எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

வஞ்சியே தஞ்சம் கொள்ளவா...உன் நெஞ்சில்! - கதை திரி

Status
Not open for further replies.

Mithila Mahadev

Moderator
வஞ்சியே தஞ்சம் கொள்ளவா...உன் நெஞ்சில்! - கதை திரி
 

Mithila Mahadev

Moderator
அத்தியாயம் : 01


தூத்துக்குடி இது தமிழ் நாட்டை சேர்ந்த ஒரு மாநகரம் ஆகும் அது மட்டுமல்ல துறைமுக நகரமாகும்…இந்த நகருக்கு திருமந்திர நகர், முத்து நகர் என்ற சிறப்பு பெயர்களும் உண்டு.

இங்கு பல இன, மொழி மக்கள் வாழ்கின்றனர் இந்த நகரின் பிரதான தொழில் வர்த்தகம்… அதுவும் உப்பளங்கள், ஏற்றுமதி, இறக்குமதி, தேங்காய் எண்ணெய் தயாரிப்பு, கடல் சார் உணவு தயாரிப்பு, ஸ்பிக் உரத் தொழிற்சாலை, ஸ்டெர்லைட் காப்பர் தொழிற்சாலை, அல்காலி இரசாயன நிறுவனம் பிரசித்திபெற்றது.

இங்கு வழிபாட்டுத் தலங்களாக பிரசித்திபெற்ற தலங்கள் சங்கர ராமேஸ்வரர் கோயில், தூய பனிமயமாதா பேராலயம்…அப்படிப்பட்ட நகரில் நடுநிசி வேளையில் தார் சாலையில் கறுப்பு நிற ஜீப் முன்னே இரண்டு பின்னே இரண்டு என நான்கு நடுவில் போர்டோஃபினோ ப்ளூ கலர் ஜாகுவார் வண்டி துறைமுகத்தை நோக்கி பாய்ந்து போனது.

கடல் நடுவே இரவு நேர ராணியாக கம்பீரமான அந்த கடல் அரசனுக்கு ஏற்ற ராணியாக ராட்சத கப்பல் ஒன்று வீற்று இருந்தது…அதன் முகப்பில் ஜகதேவ் குரூப்ஸ் என்று தங்க நிறத்தில் சிவப்பு எழுத்துக்கள் மின்னியது…

துறைமுகத்தில் வண்டிகள் வந்து நின்றது கூடவே நடு கடலுக்கு போவதற்காக மோட்டார் படகு ஒன்று தயாராக நின்று இருந்தது.. ..ஜீப்பில் இருந்து வெள்ளை வேட்டி சட்டையில் ஆளுங்க கிட்ட தட்ட பதினைந்து பேர் இறங்கினார்கள்…அதில் ஜாகுவார் காரின் முன் பக்க கதவை திறந்து வெள்ளை வேட்டி சட்டையில் இருந்த ஒருவன் இறங்கி பின் பக்க கதவை திறந்து விட்டு.

அவன் “ அண்ணே! படகு தயாராக நிற்கிறது நீங்க அனுமதி கொடுத்தால் நம்ம கடலுக்கு போகலாம் “ என்று பவ்யமாக சொன்னான்…அவன் சொன்ன அடுத்த நிமிடம் காரில் இருந்து துள்ளி இறங்கினான் ஒருவன்.

அவன் கறுப்பு நிற வேட்டி சட்டையில் ஆறடி உயரம், மாநிறம் நாள் தோறும் நாங்கள் உடற்பயிற்சி கண்டவர்கள் என கூறும் கட்டுடல்…கடல் காற்று அவன் அலையாக அசைந்த கேசத்தை கொஞ்சி விளையாட வர அவன் அதை அனுமதிக்காமல் சட்டென அதை பின்னால் தள்ளி விட்டு… தன் வலது கையில் போட்டு இருந்த ஒரு கறுப்பு நிற ஹேர் பேண்ட்டை போட்டு கட்டினான்…

பரந்த நெற்றி ,அடர்ந்த புருவம், கூர்மையான விழிகள், கத்தி போல மூக்கு, நாங்கள் புகையை ருசி பார்ப்பவர்கள் என கூறும் சற்று கருத்த தடித்த உதடுகள்…அளவான தாடி, மீசை கழுத்தில், கையில் தங்க ருத்ராட்ச மாலைகள் ,இடது காதில் வைர கடுகண் என மொத்தில் இவன் ராவணா ! ராமனா! என்ற ரீதியில் நின்று இருந்தான்.

அவன் பெயர் வாழ்வில் போர்களில் தோல்வியை தழுவாத, அதை விட பிரம்மச்சாரிய விரதம் மேற்கொண்ட மாவீரனின் பெயர்…தேவவிரதன் மகாபாரத பிதாமகன் பீஷ்மரின் இன்னொரு பெயர் அவர் பல போர் களம் கண்டு வெற்றி கொண்டவர்…தோல்வி என்பது அவர் அகராதியில் இல்லை இவனும் கிட்ட தட்ட அவர் போல தான்.

அவன் நேராக கடல் அன்னையை ரசித்தவன் அவள் வீசிய தாலாட்டு காற்றை ஒரு தடவை உள்ளே இழுத்தவன்…தன் வலது கையை தன் அருகே இருந்தவனை நோக்கி நீட்டினான்…அவன் அதை புரிந்து கொண்டவன் ஒரு சிகரெட் ,லைட்டரை அவன் நீட்டிய கையில் வைத்தான்…

தேவவிரதன் சிகரெட்டை வாயில் வைத்து அதை பத்த வைத்தவன் தன் இடது காலால் ஏத்தி வேட்டியை எடுத்தவன்…இடது கையில் அதை பிடித்து கொண்டு வாயில் உள்ள சிகரெட்டை மூன்று இழுப்பு இழுத்து புகையை வெளியே விட்டவன்…அதை கீழே போட்டு காலால் நசுக்கி விட்டு கரையில் அவனுக்காக காத்து இருந்த படகில் ஏறினான்…

கூடவே அவன் இடது கையான மாரி அல்லகைகள் ஆறு பேர்கள் ஏறினார்கள்….மற்ற அனைவருமே கரையில் நின்றனர் படகு கப்பலை நோக்கி போனது அதன் அருகே படகு நின்றதும்… மாரி தன் கூட வந்த ஒருவனை பார்க்க அவன் விசிலடிக்க நூல் ஏணி போடபட்டது…

அதை பற்றி கொண்டு அனாயாசமாக தேவவிரதன் ஏறி கப்பலில் உள்ளே கால் வைத்தான்…அது போல அவனை தொடர்ந்து மற்றவர்களும் கப்பல் உள்ளே இறங்கினார்கள். அந்த கப்பலின் பிரமாண்டம் அதன் உரிமையாளர் கோடீஸ்வரன் என சொன்னது..

