அத்தியாயம் 08
இன்று அவருடைய திருமண நாள். மனது படபடவென அடித்துக் கொண்டது இஷிகாவிற்கு ..
பதுமை போல் அமர்ந்திருந்தவள் அருகில் வந்தமர்ந்த இளமதி "பார்க்கவே தேவதை மாதிரி இருக்க.. ஆனா என்னால உன்னை ரசிக்கத் தான் முடியல.. பயமா இருக்குடா உன்னோட லைஃபை நினைச்சு.."
என்று கண்கள் கலங்க பேசினாள்.
இஷிகாவால் இதற்கு எந்த பதிலும் சொல்ல முடியவில்லை. அவளுக்கு அவள் என்ன நினைக்கிறாள் என்றே தெரியவில்லை என்பது தான் உண்மை.. ஆனால் அவள் அருகில் இருந்த ஆர்த்தி தான்
"இப்போ கூட ஒன்னும் கெட்டுப் போகல. பேசாம இங்கே இருந்து தப்பிச்சு போயிடு.. உனக்கு நாங்க ஹெல்ப் பண்றோம்.." என வேறு வழியில்லாமல் கூறினாள்.
அவளை திரும்பி முறைத்து பார்த்த இஷிகா
"இப்படி ஓடிப் போகணும்னா நான் எப்பவோ போய் இருப்பேன்.. நான் போன அப்புறம் எங்க அம்மா ஏதாச்சும் பண்ணிட்டாங்கன்னா என்ன பண்றது ..
பேசாம இந்த கல்யாணத்தை பண்ணிப்போம். வேற வழியே இல்லை .
இது தான் அந்த கடவுள் தொடக்கம் என்னை சுத்தி உள்ளவங்களோட விருப்பம்னா அதை அப்படியே விட்டுடுவோம்.." என்றாள் விரக்தியாக. அவளது பேச்சை கேட்ட இரு பெண்களும் ஒருவரை ஒருவர் பார்த்து விட்டு அமைதியாக இருந்தனர்.
அப்போது உள்ளே வந்த கவிதா "அம்மாடி இளமதி நம்ம இஷிகாவை அழைச்சிட்டு வர சொல்றாங்க.."
என்று மருமகளிடம் கூறினாலும் அவரது பார்வை என்னவோ மகளிடம் தான் இருந்தது.
இந்த கோலத்தில் மகளைப் பார்த்தும் வாரி அனைத்து கொள்ள முடியாத தனது நிலையை எண்ணி வருந்தினாலும் அவளை கண்குளிர கண்டு ரசித்தார் அந்த தாய்..
இஷிகா தான் அவருடன் பேசுவதே இல்லையே. இப்போது அருகில் செல்ல போய் அவள் ஏதாவது கூறி விட்டால் இந்த நேரத்தில் இருவருக்கும் தானே அது சங்கடம். எனவே அமைதியாக இருந்து கொண்டார் அவர்.
" இதோ அத்தை.. நீங்க முன்னாடி போங்க நாங்க ரெண்டு பேரும் அழைச்சிட்டு வரோம்.."
என்று கூறி அத்தையை அனுப்பி வைத்த இளமதி இஷிக்காவை பார்த்தாள்.
அவளும் போகலாம் என்று தலையசைக்க கனத்த மனதுடன் அவளை அழைத்துக் கொண்டு வெளியே சென்றனர் இளமதி ஆர்த்தி இருவரும்.
வானத்திலிருந்து இறங்கி வந்த தேவதை போல் அத்தனை அழகாக இருந்தாள் இஷிகா. அவளை அங்கிருந்த அனைத்து கண்களும் பார்த்த போதும் அவள் தலையைக் கூட நிமிர்த்தவில்லை ..
மணமகன் அருகே வந்தவள் யாரையும் பார்க்காது சபையை நோக்கி ஒரு வணக்கம் வைத்து விட்டு உட்காரப் போக அவளது தோளை தொட்டாள் இளமதி.. அதை மெல்ல விலக்கி விட்டு தன் போக்கில் மணமகன் அருகில் அமர்ந்து ஐயர் கூறியதை செய்ய தொடங்கினாள் இஷிகா.
"கெட்டி மேளம்... கெட்டி மேளம்.." என்ற ஐயரின் குரலை அடுத்து இஷிக்காவின் கழுத்தில் தாலி ஏறியது..
