ஹரித்,“அவங்களுக்குப் பேமெண்ட் எல்லாமே செட்டில் பண்ணியாச்சு, இன்னமும் எதுக்கு, இப்படி ஹெல்ப், அது, இதுன்னு வர்றாங்க?” என்று குழம்பினான்.
“ம்ஹூம். இதெல்லாம் வேணாம்னுத், தெளிவாக மெசேஜ் அனுப்பிரு தியா” என ஜெய்சிகாவும் கூறவே, இவளும் அதையே செய்தாள்.
அதைப் பார்த்ததுமே,”ப்ச்!” என்று தன் ஏமாற்றத்தை வெளிப்படுத்தினான் சாதுரியன்.
கனிஷா,“என்னாச்சு டா?” என்றவளிடம் அனைத்தையும் கூறி விட,”நீயே போய், ஹெல்ப் பண்றதாக சொல்லுவியா டா? கொஞ்சம் கூட யோசிக்க மாட்டியா?” எனப் பொரிந்து தள்ளினாள்.
“தனு விஷயம்ன்றதால் தான்…” என்று தயங்கினான் சாதுரியன்.
“அதுக்குன்னு, இப்படியா பண்ணுவ? அவங்க உதவி வேணும்னுப் போஸ்ட் போட்டிருந்தால் கூட, நாம செஞ்சுத் தரலாம்! இப்படி நீயே தொக்கா போய் கேட்டு வச்சிருக்கிற!” என்று அவனைக் கடிந்து கொண்டான் வராகன்.
“ஏதோ ஒரு அவசரத்தில்…” என்று தொடங்கவும்,”அவசரக் குடுக்கை! போடா!” என இருவருமே அவனைக் கழுவி ஊற்றினர்.
அதைக் கேட்டு முடித்தவனோ, அவர்களிடம் மன்னிப்புக் கேட்கும் தொனியில், குறுஞ்செய்தி அனுப்பலாமா? என்று நினைத்தான் சாதுரியன்.
அதை, மற்ற இரு நண்பர்களும், உணர்ந்தார்கள் போலும்!
எனவே,”சாரி நோட் எல்லாம் எழுதி அனுப்புறேன்னு, மறுபடியும் அசிங்கப்படாதே டா!” என்று எச்சரித்தனர் கனிஷா மற்றும் வராகன்.