Balatharsha
Moderator
அத்தியாயம் 01.
நான் அறியா உறவு தான்
என்னை பார்த்திடத் துடிக்கின்றது
வண்ண கோலம் பூண்டு.
எனக்கே உரிய உலகம்
உன் மடி என்ற
என் ஆசையை எவ்வாறு
நான் உரைக்க உன்னிடம்.
இரண்டாயிரம் பேர்களை உள்ளடக்க கூடிய பெரிய திருமண மண்டபம் அன்று பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது.
சிறுவர்கள் ஒரு புறம் மகிழ்ச்சியில் தங்களுக்கு தெரிந்த விளையாட்டுகள் அனைத்தையும் இன்றே விளையாடி தீர்த்துவிட வேண்டுமென முடிவோடு இருந்தவர்கள் போன்று கத்தி ஆரவாரித்து திருமண மண்டபத்தினை இரண்டாக்கிக் கொண்டிருந்தனர்.
இளம் பெண்கள் ஒரு புறம், தம்மால் முடிந்த அளவு தம்மை அலங்காரித்தவர்கள் அங்கு வரும் ஆடவர்களை தங்கள் அழகால் மயக்கி கொண்டிருந்தனர்.
திருமணத்திற்கு வந்தவர்களை வரவேற்கும் முகமாக அந்த மண்டபத்தில் பணி புரியும் பெண்களாே புன்னகையுடனே வந்தவர்களுக்கு பழச்சாறு வழங்கிக் கொண்டிருந்தனர்.
திருமண மண்டபமோ விழா கோலம் பூண்டிருந்தது.
மணப்பெண் அறையில்
மணப்பெண் பானுவை அலங்கரித்தபடி கதை அளந்து கொண்டிருந்தாள் அவள் உயிர் தோழியும், சகோதரியுமான மேகலா.
"ஏய் பானு! நீ சும்மாவே அவ்ளோ அழகாய் இருப்ப, இன்னைக்கு தேவலோக பெண் ஆட்டம் ஜொழிக்கிறடி?.
உன்னை பாத்தா மாப்பிள்ளை பாடுதான் திண்டாட்டமா இருக்க போகுது.
இந்த சாறி வேற உனக்காகவே நெஞ்சது போல உன் கலருக்கு எடுப்ப இருக்கு. இத விட முகூர்த்த சாறி இன்னும் அழகா இருக்கும்."
என்று அவள் கூறிக்கொண்டே போகவும்
பானுவிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.
அவளோ இன்று தனக்கு திருமணம் என்ற ஒரு உணர்வே இல்லாது எதையோ வெறித்தபடி கண்கலங்கயவாறு இருக்க.
அவள் பின்னால் நின்று தலை அலங்காரம் செய்து கொண்டிருந்த மேகலா கண்ணாடி வழியே அவள் கலங்குவதைப் கண்டு,
"என்னதான்டி உனக்கு பிரச்சினை?.. எதுக்கு ஒரு மாதிரியாவே இருக்க?.
எத்தனை தடவை தான் உனக்கு சொல்லுறது.
யாருக்கும் அவ்வளவு சீக்கிரம் இப்பிடி ஒரு வாழ்க்கை கிடைச்சுடாதுடி!.
அம்மாவும் அப்பாவும் எவ்வளவு சந்தோஷமாக இருக்காங்க தெரியுமா?...
அவங்க ஒரே பொண்ணோட வாழ்க்கை எப்பிடி அமையுமோன்னு எத்தனை தடவ வருதப்பட்டு என்கிட்ட சொல்லி அழுதிருப்பாங்க.
பையனும் செம்ம அழகு. ஊரிலையே பணத்துக்கு பஞ்சமில்லாத குடும்பம்.
இந்த காலத்தில கணவன் எப்படி அமையும் என்கிறதை பயத்தை விட, மாமியார் எப்படி அமையானவாங்களோன்ன பயந்தான் இந்த கால பெண்களுக்கு அதிகமே!.
ஆனா உனக்கு அந்த கவலையே தேவை இல்லைடி.
அவ்வளவு நல்லவங்க உன் மாமியார்."
"எங்க நிலமை தெரிஞ்சும் உன்னை பிடிச்சு போய் தானேடி உன்னை பொண்ணு கேட்டாங்க. அப்புறம் என்ன உனக்கு?..
