை பார்த்து
"ஹாப்பி நியூ இயர்..." என்றான் கண்ணில் காதலோடு.

தகிப்பாள்
 
Status
Not open for further replies.
Top