எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

காதலின் இன்மை உணர்கிறேன்

Status
Not open for further replies.

Fa.Shafana

Moderator
ஆமால்ல இனி இந்த ரூம்ல எனக்கு என்ன வேல..??"
சொல்லிக் கொண்டு திரும்பியவளின் கையில் இரவு அவன் கட்டிலில் வைத்த நாட்குறிப்பு…
"ஏய் அத ஏன் எடுத்த..?? அடுத்தவங்க டயறி எடுக்கவோ படிக்கவோ கூடாதுன்னு தெரியாதா…??
சரி தான் உனக்கு அதெல்லாம் எங்க தெரியப் போகுது"

சுருக்கென்ற வலி மறுபடியும் மனதில் பரவ….
"படிச்சதால தானே உங்க மனசுல இருக்கது எனக்குத் தெரிஞ்சது… உங்களுக்கு கஷ்டம் இல்லாம நானே தெரிஞ்சிகிட்டேன்…"

"அது… ரெண்டு நாள்ல திரும்ப வந்து நானே உங்கிட்ட சொல்ல தான் இருந்தேன்…
நமக்குள்ள ஒண்ணுமே சரியா வராது… பொருத்தம் இல்லாம…"

அவனைப் பேச விடாமல் கை நீட்டித் தடுத்து…
"அதான் எல்லாம் தெளிவா எழுதி இருக்கீங்களே… வேற ஒண்ணும் சொல்ல வேணாம்… எனக்குப் புரியுது…"

"அப்பாடா…. எங்கடா அழுது ஆர்ப்பாட்டம் பண்ணிடுவியோன்னு நெனச்சேன்…
பிரிஞ்சிக்கிட்ட…"

"தகுதியே இல்லைன்னு சொல்லும் போது அழுது புலம்பி தக்க வெச்சி என்ன சாதிக்கப் போறேன்…?? "

"ஆனா சின்ன புள்ள உன் மனச தேவையில்லா குழப்பி விட்டுட்டேன்ல சாரிடா… என் மேல கோவமா??"

"கோவம்லாம் இல்ல சின்ன வருத்தம் தான்… அதெல்லாம் கடந்து போய்டும்

************************
"எங்க அப்பா மேல உனக்கு கோபமே இல்லையா…??"
இத்தனை மாதங்கள் தொண்டையில் உருண்டு கொண்டிருந்த கேள்வி வெளியே வந்தது…

"கோபம் இல்ல வருத்தம் தான்…"
சற்றேனும் தாமதிக்காமல் பதில் வந்தது

"வருத்தமா…?"

"ஹ்ம்ம்… முற்றுப்புள்ளி வெச்ச ஒரு அத்தியாயத்த தாலியோட மூன்று முடிச்சுகள் மூலம் தொடர்புள்ளியாக்கி மறுபடியும் ஆரம்பிச்சு வெச்சுட்டார்… ஒதுக்கி நிறுத்தினவள ஒதுங்கி இருக்க விட்டிருக்கலாம்ன்னு ஒரு வருத்தம் தான்… பொருத்தம் இல்லாம இருந்தவ இப்போ மட்டும் எப்பிடி பொருத்தமானேன்…??
ஊர்ல வேற பொண்ணயே இல்லையா…??"
சடுதியில் வார்த்தைகள் வந்து கொட்டின

"என்னடீ சொல்ற…??"
அதிர்ச்சிக் குரல் அவனிடம்

"கஷ்டமா இருக்குன்னு சொல்றேன்…
தகுதியே இல்லன்னு என்னை உதறித் தள்ளிட்டு போன உங்க கிட்டயே திரும்ப வந்து நிக்கிறது வலிக்குதுன்னு சொல்றேன்
உங்களுக்கு பிடிச்சிருக்கா இல்லையான்னு தெரியாம வாழ்றது ஏதோ ஒரு கட்டாயத்துல வாழ்றது மாதிரி மூச்சு முட்டுதுன்னு சொல்றேன்…"
தன்னை மீறி கத்தியே பேசிவிட்டாள்

"ஏய் என்ன பேசற நீ…??"

