1.இனம் புரியா தேடலில் நாம்!
தோய்ந்து, கிழிந்த நாராக படுத்துக் கிடந்த தன்னவளை காண்கையில் கண்களில் வழியும் நீர்த்திரை மறைக்க, அதை துடைத்துக் கொண்டவனுக்கே தனது கண்ணீர் ஆச்சரியத்தை கொடுத்தது என்றால் மிகையாகாது. நரம்பூசி செலுத்தப்பட்டிருக்கும் அவனவள் கரத்தை பிடித்து தடவிக் கொடுத்தபடி "நான் மட்டும் வரலைனா உ.. உனக்கு என்ன ஆகிருக்கும்? ஏன்டி என்ன தவிக்க வச்சுகிட்டு இருக்க?" என, கேட்கும் புலன் தற்காலிகமாக அணைக்கப்பட்டு மயக்கத்தில் இருந்தவளுடன் வாதமிட்டான்.
அணுவசைவையும் உன்னிப்பாக நோட்டமிடும் நண்பனின் செவிகள் மட்டுமன்றி ஐம்புலனும் செயலிழந்ததோ? என வியக்கும்படி, தான் வந்தது உணராது பிதற்றிக் கொண்டிருந்தவன் முன் வந்து அவனது கண்ணீரில் திடுக்கிட்டுப் போனான் வசீகரன். இதுநாள் வரை அஞ்சா நெஞ்சன், பயமறியாதவன், ஏன் கல்நெஞ்சன் எனவெல்லாம் பட்டம் பெற்ற நமது நண்பனா கலங்குவது?' என திடுக்கிட்ட வசி நண்பன் தோளில் கரம் வைத்து "அ.. ஆதி.." என்க கலங்கிய விழிகளுடன் "ம.. மச்சான்.. இவ எப்படா முழிப்பா?" எனக் கேட்டான் ஆதித்த கிருஷ்ணன். இல்லை இல்லை ஐ.பி.எஸ். ஆதித்த கிருஷ்ணன்.
"டேய்.. மதுவுக்கு ஒன்னுமில்லடா. நீ சரியான நேரத்துல கொண்டு வந்து சேத்துட்ட. நீ கொஞ்சம் தாமதம் பண்ணிருந்தாலும், நிலமை கவலையாகி இருக்கும். நவ் ஷி க்ராஸ்ட் தெ டேஞ்சர்" என வசீகரன் கூற கலக்கம் மாறாத முகத்துடன் "பித்து பிடிச்சவ போல போறாடா. நான் மட்டும் அங்க இல்லை.. நினைச்சு பார்க்கவே நடுங்குதுடா" என ஆதி கூறினான். நண்பனின் தோளை தட்டிக் கொடுத்த வசிக்கும் ஆதிக்கும் முந்தைய நாள் காலையின் நினைவுகள் வந்தன.
இரு நாளாக இனம் புரியாத பாரத்துடன் இருந்த ஆதியின் மனம் அன்று தாளம் தப்பித் துடித்துக் கொண்டிருந்தது. பெங்களூரு மாநகரத்தின் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலில் நின்றுக் கொண்டிருந்தது அந்த கருப்பு நிற இரும்புக் குதிரை. கரும் இருசக்கர வாகனம்! அதில் வெள்ளி நிறத்தில் 'ராயல் என்ட் ஃபீல்ட்' என பொறிக்கப்பட்டிருந்தது. அதில் ஒய்யாரமாக அமர்ந்து கருப்பு நிற குளிர் கண்ணாடியை அணிந்தபடி காக்கி உடைக்கே உரிய கம்பீரத்துடன் இருந்தான் ஆதித்த கிருஷ்ணன்.
காரணமற்று வாடியிருந்த முகத்துடன் இருந்தவன் தான் எனினும் முகத்தில் உள்ள கம்பீரத்துக்கும் பார்வையில் உள்ள கூர்மைக்கும் குறைவு இல்லை என தான் கூற வேண்டும். அப்படிபட்ட கூர்மையான விழிகளில், பச்சை குறி காட்டபட்டு நகரும் வேளை ஏதோ பித்து பிடித்தார் போல் எங்கோ வெறித்தபடியும் சாலை நெரிசலை உணராதபடியும் நடந்து வந்து கொண்டிருந்த அவனவள், மதுராந்தகி பட்டாள். ஆடவன் விழிகள் விரிந்து சுருங்கும் நொடிக்குள் அவள் வருகையை எதிர்பாராமல் வந்த டெம்போ அவளை இடித்திட, ஒரே சூழலற்சியில் அவனுக்கு சமீபமாக வந்து விழுந்தாள் ரத்த வெள்ளத்துடன்.
"மதுரா..!" என்றவனது கர்ஜனையில் அந்த மொத்த கூட்டமும் திகைத்து நின்றது என தான் கூற வேண்டும். சட்டென வண்டியை விட்டு இறங்கியவன் அவள் முகத்தை கையில் ஏந்த, ரத்தப் பிசுபிசுப்பு அவன் கையில் ஒட்டியது. "மதுரா.. மகி மா.." என அவள் கன்னம் தட்டியவன் சுற்றி முற்றி பார்க்க வேதனையிலும், உணர்வுகள் அற்று பொழுது போக்குக்கும் நின்றுக் கொண்டிருந்த பொது மக்களின் பார்வை கோபத்தை கிளப்பியது. ஒருவராவது அவசர எண்ணிற்கு அழைப்பரா என எதிர்பார்த்தவன் முன் போக்குவரத்து காவலர் ஓடி வந்தார்.
"நானு அவள மேலே குகிடே சார்.. ஆடரே உன்மடடண்டே நடேடலு. அவலன்னு நில்லிசுவு மொடலு எல்லவு சம்பவிசிட்டி. லெட்ஸ் டேக் ஹேர் டூ ஹாஸ்பிடல் (நான் இந்த பெண்ணிடம் கத்தினேன். ஆனால் மன நலம் பாதிக்கப்பட்டவள் போல் நடந்து வந்தாள். அவளை தடுக்கும் முன் அனைத்தும் நடந்துவிட்டன. இவளை உடனே மருத்துவமனை அழைத்துச் செல்வோம்)" என அந்த காவலர் கன்னடத்தில் கூறி துரிதப்படுத்த, அவளை தூக்கிக் கொண்டு ஒரு வண்டியை பிடித்து ஏறியவன், தன் வண்டி சாவியை அந்த அதிகாரியிடம் கொடுத்து ஓரமாக நிறுத்தி வைக்கும்படி கேட்டுக் கொண்டான்.
