எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

கலைவாணி மதியழகன் - மழைச்சாரல் கதை திரி

Status
Not open for further replies.
வணக்கம் ?
எனது அன்பு தோழமைகளே!!
எனது புதிய தளம்.. எனது புது பரிணாம முயற்சி.. எனது முதல் கதை .. ஆதலால் தாங்கள் வாசித்து பின்னர் வர்ணனை தந்தீர்கள் என்றால் எனது கதையின் வளர்ச்சிக்கு.. பயிற்சி அடைய உதவும் எனது இனிய நட்பு உறவுகளுக்கு.. எனது மனமார்ந்த நன்றிகள் ❤️
 
Last edited:

மழை சாரல்!!IMG-20210202-WA0017.jpg





இந்தியாவின் வட மாநிலமான உத்திராகாண்டில் இமாலயத்தின் வெளிப்புற "குமோன் மலைப்பிரதேச" பகுதியிலுள்ள பசுமை கொஞ்சும்
"நைனித்தாவில்''​



அந்த அந்தி சாயும் நேரத்தில்:



மேகம் இரண்டும் உரசிக்கொள்ள மோகத் தீயால் முகம் கருக்கும் மேக மங்கை கண்டு "கில்பரி" மரங்களும் கிளுகிளுப்பை ஏற்றிய படி அசைந்து ஆடியக் கொண்டிருக்க அதற்கு இனங்கியபடி
இயற்கையால் சூழ்ந்த "நைனித்தால்" மலை பிரதேசத்தில்..​



இரு மலைகளுக்கும் இடையே..



பிறை நிலவென வடிவில் வளைந்து ஓடிய நன்னீர் ஏரியில் படகில் மீது அமர்ந்தபடி பொழியும் பனி துளிகளில் நனைந்தபடி கண்ணடிக்கும் நிலவொளியில் கரைந்துக்கொண்டு இருந்தால் மாயா..
மாயா மதராஸ் வாசி.. கல்லூரி மாணவி மட்டுமல்ல தொல்பொருள் ஆராய்ச்சியாளர் அதன் ஈடுபட்டாள் வீட்டில் இருந்து ஏகிரி ஓடி வந்தவள்..
வெகு நாட்கள் மாயாவதியின் கனவில் தோன்றி மறைந்த " பண்டைய காலத்தின் பழம் பொருளை தேடிய பயணம்" ஆரம்பத்தின் முடிவே இந்த "உத்தராகண்ட் உள்ள இமயமலைத்தொடரின் இந்தியாவின் இரண்டாவது உயரமான சிகரத்தில் இருக்கும்""நந்தாதேவி ஆலயத்தில் தான் உள்ளது தன் பிறவி பயன்".. அம்மா பாடிய பாடல் காதில் சொருகிய வாக்மேன் வழியாக ஒலித்துக்கொண்டு இருந்தது..

"சின்ன சிறு கிளியே கண்ணம்மா..
செல்வ களஞ்சியமே..
செல்வ களஞ்சியமே..!!"...


பாடலின் வரிகளில் கலந்து முனுமுனுத்தபடி வாய் அசைக்கும் மாயாவின் ரோஜா இதழினை ரசித்த நதி மீன்கள் துள்ளி குதிக்க மறந்து போயின..
காற்றின் வேகத்துக்கு இடுக்கொடுக்க முடியாமல் படகு தள்ளாட படகினை கரைக்கு வேகம்.. வேகமாக செலுவதில் மும்மும்மரமாக இருந்தவனை பார்த்து நகைத்தபடியே மாயா அவன் பெயரை ஒருமுறைக்கு இருமுறை சொல்லி அழைத்தும் அவன் திரும்பாமல் போகவே அடி தொண்டையில் இருந்து வேகமாக மீண்டும் கூப்பிட்டாள் "உத்ரா".. உத்ரா.. என

அவள் கூப்பிட்ட கூப்பாடுக்கு..
தலை நடுக்க படகின் வேகத்தை சற்றென நிறுத்தி துடுப்பினை அப்படியே போட்டு விட்டு மாயாவின் பக்கம் திரும்பியவன் சொல்லுங்க "மாயிமா" என்றவனை பார்வையால் எரித்து சாம்பாலாக்கி விடுவதை போல முறைத்தவளை பார்த்த
உத்ரன் " தாயி முறைக்காதீங்க தாயி" "நீங்கள் இப்படி கோவிச்சி கொள்ளும் படி என்ன தாயி செஞ்சி புட்டேன்" என வெகுளி கேட்கும் உத்ரனை கடித்துக்கொள்ளவும் மாயாவினால் முடியவில்லை என்றாலும் அவளின் வருகைக்கான பதிவேடு ஒவ்வொரு நாளாக இப்படி வீணாவதை பொறுத்துக்கொள்ளவும் முடியவில்லை..
உத்ரா.. உன்னிடம் என்ன சொன்னேன் கண்டிப்பாக இம்முறை ""நந்ததேவி"" கோவிலுக்கு போயே தீரனுமும் என சொன்னேன் இல்ல அதனால் வருவது என்னவாக இருந்தாலும் பார்த்துக்கலாம் தானே சொன்னேன் நீ இப்படி ஒவ்வொரு முறையும் பாதி கல் தொலைவிற்கு அழைத்து போவதும் அப்புறம் திரும்பி ஏதோ ஒரு காரணம் சொல்லி அழைத்து வருவதும் எனக்கு உன் மேலே நம்பிக்கையை இல்லாமல் போகுது உத்ரா நீ என்ன ஏமாற்றியானோ தோணுது என்று மாயா வார்த்தையை முடிப்பதற்குள் சற்றென இரு கைகளையும் கூம்பி வணங்கிய உத்ரன்..

மாயிமா இன்னொரு முறை இப்படி சொல்லி புடாதீங்க இந்த உசுரூ உங்களுக்காக கிடக்கு "என் மலைவாழ் வாசிகள் உங்க விசுவாசிகள்.. இந்த உசுரு நீங்க போட்ட பிச்ச.. உணவின்றி வேட்டையாடி திரிஞ்ச மிருகங்க நாங்க.. எங்களுக்கு உண்ண உணவையும்.. உடுத்த உடுப்பையும்.. உறங்க குடிலையும் தந்தது மட்டுமல்ல எங்க சரஸ்வதி தேவி தாயி நீ எங்களுக்கு"..

உங்க ஆராய்ச்சியே நான் தப்புனு சொல்ல உங்க உசுருக்கு என்னாவது ஆச்சின்னா அப்புறம் எங்க உசுரூ இந்த மண்ணில் இருக்காது அம்புட்டு தான் என்றவனின் முகத்தை பார்க்க சலிக்கல மாயாவால்..
ஆனா.. ஊனா.. இப்படியே பேசி என் கை.. வாயே.. கட்டி போட்டுங்க.. சரி.. சரி.. என்ன எப்ப தான் நீ நந்ததேவி சிகர ஆலயத்திற்கு அலச்சிக்கிட்டு போறேனு பார்ப்போம் உத்ரா என்றவளை கொஞ்சமாக நிமிர்ந்து உட்கார்ந்து பார்த்தபடி சொன்னான்..
தாயி "அந்த தாயே.. இந்த தாயி பார்க்கனுமுனு என்றால் அவ உத்தரவு தரனும்" இதில் என் தப்பு ஒன்னுமில்ல தாயி என்றவனை கோபம் குறைந்து சிரித்தபடியே பார்த்தவளை பார்த்த உத்ரன் அய் என் மாயிமா சிரிச்சி புட்டாங்களே என குதிக்க படகு கொஞ்சம் தள்ளாட ஆரம்பித்தது..

அய்யோ..யோ.. ஐய்யா சாமி நீ பாட்டுக்கு என்ன சாமி.. சாமின்னுட்டு கடைசில என்ன சாமியாகவே ஆக்கி புடாத.. பார்த்து உட்காரு உத்ரா என சிரித்தவளை கண் சிமிட்டாமல் பார்த்தவன் உங்களை பார்க்கும் போது அப்படியே எங்க "நந்ததேவி" போல இருக்குது மாயிமா.. ஆமாம் இப்படியே சொல்லு ஆனா அழைச்சிக்கிட்டு மட்டும் போகதே என்றவள் அது எல்லாம் இருக்கட்டும் உன்னிடம் ஒன்னு நொம்ப நாளாக கேட்கனும் என நினைச்சேன் என்றவளை பார்த்த..