தனது எதிர்காலத்தை நினைத்து இரு கண்களையும் இறுக்கமாக மூடிக்கொண்டாள் பெண் அவள்.
மூடிய கண்களில் இருந்து கண்ணீர் வெளியேறியது.
" என்னாச்சு என்னை கட்டிக்கிறதுக்கு கசக்குதா என்ன?'
என்ற குரல் அவளுடைய காதலில் கேட்க திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தாள் இஷிகா. அவனே தான்... தேவ் ஆனந்த்..எப்படி இவன் இந்த இடத்தில்?
'ஐயோ கடவுளே அப்ப அபிமன்யு எங்கே? என்ன தான் நடக்குது இங்கே ?'என்று மனதில் பல கேள்விகள் ஓட அவனுக்கு எந்த பதிலும் சொல்லாது பரபரப்பாக சபையை சுற்றிப் பார்த்தாள் அவள்.
அவளைப் போலவே தான் ஆர்த்தியும் இளமதியும் எதுவும் தெரியாது முழித்துக் கொண்டு நின்றிருந்தனர் ..
திரும்பி தந்தையை பார்த்தாள். அவர் முகத்தை கடுகடுவென வைத்திருக்க இதில் ஏதோ இருக்கிறது , அதனை அறிந்து கொள்ள வேண்டும் என்று மனதில் குறித்துக் கொண்டாள் இஷிகா.
"என்னம்மா எனக்கு பதில் சொல்லாம எல்லா பக்கமும் பாக்குற ?
என்னடா அபிமன்யுவ காணோம்னு தேடுறியா?"
என்று மேலும் அவள் அருகில் நெருங்கி பேசினான் தேவ் ஆனந்த். இவளுக்குத் தான் குழப்பமாக இருந்தது. இதில் இவன் வேறு அவளை கேள்வி மேல் கேள்வி கேட்டு நச்சரிக்கிறான்.
இவனுக்கு பதில் சொல்வதா தன் வாழ்க்கையில் என்ன நடந்து கொண்டு இருக்கிறது என்று அவள் தெரிந்து கொள்வதா? 'அவளது அண்ணன் கூட இவனை எதிர்த்துப் பேசவில்லை..ஏன்?' அதற்கு மேல் அவளுக்கு யோசிக்கக் கூட நேரம் இருக்கவில்லை.. ஐயரும் ஒவ்வொன்றாக கூற இவளும் அவனுடன் சேர்ந்து கடமைக்கு என்று அனைத்தையும் செய்து கொண்டு இருந்தாள்.
பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கிக் கொள்ளும் படி ஐயர் கூறிட முதலில் அன்னையிடம் சென்றவள் அவரை ஒரு பார்வை பார்த்தாள். அந்தப் பார்வையில் தான் எத்தனை அர்த்தங்கள். அவளுடைய பார்வை வீச்சை தாங்க முடியாமல் தலையை தாழ்த்திக் கொண்டார் கவிதா.
" ஆசீர்வாதம் பண்ணுங்க அத்தை" என்ற தேவ் ஆனந்த் அவளையும் இழுத்துக் கொண்டு அவருடைய காலில் விழுந்து எழுந்தான்.
" நல்லா இருங்க." என்றவரின் கண்கள் கலங்கி விட்டன..
இஷிகா அதற்கு மேல் நகராமல் இருக்க அவளுடைய கையை பிடித்து இழுத்துக் கொண்டு சிதம்பரம் அருகே சென்றான் தேவ் ஆனந்த்.
சிதம்பரத்திற்கு உள்ளுக்குள் எரிந்து கொண்டிருந்தது. ஆனால் சபையோரின் முன் காட்டி விட முடியாதே..எனவே அமைதியாக நின்றிருந்தார் அவர்.
" என்ன மாமா எங்களை ஆசீர்வாதம் பண்ற ஐடியா இருக்கா என்ன ?"
என்று மெல்லிய குரலில் நக்கலாகவே கேட்டான்.அவனது அருகில் இருந்த இஷிகாவிற்கு அவனுடைய பேச்சு நன்றாகவே காதில் விழுந்தது. அவள் தந்தையையும் தனது திடீர் கனவனையும் மாறி மாறி பார்த்தாள் சிறு பிள்ளை போல். சிதம்பரம் பதில் பேசவில்லை. மேலும் அவனே தான் தொடர்ந்தான்.
