எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

பானு ஸ்வராவின் ‘தீயோடு பனிமலர்’ கதை திரி

Status
Not open for further replies.

Banu swara

Moderator
தீயோடு பனிமலர் கதை இங்கே பதிவிடப்படும்…
 

Banu swara

Moderator
தீ 1






Dance meri rani
Nach nach nach nach nach
Nach meri rani
Nach nach nach nach nach

Nach meri rani
Nach nach nach nach nach
Nach meri rani
Nach nach nach nach

Dance meri rani



உச்ச ஸ்தாதியில் பாடல் ஒலித்துக் கொண்டிருக்க சுற்றி சுழன்று ஆடிக்கொண்டிருந்தாள் ஆராத்யா…



சூழ அமர்ந்திருந்த இளைஞர் பட்டாளத்தின் கை தட்டல்களும் விசில்களும் அவளுக்கு மேலும் மேலும் உற்சாகத்தை கொடுக்க ஆட்டத்தின் வேகம் அதிகரித்துக் கொண்டே சென்றது…



ஒரு வழியாக அவள் ஆட்டத்தை முடித்தபோது பெரும் ஆர்ப்பரிப்புடன் அனைவரும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்த அவளது உயிர்த்தோழி தீபிகா ஆராத்யாவை நெருங்கி கட்டிக்கொண்டாள்…



“வாவ் வாவ் வேற லெவல் ஆரு… சான்ஸே இல்ல தெரியுமா… டான்ஸ்ல நோராலாம் உன்கிட்ட பிச்சை வாங்கனும் மச்சி….”

என்க “தேங்க்ஸ் மச்சி இன்னைக்கு அருவில ஆட்டம் போட்டதுல ரொம்ப டயர்ட்பா… இல்லைனா இன்னும் பெட்டரா பண்ணிருப்பேன்….” என்றாள் ஆராத்யா..



அடுத்த நடனம் ஆரம்பமாகவே தன்னுடைய இடத்தில் வந்து உட்காரப்போனவள் அப்போதுதான் இருக்கையில் தான் வைத்துவிட்டு சென்றிருந்த அலைப்பேசி ஒளிர்வதை கவனிக்க இசை முழக்கமும் கூச்சல்களும் அந்த இடத்தை நிறப்பியிருந்ததால் அழைப்பேசியின் அழைப்பு யார் காதிலும் விழாமல் போக அவள் அதனை கையில் எடுப்பதற்குள் அழைப்பு நின்றுவிட்டிருந்தது…



அத்தையிடமிருந்து பதினைந்துக்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்திருப்பதை கண்டதும் அத்தை தேவையில்லாமல் இத்தனை தடவை அழைக்கமாட்டார் என்பதை உணர்ந்தவள் மனதில் அபாயமணி அடிக்க வேகமாக தன் தாய்மாமனின் மனைவிக்கு அழைத்தாள்…



உடனே அவளது அழைப்பு ஏற்கப்பட “ஹலோ அத்தை என்னாச்சு….” என்றாள் ஒருவித பதற்றத்துடன்…



மறுபுறம் என்ன சொல்லப்பட்டதோ பாய்ந்தடித்த்துக் கொண்டு தன்னுடைய பொருட்கள் நிரம்பியிருந்த பையை எடுத்துக் கொண்டு அங்கிருந்த ஒரு அறைக்குள் சென்று மறைந்தவள் மீண்டும் திரும்பி வரும்போது அவள் அணிந்திருந்த டாப்ஸும் பேன்டும் காணாமல் போய் சற்று தொளதொளவென்றிருந்த சுடிதாரும் நீளமான துப்பட்டாவும் உடலை தழுவியிருந்தது…



தோள்வரை வெட்டப்பட்டிருந்த அடர் கூந்தலுடன் நீளமான சவுரி முடியை சேர்த்து பின்னல் போட்டபடியே அங்கிருந்த பிரிட்ஜை திறக்க உள்ளே கொத்தாக இருந்த மல்லிகையை எடுத்து தலையில் வைத்து பின் பண்ணிக் கொள்ள அவளை நோக்கி வேகமாக வந்த அவளது மாமா மகள் நிலானி,,,



“ஹேய் ஆரு என்னாச்சு…. எதுக்கு ட்ரெஸ் சேன்ஞ் பண்ணிருக்க…” என்றதும் அவளை முறைத்தவள் “உன் ஃபோன் எங்க பக்கி….” என்றாள் ஆராத்யா..



“என்னோட ஃபோன் அப்பவே ஆஃப் ஆகிடுச்சுடி….”



“ஹையோ…. உன்னையெல்லாம் வெச்சிக்கிட்டு இங்க வந்தேன் பாரு என்ன சொல்லனும்….” என்று தலையிலடித்துக் கொண்டவள் “ஊர்ல இருந்து அப்பாவும் அம்மாவும் வந்திருக்காங்களாம்….” என்றாள்….



“என்னது….” என்றாள் நிலானி அதிர்ச்சி குரலில்… “என்னாச்சு ஆரு சொல்லாமகொள்ளாம திடீர்னு வந்திருக்காங்க….”



“தெரில்லடி….” தன் கலக்கத்தை மறைத்துக் கொண்டு கூறியவள் நேராக தன் நன்பன் வருணை நோக்கி செல்ல ஏதோ ஒரு இசைக்கு குத்தாட்டம் போட்டுக்கொண்டு இருந்தவன் முதுகில் ஓங்கி அடித்தவள் “டேய் எரும சீக்கிரம் வண்டிய எடு….” என்றாள்…



“ஆரா பாதியில எங்க கிளம்பிட்ட….” அவளது உடையை கண்டு குழப்பத்தில் கேட்டான்…



“அப்பாவும் அம்மாவும் மாமா வீட்டுக்கு வந்திருக்காங்களாம்டா….”



“வாட்!!!!” என்றவன் உடனே சுதாரித்து “சரி சரி வா போகலாம்…” மற்றவர்களிடம் விடைபெறாமலே மூவருமாகச் சென்று காரை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டனர்….



வீட்டுக்கு சற்று தூரத்தில் காரை நிறுத்தியதும் நிலானி இறங்கிவிட தானும் இறங்கப் போனவள் உடனே நினைவு வந்தவளாக தன்னுடைய கைப்பையில் எதையோ தேடி எடுத்து காரின் கண்ணாடி வழியாக பார்த்துக்கொண்டே மஞ்சள், குங்குமத்தை எடுத்து சிறு தீற்றாக நெற்றியில் பூசிக் கொண்டாள்….



“வருண் நீ கிளம்பு…. நம்ம நாளைக்கு மீட் பண்ணலாம்….” என்றுவிட்டு மாமன் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்…






*********************************************







“இதோ ஆராத்யா வந்தாச்சு…..” வைஷ்னவி கூற அனைவரின் பார்வையும் வாசல்கதவை நோக்கி சென்றது….



குனிந்த தலை நிமிராமல் வீட்டுக்குள் நுழைந்தவள் அப்போதுதான் தன் பெற்றோர் வந்திருப்பதை கண்டவள் போல் முகம் மலர “அப்பா…. அம்மா….” என்று தேன் குரலில் கூறியபடி அவர்களை நெருங்கினாள்…



“என்னப்பா திடீர்னு வந்திருக்கீங்க… என்னாச்சு..….” வெகு அக்கறையுடன் கேட்க பெற்றவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்…



“அதெல்லாம் யாருக்கும் ஒன்னுமில்லம்மா….” என்றார் அவளது தந்தை கிருஷ்னமூர்த்தி…



“ஆமா… நீ இவ்வளவு நேரமா எங்கேம்மா போயிருந்த…”



“தியானத்துக்கு போயிருந்தோம்பா…” என்றாள் ஆராத்யா…. “இன்னைக்கு சச்சிதானந்த சுவாமியோட மெடிட்டேஷன் ஈவன்ட் இருக்குனு நிலானி சொன்னா அதான் நாங்க ரெண்டு பேரும் மார்னிங்கே போயிட்டோம்… இல்ல நிலானி….”



“ஆ…. ஆமாமா…” நிலானியின் தலை வேகமாக மேலும் கீழும் ஆடியது….



‘அடிப்பாவி.. எப்படி குரல்ல கொஞ்சம்கூட பிசிர் தட்டாம பொய் சொல்றா…’ மருமகளின் வண்டவாளங்கள் அனைத்தையும் அறிந்திருந்த வைஷ்னவி வாயை பிழந்தாள்….



“ஆமா அது யாரு சச்சிதானந்த சுவா…..” என்று அவளது அன்னை கௌசல்யா ஆரம்பிக்கும்போதே காதில் விழாதவள் போல எழுந்து கொண்டவள் “அப்பா ஏதாவது சாப்பிட்டீங்களா…. இருங்க நான் போய் ஜூஸ் எடுத்துட்டு வரேன்….” என்றாள்…



“அதெல்லாம் அப்பவே குடிச்சிட்டோம்…. நீ முதல்ல உன் திங்க்ஸ்லாம் எடுத்துட்டு கிளம்பும்மா….”



‘கிளம்பவா….’ வைஷ்னவியை நோக்கினாள் ஆராத்யா… ‘என்ன மேட்டர்….’ என்பது போல் கண்களால் கேட்க அவளுக்கு பதிலளிக்க முடியாமல் தலையை குனிந்து கொண்டாள் வைஷ்னவி…



‘ஐயோ!! இந்த அத்தை ரியாக்‌ஷனே சரியில்லையே…. என்னவா இருக்கும்….’



ஏன்?? எதற்கு?? என்றெல்லாம் பெற்றவர்களிடம் கேட்டுவிட முடியாது…. அவள் வாங்கி வந்த வரம் அப்படி…



“சரிங்கப்பா….” என்று சுரத்தே இல்லாமல் கூறியவள் அந்த வீட்டில் தான் பயன்படுத்தி வந்த அறையை நோக்கி சென்றாள்…



அவளை பின்தொடர்ந்து வந்த நிலானி “என்ன ஆரு இதெல்லாம்… நீ வந்து ஒரு வாரம் கூட ஆகல்ல.. அதுக்குள்ள பின்னாடியே கூட்டிட்டு போக வந்துட்டாங்க….” என்றாள் குரலில் எரிச்சலுடன்…



ஒரு பெருமூச்சுடன் தன் மாமன் மகளை நோக்கி திரும்பியவள் “அதான் ஆறு நாள் இங்கேயே உன்கூட ஜாலியா சுத்தினேன்ல… அது போதாதா உனக்கு??..” தன்னுடை பொருட்களை பெட்டியில் அடுக்கியபடி கூறினாள் ஆராத்யா…



சொன்னவளை முறைத்தாள் நிலானி… “அதுக்காக இப்படி திடுதிப்புனு வந்து உன்ன கூப்பிட்டுட்டு இருக்காங்க… ஏன்?? எதுக்குன்னு கூட கேட்கமாட்டியா…. அட்லீஸ்ட் இன்னும் ஒருவாரம் இருந்துட்டு வரேன்னு உனக்கு சொல்ல முடியாதா??”



“அவங்களுக்கு பிடிக்காது நிலா… நான் ஏன் எதுக்குனு கேள்வி கேட்டா குடும்பத்துக்கே ஆகாத பொண்ணு மாதிரி என்ன பார்ப்பாங்க.. இப்படி வருஷத்துக்கு ஒரு தடவ இங்க வந்து போறது கூட நின்னுடும் பரவால்லயா….”



“இருந்தாலும்…..” என்று இழுத்தவள் அதற்குமேல் எதுவும் பேசாமல் ஆராத்யாவை பரிதாபமாக பார்த்து வைத்தாள் நிலானி…



அவளது பார்வையை கண்டதும் கடுப்பானவள் “அடச்சீ நிறுத்து… உன்கிட்ட எத்தன தடவை சொல்லிருக்கேன் இப்படி பாவமா பார்க்காதேன்னு… இப்ப என்ன நடந்துடுச்சுனு இப்படி பார்த்து வைக்கிற நீனு….” பல்லைக் கடித்தாள் ஆராத்யா…



அவளுக்கு யாரும் தன்மேல் பரிதாபப்படுவதோ,, பாவம் பார்ப்பதோ,, தன்னை குறைவாக எடைபோடுவதோ சகித்துக்கொள்ள முடியாத விடயங்கள்…



“அதான் எனக்கு பிடிச்சதெல்லாம் நான் பண்ணிக்கிட்டுதானே இருக்கேன்… அவங்க ஒத்துக்கமாட்டாங்கன்னு என்னோட சின்ன சின்ன ஆசையைல்லாம் அடக்கி வெச்சிக்கிட்டு சாமியார் மாதிரி உட்கார்ந்திருக்கேனா… இல்லைல…. என் இஷ்டத்துக்கு ஆடுறேன், பாடுறேன், ஜாலியா இருக்கேன்… என்ன ஒன்னு என் வீட்டு ஆளுங்களுக்கு இது எதுவும் தெரியாது…. அவ்ளோதான்….. சொல்லப்போனா உன்னையெல்லாம் விட நான் ரொம்ப சந்தோசமாத்தான் இருக்கேன்….” கெத்தாக கூறினாள்…



அவளை நோக்கி கையெடுத்து கும்பிட்ட நிலானி “அம்மா தாயே தெரியாம பார்த்துட்டேன்மா… என்னைய மன்னிச்சிடு….” என்றாள்…



“ம்ம்ம் அது….”



அடுத்து தான் ஊருக்கு கிளம்புவதாக நன்பர்களுக்கு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பினாள் ஆராத்யா…



அவளுக்காகத்தான் அவளுடைய நண்பர்கள் பட்டாளமே இங்கு வந்தது… விடுமுறை நாட்களில் ஆராத்யா செல்லும் ஒரே ஒரு இடம் மூணாறில் இருக்கும் அவளது தாய்மாமாவின் வீடு மட்டுமே… வேறு எங்கும் செல்வதற்கு அவர்கள் வீட்டில் அனுமதிக்க மாட்டார்கள்…



அவளை விட்டுவிட்டு எங்கும் செல்ல மற்றவர்களுக்கும் மனம் வருவதில்லை… அதனால் அவள் மூணாறு சென்றதும் அவளது நன்பர்களும் பின்னால் சென்றுவிடுவார்கள்….



அங்கு தங்கியிருக்கும் நாட்களெல்லாம் ஒரே ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம்தான்…. ஆனால் இது எதுவும் அவளது வீட்டினருக்கு தெரியாமல் பார்த்துக் கொள்வாள்… வீட்டினரை பொறுத்தவரை அவள் விடுமுறைக்கு மாமா வீட்டுக்கு சென்றிருக்கிறாள் அவ்வளவுதான்…







******************************************








தன் முன்னால் குனிந்த தலை நிமிராமல் பவ்யமாக நின்றிருந்த தம்பி மகளை வாஞ்சையுடன் பார்த்தார் சத்தியமூர்த்தி…



“அம்மாடி….”



“பெரிப்பா….”



“பயணமெல்லாம் சௌகரியமா இருந்துச்சா… அவசரமா கூட்டிட்டு வர சொல்லிட்டேன்னு என்மேல வருத்தம் இல்லையே…..”



பதறிப்போய் அவரை நிமிர்ந்து பார்த்தவள் “ஐயோ பெரியப்பா ஏன் இப்படில்லாம் பேசுறீங்க…. எந்த காரணமும் இல்லாம நீங்க எதுவும் செய்யமாட்டீங்கன்னு எனக்கு தெரியாதா… நீங்க எது செஞ்சாலும் எங்க எல்லாரோட நல்லதுக்காத்தான் இருக்கும்….”



இந்த வார்த்தைகளை அச்சரம் பிசகாமல் சொன்ன ஆராத்யாவை பெருமிதத்துடன் பார்த்தார் சத்தியமூர்த்தி… அவர் எதிர்பார்த்தது இந்த பதிலைத்தானே…



அதை அவளும் அறிந்தே இருந்தாள்… பிறந்ததிலிருந்து அவரை பார்த்துக்கொண்டு இருக்கிறாளே… அவரிடம் எப்போது என்ன பேச வேண்டும் என்பதெல்லாம் அவளுக்கு அத்துப்படி…



“எதுக்கு கிருஷ்ணாவும் உங்க அம்மாவும் மாமா வீட்டுல இருந்து உன்ன கூப்பிட்டுக்கிட்டு வந்தாங்கன்னு ஏதாவது தெரியுமா????”



“இல்ல பெரியப்பா… அப்பா அம்மா வந்து கிளம்ப சொன்னாங்க… நான் கிளம்பி வந்துட்டேன்…. வேற எதுவும் தெரியாது…”



மீண்டும் சத்தியமூர்த்தியின் முகத்தில் பெருமிதம்… இந்தக்காலத்தில் யார்தான் இப்படி பெற்றவர்கள் சொல்வதற்கெல்லாம் மறுவார்த்தை பேசாமல் கட்டுப்பட்டு நடக்கிறார்கள்… இவள் தன்னுடைய வளர்ப்பு என்பதில் அவர் முகத்தில் பெருமை தாண்டவமாடியது…



‘எதுவா இருந்தாலும் சீக்கிரம் சொல்லிட்டு ஆள விட்டார்னா தேவலை….’ ஆராத்யாவின் மனதுக்குள் இப்போது இதுதான் ஓடிக் கொண்டிருந்தது…



ஆனால் அடுத்து அவர் சொல்ல வேண்டியதை சொன்னபோது அவளுக்கு கண்ணை கட்டிக்கொண்டு தலை சுற்றி மயக்கமே வந்துவிட்டது..



“ஒன்னும் அவசரம் இல்ல… நல்லா யோசிச்சு உன் முடிவ நாளைக்கு சொல்லும்மா….”



பதிலேதும் சொல்லாமல் தலையை மட்டும் ஆட்டிவிட்டு நேர்ந்து விட்ட கோழி போல அங்கிருந்து சென்ற தம்பி மகளை கண்டு இப்போது அவர் முகம் சுணங்கியது…



‘நீங்க எது செஞ்சாலும் எங்க நல்லதுக்காத்தான் இருக்கும்…’ என்ற பதிலைத்தான் இப்போதும் அவர் எதிர்பார்த்தார்… அவள் அதை சொல்லாமல் சென்ற ஏமாற்றத்தில்தான் இந்த சுணக்கம்…



சற்று தள்ளி நின்று இவர்களது சம்பாஷனையை கேட்டுக் கொண்டிருந்த சத்தியமூர்த்தியின் மனைவி பத்மாவதி இப்போது கணவரை நெருங்கினார்… மனைவியை கண்டதும் உடனே தன் முகபாவனையை மாற்றிக் கொண்டார் சத்தியமூர்த்தி…



இத்தனை வருடங்களாக அந்த மனிதருடன் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கும் பத்மாவதிக்கு தெரியாதா கணவரின் மனதில் என்ன இருக்கிறது என்பது…



“அவ சின்னப் பொண்ணுங்க…. திடீர்னு உனக்கு கல்யாணம்னு சொன்னதும் தடுமாறிட்டா போல இருக்கு… அதோட பொண்ணுங்க கல்யாண பேச்சு பேசினா வெட்கத்துல ஒன்னுமே சொல்லமாட்டாங்க… அதுவும் நம்ம ஆராத்யா ஒரு வாயில்லாப் பூச்சின்னு உங்களுக்கு தெரியாதா…. நீங்க சொல்லி அவ எதையாவது மறுத்திருக்காளா…”



மனைவியின் பேச்சில் சத்தியமூர்த்தியின் முகம் சற்று தெளிந்தது.. அப்படியும் இருக்குமோ என்று யோசித்தவர் தம்பியின் மகள் வெட்கத்தில்தான் எதுவும் பேசாமல் சென்றிருக்கிறாள் என்று முடிவே செய்துவிட்டார்…








******************************************






“என்னது கல்யாணம் பண்ணிக்க போறியா…. ஹாஹாஹா…. வெச்சாங்க பாரு ஆப்பு உனக்கு….”





“ஆரு நீ இன்னும் படிப்ப கூட முடிக்கல அதுக்குள்ள கல்யாணமா!!!….”



“படிக்கப் போறேன்… லைஃப்ல பெருசா சாதிக்க போறேன்… அது பண்ணப்போறேன் இது பண்ணப்போறேன்னு கதைலாம் விட்டியே…. என்ன போச்சா…..”



“மச்சி நம்ம பேட்ச்ல உனக்குத்தான் முதல் கல்யாணம்… சீக்கிரம் பாட்டியாக வாழ்த்துக்கள்….”



“இதுவரைக்கும் எங்க யாரையும் உன் வீட்டுக்கு இன்வைட் பண்ணதே இல்ல… கல்யாணத்துக்காவது கூப்பிடுவேல்ல….”



ஒவ்வொருவரும் ஆளுக்கொரு கருத்தை சொல்லிக் கொண்டிருக்க எதையோ பறிகொடுத்தாற்போல் அலைப்பேசியில் தெரியும் நண்பர்களின் முகங்களை வெறித்துக் கொண்டிருந்தாள் ஆராத்யா…



“ஹேய் ஆளாளுக்கு எதையாவது சொல்லி அவள டென்ஷன் ஆக்காதீங்கடா….” என்ற தீபிகா “மச்சி நீ இப்படியே பேசாம இருந்தா எப்படி… உன் மனசுல என்ன இருக்குனு சொன்னாத்தானே தெரியும்….” என்றாள்…அவளுக்கு நன்றாகவே தெரியும் ஆராத்யா தன் குடும்பத்தாரின் பேச்சை மீறி எதையும் செய்யமாட்டாள் என்பது….



“இப்போதைக்கு படிக்கனும்கிற நெனப்பு மட்டும்தான் என் மனசுல இருக்கு… அதை தாண்டி வேற எதையுமே என்னால யோசிக்க முடியல…”



“உன் பெரியப்பாக்கிட்ட சொல்ல வேண்டியதுதானே முதல்ல என் படிப்பு முடியட்டும் அப்புறமா கல்யாணம் பண்ணிக்கறேன்னு…..”



“அது முடியாது மச்சி… பெரிப்பாகிட்ட அந்த மாதிரிலாம் பேசி எனக்கு பழக்கமில்ல….”



‘கஷ்டம்தான்…’ பெருமூச்சு விட்டான் ஆதரஷ்…



“ஆரு பேசாம இந்த சினிமால வர்ர மாதிரி வீட்ட விட்டு ஓடி போறியா….” என்ற வருணை தீப்பார்வை பார்த்தாள் ஆராத்யா…



“உன் வாயில இருந்து உருப்படியா ஏதாவது வருதா பாரு… எப்ப பாரு லூசுத்தனமாவே பேசிக்கிட்டு….” தீபிகா…



“பின்ன என்ன தீப்ஸ்…. இவளுக்கு கல்யாணத்துலயும் இஷ்டமில்ல பெரியப்பாகிட்ட வாய திறந்து பேசவும் மாட்டான்னா என்ன பண்ண சொல்ற….” என்றான் மற்றொரு நண்பன்…



“இது எதுவும் வேண்டாம் மச்சி… பேசாம அந்த மாப்பிள்ள கால்ல விழுந்துடு…. அவன் நம்பர் எடுத்து கால் பண்ணி எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டமில்லேன்னு சொல்லிடு மேட்டர் ஓவர்….



ஆராத்யா தலையை பிடித்துக் கொண்டாள்…. இவர்கள் எத்தனை ஐடியாக்கள் கொடுத்தாலும் அவளுக்கு இந்த விடயத்தில் தைரியமாக எதையும் செய்துவிடும் துணிச்சல் கிடையாது…. சிறு பிசகல் ஏற்பட்டாலும் அவளது குடும்பத்தில் பூகம்பமே வெடித்துவிடும்…





தோழியின் நிலையை உணர்ந்தவளாக “இது உன்னோட லைஃப் மச்சி… நீ எந்த மாதிரி வாழ்க்கை வாழனும்கிறத நீதான் டிசைட் பண்ணனும்… அந்த உரிமைய யாருக்கும் விட்டுக் கொடுக்காதே அது உன் பெரியப்பாவா இருந்தாலும் சரி…. என்னால அவ்வளவுதான் சொல்ல முடியும்….” என்றாள் தீபிகா…



யாரோ அறைக்கதவை தட்டவும் “நான் அப்புறம் பேசுறேன்….” என்றுவிட்டு ஃபோனை ஒரு ஓரமாக வைத்தவள் காதில் மாட்டியிருந்த ஹெட்செட்டை மெத்தைக்கு அடியில் போட்டுவிட்டு சாதாரணமாக வந்து கதவை திறந்தாள்…



அவளை இடித்து தள்ளாத குறையாக உள்ளே நுழைந்தாள் அவளது தாய் கௌசல்யா



“கதவ லாக் பண்ணி வெச்சிட்டு உள்ள என்ன பண்ணிட்டிருக்க??…”



“டிரெஸ் சேன்ஞ் பண்ணலாம்னுதான்மா லாக் பண்ணேன்….”



கட்டிலில் சட்டமாக அமர்ந்துகொண்டு அவளை மேலும் கீழும் பார்த்த கௌசல்யா… “பெரியப்பா சொன்ன விஷயமா என்ன முடிவு எடுத்திருக்க…. நீ எந்த பதிலும் சொல்லாம வந்துட்டேன்னு ரொம்ப வருத்த பட்டாராம்…” என்றாள்…



“அம்மா ப்ளீஸ்….. எனக்கு யோசிக்க கொஞ்சம் டைம் வேணும்….”



“இதுல நீ யோசிக்க என்ன இருக்கு ஆரா…. பெரியவங்க எந்த முடிவு எடுத்தாலும் அது சரியாத்தான் இருக்கும்… இப்பவே பெரியப்பா கிட்ட போய் கல்யாணத்துக்கு சம்மதம்னு சொல்லிடு…. புரியுதா…”



“முடியாதும்மா…. எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம்… நான் படிக்கனும்…” என்றதுதான் தாமதம் பதறிப்போய் எழுந்து வந்த கௌசல்யா அக்கம்பக்கம் பார்த்துவிட்டு “வாய மூடு அறிவுகெட்டவளே… யார் காதுலயாவது விழுந்துட போகுது….” அடக்கிய குரலில் சீறினாள்…



“என்ன நினைச்சிட்டு இருக்க உன் மனசுல…. உன் அப்பாவும் பெரியப்பாவும் ஒரு முடிவெடுத்தா அதுக்கு முடியாதுன்னு சொல்லுவியா நீ…. நாக்க அறுத்து போட்டுடுவேன்…. பொம்பள புள்ளையா அடக்க ஒடுக்கமா பெரியவங்க சொல்றத கேட்டு நடக்கிற வழிய பாரு…. இல்லனா நடக்கிறதே வேற…” கோபமாக கூறிவிட்டு சென்றாள்…



பொதுவாக ஆராத்யா இப்படியெல்லாம் பெரியவர்களின் பேச்சுக்கு மறுத்து பேசுவது கிடையாது… பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ அவர்கள் எதை சொன்னாலும் சரியென்று தலையை தலையை ஆட்டிவிட்டு வந்துவிடுவாள்…. ஆனால் எல்லாம் வீட்டுக்குள் தான்…. வீட்டை தாண்டினால் அவள் கட்டவிழ்ந்த கன்றுக் குட்டி….



இப்போது விடயமே வேறு என்பதால் தன் மறுப்பை தெரிவித்துக் கொண்டிருக்கிறாள்… அதுவும் அவளது அம்மாவிடம் மட்டும்….



சற்று நேரத்தில் அவளது தம்பி நகுலன் பெரியப்பா அழைப்பதாக கூற இதற்குமேல் தாமதிக்க முடியாது என்ற உணர்வில் ஆராத்யாவின் உடல் இறுகியது…



ஹாலில் சோபாவில் சத்யமூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவர்களது ஒரே சகோதரியின் கணவர் ராகவேந்தரும் அமர்ந்திருந்தனர்…



இவள் எவ்வளவுதான் மெல்ல மெல்ல எட்டு வைத்து நடந்து வந்தாலும் அதே வீட்டுக்குள் இருக்கும் ஹாலை அடைய எவ்வளவு நேரம் எடுத்துவிடப் போகிறது…



எதிரில் வந்து மௌனமாக நின்றவளை ஏறிட்டுப் பார்த்தார் சத்யமூர்த்தி….



“நல்லா யோசிச்சியாம்மா…. என்ன முடிவு எடுத்திருக்க….”



பத்மாவதி, கௌசல்யா இருவரும் சமயலறைக்குள் நின்று இவர்களை பார்த்துக் கொண்டிருந்தார்கள்… வீட்டினர் மட்டுமல்லாது அங்கங்கு வேலை செய்தபடி கவனித்துக் கொண்டிருந்த வேலைக்காரர்கள் அனைவரின் விழிகளும் ஆராத்யாவின் முகத்திலே பதிந்திருந்தது அடுத்து அவள் என்ன சொல்லப்போகிறாள் என்ற எதிர்பார்ப்புடன்…



அதிலும் ராகவேந்தர் சற்று அதிகப்படி எதிர்பார்ப்புடன் பார்த்திருந்தார்… ஆராத்யா இந்த திருமணத்தை மறுத்துவிடுவாள் என்பதில் அவர் நூறு சதவிகிதம் நம்பிக்கையுடன் இருந்தார்…



ஆராத்யாவை பற்றி அவருக்கு நன்கு தெரியும் என்பதோடு அவர் மனதில் வேறு ஒரு எண்ணமும் இருந்தது…



“எதுவும் சொல்லாம இப்படியே அமைதியா இருந்தா எப்படி… எதுவா இருந்தாலும் மனசுல இருக்கிறத வெட்கப்படாம சொல்லும்மா…” சத்யமூர்த்தியின் குரலில் அவரை ஏறிட்டுப்பார்த்தாள் ஆராத்யா…



பின்பு சிறு பெருமூச்சை வெளிவிட்டவள் “எனக்கு… எனக்கு இந்த கல்யாணத்துல முழு சம்மதம்….” என்க சுற்றியிருந்த அனைவரின் முகங்களும் மலர ராகவேந்தரின் முகம் மட்டும் கூம்பிப் போனது….



‘முட்டாள் பெண்…’ என நினைத்துக் கொண்டார் அவர்….





