நாயகன் முகிலாதவன் (ஊசி doctor)
கதை ஆரம்பம் இவன்லாம் என்ன design antihero nu குழம்பிப் போய் இருந்தேன்
நிலாவை கடத்தி வந்து போதை ஊசி போட்டு கொடுமைலாம் படுத்தினான்தெரிந்தே நிலாவை களவாடினான்
(ivan ippudi lam panna edhum storage ana reason irukkum nu naa guess panni avanuku support lam panni heroinearmy kedda pongal um vangnen) ஆனாலும் முகிலனை பிடிச்சிது because iam heroarmy முகிலனது வர்சினி மேலான அன்பு தனி அழகு முகில் நிலாக்கு பண்ணது எல்லாம் தப்புதான் ஆனாலும் அதுற்கு காரணம் என்னனு flash back la தெரிந்து கொண்டேன்.
நாயகி நிலா(namela susbanpense irukku)
முகிலானால் களவாட பட்டபெண்
தான் பண்ண தப்பு என்னனு தெரியாமலே தண்டனை அனுபவிச்சாள்
முகில் மேல் இவளது காதல் என்னை ஈர்த்தது (முகமே பார்க்காத காதல் இவளுடையது) ஆதி மீதான இவளது நட்பு சிறப்பு இவளது தனிமையான (பெற்றோர் இருந்தும் அன்பு கிடைக்காத) வாழ்வு என்னை வருந்தவைத்து முகிலனுக்கு மன்னிப்பு கொடுத்து வாழ்க்கை தந்த தேவதை பெண்
முகிலனின் நிலா இவள்
ஆதித்யவருணன் Character & love story twist
வருணன் & மதி நட்பிற்கு இலக்கணம் தருண் comedy & friendship super
வர்சினி... முகில் மாமா பொண்ணு
முகிலன் மீது அன்பு கொண்டவள்
(Story la பாவப்பட்ட ஜீவனும் இவளே)
வருணனின் காதலி யார்??
மதியும் நிலாவும் யார்??
முகிலாதவன் & வருணனுக்கு என்ன தொடர்பு??
கதையின் ஆரம்பம் முதல் இவையெல்லாம் ரொம்ப குழப்பமா இருந்தது கதை நகர்வில் பின்பு தெளிவாகியது
இந்த கேள்விக்கான பதிலினை ரைட்டர் கதை ஆரம்பம் முதல் susbanpense நிறைய வைத்தே நகர்த்தி சென்றார்கள் (ana naa guess panna mathiriye irunthuchchu)
கதிரவன் & நந்தினி பணத்தாசை பிடிச்ச சைக்கோ
போதைப்பொருள் பாவனையால் ஒருவன் வாழ்வில் எதனை எல்லாம் இழக்க நேரிடும் என்றும் மூடநம்பிக்கை பற்றியும் ரைட்டர் அவர்களின் எழுத்து மூலம் அருமையாக காட்டி இருந்தீர்கள்
Susbanpense நிறைய இருந்தது கதை படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியது
எனக்கு கதை ரொம்ப பிடிச்சிது மிலா
போட்டியில் வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ரைட்டர் (மிலா)NNK43
இந்த கதைக்கு ரிவுயு எழுதனும் எண்டு நினைக்கும்போது எதைப்பத்தி எழுதலாம்னு டவுட்டாவே இருக்குது. ஏன் என்றால் நிறைய பொங்கல் என்றெல்லாம் போட்டாச்சு.
டாரேக்டா கதைக்கு வாரன், கதையில எத்தனை நாயகன் நாயகி என்று மட்டும் சொல்ல மாட்டேன், தேவை என்றால் படித்து தெரிந்து கொள்ளவும்.
பட் ஆதவன் ஒரு அன்டி ஹீரோ, நிலா ஒரு அவலைப் பெண். கடத்திட்டு போய் புள்ள கொடுத்திடுவான். அதற்கு முதல் போதை ஊசி எல்லாம் போடுவான். அதால் ஆதவன் ஊசி டாக்டர் எண்டே அழைக்கப்படுவான்( இவன் டாக்டர் வேற).
அந்த ஆதவனுக்கு ஒரு பிளாஷ் பக். அவரு மதி என்ட பொண்ண லிப்ட்ல இருந்து காப்பாதும் போது அவளுக்கு லிப்லாக் கொடுத்திடுவாரு. அந்த மதி இவர நினுச்சிட்டு அலைவா???. அந்த மதிக்கு ஆதித்யா எண்டு ஒரு பனைமர பிரண்ட். அவன் ஒரு பொண்ண லவ் பண்ணுவான, அந்த பொண்ணு ஆதவன லவ் பண்ணுவா. அப்ப அந்த பொண்ணு யாரு அது தான் கதை.
இதை பார்க்க குழப்பமா இருக்கா??? இப்படித்தான் எனக்கும் இருந்துச்சு, புது ரைட்டரா எண்டு தெரியவில்லை. வந்த ஐயங்கள் எல்லாத்தையும் தீர்த்து கதைய தெளிவாக முடிச்சிட்டாங்க.
இந்த கதையில இருந்து எடுத்துக் கொண்ட படிப்பினைகள். ஜோசியத்தை நம்பி நம்உறவுகளை கஷ்டப் படுத்தக் கூடாது( மதியின் அம்மா அப்பாவுக்கு).
யார்லயும் பழி போட்டு தண்டனை கொடுக்கும் போது அவங்க பக்கமா என்ன சொல்றாங்க எண்டு கேட்கனும்( ஆதவன் நிலாக்கு). ஒருத்தன் போதையில உளறினா அதை தெளிவாக கேட்டு சரியா புரிஞ்சுக்கனும் ( ஆதி மதிக்கு) லவ் பண்ணுற பொண்ண நம்பனும் ( முகிலனுக்கு). லவ் பண்ணினவனா இருந்தலும் எல்லை மீறும் போது தடுக்கனும் ( நிலா முகிலனுக்கு). கொடுமை மேல கொடுமை பண்ணிட்டு கால்ல விழுந்தாலும் ஏத்துக்க கூடாது ( முகிலன் நிலாக்கு)
சொல்லப் போனால் இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். என் ரிவியு பார்துட்டு கதை படிச்சு யாரும் கல்லைக் கொண்டு எனக்கு எறிஞ்சிடாதிங்க. ஐ ம் பாவம்.
அன்றி ஹீரோன்னு சொல்லி கொடுமை படுத்திறதும் அப்றம் மன்னிப்பு கேட்கிறதும் வீர வாழ்க்கையில சாதாரணம்ப்பா. அப்படி தான் இங்கயும், இவரு செய்த கொடுமைக்கு அவரு உயிரா நினைக்கிற டாக்டர் வேலைய விடனும் அப்பத்தான் உங்களை ஏத்துக்குவன் என்டு அவரு பொண்டாட்டி சொல்லுவா இவரும் தொழில விட்ருவாரு ( பெண்டாட்டி முக்கியம் என்பதால்).
இந்த போட்டில வந்த கதையில கொஞ்சமாச்சும் 18+ இருக்கிற கதை இது மட்டும் தான் என்று சொல்லிக்கிறேன். அன்றி ஹீரோ கதைய ஒரு மாதிரி கரை சேத்திட்ட ரைட்டர் நிலாவின் முகிலன் க்கு வாழ்த்துக்கள்.
அடேய் ரைட்டர், யாரு டா நீ, ரிசல்ட் வரட்டும் அப்பறம் இருக்கு.....
ஹீரோக்கு எத்தனை செல்ல பேர் டா வைப்பிங்க
முகில் - நா கூட இவன் அந்த புள்ளையை கடத்தும் போது ஏதும் காரணம் இருக்கும்னு நினைச்சேன், ஆன பக்கி ஒன்னும் தெரியாதா பிள்ளையா கடத்தி என்ன என்ன வேலை பார்த்து இருக்கான்
இவன் கேரக்டர் அப்படி தான் போலனு நினைச்சா, அது தான் இல்ல, வீட்டில் எல்லாம் நல்ல புள்ள அவ கிட்ட மட்டும் முழு சந்திரமுகியா இருக்கான் பக்கி பய
ஆதவ் - அன்பான அத்தான் வருக்கு, டாக்டர்
ஆதி - இவனை எனக்கு ரொம்ப பிடிச்சது, தப்பே செய்யாம நிறைய பட்டுட்டான் பாவம்
காரணம் தனிமை, தங்கை குழந்தையை தன் குழந்தை போல வளர்க்கும் அப்பா அம்மாவுக்கு இவன் மனம் புரியல
புரியும் போது காலம் கடந்து தான் விட்டது
மதி - ஆதி கொஞ்ச நாள் ஆவது மனம் விட்டு சிரிக்க காரணம், அவன் தோழி
இவ பார்க்காமல் காதலிக்கும் காதல் அழகு ஆன ஆள் தான்
வரு - ஆதவ் & ஆதி வீட்டு இளவரசி, கியூட் கேரக்டர்
கதை என்னமோ ஈஸி யா புரியரது போல தான் இருக்கு, ஆன இந்த ரைட்டர் நமக்கு புரிய கூடாதுனு பெயரில் கூட டுவிஸ்ட் வச்சி இருக்காங்க
அது தான் நானும் அவங்க வெச்ச பேர்லையே சொல்லிட்டேன், ஸ்டோரி படிச்சி நீங்க கொஞ்சம் குழம்பனும்னு சின்ன ஆசை
கதைல டவிஸ்ட்டு வெக்கலாம் தப்பு இல்ல ஆனா இந்தளவுக்கு தேவையில்லனு என் கருத்து.. கதையை குழம்பிருச்சுனு தான் சொல்லுவேன்..