" என்னடா இவன் என் முதல் பொண்ணோட கல்யாணத்தையும் நிறுத்தினான் ..இப்போ இரண்டாவது பொண்ணோட கல்யாணத்தையும் நிறுத்திட்டான்னு பாக்குறீங்களா? இந்த நிமிஷத்துல இருந்து உங்க கெட்ட காலம் ஆரம்பிச்சிருச்சுனு நினைச்சுக்கோங்க.. அவ்வளவு சீக்கிரமாக உங்களை விட்டடுட மாட்டேன்.. "
என கூறி கண் அடித்தவன் அவன் பேச்சில் திகைத்து நின்ற மனைவியின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு வேண்டா வெறுப்பாக சிதம்பரத்தின் காலில் விழுந்தான்.. அவரும் கடமைக்கு என்று ஆசீர்வதித்தார் இருவரையும்.
அதற்கு மேல் அவன் அந்த இடத்தில் நொடி நேரம் கூட தாமதிக்கவில்லை.
அங்கு சிதம்பரத்தின் அருகில் நின்ற அபிமன்யுவின் தாய் மற்றும் சுதீப் இருவரையும் ஒரு பார்வை பார்த்து விட்டு அவளுடைய பிடித்த கையை விடாது வெளியே அழைத்து வந்தான். இஷிகாவும் வேறு வழி இல்லாமல் அவனது பின்னால் சென்றாள்.
அங்கிருந்த யாராலும் எதுவும் அவனுடன் பேச முடியவில்லை. ஏனெனில் இப்போது அனைத்தும் தேவ் ஆனந்த் பக்கம் அல்லவா இருக்கிறது. அவனுடன் செல்லும் தங்கள் வீட்டு பெண்ணை கண்கள் கலங்க பார்த்துக் கொண்டிருந்தனரே தவிர எதிர்த்து ஒரு வார்த்தை கூட அவர்கள் பேசவில்லை.
அங்கிருந்து அவளுடன் வெளியேறியவன் வந்து நின்றது அவனுடைய வீட்டில் தான். அவனுக்கு முன்பே அங்கு வந்து காத்துக் கொண்டிருந்தான் அர்னவ். விடயம் கேள்விப்பட்டவன் நண்பன் மேல் கடும் கோபத்தில் இருந்தான் .
அங்கு அவனை எதிர்பார்க்காத தேவ் ஆனந்த் "என்னடா மச்சான இந்த நேரத்தில் இங்கு வந்திருக்கே?"
என்றான் இயல்பாக எதுவும் நடவாதது போல்.
அவனுடைய கேள்வியின் மேலும் கோபம் அடைந்த அர்னவ்
"ம் ...உனக்கு ஆர்த்தி எடுக்கலாம்னு வந்து இருக்கேன்.." என்று நக்கலா கூறி விட்டு நண்பனின் அருகில் நின்ற இஷிகாவை பார்த்தான். அவளோ இன்னும் திகைப்பில் இருந்து மீளவில்லை..
" சரி விடு மச்சான் வா உள்ளே போகலாம் "
என்ற தேவ் ஆனந்த் இருவரையும் அழைத்துக் கொண்டு உள்ளே சென்றான். மூன்று பேரும் ஒவ்வொரு இடத்தில் அமர்ந்திருந்தனர்.
மௌனம்... மௌனம்...
தேவ் ஆனந்த் நடந்தவை பற்றி கூறுவான் என அர்னவ் பார்த்திருக்க ,
அர்னவ் ஏதாவது கேட்டால் சொல்லிக் கொள்ளலாம் என்று தேவ் ஆனந்த் காத்திருந்தான். இருவரும் ஏதாவது பேசினால் என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ளலாம் என அமைதியாக இருந்தாள் இஷிகா.
இதற்கு மேல் தாங்க முடியாது என்று உணர்ந்த அர்னவ்
" என்ன வேலைடா பார்த்திருக்க.. லூசா நீ?
போலீஸ்காரன் பண்ற வேலையாடா இது.."
என்று கோபத்தில் மாறி மாறி கேள்வி கேட்டான் நண்பனிடம்.
" டேய் என்னடா நீ கேள்வி கேக்குற? போலீஸ்காரன் கல்யாணம் பண்ணக்கூடாது என்று ஏதாவது சட்டம் இருக்கா என்ன?
