எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

கதை திரி - கேலேக்ஸி பெண்ணே!

Anu Chandran

Moderator
ஹாய் நட்பூஸ்????

இந்த தளத்தில் ஒரு புது கதையோடு உங்களை மீட் செய்யலாம்னு வந்திருக்கேன்....

இதோ முதல் அத்தியாயம்...
படிச்சிட்டு மறக்காமல் கருத்து சொல்லிட்டு போங்க மக்காஸ்???


ஒளியோடு
இருளில் வந்து
இருளோடு
உறவை கொணர்ந்து
எதனை உணர்த்த
முயன்றாய் பெண்ணே...

இருள் மிரண்டிடும் அடர் சூழ்ந்திருந்த அவ்விடத்தில் கடலோரமாய் கரையொதுங்கிய சிப்பினை போல் கடலோரமாய் அமைந்திருந்திருந்தது அந்த இரண்டு மாடி கெஸ்ட் ஹவுஸ்.
கடலைகளின் ஆர்பரிப்பும் காற்றின் சங்கமும் சேர்ந்து இருளின் மிரட்சிக்கு வலு சேர்த்தபடியிருக்க அதன் ஆக்கிரமிப்பு பிற அரவங்களை அடையாளந்தெரிந்திடாமல் மறைத்திருந்தது.

அது தனியார்க்கு சொந்தமான கடற்கரைப்பகுதியென்பதால் ஆள் நடமாட்டத்திற்கான அடிப்படை தடயம் கூட எங்கும் தென்படவில்லை.

கடற்கரை பகுதியென்றபோதிலும் பத்து கிலோமீட்டர் தொலைவிற்கு அங்காங்கே ஒரு சில வீடுகள் மட்டுமே இருந்தது.
செல்வந்தர்க்களுக்கான பொழுதுபோக்குக்காக அமைக்கப்பட்ட பண்ணை வீடுகளே அங்கு அதிகமாக இருந்தபடியால் மக்கள் நடமாட்டமும் மட்டுப்பட்டேயிருந்தது.

அவ்விடத்தில் அமையப்பெற்றிருந்த அதி நவீன வசதிகள் கொண்ட மாளிகையின் ஹாலில் அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்தான் மாறன்.

ஹாலிருந்த விளக்குகளனைத்தும் பகல் போன்று ப்ரகாசத்தை அள்ளி வழங்கிக்கொண்டிருக்க ஹாலை நிறைத்திருந்த ஏ.சியின் குளிமையையும் மீறி வழிந்து கொண்டிருந்த வியர்வையை கூற துடைக்கத்தோனாது மதுவை காலி செய்து கொண்டிருந்தான் அவன்.

கண்ணாடி மேசையின் மீது அடுக்கப்பட்டிருந்த மது போத்தல்களும் விதவிதமான சைட் டிஸ்சும் அம்மேசையை மொத்தமாய் ஆக்கிரமித்திருக்க சுவற்றோடு பொருத்தப்பட்டிருந்த எல்.ஈ.டி தொலைக்காட்சி அநாதையாய் கதறிக்கொண்டிருந்தது.

ஆனால் சுற்றுப்புறம் எதுவும் மாறனின் கவனித்தில் பதித்தாக தெரியவில்லை.
மேல் சட்டை அவன் அமர்ந்திருந்த சோபாவின் மீது கிடக்க அவன் எடுத்து வந்திருந்த பை கேட்பாரின்றி தரையில் அநாதையாக கிடந்தது.

அவனின் ஷூ, கார் சாவி என்று அனைத்தும் எட்டுத்திசையிலும் சிதறிக்கிடக்க இப்போது அவற்றுடன் சேர்ந்துகொண்டது காலி மதுபோத்தல்கள்.

மேசை மீதிருந்த இன்னொரு போத்தலை காலி செய்த மாறன் சோஃபாவில் ஒய்யாரமாய் சாய்ந்து கொண்டான்.
உடல் ஒய்யாரமாயிருந்த போதிலும் மனமோ அளவில்லா அலைப்புறுதலில் அவதிப்பட்டுக் கொண்டிருந்தது.

கண்கள் மேல் கூரையில் நிலைகுத்தியிருக்க அவன் நினைவுகளோ அந்த கசப்பான சம்பவத்தை நோக்கி சென்று மீண்டது.
மீண்டும் அதன் தாக்கத்தில் சிக்கியவனுக்கு தலை வலிக்க அதனை பறக்கும் வலி தெரியாது எதிரே தெரிந்த கண்ணாடிபோத்தல்களை தூக்கி எறிந்தான்.