'இவள் என்னவள் தானா?' என மீண்டும் மீண்டும் மனம் கேட்ட கேள்வியில் கண்கள் நம்பவேண்டிய உண்மையை 'ஆம்' என கண்ணீர் மூலம் கூறியது. தனது ஆருயிர் நண்பனான வசீகரனின் மருத்துவமனையில் வண்டி நிற்க அவளை கையில் தூக்கிக் கொண்டு "வசீ.." என்ற கர்ஜனையுடன் மருத்தவமனையை இடித்துத் தள்ளும் வேகத்துடன் வந்தான். நண்பனின் கோலம் கண்டு திடுக்கிட்ட வசி, அவன் கையில் கிடக்கும் மதுராந்தகியை கண்டு மேலும் அதிர, அவள் நிலை அவனை நிலைப்படுத்தியது. அவளுக்கான சிகிச்சைகளை துவங்கிய வசீகரன் "மச்சி.. நீ ஒன்னும் பயப்படாத மதுக்கு ஒன்னும் ஆகாது" என நம்பிக்கை கூறி சென்றான். இதோ இன்று சிகிச்சை நல்லபடி முடிந்து அவள் விழிப்பதற்காக காத்துக் கொண்டிருந்தனர்.
நெற்றியோரம் சற்று பலத்த அடி மற்றும் கை எலும்பு முறிந்ததால் (bone fracture) ஓஆர்ஐஎஃப் (ORFI) எனப்படும் உடைந்த எழும்பை சரிசெய்யும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. காலில் நரம்பு பிசகிய வீக்கமும், சில காயங்களும் என படுத்துக் கிடப்பவளை பார்க்க பார்க்க இருவருக்கும் பாவமாக இருந்தது. "மச்சி.. பழசெல்லாம் மறந்திருப்பாளா?" என பயத்துடன் கேட்ட ஆதியை பார்த்து "இல்ல மச்சி.. மறக்குறதுக்கு வாய்ப்பில்ல" என்றவன் "ஞாபகம் இருந்தா மட்டும் உன்ன அவளுக்கு தெரியவா போகுது?" என கேட்டான். அதில் நண்பனை முறைத்தவன் "அவளுக்கு என்ன பிரச்சனைனு தெரிய வேண்டாமா?" என கேட்க "டேய் கூல்டா.. சும்மா நீ இதுக்காவது சிரிப்பியானு சொன்னேன். பாரு, மதுவுக்கு ஒன்னும் இல்லை. நீ வீணா எதையும் யோசிக்காத. முதல்ல வீட்டுக்கு போய் ஃப்ரஷ் ஆகிட்டு வா" என வசி கூறினான்.
அவனவளை பிரிய மனமில்லாத போதும், நீரடியில் நின்று தன் வெப்பம் தீர்க்க ஆசை கொண்டவன் சிறு தலையசைப்புடன் புறப்பட்டான். பெங்களூரின் மிக பிரசித்தி பெற்ற ஆடை வடிவமைப்பு நிறுவனம் நடத்தி வரும் ஆதித்யன் மற்றும் யசோதாவின் ஒற்றை வாரிசே நமது நாயகன் ஆதித்த கிருஷ்ணன். ஆதித்யன் மற்றும் யசோவின் தொழில் மற்றும் ஆதித்தியனின் சிறுவயது நண்பரான கதிர்வேலன் மற்றும் அவர் மனைவி கல்யாணியின், ஒன்று போல இருக்கும் இரட்டை பிள்ளைகளே வசீகரன் மற்றும் வம்சீகரன்.
தந்தையை போல் அடுத்த தலைமுறையினரும் அதே நட்பு கொண்டு வளர்கின்றனர். நட்புக்காக தங்களையும் இழக்காது, தங்கள் ஆசைக்காக நட்பையும் இழக்காத தோழர்கள் மூவரும் மூன்று வெவ்வேறு துறைகளில் பணி புரிந்து வருகின்றனர். ஆதித்தன் தனது பாதையை காவலனாக தொடர, வசி அறுவை சிகிச்சை நிபுனராகவும், வம்சி நுண்ணுயிரியலில் பட்டப் படிப்பாளனாகவும் தொடர்கின்றனர். மூவருமே இருபத்தி ஆறு வயதுடைய கட்டிளம் காளைகள். நமது நாயகியோ இருபது வயது பதுமைப் பெண்.
இங்கு வீடு வந்த மகனைக் கண்ட யசோதா "கண்ணா! என்ன ரெண்டு நாளா ஆளயே காணும்?" என கேட்க சிவந்த கண்களும் இறுகிய முகமுமாக நிமிர்ந்தான். "தம்பி! என்னாச்சுப்பா?" என தாயவள் பதற சமையலறையிலிருந்து ஆதித்யன் வந்தார். "யசோ.." என மனைவியை அழைத்தவர் பார்த்த பார்வை என்ன கூறியதோ? மகனிடம் திரும்பி "போய் குளிச்சுட்டு வாடா கண்ணா" என்றார். உள்ளே சென்றவன் நீருக்கடியில் மன உஷ்ணம் தீர்க்க வேண்டி கண்களை இறுக மூடி நிற்க, கண்ணுக்குள் வந்து சிரித்தாள் அவனவள்.
அங்கு யசோதா "ஏங்க என்னாச்சு? ஏன் இவன் ஒரு மாதிரி இருக்கான்" என கேட்க ஒரு பெருமூச்சு விட்டு "எ..ஏதோ கேஸ் விஷயம்" என்றவர் "மதுராந்தகிய உனக்கு ஞாபகம் இருக்கா யசோமா?" என கேட்டார். பளிச்சென்ற புன்னகையுடன் "ஏன் இல்ல? நல்ல துருதுருனு சுத்திட்டு இருப்பாளே! அவள மறப்பேனா?" என யசோ கூற "அவளுக்கு ஆக்சிடென்ட் ஆகிடுச்சு யசோமா. நம்ம வசி ஹாஸ்பிடல்ல தான் சேத்திருக்கான். ஆபரேஷன் நல்லபடியா முடிஞ்சது. ஆனா மது இன்னும் கண்ணு முழிக்கலை" என ஈன ஸ்வரத்தில் கூறினார்.