அது சாதாரண மீன் பிடி படகு, கப்பல் அல்ல பயணிகளை ஏற்றி கொண்டு சுற்றலா போகும் பயணிகள் கப்பல்…இன்று காலை தான் தன் சுற்றலா பயணத்தை முடித்து வந்தது அதற்கு வழமையாக பராமரிப்பு பணிகளுக்காக இங்கே நங்கூரம் போட்டு நின்றது…

தேவவிரதன் “ ஏலே! மாரி எங்கே டா? அவன்” என கேட்டான்.

மாரி “ கீழே வைத்து இருக்கிறோம் அண்ணே! கூடவே நம்ம ரங்கா நிற்கிறான்” என்றான் .ரங்கா தேவவிரதனின் வலது கை அவர்கள் படி வழியாக கப்பலின் அடி பாகத்திற்க்கு போனார்கள்…அது எந்திரங்கள் இருக்கும் இடம் பாராமரிப்பு பணிகள் நடந்து கொண்டு இருந்தது தேவவிரதனை கண்டதும்… வணக்கம் போட்டனர் அவன் சின்ன தலை அசைவை கொடுத்தவன் அங்கே இருந்த ஒரு அறை கதவை திறந்து உள்ளே போனான்.

அங்கே இரண்டு கைகள் ஒன்றாக சேர்த்து சங்கிலியால் கட்டி தொங்க விட்டு ஒருவனை தேவவிரதன் ஆளுங்க பதம் பார்த்து இருந்தனர்…தலை தொங்கி மயக்கத்தில் இருந்தான் அவன் ரங்கா கூடவே நான்கு ஐந்து பேர் அவன் காவலுக்கு நின்றனர்…தேவவிரதனை கண்டதும் .

ரங்கா “ வணக்கம் அண்ணே! நீங்க சொன்னது போல இவனை நல்லா கவனித்து விட்டோம்…ஆனால் பயபுள்ள வாயை திறக்க மாட்டேன் என்று இருக்கிறான் “ என்றான்.

தேவவிரதன் “ வாய் திறக்காதவன் நமக்கு எதற்க்கு டா? கடலில் கட்டி தூக்கி வீசி விடுங்க நம்ம புள்ளைங்க பசிக்கு தோதாதக இருக்கும் “ என்றான்.

ரங்கா “ அண்ணே! எதற்க்கு கடைசி தடவையாக ஒரு முயற்ச்சி பண்ணலாம் அண்ணே! நீங்க வந்து இருப்பதை பார்த்தால் உண்மையை சொல்லுவான் “ என்றான்.

தேவவிரதன் “ சரி உன் ஆசையை எதற்க்கு கெடுப்பானே! முதலில் அவனுக்கு தண்ணீரை அடித்து எழுப்பி விடு” என்றான். ரங்கா அங்கே இருந்த ஒருவனிடம் கட்டி தொங்க விட்டவனை எழுப்ப சொன்னான்…அவன் போய் ஐஸ்கட்டி போட்ட பாக்கெட் தண்ணீரை எடுத்து வந்து அவன் தலையில் ஊற்றினான்.

தலையில் ஐஸ் தண்ணீர் பட்டதும் மயக்கத்தில் இருந்தவன் கண்களை கஷ்டபட்டு திறந்தான்…அவன் அரை கண்ணாக திறந்ததும் கண்டது வாயில் சிகரெட்டை வைத்து புகையை ஆழ்ந்து உள்ளே இழுத்து கொண்டு இருக்கும் தேவவிரதனை தான்…அவன் முகம் சட்டென பயத்தால் மாறியது அதை கண்ட.

மாரி “ ஏலே! சுப்பு அண்ணை கண்டதும் அந்த பயம் இருக்கு இல்ல…பிறகு உண்மையை சொல்லி உன் உயிரை காப்பாற்ற வேண்டியது தானே டா! வீணாக அண்ணை இங்கே வரவழைத்து கோபத்தை ஏற்றி கொண்டு இருக்க சொல்லு உன்னை இதை செய்ய சொன்னது யாரு? ஏலே! என கேட்டான்.

அப்பவும் அவன் தேவவிரதன் பய பார்வை பார்த்தானே தவிர வாய் திறக்கவில்லை சட்டென எழுந்த தேவவிரதன்… அவன் அருகில் ஒரு நொடியில் போனவன் ..தன் முதுக்கு பின்னால் வைத்து இருந்த கத்தியை எடுத்தவன்… அவன் பின் தலையை பற்றி தன் முகத்துக்கு நேராக கொண்டு வந்தவன்..

தேவவிரதன் “ என்னை எதிர்ப்பவர்கள் கூட நான் ஒரளவுக்கு மன்னிப்பு வழங்குவேன் ஆனால் அவங்க நிழல் தொட நினைத்தால்…அவ்வளவு தான் அடுத்த நொடி அவங்களை மரணம் தேடி வந்து விடும் நான் மரணத்தின் காவலன் இனி நீ ஏதும் சொல்ல தேவையில்லை…உன் மரணத்தை பார்த்து இனி ஒருவன் அவங்கள் எதிர்க்க தயங்க வேணும்…

இந்த தேவவிரதனை தாண்டி தான் அவங்களை தொட வேணும் அது இந்த ஜென்மத்தில் முடியாத காரியம்… உன்னை அனுப்பியவன் ஒரு முட்டாள் என்றால் அவன் பேச்சை கேட்டு வந்த நீ அதை விட முட்டாள் … உன்னை அனுப்பியவனை எனக்கு யாரென தெரியாது என்றா நினைக்கிற இந்த தேவவிரதன் அறியாமல் காற்று கூட வீச முடியாது டா! இருந்தும் சாவை தைரியமாக சந்திக்க நீ வந்தால் உனக்கு கடைசியாக ஒரு வாய்ப்பு தருகிறேன் சொல்லு உன்னை இதை செய்ய சொன்னது யாரு? என கேட்டான்.

சுப்பு பலவீனமான குரலில் “ நீ எப்படி கேட்டாலும் என் பதில் ஒன்று தான் தேவா அவங்க உயிரோடு இருக்க கூடாது..இருந்தால் என் அண்ணன் ஜெயிக்க முடியாது உனக்கு எப்படி அவங்க முக்கியமோ! அது போல எனக்கு என் அண்ணன் முக்கியம் அவங்க அப்படி ஒன்று நல்லவங்க இல்லை தானே! அது தான் மரணத்தை நான் அவங்களுக்கு பரி.. என சொல்லி கொண்டு இருக்கும் போதே அவன் மூச்சை தேவவிரதன் நிறுத்தி இருந்தான்.

அவன் வயிற்றில் கத்தியை இறங்கி இருந்தவன்.. முகத்தில் இரத்த துளிகள் தெறித்து இருந்தது…அவன் கை முழுவதுமாக இரத்தம் .