குளிரும்……
 

Banu swara

Moderator
தீ 2






மிகவும் கட்டுக்கோப்பான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் சத்தியமூர்த்தி…. குடும்பத்தின் மூத்த அங்கத்தவர் என்ற வகையில் அனைவரையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்று எண்ணம் எப்போதும் அவருக்கு உண்டு… தன்னை மீறி ஏதாவது நடந்துவிட்டால் அதை அவரால் ஜீரணித்துக் கொள்ளவே முடியாது….



அவர் பிறந்து ஆறு வருடங்கள் கழித்து தங்கை சுஜாதாவும் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு தம்பி கிருஷ்ணமூர்த்தியும் பிறக்க, கிருஷணமூர்த்தி பிறந்து ஒருசில நாட்களிலே அவர்களது தாய் இறந்துவிட சகோதரர்கள் இருவரையும் கண்ணும் கருத்துமாக வளர்த்தவர்…



அவர்களுக்கும் அண்ணனின் சொல்தான் வேதவாக்கு… அவரை தாண்டி எதையும் செய்ய வேண்டுமென்று அவர்களுக்கு தோன்றியதுகூட கிடையாது…



அதேபோல்தான் அவர்களது பிள்ளைகளும் சத்தியமூர்த்தியின் கட்டுப்பாட்டின்கீழ் தான் வளர்ந்தார்கள்.. அவர் உட்கார சொன்னால் உட்கார வேண்டும்… நிற்க சொன்னால் நிற்க வேண்டும்… அதிலும் ஆண், பெண் என்ற பாகுபாடு எல்லாம் கிடையாது… அவர்கள் உடுத்தும் உடையிலிருந்து சாப்பிடும் சாப்பாடு அனைத்தும் அவரின் விருப்பப்படிதான் இருக்க வேண்டும் என்று நினைப்பார்…



சத்தியமூர்த்திக்கு ஒரு ஆணும் இரண்டு பெண்பிள்ளைகளும் அதேபோல் கிருஷ்ணமூர்த்திக்கு ஆராத்யாவும் அவளது தம்பி நகுலன் என இரண்டு பிள்ளைகள்…



சிறுவயதிலிருந்தே அடக்கி அடக்கி வளர்க்கப்பட முதலில் அந்த கூட்டை உடைத்து வெளியே வந்தவள் ஆராத்யாதான்….



சத்தியமூர்த்தியின் குணத்தை சரியாக கணித்து வைத்திருந்தவள் அவரது பார்வைக்கு முன்னால் அடக்க ஒடுக்கமான அக்மார்க் அப்பாவி பெண்ணாகவும் வீட்டுக்கு வெளியே தன் இஷ்டப்படி சுதந்திரமாக சுற்றித்திரியும் பட்டாம்பூச்சியாகவும் இருந்தாள்….



அதேசமயம் தனக்கான எல்லைகளையும் வறையறுத்து வைத்திருந்தாள்…. வீட்டுக்கு தெரியாமல் எதை வேண்டுமானாலும் செய்து விடலாம் என்று எல்லை மீறி நடப்பவள் கிடையாது…. ஒழுக்கக்கேடான எந்த ஒரு விடயத்துக்கும் அவள் இடம் கொடுத்ததில்லை…



அவளுக்கு கிடைத்த நண்பர்களும் அப்படித்தான்…. அவளை போலவே நேர்மறையான எண்ணம் கொண்டவர்கள்… அதனால் இதுவரை அவளுக்கு எந்தவித சங்கடமும் நேர்ந்ததில்லை….



அவளது தம்பி தங்கைகளும் அவளைப்போலவே வீட்டில் ஒரு முகம் வீட்டுக்கு வெளியே இன்னொரு முகம் என்று இருந்ததால் ஒருவருக்கொருவர் காட்டிக்கொடுப்பதொ போட்டுக் கொடுப்பதோ கிடையாது… அவர்களை வழிநடத்தும் குருவே ஆராத்யாதான்…



ஆனால் சத்தியமூர்த்தியின் இந்த கெடுபிடிக்குள் இருந்து வெளிவர முடியாமல் திணறியவன் அவரது மகன் ஆர்யன் மட்டும்தான்… சத்தியமூர்த்தி பத்மாவதி தம்பதியினருக்கு திருமணமாகி ஏழு ஆண்டுகள் கழித்து பிறந்தவன்… சிறுவயதிலிருந்து தந்தை சொல் தட்டாத தனயனாக இருந்தவன் ஒரு கட்டத்துக்கு மேல் பருவ வயதை அடைந்து வெளி உலகில் கால் வைத்தபோதுதான் இத்தனை ஆண்டுகளாக எதையெல்லாம் இழந்திருக்கிறோம் என புரிந்து கொண்டான்….



புரிந்து என்ன பயன் அவனால் அதற்கு பிறகும் தந்தையின் பிடியில் இருந்து வெளிவர முடியவில்லை… அவன் படித்த படிப்பிலிருந்து திருமணம் செய்த பெண் வரை அனைத்துமே சத்தியமூர்த்தியின் தேர்வுதான்…







*******************************************








“இத்தன வருஷமா கல்யாண பேச்ச எடுத்தாலே பிடிகொடுக்காம இருந்தவன் திடீர்னு எங்கேயோ ஆராத்யாவ பார்த்துட்டு கட்டுனா இந்த பொண்ணதான் கட்டுவேன்னு முடிவா சொல்லிட்டான்… நான்கூட நெனச்சேன் அப்படி என்ன பெரிய அழகியான்னு… இப்ப பார்த்ததும்தான் தெரியுது…. உங்க பொண்ணு தேவதை மாதிரி இருக்கா… எங்க ஹர்ஷாவுக்கு ரொம்ப பொருத்தமான பொண்ணு…”




தன் முன்னால் மெல்லிய அலங்காரத்தில் பார்வையை தாழ்த்தியபடி உட்கார்ந்திருந்த ஆராத்யாவை பார்த்து கூறினாள் மஞ்சுளா… மாப்பிள்ளையின் தாய்மாமா மனைவி…. பெற்றவர்கள் இல்லாததனால் அவனுடைய மாமாவும் அவருடைய மனைவியும் பெண் பார்க்க வந்திருந்தார்கள்….





‘என்னது கட்டுனா நம்மளதான் கட்டுவேன்னு பிடிவாதமா இருந்தானா…. யாரா இருக்கும்…. அன்னைக்கு பார்க்ல ஜொள்ளு விட்டுட்டு இருந்த கருவாயனா இருப்பானோ…. கடவுளே!!!!!’ ஆராத்யாவுக்கு அழுகையே வந்துவிடும் போல இருந்தது…



“முதல்ல பொண்ணு பார்க்க ஹர்ஷாவும் வர்ரதாதான் இருந்தது…. அப்புறம் திடீர்னு பிசினஸ் விஷயமா துபாய் போக வேண்டி இருந்ததனால எல்லா ஏற்பாட்டையும் எங்கள பார்த்துக்க சொல்லிட்டு கிளம்பி போயிட்டான்….” என்றார் மஞ்சுளாவின் கணவர் ப்ரதாப்… “கல்யாணத்துக்கு ரெண்டுநாள் முன்னாடியே வந்துடுவான்…” சேர்த்து சொன்னார்…



“அது பரவாயில்லை…. மாப்பிள்ள தான் ஏற்கனவே பொண்ண பார்த்துட்டாரே….” என்றார் சத்தியமூர்த்தியும்…



“அதுக்கில்லைங்க…. ஹர்ஷாவும் வந்திருந்தா அவங்க ரெண்டு பேரும் தனியா ஏதாவது பேசனும்னா பேசிருக்கலாம்… ஆராவுக்கும் ஹர்ஷா கூட பேசனும்னு இருக்கும்ல….”



“சேசே…. அப்படில்லாம் எதுவும் கிடையாதுங்க….” என்றார் கிருஷ்ணமூர்த்தி வேகமாக…. “எங்க பொண்ணு அந்த மாதிரிலாம் இல்ல… நாங்க காட்டுற பையன கண்ண மூடிக்கிட்டு கல்யாணம் பண்ணிப்பா….” என்க மஞ்சுளாவும் ப்ரதாப்பும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்…



அவர்களது பார்வைக்கான அர்த்தத்தை உணர்ந்து கொண்டவள் ‘ஐயோ!!! இவங்க கட்டுப்பெட்டி தனத்த வர்ரவங்க போறவங்க கிட்டலாம் சொல்லி மானத்த வாங்குறாங்களே….’ நொந்து போனாள் ஆராத்யா….



ஒரு வழியாக பேச்சுவார்த்தையெல்லாம் முடிவடைந்ததும் அவர்கள் விடைபெறுவதற்கு முன்பு ஆராத்யாவை நெருங்கிய மஞ்சுளா தான் கொண்டு வந்துவந்திருந்த வைர நெக்லஸை அவள் சங்கு கழுத்தில் அணிவித்தார்….



பின்பு தட்டிலிருந்த பூவை எடுத்து அவளது தலையில் சூடிவிட்டவர் விழிவிரிய “அடடா!! எவ்ளோ நீளமான முடி!!!!…” என்று அவளது நீள கூந்தலை தொட்டு தடவி பார்க்க ‘ஐயோ ஆன்ட்டி இன்னும் கொஞ்சம் வேகமா இழுத்தீங்கன்னாலும் அது கையோட வந்திடும்….’ வெளியே சொல்லமுடியாமல் மனதுக்குள் புலம்பிக் கொண்டிருந்தாள்…



அவர்கள் கிளம்பிச் சென்றதும் தன் அறைக்குள் வந்து தொப்பென கட்டிலில் விழுந்தவளை சூழ்ந்து கொண்டனர் அந்த வீட்டின் மற்ற வாரிசுகள்…



“அக்கா எங்களுக்கெல்லாம் தைரியம் சொல்லி கொடுத்ததே நீதான் இப்போ நீயே இப்படி மாட்டிக்கிட்டியேக்கா….” என்றாள் சத்தியமூர்த்தியின் மகள் ப்ரியங்கா…



“மாப்பிள்ள முகத்தை கூட பார்க்காம எப்படிக்கா கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்ட….” இது திவ்யங்கா….



ப்ரியங்கா, திவ்யங்கா இருவரும் இரட்டையர்கள்…. ப்ளஸ் டூ படித்துக் கொண்டிருக்கிறார்கள்…



“அந்த ஆன்ட்டி வேற வார்த்தைக்கு வார்த்தை ஹர்ஷா… ஹர்ஷாங்கிறாங்க…. அந்த ஹர்ஷாவ பார்க்க அவன கையோட கூட்டிட்டு வந்திருக்கனுமா இல்லையா….”



“அட நீ வேற…. அவங்களுக்கு என்ன அவசியம்… நம்ம வீட்டு ஆளுங்கல்ல பொறுப்பா பையன் ஃபோட்டோவ அனுப்ப சொல்லி ஆராவுக்கு காட்டியிருக்கனும்….”



“ஆராவுக்கே இந்த நிலமைன்னா…. நமக்கெல்லாம் என்ன ஆகுமோ தெரில்லயே….”



கன்னத்தில் கை வைத்தபடி தனக்குள் மூழ்கியிருந்தாள் ஆராத்யா…. அவர்களுக்கு பதிலளிக்கும் நிலையில் அவளில்லை… திருமணப் பேச்சு ஆரம்பித்ததிலிருந்தே அவள் இப்படித்தான் இருக்கிறாள்…



“இங்க வந்து உட்கார்ந்துட்டு எதுக்கு ஆராவ கன்பியூஸ் பண்ணிட்டு இருக்கீங்க ரெண்டு பேரும்…” கேட்டுக்கொண்டே அங்கிருந்த மேசை மேல் ஏறி உட்கார்ந்தான் நகுலன்….



“ஆராக்கா இப்பத்தான் லைஃப்ல உருப்படியா ஒரு முடிவெடுத்திருக்க… இவளுங்க பேச்ச கேட்டு உன் மனச மாத்திக்காத…” என்றவனை முறைத்தார்கள் மற்ற இருவரும்…



ஆரா அவனை புரியாமல் பார்த்தாள்… அவளுக்கு அடுத்ததாக அந்த வீட்டில் கொஞ்சமாவது புத்திசாலித்தனமாக யோசிப்பவன் அவன் மட்டும்தான்…. இப்போது எதற்கு இப்படி புரியாமல் பேசிக்கொண்டிருக்கிறான்…



“என்னடா உளர்ர…..” என்றாள் கடுப்புடன்…



“நான் ஒன்னும் உளரல… நல்லா யோசிச்சு பாரு.. இந்த உலகத்துலயே ஒன்னாம் நம்பர் கட்டுப்பெட்டி குடும்பம் நம்ம குடும்பம்தான்…. நம்மாளுங்க அளவுக்கு இந்த காலத்துல வேற யாராவது கன்சர்வேடிவா இருக்க வாய்ப்பிருக்கா???”



ஆராவின் தலை வாய்ப்பில்லை என்பதுபோல் ஆடியது…



“அவ்வளவுதான்…. மேட்டர் ஓவர்….”



“டேய் சுத்தமா புரியலடா….” சாதாரண நாட்களாக இருந்திருந்தால் அவன் சொல்வதை லபக்கென கேட்ச் பண்ணியிருக்கும் அவளது மூளை… இப்போதுதான் நிலமையே வேறாயிற்றே….



“ஐயோ அக்கா இன்னுமா புரியல…” என்று தலையிலடித்துக் கொண்டவன் “உனக்கு இனிமேல் இந்த வீட்டுலேருந்து விடுதலைக்கா….” என்றான்…



“அப்பா, அம்மா, பெரிப்பா, பெரிம்மா இவங்க ரெஸ்ட்ரிக்‌ஷன் எதுவுமே இல்லாம ஜாலியா உன் இஷ்டத்துக்கு என்ஜாய் பண்ணலாம்….”



இதை கேட்டு மலர்ந்த ஆராவின் முகம் மீண்டும் நொடியில் கூம்பியது…



“பையன் வீடும் இதே மாதிரி இருந்ததுன்னா??” அவள் கவலை அவளுக்கு…



“அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லக்கா…. அதான் அவங்க அத்தையும் மாமாவும் பேசினத பார்த்தேல்ல… பொண்ணும் பையனும் தனித்தனியா பேசுறத பத்தி ஏதோ சொன்னாங்களே… அந்த தனித்தனியான்ற வார்த்தை கீழ கோடு போட்டுக்க… நம்ம வீட்டு ஆளுங்க மாதிரினா அவங்க வாய்ல இருந்து இப்படி ஒரு வார்த்தையே வந்திருக்காது…..”



“அப்படியா சொல்ற….” ஆராத்யா யோசிக்க ஆரம்பித்தாள்…



“அப்படியேதான்…. அக்கா உனக்கு இதை விட்டா இந்த வீட்டுல இருந்து எஸ்கேப்பாக சான்ஸே கிடைக்காது…. கண்ண மூடிக்கிட்டு வந்த மாப்பிள்ளைக்கு கழுத்த நீட்டிட்டு போய்கிட்டே இரு….”





“அவன் சொல்றதும் கரெக்டா தான் இருக்கு ஆராக்கா….” என்றாள் ப்ரியங்காவும்..



“அப்புறம் அந்த ஆன்டி இன்னொரு மேட்டர் சொன்னாங்க கவனிச்சியா… கல்யாணமே வேணாம்னு இருந்த பையன் ஆராவ பார்த்ததும் இந்த பொண்ணதான் கட்டிக்குவேன்னு முடிவா சொல்லிட்டான்னு…. இதுல இருந்து என்ன தெரியுது…????”



“என்ன தெரியுது….” திவ்யங்காவுக்கு புரியவில்லை…



“மாப்பிள்ள எப்பவோ ஆரா காலடியில விழுந்தாச்சி… கல்யாணத்துக்கு அப்புறம் ஆரா வைக்கிறதுதான் சட்டம்..”



“அப்போ ஆரா மட்டும் தப்பிச்சிடுவா… நம்ம ரெண்டுபேரும் இந்த வீட்டுல தானே மாட்டிக்கிட்டு இருக்கனும்….”



“கவலபடாத… இன்னும் ரெண்டு வருஷத்துல உங்க அப்பா உங்களையும் யாருக்காவது கல்யாணம் பண்ணி வெச்சி காப்பாத்திடுவார்….” என்றான் நகுலன்….



“அதெல்லாம் சரிதான்டா… முகத்த கூட பார்க்காம எப்படி….. அவன் யாரு என்னன்னு எதுவுமே தெரில்ல…”



“அதான் பையன் மாமாவ பார்த்தேல்ல…. அம்பத்தஞ்சு வயசாவது இருக்கும்… எப்படி ஜம்முனு இருக்கார்…. அவங்க அக்கா பையனும் அவர மாதிரிதான் இருப்பார்…” என்றவன் “இதெல்லாம் யோசிச்சு மூளைய கெடுத்துக்காம கிடைச்சது சான்ஸ்னு தப்பிக்கிற வழிய பாருக்கா…”



நகுலன் கிளம்பி விட்டான்….



ஆராத்யா நகத்தை கடித்துக் கொண்டு நகுலனின் கருத்தை மனதுக்குள் அலசி ஆராய்ந்து கொண்டிருந்தாள்…









*************************************************







ஐக்கிய அரபு இராச்சியத்தின் இரண்டாவது பெரிய நகரமும் உறங்கா நகரங்களின் தலைநகரமுமான துபாயில் கடலுக்கு நடுவே கம்பீரமாக வீற்றிருந்தது உலகின் ஒரே ஒரு ஏழு நட்சத்திர ஹோட்டலான புர்ஜ் அல் அரப்….




நேரம் சரியாக அதிகாலை இரண்டு மணிக்கு இன்னும் மூன்று நிமிடங்களே மீதமிருந்தது… புர்ஜ் அல் அரபின் டியூலக்ஸ் மெரினா சூட்டின் வரவேற்பறையில் இருந்த சோபாவில் சொகுசாக உறங்கிக் கொண்டிருந்தான் சதீஷ்….



அவனுடைய தூக்கத்தை கலைக்கும் விதமாக கிர்ர்… கிர்ர்… என அதிர்ந்து கொண்டிருந்தது அலைப்பேசி… புரண்டு புரண்டு படுத்தவன் மீண்டும் மீண்டும் அடித்துக் கொண்டிருக்க கையால் துலாவி அந்த அந்த அலைப்பேசியை எடுத்தவன் வெகு சிரம்ப்பட்டு விழிகளை பிரித்துப் பார்த்தான்…



அடுத்த நொடி அவன் தூக்கம் மாயமாய் மறைந்து போக “இவர் எதுக்கு இந்த நேரத்துல கால் பண்ணிட்டு இருக்கார்…” என்று யோசித்தவன் எதிரில் இருந்த அறையை பார்த்தான்…



சாத்தப்பட்ட கதவுக்கு பின்னால் இருள் சூழ்ந்திருப்பது தெரிந்தது… அந்த அறைக்குள் வெளிச்சம் இருப்பதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை…



“ஒருவேள தூங்கிட்டாங்களோ…” என்று நினைத்தவன் பின்பு அப்படியெல்லாம் தூங்கியிருக்க வாய்ப்பில்லை என்று புரிய மெல்ல எழுந்து சென்றான்…



கதவை ஒற்றை விரலால் இரண்டு, மூன்று முறை தட்டினான்…



உள்ளிருந்து ஒலித்தது அந்த கம்பீர குரல்… “யெஸ், கமின்….”



கதவை திறந்து உள்ளே சென்றான் சதீஷ்… அறை முழுக்க இருளாக இருக்க ஓரிடத்தில் மட்டும் ஸ்பாட் லைட்டின் மெல்லிய வெளிச்சம்… கண்ணை லேசாக கசக்கி விட்டு பார்த்தபோது மூன்று இளைஞர்கள் கார்ட்ஸ் விளையாடிக் கொண்டிருப்பது தெரிந்தது…



இப்போது சதீஷின் பார்வை மற்ற இருவரையும் தாண்டி நடுநாயகமாக இருந்த இருக்கையில் கம்பீரமாக உட்கார்ந்திருந்தவனை நோக்கி சென்றது…



அவன் ஹர்ஷவர்த்தனா…..



ஆறடியையும் தாண்டிய உயரம்…. அகன்ற தோள்களும் தேக்கு மர தேகம்… சட்டையை கிழித்துக் கொண்டு வெளியேற துடிக்கும் முறுக்கேறிய புஜங்கள்… அவனைப் போலவே அடங்காமல் திமிறிக் கொண்டிருக்கும் கேசத்தை ஜெல் போட்டு படிய வாரியிருந்தான்…. எதிராளியை துளைத்து தின்றுவிடும் பார்வை…. சற்றே கருமை படர்ந்திருந்த உதடுகள் அவன் மாநிறத்துக்கு மிகவும் எடுப்பாக இருந்தன…





சாம்பல் வண்ண முழுக்கை சட்டையை முழங்கை வரை ஏற்றி விட்டிருந்தான்… மணிக்கட்டில் மின்னிக் கொண்டிருந்த FP ஜோர்ன் வாட்ச் அவனது செல்வச் செழுமையை பறைசாற்றியது… கருப்பு நிற பேன்டும் அதே வண்ணத்தில் தான் அணிந்திருந்த கோட்டை கழற்றி இருக்கையின் கை வைக்கும் பகுதியில் போட்டிருந்தான்….



அருகில் இருந்த காக்டெய்ல் டேபிளில் விதவிதமான மதுபான பாட்டில்கள் வரிசை கட்டியிருந்தன…. விழிவிரிய அவற்றை பார்த்தான் சதீஷ்… ‘அத்தனையும் ஃபாரின் சரக்கு….’



கிட்டத்தட்ட 4 மணி நேரத்துக்கும் மேலாக நண்பர்களுடன் குடித்துக் கொண்டிருக்கிறான்… முகத்திலோ கண்களிலோ குடித்திருப்பதற்கான எந்தவித சாயலும் தென்படவில்லை…



“சார் எவ்ளோ குடிச்சாலும் எப்படித்தான் இப்படி ஸ்டெடியா இருக்காரோ தெரியல…..” என்று நினைத்தவன் அவன் தன்னை பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்ததும் வேகமாக ஹர்ஷவர்த்தனாவை நெருங்கியவன் “தாத்தா காலிங் சார்….” என்று அலைப்பேசியை நீட்டினான்..



எதுவும் சொல்லாமல் அலைப்பேசியை பெற்றுக் கொண்டவன் அதன் திரையை பார்த்தான்…. ‘மிஸ்டர் வரதராஜன் காலிங்….’ என்று ஒளிர்ந்தது….



இது அவன் எதிர்பார்த்ததுதான்….



“எக்ஸ்க்யூஸ் மீ…” என்றுவிட்டு அந்த அறையைலிருந்து வெளியேறியவன் அந்த சூட்டில் தனக்கென ஒதுக்கப்பட்டிருந்த படுக்கையறைக்குள் சென்று ஃபோனை அங்கிருந்த டேபிளில் வைத்தவன் ஆன் செய்து ஸ்பீக்கரில் போட்டான்….



“எவ்வளவு நேரமா உனக்கு கால் பண்றது…. என்ன பண்ணிட்டு இருந்த….” வள்ளன வந்து விழுந்தது வரதராஜனின் குரல்…



“தூங்குற டைம்ல கால் பண்ணி என்ன பண்ணிட்டு இருக்கேன்னு கேட்கறீங்க… தெரிஞ்சி கேட்கறீங்களா… தெரியாம கேட்கறீங்களா….” என்றான் இவன் எள்ளலாக….



“ஹர்ஷவர்த்தனா…..” என்று பல்லைக் கடித்தார் வரதராஜன்… “நீ தூங்கி இருக்க மாட்டேன்னு தெரிஞ்சிதான் கால் பண்ணேன்….. என்ன நினைச்சிட்டு இருக்க உன் மனசுல…. யாரை கேட்டு உன் மாமாவையும் அத்தையும் அனுப்பி யாரோ ஒருத்திய பொண்ணு பார்த்துட்டு வர சொன்ன…..” படபடவென பொரிந்தார்…



“யாரை கேட்கனும்….” ப்ரிட்ஜை திறந்து தண்ணீர் எடுத்து குடித்தபடியே நிதானமாக கேட்டான் ஹர்ஷவர்த்தனா…



“அப்போ எங்கள எல்லாம் பார்த்தா உனக்கு மனுஷங்களா தெரியலையா… நான் உன் அப்பன பெத்தவன்டா…. உனக்கு கல்யாணம்னா என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லனும்னு உனக்கு தெரியாது…..”



“அப்பனே இல்லாம போனதுக்கப்புறம் அப்பன பெத்தவன் என்ன தேவைக்கு…..”



“என்ன திமிரா…. உன் உடம்புல ஓடுறது என் ரத்தம்… அதை மனசுல வெச்சிக்கிட்டு பேசு….”



“ஸ்ஸ்ஷூ…..” என்று தன் காதை ஒரு விரலால் குடைந்து கொண்டவன் “சும்மா தலைய சுத்தி மூக்க தொடாம எதுக்கு கால் பண்ணீங்களோ அதே சொல்லுங்க….” என்றான் எரிச்சலுடன்….



“சரி…. விஷயத்துக்கே வர்ரேன்….. என் பேத்திய கட்டிக்க முடியுமா முடியாதா???…”



“முடியாது….”



“அப்போ என் தம்பி பேத்தி இருக்கா அவள கட்டிக்க….”



“சாரி… உங்க குடும்பத்துல இருக்க எந்த பேத்தியும் என்னால கட்டிக்க முடியாது….”



“அதான் ஏன்?? நம்ம குடும்பத்திலயே இத்தன பொண்ணுங்க இருக்கும்போது எதுக்கு வெளி இடத்துல பொண்ணு எடுக்கிற….”



“ஏன்னு உங்களுக்கு தெரியாது…..”



மறுமுனையில் சற்று நேரம் அமைதி….. பின்பு தொண்டையை செருமி சரி செய்து கொண்டவர் “ஹர்ஷா இதோ பார்…. பழசெல்லாம் மனசுல வெச்சிக்கிட்டு தப்பான முடிவு எதுவும் எடுக்காதே…..” என்று அவர் ஏதோ சொல்லவர,,



“பழயை குப்பையெல்லாம் நான் எப்பவும் மனசுல வெச்சுக்கிறதில்ல…. உங்களுக்கும் எனக்குமான உறவு முறிஞ்சிபோய் ஆறு வருஷமாச்சு…. அடிக்கடி இதே நீங்க மறந்து போயிடறீங்க… வயசாயிடுச்சில்ல… இனிமேல் மறக்காதீங்க…. ஒவ்வொரு தடவையும் இதே மாதிரி கூலா நியாபக படுத்திட்டு இருக்க மாட்டேன்…..” அழைப்பை துண்டித்துவிட்டான்….



கடுப்புடன் தலையை கோதிக் கொண்டவன் கண்ணாடி சுவருக்கு அப்பால் தெரிந்த கடலை வெறித்தான்….



கடல் அமைதியாக காட்சியளித்தது….. அவன் மனமும் அமைதியாகத்தான் இருந்தது… மிக மிக அமைதியாக… அது புயலுக்கு முன் தோன்றும் அமைதி….



பின்பு தன் அலைப்பேசியை எடுத்தவன் யாருக்கோ அழைத்தான்… அந்த எண் உபயோகத்தில் இல்லை என்று கூறப்படவே அலைப்பேசியை தூக்கி போட்டவன் கடகடவென சிரிக்க ஆரம்பித்தான்… அந்த இரவு நேரத்தில் அவனது சிரிப்பு சத்தம் அறை முழுக்க எதிரொலித்து ஒருவித கிலியை ஏற்படுத்துவதாக இருந்தது….



“நம்பர் சேன்ஞ் பண்ணிட்டு ஊரவிட்டு போயிட்டா என்கிட்ட இருந்து தப்பிச்சிடலாம்னு நினைச்சியா… நீ எங்க ஓடினாலும் கடைசியில என்கிட்ட தான்டீ வந்து சேரனும்……. வரவைப்பேன்….”







*****************************************








பத்மாவதி அதிகாலையில் கோலம் போட தயாராகும் வேளையில் வீட்டின் வாசலில் வழுக்கிக் கொண்டு வந்து நின்றது நீல நிற பிஎம்டபிள்யூ கார்….




வண்டியை அடையாளம் கண்டு கொண்டவர் ஆர்வமுடன் பார்க்க உள்ளிருந்து இறங்கினான் அவரது அருமை மைந்தன் ஆர்யன்…



“அம்மா….” என்றபடி அவரை நெருங்கி அணைத்துக் கொள்ள “வா ஆர்யா…. இப்பதான் இந்த அம்மா நியாபகம் வந்துச்சா உனக்கு….” குரலில் வருத்தம் இருந்தாலும் முகம் என்னவோ மகனை ஆதுரத்துடன் பார்த்திருந்தது….



“நீங்களே இப்படி பேசினா எப்படிம்மா… உங்களுக்கு தெரியாதா நான் உங்க எல்லாரையும் எந்தளவுக்கு மிஸ் பண்ணுவேன்னு…” என்றான் மகன்….



“அடடே!! ஆர்யா வா.. வா…” வாசலில் அரவம் கேட்டு வெளியே வந்த கிருஷ்ணமூர்த்தி அண்ணன் மகனை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றவர்



“ஆரா…. கௌசல்யா….. இங்க வாங்க…. யார் வந்திருக்கான்னு பாருங்க….” என்க அங்கு வந்து சேர்ந்த ஆராத்யா “அண்ணா!!!” என்றபடி அவன் கைகளை பிடித்துக் கொண்டாள்…



“அப்புறம் கல்யாணப் பொண்ணு எப்படியிருக்க???” என்றான் ஆர்யன் தங்கையின் கன்னத்தை தட்டி….