உத்ரன் நல்ல கேளுங்க மாயிமா..என அவள் கேட்க போகும் கேள்விக்கு காதை தீட்டிக்கொண்டு துடுப்பை போட்டான்..
அவளுக்கும் கரை போகும் வரை பொழுது போக வேணாமா விட்டா இவன் வாயே திறக்காமல் துடுப்பு போடுவான் என மனதுக்குள் நினைச்சவள்..
"உத்ரா.. உத்ரா.. உனக்கு ஏன் இந்த பெயர் வச்சாங்கனு உனக்கு தெரியுமா.." என்றவளின் கேள்விக்கு பதில் தெரிந்தவன் போல ஆரம்பித்தான்..
மாயிமா "எங்க தேசம் உத்திரக் கண்டம்.. நாங்கள் வாழும் தேசத்தின் நினைவாக தான் எங்க கண்டத்தின் பேரையே எனக்கு வச்சிதுனு அடிக்கடி என் அம்மாச்சி சொல்லும்" என்று அவன் சொன்ன போது அப்படியே ஒரு நிமிடம் புல்லறித்து போக செய்தது மாயாவிற்கு எவ்வளவு மலைவாசிகளாக இருந்தாலும் தன் வாழ்விடத்தின் மீது எவ்வளவு அக்கறை வச்சி இருக்காங்க.. இவர்கள் எல்லாம் இங்க உள்ள செடிக்கொடி கூட தன் உயிராக மதிப்பிடுகிறார்கள்.. மிருகங்களுடன் வாழ்ந்தாலும் மனிதர்களாக வாழும் இவர்கள் எங்கே மனிதர்களுடன் வாழும் மனித நேயமற்ற நம்ம இனத்தவர்கள் எங்கே எக்காரணம் கொண்டும் இங்க நாம வந்ததற்கான காரணம் நல்லபடியாக முடியனும் இந்த மண்ணுக்கும்.. இந்த மக்களுக்கும்.. எதுவும் ஆக கூடாது அது என் உயிர் இருக்கும் வரை நான் நடக்க விட மாட்டேன் என மனதுக்குள்ள பிராத்தனை செய்தபடி மௌனமாக அவனுடன் சென்றாள்..

மாயா??

சிறிது நேரத்திற்கு பிறகு எதையோ யோசித்தவளாக.. உத்ரா இப்ப நான் உன்னிடம் உன் பேருக்கு என்ன அர்த்தம் என கேட்டேன் இல்ல அதற்கு திரும்பி பதிலுக்கு நீ ஏன்?? என்னிடம் கேள்வி கேட்கல என்றவளிடம் மாயிமா அது எப்படி நான் உங்களிடம் கேள்வி கேட்பது என குலைந்தவனை முறைத்த மாயா யாராக இருந்தாலும் கேள்வி கேட்கனும் அது நானாக இருந்தாலும் சரி.. இப்ப கேளு.. இம் கேளு.. என்ற அவளின் அதட்டலுக்கு பயந்தவன்..

தட்டு தடுமாறி மாயிமா உங்களுக்கு ஏன் பெயர் வச்சங்க..

பெயர் வக்கலனா எப்படி கூப்பிட முடியும்.. நான் இப்படியா உன்னிடம் கேட்டேன் சொல்லு என்றவளிடம்..
அட போங்கமா எனக்கு உங்க முன்னாடி கை கட்டி.. தான் நிற்க தெரியும் கேள்வி எல்லாம் கேட்க தெரியாது.. என்றவன் வேகமாக கரைக்க செல்ல தீர்மனிச்சான்..
படகு கரையே நோக்கி பயணிக்க ஆரம்பித்தது..

அவர்களின் கரை ஓதுங்கியது படகு மட்டும் தான் மாயாவின் மனதுல்ல..
"மாயிமா.. மாயிமா.. என்று உரக்க குரலில் உத்ரன் அழைக்கவே சிந்தனை கலைந்து சுயநிலைக்கு வந்தவளாய்..
என்ன உத்ரன் ஏன் இப்படி கத்துற?? என்றபடி காதில் கை விட்டு தட்டிபடி உத்ரன் கரையின் மீது நின்று நீட்டிய கையினை பற்றிய போது தெரியாது இப்பற்று தொன்றுத்தொற்று தொடர போகும் "ஏழேழு ஜென்ம பந்தம்" என மாயாவதிக்கு தெரிய வாய்ப்பில்லை..
இரவினின் பொழுதில் மலையில் இருந்துக்கொட்டும் அருவியின் சத்தமும்.. சிலுசிலுவென வீசிடும் தென்றலின் தேகத்தை சிலிர்ப்பூட்டும் வயல் காற்றும்.. மனதை மயக்கும் மலர்களின் நறுமணங்களும்.. வளைந்து.. நெளிந்து.. தெளிந்து.. ஓடும் சலசலக்கும் ஓடைகளின் ஓசைகளும்.. உறங்கும் பூக்களின் உணர்வினை தூண்டும் சில்வண்டுக்களின் சினுங்கல் ரீங்காரமும்.. இவ்வளவு நாட்கள் மாயாவின் மனதினை வருடி வசம்பட செய்தைவகைகள் எவையும் இன்று ஏனோ மனதிற்கு புறம்பாகவே தோன்ற செய்தது..

புரண்டு.. புரண்டு.. படுத்தவளின் கண்கள் துயில் ஏற்க முரண்டு பிடித்தன..
மாயாவின் கனவினை நினைக்கும் பொழுது எல்லாம் மெல்சிலிர்க்க செய்தது..
கண்களின் ஓரம் வழிந்து ஓடும் கண்ணீரின் நடுவே மாயாவின் மனது மனம் உருகி வேண்டி அழைத்தது.. அம்மா தாயே..!!நந்தாதேவி என் கனவே நீ தானே..
உனக்காக உன் கட்டளைக்கு அடிப்பணிந்து உன் உடைமைக்கு வேண்டி தானே தாயே வந்தேன்.. பிறகு ஏன் என்னை இப்படி அலைக்கழிக்கிறாய்..!!
இப்பொழுதே சொல் என காளிங்கதேவி.. சொல்லு எனக்கு ஒரு பதிலை சொல்லு.. சொல்லுமா..

இக்காட்டில் நான் வந்து காத்திருப்பதின் பலன் தான் என்ன சொல்லு.. சொல்லுமா என மாயா புலம்பியபடி அழதாள்..

தாழிட்டு இருந்த அறையின் கதவு தானாகவே திறந்துக்கொண்டது "மகளே" .. "நைனித்தா".. எழு மகளே.. எழு என்ற அறையில் கேட்ட "அசரீரி" குரலுக்கு பொம்மையை போல் தன்னிலை மறந்து எழுந்தவள் குரல் வந்த திசை நோக்கி பயணிக்கிலானாள்..

மணமகள் அறையில் இருந்து அலறி அடித்து ஓடி வந்தவள் அத்த.. அத்த.. நம்ம "நைனித்தாவை" காணல என்றவளின் முகம் வெளிறி போய் இரத்த நாளங்களில் வந்த இரத்தம் உறைந்து இறுகி போய் இருந்தது..

ஏன்டி கத்துற இங்க தான் இருப்பாள் போய் நல்லா பாரு??

எல்லாம் இடமும் நல்லா தேடிட்டேன் அவளை காணல..

