எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

ஊடல் சேர்த்து காதல் கோர்ப்போம்_கதை திரி

Status
Not open for further replies.

NNK51

Moderator
கதையின் அத்தியாயங்கள் இங்கே பகிரப்படும்!
 

NNK51

Moderator
யாரெல்லாம் இங்க இருக்கீங்க?? நான் தான் நிலா_51.. ஆவோ.. ஆவோ.. ஒரு குட்டி டீசர்.. குடுகுடுன்னு ஓடி வந்து படிக்கணுமாம்.. இல்லைனா கனவுல வந்தியன் வாள் எடுத்துட்டு வந்துடுவான்..
pic_1.jpg


#டீசர்_1

தன் நண்பனுடன் பேசிக் கொண்டிரு வந்தியன் வேக வேகமாக வெளிவந்து, அவன் வீட்டு வழியாக நடந்து போய்க்கொண்டிருந்தவளை,

"ஏய்.. குந்தவ.. நில்லு.." என்று ரௌத்திரமாகக் கூப்பிட்டான்.

ஆடு மேய்க்க போய்க்கொண்டிருந்தவளும், "அடேயப்பா.. இவன் என்ன எதுக்காக பேரெல்லாம் சொல்லி கூப்படறான்?" என்ற ஆச்சர்யம் கலந்த சந்தேகத்தில் புருவச் சுளிப்புடன் திரும்பிப் பார்க்க.. வந்தியனோ,

"இங்க பாரு.. சும்மா சும்மா என் வீட்டு வழியா இங்கயும், அங்கேயும் போறத நிறுத்திக்கோ. நீங்கல்லாம் நடந்து போறதுக்காகத் தான் நாங்க இங்க வீடும், வாசலும் இவ்வளவு பெருசா கட்டி வச்சிருக்கோமா?

இனி வீட்டு வேலைக்குக் கூட நீ இங்க வரத் தேவையில்லை. அதான் படிப்பை முடிச்சுட்டு ஸ்கூலுக்கெல்லாம் வேலைக்கு போரல்ல? அப்பறமும் எதுக்கு இங்க வந்து ஆட்டம் காட்டிட்டு இருக்க?" என்று அவளருகே சென்று அவன் மிரட்ட, அந்த காலை வேளையில் அந்த ஒட்டுமொத்த தெருவும் அவர்களைத் தான் வேடிக்கைப் பார்த்தது.

அதைக் கண்டு தன் நீண்ட விழிகளால் அவனை உறுத்துப் பார்த்த குந்தவையோ..

"இங்க உன் வீட்டையும், வாசலையும் 'ஆஆன்னு' வேடிக்கப்பார்க்க நான் ஒன்னும் வரல.

இங்க வேலை செய்துட்டு இருந்தவங்க என் அம்மா.. அவங்களுக்கு உங்க அம்மா நிறைய உதவி செஞ்சிருக்காங்க.. அதுக்காகத் தான் நான் இப்பவும் இங்க வந்து போறது.

ஆனா.. என்ன சொன்ன நீ? எங்க ஆளுங்கள்லாம் வந்து போறதுக்காக உங்க வீடு வாசலும் கட்டலைன்னு சொன்னல்ல?

ஜாதியே இல்லன்னு சொல்லி ஒட்டு வாங்கின MLAவோட பையன்.. இங்க இத்தனை பேருக்கு மத்தியில என்ன இப்படி பேசறல்ல.. நல்லா கேட்டுக்கோ.. உன் வீட்டுக்கு விளக்கேத்தப் போறது என் ஜாதிக்கார பொண்ணு தான்.

அதுவும் எப்படி? நீ காதலிச்சு, அவ கால்ல விழுந்து கல்யாணம் பண்ணிக்கப்போற.

அதையும் உன் கூடவே இருந்து நானும் பார்க்கத் தான் போறேன் பாரு.." என்று குந்தவை சவால் விட, அதைக் கேட்ட வந்தியன் இடிஇடியென நகைத்தான்.

"எதெது? நான்.. உன்னோட ஜாதிகார பொண்ண கல்யாணம் செய்துக்கப் போறேனா? அதுவும் எப்படி காதலிச்சு.. கால்ல விழுந்து கல்யாணம் செய்துக்கபோறேனா? நல்ல காமெடி தான்." என்று மேலும் சிரித்தவன், சட்டென சீறியபடி..

அடச்சீ.. வந்துட்டா முட்டக்கண்ண உருட்டிக்கிட்டு.. இன்னும் நல்லா மை எடுத்து அப்பிக்கோ.. ஒருபய உன் கண்ண பார்த்து பேச முடியாது.

வந்துட்டா பெரிய இவ மாதிரி.. சீ போ.." என்று அவளை விரட்டியடிக்க, குந்தவையின் உள்ளுக்குள் கனன்றது பெரும் நெருப்பொன்று!

சொல்லுங்க நிலா பேபீஸ்.. டீசர் பிடிச்சுருக்கா? நம்ம ஹீரோ, ஹீரோயின் கால்ல விழுந்த கல்யாணம் செய்துக்கப் போறானா? இல்ல கல்யாணம் செய்துட்டு கால்ல விழப்போறானா? உங்களோட கருத்துக்கள் தான் என்ன இன்னும் நிறையா யோசிக்க வைக்கும்.. மறக்காம பகிர்ந்துக்கோங்க..

உங்கள் நிலா!
 

NNK51

Moderator


#டீசர்_2

ஹே செல்லம்ஸ்.. இதோ வந்துட்டேன் அடுத்த டீசரோட. நம்ம வந்தியன terror பீசுன்னு நினைச்சுட்டீங்களா? ஹா.. ஹா.. அதெல்லாம் சும்மானாச்சுக்கு! இதோ இங்க வந்துடுச்சு நம்ம வந்தியன், குந்தவையின் காலில் விழும் படலம்!


291496310_1504088360026871_8248047511529835030_n.jpg

'அய்யயோ.. என்ன பண்ணுவேன்.. நான் இப்போ என் பண்ணுவேன்..' என்று தனது அறையில் குறுக்கும், நெடுக்குமாக நடை பயின்று கொண்டிருந்த வந்தியன் தனக்குள் திண்டாடிக் கொண்டிருந்தான்.

அங்கு.. அதே அறையில்.. அவனது அதே படுக்கையில்.. சுவருக்கு முகம் காட்டி படுத்திருந்த குந்தவையைப் பார்த்து.. ஒரு பயம் கலந்த ஏக்கப் பெருமூச்சு வெளிப்பட்டது வந்தியனிடமிருந்து!

'பேசாம சொல்லிடலாமா? நான் உன்ன காதலிக்கறேன்னு சொல்லிடலாமா?' என்று வந்தியனின் ஒரு பக்க மனசாட்சி கேட்க, அவனது மறுபக்க மனசாட்சியோ,

"ஆஹா.. நீ அவள காதலிக்கறேன்னு சொன்னதும், அவளும் உடனே 'லவ் யூ டூ மாமா'ன்னு சொல்லிடுவாளா?

செருப்பால அடிப்பாடா..

ஏதோ நீ கால்ல விழுந்து கேட்டயேன்னு பாவப்பட்டு கல்யாணம் செய்துகிட்டா அவ.. இதுல நீ காதல் கீதல்ன்னு போன.. அவ்வளவு தான் உன்ன அப்படியே அம்மில வச்சு அரைச்சுப்புடுவா அரைச்சு.." என்று கூற, அதைக் கற்பனை செய்து பார்த்த வந்தியனுக்கு உடலெல்லாம் உதறியது.

உடனே மீண்டும்.. "அப்போ உன்ன நான் காதலிச்சு தானம்மா கல்யாணம் செய்துகிட்டேன்னு மறுபடியும் கால்ல விழுந்துடட்டுமா?" என்று தனக்குள்ளாகக் அவன் கேட்க, இப்பொழுது அவனுக்குள் இருபக்கமாகப் பிரிந்து தனக்குள்ளாகவே வாதிட்டுக் கொண்ட அவனது மனசாட்சி ஒன்றாகச் சேர்ந்து அவனைக் காரித் துப்பியது!

"ஆனா ஒண்ணு.. ஒரு படத்துல மணிவண்ணன்கிட்ட, கவுண்டமணி சொல்லறது மாதிரி.. 'ஒரு மனுஷன் கல்யாணம் ஆகாம கூட வாழ்ந்துடலாம். ஆனா, ஆசைப்பட்ட பொண்ணு பொண்டாட்டியா வந்த பின்னாடியும் கூட பிரம்மச்சாரியா வாழறது கொடுமையோ கொடுமைடா.." என்று வராத கண்ணீரைத் துடைத்துவிட்டுக் கொண்டவன் பார்வை தனது மனைவியை ரகசியமாய்த் தழுவியது!

இந்த டீசர் பிடிச்சுதா சொல்லுங்க செல்லம்ஸ்.. அடுத்து சீக்கிரமே இன்னொரு டீசரோட வரேன்..

உங்கள் நிலா_51
 

NNK51

Moderator
#டீஸர்_3

ஹாய் செல்லம்ஸ்.. இதோ #ஊடல்_சேர்த்து_காதல்_கோர்ப்போம் கதையோட அடுத்த டீஸர்..
இங்க நம்ம குந்தவையோட லவ்வர உங்களுக்கு மிகப் பெருமையோடு வழங்குகிறேன்.. படிச்சுட்டு உங்க கருத்துக்களை பகிருங்க..

#டீஸர்_3

அன்றைய நாளில் நடந்த நிகழ்வுகளின் உள்ளக் கொதிப்பு தாங்காது படுக்கையில் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்த குந்தவையோ, கடைசியாக தனது மொபைலை கையில் எடுத்தாள்.

தான் பல நாட்களாக பின்தொடரும் வலைப்பூ எழுத்தாளர் ஆத்மனின் வலைப்பூ பக்கத்திற்கு சென்றாள்.

ஆத்மன், travel blogger என்பார்களே.. அதுபோல அவன் பயணம் செய்யும் இடங்களைப் பற்றியெல்லாம் அழகழகாக குட்டிக் குட்டி கட்டுரைகளாக எழுதுபவன். அவனது அந்த கட்டுரைகளை எல்லாம் படிக்கையில், குந்தவைக்குத் தானே அந்த இடங்களிலெல்லாம் பயணம் செய்து நேரில் பார்ப்பது போன்ற பிரம்மை உருவாகும்.

சாதாரண ஒரு பேருந்துப் பயணத்தைக் கூட அவன் எழுத்தில் படிக்கையில் குந்தவைக்கு மழைக்கால மண் தரை போல உள்ளெள்ளாம் சிலுசிலுவென இருக்கும்.

ஆனால்.. சில நாட்களாக ஆத்மனின் வலைப்பூவில் பயணக்கட்டுரைகளுக்குப் பதிலாக காதல் கவிதைகள் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன.

அதில் குந்தவைக்கு ரகசிய போதையும் கூட!

இதோ இப்பொழுது கூட ஏதோ புதிதாக ஒன்றை எழுதியிருக்கிறான்.

"அவள்.. என்னை என்னென்னவோ செய்துகொண்டிருக்கும் அவள்.. இன்று அவள் தோழியிடம் கூறிய அந்த ஒற்றை வார்த்தை எனது நெஞ்சுக்குள் ஏதோவொன்றை ஆழமாகக் கவிழ்த்தது.

' ஒரு பெண், தன் எதிரில் நிற்கும் ஆணை, அவன் கண்ணைப் பார்த்து பேசவெண்டுமாம்.

அவள் அப்படிப் பேசினால்.. எதிரில் இருக்கும் ஆணினால் அவளது பார்வையைத் தாண்டி வேறெங்கும் தப்பாகப் பார்க்க இயலாதாம்.

என்னவொரு சத்தியமான வார்த்தைகள் அவை!

ஆம்.. எனக்கும் அவள் அஞ்சனம் பூசிய விழிகளைத் தாண்டி வேறெங்குமே பார்வையைக் கொண்டுசெல்ல இயலவில்லையே! ஆச்சரியமான உண்மை தான்..

ஆனால் இப்பொழுது என் ஜென்ம லட்சியமே.. என்னைப் பித்தனாக்கியே தீரவேண்டுமென்று கங்கணம் கட்டியது போல், அஞ்சனமிட்டு எல்லை வகுத்திருக்கும் அவளது கண்களைத் தாண்டாது.. ஜென்ம ஜென்மாமாய் அந்த கருப்பு, வெள்ளைச் சாகரத்துக்குள்ளேயே மூழ்கிக் கிடக்கவேண்டுமென்பது தான்." என்று படித்துமுடிக்கையில் குந்தவைக்கு உடலெல்லாம் மயிர்க்கூச்செரிந்தது!

இது.. இந்த வார்த்தைகள் அவள் அன்று மாலையில் தன் தோழியிடம் உதிர்த்தது!

அதையே இந்த ஆத்மன் தனது வலைப்பூவில் எழுதியிருக்கவும்.. இங்கு தான் அவன் எங்கோ வெகு அருகில் இருந்துகொண்டு தன்னைப் பின்தொடர்ந்து கொண்டிருக்கிறான் என்ற எண்ணம் அவளுக்கு வெகுவாக எழுந்தது.

அந்த எண்ணம் எழுந்த அதே கணம் ஆத்மனின் காதலை எண்ணி நெஞ்செல்லாம் படபடவென அடித்துக்கொள்ள.. உடலெல்லாம் வேர்த்து வழிந்தது பெண்மைக்கு.

இதோ.. அவனது எழுத்தில் இவள் மயங்கிக் கொண்டிருக்கும் இப்பொழுது கூட அவன் தன்னைப் பார்த்துக் கொண்டு தானிருக்கிறான் என்ற எண்ணம் வெகுவாக எழ, விரைவாகச் சென்று வீட்டுக் கதவைத் திறந்து, அந்த நள்ளிரவின் மையிருளுக்குள் துழாவினாள்.

அங்கு யாரும் இல்லாததைக் கண்டு பெருங்குழப்பத்துடன் அவள் உள்ளே வந்து கதவடைக்க.. அவள் வீட்டு வேப்பமரத்தின் பின்னிருந்து ஜன்னல் வழியாக இவ்வளவு நேரம் அவளைப் பார்த்துக் கொண்டிருந்த அந்த உருவம் மெல்ல வெளியே வந்து தனது பைக்கை சத்தமில்லாது உருட்டிக் கொண்டு வெளியே சென்றது!
 

NNK51

Moderator
ஊடல் சேர்த்து காதல் கோர்ப்போம்!


291496310_1504088360026871_8248047511529835030_n.jpg
அத்தியாயம் - 1

புதிதாகப் பிறந்த பிஞ்சுக் குழந்தை, மெல்ல மெல்ல விழி திறப்பது போல மெதுவே புலர்ந்தது அந்த அதிகாலை.

அந்த நேரத்தில் சென்னையிலிருந்து வந்த ஒரு தனியார் சொகுசுப் பேருந்து, தேவனூரின் விலகிக் கொண்டிருந்த பனிமூட்டதிற்கிடையே நம் நாயகன் ராஜ வந்தியனை, மெல்ல கீழிறக்கிவிட்டுச் செல்ல.. அந்த மையிருள் கரைந்து கொண்டிருந்த அந்த வேளையில் மெல்ல அவனுக்குக் கேட்டது தேன் குரல் ஒன்று!

"உன்னைக் காணாதுருகும் நொடி நேரம்..

பல மாதம் வருடம் என மாறும்.." என்று லதா மங்கேஸ்கரின் குரல் கொஞ்சிக் கொண்டு வந்த திசை நோக்கி அவன் நடக்க, அங்கே தன் வீட்டு வாசலில் வந்து நின்றிருந்தாள் குந்தவை!

தன் கருங்கூந்தலை அள்ளி முடிந்து கொண்டிருந்த குந்தவையை, வந்தியன் ஏறிட்டுப் பார்க்க, பின்னிருந்தோ..

"நீங்காத ரீங்காரம் நான் தானே..

நெஞ்சோடு நெஞ்சாக நின்றேனே.." என்ற எஸ்.பி.பியின் குரல் கேட்டது.

" ராகங்கள் தாளங்கள் நூறு..

ராஜா உன் பேர் சொல்லும் பாரு.." என்ற வரிகளில் மெல்ல குந்தவை, வந்தியனை ஏறிட்டுப் பார்க்க..

"சிந்தாமல் நின்றாடும் செந்தேனே

சங்கீதம் உண்டாகும் நீ பேசும் பேச்சில் தான்.." என்ற வரிகளில் அவள் முன்பு நின்றிருந்தான் அவன்.

பின்னணியில் இன்னமும் வளையோசை ஒலித்துக் கொண்டிருக்க மீண்டுமொருமுறை அவளை மேலும் கீழுமாக வந்தியன் பார்க்க, அதைக் குந்தவையோ சற்றும் கண்டுகொள்வதாக இல்லை!

அதனால் கடுப்பானவன்.. எப்பொழுதும் போல அவளை வெறுப்பேற்ற எண்ணி..

"என்ன குந்தவ.. பரதநாட்டியம் ஏதாவது கத்துக்கப் போறியா என்ன?" என்றான், அவள் சுடிதாரின் துப்பட்டாவை உடலைச் சுற்றி கட்டியிருந்த விதத்தைப் பார்த்து.

அவனது அந்த வாக்கியத்தில் மெல்ல அதிர்ந்தவள், ஒரு கணம் தன்னையே மேலும், கீழும் பார்த்துக் கொள்ள, வந்தியனே மேலும் தொடர்ந்தான்.

"ஏன் இவ்வளவு ஷாக் ஆகற?

ஓஹோ? உனக்கெல்லாம் யார் பரதநாட்டியம் கத்துக் கொடுக்கப் போறாங்கன்னா?

ஆமாமா?! உங்க ஆளுங்களுக்கெல்லாம் யார் பரதநாட்டியம் கத்துக் கொடுக்கப்
போறாங்க?" என்று இவன் இன்னும் இளக்காரமாகக் கேட்க, குந்தவையோ வந்த ஆத்திரத்தை உள்ளுக்குள் அடக்கிக் கொண்டு.. சுற்றும் முற்றும் பார்த்து, வாசல் பெருக்க எடுத்து வந்திருந்த பெறுக்குமாரைக் கையில் எடுத்து, அதன் பின்புறத்தை கையில் இருமுறை தட்ட, அதைப் பார்த்தவனுக்கோ எரிச்சல் மண்டியது.

"ஹ்ம்ம்.. திமிரு.. உடம்பெல்லாம் அதே திமிரு.. கொஞ்சம் கூட குறையவே குறையாத திமிர் இல்ல?

நான், M.L.Aவோட பையன்ற பயமும் இல்ல, உன் ஸ்கூல் சீனியர்ன்ற மரியாதையும் இல்ல?" என்று இவன் புருவம் நெரித்து ஆத்திரமாய் கேட்க, அதை கொஞ்சம் கூட சட்டையே செய்யாதவளாய் குந்தவை வாசல் பெருக்க ஆரம்பித்தாள்.

அதில் இன்னமும் அவமானமாய் உணர்ந்தவன், "ஏய்.." என்ற சீரலுடன் அவளை நெருங்க, அதற்கும் முன்னதாக ஒரு உயர் ரகக் காரொன்று வந்தியனை நெருங்கியது.

"என்ன ராஜா? பஸ் சீக்கிரமா வந்துடுச்சா? நீ பஸ் ஸ்டாப்லையே இருக்க வேண்டியது தான? எதுக்கு இதுங்க ஊர் வழியால்லாம் நீ நடந்து வர?" என்று காருக்குள் இருந்து எட்டிப் பார்த்த வந்தியனின் சித்தப்பா ராஜேந்திரன் கேட்க, காருக்குள்ளிருந்த வந்தியனின் பெரியப்பா தர்மேந்திரனோ, வெளியே நின்றிருந்த குந்தவையை.. சந்தேகமும், எரிச்சலுமாய் ஒரு பார்வை பார்த்துவிட்டு, "வா கண்ணு.. வந்து கார்ல ஏறு.." என்றார்.

இங்கு வந்தியனும்.. தர்மேந்திரன், குந்தவையை நோக்கி வீசிய அதே பார்வையை அப்படியே மாற்றது அவளை நோக்கி வீசிவிட்டு காருக்குள் ஏறி அமர்ந்தான்.

அந்த கார் சென்ற பிறகு அது சென்ற வழியையே பார்த்துக் கொண்டிருந்த குந்தவையோ.. "இவ்வளவு ரம்மியமா தொடங்கின இந்த நாள்ல.. இப்படியொரு வரவு நடந்திருக்கத் தேவையில்ல.." என்று கூறி மனதிற்குள் வந்தியனைக் கண்டபடி ஏசவும் செய்தாள்.

ஆனால், அன்றைய நாளுக்கான வந்தியனின் ஆட்டம் இன்னமும் முடியவில்லை என்று அப்போது அவள் அறிந்திருக்க வாய்ப்பில்லை தான்!

இதோ அன்றைய நாளுக்கான சில பல முன் தயாரிப்புகளை அவசரவசரமாக முடித்துவிட்டு, பெரிய வீட்டுக்கு போனாள் குந்தவை.

பெரிய வீடு.. அதன் உருவத்தால், உயரத்தால்.. மட்டுமல்ல, அந்த ஊரின் M.L.A.வின் வீடும் அது தான் என்பதால் தான் அந்தப் பெயர் அந்த வீட்டுக்கு!

ஆம்.. சந்தேகத்திற்கு இடமின்றி அது வந்தியனின் வீடே தான்!

அந்த வீட்டு முன் வாசலைத் தாண்டி, பின்னங்கட்டின் வழியாக குந்தவை, பெரிய வீட்டின் சமையலறைக்குள் நுழைய.. அங்கேயே வழி மேல் விழி வைத்துக் காத்திருந்தார்கள் பெரிய வீட்டின் மருமகள்கள். அதாவது வந்தியனின் அன்னை பாகீரதி, பெரியம்மா சிவகாமி, சித்தி சைலஜா.

உள்ளே வந்தவளை ஆசையாக இவர்கள் வரவேற்க, குந்தவையோ மகிழ்வுடன் சென்று அவர்களுக்கு நடுவே அமர்ந்தாள்.

"என்னம்மா.. ஏன் இவ்வளவு லேட்டு?" என்று கேட்டுக் கொண்டே பாகீரதி சின்னவளின் தலையை வருட.. குந்தவையோ..

"ஹ்ம்ம்.. இன்னைக்கு காலைல ஒரு மலக்குரங்கு என்ன மூட் அவுட் செஞ்சுடுச்சு.. அதான்.." என்று இவள் முகத்தைத் திருப்பிக் கொண்டு சொல்ல.. அவளுக்கு காபியைக் கலந்தபடியே வந்த சைலஜாவோ.. " ஆமாமா அந்த மலக்குரங்கும் தன்ன ஒரு குட்டிச்சாத்தான் கடுப்பாக்கிடுச்சுன்னு சொல்லிட்டு இப்போ தான் தூங்கப் போச்சு.." என்று தனது ஒரகத்திகளைப் பார்த்து கண்ணடித்துச் சிரித்தபடி கூற, அவரைப் பார்த்து முறைத்து "ஹ்ம்ம்.. சொல்லிருக்கும்.. சொல்லுக்கும்.." என்று முகம் திருப்பிக் கொண்டாள் குந்தவை.

மீண்டும் சிரித்தபடியே குந்தவையின் முன் சென்ற சைலஜாவோ.. " இதுக்கொன்னும் கொரச்சல் இல்ல.. இந்த இந்த காபிய குடி" என்று காபியை அவள் கைகளில் திணித்தவர்.. எழுந்து சென்று, ஃப்ரிட்ஜில் இருந்து நான்கைந்து ஆப்பிள்களை எடுத்து வந்து அவளிடம் நீட்டி.. "இந்தா வானதிக்கு எடுத்துட்டு போ.." என்று கொடுத்தார்.

அதைக்கண்டு சைலஜாவை ஒரு மாதிரியாகப் பார்த்த குந்தவையோ.. "இந்த வீட்டுல, இந்த ஒரு டம்ளர் காபிக்கு மேல நான் எதையும் எடுத்துக்க மாட்டேன்.

அதுவும் ஆப்பிள்?!

நீங்க எத்தனை முறை.. எப்படியெப்படிக் கொடுத்தாலும்.. நிச்சயமா நான் வாங்கிக்க மாட்டேன்.

கொண்டு போய் உங்க வீட்டு இளவரசருக்கே கொடுங்க. அவர் தானும் சாப்பிடுவாரு.. நல்லா தானமும் செய்வாரு.." என்று கூறியவள்.. அதற்கு உடனே அவர்கள் மூவரின் முகமும் சுருங்கக் கண்டு..

"இன்னைக்குத் தான் முதல் நாள் வேலைக்கு போகப் போறேன். மூனு மம்மிஸும் சந்தோஷமா என்ன ஆசீர்வாதம் செய்வீங்களாம்.." என்று கூறி அவர்களது காலில் விழுந்தாள்.

உடனே சட்டென தங்கள் முகவாட்டத்தை மாற்றிக் கொண்டவர்கள்.. புன்னகையுடன் அவளை ஆசீர்வதித்து வழியனுப்பினார்கள்.

அங்கிருந்து நேரே வீடு வந்துகொண்டிருந்த குந்தவைக்கு, வரும் வழியிலெல்லாம் முன்ஜென்ம நிகழ்வுகளைப் போல, தன் சிறு வயதில் நடந்த நிகழ்வுகள் நினைவுக்கு வந்தன.

சிறுவயதில், தங்கையுடன்.. இவர்கள் தாய் பெரிய வீட்டுக்கு வேலைக்குச் செல்லும் போது, உடன் செல்வது குந்தவைக்கு வழக்கம் தான்.
அன்றும் அதுபோலத் தான் குந்தவையின் தாய் அமிர்தம், பெரிய வீட்டுக்கு வேலைக்குச் சென்றிருந்த பொழுது, அவருடனே குந்தவையும், வானதியும் சென்றனர்.

பொதுவாகவே வந்தியன் இவர்களை மதித்ததே கிடையாது. அதையும் மீறி எப்போதாவது இவர்கள் இருக்குமிடம் அருகே அவனிருந்தாலே, அவனது சித்தப்பாவுக்கும், பெரியப்பாவுக்கும் மூக்கு வேர்த்து விடும்.

ஆனால் என்றும் இல்லாத பொன்னாளாக(!) அன்று குந்தவைக்கும், அவளது தங்கைக்கும், அவனே ஒரு ஆப்பிளை இரண்டாக வெட்டி எடுத்து வந்தான்.

"இந்தாங்க ரெண்டு பெரும் சாப்பிடுங்க.." என்று கூறி இவர்கள் கையில் அந்த ஆப்பிளை வந்தியன் கொடுத்தது தான் தாமதம்..

அதற்குள் வந்தியனின் சித்தப்பா வந்து.. "என்னடா.. இதுங்களுக்கெல்லாம் நம்ம வீட்டு ஆப்பிள் கேக்குதா?" என்று ஒரு கர்ஜனையிட, அப்பொழுது தான் எட்டாவதும், மூன்றாவதும் படித்துக் கொண்டிருந்த சிறு பிள்ளைகளான குந்தவையும், வானதியும் விதிர்விதிர்த்து எழுந்து நின்றனர்.

ஆனால் வந்தியனோ.. மிகவும் அலட்சியமாக.. "அது ஒன்னும் இல்ல சித்தப்பா.. நான் எனக்கு சாப்பிடலாம்னு ஒரு ஆப்பிளை எடுத்து கடிச்சுப் பார்த்தேன். என்னமோ அது எனக்கு வாய்க்கு பிடிக்கவே இல்ல..

சரி இது தான் அப்படி இருக்குன்னு வேற ஒரு ஆப்பிளை எடுத்து ஒரு வாய் சாப்பிட்டு பார்த்தா.. அதுவும் அப்படித்தான் இருக்கு.

சரி.. அந்த ஆப்பிளை குப்பையில் தூக்கிப் போடறதுக்குப் பதிலா இதுங்களுக்காவது கொடுக்கலாமேன்னு, நான் கடிச்சத மட்டும் கட் பண்ணி வீசிட்டு, மிச்சத்த கொண்டு வந்தேன்!"என்று வந்தியன் கூறியதும்.. குந்தவைக்கு அதுவரை புரிபடாத பல விஷயங்கள் தெள்ளத் தெளிவாகப் புரிந்தன.

வந்தியனின் பதிலில் திருப்தியுற்ற ராஜேந்திரன் அங்கிருந்து அகலவும், வந்தியனின் கண் முன்பாகவே தன் கையிலிருந்த ஆப்பிளின் கூடவே, தங்கையிடம் இருந்ததையும் பிடுங்கி குப்பைத் தொட்டியில் வீசிவிட்டு அந்த வீட்டிலிருந்து வெளியேறினாள் குந்தவை.

அதைப் பார்க்க பார்க்க, வந்தியனுக்கு உடலெல்லாம் பச்சை மிளகாயால் பற்று போட்டதை போல பற்றி எரிந்தாலும், அப்போதைக்கு அவனால், குந்தவையை வேறொன்றும் செய்ய இயலாததாகிவிட்டது.

அதன் பிறகு தான் வந்தியன் ஒவ்வொரு முறையும் குந்தவையை இன்னும் இன்னமும் சீண்ட ஆரம்பித்தான்.

ஆனால்.. அதற்கெல்லாம் குந்தவை வாய் திறந்து ஒரு வார்த்தை பதில் கூறாவிட்டாலும், தனது செய்கையாலேயே அவனைக் கீழிறங்க வைத்துக் கொண்டிருந்தாள்.

அந்த நிகழ்வின் தொடர்ச்சியாகவே வந்தியனை ஒவ்வொரு விஷயத்திலும் ஜெயிக்க வேண்டுமென நினைத்தாள் அவள்.

அந்த சம்பவம் நடந்த பொழுது வந்தியன் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். அதன் பிறகு அவன் பத்தாம் வகுப்பில் முதல் மதிப்பெண் வாங்கியிருந்தான்.

குந்தவையோ.. அப்பொழுது அரசு பள்ளியில் படித்துக் கொண்டிருந்தாலும், அதன் பிறகு அவள் பத்தாம் வகுப்பில் எடுத்த மதிப்பெண்ணின் விளைவால், வந்தியன் படித்த அந்த உயர்தர தனியார் பள்ளி, குந்தவையை இலவசமாகவே பதினொன்றாம் வகுப்பிற்கும், பன்னிரண்டாம் வகுப்பிற்கும் சேர்த்துக் கொண்டது.

அதே சமயத்தில் குந்தவையை விட இரண்டு வயது மூத்த வந்தியன், அப்பொழுது பன்னிரண்டாம் வகுப்பில் பள்ளியில் முதல் மாணவனாக வந்திருந்தாலும், குந்தவை, தான் படிக்கும் பள்ளியிலேயே படிக்க வந்தது தனக்கு கௌரவக் குறைச்சலென எண்ணினான்.

அதையும் விட, அவள் பன்னிரண்டாம் வகுப்பு முடிக்கையில், வந்தியன் பன்னிரண்டாம் வகுப்பில் எடுத்த மதிப்பெண்களை விட பத்து மதிப்பெண்கள் அதிகமாக எடுத்தது மட்டுமின்றி, அந்த மாவட்டத்திலேயே முதல் மாணவியாகவும் வந்துவிட, வந்தியனின் வயிற்றெரிச்சல் வஞ்சகமில்லாமல் வளர்ந்தது.

ஆனால் அதற்கு மேல் இருவரின் பொருளாதார நிலையால், வந்தியன் பொறியியலும், அதன் பட்ட மேற்படிப்பும் படிக்க, குந்தவையோ.. ஆசிரியப்பணியே அறப்பணி.. அதற்கே உன்னை அர்ப்பணி என்று வந்துவிட்டாள்.

ஆனால் அதற்குள்ளும் குந்தவையிடம் ஒரு அசாத்திய திட்டம் இருந்தது.

தன் தங்கையிடம் இதை பற்றி பேசிக் கொண்டிருக்கையில் தான் குந்தவையே இதை பற்றி முழுதாக யோசித்தாள்!

"அக்கா.. உன்னோட திறமைக்கு நீ எல்லாம் பெரிய லெவல்ல வந்திருக்கணும்க்கா.. நம்ம வசதி.. எனக்கும் சேர்த்து செலவு செய்யணும்ன்றதுக்காகத் தான நீ டீச்சருக்கு படிச்ச?" என்று வானதி கேட்க, அதற்கு குந்தவை சிரித்த சிரிப்பில் வானதியே பயந்துவிட்டாள்!

"அக்கா.. அக்கா.. ஏன் இப்படி சிரிக்கற?" என்று வானதி இரண்டு, மூன்று முறை அழைத்த பிற்பாடு தான் குந்தவை பதிலே கூற ஆரம்பித்தாள்.

"என்ன சொன்ன வானதி? நான் ஏதோ பெருசா தியாகம் செஞ்ச மாதிரி யோசிக்கறல்ல?

இல்ல.. அப்படி இல்ல.. டீச்சர் ப்ரொபஷன்றது ரொம்ப உன்னதமானது. நான் சின்ன வயசுல இருந்து ரொம்பவே ஆசைப்பட்டதும் கூட.

ஆனா.. இப்போ இதுல எனக்கு ஒரு கனவு இருக்கு.

இதே ஊர்ல தான் நான் வேலை பார்க்கப் போறேன். நம்ம பெரிய வீட்டு மைனரும் படிப்பு முடிஞ்ச பிறகு இனி வெளியூருக்கெல்லாம் போகவேண்டிய அவசியம் இருக்காது. அந்த சோம்பேறி வேலைக்கெல்லாம் போவான்னா நினைக்கற?

அவனும் நம்ம ஊருல தான் குப்பை கொட்டப்போறான்.

நம்ம ரதிம்மா சொல்லறதை வச்சுப் பார்த்தா.. அவனுக்கு சீக்கிரமே கல்யாணமும் செஞ்சுடுவாங்க..

அவனுக்கு பிறக்கப்போற குழந்தைக்கு நான் தான் டீச்சரா இருக்கணும்.

அப்படி மட்டும் ஒரு விஷயம் நடந்துடுச்சு.. அவன் காலி என்கிட்டே. ஒவ்வொரு முறையும், 'யோவ்.. இங்க பாரு.. உன் புள்ளையோட லட்சணத்த.. என்ன புள்ள பெத்து வச்சிருக்க நீ?'ன்னு அவன நான் கேள்வி கேட்கணும்.. அதுக்கு அவன் கைய கட்டிக்கிட்டு, குனிஞ்ச தலையோட.. 'சாரி மிஸ்.. சாரி மிஸ்..'ன்னு எனக்கு பதில் சொல்லணும்.." என்று கற்பனையில் அந்தக் காட்சியைக் கண்டு ரசித்தபடியே கூறியவளைக் கண்டு 'இவளுக்கென்ன லூசா?' என்பதைப் போல பார்த்தாள்.
பின்னே?! அவ்வளவு நன்றாகப் படித்த வந்தியனின் மகன், மக்காக இருப்பானா? அப்படிய இருந்தாலும், முதலில் அவன் பிள்ளையை, இவள் வேலை பார்க்கும் பள்ளியில் அவன் சேர்க்க வேண்டுமே?!

இது எல்லாவற்றுக்கும் முன்பாக.. என்றோ ஒருநாள்.. நடப்பதற்கு வாய்ப்பு மிக மிகக் குறைவாக இருக்கும் இந்த நிகழ்வுகளுக்காகத் தான், தான் ஆசிரியப்பணியை தேர்ந்தெடுத்ததாக குந்தவை கூறுவது அவள் தங்கைக்கே மிகவும் சிரிப்பாக வந்தது.

"அக்கா.. இதெல்லாம் உனக்கே காமெடியா இல்ல? நீ சிரிச்ச சிரிப்ப பார்த்துட்டு நானே நீ எதோ பெரிய பயங்கரமான திட்டம் போட்டிருக்கேன்னு பார்த்தா???? ஹா.. ஹா.. ஹா.." என்று அவள் பயங்கரமாய் சிரித்து விட்டு அப்புறம் செல்ல, இங்கு குந்தவையோ.. 'நீ வேணா பாரு.. அந்த வந்தியன் எப்படியும் அவனோட குழந்தையோட படிப்புக்காக என்கிட்டே கைய கட்டிக்கிட்டு நிக்கத் தான் போறான்..' என்று மனதிற்குள் கருவிக் கொண்டாள்!

தொடரும்..

என்ன செல்லம்ஸ் இந்த எபிசோட் பிடிச்சுதா? உங்களோட கருத்துக்கள்.. நிறை குறை எதுன்னாலும் என்கிட்ட பகிர்ந்துக்கிட்டா இந்தப் படைப்பு இன்னும் சிறக்கும்!


கருத்துக்களுக்கு :

- நிலவின் ஊடல்!
 

NNK51

Moderator
ஹாய் செல்லாஸ்.. மொதல்ல sorry.. sorry.. very sorry.. கொஞ்சம் கை வலி.. ஆனாலும் தினமும் ஒரு 100 வார்த்தையாவது எழுதிடனும்னு கொஞ்சம் கொஞ்சமா எழுதி இதோ ஒரு எபிசோட் எடுத்துட்டு வந்திருக்கேன்.. நீங்க படிச்சுட்டு உங்க கருத்துக்களை சொல்லுவீங்களாம்.

அத்தியாயம் - 2

IMG-20220716-WA0000.jpg


அச்சுப் பிசகாத அன்றைய நாளின் வலி இன்னமும் மனதுக்குள் குடைந்து கொண்டே இருந்தது குந்தவைக்கு.

ஆனால்.. அந்த வலிக்கெல்லாம் அருமருந்தாக இருந்தது, வந்தியனின் அன்னைமார்கள் தான்.

குந்தவையின் தாயார் அவள் பத்தாவது படிக்கையிலே இறந்துவிட்டதால், தாயில்லாப் பெண்ணுக்கு, வந்தியனின் அன்னையர் மூவரும் தாயாக மாறினர்!

அந்த மூவரிடமிருந்தும், பணமாகவோ, பொருளாகவோ எதை வாங்கவும் குந்தவை மறுத்துவிட்டாலும், அவர்களது பாசத்தை மட்டுமே அப்படிய அள்ளிக் கொண்டாள் அவள்!

ஆனால் அந்தப் பாசமும் மற்ற எவருக்கும் தெரியாமலே தான் அவளுக்கு அளிக்கப்பட்டது. இல்லையென்றால்.. அவர்களால் அந்த வீட்டில் இன்னமும் குப்பை கொட்ட முடியுமா என்ன?

குந்தவை கூட வேண்டுமென்றே அவர்களை வம்பிழுப்பாள்.. "அம்மாஸ்.. ஒரு வேளை.. நீங்க என்ன இப்படி பாராட்டி.. சீராட்டி வளர்க்கறது உங்க கணவர்மார்க்கெல்லாம் தெரிஞ்சா என்னம்மா செய்வாங்க?" என்று சிறு பிள்ளையைப் போல கண்களை படபடவென அவள் கொட்டியபடி கேட்க, அவர்களுள் மூத்தவரான சிவகாமியோ..

"என்ன செய்வாங்க? போம்மா.. போய் உன் செல்லப் பொண்ணு கூடவே போய் இருந்துக்கோன்னு சொல்லி உன் கூட எங்களை அனுப்பி வச்சுடுவாங்க.." என்று அவர் கூறவும், விழுந்து விழுந்து சிரித்தாள் அவள்.

"ஆமாமா.. உங்கள விட்டுட்டு அவங்க எல்லாரும் இருந்துட்டாலும்.. வீட்டுல வேலைக்கு இத்தனை ஆளுங்க இருந்தாலும், உங்க கையால சமையல் செஞ்சு.. உங்க கையால பரிமாறினா தான் மும்மூர்த்திங்களுக்கும் சாப்பாடே உள்ள இறங்கும்.

அத விட.. இன்னமும் ராத்திரி.. ராத்திரி.. நாலு முழம் மல்லிப்பூவும், நாலு கிலோ அல்வாவும் ரகசியமா வந்துட்டு இருக்கு.. அவங்க.. உங்கள வீட்ட விட்டு வெளிய அனுப்புவாங்களா?" என்று கண் சிமிட்டி அவள் கூற, சிவகாமியின் முகம் சிவந்துவிட்டது.

"அடிக்கழுத பெரியவங்ககிட்ட என்ன பேசறதுனு இல்ல?" என்று அவர் மேலும் சிவக்க.. குந்தவையின் சிரிப்பின் சத்தம் இன்னமும் பெருகியது.

"அட.. அட.. அட.. பெரிய மம்மிக்கு இன்னும் இப்படி முகம் சிவக்குதே.. பார்த்திங்களா மம்மிஸ்.." என்று கேலி பேசி சிரித்தவள்,

"ஆனா ஒண்ணு சொல்லுங்க.. உங்க குடும்பத்துல எல்லா ஆம்பளைங்களும் ஒரே மாதிரி.. ஆனா.." என்று இழுத்தவள்.. அவர்களை விட்டு சற்று விலகி..

"ஆனா.. நம்ம M.L.A சார் மட்டும் கொஞ்சம் வித்தியாசமா.. அதாவது நல்லவரா இருக்காரு.." என்று கூறிச் சிரிக்க, மற்ற மூவரும்..

"அடிப்பாவி.. அப்போ அவரைத் தவிர, மத்தவங்க எல்லாரும் கெட்டவங்கன்னு சொல்லறீயா?" என்று கேட்டு அவளை அடிப்பது போல் பாவனை செய்து சிரித்தனர்.

இப்படி குந்தவையுடன், அந்த மூன்று அம்மாக்களும் கேலி பேசி சிரித்தாலும், தங்கள் கணவர்கள் முன்பு.. தலை கூட நிமிர மாட்டார்கள். தங்களுக்குள்ளாகக் கூட பேசிக்கொள்ள மாட்டார்கள்.

"அம்புட்டு பயமாக்கும்.." என்று இதையும் குந்தவை கேலி செய்வாள்.

"ஆடு பகை.. குட்டி சிநேகிதம்.." என்று ஒரு பழமொழி உண்டே.. அது போல இங்கு குந்தவைக்கு, அன்னைகளுடன் சிநேகம், ஆனால் மகனுடன் பகை!

இவர்களது இந்தப் பகையில் மாட்டிக்கொண்டு முழிப்பதென்னவோ, வந்தியனின் மூன்று அன்னைகளும், கூடவே.. குந்தவையின் தங்கை வானதியும் தான்.

ஆம்.. இருவரும், ஒருவர் மேல் மற்றவர் வைக்கும் குற்றச்சாட்டுகளை மாறி மாறி கேட்டுக் கேட்டு காது வலியுடன் அவஸ்தயுறுபவர்கள் அவர்கள் தானே?

இதற்கெல்லாம் ஷொட்டு வைப்பது போல அன்று மாலையே ஒரு பெரிய சம்பவம் நிகழ்ந்தது!

தினமும் காலையில் ஒரு முறையும், மாலையில் ஒரு முறையும் பெரிய வீட்டுக்குச் சென்று, பாகீரதியையும், மற்றவர்களையும் சந்தித்து விட்டு வருவது குந்தவைக்கு வழக்கம்.

அன்று இவள் முதன்முதலாக வேலைக்கு வேறு சென்றுவிட்டு வந்திருக்கிறாள்.

முதலில் இவள் வேலை முடித்து வீடு வந்த பொழுது, தந்தையும் வீட்டிற்கு வந்திருக்கவில்லை. தங்கையும் பள்ளியில் சிறப்பு வகுப்பு முடித்து வந்திருக்கவில்லை.

எனவே அப்பொழுதே பெரியவீட்டுக்குச் சென்று அன்றைய நாளில் நடந்தவைகளை எல்லாம் அன்னைகளுடன் பகிரவேண்டும் என்று நினைத்து தனது சைக்கிளை எடுத்துக்கொண்டு பெரியவீடு நோக்கி விரைந்தாள்.

குந்தவையின் வீட்டிலிருந்து வந்தியனின் வீட்டிற்குச் செல்ல ஒரு சிறு வாய்க்காலைத் தாண்டிச் செல்ல வேண்டும்.

அந்த வாய்க்காலிற்கு இருவர் மட்டும் நடந்து செல்லும்படியாக ஒரு சிறு பாலமும் இருக்கிறது.

குந்தவை, அந்த சிறு பாலத்திலேயே சைக்கிள் ஓட்டி சர்கஸ் செய்பவள்!

எனவே என்றும் போலவே, இன்றும் குந்தவை.. பாகீரதியையும், மற்ற இருவரையும் பார்க்க தனது சைக்கிளை எடுத்துக் கொண்டு அந்தப் பாலத்தின் வழியாகச் செல்ல, அதே வேளையில் அவளுக்கு எதிர்ப்புறமாக தனது நண்பனுடன் வந்து கொண்டிருந்தான் வந்தியன்.

அவன் பாதிப் பாலத்தைத் தாண்டி வந்திருக்க, குந்தவையோ அப்பொழுது தான் அந்த பாலத்தைக் கடக்க ஆரம்பித்திருந்தாள்.

இவள் வருவதைக் கண்ட வந்தியனோ, தான் இருக்கும் இடத்திலிருந்தே.. "ஹேய்.. எறங்கி, தள்ளிட்டுப் போ.. எறங்கி தள்ளிட்டுப் போ.." என்று கத்த.. அவனைப் பார்த்துக் கொண்டே வந்த குந்தவை, 'வந்தியா.. எனக்கே எனக்காகவேன்னு இப்போ இங்க வந்தியா?!' என்று எண்ணியபடியே சைக்கிளின் வேகத்தை வெகுவாகக் குறைத்தபடியே வந்து, சட்டென அவனருகே வருகையில் வெகு வேகமாக சைக்கிளை மிதித்து.. வந்தியனுடன் சேர்த்து, அவனது நண்பனையும் அந்த வாய்க்காலின் இருபுறமாகவும் தள்ளிவிட்டுவிட்டாள்!

வந்தியனும், அவனது நண்பனும், "ஏய்.. ஏய்.. என்று கத்தியபடியே பாலத்தின் இருபுறமும் சரிந்து தண்ணீருக்குள் விழ, அவர்களைத் தாண்டி சற்று தூரம் சென்று சைக்கிளை நிறுத்திக் கீழிறங்கியவள்.. "அடடா.. நீ கீழ இறங்கி தள்ளிட்டுப் போன்னு சொன்னியா?

நான் தள்ளிட்டு, அப்பறமா கீழ இறங்கிட்டேனே!" என்று நக்கலாய் கூற, வந்தியனுக்கோ வந்ததே ஆத்திரம்..

"அடியேய்.. குட்டி சாத்தானே.. கொரங்கு குட்டியே.. என் கைல மாட்டின.. உன்ன என்ன செய்றேன் பாரு..?" என்று நீருக்குள் இருந்தபடியே கத்த.. அதைக்கேட்டு மேலும் சிரித்த குந்தவை..

"ஆமாமா.. உன் கைல வந்து மாட்டறதுக்குத் தான் நான் தவமா தவமிருந்துட்டு
இருக்கனா?

மொதல்ல தண்ணிக்குள்ள இருந்து வெளிய வா மேன்.. அடிக்கற ஊதக்காத்துக்கு ஜன்னி கின்னி வந்துடப் போகுது..

உன்னையெல்லாம் இந்த காவாய்ல தள்ளிவிட்டதுக்கே கடப்பார நீச்சல் அடிச்சுட்டு இருக்க.. உன்னை ஆத்துலையோ இல்ல கடல்லையோ தள்ளிவிட்டிருந்தா என்னாகிருப்ப?" என்று இவள் மேலும் கிண்டலாகக் கூற..

"கடல்ல தள்ளிவிட்டதுக்கு அப்பறம் நான் என்னாகறேன்றது அப்பறம் இருக்கட்டும்.. ஒரு நிமிஷம் அப்படியே அங்கேயே நில்லு.. இப்போ நீ என்னாகறன்னு நான் காட்டறேன்.." என்று இவன் வாய்க்காலில் இருந்து வெளிவந்தபடியே கூவ, அவளோ.. "போடா டேய்.." என்று சைக்கிளை வேகமாக மிதித்துக்கொண்டு கிளம்பிவிட்டாள்.

இங்கு வந்தியன் அதற்கு மேல் குந்தவையை என்னவென்று சொல்லுவதெனத் தெரியாத திணறிப்போய் குளிரில் நடுங்கியபடி நின்றிருக்க, அவன் நண்பனோ.. "மச்சி.. என்ன பொண்ணுடா.." என்று சிலாகித்தான்.

குந்தவை இங்கு பெரியவீட்டுக்கு வந்து பாகீரதியுடன் பேசிக்கொண்டிருக்கையில், பாகீரதியோ.. "ச்சே.. இந்த பையன் பாரு.. சாயந்தரம் தூங்கி எழுநது ஒரு காபி கூட குடிக்காம அப்படியே அவன் பிரெண்டு கூட ஊர் சுத்த போய்டுச்சு.." என்று தனக்குள்ளாகப் புலம்ப.. அதற்கு குந்தவையோ..

"கவலைப்படாதீங்க ரதிம்மா.. இதோ இன்னும் அஞ்சு நிமிஷத்துல அவன் வீட்டுக்கு வந்துடுவான்.

ஆங்.. அப்பறம் துடைக்க துண்டு.. குளிக்க சுடுதண்ணி எல்லாம் போட்டு வைங்க அவனுக்கு.. சீக்கிரம்.." என்று கூற, இங்கு பாகீரதியோ ஆச்சர்யமாய் பார்க்க, வந்தியனின் பெரியன்னை சிவகாமியோ..

"இது என்னடிம்மா புதுசா இருக்கு? வந்தியன பத்தி நீ பேசற? அதுவும் அவன் மேல இவ்வளவு அக்கறையா வேற பேசற?" என்று ஆச்சர்யப்பட.. குந்தவையோ..

"ஏன் நாங்க அக்கறைப்படக் கூடாதா? நாங்கல்லாம் அக்கறைப்பட்டா அந்த வளந்தாமண்டி என்ன நாலு இஞ்சு குறைஞ்சுடுவானோ?

போங்க.. போங்க.. போய் சீக்கிரம் சுடுதண்ணி காயவைங்க.." என்று இவள் மிதப்பாகப் பேச.. அங்கு வந்த வந்தியனின் சித்தி சைலஜாவோ.. "ஏய்.. நிஜமா சொல்லுடி நீங்க ரெண்டு பேரும் ராசியாகிட்டீங்களா?" என்று ஆச்சர்யத்துடன் கேட்க, காபியை பருகிக் கொண்டிருந்த குந்தவையோ.. அதை உறுஞ்சியபடியே.. "ஹ்ம்ம்.." என்று கூறினாள்.

அதே சமயம் முன் வாசலில் வந்தியனின் குரல் கேட்க, இவளோ.. "அய்யயோ.. வானதி வேற ஸ்கூல் விட்டு வந்திருப்பா.. எனக்கு நாளைக்கு ஸ்கூல் லீவ் தான? நான் நாளைக்கு வந்து உங்கள பார்க்கறேன்.. சீக்கிரம் ஓடுங்க ஓடுங்க.. உங்க பையனுக்கு துடைக்க துண்டு எடுத்துட்டு நீங்க முன்னாடி ஓடுங்க.." என்று அவசர அவசரமாக காபியை ஒரே வாயில் ஊற்றிக் கொண்டு, பின் வாசல் வழியாக தனது சைக்கிளை எடுத்துக் கொண்டு இவள் ஓடியே விட்டாள்!

அதே சமயம் வீட்டிற்குள் வேக வேகமாக வந்த வந்தியனோ, ஈரம் சொட்டும் உடையுடன் நேராகவே சமயலறைக்குள் வந்து.. "எங்க? எங்க அந்த குட்டிச்சாத்தான்?" என்று வினவ, பாகீரதிக்கு ஒன்றுமே புரியவில்லை!