அதில் திடுக்கிட்டு போனவர் "அச்சச்சோ! என்னங்க சொல்றீங்க? உங்களுக்கு எப்படி தெரியும்?" என்று கூறி "அதானே.. இந்த மூணு வானரங்களும் உங்க கிட்டயும் கதிரண்ணா கிட்டயும் மட்டும் எல்லாத்தயும் ஒப்பிப்பானுங்க. என்கிட்டயும் கல்யாணி கிட்டயும் ஒன்னும் சொல்றது இல்ல. சரி இப்போ அந்த பொண்ணுக்கு ஒன்னுமில்ல தானே?" என்க "ஒன்னுமில்ல தான்.. ஆனா இன்னும் கண்ணு முழிக்கலை" என மனைவி பொறிந்ததை எல்லாம் கேளாதவர் போல் கடைசியாக கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் கூறினார்.
"சரிங்க.. கண்ணு முழிச்சா சொல்லுங்க, போய் பாத்துட்டு வருவோம்" என கூற "ம்ம் டா" என்றார்.
நீரே அவன் உஷ்ணம் தணிக்க முடியாமல் அலுத்துப் போன பின்பே குளியலறை விட்டு வந்தான். வேட்டியும் டி-ஷர்ட்டும் அணிந்துக் கொண்டு தலையை துவட்டியபடி வந்தவனுக்கு உணவுடன் வந்த யசோ "ஒன்னும் ஆகாதுடா கண்ணா. அதான் ஆபரேஷன் நல்லபடியா முடிஞ்சதுல்ல? அந்த பொண்ணு சீக்கரம் கண்ணு திறந்திடும். உன் கேசும் நல்லபடியா முடியும். சாப்பிடு" என வெள்ளந்தியாக கூறினார். வருத்தம் மிகுந்த புன்னகை புரிந்தவன் அன்னைக்காக உணவை உன்ன "டேய் மச்சி!" என்றபடி வம்சி வந்தான்.
"வாங்க மைக்ரோபயாலஜிஸ்ட்.." என கையில் வெள்ளை அங்கி மற்றும் சில புத்தகங்களுடன் வந்தவன் கோலம் கண்டு அவனை அடையாளம் கண்டு கொண்ட ஆதித்யன் கூறினார். அவரை கண்டு திடுகிட்டவன் "ஆதிப்பா.. நீங்க எப்போ வந்தீங்க?" என கேட்க "நான் வந்து ரெண்டு நாள் ஆகுதுடா. உன்ன தான் ஆள காணும்" என கூறினார். ஆதித்யன் மற்றும் கதிர்வேலின் குடும்பம் ஒரே வீட்டில் ஒன்றாக தங்கி வருகின்றனர். இப்போது இவர்கள் இருக்கும் வீடோ ஆடவர்கள் மூவரின் பணி நிமித்தம் வேண்டிய வசதிகள் கொண்டு மூவரும் அமைத்துக் கொண்ட வீடு. தாங்கள் இருக்கும் வீட்டிலேயே என்றால், பெற்றோருக்கு எதும் ஆபத்து வரும் வாய்ப்பும், வேலை விடயங்களில் தனிமை இல்லாத உணர்வும் இருக்கும் என உணர்ந்த மூவரும் தங்களுக்குள் தனிமை அவசியம் இல்லை என தங்கள் வீட்டிற்கு சற்றே தொலைவில் உள்ள இந்த வீட்டை அமைத்துக் கொண்டனர். சுருக்காக சொல்லப் போனால், பணிக்கென்று அமைத்துக் கொள்ளப்பட்ட வீடு.
ஆதித்யன் கூறியதில் புன்னகைத்துக் கொண்டவன் வாசம் பிடிப்பது போல் பாவனை செய்து "ஆஹா.. ஆதிப்பா, உங்க சமையலோ?" என கேட்க வாய்விட்டு சிரித்தவர் "இரு வரேன்" என செல்ல, அவனுக்கு நீர் கொண்டு வர யசோதாவும் சென்றார். அமைதியாக இவர்கள் சம்பாஷணைகளை பெயருக்கு காதில் வாங்கிக் கொண்டிருந்த ஆதித்தனின் அருகில் அமர்ந்த வம்சி கிசுகிசுப்பான குரலில் "மச்சி! வசி ஃபோன் பண்ணிருந்தான். உள்ள லேப்ல இருந்ததால எடுக்க முடியலை. இப்போ தான் பாத்து கூப்பிட்டேன், அ.. அவன் சொல்றதுலாம் உண்மையா? என்னாச்சு? எங்க ஆக்சிடென்ட்?" என கேட்டான். நண்பனை நிமிர்ந்து பார்த்தவன் பார்வையே 'ஆம்' என்பது போல் இருக்க விபத்து நடந்த இடத்தை கூறிவிட்டு மீண்டும் தலையை அவன் குனிந்துக் கொள்ளவும் பெற்றோர் இருவரும் வெளி வரவும் சரியாக இருந்தது.
'ஷப்பா.. உஷாரு தான்டா நீ' என எண்ணிய வம்சி ஆதித்யனிடமிருந்து உணவை வாங்க "சரிடா.. நாங்க கிளம்பறோம்" என ஆதித்யன் கூறினார். ஆடவர்கள் இருவரும் 'சரி' என்பதுபோல் தலையசைக்க "ஆதி! அந்த பொண்ணு கண்ணு முழிச்சா சொல்லுடா. அம்மா பாக்க வரேன்" என யசோதா கூறிச் சென்றார்.
இருவரும் சென்றதும் "மச்சி! என்னடா இது? நம்ம லாஸ்ட்டா மதுவ ஒருவாரம் முன்ன கூட பாத்தோமேடா? நல்லா துருதுருனு சந்தோஷமா தானே இருந்தா? சரி திவி எங்க? ரெண்டு நாளாச்சு, இன்னுமா திவி இவள தேடலை?" என வம்சி கேள்விகளை அடுக்க "எனக்கும் அதான் இன்னும் புரியலை மச்சி. நகமும் சதையுமா தானே ரெண்டும் சுத்துங்க? இவ அட்மிட் ஆகி ரெண்டு நாளாச்சு, ஆனா அவள ஆளயே காணும். என்னமோ நடந்திருக்கு. மதுரா கண்ணுமுழிச்சா தான் தெரியும்" என ஆதி கூறினான்.
