கடல் மணல் அளந்து!
கை விரல் கலந்து!
கண் பார்வையில் காலம் கழித்து!
காதல் வளர்க்கவில்லை!!!
நினைத்ததும் பார்க்க முடியாத
தூரத்தில் நீயும் நானும்!
நினைவுகளில் மட்டுமே உணர்வை
பரிமாறி... உன்னவளாய்
நீ எனை கரம் பிடித்த நொடிதனில் -
உலகை வென்றதாய் உவகை
கொண்டு நின்றேன்!!!
துயில் கொள்ளும் நேரமதில்
உன் கைவளைவை மெத்தையாக்கி
இதயத்துடிப்பின் தாலாட்டில்
உறங்கவே உவகை கொள்கிறேன்!!
எனது பூபாலம் உன் இதழின்
ஓசையிலேயே ஆரம்பமாகிறது!!
அத்தனையும் கானல் நீர் என அறிந்தும்
என் கனவுகள் இன்னும் உன்னோடு
நீள்கிறது முடிவிலியாக...
என்றும் அன்புடன்
............................................
கை விரல் கலந்து!
கண் பார்வையில் காலம் கழித்து!
காதல் வளர்க்கவில்லை!!!
நினைத்ததும் பார்க்க முடியாத
தூரத்தில் நீயும் நானும்!
நினைவுகளில் மட்டுமே உணர்வை
பரிமாறி... உன்னவளாய்
நீ எனை கரம் பிடித்த நொடிதனில் -
உலகை வென்றதாய் உவகை
கொண்டு நின்றேன்!!!
துயில் கொள்ளும் நேரமதில்
உன் கைவளைவை மெத்தையாக்கி
இதயத்துடிப்பின் தாலாட்டில்
உறங்கவே உவகை கொள்கிறேன்!!
எனது பூபாலம் உன் இதழின்
ஓசையிலேயே ஆரம்பமாகிறது!!
அத்தனையும் கானல் நீர் என அறிந்தும்
என் கனவுகள் இன்னும் உன்னோடு
நீள்கிறது முடிவிலியாக...
என்றும் அன்புடன்
............................................