"டேய்.. என்னடா.. இப்படி தொப்பலா நனச்சிருக்க? ஆத்துக்கு குளிக்க கிளிக்க போனியா? ஆனா இப்படி ட்ரஸ்சோடவா ஆத்துக்குள்ள இறங்குவ?" என்று அவர் கேள்வி மேல் கேள்வியாய் கேட்க, இங்கு சைலஜாவோ.. விழுந்து விழுந்து நகைத்தார்.

அதைக் கண்டுகொள்ளாத சிவகாமியோ, பாகீரதிக்கும் மேலாக.. "டேய்.. ராஜா.. நீயும், நம்ம குந்தவையும் ராசியாகிட்டேங்களாமே? நீ ஆத்துக்குக் குளிக்கப் போறேன்னு அவகிட்ட சொல்லிட்டுப் போனியா? அது தான் அவ்வளவு அக்கறையா அவ உனக்கு சுடுதண்ணியெல்லாம் வைக்க சொல்லிட்டுப் போனாலா?.." என்று அவர் வாஞ்சையாகக் கூற, வந்தியனின் காதில் புகை வந்தது.

"எது.. அந்தப் பெருக்கான் எனக்காக சுடுதண்ணி வைக்க சொல்லிட்டுப் போச்சா? என்ன காவாய்க்குள்ள தள்ளிவிட்டுட்டு, இங்க வந்து நான் குளிக்க சுடுதண்ணி வேற காய வைக்க சொல்லிட்டுப் போயிருக்காளா? அவள.." என்று இவன் கறுவ, அவர்களுக்கு அப்பொழுது தான் சைலஜா சிரித்ததன் காரணம் புரிந்தது.

"அடப்பாவி.. நம்மகிட்ட என்னமோ அவளும், நம்ம ராஜாவும் சமாதானமாகிட்ட மாதிரி பேசிட்டு போனா? கழுத.. நாளைக்கு வரட்டும் பேசிக்கறேன்.." என்று சிவகாமி செல்லமாக வைதாலும், அவராலும் சிரிப்பைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை.

அபப்டியே அன்றைய நாளும் கழிய, இதோ அடுத்த நாள் காலையிலேயே தோளில் புத்தகப் பையுடனும், கையில் ஆட்டுக்குட்டிகளை கட்டிய கயிற்றுடனும் ஆடு மேய்க்க கிளம்பிவிட்டாள் குந்தவை.

அப்படியே பெரியவீட்டுக்கும் சென்று ஒரு பார்வை பார்த்துவிட்டு செல்லலாம் என்று எண்ணியபடி வழக்கம் போல வந்தியனுடைய அன்னையருடன் பேசிவிட்டு, இவன் பெரியவீட்டைச் சுற்றிக் கொண்டு வெளியே சென்றாள்.

அப்பொழுது தன் நண்பனுடன் பேசிக் கொண்டிருந்த வந்தியன், இவளைப் பார்த்துவிட்டு வேக வேகமாக வெளிவந்து, அவன் வீட்டு வழியாக நடந்து போய்க்கொண்டிருந்தவளை,

"ஏய்.. குந்தவ.. நில்லு.." என்று ரௌத்திரமாகக் கூப்பிட்டான்.

ஆடு மேய்க்க போய்க்கொண்டிருந்தவளும், "அடேயப்பா.. இவன் என்ன எதுக்காக பேரெல்லாம் சொல்லிக் கூப்படறான்?" என்ற ஆச்சர்யம் கலந்த சந்தேகத்தில் புருவச் சுளிப்புடன் திரும்பிப் பார்க்க.. வந்தியனோ,

"இங்க பாரு.. சும்மா சும்மா என் வீட்டு வழியா இங்கயும், அங்கேயும் போறத நிறுத்திக்கோ. நீங்கல்லாம் நடந்து போறதுக்காகத் தான் நாங்க இங்க வீடும், வாசலும் இவ்வளவு பெருசா கட்டி வச்சிருக்கோமா?

இனி வீட்டு வேலைக்குக் கூட நீ இங்க வரத் தேவையில்லை. அதான் படிப்ப முடிச்சுட்டு ஸ்கூலுக்கெல்லாம் வேலைக்கு போறல்ல? அப்பறமும் எதுக்கு இங்க வந்து ஆட்டம் காட்டிட்டு இருக்க?" என்று அவளருகே சென்று அவன் மிரட்ட, அந்தக் காலை வேளையில் அந்த ஒட்டுமொத்த தெருவும் அவர்களைத் தான் வேடிக்கைப் பார்த்தது.

அதைக் கண்டு தன் நீண்ட விழிகளால் அவனை உறுத்துப் பார்த்த குந்தவையோ..

"இங்க உன் வீட்டையும், வாசலையும் 'ஆஆன்னு' வேடிக்கப் பார்க்க ஒன்னும் நான் வரல.

இங்க வேலை செய்துட்டு இருந்தவங்க என் அம்மா.. அவங்களுக்கு உங்க அம்மா நிறைய உதவி செஞ்சிருக்காங்க.. அதுக்காகத் தான் நான் இப்பவும் இங்க வந்து போறது.

ஆனா.. என்ன சொன்ன நீ? எங்க ஆளுங்கள்லாம் வந்து போறதுக்காக உங்க வீடு வாசலும் கட்டலைன்னு சொன்னல்ல?

ஜாதியே இல்லன்னு சொல்லி ஒட்டு வாங்கின M.L.Aவோட பையன்.. இங்க இத்தனைப் பேருக்கு மத்தியில என்ன இப்படி பேசறல்ல.. என்னோட ஜாதி காரணமா தான நீ என்ன சின்ன வயசுல இருந்து இப்படி எங்க பார்த்தாலும் கேவலமா நடத்திட்டு இருக்க?

ஒன்னு நல்லா கேட்டுக்கோ.. இப்படி ஜாதி பார்த்துப் பேசிப் பழகற நீ, இந்த வீட்டுக்கு விளக்கேத்த கூட்டிட்டு வரப் போறது என் ஜாதிக்கார பொண்ணத் தான்.

அதுவும் எப்படி? நீ காதலிச்சு, அவ கால்ல விழுந்து கல்யாணம் பண்ணிக்கப்போற.

அதையும் உன் கூடவே இருந்து நானும் பார்க்கத் தான் போறேன் பாரு.." என்று குந்தவை சவால் விட, அதைக் கேட்ட வந்தியன் இடி இடியென நகைத்தான்.

"எதெது? நான்.. உன்னோட ஜாதிக்கார பொண்ண கல்யாணம் செய்துக்கப் போறேனா? அதுவும் எப்படி காதலிச்சு.. கால்ல விழுந்து கல்யாணம் செய்துக்கப் போறேனா? நல்ல காமெடி தான்." என்று மேலும் சிரித்தவன், சட்டென சீறியபடி..

அடச்சீ.. வந்துட்டா சாபம் கொடுக்க, முட்டக்கண்ண உருட்டிக்கிட்டு.. இன்னும் நல்லா மை எடுத்து உன் கண்ணுல அப்பிக்கோ.. ஒரு பய உன் கண்ண பார்த்து பேச முடியாது.

பேசறா பெரிய இவ மாதிரி.. சீ போ.." என்று அவளை விரட்டியடிக்க, குந்தவையின் உள்ளுக்குள் கனன்றது பெரும் நெருப்பொன்று!

அந்த நெருப்புடனே இவள் திரும்பி நடக்க, இவளுக்கு பின் புறமாய் கேட்டது "பளார்.." என்ற ஒலி!

"யார்கிட்ட என்ன வார்த்தை பேசிட்டு இருக்க? M.L.A.வோட பையன்ற திமிரா?

அவங்க ஓட்டுப் போட்டு ஜெயிக்க வச்சதால தான் நான் M.L.A. அதைப் புரிஞ்சுக்கோ மொதல்ல.." என்று சீறிய தேவேந்திரன், "போ.. போய் அந்தப் பொண்ணுகிட்ட மன்னிப்பு கேளு." என்றும் வந்தியனைப் பணிக்க, அவரை மீற முடியா ஆத்திரத்துடன், கடித்தப் பற்களுடன், "சாரி.." என்ற வந்தியன், சிவந்த கண்களுடன் வீட்டுக்குள் திரும்பி வர, அங்கு நின்றிருந்த அவன் நண்பனோ..

"ஏண்டா அவள இப்படிப் பேசின?" என்று கேட்க, அவனை ரௌத்திரமாய் பார்த்த வந்தியனோ.. "இனி அவளைப் பத்தி ஒரு வார்த்த பேசின சாவடிச்சுடுவேன்.. ஓடிப்போயிரு இங்கிருந்து.. இனி என் வீட்டுப் பக்கம் தல வச்சு கூட படுக்காத.." என்று கூறிவிட்டு விடுவிடுவென தன் அறைக்குள் நுழைந்தான்.

அதே சமயம் வந்தியனின் மொபைலுக்கு ஒரு அழைப்பை வர அதை எடுத்துக் பேசியவன், இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தவனாக..

"இதுக்கெல்லாம் ஒரே முடிவு அவளை கடத்தறது தான். திங்கக்கிழம அவ ஸ்கூல் வெள்ளிவிழாவாம்.. அதனால நைட் வரைக்கும் பங்க்ஷன் நடக்கும். அந்த ஸ்கூல்லயே வச்சு நாம அவள கடத்தறோம்." என்று தீர்க்கமாய் கூறினான்!

தொடரும்..

என்ன செல்லாஸ்.. எபிசோட் புடிச்சுதா? உங்கள் மேலான கருத்துக்களை இங்க பகிர்ந்துகோங்க..


கருத்துக்களுக்கு..


- நிலவின் ஊடல்_NNK51
 

NNK51

Moderator
ஊடல் சேர்த்து காதல் கோர்ப்போம்!
292055440_584692953041504_1729608465490144239_n.jpg

அத்தியாயம் - 3

பெருமழைக்கு அச்சாரமாய் சிறு சிறு துளிகளை மண் நோக்கி அனுப்பிக் கொண்டிருந்தது வானம். அச்சிறு துளிகள் மூலம் கிளர்ந்தெழுந்த புவியோ, மண் வாசம் பரப்பி, மகிழ்வுடனிருக்க, அந்த ஏகாந்தத்தைச் சிறிதும் ரசிக்க மனமின்றித் தன் படுக்கையில் புரண்டு படுத்தாள் குந்தவை.

"அக்கா.. என்ன இன்னும் அந்த வந்தியன் சொன்னதையே நினைச்சுட்டு இருக்கியா என்ன? விடுக்கா.. அதான் அவன் பேசினத்துக்கு நீயும் பதில் பேசிட்டல்ல?

அதுவுமில்லாம.. நம்ம M.L.Aவும் அவனை நல்லா வாங்கு வாங்குன்னு வாங்கிட்டு.. கூடவே உன்கிட்டையும் அத்தனை பேர் முன்னாடியும் மன்னிப்பு கேட்க வச்சாருல்ல?" என்று வானதி, குந்தவையை சமாதானப்படுத்தக் கூறிய எந்தக் கூற்றிலும் அவள் தேறுதலடையவில்லை!

"இல்ல வானு.. அவன் அப்பா அவனை திட்டினதாலையோ, இல்ல அவ்வளவு பேர் முன்னாடி அவனை, என்கிட்டே மன்னிப்பு கேட்க வச்சதாலையோ அவன், தான் செஞ்சது தப்புன்னு உணர்ந்துடுவானா?

எவ்வளவு கேவலமான எண்ணம் அவன் மனசுல இருக்குல்ல? ஏழை.. பணக்காரன்.. மேல் ஜாதி, கீழ் ஜாதின்னு எவ்வளவு கேவலமான எண்ணங்கள் அவனோடது?

அவனெல்லாம் என்ன வெளியூர்ல போய் படிச்சான்? அங்கேயும் இப்படி ஜாதி பார்த்து தான் பேசிப் பழகியிருப்பானா? ச்சே.." என்று வெறுத்துப் போய் கூறியவள், சற்று இடைநிறுத்தி ஆத்திரத்துடன் தொடர்ந்தாள்.

"ஆனா ஒன்னு சொல்லறேன்.. கண்டிப்பா அவனோட இந்த எண்ணங்கள் எல்லாமே மாறும். நான் மாத்துவேன். நம்மள கேவலமா, கீழா நினைக்கறான் இல்ல? அந்த எண்ணத்தை அவன் கண்டிப்பா மாத்திக்குவான்.

இப்படி நம்மள நினச்சதுக்காக கண்டிப்பா அவன் மனசு கஷ்டப்படுவான்." என்று சூளுரைப்பது போலக் கூறவும், வானதி தொடர்ந்தாள்,

"அக்கா.. அவன் திருந்துனா என்ன? வருந்துனா என்ன? நம்ம வேலைய நாம பார்ப்போம். அவனவன் செய்யற பாவத்துக்கு அவனவன் அனுபவிப்பான்." என்று ஏதேதோ வேதாந்தம் பேசினாள்.

ஆனால் அப்போதைக்கு குந்தவை, வானதியின் வேதாந்தத்துக்கு பதிலேதும் பேசாவிட்டாலும், உள்ளுக்குள் காட்டுத் தீயாய் பெருகியது தீராப்பகை.

இப்படி உள்ளெல்லாம் பெருகிய வஞ்சத்துடன், வந்தியான நினைத்து அன்றிரவு தூக்கத்தை குந்தவை தொலைத்திருக்க, அந்த வேளையில் அந்நியமாய் ஒலித்தது அவளது அலைபேசியின் குரல்.

இரண்டு, மூன்று முறை அவள் யார் அழைப்பது என்று கூட எடுத்துப் பாராதிருக்க, அடுத்த முறை வந்த அழைப்பில் கடுப்பாகி தனது அலைபேசியை எடுத்துப் பார்க்க.. அழைப்பு ஏதோ புதிய எண்ணிலிருந்து வந்திருந்தது.

எனவே அதை அவள் நிராகரித்தும் விட்டாள். ஆனால் உடனே அந்த எண்ணில் இருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது.

'டேய்.. ஒரு எமெர்ஜென்சிடா.. சீக்கிரம் போன எடுத்துத் தொல.. உன்னோட ஹெல்ப் கண்டிப்பா வேணும்..' என்று அந்த குறுஞ்செய்தி வந்திருக்க, இங்கு குந்தவைக்கோ குழப்பம்!

'என்ன இது? இப்படி ஒரு மெசேஜ் வந்திருக்கு? ஒருவேள யாராவது நம்பர் மாத்தி எனக்கு மெசேஜ் அனுப்பியிருப்பாங்களோ?' என்று எண்ணமிட்டவள், தனக்கு குறுஞ்செய்தி வந்த எண்ணிற்கே,

"சாரிங்க.. இது ராங் நம்பர்.." என்று பதிலளிக்க, உடனே கோபமாய் மறுமுனையில் இருந்தவன் மீண்டும் இவளுக்கு அழைத்தான்.

'ஹையோ.. என்னவாம் இவனுக்கு?' என்ற சலிப்புடன் யோசித்தவள்.. 'சரி.. இப்போ ஒரு முறை போன் எடுத்து இது ராங் நம்பர்ன்னு புரியவச்சுடுவோம்.' என்றெண்ணி அந்த அழைப்பை ஏற்றாள்.

"அடேய்.. நீயெல்லாம் மனுஷனா.. உனக்கு நான் எவ்வளவோ ஹெல்ப் செஞ்சிருப்பேன். இப்போ நான் ஒரு உதவி கேட்டதும் ராங் நம்பர்னு சொல்றியா?" என்று அவன் படபடவென பேச, இங்கு குந்தவையோ அவன் அலறிய அலறலில் காதை அடைத்துக் கொண்டாள்.

"ஹெலோ.. ஹெலோ.. கொஞ்சம் பொறுமையா இருங்க.. இது நிஜமாவே ராங் நம்பர் தான். நீங்க யாரோன்னு நினச்சு, என்கிட்டே பேசிட்டு இருக்கீங்க. நீங்க நினைக்கற ஆள் நான் கிடையாது.." என்று ஒரு பெண்ணின் குரல் கேட்கவும், திடுக்கிட்டு விழித்தான் வந்தியன்.

"என்னதிது? நம்ம ராகுலோட நம்பர்ல ஏதோ ஒரு பொண்ணு பேசுது?" என்று குழம்பியவன்,

"இது.. ராகுல் நம்பர் இல்லையா?" என்று தயக்கத்த்துடன் கேட்க, இங்கு குந்தவைக்கோ கடுப்பாகிவிட்டது.

"எத்தனை முறை சார் சொல்லறது.. இது ராகுலோட நம்பரும் இல்ல.. கோகுலோட நம்பரும் இல்ல.." என்று கடுப்புடன் கூற வந்தியனோ,

"சாரி.. சாரிம்மா.. இங்க ஒரு எமெர்ஜென்சி.. அதுக்கு அவனோட ஹெல்ப் வேணும். இங்க இருக்கற சூழ்நிலையும் சரியில்ல.. மனசெல்லாம் ஒரே குழப்பமா இருக்கு. அதுல என்னால சரியா யோசிக்க முடில. மறுபடியும் சாரிம்மா.." என்று அவன் உணர்ந்து கேட்க, குந்தவைக்கு மனம் உருகிவிட்டது.

'இந்த விடியற்காலை வேளையில் இப்படி ஒருவன் தவியாய் தவித்துப் போய் இருக்கிறானென்றால்.. அவனுக்கு என்ன கஷ்டமோ?' என்று எண்ணி மருகியவள், அவனிடமே..

"சார்.. எனக்கு புரியுது நீங்க ஏதோ இக்கட்டுல இருக்கீங்கன்னு. நீங்க தப்பா நினைக்கலைனா நான் ஒன்னு சொல்லறேன்..

எல்லா பிரச்சனையும் தலைக்குள்ள அழுத்திகிட்டா, தீர்வுக்கான வாசல் எங்க இருந்து கிடைக்கும்? கொஞ்சம் பொறுமையா மனச காலி பண்ணிட்டு அப்பறம் யோசிங்க சார்.

இந்த ராகுலோட ஹெல்ப் இல்லைன்னா, உங்க வேலை முடியறதுக்கு வேற என்ன வழின்னு யோசிங்க.

ஒரு கதவு மூடிட்டா, இன்னொரு கதவை திறக்கப் பாருங்க சார். மூடின கதவு முன்னாடியே உட்காந்துட்டு இருக்கறதுல என்ன உபயோகம்?" என்று இவள் நிதானமாய் கேட்க, வந்தியனின் விழிகளிலோ புது விடியல்!

"தாங்க்ஸ்ம்மா.. ரொம்ப ரொம்ப தாங்க்ஸ்.. நீ யார் என்னன்னு எதுவும் தெரியல.. ஆனா என் குழப்பத்துக்கான விடை உன்கிட்ட கிடைச்சுருக்கு. சரி நான் போன் வச்சுடறேன்.. செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கு." என்று கூறி அவன் போனை அணைத்துவிட, இங்கு குந்தவையும் இதழ்கடையின் சிரிப்புடன் போனை அணைத்தாள்.

ஆனால் அதற்குள் விடிந்துவிட, பள்ளிக்குக் கிளம்பத் தயாராகவேண்டி வந்துவிட்டது.

இங்கு மறுமுனையில் வந்தியனோ, தனது மற்ற நண்பர்களுக்கு போன் செய்து, "டேய்.. இந்த ராகுல் நம்மள நல்லா ஏமாத்திட்டான்.

"...."

"ஏனா? அவன் போன் நம்பரையே மாத்திட்டான்டா.. இனி அவனை நம்பி எந்த யூஸும் இல்ல. நாம வேற வழி பார்த்துக்கலாம். மொதல்ல அவளை இன்னைக்கு தூக்கறோம். மத்ததெல்லாம் சென்னைக்குப் போற வழில பிளான் செய்துக்கலாம்.

இன்னைக்கு விட்டோம்னு வைய்யேன்.. மறுபடியும் இப்படி அல்வாத்துண்டு மாதிரி இன்னொரு சான்ஸ் கிடைக்காது." என்று கூறி கடத்தல் திட்டத்தை உறுதிபடுத்தினான்.

இது எதுவும் தெரியாத குந்தவையோ, அன்று பள்ளியில் வெள்ளி விழா என்பதற்காக அழகாக ஆயத்தமாகிக் கொண்டிருந்தாள்.

கண்ணாடி பார்த்து தலைவாரி, பொட்டிட்டுத் திரும்புகையில், தங்கையின் கண்மை டப்பா இவள் கண்களுக்குப் பட்டது.

கூடவே மனதில் வந்தியனின் வசனங்களும்!

'இன்னும் கண்ணுக்கு நல்லா மையும் அப்பிக்கோ.. ஒரு பய உன்னைப் பார்த்து பேசமாட்டான்.' என்று அவன் ஆங்காரமாய் கூறியது இவளுக்கு ஆத்திரத்துடன் நினைவு வர, அதே ஆத்திரத்துடன் அந்தக் கண்மை டப்பாவைக் கையில் எடுத்தாள்.

என்ன தான் வானதி தினமும் கண்களுக்கு மையிட்டுக் கொண்டாலும், பாகிரதியும், சிவகாமியும், சைலஜாவும், கூடவே அவர்களது பெண்களான குழலியும், மணியும் இவளை மையிட்டுக் கொள்ள வற்புறுத்தியிருந்தாலும், இதுநாள் வரை குந்தவைக்கு, கண்களில் மையிட்டுக் கொள்ளும் ஆசை வந்ததே இல்லை.

ஆனால்.. இன்று வந்தியனுக்காக.. வந்தியன் கூறிய வார்த்தைகளுக்காக தன் கண்களுக்கு கரும்மை தீட்டினாள்.

தீட்டிவிட்டுப் பார்த்தால், பத்திரகாளி போல இருப்போம் என்று அவள் எண்ணியிருந்ததுக்கு மாறாக, அந்த கருவிழிகளுக்கு அழகாக கருநிற எல்லை தீட்டியதற்போல, பார்ப்பதற்கு கொஞ்சம் நன்றாகவே இருந்தது.

அதைப் பார்த்த குந்தவையோ, கோபத்துடன் தன் தங்கையை அருகழைத்து..

"ஏய்.. வானு.. எனக்கு இந்த மைய பத்திரகாளி மாதிரி போட்டுவிடு.." என்று கூற, வானதிக்கோ மறுபடியும்..

'இவ என்ன லூசா?!' என்ற எண்ணம் பிறந்தது.

ஆனாலும் தனக்கு பள்ளிக்கு நேரமாகிக் கொண்டிருந்த காரணத்தாலும், வேறு ஏதாவது செய்து, தன் தமக்கை இந்த அழகான அரிதாரத்தை கெடுத்துவிடக் கூடாதே என்ற எண்ணத்தாலும்,

"ஹ்ம்ம்.. இதுக்கு மேல பத்திரகாளி ஆகறதுக்கு என்ன இருக்கு? ஏற்கனவே அப்படித் தான் இருக்க.." என்று கடுப்புடன் மொழிவது போலக் கூற, குந்தவைக்கோ குழப்பம் தான் எஞ்சியது.

ஆனால்.. அவளுக்கும் தானே பள்ளிக்குத் தாமதம் ஆகிறது? எனவே வேறு எதைப்பற்றியும் யோசிக்காது தங்கையின் அந்த பதிலில் திருப்தியுற்று கிளம்பிவிட்டாள் அவள்!

அன்று பள்ளியே விழாக்கோலம் பூண்டிருக்க, இவளுக்கும் வந்தியனைப் பற்றிய நினைவுகள் ஞாபக இடுக்கின் பின் செல்ல, மனதிற்குள் சற்று உற்சாகமாகவே இருந்தது அவளுக்கு.

காலை முதல் மாலை வரை வழக்கம் போலவே வகுப்புகள் இயங்க, மாலை பள்ளி விடும் நேரத்தில் தான் விழா ஆரம்பித்தது.

முதலில் பள்ளித் தலைவர்கள், பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் என அனைவரும் பேசி முடிக்கையில் லேசாக இருட்டவும் துவங்கிவிட்டது.

மாணவர்களின் கலை நிகழ்ச்சியும் அடுத்ததாகத் துவங்கிவிட, அனைவரும் அதி லயித்திருந்தனர்.

இதில் நன்றாகவே இருள் சூழ, ஒரு கும்பல் மெதுவாக பள்ளிக்குள் புகுந்தது.

"டேய்.. நீங்க ரெண்டு பேரும் கேட்டுக்கிட்ட ரெடியா இருங்க.

டேய்.. நீ போய் பவர் ஆஃப் பண்ணு..

டேய்.. நாம ரெண்டு பேர் போதும் அவள தூக்க.." என்று கூறி அவன் மெது மெதுவாக முன்னேறி குந்தவையை அடைய, அதே சமயம், தடபுடலாக அங்கு நுழைந்த வந்தியனோ, அவளை நெருங்கும் நேரம், அங்கு மின்வெட்டாக, குந்தவையின் முகத்தில் துணியை மூடி, அவள் வாயைப் பொத்தி அலேக்காகத் தூக்கிச் சென்றான் வந்தியன்.

அதே சமயம்.. "டேய்.. வேற யாரோ அந்தப் பொண்ண கடத்திட்டுப் போறாங்கடா.." என்று முதலில் வந்த குழுவின் தலைவன், தன் சகாக்களிடம் கூறியது வந்தியனின் செவிகளில் விழ,

'இவள நாம கடத்தறதுல ஒரு அர்த்தம் இருக்கு.. ஆனா.. இன்னொரு காங் எதுக்கு இவளை கடத்தணும்?' என்ற குழப்பத்துடனே சென்று காரில் அவளை ஏற்றினான்.

அங்கு ஒலித்துக் கொண்டிருந்த பாடல்களின் இரைச்சலில் இந்தத் தடபுடல் யாருக்கும் தெரியாது போக, இங்கு குந்தவையின் வலப்புறம் வந்தியனும், மறுபுறம் மற்றொருவனும் அமர்ந்துகொள்ள, வந்தியனின் இன்னொரு நண்பன் காரை ஓட்டிச் சென்றான்.

குந்தவைக்கு இதயமெல்லாம் படபடவென அடித்துக் கொண்டிருந்தது. பயத்தில் மூச்செல்லாம் தாறுமாறாய் இயங்கிக் கொண்டிருக்க, இவளுக்கு வலப்புறம் இருந்தவன் இதயத்துடிப்பும் இவளுக்கு இணையாகத் துடிப்பதாய் உணர்ந்தாள் அவள்!

கூடவே அவனது மூச்சும் தாறுமாறாய் இயங்க.. அவன் நெஞ்சம் ஏறி இறங்கும் தொனியில்.. அது வந்தியன் தான் என்று உணர்ந்தும் விட்டாள்.

இத்தனையும் மீறிய அச்சாரமாய், அவளது கைய இறுக்கப் பிடித்திருக்கும் அவன் கையின் கதகதப்பும் நிச்சயமாய் இது வந்தியன் தான் என்று அவளுக்கு அறுதியேற்றியது.

ஆனால் இதில்.. வந்தியனின் இதயத்துடிப்பு.. மூச்சின் வேகம், கையின் கதகதப்பு இதெல்லாம் இவளுக்கு எப்படித் தெரியும் என்று கேட்டால்.. அதற்கான பதில்.. சுழியம் தான்.

அவனை மிக அருகாமையில் கூட இவள் பார்த்ததில்லை.. அதிகப் பேச்சுவார்த்தையும் இருவருக்கும் இருந்ததில்லை. இதுவரை நடந்ததெல்லாம் வெறும் சண்டையே..

ஆனால்.. அவளது உள்ளுணர்வுக்கு அவனைத் தெரிந்திருக்கிறது!

இது அவளுக்குமே ஆச்சர்யம் தான்!!

ஆனால் அந்த ஆச்சர்யத்தின் ஆராய்ச்சியில் இறங்காது, இவன் எதற்காகத் தன்னை கடத்த வேண்டும் என்று யோசித்தாள்.

'ஓஓ.. அன்னைக்கு இவனோட அப்பா, இவன எல்லார் முன்னாடியும் என்கிட்டே மன்னிப்பு கேட்க சொன்னதுக்காக என்ன கடத்திட்டுப் போய் ஏதாவது செய்யப் பார்க்கறானா?' என்று யோசித்தவள், எப்பொழுதும் தனது இடையில் மறைத்து வைத்திருக்கும் குறுங்கத்தியை எடுக்க நினைத்தாள்.

அவளால் இப்பொழுது அதை எளிதாக எடுக்க முடியும் தான்.. ஆனாலும் சரியான சந்தர்ப்பத்திற்கு அவள் காத்திருக்க.. அதே சமய வந்தியனின் நண்பன், அவளிடம் பேசினான்.

"இங்க பாரு.. நான் இப்போ செஞ்சிருக்கறது உனக்குப் பிடிக்கலைன்னு எனக்கு நல்லாவே தெரியும். ஆனா.. எனக்கு வேற வழி இல்ல.. ப்ளீஸ் புரிஞ்சுக்கோ." என்று கூற, குந்தவைக்கோ வந்ததே ஆத்திரம்!

"டேய்.. என்னடா உங்கள புரிஞ்சுருக்கறது.." என்று குந்தவை கூறியது தான் தாமதம், அவளது ஒற்றை வார்த்தையில் வந்தியன் அலறிவிட்டான்.

"அடேய் மாறா.. இது உன்னோட லவ்வர் நதியா இல்லடா.. இது வேற ஒருத்திடா.." என்று அலற, அவனது கூப்பாட்டில் ஓட்டுநர் இருக்கையில் இருந்தவனது கையில் கார் தடுமாற, அந்த கார் ஒரு சிறு மரத்தில் முட்டிக் கொண்டு நின்றது.

"அய்யயோ.. போயும் போயும் இவ கைலயாடா சிக்குவோம்.. ஒடுங்கடா.. இறங்கி ஓடிருங்க.." என்று வந்தியன் மேலும் கூவ, அவனது நபர்கள் இருவரும் திக்குக்கு ஒருவராய் ஓட, தானும் ஓட முயன்ற வந்தியனை எட்டிப் பிடித்த குந்தவையோ, அவனது கையைப் பின்னால் முறுக்கி.. தன் முகத்திலிருந்த துணியை கழற்றி வீசி எறிந்துவிட்டு, அவன் கழுத்தில் கத்தியும் வைத்தாள்.. "டேய்.. நில்லுங்கடா.." என்ற கர்ஜ்ஜனையுடன்.

அவளது கர்ஜ்ஜனையில் ஓடிய இருவரும் மிரண்டு திரும்பிப் பார்க்க, அங்கு வந்தியனோ, பரிதாபமாய் குந்தவையின் கத்தியில் கழுத்தைக் கொடுத்தபடி!

"சொல்லுங்கடா.. என்ன என்ன செய்ய திட்டம் போட்டீங்க?" என்று அவள் கேட்க, அதற்கு அந்த மாறனோ.. "இல்ல சிஸ்டர்.. இது நிச்சயமா உங்களுக்குப் போட்ட பிளான் கிடையாது.

நான் உங்க ஸ்கூல்ல வேலை செய்யற நதியான்ற டீச்சரை லவ் பண்றேன். அவளும் தான்..

எங்க ரெண்டு பேர் வீட்டுலையும் கல்யாணத்துக்கு ஒப்புக்கல. அதனால ஊர விட்டு ஓடிப் போய்டலாம்னு அவள கூப்பிட்டா, அதுக்கு அவ ஒப்புக்கல.. அதனால தான் அவளுக்கே தெரியாம அவள கடத்திட்டுப் போலாம். அதுக்கப்பறம் அவள ஒத்துக்க வச்சுக்கலாம்ன்னு நினச்சேன்.

அதுக்காகத் தான் வந்தியன் எனக்கு ஹெல்ப் பண்ணான்." என்று அவன் விளக்கமாய் கூறினாலும் குந்தவை அதை நம்புவதாய் இல்லை.

"ஆஹா.. நீங்க கட்டற கதையெல்லாம் நான் நம்புவேன்னு நினைச்சுட்டு இருக்கீங்களா? காதலாம்.. மண்ணாங்கட்டியாம்.. அதுக்கு லவ் பண்ணின பொண்ணையே தூக்குவானாம்?

ஏண்டா சினிமாப் படக் கதையெல்லாம் சொன்னா அத அப்படியே நான் நம்பிடுவேன்னு நினச்சியா?" என்று அந்த மாறனையும், குந்தவை வாங்கு வாங்கென்று வாங்க.. மாறனுக்கோ அடுத்து என்ன செய்வதென்று தெரியவில்லை.

இதில் வந்தியனுக்கோ, கத்தி கழுத்தில் பட்டு லேசாகக் கீறிக் கொண்டு வேறு இருந்தது.

"குந்தவ.. வலிக்குதும்மா.. கொஞ்சம் கத்திய எடுக்கறியா ப்ளீஸ்.." என்று அவன் மெல்ல குந்தவையிடம் கூற, அவளோ காளியவதாரமே எடுத்துவிட்டாள்.

"டேய்.. என்ன கடத்திட்டுப் போய் நாசம் செய்யப் பார்த்த உன்ன அப்படியே கழுத்தறுத்து கொன்னு போட்டுடுவேன்டா.. நீ யார் மகனா வேணாலும் இருந்துக்கோ.. ஆனா நீ செஞ்ச காரியத்துக்கு நீ இங்கிருந்து உயிரோட போகப் போறது இல்ல.." என்று அவள் ஆங்காரமாய் கூற, அதைக் கேட்ட வந்தியனின் நண்பர்கள் பதறிவிட்டனர்.

"அம்மா.. அம்மா.. கொஞ்சம் இரும்மா.. நான் வேணா என் லவ்வருக்கே போன் போட்டுத் தரேன்.. நீயே அவகிட்ட பேசிக்கோ.. வேணும்னா வீடியோ கால் வேணாலும் போட்டுத் தரேன்.." என்று கூறி அவன், அவனது காதலிக்கு வீடியோ கால் செய்து இங்கிருக்கும் நிலைமையை விளக்கியும் கூற, அந்த நதியாவோ, மாறனை மானம்கெட வைதாள்.

"டேய்.. அறிவுகெட்டவனே.. உன்னையெல்லாம் நான் காதலிச்ச பாவத்துக்கு.. இன்னும் என்னென்ன அனுபவிக்கணுமோ?" என்றவள், போனை குந்தவையிடம் தரச்சொல்ல, அதன்படியே அவனும் போனை அவளிடம் கொடுத்தான்.

"குந்தவை.. ப்ளீஸ்.. குந்தவை.. இது பெரிய பெரிய தப்பு தான். ஆனா.. இந்த ஒரு முறை அவங்கள விட்டுடுங்க குந்தவை. அவங்க ஆள் மாத்தி கடத்திட்டாங்க.

ஆனா.. அவங்க என்னையே கடத்தியிருந்தாலும், அவன் நினைச்சது நடந்திருக்காது.." என்று பல்லை கடித்துக் கொண்டு கூற.. குந்தவையோ,

"ஏம்மா.. உங்களுக்கு லவ் பண்ண வேற நல்ல பையனே கிடைக்கலையா?" என்றவள், மாறனை ஒரு பார்வை பார்த்துவிட்டு.. "என்னமோ.. இனிமேலாவது ஒருமுறைக்கு ரெண்டு முறை நல்லா யோசிச்சு முடிவெடுங்க.." என்று ஒரு மாதிரியாகக் கூறிவிட்டு போனை மாறனிடம் கொடுத்தாள்.

"உனக்கு அப்பறம் இருக்குடா மவனே.." என்று நதியா அவனிடம் கூறி போனை வைத்துவிட, இங்கு குந்தவையும், வந்தியனை விடுவித்தாள்.

"சாரி குந்தவ.." என்று வந்தியன் மீண்டும் மன்னிப்பு கேட்க, குந்தவையோ..

"உன் சாரிய கொண்டு போய் குட்டையடுப்புல போடு..

சாரியாம் சாரி.. இப்போ எப்படிடா நான் மறுபடியும் ஸ்கூலுக்கு போவேன்?" என்று எரிந்து விழுந்தாள்.

அவள் இப்படி எரிச்சலுற, அவளது கோபத்தை தணிக்கும் பொருட்டு வந்தியனின் மற்றொரு நண்பன் இடைபுகுந்தான்.

"நீங்க மறுபடியும் ஸ்கூலுக்குத் தான போகணும்? நம்ம வந்தியனே உங்கள கார்ல கூட்டிட்டுப் போய் விடுவான்." என்று கூற, அவனை அங்கிருந்த அனைவரும் முறைத்தனர், குந்தவை உட்பட!

ஆனால் அவர்களுக்கு வேறு வழியும் தான் இல்லையே?!

எனவே வந்தியன் மட்டுமாக குந்தவையை காரில் கூட்டிக் கொண்டு போய் பள்ளியிலேயே விட்டுவிட்டு வருவதென்று முடிவானது.

வந்தியனின் நண்பர்கள் மீண்டும் குந்தவையுடன் செல்ல பயந்துவிட்டதால் இந்த ஏற்பாடு!

காரில் குந்தவை உர்ரென்ற முகத்துடனும், வந்தியன் சற்று பயந்த முகத்துடனும் சென்றுகொண்டிருந்தனர்.

இதில் எதிரில் ஒரு கார் வர, அந்த விளக்கொளியில் வந்தியன், குந்தவையை எதார்த்தமாகத் திரும்பிப் பார்க்க, பார்த்தவன் சற்று திகைத்தான்.

என்னவோ அதுவரை அவனைச் சூழ்ந்திருந்த பய உணர்வு விலக, கண்கள் கனிந்து.. முகம் மென்மையற்றது!

மீண்டும் ஒரு முறை அவளைத் திரும்பிப் பார்த்தவன், ரகசியக் குரலில், "கண்ணுக்கு மை போட்டிருக்கியா?" என்றான்.

அதை கேட்டு சட்டென விதிர்த்துப் போய் அவனைத் திரும்பிப் பார்த்த குந்தவையோ.. "எதே?!" என்றாள்.

"இல்ல.. இப்போ இன்னும் ரொம்ப நல்லாருக்கு.." என்று அவன் கிறக்கக் குரலில் கூற, குந்தவைக்கு மூச்சடைத்தது.

"நீ இன்னைக்கு ஏதோ சரியில்ல.. நீ வண்டிய நிறுத்து.. நான் நடந்தே போய்க்கறேன்.." என்று அவள் வண்டியிலிருந்து இறங்க முற்பட..

"ஹேய்.. ஹேய்.. இல்ல இல்ல சாரி.. நானே உன்ன ஸ்கூல்ல விட்டுடறேன்.." என்று குமிழ் சிரிப்புடன் வந்தியன் கூற,

அவனது அந்தக் குரலும், சிரிப்பும் அவளுக்குள் ஏதேதோ ரசாயன மாற்றத்தை உண்டு பண்ண, அதற்கு மேல் அவள் அவனிடம் எதுவும் பேசவில்லை.

உள்ளுக்குள் துடிக்கும் இதயம் மட்டும் காரணமே இன்றி வழக்கத்துக்கு மாறாக அதி வேகத்துடன் துடிக்க ஆரம்பித்தது அவளுக்கு!

இது அவளுக்குப் புரியாத உணர்வாக இருந்தது.. புதிதான உணர்வாகவும்!

இங்கு வந்தியனும், அவளிடம் எதுவும் பேச முற்படாவிட்டாலும், அவ்வப்பொழுது அவளை ஓரக்கண்ணால் பார்ப்பதை மட்டும் அவனால் நிறுத்தமுடியவில்லை!

அவன் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளவேண்டும் என்று நினைத்தாலும் காந்தம் போல ஏதோ ஒன்று அவனை, அவள் பால் ஈர்த்தது!

இறுதியாக பள்ளிக்கருகில் வந்ததும் அவளை இறக்கிவிட்டவன், "குந்தவை.." என்று மெல்ல அவளை அழைத்தான்.

ஏதோ சிந்தனையில் தன் போக்கில் நடந்து சென்றவளும் சிறு திடுக்கிடலுன் அவனைத் திரும்பிப் பார்க்க.. மீண்டும் சன்னச் சிரிப்புடன் மெல்லத் தலையசைத்து..

"ஒன்னும் இல்ல போய்ட்டு வா.." என்று கூறி விடையளித்தான்!

அவளும் வெறும் தலையசைப்புடன் பள்ளிக்குள்ளே செல்ல, அங்கு வாசலிலேயே நின்றிருந்தாள்.

"சாரி.. சாரி குந்தவை.. அவங்க செஞ்சது பெரிய தப்பு தான்.. அதுக்காக அவங்கள போலீஸ்ல மாட்டிவிட்டுடாதீங்க.." என்று குந்தவையின் கையைப் பிடித்துக் கொண்டு அவள் கெஞ்ச, வேறு உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்த குந்தவையோ, மொழி தெரியாதவள் போல விழித்தாள்.

அதைக் கண்ட நதியாவோ.. " குந்தவை.." என்று சந்தேகமாக அழைக்க, நடப்புக்கு வந்தவள்.. "இல்ல.. அதெல்லாம் எதுவும் செய்ய மாட்டேன்.. விடுங்க.." என்று கூறி வேறு புறம் சென்றுவிட்டாள்.

வீடு வந்து சேர்ந்த வந்தியனுக்கோ, கண் மூடி உறங்க முடியவில்லை.. குந்தவையின் கண்களே மீண்டும் மீண்டும் அவனது நினைவுக்கு வந்து சில ரகசிய ராத்திரி கனவுகளுக்கு கதவு திறந்தன.

அவனுக்குள் தோன்றிய இந்த உணர்வுகளுக்கெல்லாம் என்ன பெயரிடுவது என்று வந்தியனுக்குத் தெரியவில்லை.. ஆனால் இது அவனுக்குப் பிடித்திருந்தது.

அதே வேளையில் குந்தவையைக் கடத்த வந்த அந்த இன்னொரு கும்பல் யார் என்ற குழப்பமும் அவனுக்குத் தோன்றியது.

அந்த சமயத்தில் அவனது அலைபேசிக்கு ஒரு குறுஞ்செய்தியும் வந்தது!

தொடரும்..

முன் அத்தியாயங்களுக்கு கருத்துக்கள் கூறிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்!


இந்த அத்தியாயத்தைப் பற்றிய உங்களது கருத்துக்களை கூற :

https://www.narumugainovels.com/index.php?threads/ஊடல்-சேர்த்து-காதல்-கோர்ப்போம்_கருத்து-திரி.577/

- நிலவின் ஊடல்!
 

NNK51

Moderator
ஊடல் சேர்த்து காதல் கோர்ப்போம்!

292802327_117873510979953_6681284240950914064_n.jpg

அத்தியாயம் - 4

மனமெல்லாம் பற்பல சிந்தனைகள்.. குழப்பங்கள்.. இனம் புரியா மயக்கங்கள் என கலவையான எண்ணங்கள் அனைத்தும் பாய் போட்டு அமர்ந்திருக்க.. வந்தியனின் அலைபேசியோ சிறு ஒலியெழுப்பி, மினுக்கென ஒளிர்ந்து அடங்கியது!

யாரடா இந்நேரத்தில் தனக்கு குறுஞ்செய்தி அனுப்புவது என்ற சிந்தனையுடன் வந்தியன் தனது மொபைலை எடுத்துப் பார்க்க, அவனுக்கு குறுஞ்செய்தி அனுப்பியது.. வேறு யார்? குந்தவை தான்!

அன்றைய நாள் முழுவதும் நிகழ்ந்த குழப்பங்களில் தலைவலியுடன் படுத்திருந்த குந்தவைக்கோ, வந்தியன் செய்ததை என்ன சமாதானம் கூறினாலும் ஏற்றுக் கொள்ளவே இயலவில்லை.

'ஃபிரண்டுக்காக அவன் லவ் பண்ற பொண்ண கடத்துவானாம்.. அந்த பொண்ண அவன லவ்வே பண்ணியிருக்கட்டுமே? அதெப்படி அவளோட சம்மதம் இல்லாம இவன் கடத்திட்டு போய் கல்யாணம் செய்யலாம்?

இதென்ன சினிமாவா? முந்தின சீன்ல கட்டாயக் கல்யாணம் செய்துட்டு, அடுத்த சீன்லயே கட்டிப்பிடிச்ச உருள்றதுக்கு?

ச்சே.. காதலாம்.. மண்ணாங்கட்டியாம்.. நல்லவேளை எந்த சாமி புண்ணியமோ நான் இன்னைக்கு தப்பிச்சுட்டேன்..' என்று தனக்குள்ளாக எண்ணியவளுக்கு அப்பொழுது தான் அன்று அதிகாலையில் தனக்கு வந்த ராங் நம்பரை பற்றிய நினைவு வந்தது.

'ச்சே.. நாம இப்படி நம்மளோட கஷ்டத்தை மட்டுமே நினைச்சுட்டு இருக்கோம். ஆனா யார் ஒருத்தன் இன்னைக்கு விடிகாலைல ஏதோ எமெர்ஜென்சின்னு போன் செய்தானே? அவனுக்கு என்னாகியிருக்குமோ?' என்று மனதுள் எண்ணினாள்.

ஆனால் நேரம் செல்லச் செல்லம் தனது பிரச்சனைகள் எல்லாம் மறந்து மனம் முழுக்க அந்த முகம் அறியாதவனின் பிரச்சனையே ஆக்கிரமித்துக் கொண்டது.

அவனது குரலும், அதில் இருந்த தவிப்பும்.. இவளது மனதை ரொம்பவும் இம்சிக்க, பல்வேறு யோசனைகளுக்குப் பிறகு, ஆழ்ந்த சிந்தனையுடன் அந்த முகமறியாதவனது எண்ணுக்கு, "ஆல் ஓகே?" என்று ஒரு குறுஞ்செய்தியைத் தட்டிவிட்டாள்.

அதைக்கண்ட வந்தியனின் பார்வையோ அதுவரை கொண்டிருந்த குழப்பம் தளர்ந்து கனிந்தது! புருவம் கொண்டிருந்த முடிச்சுகள் அவிழ்ந்தன! சுருங்கியிருந்த உதடுகள் மென் புன்னகையை எடுத்து அணிவித்துக் கொண்டன!!

வந்தியனது எண்ணை குந்தவை தனது அலைபேசியில் பதிவு செய்திருக்கவில்லை. அதுபோலவே அவனும்!

எனவே இந்தக் குறுஞ்செய்தி வந்தது காலையில் தான் பேசிய பெண்ணிடமிருந்து தான் என்பது வந்தியனுக்குத் தெரிந்திருந்தாலும், ஒரு ஒப்புக்காக, "ராங் நம்பர்?" என்று கேள்வியாய் பதிலனுப்பினான்.

அதற்கு அவளும்.. "ஹ்ம்ம்.." என்றிட.. இப்பொழுது வந்தியனோ,

"போட்ட பிளான் மொத்தமும் தலைகீழாகிடுச்சி மா.." என்றான் சோகத்துடன்.

"ஏன்.. என்னாச்சு.." என்று கவலையாய் இவள் கேட்க..

"இன்னொருத்தனுக்கு ஹெல்ப் செய்யப் போய் நான் வசமா சிக்கியிருப்பேன். தலை தப்பிச்சது தம்பிரான் புண்ணியமாகிடுச்சு.." என்று சுய கேலியாய் கூற, இவளது இதழ்களிலும் இப்பொழுது மென் சிரிப்பு!

"நீங்க நல்லது தான செய்ய நினைச்சீங்க?" என்று எதுவுமறியாத அவள் கேட்க, அவனோ..

"இந்த விஷயம் செய்யறதுக்கு முன்னாடி அது நல்லது தான்னு நினச்சேன். ஆனா.. இப்போ யோசிச்சா.. அது எவ்வளவு பெரிய தப்புன்னு தெரியுது. இத நான் செஞ்சிருக்கவே கூடாது." என்று பெரும் வருத்தத்தில் வந்தியன் கூறினான்.

அதைக் கேட்டவள் ஒரு கணம் நிசப்தித்தாள்.

பின்பு.. "நீங்க செஞ்சது தப்புன்னு உண்மையா உங்க மனசாட்சி சொல்லுதா?" என்று கேட்டாள் அவள்.

அதற்கு அவனோ.. "ஹ்ம்ம்.. ரொம்ப ரொம்ப.. என் மனசாட்சி என்ன கேவலமா கழுவி கழுவி ஊத்துது.." என்று சோகமாய் கூறினான்.

"இதுவே போதும்.." என்று அவள் கூறிட, வந்தியனோ ஆச்சர்யமாய் முழித்தான்.

"என்ன சொல்ற நீ?" என்று இவன் கேட்டிட, குந்தவையோ,

"இல்ல.. நீங்க செஞ்சது தப்புன்னு நீங்களே உணர்ந்துட்டீங்களே! அதுவே போதும்னு சொன்னேன். இந்த அளவுக்குத் தெளிவிருந்தா கண்டிப்பா இனி இது மாதிரியான ஒரு தப்ப நீங்க செய்ய மாட்டீங்க.

இத பத்தி இனி நினைக்காதீங்கப்பா.." என்று அவள் ஆறுதலாகக் கூறிட, அவனோ சற்று மனம் தெளிந்தான்.

ஒரு பக்கம் குந்தவை, வந்தியனின் மீது தீராக் கோபத்தில் இருக்க, மறுபுறம் அதே குந்தவையோ.. அலைபேசியில் பேசும் முகமறியாத வந்தியனுக்கு அவன், அவளுக்குச் செய்த தப்புக்கு ஆறுதல் அளித்துக் கொண்டிருந்தாள்.

இயற்கையின் விந்தை என்பது இதுவோ!

ஒரு புறம் நம் மனம் கொண்டவரின் மீது மிகுந்த ஆத்திரத்தில் நாம் இருந்தாலும், மறு புறத்தில் அதே நபருக்காக நம்மையும் அறியாது நமது உள்ளம் தவிக்கும். இங்கும் அதே போலத் தான் நடந்து கொண்டிருந்தது.

ஆனால என்ன ஒரு புறத்தில் முகத்துக்கு நேரே எலியும் புலியாக உலவிக் கொண்டிருந்தவர்கள், மறுபுறத்தில் முகமறியா நட்பாய் நெருங்கி கொண்டிருந்தார்கள்.

இப்படியாய் அந்த இரவு முடிந்திட, மறுநாள் என்றும் போல அழகாகத் தான் விடிந்தது. வந்தியனுக்கு என்னவோ அப்படித் தான் தோன்றியது.

ஆனால்.. அப்படியே அந்த நாள் அழகாய் இருந்திடுமா என்ன?

ஆம்.. அன்று காலையிலேயே வந்தியனுக்கு சனி பகவானின் சிறப்பு தரிசனம்!

விடிந்து, குளித்து முடித்து வெளியே வந்த வந்தியனை, உணவு அருந்தும் முன்னதாகவே அவனது பெரியப்பாவும், சித்தப்பாவும் அழைத்தனர்.

இவனும் எப்பொழுதும் போல அவர்களுக்கு முன்பு சென்று நின்று.. "என்ன பெரியப்பா?" என்று அவன் கேட்க, அவனது பெரியப்பாவோ, உர்ரென்ற முகத்துடன் ஊஞ்சலில் வீற்றிருந்தார்.

அதைக்கண்ட வந்தியனுக்கோ ஒன்றுமே புரியவில்லை.

"என்னாச்சு சித்தப்பா?" என்று தன்னருகே நின்றிருந்த ராஜேந்திரனிடம், வந்தியன் கிசுகிசுப்பான குரலில் கேட்க, அவரோ..

"செய்யறதெல்லாம் செஞ்சுட்டு.. இப்போ என்னாச்சுன்னா கேட்கற?" என்று பல்லைக் கடிக்க, வந்தியனுக்கோ அடி வயிற்றில் சுரந்த அமிலக் கரைசல் தொண்டை வரை பரவியது.

'அய்யயோ.. அதுக்குள்ளே எந்த மகா புண்ணியவான் டா அந்த விஷயத்தை இவங்க கிட்ட வந்து வத்தி வச்சது? ஒரு வேள அந்த குந்தவையா இருக்குமோ?' என்று இவன் யோசிக்க, அதற்குள் தர்மேந்திரனோ..

"பாரு.. எவ்வளவு பெரிய காரியம் செய்துட்டு இப்படி அமுக்குக் கள்ளன் மாதிரி நிக்கறான் பாரு.." என்று புலியாய் உறும.. வந்தியனுக்குக் குலை நடுங்கிவிட்டது.