ஒரு பெருமூச்சை விட்ட ஆதி "சரி உன் ரிசர்ச் (ஆய்வு) எப்டி போகுது? எப்போ சார் பட்டம் வாங்குவீங்க?" என கேட்க "ம்ம்.. முடிஞ்சது மச்சி. அந்த லேப் டீன் பிரசாத் சாரே என்ன பி.எச்.டி முடிச்சதும் அங்க ஜாயின் பண்ணிக்க சொல்லிட்டார்" என கூறினான். "சூப்பர்டா.. ஆனாலும் அவருக்கு உன் மேல தனி பிரியம் தான். முதல்ல கிடைக்கும் இடத்துல சேரு. அப்டியே பிக்கப் ஆகிக்கலாம்" என ஆதி கூற "நல்லா தின்னுங்கடா. ஒருத்தன் பசில இருப்பான் அவனுக்கு சாப்பாடு குடுத்துட்டு வந்து சாப்பிடுவோம்னு கொஞ்சமாவது இரக்கம் இருக்கா? அதுசரி.. உங்க கிட்ட அதுலாம் எதிர்பாக்க முடியுமா? மிச்சம் மீதி எதும் இருக்கா இல்லையா?" என கேட்டபடி உள்ளே வந்தான், வசீகரன்.
அதில் சிரித்த இருவரில் "நீ ஒருத்தன் இருக்குறதையே மறந்துட்டோம்டா. மிச்சம் இருக்குனு தான் நினைக்கேன்" என்றபடி உள்ளே சென்ற வம்சி "டேய் உடன்பிறப்பு! இருக்குடா. நல்லவேலை வந்த, இல்ல மிச்சம் மீது எதுக்குனு நம்ம திவாக்கு போட்டிருப்போம்" என கத்தினான். அதில் அத்தனை நேரம் வெளியே படுத்திருந்த அவர்களின் திவா உள்ளே துள்ளிக் கொண்டு வர உடன்பிறந்தவனையும் நண்பனையும் முறைத்துக் கொண்டிருந்தவன் அந்த நன்றியுள்ள பிராணியும் இவர்களது வளர்ப்பு நாயுமான திவாவை பார்த்து "வாடா வா! ஏதோ மிச்சம் மீதி தான் இருக்காம். எனக்கு பசிக்குது சொல்லிட்டேன். பங்குக்கு வந்த மவனே கொண்டுபோய் ப்ளூ க்ராஸ்ல கொடுத்துட்டு வந்திடுவேன் உன்ன" என வசி கூறினான்.
அதில் பாவமாக முகத்தை வைத்துக் கொண்ட திவாகரன் (ஆதித்தன்லருந்து இரண்டாம் எழுத்து 'தி', வசியோட முதல் எழுத்து 'வ' , வம்சீகரனோட கடைசி எழுத்துக்களான 'கரன்' சேர்த்து மூணு பேரும் ஆசையாய் வளர்க்கும் நாய்) ஈன ஸ்வரத்தில் சத்தம் எழுப்ப, அந்த புசுபுசு பழுப்பு நிற (brown) நாயை தூக்கிக் கொண்ட ஆதி அதன் தலையை கோதியபடி "டேய் பாவம்டா" என கூறி "நீ வாடா செல்லம்.. இவன் கிடக்கான். மச்சி! இந்த நாய்க்கு சோறில்லைனாலும் பரவாயில்லை திவாக்கு எடுத்து வை" என கத்தினான். அதில் விரக்தியாக சிரிப்பது போல பாவனை செய்தவன் "உண்மையான மனுஷன நாய்னு சொல்லி தொறத்துரானுங்க, நாய்க்கு மனுஷன் பேர வச்சு மரியாதையா நடத்துறானுங்க. வர வர இந்த நாய்க்கு கிடைக்குற மரியாதை கூட நமக்கு இல்ல" என கூறிக் கொண்டதில் யாவரும் சிரித்தனர்.
பொழுது ஓடிட, மாலை நேரம் ஆடவர்கள் மூவரும் மருத்துவமனை வந்தனர். வசீகரனிடம் படபடப்புடன் வந்த செவிலி "டாக்டர், ரெண்டு நாள் முன்ன அட்மிட் பண்ண அந்த பொண்ணு கண்ணு முழிச்சு பயங்கரமா கத்திட்டு இருக்காங்க" என கூற "வாட்?" என்று மூவரும் பதறிக் கொண்டு வந்தனர். நால்வரும் உள்ளே நுழைய கட்டிலின் ஓரம் மிரண்டு சுருண்டு அமர்ந்திருந்த பெண் "ஆ.. ஆ.. வெ.. வேணாம்.." என கத்த உள்ளிருந்த செவிலியோ "ஒன்னுமில்லம்மா, இங்க பாரு" என அவளை சமாதானம் செய்ய முயற்சித்துக் கொண்டிருந்தாள்.
"சிஸ்டர்! என்னாச்சு?" என வசி கேட்க "ட்ரிப்ஸ் மாத்த வந்தேன் டாக்டர். இவங்க கண்ணு முழிச்சாங்க. உடம்பு எப்டி இருக்குனு விசாரிச்சேன், பதறி போய் எல்லாதயும் தட்டிவிட்டு கத்த ஆரம்பிச்சுட்டாங்க" என கூறினார். "சரி சீக்ரம் **** இன்ஜெக்ஷன் எடுத்துட்டு வாங்க" என கூறியவன் மதுவை நெருங்கி "மது! காம் டவுன். ஒன்னுமில்லடா. நான் தான்டா வசீ அண்ணா.." என்றபடி கூற அவனை கண்டு மருண்டவள் "ஆ.. வேணாம்.. வராத.." என கத்தினாள்.
இனி சரிப்பட்டு வராது என உணர்ந்த வசி "வம்சி, ஆதி கொஞ்சம் இவள புடிங்கடா" என்க ஆதி சிலை போல நின்றிருந்தான். அதை கண்டவன் ஊசியுடன் வந்த செவிலியை ஒருபுறமும் வம்சியை ஒருபுறமுமாக பிடித்துக் கொள்ளும்படி கூறி அந்த மயக்க ஊசியை அவளுக்கு செலுத்த, கத்தி கதறியப் பெண் கொஞ்சம் கொஞ்சமாக மயங்கி ஓய்ந்தாள்.
-தேடல் தொடரும்..