தேவவிரதன் “ எனக்கு என்ன என்றால் கூட நான் மன்னிப்பு வழங்குவேன் ஆனால் அவங்க நிழலை கூட..தொட நினைப்பவங்களை நான் உயிரோடு விட மாட்டேன் ஏலே! மாரி இவன் உடலை அவனுக்கு பார்ச்சல் பண்ணி விடுங்க இவன் சாவை பார்த்து இனி ஒருவன் அவங்களை எதிர்க்க பயப்பட வேணும்.

கமிஷனருக்கு வழமையானதை அனுப்பி விடு என சொன்னவன்.. கத்தியை தன் முதுகுக்கு பின்னால் வைத்தான் பிறகு அவன் நேராக சென்ற இடம் கப்பலின் மேற்புறம் அங்கே நின்றவன். தன் வேட்டி, சட்டையை களைந்தவன் உள்ளே போட்டு இருந்த ஷார்ட்ஸ் வெற்றி மேனியோடு கடலில் குதித்தான்.

கிட்ட தட்ட அரை மணிநேரம் உள் நீச்சல் அடித்தவன் மேலே வரும் போது சூரிய தன் கரங்களால் பூமியை தழுவ ஆரம்பித்து இருந்தான்…மேலே வந்தவன் சூரியன் உதமாகும் திசையில் ஒற்றை காலில் நின்றவன்.. கரங்களை மேலே உயர்த்தி கண்களை மூடியவாறே சூரிய நமஸ்காரம் செய்தான்.. அவன் உடலில் சூரிய கதிர்கள் தழுவியது அவன் உடல் சூரிய வெளிச்சத்தில் வைரமாக ஜொலித்து இவனை நெருங்குவது ஆபத்து என காட்டியது.

அப்போது மாரி வந்தவன் அவன் சூரிய நமஸ்காரம் செய்யும் போது தொந்தரவு செய்தால்..அதன் விளைவு பயங்கரமாக இருக்கும் என தெரியும் அதனால் தயங்கி நின்றான்..தேவவிரதன் கண்களை திறக்காது.

தேவவிரதன் “ மாரி வந்த விஷயத்தை சொல்லு” என்றான்.

மாரி “;அண்ணே! வீட்டில் இருந்து அழைப்பு வந்து இருக்கு உங்களை உடனடியாக வர சொல்லி “என்றான்..தேவவிரதன் கண்கள் திறந்தவன் சட்டென தன் சூரிய நமஸ்காரம் கை விட்டவன்.

தேவவிரதன் “ நீ போய் வண்டியை தயார் செய் கிளம்ப” என சொல்லி விட்டு தன் வேட்டி சட்டையை போட்டவன் கிளம்பினான்..


தஞ்சம் கொள்ள வருவான்..
 
Last edited:

Mithila Mahadev

Moderator
அத்தியாயம்: 02


சென்னையில் ஒரு தெருவில் உள்ள வீட்டில் காலை நேர பரபரப்பு காணப்பட்டது… வழமையான அம்மாக்கள் போல அந்த வீட்டின் தலைவி சுவர்ணா சமையலில் ஈடுபட்டு கொண்டு இருந்தார்…


அப்போது அந்த வீட்டின் கேட் திறந்து குடும்ப தலைவர் ஜார்ஜ் ஸ்டீபன் கையில் காய்கறி கூடையோடு வந்தார்… ஆம் கலப்பு காதல் திருமணம் வழமை போல கல்லூரி காதல் அல்ல…இருவருமே புரபசர்கள் ஒன்றாக வேலை செய்யும் போது காதலித்து வீட்டில் தங்கள் காதலை சொன்னார்கள்..


வழமை போல எதிர்ப்பு இருவருமே வீட்டில் சொல்லி விட்டு நண்பர்கள் உதவியோடு ரிஜிஸ்டர் மேரீஸ் பண்ணி… தங்களை சொந்த ஊர் திருச்சியை விட்டு சென்னைக்கு வந்து விட்டனர்…முதலில் உறவுகளை விட்டு வந்தது கஷ்டமாக இருந்தது ஆனால் அவர்களின் காதல் அதை ஈடு செய்தது.


இருவருமே கோல்ட் மெடல் என்பதால் ஒரு நண்பர் மூலமாக ஸ்டீபனுக்கு கல்லூரியிலும் சுவர்ணாவுக்கு ஸ்கூலிலும் வேலை கிடைத்தது…அதனால் பணத்திற்க்கு கஷ்டம் இல்லாமல் போனது அப்போது அவர்கள் வாழ்க்கையை மேலும் வளமாக்க பிறந்தாள் பரிநிதா… அவள் பிறந்த நேரம் இந்த வீடு சொந்தமாக வாங்க கூடிய நிலையில் இருந்தார்கள்.


மூன்று சிறிய அறை கொண்ட சிறு வீடு ஹால், சமையலறை, என இருந்தது …பூஜையறை வைக்க இடம் இல்லை என்பதால் பூஜைக்குரிய ஷெல்ஃப் வாங்கி கொடுத்து இருந்தார் ஸ்டீபன்…கொல்லை பக்கமாக குளியலறை இருந்தது.


பரிநிதாவுக்கு பிறகு ஆறு ஆண்டுகள் கழித்து பிறந்தார்கள் இரட்டையர்களான செளமியா- ரம்யா சுவர்ணாவுக்கு தான் ஆண் குழந்தை பிறக்கவில்லை என்ற வருத்தம்…ஆனால் ஸ்டீபனுக்கு தனக்கு மூன்று தேவதைகள் பிறந்து விட்டார்கள் என தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார்.


அவர்கள் வாழ்க்கை உறவுகள் அருகாமை இல்லை என்பதை தவிர மற்றபடி சந்தோஷமாக தான் போய் கொண்டு இருந்தது…அவர் கேட் திறக்கும் சத்தம் கேட்டு சுவர்ணா சாம்பார் கலக்கி கொண்டு இருந்தவர் தன் கையை புடவை முந்தானையால் துடைத்து கொண்டு வந்தார்.


சுவர்ணா “ என்னங்க இது உங்களுக்கு எத்தனை தடவை சொல்வது நான் இதை எல்லாம் நீங்க வேலைக்கு கிளம்பிய பிறகு வாங்கி கொள்வேன் என்று…உங்களுக்கு இருக்கும் வேலையில் இதை வேற பார்க்க வேணுமா? இப்போ பரீட்சை வேற நடக்கும் சமயம்… நீங்க ரிலாக்ஸ்டாக வாக்கிங் போவதை விட்டு இதை எல்லாம் அள்ளி கொண்டு வர வேணுமா? என கேட்டார்.


ஸ்டீபன் “ சுவி மா ரிலாக்ஸ் இது எல்லாம் பெரிய வேலையா எனக்கு!. நீ தான் நாள் பூராகவும் எங்களுக்காக காலில் சக்கரம் கட்டாத குறையாக ஓடி கொண்டு இருக்க… அது மட்டுமல்ல காலையில் தான் ப்ரெஷ்ஷான காய்கறி வாங்க முடியும் நீ போகும் நேரம் அது எல்லாம் வாடி வதங்கி விடும்.


சரி இந்தா!. காய்கறி இதில் மீன் கூட இருக்கு வை நான் கழுவி தருகிறேன் உன் கையில் மீன் முள் குத்தி விடும்…சரி பரி குட்டி வந்து விட்டாளா? செளமி, ரம்மி செல்லம் எல்லாம் எங்கே படிக்கிறாங்களா? என கேட்டார்.


சுவர்ணா “ நீங்க தான் உங்க பரி குட்டியை கொஞ்சி கொள்ள வேணும் ஊர் உலகில் எவ்வளவு படிப்பு இருக்கு…அதை விட்டு எனக்கு ஜர்னலிசம் தான் பிடித்து இருக்கு என்று உங்களை தாஜா பண்ணி படித்து கூடவே வேலையும் எடுத்தாள்.


சரி அது போகட்டும் என்று விட்டால் இப்போ என்ன என்றால் ஏதோ போலீஸ் மாதிரி குற்றங்களை கண்டுபிடிக்க போகிறேன் என்று… அந்த இரண்டு தடிமாடுகள் கூட நைட் பூராகவும் சுற்றி வருகிறாள் எனக்கு பயமாக இருங்குங்க…பையன் என்றால் கூட அவன் உயிர் மட்டும் தான் போகும் இவள் பெண்ணுங்க உயிரை விட மானம் பெரிது.


இவளுக்கு சீக்கிரமாக ஒரு கல்யாணத்தை பண்ணி வைக்க வேணும் அப்போ தான் இந்த எண்ணம் எல்லாம் இல்லாமல் போகும் “ என்றார்…ஸ்டீபன் மனைவியை அணைத்து கொண்டவர்.


ஸ்டீபன் “ கமான் சுவி டியர்!. அவள் யாரு இந்த ஜார்ஸ் ஸ்டீபன் பெண்ணு அவள் ரத்தில் தைரியம் இருக்கும்…நம்ம காலேஜ் டேஜ் நினைவு இருக்கு இல்லையா உனக்கு? நான் அடக்காத ரவுடிசமா சரி இப்போ அதை விட என் மற்ற இரண்டு பிரின்சஸ்ம் எங்கே? என கேட்டு கொண்டு இருக்கும் போது…டாடி என அவர் சத்தம் கேட்டு டென்த் படிக்கும் செளமியா, ரம்யா ஓடி வந்தார்கள்.


அவர்கள் இருவரையுமே இரண்டு பக்கமாக அணைத்து நெற்றியில் முத்தம் வைத்தவர்

“ குட் மார்னிங் மை டியர் பிரின்சஸ்ஸ் டாடி கிளம்பும் போது நீங்க படித்து கொண்டு இருந்தீங்க!. சோ உங்களை டிஸ்டர்ப் பண்ண கூடாது என டாடி கிளம்பி விட்டேன்…நைட் டாடி சொல்லி தந்தது புரிந்தது தானே!.. புரியவில்லை என்றால் கூட தயங்காமல் கேட்க வேணும்.


படிப்பில் டவுட் கேட்க தயங்கினால் நம்ம வாழ்க்கை திசை மாறி விடும் படிப்பில் மட்டுமல்ல எதிலும் டவுட் கேட்க தயங்க கூடாது…டாடியும் அம்மாவும் உங்களுக்கு பேரண்ட்ஸ் மட்டுமல்ல பெஸ்ட் ப்ரண்ட்ஸ் கூட சரியா? பால் சாப்பிட்டு விட்டீங்களா? அம்மா தருவதை வேணாம் என்று சொல்லாது சாப்பிட வேணும் அப்போ தான் படிப்பது நினைவில் நிற்க்கும்…


ஓகே ஸ்கூல் போக டைம் ஆகி விட்டது ரெடியாகி வாங்க ஆ! வெயிட் என்றவர் அவர் வாங்கி வந்த சாக்லேட் சிலதை கொடுத்தார்.


செளமியா “ தேங்டியூ டாடி அக்காவுக்கு எங்கே? என கேட்டாள் ஸ்டீபன் சிரித்தவர் இன்னொரு பையை காட்ட…இருவருமே அவர் கன்னத்தில் முத்தம் வைத்து விட்டு ஸ்கூல் கிளம்ப ரெடியானார்கள்… ஸ்டீபன் உள்ளே போய் வேற உடை மாற்றி வந்தவர் மனைவிக்கு மீன் வெட்டி கொடுத்து கழுவி கொடுத்தவர்… தன் கைகளை ஹேண்ட் வாஷ் போட்டு கழுவி விட்டு கை துடைக்க ஆரம்பிக்க கேட் திறக்கும் சத்தம் கேட்டது.


சுவர்ணா “ ம்!. உங்க செல்ல பெண்ணு வந்து விட்டாள் இன்று இருக்கு அவளுக்கு விடியற்காலை நான்கு மணிக்கு கிளம்பியவள்…இப்போ வரும் நேரத்தை பாருங்க மணி ஏழயை தாண்டி விட்டது.. அதுவும் வெறும் வயிற்றோடு கிளம்பினாள் இப்படி இருந்தால் உடம்பு என்னத்துக்கு ஆகும் “ என்றார்.


ஸ்டீபன் “ சுவர்ணா வெயிட் இப்போ தான் வருகிறாள் அவளை திட்டி விடாதே!. வரட்டும் நான் என்ன என்று கேட்கிறேன்” என்றார்.


கேட் திறந்து உள்ளே வந்தது ஒரு ஐந்தரையடி சிலை குண்டும் இல்லை ஒல்லியும் இல்லை நடுத்தர உடல்வாகு…எலுமிச்சம்பழ நிறம் பெரிய விழிகள் அழகிய நுதல், வில் போல புருவங்கள் கூர் மூக்கு அதில் தங்க மூக்குத்தி…சிவந்த இதழ்கள் மாம்பழ கன்னங்கள் தோள் வரை சுருண்ட முடி இவள் தான் பரிநிதா நம் நாயகி…ஸ்டீபனை காண டாடி என ஓடி வந்தவள் சாயம் போன நீல கலரில் ஒரு ஜீன்ஸ், பழுப்பு நிறத்தில் டாப்.. தன் தோள் வரை இருந்த சுருண்ட முடியை ஒரு கருப்பு நிற ஹேர் பேண்டில் அடக்கி இருந்தாள்…


தந்தையை அணைக்க வந்தவள் பாதியில் சட்டென நின்று வாசனை பிடித்தவள்… முகத்தை ஒரு மாதிரியாக வைத்தவள் டாடி என சிணுங்கினாள்…ஸ்டீபன் சின்ன சிரிப்போடு


ஸ்டீபன் “ என்ன பேபி டாடியை ஹாக் பண்ண வந்த பாதியில் நின்று விட்ட என்ன விஷயம் பேபி” என கேட்டார்.


பரிநிதா “டாடி தெரியாமல் கேட்க வேணாம் எனக்கு பிஷ் ஸ்மெல் பிடிக்காது என தெரியும் தானே…பிறகு டிரஸ் சேன்ஸ் பண்ணாமல் எதற்காக என் கிட்ட வந்தீங்க” என கேட்டாள்.


சுவர்ணா “ஏய்!. உனக்காக அவர் என்ன கோட் சூட் போட்டு கொண்டா மீன் வெட்ட முடியும்? பார்த்து டி உன்னை கல்யாணம் பண்ணி கொள்ள போகிறவன் கடலுக்கு சொந்தகாரனாக இருந்து விட போகிறான்…இதை விடு முதலில் காலை என்ன விஷயம் என கேட்டும் சொல்லாமல் ஓடி விட்ட எங்கே முதலில் போன அதை முதலில் சொல்லு” என்றார்.


பரிநிதா “அம்மா அது சீக்ரெட் மேட்டர்.. அதை எல்லாம் பெத்த அம்மாவாக கூட இருந்தாலும் உன் கிட்ட சொல்ல கூடாது… அது தான் தொழில் தர்மம் “என்றாள்.


சுவர்ணா “ உன் தொழில் தர்மத்தை நீ தான் தலையில் தூக்கி வகைக்க வேணும்.. ஏய்!. இது உன் பழைய ஜீன்ஸ் ,டாப் தானே இதை நான் தூசி துடைக்க தானே வைத்து இருந்தேன்…இதை எதற்காக எடுத்த என்ன கண்றாவி கோலம் டி இது… அதுவும் காலையில் போ போய் துணி மாற்றி குளித்து விட்டு வா சாப்பிட முதலில் அந்த தூணியை தூக்கி வீசு” என்றார்.


பரிநிதா “வாட் பழைய துணியா? மை காட் இதை நீ தானா தூக்கி ஸ்டோர் ரூம்மில் போட்டது…இதன் விலை தெரியுமா? இது தான் இப்போ பேஷன் அதை விட துப்பு துலக்க போகும் போது இப்படி தான் போக வேணும்… வாட் சுவர்ணா நீ இன்னும் அப்டேட் ஆகாமல் இருக்க” என்றாள்.


“அடி கழுதை” என விளையாட்டாக அடிக்க கை ஓங்க.. டாடி சேவ் மீ என்றவள் ஸ்டீபன் பின்னால் ஒளிந்து கொண்டாள்.


ஸ்டீபன் “ விடு டியர் அவள் விளையாட்டுக்காக தானே சொன்னாள்…பேபி நீ போய் ப்ரெஷ் அப் செய்து விட்டு வா” என்றார்.பரிநிதா தன் ரூம்முக்கு ஓடி விட இது எங்கே போய் முடிய போகிறதோ என நினைத்து விட்டு சுவர்ணா சமயலறைக்கு போனார்.


அந்த வீட்டியில் மூன்று அறைகள் உள்ளது பெரிய அறைகள் அல்ல இருவர் தாராளமாக வசிக்கலாம்…ஸ்டீபன்,சுவர்ணாவுக்கு ஒரு ரூம் பரிநிதாவுக்கு ஒரு அறை செளமியா-ரம்யாவுக்கு ஒன்று… பரிநிதா வேலையால் படிக்கும் மற்ற இருவருக்கும் தொந்தரவாக இருக்க கூடாது என்று இந்த ஏற்பாடு… பரிநிதா தன் அறைக்கு வந்தவள் தன் மாற்று உடைகளை எடுத்து கொண்டு குளிக்க கொல்லைக்கு போனாள்.



தஞ்சம் கொள்ள வருவான்…




 

Mithila Mahadev

Moderator
அத்தியாயம்: 03


சென்னையில் கிட்ட தட்ட இரண்டு தெருக்களை உள்ளடக்கி அந்த பங்களா இருந்தது…பங்களாவுக்குள்ளே அங்கே வசிக்கும் ஆளுங்க கார்கள் நின்றதால் வெளியே தான் மற்ற கார், ஜீப் நின்றது… அங்கே வாசலில் யாருமே நிற்க கூடாது என்பதால் உள்ளே ஒரு டென்ட் போட்டு அவர்கள் அமர பிளாஸ்டிக் நாற்காலி இருந்தது.


அவர்களுக்கு சாப்பிட கலர் கொடுத்து கொண்டு இருந்தார்கள் அது தான் அந்த வீட்டை கட்டியாளும் அரசியின் கட்டளை…தன்னை பார்க்க வரும் யாருமே கஷ்டப்பட கூடாது அங்கே காவலுக்கு கறுப்பு உடை அணிந்த கார்ட்ஸ் கூடவே நிறைய வெள்ளை வேட்டி சட்டைகளும் நின்றது.


அப்போது அந்த பங்களாவுக்குள்ளே போர்டோஃபினோ ஜாகுவார் கார் வர அதை தொடர்ந்து முன், பின் கருப்பு நிற வண்டிகள் பாய்ந்து வந்து நின்றது…அதன் முகப்பில் நங்கூரம் அமைப்பில் வெள்ளி சின்னம் இருக்க அனைவருக்குமே புரிந்தது வந்தது யாரென சட்டென அங்கே இருந்தவர்கள் எழுந்தார்கள்.


கறுப்பு, வெள்ளை சட்டை எல்லாம் அலர்ட்டாகி நின்றது… அவன் பக்க கதவை ஒருவன் திறக்க இறங்கினான் தேவவிரதன்…அனைவருமே அவர்களின் வயதுக்கு ஏற்றவாறே வணக்கம் தம்பி வணக்கம் அண்ணன் என வணக்கம் வைக்க.. அவன் அதை ஒரு தலையசைவோடு ஏற்று கொண்டவன் வீட்டுக்குள்ளே வேக எட்டு வைத்து போனான்.


அது வீடு என்பதை விட அரண்மனை என சொல்லாம் பணத்தை கொட்டி அதை கட்டி இருந்தார்கள்….பரம்பரையாக வந்த அரண்மை வம்சம் அது தேவ விரதன் உள்ளே வர அவன் கார்ட்ஸ் வெளியே நின்றார்கள்… அவன் வலது, இடது கையான மாரி, ரங்கா மட்டும் தான் அவனை தொடர்ந்து வந்தார்கள்….அவர்களுக்கு மட்டும் தான் அந்த வீட்டுக்குள்ளே வர அனுமதி.


ஹை!...சித்தா வந்துட்டான் என சத்தம் போட்டு கொண்டே ஐந்து வயது ஆறு வயது உள்ள பையன்கள் ஓடி வந்தார்கள்…அவர்களை காண தேவவிரதன் முகம் மலர்ந்தது அவன் அவர்களை தூக்க போக… நிறுத்து தேவா என சொல்லி கொண்டே எழுபது வயதை உள்ள ஒரு பெண்மணி வந்தார்.


தேவவிரதன் அம்மாச்சி என அழைக்க அவர் கை காட்டி அவனை நிறுத்த சொன்னவர்…கலா என அழைத்தார் அடுத்த நிமிஷம் வேலைக்கார நடுத்தர வயது பெண் ஒருவர் வந்தார்.


அவர் “ கலா புள்ளைங்களை அவங்க ரூம்க்கு கொண்டு போ…கண்ணுங்களா!.. உங்க சித்தா இப்போ வருவான் நீங்க கலா பாட்டி கூட போங்க அப்பு” என்றார்…கலா கூட இன்னும் ஒரு பெண்ணு வர இருவையுமே தூக்கி கொண்டு போக அவர்கள் சித்தா டாட்டா என கை காட்டி விட்டு போனார்கள்.


அம்மாச்சி என அழைத்தவர் வெள்ளை நிற பட்டு புடவை கரை தங்கம் நெற்றியில் திருநீறு மட்டும்… காதில் வைரத்தோடு, கழுத்தில் கறுப்பு, தங்கம் கலந்த ருத்ராட்ச மாலை, கையில் ஒற்றை பட்டை வளையலாக வைர வளையல் அணிந்து இருந்தார்.


அவர் “ உனக்கும் உனக்கு உன் தாத்தா, அம்மாவுக்கும் ரத்த கறை சாதாரணமாக இருக்கலாம் தேவா… ஆனால் எங்களுக்கு இல்லை எத்தனை தடவை நான் சொல்லி இருக்கிறேன்…உன் பாவ வேலைகளை செய்த கையால் குழந்தைகளை தூக்க கூடாது என்று….


அவங்க தூய நிழலில் வளர வேண்டியவங்க ...உங்க பாவ நிழல்கள் கூட அவங்க மேலே பட கூடாது …எந்த சாபமும் என் பூட்ட பிள்ளைங்க மேலே பட கூடாது நீயும் உன் தாத்தா, அம்மா வழியை பின்பற்றாதே என பல தடவை சொல்லி சலித்து விட்டேன்…இதற்காக பலனை நீ கூடிய சீக்கிரமாக அனுபவிப்ப” என சொல்லி கொண்டு இருக்கும் போதே..


“ என் பையனை எந்த பாவ நிழலும் அண்டாதுமா ஏன் தெரியுமா? அவன் தேவ விரதன் அவனை மரணம் கூட நெருங்க முடியாது அவன் இஷ்டப்பட்டால் மட்டும் தான் மரணத்தின் நிழல் கூட அவனை நெருங்கும் “ என சொல்லி கொண்டு வந்தாள்… அகிலாண்டேஸ்வரி தேவ விரதனின் அன்னை மட்டுமல்ல ஜகதேவ் குரூப்ஸ் சொந்தகாரி கூடவே ஆளும் கட்சியின் கல்வி மந்திரி.


அகிலா பெயருக்கேற்ப அகிலத்தை ஆள பிறந்தவள் தான் அவள் தந்தை தாய்க்கு ஒரேய வாரிசு…அவள் தந்தை ஜகதேவ் அவர் தமிழ்நாட்டு சி.எம்யாக மூன்று தடவை இருந்தவர்…அரசியல் பரம்பரை அதை பார்த்து வளர்ந்த அகிலாவுக்கும் அது பிடித்து இருந்தது.


அதனால் அன்னை சொல்லை தட்டி விட்டு தந்தை வழியை பின்பற்றி நடக்க தொடங்கி விட்டாள் …கடந்த சில வருடங்களாக அரசியலில் அசைக்க முடியாத இடத்தில் இருக்கிறாள்…அவளை போல தான் தேவ விரதனும் அரசியலில் குதித்து விட்டான்…ஆனால் அவனை பொருத்த வரைக்கும் ஏதுவும் அவனை கட்டுபடுத்த கூடாது அது பணம், பதவி எது என்றாலும் கூட அதனால் பதவியில் அமராது அன்னைக்கு காவலாக இருக்கிறான்.


அகிலாவின் கணவன் பார்த்தசாரதி அகிலாவின் தந்தை ஜகதேவ்வின் தங்கை மகன்…தன் மகனான எண்ணி வளர்த்தவர் தன் ஓரேய மகளையும் தன் சொத்தையும் அவரிடம் கொடுத்து விட்டு கண் மூடினார்... அகிலாவுக்கு மூன்றுமே ஆண் வாரிசுகள் தான் அதில் அவளுக்கு சந்தோஷம் தன் அரசியல் வாழ்க்கைக்கு துணை புரிய வந்தவர்கள் என்று…



ஆனால் அங்கே தான் கடவுள் டூவிஸ்ட் வைத்தார்…தேவ விரதனை தவிர மூத்த இரு ஆண் வாரிசுகளும் அரசியலை அடியோடு வெறுத்தனர்…அவர்களை வளர்ந்தது அகிலாவின் அன்னை கோமளா அதனால் அவர்கள் படிப்பை தான் தேர்ந்தெடுத்தனர்.


பார்த்தசாரதி சிறந்த கணவன், தந்தை அவர் அகிலாவை காதலித்து கல்யாணம் செய்யவில்லை தான்…மாமன் வார்த்தைக்காக அவளை கரம் பற்றியவர் இப்போ வரைக்கும் அவளை கடிந்து ஒரு வார்த்தையோ!..இல்ல கை நீட்டியது இல்லை.. அவர் வெறுப்பது இந்த அரசியல் வாழ்க்கை தான்…தன் மாமனின் வியாபாரத்தை மட்டுமல்ல தன் தந்தையின் வியாபாரத்தையும் அவர் தான் நடத்துகிறார்.


கூடவே அவர் இரண்டு பசங்களும் தந்தை வழியில் இறங்கி விட்டனர் மூத்தவன் மகிழன் அடுத்தவன் இனியன்… அவர்கள் மனைவிகள் இருவருமே பணக்கார குடும்ப பெண்ணுங்க… மகிழன் மனைவி காவ்யா டாக்டராக இருக்கிறாள்…இனியன் மனைவி சரண்யா லாயராக இருக்கிறாள்.


அகிலா வயது ஐம்பதாக இன்னும் நான்கு மாதம் இருக்கும்…அழகும் கம்பீரமும் ஒருங்கே பெற்றவள் கட்சி ஆபிஸ் கிளம்பி இருந்தாள் போல….அது தான் வயலட் கலரில் பிளவுஸ் வெள்ளை வயலட் கலர் சேர்ந்த பட்டுப்புடவை…காதில் வைர தோடு கழுத்தில் தாலியோடு சேர்த்து ஒரு பெரிய செயின்.