"இ.. இல்ல பெரியப்பா. வந்து.. வந்து.. என் ஃப்ரண்டுக்காக செய்யப் போய்.. அது ஆள் மாறாட்டம் ஆகி.. அப்படி இப்படின்னு ஆகிடுச்சு. தயவுசெஞ்சு மன்னிச்சுடுங்க பெரியப்பா.. இனிமே இந்த மாதிரி எந்தத் தப்பும் நான் செய்ய மாட்டேன்.." என்று இறைஞ்ச, அவனது பெரியப்பாவோ அவனை அடிக்கவே எழுந்துவிட்டார்.

"ஓங்கி ஒரு அறை விட்டேன்னா பாரு. ஃப்ரண்டுக்காக பொண்ண கடத்துவானாம்..

இந்த விஷயம் மட்டும் உங்க அப்பனுக்குத் தெரிஞ்சிருந்தா உன்ன அப்பவே வெட்டி பொலி போட்டிருப்பான்.

என்னடா நீயெல்லாம் படிச்ச? ஃப்ரண்டுக்காக செஞ்சானாம் ஃப்ரண்டுக்காக..

உனக்குத் தகுந்த சகவாசமா டா வச்சிருக்க?" என்று அவர் இன்னும் இன்னும் பொரிந்து தள்ளிக் கொண்டே போக.. ராஜேந்திரன் தான் அவனை, தர்மேந்திரனிடம் இருந்து காப்பாற்றிக் கூட்டி வந்தார்.

அவனை கையைப் பிடித்து இழுத்து வந்தவரோ.. "இனிமே ப்ரண்டுக்காக அது பண்றேன்.. இது பண்றேன் ஏதாவது கோக்கு மாக்கா பண்ணி வச்ச.. உன்ன என்னால கூட காப்பாத்த முடியாது பார்த்துக்கோ.." என்று கர்ஜனையாய் கூறிவிட்டுச் செல்ல, வந்தியனுக்கோ, சுனாமியில் சிக்கி மீண்ட உணர்வு.

இப்படியாய் இங்கு வந்தியன் ஏற்கனவே ஏகப்பட்ட பிரச்சனைகளில் இருக்க, அப்பொழுது மாறன் வேறு தொடர்ந்து அவனுக்கு அலைபேசியில் அழைத்துக் கொண்டிருந்தான்.

அதைப் பார்த்த வந்தியனோ இன்னும் கடுப்பாக.. "எல்லாம் இந்த நாயால தான்.. இவனுக்கு ஹெல்ப் பண்ண போய் நான் தான் பெரிய சிக்கல்ல மாட்டிகிட்டேன்.." என்று எண்ணி அவனது அழைப்பை நிராகரிக்க, ஆனால் மாறன் தான் அவனை விடுவதாய் இல்லை!

இன்னும் பல முறை அவனிடம் இருந்து அழைப்பு வர, ஒரு கட்டத்தில் எரிச்சலடைந்த வந்தியன், போனை எடுத்து.. " அடேய்.. வெண்ண.. என்னடா வேணும் உனக்கு?ஏற்கனவே உன் மேல கொல காண்டுல இருக்கேன்.. ஒழுங்கு மரியாதையா போன் கட் பண்ணிட்டு ஓடிரு.. இல்ல உன்ன தேடி வந்து கொல்லுவேன்.." என்று இவன் ஆத்திரமாய் உறும..

"ஹரே மெண்டல்.. பொண்ண மாத்தி கடத்திப்புட்டு என்ன திட்டிட்டு இருக்க?

இப்போ நான் பேச வந்தது அந்த விஷயம் இல்ல டா.. அத விட முக்கியமான விஷயம் டா.. கொஞ்சம் காது கொடுத்துத் தான் கேளேன்.." என்று மாறன் சிடுசிடுதான்.

"டேய்.. உனக்கு பொண்ண மாத்தி கடத்தினத விட வேற ஒரு விஷயம் முக்கியமானதா இருக்கா? சொல்லுடா.. அப்படி என்ன விஷயம் முக்கியமானதுன்னு சொல்லுடா?" என்று வந்தியன் வினவ, மாறனோ..

"டேய்.. காலா வந்துட்டான்டா.." என்றது தான் தாமதம், வந்தியன் காலுக்குக் கீழே பூமி நழுவியது!

"டேய்.. நீ என்னமோ சொன்ன.. அது என் காதுல வேற மாதிரி விழுந்துச்சு.." என்று இவன் எச்சிலைக் கூட்டி விழுங்கியபடிக் கூற, மாறனோ,

"எல்லாம் நீ சரியா தான் கேட்ட.

அந்த கரிகாலன்.. நம்ம ஊருக்கே இன்ஸ்பெக்டரா வந்துட்டான்டா.." என்று அவன் கூறி முடிக்கும் முன்பாகவே, அறக்கப் பறக்க வீட்டிலிருந்து கிளம்பிய வந்தியன், மாறன் கூற்று உண்மையா என்று ஐயத்தை நிவர்த்தி கொள்ள, நேராக அந்த கரிகாலனைப் பார்க்க காவல் நிலையத்துக்கே ஓடினான்.

அவன் காவல் நிலையம் செல்லும் வழியிலேயே தான் குந்தவையின் வீடும் இருந்தது. அந்த வழியாக இவன் செல்ல, இவர்கள் அஞ்சி நடுங்கிய காலனோ.. அதாவது கரிகாலனோ, குந்தவையுடன் ஏதோ தீவிரமாகப் பேசிக்கொண்டிருந்தான்.

அதே வேளையில் அங்கு மூச்சிரைக்க வந்தடைந்த மாறனோ, வந்தியனின் அருகே வந்து.. "மச்சி.. போச்சுடா.. செத்தோம்.. வந்ததும் வராததுமா அந்த குந்தவை, காலன்கிட்ட நம்மள வத்தி வச்சுட்டா.." என்று கூற, வந்தியனின் இதயமோ தாறுமாறாக அடித்துக் கொண்டது!

அங்கு கரிகாலனும், குந்தவையும் ஏதோ சுவாரஸ்யமாய் பேசிக் கொண்டிருக்க, வந்தியனுக்கும், மாறனுக்குமோ அவர்கள் இருவரும் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்பதைக் கேட்டே ஆகவேண்டும் என்று ஆவல் எழுந்தது.

எனவே இருவரும் மெல்ல மெல்ல நகர்ந்து கரிகாலனுக்கும, குந்தவைக்கும் அருகே செல்ல, அதே சமயத்தில் கரிகாலனுக்கு அலைபேசி அழைப்பொன்று வந்தது.

இவர்கள் இருவரையும் ஒரு பார்வை பார்த்துக்கொண்டே, "சொல்லு டா பார்த்திபா.." என்று போனை காதில் வைத்தபடி வேறு புறம் செல்ல, குந்தவையை நெருங்கிய வந்தியனோ..

"குந்தவை.. கொஞ்சம் தனியா வாவேன்.." என்று அப்பால் சென்ற கரிகாலனை ஓர் பார்வை பார்த்தபடியே கெஞ்சுதலாகக் கேட்டான்.

அதற்கு குந்தவையோ.. "ஏன் அந்த பக்கம் வந்ததும் மூஞ்சில மயக்க மருந்து அடிச்சு என்ன மறுபடியும் கடத்தப் போறீங்களா?" என்று இவள் கேட்க, வந்தியனுக்கோ.. எங்கே குந்தவை பேசுவது கரிகாலனுக்கு கேட்டுவிடுமோ என்ற பயத்தில், "ஷ்ஷ்.. குந்தவை.. சத்தமா பேசாத.. ப்ளீஸ்.. தயவுசெஞ்சு அந்தப் பக்கம் வாயேன்.. நாங்க உன்ன எதுவும் செய்ய மாட்டோம்.." என்று கூறி குந்தவையை, அவள் வீட்டின் பின்புறமாக கூட்டிச் சென்றான்.

அங்கே வந்ததும், வந்தியனும், மாறனும் ஒரு கணம் சுற்றும் முற்றும் பார்த்தனர். பின்னர் மறுகணமே.. தடாலென இருவரும் அவர்க காலில் விழுந்திட.. குந்தவைக்கோ பதறிப் போனது!

"டேய்.. டேய்.. எந்திரிங்கடா.. என்னடா பண்றீங்க?" என்று கேட்டாள்.

"ப்ளீஸ் குந்தவை.. எங்கள அந்த காலன் கிட்ட மாட்டிவிட்டுடாத. அவன் நிஜமாவே எங்களுக்கு காலன் தான். ப்ளீஸ் குந்தவை.." என்று கெஞ்ச, குந்தவைக்கோ, கரிகாலன் வந்து எங்கே இதைப் பார்த்துவிடுவானோ என்று நெஞ்சம் பதறியது.

"டேய்.. மொதல்ல மேல எந்திரிங்கடா.. இப்போ நீங்க எந்திரிக்கல.. உடனே கரிகாலங்கிட்ட உங்க லீலையெல்லாம் சொல்லிடுவேன்." என்று அவள் மிரட்டுவதற்கும், கரிகாலன் அங்கு வருவதற்கும் சரியாக இருந்தது!

அங்கு குந்தவையின் காலில் மாறனும், வந்தியனும் விழுந்டீ கிடப்பதைப் பார்த்த கரிகாலனோ..

"குந்தவை.. என்ன பண்றாங்க இவங்க? உனக்கு இவங்கள தெரியுமா?" என்று கேட்டான்.

அதற்கு குந்தவையோ.. "தெரியு.. மாவா?? நான் சொன்னனே? அது இவங்க தான்.." என்று கூற, மாறனோ.. "அய்யயோ நாம கால்ல விழுந்தது வேஸ்ட்டு டா.. இவ ஏற்கனவே காலன் கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டா போலிருக்கு." என்று வந்தியனின் காதைக் கடித்தான்.

"டேய் சும்மா இருடா.." என்று வந்தியன் மாறனின் தோளில் இடித்துவிட்டு, குந்தவையும், கரிகாலனும் பேசுவதைக் கவனிக்கலானான்.

அங்கு குந்தவை கூறிய பதிலுக்கு கரிகாலனோ.. "ஓஹோ? நீ சொன்னியே.. அந்த சார்.. இந்த சார் தானா??

என்ன சார்.. நீங்க ஒரு M.L.Aவோட பையன்னு எனக்கு சொல்லவே இல்லையே?" என்று வந்தியனிடம் கூறிவிட்டு.. குந்தவையிடம்.. "சார எனக்கு முன்னாடியே தெரியும் குந்தவை.." என்று கூறி, அவர்களுக்குள் இதற்கு முன்பு என்ன சம்மந்தம் என்று கூற ஆரம்பித்தான்.

வந்தியன் சென்னையில் படித்துக் கொண்டிருக்கும் பொழுது அடிக்கடி பைக் ரேஸில் ஈடுபடுவது வழக்கம்.

அப்படி ஒரு நாள் இரவில் இவன் பைக் ரேஸ் செய்துகொண்டிருக்க.. பிரேக்கும், பைக்குமாக பிடிபட்டான் கரிகாலனிடம்.

அவன் இந்த விஷயத்தைப் பெரிதாக வெளியே பத்திரிக்கைகளுக்குச் செய்தியாக வழங்கவில்லை.

ஆனால், பிடிபட்டவர்களை எல்லாம் ஒரு வாரம் சென்னையின் முக்கிய சாலையில் போக்குவரத்தை சரி செய்யும் பணியிலும், இன்னும் ஒரு வாரம் அரசு மருத்துவமனையில் விபத்துப் பிரிவில் கம்பவுண்டராகவும் பணி செய்ய வைத்தான்.

இதில் சில எகிறி, தொகிரியவர்கள் எல்லாம் பாத்ரூமில் வழுக்கி விழுந்து கை, கால்களை உடைத்துக் கொண்டார்கள்!

ஆனால் வந்தியனின் நண்பர்கள், அவனிடம்.. "மச்சான் நீ பெரிய அரசியல்வாதியோட பையன்னு சொல்லுடா இந்தாளுகிட்ட. உடனே நம்மள விட்டுடுவான்.." என்று கூற வந்தியனோ..

"அடேய் ஷைத்தான்! எங்க அப்பாகிட்ட மாட்டிக்கறதுக்கு நாமளும் பாத்ரூம்ல வழுக்கி விழுந்துடலாம்டா.. எங்க அப்பாவ பொறுத்தவரைக்கும் அவரோட அரசியல் செல்வாக்குக்கு பாதிப்பு வர மாதிரி நான் எதையாவது செஞ்சேன்னா.. அவ்வளவே தான்.. என்ன நிஜமா கொன்னே போட்டுடுவார்டா.." என்றுவிட்டான்.

ஆனால் அப்போதிருந்தே எங்கேயாவது, எதேச்சையாக கரிகாலன், இவர்களை பார்த்துவிட்டால் போதும் வைத்து செய்துவிடுவான்.

இவர்களுக்கும் கரிகாலன் என்ற பெயரொன்றே மனதிற்குள் கிலிபிடிக்க போதுமானதாய் அமைந்தது.
அப்படியிருக்க, இப்பொழுது வந்தியனும், மாறனும் குந்தவையைக் கடத்தி, இப்படி வகை தொகையாய் ஒரு காரியத்தில் ஈடுபட்டிருக்க, இப்பொழுது கரிகாலன் இந்த ஊருக்கு புதிய இன்ஸ்பெக்டராகவும் வந்திருக்க, இவர்களுக்கு தொண்டையில் அடைத்துக் கொள்ளாதா என்ன?

இதில் குந்தவை வேறு இந்தக் கதையெல்லாம் கேட்டுச் சிரித்தபடியே..

"சூப்பர் பனிஷ்மென்ட் அண்ணா.. இந்த ஊருளையும் இவனுங்க மாதிரி ஆளுங்க இருக்காங்க.. இப்போ நீ வந்துட்டல்ல.. இனிமே நம்ம ஊர் பொண்ணுங்க தைரியமா இருக்கலாம்.." என்று கரிகாலனை 'அண்ணா' என்று வேறு அழைக்க, மாறனுக்கு, வந்தியனுக்கும் அதற்கு மேல் உயிர் அவர்களது உடலில் இருக்குமா என்ன?

"டேய்.. வந்தியா.. நான் செத்து ஒரு மாசம் ஆகிடுச்சு டா.. என் வீட்டுல கேட்டாங்கன்னா சொல்லிடு.." என்று பயத்தில் உளற, வந்தியனோ அப்படி உளறும் நிலையில் கூட இல்லை.

"சரி.. இவனுங்க எதுக்கு உன் கால்ல விழுந்தாங்க?" என்று மீண்டும் கரிகாலன் விறைப்பாய் கேட்டிட.. அவ்வளவே தான்.. மாறனுக்கு தலை கிறுகிறுக்க ஆரம்பித்தது.

"அது.. அதுண்ணா.. எங்களுக்குள்ள ஒரு பெட்டு.. அதுல இவங்க தோத்துட்டாங்க. அதான்.. என்ன எங்க பார்த்தாலும் கால்ல விழணும்னு சொல்லியிருந்தேன். அதுக்காகத் தான்.." என்று கரிகாலனைப் பார்த்துக் கூறியவள், பின்பு வந்தியனையும், மாறனையும் பார்த்து..

"இப்போ கூட என்ன பார்த்துட்டு தான் இருக்கீங்க?" என்று கூறியபடி, தழையத் தழைய கட்டியிருந்த தன் பாவாடையை சற்றே மேலே தூக்கி, தன் வலது கால் பாதத்தை மட்டுமாக சற்றே முன்னே நீட்டி அவள் காட்ட, ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட வந்தியனும், மாறனும் சட்டென அவள் காலில் மீண்டும் விழுந்தனர்!

தொடரும்..

முன் அத்தியாயங்களுக்கு கருத்து சொல்லிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்!


இந்த அத்தியாயத்தைப் பற்றிய உங்களது கருத்துக்களைக் கூற..

https://www.narumugainovels.com/index.php?threads/ஊடல்-சேர்த்து-காதல்-கோர்ப்போம்_கருத்து-திரி.577/

- நிலவின் ஊடல்
 

NNK51

Moderator
ஊடல் சேர்த்து காதல் கோர்ப்போம்!

அத்தியாயம் - 5

"எப்பா எப்பா எப்பா.. இப்படி ஒரு பொண்ண நான் பார்த்ததே இல்லடா சாமி!! என்ன திமிரு.. என்ன தெனாவெட்டு?

அண்ணன்காரன் போலீசா இருந்தா நாமளும் ஊருக்குள்ள இப்படியெல்லாம் சீன போட்டுட்டு இருக்கலாம் போலிருக்கு. ஆனா.. நீயும் இருக்கியே பெரிய MLA வோட பையன்னு. அவளுக்கு பயந்து நடுங்கிட்டு இருக்க நீ?

உன்னையெல்லாம் என் ப்ரண்டுன்னு சொல்லிக்கவே எனக்கு வெட்கமா இருக்குடா?" என்று மாறன் இன்னுமின்னுமாய் நொந்துகொள்ள.. கடுப்பான வந்தியனோ,

"அடேய்.. கொஞ்சம் அடக்கி வாசி. அவளா இருக்கவும் தான் நாம செஞ்ச காரியத்துக்கு அமைதியா இருக்கா. இதே இன்னொருத்தியா இருந்ததுன்னு வச்சுக்கோ.. நம்மள ஊரக் கூட்டி மானத்த வாங்கியிருப்பா.. அதுவும் அவ அண்ணன், நமக்கு எமன்னு தெரிஞ்ச பின்னாலும் கூட நம்மள கால்ல தான் விழ வச்சாலே தவிர, நம்மள காட்டிக்கொடுக்கலடா.." என்று கூற, அவனை மேலிருந்து கீழாக வித்தியாசமாகப் பார்த்தான் மாறன்.

"என்னடா அவளுக்கு ரொம்ப ஓவரா தான் சிங்கி அடிக்கற? என்னமோ சரியில்லையே.." என்று அவன் சந்தேகப்பட, வந்தியனோ..

"ஹ்ம்ம்.. என்ன சந்தேகப்படறியா நீ? அவ மட்டும் காலாகிட்ட நம்மள பத்தி சொல்லியிருக்கணும்.. அப்போ புரிஞ்சுருக்கும் உனக்கு." என்று கரிகாலனை உள்ளிழுக்க, சட்டென மாறனோ..

"மச்சி தயவு செஞ்சு அந்த காலன மட்டும் ஞாபகப்படுத்தாதடா.. மனசெல்லாம் பக்கு பக்குன்னு இருக்கு.." என்று திகில் குரலில் உரைத்தான்.

"ஹ்ம்ம்.. இப்போ புரியுதா? அந்த பக்கு பக்கு பீல் மட்டும் என்னைக்கும் மாறிடாம பார்த்துக்கோ மச்சி.. அப்போ தான் நம்ம உசுருக்கு உத்தரவாதம்.." என்று இன்னமுமாய் அவன், மாறனுக்கு கிலி கிளப்ப, மாறனோ மிடறு விழுங்கிக் கொண்டான்.

இவர்கள் இப்படியாய் குந்தவை மீது கொண்ட பயத்துடனே வெட்டியாய் ஊரைச் சுற்றுவதும், பொழுதைக் கழிப்பதுமாக இருக்க, ஒரு நாள் மாலையில் இது போலவே நண்பர்கள் இருவரும் அருகிலிருக்கும் டீக்கடைக்கு செல்லலாம் என்று பைக்கில் சென்றுகொண்டிருந்த பொழுது ஒரு மறைவிடத்தில் குந்தவையும், அவளது தோழியும் நின்றிருக்கக் கண்டனர்.

"ஆத்தாடி.. இப்போ இவ கண்ணுல மட்டும் நாம பட்டோம்.. இங்கையே நம்மள கால்ல விழ வச்சுடுவாடா.. இரு அவ கிளம்பட்டும். நாம அதுவரைக்கும் அவளுக்குத் தெரியாம மறைஞ்சிருப்போம்." என்று மாறன் கூறியதைக் கேட்டு, வந்தியனும் தனது பைக்கை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு மறைந்து நிற்க, அங்கு அவனுக்கு மறுபுறத்தில் குந்தவையும், அவளது தோழியும் பேசுவது நன்றாகக் கேட்டது.

"ஹேய் மது.. மது.. இங்க பாரு.. எதுக்கு இப்படி என்கிட்ட தனியா பேசணும்னு கூட்டிட்டு வந்து இப்படி அழுதுட்டு இருக்க?" என்று குந்தவை அவளது தோழியிடம் நான்கைந்து முறை கேட்க, அப்பொழுதும் நிறுத்தாமல் அழுது கொண்டிருந்தவளை.. "மது.." என்று ஒரு அதட்டல் போட்டு அடக்கினாள் குந்தவை.

"இங்க பாரு மது.. என்ன பிரச்சனைன்னு சொன்னா தான எனக்குப் புரியும்? இப்படி அழுதுட்டே இருந்தா நான் என்னன்னு எடுத்துக்கறது? என்ன நம்பி சொல்லுடி.. எந்த பிரச்சனையா இருந்தாலும் நான் உன்கூடவே இருப்பேன் சரியா?" என்று இவள் தேறுதலாகக் கூறிய பின் தான் அந்த மது வாயையே திறந்தாள்.

"நா.. நான் வேலை செய்யற ஆபீஸ்ல என்னோட மேனேஜர் என்கிட்டே ரொம்ப தப்பா பிஹேவ் செய்யறான் டி..

எல்லார் முன்னாடியும் திட்டறதும், அப்பறம் அவங்க முன்னாடியே ஏதோ நான் அவன் ஆளுன்ற மாதிரி காட்டிக்கறதும். எங்களுக்குள்ள ஏதோ இருக்கற மாதிரி கதை பரப்பறதும்னு என் பேர நாறடிச்சுட்டு இருக்கான் டி..

என்னால ஆபீஸ்க்கு போகவே முடில.. வீட்டு சூழ்நிலையில என்னால வேலைக்குப் போகாமலும் இருக்க முடில. வேற வேலை தேடினா அங்கேயும் இப்படி ஒருத்தன் இருப்பானோன்னு எனக்கு பயமா இருக்குடி.. சாகலாம் போலிருக்குடி.." என்றவளை பதறி அணைத்தாள் குந்தவை.

"என்ன பேசற மது? இவனுங்க மாதிரி கேவலமானவனுங்களுக்காக பயந்துட்டு நீ சாகப் போறியா?

ஹ்ம்ம்.. உனக்கு சாகறதுக்கே தைரியம் இருக்குல்ல? அப்பறம் ஏன் உன்னால இவனுங்கள எதிர்த்து நிக்க முடியாது? உனக்கு ஏன் அதுக்கு தைரியம் இல்ல?

இங்க பாரு மது.. ஒரு பொண்ணுக்கு பலமே அவளோட கண்ணு தான். நீ ஒரு ஆம்பளையே நேருக்கு நேரா கண்ணா பார்த்து பேசினன்னு வையேன்.. அவனால உன்ன தப்பா பார்க்கவே முடியாது.

அதே மாதிரி தான் உன்னோட மானஜரையும் நேருக்கு நேரா பார்த்து பேசு. தேவையில்லாம எல்லார் முன்னாடியும் உன்ன திட்டறானா? அத எதிர்த்து கேள்வி கேளு. உன்ன பத்தி ஆபீஸுல தப்பா ரூமர் கிளப்பறானா? போடா டேஷுன்னு போயிட்டே இரு.

இப்படிப்பட்ட நாய்ங்கல்லாம் ஊருக்குள்ள தெனாவெட்டா திரியும் போது நமக்கென்னடி தலையெழுத்து சாகணும்னு?

இங்க பாரு மது.. ஏதோ ஒரு படத்துல சொல்லறது மாதிரி.. நம்ம விசுவாசம் வேலைக்கு மட்டும் தான்.. முதலாளிக்கு கிடையாது. உன்னோட திமிரும், தைரியமும் தான் உன்ன காப்பாத்திக்கற ஆயுதம். நீ பலவீனமானவன்னு காமிச்சுக்கிட்ட.. உன்ன ஜெயிக்க தான் இந்த உலகம் நினைக்கும். உனக்கு நீ தான் பலம்.

நீ எந்த ஆபீஸ் போனாலும் சரி.. எந்த ஊருக்கு போனாலும் சரி.. ஏன் வேற நாட்டுக்கே போனாலும் சரி.. அங்க நூத்துல பத்து ஆம்பளைங்க இப்படித் தான் இருப்பானுங்க.

அதுக்காக அவன அப்படிய விட்டுடுன்னு நான் சொல்லல.. உன் ஆபீஸ்ல அவன பத்தி கம்பளைண்ட் பண்ணு.. தைரியமா பண்ணு. உன்ன நீ நம்பறல்ல? உன் உண்மை தான் உன்ன காப்பாத்தும்.

ஆனா நான் திரும்பவும் சொல்லறேன் மது.. உன்னோட தைரியம் உன் கண்ணுல தெரியணும்.

எவண்டி சொன்னது பொண்ணுன்னா தலை குனிஞ்சு நடக்கணும்னு? எங்கயாவது சட்டம் கிட்டும் போட்டிருக்காங்களா என்ன?

நாம தலை நிமிந்து நடக்கணும்டி.. ஆம்பள கண்ணப்ப பார்த்து பேசணும். நீ ஒரு ஆம்பளையோட கண்ணப்ப பார்த்து பேசினா.. அவனால உன்ன தோக்கடிக்கவே முடியாது." என்று குந்தவை ஆணித்தரமாகக் கூற, அவளது கூற்றில், தைரியம் ஊறியது மதுவுக்கு.

இங்கு மறுபுறத்தில் இருந்த வந்தியனுக்கோ.. 'அம்மாடியோவ்' என்றிருந்தது!

இவளது இந்தத் திமிரும், ஆணவமும் எதற்காக என்று இப்பொழுது புரிந்தது வந்தியனுக்கு.

அவளது ஒவ்வொரு வார்த்தையும் அவனை மூச்சடைக்க வைத்து, அவள் பால் தலை குப்புற கவிழ வைத்தது!

இங்கு இவன் இப்படி பிரம்மை பிடித்து, பிரேமையேறிப் போய் கிடக்க.. மறுபுறம் மாறனோ..

"ஆத்தாடி.. இவளெல்லாம் நம்மள இவ்வளவு நாள் விட்டு வச்சிருக்காளே அதுவே பெருசுடா.. இவ காலாக்கு தங்கச்சி இல்லடா.. அவனுக்கு அக்கா.." என்று பயந்த குரலில் கூற அதைக் கேட்டு சிரிப்பு தான் வந்தது வந்தியனுக்கு.

அன்று வீடு திரும்பிய பின்னரும் வந்தியனின் மனதிற்குள் ஓடிக் கொண்டிருந்தது குந்தவையின் வார்த்தைகள் தான்!

அவன் பிறந்து வளர்ந்து இத்தனை நாட்களில் இப்படி ஒரு பெண்ணை அவன் பார்த்ததில்லை.

அவன் பார்த்த பெண்களெல்லாம் ஆண்களுக்கு அஞ்சி நடுங்கியும், கொஞ்சிக் குழவியும் இருந்திருக்கிறார்கள்.

அவன் நட்பாய் கூட சில பெண்களிடம் பழகியதுண்டு. ஆனால் அவர்களில் யாரும் இவ்வளவு தைரியத்துடன் இருந்ததில்லை.. இன்று குந்தவையின் தைரியம், வந்தியனை வெகுவாகப் பாதித்தது!

அவனுக்குள்ளிருந்த அவனது ஆத்மாவை அசைத்தது!

இத்தனை நாட்களாய் ஏதோவொரு எண்ணத்தில் கவிதை கிறுக்கிய அவனது கரங்கள்.. இன்று முதன் முதலாக அவளை நினைத்தே கிறுக்கத் துவங்கின!

அதே வேளையில் இங்கு குந்தவையின் வீட்டிலோ..

அன்றைய நாளில் மது கூறிய நிகழ்வுகளின் உள்ளக் கொதிப்பு தாங்காது படுக்கையில் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்த குந்தவையோ, கடைசியாக தனது மொபைலை கையில் எடுத்தாள்.

தான் பல நாட்களாக பின்தொடரும் வலைப்பூ எழுத்தாளர் ஆத்மனின் வலைப்பூ பக்கத்திற்கு சென்றாள்.

ஆத்மன், travel blogger என்பார்களே.. அதுபோல அவன் பயணம் செய்யும் இடங்களைப் பற்றியெல்லாம் அழகழகாக குட்டிக் குட்டி கட்டுரைகளாக எழுதுபவன். அவனது அந்த கட்டுரைகளை எல்லாம் படிக்கையில், குந்தவைக்குத் தானே அந்த இடங்களிலெல்லாம் பயணம் செய்து நேரில் பார்ப்பது போன்ற பிரம்மை உருவாகும்.

சாதாரண ஒரு பேருந்துப் பயணத்தைக் கூட அவன் எழுத்தில் படிக்கையில் குந்தவைக்கு மழைக்கால மண் தரை போல உள்ளெள்ளாம் சிலுசிலுவென இருக்கும்.

ஆனால்.. சில நாட்களாக ஆத்மனின் வலைப்பூவில் பயணக்கட்டுரைகளுக்குப் பதிலாக காதல் கவிதைகள் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன.

அதில் குந்தவைக்கு ரகசிய போதையும் கூட!

இதோ இப்பொழுது கூட ஏதோ புதிதாக ஒன்றை எழுதியிருக்கிறான்.

"அவள்.. என்னை என்னென்னவோ செய்துகொண்டிருக்கும் அவள்.. இன்று அவள் தோழியிடம் கூறிய அந்த ஒற்றை வார்த்தை எனது நெஞ்சுக்குள் ஏதோவொன்றை ஆழமாகக் கவிழ்த்தது.

' ஒரு பெண், தன் எதிரில் நிற்கும் ஆணை, அவன் கண்ணைப் பார்த்து பேசவெண்டுமாம்.

அவள் அப்படிப் பேசினால்.. எதிரில் இருக்கும் ஆணினால் அவளது பார்வையைத் தாண்டி வேறெங்கும் தப்பாகப் பார்க்க இயலாதாம்.

என்னவொரு சத்தியமான வார்த்தைகள் அவை!

ஆம்.. எனக்கும் அவள் அஞ்சனம் பூசிய விழிகளைத் தாண்டி வேறெங்குமே பார்வையைக் கொண்டு செல்ல இயலவில்லையே!

ஆச்சரியமான உண்மை தான்..

ஆனால் இப்பொழுது என் ஜென்ம லட்சியமே.. என்னைப் பித்தனாக்கியே தீரவேண்டுமென்று கங்கணம் கட்டியது போல், அஞ்சனமிட்டு எல்லை வகுத்திருக்கும் அவளது கண்களைத் தாண்டாது.. ஜென்ம ஜென்மாமாய் அந்த கருப்பு, வெள்ளைச் சாகரத்துக்குள்ளேயே மூழ்கிக் கிடக்கவேண்டுமென்பது தான்." என்று படித்துமுடிக்கையில் குந்தவைக்கு உடலெல்லாம் மயிர்க்கூச்செரிந்தது!

இது.. இந்த வார்த்தைகள் அவள் அன்று மாலையில் தன் தோழியிடம் உதிர்த்தது!

அதையே இந்த ஆத்மன் தனது வலைப்பூவில் எழுதியிருக்கவும்.. இங்கு தான் அவன் எங்கோ வெகு அருகில் இருந்துகொண்டு தன்னைப் பின்தொடர்ந்து கொண்டிருக்கிறான் என்ற எண்ணம் அவளுக்கு வெகுவாக எழுந்தது.

அந்த எண்ணம் எழுந்த அதே கணம் ஆத்மனின் காதலை எண்ணி நெஞ்செல்லாம் படபடவென அடித்துக்கொள்ள.. உடலெல்லாம் வேர்த்து வழிந்தது பெண்மைக்கு.

இதோ.. அவனது எழுத்தில் இவள் மயங்கிக் கொண்டிருக்கும் இப்பொழுது கூட அவன் தன்னைப் பார்த்துக் கொண்டு தானிருக்கிறான் என்ற எண்ணம் வெகுவாக எழ, விரைவாகச் சென்று வீட்டுக் கதவைத் திறந்து, அந்த நள்ளிரவின் மையிருளுக்குள் துழாவினாள் குந்தவை.

அங்கு யாரும் இல்லாததைக் கண்டு பெருங்குழப்பத்துடன் அவள் உள்ளே வந்து கதவடைக்க.. அவள் வீட்டு வேப்பமரத்தின் பின்னிருந்து ஜன்னல் வழியாக இவ்வளவு நேரம் அவளைப் பார்த்துக் கொண்டிருந்த அந்த உருவம் மெல்ல வெளியே வந்து தனது பைக்கை சத்தமில்லாது உருட்டிக் கொண்டு வெளியே சென்றது!

இங்கு மீண்டும் வீட்டிற்குள் வந்தவளுக்கோ கை, கால்கள் எதுவும் நிலை கொள்ளவில்லை.

'எப்படி இது? இது நிஜமாவே ஒரு தற்செயலான விஷயமா? இல்ல ஆத்மன் என்ன நினச்சு தான் இதை எழுதியிருப்பானா? இப்போ நான் இத யார்கிட்ட நான் போய் கேட்பேன்?' என்று எண்ணியவளாது பார்வை மீண்டும் அவளது மொபைலில் படிந்தது.

'சரி இத நாம இந்த ராங் நம்பர்கிட்டையே கேட்போம்..' என்று எண்ணியவள், அந்த ராங் நம்பருக்கு ஒரு குறுஞ்செய்தியைத் தட்டினாள்.

இப்பொழுது தான் குந்தவையும், வந்தியனும், யாரென்று தெரியாமலேயே மொபைல் மூலமாகவே நெருங்கிய நண்பர்களாகிவிட்டனரே?! எனவே தான் குந்தவை, தயக்கமின்றி ராங் நம்பரிடமே தனது சந்தேகத்தை தீர்த்துக்கொள்ள நினைத்தாள்.

சிலபல முஸ்தீபு பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு குந்தவை, "உனக்கு ஆத்மன தெரியுமா?" என்று மிகத் தயக்கத்துடன் கேட்க, இங்கு வந்தியனுக்கோ.. 'என்னது?' என்று அதிர்ச்சியாக இருந்தது.

ஆனால் அவன் தனது அதிர்ச்சியை நேரடியாகக் கட்டிக்கொள்ளாது சாதாரணமாகவே.. "ஹ்ம்ம்.. தெரியுமே. சும்மா அவன் பிளாக்ல ரைட் அப்ன்ற பேர்ல கண்டதையும் கிறுக்கிட்டு இருப்பானே அவன தான சொல்லற?" என்று இவன் ஆத்மனைப் பற்றி சற்று அலட்சியமாகக் கூற, குந்தவைக்குக் கோபம் தலைக்கேறியது.

"ஏய் இங்க பாரு.. உனக்கு ஆத்மன பத்தி என்ன தெரியும்? தேவையில்லாம அவர கேலி பேசற வேலையெல்லாம் வச்சுக்காத." என்று இவள் சூடாகக் கூற, வந்தியனுக்கு சிரிப்பு தான் வந்தது.

ஆமாம் பின்னே?! அவனுக்காக அவனிடமே சண்டையிடுபவளைப் பார்த்து இவனுக்கு சந்தோஷமாக இருக்காதம்மா?

ஏனென்றால்.. அவன் தானே ஆத்மன்.. அதுவும் இப்பொழுது அவளை ஆத்மப் பூர்வமாய் ரசிக்கும் ஆத்மன் அவனல்லவா?

எனவே தான் குந்தவையின் கோபம், வந்தியனுக்கு சந்தோஷத்தை பிறப்பித்தது.. அந்த சந்தோசம் இவனுக்கு சிரிப்பை உடனழைத்தது!

ஆனால் அதையும் காட்டிக் கொள்ளாது..

"சரி அந்த ஆத்மனுக்கு இப்போ என்ன வந்துச்சு?" என்று வந்தியன் கேட்க, குந்தவையோ ஒரு கணம் தயங்கினாள். பின், "நீ ஆத்மனோட இன்னைக்கு ரைட் அப் பார்த்தியா?" என்று கேட்க, அவனோ..

"ஹ்ம்ம் பார்த்தேனே." என்று சாதாரணமாகவே பதிலளித்தான்.

"வந்து.. இன்னைக்கு ஆத்மன் எழுதினது.. நான் என் ப்ரண்டுகிட்ட பேசின விஷயம்.

அதாவது.. ஆத்மன் எழுதினது என்ன பத்தியோன்னு எனக்கு சந்தேகமா இருக்கு.." என்று இவள் அனுப்பிய குறுஞ்செய்தியைப் படித்த வந்தியனோ அதிர்ச்சியில் தன்னையும் அறியாது சட்டென அவன் கையிலிருந்த மொபைலை கீழே நழுவவிட்டான்.

தொடரும்..

என்ன செல்லம்ஸ் எபிசோட் பிடிச்சுதா? மறக்காம உங் கருத்துக்களை இந்த லிங்க்ல பகிர்ந்துக்கோங்க..


https://www.narumugainovels.com/index.php?threads/ஊடல்-சேர்த்து-காதல்-கோர்ப்போம்_கருத்து-திரி.577/

- நிலவின் ஊடல்!
 

NNK51

Moderator
ஊடல் சேர்த்து காதல் கோர்ப்போம்!

அத்தியாயம் - 6
292802327_117873510979953_6681284240950914064_n.jpg

வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா ஒரு உருண்டையும் உருளுதடி என்ற வைரமுத்துவின் வரிகள் இங்கு வாத்தியனுக்கு மெய்யாகின. இருந்தாலும் தனது அதிர்ச்சியை மறைத்துக்கொண்டு, "என்னம்மா சொல்ற? கொஞ்சம் புரியிற மாதிரி சொல்லு?" என்று சாதாரணமாகப் பதில் கேள்வி கேட்டான்.

ஆனால் உள்ளுக்குள் அவனுக்கு என்னவோ நடுநடுக்கம் தான்!

"ஐயோ.. ஐயோ.. நிஜமாத் தான் சொல்றேன்." என்று கூறிய குந்தவை, அன்று மாலையில் அவளுக்கும்.. அவளது சிநேகிதிக்கும் நடைபெற்ற உரையாடலைத் திரும்பவும் வந்தியனுக்கு எடுத்துரைக்க, அவனுக்கோ முற்றும் முழுமையாக விளங்கிவிட்டது தன்னுடைய ராங் நம்பர் குந்தவை தான் என்று.

உண்மையை உணர்ந்த பிறகு வந்தியனது உள்ளத்து உணர்வுகள் தடுமாறிப் போயின!

தனக்கு, குந்தவையை எண்ணித் தோன்றிய உணர்வுகள் எல்லாம் வயதின் தடுமாற்றம் என்றெண்ணிய வந்தியனுக்கு, இப்பொழுது குந்தவை தன்னை பார்க்காமலேயே தனது எழுத்தின் மேல் கொண்ட காதல் சற்று திகைப்பாக இருந்தது!

தன்னிடமே தனக்காக அவள் சண்டையிட்டதை எண்ணி உள்ளுக்குள் சிரித்துக் கொண்டவனால் உண்மையையும் உரைக்க இயலவில்லை.

ஏனென்றால் முதலாவதாக, இப்பொழுது தான் தான் ஆத்மன் என்று அவன் கூறினால், அதை குந்தவை நம்புவாள் என்றே தெரியாது.

அடுத்ததாக, அந்த ஆத்மன் தான் வந்தியன் என்று அவளுக்கு இப்பொழுது தெரிந்தால், அவள் ஆத்மனையும் சேர்த்தே வெறுத்துவிடுவாளோ என்ற பயம் வந்தியனுக்குப் பிறந்தது.

எனவே அப்போதைக்கு எதுவும் கூறாது குந்தவையிடம் ஏதோ பேசி சமாளித்து முடித்தவனால் இரவு உறங்கக் கூட இயலவில்லை.

மனமெல்லாம் மல்லிகையின் மணமாக குந்தவையின் சுகந்தங்களே நிறைத்திருக்க.. வீட்டு முற்றத்தின் கிணற்றுக்குள் கவிழ்ந்திருக்கும் பூரண சந்திரனாக தனக்குள் கிடந்து துடிக்கும் குந்தவையின் நினைவுகளை திகட்டத் திகட்ட அசைபோட்டுக் கொண்டிருந்தான்.

ஆனாலும் அப்பொழுது அவனது மனதின் ஆசை தீராது.. அவளை ஒரே ஒரு முறை பார்த்தாவது தீரவேண்டும் என்றெண்ணியவன், வீட்டினருக்குத் தெரியாது குந்தவையின் வீட்டுக்குக் கிளம்பினான்.

அவள் வீட்டுக்குச் சென்று எப்பொழுதும் போல அவளது வீட்டின் ஜன்னல் வழியாக அமைதியாக உறங்கும் அழகியை, விழிகளாலேயே தழுவிவிட்டு காதல் கிறக்கத்தில் இவன் வீடு திரும்ப, அங்கு வீட்டிலோ இவனுக்குப் பேரதிர்ச்சி ஒன்று காத்திருந்தது.

அந்த நடு ராத்திரியில் மொத்த குடும்பமும் வீட்டின் வராண்டாவில் காத்திருந்தார்கள்.

மெல்ல மெதுவாக பூனை போல தனது பைக்கை உருட்டிக் கொண்டு வந்தவனுக்கோ, இதைப் பார்த்ததும் வயிற்றுக்குள் தீப்பிடித்த உணர்வு!

'என்னடா இது? மொத்த குடும்பமும் இந்நேரத்துக்கு முழிச்சுருக்காங்க.. எங்க நம்ம விஷயம் இவங்களுக்கெலாம் தெரிஞ்சுருக்குமோ?' என்று தனக்குள்ளாகக் கேட்டுக் கொண்டவன்,

'ச்சே.. ச்சே.. இதுங்களுக்கெல்லாம் அவ்வளவு அறிவிருக்கா என்ன? அப்பாவோட கட்சில ஏதாவது பிரச்சனையா இருக்குமா இருக்கும். அதனால தான் அம்புட்டு பேரும் அரண்டு போய் நிக்கறாங்க..' என்று தன்னைத் தானே தேற்றிக் கொண்டவன்.. அதுவரை பேயறைந்தார் போலிருந்த தன் முகத்தை சாதாரணமாக மாற்றிக் கொண்டு வீட்டு கேட்டைத் திறந்து உள்ளே சென்றான்.

அவன் வண்டியை நிறுத்திவிட்டு வரும் வரை அங்கு ஒரு குண்டூசி விழுந்தால் கூட கேட்குமளவுக்கு நிசப்தம் நிலவியிருந்தது.

அவர்களது அமைதியே தனக்கு சாதகமென எண்ணியவன், மெதுவாக தலை குனிந்தபடியே வீட்டுக்குள் காலடி எடுத்து வைக்க, அவனது பெரிய தந்தை தர்மேந்திரனோ.. "டேய் நில்லுடா.." என்று கர்ஜித்தார்.

அந்த கர்ஜனையில் ஒரு கணம் தூக்கிவாரிப் போட திடுக்கிட்டவனோ.. 'செத்தாண்டா சேகரு..' என்றபடி மெல்லத் திரும்பி நிற்க, தர்மேந்திரனே..

"எங்கடா போயிட்டு வர.." என்று மீண்டும் உறும..

'ஆத்தாடி.. வகையா சிக்கிட்டோம்டா.. இன்னைக்கு மட்டும் நாம வாய திறந்தோம்.. அவ்ளோ தான் கூறுகட்டி கருவாடு லாரில ஏத்தி விட்ருவாங்க..' என்று தனக்குள்ளாக்கப் பேசிய வந்தியனோ.. எதுவுமே பேசாது திருதிருவென விழித்துக் கொண்டிருந்தான்.

"டேய்.. கேட்கறேன்ல.. வாயத் தொறந்து சொல்லுடா.. இந்நேரத்துக்கு எங்க போய் சுத்திட்டு வர நீ?" என்று மீண்டுமாய் அவர் சீற, ஹும்ஹும்.. இப்பொழுதும் வந்தியனிடத்தில் ஆத்ம அமைதி!

இப்படி அவன் வாயே திறக்காது நிற்பதைக் கண்ட வந்தியனின் சித்தப்பா ராஜேந்திரனோ..

"டேய்.. அண்ணா கேட்கறாருல்ல? வாயில என்ன கொழுக்கட்டையா வச்சிருக்க? சொல்லுடா எங்க போன இந்நேரத்துக்கு?" என்று கேட்க, அபொழுதும் அவரைப் பரிதாபமாய் நிமிர்ந்து பார்த்த வந்தியனைப் பார்க்க அவரது ரத்த அழுத்தமோ ஏகத்துக்கும் எகிறியது.

இப்படியே மூத்தவரும், இளையவருமாக மாற்றி மாற்றி வந்தியனிடம் கேள்வி கேட்டு சோர்ந்து போக, அங்கு இறுகிய முகத்துடன் அமர்ந்திருந்த வந்தியனின் தந்தை தேவேந்திரனோ.. "போதும்.." என்று ஒரு சப்தம் போட்டாரே பார்க்கலாம்.. அங்கிருந்த மொத்த ஓசையும் அடங்கிட.. அனைவரும் அவரைத் திரும்பிப் பார்த்தனர்.

தனது இருக்கையில் இருந்து மெல்ல எழுந்து வந்த தேவேந்திரனோ.. பார்வையை வந்தியனிடம் பதித்து.. வார்த்தைகள் மட்டும் தனது அண்ணன் தர்மேந்திரனிடமாக..

"விடுங்கண்ணா.. நீங்க இன்னைக்கு நைட்டு முழுக்க அவன்கிட்ட கேட்டுட்டு இருந்தாலும் அவன் பதில் சொல்லறதா இல்ல. சரி நமக்கு அவன் பதில் எல்லாம் சொல்லத் தேவையில்லை..

நாளைக்கு அவனுக்கு பொண்ணு பார்க்க போறோம். காலைல ரெடியா இருக்க சொல்லுங்க.." என்று உத்தரவிடுவதைப் போலக் கூறிவிட்டு உள்ளே செல்ல, மொத்தக் குடும்பமும் அவரைப் பின்தொடர்ந்தனர்.

'ஸ்ஸ்ஸ்.. ஹப்பாடா.. இவ்வளவு தான் விஷயமா? ச்சே.. நான் என்னமோ ஏதோன்னு பயந்துட்டேன்.. சரி நாளைக்கு பொண்ணு வேற பார்க்க போகணுமா? முன்னாடியே சொல்லியிருந்தா காலைலயே கொஞ்சம் கட்டிங், ஷேவிங் எல்லாம் முடிச்சுருப்பனே?' என்று எண்ணியபடியே வீட்டுக்குள் நுழைந்தவன், மீண்டும் தனது வலைப்பூவைத் திறந்தான்.


அன்றைய தினத்தில் அவனுக்கும், குந்தவைக்கும் நடந்த உரையாடல்களை கவிதையாகத் தொகுத்தவன், அதை பதிவிட்டுவிட்டு உறங்கியும் விட்டான்!.

***

மறுநாள் காலையில் தடபுடலாக மொத்த குடும்பமும் வந்தியனுக்குப் பெண் பார்க்கக் கிளம்பினர்.

வந்தியனும் எதிர்பார்ப்புடன் தான் அவர்களுடன் கிளம்பினான். அவனைப் பொருத்தவரைக்கும் இந்தக் காதல் உணர்வுகள் வேறு.. திருமணம் என்பது வேறு என்பதில் தெளிவாக இருந்தான்.

தனது உள்மன உணர்வுகளுக்கெல்லாம் ஆத்மன் என்று பெயரிட்டு அதற்கு தனது கவிதைகளின் மூலம் உயிர் கொடுத்தவனுக்கு, அந்த ஆத்மன் தான் இங்கு இன்னொருத்தியின் உயிர் காற்றாகிப் போனான் என்பது தெரியவில்லை.

எனவே மனதில் எவ்வித உறுத்தலுமின்றி பெண் பார்க்கப் போனவன், பெண்ணைப் பார்த்துப், பேசி, நிச்சய தேதி வரைக்கும் குறித்துவிட்டு வந்தான்.

இங்கு குந்தவைக்கோ அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!

நேற்று தான் அந்த ராங் நம்பரிடம் ஆத்மனைத் பற்றிக் கூறியிருந்தால், இப்பொழுது அதே ஆத்மன், இந்த ராங் நம்பரிடம் தான் பேசியவற்றையெல்லாம் கவிதையாக்கியிருக்கிறானே? அப்படியென்றால்.. அந்த ராங் நம்பரும்.. ஆத்மனும் ஒருவரே தானா? என்று எண்ணியவளுக்கு தலையெல்லாம் கிறுகிறுத்தது.

அவள் பள்ளியில் இருக்கும் பொழுது அவளுக்குப் பாடவேளை இல்லாத ஓய்வு நேரத்தில் தான் ஆத்மனின் அன்றைய பதிவைப் படித்தாள். படித்தவளுக்கு அப்பொழுது தான் புரிந்தது அவளது ராங் நம்பரும், ஆத்மனும் ஒருவரே என்று!

அவனுக்கு உடனே போனில் அழைத்துப் பேசிவிட வேண்டுமென கைகள் பரபரக்க, அவனது மொபைலுக்கு அழைத்தால்.. அவனோ.. அவளது அழைப்பை ஏற்கவே இல்லை.

இங்கு நம் நாயகன் தான் திருமணத்திற்குப் பெண் பார்க்கப் போயிருக்கிறானே? பிறகெப்படி இவளது அழைப்பை ஏற்பான்?

குந்தவையும் நான்கைந்து முறை அவனை அழைத்துவிட்டு, அவன் அழைப்பை ஏற்காததில் மனம் சலித்துப் போனாள்.

இதற்கு மேல் பள்ளியில் இருக்கவியலாது என்று எண்ணியவள், பள்ளியில் விடுமுறை கூறிவிட்டு வீடு வந்து சேர்ந்தாள்.

வீட்டிற்கு வந்தால் அந்த வெறுமையும் சேர்ந்து இவளுக்குத் தலையிடியை உருவாக்க, அயற்சியில் ஒரு மாத்திரையைப் போட்டுக்கொண்டு படுத்துவிட்டாள் அவள்.

ஆனால்.. அவள் உறங்கிய சற்று நேரத்திற்கெல்லாம் சமய பார்த்து காத்திருந்த ஒரு கயவன் திருட்டுத் தனமாய் அவளது வீட்டிற்குள் நுழைந்தான்.

உறங்கிக் கொண்டிருந்த அவளை நோக்கித் தவறான எண்ணத்துடன் அவன் நெருங்க, திடுக்கிட்டு விழித்த அவளோ அவனை உரித்து எடுத்துவிட்டாள். அங்கு நடந்த களேபரத்தில் ஒட்டு மொத்த மக்களும் அங்கு கூடிவிட, விஷயம் கேள்விப்பட்டு அங்கு கரிகாலனும் வந்துவிட்டான்.

அதே வேளையில் பெண் பார்த்து முடித்து வீடு வந்த வந்தியன், மாறனுடன் சேர்ந்து அவனது முழுநேரத் தொழிலான ஊர் சுற்றக் கிளம்ப, இந்தக் களேபரம் அவனது கண்ணிற்கும் பட்டது.

ஊர் மக்கள் அனைவரும் அங்கு ஒருவனைக் கூடி நின்று வெளுத்துக் கொண்டிருக்க, அது யாரென்று வந்தியன் எட்டிப் பார்த்தால், அது வந்தியனின் உறவினன் தான்! அவர்களது ஜாதி சங்கத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவன்.

அவனுக்கு அருகிலேயே கண்கள் சிவக்க நின்றிருந்த குந்தவையோ, அவனைப் பார்த்து..