உங்கள் பொன்னான கருத்துக்களை கீழே உள்ள கருத்துத் திரியில் பதிவிடுங்கள் தங்கம்ஸ்
தோய்ந்து, கிழிந்த நாராக படுத்துக் கிடந்த தன்னவளை காண்கையில் கண்களில் வழியும் நீர்த்திரை மறைக்க, அதை துடைத்துக் கொண்டவனுக்கே தனது கண்ணீர் ஆச்சரியத்தை கொடுத்தது என்றால் மிகையாகாது. நரம்பூசி செலுத்தப்பட்டிருக்கும் அவனவள் கரத்தை பிடித்து தடவிக் கொடுத்தபடி "நான் மட்டும் வரலைனா உ.. உனக்கு என்ன ஆகிருக்கும்? ஏன்டி என்ன தவிக்க வச்சுகிட்டு இருக்க?" என, கேட்கும் புலன் தற்காலிகமாக அணைக்கப்பட்டு மயக்கத்தில் இருந்தவளுடன் வாதமிட்டான்.
அணுவசைவையும் உன்னிப்பாக நோட்டமிடும் நண்பனின் செவிகள் மட்டுமன்றி ஐம்புலனும் செயலிழந்ததோ? என வியக்கும்படி, தான் வந்தது உணராது பிதற்றிக் கொண்டிருந்தவன் முன் வந்து அவனது கண்ணீரில் திடுக்கிட்டுப் போனான் வசீகரன். இதுநாள் வரை அஞ்சா நெஞ்சன், பயமறியாதவன், ஏன் கல்நெஞ்சன் எனவெல்லாம் பட்டம் பெற்ற நமது நண்பனா கலங்குவது?' என திடுக்கிட்ட வசி நண்பன் தோளில் கரம் வைத்து "அ.. ஆதி.." என்க கலங்கிய விழிகளுடன் "ம.. மச்சான்.. இவ எப்படா முழிப்பா?" எனக் கேட்டான் ஆதித்த கிருஷ்ணன். இல்லை இல்லை ஐ.பி.எஸ். ஆதித்த கிருஷ்ணன்.
"டேய்.. மதுவுக்கு ஒன்னுமில்லடா. நீ சரியான நேரத்துல கொண்டு வந்து சேத்துட்ட. நீ கொஞ்சம் தாமதம் பண்ணிருந்தாலும், நிலமை கவலையாகி இருக்கும். நவ் ஷி க்ராஸ்ட் தெ டேஞ்சர்" என வசீகரன் கூற கலக்கம் மாறாத முகத்துடன் "பித்து பிடிச்சவ போல போறாடா. நான் மட்டும் அங்க இல்லை.. நினைச்சு பார்க்கவே நடுங்குதுடா" என ஆதி கூறினான். நண்பனின் தோளை தட்டிக் கொடுத்த வசிக்கும் ஆதிக்கும் முந்தைய நாள் காலையின் நினைவுகள் வந்தன.
இரு நாளாக இனம் புரியாத பாரத்துடன் இருந்த ஆதியின் மனம் அன்று தாளம் தப்பித் துடித்துக் கொண்டிருந்தது. பெங்களூரு மாநகரத்தின் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலில் நின்றுக் கொண்டிருந்தது அந்த கருப்பு நிற இரும்புக் குதிரை. கரும் இருசக்கர வாகனம்! அதில் வெள்ளி நிறத்தில் 'ராயல் என்ட் ஃபீல்ட்' என பொறிக்கப்பட்டிருந்தது. அதில் ஒய்யாரமாக அமர்ந்து கருப்பு நிற குளிர் கண்ணாடியை அணிந்தபடி காக்கி உடைக்கே உரிய கம்பீரத்துடன் இருந்தான் ஆதித்த கிருஷ்ணன்.
காரணமற்று வாடியிருந்த முகத்துடன் இருந்தவன் தான் எனினும் முகத்தில் உள்ள கம்பீரத்துக்கும் பார்வையில் உள்ள கூர்மைக்கும் குறைவு இல்லை என தான் கூற வேண்டும். அப்படிபட்ட கூர்மையான விழிகளில், பச்சை குறி காட்டபட்டு நகரும் வேளை ஏதோ பித்து பிடித்தார் போல் எங்கோ வெறித்தபடியும் சாலை நெரிசலை உணராதபடியும் நடந்து வந்து கொண்டிருந்த அவனவள், மதுராந்தகி பட்டாள். ஆடவன் விழிகள் விரிந்து சுருங்கும் நொடிக்குள் அவள் வருகையை எதிர்பாராமல் வந்த டெம்போ அவளை இடித்திட, ஒரே சூழலற்சியில் அவனுக்கு சமீபமாக வந்து விழுந்தாள் ரத்த வெள்ளத்துடன்.
"மதுரா..!" என்றவனது கர்ஜனையில் அந்த மொத்த கூட்டமும் திகைத்து நின்றது என தான் கூற வேண்டும். சட்டென வண்டியை விட்டு இறங்கியவன் அவள் முகத்தை கையில் ஏந்த, ரத்தப் பிசுபிசுப்பு அவன் கையில் ஒட்டியது. "மதுரா.. மகி மா.." என அவள் கன்னம் தட்டியவன் சுற்றி முற்றி பார்க்க வேதனையிலும், உணர்வுகள் அற்று பொழுது போக்குக்கும் நின்றுக் கொண்டிருந்த பொது மக்களின் பார்வை கோபத்தை கிளப்பியது. ஒருவராவது அவசர எண்ணிற்கு அழைப்பரா என எதிர்பார்த்தவன் முன் போக்குவரத்து காவலர் ஓடி வந்தார்.
"நானு அவள மேலே குகிடே சார்.. ஆடரே உன்மடடண்டே நடேடலு. அவலன்னு நில்லிசுவு மொடலு எல்லவு சம்பவிசிட்டி. லெட்ஸ் டேக் ஹேர் டூ ஹாஸ்பிடல் (நான் இந்த பெண்ணிடம் கத்தினேன். ஆனால் மன நலம் பாதிக்கப்பட்டவள் போல் நடந்து வந்தாள். அவளை தடுக்கும் முன் அனைத்தும் நடந்துவிட்டன. இவளை உடனே மருத்துவமனை அழைத்துச் செல்வோம்)" என அந்த காவலர் கன்னடத்தில் கூறி துரிதப்படுத்த, அவளை தூக்கிக் கொண்டு ஒரு வண்டியை பிடித்து ஏறியவன், தன் வண்டி சாவியை அந்த அதிகாரியிடம் கொடுத்து ஓரமாக நிறுத்தி வைக்கும்படி கேட்டுக் கொண்டான்.