அது எல்லாம் விடு!.. அவனை உனக்கு பிடிக்கல்லை எண்டதுக்கு ஒரே ஒரு காரணம் சொல்லு எதுவும் வேனாம்னு நிறுத்திடுவேம்" என்றவள்.
"என்ன மாப்பிள்ளைக்கு சிரிக்க மட்டும் தான் தெரியாது. அது கூட அவனுக்கு அழகாத்தான் இருக்கு.
உண்மைய சொல்ல போன, நீ மட்டும் அவனை வேண்டாம்னு சொல்லி இருந்தன்னா நானே அவனை கட்டியிருப்பேன்." என அவள் மனதை கடசி நிமிடத்திலாவது மாற்றிவிடலாம் என கூற.
உடனே பானு அவள் முகம் நோக்கி "நிஜமாத்தான் சொல்றியா மேகலா?....
அப்போ நீயே கட்டிக்கோ!" என்று வெடுக்கென பானு சொன்னதும்,
"ஏய் என்னடி?.. நான் சும்மா உன் மனச மாத்துறத்துக்காக சொன்னேன். என் தலையில அவனை கட்டிவிட பாக்குறியா?" என்று கேலியாக தொடங்கியவள்,
"பானு....! இங்க பாரேன்." என்று அவள் முகத்தை தன் புறம் திருப்பியவள்,
"இது விளையாட்டு இல்லடி. வாழ்க்கை...! புரிஞ்சுககோ!....
நாம பட்ட கஷ்டம் எங்களோட போகட்டும். நீயாவது நல்லா இருக்கணும்டி!.
இத்தனை வருசத்தில அம்மாவும் அப்பாவும் இவ்வளவு சந்தோஷம இருந்து நான் பாத்ததே இல்லை தெரியுமா?...
நீ கல்யாணத்தில இஷ்டமில்லன்னு சொன்னதும் எவ்வளவு உடைஞ்சு போயிட்டாங்க தெரியுமா?...
அதோட நீயும் இந்த பேச்சு தொடங்கின நாள்ல இருந்து அவங்க கூட சரியா பேசாமல் அவங்களை ரொம்ப கஷ்டபடுதிறியேடி.
அவங்களையும் சமாதாணப்படுத்தி, உன்னையும் அவங்க ஆசைக்கு சம்பதிக்க வைக்கிறதுக்குள்ள என் உயிரே போச்சு தெரியுமா?....
எல்லாம் முடிஞ்சு இவ்ளோ தூரம் வந்திட்டோம். அப்பிடினு நிம்மதியா இருந்தா, திரும்ப ஆரம்பிச்ச இடத்திலையே வந்து நின்னா என்னடி நான் பண்ணுவேன்?" என்று மேகலா சோர்ந்து போய் பேச.
எதையோ தீவிரமாக சிந்தித்த சின்னவளோ சட்டென தாவி அவளை அணைத்து கதறினாள்.
அவள் அழுததும் தங்களை பிரிவதை எண்ணித்தான் அழுகிறாள் என உணர்ந்த மேகலை,
அவள் முதுகினை ஆறுதலாக வருடி விட்டவாறே,
"என்னோட நல்ல தோழி என்கிறத விட என் பொண்ணுடி நீ..!.
எனக்கும் உன்னை பிரியிறது கவலை தான். ஆனா அதை விட என் பொண்ணுக்கு நல்ல ஒரு வாழ்க்கை அமையப்போகுது என்கிற சந்தோஷமே அந்த சோகத்தை காணாம செய்திடிச்சு." என்றவள்"
"இப்போ என்ன?... எங்களை பிரியிறத நினைச்சுத்தானே அழுவுற? எப்போ உனக்கு எங்களை பாக்கணும்னு தோணினாலும் உன் முன்னாடி நாங்க இருப்போம்." என அவளுக்கு ஆறுதல் சொல்வதை போல் தனக்கும் சேர்த்து சொல்லிக்கொண்டாள் மேகலா.
உண்மையில் இருவரும் ஒரு தாய் வயிற்று பிள்ளைகளில்லை. அவர்களின் முதல் சந்திப்பே பல உயிர்களின் தியாகத்திலும்,
பல விழிகளின் கண்ணிரிலும், பல உடல்களின் குருதியுடலிலும், பல இறப்புகளின் ஓலங்களில் நிகழ்ந்தது தான்.