"ஏண்டா.. நீங்க குடியிருக்கற தெரு வழியா நாங்க வந்தா தீட்டாகிடும்.. உங்க வீட்டுக்குள்ள எங்க காலடி பட்டா தீட்டாகிடும்.. ஒரு நல்ல காரியத்துக்கு போறப்போ எங்க முகத்தை பார்த்தாலே உங்களுக்குத் தீட்டாகிடும்.. இவ்வளவு ஏன்.. எல்லாருக்கும் பொதுவான சாமிய கூட நீங்க கும்பிடற கோவிலுக்குள்ளே நுழைஞ்சு நாங்க கும்பிடக்கூடாது. ஏன்னா அதுவும் தீட்டாகிடும்.

உயிரோட இருக்கும் பொது தான் இப்படி ஜாதி வெறி பிடிச்சு திரியறீங்கன்னா.. செத்த பின்னாடியும் கூட, எங்களை நிம்மதியா புதைக்கக் கூட விடமாட்டீங்கறீங்களேடா? ஆனா.. இப்படி அத்தனையிலையும் ஜாதி பார்க்கற நீங்க படுக்கைக்கு மட்டும் ஏண்டா ஜாதி பார்க்க மாட்டேங்கறீங்க?

ஒரு பொண்ண தொடரதுல மட்டும் உங்க ஜாதியெல்லாம் எங்கடா போய் ஒளிஞ்சுக்குது?

இது மட்டும் உங்களுக்குத் தீட்டாகாதா?" என்று சீறிச் சினந்து பொரிந்துத் தள்ள.. வந்தியனுக்கோ தன்னையே அவள் அப்படி செருப்பால் அடித்துக் கேள்வி கேட்டது போலிருந்தது!

இப்பொழுது குந்தவையிடம் தப்பாக நடந்து கொண்டவனுக்கும், தனக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது என்று எண்ணியவனுக்கு நிஜமாகவே தன்னை நினைக்கையில் குமட்டியது.

கண்களில் நீர்க்கட்டி, தலை கிறுகிறுத்துப் போய் அப்படியே கீழே அமர்ந்துவிட்டவனை, மாறன் தான் கைபிடித்து எழுப்பி மீண்டும் வீட்டிற்கே அழைத்துச் சென்றான்.

ஆனால் மாறனிடம் கூட வந்தியன் என்ன விஷயம் என்று கூறவில்லை. இரவு சரியாகத் தூங்காததால் இப்படி இருக்கிறது என்று கூறி அவனைத் திருப்பி அனுப்பிவிட்டவனால் நிம்மதியாக இருக்கவே இயலவில்லை.

தான் எவ்வளவு கீழ்த்தரமான காரியம் செய்திருக்கிறோம் என்று மீண்டும் மீண்டும் எண்ணி எண்ணி மறுகியவன், வீட்டிலிருந்தால் ஏன் அறைக்குள்ளேயே அடைந்து கிடக்கிறான் என்ற சந்தேகம் வீட்டிலிருப்பவர்களுக்கு வரும் என்ற காரணத்தால் யாரிடமும் எதுவும் பேசாது தன் போக்கில் சென்று ஊரின் ஆற்றங்கரையோரமாக அமர்ந்துவிட்டான்.

அவனையும் அறியாது அவனது ஆழ்மனதின் எண்ணங்களெல்லாம் விஸ்வரூபமெடுத்து பேயாய் அவனை விரட்ட, அவன் போக்கில் அவனது விழிகளிருந்து மட்டும் உவர் நீர் வடிந்து கொண்டிருந்தது.

இரவு நடுச்சாமம் வரையிலும் அப்படியே அமர்ந்திருந்தவனை, நிலவின் வெளிச்சத்தில் தூரத்தில் இருந்து பார்த்த கரிகாலன் வந்து அழைத்தான்.

"ஏண்டா.. எதுக்கு இந்த நேரத்துல இப்படி வந்து உட்காந்துட்டு இருக்க?" என்று அவனது முகத்தைப் பார்த்தே ஏதோ சரியில்லையே என்று உணர்ந்து கரிகாலன் கேட்க,
அவனது கேள்விக்கு சற்று நேரம் வரையிலும் எதுவும் பதில் சொல்லாத வந்தியனோ, சிறிது நேரம் கழித்தே..

"சார்.. நீங்க லவ் பண்ணியிருக்கீங்களா?" என்றான் வலி நிறைந்த குரலோடு.

அவன் அப்படிக் கேட்டதும் சட்டென கரிகாலனின் மனத்திரைக்குள் அவன் நந்தினியின் மதிமுகம் ஒரு கணம் மின்னலடித்ததைப் போல வந்து மறைந்தது.

ஆனாலும் அதை மறைத்துக் கொண்டு.. "ஏண்டா கேட்கற?" என்று கேட்டது தான் தாமதம்.. தன் மனதில் இருந்த அத்தனையும் கரிகாலனிடம் கொட்டித் தீர்த்துவிட்டான் வந்தியன்.

அவன் கூறியதனைத்ததையும் கேட்டுத் திகைத்துப் போய் அமர்ந்திருந்தான் கரிகாலன்.

தொடரும்..

கதை உங்களுக்கு பிடிச்சிருக்கா? அப்போ இங்க உங்களோட கருத்துக்களை மறக்காம என்கூட பகிர்ந்துக்கோங்க..



அப்பறம் மீம் க்ரியேட்டர்ஸ்.. ஏற்கனவே உங்க கமெண்ட்டுக்களை என்கூட பகிர்ந்துக்கிட்ட ரீடர்ஸ்.. சைலன்ட் ரீடர்ஸ்ன்னு எல்லாருக்கும் அவ்வளவு அவ்வளவு தாங்ஸ்டா செல்லங்களே..

நட்புடன்,

-நிலவின் ஊடல்!
 

NNK51

Moderator
ஊடல் சேர்த்து காதல் கோர்ப்போம்!
292802327_117873510979953_6681284240950914064_n.jpg

சாரி.. சாரி.. சாரி.. லட்சம் லட்சம் சாரி தங்கம்ஸ்.. நிறைய வேலை. கூடவே ஹெல்த் இஸ்யூ.. என்னால இங்க வரவே முடில. என்ன காரணம் சொன்னாலும் என் மேல எல்லாரும் பயங்கர கோபத்துல இருப்பீங்கன்னு தெரியும்.. வெரி சாரி.. இனி கண்டிப்பா ஒழுக்கமா கதை வரும். ப்ளீஸ் இந்த பச்சை புள்ளைய மன்னிச்சுட்டு கதைய தொடர்ந்து படிப்பீங்களாம்..

அத்தியாயம் - 7
ந்தியன் தனது முழு மனதையும் மடை திறந்த காவிரி வெள்ளமாய் கரிகாலனிடம் கொட்டிவிட, அந்த அலைகடல் வெள்ளத்தில் சிக்கி மூச்சுத் திணறிப் போய் அமர்ந்திருந்தான் கரிகாலன்.

'என்னடா.. நாம இத்தனை சொல்லியிருக்கோம்! ஆனா, பக்கத்துல இருக்கறவன் அதுக்கு பதிலேதும் பேசாம அமைதியா இருக்கானே..' என்று வந்தியன் திரும்பிப் பார்க்க, அப்பொழுது தான் முற்றும் முழுவதுமாக அதிர்ச்சியில் உறைந்து இருக்கும் கரிகாலனை உணர்ந்தான்.

'அய்யய்யயோ.. இவன் தான் குந்தவையோட அண்ணனில்ல.. இவன்கிட்ட போய் உணர்ச்சிவசப்பட்டு உளறிட்டேனே.. இவன் வேற வாய்லயே வெட்டுவானே..' என்று உணர்ந்தவன், மெல்ல அங்கிருந்து ஊர்ந்து செல்ல முயற்சிக்க, அவனது சட்டையை கொத்தாகப் பிடித்துவிட்டால் கரிகாலன்!

"அண்ணா.. அண்ணா.. சார்.. சார்.. விட்டுடுங்க சார்.. நான் ஏதோ உணர்ச்சிவசப்பட்டு உங்ககிட்ட உளறிக் கொட்டிட்டேன்.. சாரி சார்.. அண்ணா.. விட்டுடுங்கண்ணா.." என்று கெஞ்சாத குறையாக வந்தியன் கேட்க, அவனையே உறுத்து விழித்தபடி இருந்த கரிகாலனோ, ஒரு பெருமூச்சுடன் மேலே எழுந்தான்.

இன்னமும் கீழேயே அமர்ந்திருந்த வந்தியனை கை பிடித்து மேலே எழுப்பியவன், தன் போக்கில் திரும்பிச் செல்ல, வந்தியனுக்கோ 'ஹப்பாடி..' என்றிருந்தது.

ஆனால் அவன் ஒரு கணம் ஆசுவாசிக்கும் முன் மீண்டும் திரும்பி வந்த கரிகாலனோ,
"நீ என் தங்கச்சிய காதலிக்கறதுக்கு நானோ, என் குடும்பமோ சம்மதிக்கறது முக்கியமில்லை. உன் குடும்பம்.. அவங்களோட மனநிலை.. அது என்னைக்குமே மாறாது.

என் தங்கச்சி கல்யாணம் பண்ணிப் போற இடம், அவளோட பெருமையை, அருமையை உணர்ந்து அவளை தாங்கறவங்களா இருக்கணும்.

ஒரு பொண்ணு பிறந்த வீட்டுல இளவரசியான வாழறது முக்கியம் இல்ல.. அவ கல்யாணம் ஆனா பிறகு, அந்த வீட்டுல அவ மகாராணியா கொண்டாடப்படணும். அது தான் முக்கியம்.

இங்க காதல் மட்டும் முக்கியம் இல்ல தம்பி.. அதுக்கு அப்பறம் வாழ்க்கைன்னு ஒன்னு இருக்கு.

அதான் சொல்லறேன்.. உன்ன கல்யாணம் பண்ணி உன் குடும்பத்துக்கு வந்து கஷ்டப்படணும்னு என் தங்கச்சிக்கு தலையெழுத்தில்ல.

அதனால இந்த மாதிரியான என்னத்த நீ இந்த ஆத்தங்கரைலையே கரைச்சுட்டு போய்டு.. அப்படி இல்லாம என் தங்கச்சி மனசுல கண்ட எண்ணத்தையும் வளர்க்கலாம்னு ஆசைப்பட்டா.. உங்க அப்பா, அவரோட அரசியலுக்கு மிச்சம் இருக்கற வாரிசும் போனா பரவாயில்லைன்னு நினச்சுடுவாரு." என்று மிரட்டலாய் கூற, வந்தியனின் தொண்டை அடைத்தது.

"சீக்கிரம் வீட்டுக்கு கிளம்ப வழியப் பாரு.." என்று கரிகாலன் கிளம்பிட, அதற்கு பதிலேதும் பேசாது வந்தியன் கிளம்பினாலும், அவன் மனதிற்குள்..

'எனக்கு நிதர்சனம் புரியுது.. ஆனா, இந்த காதல் போதை என்ன நிலை தடுமாற வைக்குது. இதுவரைக்கும் நான் அவ மேல வச்சிருந்தது காதல் இல்ல.. அது வெறும் இனக்கவர்ச்சி மட்டும் தான்.

ஆனா.. இன்னைக்கு அவளோட வார்த்தைகள்ல எனக்குள்ள உருவாச்சே ஒரு புது உணர்வு.. அது தான் காதல்.

என்ன முதன் முறை இந்த உலகத்துக்கு பெத்து கொடுத்தது என் அம்மான்னா.. இன்னைக்கு நான் முழுசா மனுஷனா பிறந்தது குந்தவையால.

என்னால எப்படி அவளை விட முடியும்?

காதல்ன்ற உணர்வு காலப்போக்குல வலுப்படறதும் இல்ல, குறையறதும் இல்ல..

அது ஊனோடும், உயிரோடும் ஒரு கணத்துல உள்ளுக்குள்ள பாஞ்சு ஓடற ரத்தம் மாதிரி.

அது மாறவும் மாறாது.. அதோட வீரியம் குறையவும் குறையாது.' என்று எண்ணிய வந்தியனுக்கு இன்னுமொரு விஷயம் நினைவுக்கு வந்தது.

'சரி மத்தவங்களை எல்லாம் எதிர்த்து நான் காதல் செய்யலாம். ஆனா.. நான் காதலிக்கற பொண்ணே என்ன எதிர்த்தா?' என்று எண்ணியவனால் அதற்கு மேல் அந்த விஷயத்தை பற்றி யோசிக்கவே இயலவில்லை.

சுருக்கென்று சாரைப் பாம்பொன்று கொத்தியதாய் அடிமனதில் வலியென்று பெருஞ்சிறலாய் பிறக்க, தலையைப் பிடித்துக் கொண்டான் வந்தியன்.

'என் காதலுக்கு யார் எதிர்ப்பு தெரிவிச்சாலும் என்னால அதை தாண்டிட முடியும். ஆனா.. குந்தவை.. நீயே என்ன ஏத்துக்க மாட்டியோ?' என்ற எண்ணம் நிஜ நிச்சயமாய் அவனை நிலை குலையச் செய்தது என்று தான் கூற வேண்டும்.

இப்படிப் பற்பல எண்ணங்கள் சூழ்ந்தவனாய் வீடு வந்து சேர்ந்த பிறகு தான் தனது மொபைலை கையிலேயே எடுத்தான் வந்தியன்.

அப்பொழுது தான் அன்று முழுவதுமாக குந்தவை அனுப்பிய குறுஞ்செய்திகளை எல்லாம் படித்துப் பார்த்தவனுக்கு, குந்தவையின் மனதில் இடம் பிடிக்கும் வழி இருப்பது புரிந்தது!

அது தான் 'ஆத்மன்'!

இந்த ஒரு முகமூடி போதுமே குந்தவையை அவன் காதலில் விழ வைக்க!

'மிஸ்டர். கரிகாலன்.. இங்க இருந்தா தான அவளை என் வீட்டு ஆளுங்க டார்ச்சர் செய்வாங்க? எனக்கு முன்னோடியா என் அண்ணன் ஆதி ஒரு வழி காண்பிச்சிருக்கானே!

அவன மாதிரி நாங்க எங்கயாவது கண் காணாத இடத்துக்குப் போய் கூட சந்தோசமா வாழ்ந்துப்போம்..' என்று சூளுரைத்தபடியே குந்தவையின் எல்லா குறுஞ்செய்திகளையும் ஒவ்வொன்றாகப் படிக்க ஆரம்பித்தான்.

அப்பொழுதே அவனது மனது அடுத்து நிகழும் காய் நகர்வுகளை ஒவ்வொன்றாகத் திட்டமிடத் துவங்கியது.

ஏனென்றால்.. ஏற்கனவே குந்தவைக்கு ஆத்மன் மீது பிரேமை..

ஆத்மனிடம் தான் இதுநாள் வரையில் பேசிக்கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்ததுமே அவளுக்கு உள்ளுக்குள் சிலுசிலுப்பு தானே?

ஆத்மன் மீது அவள் கொண்டிருக்கும் காதலை அவள் ஒப்புக்கொண்டால் போதுமே.. தானாகவே தான் நினைத்தது நடந்துவிடுமே என்று எண்ணியபடியே மீண்டும் ஒருமுறை அவளது குறுஞ்செய்திகளை படித்தவன், அதிலிருந்த அவளது காதலையும், தவிப்பையும் உயிரும், உணர்வுமாக உணர்ந்தான்!

இதோ அவன் அவளை நினைத்து காதலாய் கசிந்துருகிக் கொண்டிருக்கும் வேளையில் இப்பொழுதும் கூட குந்தவையிடம் இருந்து இன்னுமொரு குறுஞ்செய்தி!

"ஆத்மன்.. ப்ளீஸ் என்ன தவிக்கவிடாதீங்க.. நிஜமாவே நீங்க தான?" என்று தவியாய் தவித்து இன்னுமொரு குறுஞ்செய்தி அவளிடம் வர, அதற்கு மேல் வந்தியனாலும் தாங்கிக்கொள்ள இயலவில்லை.

உடனே அவளது எண்ணுக்கு அழைத்தவன், அவள் குரல் தவிப்புடன், "ஆத்மன்.. நிஜமா நீங்க தான? ஏன் இன்னைக்கு முழுக்க என்ன அவாய்ட் செய்தீங்க? என்ன பிரச்சனை உங்களுக்கு?

நிஜமா சொல்லுங்க நீங்க இந்த ஊர்ல தான் இருக்கீங்களா? என்ன உங்களுக்கு எப்படித் தெரியும்? சொல்லுங்க ஆத்மன்?" என்று அவள் பரிதவிப்புடன் கேட்டுக் கொண்டிருக்க, சட்டென.. "என்ன கல்யாணம் செய்துக்கறயா குந்தவை?" என்று வந்தியன் கேட்டுவிட்டிருந்தான்!

அதைக் கேட்டவளுக்கோ தன் செவிகளையே நம்பவியலாத திகைப்பு!

'நிஜமாவே என் காது சரியா தான் கேட்குதா? இல்ல என் மனசுல இருக்கற ஆசை, இப்படி எல்லாம் என்ன நினைக்க வைக்குதா?' என்று இவள் தன்னையே சந்தேகித்துக் கொண்டிருக்க, வந்தியனோ..

"உன் ஆத்மன் நான் தான்.. அத நீ நம்பற இல்ல? அதே ஆத்மன் தான் ஆத்மார்த்தமா கேட்கறேன்.. என்ன கல்யாணம் செய்துக்கறியா குந்தவை?" என்று இவன் தன் காதலை கரைத்து, தன் குரல் வழி அவளுக்குக் கடத்த, குந்தவையின் கண்களிலோ கண்ணீரின் சுவடுகள்.

"எ.. எனக்கு என்ன சொல்லறதுன்னு தெ.. தெரியல.." என்று இவள் திக்கித் திணற, அவனோ..

"நீ என் வாழ்க்கையோட பொக்கிஷம்னு நானே இப்போ தான் உணர்ந்தேன் குந்தவை! என் வாழ்க்கையை அழகாக்க உன்னால தான் முடியும். அதே மாதிரி உன் வாழ்க்கைய கண்டிப்பா நான் இன்னும் அழகாக்குவேன்.." என்று கூறினான்.

அவனது பதிலில் கசந்த முறுவல் பிறந்தது குந்தவைக்கு.

"நான் பொக்கிஷமா ஆத்மன்? நீங்க ஏன் என்ன அப்படி நினைக்கறீங்கன்னு எனக்குத் தெரியல.. ஆனா, மத்த ஆம்பளைங்க எல்லாரும் பொண்ணுங்கள போகப்பொருளா தான நினைக்கறாங்க.." என்று கண்ணீர் குரலுடன் கூற, வந்தியனுக்கோ அவள் அன்றைய சம்பவத்தை நினைத்து தான் இப்படிக் கூறுகிறாள் என்று புரிந்தது.

ஒரு கணம் ஆழ்ந்த மூச்சை எடுத்துவிட்டவன், "குந்தவை.. உனக்கு நடந்தது.. நடக்கறது எல்லாமே எனக்குத் தெரியும். உன்னோட பிரச்சனைகள் எல்லாமே புரியுது.

இந்தப் பிரச்சனைகள் எல்லாம் உனக்கு மட்டும் தான் நடக்குதுன்னு நினைக்கறியா?

நீ படிச்சுருக்க.. உன்னால இந்த ஊர்ல இல்லைனாலும், வெளியூர்லயாவது போய் உன் வாழ்க்கையை பார்த்துக்க முடியும்.

ஆனா, உன் இடத்துல இருக்கற மத்த பொண்ணுங்க? உன் சமூகத்துக்கு நடக்கற கொடுமைகள் எல்லாம் எப்ப சரியாகும்? யார் சரி செய்யறது?

இங்க மனுஷங்களுக்கு இருக்கற ஏற்றத் தாழ்வுன்ற புத்தி மாறுனா தான் இதெல்லாம் மாறும்.

ஆனா எல்லாரையும் மாத்த முடியுமா நம்மளால?

அதுக்காக மாத்த முடியலைன்னு சும்மா இருக்கவும் முடியாதுல?

ஆனா இதையெல்லாம் தடுக்கலாம்.. அதிகாரத்தின் மூலமா தடுக்கலாம்..

உன் கைல அதிகாரம் இருந்தா நீ தடுக்கலாம்.. நீ இப்படி பிறந்துட்டேன்னு உன்ன நினச்சு நீயே வருந்திட்டு இருக்கறத விட, உன் தலையெழுத்த மட்டும் இல்லாம, உன் மக்களோட தலையெழுத்தையும் நீ மாத்தணும்னா அதுக்கு இப்போ இருக்கற வழி.. உன் கைல அதிகாரம் இருக்கறது தான்.

உன் மக்களோட ரெப்ரசென்டடிவா நீ முழு பலத்தோட, உச்சபட்ச அதிகாரத்தோட முன்னாடி நின்னன்னு வை.. உன் மக்கள தொட ஒரு பையனுக்கும் தைரியம் இருக்காது.. யோசிச்சு பாரு." என்று கூறி முடிக்க, குந்தவைக்கோ வாழ்வின் புது ஒளி ஒன்று பிறந்தது.

"என்ன சொல்றீங்க ஆத்மன்?" என்று இவள் மீண்டும் கேள்வியாய் இழுக்க.. அவனோ, அவளது கேள்விக்கு முழு விளக்கத்தையும் அளித்துவிட்டு..

"நாளைக்கு முதல் வேலையா நான் சொன்னத போய் செய்யற.. உன் வெற்றிக்கு நான் பொறுப்பு.." என்று தைரியமூட்டினான்.

அதற்கு அவள் சரியென்கவும்..

"சரி.. நான் சொல்ற மத்ததெல்லாம் புரியுது. என் காதல்.. அது உனக்கு புரியுதா குந்தவை?" என்று உருகிக் கரையும் குரலில் வந்தியன் கேட்க, அதுவரை தான் கொண்டிருந்த இறுகு நிலை மாறி, மெல்ல இளகினாள் பெண்!

சட்டென்று அவளிடம் நிலவிய மௌனம், இவனுக்கும் மனத்திரையில் அவளது முகத்தை அப்படியே படம் பிடித்துக் காட்டிட, இவனும் இன்னமும் நெருங்கினான்.

"சரி.. உன் வாய்ல இருந்து முத்து உதிர நான் காத்திருக்கேன்.. ஏன்னா சொன்னா தான் காதலா என்ன?" என்று சிறு சீண்டலாய் சிரிப்புக் குரலில் அவன் கூற, "ஆத்மன்.." என்ற செல்லமாய் அவள் குரல் குழைய, அன்றைய இரவு அழகியலாய் நிறைந்தது!

உயிரும் உணர்வுமாய் குந்தவையின் காதலை வந்தியன் உணர்ந்துவிட்ட பிறகு வாய் மொழி வார்த்தைகளுக்கு அவசியமென்ன?

இப்படியாய் அவள் கொண்ட கனவுகளுடன் அவன் துயில, அடுத்த்ட்ட நாள் காலையில் அறக்கப் பறக்க அவன் அறைக் கதவை யாரோ தட்டினார்கள்.

விழித்தெழ இயலாதபடி அவனவள், அவனை கனவுக்குள்ளே கட்டி வைத்திருந்தாலும், அபஸ்வரமாய் அவன் அறைக்கதவு தட்டப்படும் ஓசை அரக்கத் தனமாய் அவனை எழுப்பியது.

'ஏய்.. ஏய்.. யாருடா.. என்னடா..' என்று திடீரென்று உறக்கத்திலிருந்து அலறிப் புடைத்து விழித்தெழுந்தவன், பதறிச் சென்று கதவைத் திறந்தான்.

அங்கு நின்றிருந்ததோ.. அவன் சித்தி சைலஜா.

"என்ன சித்தி.. எதுக்கு இவ்வளவு காலைல வந்து எழுப்பறீங்க?" என்று அவன் எரிச்சலுடன் கேட்க, சைலஜாவோ இடுப்பில் கை வைத்தபடி..

"என்னங்க சார்.. காலைல பத்து மணி உங்களுக்கு இவ்வளவு சீக்கரமேவா?

ராத்திரியெல்லாம் தூங்காம ஊர சுத்திட்டு.. அதுவும் உங்க அப்பாங்களுக்கெல்லாம் ஆகாத அந்த போலீஸ் கூட ஊர சுத்திட்டு இப்போ துரையால காலைல பத்து மணிக்கு கூட எந்திருக்க முடில? ஹ்ம்ம்?" என்று அவர் கேட்க, வந்தியனோ திருதிருவென விழித்தான்.

"அ.. அதெப்படி உங்களுக்குத் தெரியும்?" என்று இவன் அசடு வழிய கேட்க,
"ஹ்ம்ம்.. ராக்கோழி வந்து தூது சொல்லிட்டு போச்சு.. உனக்குத் தான் தெரியும்ல நம்ம பெருசுங்களுக்கு ஊரெல்லாம் கண்ணுன்னு.. அதுல ஏதோவொரு கண்ணு உன்ன பத்தி வத்தி வச்சுடுச்சு.. சீக்கிரம் குளிச்சுட்டு வா.. அத பத்தி தான் பஞ்சாயத்துக்கு கூப்பிடறாங்க.." என்று அவர் கூறி முடிக்கவும், 'ஐயோடாஆஆஆ... சிக்குனாண்டா சிவனாண்டி' என்றிருந்தது வந்தியனுக்கு.

"சரி.. நீங்க போங்க நான் வரேன்.." என்று தொங்கிய தலையுடன் உள்ளே சென்றவனைப் பார்த்து விஷமமாய் சிரித்துவிட்டுச் சென்றார் சைலஜா.

இங்கு வந்தியன் குளித்துவிட்டு வர, அவனது தந்தை தேவேந்திரனோ..

"என்னடா ராத்திரியெல்லாம் ரொம்ப ஊர சுத்தறியாமே?" என்று சிறு அதட்டலாகக் கேட்க ஆரம்பிக்க, அதற்குள் இடைபுகுந்த தர்மேந்திரனோ..

"விடு தம்பி.. நல்ல காரியத்துக்குக் கிளம்பிட்டு இருக்கோம். அதுக்குள்ள புள்ளைகிட்ட கண்டதையும் கேட்டு அவன அப்செட் பண்ணாத.." என்று கூற, அதற்கு தேவேந்திரனும்,

"சரிண்ணா.." என்று அவரிடம் பதிலுரைத்துவிட்டு, ராஜேந்திரனிடம் திரும்பினார்.

"என்ன ராஜு.. முகூர்த்த நேரம் இன்னும் முடியலல்ல?" என்று கேட்க, அவரோ..

"இன்னும் முடியலண்ணா.. இப்போ கிளம்பினா சரியா இருக்கும்." என்று கூற மொத்த குடும்பமும் வந்தியனுடன் கிளம்பினார்கள்.

அனைவரும் கிளம்பி நல்ல நேரம் முடிவடைவதற்குள் அங்கு செல்ல, அந்த இடத்திலோ குந்தவையும் முகமெல்லாம் மலர்ச்சியுடன் நின்றிருந்தாள்!

தொடரும்..

கதை மறந்திருக்காதுன்ற நம்பிக்கைல இருக்கேன்.. உங்களோட கருத்துக்களை மறக்காம பகிர்ந்துக்கோங்க செல்லம்ஸ்.. மறுபடியும் ரொம்ப ரொம்ப சாரிடா..


கருத்துக்களுக்கு : https://www.narumugainovels.com/ind...-காதல்-கோர்ப்போம்_கருத்து-திரி.577/#post-6885

- நிலவின் ஊடல்!
 

NNK51

Moderator
ஊடல் சேர்த்து காதல் கோர்ப்போம்!

292055440_584692953041504_1729608465490144239_n.jpg


அத்தியாயம் - 8

காலையில் ஒரு முக்கியமான இடத்திற்குச் செல்ல வேண்டும் என்று வந்தியனின் குடும்பத்தினர் அவனை அழைத்து வருகையில் நிச்சயமாக இப்படி ஒரு இடத்திற்கு அவனை அழைத்து வருவார்கள் என்று அவன் கனவிலும் கருதவில்லை.

"அடேய்.. என்னங்கடா.. நேத்து நான் குந்தவைக்கு கொடுத்த ஐடியாவ, என்ன வச்சே எக்ஸ்பெரிமெண்ட் செய்துட்டு இருக்கீங்க? அதுவும் குந்தவை இங்க வந்திருக்க அதே நேரத்துக்கு என்னையும் கூட்டிட்டு வந்திருக்கீங்க?" என்று உள்ளுக்குள் அவன் அலறிக் கொண்டிருந்தான்.

அப்படி அவர்கள் வந்திருந்த இடம்.. வட்டாட்சியர் அலுவலகம்!

எதற்காகவென்றால்.. உள்ளாட்சி தேர்தலுக்காக கவுன்சிலர் பதவிக்கு வந்தியனை வேட்பாளராக்கி, வேட்புமனுத் தாக்கல் செய்ய வந்திருந்தார்கள் அவர்கள்!

மகனை எடுத்ததுமே பெரிய பதவியில் அமர வைத்துவிடும் எண்ணம் தான் தேவேந்திரனுக்கு.

ஆனால்.. இப்படி அரசியலைப் பற்றி ஆன்னா.. ஆவன்னா கூடத் தெரியாதவனுக்கு அப்படி பெரிய பதவியெல்லாம் கொடுத்தால்.. அவனும் கெட்டு, தன்னையும் கெடுத்துவிடுவான் என்று பயந்த தேவேந்திரன், முதலில் அவன் அரிச்சுவடி படிக்கட்டும் என்று எண்ணியதால் தான் இப்பொழுது இந்த இடத்தில் வந்து நின்றிருக்கிறான் வந்தியன்.

இதுகுறித்து வந்தியனின் பெரியன்னை சிவகாமியே சற்று குறையாக தேவேந்திரனிடம் கேட்டிருக்கிறார் தான்.

"ஏன் தம்பி.. நீங்க எவ்வளவு பெரிய அரசியல்வாதி? ஆனா நம்ம பையன நேரடியா கட்சிலேயே சேர்த்து விட்டா, உங்க பேருக்கும் புகழுக்கும் அவனுக்கும் ஏதாவது பெரிய பதிவியே கொடுப்பாங்க இல்ல? " என்று அங்கலாய்க்க, அதற்கு தேவேந்திரன் கூறிய பதில் தான் மேற்சொன்னது!

"அனுபவமே இல்லாம இவன உள்ள விட்டோம்னா.. இவன், அவனோட பேரையும் கெடுத்துகிட்டு, என் பேரையும் நாறடிச்சுடுவான்.

அதனால தான் மொதல்ல இவனுக்கு இப்படிச் சின்னதா ஒரு பதவிய கொடுக்கறேன்.. இதுல இவன் அது செஞ்சான்.. இது செஞ்சான் அப்படின்னு மேலிடத்துக்கு கொஞ்சம் தகவல் பரவுச்சுன்னா போதும்.. அவங்களே இவன கூப்பிட்டு பதவி கொடுப்பாங்க.

எப்பவுமே சிபாரிசுல வர பதவிக்கும், தன்னால வழிய வர பதவிக்கும் வித்தியாசம் இருக்கு." என்று கூறி அவர் முடித்து விட, வந்தியனோ..

'அடேய்.. இப்ப உங்ககிட்ட எவன்டா பதவி கேட்டு அலஞ்சது? இப்படி நீங்களா ஏதொவொன்னு நினைச்சுட்டு என் வாழ்க்கைல கும்மி அடிக்கறீங்களேடா' என்று அரற்றிக் கொண்டிருந்தான்.

மறுபக்கம் குந்தவையோ, ஆத்மனிடம் வந்தியனைக் கழுவி கழுவி ஊற்றிக் கொண்டிருந்தாள்!

"அரசியலுக்கு யார் வேணாலும் வரலாம் ஆத்மன்! ஆனா.. இந்த வந்தியனுக்கு எதுக்கு இந்தத் தேவையில்லாத வேலையெல்லாம்.

ஆனா.. ஒரு வகைல இது பரவாயில்ல தான்..

ஏன்னா.. வாழ்க்கை முழுக்க அவன் அப்பா சம்பாத்தியத்துல மட்டுமே உட்கார்ந்து சாப்பிடுவான்னு நினச்சேன்.. ஆனா, அரசியலுக்கு வந்தாவது தான் சம்பாதிக்கணும்னு நினைக்கறானே.. அந்த ஒரு விஷயத்த தான் நான் பாராட்டுறேன்.." என்று இவள் கூறவும், வந்தியனுக்கோ தலையை எங்காவது பலமான தூணில் கொண்டு போய் முட்டிக் கொள்ளலாமா என்றிருந்தது.

ஆனால் குந்தவை, வந்தியனை பற்றிக் குறைப்படுவதிலும் ஒரு நியாயம் இருக்கத் தான் செய்கிறது என்பதை வந்தியனே அப்பொழுது தான் உணர்ந்தான்.

'காலேஜ் முடிச்சாச்சுன்னு சும்மா ஊர சுத்திட்டு, எந்தவொரு குறிக்கோளும் இல்லாம இருந்தா இப்படித் தான் ஊர்ல இருக்க எல்லாருமே என்ன நினைப்பாங்க.

ஏதோ அப்பா ஆசைக்காக இன்ஜினியரிங் படிச்சோம்.. அதை வச்சு ஏதாவது வேலை பார்க்கலாம்.

ஆனா.. அப்பாவோ என்ன வெளில வேலைக்கெல்லாம் அனுப்ப மாட்டாங்க.

இப்படி இன்ஜினீரிங் படிச்சதே அவர் பெருமை பீத்திக்கத் தான். ஆனா.. நான் வேலைக்கு மட்டும் போறேன்னு சொன்னா.. அவ்வளவு தான்! மனுஷன் கொல காண்டாகிடுவார்.

அதே சமயம் எனக்குன்னு ஒரு தொழிலையும் நான் உருவாக்கிக்கணும்.. என்ன செய்யறது?' என்று வந்தியன் யோசித்துக் கொண்டிருந்த பொழுது தான் அவனுக்கு ஒரு முக்கியமான விஷயமே ஞாபகம் வந்தது.

'ஆஹா.. பழம் நழுவி பால்லயே விழுந்திருக்கு.. நான் எப்படி இத கவனிக்காம விட்டேன்?!" என்று எண்ணியவனாய் உடனே வீடு நோக்கி விரைந்தவன், தன் தாய்மார்களிடம் ஓடி வந்து, தன் மனதில் தோன்றிய அந்த விஷயத்தைக் கூறினான்.

இவன் கூறியதைக் கேட்டதும் சிவகாமிக்கும், பாகிரதிக்கும் பேரானந்தம்!

"தம்பி இப்போவாது உனக்கு நீயாவே ஏதாவது செய்யணும்னு தோணுச்சே.. அத நினச்சு எங்களுக்கு ரொம்ப சந்தோசமா இருக்குப்பா.." என்றவர்கள்..

"இரு இப்பவே போய் உன் அப்பாகிட்ட பேசறோம்.." என்று கூறிவிட்டு அங்கிருந்து துள்ளிக் குதித்து ஓடினார்கள்.

'அப்பாடா.. எப்படியோ நாம நினைச்ச விஷயம் நடக்கப் போகுது..' என்று சந்தோசப் பெருமூச்சுடன் திரும்பியவனை, இடுப்பில் கை வைத்து முறைத்தபடி நின்று பார்த்துக் கொண்டிருந்தார் வந்தியனின் சித்தி சைலஜா.

'அய்யயோ.. இது சந்திரமுகி ரஜினிக்கே டியூஷன் சொல்லிக் கொடுத்ததாச்சே.. நாம மனசுல என்ன நினைச்சாலும் அத அப்படியே பச்சாக்குன்னு கண்டுபிடிக்கற பார்ட்டியாச்சே.. இவங்ககிட்ட இருந்து நான் எப்படி எஸ்கேப் ஆகப் போறேன்?' என்று எண்ணியவன், அசடுவழிய சைலஜாவைப் பார்த்து சிரித்து வைத்தான்.

"என்னடா.." என்று இன்னமும் அவனை முறைத்தபடி கேட்டவரிடம்..

"ஒ.. ஒண்ணுமில்லையே சித்தி.." என்று திக்கித் திணறியவன்.. சற்று குரலை செருமி சீர்படுத்திவிட்டு..

"அம்மா கூப்பிட்டாங்க.. நான் போகணும்.." என்றான் சிறு பிள்ளையைப் போல!

அதைக் கேட்ட சைலஜாவுக்கோ இதழோரமாய் சிரிப்பு பீறிட்டாலும், ' இவன் ஏதோவொரு காரணத்துக்காகத் தான் அக்காங்ககிட்ட இத்தனை பிட்டு போட்டிருக்கான்..' என்று அவன் மீது உள்ளூர சந்தேகித்தவர், தனது எண்ணத்தை அவனிடம் வெளிக்காட்டிக் கொள்ளாது,

"சரி.. போ.." என்று கூறி அவனை அனுப்பிவிட்டிருந்தார்.

சைலஜாவும், வந்தியனும், பொதுவாகவே ரொம்பவும் நெருக்கமானவர்கள். வந்தியனைப் பொருத்த வரைக்கும் ஷைலஜா, அவனது தமக்கையைப் போன்றவர்.

அவருக்குத் தெரியாத ரகசியம் வந்தியனிடத்தில் எதுவுமே இல்லை! (குந்தவை விஷயத்தைத் தவிர்த்து.)

அதனால் தான் இப்பொழுது மகனது ஒற்றைச் செய்கையில் அவன் மீது சந்தேகம் வலுத்துவிட்டது அந்தத் தாய்க்கு.

ஆனாலும் வந்தியன் எவ்வளவு தூரம் தான் போவான் என்று பொறுத்திருந்து வேடிக்கை பார்க்க நினைத்தார் அவர்.

ஏனென்றால்.. வந்தியன் தன் தாய்மார்களிடம் கூறியது.. இப்பொழுது விற்பனைக்கு வந்திருக்கும் குந்தவை வேலை செய்யும் பள்ளியைத், தான் வாங்கி.. தானே அதற்கு தாளாளர் ஆகவேண்டும் என்பது தான்.

இதற்கே அந்த இரு அம்மாக்களும், ஏதோ தன் மகனுக்கு பெரிதாகப் பொறுப்பு பருப்பு (வெ)வந்துவிட்டதாக நினைத்து துள்ளிக் குதித்து ஓடினார்கள்.

ஆனால் இதை சந்தேகித்தது சைலஜா மட்டும் தான்.

'இவனுக்கே குந்தவைய கண்டாலே ஆகாது. ஆனா எதுக்காக இவனே தேடிப் போய் அவ வேலை செய்யற பள்ளிக்கூடத்த விலை கொடுத்து வாங்கணும்?

ஒருவேளை பழி கிழின்னு பையன் எதுவும் பிளான் செய்யறானோ?' என்று நம் நாயகனை சைலஜா சந்தேகிக்க, மறுபுறத்தில் அவன் தந்தையோ மிகவும் அப்பாவியாக..

"ஏதோ உனக்கு இப்பவாவது நல்ல புத்தி வந்துச்சே.." என்று வந்தியனின் யோசனைக்கு ஆமோத்தித்துக் வந்திருந்தார்.

பின் தன் தமையனிடம் திரும்பி..

"பாருங்கண்ணா நீங்க சொன்னது சரியாப் போச்சு.. இன்னைக்குத் தான் பையன் வேட்புமனுத் தாக்கல் செஞ்சான்.. அடுத்து ஒரு மணி நேரத்துல பையனுக்கு பொறுப்பு வந்துடுச்சு பாருங்களேன்.." என்று சிலாகிப்பாய் கூற, வந்தியனுக்கே..

'இவரெல்லாம் எப்படி இவ்வளவு பெரிய அரசியல்வாதி ஆனார்?' என்ற சந்தேகம் வலுத்தது.

இப்படி MLA குடும்பமே மொத்தமாய் சம்மதிக்க, அடுத்து வந்த இரண்டொரு நாட்களில், அந்தப் பள்ளிக்கு வந்தியன் அதிகார பூர்வமாகத் தாளாளர் ஆனான்!

அடுத்து வந்த நாளில் வந்தியன் முறையாக அந்தப் பள்ளியை கையிலெடுக்கும் நிகழ்வை பெரிய விழாவாகவே கொண்டாடினார்கள் அந்தப் பெரிய குடும்பத்தினர்.

இதில் புகைந்து போனது தான் யாரென்று நமக்குத் தெரியுமே?!
சந்தேகத்திற்கு இடமின்றி குந்தவையின் காதில் தான் புகை வந்து கொண்டிருந்தது.

'இவன் கண்ணுல படக் கூடாதுன்னு நாம எவ்வளவு தான் நினைச்சாலும், இவன் நம்மள விடமாட்டான் போலிருக்கே..' என்று எண்ணியபடி அந்த விழாவில் வேறு வழியின்றி அமர்ந்திருந்தவளுக்கு, ஆத்மனிடம் இருந்து ஒரு குறுஞ்செய்து வந்தது.

"இன்னைக்கு உன் ஸாரி சூப்பர்.. ஆனா கூடவே முகத்துல கொஞ்சூண்டு சிரிப்பு இருந்தா இன்னும் சூப்பரா இருக்கும்.." என்றபடி அவனிடமிருந்து வந்த குறுஞ்செய்தியைப் படித்தவளுக்கு உள்ளுக்குள் குறுகுறுவென்றிருந்தது.

"ஹேய்.. எங்கப்பா இருக்கீங்க?" என்று இவள் குதூகலமாய் பதில் கேள்வி கேட்க.. அவனோ,

"அட.. அட.. அட.. பொண்ணுங்களுக்கு ரொம்ப அழகான நகையே புன்னகை தான்னு பெரியவங்க சும்மாவா சொன்னாங்க?" என்று இன்னுமொரு குறுஞ்செய்தியைத் தட்டிவிட, குந்தவையோ தன்னைச் சுற்றிலும் பார்வையால் தேடித் துழாவினாள் ஆத்மனை!

"ஏய்.. ஏய்.. என்ன செய்யற? யாராவது பார்த்து வைக்கப் போறாங்க.. எதுக்கு இப்படியும் அப்படியும் கொக்கு மாதிரி தலைய திருப்பிட்டு இருக்க? நான் இங்க தான் இருக்கேன்.. போதுமா?" என்று அவள் முதலில் கேட்ட கேள்விக்கு இவன் இப்பொழுது பதிலுரைக்க, குந்தவையோ..

"இங்க இருக்கீங்களா? இங்க தான் இருக்கீங்களா?" என்று பரவசப்பட்டவள்..

"சொல்லுங்க ஆத்மன்.. எங்க இருக்கீங்க நீங்க? இன்னும் எத்தனை நாளுக்கு என்கிட்ட இந்த கண்ணாமூச்சி.. சொல்லுங்க ஆத்மன்? எங்கிருக்கீங்க நீங்க?" என்று தவியாய் தவிக்க.. வந்தியனுக்கோ, 'அச்சோ.. பாவம்..' என்றிருந்தது.

"இன்னும் கொஞ்ச நாள் தான் குந்தவை.. உன் கவுன்சிலர் எலெக்க்ஷனோட ரிசல்ட் என்னைக்கு வருதோ.. அன்னைக்கு நான் உன் முன்னாடி இருப்பேன்.. சரியா?" என்று இன்னமும் அவனைத் தேடித் தேடித் சலிக்கும் அவளது விழிகளை ரசித்தபடி இவன் குறுஞ்செய்தியை அனுப்ப, அவனது குறுஞ்செய்தியைப் படித்தவளுக்கு, கண்களின் ஓரம் ஓர் ஏமாற்றம் வந்தாலும், அதைத் தோற்கடிக்கப் பிறந்தது ஆழ்மன மகிழ்ச்சி!

அப்படியே அவளது அந்த அழகைத் தனது மொபைலில் புகைப்படம் எடுத்தவன், அதில் அவளது கண்களை மட்டும் வெட்டித் தனது மொபைலின் முகப்புப் படமாகச் சேமித்துக் கொண்டான்.

அந்த விழா முடிந்த பிறகு, வந்தியனை பள்ளி முழுமைக்கும் அழைத்துச் சென்று சுற்றிக் காண்பித்தார்கள்.

அப்படி அவன் வருகையில்.. குந்தவையோ, 'இவன் கீழ வேலை செய்வதைக் காட்டிலும், உன் வேலையும் வேண்டாம்.. ஒன்னும் வேண்டாம்..' என்று கூறிவிட்டு பள்ளியைவிட்டுச் சென்றுவிடலாமா என்று எண்ணிக் கொண்டிருந்தான்.

பள்ளியின் பிரின்சிபாலுடன் சுற்றி வந்தவன்.. சரியாக குந்தவைக்கு அருகில் வந்தவுடன்..

"சரி சார்.. இதுக்கு மேல நானே பார்த்துக்கறேன். நீங்க உங்க ரூமுக்குப் போங்க.." என்று கூறி அவரை அனுப்பி வைத்துவிட்டு, சட்டென குந்தவையின் மேஜை மேல் பரபரப்பாக எதையோ தேடினான்.

"ஏய்.. ஏய்.. என்ன செய்யற நீ? என்ன தேடற?" என்று குந்தவை பதறிப் போய் கேட்க,

"எங்க அது? எங்க அது?" என்று இன்னமும் மொட்டையாக அவளிடம் பதில் கேள்வி கேட்டான் வந்தியன்.

இது இன்னமும் குந்தவைக்கு எரிச்சலை ஏற்படுத்த..

"ஹேய்.. நிறுத்து! நிறுத்துன்னு சொல்லறேனில்ல? என்ன தான் தேடறநீ இங்க?" என்று இவள் சற்று தன் குரலுயர்த்திக் கேட்க, வந்தியனோ..

"இல்ல உன்னோட ராஜினாமா லெட்டர் எங்கன்னு தேடறேன்?" என்று சாவதானமாக தொலைக்க குலுக்கியபடி பதில் கூறியதும் குந்தவைக்கோ பக்கென்றது!

"என்னது ராஜினாமாவா? என்ன.. என்ன உளர்ற நீ? நான் எதுக்கு ரிசைன் செய்யப் போறேன்?" என்று இவள் தனது படபடப்பை மறைத்தபடி கேட்க, வந்தியனோ..

"ஆமா.. உன்ன இந்த வேலைய விட்டே துரத்தணும்ன்னு தான நான் இத ஸ்கூலையே விலைக்கு வாங்கினேன்?

இப்போ நான் தான் இந்த ஸ்கூலோட ஓனருன்னு தெரிஞ்சதும் நீ எனக்கு பயந்துட்டு இந்த ஸ்கூல விட்டே ஓடிருவ தான?" என்று அவன் நக்கலாகக் கேட்க, குந்தவைக்கோ நங்கென்று அவன் தலையிலேயே கொட்டிவிடலாம் போல் ஆத்திரம் வந்தது.

"ஆஹாஹா.. இவரு பெரிய நடுக்காட்டு முனி! இவர் எங்க எதிர்ல வந்துட்டாருன்னதும் நாங்கல்லாம் அபப்டியே பயந்து போய் பின்னங்கால் பிடரில பட ஓடிருவுமாக்கும்?

அடேய்.. உன்ன இந்த ஸ்கூலை விட்டு விரட்டாம நான் இந்த ஸ்கூலை விட்டு போக மாட்டேன்டா.." என்று அவள் ஆத்திரத்தில் சூளுரைக்க, வந்தியனும்,

"அப்படியா சொல்லற? பார்த்துடலாமா?" என்று இன்னமும் அவளுக்கு கொம்பு சீவிவிட்டு, அவள் அந்த வேலையைவிட்டு விலகாதிருப்பதை உறுதி செய்துகொண்டான்.

இப்படி அன்றைய நாளின் நிகழ்வுகளை எல்லாம் ஆத்மனிடம் குறுஞ்செய்தியாய் வடித்துக் கொண்டே வந்தவளுக்கு வீடு வந்ததும் ஒரு பேரதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது!

ஏனென்றால்.. அவளது வீட்டில், அவள் காதலன் என்று ஒருவன் வந்திருந்தான்!

தொடரும்..

என்ன நட்புக்களே.. கதை போக்கு பிடிக்குதா? உங்க மேலான விமர்சனங்களை மறக்காம இங்க பகிருங்க!


https://www.narumugainovels.com/index.php?threads/ஊடல்-சேர்த்து-காதல்-கோர்ப்போம்_கருத்து-திரி.577/

-நிலவின் ஊடல்!
 

NNK51

Moderator
ஊடல் சேர்த்து காதல் கோர்ப்போம்!

292802327_117873510979953_6681284240950914064_n.jpg

அத்தியாயம் - 9

அன்றைய நாளில் வந்தியன், தனது பள்ளிக்குத் தாளாளர் ஆகிவிட்டான் என்ற ஒரு உறுத்தலைத் தவிர, மற்றதெல்லாம் சிறப்பாக அமைந்திருக்கிறதே என்று எண்ணத்தோடு வீடு வந்து சேர்ந்த குந்தவைக்கு, தனது வீட்டின் நடுக் கூடத்தில் ஒருவன் மிகவும் ஜபர்தஸ்தாக கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருப்பதைக் கண்டதும் நெஞ்சுக்குள் ஒருவித அசூசை உணர்வு உண்டாக்கியது.

அவன் முன்பாக நின்றிருந்த தந்தையின் கண்களில் தென்பட்ட அருவருப்பையும், கோபத்தையும் கண்டவளுக்கோ இன்னமும் உள்ளத்தில் குழப்பம் ஏற்பட, தந்தையைப் பார்த்து பார்வையாலே 'யார் இது?' என்று விசாரித்தாள்.

அதற்கு அவள் தந்தை இன்னமும் அந்தப் புதியவின் மீது பார்வையாலே வெறுப்பை உமிழ்ந்தபடி, "நீயே கேளு.." என்றார் குரலில் கடினத்துடன்.

அவரது பதிலில் இன்னமும் புருவம் சுருக்கிய குந்தவை, நேரடியாகவே.. "யார் சார் நீங்க?" எனக் கேட்டாள்.

அதைக் கேட்ட அந்தப் புதியவனோ.. "என்ன குந்தவை என்ன யாருன்னு கேட்கற? நான் தான் உன்னோட லவ்வர் குணா.. என்ன யாருன்னே தெரியாத மாதிரி பேசற?" என்றான் மிகுந்த வியப்பு காட்டி!

அவனது அந்த ஒற்றை வாக்கியத்தில் சுர்ரென்று ஏறியது குந்தவைக்கு.

"ஏய்.. யார் நீ? என்ன கண்டபடி பேசிட்டு இருக்க? யாருக்கு யார் லவ்வர்?" என்று கோபத்தில் கத்தினாள் குந்தவை குரல் நடுங்க!

அவளுக்கு அவனது குரலும், தோரணையும் மனதிற்குள் வெகு அருவருப்பாக இருந்தது.

அவளுக்குத் துளி அளவு கூட வந்திருப்பவன் ஆத்மனாக இருக்குமோ என்ற சந்தேகம் இல்லை.

எனவே தான் இப்படி ஒருவன் அடாவடியாக வீட்டிற்குள் நுழைந்து தன்னை அவள் காதலன் என்று கூறவும் சீறிக்கொண்டு வந்துவிட்டது குந்தவைக்கு.

ஆனால் அதற்கு அந்த குணா மசிந்தால் தானே?

"என்ன குந்தவை? ஏன் திடீருன்னு இப்படி பேசற? என்னாச்சு உனக்கு?" என்று அவன் தவிப்பாய் கேட்பது போலக் கேட்க, பொங்கிவிட்டாள் குந்தவை.

சுற்றும் முற்றும் தேடி, வீட்டிலிருந்த பெருக்குமாரை எடுத்தவள்..

"டேய்.. மேல எழுந்திரு.. ஒழுங்கு மரியாதையா இப்போ வீட்டை விட்டு நீ வெளில போகல, உன்ன இந்த வெளக்கமாரால அடிச்சு இங்கிருந்து தொரத்துவேன்.

போடா.. அடிவாங்கி சாகாத.. போய்டு இங்கிருந்து.." நேற்று அவள் தன் கையிலிருந்த பெருக்குமாரை உயர்த்திக் காண்பிக்கவும்.. வந்திருந்தவனோ,

"குந்தவை.. நீ ஏன் இப்போ இபப்டி பேசறன்னு எனக்குத் தெரியல. ஆனா.. உன்ன நான் இப்படியே சும்மா விடமாட்டேன்.