தரையில் கிடந்த சிதறல்களை கண்டவனது மனம் தூர விழுந்து சிதறி உருவம் மறைந்து நின்று அக்கண்ணாடிப்போத்தல்கள் போல் அந்த கசப்பான நினைவுகளும் மாறாதா என்று ஏங்கியது.

மறக்க நினைப்பது கூட அச்சம்பவத்தை மீண்டும் அவனுக்கு நினைவு படுத்த முழு போத்தலை எடுத்து வாயில் சரிக்கத்தொடங்கினான்.

போத்தல் பாதி காலியாகிருக்க அப்போது சரியாக விளக்குகள் அனைத்தும் அறிவிப்பின்றி அணைந்துபோனது.

இத்தனை நேரம் ஏ.சியின் அரவணைப்பில் இருந்தவனுக்கு இப்போது உடல் வெளி உஷ்ணத்தை உணர்த்திட கோபத்தில் யார் யாரையோ திட்டத்தொடங்கினான்.

தட்டுத்தடுமாறி சோபாவின் மீதிருந்த மேல் சட்டையை தேடி எடுத்தவன் தள்ளாடியபடியே எழுந்து நின்று தன் போனை தேடினான்.

இருளாயிருந்த போதிலும் திரைச்சீலையை மீறி உள்ளே விழுந்த நிலவொளி அந்நேரத்தில் சிறு உதவியாகிட போதையின் பிடியிலும் தன் மொபைலை சரியாக தேடி எடுத்தான்.
ஈ.பிக்கு அழைக்க அழைப்போ எடுக்கப்படாமலிருக்க எரிச்சலுடன் வீட்டிலிருந்து வெளியேறி கடற்கரைக்கு வந்தான்.

கடற்கரையின் ஒரு புறமாக கண்ணை கூசும் வெளிச்சம் குவிந்திருக்க அது என்னவென்று அறிவதற்காக முன்னேறியவனின் கால்கள் நிமிடத்திற்கு நிமிடம் தள்ளாட்டத்தை அதிகரித்தது.

முகத்தில் மோதிய உப்புக்காற்று அவன் போதையை அதிகரிக்க ஒரு கட்டத்தில் நிற்கமுடியாமல் கடல்மண்ணில் மட்டையானான்.

மறுநாள் காலை மெதுவாக கண்விழித்தான் மாறன்.

எப்போதுமே அதிகாலை நான்கு மணிக்கு எழுத்திடும் வழக்கமுடையவன் இன்று மதுவின் தாக்கத்தால் சற்று தாமதமாக எழுந்தான். ஆனால் அவனுக்கு கண்களை பிரிக்கவே கஷ்டமாக இருந்தது.

கட்டிலில் குப்புற கவிழ்ந்திருந்தவனின் விழிகள் விழிக்க மறுக்க வலக்கை பெட்டை தடவியது.

அவன் தேடிய பொருள் சிக்கிடமால் வேறேதோ கையில் தட்டுபட அதை மேலும் ஆராய முயன்றவர் திடுக்கிட்டு தலையை திருப்பி பார்த்தான்.

அவன் பார்த்த திசையில் ஒரு பெண் படுத்திருக்க பெட்சீட்டை வாரி சுருட்டிக்கொண்டு எழுந்து அமர்ந்தான்.

தலைவலி ஒருபுறம் படுத்த அருகே படுத்திருந்த பெண்ணின் வருகையோ குழப்பத்தை உண்டாக்கி மேலும் படுத்தியது.

சுற்றும் முற்றும் ஆராய்ந்தவனுக்கு ஏதும் தவறாக தென்படாது போக தன் சட்டையை தேடினான் மாறன்.

ஆனால் அந்தோ பரிதாபம் அவன் சட்டை இப்போது அப் பெண்ணின் மேலணியாகியிருந்தது.

என்ன செய்வதென்று தெரியாது குழம்பியவன் அப்பெண்ணை எழுப்ப முயன்றான்.

“ஏய் யார் நீ??? எழுந்திரு...ஏய்.. உன்னை தான்... எழுந்திரு...” என்று குரல் கொடுக்க அப்பெண்ணோ அசைவேனா என்ற ரீதியில் படுத்திருந்தான்.

அசைவின்றி படுத்திருந்தவளின் செயல் மாறனுள் சந்தேகத்தை கிளப்ப அப்பெண்ணை தொட்டு எழுப்ப கையை அருகே கொண்டு சென்ற நொடி சட்டென்று கண்விழித்தாள் அப்பெண்.

கண்விழித்த மறுநொடி எழுந்து அமர்ந்த அப்பெண் மாறனை பார்த்த்தாள்.
அவளின் திடீர் செயலில் திடுக்கிட்ட மாறனுக்கு பேசவேண்டுமென்று உணரவே சில கணங்களானாது.

தன்னிலை மீண்டவன்
“ஏய் யார் நீ? எப்படி வீட்டுக்குள்ள வந்த? உன்னை யாரு உள்ள விட்டா? என்ன தைரியம் இருந்தா என் ரூமுக்குள்ளயே வந்திருப்ப? ஏய் எந்திரி.” என்று மாறன் அப்பெண்ணை விரட்ட முயல அப்பெண்ணோ அப்பாவியாக அவனை பார்த்தபடியே ஏதும் பேசாமல் அமர்ந்திருந்தாள்.

அவளின் அமைதி மாறனின் பொறுமையை சோதிக்க
“ஏய் முதல்ல எந்திரி. இப்போ நீ வெளிய போகலன்னா போலிஸை கூப்பிடுவேன்.” என்றவனின் வார்த்தைகள் அவளின் காதில் விழுந்ததாக தெரியவில்லை.
ஒரு நிமிடம் அவனை உறுத்து பார்த்தவள் கண்களை மூடிக்கொண்டு மீண்டும் கட்டிலில் சரிந்தாள்.

சட்டென்று கட்டிலில் சரிந்தவளின் செயலில் எரிச்சலடைந்தவனை தலைவலி படுத்தியெடுக்க குளித்துவிட்டு வந்து ஏதும் செய்யலாமென்று முடிவெடுத்தவன் மாற்றுடையோடு குளியலறைக்குள் புகுந்தான்.

குளித்துமுடித்து உடைமாற்றி வந்தவனது கண்கள் வெறுமையாயிருந்த கட்டிலையே கண்டது.

“எங்க போயிட்டா அந்த பொண்ணு?” என்ற யோசனையுடன் அறைமுழுவதும் தேடியவன் ஹாலுக்கு வர அப்பெண்ணோ சர்வசாதரணமாக சுவற்றோடிருந்த டிவியை பெயர்த்து எடுத்து சுற்றும் முற்றும் திருப்பி ஆராய்ந்துக்கொண்டிருந்தாள்.

அதை கண்டு பதறியவன்
“ஹேய் என்ன பண்ணுற நீ? டீவியை கீழ வை...”என்று கத்தியபடியே வந்தவன் அவள் கையிலிருந்த டீவியை பிடிங்கி தரையில் வைத்துவிட்டு சுவற்றை பார்த்தான்.

அது அங்காங்கே சில இடங்களில் உடைந்திருக்க அதுவே அவளின் பலத்தை காட்டிட போதுமானதாக இருந்தது.

“ஏய் நீ...” என்று திரும்பியவனின் பார்வையில் அப்பெண் சிக்கவில்லை.

“எங்க இவளை காணல.. இப்போ எதை பேர்த்து எடுக்கப்போறானு தெரியலையே.” என்று உள்ளுக்குள் புலம்பியபடியே அப்பெண்ணை தேடிச் சென்றான் மாறன்.

இம்முறை அவன் நம்பிக்கையை பொய்யாக்குவது போல் பழக்கூடையை பரிசோதித்துக் கொண்டிருந்தாள் அப்பெண்.

மேலாக இருந்த ஆப்பிள் பழத்தை எடுத்தவள் அதனை சுற்றும் முற்றும் ஆராய்ந்தாள்.

பின் அதன் மேற்புறத்தை விரல்களால் தட்டுப்பார்த்துவிட்டு ஏதோவொரு யோசனையுடனே அதனை முகர்ந்து பார்த்தாள்.

ஆனால் ஏனோ அது அவளுக்கு திருப்தி கொடுக்கவில்லை போலும். ஆப்பிள் பழத்தை மேஜை மீது வைத்தவள் கையுயர்த்தி கராத்தே ஸ்டன்ட் செய்வது போல் கையையுயர்த்தி பழத்தின் மீது வைக்க பழம் இரண்டு துண்டானது.
அதை தூரத்திலிருந்து பார்த்திருந்த மாற்றவோ வெளிறிப்போய் நின்றிருந்தான்.