சங்கமிப்பாள்........
நான் அறியா உறவு தான்
என்னை பார்த்திடத் துடிக்கின்றது
வண்ண கோலம் பூண்டு.
எனக்கே உரிய உலகம்
உன் மடி என்ற
என் ஆசையை எவ்வாறு
நான் உரைக்க உன்னிடம்.
இரண்டாயிரம் பேர்களை உள்ளடக்க கூடிய பெரிய திருமண மண்டபம் அன்று பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது.
சிறுவர்கள் ஒரு புறம் மகிழ்ச்சியில் தங்களுக்கு தெரிந்த விளையாட்டுகள் அனைத்தையும் இன்றே விளையாடி தீர்த்துவிட வேண்டுமென முடிவோடு இருந்தவர்கள் போன்று கத்தி ஆரவாரித்து திருமண மண்டபத்தினை இரண்டாக்கிக் கொண்டிருந்தனர்.
இளம் பெண்கள் ஒரு புறம், தம்மால் முடிந்த அளவு தம்மை அலங்காரித்தவர்கள் அங்கு வரும் ஆடவர்களை தங்கள் அழகால் மயக்கி கொண்டிருந்தனர்.
திருமணத்திற்கு வந்தவர்களை வரவேற்கும் முகமாக அந்த மண்டபத்தில் பணி புரியும் பெண்களாே புன்னகையுடனே வந்தவர்களுக்கு பழச்சாறு வழங்கிக் கொண்டிருந்தனர்.
திருமண மண்டபமோ விழா கோலம் பூண்டிருந்தது.
மணப்பெண் அறையில்
மணப்பெண் பானுவை அலங்கரித்தபடி கதை அளந்து கொண்டிருந்தாள் அவள் உயிர் தோழியும், சகோதரியுமான மேகலா.
"ஏய் பானு! நீ சும்மாவே அவ்ளோ அழகாய் இருப்ப, இன்னைக்கு தேவலோக பெண் ஆட்டம் ஜொழிக்கிறடி?.
உன்னை பாத்தா மாப்பிள்ளை பாடுதான் திண்டாட்டமா இருக்க போகுது.
இந்த சாறி வேற உனக்காகவே நெஞ்சது போல உன் கலருக்கு எடுப்ப இருக்கு. இத விட முகூர்த்த சாறி இன்னும் அழகா இருக்கும்."
என்று அவள் கூறிக்கொண்டே போகவும்
பானுவிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.
அவளோ இன்று தனக்கு திருமணம் என்ற ஒரு உணர்வே இல்லாது எதையோ வெறித்தபடி கண்கலங்கயவாறு இருக்க.
அவள் பின்னால் நின்று தலை அலங்காரம் செய்து கொண்டிருந்த மேகலா கண்ணாடி வழியே அவள் கலங்குவதைப் கண்டு,
"என்னதான்டி உனக்கு பிரச்சினை?.. எதுக்கு ஒரு மாதிரியாவே இருக்க?.
எத்தனை தடவை தான் உனக்கு சொல்லுறது.
யாருக்கும் அவ்வளவு சீக்கிரம் இப்பிடி ஒரு வாழ்க்கை கிடைச்சுடாதுடி!.
அம்மாவும் அப்பாவும் எவ்வளவு சந்தோஷமாக இருக்காங்க தெரியுமா?...
அவங்க ஒரே பொண்ணோட வாழ்க்கை எப்பிடி அமையுமோன்னு எத்தனை தடவ வருதப்பட்டு என்கிட்ட சொல்லி அழுதிருப்பாங்க.
பையனும் செம்ம அழகு. ஊரிலையே பணத்துக்கு பஞ்சமில்லாத குடும்பம்.
இந்த காலத்தில கணவன் எப்படி அமையும் என்கிறதை பயத்தை விட, மாமியார் எப்படி அமையானவாங்களோன்ன பயந்தான் இந்த கால பெண்களுக்கு அதிகமே!.
ஆனா உனக்கு அந்த கவலையே தேவை இல்லைடி.
அவ்வளவு நல்லவங்க உன் மாமியார்."
"எங்க நிலமை தெரிஞ்சும் உன்னை பிடிச்சு போய் தானேடி உன்னை பொண்ணு கேட்டாங்க. அப்புறம் என்ன உனக்கு?..