பதிலுக்கு “ம்ம்ம்… இருக்கேன்…” என்று மட்டும் சொல்லி வைத்தாள் ஆராத்யா…. கல்யாண விடயத்தில் அவளால் இன்னும்கூட ஒரு தெளிவுக்கு வர முடியவில்லை…



சத்தியமூர்த்தி தொண்டையை செருமும் சத்தத்தில் அனைவரின் பார்வையும் அவரை நோக்கி சென்றது…. பூஜையறையில் இருந்து வெளிவந்து கொண்டிருந்தார் அவர்…



“அண்ணா…. நம்ம ஆர்யா வந்திருக்கான்….” என்று சொன்ன கிருஷ்ணமூர்த்திக்கு பதிலாக “ம்ம்.. ம்ம்.. தெரியுது….” என்று பதிலளித்தவரின் பார்வை மகனை துளைத்தெடுத்தது…



அவரது பார்வையை சந்திக்க முடியாமல் தன் பார்வையை தாழ்த்திக் கொண்டான் ஆர்யன்…



“மருமக பொண்ணு வரல???” பத்மாவதியை பார்த்துக் கேட்டார் சத்தியமூர்த்தி…



பத்மாவதி மகனை பார்க்க “அவ ஒரு முக்கியமான வேலையா வெளியூர் போயிருக்காம்மா…. அவள ரீச் பண்ண முடியல… ஆரா கல்யாண விஷயம் மெஸேஜ் பண்ணியிருக்கேன்… அவ பார்த்தான்னா கண்டிப்பா கிளம்பி வருவா….” என்றான் ஏதோ பத்மாவதிதான் தன்னிடம் கேள்வி கேட்டது போல அன்னையின் முகத்தை பார்த்துக் கொண்டு ஒப்பித்தான்….



சத்தியமூர்த்தி பல்லைக் கடித்தார்….



“இதுதான் உன்புள்ள கட்டிக்கிட்டவள கவனிச்சிக்கிற லட்சணமா…. பொண்டாட்டி எங்க போயிருக்கா, என்ன பண்றாங்கிறத கூட தெரிஞ்சிக்காம அப்படி என்ன வெட்டி முறிக்கிற வேலை இவனுக்கு…..” என்று ஆத்திரத்துடன் உறுமிக் கொண்டிருந்தவர் ப்ரியங்கா, திவ்யங்கா, நகுலன் அனைவரும் வரிசையாக நின்று பார்த்துக் கொண்டிருப்பதை கண்டதும் இளையவர்கள் முன்னால் மகனது பிரச்சினையை பேச மனமில்லாதவராக “சை…..” என்றுவிட்டு அங்கிருந்து கோபமாக சென்றுவிட்டார்…



அவரது கத்தலை அந்தக் காதால் வாங்கி இந்தக் காதால் தள்ளியவன் அன்னையின் வாடிய முகத்தை கண்டதும் “விடுங்கம்மா… அப்பா பேசுறதெல்லாம் நான் மனசுல வெச்சிக்கிறதில்ல….” என்றான்….



“இருந்தாலும்….” என்று இழுத்தவர் “உனக்கும் காவ்யாக்கும் இன்னும் எதுவும் சரியாகல்லையாப்பா….” என்க,



“சே… சே…. அதெல்லாம் இல்லம்மா…. நாங்க நல்லாத்தான் இருக்கோம்….” தன் மனதறிய பொய் சொன்னான்….



“அப்போ ஏன் காவ்யா உன்கூட வரல்ல….”



“நான்தான் சொன்னனேம்மா.. அவ முக்கியமான பிசினெஸ் விசயமா வெளியூர் போயிருக்கான்னு… உங்களுக்கு தான் தெரியுமே அவங்க அம்மாவுக்கும் கொஞ்சநாளா உடம்பு சரியில்ல… அதனால அவங்க பிசினெஸும் இவதான் பார்த்துக்கிறா… அவ ரொம்ப பிஸிம்மா…. அதோட ஆரா கல்யாண விஷயமும் அவசர அவசரமா பேசி முடிச்சிட்டீங்க… அவளுக்கு முன்னாடியே தெரிஞ்சிருந்தா எங்கேயும் போகாம என்கூடவே கிளம்பி வந்திருப்பா…” பாதி மெய்யும் பாதி பொய்யுமாக அவன் கலந்துவிட அதனை உண்மையைன்று நம்பியவர்,,



“எப்படியாவது முயற்சி பண்ணி அவள கல்யாணத்துக்கு வர வெச்சிடுப்பா…. வீட்டுக்கு மூத்த மருமக நாத்தனார் கல்யாணத்துக்கு வரலைன்னா நல்லாருக்காது….” என்றார் மகனிடம் வேண்டுதலாக….



“கண்டிப்பாம்மா…..” அப்போதைக்கு வாக்களித்தான் மகனும்…



இளையவர்களுக்காக தான் வாங்கி வந்த உடைகள், சாக்லேட் என அனைத்தையும் கொடுத்தவன் ஆராத்யாவை தனியாக அழைத்து சென்று கேட்டான்….



“உன்கிட்ட கேட்டுதான் இந்த கல்யாண முடிவெல்லாம் எடுத்தாங்களா…. உனக்கு கல்யாணத்துல இஷ்டம்தானே ஆரா???” தன் வாழ்க்கையை போல் தங்கையின் வாழ்க்கையும் ஆகிவிட கூடாதே என்ற அக்கறை அவனுக்கு…



சற்று தயங்கினாலும் அவளது பதில் தெளிவாக வந்தது… “ஆமாண்ணா……”



ஏனோ ஆர்யனிடம் எதையும் பகிர்ந்து கொள்ள அவளுக்கு மனம் வரவில்லை…. ஏற்கனவே அவன் சொந்த வாழ்வில் ஆயிரம் குழப்பங்கள்…. இதில் தன்னுடைய பாரத்தையும் அவன் தலையில் சுமத்த வேண்டாம் என்று நினைத்தாள்….



அதோடு நகுலன் சொன்னதுபோல் இந்த வீட்டின் கெடுபிடிகளிலிருந்து தப்பித்தால் போதும் என்ற எண்ணமும் அவளுக்கு இருந்தது….



நெருப்புக்கு தப்பி வாணலியில் விழுந்த கதையாக தன் கதையும் ஆகப்போவதை அவள் அறியாமல் போனதுதான் பரிதாபம்….






குளிரும்….
 

Banu swara

Moderator
தீ 3





கெட்டி மேளம்… கெட்டி மேளம்…’ ஐயரின் குரலை தொடர்ந்து வாத்தியங்கள் முழங்க தன் வலிய கரங்களில் இருந்த மங்கள நாணை ஆராத்யாவின் சங்கு கழுத்தில் அணிவித்து தன்னவளாக்கிக் கொண்டான் ஹர்ஷவர்த்தனா…



பெண்ணவளின் உடல் ஒருமுறை சிலிர்த்து அடங்கியது… நகுலனின் உதவியால் நேற்றுதான் ஹர்ஷாவின் புகைப்படத்தையே பார்த்திருந்தாள்… அவள் எண்ணி பயந்தது போல் எல்லாம் எதுவும் இல்லை… சொல்லப்போனாள் அவனது தோற்றம் அவளுக்கு மிக மிக பிடித்துதான் இருந்தது… ஆனால் அவனை பற்றி தனக்கு வேறு ஒன்றுமே தெரியாது என்பதுதான் சற்று கலக்கமாக இருந்தது…



அடுத்தடுத்த சம்பிரதாயங்கள் வரிசைகட்டியிருக்க வேறு எதை பற்றியும் சிந்திக்க முடியாமல் இயந்திர கதியில் அவனை பின்தொடர்ந்தாள் ஆரத்யா…



இறுதியாக மணமக்கள் இருவரும் பெரியவர்களின் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க சத்தியமூர்த்தி பத்மாவதி தம்பதியினர், கிருஷ்ணமூர்த்தி கௌசல்யா தம்பதியினர் மற்றும் ப்ரதாப், மஞ்சுளா தம்பதியினர் மணமக்களை மனதார வாழ்த்தினார்கள்…



ப்ரதாப் ஹர்ஷாவிடம் ஏதோ ஜாடை காட்ட அந்த பக்கம் திரும்பியவன் அங்கு அவனை எள்ளலாக நோக்கியபடி நின்றிருந்த வரதராஜனை கண்டு பல்லை கடித்தான் “இவர யாரு இன்வைட் பண்ணது….” ஆராத்யா அறியாமல் ப்ரதாப்பிடம் அடிக்குரலில் சீறினான்….



“நான்தான் ஹர்ஷா கூப்பிட்டேன்… என்ன இருந்தாலும் அவர் உன் தாத்தா….” என்ற ப்ரதாப் “போய் ஆசிர்வாதம் வாங்கிட்டு வா….” என்க அதில் கடுப்புடன் ப்ரதாப்பை முறைத்தாலும் ஆராத்யாவை அருகில் வைத்துக் கொண்டு வீணான ரசாபாசத்தை உருவாக்கிக் கொள்ள விரும்பாதவனாக அவளை அழைத்துக் கொண்டு அவரை நோக்கி நடந்தான்….



மணமக்கள் இருவரும் வரதராஜனின் காலில் விழுந்து வணங்க “நல்லா இரு ஹர்ஷா….” ஆராத்யா என்ற ஒருத்தி அங்கு இல்லாததை போல் தன் பேரனை மட்டும் வாழ்த்தியவர் “எப்ப நம்ம வீட்டுக்கு வரப்போற….” என்று கேட்க அவரது வார்த்தைகள் காதில் விழாததைப் போல் அங்கிருந்து விலகிச்சென்றான் அவன்…



அப்போதுதான் தாலி கட்டிய புது மனைவியின் கையை உரிமையுடன் பற்றிக் கொண்டு செல்லும் பேரனின் முதுகை முகம் கன்ற வெறித்துப் பார்த்திருந்தார் வரதராஜன்…



சத்தியமூர்த்தி மலர்ந்த முகத்துடன் நின்றிருக்க வரதராஜனின் பாராமுகம் அவருக்கு கோபத்தை கிளப்பியது… பாட்டனுக்கும் பேரனுக்கும் ஒத்துப்போகாது என்பது அவருக்கும் ஓரளவு தெரிந்துதான் இருந்தது….



அவரை பொறுத்தவரை மாப்பிள்ளை சொக்கத்தங்கம்.. பணத்திலும் அந்தஸ்திலும் பலமடங்கு உயரத்தில் இருப்பவன்… குடும்பத்தை பார்த்து இப்படி ஒரு சம்மந்தத்தை இழந்துவிட அவருக்கு துளியும் விருப்பம் இல்லை… அவர்கள் பெண் கேட்டு வந்ததுமே சற்றும் யோசிக்காமல் தன் சம்மதத்தை தெரிவித்துவிட்டார்…. வரதராஜனை பற்றியெல்லாம் அவருக்கு கவலையே இல்லை…. அவரது பேரனே அவரை கண்டு கொள்ளாதபோது தான் மட்டும் எதற்காக அவரை பற்றி யோசிக்க வேண்டும்….



சத்தியமூர்த்தி மட்டுமல்லாது அவரது குடும்பத்தினர் அனைவருமே மிகுந்த திருப்தியுடன்தான் நின்றிருந்தனர்… சத்தியமூர்த்தியின் ஒரே தங்கையான சுஜாதா மற்றும் அவளது கணவர் ராகவேந்தர் இருவரையும் தவிர…. இத்தனை வருடமாக தங்கள் மகன் கௌதமுக்கு தான் ஆராத்யா என்று அவர்கள் மனக்கோட்டை கட்டிக் கொண்டிருக்க ஒரே வார்த்தையில் அந்த கோட்டையை அடித்து தகர்த்துவிட்டார் சத்தியமூர்த்தி…



“நெருங்கின சொந்தத்துக்குள்ள கல்யாணம் பண்றதெல்லாம் சரியா வராது சுஜாதா….” என்று அவர் சொல்லிவிட அண்ணனின் வார்த்தையை மீற சுஜாதாவுக்கும் தைரியமில்லை… மனைவியின் வார்த்தையை மீற ராகவேந்தருக்கும் மனமில்லை…



ஆராத்யாவே இந்த திருமணத்தை மறுத்துவிடுவாள் என அவர்கள் எதிர்பார்த்திருந்தார்கள்… சொந்த தங்கையான சுஜாதாவுக்கே சத்தியமூர்த்தியை எதிர்த்து பேச தைரியமில்லாத போது ஆராத்யாவுக்கு மட்டும் எங்கிருந்து தைரியம் வந்துவிடும்….





காவ்யா இல்லையென்ற உறுத்தலை தவிர மற்றபடி அனைத்தும் சிறப்பாகவே நடந்து முடிந்தது…. பத்மாவதிக்குத்தான் மருமகள் வராதது பெரும் கவலையாக இருந்தது… மகனிடம் திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டே இருந்தார்…. ஆனால் எந்த பயனும் இல்லை….



அதைவிட ஒருசில உறவினர்களின் தொணதொணப்பை சமாளிப்பதுதான் அவருக்கு பெரும்பாடாக இருந்தது…. ‘அவங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்லை…..’ என்று ஏதேதோ கூறி தன்னால் முடிந்த அஎவு சமாளித்துக் கொண்டிருந்தார்…



ஆர்யனும் காவ்யா வராததற்காக ஒன்றும் வருந்துவதாக தெரியவில்லை….. விட்டது தொல்லை என்பதுபோல் நின்றிருந்தான்…. அதை கண்ட பத்மாவதிக்கு இன்னும் கவலையாகி போனது…. இத்தனை நாட்களில் அவர்களுக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் தீர்ந்து சுமூகமாகியிருப்பார்கள் என்று நினைத்திருந்தார்….. இப்போது அப்படி இல்லையோ என்று தோன்றியது….. தன் மகனின் வாழ்க்கை சீக்கிரமே சீராகி விடவேண்டுமென கடவுளிடம் வேண்டியபடியே இருந்தார் அந்த தாய்….



சத்தியமூர்க்கும் மருமகள் வராது போனது கோபமாக இருந்தாலும் அதனை அவரால் வெளிக்காட்டிக் கொள்ள முடியவில்லை… அதற்கு ஒரே காரணம் காவ்யா அவர் பார்த்து திருமணம் செய்து வைத்த பெண்… அவள் எதை செய்தாலும் காவ்யாவை ஒற்றை வார்த்தை பேசமாட்டார்…. அவரது கோபத்துக்கு வடிகாலாக இருப்பது மகன் ஆர்யன் மட்டுமே…






*********************************************









அந்த பிரம்மாண்டமான வீட்டை சுற்றி தன் விழிகளை ஓட்டினாள் ஆராத்யா… அவளது வீடே மிகவும் பெரியதுதான்.. ஆனால் இந்த வீடு அவளது வீட்டை விடவும் பல மடங்கு பெரியதாக இருந்தது…



ஆனால் ஹர்ஷவர்த்தனா எப்போதாவதுதான் இந்த வீட்டுக்கே வருவானாம்… மற்றபடி அவன் வசிப்பது துபாயிலும் ஹைதராபாத்திலும் தானாம்…. ஹைதராபாத்தில் இருக்கும் வீட்டுக்கு முன்னால் இந்த வீடு எல்லாம் ஒன்றுமே இல்லை என்றாள் மஞ்சுளா…



அவளை வீட்டில் கொண்டுவந்து விட்டதோடு சரி… மஞ்சுளாவிடம் அவளை ஒப்படைத்துவிட்டு ஹர்ஷா ப்ரதாப்புடன் வெளியே சென்றுவிட்டான்…



மஞ்சுளா அவளுக்கு வீட்டை சுற்றிக்காட்டியதோடு அங்கிருந்த வேலையாட்களையும் அறிமுகம் செய்து வைத்தாள்… அதிக ஆர்ப்பாட்டமில்லாமல் எப்போதும் சிரித்த முகத்துடன் கனிவாக பேசிய மஞ்சுளாவை ஆராவுக்கு மிகவும் பிடித்துவிட்டது… முதலில் சற்று தயக்கத்துடன் பேசிக் கொண்டிருந்தவள் பின்பு மெல்ல மெல்ல இயல்பாக பேச ஆரம்பித்தாள்….



அதிலும் அவரது பேச்சு அதிகமாக ஹர்ஷாவை பற்றியதாகத்தான் இருந்தது… அவன் அப்படி அவன் இப்படி என அவனது குணாதிசயங்களை பட்டியலிட்டுக் கொண்டிருந்தாள்…. அவ்வப்போது அவனுடைய பெற்றோரை பற்றியும் கூறினாள்…. அவர்களது காதல் திருமணம்… ஹர்ஷாவின் பிறப்பு… சிறு வயதிலயே நிகழ்ந்த அவனது தாயின் மரணம்… பள்ளிப்பருவத்தில் தந்தையையும் இழந்தது என அனைத்தும்….



பின்பு ஏதோ நினைத்தவளாக ஆராவின் கையை பற்றிக் கொண்டவள் “இதோ பாரு ஆராம்மா இத்தன வருஷம் எப்படியோ வாழ்ந்துட்டான்…. அவன் ரொம்ப நம்பினவங்க, ரொம்ப பாசம் வெச்சிருந்தவங்க எல்லாருமே அவன விட்டு போயிட்டாங்கம்மா…. இனிமே நீதான் எல்லாமாவும் இருந்து அவன நல்லபடியா பார்த்துக்கனும் கண்ணா….” என்றாள்…



“நல்லபடியான்னா குளிப்பாட்டி, ட்ரெஸ் போட்டுவிட்டு, சாப்பாடு ஊட்டி…. இதெல்லாமா….’ அவளது துடுக்கு மனம் கேள்வியெழுப்ப அதனை தட்டி அடக்கி வைத்தவள் மஞ்சுளாவிடம் “ம்ம்ம்…..” என்றாள்….





ஹர்ஷா திரும்பி வரும்போது மாலை மறைந்து இரவாகியிருந்தது….



அன்றைய இரவுக்காக அவளை தயார் செய்துவிட்டதும் ஆரத்யாவுக்கு பயத்தில் கை கால்கள் தந்தியடிக்க ஆரம்பித்துவிட்டன…



“நீ ரொம்ப பக்குவமான பொண்ணு… உனக்கு நான் சொல்லனும்னு இல்ல… பார்த்து நடந்துக்கம்மா…. என்று அறிவுரை கூறிவிட்டு அவளை ஹர்ஷாவின் அறைக்குள் அனுப்பி வைத்தாள்…



அவள் உள்ளே நுழைந்ததும் மஞ்சுளா கதவை சாத்திக்கொண்டு சென்றுவிட பயத்தில் மெல்லிய எட்டுக்களாக வைத்து முன்னேறினாள் ஆராத்யா….



உள்ளே அவனை காணவில்லை…. ‘அப்பவே வந்துட்டானே…. எங்க காணோம்….’ என்று நினைத்தாலும் அவன் இல்லாதது அவளுக்கு ஏதோ ஒரு வகையில் நிம்மதியை தான் கொடுத்தது…



அந்த அறையை நோட்டமிட்டாள்…. ஒரு வீட்டையே அதற்குள் அடக்கிவிடலாம் போல அவ்வளவு பெரிய அறை வெள்ளை நிற தீமில் மிகவும் நேர்த்தியாக இருந்தது…. கட்டில் முதல் டேபிள் லேம்ப் வரை அனைத்து தளபாடங்களுமே வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதாக இருக்க வேண்டும்… அவள் இதுவரை எங்குமே இதுபோன்ற தளவாடங்களை பார்த்ததில்லை….



அந்த அறைக்குள்ளேயே இன்னும் மூன்று நான்கு அறைகள் இருந்தன…. அருகருகே இருந்த இரண்டு அறைகள் குளியலறை மற்றும் உடை மாற்றும் அறை என்பது புரிய மற்ற இரண்டு அறைகளின் கதவுகளையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தாள்….



இது இரண்டில் ஏதோ ஒரு அறையில்தான் அவன் இருப்பான் என உணர்ந்தவள் இப்போது என்ன செய்வது தான் சென்று அழைக்க வேண்டுமோ என யோசித்துக் கொண்டு நிற்க அவளை அதிகம் காக்க வைக்காமல் வலது பக்கம் இருந்த அறையின் கதவை திறந்து கொண்டு வெளியே வந்தான் ஹர்ஷவர்த்தனா…..



ஆராத்யாவுக்கு மூச்சு முட்டியது…. அவளும் எத்தனையோ ஆண்களை பார்த்திருக்கிறாள்…. இவ்வளவு கவர்ச்சிகரமான ஒருவனை இதுவரை பார்த்ததில்லை…. ‘



‘யார்டா நீ??’ அவள் மனம் ஜொள்ளியது….



இன்னொரு மனம் பயத்தில் அரற்றியது ‘ஐயோ கிட்ட வர்ரான்….’



அவள் முகத்தில் தோன்றிய உணர்வுகளை அளவிடுவதுபோல் பார்த்துக் கொண்டே நெருங்கியவன் “வந்து ரொம்ப நேரமாச்சா ஆரா… கூப்பிட்டிருக்கலாம்ல….” என்றான் சாதாரணமாக…



“அது….. அது…. வந்து…. நான் இப்போதான் வந்தேன்…..” அவசரத்துக்கு பேச்சு கூட வராமல் குழறுபடி செய்தது…



“ஓஹ்…” என்றவன் அவளை மேலிருந்து கீழாக பார்க்க ‘எதுக்கு இப்படி பார்க்கிறான்…” ஆராத்யாவுக்கு மீண்டும் கைகால்கள் வெடவெடக்க ஆரம்பித்தன… அவனது முகம் பார்க்க முடியாமல் தரையில் பார்வையை பதித்தபடி நின்றிருந்தாள்…



“ரிலாக்ஸ் ஆராத்யா….” என்றான் அவன்… “நான் உன்ன ரொம்ப தைரியமான பொண்ணு நினைச்சேன்… இப்படி பயப்படுற…” என்க



“அப்படில்லாம் இல்ல…” என்றாள் அவள் மெல்லிய குரலில்…



“அப்புறம் எதுக்கு உன் பாடி இப்படி ஷேக் ஆகுது… என்ன பார்த்தா ட்ராகன் மாதிரியா தெரியுது…”



இயல்பிலேயே துடுக்குத்தனம் நிறைந்தவள் என்பதால் அவனுக்கு பதில் சொல்ல நினைத்து வாயை திறந்தவள் பிறகு கப்பென மூடிக் கொண்டாள்… ‘எதுக்கு வம்பு….. இவன பத்தி ஒன்னுமே தெரில்ல….. இப்போதைக்கு நம்ம அப்பாவி வேஷத்த மெயின்டைன் பண்ணுவோம்….’



பின்பு எதையோ நினைத்தவனாக “நீ யார்கிட்டயும் வாய திறந்து பேசகூட மாட்டியாமே….. அப்படியா…..” என்று கேட்டவனை நிமிர்ந்து பார்த்தாள் ஆரா…. அவன் முகம் என்னவோ சாதாரணமாகத்தான் இருந்தது…. ஆனால் அந்த குரல்…. ‘இவனுக்கு நம்மள பத்தி தெரியுமோ….’ அவளுக்கு சந்தேகமாக இருந்தது….



எதற்கும் ‘ஆம்…’ என்பது போல் தலையாட்டி வைத்தாள்…



“அவ்ளோ இன்னசென்டா என் பொண்டாட்டி……”



‘கடவுளே!!! இவன் தெரிஞ்சி பேசுறானா…. தெரியாம பேசுறானா….’ அவள் வாயே திறக்கவில்லை….



‘இதுக்கு மேல பேசமாட்டா….’ என நினைத்தவன் “நின்னுகிட்டே பேசிக்கிட்டு இருக்கோம் பாரு…..” என்றான்….



கட்டிலை காட்டி அவளை உட்கார சொல்ல சமத்தாக உட்கார்ந்து கொண்டவள் அப்போதுதான் நியாபகம் வந்தவளாக தன் கையிலிருந்த பால் கிளாஸை அவனிடம் நீட்டினாள்…



மறுக்காமல் அதனை வாங்கிக் கொண்டான் அவன்…



ஒரே மடக்கில் குடித்து முடித்துவிட்டு காலி கிளாஸை அங்கிருந்த சைட் டேபிளில் வைத்தவன் அவளது பார்வையை கண்டு என்ன என்பதுபோல் பார்க்க “இல்ல… உங்கள பாதி குடிச்சிட்டு மீதி என்ன குடிக்க சொன்னாங்க….”



அவள் தயங்கி தயங்கி கூற “அச்சோ….” என்றவன் “சாரி மா…. எனக்கு தெரியல…..” என்றான் சோகமாக….



“ஹையோ பரவால்லை…. இதுக்கு எதுக்கு சாரி….” என்றாள் அவள் அவசரமாக…



அவன் அவளை பார்த்தான்….. புடவையின் நுணியை கைகளால் திருகியபடி தலையை குனிந்து கொண்டு உட்கார்ந்திருந்தவளை கண்டவனுக்கு சிலபல நாட்களுக்கு முன்பு தான் பார்த்த காட்சி நினைவிலாடி சிரிப்பை வரவழைத்தது…..



“ஹேய் என்னதிது… இப்படியே விட்டா சேரிய கிழிச்சிடுவ போல…..” என்றவன் அவள் கரத்தை பற்றி தன் கரங்களுக்குள் பொதித்துக் கொண்டான்…



சில்லென்றிருந்த தன் கரத்தினுள் அவன் சூடான கரங்களின் வெப்பம் இறங்குவதை ஒருவித பயத்துடன் உணர்ந்தாள் ஆராத்யா…..



இதற்கு முன்பும் ஆண் நண்பர்களுடன் தொட்டு பேசி பழகியிருக்கிறாள்தான்….. ஆனால் இந்த உணர்வு மிகவும் புதிதாக இருந்தது…. தவிப்பாகவும் இருந்தது….



அவளது கையை பற்றிக் கொண்டு சற்று நேரம் வெகு தீவிரமாக எதையோ யோசித்துக் கொண்டிருந்தவன் பின்பு பேச ஆரம்பித்தான்…..



“ஆரா…. ஒருசில காரணத்தால நம்ம கல்யாணம் ரொம்ப அவசரமா நடந்துடுச்சு… இப்போ கல்யாணம் பண்ணிக்கனும்கிற தோட் உனக்கு சுத்தமா இருந்திருக்காதுன்னு தெரியும்… நானும் இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம்னு தான் இருந்தேன்…. ஆனா…..” நிறுத்தி சற்று தயங்கியவன் “நீ ஒன்னும் சின்ன குழந்தை இல்ல….. நான் நேரா விஷயத்துக்கே வரேன்..…”



“முதல்ல நம்ம ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சிக்கிட்டு அப்புறமா நம்ம வாழ்க்கைய ஆரம்பிக்கிறது தான் சரியா இருக்கும்… உனக்கு நான் என்ன சொல்ல வரேன்னு புரியுதில்லடா….” என்று கேட்க ஆராத்யாவுக்கு அப்படியே துள்ளி குத்தாட்டம் போட வேண்டும் போல இருந்தது….



அவளுக்கா புரியாமல் போகும்…. ‘எப்படியும் இன்னைக்கு ஃபர்ஸ்ட் நைட்ட முடிச்சிடுவான்…. அப்புறம் குழந்தை…. அதுக்கப்புறம் இன்னொரு குழந்தை…. நீ சீக்கிரமாவே பாட்டி ஆகிடுவ ஆரா…..’ என்று நினைத்துக் கொண்டிருந்தவளுக்கு

இப்போது வெல்லத்தை கரைத்து காதில் சொட்டு சொட்டாக ஊற்றியதை போல தித்திப்பாக இருந்தது…..



பின்னாட்களில் இதையே நினைத்து வருந்தப் போவதை அறியாமல் போனாள்…..



‘புரிகிறது…’ என்பதுபோல் அவள் வேகமாக தலையாட்ட “அப்போ இப்போதைக்கு நம்ம ரெண்டுபேரும் ப்ரென்ட்ஸா மட்டும் இருக்கலாம்… சரிதான….” என்றவன் அவள் அதற்கும் சம்மதமாக தலையசைக்கவும் “எல்லாத்துக்கும் இப்படியே தலைய தலைய ஆட்டாம உன் ப்ரென்ட்ஸ் கூட பேசுற மாதிரி என்கிட்டயும் ஃப்ரீயா பேசு புரியுதா….” என்க அதில் தைரியம் வரப்பெற்றவளாக “ஓ பேசலாமே….” என்றாள் அவளும்….



“இது…. இத தான் உன்கிட்ட எதிர்பார்த்தேன்….” என்றவன் எதிலிருந்தோ தப்பித்துவிட்ட நிம்மதி பெருமூச்சுடன் எழுந்து கொண்டான்…



“ஓகேடா…. ரொம்ப டயர்டா இருப்ப நீ தூங்கு… எனக்கு கொஞ்சம் ஒர்க்ஸ் இருக்கு…. முடிச்சிட்டு வந்து அப்புறமா தூங்கிக்கறேன்….” என்றான்….



தன்னுடைய அலுவலக அறைக்குள் செல்ல கதவை நெருங்கியதும் மீண்டும் அவளிடம் திரும்பி வந்தவன், “ஆரா… இந்த ட்ரெஸ்ஸோட தூங்க வேண்டாம்… கம்ஃபர்டபிளா இருக்காது… கம் வித் மீ….” அவளது கை பிடித்து அழைத்துச் சென்றவன் அங்கிருந்த ட்ரெஸ்ஸிங் ரூமிற்குள் நுழைந்து வாக் இன் க்ளோசட்டை சுட்டிக்காட்டியவன் “இந்த சைட்ல இருக்க எல்லாமே உன்னோட ட்ரெஸ்தான்…. உனக்கு எது வேணுமோ எடுத்து போட்டுக்க….” என்றுவிட்டு சென்றான்…



அவன் சொன்னது போல் உடை மாற்றிக் கொண்டு வந்து கட்டிலில் படுத்தவளுக்கு புது இடம் என்பதால் தூக்கம் வராமல் போகவும் அன்றைய நாளை அசைபோட்டாள் ஆராத்யா…



அவளுக்கு தாலி கட்டியதிலிருந்து இதோ இப்போது வரை ஹர்ஷாவின் ஒவ்வொரு செயலிலும் அவள் மீதான அக்கறை வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது…. அவன் பந்தா எதுவும் இல்லாமல் மிகவும் சகஜமாக தன்னிடம் பேசியது அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது….



அவள் அறிந்தவரை அவன் அவளை விரும்பித்தான் திருமணம் செய்திருக்கிறான்…. அவன் நினைத்திருந்தால் இன்றைய இரவை தனக்கு சாதகமாக ஆக்கியிருக்க முடியும்… ஆனால் அப்படியெதுவும் செய்யாமல்புரிந்துணர்வுடன் நடந்து கொண்டது மனதுக்கு இதமாக இருந்தது….



காலையில் இருந்த இனம் புரியாத தவிப்பு, பயம் இப்போது மறைந்து மனம் லேசாக இருந்ததில் நகுலன் சொன்னதை நினைத்துக் கொண்டாள்…



“டேய் நகுலா நீ சொன்ன மாதிரியே எல்லாம் நடக்குதுடா….” மனதுக்குள் தம்பியிடம் சொன்னவளின் நினைவுகள் அடுத்து தன் நண்பர்கள் பட்டாளத்திடம் வந்து நின்றது….



திருமணத்திற்கு பெண் தோழிகளை மட்டும்தான் அழைத்திருந்தாள்… அதிலும் குறிப்பிட்ட சிலரைத்தான்… ஆண் நண்பர்கள் எவரையும் அழைக்கவில்லை… அவளுக்கு ஆண் நண்பர்கள் இருப்பதே அவளது வீட்டில் யாருக்கும் தெரியாது… திருமணத்திற்கு எப்படி அவர்களை அழைக்க முடியும்…



அவளது வீட்டு சூழல் தெரிந்தோ என்னவோ பெண் தோழிகளும் அவ்வளவாக வரவில்லை… தீபிகாவும் இன்னும் இருவரும் மட்டுமே வந்திருந்தனர்…



ஏனோ நண்பர்களின் நினைவு வந்ததும் தன்னுடைய அலைப்பேசியை தேடி எடுத்துப் பார்த்தாள்… ஆளாளுக்கு வாழ்த்து சொல்லி மெஸேஜ் செய்திருந்தார்கள்… அனைவருக்கும் பதிலுக்கு நன்றி தெரிவித்தவள் ‘இந்த நேரத்தில் ஃபோனை வைத்துக் கொண்டு என்ன செய்கிறாய்?? எங்கே உன் ஆளு??” என்று அவர்களிடமிருந்து விதவிதமாக கேள்விகள் வரத்தொடங்கவும் ஃபோனை தூக்கி போட்டுவிட்டு இழுத்து போர்த்திக் கொண்டு தூங்க ஆரம்பித்து விட்டாள்…. கொஞ்ச நேரத்திலேயே ஆழ்ந்த உறக்கத்திற்கும் சென்று விட்டாள்…..



அதன்பிறகு வெகுநேரம் கழித்து அவன் வந்ததையோ அவள் உறங்குவதை பார்த்தவன் அவளது தலையிலிருந்து பிரிந்து கட்டிலின் ஓரத்தில் வந்து விழுந்துகிடந்த சவுரி முடியை கண்டு அடக்கமாட்டாமல் சிரித்துவிட்டு சென்றதையோ அவள் அறியவில்லை…..



தன் கம்பெனி ஃபைல்கள் அனைத்தையும் லேப்டாப்பில் பார்வையிட்டு முடித்தவன் இறுதியாக கொஞ்ச நேரத்திற்கு முன்பு வந்திருந்த ஒரு மெயிலை திறந்து பார்க்க அதில் இருந்த காணொளியை ஓடவிட்டான்….



சிறிய தீவுபோல் ஓர் இடத்தில் கட்டுமான வேலைகள் நடந்து கொண்டிருந்தன…



இப்போது அந்த வீடியோவை பதிவு செய்துகொண்டிருந்தவன் கேமிராவை வேறு பக்கம் திருப்பினான்…..



அங்கு மாம்பழ மஞ்சள் நிறத்தில் ஜார்ஜெட் புடவையும் டீப் பிங்க் வண்ணத்தில் கையில்லாத ஜாக்கெட்டும் அணிந்து காற்றில் பறந்து முகத்தை மறைத்த கூந்தலை தன் வெண்டை பிஞ்சு விரல்களால் ஒதுக்கிவிட்டபடி அவளது வேகநடைக்கு ஈடு கொடுக்க முடியாமல் மணலில் கால் புதைய ஓட்டமும் நடையுமாக பின்தொடர்ந்து கொண்டிருந்த பெண்ணிடம் தீவிரமாக எதையோ சொல்லிக் கொண்டே கடலோரமாக நடந்து வந்து கொண்டிருந்தாள் அவள்…



அவன் அடிமனதின் ஆழத்தில் அமிழ்ந்து போய் கிடந்த அந்த முகத்தை ஆசையும் இல்லாமல் காதலும் இல்லாமல் ஒருவித வேட்கையுடன் பார்த்துக் கொண்டிருந்தான் ஹர்ஷவர்த்தனா….



உச்சி வெயில் கடலில் பட்டுத் தெறிக்க பெண்ணவளின் பால் வண்ண மேனி தங்கத் தாமரை போல் மின்னியது… அதை கண்டவனின் விழிகளும் தாபத்தில் மின்னியது….



பத்து ஆண்டுகளுக்கு முன் அவன் முதன்முதலாக பார்த்தபோது பள்ளி சீருடையில் இருந்தவளுக்கும் இப்போது இருப்பவளுக்கும் தான் எத்தனை வித்தியாசங்கள்…. ஆனால் அந்த அழகு மட்டும் பல மடங்கு மெருகேறியிருந்தது…



அதற்குமேல் தாளமாட்டாதவனாக சிகரெட் ஒன்றை எடுத்து பற்ற வைத்தான் ஹர்ஷவர்த்தனா…. எவ்வளவு நேரம் அந்த வீடியோவை பார்த்துக் கொண்டு எத்தனை சிகரெட்டுகளை ஊதித்தள்ளினான் என்பது அவனுக்கே தெரியாது….



அவன் உதடுகளோ தாபத்துடன் “வர்ஷூ… வர்ஷூ….” என முணுமுணுத்துக் கொண்டிருந்தன..





குளிரும்…..
 

Banu swara

Moderator
தீ 4







காலையில் ஆராத்யா எழுந்து பார்த்தபோது ஹர்ஷா அருகில் இல்லை…. வழக்கமாக அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்து விடுபவள், அதுதான் அவர்கள் வீட்டு வழக்கம்… இப்போது நேரம் ஒன்பதை தாண்டியிருந்தது…




அடித்துப் பிடித்து எழுந்தவள் கொண்டையிடுவதற்காக தலைமுடியை கைகளில் அள்ளியெடுத்தபோது தான் உணர்ந்தாள்…. ‘எங்க போச்சு….’ என்று பதட்டமாக தேடியவள் அங்கிருந்த சைட் டேபிளில் தன்னுடைய ஆறடி கூந்தலை கண்டதும் பதறித்தான் போனாள்….



“ஹையோ!!! நைட் என் தலையில தானே இருந்துச்சு… இங்க யாரு வெச்சிருப்பா….. அவனா!!!!! கடவுளே!!!! முடி அவுந்து விழுந்தது கூட தெரியாம பக்கி மாதிரி தூங்கிருக்கமே… அவன் என்ன நினைச்சிருப்பான்…..” தனக்குத்தானே புலம்பிக் கொண்டு உட்கார்ந்திருந்தவள் நேரமாகவே குளித்து தயாரானாள்….



அழகிய டிசைனர் சுடிதார் ஒன்றை அணிந்து கொண்டு அளவான ஒப்பனையுடன் கீழே இறங்கி வந்தவளை எதிர்கொண்டது கௌசல்யாவின் தீப்பார்வை….



“அம்மா!!!…” என்று ஆசையாக நெருங்கியவளை மஞ்சுளா அறியாமல் தொடையில் கிள்ளி கால் கிலோ சதையை எடுத்துவிட்டாள் அவளது அன்னை…..



ஆராவுக்கு வலியில் கண்ணெல்லாம் கலங்கிவிட்டது…



“புதுசா கல்யாணமாகி புகுந்த வீட்டுக்கு வந்த பொண்ணு எழுந்திருக்கிற நேரமாடி இது…. புருஷன் எழுந்திருச்சு கிளம்பி போனது கூட தெரியாம இவ்வளவு நேரமா தூங்கிட்டு இருப்பியா….”



“இல்லம்மா…..” அவள் ஏதோ சொல்லவர “வாய மூடு….” என்று சீறினாள் கௌசல்யா…. “என்னடி இது ட்ரெஸ் சின்ன குழந்தைங்க மாதிரி … ஓடு ஓடு முதல்ல போய் புடவைய கட்டிக்கிட்டு வா…. போ….” அவளை அடிக்காத குறையாக விரட்டி விட மனதுக்குள் கௌசல்யாவை அர்ச்சித்துக் கொண்டே புடவை கட்ட சென்றாள்…



அவள் புடவை கட்டிக் கொண்டு வந்ததும் கௌசல்யா வீடு திரும்பும் வரை மகளுக்கு அறிவுரை கூறிக் கொண்டே இருக்க மஞ்சுளாவின் பார்வை அவர்கள்மேல் சுவாரஷ்யமாக படிந்தது….



‘இவங்க பட்டிக்காட்டு ரூல்ஸ் எல்லாம் அடுத்தவங்க முன்னாடி கடைபரப்புறாங்களே…..’ ஆராத்யாவுக்கு மிகவும் எரிச்சலாக இருந்தது…. ‘ஒரு சுடிதார் போட்டது தப்பா கோபால்….’



ஒருவழியாக பெற்றவர்கள் கிளம்பிய பிறகுதான் அவளால் நிம்மதியாக மூச்சு விடவே முடிந்தது… அவர்கள் அந்தப்பக்கம் சென்றதும் இந்தப்பக்கம் அறைக்குள் சென்றவள் கடுப்புடன் புடவையை களைந்து கொண்டிருந்தாள்…





“பொதுவா பொண்ணுங்களுக்கு கல்யாணமாகி போனதும் பொறந்த வீட்டு ஆளுங்க வந்தா சந்தோசத்துல வானத்துல பறக்கிற மாதிரி இருக்கும்னு சொல்லுவாங்க…. எனக்கு மட்டும் பூமிக்கு அடியில பொதைச்சு வெச்சா மாதிரி மூச்சு முட்டுதே…..”



தனக்குள் பேசியபடி உடைமாற்றும் அறைக்குள் நின்று கொண்டிருந்தவள் ஹர்ஷா வந்ததை அறியவில்லை…



இவள் இருப்பது தெரியாமல் அவனும் தன் சட்டை பொத்தான்களை அகற்றியபடி உள்ளே நுழைய எதேர்ச்சையாக நிமிர்ந்தவள் அவனை கண்டு பயத்தில் அலற அவளை உணர்ந்து பார்வையை அவள் பக்கம் திருப்பாமலே “ஐம் சாரி……” என்றவன் வேகமாக அங்கிருந்து வெளியேறிவிட்டான்….



“லூசு…. லூசு…. மூளை கெட்டவளே…. ட்ரெஸ் சேன்ஞ் பண்ணும்போது கதவ சாத்திக்கனும்கிற அறிவு கூட உனக்கு இல்லாம போச்சா… நல்லவேள அவன் பாக்கல… இல்லனா ஷேம் ஷேம் பப்பி ஷேமா ஆகிருக்கும்…..” மீண்டுமொருமுறை தன்னைத் தானே திட்டிக் கொண்டாலும் ஏனோ கணவனின் இந்த செயல் அவளுக்கு மிகவும் பிடித்துதான் இருந்தது….



கட்டிய மனைவியான தன்னையே ஏறெடுத்தும் பார்க்காமல் கண்ணியமாக விலகி செல்பவன் எப்பேர்ப்பட்டவனாக இருக்க வேண்டும்…. அந்த நொடி தன்னை மிகவும் அதிர்ஷ்டசாலியாக உணர்ந்தாள் ஆராத்யா….



அவள் தயங்கித் தயங்கி கூச்சத்துடன் வெளியே வந்து பார்த்தபோது அவன் இல்லை…. வந்தவன் மீண்டும் திரும்பி சென்றுவிட்டான் என்றாள் மஞ்சுளா….



அதன்பிறகு ஆராத்யா எதை செய்தாலும் பார்த்து பார்த்து செய்தாள்…. இதுவரைக்கும் இரண்டு முறை அவன் முன்பு முட்டாள்தனமாக நடத்து கொண்டாயிற்று…. இனியும் அப்படியெதுவும் ஆக கூடாது என்று கவனமாக இருந்தாள்….





அவ்வளவு பெரிய வீட்டில் தனியாக அவளுக்கு மிகவும் போரடித்தது… மஞ்சுளாவுடன் எவ்வளவு நேரம்தான் பேசிக் கொண்டிருப்பது…..



தன் நண்பர்களுக்கும் அழைத்து பேசினாள்…. வீடியோ காலில் ஆண், பெண் என பாகுபாடில்லாம் அனைவருடனும் அரட்டையடித்துக் கொண்டிருந்தாள்….



கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக அவர்களுடன் பேசிக் கொண்டிருந்துவிட்டுதான் அழைப்பை துண்டித்தாள்…..



அவளது வீட்டில் இப்படியெல்லாம் ஃபோனில் வெகுநேரம் பேசிக் கொண்டிருக்க முடியாது…. இவள் ஃபோனை வைத்துக் கொண்டிருப்பதை கண்டாலே கௌசல்யா ஒருவழி பண்ணி விடுவாள்….



ஏனோ இப்போதுதான் சுதந்திர காற்றை சுவாசிப்பதுபோல் உணர்ந்தாள் ஆராத்யா… எத்தனை கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் இத்தனை ஆண்டுகள் வளர்ந்திருக்கிறோம் என்று நினைத்தவளுக்கு தான் திருமணத்திற்கு சம்மதித்தது சரியான முடிவுதான் என்று தோன்றினாலும் அதற்கு விலையாக அவள் கொடுத்தது தன்னுடைய படிப்பை அல்லவா….



இத்தனை நேரம் இருந்த உற்சாகம் மறைய மீண்டும் சோர்ந்து போனாள் ஆராத்யா……



ஆனால் அந்த கவலைக்கு அவசியமே இல்லை என்பதுபோல் அன்று மாலையே அவளது கணவன் கூறினான்…. விழிவிரிய அவனை நம்ப முடியாமல் பார்த்தவளை கண்டதும் அவளது முகத்துக்கு நேராக சொடுக்கிட்டவன் “ஹலோ… நீ இப்படியே உன் கண்ண விரிச்சி பார்த்து பார்த்து என்ன ஒரு வழி பண்ணிடுவ போலயே…..” என்றான் “உன் ஸ்டடீஸ் கண்டினியூ பண்ணலாம்னு சொன்னேன் பட் இங்க இல்ல… ஹைதராபாத்ல…..”



“ஹைதராபாத்தா…..” மீண்டும் விழி விரித்தாள் அவள்….



“ஆமாடா ஆரு…. அத்தை உன்கிட்ட சொல்லல….”



“ம்ஹூம்….” இல்லையென்பது போல் தலையாட்டியவளுக்கு தன் நண்பர்களை விட்டு வேறு இடத்துக்கு செல்லவேண்டும் என்பது நினைத்துப் பார்க்கவே மிகவும் கடினமாக இருந்தது….



ஆனால் தீபிகா வேறு சொன்னாள்….



“மச்சி உனக்கு கிடைச்சிருக்கிறது எவ்வளவு பெரிய சான்ஸ் தெரியுமா…. இந்த மாதிரி வொய்ஃப படிக்க வெக்கனும்னு நினைக்கிற ஆம்பளைங்கலாம் ரொம்ப ரேர்…. இத்தன நாளா நீ உன் வீட்டுல கஷ்டப்பட்டதுக்கு கடவுளா பார்த்து உனக்கு இப்படி ஒரு நல்ல ஹஸ்பன்ட கொடுத்திருக்காரு மச்சி…. யூர் ரியலி லக்கி….



“படிக்கனும்தானே ஆசைப்பட்ட…. இங்க படிச்சா என்ன அங்க படிச்சா என்ன…. எங்கள பத்தியெல்லாம் கவலபடாத ஆரா…. ஆளாளுக்கு வெத்தல டப்பா சைஸ்ல ஃபோன் வெச்சிருக்கோம்ல…. எப்போ வேணும்னாலும் நம்ம இஷ்டத்துக்கு பேசிக்கலாம்…. நீ எதையும் போட்டு குழப்பிக்காம ஹேப்பியா கிளம்பு…….”



தீபிகாவுடன் பேசிய பிறகு ஆராத்யாவுக்கு சற்று தெளிவு பிறந்தது….



இரவு உணவின் போது மஞ்சுளா, ப்ரதாப் இருவரும் மறுவீட்டு விருந்துக்கு செல்வது பற்றி கூறியபோது நாளை அமைச்சர் வீட்டில் தனக்கும் ஆராவுக்கும் விருந்துக்கு அழைத்திருப்பதாக சொன்னவன் அவனே சத்தியமூர்த்திக்கு அழைத்து நாளை மறுநாள் அவர்கள் வீட்டுக்கு வருவதாக கூறினான்….



அதில் ஆராத்யாவுக்கு எந்த வருத்தமும் இல்லை…. ஏற்கனவே மஞ்சுளாவுக்கு முன்னால் மானத்தை வாங்கியாயிற்று… இப்போது ஹர்ஷாவின் முன்னாலும் பிறந்த வீட்டினரால் அவமானப்பட அவளுக்கு சுத்தமாக இஷ்டமில்லை….







**********************************************










லாவெண்டர் வண்ண புடவையில் அதற்கு பொருத்தமான அணிகலன்களும் மிதமான ஒப்பனையுடன் தயாராகி வந்தவளை ரசனை பார்வையுடன் எதிர்கொண்டான் ஹர்ஷவர்த்தனா…..




“யூர் சோ அடோரபிள் ஆரா….” என்க,



அதில் கன்னம் சிவக்க “தேங்க்ஸ்…” என்றவளை புன்னகையுடன் பார்த்தவன் “போலாமா…..” என்றுவிட்டு முன்னே நடக்க அவனை பின்தொடர்ந்தாள் ஆராத்யா….



அவளுக்காக கார் கதவை திறந்துவிட்டவன் அவள் ஏறி உட்கார்ந்ததும் காருக்கு வெளியே வழிந்து கிடந்த அவளது புடவை முந்தானையை உள்பக்கமாக எடுத்துவிட்டவன் அவள் சங்கடத்துடன் நெளிந்ததை பொருட்படுத்தாமல் கதவை சாத்திவிட்டு மறுபக்கம் வந்து காரை எடுத்தான்….



அமைச்சரின் வீட்டை அடைந்ததும் அவர்களது தடபுடலான வரவேற்பை கண்டு மிரண்டுதான் போனாள் ஆராத்யா…. அதே சமயம் வாயெல்லாம் பல்லாக அவர்களை வாசலுக்கே வந்து வரவேற்ற அமைச்சரை கண்டு அவளுக்கு சிரிப்பாக கூட இருந்தது….



தேர்தல் சமயங்களில் எல்லாம் மேடைகளில் எதிர்கட்சிகளை கிழித்து தோரணம் கட்டி தொங்கவிட்டுக் கொண்டிருப்பவர் இப்போது ஹர்ஷாவிற்கு கூழைகும்பிடு போட்டுக் கொண்டு நிற்பதை தன் நண்பர்கள் பார்த்தால் எப்படியெல்லாம் கலாய்ப்பார்கள் என்று நினைத்தவளுக்கு சிரிப்பை அடக்கிக் கொள்வது பெரும்பாடாகத்தான் இருந்தது…



அமைச்சரின் மனைவி, மகன், மருமகள் மற்றும் மகள்கள் என அனைவரும் மணமக்களை வரவேற்று உபசரித்தனர்….

வரவேற்பு, பொதுவான நலவிசாரிப்புகள் எல்லாம் முடிந்தவுடன் விருந்து பரிமாறப்பட்டது…



சுவையான நான்வெஜ் விருந்தை ஆரா ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவள் எதேர்ச்சையாக திரும்ப அமைச்சரின் மகள்கள் இருவரும் தட்டை பார்த்து சாப்பிடாமல் ஹர்ஷாவை பார்த்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்… போதாதைக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்த அவரது மருமகள் வேறு கவனிக்கிறேன் பேர்வழியென்று ஹர்ஷாவின் ப்ளேட்டில் ஒவ்வொரு உணவாக வைத்து நிரப்பிக் கொண்டிருந்தாள்…..




திரும்பி கணவனை பார்த்தாள்.… அமைச்சரின் மகன் எதையோ கூற அதை கவனித்தபடி சாப்பிட்டுக் கொண்டிருந்தான் அவன்…..



‘எவ்ளோ தைரியம் இருந்தா என் புருஷனையே இப்டி வெறிச்சு பார்ப்பாளுங்க…..’ சுர்ரென்று கோபம் தலைக்கேற அதன் பிறகு உணவு தொண்டைக் குழியை தாண்டி இறங்கவில்லை…. இப்போதே அவன் கையை பிடித்து இழுத்துக் கொண்டு வீட்டுக்கு கிளம்பிவிட வேண்டும் போல் தோன்றியதில் முள்ளின்மேல் இருப்பதை போல் அமர்ந்திருந்தாள் அவள்….



அவன் சாப்பிட்டு முடித்து கை கழுவ செல்லவும் அவன் பின்னாலேயே அமைச்சரின் மருமகளும் சிறிய டவலுடன் செல்ல வேகமாக அவளை நெருங்கிய ஆராத்யா “கொடுங்க…. நானே அவர்கிட்ட கொடுத்திர்ரேன்….” என்றாள்…



“ஐயோ இல்லைங்க பரவால்ல…. நானே கொடுத்திர்ரேன்….” அவள் ஹர்ஷாவை நோக்கி முன்னேற போனாள்….



“இல்ல இல்ல நானே கொடுத்துக்கிறேன்… கொடுங்க….” என்று ஆராத்யா அவள் கையிலிருந்த டவளை பற்ற முயற்சிக்க “ஐயோ நீங்க கெஸ்ட்ங்க… இதெல்லாம் நாங்கதாங்க செய்யனும்…..” அவள் ஹர்ஷாவிடம் செல்வதிலேயே குறியாக இருக்க,,



“ஏய் நில்லுடி….” அவளது கையை பிடித்து தடுத்தாள் ஆராத்யா…. “அதான் நான் கொடுக்கிறேன்னு சொல்றேன்ல… கொடு…..” கொத்திப் பறிக்காத குறையாக அவளிடமிருந்து டவலை பிடுங்கிக் கொண்டு சென்றவளை ‘ஙே’ என்று பார்த்திருந்தாள் அமைச்சரின் மருமகள்…



கை கழுவிவிட்டு திரும்பிய ஹர்ஷாவிடம் அதனை நீட்ட “தேங்க்ஸ்டா…..” என்றபடி வாங்கிக் கொண்டான் அவன்….



தானும் கை கழுவிக் கொண்டு வந்தவள் அவனுக்கு அருகில் ஒட்டிக் கொண்டு அமர்ந்தாள்…



அவன் தன்னை விசித்திரமாக பார்ப்பதை உணர்ந்தாலும் அதனை கவனியாதது போல் வேறு எங்கோ பார்த்துக் கொண்டிருந்தாள்….



அங்கிருந்து திரும்பியதும் வீட்டுக்கு செல்லாமல் வேறு எங்கோ காரை செலுத்தினான் ஹர்ஷவர்த்தனா….



கடற்கரை சாலையில் வெகுதூரம் சென்றபின் அவள் கண்களில் தென்பட்டது அந்த கண்ணாடி மாளிகை போன்ற வீடு….



அவனது பீச் ஹவுஸாம்…



வாயிலில் நின்ற காவலாளி ஹர்ஷாவை கண்டதும் வேகமாக கேட்டை திறந்துவிட கார் வழுக்கிக் கொண்டு உள்ளே சென்றது….



காரை நிறுத்திவிட்டு இறங்கியவன் அவளை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றான்….. சுவரே இல்லாது போல திரும்புகிற பக்கமெல்லாம் கண்ணாடியாலான அந்த வீட்டின் எந்த அறைக்குள் இருந்து பார்த்தாலும் கடலை தெளிவாக பார்க்க முடியும்….



வைத்த கண் வாங்காமல் கடலை, அதன் அலைகளை, தொடுவானத்தை ரசித்துப் பார்த்தாள் ஆராத்யா…. அவளது வீட்டில் கடற்கரைக்கு செல்வதற்கெல்லாம் அனுமதி கிடையாது…. “கண்ட கண்ட கழிசடைங்க வர்ர இடம்…. அங்கெல்லாம் போகக்கூடாது…..” என்றுவிடுவார் சத்தியமூர்த்தி…



அதற்காக எல்லாம் அவள் போகாமல் இருந்தது கிடையாது…. தலையில் முக்காடும் முகத்தை மறைக்கும் கூலர்ஸும் அணிந்து கொண்டு நண்பர்களுடன் பலமுறை சென்று வந்திருக்கிறாள்தான்….. ஆனால் இந்த அளவுக்கு சுதந்திரமாக யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியமே இல்லாமல்… இப்போதுதான் முதல் தடவை ரசித்துப் பார்க்கிறாள்….



“ஆரா….” என்ற ஹர்ஷாவின் குரல் நெருக்கத்தில் கேட்கவும் திடுக்கிட்டு திரும்பி பார்த்தவளின் கையை பற்றி கொண்டவன் “கம் வித் மீ…..” என்று தன்னுடன் அழைத்து சென்றான் அவன்….



அந்த வீட்டின் மொட்டை மாடிக்கு அவளை கொண்டு வந்து நிறுத்த “ஆ….”வென்று வாயைப் பிளந்தாள் ஆராத்யா…..



மிக பிரம்மாண்டமான நீச்சல் தடாகம் மொட்டை மாடியை ஆக்கிரமித்திருந்தது…. இவ்வளவு பெரிய நீச்சல் குளத்தை அவள் இதுவரை பார்த்ததே இல்லை… மேலே பரந்து விரிந்திரிந்த ஆகாயம், கீழே கடல், இரண்டுக்கும் நடுவில் ஸ்விம்மிங் பூல் அவளுக்கு ஏதோ சொர்க்கத்தில் மிதப்பதை போல் தோன்றியதில் உள்ளே குதித்து குத்தாட்டம் போட வேண்டும்போல் இருந்தது….



அதற்கு அவள் கட்டியிருக்கும் சேலை ஒரு தடை என்றால் ஹர்ஷாவின் முன்னிலையில் அப்படி எதுவும் செய்து சிறுபிள்ளை தனமாக நடந்து கொள்ள முடியாமல் ஏக்கத்துடன் பார்த்திருந்தாள்…



அங்கு இருந்த ஒரு அறைக்குள் நுழைந்தவன் திரும்பி வரும்போது ஸ்விம்மிங் டிரங்க்ஸுடன் வர அவனது அகன்ற தோள்களும் இறுகிய மார்பும் எய்ட் பாக் வயிறும் படிக்கட்டு தேகமும் கண்டு சற்று நேரம் வாயை பிளந்து கொண்டு நின்றவள் அவன் பார்வை தன்னை நோக்கி திரும்பவும் ‘நான் ஒன்னும் பார்க்கலப்பா..’ என்பது போல் நொடியில் வேறு பக்கம் திரும்பிக் கொண்டாள்…



அவன் நீச்சல் குளத்தில் குதிக்கும் சத்தம் காதில் விழ மீண்டும் ஓரக் கண்ணால் பார்த்தாள்… ஒரு கைதேர்ந்த நீச்சல் வீரனைப் போல் அவன் லாவகமாக நீச்சலடித்துக் கொண்டிருக்க அவளால் கண்ணை வேறு பக்கம் திருப்பவே முடியவில்லை…

‘இப்டியே இவன சைட் அடிச்சிக்கிட்டு இருந்தா…. சுத்தம்…. நம்ம லட்சியத்தில மண்ணள்ளி போட்டுடுவான் போலயே…. இனிமே இவன் பக்கமே திரும்ப கூடாது….”




ஒரு முடிவுடன் இருந்தவளின் தவத்தை கலைக்கவென அவள் முகத்தில் வந்து விழுந்தன நீர்த்துளிகள்….



அவன்தான்…



“கமான் ஆரா…” என்றான்…



“ம்ஹூம்….” மாட்டேன் என்பது போல் தலையசைத்தாள் அவள்…



“ப்ச்.. வான்னு சொல்றேன்ல….”



அவள் மறுக்கவே நீச்சல் குளத்திலிருந்து ஒரே தாவலில் வெளியே வந்தவன் “கூப்டா வரமாட்ட…” என்றபடி குனிந்து அவளை தூக்கிக் கொண்டு அவள் எவ்வளவு கெஞ்சியும் காதில் வாங்காமல் நீருக்குள் இறங்கினான்…



“ஹையோ விடுங்க ப்ளீஸ்…. நான் வேற ட்ரெஸ் எதுவும் கொண்டு வரல…” என்று சொன்னவளிடம் “என்னோட ட்ரெஸ் இருக்கு போட்டுக்கலாம் வா….” என்று நீருக்குள் தள்ளிவிட்டான்…



அதில் சேலை தடுக்கி தட்டுத்தடுமாறி எழுந்து கொண்டவளுக்கு அவன் மீது கோபம் வந்தாலும் குளுமையான அந்த மாலைப் பொழுதில் இளஞ்சூடான நீர் உடலுக்கு இதமாக இருக்க முன்புறம் இருந்த படிகளில் ஏறி நின்று கொண்டாள்….



அவன் விட்டால்தானே அவளையும் தன்னுடன் சேர்த்து இழுத்துக் கொண்டு நீந்த ஆரம்பித்தான்…. ஏதோ ராட்சத சுழலுக்குள் சிக்கியதைப் போல சற்று நேரம் மூச்சு முட்ட தவித்தவள் பின்பு அவளும் அவனது விளையாட்டை ரசிக்க ஆரம்பித்தாள்….



வெகுநேரம் நீரில் விளையாடிவிட்டு இருவரும் வெளியேறினார்கள்…



இத்தனை நேரம் நீருக்குள் இருக்கும்போது தெரியாத குளிர் இப்போது வெளியே வந்ததும் ஊசியாய் உடலை துளைக்கவும் மாற்றுடை கூட இல்லாமல் தண்ணீரில் நனைந்த தன் மடத்தனத்தை எண்ணி அவள் நொந்து கொண்டிருக்க அவள் முன்னால் ஒரு உடையை நீட்டியவன் “போய் சேன்ஞ் பண்ணிட்டு வா….” என்றான்…



உடையுடன் கூடவே விலையுயர்ந்த பாடி லோஷனும் இருந்தது…



அவளுடைய சைஸில் கனகச்சிதமாக இருந்த அந்த உடைய கண்டவளுக்கு “இவ்ளோ நேரமா நம்மளும் கூடதானே இருந்தோம்… இது எப்போ வாங்கினான்…” என்ற எண்ணமே பிரதானமாக இருந்தது….



ஒருவழியாக அவள் உடைமாற்றி வெளியே வந்ததும் காபி மேக்கரிலிருந்து சூடான காபியை அவளிடம் நீட்டியவன் தனக்கும் ஒன்றை எடுத்துக் கொண்டு மீண்டும் அவளது கைப்பிடித்து கடற்கரை நோக்கி அழைத்து சென்றான்….



கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஆள் அரவமே இல்லாமல் கடலோரமாக கையில் சூடான காபியோடு இப்படி அவன் கைகோர்த்து நடப்பது அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது…



அவனை பார்த்தாள்…. கருப்பு நிற வெஸ்ட்டும் வெள்ளை நிற ஷார்ட்ஸும் அணிந்து காற்றில் முடி பறக்க படுகம்பீரமாக தன் அருகில் பட்டும் படாமல் ஒட்டியும் ஒட்டாமல் நடந்து வந்து கொண்டிருந்தவன் தனக்கு மட்டுமே சொந்தமான தன் கணவன் என்பதில் அவள் உள்ளம் பூரித்தது…



அவன் நிறைய பேசினான்…. அவனுடைய தொழில், படிப்பு, வாழ்க்கை முறை என ஒரு மனைவியாக அவள் தன்னை பற்றி எதையெல்லாம் தெரிந்து வைத்திருக்க வேண்டுமென அவன் நினைத்தானோ அத்தனையும் சொன்னான்….



வெகுநேரம் பேசிக்கொண்டே நடந்தவர்கள் மாலை மறைந்து இருள் பரவ ஆரம்பிக்கும் வேளையில் ஓரிடத்தில் உட்கார்ந்து கொள்ள வாகாக அவள் மடியில் தலைவைத்து படுத்தவன் “நான் மட்டும்தான் பேசிட்டிருக்கேன் நீ எதுவுமே சொல்லமாட்டேங்கறீயே….” என்றான்…



“என்ன சொல்ல….” என்றாள் அவள் தயக்கத்துடன்…



“நான் இவ்வளவு நேரமா என்ன பத்தி சொன்னேன்ல… அப்படி நீயும் சொல்லு உன்ன பத்தி, உன் ஃபேமிலி, உனக்கு பிடிச்சது பிடிக்காதது எல்லாம்….”



ஆராவும் தன்னை பற்றி சொல்ல ஆரம்பித்தாள்….



பொதுவாக பெண்கள் யாரையாவது மிகவும் நம்பி விட்டாலோ அல்லது யாரையாவது மனதுக்கு பிடித்துவிட்டாலோ மடை திறந்த வெள்ளமாக அவர்களிடம் அனைத்தையும் கொட்டி விடுவார்கள்….



ஆராவும் அப்படித்தான் அவனிடம் தன்னை பற்றி, தன் குடும்பத்தை பற்றி என ஆரம்பத்தில் சற்று தயங்கினாலும் அவனது உந்துதலில் தடையற்று அனைத்தையும் கூற ஆரம்பித்தாள் அவளுடைய தில்லாலங்கடி வேலைகளை தவிர…..



அத்தனையும் கவனமாக கேட்டுக் கொண்டான் அவன்… அவ்வப்போது அவன் முகத்தில் யோசனை படிந்ததையும் சில சமயங்களில் அவன் விழிகள் இடுங்கியதையும் இருள் சூழ்ந்துவிட்டதால் பாவம் அவள் கண்டு கொண்டிருக்க வாய்ப்பில்லை…









**********************************************







நீண்ட நாட்களுக்கு பிறகு தன்னுடன் படித்த நண்பர்களை சந்தித்துவிட்டு வீடு திரும்பிய ஆர்யன் தான் வரும்வரை தூங்காமல் காத்துக் கொண்டிருந்த அன்னையை கடிந்து கொண்டான்…




அவர் கொடுத்த சூடான பாலை அருந்திவிட்டு தன்னறைக்கு வந்து சேர்ந்தவன் உடலெல்லாம் கசகசவென்று இருக்கவே ரெஃப்ரெஷ் செய்து கொண்டு வந்தான்…



வழக்கம்போல் தூங்கச் செல்லுமுன் தன் அலைப்பேசியை எடுத்து பார்க்க தான் ஆராத்யாவின் திருமணம் பற்றி ஒரு வாரத்திற்கு முன்பு அனுப்பிய செய்தியை இப்போதுதான் மனைவி பார்த்தருப்பதற்கான நீல நிற அடையாளத்தை கண்டதும் ஆர்யனுக்கு பற்றிக்கொண்டு வந்தது…



ஆராவின் திருமணம் அவர்களது குடும்பத்திற்கு எவ்வளவு முக்கியமான நிகழ்வு… அதற்கு கூட வரமுடியாமல் எங்கே போய் தொலைந்தாள்… அண்ணன் மனைவி என்ற முறையில் இவளல்லவா முன்னால் நின்று அனைத்தும் செய்திருக்க வேண்டும்….



இவள் எங்கே என்ற எத்தனை பேரின் கேள்விகளுக்கு அவனும் அவனுடைய குடும்பத்தினரும் பதில் சொல்ல முடியாமல் எப்படியெல்லாம் தவித்துக் கொண்டிருந்தார்கள்….



இவள் என்னடாவென்றால் சாவகாசமாக திருமணமாகி இரண்டு நாட்களின் பின்தான் அவன் அனுப்பியை செய்தியையே படித்திருக்கிறாள்….



எப்போதும் போல சனியன் எப்படியோ போய் தொலைகிறது என அவனால் இருக்க முடியவில்லை….



அவளை வேண்டாம் என்று வெறுத்து விலகியவன் அவன்தான்… அதே சமயம் முற்றிலுமாக ஒதுக்கி வைக்க முடியாமல் அவனுடைய குடும்பமும் சூழ்நிலைகளும் தடையாக இருந்தது….. முன்னொரு காலத்தில் அவளுடன் வாழ்ந்த காதல் வாழ்க்கையும் ஒரு காரணம் என்றால் மிகையில்லை….



ஆனால் அவள் செய்த காரியம்…. அவனது இறுதி மூச்சு வரை அவனால் அந்த பாவத்தை மன்னிக்கவே முடியாது…



இன்னும் எத்தனை ஜென்மங்களுக்கு அந்த பாவமும் பழியும் தன்னையும் தன் குடும்பத்தையும் துரத்தப்போகிறதோ என நினைத்தவனுக்கு அதன்பிறகு அந்த இரவு சிவராத்திரியாகித்தான் போனது……



மறுநாள் ஆராவும் ஹர்ஷாவும் வருவதால் வீடே பரபரப்பாக இருந்தது… அதிகாலையிலிருந்தே சமையல் வேலைகளெல்லாம் தடபுடலாக ஆரம்பமாகியிருக்க சத்தியமூர்த்தி அதைப்பார் இதைக் கவனி என வீட்டு ஆட்களையும் வேலையாட்களையும் ஒருவழி பண்ணிக் கொண்டிருந்தார்…



மணமக்கள் இருவரும் வந்து சேர்ந்ததும் பத்மாவதி ஆரத்தியெடுத்து வரவேற்றார்… ஹர்ஷா வீட்டுக்குள் செல்லுமுன் டிரைவரை பார்த்து ஜாடை காட்ட கார் டிக்கியிலிருந்து உடைகள் நிறைந்த பைகள், நகை பெட்டிகள் என விதவிதமான பொருட்களை வரிசையாக வீட்டுக்குள் கொண்டு வந்து வைத்துவிட்டு சென்றான் அவன்….



‘இது எப்போ??’ என்பதுபோல் புரியாமல் பார்த்தாள் ஆராத்யா… இந்த பொருட்கள் எல்லாம் எப்போது காருக்குள் வந்து சேர்ந்தது என்பதே அவளுக்கு தெரியவில்லை… ‘இதுக்குத்தான் டிரைவரை கூட்டிக்கிட்டு வந்தானா….’ என நினைத்துக் கொண்டாள்…



சத்தியமூர்த்தியிலிருந்து அவர்கள் வீட்டு நாய்க்குட்டி வரை அத்தனை பேருக்கும் பரிசுப் பொருட்கள் வாங்கி வந்திருந்தான் அவன்…. அதுவும் கோடிக்கணக்கில்….



பத்மாவதி கௌசல்யா இருவருக்கும் லட்சங்கள் பெறுமதியான பட்டுப் புடவைகளும், வைர நகை செட்களும்…. சத்தியமூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி, ஆர்யனுக்கும் அதேபோல் உடைகள், விலையுயர்ந்த கைக்கடிகாரங்கள், மோதிரங்கள்….



நகுலனுக்கு கூடுதலாக ஐஃபோன், லேப்டாப்…. அதேபோல் ப்ரியங்கா, திவ்யங்காவுக்கும் உடைகள், நகைகள் என ஒரே நாளில் ஒட்டுமொத்த குடும்பமும் ஃப்ளாட்டாகி விட்டார்கள்….



இத்தனையும் செய்துவிட்டு எந்தவித பந்தாவும் இல்லாமல் மிகவும் சகஜமாக அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தவனை மற்றவர்கள் பிரமிப்புடன் பார்த்திருக்க ஆரா மட்டும் பிரமிப்பையும் தாண்டிய முக்தி நிலைக்கு சென்றுவிட்டாள்…



அவள்தான் நேற்று கடற்கரையில் அவனிடம் கூறினாள்…. என்னதான் பணக்காரராக இருந்தாலும் அவளுடைய பெரியப்பாவுக்கு வீண் செலவுகள் பிடிக்காது…. பெரியம்மா அதிக விலையில் பட்டு சேலை வாங்கியதற்காக பயங்கரமாக திட்டு விழுந்தது…. நகுலன் ஐஃபோன் கேட்டு பெரியப்பா சத்தம் போட்டது என இன்னும் நிறைய சொல்லியிருந்தாள்…



அதற்காக இப்படியா…. ஒரே இரவுக்குள் இத்தனையும் வாங்கி குவித்திருக்கிறான்…. அவனுடைய இந்த வேகத்தில் அவளுக்கு லேசான பயம் கூட வந்தது…



சமயறைக்குள் பத்மாவதியும் கௌசல்யாவும் அவர்கள் வீட்டு மாப்பிள்ளையை புகழ்ந்து தள்ளிக் கொண்டிருந்தார்கள்…



“புது டிசைன் வைர நெக்லஸ் வாங்கனும்னு எவ்வளவு நாளா கேட்டுட்டு இருந்திருப்பேன்…. அப்புறம் பார்க்கலாம் அப்புறம் பார்க்கலாம்னு தட்டி கழிச்சிட்டே இருந்தாரு…. இப்போ மாப்ள வாங்கிட்டு வந்திருக்க நகையெல்லாம் பார்த்து உங்க கொழுந்தனாருக்கு மயக்கமே வந்துடும் போல இருக்கு கா…..”



“இங்க மட்டும் என்ன…. பட்டுப்புடவை விலை அதிகமா வாங்கிட்டேன்னு எப்படி சத்தம் போட்டாரு… இப்போ பார்த்தியா…”



கணவன்மாருக்கு முன்னால் வாயே திறக்காமல் பம்மிக் கொண்டு இருப்பவர்கள் இப்படி பேசுவதை கேட்டு ஆராவுக்கு சிரிப்பு வந்தது….



இவர்களே இப்படியென்றால் இளையவர்களை சொல்லவும் வேண்டாம்…. நகுலன், ப்ரியா, திவ்யா மூவரும் “அத்தான், அத்தான்…” என்று அவனுடனே ஒட்டிக்கொண்டு திரிந்தார்கள்…



தன் குடும்பத்தார் ஹர்ஷாவை கவனித்த கவனிப்பில் ஆராவுக்கே அவன்மீது பொறாமை வந்துவிடும் போல இருந்தது…. அந்தளவுக்கு அவனை தாங்கி, தூங்கி தலையில் வைத்து கொண்டாடினார்கள்….



ஒருவழியாக அன்றைய விருந்துபசாரம் அனைத்தும் முடிந்து மாலையில் அவர்கள் வீடு திரும்புவதற்காக விடை பெற்றுக் கொண்டிருந்த நேரம் அந்த வீட்டு வாசலில் கிரீச்சென்ற சத்தத்துடன் கார் ஒன்று வந்து நிற்க அதிலிருந்து இறங்கி வந்தவளை முதலில் கவனித்தது பத்மாவதிதான்…..



“காவ்யா!!!” என்ற அவரது குரலில் ஆர்யனின் உடல் இறுகியது… இனி அவள் வந்துவிடுவாள் என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும்…. அதனால்தான் இன்றே கிளம்புவதற்காக தன்னுடைய பெட்டி படுக்கையை கட்டிக்கொண்டு அப்போதே தயார் செய்து வைத்திருந்தான்…



தன் வேக நடையுடன் வீட்டுக்குள் நுழைந்தவள் அத்தனை நேரம் பயணம் செய்து வந்திருந்த போதிலும் அவள் முகத்தில் துளிக்கூட களைப்பின் சாயலே இல்லை… அன்றலர்ந்த தாமரை போல் பளிச்சென்று அழகாக இருந்தது…. அந்த விழிகளில் மட்டும் லேசான பதட்டம் அவ்வளவுதான்….





“வாம்மா காவ்யா….” பத்மாவதியை தொடர்ந்து ஒலித்த கிருஷ்ணமூர்த்தியின் கணீர் குரலில் மற்றவர்களும் அவள் பக்கம் திரும்பி பார்க்க அவள் கண்கள் என்னவோ ஆர்யனைத்தான் தேடியது…



சற்று தூரத்தில் தனக்கும் அவளுக்கும் சம்மந்தமே இல்லையென்பது போல் விறைப்புடன் வேறு பக்கம் பார்த்துக் கொண்டிருந்த கணவனை கண்டவளின் அழகு வதனத்தில் வேதனையின் சாயல் நொடிக்கும் குறைவான நேரத்தில் தோன்றி மறைந்தது….



மறுநொடியே தன் முகத்தை மாற்றிக் கொண்டவள் மற்றவர்களை நோக்கி பார்வையை திருப்பினாள்… வேதனையுடன் மகனை பார்த்துக் கொண்டு நின்றிருந்த பத்மாவதி, நான் ஆர்யனின் அப்பாவாக்கும் என்பதுபோல் அவனுக்கும் மேலாக விறைப்புடன் நின்றிருந்த சத்தியமூர்த்தி, ஒன்றும் அறியாதவர்கள் போல் நடுநிலைவாதிகளாக நின்றிருந்த கிருஷ்ணமூர்த்தி, கௌசல்யா…..



அடுத்து அவளது பார்வை இவர்களை தாண்டி ஆராவை நோக்கி சென்றது… கழுத்தில் புதுத்தாலியுடனும், புதுமணப் பெண்களுக்கே உரித்தான நாணத்துடனும் தன் கணவனை பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்….



அவளைத் தாண்டி நகுலனுடன் பேசிக்கொண்டு தனக்கு முதுகு காட்டியபடி நெடுநெடுவென்று நின்றிருந்த ஆராவின் கணவன் மீது காவ்யாவின் பார்வை ஆராய்ச்சியுடன் படிந்தது…. ‘யார் இவன்…..’ என்ற யோசனையுடன் பார்த்துக் கொண்டே நின்றவள் அடுத்த நொடியே நகுலனிடம் விடைபெற்றுக் கொண்டு சிறு புன்னகையுடன் திரும்பியவனைக் கண்டதும் மின்னல் தாக்கியதுபோல் அப்படியே நின்றுவிட்டாள்….



அழுத்தமான நடையுடன் அவள் நின்றிருந்த திசை நோக்கி அவன் முன்னேறிவர உடனே கிருஷ்ணமூர்த்தி வீட்டு பெரியவராக “மாப்ள இது எங்க ஆர்யாவோட வொய்ஃப் காவ்யா….” என்று ஹர்ஷாவுக்கு அவளை அறிமுகம் செய்து வைத்தார்…. “காவ்யா கூட ஹைதராபாத்தான்….” என்க,



“ஆஹான்…..” என்றவனின் பார்வை தீர்க்கமாக அவள் முகத்தில் படிந்தது….



“காவ்யாம்மா…. இதுதான் நம்ம ஆராவோட வீட்டுக்காரர்…” என்று கௌசல்யா அவளிடம் கூற உறைந்து போய் நின்றிருந்த சிலைக்கு உணர்வு வந்தாலும் பேசுவதற்கு வாய்தான் வரவில்லை….



எவனிடமிருந்து தப்புவதற்காக யார் கண்ணிலும் படாமல் எந்த தொடர்பும் இல்லாமல் எங்கோ மறைந்திருந்துவிட்டு வந்தாளோ அவன் அவளுடைய புகுந்த வீட்டில்!!! அதுவும் அந்த வீட்டு மாப்பிள்ளையாக தன் எதிரில் வந்து நிற்பானென அவள் கனவில் கூட நினைத்துப் பார்க்கவில்லை…..



தன்னை விழுங்க வந்திருக்கும் அந்த ராட்சஷனை ரத்தப் பசையற்று வெளிறிப்போன முகத்துடன் பார்த்திருந்தாள் காவ்யா…. காவ்யவர்ஷினி….






குளிரும்……
 

Banu swara

Moderator
தீ 5






“பெல்லா அதுக்குள்ள எங்க ஓடிட்ட நீ….” கேட்டுக் கொண்டே பரந்து விரிந்திருந்த அந்த தோட்டத்தின் ஒவ்வொரு இடமாக தேடிக் கொண்டிருந்தாள் ஆராத்யா…



ஒருவழியாக புதருக்கு பின்னால் மறைந்திருந்த பெல்லாவை கண்டு கொண்டவள் “பெல்லா குட்டி இங்கதான் ஒளிஞ்சிருக்கியா….” என்று கைநீட்ட அவளிடம் தாவிப் பாய்ந்து ஒட்டிக் கொண்டது புசுபுசுவென்ற அந்த வெள்ளை நிற சமோய்ட் நாய்க்குட்டி….



அதனை அணைத்து முத்தமிட்டவள் தூக்கிச்சென்று தான் செய்து வைத்திருந்த ஃபிஷ் கேக்கை அதற்கு ஊட்டிவிட்டாள்…



அவர்கள் ஹைதராபாத்துக்கு வந்த மறுநாளே அவளுக்காக இந்த நாய்க்குட்டியை வாங்கி கொடுத்துவிட்டான் ஹர்ஷா…. அவன் அலுவலகம் சென்றதும் இவள் வீட்டில் தனியாக இருப்பதால் அவளுக்கு துணையாக இந்த பெல்லா…



அவன் வாங்கி வந்த சிலமணி நேரங்களிலே பெல்லாவும் ஆராவும் ஒருவருடன் ஒருவர் ஒட்டிக் கொண்டார்கள்… கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக காலையில் எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை இருவரும் இணை பிரிவதே இல்லை….



ஹர்ஷா தயாராகி வந்ததும் அவனுக்காக பார்த்து பார்த்து சமைத்து வைத்திருந்த உணவு வகைகளை தானே பரிமாற ஆரம்பித்தாள்….



முன்புபோல் அல்லாமல் இப்போது நன்றாகவே அவனிடம் பேச ஆரம்பித்திருந்தாள் எந்த தயக்கமும் இல்லாமல் வெளிப்படையாக…. சில சமயங்களில் வாடா போடா சொல்லும் அளவுக்கு முன்னேறியிருந்தாள்…



இங்கு வந்த புதிதில் ஒருநாள் தன்னுடைய ப்ளாட்டினம் கார்டை அவளிடம் நீட்டினான் ஹர்ஷவர்த்தனா… “உனக்கு ஏதாவது வாங்கிக்கனும்னா இதே யூஸ் பண்ணிக்க ஆரா…” என்றான்…



வழக்கம்போல் அவனை நம்பமுடியாமல் விழிவிரித்துப் பார்த்தவளின் கண்களுக்கு தன்னை ரட்சிக்க வந்த தேவதூதன் போல் தோன்றினான் அவன்…



பணத்தை எல்லாம் அவள் எப்போதும் பெரிதாக நினைப்பதில்லைதான்… ஆனால் முன்பெல்லாம் ஐந்துக்கும் பத்துக்கும் கௌசல்யாவிடம் காலில் விழாத குறையாக கெஞ்சி கூத்தாடி தலையில் கொட்டு வாங்கித்தான் பெற்றுக் கொள்ள முடியும்…



அதுவும் ஒருமுறை தீபிகாவின் பிறந்தநாளுக்கு கிஃப்ட் வாங்கி கொடுத்ததற்காக கௌசல்யாவிடம் வாங்கிய மண்டகப்படி அவளது வாழ்நாளிலும் மறக்க முடியாதது…



அப்படியிருக்க இவன் எதை வேண்டுமானாலும் வாங்கிக்கொள் என்று தன்னுடைய கார்டை கொடுத்தால் அவள் கண்ணுக்கு அவன் உயர்வாகத்தானே தெரிவான்…



தனக்காக இத்தனையும் செய்பவனுக்கு தன்னால் முடிந்தது என்று அவள் செய்வது சமையல் மட்டும்தான்… கௌசல்யாவின் புண்ணியத்தால் பள்ளியில் படிக்கும் போதிருந்தே நன்றாக சமைக்க கற்றிருந்தாள் ஆராத்யா…



இப்போது அத்தனை கைவண்ணத்தையும் விதவிதமான உணவுகளாக அவனுக்கு சமைத்துக் கொட்டிக் கொண்டிருக்க ஆரம்பத்தில் அவளை தடுத்துப்பார்த்தவன் பின்பு அவனுக்கும் அவளுடைய சமையல் பிடித்துவிட்டதோ என்னவோ இப்போதெல்லாம் அவனும் வெகுவாக ரசித்து சாப்பிட ஆரம்பித்திருந்தான்….



அதில் அவளுக்கு மிகுந்த மகிழ்ச்சி என்று சொன்னால் மிகையில்லை…. அதுவும் அவன் சாப்பிட்டுவிட்டு ஆஹா ஓஹோ என்று அவளை பாராட்டித் தள்ளுவதோடு அந்த சமையலுக்கான பரிசாக வீட்டுக்கு திரும்பும்போது அவளுக்கு மேலும் ஏதாவது வாங்கிக் கொண்டு வருவான்….



அவர்களுடைய திருமண வரவேற்புக்கான அனைத்து ஏற்பாடுகளும் துபாயில் பிரம்மாண்டமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன… அதற்கு இன்னும் ஒரு வாரமே இருப்பதால் அனைத்தையும் முடித்துவிட்டு அதன்பிறகு கல்லூரியில் சேர்ந்து கொள்ளலாம் என கூறிவிட்டான்….



அவளுக்காகவே உடைகள், அணிகலன்கள் என அனைத்தும் பிரத்தியேகமாக தயாராகிக் கொண்டிருந்தன… அவளுடைய விருப்பப்படிதான்…. அனைத்தும் அவளுக்கு பிடித்தவிதமாக இருக்க வேண்டுமென ஏற்பாட்டாளர்களிடம் கட்டளையாக கூறியிருந்தான்…



ஏனோ திருமணத்திற்கு பிறகு தேவதைகள் தன்னை சுற்றி எப்போதும் வண்ண வண்ண பூக்களை தூவிக் கொண்டிருப்பதை போன்ற ஒரு உணர்வு ஆராத்யாவுக்கு இருந்து கொண்டே இருந்தது… தரையில் கால் படாமல் மிதந்து கொண்டிருந்தாள்… (ஒரு நாளைக்கு தொபுக்குனு கீழ விழும்போது புரியும்)






*********************************************








உறங்கிக் கொண்டிருந்த ஜெயசுதாவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள் காவ்யா… ஒரு காலத்தில் எப்படி இருந்தவர்… இப்போது படுத்த படுக்கையாகி விட்டாரே… அந்த முகத்தில் உயிர்ப்பே இல்லாமல் ஜடம் போல கிடந்தது….



“அம்மா…..” என்றவளின் விழிகளிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் வழிய இத்தனை காலம் தனக்கு எல்லாமுமாக இருந்து வழிநடத்தியவர் இப்போது எவ்வளவு பெரிய இக்கட்டில் தான் சிக்கியிருக்கும்போது அவரால் என்னவென்று கூட கேட்க முடியாமல் போய்விட்டதே என்று மருகிக் கொண்டிருந்தாள் மகள்…



எவ்வளவு நேரம் இருந்தாளோ ஒருவாறு அவள் எழுந்து ஹாலுக்குள் செல்ல வீடே வெறிச்சோடிக் கிடந்தது அவள் வாழ்வைப்போல…



வேலைக்காரர்களையும் அனுப்பி விட்டாள்…. அவள் இல்லாத சமயங்களில் மட்டும் ஜெயசுதாவை பார்த்துக் கொள்ள ஒரு நர்ஸை ஏற்பாடு செய்திருந்தாள்….





அலைப்பேசியை எடுத்து ஆர்யனுக்கு அழைத்துப் பார்க்க அவளது எண்ணை ப்ளாக் செய்து வைத்திருந்தான்… இவள் ஒவ்வொரு எண்ணாக மாற்றிக்கொண்டு அவனுக்கு அழைப்பதும் அவன் இவள்தான் என கண்டு கொண்டதும் அந்த எண்ணை ப்ளாக் செய்து வைப்பதும் என இதுவே வாடிக்கையாக இருந்தது….



ஒரு பெருமூச்சுடன் தன் அறைக்குள் சென்று குளித்து உடை மாற்றி வந்தவளை பின்னாலிருந்து அணைத்தன இரு வலிய கரங்கள்….



“வர்ஷூ…”



அவள் காதுக்குள் சூடான மூச்சுக்காற்றுடன் கலந்து ஒலித்தது அந்த குரல்…



காவ்யவர்ஷினியின் உடல் இறுகியது…. அவன் எப்படி தன் அறைக்குள் வந்தான் என்றெல்லாம் அவள் யோசிக்கவில்லை… அவன் ஒன்றை நினைத்துவிட்டால் அதை செய்துவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பான் என்பது அவளுக்கு நன்றாகவே தெரியும்….



அவளது கழுத்து வளைவில் முகம் புதைத்தவனின் கரங்கள் இன்னும் இன்னும் அவளை தன்னுடன் இறுக்கிக் கொண்டன…



இப்பவா அப்பவா என பொங்கி வரத்துடித்த கண்ணீரை அடக்கிக் கொண்டு சிலைபோல் நின்றிருந்தாள் காவ்யா… இப்போது அவள் வாயை திறந்தால் அது அவளுக்குத்தான் பாதகமாக முடியும்…. இறுதியில் அவன் காலில் விழுந்து கெஞ்ச வேண்டும்… கதற வேண்டும்…..



அவன் உதடுகள் அவள் கழுத்திலிருந்து முன்னேறி காது, கன்னம் என ஊர்வலம் நடத்த இறுதியாக அவளது முகத்தை மட்டும் திருப்பி இதழ்களை சிறை செய்ய விழையவும் அதற்குமேல் பொறுக்க முடியாமல் அவனிடமிருந்து தன்னை விடுவித்து விலகி நின்றவள் “ப்ளீஸ்…. ப்ளீஸ் ஹர்ஷா…. என்ன விட்டுடு…. என்… என்னால முடியல….” என்றாள் கண்ணீருடன்….



அதில் அவன் முகம் அதிருப்தியை பிரதிபலிக்க மீண்டும் கரம் நீட்டி அவளை தன் பக்கம் இழுத்துக் கொண்டவன் “உன்ன விடுறதுக்கா இத்தன வருஷம் கழிச்சி திரும்ப வந்திருக்கேன்….” என்றான் சிவந்திருந்த அவளது கன்னத்தை வருடியபடி…. “அப்படில்லாம் ஈஸியா விட்டுடுவேன்னு நினைக்கிற நீ….”





மறு பேச்சு பேச முடியாமல் அவள் விழிகள் பொல பொலவென்று கண்ணீரை சொரிந்து கொண்டிருந்தன….



“நான் செஞ்சதெல்லாம் தப்புதான்… அதுக்காக என்ன தண்டனை கொடுத்தாலும் ஏத்துக்கிறேன்… இது… இது வேண்டாம்…. ப்ளீஸ்….” கெஞ்சினாள்…



அவன் உதடுகள் ஏளனமாக வளைந்தன…. “உனக்கு த்ரீ மன்த்ஸ் டைம் கொடுத்தேன்… அதுல ஒரு மாசத்த ஊர விட்டு ஓடிப்போய் வேஸ்ட் பண்ணிட்ட… இன்னும் ரெண்டு மாசம் இருக்கு…. நீ என்ன பண்ணுவியோ தெரியாது…” என்றவன் அவள் கழுத்தில் கிடந்த தாலியை இழுத்து வெளியே எடுத்தவன் “அதுக்கப்புறம் ஒருநாள் கூட இது உன் கழுத்துல இருக்க கூடாது….” என்றான் கட்டளையிடும் தொனியில்….



“என் உயிரே போனாலும் அது நடக்காது…..” அவனது பேச்சினால் விழைந்த ஆத்திரத்தில் அவள் குரல் உறுதியுடன் ஒலித்தது….



“ஹாஹா….. அப்படியா…” சிரித்தான் அவன்.. “உன் புருஷன் உயிர் போனாலுமா….”



“ஹர்ஷா!!!” அதிர்வுடன் அவன் வாயில் கை வைத்து மூட, தன் வாயை மறைத்திருந்த அந்த விரல்களில் அழுத்தமாக முத்தமிட்டான்….



உடனே தன் கையை இழுத்து கொண்டவள் பின்பு விரக்தியுடன் அவனை பார்த்தாள்….



“கடவுள் ஏற்கனவே எனக்கு நிறைய தண்டனை கொடுத்துட்டார்…. நான் செஞ்ச பாவத்துக்கு என் வயித்துல வளர்ந்த என் குழந்தைய கூட இழந்துட்டேன்… இப்படி நீயும் என்னை கொல்லாத ஹர்ஷா…. செத்த பாம்பை எத்தன தடவைதான் அடிப்ப….” என்றவளை இரக்கமே இல்லாமல் பார்த்தான் அவன்….



“இப்போ என்ன ஸ்வீட்டி…. குழந்தை தானே வேணும்… உனக்கு எத்தனை குழந்தை வேணும்னாலும் நான் தரேன்… நீ நான் சொன்னத மட்டும் செய்…” என்றவன் “உன் கழுத்துல நான் கட்டுற தாலி மட்டும்தான் இருக்கனும் புரியுதா….” உத்தரவாக கூறினான்…



“ அப்புறம் எங்க என் மாமியார்.??”



அவன் அறையை விட்டு வெளியேறப் போவதை உணர்ந்து வேகமாக அவன் முன்னால் வந்து தடுத்தவள் “அம்மா…. அம்மா உடம்பு சரியில்லாதவங்க…. அவங்களுக்கு இது எதுவும் தெரிய வேண்டாம் ஹர்ஷா…. உன்ன கெஞ்சி கேட்டுக்கிறேன்….”



“உன் அம்மாவுக்கு தெரியாம எப்படி வர்ஷூ டார்லிங்…. எனக்கே பாடம் சொல்லிக் கொடுத்தவங்களாச்சே…. குருதட்சணை கொடுக்க வேணாம்….” அவள் கையை பற்றி தன்னுடன் அழைத்துக் கொண்டு முன்னேறினான்….



காவ்யாவால் அவனை தடுக்கவும் முடியவில்லை… உடலாலும் மனதாலும் மிகவும் சோர்ந்து போயிருந்தாள் அவள்…



ஜெயசுதாவின் அறைக் கதவை அவன் வேகமாக திறக்க அத்தனை நேரம் உறங்கிக் கொண்டிருந்தவர் அந்த சத்தத்தில் மெதுவாக கண்விழித்தார்….



கண்ணை சுருக்கி ஓரிரு நொடிகள் இவனை பார்த்தவர் அடையாளம் கண்டு கொண்டதும் அவர் விழிகளில் மெல்லிய அதிர்வு தோன்றி மறைந்தது….



“அட என் மாமியார் எவ்வளவு ஷார்ப் பார்த்தியா ஸ்வீட்டி… பார்த்த உடனே கண்டுபிடிச்சிட்டாங்க….”



“ஹர்ஷா… ப்ளீஸ் வெளிய போகலாம்…. அம்மா பாவம் அவங்கள விட்டுடு….” அவன் கை பிடித்து வெளியேற்ற முயல “என்ன வர்ஷூ இது…. உன் அம்மா முன்னாடியே இப்படி கை புடிச்சி இழுக்கிற…. இதெல்லாம் நான் உன் கழுத்துல தாலி கட்டினதுக்கு அப்புறம் தனியா நம்ம ரூம்ல வெச்சிக்கலாம்…. இப்போ நான் அத்தைகிட்ட பேசிட்டு வர்ரேன் விடு…. எங்க ரெண்டு பேருக்கும் தீர்த்துக்க வேண்டிய பழைய கணக்கு நிறையவே இருக்கு….” என்றவன் ஜெயசுதாவின் அருகில் கிடந்த இருக்கையை இழுத்துப் போட்டுக்கொண்டு அமர்ந்தான்….



பின்பு “ஆமா உன் அம்மாவ நான் எப்படி கூப்பிடுறது ஸ்வீட்டி… முன்னால் மாமியார்னா??? இல்ல வருங்கால மாமியார்னா???” அவளிடம் சந்தேகம் கேட்டான்….



பின் அவனே “சரி விடு ஏதோ ஒரு மாமியார்…..” என்றவன் பின்னால் சாய்ந்து கால்மேல் கால் போட்டுக்கொண்டு தோரணையாக உட்கார்ந்தான் “அப்புறம் அத்தை…. எப்படியிருக்கீங்க…. இருந்தாலும் இவ்வளவு சின்ன வயசுல உங்களுக்கு இப்படி ஆகியிருக்க வேணாம்… உங்க கெத்துக்கு உங்கள இப்படி பார்க்க எனக்கே ஒரு மாதிரிதான் இருக்கு….” என்றான் ஏகத்துக்கும் சோகமாக…



“இப்போ பாருங்க உங்க சப்போர்ட் இல்லாம தனியா என் ஸ்வீட்டி எவ்வளவு கஷ்டப்படுறா….” என்றவனை அந்த நிலையிலும் கூர்மையுடன் ஏறிட்டன ஜெயசுதாவின் விழிகள்…. “அதுக்காக எல்லாம் நீங்க ஃபீல் பண்ணாதீங்க அத்தே….”



கலைந்து, களைத்து, வெளிறிப்போய் நின்றிருந்த காவ்யாவை இழுத்து தன் மடியில் இருத்திக் கொண்டவன் “இனிமேல் ஸ்வீட்டி என் பொறுப்பு….” என்றான்….



இப்போது ஜெயசுதாவின் முகத்தில் பயத்தின் ரேகைகள்….



“உங்க பொண்ண எப்படில்லாம் வாழ வைக்கனும்னு ஆசைப்பட்டீங்க…. மகாராணி மாதிரி…. அதுக்காக என்ன எல்லாம் பண்ணியிருப்பீங்க….”



அவன் பேசினான்…. அவன் பேசப்பேச ஜெயசுதாவின் முகம் இருண்டு கொண்டே சென்றது…. காவ்யா முகத்தை மூடிக்கொண்டு அழவே ஆரம்பித்துவிட்டாள்….



இருவரின் கலங்கிய முகங்களையும் வெகு திருப்தியுடன் பார்த்தவன் “ஓகே… டைம் ஆச்சு… என் பொண்டாட்டி எனக்காக வெய்ட் பண்ணிட்டு இருப்பா… நான் கிளம்பட்டுமா அத்தை….” அவரிடம் விடைபெற்றுக் கொண்டு அவரது பார்வைக்கு முன்பாகவே காவ்யாவின் கன்னத்திலும் நெற்றியிலும் அழுத்தமாக முத்தமிட்டான்….



“வரேன் ஸ்வீட்டி…..”



அவன் சென்றுவிட்டான்…



உடல் தகிக்க தாங்க முடியாமல் தரையில் சரிந்து கதறியழுது கொண்டிருந்த தன் மகளை ஆற்றவும் முடியாமல் தேற்றவும் முடியாமல் போன தன் நிலையை எண்ணி உள்ளுக்குள் நொறுங்கிக் கொண்டிருந்தார் ஜெயசுதா….







***********************************************








ஹர்ஷா வீட்டுக்கு வரும்போது ஹால் சோபாவில் உட்கார்ந்து கொண்டு ஆராத்யா செய்து கொடுத்திருந்த சாக்லேட் புடிங்கை ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான் சதீஷ்….



இவனை கண்டதும் சதீஷ் சட்டென்று எழுந்து கொள்ள முயல உட்கார் என்பது போல் செய்கை செய்தவன் ஆராவை தேடி சமயலறைக்குள் சென்றான்…



அவனுக்கு முதுகு காட்டி நின்றபடி எதையோ செய்து கொண்டிருந்தவளின் பின்னால் வந்து நின்றவன் “உன்கிட்ட எத்தன தடவ சொல்லிருக்கேன் நீ இதெல்லாம் பண்ண வேண்டாம்னு….” என்றவனை நோக்கி திரும்பியவள் எதுவும் பேசாமல் தன் கையிலிருந்த புடிங் நிறைந்த கரண்டியை அவன் வாயிருகில் கொண்டு ஊட்டிவிட மறுக்காமல் வாயை திறந்து வாங்கிக் கொண்டவன் அதன் சுவையில் “ம்ம்ம் டிலிசியஸ்…. கலக்குறடி பொண்டாட்டி….” என்றான்….



முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டவள் “இவ்ளோ நேரமா எங்கே போயிருந்தீங்க…. கால் பண்ணாலும் எடுக்கல… ரொம்ப நேரமா தனியாவே இருந்தேன் தெரியுமா… நல்லவேள சதீஷ் அண்ணா வந்தாங்க….” என்றாள் கோபமாக….



“நீ தனியா இருப்பேன்னு தான் அவனை அப்பவே போக சொன்னேன்…. இடியட் இப்போதான் வந்திருக்கான் போல….” என்றவன் “சாரிடா ஆரா… ஒரு இம்பார்டன்ட் மீட்டிங்….” அவள் காதோரமாக சரிந்து கிடந்த கூந்தலை ஒதுக்கி விட்டான்….



“வேற யாரையாவது அனுப்பிருக்கலாம்ல…. நீங்கதான் போகனுமா…” அவனுக்கு ஊட்டிவிட்டபடியே கேட்டாள்..:



“நோ நோ…. இந்த க்ளையன்ட் ரொம்ப ரொம்ப முக்கியமானவங்க… இதே நான்தான் டீல் பண்ணனும்…. சாரிடா தங்கம்….”



“என்னமோ போங்க…. இனிமேல் இந்த மாதிரிலாம் லேட் ஆக கூடாது… இப்பவே சொல்லிட்டேன்….” அவள் சொல்லிக் கொண்டிருக்க நெற்றியை பிடித்துக் கொண்டு “ஷ்ஷ்ஷ்…..” என்றான் அவன் “லைட்டா தல வலிக்கிற மாதிரி இருக்குடா…..”



“ஹையோ என்னாச்சிங்க….” அவள் பதட்டமாக,



“தெரில்லயே…”



“சரி… நீங்க ரூம்ல போய் ரெஃப்ரெஷ் பண்ணிட்டு வாங்க… நான் இப்போ சூடா காபி போட்டு எடுத்துட்டு வரேன்….”



இவள் காபியை கலந்து கொண்டு செல்லவும் அவன் வாஷ்ரூமில் இருந்து வெளியே வரவும் சரியாக இருந்தது…



இடுப்பில் டவலை மட்டும் கட்டிக்கொண்டு வந்தவனை கண்டு உடனே திரும்பி நின்று கொண்டவள் “காபி….” என்க, அவளது செயலால் விழைந்த சிரிப்பை அடக்கிக் கொண்டவன் “ஒன் மினிட் ஆரா….” என்றுவிட்டு வேகமாக உடைமாற்றிக் கொண்டு வந்தான்…



அவனுக்கு சூடாக காபியும் தலைவலிக்காக மாத்திரையும் கொடுத்தவள் கூடவே அவன் நெற்றியில் ஆயின்ட்மென்டும் தடவி மசாஜ் செய்து விட்டாள்….



அவனுக்கு அது இதமாக இருந்திருக்க வேண்டும்…. அவள் மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டவன் “இப்டியே மசாஜ் பண்ணிட்டு இருடா… சுகம்மா இருக்கு…..” என்று கண்ணை மூடி உறங்க ஆரம்பித்துவிட்டான்….



மிகப்பெரும் தொழில் சம்ராஜ்யத்தையே தனியாளாக கட்டி ஆள்பவன்….. அரசியல்வாதிகள் முதல் பெரும் தொழிலதிபர்கள் வரை பலரும் அவன் முன்னால் கை கட்டி வாய் பொத்தாத குறையாக நின்று பேசிக் கொண்டிருப்பதை அவளே இங்கு வந்ததிலிருந்து பலமுறை பார்த்திருக்கிறாள்….



அப்பேர்ப்பட்டவன் சிறு குழந்தை போல் தன் மடியில் படுத்துக் கொண்டிருப்பதை கண்டவள் மனதில் தாய்மை சுரந்தது… தன்னையறியாமலே குனிந்து உறங்கிக் கொண்டிருந்தவனின் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டாள் ஆராத்யா….



பின்புதான் தான் செய்த விடயம் உறைக்க வெட்கம் பிடுங்கி தின்றதில் “நல்லவேள தூங்கிட்டான்…” என்று நினைத்தவள் மிகவும் சிரம்ப்பட்டு தன் மடியில் படுத்திருந்தவனின் தூக்கம் கலையாமல் அவனை புரட்டி தலையணைக்கு மாற்றி விட்டு அங்கிருந்து ஒரே ஓட்டமாக ஓடிவிட்டாள்….



ஹர்ஷா காலையில் எழுந்து பார்க்கும்போது ஆராத்யா அருகில் இல்லை…. நேரத்தை பார்த்தான் மணி ஐந்து என காட்டவே நேற்றைய நினைவில் தன் அலைப்பேசியை எடுத்துப் பார்த்தான்….



காவ்யாவும் அவனும் வெகு அருகாமையில் கன்னத்தோடு கன்னம் உரச நின்றிருந்த அந்த ஃபோட்டோவை கண்டதும் அவனுக்கு இப்போதே அவளை பார்க்க வேண்டும் போல இருந்தது…



அவளுக்கு அழைத்தான்…..



அவனது அழைப்பை அவள் ஏற்கவில்லை….



மீண்டும் பலமுறை அழைத்துப் பார்த்தவன் அவளிடமிருந்து பதில் இல்லை எனவும் “இருக்குடி உனக்கு….” என்று கறுவிவிட்டு கடுப்புடன் எழுந்து சென்றான்….



கீழே ஆராத்யா பூஜையறையில் நின்றிருந்தாள்… கண்மூடி வணங்கி நின்றவள் இவன் வந்ததையோ எதிரில் நின்று அவளையே பார்த்துக் கொண்டிருந்ததையோ அறியவில்லை…



வெகு நேரத்திற்கு பிறகு கண்ணை திறந்து பார்த்தவள் தன் எதிரில் கைகளை குறுக்காக கட்டியபடி சிரிப்பை அடக்கிக் கொண்டு நின்றிருந்தவனை கண்டு திருதிருவென விழித்தாள்… ‘எப்ப வந்தான்னு தெரில்லயே….’



“எ… என்ன… எதுக்கு இப்டி பார்க்கிறீங்க??”



“இல்ல ரொம்ப நேரமா கண்ண மூடிட்டு ஏதோ தியானம் பண்ணிக்கிட்டு இருந்தியே… அதான் என்னன்னு பார்த்தேன்…”



அதில் பல்லை கடித்தவள் “இதுக்கு பேரு தியானம் இல்ல… சாமி கும்பிடுறது….”



“ஓஹ்… அதை அப்படி கூட சொல்லுவாங்களா….” என்றவனை முறைத்தவள்,



“ஆமா… காலையில சீக்கிரம் எழுந்திருச்சி, குளிச்சி, பூஜை பண்ணி சாமிகிட்ட வேண்டிகிட்டா கேக்கிறதெல்லாம் கிடைக்கும்….” என்றாள்….



“அட நிஜமாவா… இது தெரியாம இத்தன வருஷமா ராப்பகலா கஷ்டப்பட்டு உழைச்சிருக்கேன் பாரு…. முன்னாடியே தெரிஞ்சிருந்தா காலையிலயே எழுந்திரிச்சி பூஜை பண்ணிட்டு வீட்டுலயே உட்கார்ந்திருப்பேன்… காசு பணம் கூரைய பிச்சுக்கிட்டு கொட்டிருக்கும்… இதை எனக்கு அப்பவே சொல்லி தர்ரதுக்கு என் ஆரா செல்லம் இல்லாம போயிட்டாளே….” முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு கூறினான்….



“என்ன நக்கலா…. எதுல வேணாலும் விளையாடுங்க… கடவுள் கூட விளையாடாதீங்க அப்புறம் எனக்கு கெட்ட கோபம் வரும்….” என்றாள் அவளும் சீரியஸாக….



“சரி… ஓகே ஓகே… கூல்…. ஆமா என்ன வேண்டிக்கிட்ட இவ்வளவு நேரமா….” என்றான் கேள்வியாக…



“அது யாருக்கும் சொல்லக்கூடாதாம்…. சொன்ன பலிக்காதாம்….” என்றவள் “உங்களுக்கும் ஏதாவது வேண்டிக்கனும்னா சொல்லுங்க… வேண்டிக்கிறேன்…..” சேர்த்து சொன்னாள்…



“அப்படியா….” என்று தாடையை தடவியவன் “ம்ம்ம்…. என் மனசுல ஒன்னு நினைச்சிருக்கேன்…. அது நல்லபடியா நடக்கனும்னு வேண்டிக்க….” என்றான்…



“அப்படி என்ன நினைச்சிருக்கீங்க…. உங்க மனசுல…” புரியாமல் கேட்டவளிடம் “அது வெளிய சொல்லக்கூடாதாம்… சொன்னா பலிக்காதாம்….” என்றுவிட்டு போனான் அவன்….



“ராஸ்கல்… என்கிட்டயேவா….” என்று செல்லமாக அவனை வைதாலும் அவன் சொன்னதை மறக்காமல் வேண்டிக் கொண்டாள் ஆராத்யா….








********************************************









பரபரப்பான அந்த ஏர்போட்டில் வழக்கத்துக்கும் மாறாக வேக எட்டுக்களை வைத்து முன்னேறி வந்து கொண்டிருந்தான் அவன்….



முகத்தை மறைக்க மாஸ்க் மற்றும் சன் கிளாஸ் அணிந்திருந்தாலும் அப்போதும் அவனை ஒருசிலர் அடையாளம் கண்டு ‘தலைவா’ ‘தேஜா’ என்ற கூப்பாடுடன் நெருங்கி வரத்தான் செய்தனர்….



முன்பென்றால் ஏர்போட்டில் யார் அவனை கண்டு வந்தாலும் நின்று நிதானமாக அவர்களுடன் பேசி, செல்ஃபி எடுத்து விட்டுத்தான் செல்வான்…. இப்போது அவன் இருக்கும் மனநிலையில் அவனுக்கு சுத்தமாக பொறுமை இல்லை… எப்போது சென்று சேருவோம் என்றிருந்தது…



ஏர்போட்டில் இருந்து வெளியே வந்ததும் தனக்காக காத்திருந்த வண்டியை நெருங்கியவன் டிரைவர் சீட்டில் உட்கார்ந்திருந்தவனை இறங்க சொல்லிவிட்டு தானே வண்டியை ஓட்ட ஆரம்பித்தான்….



அசுர வேகத்தில் வண்டியை செலுத்திக் கொண்டிருந்தவன் மனதில் இருந்ததெல்லாம் எப்படி இப்படி நடந்தது என்பதுதான்… அவனுக்கிருந்த நேரமின்மை காரணமாக கொஞ்சம் அசால்ட்டாக இருந்துவிட்டான்… அதற்குள் காத்திருந்தவன் பெண்டாட்டியை நேற்று வந்தவன் தூக்கிச் சென்றதுபோல் இப்படியாகி விட்டது….



நினைக்க நினைக்க அவனுக்கு உடம்பெல்லாம் தீப்பற்றி எரிவதைப்போல் ஆத்திரமாக இருக்க அந்த ஆத்திரத்தில் அவன் கார் இன்னும் வேகமெடுத்தது….



அலுவலகம் செல்வதற்காக தயாராகி வந்த காவ்யா தன் காரை எடுப்பதற்காக நெருங்க எதிரில் புயல் வேகத்தில் சீறிப்பாய்ந்து வந்து நின்றது அந்த கார்….



ஹர்ஷாதான் வந்துவிட்டானோ என மிரட்சியுடன் இவள் பார்த்திருக்க உள்ளிருந்து இறங்கியவனை கண்டதும் பயம் அகன்று முகம் மலர “தேஜ்…” என்றபடி அவனை நெருங்கினாள் காவ்யா…



“என்னடா திடீர்னு வந்திருக்க….. சொல்லாம கொள்ளாம…” அடுத்த நொடி கன்னத்தில் பொறி பறக்க தரையில் விழுந்து கிடந்தவளிடம்,,



“எதுக்காகடீ ஆராவுக்கு கல்யாணம் நடந்தத என்கிட்ட சொல்லாம மறைச்ச…..” என்று உறுமிக் கொண்டிருந்தான் தேஜாஸ்வின்….










குளிரும்…..
 

Banu swara

Moderator
தீ 6








தன் கையிலிருந்த டீப் கிறீன் மற்றும் வைன் ரெட்டில் தங்க நிற வேலைப்பாடுகள் நிறைந்த அந்த லெஹங்காவை ஆசையுடன் தடவி பார்த்துக் கொண்டிருந்தாள் ஆராத்யா.. எடை நான்கு ஐந்து கிலோ இருக்கும் போல அத்தனை கனமாக இருந்தது..



ஆனால் அதன் வடிவமைப்பு வேற லெவலில் இருந்தது.. ஏற்கனவே அளவு சரி பார்ப்பதற்காக அணிந்திருந்தாலும் ஆராத்யாவுக்கு மீண்டும் அணிந்து பார்க்க வேண்டும் போல ஆசையாக இருந்தது... ஆனால் நாளை மேக்கப் செய்த பிறகு தான் அணிந்து கொள்ள வேண்டுமென கூறியிருந்ததால் கையில் வைத்து பார்த்துக் கொண்டிருந்தாள்…



பிரியா திவ்யா இருவரும் அவளை தேடி வந்தவர்கள் ப்ரியா ஆராவிடம் "ஆரா நீ இந்த வீட்டை பார்த்தியா இல்லையா..." என்றாள் கேள்வியாக... "ஹப்பா செம்மயா இருக்கு தெரியுமா...."



"துபாய் வீடுன்னா அப்டித்தான்டி இருக்கும்..." என்றாள் திவ்யா..



அதே நேரம் காவ்யாவும் மாளிகை போன்றிருந்த அந்த வீட்டை பிரம்மிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.. அந்த வீடு அவளுக்கு வேறு எதையோ நியாபகபடுத்த, ஏதோ ஒரு காலத்தில் எந்த நாடு என்பது கூட அவளுக்கு நினைவில் இல்லை.. அந்த வீடு மட்டுமே கனவு போல கலங்கலாக நினைவிருந்தது...



விழி விரிய அவனிடம் "ஹர்ஷா !!! இந்த வீடு எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு.. நம்மளும் கல்யாணத்துக்கு அப்புறம் இதே மாதிரி ஒரு வீடு கட்டணும்..." அவள் சொன்னதும், "நீ சொல்லிட்டேல்ல செஞ்சிடுவோம் ஸ்வீட்டி.." என அவன் பதிலளித்ததும் நினைவில் வந்து அவள் மனதை கனக்க செய்தது..



தான் இங்கு வந்ததே தவறோ என தோன்ற தொடங்கியிருக்க, அவளது வருகைக்கு ஒரே காரணம் ஆர்யன் மட்டுமே... ஏற்கனவே திருமணத்திற்கு அவளால் வர முடியவில்லை.. இப்போது ரிசப்ஷனுக்கும் செல்லாவிட்டால் நிச்சயமாக கணவனது பெருங்கோபத்துக்கு ஆளாக வேண்டிவரும் என்று தான் வந்திருந்தாள்.. அவளது கெட்ட நேரம் அவள் வந்தும் அவன் வரவில்லை... பெரியவர்களும் அழைத்துப் பார்த்துவிட்டார்கள் அவனிடமிருந்து எந்த தகவலும் இல்லை..



சிங்கத்தின் குகைக்குள் சிக்கியது போல் எப்போது ஹர்ஷாவிடம் சிக்கிக் கொள்வோம் என அது வேறு பயமாக இருந்தது அவளுக்கு...



ஒரே ஒரு நிம்மதி குடும்பத்தினரையும் ஆராவையும் வைத்துக் கொண்டு அவன் தன்னிடம் வேறுவிதமாக நடந்துகொள்ளமாட்டான் என்பது மட்டுமே... அன்றும் அவர்கள் வீட்டில் அனைவர் முன்னிலையிலும் அவளுக்கு வணக்கம் சொன்னதோடு சென்றுவிட்டான்... வேறு அவளை தெரிந்ததுபோல் எல்லாம் அவன் காட்டிக் கொள்ளவில்லை...



எதற்கும் என்று மற்றவர்களுடன் சேர்ந்து தான் நின்று கொண்டிருந்தாள்.. தனியாக அந்த பக்கம் இந்த பக்கம் நகரவில்லை...



பெரியவர்களுக்கான அறைகள் கீழ்த்தளத்தில் ஒதுக்கப் பட்டிருக்க இளையவர்களுக்கான அறைகள் மேல்தளத்தில் இருந்தன... மணமக்களின் அறையும் அங்கேயே இருந்தது.... அதிகாலையில் எழுந்துவிட வேண்டும் என்பதற்க்காக ஆராவை நேரத்துடன் உறங்க சொல்லியிருந்தான் ஹர்ஷவர்த்தனா..



நாளை முழுக்க ஆராவுடன் இருக்க வேண்டும் என்பதற்காக ப்ரியா மற்றும் திவ்யாவும் அப்போதே உறங்க சென்று விட்டார்கள்...



காவ்யா பத்மாவதியுடனோ சத்யமூர்த்தியுடனோ அதிகம் பேசமாட்டாள்.. கௌசல்யா மற்றும் கிருஷ்ணமூர்த்தியுடன் தான் நன்றாக பேசுவாள்.. அவர்களுடனும்தான் எத்தனை நேரம் பேசிக்கொண்டிருக்க முடியும்.. கௌசல்யா உறங்க சென்றுவிட தானும் எழுந்து கொண்டவள் வேகமாக அவளுக்கும் ஆர்யனுக்குமான அறைக்குள் செல்லப்போக வழியிலேயே அவளை இடைமறித்தான் ஹர்ஷா...



அவனைக் கண்டு மிரண்டு போய் நின்றவளை அருகில் இருந்த அறைக்குள் தள்ளி கதவை தாழிட்டவன்,,"அப்புறம் ஸ்வீட்டி ரொம்ப டல்லா இருக்கிற மாதிரி தெரியுது... என்ன உன் புருஷன் வரலைன்னு ரொம்ப வருத்தமோ.." என்றான் நக்கலாக... "கவலைப்படாதே இப்போதைக்கு அவன் இந்த பக்கமே வரமாட்டான்..."



இவனுடைய இடம் என்று தெரிந்திருந்தும் இங்கு வந்தது தன்னுடைய முட்டாள்த்தனம் என எண்ணினாளோ என்னவோ எதுவும் பேசாமல் மௌனமாக நின்றிருந்தாள் காவ்யா...



"உன் புருஷனுக்கு ஒரே நேரத்துல மூனு ப்ராஜெக்ட் கிடைச்சிருக்கு.. அவனால அந்த பக்கம் இந்த பக்கம் நகரக்கூட முடியாது.."



அப்போதும் அவள் பதில் பேசவில்லை...



"என்ன ஸ்வீட்டி எதுவும் பேசமாட்டேங்கிற... வாயில ஏதாவது வெச்சிருக்கியா என்ன??" என்றான்.. "நான் வேணும்னா என்ன வெச்சிருக்கன்னு டெஸ்ட் பண்ணி பார்க்கவா" என்றபடி அவள் முகம் நோக்கி குனிய அதுவரை பல்லை கடித்துக்கொண்டு நின்றவள் அவனை அறைவதற்காக கையை ஓங்கிய நேரம் நொடியில் அவள் கையை பற்றித் தடுத்தவன் "என்கிட்டயே உன் வேலைய காட்டுறியா.." என்றபடி அவள் இதழ்களை அழுத்தமாக சிறை செய்தான்...



அவனிடமிருந்து விடுபட போராடியவள் முடியாமல் போக இறுதியில் அவனாக விடுவித்தபோது அவன் முகத்திலேயே காறித்துப்பிவிட்டாள் காவ்யா…



“அடுத்தவன் பொண்டாட்டிக்கிட்ட இந்த மாதிரி நடந்துக்க உனக்கு வெட்கமா இல்ல….” ஆங்காரமாக கேட்டாள்…



“இல்லையே….” என்றான் அவன்… “அடுத்தவன் பொண்டாட்டியா ஆகுறதுக்கு முன்னாடி நீ என்கூட எப்படில்லாம் இருந்தேங்கிறதை மறந்துட்டு பேசுறியே ஸ்வீட்டி… ஒன்னு ஒன்னா நியாபக படுத்தவா….” என்று அவன் சொல்ல ஆரம்பிக்க அவள் தன் காதுகளை பொத்திக் கொண்டாள்….



"என்னைக்கு இருந்தாலும் எனக்கு சொந்தமாக போறவன்னு நீயா வந்தப்ப கூட எதுவுமே பண்ணாம விட்டு வெச்சிருந்தேன்... ஆனா நீ என்ன பண்ண??" நிறுத்தி ஒற்றை புருவத்தை உயர்த்தியவன் "ஒருத்தன் ஒரு தடவதான்மா ஏமாற முடியும்..." என்றான்..



“இப்ப நீ என்ன பண்ற நீ துப்புனத நீயே உன் நாக்கால துடைச்சி விடுற… இல்லைன்னு வெச்சிக்க…. உனக்கே தெரியும் அடுத்து என்ன நடக்கும்னு….” விழிகள் பளபளக்க கூறியவன் தன் முகத்தை அவளுக்கு நெருக்கத்தில் கொண்டு சென்று “கமான் டூ இட்…” என்றான் கட்டளையாக….



அழுகை முட்டிக் கொண்டு வர இந்த நொடியே ஏதாவது நடந்து தன் உயிர் போய்விடாதா என நினைத்துக் கொண்டிருந்தவளை காப்பாற்ற கடவுளாக அனுப்பி வைத்தாரோ என்னவோ “அத்தான்… அத்தான் உள்ள இருக்கீங்களா???…. “ என்றபடி அந்த அறையின் கதவை படபடவென தட்டிக் கொண்டிருந்தான் நகுலன்….



“ஷிட்….” என்றபடி பேன்ட் பாக்கெட்டிலிருந்த கைக்குட்டையை எடுத்து வேகமாக தன் முகத்தை துடைத்துக் கொண்டவன் அங்கிருந்த வாஷ்ரூமிற்குள் காவ்யாவை தள்ளிவிட்டு சென்று கதவை திறந்தான்…



“என்ன நகுல் இங்க என்ன பண்ற….” என்க,, அவன் கேட்ட தோரணையில் லேசாக பயந்தவன் “இல்ல… நீ… நீங்க பேசின மாதிரி சத்தம் கேட்டது… அதான்….” என்றான் தயக்கத்துடன்…. ‘ஏன் இங்கு வந்தோம்…’ என்பதுபோல் ஆகிவிட்டது நகுலனுக்கு….