அவளின் அசாத்திய சக்தியை கண்கூடாக கண்டவனுக்கு அவளை நெருங்க பயமாயிருந்தது.

ஆனால் அவளை இங்கிருந்து முதலில் அனுப்பவேண்டுமென்று எண்ணிய வன் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அவளை நெருங்கினான்.

மாறன் அவளருகே வரும் போது இரண்டு துண்டு ஆப்பிளை இரண்டே வாயில் இரண்டு கணங்களில் உண்டுமுடித்திருந்தாள்.

அதையும் கண்டவனுக்கு இவள் சாதாரண பெண்ணல்ல என்று புரிந்தது.

“ஹலோ யாருங்க நீங்க? உங்களுக்கு என்ன வேணும்? எப்படி வீட்டுக்குள்ள வந்தீங்க?” என்று மாறன் கேட்க அப்பெண்ணோ சற்று நேரம் அவனையே குறுகுறுவென்று பார்த்துவிட்டு

“பசி” என்று கூற அவனுக்கோ ஏதும் புரியவில்லை.

சற்று கணங்களிலேயே அவளுக்கு பசிக்கிறதென்று புரிந்துகொண்ட மாறன் அவளை ஒரு பார்த்துவிட்டு ப்ரிஜ்டை திறந்து பாஸ்தாவை எடுத்தவன் அதனை மைக்ரோவில் வைத்து சூடு பண்ணி அவளிடம் நீட்டினான்.

அவன் நீட்டியதை வாங்கி அப்பெண் அத்தட்டை ஆராய்ந்து விட்டு பாஸ்தாவை முகர்ந்து பார்த்தாள்.

பின் பாஸ்தாவை அவள் கையில் எடுக்க முனையும் போது அவளிடம் ஸ்பூனை நீட்டிய மாறன்

“இதுல சாப்பிடுங்க.” என்று கூற அதையும் உணவுக்கு செய்ததை போல் பரிசோதிக்க, அவளை விசித்திரமாக பார்த்த மாறன்

“அது ஸ்பூன்ங்க. அது சாப்பிடுறதுக்கு யூஸ் பண்ணுறது.” என்றவனுக்கு அப்பெண்ணின் ஒவ்வொரு நடவடிக்கையும் விசித்திரமாக இருந்தது.

அந்த ஸ்பூனை ஆராய்ந்தபடியிருந்தவளிடமிருந்த தூர வந்தவன் மொபைலில் தன் நண்பன் விதார்த்தை அழைத்தான்.

இரண்டே ரிங்கிட் அழைப்பு எடுக்கப்பட
“மாறா எங்கடா இருக்க? நைட்டு எத்தனை தடவை உனக்கு கால் பண்ணேன் தெரியுமா? சரி இப்போ நீ எங்க இருக்கனு சொல்லு நான் உடனே வரேன்.” என்றவனிடம் மாறன்

“உன்ன வரச்சொல்ல தான் கால் பண்ணேன். நீ உடனே கிளம்பி என்னோட பார்ம் ஹவுசுக்கு வா. லேட் பண்ணாத.” என்றவன் அதற்கு மேல் விதார்த்திற்கு பேச இடம் கொடுக்காது அழைப்பை துண்டித்துவிட்டான்.

தாமதியாது கிளம்பியவனுக்கு அங்கு இருக்கும் விசித்திரம் பற்றி தெரிந்தால்?
 

Anu Chandran

Moderator
அறியாத
இவளின் அடையாளம்
புரியாததாய்
மறைந்துள்ள
ரகசியமாம்..

வித்தார்த்திற்கு அழைத்து விட்டு மீண்டும் கிச்சனிற்கு வந்த மாறனுக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது.

அவன் கொடுத்து சென்ற ஸ்பூனை கடித்திடும் முயற்சியில் இறங்கியிருந்தாள் அப்பெண்.

பதறிய படியே அவளருகே சென்ற மாறன் அவளிடமிருந்து ஸ்பூனை பறிக்க முயல அவனால் அது முடியாமல் போனது.