'இவள் என்னவள் தானா?' என மீண்டும் மீண்டும் மனம் கேட்ட கேள்வியில் கண்கள் நம்பவேண்டிய உண்மையை 'ஆம்' என கண்ணீர் மூலம் கூறியது. தனது ஆருயிர் நண்பனான வசீகரனின் மருத்துவமனையில் வண்டி நிற்க அவளை கையில் தூக்கிக் கொண்டு "வசீ.." என்ற கர்ஜனையுடன் மருத்தவமனையை இடித்துத் தள்ளும் வேகத்துடன் வந்தான். நண்பனின் கோலம் கண்டு திடுக்கிட்ட வசி, அவன் கையில் கிடக்கும் மதுராந்தகியை கண்டு மேலும் அதிர, அவள் நிலை அவனை நிலைப்படுத்தியது. அவளுக்கான சிகிச்சைகளை துவங்கிய வசீகரன் "மச்சி.. நீ ஒன்னும் பயப்படாத மதுக்கு ஒன்னும் ஆகாது" என நம்பிக்கை கூறி சென்றான். இதோ இன்று சிகிச்சை நல்லபடி முடிந்து அவள் விழிப்பதற்காக காத்துக் கொண்டிருந்தனர்.
நெற்றியோரம் சற்று பலத்த அடி மற்றும் கை எலும்பு முறிந்ததால் (bone fracture) ஓஆர்ஐஎஃப் (ORFI) எனப்படும் உடைந்த எழும்பை சரிசெய்யும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. காலில் நரம்பு பிசகிய வீக்கமும், சில காயங்களும் என படுத்துக் கிடப்பவளை பார்க்க பார்க்க இருவருக்கும் பாவமாக இருந்தது. "மச்சி.. பழசெல்லாம் மறந்திருப்பாளா?" என பயத்துடன் கேட்ட ஆதியை பார்த்து "இல்ல மச்சி.. மறக்குறதுக்கு வாய்ப்பில்ல" என்றவன் "ஞாபகம் இருந்தா மட்டும் உன்ன அவளுக்கு தெரியவா போகுது?" என கேட்டான். அதில் நண்பனை முறைத்தவன் "அவளுக்கு என்ன பிரச்சனைனு தெரிய வேண்டாமா?" என கேட்க "டேய் கூல்டா.. சும்மா நீ இதுக்காவது சிரிப்பியானு சொன்னேன். பாரு, மதுவுக்கு ஒன்னும் இல்லை. நீ வீணா எதையும் யோசிக்காத. முதல்ல வீட்டுக்கு போய் ஃப்ரஷ் ஆகிட்டு வா" என வசி கூறினான்.
அவனவளை பிரிய மனமில்லாத போதும், நீரடியில் நின்று தன் வெப்பம் தீர்க்க ஆசை கொண்டவன் சிறு தலையசைப்புடன் புறப்பட்டான். பெங்களூரின் மிக பிரசித்தி பெற்ற ஆடை வடிவமைப்பு நிறுவனம் நடத்தி வரும் ஆதித்யன் மற்றும் யசோதாவின் ஒற்றை வாரிசே நமது நாயகன் ஆதித்த கிருஷ்ணன். ஆதித்யன் மற்றும் யசோவின் தொழில் மற்றும் ஆதித்தியனின் சிறுவயது நண்பரான கதிர்வேலன் மற்றும் அவர் மனைவி கல்யாணியின், ஒன்று போல இருக்கும் இரட்டை பிள்ளைகளே வசீகரன் மற்றும் வம்சீகரன்.
தந்தையை போல் அடுத்த தலைமுறையினரும் அதே நட்பு கொண்டு வளர்கின்றனர். நட்புக்காக தங்களையும் இழக்காது, தங்கள் ஆசைக்காக நட்பையும் இழக்காத தோழர்கள் மூவரும் மூன்று வெவ்வேறு துறைகளில் பணி புரிந்து வருகின்றனர். ஆதித்தன் தனது பாதையை காவலனாக தொடர, வசி அறுவை சிகிச்சை நிபுனராகவும், வம்சி நுண்ணுயிரியலில் பட்டப் படிப்பாளனாகவும் தொடர்கின்றனர். மூவருமே இருபத்தி ஆறு வயதுடைய கட்டிளம் காளைகள். நமது நாயகியோ இருபது வயது பதுமைப் பெண்.
இங்கு வீடு வந்த மகனைக் கண்ட யசோதா "கண்ணா! என்ன ரெண்டு நாளா ஆளயே காணும்?" என கேட்க சிவந்த கண்களும் இறுகிய முகமுமாக நிமிர்ந்தான். "தம்பி! என்னாச்சுப்பா?" என தாயவள் பதற சமையலறையிலிருந்து ஆதித்யன் வந்தார். "யசோ.." என மனைவியை அழைத்தவர் பார்த்த பார்வை என்ன கூறியதோ? மகனிடம் திரும்பி "போய் குளிச்சுட்டு வாடா கண்ணா" என்றார். உள்ளே சென்றவன் நீருக்கடியில் மன உஷ்ணம் தீர்க்க வேண்டி கண்களை இறுக மூடி நிற்க, கண்ணுக்குள் வந்து சிரித்தாள் அவனவள்.
அங்கு யசோதா "ஏங்க என்னாச்சு? ஏன் இவன் ஒரு மாதிரி இருக்கான்" என கேட்க ஒரு பெருமூச்சு விட்டு "எ..ஏதோ கேஸ் விஷயம்" என்றவர் "மதுராந்தகிய உனக்கு ஞாபகம் இருக்கா யசோமா?" என கேட்டார். பளிச்சென்ற புன்னகையுடன் "ஏன் இல்ல? நல்ல துருதுருனு சுத்திட்டு இருப்பாளே! அவள மறப்பேனா?" என யசோ கூற "அவளுக்கு ஆக்சிடென்ட் ஆகிடுச்சு யசோமா. நம்ம வசி ஹாஸ்பிடல்ல தான் சேத்திருக்கான். ஆபரேஷன் நல்லபடியா முடிஞ்சது. ஆனா மது இன்னும் கண்ணு முழிக்கலை" என ஈன ஸ்வரத்தில் கூறினார்.