“ஃபோன்ல பேசிட்டு இருந்தேன்…. நீ இன்னுமா தூங்கல….” கடுப்புடன் கேட்டான்….



“இல்ல இப்போ தூங்கத்தான்….” என்றவன் விட்டால் போதுமென அங்கிருந்து ஓடிவிட்டான்….



அவன் சென்று மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்தவன் வாஷ்ரூமிற்குள் மறைந்திருந்த காவ்யாவை இழுத்து மீண்டும் முத்தமிட்டவன் பின்பு “இனி இங்க இருக்க வேண்டாம்… உன் ரூம்க்கு போ….” என்றுவிட்டு வேகமாக அங்கிருந்து வெளியேறினான்…



தன்னுடைய அறைக்குள் வந்து சேர்ந்தவனுக்கு காவ்யாவுடனான தனிமை கலைந்து விட்டதாலோ என்னவோ எரிச்சலாக இருந்தது….



கடுப்புடனே குளித்து உடைமாற்றிக் கொண்டு வந்து படுத்தவன் அருகில் உறங்கிக் கொண்டிருந்த ஆராத்யா தூக்கத்தில் அவன் மீது தன் கையை போட்டுவிட அவ்வளவுதான் அவன் எட்டி உதைத்து தள்ளிய வேகத்தில் புரண்டு சென்று கட்டிலிலிருந்து கீழே விழுந்துவிட்டாள்….



ஏதோ சுழலில் சிக்கி அடித்து வரப்பட்டதை போல வலித்ததில் துடித்துப்போய் கண் விழித்துப் பார்க்க எதிரில் சிவந்த விழிகளுடன் கட்டிலில் உட்கார்ந்திருந்தவனை கண்டவள் தனக்கு என்னவானது என்பது போல் அவனை புரியாமல் பார்த்தாள்,,


“என்னங்க என்னாச்சு….”

“என்ன பொண்ணுடி நீ… உன்மேல கை போட்டா இப்படித்தான் தட்டிவிட்டுட்டு கீழ போய் விழுவியா….” எரிந்துவிழுந்தான் அவன்….

‘என்னது கை போட்டானா….’ அவளுக்கு சுத்தமாக நியாபகமே இல்லை….

“என்ன பார்த்தா உனக்கென்ன பொம்பள பொறுக்கி மாதிரியா தெரியுது….. தூக்கத்துல தெரியாத்தனமா கை போட்டா இப்படி சீன் போடுற……” என்றவனை இடைமறித்தவள் “ஹையோ இல்லைங்க…. நீங்க எப்ப கை போட்டீங்க… எனக்கு நிஜமாவே எதுவும் தெரியல…. நான் எதுக்குங்க உங்க கைய தட்டிவிட போறேன்…. தூக்கத்துல தெரியாம செஞ்சிருப்பேங்க… சாரி….” தூக்கம் பறந்தோட தனக்கு வலித்ததையும் மறந்து அவனுடைய கோபத்தை போக்க முயன்றாள்….

“உன் மனசுல என்ன பெரிய அழகின்னு நினைப்பா…” என்று சீறியவன் “இனிமேல் என் பக்கத்துல வந்துடாதே…. சை….” என்றுவிட்டு மறுபக்கம் சென்று தூங்க ஆரம்பித்துவிட்டான்….

விக்கித்துப்போய் அவனை பார்த்திருந்தாள் ஆராத்யா….

இத்தனை நாள் அன்பை மட்டுமே காட்டியிருந்தவனின் முதல் கோபத்தில் மிரண்டுதான் போனாள் பெண்ணவள்… அழுகை பொத்துக் கொண்டுவர வெகுநேரம் அப்படியே உட்கார்ந்திருந்தவளுக்கு எவ்வளவு முயன்றும் என்ன நடந்தது என்பது சுத்தமாக நியாபகம் வரவில்லை….

“நான் வேணும்னு எதுவும் பண்ணல…” என தனக்குள்ளே சொல்லிக் கொண்டவள் தன்மீதுதான் தவறு என நினைத்து வருந்தினாலே தவிர அவன்தான் தள்ளிவிட்டான் என்பதை அறியாமலே போனாள்…

கட்டிலின் ஒரு ஓரமாக முடங்கிக் கொண்டவளுக்கு அதன்பிறகு தூக்கம் விடைபெற்று செல்ல இரவெல்லாம் பொட்டுக் கண் மூட முடியவில்லை அவளால்….







**********************************************












கடலுக்கு நடுவே ஒரு பனைமரத் தீவையே உருவாக்கி அதில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருந்த அட்லாண்டிஸ் நட்சத்திர விடுதியின் கடலோரமாக ஹர்ஷவர்த்தனா மற்றும் ஆராத்யாவின் திருமண வரவேற்பு கோலாகலமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது…..



அனைவரும் ஆட்டம், பாட்டம் என கொண்டாடிக் கொண்டிருக்க ஒருசில ஜீவராசிகள் மட்டும் எப்போதடா இதெல்லாம் முடியும் என்பது போல் நின்றிருந்தார்கள்… அதில் மணமக்களும் அடக்கம்….



வாடிய கொடிபோல் சோகமாக நின்றிருந்தாள் ஆராத்யா…. அவள் அருகில் இறுகிய முகத்துடன் அவளது கணவன் ஹர்ஷவர்த்தனா…



விடிந்ததில் இருந்து அவளிடம் ஒற்றை வார்த்தை பேசவில்லை அவன்… கண்ணில் படுபவர்களிடமில்லாம் எரிந்து விழுந்து கொண்டிருந்தான்… ஏனோ தன்மீது இருக்கும் கோபத்தில்தான் இப்படியெல்லாம் நடந்து கொள்கிறான் என நினைத்து அவள் பேச முயற்சித்த போதெல்லாம் அவளை கண்டும் காணாததுபோல் புறக்கணித்துக் கொண்டிருந்தான்…



அவனை ஓரளவுக்காவது நெருங்க முடிந்தது அவனது உயிர் நண்பர்களான யதுவீர் மற்றும் சந்தீப் இருவர் மட்டுமே… அவர்களுடன் மட்டும்தான் முகம் கொடுத்து பேசிக் கொண்டிருந்தான்…



ஆராத்யாவுக்கு அழுகையே வந்துவிடும் போல இருந்தது… எத்தனை ஆசையாக இந்த உடையை அணிந்து பார்க்க வேண்டும் என்று காத்திருந்தாள்… இந்த உடையில் அவளை கண்டு விழிகள் மின்ன அவன் ஏதாவது சொல்வான் என எதிர்பார்ப்புடன் இருந்தவளுக்கு இப்போது இந்த உடையே ஒரு பாரமாக இருந்தது… அவன்தான் அவள் பக்கமே திரும்பவில்லையே…



அவளது நிலை இப்படியென்றால் அவனுக்கோ உள்ளுக்குள் எரிமலையே கனன்று கொண்டிருந்தது… அதற்கு காரணம் அவன் எதிரில் ஜோடியாக கைகோர்த்து நின்றிருந்த ஆர்யனும் காவ்யாவும்தான்…



அதிகாலையிலேயே வீட்டு வாசலில் வந்து இறங்கிய ஆர்யனை கண்டு கடுப்பானவன் “எப்படி..??” என்பதுபோல் தன் நண்பர்களை பார்க்க அவர்கள் தங்களுக்கு தெரியாது என்பது போல் தலையை குனிந்து கொண்டார்கள்….



அப்போது ஆரம்பித்ததுதான் இந்த கொதிநிலை… நேரம் செல்லச்செல்ல உச்சமடைந்து கொண்டே சென்றது…



ஆர்யன் வரவேமாட்டான் என எண்ணிக் கொண்டிருந்த காவ்யாவுக்கு அவனது இந்த திடீர் வரவு எல்லையில்லா மகிழ்ச்சியை கொடுத்தது என்றால் மிகையில்லை... இன்னும் ஒரேயொரு இரவு தான் இந்த நாட்டில் இவனது வீட்டில் தங்கியிருக்க வேண்டும்.. அதற்குள் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என பயந்துபோய் இருந்தவள் கணவனை கண்டதும் அட்டைபோல் அவனுடன் ஒட்டிக்கொண்டாள்...



அது ஹர்ஷாவுக்கு ஒரு பக்கம் கடுப்பை கிளப்பியது என்றால் அவனைவிட நூறு மடங்கு அதிகமாக ஆர்யனுக்கு கடுப்பை கிளப்பியது... அவனும் குடும்பத்தினரின் கருத்தை கவராது பலமுறை அவளிடம் சொல்லிப் பார்த்துவிட்டான்.. கேட்டால்தானே.... அவன் கையுடன் தன் கையை கோர்த்துக்கொண்டு வேறு நின்றிருந்தாள்...



உணவு நேரத்தில் ஆரா மற்றும் ஹர்ஷாவின் டேபிளில் ஆர்யனும் வந்து சேர்ந்துகொள்ள வேறுவழியில்லாமல் காவ்யாவும் அவனுடன் உட்கார வேண்டிவந்தது..



ஆரா உள்ளுக்குள் சோர்வாக உணர்ந்தாலும் அண்ணனிடம் அதை காட்டிக்கொள்ளாது சாதாரணமாக பேச முயற்சித்துக் கொண்டிருந்தாள்..



ஆர்யனும் சுற்றம் மறந்து தங்கையுடன் பேசுவதிலேயே கவனமாக இருக்க ஹர்ஷாவின் பார்வையோ தன் எதிரில் உட்கார்ந்திருந்த காவ்யாவை அங்குலம் அங்குலமாக மேய்ந்து கொண்டிருந்ததில் அவளுக்கு உடம்பெல்லாம் கூசி தகித்தது..



போதாதைக்கு யதுவீர், சந்தீப் இருவரும் கூட அங்குதான் அவர்களுக்கு அடுத்த மேசையில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்..



சந்தீப் அவளை புழுவைப்போல் கேவலமாக பார்த்தானென்றால் யதுவீர் பார்வையாலேயே பஸ்பமாக்கிக் கொண்டிருந்தான்.. இப்போது எழுந்து சென்றால் ஒரு மாதிரி ஆகிவிடும் என்பதால் மிகவும் சிரமப்பட்டு உட்கார்ந்திருந்தாள் காவ்யா..



ஒருவழியாக விழா முடிந்து அவர்கள் வீடு திரும்பவும் காலையில் இருந்து தன் பக்கமே திரும்பாத கணவனை நினைத்து நெஞ்சம் விம்ம குளித்து உடைமாற்றி வந்தவள் அவன் வெளியே கிளம்புவதற்காக தயாராவது போல் தெரிய அவனது இந்த விலகலை தாங்க முடியாமல் ஓடிச்சென்று அவன் கையை பிடித்துக் கொண்டாள் ஆராத்யா…





"என்மேல கோபமா..." சிறு குழந்தை போல் தன்னை அண்ணார்ந்து பார்த்து கேட்டவளை புரியாத பார்வை பார்த்தான் ஹர்ஷா.....



"உன்மேல எனக்கென்ன கோபம்.." என்றான் அவன் விட்டேற்றியாக... "நீதான் எதையோ பறிகொடுத்த மாதிரி உன் முகத்த உம்முனு வெச்சிட்டு இருந்தே.."



"நானா???!!!! நீங்க தான் இன்னைக்கு முழுக்க என்கிட்ட பேசவே இல்ல...." கண்ணீர் இப்பவா அப்பாவா என கரையுடைக்க காத்திருந்தது...



"ஷ்ஸூ ... இவ்ளோதானா... இதுக்கா முகத்த அப்டி வெச்சிருந்த... நான் வேற டென்ஷன்ல இருந்தேன் அதான் உன்கிட்ட பேச முடியல..." என்றவன் "இப்ப கைய கொஞ்சம் விடுறியா... நான் அர்ஜென்டா வெளிய போகனும்..." என்றான்...





அவள் முகம் அப்போதும் தெளியாமல் மேலும் ஏதோ கேட்கவர அவள் பேச தொடங்குமுன்னரே தன் கையை அவளிடமிருந்து உருவிக் கொண்டவன் "சீ யூ ஆரா..." விட்டால் போதுமென்று வேகமாக அங்கிருந்து சென்று விட்டான்...



செல்லும் அவன் முதுகை குழப்பத்துடன் பார்த்திருந்தாள் ஆராத்யா...








**************************************************









"வீர் உன்கிட்ட நான் என்ன சொல்லிருந்தேன்... அந்த ஆர்யா இந்த பக்கமே வரக்கூடாதுன்னு சொன்னேனா இல்லையா??... அப்புறம் எப்படி அவன் இங்க வந்தான்..???" கோபமாக தன் நண்பனுடன் ஃபோனில் பேசியபடியே வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தவன் அருகில் வந்த கார் தன்னுடையதை இடிப்பதை போல் நெருங்கவும் சுதாரித்துக்கொண்டு நொடியில் தன் காரை விலக்கிக் கொள்ள அந்த காருக்குள் இருந்த நபரை கண்டதும் ஆத்திரம் தலைக்கேற அதனை துரத்த ஆரம்பித்தான் ஹர்ஷவர்த்தனா...



அந்த ஹைவேயில் இரண்டு கார்களும் சீறிப்பாய்ந்து கொண்டிருந்தன...



தேஜஸ்வினும் தனக்கிருந்த வன்மத்தில் இடம், பொருள் எதையும் பாராமல் ஹர்ஷாவின் காரை இடித்து தள்ள முயன்றவன் அவன் தன்னை கண்டுகொண்டு துரத்த ஆரம்பித்ததும் கண்மண் தெரியாமல் ஓட்ட ஆரம்பித்தான்...



வெகுதூரம் ஓட்டிக்கொண்டு வந்தவன் பின்னால் வந்துகொண்டிருந்த ஹர்ஷாவின் கார் தன் பார்வையிலிருந்து மறைந்து காணாமல் போக அதன் பின்னரே மூச்சுவிட முடிந்தவனாக வண்டியை வேறு சாலையில் செலுத்தினான்...



சிறிது தூரம் சென்றதும் ஏதோ தோன்ற பின்பக்க கண்ணாடி வழியாக பார்த்தவன் மூன்று கார்கள் அசுர வேகத்தில் தன் காரை நோக்கி வருவதை கண்டதும் மீண்டும் வேகமெடுத்தான்..



எங்கெங்கோ சுற்றி சந்துபொந்துக்குள் எல்லாம் புகுந்து இறுதியாக ஒரு மணல் சாலையில் சென்றவன் அவன் கார் எதிலோ மோதி புதைந்துபோய் நின்றுவிட இறங்கி ஓட ஆரம்பித்தான் தேஜஸ்வின்...





என்ன ஓடி என்ன பயன் அது ஏதோ மீன் பிடிக்கும் இடம்போல முன்னால் பாறைகள் இருந்தன ... அதற்க்கு அப்பால் கடல்....



ஓடவும் முடியாமல் ஒழியவும் முடியாமல் அவன் அப்படியே நின்றுவிட அந்த மூன்று கார்களும் புழுதி பறக்க அவன் எதிரில் வந்து நின்றன...



இருபுறமிருந்தும் சந்தீப், யதுவீர் இறங்கிவர நடுவிலிருந்த காரிலிருந்து நிதானமாக இறங்கினான் ஹர்ஷவர்தனா... சிகரெட் ஒன்றை எடுத்து பற்ற வைத்துக் கொண்டே அழுத்தமான நடையுடன் தன்னை நோக்கி நடந்து வருபவனை எச்சில் கூட்டி விழுங்கியபடி பார்த்திருந்தான் தேஜஸ்வின்...



"அப்புறம் அமுல் பேபி சௌக்கியமா??..." என்றான் ஹர்ஷா அதே நிதானத்துடன்... " ரொம்ப நாளாச்சுல்ல நம்ம பார்த்து..."



"ஆமா, இங்க என்னடா பண்ற ஷூட்டிங்கா... அப்படி ஒன்னும் தெரில்லயே..." என்றான் சந்தீப் அவனுக்கு மறுபக்கம் வந்து நின்றுகொண்டு...



"எதையோ தொலைச்சிட்டானாம் தீப்... அதான் தேடி வந்திருக்கான் போல..." இது யதுவீர்...



"அப்படி என்னத்தடா தொலைச்சு தொலைச்ச இப்படி துபாய் குறுக்கு சந்துல எல்லாம் பைத்தியக்காரன் மாதிரி சுத்திக்கிட்டு இருக்க..." அவன் முதுகில் அடித்தான் சந்தீப்...



"பெருசா எதையோ தொலைச்சிருக்கான் போல..."



இனி யோசித்து எந்த பயனும் இல்லை... இவர்கள் மூவரிடமும் தனியாக வந்து மாட்டிக்கொண்ட தன் மடத்தனத்தை எண்ணி நொந்து போனான் தேஜஸ்வின்... ஒருவன் என்றிருந்தால் கூட அவனால் ஓரளவு சமாளித்துக் கொள்ள முடியும்... இங்கு மூவரும் மூன்று பூதங்களை போல வாட்டசாட்டமாக அவனை சுற்றி வளைத்து நின்று கொண்டிருந்தால் அவனும் தான் என்ன செய்வது....



தன் கை முஷ்டியை இறுக்கி அவர்களிடம் காட்ட முடியாத கோபத்தை அடக்கிக்கொண்டு நின்றிருந்தான் அவன்...



"அப்படியா??" என்ற ஹர்ஷாவின் பார்வை தேஜாவின் மீது குரூரத்துடன் படிந்தது... “அவன் தொலைச்சது இப்போ என்கிட்ட ரொம்ப பத்திரமா இருக்குனு சொல்லு வீர்….”



அவ்வளவுதான் "டேய்...." என்று ஆத்திரத்துடன் ஹர்ஷாவின் சட்டை காலரை பற்றினான் தேஜா... "எதுக்குடா என் ஆராவ கல்யாணம் பண்ணினே..."



"உன் ரியாக்ஷன் பத்தலடா அமுல் பேபி... உன்கிட்ட நான் இன்னும் நெறையா எதிர்பார்க்கிறேன்.." நக்கலாக கூறியவன் "எல்லாரும் எதுக்கு கல்யாணம் பண்ணுவாங்களோ அதுக்கு தான் நானும் பண்ணியிருக்கேன்..." தன் சட்டையை பற்றியிருந்த அவன் கையை பிரித்து விட்டபடியே அழுத்தமான குரலில் கூறினான்.....



"நான் ஊர்ல இல்லாத நேரத்துல நான் காதலிச்ச பொண்ண கல்யாணம் பண்ணிருக்க வெக்கமா இல்ல..." எகிறினான் அவன்...



"நீ ஊர்ல இல்லாத நேரத்துலயா... ஹாஹாஹா....நீ ஊர்ல இல்லாம போனதே எங்க பிளான் தானேடா..." சிரித்தான் யதுவீர்...



"ஏன்டா நீ அழகா பொறந்ததுக்கு உன் ஃபேன்ஸ் எல்லாம் உன் அப்பா அம்மாவுக்கு நன்றி சொல்லனுமா... அவங்க எதுக்குடா சொல்லணும் பக்கி...." அவன் தலையில் அடித்தான் சந்தீப்.... "உன்னமாதிரி அரைவேக்காட்டை எல்லாம் ஹீரோவா ஏத்துக்கிட்டதுக்கு நீதான்டா அவங்களுக்கு நன்றி சொல்லனும்.... இதுல டைரக்டர்ஸ் கதை சொல்ல வந்தா தூங்கிட வேற செய்வியாம்..."



"ஒரு வருஷமா நமக்குதான் எவனும் சான்ஸ் கொடுக்கலையே... திடீர்னு இவ்ளோ பெரிய பட்ஜெட்ல நம்மள ஹீரோவா போட்டு அதுவும் ஃபாரின்ல படம் எடுக்குறாங்களே... யோசிக்க வேணாம்...." யதுவீர் சொல்ல"மூளை.. மூளை.. மூளை இருந்தாத்தானே யோசிக்கிறதுக்கு...." சொல்லிக்கொண்டே அவன் தலையில் மீண்டும் மீண்டும் அடித்தான் சந்தீப்..





"என்னடா தனியா வந்து மாட்டிட்டேன்னு உங்க வீரத்தை காட்டுறீங்களா பொட்ட பசங்களா..." என்று திமிறிய தேஜாவின் வாயிலேயே அடித்தான் யதுவீர்...



"வீர்..." என்று அவனை தடுத்தவன் தன் கையிலிருந்த சிகரெட்டை கீழே போட்டு நசுக்கிவிட்டு "ரொம்பல்லாம் அடிக்காதே... தெரிஞ்சோ தெரியாமலோ அமுல் பேபி எனக்கு நல்லதுதான் பண்ணியிருக்கான்..”என்றான்…



பின்பு அவர்கள் இருவரிடமிருந்தும் அவனை பிரித்துவிட்டவன் தேஜாவின் சட்டையை சரிசெய்து “இவனால தானே எனக்கு ஆரா கிடைச்சிருக்கா..." என்றான்.. “சும்மா சொல்லக்கூடாதுடா… நீ காதலிக்கிற பொண்ணுனு தெரிஞ்சதும் ஏதோ சப்ப ஃபிகர்னு நினைச்சேன்…. என்னம்மா இருக்கா தெரியுமா…”



ஆத்திரத்தில் பல்லைக் கடித்தான் தேஜா…. விட்டால் இங்கேயே ஹர்ஷாவை குழிதோண்டி புதைத்து விடுபவன் போல அவனை வெறியுடன் பார்த்தான்….



“என்ன எரியுதா??” என்றான் ஹர்ஷா குரூரமாக.. “ஆசைப்பட்ட பொண்ணு நம்ம கண்ணு முன்னாடியே இன்னொருத்தன கல்யாணம் பண்ணி சந்தோசமா இருந்தா எப்படி எரியும்னு இப்போ புரியுதா..." தேஜாவின் தோள் மீது கை போட்டு அசைய முடியாமல் பிடித்துக் கொண்டான்..



"நீ என்ன கணக்கு போட்ட உன் ஃபிரென்ட் காவ்யாவ ஆர்யன்கூட சேர்த்து வெச்சிட்டு அவன் தங்கச்சி ஆராவ கட்டிக்கலாம்னு நினைச்ச.." என்க,,



ஒரு முடிவுடன் ஹர்ஷாவை நோக்கியவன் “உனக்கு காவ்யாதான வேணும்… அவள உன்கூட சேர்த்து வெச்சிட்டா என் ஆராவ விட்டுடுவேல்ல…” என்றான் தேஜஸ்வின் குரலில் எதிர்பார்ப்புடன்…



நிதானமாக அவன் முகத்தை திரும்பி பார்த்தான் ஹர்ஷா.. "எனக்கு காவ்யா வேணும்தான்… அதுக்காக அவள ஊர் உலகத்துக்கு முன்னாடி கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்த நான் ஒன்னும் எச்ச பீஸ் இல்லடா அமுல் பேபி… அதனால உன் ஃபிரென்ட அனுப்பு அவளுக்கும் தாலி கட்டி ஒரு ஓரமா வெச்சிக்கிறேன்….” என்று அந்த வெச்சிக்கிறேனில் அழுத்தம் கொடுத்து சொன்னவன் “அவளும் எனக்குத்தான் இவளும் எனக்குத்தான்.... இத நீ இல்ல உங்க அப்பனே வந்தாலும் மாத்த முடியாது….” என்றான்…



“தீப்… வீர்…. தம்பிய சிறப்பா கவனிச்சு அனுப்புங்கடா…” இன்னொரு சிகரெட்டை பற்றவைத்து வாயில் வைத்து ஊதியபடியே அவன் அங்கிருந்து செல்ல அவனது நண்பர்கள் இருவரும் தேஜாவை நெருங்கினார்கள்….





அதேநேரம் கிருஷ்ணமூர்த்தியுடன் பேசிக் கொண்டிருந்துவிட்டு தூங்குவதற்காக அறைக்குள் வந்த ஆர்யனின் வழியை மறித்தாற்போல் வந்து நின்றாள் காவ்யா..



அவன் எரிச்சலுடன் 'என்ன' என்பதுபோல் பார்க்க,,,,,



"பேசணும்..." என்றாள் அவள்...



"நம்ம பேசுறதுக்கு ஒன்னும் இல்ல... வழிய விடு..." என்று விலகி செல்லப்போனவனை கை பிடித்து தடுத்தவள் "எத்தன நாளைக்குத்தான் நம்ம ரெண்டுபேரும் இப்படியே பிரிஞ்சி இருக்கிறது ஆர்யா...." ஏக்கத்துடன் அவனை பார்த்து கேட்டாள்....



"சாகுற வரைக்கும்..." என்றான் அவன்... "சாகுறவரைக்கும் நீயும் நானும் இப்படித்தான் இருக்கனும்....."



அவள் ஏதோ சொல்லவர 'நிறுத்து..' என்பதுபோல் கையை தூக்கி காட்டியவன் "ஆமா.. உன் பிரென்ட் தேஜஸ்வின் இங்க என்ன பண்ணிட்டு இருக்கான்..." என்றான் கோபமாக....



“தே… தேஜாவா…. இங்கயா…. எ… எனக்கு தெரியா…..” அவள் தடுமாறிக் கொண்டிருக்கும்போதே அவளது கழுத்தை பிடித்து நெரித்தவன் “பொய்… பொய் சொல்லாதடி…. அப்புறம் நான் மனுஷனா இருக்கமாட்டேன்…. அந்த நாய்கூட நீ எங்க வேணா எப்படி வேணா ஆட்டம் போடு அதை பத்தி ஐ டோன்ட் கேர்…. ஆனா நானோ, என் தங்கச்சியோ, என் குடும்பமோ இருக்க இடத்துல அவன நான் பார்க்கவே கூடாது….. மீறி பார்த்தேன் முதல்ல உன்ன கொன்னுட்டு அவனையும் சேர்த்து கொல்லுவேன் உறுமிக் கொண்டிருந்தான் ஆர்யன்….





குளிரும்………










 

Banu swara

Moderator
தீ 7







காலை எழுந்ததிலிருந்தே மிகவும் சோகமாக நடமாடிக் கொண்டிருந்தாள் ஆராத்யா... அவள் பிறந்ததிலிருந்து சந்தோசமே இல்லாமல் விடிந்த அவளது ஒரே ஒரு பிறந்தநாள் இதுவாகத்தான் இருக்க முடியும்...



அவர்கள் துபையிலிருந்து திரும்பி இரண்டு வாரங்கள் கடந்திருந்ததன ... சென்ற வாரம்தான் கல்லூரியிலும் சேர்ந்திருந்தாள்… வரவேற்பு நாளன்றை தவிர அதன்பிறகு ஹர்ஷா வழக்கம் போல அவளுடன் மிகவும் அன்பாகத்தான் நடந்து கொண்டான்... சிறு சிறு சீண்டல்கள், ஊடல்கள் என்று அவர்களது உறவு நட்புக்கு மேல் காதலுக்கு கீழ் எனும் படித்தரத்தில் இருந்தது...



அவனது பேச்சு, சிரிப்பு, அவளுக்காக ஒவ்வொன்றாக பார்த்து பார்த்து செய்வது என்று அவளுக்கு எல்லாமே மிகவும் பிடித்திருந்தது... அவனுடன் இருக்கும் பொழுதுகளை ரசித்தாள்.. அவனையும் தான்... பள்ளியிலும் கல்லூரியிலும் பல பல ஆண்களுடன் பழகியிருக்கிறால்தான்... காதல் என்ற வலையில் இதுவரை விழுந்ததில்லை...



எப்படியும் காதல் கத்தரிக்காய் என்று சென்று நின்றால் நிச்சயமாக தன்னுடைய வீட்டினர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதை அறிந்திருந்ததாலோ என்னவோ அவள் அந்த உணர்வுக்கே இடம் கொடுத்ததில்லை....



இப்போது முதல்முறையாக கணவன் என்ற உறவு கொடுத்த உரிமையோ அல்லது அவன் அவள் மீது காட்டும் அன்பினாலோ அவன் மீதான அவளது நேசம் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே சென்றது...



அவளுடைய வீட்டில் பிறந்தநாள் கொண்டாட்டம் எல்லாம் கிடையவே கிடையாது... காலையில் கோயிலுக்கு சென்று வருவதும், பகலில் பத்மாவதி சமைக்கும் அசைவ விருந்தோடு நின்றுவிடும்...



ஹர்ஷா அப்படியல்லவே...



அதனால்தான் தன்னுடைய பிறந்தநாளை மிகவும் எதிர்பார்த்திருந்தாள்... ஆனால் காலை எழுந்ததிலிருந்து அவளது பிறந்தநாளையே மறந்தவனாக சாதாரணமாக பேசிக் கொண்டிருந்துவிட்டு அவள் சமைத்து கொடுத்த காலையுணவையும் வக்கணையாக சாப்பிட்டுவிட்டு “இன்னைக்கு ஈவ்னிங் கொஞ்சம் லேட் ஆகும்டா… சதீஷ் வர சொல்லிடறேன்…. பை ஆரா…” என்றுவிட்டு சென்றுவிட்டான்…



சப்பென்று ஆகிவிட ‘இவனுக்கு நிஜமாகவே மறந்துவிட்டதா…’ ஆராத்யாவுக்கு கோபம் கோபமாக வந்தது…



இவன்தான் இப்படியென்றால் அவளுடைய நண்பர்கள்,,,, ஒருவர்கூட வாழ்த்து சொல்லவில்லை…. ஆர்யன், நகுலன், ப்ரியா, திவ்யா நால்வர் மட்டுமே வாழ்த்தியிருந்தார்கள்…. கிருஷ்ணமூர்த்தியும் கௌசல்யாவும் அழைத்து பேசினார்கள் வாழ்த்து எல்லாம் சொல்வதற்காக அல்ல…



“சின்ன குழந்தைங்க மாதிரி என் பெர்த்டேக்கு அது வாங்கி கொடுங்க இது வாங்கி கொடுங்கன்னு மாப்பிள்ளைய தொல்லை பண்ணாத புரியுதா….” என்ற கௌசல்யாவின் அறிவுரையில் ஆராத்யாவுக்கு அந்த நாளே வெறுத்துப் போனது…



தன் நண்பர்கள் அனைவரின் வாட்ஸ்ஆப்பையும் பார்த்துக் கொண்டே இருந்தாள்… பலரும் ஆன்லைனில் தான் இருந்தார்கள்… இவளுக்கு ஒரு வாழ்த்து மெஸேஜ் அனுப்பத்தான் முடியாமல் போய்விட்டது….