அவளின் பிடி வழமைக்கு மாறான உறுதியோடு இருக்க
“ஏய் என்ன பண்ணுற நீ? முதல்ல அதை விடு...” என்று கத்த அப்பெண்ணோ பிடியை தளர்த்தாது அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

“உனக்கு இது பத்தலைனா வேற தரேன். ஆனா இந்த ஸ்பூனை விடு.”என்று அவளிடமிருந்து பிடுங்க கடுமையாய் போராட அப்பெண்ணோ அவன் எதிர்பாரா நேரத்தில் பிடியை விட்டுவிட ஸ்பூனோடு தூர விழுந்தான் மாறன்.

ஆனால் அப்பெண்ணோ ஏதும் நடக்காதது போல் கோப்பையிலிருந்த பாஸ்தாவை கைகளால் எடுத்து உண்ணத் தொடங்கினாள்.

கீழே விழுந்த மாறன் எழுந்து அப்பெண்ணை விசித்திரமாக பார்த்தபடியே அங்கிருந்து வெளியேற முனைந்தான்.

ஆனால் திடீரென்று மனதில் அப்பெண் கோப்பையை கடித்து சாப்பிட்டுவிட்டால் என்று தோன்ற அவனின் நடை தடைப்பட்டது.

அவள் செய்வதற்கு வாய்ப்புள்ளதென்று அவன் மூளை எச்சரிக்கை அங்கேயே அமர்ந்து அவளை கவனிக்கத்தொடங்கினான்.

அந்த முழு கோப்பையையும் காலி செய்தவள் கோப்பையில் ஒட்டியிருந்த சிறு துகள்களை கூட விட்டுவைக்காமல் நாக்கால் வழித்து எடுக்க இதை பார்த்திருந்த மாறனுக்கு தான் குமட்டிக் கொண்டு வந்தது.

வாஸ் பேசினை நோக்கி ஓடியவன் ஒரு குடம் வாந்தி எடுத்து முடித்தபின்பே ஓய்ந்தான்.

நேற்றிரவு அளவுக்கதிகமாய் குடித்தது, அளவு தெரியாமல் சாப்பிட்டதென்று அவன் வயிற்றில் தங்கியிருந்த அனைத்தும் இப்போது வெளியேறியிருந்தது.

வாந்தி எடுத்து முடித்தவனுக்கு அப்போது தான் பாதாள சிறையிலிருந்து மீண்ட உணர்வு.

வாந்தி எடுத்து ஓய்ந்துபோய் கண்மூடி அமர்ந்திருந்த மாறானது அருகே வந்த அப்பெண் அவனை குறுகுறுவென்று பார்த்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

திடீரென்று உடல் ஈரமாவதை உணர்ந்த மாறன் கண்விழித்து பதறி எழ அவன் முன்னே கண்ணாடி கோப்பையோடு நின்றிருந்தாள் அப்பெண்.

உள்ளே எழுந்த கோபத்தை கட்டுப்படுத்திக்கொண்டவன் பல்லை கடித்தபடியே ஏதோ சொல்வதற்குள் அழைப்பு மணி சத்தம் கேட்டது.

தலையை குலுக்கி தன்னை சரி செய்துகொண்ட மாறன் தடுமாறி எழுந்து கதவை திறக்க சென்றான்.

உள்ளே வந்த விதார்த் வீடு இருந்த நிலைமையை கண்டு சோர்ந்திருந்த மாறனை திட்டத்தொடங்கினான்.

“டேய் என்னடா இது? இராத்திரி முழுக்கா குடிச்சிட்டு தான் இருந்தியா? இப்படி குடிச்சா உடம்புக்கு என்னடா ஆகும்? ஒரு சின்ன விஷயத்தால உன் வாழ்க்கையையே அழிச்சிக்க போறியா? இவ்வளவு கோழையா நீ?” என்று விதார்த் பேச மாறனோ

“டேய் வெண்ண.. எந்த நேரத்துல அட்வைஸ் பண்ணனும்னு உனக்கு ஒரு விவஸ்தை இல்லையா? பேசுறான் பத்து பக்கத்துக்கு...” என்று திட்டியபடியே மாறன் சோபாவில் அமர குழப்பத்துடன் அவனை நெருங்கினான் விதார்த்.

ஏதோ சரியில்லையென்று புரிந்துகொண்ட விதார்த்
“என்னடா ஆச்சு? ஏன் நீ இப்படி நனைஞ்சிருக்க?” என்று விசாரித்தபடியே சுற்றுப்புறத்தை ஆராய ஜன்னலருகே ஒரு பெண் உருவம் தெரிய பயத்தில் அலறினான் விதார்த்.