திருமண மண்டபவமே சற்றென அமைதிக்காக.. பின் வழக்கமான சலசலப்புகள் சங்கரித்தன..
ஓடும் பஸ்சில் ஏறி அமர்ந்தாள் மணகோலத்தில் "நைனித்தாள்" ..
அருகில் வந்த நடத்துனர் அவளை ஏற.. இறங்க.. ஒருமாதிரி பார்த்தபடியே "எங்க போகனும்மா" என்ற கேள்விக்கு பதில் இன்றி அமர்ந்து இருந்தவளிடம்.. இந்தாமா உன்ன தான் எங்க போகனும் என்ற போது தான் சுயநினைவிக்கு வந்தவளாய்..
நான்.. நான்.. என நாக்கு குலற நான் எங்க இருக்கேன் என்ற போது இது வேறவா தூக்கத்துல நடக்குற கேஸா என நகைத்த நடத்துனரை பார்க்க உடல் கூசி கீழே குனிந்தவள்.. சரி இந்த பஸ் எங்கே போகுது என்றவிடம் கடைசி ஸ்டாப் இரயில்வே ஸ்டேஷன் என்றவரிடம்.. எனக்கு ஸ்டேசனுக்கு ஒரு டிக்கெட் என எடுத்து அமர்ந்தவளின் மனது கிடந்து அடித்துக்கொண்டது..

அச்சோ.. இந்நேரம் மண்டபத்தில் என்னை அலங்காரம் செய்ய ஆள் வந்து இருப்பார்கள் என் மகளை காணும் என்று கேள்வி பட்டதும் பெத்த மனசு என்ன பாடுபடுமோ??
என்னையும் அறியாமல் என்னை இயக்கும் "சக்தி" யார்??

என குழம்பியபடி ஸ்டேஷனில் நின்ற பஸ்சில் இருந்து இறங்கியவளை அழைத்து போக காத்திருக்கும் மர்மங்கள் தொடரும்??​



சித்தம்- 2 தொடரும்?!?!
 


அந்த:

விடியா காலை பொழுது "நைனித்தா" பஸை விட்டு இறங்கியவளை செல்ல தூரல் மழை துறத்த இரயில் நிலையத்தில் உள் நுழைந்தாள்.. நிலையம் அரவமற்று கிடந்தது. . ஓரே போர்வைக்குள் தூங்கும் குடும்பமும்.. ஒரு சிலரின் நடை பயணத்தை வாங்கிபடி அங்கே ஒலிப்பெருக்கி ஒலிக்க தொடங்கியது பயணிகள் கவனத்திற்கு டெல்லிக்கு செல்லும் "அக்ரா 09 இரயில் இன்னும் சற்று நேரத்தில் மூன்றாம் பிளாட்பாரம் ஏபிக்கு வந்து விடும்".. என தொடர்ந்து ஒலிக்க அந்த இடத்தில் சலசலப்புகள் சங்கரித்தன ஜனங்கள் ஒரு சிலர் தயார் நிலையில் இருக்க..

நைனித்தா நமது பயணம் எதை நோக்கி பயணிப்பது.. எங்கே போவது என ஒன்றும் அறியா பேதையாக பிணாத்திய படி சிமெண்ட் நாற்கலி அமர்ந்து இருக்கவும் இரயில் வந்து அடையவும் சரியாக இருந்தது..

இரயில் சில நிமிடத்தில் புகையை உமிழ்ந்து பச்சை கொடியுடன் பயணிக்க ஆரம்பித்தது.. அதுவரை அமைதியாக உறங்கிய நாய் திடீர் என நைனித்தாவை பார்த்து குரைத்த படி விரட்ட பயத்தில் செய்வது அறியா குழம்பி போனவள் எழுந்து ஓட "விடாது கருப்பாக" அந்த நாய் விரட்ட வேகமாக ஓடியவள் ஓடும் ரயிலின் பக்கம் ஓடியபடி நீட்டிய அவளின் கரத்தினை பற்றி உள்ளே இழுத்து அரவணைத்தபடி நின்றவனின் நெஞ்சில் முகம் புதைத்தவள் "அப்படா என்று பெரும் மூச்சிழுத்தவள்.."

தன்னை ஒரு கரம் தழுவி இருப்பதை உணர்ந்தவளாய் சற்றென தள்ளி விலகி வந்து நிமிர்ந்து பார்த்தவளின் முகத்தினை பார்த்தவனுக்கு அல்லு விட்டுது போ உடல் எல்லாம் குப்பென வியர்க்க இல்லாத தைரியத்தை வரவழைத்து கொண்டவனாய் " நான் வேணும் என்று செய்யல.. உன்னை காப்பற்ற தான் கைப்பற்றி இழுத்தேன் என நா குலற உலறினவனை"..

உனக்கு எவ்வளவு திமிர் எப்ப பார் இதே வேலையாக போச்சி இல்ல..

இவ்வளவு நாழி வாய் குலறி பயத்தில் நடுங்கியவன் அப்படியே ஒரு நமட்டு சிரிப்பினை சிரித்தபடி ஸ்டைலாக சட்டையில் தொங்கிய நீல நிற குளிர் கண்ணாடியை ரஜினி ஸ்டைலில் எடுத்து மாட்டியபடி "அவளின் கரத்தினை இறுக்க பற்றி அருகில் இழுத்து அணைத்தபடி அவளின் முன் நெற்றியில் களைந்து தவழந்த ஒற்றை கூந்தலை விலக்கியபடி"..

" ஓய் பேபி இவ்வளவு கோபம்.. பதற்றம்.. உடம்பு என்னவாகுறது.." என்று சிரித்தவனை கொலை வெறியில் முறைத்து படி எவ்வளவு திமிர் இருந்தால் என்னிடம் இப்படி நடந்துப்ப" என முரண்டு பிடித்தவளை டக்கென தள்ளி.. இரு கைகளையும் முன் கட்டிக்கொண்டு "அம்மே" பயந்துட்டேன் என்று நெக்கல் அடித்தவனை வெறுப்பின் உச்சத்தில் பார்த்தவள் இவனுடன் நின்று தொடர் வாதம் செய்வது நமக்கு தான் தலைவலி என ஓதுங்கி சென்றவள் இருக்கை எல்லாம் அனைவரும் உறங்க இரண்டு "பர்த்துக்கு" அடுத்ததாக "புக் செய்த அறையை மட்டுமே காலியாக இருப்பதை எட்டி பார்த்தவளை பின்னிருந்து யாரோ உள்ளே தள்ளி விட்டு உள்ளே வந்து கதவினை தாழிட துடித்து போனவளாய் திரும்பி பார்த்தவளை திரும்பி பார்க்க முடியாதபடி "பாத்ரூம்" தள்ளி வெளியே தாழிட்டவன் செல்பேசியில் பாடலை வேகம் படுத்தியவன்..

குளிர் அறையில் இருந்து வெளியே வந்தவன் "டிடிஆர்" இடம் சென்று தன் பேண்ட் பாக்கெடில் கை விட்டு துழாவி பின் அடையாள அட்டை காண்பித்து டிக்கெட் வாங்கிக் கொண்டு மீண்டும் அறையினுள் நுழைந்தவன் தாழிட்டு பின் தாழிட்டு இருந்த "பாத்ரூம்" கதவினை மெல்ல திறந்தவனை தள்ளிக்கொண்டு ஓட முயன்ற நைனித்தாவின் கையினை பிடித்து இழித்து அமர வைத்தான் நைனித்தா ஓடாத அளவிற்கு எதிர் திசையில் அமர்ந்து காலினை எதிர் சீட்டில் மிதித்தபடி அமர்ந்தவனை பார்த்த..

நைனித்தா "நந்தா வேணாம் உன்னுடன் விளையாட வரவில்லை என்னிடம் வச்சிக்காதே" என்றவாறு முகத்தினை சுருக்கியவளிடம்..

பேபிமா "நான் உன்னுடன் விளையாட கூடாதுன்னா நீ ஒன்னு செய்யனுமே"..

நான் என்ன செய்யனும் உடனே சொல்லி தொல..

அப்படியோ.. என் செல்லத்துக்கு எவ்வளவு அவசரம் பாரேன் இரு.. இரு.. மேட்டருக்கு வரேன்.. நான் உன்னுடன் விளையாட கூடாது.. உன்னை தொந்தரவு செய்ய கூடாதுனா உடனடியாக நம்மை போல ஒரு பேபியை பெத்து கொடு அப்புறம் பாரு".. என்று செல்லமாக நைனித்தாவின் கன்னத்தை கிள்ளியவனின் கைகளை தட்டி எழுந்து ஓட முயன்றவளின் கரத்தினை பற்றியவன் இதோ பத்தியா இதனே வேணாம் என்றது..