இப்போ நான் அமைதியா போறேன்னு என்ன சாதாரணமா எடுத்துக்காத. என்ன பத்தி நாளைக்கு நீ நல்லா புரிஞ்சுசுக்குவ.." என்று சவால் விட்டு அவன் செல்ல, குந்தவையோ..

"இன்னொரு வார்த்த நீ பேசின, இங்கிருந்து நீ உயிரோரோடவே போக மாட்ட. என்ன ஆனாலும் பரவாயில்லன்னு உன்ன கொன்னே போட்டாலும் போட்டுடுவேன்." என்று இன்னமும் காளியாய் உருவெடுக்க, அந்த குணா.. அங்கிருந்து ஓடியே விட்டான்.

ஆனால் அப்பொழுது சென்றவன், அடுத்த நாள் செய்யவிருக்கும் காரியத்தைப் பற்றி அறியாத குந்தவையோ மேல்மூச்சு, கீழ்மூச்சு வாங்க நின்றிருந்தாள்.

"கண்ணு.. நீ அவனைப் பத்தி எதுவும் நினைச்சுட்டு இருக்காத. ஏதோ ஒரு காரியத்துக்காக அவன் இங்க வந்திருக்கான். அவன் நினச்சு வந்தது நடக்கலைன்னதும் ஏதோ சவால் விட்டுட்டு போயிருக்கான்.

இந்தப் பிரச்சனை இத்தோட நின்னாலும் சரி.. இதுக்கு மேல தொடர்ந்தாலும் சரி.. நான் உன்ன நம்பறேன்.. உன் கூட இருப்பேன். சரியா?" என்று அவர் குந்தவையின் அருகே வந்து, அவள் தலையைத் தடவி கூறவும், குந்தவை அப்படியே உடைந்துவிட்டாள்.

"அப்பா.. என்ன நீங்க நம்பறீங்கல்ல ப்பா.. அது போதும். இவன் யாரு? எதுக்காக இங்க வந்து இப்படி பிரச்சனை செய்துட்டு இருக்கான்னே எனக்கு புரியல. ஆனா.. என்ன நடந்தாலும் சரி, இவனுக்குப் பின்னாடி யார் இருக்காங்கன்னு நான் கண்டுபிடிச்சே தீருவேன்." என்று இவள் சூளுரைத்தாள்.

இங்கு மறுபுறமோ, குந்தவையைக் காதலிக்கிறேன் என்று வந்த அந்த குணா, நேராக சென்று சந்தித்தது வந்தியனின் பெரியப்பாவையும், சித்தப்பாவையும் தான்.

"என்னங்கய்யா அந்த பொண்ணு என்ன வெளக்கமாறால அடிக்க வந்துடுச்சு. நீங்க என்னமோ அது அழுகும், கூச்சல் போடும், ஊரக் கூட்டி நியாயம் கேட்கும்.. அப்படி இப்படின்னு சொன்னீங்க?

ஆனா அது என்னவோ பத்திரகாளி மாதிரி சீறிக்கிட்டு நிக்குது?!" என்று பதட்டமாய் கூற, வந்தியனின் சித்தப்பா ராஜேந்திரனோ, "என்னங்கண்ணா.. ஏற்கனவே அவ, நம்ம வந்தியன் முன்னாடி தலை நிமிர்ந்து பேசினதுக்கே அவள கடத்திட்டுப் போய் நாசம் செய்யலாம்னு நினைச்சோம்.. ஆனா அது நம்ம பையனாலேயே மிஸ் ஆகிடுச்சு.

நம்ம பையன் அன்னபோஸ்ட்டா எலெக்க்ஷன்ல ஜெயிச்சா தான் கௌரவம்ன்னு நினச்சா.. இப்படி இந்த ஜாதிக்காரி, நம்ம பையனுக்கு எதிராவே அவளும் எலெக்ஷன்ல நின்னா.. அது நமக்கு எவ்வளவு பெரிய கேவலம்.

சரி இப்படி ஒரு ரகசிய காதலன் அவளுக்கு இருக்கறான்னு சொல்லி அவளோட நடத்தையை அசிங்கப்படுத்தலாம்னு பார்த்தா.. அதுவும் சரிப்படாது போலிருக்கே?!

இதுக்காகத் தான் சொன்னேன் நான்.. யாருக்கும் தெரியாம அவ கதையவே முடிச்சுடலாம்ன்னு.. ஆனா, நீங்க தான் என் பேச்ச கேட்கல?" என்று அவர் தலையைப் பிடித்துக் கொண்டு குறைபட, ஒரு கணம் வான் நோக்கி வெறித்த தர்மேந்திரனோ,

"இங்க பாரு ராஜு.. அவ அப்படி எங்கயாவாது காணாம போய்ட்டாலோ.. இல்ல செத்து போய்ட்டாலோ, இந்த ஊரு ஜனங்க எல்லாரும் சேர்ந்து அவள ஊரக் காப்பாத்தற சாமியாக்கிடுவாங்கடா..

இப்படி அவ நடத்த கெட்டவள்ன்னு ஊருக்குள்ள கதை பரப்பிட்டோம்ன்னு வையேன்.. இந்த ஊரே அவள, மூஞ்சிலயே காறித் துப்பி ஊரவிட்டு தொரத்திடும்." என்று தம்பியிடம் கூறிவிட்டு, அந்த குணாவிடம் திரும்பியவர்..

"டேய்.. என்ன சொன்ன? அவ அழுகல, கதறல, ஊரக் கூட்டல.. அப்படின்னு சொல்றல்ல?

அவ அப்படி செய்யலைன்னா என்ன? நீ செய் இதெல்லாம். ஊரக் கூட்டி உன்ன இவ ஏமாத்திட்டான்னு சொல்லு.. அழு, கதறு, பழி போடு.. சபி.. உன்னால அவளை எந்தளவுக்கு அவமானப்படுத்த முடியுமோ அத்தனையும் செய்.

எனக்கு இந்த ஊர் மக்கள் அவள எப்படியாவது இந்த ஊர விட்டே தொரத்தணும்.

என் தம்பி தேவேந்திரன் நாளைக்கு நைட்டு தான் சென்னைல இருந்து இங்க திரும்ப வரான்.

அவன் வரதுக்குள்ள, அந்த குந்தவை இந்த ஊரைவிட்டே ஓடியிருக்கணும். சரியா?" என்று அதிகாரமாய் கூற, அந்த குணாவோ பணிவாய் தலையசைத்தான்.

*****

அன்றைய இரவு மிகக் கடுமையான தலைவலியில் படுக்கையில் இருந்த குந்தவைக்கு, ஆத்மனிடம் இருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது.

"என்னங்க மேடம்.. சத்தமே இலலாம இருக்கீங்க? ஏதாவது மூட் ஆஃபா?" என்றான்.

அன்றைய தினம் தான் வந்தியன், குந்தவையின் பள்ளியின் தாளாளர் ஆன காரணத்தால் அவள் மனக்கசப்பில் இருப்பாளோ என்ற எண்ணத்தில் அவன் கேட்க, குந்தவையோ கொட்டித் தீர்த்துவிட்டாள்.

குந்தவை கூறிய விஷயம் வந்தியனுக்கே பேரதிர்ச்சியாய் இருந்தது.

"என்னம்மா சொல்லற? யார் அவன்? எதுக்காக இப்படி வந்து பிரச்சனை செய்துட்டு இருக்கான்?" என்று ஆத்திரமாய் இவன் கேட்க, குந்தவையும்..

"எனக்கு தெரில ஆத்மன்.. எந்தக் காரணத்துக்காக யார் இப்படியெல்லாம் செய்யறாங்கன்னு எனக்கு சுத்தமா புரியல?

ஒரே குழப்பமா இருக்கு.. பயங்கர தலைவலியா இருக்கு.." என்று இவள் சோர்வுடன் கூறினாள்.

"ஹேய்.. விடு.. நான் பார்த்துக்கறேன். ஆனா.. இந்த பிரச்சனை இத்தோட முடியும்னு எனக்குத் தோணல.

எங்கிருந்தோ ஒருத்தன் உன் வீட்டுக்கே வந்து இப்படியெல்லாம் பேசறான்னா.. அவன் சும்மா ஒத்த வார்த்தைல இங்கிருந்து ஓடிடுவான்னு நான் நினைக்கல.
ஆனா.. உன் அப்பா சொன்னதையே தான் நானும் சொல்லறேன்.

என்ன பிரச்சனை வந்தாலும் சரி.. நான் உன்ன விட்டு எப்பவும் போகமாட்டேன். உன் பக்கத்துல நான் இருப்பேன். எந்த சூழ்நிலைலயும் நீ சோர்ந்து போயிடாத.

இதெல்லாம் நீ இப்ப கவுன்சிலர் எலெக்க்ஷனுக்கு நிக்கறதால தான்னு நான் நினைக்கறேன்.

அதனால எந்தவொரு சூழ்நிலையையும் நீ எலெச்சன்ல இருந்து பின்வாங்கிடாத.

இப்போ நடக்கறதெல்லாம் உன் முன்னேற்றத்த.. உன் மக்களோட முன்னேற்றத்த தடுக்கறதுக்காக வந்திருக்கற சின்ன சலசலப்பு. அதுக்கெல்லாம் நீ பயப்பட்டுடாத.

உன் தலைலயே இதெல்லாம் ஏத்திக்காத. நான் பார்த்துக்கறேன்.." என்று அவன் தைரியமூட்ட, குந்தவையின் விழிகளில் நீர் சுரந்தது.

"நான் ரொம்ப ரொம்ப அதிர்ஷ்ட்டசாலி ஆத்மன்.. என் அப்பாவும் சரி, நீங்களும் சரி.. இந்த விசயத்துல 'என்னதிது? யார் இவன்?'அப்படின்னு என்கிட்ட ஒரு வார்த்தை கூட கேள்வி கேட்கல, மாறா.. இந்தப் பிரச்சனைல இருந்து உன்ன வெளில கொண்டு வர நான் உன் கூட இருக்கேன்னு என்ன நிமிர வச்சிருக்கீங்க.

இந்த ஒரு விஷயம்.. இந்த ஒரு வார்த்தை போதும். என்னால எந்தவொரு சூழ்நிலையயும் கடந்து வர முடியும்." என்று அவள் திடமாகக் கூறினாள்.

என்ன தான் ஆத்மனிடம், குந்தவை இப்படி நிமிர்வாகக் கூறினாலும், மறுநாள் காலையில் ஊரையே கூட்டி அந்த குணா இவள் பேரை நாறடிக்க.. அந்தக் கணத்தில் உள்ளம் துவண்டாள் குந்தவை.

*****

அன்றைய நாள் விடிந்ததும் வாசற்கதவைத் திறக்கையிலேயே அவள் வீட்டின் முன்பு கூடியிருந்த பெருங்கூட்டத்தைக் கண்டதும் மனதிற்குள் சட்டென ஒரு விதிர்விதிர்ப்பு தான் அவளுக்கு.

என்ன தான் தன் மீது எந்தவொரு தவறும் இல்லை என்றாலும், ஒரு இழி சொல்.. ஒரு பழி சொல் தாங்குமா நல்லவர் நெஞ்சம்?

அதனால் தான் குந்தவைக்கு மனதோரம் இந்த விதிர்ப்பு.

ஆனாலும் அதை ஓரம்கட்டிவிட்டு, மனத்தின் பலவீனத்தை வெளியில் காட்டிக் கொள்ளாது வீட்டின் வாசற்படிக்கு வந்த குந்தவை, அங்கிருந்த மக்களைப் பார்த்து..

"என்ன? என்ன விஷயம்? எதுக்காக எல்லாரும் இப்படி கூட்டமா வந்திருக்கீங்க?" என்று நிமிர்வுடன் கேட்க, அங்கிருந்த பெரிய குடும்பத்தின் சொந்தக்காரப் பெண்மணி ஒருவர்..

"என்ன விசயம்ன்னா கேட்கற? ஆங்.. நல்லா கேட்பியே கேள்வி?

நீ செஞ்சு வச்சிருக்கற காரியத்துக்கு உனக்கெல்லாம் கவுன்சிலர் பதவி ஒரு கேடு?" என்று அவளை கேவலமாய் பேசத் துவங்க, குந்தவைக்கோ கண்கள் இரண்டும் கட்டுக்கடங்காது சிவந்தன.

"இங்க பாருங்க சும்மா உங்க வாய்க்கு வந்தபடி எல்லாம் பேசாதீங்க. நான் அப்படி என்ன காரியம் செஞ்சேன்?" என்று இவள் முடிந்தளவு பொறுமையை இழுத்துப் பிடித்துக் கேட்க, அதே பெண்மணி இன்னமும் தொடர்ந்தாள்.

"என்னது நான் வாய்க்கு வந்தபடி பேசறனா?

நீ இருக்கற லட்சணத்துக்கு கவுன்சிலர் ஆகணும்னு ஆசைப்படறியே.. அதுவும் எப்படி உங்க ஆளுங்க இருக்கற இடம் தனி வார்டா இருந்தா பரவாயில்ல.. அதுக்கு நீ கவுன்சிலர் ஆகணும்னு ஆசைப்பட்டா பரவாயில்ல.

ஆனா, நீ எங்க ஆளுங்க இருக்கற ஏரியாவையும் சேர்த்து ஒரே வார்டா இருக்கற இடத்துக்கு கவுன்சிலர் ஆகணும்னு நினைக்கறியே.. உன்னையெல்லாம் கல்லால அடிச்சே ஊறவிட்டு தொரத்தணும்..

உனக்குள்ள இத்தனை நாத்தத்தை வச்சுட்டு கோபம் வருதா.. உனக்குக் கோபம்?" என்று சாக்கடையாய் தொடர்ந்தார்.

ஆனால்.. அதற்கு மேல் அவரைத் தொடர விடாத குந்தவையோ..

"இங்க பாருங்க நீங்க இப்படி அனாவசியமா என்ன அசிங்கமா பேசறத நான் கைகட்டி பார்த்துட்டு இருக்கணும்னு எனக்கு எந்த அவசியமும் இல்ல.

சொல்லறத்துக்கு ஏதாவது விஷயம் இருந்தா சொல்லுங்க.. இல்லைனா நடைய கட்டுங்க. இல்லைனா மரியாதை கெட்டுடும்." என்று மிரட்டலாய் கூற, மொத்த ஊரும் இவளை நோக்கி கோபத்துடன் முன்னே வரத் துவங்கியது.

இதுவரை மகளே சமாளிப்பாள் என்று அவளை பேசவிட்டு, அவளுக்குத் துணையாக, அவளருகே நின்றிருந்த குந்தவையின் தந்தை, அவர்கள் முன்பு கூடியிருந்த கூட்டத்தின் ஆவேசத்தைக் கண்டு சற்று திகைத்து, முன் வந்தார்.

"இருங்க.. இருங்க.. எதுக்கு இப்படி எல்லாரும் கோபப் படறீங்க? என்ன விஷயம்னு நேரடியா சொன்னாத் தான எங்களுக்கும் விஷயம் தெரியும்?

இப்படி விடிஞ்சும், விடியாமையும் வீட்டு வாசல்ல வந்து நின்னுகிட்டு எங்கள தேவையில்லாம பேசினா எங்களுக்குக் கோபம் வராதா?" என்று அவர் குரலுயர்த்திப் பேச, அந்தக் கூட்டத்தின் ஆவேசம் சற்று அடங்கியது.

அப்பொழுது குந்தவையின் சொந்தத்தில் ஒருவனே முன் வந்து.. "அண்ணே.. கொஞ்சம் இப்படி வாங்க.." என்று கூறி, கூட்டத்திலிருந்து சற்று விலகி அவரைக் கூட்டிப் போய்..

"அண்ணே.. நம்ம பொண்ணு ஏதோ ஒரு பையன காதலிச்சு ஏமாத்திடுச்சாம். அதனால அவன் நம்ம ஊர் நடுவுல தீக்குளிக்கப் போறேன்னு வந்து நிக்கறான். அதான் நாங்க எல்லாரும் நேராவே இங்க வந்துட்டோம்.." என்று சற்று குரல் தனித்துக் கூற, அந்த ஊரின் மேட்டுக்குடிகள்,

"என்னப்பா.. எதுக்கு இனிமேலும் ரகசியம்? கூப்பிடுங்க அந்த பையன?" என்று கூற, அங்கு வந்தான் குணா.

முகத்தில் வெளிப்பார்வைக்கு சோகம் வழிந்தாலும், அவன் கண்களில் நஞ்சு கசிந்தது.

அவனைக் கொலைவெறியுடன் பார்த்த குந்தவைக்கு, பாய்ந்து சென்று அவன் கன்னத்தில் பளார் என்று வைத்து, அவனை அடித்துத் துவைத்து விடும் வேகம் வந்தது.

ஆனாலும் தன்னைச் சிரமத்துடன் கட்டுப்படுத்திக் கொண்டவள், கூட்டத்தின் முன்னே வந்து..

"நீ தான் என்ன காதலிக்கறேன்னு சொல்ற இல்ல?" என்று கேட்க, அவனோ 'ஆம்..' என்று தலையசைத்தான்.

அவனை ஒரு கணம் மேலும் கீழும் பார்த்தவள்.. பின் கூட்டத்தை நோக்கித் திரும்பி,

"ஆமா.. இவர் என் லவ்வர் தான். நான் இவர் வேணாம்னு நினச்சேன் தான்.. ஏன்னா, நான் என் வாழ்க்கைல ஏதாவது சாதிக்கணும்னு நினச்சேன்.. அதுக்கு இந்த காதல் எனக்குத் தடையா இருக்கும்னு நினச்சேன்.

ஆனா, விஷயம் இவ்வளவு தூரத்துக்கு வந்த பிறகு.. இவர மறுக்கறது சரியா வராது.

அதனால நான் இப்போ என்ன சொல்ல வரேன்னா.. நாளைக்கு காலைல நம்ம ஊர் கோவில்ல நான் இவர கல்யாணம் செய்துக்கறேன்..

கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்ங்க.." என்று கூறிவிட்டு அவள் உள்ளே செல்ல, மொத்த ஊரும் அதிர்ச்சியில் உறைந்தது, அந்த குணாவும் உட்பட!

தொடரும்..

ஹேய் செல்லம்ஸ்.. கதை படிக்கறீங்களா? பிடிக்குதா? அப்போ ஒண்ணு ரெண்டு வார்த்தை கமெண்ட் செய்யலாம்.. நான் கோவிச்சுக்கவெல்லாம் மாட்டேன்.. ஹி.. ஹி.. ஹி..


கமெண்ட் ஹியர் : https://www.narumugainovels.com/index.php?threads/ஊடல்-சேர்த்து-காதல்-கோர்ப்போம்_கருத்து-திரி.577/

நட்புடன்,

நிலவின் ஊடல்!
 

NNK51

Moderator

ஊடல் சேர்த்து காதல் கோர்ப்போம்

292055440_584692953041504_1729608465490144239_n.jpg
அத்தியாயம் - 10

கார்கால மின்னலொன்று சத்தமின்றி உயிர்த் தீண்டியதைப் போல சுள்ளென்ற வலியொன்றை இருதய ஆழமதில் உணர்ந்தான் வந்தியன்.

'என்ன நடக்குது இங்க? எப்படி இவ இப்படியொரு முடிவெடுத்தா?' என்ற ஒற்றைக் கேள்வியே இவனது மனதோரத்தில்!

எத்தனையோ முறை வந்தியன், குந்தவைக்கு போனில் அழைத்தும் அவள், இவனது அழைப்பை ஏற்கவில்லை.

ஒற்றை வரியாய் ஒரே ஒரு குறுஞ்செய்தி மட்டிலுமே அவளிடமிருந்து.. 'என்னிடம் நம்பிக்கை இருக்கிறதில்லையா?' என்ற ஒற்றைக் கேள்வியாக!

என்னவென்று பதில் கூறுவான் இவன்?

நம்பிக்கை இல்லாமலா இத்தனை நடந்த பிறகும் ஆத்மனாக அவள் அகம் தொட்டிருக்கிறான்?

ஆனால் உள்ளுக்குள் திக் திக் என்று தாறுமாறாகத் துடிக்கும் இந்த இதயம் கொடுக்கும் கனம் அவனால் தாங்க இயலவில்லையே?

ஏதோ தப்பும் தவறாகவும் நடக்கவிருக்கிறது என்று வந்தியனின் ஆள் மனத்திற்குள் பட்சி ஒன்று கூப்பாடு போடுகிறதே?

அதன் குரல்வளையை வந்தியனால் நசுக்கி எறிந்துவிட்டு அலட்சியப்படுத்தி செல்ல இயலவில்லையே?

இதோ.. அடுத்த நாளும் விடிந்துவிட்டது!

ஊரே இப்பொழுது குந்தவையின் திருமணத்திற்காகத் தடபுடலாகத் தயாராகிக் கொண்டிருக்கின்றது!

வந்தியனுக்கோ இருப்பே கொள்ளவில்லை.

வீட்டில் அவனது சித்தப்பாவும், பெரியப்பாவும் ஏதோ மலையைப் புரட்டிவிட்டதாக மீசையை முறுக்கிவிட்டுத் திரிகிறார்கள்.

வந்தியனின் அப்பா சென்னையில் இருந்து திரும்புவதற்குள் குந்தவை இந்த ஊரை விட்டே சென்றுவிடுவாள் என்று திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

இதெல்லாம் ஒரு புறம் இருக்க, மறுபுறம் குந்தவையோ.. சர்வ அலங்கார பூஷிதையாக திருமணக் கோலத்தில் நின்றிருந்தாள்.

அருகில் அவள் தந்தையும், தங்கையும் விழிகளில் கவலையுடன் நிற்கக் காணவும், தன்னைச் சுற்றி இருந்த மற்றவர்களை எல்லாம் விலகிப் போகச் சொன்னவள், தன் தந்தையிடம் திரும்பி..

"என்னப்பா.. என் மேல நம்பிக்கை இல்லையா?" என்று அவர் கண் பார்த்துக் கேட்க, அவரோ தன் மகளை இன்னுமாய் நிமிர்ந்து பார்த்து..

"எனக்கு ஆம்பள பையன் பொறந்தா ராணுவத்துக்கு அனுப்பி வைக்கணும்னு நினச்சேன்ம்மா..

ஆனா.. இதோ இப்போ நீ நிக்கறியே.. இதுவும் போர்க்களம் தான். பாகிஸ்தான் பார்டர்ல நின்னு துப்பாக்கி புடிச்சு சண்டை போட்டா தான் அவன் வீரனா?

நீ இப்போ நிக்கறதும் போர்க்களம் தான்டா.. எனக்கு உன்ன தெரியும்.

நீ எதை பத்தியும் கவலைப்படாத. என்ன நடந்தாலும் நாங்க உன் பக்கத்துல இருப்போம்." என்று அவர் கூற, உள்ளுக்குள் நிம்மதி பிறந்தது குந்தவைக்கு.

இங்கு நிலைமை இவ்வாறாய் இருக்க, மறுபுறத்தில் அந்த குணாவோ மரண பீதியில் இருந்தான்.

'நாம பாட்டுக்கு அவ பேர கெடுத்துட்டு போய்டலாம்னு பார்த்தா, அவ என்னடான்னா அவ்வளவு தைரியமா நம்மள கல்யாணம் செய்துக்கறேன்னு சொல்லிட்டா..

இப்போ என்ன செய்யறது?' என்று யோசித்தவன், வந்தியனின் சித்தப்பாவை முந்தைய தினமே நேரில் சென்று பார்த்தான்.

"என்ன சார்.. நீங்க பாட்டுக்கு அந்த பொண்ணு பேர மட்டும் கெடுத்தா போதும்.. மத்தத நாங்க பார்த்துக்கறோம்னு சொன்னீங்க? இப்போ என்னடான்னா அந்தப் பொண்ணு வா.. கல்யாணம் பண்ணிக்கலாம்னு நாளெல்லாம் குறிச்சுடுச்சு.

நம்மளால இந்த கல்யாணம் எல்லாம் செய்ய முடியாது சார். ஏன்னா, எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சு. என் பொண்டாட்டிக்கு நான் துரோகம் செய்ய மாட்டேன்." என்று குணா வசனம் பேச, வந்தியனின் சித்தப்ப்பா ராஜேந்திரனோ அவனை முறைத்தார்.

"டேய்.. உன்ன என்ன கல்யாணம் பண்ணி அவ கூட குடும்பம் நடத்தவா சொல்லறோம்?

நாங்க ஒன்னு பிளான் பண்ணினா.. அவ வேற ஒன்னு பிளான் செய்துட்டா.

நீ என்ன பண்ணு.. அவள கல்யாணம் செய்துக்கோ. ஆனா, உடனே உன்னோட ஊருக்கு அவள கூட்டிட்டுப் போகணும்னு சொல்லி அவளை பாம்பேக்கு கூட்டிட்டு போய் வித்துடு. அவ்வளவு தான். விஷயம் அத்தோட முடிஞ்சுடும்.." என்று சாதாரணமாகக் கூற, அதைக் கேட்டுக் கொண்டிருந்த குணாவுக்கோ உள்ளுக்குள் உதறிவிட்டது.

"சார்.. என்ன சார் சொல்லறீங்க? நான் ஏதோ சின்ன விஷயம்னு நினச்சு வந்தா.. நீங்க என்ன ஏதோ பெரிய மேட்டர்ல மாட்டி விடற மாதிரி இருக்கு?" என்று அவன் பதற, அவன் முன்பு வந்து நின்ற வந்தியனின் பெரியப்பா தர்மேந்திரன்,

"டேய்.. என்ன? பாதி வழில ஜகா வாங்கலாம்னு பார்க்கறியா? ஒழுங்கு மரியாதையா நாங்க சொல்லற மாதிரி நடந்துக்கலைன்னு வச்சுக்க.. காதல் தோல்வியால நீ தூக்குல தொங்கிட்டன்னு சொல்லி, உன்ன ராத்திரியோட ராத்திரியா அடிச்சு, ஊர் முச்சந்தில இருக்கற மரத்துல கட்டி தொங்க விட்டுடுவோம்.

போ.. நாங்க சொல்லற படி.. நாளைக்கு அவ கழுத்துல தாலி கட்டற.. அவள வெளியூர்ல எங்கயாவது கூட்டிட்டு போய் வித்துடற.. அப்பறம் நீ என்ன ஆனாலும் எங்களுக்குக் கவலையில்லை." என்று மிரட்டல் தொனியில் கர்ஜிப்பாய் கூறிட, குணாவுக்கோ.. தேவையில்லாமல் புலி வாலைப் பிடித்து விட்டோமோ என்ற பயம் மெல்ல உள்ளுக்குள் எழுந்தது!

அதை எல்லாம் எண்ணியபடியே விழி பிதுங்கி செய்வதறியாது நின்றிருந்தவனை, ஊர்க்காரர்கள் எல்லாம் சேர்த்து கல்யாண மாப்பிள்ளையாக அலங்கரிக்க வந்தனர்.

சொல்லவும் முடியாது மெல்லவும் முடியாது மெல்ல மணவறையில் வந்து அமர்ந்தவனுக்கு, ஹோமப் புகையினால் அல்லாது, தன்னாலேயே வியர்த்துக் கொட்டியது.

குந்தவை மணமேடை நோக்கி, இவனைப் பார்த்து ஓர் எள்ளல் நகையுடன் தைரியமாக வரவும், அங்கே மணமேடையில் அமர்ந்திருந்த குணாவுக்கோ மூச்சடைத்தது!

அவள் மெல்ல நடந்து வந்து இவனருகே அமரும் நொடியில் சட்டென எழுந்த குணா..

"உனக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா குந்தவை?" என்று குந்தவையைப் பார்த்து அதிகாரமாய்.. அங்காரமாய் கேட்கவும், குந்தவையின் முகத்தில் ஒரு வெற்றிக் களிப்பு தோன்றியது.

மெல்ல மேலே எழுந்து வந்தவள்..

"சொல்லுங்க.. என்னோட மனசாட்சிக்கு என்ன இப்போ?" என்று இவள் நிதானமாகக் கை கட்டிக் கேட்க, குணாவுக்கு உள்ளுக்குள் இன்னமும் வலுவிழந்தாலும்.. வெளியில் கோபமாகக் காட்டிக் கொண்டு..

"நீ எவன் எவன் கூடவே ஊர் சுத்திட்டு இப்போ நான் வந்து கேட்டதும் உடனே என்ன அப்படியே அமுக்கிடலாம்னு முடிவு பண்ணிட்டியா?" என்று கேட்க, குந்தவைக்கு உள்ளுக்குள் சுறுசுறுவென்றது.

"ஏய்.. என்ன நீ? நேத்து என்னமோ திடீர்னு வந்து நீ தான் என் காதலன்னு சொன்ன.. நான் உன்ன ஏமாத்திட்டேன்னு சொன்ன..

இப்போ என்னடான்னா நான் வேற எவன் கூடவோ ஊற சுத்திட்டு இருக்கேனு இன்னும் இன்னும் கதை கட்டிட்டு இருக்க?

நீ என்ன சுயநினைவோட தான் இருக்கியா?" என்று அவள் கேட்க, குணாவுக்கோ வாயடைத்தது.

'என்னடா.. நாம என்ன சொன்னாலும் இவ கொஞ்சம் கூட அசரவே மாட்டிங்கறா?' என்று எண்ணியவன், அடுத்ததாக இன்னுமொரு குண்டைத் தூக்கிப் போட்டான்.

"ஹோ.. நான் கதை சொல்லறானா? அப்போ.. இது என்ன?" என்று கூறித் தனது மொபைலில் இருந்த ஒரு புகைப்படத்தை எடுத்துக் காட்ட, குந்தவைக்கே கண்களை இருட்டிக் கொண்டு வந்தது.

ஏனென்றால்.. அந்தப் புகைப்படத்தில் இருந்தது வந்தியனும், குந்தவையும்!

அதுவும், குந்தவையை ஆள் மாற்றி வந்தியன் கடத்திவிட்டு மீண்டும் அவளை பள்ளியில் திருப்பிக் கொண்டு விடும் பொழுது யாரோ எங்கேயோ மறைந்திருந்து எடுத்தது.

அதிர்ச்சியில் உறைந்த குந்தவை.. "இ.. இது.." என்று திணற, குணாவுக்கோ இப்பொழுது தான் பிரிந்த உயிர் மீண்டது போல் இருந்தது.

'அப்பாடா..எப்படியோ இவள ஆடிப் போக வச்சாச்சு. இத இப்படியே கன்டினியூ செஞ்சுட வேண்டியது தான்.' என்று எண்ணியவன்..

"சொல்லு குந்தவை.. உனக்கும் இந்த MLA வோட பையன் வந்தியனுக்கும் என்ன சம்மந்தம்?

அர்த்த ராத்திரில நீங்க ரெண்டு பேரும் எங்க போனீங்க? அதுவும் அந்த வந்தியன் முகத்தைப் பாரு.. உன்ன எப்படிப் பார்க்கறான்?

சொல்லு குந்தவை.. இவனுக்கும் உனக்கும் என்ன சம்மந்தம்?

ஓஹோ? இவனால தான் என்ன கழட்டிவிட நினைச்சியா? அப்போ நானா தான் வந்து மாட்டிகிட்டனா?

நல்லவேளை எனக்கு கல்யாணத்துக்கு முன்னாடியே இந்த போட்டோ கிடைச்சுது.. இல்லைனா நான் எவ்வளவு பெரிய ஏமாளியா போயிருப்பேன்.

ச்சை.. நீயெல்லாம் ஒரு பொம்பளையா? உன்னப் போய் காதலிச்சேன் பாரு.. என்ன சொல்லணும்." என்றவன்,

"இந்தக் கல்யாணம் நடக்காது. நான் கிளம்பறேன்.." என்றுவிட்டு விறுவிறுவென அங்கிருந்து கிளம்பிவிட்டான்.

சுற்றி இருந்த கூட்டம் மொத்தமும் இப்பொழுது இவளை அருவருத்துப் பார்க்க.. குந்தவைக்கோ உடல் கூசியது.

சுற்றும் முற்றும் திரும்பி தன் தந்தையைப் பார்த்தவள், அவரிடம் ஓடிச் சென்று..

"அப்பா.. அப்பா.. இது நீங்க நினைக்கற மாதிரி இல்லப்பா.." என்று இவள் சிறு துளி உவர் நீர் கண்கள் தாண்டி கன்னம் வழிய கேட்க, அவள் தந்தையோ..

"உன்ன இன்னமும் நான் நம்பறேன் தான் ம்மா.. ஆனா.. இது நீ இல்லைன்னு உன்னால மறுக்க முடியலையே..?" என்று அவரும் குரல் உடைந்து கூற, குந்தவைக்கோ உடல் விறைத்துப் போனது.

இதற்கிடையில் மொத்த ஊரும் வந்தியனையும், குந்தவையையும் ஏசத் துவங்க, அங்கு நின்றிருந்த வந்தியனின் சித்தப்பா ராஜேந்திரனோ..

"இப்போ எதுக்கு எங்க வீட்டுப் பையன திட்டறீங்க? அவ ஏதோ கேடுகெட்டவ. அவளோட லவ்வர் அவகிட்ட இருந்து தப்பிக்க ஏதேதோ கதை சொல்லிட்டு போய்ட்டான்.

இதுல எதுக்கு எங்க வீட்டுப் பையன இழுக்கறீங்க?" என்று அவர் ஆவேசப்பட, அங்கிருந்த ஊர் பெரியவர்களோ..

"என்னப்பா.. ஊருக்கு ஒரு நியாயம், உங்க வீட்டு பையனுக்கு ஒரு நியாயமா?

உங்க பையன வாயத் தொறந்து சொல்லச் சொல்லுங்க அந்த போட்டோல இருந்தது தான் இல்லைன்னு?

அவன் அப்படி சொல்லட்டும் அப்பறம் நாங்க பார்த்துக்கறோம்.." என்று கூற, ராஜேந்திரனும், தர்மேந்திரனும் வந்தியனை ஊர் நடுவே கொண்டு வந்து..

"சொல்லுடா.. உனக்கும் அந்த போட்டோக்கும் எந்த சம்மந்தமும் இல்லைன்னு சொல்லுடா.." என்று அதட்டினார்கள்.

இங்கு வந்தியன் உண்மை கூறியாக வேண்டிய நிலை.

அவன் அதை மாற்றிக் கூறினான் என்றால், அது குந்தவைக்கு தீராப் பழியை உண்டாக்கிவிடும்.

அதே போல, இந்தப் புகைப்படத்தில் இருப்பது தாங்கள் இருவரும் தான் என்றும் கூறிவிட இயலாது.

எனவே வார்த்தையை மிகக் கவனமாகத் தேர்ந்தெடுத்துக் கூறினான்.

"அந்த போட்டோல இருக்கறது 'நான்' தான்." என்று தன்னை மட்டுமே அவன் குறிப்பிட்டுக் கூற, மொத்த ஊரும் ஆடிப் போனது.

ஊரே சேர்ந்து வந்தியனையும், குந்தவையையும் வாய்க்கு வந்தபடி பேசிக் கொண்டிருக்க, ஊர் பெரியவர்களில் ஒருவர்..

"இப்படி பேசிட்டே இருந்தா.. இவங்கள என்னப்பா செய்யறது?" என்று அடுத்த கட்டத்தை விசாரிக்க.. மொத்த ஊரும் சேர்ந்து, இவர்களுக்கு கல்யாணம் செய்துவைத்து விட வேண்டும் என்று முடிவெடுத்தது.

இதைத் தடுக்க வந்தியனின் பெரியப்பவும், சித்தப்பாவும் எவ்வளவோ முயன்றும் கூட, ஊர் மக்கள் அனைவரும்..

"எங்களால தான் நீங்க அரசியல்வாதி ஆகறதும்.. ஒண்ணுமே இல்லாம போறதும்.

இப்படி உங்க வீட்டுப் பையன் ஊர் மேஞ்சுட்டு இருந்தா எங்க வீட்டு பொண்ணுங்கல்லாம் என்ன ஆவாங்க?" என்று அவர்களை அடக்கினர்.

ஆனால்.. குந்தவைக்கோ இதை ஒப்புக்கொள்ளவே இயலவில்லை.

"நான் இந்தக் கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டேன்.." என்று அவள் ஊர் நடுவே வந்து கத்தியும் கூட, அவளை யாரும் பொருட்படுத்தவில்லை.

இறுதியாக வந்தியன், "நான் குந்தவைகிட்ட தனியா பேசணும்.." என்று கூற, குந்தவையோ அவனை முறைத்தபடியே அவனுடன் தனியே சென்றாள்.

"பார்த்தியா.. நீ செஞ்ச ஒரு தப்பு.. என்ன.. என் வாழ்க்கையையே எப்படி சீரழிச்சுடுச்சுன்னு பார்த்தியா?

இதுல நீ என்ன கடத்திட்டு போய் திரும்ப கூட்டிட்டு வந்துவிட்டன்னு சொன்னா யாராவது நம்புவாங்களா?" என்று அழுகையுடன் கேட்க, வந்தியனோ.. அப்படியே தட்டை மாற்றிவிட்டான்!

"என்ன நீ என்னமோ உன் வாழ்க்கை மட்டும் தான் வீணாப் போச்சுன்னு ஓவரா பேசற? ஏன் என் வாழ்க்கை வீணாய் போகலையா?

ஒரு பஞ்சப் பரதேசிக்காக (சாரிடா மாறா..) ஹெல்ப் பண்ணப் போய்.. உன்ன ஆள் மாத்திக் கடத்தி இப்போ என் வாழ்க்கை எங்க வந்து நிக்குது பாரு..

ச்சே.. என் வாழ்க்கையே வீணாய் போச்சு.. எல்லாம் அவனால. ச்சே.. அதுவும் போயும் போயும் உன்ன கடத்தி.. அந்தத் தப்ப சரி செய்யறேன்னு, நானே உன்ன திரும்ப கூட்டிட்டுப் போய் விடறேன்னு வந்தேன் பாரு.. அத எந்த நாசமாப் போன மூதேவி போட்டோ எடுத்து போட்டுச்சோ தெரியல.. இப்படி என்ன இந்த நிலைமைக்கு கொண்டு வந்து விட்டுடுச்சு.." என்று அவன் புலம்ப, குந்தவைக்கோ குழம்பிப் போனது!

"இப்போ பாரு என் பேர் உன்னோட சேர்ந்து எப்படி நாறிப் போய்டுச்சு? இப்போ தான் கல்யாணத்துக்கு பொண்ணு பார்த்துட்டு வந்தேன். இனி யார் எனக்கு பொண்ணு கொடுப்பாங்க?

எனக்கு வேற வழியே இல்ல.. உன்ன கல்யாணம் செஞ்சே தீரணும்!

ப்ளீஸ் குந்தவை.. என்ன கலயாணம் செய்துக்க மாட்டேன்னு சொல்லிடாத.. என் வாழ்க்கையே வீணாப் போய்டும்.. தயவுசெஞ்சு என்ன கல்யாணம் செஞ்சுக்கோ.." என்று கூறியவன், பொத்தென குந்தவையின் காலில் விழுந்துவிட்டான்!

தொடரும்..

ஹாய் செல்லம்ஸ்.. கதை பிடிச்சா உங்க கருத்துக்களை இங்க பகிர்ந்துக்கோங்க!


நட்புடன்,

நிலவின் ஊடல்!
 

NNK51

Moderator
ஊடல் சேர்த்து காதல் கோர்ப்போம்

pic_1.jpg
அத்தியாயம் - 11

"குந்தவை.. ப்ளீஸ் குந்தவை.. என் வாழ்க்கையே நீ சொல்லற ஒரு முடிவுல தான் இருக்கு. இப்போ உன்ன நான் க்யானம் செய்துக்கலைன்னா என் வாழ்க்கையே முடிஞ்சுரும்.

என் வீட்டுல கூட யாரும் என்ன மதிக்க மாட்டாங்க.

அதைவிட ஊர்க்காரங்க இருக்கற வெறியைப் பார்த்தா.. என்ன இங்கயே வெட்டி கொன்னுடுவாங்க போலிருக்கு. ப்ளீஸ் குந்தவை.." என்று இவன் கெஞ்சிக் கொண்டிருக்க, குந்தவையின் பார்வை, வெளியே நின்றிருந்த அவளது தந்தையின் மீதும், தங்கையின் மீதும் பதிந்திருந்தது.

காதலன் என்று ஒருவன் வீடு தேடி வந்த பொழுது கூட கலங்காமல் நின்றிருந்த தந்தையின் கண்களில் இன்று கண்ணீர்!

தன் மகள் எப்பொழுதுமே பிறழ மாட்டாள் என்ற நம்பிக்கையின் ஆணிவேர் சற்று ஆட்டம் கண்டுவிட்டதோ என்னும் வகையாக அவரது கம்பீரம் கொண்ட கண்கள் இப்பொழுது தரை நோக்கிக் கொண்டிருக்க, அவரையும், வானதியையும் சுற்றி ஊர்க்காரர்கள் எல்லோரும் நின்று ஏதோதோ பேசிக் கொண்டிருந்தனர்.

அவர்களது பேச்சின் சாராம்சம் எதுவும் குந்தவைக்குப் புரியவில்லை. ஆனால் அவர்களது ஏச்சு தாங்காது, தங்கை வானதி காதடைத்து.. கண்ணீர் வழிய நின்றிருக்கும் காட்சி ஒன்று தான் குந்தவையின் விழி நிறைத்திருந்தது.

வெளியே பார்த்துக் கொண்டிருந்த பார்வை மாறாது வெறும் உதட்டசைவாக..

"எழுந்திரு வந்தியா.." என்ற குந்தவையின் குரலில் தலை நிமிர்த்தி மேலே எழுந்த வந்தியன், அமைதியாக ஒரு எதிர்ப்பார்ப்புடன் அவளை நோக்கினான்.

ஒரு கணம் கண்களை இறுக மூடியவளின் மனக்கண்ணுக்குள், ஆத்மன் இறுதியாக அவளுக்கு எழுதிய கவிதை வரிகள் நினைவுக்கு வந்தன..

"எங்கோ தொலை தூரத்தில் கடலாடிக் கொண்டிருந்த நீர்த்துளி ஒன்று..

செஞ்சூரியன் பட்டு மேகம் கலந்து..

குளிர் வாடை பட்டு மழையாகி..

என் பேருந்தின் ஜன்னல் கம்பிகளைத் தாண்டி..

சாரலாய் என் கன்னம் தொட்டது போல்.. - அவள்

காதலாய் என் இதயம் தொட்டு விட்டாள்!

என் காதலை உயிர்ப்பிக்க,

என்னவளின் மொத்த அங்க அவயங்கள் தேவையில்லை..

அவளது ரெட்டை அஞ்சனமது போதுமெனக்கு!"

என்றிருந்த கவிதை வரிகளுக்கு கீழாக அவளது விழிகளை மட்டும் புகைப்படமெடுத்து அதில் பதிவிட்டிருந்தான் ஆத்மன்!

அதைப் பற்றி குந்தவை, ஆத்மனிடம் கேட்டதற்கு கூட..

"உன்னோட ஒரு நூறு போட்டோ என்கிட்ட இருக்கு குந்தவை.. கூடவே இது போல ஓராயிரம் கவிதைகளும் இருக்கு..

என் கவிதையெல்லாம் நீ ரசிச்சு படிக்கறப்போ.. நான் ரசிக்கற கவிதைகளான உன் கண்கள நான் நேர்ல பார்க்கணும்.." என்று அவன் சரசமாகக் கூறியது இப்பொழுதும் குந்தவையின் செவிகளில் அலையோசை போல உரத்து ஒலித்துக் கொண்டிருந்தது.

ஆனால்.. அவர்கள் கனவுகளனைத்தும் இனி கானல் தான் என்று உணர்ந்த அக்கணமதில் நெஞ்சில் கசிந்த ரத்தத்தின் துளி ஒன்று, பாதை மாறி விழி வழி வழிந்தது!

சட்டென விழி திறந்தவள், வந்தியனைப் பார்த்து..

"எனக்கு முன்னாடியே ஒரு காதல் இருந்துச்சு. ஆமா.. இருந்துச்சு.. இப்போ அ.. அது.. இல்ல.

அது.. முடிஞ்சுடுச்சு..

அதனால.. சரி.. உ.. உன்ன.. உன்ன.. க்.. கல்யாணம் செய்ய.. எ.. எனக்கு.. சம்மதம்." என்று அவளது அணுவெங்கும் ஆத்மனை நினைத்து ஏங்கி ஏங்கி அழ, அதைத் தேற்ற வழி தெரியாது, திக்கித் திணறிக் கூறி முடித்தவள்.. தன் கையிலிருந்த மொபைலை ஒரு கணம் பரிதாபமாகப் பார்த்தாள்.

ஆனால் மறுகணமே, அவள் அதைத் தரையில் ஓங்கி அடிக்க, அந்த மொபைல் சுக்கல் சுக்கலாய் சிதறிப் போனது.

அதைக் கண்டு உண்டான அதிர்ச்சியையும் தாண்டி.. உயிருக்குள் வலித்தது வந்தியனுக்கு.

'இன்னைக்கு நீ அனுபவிக்கற அத்தனை வலிக்கும் நான் மருந்தா இருப்பேன் குந்தவை.

உன்ன இப்படி நான் கல்யாணம் செய்துக்கணும்னு நினைக்கல.. ஆனா, இப்போ வேற வழியும் இல்ல எனக்கு.

ஆனா ஒன்னே ஒன்னு. இப்போ உனக்கு நடந்த இத்தனை அசிங்கத்துக்கும் காரணமானவங்கள நான் சும்மா விட மாட்டேன்.' என்று உள்ளுக்குள்.. அவன் உயிர் காதலுக்குள் சபதமேற்றான் வந்தியன்!

ஆனால் உண்மை ஏதும் அறியாத குந்தவை தான் நடைபிணமாகிப் போனாள்!

தன் கழுத்தில் வந்தியனின் தாலி ஏறிய அக்கணம் தொட்டே மொத்தமாய் உயிர் துறந்தாள்!
தந்தைக்கு அவப்பெயர் வந்துவிட்டதென வந்தியனை அவள் மனம் புரிந்திருந்தாலும், இனி தான் தன் வாழ்க்கையில் மீண்டு வர இயலா இன்னல்களுக்கு ஆளாகப் போகிறோம் என்ற எண்ணம் அவளுக்குத் தோன்றாமலில்லை.

சரியாகச் சொல்லப்போனால்.. இது வாணலிக்குத் தப்பி அடுப்பில் விழுந்த கதை தான்.

ஆனால்.. வாணலியில் இருந்து தப்பியது அவளது தந்தையும், தங்கையும்.. இப்பொழுது அடுப்பில் விழுந்திருப்பது தான் தான் என்பதில் அவளுக்கு நிறைவே!

எப்படியோ யார் யாரோ ஆட்டுவிக்கும் பொம்மை போல வந்தியனுடன் அவன் வீட்டிற்குச் செல்ல, அதே கணமே வந்தியனின் தந்தை தேவேந்திரன் வீடு வந்து சேர்ந்தார்.

மகனது திருமண நிச்சய விழாவிற்கே முதலமைச்சரை நேரில் சந்தித்து அழைக்கப் போனவர், முதல்வரும் கண்டிப்பாய் தான் நிச்சய விழாவில் கலந்து கொள்கிறேன் என்று உறுதியளித்த சந்தோசத்தில் வீடு திரும்பினால்.. இங்கு இப்படி ஒரு காட்சி!

இதைக் காணவும் ஒரு கணம் தேவேந்திரனால் தன் கண்களை நம்ப இயலவில்லை.

கண்டது நிஜம் தான் என்று அவர் மூளை உணர்ந்த அந்த நொடி, சட்டென நெஞ்சைப் பிடித்துக் கொண்டு தட்டுத் தடுமாறிவிட்டார்.

அதே வேளையில் விஷயம் கேள்விப்பட்டு சுற்றுவட்டார பத்திரிக்கை நிபுணர்களெல்லாம் அங்கு குழுமிவிட.. அவர்களிடம் பெருந்தன்மையாய் இவர்களது காதலுக்கு சம்மதித்து விட்டதாய் பதிலளித்துவிட்டு வீட்டினுள்ளே சென்றவர் தான்.. அவரை அவரது அண்ணன், தம்பியாலும் கூட அவரை அணுக இயலவில்லை.

அதே வேளையில் இவர்களை எல்லாம் அலட்சியப்படுத்திவிட்டு, வந்தியனின் சிறிய தாயார் அவர்களுக்கு ஆரத்தி எடுத்து வர, அதைக் கண்டு கண்களில் கோபக் கனலுடன் அங்கே வந்த ராஜேந்திரனோ..

"ஆமா.. இதுங்களுக்கு ஆரத்தி ஒன்னு தான் கேடு.." என்று கோபாவேசமாக அந்த ஆரத்தித் தட்டைப் பிடுங்கி விசிறி எறிந்தார்.

அதைக் கண்டு கோபமாக அவரை முறைத்த சைலஜா.. எதுவும் பேச வழியின்றி, வந்தியனையும், குந்தவையையும் வீட்டிற்குள் அழைத்து வந்தார்.

"இங்க பாரு குந்தவை.. உனக்கே இந்த வீட்டு ஆளுங்கள பத்தி எல்லாம் தெரியுமில்ல.. விடு.. இங்க உன்னோட குறிக்கோள் இவங்கள திருத்தறது கிடையாது.

உன்னோட வாழ்க்கையை நீ சந்தோசமா வாழற வழியப் பாரு.

நீ ஏற்கனவே எங்களுக்கு சொன்னது தான் நான் உனக்கு சொல்லறேன்.

சந்தோசத்த மத்தவங்க கிட்ட தேடாத. உனக்குள்ள இருக்கு உன்னோட சந்தோசம். அதை மட்டும் பாரு.." என்றவர், தனது அறைக்குள் சென்று தனது புதிய பட்டுப் புடவைகளை எடுத்து வந்து..

"இந்தா.. இதெல்லாம் நீ வச்சுக்கோ. ஹ்ம்ம்.. நம்ம டைலர வர சொல்லறேன். வந்து அவங்க அளவு வாங்கிட்டு போவாங்க. ரெண்டு நாள்ல தெச்சு கொடுத்துடுவாங்க.

அப்பறம் இப்போதைக்கு உன் அப்பா வீட்டுல இருக்கற துணியெல்லாம் யார்கிட்டயாவது கொடுத்து விட சொல்லு..

யார்கிட்டயாவது என்ன? வந்தியா.. நீ கொஞ்ச நேரம் கழிச்சு, குந்தவை வீட்டுக்கு போய் அவளோட துணி மணியெல்லாம் வாங்கிட்டு வந்துடு.

நாம இந்த சந்தடியெல்லாம் கொஞ்சம் அடங்கட்டும் ஒரு ரெண்டு மூணு நாள் கச்சு, டவுனுக்குப் போய் உனக்கு வேணுங்கறதையெல்லாம் வாங்கிட்டு வந்துடலாம்.. சரியா?" என்று இருவரிடமுமாக பேசி அவர்களது இறுக்கத்தை கொஞ்சம் தளர்த்தியவர்..

"சரி போங்க மொதல்ல, சிவகாமி அக்கா கால்லயும், பாகி அக்கா காலையும் விழுந்து ஆசிர்வாதம் வாங்குங்க.." என்று பணித்தார்.

இவனருகில் நிற்கக் கூடப் பிடிக்கவில்லை தான் குந்தவைக்கு.

இதில் இவனது மனைவியாக.. ஜோடியாக வேறு ஆசிர்வாதம் வாங்க வேண்டும் என்பதை நினைக்கவே கோபம் கோபமாக வந்தது தான் அவளுக்கு.

ஆனாலும் வேறு வழியில்லை.. இனி இதையெல்லாம் சகித்துத் தான் ஆகவேண்டும். என்ற எண்ணத்துடன் சிவகாமியின் காலில் வந்தியனுடன் சேர்ந்து அவள் விழுந்து வணங்க, அவர்களை மேலெழுப்பிய சிவகாமியோ விழிகளில் பயத்துடன்..