அது எல்லாம் விடு!.. அவனை உனக்கு பிடிக்கல்லை எண்டதுக்கு ஒரே ஒரு காரணம் சொல்லு எதுவும் வேனாம்னு நிறுத்திடுவேம்" என்றவள்.
"என்ன மாப்பிள்ளைக்கு சிரிக்க மட்டும் தான் தெரியாது. அது கூட அவனுக்கு அழகாத்தான் இருக்கு.
உண்மைய சொல்ல போன, நீ மட்டும் அவனை வேண்டாம்னு சொல்லி இருந்தன்னா நானே அவனை கட்டியிருப்பேன்." என அவள் மனதை கடசி நிமிடத்திலாவது மாற்றிவிடலாம் என கூற.
உடனே பானு அவள் முகம் நோக்கி "நிஜமாத்தான் சொல்றியா மேகலா?....
அப்போ நீயே கட்டிக்கோ!" என்று வெடுக்கென பானு சொன்னதும்,
"ஏய் என்னடி?.. நான் சும்மா உன் மனச மாத்துறத்துக்காக சொன்னேன். என் தலையில அவனை கட்டிவிட பாக்குறியா?" என்று கேலியாக தொடங்கியவள்,
"பானு....! இங்க பாரேன்." என்று அவள் முகத்தை தன் புறம் திருப்பியவள்,
"இது விளையாட்டு இல்லடி. வாழ்க்கை...! புரிஞ்சுககோ!....
நாம பட்ட கஷ்டம் எங்களோட போகட்டும். நீயாவது நல்லா இருக்கணும்டி!.
இத்தனை வருசத்தில அம்மாவும் அப்பாவும் இவ்வளவு சந்தோஷம இருந்து நான் பாத்ததே இல்லை தெரியுமா?...
நீ கல்யாணத்தில இஷ்டமில்லன்னு சொன்னதும் எவ்வளவு உடைஞ்சு போயிட்டாங்க தெரியுமா?...
அதோட நீயும் இந்த பேச்சு தொடங்கின நாள்ல இருந்து அவங்க கூட சரியா பேசாமல் அவங்களை ரொம்ப கஷ்டபடுதிறியேடி.
அவங்களையும் சமாதாணப்படுத்தி, உன்னையும் அவங்க ஆசைக்கு சம்பதிக்க வைக்கிறதுக்குள்ள என் உயிரே போச்சு தெரியுமா?....
எல்லாம் முடிஞ்சு இவ்ளோ தூரம் வந்திட்டோம். அப்பிடினு நிம்மதியா இருந்தா, திரும்ப ஆரம்பிச்ச இடத்திலையே வந்து நின்னா என்னடி நான் பண்ணுவேன்?" என்று மேகலா சோர்ந்து போய் பேச.
எதையோ தீவிரமாக சிந்தித்த சின்னவளோ சட்டென தாவி அவளை அணைத்து கதறினாள்.
அவள் அழுததும் தங்களை பிரிவதை எண்ணித்தான் அழுகிறாள் என உணர்ந்த மேகலை,
அவள் முதுகினை ஆறுதலாக வருடி விட்டவாறே,
"என்னோட நல்ல தோழி என்கிறத விட என் பொண்ணுடி நீ..!.
எனக்கும் உன்னை பிரியிறது கவலை தான். ஆனா அதை விட என் பொண்ணுக்கு நல்ல ஒரு வாழ்க்கை அமையப்போகுது என்கிற சந்தோஷமே அந்த சோகத்தை காணாம செய்திடிச்சு." என்றவள்"
"இப்போ என்ன?... எங்களை பிரியிறத நினைச்சுத்தானே அழுவுற? எப்போ உனக்கு எங்களை பாக்கணும்னு தோணினாலும் உன் முன்னாடி நாங்க இருப்போம்." என அவளுக்கு ஆறுதல் சொல்வதை போல் தனக்கும் சேர்த்து சொல்லிக்கொண்டாள் மேகலா.
உண்மையில் இருவரும் ஒரு தாய் வயிற்று பிள்ளைகளில்லை. அவர்களின் முதல் சந்திப்பே பல உயிர்களின் தியாகத்திலும்,
பல விழிகளின் கண்ணிரிலும், பல உடல்களின் குருதியுடலிலும், பல இறப்புகளின் ஓலங்களில் நிகழ்ந்தது தான்.
சங்கமிப்பாள்........