“அங்க... அங்க... ஏதோ நிக்கிதுடா.. அதுவும் பொண்ணு ரூபத்துல...” என்று தன்னை நெருங்கியவனை பிடித்து தள்ளிய மாறன்

“டேய் சீ.. தள்ளிப்போ.. அது பொண்ணு தான்.. எங்க இருந்து வந்தானு தெரியல. போய் நீயே விசாரி...” என்று கூற அவனையும் அப்பெண்ணையும் மாறி மாறி பார்த்த விதார்த்

“அவளா வந்தாளா இல்லை நீ போன் பண்ணி கூப்பிட்டியா?” என்று சந்தேகமாக கேட்க அவனை உஷ்ணப்பார்வை பார்த்த மாறன்

“என்னை பார்த்தா உனக்கு எப்படி தெரியிது?” என்று கேட்க விதார்த்தோ

“அதுக்கில்ல. இத்தனை நாள் அளவா குடிச்சிட்டு நேத்து அளவுக்கதிகமாக குடிக்கலையா... அதே மாதிரி இதுவும் இருக்குமோனு...” என்று இழுத்தவனை

“மரியாதையா எழுந்து போயிடு. இல்லைனா அடிப்பட்டே செத்திடுவ.” என்றவனின் குரலில் இப்போது நிஜ மிரட்டல் இருந்தது.

மெதுவாக எழுந்து அப்பெண்ணருகே வந்த விதார்த் அவளை முழுதாக ஆராய்ந்தான்.

ஐந்தடிக்கு சற்று குறைவான உயரம், வழமைக்கு மாறான வெண்மை தேய்ந்த முகம், ஆளை ஊடுருவும் சக்தி வாய்ந்த சற்று அகண்ட விழிகள், மெல்லியான தேகம் என்று உடலமைப்பு கச்சிதமாக இருக்க அதனை பகுதியாய் மறைந்திருந்தது மாறனின் நீலநிற மேற்சட்டை.

சோலை காட்டு பொம்மைக்கு சட்டையிட்டது போல் அம்மேற்சட்டையோ அவளின் தொடை வரை நீண்டு தொங்கிக்கொண்டிருந்தது.

அதை பார்த்தவனுக்கு ஒரு புறம் சிரிப்பாகவும் மறுபுறம் பாவமாகவும் இருந்தது.

அவளை அளவிட்டபடியே அருகில் வந்தவன்
“யாருமா நீ? எப்படி இங்க வந்த?” என்று கேட்க அப்பெண்ணோ விதார்த்தை குறுகுறுவென்று பார்த்தாளே தவிர வேறு ஏதும் பேசவில்லை.

அவள் பேசமாட்டாளென்று புரிந்துக்கொண்ட விதார்த்

“என்னடா இவ ஏதும் பேச மாட்டேங்கிறா?” என்று மாறனிடம் கேட்க

“என்கிட்ட கேட்டா எப்படி? நீ தான் டாக்டராச்சே... ஏதாவது பண்ணு” என்று கூற இப்போது மாறனை முறைத்தான் விதார்த்.

“டேய் நான் வெட்டனேரியன்டா. நான் என்னடா பண்ண முடியும்?” என்று கேட்க மாறனோ சற்றும் பரிதாபப்படாமல்

“அது எனக்கு தெரியாது. சீக்கிரம் அவளை இங்க இருந்து பேக் பண்ணு”என்றவனின் எண்ணமே விதார்த்திற்கும்.

ஆனால் எப்படி அனுப்புவது? அப்பெண்ணை பார்த்தாலும் பாவமாக இருந்தது. ஆனால் பேசக்கூட மறுக்கும் பெண்ணை தம் பொறுப்பில் வைத்திருப்பது சரி தானா என்று யோசித்தவனுக்கு குழப்பமாக இருந்தது.

யோசித்தபடியே திரும்பியவனின் எதிரே நின்றிருந்தாள் அப்பெண்.

அவளை கண்டு ஓரடி பின்னே குதித்தவன்
“ஷிட்... நல்லா பயந்துட்டேன். இப்படியா பின்னாடி வந்து நின்று பயமுறுத்துவ?” என்றவனுக்கு அப்போது தான் ஒரு விஷயம் புலப்பட்டது.

அதை பரிசோதித்து பார்க்க எண்ணியவன் தனக்கு தெரிந்த சைகை மொழி மூலம் அப்பெண்ணுடன் பேச முயன்றான்.

ஆனால் அந்தோ பரிதாபம் அவன் முயற்சி விபரீதமாக முடிந்தது.

அவன் சைகை செய்ய அப்பெண்ணோ அவன் கையை முறுக்கி நிலத்தில் தள்ளினாள்.

தரையில் விழுந்த விதார்த் ஐயோ அம்மாவென்று கதற அவனருகே ஓடிவந்தான் மாறன்.

விதார்த்தை எழுந்து அமரவைத்தவன்
“என்னடா பண்ணித்தொலச்ச?” என்று விசாரிக்க

“டெப் அன்ட் டம்ப்பானு செக் பண்ண சைன் லங்குவேஜில பேச ட்ரைபண்ணேன்டா. ஆனா அந்த பொண்ணு டிபென்ஸ் அட்டாக் பண்ணி என்னை கீழ தள்ளிடுச்சுடா.” என்று விதார்த் வலியில் முணங்கியபடியே கூறினான்.

மாறனுக்கும் என்ன செய்வதென்று புரியாது போக ஏதோ யோசித்தவன்
“சரி அந்த பொண்ணு இங்கேயே இருக்கட்டும். வேற ஏதும் பிரச்சினை வந்தா நான் பார்த்துக்கிறேன். “ என்றவன் விதார்த்தை தூக்கி சோஃபாவில் அமரவைத்து விட்டு தன் மொபைலை எடுத்து வேலையாட்களுக்கு தகவல் சொன்னவன் அந்த பெண்ணிற்கு சில ஆடைகளை ஆன்லைனிலேயே ஆர்டர் செய்தான்.

அவன் போனில் வேலைகளை முடித்துவிட்டு திரும்பும் போது மீண்டும் அவனெதிரே நின்றிருந்தாள் அப்பெண்.
இப்போது புருவத்தை உயர்த்தி பார்த்தவன்
“என்ன வேணும்?” என்று கேட்க

“பசி” என்று அப்பெண்ணும் பதில் கூற இப்போது சிரித்து விட்டான் மாறன்.

அவளை பார்த்தநொடியிலிருந்து அவள் வாய்வழியே அவன் கேட்ட ஒரே வார்த்தை இது மட்டுமே.

தலையை குலுக்கி கொண்டு சென்றவனை பார்த்த விதார்த்
“டேய் அந்த பொண்ணு டெப் அன்ட் டம்ப் இல்லையா டா?” என்று குழப்பமாக கேட்க

“நான் உன்கிட்ட அப்படி சொன்னேனா?” என்று கேட்டுவிட்டு அப்பெண்ணிற்கு உணவு தயார் செய்ய கிச்சனிற்கு சென்றான் மாறன்.

அவன் பின்னேயே அப்பெண்ணும் செல்ல விதார்த்தும் அவர்கள் பின்னே சென்றான்.

மூவருக்கும் சேர்த்து மேகி தயாரித்த மாறன் அதனை மூன்று கோப்பைகளில் நிரப்பிவிட்டு மேசையில் வைத்தான்.

இப்போது அப்பெண் அவளே ஸ்பூனை எடுத்து நூடில்ஸை சாப்பிடத் தொடங்கினாள்.

அதை பார்த்த விதார்த்திடம் சற்றும் நடந்த அனைத்தையும் கூறிமுடித்தான் மாறன்.

“ஸ்பூனு பத்திரம்டா.” என்றவன் முதுகில் ஒன்று போட்ட மாறன்

“எனக்கென்னமோ இவ சாதாரண மனிஷியில்லைனு தோனுது. இவகிட்ட ஏதோ வித்தியாசம் இருக்குடா... நினைச்சி பார்க்க முடியாத அளவுக்கு ஸ்ரோங்கா இருக்கா.” என்றவனது வார்த்தைகளிலிருந்த உண்மை விதார்த்துக்கு நன்றாகவே புரிந்தது.

சற்றுமுன் அவளின் பலத்தை அனுபவித்தவனாயிற்றே..

“நாம வேணும்னா யாராவது டாக்டரை வரச்சொல்லட்டுமா?” என்று கேட்க மாறனுக்கு அந்த யோசனை பிடித்திருந்த போதிலும் ஏனோ தயக்கமாக இருந்தது.