"பயமா இருக்கு வந்தியா.. இந்த வீடு இன்னுமொரு இழப்ப தாங்காதுப்பா.. பார்த்து இருந்துக்கோங்க.." என்று குரல் நடுங்கக் கூற, இதில் இடைபுகுந்த சைலஜாவோ..

"அக்கா.. என்ன நம்ம ஆதி மாதிரி இவனையும் ஊர விட்டு அடிச்சுத் துரத்திடுவாங்கன்னு நினைக்கறீங்களா?

நம்ம ஆதிய, வீட்டுக்கு முதல் குழந்தைன்னு நாம ரொம்ப செல்லம் கொடுத்து பொத்திப் பொத்தி வளர்த்துட்டோம்..

அதனால தான் காதலிக்கற அளவுக்கு தைரியம் இருந்தவனுக்கு, வீட்டுல சொல்லி கல்யாணம் செய்ய தைரியம் இல்ல.

அதனால தான் ஊரவிட்டு ஓடிப் போனவன்.. இன்னமும் ஆள் அட்ரெஸ்ஸே இல்லாம இருக்கான்.

இங்க நம்ம வந்தியன் நல்லபடியா வாழ ஆரம்பிச்சுட்டான்னா.. அவனுக்கும் தைரியம் வந்து இங்க திரும்பி வந்துடுவான்.

ஏன்னா.. எங்க இருந்தாலும் அவன் மனசெல்லாம் நம்ம மேல தான் இருக்கும். அவன் நம்மள பார்த்துட்டே தான் இருப்பான் க்கா.. நீங்க கவலைப் படாதீங்க.." என்று தேறுதலாகக் கூற.. சிவகாமியோ எங்கோ வெறித்த பார்வையுடன்,

"ஆமா.. அவன் எங்க இருந்தாலும் நம்மள பார்த்துட்டே தான் இருப்பான்.." என்று கூறிவிட்டு விறுவிறுவென தனதறைக்குள் சென்றுவிட்டார்.

அவரைக் கவலையாய் நோக்கிய தன் அன்னையிடம், "கவலைப்படாதீங்கம்மா.. அண்ணன் எப்படி இருந்தாலும் சீக்கிரமா நம்ம கிட்ட வந்துடுவான்.." என்று தேறுதலாகக் கூறிட, அவரும் மெல்ல சிரித்து வந்தியனின் கன்னத்தில் தட்டிவிட்டு தன் வேலையைப் பார்க்கப் போனார்.

அன்றைய பகல் முழுவதுமே யாரும் யாரிடமும் வேறு எதுவும் பேசவில்லை.

எல்லோரும் அவரவர் அறைக்குள்ளே தான் அடைந்து கிடந்தனர்.

குந்தவையோ மனதெல்லாம் ஒரு வித பயம் ஆட்கொள்ள தவியாய் தவித்துக் கொண்டிருந்தாள்.

'அப்பாக்காக.. வானதிக்காக நாம கல்யாணம் செய்தோம்.. இந்த வந்தியன், ஊருக்குள்ள தன்னோட பேர் கெட்டுப்போச்சே.. ஊர்க்காரங்க தன்னை ஏதாவது பண்ணிடுவாங்களோன்ற பயத்துல என்ன கல்யாணம் செஞ்சான்.

ஆனா.. கல்யாணம்ன்றது.. வெறும் கல்யாணத்தோட மட்டும் நிக்கறது இல்லையே?!

இவன் பாட்டுக்கு, நான் உனக்குப் புருஷன்.. நீ எனக்குப் பொண்டாட்டி.. அப்படி இப்படின்னு ஏதாவது யோசிப்பானோ..' என்று சற்று நடுங்கியவள்.. உடனே சுதாரித்து,

'ஹ்ம்ம்.. அப்படி ஒரு எண்ணத்தோட மட்டும் இவன் என் பக்கத்துல வந்தான்.. அவ்வளவு தான்.

அப்படியே கடப்பாரைய எடுத்து அவன் நெஞ்சுலையே சொருகிடுவேன்..' என்று உள்ளுக்குள் திட்டம் தீட்டிக் கொண்டிருக்க, வந்தியனோ.. அப்படிப்பட்ட தவறேதும் செய்யவில்லை.

"நீ கம்பர்ட்டபிளா இருந்துக்கோ குந்தவை. இந்த ரூம்ல நான் இருக்கேன்னு எல்லாம் சங்கடமா நினைச்சுக்காத.

இப்போ உடனே நான் வெளில போனா, மறுபடியும் ஊர்க்காரங்க ஏதாவது பேசுவாங்களோன்னு இருக்கு.. இல்லைனா உனக்கு தனிமையை கொடுத்துட்டு நான் வெளில போய்டுவேன்.." என்று அவளைத் தேற்றும் விதமாக ஏதேதோ கூற, குந்தவைக்கோ, அவனது படுக்கையில் அமரக் கூட சங்கடமாய்இருந்தது.
அதைக் கண்டவனோ.. சட் சட்டென தனது அறையை ஓரளவுக்கு ஒதுங்க வைத்துக் கொடுத்தான்.
நிலைமை இவ்வாறாக இருக்க, சைலஜா தான் ஒவ்வொருவருக்குமாய் உண்ண, அருந்த என, எதையாவது கொடுத்துக் கொண்டே இருந்தார். அதற்காக ஆண்களிடம் திட்டே வாங்கினாலும் கூட அவர் அதைப் பொருட்படுத்தவில்லை.

மனமெல்லாம் ஒரே சஞ்சலமாய் இருக்க, குந்தவையால், சைலஜா கொடுத்த எதையுமே சாப்பிட இயலவில்லை.

ஏற்கனேவே முந்தைய தினத்தில் இருந்தே அவளைப் படுத்திக் கொண்டிருக்கும் மனதின் அதிர்வுகள், சரியாக உண்ணாதது என, அனைத்துமாக குந்தவைக்கு மிகுந்த சோர்வைக் கொடுக்க, அவளுக்கு மாலையிலேயே உறக்கம் கண்களைச் சுழற்றியது.

வந்தியனின் வெகுவான வற்புறுத்தலுக்கு இணங்க, அவனது படுக்கையிலேயே, அவனுக்கு முதுகு காட்டிப் படுத்துக்க கொண்டாள் குந்தவை.

ஆத்மனான தன்னை நினைத்து, வந்தியனான தன்னை ஒதுக்கும் தன்னவளைப் பார்த்து வந்தியனால் இப்போதைக்கு ஏக்கப் பெருமூச்சு மட்டிலுமே விட முடிந்தது.

ஆனால்.. அதுவும் ஒரு கட்டம் வரைக்கும் தான்!

எவ்வளவு நேரம் தான் தன்னை ஒருவன் கட்டுப்படுத்திக் கொள்ள இயலும்.. அதிலும் தன் காதல் மனைவி, தன் முன்னே செப்புச் சிலையாகத் துயில் கொண்டிருக்கும் பொழுது?

கடைசியில் காதல் பித்து என்பார்களே.. அது முற்றிலுமாக அவனை ஆட்கொள்ளத் துவங்கியது.. ஆனால் பித்தம் தெளிவிக்கும் மருந்தவளோ.. எதையும் அறியாது ஆழ் துயில் பயின்றிருந்தாள்!

அதைப் பார்த்தவன் ஒரு கட்டத்தில் , 'அய்யயோ.. என்ன பண்ணுவேன்.. நான் இப்போ என்ன பண்ணுவேன்..' என்று தனது அறையில் குறுக்கும், நெடுக்குமாக நடை பயின்று கொண்டிருந்தவன் தனக்குள் திண்டாட ஆரம்பித்துவிட்டான்!
அங்கு.. அதே அறையில்.. அவனது அதே படுக்கையில்.. சுவருக்கு முகம் காட்டி படுத்திருந்த குந்தவையைப் பார்த்து.. ஒரு பயம் கலந்த ஏக்கப் பெருமூச்சு வெளிப்பட்டது வந்தியனிடமிருந்து!

'பேசாம சொல்லிடலாமா? நான் உன்ன காதலிக்கறேன்னு சொல்லிடலாமா?' என்று வந்தியனின் ஒரு பக்க மனசாட்சி கேட்க, அவனது மறு பக்க மனசாட்சியோ,

"ஆஹா.. நீ அவள காதலிக்கறேன்னு சொன்னதும், அவளும் உடனே 'லவ் யூ டூ மாமா'ன்னு சொல்லிடுவாளா?

செருப்பால அடிப்பாடா..

ஏதோ நீ கால்ல விழுந்து கேட்டயேன்னு பாவப்பட்டு கல்யாணம் செய்துகிட்டா அவ.. இதுல நீ காதல் கீதல்ன்னு போன.. அவ்வளவு தான் உன்ன அப்படியே அம்மில வச்சு அரைச்சுப்புடுவா அரைச்சு.." என்று கூற, அதைக் கற்பனை செய்து பார்த்த வந்தியனுக்கு உடலெல்லாம் உதறியது.

உடனே மீண்டும்.. "அப்போ உன்ன நான் காதலிச்சு தானம்மா கல்யாணம் செய்துகிட்டேன்னு மறுபடியும் கால்ல விழுந்துடட்டுமா?" என்று தனக்குள்ளாக அவன் கேட்க, இப்பொழுது அவனுக்குள் இருபக்கமாகப் பிரிந்து தனக்குள்ளாகவே வாதிட்டுக் கொண்ட அவனது மனசாட்சி ஒன்றாகச் சேர்ந்து அவனைக் காரித் துப்பியது!

"ஆனா ஒண்ணு.. ஒரு படத்துல மணிவண்ணன்கிட்ட, கவுண்டமணி சொல்லறது மாதிரி.. 'ஒரு மனுஷன் கல்யாணம் ஆகாம கூட வாழ்ந்துடலாம். ஆனா, ஆசைப்பட்ட பொண்ணு பொண்டாட்டியா வந்த பின்னாடியும் கூட பிரம்மச்சாரியா வாழறது கொடுமையோ கொடுமைடா.." என்று வராத கண்ணீரைத் துடைத்துவிட்டுக் கொண்டவன் பார்வை தனது மனைவியை ரகசியமாய்த் தழுவியது!

தொடரும்..

ஹாய் கண்மனிஸ்.. கதை பிடிச்சா உங்க கருத்துக்களை இங்க பகிருங்க!



நட்புடன்,

நிலவின் ஊடல்!
 

NNK51

Moderator
ஊடல் சேர்த்து காதல் கோர்ப்போம்
292802327_117873510979953_6681284240950914064_n.jpg
அத்தியாயம் - 12

சடசடவெனக் கேட்ட மத்தாப்பு ஒலியில் மெல்ல விழித்திருந்தாள் குந்தவை.

பார்த்தால், வெடித்தது மத்தாப்பு அல்ல.. வானம்!

வானம் நிரம்பி, மேகத்தின் வழியாய் மழையாய் பொழிந்து கொண்டிருந்தது.

முந்தைய நாள் மாலையிலேயே உறங்கிவிட்டதால் குந்தவைக்கு அன்று அதிகாலையிலேயே விழிப்பு தட்டிவிட்டது. அது வரை ஒரு பக்கமாகவே படுத்துக் கிடந்ததால் வலித்த கையையும், கழுத்தையும் சரி செய்தபடியே பார்த்தால், வந்தியன் அவளுக்கு நேராக ஒரு நாற்காலியில் அமர்ந்து இவளைப் பார்த்தபடியே உறங்கிக் கொண்டிருந்தான்.

அதைக் காணவும் சட்டென இவள் மனதுள் ஒரு திடுக்கிடல்!

கூடவே அவன் கரங்களில் ஒரு நோட்டுப் புத்தகமும் கூடவே பேனாவும்.

ஏதோவொன்றை எழுதிக் கொண்டே அவன் உறங்கிவிட்டானென்று அதைப் பார்க்கவும் குந்தவைக்குப் புரிந்து தான் போனது.

ஆனால், அது என்னவென்று அறியும் ஆவல் இவளுக்குப் பிறக்கவில்லை.

மாறாக.. 'இவன் ஏன் என்ன பார்த்துட்டே தூங்கியிருக்கான். நேத்து என்னமோ பெரிய உத்தம சிகாமணி மாதிரி.. நீ இங்க கம்பர்ட்டபிளா இருந்துக்கோ. நான் இங்க இருக்கேன்னு நீ எதுவும் சங்கடமா நினைச்சுக்காதன்னு ஓவரா உதார் விட்டான்?

இப்போ எதுக்கு இவன் என்ன பார்த்துட்டே தூங்கியிருக்கான்?' என்று மனதிற்குள் ஆயிரம் கேள்விகள். ஆனால்.. எதற்கும் விடையில்லை. அவள் விடை காணவும் முயலவில்லை.

ஆனால்.. அந்தக் காட்சி அவளுக்குள் ஒரு அகத் திறப்பை உண்டாக்கியது.

ஆம்.. இது தான் அவள் வாழ்க்கை.. காலம் முழுமைக்கும்.. கடைசி மூச்சு இருக்கும் வரைக்கும் இது தான் அவளது வாழ்க்கையாய் இருக்கப் போகிறது.

திருமணம் என்ற ஒன்று என்றென்றைக்கும் சாசுவதமானது என்பதை அவள் உணர்ந்தே இருந்தாலும்.. இப்பொழுது அது புத்தியில் உறைத்த விதம் அவளைக் கொஞ்சம் திடுக்கிடவே வைத்தது.

சும்மா பேருக்கு, தந்தைக்காகவும், தங்கைக்காகவும் இன்று திருமணம் செய்துவிட்டு, நாளை பிரிந்துவிடலாம் என்று அவள் நினைக்கவில்லை.

என்ன தான் ஊருக்காகத் திருமணம் செய்திருந்தாலும், சூழ்ந்திருக்கும் சிக்கல்களை எல்லாம் முடிந்தவரை தீர்த்துவிட வேண்டும் என்று தான் அவள் எண்ணினாள்.

ஆனால்.. அவள் மனமே அவளுக்கு விரோதியாக.. 'ஆத்மன்.. ஆத்மன்..' என்று உள்ளுக்குள் கதறிக் கொண்டிருக்கிறதே?!

அவ்வளவு சீக்கிரம் அவனை.. அவன் நினைவுகளைத் தன்னால் உதறிவிட முடியும் என்று தோன்றவில்லை அவளுக்கு.

இப்படி இருமனமாய் தவித்துக் கொண்டிருந்தவளுக்கு தலைவலியும் பிறந்துவிட்டது.

கூடவே அறைக்குள் இவ்வளவு நேரம் இவனுடன் இருந்ததே மூச்சடைப்பது போலவும் இருக்கிறது.

எனவே சந்தடி செய்யாமல் மெல்ல எழுந்து சென்று குளித்து முடித்தவள், சமையலறையில் போய் ஏதாவது செய்யலாம் என்று எண்ணினாள்.

ஆனால் அதுவும் சரியாகப் படவில்லை இவளுக்கு. இந்நேரம் வீட்டுப் பெரியவர்களான பாகிரதி அம்மாவோ, சிவகாமி அம்மாவோ, அல்லது சைலஜா அம்மாவோ இருந்தால் அவர்களிடம் கேட்டு எதையாவது செய்யலாம்.

இப்பொழுது இந்த உரிமையில்லாத இடத்தில் தானே உரிமை எடுத்துக் கொண்டதைப் போல எதுவும் செய்து அது வேறு இன்னும் வேறு பிரச்சனைகளைக் கிளப்பிவிட்டு விடுமோ என்று குந்தவைக்கு அச்சமாக இருந்ததால், 'சரி பெரியவர்கள் எழும் வரைக்கும் சும்மா தோட்டத்தில் சுற்றலாமே' என்று அங்கு சென்றாள்.

மெல்லிய சாரலாய் வான் மழை தூவிக் கொண்டிருக்க, மன சஞ்சலங்களெல்லாம் மறந்து சற்று நேரம் மழையின் மழலையாய், அதன் மடி சாய்ந்தபடி நடை பயின்று கொண்டிருந்தாள் அவள்.

அதே வேளையில் வீட்டிற்குள்ளிருந்து பேச்சு சப்தம் கேட்டது. அதைக் கண்டுகொள்ளாமல் இவள் முன்னேற, சட்டென இவள் பெயர் அதில் அடிபடவும், என்ன பேசக்கிறார்கள் என்று இயற்கையாகத் தோன்றும் ஆர்வம் காரண்மாக அங்கு நின்று யார் இவளை பற்றி பேசுகிறார்கள் என்று கேட்க நினைத்தாள்.

உள்ளே பேசிக் கொண்டிருந்தது வேறு யாருமல்ல.. நம் இந்திரன் சகோதரர்கள் தான்!

அது தான், தர்மேந்திரன், தேவேந்திரன், ராஜேந்திரன்.. இந்த மூவரும் தான் குந்தவையைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள்.

"அண்ணா.. நான் தான் கொஞ்சம் பொறுமையா இருங்கன்னு சொன்னேன்ல? இப்போ நீங்க செய்திருக்கற காரியம் எங்க வந்து நின்னுருக்குன்னு பார்த்தீங்களா?" என்று தேவேந்திரன் தன் தமையன் தர்மேந்திரனிடம் சிறு சிடுசிடுப்புடன் கூறிக் கொண்டிருக்க, ராஜேந்திரன் இடைபுகுந்தார்.

"என்ன பொறுமையா இருக்கறது? இதுக்குத் தான் நான் முன்னாடியே அந்த குந்தவையோட கதையவே முடிச்சுடலாம்னு சொன்னேன். பெரியண்ணன் தான் என் கைய கட்டிப் போட்டுட்டார்.

இல்லைனா அவளை புதைச்சு இடத்துல இன்னைக்குப் புல்லு முளைச்சிருக்கும்." என்று கூற, அவரைப் பார்த்து சீறலாய் முறைத்தார் தேவேந்திரன்.

"என்ன சொல்லறான்னு கொஞ்சம் யோசிச்சுப் பேசு. இப்படித் தான் ரெண்டு பேரும் ஆத்திரத்துல அறிவில்லாம நிக்கறீங்க.

இப்போ நம்ம பையன் வாழ்க்கை இப்படி வந்து நிக்குது. அவனாவது இவளுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லைன்னு சொல்லிருக்கலாம்.

ஆனா.. ஊரெல்லாம் சேர்ந்து மிரட்டினதுல பையன் பயந்துட்டான். இப்போ அவன் கல்யாணத்தால என் அரசியல் வாழ்க்கைக்கும் பெரிய பிரச்சனையாகிடும் போல.

எப்படியாவது அவளை இந்த வீட்டிலிருந்து வெளியேத்தணும். என் பையன் வாழ்க்கை நல்லபடியா அமையனும்." என்று தகப்பனாகவும், கூடவே அரசியல்வாதியாகவும் ஆதங்கப்பட்டார் தேவேந்திரன்.

இவர்கள் பேசுவதையெல்லாம் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த தர்மேந்திரனோ, ஒரு கண நேரம் இடைவெளிவிட்டுப் பின் தொடர்ந்தார்.

"இந்த குந்தவை, நம்ம பையனுக்கு எதிரா எலெக்ஷன்ல நிக்கறானு தான் அவ பேர கெடுத்து, அவள இந்த ஊருல இருந்தே விரட்ட நினச்சேன்.. இவ இப்போ நம்ம பையன கல்யாணம் செய்துகிட்டு, நம்ம வீட்டுக்குள்ளையே வந்துட்டா.. இவள இங்கிருந்து விரட்டறது என் பொறுப்பு. அத நான் பார்த்துக்கறேன்.

தேவா.. நீ உன் அரசியல மட்டும் கவனிச்சுக்கோ. நான் மத்ததெல்லாம் பார்த்துக்கறேன்.." என்று கூற, குந்தவைக்கோ தலையில் இடி விழுந்ததைப் போலானது.

'அடப் பாவிங்களா.. உங்க பையன எதிர்த்து நான் எலெக்ஷன்ல நிக்கறேன்னு என் வாழ்க்கையையே கேள்விக் குறி ஆக்கிட்டீங்களே டா?

அதுவும் வந்தியன் வேட்புமனுத் தாக்கல் செய்த பின்னாடியா அவனுக்கு போட்டியா நானும் எலெக்ஷன்ல நிப்பேன்னு போனேன்? நான் வேட்புமனுத் தாக்கல் செய்த பின்னாடி தானடா நீங்க குடும்பமா அங்க வந்தீங்க?

என்ன ஒரு வெறி உங்களுக்கு. உங்களோட இந்தக் கேவலமான ஜாதி வெறியால இப்போ என் ஒட்டுமொத்த வாழ்க்கையும் பலியாகிடுச்சே?

அதுக்கு தண்டனையா தான் என்னையே உங்க வீட்டு மருமகளா அந்த இறைவன் இங்க என்ன அனுப்பியிருக்கான்னு சந்தோஷப்படறதா.. இல்ல உங்களோட சேர்த்து, எனக்கும் அந்தக் கடவுள் தண்டனை கொடுத்துட்டார்னு வருத்தப்படறதா?

ஆனா ஒன்னு.. உங்க பணம், பதவியால எங்கள ஈஸியா நசுக்கிப் போட்டுட்டு போய்டலாம்னு நினைச்சுட்டு இருக்கீங்க இல்ல? அந்த எண்ணத்தை நான் அழிப்பேன்.

உங்க ஜாதி வெறிக்கும், பதவி வெறிக்கும் சரியான பாடம் கொடுக்காம நான் இந்த வீட்ட விட்டுப் போக மாட்டேன்.." என்று உள்ளுக்குள் சபதமெடுத்தவள்.. இன்னும் சற்று நேரம் வீட்டின் தோட்டத்திலே உலவி, தன்னை சமனப்படுத்திக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தாள்.

அதே வேளையில் அப்பொழுது தான் சமையலைக்கு வந்த பாகிரதியைக் கண்டவள், உதட்டில் சிறு முறுவலுடன், அங்கு செல்ல.. அவளைப் பார்த்து நெற்றியைச் சுருக்கினார் பாகிரதி.

"நீ எதுக்கு இங்க வந்த?" என்று யாரோ போல் அவர் கேட்க, குந்தவைக்கு ஒரு கணம் ஒன்றும் புரியவில்லை.

"இல்லம்மா.. உங்களுக்கு ஹெல்ப் செய்யத் தான்.." என்று அவள் இழுக்க, வெடுக்கெனப் பேசினார் பாகிரதி!

"உன்னையெல்லாம் முன்னாடி என் வீட்டு கிட்சனுக்குள்ள விட்டதே தப்பு. இப்போ இந்த வீட்டு மருமகள்ன்ற பேர்ல வேற உரிமையோட வரியா?

இனி ஒரு முறை என் கிட்சனுக்குள்ள வர வேலையெல்லாம் வச்சுக்காத.." என்று அவர் போட்ட அதட்டலில் மொத்தக்க குடும்பமும் அங்கு கூடிவிட்டது, ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த வந்தியனும் உட்பட.

எல்லோரும் அதிர்வுடன் பார்த்துக் கொண்டிருக்க, அங்கே முன் வந்த ராஜேந்திரன்..

"என்ன அண்ணி.. அவளை ஏன் கிட்சனுக்குள்ள வர வேண்டாம்னு சொல்லறீங்க?" என்று கேட்க, பாகிரதியோ..

"இது பொம்பளைங்க சமாச்சாரம் தம்பி.. நாங்க பார்த்துக்கறோம். நீங்க போங்க.." என்று ஒற்றை வார்த்தையாய் கூறிவிட, அதைக் கேட்ட தேவேந்திரனுக்கு, தன் தம்பியை இவள் மரியாதையின்றிப் பேசுவதா என்ற கோபம் வந்து, அவர் பாகிரதியை நெருங்கப் போக, சட்டென தர்மேந்திரன் அவரைத் தடுத்தார்.

"விடு தம்பி.. நாம இவளுக்கு சப்போர்ட்டா நம்ம பொண்டாட்டிங்க தான் இருப்பாங்கன்னு நினைச்சோம்.. ஆனா.. உன் பொண்டாட்டியே அவள விலக்க ஆரம்பிச்சுட்டா.

என்ன தான் நம்ம பிளான் படி அவள கிட்சனுக்குள்ளையே கட்டிப் போட நினைச்சது நடக்கலைன்னாலும்.. இந்த வீட்டுல நம்ம பொண்டாட்டிங்க தயவு இல்லாம அந்த குந்தவை அனுபவிக்கப் போறது பெரிய பெரிய கொடுமைகள் தான்.

அதனால அப்படியே இத விட்டுடுங்க.." என்று அவர் கூறி முடிக்க, அவரது தம்பிகள் இருவரும் அப்படியே அமைதியாகிவிட்டனர்.

ஆனால் அங்கிருந்த சைலஜாவோ.. "அக்கா.. நீங்களே இப்படி நினைக்கலாமா? ஏன்க்கா திடீருன்னு இப்படியெல்லாம் பேசறீங்க?" என்று கேட்க, அவரை ஆத்திரமாக முறைத்த பாகிரதியோ..

"பெரியவங்க எல்லாம் சும்மா ஒரு விசயத்தை சொல்லி வச்சுட்டு போகல சைலா.. பெரியவங்க ஒன்னு சொன்னா அதுல நூறு அர்த்தம் இருக்கும், ஆயிரம் காரணம் இருக்கும்.

அதையெல்லாம் நாம அலசிட்டு இருக்க முடியாது. பெரியவங்க சிலதெல்லாம் சொல்லியிருக்காங்கன்னா நாம அதுப்படி தான் நடக்கணும்." என்று சைலஜாவிடம் கூறியவர்.. குந்தவையிடம் திரும்பி..

"என்ன இன்னும் இங்க நின்னுட்டு இருக்க? போ.. போய் உன் வேலை எதுவோ அதை பார்க்க போ.." என்று கூற, குந்தவையோ குனிந்த தலையுடன் திரும்பினாள்.

ஆனால் அப்பொழுது பார்த்து நம் நாயகனுக்கு வீரம் பொங்க..

"அம்மா.. என்னம்மா பேசறீங்க?" என்று அவன் மீண்டும் ஆரம்பிக்க.. குந்தவையோ, அவனைப் பார்த்து..

"நீ கொஞ்சம் நம்ம ரூமுக்கு வா.." என்று கூற, வந்தியனோ அவளை பார்த்து சற்று திகைத்தவனாக..

"எ.. என்ன சொன்ன?" என்று முகமெல்லாம் சந்தோசப் பூ பூத்தபடி கேட்க, குந்தவையோ சட்டென சுதாரித்தாள்.

"உன் ரூமுக்கு போலாம் வா.." என்று அவள் நிதானமாக கூடவே அழுத்தம் திருத்தமாகக் கூறவும், உதட்டில் பூத்த குமிழ் சிரிப்புடன் மெல்ல அவளைப் பின் தொடர்ந்தான் வந்தியன்.

அதைப் பார்த்த மூன்று சகோதரர்களுக்கும் வயிறு எரிந்தது.

"டேய்.. என்னடா? இவன் என்ன ஒரே நைட்டுல இப்படி வாலாட்டற நாய் குட்டி மாதிரி ஈஈஈன்னு அவ பின்னாடி போறான்.." என்று தர்மேந்திரன் கேட்க, ராஜேந்திரனின் கண்களோ சிவந்தது.

அதே வேளையில் தங்களது அறைக்குள் வந்துவிட்ட வந்தியன், குந்தவையிடம்..

"என்ன சொல்லு?" என்றான் நகை முகம் மாறாமலேயே.

'இவன் எதுக்கு இப்போ உதட்ட, காது வரைக்கும் இழுத்து வச்சுட்டு இருக்கான்?' என்ற யோசனையுடன்..

"என்ன சொல்லறது? உங்க அம்மா பேசும்போது குறுக்க நீ எதுவும் பேச வேணாம்னு நினச்சேன். அதான் உன்ன ரூமுக்குள்ள கூட்டிட்டு வந்தேன்." என்று கூறிவிட்டு, வழக்கம் போல பள்ளிக்கு கிளம்பத் தயாரானாள்.

அவள் கிளம்புவதையே கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தவன், அவள் தயாராகி வெளியே செல்லும் முன்,

"ஏன்.. கண்ணுக்கு மை போட்டுக்கலையா?" என்று மென் சிரிப்புடன் கேட்டான்.

அவன் அப்படிக் கேட்டது தான் தாமதம், குந்தவை காளியவதாரம் எடுத்துவிட்டாள்.

"மையா? ஏன்? நான் மை போட்டா என்ன? போடலைனா உனக்கு என்ன? உன் வேலை எதுவோ அதை மட்டும் பாரு போதும்." என்றுவிட்டு அவள் வெளியே செல்ல முயல.. இவனோ சட்டென அவளது கையைப் பற்றினான்.

அவனது அந்தச் செய்கையை சற்றும் எதிர்பாராத குந்தவையோ, திடுக்கிட்டுத் திரும்பி இவனைப் பார்க்க.. அவனோ ஒருவித மந்தகாசப் புன்னகையுடன்..

"என் வேலை என்னவோ அத பார்க்க சொன்னல்ல?

நான் இப்போ உன்னோட புருஷன்.. என்னோட புருஷன் வேலைய பார்க்கட்டுமா?" என்று அவன் மையலாய் கேட்க, குந்தவையின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தன!

"ஏ.. எது?" என்று அவள் படபடப்பாய் கேட்க, உடனே தனது பாவனையை மாற்றிக் கொண்ட வந்தியன், பீறிடும் சிரிப்பை அடக்கிக் கொண்டு..

"அதான்ம்மா.. பொண்டாட்டி வேலைக்குக் கிளம்பும் போது புருஷன் வந்து ட்ராப் பண்ணணும் இல்ல? அந்த வேலைய சொன்னேன்." என்று அப்படியே திருப்பிவிட.. குந்தவையோ அவனை முறைத்தபடியே..

"ஒன்னும் தேவையில்லை.. நாங்களே போய்க்குவோம்." என்றுவிட்டுக் கிளம்பிவிட்டாள்.

வந்தியனுக்கோ இன்னும் இன்னும் அவளிடம் நெருங்கிவிட ஆசை தான். ஆனால் அவள் தன்னை யார் என்று அறியாமாலேயே வெறுத்துவிடுவாளோ என்ற பயம் இருந்தது அவனுக்கு.

அதே வேளையில் அவனால் இந்தத் திருமணத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ள இயலவில்லை. குந்தவையும் அப்படி சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை என்பது இவனுக்கும் புரிந்திருக்கிறது தான்.

அதனால் தான் அவளிடம் தன்னைக் கூடிய சீக்கிரம் புரியவைத்துவிட வேண்டும் என்ற முடிவில் இருக்கிறான் அவன்.

முக்கியமாக.. திருமணம் என்று ஆன பிறகு.. அதுவும், அவன் அறையிலேயே அவனவள் தங்கிடுகையில்.. ஒரே ஒரு நாள் கூட அவனால் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள இயலவில்லை.

கூடவே ஆத்மனாக அவளிடம் ஆடிய கண்ணாமுச்சி ஆட்டம், வந்தியனுக்கு ஒரு வகையில் பிடித்திருந்தது என்றால்.. இப்படி வந்தியனாக, குந்தவையின் கணவனாக அவளைச் சீண்டுவதும் அவனுக்கு ஏக குஷியாக இருக்கிறது.

எனவே இந்த விளையாட்டை தொடர்ந்து விளையாடிப் பார்க்கலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டான் அவன்.

*****

குந்தவை வீட்டிலிருந்து பள்ளிக்குச் செல்லும் வழியில், குந்தவையின் வண்டியுடன், அவளது தங்கை வானதியும், கரிகாலனும் நின்றிருந்தார்கள்.

அவர்களைப் பார்த்ததும் சட்டென கண்களில் நீட் கட்டி, அவள் பாதையை மறைத்துக் கொள்ள, சற்று தடுமாற்றத்துடன் அவர்களிடம் சென்றாள் குந்தவை.

"ஒரு ரெண்டு நாள் நான் ஊர்ல இல்ல.. அதுக்குள்ள என்னென்ன களேபரம் நடந்துருக்கு?

இப்படிப் பிரச்சனை ஆகிடுச்சுன்னு அண்ணனுக்கு ஒரு போன் போட்டு சொல்லணும்னு கூட தோனலயில்ல உனக்கு?" என்று குரலடைக்க கரிகாலன் கேட்க, கண்களில் திறந்துவிட்டக் கண்ணீரைக் கட்டுப்படுத்த மிகுந்த பிரயசனப்பட்டாள் குந்தவை.

"தெரிலண்ணா.. என்னால அந்த சூழ்நிலைல நிதானமா யோசிக்க முடில.

அப்படியே நான் உனக்கு போன் பண்ணி சொல்லியிருந்தாலும் பெருசா என்ன ஆகியிருக்கும் சொல்லு?

விடு இனிமே நடந்ததை பத்திப் பேச எனக்கு விருப்பம் இல்ல." என்று விரக்தியாய் அவள் கூற, கரிகாலனும் ஒரு கணம் அமைதி காத்தான்.

"சரி விடு.. சீக்கிரம் நான் அந்த குணா யாரு.. அவன் யார் அனுப்பின ஆளுன்னு கண்டுபிடிக்கறேன்.

அந்த வீட்டுல எல்லாரும் உன்கிட்ட எப்படி நடந்துக்கறாங்கனு கேட்கணும்னு அவசியம் இல்ல. ஏன்னா.. எனக்கே தெரியும் அவங்க உன்ன எப்படி ட்ரீட் செய்வாங்கன்னு.

ஆனா, தாங்க முடியாத கஷ்டத்துலையும் நீ அங்க இருக்கணும்னு எந்த அவசியமும் இல்ல. சரியா?

எதுவா இருந்தாலும் அண்ணன் நான் இருக்கேன் உனக்கு. அத எப்பவும் நீ மறந்துடாத." என்று குந்தவையின் தலை தடவி கரிகாலன் சொல்ல, குந்தவையோ வழிகின்ற கண்ணீரையும் மீறி, அவனைத் திடமாக, தான் சமாளித்துக் கொள்வேன் என்னும் நிமிர்வுடன் பார்த்தாள்.

கூடவே தங்கையிடமும் தேறுதலாகப் பேசிவிட்டு, தந்தையைப் பார்த்துக் கொள்ளும்படி அவளிடம் கூறிவிட்டு, குந்தவை பள்ளி நோக்கிச் செல்ல, அதே வேளையில் வந்தியனும் தனது பைக்கை எடுத்துக் கொண்டு பள்ளி நோக்கிச் சென்று கொண்டிருந்தான்.

வழியில் கரிகாலனைப் பார்க்கவும், வண்டியை ஒரு ஓரமாக ஓட்டிச் சென்று நிறுத்திவிட்டு, காலனை நோக்கிப் போனான்.
தன்னைப் பார்த்ததும் சிரித்தபடி வண்டியிலிருந்து கீழிறங்கிய வந்தியனை கண்களில் கொலை வெறியுடன் பார்த்தான் கரிகாலன்.

"என்னடா.. என்னென்னமோ தகிடுதத்தம் செய்து என் தங்கச்சிய கல்யாணம் செய்துகிட்ட போலிருக்கு?" என்று இரும்பாய், உறுமும் குரலில் கேட்கவும் வந்தியனே ஒரு கணம் ஆடிப் போய்விட்டான்.

"ண்ணா.. என்னண்ணா சொல்லறீங்க? நானா? நான் இத செய்தேன்னு நீங்க நம்பறீங்களா?

தப்புண்ணா.. ரொம்ப தப்பு. இப்படித் தான் உங்க தங்கச்சிய கல்யாணம் செய்யணும்னு எனக்கு எந்த அவசியமும் இல்ல.

தவிர, ஒரு பொண்ண உண்மையா நேசிக்கறவன், அவள இப்படி அசிங்கப்படுத்தி கல்யாணம் செய்துக்க மாட்டான்." என்று உணர்ச்சிப்பூர்வமாய் கூற, அவனை ஏற இறங்கப் பார்த்தான் காலா.

"என்னண்ணா பார்க்கறீங்க?

ஒத்துக்கறேன்.. ஒரு காலத்துல இந்த வந்தியன் அப்படியெல்லாம் செய்திருக்கக் கூடியவன் தான்.

சில தப்பான போதனைகள்.. தப்பான வழிகாட்டுதல்கள்.. இப்படி நிறைய காரணங்களால நானும் ஒன்னும் அவ்வளவு நல்லவனா எல்லாம் இருக்கல தான்.

ஆனா.. உங்க தங்கச்சியோட நேசம்.. அவ ஆத்மன்ற ஒருத்தன் மேல வச்ச உண்மையான நேசம் தான் என்னையும் மாத்திச்சு." என்று கூற, காலாவோ..

"உன்ன நம்பலாமா?" என்றான் இன்னமும் ஒரு மாதிரியாகவே.

அதற்கு பதிலேதும் கூறாத வந்தியனோ, மென் நகையுடன் நின்றிருந்தான்.

பின் சற்று பொறுத்து காலாவே தொடர்ந்தான்.

"ஹ்ம்ம்.. பொண்டாட்டி வேலைக்குப் போறாளே.. அவள நாமளே டிராப் பண்ணுவோம்னு தோணுச்சாடா உனக்கு?" என்று கேட்க, வந்தியனோ பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டு..

"நானும் இதே வார்த்தைய தான் கேட்டேன்.. ஆனா, உங்க தங்கச்சி என்ன அடிக்க வராளே.. நான் என்ன செய்யறது?" என்று கேட்க, அதைக் கேட்டு காலா இடிஇடியென நகைத்தான்.

"ஆமா.. பொண்ண வளர்க்க சொன்னா.. ஒரு பூகம்பத்தை வளர்த்துட்டு சிரிக்க வேற செய்யறீங்களா நீங்க?" என்று மேலும் வந்தியன் கேட்ட கேள்வியில் கலாவின் சிரிப்பு இன்னமும் அதிகமானது.

இப்படி பேசியபடியே வந்தியன், "சரிண்ணா.. நான் அப்படியே கிளம்பறேன். குந்தவை வேற தனியா ஸ்கூலுக்கு போறா. அங்க வேற அவள என்னென்னவெல்லாம் பேசறாங்களோ தெரியல. அவளே விரும்பாட்டியும் நான் அவ பக்கம் நிப்பேன்.. நீங்க கவலைப்படாதீங்க.." என்று கூறிவிட்டு அவன் ரெண்டெட்டு முன்னே வைக்க, காலனோ..

"மாப்ள.." என்றான் சத்தமாக.

அவன் வேறு யாரையோ அழைப்பதாக எண்ணி வந்தியன் தனது பைக்கை கிளப்ப முயல, மீண்டும் சத்தமாக காலா..

"யோவ்.. மாப்ள.. உன்னத் தான்யா.." என்று கூப்பிட, திடுக்கிட்டுத் திரும்பிய வந்தியனோ.. இனிய அதிர்ச்சியுடன், சந்தோஷ முறுவல் விரிய.. 'என்னையா?' என்று சைகையில் கேட்டான்.

அதைப் பார்த்த காலாவும் விரிந்த புன்னகையுடன்..

"உன்னதான் மாப்ள.. தங்கச்சிய நல்லாப் பார்த்துக்கோ என்ன?" என்று கூற, வந்தியனோ சந்தோசமாகத் தலையாட்டினான்.

காலாவுடன் இப்படி பேசியபடி பள்ளிக்குச் செல்ல, அங்கு வந்தியன் எதிர்பார்த்தது போலவே சிலர் ஜாடையாக குந்தவையைப் பார்த்து பேசத் துவங்கியிருக்க.. வந்தியனுக்கோ சுர்ரென்று பொங்கியது.

அந்த ஆத்திரத்துடன் அவன் அவர்களை நோக்கிச் செல்ல, அதற்கும் முன்னதாக குந்தவை, நேரடியாகவே அவர்களை வாங்கு வாங்கென்று வாங்கிவிட்டாள்.

"நான் யாரையோ காதலிக்கறேன்.. யாரையோ கல்யாணம் செய்யறேன்.. அது பத்தி எல்லாம் உங்களுக்கு என்ன கவலை?

அப்படி என்னோட இந்த விஷயங்கள் எல்லாம் உங்களுக்குத் பிரச்சனையா இருந்துச்சுன்னா.. நீங்க வேணா இந்த வேலைய விட்டு போய்டுங்களேன்?
ஹ்ம்ம்.. என்ன சொல்லறீங்க?" என்று திடமாக அவர்கள் முன்பு கேட்கவும், இவர்களைப் பற்றி புரளி பேசியவர்கள் அனைவரும் பீதியில் பறந்துவிட்டனர்.

அதைக் கண்ட வந்தியனுக்கோ நிறைவாய் இருந்தது.

இவளைக் காப்பாற்ற ஆபத்பாந்தவன் தேவையில்லை. இவளுக்கு உறுதுணையாக.. உற்றவனாக ஒருத்தன் மட்டும் போதும் என்ற திடம் வந்தது அவனுக்கு.

அன்றைய நாளின் சில முக்கிய வேலைகளையெல்லாம் முடித்தவன், பள்ளிக்கு வந்த சில மணி நேரத்திலேயே வேறொரு முக்கியமான இடத்திற்குச் சென்றான்.

பள்ளிக்கு வந்தியன் வந்ததும், வந்து சற்று நேரத்திலேயே அவன் கிளம்பிவிட்டதும் குந்தவைக்கு சற்று உறுத்தலாகத் தான் இருந்தது.

வெளிப்படையாய் இல்லாவிட்டாலும், உள்ளுக்குள் அவனை இவள் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறாள்.

அவன் மீது கணவன் என்ற உரிமை, அக்கறை என்று இல்லாவிட்டாலும்.. சிறு குறுகுறுப்பு இருக்கத் தான் எரிகிறது அவளுக்கு!

இப்படியே மாலை பள்ளி முடியும் நேரம் வரையிலும் கூட அவன் பள்ளிக்குத் திரும்பவில்லை எனவும், அவனைச் சற்று கீழாகவும் நினைத்தாள் அவள்.

'ஹ்ம்ம்.. ராஜா வீட்டு கன்னுக்குட்டி.. ஸ்கூல் ஒனரு வேற.. ஸ்கூலுக்கு வந்து கையெழுத்து மட்டும் போட்டுட்டு போய்ட்டான் போல.." என்று எண்ணிவிட்டு அவள் வீடு கிளம்பினாள்.

அவள் வீட்டிற்கு சென்ற அதே வேளையில் சரியாக, வந்தியனும் வீட்டிற்குள் நுழைய, அவனது பெரியப்பவோ வாசலிலேயே அவர்களைத் தடுத்தார்.

அவரது "எங்க போயிட்டு வர?" என்ற கர்ஜ்ஜனையான கேள்வியில் குந்தவை குழம்பினாள்.

'காலைல தான இவங்க எல்லாருக்கும் கேட்கற மாதிரி நான் வேலைக்குப் போயிட்டு வரேன்னு சொல்லிட்டுக் கிளம்பினோம்.. இப்போ என்ன மறுபடியும் புதுசா கேட்கறாங்க?' என்று எண்ணியவள், பதில் கூற வாயைத் திறக்கும் முன், வந்தியன் குறுக்கிட்டான்.

"அவங்க உன்கிட்ட கேட்கல, என்கிட்டே கேட்கறாங்க.." என்று குந்தவையிடம் கூறியவன், தன் பெரிய தந்தையிடம் திரும்பி..

"நான் எங்க போயிருந்தேன்னு இந்நேரம் உங்களுக்கு நியூஸ் வந்திருக்குமே?" என்று ஒரு மார்க்கமாகக் கூற, அவனை எரிமலையின் சீற்றத்துடன் பார்த்தார் அவன் சிறிய தந்தை.

"எங்களுக்குத் தெரியும் தான்டா.. ஆனா அதை உன் திருவாயாலேயே கேட்கணும்னு எங்களுக்கு ரொம்ப ஆசை.. சொல்லு.. நீயே அதையும் சொல்லித் தொல.." என்று அவர் படு நக்கலாக, எரிச்சலுடன் கூற, வந்தியன் மிகச் சாதாரணமாக..

"எலெக்ஷன்ல இருந்து வாபஸ் வாங்கிட்டு வரேன்.." என்றான் எங்கோ பார்த்துக் கொண்டு.

அவன் அப்படிக் கூறியதும் பொங்கி விட்டார் அவனது பெரிய தந்தை.

ஓடி வந்து கொத்தாக அவனது சட்டையைப் பற்றிக் கொண்டவர்,

"டேய்.. டேய்.. உன்ன வச்சு என்னென்ன கனவெல்லாம் கண்டோம் தெரியுமாடா? எங்களோட ஆசைல இப்படி மொத்தமா மண்ண போட்டுட்டியே?" என்று கத்த.. அவரது கையை மெதுவே விலக்கிவிட்டவன்..

"இப்போ மட்டும் உங்க கனவுக்கு என்ன கொறச்சல்? நான் தான வாபஸ் வாங்கிட்டேன்? என் பொண்டாட்டி இன்னமும் எலக்சன்ல நிக்கறால்ல?

அவள ஜெயிக்க வைப்போம். இல்ல.. இல்ல.. நான் அவள 'ஜெயிக்க வைப்பேன்..'

அவ கனவை, அவ வாழட்டும்.. இதுக்கு குறுக்க யாரும் வரக்கூடாது." என்று தன் இரு கைகளாலும் குந்தவையின் இருபக்கத் தோள்களையும் பற்றியபடி வந்தியன் கூற, மொத்தக் குடும்பமும் பிரம்மித்துப் போய் பார்த்தது.

"டேய்.. இருடா.. உன்ன.. உன்ன.. என்ன செய்யறேன் பாரு.." என்று வாயில் வந்ததை உளறிவிட்டு, அவர்கள் அங்கிருந்து கிளம்பிவிட, குந்தவையோ.. வந்தியனை அண்ணார்ந்து பார்த்தாள்.

வந்தியனும், குந்தவையை குனிந்து பார்த்து என்னவென்று புருவமுயர்த்திக் கேட்க,

குந்தவையும் அவனைப் போலவே புருவமுயர்த்தி.. "என்ன?" என்றிட.. அப்பொழுது தான் வந்தியனுக்கு, தான் குந்தவையின் தோளைப் பற்றியிருப்பதே உறைத்தது!

உடனே ஒரு அசட்டுச் சிரிப்புடன், "ஒகே.." என்றுவிட்டு, அவள் தோள் மீதிருந்து தன் கையை எடுக்கவே மனமில்லாது அவன் விலக்க, அவனைப் புரிந்துகொள்ளவியலாத பார்வையுடன் அங்கிருந்து அகன்றாள் குந்தவை.

தொடரும்..

ஹேய் செல்லம்ஸ்.. கதை பிடிச்சா, உங்க கருத்துக்களை இங்க சொல்லுங்க..


நட்புடன்,

நிலவின் ஊடல்!
 

NNK51

Moderator
ஊடல் சேர்த்து காதல் கோர்ப்போம்!
292802327_117873510979953_6681284240950914064_n.jpg
அத்தியாயம் - 13

சிறுபிள்ளையின் கையில் மாட்டிக் கொண்ட தும்பி போல, படபடவே அடித்துக் கொண்டிருந்தது குந்தவையின் இதயம்.

'இவன் எதுக்காக தேவையில்லாம இப்போ எலெக்ஷன்ல இருந்து வாபஸ் வாங்கிட்டு வந்து நிக்கறான்?

இந்த உலகத்துல எதுவுமே இலவசமா கிடைக்காதுன்னு சொல்லுவாங்களே?

இப்போ இவன், நான் உனக்காக தான் எலெக்ஷன்ல இருந்து வாபஸ் வாங்கினேன்.. அதுக்கு பதிலா நீ எனக்கு இத செய்யணும்னு நம்மகிட்ட இருந்து எதையாவது எதிர்பார்ப்பானோ?' என்ற சிந்தனையில் அவர்களது அறையில் கட்டிலின் மேல் காலை மடக்கி அமர்ந்தபடி யோசனையில் இருந்தவளை, அப்பொழுது தான் அறைக்குள் வந்த வந்தியன் பார்த்தான்.

'என்னடா.. நாம செய்த காரியத்துக்கு மேடமோட முகத்துல கொஞ்சமாவது சந்தோசம் தெரியும்னு நினச்சா, இவ இன்னுமில்ல டென்ஷனா உட்கார்ந்துருக்கா?

என்ன விஷயமா இருக்கும்?' என்று யோசித்தபடியே..

"ஏன் குந்தவை ஒரு மாதிரி இருக்க?" என்றான் அவள் முகம் நோக்கியபடியே.

அவன் கேட்ட கேள்விக்கு, சட்டென அவனைத் திரும்பிப் பார்த்து முறைத்த குந்தவை..

"நீ எதுக்கு எலெக்ஷன்ல இருந்து வாபஸ் வாங்கின?" என்றாள் சற்று கோபமாக.

'இது என்னடா.. பிள்ளையார் பிடிக்க குரங்காகிடுச்சு?!' என்று தடுமாறிய வந்தியனோ..

"இல்ல.. நீ.. வந்து.. நீ எலெக்ஷன்ல ஜெயிக்கணும்னு தான்.." என்று அவன் தயங்கியபடியே கூற, இன்னுமாய் அவனை முறைத்தவள்..

"நீ ஒரு கூறுகெட்ட குக்கருன்னு தான் இத்தனை நாளா உன்ன பத்தி நினைச்சுட்டு இருந்தேன். ஆனா, நீ சரியான மக்கு மடமாங்கான்னு இப்போ தான் எனக்குத் தெரியுது." என்று அவள் வசைபாட.. வந்தியனுக்கோ இவள் எதுக்காக இப்படி வசைமாரி பொழிகிறாள் என்று தெரியவில்லை.

"குந்தவை.. ஒத்துக்கறேன்.. நான் மக்கு மடமங்கா தான்.. சரி இந்த மக்கு மாங்காக்கு புரியற மாதிரி நீ தான் கொஞ்சம் விளக்கமா சொல்லேன்.." என்று அவன் சற்று சூடாகக் கேட்க, குந்தவையோ, எழுந்து நின்று அவனருகே வந்தாள்.

"ஆமா.. யார கேட்டு நீ எலெக்ஷன்ல இருந்து வாபஸ் வாங்கின?

நீ மட்டும் வாபஸ் வாங்காம இருந்திருந்தா, இப்போ நாம நிக்கற அதே வார்டுக்கு இன்னும் ரெண்டு பேர் வேட்பாளரா நிக்கறாங்களே.. அவங்கள உன் அப்பாங்களே சேர்ந்து மிரட்டி வாபஸ் வாங்க வச்சிருப்பாங்க.

அப்பறம் போட்டிக்கு நீயும், நானும் தான் இருந்திருப்போம்.

ஊருக்குள்ள உன்ன விட, எனக்கு கொஞ்சம் மதிப்பு அதிகம்.. அதனால எனக்கு தான் அதிகம் ஓட்டு போட்டிருப்பாங்க. நான் ஈஸியா ஜெயிச்சுருப்பேன்." என்று கூற, வந்தியனோ..

'அட மானங்கெட்டவைங்களா.. இதுக்கு எதுக்குடா வெள்ளையுஞ் சொள்ளையுமா அலையணும்?' என்பது போல பார்த்து வைத்தான்.

அவனது அந்தப் பார்வையின் பொருள் குந்தவைக்கு புரிந்து போனது.

உடனே தனது அதிகாரத் தொனியை சட்டென மாற்றியவள்..

"சரி சரி.. ஏதோ எனக்கு நல்லது செய்யறேன்னு நினைச்சுட்டு செய்துட்ட.. பரவால்ல." என்று கூறவும், இப்பொழுது வந்தியன், குந்தவையை முறைத்தான்!

அதைக் கண்டவள்.. உடனே சமாளிப்புத் தோரணைக்கு மாறிவிட்டாள்!

"அது.. வந்து.. அப்படியில்ல.. அதாவது, கஷ்டப்பட்டு ஜெயிச்சா தான் அந்த வெற்றிக்கு ஒரு அர்த்தம் இருக்கு, இல்லையா? நான் கஷ்டப்பட்டு, போராடியே ஜெயிச்சு காமிக்கறேன்.

ஏன்னா.. எப்படி இருந்தாலும் இப்போ எனக்கு எதிரா எலெக்ஷன்ல நிக்கறவங்களும் உங்க அப்பாகிட்ட இருந்து பிரிச்சவங்க தான்.

ஆனா.. என்னமோ ஒழுக்க சிகாமணிங்க மாதிரி.. உன் அப்பாவோட ஊழலான ஆட்சியால தான் அவர்கிட்ட இருந்து விலகி இப்போ வெவ்வேற கட்சிக்கு போய்ட்டதா சொல்லி மக்கள ஏமாத்தி ஓட்டு வாங்க முயற்சி செய்யறாங்க.

ஆனா.. அவங்களோட எல்லா முயற்சியையும் நான் முறியடிக்கறேனா இல்லையான்னு பாரு!" என்றவள், ஈனமுண்ம் வந்தியன் தன் இடுப்பில் கை வைத்தபடி அவளை முறைத்துப் பார்க்க.. அந்தப் பார்வை இவளை அசடு வழிய வைப்பதற்கு இருந்தாலும், அதை காட்டிக் கொள்ளாது.. திடமாய்,

"சரி சரி. இடத்தை காலி பண்ணு.. போ.. போய் ஏதாவது உருப்படியான வேலை இருந்தா பாரு." என்று ஏதோ அவனைத் தான் பெருந்தன்மையுடன் மன்னித்து விட்ட பாவனையுடன் கூற, வந்தியனோ, "கருமம்டா.." என்று தலையில் அடித்துக் கொண்டு நகர்ந்துவிட்டான்.

அப்போதைக்கு இதை குந்தவை பெரிதாக எடுத்துக் கொள்ளாவிட்டாலும் கூட, தனிமையில் அமர்ந்து சிந்திக்கையில் தான் இதெல்லாம் எங்கு சென்று முடியுமோ என்ற பயம் குந்தவைக்கு ஏற்பட்டது.

ஏன்னென்றால்.. வந்தியனின் நடவடிக்கையில் ஏற்படும் இது போன்ற சிறு மாற்றங்கள் கூட குந்தவைக்குச் சற்று பயத்தை உண்டாக்கியது.

வெளிப்படையாக அவன் எதுவும் பேசாவிட்டாலும் கூட அவனது 'கணவன் பார்வைகள்' குந்தவைக்கு அடிவயிற்றில் சில்லிப்பைக் கிளப்பின.

முன்பெல்லாம் பார்த்தாலே அப்படி வெறுப்பை உமிழ்பவன், இன்று தாலி கட்டிய பிறகு, தன்னை மனைவியாகப் பார்க்கிறானா? என்ற கோபமும் அதில் இருந்தது அவளுக்கு.

எனவே அடுத்து வந்த நாட்களில் வந்தியனிடம் முகம் கொடுத்துப் பேசுவதைக் கூட தவிர்த்தாள் குந்தவை.

இரவு வேளையில் இருவரும் ஒரே அறையைப் பகிரும் சமயங்களில் கூட, நேராக சென்று எப்பொழுதும் போல படுக்கையில் திரும்பிப் படுத்துக் கொள்வாளே தவிர, வந்தியனை நேருக்கு நேர் பார்ப்பது கூட வேண்டாம் என்ற மனநிலைக்கு போயிருந்தாள் அவள்.

வந்தியனோ, குந்தவையின் இந்தக் கண்ணாமூச்சி விளையாட்டைப் புரிந்து கொண்டாலும், உள்ளுக்குள் சிரிப்புடன் அதை ரசித்தும் கொண்டிருந்தான்.

ஆனால் இரவின் இருளில் குந்தவை, ஆத்மனை நினைத்து மறுகுவதும், தனக்கும், ஆத்மனுக்கும் துரோகம் செய்துவிட்டோமோ என்று வருந்துவதும் வந்தியனுக்குத் தெரியாமலில்லை.

அதே வேளையில் எடுத்ததுமே தான் தான் அவளது ஆத்மன் என்று அவளிடம் கூறவும் இயலவில்லை வந்தியனால்.

அவளாக வந்தியனை, ஆத்மன் என்று உணருவது வேறு.. வந்தியனாக அவளிடம் சென்று தான் தான் ஆத்மன் என்று கூறுவது வேறல்லவா?

வந்தியனாக, தன்னை ஆத்மன் என்று அடையாளப் படுத்தி கொண்டால், வந்தியன் மீதிருக்கும் வெறுப்பினால் குந்தவை, ஆத்மனையும் நிராகரித்து விடுவாளோ என்ற பயம் இருந்தது அவனுக்கு.

எனவே வந்தியனாகவே.. அதாவது அவளது கணவனாகவே தன்னை அவளுக்குப் புரிய வைத்துவிடவேண்டும் என்று நினைத்து, அதற்குத் தக்கபடி தனது திட்டங்களை வகுக்கலானான் அவன்!

*****

இப்படியே அவள் ஒளிவதும், இவன் மீட்பதுமாக சில நாட்கள் செல்ல, அடுத்து சில நாட்கள், தேர்தலுக்காகப் பிரச்சாரம் செய்ய விடுப்பு வேண்டுமென்று குந்தவை, அவளது பிரின்சிபாலிடம் கேட்கச் சென்றாள்.

ஆனால் அவரோ.. "உனக்கு லீவ் வேணும்னா, நம்ம சேர்மேன்கிட்ட தான் கேட்கணுமாம்மா.." என்று நமுட்டுச் சிறுப்புடன் கூற, அவரைக் கையாளாகா முறைப்புடன் கடந்து வந்தாள் குந்தவை.

'இவன் என்ன மனசுக்குள்ள பெரிய இவன்னு நினைச்சுட்டு இருக்கானா?

எனக்கு லீவ் வேணும்னா நான் எதுக்கு இவன்கிட்ட பெர்மிஷன் கேட்கணும்?

இவன் பெரிய பிஸ்தா, பாதாம் பருப்பு, முந்திரி கொட்ட.. வெள்ளரி வித.. ஆளையும் அவனையும் பாரு.." என்று வாய்க்குள் முணுமுணுத்தபடியே வேக வேகமாய் ஆசிரியர்களின் அறைக்கு வந்தவள், அங்கு தனது இருக்கையில் வந்தியன் சாவதானமாக அமர்ந்திருப்பதைக் கண்டவளுக்கு இன்னமும் கடுப்பானது.

இதில் அந்த ஆசிரியர் அறையில் வேறு யாருமில்லை.

எனவே விறுவிறுவென அவன் அருகில் வந்தவள்.. "இங்க என்ன செய்யற?" என்றாள் கோபமாக.

ஹாயாக சேரில் சாய்ந்து தலைக்கடியில் கைகளைப் பிணைத்தபடி கண்மூடி இருந்தவன், மெல்லக் கண்களைத் திறந்து..

"என்ன கேட்ட?" என்றான் மிகவும் அலட்சியமாக.

அதைக் கண்டவளுக்கு அரைக் கிலோ பச்சை மிளகாயை அப்படியே விழுங்கியதைப் போல எரிச்சல் உண்டாகியது.

"இது என் சீட்டு.. இங்க நீ என்ன செய்யறன்னு கேட்டேன்?" என்றாள் மீண்டும் கோபமாக.

அதைக் கேட்டு அவளை ஆச்சர்யமாகப் பார்ப்பதை போலப் பார்த்தவன்..

"அப்படியா? அப்போ இந்த சீட்ல உன் பேர் எழுதியிருக்கா என்ன?

ஆனா.. வெரி சாரிம்மா.. இந்த ஸ்கூலே என் பேர்ல எழுதியிருக்கு.." என்று ஏதோ பெரும் நகைச்சுவையைக் கூறிவிட்டதைப் போல நகைப்புடன் இதை அவன் கூறவும், குந்தவைக்கோ.. அங்கிருக்கும் சாக் பீஸ் டப்பாவை எடுத்து அவன் தலையிலேயே போட்டுவிடலாம் என்ற ஆத்திரம் வந்தது.

அவளது அந்த ஆத்திரத்தை அதிகப்படுத்தும் விதமாக..

"ஹ்ம்ம்.. வேணும்னா, நீ என் பொண்டாட்டி.. சோ, இந்த ஸ்கூல்ல உனக்கும் பங்கு இருக்குன்னு சொல்லு.. நான் ஒத்துக்கறேன்." என்று வேண்டுமென்றே அவளிடம் வம்பிழுக்க, சுறுசுறுவென ஏறியது குந்தவைக்கு.

"இங்க பாரு.. நீ இப்போல்லாம் ஆளே சரியில்ல.

கல்யாணத்தப்போ என் கால்ல விழுந்து கேட்டு கல்யாணம் செய்துக்கிட்ட. ஆனா, அதுக்கப்பறம் உன் நடவடிக்கை எதுவும் சரியில்லை.

ஓவரா அட்வான்டேஜ் எடுத்துக்கற நீ.." என்று ஆத்திரத்தில் குரல் நடுங்க, வந்தியன் முன்பு கை நீட்டி குந்தவை கூற, நீட்டிய கையை அப்படியே பற்றிக் கொண்டான் வந்தியன்.

அவன் இவ்வளவு தைரியமாக.. அதுவும் இப்படி பள்ளி வளாகத்திலேயே இப்படி நடந்து கொள்வதைப் பார்க்கவும் குந்தவைக்குத் தான் உதறலெடுத்தது.

"இ.. இங்க பாரு.. நீ செய்யறது எதுவும் சரியில்ல.." என்று இன்னமும் குரல் தந்தியடிக்கக் கூறியவளைப் பார்த்து சிரித்தபடியே வந்தியன்,

"ஹ்ம்ம்.. கால்ல விழுந்தேன் தான்.. யார் கால்ல விழுந்தேன்? என் பொண்டாட்டி கால்ல தான? தப்பில்ல.. சாமி குத்தமெல்லாம் ஆகாது.." என்று நக்கலாய் கூற,

"மொ.. மொதல்ல கைய விடு.. கைய விடுன்னு சொல்லறேன்ல?

யாராவது பார்த்துடப் போறாங்க.."என்று இவள் கூறிக் கொண்டிருந்த அந்த நொடியில், அதே பள்ளியில் வேலை செய்யும் மாறனின் காதலி, நதியா அங்கு வந்து அவர்கள் இருக்கும் கோலத்தைப் பார்த்துவிட்டாள்.

நாற்காலியில் அமர்ந்திருந்த வந்தியன், எட்டி குந்தவையின் கரத்தைப் பற்றி தன்னை நோக்கி இழுத்துக் கொண்டிருக்க, குந்தவையோ.. சற்று வந்தியன் புறம் குனிந்தபடி, அவனுக்கு நெருக்கமாக நின்று பேசிக் கொண்டிருப்பதைக் கண்ட நதியா, "களுக்"கென சிரித்துவிட்டு வந்த வழியே திரும்பி ஓடிவிட்டாள்!

அதைக் கண்ட குந்தவையோ, தலையில் அடித்துக் கொண்டாள்.

"ஹையோ.. கடவுளே.. உன்னால.. என் மானமே போகுது. என் கைய விடு.." என்று இன்னமும் அவள் கத்த..

"கைய விடமாட்டேன்னு அக்னி சுத்தி சத்தியம் பண்ணி, உன்ன கல்யாணம் செய்துருக்கேன்ம்மா. இப்போ இவ்வ்ளவு சாதரணமா கியா விட சொல்லற? காலம் வரிக்கும் உன் கைய நான் விடமாட்டேன் தெரியுமா?" என்று மோனமாய் கூற.. குந்தவையோ பயமும், படபடப்பும் மிக, அவனிடம் கெஞ்சத் துவங்கிவிட்டாள்.

"ஹையோ.. கைய விடு ப்ளீஸ்.. இன்னும் ஊரே பார்த்து என் மானம் போறதுக்கு முன்னாடி விடு.." என்று அவள் கூறுவதற்கும், வந்தியனின் மொபைல் சிணுங்குவதற்கும் சரியாய் இருந்தது.

அந்த சத்தத்தில் சற்று எரிச்சலுற்ற வந்தியனோ.. "சரியான கரடி.." என்று தனக்குள் திட்டிக் கொண்டே மொபைலை எடுத்தால், அழைத்திருப்பது மாறன்!

சட்டென குந்தவையின் கைகளை விட்டுட்டுவிட்டு, அந்த அழைப்பை ஏற்றவன்..

"சொல்லுடா கருங்கரடி.." என்று திட்டியபடியே மாறனிடம் பேசுவதற்காக அவன் அங்கிருந்து எழுந்து சென்றான்.

"அப்பாடா.." என்ற தேறுதலுடன், அதுவரை கொண்ட படபடப்பின் காரணமாக அடைத்து வைத்திருந்த மூச்சை அப்பொழுது தான் வெளியேற்றியபடி தனது இருக்கையில் பொத்தென அமர்ந்தாள் குந்தவை.

அங்கு மறுபுறத்திலோ வந்தியனிடம், மாறன்..

"என்ன மச்சி.. ஸ்கூல்லயே ரொமான்ஸா?" என்று கிண்டலாகக் கேட்க, வந்தியனோ.. மாறனைக் காரித் துப்பினான்.

"டேய்.. உனக்கெல்லாம் வெட்கமே இல்லையா டா?" என்று இவன் வசை பொழிய, மாறனோ அதற்கெல்லாம் அசருவதாக இல்லை.

"டேய்.. டேய்.. உனக்கு எதுக்கு இவ்வளவு கோபம் வருதுன்னு தெரியுது. பூஜை வேளை கரடி மாதிரி, நீ உன் ஆளு கூட ரொமான்ஸ் செய்யறப்போ நான் வந்து கெடுத்துட்டேன்னு தான உனக்கு இத்தனை கோபம் வருது?" என்று அவன் கேட்க, வந்தியனோ கடுப்பாகிப் போனான்.

"டேய்.. உனக்கும், உன் ஆளுக்கும் வேற வேலையே இல்லையாடா? இப்போ தான் நான் என் பொண்டாட்டியோட கையவே பிடிச்சேன். அதுக்குள்ளே உன் ஆளு அதை பார்த்து, அத உன்கிட்ட வேற போட்டு கொடுத்துடுச்சு.

நீங்க காதல் வளர்க்கறதுக்கு, நாங்க ஊறுகா ஆகிட்டமாடா?" என்று வந்தியன் கேலியுடன் கேட்க, மாறனோ அதை மறுத்தான்.

"அடேய் அறிவுகெட்டவனே.. நான் அதுக்கெல்லாம் கால் பண்ணல.. நீ சொன்ன விஷயம் எல்லாம் ரெடியாகிடுச்சுன்னு சொல்லத் தான் கால் பண்ணனேன்.

நீ சொன்னபடி, போஸ்டர், ப்ளெக்ஸ் போர்டு, கட் அவுட்டுன்னு பிரச்சாரத்துக்குத் தேவையான எல்லாமே தயாராகிடுச்சு.

நாளையிலிருந்து நாம பிரச்சாரம் பண்ண ஆரம்பிச்சுடலாம்." என்று கூற, வந்தியனுக்கு மகிழ்வாய் இருந்தது.

அவர்கள் திட்டமிட்டபடியே குந்தவைக்காக, வந்தியன் ஒவ்வொரு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்தான்.

அதை அறிந்த குந்தவைக்கு இதை என்னவென்று எடுத்துக் கொள்வதென்றே தெரியவில்லை.

ஏனெனில், வந்தியன் தனக்கு பள்ளிக்கு விடுமுறை அளித்தாலும் சரி.. இல்லையென்றாலும் சரி என்று பள்ளிக்கு விடுப்புக் கடிதம் மட்டும் அனுப்பிவிட்டு, அவளும், கரிகாலனும் பிரச்சாரத்தை ஆரம்பித்திருந்தனர்.

அப்பொழுது தான் குந்தவைக்கு, வந்தியனும் இபப்டிக் களத்தில் இறங்கித் தனக்காக பிரச்சாரம் செய்வது தெரிய வந்தது.

இதைப் பற்றி கரிகாலனிடம் கேட்டால்.. அவன் சாதாரணமாகத் தோளைக் குலுக்கினான்.

"உன் புருஷன் என்ன செய்யறான்னு என்கிட்டே கேட்டா.. நான் என்ன சொல்றது?" என்பதே அவனது முதல் பதிலாய் இருக்க, குந்தவையோ, அவனைக் கோபத்துடன் முறைத்தாள்.

"அண்ணா.. என்னண்ண்ணா நீயும் அவனுக்கு சப்போர்ட்டா பேசற மாதிரி பேசற?" என்று இவள் இறுகிய குரலில் கேட்க, கரிகாலனோ நின்று நிதானமாக குந்தவையைப் பார்த்தான்.

"நான் வேற என்ன செவ்ல்லணும்னு நீ எதிர்பார்த்த?

நீ முடிவெடுத்து தான் அவன கல்யாணம் செய்த.. அது உனக்கு ஞாபகம் இருக்குல்ல குந்தவை?

எல்லா நேரத்துலையும் நின்னு, நிதானமா, தீர்க்கமான முடிவெடுக்கற என் தங்கச்சி.. அன்னைக்கு மட்டும் ஏன் அவ்வளவு அவசரமா அப்படி ஒரு முடிவெடுத்தான்னு எனக்குத் தெரியல.

நானும் கூட, முன்னாடி நீ தப்பான முடிவெடுத்துட்டன்னு தான் நினச்சேன்.

குந்தவை.. அதி புத்திசாலியான நீ, அன்னைக்கு அவ்வளவு அவசரமா.. அவ்ளோ பெரிய முடிவெடுத்தது மிகப் பெரிய முரண்.

ஆனா அப்படிப்பட்ட முரண்கள் தான் வாழ்க்கைல ஒரு முக்கியமான திருப்பத்தை உண்டாக்குது.

அந்த மாதிரி உன் வாழ்க்கைல நடந்த திருப்பம்.. உனக்குத் தப்பானதா ஆகிடுச்சுன்னு எனக்குத் தோனல.

ஏற்கனவே வந்தியன் சொன்னது மாதிரி.. இந்த விஷயத்துல நீ மட்டும் இல்ல.. அவனும் உனக்கு சமமா பாதிக்கப்பட்டிருக்கான்.

இன்னமும் நீங்க ரெண்டு பேரும், அந்த குணா காண்பிச்ச போட்டோக்கான விளக்கத்தை எங்கேயுமே சொல்லல?

அத பத்தி நான் கேள்வி கேட்கல.. ஆனா, நீ முடிவெடுத்த விஷயம் இது.. அத நீ தான் சரி செய்யணும்.

முன்னாடி ஒருத்தன் தப்பா இருந்தான்றத்துக்காக, இப்பவும் அவன அதே தப்ப வச்சு எடை போடறது சரியில்ல." என்று ஒரு பெரிய பிரசங்கமே நடத்த.. குந்தவைக்கு தலை சுற்றிப் போனது.

அதன் கூடவே இவள் பிரச்சாரத்திற்கு செல்ல, அங்கு மக்களும் இவர்களை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.

ஏனென்றால்.. அந்த ஊர்க்காரர்கள், குந்தவையை ஒரு நடத்தை கெட்டவளாகத் தான் இன்னமும் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அது வேறு குந்தவையின் மன வேதனையை இன்னமும் கிளறிவிட்டிருந்தது.

தான் எந்தத் தவறும் செய்யாத பொழுதும், தன்னை நன்கு அறிந்த இந்த மக்களே தன்னைப் பற்றி இப்படிக் கேவலமாக பேசுகிறார்களே என்ற சுய கழிவிரக்கம் தோன்றி வதைத்தது அவளை.

அதற்கு மேல் அன்றைய பிரச்சாரத்தைத் தொடரவியலாது என்று எண்ணியவள், கரிகாலனிடம் கூறிவிட்டு வீடு வந்து சேர்ந்தாள்.

அவர்களது அறைக்குள் சென்று, உடை கூட மாற்றாது தலையைக் கையில் தாங்கியபடி அவள் அமர்ந்திருக்க, சற்று நேரத்திலேயே அங்கு வந்தான் வந்தியன்.

இவளது மனநிலையை, கரிகாலன் கூறவும் தான் அவன் இவ்வளவு வேகமாக வீடு வந்து சேர்ந்தது.

வந்து பார்த்ததுமே மனைவி இப்படி யாருமே இல்லாதவள் போலத் தனிமையில் அமர்ந்திருக்கக் கண்டவன், அவளை எப்படி சமாதானம் செய்வது என்று யோசித்தபடியே சிரம பரிகாரம் செய்ய குளியலறைக்குள் புகுந்தான்.

அவன் உள்ளே சென்று சற்று நேரத்திற்கெல்லாம், வந்தியன் வெளியிலேயே வைத்துவிட்டுப் போயிருந்த அவனது மொபைல் ஒலியெழுப்பியது.

அதன் ஒளி கேட்கவுமே, வந்தியனுக்கு பகீரென்றது.

ஏனென்றால்.. அவனது மொபைலை, குந்தவை பார்த்துவிட்டாளென்றால்.. அவ்வளவு தான்..

'நீலச்சாயம் வெளுத்துப் போச்சு டும்.. டும்.. டும்.. டும்..

ராஜா வேஷம் கலைஞ்சு போச்சு டும்.. டும்.. டும்.. டும்..' தான் என்று உணர்ந்தவன், அவசர அவசரமாக சோப்பு நுரையுடன் இருந்த முகத்தை கழுவிவிட்டு வெளியே வரும் முன்.. அவனது மொபைல் குந்தவையின் கரத்தினில் இருந்தது.

கண்களெல்லாம் சிவந்து விரிய, அந்த மொபைலையே பார்த்துக் கொண்டிருந்தாள் குந்தவை.

ஏனென்றால்.. அதன் மொபைலில் லாக் ஸ்கிரீனில் இருந்தது.. ஆத்மன், அவனது வலைப்பூவில் குந்தவைக்கு கடைசியாக எழுதிய கவிதையுடன் இணைக்கப்பட்டிருந்த அவளது கண்களின் புகைப்படம் தான்.

அதைப் பார்த்ததும் குந்தவைக்கு பற்பல விஷயங்கள் புரியத் துவங்கின.

அப்பொழுது வேக வேகமாக குளியரலையில் இருந்து வெளியே வந்த வந்தியன், தனது மொபைலுடன் இருந்த குந்தவையைப் பார்த்து சற்று திடுக்கிட்டுத் தான் போனான்.

அதே வேளையில் அந்த சூழ்நிலையிலும் கூட ஏதுமறியாதவன் போல,

"போன் வந்துச்சா? எனக்கா? போன கொடும்மா.. யாருன்னு பார்க்கலாம்.." என்று சாதாரணம் போல தனது மொபைலை அவன் திருப்பிக் கேட்க, தீச்சுடரென தகிக்கும் பார்வையுடன் அவனை நிமிர்ந்து பார்த்தாள் குந்தவை.

தொடரும்..

ஹேய் செல்லம்ஸ்.. இன்னும் ஒன்னு.. இல்ல ரெண்டு எபிசோட்ல கதை முடிச்சுடும்.. படிச்சுட்டு உங்க கருத்துக்களை மறக்காம இங்க சொல்லுவீங்களாம்..



நட்புடன்,


நிலவின் ஊடல்!
 

NNK51

Moderator
ஊடல் சேர்த்து காதல் கோர்ப்போம்!
292055440_584692953041504_1729608465490144239_n.jpg
அத்தியாயம் - 14

வந்தியன், தனது போனைத் திருப்பிக் கேட்கவும் அவனை அப்படி முறைத்தவளைப் பார்த்து அவனுக்குப் பதட்டம் உண்டாகியது.

'இவளுக்கு ஒருவேளை ஏதாவது தெரிஞ்சுருக்குமோ?

ச்சே.. ச்சே.. நம்ம போனோட பாஸ்வோர்ட் தான் அவளுக்குத் தெரியாதே?' என்று ஒரு கணம் நிம்மதியுற்றவனுக்கு, அப்பொழுது தான் அவன் தனது லாக் ஸ்க்ரீனில் தான் குந்தவையின் கண்களை வைத்திருப்பது நினைவுக்கே வந்தது.

சட்டென உள்ளுக்குள் உண்டான பதட்டத்துடன்.. "அய்யயோ.. குந்தவை என் போன கொடு.. அதுல ஒரு முக்கியமா ஒரு கால் செய்யணும்.." என்று பதறிப் போய் கேட்க, குந்தவையோ படுக்கையில் இருந்து கீழே இறங்கி நின்று அவனை இன்னமுமாய் முறைத்தாள்.

"என்னம்மா? ஏன் முறைக்கற? போன கொடும்மா ப்ளீஸ்.." என்று கூறிக் கொண்டே அவன் குந்தவையின் அருகே செல்ல, குந்தவையோ கோபமாக..

"நீ என்கிட்டே ஏதாவது மறைக்கறியா வந்தியா?" என்றாள் அவனை நேராகப் பார்த்துக் கொண்டே.

தான் இப்படி ஒரு சூழ்நிலையில் மாட்டிக் கொள்வோம் என்று வந்தியன் துளியும் எண்ணவில்லை. அவன் நினைத்திருந்ததெல்லாம்.. என்றாவது ஒரு நாள், குந்தவைக்குத் தன்னை வந்தியனாகவே பிடிக்கும்..

அன்று தன்னைப் பற்றிய உண்மையை குந்தவையிடம் எடுத்துரைக்கலாம் என்று எண்ணியிருந்தான் அவன்.

ஆனால் இப்படித் திடுமென போனும், போட்டோவுமாக தான் மாட்டுவோம் என்று சிறிதும் எதிர்பார்க்கவில்லை அவன்.

எனவே தடுமாற்றத்துடன், "போன கொடு குந்தவை ப்ளீஸ்.." என்றபடி அவளது கையிலிருக்கும் போனைப் பிடுங்க இன்னமும் அவளிடமாய் முன்னேற, குந்தவையோ அவனிடமிருந்து போனை மறைப்பதற்காக கைகளைப் பின்னே வைத்தபடி..

"உண்மைய சொல்லு வந்தியா.." என்று சிவந்த விழிகள் விரிய கேட்க, சட்டென அவளிடமிருந்து போனைப் பறிக்க வந்தியன் முயன்றான்.

அந்த முயற்சில் கால் இடறி வந்தியன், குந்தவை மீது விழ, குந்தவையோ கட்டிலின் மீது விழுந்தாள்.

இருவரும், அந்த போனின் மீது கிடந்தார்கள்!

"ஹேய்.. எந்திரிடா மேல.." என்று குந்தவை அவனை விலக்க முயன்றபடியே கூற, வந்தியனோ..

"சாரி சாரி.. இரு எந்திரிக்கறேன்.." என்று கூறியபடியே எழ முயற்சித்தவன், மீண்டும் தடுமாறியபடி அவள் மீதே விழ, இப்பொழுது சட்டென அவளது கழுத்து வளைவில் மெதுவே வழுக்கினான்!

தனையறியாது கிறங்கினான்!!

தன்னிச்சையாக.. முற்றிலும் ஆத்மனாக, அவள் வாசத்தை அவன் உள்ளுக்குள் இழுத்து.. உயிருக்குள் நிறைக்க, குந்தவையோ.. அவனைத் தன்னிடமிருந்து விலக்க முயன்றபடியே..

"டேய்.. பொறுக்கி.. மேல எழுந்திரிடா.." என்று கத்த, வந்தியனோ..

"அத்துக்குத் தான் ட்ரை பண்றேன்.. ஆனா முடியலையே.." என்று இன்னமும் விலகாத மயக்கத்துடன் பதிலுரைத்தான்.

அவனது பதிலும், தொடுகையும் குந்தவைக்கு உள்ளுக்குள் என்னென்னவோ செய்தாலும்.. மிகுந்த பிரயாசனப்பட்டு அவனைத் தன் மீதிருந்து தரையில் தள்ளி விட்டாள்.

மூச்சிறைத்தபடியே மேலே எழுந்து அமர்ந்தவள், தரையில் கிடந்த வந்தியனைப் பார்த்து..

"என்கிட்டே சொல்லலைல நீ? மறச்சுட்டல்ல??" என்றால் விழிகள் இன்னமும் ரௌத்திரமாக!

அந்த ரௌத்திரத்திற்குப் பின் இருக்கும் வேதனையை அவன் உணரமாட்டானா என்ன?

தன்னவள் இப்படி வேதனையுறுகிறாளே என்று வருத்தமுற்றவன், அவளை சமாதானப்படுத்தவெனெ சட்டென எழுந்து அவளருகே செல்ல முயல, அவனது கன்னத்தில் பளாரென அறைந்துவிட்டாள் குந்தவை.

"கொன்னுடுவேன் கிட்ட வந்தைன்னா.. போ.. அங்கேயே போ.. கிட்ட வராத..

நான் எவ்வளவு நாள் குற்ற உணர்ச்சில மறுகியிருப்பேன்? உனக்கு எல்லாமே விளையாட்டா போயிடுச்சுல்ல?" என்று அவள் அழுதபடியே கேட்க, வந்தியனுக்கோ அவளிடம் எப்படி மன்னிப்பு கேட்பதென்று கூடத் தெரியவில்லை.

அவனுக்குத் தெரிந்ததெல்லாம் ஒரே வழி தானே? எனவே அப்படியே அவளது கால்களில் சாஷ்டாங்கமாக விழுந்தவன், அங்கேயே படுத்தபடி..

"சாரி குந்தவை.. உன்கிட்ட நான் முன்னாடி நடந்துகிட்ட விதம் ரொம்ப தப்பு தான்..

ஆனா.. உன்னால தான் நான் மாறினேன்.

உன்னால தான் சுற்றி இருந்த என்னோட உலகத்த நான் அழகா பார்க்க ஆரம்பிச்சேன்.

ஆனா.. இந்தக் கல்யாணம்.. நானே எதிர்பாராதது.

இந்த நிலமைல எப்படி நான் வந்து, நான் தான் உன்னோட ஆத்மன்னு சொல்லறது?

அப்படி மட்டும் சொல்லியிருந்தா நீ என்ன அடிச்சு விரட்டியிருக்க மாட்ட?" என்று அவள் விரல்களில் இருந்த மெட்டியை நிமிண்டியபடியே அவன் கேட்க, குந்தவையோ கோபமாக தனது கால்களைப் பின் இழுத்துக் கொண்டாள்.

ஆனாலும் தனது முயற்சியில் கொஞ்சமும் மனம் தளராத விக்ரமாதித்தனாக, அப்படியே படுத்துக் கொண்டிருந்தபடியே வந்தியன், சற்று நேரம் கழித்து மீண்டும் பேச்சைத் துவங்கினான்.

ஆனால்.. இம்முறை வேறு விதமாக!

"ஆமா குந்தவை.. நான் உன் மேல விழுந்தப்போ உன்னோட இதயம் அவ்வளவு வேகமா துடிச்சுதே.. அது ஏன்?" என்று அவளது மனநிலையை சமனப்படுத்த, சிரிப்பை உள்ளடக்கியபடி அவன் கேட்க, குந்தவையோ இப்பொழுது அவனைப் பார்த்து கஷ்டபப்ட்டு முறைத்தாள்.

"சொல்லு குந்தவை.. இன்னமும் உன் இதயம் அப்படித் தான் துடிக்குதா என்ன?" என்று மேலும் அவன் கேட்க, குந்தவையோ..

"இல்ல அப்படிலாம் ஒன்னும் இல்ல.." என்றாள் வெடுக்கென, வேறெங்கோ பார்த்தபடி..

"ஓஹோ.. வேணும்னா நான் ஒரு டைம் செக் பண்ணி சொல்லட்டுமா?" என்று வந்தியன் கேட்க,

அவனது கேள்வியில் சட்டென திடுக்கிட்டவளோ, "அபப்டியே எதையாவது எடுத்து உன் மேல வீசிடப் போறேன் பார்த்துக்கோ.." என்று ஆத்திரப்பட்டாள்.

இந்த சமயத்தில் தான் அவர்களது அறைக்கதவு மெல்ல தட்டப்பட, குந்தவை எழுந்து சென்று கதவைத் திறக்கப் போனாள்.

அப்பொழுது காலில் தடுக்கிய புடவையையும் கையில் சுருட்டிப் பிடித்தபடி அவள் எழுத்து செல்ல, வந்தியனோ, தலையைக் கையால் தாங்கியபடி முட்டுக்கு கொடுத்து இன்னமும் தரையிலேயே படுத்திருந்தான்.

இங்கு குந்தவை சென்று கதவைத் திறக்கவும், வெளியில் நின்றிருந்த சைலஜாவோ..

"சாப்பிட வரலயா?" என்று கேட்டபடியே குந்தவையை மேலும் கீழும் பார்க்க, பார்த்தவருக்கு சட்டென சிரிப்பு வந்துவிட்டது.

கூடவே லேசாக கன்னமும் சிவந்துவிட்டது!

"சரி சரி.. நான் சாப்பாட இங்கயே எடுத்துட்டு வரேன்.. ஒரு ரெண்டு நிமிஷம் கதவ திறந்தே வச்சிருங்க.." என்று சிரித்தபடியே கூறிவிட்டு வேகமாகச் செல்ல, குந்தவைக்குக் குழம்பிவிட்டது.

அந்தக் குழப்பத்தையும் எரிச்சலாக மாற்றி வந்தியனிடம்..

"டேய்.. என்னடா? எதுக்குடா இவங்க இப்படி சிரிச்சுட்டுப் போறாங்க?" என்று அவள் வந்தியனிடம் கத்த, வந்தியனே அப்பொழுது தான் அவளது கோலத்தை சரியாகக் கவனித்தான்.

பார்த்தவனுக்கும் சிரிப்புப் பீறிட்டது!

"ஏய்.. ரூம் கதவ திறக்கும் போது ட்ரெஸ்ஸெல்லாம் சரியா இருக்கான்னு பார்த்துட்டு திறக்கமாட்டியா?" என்று அவன் நகைப்புடனே கேட்க, அப்பொழுது தான் தன்னைக் குனிந்து பார்த்த குந்தவையும் திகைத்துப் போனாள்.

"கர்மம்.. கர்மம்.. டேய்.. இத கூட நீ கவனிச்சு சொல்ல மாட்டியா?" என்று அதற்கும் வந்தியனிடம் அவள் எரிந்து விழுந்தாள்.

இங்கு இவர்கள் இப்படியாய் சண்டையிட்டுக் கொண்டிருக்க, சிரித்தபடியே அடுப்படிக்கு சென்ற சைலஜா, குந்தவைக்கும், வந்தியனுக்கும் சாப்பாடு எடுத்து வைத்துக் கொண்டிருந்தார்.

அதைப் பார்த்த சிவகாமியோ..

"என்ன இன்னைக்கும் சண்டையா? சாப்பிட வர மாட்டேன்னு சொல்லிடுச்சுங்களா ரெண்டும்?" என்று சைலஜாவிடம் கேட்க, கட்டுப்படுத்த முடியாதபடிக்கு சிரித்து வைத்தார் சைலஜா.

"ஏய்.. ஏண்டி சிரிக்கற? அட.. சொல்லிட்டு தான் சிரியேன்?" என்று பாகிரதியும், சைலஜாவிடம் கேட்க, சைலஜாவோ சிரிப்பை அடக்கியபடியே..

"அக்கா.. அதுங்க கொஞ்சம் ஓவரா சமாதானம் ஆகிடுச்சுங்க.." என்று கூறியபடியே சந்தோசமாக வந்தியனின் அறைக்கு உணவை எடுத்துக் கொண்டு சென்றார்.

அவரிடம் உணவை வாங்கி வைத்துக் கொண்டு மீண்டும் கதவை சாத்திய குந்தவை, தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்துவிட்டாள்.

அவள் மனதிலிருக்கும் குழப்பங்களும், தயக்கங்களும் வந்தியனுக்கு நன்றாகவே புரிந்தன.

"இங்க பாருடா.. நான் நிஜமா உன்ன ஏமாத்தணும்னு நினைக்கல.. அதே மாதிரி சின்ன வயசுல இருந்து நான் உன்கிட்ட நடந்துகிட்டதுக்கும் நிறைய காரணம் இருக்கு." என்று அவன் கூற, குந்தவையோ அவனிடத்தில் கோபமாகச் சீறினாள்.

"எதுக்கு காரணம் இருக்கு? நல்லா இல்லாத ஆப்பிள, குப்பைத்தொட்டில போடறதுக்கு பதிலா என்கிட்டையும், என் தங்கச்சிகிட்டயும் கொண்டு வந்து கொடுத்தியே? அதுக்கு என்ன காரணம் இருக்கு?" என்று அவள் கேட்க, வந்தியனோ, மெல்ல சிரித்தபடி மேலெழுந்து குந்தவையின் அருகே அமர்ந்தான்.

"அப்போ நீயும், உன் தங்கச்சியும் சின்ன பசங்க.. அதே மாதிரி தான் நானும் அப்போ சின்ன பையன்.

இங்க வீட்டுல என் பெரியப்பாவும், சித்தப்பாவும் ஏதோ அவங்க தான் அந்தக் கடவுளோட மறு அவதாரம்னு நினைச்சுட்டு இருக்கறவங்க.

அப்போ வீட்டுக்கு வந்தது ஊட்டிலிருந்து வந்த புது ஆப்பிள். நான் சாப்பிட்டப்போ எனக்கு ரொம்ப பிடிச்சுது.

நீங்களும் என்ன மாதிரியே சின்னப் பசங்க தான? அதனால தான் உங்களுக்கும் கொடுக்கலாம்னு நினச்சேன்.

ஆனா.. நான் பாசமா உங்களுக்கு கொண்டு வந்து கொடுத்தத, என் சித்தப்பா பார்த்துட்டார். அவர்கிட்ட நான் உண்மைய சொல்ல முடியுமா?

அதனால் தான் அவர மாதிரியே நான் பதில் சொன்னேன். ஆனா, அது உனக்குப் புரியல.

அன்னைல இருந்து நீ ஆப்பிளே சாப்படலன்னு அம்மா சொன்னாங்க.. அது தெரிஞ்சதுல இருந்து நானும் ஆப்பிள் சாப்பிடறது இல்ல.." என்று தலை குனிந்தபடி அவன் கூற, குந்தவைக்கோ இதையெல்லாம் நம்புவதா வேண்டாமா என்று இருந்தது.

அதே சமயம், வெகு சமீபமாகக் கூட வந்தியன், தான் தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்தவள் என்பதால் தன்னை அவன் வீட்டிற்கு வரக் கூடாது என்று நடுத்தெருவில் நின்று சத்தம் போட்டானே? அதை என்னவென்று விளக்குவது என்று அதையும் கோபத்துடன் குந்தவை கேட்க, வந்தியனோ ஒரு கணம் கண்களை இறுக்க மூடிப் பின் திறந்தான்.

"இத எப்படி சொல்லறது குந்தவை.. எனக்கு சின்னதுல இருந்தே உன் மேல ஒரு ஈடுபாடு இருந்துச்சு. ஆனா, அத நான் காதல்னு சொல்ல மாட்டேன். ஏதோ ஒரு சலனம்.

உன் கூட சண்டை பிடிக்க பிடிக்கும், உன்ன சீண்டிட்டே இருக்க பிடிக்கும்..

அதனாலேயே எப்பவும் உன்ன சீன்றதும், உன்கூட போட்டி போடறதும் எனக்கு ஜாலியா இருந்துச்சு.
அதே மாதிரி தான் நான் காலேஜ் முடிச்சு இங்க ஊருக்கு வந்த போதும், பஸ்ஸ விட்டு இறங்கினதும் உன்ன தான் முதல்ல பார்த்தேன்.

எப்பவும் போல தான் உன்கிட்ட வம்பிழுக்கவும் செஞ்சேன். ஆனா, அந்த வார்த்தைகள் எல்லாம் உன்ன எவ்வளவு காயப்படுத்தி இருக்கும்னு எனக்கு அப்போ புரிய.

ஏன்னா.. நான் முழுக்க முழுக்க வளர்ந்தது என் சித்தப்பாகிட்டயும், பெரியப்பாகிட்டையும்.

அவங்களோட போதனைகள் தான் என் மனசுல முழுசா நிறைஞ்சுருந்துச்சு.

அதே சமயம், அன்னைக்கு நீ கடைசியா இங்க நம்ம வீட்டுக்கு வந்தப்போ.. என் கூட என்னோட இன்னொரு பிரண்ட் கோகுலும் இருந்தான்.

நீ அம்மாகிட்ட பேசிட்டு இருந்தத கேட்டவன், என்கிட்டே உன்ன பத்தி கொஞ்சம் ஒரு மாதிரி பேசினான்.

அவன் மேல இருந்த கடுப்புல தான் நான் உன்கிட்ட அந்த மாதிரி நடந்துக்கிட்டேன்.. அதே சமயம் அந்த நாயையும் நான் அதுக்கப்பறம் என்கிட்டே சேர்த்துக்கல. அப்பவே அவனையும் நம்ம வீட்டை விட்டு அடிச்சு தொரத்திட்டேன்.

ஆனா குந்தவை, அந்த நாய் மேல எனக்கு இன்னொரு டவுட்டும் இருக்கு.. அந்த குணா, நம்ம ரெண்டு பேரோட போட்டோவையும் ஊர் முன்னாடி காண்பிச்சானே? அது கூட அந்த கோகுல் செய்த வேலையா தான் இருக்கும்னு நினைக்கறேன்.

ஏன்னா, மாறனுக்காக அவனும் அன்னைக்கு பொண்ண தூக்க வந்திருந்தான். அவன் தான் நம்மள அப்போ போட்டோ எடுத்துருக்கணும். அவன தான் நானும் இப்போ தேடிட்டு இருக்கேன். அவன் மட்டும் என் கைல கிடைச்சான்.. அவ்வளவு தான்." என்று விளக்கம் கூற ஆரம்பித்தவன், இறுதியில் இறுகிய குரலில் தன் கோபத்தை வெளிப்படுத்தினான்.

அதே கனம் சட்டென தன் குரலில் கடுமை உடைந்து அமைதியான, அழுத்தத்தோடு சேர்ந்து எஃகிரும்பு கலக்க, "இன்னொன்னும் சொல்லணும் குந்தவை.. என்ன பொறுத்தவரைக்கும், வந்தியன்.. அவன் பொய்யா இருக்கலாம்.

ஆனா, உன்னோட ஆத்மன்.. அவன் என்னைக்கும் பொய்யில்லை.

அவன் காதல்.. அது பொய்யே இல்ல..

அவன் எழுதின முதல் காதல் கவிதை உனக்காகத் தான்.. அவன் மனசுல முதல் காதலை எழுதியது நீ தான்.

உன் மேல எனக்கு இருக்கறது காதல்னு தெரியாத போதும் கூட, நான் உனக்காகத் தான் ஏங்கியிருக்கேன்.

அதே சமயம்.. உன்கிட்ட ஒருத்தன் தப்பப்பா நடக்க முயற்சி செய்தானே? அந்த நான் தான் என் கண் திறப்பு நாள்!

ஏன்னா.. நானும் உன் மேல எனக்கிருக்கறது காதல் தான்னு தெரியாமலேயே ஒரு பக்கம் உன்ன நினச்சு உருகிட்டும், இன்னொரு பக்கம் சந்தோசமா கல்யாணம் பண்ணிக்க வேற ஒரு பொண்ண பார்த்துட்டும் வந்தேன்.

ஆனா, அந்த அன்னைக்கு தான் நான் எவ்வளவு தப்பாவன்னு எனக்குப் புரிஞ்சுது. எப்படியாவது என்ன உன்கிட்ட புரியவச்சுடணும்னு அதுக்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துட்டு இருந்தேன்.. ஆனா, அந்த சந்தர்ப்பம் நம்ம கல்யாணமா அமைஞ்சுடுச்சு.

இப்படி உன்ன கல்யாணம் செய்யணும்னு நான் நினைக்கவே இல்ல.. ஆனா ஆத்மனா, அந்த சந்தர்ப்பத்தை என்னால பயன்படுத்திக்காம இருக்கவும் முடில..

கூடவே கல்யாணத்துக்கப்பாறமும் என் காதலை மறைச்சுட்டு, இப்படி உன்னைவிட்டு விலகி இருக்கவும் முடில.." என்று அவன் குரல் கரகரக்க, தன் மனமுடைத்துக் கூறினான்.

இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த குந்தவைக்கோ, தான் இதுவரை வந்தியனைப் பற்றி நினைத்ததெல்லாம் தவறோ என்று மனம் கனக்கத் துவங்கியது.

ஆனாலும் உறுதியாக ஒரு முடிவு எடுக்க முடியாமல் தடுமாறியவள்..

"இல்ல.. எ.. எனக்கு குழப்பமா இருக்கு. நான் யோ.. யோசிசுக்கணும்.." என்று தடுமாற்றத்துடன் கூற, "சரிடா.. நீ யோசி.. நன் வெயிட் பண்றேன்.." என்று வந்தியன் ஒரு பெருமூச்சுடன் விலகினான்.

இங்கு குந்தவைக்குள்ளோ.. ஒரு பக்கம் இதய நாளமெங்கும் ஆத்மனை எண்ணி ஆனந்தத் தாண்டவமாடிக் கொண்டிருந்தன.

ஆனால், மற்றொரு பக்கம்.. அந்த ஆத்மன் தான் வந்தியன் என்பது நம்பமுடியாத திகைப்புக்குள் அவளை ஆட்படுத்தவும் செய்தது.

நம் வாழ்வில் நடக்கவே நடக்காது என்று நாம் ஒதுக்கி வைத்திருந்த நம் ஆசைகளும், கனவுகளும், நம்மையும் மீறிப் பலிக்கையில், அதை சட்டென ஏற்றுக்கொள்ள மனம் தடுமாறும்!

அப்படிப்பட்ட தடுமாற்றத்தில் தான் இருந்தாள் குந்தவை!

இதையெல்லாம் இரவு முழுக்க யோசித்தபடியே தன்னையும் மீறி உறங்கிவிட்டாள் அவள்.

ஆனால் வந்தியன் தான் குந்தவை என்ன பதில் கூறுவாளோ என்ற பயத்திலேயே வெகுநேரம் வரையில் தூங்கவில்லை.

ஆனால்.. காலையிலேயே அவர்களது குழப்பமும், பயமும் ஒரு சேர சரியாகும் என்று இருவருமே கனவிலும் கூட நினைக்கவில்லை!

*****

மறுநாள் காலையில் வெகுநேரம் கழித்து அப்பொழுது தான் உறக்கத்திலிருந்து விழித்தெழுந்தவனின் கண்களுக்கு முன்பு தேவதையைப் போல முன் வந்து நின்றாள் அவள்!

அவனது படுக்கையிலிருந்த வந்தியனைக் கவனிக்காதவள், தன் போக்கில் வெளியே செல்லத் தயாராகிக் கொண்டிருக்க, வந்தியனோ, ஆத்மனாக அவளையே விழியசைக்காது தலை முதல் பாதம் வரை தனது விழிகளாலேயே ரசித்துக் கொண்டிருந்தான்!

பொதி பொதியாய் கட்டி வைத்த கருமுகில் கார்மேகமாய் அவளும், அவளது கருநிறப் புடவையும் இவனைக் கொஞ்சம் கொஞ்சமாய் தன் வயமிழக்கச் செய்துகொண்டிருந்தன.

இறுதியாக முழுவதும் தயாராகி, அவள் வெளியே செல்ல எத்தனிக்க, அந்தப் படுக்கையின் ஒரு மூலையில் இருந்து மறு மூலைக்கு உருண்டு வந்தவன், சட்டென குந்தவையின் கைகளைப் பற்றியபடி..

"இப்போல்லாம் கண் மை போட்டுக்கறது இல்லையா?" என்றான் அவளது கண்களையே பார்த்துக் கொண்டு.

அவனது பார்வையும், கேள்வியும்.. மெல்லத் தன் விழிகளைத் தாழ்த்தச் செய்ய.. மெதுவே, "ஹுஹும்.." என்றிவள் தலையசைத்தாள்.

அந்த பதிலில் உடனே தன் படுக்கையில் இருந்து எழுந்தவன், அவளைக் கட்டிலின் மீது அமர வைத்து, ட்ரெஸ்ஸிங் டேபிளில் இருந்த அவளது பொருட்களில் தேடி அந்த கண் மை டப்பாவை எடுத்தான்!

அவளது அந்த மருண்ட மான் விழிகளுக்குத் தானே கரு நிறப் பாத்தி கட்டியவன்,

"இது வரைக்கும் உன் கண்ணத் தாண்டி என் பார்வை போனதே இல்ல.. ஆனா, இப்போ முதன் முறையா என்னோட கண்ண என்னால கட்டுப்படுத்தவே முடியல.." என்றவனது பார்வை மெல்லக் கீழிறங்கி அவளது உதடுகளில் படிய, பெண்ணுக்கோ இதயத்தின் துடிப்பு எகிறியது.

"எ.. எனக்கு ஸ்கூலுக்கு லே.." என்றவளது வார்த்தை முடியும் முன்னே, அவனது வல்லின இதழ்கள், குந்தவையின் மெல்லின இதழை சிறைசெய்ய, அவளது கண்களுக்கு மை தீட்டிய அவன் விரல்கள், இப்பொழுது அவளது இடையினத்தில் காதல் தீட்டின!

தொடரும்..

என்ன செல்லம்ஸ்.. கதை பிடிச்சுதா? அப்போ உங்க கருத்துக்களை இங்க பகிருங்க!



நட்புடன்,

நிலவின் ஊடல்!
 

NNK51

Moderator
ஊடல் சேர்த்து காதல் கோர்ப்போம்!
pic_1.jpg
அத்தியாயம் - 15 (FINAL)

அன்று தாமதமானாலும்.. வந்தியனும், குந்தவையும் ஒன்றாகக் கிளம்பி வெளியே செல்வதைப் பார்க்கவும், வந்தியனின் தாய்மார்களுக்கு சந்தோசமாக இருந்தது.

எதுவுமே நடவாதது போல.. தயக்கம், வெட்கம்.. அச்சு பிச்சுத்தனம் என எதுவும் இல்லாமலேயே வந்தியனும், குந்தவையும் இயல்பாக, சிவகாமி, பாகிரதி மற்றும் சைலஜாவிடம், "போயிட்டு வரோம்.." என்று கூறிவிட்டு வெளியே செல்ல, அம்மாக்கள் மூவளும், 'ஆஆஆஆ..'வென வாயைப் பிளந்தார்கள்!

"ஏய்.. சைலா.. என்னடி இது? நேத்து இந்நேரம் வரைக்கும் சண்டை கட்டிட்டு இருந்துச்சுங்க.. ஆனா இன்னைக்கு இந்நேரம் சமாதானம் ஆகிடுச்சுங்க?" என்று சிவகாமி ஆச்சர்யமாய் கேட்க, அதில் இடை புகுந்த பாகிரதியோ..

"அக்கா.. அத தான்க்கா மஞ்சக்கயிறு மாஜிக்குன்னு சொல்லுவாங்க.." என்று விளக்கம் கூற, சைலஜாவோ அவர்களைப் பார்த்து சிரித்தார்.

"ஏய்.. ஏண்டி எங்களை பார்த்து சிரிக்கற நீ?" என்று பாகிரதி இன்னுமாய் சைலஜாவைப் பார்த்து கேட்க, அவரது கேள்வியில் இன்னுமாய் பீறிட்ட சிரிப்பை சிரமப்பட்டு அடக்கியபடியே..

"அக்கா.. அக்கா.. நீங்க ரெண்டு பேரும் இவ்வளவு வெள்ளந்தியா இருக்கீங்களேன்னு நினச்சேன்.. சிரிச்சேன்.." என்று கூறிவிட்டு அவர் மேலும் சிரிக்க, இப்பொழுது மற்ற இருவரும் அவரைப் பார்த்து முறைத்தார்கள்.

அதை பார்த்த சைலஜாவோ.. "அட என்ன முறைச்சு என்ன ஆகப் போகுது?

இதுங்க என்னமோ மஞ்சக்கயிறு மாஜிக்குனால தான் இப்போ ஒன்னு சேர்ந்துடுச்சுங்கன்னு இன்னமும் நீங்க நம்பிட்டு இருக்கீங்களே.. அது தப்பு!

எனக்கென்னமோ.. இவங்களுக்கு கல்யாணத்துக்கு முன்னாடியே ஏதோ கசமுசா நடந்திருக்கு." என்று கூறவும் சிவகாமியும், பாகிரதியும்..

"என்ன கசமுசாவா?!" என்று அதிர்ந்தாள் ஒரு சேர!

அவர்களது அதிர்ச்சியில் தானும் பதறி.. தான் கூறிய வார்த்தையை இவர்கள் தவறாகப் புரிந்து கொண்டார்களே என்று அவசர அவசரமாக அதை மறுத்த சைலஜா,

"ஹையோ.. கசமுசான்னா அது இல்லக்கா.. நீங்க வேற பதறி, என்னையும் பயமுறுத்திட்டு இருக்கீங்க..

அதாவது கசமுசான்னா.. அந்த மாதிரி இல்ல.. இவங்க ரெண்டு பேருக்குள்ளையும் ஏதோவொரு கரன்ட்டு பாஞ்சிருக்கு. அந்த கரன்ட்டு.. இப்போ காதலா மாறியிருக்கு. அத சொல்ல வந்தேன்." என்று அவர் விளக்கிய பிற்பாடு தான் சிவகாமிக்கும், பாகிரதிக்கும் மூச்சே வந்தது.

"ஐயோ.. நீ சொன்னதுல எங்களுக்கு ஒரு நிமிஷம் உயிரே போய்டுச்சுடி.. என்னடா நாம வளர்த்த நம்ம பிள்ளைங்க போய் இப்படியான்னு ஆகிடுச்சு.." என்று பாகிரதி கூற, சைலஜா அவரைப் பார்த்து இன்னும் சிரித்துக் கொண்டே..

"ஆமாமா.. நாம வளர்த்த பிள்ளைங்க தான்.. ஆனா, அதுங்க நாம கற்பனை செய்யாத அளவுக்கு வளர்ந்துடுச்சுங்க. எப்படியோ சமாதானமாகிட்டாங்க. அத நினைக்கும் போது சந்தோசமா தான் இருக்கு." என்று பதிலளித்தார்.

உடனே இதில் இடை புகுந்த சிவகாமியோ..

"ஏய்.. நம்ம வேண்டுதல் ஞாபகம் இருக்கா?

நம்ம பசங்க, இந்தக் குழப்பமெல்லாம் தீர்ந்து சந்தோசமா வாழ ஆரம்பிச்சா, நாம நம்ம குல தெய்வம் கோவில்ல பொங்கல் வைக்கறோம்னு வேண்டியிருந்தமே? அதுக்கு நல்ல நாள் பார்த்து, சீக்கிரம் போயிட்டு வரணும்.." என்று கூறினார்.

அந்த நேரத்தில் யாரும் எதிர்பாராதபடி அங்கு வந்த ராஜேந்திரனோ.. முகமெல்லாம் சந்தோசமாக,

"அண்ணி என்ன அண்ணி சொன்னீங்க? நாம்ம வந்தியனும், குந்தவையும் சமாதானமாகிட்டாங்களா?

கேட்கவே ரொம்ப சந்தோசமா இருக்கு!

அப்பாடா.. இனி நம்ம குடும்பத்துல எந்த பிரச்சனையும் இருக்காதுன்னு நினைக்கறப்போ ரொம்ப நிம்மத்தியா இருக்கு." என்று பேசிக் கொண்டே போக, பெண்கள் மூவரும் அவரை வித்தியாசமாகப் பார்த்தனர்.

அவர்களது பார்வையின் பொருள் உணர்ந்து கொண்ட ராஜேந்திரனோ சட்டென அமைதியாகி..

"என்ன பார்க்கறீங்க? என்னடா இது இத்தனை நாள் வில்லனா இருந்தவன், இன்னைக்கு ஏதோ ரொம்ப நல்லவன் மாதிரி பேசறானேன்னு யோசிக்கறீங்களா?

நான் நல்லவன் தான் அண்ணி.. ஆனா, அண்ணனுங்கள மதிக்கிற, அவங்க ஒரு சொல் சொல்லிட்டா.. அதுக்கு மறு வார்த்தை பேசறது என்ன? யோசிக்கக் கூட செய்யாத நல்லவன் அண்ணி.

ஆனா, கொஞ்ச நாளாவே மனசுக்குள்ள நாம பண்றது தப்போன்னு யோசிச்சுட்டே இருந்தேன்.

அதான் பாருங்க.. எதேச்சையா நீங்க பேசறது காதுல கேட்டவுடனே என்னையே அறியாம எனக்குள்ள சந்தோஷமும் நிம்மதியும் வந்துடுச்சு.." என்று மகிழ்வுடன் கூறியவரைப் பார்த்து பெண்களுக்கு சந்தோசம் தான்.

இத்தனை நாள் கழித்து ஆண்களில் ஒருவருக்காவது மனம் மாறியிருக்கிறதே என்று அவர்களுக்கு நிம்மதியாக இருந்தது!

அதனூடே ராஜேந்திரன் மேலும் கூறினார்.

"நம்ம குல தெய்வம் கோவிலுக்குப் போகணும்னு சொன்னீங்கள்ல அண்ணி? நானே அய்யர்கிட்ட போய் நல்ல நாள் பார்த்துட்டு வரேன்.. நீங்க கோவிலுக்கு கிளம்பறதுக்கான ஏற்பாடெல்லாம் செய்ங்க." என்றவர், கொஞ்சம் அவர்கள் அருகே வந்து..

"நீங்க அண்ணன்க கிட்ட இப்போதைக்கு நம்ம பசங்க சமாதானமாகிட்டத பத்தி எதுவும் சொல்லாதீங்க.

சும்மா ஏதோ வேண்டுதல்.. கோவிலுக்குப் போகணும்னு மட்டும் சொல்லுங்க.

ஏன்னா.. நம்ம பசங்களுக்காக வேண்டுதல நிறைவேத்த கோவிலுக்குப் போகறேன்னு சொன்னா.. நிச்சயம் அவங்க உங்கள போக விட மாட்டாங்க.." என்றும் அவர் கூறி முடிக்க, பெண்களுக்கும் அது சரி என்றே பட்டது.

இப்படி அவர்களிடம் சந்தோசமாகப் பேசி முடித்துவிட்டு ராஜேந்திரன் கிளம்ப.. மூன்று பெண்களும் அவர் செல்லும் வழியையே ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

"ஏண்டி சைலா.. இந்த உலகம் என்ன திடீருன்னு தலைகீழா சுத்த ஆரம்பிச்சுடுச்சு?" என்று கன்னத்தில் கை வைத்தபடி சிவகாமி கேட்க, சைலஜாவும் தனது வியப்பு மாறாமலேயே..

"ஆமாக்கா.. என்ன இத்தனை வருஷம் கழிச்சு இந்த திடீர் கண் திறப்புன்னு தெரிலையே.." என்றார்.

ஆனால் அதற்கு பாகிரதியோ..

"ம்ம்க்கும்.. நேராவும் சுத்தல.. தலைகீழாவும் சுத்தல.. எல்லா நம்ம மருமகளோட மகிமை.

எப்படி இருந்தாலும் எலெக்ஷன்ல நம்ம குந்தவை தான் ஜெயிக்கப் போறான்னு இவங்களுக்குத் தெரிஞ்சுடுச்சு.

முன்னாடி நம்ம பையன இந்த எலெக்ஷன்ல ஜெயிக்க வச்சு கட்சில இன்னும் நல்ல பேர் வாங்கி பெரிய போஸ்டிங்குக்கு போய்டலாம்னு நினச்சாங்க.. அது நடக்கலைன்னதும் அவங்களுக்குக் கோவம் வந்துச்சு.

இப்போ நம்ம மருமக எலெக்ஷன்ல ஜெயிக்கப் போறான்னு இவங்களுக்கே தெரிஞ்சுடுச்சு போல.. அதனால இப்படி ஒரு ட்ராமா..

இத்தனை வருஷமா அரசியல்வாதிங்க கூட குடும்பம் நடத்தியும் இவங்களோட பாலிடிக்ஸ் உங்களுக்குப் புரிய மாட்டிங்குதே?" என்றார் அவர் சிரித்தபடியே.

உடனே மற்ற பெண்கள் இருவரும்..

"ஓஹோ?.. இது தான் விஷயமா? நாங்க கூட இவருக்காவது கொஞ்சம் புத்தி வந்துச்சேன்னு சந்தோஷப்பட்டோம்..

ஹ்ம்ம்.. எங்க? நம்ம வீட்டு ஆம்பளைங்களுக்குத் தான் எந்த காலத்துலையும் நல்ல புத்தின்றதே வராதே?" என்று பெருமூச்சுடன் ஏக்கமாகச் சொல்லிச் சென்றார் சிவாகாமி.

இவர்களை நினைத்து வருந்துவதை விட, வந்தியனையும், குந்தவையையும் எப்படி சந்தோசமாக வைத்துக் கொள்ளவது என்று யோசிக்க வேண்டும் என்று முடிவெடுத்தபடி மற்ற பெண்களும் அவரவர் வேலையைப் பார்க்க சென்றார்கள்.

இப்படியே சில தினங்கள் வந்தியனும், குந்தவையும் பிரச்சாரத்திற்குச் செல்வதும், அது ஆண்டுப் பரீட்சை சமயமென்பதால், சிறிது நேரம் பள்ளிக்குச் செல்வதுமாக இருக்க, கரிகாலன் ஏதோவொரு முக்கியமான கேஸ் விஷயத்தில் தீவிரமாக ஆழ்ந்திருந்தான்.

அதனால் அவன் சென்னைக்குச் செல்வதும், தனது பெரிய அதிகாரிகளை சந்திப்பதும், வழக்கு பற்றி ஆதாரங்கள் சேகரிப்பதுமென அங்கேயும் இங்கேயும் அலைந்து கொண்டிருந்தான் அவன்.

இப்படியான ஒரு சமயத்தில், சிவகாமி, பார்கிறது, சைலஜா மூவரும் வீட்டில் சொல்லிவிட்டு குலதெய்வ கோவிலுக்குப் பொங்கல் வைக்க அன்று மாலை கிளம்பினார்கள்.

மறுநாள் அதிகாலையிலேயே கோவிலில் பொங்கல் வைத்துவிட்டு, இரண்டு தினங்களில் திரும்பிவிடுவதாகக் கூறிவிட்டுக் கிளம்பியிருந்தார்கள் அவர்கள்.

அது.. இன்னும் சில தினங்களில் தேர்தல் என்ற நிலை! வந்தியன் மறுநாள் காலையில் தீவிர பிரச்சாரத்திற்கு சென்றுவிட, குந்தவையோ பள்ளிக்குச் சென்று தனது மாணவரக்ளின் படிப்பு பற்றியும் விசாரித்துக் கொண்டிருந்தாள்.

என்ன தான் அவளது வகுப்புக்கு மாற்று ஆசிரியர் இப்பொழுது பாடம் எடுத்தாலும், இவளும் அவ்வப்பொழுது போய் அவர்களது முன்னேற்றத்தை கண்காணிப்பது வருவாள்.

அப்படியான ஒரு நாள் தான் அது.

அவள் அப்படி பள்ளியில் இருக்கையில், அந்த மாலையில் காலாவிடம் இருந்து அவளுக்கு அவசரமாக ஒரு அழைப்பு வந்தது.

"குந்தவை.. உன்கிட்ட முக்கியமான ஒரு விஷயம் பேசணும்.. உடனே ஸ்கூல்விட்டு வெளியல வா.." என்று கூற, குந்தவையும் அவன் சொல்லுக்கிணங்க வெளியே வந்தாள்.

வந்தவள், கலாவின் முகம் பார்த்து பதறிப் போனாள்.

"என்னண்ணா? ஏன் முகமெல்லாம் இப்படிக் கறுத்துப் போய் இருக்கு? என்ன பிரச்சனை?

யாருக்கு என்ன ஆச்சு?" என்று அவள் பதட்டத்துடன் கேள்வி மேல் கேள்வியாய் கேட்க அவளை ஒரு கணம் அமைதிப்படுத்தியவன்,

"இங்க யாருக்கும் எதுவும் இல்ல குந்தவை.. ஆனா, நான் சொல்ல வந்த விஷயமே வேற.." என்று கூறிவிட்டு, அதற்கடுத்து அலுங்காமல்.. குலுங்காமல் ஒரு பேரிடியை அவள் தலையில் தூக்கிப் போட்டான்!

அதைக் கேட்டவளது சர்வாங்கமும் நடுநடுங்கிப் போனது!

தலை சுற்றி கீழே விழப்போனவளைத் தாங்கிப் பிடித்த காலாவோ..

"நீ சீக்கிரம் வீட்டுக்குப் போய் வந்தியன்கிட்ட விசயத்த சொல்லி அவன உஷார்படுத்து.

அவனுக்கு போன் போட்டா, போன் நாட் ரீச்சபிள்ல இருக்கு.

எனக்கு இப்போ ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு. நான் அதை சீக்கிரம் முடிச்சுட்டு வந்துடறேன். நீங்க கவனமா இருங்க.

வந்தியன்கிட்ட பேசிட்டு, அடுத்து என்ன செய்யறதுன்னு பார்த்துக்கலாம்." என்று கூறியவன், அப்படியே குந்தவையைத் தனது பைக்கிலேயே அவள் வீட்டில் இறக்கிவிட்டு..

"பத்திரமா இருந்நதுக்கோடா.." என்று கூறிவிட்டு சென்றுவிட்டான்.

காலா, அவளிடம் அந்த விஷயத்தைக் கூறிய பிறகு குந்தவையின் உடலில் உயிரே இல்லை.

கை, கால்கள் எல்லாம் வெடவெடுக்க சிறு நடுக்கத்துடனே மெல்ல நடந்து வீடு வந்தவளை, தடபுடலாக வரவேற்றான் வந்தியன்.

"ஹே குந்தவை.. வா.. வா.. நானே உன்ன ஸ்கூல்ல வந்து கூட்டிட்டு வரலாம்னு நினச்சேன்.

ஆனா, எப்படியும் நீ கிளம்பற நேரம் தான். நான் வரதுக்குள்ள நீயே வீட்டுக்கு வந்துடுவன்னு சித்தப்பா சொன்னாங்களா? அதான் நானும் சரினு விட்டுட்டேன்.

சரி சரி சீக்கிரம் கிளம்பு.. போ.. போய் ஒரு நல்ல புடவையா கட்டிக்கோ. கூடவே நான் உனக்கு போன வாரம் எடுத்து தந்தேனே? அந்தப் பட்டுப் புடவைய பேக்ல எடுத்து வச்சுக்கோ.. போம்மா.. சீக்கிரம் போய் ரெடியாகு.." என்று அவள் பேசுவதற்கு இடமே கொடுக்காமல் பேசிக்கொண்டே போனவன்.. சற்று குரலைத் தணித்து..

"அட உனக்கு எதுவும் புரியலையா?

நம்ம பெருசுங்க கொஞ்சம் நம்ம வழிக்கு வந்துடுச்சுங்க.

நம்ம குல தெய்வம் கோவிலுக்குத் தான நம்ம அம்மாங்கல்லாம் போயிருக்காங்க?

அவங்க நம்மளையும் அங்க வரச் சொன்னாங்களாம். அங்க இருக்கற பூசாரி, உன் கையாலேயே பொங்கல் வச்சா அது இன்னும் விசேஷம்னு சொன்னாராம்.

ராஜேந்திரன் சித்தப்பா.. நம்மள கிளம்ப சொன்னாரு. இதுல இன்னொரு விஷயம் தெரியுமா?

என் அப்பாவும், பெரியப்பவும் இன்னமும் முறுக்கிட்டுத் திரிஞ்சாலும், நம்ம கூட அவங்களும் கோவிலுக்கு வராங்க.." என்று சந்தோசமாக பேசியவனைப் பார்க்க பாவமாக இருந்தது குந்தவைக்கு.

"இல்ல ஆது.. நான் உன்கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்.." என்று அவள் சொல்லி முடிக்கும் முன்னாரே அங்கு வந்த ராஜேந்திரன்..

"என்னம்மா? இன்னும் கிளம்பலையா? நேரமாயிடுச்சும்மா.. நல்ல நேரத்துல நாம கார்ல ஏறிட்டோம்னா நல்லது.

கார்ல போயிட்டே ரெண்டு பெரும் என்ன வேணா பேசிக்கோங்க. நாங்க வேணா உங்க பேச்சு கேட்காதபடிக்கு எங்க காத அடச்சுக்கறோம்.." என்று ஏதோ தமாசாகக் கூறுவதை போல கூறிச் சிரித்தவர், வந்தியனிடம் திரும்பி..

"வந்தியா வா.. நாம ரெண்டு பேரும் சேர்ந்து கார்ல ஜாமானமெல்லாம் ஏத்திடலாம்.

இந்த வேலைக்காரப் பசங்கள கூப்பிட்டா, ஒரு நேரம் பண்ணிடுவாங்க. அப்பறம் நல்ல நேரம் போய்டும். அதுக்கு நாமளே இந்த வேலைய செஞ்சு முடிச்சுடலாம்.." என்று கூறியவர், மீண்டும் குந்தவையிடமே..

"நீ சீக்கிரம் கிளம்பி வந்துடும்மா.. நாம இன்னும் பத்து நிமிஷத்துல கார்ல ஏறணும்." என்று சொல்லிவிட்டு, வந்தியனையும் கையோடு கூட்டிச் சென்றார்.

குந்தவைக்கோ அடிவயிறு காலியாகிவிட்ட உணர்வு!

அவளுக்கு எங்கேயும் செல்ல விருப்பமில்லை. காலா இங்கு வரும் வரை இதே வீட்டிற்குள் பத்திரமாக இருந்துகொள்ள வேண்டும் என்று எண்ணியிருந்தாள் அவள்.

ஆனால் நிலைமை இப்படி ஆகும் என்று அவள் துளியும் நினைக்கவில்லை.

இதில் காலாவிற்கு போன் செய்யலாம் என்றால், அவன் மீட்டிங்கில் இருப்பதால் அவனது அலைபேசியும் அணைத்து வைக்கப்பட்டிருந்தது.

வேறு வழியில்லாமல், கசாப்புக்கு கடைக்குச் செல்லும் ஆட்டைப் போல, கடவுளின் மீது பாரத்தைப் போட்டுவிட்டு அங்கிருந்து சென்றாள் அவள்.

கூடவே வீட்டு சமையலம்மாவிடம், காலா அங்கே வந்தால்.. அவனிடம் தாங்கள் குடும்பத்தோடு குல தெய்வம் கோவிலுக்குச் சென்றிருப்பதாக சொல்லவேண்டும் எனவும், அந்தக் குல தெய்வம் கோவிலின் முகவரியையும் கொடுக்க வேண்டும் எனவும் அவள் சொல்லிவிட்டுக் கிளம்பினாள்.

அப்போதைக்கு அவளால் முடிந்தது அது மட்டுமே..

காரில் பயணம் முழுவதுமே குந்தவை அமைதி காக்க.. வந்தியனும் அவனது அப்பாக்கள் மட்டுமே வளவளத்துக் கொண்டிருந்தார்கள்.

ஆனால்.. வழக்கத்துக்கு மாறான குந்தவையின் அமைதி, வந்தியனை ஏதோ செய்தது.

"ஏன் குந்தவை ரொம்ப அமைதியா வர? உடம்புக்கு எதுவும் முடியலையா?" என்று அவன் கேட்க, குந்தவிக்கு முன்னதாக ராஜேந்திரன் பதிலுரைத்தார்.

"என்னப்பா கேட்கற? நாமெல்லாம் ஆம்பளைங்க.. நம்ம கூட என்னன்னு பேசிட்டு வரும் குந்தவ? அவளோட மாமியாருங்க இருந்தாங்கன்னா நல்லா வார்த்தையாடிட்டு வரும்..

இல்லம்மா?" என்று வந்தியனிடம் கூறிவிட்டு, குந்தவையிடமும் கேட்டார் அவர்.

"அவருக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாத குந்தவை, வந்தியனிடம்..

"எனக்கு கொஞ்சம் தூக்கம் வருது.. நான் வேணா உன் மடில படுத்துகிட்டுமா?" என்று கேட்டுவிட்டு, அவனது மடியிலேயே படுத்துக் கொண்டாள்.

சற்று நேரம் கழித்து வந்தியனோ.. "என்ன சித்தப்பா.. நாம வழி மாறி வந்துட்டமா? வேற ரூட்ல போற ராத்திரி இருக்கு?" என்று கேட்க, அதற்கு ராஜேந்திரனோ..

"ஹ்ம்ம்.. அதே கேள்வி.." என்றார் ஏதோ மர்மமாக.

உடனே வந்தியன், "என்ன சித்தப்பா?" என்றான் புரியாதவனாக.

சட்டென சமாளித்த ராஜேந்திரனோ.. "இது நம்ம பழைய கோவிலுக்கு போற வழிப்பா.

இங்க இருந்து மண்ணு எடுத்துட்டு வந்து தான் நம்மளோட அந்த குல தெய்வ கோவில கட்டினோம். ஆனா, இது தான் புராதனமானது.

ஏதோ பங்காளிப் பிரச்சனையில நாம புதுக் கோவிலுக்கு மாறிட்டோம். ஆனா, வழி வழியா கும்பிட்டது இந்தக் கோவில்ல தான்.

அதனால இங்க பொங்கல் வைக்கணும்ன்றது தான் உன் அம்மாக்களோட ஆசையாம். அதான் இந்தக் கோவிலுக்கு போறோம்." என்று கூறிவிட, அதன் பிறகு சமாதானமாகிவிட்டான் வந்தியன்.

அதன் பிறகு இரவு நெருங்கிவிட்டதால், அந்த காருக்குள் அதற்கு மேல் சத்தமில்லை.

ராஜேந்திரன் காரை ஓட்டும் சத்தம் மட்டுமே ஏதோ ஒரு அமானுஷ்யமாக ஒலித்துக் கொண்டிருந்தது.

அதே வேளையில் உறங்குவதாக கூறிய குந்தவை மட்டும் இன்னும் உறங்காது, நெஞ்செல்லாம் "திக்.. திக்.." என்று அடித்துக் கொள்ள.. வண்டியனின் மடியில் படுத்துக்க கொண்டிருந்தாள்.

ஆனால் வந்தியனோ.. எப்பொழுதோ உறங்கிவிட்டிருந்தான்.

இன்னும் புலரவே இல்லாத அதிகாலை நேரத்தில் சட்டென ப்ரேக்கடித்து நின்றது அவர்களது கார்.

அந்த அதிர்வில் சட்டென கண் விழித்த வந்தியனோ.. "என்ன சித்தப்பா வந்துட்டமா?" என்று கேட்க, ராஜேந்திரனோ..

"ஆமாம்ப்பா.. வந்துட்டோம். ஆனா, இங்க இதுக்கு மேல கார் போகாது. நாம் இந்தப் புதருக்குள்ள நடந்து தான் போகணும்.." என்று கூறிவிட்டு அவர்களை கூட்டிச் சென்றார்.

பெரியவர்கள் முன்னே நடக்க, வந்தியன், குந்தவையை நடுவே விட்டு கடைசியாக வந்தார் ராஜேந்திரன்.

குந்தவையோ பயத்தில் வந்தியனின் கைகளை இறுக்கப் பிடித்துக் கொண்டாள்.

அவளது இதயமோ வெளியில் வந்து விழுந்துவிடும் அளவுக்குத் துடித்துக் கொண்டிருந்தது.

அதை உணர்ந்த வந்தியனோ..

"எதுக்கு இவ்வளவு பயம் உனக்கு? ஹோ.. இருட்டுனாலையா? கவலைப்படாத குந்தவை.. சீக்கிரம் விடிஞ்சுடும். நான் உன் கூடவே இருக்கேன்ல.. பயப்படாத.." என்று கூறியபடி அவளது கரத்தை இருக்கமாகப் பிடித்துக் கொண்டான் அவன்.

சில நிமிடங்கள் கடந்த பிறகு அவர்கள் அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தார்கள்!

நட்ட நடுவில் ஒரு சிறு கோவில்.. சுற்றிலும் பார்த்தால் அடர்ந்த வனமாய் இருந்தது!

ஆனால் அந்தக் கோவிலில் யாரும் இருப்பதற்கான எந்தவொரு அடையாளமும் தெரியவில்லை.

இத்தனை தொலைவு பயணித்து வந்த களைப்பிலேயே வந்தியன் சோம்பலாக.. "என்ன சித்தப்பா.. அம்மா எல்லாம் எங்க இருக்காங்க? நாம எங்க குளிச்சுட்டு கிளம்பறது? இங்க கோவில்ல பார்த்தா யாரும் இல்லையே?" என்றவன்..

"ஓஓஓஓ? ஒருவேள இங்க தான் என் அண்ணன் இருக்கானோ?" என்று கேட்க, குந்தவைக்கு முதுகுத் தண்டு சில்லிட்டது.

அவனை பாதுகாப்பது போல, அவனுக்கு முன்னால வந்து நின்றவள்.. "உனக்குத் தெரியுமா?" என்றாள் அதிர்வுடன்.

அத்தகு அவனோ.. "ம்ம்.. கிளம்பும் போது தான் சார்ஜர்ல இருந்த மொபைல பார்த்தேன். காலா மெசேஜ் பண்ணியிருந்தாரு." என்று குந்தவையிடம் பதிலுரைத்தவன், தனக்கு முன்னாள் நின்றிருந்த குந்தவையை, பின்னால் நகர்த்திவிட்டு..

"எங்கள மாதிரியே என் அண்ணனும், அவன் பொண்டாட்டியும் இங்க வந்து தனியா மாட்டிக்கிட்டாங்க இல்லப்பா?

இப்போ அவங்கள மாதிரியே இங்க எங்கள நீங்க கொன்னு புதைக்கப்போறீங்க இல்ல?" என்று அவன் கேட்க, "ஆமான்டா.." என்று கத்தியபடியே ராஜேந்திரன், அரிவாளை எடுத்துக் கொண்டு அவனை நோக்கி ஓடி வந்தார்.

உண்மை அறிந்திருந்தாலும், கண்ணால் கண்டா காட்சியை நம்ப முடியாத வந்தியன்..

"நீங்க அரசியலுக்காக கொஞ்சம் அப்படி இப்படி நடந்துப்பீங்கனு தெரியும்.. ஆனா, பெத்த புள்ளைங்களையே கொலை செய்யற அளவுக்குப் போவீங்கன்னு நான் எதிர்பார்க்கல சித்தப்பா.." என்று அவனும் கத்தியபடியே ஓடிச்சென்று அவரை தடுத்து, அவர் கையில் இருந்த அரிவாளை பிடுங்கி வீசினான்.

ஆனால் அவனால் ஒற்றையாக அவன் அப்பாக்களை சமாளிக்க இயலவில்லை.

சாதாரணமாக ஒரு ஐந்து பேரையாவது தனியாக சமாளிக்கக் கூடியவன் தான் வந்தியன்.

ஆனால்.. பெற்றவர்கள் இபப்டி ஒரு பாவத்தை செய்துவிட்டார்களே என்ற பச்சாதாபம்.. தானும் இந்தப் போராட்டத்தில் இறந்துவிடுவோமோ என்ற உயிர்பயம்.

அதையும் மீறி, தன்னை நம்பி வந்த, தனது காதலி.. மனைவி.. அவளுக்கும் ஏதாவது பாதிப்பு வந்துவிடுமோ என்ற பதட்டம் எல்லாமுமாகச் சென்று அவனை உறுதியாகச் செயல்பட விடாது தடுத்தன.

அவனால் ஒரு கட்டத்தில் அதற்கு மேல் போராடவே இயலவில்லை. அவன் அதுவரை பெரிதும் பாசம் வைத்த தந்தையை அல்வா அவன் இஇப்போழுது எதிர்க்க வேண்டி இருந்தது?

இறுதியில் குந்தவையும், வந்தியனும் கைகள் இரண்டும் மரத்தோடு கட்டப்பட்டிருக்க, கண்களில் கொலை வெறியோடு அவர்களை நோக்கி முன்னே வந்து கொண்டிருந்தார் ராஜேந்திரன்.

"இந்த வீட்டு மூத்த ஆம்பள பையன்டா.. என் ஆதிடா.. அவனே கீழ் ஜாதிப் பொண்ண காதலிச்சு கல்யாணம் செஞ்சதால கொலை செஞ்சோம்.

சரி வாரிசுக்கு ஒருத்தன் போனா பரவாயில்ல.. இன்னொருத்தன் தான் இருக்கானேன்னு நினச்சா? நீயும் அதே மாறி ஒரு அசிங்கத்தை வீட்டுக்கே கூட்டிட்டு வந்து குடும்பம் நடத்தற..

அதுவும் எப்படி எங்களை எதிர்த்து இவ எலெக்ஷன்ல நிப்பாளாம்.. இவளுக்கு நீ பிரச்சாரம் செய்வியாம்..

த்தூ.. நீயெல்லாம் இந்த குடும்பத்த்துல தான் பிறந்தயா?" என்று மூத்தவரான தர்மேந்திரன் கேட்டுக் கொண்டிருக்க, அவரது இறுதி வாக்கியத்தில் வந்தியனிடம் வந்துவிட்ட ராஜேந்திரன், பெருத்த சத்தத்துடன் தன் கையிலிருந்த அரிவாளை ஓங்க, அப்பொழுது பெருத்த சத்தத்துடன் வந்த துப்பாக்கிக் குண்டொன்று, ஓங்கிய ராஜேந்திரன் கையை முத்தமிட்டுத் துளைத்தது.

"ஆஆஆஆஆ.." வென்ற ராஜேந்திரனின் அலறலுடன், அவர் கையிலிருந்த அறிவாலும் தூரத்த்தில் பறந்து விழ, சுற்றி இருந்தவர்கள் அனைவரும் அதிர்வுடன், கொண்டுவந்த திசையை நோக்கினர்.

பார்த்தால்.. அங்கு ஒரு பெரிய காவல் பட்டாளத்துடன் காலா வந்து கொண்டிருந்தான்.

அவனைக் கண்களில் கண்ணீருடன் குந்தவை பார்க்க..

"என்ன வெறும் இன்பர்மேஷன் மட்டும் தான் கொடுப்பேன்னு நினைச்சியா? உன் அண்ணா போலீஸ்மா.. மறந்துட்டியா?" என்று கேட்டபடியே தனது படைக்கு அவன் சிக்னல் கொடுக்க, மொத்த காவலர்களும் இந்திரன் சகோதரர்களை சூழ்ந்து கொண்டனர்.

அன்றைய க்ளையில் செய்தி சேனல்களுக்கெல்லாம் பெரும் தீனி.

"ஆணவக் கொலை செய்த அரசியல்வாதி!

தந்து மகன் வேற்று ஜாதிக்கார பெண்ணனை மணந்தால், தனது மகனையும், மருமகளையும் கொன்ற MLA தேவேந்திரன்.

அதனது இரண்டாவது மகனும் அதுபோலவே காதல் திருமண செய்ததால் அவரையும் கொலை செய்ய முயன்ற பொழுது கையும், களவுமாக போலீசில் பிடிபட்டார்.

இதில்.. தேவேந்திரனால் ஆணவக் கொலை செய்யப்பட்ட அவரது மூத்த மகன் ஆதி.. அவர்களது குல தெய்வக் கோவிலிலேயே புதைக்கப்பட்டிருப்பது தெரியவந்து பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது." என்று நிமிடத்துக்கு நூறு முறை செய்தி வந்துகொண்டிருந்தது.

கூடவே கட்சி மேலிடம், தேவேந்திரனை உடனடியாக பதவியை விட்டுத் தூக்கியது.

இதில் காலா, குந்தவை மீது குணா என்ற ஒருவன் காதல் பழி போட்டு நடந்த நாடகமும் இந்திரன் சகோதரர்களால் தான் நடந்தது என்று அந்த குனாவையே பிடித்துக் கொண்டு வந்து ஊர் முன்னால் ஒப்புக்கொள்ள வைக்க, அதுவரை குந்தவையை தூற்றிய ஊர் மக்கள், உண்மை அறிந்த பிறகு அவளிடம் மனமார மன்னிப்பு வேண்டினர்.

வீட்டில் வந்தால், வந்தியனின் தாய்மார்கள் மூவரும் அவனைக் கட்டிப்பிடித்து அழுதனர்.

இதில் சிவகாமியோ.. "எனக்குத் தெரியும்ப்பா.. உங்க அண்ணன் செத்துட்டான்னு எனக்கு முன்னாடியே தெரியுமப்பா.. உன் பெரியப்பா ஒரு நாள் குடிச்சுட்டு என்கிட்டே உலரறிட்டாருப்பா..

ஆனா, எனக்கு.. இந்த கோழைக்குத் தான் அத வெளில சொல்லி என் பையன் சாவுக்கு நியாயம் வாங்கி கொடுக்க தைரியம் வரல.." என்று வந்தியனின் நெஞ்சின் மீதே விழுந்து கதற.. அவரது அத்தனை நாள் வேதனை.. அதை உள்ளடக்கிக் கொண்டு எல்லார் முன்னிலையிலும் சாதாரணமாய் இருந்தது எத்தனை ரணமாய் இருந்திருக்கும் என்று புரிந்தது.

அது போலவே இவர்கள் காலஞாண் செய்து கொண்டு வந்த அன்று, அவர் கூறிய.. "பயமா இருக்குப்பா.."விற்கு அர்த்தமும் இப்பொழுது தான் அவனுக்குப் புரிந்தது.

ஆனால் இப்பொழுது பேர்கள் மூவருக்கும் அவர்கள் கணவன்மார்கள் சிறை சென்றதில் திருப்தியே.. எத்தனை பேரை தங்களது அரசியல் ஆதாயத்திற்காக கொலை செய்திருப்பர்கள்?

அதிலும்.. பெற்ற மகனையே.. என் மகன் எத்தனையாய் அவர்களை நம்பியிருப்பான்? அந்த நம்பிக்கை சிதையக் காணுகையில் எத்த்னையை துடித்திருப்பான் அவன்? என்று எண்ணுகையில் அவர்களது இதயத்தில் குருதி தான் வழிந்தது.

இத்தனை நாட்களாய் அடக்கி வைத்த அழுத்தம் சிவகாமிக்கு.. ஆனால் சைலஜாவும், பாகிரதியுமோ.. எங்கேயோ சந்தோசமாக இருந்த தங்களது மகன்.. அநியாயமாக வஞ்சகத்தால் வாழ்ந்திருக்கிறான் என்று எண்ணி மருகினார்கள்.

அவர்கள் தங்களைத் தாங்களே தண்டித்துக் கொள்ளலாமல் பாதுகாக்கும் பொறுப்பு, குந்தவையுடையதானது.

இதில் கடைசியாகத் தேர்தல் நாளும் வந்தது!

அனைத்து மக்களும் சந்தோசமாக தேர்தலில் வாக்கு செலுத்திவிட்டு வர, குந்தவைக்குத் தான் பயமாக இருந்தது.

அந்தச் சூழ்நிலையிலும் அவளது மனநிலையைப் புரிந்து கொண்ட அன்னைகள்,

"பயப்படாதடா.. ஜெயிச்சா.. இந்த மக்களுக்கு உன்னால என்ன நல்லதெல்லாம் செய்ய முடியுமோ அதை எல்லாம் செய்!

கூடவே அடுத்து எப்படி முன்னேறறது.. அடுத்து எப்படி இதுலயே வளர்றதுன்னு யோசி.

ஒருவேளை தோத்துட்டாலும் கவலையில்லை.. இன்னும் அதிகமா உழை! அடுத்த முறை நிச்சயம் வெற்றி கிடைக்கும்.

ஆனா.. வெற்றி மட்டுமே நிரந்தரம் இல்ல.. ஓடணும்.. அது தான் முக்கியம்.

ஜெய்க்கறதும், தோற்க்கறதும் வாழ்க்கைல ஒரு பகுதி தான்.

இப்போ ஜெயிச்சா.. கடவுள் உனக்கு ஒரு நல்ல வாய்ப்பை கொடுத்திருக்கார்ன்னு சந்தோஷப்படு!

ஒரு வேளை தோர்த்துட்டா.. கடவுள் உன்ன ஒரு நல்ல வாய்ப்புக்காக தயார்படுத்தறார்ன்னு சந்தோஷப்படு!

சந்தோசமா இருக்கறதுக்கு ரொம்ப முக்கியம்.." என்று மூவரும் அவளைச் சுற்றி அமர்ந்தபடி அவளைத் தேற்றிக் கொண்டிருந்தனர்.

*****

தேர்தல் முடிந்து ஒரு மாதம் ஆகியிருந்தது.

இந்திரன் சகோதர்களுக்கு தீர்ப்பும் வந்திருந்தது.

மூவருக்கும் மரண தண்டனை விதித்திருந்தார்கள்!

இங்கு வந்தியனும், குந்தவையும் சந்தோசமாக தங்களது அடுத்த தலைமுறைக்காக காத்திருந்தார்கள்!

ஆம்.. குந்தவை கருவுற்றிருந்தாள்!

அன்று காலையில் வந்தியன் தன் வீட்டு வாசலில் ஆணி அடித்துக் கொண்டிருக்க.. அப்பொழுது தனது தமக்கையைப் பார்க்க அங்கு வந்த வானதியோ..

"என்ன மாமா? காலைலயே வேலையெல்லாம் பலமா இருக்கு போலிருக்கு?" என்றபடி வம்பிழுத்தாள்.

அதற்கு வந்தியனோ.. "ஆமாமா.. பலமா தான் இருக்கு.." என்றான் கிண்டலாக.

ஆனாலும் விடாத வானதியோ.. "ஹ்ம்ம்.. அப்பறம் மாமா.. எங்க அக்கா உங்கள் கண் கலங்காம பார்த்துக்கறாளா?" என்றாள் மேலும் வம்பு வளர்க்க முயன்றபடி.

அதுவரை ஆணியடிப்பதிலேயே கவனமுடன் இருந்த வந்தியனோ, வானதியின் இந்தக் கேள்வியில், ஒரு கணம் ஆணி அடிப்பதை நிறுத்திவிட்டு, வானதியைப் பார்த்து முறைத்தான்.

"ம்ம்க்கும்.. உங்க அக்கா என்ன நல்லா பார்த்த்துக்கிட்டாலும்..

இன்னைக்கு காலைல தோசை சுடறேன்னு அதிசயமா அடுப்படிக்குப் போனா.. போனவை, சட்டுன்னு ஒரு வெங்காயத்தை எடுத்து கட் பண்ணினா.. சரி நானும் க்கூட வெங்காய தோசை தான் சுடறாளோன்னு பார்த்தா.. மேடம், அந்த வெங்காயத்தை எடுத்து தோச கல்ல தேய்க்கறா!

ஏய்.. என்னடி செய்யறன்னு கேட்டா.. 'தோச ஒட்டாம வரத்துக்காக வெங்காயம் தேய்க்கறேன்'னு சொல்லறா..

பார்த்ஹ்டியா என் நிலைமைய?

ஆமா.. உங்க வீட்டுல எல்லாம் உங்க அக்காக்கு நீங்க சாப்பாடு ஆக்க சொல்லிக் கொடுக்கலையா?" என்று கிண்டலடித்தான் வந்தியன்.

அது வானதிக்குப் புரிந்தாலும்.. "ஹ்ம்ம்.. எங்க வீட்டுல எங்க அப்பா தான் சமைப்பாங்க.. அதுவும் செம சூப்பரா சமைப்பாரு.. உங்களுக்குத் தான் தெரியுமே?

எத்தனை முறை வந்திருக்கீங்க வீட்டுக்கு? அப்போல்லாம் எங்க அப்பா தான சமைக்கறாரு?

இங்க நீங்க புள்ளத்தாச்சியா இருக்கற எங்க அக்காவை அடுப்படிக்கு அனுப்பி இருக்கீங்க.. ஹ்ம்ம்?" என்று மிரட்டலை கேட்டாள்.

அவளது தோரணையைப் பார்த்து வந்தியனுக்கு சிரிப்பு வந்துவிட்டது.

சத்தமாக சிரித்தபடியே.. "ஹா.. ஹா.. அப்போ உனக்கும் சமைக்காத தெரியாதா?" என்று அவன் கேட்க, வானதியோ.. "ஹ்ம்ம்.. என் வீட்டுல எல்லாம் வாஸ்துப்படி கிட்சனே இருக்கக் கூடாதுன்னு எங்க ஜோஸ்யக்காரரு சொல்லியிருக்காரு.." என்று ஒரே போடு போட, வந்தியனுக்கோ சிரித்து சிரித்து புரையேறிவிட்டது.

அதே வேளையில் கையில் காபி டம்ளருடன் வந்த குந்தவை.. "என்ன என் தங்கச்சிகிட்ட என் தோசைய பத்தி ஏதோ சொன்ன மாதிரி இருந்துச்சு?" என்று கேள்வியுடன் வந்தாள்.

அதற்கு வந்தியனோ.. "அய்யயோ.. இனி உன் சமையல நான் கிண்டலடிக்கவே மாட்டேனம்மா.. உன் தங்கச்சிக்கு நீ எவ்வளவோ தேவல.." என்று முழு சரணாகதி அடைந்துவிட, குந்தவையோ..

"ஹம்ம்.. அந்த பயம் இருக்கட்டும்!" என்றதுடன்..

"ஆமா.. காலங்காதால இங்க எதுக்கு ஆணி அடிச்சுட்டு இருக்கீங்க?" என்று கேட்டாள்.

அதற்கு வந்தியனோ.. "ஹ்ம்ம்.. இந்த ராஜ வந்தியனின் மாதேவியார், குந்தவைன்னு கல்வெட்டு தான் பொறிக்கலாம்னு நினச்சேன்.

ஆனா.. இப்போதைக்கு வெறும் 'குந்தவை (கவுன்சிலர்)' ன்னு மட்டும் நேம் போர்டு மாட்டிட்டு இருக்கேன்." என்றான் விஷமமாக.

அதை சந்தோசத்துடன் வந்து பார்த்த குந்தவையோ.. முகமெல்லாம் பெருமையாக.. "ஹ்ம்ம்.. எலெக்ஷன் ரிசல்ட்டு வந்து ரெண்டு நாள் ஆச்சு.. இப்போ தான் இத மாட்டறீங்களா?" என்று கிண்டலாகக் கூறிக் கொண்டே, அவனது கரத்தை அழுத்தமாகப் பற்றினாள்.

அந்தப் பற்றுதலில் இருந்த காதல் அவள் கண்களில் வழிய.. அதையே விழியெடுக்காமல் வந்தியன் பார்த்ஹ்த்துக் கொண்டிருந்தான்.

அப்பொழுது சட்டென.. "ச்சூ.. ச்சூ.. இந்தக் கொசு தொல்லை தாங்கலப்பா.." என்றுஎங்கோபார்த்தபடிகிண்டலாகவானதிகூற, வந்தியனோ,

"அடேய் இந்த கொசுவ அடிங்கடா.. எப்ப பாரு பூஜ வேள கரடியா இருக்குது.." என்று கூறியபடி அவளைத் துரத்த ஆரம்பித்தான்.

அன்று இரவு, கணவனின் மடியில் படுத்தபடி ஜன்னல் வழி தெரிந்த முழு நிலவை ஆசையாய் பார்த்துக் கொண்டிருந்தாள் குந்தவை.

"நான் இதெல்லாம் நினைச்சே பார்க்கல ஆது.." என்றாள் ஆத்மனைச் சுருக்கி!

"எத?" என்றான் அவள் கணவன் மையலுடன்..

"ஹ்ம்ம்.. எதையோ? இத.. இப்படி உன் மடில நான் படுத்திருக்கிறத.. இந்த வந்தியன் மடில.." என்றாள் வந்தியனின் மீசையைப் பிடித்து இழுத்து.

"ஸ்ஸ்ஸ்.. ஆஆஆ.. வலிக்குதுடி.." என்று அவளது கரத்தை தனது மீசையில் இருந்து விலக்கி விட்டவன், அவளது விரலுக்கு ஒரு குட்டி முத்தத்தை பதித்துவிட்டு..

"நானும் தான் நினைக்கல.. இந்த ராங்கிக்காரிகிட்ட நான் மனச தொலைப்பேன்னு நினைக்கல..

இப்படி உன்ன மடில வச்சு கொஞ்சுவேன்னும் நினைக்கல.. கடைசியா நீ எனக்கு விட்ட சாபமெல்லாம் இப்படி அநியாயத்துக்கு அப்படியே பலிச்சுப் போகும்னும் நினைக்கல.." என்று சிரித்துக் கொண்டே கூறினான் அவன்.

அதைக் கேட்டுத் தானும் சிரித்தபடி.. "ஏய்.. அப்படி என்னடா நான் உனக்கு சாபம் கொடுத்தேன்?" என்றாள் குந்தவை.

அவள் அப்படி கேட்டவுடனே, அவள் முகத்தை தன் புறம் திருப்பிய வந்தியன்.. "என சாபம் விட்டன்னா கேட்கற?

கேட்டுக்கோ.. உன்ன மாதிரி ஒரு பொண்ண நான் கால்ல விழுந்து கல்யாணம் செய்துப்பேன்ன்னு சொன்னியே? அது நடந்துச்சா இல்லையா?"

"ஹ்ம்ம் நடந்துச்சு.."

"அப்பறம் உன் தங்கச்சிகிட்ட நீ என்ன சொல்லிருக்க?

என் குழந்தைக்கு நீ தான் டீச்சரா வருவ.. உன் முன்னாடி நான் கைய கட்டிக்கிட்டு என் புள்ளைக்காக வந்து நிப்பேன்னு சொன்னியா இல்லையா? அதுவும் இப்போ பலிக்கப் போகுது.." என்று அவன் சோகமாக சொன்னதும் சட்டென மேலே எழுந்து அமர்ந்தாள் குந்தவை.

"ஏய்.. இரு இரு.. இந்த விஷயம் நான் ஏன் தங்கச்சிகிட்ட சொன்னனதாச்சே?

உனக்கு எப்படி தெரிஞ்சுது?" என்று அவள் ஆச்சர்யமாகக் கேட்க, வந்தியனோ..

"ஆமா.. இது பெரிய தங்கமலை ரகசியம். நீ ஒரு சில்வண்டு.. உன் தங்கச்சி அத விட சின்ன சில்வண்டு..

நீங்க ரெண்டு பேரும் பேசிக்கற ரகசியம் யாருக்கும் தெரியாதாமா?" என்று கேட்டான்.

"ஓஹோ? அந்த எரும தான் உன்கிட்ட சொல்லுச்சா? காலைல கவனிச்சுக்கறேன் அவள.." என்று பல்லைக் கருவிக்கொண்டு குந்தவை கூற, வந்தியனோ..

"ஹ்ம்ம்.. அவள காலைல கவனிச்சுக்கலாம்.. இப்போ மாமாவ கவனிப்பியாம் வா.." என்று அவளைக் கை பிடித்து இழுத்துத் தன்னோடு இறுக்கிக் கொண்டான்.

மறுநாள் காலையில் சூரியக் கதிர்கள் கொஞ்சம் கொஞ்சமாகத் தன் மேல் ஆனந்தமாய் சுகந்ததை பொழிகையில்.. உறக்கத்திலிருந்து விழிக்கலாமா.. வேண்டாமா என்று வந்தியன் யோசித்த்த்துக் கொண்டிருந்த வேளையில், சட்டென யாரோ அவன் காலைச் சுரண்டுவது போலிருக்க, "ஐயோ.. அம்மா.. யாரு.. யாரு.." என்று அலறியபடி விழித்தான் அவன்.

"ஏய்.. ஷு.. எதுக்குடா இப்போ இப்படி ஆந்த மாதிரி அலர்ற?" என்று அவன் காலைத் தொட்டுக் கும்பிட்டபடி இருந்த குந்தவை கேட்க, வந்தியனுக்கோ பேராச்சர்யம்!

"ஏய்.. என்னடி பண்ற காலங்காத்தால?" என்று அவன் மெல்ல படுக்கையில் இருந்து எழுத்து அமர்ந்தபடியே கேட்க, குந்தவையோ..

"எப்பவுமே நீ தான் என் கால்ல விழறியே.. ஒரு சேஞ்சுக்கு நான் உன் கால்ல விழலாமேன்னு நினச்சேன். அதுக்கு இந்த ஆர்ப்பாட்டம் செய்யறியே நீ?" என்று பதில் உரைத்தாள் அவள்.

"என்னது கால்ல விழுந்தியா? நீயா?

ஏம்மா.. எதுவா இருந்தாலும் சொல்லிட்டு செய்மா.. மனுஷனுக்கு பயந்து வருதுல்ல?" என்று வானதியின் கூற, அவனைக் கடுகடுவென முறைத்தவள்.. முந்தானையை எடுத்து இடுப்பில் சொருகிக் கொண்டே..

"ஓஹோ? சாருக்கு என்னக் கண்டா பயந்து வருதா?" என்று கேட்டபடியே அவன் மடியில் வந்து அமர்ந்தாள்.

அவள் அப்படி அமர்ந்ததும் வந்தியனோ.. "என்னடி.. காலைலயே ஒரு மார்க்கமா இருக்க?" என்று கிசுகிசுப்பாய் கேட்க, குந்தவையோ..

"ஹ்ம்ம் என்ன ஒரு மார்க்கமா இருக்காங்க? சொல்லு என்னக் கண்டு பயப்படறவனா நீ?" என்றாள் சற்றே கோபமாக.

"இவ்ளோ அழகா வந்து மடில உட்கார்ந்துட்டு இப்போ எதுக்குடி செல்லம் கோபப்படற? அப்படி என்ன செய்துட்டேன் மாமா?" என்று அவள் கன்னத்தைப் பிடித்துக் கொஞ்சியபடிய அவன் கேட்க, குந்தவை.. அவனை நன்றாகக் கிள்ளிவிட்டாள்.

"என்ன செய்தேன்னா கேட்ட?

நேத்து நைட்டு நான் தூங்கின பிறகு நீ என்னடா செய்த?" என்று பின்னுமாய் அவள் அதட்ட.. ஒரு அசட்டுச் சிரிப்பு சிரித்தான் வந்தியன்.

"அதுக்குள்ளே படிச்சுட்டியா நீ?" என்று விஷமமாய் அவன் பார்க்க.. குந்தவையோ,

"பார்க்காத.. அப்படி பார்க்காத.. நைட்டு நடந்ததெல்லாம் அப்படியே உன் நோட் புக்குல கவிதையா எழுதியிருக்க நீ?" என்று குற்றம் சாட்டினாள்.

அதற்கு வந்தியனோ.. "ஏய்.. என் நோட்டுல தானடி எழுதினேன்? நான் என்ன எழுதி இன்டர்நெட்டுலயா போட்டேன்?" என்று கேட்க, அவனது கன்னத்தை தனது ஒற்றைக் கையால் அழுத்திப் பிடித்த்த குந்தவையோ..

"ஓஹோ? சார் இன்டர்நெட்டுல கூட போடுவீங்களா? அப்போ இதையும் சேர்த்து போடுங்க.." என்றபடி அவன் இதழ் நோக்கிக் குனிந்தாள்!

சுபம்!

ஹேய் செல்லம்ஸ்.. கதை முடிஞ்சுடுச்சு.. என்ன இவ்வளவு நாள் ENCOURAGE செய்த அத்தனை பேருக்கும் அவ்வளவு நன்றிகள்..


கதை பிடிச்சா உங்க கருத்துக்களையும், விமர்சனங்களையும் மறக்காம என்கூட பகிருங்க.. அது என் தவறுகளை எல்லாம் திருத்திக்க உதவும்.


திரும்பவும் ஒரு முறை எல்லாருக்கும் நன்றிகள்டா!

என்றும் நட்புடன்,

நிலவின் ஊடல்!
 
Status
Not open for further replies.
Top