மகா சமுத்ரா
Moderator
அத்தியாயம் - 23
ஆறு வருடங்களுக்கு முன்...
“ஹே ஹே ஹே
ரிமெம்பர் மீ பார் செஞ்சுரீஸ்
அண்ட் ஐ கான்ட் ஸ்டாப் டில் த ஹோல் வோர்ல்ட் நோஸ் மை நேம்
பிகாஸ் ஐ வாஸ் ஒன்லி பார்ன் இன்சைட் மை ட்ரீம்ஸ்”
உச்ச டெசிபெல்லில் பாடிக் கொண்டிருந்த கார் ஸ்டீரியோவைத தாண்டி சத்தமாகப் பாடிக் கொண்டிருந்த பூர்ணவ் சந்திரனை பார்த்து காதுகளைப் பொத்தியும், தலையைக் குனிந்தும், கண்களைச் சுருக்கியும் பார்த்து “அடேய் நிறுத்துடா!!!!!!” என்று அமித்ரா கத்த
காரை லாவகமாக ஒட்டிக் கொண்டே அமித்ராவின் காதுக்கு அருகே வந்து
“அன்டில் யூ டை பார் மீ, அஸ் லாங் அஸ்தேர் இஸ் லைட்
மை சேடோ இஸ் ஓவர் யூ பிகாஸ் ஐ அம் த ஆப்போசிட் ஆப் அம்னீசியா” என்று இன்னும் கத்தி சத்தமாகப் பாடினானே தவிர நிறுத்தவில்லை.
அவனது முகத்தில் அத்தனை உற்சாகம், சந்தோஷம்.
இருபத்து மூன்று வயதிற்கே உரிய துள்ளல்,இன்னும் வாழ்க்கையில் எந்தப் பெரிய அனுபவத்தையும் அனுபவித்து இராத நிலையில் வரும் குழந்தையின் அப்பழுக்கற்ற சந்தோஷம், இதையெல்லாம் தாண்டி எந்த ஒரு கவலையும் இல்லாத வாழ்க்கை என்பதற்கான பொலிவு இருந்தது அவனது முகத்தில்.
கார் பெங்களூரை நோக்கி போய்க் கொண்டிருந்தது.
அமித்ரா “அடேய் நீயெல்லாம் மனுஷ ஜென்மமா? உனக்கு எல்லாம் காதுல சொரணை இருக்கா... இல்ல சும்மா தான இருக்குன்னு கடன் குடுத்திட்டையா?” என்று கத்தியவளுக்கு அவனிடம் இருந்து பதிலாகக் கிடைத்தது என்னவோ ஸ்டீரியோவின் சத்தம் இன்னும் அதிகமாக்கப்பட்டது தான்.
இதைப் பார்த்தவள் “பகவானே... என்னைய யாராச்சும் இந்தக் காதில்லாதவன் கிட்ட இருந்து காப்பாத்துங்களேன்” என்று மேல் நோக்கி கும்பிட்டுவிட்டுத் தலையில் கை வைத்தபடி உட்கார்ந்தாள்.
வலது கை முட்டியை வலது தொடையில் அழுத்தி ,நெற்றியை உள்ளங்கையில் தாங்கி அமர்ந்து இருந்தவள் தலையைக் கொஞ்சமே கொஞ்சமாகத் திருப்பி அவனைப் பார்த்தாள்.
அமித்ராவும், பூர்ணவ்வும் வெளிநாட்டில் ஒரே பல்கலைகழகத்தில், ஒரே வகுப்பில் மேனேஜ்மெண்ட் படிப்பை முடித்துவிட்டு நான்கு நாட்களுக்கு முன் தான் இந்தியா வந்திருந்தனர்.
அந்தப் பல்கலைகழகத்தில் படிக்கும் பொழுது இவர்களுடன் மித்ரா, சிக்கந்தர், அஞ்சிதா, வித்யுத், குஷி எனக் கூடப் படித்த ஐவரும் சேர்ந்து ஒரு கேங். இவர்கள் எழுவரும் ஓர் இடத்தில் குழுமிவிட்டார்கள் என்றால் அவ்விடம் அமுக்கு டுமுக்கு அமால் டுமால் தான்.
இவர்களில் பூர்ணவ்வும் அமித்ராவும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாக இருக்க சிக்கந்தர்- பஞ்சாப், அஞ்சிதா- கேரளா,வித்யுத் – மகாராஷ்டிரா, குஷி – டெல்லி,மற்றும் மித்ரா – ஹைதராபாத் எனக் கிட்டத்தட்ட பாதி இந்தியாவே ஒன்றுக் கூடி அந்தப் பெயர் போன லண்டன் பல்கலைகழகத்தை ஆட்டி எடுத்த அமால் டுமால்களைச் சொல்லி மாளாது.