"பேசிச்சி.. பேச்சாக தான் இருக்கனும் இப்படி எல்லாம் செய்ய பிடாது ஓகே.. கைகளை விடுவிக்க அவள் முயல கரம் சிவப்பதை பார்த்த நந்தா "அய்யோ என் செல்லத்து கரம் சிவக்குதே ஏன்டீ.. ஏன்.. கண்ணம்மா நொம்ப முரண்டு பிடிக்கிற.. இப்ப உனக்கு என்னை விட்டா வேறு கதி கிடையாது.." என்றதும்..

நைனித்தா உடைந்து போய் அழ ஆரம்பித்தவளை தேற்ற தெரியாமல் திக்குமுக்கு ஆடி போனான் நந்தா..

நைனி.. நைனி.. இந்த என்னை அடி.. அடி.. என அவளின் கைகளை எடுத்து கன்னத்தில் அடித்துக்கொண்டவன்..

என்மீது ஒரு தப்பும் இல்ல கண்ணம்மா.. நீ தான் என் கனவில் வந்த தேவதை .. முதன்முதலில் கல்லூரியில் சேர வந்த பொழுது கல்லூரி நுழைவாயிலில் எனக்காக காத்திருந்த செல்லம்மா.. நான் தேர்வு செய்த அதே படிப்பினை தேர்வு செய்த கண்ணம்மா.. என் எதிர் இருக்கையில் அமர்ந்த பட்டம்மா நீ.. எல்லாம் தப்பும் உன்மீது வச்சிக்கிட்டு என்னை குறை சொல்லலாமா கண்ணம்மா.. என் கனவை நான் தொலைக்க விரும்பல அவ்வளவு தான்.. நான் உன் பின்னாடி பைத்தியமாக சுத்துவதற்கு இதான் காரணம் என்னை புரிந்துஞ்சிக்கோ கண்ணம்மா என கெஞ்சினவனை பார்த்தவளுக்கு மனம் இறங்கியும்.. கொஞ்சம் கிறங்கிம் தான் போனது இருந்தாலும் இவனிடம் கொஞ்சம் "ஊசாராக" தான் இருக்கனும் இப்போதைக்கு இவன் சொல்வதை போல இவனை விட்டாலும் நமக்கு வேற கெதி கிடையாது என மனதுக்குள் நினைத்தபடி அவன் பிடியில் இருந்து விலகி சன்னல் ஓர இருக்கையில் அமர்ந்தபடி இயற்கையின் அழகினை ரசித்தபடியே கனவில் கல்லூரியில் வாசம் செய்யலானாள் "நந்தா என்றாலே கலகலப்பு.. குறும்பு.. அழகு.. திமிர்.. என பல முக மன்மதன்.. பெண்களின் "கனவு காதலன்" கல்லுரி பெண்டிரே இவனிடம் மயங்கி இவனே தஞ்சம் என அலைந்தனர் ஆனால் இவன் மட்டும் இவளை சுற்றி வம்பு செய்து அலைந்தால் பெண்களின் மத்தியில் இவளை வெறுத்தனர்.. இவளோ அதே காரணத்தால் இவனை வெறுக்கலானாள்.. மனதிற்குள் ஒவ்வொன்றாக அசைப்போட்ட படி அமர்ந்து இருந்தவள் அப்படியே உறங்கியும் போனவள்"..

கண்விழிக்கும் போது துடித்து.. பிடித்து.. எழுந்து அமர்ந்தவள் சுற்றும்.. முற்றும்.. பார்க்க இரயில் இப்பொழுது எங்கே நிற்கிறது என்பது கூட தெரியவில்லை.. அய்யோ இவனையும் காணும் என முழி பிதுங்க முழித்தவள் இரயில் கிளம்பவும் பயத்தில் அழ ஆரம்பிக்கும் முன் வேகமாக கதவினை திறந்துக்கொண்டு மழையில் நனைந்தபடி கையில் ஆவி பறக்கும் காபியும்.. பிஸ்கடுமாய் வந்தவன் "அசடு பயந்துட்டியா" இத்தனை வருட தவம் நீ.. உன்னை விட்டு போவேனா.. நீ தூங்கி முழித்தால் பிஸ்கட்.. காபி சாப்பிடுவது பழக்கம் தானே அதான் என்றபடி உடம்பில் சொட்டும் நீரை கூட பொருட்படுத்தாது அவனின் செய்கையில் தன்னிலை மறந்து நின்றவளை அமர செய்தான்..

அவன் நடந்துகொள்ளும் விதமும்.. அவன் அழகும்.. பெண்மையை பாதுகாக்கும் விதமும்.. மெல்ல நைனித்தாவின் இதயனுள் ஊடுருவி செம்மையாக ஆர்ப்பரிக்க ஆரம்பித்தது.. இவளுக்காக அவன் ஓடுவதும் ஒன்னு.. ஒன்னாக பார்த்து.. பார்த்து.. செய்வதும் இவளுக்குள் என்னவோ செய்ய ஆரம்பித்தன..

ஒருவார ஓட்டத்தின் முடிவாக புது டெல்லி சந்திப்பில் இரயில் வந்து ஓய்வு எடுக்க ஆரம்பித்தது..

நைனித்தால் சுற்றிலும் பார்வை ஓட்டத்தை சுழற்றினால்.. பின் நந்தாவின் கை பிடித்தபடி வெளியே சென்றவளிடம்..

ஓடி வந்த வேன் ஓட்டுனர் இவர்களிடம் வந்தவர் " நைனித்தாவின்" கரத்தினை பற்றிபடி ..

"ஷேஹேஹி பேட்டி மந்தர் மே தாளா லஹி காத்தேஹே"..!! (மகளே கோயில் சாத்திடுவாங்க சீக்கிரமாக வா) என்று கூறி ஓட்டமும்.. நடையுமாக வேனில் ஏற்றிய முதியவர் பின் கதவினை சாத்தி வேனை தட்டவும் "ஹாரன் சவுண்ட் உடன் புழுதி கிளப்ப புறப்பட்டது"..

வெகு நேர பயணத்தில் வழிகள் ஒருவரும்.. இருவருமாக இறங்க மிச்சம் மிஞ்சியவர்கள் இவர்களை அழைத்து வந்த வேனும் இவர்களை..

அந்த நட்டு.. நடு காட்டினில் இருளில் இறக்கி பறந்து.. மறைந்தது..!!

இருளின் பயம் கவ்வ.. நந்தாவின் கைகளை பற்றியவளை அணைத்தபடி வெளிச்சம் தேடினர்..

"நைனித்தாவை" யாரோ துலைப்பது போல பின் புறத்தில் பார்ப்பதை உணர்ந்தவளாய் திரும்ப..

அந்த:

இருளின் அந்த கருப்பு போர்வைக்குள் ஒளிந்து படி இவளையே குறு.. குறுவென பார்த்தபடி இவளின் அருகில் வர நைனித்தா "வீல் என கத்தி நந்தாவின் மீது சரிந்தாள்"..

போர்வைக்குள் இருந்த அந்த கறுப்பு உருவம் "நந்தாவை பார்த்து சிரித்தபடி அருகில் வர"..

நந்தாவும் பதிலுக்கு சிரிப்பினை உதிர்த்தான்..

சித்தம் தொடரும் -3
 


அந்த இருளில் நின்ற நந்தா.. தன் விரலினை மடக்கி நாவிற்கிடையே வைத்து ஒரு விசில் தான் அடித்தான்.. காற்றை கிழித்துக்கொண்டு பறந்து வந்தது குதிரை பூட்டிய ரதம் போன்ற வாகனமொன்று... அவைகளை பார்த்து கண்களை சிமிட்டியபடி தன் மீது சரிந்து கிடக்கும் நைனித்தாவை ரோஜாவின் இதழ்களை போல மெல்ல தூக்கி குதிரை பூட்டி இருந்த வாகனத்தில் பின் புறத்தில் படுக்க வைத்தவன் ஒரே பாய்ச்சலில் ஏறி அமர்ந்தபடி கீழே நின்றவரை பார்த்து..

"என்ன கிழவா? பார்த்து பத்திரமாக குடிலுக்கு வந்து சேரு" என சொன்னவன் அவரின் பதிலுக்கு காத்திருக்காமல் பறந்து மறைந்தான்.

போர்வைக்குள் மறைந்து இருந்த கிழவர் " இவன் ஒரு போக்கிரி பய... அந்த தாயி முகத்தை பார்க்க முடியலயே" என புலம்பியபடி தடியுடன் நடக்கலானார்.

தண்ணீரில் உள்ள தாமரை போல மென்மையாக நைனித்தாவை பட்டும் படாமலும் தூக்கி சென்று காட்டின் நடுவே அமைந்து இருந்த குடிலினுள் படுக்க வைத்து விட்டு கண் அசைக்காமல் அவளை ரசித்தவன் பின் தன் தலைக்கு பின்புறத்தில் ஒரு தட்டு.. தட்டி.. நாவினை கடித்துக்கொண்டு கண்களை சிமிட்டி சிரித்தபடி குடிலின் வாசற்கதவை அடைத்து விட்டு வெளியே குருத்தோளையை போட்டு கைகளை மடக்கி தலையணையாக்கியவன் அப்படியே உறங்கி போனான்..

........................................

அழகிய காட்டில் குளிர்ச்சியான அந்த அதிகாலை செவ்வானப் பொழுதில்..

மலைகளின் இடையே சலசலவென கொட்டும் அருவி சத்தமும்.. தேகம் சிலிர்க்க அசைந்தாடும் நெற்கதிர்களின் தென்றலும்.. மனதை சுண்டி இழுத்த மலர்களின் நறுமணமும்.. தொலைத்தூரத்தில் தெளித்து விழும் மேகத்தின் மழைச் சாரலும்.. நைனித்தாவின் தேகத்தை சிலிர்ப்பூட்ட.. இனம் புரியா வண்டு போல ஏதோ ஒன்று இதயத்தை வருட திடிக்கிட்டு எழுந்து அமர்ந்த நைனித்தாவை சுற்றிலும் புரியாத பாஷையில் கிசுகிசுத்தபடி நின்றிருந்த கூட்டம் பயமுறுத்தியதில் மீண்டும் அலற... கூடி இருந்த கூட்டத்தை விளக்கியபடி உள்ளே புகுந்த பாட்டிமா..

"பயப்படாதிங்க.. பயப்பிடாதிங்க.. மாயிமா".. என்பவரை பார்த்து பேந்த.. பேந்த.. விழித்தபடி உங்களுக்கு
"தமிழ் தெரியுமா?" என்றாள் குழப்பத்துடன்..

"ஏன் தெரியாது??
நல்லாவே பேசுவோம்.. எங்க மாயிமா பேச்சு அல்லவா அது" என்றவர்கள் அனைவரும் நைனித்தாவை "வணங்க".. செய்வதறியா திகைத்தவள் "அய்யோ இந்த நந்தா இப்படி என்னை எங்கோ மாட்டி விட்டு போய்டானே.. இப்ப நான் என்ன செய்வேன்" என அமர்ந்தாள்..

சுற்றும்.. முற்றும்.. பார்த்தாள்.. சுற்றி இருந்தவர்களின் அலங்காரங்கள் மற்றும் உருவங்களை பார்க்கும் போது நன்றாக தெரிந்தது இவர்கள் மலைவாழ் மனிதர்கள் என..

'அய்யோ இந்த நந்தா நம்மளை நறபலிக்கு தாரை வாக்க விட்டு.. விட்டு ஓடிட்டானா..' என திகைத்து நின்றவளை இன்னும் திகைப்பில் ஆழ்த்தியது
அங்கே வாசம் செய்த நந்தாவின் பாங்கு..

உடம்பில் கச்சை கட்டிக்கொண்டு கட்டுமஸ்தான தேகத்தில் நீர் திவளைகள் திளைத்து நிற்க சுருண்ட கேசத்தில் இருந்து சிந்திய பனி துளியான நீர் பட்டு ஒரு நிமிடம் கண் சிமிட்ட மறந்தவளாய் எதிரில் நின்ற நந்தாவினை பார்த்து திகைத்தவள் பிறகு சுதாரித்தவளாய் ஓடி சென்று அவனை கட்டியணைந்து கொண்டாள்..

"நந்தா எங்கே போன? இவங்க என்னென்வோ பேசுகிறாங்க டா... எனக்கு பயமா இருக்கு" என அணைத்தவளை ஆர தழுவியவனின் கரத்தினை ஓங்கி தடியாள் ஒரு அடி தந்தாள் அந்த கூட்டத்தில் நின்ற மூதாதைய பாட்டிமா..

"ஆ... ஏய் லூசு கிழவி உனக்கு என்னாச்சி??" என கைகளை உதறியபடி எடுத்தவனை தள்ளி விட்டு நைனித்தாவை விலக்கி நிறுத்திய பாட்டிமா..

"இவங்க நம்ம குல தெய்வம் மாயிமா டா.. நீ விலகியே இரு".. என்றதும் அனைவரும் மண்டியிட்டு வணங்கிடவும் இவைகளை எல்லாம் பார்த்த நைனித்தா மட்டுமன்றி நந்தாவிற்கும் வியப்பாகவும் குழப்பமாகவும் தான் இருந்தது.

அங்கு நடப்பதறியா குழப்பதில் இன்னும் மூழ்கிய நைனித்தா மெதுவாக பேச்சை ஆரம்பித்தாள்.

"நீங்க எல்லோரும் ஏதோ என்ன தப்பா நினைக்கிறிங்க.. நீங்க நினைக்கும் ஆள் நான் இல்ல.. என் பேரு மாயாவும் இல்ல... என் பேரு நைனித்தா.. முதல்ல இதை நீங்க புரிந்துகொள்ளுங்க எங்களை விட்டு.. விடுங்க".. என்ற போது அவளின் முகத்தில் கொஞ்சம் மிரட்சியும் கண்களில் பயம் கலந்த கண்ணீரும் தேங்கி நிற்க..

"மாயிமா.. நீங்க எங்க குலச்சாமி இதை நீங்க ஏன் புரிந்துக்கொள்ள மாட்டேங்கிறிங்க மாயிமா?" என்ற பாட்டிமாவின் வார்த்தையில் சுடுப்பட்ட தேகம் போல சுட்டெழுந்தாள் நைனித்தா..

"அய்யோ உங்களிடம் விவாதம் செய்ய எனக்கு விருப்பமில்ல.. எனக்கு பிடிக்கவும் இல்ல நான் என் நாட்டுக்கு போகனும்.. இப்ப என்னை கொஞ்சம் தனியாக விடுங்க.. எனக்கு தலையே சுத்துது.... போங்க.. என்னை விட்டு போங்க.." என ஆவேசமாக கத்தி விரட்டினாள்.

நைனித்தா எல்லோரும் போங்க.. வெளியே போங்க..என்ற போது அதுவரை மறைந்து நின்ற கண்ணீர் துளிகள் உடைந்து உருண்டோடியது திரவங்களாக....

நைனித்தாவின் அழுக்குரல் காற்றில் பட்டு எதிர் ஒலிக்க வேகமாக குடிலுக்குள் புகுந்தார் "அந்த போர்வை மனிதர்"..

"தாயி.. தாயி.. நீங்க அழாதீங்க.. உங்க பொற்பாதம் பட்ட இடத்தில் கண்ணீர் துளிகள் பட கூடாது நீங்க உங்க நாட்டுக்கு போகலாம்.. நான் உங்களை நம்புகிறேன்.. இப்ப உங்களுக்கு ஓய்வு தான் முக்கியம்... அமைதியாக ஓய்வேடுங்க மாயிமா.." என்று அந்த போர்வை மனிதர் பேசும் போது மட்டும் நைனித்தா கார்குயிலுக்கு கவி பாடும் காற்றை போல மறுப்பேதும் பேசாத மடந்தையாக மௌனமாக தலையாட்டி நின்றவளை பார்த்த முக மூடிய கிழவர் அவ்வினத்தவரை அவ்விடத்தில் இருந்து அப்புறப்படுத்தி வெளியே அழைத்து சென்றார் சிலையாக நின்ற நந்தாவையும் சேர்த்து..

அவர்கள் அனைவரின் தலைகள் மறையும் வரை காத்திருந்தவள் போல் மலர்கள் செய்யப்பட்டு இருந்த படுக்கையில் தொப்பென விழ இன்னும் குழப்பத்தில் ஆழ்த்தியது அவர்கள் செய்கை...

விடையறியா வினாகள் தொடர்கதை போல தொடர்ந்த வண்ணம் மண்டைக்குள் உட்கார்ந்து நர்த்தனம் ஆடி நச்சரித்தன.

யார் அந்த மாயா??

அவளை ஏன் என்னோடு ஒப்பிடுகிறார்கள்??

நந்தாவும் இந்த கூட்டத்தை சேர்ந்தவனா??

முகம் காட்ட மறுக்கும் அந்த மனிதர் யார்??

அவரை கண்டால் மட்டும் ஏன் எனக்குள் இத்தனை தடுமாற்றம்??

என்னை இங்க வர செய்த சக்தி எது??

என்னால் இங்கே ஆக வேண்டிய கடமை என்ன??

வினா தொடர்ந்ததே தவிர விடை தெரியவில்லை..

குழப்பத்தின் உச்சமே உறக்கம்!!!

டோர்.. டோர்.. சிறிது இளைப்பாறட்டும்..

விடையினை தேடி பயணத்தை தொடர்வோம்..

சித்தம் தொடரும் - 4
 


சென்னையில்:

அதே நேரம்..

மாளிகை போல அலங்கரிக்கப்பட்ட திருமணமண்டபம் செயலிழந்து.. பொலிவிழந்து காணப்பட்டது.. கூட்டங்களும் கொஞ்சம்.. கொஞ்சமாக.. கரைய தொடங்கின.. உறவினர்களை தவிர மற்றவர்கள் களைந்து போய் இருந்தனர்..

தரையில் இடிந்து போய் அழுது.. அழுது.. அப்பளம் போல வீங்கி முகத்துடன் அமர்ந்து இருந்தாள் நைனித்தாவின் அம்மா துளசி. . ஆறுதல் கூறிடவும் கஷ்டத்தை கண்ணீரால் கரைத்திடவும் வழியின்றி மரத்து போன கல்லாக இறுகி போய் கிடந்தார் விநாயகம்..

சுற்றி அமர்ந்து இருந்த உறவினர்கள் ஆறுதலும்.. அவஸ்தையும் தந்துக்கொண்டு இருந்தனர்..

மண்டபமே அதிர திடுதிப்பென ஓடி வந்த நான்கு ஐந்து தடியன்களுடன் விநாயகத்தை நெருக்கிய வெள்ளை வேட்டி.. வெள்ளை சட்டை போட்ட மனிதருக்கு பின் ஓடிவந்தவன்களின் ஒருவன் உட்கார ஷேரை போட அதனை ஒற்றை கையால் சுழற்றியபடி அமர்ந்து காலினுள் வேட்டியே தள்ளி இடது காலை தூக்கி வலது காலின் மீது போட்டபடி மடியில் கையை மடக்கி உடம்பை முன் நிறுத்தியவன் தன் ஒற்றை விரலால் தலை கவிந்து அமர்ந்து இருந்த விநாயகத்தின் தாவங்கட்டை தூக்கினான்..

"ஏய்!! விநாயகம் என்ற போது மண்டபமே மறுகணம் எதிர் ஒலித்து அடங்கியது"..

நான் யார் தெரியுமா??

" டைகர்" சேதுபதி.. அரசியலில் என்னை மிஞ்சி ஓடியவன் எவனும் கிடையாது.. அதனால் தான் எனக்கு ,"டைகர் சேதுபதினு" ஒரு பட்ட பெயரே வச்சான்க அப்படி இருக்கும் போது உன் பொண்ணு என்னையை ஏமாற்றி ஓடி இருக்க.. சொல்லுமையா.. சொல்லு.. அவளை குடும்பமாக சேர்ந்து அனுப்பி வச்சிட்டு இப்ப நீலி கண்ணீர் வடிக்கிறிங்களோ!!.. இதை நான் நம்புவேனு நினைச்சியோலோ இங்க.. பாரு.. இங்கு பாரு.. எனக்கு முன்னடி பிறந்த்தால இரண்டு பேரை முழுங்கிட்டு பிறந்தவன் அதற்காக எனக்கு பொறந்த உடனே காது குத்திடாங்க என்னையை யாரும் ஏமாத்த முடியாது சொல்லு.. சொல்லு.. எங்க ஓடி போன சொல்லுலே.. சொல்லு.. என அதட்டல் பயங்கரமாக இருந்தது..

விநாயகம் இப்பொழுது மெல்ல வாய் திறந்தான் "ஐயா.. யா.. நீங்க நினைக்கிறபடி நாங்க எங்கேயும் அனுப்பி வைக்கல.. அவ ஓடி போனதே எங்களுக்கு தெரியாது ஐயா.. என போது கலக்கம் ஆழ்க்கொண்டிருந்தது விநாயகத்திற்கு..

இங்க பார் விநாயகம் நான் ஒன்னு சொல்கிறேன் நல்லா கேட்டுக்கோ.. என் தகுதிக்கும்.. என் அந்தஸ்சதுக்கும் துளியும் பொருத்தமே இல்லாத குடும்பம் உன் குடும்பம்.. இருந்தாலும் என் பையன் ஆசைப்பட்டுடானே என்கிற ஒரே காரணத்தால் தான் உன் பொண்ணை கல்யாணம் செய்ய சம்மதிச்சேன்..

இப்ப அவளால் இவ்வளவு நாள் நான் கட்டி காப்பத்தின என் அரசியல் சாம்ராஜ்ஜியத்தின் வாழ்க்கையில் ஒரு அசிங்கத்தை ஏற்படுத்திட்டு ஓடிட்டா.. விட மாட்டேன் அவ எவன் கூட எந்த ஜில்லாவுல போய் பதுங்கி இருந்தாலும்.. இந்த டைகர் சேதுபதி சும்மா விட மாட்டேன்..

அவ இதுவரை உங்க கூட தான் இருந்து இருக்க.. அவ எங்க போற.. எங்க போக போற.. எங்க போய் இருக்கா என்பதை பற்றி தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்ல.. சொல்லுங்க அதான் எல்லோருக்கும் நல்லது.. உங்க நலனுக்கு தான் கேட்கிறேன் புரிஞ்சிக்கிட்டு சொல்லிடுங்க பெரிய அதட்டலும்.. அதனுடனே சேர்ந்த உருட்டலும் சேர அங்க இடியுடன் கூடிய மழை போல இருந்தது சேதுபதியின் கர்ஜனை..

இவைகளை எல்லாம் கண்டு மிரண்டு துளசிக்கு பின் பதுங்கியவளை கண்ட சேதுபதிக்கு மனது ஓரத்தில் சிறு நம்பிக்கையும்.. உதட்டோரத்தில் சிறு புன்னகையும் வந்து ஒட்டிக்கொண்டது.. வெள்ளை ஆடு ஒன்று வசமாக வந்து மாலை போட்டு மஞ்ச தண்ணீ ஊற்றி ரெடியாக நிற்கிறது என மனதிற்குள் நகைத்த சேதுபதி வலது கையினை துளசி முகம் முன் நீட்டி கட்டைவிரலில் ஆள்காட்டி விரலை அழுத்தி வேகமாக "சொடுக்கு" போட்டான்.. சற்றென பயத்தில் முழிகள் அகல விரிக்க வாயினில் மெல்லிய அலறலுடன் நடுமாறி நின்றாள் விவாஹி..

இங்க வாமா.. இங்க முன்னே வா என்ற சேதுபதியின் மிரட்டலுக்கு தலையினை கவிழ்ந்த படி முன் வந்து நின்றவளை பார்வையால் கண்காணித்தான் அவளுக்குள் ஏதோ விசயம் ஒளிந்து இருக்கு என்பதை உணர்ந்தவனாய்.. அம்மா நீ நைனித்தாலின் அண்ணி தானே என்பவனுக்கு எத்திசையில் இருந்து மண்டையை ஆட்டுவது என விளங்காதவளாய் வேகம்.. வேகமாக.. ஆட்டினாள் விவாஹி..

உன்னையை பார்த்தாள் நைனித்தா சோட்டு பொண்ணாக தான் தெரிகிற.. ஒத்த வயசு புள்ளைகளோ என்று வினாவினர்க்கு..

ஆமாங்க ஐயா என் மகளோட தோழி என்று முடித்தாள் துளசி..

சபாஷ் அப்ப நல்லாத போச்சி.. கண்டிப்பாக நட்பிற்குள் ஒளிவு.. மறைவு.. இருக்க வாய்ப்பில்லை.. சொல்லுமா.. என்பவரிடம்..

அவளுக்கு எதுவும் தெரியாது சார் அவ பெங்களூரில் இருந்து நேற்று தான் வந்தார்கள்.. அவ கொஞ்சம் பயந்த சுபாவம் அதோட கர்ப்பமாக வேற இருக்க வீக் பாடி அதான் பயப்பிடுகிறா என்ற விநாயகத்து பக்கம் திரும்பிய சேதுபதி..

விநாயகம்.. எனக்கும் மகள் இருக்கா நான் மனசாட்சி அற்றவன் இல்ல அவளுக்கு எதுவாது தெரிய வாய்ப்பு கிடைத்தால் எல்லோருக்கும் நல்லது தானே என்று சுற்றி இருந்தவர்களின் முக பாவனையை மேய்ந்தான் அரசியல்வாதியின் கடைசி வச்சிவுதாயிதம்..

சேதுபதி கலங்கி.. கவளை தோய்ந்த முகத்தினை கண்ட விவாஹி..

" சார்," என்றாள்..

உடனே சுறுசுறுப்பானவன் சொல்லுடாமா.. சொல்லு.. உனக்கு எதுவாது விவரம் தெரியுமா?? தெரிந்தால் பயப்பிடாமல் சொல்லு நான் உன் அப்பா போல தான் என்றவரிடம்..

முதலில் தயங்கினாலும் பிறகு மெல்ல சொல்ல ஆரம்பித்தாள்.. நான் வந்ததில் இருந்து கவனித்தேன் அவ முகமே சரியில்லை.. என்று அவள் வாக்கியத்தை முடிப்பதற்கு முன்னரே..

ஏம்மா??

அவளுக்கு கல்யாணத்தில் இஷ்டமில்லையா?? என்றான் சேதுபதி..

இல்ல.. இல்ல.. அவ அப்படி எல்லாம் எதுவும் சொல்லல..

வேறு என்னமா சொன்னா..

அவளுக்கு மட்டும் கேட்கும் படி யாரோ பேசுகிறாங்கன.. ஏதேதோ வினோதமாக நடந்துக்கொண்ட.. சில வினாடி நான் குலுக்கிய பின் தான் சுய சிந்தனைக்கே வந்த அவ்வளவு தான் எனக்கு தெரியும் என்றவளுக்கு இப்பொழுது கொஞ்சம் பயம் போய் முகம் தெளிவு பெற்று இருந்தது..

"சந்தோஷமா நல்லா இரு" என்ற சேதுபதி ஆசீர்வாதம் செய்து விட்டு "டேய் வாங்கடா" என் மருமகள் எந்த ஜில்லாவில் இருந்தாலும் தூக்கி வருவான் இந்த "டைகர்" சேதுபதி என்று விரைந்தவர் பின்னால் பறந்தனர் அந்த முரட்டு தடியன்கள்..

சித்தம் தொடரும் -4
 
நைனிடாலில் அந்த அழகிய வனத்தின் நடுவில் குழப்பத்தின் உச்சத்தில் உறங்கியவளுக்கு தொல்லை தராமல் வெளியேறிய நந்தா குடிலின் வாசற்கதவினை அடைத்து விட்டு..

மெல்ல திரும்பிய நந்தா தன் கரங்களை பற்றி இருந்தவர்களிடம் இருந்து முரண்டு பிடியாக திமிரினான்..

நந்தாவுடன் வெகு தொலைவிற்கு சென்ற பழங்குடினர்.. நந்தா இன்னும் ஆவேசத்துடன் துள்ளி குதித்து படியே இருந்தவனை நெருங்கிய போர்வை மனிதர்..

நந்தா.. நந்தா.. சற்று அமைதிக்கொள்.. அமைதியாக இரு என்றதும்..

கோபத்துடன் அவரை ஏறிட்ட நந்தா..
ஏய்!!
கிழவா.. உங்களுக்கு எல்லாம் என்ன பிரச்சினை.. இங்க நீ மட்டும் தான் பைத்தியம் என நினைத்தேன் இப்ப தான் புரிகிறது இங்கே உள்ள அனைவருமே பைத்தியம் தாம் என.. என்னை நம்பி வந்தவ அவ அவளை போய் மாயிமா.. பேயிமானு உலறுகிறிங்க என்ன நினைக்கிறிங்க.. நீங்க எல்லாம் படிச்சி இருந்தால் தானே இந்த காட்டையே கட்டிக்கொண்டு வாழும் காட்டுவாசிகள் தானே அவளை நறபலி எதுவும் தர ப்ளான் பண்ணி வச்சி இருக்கீங்களா என்று நந்தா வார்த்தையினை முடிக்கும் முன் நந்தாவின் காதுக்குள் "கீர்" என்ற சத்தமும் ஒரு நொடி பொறிக்கலங்கி நிலை தடுமாறி நின்ற நந்தா..

ஏய்.. லூசு கிழவா அப்பா என்றவாறே தன் தாடை போச்சு என வலது கைகளால் தாடையை பிடித்து வாயே முன்னும்.. பின்னுமாக அசைத்து பார்த்தவன்.. நான் தான் தெரியாமல் கேட்கிறேன் உங்களுக்கு எல்லாம் என்ன பிரச்சினை நீங்க எக்கேடாவது கெட்டு நாசா போங்க எனக்கு என்ன வந்துச்சி உங்க குணம் அறிந்தாலோ என்னவோ என் அம்மாபாட்டி என்னை இந்த காட்டுக்கே வர விடாமல் வளர விட்டு இருக்காங்க இன்னும் சொல்ல போன என் அப்பா.. அம்மா.. சாவுல கூட எனக்கு இப்ப சந்தேகம் வருது லூசு கிழவா நான் இப்படி அனாதையாக அலைவதற்கு காரணமே நீ தான் சொல்லு.. இங்க எங்களை சுற்றி என்ன நடக்குது.. சொல்லு கிழவா சொல்லு.. என போர்வையோடு சேர்த்து குலுக்கியவனின் கைகளை பற்றிய போர்வை கிழவர் தன் அருகில் நின்ற வாலிபர்களை அழைத்து இவனை இறுக்க பற்றுங்கள் என்றார் அவர்கள் இருவரும் நந்தாவினை இறுக்க பிடித்துக்கொண்டனர்..

டேய் தடியன்களா என்னை என்ன டா செய் போறிங்க..
ஏய்!! கிழவா எதுவாக இருந்தாலும் பேசி தீர்த்துக்கொள்ளலாம்.. கொன்னுட்டு தீர்க்க முடியாது.. ஏய்.. என்னை விடுங்க டா.. விடுங்க டா என முடிந்த வரை திமிரியவன் ஒரு கட்டத்திற்கு மீது துவண்டு போனான்..

துவண்டு சரிந்தவனை கண்டு நகைத்தபடி.. போர்வை மனிதர் தன் அருகில் இருந்தவனிடம் போய் "பாங்" செடியினை கொண்டு வா என்றார்..

அவன் தயங்கியதை கண்டு என்ன பீர்மா ஏன் தயங்கிற என்ற தாத்தாவிடம்..

அது.. அது.. வந்து அவன் நம்ம நந்தா அதான்..

எனக்கும் நல்லா தெரியும் பீர்மா உனக்கு கவலை வேண்டாம்.. இப்பொழுது வேற வழியில்லை நமக்கு .. இவன் நம்ம பணிக்கு இடையூறாக இருக்க நேரிடம் அதை தவிர்க்க வேறு வழி தெரியல.. நமக்கு நேரம் கம்மி.. நீ பயப்பிடும் அளவிற்கு தர மாட்டேன்.. இன்றைய பொழுது கடக்கவும் இவனுக்கு நம்மை பற்றிய புரிதலுக்கும் தான நேரம் அவ்வளவு தான் சரிசரி பேசுவதை குறைத்துக்கொண்டு சட்டுபுட்டென அந்த "பாங்" செடியை பறித்து வா இவன் எழுந்து விட போகிறான்..

மீண்டும் என்ன தயக்கம் பீர்மா என்ற போர்வை தாத்தாவிடம்..

அது ஒன்றுமில்லை நமது குல வழக்குபடி நம்ம தாய் மாயிம்மாவின் வேண்டுதலை இதுவரை நாம மீறியது இல்லை இப்பொழுது அதை நீங்களே செய்ய வேண்டுமா என ஒரு சிறு ஐயம் ஐயா.. அதற்கு பதில் தாங்கள் வர்ம ஜாலத்தை செய்யலாமே சுய நினைவுடனும் இருப்பான் தொல்லையும் தர மாட்டான் என்னின் விதாண்டா வாதத்திற்கு மன்னிப்பு கோர்கிறேன் ஐயா..

உன் வாதம் நேர்மையானது தான் பீர்மா ஆனால் வர்மம் சுய உணர்வளிக்கும் அவனின் உடல் இயலாமை உடையதாகி விடும்.. நம்ம மாயிமாவின் சொல்லை மீறினாலும் இச்செயல் மாயிமாவிற்காக தானே ஆகும் பிழை பார்க்க நேரம் குறைவு இருக்கும் நேரமும் குறைகிறது அவன் மூளை நம்ம செயலை உணரும் உடலும் நம்முடன் பயணிக்கும் ஆனால் நம்மை எதிர்த்து போரிட இயலாது அவனால்.. அதான் சற்றென காற்றை போல ஓடி விரைந்து கொண்டு வா பீர்மா என்று முடிப்பதற்குள்..

இந்த மரமண்டைக்கு இப்பொழுது நன்றாக விளங்கிட்டு ஐயா என விரைந்து பறந்தான்..

நாழிகளை உருண்டோட மெல்ல மயக்கத்தை விட்டு வெளி வர தொடங்கினான் நம்ம நந்தா..

அய்யோ.. அம்மா.. காட்டு பயலுகளா.. காட்டான் போல அடிச்சி இருக்கிங்களே.. டேய்.. டேய்.. என புலம்பியவனை பார்த்து சிரித்த தாத்தாவை பார்த்ததும்.. துள்ளி குதித்து எழுந்த நந்தாவை கண்களால் செய்கை செய்ய இரண்டு முரட்டு ஆசாமி நந்தாவின் கரத்தினை பற்றவும் பீர்மா " பாங்" செடியுடன் வரவும் சரியாகி போக..

ஐயா இந்தாங்க என தந்தவனின் கையில் இருந்த பாங் செடியை வாங்கி இலைகளை எடுத்து.. சிறிதளவு இலைகளை தன் கைக்குள் வைத்து இமைகளை மூடிய போர்வை தாத்தா ஒருநிமிடம் மந்திரம் சபித்தார் பின்னர் நந்தாவின் அருகினில் செல்ல அதுவரை நடப்பவற்றை இமைக்கொட்ட பார்த்து படி அமர்ந்து இருந்த நந்தா தன்னிடம் கிழவன் வர..

அய்யோயோ.. அட கிருக்கு கிழவா உன் கை என்ன செடிடா இது.. இதுவரை அடிக்க மட்டுமாவது செய்தீங்க அதிலாவது கொஞ்சம் லாஜிக்காவது இருந்துச்சி இப்ப என்னடானா மர்டரே செய்ய போகுறிங்களா இது உங்க வரலாற்றிலேயே கிடையாதுனு நம்பி வந்தேனே டா..

அய்யோ.. இன்னும் காதல் கூட முழுசா பண்ணலேயே டா.. என் வயசு பயல்க எல்லாம் என்னென்மோ பண்ணிட்டான்க ஆனால் என் படத்தில் இன்னும் முத்த சீன் கூட வரலேயே ஒரு வர்ஞின் பையனோட சாபத்தை வாங்கி கட்டிக்காம விலகி போங்க டா தடி பயல்களா.. என் வயித்தெறிச்ச உங்களுக்கு எல்லாம் எப்படி புரியும் பருவம் அடையாமலே அப்பா ஆகும் அப்பரன்சுகளா போங்கடா என மான் போல துள்ளியவன் முகத்தில் போர்வை தாத்தா "பாங் செடியின்" கசக்கிய இலைகளை நந்தாவின் முகத்தின் அருகில் போய் மூக்கினுள் அவன் சுவாசிக்கும் படி வைக்க..

நந்தா டேய் கிழவா "வேணாம்.. டா.. வேணாம்ம ம்ம்மம்ம்" .. என்னடா இதுதுதுஉஉஉஉ என கத்தியபடியே மெல்ல கண்கள் மேல் நோக்கி சொருக கீழே சரிந்தான் நந்தா?!!!

ஐயா.. ஐயா.. தூரத்தில் இருந்து உரைக்க கத்தியவாரு இவர்கள் நோக்கி விரைந்து ஒடி வந்தவனை நிற்க வலுவின்றி தடுமாற அவன் கைகளை பற்றிய போர்வை மனிதர்..

சொல்லுப்பா.. கொஞ்சம் மூச்சை உள்வாங்கி விடு சற்றே இளைபாறு என்க..

ஐயாயாஆஆ.. இது இளைபார வேண்டிய நேரமல்ல நமது தேசத்தின் அழிவுக்கான ஆரம்பம் இது என சொன்னவனை பார்த்த போர்வை மனிதர்..

மதுவீரா எப்படியா பட்ட சூழலிலும் நமது வார்த்தைகள் நன்மையை பயக்க வேண்டுமே தவிர பாதகம் பதைக்க கூடாது.. போர் களத்தினில் ஒரு மாவீரன் மரணப்படுக்கையில் கூட வெல்வேன் என எண்ணிட வேண்டும் அப்பொழுது மரணமே அவனிடம் மரணித்து போகும் மதுவீரா..

ஐயா மன்னிக்கவும்.. தேசத்தின் காதலால் பதற்றதினால் வார்த்தை வசம் இழந்து விட்டேன் என்று மண்டி இட்டவனை முதுகில் தட்டி எழுப்பிய போர்வை மனிதர்..

ஒன்றும் நீ தவறு இழைக்கவில்லை சொல்லு மதுவீரா.. பயப்பிடாமல் சொல்லு..என்பவரை பார்த்த மதுவீரன்..

ஐயா.. தாங்கள் அனைவரையும் நமது "குருமாதா" அவசர சேதி ஒன்று பிரபிக்க வேண்டும் அழைத்து வர சொன்னார்கள்.. உடனடியாக நமது குருமாதாவை சந்திங்க செல்லுங்க.. என்றவன் அப்பொழுது தான் கீழே சரிந்து கிடந்த நந்தாவை பார்த்தான்..

அய்யோ.. நந்தா.. நந்தாவிற்கு என்றாயிற்று ஐயா என்றவனை பார்த்த போர்வை மனிதர்..

மதுவீரா சிறு வினாடியில் அவன் சித்தம் தெளியும் அரை மயக்கத்தில் புலம்புவான் அதை காதில் வாங்காமல் கைப்பற்றாக நமது தெய்வகுரு சன்னிதானத்திற்கு அழைத்து வந்து விடு என்றவாறு போர்வை மனிதர் நடக்க..

பின்னவர்கள்.. பின்னோக்கி பயணித்தனர்.. மர்மத்தை நோக்கிய பயணத்தில் விடைக்காண வேண்டி..

சித்தம் தொடரும் - 6
 
Status
Not open for further replies.
Top