ஒரு பொண்ணை கல்யாணம் தானடா பண்ணேன் ..
இதுல என்ன தப்பு இருக்கு?"
என்று தேவ் ஆனந்த் கேட்க முடிந்த மட்டும் நண்பனை முறைத்தான் அர்னவ்.
" சரிடா நீ கல்யாணம் பண்ணது எல்லாம் நல்ல விஷயம் தான். ஆனால் இப்படி பண்ணி இருக்க வேண்டும் ..
சரி அதை விடு இந்த பொண்ணுக்கு நடக்க இருந்த கல்யாணம் என்ன ஆச்சு?"
மேலும் நண்பனிடம் கேள்வி கேட்டான் அர்னவ்.
" மாப்பிள்ளையை தூக்கிட்டேன்.. அந்த இடத்தில நான் உட்கார்ந்துட்டேன். சிம்பிள் மச்சி.." என்று கூறியவன் கூலாக சோஃபாவில் சாய்ந்து அமர்ந்து கொண்டான். இதுவரை நேரமும் அமைதியாக இருந்த இஷிகா என்ற சிலைக்கு இப்போது தான் உயிர் வந்தது.. அமர்ந்த இடத்தில் இருந்து பட்டென்று எழுந்தவள் தேவ் ஆனந்த் முன் வந்து
" அபிமன்யுவை என்ன பண்ணீங்க? அவருக்கு என்ன ஆச்சு ?"
என்று படபடவென கேள்வி கேட்டாள் அவள்.
இஷிகாவின் தவிப்பை ரசித்தவன் மெல்லியதாக புன்னகைத்தான். அவள் அன்று ரசித்த அதே புன்னகை. ஆனால் இன்று அவர்களுக்கு அது கசந்தது .
"நான் கேட்டுக்கிட்டே இருக்கேன். நீங்க எதுவும் சொல்லாம சிரிச்சா என்ன அர்த்தம்? ஓஹோ நீங்க அவரை கடத்தினதுனால தான் அத்தை,அப்பா, சுதீப், அண்ணானு எல்லாருமே அமைதியா இருந்தாங்களா?"
என அவளே கேள்வியும் கேட்டு அவளே பதிலும் சொல்லிக் கொண்டாள்.
" மச்சான் கேட்கிறதுக்கு பதில் சொல்லு ..உனக்கும் அவங்க அப்பாவுக்கும் இருக்கிற பகையில நீ இந்த பொண்ணை இடையில இழுத்தது பெரிய தப்பு.அதுவும் அந்த பொண்ணோட லைஃப் மேட்டர்.. என்னை கேட்டா நீ பண்ணது பெரிய தப்பு மச்சி.."
ஒரு சிறந்த தோழனாக அறிவுரை கூறினான் அர்னவ்.
"என்ன சொல்றாரு அவர்?
என் அப்பா மேல உள்ள கோபத்தில் தான் என்னை கல்யாணம் பண்ணீங்களா? அப்புறம் ...அப்புறம் ..ஏதோ அப்பாகிட்ட சொன்னீங்க .
உங்க பெரிய பொண்ணோட கல்யாணத்தை நிறுத்தினேன் இப்போ இரண்டாவது பொண்ணோட கல்யாணத்தையும் நிறுத்துறேன்னு..அப்படின்னா என்ன அர்த்தம்?
என் அக்கா எங்கே? என்ன நடந்தது அவளுக்கு?
இங்க என்ன தான் நடக்குது?"
என்று மனதில் உள்ள அனைத்து கேள்விகளையும் கேட்டாள் இஷிகா.
கண்களில் இருந்து கண்ணீர் துடைக்க துடைக்க வழிந்து கொண்டு இருந்தது அவளுக்கு..அர்னவிற்கு அவளை அப்படி பார்க்க பாவமாகத் தான் இருந்தது.. எதுவும் தெரியாமல் மாட்டிக் கொண்டிருக்கும் அவளை என்ன ஆறுதல் வார்த்தை கூறி தேற்றலாம் என்று அவனுக்கு தெரியவில்லை..
ஆனால் இது அனைத்துக்கும் சொந்தக்காரனான தேவ் ஆனந்த் அமைதியாக நின்று அவளது அழுகையை ரசித்துக் கொண்டிருந்தான்...
தொடரும்...