அதில் திடுக்கிட்டு போனவர் "அச்சச்சோ! என்னங்க சொல்றீங்க? உங்களுக்கு எப்படி தெரியும்?" என்று கூறி "அதானே.. இந்த மூணு வானரங்களும் உங்க கிட்டயும் கதிரண்ணா கிட்டயும் மட்டும் எல்லாத்தயும் ஒப்பிப்பானுங்க. என்கிட்டயும் கல்யாணி கிட்டயும் ஒன்னும் சொல்றது இல்ல. சரி இப்போ அந்த பொண்ணுக்கு ஒன்னுமில்ல தானே?" என்க "ஒன்னுமில்ல தான்.. ஆனா இன்னும் கண்ணு முழிக்கலை" என மனைவி பொறிந்ததை எல்லாம் கேளாதவர் போல் கடைசியாக கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் கூறினார்.
"சரிங்க.. கண்ணு முழிச்சா சொல்லுங்க, போய் பாத்துட்டு வருவோம்" என கூற "ம்ம் டா" என்றார்.
நீரே அவன் உஷ்ணம் தணிக்க முடியாமல் அலுத்துப் போன பின்பே குளியலறை விட்டு வந்தான். வேட்டியும் டி-ஷர்ட்டும் அணிந்துக் கொண்டு தலையை துவட்டியபடி வந்தவனுக்கு உணவுடன் வந்த யசோ "ஒன்னும் ஆகாதுடா கண்ணா. அதான் ஆபரேஷன் நல்லபடியா முடிஞ்சதுல்ல? அந்த பொண்ணு சீக்கரம் கண்ணு திறந்திடும். உன் கேசும் நல்லபடியா முடியும். சாப்பிடு" என வெள்ளந்தியாக கூறினார். வருத்தம் மிகுந்த புன்னகை புரிந்தவன் அன்னைக்காக உணவை உன்ன "டேய் மச்சி!" என்றபடி வம்சி வந்தான்.
"வாங்க மைக்ரோபயாலஜிஸ்ட்.." என கையில் வெள்ளை அங்கி மற்றும் சில புத்தகங்களுடன் வந்தவன் கோலம் கண்டு அவனை அடையாளம் கண்டு கொண்ட ஆதித்யன் கூறினார். அவரை கண்டு திடுகிட்டவன் "ஆதிப்பா.. நீங்க எப்போ வந்தீங்க?" என கேட்க "நான் வந்து ரெண்டு நாள் ஆகுதுடா. உன்ன தான் ஆள காணும்" என கூறினார். ஆதித்யன் மற்றும் கதிர்வேலின் குடும்பம் ஒரே வீட்டில் ஒன்றாக தங்கி வருகின்றனர். இப்போது இவர்கள் இருக்கும் வீடோ ஆடவர்கள் மூவரின் பணி நிமித்தம் வேண்டிய வசதிகள் கொண்டு மூவரும் அமைத்துக் கொண்ட வீடு. தாங்கள் இருக்கும் வீட்டிலேயே என்றால், பெற்றோருக்கு எதும் ஆபத்து வரும் வாய்ப்பும், வேலை விடயங்களில் தனிமை இல்லாத உணர்வும் இருக்கும் என உணர்ந்த மூவரும் தங்களுக்குள் தனிமை அவசியம் இல்லை என தங்கள் வீட்டிற்கு சற்றே தொலைவில் உள்ள இந்த வீட்டை அமைத்துக் கொண்டனர். சுருக்காக சொல்லப் போனால், பணிக்கென்று அமைத்துக் கொள்ளப்பட்ட வீடு.
ஆதித்யன் கூறியதில் புன்னகைத்துக் கொண்டவன் வாசம் பிடிப்பது போல் பாவனை செய்து "ஆஹா.. ஆதிப்பா, உங்க சமையலோ?" என கேட்க வாய்விட்டு சிரித்தவர் "இரு வரேன்" என செல்ல, அவனுக்கு நீர் கொண்டு வர யசோதாவும் சென்றார். அமைதியாக இவர்கள் சம்பாஷணைகளை பெயருக்கு காதில் வாங்கிக் கொண்டிருந்த ஆதித்தனின் அருகில் அமர்ந்த வம்சி கிசுகிசுப்பான குரலில் "மச்சி! வசி ஃபோன் பண்ணிருந்தான். உள்ள லேப்ல இருந்ததால எடுக்க முடியலை. இப்போ தான் பாத்து கூப்பிட்டேன், அ.. அவன் சொல்றதுலாம் உண்மையா? என்னாச்சு? எங்க ஆக்சிடென்ட்?" என கேட்டான். நண்பனை நிமிர்ந்து பார்த்தவன் பார்வையே 'ஆம்' என்பது போல் இருக்க விபத்து நடந்த இடத்தை கூறிவிட்டு மீண்டும் தலையை அவன் குனிந்துக் கொள்ளவும் பெற்றோர் இருவரும் வெளி வரவும் சரியாக இருந்தது.
'ஷப்பா.. உஷாரு தான்டா நீ' என எண்ணிய வம்சி ஆதித்யனிடமிருந்து உணவை வாங்க "சரிடா.. நாங்க கிளம்பறோம்" என ஆதித்யன் கூறினார். ஆடவர்கள் இருவரும் 'சரி' என்பதுபோல் தலையசைக்க "ஆதி! அந்த பொண்ணு கண்ணு முழிச்சா சொல்லுடா. அம்மா பாக்க வரேன்" என யசோதா கூறிச் சென்றார்.
இருவரும் சென்றதும் "மச்சி! என்னடா இது? நம்ம லாஸ்ட்டா மதுவ ஒருவாரம் முன்ன கூட பாத்தோமேடா? நல்லா துருதுருனு சந்தோஷமா தானே இருந்தா? சரி திவி எங்க? ரெண்டு நாளாச்சு, இன்னுமா திவி இவள தேடலை?" என வம்சி கேள்விகளை அடுக்க "எனக்கும் அதான் இன்னும் புரியலை மச்சி. நகமும் சதையுமா தானே ரெண்டும் சுத்துங்க? இவ அட்மிட் ஆகி ரெண்டு நாளாச்சு, ஆனா அவள ஆளயே காணும். என்னமோ நடந்திருக்கு. மதுரா கண்ணுமுழிச்சா தான் தெரியும்" என ஆதி கூறினான்.
ஒரு பெருமூச்சை விட்ட ஆதி "சரி உன் ரிசர்ச் (ஆய்வு) எப்டி போகுது? எப்போ சார் பட்டம் வாங்குவீங்க?" என கேட்க "ம்ம்.. முடிஞ்சது மச்சி. அந்த லேப் டீன் பிரசாத் சாரே என்ன பி.எச்.டி முடிச்சதும் அங்க ஜாயின் பண்ணிக்க சொல்லிட்டார்" என கூறினான். "சூப்பர்டா.. ஆனாலும் அவருக்கு உன் மேல தனி பிரியம் தான். முதல்ல கிடைக்கும் இடத்துல சேரு. அப்டியே பிக்கப் ஆகிக்கலாம்" என ஆதி கூற "நல்லா தின்னுங்கடா. ஒருத்தன் பசில இருப்பான் அவனுக்கு சாப்பாடு குடுத்துட்டு வந்து சாப்பிடுவோம்னு கொஞ்சமாவது இரக்கம் இருக்கா? அதுசரி.. உங்க கிட்ட அதுலாம் எதிர்பாக்க முடியுமா? மிச்சம் மீதி எதும் இருக்கா இல்லையா?" என கேட்டபடி உள்ளே வந்தான், வசீகரன்.
அதில் சிரித்த இருவரில் "நீ ஒருத்தன் இருக்குறதையே மறந்துட்டோம்டா. மிச்சம் இருக்குனு தான் நினைக்கேன்" என்றபடி உள்ளே சென்ற வம்சி "டேய் உடன்பிறப்பு! இருக்குடா. நல்லவேலை வந்த, இல்ல மிச்சம் மீது எதுக்குனு நம்ம திவாக்கு போட்டிருப்போம்" என கத்தினான். அதில் அத்தனை நேரம் வெளியே படுத்திருந்த அவர்களின் திவா உள்ளே துள்ளிக் கொண்டு வர உடன்பிறந்தவனையும் நண்பனையும் முறைத்துக் கொண்டிருந்தவன் அந்த நன்றியுள்ள பிராணியும் இவர்களது வளர்ப்பு நாயுமான திவாவை பார்த்து "வாடா வா! ஏதோ மிச்சம் மீதி தான் இருக்காம். எனக்கு பசிக்குது சொல்லிட்டேன். பங்குக்கு வந்த மவனே கொண்டுபோய் ப்ளூ க்ராஸ்ல கொடுத்துட்டு வந்திடுவேன் உன்ன" என வசி கூறினான்.
அதில் பாவமாக முகத்தை வைத்துக் கொண்ட திவாகரன் (ஆதித்தன்லருந்து இரண்டாம் எழுத்து 'தி', வசியோட முதல் எழுத்து 'வ' , வம்சீகரனோட கடைசி எழுத்துக்களான 'கரன்' சேர்த்து மூணு பேரும் ஆசையாய் வளர்க்கும் நாய்) ஈன ஸ்வரத்தில் சத்தம் எழுப்ப, அந்த புசுபுசு பழுப்பு நிற (brown) நாயை தூக்கிக் கொண்ட ஆதி அதன் தலையை கோதியபடி "டேய் பாவம்டா" என கூறி "நீ வாடா செல்லம்.. இவன் கிடக்கான். மச்சி! இந்த நாய்க்கு சோறில்லைனாலும் பரவாயில்லை திவாக்கு எடுத்து வை" என கத்தினான். அதில் விரக்தியாக சிரிப்பது போல பாவனை செய்தவன் "உண்மையான மனுஷன நாய்னு சொல்லி தொறத்துரானுங்க, நாய்க்கு மனுஷன் பேர வச்சு மரியாதையா நடத்துறானுங்க. வர வர இந்த நாய்க்கு கிடைக்குற மரியாதை கூட நமக்கு இல்ல" என கூறிக் கொண்டதில் யாவரும் சிரித்தனர்.
பொழுது ஓடிட, மாலை நேரம் ஆடவர்கள் மூவரும் மருத்துவமனை வந்தனர். வசீகரனிடம் படபடப்புடன் வந்த செவிலி "டாக்டர், ரெண்டு நாள் முன்ன அட்மிட் பண்ண அந்த பொண்ணு கண்ணு முழிச்சு பயங்கரமா கத்திட்டு இருக்காங்க" என கூற "வாட்?" என்று மூவரும் பதறிக் கொண்டு வந்தனர். நால்வரும் உள்ளே நுழைய கட்டிலின் ஓரம் மிரண்டு சுருண்டு அமர்ந்திருந்த பெண் "ஆ.. ஆ.. வெ.. வேணாம்.." என கத்த உள்ளிருந்த செவிலியோ "ஒன்னுமில்லம்மா, இங்க பாரு" என அவளை சமாதானம் செய்ய முயற்சித்துக் கொண்டிருந்தாள்.
"சிஸ்டர்! என்னாச்சு?" என வசி கேட்க "ட்ரிப்ஸ் மாத்த வந்தேன் டாக்டர். இவங்க கண்ணு முழிச்சாங்க. உடம்பு எப்டி இருக்குனு விசாரிச்சேன், பதறி போய் எல்லாதயும் தட்டிவிட்டு கத்த ஆரம்பிச்சுட்டாங்க" என கூறினார். "சரி சீக்ரம் **** இன்ஜெக்ஷன் எடுத்துட்டு வாங்க" என கூறியவன் மதுவை நெருங்கி "மது! காம் டவுன். ஒன்னுமில்லடா. நான் தான்டா வசீ அண்ணா.." என்றபடி கூற அவனை கண்டு மருண்டவள் "ஆ.. வேணாம்.. வராத.." என கத்தினாள்.
இனி சரிப்பட்டு வராது என உணர்ந்த வசி "வம்சி, ஆதி கொஞ்சம் இவள புடிங்கடா" என்க ஆதி சிலை போல நின்றிருந்தான். அதை கண்டவன் ஊசியுடன் வந்த செவிலியை ஒருபுறமும் வம்சியை ஒருபுறமுமாக பிடித்துக் கொள்ளும்படி கூறி அந்த மயக்க ஊசியை அவளுக்கு செலுத்த, கத்தி கதறியப் பெண் கொஞ்சம் கொஞ்சமாக மயங்கி ஓய்ந்தாள்.
-தேடல் தொடரும்..
உங்கள் பொன்னான கருத்துக்களை கீழே உள்ள கருத்துத் திரியில் பதிவிடுங்கள் தங்கம்ஸ்
இனம் புரியா தேடலில் நாம் - கருத்துத் திரி
உங்கள் பொன்னான கருத்துக்களை தெரிவியுங்கள் தங்கம்ஸ் ❤️
narumugainovels.com
Last edited: