Saranya Visveswaran
Moderator
நாயகன் - அர்ஜுன் ஆதித்யன்
நாயகி - வித்ய யாழினி
அத்தியாயம் 1
அதிகாலை நேரம் லேசான மழைச்சாரல் முகத்தில் மோத... சுருள்சுருளான கேசம் மழைக்காற்றுக்கு ஏற்றவாறு நெற்றியை மென்மையாய் வருடிச் செல்ல… அந்த மலை பிரதேசத்தின் குளிரையும் பொருட்படுத்தாமல் உடல் விறைக்க தன் அறையின் பால்கனியில் நின்றிருந்தான் அர்ஜுன்.
அர்ஜுன் ஆதித்யன் , தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்றழைக்கப்படும் கோவை மாநகரின் முன்னனி தொழிலதிபர்களுள் ஒருவன். ஆதி மெஷின் ஒர்க்ஸ் என்னும் ஜவுளி துறைக்கு தேவையான இயந்திரங்கள் தயாரிக்கும் நிறுவனம் அர்ஜுனின் தாத்தாவினால் தொடங்கப்பட்டு, அர்ஜுனின் தந்தை ஆதிகேசவின் காலத்தில் நிலையான வளர்ச்சியை அடைந்தது.
இன்று அர்ஜுன் கைக்கு நிறுவனம் வந்த பிறகு இந்தியாவில் நூற்பு ஜவுளி இயந்திரங்களின் மிகப்பெரிய உற்பத்தியாளராக தொடர்ந்து முன்னேறி வருகிறது. தொழில் என்று வந்துவிட்டால் தூக்கம் பசி மறந்து அதில் மூழ்கிவிடுபவன் இன்று தன் உயிரானவளை தொலைத்துவிட்டு, அதே தொழில் என்ற ஒன்று இருப்பது கூட மறந்து தன் உயிரில் கலந்தவளை தேடி அலைகிறான்.
கேரள வயநாடு மழைப் பிரதேசத்தின் ரம்மியமான எழில் கொஞ்சும் அழகு அவன் மனதை குளிர்விக்கவில்லை. மாறாக ஏதோ ஒருவித மன அழுத்தத்தையே கொடுத்தது.
வேண்டாம் என்று ஒதுக்க நினைத்த ஒன்றை இப்படி உயிர் துடிக்கும் வலியுடன் தேட நேரிடும் என்று அவன் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.
மனதின் அழுத்தம் தாளாமல், "எங்கடி இருக்க... ரொம்ப பயமா இருக்கு உனக்கு என்னாச்சோன்னு " என்று வாய்விட்டு புலம்பியவன் கண்களில் வழிந்த கண்ணீரை தன் புரங்கையால் துடைத்துக்கொண்டான்.
கடைசியாக அவளை பார்த்தபோது "இனி நீயா என்ன தேடி வர வரைக்கும் நான் உன்ன பார்க்க வரமாட்டேன் " என்று கலங்கிய கண்களுடன் கூறிச் சென்றவள் முகமே அவனை வாட்டி எடுத்தது. 'உன்னத் தேடி தான்டி அலையறேன்... ஆனா கண்டுபிடிக்க முடியலையே... ' என்று அவளை காணாத விரக்தியில் தவித்தான்.
சிறிது நேரம் அவள் ரசிக்கும் மழைத்தூறலில் நின்றவன் பொழுது விடிவதை உணர்ந்து உடை மாற்றிக்கொண்டு வந்தான். எப்போதும் இருக்கும் கம்பீரம் தளர்ந்து கலைந்த கேசமும், தாடி அடர்ந்த முகமுமாக கண்களில் ஓர் சோர்வுடன் இருந்தான். கடந்த ஒரு மாதமாக அந்த ஊர் முழுவதும் எத்தனையோ வழிகளில் தேடிப் பார்த்துவிட்டான் பலன் என்னவோ பூஜ்யமாக தான் இருந்தது.
இன்றும் அவளை தேடவே விரைவாக வெளியே கிளம்பியவனை தடுத்தது அவன் நண்பன் பிரதீஷின் வருகை. எப்படியும் அர்ஜுன் சாப்பிட்டு இருக்க மாட்டான் என்று அறிந்தே தன் வீட்டிலிருந்து உணவை எடுத்து வந்திருந்தான்.
பிரதீஷ் அர்ஜூனின் கல்லூரி நண்பன், இங்கு அர்ஜுன் வந்த காரணத்தை அறிந்தவன் அவனுக்கு அனைத்து வழிகளிலும் உதவியாக இருந்தான்.
" என்ன மச்சான் இது… சாப்பிடாம இப்படியே இருந்தா உடம்பு தான் கெட்டுப் போகும். சாப்பிட்டு போலாம் இரு இன்னிக்கு நானும் வரேன் " என்றான் அர்ஜுனின் சோர்வு உணர்ந்து. பிரதீஷ் என்ன பேசினான் என்று கூட உணராது, "ம்ம்ம்…" என்ற முனங்கல் மட்டுமே பதிலாக கொடுத்தான்.
பெயருக்கு ஏதோ சாப்பிட்டுவிட்டு இருவரும் முதலில் யாழினியை பற்றி விசாரித்துக் கொண்டிருக்கும் காவல் துறை அதிகாரி கிருஷ்ணனை சந்திக்கச்
சென்றனர். அவர் பிரதீஷின் குடும்ப நண்பர் என்பதால் விசாரணை சற்று சுறுசுறுப்பாக சென்றாலும் பெரிதாக அவர்களாலும் ஏதும் கண்டுபிடிக்க முடியவில்லை.
அர்ஜுன், " எப்படி சார் இவ்ளோ நாளா ஒரு சின்ன விஷயம் கூட தெரியாம… மனசு ரொம்ப பதட்டமாவே இருக்கு. ரிசார்ட்ல இருந்து கிளம்பி போனவ கார் ஒரு இடத்துல மரத்துல மோதி நிக்குது ஆனா அவ… " என்றவன் குரல் கரகரத்து ஒலித்தது. அவன் நிலையை உணர்ந்த கிருஷ்ணனும், " அர்ஜுன் ரிலாக்ஸ்… பயப்பட ஒன்னும் இல்லனு சொல்ல முடியாது தான்… பட் கொஞ்சம் பாசிட்டிவா யோசிப்போம்... யாழினி கிடைச்சுருவாங்க " என்றார் அவனை தேற்றும் விதமாக.
அதற்கு எந்த பதிலும் அளிக்காமல் ஓர் பெருமூச்சுடன் தான் அமர்ந்திருந்த இருக்கையில் கண் மூடி சாய்ந்து கொண்டான். அவர்களும் தான் தேடாத இடம் இல்லையே விபத்து நடந்த இடத்திற்கு பக்கத்தில் உள்ள ஊர்கள், மருத்துவமனைகள் என்று அனைத்து இடங்களையும் புரட்டி பார்த்துவிட்டார்கள் எங்கும் யாழினியை கண்டுபிடிக்க முடியவில்லை.
கொரோனா வைரஸின் தாக்கத்தால் ஊர் எல்லைகள் அடைக்கப்பட்டிருக்க,
அவளை கடத்தியிருந்தால் கூட வெளியில் எங்கும் கொண்டு செல்லப்பட்டிருக்க வாய்ப்புகள் குறைவாக இருந்தது.
மேலும் சிறிது நேரம் கிருஷ்ணனிடம் சில விவரங்களை பேசி தெரிந்துகொண்டு அங்கிருந்து கிளம்பினர். அவர்கள் சென்றதும் கிருஷ்ணன் தன் கீழ் வேலை செய்யும் அதிகாரியை அழைத்து, "யாழினி கேஸ் விஷயமா பக்கத்து கிராமங்களை விசாரிக்க சொன்னனே என்னாச்சு இன்னும் எந்த ரிபோர்ட்டும் வரல. ஈவினிங்க்குள்ள விசாரிச்சுட்டு எனக்கு சொல்லுங்க " என்று உத்தரவிட்டுவிட்டு அழைப்பை துண்டித்தார். அவருக்கும் சற்று கலக்கம் இருக்க தான் செய்தது இரு பெண்பிள்ளைகளின் தந்தையாய்.
காவல் துறை ஒருபுறம் விசாரித்துக்கொண்டிருந்தாலும், அர்ஜுனும் ப்ரதீஷும் அன்று முழுவதும் யாழினி பற்றி ஏதும் தகவல் கிடைக்க கூடுமா என்று அலைந்துகொண்டு தான் இருந்தனர். மாலை வேலை சற்று சோர்வாக உணர்ந்த பிரதீஷ், " மச்சான் ஒரு காபி குடிக்கலாம் அந்த கடைல நிறுத்து " என்றான்.
அர்ஜுனுக்கும் சற்று தலைவலியாக இருக்க காரை அந்த மலை பாதைலிருந்த தேநீர் கடையில் நிறுத்தினான். இருவரும் கடையில் காபி வாங்கிக்கொண்டு அமர்ந்தனர். அர்ஜுன் காபியை ஒரு மிடரு அருந்தவும் தலைவலி கொஞ்சம் மட்டுபட்டது போல் இருக்க மெல்ல சுற்றுபுரத்தை கவனிக்க தொடங்கினான்.
அங்கு கடைகாரரிடம் ஒரு பெண், "என்ன அண்ணா நான் சொன்னது எல்லாம் வாங்கிட்டு வந்திங்ளா " என்று கேட்டுக்கொண்டிருந்தாள். பார்க்க மலை கிராமத்தை சேர்ந்தவள் போல் இருந்தாள். கடைக்காரரும் அவள் கேட்டதை எடுத்து கொடுத்துக்கொண்டே, "என்ன செல்லி எதுக்கு இந்த பிஸ்கட் எல்லாம் இது எல்லாம் சாப்பிட மாட்டீங்களே " என அவளை துளைக்கும் பார்வையுடன் கேட்கவும் அவள் சிறிது தடுமாறித்தான் போனாள்.
மெல்ல தன்னை சுதாரித்துக்கொண்டு, "ஊர்ல இருந்து சொந்தக்காரங்க வந்துதிருக்காங்க அதுக்கு தான் " என்று சமாளிக்க பார்த்தாள்... அப்போதும் அவருக்கு சந்தேகம் தீரவில்லை போலும் , " உங்க ஐயா அவ்ளோ சீக்கரம் இது எல்லாம் வாங்க ஒத்துக்க மாட்டாரே " என மீண்டும் கேட்டவருக்கு பதில் சொல்ல முடியாமல் , " அப்படி இல்லை அது… அது… இந்த சொந்தகாரங்க கொஞ்சம் வெளியூர்ல இருந்து வந்துருக்காங்க " என்று திணறியபடி எது ஏதோ சொல்லி சமாளித்துக்கொண்டிருந்தாள்.
ஆம், அவள் ஏதோ மறைத்து பேசி சமாளித்துக்கொண்டிருப்பது போல் தான் தெரிந்தது அர்ஜுனுக்கு. அதுவரை ஏதோ அவர்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவன் இப்பொது சிறிது உற்று கவனிக்க தொடங்கினான்.
மீண்டும் கடைக்காரர் ஏதோ கேட்க வரவும் அவர்களை இடை மறைத்த அர்ஜுன் தன்னிடம் இருந்த வித்ய யாழினியின் புகைப்படதை செல்லியிடம் காட்டி, " இந்த பொண்ண எங்கயும் பார்த்து இருக்கீங்களா " என கேட்டான்.
செல்லி, யாழினியின் படத்தை பார்த்ததும் முதலில் திகைத்து விழித்து… பின், அர்ஜுன் தன்னை கவனிப்பதை உணர்ந்து தன் முக மாற்றத்தை சரி செய்துகொண்டாள். ஆனால், அவளையே அளவிட்டுக்கொண்டிருந்த அர்ஜுனின் கண்களுக்கு அது தப்பாமல் விழுந்தது.
ஏதும் தெரியாதவள் போல் யாழினியின் படத்தை அவனிடம் இருந்து வாங்கி அப்போது தான் நன்றாக பார்ப்பது போல் பார்த்துவிட்டு, " இல்லைங்க பார்த்தது இல்லை… யார் இவுங்க " என்றாள். அவளின் ஒவ்வொரு அசைவுகளையும் கவனித்துக்கொண்டே இருந்த அர்ஜுன் , " நான் கல்யாணம் செஞ்சுக்க போற பொண்ணு " என்றான். ' கல்யாணம் செஞ்சுக்க போற பொண்ணு ' மீண்டும் மனதில் சொல்லி பார்த்தவனுக்கு ஏதோ சுகமான உணர்வு மனதில் தோன்றியது. ' ஆமாம், அவள் எனக்கானவள் என்னுடையவள் மட்டுமே ' என்ற எண்ணம் அவன் மனதில் உறுதி பூண்டது.
அவன் சொன்ன பதில் கேட்டும் குழப்பம் தெளியாத செல்லி, " ஓ… சரிங்க. இவுங்களுக்கு என்னாச்சு எப்ப இருந்து காணோம்… போலீஸ் கிட்ட சொல்லலையா… இவுங்க அம்மா அப்பா எங்க இருக்காங்க " என்று விசாரித்தாள். தன் மேல் சந்தேகம் கொண்டு அவள் கேட்கும் கேள்விகளை எண்ணி அவளை மனதிற்குள் மெச்சியவன், " ம்ம்ம் போலீஸ்ல சொல்லியிருக்கோம்… அவுங்க அப்பா கோயம்பத்தூர்ல இருக்காங்க… ஒரு மாசத்துக்கு மேல தேடிட்டு இருக்கோம்மா ஏதும் தெரிஞ்சா சொல்லும்மா " என்றான் அவளுக்கு புரியும் விதமாக.
அவளிடம் சொல்லும் போதே கண்கலங்கினாலும் அதை மறுபுறம் திரும்பி வெளியிடாமல் மறைத்துக்கொண்டவன்… அவளை ஏறிட்டு பார்க்க அவள் ஏதோ குழப்பத்தில் இருப்பது போல் தெரிந்தது. மேலும் அவளை குழப்பத்தில் ஆழ்த்த விரும்பாதவன், " சரிமா பார்த்தா இந்த நம்பர்க்கு போன் பண்ணு " என்று தன் விசிட்டிங் கார்டை அவளிடம் கொடுத்தவன்… மேலும், "இது இந்த கேஸ் பார்த்துக்கர போலீஸ் நம்பர்… அவுங்களுக்கு கூட சொல்லு " என்று கிருஷ்ணனின் எண்ணையும் கொடுத்தான்.
இரண்டையும் வாங்கிக்கொண்டவள் யோசனையுடனே அவனிடம் ஒரு சிறு தலையசைபுடன் கிளம்பிச் சென்றாள். அவள் செல்வதையே பார்த்துக்கொண்டிருந்தவன் தோள் தொட்டு அழைத்த பிரதீஷ், "என்னடா அந்த பொண்ணுக்கு தெரியும்னு நினைக்கிறயா என்ன " என்றான். அர்ஜுன் காரணம் இல்லாமல் ஏதும் செய்ய மாட்டான் என்று அவனுக்கு நன்கு தெரியுமே.
பிரதீஷ் கேட்டதிற்கு யோசனையுடனே, "இருக்கலாம் மச்சான்… " என்றான்.
" அப்போ அங்கிள் கிட்ட சொல்லுவோம்… அந்த பொண்ண விசாரிச்சு பாப்போம் " என்றான் நம்பிக்கை துளிர்விட… அவனும் தான் இந்தனை நாட்களாக பார்த்துக்கொண்டிருக்கிறான் எந்த வித தகவலும் யாழினி பற்றி தெரியவில்லையே.
இவர்களை முதலிலிருந்தே கவனித்துக்கொண்டிருந்த கடைக்காரர்,
" சார் அவசர படாதீங்க… அந்த பொண்ணு நல்ல பொண்ணு தான் ஆனா ஊருக்குள்ள போக அனுமதி வாங்கனும்… கொஞ்சம் கட்டுப்பாடான இடம் " என்று தகவல் அளித்தார். அவருக்கு வயது மற்றும் அனுபவத்தின் காரணமாக ஒருவரை பற்றி கணிக்க முடிந்தது. அதுவே செல்லியின் தடுமாற்றம் மற்றும் அர்ஜுனின் உண்மையான வருத்தத்தையும்… அவர் அவன் கண்களை வைத்தே கணித்திருந்தார்.
அவர் சொன்னதை கேட்டு பிரதீஷ், "அப்போ எப்படி விசாரிக்க… ஊருக்குள்ள எப்படி போகனும் " என அவரிடம் விசாரித்தான். அதற்கு அவர், "பக்கத்து எஸ்டேட்ல ராம்ன்னு ஒருத்தர் இருக்கார் அவர பார்த்து பேசுங்க… அவர் தான் அங்க போக கூடிய ஒரே ஆள் " என்று அவரை பற்றிய தகவல்கள் அளித்தார்.
அப்போதே கடைக்காரர் கொடுத்த விலாசத்தில் அவரை தேடி விரைந்தனர். போகும் வழியில் கிருஷ்ணனுக்கு அழைத்து விடையத்தை தெரிவித்துவிட்டு சென்றனர். ராமின் இருப்பிடம் அடைந்தவர்களை வரவேற்றது என்னவோ அவர் உதவியாளர் தான். ராம் வெளியே சென்றிருக்க அவர் உதவியாளரிடம் தங்களை பற்றிய தகவல்களை அளித்துவிட்டு வந்தனர்.
பின்பு கிருஷ்ணனுக்கு மீண்டும் அழைக்க அவர் நாளை அவரே நேரில் சென்று பேசிவிட்டு அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி முடிவு எடுப்பதாக தெரிவித்தார்.
இன்னும் பழமை மாறாத பழங்குடி இன மக்களும் பூமியில் வாழ்ந்து வருகிறார்கள் என்பதற்கு சாட்சி... செல்லி வாழும் வனப்பகுதியை சேர்ந்த மக்கள். வெளிநபர்கள் உள்ளே வந்தால் வனபகுதியை அசுத்தப்படுத்தி அவர்கள் வனத்தை அபகரித்து விடுவார்கள் என்று அச்சம் கொண்டு வெளியிலிருந்து வரும் யாரையும் அவர்கள் பகுதிக்குள் அனுமதிப்பது இல்லை.
செல்லியின் ஊர் மக்கள் நம்பும் ஒரே நபர் ராம். அவர் பலமுறை அங்கு சென்றும் வந்துள்ளார். எனவே அவர் உதவியை நாடினர்.
கிருஷ்ணனிடம் பேசிவிட்டு பிரதீஷ்யை அவன் வீட்டில் விட சென்ற போது… அவன் வீட்டினரின் அன்பு கட்டளையால் அங்கேயே இரவு உணவை முடித்துக்கொண்டு தான் கிளம்பினான்.
இரவு படுக்கையில் எப்பொழுதும் தூக்கமின்றி தவிப்பவனுக்கு இன்று ஏதோ கலவையான உணர்வு… தன் சந்தேகம் சரியானதா இல்லை தேவையற்று சிந்திக்கிறோமா என்று பல குழப்பங்கள் மனதை வாட்டியது.
ஒரு பெண்ணிடம் இருக்கும் சாதாரண வளையல்களை வைத்து தான் யோசிக்கும் கோணம் சரியாக இருக்குமா என்ற ஐயம் எழத்தான் செய்தது. இருந்தும் எதை தின்றால் பித்தம் தீரும் என்று திரிபவனுக்கு இது எப்படியும் சரியாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் ஓடிக்கொண்டே இருந்தது.
இருந்தும் ஏதோ வெறுமை உணர்வு தோன்ற காரை எடுத்துக்கொண்டு வெளியே கிளம்பினான். களைத்து ஓயும் வரை எங்க எங்கோ அழைந்தவன் மனம் ஒரு நிலை இல்லாமல் சோர்ந்து போக... நடுநசி நேரம் சாலையின் ஓர் ஓரமாக தன் காரை நிறுத்திவிட்டு ஸ்டியரிங் வீல்லில் தலை கவிழ்த்து படுத்துக்கொண்டான். எத்தனை நேரம் அப்படி இருந்தானோ... போன் ஒலிக்கவும் அதை எடுத்து காதிற்கு கொடுத்தவன், " ம்ம்ம், வினித் சொல்லு " என்றான்.
மறுபுறம் இருந்த அவன் பி எ வினித் , " சார் எவ்ளோ நேரமா கால் பண்ணறேன் எங்க இருக்கீங்க " என்று சற்று கவலையுடனே வினவினான். அவன் கேள்விக்கு அர்ஜுனிடம் எந்த பதிலும் இல்லாமல் போக, வினித் சற்று பதட்டமாக, " சார் சார்.... " என்று பல முறை அழைத்த பிறகே அர்ஜுன், " ம்ம்ம்... இருக்கேன்" என்றான் முனங்களான குரலில்.
வினித் " சார் அங்க இருந்து பிரதீஷ் சார் கால் செஞ்சு இருந்தார். உங்களுக்கு கூப்பிட்டு நீங்க எடுக்கலைன்னு எனக்கு கூப்பிட்டார்... உங்கள ஸ்டேஷன் வர சொன்னார் " என்றதும் எழுந்து அமர்ந்தவன், " வேற ஏதாச்சும் சொன்னாரா " என்றான் சோர்வு நீங்கி ஆர்வம் மிக.
வினித், " அங்க இருக்க ஓர் மலை கிராமத்துக்கு போகணும் என்று சொன்னார். நீங்க எதுக்கும் நேர்ல போய் பாருங்க… எப்படியும் யாழினி கிடைச்சுருவாங்க " என்றான் அர்ஜுனின் கவலை உணர்ந்து.
" சரி வினித் நான் பாத்துட்டு கால் பண்ணறேன் " என்று அவன் பதிலை எதிர் பாராமலே கிளம்பிவிட்டான்.
சற்று பதற்றத்துடன் காவல் நிலையதுக்குள் நுழைந்தவனை எதிர்கொண்ட உயர் அதிகாரியிடம், "என்னாச்சு சார் விது கிடைச்சுட்டாளா எங்க இருக்கா… நான் இப்போவே பார்க்கணும் " என்றான் பதற்றத்துடன்.
மழைத்தூறும்… ?
அத்தியாயம் 2
அதிகாலை நேரம் பதற்றத்துடன் காவல் நிலையத்துக்குள் நுழைந்து யாழினியை பற்றி விசாரித்தவனை அமரவைத்த அதிகாரி, " அர்ஜுன் ப்ளீஸ் ரிலாக்ஸ் கிருஷ்ணன் சார் இப்போ வந்துருவாரு... காட்டுக்குள்ள போறதுக்கான ஏற்பாடு எல்லாம் செஞ்சுட்டார். யாழினி வில் பி பைன்... " என சமாதானம் செய்தார்.
இவர்கள் பேசிக்கொண்டிருக்கவும் சிறிது நேரத்தில் கிருஷ்ணனும் பிரதீஷும் ஒரு நாற்பத்தைந்து வயது மதிக்கதக்க நபருடன் வந்து சேர்ந்தனர்.
கிருஷ்ணன் அவரை மற்றவர்களிடம் , " இவர் தான் மிஸ்டர். ராம், சமூக ஆர்வலர்... நம்ம மேப்பாடி மலைக்கு அழைச்சுட்டு போக போறது இவர்தான் " என்று அறிமுகம் செய்து வைத்தார். பின் அர்ஜுனையும் அவருக்கு அறிமுகம் செய்து வைக்கவும் அவர், " ஹலோ... அர்ஜுன் கவலை வேண்டாம் அவுங்க அங்க தான் இருக்காங்கன்னு நினைச்சீங்கன்னா, அவுங்க பாதுகாப்பா இருக்காங்கன்னு அர்த்தம் " என்று நம்பிக்கையூட்டினார்.
பின் கிருஷ்ணனின் அறிவுரைப்படி பிரதீஷ் அர்ஜுனை சாப்பிட வைத்து அழைத்து வந்த பிறகு... ராமுடன் அர்ஜுன், பிரதீஷ், கிருஷ்ணன் மற்றும் இன்னொரு பெண் அதிகாரியும் மேப்பாடி நோக்கி தங்கள் பயணத்தை தொடங்கினர்.
வனப்பகுதியை அடைந்தவுடன் அதற்கு மேல் வாகனங்கள் செல்லாது என்பதால் நடந்து செல்ல தொடங்கினர். முதலில் ராம் சிறிது தூரம் சென்று எந்த ஆபத்தும் இல்லை என உறுதிப்படுத்திக் கொண்டே இவர்களை அழைத்துச்சென்றார்.
ஆங்காங்கே காணப்பட்ட சாண குவியல்களை கண்டவர்கள் அது யானைகளின் வழித்தடம் என புரிந்துகொண்டனர். உச்சி வரை முட்கள் கொண்ட காட்டு தேக்கு மரங்கள் போன்றவை காணப்பட்டன. ஓர் நீரோடை அருகில் அனைவரும் ஓய்வு எடுக்க அமர… அர்ஜுன் தனித்து அமர்ந்து கொண்டான். அங்கு சூழ்ந்திருந்த இயற்கையை ரசிக்கும் மனநிலை அவனுக்கு இப்பொது இல்லை.
அவன் மனமோ, ' எப்படிடி இங்க வந்த… எனக்கு என்னவோ மனசு கிடந்தது அடிச்சுக்குது… இப்போ நீ இங்க பாதுகாப்பா இருந்தாலும் ஏன் நீ இங்க வந்த… உனக்கு எதும் கெட்டதா நடக்காம இருக்கனும் ' என்று பலவித யோசனையில் மூழ்கி போனான். கண்மூடி பாறையில் சாய்ந்து கொண்டவன் கண்களிக்குள் தன்னவளின் குறும்பு சிரிப்பே மின்னிச் சென்றது.
*****
வானத்தை முட்டும் அளவுக்கு உயர்ந்து, அடர்ந்து வளர்ந்திருந்த அந்த மரங்களின் நடுவே கிடைத்த இடைவெளியில் தன் ஒளியை பரபிக்கொண்டிருந்தது அதிகாலை நேர சூரியனின் செங்கதிர்கள்.
அவ்வொளி அவ்வனத்தின் நடுவே இருந்த ஓர் குடிசையின் ஜன்னல் வழியாக பரவி அங்கு தூக்கதிர்க்கும் விழிப்பிற்கும் நடுவே போராடிக்கொண்டிருந்த இரு செந்தாமரை போன்ற விழிகளின் மேல் விழுந்தது.
மெல்ல இமை திறக்க முயன்றவளுக்கு…இரவில் தூங்காமல் அழுது கரைந்ததன் விளைவால் கண்களில் எரிச்சல் ஊசி குத்துவது போல் இருக்க… இமைகளின் வீக்கம் அவற்றை ஒன்றுடனிருந்து மற்றொன்றை பிரிக்க முடியாமல் சண்டித்தனம் செய்தது.
விரக்தியில் பெருமூச்சு எடுத்தவள்… தன் உள்ளங்கைகளை ஒன்றுடன் ஒன்றை உரசி நன்றாக சூடு வர தேய்த்து கண்களின் மேல் ஒன்றி எடுக்க எரிச்சல் சற்று குறைந்தது போல் தோன்றியது. பின் மெல்ல தன் இமைகளை திறந்தாள் வித்ய யாழினி.
உடல் முழுவதும் ஏதோ அசதி பரவ அதை விரட்டும் முயற்சியில் எழுந்து அமர்ந்தாள். காலின் வலி இன்று குறைந்தது போலிருக்க… தன் படுக்கையின் பக்கவாட்டிலிருந்த சுவரில் சாய்ந்து அமர்ந்து கொண்டாள்.
ஜன்னலின் வழியாக சூரிய ஒளி முகத்தில் படவும் அங்கு திரும்பி பார்த்தவளுக்கு… அங்கு வெளியே தெரிந்த மரங்கள் நேற்றைய இரவு காற்றில் பேய்யாட்டம் போட்டது நியாபகம் வர உடலில் ஒருவித நடுக்கம் ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக பலவித எண்ணங்கள் கண்முன் தோன்றி மனதை கலங்க செய்தது.
கண்மூடி தன் துக்கத்தை தொண்டைக்குள் விழுங்கிக்கொண்டாள். தன்னுள் குடிகொண்ட வெறுமையை விரட்டும் வழியறியாமல் கண்ணீரில் கரைய தொடங்கியவளை குடிசையின் கதவு திறக்கும் சத்தம் தடுத்து நிறுத்தியது.
குடிசையின் கதவை திறந்துகொண்டு உள்ளே வந்த செல்லி யாழினியின் முகத்தில் குடிகொண்டிருந்த வேதனை கண்டு மனம் வருந்தினாலும் அதை மற்றவளிடம் வெளிகாட்டிக் கொள்ளாமல், " அக்கா எழுந்துட்டீங்களா… வாங்க என் கை பிடிச்சு மெல்ல எழுந்துக்கோங்க முகம் கழுவிட்டு வந்து சாப்பிடுவோம்" என்று சொல்லிக்கொண்டே யாழினி எழ உதவினாள்.
யாழினிக்கு தேவையான உதவிகளை செய்தவள் பின் அவளுக்கு காபியும் முதல் நாள் வாங்கி வந்த தீன்பண்டங்களையும் கொடுத்தாள். அதை கண்ட யாழினி புருவம் சுருக்கி மெல்லிய குரலில், " இது எல்லாம்… " என்று வார்த்தையை இழுத்தவளை பார்த்து மெலிதாக சிரித்த செல்லி, "ஆமா அக்கா உங்களுக்கு இங்க எதும் சரியா புடிக்கல போல நல்லாவே சாப்பிடறது இல்ல… அதான் ஐயா கிட்ட சொல்லி வாங்கிட்டு வந்தேன்… இங்க யாரும் இப்படி வெளி பொருள் எல்லாம் வாங்கி சாப்பிட ஐயா ஒதுக்க மாட்டார் இங்க இயற்கை எங்களுக்கு தரது தான் எங்க உணவு… ஆனாலும் நீங்க கஷ்டபடறத பாத்து எனக்கு தான் மனசு கேட்கல அதான் வாங்கிட்டு வந்தேன் " என்றாள் யாழினியின் கஷ்டம் உணர்ந்து.
அந்த பாசத்தில் தன் தந்தையின் நியாபகம் மேலோங்க… கலங்கிய கண்களுடன் செல்லியை ஏறிட்டவள், "ரொம்ப நன்றி செல்லி இதுக்குனு இல்லை எல்லாத்துக்கும் " என்றாள்.
"அச்சோ என்ன அக்கா இதுக்கு போய்... " என்றவாரே யாழினியின் கண்களை துடைத்துவிட்டவள்… அவளிடம் தயங்கியவாரே, "அக்கா இவுங்கள உங்களுக்கு தெரியுமா? " என்று கேட்டுக்கொண்டே அவளிடம் அர்ஜுன் கொடுத்த சீட்டை நீட்டினாள்.
குழப்பத்துடன் அதை வாங்கி பார்த்தவள் அதிலிருந்த 'அர்ஜுன் ஆதித்யன்' என்ற பெயரை பார்த்ததும் உடலில் ஓர் சிலிர்ப்பு ஓடி மறந்தது. அப்பெயரை மெல்ல வருடிக்கொடுத்தவளுக்கு அழுகை முட்டிக்கொண்டு வர அதை கட்டுப்படுத்தும் வழியறியாது தன் கீழ் உதட்டை பற்களால் கடித்து கொண்டாள். அதையும் மீறி கேவல் வெளிப்பட்டுவிட முழங்காலில் முகம் புதைத்து அழ தொடங்கினாள். அவள் அழுகை கண்டு பதற்றமடைந்த செல்லி, " அக்கா என்னாச்சு இவுங்கள தெரியுமா… ஐயா கிட்ட சொன்னேன் அவரு உங்களை கேட்டுட்டு சொல்லலாம்னு சொன்னாரு… உங்களுக்கு சரினா சொல்லலாம் இல்லனா பரவால்ல… " என்றாள் அவளை சமாதானம் செய்யும் விதமாக.
செல்லி கேட்டதுக்கு எந்த பதிலும் இல்லாமல் அமர்ந்திருந்தவள் அழுகை மட்டும் குறையவில்லை. யாழினியின் செய்கையே நேற்று அவள் சந்தித்தவன் அவளுக்கு எவ்வளவு பிரியமானவன் என்று செல்லிக்கு உணர்த்திவிட… யாழினியை சமாதானம் செய்யும் நோக்கத்துடன் அவள் தோள் தொட்டவளை அணைத்துக்கொண்டு கதறிவிட்டாள். மெல்ல அவளை சமாதானம் செய்து உறங்க வைத்துவிட்டுட்டு வெளியே வந்து அங்கிருந்த கிழங்குகளை எடுத்து சுத்தம் செய்து அடுப்பு மூட்டி சமைக்க தொடங்கியவளுக்கு சில நாட்களுக்கு முன் யாழினியை முதல் முதலில் பார்த்த நாள் கண்முன் தோன்றியது…
அன்று…
வயநாட்டின் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது மேப்பாடி மலைப்பகுதி. அங்கு வசித்த பெரும்பான்மையான பழங்குடியினர் அப்பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக வனப்பகுதியை விடுத்து அரசாங்க குடியிருப்புகளுக்கு மாறிவிட்டனர். இப்பொது அங்கு வெறும் மூன்று குடும்பங்களே வசித்து வருகின்றனர். அதில் செல்லியின் குடும்பமும் ஒன்று.
அவர்களின் அன்றாட வாழ்வாதாரம் இயற்கையை ஒன்றியதாகவே இருக்கிறது. அங்கு கிடைக்கும் தேன், கிழங்கு, பழவகைகள் மற்றும் அங்கிருக்கும் சிறு மிருகங்களை வேட்டையாடியும் உண்டு தங்கள் வாழ்வை நகர்த்திவருகின்றனர்.
ஆண்கள் வேட்டைக்கும், தேன் எடுக்கவும் சென்றால் பெண்கள் தேவையான பழங்கள் கிழங்குகள் கொண்டுவருவர். அப்படித்தான் அன்றும் செல்லியும் பெண்களுடன் ஒன்றாக சென்றிருந்தாள். காட்டில் கிழங்குகளை சேகரித்தவர்கள் பக்கத்திலிருந்த நீரோடையில் நீர் அருந்த சென்றனர்.
அங்கு பக்கத்திலிருந்த பாறைக்கு பின் யாரோ வலியில் முனங்கும் சத்தம் கேட்டது. அங்கு விரைந்து சென்று பார்த்தவர்களுக்கு அங்கமெல்லாம் நடுங்கிவிட்டது. ஒரு பெண் வன்கொடுமைக்கு உள்ளானாள் என்று கேள்விப்பட்டாலே மனம் பதறும் அப்படியொரு நிலையில் உடல் முழுதும் காயங்களுடனும் தலையில் பலத்த அடியுடனும் கசங்கிய பூபோல் கிடந்த யாழினியை கண்டவர்களுக்கு நெஞ்சில் நீர் வற்றிபோன உணர்வு. அப்படியே அசைவற்று நின்றவர்களில் முதலில் சுதாரித்த செல்லி ஓடிச்சென்று அவள் தலையை மடியில் ஏந்திக்கொண்டு, " அக்கா அக்கா… முழிச்சு பாருங்க… " என்று கன்னம் தட்டி அழைத்துப் பார்த்தாள்.
யாழினியிடம் எந்த பதிலும் இல்லாமல் போக செய்வதறியாது தவித்தனர். காட்டிலிருந்து அவசரமாக மருத்துவமனை அழைத்து செல்வது இயலாத காரியம். ரத்த வாடைக்கு வரும் மிருகங்களின் அச்சுறுத்தல் வேறு அங்கு மேலும் தாமதிக்க முடியாது போக... தங்கள் இடத்துக்கு அழைத்து செல்ல முடிவெடுத்து உதவிக்கு ஆண்களை வர சொல்ல இரு பெண்களை அனுப்பிவிட்டு…செல்லி அங்கிருந்த மற்றோரு பெண்ணுடன் சேர்ந்து யாழினிக்கு சிறு சிறு முதலுதவிகளை செய்தாள்.
அதற்குள் அவர்கள் உதவிக்கு ஆட்கள் வந்துவிட… அவர்களுடன் சேர்ந்து யாழினியை தங்கள் குடியிருப்புக்கு அழைத்து வந்தனர். அங்கு அவர்கள் தலைவர் வெளுத்தாவின் உதவியால் அவளுக்கு மருத்துவம் செய்யப்பட்டு யாழினி காப்பாற்றப்பட்டாள். அவளின் பாதுகாப்பு கருதி அவள் உடல்நிலை சரியாகும் வரை எந்த விபரத்தையும் வெளியில் தெரியாமல் பார்த்துக்கொண்டனர்.
யாழினியின் தேவைகளை செல்லியே பார்த்துக்கொள்ள... அங்கு வந்த பதினைந்து நாட்கள் கழித்தே கண்விழித்தாள் யாழினி. கண்விழித்த முதல் இரண்டு நாட்கள் சரியாக மயக்கம் தெளியாமல் சிறிது நேரம் விழித்திருப்பவள் மீண்டும் கண் மூடிக்கொள்வாள். வலது நெற்றியில் ஆழமான வெட்டுக்காயமும், உடலில் சிராய்ப்புகளும்… வலது காலிலும் அடிபட்டிருக்க நடப்பதற்கு கொஞ்சம் சிரமமாக இருந்தது.
சிறிது சிறிதாக நினைவு திரும்ப ஆரம்பித்த நிலையில் தன்னை பார்த்துக்கொண்ட செல்லியை தவிர மற்றவர்களை நெருங்க விடாமல் சற்று மூர்க்கதனமாக நடந்து கொண்ட நாட்களும் உண்டு.
இப்படியே நாட்கள் செல்ல… மெல்ல அங்கிருந்த இயற்கையுடன் ஒன்ற ஆரம்பித்தாள். சட்டென பெய்யும் மழை, குளிர்ந்த காற்று, ஆர்ப்பரிக்கும் நதியில் தெரியும் முழு நிலவு என்று மனதை அமைதியடைய செய்தாலும்… தனக்குள் அவள் தவித்துக்கொண்டிருப்பது இரவில் அவளுடன் துணைக்கு உறங்கும் செல்லிக்கு நன்கு புரிந்தது.
இன்றுவரை அவளிடம் யாரும் எதும் கேட்டு தொந்தரவு செய்யவில்லை. அவளின் தேவைகள் அனைத்தும் செல்லி மட்டுமே பார்த்துக்கொண்டாள். இதுவே இருவருக்குள்ளும் சிறு நெருக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.
மெதுவாக அவளிடம் பேச்சு கொடுத்து அவள் பெற்றோரை பற்றி தெரிந்துகொள்ள முயன்றால் மௌனத்தை கடைபிடிக்க தொடங்கிவிடுவாள். என்னதான் மற்றவர்களிடம் விலகி இருந்தாலும்… அங்கிருக்கும் குழந்தைகளிடம் ஒதுக்கம் காட்டாமல் அவர்களுடன் நேரம் செலவிடுவாள்.
இவற்றை மனதில் உருபோட்டவாரே வேக வைத்த கிழங்கை குழந்தைகளுக்கு கொடுத்துவிட்டு நிமிர அங்கு ராம்… அர்ஜுன் மற்றும் வேறு இருவருடன் வந்து கொண்டிருப்பது தெரிந்தது.
அவர்களை கண்டதும் ஓடிச்சென்று யாழினியை பார்க்க… அவள் நல்ல உறக்கத்திலிருப்பது தெரிந்தது. வெளி ஆட்களுடன் நின்று பேசும் பழக்கம் இல்லாததால் அவள் அங்கு யாழினியுடன் இருந்துவிட்டாள்.
ராம் பரிச்சியமானவர் என்பதால் வந்திருப்பவர்கள் மேல் நம்பிக்கை உருவானாலும், முதலில் அவர்கள் வெளுத்தாவிடம் பேசிவிட்டு வரட்டும் என்று பேசாமல் இருந்து விட்டாள்.
ராமும் சற்று தொலைவிலேயே அவர்களை நிறுத்திவிட்டு , " நான் போய் இந்த ஊர் தலைவர் வெளுத்தா கிட்ட பேசிட்டு வரேன் அப்றம் நீங்க எல்லாரும் வரலாம்" என்று கூறி வெளுத்தாவை பார்க்க சென்றார்.
ராமிற்கு சிறு வயது முதலே இங்கு வாழும் மக்கள் பழக்கம் என்பதால் எந்தவித தடையுமின்றி உள்ளே சென்றார். சென்றவர் சிறிது நேரத்திலே திரும்பி வந்து தன்னையே ஆர்வமாக பார்த்துக்கொண்டிருந்த அர்ஜுனிடம் தயங்கியவாரே , "யாழினி இங்க தான் இருக்காங்க…நல்லா இருக்காங்க… ஆனா… " என்று அவர் சொன்ன செய்தியில் அப்டியே சரிந்து மண்டியிட்டு அமர்ந்தவன் நிலத்தில் ஓங்கி குத்திக்கொண்டு கத்தவும்… அதிர்ச்சியில் இருந்த மற்றவர்கள் தங்கைகளை மீட்டுக்கொண்டு அவனை நெருங்கி சமாதானம் செய்ய எடுத்த எந்தவொரு முயற்சியும் பயனில்லாமல் போனது.
பிரதீஷ் அர்ஜுன் பக்கத்தில் மண்டியிட்டு அமர்ந்து அவனை அணைத்துக்கொண்டே, " மச்சான் பொறுமையா இருடா… ப்ளீஸ் கண்ட்ரோல் யூவர் செ ல்ப்… அமைதியா இரு … " என்று அவனை கொஞ்சம் கொஞ்சமாக நிதானப்படுத்த முயன்றான்.
அர்ஜுனோ, " முடியலடா அவளுக்கு எதும் ஆக கூடாதுனு இவ்ளோ நாள் விடாம ஒரு ஒரு நிமிஷமும் வேண்டிகிட்டது எதுக்கும் பயனில்லையே… அ… அவ ஒரு குழந்தை மாதிரிடா எப்பிடிடா மனசு வந்துச்சு அவளை உயிரோட சாகடிக்க…" என்று அழுது புலம்ப அவனை படாத பாடுபட்டு கட்டுக்குள் கொண்டு வர பெரும் போராட்டம் நடத்தவேண்டியதாய் போனது.
கிருஷ்ணன், " இப்படி அழுதுட்டு இருந்தா இனி அடுத்தடுத்த சூழ்நிலைகளை எப்படி சமாளிக்க… எந்திருச்சு வாங்க அர்ஜுன் " என்று சிறு கண்டிப்புடன் சொன்னார். அவருக்கும் மனம் பாரமாக தானிருந்தது இருந்தும் சுற்றியிருப்பவர்கள் கொடுக்கும் தைரியம் தான் அப்பெண்ணுக்கு தேவை என்றுணர்ந்து அர்ஜுனிடம் கண்டிப்பு காட்டினார்.
தலைகவிழ்த்து பெரும்மூச்சுகளை எடுத்து தன்னை நிதானித்துக்கொள்ள முயன்றவன் . பின் தன் முகத்தை அழுந்த துடைத்துக்கொண்டு நிமிர… பிரதீஷ் அவன் தோள் தொட்டு, " மச்சான் வா போய் பாப்போம் " என்று அழைக்கவும் எழுந்து அவர்களுடன் அங்கிருந்த குடிசை பகுதியை நோக்கி சென்றான்.
அவர்களை எதிர்கொண்ட வெளுத்தா, "அந்த பொண்ணு செல்லிய தவிர எங்க யாரையும் பார்க்க விருப்பப் பட்டது இல்லை அதனால அவுங்களுக்கு நெருக்கமானவுங்க மட்டும் போய் பாருங்க " என்றவர்… பின் செல்லியை அழைத்து அவர்களுக்கு உதவ சொல்லிவிட்டு பக்கத்திலிருந்த பாறையில் ராமுடன் அமர்ந்துகொண்டார்.
மற்றவர்கள் ஒதுங்கிக்கொள்ள செல்லியுடன் நடந்த அர்ஜுன், " எப்படி இருக்கா " என்றான் மெல்லிய குரலில்.
" ம்ம்ம் முதல் இருந்ததுக்கு இப்போ பரவால்ல அண்ணா… கொஞ்சம் நேரம் முன்னாடி தான் நீங்க கொடுத்த சீட்டை அவுங்க கிட்ட காட்டினேன்… ரொம்ப அழுதாங்க… இப்போ தான் தூங்கறாங்க… " என்றாள்.
அவள் தன்னை நினைத்து அழுதாள் என்று கேட்டவனுக்கு மனம் துடித்துபோனது. குடிசையை நெருங்கியதும் அவன் கால்கள் இரண்டும் பெரும் பாரம் கொண்டு நகர மறுத்தது. எத்தனை நாள் தேடல்… உயிரை கையில் பிடித்துக்கொண்டு அவளுக்காக அவன் ஓடாத நேரமில்லை. ஆனால் இந்த நிமிடத்தை எதிர்கொள்ளும் தைரியம் அவனிடம் சுத்தமாக இல்லாமல் போனது.
கடினப்பட்டு தன் நடுங்கும் கரம் கொண்டு கதவை திறந்து உள்ளே நுழைந்தவன் கண்டது வாடிய கொடிபோல் கிடந்தவளையே… இத்தனை நாட்களில் உடல் மெலிந்து கொஞ்சம் நிறம் மங்கி… அவள் முகத்தில் குடியிருக்கும் குறும்புத்தனம் சுத்தமாக துடைக்கப்பட்டு ஓர் முதிர்ந்த தோற்றம் தெரிந்தது.
அவளை நெருங்கி அவள் படுக்கையின் ஓரத்தில் அமர்ந்தவன்… அவள் வலது நெற்றியிலிருந்த காயத்தை மெல்ல தன் விரல் கொண்டு வருடிக்கொடுத்தான். காயங்கள் வெளியில் மெல்ல ஆர தொடங்கினாலும் அவள் மனம் கொண்ட காயத்தை எப்படி ஆற்றுவது என்று புரியாமல் கலங்கி நின்றான்.



நாயகி - வித்ய யாழினி
அத்தியாயம் 1
அதிகாலை நேரம் லேசான மழைச்சாரல் முகத்தில் மோத... சுருள்சுருளான கேசம் மழைக்காற்றுக்கு ஏற்றவாறு நெற்றியை மென்மையாய் வருடிச் செல்ல… அந்த மலை பிரதேசத்தின் குளிரையும் பொருட்படுத்தாமல் உடல் விறைக்க தன் அறையின் பால்கனியில் நின்றிருந்தான் அர்ஜுன்.
அர்ஜுன் ஆதித்யன் , தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்றழைக்கப்படும் கோவை மாநகரின் முன்னனி தொழிலதிபர்களுள் ஒருவன். ஆதி மெஷின் ஒர்க்ஸ் என்னும் ஜவுளி துறைக்கு தேவையான இயந்திரங்கள் தயாரிக்கும் நிறுவனம் அர்ஜுனின் தாத்தாவினால் தொடங்கப்பட்டு, அர்ஜுனின் தந்தை ஆதிகேசவின் காலத்தில் நிலையான வளர்ச்சியை அடைந்தது.
இன்று அர்ஜுன் கைக்கு நிறுவனம் வந்த பிறகு இந்தியாவில் நூற்பு ஜவுளி இயந்திரங்களின் மிகப்பெரிய உற்பத்தியாளராக தொடர்ந்து முன்னேறி வருகிறது. தொழில் என்று வந்துவிட்டால் தூக்கம் பசி மறந்து அதில் மூழ்கிவிடுபவன் இன்று தன் உயிரானவளை தொலைத்துவிட்டு, அதே தொழில் என்ற ஒன்று இருப்பது கூட மறந்து தன் உயிரில் கலந்தவளை தேடி அலைகிறான்.
கேரள வயநாடு மழைப் பிரதேசத்தின் ரம்மியமான எழில் கொஞ்சும் அழகு அவன் மனதை குளிர்விக்கவில்லை. மாறாக ஏதோ ஒருவித மன அழுத்தத்தையே கொடுத்தது.
வேண்டாம் என்று ஒதுக்க நினைத்த ஒன்றை இப்படி உயிர் துடிக்கும் வலியுடன் தேட நேரிடும் என்று அவன் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.
மனதின் அழுத்தம் தாளாமல், "எங்கடி இருக்க... ரொம்ப பயமா இருக்கு உனக்கு என்னாச்சோன்னு " என்று வாய்விட்டு புலம்பியவன் கண்களில் வழிந்த கண்ணீரை தன் புரங்கையால் துடைத்துக்கொண்டான்.
கடைசியாக அவளை பார்த்தபோது "இனி நீயா என்ன தேடி வர வரைக்கும் நான் உன்ன பார்க்க வரமாட்டேன் " என்று கலங்கிய கண்களுடன் கூறிச் சென்றவள் முகமே அவனை வாட்டி எடுத்தது. 'உன்னத் தேடி தான்டி அலையறேன்... ஆனா கண்டுபிடிக்க முடியலையே... ' என்று அவளை காணாத விரக்தியில் தவித்தான்.
சிறிது நேரம் அவள் ரசிக்கும் மழைத்தூறலில் நின்றவன் பொழுது விடிவதை உணர்ந்து உடை மாற்றிக்கொண்டு வந்தான். எப்போதும் இருக்கும் கம்பீரம் தளர்ந்து கலைந்த கேசமும், தாடி அடர்ந்த முகமுமாக கண்களில் ஓர் சோர்வுடன் இருந்தான். கடந்த ஒரு மாதமாக அந்த ஊர் முழுவதும் எத்தனையோ வழிகளில் தேடிப் பார்த்துவிட்டான் பலன் என்னவோ பூஜ்யமாக தான் இருந்தது.
இன்றும் அவளை தேடவே விரைவாக வெளியே கிளம்பியவனை தடுத்தது அவன் நண்பன் பிரதீஷின் வருகை. எப்படியும் அர்ஜுன் சாப்பிட்டு இருக்க மாட்டான் என்று அறிந்தே தன் வீட்டிலிருந்து உணவை எடுத்து வந்திருந்தான்.
பிரதீஷ் அர்ஜூனின் கல்லூரி நண்பன், இங்கு அர்ஜுன் வந்த காரணத்தை அறிந்தவன் அவனுக்கு அனைத்து வழிகளிலும் உதவியாக இருந்தான்.
" என்ன மச்சான் இது… சாப்பிடாம இப்படியே இருந்தா உடம்பு தான் கெட்டுப் போகும். சாப்பிட்டு போலாம் இரு இன்னிக்கு நானும் வரேன் " என்றான் அர்ஜுனின் சோர்வு உணர்ந்து. பிரதீஷ் என்ன பேசினான் என்று கூட உணராது, "ம்ம்ம்…" என்ற முனங்கல் மட்டுமே பதிலாக கொடுத்தான்.
பெயருக்கு ஏதோ சாப்பிட்டுவிட்டு இருவரும் முதலில் யாழினியை பற்றி விசாரித்துக் கொண்டிருக்கும் காவல் துறை அதிகாரி கிருஷ்ணனை சந்திக்கச்
சென்றனர். அவர் பிரதீஷின் குடும்ப நண்பர் என்பதால் விசாரணை சற்று சுறுசுறுப்பாக சென்றாலும் பெரிதாக அவர்களாலும் ஏதும் கண்டுபிடிக்க முடியவில்லை.
அர்ஜுன், " எப்படி சார் இவ்ளோ நாளா ஒரு சின்ன விஷயம் கூட தெரியாம… மனசு ரொம்ப பதட்டமாவே இருக்கு. ரிசார்ட்ல இருந்து கிளம்பி போனவ கார் ஒரு இடத்துல மரத்துல மோதி நிக்குது ஆனா அவ… " என்றவன் குரல் கரகரத்து ஒலித்தது. அவன் நிலையை உணர்ந்த கிருஷ்ணனும், " அர்ஜுன் ரிலாக்ஸ்… பயப்பட ஒன்னும் இல்லனு சொல்ல முடியாது தான்… பட் கொஞ்சம் பாசிட்டிவா யோசிப்போம்... யாழினி கிடைச்சுருவாங்க " என்றார் அவனை தேற்றும் விதமாக.
அதற்கு எந்த பதிலும் அளிக்காமல் ஓர் பெருமூச்சுடன் தான் அமர்ந்திருந்த இருக்கையில் கண் மூடி சாய்ந்து கொண்டான். அவர்களும் தான் தேடாத இடம் இல்லையே விபத்து நடந்த இடத்திற்கு பக்கத்தில் உள்ள ஊர்கள், மருத்துவமனைகள் என்று அனைத்து இடங்களையும் புரட்டி பார்த்துவிட்டார்கள் எங்கும் யாழினியை கண்டுபிடிக்க முடியவில்லை.
கொரோனா வைரஸின் தாக்கத்தால் ஊர் எல்லைகள் அடைக்கப்பட்டிருக்க,
அவளை கடத்தியிருந்தால் கூட வெளியில் எங்கும் கொண்டு செல்லப்பட்டிருக்க வாய்ப்புகள் குறைவாக இருந்தது.
மேலும் சிறிது நேரம் கிருஷ்ணனிடம் சில விவரங்களை பேசி தெரிந்துகொண்டு அங்கிருந்து கிளம்பினர். அவர்கள் சென்றதும் கிருஷ்ணன் தன் கீழ் வேலை செய்யும் அதிகாரியை அழைத்து, "யாழினி கேஸ் விஷயமா பக்கத்து கிராமங்களை விசாரிக்க சொன்னனே என்னாச்சு இன்னும் எந்த ரிபோர்ட்டும் வரல. ஈவினிங்க்குள்ள விசாரிச்சுட்டு எனக்கு சொல்லுங்க " என்று உத்தரவிட்டுவிட்டு அழைப்பை துண்டித்தார். அவருக்கும் சற்று கலக்கம் இருக்க தான் செய்தது இரு பெண்பிள்ளைகளின் தந்தையாய்.
காவல் துறை ஒருபுறம் விசாரித்துக்கொண்டிருந்தாலும், அர்ஜுனும் ப்ரதீஷும் அன்று முழுவதும் யாழினி பற்றி ஏதும் தகவல் கிடைக்க கூடுமா என்று அலைந்துகொண்டு தான் இருந்தனர். மாலை வேலை சற்று சோர்வாக உணர்ந்த பிரதீஷ், " மச்சான் ஒரு காபி குடிக்கலாம் அந்த கடைல நிறுத்து " என்றான்.
அர்ஜுனுக்கும் சற்று தலைவலியாக இருக்க காரை அந்த மலை பாதைலிருந்த தேநீர் கடையில் நிறுத்தினான். இருவரும் கடையில் காபி வாங்கிக்கொண்டு அமர்ந்தனர். அர்ஜுன் காபியை ஒரு மிடரு அருந்தவும் தலைவலி கொஞ்சம் மட்டுபட்டது போல் இருக்க மெல்ல சுற்றுபுரத்தை கவனிக்க தொடங்கினான்.
அங்கு கடைகாரரிடம் ஒரு பெண், "என்ன அண்ணா நான் சொன்னது எல்லாம் வாங்கிட்டு வந்திங்ளா " என்று கேட்டுக்கொண்டிருந்தாள். பார்க்க மலை கிராமத்தை சேர்ந்தவள் போல் இருந்தாள். கடைக்காரரும் அவள் கேட்டதை எடுத்து கொடுத்துக்கொண்டே, "என்ன செல்லி எதுக்கு இந்த பிஸ்கட் எல்லாம் இது எல்லாம் சாப்பிட மாட்டீங்களே " என அவளை துளைக்கும் பார்வையுடன் கேட்கவும் அவள் சிறிது தடுமாறித்தான் போனாள்.
மெல்ல தன்னை சுதாரித்துக்கொண்டு, "ஊர்ல இருந்து சொந்தக்காரங்க வந்துதிருக்காங்க அதுக்கு தான் " என்று சமாளிக்க பார்த்தாள்... அப்போதும் அவருக்கு சந்தேகம் தீரவில்லை போலும் , " உங்க ஐயா அவ்ளோ சீக்கரம் இது எல்லாம் வாங்க ஒத்துக்க மாட்டாரே " என மீண்டும் கேட்டவருக்கு பதில் சொல்ல முடியாமல் , " அப்படி இல்லை அது… அது… இந்த சொந்தகாரங்க கொஞ்சம் வெளியூர்ல இருந்து வந்துருக்காங்க " என்று திணறியபடி எது ஏதோ சொல்லி சமாளித்துக்கொண்டிருந்தாள்.
ஆம், அவள் ஏதோ மறைத்து பேசி சமாளித்துக்கொண்டிருப்பது போல் தான் தெரிந்தது அர்ஜுனுக்கு. அதுவரை ஏதோ அவர்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவன் இப்பொது சிறிது உற்று கவனிக்க தொடங்கினான்.
மீண்டும் கடைக்காரர் ஏதோ கேட்க வரவும் அவர்களை இடை மறைத்த அர்ஜுன் தன்னிடம் இருந்த வித்ய யாழினியின் புகைப்படதை செல்லியிடம் காட்டி, " இந்த பொண்ண எங்கயும் பார்த்து இருக்கீங்களா " என கேட்டான்.
செல்லி, யாழினியின் படத்தை பார்த்ததும் முதலில் திகைத்து விழித்து… பின், அர்ஜுன் தன்னை கவனிப்பதை உணர்ந்து தன் முக மாற்றத்தை சரி செய்துகொண்டாள். ஆனால், அவளையே அளவிட்டுக்கொண்டிருந்த அர்ஜுனின் கண்களுக்கு அது தப்பாமல் விழுந்தது.
ஏதும் தெரியாதவள் போல் யாழினியின் படத்தை அவனிடம் இருந்து வாங்கி அப்போது தான் நன்றாக பார்ப்பது போல் பார்த்துவிட்டு, " இல்லைங்க பார்த்தது இல்லை… யார் இவுங்க " என்றாள். அவளின் ஒவ்வொரு அசைவுகளையும் கவனித்துக்கொண்டே இருந்த அர்ஜுன் , " நான் கல்யாணம் செஞ்சுக்க போற பொண்ணு " என்றான். ' கல்யாணம் செஞ்சுக்க போற பொண்ணு ' மீண்டும் மனதில் சொல்லி பார்த்தவனுக்கு ஏதோ சுகமான உணர்வு மனதில் தோன்றியது. ' ஆமாம், அவள் எனக்கானவள் என்னுடையவள் மட்டுமே ' என்ற எண்ணம் அவன் மனதில் உறுதி பூண்டது.
அவன் சொன்ன பதில் கேட்டும் குழப்பம் தெளியாத செல்லி, " ஓ… சரிங்க. இவுங்களுக்கு என்னாச்சு எப்ப இருந்து காணோம்… போலீஸ் கிட்ட சொல்லலையா… இவுங்க அம்மா அப்பா எங்க இருக்காங்க " என்று விசாரித்தாள். தன் மேல் சந்தேகம் கொண்டு அவள் கேட்கும் கேள்விகளை எண்ணி அவளை மனதிற்குள் மெச்சியவன், " ம்ம்ம் போலீஸ்ல சொல்லியிருக்கோம்… அவுங்க அப்பா கோயம்பத்தூர்ல இருக்காங்க… ஒரு மாசத்துக்கு மேல தேடிட்டு இருக்கோம்மா ஏதும் தெரிஞ்சா சொல்லும்மா " என்றான் அவளுக்கு புரியும் விதமாக.
அவளிடம் சொல்லும் போதே கண்கலங்கினாலும் அதை மறுபுறம் திரும்பி வெளியிடாமல் மறைத்துக்கொண்டவன்… அவளை ஏறிட்டு பார்க்க அவள் ஏதோ குழப்பத்தில் இருப்பது போல் தெரிந்தது. மேலும் அவளை குழப்பத்தில் ஆழ்த்த விரும்பாதவன், " சரிமா பார்த்தா இந்த நம்பர்க்கு போன் பண்ணு " என்று தன் விசிட்டிங் கார்டை அவளிடம் கொடுத்தவன்… மேலும், "இது இந்த கேஸ் பார்த்துக்கர போலீஸ் நம்பர்… அவுங்களுக்கு கூட சொல்லு " என்று கிருஷ்ணனின் எண்ணையும் கொடுத்தான்.
இரண்டையும் வாங்கிக்கொண்டவள் யோசனையுடனே அவனிடம் ஒரு சிறு தலையசைபுடன் கிளம்பிச் சென்றாள். அவள் செல்வதையே பார்த்துக்கொண்டிருந்தவன் தோள் தொட்டு அழைத்த பிரதீஷ், "என்னடா அந்த பொண்ணுக்கு தெரியும்னு நினைக்கிறயா என்ன " என்றான். அர்ஜுன் காரணம் இல்லாமல் ஏதும் செய்ய மாட்டான் என்று அவனுக்கு நன்கு தெரியுமே.
பிரதீஷ் கேட்டதிற்கு யோசனையுடனே, "இருக்கலாம் மச்சான்… " என்றான்.
" அப்போ அங்கிள் கிட்ட சொல்லுவோம்… அந்த பொண்ண விசாரிச்சு பாப்போம் " என்றான் நம்பிக்கை துளிர்விட… அவனும் தான் இந்தனை நாட்களாக பார்த்துக்கொண்டிருக்கிறான் எந்த வித தகவலும் யாழினி பற்றி தெரியவில்லையே.
இவர்களை முதலிலிருந்தே கவனித்துக்கொண்டிருந்த கடைக்காரர்,
" சார் அவசர படாதீங்க… அந்த பொண்ணு நல்ல பொண்ணு தான் ஆனா ஊருக்குள்ள போக அனுமதி வாங்கனும்… கொஞ்சம் கட்டுப்பாடான இடம் " என்று தகவல் அளித்தார். அவருக்கு வயது மற்றும் அனுபவத்தின் காரணமாக ஒருவரை பற்றி கணிக்க முடிந்தது. அதுவே செல்லியின் தடுமாற்றம் மற்றும் அர்ஜுனின் உண்மையான வருத்தத்தையும்… அவர் அவன் கண்களை வைத்தே கணித்திருந்தார்.
அவர் சொன்னதை கேட்டு பிரதீஷ், "அப்போ எப்படி விசாரிக்க… ஊருக்குள்ள எப்படி போகனும் " என அவரிடம் விசாரித்தான். அதற்கு அவர், "பக்கத்து எஸ்டேட்ல ராம்ன்னு ஒருத்தர் இருக்கார் அவர பார்த்து பேசுங்க… அவர் தான் அங்க போக கூடிய ஒரே ஆள் " என்று அவரை பற்றிய தகவல்கள் அளித்தார்.
அப்போதே கடைக்காரர் கொடுத்த விலாசத்தில் அவரை தேடி விரைந்தனர். போகும் வழியில் கிருஷ்ணனுக்கு அழைத்து விடையத்தை தெரிவித்துவிட்டு சென்றனர். ராமின் இருப்பிடம் அடைந்தவர்களை வரவேற்றது என்னவோ அவர் உதவியாளர் தான். ராம் வெளியே சென்றிருக்க அவர் உதவியாளரிடம் தங்களை பற்றிய தகவல்களை அளித்துவிட்டு வந்தனர்.
பின்பு கிருஷ்ணனுக்கு மீண்டும் அழைக்க அவர் நாளை அவரே நேரில் சென்று பேசிவிட்டு அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி முடிவு எடுப்பதாக தெரிவித்தார்.
இன்னும் பழமை மாறாத பழங்குடி இன மக்களும் பூமியில் வாழ்ந்து வருகிறார்கள் என்பதற்கு சாட்சி... செல்லி வாழும் வனப்பகுதியை சேர்ந்த மக்கள். வெளிநபர்கள் உள்ளே வந்தால் வனபகுதியை அசுத்தப்படுத்தி அவர்கள் வனத்தை அபகரித்து விடுவார்கள் என்று அச்சம் கொண்டு வெளியிலிருந்து வரும் யாரையும் அவர்கள் பகுதிக்குள் அனுமதிப்பது இல்லை.
செல்லியின் ஊர் மக்கள் நம்பும் ஒரே நபர் ராம். அவர் பலமுறை அங்கு சென்றும் வந்துள்ளார். எனவே அவர் உதவியை நாடினர்.
கிருஷ்ணனிடம் பேசிவிட்டு பிரதீஷ்யை அவன் வீட்டில் விட சென்ற போது… அவன் வீட்டினரின் அன்பு கட்டளையால் அங்கேயே இரவு உணவை முடித்துக்கொண்டு தான் கிளம்பினான்.
இரவு படுக்கையில் எப்பொழுதும் தூக்கமின்றி தவிப்பவனுக்கு இன்று ஏதோ கலவையான உணர்வு… தன் சந்தேகம் சரியானதா இல்லை தேவையற்று சிந்திக்கிறோமா என்று பல குழப்பங்கள் மனதை வாட்டியது.
ஒரு பெண்ணிடம் இருக்கும் சாதாரண வளையல்களை வைத்து தான் யோசிக்கும் கோணம் சரியாக இருக்குமா என்ற ஐயம் எழத்தான் செய்தது. இருந்தும் எதை தின்றால் பித்தம் தீரும் என்று திரிபவனுக்கு இது எப்படியும் சரியாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் ஓடிக்கொண்டே இருந்தது.
இருந்தும் ஏதோ வெறுமை உணர்வு தோன்ற காரை எடுத்துக்கொண்டு வெளியே கிளம்பினான். களைத்து ஓயும் வரை எங்க எங்கோ அழைந்தவன் மனம் ஒரு நிலை இல்லாமல் சோர்ந்து போக... நடுநசி நேரம் சாலையின் ஓர் ஓரமாக தன் காரை நிறுத்திவிட்டு ஸ்டியரிங் வீல்லில் தலை கவிழ்த்து படுத்துக்கொண்டான். எத்தனை நேரம் அப்படி இருந்தானோ... போன் ஒலிக்கவும் அதை எடுத்து காதிற்கு கொடுத்தவன், " ம்ம்ம், வினித் சொல்லு " என்றான்.
மறுபுறம் இருந்த அவன் பி எ வினித் , " சார் எவ்ளோ நேரமா கால் பண்ணறேன் எங்க இருக்கீங்க " என்று சற்று கவலையுடனே வினவினான். அவன் கேள்விக்கு அர்ஜுனிடம் எந்த பதிலும் இல்லாமல் போக, வினித் சற்று பதட்டமாக, " சார் சார்.... " என்று பல முறை அழைத்த பிறகே அர்ஜுன், " ம்ம்ம்... இருக்கேன்" என்றான் முனங்களான குரலில்.
வினித் " சார் அங்க இருந்து பிரதீஷ் சார் கால் செஞ்சு இருந்தார். உங்களுக்கு கூப்பிட்டு நீங்க எடுக்கலைன்னு எனக்கு கூப்பிட்டார்... உங்கள ஸ்டேஷன் வர சொன்னார் " என்றதும் எழுந்து அமர்ந்தவன், " வேற ஏதாச்சும் சொன்னாரா " என்றான் சோர்வு நீங்கி ஆர்வம் மிக.
வினித், " அங்க இருக்க ஓர் மலை கிராமத்துக்கு போகணும் என்று சொன்னார். நீங்க எதுக்கும் நேர்ல போய் பாருங்க… எப்படியும் யாழினி கிடைச்சுருவாங்க " என்றான் அர்ஜுனின் கவலை உணர்ந்து.
" சரி வினித் நான் பாத்துட்டு கால் பண்ணறேன் " என்று அவன் பதிலை எதிர் பாராமலே கிளம்பிவிட்டான்.
சற்று பதற்றத்துடன் காவல் நிலையதுக்குள் நுழைந்தவனை எதிர்கொண்ட உயர் அதிகாரியிடம், "என்னாச்சு சார் விது கிடைச்சுட்டாளா எங்க இருக்கா… நான் இப்போவே பார்க்கணும் " என்றான் பதற்றத்துடன்.
மழைத்தூறும்… ?
அத்தியாயம் 2
அதிகாலை நேரம் பதற்றத்துடன் காவல் நிலையத்துக்குள் நுழைந்து யாழினியை பற்றி விசாரித்தவனை அமரவைத்த அதிகாரி, " அர்ஜுன் ப்ளீஸ் ரிலாக்ஸ் கிருஷ்ணன் சார் இப்போ வந்துருவாரு... காட்டுக்குள்ள போறதுக்கான ஏற்பாடு எல்லாம் செஞ்சுட்டார். யாழினி வில் பி பைன்... " என சமாதானம் செய்தார்.
இவர்கள் பேசிக்கொண்டிருக்கவும் சிறிது நேரத்தில் கிருஷ்ணனும் பிரதீஷும் ஒரு நாற்பத்தைந்து வயது மதிக்கதக்க நபருடன் வந்து சேர்ந்தனர்.
கிருஷ்ணன் அவரை மற்றவர்களிடம் , " இவர் தான் மிஸ்டர். ராம், சமூக ஆர்வலர்... நம்ம மேப்பாடி மலைக்கு அழைச்சுட்டு போக போறது இவர்தான் " என்று அறிமுகம் செய்து வைத்தார். பின் அர்ஜுனையும் அவருக்கு அறிமுகம் செய்து வைக்கவும் அவர், " ஹலோ... அர்ஜுன் கவலை வேண்டாம் அவுங்க அங்க தான் இருக்காங்கன்னு நினைச்சீங்கன்னா, அவுங்க பாதுகாப்பா இருக்காங்கன்னு அர்த்தம் " என்று நம்பிக்கையூட்டினார்.
பின் கிருஷ்ணனின் அறிவுரைப்படி பிரதீஷ் அர்ஜுனை சாப்பிட வைத்து அழைத்து வந்த பிறகு... ராமுடன் அர்ஜுன், பிரதீஷ், கிருஷ்ணன் மற்றும் இன்னொரு பெண் அதிகாரியும் மேப்பாடி நோக்கி தங்கள் பயணத்தை தொடங்கினர்.
வனப்பகுதியை அடைந்தவுடன் அதற்கு மேல் வாகனங்கள் செல்லாது என்பதால் நடந்து செல்ல தொடங்கினர். முதலில் ராம் சிறிது தூரம் சென்று எந்த ஆபத்தும் இல்லை என உறுதிப்படுத்திக் கொண்டே இவர்களை அழைத்துச்சென்றார்.
ஆங்காங்கே காணப்பட்ட சாண குவியல்களை கண்டவர்கள் அது யானைகளின் வழித்தடம் என புரிந்துகொண்டனர். உச்சி வரை முட்கள் கொண்ட காட்டு தேக்கு மரங்கள் போன்றவை காணப்பட்டன. ஓர் நீரோடை அருகில் அனைவரும் ஓய்வு எடுக்க அமர… அர்ஜுன் தனித்து அமர்ந்து கொண்டான். அங்கு சூழ்ந்திருந்த இயற்கையை ரசிக்கும் மனநிலை அவனுக்கு இப்பொது இல்லை.
அவன் மனமோ, ' எப்படிடி இங்க வந்த… எனக்கு என்னவோ மனசு கிடந்தது அடிச்சுக்குது… இப்போ நீ இங்க பாதுகாப்பா இருந்தாலும் ஏன் நீ இங்க வந்த… உனக்கு எதும் கெட்டதா நடக்காம இருக்கனும் ' என்று பலவித யோசனையில் மூழ்கி போனான். கண்மூடி பாறையில் சாய்ந்து கொண்டவன் கண்களிக்குள் தன்னவளின் குறும்பு சிரிப்பே மின்னிச் சென்றது.
*****
வானத்தை முட்டும் அளவுக்கு உயர்ந்து, அடர்ந்து வளர்ந்திருந்த அந்த மரங்களின் நடுவே கிடைத்த இடைவெளியில் தன் ஒளியை பரபிக்கொண்டிருந்தது அதிகாலை நேர சூரியனின் செங்கதிர்கள்.
அவ்வொளி அவ்வனத்தின் நடுவே இருந்த ஓர் குடிசையின் ஜன்னல் வழியாக பரவி அங்கு தூக்கதிர்க்கும் விழிப்பிற்கும் நடுவே போராடிக்கொண்டிருந்த இரு செந்தாமரை போன்ற விழிகளின் மேல் விழுந்தது.
மெல்ல இமை திறக்க முயன்றவளுக்கு…இரவில் தூங்காமல் அழுது கரைந்ததன் விளைவால் கண்களில் எரிச்சல் ஊசி குத்துவது போல் இருக்க… இமைகளின் வீக்கம் அவற்றை ஒன்றுடனிருந்து மற்றொன்றை பிரிக்க முடியாமல் சண்டித்தனம் செய்தது.
விரக்தியில் பெருமூச்சு எடுத்தவள்… தன் உள்ளங்கைகளை ஒன்றுடன் ஒன்றை உரசி நன்றாக சூடு வர தேய்த்து கண்களின் மேல் ஒன்றி எடுக்க எரிச்சல் சற்று குறைந்தது போல் தோன்றியது. பின் மெல்ல தன் இமைகளை திறந்தாள் வித்ய யாழினி.
உடல் முழுவதும் ஏதோ அசதி பரவ அதை விரட்டும் முயற்சியில் எழுந்து அமர்ந்தாள். காலின் வலி இன்று குறைந்தது போலிருக்க… தன் படுக்கையின் பக்கவாட்டிலிருந்த சுவரில் சாய்ந்து அமர்ந்து கொண்டாள்.
ஜன்னலின் வழியாக சூரிய ஒளி முகத்தில் படவும் அங்கு திரும்பி பார்த்தவளுக்கு… அங்கு வெளியே தெரிந்த மரங்கள் நேற்றைய இரவு காற்றில் பேய்யாட்டம் போட்டது நியாபகம் வர உடலில் ஒருவித நடுக்கம் ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக பலவித எண்ணங்கள் கண்முன் தோன்றி மனதை கலங்க செய்தது.
கண்மூடி தன் துக்கத்தை தொண்டைக்குள் விழுங்கிக்கொண்டாள். தன்னுள் குடிகொண்ட வெறுமையை விரட்டும் வழியறியாமல் கண்ணீரில் கரைய தொடங்கியவளை குடிசையின் கதவு திறக்கும் சத்தம் தடுத்து நிறுத்தியது.
குடிசையின் கதவை திறந்துகொண்டு உள்ளே வந்த செல்லி யாழினியின் முகத்தில் குடிகொண்டிருந்த வேதனை கண்டு மனம் வருந்தினாலும் அதை மற்றவளிடம் வெளிகாட்டிக் கொள்ளாமல், " அக்கா எழுந்துட்டீங்களா… வாங்க என் கை பிடிச்சு மெல்ல எழுந்துக்கோங்க முகம் கழுவிட்டு வந்து சாப்பிடுவோம்" என்று சொல்லிக்கொண்டே யாழினி எழ உதவினாள்.
யாழினிக்கு தேவையான உதவிகளை செய்தவள் பின் அவளுக்கு காபியும் முதல் நாள் வாங்கி வந்த தீன்பண்டங்களையும் கொடுத்தாள். அதை கண்ட யாழினி புருவம் சுருக்கி மெல்லிய குரலில், " இது எல்லாம்… " என்று வார்த்தையை இழுத்தவளை பார்த்து மெலிதாக சிரித்த செல்லி, "ஆமா அக்கா உங்களுக்கு இங்க எதும் சரியா புடிக்கல போல நல்லாவே சாப்பிடறது இல்ல… அதான் ஐயா கிட்ட சொல்லி வாங்கிட்டு வந்தேன்… இங்க யாரும் இப்படி வெளி பொருள் எல்லாம் வாங்கி சாப்பிட ஐயா ஒதுக்க மாட்டார் இங்க இயற்கை எங்களுக்கு தரது தான் எங்க உணவு… ஆனாலும் நீங்க கஷ்டபடறத பாத்து எனக்கு தான் மனசு கேட்கல அதான் வாங்கிட்டு வந்தேன் " என்றாள் யாழினியின் கஷ்டம் உணர்ந்து.
அந்த பாசத்தில் தன் தந்தையின் நியாபகம் மேலோங்க… கலங்கிய கண்களுடன் செல்லியை ஏறிட்டவள், "ரொம்ப நன்றி செல்லி இதுக்குனு இல்லை எல்லாத்துக்கும் " என்றாள்.
"அச்சோ என்ன அக்கா இதுக்கு போய்... " என்றவாரே யாழினியின் கண்களை துடைத்துவிட்டவள்… அவளிடம் தயங்கியவாரே, "அக்கா இவுங்கள உங்களுக்கு தெரியுமா? " என்று கேட்டுக்கொண்டே அவளிடம் அர்ஜுன் கொடுத்த சீட்டை நீட்டினாள்.
குழப்பத்துடன் அதை வாங்கி பார்த்தவள் அதிலிருந்த 'அர்ஜுன் ஆதித்யன்' என்ற பெயரை பார்த்ததும் உடலில் ஓர் சிலிர்ப்பு ஓடி மறந்தது. அப்பெயரை மெல்ல வருடிக்கொடுத்தவளுக்கு அழுகை முட்டிக்கொண்டு வர அதை கட்டுப்படுத்தும் வழியறியாது தன் கீழ் உதட்டை பற்களால் கடித்து கொண்டாள். அதையும் மீறி கேவல் வெளிப்பட்டுவிட முழங்காலில் முகம் புதைத்து அழ தொடங்கினாள். அவள் அழுகை கண்டு பதற்றமடைந்த செல்லி, " அக்கா என்னாச்சு இவுங்கள தெரியுமா… ஐயா கிட்ட சொன்னேன் அவரு உங்களை கேட்டுட்டு சொல்லலாம்னு சொன்னாரு… உங்களுக்கு சரினா சொல்லலாம் இல்லனா பரவால்ல… " என்றாள் அவளை சமாதானம் செய்யும் விதமாக.
செல்லி கேட்டதுக்கு எந்த பதிலும் இல்லாமல் அமர்ந்திருந்தவள் அழுகை மட்டும் குறையவில்லை. யாழினியின் செய்கையே நேற்று அவள் சந்தித்தவன் அவளுக்கு எவ்வளவு பிரியமானவன் என்று செல்லிக்கு உணர்த்திவிட… யாழினியை சமாதானம் செய்யும் நோக்கத்துடன் அவள் தோள் தொட்டவளை அணைத்துக்கொண்டு கதறிவிட்டாள். மெல்ல அவளை சமாதானம் செய்து உறங்க வைத்துவிட்டுட்டு வெளியே வந்து அங்கிருந்த கிழங்குகளை எடுத்து சுத்தம் செய்து அடுப்பு மூட்டி சமைக்க தொடங்கியவளுக்கு சில நாட்களுக்கு முன் யாழினியை முதல் முதலில் பார்த்த நாள் கண்முன் தோன்றியது…
அன்று…
வயநாட்டின் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது மேப்பாடி மலைப்பகுதி. அங்கு வசித்த பெரும்பான்மையான பழங்குடியினர் அப்பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக வனப்பகுதியை விடுத்து அரசாங்க குடியிருப்புகளுக்கு மாறிவிட்டனர். இப்பொது அங்கு வெறும் மூன்று குடும்பங்களே வசித்து வருகின்றனர். அதில் செல்லியின் குடும்பமும் ஒன்று.
அவர்களின் அன்றாட வாழ்வாதாரம் இயற்கையை ஒன்றியதாகவே இருக்கிறது. அங்கு கிடைக்கும் தேன், கிழங்கு, பழவகைகள் மற்றும் அங்கிருக்கும் சிறு மிருகங்களை வேட்டையாடியும் உண்டு தங்கள் வாழ்வை நகர்த்திவருகின்றனர்.
ஆண்கள் வேட்டைக்கும், தேன் எடுக்கவும் சென்றால் பெண்கள் தேவையான பழங்கள் கிழங்குகள் கொண்டுவருவர். அப்படித்தான் அன்றும் செல்லியும் பெண்களுடன் ஒன்றாக சென்றிருந்தாள். காட்டில் கிழங்குகளை சேகரித்தவர்கள் பக்கத்திலிருந்த நீரோடையில் நீர் அருந்த சென்றனர்.
அங்கு பக்கத்திலிருந்த பாறைக்கு பின் யாரோ வலியில் முனங்கும் சத்தம் கேட்டது. அங்கு விரைந்து சென்று பார்த்தவர்களுக்கு அங்கமெல்லாம் நடுங்கிவிட்டது. ஒரு பெண் வன்கொடுமைக்கு உள்ளானாள் என்று கேள்விப்பட்டாலே மனம் பதறும் அப்படியொரு நிலையில் உடல் முழுதும் காயங்களுடனும் தலையில் பலத்த அடியுடனும் கசங்கிய பூபோல் கிடந்த யாழினியை கண்டவர்களுக்கு நெஞ்சில் நீர் வற்றிபோன உணர்வு. அப்படியே அசைவற்று நின்றவர்களில் முதலில் சுதாரித்த செல்லி ஓடிச்சென்று அவள் தலையை மடியில் ஏந்திக்கொண்டு, " அக்கா அக்கா… முழிச்சு பாருங்க… " என்று கன்னம் தட்டி அழைத்துப் பார்த்தாள்.
யாழினியிடம் எந்த பதிலும் இல்லாமல் போக செய்வதறியாது தவித்தனர். காட்டிலிருந்து அவசரமாக மருத்துவமனை அழைத்து செல்வது இயலாத காரியம். ரத்த வாடைக்கு வரும் மிருகங்களின் அச்சுறுத்தல் வேறு அங்கு மேலும் தாமதிக்க முடியாது போக... தங்கள் இடத்துக்கு அழைத்து செல்ல முடிவெடுத்து உதவிக்கு ஆண்களை வர சொல்ல இரு பெண்களை அனுப்பிவிட்டு…செல்லி அங்கிருந்த மற்றோரு பெண்ணுடன் சேர்ந்து யாழினிக்கு சிறு சிறு முதலுதவிகளை செய்தாள்.
அதற்குள் அவர்கள் உதவிக்கு ஆட்கள் வந்துவிட… அவர்களுடன் சேர்ந்து யாழினியை தங்கள் குடியிருப்புக்கு அழைத்து வந்தனர். அங்கு அவர்கள் தலைவர் வெளுத்தாவின் உதவியால் அவளுக்கு மருத்துவம் செய்யப்பட்டு யாழினி காப்பாற்றப்பட்டாள். அவளின் பாதுகாப்பு கருதி அவள் உடல்நிலை சரியாகும் வரை எந்த விபரத்தையும் வெளியில் தெரியாமல் பார்த்துக்கொண்டனர்.
யாழினியின் தேவைகளை செல்லியே பார்த்துக்கொள்ள... அங்கு வந்த பதினைந்து நாட்கள் கழித்தே கண்விழித்தாள் யாழினி. கண்விழித்த முதல் இரண்டு நாட்கள் சரியாக மயக்கம் தெளியாமல் சிறிது நேரம் விழித்திருப்பவள் மீண்டும் கண் மூடிக்கொள்வாள். வலது நெற்றியில் ஆழமான வெட்டுக்காயமும், உடலில் சிராய்ப்புகளும்… வலது காலிலும் அடிபட்டிருக்க நடப்பதற்கு கொஞ்சம் சிரமமாக இருந்தது.
சிறிது சிறிதாக நினைவு திரும்ப ஆரம்பித்த நிலையில் தன்னை பார்த்துக்கொண்ட செல்லியை தவிர மற்றவர்களை நெருங்க விடாமல் சற்று மூர்க்கதனமாக நடந்து கொண்ட நாட்களும் உண்டு.
இப்படியே நாட்கள் செல்ல… மெல்ல அங்கிருந்த இயற்கையுடன் ஒன்ற ஆரம்பித்தாள். சட்டென பெய்யும் மழை, குளிர்ந்த காற்று, ஆர்ப்பரிக்கும் நதியில் தெரியும் முழு நிலவு என்று மனதை அமைதியடைய செய்தாலும்… தனக்குள் அவள் தவித்துக்கொண்டிருப்பது இரவில் அவளுடன் துணைக்கு உறங்கும் செல்லிக்கு நன்கு புரிந்தது.
இன்றுவரை அவளிடம் யாரும் எதும் கேட்டு தொந்தரவு செய்யவில்லை. அவளின் தேவைகள் அனைத்தும் செல்லி மட்டுமே பார்த்துக்கொண்டாள். இதுவே இருவருக்குள்ளும் சிறு நெருக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.
மெதுவாக அவளிடம் பேச்சு கொடுத்து அவள் பெற்றோரை பற்றி தெரிந்துகொள்ள முயன்றால் மௌனத்தை கடைபிடிக்க தொடங்கிவிடுவாள். என்னதான் மற்றவர்களிடம் விலகி இருந்தாலும்… அங்கிருக்கும் குழந்தைகளிடம் ஒதுக்கம் காட்டாமல் அவர்களுடன் நேரம் செலவிடுவாள்.
இவற்றை மனதில் உருபோட்டவாரே வேக வைத்த கிழங்கை குழந்தைகளுக்கு கொடுத்துவிட்டு நிமிர அங்கு ராம்… அர்ஜுன் மற்றும் வேறு இருவருடன் வந்து கொண்டிருப்பது தெரிந்தது.
அவர்களை கண்டதும் ஓடிச்சென்று யாழினியை பார்க்க… அவள் நல்ல உறக்கத்திலிருப்பது தெரிந்தது. வெளி ஆட்களுடன் நின்று பேசும் பழக்கம் இல்லாததால் அவள் அங்கு யாழினியுடன் இருந்துவிட்டாள்.
ராம் பரிச்சியமானவர் என்பதால் வந்திருப்பவர்கள் மேல் நம்பிக்கை உருவானாலும், முதலில் அவர்கள் வெளுத்தாவிடம் பேசிவிட்டு வரட்டும் என்று பேசாமல் இருந்து விட்டாள்.
ராமும் சற்று தொலைவிலேயே அவர்களை நிறுத்திவிட்டு , " நான் போய் இந்த ஊர் தலைவர் வெளுத்தா கிட்ட பேசிட்டு வரேன் அப்றம் நீங்க எல்லாரும் வரலாம்" என்று கூறி வெளுத்தாவை பார்க்க சென்றார்.
ராமிற்கு சிறு வயது முதலே இங்கு வாழும் மக்கள் பழக்கம் என்பதால் எந்தவித தடையுமின்றி உள்ளே சென்றார். சென்றவர் சிறிது நேரத்திலே திரும்பி வந்து தன்னையே ஆர்வமாக பார்த்துக்கொண்டிருந்த அர்ஜுனிடம் தயங்கியவாரே , "யாழினி இங்க தான் இருக்காங்க…நல்லா இருக்காங்க… ஆனா… " என்று அவர் சொன்ன செய்தியில் அப்டியே சரிந்து மண்டியிட்டு அமர்ந்தவன் நிலத்தில் ஓங்கி குத்திக்கொண்டு கத்தவும்… அதிர்ச்சியில் இருந்த மற்றவர்கள் தங்கைகளை மீட்டுக்கொண்டு அவனை நெருங்கி சமாதானம் செய்ய எடுத்த எந்தவொரு முயற்சியும் பயனில்லாமல் போனது.
பிரதீஷ் அர்ஜுன் பக்கத்தில் மண்டியிட்டு அமர்ந்து அவனை அணைத்துக்கொண்டே, " மச்சான் பொறுமையா இருடா… ப்ளீஸ் கண்ட்ரோல் யூவர் செ ல்ப்… அமைதியா இரு … " என்று அவனை கொஞ்சம் கொஞ்சமாக நிதானப்படுத்த முயன்றான்.
அர்ஜுனோ, " முடியலடா அவளுக்கு எதும் ஆக கூடாதுனு இவ்ளோ நாள் விடாம ஒரு ஒரு நிமிஷமும் வேண்டிகிட்டது எதுக்கும் பயனில்லையே… அ… அவ ஒரு குழந்தை மாதிரிடா எப்பிடிடா மனசு வந்துச்சு அவளை உயிரோட சாகடிக்க…" என்று அழுது புலம்ப அவனை படாத பாடுபட்டு கட்டுக்குள் கொண்டு வர பெரும் போராட்டம் நடத்தவேண்டியதாய் போனது.
கிருஷ்ணன், " இப்படி அழுதுட்டு இருந்தா இனி அடுத்தடுத்த சூழ்நிலைகளை எப்படி சமாளிக்க… எந்திருச்சு வாங்க அர்ஜுன் " என்று சிறு கண்டிப்புடன் சொன்னார். அவருக்கும் மனம் பாரமாக தானிருந்தது இருந்தும் சுற்றியிருப்பவர்கள் கொடுக்கும் தைரியம் தான் அப்பெண்ணுக்கு தேவை என்றுணர்ந்து அர்ஜுனிடம் கண்டிப்பு காட்டினார்.
தலைகவிழ்த்து பெரும்மூச்சுகளை எடுத்து தன்னை நிதானித்துக்கொள்ள முயன்றவன் . பின் தன் முகத்தை அழுந்த துடைத்துக்கொண்டு நிமிர… பிரதீஷ் அவன் தோள் தொட்டு, " மச்சான் வா போய் பாப்போம் " என்று அழைக்கவும் எழுந்து அவர்களுடன் அங்கிருந்த குடிசை பகுதியை நோக்கி சென்றான்.
அவர்களை எதிர்கொண்ட வெளுத்தா, "அந்த பொண்ணு செல்லிய தவிர எங்க யாரையும் பார்க்க விருப்பப் பட்டது இல்லை அதனால அவுங்களுக்கு நெருக்கமானவுங்க மட்டும் போய் பாருங்க " என்றவர்… பின் செல்லியை அழைத்து அவர்களுக்கு உதவ சொல்லிவிட்டு பக்கத்திலிருந்த பாறையில் ராமுடன் அமர்ந்துகொண்டார்.
மற்றவர்கள் ஒதுங்கிக்கொள்ள செல்லியுடன் நடந்த அர்ஜுன், " எப்படி இருக்கா " என்றான் மெல்லிய குரலில்.
" ம்ம்ம் முதல் இருந்ததுக்கு இப்போ பரவால்ல அண்ணா… கொஞ்சம் நேரம் முன்னாடி தான் நீங்க கொடுத்த சீட்டை அவுங்க கிட்ட காட்டினேன்… ரொம்ப அழுதாங்க… இப்போ தான் தூங்கறாங்க… " என்றாள்.
அவள் தன்னை நினைத்து அழுதாள் என்று கேட்டவனுக்கு மனம் துடித்துபோனது. குடிசையை நெருங்கியதும் அவன் கால்கள் இரண்டும் பெரும் பாரம் கொண்டு நகர மறுத்தது. எத்தனை நாள் தேடல்… உயிரை கையில் பிடித்துக்கொண்டு அவளுக்காக அவன் ஓடாத நேரமில்லை. ஆனால் இந்த நிமிடத்தை எதிர்கொள்ளும் தைரியம் அவனிடம் சுத்தமாக இல்லாமல் போனது.
கடினப்பட்டு தன் நடுங்கும் கரம் கொண்டு கதவை திறந்து உள்ளே நுழைந்தவன் கண்டது வாடிய கொடிபோல் கிடந்தவளையே… இத்தனை நாட்களில் உடல் மெலிந்து கொஞ்சம் நிறம் மங்கி… அவள் முகத்தில் குடியிருக்கும் குறும்புத்தனம் சுத்தமாக துடைக்கப்பட்டு ஓர் முதிர்ந்த தோற்றம் தெரிந்தது.
அவளை நெருங்கி அவள் படுக்கையின் ஓரத்தில் அமர்ந்தவன்… அவள் வலது நெற்றியிலிருந்த காயத்தை மெல்ல தன் விரல் கொண்டு வருடிக்கொடுத்தான். காயங்கள் வெளியில் மெல்ல ஆர தொடங்கினாலும் அவள் மனம் கொண்ட காயத்தை எப்படி ஆற்றுவது என்று புரியாமல் கலங்கி நின்றான்.