இன்னும் இவர்கள் கொஞ்ச நாட்கள் அங்கே இருந்திருந்தால் அங்கு ஓர் “இந்தியனே வெளியேறு” இயக்கம் தொடங்கி இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
மூன்று வாரங்களுக்கு முன்பு வரை அவர்கள் குழுவில் குஷியும், வித்யுத்தும் மட்டுமே காதல் கிளிகளாக இருந்தனர். ஒரு ஜோடி இரு ஜோடியாக மாறக் காரணம் - “அன்று நடந்த பார்ட்டியும், அஞ்சிதா குரங்கும்” ஏதோ தமிழ் பட டைட்டில் போல இருக்குல..
மேனேஜ்மென்ட் படிப்பின் ஆரம்பத்தில் இருந்தே பூர்ணவ் மீது அமித்ராவிற்கு ஓர் ஈர்ப்பு இருந்து அது காலப் போக்கில் காதலாக மாறி, மூன்று வாரங்களுக்கு முன் நடந்த ஒரு பார்ட்டியில் அமித்ரா தான் பூர்ணவ்விற்கு ப்ரொபோஸ் செய்தாள்.
படிப்பின் ஆரம்பத்தில் இருந்தே எழுவரும் ஒன்றாகச் சேர்ந்து இருந்தவர்கள் தான் என்றாலும் படிப்பு முடியப் போகும் ஒரு மாதத்திற்கு முன்பு வரை கூட அமித்ராவிற்குத் தனது காதலை வெளிப்படுத்த தைரியம் வந்திருக்கவில்லை... ஆனால் ஆசை மட்டும் ஆழி அளவு இருந்தது. அவளை அவளது காதலை சொல்ல விடாமல் தடுத்த காரணம் பூர்ணவ் என்றுமே இவளை நல்ல தோழியாக மட்டும் தான் பார்க்கிறான் என்பதே. எங்கே தன்னை மறுத்துவிடுவானோ என்ற பயம் அவளுள் இருந்தாலும் அவளது இயல்பான பிடிவாத குணம் பூர்ணவ் வேண்டும் என்று கரகாட்டம் போட ஏதோ ஒரு குருட்டுத் தைரியத்தில் பார்ட்டியில் எல்லோர் முன்பும் வைத்து பூர்ணவ்விற்கு ப்ரொபோஸ் செய்துவிட்டாள்.
சுற்றி இருந்த இவர்களின் ஐந்து நண்பர்களும்
“ஓ..................ஹோ”
“ஹே கைஸ்... வென் டிட் இட் ஹெப்பென்?”
“பூர்ணவ் வொய் ஆர் யூ சைலன்ட்? காமன் மேன்” என்று எல்லோரும் குதூகலிக்க
பூர்ணவ்வின் பார்வை முழுக்க அமித்ராவின் முகத்திலேயே இருந்தது.
“எங்கே தன்னை நிராகரித்துவிடுவானோ?, எல்லோர் முன்பும் அவமானம் ஆகி விடுமோ? ஒருவேளை காதலோடு சேர்த்து நட்பையும் உதறிவிட்டால் என்ன ஆவது? ப்ரொபோஸ் செய்திருக்கக் கூடாதோ” என இன்னும் பல வகையான பயக் கலவைகளை அமித்ராவின் முகத்தில் பார்த்தவனுக்கு “எத்தனை தைரியமான பெண்... காதல் இப்படி கோளை ஆக்கிவிட்டதே” என்ற எண்ணம் தோன்ற சிரிப்பு தான் வந்தது அவனுக்கு.
அவன் முகத்தில் படர்ந்த புன்னகையைப் பார்த்த அஞ்சிதா, பூர்ணவ்விற்கும் சம்மதம் என்று நினைத்துக் கொண்டு “ஹே, அனதர் கப்பில் இன் அவர் கேங்.... கமான் லெட்ஸ் பார்ட்டி ” என்று துள்ளிக் குதித்தாள்
இதைக் கேட்டுத் திகைத்த பூர்ணவ் “எதே?????!!!! நா எப்படா ஆமான்னே?” என்ற எண்ணம் ஓட அஞ்சிதாவைத் திரும்பிப் பார்த்தபடி அமித்ராவைப் பார்க்க அவளோ ஏற்கனவே வெட்கத்தில் குளித்து எழுந்தவள் போல் நின்று இருந்தாள்.
“இது வேறையா?” என்று நினைத்தவனுக்கு “நம்மளுக்குப் பிடிச்ச பொண்ண விட நம்மள பிடிச்ச பொண்ண கல்யாணம் பணிகிட்டா லைப் நல்லாருக்கும்” என்ற டைலாக் பேக் கிரவுண்டில் ஓட “சரி நாமளும் சிங்கிளா தான் இருக்கோம், எப்டியும் கல்யாணம் பண்ணி தான் ஆகணும், அமித்ராவையே பண்ணிப்போம்” என்று யோசித்துக் கொண்டிருந்தவனுக்கு அமித்ராவின் தந்தைக்கும் அவனது தந்தைக்கும் இருக்கும் தொழில் பகைக் கூட இதனால் தீர்ந்து போக வாய்ப்பு இருக்கின்றது... மேலும் அவள் மேனேஜ்மென்ட் படித்து இருப்பதால் பிசினஸ் டிவலப் பண்ண ஈசியா இருக்கும்..” என இந்தக் காதலினால் உண்டாகும் பயன்கள் மட்டுமே அந்தப் பொறுப்பான குணம் கொண்டவனின் மனக் கண்ணுக்கு தெரிய “ஹ்ம்ம்... ஓகே” என்ற ஒரு தோள் குலுக்கலோடு சம்மதம் தெரிவித்துவிட்டான்.
அதெப்படி காதலே இல்லாமல் ஒத்துக் கொண்டான் என்று தோன்றுகின்றதா? லாஜிக் இல்லாத விசயமாகத் தெரிகின்றதா?
ஏதோ ஒரு வகையில் பூர்ணவ்வின் இந்தக் குணத்தை எனக்கு “பக்கா இந்திய அர்ரெஞ் மேர்ரேஜ்”க்களோடு ஒப்புமை படுத்திப் பார்க்கத் தோன்றுகிறது.
நம்முடைய இந்தியாவில் அதிகம் நடக்கும் ‘பக்கா’ அர்ரெஞ் மேரேஜ்ஜுக்களில் காதல் என்பது திருமணத்துக்குப் பின்னான ஒன்றானதாகத் தான் இருந்து வருகின்றது... இணையும் இரு மனமும் காதலின் அடிப்படியில் இணைவதில்லை.. “இணை வேண்டும்” என்ற எண்ணத்தின் அடிப்படையிலும், பெற்றவர்களின் கைகளில் இருக்கும் பொறுப்புகளின் பெயரிலும் தான் முக்கால்வாசி திருமணங்கள் நடக்கின்றன... அப்படிப் பார்த்தால் இதே சமூகத்தில் பிறந்து வளர்ந்த ஒருவனின் எண்ணங்கள் வெளிநாடு போய்ப் படித்த பின்பும் மாறுபடாமல் போனதில் ஆச்சரியப் படுவதற்கில்லை... இதனால் நான் சொல்ல வருவது என்னவென்றால் பூர்ணவ்விற்கு நடப்பது அர்ரேஜ்ட் லவ் அவ்வளவு தான். அதே நேரத்தில் பல வெற்றிகரமான அறேஞ்ட் மேரேஜூகளைப் பார்த்தவனுக்கு இது எதில் போய் முடியுமோ என்ற பயமெல்லாம் எழவே இல்லை. மொத்தத்தில் பக்கா ப்ராக்டிக்கல் மேன் என்று டேக் குத்தும் மன நிலையில் இருந்தான் பூர்ணவ் சந்திரன். அவனைப் பொறுத்தவரையில் திருமணம் செய்யப் போவது யாராக வேண்டும் என்றாலும் இருக்காலாம், மற்றபடி அது ஒரு பெண்ணாக இருக்க வேண்டும் என்பது மட்டுமே அதில் விதி விலக்கு.
இன்னொரு பக்கம் அமித்ராவை எடுத்துக் கொள்ளலாம், பூர்ணவ்வின் சம்மதத்திலேயே அவளது காதல் வெற்றி அடைந்து விட்டதாக தான் அவளுக்குத் தோன்றியது... எதையும் பதிலுக்கு எதிர்பாராமல் கொடுக்கும் மனது அவளுடையது... அவள் பூர்ணவ் மீது அளவற்ற காதல் வைத்திருக்கிறாள்... அதே நேரத்தில் பூர்ணவ்வும் அவளைக் காதலிக்க ஆரம்பித்துவிட்டான் என்று எண்ணும் அளவிற்கு அவள் முட்டாளும் அல்ல... அவன் ஏற்றுக் கொண்டது அவளுடைய காதலை மட்டுமே என்பதையும் அவனை அணு அணுவாக இத்தனை நாட்கள் ரசித்துப் புரிந்து வைத்திருந்தவள் இதையும் புரிந்து கொண்டாள் தான்.
“இப்போ அவன் லவ் பண்ணலைன்னா என்ன? என்னோட லவ்வே எங்க ரெண்டு பேருக்கும் போதுமானது... “ என்று நினைத்தவளுக்குச் சந்தோஷம் தாங்கவில்லை.
இது நடந்து மூன்று வாரங்கள் + நான்கு நாட்கள் ஆகி இருந்தது. பெங்களூரில் நடக்கும் மித்ராவின் திருமணத்திற்குத் தான் இருவரும் சென்று கொண்டு இருக்கிறார்கள். பின் குறிப்பு - மித்ரா ஹைதராபாத் தான், மாப்பிள்ளை பெங்களூர்.
தனது முகத்தை லேசாகத் திருப்பிப் பூர்ணவ்வைப் பார்த்தவளின் கண்கள் அவன் மீதே மையல் கொண்டு நின்றன. அவனே மனது மூளை இரண்டிலும் நிரம்பி இருக்க இத்தனை நேரம் இருந்த ஹை டெசிபெல் சத்தம் இப்பொழுது அவளுக்குக் கேட்கவில்லை.
பூர்ணவ்வை அவள் ரசிக்க ஆரம்பித்த மறுநொடி அவளது உடலில் சுரந்த ஹார்மோன்கள் அவளைச் செவிடாக்கி இருந்தது.
கண்கள் மட்டுமே ஒழுங்காக வேலை செய்ய, அவை பூர்ணவ்வின் முகத்தை இன்ச் இஞ்சாக ரசிக்கும் வேலையைச் செவ்வனே செய்து கொண்டிருந்தன.
பாட்டோடு சேர்ந்து சத்தமாகப் பாடும் போது மின்னும் அவனது வெண்ணிற பற்கள், பிடித்த பாடல் என்பதை எடுத்துக் காட்டும் விதமாக உண்டான உற்சாகத்தில் விரிந்து இருந்த அவனது இதழ்களும், கன்ன தசை விரிந்ததால் அவைகளுக்கு முரணாகச் சுருங்கி இருந்த அவனது கண்களும் கூடச் சிரித்தன.
அவனுடன் படித்த இத்தனை வருடங்களில் எந்த ஒரு செயலாலும், நிகழ்வாலும் பாதிக்கப்பட்ட சிறு சுணக்கத்தைக் கூட அவனது முகத்தில் பார்த்தது இல்லை அமித்ரா.
அதே வாழ்வை வாழ்பவள் தான் அவளும். ஆனால் அதைப் பூர்ணவ்வுடன் வாழ்ந்தால் இன்னும் அழகாக இருக்கும் என்று சொல்லியது அவளது மனது.
நாளுக்கு நாள் அவன் மீது கொண்ட காதல் அதிகமாகக் காரணம் அறியாள் அப்பேதைப் பெண்.
தான் கொடுத்த எதையும் திருப்பி எதிர்பார்க்கா அட்சயப்பாத்திரம் போல அவளது காதல்.. எடுக்க எடுக்க நிரம்பி வழியும், அதனை வைத்திருப்பவருக்கு மட்டுமே பயன், அள்ள அள்ள கொடுப்பதால் அட்சயப்பாத்திரத்திற்கு என்ன பயன் இருக்கப் போகிறது? ஒன்றும் இல்லை. எதையும் பிரதிபலன் இல்லாமல் செய்யாத மக்கள் பெருக ஆரம்பித்து இருக்கும் மனித உலகில் அவள் வேறானவள்.
அவனுடன் இருப்பது மட்டுமே அவளுக்குச் சந்தோசத்தை அளிக்கப் போதுமானதாக இருக்க
அவள் உயிராக நினைக்கும் அக்காதலில் காலம் கல்லாட்டம் ஆடப் போகிறது என்று நமக்குத் தெரியும்....
அவளுக்குத் தெரியுமா?
தெரிந்திருந்தால் அன்றே அவனை விட்டு விலகியிருப்பளா?
இந்தக் காதல் வேண்டாம் என்று தூக்கி எரிந்திருப்பளா?
அவனைச் சுலபமாக மறந்திருப்பாளா?
ஆறு வருடங்களுக்கு முன்...
“ஹே ஹே ஹே
ரிமெம்பர் மீ பார் செஞ்சுரீஸ்
அண்ட் ஐ கான்ட் ஸ்டாப் டில் த ஹோல் வோர்ல்ட் நோஸ் மை நேம்
பிகாஸ் ஐ வாஸ் ஒன்லி பார்ன் இன்சைட் மை ட்ரீம்ஸ்”
உச்ச டெசிபெல்லில் பாடிக் கொண்டிருந்த கார் ஸ்டீரியோவைத தாண்டி சத்தமாகப் பாடிக் கொண்டிருந்த பூர்ணவ் சந்திரனை பார்த்து காதுகளைப் பொத்தியும், தலையைக் குனிந்தும், கண்களைச் சுருக்கியும் பார்த்து “அடேய் நிறுத்துடா!!!!!!” என்று அமித்ரா கத்த
காரை லாவகமாக ஒட்டிக் கொண்டே அமித்ராவின் காதுக்கு அருகே வந்து
“அன்டில் யூ டை பார் மீ, அஸ் லாங் அஸ்தேர் இஸ் லைட்
மை சேடோ இஸ் ஓவர் யூ பிகாஸ் ஐ அம் த ஆப்போசிட் ஆப் அம்னீசியா” என்று இன்னும் கத்தி சத்தமாகப் பாடினானே தவிர நிறுத்தவில்லை.
அவனது முகத்தில் அத்தனை உற்சாகம், சந்தோஷம்.
இருபத்து மூன்று வயதிற்கே உரிய துள்ளல்,இன்னும் வாழ்க்கையில் எந்தப் பெரிய அனுபவத்தையும் அனுபவித்து இராத நிலையில் வரும் குழந்தையின் அப்பழுக்கற்ற சந்தோஷம், இதையெல்லாம் தாண்டி எந்த ஒரு கவலையும் இல்லாத வாழ்க்கை என்பதற்கான பொலிவு இருந்தது அவனது முகத்தில்.
கார் பெங்களூரை நோக்கி போய்க் கொண்டிருந்தது.
அமித்ரா “அடேய் நீயெல்லாம் மனுஷ ஜென்மமா? உனக்கு எல்லாம் காதுல சொரணை இருக்கா... இல்ல சும்மா தான இருக்குன்னு கடன் குடுத்திட்டையா?” என்று கத்தியவளுக்கு அவனிடம் இருந்து பதிலாகக் கிடைத்தது என்னவோ ஸ்டீரியோவின் சத்தம் இன்னும் அதிகமாக்கப்பட்டது தான்.
இதைப் பார்த்தவள் “பகவானே... என்னைய யாராச்சும் இந்தக் காதில்லாதவன் கிட்ட இருந்து காப்பாத்துங்களேன்” என்று மேல் நோக்கி கும்பிட்டுவிட்டுத் தலையில் கை வைத்தபடி உட்கார்ந்தாள்.
வலது கை முட்டியை வலது தொடையில் அழுத்தி ,நெற்றியை உள்ளங்கையில் தாங்கி அமர்ந்து இருந்தவள் தலையைக் கொஞ்சமே கொஞ்சமாகத் திருப்பி அவனைப் பார்த்தாள்.
அமித்ராவும், பூர்ணவ்வும் வெளிநாட்டில் ஒரே பல்கலைகழகத்தில், ஒரே வகுப்பில் மேனேஜ்மெண்ட் படிப்பை முடித்துவிட்டு நான்கு நாட்களுக்கு முன் தான் இந்தியா வந்திருந்தனர்.
அந்தப் பல்கலைகழகத்தில் படிக்கும் பொழுது இவர்களுடன் மித்ரா, சிக்கந்தர், அஞ்சிதா, வித்யுத், குஷி எனக் கூடப் படித்த ஐவரும் சேர்ந்து ஒரு கேங். இவர்கள் எழுவரும் ஓர் இடத்தில் குழுமிவிட்டார்கள் என்றால் அவ்விடம் அமுக்கு டுமுக்கு அமால் டுமால் தான்.
இவர்களில் பூர்ணவ்வும் அமித்ராவும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாக இருக்க சிக்கந்தர்- பஞ்சாப், அஞ்சிதா- கேரளா,வித்யுத் – மகாராஷ்டிரா, குஷி – டெல்லி,மற்றும் மித்ரா – ஹைதராபாத் எனக் கிட்டத்தட்ட பாதி இந்தியாவே ஒன்றுக் கூடி அந்தப் பெயர் போன லண்டன் பல்கலைகழகத்தை ஆட்டி எடுத்த அமால் டுமால்களைச் சொல்லி மாளாது.
இன்னும் இவர்கள் கொஞ்ச நாட்கள் அங்கே இருந்திருந்தால் அங்கு ஓர் “இந்தியனே வெளியேறு” இயக்கம் தொடங்கி இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
மூன்று வாரங்களுக்கு முன்பு வரை அவர்கள் குழுவில் குஷியும், வித்யுத்தும் மட்டுமே காதல் கிளிகளாக இருந்தனர். ஒரு ஜோடி இரு ஜோடியாக மாறக் காரணம் - “அன்று நடந்த பார்ட்டியும், அஞ்சிதா குரங்கும்” ஏதோ தமிழ் பட டைட்டில் போல இருக்குல..
மேனேஜ்மென்ட் படிப்பின் ஆரம்பத்தில் இருந்தே பூர்ணவ் மீது அமித்ராவிற்கு ஓர் ஈர்ப்பு இருந்து அது காலப் போக்கில் காதலாக மாறி, மூன்று வாரங்களுக்கு முன் நடந்த ஒரு பார்ட்டியில் அமித்ரா தான் பூர்ணவ்விற்கு ப்ரொபோஸ் செய்தாள்.
படிப்பின் ஆரம்பத்தில் இருந்தே எழுவரும் ஒன்றாகச் சேர்ந்து இருந்தவர்கள் தான் என்றாலும் படிப்பு முடியப் போகும் ஒரு மாதத்திற்கு முன்பு வரை கூட அமித்ராவிற்குத் தனது காதலை வெளிப்படுத்த தைரியம் வந்திருக்கவில்லை... ஆனால் ஆசை மட்டும் ஆழி அளவு இருந்தது. அவளை அவளது காதலை சொல்ல விடாமல் தடுத்த காரணம் பூர்ணவ் என்றுமே இவளை நல்ல தோழியாக மட்டும் தான் பார்க்கிறான் என்பதே. எங்கே தன்னை மறுத்துவிடுவானோ என்ற பயம் அவளுள் இருந்தாலும் அவளது இயல்பான பிடிவாத குணம் பூர்ணவ் வேண்டும் என்று கரகாட்டம் போட ஏதோ ஒரு குருட்டுத் தைரியத்தில் பார்ட்டியில் எல்லோர் முன்பும் வைத்து பூர்ணவ்விற்கு ப்ரொபோஸ் செய்துவிட்டாள்.
சுற்றி இருந்த இவர்களின் ஐந்து நண்பர்களும்
“ஓ..................ஹோ”
“ஹே கைஸ்... வென் டிட் இட் ஹெப்பென்?”
“பூர்ணவ் வொய் ஆர் யூ சைலன்ட்? காமன் மேன்” என்று எல்லோரும் குதூகலிக்க
பூர்ணவ்வின் பார்வை முழுக்க அமித்ராவின் முகத்திலேயே இருந்தது.
“எங்கே தன்னை நிராகரித்துவிடுவானோ?, எல்லோர் முன்பும் அவமானம் ஆகி விடுமோ? ஒருவேளை காதலோடு சேர்த்து நட்பையும் உதறிவிட்டால் என்ன ஆவது? ப்ரொபோஸ் செய்திருக்கக் கூடாதோ” என இன்னும் பல வகையான பயக் கலவைகளை அமித்ராவின் முகத்தில் பார்த்தவனுக்கு “எத்தனை தைரியமான பெண்... காதல் இப்படி கோளை ஆக்கிவிட்டதே” என்ற எண்ணம் தோன்ற சிரிப்பு தான் வந்தது அவனுக்கு.
அவன் முகத்தில் படர்ந்த புன்னகையைப் பார்த்த அஞ்சிதா, பூர்ணவ்விற்கும் சம்மதம் என்று நினைத்துக் கொண்டு “ஹே, அனதர் கப்பில் இன் அவர் கேங்.... கமான் லெட்ஸ் பார்ட்டி ” என்று துள்ளிக் குதித்தாள்
இதைக் கேட்டுத் திகைத்த பூர்ணவ் “எதே?????!!!! நா எப்படா ஆமான்னே?” என்ற எண்ணம் ஓட அஞ்சிதாவைத் திரும்பிப் பார்த்தபடி அமித்ராவைப் பார்க்க அவளோ ஏற்கனவே வெட்கத்தில் குளித்து எழுந்தவள் போல் நின்று இருந்தாள்.
“இது வேறையா?” என்று நினைத்தவனுக்கு “நம்மளுக்குப் பிடிச்ச பொண்ண விட நம்மள பிடிச்ச பொண்ண கல்யாணம் பணிகிட்டா லைப் நல்லாருக்கும்” என்ற டைலாக் பேக் கிரவுண்டில் ஓட “சரி நாமளும் சிங்கிளா தான் இருக்கோம், எப்டியும் கல்யாணம் பண்ணி தான் ஆகணும், அமித்ராவையே பண்ணிப்போம்” என்று யோசித்துக் கொண்டிருந்தவனுக்கு அமித்ராவின் தந்தைக்கும் அவனது தந்தைக்கும் இருக்கும் தொழில் பகைக் கூட இதனால் தீர்ந்து போக வாய்ப்பு இருக்கின்றது... மேலும் அவள் மேனேஜ்மென்ட் படித்து இருப்பதால் பிசினஸ் டிவலப் பண்ண ஈசியா இருக்கும்..” என இந்தக் காதலினால் உண்டாகும் பயன்கள் மட்டுமே அந்தப் பொறுப்பான குணம் கொண்டவனின் மனக் கண்ணுக்கு தெரிய “ஹ்ம்ம்... ஓகே” என்ற ஒரு தோள் குலுக்கலோடு சம்மதம் தெரிவித்துவிட்டான்.
அதெப்படி காதலே இல்லாமல் ஒத்துக் கொண்டான் என்று தோன்றுகின்றதா? லாஜிக் இல்லாத விசயமாகத் தெரிகின்றதா?
ஏதோ ஒரு வகையில் பூர்ணவ்வின் இந்தக் குணத்தை எனக்கு “பக்கா இந்திய அர்ரெஞ் மேர்ரேஜ்”க்களோடு ஒப்புமை படுத்திப் பார்க்கத் தோன்றுகிறது.
நம்முடைய இந்தியாவில் அதிகம் நடக்கும் ‘பக்கா’ அர்ரெஞ் மேரேஜ்ஜுக்களில் காதல் என்பது திருமணத்துக்குப் பின்னான ஒன்றானதாகத் தான் இருந்து வருகின்றது... இணையும் இரு மனமும் காதலின் அடிப்படியில் இணைவதில்லை.. “இணை வேண்டும்” என்ற எண்ணத்தின் அடிப்படையிலும், பெற்றவர்களின் கைகளில் இருக்கும் பொறுப்புகளின் பெயரிலும் தான் முக்கால்வாசி திருமணங்கள் நடக்கின்றன... அப்படிப் பார்த்தால் இதே சமூகத்தில் பிறந்து வளர்ந்த ஒருவனின் எண்ணங்கள் வெளிநாடு போய்ப் படித்த பின்பும் மாறுபடாமல் போனதில் ஆச்சரியப் படுவதற்கில்லை... இதனால் நான் சொல்ல வருவது என்னவென்றால் பூர்ணவ்விற்கு நடப்பது அர்ரேஜ்ட் லவ் அவ்வளவு தான். அதே நேரத்தில் பல வெற்றிகரமான அறேஞ்ட் மேரேஜூகளைப் பார்த்தவனுக்கு இது எதில் போய் முடியுமோ என்ற பயமெல்லாம் எழவே இல்லை. மொத்தத்தில் பக்கா ப்ராக்டிக்கல் மேன் என்று டேக் குத்தும் மன நிலையில் இருந்தான் பூர்ணவ் சந்திரன். அவனைப் பொறுத்தவரையில் திருமணம் செய்யப் போவது யாராக வேண்டும் என்றாலும் இருக்காலாம், மற்றபடி அது ஒரு பெண்ணாக இருக்க வேண்டும் என்பது மட்டுமே அதில் விதி விலக்கு.
இன்னொரு பக்கம் அமித்ராவை எடுத்துக் கொள்ளலாம், பூர்ணவ்வின் சம்மதத்திலேயே அவளது காதல் வெற்றி அடைந்து விட்டதாக தான் அவளுக்குத் தோன்றியது... எதையும் பதிலுக்கு எதிர்பாராமல் கொடுக்கும் மனது அவளுடையது... அவள் பூர்ணவ் மீது அளவற்ற காதல் வைத்திருக்கிறாள்... அதே நேரத்தில் பூர்ணவ்வும் அவளைக் காதலிக்க ஆரம்பித்துவிட்டான் என்று எண்ணும் அளவிற்கு அவள் முட்டாளும் அல்ல... அவன் ஏற்றுக் கொண்டது அவளுடைய காதலை மட்டுமே என்பதையும் அவனை அணு அணுவாக இத்தனை நாட்கள் ரசித்துப் புரிந்து வைத்திருந்தவள் இதையும் புரிந்து கொண்டாள் தான்.
“இப்போ அவன் லவ் பண்ணலைன்னா என்ன? என்னோட லவ்வே எங்க ரெண்டு பேருக்கும் போதுமானது... “ என்று நினைத்தவளுக்குச் சந்தோஷம் தாங்கவில்லை.
இது நடந்து மூன்று வாரங்கள் + நான்கு நாட்கள் ஆகி இருந்தது. பெங்களூரில் நடக்கும் மித்ராவின் திருமணத்திற்குத் தான் இருவரும் சென்று கொண்டு இருக்கிறார்கள். பின் குறிப்பு - மித்ரா ஹைதராபாத் தான், மாப்பிள்ளை பெங்களூர்.
தனது முகத்தை லேசாகத் திருப்பிப் பூர்ணவ்வைப் பார்த்தவளின் கண்கள் அவன் மீதே மையல் கொண்டு நின்றன. அவனே மனது மூளை இரண்டிலும் நிரம்பி இருக்க இத்தனை நேரம் இருந்த ஹை டெசிபெல் சத்தம் இப்பொழுது அவளுக்குக் கேட்கவில்லை.
பூர்ணவ்வை அவள் ரசிக்க ஆரம்பித்த மறுநொடி அவளது உடலில் சுரந்த ஹார்மோன்கள் அவளைச் செவிடாக்கி இருந்தது.
கண்கள் மட்டுமே ஒழுங்காக வேலை செய்ய, அவை பூர்ணவ்வின் முகத்தை இன்ச் இஞ்சாக ரசிக்கும் வேலையைச் செவ்வனே செய்து கொண்டிருந்தன.
பாட்டோடு சேர்ந்து சத்தமாகப் பாடும் போது மின்னும் அவனது வெண்ணிற பற்கள், பிடித்த பாடல் என்பதை எடுத்துக் காட்டும் விதமாக உண்டான உற்சாகத்தில் விரிந்து இருந்த அவனது இதழ்களும், கன்ன தசை விரிந்ததால் அவைகளுக்கு முரணாகச் சுருங்கி இருந்த அவனது கண்களும் கூடச் சிரித்தன.
அவனுடன் படித்த இத்தனை வருடங்களில் எந்த ஒரு செயலாலும், நிகழ்வாலும் பாதிக்கப்பட்ட சிறு சுணக்கத்தைக் கூட அவனது முகத்தில் பார்த்தது இல்லை அமித்ரா.
அதே வாழ்வை வாழ்பவள் தான் அவளும். ஆனால் அதைப் பூர்ணவ்வுடன் வாழ்ந்தால் இன்னும் அழகாக இருக்கும் என்று சொல்லியது அவளது மனது.
நாளுக்கு நாள் அவன் மீது கொண்ட காதல் அதிகமாகக் காரணம் அறியாள் அப்பேதைப் பெண்.
தான் கொடுத்த எதையும் திருப்பி எதிர்பார்க்கா அட்சயப்பாத்திரம் போல அவளது காதல்.. எடுக்க எடுக்க நிரம்பி வழியும், அதனை வைத்திருப்பவருக்கு மட்டுமே பயன், அள்ள அள்ள கொடுப்பதால் அட்சயப்பாத்திரத்திற்கு என்ன பயன் இருக்கப் போகிறது? ஒன்றும் இல்லை. எதையும் பிரதிபலன் இல்லாமல் செய்யாத மக்கள் பெருக ஆரம்பித்து இருக்கும் மனித உலகில் அவள் வேறானவள்.
அவனுடன் இருப்பது மட்டுமே அவளுக்குச் சந்தோசத்தை அளிக்கப் போதுமானதாக இருக்க
அவள் உயிராக நினைக்கும் அக்காதலில் காலம் கல்லாட்டம் ஆடப் போகிறது என்று நமக்குத் தெரியும்....
அவளுக்குத் தெரியுமா?
தெரிந்திருந்தால் அன்றே அவனை விட்டு விலகியிருப்பளா?
இந்தக் காதல் வேண்டாம் என்று தூக்கி எரிந்திருப்பளா?
அவனைச் சுலபமாக மறந்திருப்பாளா?