‘இனிமே யாராவது எதுக்காவது எனக்கு மெஸேஜ் பண்ணி பாருங்கடா அப்புறம் தெரியும்…” என கறுவிக் கொண்டவள் ஃபோனை ஆஃப் செய்து தூக்கிப்போட்டு விட்டு சோபாவில் படுத்துக் கொண்டாள்….





அன்று ஞாயிறு என்பதால் கல்லூரியும் இல்லை... எவ்வளவு நேரம்தான் இப்படியே உட்கார்ந்திருக்க முடியும்... பொழுது போகாமல் இருக்கவே ஷாப்பிங் சென்று வரலாம் என்று கிளம்ப அவளுக்கு முக்கியமாக சில பொருட்களும் வாங்க வேண்டி இருந்தது...



டிரைவருடன் சென்று மாலில் இறங்கியவள் ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கி தனக்கும் ஹர்ஷாவுக்குமாக சிலபல பொருட்களை வாங்கிக்கொண்டு வந்தவள் ஐஸ் கிரீம் சாப்பிட வேண்டும்போல் தோன்றவே அங்கிருந்த ஐஸ் கிரீம் பார்லருக்குள் நுழைந்து கொண்டாள்...



தனக்கு பிடித்த ஐஸ் கிறீம் வகையை ஆர்டர் செய்து வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருந்தவள் “ஹலோ ஆராத்யா….” அதிரடியாக தன் எதிரில் வந்து உட்கார்ந்தவனை கண்டு முதலில் திடுக்கிட்டு பின்பு அவன் யாரென கண்டு கொண்டதும் சின்ன சிரிப்புடன் “ஹாய்….” என்றாள்….



"எப்படி இருக்கீங்க அஸ்வின்... ஆளே மாறிட்டீங்க...."



"ஹாஹா... நீ கூடத்தான் ஆளே மாறிட்ட... முன்னாடி வாயே திறக்காம ரொம்ப சைலெண்டா நல்ல பொண்ணா இருந்தே... இப்போ கல்யாணமெல்லாம் பண்ணிக்கிட்டு என்னமோ மாதிரி ஆகிட்ட ..." என்றான் தேஜஸ்வின் அவனது குரலும் என்னமோ போல்தான் இருந்தது...



அந்த பேச்சு அவளுக்கு கடுப்பை கிளம்ப 'இவனே ஒரு லூசு..' என்று நினைத்தவள் ஹிஹி என்று சிரித்து மட்டும் வைத்தாள்....



"உன் கல்யாணத்துக்கு எனக்கெல்லாம் சொல்லவே இல்லையே... மறந்துட்டே இல்ல.." என்றான் சோகமாக...



'உன்ன யாருடா நினைச்சா மறக்கிறதுக்கு...' "கல்யாணம் ரொம்ப அவசரமா நடந்ததால நிறைய பேருக்கு சொல்ல முடியாம போயிடுச்சி..."



"ஓஹ்... அவசரமா நடந்துச்சில்ல.... ம்ம்ம்ம்... அப்புறம் காவ்யா வீட்டு பக்கம் போகல???..." என்றான் கேள்வியாக...



அவள் சிறு தயக்கத்துடன் "இல்லை..." என்று கூற,,



"ஏன்???" என்றான் அவன்... "உன் அண்ணிதான காவ்யா.. ஒரே ஊர்ல இருக்கீங்க போய் பார்க்கிறதுக்கு என்ன... அவங்க அம்மா கூட உடம்பு சரியில்லாம இவதான் அவங்களையும் பார்த்துக்கிட்டு பிசினெஸ்ஸையும் பார்த்துக்கிறா.. பாவம் அவ..." சோகமாக கூறினான்…



ஆராவுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை... அவள் அண்ணி வீடு என்று செல்வதற்கு ஆர்யனுக்கும் காவ்யாவுக்குமிடையில் இப்படி வருடக்கணக்கில் விரிசல் விழுந்து ஆளுக்கொரு இடத்தில் பிரிந்திருக்கும்போது இவளால் எப்படி அவள் வீட்டுக்கு உரிமையுடன் செல்ல முடியும்…. ஏதோ ஒரு தடை அவள் மனதுக்குள் இருந்து கொண்டே இருந்தது… அதனால்தான் அவள் காவ்யா வீட்டு பக்கமே சென்றதில்லை…



அதோடு ஏனென்று தெரியாமல் அவளுக்கு ஜெயசுதாவை ஆரம்பத்திலிருந்தே பிடிக்காது… தேனொழுக பேசும் பேச்சும், நடத்தையும் அவரை மிகவும் நல்லவர் போல காட்டினாலும் எப்போதும் குறுகுறுவென்று ஆராயும் தன்மை கொண்ட அந்த பார்வை இவர் மற்றவர்கள் நினைக்கும் அளவுக்கு நல்லவர் கிடையாது என்ற உணர்வை ஆராத்யாவிடம் தோற்றுவித்திருந்தது….



இவனிடம் எதை சொல்லி சமாளிப்பதென தெரியாமல் அவள் யோசித்துக் கொண்டிருக்கும்போது “ஹேய் தேஜா!!!” என்றபடி இளம்பெண்கள் பட்டாளமொன்று அவனை கண்டு அங்கு வந்தார்கள்….



“வாவ்!!! நிஜமாவே தேஜாதானா!!! என்னால நம்பவே முடியல…”



“சார் நான் உங்க பெரிய ஃபேன்…”



அந்தப் பெண்கள் ஆளுக்கொரு வசனம் கூறிக்கொண்டு அவனுடன் விடாமல் கை குலுக்கி செல்பி எடுத்துக் கொண்டிருப்பதை கண்ட ஆராவுக்கு பயங்கரமாக சிரிப்பு வந்தது…



ஒல்லியாக வெள்ளை வெளேரென்ற தோலுடன் பூனைக் கண்ணும் காதில் கடுக்கனும் தலையில் தீச்சட்டியை கவிழ்த்து விட்டதுபோல் நீட்டிக் கொண்டிருந்த மஞ்சள் நிற முடியும்…. இப்படித்தான் அவள் முதன்முதலாக அவனைப் பார்த்தது….



அப்போதைக்கும் இப்போதைக்கும் ஏணி வைத்தாலும் எட்டாதுதான்… அவனது தோற்றம் வேற லெவலில் மாறியிருந்தது…. ஆனாலும் அவள் மனதில் ஆரம்பத்திலிருந்தே பதிந்திருந்த உருவம் அதுதானே….



அப்போதே அவனை கண்டு சிரிப்பை அடக்க முடியாமல் பெரும்பாடு பட்டவள் இப்போது அவன் ஏதோ சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு இந்தப் பெண்கள் எல்லாம் அவனை பரவசத்துடன் பார்ப்பதை கண்டு விழுந்து விழுந்து சிரிக்க வேண்டும் போல் இருந்தது…



அவன் இவளையே திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டு அந்த பெண்களிடம் பேசிக் கொண்டிருக்க தனது கைக்கடிகாரத்தை பார்த்தவள் நேரம் செல்வதை உணர்ந்து தான் கிளம்புவதாக அவனுக்கு சைகை செய்து விட்டு கிளம்ப “எக்ஸ்க்யூஸ் மீ…” என்று அவள் பின்னாலேயே செல்லப்போனவனை “சார் சார் சார்…. ப்ளீஸ்….” ஒரு பெண் அவனை விடாமல் அருகில் வந்து நின்று செல்பி எடுக்க ஆரம்பிக்க பொதுவெளியில் மறுத்துவிட்டு செல்ல முடியாமல் கடுப்புடன் நின்றிருந்தான்….



ஒருவழியாக அவர்களிடமிருந்து தப்பித்து அவன் வெளியே வந்து பார்த்தபோது ஆரா சென்று விட்டிருந்தாள்...



ஆத்திரத்துடன் தன் காரை எடுத்துக்கொண்டு கிளம்பியவன் கண்ணில் சற்றுமுன்னர் அவனுடன் செலஃபீ எடுத்துக் கொண்டிருந்த அந்தப் பெண்களும் கிளம்பிக் கொண்டிருப்பது கண்ணில் பட அதில் கருப்பு நிற குர்தி அணிந்திருந்த பெண்,, அவள்தான் இறுதியாக அவனை ஆராவின் பின்னால் செல்லவிடாமல் பிடித்துக் கொண்டவள்....



வன்மத்துடன் அவளை நோக்கியவன் சட்டென காரை திருப்பி அவளது ஸ்கூட்டியை பின்தொடர ஆரம்பித்தான்... அவளது தோழிகள் ஒவ்வொருவராக தங்கள் வழியில் பிரிந்து சென்றுவிட சிறிது தூரத்தில் ஆள் நடமாட்டமில்லாத சாலையில் அவள் வண்டியை திருப்பி பயணிக்க தன் காரில் வேகமெடுத்தவன் நொடியில் அவளை அடித்து தள்ளிவிட்டு அங்கிருந்து சென்று மறைந்தான்...








***********************************************










பெங்களூரின் பிரபல குடுயிருப்பு பகுதியில் அமைந்திருக்கும் அந்த பெரிய வீட்டின் முன் காவ்யாவின் காரை கண்டதும் அங்கிருந்த காவலாளி மரியாதையுடன் கேட்டை திறந்துவிட உள்ளே நுழைந்தாள் அவள்…



அந்த வீட்டை நெருங்கும்போதே அவள் மனதில் பாரம் ஏறிக்கொண்டது… அவர்கள் இருவரும் எவ்வளவு ஆனந்தமாக வாழ்ந்த வீடு இது… தன்னுடைய முட்டாள்தனத்தால் அத்தனையும் நாசமாக்கிவிட்டாளே… பழைய நினைவுகளின் கனம் தாங்க முடியாமல் தன் நெஞ்சை நீவி விட்டுக் கொண்டாள் காவ்யா….



அவள் வந்த நேரம் வீட்டில் ஆர்யன் இல்லை… தான் வழக்கமாக தங்கும் அறையை நோக்கி சென்றவளின் கால்கள் அவர்களின் படுக்கயறையை கடக்கும்போது ஒருநொடி நின்று தயங்கியது…



அந்த அறையை திரும்பிப் பார்த்தாள் கதவு பூட்டப்பட்டிருந்தது… அவன் மனதையும் அப்படித்தான் இறுக்கமாக பூட்டி வைத்திருக்கிறான்…. அந்த அறையிலும் அவளுக்கு இடமில்லை… அவன் மனதிலும் அவளுக்கு இடமில்லை…



அழக்கூடாது என்று நினைத்தாலும் தன்னையும் மீறி பெருகி வழியும் கண்ணீரை எப்படித்தான் தடுப்பது…. இந்த வீட்டுக்குள் நுழைந்தாலே அத்தனை உணர்வுகளும் ஒன்றாக சேர்ந்து அவளை தாக்கி வதைத்துவிடும்…



அவன் மட்டும்தான் தனியாக வசித்தாலும் அந்த வீட்டில் சிறு தூசு துரும்பு கூட கிடக்காமல் மிகவும் சுத்தமாக இருந்தது… வெகுதூரம் பயணம் செய்து வந்திருந்ததால் குளித்து உடைமாற்றி வந்தவள் சமையலறைக்குள் நுழைந்து கொண்டாள்…



அவன் அலுவலகத்திலிருந்து திரும்பி வரும் நேரம் என்பதால் ஏதாவது சிற்றுண்டி செய்யலாம் என தனக்கு சுத்தமாக வராத சமையலை யூடியூப்பில் பார்த்து கஷ்டப்பட்டு எதையோ சமைத்து சாப்பிட்டு பார்த்தவள் ருசி பிரம்மாதமாக இருக்கவே தனக்கும் சமைக்க வருகிறதே என்ற மகிழ்ச்சியுடன் கணவனுக்காக காத்திருந்தாள்….



வெகு நேரம் கழித்துதான் வந்து சேர்ந்தான் அவன்… அதுவும் அரை போதையில்… அதில் நம்பமுடியாமல் அவனை பார்த்தவள் “ஆர்யா எப்போ இருந்து நீங்க இப்படி குடிக்க ஆரம்பிச்சீங்க….” என்றாள்…



அவளால் ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை… ஒரு காலத்தில் எப்படி இருந்தவன்… குடிப்பவர்களை கண்டாலே அவனுக்கு பிடிக்காது… அப்பேர்ப்பட்டவன் இப்போது அவனே குடித்துக் கொண்டு வந்திருக்கிறான்….



“ஏன் ஆர்யா இப்படில்லாம் பண்றீங்க…. என்னால இதை நம்பவே முடில்ல….” என்றவளை திரும்பி ஒரு பார்வை பார்த்தவன் “என்னாலயும்தான் நம்ப முடியல… என் பொண்டாட்டி ஒரு கொலைகாரின்னு….” என்றவன் “உன்ன இங்க வரக்கூடாதுனு எத்தனை தடவை சொல்லிருக்கேன்… எதுக்குடி வந்த…” சீறினான்…



“இது உங்க வீடு மட்டுமில்ல… எனக்கும் இதுதான் வீடு….” நிமிர்வாகவே கூறினாள்…



அதில் கடுப்பானவன் அவளது கன்னத்தை அழுந்த பற்றினான் “கொலைகாரிலாம் இவ்வளவு தைரியமா பேச கூடாது….” அவன் வார்த்தைகளை கடித்து துப்ப பெண்ணவள் துடித்துப்போனாள்…



“எத்தனை நாளைக்குத்தான் இதையே சொல்லி சொல்லி என்னை காயப்படுத்துவீங்க ஆர்யா… நான் யாரையும் கொலை பண்ணல…” என்றாள் பலவீனமான குரலில்…



"ஏய்..." என்று உறுமியவன் "உன் ட்ராமால்லாம் உன் அம்மாகிட்டையும் உன்கூடவே நாய்க்கு வால் முளைச்ச மாதிரி ஒருத்தன் சுத்திட்டு இருப்பானே அவன்கிட்டயும் காட்டு... என்கிட்டே வெச்சிக்காதே... போடி இங்கேருந்து..." தன்னுடைய அறைக்குள் சென்று கதவை பாடாரென அடித்து சாத்தினான்...



நொந்துபோய் நின்றிருந்த காவ்யா அலைப்பேசி ஒலிக்கவும் எடுத்து பார்த்தாள்.... பின்பு ஒரு பெருமூச்சுடன் ஆன் செய்து காதில் வைத்தவள் "சொல்லுடா..." என்க,,



"நீ எதுக்கு இப்போ பெங்களூர் போயிருக்க??? முதல்ல கிளம்பி வா..." அந்த பக்கமிருந்து கத்திக் கொண்டிருந்தான் தேஜா....



"நான் ஒரு முக்கியமான விஷயமா வந்திருக்கேன் தேஜ்... முடிஞ்சதும் கிளம்பிடுவேன்...."



"அப்படி என்ன அவ்ளோ முக்கியமான வேல ********.... உன் புருஷன சமாதானம் பண்ண போயிருப்ப அதானே... அவன்தான் உன்ன கண்டுக்கவே மாட்டேங்கிறான்ல, அப்புறம் எதுக்குடி அவன் பின்னாடியே லோ லோன்னு அலையுற...."



பல்லைக் கடித்தால் காவ்யா...



அவனது பேச்சில் பயங்கர ஆத்திரம் வந்தாலும் அவளால் அவனை எதுவும் சொல்ல முடியவில்லை... இப்போதைக்கு அவளுக்கென்று இருக்கும் ஒரே ஜீவன் அவன் மட்டும்தான்...



"புரிஞ்சிக்கோ தேஜ்... நாளைக்கு ஒருநாள்தான்... அப்புறம் கிளம்பிடுவேன்..." பொறுமையாகவே கூறினாள்...



"அப்படி என்ன.... நாளைக்கு ஒருநாள் மட்டும் நீ செஞ்சி கிழிக்கிற வேலை...."



ஒரு நொடி விழிகளை மூடித்திறந்தவள் "சாரா..." என்றாள்....



"...................." மறுபக்கம் சற்று நேரம் அமைதி நிலவியது …



அவள் அடுத்து ஏதோ சொல்லுமுன் அழைப்பை துண்டித்து விட்டிருந்தான் தேஜஸ்வின்...



ஒரு பெருமூச்சுடன் திரும்பியவளின் பார்வையில் அவள் கஷ்டப்பட்டு செய்து வைத்திருந்த சிற்றுண்டி தட்டு பட அதை அப்படியே எடுத்துச் சென்று குப்பையில் கொட்டிவிட்டு வந்தாள் காவ்யா….










***********************************************









மாலை ஆறு மணியளவில் கார் ஒன்று வந்து நிற்கும் சத்தம் கேட்க சதீஷாக இருக்கும் என்று நினைத்தவள் கடுப்புடன் சோபாவில் உட்கார்ந்து மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள் ஆராத்யா….



வெகுநேரமாகியும் சதீஷ் உள்ளே வராததால் என்னவென்று பார்ப்பதற்காக வெளியே சென்று பார்க்க அங்கு வேறொரு கார் நின்றிருந்தது…



யாராக இருக்கும் என்று யோசித்தபடியே திரும்ப பின்னாலிருந்து அவள் மீது நான்கு ஐந்து பேர் ஒரே நேரத்தில் பாய்ந்ததில் பயத்தில் அலறி துடித்தவள் அதன்பிறகுதான் அவர்கள் யாரென்பதை கண்டுகொண்டவள் “உங்க வேலதானாடா இதெல்லாம் பக்கிகளா…” என்று அனைவரையும் துரத்தி துரத்தி விளாச ஆரம்பித்தாள்…



காலையிலிருந்து நண்பர்கள் யாரும் தன்னை வாழ்த்தவில்லை என்று சுணக்கத்துடன் இருந்தவள் இப்போது அவர்கள் அவளது வீட்டுக்கே வந்துவிட்டதில் ஆனந்தத்துடன் சிறுபிள்ளை போல நண்பர்களுடன் அடித்து பிடித்து விளையாடிக் கொண்டிருந்தவள் அப்போதுதான் கைகளை குறுக்காக கட்டியபடி கதவு நிலையில் சாய்ந்து நின்றபடி அவளையே பார்த்துக் கொண்டிருந்த ஹர்ஷாவை கண்டதும் அப்படியே நின்றுவிட்டாள்…..



அதை கண்டு மற்றவர்கள் சிரிக்க ஆரம்பிக்க தன்னுடைய சிறுபிள்ளை தனத்தை எண்ணி நொந்தவளாக உதட்டை கடித்துக் கொண்டு நின்றவளை நோக்கி வந்தவன் எதுவும் பேசாமல் தீபிகாவை பார்த்து கண்ணசைக்க அவள் “ஆரா என்கூட வா….” என்றபடி ஆராவை அறைக்குள் அழைத்து சென்றாள்….



கூடவே இரண்டு தோழிகள் சேர்ந்து கையில் துணியால் மூடிய எதையோ தூக்கிக் கொண்டு செல்ல அவர்கள் மீண்டும் திரும்பி வரும்போது ஆரா ஆகாய நீல வண்ண கவுனில் பிளாட்டினத்தில் வைர கற்கள் பதித்த நகைகளுடன் டிஸ்னி பிரின்சஸைபோல் கதவை திறந்து கொண்டு வர அனைவரும் “வாவ்!!!!!!!…” என வாயை பிளந்தார்கள்…..



ஹர்ஷாவும் அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்…..

(ஜஸ்ட் பார்த்துக் கொண்டிருந்தான்….. அவ்வளவுதான்….. அதற்குமேல் வேறு எந்த உணர்வும் அவனுக்கு அவள்மீது இருப்பதாக ரைட்டராகிய எனக்கு தோன்றவில்லை… 😜)



அவள் தயாராகி வந்ததும் அவள் கேட்க கேட்க எதுவும் சொல்லாமல் எங்கோ அழைத்து சென்றார்கள்…. குறிப்பிட்ட இடத்தை அடைந்ததும் தீபிகா அவளது கண்களை பின்னாலிருந்து இறுக பொத்தியபடி அழைத்துச் சென்றவள் இறுதியாக தன் கரங்களை அகற்றிக் கொள்ள விழிகளை திறந்து பார்த்தாள் ஆராத்யா…



வண்ண வண்ண விளக்குகளும், மலர்களும், பலூன்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த அந்த இடத்தின் நடுவே கிட்டத்தட்ட ஆராவின் உயரத்தில் பாதியளவு இருக்கக்கூடிய அழகிய ஃபைவ் டையர் கேக் ஒன்று வைக்கப்பட்டிருந்தது….



ஹர்ஷா அவளை நோக்கி வருவதை கண்டு தீபிகா விலகிக் கொள்ள அவர்களின் இருபுறமும் நின்றிருந்த இளைஞர்கள் வயலினில் பிறந்தநாள் வாழ்த்து இசைக்க தொடங்கவும் அவளது கைப்பிடித்து அழைத்து சென்றான் அவன்..



“ஹேப்பி பேர்த்டே ஆரா….” என்று வாழ்த்தியவன் அவள் அணிந்திருந்த நகைகளுக்கு ஏற்றவாறு பிளாட்டினத்தில் இருதய வடிவ பிளாக் டைமண்ட் பதித்த ஒரு மோதிரத்தை அவளது பிறந்தநாள் பரிசாக அணிவித்து விட்டான் ஹர்ஷா…



அவள் அந்த கேக்கை வெட்டியதும் ஹர்ஷாவுக்கு ஊட்டிவிட அடுத்து அவனும் அவளுக்கு ஊட்டிவிட்டான்…. மற்றவர்களும் உடன் கலந்து கொள்ள ஒவ்வொருவராக மாற்றி மாற்றி ஊட்டிவிட்டுக் கொண்டார்கள்….





அதன்பிறகு விழா களைகட்ட வெர்ச்சுவல் கேம்ஸ், இசை நிகழ்ச்சிகள் என்று நள்ளிரவு வரை ஆட்டம் போட்டுக் கொண்டிருக்க ஆராத்யாவை கையிலேயே பிடிக்க முடியவில்லை…. அத்தனை சந்தோசத்தில் இருந்தாள்…. அவளது வாழ்நாளிலேயே இப்படியொரு பிறந்தநாள் விழாவை அவள் கொண்டாடியதே இல்லை…



விழா முடிந்ததும் அவளது நண்பர்களை அன்றிரவு அவர்களது வீட்டிலேயே அவன் தங்க சொல்லிவிட அவளுக்கு இன்னும் ஆனந்தமாகி போனது…. வீட்டுக்கு வந்த பின்னும் வெகுநேரம் அவர்களுடன் அரட்டையடித்துவிட்டு அதிகாலை மூன்று மணியளவில் அவள் அறைக்கு வந்து பார்த்தபோது ஹர்ஷாவும் அவனுடைய அலுவலக அறையிலிருந்து அப்போதுதான் வெளியே வந்து கொண்டிருந்தான்….



சந்தோச மிகுதியில் இருந்தவள் அவனை கண்டதும் வேகமாக அவனை நெருங்கி அணைத்துக் கொண்டவள் “தேங்க் யூ…. தேங்க் யூ சோ மச் ஹர்ஷா….” என்று அவன் கன்னத்தில் முத்தமிட முனைய அனிச்சை செயலாக அவளை தன்னிடமிருந்து பிரித்து தள்ளிவிட்டவன் “வாட் நான்சென்ஸ்….” என்றான் முகத்தை சுளித்தவாறு….



அவன் இப்படி செய்வான் என்று சற்றும் எதிர்பார்க்காதவள் முகம் அவமானத்தில் கசங்கி சிவந்தது…. அவள் எந்தவித கல்மிஷமும் இல்லாமல் ஒரு ஆர்வக்கோளாறில்தான் அப்படி செய்தாள்….



வழக்கமாக ஏதாவது மகிழ்ச்சியான விடயம் நடந்துவிட்டால் அவளும் அவளது பெண் தோழிகளும் ஒருவரையொருவர் அணைத்து சந்தோசத்தை வெளிப்படுத்திக் கொள்வார்கள்…. அந்தப் பழக்கத்தில் செய்தது….



ஒருசில நொடிகளுக்கு பிறகுதான் தான் செய்த காரியம் உறைக்க அவளது முகத்தை பார்த்தவன் அடுத்து அவள் எதையும் யோசிக்குமுன் ஆராத்யாவை இழுத்து அணைத்துக் கொண்டான்….



“சாரிடா ஆரா…. நான் ஏதோ நெனப்புல……” என்றவன் அவளது முகத்தை நிமிர்த்தி விழியோடு விழி கலக்க கூறினான்…



“நீ நல்லபடியா உன் படிப்ப முடிக்கிற வரைக்கும் உன்கிட்ட வேற மாதிரி நடந்துக்க கூடாதுன்னு நானே ரொம்ப கன்ட்ரோல்டா இருக்கும் போது நீ இந்த மாதிரியெல்லாம் டெம்ப்ட் பண்ணி விட்டேன்னா எனக்கு ஒரு மாதிரி ஆகுமா ஆகாதா….. நான் ஆம்பள மா… அப்புறம் ஏதாவது ஏடாகுடமா நடந்துட்டா நீ என்னை குத்தம் சொல்லக் கூடாது…..”





அதற்கு மேலும் அவளால் அவனை தவறாக நினைக்க முடியுமா என்ன?? அதுவும் அவன் படிப்பை பற்றி சொன்னதும் தான்தான் முட்டாள்தனமாக நடந்து கொண்டுவிட்டதாக நினைத்தள் “ஐம் சாரி… இனிமே இந்த மாதிரி பண்ணமாட்டேன்….” என்றாள்…



“இட்ஸ் ஓகே.. நீ என்ன வேணும்னா பண்ணின… விடு…” என்றவன் அவளை தன் கைவளைவில் பிடித்தபடியே தூங்குவதற்காக அழைத்துச் சென்றான்….










**************************************************









இருள் பிரியாத அதிகாலை வேளையில் சாரா வில்லியம்ஸ் என்ற பெயர் பொறிக்கப்பட்டிருந்த அந்தக் கல்லறையின் முன்னால் மண்டியிட்டவளாக குலுங்கி குலுங்கி அழுது கொண்டிருந்தாள் காவ்யா…..



அவள் அறியாமையில் செய்த ஒரு தவறு எப்பேர்ப்பட்ட விபரீதத்தை ஏற்படுத்திவிட்டது…. இரண்டு உயிர்களை காவு வாங்கியதோடு மட்டுமல்லாமல் அழகான ஒரு குடும்பத்தையே சிதைத்துவிட்டதே….



யாரை நொந்து என்ன பயன் அத்தனைக்கும் அவள் மட்டுமே காரணம்…



அவளுடைய அவசரபுத்தி…



அவளுடைய அறியாமை…



அவளுடைய ஆத்திரம்…



அவள் அவள் அவள் மட்டுமே…..



இன்னும் எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் அவளால் இந்த பாவத்தை தீர்க்க முடியாதே…. நினைத்து நினைத்து அழுது கொண்டிருந்தாள் காவ்யா…



தன் காரை நிறுத்திவிட்டு இறங்கியவன் அதே கல்லறையை நோக்கி நடக்க சற்று தூரத்தில் தனக்கு முன்னாலேயே அங்கு வந்து அழுது கொண்டிருந்த மனைவியை கண்டு கோபத்தில் விழிகள் சிவக்க அப்படியே நின்றுவிட்டான் ஆர்யன்...



அவன் இரத்தம் கொதித்தது... அப்படியே சென்று அதே இடத்தில் அவளையும் கொன்று புதைத்துவிட்டு வரவேண்டும்போல் தோனறியதில் தன் கோபத்தை கட்டுப்படுத்தும் வழி தெரியாமல் அருகிலிருந்த மரத்தில் கையை ஓங்கி குத்தியவன் எங்கே அவளிடம் சென்றால் அவளை ஏதாவது செய்து விடுவோமோ என பயந்து அங்கேயே நின்று கொண்டான்...



கணவன் தன்னை பார்த்துக் கொண்டிருப்பத்தை அறியாமல் அழுது கரைந்து கொண்டிருந்தவள் பொழுது புலர்வதை உணர்ந்து இனி யாராவது வந்து விடுவார்கள் என நினைத்தவள் அங்கிருந்து எழுந்து செல்ல முனைய அப்போதுதான் ஆர்யன் திரும்பி நடந்து செல்வது அவளது கண்களில் பட்டது...



மனம் கணக்க செல்லும் அவனது முதுகை பார்த்தவளுக்கு மீண்டும் கண்ணீர் கரையுடைக்க ஆரம்பிக்க அவனை நோக்கி ஓடியவள் "ஆர்யா..." என்றபடி காரில் ஏறப்போனவனை நெருங்கி வந்து தோளில் கைவைக்க அவன் தள்ளி விட்ட வேகத்தில் தெருவில் சென்று விழுந்தாள்...



அவளை திரும்பி கூட பார்க்காமல் கார் கதவை அறைந்து சாத்தியவன் அங்கிருந்து கிளம்பி விட அவளுக்கு அவன்மீது எந்த வித கோப்மோ வருத்தமோ ஏற்படவில்லை... தனக்கு இந்த தண்டனை தேவைதான் என நினைத்துக் கொண்டாள்….



ஒருவழியாக சிரம்ப்பட்டு எழுந்து கொண்டவள் தன்னுடைய காரை நோக்கி நடந்தபோது தோன்றிய முதுகை துளைக்கும் உணர்வில் சட்டென திரும்பிப் பார்த்தாள் காவ்யா….



கண்ணுக்கெட்டிய தூரம் வரை மனித நடமாட்டமே இல்லை… வெளிச்சம் மெல்ல மெல்ல ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் விடிகாலை வேளையில் பனிமூட்டமாய் தெரிந்த ஆள்அரவமற்ற அந்த சூழலும் இடமும் ஒருவித பயத்தை கிளப்ப வேகமாக காரை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டாள்…



அவள் சென்று மறைந்ததும் அங்கிருந்த கல்லறை ஒன்றின் மறைவிலிருந்து குரூர விழிகளுடன் வெளிப்பட்டது அந்த உருவம்…








குளிரும்……
 
Status
Not open for further replies.
Top