காலாங்காலமா ஆண்டி ஹீரோ ஹீரோயினை தப்பா புரிஞ்சுக்கிட்டு கொடுமைப்படுத்தறதும் அப்பறம் அவ காலுல விழுந்து மன்னிப்பு கேட்கறதும்.. கெத்தா திரிஞ்சா ஹீரோ காலுல விழுந்ததும் ஹீரோயின் அவன்மேல வெச்ச காதல்ல அவனை மன்னிக்கறதும்.. இதுதான் நடத்துட்டு இருக்கு..
முகிலாதவனை போட்டு தள்ளிருந்தா கூட தப்பே இல்லை.. மதி நிலாவும் எனக்கு கடுப்பே.. வர்ஷினி பரவால்ல.. ஆதித்ய வருணன் மட்டும் பிடிச்சுருந்துச்சு..
உங்க முதல் கதைனு சொல்றீங்க இவ்ளோ நெகட்டிவ் வெச்சு எழுதிருக்க வேணாமே.. ஹீரோனா என்ன கொம்பா முளைச்சுருக்கு.. ஏன் ஹீரோயினுக்கு அவனை விட்டா வேற பையன் கிடைக்க மாட்டானா.?
ஆண்டி ஹீரோ கதை படிக்கவே மாட்டேன்.. உங்க தலைப்பை பார்த்து நார்மல் கதைனு நினைச்சு படிச்சேன்.. ப்ச் என் நினைப்பு பொய்யாகிருச்சு..
எழுத்துப்பிழை எவ்ளோ இருந்தாலும் எனக்கு பிரச்சனை இல்லை ஆனா ஆண்டி ஹீரோனு இப்படி கொடுமைப்படுத்தி எழுத வேணாமே ப்ளீஸ்..
எனக்கு தோணுனதை சொல்லிருக்கேன்.. கதைல நல்ல விசயங்கள் இருக்கலாம் இல்லனு சொல்லல.. என் பார்வைல கதை எப்படினு சொல்லிருக்கேன் அவ்ளோதான்..
நீங்க என்ன நினைச்சாலும் ஐ டோண்ட் கேர்.. கதையை பத்தி சொல்ல என்கிட்ட எதுவும் இல்லை.. சாரி டியர்
ஏன் என்றே தெரியாது கடத்தப்படும் நாயகி...
அடுத்தவர்களின் மீது மென்மையும் கொண்டவள் மீது வன்மையும் காட்டும் நாயகன்???? (வில்லன்)
அத்தை மகளுக்காக மகளுக்காகவே ஏங்கும் மாமன் மகன்...
அனைத்தும் ஒருகோட்டில் சந்தித்தால்???
கதைமுழுக்க என்னை கவர்ந்த ஒரே பாத்திரம் ஆதி என்கிற ஆதித்யவர்ணன்.. பெண்மையை மதிப்பவன்.. அடுத்தவர்களை காயப்படுத்த தெரியாதவன்...
முகிலாதவன்... கதைமுழுக்க என்னை smiley ஐ தவிர வேறு எதுவுமே போட வைக்காதவன்... இவன் ஒரு மண்டை கழண்ட case... தில்லாலங்கடி படத்தில் வரும் சந்தானத்தை போல... யாரோ இவன் மனதில் தான் ஒரு doctor என்று உருவேற்றியிருப்பார்கள் போலும்... போதை ஊசி மட்டுமே போட தெரிந்த so called doctor... இவனுக்கு கிடைத்த தண்டனை போதவே போதாது.. Writer கிட்ட கருணை மனு எழுதி கொடுத்தானோ என்னவோ... அவனை deal இல் விட்டுவிட்டார்... அவனோட doctor license ஐ புடுங்கி எடுத்திருக்க வேண்டும்...
இறுதியாக writer ஜி... Twist என்கிற பெயரில் வாசிக்கும் எமது 300g பொருளை நன்றாக குழப்பி விட்டுட்டார்.. யாருனு மட்டும் தெரியட்டும்... இருக்கு...