"வேற என்ன சொல்லணும்…??
இன்னைக்கு வரைக்கும் நான் உங்களுக்கு பொருத்தமானவ தானா...
உங்களுக்கு பிடிச்ச மனைவியா வாழ தகுதி இருக்கான்னு கூட தெரியாதே…??
இன்னைக்கு வர நீங்க அதப்பத்தி ஒண்ணுமே சொல்லலயே…
நம்ம கல்யாணம் கூட என்னைய ஒரு வார்த்த பேசவிடாம ஏதோ ஒரு பாரத்த தள்ளி விடற மாதிரி தானே எங்க வீட்டுலயும் செஞ்சாங்க…
புஜ்ஜி கிட்ட கூட பேசவே விடல்லயே"

"அப்போ உங்கிட்ட சம்மதம் கேட்கவே இல்லயா…??"
அவள் தோலைப் பிடித்துக் கொண்டு கேட்க

இல்லை என்ற தலையசைப்பு அவளிடம்…

"ஆனா எங்கிட்ட நீ சரி சொன்னதா தானே சொன்னாங்க…"

அவன் கையைத் தட்டிவிட்டவள்
"எப்பிடி சரின்னு சொல்லுவேன்…??
அவங்க சொன்னா உங்களுக்கு எங்க போச்சி புத்தி…??
ஒதுக்கி தள்ளிட்டு போன நீங்க ஒரு வார்த்த எங்கிட்ட கேட்டு இருக்கணுமா இல்லையா…??"
கோபக் குரலில் கேட்டவள்

"யாரோ தெரியாத ஒருத்தர கல்யாணம் பண்ணி வாழ்றது வேற… காதல், பிடித்தம் எல்லாம் தானா வரும்….வராமக் கூட இருக்கும்… அப்பிடியே வராமப் போனாக் கூட பரவால்ல… ஆனா மனசு முழுக்க காதல வெச்சிட்டு இருந்த என் கிட்ட…
எனக்கு உன் மேல காதலே இல்ல சலனம் மட்டும் தான்… நீ எனக்கு பெருத்தமே இல்ல… தகுதியே இல்லன்னு சொல்லி விலகி போனவர் கூட கல்யாணம்னா எப்பிடி சரின்னு சொல்லுவேன்…??
அவங்க கேட்டு இருந்தா கூட உங்க கிட்ட பேசணும்ன்னு தான் சொல்லி இருப்பேன்… உங்க கிட்ட பேசி எதுக்கு மறுபடியும் என்னய உங்க வாழ்க்கைல இழுத்து விட்டுக்க போறீங்கன்னு கேட்டு இருப்பேன்… அதுக்கெல்லாம் வழி இல்லாம பண்ணி இன்னைக்கு வர என்னோட நிம்மதி கெடுத்து வெச்சுருக்காங்க…உங்கள விட்டு விழகி இருக்கவும் முடியாம மனசார ஒன்றவும் முடியாம அதெல்லாம் கொடும…" வெருமைக் குரல் அவளிடம்…

"அடியேய் பைத்தியம் மாதிரி உளறாத
பிடிக்காமத் தான் நம்ம குழந்த உருவாகி இருக்கா…??"

"இல்ல பைத்தியம் மட்டும் தான் பிடிக்கல்ல எனக்கு… இன்னும் கொஞ்ச நாள்ல அதுவும் நடந்து இருக்குமோ என்னவோ… என் நல்ல நேரம் இவன் எனக்குள்ள வந்து என் மனசுக்கு ஆருதலா இருக்கான்…"
அவளை அறியாமலேயே கை வயிற்றில் இடம் பிடித்திருந்தது…

"உனக்குள்ள இருக்க உயிர் எனக்கு உன் மேல பிரியம் இல்லாம தான் வந்ததா…??"
அவனுக்கே பதில் தெரியாத கேள்வி அவளை நோக்கி

"அது எப்பிடி எனக்குத் தெரியும்…
நீங்க உங்க உரிமைய கேட்டீங்க நான் என் கடமைய செஞ்சேன்… இடைல பிடித்தமும் காதலும் எங்க வந்திச்சு…
கட்டாயத்துல வாழ்றதுன்னாலும் இந்த வாழ்க்கைக்கு ஒரு பிடித்தம் வேணும்ல அதான் இந்த குழந்தைய கடவுள் உருவாக்கினார் போல… பிடித்தம் இருந்தா தான் குழந்தைன்னா எத்தனையோ பேர் குழந்தை இல்லாமத் தான் இருப்பாங்க…"
உள்மனதின் ஆற்றாமை எல்லாம் காட்டாற்று வெள்ளமாக அவள் குரல்வழி வெளி வந்தது

"ஆனா உங்க மேல நான் வெச்ச காதலோட மிச்சம் என்னோட ஆழ் மனசுல இருந்திருக்கு அதுதான் உங்க அருகாமையையும் தொடுகைகளையும்
அருவருப்பு இல்லாம ஏத்துக்க வெச்சது…"

"அப்போ என் காதலே இல்லாமத் தான் நம்ம குழந்த உருவாகி இருக்குன்னு சொல்ற… அப்பிடி தானே??"

மீண்டும் அதே கேள்வி…
அவனே உணராது ஆழ்மனதில் புதைந்த காதல் கேள்விகளை வேறு வேறு கோணத்தில் கேட்க வைக்க… அவனுக்கே புரியாத காதல் அவளுக்கு எங்கே புரியுமாம்…

"காதலா… அது இருந்துச்சு…
மனசு முழுக்க என் மேல பிரியமும் நேசமும் மட்டுமே வெச்சி… எனக்கு நீங்க நெற்றில தந்து என் உயிர் வர இனிப்பா இறங்கிச்சே முதல் முத்தம் அதுல இருந்துச்சு முழுக்க முழுக்க எனக்கே எனக்கான காதல்…
நீங்களே உணராத காதல நான் உணர்ந்தேன் அன்னைக்கு…
அத தான் எழுதி இருப்பீங்கன்னு நெனச்சு தான் அந்த டயரிய ஆர்வமா படிச்சேன்… ஆனா நீங்க அதையே சலனம்ன்னு எழுதி இருந்தீங்க…"
வெற்றுப் புன்னகை சிந்தினாள்

" ஏற்கனவே நான் உணர்ந்த உண்மையான காதல சலனம்ன்னு தூக்கிப் போட்டுட்டு போனவர் தானே நீங்க அப்பிடி இருக்கும் போது காதல், பிடித்தம் எல்லாம் நீங்க உணர்த்தாம எனக்கு எப்பிடி புரியுமாம்…??"

இத்தனை மாதங்கள் அவளின் மனதில் கனன்று கொண்டிருந்த வலிகள் எல்லாம் எரிமலையாக வெடித்துச் சிதற
அனல் முழுவதும் தாக்கியது கரணைத்தான்…

*****************************

எனக்கு எத்தன பொண்ணு பார்த்தாங்கன்னு உனக்குத் தெரியுமா…??

பத்துக்கும் மேல பொண்ணுங்க… வீட்ல அவங்களே பார்ப்பாங்க பேசிக்குவாங்க அப்புறம்… அது சரிவரல்ல வேற ஒன்னு பார்க்கலாம்ன்னு சொல்லுவாங்க…

நான் என்னன்னு கூட கேட்க மாட்டேன்… கேட்க கூடிய அளவு எதுவும் மனசுல பதிஞ்சதுமில்ல பாதிச்சதுமில்ல…

ஒரு நாள் எங்க அம்மாவோட, தம்பி பொண்ணு தெ‌ரியும்ல உனக்கு அவள எங்க பாட்டி, பொண்ணு கேட்க…
அப்பாவ காரணம் காட்டி முடியாதுன்னு சொல்லிருக்காங்க…"

சாதாரணமாக கேட்டுக் கொண்டிருந்தவள் எழுந்து உட்கார்ந்து விட்டாள்…
இது அவளுக்கு புதுச் செய்தி

"அன்னைக்கு பாட்டி அழுது புலம்பி ஒரே ஆர்ப்பாட்டம் பண்ணிட்டாங்க…
மொத பார்த்த சில பொண்ணுங்க வீட்லயும் இதயே தான் சொல்லியிருந்தது அன்னைக்கு தான் எனக்குத் தெரிஞ்சது…"

'தீப்தி ஆரம்பிச்சி வெச்சது தொடர் கதையாகியிருக்கு…'
மனம் நினைத்துக் கொண்டது…

"அப்போவே சொல்லிட்டேன் இனி யாரும் கல்யாணப் பேச்சே எடுக்கக் கூடாதுன்னு…
அப்பாவும் மனசளவுல ரொம்பவே ஓய்ஞ்சி இருக்கும் போது இப்பிடியான பேச்சு இன்னும் அவர பீல் பண்ண வைக்கும்னு கவல எனக்கு…

அப்புறம் திடீருன்னு ஒருநாள் ஆபீஸ்ல இருந்த எனக்கு அம்மா கால்…
உன்ன, அப்பா பொண்ணு கேட்டு உங்க வீட்ல… எல்லாரும் சம்மதம் சொன்னாங்கன்னு…

உடனே வந்து அப்பா, அம்மா கிட்ட பேச
முழுமனசா, சந்தோஷமா தான் பொண்ணு கேட்டேன்னு அப்பாவும்…
நீயும் சம்மதிச்சதா அம்மாவும் சொன்னாங்க…

எனக்கு அதத் தாண்டி வேற எதுவும் யோசிக்கக் கூடத் தோணல்ல…
மனசு நெறஞ்சி போச்சி…
அத்தன நாள் இல்லாத ஏதோ ஒரு உணர்வு…
நம்ம கல்யாணம் நடந்துட்டா போதும்ன்னு ஒரு எண்ணம் மட்டுமே இருந்துச்சு…
அது ஏன்னு கூட புரியல்ல…"

திரும்பி அவளைப் பார்த்தவன்

"கல்யாணத்தன்னைக்கு உன் முகம் ஒரு மாதிரி டல்லா இருக்கவும் தான்… ஒரு வேள உன் வீட்ல கேட்டத மறுக்க முடியாம கல்யாணம் பண்ணிக்கிட்டியோன்னு யோசிச்சேன்…
அத உங்கிட்ட கேட்கணும்ன்னா கூட ஒரு தயக்கம்…
ஆனா கொஞ்ச நாள்லயே நீ இயல்பா இருக்கவும்… நான் அத பத்தி யோசிக்கவேயில்ல… மறந்துட்டேன்…"

அவள் திரும்பி முறைக்கவும்…

"உண்மைய சொல்லணும்ல…"
கெஞ்சிக் கொண்டு வந்தது குரல்

"ஆனா நீ இன்னைக்கு வர மனசுலயே வெச்சி ரொம்பவே கஷ்டப்பட்டு இருக்க… சாரிடி…
நம்ம வாழ ஆரம்பிக்கும் போதாவது நீ சொல்லி இருக்கலாம்ல…??"

"இல்ல இது தான் நிதர்சனம்,
இத ஏத்துகிட்டு வாழ பழகிக்கணும்ன்னு புரிஞ்சது…
நான் அனுபவிச்ச அவமானம், புறக்கணிப்பு, ஏமாத்தம் எல்லாம் எனக்கு பெரியளவு மனமுதிர்ச்சிய தந்திருக்கு…
எத்தனையோ கஷ்டங்கள கடந்து வந்திருக்கேன்…
அந்த மெச்சூரிட்டிய வெச்சே இந்த வாழ்க்கைய ஏத்துகிட்டேன்…"

முன்னால் இருந்த சுவற்றை வெறித்தவள்…. வறண்ட குரலில் பேசி இருந்தாள்…

குரலுக்கு மாற்றமாக ஈரமான கண்களை கண்டு கொண்டவன்…
அவளை இழுத்து அணைத்து…

"ஊர்ல பொண்ணுங்களே இல்லையான்னு கேட்ட தானே நீ…??
நிறைய இருக்காங்க ஆனா உன்ன மாதிரி, என்னய ஏத்துக்க வேற யாருமே இருக்கல்ல…"

அவளின் உச்சந்தலையில் கன்னம் வைத்துக் கொண்டான்…

அவனின் இறுகிய அணைப்பு அவளிடம் இதுவரை அவன் செல்லாத தவிப்பையும் காதலையும் சேர்த்து வைத்துச் சொல்ல…
முற்றிலும் கரைந்து விட்டாள் காதலுடன்…

*********************
Thread 'காதலின் இன்மை உணர்கிறேன்-கதைத் திரி'


 
Last edited:
Status
Not open for further replies.
Top