“மறுபடியும் ஒரு தடவை அந்த பொண்ணு கிட்ட பேசி பார்க்கிறியா?” என்று மாறன் கேட்க

“அடேய் ஏன்டா உனக்கு இந்த கொலைவெறி? மறுபடியும் எனக்கு டின்கட்ட பிளான் போடுறியா? உடம்புல தெம்புல்ல ராசா.” என்று விதார்த்தோ ஜகா வாங்க தலையிலடித்துக்கொண்டான் மாறன்.

“பேசச்சொன்னப்போ சரியா பேசாமல் கண்டமாதிரி டான்சாடுனா யாருனாலும் இப்படி தான் பண்ணுவாங்க.” என்று மாறன் கூற

“ஆஹான்... சார் தான் தைரியமான ஆளாச்சே... நீங்களே பேசுங்க...” என்று விதார்த் மறுபடியும் பந்தை அவனிடமே தூக்கிப்போட மாறனுக்கும் வேறு வழியிருக்கவில்லை.

அப்பெண்ணை நெருங்கிய மாறன்
“இங்கப்பாருங்க. நீங்க யாரு ஏதுனு உங்க டீடெயில்ஸ் சொன்னா தான் எங்களுக்கு உங்களுக்கு தேவையான உதவியை நாங்க பண்ண முடியும்.” என்று மாறன் கூற அப்பெண்ணோ மாறனை ஒருமுறை குறுகுறுவென்று பார்த்துவிட்டு

“தானோஸ் தினாய் திதா அஷிஹாய் சம்ரு ரியாஹி.” என்று கூற இப்போது முழிப்பது ஆடவர் இருவரின் முறையானது.

விதார்த்தோ
“என்னடா பெயரை கேட்டா அவென்ஜர்ஸ் கேரெக்டர்ஸ் பெயரெல்லாம் சொல்றா?” என்று விதார்த் கேட்க

“இது என்னோட பெயர்.” என்று கேட்ட அவளின் குரலில் இருவரும் ஒரு சேர திரும்பி பார்த்தனர்.

விதார்த்தோ ஒருபடி மேலே சென்று
“எந்த பிளானட்ல இப்படியெல்லாம் பெயர் வைக்கிறாங்க?” என்று அவன் கேலியாக கேட்க அப்பெண்ணோ சீரியஸாக

“பூமிக்கிரகத்தில் இருந்து 23458769 பில்லியன் தொலைவிலுள்ள அரோத்மன் சியாட்டா பிளானட்ல.” என்று பதில் இப்போது குழப்புவது விதார்த் மற்றும் மாறனின் முறையானது.

விதார்த் மாறனின் காதில்
“டேய் இவ லூசுடா. லூசு கிட்ட மாட்டிக்கிட்ட நீ?” என்று கூற மாறனுக்குமே அதே சந்தேகம் தான்.

“அப்போ நீ ஏலியானா?” என்று மாறன் கேட்க அப்பெண்ணும்

“வேற்றுகிரவாசியை உங்க கிரகம் அப்படி தானே கூப்பிடுவாங்க.” என்று கூற இப்போது இருவருக்கும் நிச்சயமானது.

“எதுக்கு இங்க வந்த?” என்று விதார்த் கேட்க

“சேட்டை பண்ணதுக்கு தண்டனையா பூமிக்கு அனுப்பிட்டாங்க.” என்று அப்பெண் கூற விதார்த்தும் மாறனும் ஒருவரை மற்றவர் ஏதோ புரிந்தது போல் பார்த்துக்கொண்டனர்.

“எப்போ திரும்ப உன்னோட இடத்துக்கு போவ?” என்று விதார்த் கேட்க

“31536000 விநாடிகள் முடிந்ததும் திரும்ப அழைச்சிட்டு போயிடுவாங்க.” என்று கூற மாறன் புரியாது விதார்த்தை பார்க்க

“ஒரு வருஷத்தை தான் அவ அப்படி சொல்றா..” என்று கூறிய விதார்த்

“நீ எப்படி வீட்டுக்குள்ள வந்த?” என்று கேட்க முதல் நாள் இரவு நடந்ததை விவரிக்கத்தொடங்கினாள் இனி ரியா என்று அழைக்கப்படப்போகும் தானோஸ் தினாய் திதா அஷிஹாய் சம்ரு ரியாஹி.
 
Top