இடது கையில் வாட்ச் வலது கையில் ஒரு ஜோடி வைர வளையல்கள்…இரண்டு விரல்களில் வைர மோதிரம் நெற்றி, வகிட்டில் குங்குமம்…கூந்தலை கொண்டை போட்டு இருந்தாள் அவள் கம்பீரம் தான் அவளுக்கு பிளஸ் பாயின்ட்…படியில் இருந்து இறங்கி வந்தாள்.


அகிலா வர தேவ விரதன் அவள் பாதம் தொட அகிலா முகம் கனிய அவன தலையில் கை வைத்து ஆசி வழங்கியவள்…அவன் எழ அவன் கன்னத்தை தடவி விட்டாள் தன் தந்தை போல உருவத்தில் இருக்கும் மகன் மீது அவளுக்கு அதிக அன்பு…


அகிலா “ என் மகன் ஜெயிக்க பிறந்தவன் மா அதை விட மரணத்தை வென்றவன்…பீஷ்மர் கூட கெளரவர்கள் பக்கம் நின்றவர் தான் எதற்காக? அவர் கற்ற தர்மம் அது கடைசி வரை தன் தந்தை ,சிற்றனைக்கு கொடுத்த வாக்கை அவர் மீற நினைக்கவில்லை…


அது போல தான் என் பையனும் அம்மாவுக்காக சிலதை களை எடுக்கிறான் இதில் தவறு இருப்பதாக எனக்கு தெரியவில்லை மா “என்றாள் அப்போது அங்கு வந்த பார்த்த சாரதி.


“அது உன் பார்வைக்கு ஈஸ்வரி ஆனால் ஊர்,உலக பார்வையில் உன் பையன் பெயர் என்ன தெரியுமா? ரவுடி,டாண் விபீஷணன் ராவணனின் தம்பி எத்தனை தடவை தன் உயிரான அண்ணன் செய்யும் தப்பை சுட்டி காட்டியவன்.


அது முடியாத போது தர்மத்திற்காக அண்ணனை விட்டி விலகி தர்ம பாதையில் நடப்பவன் எங்கெல்லாம் நேர்மை இருக்கோ அங்கு இவன் நாமம் உச்சரிக்கபடும்… இவனும் பிரம்மாவிடம் மரணமில்லா வாழ்வின் வரம் பெற்றவன் தான்மா…


இவனை போல உன் பையனை நீ உருவாக்க ஏன் ஈஸ்வரி நீ நினைக்கவில்லை காரணம் சொல்லவா? உனக்கு பிறகு இந்த அரசியலை காட்டி ஆள ஒருவன் வேணும் அதற்காக தான் இவனை நீ உருவாக்கி இருக்க “ என்றார்.


அவர் பேச பேச அகிலா முகம் பயங்கரமாக மாறியதுஅவள் நிறுத்துங்க அத்தான் என சத்தம் போட்டாள்…அந்த சத்தத்தில் அந்த பங்களா அதிர்ந்தது …தேவவிரதன் முகமும் மாறியது அவனுக்கு அன்னை பற்றி யாரும் தப்பாக பேசினால் பிடிக்காது... அவள் குரல் கேட்டு மகிழன்,இனியன் ,காவ்யா, சரண்யா ஓடி வந்தார்கள்.அகிலா என குரலை உயர்த்தினார்.



கோமளா “ அகிலா நீ யார் முன்னாடி குரலை உயர்த்துகிற என பாரு…உன் மகன் விஷயம் என வந்தால் உனக்கு கண்ணு தெரியாதா? தேவா உனக்கு மட்டுமா பையன் மாப்பிள்ளை அவன் அப்பா அவர் சொன்னதில் என்ன தவறை கண்ட நீ… ஆ சொல்லு இப்போ கூட உனக்காக தான் இவன் யாரையோ அடித்து பிளந்து விட்டு வந்து இருப்பான்.


உன் அப்பா கூட ஒரு தடவை கூட மாப்பிள்ளை கிட்ட குரலை உயர்த்தியது இல்லை …ஆனால் நீ குரலை உயர்த்துகிற தப்பு செய்தது நீயும் உன் பையனும் தான் நாங்க இல்லை தேவா என்ன எங்க எதிரியா? தன் மகன் இந்த அரசியலை விட்டு வந்தால் தான் பேசுவேன் என காத்து இருக்கிறார் மாப்பிள்ளை…


ஆனால் நீ அந்த சாக்கடைக்குள்ளே விழுந்தது இல்லாது அதில் உன் பையனையும் சேர்த்து இழுத்து விட்டு இருக்கிற இந்த அரசியலால் தான் நான் உன் அப்பாவை இழந்தேன்…உன்னை,தேவாவை என்னால் இழக்க முடியாது அகிலா அம்மா திரும்ப சொல்கிறேன் இது வேண்டாம் நமக்கு “ என்றார்.


அகிலா “ மன்னிக்க வேணும் மா என்னால் முடியாது இது என் லட்சியம் மட்டுமல்ல இது மூலமாக தான் நான் இல்லாதவங்களுக்கு கல்வியறிவை கொடுக்க நினைக்கிறேன்.. அது மட்டுமல்ல என் அரசியல் வாரிசாக தேவாவை நான் அறிவிக்க போகிறேன்…இந்த அம்மாவுக்காக அவன் இதை ஏற்று கொள்வான் “என்றாள்.



தஞ்சம் கொள்ள வருவான்…




 

Mithila Mahadev

Moderator
அத்தியாயம்- 04


அகிலாண்டேஸ்வரி தன் அரசியல் வாரிசாக தேவவிரதனை அறிவிக்க போவதாக சொன்னாள்.


கோமளா “ உனக்கு என்ன அகிலா பைத்தியமா? பிடித்து இருக்கு இவன் வாழ்க்கையை மொத்தமாக பழி கொடுக்க போகிறாயா? இவன் பற்றி தெரிந்துமா? இதில் இவனை இறக்க போகிறாய்…இவன் என்ன உன் மற்ற இரண்டு பசங்க போல அமையாதியான பையன் என்றா நினைத்த?


உன் அப்பா போல இவனுக்கு கை நீளம் அடித்து விட்டு தான் அவர் பேசுவார்… அது நேர்மையாக இருந்தாலும் அரசியலுக்கு சரி வருமா? உன் பையன் மூக்கணாங்கயிறு இல்லாத மாடு போல சுற்றி திரிகிறான்.


முதலில் இவனுக்கு ஒரு மூக்கணாங்கயிறு போடு பிறகு மற்றதை பார்க்கலாம்..என் இரண்டு பேத்திங்க போல அமைதியான ஒரு பெண்ணை பாரு…உன் ஆசைக்கு என் பேரனை பழி கொடுக்க முடியாது.


படித்தவன் மாதிரியா இவன் நடந்து கொள்கிறான்.. மாப்பிள்ளை சொன்னது போல பக்கா ரவுடி போல நடந்து கொள்கிறான்…மாப்பிள்ளை இவனுக்கு சீக்கிரமாக ஒரு பெண்ணை பார்த்து கல்யாணம் பண்ணி லண்டன் அனுப்புங்க.


அங்கே உள்ள உங்க பிசினஸை பார்த்து கொள்ளட்டும்.. இவனை பார்த்து என் பூட்ட புள்ளைங்களும் வளர கூடாது” என்றார்.


அகிலா “ அம்மா மகி,இனி விஷயத்தில் தான் நீங்களும் அத்தானும் முடிவெடுக்க முடியும்…தேவா விஷயத்தில் இல்லை இவன் என் பையன் மட்டுமல்ல என் அப்பாவும் கூட …இவனுக்கு வர போகிறவள் என் பையன் சொற்படி கேட்டும் நடக்கும் ஒருத்தியாக தான் இருக்க வேணும் “ என்றாள்.


பார்த்தசாரதி “ ஈஸ்வரி எதற்காக அவள் வாயை மூடுவதற்காகவா? சொல்லு… நீயும் உன் பையனும் என்ன செய்தாலும் அவள் ஆமாம் சாமி போடுவதற்காகவா? அதற்க்கு எதற்க்கு கல்யாணம் உன் பிஏ உன் கட்சி தொண்டர்கள் போதுமே?


அத்தை உங்களை மறுத்து பேசுவதாக நினைக்க வேணாம்…முதலில் உங்க பேரனை சரி செய்து விட்டு அவனுக்கு பெண்ணு பாருங்க அது தான் சரியாக இருக்கும்…இதற்க்கு மேலே உங்க விருப்பம்.


ஈஸ்வரி மாமா நினைவு நாள் வருகிறது…அதை நான் நினைவுபடுத்த தேவையில்லை நான் ஏற்பாடுகளை செய்யவா? இல்ல தேவவிரதன் சார் செய்கிறாரா?


கேட்டு சொல்லு நான் மாமா கிட்ட இந்த நினைவு நாளில் கேட்பது ஒன்று தான்… அவர் ஆசை மகளுக்கும், மகனுக்கும் புத்தியை கொடுங்கள் என்று…இதற்க்கு மேலே எனக்கு பேச ஒன்றுமில்லை” என்று சொல்லி விட்டு போனார்.


பரிநிதா குளித்து விட்டு தன் ரூம்க்கு வந்தவள்… ஜீன்ஸ், கறுப்பில் எம்பிராய்டரி வொர்க் செய்த டாப் ஒன்றை போட்டாள்… இடது கையில் கொஞ்சம் பெரிய வட்ட வடிவிலான கறுப்பு நிற ஸ்டிராப் வாட்ச்…மறு கையில் சின்ன தங்க பிரேஸ்லெட்,காதில் பூ டிசைன் தோடு கழுத்தில் தங்க செயினில் பி என்ற எழுத்தில் பெண்டன்.


வலது கரத்து விரலில் ஒரு தங்க மோதிரம் இது தான் அவளின் மொத்த அலங்காரம்…முகத்திற்க்கு சன் லோஷன் கிரிம் போட்டவள் கண்ணுக்கு மையும் உதட்டுக்கு லிப் பாம் பூசியவள்…தன் சுருண்ட முடியை ஒரு ஹேர் பேண்ட்டில் அடக்கி கொண்டு தோளில் சின்ன பேக் ஒன்றை மாட்டி கொண்டு வெளியே வந்தாள்.


அவள் வர அக்கா என தங்கைகள் அவளை அணைத்து கொள்ள அவளும் அணைத்து கொண்டாள்.


பரிநிதா “ செள,ரம்ஸ் இரண்டு பேருமே ரெடியாகி வீட்டீங்க போல…குட் ஹோம் வொர்க் எல்லாம் செய்து விட்டீங்க தானே!. ஏதும் டவுட் இருந்தால் அக்கா கிட்ட தயங்காமல் கேளுங்க” என்றாள்.


சுவர்ணா “ பரி, செளமி, ரம்மி சாப்பிட வாங்க டைம் ஆகுது “ என அழைக்க மூவருமே டைனிங் டேபிளுக்கு போனார்கள்…ஐந்து பேர் அமர கூடிய சின்ன டேபிள் அது செளமியா, ரம்மியா இருவருமே ஒன்றாக அமர்ந்தார்கள்…


அவர்கள் அருகில் தான் சுவர்ணா இருப்பது….தந்தை அருகில் தன்னை தவிர யாரையுமே பரிநிதா அமர விட மாட்டாள்.


பரிநிதா “ அம்மா டாடி எங்கே காணோம்” என கேட்டு கொண்டு இருக்கும் போது ஸ்டீபன் காலேஜ் போக ரெடியாக வந்தார்…


ஸ்டீபன் “ என் மூன்று பிரின்ஸ்ஸம் ரெடியாகி விட்டாங்க போல இருக்கே “என கேட்டு கொண்டு பரிநிதா பக்கத்தில் அமர்ந்தார்.


சுவர்ணா முதலில் கணவருக்கு இட்லி வைக்க வந்தார் அவரை தடுத்தவள்.


பரிநிதா” அம்மா முதலில் டாடிக்கு தோசை வை “ என்றாள்.


சுவர்ணா “ஏய் அவருக்கு தோசை பிடிக்காது டி இது உனக்கும் தெரியும் தானே “ என கேட்டாள்.


ஸ்டீபன் “சுவி டியர் என்ன மா நீ வர வர சோ இன்னசென்டாக இருக்கிற…உன் புருஷனுக்கு பிடிக்காது தான் பட் உன் பெண்ணுக்கு பிடிக்குமே “என சொல்லி மென்புன்னகை புரிந்தார்.


சுவர்ணா “இதுதெரியாமல் இருக்க நான் கூமுட்டை இல்லைங்க…தெரிந்து தான் கேட்டேன் உனக்கு என்ன ஐந்து வயது புள்ள என நினைப்பா பரி.


தடுமாட்டு வயதாகி விட்டது உன் டாடி இன்னும் ஊட்டி கொண்டு இருக்க வேணுமா? இது சரி வராது பரிநிதா அடுத்த வருஷம் உனக்கு கல்யாணம் பண்ண நினைத்து இருக்கிறேன்…ஆனால் நீ செய்யும் வேலையால் உன் புகுந்த வீட்டில் நாங்க தான் தலை குனிந்து நிற்க வேணும்.


சமைக்க தெரியாது துணி துவைக்க தெரியாது… ