எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

சிராஜூ நிஷாவின் "அல்லி மலர்க் கொடியே!!!" - கதை திரி

Status
Not open for further replies.

Sirajunisha

Moderator
வணக்கம் மக்களே,
மீண்டும் ஒரு கதையுடன் நான் வந்துட்டேன். குடும்பத்தின் அச்சாணியாக இருக்கும் பெண்ணை பற்றிய கதை. கதை படிக்கும் மாந்தர்களது வாழ்வில் நடந்த (அ)நடக்கும் விசயங்களை நிச்சயம் நியாபகப்படுத்துவாள்.

அல்லி மலர்க் கொடி நம்மில் ஒருத்தியாகவோ? ஏன்? நாமாகவோ கூட இருக்கலாம்.

திங்கள் மற்றும் வியாழன் இரவு பதிவுகள் வரும் டியர்ஸ். தொடர் ஆதரவை தந்து கதையின் நிறை குறைகளை என்னுடன் பகிர்ந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
 
Last edited:

Sirajunisha

Moderator
அத்தியாயம் :1
பேருந்தில் அனைவரும் ஏறிக் கொண்டிருந்தனர். பத்மினி இருவர் அமரும் இருக்கையில் கண்மூடி அமர்ந்திருந்தார். மனம் இறைவனை மனமுருக வேண்டிக் கொண்டிருந்தது. தன் குடும்பத்திற்கு ஏற்ற மருமகளை தன் கண்ணில் காட்ட வேண்டுமென்று என்று வேண்டும் போதே, அவரின் செல்போன் இசைக்க ஆரம்பித்தது.

கையிலிருந்த போனை எடுத்து பார்த்தார். மகனது பெயர் ஒளிர்ந்து கொண்டிருந்தது. அழைப்பை இணைத்தவர். மகனது கேள்விக்கு,

"ம்ம். இப்போ வண்டி கிளம்பிடும். சும்மா போன் பண்ணி தொல்லை பண்ணக் கூடாது. இதை உன் தங்கையிடமும் சொல்லி விடு. ஒரு வாரம் நிம்மதியாய் சுற்றி பார்த்து விட்டு தான் வருவேன் " என்றார் கராராக

மறுமுனை பேசிக் கொண்டிருக்க.. அப்போது படியில்! இளம் பெண்ணின் முகம் மட்டும் தெரிந்தது. படியில் நின்றபடி உள்ளே சீட் இருக்கிறதா? என்று பார்வையிட்டுக் கொண்டிருந்தாள். அழகான வட்ட முகம் துறுதுறுக்கும் கண்கள் உதட்டில் மெல்லிய புன்னகை. கண்டேன் சீதையை என்று அனுமன் ராமனிடம் சொன்னது போல!

கண்டேன் மருமகளை என்று! தன் மனதுக்கு பிடித்தது போல இருந்த பெண்ணை பார்த்துக் கொண்டிருந்தார். அங்கே மகனது கையிலிருந்து போன் கை மாறி கணவன் பேச ஆரம்பித்தது எதுவும் அவர் காதில் விழவில்லை.

அந்த பெண்ணையே பார்த்திருந்தவர். அவள் இன்னும் மேலே ஏறவும் அவர் தோற்றத்தை கண்டு மனம் சுனங்கியது. இரு கைநிறைய கண்ணாடி வளையல்களுடன் வயிறு பெரிதாக இருந்தது. திருமணமான பெண்!.

பெருமூச்சு எழுந்தாலும் அப்பெண்ணை விட்டு பார்வையை திருப்ப முடியவில்லை. சிரித்தபடியே அவர் அருகில் வந்தவள்.

"நான் இங்கே உட்காரவா மா. வேறு யாரும் வராங்களா?" என்றாள் பத்மினியிடம்.

"இல்லை மா. நீ உட்காரு " என்று காலை சற்றே நகர்த்தி அவள் ஜன்னலோரம் அமர இடம் கொடுத்தார்.

"ரொம்ப நன்றி மா " என்று அவரருகில் அமர்ந்து கொண்டாள். பத்மினி அவளையே பார்த்துக் கொண்டிருக்க! அதை கவனித்து அவளும் சினேகமாக புன்னகைத்தாள்.

"எத்தனை மாசம்?" என்றார் அவளது வயிற்றை பார்த்தபடி

"ஏழு மாசம்" என்றார் மென்னகை புரிந்தபடி

"ஓ! உன் கணவர் வரலையாம்மா. இந்த நேரத்தில் தனியே வந்திருக்கியே?" என்றார்.

"இல்லை மா. அவர் வெளிநாட்டில் இருக்கிறார் " என்றாள்.

பத்மினி அந்த பெண்ணிடம் பேச ஆரம்பித்ததில், தன் போனை கட் செய்யவில்லை கணவர் ஹலோ ஹலோ என்று பேசுவதை அவர் கண்டுகொள்ளவும் வில்லை.

"ஓ! எப்போ வெளிநாடு போனார்"

"எங்க கல்யாணம் முடிந்த உடனே மா. லீவ் ரொம்ப நாள் அவருக்கு இல்லை. அதனால் உடனே கிளம்பிட்டார்."

"அச்சோ! ரொம்ப கஷ்டமில்லை" என்று பரிதாபபட்டவர். " எப்போ மா கல்யாணம் ஆச்சு. உன்னை அங்கே அழைச்சிட்டு போவாரா?" என்றார்.

அவள் கையில் வைத்திருந்த போனில் பரபரப்பாக எதையோ தேடியபடி இருந்தவள்.

"இல்லை மா. கல்யாணம் முடிஞ்சு இரண்டு மாசம் ஆச்சு" என்றாள்.

"அப்போ .. ?"

"அவர் வெளிநாடு போய் ஒரு வருசம் ஆச்சு" என்றாள். பார்வை செல்லை விட்டு நகரவில்லை. வாய் மட்டும் பதில் சொல்லி கொண்டிருந்தது.

"ஓ!" என்று சற்று நேரத்தில் அதிர்ச்சி.. "கல்யாணம் செய்து இரண்டு மாதம் தான் ஆச்சு?வயிற்றில் ஏழு மாதம் கரு!" என்று வாய்விட்டே யோசிக்க!

"ம்ம். ஆன்லைனில் கல்யாணம் செய்து கொண்டோம் மா" என்று பேசியவள். அவள் தேடிய நம்பர் கிடைத்து விட்டது போலும், அந்த எண்ணிற்கு அழைப்பு விடுத்தவள்.

பத்மினி அதிர்ச்சியாய் பார்த்துக் கொண்டிருப்பதை கண்டு, " ஒரு நிமிசம் மா " என்றவள்.

மறுமுனை அழைப்பு இணைக்கப்பட்டதும்.. "குமாரு என்னாச்சு?. நான் கிளம்பிட்டேன் " என்றாள்.

மறுமுனையில் என்ன சொல்லப்பட்டதோ!

"உங்களுக்காக தான் ரிஸ்க் எடுக்கிறேன். அங்க போய்ட்டு வேற ஏதாவது அவன் சொன்னான்! நான் மனுசியாவே இருக்க மாட்டேன்"

மறுமுனையில் என்ன கூறப்பட்டதோ?

"ம்ம். சரி. வை " என்று வைத்து விட்டாள்.

பத்மினி இவளையே பார்த்து கொண்டிருக்க, அதை கவனித்தவள். " ப்ரண்ட் லவ் பண்றான். அவன் லவ்வருக்கு கல்யாணம் ஏற்பாடு பண்ணிட்டாங்க. அடுத்த வாரம் கல்யாணம். அதை நிறுத்த ஹெல்ப் கேட்டான். அதான்.. " என்று தானாகவே விளக்கம் கொடுத்தாள்.

" ஓ!" என்று தலையாட்டி கொண்டவர். அவள் பேசியதை வைத்து, பையன் பேரு குமாரா?"

"ஆமாம் மா"

"ம்ம்!. நல்ல பையன் தானே?"

"ஆமாம் மா "

"பொண்ணு வீட்டில ஒத்துக்கலையா?. ஜாதி பார்க்கிறாங்களா?" என்றார்.

"ம்ஹும். இரண்டு பையனுங்க வீட்டிலயும் ஒத்துக்கலை மா" என்றாள்.

முதலில் புரியாமல் அவளை பார்த்தவருக்கு டக்கென்று விசயம் புரிய.. " ஆத்திதி!" என்றவருக்கு நெஞ்சு வலி வரும்போல இருந்தது.

" பையனும் பையனுமா லவ் பண்றாங்க! இது தப்பில்லையா?" என்றார் ஆதங்கமாக

"அவங்களுக்கு பிடிச்சிருக்கேமா? நாம என்ன செய்ய முடியும் சொல்லுங்க?. முன்னாடியெல்லாம் பொண்ணுங்களை படிக்க கூட வெளியில் அனுப்ப மாட்டாங்க! ஆனால் இப்போ படிக்கிறாங்க, சம்பாதிச்சு குடும்பத்த காப்பாத்துறாங்க, மறுமணம், விதவை திருமணம் இப்படி நிறைய மாற்றம் வந்துடுச்சே. நாமளும் ஏத்துக்கிட்டோமே " என்றவளை இடைமறித்தவர்.

"அதுவும் இதுவும் ஒன்றா!" என்றார் எரிச்சலாக

"இல்லை தான்! இருந்தாலும் இதில் சில சௌகரியங்கள் இருக்க தானேமா செய்யுது" என்றாள்.

பத்மினி புரியாமல், "எப்படி?" என்றார்.

"இப்போ! கல்யாணம் செய்து ஒரு பொண்ணு புகுந்த வீட்டுக்கு வந்தால்! வந்தவுடனே புருஷன கைக்குள்ள போட்டுக் கொண்டு, பையனை குடும்பத்திலிருந்து பிரிச்சு தனியே சில பேர் கூப்பிட்டு போக பார்ப்பாங்க. காரணம்! மாமியார் மருமகள் ஒத்து போகாதது. இதில அப்படி நடக்க வாய்ப்பில்லையே" என்று வெகு தீவிரமாக பேசியவளை !

'என்ன சொல்லி மடக்கலாம் என்று யோசித்தவருக்கு' டக்கென்று ஐடியா தோன்ற! "அப்போ குழந்தை பெற்றுக் கொள்ள என்ன செய்வாங்க. குழந்தை வேணும் ல " என்றார் அப்பாவியாய்.

"இவனுக்கு அவன் குழந்தை. அவனுக்கு இவன் குழந்தை . அதெல்லாம் புரிதல் மா " என்றவள். ஓரக் கண்ணால் பத்மினியை பார்த்தபடி, " உங்களுக்கு ஆம்பளை பிள்ளை இருக்கா மா?. கல்யாண வயசுல?" என்றாள் சிரிப்பை மறைத்தபடி.

"எதே!" என்று அதிர்ந்தவர். "ஏன்? ஏன்? ஏன்? ஏன் கேட்கிற?" என்றார் பயந்து போய்

"ஏன் ? இத்தனை ஏன்?" என்றாள் புரியாதது போல

"இல்லை. சும்.. சும்மா தான் மா கேட்டேன்" என்றார் எச்சில் விழுங்கிய படி,

"உங்க பதட்டத்திலேயே தெரியுது ஆம்பள பிள்ளை அதுவும் கல்யாண வயசுல இருக்குன்னு. காலம் ரொம்ப கெட்டு கெடக்கு மா. காசு பணம் பார்க்காமல் நல்ல குடும்பமா? நல்ல பெண்ணா இருந்தால் கட்டி வைச்சிடுங்க. இல்லையென்றால் ஒரு பையனை கல்யாணம் பண்ணிட்டு.. " என்றவளை இடைமறித்தவர்.

"ச்சே.. ச்சே.. என் பையன் அப்படியெல்லாம் இல்லை" என்றார்.

"ம்ஹும்! உங்களுக்கெல்லாம் சொன்னால் புரியாது" என்றவள். ஜன்னல் கதவை நன்றாக திறந்து விட்டு, வெளிகாற்று முகத்தில் படவும் கண்களை மூடி நன்றாக சாய்ந்து கொண்டாள்.

பத்மினிக்கு படபடவென்று வந்தது. 'எப்போது கேட்டாலும் திருமணத்துக்கு பிடி கொடுக்க மாட்டேங்கிறான். ஒரு வேளை அப்படியும் இருக்குமோ!' என்று நினைத்து பயந்தவர். 'இல்லை. இதற்கு மேல் பொறுமையாக இருக்கக் கூடாது. நாளைக்கே போய் என் அண்ணன் பெண்ணை பேசி முடிவு பண்ணிடனும். அந்த பெண்ணிடம் தான் கொஞ்சமாவது அக்கறையா அன்பா பேசுவான்' என்று நினைத்தவர். எழுந்து, தான் கொண்டு வந்திருந்த துணி பையை எடுத்துக் கொண்டார்.

அசைவு தெரிந்து அந்த பெண் பார்க்க, " நான் வரேன் மா " என்றபடியே நகர்ந்தார்.
 
Last edited:

Sirajunisha

Moderator
அவள் காலடியில் கட்டை வைத்த பை இருப்பதை கண்டு, " அம்மா இந்த பையை வைச்சுட்டு போறீங்க" என்று எடுத்து கொடுக்க,

"சாப்பாடும் கொஞ்சம் நொறுக்கு தீனியும் இருக்கு மா. புள்ளை தாச்சியா இருக்க! நீ சாப்பிடு மா. என் கையாலேயே செஞ்சேன். நல்லாயிருக்கும்" என்றவர். பதிலை எதிர்பார்க்காது இறங்கி விட்டார்.

"ப்பூபூ " என்றவள். "தனியே போய் உட்காருவாங்கன்னு பார்த்தால்! பஸ்ஸ விட்டே இறங்கிட்டாங்க. பாவம் யார் பெத்த பிள்ளையோ!" என்று பரிதாபபட்டவள். நன்றாக அமர்ந்து கொண்டாள். பேருந்து சென்னை நோக்கி பயணமானது.

அதிகாலை சென்னை பேருந்து நிலையத்தில் தூக்க கலக்கமும் சோர்வாக இறங்கியவளின் முன் ஆட்டோ வந்து நின்றது. யாரென்று பார்த்தவள். குமாரின் தம்பி வேலுவை கண்டதும் ஆட்டோவில் ஏறி அமர்ந்தாள்.

ஆட்டோ புறப்பட்டது. வேலு முன்பிருந்த கண்ணாடி வழியாக பின்னால் அமர்ந்திருந்தவளை அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தவன். அவளது சோர்வான தோற்றத்தை கண்டு மனம் பொறுக்காமல்!

"யக்கா உடம்பு சரியில்லையாக்கா? " என்றான்.

அவனை அதே கண்ணாடிவூடே முறைத்தவள். எதுவும் பதில் சொல்லவில்லை.

"ஐய! உன்னாட போய் கேட்டேன் பாரு? பெரிய எலிசபெத் மகாராணி வாய தொறந்து பதில் சொல்லாது" என்றான் நக்கலாக.

"இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசின! ஓடுற ஆட்டோவிலிருந்து குதிச்சுடுவேன். கம்முனு வண்டியை ஓட்டு" என்று சிடுசிடுத்தாள்.

"நீ செஞ்சாலும் செய்வ" என்று முணுமுணுத்தவன். பிறகு எதுவும் பேசவில்லை.

குளிர் காற்று உடலை தழுவ முந்தானையை உடலை சுற்றி போர்த்திக் கொண்டவள். மேலும் இருபது நிமிட பயணத்திற்கு பின் ஒரு வீட்டின் முன் நின்றது. ஆட்டோ சத்தத்தை கேட்டு, மாடி அறையின் விளக்கு எரிந்தது. கேட்டை திறந்து பக்கவாட்டில் உள்ள படிகளின் வழியே மாடிக்கு ஏறினாள்.
மாடியில் சிறு வீடு ஒன்று ஷீட்டினால் வேயப்பட்டிருந்தது. மீதமுள்ள பகுதி அப்படியே தரை தளமாக விடப்பட்டிருந்தது.

இவள் வருவதற்கும் கதவு திறப்பதற்கும் சரியாக இருந்தது. புன்னகை முகமாக , " வா டி " என்று பெண் ஒருவள் வரவேற்றாள்.

"வரேன் கா " என்றவள். பின்னால் தனது பையை தூக்கிக் கொண்டு வந்து நின்ற வேலுவை கண்டு, அவனிடமிருந்து பைகளை வாங்கிக் கொண்டு, ஆட்டோவுக்கான பணத்தை கொடுத்தாள்.

"வேணாம் கா " என்று வேலு மறுக்க, அதை காதில் வாங்காமல், அவனின் சட்டை பாக்கெட்டில் வைத்தவள். "ஒழுங்கா படிச்சு பாஸ் பண்ற வழிய பாரு. டிகிரி முக்கியம்" என்றதும்! தலையை ஆட்டி சம்மதம் சொல்லிவிட்டு , "வரேன் க்கா " என்றவன். பின்னால் நின்றிருந்தவளை பார்த்து "வரேன் அண்ணி " என்று விட,

அவனது அண்ணி என்ற அழைப்பில் கடுப்பானவள். "டேய்ய்! " என்ற அதட்ட அதற்கு முன் படிகளில் இறங்கி ஒடி விட்டான் வேலு.

"உனக்கு இவன் ஆட்டோவ தவிர வேறு ஆட்டோவே கிடைக்கலையா?" என்றபடி வீட்டின் கதவை சாற்றினாள்.

"குமாரு தான் அனுப்பிச்சுச்சு. என்னை என்ன செய்ய சொல்ற? அவன் வந்தால் உனக்கு பிடிக்காது" என்று வளவளத்தபடி அங்கே போடப்பட்டிருந்த கட்டிலில் அமர்ந்தவளை எதுவும் சொல்ல முடியாமல் பேச்சை மாற்றும் விதமாக!

"ஆமாம்! இது என்ன கைநிறைய வளையல்?" என்றாள்.

"அழகா இருக்கு தானே! " என்று இரு கைகளையும் தூக்கி லேசாக அசைத்து, அதன் சத்தத்தையும் அழகையும் கண்கள் மின்ன பார்த்தவள்.

"இங்கே வந்து கொண்டு இருந்தப்போ... " என்று எதையோ சொல்ல வந்தவள். டக்கென்று நிறுத்தி, எழுந்து நின்று!

"அக்கா என்னை பார்த்தால் எப்படி தெரியுது?" என்றாள்

"ஏன் டி? நல்லாத்தானே இருக்க" என்றாள் மற்றவள். அவளை மேலும் கீழும் பார்த்தபடி

"உங்கிட்ட போய் கேட்டேன் பாரு" என்றபடி அங்கிருந்த ஆள் உயர கண்ணாடியின் முன் நின்று பார்த்தாள். வயிறு பெரிதாக இருப்பதை கண்டு, அதனை தடவிப் பார்த்தவளுக்கு சிரிப்பு வந்தது.

பிறகு, புடவையின் பின்னை கழட்டி புடவையை கழற்றி போட்டாள். பாவாடைக்கு பதில் லெகின்ஸ் அதன் மேல் இடுப்பு வலி மற்றும் எடைக் குறைப்புக்கான பெல்ட் சுற்றி இருந்தாள். இஞ்சி இடுப்புக்கு பெரிய அளவான பெல்ட் ஐந்து சுற்று வந்திருந்தது.

அதை கழற்றியபடியே, "நேத்து பஸ்ல ஒருத்தவங்க... " என்று ஆரம்பித்தவள். முழுதாக நடந்ததை சொல்ல, மற்றவளுக்கு சிரிப்பு வந்து விட்டது.

"பாவம்! ஏன் டி அப்படி பண்ணின?"

"பின்ன என்னவாம்! பஸ் ஏறுனதுல இருந்து குறுகுறுனு பார்த்துட்டு இருந்தால்! அதோட நொய் நொய்னு கேள்வி வேற! புருஷன் எங்கே? எத்தனை மாசம்னு . அதான் காண்டாகிட்டேன்" என்றாள் இலகுவாக.

"உன்னை எல்லாம் திருத்தவே முடியாது" என்றபடி அடுப்படிக்கு சென்று விட்டாள்.

"புவனா எனக்கு ஸ்ட்ராங்கா காபி வேணும்" என்றபடி பெல்ட்டை மடிக்க,

"ஏன் டி. ஒரு நேரம் அக்கானு சொல்ற, இன்னொரு நேரம் புவனானு பேர் சொல்லி கூப்பிடுற" என்றவளை இடைமறித்தவள்.

"அந்த மானே தேனே பொன்மானே அதையும் சேர்த்துக்கோ " என்றாள் பேக்கிலிருந்த துணியை எடுத்து அலமாரியில் வைத்தபடி,

புவனா வெளியே வந்து முறைக்க, "சரி சரி விடு. எனக்கு எப்படி கூப்பிட தோணுதோ அப்படிதான் கூப்பிடுவேன். மரியாதையெல்லாம் நீ என்னிடம் எதிர்பார்க்கலாமா? தப்பில்ல?" என்றாள்.

"ம்க்கும்" என்று நொடித்தபடி மீண்டும் அடுக்களைக்குள் சென்று விட்டாள் புவனா.

"மன்மதா.. ஆஹாங்.. ச்சுச் சக்கு
கொஞ்சவா.. ஆஹாங்.. ச்சுச் சக்கு
மந்திரம்.. ஆஹாங்.. "

என்று பாட்டு பாடியபடி அதற்கேற்ப தலையை அசைத்துக் கொண்டே குளிப்பதற்காக ஆடைகளை கலைந்து, டவலை நெஞ்சு முதல் முட்டிவரை கட்டிக் கொண்டு, குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.

செல்போன் இசைக்கும் சப்தத்தில் புவனா, அடுக்களையை விட்டு வெளியே வந்தாள். அதற்குள் குளியலறையிலிருந்து, " புவனா அம்மா தான் பேசுவாங்க. வந்துட்டன்னு சொல்லு. பிறகு பேசறேன்" என்று சொல்ல,

செல்போனை எடுத்து அழைப்பை இணைத்தவள். " ஹலோ சொல்லுங்க மா. நான் புவனா பேசறேன் " என்று பேசியபடியே மீண்டும் அடுப்படிக்குள் நுழைந்தாள்.

புவனா செல்போனை எடுத்ததுமே, மகள் சென்று விட்டாள் என்பதை புரிந்து கொண்டவர். " நல்லாயிருக்கியாமா? " என்று அவள் நலத்தை விசாரித்தார்.

"நல்லா இருக்கேன் மா. நீங்க எப்படி இருக்கீங்க? கயல் நன்றாக இருக்கிறாளா? இப்போ பன்னிரண்டாவது தானே படிக்கிறா. நல்லா படிக்கிறாளா? நேத்ரன் எப்படி இருக்கான் மா?. பெரிய கம்பெனியில் வேலை கிடைக்கப் போகுதுன்னு சொன்னாளே. கிடைத்து விட்டதா?" என்று வரிசையாக அனைவரையும் விசாரித்து விட்டாள்.

"எல்லோரும் நன்றாக இருக்கோம் மா. கயல் நல்லா படிக்கிறா. நேத்ரனுக்கு வேலை கிடைச்சு ஒரு ஆறு மாதம் ஆயிடுச்சு மா" என்றார்.

"ரொம்ப சந்தோஷம் மா" என்றாள் புவனாவும்.

அப்போது கயல் எதுவோ தாயிடம் சொல்வது கேட்க, " அதான் பேசிட்டு இருக்கேன் ல" என்று அவளை சாடியவர். " புவனா, எனக்கொரு உதவி பண்ணும்மா. அவ குளிச்சிட்டு வந்த பிறகு, கயலோட ஸ்கூல் பீஸ் விசயத்தை பற்றி நியாபகப்படுத்துமா. இங்கே இருக்கும் போதே சொன்னேன். மறந்து விட்டாள் போல! கொடுக்கலை. இன்றைக்கு தான் மா கடைசி தேதி " என்றார்.

"கயல் ஃபீஸ்ஸா..? 5ம் தேதியே உங்களுக்கு பணம் அனுப்பனாலே மா. நான் தானே அனுப்பி விட்டேன்" என்றாள்.

"அனுப்பினா மா. ஆனால் அதை நான் அவ ஆஸ்பத்திரியில இருக்கும் போது, கடனாக வாங்கி செலவு பண்ணியிருந்தேன்ல, அதற்கு கொடுத்துட்டேன். இப்போ கயலுக்கு ஃபீஸ் கட்ட பணம் வேணும்" என்றார்.

"நான் அவளிடம் சொல்றேன் மா" என்றதோடு புவனா நிறுத்திக் கொண்டாள். அவளுக்கு ஆற்றாமையாக இருந்தது. எதுவும் மரியாதை குறைவாக பேசி விடுவோமோ என்று வாயை மூடிக் கொண்டாள்.

"அப்புறம் இன்னொரு விசயம் மா. இதை எப்படி ஆரம்பிக்கிறதுன்னு தெரியலை" என்றார் பீடுகையுடன்.

"பரவாயில்லை சொல்லுங்க மா"

"அது.. அது வந்து நம்ம நேத்ரன் ஒரு பெண்ணை காதலிக்கிறான் போல மா. அந்த பெண்ணை தான் கட்டிப்பேன்னு ஒத்த காலில் நிற்கிறான்" என்றதும்.

"ஓ! " என்றாள் பொறுமையை இழுத்து பிடித்து

"ஆமாம் மா. பொண்ணு பெரிய இடம். இவ ஆஸ்பத்திரியில இருக்கும் போது கூட அந்த பொண்ணுக்கிட்ட தான் வாங்கி நிறைய செலவு செய்திருக்கான்" என்றதும்.

"ஏன் மா? நான் தெரியாமல் தான் கேட்கிறேன். ரோட் கிராஸ் பண்ணும் போது ஆட்டோ இடிச்சு கீழே விழுந்து அடிபட்டிடுச்சு. கை, காலில் எல்லாம் ஊமை காயம். தலையில் கல்லு குத்தி இரத்தம் வந்து கட்டுப் போட்டிருந்தாங்க. உண்மை தான் ஒத்துக்கிறேன். கவர்மெண்ட் ஆஸ்பத்திரியில் சேர்த்ததுக்கு எவ்வளவு மா செலவு ஆகியிருக்கும்?" என்று எகிறினாள்.

"தெரியலையேம்மா. நிறைய டெஸ்ட் எடுத்தெல்லாம் பார்த்திருக்காங்க மா. கவர்மெண்ட் ஆஸ்பத்திரியில ஸ்கேன் எதோ எடுக்க முடியாமல், வேற பெரியாஸ்பத்திரிக்கு போக சொல்லியிருக்காங்க. நம்ம நேத்ரன் தான் அங்கெல்லாம் வேணாம்னு தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைச்சிட்டு போய் ஸ்கேனெல்லாம் எடுத்திருக்கான். தங்கச்சி மேல அவ்வளவு பாசம்" என்றார்.

கண்ணை இறுக மூடி திறந்தவளுக்கு பொறுமை இருக்கவா? பறக்கவா? என்றிருந்தது. "விசயத்தை சொல்லுங்க மா?" என்றாள் எரிச்சலை மறைத்து

"அதான் மா. அந்த பொண்ணு வீட்டில இருந்து பேசினால்! பார்த்து பக்குவமா பேச சொல்லுமா" என்றவரை

"எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை மா. நேத்ரனுக்கும் இவளுக்கும் ஒரு வயது தான் வித்தியாசம். அப்படியிருக்க, இவளுக்கு வரன் பார்க்காமல் பையனுக்கு பார்க்குகிறிங்களே?" என்றாள் ஆதங்கமாக.

"கல்யாணம் பற்றியெல்லாம் இப்போ பேசலை மா. நேத்திரன் விரும்புற பொண்ணு, இவ நம்பரை வாங்கி இருக்கு. இன்னும் நேத்ரன் விசயம் பற்றி எதுவுமே இவளுக்கு தெரியாது. அதனால் நீ தான் மா பக்குவமா இவளிடம் பேசனும். உனக்கு பெரிய புண்ணியமா போகும்" என்றவர். மீண்டும் கயலின் குரல் கேட்க,

"நான் பிறகு பேசறேன் மா. நீனும் அவளிடம் எடுத்து சொல்லுமா" என்று போனை வைத்து விட்டார்.

புவனா அலைபேசியை அணைத்து விட்டு, 'லவ்வாமில்ல லவ்வூ.. அவளை பற்றி தெரியாமல் பேசிட்டீங்க மா. இனி நேத்ரனையும் அவன் காதலையும் வைச்சு செய்வா! ' என்று நினைத்தபடி காபி கலக்க ஆரம்பித்தாள்.

அல்லி மலர்க் கொடி வருவாள்..
 

Sirajunisha

Moderator
அத்தியாயம் : 2
பாத்ருமில் தண்ணீர் விழும் சத்தம் நின்று, சிறிது நேரத்தில் குளியலறைக் கதவை திறந்தபடி வந்தவளை காபியை குடித்தபடி பார்த்துக் கொண்டிருந்தாள் புவனா.

தலைக்கு குளித்து அதில் டவளை சுற்றி இருந்தாள். துறுதுறு கண்களும், சுறுசுறுப்பும் உதட்டிலேயே உறைந்து நிற்கும் புன்னகையே அவளை அழகியாய் காட்டியது. மற்றபடி சற்றே வெளுத்த நிறம்! பிங்க் நிற சல்வார் மட்டும் அணிந்து, பேன்ட் அணியாமல் அவளது வாழைத்தண்டு கால்கள் நீண்டு தெரிய வந்தவள். புவனாவின் பார்வையை கண்டு, புருவத்தை மட்டும் உயர்த்தி என்னவென்று கேட்க,

புவனா மறுப்பாக தலையசைத்து விட்டு, தனது கையிலிருந்த காபியில் கவனத்தை செலுத்தினாள். சற்று நேரத்தில் போன் ஒலித்தது.

"அம்மாவோ?" என்றபடியே போனை கையில் எடுத்தவள். டிஸ்பிளேயில் வரும் நம்பரை கண்டு புரியாமல் அழைப்பை இணைத்து,

"ஹலோ " என்றாள்.

"லில்லி.. ?" என்றது ஆண் குரல்

"லில்லியா?.. ராங் நம்பர் " என்று அழைப்பை துண்டித்து விட்டு, "புவனா காபி " என்றபடி பேண்ட்டை கையில் எடுத்தாள்.

மீண்டும் போன் ஒலித்தது. அதே எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. கடுப்பானவள். அழைப்பை இணைத்து, " ஹலோ " என்றாள் சற்று அதட்டலாக

"நான் பவி அண்ணன் பேசறேன். நீங்க லில்லி தானே?" என்று மீண்டும் கேட்க,

"பவியா..? அதாரு பவி. இங்கன பாரு கண்ணு. நீங்க வேறு ஆருக்கோ போன் பேசறேன்னு என்ர நம்பருக்கு போன் பேசிட்டு இருக்குற. நம்பர பார்த்து போடு கண்ணு.. இல்லைனா தோல உரிச்சு போடுவேனாக்கும்" என்று சரத்குமார் ஸ்டைலில் பேசிவிட்டு, அழைப்பை துண்டித்தவள்.

இவளையே பார்த்துக் கொண்டிருந்த புவனாவிடம், " பொன்ன்ன் மானே.. காபி எங்கே?" என்று பாட,

"எத்தனை காபி வேணும்னாலும் போட்டு தரேன். தயவு செய்து நீ பாட மட்டும் செய்யாத" என்று நொடித்தபடியே புவனா எழுந்தாள்.

"உனக்கு பொறாமை டி பொறாமை" என்று மீண்டும் புவனாவை வம்பிழுக்க ஆரம்பிக்கும் போதே, மீண்டும் அதே எண்ணிலிருந்து அழைப்பு வந்தது.

எண்ணை பார்த்து விட்டு, "போங்கடா டேய் " என்று விட்டு, பேண்ட்டை சாவகாசமாக அணிந்து கொண்டிருந்தாள். முழுதாக ரிங் வந்து நின்று, மீண்டும் அழைப்பு வர,

"ஐயயய்ய! தொல்ல தாங்க முடியலையே?" என்றபடி அழைப்பை இணைத்து,

"ஹல்லல்லோ.. " என்றாள் வடிவேலு ஸ்டைலில்

"ஈஸ் திஸ் அல்லி மலர்க் கொடி?" என்றது ஆளுமையான ஆண் குரல் ஒன்று.

அந்த குரலின் ஆளுமை மனதை திடுக்கிட வைக்க, அதை மறைத்து "யா அஃப்கோர்ஸ்" என்றாள். அவளறியாமல் நன்றாக நிமிர்ந்து அமர்ந்தபடி,

"ஈவினிங் 5 ஓ கிளாக் ஹொட்டல் மெரிடியன். என்னை வந்து மீட் பண்ணுங்க" என்றவன். " மற்ற டீட்டெய்ல்சை என் தம்பி கவின் சொல்வார் " என்றபடி போனை அருகில் நின்ற ஒருவரிடம் கொடுப்பதை உணர முடிந்தது.

மீண்டும், "ஹலோ " என்ற பழைய குரல் .

"வர முடியாது. போனை வைங்க" என்று அழைப்பை துண்டித்து சைலண்டில் போட்டு விட்டாள்.

"யார் போனில்?" என்று கேட்டபடி புவனா வந்தாள்.

"பவி பிரதர்ஸ்ஸாம் .. ராங் நம்பர்" என்றவள். புவனாவிடமிருந்து காபியை வாங்கிக் கொண்டாள்.

"ம்ம்ம்ம்!. பேஷ் பேஷ் ரொம்ப நல்லாயிருக்கு" என்று காபியை ரசித்து ருசித்து பருகினாள். அதன் பிறகு, இருவரும் வேலைக்கு கிளம்பினர். சாப்பிட்டு அவசர அவசரமாக பேருந்து நிற்குமிடம் சென்ற போது, பஸ் கிளம்ப தயாராக ஓடிச் சென்று கடைசி நேரத்தில் இருவரும் ஏறிக் கொண்டனர்.

பஸ் ஊர்ந்து செல்ல, அவர்களுடைய நிறுத்தத்தில் இறங்கிய போது, மீண்டும் ஒரு முறை வியர்வையில் குளித்தபடி இறங்கினர். அதையெல்லாம் கவனிக்கும் மனநிலையில் இருவரும் இல்லை. ஓட்டமும் நடையுமாக அங்கிருந்து மாலிற்கு ஓடி, அங்கிருந்த அட்டையில் இவர்கள் வந்த நேரத்தை பதிவு செய்த பின்னரே ஆசுவாச மூச்சு விட்டனர்.

"ஹப்பாடா.. வந்தாச்சு வந்தாச்சு " என்று சிறுகுழந்தை போல சிரிக்க!

"வா டி " என்றபடி புவனா அவள் கையை பிடித்து இழுத்தபடி லிப்ட்டுக்குள் நுழைந்தாள். மூன்றாவது மாடியில் லிப்ட் நின்று வெளியில் வர, " இது பெண்கள் தளம்" என்ற கொட்டை எழுத்தில் நியான் எழுத்துக்களால் பெரிதாக எழுதப்பட்டிருந்தது.

இருவரும் அங்கே தான் வேலை செய்கின்றனர். இதில் பெண்களுக்கென்றே தனிப்பிரிவு அதில் தலைக்கான ஹேர் கிளிப் முதல் பாத நகத்திற்கு அணியும் நகப்பூச்சு வரை அனைத்தும் ரகரகமாய் விற்பனைக்கு கிடைக்கும். இதில் முழுவதும் பெண்கள் மட்டுமே.

இதில் இருவரும் சூப்பர்வைசிங் பணியில் இருக்கின்றனர். புதிதாக வரும் வாடிக்கையாளர்களின் தேவையறிந்து அவர்களுக்கு வழிகாட்டுதல் இன்முகத்தோடு அவர்களின் குறைகளை கேட்டறிந்து சரிசெய்து கொடுப்பர். இதில் சூப்பர்வைசிங் பணியில் மட்டுமே இருபது பேர் இருக்கின்றனர்.

நேராக சென்று அவர்களுக்கான பிரத்யேக யூனிபார்ம் போல ஒரே கலரில் புடவையை அணிந்தவர்கள். மீண்டும் தலையை நாகரிக கொண்டை போல போட்டு, கண்ணுக்கு மை, லேசான உதட்டு சாயமிட்டு அவரவர்களுக்கான இடத்திற்கு சென்று தனது பணியை ஆரம்பித்து விட்டனர்.

இங்கே நேத்ரன் தனது அன்னையிடம் பேசியில் வறுத்தெடுத்து கொண்டிருந்தான். அவளுக்கு என்ன அவ்வளவு திமிரு, "பவி அண்ணன் பேசும் போது, ராங் நம்பர்னு வைச்சிட்டாளாம். பவி ரொம்ப வருத்தப்படுறா மா. உங்க தங்கச்சியை நினைத்தால் பயமாயிருக்கு னு சொல்றா. எந்த நேரத்தில் தான் அவளுக்கு அல்லி மலர்க் கொடி னு பெயர் வைச்சீங்களோ! நிஜமான அல்லி ராணி னு நினைப்பு " என்றவனை. சமாதானப்படுத்தி அழைப்பை துண்டித்தவர். மீண்டும் தனது மகளுக்கு அழைப்பு விடுத்தார்.

நேத்ரனை சமாதானப்படுத்தி விட்டு, மகளுக்கு அழைப்பு விடுத்த போது ரிங் போய் கொண்டே இருந்தது. எடுக்கவே இல்லை. நேரத்தை பார்த்தவருக்கு, வேலைக்கு சென்று கொண்டிருப்பாள் என்பது புரிய, இரவில் பேசிக் கொள்ளலாம் என்று அழைப்பை துண்டித்து விட்டார்.

கிடைத்த இடைவெளியில் மதிய உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்த போது தான், புவனா விசயத்தை ஆரம்பித்தாள்.

"கயல் பீஸ் விசயத்தை அம்மா நியாபகப்படுத்த சொன்னாங்க " என்றவள். சற்று இடைவெளி விட்டு,
"மலர், நேத்ரன் யாரையோ காதலிக்கிறான் போல.. ?" என்றாள் டிபன் பாக்ஸை திறந்தபடி

"என்னை பற்றி தெரிந்து மா காதலிக்கிறான்?" என்றாள் இவளும் சிரித்தபடி

"ம்ச்ச். விளையாட்டு போதும் மலர். காலையில் அம்மா போன் பேசும் போது இதை பற்றி உன்னிடம் பேச சொன்னாங்க. நேத்ரன் விரும்பிர பொண்ணு உனக்கு போன் செய்யும்னு அம்மா சொன்னாங்க.." எனும் போதே

"எனக்கு எல்லாம் தெரியும் கா. வீட்டிலிருந்து தானே வந்தேன். என்னிடம் விசயத்தை சொல்லவில்லை என்றாலும் கண்ணு, காதெல்லாம் இருக்கே! கவனிக்காமலயா இருப்பேன்" என்றாள் வேகவேகமாக சாப்பிட்டபடியே

சாப்பிடும் வேகத்திலேயே அவளின் பசியறிந்து அதற்கு மேல் சாப்பிட்டு முடிக்கும் வரை புவனா பேச்சை எடுக்கவில்லை. தானும் உண்ண ஆரம்பித்தாள்.

அப்போது அங்கே வந்த மேனேஜர் மலர், புவனா இரண்டு பேரும் ஈவினிங் வெயிட் பண்ணுங்க. நடிகை அனாமிகா, அவங்க மேரேஜ்க்கு பர்ச்சேஸ் பண்ண வராங்க" என்றார். இது அங்கே வழமை தான் என்பதால், " சரி " என்று தலையாட்டினர்.

அதன் பிறகு, வேறெதுவும் பேச அவர்களுக்கு நேரம் இல்லை. சாப்பிட்டு முடித்து வேலையை இன்முகத்தோடு தொடங்கினர். மாலையில் பெரும்பாலோனர் சென்ற பிறகு, அந்த நடிகை தனது குடும்பத்துடன் வர அவர்களுக்கு தேவையானவற்றை எடுத்து காண்பித்தனர். காலையிலிருந்து நடந்து கொண்டிருப்பதால் பாதத்தில் வலி ஏற்பட, ஓய்வெடுத்தால் சரியாகி விடும் என்று தேற்றிக் கொண்டு சிறப்பாகவே விற்பனை செய்தனர்.

மலரின் சுறுசுறுப்பும், தாம் கேட்க வருவதை டக்கென்று புரிந்து எடுத்து தரும் விதமும் அவர்களை கவர, நிறையவே துணிமணிகளை வாங்கி சென்றனர். வேலை முடித்து மீண்டும் பஸ்ஸில் ஏறி இருவரும் வீடு வந்த போது இரவு மணி 9.

கதவை திறந்ததும் காலணியை ஓரமாக கழட்டி போட்டு விட்டு, அறைக்குச் சென்றவள். கட்டிலில் அப்படியே குப்புற விழுந்து கண்களை மூடிக் கொண்டாள்.

கதவை தாழிட்டு வந்த புவனா, "மலர் போய் முகம் கைகாலெல்லாம் கழுவி விட்டு வந்து படு " என்றதும், கண்கள் உறக்கத்திற்கு கெஞ்ச! " பாதம் ரொம்ப வலிக்குது க்கா. கொஞ்சம் நேரம் ஆகட்டும் போறேன் " என்றவள் சிறிது நேரத்திலேயே ஆழ்ந்த நித்திரைக்கு சென்று விட்டாள்.

புவனா தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வந்து பார்த்த போது, குப்புற படுத்து தூங்கிக் கொண்டிருந்தவளை கண்டு மனம் கனிந்தது. மெத்தையில் தலையணையை சரி செய்து, அதில் அவளது தலையை ஏதுவாக வைத்து நேராக படுக்க வைத்தவள். போர்வையை போர்த்தி விட்டு நகர்ந்தாள்.

அப்போது கதவை தட்டும் ஒலியும், கூடவே "மலரு .. மலரு" என்ற ஆணின் குரலும் தயக்கத்துடனே ஒலித்தது. குரலை அடையாளங்கண்ட புவனா பட்டென்று கதவை திறந்தவள். அவன் கையில் இருந்த பொருளை பார்த்ததும் தீயாக முறைக்க ஆரம்பித்தாள்.

"அது.. அது.. " என்று தயங்கியபடியே அவளை பார்த்தான். புவனாவின் பார்வையில் எந்த மாற்றமும் இல்லை. பார்வையின் வீச்சை கண்டு பயத்தில் எச்சில் கூட்டி விழுங்கியவன். தலையை குனிந்து கொண்டு, கையிலிருந்த பையை அவள் முன் நீட்ட,

"உங்களுக்கு வெட்கமா இல்லையா குமார். இதை வாங்கிக் கொண்டு வரீங்க? அவ என்ன குழந்தையா?" என்று எகிறினாள்.

"இல்லைங்க " என்று பயத்தில் திணறியவன். பின்பு ," த.. தண்ணி குடிக்க வேணும் " என்றான்.

ஏகத்துக்கும் அவனை முறைத்து விட்டு, உள்ளே சென்று குவளையில் தண்ணீர் எடுத்துக் கொண்டு வந்த போது, குமார் அங்கே இல்லை. கதவின் அருகே அவன் எடுத்து வந்த பை மட்டும் இருந்தது.

எதையோ முணங்கிய படியே, கதவை தாழிட்டவள். அந்த பையை ஓரமாக எடுத்து வைத்து விட்டு வந்த போது, டப்பென்று ஏதோ விழும் சத்தம் கேட்க, திரும்பிப் பார்த்தாள்.

மலரிடமிருந்து பீடிங் பாட்டில் கீழே விழுந்திருந்தது. தூக்கத்திலேயே நன்றாக சப்புக் கொட்டி குடித்து விட்டு மீண்டும் ஆழ்ந்த உறக்கத்திற்கு மலர் சென்று விட, நறநறவென்று பல்லைக் கடித்த புவனா!

"டேய்.. டொமாரு " என்று கோபத்தில் சத்தமிட்டபடி மீண்டும் கதவை திறந்து வெளியே சென்று பார்க்க, ஆட்டோ வேகமாக புகை கிளப்பியபடி சென்று விட்டது.

"நாளைக்கு வைச்சிருக்கிறன்டா கச்சேரிய " என்றபடி புடவை முந்தானையை உதறி இடுப்பில் சொறுகியவள். மீண்டும் உள்ளே சென்று கதவை வேகமாக அடைத்தவள். "எல்லாம் என் தலையெழுத்து இந்த கண்ராவியெல்லாம் என் கண்ணால பார்க்கனும்னு! உலக்கை மாதிரி இருக்கிற புள்ளைக்கு எவனாவது பீடிங் பாட்டில்ல ஹார்லிக்ஸ் கொண்டு வந்து கொடுப்பானா? கேட்டால் இந்த அம்மாவுக்கு ஹார்லிக்ஸ் வாசனை பிடிக்கலையாம். குடிக்க மட்டும் நல்லாயிருக்கு போல!" என்று புலம்பியபடியே பாட்டிலை எடுத்து கட்டிலருகே வைத்து விட்டு அடுக்களைக்கு சென்றாள்.

புவனாவின் சப்தத்தில் லேசாக விழித்தவள். அருகிலிருந்த பாட்டிலில் மீதமிருந்த பாலையும் போர்வையை தலைவரை மூடிக் கொண்டு குடித்து விட்டு, அதே இடத்தில் வைத்து விட்டு சப்தமிடாமல் உறங்க ஆரம்பித்தாள்.

உறவுகள் பணத்திற்காக இருக்க, பாசத்திற்காக அழையும் சொந்தமில்லா உறவுகளின் கூட்டமோ? பொறுத்திருந்து பார்ப்போம்..
அல்லி மலர்க் கொடி வருவாள்..
 

Sirajunisha

Moderator
அத்தியாயம் :3
மறு நாள் காலை கண் விழித்து தனக்கு எதிரே இருந்த கடிகாரத்தை பார்த்த போது மணி சரியாக 6. ' என்ன? அதற்குள் பொழுது விடிஞ்சிடுச்சு! கண்ணை மூடி திறந்த மாதிரி தானே இருந்துச்சு. ம்ஹும், இனிமே இராத்திரி தான் தூங்க முடியும் ' என்று மனம் அனிச்சையாய் புலம்ப, மெல்ல எழுந்தவள். கீழே கிடந்த பாட்டிலை கண்டு பல்லைக் கடித்தாள். 'எத்தனை தடவை சொன்னாலும் இந்த குமாரு கேட்கிறதுல்லை. நேரில் பார்க்கும் போது பேசிக்கிறேன்' என்று நொடித்தபடி பாத்ரூமிற்குள் நுழைந்தாள்.

தலைக்கு குளித்து விட்டு இலகுவான பாவாடை தாவணி கட்டிக் கொண்டு , "புவனா " என்று அழைக்க! அதே நேரம் வாசல் கதவை திறந்தபடி, புவனா கையில் பக்கெட்டுடன் உள்ளே வந்தாள்.

" புவி பசிக்குது " என்றதும். " பீடிங் பாட்டில்ல ஹார்லிக்ஸ் குடிக்கறியா?" என்றாள் பொய்யான முறைப்புடன்.

"ம்ச்ச் " என்றபடி முகம் சிவக்க , தலையை திருப்பிக் கொண்டவள். " அந்த குமாரை நேரில் பார்க்கும் போது பேசிக்கிறேன்" என்றபடி வேகமாக கிட்சனுக்குள் சென்றாள்.
அவளுக்கு பிடித்த மாதிரி காபி தயாராக இருந்தது. அதை தனக்கென குவளையில் ஊற்றி, ஒரு மிடறு விழுங்கியபடி வெளியே வந்தவள். அப்போது தான் தனது செல்போனை தேடினாள்.

நேற்று பேக்கிலேயே சைலண்ட் மோடில் போட்டு வைத்தது நினைவில் வர, வேகமாக சென்று தனது பேக்கிலிருந்த செல்போனை கையில் எடுத்தாள்.

ஏகப்பட்ட அழைப்புகள்! தாயிடமிருந்து வந்த அழைப்புகளின் நேரத்தை பார்த்தாள். நேற்று காலை ஒரு முறை. நேற்று இரவு மூன்று அழைப்புகள் வந்திருந்தது. பிறகு நேற்று பேசிய புதிய எண்ணிலிருந்து தொடர்ந்து பத்திற்கும் மேற்பட்ட அழைப்புகள் மாலை வந்திருந்தது.

யோசனையுடனேயே பார்த்துக் கொண்டிருந்தவள். பிறகு ஏதாவது முக்கியமான விசயமாக இருக்குமோ? நாமே இப்போ போன் செய்யலாமா? எனும் போதே , அதே நேரம் அந்த எண்ணிலிருந்து அழைப்பு வர, அழைப்பை டக்கென்று இணைத்து, " ஹலோ " என்றிருந்தாள்.

"ஹலோ நேத்திரன் சிஸ்டர் தானே?" என்றது மறுமுனை.

"ஆமாம். நீங்க? "

"நான் பவியோட பிரதர் கவின் பேசுறேன் " என்றதும்.

"யார் பவி?" என்றாள். எதுவும் தெரியாதது போல!

மறு முனையில் சற்று நேரம் அமைதி. பிறகு மீண்டும், " உங்க பிரதர் உங்களிடம் எதுவும் சொல்லலையா?" என்றான்.

"எது தேவையோ அதை மட்டும் எப்போதும் என்னிடம் சொல்லிடுவானே?. ஆனால் உங்களை பற்றி எதுவும் சொல்லவில்லையே?" என்றாள். உங்களுடைய விசயம் அவ்வளவு முக்கியமில்லை போல! என்ற மறைமுக பேச்சும் அதில் இருந்தது.

டக்கென்று போன் கைமாறி, " நான் பவி பேசுறேன் " என்ற இளம் பெண்ணின் குரல் கேட்டது.

"பேசுங்க " என்றவள். " ஆனால் என்னிடம் ஏன் பேசுறீங்கன்னு தான் யோசிக்கிறேன் " என்றாள் காபியை ஒரு மிடறு விழுங்கியபடி.

" நேத்திரன் சொன்னார். சரியான திமிர் பிடிச்சவ. படிக்காமல், மாலில் மாத சம்பளத்துக்கு வேலை பார்ப்பதால்! சுய சம்பாத்தியம்னு ரொம்ப தலைக்கனம்னு" என்றாள் பவி.

" ஏன்? இருக்கக் கூடாதா?" என்றாள் மெல்ல கதவை திறந்து வெளியில் வந்த படி. மார்கழி மாதத்தின் பனியில் தரையில் கால் வைத்ததும், சில்லென்ற உணர்வு உள்ளங்கால் முதல் உச்சி வரை சிலிர்த்தது.

" அல்லி னு பெயர் வைத்தால் அல்லி ராணி நினைப்பு னு நேத்திரன் உங்களை பற்றி சொல்வார் " என்றாள் பவி .

அங்கே புவனா, " மலர் என்ன டிபன் செய்ய? " என்றபடி அவள் எதிரில் வந்து நின்றாள்.

பவி லைனில் இருப்பதை கண்டு கொள்ளாமல், செல்போனை ஸ்பீக்கரில் போட்டு, அருகிலிருந்த திட்டில் வைத்தவள். பக்கத்து வீட்டின் வாசலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை கண்டு,

" டேய் சோன முத்தா. உங்க வீட்டில என்ன டிபன் டா?" என்றாள். கைகளை திட்டில் ஊன்றி கீழே குனிந்து பார்த்தபடி,

குரல் வந்த திசையில் அன்னார்ந்து பார்த்தவன். அல்லி நிற்பதை கண்டு, " பூரி . உனக்கு வேணுமா? " என்றான்.

" நிச்சயம் முடியாமல் கை நினைக்க கூடாதுன்னு எங்க ஊர்க்கிழவி சொல்லுமே " என்றாள் வருத்தமாக.

" நான் உனக்கு ஊட்டிவிடுறேன். நீ கை நனையாமல் சாப்பிடு " என்று ஈஈஈ என இளித்து வைத்தான் அந்த சிறுவனும்.

"விவரம் தான் டி. உன் ஆளு " என்றாள் புவனாவும் சிரித்தபடி

" சரி சரி. அத்தைக்கு தெரியாமல் எடுத்துட்டு வா. தெரிஞ்சுது, ஊருக்கு போன் போட்டு அம்மாவை ஒரு வழி பண்ணிடுவாங்க " என்றாள். அவனும் தலையை ஆட்டி விட்டு குடுகுடுவென வீடு நோக்கி ஓடினான்.

இங்கே பவி, போனை அணைத்து கவினின் கையில் கொடுத்து விட்டு, பொரும ஆரம்பித்தாள்.

"ச்சே.. எவ்வளவு திமிரு இவளுக்கு!" என்றவளை ஒரு கை நீட்டி மேலும் பேச விடாமல் தடுத்தவனின் அழுத்தமான பார்வையில், பவி சற்று பயந்து தான் போனாள்.

"கிவ் ரெஸ்க்பெக்ட் அண்ட் டேக் ரெக்ஸ்பெக்ட் பவி. நீ பேசின பேச்சுக்கு அந்த பொண்ணு இனிமே உன்னிடம் பேசாது. உனக்கு நேத்திரன் சரியா வருவார்னு தோணலை. சொந்த தங்கையையே உன்னிடம் விட்டுக் கொடுத்து பேசறவர். நாளை உன்னையும் மற்றவர் முன் விட்டுக் கொடுத்து விடுவார். அவர் உனக்கு வேண்டாம்" என்றபடி கவின் எழுந்து சென்று விட்டான்.

கவினின் பேச்சில் பவி அதிர்ந்து போய் அமர்ந்திருந்தாள்.

புவனா சென்றதும். அதுவரை சிரித்துக் கொண்டிருந்த அல்லி மலரின் முகம் வேதனையில் வாடியது. கண்ணை இறுக மூடி தன்னை நிலைப்படுத்திக் கொண்டவள். தனது தாய் கலைவாணிக்கு அழைத்தாள்.

மறுமுனை அழைப்பை ஏற்றதும். " ஹலோ அம்மா".

"அக்கா. நான் கயல் பேசறேன். ஸ்கூல் பீஸ் அனுப்பி விடுறேன்னு சொன்னியே. இன்னும் அனுப்பலையே " என்றாள் தயக்கமாக.

"ஸ்கூல் பீஸ் கட்ட சொல்லி உன்னிடம் கேட்டாங்களா?" என்றாள் வார்த்தையில் அழுத்தம் கொடுத்து,

"இல்லைக்கா. ஆனால் இன்னும் கட்டலை தானே. எல்லார் முன்னாடியும் கேட்டு டீச்சர் வெளியில் நிற்க வைச்சிடுவாங்களோன்னு பயமாயிருக்கு கா" என்றாள்.

"உனக்கு ஸ்கூல் பீஸ் முழுதாக கட்டிட்டு தான் வந்தேன். யாரும் எதுவும் கேட்க மாட்டாங்க. பில்லோட ஜெராக்ஸ் டேபில் டிராவ்ல இருக்கு பாரு" என்றதும்.

"யார் கயல்? " என்ற தாயின் குரல் கேட்டது.

"அம்மாவிடம் போனை கொடு" என்றதும், " இதோ " என்றவள். " அக்கா மா " என்று போனை கொடுத்து விட்டு நகர்ந்து விட்டாள்.

"அல்லி " என்றார் கனிவாக

"நேற்று வேலை முடிந்து வர நேரமாயிடுச்சும்மா. போன் வேற பேக்கில் இருந்து எடுக்கலையா. நீ போன் பண்ணது தெரியலைமா" என்றாள்.

" நானும் அதான் மா நினைச்சேன் " என்றவர். " இன்னைக்கு லீவா? சாவதானமா பேசுறியா?" என்றார்.

" இன்னைக்கு பாதி நேரம் மா. மதியம் போனால் போதும்"

" நல்லது டா " என்றவர். " அப்புறம் .. யாரிடமிருந்தாவது போன் வந்துச்சா அல்லி " என்றார்.

"யாருக்கிட்டேயிருந்து.. ?"

"அது.. பவின்னு " என்று மெல்ல பேச்சை இழுத்து நிறுத்தினார்.

" ம்ம்ம். ஒரு பொண்ணு பேசினது மா. நேத்திரன் என்னை பற்றி ஏதோ திமிர் பிடிச்சவன்னு சொன்னதாகவும் பிறகு படிக்காமல் மாலில் வேலை செய்யும் போதே சம்பாதிக்கிறன்னு தலைக்கனம்னு சொன்னதாக சொன்னாங்க " என்றதும்

வாணியால் எதையும் மேற்கொண்டு பேச முடியவில்லை.

மேலும் பேச்சை தொடர்ந்தவள். " யாரும்மா அந்த பொண்ணு? ஏன்? நேத்திரன் அப்படி பேசினதாக என்னிடம் சொன்னாங்க?" என்றாள்.

" அ.. அ.. அது.. அது.. அந்த பெண்ணிடம் தான் நேத்திரன் பணம் வாங்கி உனக்கு ஆஸ்பத்திரி செலவு பண்ணிணாம் மா. அந்த பவி.. " என்று மேலும் சொல்ல முடியாமல் வார்த்தையை மென்று விழுங்க!

" ஓ! பணம் கேட்டு போன் செய்தாங்களா? நேற்று கூட இரண்டு பேர் போன் செய்தாங்க. இவங்க பிரதர்ஸ் போல! பணம் சம்மந்தப்பட்ட விசயம் நானே பேசி கொடுத்து விடுறேன் மா. நேத்திரனை வொரி பண்ண வேணாம்னு சொல்லிடுமா " என்றவள். " உடம்பை பார்த்துக்கோங்க. நான் போனை கட் செய்கிறேன் " என்று பதிலை எதிர்பார்க்காமல் அழைப்பை துண்டித்து விட்டாள்.

இங்கே பவி இன்று கவின் பேசிய அனைத்தையும் அழுகையினூடே தனது பெரிய சகோதரனிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.

அனைத்தையும் பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்தவன். " நான் சென்னை வந்த பிறகு இது பற்றி பேசலாம் " என்றவனின் ஆளுமையான பேச்சில், " சரி " என்று மட்டும் தான் பவியால் தலையாட்ட முடிந்தது.

சிறிது நேரத்தில் நேற்று வந்த எண்ணிற்கு அல்லி மீண்டும் அழைப்பு விடுத்தாள். அழைப்பு சென்று கொண்டே இருந்தது. அழைப்பு நிற்க போகும் கடைசி தருவாயில் அழைப்பு ஏற்கப்பட்டு,

" ஹலோ " என்றது கம்பீரமான ஆண் குரல்.

" ஹ.. ஹலோ .. நான் நேத்திரன் சிஸ்டர் பேசறேன்" என்றாள் அவசரமாக.

" எந்த நேத்திரன்?"

" எந்த நேத்திரனா? நேற்று போன் செய்தீங்களே பவி பிரதர் கவின்னு.. " எனும் போதே.

இடையிட்டவன். " அல்லி மலர்க் கொடி?"

" ஆமாம். நான் தான். "

"நான் பவியோட பெரியண்ணன். என்ன விசயம் சொல்லுங்க" என்றான் அருகில் நின்றிருந்த நபர்களிடம் செய்கையாலேயே வேலையை ஏவியபடி.

"என்னோட ஹாஸ்பிட்டல் செலவுக்கு நேத்திரன் உங்க சிஸ்டரிடம் பணம் கடனாக வாங்கி இருக்கார் ணா. எவ்வளவு னு சொன்னால் கொடுத்திடுவேன் ணா " என்றதும்

அவளது அண்ணா என்ற வார்த்தை! ஏதோ நக்கலாக பேசுவது போல தோன்ற! " மாலில் வேலை செய்யற பொண்ணு தானே. ரொம்ப கஷ்டப்படுற குடும்பம்னு பவி சொன்னாள். திருப்பி தர வேணாம். உனக்கு பவி தர்மம் கொடுத்ததாக வைத்துக் கொள்" என்றான் மட்டம் தட்டும் விதமாக

" தர்மமா? என்ன பிச்சை போடுறீங்களா? .அந்த தர்மத்தை உங்க மனைவிக்கு வாங்கி கொடுங்க. எனக்கு வேண்டாம்" என்று விட்டு டக்கென்று அழைப்பை துண்டித்து விட்டாள். கோபமும் ஆற்றாமையும் அழுகையும் ஒருங்கே வந்தது.

ஒருவரது பேச்சில் மற்றவரது தன்மானம் சீண்டப்பட, சிலிர்த்துக் கொண்டு நின்றனர்.

அடுத்த அரைமணி நேரத்தில் என்ன நிகழ்ந்ததோ! நேத்திரனின் வேலை பறி போனது.

அல்லி மலர்க் கொடி வருவாள்...
 

Sirajunisha

Moderator
அத்தியாயம் : 4
ஒருவாறு தன்னை நிலைப்படுத்திக் கொண்டவள். இயல்பு நிலைக்கு வந்து விட்டாள். அதை நிலைத்திருக்க விடாமல், நேத்திரனிடமிருந்து அழைப்பு வந்தது.

அழைப்பை இணைத்து, " ஹலோ " என்றதும்.

" ஏன் மலர்? என்னை நிம்மதியாவே இருக்க விட மாட்டியா? பவியோட அண்ணனிடம் என்ன சொன்ன?" என்று எகிறினான்.

" ம்ச்ச். இப்போ என்ன விசயம் முதலில் சொல்லு" என்றாள் நிதானமாகவே.

" என்னை வேலையை விட்டு எடுத்துட்டாங்க. காரணம் கேட்டால் பவியோட அண்ணனை கை காட்டுறாங்க. அவரிடம் கேட்டால் உன்னிடம் கேட்க சொல்றாராம்" என்றான் அழுகாத குறையாக.

"கவின்னோ பவின்னோ ஏதோ ஒரு பிரதர் பேசினார். என்னோட ஹாஸ்ப்பிட்டல் செலவுக்கு நீ அவங்க சிஸ்டரிடம் பணம் வாங்கினன்னு அம்மா சொன்னாங்க. சரி, நான் கொடுக்கறேன். எவ்வளவுன்னு கேட்டால்? உனக்கு என் தங்கை தர்மம் போட்டதா வைச்சுக்கன்னு சொல்றான். அந்த புறம்போக்கு. அந்த தர்மத்தை உன் மனைவிக்கு வாங்கி கொடுன்னு சொல்லிட்டு போனை வைச்சிட்டேன்" என்றாள் படபடவென

"ஐயோ! " என்று தலையில் அடித்துக் கொண்டவன். "உன்னை யாரு அவருக்கு பேச சொன்னது?" என்றான் ஆதங்கமாக.

"எனக்கு வந்த நம்பருக்கு தானே டயல் செய்ய முடியும்?"

"கடவுளே! கால் ஃபார்வேர்ட் ஆகி அவருக்கு போயிருக்கு" என்றான் ஆற்றாமையுடன்.

"இப்போ என்ன விசயம்னு சொல்லப் போறியா? இல்லையா?" என்றாள் கோபமாக

" நீ பேசின பேச்சில அவர் என்னை வேலையை விட்டு தூக்க வைச்சிட்டார்" என்றதும்.

"நான் பேசினது சரியா? தப்பா?" என்றாள் அழுத்தமாக

"சரி தான். சரி தான் . ஆனால் அவரிடம் போய் நீ ஏன் பேசின. நான் பேசியிருப்பேன் ல " என்றவனுக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை.

"இதென்ன கேள்வி ? முதலில் அவங்க ஏன் என்னிடம் பேசனும்? என் நம்பரை அவங்களிடம் கொடுத்தது யாரு?" என்று வரிசையாக கேள்வியை அடுக்க, அடுத்து என்ன பேசுவது என்று தெரியாமல் டப்பென்று வாயை மூடிக் கொண்டான். அவனுக்கு அவள் கேட்பது நியாயம் தானே!என்ற எண்ணம் எழுந்தது.

"இப்போ என் வேலை போயிடுச்சு அல்லி. நான் இப்போ என்ன பண்றது? " என்றான் அழாத குறையாக

"என்னிடம் கேட்டால்? நானே படிக்காமல் மாலில் வேலை பார்க்கும் சாதாரண பொண்ணு எனக்கு உன் அளவுக்கெல்லாம் யோசிக்க தெரியாது" என்றாள்.

மறுபக்கம் பெருத்த அமைதி.. பிறகு, "நான் இராணா சாரிடம் மன்னிப்பு கேட்கிறேன்"

"இராணா வா? விஜயகாந்த் மாதிரி 'மன்னிப்பு ' எனக்கு தமிழில் பிடிக்காத ஒரே வார்த்தை அப்படின்னு சொல்லிவிட்டால்?

"அதை நான் பார்த்துக்கிறேன். நீ வை" என்றான் எரிச்சலாக.

"இது தான் உனக்கு முதலும் கடைசியுமான எச்சரிக்கை!. காதல் கத்திரிக்காய்னு எதையாவது பேசிக்கிட்டு நம்பர் கொடுத்துட்டு திரிந்த? குடும்பத்தில் பூந்து ஆட்டய கலைச்சு விட்டுறுவேன். வேலைக்கு சேர்ந்தவுடனே லவ்வு?. வைக்கிறேன் ஆப்பு! " என்றபடி அழைப்பை துண்டித்து விட்டாள்.

கைகளை கட்டிக் கொண்டு அல்லி மலர் பேசுவதையே பார்த்துக் கொண்டிருந்த புவனா. "அப்படி என்னடி காதலிக்கிறவங்களை கண்டால் அவ்வளவு கோபம்?"

"கோவம் ல இல்லைக்கா. என்ன யாருடா காதலிக்க விட்டீங்க! அப்படிங்கிற கடுப்பு தான்" என்றாள் கண்ணடித்து சிரித்தபடி

"அடிப்பாவி! உன்னை யாரு காதலிக்க வேண்டாம்னு சொன்னா?"

"சின்ன வயசிலிருந்தே ஓரே குடும்பம் குடும்பம்னு டி டிகாசனா இருந்துட்டேனா! காதல் வரலைக்கா" என்றாள் இலகுவாக

"அதற்கு காதலிக்கிறவங்களை ஏன் டி தடுக்கிற?" என்றாள் புரியாமல்.

"இதுங்க பண்றதுக்கு பேரு காதலா? அந்த பொண்ணுக்கும் இவனுக்கும் செட் ஆகாதுக்கா. அதே போல எங்க குடும்பத்துக்கும் இந்த பொண்ணுக்கும் செட் ஆகாது. அதனால இந்த பொண்ணு வேணாம்." என்றாள் காலம் கணித்திருப்பதை அறியாத பேதையாக!

"ம்க்கும். அவங்களுக்குள்ள செட் ஆகாதுன்னு நீ சொல்லாதே. பிடிச்சததால் தானே. அந்த பொண்ணு வீட்டிலிருந்து போன் வருது" என்றவள். " சரி. சீக்கிரம் கிளம்பு கோவிலுக்கு போய்விட்டு , அப்படியே வேலைக்கு போகலாம்" என்றதும் புவனாவை முறைத்து விட்டு கோவிலுக்கு கிளம்பினாள்.

அருகிலிருந்து கோவிலுக்கு சென்ற போது சுவாமிக்கு தீபாராதனை காட்டிக் கொண்டிருந்தனர். கண்களை மூடி கை கூப்பியவள்..
" ஐ கிரி நந்தினி நந்தித மேதினி
விஷ்வ விநோதினி நந்திதுதே " என்று முணுமுணுக்க!

அருகில் நின்றிருந்த புவனா அவளை முழங்கையால் வேகமாக இடித்தாள்.

ஸ்லோகத்தை நிறுத்தி விட்டு, கண்களை மூடியபடி, "என்னக்கா? சாமி கும்பிடும் போது டிஸ்டர்ப் பண்ணாத " என்றாள் கடுப்பாக.

"முதலில் எந்த சாமின்னு கண்ணை திறந்து பாரு. பிள்ளையாருக்கு முன்னாடி நின்னுக்குட்டு அம்பாள் சுலோகம் சொல்லிட்டு இருக்க" என்றாள் புவனாவும் அதே தொணியில்

பட்டென்று கண்ணை திறந்து கருவறையை பார்க்க, பிள்ளையார் இவளை நக்கலாக பார்த்து சிரித்தபடி ஒய்யாரமாய் அமர்ந்திருந்தார். " சாரி " என்று அவரை பார்த்து அசடு வழிந்து விட்டு, அவசரமாக இரு காதுகளையும் பிடித்து தோப்புக் கரணம் போட்டவள்.

"பட்டி டிங்கரிங் செய்யாத கெட்ட பொம்பளைய நம்பி ஏமாந்து பூடாத ஏமாந்த பூடாத " என்று முணுமுணுக்க!

"பிள்ளையாரப்பா! நீ தான் இவளுக்கு நல்ல புத்தியை கொடுக்கனும்" என்று புவனா சத்தமாகவே வேண்டிக் கொண்டாள்.

புவனாவின் வேண்டுதலை கண்டு, டக்கென்று நின்றவள். " எல்லாம் உன்னால தான் கா! நான் என்ன ஸ்லோகம் சொன்னால் என்ன? பிள்ளையாரு கோவிச்சுக்க மாட்டாரு. பார்ரா! நம்ம அம்மாவை இந்த புள்ள நினைக்குதுன்னு! அவங்க அம்மாக்கிட்ட என்னை பற்றி சொல்லுவாரு. இரண்டு பேரும் என்னை பத்தி டிஸ்கஸ் பண்ணியிருப்பாங்க. என்னோட கனவு அடுத்த ஜென்மத்துல நிறைவேறியிருக்கும்" என்றாள் அங்கலாய்ப்பாக.

"அப்படி என்ன வேண்டுதல்? அதுவும் அடுத்த ஜென்மத்துக்கு சேர்த்து?" என்றாள் நக்கலாக பார்த்தபடி

"அதுவா? அடுத்த ஜென்மத்துல, என்னை மட்டும் உயிரா நேசிக்கிறவரை. காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா நிம்மதியா பிள்ளை குட்டிகளோட வாழனும்" என்றாள்.

"காதலிச்சா!" என்று அதிர்ச்சியாக பார்த்த புவனா." ஏன்? இந்த ஜென்மத்துல காதலிச்சு கல்யாணம் பண்ணால் ஆகாதா?" என்றாள் சிரிப்புடன்.

"நானெல்லாம் எத்தனை பேர் லவ்வை பிரிச்சு விட்டுறுப்பேன் தெரியுமா? நான் நல்லதுக்கு செய்தாலும் அந்த லவ்வர்ஸ் பார்வையில் நான் கெட்டவளாகத் தானே தெரிவேன். அதோட, இப்போ லவ்வெல்லாம் பிடிக்க மாட்டேங்குதுக்கா. அதான் அடுத்த ஜென்மத்துக்கு இப்போவே வேண்டுதல் வைச்சேன். அட்வான்ஸ் பிரைன் கா " என்றாள் கண்ணடித்தபடி.

"உன்னையெல்லாம் திருத்தவே முடியாது " என்று விட்டு புவனா கண்ணை மூடி மனமுருக வேண்ட ஆரம்பித்தாள்.

தீபாராதனை காட்டி விட்டு, அர்ச்சகர் பிரசாதத்துடன் வர, "என்ன சாமி? எப்படி இருக்கீங்க? நல்லா இருக்கீங்களா?" என்றவளை கண்டு,

நல்லாயிருக்கேன் மா என்று சொல்ல வந்தவரை பேச விடாமல்! கம்பியில் கைகளை பற்றிக் கொண்டு, " அப்புறம் என்ன? பூஜையெல்லாம் ஒழுங்கா நடக்குது?பிரசாதம் ஒழுங்கா தராங்களா? தேங்காய் உடைத்து உங்க காலடியில் வைத்தவுடனேயே காணாமல் போயிடுதாமே? உங்க எலி சாப்பிட்டு விடுதோ? முன்னாடி உள்ள எலியா? இல்லை உங்க வாகனமான எலியா?" என்று அல்லி பேசிக் கொண்டிருக்க!

"எலியா?" என்று புரியாமல் அல்லியை பார்த்தார்.

அவள் தீவிரமாக பிள்ளையாரின் நலத்தை விசாரித்துக் கொண்டிருந்தாள். அல்லியின் பார்வையை கண்டு தானும் பார்த்தவருக்கு, மனம் கனிந்தது.
அவரையும் சேர்த்து கிண்டல் செய்வதை பொருட்படுத்தாமல், புன்சிரிப்போடே பிரசாதத்தை கொடுத்து விட்டு சென்றார்.

விபூதியை பூசிக் கொண்டு, பிரகாரத்தை சுற்றி விட்டு, சிறுது நேரம் சம்பிரதாயத்திற்காக அமர்ந்து! மனம் திருப்தியுடன் கோவிலை விட்டு வெளியே வந்த போது, சிவா தனது ஆட்டோவில் பேப்பர் படித்த படி அமர்ந்திருந்தான். இருவருமே ஒரு சேர அவனை கண்டனர்.

"குமார்!" என்ற அழைப்பில் டக்கென்று நிமிர்ந்து பார்த்தவன். அல்லியை கண்டவனின் முகம் புன்னகைத்து, பிறகு அருகிலேயே முறைத்தபடி நின்றிருந்த புவனாவை கண்டு, எச்சில் கூட்டி விழுங்கியவன். மீண்டும் பார்வையை அல்லியின் பக்கம் திருப்பினான்.

அதற்குள் அல்லி மலர்க் கொடி, அவன் அருகில் வந்திருந்தாள். " குமார், சவாரியா? எப்போ வந்த?" என்றாள் சந்தோஷமாக

"இப்போ தான் மலரு. கோவிலுக்கு வந்த சவாரி. உள்ளே போயிருக்காங்க. நீ எப்படி இருக்க? நல்லாயிருக்கியா? நேத்து ஊட்டான்ட வந்தேன். நீ
தூங்கிட்டு இருந்தியா! அதான் பேசாமல் வந்துட்டேன்" என்றான்.
 
Last edited:

Sirajunisha

Moderator
இடுப்பில் கைவைத்து முறைத்தவள். "பீடிங் பாட்டில் வாங்கிட்டு வந்தது நீ தானே?".

"ஆமாம். ஏன் கண்ணு?" என்றான் புரியாமல்

"உனக்கு எத்தனை வாட்டி சொல்றது?. அந்த பிராண்ட் நிப்பிலை வாங்காதே. ரொம்ப அழுத்தமா இருக்கு. ஹார்லிக்ஸ்ஸே வர மாட்டேங்குதுன்னு. ஏன் அதையே வாங்குற?" என்றாள் அங்கலாய்ப்பாக

"அந்த கடைக்காரர்க்கிட்ட சொன்னேன் பாப்பா. அவன் தான் நீங்க சொன்னது தான் இதுன்னு. கொடுத்தான்" என்றான் அப்பிராணியாக

"அந்த கடைக்கு போகாதே இனிமே. சரியா?. வாட்ஸ் அப்ல உனக்கு எந்த பிராண்ட்ன்னு மெசேஜ் அனுப்பி வைக்கிறேன். இனி அதையே வாங்கு. ஏமாந்துறானுங்க... " என்று மேற்கொண்டு ஏதோ சொல்ல வந்தவளை

"கல்யாணம் செய்திருந்தால் இந்நேரம் குழந்தை கையில் இருந்திருக்கும். தடி மாடு மாதிரி இருந்துக்கிட்டு பீடிங் பாட்டிலில் ஹார்லிக்ஸ் .. அதுவும் வேற பிராண்ட் ... " என்று ஆரம்பித்த புவனா! பேச்சை நிறுத்தவேயில்லை.

வொய் பிளட் சேம் பிளட் என்று நினைத்தபடி ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு, பாவமாக முகத்தை வைத்தபடி நின்றிருந்னர்.
எந்த பதிலும் சொல்லாததை கண்டு,

"ஏன்க? அவ தான் கேட்கிறான்னா. உங்களுக்கு எங்க போச்சு அறிவு. எது கேட்டாலும் வாங்கி கொடுத்திடுவீங்களா?" என்று புவனா நிறுத்தாமல் பேச

"என்னப்பா? வீட்டிலிருந்து வந்திருக்காங்களா?" என்றபடி வயதானவர் ஒருவர் ஆட்டோவில் ஏற, கூடவே அவர் மனைவியும் ஏறினார்.

"ஐயா! " என்றவன். "ஆமாங்கையா" என்றபடி, " நான் கிளம்பறேன்" என்று பொதுவாக சொல்லிவிட்டு ஆட்டோவில் டிரைவர் சீட்டில் அமர்ந்தவன். " பார்த்து பத்திரமா போங்க. வேலு சரிசெய்ய கொடுத்த டூவீலரை நாளைக்கு கொண்டு வந்து விடுவான். பத்திரம் கண்ணு" என்று அல்லியை பார்த்து சொன்னவன். புவனாவை பார்க்க! அவள் விறு விறுவென நடக்க ஆரம்பித்து விட்டாள். பின்னாலேயே மலர் ஓட வேண்டியதாகி விட்டது.

பெருமூச்சு விட்டவன். வண்டியை ஸ்டார்ட் செய்து ஓட்ட ஆரம்பிக்க, "பீடிங் பாட்டில்ல வேணாம் பா. குழந்தைக்கு தாய்ப்பால் தான் கொடுக்கனும். உன் பொண்டாட்டி சொல்றதை கேளு " என்று அந்த வயோதிக பெண்மணி சொன்னதும்! ஆட்டோவை நிறுத்தி டக்கென்று அவரை திரும்பிப் பார்த்தான்.

அவர்கள் தவறாக புரிந்து கொண்டு பேசுவது புரிய, "இல்லைங்க. அது .. எப்படி.. உங்களுக்கு புரியாதும்மா" என்றான் மழுப்பலாக.

வண்டி புவனா மற்றும் அல்லி அருகே வர, " வண்டியை நிறுத்து பா " என்றதும். நிறுத்தி விட்டு " என்னாச்சு மா?" என்றார்.

புவனா ஆட்டோவை கடக்க, " நில்லுமா " என்றார் அவளை பார்த்து! புவனா நின்று விட, கூடவே அல்லியும் நின்றாள்.

"குழந்தைக்கு பீடிங் பாட்டிலில் பால் கொடுக்க கூடாது. நீ சொன்னது சரி தான். தாய்பால் தான் மா நல்லது " என்றவரை புரியாமல் பார்த்தபடி நின்றிருந்தனர்.

"சத்தான ஆகாரமா சாப்பிடு. நிறைய சூப் வைச்சு குடித்தால் தாய்ப்பால் நிறைய வரும். தம்பி ட சொல்லியிருக்கேன். இனி பாட்டிலெல்லாம் வாங்க மாட்டாரு. தாய்ப்பால் தான் குழந்தைக்கு நல்லதுன்னு உன் வீட்டுக்காரரிடம் சொல்லியிருக்கேன்" என்று சிவாவை பார்க்க!

புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு விசயம் புரிய, " ஆங்!" என்று அதிர்ந்து புவனா ஒரு அடி பின்னே வைத்தாள். அல்லிக்கோ சிரிப்பை அடக்குவது பெரும்பாடாக இருந்தது.

"டைம் ஆச்சு. நாம போகலாம்" என்றவன். யாருடைய பதிலையும் எதிர்பார்க்காத வண்டியை வேகமெடுத்து ஓட்ட ஆரம்பித்தான்.

வண்டி நகர்ந்த பின் தான் புவனா சுயத்திற்கே வந்தாள். " இவன்.. இவன்.. என்ன சொல்லி வைச்சிருக்கான் பாரு " என்று கோவமாக பேசியவளை தடுத்த அல்லி,

"குமார் அப்படி சொல்லியிருக்காது அக்கா. நாம பேசியதை அரைகுறையா காதில் வாங்கிட்டு அவங்க பேசியிருப்பாங்க. நீ குமார எதுவும் திட்டிடாத. ப்ளீஸ்" என்றாள் கெஞ்சலாக.

கண்ணை இறுக மூடி தன்னை அடக்கியவள். பேருந்து நிறுத்துமிடம் வந்து பேருந்தில் ஏறி பணியிடத்திற்கு சென்றனர்.

இங்கே நேத்ரன் வேலை நீக்கம் செய்யப்பட்டதை நினைத்து! பவி பயந்து போய் இருந்தாள். அவளது காதல்! திருமணத்தில் முடியுமா? 99% வாய்ப்பில்லை என்று தான் தோன்றியது.

பெரியண்ணன் மறுத்தால் அதை மீற யாருக்கும் துணிவில்லை. நேத்ரன் முகம் மனக்கண் முன் வந்து போக! அவனை இழந்து விடுவோமோ என்று கலங்கி போய் நின்றாள் பவி.

எல்லாம் அவளால் தான்! நீனும் ஒரு நாள் என்னை போல கலங்கி நிற்பே டி! அப்போ தான் என்னோட நிலமை புரியும் என்று சபிக்க! அவளது சாபத்தை பலிக்க வைக்க! வந்து கொண்டிருந்தான்! குடும்பத்திற்கு மட்டும் இராணா!.. வெளியுலகத்திற்கு இரணதீரன். முக்கியமாக அல்லிக்கு இரணத்தை கொடுக்கும் தீரன்! 'இரணதீரன்'.

அல்லி மலர்க் கொடி வருவாள்..
 
Last edited:

Sirajunisha

Moderator
அத்தியாயம் : 5
நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன. நேத்ரனிடமிருந்து அதன் பிறகு எந்த அழைப்பும் வரவில்லை. வாணியும் போன் செய்து மகளின் நலத்தை பற்றி விசாரித்து பொதுவான விசயங்களை மட்டுமே பேசிவார். நேத்ரனை பற்றி அல்லியும் எதுவும் கேட்கவில்லை.

பொங்கல் நெருங்கிக் கொண்டிருக்க, புவனா தனது ஊருக்கு செல்வதற்காக டிக்கெட் புக் செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.

"அக்கா! நீ எப்போ திரும்பி வருவ?"

"பொங்கலுக்கு நான்கு நாள் அதோடு சனி ஞாயிறு சேர்ந்தே வருது. அதனால் ஞாயிற்று கிழமை இராத்திரி கிளம்புவேன். நீ? " என்றாள் கேள்வியாக

"நானும் அப்படித்தான் கா. வரும் போது எனக்கு போன் பண்ணு. குமார் ஆட்டோவிலேயே பஸ் ஸ்டாண்டிலிருந்து சேர்ந்து வந்திடலாம் " என்றாள்.

"கிளம்பும் போது போன் செய்யறேன்" என்றவள். "பொங்கலுக்கு அம்மா, கயலுக்கு, நேத்ரனுக்கெல்லாம் என்ன டிரஸ் வாங்கப் போற?"

"அம்மாவுக்கு சில்க் காட்டனில் இரண்டு புடவை வாங்கனும். கல்யாணத்துக்கு போக வர கட்டிப்பாங்க. சின்ன குட்டிக்கு பாவாடை தாவணி ஒரு சுடிதார். நேத்ரனுக்கு வேஷ்டி சட்டை " என்றாள்.

"உனக்கு?"

"எனக்கு புடவை" என்றவள். " டிரஸ் வாங்க நாளைக்கு போகலாம் கா. அதன் பிறகு வாங்க நேரம் கிடைக்காது" என்றதும்.

" சரி " என்றாள் புவனாவும். மறு நாளே இருவரும் சென்று தங்களது குடும்பத்தினருக்கு ஆடையை தேர்ந்தெடுத்து வாங்கினர். அல்லி, குமாருக்கு வேஷ்டி சட்டை எடுத்தாள் என்றால்! புவனா வேலுவுக்கு சட்டையும் பேண்ட்டும் வாங்கிக் கொண்டாள்.

ஊருக்கு போகிறோம் என்று சந்தோஷமான மனநிலையில் இருவருமே இருந்தனர். பொங்கல் நேரமானதால் இவர்களது கடையில் விற்பனை அதிகமாக இருந்ததால் நிற்க நேரமில்லாமல் பம்பரமாக சுற்றி வேலை செய்து கொண்டிருந்தனர்.

புவனா போகி பண்டிகைக்கு முதல் நாள் மதியம் கிளம்பி விட்டாள். கிளம்பும் முன் ஆயிரம் பத்திரம் சொல்லி சென்றாள். அல்லி அன்று இரவு ஒன்பது மணிக்கு டிக்கெட் புக் செய்திருந்ததால்! வீட்டிலிருந்து மாலை கிளம்பினால் பஸ் வர சரியாக இருக்கும் என்று கணக்கிட்டு மெதுவாக தயாராகிக் கொண்டிருந்தாள்.

அப்போது வாணியிடமிருந்து அழைப்பு வந்தது. டிஸ்ப்பிளேயில் வந்த பெயரை கண்டு, அழைப்பை இணைத்தவள். " ஹலோ அம்மா! நான் கிளம்பிட்டே இருக்கேன். காலையில் அங்க வந்துடுவேன். வேற எதுவும் வேணுமா? சொல்லு! வாங்கிட்டு வரேன்" என்றாள்.

"அல்லி, நாங்க இப்போ அப்பத்தா கிராமத்துக்கு கிளம்பிட்டோம். நீ அங்கன வாரியா?" என்றார் தயங்கியபடி

"யம்மா! என்ன விளையாடுறியா?நான் நம்ம ஊருக்கு வர கிளம்பிட்டு இருக்கேன். அப்பத்தா ஊருக்கு வரனும் னா எப்படியும் நாளைக்கு சாயங்காலம் ஆயிடும். கடைசி நேரத்துல அங்க வான்னு சொன்னால் எப்படி? இப்போ எதுக்கு அங்க போகனும். அப்பத்தாவுக்கு எதும் உடம்பு சரியில்லையா?" என்றாள் படபட பட்டாசாக

"அப்படியெல்லாம் இல்ல அல்லி. குல தெய்வ கோயிலில் பொங்க வைத்தால் குடும்பத்துக்கு நல்லதுன்னு சொன்னாக. அதனால கிளம்பிட்டேன். பொங்க அன்னைக்கு காலையில கோவிலில் பொங்க வைச்ச உடனே கிளம்பிடலாம். மதியம் மூணு மணிக்கெல்லாம் நாம திரும்ப நம்ப வீட்டுக்கு வந்திடலாம். அண்ண கார் வாடகைக்கு புடிக்க சொல்லியிருக்கேன்" என்றார்.

அல்லி அமைதியாகவே இருக்க! "இல்லைனா நீ பொங்கல் அன்றைக்கு சாயங்காலம் வர மாதிரி கிளம்பி வரியா?" என்றார் அவசரமாக

பெருமூச்சு விட்டவள். "சரி மா. துணியெல்லாம் வாங்கிட்டீங்களா?என்ன பண்ணியிருக்கீங்க?"

"நேத்ரன் வாங்கிட்டு வந்தான் மா" என்றவர். " நீ கிளம்பும் போது போன் பண்ணு. நாங்க எங்கே இருக்கோம்னு சொல்றோம் டா" என்றார்.

"சரி மா " என்றபடி அழைப்பை துண்டித்தவளுக்கு , ஊருக்கு செல்ல போகும் மகிழ்ச்சி முழுவதும் வடிந்திருந்தது. 'பொங்கலன்று மதியம் வருவதாக சொன்னாலும் அங்கிருந்து கிளம்பி வர, எப்படியும் நள்ளிரவு ஆகிவிடும். அடுத்த இரண்டு நாள் மாட்டுப் பொங்கல் கானும் பொங்கல்! அன்று இரவே கிளம்ப வேண்டியிருக்கும்! சனி ஞாயிறு இவள் வேலைக்கு வருவதாக கூறியிருந்தாள்! .என்ன செய்யலாம்? என்று யோசித்தவளுக்கு அப்பத்தாவை பார்த்து விட்டு வரலாம் என்று தோன்ற அப்போதே கிளம்பி விட்டாள்.

சில துணிமணிகளை வாங்கிக் கொண்டாள். அவளது அப்பத்தாவின் ஊருக்கு கிளம்பி விட்டாள். தமிழ் நாட்டுக்கும் கேரளாவுக்குமான எல்லையில் உள்ள புதூர் நாடு. அதிலும் அவர் வசிப்பது குக்கிராமம். மலை ஏறி செல்ல வேண்டும். இன்னும் பேருந்து வசதி தரப்படவில்லை. பஸ்ஸை விட்டு இறங்கி, கிட்டதட்ட 5கி.மீ நடந்த பிறகே கிராமத்தை அடைய முடியும். இரு சக்கர வாகனங்களில் அவ்வப்போது மக்கள் பொருட்கள் வாங்க செல்வதுண்டு.

காட்டு விலங்குகளின் நடமாட்டம் இருப்பதால் கவனத்துடனேயே இருக்க வேண்டிய சூழல்!

சென்னையில் இருந்து கிளம்பி முக்கிய இரு பெரு ஊர்களை கடந்து அவள் வயநாடு வந்த போது காலை மணி 7. அங்கேயே முகம் கழுவி டீ குடித்தவள். மீண்டும் பேருந்தில் ஏறிக் கொண்டாள். மீண்டும் ஒன்றரை மணி நேரம் பயணம். பனிமூட்டத்திடயே வேகமாக வளைந்து வளைந்து செல்லும் பேருந்து! அல்லிக்கு வாந்தி வந்தது.

மயக்கமும் வர, கண்ணை மூடி தலைசாய்த்துக் கொண்டாள். " சொய் சொய்.. கையலளவு நெஞ்சத்துல கடலளவு பாசம் மச்சான்" என்ற பாடல் பேருந்தில் பாடிக் கொண்டிருந்தது. காதில் விழுந்தாலும் அதை கேட்டு ரசிக்கும் மனநிலை இல்லை. எப்போதடா இறங்குவோம் என்றிருந்தது. "புதூர் நாடு ஸ்டிப்பிங் இறங்குங்க" என்று கண்டக்டர் விசில் அடிக்க, வண்டி மெதுவாக நின்றது.

இரண்டு துணி பைகள். சில மளிகை பொருட்கள் அடங்கிய சாக்கு மூட்டைகளை எடுத்துக் கொண்டு இறங்கினாள். இதுவரை தெரியாத குளிர் எலும்பு வரை ஊடுருவியது. பையில் வைத்திருந்த கம்பளி சட்டையை எடுத்து அணிந்து கொண்டவள். காலேஜ் பேக்கில் புது துணிகளை எடுத்து வைத்திருந்த பையை முதுகில் மாட்டிக் கொண்டாள்.

தலையில் சிறு துண்டை சுற்றி களவடை போல வைத்தவள். மூட்டைகளை தூக்கி தலையில் சிரமத்துடன் வைக்க! அவள் சிரமத்தை கண்டு, பெண்மணி ஒருவர் தூக்கி தலையில் வைக்க உதவினார். மென்னகை புரிந்தாள்.

"ராசம்மா பேத்தி தானே நீ?" என்றார்.

"ஆமாம் " என்று அவருடன் பேச்சு கொடுத்த படி நடக்க ஆரம்பித்தாள். ஆறேழு பெண்கள் சேர்ந்து நடக்க, அனைவரது தலையிலும் பொருட்கள் அடக்கிய சாக்கு பை இருந்தது. அவர்கள் இலகுவாக நடந்தனர். பழக்கமில்லாத பாதையில் நடக்க சிரமமாக இருந்தது. மூச்சிரைக்க சிரமப்பட்டுக் கொண்டே வந்து சேர்ந்து விட்டாள்.

வீட்டு கதவு சாத்தியிருந்தது. உள்ளே சென்றாள். ராசம்மா இல்லை. "அப்பத்தா அப்பத்தா " என்று அழைக்க பதில் இல்லை. சுற்றிலும் பார்த்தாள்! சிறிய வீடு தான்! சுத்தமாக பராமரிக்கப்பட்டு இருந்தது. சிறு பூசை சாமான்கள் கழுவி காய வைத்திருந்தார். 'இப்போது தான் வெளியில் சென்றிருக்க வேண்டும். வரும் வரை காத்திருப்போம்' என்று நினைத்தவள். சாமான்களை இறக்கி வைத்து விட்டு, அங்கிருந்த கயிற்று கட்டிலில் படுத்து விட்டாள்.

உடல் வலி கொடுத்து உடம்பு அனத்த ஆரம்பித்தது. மெல்ல கண்களை மூடியவள் அடுத்த நொடி ஆழ்ந்த நித்திரைக்கு சென்றிருந்தாள். இடையில் தாங்க முடியாது உடல் வலி வேறு! யாரோ அவளுக்கு வாயில் தண்ணீர் போன்று ஏதோ ஒன்றை வைத்து புகட்டினர். பாதியை குடித்து விட்டு மீதியை வாந்தி எடுத்தாள். கண்களை கொஞ்சம் கூட திறக்க முடியவில்லை.

இயலாமையில் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோட, மெல்ல விசும்பினாள். யாரோ தலையை வருடிவிட அந்த ஸ்பரிசத்தில் "ப்பா.. " என்று முனக ஆரம்பித்தாள். தலைவருடல் ஆழ்ந்த தூக்கத்திற்கு அவளை அழைத்துச் சென்றது.
 
Last edited:

Sirajunisha

Moderator
எத்தனை மணி நேரம் தூங்கினாள் என்று தெரியாது மீண்டும் அவள் கண் விழித்த போது அந்த வீட்டில் வெளிச்சத்திற்காக சிறிய சிமினி விளக்கு எரிந்து கொண்டிருந்தது. அடுப்பை எரிய வைக்க! ஊது குழலின் சப்தம் கேட்டு பார்வையை அங்கு திருப்பினாள்.

வயதான பாட்டி, கருமமே கண்ணாக அடுப்பில் உள்ள மண் சட்டியில் எதையோ கிண்டிக் கொண்டு இருந்தார். அவளை அடையாளம் கண்டு,

" அப்பத்தா! " என்றபடி மெல்ல எழுந்து அமர்ந்தாள்.

பேத்தியின் குரலில் சட்டென்று திரும்பி பார்த்தவரின் முகம் கனிவில் விகசித்தது. "அல்லி கண்ணு.. " என்றபடி எழுந்தவர்.

"இப்போ உடம்பு பரவாயில்லையா ஆச்சி" என்றார்.

"ம்ம் " என்றவர். "அம்மா இன்னும் வரலையா அப்பத்தா?" என்றாள் சோர்வாக

"பொங்கலும் அதுவுமா எப்படி இங்கன வருவா?" என்றவரை புரியாமல் பார்த்தாள்.

"சரி சரி. சீக்கிரம் போய் முகம் கை காலெல்லாம் கழுவிட்டு , வெந்நி தண்ணி போட்டிருக்கேன். அப்படியே குளிச்சிட்டு வந்துடு! பொங்க பானைக்கு மஞ்சள் தடவி வை. நான் போய் மித்த வேலையெல்லாம் பார்க்கிறேன் " என்று அவளை யோசிக்க விடாமல் எழ வைத்து விட்டார்.

அவள் வாங்கி வந்த புது துணிகள் அனைத்தையும் எடுத்து அப்பத்தா கையில் கொடுத்து விட்டு, பின் கட்டுக்கு குளிக்க சென்றாள். அதன் பிறகு எதையும் யோசிக்க வில்லை. குளித்து வந்த போது அப்பத்தா சாமி கும்பிட்டு புது துணிகளை எடுத்து கொடுத்தார். அதை கட்டிக் கொண்டாள்.

பொழுது புலர வாசலில் பானை வைத்து பொங்கலிட்டனர். அக்கம் பக்கத்திலும் அதே போன்று வைக்க! வெகு நாட்கள் கழித்து வந்திருந்ததால் அனைவரிடம் பேசி சிரித்து பொங்கல் வைத்து மிக சந்தோஷமாகவே இருந்தாள்.

அப்பத்தா எதுவுமே அவளை கேட்கவில்லை. இவளும் அதன் பிறகு எந்த கேள்வியும் கேட்கவில்லை. பொங்கல் வைத்து சாமி கும்பிட்டனர். வெகு நாட்கள் கழித்து வந்திருப்பதால், "அப்பத்தா நான் நம்ம ஊரை சுத்தி பார்த்துட்டு வரேன்" என்று பதிலை எதிர்பார்க்காமல் கரும்பை கையில் எடுத்துக் கொண்டு ஓடி விட்டாள்.

சிறு வயது தோழிகள், பெரியவர்கள் என அனைவரிடமும் பேசி வம்பிழுத்து சிறுவர்களுடன் விளையாடி அங்கிருந்த சிறு தெருக்களில் வயது வித்யாசம் பார்க்காமல் விளையாடி கொண்டிருந்தாள்.

அப்போது அப்பத்தா அந்த கிராமத்தின் உள்ள நாட்டாமை வீட்டுக்கு செல்வதை கண்டு, தானும் பின்னாடியே சென்றாள். வழியில் சிலர் நலன் விசாரிக்க, அவர்களிடம் விடைபெற்று சென்ற போது, அப்பத்தா ஸ்பீக்கரே தேவை இல்லாமல் சத்தமாக போனில் பேசிக் கொண்டிருந்தார்.

இங்கே ஒரிருவர் வீட்டில் மட்டும் செல்போன் இருந்தது. வாணியிடம் பேசிக் கொண்டிருந்தவர். பின்னால் அல்லி நிற்பதை கவனிக்கவில்லை.

அவள் அங்கு சென்ற போது!
" அதெல்லாம் நான் நல்லாயிருக்கேன். நேத்ரன், கயலு, அல்லி எல்லாரும் நல்லாயிருக்காங்களா?" என்றார்.

" எல்லாரும் நல்லாயிருக்கோம்" என்றார் வாணி

"அல்லி புள்ள நல்லாயிருக்கா?ஒரு வாட்டி இங்கன எல்லாரும் வந்துட்டு போங்களேன். இங்க கிழவி தனியா தானே கிடக்கேன் " என்றவர். " அல்லி பக்கத்துல இருக்கா? போன கொடு பேசுறேன்" என்றதும்

"இல்லை அத்தை. அல்லி.. அல்லி வரலை. அநேகமா இன்னைக்கு இராத்திரிக்கு தான் வருவாள்" என்றார் வாணி தயக்கமாக

"ஏன்?" என்று கேள்வியின் கூர்மையில் ..

"அது.. அது.. இங்கன நேத்ரன பிடிச்சு போய் அவனுக்கு பொண்ணு கொடுக்க சம்பந்தி வீட்டாளுக வராக அத்தை " என்றதும்

"சம்பந்தின்னு முடிவே பண்ணியாச்சா?" என்றார் அப்பத்தா அழுத்தமாக

"இல்லை.. இல்லை.. அப்படியெல்லாம் இல்லை அத்தை. அந்த பொண்ணு பவித்ரா, நேத்ரனை தான் கட்டுவேன்னு சொல்லுதாம். இல்லைனா ஏதாவது பண்ணிக்கிடுவேன்னு பயமுறுத்துது போல! அவுங்க பெரிய வசதியான குடும்பமாம் அத்தை. அவுகளும் நமக்கு வசதி வாய்ப்பு கம்மின்னு யோசிக்கிறாங்க போலிருக்கு அத்தை.

அந்த பொண்ணோட பிடிவாதத்திற்காக வேற வழியில்லாமல் இன்னைக்கு வந்திருக்காங்க. கூடத்துல நேத்ரனிடம் பேசிட்டு இருக்காக" என்றார் தயக்கத்துடனேயே

"பையனுக்கு கல்யாணம் முடிக்க பேசுற? சரி. அல்லி இல்லாமல் ஏன் பார்க்க வர சொன்ன? உனக்கு அந்த அளவுக்கு விவரம் பத்தாதே" என்றார்.

"அல்லிக்கும் அந்த குடும்பத்துக்கும் ஆரம்பத்திலிருந்தே ஒத்து வரலை அத்தை. அந்த பொண்ணு பவி ஏதோ சொல்ல, அதை கேட்டு அல்லி கோவத்துல அவுக அண்ணனிடம் மரியாதை குறைவா பேசிடுச்சாம். அந்த பையன் தன் செல்வாக்கை பயன்படுத்தி நேத்ரனுக்கு வேலையில்லாமல் பண்ணிட்டாங்க" என்றவர்.

மேலும் தொடர்ந்து, "பிறகு தான் நேத்ரன் பேசி சமாதானப்படுத்தி இருக்கான். பவியும் நேத்ரனை தான் பிடிச்சிருக்கு சொன்னதும்! வேற வழியில்லாமல் வந்திருக்காங்க" என்றார்.

"அது அவங்க சேதி. அல்லியை அவங்களுக்கு பிடிக்கலைனு சொல்ற? சும்மா வாரதுக்கு அல்லியை வர வேணாம்னு சொல்லியிருக்க? அந்த குடும்பத்துக்கு பிடிக்கலைனா! நேத்ரன் கல்யாணத்துக்கு கூட, அல்லியை வர விட மாட்ட போலயே!" என்றார் நறுக்கென்று

"ஐயோ! அத்தை அப்படியெல்லாம் இல்லை. முதலில் முடிவாகட்டும் பிறகு பார்க்கலாம். அல்லி இல்லாமல் இங்க எதுவும் நடக்காது" என்ற வாணியை இடைமறித்தவர்.

"ஏன்? இப்போ கூட அல்லி இல்லாமல் தானே நடக்குது?" என்ற அப்பத்தாவின் கேள்விக்கு வாணியிடம் எந்த பதிலும் இல்லை.

அவரது நிலையை புரிந்து கொண்ட அப்பத்தா, " உன் நிலமை புரியுதுத்தா! எந்த புள்ளைய பார்க்கிறதுன்னு யோசிக்கிற? அன்னைக்கு என் மகன் இல்லாமல் நீ என்ன பண்றதுன்னு தெரியாமல் நின்னப்போ! தகப்பன் சாமியா குடும்பத்துக்காக வேலைக்கு போனது யாரு அல்லி தானே! அப்போ அவளுக்கு வயசு ஒரு பதிமூனூ இருக்குமா?. ஆம்பளை புள்ளைய படிக்க போ சொல்லிட்டு அவ குடும்பத்தை சுமந்தாள். அந்த நன்றியை மறந்துடாத!" என்றார் கோவத்தை உள்ளடக்கி

வாணியிடமிருந்து எந்த பதிலும் இல்லை. அந்த பக்கம் நேத்ரன் யார் என்று விசாரிப்பதும்! வாணி பதில் சொல்வதும் கேட்டது. பிறகு போன் கைமாறி,

"ஹலோ.. " என்ற கம்பீரமான ஆண் குரல் ஒலித்தது.

அப்பத்தா பதில் கொடுக்கவே இல்லை. அமைதியாகவே நின்றிருந்தார்.

"ஹலோ.. நீங்க நேத்ரன் பாட்டியா?"

"இல்லை. அல்லி மலர் பாட்டி" என்றார் வெடுக்கென்று

"ஓ! " என்றவனின் குரலில் சிரிப்பு இருந்தது.

"நான் இரணதீரன். என் தங்கச்சி பவித்ராவுக்கு உங்க பேரனை பார்க்க வந்திருக்கோம் " என்றவன்.
"பரவாயில்லை நல்ல குடும்பம் தான். எனக்கு பிடிச்சிருக்கு. ஆனால் வீடு தான் சின்னதா இருக்கு. பரவாயில்லை நேத்ரன் பவி மேரேஜ்க்கு பிறகு தனியே வீடு வாங்கி கொடுத்திடுவோம். அங்கே வாணி ஆன்ட்டி, கயல் தங்கிக்கலாம். ஏன்? யார் வேண்டுமென்றாலும் கெஸ்டா தங்கலாம். உங்க பேத்தி அல்லி மலர்க் கொடியை தவிர,

எனக்கு பூசி மெழுகி பேசி பழக்கமில்லை. பவிக்கு அந்த பொண்ணை பிடிக்கலை. அதனால அவ இருக்கிற எடுத்துக்கு நேத்ரனோட சிஸ்டர் வர வேண்டாம் . நீங்க இத்தனை நாட்கள் இல்லாமல் இன்றைக்கு அந்த பெண் அல்லியை பற்றி திரும்ப திரும்ப பேசுவதை கேட்டால்! அல்லி மலர் கொடி, இப்போ அங்கே உங்க கூட இருக்கனும்? ரைட்" என்றான்.

அவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்த பெரியவர்களுக்கு அவனது அறிவை மெச்சாமல் இருக்க முடியவில்லை.

கண்ணை இறுக மூடி திறந்தவர். "அல்லியோட அம்மாவிடம் உங்களோட விருப்பத்தை சொல்லுங்க. அல்லி இல்லாமல் அங்கே ஒரு அணுவும் அசையாதுன்னு அவ அம்மா புரிய வைப்பாள்" என்றார் ஆணித்தரமாகவே.

"அது அவங்க குடும்ப விசயம். இதில் நான் எதுவும் பேச முடியாது. எங்க பேமிலிக்கு அல்லியை பிடிக்கலை. தட்ஸ் இட் " என்றவன். அருகே வந்த நேத்ரனிடம் போனை கொடுத்து விட்டு சென்றான்.

" ஹலோ பாட்டி. நான் நேத்ரன் பேசறேன்" என்றதும்.

" உனக்கு அந்த பொண்ணு பவி வேணாம். கல்யாண... " என்றவரை இடைமறித்தவன்.

"அல்லி சொல்லிக் கொடுத்தாளா? இப்படி சொல்ல சொல்லி. அவளுக்கு கல்யாணமானால் அவ புருஷன் வீட்டுக்கு தானே போவா? என் கூட வா வந்தா இருக்க போறா? உங்களுக்கு அவளை பத்தி தெரியலை . என்னோட காதலை சேர விட மாட்டேன்னு மிரட்டுறா? தெரியுமா உங்களுக்கு? " என்றான் ஆதங்கமாக

'யாருக்குமே நான் வேண்டாமா?' என்று சுய பச்சாதாபம் தோன்ற! வேகமாக வந்து அழைப்பை துண்டித்தவள். " வா அப்பத்தா " என்று கையை பிடித்து இழுத்து சென்றாள்.

காலம் என்ன கணக்கு போட்டு காத்திருக்கிறதோ! பொறுத்திருந்து பார்ப்போம்.
 

Sirajunisha

Moderator

அத்தியாயம் : 6
இருவரும் வீட்டின் வாசற்படியை கூட தான்டி இருக்க மாட்டார்கள். மீண்டும் அப்பத்தாவுக்கு அழைப்பு வந்தது. அழைப்பை எடுத்த பெரியவர், "ராசம்மா, உன் மருமக தான்! பேசு " என்றார்.

அல்லி அப்படியே நிற்க! பெருமூச்சு விட்டவர். அல்லியின் கையை ஆதரவாக அழுத்தி கொடுத்து விட்டு வந்து, மீண்டும் பேசியை கையில் வாங்கியவர்.

"சொல்லு வாணி" என்றார்.

"அத்தை அல்லி இன்னைக்கு சாயுங்காலம் இங்க வருவா. அவளிடம் பேசிவிட்டு சொல்றேன்" என்றவரை இடைமறித்தவர்.

"அல்லியிடம் பேசுறது பிறகு இருக்கட்டும். முதலில் நீ அவுக குடும்பத்திடம் பேசு!. அந்த பொண்ணுக்கு நம்ம அல்லி வாரதெல்லாம் பிடிக்காதாம் . நான் வைக்கிறேன் " என்றிட,

"அத்தை அத்தை " என்ற வாணியின் குரல் அப்பத்தாவை துண்டிக்க விடாமல் செய்தது.

அல்லி அதற்குள் சுதாரித்து கொண்டாள். ஆரம்பத்தில் முகத்தில் இருந்த வாட்டம் இப்போது இல்லை. அப்பத்தாவை திரும்பி பார்த்தவள். அவர் தீவிரமாக பேசிக் கொண்டிருப்பதை கண்டு, சற்று நகர்ந்து வந்து வாணிக்கு அழைப்பு விடுத்தாள். அப்பத்தாவுடன் பேசிக் கொண்டிருந்ததால் என்கேஜ்ட் டோன்னாகவே வந்து கொண்டிருந்தது.

பிறகு நேத்ரனுக்கு அழைத்தாள். ரிங் முழுதாக போய் நின்றது. அழைப்பை எடுக்கவில்லை. மென்னகை வர! அடுத்து கயல் விழிக்கு அழைப்பு விடுத்தாள். பழைய ரக போன்!. தனது முதல் சம்பளத்தில் வாங்கிய போன் என்பதால்! எவ்வளவு ரிப்பேர் ஆனாலும் சரிசெய்வாளே தவிர தூக்கிப் போடவில்லை. அவசர உதவிக்காக கயல் அதை உபயோகிக்க கொடுத்திருந்தாள்.

அழைப்பு போய் கொண்டிருந்தது.. கடைசி நிமிட அழைப்பில் ! கயல் இணைத்து, " ஹலோ அக்கா " என்றிருந்தாள்.

"கயல் எங்கே இருக்கீங்க? எவ்வளவு நேரம் போன் பண்றது? எப்போ வருவீங்க?" என்றாள்.

"என்னக்கா சொல்ற?" என்றாள் புரியாமல்

"ம்ச்ச். அம்மா எங்கே? போன் ஏன் எங்கேஞ்சிடாவே இருக்கு?" என்றாள்.

"அம்மா, அப்பத்தாவிடம் பேசிக்கிட்டு இருக்காங்க!. ஆமாம் நீ ஏன் கா இன்னும் வரலை. எப்போ வருவ?" என்றவள். கிசுகிசுப்பாக, "இங்கே அண்ணனுக்கு கல்யாணம் பேச வந்திருக்காங்க. நீ சீக்கிரம் வா " என்றாள்.

"நீ இப்போ எங்கே இருக்க?"

"நம்ம வீட்ல. நீ ஏன் கா இன்னும் வரலை. அண்ண ரொம்ப ஓவரா பண்ணுது. நீ வா. வந்து என்னென்னு கேளு" என்றாள் சிணுங்களாக

"யார் யார் வந்திருக்கா? எப்போ வந்தாங்க?" என்று வரிசையாக கேள்விகளை அடக்கினாள்.

"அண்ண காதலிக்கிற பொண்ணு பவித்ரா அப்புறம் சின்ன அண்ணன் கவின்னு ஒரு அண்ணணும் ஒரு காரில் வந்தாங்க. பிறகு, அரைமணி நேரம் கழிச்சு இராணா அண்ணன் வந்தாரு. அக்கா! பார்க்க செம்மையா இருக்காங்க கா இரண்டு பேரும். நுனி நாக்கு இங்கிலீஷ் என்ன! காரு என்ன! தெருவே இன்னைக்கு நம்ம வீட்டை தான் நோட்டம் விட்டுட்டு இருக்கு" என்று அங்கே நடக்கும் விவகாரங்களை புட்டு புட்டு வைத்தவள். "நீ சீக்கிரம் வா கா. எதுக்கிட்ட வர. நான் வரவா பஸ்ஸாண்டுக்கு " என்றவளிடம்.

"வந்திட்டு தான் டி இருக்கேன்" என்றவள். "சரி. நீ அம்மாவிடம் போய் போன் கொடு. ஸ்பீக்கரில் போட்டு" என்றதும்.

"சரி கா" என்றவள். அறையிலிருந்து போனை எடுத்துக் கொண்டு வந்தவள். "அம்மா.. அக்கா லைன்ல இருக்காங்க. நீ பேசு" என்று போனை வாணியின் கையில் கொடுத்தார்.

"அத்தை. அல்லி பேசுறா. நான் பிறகு உங்களிடம் பேசுறேன்" என்று அழைப்பை துண்டித்தவர்.

"ஹலோ அல்லி " என்றவருக்கு குரலில் லேசான தடுமாற்றம்.

"அல்லி " என்ற உச்சரிப்பில் அனைவரின் கவனமும் வாணி பக்கம் திரும்பியது.

"யம்மா. நீ அப்பத்தா ஊருக்கு போறேன்னு சொன்ன ? போகலையா? கயல், வீட்டில தான் இருக்கோம்னு சொல்றா?" என்றாள் ஒன்றும் தெரியாதது போல!

"அது.. அது.. நேத்ரனை மாப்பிள்ளை பார்க்க வந்திருக்காங்க மா. பவித்ரா வீட்டிலிருந்து " என்றவரின் குரல் வெளியிலேயே வரவில்லை.

"பார்ரா! " என்ன திடீர்னு? அந்த பொண்ணோட அண்ணன் தான் நேத்ரன் வேலைக்கு வேட்டு வைச்சுட்டான்ல! பிறகு ஏன் வர்றாங்க?" என்றாள் எரிச்சலை மறைக்காது

அனைவருக்கும் அவள் பேசுவது கேட்டது. இரணதீரனின் இறுகிய முகத்தை கண்டு, பதட்டப்பட்ட நேத்ரன் அவசரமாக எழுந்து வாணியிடம் சென்றான்.

மேலும் தொடர்ந்தவள். " பேசினது நானு! எதுக்கு தேவையில்லாமல் நேத்ரனை வேலையை விட்டு நிறுத்த வைக்கனும். எதுவாக இருந்தாலும் என்னிடம் பேச வேண்டியது தானே? நேத்ரன் என்ன இவங்களுக்கு தக்காளி தொக்கா!

என் கூட பிரச்சனைன்னு நேத்ரனை வேலையை விட்டு எடுக்க வைச்சாங்க. நாளை பின்ன அந்த புள்ளைக்கு இவனுக்கும் எதாவது பிரச்சனைனா என்ன செய்வாங்க? அவனை தூக்கி ஜெயில் போடுவாங்களா?" என்ற கேள்வியில்

'வாணிக்குமே வயிற்றில் புளியை கரைத்தது. ஒரு வேலை செய்வாங்களோ?' என்று மனம் பதைபதைத்தது. பயந்து போய் கூடத்தில் அமர்ந்திருந்தவர்களை பார்த்தாள். கண்ணில் பட்ட இராணாவின் இறுகிய தோற்றம் அவருக்கு பயத்தில் மிரள செய்தது.

அவர் அப்படியே நிற்பதை கண்டு, வாணியில் கையிலிருந்த பேசியை வாங்கி, " ஹலோ அல்லி " என்றான்.

"ஹலோ நேத்ரன்! என்ன உன் லவ்ஸ் உன்னை தேடி வந்திடுச்சு போல!. வாழ்த்துக்கள் " என்றாள் மனமார

"ம்ம்ம். தேங்க்ஸ் " என்றான் மென்மையாக

"அம்மா, அப்பத்தா ஊருக்கு போறன்னு சொல்லுச்சு. அதான் நான் லேட்டா கிளம்பளாம்னு இருந்தேன். அங்க போகலைன்னு தெரிந்தால் வீட்டுக்கு வந்திருப்பேன்" என்று அவன் கேட்காமலேயே விளக்கம் கொடுத்தாள்.

"இல்.. லை.. திடீர்னு தான் வந்தாங்க " என்றான் சங்கடமாக

"பரவாயில்லை விடு. திடீரென கிளம்பி வரேன்னு சொன்னால்! யார் ? என்ன தான் செய்ய முடியும்?அவங்களுக்கா புரியனும்!. இந்த நேரத்தில் வரக் கூடாதுன்னு. இது கூடவா தெரியாது?" என்று முணமுணுத்தவள்.

"சரி விடு நேத்ரா. கல்யாண முடிஞ்ச பிறகு நீ தனிக் குடித்தனம் போயிடு. இங்கே எல்லாம் அந்த பொண்ணுக்கு செட் ஆகாது. அதோட நீ அவங்க குடும்பத்துக்கு போய் எடு பிடி வேலை பார்க்கிறதை எங்களால தாங்க முடியாது. அடுத்தவங்க குடும்ப விசயத்தில் தலையிடறதும் தப்பு. பார்த்து சூதானமா இரு. பஸ் வந்துடும். நான் வரேன்" என்று அழைப்பை துண்டித்து விட்டாள்.

'இதெல்லாம் நாங்க கேட்கனுமா?' என்ற இரு அண்ணன்களின் அழுத்தமான பார்வையில் பவி தலையை குனிந்து கொண்டாள்.

நேத்ரன் அவர்கள் முன் வந்து மீண்டும் அமர்ந்தான். அங்கே ஒரு சங்கடம் நிலவியது. இராணாவின் கோவ முகத்தை பார்க்க முடியாமல், கவினை பார்வையால் கெஞ்சினாள் பவி. ஏதாவது செய் என்பது போல!

கண்ணை மூடி அவளுக்கு ஆறுதல் அளித்தவன். தொண்டையை செறுமி, " ஒ.கே நாங்க சொல்ல வேண்டியதை சொல்லிட்டோம். மேற்கொண்டு நீங்க தான் சொல்லனும் " என்று பேச்சை ஆரம்பித்தான்.

"அது.. அது.. அல்லி வந்த பிறகு சேர்ந்து பேசி.. " என்று முடிப்பதற்குள் வெடுக்கென எழுந்து நின்றான் இராணா. அவனது உயரத்திற்கு அந்த வீடு சிறியதாக இருந்தது. 'எம்மாடி என்ன இவ்வளவு உயரமா இருக்காரு!' என்று கயல் வாயை பிளந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

"ஏன்? உங்க வீட்ல ஆம்பளை இல்லையா? இல்லை! எதையும் முடிவெடுத்து செய்யும் திறன் கிடையாதா?" என்றவனின் பதில் வாணிக்காக இருந்தாலும் பார்வை நேத்ரனிடம் இருந்தது.

நேத்ரன் எதுவும் பேசும் முன், பயத்தில் மிரண்டு போய் பார்த்துக் கொண்டிருந்த வாணி, " அச்சோ! அப்படியெல்லாம் இல்லை தம்பி. அண்ணனுக்கு கல்யாணம்னா தங்கைச்சி அவளையும் கேட்கனும்ம்.. " என்று தயங்கியபடி சொன்னவரின் வார்த்தை மேலும் அவனை உசிப்பேற்றி விட,

"என் தங்கையோட கல்யாணம்! யாரோ ஒரு பெண் சொன்னதை கேட்டு தான் செய்யனும்னா? எங்களுக்கு இந்த சம்மந்தம் வேண்டாம்" என்றான் அழுத்தமாக.

"சார்.. " என்று நேத்ரன் பதறி போய் ஏதோ கூற வர,

இடையிட்டு தடுத்த கவின்,"இனாஃப் நேத்ரன். கல்யாணத்துக்கு, உங்க இரண்டு பேரோட விருப்பம் தான் தேவை. வேற யாரோடதும் இல்லை. அப்படி பார்த்தால்! இந்த மேரேஜ்ல பவிக்கு மட்டும் தான் விருப்பம். எங்க யாருக்கும் இல்லை. நாங்க அப்படியா பேசிக் கொண்டிருக்கிறோம்" என்றவன். "சபை நாகரீகம் தெரியாமல்.. " என்றான் எரிச்சலாக.

அனைவரின் முகத்தை ஒரு முறை பார்வையால் ஆராய்ந்த இராணா, " கவின் . நாம கிளம்பலாம்" என்றவன். அவனிடம் ஏதோ பார்வையால் குறிப்பு காட்டி விட்டு கிளம்பி விட்டான்.

"சார்.. தம்பி.. " என்ற குரல்கள் கேட்டாலும் அதற்கெல்லாம் செவி சாய்க்காது வாயிலை நோக்கி சென்றான்.

பவியின் முகம் அழுகைக்கு தயாராக நேத்ரனும், " சார்.." என்றான் தவிப்பாக

"உங்க சிஸ்டரிடம் கேட்டு கேட்டு செய்ய இது அவங்க மேரெஜ் இல்லை. உங்க மேரேஜ் நேத்ரன். பேசி விட்டு முடிவு சொல்லுங்க. நாங்க சொல்ற மாதிரி இருந்தால் மட்டும் இந்த மேரேஜ் பற்றி அண்ணாவிடம் பேசுவேன். அதுவும் பவிக்காக.. " என்றவன் பதிலை எதிர்ப்பார்க்காது கிளம்பி விட்டான். பின்னாலேயே அனைவரிடமும் தலையசைத்து விட்டு பவியும் சென்றாள்.

என்ன செய்வதென்று புரியாமல், மூச்சடைப்பது போல் இருக்க, "அம்மா நான் கொஞ்சம் வெளியில் போய்ட்டு வரேன்" என்று நேத்ரன் வெளியில் சென்றான். வாணி, அடுக்கு கேரியரில் பொங்கல் எடுத்து வைத்து கொண்டு, "நான் மரியம் வீட்டில போய் பொங்கல் கொடுத்துட்டு வரேன். கேட்டை பூட்டிக்க" என்று சின்ன மகளுக்கு சொல்லி விட்டு சென்றார்.

கயல் சிறிது நேரத்தில் அல்லிக்கு அழைத்தாள். அப்பத்தாவிடம் பேசிக் கொண்டே நடந்தவள். கயலின் அழைப்பை கண்டு, "ஹலோ சொல்லு கயல். எல்லோரும் போய்ட்டாங்களா?" என்றாள்.

"ம்ம். போய்ட்டாங்க அக்கா" என்றவள். அங்கு நடந்த அத்தனையும் ஒன்று விடாமல் அல்லிக்கு சொன்னவள். "உன்னை ஏன் கா எதுவும் கேட்க கூடாதுன்னு சொல்றாங்க?.அவங்க மட்டும் அவங்க தங்கச்சி பவிக்கு எல்லாம் முன்னாடி நின்னு செய்றாங்க. உன்னை மட்டும் அண்ணன் கல்யாண விசயத்தில் எதுவும் கேட்க கூடாதுன்னு சொல்றாங்களே?" என்றாள் ஆதங்கமாக

"சின்ன புள்ள உனக்கே புரியுது. அந்த தம்பிக்கு புரியலையே!" என்றாள் கிண்டலாக

"தம்பி இல்லை கா . அண்ணா " என்று திருத்தினாள் சின்னவள்.

"இல்லை டி தம்பி"

"கவின் தம்பி, இராணா அண்ணன்" என்றாள் கயல்.

"எனக்கு தெரிஞ்செதெல்லாம் இராணா தான். இனி இராணா என் தம்பி. புரியாத மக்கு பய! சின்ன புள்ள தனமாவே பேசுவான். அவன் பொண்டாட்டியை அன்றைக்கு திட்டிட்டேன். அதனால அந்த தம்பிக்கு என் மேல கடுப்பு " என்றாள்.

"அவர் பொண்டாட்டியை ரொம்ப லவ் பண்ணியிருப்பார் போல! நீ திட்டினதும் கோவம் வந்... து.. டுச்சோ.. சோ.. சோ.. ஹி..ஹி.. கா..கா.. பறக்குது " என்று கயல் தடுமாறுவதை அல்லி கவனிக்கவில்லை.எதிரில் இராணா கையை கட்டி போனில் பேசிக் கொண்டிருந்த அல்லியின் பேச்சை ஸ்பீக்கர் போடாமலேயே கேட்டுக் கொண்டிருந்தான்.

போனில் இரு தடவை பட்டனை அழுத்தும் சத்தம் கேட்க அதையும் அல்லி பெரிதுபடுத்தவில்லை. போனை கட் செய்கிறேன் என்று ஸ்பீக்கரை பட்டனையும் தற்சமயம் அழுத்தி இருந்தாள் கயல்.

"அவர் பொண்டாட்டியை லவ் பண்ணட்டும்! அதற்கு இன்னொருத்தன் பொண்டாட்டியை திட்டலாமா? தப்பில்லை"

அவ்வளவு பதட்ட நிலையிலும், "அது யாருக்கா இன்னொருத்தர் பொண்டாட்டி" என்று கேட்டிருந்தாள் கயல்.

"நான் தான்! .நாளை பின்ன எனக்கு கல்யாணம் ஆன பிறகு, நான் இன்னொருதருடைய பொண்டாட்டி தானே?. என்னை எப்படி அந்த ஆளு பிச்சை வாங்கிக்க என்கிற மாதிரி பேசலாம். இது மட்டும் என்னை கட்டாத புருஷனுக்கு தெரிஞ்சுது " என்று ஜாலியான மூடில் கயலிடம் பேசிக் கொண்டிருக்க!

"ஹலோ " என்ற இராணாவின் குரல் போனில் கேட்க!

சட்டென அடையாளம் கண்டு கொண்டவள். கயலின் தடுமாற்றம் தற்போது மண்டையில் உரைக்க!

"ணா காபி சாப்டீங்களா ணா? டிபன் சாப்டீங்களா ணா?" என்று சினிமா பாணியில் விசாரித்தாள்.

கோவத்தில் முகம் சிவக்க! "உன்னை கல்யாணத்துக்கு பிறகு வைச்சுக்கிறேன்" என்றான் பல்லைக் கடித்தபடி

"தப்பு தப்பா பேசக் கூடாதுங்கண்ணா. தப்புங்கண்ணா. அறியா புள்ள தெரியாம லவ் பண்ணிடுச்சுங்கண்ணா. நீங்க கல்யாணம் பண்ணி வீட்டோட மாப்பிள்ளையா நேத்ரனை கூட்டிட்டு போயிடுங்கண்ணா. பிறவி விமோசனம் எங்களுக்கு கிடைக்குங்கண்ணா" என்று அல்லி பேச பேச

கயலுக்கு சிரிப்பை அடக்குவது பெரும் பாடாக இருந்தது. 'எப்படி எல்லாம் சமாளிக்குது பாரு இந்த அக்கா' என்று!

அவனை பேசவே விடாமல், " அண்ணா எனக்கொரு டவுட்னா? உங்க வீட்டுக்காரம்மா உங்களை எப்படி கூப்பிடுவாங்க. எல்லார் முன்னாடியும் அண்ணா னு கூப்பிட்டால் தப்பா தெரியாது?"

"என் பேர் இராணா " என்றான் கோவத்தை அடக்கி,

"அதாங்கண்ணா.. இராணா? பிராணா? கவுனா?.. மீ னா? மு னா? கே னா?" இதெல்லாம் ஒரு பேரா னா?" என்று கிண்டலடித்தாள்.

"யூ ப்ளடி.. ..... .......... ......... ........ " என்று பல பல கலர் ஆங்கில வார்த்தைகளால் திட்டி தீர்த்து விட்டான். வாழ் நாளில் இப்படி யாரையும் பேசியிருக்க மாட்டான். ஏகத்திற்கும் அவன் பிபீயை எகிற வைத்திருந்தாள் அல்லி.

அவன் பேசி முடித்ததும்.. "ஹலோ.. ஹ..லோ.. இங்க டவர் கிடைக்கலை. பேசிறது கேட்குதா " என்று முடிப்பதற்குள்.. போனை சுவற்றில் தூக்கி வீசியிருந்தவனின் ஆக்ரோஷம் கயலை கதிகலங்க செய்தது.

கண்களில் கண்ணீர் பளபளக்க பயத்தில் வெடவெடத்தவளை கண்டு, "சாரி.. வேற போன் வாங்கி தரேன்" என்றவன். கோவம் குறையாமல் கூடத்திற்கு சென்று, பவி மறதியாக விட்டுச் சென்ற கவரை எடுத்துச் சென்றவனின் ஆட்டத்தை அல்லி அறிவாளா?

அல்லி மலர்க் கொடி வருவாள்..
 

Sirajunisha

Moderator
அத்தியாயம் :7
அப்பத்தா, வாணியிடம் பேசியதை பற்றி யோசனையூடே வந்தவர். இடையில் அல்லி, கயலிடம் பேசுவதையும் அரைகுறையாக கேட்டுக் கொண்டிருந்தார். அல்லி அழைப்பை துண்டித்ததும்,

"கயலிடம் எந்த அண்ணாவை பத்தி பேசுறவ?"

"ம்ம்! அறிஞர் அண்ணாவை பத்தி தான்" என்றாள் சிரிப்போடு

"ம்க்கும் " என்று நொடித்தவர். "நேத்ரனை பத்தி பேசுனியா?" என்றார் விடாமல்.

"இல்லை அப்பத்தா. பவியோட அண்ணன் பேரு இராணா. அதான் அந்த ஆளோட பொண்டாட்டி, அவர எப்படி கூப்பிடும்னு பேசிட்டு இருந்தேன்" என்றாள் கூலாக

"வயசு புள்ளைக்கிட்ட என்ன பேச்சு இது அல்லி!" என்றார் அப்பத்தா கண்டிக்கும் விதமாக

"ச்ச்சச.. நான் கயலிடம் கேட்கல அப்பத்தா. அந்த இராணாவிடமே கேட்டேன்" என்றார் குறும்பாக

"அதுக்குதே அத்தனை ணா போட்டியாக்கும்" என்று நொடித்தவர். "அவய் பொண்டாட்டி அவனை எப்படி கூப்பிட்டால் உனக்கென்ன? ஐயரு வீட்டு மாமியெல்லாம் புருஷன ஏன் னா தானே கூப்பிடுறாங்க! எத்தனை சினிமாவில் பார்த்திருப்ப" என்றார்.

"அதுக்கு இவர் பொண்டாட்டி மடிசார் கட்டிய மாமியா இருக்கனுமே? எனக்கு தெரிஞ்சு இவா அவா இல்லை" என்றாள்.

"யாராக இருந்தால் உனக்கு என்ன இப்போ?" என்றார்.

"அதில்லை அப்பத்தா! இவர் வேற இராணா னு பெயர் வைச்சிருக்காரா! இவங்களும் வேற ஆளுங்க போல! பலான நேரத்துல புருஷன இராணாவுக்கு பதிலா ! வெறும் காத்து தேன் வருதுன்னு, தேவர் மகன் ரேவதி மாதிரி 'இரா' வை முழுங்கிட்டு ணா ன்னு கூப்பிட்டு, இவருக்கு வந்த பீலிங்கெல்லாம் புஸ்ஸீசுன்னு போயிடுச்சுன்னு வைச்சுக்க! மனுசன் ஃபீல் ஆகிட மாட்டாரு?" என்று சிரிக்காமல் அப்பத்தாவிடம் கேள்வி எழுப்ப,

அப்பத்தாவுக்கு ஒன்றுமே புரியவில்லை. இவள் கேள்வியை மீண்டும் அசைபோட்டு பார்த்தவர். " எடு அந்த வெளக்கமாத்த! " என்று சுற்றி முற்றிலும் தேடும் போதே அல்லி சிரித்தபடி முன்னே ஓட ஆரம்பித்தாள்.

அப்பத்தாவும் அவளை விடுவதாய் இல்லை. " ஏன் டி? உனக்கு எவ்வளவு கொழுப்பு இருந்தால் இப்படியொரு கேள்வியை ஒரு ஆம்பளைய பார்த்து கேட்டிருப்ப? " என்றவர். அங்கே தெரு கூட்டி விட்டு ஓரமாக கிடந்த வெளக்கமாற்றையும் கையில் எடுத்துக் கொண்டு துரத்த ஆரம்பித்தார்.

அவரை அப்பப்போ திரும்பி பார்த்து ஒடிய படி, " அப்பத்தா, நான் அவ்வளவு விளக்கமா எல்லாம் கேள்வி கேட்கலை. உங்க பொண்டாட்டி உங்களை எப்படி கூப்பிடு வாங்கன்னு தான் கேட்டேன்" என்றவள். பக்கத்தில் வந்த சரிவில் புகுந்து அடுத்த தெருவுக்கு ஓடி விட்டாள்.

அவளது ஓட்டத்துக்கு ஓட முடியாமல், "எப்படி இருந்தாலும் வீட்டுக்கு தானே வரனும். அப்போ வைச்சிக்கிறேன் உன்னைய!" என்றவர். விளக்கமாற்றை ஓரமாக தூக்கி போட்டு விட்டு வீடு நோக்கி விறு விறுவென சென்றார்.

இராணாவின் கார் கிளம்பும் சத்தம் கேட்ட பிறகே! கயல் சுயத்துக்கு வந்தாள். தனித்தனியாக சிதறிக் கிடந்த போனை கையில் எடுத்தவள். அதை மீண்டும் ஒன்றாக்கி ஆன் செய்த போது, அல்லி மலரை போலவே! 'யாருகிட்ட? இதோ ஆன் ஆயிட்டேன் ல' என்பது போல வேலை செய்ய ஆரம்பித்தது.

"ஹப்பா! வேலை செய்யுது" என்று முணுமுணுத்தவள். போனை சார்ஜரில் போட்டு விட்டு, வெளி கேட்டை பூட்ட சென்றாள். 'இதை முன்னாடியே செய்திருக்கலாம்' என்று அறிவு இடித்துரைத்தது.

இரவு நெருங்க, வாணி வாசலுக்கும் வீட்டுக்குமாக நடைபயின்று கொண்டிருந்தார். இதுவரை அல்லி வந்த பாடில்லை. டிவியில் படம் பார்த்துக் கொண்டிருந்த கயலிடம்,

"கயல், அக்காவுக்கு போன் பண்ணி பாரு மா. இன்னும் வரலை. எப்போ கிளம்பினான்னு கேளு" என்றார்.

கயல், அல்லியின் போனுக்கு அழைப்பு விடுத்தாள். அழைப்பை எடுக்கவே இல்லை.

"அம்மா, அக்கா போனை எடுக்கலை. பஸ்ஸில் வந்து கொண்டிருக்கும் போல மா. ரிங் சவுண்ட் காதில் விழுந்திருக்காது. கொஞ்சம் நேரம் கழித்து போன் செய்யறேன்" என்று மீண்டும் டிவியில் மூழ்கினாள்.

மீண்டும் உள்ளே வந்தவருக்கு வருத்தமாக இருந்தது. 'ஆசையாக கிளம்பி இருப்பாள். கடைசி நேரத்தில் அது இது என சாக்கு சொல்லி அவளை இன்று வர சொன்னது தவறு. பொங்கல் கழித்து பவி வீட்டிலிருந்து வர சொல்லியிருக்கலாம்! என்று மனம் புலம்பியபடியே கயலின் அருகில் வந்து அமர்ந்தார்.

வாணியின் முகம் சோர்வாக இருப்பதை கண்ட கயல், " அக்கா வந்திடும் மா " என்றாள் தாயை தேற்றும் விதமாக

"ம்ம்ம் " என்றாள் முணங்கலாக

அப்போது தான் வீட்டினுள் வந்த நேத்ரன். "கயல் டீ போட்டு கொடு டா. தலை வலிக்குது " என்று தலைவலி தைலைத்தை மேசைமேல் இருந்து எடுத்து, தேய்த்தபடி வந்து அமர்ந்தான்.

"டீ போட்டது இருக்குண்ண. சூடு பண்ணி எடுத்துட்டு வரவா?" என்றாள்.

"ம்ம் " என்றான்.

"அம்மா உனக்கு?"

"இரண்டு தடவை குடிச்சுட்டேன் டி. வேண்டாம்" என்றார்.

"ஏன் மா? நிறைய போட்டுட்டீங்களா?" என்றான் நெற்றி பொட்டின் இரு புறமும் அழுத்தி விரல்களால் மசாஜ் செய்தபடி

"அது பவி வீட்டிலிருந்து வந்தவங்க யாரும் டீ குடிக்கலை. எடுத்துக் கொண்டு வந்ததை வேணாம்னு சொல்லிட்டாங்க. அது தான் இது " என்றபடி கயல் எழுந்து சென்றாள்.

கயல் டீ யை சூடு செய்து கொண்டு வந்து கொடுக்கும் வரை வாணியும் நேத்ரனும் தங்களுக்குள்ளேயே யோசனையில் மூழ்கி இருந்தனர்.

டீ கொண்டு வந்து கயல் கொடுக்க, அதை பெற்றுக் கொண்டவன். "அல்லி இன்னும் வரலையா?" என்றான் பொதுவாக

"இன்னும் வரலை. போன் பண்ணேன். ரிங் போகுது ஆனா எடுக்கலை " என்று கயல் சொல்லும் போதே அல்லியிடமிருந்து அழைப்பு வந்தது.

வேகமாக சென்று அழைப்பை இணைத்து, " ஹலோ " என்றார் வாணி.

" ஹலோ அம்மா. ஏன் மா போன் செய்திருந்தியா?" என்றாள்.

"எங்க டி வந்துட்டு இருக்க! எவ்வளவு நேரமாச்சு?" என்றார் பரிதவிப்பாக.
 

Sirajunisha

Moderator
"ரைட் ரைட்" என்பதன் கூடிய விசில் சத்தம் கேட்க, " அம்மா நான் திரும்ப சென்னைக்கு கிளம்பிட்டேன் மா. நான் வந்த பஸ்ஸு டையர் பஞ்சர். இருட்ட வேறு ஆரம்பிச்சிடுச்சு.. தனியா நிற்கிறது சேஃப் இல்லைன்னு. எதிரில் வந்த சென்னை பஸ்ஸில் ஏறிட்டேன்" என்ற போது!

"ம்மா கொஞ்சம் தள்ளி நில்லு மா. பேசன்சர் ஏறுறாங்கள்ள!" என்ற குரல் கேட்க, " நான் சென்னை போயிட்டு பேசறேன் மா" என்று அழைப்பை துண்டித்தவள்.

"டேய் நான் வந்து உன் பஸ் ல ஏறுறேன்னு சொன்னனா? நீ தானே வந்து ஏறுக்கா னு சொன்ன? இப்போ என்னமோ ரொம்ப ஓவரா பேசுற?. வண்டியை நிறுத்து நான் இறக்கிக்கிறேன் " என்று எகிறினாள்.

"சாரிக்கா சாரிக்கா.. அது என் மாமா பொண்ணு ஏறுனாளா! அதான்.. ஈஈஈ " என்று அசடு வழிய,

"எது? இந்த மூக்கு ஒழுவி மாமா பொண்ணுக்காக என்ன திட்டுவியா?" என்று அந்த சிறுவனிடம் மல்லுக்கு நின்றாள்.

அப்போது, " ஏன் டி கோட்டி சிறுக்கி. பனி பெய்யுதில்லை. வீட்டுக்கு வராம இன்னும் என்ன பண்றவ?" என்றார் அப்பத்தா.

"ஆத்தா.. நீ போ. நாங்க கொண்டு வந்து பத்திரமா வீட்டில விட்டிற்றோம் " என்றவன்.

"ட்ரும்.. ட்ரூம்.. ட்ர்ர்ர்ர் " என்று வாயாலயே சவுண்ட் கொடுத்தபடி, கயிறை பிடித்த படி ஒட, பின்னாலேயே வரிசையாக கயிற்று வளையத்துக்குள் நின்றபடி, சிறிசும் பொடுசுமாக ஒடினர். அல்லியும் அந்த சிறுவர்களின் கயிற்றின் உள்ளே பேருந்தாக பாவித்து கயிற்றினுள்ளே நுழைந்து கொண்டு அவர்களுடன் ஓடிக் கொண்டிருந்தாள்.

பஸ் அவர்களின் வீடு வந்ததும் நிற்க, குனிந்து வெளியே வந்ததும். "ரைட் ரைட் " என்று சிறுவன் ஒருவன் விசில் அடிக்க, " ட்ருரு.. " என்ற சவுண்ட் கொடுத்தபடி முதலில் நின்று கொண்டிருந்த சிறுவன் ஓட்ட, பின்னாலேயே மற்ற சிறுவர் சிறுமிகளும் ஓடினர்.

அல்லி வீட்டுக்குள்ளே வர, பின்னாலேயே வந்த அப்பத்தா, " நேத்து முழுக்க கண்ணு முழிக்காம சுரத்துல கடந்தவ? இன்னிக்கு பனியில போய் நிக்கிறியே? திரும்ப சுரம் வந்தா என்னாவரது?" என்றார் ஆதங்கமாக.

அவரை போய் கட்டிக் கொண்டவள். "அப்பத்தா இருக்க நான் ஏன் கவலைப்படனும்? ஜுரம் ல பயப்படனும் " என்றாள்.

"ம்க்கும் " என்று நொடித்தவர். "இதென்ன கட்டி பிடிச்சிட்டு பேசுற? நகரு " என்றவர். அவளிடமிருந்து விடுபட்டு கசாயம் வைக்க சென்றார்.

" உன் அம்மாவிடம் பேசினியா? " என்றார் அப்பத்தா. ஊதாங்குழலால் நெருப்பை பற்ற வைக்க ஊதியபடியே,

"இப்போ தான் பேசினேன் அப்பத்தா. சென்னைக்கு போறேன்னு சொல்லிட்டேன். அங்கே போய்ட்டு போன் பண்றேன்னு சொன்னேன்" என்றாள்.

"இங்க வந்தது பற்றி சொல்லலையா?"

"சொன்னால் வருத்தப்படுவாங்க, அவங்க சொன்னதை நம்பி இங்கே கிளம்பி வந்து! கடைசி நேரத்தில் பஸ் கிடைக்காம இரண்டு பஸ் மாறி ஏறி... " என்றவளின் முகம் வேதனையில் கசங்கிய்து.

"என்ன பார்க்க வாரது அவ்வளவு கஷ்டமான விசயமா? முகத்தை தூக்கி வைச்சிருக்க?" என்றார் அவர் மனநிலையை மாற்றும் பொருட்டு

"கடுப்ப கிளப்பாத அப்பத்தா. அப்படியே ஓடோடி வந்து பார்க்கிற மாதிரி தான் ஊரு இருக்காதுக்கும். கும்கி படத்தில வர ஊர் மாதிரி இருக்கு. என்ன இங்க கும்கிக்கு பதிலா நீ இருக்க" என்றாள் அங்கலாய்ப்பாக

திரும்பி பார்த்து அவளை முறைத்தவர். " நான் ஒன்னு சொல்றேன் கேட்குறியா கண்ணு" என்றார்.

"என்ன?"

"உன்னை பொண்ணு பார்க்க வரும் போது வாயை மட்டும் திறந்து பேசிப்புடாத ஆத்தா!" என்றார் தீவிரமான முக பாவனையில்

"ஏன்?"

"உன் வாய்க்கு எவனும் உன்னைய கட்ட மாட்டான். ஓடியே போயிடுவான் " என்றார் நக்கலாக

"எப்படி! தாத்தா உன்னைய விட்டு ஓடுன மாதிரி!. ஆனால் ஒன்னு அப்பத்தா, கல்யாணமான ஒரே வாரத்தில் மனுசன சன்யாசி ஆக முடிவெடுத்திருக்கார் னா! நீ என்ன பேச்சு பேசியிருப்ப!" என்று சிரித்தாள்.

" ம்க்கும். அவர் சன்யாசத்தை பத்தி பேசாத " என்று அவள் கிண்டலுக்கு முற்றுப்புள்ளி வைத்தவர். பிறகு அல்லிக்கு மீண்டும் கசாயத்தை போட்டு கொடுத்து குடிக்க வைத்தார்.

பிறகு, "நேத்ரன் அந்த புள்ளைய தான் கட்டிக்க போறானா?" என்றார்.

"விரும்புறவங்களை ஏன் அப்பத்தா பிரிக்கனும். இரண்டு குடும்பமுமே பேசி முடிவு பண்ணட்டும்" என்றார்.

"நீனும் அந்த குடும்பத்தில் ஒருத்தி தான்!" என்றார்.

"ம்ஹூம் " என்று விரக்தியாக சிரித்தவள். "அப்படியிருந்தால் என்னை ஏன்? வர விடாமல் செய்யனும் அப்பத்தா?"

"நீனும் சும்மா இருக்க மாட்ட?ஏதாவது வெடுக்குன்னு பேசி புடுவ.. அதுக்காக கூட இருக்கலாமில்லை" என்றாள்.

"நான் அப்படியிருந்ததால் தான் அப்பத்தா! தெரியாத ஊரில பல வருஷமா என்னையும் காப்பாத்திக்கிட்டு குடும்பத்துக்கும் உழைக்க முடியுது. என் குணத்தை புதுசாவா பார்க்குறாங்க எல்லாரும்" என்றவள்.

"இன்னைக்கு வர விடாம பண்ணாங்க! நாளை பின்ன கல்யாணம் ஏற்பாடாகி என் உறவே வைச்சுக்க கூடாதுன்னு சொன்னால் என்ன செய்யறது அப்பத்தா?" என்றாள்.

அவளை அழுத்தமாக பார்த்தவர். " பொண்ணோட பலவீனமே பாசம் தான் கண்ணு. அதை நம்மை மதிக்கிறவங்களுக்கும் உண்மையான அன்பை காண்பிக்கிறவங்களுக்கு கொடு! யாருன்னே தெரியாத பணக்கார குடும்பத்திலிருந்து கிடைக்கும்னு நினைக்காத! எதிர்ப்பார்க்காத! எதிர்பார்ப்பு இல்லைனா ஏமாற்றமும் இல்லை " என்றார்.

சற்று நேரம் அவர் சொன்னதை யோசித்தவள். "நேற்றைக்கு என்னை வர விடாம பண்ணினது என் குடும்பம் அப்பத்தா. நீ அடுத்த குடும்பத்தை பத்தி பேசிட்டு இருக்க " என்றவள்.

"யாரை நம்பி நான் பிறந்தேன். போங்க டா போங்க. என் காலம் வெல்லும் வென்ற பின்னே.. வாங்க டா வாங்க " என்று எம்.ஜி. ஆர் போன்று ஆக்க்ஷன் செய்தபடியே எழுந்து பாட

திடீரென அவள் எழுந்து நின்று பாடியதில் பயந்து போய் நெஞ்சில் கை வைத்து விட்டார். நெஞ்சு படபடவென அடித்துக் கொண்டது.

அப்பத்தா பயந்து போய் நெஞ்சை பிடித்தபடி இருப்பதை கண்டு, " அங்க என்ன சொல்லுது? அல்லி அல்லி சொல்லுதா?" என்று வி. டி கணேஷ் மாதிரி வேறு பேசிக் காண்பிக்கவும்,

"அடி கோட்டி சிறுக்கி" என்று திட்டியவர். மீண்டும் அடுப்படிக்கு எழுந்து படி, "யார் செஞ்ச பாவமோ? இப்படி அரைகிறுக்க பெத்திருக்கானே என் புள்ள!" என்று ஒப்பாரி வைக்கவே ஆரம்பித்து விட்டார்.

"எதே! அரை கிறுக்கா!"

"ஆமாண் டி. கிறுக்கி. இந்த கொடுமைய பார்க்காம என் புள்ள போயிட்டான். இவளை ஒருத்தன் கையில பிடிச்சு கொடுக்கும் வரை. இவளோட கிறுக்கு தனம் வெளியில தெரியக் கூடாது ஆத்தா. எவ வந்து கட்டிக்கிட்டு மல்லடிக்க போறானோ? யார் பெத்த புள்ளையோ?" என்று மேலும் புலம்ப!

"என்னை கட்டிக்க கொடுத்து வைச்சிருக்கனும்" என்று முணுமுணுத்தவள். "நீ ரொம்ப ஓவரா பெர்பாமென்ஸ் பண்ணி கடுப்பாக்காத. எனக்கு தூக்கம் வருது. நான் தூங்கப் போறேன். உன் பாட்டை கொஞ்சம் நிறுத்து " என்று கட்டிலில் படுத்து போர்வையை இழுத்து தலைவரை போர்த்திக் கொண்டு படுத்து விட்டாள்.

அப்பத்தாவின் புலம்பல் நிற்பதாக தெரியவில்லை. இவளை திட்டுவதும், அவளுக்கு வரப் போகும் கணவனை நினைத்து வருந்துவதுமாகவே இருந்தார்.

அல்லிக்கேத்த அர்ஜுனன் யாரோ? பொறுத்திருந்து பார்ப்போம்.
 

Sirajunisha

Moderator
அத்தியாயம் : 8
மறு நாள் மதியம் கறி விருந்தை முடித்து விட்டு அல்லி சென்னை கிளம்பினாள். நாளை போகலாம் என்றபோது அல்லி மறுத்து விட்டாள்.

"இல்லை அப்பத்தா. இங்கிருந்து இரண்டு பஸ் பிடித்து டவுனுக்கு போய், அங்கிருந்து மெயின் பஸ் ஸ்டாண்டு போகனும். அங்கிருந்து சென்னை போக எவ்வளவு நேரம் ஆகுமோ? பயணத்திலேயே பாதி நாளுக்கு மேல் ஆகி விடும். இப்போதைக்கு கிளம்பினால் உட்காரவாவது இடம் கிடைக்கும்" என்று தன் பாட்டுக்கு அப்பத்தா கொடுத்த ஊறுகாய், உப்பு கண்டம் போட்ட கறியை பையில் கவர் செய்து எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.

"அப்போ! வரும் போது நின்னுக்கிட்டே வந்தியா கண்ணு?" என்றார் பரிவாக.

"பொங்கல் லீவுக்கு எல்லாரும் ஊருக்கு போவாங்க அப்பத்தா. அதனால முதலிலேயே டிக்கெட் போட்டு வைச்சுக்கனும். அம்மா, குல சாமிக்கு பொங்க வைக்க இங்கே வரேன்னு சொன்னதால! நானும் இங்கே வந்தேன். போகும் போது அம்மாவுடன் சேர்ந்தே நம்மூர் போயிடலாம். பிறகு பொங்கலை கொண்டாட்டிட்டு ஊருக்கு போய் விட்டு அங்கிருந்து சென்னை கிளம்பலாம்னு இருந்தேன்.

இப்போ தனியாக தானே அப்பத்தா சென்னை போகனும். போய் ஒரு நாள் முழுக்க தூங்கி எழுந்தால் தான். சனிக்கிழமை வேலைக்கு போக முடியும் " என்றாள். பேக்கினுள் அப்பத்தா கொடுத்த சில உணவு பதார்த்தங்களை எடுத்து வைத்த படி

அப்பத்தாவுக்கு மனம் கனத்து போனது. சிறு பெண் இப்படிக்கு குடும்பத்திற்காக ஓடி ஓடி உழைக்கிறாளே! எத்தனை தூர பயணம்! அதனால் ஏற்படும் உடல்வலி, தலைவலி, உடல் சோர்வு . எதையும் வெளிக்காட்டாமல் மனதிற்குள்ளே போட்டுக் கொண்டு வெளியே சிரித்து, உள்ளே சோர்ந்து போய் இருப்பவளை பார்த்து, ' என் குலசாமி மலைப்பாவையே என் பேத்திக்கு நீதான் கடைசி வரை துணை இருக்கனும். அவ சந்தோஷமா புருஷன் புள்ள குட்டிகளோட நிறைவான வாழ்க்கையை அமைச்சு கொடு' என்று மனமாற வேண்டினார்.

அல்லிக்கு தேவையான பொருட்களை எடுத்துக் கொடுத்து பேக் செய்ய உதவினார். எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டதை சரி பார்த்துக் கொண்டு, காலேஜ் பேக்கை முதுகில் மாட்டிக் கொண்டவள். சிறு பேக்கை கையில் எடுத்துக் கொண்டு, " வரேன் அப்பத்தா" என்றாள்.

" வா. நானே வந்து பஸ் ஏத்தி விடுறேன்" என்று அப்பத்தாவும் உடன் கிளம்பினார்.

"நீ திரும்ப இவ்வளவு தூரம் நடந்து வரனும் அப்பாத்தா. வேணாம் "

"நான் என்ன புதுசாவா நடக்கிறேன். நீ வா " என்றவர். கதவை சாற்றி விட்டு முன்னே நடந்தார். வழியில் தென்பட்டவர்களிடம் விடைபெற்று நலம் விசாரித்து சென்றாள்.

குடியிருப்பு பகுதிகளை தாண்டியதும், " அல்லி கசாயத்துக்கு உள்ளதை பொடி பண்ணி டப்பியில வைச்சிருக்கேன். போன உடனேயே அழுப்பு படாம கொதிக்க வைச்சு குடிச்சிடு கண்ணு" என்றார்.

"சரி அப்பத்தா " என்றாள்.

சிறிது நேரம் கழித்து, " உன் அண்ணன் கல்யாணத்தை பத்தி என்ன முடிவு பண்ணி இருக்க? " என்றார் மெதுவாக.

" என்னைக்கு இருந்தாலும் நேத்ரனுக்கு கல்யாணம் செய்ய தான் போறோம். அது அவனுக்கு பிடிச்ச பெண் கூட நடந்தால் சந்தோஷமா இருப்பான். அவங்களே விரும்பி வந்து கேட்கும் போது கல்யாணம் கட்டி வைக்கலாம் " என்றாள்.

" ஆனால் அந்த குடும்பம் உன்னை ஒதுக்கி விட்டுறுவாங்க போலயே" என்றாள் வருத்தமாக

" படைச்ச கடவுளை தவிர, எதற்கும் யாரையும், நான் எதிர் பார்க்கலை . வேலையிருக்கு, வருமானம் வருது. நாளைக்கு எனக்கும் புருஷன் பிள்ளைன்னு வரும். நான் என் குடும்பத்தை பார்த்துட்டு போயிடுவேன். இதுல இவங்களை பற்றியெல்லாம் கவலை பட முடியுமா அப்பத்தா " என்றவள்.

சற்று யோசித்து, " அம்மா எப்படியும் போனில் நேத்ரன் கல்யாணத்தை பத்தி உங்கிட்ட பேசுவாங்க. கல்யாணத்தை பேசி முடிக்க சொல்லு. " என்றவள்.

"பொண்ணு பார்க்க பேசி முடிக்க நீ போவ தானே? அப்போ நீ தான் பெரிய மனுசியா சில விவரங்களை தெளிவா பேசனும். எங்கம்மா பயப்படும். அதனால, கல்யாணத்துக்கு பிறகு நேத்ரனையும் அவன் மனைவியையும் தனி குடுத்தனம் வைக்க சொல்லிடு. அதோட தேவையில்லாமல் போய் அவங்களை தொல்ல பண்ண கூடாது. நல்லது கெட்டது எதையும் அவங்களே வாழ்ந்து கத்துக்கட்டும்.

சும்மா சும்மா அம்மா, அண்ணன்னு போய் நிக்க கூடாதுன்னு அந்த புள்ளைக்கிட்டயும் சொல்லிடு. அப்புறம் நம்ம குடும்பத்துக்கும் நேத்ரன் மாதா மாதம் குடும்ப செலவுக்கு இப்போ குடுக்கிற மாதிரியே 20000 கொடுக்கனும் சொல்லு "என்றதும்.

" இதுவரைக்கும் அவன் குடும்ப செலவுக்கு கொடுத்ததே இல்லைன்னு உங்க அம்மா சொல்லுவா?"

"உண்மை தான். ஆனால் அதை சபையில சொல்ல முடியுமா? அதனால மாத குடும்ப செலவுக்கு பணம் கொடுக்கனும் கரக்ட்டா சொல்லிடு. அப்போ தான் 10000 ம் ஆவது கொடுப்பான். சின்னவளுக்கு கல்யாண நகையெல்லாம் செய்ய உதவும்" என்று முடித்த போது பஸ் தரிப்பிடம் வந்தனர். அப்போது பஸ்ஸும் வர ,

"அப்பத்தா பஸ் வருது. நான் கிளம்பறேன். உடம்ப பார்த்துக்க. நான் சொன்னதை மறந்துடாத " என்றபடி பஸ்ஸை நிறுத்தி ஏறிக் கொண்டாள்.

" நீ பத்திரமா இருந்துக்க. போனதும் போன் பண்ணு " என்றார். பஸ் நகர ஆரம்பித்தது. தலையசைத்து அப்பத்தாவிடம் விடை பெற்றாள்.

'அனைத்தையும் யோசித்து செய்கிறாள். தெளிவும் அறிவும் சாஸ்தி. அப்படியே அவ தாத்தனை போல!' என்று பெருமை பட்டுக் கொண்டே வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

அவள் சென்னை வந்து இறங்கிய போது மறு நாள் பொழுது புலர துவங்கியிருந்தது. வரும் போதே சில காலை உணவை கையேந்தி பவனில் சாப்பிட்டு விட்டே வீடு வந்து சேர்ந்தாள். போனை சார்ஜ் போட்டு விட்டு, அப்பத்தா கொடுத்த பொருட்களை எடுத்து வைத்தாள். வெந்நீர் போட்டு தலைக்கு குளித்த பிறகே, ரெப்பெஷாக உணர்ந்தாள். மறக்காமல் அப்பத்தா சொன்ன மாதிரியே கசாயத்தை போட்டு குடித்த போது, அப்பத்தாவிடமிருந்து போன் வந்தது. சென்னை வந்து சேர்ந்ததை சொல்லி விட்டு, நலத்தை விசாரித்து விட்டு அழைப்பை துண்டித்தாள்.

பிறகு நல்ல உறக்கம். புவனா வரும் வரை சோம்பலாக சுற்றிக் கொண்டு, வேலைக்கு சென்று வந்தவளுக்கு புவனா வந்த பிறகு நேரம் ரக்கை கட்டி பறந்தது.

"ஆர் யூ ச்யூர்? " என்றபடி மீண்டும் மீண்டும் அந்த புகைப்படத்தை உற்று பார்த்து கேட்டுக் கொண்டிருந்த கவின். அருகில் அமர்ந்து தனது லேப்டாப்பில் தீவிரமாக டைப் செய்து கொண்டிருந்த மற்றவனின் பார்வையின் முன் தனது செல்போனுக்கு வந்திருந்த போட்டோவை காட்டினான்.

"யா ச்யூர் பையா. நேத்ரன் தான் அவங்க டிபில போட்டோ இருக்கும்னு சொன்னாங்க. அதிலிருந்த போட்டோ தான் இது" என்றாள்.

"நேத்ரனிடம் கன்பார்ம் பண்ணியா?" என்றபடி கவினின் செல்போனில் காட்டிய போட்டோவை பார்த்தவனின் கண்கள் திரும்ப திரும்ப அதையே உற்று உற்று பார்த்துக் கொண்டிருந்தது.

"எனக்கு நல்லா தெரியும் பையா. அவங்க எதோ பங்சனில் கலந்து கொண்ட போது போட்ட டிரெடிசனல் டிரஸ்ஸாம். அதில் கொஞ்சம் சுமாராக தான் இருப்பா. அதை வைச்சு நாங்க கிண்டல் பண்ணுவோம்னு ஏற்கனவே சொல்லியிருக்கார்" என்றாள் பவி.

"டிரஸ் எப்படி வேணும்னாலும் இருக்கட்டும். ஆனால் இது.. இது.. " என்றபடி கண்ணை இறுகி மூடி திறந்தவன். "அவசியம் உனக்கு நேத்ரன் தான் வேணுமா பவி " என்று கேட்க வைத்தது.


பவி அந்த கேள்வியில் சற்றே அதிர, கவின் தான் முந்திக் கொண்டு, "அந்த பொண்ணு எப்படி வேண்டுமென்றாலும் இருக்கட்டும். இவ விரும்பறது நேத்ரனை தானே" என்றான் அவசரமாக.

அவனை முறைத்த இராணா, "பவி நேத்ரன் ஒ.கே. பட் எதிர்காலத்தில் இவர்களை போல இல்லாமல் இந்த பெண் மாதிரி குழந்தை பிறந்தால் என்ன செய்வது என்றும் யோசித்துக் கொள்" எனும் போதே!. அவனது போன் இசைக்க, அழைப்பை இணைத்து, " ஹலோ " என்றபடியே நுனிநாக்கு ஆங்கிலத்தில் மறுநாள் அவனது வெளிநாட்டு பயணத்தை பற்றி பேசியபடி லேப்டாப்பை கையில் எடுத்துக் கொண்டு அந்த மாளிகையின் உள்ளே சாவதானமாக சென்றான்.

வருத்தமாக கவினை நிமிர்ந்து பார்க்க, பெருமூச்சு விட்டவன். "நன்றாக யோசி டா. இப்போது கூட உனக்கு வாய்ப்பிருக்கு " என்றபடி கவினும் எழுந்து சென்று விட்டான்.

'அப்படியென்ன போட்டோ வைத்திருப்பாள் அல்லி மலர்க் கொடி' ஆத்தே!

பவி தான் இயோது தலையில் கை வைத்தபடி அமர்ந்திருந்தாள். அல்லியை கிண்டலடிப்பதற்காக அவள் போட்டோவை போய் அண்ணன்களிடம் காண்பிக்க, அது மீண்டும் மீண்டும் அவளது திருமணத்தை நிறுத்துவதிலேயே போய் நிற்கிறது. திருமணம் முடியும் வரை இவளை பற்றி யாரிடமும் பேசக் கூடாது என்ற முடிவுக்கு வந்து விட்டாள்.

மும்பையிலேயே படிப்பு வாழ்க்கை என இருந்தவளுக்கு ' இந்த அல்லியை' தெரிய வாய்ப்பில்லாமல் போய்விட்டது.. அல்லி வருவாள்..
 

Attachments

  • Screenshot_20221223-211627_YouTube.jpg
    Screenshot_20221223-211627_YouTube.jpg
    306.3 KB · Views: 9
Last edited:

Sirajunisha

Moderator
அத்தியாயம் : 9
காலமும் நேரமும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. வழக்கமான சேட்டைகள் மற்றும் குறும்புகளுடன் அல்லியும் புவனாவும் வேலைக்கு சென்றனர். பொதுவான நல விசாரிப்புகள் வாணி போன் செய்தால், "ஹலோ" என்றதுமே!

"ஹலோ சொல்லுமா? கயல், நேத்ரன், நீ எல்லாரும் நல்லாயிருக்கீங்களா?" என்பவள். அவர் பதில் சொல்லும் முன்பே, " ஏன் மா? ஏதாவது அர்ஜண்ட்டா பணம் வேணுமா? என்று கேட்டிருப்பாள்.

"ஆமாம் மா. இந்த மாசம் செலவுக்கு கொஞ்சம் சேர்த்து பணம் அனுப்பி விடு மா. பக்கத்து வீட்டு லெஷ்மிக்கு கல்யாண சீர் வாங்க போறாங்க. அங்கேயே சீட்டு பிடிக்கிறாங்களாம். சீட்டில் சேர்ந்தால்! நாமளும் கல்யாணத்துக்கு சீர் வாங்கனும் என்று அந்த நேரம் பணத்துக்கு அழைய வேண்டாம் பாரு " என்றார்.

"எவ்வளவு பணம்? எத்தனை மாசம் கட்டனுமாம்?"

"தெரியலை மா. போனா தானே தெரியும். இரண்டு வருசம், மூனு வருசம் ஏன்? ஐந்து வருசம் கட்டுவதெல்லாம் இருக்காம் . வருசம் கூட ஆக, கட்டுற தொகையும் குறையும். நம்ம சின்ன குட்டிக்கு போடலாம் னு நேத்ரன் கூட சொன்னான். நீ என்ன அல்லி சொல்ற?" என்றார்.

"முடிவெடுத்தாச்சுல்ல மா. பிறகு ஏன் கேட்கிறீங்க?. போய் பார்த்துட்டு வந்து விவரம் சொல்லுங்க. பணம் சேர்த்து அனுப்பி வைக்கிறேன். வேலைக்கு டைம் ஆச்சு வைக்கிறேன் " என்று அழைப்பை துண்டித்து விட்டாள்.

இப்போதெல்லாம் குடும்ப விசயங்களை அப்பத்தாவே போன் போட்டு அல்லிக்கு சொல்லி விடுகிறார். ஏனோ! அல்லியை அனைவரும் தனியாக விட்டுவிடுவார்களோ? என்ற பயம் உள்ளுக்குள் அவருக்கு இருந்து கொண்டே இருக்கிறது. தூரத்தில் இருப்பதால் அவளுடைய கஷ்டங்கள் கண்ணில் படாமல்! நன்றாகத் தானே இருக்கிறாள்! புத்திசாலி எதையும் சமாளிப்பாள் என்ற மனப்போக்கு உள்ளதை அப்பத்தா கண்டு கொண்டார். அதனால் ஒவ்வொரு விசயத்தை அல்லிக்கு தெரியப்படுத்தி கொண்டிருந்தார்.

பவி, "நேத்ரனை தான் திருமணம் செய்து கொள்வேன்" என்று பிடிவாதமாக கவினிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தாள்.

"சொல்வதை கேளு பவி. எத்தனை முறை சொல்வது. நாம சொல்ற கண்டிஷனுக்கு அவங்க ஒத்து வர மாட்டாங்க. இங்கே செல்லமாகவும் வசதியோடும் வளர்ந்திட்டு! அங்கே போய் அப்படியெல்லாம் இருக்க முடியாது. அன்றைக்கு உன்னோட பிடிவாதத்துக்காக தான் நாங்க வந்தோம். அங்கே என்ன மரியாதை கிடைச்சுது. அந்த பொண்ணு போனில் என்னவெல்லாம் பேசுது.

அவங்களோட குணமும் தரமும் அவ்வளவு தான்னு அண்ணன் கூட சொல்லலை" என்றான் கவின் அவளுக்கு புரிய வைத்திடும் விதமாக.

"நீங்க தான் அன்றைக்கு கல்யாணம் செய்து வைக்கிறேன். நேத்ரன் நல்ல பையனா தான் தெரியறானு சொன்னீங்க! இப்போ வேற மாதிரி பேசுறீங்க?" என்றாள் அழுகையில் தொண்டையடைக்க

"அட டா! எதுக்கு இப்போ அழுகை? " என்று வேகமாக வந்து அவள் கண்ணீரை தனது கைகக்குட்டையால் துடைத்து விட்டவன். " இராணா அண்ணனுக்கு இதில் விருப்பம் இல்லை. அம்மாவிடம் இது பற்றி பேசி, அண்ணனிடம் பேச சொல்லலாம் சரியா?" என்றான் ஆதூரமாக.

"ம்ம்ம் " என்று ஆமோதிப்பாக தலையசைத்தவள்.

"உனக்கும், நான் நேத்ரனை கல்யாணம் செய்வதில் விருப்பமில்லையா? அவiரிடம் நீ சரியாகவே அன்றைக்கு பேசலையே? இராணா அண்ணன் மட்டும் தானே பேசினாங்க" என்றாள்.

"உன்னுடைய சந்தோஷம் தான் பவி எங்களுக்கு முக்கியம். நேத்ரனை பிடிச்சிருக்கு. நல்ல பையனாக தான் தெரியறார். அவரோட அம்மா, தங்கச்சி எல்லாரும் நல்ல விதமாக பேசுறாங்க பழகுறாங்க" என்றவன்.

"ஆனால் வசதி வாய்ப்பில் நம்மை விட ரொம்ப ரொம்ப குறைவு. இன்றைக்கு அவசரப்பட்டு கல்யாணம் செய்து விட்டு பின்னாலில் வருத்தப்பட முடியாது இல்லை யா பவி?"

"இதையே தான் ராணா பையாவும் சொன்னாங்க. இரண்டு பேரும் இதையே பேசுறீங்க? வசதி இருந்தால் தான் சந்தோஷமா வாழ முடியுமா? அப்படி பார்த்தால் அந்த வசதி நம்மிடம் இருக்கே? நானும் உங்க கூட தானே இருக்க போகிறேன். வீடு வாங்கி கொடுப்பதாக சொன்னீங்க!. அப்போ எல்லா வசதியோடும் செய்து கொடுப்பீங்க தானே? வசதி வாய்ப்போடும் நானும் இருப்பேன். பிறகு ஏன் இப்படியெல்லாம் பேசுறீங்க?" என்றாள் ஆதங்கமாக.

"பவி முதலில் நான் என்ன சொல்ல வரேன்னு புரிஞ்சுக்க! வசதி நம்மிடம் மட்டும் தான் இருக்கு. நாங்க உனக்கு செய்யறது அன்புக்காக. இதைவிட இன்னும் நிறையவே செய்வோம். ஆனால் அவங்களிடம் வசதிகளோ அந்தஸ்தோ இல்லை. நம்ம ரிலேடிவ் சைட்ல நம்மோட பிஸ்னஸ் பண்ணிட்டு இருக்கிறவங்க எல்லாம் கேட்க மாட்டாங்களா? ஏன் ஒரே தங்கைக்கு இப்படி மாப்பிள்ளை பார்த்திருக்கீங்க என்று? இதெல்லாம் நமக்கு அவமானம் இல்லையா? நம்ம வீட்டுக்கு மருமகள் வருவாங்க. அவங்க உன்னையும் உன் குடும்பத்தையும் மதிப்பாங்களா?" என்றதும்.

"நீங்க யாரை மனசில வைச்சிட்டு இதெல்லாம் பேசுறீங்கன்னு? எனக்கு தெரியும். என்னோட விருப்பத்தையும் சந்தோஷத்தையும் விட உங்க இரண்டு பேருக்குமே உங்க மாமனார் வீட்டீல என்ன சொல்லிடுவாங்க அப்படிங்கிறதும், அவங்க பொண்ணுங்களோட விருப்பமும் தான் பெருசா போயிடுச்சு இல்லையா? என்றவள். "நீங்க யாரும் எனக்கு வேணாம். யூ ஆர் லையர்ஸ்(பொய்யர்கள்). அண்ட் செல்ப்பிஷ் " என்று கத்தி அழுதபடி வேகமாக ஓட,

பின்னாடியே கவினும் சமாதானப்படுத்த ஓடினான். ஆனால் அதற்குள் தனது தாயின் அறைக்கு சென்று கதவை தாழிட்டுக் கொண்டவள். நடக்க முடியாமல் வாத நோயினால் கால்கள் செயலிழந்து, மாத்திரையின் உதவியால் உறங்கிக் கொண்டிருக்கும் தாயின் கைகளை பிடித்துக் கொண்டு கதறி அழ தொடங்கினாள்.

"பவி கதவை திற. அம்மாவை டென்சன் பண்ணாத. அவங்க பக்கத்தில் உட்கார்ந்து அழாதே. அவங்க பயந்திடு வாங்க " என்றான்.

பவி அழும் குரல் மட்டுமே கேட்டதே தவிர, கதவு திறந்த பாடில்லை. இதற்கு மேல் இவளை சமாளிக்க முடியாது என்று நினைத்தவன்.
 

Sirajunisha

Moderator
"பவி சொல்வதை கேளு. அண்ணன் ஏர்போட்டிலிருந்து வீட்டுக்கு தான் வந்துட்டு இருக்காங்க. உன் மேரேஜ் பற்றி இப்போவே பேசி முடிவு பண்ணலாம். ப்ளீஸ் கதவை திற டா. நான் பேசறேன். ஐ ப்ராமிஸ் யூ. நீ அழுததை பார்த்து அம்மாவுக்கு ஏதும் ஆயிட போகுது. ப்ளீஸ் கதவை திற " என்று கெஞ்சிக் கொண்டிருந்தான்.

அந்த மாளிகையின் உள்ளே நுழைந்த சொகுசு காரின் ஹாரன் ஒலிக்க, " பவி, அண்ணன் வந்துட்டாங்க. நேரா அம்மாவை பார்க்கத்தான் வருவாங்க. கதவை திறந்து வை" என்றபடி படிகளில் இறங்கி இராணாவை வரவேற்க ஓடினான்.

காரிலிருந்து இறங்கியதுமே, " வாங்க. டிராவலிங் எப்படி இருந்துச்சு அண்ணா " என்றபடி கவின் இன்முகத்தோடு கட்டியணைத்து இராணாவை வரவேற்றான்.

"யா பைன் கவின் " என்றபடி அவனை அணைத்து விடுவித்தவன். பவி வராததை கண்டு, " பவி எங்கே? அம்மா நல்லாயிருக்க தானே?" என்றான்.

"பவி அம்மா ரூமில் இருக்கிறா " என்றதும்.

"ஓ! ஓ.கே " என்றவன். வீட்டில் வேலை செய்யும் சாமிநாதன் வர, "சாமி லக்கேஜை ரூமில் எடுத்து வைச்சிடுங்க " என்றபடி தனது அம்மாவை காண சென்றான்.

"பிசியோ தெரபிஸ்ட் வந்தாங்களா? இப்போ எப்படி இருக்காங்க?" என்று கவினிடம் கேட்டு, விபரம் அறிந்து கொண்டே அம்மா ராஜலெட்சுமியை காண அறை கதவை திறந்தான்.

கதவு திறந்து கொண்டதும் தான். கவினுக்கு உயிரே வந்தது. வாசலில் நின்றபடியே ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த தாயை கண்டான். அவரது கம்பீரமான பழைய தோற்றம் கண்முன் வந்து போனது. அப்போது இருந்ததுக்கும் இப்போதைக்கும் எவ்வளவு மாற்றம்!.

விசும்பல் ஒலியில் தான்! கதவருகில் பவி நிற்பதையே கவனித்தான். அழுது சிவந்த கண்களும் , கண்ணீர் துடைத்த கன்னங்களும் கண்டு மனம் திடுக்கிட, " பவி " என்றான்.

ஒடி வந்து அண்ணனின் நெஞ்சில் சாய்ந்து கொண்டு, மேலும் அழ, புரியாமல் கவினை பார்த்தான் இராணா.

"பவி, அம்மா முழிச்சிடுவாங்க. நீ கீழ வா. நாம பேசலாம்" என்றவன். இராணாவின் ' என்ன?' என்பது போல பார்வையை புரிந்து கொண்டு, "பவி மேரேஜ் பற்றி .. " என்றதும்..

"டின்னர் சாப்பிட்ட பிறகு, அம்மாவிடம் இது பற்றி கலந்து பேசி முடிவெடுக்கலாம்" என்று பவியின் தலையை அன்பாக வருடினான்.

பவி சமாதானாமாகி " ம்ம்ம்" என்றாள்.

"நான் போய் ரிப்ரெஷ் ஆகிவிட்டு வருகிறேன்" என்று பொதுவாக சொல்லி விட்டு தனது அறைக்கு சென்று விட்டான்.

இரவு நேரம் வீட்டில் அமைக்கப்பட்டிருந்த லிப்டில், நர்ஸ் உதவியுடன் வீல் சேரில் அமர்ந்தபடி வந்து இறங்கினார் ராஜலெட்சுமி. அமர்ந்திருந்தாலும் அவரது பார்வையில் கம்பீரமும் ஆளுமையும் எப்போதும் இருக்கும்.

டைனிங் டேபிள் அருகில் வந்து அவரது வீல் சேரை நிறுத்தி விட்டு, நர்ஸ் நகர்ந்து சென்று விட்டார். பவி தலையை குனிந்த படி ஏதோ யோசனையில் அவர் வந்தது கூட தெரியாமல் தன்னை மறந்து அமர்ந்திருந்தாள்.

"பவி அப்படியென்ன யோசனை?" என்ற குரலில் திடுக்கிட்டு நிமிர்ந்தாள்.

ப்ளேட்டை அவளுக்கு நகர்த்தி வைத்தவர். "இராணாவும் கவினும் எங்கே?" என்ற போது கவின் வந்து பவியின் அருகில் போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்தான்.

'இராணா எங்கே?' என்பது போல பார்வையை சுழல விட, அவருக்கு பின்புறமாக அவனின் குரல் கேட்டது. நாற்காலியை கை வைத்து சுழற்றி திரும்பி பார்க்க, இரணதீரன் வந்து கொண்டிருந்தான்.

ஆறடி உயரம், இள ரோஜா நிறம், அவனது வழமையான உடற்பயிற்சியால் கட்டுமஸ்தான தேகம் கூடுதல் அழகை கொடுத்தது. அலையலையான அடர்ந்த கேசம், அடர் நீல பனியனும் வெள்ளை நிற டிராக் பேண்ட்டும் ஆடைகளில் தேர்வையும் ,நிறத்தின் ரசனையை வெளிப்படுத்துவதாய் அமைந்தது.
அழுத்தமான காலடிகளுடன் போனில் பேசியபடியே வந்தவனின் குரலில் ஆளுமையும் கட்டளையுமே தெரிந்தன.

அனைவரும் டைனிங் டேபிளில் அமர்ந்திருப்பதை கண்டு, சுருக்கமாக பேசி இணைப்பை துண்டித்து போனை பாக்கெட்டில் போட்ட படி வந்து தாயின் அருகில் உள்ள இருக்கையில் அமர்ந்தவன்.

"அப்படியென்னம்மா என்னையே பார்த்துட்டு இருக்கீங்க? ஏதாவது முக்கியமான விசயம் பேசனுமா?" என்றான். தட்டில் இலகு உணவான இடியாப்பத்தை ராஜலெட்சுமிக்கு பரிமாறியபடி

"இந்த இராணாவுக்கேத்த ராணி எப்போ வருவாள்னு யோசிச்சிட்டு இருந்தேன் பா" என்றார் புன்சிரிப்போடு

'ராணி என்றதுமே, பவிக்கு நேத்ரன் சொன்ன அல்லி ராணி தான் அழையா விருந்தாளியாக நினைவில் வந்தாள். கூடவே நேத்ரன் உடனான திருமணம் நினைவில் வந்து காதல் கைகூடுமா? என்று கண்கள் கலங்கியது.

"அண்ணணுக்கு தான் பொண்ணு ரெடியா இருக்காங்களே மா. மாப்பிள்ளை சரியென்று சொன்னால் உடனே கல்யாணம் தான் " என்றான் கவின் சிரிப்போடு.

"அப்படியே உனக்கும் சேர்த்தே சொல்லறது தானே!" என்று ராஜி அவனை வாரினார்.

இராணா எந்த பதிலும் சொல்லாமல் சப்பத்தாயை சென்னா மசாலாவுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அவனது அமைதி ஏதோ இடற, " என்ன விசயம் பா?" என்றார் இராணாவை கையை பற்றி

"முதலில் பவி திருமணத்தை பற்றி பேசலாம் மா. சாப்பிடுங்க" என்று மீண்டும் சாப்பிடத் தொடங்கினான்.
அதன் பிறகு சாப்பிட்டு முடியும் வரை வேறெந்த பேச்சுகளுமே இல்லை.

சாப்பிட்டு முடித்து, தோட்டத்தில் சீராக வெட்டி விடப்பட்ட புல்தரையில் வெறும் காலால் நடந்தபடி வீல் சேரை நகர்த்தி கொண்டு வந்து வட்டமாக போடப்பட்டிருந்த கல் இருக்கையின் முன் வந்து நிறுத்தினான்.

அவனே பேசட்டும் என்று பொறுமை காத்தார் ராஜி. கவின் மற்றும் பவி இருவரும் மற்ற கல் இருக்கைகளில் அமர்ந்து கொண்டனர்.

பிறகு, "பவிக்கு ஒரு பையனை பிடிச்சிருக்குமா. பெயர் நேத்ரன் என படிப்பு, வேலை, குடும்ப நிலை உடன் பிறந்தவர்கள் என அனைத்து விவரத்தையும் சொல்லி முடியும் வரை பொறுமையாக அனைத்தையும் கேட்டுக் கொண்டார்.

"இதெல்லாம் உண்மையா பவி?" என்றார் ராஜி.

"ஆமாம் மா. நான் கல்யாணம் ஒன்னு செய்து கொண்டால் நேத்ரனை தான் செய்து கொள்வேன்" என்றாள் பிடிவாதமாக.

"அப்படியென்ன 'நேத்ரனை' மட்டும் தான். அப்படியென்ன அவனிடம் இருக்கு?" என்றார் கோபமாகவே

"என் மேல உண்மையான அன்பு இருக்கு. குடும்பத்தின் மீது பாசம் இருக்கு. முக்கியமாக பெண்களை மதிக்க தெரிஞ்சு இருக்கு. பணத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காதவர்" என்றதும்.

ராஜி சிரிக்க ஆரம்பித்து விட்டார். அந்த சிரிப்பே சொன்னது அவர் கிண்டலாக சிரிப்பதை! சற்று ஆசுவாசப் படுத்திக் கொண்டவர். "பணத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காதவர் தான். பணக்கார பெண்ணை பார்த்து லவ் பண்றாரா?" என்றார் நக்கலாக.

"நான் அவரை காதலிக்கிறேன்னு சொன்ன போது, நம்முடைய செல்வாக்கோ பணபலமோ அவருக்கு தெரியாது. அவர் விரும்பினது சாதாரண பவித்ராவை மட்டும் தான். தீரன் குரூப் ஆப் கம்பெனிஸின் குடும்ப பெண்ணை அல்ல" என்றவள்.

வீல் சேரின் அமர்ந்திருந்த தாயின் கைகளை அவர் முன் மண்டி போட்டு அமர்ந்து பிடித்துக் கொண்டவள். "அம்மா ப்ளீஸ் மா. தயவுசெய்து நேத்ரனை எனக்கு திருமணம் செய்து வைத்து விடுங்கள். இது இனக்கவர்ச்சியோ! வயசுக் கோளாறோ இல்லை மா.

அவர் கூட இருக்கும் போது நான் பாதுகாப்பை உணர்ந்திருக்கேன். அண்ணன் கூட இருக்கும் போது அப்பா கூட இருந்த போது, கூட பத்து பேர் நின்றாலும் , நான் எப்படி பயமில்லாமல் இருப்பேனோ? அப்படியொரு பீல் நேத்ரன் கூட இருக்கும் போது எனக்கு கிடைச்சுது மா. நான் அவர் கூட இருந்தால் சந்தோஷமா இருப்பேன் மா" என்றபடி அவர் கைகளில் முகத்தை வைத்து குலுங்கி அழுதாள்.

மகள் அழுவது மனதில் பரிதவிப்பை கொடுத்தாலும், சற்று நேரம் கண்ணை மூடி யோசித்தவர்.

"அந்த பையனை பற்றி உங்க இரண்டு பேரோட முடிவு என்ன?" என்றார்.

"நல்ல பையன் தான். படிப்பு, குணம் எல்லாம் ஒ.கே தான்" என்றான் கவின்.

"ஆனால் வசதி வாய்ப்பில் நம்மை விட வெகு குறைவு. அதோட அவங்க குடும்பத்தில அவருக்கு சிஸ்டர்ஸ் இரண்டு பேர் இருக்காங்க. அவங்களை திருமணம் செய்து கொடுக்க வேண்டிய பொறுப்பு அவருக்கு இருக்கு" என்றவன்.

"ஏன்? இதை முன்னாடியே சொல்கிறேன் என்றால்! உங்கள் திருமணத்திற்கு பிறகு அந்த பெண்களின் திருமணத்திற்கு பணம் காசு என்று உன்னிடம் வந்து கேட்க கூடாது. ஏற்கனவே அந்த குடும்ப பெண்ணின் மருத்துவ செலவுக்கு நீ பணம் கொடுத்திருக்க!" என்றதும்.

"அப்படியில்லை அண்ணா. அந்த பெண்ணிடம் பேச வேண்டி நானாக தான் அப்படி சொல்ல சொன்னேன். செலவு எதுவும் நான் செய்யலை" என்று உண்மையை ஒப்புக் கொண்டாள்.

"ஏன்? சாதாரணமாக பேசினால் அந்த பொண்ணு பேச மாட்டாளா?" என்றார் ராஜி.

"அது.. அந்த பொண்ணு நேத்ரனிடமே டக்குன்னு முகத்திலடித்தது போல பேசி கேட்டிருக்கேன். அதனால உதவி செய்ததாக சொல்லி பேச்சை ஆரம்பித்தால் கொஞ்சம் இலகுவாக பேசலாமென்று தான்!" என்றாள் தயங்கியபடி

இராணா அவளை முறைப்பதை பவியால் நன்றாகவே உணர முடிந்தது. அவன் பக்கம் தலையை திருப்பவே இல்லை.

பிறகு மெல்ல, பொறுப்பை தட்டிக் கழிக்க மாட்டார் மா. அவரோட சிஸ்டர் மேரேஜ்க்கு பிறகு தான் எங்க காதலை பற்றி வீட்டில் சொல்லுவேன்னு.. ரொம்ப உறுதியாக இருந்தார்.

"அவர் வீட்டிற்கு லீவுக்கு போன போது நான் போன் பண்ணேன். அதை அவர் சின்ன தங்கச்சி எடுத்து விட்டாள். விசயம் எல்லாருக்கும் தெரிந்து விட்டது" என்றார்.

"இது பற்றி யோசித்து காலையில் முடிவு சொல்கிறேன். நீ போ" என்று அறைக்கு அனுப்பி வைத்தவர். இரு மகன்களிடமும் திருமணத்தை பற்றிய அபிப்ராயத்தை கேட்டார்.

"வசதி வாய்ப்பு இல்லையே தவிர, நல்ல பையன் நல்ல குடும்பம் தான் மா. நான் விசாரித்து விட்டேன்" என்றான் கவின்.

"நீ என்னப்பா சொல்கிறாய்?" என்றார்.
இராணாவிடம்.

"இரண்டு பேருக்குமே சின்ன வயசு தான். அவருக்கு சிஸ்டர் இருக்காங்க. ஒரு சிஸ்டருக்காவது திருமணம் முடியட்டும். அப்போது தான் பவிக்கும் பொறுப்புகள் கம்மியாக இருக்கும்." என்றான்.

"அது அவங்களோட குடும்ப விசயம் பா. கல்யாணம் என்கிறது அவரவர்களோட தனிப்பட்ட விசயம் இதை நாம நிர்ணயம் முடியாது இல்லையா?" என்றார்.

"ம்ச்ச் " என்றவன். "அந்த பொண்ணு நேத்ரனோட சிஸ்டர் ரொம்ப ஓவரா பேசுவா மா. அவளை பவியால் சமாளிக்க முடியாது " என்றவனை மனம் கனிய பார்த்தவர்.

"இப்போ இவளோ நேரம் அவளுக்காக நம்மிடம் பேசினாலே அது போல பேசட்டும்" என்றார்.

"உங்களுக்கு சொன்னால் புரியாது. அவளிடம் பேசி பாருங்க புரியும்" என்று முணுமுணுத்தவன்.

"உங்க இஷ்டம் மா" என்று விறுவிறுவென உள்ளே சென்று விட்டான்.

செல்லும் மகனையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தவர். " கவின் இவன் ஏன் சின்ன பிள்ளை மாதிரி கோவிச்சுட்டு போகிறான்" என்றார் புரியாமல்.

"முதலில் சண்டை ஆரம்பிச்சதே அண்ணனுக்கும் அந்த பொண்ணு அல்லிக்கும் தான்" என்றான் சிரித்தபடி

"இன்ட்ரஸ்டிங்! " என்றார் சிரித்தபடி

"அப்போ அந்த பொண்ணு வீட்டிலேயே பவிக்கு பேசிடலாம்" என்றார். ஏதோ முடிவெடுத்தவராக

"சரி மா " என்றவன். வீல் சேரை தள்ளியபடி ராஜியுடன் பேசிக் கொண்டு உள்ளே சென்றான்.

உள்ளே சென்றதுமே, இராணா டிவியை வெறித்து பார்த்தபடி நின்றிருந்தான். அங்கே லேடி கெட்அப் போட்ட ராமரின் ஷோ டிவியில் ஓடிக் கொண்டிருக்க! அதை
பார்த்தவுடனேயே புரிந்து விட்டது. அது அல்லி இல்லையென்று!

கவினுமே இதை பார்த்து திகைத்து நின்றிருந்தான். அல்லி மனக்கண்ணில் தொப்பி தொப்பி என்று சிரிப்பது போல தோன்றியது.

"அடடே! நல்ல காமெடி ஷோ ராமர்க்கு லேடி கெட்டப்பா நல்லாயிருக்குமே" என்று சாமிநாதன் டிவி முன்னாடி வந்து அமர்ந்தவர்.

ராஜியை பார்த்து, " அம்மா உங்களுக்கு பிடிச்ச ஷோ" என்றார்.

"ஒத்த ரோசா பிள்ளைய நல்லா வளர்த்திருக்க மா " என்று ராமர் பேச,

தலையை அழுந்த கோதியவன். இரண்டு இரண்டு படிகளாக தாவி மாடியில் தன்னறைக்கு சென்று விட்டான். கவினோ தனது தாயுடனே அமர்ந்து டிவி ஷோவை பார்க்க ஆரம்பித்து விட்டான். பின்னே இராணாவிடம் தனியே மாட்டி யார் திட்டு வாங்குவது!

அல்லி மலர்க் கொடி வருவாள்..
 

Sirajunisha

Moderator
அத்தியாயம் : 10
மறு நாள் காலை , அன்னை தனது திருமணத்தை பற்றி என்ன முடிவெடுத்திருக்கின்றாரோ! என்று மனம் பரபரக்க! அதை வெளியில் தெரியாமல் மறைக்க முயன்றும் முடியாமல் அங்கேயும் இங்கேயும் வீட்டினுள்ளேயே அலைந்து கொண்டிருந்தாள் பவித்ரா.

காலை உணவு அவரது அறைக்கே எடுத்துச் செல்லப்பட்டு விடும். பின்பு பிசியோ தெரபிஸ்ட் வந்து அவர் கால்களுக்கு பயிற்சிகள் முடித்து விட்டு அவர் சென்ற பிறகே ஏதும் அவசியம் இருந்தால் மட்டுமே கீழே வருவார். அவர் வருவதற்கு எப்படியும் பதினோறு மணி ஆகிவிடும்.

இன்று விடுமுறை தினம் என்பதால் சற்று ஆசுவாசமாகவே லிப்டில் வீல்சேரில் அமர்ந்தபடி நர்ஸுடன் இறங்கி வந்தார். இராணாவும் கவினும் முக்கிய அரசு ஒப்பந்தத்திற்கான டெண்டரில் தொகையை பற்றி தங்களது அலுவல் அறையில் கலந்தாலோசித்து கொண்டிருந்தனர்.

ராஜி அலுவலக அறை நோக்கி செல்ல , பவி பின்னோடு வந்து நர்சை அனுப்பி விட்டாள். வீல் சேரை ராஜியே நவீன தொழில் நுட்பத்தில் பட்டனை தட்டி, விசையை இயக்க, வண்டி நகர ஆரம்பித்தது. அலுவலக அறையின் கதவுகள் சென்சார் உதவியால் திறக்க, இருவரும் உள்ளே சென்றனர்.

"வாங்கம்மா " என்றான் கவின். முதலில் கவனித்து, வேலையில் மூழ்கி இருந்த ராணா அப்போது தான் நிமிர்ந்து பார்த்தான். முக்கிய விடயம் இல்லாமல் அலுவலக அறைக்கே ராஜி வர மாட்டார். பின்னோடு பவியும் வர, நேற்று பவி பற்றிய திருமண விசயம் நினைவிலாட! " வாங்க " என்று பொதுவாக இருவரையும் வரவேற்றவன். முக்கிய குறிப்புகளை நோட் செய்து அதை சேவ் செய்து விட்டு, இருக்கையிலிருந்து எழுந்தான் இராணா.

"பவி மேரேஜ் பற்றி முடிவு சொல்லேன்று சொன்னீங்களே?" என்றான் கவின் முந்திக் கொண்டு அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தபடி,

"ம்ம். ஆமாப்பா " என்றவர்.

"எதற்கும் அவர்களை நேரில் பார்த்து பேசி முடிவு பண்ணலாம்னு தோணுது " என்றவர். "நேத்ரன் வீட்டில் என்ன சொல்றாங்க பவி?" என்றார் மகளிடம் திரும்பி.

" அவங்க எல்லோருக்கும் விருப்பம் தான் மா . இருந்தாலும்! அண்ணாவை நினைத்து அவங்க அம்மா பயப்படுறாங்க போல! " என்றாள்.

"ஏன்?"

"நேத்ரனுக்கும் எனக்கும் மேரேஜ்க்கு பிறகு எதாவது சின்ன சண்டை வந்தாலும் அண்ணன் அவரை ஜெயிலில் பிடிச்சு போட்டுறுவாறுன்னு .. அன்றைக்கு அந்த பொண்ணு அல்லி சொன்னதை நம்பி பயப்படுறாங்க " என்றாள் வருத்தமாக.

" பயப்படுறாங்களா?" என்றவருக்கே உள்ளே சுறுசுறுவென்று கோபம் வந்தது. ' அப்போ! நேத்ரன் அந்த அளவுக்கு கொடுமை செய்யும் குணம் படைத்தவர் னு சொல்றாங்களா? இல்லை என் மகன் அநியாயமாக நடந்து கொள்வானு நினைக்கிறாங்களா? ' என்று கேட்க தோன்ற! அதை பவியிடம் கேட்டு ஒன்றும் ஆக போவதில்லை. நேரில் சந்திக்கும் போது கேட்டே ஆக வேண்டும் என்று முடிவுக்கு வந்து விட்டார்.

சற்று நேரம் அமைதியாக யோசித்தவர். " அவர்களை குடும்பதோடு நம் வீட்டிற்கு வரச் சொல். பேசிப் பார்க்கலாம். அதன் பிறகு தான் எந்த முடிவும் சொல்ல முடியும். நீயும் அதுவரை சற்று பொறுமையாகவே இரு பவி " என்றவர். " அடுத்த வார ஞாயிற்று கிழமை வரச் சொல் " என்றார்.

" சரிம்மா " என்று விட்டு பவித்ரா, நேத்ரனிடம் சொல்ல சந்தோஷமாக சென்றாள்.

இரணதீரன் இதை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தானே தவிர, எந்த கருத்தையும் சொல்லவில்லை. மிக தீவீரமாக எதையோ யோசித்துக் கொண்டிருந்தான்.

"கவின் மாமாவுக்கு போன் போடுப்பா" என்றார் ராஜி.

" ஏன்?" என்றான் இராணா டக்கென்று

"இதென்ன கேள்வி இராணா?. அவரும் இந்த வீட்டில் சம்மந்தம் போடப் போகிறவர். அவர் பெண்களை தான் உங்கள் இருவருக்கும் திருமணம் செய்ய பேசி இருக்கிறோம். மறந்து விட்டதா?" என்றார் கண்டிக்கும் விதமாக.

அப்போது முக்கியமான அழைப்பு இராணாவுக்கு வர, மிக முக்கிய தொழில் சம்பந்தப்பட்ட அழைப்பாக இருக்கவும். " வெயிட் மா " என்றவன். " ஹலோ " என்றபடி மற்றொரு அறைக்குள் சென்று பேச ஆரம்பித்தான்.

கவின் புறம் பார்வையை திருப்ப! "அம்மா! சிறு வயதில் பேசியதை எல்லாம் வைத்து முடிவு செய்யாதீர்கள். இதுவரை எந்த விசேங்களிலும் அவர்களோ? நாமோ? கூப்பிட்டதும் இல்லை. கலந்து கொண்டதும் இல்லை. இப்போது மட்டும் என்ன?" என்றான் எரிச்சலாக

"அதற்கென்று அப்படியே விட முடியுமா ?. அப்போது இருவரும் வயதில் சிறியவர்கள். திருமண வயதை அடையவில்லை. அதனால் நேரில் பார்ப்பதை பேசுவதை தவிர்க்க நினைத்து சொன்னது. அதனால் தானே இப்போது வரை நீங்கள் இருவருமே காதல் என்று வந்து நிற்கவில்லை. பவியை போல!" என்றார்.

"அம்மா " என்றவனுக்கு சிரிப்பதா? அழுவதா? என்று தெரியவில்லை. "நாங்கள் பலமுறை பிஸ்னல் மீட்டிங்கில் கான்பிரன்சிஸ் அவர்களை பார்த்திருக்கிறோம் மா. எனக்கு பிடிக்கவில்லை . அண்ணனுக்கு பிடித்தால் அவருக்கு மட்டும் பேசுங்கள் " என்றான் விட்டேற்றியாக.

"என்னப்பா! இப்படி சொல்கிறாய்?" என்று ஆதங்கமாக பேச ஆரம்பிக்கும் போதே,

இடையிட்ட கவின், " எத்தனையோ முறை நம்முடைய பிஸ்னஸ் டெண்டர்களில் போட்டி போட்டிருக்கிறார்" என்றவன்.' தட்டி பறிக்க! அதுவும் குள்ள நரித்தனமாக என்பதை சொல்லாமல் விட்டுவிட்டான். ராஜி இதை தாங்க மாட்டார் என்பதை அறிந்து. "அப்படிப்பட்டவர் குடும்பத்தில் பெண் வேண்டாமம்மா" என்றான் வெறுப்பாக.

"என்ன கவின்! இதெல்லாம். தொழிலில் எல்லோரும் தானே போட்டி போடுவார்கள். பிறகு எப்படி சம்பாதிப்பது. அவரவர் திறமையும் உழைப்பும் அப்போது தானே தெரிய வரும் " என்றார். ஏன் என்னிடம் சொல்லவில்லை ?" என்றார் படபடப்பாக.

"அன்றைக்கு அண்ணனுக்கு ஏற்ற பெண் இருப்பதாக தரகர் சொன்ன பிறகு தானேம்மா! . நீங்களும் மாமாவின் குடும்பத்தில் பெண் எடுப்பதாக பேசியதை பற்றி சொன்னீர்கள்?" என்றான் கவின் குற்றம் சாட்டும் விதமாக.

"அப்போதே இந்த விசயத்தையும் சொல்லி இருக்கலாமே! உனக்கு வேறு வரன்களை பார்க்க போவதாக சொல்லியிருப்பேன். ஏன்? இத்தனை நாட்களாக சொல்லவில்லை? "

"அம்மா! எனக்கு விருப்பமில்லை. ஆனால் அண்ணனுக்கு! அவரது விருப்பத்தை அறிந்து செயல்படுங்கள். திருமணம் பேசும் போது என்னை எந்த விதத்திலும் கட்டாயப்படுத்தக் கூடாது என்று தான் முதலியேயே என் விருப்பமின்மையை முதலில் சொல்லி விட்டேனம்மா " என்றான் தீர்மானமாக.

"சரி. தற்போது பவியின் திருமணத்தை பற்றி மட்டும் பேசுவோம். பிறகு இது பற்றி பேசலாம் " என்றார் ராஜி.

அவருக்கு யோசிக்க வேண்டி இருந்தது. உடன் பிறவா சகோதரன் சீனிவாசன். அவரிடம் என்ன சொல்வது. நேரில் அவர்களை பார்க்க முடியா விட்டாலும், போனில் இன்னும் தொடர்பு இருந்ததே. நேற்று கூட பேசினாரே! தொழிலில் தன் மகன்களின் வளர்ச்சியை பற்றி! கவினும் ராஜியும் தங்களது யோசனையில் மூழ்கி இருக்க!

"அம்மா " என்றபடி பவி அலுவலக அறைக்கு கையில் செல்போனில் பேசியபடி ஓடி வந்தாள்.

'என்ன?' என்பது போல் பார்த்தார். "நேத்ரன் லைனில் இருக்கார் மா. நீங்க பேசுங்க. வரச் சொல்லுங்க " என்றார் அவசரமாக.

ராஜி அவளை முறைத்தபடயே செல்பேசியை வாங்கி, " ஹலோ" என்றார்.

" ஹ.. ஹலோ.. நான் நேத்ரன் பேசுகிறேன் அத்.. ஆன்ட்டி" என்றான் திணறி

"வீட்டு பெரியவங்களிடம் போனை கொடுங்க " என்றதும்
 

Sirajunisha

Moderator
"நான் பெங்களூர்ல இருக்கேன் ஆன்ட்டி. வெயிட் பண்ணுங்க. நான் கான் காலில் போடுகிறேன் " என்று உடனேயே வாணிக்கு அழைத்தான்.

"பேசும் போது போனை கொடு" என்று பவியிடம் கொடுத்து விட்டு ராஜி அமைதியாக அமர்ந்திருந்தார்.

நேத்ரன் வாணிக்கு அழைக்க, அது பிஸியாகவே இருந்தது. கயலுக்கு அழைத்தவன். " அம்மா எங்கே கயல்? பவி அம்மா பேசனுமாம். லைனில் இருக்காங்க " என்றான் பரபரப்பாக.

"அப்பத்தா வந்திருக்காங்க. அவங்க தான் அக்காவிடம் போனில் பேசிக் கொண்டிருந்தாங்க " என்றாள்.

"நீ அப்பத்தாவிடம் பிறகு பேசலாம்னு சொல்லு! அம்மாவிடம் போனை கொடுக்க சொல்லு " என்றான்.

சிறிது நேரத்தில் அழைப்பு துண்டிக்கப்பட, வாணியின் எண்ணிலிருந்து நேத்ரனுக்கு அழைப்பு சென்றது.

"ஹலோ அம்மா. பவி அம்மா உன்னிடம் பேசனும் சொல்றாங்க. நான் போன் போடுகிறேன். நீ பேசும்மா" என்றான்.

"பவியோட அம்மாவா?. என்ன விசயம் பா?" என்றார். பயத்தில் குரல் அடைத்தது.

"அது .. அவங்களே சொல்லுவாங்க மா. எனக்கும் எதும் விசயம் விவரமாக புரியலை. நானும் லைனில் இருக்கேன்.நீ பவியோட நம்பருக்கு போன் போடு மா. என் போனில் சார்ஜ் கம்மியாக இருக்கு. பேசிக் கொண்டு இருக்கும் போது கட் ஆனது என்றால்? நல்லாயிருக்காது" என்றான்.

"நான் என்னப்பா பேசனும்?" என்று திணற

"அம்மாமா " என்று பல்லைக் கடித்தவன். "நீ அப்பத்தாவிடம் போனை கொடு" என்றதும். போன் கைமாற, " விசயத்தை கடகடவென சொல்லி பவியின் நம்பரை கொடுத்து அழைக்க சொன்னான்.

பத்து நிமிடத்திற்கு பிறகு, பவியின் போனிற்கு அழைப்பு வந்தது. அழைப்பு இணைத்ததும், " ஹலோலோ.. " என்றார் அப்பத்தா.

ஸ்பீக்கர் போடாமலேயே அனைவருக்குமே கேட்டது. அப்போது தான் இராணாவும் அறைக்குள் மீண்டும் வந்து , விட்ட இடத்திலிருந்து தனது வேலையை கணிணியில் தொடர்ந்தான்.

"நான் பவித்ராவோட அம்மா ராஜலெஷ்மி பேசுகிறேன் மா " என்றதும்

"நல்லாயிருக்கியா தாயி. வீட்டில எல்லாரும் நல்லா இருக்காகளா?" என்றவர். " நான் ஆருன்னு சொல்லாம பேசுறேன் பாருங்க? நான் நேத்ரனோட அப்பத்தா ராசம்மா பேசுறேன். சொல்லுங்க என்ன விசியம்" என்றார். குரலில் பாசம், பரிவு, அக்கறை அனைத்துமே உண்மையாக இருந்தது.

"பவித்ரா, நேத்ரன் அவளை விரும்புவதை பற்றி சொன்னாள் " எனும் போதே இடைமறித்தவர்.

"நேத்ரன் மட்டும் தான் விரும்புறானா கண்ணு? உம்மட மக விரும்பலையா? இந்த பய எங்களிடம் அந்த புள்ளையும் விரும்பறதால்ல சொல்லிக்கிட்டு திரியறான். இங்கன வரட்டும் காலை ஒடச்சி அடுப்புல வைக்கிறேன். நீங்க விசனப்படாதீங்க. இரண்டு பொட்ட புள்ளைகளோட கூட பொறந்துட்டு, இன்னொரு வீட்டு புள்ளையா பார்த்து அந்த புள்ளையும் விரும்புதுன்னு சொல்லிட்டு திரியறான் " என்றார்.

ராஜிக்கே சட்டென்று என்ன பேசுவது என்று தெரியவில்லை. தன் பேச்சை ஆரம்பிக்கும் போதே! தெரிந்து தான் நேத்ரன் விரும்புவது போல பேசினார். புதிதாக கேட்பவருக்கு பவி விரும்பவில்லையோ என்று தான் தோன்றும்!. இப்போது அப்பத்தாவின் கேள்வியும் பதிலும் அப்படித்தானே இருந்தது. அவரது பேச்சின் மறைமுக அர்த்தமும், ' ஏன்? உன் மகள் விரும்பவில்லையா?' என்பதும் தானே! இனி கவனமாக பேச வேண்டும் என்று முடிவெடுத்தவர்.

"பவிக்கும் தான் வீருப்பம் " என்றவர். "எனக்கு இருக்கிறது ஒரே பொண்ணு. இன்னும் நிறைய படிக்க வைச்சு. சொந்தமான சம்பாத்தித்த பிறகே, திருமணம் செய்ய வேண்டும் என்பது எங்கள் விருப்பம். ஆனால் அவளுக்கு அது புரியவில்லை.

வரும் ஞாயிற்று கிழமை. இங்கே வீட்டுக்கு குடும்பத்தோடு வாங்க. பேசுவோம். எங்க எல்லோருக்கும் பிடித்திருந்தால் ஜாதகமும் பொருந்தியிருந்தால்! திருமணம் பற்றி பேசுவோம். இல்லையென்றால் விட்டு விடுவோம். எதுவாக இருந்தாலும் ஒரு முடிவுக்கு வருவோம். இந்த பேச்சை மேலும் இழுத்துக் கொண்டே செல்ல, எனக்கு விருப்பமில்லை " என்றார் ராஜி.

"நீங்க சொல்றது புரியுது கண்ணு" என்றவர். "அட்ரசை சொல்லுங்க. நாங்க வந்திடுறோம் " என்றார்.

"பவி நம்ம வீட்டு அட்ரஸ் சொல்லு " என்று போனை பவியிடம் கொடுத்து விட்டார். போனை கையில் வாங்கியவள்.

" ஹலோ , அட்ரசை நான் வாட்சப்பில் அனுப்பறேன் அத்தை" எனும் போதே,

"வேளச்சேரியில் உள்ள வீட்டு அட்ரசை கொடு பவி " என்று விட்டு ராஜி சென்று விட, கவினும் தாயுடன் சென்று விட்டான்.

"வேளச்சேரி அட்ரஸ். எனக்கு சரியாக தெரியாதே " என்றாள் கணிணி முன் அமர்ந்திருந்த இராணாவிடம். கண் கணிணியில் இருக்க, இடது கையை மட்டும் நீட்டி, அவளது செல்பேசியை கேட்டான்.

முகம் மலர, போனை கொடுத்தவள். " இதோ வருகிறேன் அண்ணா" என்று விட்டு வெளியில் ஓடினாள். போனை கையில் வாங்கியவன். அட்ரசை சொல்ல காதில் வைத்த போது,

" என்னவாம்? ரொம்ப தான்! ஏன்? பேச மாட்டாங்களாமா?" என்ற நொடிக்கும் குரல் வேறு யாரு நம்ம அல்லியினுடையது தான்.

போனை காதிலிருந்து எடுத்து, யார் நம்பர் என்று பார்த்து விட்டு, மீண்டும் காதில் வைத்தான்.

"அவங்க லைனிலேயே இல்லை போல கண்ணு" என்றவர். "வா.. வாட்டு சப்புல அட்ரஸ் சொல்றன்னு சொல்லியிருக்கு" என்றார் அப்பத்தா.

"சரி அப்பத்தா. நீ இருந்து பார்த்துட்டு போ சரியா. நான் சொன்னதை மறந்துடாதே " என்றாள்.

"ஏன் கண்ணு? நீ வரலையா?.நீதானே அண்ணணுக்கு பேசனும்" என்றார் அப்பத்தா பரிவாக.

"அது.. அவுங்க வீட்டாலுங்களுக்கும் எனக்கும் பெரிதாக ஒத்து வரலை அப்பத்தா. பேசினாலே சண்டையில தான் முடியுது. நீங்க போய் பார்த்து பேசுங்க. எல்லாம் நல்லதாவே நடக்கும்" என்றாள்.

"நான் பேசறேன். இருந்தாலும் நீ இருக்கிற மாதிரி வருமா?" என்ற போது!

"ம்ச்ச். அப்பத்தா! எனக்கு அன்னைக்கு வீட்டுக்கு தூரம் வர நாள். என்னால அழைய முடியாது" என்றாள்.

இராணாவின் கண்கள் அனிச்சையாக அடுத்தவார ஞாயிற்று கிழமைக்கான தேதியை பார்த்தது.

"ஏன்? வயிற்றை வலிக்குமா? இல்லையே.. அப்படியெல்லாம் வராதே!"

"காலெல்லாம் கடுக்கும் அப்பத்தா. அதான் வரலை . வேலையிடத்திலேயும் அங்கன இங்கன அழையுரேன்ல" என்றாள்.

சற்று நேரம் எதுவுமே பேசவில்லை. பேசவும் முடியவில்லை. ஏதோ ஒரு இயலாமை! தொண்டைக்கும் நெஞ்சுக்கும் சிக்கிக் கொண்டு தவிப்பது போல!

"சரி உடம்பை பார்த்துக்க. நான் பேசிட்டு சொல்றேன் " என்று விட

இருவரும் அழைப்பை துண்டித்தனர். வேளச்சேரி வீட்டு அட்ரசை டைப் செய்து, அதில் தனது நம்பரையும் சேர்த்தே, வாணி நம்பருக்கு அனுப்பி விட்டு வைத்தான் இராணா.

பவி வர, பேசியை அவளிடம் கொடுத்தவன். மீண்டும் தனது கணிணியில் வேலையை தொடர, அவனது செல்பேசி இசைத்தது.

வேலையில் கவனமாகவே, அழைப்பை இணைத்து, " ஹலோ இராணா ஹியர் " என்றான்.

" ஹ... ." என்றதோடு சத்தம் வரவில்லை. ' என்னாச்சு? ' என்பது போல காதிலிருந்து எடுத்து பார்க்க, மறுபுறம் லைனில் இருப்பது தெரிந்தது. அங்கே பாட்டு சத்தம், ஹாரன் ஒலி கூட கேட்டது. ஆள் மட்டும் பேசவில்லை.

"இரணதீரன் ஹியர் " என்றான் அழுத்தமாக.

பட்டென்று அழைப்பு துண்டிக்கப்பட்டது. தனக்கு வந்த அழைப்பின் எண்ணில், "அல்லி மலர்" என்று சேமித்தவன். மீண்டும் தனது வேலையில் கவனமானான்.

அல்லி மலர்க் கொடி வருவாள்..
 

Sirajunisha

Moderator
அத்தியாயம் : 11
அல்லி தனியே போனை பார்த்தபடியே நிற்பதை கண்ட புவனா, " என்னாச்சு அல்லி ? ஏன் போனையே முறைச்சு பார்த்துட்டு நிற்கிற?" என்றாள். கொடியில் துவைத்த துணிகளை காயப்போட்டபடி,

"ம்ம்ம்?. அடுத்த வார ஞாயிற்றுக் கிழமை குடும்பத்தோட வர சொல்லியிருக்காங்க"

"யாரு? "

" நேத்ரன் லவ் பண்ணறான்ல அந்த பொண்ணு பவித்ரா வீட்டில்!"

புவனாவுக்கு இதை கேட்கும் போது கடுப்பாக வந்தது. " அதற்கு? குடும்பத்தோட இங்க வந்து பொண்ணு பார்க்க போறீங்களா?" என்றாள் சிடுசிடுவென

"ஆமாக்கா. ஆனால் அவங்க வீடு (வேற ஏரியா ). இங்கே வேளச்சேரின்னு போட்டு அட்ரஸ் கொடுத்திருக்காங்க "

" போன் செய்து விவரம் கேட்டியா?" என்றாள் புவனா ஈரத்துணியை பிழிந்தபடியே

" ம்ம்ம். கொடுத்த நம்பருக்கு போன் பண்ணேன். பவித்ராவுடைய அண்ணன் பேசறாங்க. ஒரு வேளை அவங்க வீட்டில் வைத்து, பேச வர சொல்றாங்களோ!"

"ம்ம்ம். வாய்ப்பிருக்கு " என்றாள் புவனாவும் ஆமோதிப்பதாக.

"அதனால தான் போனை கட் பண்ணேன். நீங்க வந்து என்ன விசயம்னு கேட்டு, அதற்கு நான் விளக்கம் கொடுத்து... " என்றவளை முறைத்தாள் புவனா.

"பிறகு என்னக்கா? எப்போது பார்த்தாலும் என்ன பண்ற? என்ன யோசிச்சிட்டு இருக்க? யாரு போனில? என்ன சொல்றாங்கன்னு நொய் நொய்னு கேள்வியா கேட்குறீங்களே? ஒரு நாள்! ஒரே ஒரு நாள்! பிரியாணி செய்து கொடுத்திருப்பியா?" என்றாள் அல்லி.

"அதற்கும் இதற்கும் என்ன டி சம்பந்தம்?" என்றாள் புரியாமல்

"கேட்ட கேள்விக்கு பதில்? பிரியாணி செஞ்சு கொடுத்திருக்கியா இல்லையா?

"செய்ய தெரிஞ்சாதானே செய்ய முடியும். எனக்கு தான் தெரியாதே" என்றாள்.

"அப்போ நான் செய்யறேன். நீ சாப்பிடு " என்று விட்டு விறுவிறுவென வீட்டுக்குள் சென்று விட்டாள்.

'நாம சரியாதான் கேள்வி கேட்டோம்!.. இல்லை மாற்றி எதுவும் கேட்டு விட்டோமா? அவ சரியாத்தான் பதில் சொன்னாளா? . இல்லை தவறாக எதுவும் கேட்டு விட்டோமா?. இப்போ எதுக்கு இப்படி சம்பந்தமே இல்லாமல் பேசிட்டு போறா?' என்று யோசித்தபடியே அனைத்து துணிகளை காயப்போட்டு, அதற்கு கிளிப் போட்டு விட்டு நகர்ந்து போது,

கீழ் வீட்டிலிருந்து , "புவனா புவனா " என்ற குரல் கேட்டது. மாடியிலிருந்து எட்டி பார்த்தவள். " என்னக்கா? " என்றாள்.

"சின்னவனுக்கு உடம்பு சரியில்லை. ஆஸ்பத்திரி போறேன். துணைக்கு வரியா?" என்றாள்.

"என்ன அமுதாக்கா இப்படி கேட்கிற? இதோ வரேன் இரு " என்றவள். " பெரியவன் எங்கே? கூடவே அழைச்சிட்டு வர்றியா? இல்லை வீட்டில் இருக்க போகிறானா?" என்றாள்.

"அத்தை பார்த்துப்பாங்க . நீ வா ஆட்டோ வந்து விடும்" என்று அமுதா வீட்டினுள் சென்றாள்.

"அல்லி, நான்.. " என்று ஆரம்பிக்கும் போதே,

"கேட்டுச்சுக்கா! பத்திரமா போயிட்டு வா. பெரியவன் அழுதா, அத்தையை மாடிக்கு தூக்கிட்டு வர சொல்லிடு" என்று குரல் மட்டும் உள்ளே இருந்து வந்தது.

"சரி நான் கிளம்பறேன்" என்று வாசலில் கிடந்த செறுப்பை மாட்டிக் கொண்டு, கீழே சென்றாள். ஆட்டோ வந்து அது போவது வரை சத்தம் கேட்டுக் கொண்டு தான் இருந்தது.

குழந்தையை காண்பித்து ஊசி போட்டு விட்டு திரும்ப ஆட்டோவில் வந்து கொண்டிருக்கும் போது,

"ஏன் புவனா? அல்லிக்கு அவங்க வீட்டில மாப்பிள்ளை பார்க்கிறாங்களா?"

"ஏன் அக்கா?"

"எங்க சொந்தத்தில தெரிந்த பையன் இருக்கான். நல்ல பையன். நல்லா படிச்சிருக்கான். நல்ல வேலை. எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. இப்போ தான் தங்கச்சியை கட்டி கொடுத்தான். பொறுப்பானவன். அந்த பையனுக்கு பொண்ணு பார்க்கிறாங்க. வரதட்சணை எதுவும் எதிர்பார்க்கலை. பொண்ணு நல்ல பொண்ணா! நல்ல குடும்பமாக இருந்தால் மட்டும் போதும்னு சொல்றாங்க. எனக்கு அல்லி நினைப்பு தான் வந்தது. நீ அவங்க வீட்டில் கேட்டு சொல்றியா?" என்றார் ஆர்வமாக.

"அவங்க அண்ணனுக்கு கூட பொண்ணு பார்க்க அடுத்த வாரம் சென்னை வராங்கக்கா. நான் அவங்க அம்மாவிடம் பேசிட்டு சொல்கிறேன்" என்றாள்.

"சரி புவனா " என்றவர். சிறிது யோசனைக்கு பிறகு, "உன் கல்யாணத்தை பற்றி என்ன முடிவு செய்திருக்க?" என்றாள்.

"கல்யாணத்தில் எல்லாம் விருப்பம் இல்லைக்கா. அதோட கல்யாண பத்திரிக்கை வரை அடிச்சு, கல்யாணம் நின்னு போனதால்! எவ்வளவு பேச்சு! நினைச்சு பார்த்தாலே மனசு பதறுதுக்கா. தம்பிக்கு நல்ல வேலை கிடைச்சிடுச்சு. தங்கச்சிக்கு படிச்சிட்டு இருக்கா. அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்து கொடுத்து விட்டால் போதும்" என்றாள் . கோவிலில் கூட்டமாக இருப்பதை வேடிக்கை பார்த்தபடியே

"நீயா கல்யாணத்தை நிறுத்தின? கிழவனுக்கு குமரன் வேசம் போட்டு கல்யாண செய்ய பார்த்தால்! கடவுளுக்கே பொறுக்கலை! அவனுக்கு ஆக்ஸ்டெண்ட் ஆக வைச்சு கல்யாணத்தை நிறுத்திடுச்சு. இதற்கு நீ என்ன பண்ணுவ?" என்றார்.

"விடுங்கக்கா எல்லாம் நல்லதுக்கு தான்" என்றவள். "இன்றைக்கு என்ன கோவிலில் கூட்டமா இருக்கு?" என்றாள்.

"பிரதோஷம் ல. அதானலயே இருக்கும்"

'என்னது பிரதோஷமா?. அதனால தான் சம்மந்தமில்லாமல் பேசி பிரியாணி செய்யறாளா? கடவுளே! அசைவம் எதும் சமைச்சிருக்க கூடாது' என்று மனதோடு புலம்பியபடியே வந்தாள்.

புவனா எதிர்ப்பார்ப்புக்கு மாறாக, அங்கே கோழி பிரியாணி செய்து சாப்பிட்டு விட்டு, மதிய தூக்கத்தில் ஆழ்ந்திருந்தாள். பக்கத்தில் பீடிங் பாட்டில், பாதி ஹார்லிக்ஸ் குடித்ததோடு தரையில் கிடந்தது.

"இவள.. " என்று பல்லை கடிக்கத்தான் முடிந்தது புவனாவாள். "கல்யாணம் செய்து குழந்தை பெற்றுக்கிற வயசில இன்னும் பீடிங் பாட்டிலில் பால் குடிக்கிறா! இதெல்லாம் வெளியில சொல்லக் கூட முடியலை! எல்லாம் அந்த ஆட்டோகாரர் கொடுக்கிற இடம். வாங்கிட்டு வந்து கொடுக்கிறார் ல. இனி நேரில் பார்க்கும் போது, அந்த ஆளை பிடிச்சு ஏசுனா தான் இவ வழிக்கு வருவா " என்று பொறிந்து தள்ளுபடியே வீட்டை ஒழுங்கு செய்து முடித்தாள்.

கிட்சனுள்ளே நுழைந்த போதே! பிரியாணி வாசனை மூக்கை துளைத்தது. ஏற்கனவே பசி இதில் அவளுக்கு பிடித்த பிரியாணி வேறு, நாக்கில் எச்சில் ஊர்ந்தது. "கடவுளே! பசியில இருக்கிற எனக்கு இப்படி பிரியாணியை காண்பிச்சு சோதிக்காதப்பா " என்று வாய் விட்டே புலம்பியபடி, காலையில் செய்த ஆறிப்போன உப்புமா இருக்க, அதை முழுவதும் சாப்பிட்டு விட்டு, கூடவே ஒரு டீ, பிறகு வாழைப்பழம் ஒன்றை சாப்பிட்டதும் வயிறு நிறைந்து விட்டது. ' அப்பாடா இனி பிரியாணியை பார்த்தாலும் மனசு சபலப்படாது' என்று தேற்றிக் கொண்டாள் புவனா.

தூங்கி எழுந்த அல்லி, புவனா திட்டிய எதையுமே காதில் வாங்கிக் கொள்ளவில்லை. ஒரு கட்டத்தில் சலித்து போய் அவளே பேச்சை நிறுத்தி விட்டாள்.

அடுத்த சனிக்கிழமை பாட்டி, கயல், வாணி அனைவரும் அல்லி தங்கியிருந்த வீட்டிற்கு வந்து விட்டனர். குமார், ஆட்டோவிலேயே அழைத்து வந்து விட்டான். பேக்கை எடுத்துக் கொண்டு மாடிக்கு சென்றனர். பவிக்கென்று பார்த்து பார்த்து புடவை எடுத்திருந்தார் வாணி. ஏனோ பவி தன் குடும்பத்திற்கு மருமகளாக வந்தால் பிள்ளைகளுக்கு நல்ல வாழ்க்கை அமைத்து கொடுப்பாள் என்று தோன்றியது.

"இதற்கு முன்னால் வந்ததற்கும் இப்போது உள்ளதற்கும் நிறைய மாறியிருக்கு அல்லி" என்று அந்த இடத்தில் புதிதாக முளைத்த கட்டிடங்கள் கடைகள் என பார்த்தபடி பேசினார் வாணி.

"ஆமாம் மா. நீங்க எல்லாரும் வந்து ரொம்ப நாள் ஆச்சு தானே! இப்போ நிறைய மாறிடுச்சு" என்று பேசியபடி வீட்டினுள் அனைவரையும் அழைத்து சென்றாள் அல்லி.

அப்போது, " மலர!" என்றபடி குமார் வந்து நின்றான்.

"என்ன குமாரு?" என்றபடி தனியே வந்து விசாரித்தாள்.

"ஏதாவது சாமான் வேணுமென்றால் சொல்லு வாங்கியாரேன் " என்றான்

"அதெல்லாம் இருக்கு " என்றவள். "நாளைக்கு காலையில ஒரு பத்துமணி போல வா குமாரு அண்ணணுக்கு பொண்ணு பார்க்க போகனும். வேற யாரும் சவாரிக்கு கூப்பிட்டால் போயிடாத" என்றாள்.

"சரி வந்திடுறேன். வரும் போது எதுவும் வாங்கிட்டு வரனுமென்றாலும் போனில் சொல்லு வாங்கியாரேன்" என்று விடைபெற்று சென்று விட்டான்.

அல்லி, குமாரிடம் பேசியதை கவனித்துக் கொண்டிருந்த வாணி. "யாரு அல்லி அது? எதுக்காக ஆட்டோக்காரங்களெல்லாம் பெயர் சொல்லி கூப்பிடுற அளவில் வைச்சிக்கிற? இந்த காலத்தில யாரையும் நம்ப முடியாது. பொழைக்க வந்த இடத்தில் கவனமா இரு . பேரை கெடுத்துக்காத " என்ற வாணியின் பேச்சில்!

அல்லி விக்கித்து போய் நின்று விட்டாள். வாணி பேசியதை கேட்டபடியே வீட்டினுள் வந்த புவனாவுக்கு கோபம் கொப்பளித்தது. வெகு நாள் கழித்து வந்திருப்பவரை எதுவும் பேசிவிட மனமில்லாமல் , "வாங்கம்மா, வா கயல், வாங்க பாட்டி " என்று இன்முகமாகவே வரவேற்று விட்டு அப்படியே நின்றிருந்த அல்லியை கவனித்து விட்டு, கையை பிடித்து இழுத்தபடி அறைக்கு அழைத்துச் சென்றாள்.

அந்த இடத்தை விட்டு நகர்ந்த பிறகே, அல்லி சுயத்துக்கு வந்தாள். தன்னை சமாளித்து கொள்ள சற்று நேரம் எடுத்தது. கட்டிலில் சற்று நேரம் யோசித்தபடியே அமர்ந்திருந்தவளை கூடத்தில் கேட்ட பேச்சுக் குரல் கவனத்தை கலைத்தது.
 

Sirajunisha

Moderator
"ஏன் வாணி? ஒரு நாள் பார்த்துட்டு வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசாதே! அல்லிக்கு யாரிடம் எப்படி பேசனுமென்று தெரியும் " என்றவர். "நேத்ரன் எப்போ வருவான்னு போன் செய்து கேளு. காலையில் போய் பொண்ணு பார்த்து விட்டு வந்திடனும்" என்றார்.

முதலில் பாட்டியின் பேச்சை கேட்டு , "நான் அவ நல்லதற்கு தானே சொன்னேன்?" என்றவர். பின்னர் , நேத்ரன் பேச்சை எடுத்ததும், "நாளைக்கு நேரா பவி வீட்டுக்கு வந்திடரேன்னு சொல்லியிருக்கான் அத்தை" என்றார்.

"சரி சரி " என்றவர். "அல்லி கண்ணு நாளைக்கு நீயும் பொண்ணு பார்க்க வருவ தானே?" என்றார் கயல் போட்டு கொடுத்த டீ யை குடித்தபடி

முதலில் வர மறுக்க நினைத்தவள். பிறகு, பவியிடம் வாங்கிய மருத்துவ செலவுக்கான பணம் நினைவில் வர, அதை கொடுத்து விட நினைத்து, "வருவேன் அப்பத்தா" என்று விட்டாள்.

மறு நாள் காலை நேத்ரன் கால் டாக்ஸியில் வந்து அழைத்து செல்வதாக கூற, அதில் அனைவரும் செல்லலாம் என வாணி கூறிக் கொண்டிருக்கும் போதே! வாசலில் ஆட்டோ நிற்கும் சப்தம் கேட்டது.

"குமார் வந்திடுச்சு போல.. " என்றபடியே வெளியே வந்து அல்லி எட்டிப்பார்க்க, பளிச்சென்று சிரிப்புடன் அல்லியை பார்த்து சிரித்தபடியே படிகளில் ஏறி வந்து கொண்டிருந்தான் குமார்.

"ஏதாவது சாமான் வாங்கனுமென்றால்! அதனால் தான் நான் முன்னாடியே வந்துட்டேன் மலரு" என்றான் சீக்கிரம் வந்ததற்கு காரணமாக

இப்போது எதில் செல்வது?குமாரிடம், நேத்ரனுடன் கால் டாக்ஸியில் செல்வதாக கூறினால்! 'சரி பத்திரமா போய்விட்டு வாங்க' என்று தான் சொல்லி விட்டு செல்வான். ஆனால் அப்படி அனுப்ப அல்லிக்கு மனம் வரவில்லை.

" நீ இங்கேயே நில்லு நான் வரேன் " என்றவள். அவசரமாக வீட்டினுள்ளே ஓடி, " அம்மா.. பொண்ணு பார்த்து பேசி முடிச்சிட்டு நேத்ரன் இங்கே வருவான் தானே?" என்றாள்.

"இல்லைக்கா. அண்ணன் உடனே கிளம்பனுமாம். அங்கிருந்தே திரும்ப வேலைக்கு பெங்களூர் கிளம்பிடும்" என்றாள் கயல் முந்திக் கொண்டு

"ஓ! அப்போ நாம .சென்னையை சுத்தி பார்த்துட்டு வரலாம். என்ன அப்பத்தா? பொண்ணு பார்த்துட்டு சென்னையை சுத்திக்காட்டுறேன் " என்றாள்.

"அது அங்கே? எவ்வளவு நேரமாகும்னு தெரியலையே கண்ணு. மதியம் சாப்பிட்டு விட்டு உடனே பஸ் ஏறினாதே, இரவைக்கு வீட்டுக்கு போய் செத்த நேரம் கட்டைய சாய்க்கலாம்" என்றார்.

அவரின் உடல் நிலையும் மனதை வருத்தத்தான் செய்தது. "சரி அப்பத்தா. நீங்க முன்னாடி நேத்ரனோட காரில் போங்க. நான் பின்னாடி ஆட்டோவில் வந்து விடுகிறேன்" என்றாள்.

"ஏன்? எங்களோட காரில் வந்துவிட்டு வரும் போது உன்னை பஸ் ஏற்றி விடுகிறோம். இங்கே வந்துவிடு. எதற்கு தேவையில்லாமல் ஆட்டோ?" என்றார் வாணி வெடுக்கென்று.

"உங்களுடைய ஒரு நாள் கூத்துக்காக எனக்கு உபகாரம் பண்றவங்களை தள்ளி நிறுத்த முடியாது . நீங்க முன்னாடி கிளம்புங்க. நான் பின்னால் வருகிறேன். வரும் போது சில சாமான் வாங்கனும். கையில் தூக்கிட்டு வர முடியாது " என்றாள் வாணியை உறுத்து விழித்தபடி

"ஏன்? அதான் ஸ்கூட்டி இருக்கு தானே! எங்களுக்கு சொல்லாமல் வாங்கி ஓட்டிட்டு தானே இருக்க? அதில் வர வேண்டியது தானே?" என்றார் வாணியும் விடாமல்.

"எது! அந்த ஸ்கூட்டியை புவனாவை கட்டிக்க போறவர் வாங்கி கொடுத்திருக்கார். என் இஷ்டத்துக்கு எடுத்து சுத்தினால் வெளக்கமாத்து அடி யார் வாங்குறது?" என்றாள் படபடப்பாக

இவர்கள் பேச்சை கேட்டபடியே சாப்பிட்டு கொண்டிருந்த புவனாக்கு சாப்பாடு புரையேற! தண்ணீர் கூட குடிக்க முடியாமல் காரம் உச்சிக்கு ஏறி, இருமி கண்களிலிருந்து கண்ணீர் கொட்ட ஆரம்பித்தது.
பிறகு மெல்ல தண்ணீர் குடித்து, ஓரளவுக்கு இருமலை நிறுத்தி விட்டு கிட்சனிலிருந்து வெளியே வந்தாள் புவனா.

"சரி கிளம்பும் போது எதுக்கு வாக்கு வாதம். அவ வரப்படி வரட்டும். நாம நேத்ரனோட போவம் " என்றார் அப்பத்தா.

"அப்போ சரி நான் குளிச்சிட்டு வரேன்" என்றவள். "கயல் அங்கே வீட்டுக்கு போனதும் லொக்கேஷன் சேர் பண்ணி விடு " என்றவள். தனது பதிலை எதிர்பாராது பாத்ரூமினுள் நுழைந்து விட்டாள்.

அவசரமாக குளித்து உடைமாற்றிக் கொண்ட வெளியில் வந்த போது, அனைவரும் காரில் ஏறிக் கொண்டிருந்தனர். " ஏன் மா அல்லி வரலை?" என்றான் நேத்ரன் . அவள் இன்னும் கீழே வராததை கண்டு

"அல்லி குளிச்சிட்டு இருக்கா?நாம முன்னாடி போகலாம். அவ வந்து விடுவாள். ஏதோ சாமான் வாங்கனுமாம். வாங்கி விட்டு வந்து விடுவாள்" என்றார் அப்பத்தா சமாதானமாக.

"நேத்ரன்!" என்ற உற்சாகமான அல்லியின் குரலில் வேகமாக திரும்பி பார்த்தான்.

அது வரை அவள் மேல் இருந்த பிணக்கு மறைத்து, " நீ இன்னும் கிளம்பலையா?" என்றான் தண்ணீரில் முகம் குளித்ததில் நிறைந்து முகம் கழுத்தெல்லாம் சொட்டிக் கொண்டிருக்க, மாடிப்படிகளில் நின்றபடியே சந்தோஷமாக அழைத்தவளை கண்டு மனம் கனிந்து போனது.

செய்கையால் ஏதோ கூற, நேத்ரனுக்கு அது புரியவில்லை. "என்ன?" என்றான் புரியாமல்.

"நீங்க அங்கே போய் சேர்ந்த அரைணி நேரத்தில் அங்கே இருப்பேன்" என்றவள். "பயப்படாத டா பயப்படாத தங்கச்சி நான் இருக்கேன்" என்றாள் வடிவேலு பாணியில் சத்தமாக.

"நீ இருக்கிற தான் டி பயமே" என்று வாரினான் நேத்ரன் சிரித்தபடி.

"அது! அந்த பயம் இருக்கட்டும் " என்றவள். "டைம் ஆச்சு " என்று மணிக்கட்டை சுட்டிக்காட்டியதும்.

"சீக்கிரம் வா" என்று விட்டு காரில் ஏறி சென்றான் நேத்ரன்.

அவர்கள் சென்ற பத்து நிமிடத்திலேயே கிளம்பி சென்றோ, ஏற்கனவே செய்ய சொன்ன நகையை வாங்கிக் கொண்டு, அவர்கள் சொன்ன லொக்கேஷனுக்கு சரியான நேரத்திற்கு வந்து சேர்ந்திருந்த அதே நேரம் ! அல்லியின் போனும் சார்ஜ் இல்லாமல் ஸ்விட்ச் ஆப் ஆனது.

' நல்லவேளை கரெக்ட்டான இடத்துக்கு வந்து விட்டோம்' என்று ஆசுவாசம் பட்டுக் கொண்டவள். ஆட்டோவிலிருந்து இறங்கி,

"ஏன் குமாரு? இந்த பச்சை வீடா? இல்லை மஞ்சள் வீடா?" என்றாள் புரியாமல்.

"எனக்கு என்ன தெரியும்? நீ சொன்ன இடத்துக்கு இட்டாது உட்டுட்டேன். அவ்வளவு தான் என் சோலி" என்றான்.

"ம்க்கும் " என்று நொடித்தவள். "எல்லா வீடும் ஒரே மாதிரி இருக்கு. இதில் வீட்டு நம்பர்ல வேற 2A 2B னு செக்சன் போட்டு வைச்சிருக்காங்க. இதில் நம்ம வீட்டு புள்ளை எந்த செக்ஷன்னு தெரிலையே" என்று வாய்விட்டே புலம்பினாள்.

அவளது புலம்பலை கண்டு, குமாருக்கு சிரிப்பு வந்தது." இரு நான் போய் வாட்ச்மேனிடம் விசாரிச்சு வரேன்" என்று சென்றவன்.
சிறிது நேரத்திலேயே திரும்பி வந்து, " சலோ சலோ னு " சொல்றான் மலரு. பேசறதை கேட்கவே மாட்டேங்கிறான்" என்றான் அங்கலாய்ப்பாக.

"ஹிந்திக்காரனா?"

"ஆமாம்"

"சரி. நான் சொல்ற மாதிரி சொல்லு?"

"என்ன சொல்லனும்? சொல்லு?"

" சாரி கே ஃபால் சா மேட்ச் கியா ரே "

"அப்படினா?"

"அப்... அப்படி.. அப்படினா? சேரியும் அதுக்கு மேட்சிங்கா பளவுஸ் வாங்கிட்டு வர லேட்டாயிடுச்சு னு அர்த்தம்"

"அதை ஏன் அவனிடம் சொல்லனும்"என்றான் குமார் புரியாமல்.

"கடவுளே! " என்று பல்லைக்கடிதவள். "இது பவித்ரா வீடாக இருந்தால் அவங்க தான் சாரி வாங்கிட்டு வர சொன்னாங்க. நீங்க போய் கேளுங்கன்னு சொல்லலாம் ல"

"ஓ!"

"சரி இன்னொரு தடவ சொல்லு!. சாரி கே... ?"

"ஃபால் சா"

"ஃபால் சா.. "

"கபி மேட்ச்.. கியா ரே" இப்படி சொல்லனும்

"கபி மேட்ச்.. கியா ரே"

"ஹாங்! அப்படித்தான்! எங்கே இன்னொரு தரம் சொல்லு..

"சாரி கே தாள் சா .. மேட்சா " என்று குமார் திணற

இடுப்பில் கைவைத்து முறைத்தாள். "என்ன? என்னை முறைக்கிற? நீ யே போய் கேளு? எனக்கு வரலை?" என்றான்.

"சரியான பயந்தாங்கொள்ளி.. இப்போ பாரு?" என்றவள்.

நேராக வாட்ச்மேன் இருக்கும் பக்கம் கதவை தட்ட, அவர் அந்த சிறு பலகையை மட்டும் நகர்த்தி, 'என்ன என்று கேட்கும் முன்பே, காரின் ஹாரன் ஒலி அவள் முதுகின் பின்னால் ஒலித்தது. திரும்பிப் பார்த்தாள். வாட்ச் மேன் அவசரமாக கேட்டை திறக்க, அல்லி சற்று விலகி நின்றாள்.

கார் ஹாரன் அடித்தபடி மிக மெதுவாக அவளை கடந்து வீட்டினுள் சென்றது. 'இவ்வளவு நேரமும் இவர்களது ஆட்டோவிற்கு பின்னால் தான் இந்த கார் நின்றிருந்தது?' என்று யோசித்தபடியே பார்த்திருந்தாள்.

கதவு திறந்திருந்ததால் வீட்டின் அமைப்பை பார்க்க முடிந்தது. நேத்ரன் வீட்டினுள்ளே இருந்து வந்தவன். அல்லி வாயிலில் நிற்பதை கண்டு கையசைத்து வர சொன்னான். வாட்ச்மேன் இதை கவனித்து,

" வாங்கோ மேம்" என்றான்.

"குமாரு இந்த வீடு தான். நீயும் வா" என்றாள் சந்தோஷமாக.

"நீ போ மலரு. நான் இங்கேயே இருக்கேன்" என்று விட்டான்.

"இங்கேயே இரு. போனில் சார்ஜ் வேற இல்லை. " என்று விட்டு உள்ளே சென்றாள்.

கார் போர்டிக்கோவில் போய் நின்று, டிரைவர் இருக்கையிலிருந்து நெடியவன் ஒருவன் இறங்கினான். அல்லிக்கு அவன் முதுகு பக்கம் மட்டும் தான் தெரிந்தது. நேத்ரனுக்கு அவன் கை கொடுப்பதும், பிறகு பேசியபடியே உள்ளே செல்வதும் தெரிந்தது.

நேத்ரன் அவனிடம் ஏதோ சொல்லிவிட்டு அங்கேயே நிற்க, தலையசைத்து விட்டு உள்ளே சென்று விட்டான்.

'யாராக இருக்கும்? நாம வரும் போதே அந்த கார் அங்கேயே தானே நின்றிருந்துச்சு? ஏன்? அப்போதே உள்ளே போகலை?' என்று சிந்தித்தபடியே வந்தவள். நேத்ரனின்அருகே வந்ததும்!

"எவ்வளவு நேரமா நிற்கிறேன்.வெளியில் வந்து தங்கச்சி எங்கேனு தேட மாட்டியா?' என்றாள் பொய்யாக கோபத்தை காண்பித்தபடி

"சாரி சாரி " என்று அசடு வழிந்தான்.

"என்ன? மன்னிப்பெல்லாம் கேட்கிற? பவித்ராவிடம் பேசிட்டு இருந்தியா?" என்று சரியாக பாயிண்டை பிடித்தாள்.

"ம்ம். ஆமாம். இராணா சார் வருவதை கண்டதும் ஓடி விட்டாள்" என்றார்.

"எங்கே?" என்றாள் புரியாமல்

"இப்போ காரில் உள்ளே வந்தாரே? அவர் தான் இராணா" என்றவன். "நீ வா" என்று உள்ளே அழைத்து சென்றான்.

'எதே! இராணாவா!.. ஆத்தீ! இப்போ என்ன பண்றது? நாம ஏற்கனவே பேசி, வம்பு வேறு வளர்த்து வைச்சிருக்கோம். இங்கே அதே மாதிரி எதும் பேசிடுவானோ?. ச்ச்ச.. ச்சச.. பேசிடுவாரோ? ஆளு வேற நெட்டை கொக்கு மாதிரி பல்க்கா இருக்கான்!. எதுக்கும் மரியாதையா பேசுவோம்?

முன்னெச்சரிக்கையா, அப்பத்தா பக்கத்தில போய் உட்கார்த்துக்குவோம். நாம யார் வம்புக்கும் போறதில்லை! தும்புக்கும் போறதில்லை! ' என்று நினைத்த போதே அவளுக்கே சிரிப்பு வந்து விட்டது.

சந்தோஷமாக சிரித்தபடியே அழகான அந்த வீட்டை பார்வையிட்டபடியே உள்ளே சென்றவள். அங்கே போடப்பட்டிருந்த நீள் இருக்கையில்அப்பத்தாவுக்கும் கயலுக்கும் நடுவே நல்லபிள்ளை போல அமர்ந்து கொண்டாள்.

என்ன தான் வெளியில் சாதாரணம் போல காட்டிக் கொண்டு அமர்ந்திருந்தாலும் உள்ளுக்குள் இனம்புரியா படபடப்பு இருக்கத்தான் செய்தது. காரணம் யாரோ?

அல்லி மலர்க் கொடி வருவாள்..
 

Sirajunisha

Moderator
அத்தியாயம் : 12
'கடவுளே! தெரியாத்தனமாக வந்து விட்டேன். என் வாய்க்கு இங்கிருந்து கிளம்பும் வரை நீ தான்ப்பா பூட்டை போடனும்' என்று வேண்டிக் கொண்டவள். அப்போது தான் விரைப்பாக அமர்ந்து இருந்த கயலை கவனித்து,

"நீ ஏன் டி காட்டன் துணிக்கு போட்ட கஞ்சி மாதிரி விரைப்பா உட்கார்ந்திருக்க?" என்றாள்.

"கொஞ்ச நேரம் சும்மா இருக்கா. இப்போ தான் பவி அக்காவோட பெரிய அண்ணன் வந்தாரு"

"அதற்கு?" என்றாள் புரியாமல்

"வாங்கன்னு கூப்பிட்டாரு"

"சரி"

"நானு வரேங்க னானு சொல்லிட்டேன்"

"சரி"

"அதற்கு டக்குன்னு திரும்பி ஸ்கேன் எடுக்க மாதிரி ஒரு பார்வை பார்த்தாரு பாரு! எனக்கு அல்லு விட்டுடுச்சு கா" என்றவள். "அப்போதிலிருந்து இப்படித்தான் அங்கேயும் இங்கேயும் திரும்பாமல் உட்கார்ந்து இருக்கேன்" என்றாள்.

"இது என்ன டி! வா னு சொன்னால் வரேன்னு தானே சொல்ல முடியும். அதற்கு உன்னை அப்படி பார்ப்பானா? பொம்பளை பிள்ளையை அப்படியென்ன பார்வை பார்க்கிறது?" என்று முணுமுணுத்தவள்.

"ஏன் அப்பத்தா? நீ இதெல்லாம் பார்க்க மாட்டியா? கேட்க மாட்டியா?" என்று இடது பக்கம் திரும்பி அப்பத்தாவிடம் எகிறினாள்.

ஏதோ! சிந்தனையில் இருந்தவர் அல்லி பேசியதை அரைகுறையாக காதில் வாங்கி கொண்டு,
"யாரை கேட்கனும்?" என்றார் புரியாமல்.

"அந்த இராணாவை தான் " என்றாள். அவர் காதில் கிசுகிசுப்பாக

அவருக்கு அன்று அல்லி பொங்கலுக்கு வந்த போது சொன்ன விசயம் நினைவிலாட! அதோடு அல்லி கிசுகிசுப்பாக பேசவும், தானே ஒன்றை ஊகித்துக் கொண்டு,

"ஏன் டி? நீ வம்பு பண்ணாம இருக்க மாட்டியா? அவய் பொண்டாட்டி, எந்த நேரத்தில எப்படியோ கூப்பிட்டுட்டு போறா? உனக்கென்ன வந்துச்சு? வர வர உன் பேச்சுக்கு வம்புக்கும் அளவில்லாமல் போயிட்டு இருக்கு. இனி இப்படி பேசின... " என்று அப்பத்தா அவளை மெதுவாக திட்டிக் கொண்டிருந்த போதே, பணியாளர் டிரேயில் காபியோட வர, அப்பத்தா டக்கென்று பேச்சை நிறுத்திக் கொண்டார்.

'நான் அன்றைக்கு விளையாட்டாக சொன்னதை நினைத்து கொண்டு, இப்படி பேசுது இந்த அப்பத்தா!' என்று அவர் திட்டியதில் கோபம் வர, சூழ்நிலையால் எதிர்த்து பேச முடியாததால் கண்கள் கலங்கிய போது தான்!

பணியாளர் , " காபி சாப்பிடுங்கம்மா " என்று அல்லியின் முன் நீட்டினார்.

"எனக்கொன்னும் வேணாம்" என்றாள் வெடுக்கென்று

அவர் திகைத்து பார்க்க! கண்கள் கலங்கி போய் அவரையே முறைத்து பார்த்தாள்.

"சாமி என்னாச்சு? " என்றபடி உயரமாக பணக்கார களையுடன் கண்ணியமான பார்வையுடன் இளைஞன் ஒருவன் வந்தவன். " இது வேணாமென்றால் வேறு எதுவும் கொண்டு வாங்க சாமி" என்றதும்

"வேற எதுவும் வேண்டாம் " என்றாள் இப்போது அவனையும் முறைத்தபடி

"ஏன்?" என்றான் புரியாமல்.

"வந்தவங்களை வாங்கன்னு கூப்பிடாத வீட்டில் நான் எதுவும் சாப்பிடறதில்லை" என்றாள் பட்டென்று

சற்று திகைத்து! "சாரிங்க. நான் இப்போ தான் வரேன்.. " என்று விளக்க முயலும் போதே!

"நாங்க வரும் போது, எல்லாரும் வாங்கன்னு கூப்பிட்டு, உபசரிசிட்டு தான் போனாங்க. நீ லேட்டாக வந்ததால் தெரியலை அல்லி " என்றார் வாணி. எங்கே எதுவும் சண்டை இழுத்து வைத்து விடுவாளோ! என்று பயந்து சமாதானப்படுத்தும் முயற்சியாக

"அப்போ லேட்டாக வந்தால் கூப்பிட மாட்டாங்களா?" என்றாள் வாணியை முறைத்தபடி

"சாரி. வந்தவுடனே கூப்பிட்டு இருக்கனும். எதுவும் நினைக்க வேண்டாம். வாங்க " என்றான் தன்மையாகவே

அதற்கு மேல் கோபத்தை இழுத்து பிடிக்க விரும்பாமல், " சாரி " என்று மெதுவாக முணுமுணுத்தாள்.

"காபி எடுத்துக்கோங்க. இல்லை வேறு எதுவும் எடுத்துக் கொண்டு வர சொல்லவா?" என்றான்.

"இல்லை. இதுவே போதும் " என்றவள். "நீங்க காபி குடிச்சீங்களா?" என்றாள்.

அவன் வீட்டிற்கு வந்து அவனுக்கே உபசரிப்பாக பேசியதை கண்டு, ஆச்சிரியம் தோன்ற! " இல்லைங்க. ப்ளாக் டீ தான் குடிப்பேன்" என்றான் அங்கே இருந்த தனியிருக்கையில் அமர்ந்தபடி

"அப்போ சாமி தாத்தா, சார்க்கு ப்ளாக் டீ கொண்டு வந்து தாங்க" என்றபடி அவர் டிரேயில் வைத்திருந்த இருந்த காபி கப்பை எடுத்துக் கொண்டாள்.

சாமி, கவினை பார்க்க, "எடுத்துட்டு வாங்க " என்றவன். " அண்ணன் வந்தாச்சா?" என்று விசாரித்தான்.

"இப்போ தான் தம்பி வந்தாங்க. அம்மாவை பார்க்க போயிருக்காங்க" என்று விட்டு சாமி உள்ளே சென்று விட்டார்.

"நீங்க யாருன்னு எனக்கு தெரியலையே தம்பி" என்றார் அப்பத்தா.

"நான் கவின். பவித்ராவுடைய அண்ணன் " என்றான்.

"நீங்க இரண்டு பேரு தானுங்களா?" என்றார் அப்பத்தா பேச்சை வளர்க்கும் விதமாக

"அம்மா அப்பாக்கு அண்ணனும் நானும் இரண்டு பசங்க. பவித்ரா ஒரு பொண்ணு.. பவி சின்னவ என்பதால் எங்க எல்லாருக்கும் ரொம்ப செல்லமும் கூட" என்றான் புன்னகைத்தபடி

"அண்ணன் வீட்டிலிருந்து யாரும் வரலைங்களா?" என்றார் அப்பத்தா.

'இந்த அப்பத்தா என்னைய மாட்டி விடாம போகாது போலிருக்கே!' என்று மனதில் புலம்பியபடி, அதை வெளியில் காட்டாமல் 'காபி நல்லது' என்பது போல காபி குடித்துக் கொண்டிருந்தவள். சூடாக இருந்தாலும் பரவாயில்லையென வேகமாக குடிக்க ஆரம்பித்தாள். அல்லி.

"நீங்க கேட்பது புரியலை?" என்றான் கவின்

"இல்லை தம்பி. உங்க அண்ணனோட மனைவி வரலையான்னு கேட்டேன்?" என்றார்

"அண்ணனுக்கு இன்னும் கல்யாணம் ஆகலையே! யார் சொன்னது கல்யாணம் ஆயிடுச்சு என்று?" என்றான் புருவங்கள் முடிச்சிட

கவினின் பதிலில் கடைசி மடக்கு காபி விழுங்க முடியாமல் திணறி உள்ளேயும் போகாமல் தொண்டையிலேயே சிக்கிக் கொண்டது போல ஆனது. சில வினாடிகள் எப்படி விழுங்குவது? என்று தெரியாதது போல ,நிகைத்த நிலை!

பிறகு மெல்ல தொண்டையை சரி செய்து, மெல்ல விழுங்கி தனக்குள் சரிசெய்து கொண்டவள். காபி கப்பை டிரேயில் வைத்து நல்ல பிள்ளையாக அமர்ந்திருந்தாள்.

"யாரோ கல்யாணம் முடிச்சிட்டங்கன்னு சொன்ன மாதிரி இருந்துச்சு தம்பி. சரியாக தெரியலை எனக்கு. தவறாக நினைக்காதீங்க" என்றார்.
 

Sirajunisha

Moderator
"பரவாயில்லை பாட்டி " என்றான். பிறகு அப்பத்தா, கவினிடம் பொதுவான குடும்ப விசயங்களை கேட்டு தெரிந்து கொண்டிருந்தார்.

அல்லி மெதுவாக கயலிடம், " ஏன் கயல்? கட்டாத பொண்டாட்டிக்காகவா என்னிடம் அவ்வளவு சண்டை போட்டான்?" என்றாள் மெதுவாக

"நீயும் தான் அடுத்தவன் பொண்டாட்டிக்காக அந்த அண்ணாவிடம் சண்டை போட்ட!" என்றாள் கிண்டலாக.

"அது யாரு அடுத்தவன் பொண்டாட்டி?"

"நீ தான்க்கா" என்றதும்

அதை கேட்ட அல்லிக்கும், ஏன்? கயலுக்குமே ஒரு சேர சிரிப்பை அடக்குவது பெரும் பாடாக இருந்தது. கவின் அங்கே இல்லையென்றால் நிச்சயம் சத்தமாக சிரித்திருப்பார்கள்.

"கொழுப்பு டி " என்று செல்லமாக திட்டியவள். " ஏன்? எல்லாரும் தனியே உட்கார்ந்து இருக்கீங்க? பொண்ணு பார்க்கலை " என்றாள்.

"நாங்க வரும் போது பவிக்காவும் அவங்க அம்மாவும் இருந்தாங்க. வாங்கன்னு கூப்பிட்டுட்டு„ பசங்க வந்து கொண்டிருக்காங்க வந்தவுடன் பேசலாம் னு சொல்லிட்டு அவங்க அம்மா உள்ளே போயிட்டாங்க. பவிக்கா இங்க தான் எங்க கூட பேசிக் கொண்டு இருந்தாங்க. இராணா அண்ணன் வந்ததை பார்த்து, உள்ளே ஓடிட்டாங்க" என்றதும்

"பார்ரா!" என்றாள் ஆச்சரியம் கலந்த கிண்டலும்

"ஏன் கா?"

"இல்லை கயல். லவ் பண்ணி, கல்யாணம் பேசற வரை வந்தாச்சு? பிறகு எதுக்கு பயந்த மாதிரி ஓடனும்!" என்றாள் நக்கலாக

யாரும் தங்களை கவனிக்கிறார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்தவள். இல்லையென்றதும், " முக்கியமா அவங்க அண்ணனுக்கு பவியை நம்ம வீட்டில் கல்யாணம் கட்டுவதில் இஷ்டமில்லையாம். பவிக்காவோட பிடிவாதத்தில் தான் பேசாமல் இருக்காங்களாம். அதனால தான் கல்யாணம் முடியர வரை நல்லபடியா நடந்துக்கனும்னு நேத்ரன் அண்ணனிடம் பேசிக் கொண்டிருந்தாங்க" என்றாள் கயல்.

"கல்யாணத்துக்கு இஷ்டம் இல்லாமையா பொண்ணு பார்க்க வர சொன்னாங்க? அப்போ எல்லாமே கண் துடைப்பா?" என்றாள்.

"தெரியலைக்கா " என்றாள் கயலும்

"ம்ம்ம். அவங்க சொல்ற கண்டிஷனுக்கு ஓத்து வரனும் னு கூட அப்படி சொல்லியிருக்கலாம். அதோடு, வசதியான வீட்டில் பிறந்த பெண்! நடுத்தர வர்க்கத்தில் எப்படி கொடுப்பது என்று நினைத்திருக்கலாம்!. நியாயம் தான்!. யாராக இருந்தாலும் அப்படித்தான் யோசிப்பார்கள்" என்று தனக்கு தோன்றிய நியாயத்தை கூறி, மெல்ல அமைதி காத்தாள். சிறிது நேரத்தில் வராண்டாவில் நின்று கொண்டிருந்த நேத்ரனும் அவர்களோடு வந்து அமர்ந்திருந்தான்.

"மன்னிக்கனும். ரொம்ப நேரம் காக்க வைத்து விட்டேனா?" என்றபடி வீல் சேரை இயக்கபடி அதில் கம்பீரமான தோற்றத்துடன் ராஜலெஷ்மி வந்தார். அவர் பக்கம் கவனத்தை திருப்ப, தனக்கு பின்னால் வந்த நர்சிடம், " நீ போ மா " என்று அனுப்பி விட்டு, இவர்கள் அமர்ந்திருந்த இடத்திற்கு வந்தவர்.

அல்லியை பார்த்து , " வா மா " என்று வரவேற்றாலும் பார்வை என்னமோ அவளை தலைமுதல் பாதம் வரை ஆராய்ந்து பார்த்தது.

"இந்த பொண்ணு... ?" என்று கேள்வியாக திரும்பி வாணியை பார்த்தார்.

"என் பொண்ணு அல்லி மலர்க் கொடி மா " என்றார் வாணி.

"வணக்கம் " என்றாள் அல்லி இரு கை கூப்பி.

"ஏன்? நிற்குறீங்க? உட்காருங்க வாணி என்றதும் தான் அல்லி கவனித்தாள். அப்பத்தாவை தவிர அனைவரும் நின்று கொண்டிருப்பதை! அல்லி கூட அவருக்கு வணக்கம் சொல்லும் போது தான் எழுந்தாள்! ஏதோ! தன் குடும்பத்தின் சுயம் தொலைவது போல ஒரு தோற்றம்! யோசித்தபடியே நெற்றியை லேசாக வருடியபடி அமர்ந்தாள்.

"கவின், பவி எங்கப்பா? வரச் சொல்லு" என்றதும்.

"பவி " எனும் போதே, மெல்ல படிகளில் இறங்கி வந்து, " வாங்க " என்று பொதுவாக அனைவரையும் வரவேற்றவளின் பார்வை நேத்ரனிடம் ஒரு முறை அழுந்த படிந்து வெட்கத்தால் தரை தாழ்ந்தது.

அல்லி பவித்ராவை தான் பார்த்துக் கொண்டிருந்தாள். நல்ல இளரோஜா நிறம், லேசான சுருள் கேசம் முதுகுவரை இருந்தது. மையிட்ட விழிகள் கூடுதல் அழகை தந்தது. கரும்பச்சையில் நீண்ட குர்த்தியும் அதற்கேற்றார் போல தொள தொள பேண்டும் அணிந்திருந்தாள். அந்த ஆடை அவளது உடல் அளவை எடுத்துக் காட்டும் விதத்திலும், ஆடையின் தரம் அவர்களது வளமான பொருளாதார நிலையையும் கூறியது!

பெண்களுக்கே உரிய விற்பனை அங்காடியில் வேலை செய்பவளுக்கு, பவி அணிந்திருந்த ஆடையின் விலை தெரியாமல் இருக்குமா என்ன? இவை அனைத்தையும் ஒரு சில விநாடிகளிலேயே கண்டு கொண்டவள். ராஜியின் பேச்சை கவனித்தாள்.

"நான் சுற்றி வளைச்சு பேச விரும்பலை. எங்க குடும்பத்தில் சின்ன பெண் பவித்ரா. எங்கள் வீட்டு இளவரசி. எப்போதும் அவளுடைய விருப்பம் தான் எங்களுடைய விருப்பம் . அவளுக்கும் அப்படித்தான்" என்றவர்.

சற்று நிறுத்தி, " நான் இப்போ உங்களை வரச் சொன்னதற்கு காரணம். நேத்ரனை தம்பியை நேரில் பார்த்து சில விசயத்தை நேரில் பேசி விடலாம் என்பதற்காகவும் தான். எங்களுக்கு நேத்ரனை பிடித்திருக்கு . அதோடு ஜாதகமும் பொருந்தியிருக்கு " என்றதும்

"ரொம்ப சந்தோஷம்மா " என்றார் வாணி .

"ஆனால்.. ?" என்று ராஜி நிறுத்த

'என்ன?' என்பது போல அனைவரும் அவரையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அல்லிக்கு , தலைபின்னலில் அடங்காமல், நெற்றியில் ஆடிய லேசான குறு முடி காற்றில் கன்னத்தில் முத்தமிட, அதை காதோரம் மென்மையாக ஒதுக்கி விட்டபடி ராஜியின் பேச்சை கவனித்தாள்.

"நேத்ரன் தம்பிக்கு கல்யாணம் யோகம் வர இன்னும் ஆறு மாதம் இருக்கு. அதன் பிறகு தான் திருமணம் செய்யனும்னு சொல்றார்" என்றதும்

துறுதுறு கண்கள் நேத்ரனையும் பவியையும் பார்க்க, பிறகு ராஜியை ஆராய்வது போல பார்த்தது. செதுக்கியது போன்ற மூக்கு சற்றே வியர்க்க தனது வெண்டை பிஞ்சு விரலால் லேசாக தேய்த்து விட்டுக் கொண்டாள். ஆரஞ்சு சுளை போன்ற உதடுகள் .. அவளுக்கு திடீரென குறுகுறுக்க அனிச்சை செயலாக லேசாக பற்களால் வருடி, நாவினால் இதழை தொட்டு மெல்ல எச்சிலை விழுங்கினாள்.

வாணி ஏதோ கூற வர, அப்பத்தா கண்களாலேயே பேசாதே! என்பது போல செய்கை செய்தார். ராஜி முழுதாக பேசி முடித்த பிறகே, பேச முடிவெடுத்திருந்தார்.

எச்சிலை விழுங்கும் போது ஏறியிருக்கிய தொண்டை குழி! அவளது கழுத்தை அலங்கரித்திருந்த முத்து மாலை அவள் மார்ப்போடு உறவாட, சரியாக இருந்த மாராப்பை இன்னும் இழுத்து விட்டபடி ராஜி பேச போவதை கவனித்துக் கொண்டிருந்தாள்.

"அதனால் திருமணம் செய்வதாக இருந்தால் ஆறுமாதத்திற்கு பிறகு தான். அதோட எங்களுக்கு சில நிபந்தனைகள் இருக்கு அதை மேரேஜ் முன்னாடியே செய்து கொடுக்கனும் " என்றார்.

'அல்லியோ? சொல்லும். சொல்லி முடியும்' என்ற ரீதியில் உதட்டை சுழித்து விட்டு அமர்ந்திருந்தாள்.

இதுவரை மயிலறகால் வருடுவதை போல் இருந்த உணர்வு மாறி! அழுத்தமான பார்வையால் யாரோ அவளை பார்ப்பது போல் தோன்ற! பார்வையை சுழல விட்டவள். மெல்ல மாடியை பார்க்க,

அவர்கள் அமர்ந்து பேசுவதை பார்த்தபடி சுவற்றில் ஒரு பக்க தோளை சாய்ந்து, கைகளை கட்டிக் கொண்டு நின்றிருந்தவனை கண்டதும், அல்லியின் கண்கள் சாசர் போல் விரிந்தன. ' இவன் அவன் தானே!' என்று மூளை கேள்வி கேட்க,

'ஆமாம். அவனே தான். இராணா தான்' என்று மனம் பதிலளிக்க! ஒரு விநாடி கேள்வி பதிலில் விடை கிடைக்க, டக்கென்று பார்வையை தாழ்த்திக் கொண்டாள். ரொம்ப நேரமாக பேசவதை கவனித்துக் கொண்டு இருக்கான் போலயே!' என்று மனம் புலம்பியது.

"திருமணத்திற்கு பிறகு , பவி பெயரில் வீடு வாங்கி கொடுப்போம். அதில் நேத்ரனும் பவியும் தனிக்குடித்தனம் இருக்கட்டும். ரொம்ப வசதியாக இருந்து விட்டு, அங்கே வசதியில்லாமல் அவளால் இருக்க முடியாது. அதோடு மற்ற முக்கிய விசேஷங்களில் அதாவது உங்க குடும்ப விழாக்களில் பவித்ரா கலந்து கொள்வாள். நீங்களும் அப்பப்போ வந்து மகனையும் மருமகளையும் பார்த்து விட்டு போகலாம்" என்றவர்.

சற்று நிறுத்தி, அதற்கு முன் பவி நேத்ரன் இருவருமே சின்னவங்க . பவிக்கு அனுபவம் பத்தாது. ஒரு குடும்பத்தை எடுத்து நடத்த. அதோடு எனக்கும் .. " என்றவருக்கு தொண்டை கமறியது. தாய் தன் உடல் நிலையை நினைத்து வருந்துவதை கண்டு, இராணா வேகமாக படிகளில் இறங்கி வர, கவின் ஒரு பக்கமும், பவி ஒரு பக்கமும் அவர் கையை ஆதரவாக பிடித்திருக்க,

அவரின் சக்கர நாற்காலியின் பின்னால் வந்த நின்றவன். குனிந்து அவர் கழுத்தை மெல்ல கட்டிக் கொண்டு அவர் கன்னத்தோடு கன்னம் உரசி காதில் மெதுவாக எதுவோ சொல்ல! அதை கேட்டு அவர் முகம் மலர்ந்து சிரித்தது.

அல்லிக்கு இதை பார்த்த போது, கவிதையை போல இருந்தது. பரவாயில்லையே தாயை மதிக்கும் பிள்ளைகள். பிள்ளைகளின் உணர்வுகளை மதிக்கும் தாய்! என்று அப்பத்தா கூட நினைத்தார்.

பிள்ளைகளின் அரவணைப்பில் சற்று தெளிய, இராணா அவரின் வலது புறம் அமர்ந்து கொள்ள, பவி அவனின் கையை பற்றியபடி அவன் தோள் சாய்ந்து கொண்டாள். கவின் அவரின் இடது புற இருக்கையில் அமர்ந்து கொண்டான்.

" அதோடு எனக்கும் பவியுடன் கூட இருந்து நல்லகெட்டது சொல்லி பழகி கொடுத்து, உடன் இருந்து வழி நடத்த என் உடல் ஒத்துழைக்காது. அதனால் நீங்கள் தான் பெரும்பாலும் மகன் மருமகள் கூடவே இருக்க வேண்டியிருக்கும்.

கயல் ஸ்கூல் முடித்து காலேஜ் படிப்பது கூட இங்கே சென்னையிலேயே படிக்கட்டும். நல்ல ஹாஸ்டல் இருக்கும் காலேஜில் சேர்த்து விடலாம் " என்றதும்..

அதுவரை அவரது பேச்சை கேட்டுக் கொண்டிருந்தவள். கயலை ஹாஸ்டலில் சேர்த்து படிக்க வைக்கலாம் என்றதும். முகம் கோவத்தில் சிவக்க! கையை போதும்! என்பது போல உயர்த்தினாள்.

அல்லியின் கோவம் வெளிப்படையாகவே தெரிய, " என்ன? என்னம்மா?" என்றார் ராஜி புரியாமல்.

"நீங்க உங்க பொண்ணை பற்றி பேசினால் மட்டும் போதுமென்று நினைக்கிறேன். என் தங்கை எங்கே படிக்கனும்? எப்படி படிக்க வைக்க வேண்டுமென்று நாங்கள் முடிவு செய்து கொள்கிறோம்" என்றாள் பட்டென்று.
 

Sirajunisha

Moderator
ராஜி திகைத்து போய் பார்க்க! இராணா கோவத்தில் உடல் இறுகி அவளை நேருக்கு நேராக கண்களில் அனல் பறக்க பார்த்திருந்தான்.

"அல்லி !" என்ற அதட்டல் குரல்கள் வாணி மற்றும் நேத்ரனிடமிருந்து வந்தன. அப்பத்தாவும் அவளது கையை பற்றி, 'பொறுமையாக இருக்கும் படி ' கண்ணை மூடி திறந்தார்.

"எப்படி அப்பத்தா? நேத்ரன் இங்க வந்து வீட்டோட மாப்பிள்ளையாக இருக்கிறதோ? இல்லை தனிக்குடித்தனம் இருப்பதோ! அவனோட விருப்பம். இதில் நாம எதும் சொல்வதற்கு இல்லை. ஆனால் என் தங்கச்சியை ஹாஸ்டலில் தங்கி படிக்க வைப்பது பற்றி இவங்க ஏன் பேசறாங்க?. அது நம்ம விருப்பம் . எது நல்லதென்று நமக்கு தெரியாதா?" என்றாள் ஆதங்கமாக.

இராணாவின் உடல் இறுகி, கோவத்தில் அமர்ந்திருப்பதை கண்டு, பவிக்கு பயம் வந்து விட்டது. எங்கே? இவளால் திருமண பேச்சு தடைபடுமோ? என்று பயந்த பவி, 'ஏதாவதோ செய்!' என்பது போல நேத்ரனை பார்க்க, அதை புரிந்து கொண்டவன்.

"அல்லி, அத்தை அவங்களோட விருப்பத்தை தான் சொல்றாங்க. அதுவும் கயலோட படிப்புக்காக. பெரியவங்க பேசும் போது, என்ன சொல்ல வர்றாங்கன்னு முழுதாக கேட்க மாட்டியா? மரியாதை இல்லாமல் எதிர்த்து பேசுற? கொஞ்சம் நேரம் அமைதியாக இரு" என்று அதட்டினான்.

கோவம் தலைஉச்சிக்கு ஏற, கண்ணை மூட.. சரசரவென வார்த்தைகள் வரிசை கட்ட, கண்ணை திறந்து நேத்ரனை பார்த்தவள்.

"கல்யாணம் செய்து வீட்டோடு மாப்பிள்ளையாக போய், கூடவே அம்மாவையும் எடுபிடிக்கு அழைச்சிட்டு போகனும்னு நினைக்கிற உனக்கு! சுய கௌரத்துக்கான அர்த்தம் புரியாது நேத்ரன். கொஞ்சம் நேரம் அமைதியாக இரு " என்றாள் வெகு தெளிவாக.

பட்டென்று இராணா எழுந்து விட்டான். "இதற்கு தான்.. இதற்கு தான் மா.. இந்த மேரேஜ் வேண்டாம் என்றேன். இவ எங்கே இருந்தாலும் ஏன்? வந்தாலுமே பிரச்சனை தான். எதையாவது இழுத்து வைக்க வேண்டியது. தனக்கு தான் பேச தெரியுமென்று பேச வேண்டியது" என்று கடுகடுத்தவன்.

"இப்போ என்ன? உன் தங்கச்சியை நீ தான் படிக்க வைக்கிற. உன் அண்ணனை நீதான் வேலை பார்த்து படிக்க வைத்தாய்! உன் குடும்பத்தை நீ தான் பார்த்துக் கொள்கிறாய். அது எங்க எல்லாருக்கும் தெரியும். அதையே காரணமாக வைத்துக் கொண்டு ஒருத்தருக்கு கிடைக்க கூடிய நல்லதை ஏன் கெடுக்கிற? அப்படியென்ன ஈகோ உனக்கு?. எல்லாரும் காலம் முழுவதும் நீ தான் அவங்களை படிக்க வைச்ச, சாப்பாடு போட்டேன்னு சொல்லி சொல்லி காமிக்கனும்னு நினைக்கிறதுக்கு பெயர் 'வக்ர புத்தி' என்று அழுத்தமாக அவள் முகத்தை நேருக்கு நேர் பார்த்து!

இராணா எழும் போதே! அனிச்சையாக எழுந்தவள். அவன் பேசுவதை கேட்க கேட்க, எதற்கென்றே தெரியாமல் அடிவாங்கிய குழந்தை போல மலங்க மலங்க விழித்தாள். கண்களில் கண்ணீர் நிரம்பி பார்வை மறைத்தது.

சூழ்நிலை இராசாபாசம் ஆகும் முன், "அல்லி இங்கே வா " என வாணி அவள் கையை பிடித்து தனியே இழுத்துச் சென்றார். உடன் அப்பத்தா, கயலும் சென்றனர். நேத்ரனுக்கு பவியின் முகத்தை கண்டு, அவளை எப்படி சமாதானப்படுத்துவது என்று தெரியாமல் அமர்ந்திருந்தான்

ராஜி, கண்ணை மூடி அமர்ந்திருந்தார். யாரும் எதுவும் பேசவில்லை. அங்கே பலத்த மௌனம் நிலவியது. சிறிது நேரத்திற்கு மேல் அங்கே இருக்க முடியாமல், இராணா வேகமாக மாடியில் உள்ள பால்கனிக்கு சென்று விட்டான். உயரமான இடமும் தனிமையும் எப்போதும் அவனுக்கு சற்று ஆசுவாசத்தை கொடுக்கும்.

வாணி ஏகத்துக்கும் அல்லியை திட்டிக் கொண்டிருந்தார். "உனக்கு என்ன கிறுக்கு பிடிச்சிடிச்சா அல்லி. மட்டு மரியாதை இல்லாமல் பேசிட்டு இருக்க. நேத்ரனுக்கு நல்ல வாழ்க்கை அமைய போகுது. இதில் தேவையில்லாமல் பேசினால் என்ன நினைப்பாங்க? பொறாமை பிடிச்சவன்னு பேச மாட்டாங்க?" என்றதும்

"அம்.. மா..!" என்றாள் விக்கித்து போய்

"அவங்க சொல்வதற்கு முன் நானே சொல்வேன். எனக்கும் அப்படித்தான் தோணுது. கூட பிறந்தவன் நன்றாக இருக்கனும்னு நினைக்க மாட்டியா? நீ. எல்லாத்துக்கும் குறை கண்டுபிடித்து பேசிட்டு இருக்கிற?"

"அம்மா.. அவங்க கயலை ஹாஸ்டலில்.. " எனும் போதே இடைமறித்தவர்.

"நாம தங்கியிருக்கிற இடத்துக்கும் படிக்கிற இடத்திற்கும் தூரம் அதிகம் இருந்தால் என்ன செய்வோம்?ஹாஸ்டலில் தானே தங்க வைப்போம். அப்படி நினைத்து தானே அவங்களும் சொன்னாங்க. ஒரு அம்மாவாக சொல்ல வந்தது எனக்கு புரிந்தது. உனக்கு தான் புரியலை. அந்த தம்பி சொல்ற மாதிரி உன்னோட அடிமையா, எல்லாத்துக்கும் உன்னை எதிர்பார்த்துக் கொண்டு நிற்கனுமென்று நினைக்கிறியா? அதான் உன் எண்ணமா?" என்றார்.

ஏற்கனவே அடிவாங்கிய குழந்தையாக மலங்க மலங்க விழித்துக் கொண்டிருந்தவள். இப்போது வாணி பேசியதும் சேர்த்து!பேசாமடத்தையாகியிருந்தாள்

அப்போது, வாசலில் , "மலர் " என்று குமார் சற்று சத்தமிட்டு அழைக்க,

வாசலை எட்டிப் பார்த்தவள். " இதோ வரேன் குமார் " என்று பதிலளித்தவள். அவசர அவசரமாக முகத்தை அழுந்த துடைத்து விட்டு வேகமாக வாயிலை நோக்கி ஓடினாள்.

அதற்கு மேல் அங்கே நிற்காமல், வாணி, கயல் மற்றும் அப்பத்தா என அனைவரும் கூடத்திற்கு வந்தனர். அங்கே சங்கடமான நிலை நிலவியது. தயங்கினாலும் வாணி தான் பேச்சை ஆரம்பித்தார்.

"அல்லி பேசியதை நீங்க தவறாக நினைக்காதீங்க மா. அவளும் சின்ன பொண்ணு தானே. கல்யாணம் செய்தவுடனே கயலை படிப்பிற்காக ஹாஸ்டலில் சேர்ப்பதாக சொன்னதை தவறாக புரிந்து கொண்டு பேசி விட்டாள். இப்போது எடுத்து சொன்னதும் புரிந்து கொண்டாள். அவளுக்காக நான் மன்னிப்பு... " என்ற போதே

"என்ன சம்மந்தி நீங்க? மன்னிப்பெல்லாம் கேட்டுக் கொண்டு, நீங்களா பேசினீங்க? மன்னிப்பு கேட்பதற்கு?" என்றார்.

'அதில் அல்லி பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்' என்ற மறைபொருள் இருந்ததோ!

இராணா தலையை அழுந்த கோதிக் கொண்டு தன்னை சமன் செய்து கொண்டிருந்தான். அல்லி மலங்க மலங்க விழித்தபடி நின்றதே கண் முன் தோன்றி! எரிச்சலையும் கோபத்தையும் ஒரு சேர தோற்றுவித்தது.

ராஜி அழைப்பதாக கூறி, சாமி வந்து கூப்பிட்டதும். "நீங்க போங்க " என்று விட்டு, சற்று நேரத்தில் பின்னாடியே வந்தான்.

"சொல்லுங்கம்மா " என்றான்.

"இப்போ சின்னதாக பூ வைத்து முடிவு செய்து விட்டு பிறகு ஒரு நாளில் சொந்தங்களை கூப்பிட்டு நிச்சயம் செய்து கொள்ளலாம். ஆறு மாதத்திற்கு பிறகு, கல்யாண தேதி குறித்துக் கொள்ளலாம்" என்றார்.

"ம்ம்ம். சரி மா " என்றவன். "வாழ்த்துக்கள் டா " என்று பவியை அனைத்து விடுவித்தவன். நேத்ரனிடமும் தனது வாழ்த்தை தெரிவித்தான்.

பவிக்கு வாங்கி வந்த புடவையை, பரிசாக நேத்ரன் கொடுக்க, அதை சந்தோஷமாக பெற்றுக் கொண்டவள். வாணியின் உதவியோடு அழகாக கட்டியிருந்தாள். தங்க நிறம் கலந்த வாடாமல்லி நிற புடவை அவளுக்கு அவ்வளவு அழகாக இருந்தது.

"நல்லா வளர்ந்துட்டாள் மா?" என்றான் கவின் மனம் நெகிழ, ராஜி மற்றும் இராணா இருவருமே அதே மனநிலையில் தான் இருந்தனர்.
ஒப்புதலாக தலையசைத்தார் ராஜி.

பவியை ஷோபாவில் அமர வைத்து, அவளுக்கு கயலை கொண்டு தலையில் பூ வைத்து விட்டனர். இன்னும் அல்லி வராததை கண்டு, அப்பத்தா தான் கயலிடம், "போய் அல்லியை அழைச்சிட்டு வா " என்றார்.

குமார் என்னவோ சொல்லிக் கொண்டிருக்க, " அக்கா " என்றதும்..

அல்லி திரும்பிப் பார்த்தாள். "அப்பத்தா பூ வைக்க கூப்பிடுறாங்க" என்றாள் தயங்கியபடி

"இதோ வரேன்" என்றதும். கயல் முன்னே செல்ல, பின்னால் வேகமாக அல்லி வந்தவள். ஏற்கனவே பூ வைத்து அமர்ந்திருப்பதை கண்டு,

தான் வாங்கி வந்த மோதிரத்தை நேத்ரனிடம் நீட்டியவள். மற்றொன்றை பவித்ராவின் கையில் கொடுத்தாள்.

"வர அவசரத்தில் ஆட்டோவிலேயே மோதிரத்தை விட்டுவிட்டு வந்துட்டேன். அதான் குமார் எடுத்துக் கொண்டு வந்துச்சு " என்றவள்.

"அதற்கு முன்னாடி இந்த பணத்தை வாங்கிக்கனும் " என்றாள்.

ஐநூறு ரூபாய் நோட்டு கத்தையாக சுருட்டியிருந்தது. குறைந்தது இருபதாயிரம் ரூபாயாவது இருக்கும்.
"எத..எதற்கு?" என்றாள் புரியாமல் பவி

"நீங்க எனக்கு ஹாஸ்பிட்டலில் இருக்கும் போது செலவு செய்தது. எவ்வளவு னு நீங்களும் சொல்லலை நேத்ரனும் சொல்லலை. அதனால் நானே குத்துமதிப்பாக யோசிச்சு பணம் எடுத்துட்டு வந்தேன்." என்றாள்.

"இல்லை. இவ்வளவு எல்லாம் செலவு ஆகலை " என்றாள் பவி தயங்கி இராணா மற்றும் கவினை பார்த்தபடி

"அப்போ மீதியை நேத்ரனிடம் கொடுத்திடுங்க. நான் பிறகு வாங்கிக்கிறேன் " என்றவள்.

"ம்ம்ம். நேத்ரனுக்கு மோதிரத்தை போடுங்க " என்றாள் பவியிடம்.

இருவரும் ஒருவருக்கொருவர் மோதிரம் மாற்றிக் கொள்ள! கயல் சிறு பிள்ளையாக " ஹேய்ய்ய்! " என்று கைதட்டி ஆர்ப்பரித்தாள்.
அனைவரது முகத்திலும் சந்தோஷம் நிறைந்து இருந்தது.

"சரிங்க நான் கிளம்பறேன். டைம் ஆச்சு. சில சாமானெல்லாம் வாங்கிட்டு போகனும் " என்றவள். "வரேன் நேத்ரன். வரேன் மா. வரேன் கயல். வரேன் அப்பத்தா. ஊருக்கு போயிட்டு எனக்கு போன் பண்ணு " என்றவள்.

"வரேன் கவின் சார் " என்றதும் அனைவரும் திகைத்து பார்க்க! " வரேன் மேடம் " என்று ராஜியிடமும் விடைபெற்று விட்டு, விறுவிறுவென வாயிலை நோக்கி சென்றாள். அவளால் இராணாவை நிமிர்ந்தும் பார்க்க முடியவில்லை.

இராணாவும் அவளை கண்டு கொண்டதாக காட்டிக் கொள்ளவில்லை. 'போடி ' என்ற மனநிலையை தான் மற்றவர்களுக்கு பிரதிபலித்தான்.

பவிக்கு, அங்கிருந்த இனிப்பை வாயில் இட்டு விட்டு நகர, இராணாவின் போன் ஒலித்தது. "எக்ஸ்கியூஸ் மீ" என்று விட்டு அழைப்பை இணைத்தவன். பேசியபடி வாசலை நோக்கி செல்ல!

அல்லி, முகத்தை தண்ணீர் விட்டு அடித்து கழுவுவதும். பிறகு ஆட்டோ டிரைவர் டவல் தர, முகத்தை துடைத்து விட்டு கொடுத்தாலும் கண்களில் கண்ணீர் வழிந்தது. புறங்கையால் சிறு பிள்ளை போலவே துடைத்தபடியே ஆட்டோவில் ஏறிக் கொண்டாள். வாட்ச்மேன் கதவை மூடிவிட்டு நகர, அந்த கேட்டையே வெறித்து பார்த்தபடி நின்றிருந்தான் 'இராணா'.

அல்லி மலர்க் கொடி வருவாள்..

அடுத்த பதிவு வியாழன் இரவு டியர்ஸ்
 
Last edited:

Sirajunisha

Moderator
அத்தியாயம் :13
அப்பத்தாவுக்கு மனம் பாரமாக இருந்தது. எவ்வளவு சொல்லியும் அங்கே பவியின் வீட்டில் தடபுடலாக ஹோட்டலில் வரவழைத்து கொடுத்த உணவை சாப்பிட மறுத்து விட்டார். வெளிப்பார்வைக்கு சந்தோஷமாக காட்டிக் கொண்டாலும் கயலுக்கும் உணவு இறங்கவில்லை

அல்லியை மலங்க மலங்க விழித்த பார்வையே அவள் மனக்கண்ணில் வந்து போனது. பெயருக்கு சாப்பிட்டாள். வாணிக்கும், அல்லி உடனே சென்று விட்டதில் மனவருத்தமே. இருந்தாலும் அவளது பேச்சினால், இந்த திருமணம் ஏதும் தடைப்பட்டு விடுமோ? என்ற பயத்தினால்! இதுவரை அல்லியை கோவமாக பேசியிராதவர் பேசிவிட்டார்.

இதில் நேத்ரனும் பவித்ராவும் மட்டுமே காதல் கை கூடிய மகிழ்ச்சியில் இருந்தனர். இராணா, ராஜி, மற்றும் கவினின் உணர்வுகளை கண்டறிய முடியவில்லை.

அனைவரிடமும் விடைபெற்று கிளம்ப கயல் , அல்லியை போலவே பவித்ராவிடம் வரேங்க" என்று விடை பெற்றவள். ராஜிடம் " வரேன் மேடம் " என்றாள்.

அவளது மேடம் என்ற வார்த்தையில், ராஜி, முதலில் திகைத்தாலும் பின்பு சிரிப்பு வந்தது. சிறு பிள்ளை தானே என்று தோன்ற!

"நான் உனக்கு அத்தை மா. அத்தையென்று கூப்பிடு " என்று திருத்தினார்.

"அக்கா எப்படி கூப்பிடு வாங்களோ? அப்படியே கூப்பிட்டு பழக்கம் மேடம். அதனால அப்படித்தான் வரும் " என்றவள்.

"வரேன் சார் " என்று கவினிடம் மட்டும் விடைபெற்றாள்.

வாணிக்கு , கயலை பார்த்து கோபம் வந்தது. 'அகம் பிடித்த கழுதை பெரியவங்களிடம் பேசும் பேச்சை பாரு! என்று அவளை முறைத்தபடி நின்றிருந்தார்.

அல்லியை போலவே இராணாவிடம் விடைபெறாமல் கிளம்ப, கயலின் சிறு பிள்ளை தனத்தை கண்டு அவனுக்கு சிரிப்பு தான் வந்தது. ஆனால் அவள் மேல் கோபம் பாராட்டாமல்,

"பத்திரமா போயிட்டு வாங்க" என்றவன். "நல்லா படி கயல் " என்றான் இன்முகமாகவே.

அனைவரும் முன்னே சென்று கொண்டிருக்க, பின்னால் நடந்து சென்று கொண்டிருந்தவள். டக்கென்று திரும்பி இராணாவை முறைத்தாள்.

அவளது முறைப்பை கவனித்த! கவினிக்குமே இப்போது சிரிப்பு வந்தது. இராணாவும் கவினும் ஒருவருக்கொருவர் பார்த்து சிரிக்க!

"எங்க அக்காவை அழ வைச்சிட்டீங்க ல?" என்ற அழுகையுடனான குற்றச்சாட்டில், இராணா எந்த உணர்வையும் காட்டாது அப்படியே நின்றிருந்தான்.

"எங்க அக்கா அழுது நான் இதுவரை பார்த்ததில்லை. உங்களால இன்றைக்கு அழுதுட்டாங்க. நீங்க தான் அழ வைச்சீங்க சார். எங்க அக்கா உங்களிடம் பேசாதவரை நீங்களும் என்னிடம் பேசாதீங்க" என்று விட்டு அழுகையில் தொண்டையடைக்க விறுவிறுவென முன்னால் சென்று காரில் ஏறிக் கொண்டாள்.

"எப்படி பேசி விட்டு போகிறாள் பாரேன்!" என்று கவின் கூட ஆச்சரியப்பட்டான்.

"கயலுக்கு சப்போர்ட் செய்து தானே பேசினாள். அதற்கு தான் எல்லாரிடமும் வாங்கி கட்டிக் கொண்டது. அந்த குற்றவுணர்ச்சியில் தான் என்னிடம் கோபமாக பேசுவது. என்னமோ நான் மட்டுமா பேசினேன். அவங்க அம்மா!ஏன்? நேத்ரன் கூட தான் கண்டித்தார். அங்கே போய் காட்ட சொல்லு பார்க்கலாம்! " என்றான் நக்கலாகவே

"இருந்தாலும் அந்த பொண்ணு அல்லியை அப்படி நீங்க பேசும் போது! எனக்கே அதிர்ச்சி தான் அண்ணா. நம்ம பவிக்காக நாம பேசும் போது அமைதியாக தான் இருந்தாங்க. கயலை படிக்க வைக்கிறேன்னு ஹாஸ்டலில் தங்க வைக்கிறேன்னு சொல்லும் போது! அந்த பெண்ணுக்கு கோவம் வந்திடுச்சு போல! அதனால் அம்மாவிடம் அப்படி பேசிட்டாங்க..." என்று கவின் பேசும் போது இடையிட்ட இராணா

"அவளுக்கு கோவம் வந்தா மரியாதை குறைவாக பேசுவாளா? அதே மாதிரி எதிரில் இருப்பவர்களுக்கு கோவம் வந்தால் எப்படி பேசுவாங்கன்னு இந்நேரம் புரிந்திருக்கும் . இனிமே அம்மா முன்னாடி இப்படி பேசுவதை இத்தோடு நிறுத்திக்கனும் . இல்லை நிறுத்த வேண்டியிருக்கும் " என்று விட்டு வேகமாக வீட்டினுள் சென்றான் இராணா.

கவின் யோசித்தபடியே ஹாலில் உள்ள இருக்கையில் அமர, அப்போது அங்கே வந்த ராஜி, " ஏன் பா உன் முகம் டல்லா இருக்கு?" என்றபடி ' உடல் நிலை சரியில்லையோ? 'என்று அவன் நெற்றியை புறங்கையால் தொட்ட பார்த்தார்.

"ஒன்றும் இல்லைமா. அந்த பொண்ணு அல்லி அழுத மாதிரி கண் எல்லாம் கலங்கியபடி போனது! ஒரு மாதிரி வருத்தமா இருக்கு " என்றான்.

"இராணாவுடைய கோவத்தை பற்றி தான் உனக்கு நல்லாத் தெரியுமே கவின். அந்த பொண்ணு முகத்திலடித்த மாதிரி பேசினது எனக்குமே மனதுக்கு கஷ்டமா தான் இருந்தது " என்றார் தன்னிலை விளக்கமாக

"இதே மாதிரி திரும்பி நடக்காமல் பார்த்துக்கோங்க மா. அது நம்ம குடும்பத்துக்காக இருந்தாலும் சரி, நேத்ரனுடைய குடும்பத்துக்காக இருந்தாலும் சரி!" என்றவன்.

ராஜி புரியாமல் பார்ப்பதை கண்டு, "அம்மா ! பவியை நாம நேத்ரனுக்கு கல்யாணம் செய்து கொடுக்க போறோம். திருமணத்திற்கு பிறகு அவ எங்கே இருந்தாலும் அவ நேத்ரன் குடும்பத்தை சேர்ந்தவ தான். அப்படியிருக்க! அந்த பெண்ணை அழ வைக்கிறது நம்ம பவியோட லைஃப்புக்கு நல்லதில்லை மா . இதே இடத்தில் நீங்க பவியை வைத்து யோசித்து பாருங்க ... " என்று விட்டு, ,அதற்கு மேல் அங்கே இருக்க விருப்பமில்லாமல்,

"நான் நம்ம குடோனுக்கு போய்விட்டு வரேன்" என்று பதிலை எதிர்பார்க்காமல் எழுந்து சென்று விட்டான்.

இங்கே அல்லி ஆட்டோவில் போகும் போதே, ஒரே அழுகை! ஒரு கட்டத்துக்கு மேல் பொறுக்க முடியாமல் , "இப்போ எதுக்கு இவ்வளவு அழுகை மலரு. அதான் புவனா சமாளிச்சுக்குவேன்னு சொன்னாங்கள்ள" என்றான்.

"எப்படி சமாளிப்பாங்களாம்?. நீ என்னை கூப்பிட வந்த நேரம் அங்கே போய் அவங்களுக்கு உதவி செய்திருக்கலாம்" என்றாள் ஆற்றாமையாக.

"ஒரு விசயம் புரிஞ்சுக்கனும் மலரு. அவங்க நிலையில் இப்போ யாரும் உதவி செய்யறேன்னு போய் நின்றாலும், அந்த புள்ளைய தான் தப்பா பேசுவாங்க. கீழ் வீட்டீல் இருக்கிற அமுதா அக்காவுக்கு போன் பண்ணி, நாங்க வருகிற வரை அங்கேயே இருக்க சொல்லியிருக்கேன். வேலுவையும் கையோடு அனுப்பியிருக்கேன். நீ அழுவாத சரியா!" என்று சமாதானப்படுத்தினான்.

குமாருக்குமே அல்லியின் அழுகையை கண்டு திகைப்பே! அல்லியின் போன் சுவிட்ச் ஆப் ஆகிவிட்டதால், குமாரின் எண்ணுக்கு தான் புவனாவிடமிருந்து அழைப்பு வந்தது. அழைப்பை இணைத்தவன்.

"ஹலோ " என்றதுமே..

"அல்லி எங்கே? அ.. அவ.. அவளிடம் போனை கொடுங்களேன் " என்ற புவனாவின் குரலில் இருந்த நடுக்கமும் பயமும் இதுவரை அவன் பார்த்திராதது.

"அவங்க வீட்டு உள்ளார இருக்காங்க. போன் ஸ்விட்ச் ஆப் ஆயிடுச்சு " எனும் போதே! 'யாரோ கதவை தட்டும் ஒலி பலமாக கேட்டுக் கொண்டே இருந்தது.

புவனாவின் குரலில் இருந்த நடுக்கமும், வேகமாக கதவு தட்டும் ஒலியும் பிறகு கொச்சை பேச்சும் இப்போது காதில் விழ, " என்னாச்சு சொல்லுங்க? அங்கே என்ன சத்தம்? யார் கதவை தட்டுறது?" என்றான்

அவளிடத்தில் எந்த பதிலும் இல்லை. அழுகையை அடக்குவதும் விம்மலும் மட்டுமே கேட்க, "நீங்க லைனிலேயே இருங்க. நான் மலரை கூப்பிடுறேன்" என்று வேகமாக வந்து மலரை அழைத்து போனை கொடுத்தான்.

அல்லி ஹலோ என்றது தான் தாமதம்.. மறுமுனையில் என்ன சொல்லப்பட்டதோ,

"அக்கா.. அக்கா.. அழுவாத கா. நான் வந்திடுறேன்.. நீ கதவை மட்டும் திறந்துடாத.. "

"............. "


"அக்கா..! " என்றவளுக்கு கண்களிலிருந்து கண்ணீர் கடகடவென கொட்ட ஆரம்பித்தது.
 

Sirajunisha

Moderator
"அப்போ என்ன பத்தி நீ நினைக்கலை தானே!" என்றாள் குரல் அடைக்க

அந்த சமயத்தில் கயல் வந்து கூப்பிட, " வருகிறேன்" என்றவள். "புவனா.. நான் வரும் வரை அவன் அங்கேயே இருக்க வைக்க வேண்டியது உன்னோட பொறுப்பு " என்று அழுத்தமாக கூறி விட்டு, " ஆட்டோவை ஸ்டார்ட் பண்ணி வை குமாரு. ஐந்து நிமிசத்துல நாம கிளம்பறோம் " என்று போனை குமாரிடம் கொடுத்து விட்டு சென்று விட்டாள்.

இங்கே புவனாவோ, " ம்ஹூம். என்னால எல்லாம் முடியாது. அந்த கிழவன் அப்படி பேசறான். எவனை வைச்சிருக்கே? எவ்வளவு சம்பாதிக்கிற? எத்தனை மணி நேரம் னு.. ரொம்ப கேவலமாக பேசறான். என்னால முடியலை டி. அவ்வளவு கொச்சை கொச்சையா பேசி.. என் மானத்தை வாங்குறான். உடம்பெல்லாம் கூசுது மலரு " என்ற புவனாவின் கதறலில் குமாரின் உடல் இறுகியது.

"உன் மானம் மரியாதை எவன் வாயிலிருந்து வரும் வார்த்தையில் இல்லை. உங்கிட்ட தான் இருக்கு " என்ற குமாரின் திடீரென்ற பேச்சில்
புவனாவின் அழுகை டக்கென்று நின்றது.

"சும்மா.. ஒய்யி ஒய்யினு அழுதுக்கிட்டு " என்று எரிச்சலாக வேறு பேசி வைக்க,

அழுகை! திகைப்பு! எல்லாம் மாறி, இப்போது கோவம் வர, " என்ன அழுவுறாங்க? உங்க அக்கா தங்கச்சியா இருந்தா இப்படி தான் பேசுவீங்களா? அவங்க நிலையிலிருந்து யோசிச்சு பாருங்க " என்றாள் ஆதங்கமாக

"எனக்கு அக்கா தங்கச்சியெல்லாம் கிடையாது. அல்லி மலருன்னு பெராது ஒரு பொண்ணு மட்டும் தான். அவளும் தைரியமானவ தான்"

"அப்போ உங்க பொண்டாட்டிக்கு இப்படி நடந்தால்?" என்றாள் கோவமாக.

"அதுக்கு தான் டிரைன் பண்ணிட்டு இருக்கேன். எதாவது புரிஞ்சா தானே!" என்று முணுமுணுத்தவன். "மலர் வந்திடுச்சு நாங்க கிளம்பிட்டோம்" என்று அழைப்பை துண்டித்து, அமுதா மற்றும் வேலுவுக்கு போன் செய்து விவரம் சொல்லி அனுப்பி வைத்தான்.

அல்லி அவசரமாக வர, முகத்தை கழுவி டவலை கொடுத்து துடைக்க சொன்னவன். தண்ணீர் கொடுத்து குடிக்க வைத்து அவளை சற்று ஆசுவாசப்படுத்தி அழைத்து சென்றான். ஆனால் அல்லிக்கு மனம் சமாதானம் ஆகவில்லை. சற்று முன் நிகழ்ந்ததை அவளால் ஜீரணிக்க முடியவில்லை.

அதற்குள் புவனாவுக்கு பிரச்சனை என்று ஓடி கொண்டிருக்கிறாள். என்ன வாழ்க்கை இது? என்ற சலிப்பு தான் வந்தது. இந்த கடவுளுக்கு அப்படி என்ன தான் எங்கள் மீது கோபம்? யாருக்காக ஓடுகிறோமோ? யாருக்காக உழைக்கிறோமோ?அவர்களாலேயே அவமானத்திற்கும் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகி கொண்டிருக்கிறோம் என்று மனம் இயலாமையால் புலம்பிக் கொண்டிருந்தது.

வீட்டிற்கு வந்த ஆட்டோ நின்றதுமே, மாடிக்கு வேகமாக ஓடினாள். அங்கே, அமுதாவும் வேலுவும் நின்று அந்த கிழவனிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். இருவருக்குமே சலிக்காமல் பதில் சொல்லிக் கொண்டிருந்தான்.

"யார் நீங்க? எதுக்கு இங்கே பிரச்சனை பண்ணிட்டு இருக்கீங்க?" என்றாள் அந்த கிழவனிம்.

"முதலில் நீ யாருன்னு சொல்லு?" என்றான் அதிகாரமாக

"இது என் வீடு? என் வீட்டு முன்னாடி கத்திட்டு நிக்கிறீங்க? யாரு நீங்க? " என்றாள்.

"ஓ! நீ தான் அவ கூட தங்கிட்டு இருக்கியா? நீ தான் அவளுக்கு ப்ரோக்கரா?" என்றதும்

உயரமாக அதற்கேற்ற பருமனுடன் முன்னால் வயிறு தொப்பையால் சரிந்திருக்க! வழுக்கை தலையும் அதன் ஓரத்தில் இருந்த ஒன்றிரண்டு முடியும் நரைத்து வெளுத்துபோய் நிற்க, ஊருக்கு பெரிய மனிதனாக பெயர் செய்து கொண்டு, மகனுக்கு பார்த்த பெண்ணை தனக்கு கல்யாணம் பேச வந்த கிழவனின் பேச்சில் தன்னிலை இழக்க! அங்கே கிடந்த விறகு கட்டையை ஆவேசமாக கையில் எடுத்தவள். அடி வெளுக்க ஆரம்பித்தாள்.

" பொறுக்கி நாயே? குடிகார பிள்ளையை பெத்து வைச்சு அவனுக்கு கல்யாணம் பண்ண முடியலைன்னு. இப்போ உன்னை கல்யாணம் பண்ண சொல்லி டார்சர் பண்ற அவங்களை" என்றவள். அடியை ஒரு நொடி கூட நிற்பாட்ட வில்லை.

"கட்டையில போற வயசுல.. உனக்கு கட்டிலுக்கு பொண்ணு கேக்குதா? இனிமே இங்கே இப்படி பேசிட்டு வருவியா? வருவியா?" என்று அவள் ஆவேசமாக அடிக்க ஆரம்பித்தலிருந்து யாருமே அவளிடம் நெருங்க முடியவில்லை.

'எங்கே? இவளை தடுக்க போய்! அந்த அடி தங்களுக்கு தவறி விழுந்து விடுமோ? என்று பயந்து போய் நின்றிருந்தனர்.

குமாருக்குமே ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆண் பிள்ளையாக இருந்தால் கூட, இழுத்து நகர்த்தி கொண்டு வரலாம். பெண் பிள்ளையாக இருக்க, ஒன்றுமே செய்ய முடியவில்லை.

கிழவன் அடி வாங்கும் சத்தம் கேட்டு, வெளியில் வந்த புவனா முதலில் திகைத்தாலும், பிறகு நிதானமாக அவன் கதறலை ரசித்துக் கொண்டிருந்தாள்.

ஒரு கட்டத்திற்கு மேல் அடி தாங்க முடியாமல், கை கால்களில் இரத்த காயங்களுடன் சரிந்தவன். உடல்கள் நடுங்க, பேச முடியாமல் கையெடுத்துக் கும்பிட்டான். ஒரு நொடி திகைத்து நிற்க! அதை பயன்படுத்தி, அவள் கையிலிருந்த கட்டையை பிடிங்கி எரிந்திருந்தான் குமார்.

அப்போதும் கோபம் தனியாமல், "உன் வயசு என்ன? அவ வயசு என்ன? உனக்கெல்லாம் மனசாட்சியே கிடையாதா? உன் பேத்தி வயசு டா அவளுக்கு. வக்கிரம் புடிச்ச நாயே.

ஒருத்திட்ட காசு இல்லைனா சுயகௌரவம் இருக்கக் கூடாதா?அவளை மதிக்க மாட்டீங்களா?குடும்பத்தை பகடையா வைச்சு இன்னும் எத்தனை காலத்துக்கு தான் டா அவளோட மனசை கொன்னு திம்பீங்க? ஒருத்தி குடும்பத்துக்காக உழைச்சிட கூடாது. அவ குடும்பத்துக்காக தனக்கான வாழ்க்கையை தள்ளி போட்டால்! உடனே பேரம் பேச வந்திட வேண்டியது. என்ன ஜென்மம் டா நீங்களெல்லாம்?" என்றவள்.

"இனிமே அவங்க குடும்பத்து பக்கம் கூட தலைவைச்சு படுக்கக் கூடாது. இது தான் உனக்கு கடைசி. இனிமே எங்கேயாவது உன்னை பார்த்தேன். உன்னை கொல்லவும் தயங்க மாட்டேன்" என்றதும்.

கனத்த சரீரத்தை தூக்கிக் கொண்டு, துணி அலங்கோலமாக கிடக்க! அதை சரிசெய்யக் கூட தோன்றாமல் கஷ்டப்பட்ட எழுந்து காலை நகர்த்த, வலி தாள முடியாமல், அதற்கு கத்த கூட திராணியற்று அவள் முன் நிற்க முடியாமல் பயந்து போய் நொண்டியடித்த படி அங்கியிருந்து சென்று விட்டான்.

"சே " என்றபடி வீட்டினுள்ளே சென்று கட்டிலில் அமர்ந்து கொண்டாள். புவனா மெதுவாக ஜில்லென்று எலுமிச்சை ஜூஸ் அவளுக்கு பிடித்தது போல கொடுக்க, வாங்கி மடமடவென குடித்ததும் தான் சற்று ஆசுவாசமானது

"மலரு. நான் கிளம்பவா? நேரமாச்சு?" என்றான் குமார்.

"ம்ம்ம்? " என்று பார்த்தவள். "புவனா கையில காசு வைச்சிருக்கியா?" என்றாள்.

"எவ்வளவு?"

"இருக்கிறதை கொடு " என்றதும்.. புவனா ஐநூறு ரூபாயை கொண்டு வந்து கொடுக்க, " அதை குமாரிடம் கொடு" என்றதும்

"எனக்கெதுக்கு பாப்பா பணம். ஆட்டோக்கா?" என்றான்.

"ஐய! ஆசை தான். வரும் போது பாய்கடை திறந்து இருந்துச்சு. வரும் போதே பிரியாணி வாசம் தாங்கலை. நீ போய் 4 பாக்கெட் சிக்கன் பிரியாணியும் கூடவே பன்னீர் சோடாவும் வாங்கிட்டு வா. எனக்கு பசிக்குது" என்றாள்.

விளையாடுகிறாளா? என்று அவள் முகத்தை குமாரும் புவனாவும் உற்று பார்த்தனர். அதில் விளையாட்டு தனம் இல்லை. களைப்பு, சோர்வும் தெரிய, " நான் போய் வாங்கிட்டு வரேன்" என்று பணத்தை வாங்கிக் கொண்டு சென்று விட்டான்.

அமுதா, வேலு ஏற்கனவே சென்றிருந்தனர்ர் தண்ணீர் தட்டு என எடுத்து வைத்து புவனா தயாராக இருக்க, பத்து நிமிடத்தில் உணவுடன் வந்து விட்டான்.

"நீனும் வா சேர்ந்து இன்றைக்கு சாப்பிடலாம் " என உணவு பொட்டலத்தை பிரித்த படி தரையில் அமர்ந்தாள் அல்லி. குமார் திகைத்து போய் புவனாவை பார்க்க, எதும் பேசாமல் அவளும் அல்லியோட அமர்ந்து கொண்டாள். தயங்கியபடியே குமாரும் அமர, சாப்பிடுவதை தவிர அங்கே வேறு சப்தமே இல்லை. சாப்பிட்டு முடித்து, குமார் விடைபெற்று கிளம்பி விட்டான்.

அடுத்த அடுத்த நாட்களும் அல்லி ஏதோ யோசித்தபடியே சுற்றிக் கொண்டிருந்தாள். அதோடு போன் சுவிட்ஸ் ஆப் ஆனதை அவள் ஆன் செய்யவேயில்லை. போனை அவள் பயன்படுத்தவும் இல்லை.

இரண்டு நாட்களுக்கு மேலும் அல்லியின் போன் ஸ்விட்ச் ஆப் என்று வர, புவனாவுக்கு அழைத்தார் வாணி.

"அல்லி எங்கே மா? அவளிடம் போனை கொடு புவனா" என்றார்.

"இன்னொரு பிரான்ச் திறக்கிறாங்க மா. அங்கே பொருளை எல்லாம் அடிக்கிட்டு இருக்கோம். ரொம்ப வேலை அதிகம் மா. கொஞ்ச நேரம் பேசினால் கூட முதலாளி திட்டுறாங்க. நான் வீட்டுக்கு போனதுதும் பேச சொல்றேன்" என்று அழைப்பை துண்டித்து விட்டாள்.

அடுத்து வந்த நாட்களில் போனை ஆன் செய்து வைத்தாலும், வரும் அழைப்புக்கு இரண்டொரு வார்த்தையில் பேசி விட்டு வைத்து விடுவாள் அல்லி.

அல்லியின் ஒதுக்கத்தை இப்போதாவது உணர்வாரா வாணி?

அல்லி மலர்க் கொடி வருவாள்.

அடுத்த பதிவு திங்கள் கிழமை டியர்ஸ்
 

Sirajunisha

Moderator
அத்தியாயம் : 14
அன்று டிராபிக்கில் மாட்டிக் கொண்டு, வண்டியை நகர்த்த முடியாமல் நின்றிருந்தான் இராணா. மாலை நேரம் வேறு, வீட்டிற்கு போய் குளித்தால் தான் சரியாக வரும் என தனது டையை தளர்த்தியவன். கோட்டை கழட்டி, பக்கத்து இருக்கையில் போட்டு விட்டு, கையில் போட்டிருந்த பட்டனை கழற்றி முழங்கை வரை சட்டையை ஏற்றி விட்டான்.

கட்சி கூட்டம் போல! ஒரு பக்கத்தில் தொண்டர்களின் வாகனங்களை பிரித்து, போக்குவரத்து காவலர்கள் அனுப்பிக் கொண்டிருந்தனர். இன்னொரு புறம் பொது மக்களுக்கு!
இந்த டிராபிக்கில் நீந்தி எப்போது வீடு போய் சேருவது? என்று மனது புலம்ப ஆரம்பித்தது. "ப்ப்பூபூ " என வாய்விட்டு ஊதி தலையை அழுந்த கோதிக் கொண்டான். வாகனங்கள் இரண்டு அடி ஊர்வதும் பின்பு நிற்பதும் பிறகு ஊர்வதுமாக இருந்தது.

திடீரென வெயில் மறைய, இலேசாக குளிர் காற்று வீச, அப்போதைய காலநிலை, வாகன ஓட்டிகளுக்கு சற்று ஆசுவாசம் அடைய வைத்தது. ஏசியை ஆப் செய்து, காரின் பக்க ஜன்னலை திறக்க, மெல்லிய குளிர் காற்று அவன் உடலை தழுவ, கண்மூடி அதை ரசித்தான்.

" நீ வேற ஏன் கா? அவன் என்னை பார்த்தாலே வெட்கப்படுறான்?" என்ற குரல் அவனுக்கு சற்று தள்ளி கேட்க,

'இது .. ?' என்று யோசிக்கும் முன் அவன் தலை அனிச்சை செயலாக குரல் வந்த திசையில் திரும்பியது.

அவன் நினைத்தது போல! அல்லி மலர்க் கொடியே தான். ஸ்கூட்டியின் பின்னால் அமர்ந்தபடி வெகு சுவாரசியமாக பேசிக் கொண்டிருந்தாள்.

புடவை அணிந்த பெண் ஸ்கூட்டியை ஓட்டிக் கொண்டிருக்க, பிங்க்கும் வெள்ளை நிறமும் கலந்த குர்த்தியை அணிந்திருந்தாள். குறும்பு கூத்தாடும் கண்களுடன், ஓயாமல் வாய் பேசியபடி அமர்ந்திருந்தாள்.

இவளது பேச்சுக்கு முன்னால் உள்ள பெண் ஏதும் சொல்லியிருக்க வேண்டும். அதற்கு பதில் சொல்லும் விதமாக, " நாங்க பொண்ணு பார்க்க போன அன்றைக்கு மாடியை விட்டே கீழே இறங்கலை. ரொம்ப நேரத்திற்கு பிறகு தான் வந்தான்.

வண்டி சிறிது நகர, "இதெல்லாம் நம்பறா மாதிரியா இருக்கு?" என்றாள் புவனா.

"நீ நம்பலேன்னாலும் அதான் நிசம்" என்றவள்." ணா னு கூப்பிட்டால் அவனுக்கு அவ்வளவு கோவம் வேற வருது கா" என்று மேலும் கிண்டலடித்துக் கொண்டிருந்தாள்.

அவள் தன்னை பற்றி தான் கிண்டலடித்துக் கொண்டிருக்கிறாள் என்பதில் கோவம் வர, செல்போனை எடுத்து அவளுக்கு அழைத்தான். பேசியபடி இருந்தவள். பேக்கில் இருந்த போனிலிருந்து வைப்ரேட் சவுண்ட் வர, பேக்கை திறக்காமல் காதில் கேட்டாள். அதிலிருந்து தான் வருவது போல தோன்ற!

பிறகு, தனது போனை எடுத்து ஆன் செய்து, " ஹலோ " என்ற போது, இராணாவின் பின்னால் ஹாரன் ஒலித்தது. அவன் காரை நகர்த்த வேண்டிய நிலை, போனை டேஸ்போர்டில் வைத்தவன். வண்டியை நகர்த்த ஆரம்பித்தான்.

இங்கே, "ஹலோ ஹலோ " என்றவளுக்கு பதில் இல்லை. அதோடு, டிஸ்பிளேயில் டைம் அவுட் ஆகி அணைந்து விட, போன் கட் ஆகி விட்டதாக நினைத்து, பேக்கில் போட்டுக் கொண்டாள்.

இப்போது இராணா போனை எடுத்து, " ஹலோ " என்றபடி திரும்பி அல்லியை பார்க்க, போன் அவள் கையில் இல்லை.

"யாரு மலர் போன்ல? "

"தெரியலைக்கா. கட் ஆகிடுச்சு " என்பது இராணாவுக்கு கேட்டது.

"ம்ம். பிறகு என்னாச்சு? எப்போ தான் நேரில் பார்த்த?" என்றாள் புவனா.

"அது என்னமோ தெரியலைக்கா. அந்த ணா தனியாவே எங்கிட்ட சிக்க மாட்டேங்கிறான். கூட்டத்தோடு இருக்கும் போது தான் பார்க்க முடிஞ்சுது. அதிலேயும் , குனிஞ்ச தலை நிமிராம எங்களை ஏறெடுத்தும் பார்க்காமல் உட்கார்ந்து இருக்கான். ரொம்ப வருத்தமா போச்சு அக்கா"

"ஏன் டி?"

"இந்த ணா கல்யாணம் பண்ணி என்ன பண்ண போறானோ?னு தான்" என்றாள்.

"அது என்ன அடிக்கடி ணா னு சொல்ற? அவர் என்ன உனக்கு அண்ணன் முறையா வரும்?" என்றாள் புவனாவண்டியை ஓட்டியபடியே

"அண்ணனோ தம்பியோ? நாம இந்திய சிட்டிசன் கா. அதனால இந்தியர்கள் அனைவரும் நம் உடன்பிறந்தவர்கள் னு சின்ன வயசுல ஸ்கூல்ல உறுதிமொழி எடுத்தோமே மறந்துட சொல்றியா?"

"அது அப்படியா வரும்?"

"அப்படித்தான் வரும். "

"அப்போ! குமார் எப்படி?"

"அது தாய்பிரதர் "

"இதென்ன டி புதுசா இருக்கு?"

"அது இன்னொரு அம்மா மாதிரி கா. அதனால தாய்பிரதர் "

"நீ இப்படி மற்றவர்களை பேசிற மாதிரி. அந்தண்ணா வை பேசி எதுவும் வாங்கி கட்டிக்காத அவ்வளவு தான் சொல்லுவேன். அதோடு சம்மந்தம் செய்ய போறீங்க பார்த்து பேசு" என்று கண்டித்தாள்.

"ஏன் கா? ஏன்? அந்த இராணாவை பத்தி பேசினால் மட்டும் ஆளுக்காளு வரிஞ்சு கட்டிட்டு சண்டைக்கு வர்றீங்க? திட்டுறீங்க? இந்த அப்பத்தா அன்றைக்கு என்ன விளக்குமாத்தால விரட்டி விரட்டி அடிக்க வருது " என்றாள் அழாத குறையாக.

"அப்பத்தா வா? அப்படி என்ன பேசின அவரை பத்தி?"

"அவனுக்கு என்ன மரியாதை வேண்டி கிடக்கு, அவரை துவரை னு " என்று ஏக கடுப்பில்

"நீ பேச்சை மாற்றாதே! விசயத்தை சொல்லு "

"அது அவன் பெயர் இராணா வாவாவாவா. அவன் வொய்ப் அவனை எப்படி கூப்பிடும் னு கேட்டேன்"

"எப்படி கூப்பிடுவாங்க?"

"சாதாரண நேரத்தில் இராணா னு கூப்பிட்டால் கூட! அப்படி இப்படி இருக்கும் போது, கிசுகிசுப்பாக "ணா"ன்னு கூப்பிட்டால்!"

அவளது கிசுகிசுப்பான "ணா "வை கேட்டவன். தொண்டை வரண்டு போனது போல எச்சில் விழுங்கினான். முகம் சூடேறியது! மூச்சுக்கு தவிப்பது போல தோன்ற, காரை ஒரமாக நிறுத்தி விட்டான்.
 

Sirajunisha

Moderator
இங்கே புவனாவும் வண்டியை நிறுத்தி விட்டாள். தலையை மட்டும் திருப்பி, "அப்படி கூப்பிட்டால் என்ன?" என்றாள் புரியாமல்

"பொண்டாட்டி அப்படி கூப்பிட்டால் , என்னடா? நம்மளை அண்ணானு சொல்லிட்டான்னு மூடு போயிடாது" என்று கண்ணடிக்க,

"அப்பத்தா அடிக்காமல் விட்ட அடியே வீட்டுக்கு வா. நான் அடிக்கிறேன். என்ன பேச்சுடி இது? அடுத்த ஆம்பளை பற்றி" என்று ஏகத்துக்கும் திட்டினாள்.

"என்ன கா? சும்மா விளையாட்டுக்கு தானே பேசினேன். இதையெல்லாம் போய் சீரியசாக எடுத்துக்கிட்டு? " என்றாள் மலரும் விடாமல்.

"எல்லா நேரமும் எல்லாரும் ஓரே மாதிரி யோசிக்க மாட்டாங்க மலரு. புரியுதா?"

"ம்க்கும் " என்று உதட்டை சுழித்தவள். "புரியுது..புரியுது " என்றாள் எரிச்சலாக. அவர்கள் வண்டி சத்தம் நின்று, கேட்டை திறக்கும் சப்தம் கேட்க, இராணா தனது இணைப்பை துண்டித்து விட்டான்.

சிறிது நேரத்திலேயே கவினிடமிருந்து அழைப்பு வந்தது. அழைப்பை இணைத்தவன். "பவி நிச்சயத்துக்கு, மூன்று தேதிகளை ஜோதிடர் குறித்து கொடுத்திருக்காங்க அண்ணா?" என்றான்.

"சரி"

"அம்மா உங்களை எந்த தேதியில் வைக்கலாமென்று கேட்க சொன்னாங்க"

"நேத்ரன் வீட்டில் பேசினீங்களா? ஏனென்றால் நிச்சயதார்த்தம் அவர்கள் ஊரில் தானே வைப்பதாக பேச்சு" என்றான்.

"ஆமாம் "

"பிறகு என்ன? நேத்திரனிடம் விசயத்தை சொல்லி, தேதியை பிக்ஸ் பண்ண சொல்லி கேளு! அவங்க வீட்டிலேயும் நிச்சயதுக்கு தேதி எதுவும் பார்த்திருக்காங்களானு கேளுங்க" என்றவன். "வீட்டுக்கு தான் வந்து கொண்டு இருக்கிறேன். நேரில் பேசலாம் " என்று அழைப்பை துண்டித்தான்.

வீட்டிற்கு வந்த போது, ஹாலிலேயே பவியும் ராஜியும் காத்திருந்தனர். " நான் போய் ரெப்ரெஷ் ஆகிட்டு வரேன் " என்று நேரே தனது அறைக்கு சென்று விட்டான்.

சற்று நேரத்தில் குளித்து விட்டு, இலகுவான இரவு உடையணிந்து தலையை டவலால் துடைத்துக் கொண்டிருந்த போது, அல்லியிடமிருந்து அழைப்பு வந்தது.

"அல்லி மலர் " என்று பெயரை கண்டதும், அவனது இதழ்கள் தானாக விரிந்தன.

அழைப்பை இணைத்தவன். "ஹலோ என்பதற்கு முன்பே, " ஹலோ யாருங்க பேசுறது? டிராபிக்ல இருக்கும் போது பேச முடியலை. போன் கட் ஆகிடுச்சுன்னு நினைச்சு அப்படியே வைச்சிட்டேன். நீங்க ஏன் போனை கட் பண்ணாம வைச்சிருந்தீங்க? கிட்டதட்ட முக்கால் மணி நேரம் லைனிலேயே இருந்திருக்கீங்க. என்ன பழக்கம் இது? யார் நீங்க?" என்று ஏகத்திற்கும் எகிறினாள்.

"திஸ் ஈஸ் இரணதீரன் " என்றான் தனது ஆளுமையான குரலில்.

மறுபக்கம் எந்த சப்தமும் இல்லை.

"இது என்னுடைய பர்சனல் நம்பர். சேவ் பண்ணி வைச்சுக்கோ. தென்.. போனை ஏன் கட் பண்ணாம இருந்தீங்கன்னு கேட்ட தானே?"

மீண்டும் மறுமுனை அமைதியாகவே இருக்க!

"சே.. எஸ் ஆர் நோ?" என்றான் அழுத்தமாக

"ம்ம்ம். ஆமா " என்றாள் முணகலாக

"அதனால தான் என் வொய்ப் என்னை எப்படி கூப்பிடுவான்னு... ... " என்று அவன் மேலும் பேசாமல் நிறுத்த,

இங்கே அல்லி தன் வாயை பொத்திக் கொண்டாள். கண்கள் கலங்கி, செல்போன் பிடித்திருந்த கை வெடவெட என நடுங்கத் தொடங்கியது.

தொண்டையை செறுமி தன்னை நிலைப்படுத்திக் கொண்டவன். "இப்படியெல்லாம் பேசுவாய் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை " என்றான் கடுமையாக.

"இல்லீங் ணா " என்று அல்லி சமாளிக்க முயல!

"ஜஸ்ட் ஷட் அப்... இனி உன் வாயிலிருந்து ணா னு எதாவது வார்த்தை வந்தது. நான் மனுசனாவே இருக்க மாட்டேன்" என்றான்

அவனது கோவம் புரிய, " சாரி சாரி சார். நான் ஏதோ விளையாட்டுக்கு அப்படி பேசி ... " என்றவளின் பேச்சை முழுவதுமாக முடிக்க விடாமல்

"எது விளையாட்டு? நானும் என் வொய்ப்பும் அந்தரங்கமான நேரத்தில் எப்படி பேசுவோம்னு கிண்டல் பண்றது உனக்கு விளையாட்டா?"

அல்லிக்கு அவனுடைய பேச்சில் கற்பனையான காட்சி வடிவம் வேறு தோன்றி, ஏதோ அடுத்தவர்களின் பெட்ரூமை எட்டி பார்த்தது போல, அவமானமாக இருக்க! கண்களிலிருந்து கண்ணீர் கொட்டியது.

"விளையாட்டான்னு கேட்டேன்?"

"அது அப்போ உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சுன்னு நினைச்சு பேசினது. அது தான் இப்போ உங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகலை இல்லை. அதனால நான் சொன்னதை மனசில வைச்சுக்காதீங்க" என்றாள் மூக்கை உறிஞ்சியபடி அவள் அழுகிறாள் என்பது புரிய,

அதற்கு மேல் அவள் அழுவது பொறுக்காமல், "யாரது குமார்?" என்று பேச்சை மாற்றினான்.

"அது அன்றைக்கு குமார் ஆட்டோவில் வந்தேனே?. அது.. அது.. " என்று திணற

"அந்த ஆட்டோ டிரைவர் பெயர் குமாரா?"

"ம்ம். ஆமாம் "

"வாசலில் நின்ற வாட்ச்மேனிடம் போய், "சாரி கே ஃபாலு சா.. கமி மேட்ச் கியா ரே கேட்க சொன்னாயே? அவரா?"

"ம்ம்ம். ஆமாம். அவர் தான் குமார் " என்று ஊர்ஜிதப்படுத்தினாள்.

"இன்றைக்கு ஸ்கூட்டியில் உன் கூட வந்தது யாரு?"

"புவனா அக்கா. நானும் அவங்களும் தான் தனியாக வீடு எடுத்து தங்கியிருக்கோம்" என்றாள்.

பயத்தில் அவன் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் பதில் அளித்து கொண்டிருக்கிறோம் என்பதை அவள் உணரவில்லை.

"சேஃப்பான இடம் தானே? இரண்டு லேடீஸ் தனியாக தங்கியிருக்கீங்க? பயமில்லையே?"

முதல் முறையாக அவர்களின் பாதுகாப்பு பற்றி ஒருவன் விசாரிக்கிறான். அது அக்கறையா?இல்லை சாதாரணமாக விசாரிப்பா? எதுவென்று தெரியவில்லை. உள்ளுக்குள் எதுவோ ஒன்று உடைந்தது.

"இல்லை. அப்படியெதும் இல்லை. எதுவும் உதவியென்றால் அக்கம் பக்கத்தில் உதவிக்கு வருவாங்க" என்றாள்.

"ம்ம்ம். அந்த குமார் போன் நம்பரை எனக்கு அனுப்பு?"

"ஏன்? ஏன்? ஏன் அனுப்பனும்?" என்றவளின் குரல் உயர்ந்தது.

"நான் கேட்டால் சொல்லனும்!"

"நான் எதுக்கு சொல்லனும்?"

"உனக்கு தானே நம்பர் தெரியும். அதனால சொல்லு "

"இல்லை எதுக்கு குமார் நம்பரை கேட்குறீங்க சார். முதலில் அதை சொல்லுங்க" என்றாள் விடாமல்

"ம்ம். அவருக்கு பொண்ணு பார்க்க" என்றான் எரிச்சலாக

"அவருக்கு அல்ரெடி ஆளு இருக்கு. புவனா அக்காவை அவர் விரும்பறார். இன்னும் அக்காவிடம் சொல்லலை. நீங்க தேவையில்லாமல் பொண்ணு எதும் பார்த்துடாதீங்க சார். பிறகு ரொம்ப வருத்தமா போயிடும்" என்றாள் அவசரமாக

அவனது பேச்சை நிஜமென்று நம்பி, பேசியவளை கண்டு, சிரிப்பு வந்தது.

அப்போது, அவனது அறைக்கதவை தட்டி விட்டு, பவி உள்ளே வந்தவள்.
"அண்ணா அம்மா கூப்பிடுறாங்க?" என்றாள்.

"நான் வரேன். நீ போ " என்று அனுப்பி வைத்தவன்.

"அப்போ சரி! உனக்கு மாப்பிள்ளை பார்க்கலாம். வீட்டில் கல்யாண வயசில பொண்ணு இருக்கும் போது, பையனுக்கு எப்படி முதலில் கல்யாணம் செய்வாங்க? அதோடு, பவி உன்னால ஹேர்ட் ஆயிட கூடாது. நீனும் பவியால்... " எனும் போதே போன் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

மீண்டும் அழைக்க ஸ்விட்ச் ஆப் என்று வர, பிறகு பேசலாம் என்று ராஜியை பார்க்க சென்றான்.

இங்கே அல்லியோ, புவனாவை கேள்வி மேல் கேள்வியாக கேட்டுக் கொண்டிருந்தால், " இவன் மனுசுல என்னக்கா நினைச்சுட்டு இருக்கான்! ஏதோ அறியா பிள்ளை தெரியாமல் விளையாட்டா பேசிட்டேன்.

அதுக்கு ஏதோ ரொம்ப ஓவரா பேசறான்?. வாய் இருக்குன்னு பேசிடுவான்னா? பேச்சோட பேச்சா? என்னோட ஹிந்தி பேசுற அறிவை கிண்டல் பண்ற மாதிரி பேசுறான்.

அவனுக்கு மனசில ஆலியா பட் புருஷன்னு நினைப்பு!. கடைசியில புஷ்பா புருஷனா தான் ஆவப் போகிறான் பாரு!" என்றவளை கேள்வி கேட்க முடியாமல் கன்னத்தில் கை வைத்து விதியே! என்று அமர்ந்திருந்தாள் புவனா. கிட்டதட்ட அரைமணி நேரமாக இடைவெளியே விடாமல் யாரையோ கழுவி ஊத்திக் கொண்டிருக்கிறாள்.

திடீரென "பிரியாணி சாப்பிடலாமா?" என்றாள் புவனா.

"இப்பவா கிடைக்குமா?" என்றாள் கண்களில் ஆர்வம் மின்ன

"ஆர்டர் பண்ணலாம் வா " என்று அழைத்துச் சென்றாள்.

நமக்கு சோறு தான் முக்கியம்.. அல்லி மலர்க் கொடி வருவாள்.

அடுத்த பதிவு வெள்ளிக்கிழமை டியர்ஸ்
 

Sirajunisha

Moderator
அத்தியாயம் :15
மறுநாள் காலை வெளியில் கிளம்பும் போது தான்! மீண்டும் போனை ஆன் செய்தாள் அல்லி. வீட்டை பூட்டி சரிபார்த்து விட்டு, புவனாவும் வர, இருவரும் ஸ்கூட்டியில் கிளம்பினர்.

சற்று நேரம் அமைதியாக இருந்தவள். "அக்கா, அந்த கோயில்கிட்ட வண்டியை நிறுத்து, நான் போய் விநாயகத்தை பார்த்துட்டு வரேன்"

"ஏன்?. அதெல்லாம் ஒன்னும் வேணாம்" என்றாள் புவனா வண்டியை ஓட்டியபடி

"அவரை பார்த்து ரொம்ப நாளாச்சுக்கா. முக்கியமான விசயம் அவரிடம் சொல்லனும். ஒன்லி 2மினிட்ஸ்.. சட்டுன்னு போயிட்டு பட்டுன்னு வந்துடுவேன் " என்றவள். வண்டி அதை தாண்டி செல்வதை கண்டு, "அக்கா நிறுத்துக்கா. நிறுத்து! ஐயோ! என்னை பார்த்துட்டாருக்கா. நிப்பாட்டு " என்றாள் சத்தமாக.

"கத்தாதே டி " என்றவள். "இரண்டு நிமிசத்துக்கு மேலே ஒரு விநாடி கூட நிற்க மாட்டேன். நான் போய்டுவேன். இப்பவே சொல்லிட்டேன் " என்று கராராக சொல்லித்தான் அனுப்பி வைத்தாள் புவனா.

வேகமாக உள்ளே ஓடியவள். " என்ன விநாயகம் சார்! எப்படி இருக்கீங்க? நல்லா இருக்கீங்களா?" என்றாள் இன்முகமாக

அவர் , அவளை பார்த்து முறைக்க! "என்ன முறைக்கிறீங்க?. காரியம் இல்லாமல் இவ வர மாட்டாளேன்னு தானே!. அதே தான்! எனக்கு முக்கியமா ரொம்ப ரொம்ப அர்ஜண்ட்டா உங்க உதவி தேவை!" என்றவளை அவர் முறைத்துப் பார்த்தபடியே இருந்தார்.

"என்ன முறைக்கிறீங்க?.. "சொல்லும் சொல்லித் தொலையும் அப்படிங்கிறீங்களா?.. எனக்கு தெரியும்! எனக்கு தெரியும் . என் மேல உங்களுக்கு அம்புட்டு பாசம்ன்னு " என்றவள்.

"சரி. நேராக விசயத்துக்கு வரேன். இன்னைக்கு எனக்கு பரிட்சை. தெரிஞ்ச கேள்வியா மட்டும் தான் வரனும். அப்படி தெரியாத கேள்வியாக வந்தால்! பரிட்சை ஹால் சூப்பர் வைசர் காப்பியடிக்கிறத கண்டுக்க கூடாது. அது உங்க பொறுப்பு. நல்ல ஆளோ! தாளோ! எதையாவது அனுப்பி விடுங்க. நான் வரேன். பய்" என்று விட்டு வேகமாக வெளியே வந்து ஸ்கூட்டியில் ஏறிக் கொண்டாள்.

வண்டி நகர, " என்ன சொன்னாரு?" என்றாள் புவனா மெல்ல

"என்ன சொல்வாரு! முறைச்சாரு. இவ்வளவு நாள் பார்க்க வரலையில்லை" என்று அதற்கு ஒரு விளக்கமும் கொடுத்தாள்.

"ம்ம்ம். அப்புறம்?"

"அப்புறம் என்ன? விசயத்தை அவரின் காதில் போட்டுட்டேன். இனி அவர் பார்த்துப்பார்" என்றாள் உறுதியாக

அந்த பிரசித்த பெற்ற பல்கலைக்கழகத்தினுள் புவனாவும் அல்லியும் தங்களது ஸ்கூட்டியில் உள்ளே சென்றனர். வண்டியை பார்க்கிங்கில் நிறுத்தி விட்டு, ஹால் டிக்கட் வந்த கவரையும் அதில் கொடுக்கப்பட்டிருந்த அறை எண்ணை நோக்கி சென்றனர்.

MBA முதலாமாண்டிற்கான தேர்வு நடைபெறும் ஹாலை வந்தடைந்தவள். அவளது அறை எண்ணை கண்டு, " புவனா " என்று அங்கேயே நிற்க,

"ஆல் த பெஸ்ட்" என்றவள். " நான் பக்கத்து ஹால் "என்று விட்டு வேகமாக சென்று விட்டாள் புவனா. அவள் இரண்டாம் ஆண்டு படிக்கிறாள். இருவரும் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பை டுடேரியல் மூலமாக படித்து பரிட்சை எழுதியவர்கள்.

இப்போது வேலையும் பார்த்துக் கொண்டு, தொலைதூர கல்வியியல் மூலமாக பட்டப்படிப்பை படிக்கின்றனர்.

பயிற்சி வகுப்பில் கலந்துக் கொண்டு போது உடன் பயின்றவர்களும் இருக்க, சின்ன சிரிப்பு சிறிய தலையசைப்போடு புன்னகைத்து கொண்டனர்.

ஹாலிற்கு பேராசிரியர் வர, அறையே நிசப்தனமானது. தேர்வு தாள்கள் கொடுக்கப்பட்டு, அடுத்து கேள்வி தாள் கொடுக்கப்பட.. வாங்கி பார்த்தவளுக்கு, பாதி கேள்விக்கு பதிலே தெரியவில்லை.

'அச்சோ! எல்லா கேள்விக்கு பதில் எழுதினாலே ஐம்பது மார்க் தான் வரும். இதில பாதிக்கு பாதி எழுதி.. எப்படி பாஸ் பண்ணி?... என்று மனம் புலம்ப!

"விநாயகம் சார்' என்ற குரல் கேட்க, கண்கள் மின்ன அல்லி திரும்பி பார்த்தாள்.

அங்கே கல்லூரி கிளர்க் நின்றிருந்தார். அவர் வாசலை நோக்கி போய், " என்ன சார் சர்க்குலரா?" என்றபடி படித்து பார்த்து அதில் கையெழுத்திட, கிளர்க்கும் அதை பெற்றுக் கொண்டு கிளம்பி விட்டார்.

அவர் மீண்டும் உள்ளே வர, ",சார்.. உங்க பெயர் விநாயகமா சார்?" என்றாள் ஆர்வமாக

"ஆமாம். ஏன் மா கேட்குறீங்க?" என்றார் புரியாமல்.

"என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க சார்" என்றவள். இடத்திலிருந்து எழுந்து அவர் காலில் விழ,

"நல்லாயிரும்மா " என்றவர். அனைவரும் அவர்களையே பார்ப்பதை கண்டு, "இப்படியெல்லாம் பரிட்சை ஹாலில் செய்ய கூடாது. கோ டூ யுவர் சீட் " என்றார் அதட்டலாக.

"சாரி சார். நீங்களே வருவீங்கன்னு எதிர்பார்க்கலை சார். கேள்வி கஷ்டமா இருக்கேன்னு நினைச்சேன். நீங்க இருக்கும் போது என்ன பயம் சார். நான் பாஸ் பண்ணிடுவேன்" என்று சந்தோஷமாக இருக்கையில் போய் அமர்ந்து எழுத ஆரம்பித்தாள்.

'இந்த பொண்ணு என்ன லூசா?' என்று பார்த்துக் கொண்டிருக்க!

"சார் என்னையும் ஆசிர்வாதம் பண்ணுங்க" என்ற குரலில் அவர் திகைத்து திரும்ப,

"சார் என்னையும்"

" என்னையும்" என்று வரிசையாக அவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க!

"நல்லாயிருங்க.. நல்லாயிருங்க " என்றவர். 'இதென்னடா வம்பா போச்சு !' என்று வாயில் அருகில் போய் நின்று கொண்டார்.

யாரும் மேலதிக பேப்பர் வேண்டுமென்று கேட்டாலும், "அங்கே மேசையில் இருக்கு. எடுத்துக்கோங்க " என்று விட்டார்.

'என்னே! உன் திருவிளையாடலப்பா!' என்று பூரித்தவள். முன்னால் தெரிந்த மாணவியின் பேப்பரை பார்த்து காப்பியடித்து மீதமுள்ளதை எழுதி முடித்தாள். அவர் உள்ளே வராதது தேர்வர்களுக்கு வசதியாகி விட்டது.

தேர்வெழுதி பேப்பரை கொடுத்து விட்டு, வெளியே வர, பரிட்சை முடிந்ததற்கான பெல்லும் அடித்தது. புவனா வர, அவர்களுடன் குமாரும் வந்து இணைந்து கொண்டான்.

"ஹேய் குமாரு. உனக்கும் இன்றைக்கு தான் பரிட்சையா? எப்படி எழுதியிருக்க? " என்றாள் அல்லி.

"ம்ம். அரியர் ஒரு பேப்பர் இருந்துச்சு. அதை எழுதிட்டேன்" என்றவன். "நீ எப்படி எழுதியிருக்க?" என்றவன். சற்று தயங்கமாக புவனாவை பார்த்து, " நீங்க? " என்றான்.

"ம்ம் " என்று மெதுவாக தலையசைத்தாள் புவனா.

"நான் சூப்பரா எழுதியிருக்கேன் பா" என்றாள் சிறு குழந்தையின் துள்ளளுடன்.

சிரித்து பேசியபடி பார்க்கிங் வர, "பார்த்து பத்திரமாக போங்க " என்றபடி புவனாவையே பார்க்க!

அவன் பார்வையில் சற்று தடுமாறியவள். வண்டியை ஸ்டார்ட் செய்ய, வண்டியில் ஏறி அமர்ந்து கொண்டு, " வரேன் குமாரு " என்று அல்லி மலரும் விடைபெற்றாள். பரிட்சைக்காக ஒரு வாரம் விடுமுறை எடுத்திருக்கின்றனர்.

வீட்டுக்கு வந்து காலையில் செய்த உணவை சாப்பிட்டு முடித்தவள். சற்று நேர ஓய்வுக்கு பிறகு, நாளைய பரிட்சைக்கு படிக்க ஆரம்பித்து விட்டனர்.

மாலை வாணியிடமிருந்து அல்லிக்கு அழைப்பு வந்தது. அழைப்பை இணைத்தவள்.

"ஹலோ. சொல்லுமா . நல்லா இருக்கியா?" என்றாள்.

"இருக்கேன் அல்லி " என்றவர். பரஸ்பரம் ஒருவருக்கொருவர் நலம் விசாரித்து விட்டு,

"அல்லி, பவி வீட்டிலிருந்து போன் செய்தாங்க. நிச்சயதார்த்தம் செய்ய மூனு தேதி குறிச்சு சொல்லியிருக்காங்க"

"சரி "

"அதான் எந்த தேதியில் வைச்சுக்களாம்?" என்றார்.

"எனக்கு என்னம்மா தெரியும். நாளும் கிழமையெல்லாம் பற்றி!. அப்பத்தாவிடம் கேளு " என்றாள்.

"அவங்க உன்னை கேட்க சொல்றாங்க" என்றார்.

"அப்படியா?..சரி. நீ தேதியை சொல்லு " என்றாள்.

"இந்த மாதம் கடைசி. அதாவது அடுத்த வாரம் " என்றதும்.

"இந்த மாசமெல்லாம் வாய்ப்பே இல்லை. நீ அடுத்த மாசத்தில ஒரு தேதியை சொல்லு" என்றார்.

"அடுத்த மாசம் ஒன்னாம் தேதி ஒன்னு, பத்தாம் தேதி ஒன்னு.. எதில் வைக்கலாம் " என்றார் ஆர்வமாக.

சற்று யோசித்தவள். "பத்தாம் தேதி என்ன கிழமை வருது?"

"ஞாயிறு "

"ம்ம்ம்?. சரி .அப்போ அன்றைக்கே இருக்கட்டும் " என்று விட்டாள்.

"சரி மா. அப்போ பத்தாம் தேதியே வைச்சுக்குவோம். அவங்களிடம் சொல்லி விடு" என்றாள்.

"சரி . நான் வைச்சிடுறேன்" என்று அழைப்பை துண்டித்தாள்.

வாரம் முழுவதும் தேர்வில் போக, விடுமுறை எடுத்த நாட்களையும் சேர்த்து வேலை பார்க்க வேண்டிய சூழல். தற்போது இன்னொரு ப்ரான்ச் வேறு ஓபன் செய்திருந்ததால் வேலை அதிகமாகவே இருந்தன.

வீட்டிற்கு வந்து சமைத்து சாப்பிட எல்லாம் அவர்களுக்கு நேரமில்லை. வரும் வழியில் கையேந்தி பவனில் சாப்பிட்டு விட்டு வந்து விடுவர்.

அன்று இரவு வாணி அழைத்திருந்தார். சோர்வும், தூக்கமும் ஒரு சேர, துணியை கூட மாற்றாமல், அப்படியே அல்லி கட்டிலில் படுத்திருக்க, அவளரியாமல் கண்கள் தூக்கத்திற்கு இழுத்தது.

அந்த நேரம் வாணியின் அழைப்பு வர, அழைப்பை இணைத்து, "ஹலோ.. சொல்லுமா" என்றாள் சோர்வாக

"அல்லி, ஒன்னாம் தேதியே நிச்சயதார்த்தம் வைக்க ஏற்பாடு பண்ணியாச்சு. வெள்ளிக் கிழமை நிச்சயம் சனி, ஞாயிறும் சேர்த்து லீவ் போட்டுட்டு வந்து விடு" என்றார்.

தூக்கம் பறந்தோட! வெடுக்கன எழுந்து அமர்ந்தவள். "என்ன விளையாடுறீங்களா? திடீரென இப்படி சொன்னால் எப்படி? தேதியை யார் மாற்றியது? மாற்றினாலும் கடைசி நேரத்தில் தான் சொல்லுவீங்களா?" என்று ஏகத்துக்கும் எகிறினாள்.

"சொல்லனும்னு நினைச்சேன். இங்கே நிச்சயதார்த்த வேலையில் மறந்துட்டேன். நான் ஒருத்தியே எல்லாத்துக்கும் அல்லாடிட்டு இருக்கேன்" என்றார்.

"எனக்கு லீவ் கிடைக்கிறது கஷ்டம். என்னால வர முடியாது" என்றாள் அழுத்தமாக

"என்ன கலெக்டர் வேலையா பார்க்கிற! லீவ் கிடைக்காமல் இருக்க!" என்றதும்

"அதை விட, எனக்கு முக்கியமான வேலை. மூனு வேலை சாப்பாட்டுக்கு யார் கையும் எதிர்பார்க்க விடாம குடும்பத்துக்கும் சோறு போட்ட வேலை. கவுரவமா வாழ வைக்கிற வேலை" என்று சூடாக பதிலளடி கொடுத்தாள்.

"என்ன சொல்லி காட்டுறியா அல்லி? வேலை பார்த்து குடும்பத்தை காப்பாற்றியதை?"

"உண்மையை தானே சொன்னேன்" என்றாள் தெனாவட்டாக

" சரி. மன்னித்து கொள். நான் அப்படி பேசியிருக்க கூடாது. நீ வர மாட்டேன்னு சொன்னதால பதட்டத்துல பேசிட்டேன். தயவு செய்து கிளம்பி வா அல்லி " என்றார்.

"லீவ் கிடைத்தால் தான் வர முடியும்" என்றாள் கோபமாகவே.

"சரி. வெள்ளிக்கிழமை காலை பதினோரு மணிக்கு நிச்சயதார்த்தம். நாளைக்கு நைட் கிளம்பி, லேட்டாக்காமல் வந்துவிடு" என்று அழைப்பை துண்டித்து விட்டார்.

கோபத்தில் ஆஆஆ என்று கத்த வேண்டும் போல இருந்தது. விசயத்தை புவனாவிடம் சொல்ல, "கடைசி நேரத்தில் கிளம்பி வரச் சொன்னால் எப்படி?" என்றாள் ஆற்றாமையாக.

முன்னாடி உள்ள உரிமையாளராக இருந்தால் கூட பரவாயில்லை. புரிந்து கொள்வார். இப்போது அவரது மருமகள் பொறுப்பேற்றுக்க, புதிதாக மாற்றங்கள் செய்யக் கூடியவராக இருந்தார். பரிட்சை என்பதால் மட்டுமே விடுமுறை கொடுக்கப்பட்டது.

பிறகு, மறுநாள் அவரிடம் பேசி, கெஞ்சி கூத்தாடியே ஒரு நாள் விடுமுறை எடுத்துக் கொண்டு கிளம்பினால். கிளம்பும் போதே தாமதமாகி, பிறகு குமார் தான் ஆட்டோவில் கொண்டு போய் மலரை பஸ் ஏற்றி விட்டான்.

மனம் அலைக்கழிப்பாகவே இருந்தது. 'போய் தான் ஆக வேண்டுமா?' என்று உள்ளுணர்வு குடைய, வேறு வழியில்லாமல் சென்று கொண்டிருந்தாள்.

உள்ளுணர்வுக்கு மதிப்பு கொடுத்திருந்தால், வாழ்நாளில் சந்திக்க முடியாத அவமானங்களிலிருந்து அவள் தப்பித்து இருக்கலாம்.

அல்லி மலர்க்கொடி வருவாள்.
அடுத்த பதிவு செவ்வாய்கிழமை டியர்ஸ்
 

Sirajunisha

Moderator
அத்தியாயம் :16
மறுநாள் அதிகாலை நான்கு மணிக்கு பஸ்ஸிலிருந்து இறங்கிய போது, நேத்ரன் அவளை அழைத்து செல்ல, பஸ் ஸ்டாண்டில் காத்திருந்தான்.

அரைகுறை தூக்கத்துடன் பயணிகளோடு பயணியாக கையில் பேக்குடன் இறங்கியவள். அவனது இரு சக்கர வாகனத்தில் சாய்ந்தபடி நின்ற, நேத்ரனை அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
கண்கள் ஆச்சரியத்தில் சாசர் போல விரிய! உதட்டில் புன்னகை பூக்க, அவ்வளவு நேரம் இருந்த சோர்வு ஓடிப்போய் உற்சாக துள்ளலுடன் அவனை நோக்கி வர, அதே அளவு சந்தோஷத்துடன் அல்லியை நோக்கி வந்தான் நேத்ரனும்.

"புது மாப்பிள்ளை இங்கே என்ன பண்றாரு? பெண்ணை போய் பார்க்காமல்?" என்றாள் புன்னகை பூக்க,

"என் தங்கச்சியை அழைக்க வந்தேன்" என்றான் நேத்ரனும் சிரித்தபடி

" பார்ரா!" என்றபடி அவனுடன் செல்ல, அவளது பேக்கை வாங்கிக் கொண்டு, அதை பைக்கில் மாட்டி விட்டு, தான் அமர்ந்து கொள்ள, பின்னால் அல்லி அமர, உற்சாகமாக பேசியபடி வீட்டுக்கு வந்தனர்.

வாணி நிச்சயத்திற்கு என்று! உள்ளூரிலும் நெருங்கிய உறவுகளையும் ஓரளவு அழைத்திருந்தார்.

வீட்டுக்குள் நுழைந்த போது, ஒன்றிரண்டு உறவுகள் வந்திருப்பது தெரிந்தது. வாணி மகளை எதிர்பார்த்து காத்திருந்தார் போலும்!.

"வா அல்லி " என்றவர். "இந்தா காபியை குடிச்சிட்டு. கொஞ்ச நேரம் போய் தூங்கு" என்று அவளை அறைக்கு அனுப்பி வைத்தவர். "நேத்ரன் நீனும் போய் கொஞ்சம் படு" என்றார்.

"சரி மா. சமையல் செய்ய ஆட்கள் ஆறுமணிக்கு வந்திடுவாங்க" என்றபடி அவன் சற்று நேரம் ஓய்வெடுக்க சென்று விட்டான்.

கயல் அங்கே கட்டிலில் உறங்கிக் கொண்டிருக்க, ரெஸ்ட் ரூம் சென்று வந்தவள். சத்தமிடாமல் அவளருகே வந்து படுத்துக் கொண்டாள். பயண களைப்பு அவளை உறக்கத்திற்கு இட்டுச் சென்றது.

எவ்வளவு நேரம் உறங்கினாளோ தெரியவில்லை. கயலின் குரல் தான் அவளை எழுப்பியது.

"அக்கா! சீக்கிரம் எழுந்திரு. டைம் ஆச்சு. விருந்தாளிகளெல்லாம் வந்துட்டு இருக்காங்க" என்று எழுப்பியவள். அங்கே வாணி அழைக்கும் சத்தம் கேட்க,

"வரேன் மா" என்றவள். மீண்டும் "சீக்கிரம் குளிச்சிட்டு கிளம்புக்கா" என்று விட்டு சென்று விட்டாள்.

கயல் உலுக்கியதில் மெல்ல கண்விழித்தவளுக்கு, அப்பத்தாவின் குரல் கேட்க, வேகமாக எழுந்தவள். குளிப்பதற்கு ஓடி விட்டாள்.

மீண்டும் அறைக்குள் வந்த கயல், "அக்கா உனக்கு டிரஸ் எடுத்து வைச்சிருக்கேன். குளிச்சிட்டு போட்டுக்கோ" என்றவள். அறையை சாற்றி விட்டு சென்று விட்டாள்.

குளித்து வெளியே வந்தவள். கட்டிலில் வைக்கப்பட்டிருந்த பாவாடை தாவணியை கண்டு, ஆச்சரியத்தில் கண்கள் விரிந்தது.

சற்று அடர்மஞ்சள் நிற வேலைப்பாடுகள் நிறைந்த சட்டையும், நீண்ட பாவாடையும் இருந்தது. அதன் பாடர்கள் கருநீலத்தினால பட்டில் இருந்தது. அதே நிறத்தில் தாவணி கண்ணை பறிந்தது.

அதற்கேற்ற கண்ணாடி வளையல்கள், பூ, ஹேர்பின் முதல் ஹேர்கிளிப் வரை கயல் அனைத்தும் எடுத்து வைத்திருந்தாள். 'என் செல்லக் குட்டி டி நீ!' என்று கொஞ்சிக் கொண்டவள். உடைகளை அணிந்து கிளம்பினாள்.

அவள் அறையை விட்டு கிளம்பி வெளியே வந்த போது, "அக்கா! ரொம்ப அழகா இருக்கக் கா!" என்ற கயலின் குரல் தான் வரவேற்றது.

திரும்பி பார்த்து புன்னகைத்தவள். அவளுக்கும் அதே போல! வேறு நிறத்தில் பாவாடை தாவணி அணிந்திருந்தாள். " உன்னோட அக்கா வேறு எப்படி இருப்பேனாம். உன்னை மாதிரி தானே!" என்று அவளை கொஞ்சிக் கொண்டவள். அனைவரும் வாசலுக்கு பொருட்களை எடுத்து செல்வதை பார்த்து!

"எங்கே? எடுத்துட்டு போறாங்க பழங்கள் எல்லாம்?" என்றாள் புரியாமல்

"ஹோட்டலுக்கு அக்கா. வேன் ரெடியா நிக்குது. வா போகலாம்" என்று அவள் கையை பிடித்து அழைத்துச் சென்று வேனில் ஏறினாள்.

"என்ன சொல்ற? ஹோட்டலுக்கா?" என்றாள் மீண்டும்.

"டவுனில் இருக்கிற பெரிய ஹோட்டலில் தான் ஹால் புக் பண்ணியிருக்கு அண்ணன். பன்னிரண்டு மணிக்கு நிச்சயம். பொண்ணு வீட்டுக்காரங்க எல்லாம் அங்கே தான் தங்கியிருக்காங்க" எனும் போதே, அப்பத்தாவும் வந்து வேனில் ஏற, உறவினர்களும் ஏறினர்.

வேன் கிளம்ப அல்லி எதையும் பேசவில்லை. அல்லியை கண்டு, உறவினர் ஒருவர். " ஏன் அத்தை? அல்லிக்கு முதலில் கல்யாணம் முடிக்காமல் ஏன் நேத்ரனுக்கு கல்யாணம் முடிக்கிறீங்க? அல்லிக்கும் கல்யாண வயசு தானே. முதலில் பொண்ணுக்கு முடிக்கிறது தானே வழக்கம்" என்றார் அப்பத்தாவிடம்.

இதற்கு அப்பத்தா பதிலளிக்கும் முன் அல்லி முந்திக் கொண்டு, " சின்னம்மா. எனக்கு ஒருத்தர் ஏற்கனவே பிறந்திருப்பார். அவர் வர்ர வரை நான் வெயிட்டிங் லிஸ்ட் தான்" என்றாள் கண்ணடித்து

"யாருடி அந்த அவர்ர்ரு?" என்றார் அப்பத்தா அவளை மேலும் கீழும் பார்த்து!

"அந்த துவரை தெரிஞ்சா நான் ஏன் வெயிட்டிங் லிஸ்ட்ல உட்கார்ந்திருக்கேன். போய் நானே அழைச்சிட்டு வந்திட மாட்டேன்!. யார் பெத்த பிள்ளையோ? என்னை கட்டிக்கிற வரை சந்தோஷமா இருக்கட்டும் அப்பத்தா" என்றாள் கிண்டலாக

"ஏத்தம் தான் டி உனக்கு!" என்றார் அப்பத்தாவும் விடாமல்

வேன் ஹோட்டல் வாசலில் நிற்க, அனைவரும் இறங்கிக் கொண்டனர்.
"அப்பத்தா அம்மா, நேத்ரரெனெல்லாம் இன்னும் வரலை?" என்றாள்.

" வேன் போய் திரும்ப அழைச்சிட்டு வரும். எல்லாரையும் வீட்டு ஆளுங்க நாம தானே வரவேற்கனும். அதுக்கு தான் நாம முதலில் வந்தது" என்று விளக்கம் சொன்ன படி அப்பத்தா ஹோட்டலின் உள்ளே சென்றார்.

மூன்றடுக்கு மாடியினாலான ஹோட்டல். வி.ஐ. பி கள் தங்குவதை போன்று சகலவசதிகளுடன் நல்ல தரத்தில் இருந்தது. கயல் அவளுடைய தோழிகள் வர, அவர்களுடன் இணைந்து கொண்டாள்.

"அக்கா. நான் போய் அண்ணியை பார்த்துட்டு வரேன்" என்றவள். "வாங்க டி " என்று உடன் தோழிகளையும் அழைக்க,

"நீங்க எங்கே தனியா போறீங்க? எங்கே ஹால்? எந்த ரூமில் தங்கியிருக்காங்கன்னு தெரியாமல்?" என்று அதட்டினாள் அல்லி.

"அக்கா. எனக்கு அண்ணி தங்கியிருக்கிற ரூம் தெரியும் கா. இரண்டாவது(ப்ளோர்) தளத்தில் தங்கியிருக்காங்க. ஹால் முதல் (ப்ளோர்) தளத்தில் தான் இருக்கு. நாங்க தானே நேற்று அவங்களை ரிசீவ் பண்ணி பேமிலியோடு எல்லாரையும் தங்க வைத்தோம்" என்றாள்.

"ஓ! .சரி பத்திரமா போய்ட்டு வாங்க. நீங்க எல்லாம் டீனேஜர்ஸ். காலம் ரொம்ப கெட்டுகிடக்கு. போய் அண்ணியை பார்த்து விட்டு, நேரே ஹாலுக்கு வந்திடனும். வேற எங்கேயும் போக கூடாது. நம்ம ஊரு தானேன்னு அலைச்சியமா இருக்கக் கூடாது. புரியுதா? உங்க பாதுகாப்பு முக்கியம்" என்றாள்.

"சரி கா " என்று கயல். லிப்டை நோக்கி செல்ல, அதில் குறும்புக்கார தோழி ஒருவள். "அக்கா சேம் டு யூ " என்றாள் அல்லியை திரும்பி பார்த்து சிரித்தபடி

அல்லி புரியாமல் பார்க்க! "எங்களுக்கு சொன்னது தான் உங்களுக்கும். ஏனென்றால் எங்களை விட நீங்க தான் அழகா இருக்கீங்க" என்றபடி வம்பு வளர்க்க

"அடிங்ங்க " என்று பொய்யாக அல்லி அவளை மிரட்ட, அவள் லிப்டை நோக்கி, ஓடியே விட்டாள்.

அடுத்த டிரிப் வேனில் ஆட்கள் வர, அவர்களை நேராக ஹாலுக்கு அழைத்து சென்றாள். வருபவர்களுக்கு காபி, கூல்டிரிக்ஸ் என்று தனித்தனியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கிட்டதட்ட ஒரு மணி நேரமாக வருபவர்களை கவனித்துக் உபசரித்துக் கொண்டிருந்தவள்.

கயல் அவள் தோழிகளுடன் வருவதை கண்டு, " எவ்வளவு நேரம் கயல்? பசிக்குது எனக்கு. நான் கீழே போய் சாப்பிட்டு விட்டு வரேன். நீ பார்த்துக்கோ. அம்மாவும் நேத்ரனும் வந்துட்டாங்க. நீ போய் பாரு" என்றபடி நகர,

"அக்கா. சாப்பிட்டு விட்டு அண்ணியை போய் பார்த்து விட்டு வந்து விடு " என்றாள்.

"சரி " என்று கீழே ஹோட்டலில் சாப்பிட லிப்டில் ஏற, அதில் ஏற்கவே கவின் நின்றிருந்தான்.

"ஹலோ கவின் சார். எப்படியிருக்கீங்க?" என்று அல்லியே பேச்சை ஆரம்பித்தாள்.

"நல்லாயிருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க? எப்போ சென்னையிலிருந்து வந்தீங்க?" என்றான்.

"காலையில் வந்தேன். நீங்க? "

"நேற்று ஈவினிங் வந்தோம் " எனும் போது, லிப்ட் கீழ் தளம் வர,

"நான் சாப்பிட போகிறேன். வாங்களேன் சாப்பிடலாம்" என்றாள்.

"நான் சாப்பிட்டு விட்டேன். நீங்க சாப்பிடுங்க" என்று விடைபெறும் போது,

அவள் பின்னலை பின்னால் தூக்கி போட, அதன் நுனி, கவினின் கண்ணில் பட்டு விட,

"ஷ்ஷ்.. ஆஆ " என கண்ணை கசக்கினான். இதை அல்லியுமே கவனித்திருந்தாள்.

"சாரிங்க. தெரியாம பட்டிடுச்சு " என்றவள். "நான் வேண்டுமென்றால் கண்ணை ஊதி விடவா?" என்றாள்.
 

Sirajunisha

Moderator
"ரொம்ப எரியுதுங்க. ஊதினால் சரியாயிடுமா?" என்றான் கண்ணை கசக்கியபடி

"இருங்க " என்று அவன் கையை நகர்த்தியவள். அவன் கண்ணை ஊதி விட்டாள்.

"பரவாயில்லை. நான் பார்த்துக்கிறேன்" என்றபடி கவின் நகர,

"கர்ஷிப் வைச்சிருக்கீங்களா? இருந்தால் கொடுங்க" என்றதும். அவனது கைகுட்டையை எடுத்து கொடுக்க, அதை விரித்து நடுவில் பிடித்து தூக்கி சற்று இடைவெளை விட்டு பிடித்து அவன் கையில் கொடுத்து,

" இதை அப்படியே வாயில வைச்சு ஊதி, கண்ணுல வைங்க" என்றாள்.
அதே போல செய்ய தற்போது ஓரளவு சரியாகி இருந்தது.

"இப்போ பரவாயில்லைங்க. தேங்க்ஸ் " என்றவன். "நீங்க சாப்பிட போங்க! டைம் ஆச்சு " என்று கூற,

"சரியாயிடுச்சா? அப்போ சரி . நான் வரேன் கவின் சார்" என்று தானும் சாப்பிட சென்றாள்.

பதினொரு மணிக்கு மேல் ஆகியிருந்ததால் தோசை மட்டும் ஆர்டர் செய்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். அப்போது ஒரு பெண் கையில் குழந்தையை தூக்கிக் கொண்டு, தானும் சாப்பிட வந்தாள். அல்லி அமர்ந்திருந்த டேபிளேயே அமர்ந்தாள்.

மரியாதையான தோற்றம்! அவளும் தோசை ஒன்றை ஆர்டர் செய்தபடி தானும் சாப்பிட்டு குழந்தைக்கு ஊட்டி விட்டாள். இடையில் அந்த பெண்ணுக்கு போன் வர,

"ஹலோ. எவ்வளவு நேரமா நிக்கிறது. உங்க பையன் பசி வந்ததில் ஒரே அழுகை. ஹோட்டல் பெயரை சொல்லி, இங்கே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம் " என்றாள்.

அதற்குள் அந்த குழந்தை போனை தாயிடமிருந்து பிடுங்கி.. "ப்பா.. ப்பா.." என்றது! மறு முனையில் என்ன சொல்லபட்டதோ!

"மா..மா.. ப்பூபூபூ " என்று கூற, தன் குழந்தை மொழி அறிந்தவள். "அப்பா கார் ஓட்டிட்டு வந்துட்டு இருக்காங்களா?" என்றதும், அதற்கு சிரித்தது.

சாப்பிட்டுக் கொண்டே பார்த்தவள். குழந்தையின் அழகிலும் செயலிலும் மனம் இலயிக்க, அந்த குழந்தையை பார்த்து சிரித்தாள். தானும் சிரித்து, அந்த மேஜையின் மேல் ஏறி அமர்ந்து கொண்டு, அல்லியிடம் அதை தலையில் வைத்திருந்த பூ வை காட்டி பேசியது.

" உங்களுக்கும் பூ வேணுமா?" என்றாள்.

"மம்மா..பூ..பூ " என்று கூற

"ஓ! உங்க அம்மாவுக்கு பூ வேணுமா?" என்று கேட்க,

தாயிடம் திரும்பி, "ம்மாமா.. ப்பாபா " என்று கூற, மெல்ல சிரித்தவள். "அவங்க அப்பா எனக்கு பூ வாங்கிட்டு வருவாங்க. அதை தான் சொல்றான்" என்றாள் அந்த பெண்ணும் சிரித்தபடி

"அவங்க அப்பா உங்களுக்கு ஏன் பூ வாங்கிட்டு வரனும்?" என்று முதலில் புரியாமல் கேட்டு, பிறகு யூகித்து! "ச்சே.. உங்க கணவர் தானே!" என்று தன் அசட்டு தனத்தை சிரித்து சமாளித்தாள் அல்லி.

முதலில் , " பூ எதற்கு வாங்கிட்டு வரனும்?" என்ற கேள்வியியில் முதலில் திகைத்து! பிறகு, 'அவர் உங்க கணவர் ல! " என்று தானே அவள் சொல்லி விளங்கி கொண்தை கண்டு, அந்த பெண்ணுக்கு சிரிப்பு வந்து விட்டது. கலகலவென சிரித்து விட்டாள்.

பிறகு, "என் பெயர் ரேகா. இந்த பெரியவர் பேரு என்று தன் ஒன்றரை வயது மகனை காட்டி, மித்ரன் " என்றதும்.

"ஐ! என் பெயர் அல்லி மலர் கொடி. எங்க அண்ணன் பேர் நேத்ரன் " என்றவள். "இன்றைக்கு எங்க அண்ணனுக்கு நிச்சயதார்த்தம் பர்ஸ்ட் ப்ளோர்ல உள்ள ஹாலில் நடக்குது. நான் சென்னையில் உள்ள மாலில் சூப்பர்வைசரா ஒர்க் பண்றேன்" எனும் போதே அல்லிக்கு அழைப்பு வர,

அழைப்பை இணைத்தவள் ஹோட்டலுக்கு வரும் வழியை கேட்க, அதை கூறியபடி கை கழுவி விட்டு வந்தாள். சாப்பிட்டதற்கு பில் வர, அதை கொடுத்து விட்டு, மீதி தொகைக்காக அமர்ந்திருந்த போது!

மித்ரன் அவளை பார்த்து சிரிக்க, தானும் சிரித்து, "அத்தையிடம் வர்ரியா?" என்று கேட்க, அவளிடம் டக்கென்று ஒட்டிக் கொண்டான்.

ரேகா சாப்பிட்ட கையை கழுவ எழும் போது அவளுக்கு அழைப்பு வர, "கொஞ்சம் நேரம் பார்த்துக் கோ மா. கை கழுவிட்டு வரேன் " என்று போன் பேசியபடி எழுந்து சென்றாள்.

அல்லி குழந்தையுடன் கொஞ்ச, சற்று நேரத்தில் அவள் தோளிலேயே சாய்ந்து தூக்க ஆரம்பித்தான் நேத்ரன். சிறிது நேரம் கழித்து, போன் பேசியபடி பதட்டத்திலேயே வந்த ரேகா.

"அவருக்கு ஆக்ஸிடெண்ட்னு போன் வருது. எனக்கு பயமா இருக்கு. எனக்கு இந்த ஊரில் யாரையுமே தெரியாது. என்னென்னமோ சொல்றாங்க " என்று அழ ஆரம்பித்து விட்டாள்.

"நீங்க அழாதீங்க. நானும் கூட வரேன். என்ன சொன்னாங்க? யார் பேசினது?" என்று விபரம் கேட்டாள்.

" யார் என்னனென்னு தெரியலை " என்று அவர் பதற, அப்போது ரேகாவுக்கு தெரிந்த நபர் வர,
அவரிடம் விவரம் சொல்லவும். "வா மா. நாம போய் பார்க்கலாம்" ,என்று அழைத்து சென்றார்.

குழந்தை என்னிடம் இருக்கட்டும் என்று வைத்துக் கொண்டவள். தன்னுடைய அலைபேசி எண்ணை கொடுத்து, அவர்களுடையதையும் பெற்றுக் கொண்டாள்.

"இங்கே தான் இருப்பேன். ஒன்னும் ஆகி இருக்காது. கவலைப்படாதீங்க" என்று அனுப்பி வைத்தாள்.

மேலும் கால்மணி நேரம் காத்திருந்தவள். யாராவது குழந்தையை தேடி வந்தால் எனக்கு அழையுங்கள் என்று தனது போன் நம்பரை அந்த ரிசப்சனிஸ்ட்னிடம் கொடுத்து விட்டு லிப்ட்டினுள் நுழைந்தாள்.

மித்ரன் அவளது தோளில் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான். போய் பவித்ராவை பார்த்து விட்டு வந்து விடலாம் என்று இரண்டாவது தளத்திற்கு வந்த போது, அவளது சோதனை காலம் ஆரம்பமானது.

லிப்டிலிருந்து வந்தவள். ஏற்கனவே கயல் அறை எண் சொன்னது நினைவில் இருக்க, நேரே அங்கே சென்று நாசுக்காக கதவை தட்டி திறக்க! திறந்து கொண்டது. லாக் செய்யப்பட வில்லை.

"பவித்ரா " என்றபடி உள்ளே செல்ல, யாரும் இல்லை. புடவைகள் மேக்அப் செட் எல்லாம் அப்படியே கிடந்தன. யாரும் எதையும் எடுத்து வைக்கவில்லை. வேறு யாரும் இருப்பது போல தெரியவில்லை. கீழே போய்ட்டாங்களா! என்று நினைத்தபடி வெளியே செல்ல எத்தனிக்க,

திடீரென ஒரு குரல், "ஏய் யாரு நீ? உள்ளே எப்படி வந்த?" என்று வயதான பெண்மணி பாத்ரூமிலிருந்து வெளியே வந்தார்.

"நான் பவித்ரா அண்ணியை பார்க்க வந்தேன். நான் நேத்ரனோட சிஸ்டர்" என்றாள்.

"யாரிடம் கதை சொல்ற? நேத்ரனோட குடும்பத்தில் எல்லாரையும் எனக்கு தெரியும். உன்னை நான் பார்த்ததே இல்லை. என்ன? யாரும் அறையில் இருக்க மாட்டாங்கன்னு திருட வந்தியா?" என்றார்.

"இது தான் உங்களுக்கு மரியாதை. வார்த்தையை அளந்து பேசுங்க " என்றாள் அழுத்தமாக.

"திருட வந்த உன்னிடம் வார்த்தையை அளந்து பேசனுனமா?. சொல்லு என்ன திருடி வைச்சிருக்க? ஒழுங்கா கொடுத்து விட்டு, காலில் விழுந்து மன்னிப்பு கேளு" என்றார்.

' லூசா நீ!' என்பது போல பார்த்து வைத்தவள். வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டு, அறையை விட்டு வெளியேற போக,

"ஏய்! என்ன? தப்பிச்சு போக பார்க்கிறியா? ஒழுங்கா ஓரமா அந்த மூலையில் உட்காரு" என்று அறைக்கதவை சாற்றி விட்டார்.

கையில் போன் இருந்தாலும் அதில் சார்ஜ் வேறு ஊசலாடிக் கொண்டிருந்தது. அதும் போய் விட்டால் ரேகா வந்து அழைத்தாள். பேச வேண்டும் என்று அமைதியாக அமர்ந்து விட்டாள்.

இவர்களிடம் கத்தி சண்டை போட்டு, ஒன்றும் ஆகப் போவதில்லை. குழந்தை விழித்து விட்டாள். நிச்சயமாக அவன் அம்மாவை தேடுவான். அழ விடக் கூடாது. அங்கே என்ன ஆனதோ தெரியவில்லை" என்று அமைதியாக இருந்தாள்.

அனைத்தையும் அந்த பெண்மணி ஒழுங்கு செய்து கொண்டிருந்தார். அல்லிக்கு ரேகாவிடமிருந்து அழைப்பு வர, " இரண்டாவது ப்ளோர் அறை எண் 112 க்கு வாங்க" என்று அழைப்பை துண்டித்து விட்டாள்.

மேலும் ஐந்து நிமிடத்தில் அறைக்கதவு தட்டப்பட, அந்த பெண்மணி போய் கதவை திறந்தார். அல்லி, குழந்தையுடன் உள்ளே அமர்ந்திருப்பதை கண்டு,

"ரொம்ப பயந்துட்டேன் மா. கடைசியில் அது ராங் ரம்பர். என் கணவரும் வந்து விட்டார். கீழே வெயிட் பண்றார். ரொம்ப தேங்க்ஸ் " என்று குழந்தையை தூக்கிக் கொண்டு கிளம்பி விட்டாள்.

அல்லி தலையசைப்போடு நிறுத்திக் கொண்டாள். ரேகாவுக்கு அவள் கணவனிடம் நிச்சயம் திட்டு விழுந்திருக்கும். குழந்தையை யாரென்று தெரியாதவரிடம் விட்டு வந்ததற்கு! எனவே அவள் சூழ்நிலையை உணர்ந்து அமைதி காத்தாள். மேலும் இங்கே எதும் பேசி, அல்லி மேலும் அவமானப்பட தயாராயில்லை.

"என்ன எல்லாரும் கூட்டு களவாணிங்களா? யார் குழந்தையும் அது. மாட்டிக்கிட்டோம்னு தப்பிச்சு ஓடுற ப்ளானோ?" என்று மேலும் பேச

"நீங்க நேத்ரனுக்கு போன் போடுங்க. இல்லை பவிக்கு " என்றாள்.

"ஏன்? அவங்க எடுக்க மாட்டாங்கன்னு தெரிஞ்சு தானே சொல்ற? எல்லாரும் நிச்சயதார்த்தில் நின்று கொண்டிருப்பாங்க. இப்போ எடுக்க முடியாதில்லை! எப்பா? எவ்வளவு பெரிய கேடியா இருக்க?" என்றார் அவரும் விடாமல்.

அவளது போனும் ஸ்விட்ச் ஆப் ஆகி விட, யாராவது வரும்வரை அமைதியாக இருக்க வேண்டிய சூழல்!

ஒவ்வொன்றாக பட்டுப் புடவைகள், மேக்அப் சாமான்கள் சில நகைகள் என அனைத்தையும் எடுத்து வைத்துக் கொண்டிருந்தவர். திடீரென, "ஐயோ! ஐயோ! அட்டிகையை காணோமே? ஏய் எடுத்த நகையை ஒழுங்கா கொடுத்திடு. இல்லை நடக்கிறதே வேற" என்று அல்லியை பேச ஆரம்பித்தார்.

"நான் எடுக்கலை. எடுக்க வேண்டிய அவசியமும் இல்லை " என்றாள் நிதானமாகவே
 

Sirajunisha

Moderator
"நீ எடுக்காமல் எப்படி காணாமல் போச்சு?"

"என்னிடம் கேட்டால்? எனக்கெப்படி தெரியும்?"

"திருடின உன்னை கேட்காமல் வேறு யாரை கேட்க சொல்ற?"

"நான் நேத்ரனோட சிஸ்டர். நீங்க தவறா புரிந்து கொண்டு பேசுறீங்க. திருடி மாதிரி அப்போதிலிருந்து பேசிட்டு இருக்கீங்க. தயவுசெய்து போன் செய்து யாரிமாவது கேளுங்க. என்னை காணுமென்று அங்கே எல்லாரும் என்னை தேடிட்டு இருப்பாங்க. நான் போகனும் " என்றாள்.

"உன்னை தேடுறாங்களா?" என்று நக்கலாக கேட்டவர். தனது செல்போனில் யாருக்கோ அழைப்பு விடுத்தார். அழைப்பு இணைக்கப்பட்டதும், " மாப்பிள்ளையோட சிஸ்டர் அங்கே இருக்காளா?" என்றார்.

"ம்ம். இருக்காங்க மா. அந்த பொண்ணு தான் எல்லாத்தையும் எடுத்து வைத்துக் கொண்டு இருக்கு. பொறுப்பான பொண்ணு"

"அங்கே முக்கியமானவங்க யாரும் வரலைன்னு தேடுறாங்களா?"

"இல்லையே. நிச்சயதார்த்தம் முடிஞ்சிடுச்சு. இப்போ தான் தாம்பூலம் மாற்றுனாங்க. எல்லாரும் பேமிலியா போட்டோ எடுத்துக் கொண்டு இருக்காங்க" என்றது மறுமுனை

"நீ அதை அப்படியே! வீடியோ எடுத்து எனக்கு அனுப்பி விடேன்" என்றார்.

"தாம்பூலம் மாற்றியதை எடுத்திருக்கேன். உனக்கு அனுப்பிவிடுறேன்" என்று போனை கட் செய்ய

சில நொடிகளில் வீடியோக்கள் அந்த பெண்மணியின் செல்போனில் டவுன்லோட் ஆகியது. வீடியோவை ஓட விட்டு பார்த்தார். அருகில் நின்றிருந்த அல்லியாலும் அனைத்தையும் பார்க்க முடிந்தது.

மணமக்கள் நின்றிருக்க! மாப்பிள்ளை வீட்டின் சார்பாக வயதான தம்பதியர்கள் தாம்பூலம் மாற்றினர். மறுபக்கம் இரணதீரன், கவின், ராஜி நின்றிருக்க, கூடவே அவர்களின் உறவுகளும் நின்றிருந்தனர்.

வாணி அடிக்கடி வாயிலை பார்ப்பதும், நேத்ரன் அவரிடம் எதுவோ பேசுவதுமாக இருந்தான். அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் முகம் தெளிவாக இல்லை. வேறு என்ன? அல்லியை காணுமென்று தான் பரிதவித்து கொண்டிருந்தனர். ஆனால் அதை யாருக்கும் தெரியாமல் மறைத்துக் கொண்டனர். பார்ப்பதற்கு சந்தோஷமாக கலந்து கொள்வது போல தோற்ற மயக்கம்.

"நீயே பார். உன்னை யாராவது அங்கே தேடுறாங்களா?"

"மாப்பிள்ளைக்கு இரண்டு தங்கச்சி .
நான் பெரியவ. அங்கே இருப்பது சின்னவள். நான் பவியை பார்க்க வந்தேன். நீங்க தேவையில்லாமல் என்னை சந்தேகப்பட்டு பேசிட்டு இருக்கீங்க?" என்றாள் அப்போதும் பொறுமை, அழுகை, கோபம் அனைத்தையும் இழுத்து பிடித்தபடி

"என்ன! மாப்பிள்ளைக்கு இரண்டு தங்கச்சியா!" என்று சற்று யோசித்தவர். "அப்போ ராஜியிடம் மரியாதை இல்லாமல் பேசியது நீ தானா? அந்த கயல் இல்லையா?" என்றார்.

அவரையே வெறித்து பார்த்தபடி நின்றிருந்தாள்.' இவர் வேண்டுமென்றே அவமானப்படுத்துகிறாரோ!' என்று தான் தோன்றியது.

"உங்களுக்கெல்லாம் பெரிய பணக்கார குடும்பத்தில் பெண் கொடுக்கிறேன்னு சொன்னால் போதும்! உடனே உங்களுக்கு தலையில் நாலு கொம்பு முளைச்ச மாதிரி. உங்க வன்மம்! எரிச்சல்! பொறாமை எல்லாத்தையும் வார்த்தையால கொட்டுவீங்க. அதற்கு பேர் தன்மானம்னு வேற பெயர் வைச்சுப்பீங்க. இதெல்லாம் ஒரு பொழப்புன்னு!" என்று மிக கேவலமாக பேசினார்.

அல்லி வெறித்த பார்வையை சற்றும் மாற்றவில்லை. அப்படியே பார்த்தபடி நின்றிருந்தாள்.

"நீ யாராக வேணாலும் இருந்துட்டு போ. ஒழுங்கா நகையை கொடுத்து விடு. இல்லையென்றால் நானே உன்னை செக் செய்ய வேண்டியிருக்கும்" என்றார்.

"என் மேல் கை வைச்சா. காலில் கிடக்கிறதை கழட்டி அடிப்பேன்" என்றாள் தீர்க்கமாக

"என்ன? என்ன? திருட்டு நாய் என்னை அடிப்பியா?" என்றவர். சற்றும் எதிர்பாராமல் அவளது தாவணியை உருவதற்கும் இரணதீரன் அந்த அறைக்குள் நுழைவதற்கும் சரியாக இருந்தது.

"பெரியம்மா என்ன பண்றீங்க?" என்றான் அதிர்ந்து போய்.

தாவணி உருவப்பட்டதில் ஜாக்கெட் மற்றும் பாவாடையுடன் நின்றது மட்டுமல்லாமல் அது ஒரு ஆணின் முன் நடந்தது வேறு அவளை கூனிக்குறுக செய்ய! கைகளை கொண்டு தன் மேனியை அனிச்சையாக மறைத்தாள். இவை அனைத்தும் ஒரு நொடி பொழுதில் நடந்தேறியது.

அந்த பெண்மணிக்கு, அல்லி செறுப்பால் அடிப்பேன் என்று சொன்னதை ஜீரணிக்கவே முடியவில்லை. ஆங்காரம் மேலோங்க, தன்னிலை இழந்தவர்.
.
"உனக்கு எவ்வளவு திமிரு டி?" என்று மேலும் முன்னேற, அல்லி பின்னால் நகர, " என்ன பண்ணிட்டு இருக்கீங்க பெரியம்மா?" என்றபடி அல்லியை மறைத்தார் போல் நின்றான் இரணதீரன்.

"நீ நகரு இராணா. உனக்கு இவளை பத்தி தெரியாது. ஒன்னாம் நம்பர் திருடி. என் நகையை திருடிவிட்டு எடுக்கவே இல்லைன்னு சாதிக்கிறா? நான் அவளை முழுசா சோதிக்கனும். நீ நகரு" என்றார்.

"முடியாது " என்றான் இராணா அழுத்தமாக. " இங்கே திருடும் பழக்கம் யாருக்குமே இல்லை. நகையை எங்கேயாவது மிஸ் பண்ணியிருப்பீங்க. நிச்சயம் இவ எடுத்திருக்க மாட்டாள். நீங்க தாவணியை கொடுங்க" என்றான் கோவத்தில் அவன் முகம் சிவந்து கிடந்தது.

"இவளையா நம்புற? ஆம்பளை மயக்கி. காலையில் உன் தம்பியிடம் குலாவிட்டு நின்றாள். உன்னை எப்போ மயக்குனா?" என்றார் நாரசமாக

அவர் கையிலிருந்த தாவணியை வெடுக்கென பிடிங்கி, திரும்பாமலேயே அல்லியிடம் கொடுத்தன். "நீங்க வரம்பு மீறி பேசிறீங்க. இங்கே யாரும் மயக்கவும் இல்லை. மயங்கவும் இல்லை" என்றான் அழுத்தமாக.

"ஏன்? ஓரே நாளில் அண்ணனும் தம்பியும் மயங்கி நிற்குறீங்களே தெரியலை. நான் இப்பவே எல்லாரையும் கூப்பிடுறேன். நகை திருடிக்கு நீ சப்போர்ட் பண்றதை சொல்றேன். அதோடு உங்க இரண்டு பேரையும் மயக்கி ஆட்டுவிக்கிறதையும் சொல்றேன்" என்றதும்.

அல்லியின் உடல் வெளிப்படையாக வெடவெடக்க தொடங்கியது. ' அப்படி நடந்தால் எவ்வளவு பெரிய அவமானம். திருடி என்பதையும் தான்டி ஆள்மயக்கி என்றெல்லாம் பேசினால்! யாரும் நம்பவில்லை என்றாலும் பத்தில் இருவர் நம்பினால் கூட, அவள் உயிருடன் இருப்பதில் அர்த்தமில்லை. காலம் முழுவதும் அந்த பெயர் நிலைத்து விடுமே! அதற்கு தன்னை பரிசோதித்து இல்லை என்று தெரிந்து விட்டால்! போதும்!' என்று நினைத்தவள்.

இரணதீரன் முதுகை விட்டு நகர்ந்து வந்தவள். "என்னை செக் பண்ணிக்கோ.. ங்க. என்னிடம் நகை எதுவும் இல்லை. நா..ன்.. திரு ..டி.. இல்லை " என்ற போது!

அவள் உடல் வெளிப்படையாக நடுங்கிக் கொண்டிருந்தது. முகம் அழுகையில் சிவந்து, தலை கலைந்து உயிர்பே இல்லாமல் நின்றவளை அந்த பெண்மணி நெருங்க! மீண்டும் கட்டியிருந்த தாவணியை பயத்தில் இறுக்கி பிடித்தாள்.

ஒரடி எடுத்து வைத்திருந்தது தான் தெரியும். "பெரியம்மா " என்று ருத்ர மூர்த்தியாக நின்றவன். அவரை தள்ளிவிட்டு, அல்லியை ஒரு இழுப்பில் தன் நெஞ்சோடு அணைத்திருந்தான். தன் குஞ்சை பாதுகாக்கும் தாய் பறவையின் அணைப்பு போல் தோன்ற!

"ஓ... " என அவன் நெஞ்சில் முகம் புதைத்து அழ ஆரம்பித்திருந்தாள். யாராலும் தேற்ற முடியாத அழுகை அது! தன் அணைப்பில் நின்றபடி அழுபவளை , எப்படி? தேற்றவது என்று தெரியாமல் செயலற்று போய் நின்றிருந்தான் இரணதீரன்.

அவன் தள்ளியதில் கட்டிலில் விழுந்தவர். எழவே சற்று நேரம் எடுத்தது. "படுபாவி எப்படி தள்ளி விட்டுட்டான்" என்று முணுமுணுத்தபடி வெகு சிரமப்பட்டு எழுந்த போது கதவை திறந்து அவரது பேத்தி வந்தாள்.

"பாட்டி.. இன்னும் என்ன பண்றீங்க.? அம்மா கூப்பிட்டாங்க. அதோட இந்த அட்டிகை லூசா இருக்கு. கொக்கியை நெறுக்கி விடனுமாம்" என்றதும். அந்த பெண்மணி வெளவெளத்து போய் விட்டார்.

இதை காணோமென்று தானே! இவ்வளவு நேரம் ரகளை செய்தது. கடைசியில் தன் மீது தான் தவறு என்று புரிய, இராணாவின் எரிக்கும் பார்வையை தாங்க முடியாமல், "வா. நாம போகலாம்" என்று தன் பேத்தியை அழைத்துக் கொண்டு நகர்ந்து விட்டார்.

தனிமை அவனுக்கு மேலும் தேற்ற இடம் கொடுக்க, " இங்கே பாரும்மா. அவங்களுக்கு தெரிஞ்ச புத்தி அவ்வளவு தான். இதற்கெல்லாம் போய் அழுது கொண்டு!" என்று அவளை சமாதானம் செய்ய முயன்றான். மேலும் அழுகை கூடியதே தவிர குறையவில்லை.

"என் செல்லம் . இப்படி அழலாமா? எவ்வளவு தைரியமான பொண்ணு என்னோட தங்கம். இதெல்லாம் ஒரு ஆளான்னு போல்ட்டா இல்லாமல் அழுது கொண்டு!" என்று பல சமாதான வார்தைகள் கூறினான். அதில் எத்தனை செல்லம்! எத்தனை தங்கக்கட்டி! எத்தனை அம்மு குட்டி! எத்தனை உச்சந்தலை முத்தம்! என்று இருவருமே அறியா!

இராணாவின் போன் ஒலிக்க! அப்போது தான் இருவரும் தன்னிலை உணர்ந்தனர். அழைப்பை இணைத்து, " இராணா ஹியர் " என்றதும் தான்.

அல்லி தன்னிலை உணர்ந்து, அவன் நெஞ்சிலிருந்து முகத்தை நகர்த்த! "ஆமாம் மா. பிரஸ் அப் ஆக வந்தேன். டென் மினிட்ஸ்ல வந்து விடுவேன்" என்றபடி அவள் கன்னத்தில் அழுகையிலும் வியர்வையிலும் ஒட்டியிருந்த நீண்ட முடியை அவள் காதருகே ஒதுக்கி விட,

அப்போது தான் அல்லிக்குமே அவன் நெஞ்சில் முகம் புதைந்து அழுதது உறைக்க! வேகமாக ரெஸ்ட் ரூமிற்குள் நுழைந்து கொண்டாள்.

"ம்ம். கயலை இங்கே பவி ரூமிற்கு வர சொல்லுங்க" என்பதும் அவள் காதில் விழ! கண்ணாடியில் தெரிந்த தனது பிம்பத்தை வெறித்து பார்த்தபடி நின்றாள் அல்லி.

அல்லி மலர்க் கொடி வருவாள். அடுத்த பதிவு வெள்ளி இரவு டியர்ஸ்
 

Sirajunisha

Moderator
அத்தியாயம் :17
சற்று முன்பு நடந்த நிகழ்வு மீண்டும் நினைவிலாட கண்கள் கலங்க ஆரம்பித்தது. அதற்கு மேல் ... ? அவள் எதையும் யோசிக்க தயாராக இல்லை. தண்ணீரை திறந்து விட்டு, முகத்தை நீரால் அடித்து கழுவினாள்.

கலைந்திருந்த தலையை சரிசெய்து விட்டு, அடுத்து தாவணியை பார்க்க!
பின் செய்திருந்ததோடு பிடித்து இழுத்ததால்! நடுவில் கோடு போல கிழிந்திருந்தது. அதை மறைத்தார் போல மீண்டும் சரிசெய்து பின் குத்தி விட்டு, மீண்டும் கண்ணாடியில் பார்த்தாள்.

முகம் சிவந்து அழுதிருப்பது நன்றாக தெரிந்தது. இப்படியே எப்படி செல்வது? அங்கிருந்த சோப்பு போட்டு மீண்டும் முகத்தை கழுவி விட்டு, டவலால் முகத்தை நன்றாக துடைத்த போது, இப்போது கொஞ்சம் பரவாயில்லை என்பது போல தோன்ற! ஸ்டிக்கர் பொட்டை எடுத்து மீண்டும் வைத்துக் கொண்டு கதவை திறந்தாள்.

அறைக்கு வெளியே இராணா கயல் மற்றும் அவள் தோழிகளுடன் பேசிக் கொண்டிருப்பது கேட்க, டக்கென்று அறைக்கதவை திறந்தவள். யாரையும் நிமிர்ந்து பார்க்காமல், " வா கயல் போகலாம் " என்று படிகளை நோக்கி சென்றாள்.

"அக்கா லிப்ட் இந்த பக்கம் இருக்கு?" என்று கயல் சத்தமிட,

அதை காதில் வாங்காதது போல! படிகளில் வேகமாக இறங்கி சென்றாள். "வரேன் சார். வாங்க டி " என்று இராணாவிடம் விடை பெற்று, தனது தோழிகளுடன் படிகளை நோக்கி ஓடினாள் கயல்.

நேராக நிச்சயதார்த்தம் நடக்கும் ஹாலிற்கு வந்தவள். அங்கே அவர்கள் வீட்டு விருந்தாளிகளுடன் பேச்சு கொடுத்தபடி நின்றிருந்தாள். பிறகு, சாப்பிட அனைவரையும் அழைத்துச் சென்றவள். விருந்தினர்களை சிறிது நேரம் கவனித்து விட்டு, மெல்ல மேடையில் ஏறினாள்.

நேத்ரனிடம் வந்தவள். " வாழ்த்துக்கள் டா. வாழ்த்துக்கள் பவித்ரா " என்றதும்.

"தேங்க்ஸ் அல்லி " என்று பவி கூற, நேத்ரன் பதில் கூறாமல் அவளை முறைத்தான். நேத்ரன் முறைப்பை கண்டு, சிரித்து மழுப்ப முயன்றாள். "இவ்வளவு நேரம் எங்க போன அல்லி?" என்று ஆதங்கமாக கேட்க!
அவளது முகம் சரியில்லாததை கண்டு, மனம் துணுக்குற!

"என்னாச்சு? ஏன் முகம் டல்லாயிருக்கு?" என்றான் நேத்ரன்.

வாணி, அல்லி உள்ளே வரும் போதே அவளை கவனித்து விட்டார். அழுதிருந்த கண்களும், உயிர்பில்லா சிரிப்பும், தன்னை சமாளித்தபடி விருந்தினர்களை கவனிப்பது போல நிற்பதையும் அவர் பார்த்துக் கொண்டு தானே இருந்தார். சூழ்நிலை கருதி அவர் வாயை இறுக மூடி நின்றாலும், மகளின் முகம் அவரை பதைபதைக்க தான் செய்தது.

" ஒன்று மில்லை நேத்ரன். லேசாக தலைவலி , தைலம் தேய்த்தேன் அது கண்ணில் பட்டு ஒரே எரிச்சல். அதோடு, அது நெற்றியில் தேய்த்ததில் தோளெல்லாம் ரொம்ப எரியுது. இப்பத்தான் முகத்தை கழுவி விட்டு வந்தேன். அதனால் முகம் அப்படி தெரியுது போல!" என்றாள்.

ஆனால் அவள் சொல்வதை நேத்ரன் மற்றும் வாணி நம்புவதாக இல்லை. அவர்களது சந்தேகப்பார்வையை கண்டு கொண்டவள்.

"சரி நேத்ரன். நான் சென்னை கிளம்பறேன். இன்றைக்கு மட்டும் தான் எனக்கு லீவ் கொடுத்தாங்க. அப்பாத்தாவுடன் வேனில் வீட்டில் போய் இறங்கிக்கிறேன். வரேன் மா. வரேன் நேத்ரன்" என்றபடி நகர,

"இரு அல்லி. நானும் வரேன் " என்று வாணியும் உடன் கிளம்பினார்.

"பரவாயில்லை மா. நான் அப்பத்தாவுடன் போகிறேன்" என்றாள்.

"புவனாவுக்கு ஸ்வீட்ஸ் கொண்டு போ" என்றவர். "நேத்ரன், நான் அல்லியுடன் வீட்டுக்கு போகிறேன்" என்றவர். "வரேன் பவி " என்று மருமகளிடன் கூறி விட்டு, மேடையை விட்டு கீழே இறங்கி, ராஜியை நோக்கி சென்றவர்.

ராஜியுடன் அவரது உறவினர்கள் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். உடன் கவினும் சில பெண்களும் நின்றிருந்தனர். அங்கே சந்தோஷ மனநிலையில் பேசிக் கொண்டிருந்தனர்.

"சம்மந்தி " என்று வாணி அழைக்க, ராஜி திரும்பி பார்த்தவர். வாணி நிற்பதை கண்டு, முதலில் வாணியிடம் " சொல்லுங்க சம்மந்தி " என்றவர். அல்லியும் நிற்பதை கண்டு, " வா மா அல்லி. இவ்வளவு நேரம் எங்கே மா உன்னை காணும்?" என்றார் கரிசனையாக.

"இங்.. க தான் டைனிங் ஹாலில் இருந்தேன் " என்றவள். " நீ பேசிட்டு வா மா. நான் வெளியில் வெயிட் பண்றேன் " என்று வாணியிடம் கூறி விட்டு,

"வரேன் மேடம். வரேன் கவின் சார் " என்றவள். மற்றவர்ளிடமும் "வருகிறேன் " என்று பொதுவாக சொல்லிவிட்டு வாயிலை நோக்கி சென்றாள். வாணியும் , " அல்லி சென்னை கிளம்புகிறாள். நான் அனுப்பி விட்டு வருகிறேன்" என்று அவளுடனே விடைபெற்று சென்றார்.

வாணி, அல்லியுடன் செல்வதால்! அப்பத்தாவை கயலை பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டு கிளம்பினர். ஆட்டோ பிடித்து வீடு வந்து சேர்ந்தனர். வாணி எதுவும் பேசவில்லை. கேட்கவும் இல்லை. அதே சமயம் வீடு வரும் வரை அவளை பற்றியிருந்த கையை விடவும் இல்லை.

கதவை திறந்ததும் நேராக அறைக்குச் செல்ல முயன்றவளை, " அல்லி நில்லு!" என்றார் வாணி.

'இப்போ என்ன?' என்பது போல் அவரை திரும்பி பார்த்தாள். ஓய்ந்து போன தோற்றம். அவர் மனதை பிசைய,

"என்னாச்சு டி? ஏன்? என்னவோ போல இருக்க?" என்று அவள் கன்னத்தை வருடி, கண்களில் பரிதவிப்போடு கேட்க,

மனம் வெதும்ப, அவள் கண்களிலிருந்து கண்ணீர் கடகடவென கொட்டியது. இதுவரை அவள் அழுதே பார்த்திராதவர். " என் சாமி? என்னாச்சு டா? உனக்கு ஒன்னுமில்லையே.. ? " என்று அவரது கண்கள் பதற்றமாக அவளை ஆராய்ந்தது.

அதற்கு மேல் முடியாமல் , " என்னை இனிமேல் எதற்கும் கூப்பிடாதே மா. உன்னோட வற்புறுத்தலால் ஒவ்வொரு தடவை வந்து அவமானப்படுறேன். இன்றைக்கு.. இன்றைக்கு என்றவள்.. பவித்ரா அறையில் நடந்த அத்தனையும் சொல்லி விட்டாள். அந்த பெண்மணி திருடி என்றது முதல் தாவணியை பிடித்து இழுத்து அப்போது இரணதீரன் வந்து காப்பாற்றியது வரை!

என்னை சபைக்கு கூப்பிட்டு, என் நகையை திருடிட்டான்னு சொல்வேன்னு சொல்றாங்க?" என்றவள். ஆள் மயக்கி என்று சொன்னதை மறைத்து விட்டாள். பெற்ற தாயாக இருந்தாலும் அவளால் அவர் கூறிய அபாண்டத்தை கூற முடியவில்லை.

"கடைசியில் அவங்க பேத்தி, அந்த நகையை போட்டுட்டு வருது " என்ற போது வாணி அதிர்ச்சியில் நின்றிருந்தார்.

" என்னால இதற்கு மேல முடியலை மா . உங்க இஷ்டத்துக்கு கிளம்பி வா என்கிறதும். லீவு போடுன்னு சொல்றதும். எனக்கு மூச்சு முட்டுது. திடீர் திடீர்னு நீங்க முடிவெடுத்து அதற்கேற்றது போல ஆட்டு விக்கிறீங்க. தயவு செய்து என்னை விட்டிடுங்க... ஒரு பொண்ணு கிளம்பி தனியாக வரேன். என்ன தான் அங்கே ஏறி இங்கே இறங்கினாலும், இங்கே வந்து சேரும் வரை என் மனநிலை எப்படி இருக்கும் தெரியுமா?

சில சமயம் வழியிலேயே லேடீஸ் எல்லாம் இறங்கிடுவாங்க! நான் மட்டும் தான் இருப்பேன். மற்ற எல்லாருமே ஆண்களாக இருக்கும் போது, என்னோட மனநிலை எப்படி இருக்கும் தெரியுமா?. உங்களுக்கு அதெல்லாம் புரியாது மா. ஏனென்றால் நீங்க அந்த மாதிரி நிலையில் நின்றதில்லை.

சொன்னால் கூட, ஏன்? உலகத்திலேயே நீ மட்டும் தான் பஸ்ஸில் வருகிறாயா? வேறு யாரும் வருவதில்லையா? எல்லாரும் கெட்டவங்க மாதிரி பேசுறன்னு சொல்வீங்க? நான் சொல்றது அத்தனையும் மனஉணர்வுகள் பற்றியது! சொன்னாலும் உங்களுக்கு புரிய போவதும் இல்லை " என்று விரக்தியாக பேசியபடி தனது அறைக்கு சென்று விட்டாள்.

வாணி, மகளின் பேச்சில் அப்படியே விக்கித்து போய் நின்றார். அல்லி சொல்வதும் சரிதானே! இவர் நினைத்த நேரத்தில் கிளம்பி வா! என்பதும். அங்கே சென்னையில் பஸ் ஏறினால்! இத்தனை மணி நேரத்தில் இங்கே வந்து விடுவாள் என்று பயணக் கணக்கை போட்டாரே தவிர, மகளின் மன நிலையை அறிய முடியாமல் போய் விட்டார்.!

வேறு உடை மாற்றிக் கொண்டு, பயணப் பையுடன் வந்தவள். " நான் கிளம்பறேன் மா. கல்யாணம் எப்படியும் சென்னையில் தான் வைப்பாங்க. நீ பத்திரிக்கை ரெடியானதும் எனக்கு இரண்டு அனுப்பி விடு. புவனா அக்காவுக்கும் ஹவுஸ் ஒனருக்கும் வைக்கனும். பிறகு, நேராக நான் மண்டபத்துக்கு வந்து விடுவேன். அங்க வா! இங்கே வா னு என்னை கட்டாயப்படுத்தாதீங்க " என்றவள் .

அப்படியே நின்றிருந்த வாணியிடம், " புவனாவுக்கு ஸ்வீட் தரேன்னு சொன்னீங்களே என்னாச்சு?" என்றாள்.

அப்போது தான் சுயத்துக்கே வந்தவர். முகம் சிவந்து சிடுசிடுவென நின்றிருந்த அல்லியை கண்டு, " அம்மாவை மன்னிச்சிரு மா " என்றார் கண்ணீர் மல்க . அதில் மகள் பட்ட கஷ்டம், அதை தாயாக புரிந்து கொள்ளாத , தனது இயலாமை! என்று அவரது உணர்வுகளை முகம் அப்பட்டமாக காட்டிக் கொடுத்தது.

" விடு மா " என்றவள். " எனக்கு பசிக்குது. என்ன சாப்பாடு இருக்கு?" என்றாள்.

" சாதம் இருக்கு. உனக்கு பிடிச்சு ஈரல் பிரட்டல் இருக்கு. எடுத்துட்டு வரேன் " என்றவர். கண்ணை துடைத்தபடி வேகமாக அடுக்களைக்குள் சென்றார்.

வாணியை பார்க்க! அல்லிக்குமே பாவமாக இருந்தது. சாதாரணமாக பேசும் போது, சற்று அதட்டல் கண்டிப்பு அவர் பேச்சில் இருக்கும். இந்த மாதிரியான மன உணர்வுகளை சொல்லும் போது, தவறு செய்த குழந்தை போல விழிப்பார். இது போன்ற நிகழ்வுகளை அவர் வாழ்நாளில் அறிந்து கொண்டதுமில்லை. புரிந்ததுமில்லை.

நேத்ரனிடம் எதையும் வெளிப்படையாக பேசியதில்லை. எப்போதுமே அதை செய். இதை செய்! என்று அவனை தகப்பன் போல கண்டித்து கொண்டிருப்பாள். கயல் அவளுக்கு குழந்தை போல! அன்பு நிறையவும், கண்டிப்பு குறைவாகவும் இருக்கும். உணர்ந்து சொல்ல வேண்டுமானால் அந்த வீட்டின் ' தகப்பன் சாமி ' அல்லி. அவளறியாமல் அதை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறாள்.

ஆனால் அவளது மனக் கவலையை குறைக்க, ஆறுதல் சொல்ல, அவளை அரவணைக்க, அவளை குழந்தை போல் தேற்ற! அவளது தலை சாய்ந்து கொள்ள ஒரு தோள்! இது வரை அவளுக்கு கிடைத்ததில்லை.

வாணி சாப்பாடு கொண்டு வர, மல்லுக்கட்டி அதை சாப்பிட்டு கொண்டிருந்தாள். வாணியை திசை திருப்பவே, அவள் உணவு கேட்டதும். ஆனால் இப்போது இருக்கும் மனநிலையில் உள்ளே இறங்கவில்லை.

எதையோ? யோசித்தடியே உணவு உண்டு முடித்தவள். வாணி கொடுத்த ஸ்வீட்சை எடுத்துக் கொண்டு, " வரேன் மா. நேத்ரனிடம் இப்போதைக்கு இது பற்றி எதுவும் பேசிக் கொள்ள வேணாம் " என்றபடி வாசலுக்கு வர, அப்போது சரியாக உயர்ரக கார் ஒன்று வந்து நின்றது.

அதிலிருந்து கவின் இறங்க, " வாங்க சார். உள்ளே போங்க . எனக்கு பஸ்ஸுக்கு டைம் ஆச்சு " என்று மெல்ல நழுவ முயன்றாள்.

" சாரி அல்லி. அண்ணன் எல்லா விசயமும் சொன்னாங்க. பெரியம்மா சார்பா நாங்க மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம் " என்றவன். " அம்மாவும் வந்திருக்காங்க " என்றபடி பின்னால் உள்ள கதவை திறக்க, ராஜி அமர்ந்திருந்தார்.

அவரின் உதவியாளர் வீல் சேரை கீழே இறக்க, அதில் கவின் ராஜியை தூக்கி அமர வைத்தான். " வாங்க மேடம் " என்றவளுக்கு மிகவும் சங்கடமான நிலை

" வாங்க தம்பி. வாங்க சம்மந்தி " என்ற வாணிக்கு முன்பிருந்த அன்பு இப்போது அவர்களை வரவேற்கும் போது இல்லை. பெயருக்கு அவர்களை வரவேற்றார்.

அல்லியின் கையை பற்றிக் கொண்டவர். " எங்க அக்கா நடந்து கொண்ட விதத்திற்கு நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் மா. அவங்க இப்படி நடந்து கொள்வாங்கன்னு நான் நினைத்து கூட பார்க்கவில்லை " என்று ஏதேதோ சமாதான வார்த்தைகள் கூறினார்.

" ப்ளீஸ். அதை பற்றி பேச வேண்டாமே! அதை மறக்க எனக்கு கொஞ்சம் நாட்கள் ஆகும். நீங்க உள்ளே போங்க. அழைத்துக் கொண்டு போங்க கவின் சார் " என்றவள். " நான் வரேன் மா. சென்னை போய்ட்டு போன் பண்றேன் மா " என்றபடி வேகமாக திரும்பியவள். எதன் மீதோ வேகமாக மோதி விட்டாள்.

" ஆ!" என லேசாக முணங்கும் போதே! அவளது உள்ளுணர்வு அது இரணதீரன் என்று அடித்து கூறியது. அவனே தான்! நிமிர்ந்து பார்க்க முடியாமல், " சாரி " என்றவள்.

"உள்ளே போங்க " என்றபடி நகர முயல

"எங்கே சென்னைக்கா?" என்றான்.

"ம்ம்ம். ஆமாம் " என்ற போதும் அவனை நிமிர்ந்து பார்க்கவில்லை.

"அல்லி உன் செல்போன் எங்கே?" என்றார் வாணி.

'சார்ஜ் போட்டதை எடுக்க மறந்திருந்தாள். " சார்ஜ் போட்டேன்.. " என்றபடியே உள்ளே வர, கவின் மற்றும் ராஜி உள்ளே வந்தனர்.

செல்போனை எடுத்துக் கொண்டு வந்தவள். " நான் வருகிறேன் " என்று பொதுவாக விடைபெற, " இராணா சென்னை தான் மா. போகிறான். நீ அவன் கூடவே போம்மா " என்றார் ராஜி .

" இல்லை.. நான் பஸ்ஸிலேயே போய் விடுவேன். எதற்கு அவங்களுக்கு சிரமம் " என்று மறுக்க முயன்றாள்.

" நானா சுமக்கிறேன். வண்டி தானே சுமக்க போகிறது. நீங்க வாங்க " என்றான் வாயிலில் நின்றபடி

" வேண்டாம் " என்றாள்.

" நீங்க சொல்லுங்க அத்தை. நானும் சென்னை தான் போகிறேன். பத்திரமாக அவங்க வீட்டில் டிராப் பண்ணிடுறேன். நைட் கிளம்பி இங்கே வந்துவிட்டு, திரும்பவும் உடனே கிளம்பறது கஷ்டம் தானே!. அதோடு, என் மேல் நம்பிக்கை இல்லையென்றால் வேண்டாம் " என்று சேர்த்து சொல்ல!

மறுக்க முடியாமல், " தம்பி கூட போ அல்லி. ரொம்ப சோர்வாக தெரியரே. போனதும் போன் போடு " என்றார்.

எதையும் பேசவோ மறுக்க முடியாமல், ஆமோதிப்பாக தலையசைத்தபடி விடைபெற்று சென்றாள்.

இராணாவின் தனி வாகனம். ஓட்டுனர் ஏறி அமர, பின்னால் உள்ள இருக்கையில் ஒரு புறத்தில் அல்லியும், மறு புறத்தில் இராணாவும் அமர்ந்தனர். வுண்டி சென்னையை நோக்கி பயணமானது.

அல்லி, அமைதியாக கண்ணை மூடி அமர்ந்து கொண்டாள். அவனிடம் ஏதும் பேச வேண்டி வருமோ? என்று நினைத்து தான் கண்ணை மூடினாள்.

உள்ளே இருந்த இதமும் மெல்லிய இசையும் மனதை வருட, சற்று நேரத்தில் அல்லி ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்று இருந்தாள். மாலை நேரம் சிற்றூண்டிக்காக வண்டி ஒரு மோட்டலில் நின்றது. டிரைவர் இறங்கி விட, இராணா அவளை எழுப்பாமல் அவளது முகத்தையே பார்த்தபடி அமர்ந்திருந்தான்.

பிறகு நேரமாவதை உணர்ந்து, "அல்லி மலர் " என்று மெதுவாக அழைத்தான்.

அவளிடம் எந்த அசைவும் இல்லை. இப்போது சற்று சத்தமாக " அல்லி மலர் " என்று அழைக்க, அப்போதும் அசைவு இல்லை.

புருவத்தை சுருக்கியவன். அவளை தொட, நெருப்பு போல உடம்பு கொதித்தது. " ஹேய்.. அல்லி " என்று நெருங்கி அவளது கன்னத்தை தட்ட,

" ம்ம்ம் " என்று முணங்கியவள். அப்படியே மயங்கி அவன் தோளில் சரிந்தாள்.

டிரைவரை அவசரமாக அழைத்தவன். மருத்துவமனைக்கு போக சொன்னான். அங்கே நின்றிருந்தவர்களிடம் மருத்துவமனை எங்கே என விசாரித்து, இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த கிளீனிக்கிற்கு அழைத்துச் சென்றனர்.

அதுவரையுமே அவளை எழுப்ப முயன்றான். எந்த வித சிறு அசைவுமே இல்லை. சூடான மூச்சுக்காற்று மட்டும் வந்து கொண்டிருந்தது.

மருத்துவமனை வந்திருக்க, டிரைவர் ஸ்டெக்சரை எடுக்க முதலில் ஓட, அது வரை காத்திராமல் அவளை பூ போல கைகளில் ஏந்தியபடி காரிலிருந்து இறங்கி, மருத்துவமனை உள்ளே சென்றான்.

எதிரில் பெண் மருத்துவர் வர, அவரது அறைக்கு அழைத்து சென்று, அங்கிருந்த படுக்கையில் படுக்க வைக்க செய்தனர்.

அல்லியை பற்றிய தகவல்கள் கேட்க, அவனுக்கு தெரிந்த வரை பதிலளித்தான். " ஜீரம் ரொம்ப அதிகமாக இருக்கு. அதில் தான் மயங்கிட்டாங்க. ஊசி போட்டவுடனே கொஞ்ச நேரத்தில் மயக்கம் தெளிஞ்சுடும். ஜுரமும் குறைந்தவுடனே நீங்க அழைச்சிட்டு போகலாம் " என்ற விட்டு மருத்துவர் சென்று விட்டார்.

அவர்களுக்கு சிறிய அறை சிகிச்சைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே ஊசி போடப்பட்டிருக்க, இப்போது சிலைன் இறங்கிக் கொண்டிருந்தது. முழுதாக இறங்கிய பின்னரே மெல்ல கண்ணை விழித்தாள் அல்லி.

அவள் அருகில் இருந்த சேரில், எதையோ இழந்தது போல பரிதவிப்புடன் அமர்ந்திருந்ததை கண்டவள். புருவ சுழிப்புடன்.. " என்னாச்சு?" என்றாள் மெல்ல

அதுவரை சிந்தனை இங்கே இல்லாமல், பார்வை மட்டுமே அவள் மேல் பதித்தபடி அமர்ந்திருந்தவன். அவளது குரலில் தான் சுயத்துக்கு வந்தான்.

" என்ன.. ஏதாவது வேணுமா?" என்றான் படபடப்பாக

"ம்ஹூம்.. என்னாச்சு? ஏன் ஒரு மாதிரியா! எதை.. யோ இழந்த மாதிரி உட்கார்ந்திருக்.. கீங்க?" என்றாள் திக்கி திணறி, தொண்டை வரண்டு போய் இருந்தது. அவளால் பேச முடியவில்லை. இருமல் வந்தது. லேசாக இரும,

வாட்டர் பாட்டிலில் இருந்த தண்ணியை மெல்ல அவளது தலையை மட்டும் தனது கைகளால் தூக்கி, நீரை பருக கொடுத்தான். இரண்டு மடக்கு குடித்த பிறகே, அவளுக்கு சுற்றம் உறைத்தது. அவள் முகம் அவன் நெஞ்சோடு சாய்ந்திருக்க, அவ்வளவு நெருக்கமாக ஓட்டிக் கொண்டிருந்தாள்.

தண்ணீர் புரையேற, போதும்! என்று தலையை ஆட்டியவள். மெல்ல நிமிர்ந்து அமர்ந்து கொண்டு, அவன் நெஞ்சில் கை வைத்து மெல்ல அவனை தன்னிடமிருந்து விலக்கினாள். அவள் விலக்கிய கை அவன் நெஞ்சில் இருக்க! அவளையும் அவள் கையையும் மாரி மாரி பார்த்தவன். கண்ணோடு கண் பார்த்து முறைக்க, மெதுவாக அவளது கையை அவனிடமிருந்து எடுத்துக் கொண்டவள்.

" சா.. சாரி.. வேண்டுமென்றே தொடலை " என்று அவள் தொட்டதற்காக முறைக்கிறான் போலும் என்று நினைத்து விளக்கம் கொடுக்க முயன்றாள்.

"தேவையில்லை. நீ சாரி சொல்லனுமென்றால் நிறைய சொல்ல வேண்டியிருக்கும்" என்றவனை புரியாமல் பார்த்தாள்.

காரில் வரும் போது, ஜீர மயக்கத்தில் என் நெஞ்சில் தான் சாய்ந்து இருந்த" என்றதும் அவள் கண்கள் சாசர் போல விரிந்தது. அப்புறம் என்னால நகர கூட முடியலை. உன் கை எடுத்து விட்டால் என் மேல படக்கூடாத இடத்தில் எல்லாம் உன் கை பட்டுடிச்சு " என்றதும்..

" என்ன?" என்றாள் அவள் அதிர்ந்து போய்

"மயக்கத்தில் உள்ள உன்னை என்ன சொல்ல முடியும். நீயும் தெரியாமல் போட்டுட்ட .. " என்றவன். அவள் எதும் புரியாமல் யோசிப்பதும் திருதிருவென முழிப்பதையும் கண்டு, சிரிப்பை அடக்க பெரும் பாடு பட்டவன்.

"எதற்கு சொல்கிறேன் என்றால்? உன் கை என் மேல் தெரிந்தும் தெரியாமல் பட்டதற்கோ? என் கை உன் மேல் தெரிந்தே பட்டதற்கெல்லாம் சாரி சொல்ல வேண்டாமே! " என்றான்.

எல்லா பக்கமும் தலையை உருட்டினாள். அவன் சொன்னது எதுவும் தற்போது மூளைக்கு உறைக்கவில்லை.

மருத்துவர் வர, அவளுக்கு ஜீரம் குறைந்திருப்பதை கண்டு, மருந்து எழுதி கொடுக்க, அதை பெற்றுக் கொண்டு வந்தனர். மலரை அவரது வீட்டருகே இறக்கி விட,

"ரொம்ப தேங்க்ஸ் சார் " என்று காரிலிருந்து இறங்கினாள். தானும் உடன் இறங்கியவன். அவளது பேக்கை கையில் எடுத்துக் கொண்டு, "இங்கே தான் தங்கி இருக்கீங்களா?" என்றான்.

"ம்ம். மாடியில் " என்றாள்.

" சரி. வாங்க " என்று படியில் ஏற பின்னால் அல்லியும் ஏறினாள். வாசலருகே நின்றவன்.
"சரி. நான் கிளம்பறேன் . வீட்டுக்கு போன் செய்து சென்னை வந்ததை சொல்லி விடு " என்றான்.

"ம்ம்ம் " என்றாள்.

"ஒ.கே. பை. நான் சொன்னதை மறந்துடாதே" என்று விடைபெற

"என்ன சொன்னீங்க? " என்றாள் புரியாமல்

அது தான்! உன் கை என் மேல் தெரிந்தும் தெரியாமல் பட்டதற்கோ? என் கை உன் மேல் தெரிந்தே பட்டதற்கெல்லாம் சாரி சொல்ல வேண்டாம்! " என்றவன். கிளம்பி விட்டான்.

இப்போதும் குழப்பமாக யோசித்துக் கொண்டிருந்தாள். தெளிவாக யோசிக்கும் போது.... ? என்னவாகுமோ!

அல்லி மலர்க் கொடி வருவாள்..
 
Status
Not open for further replies.
Top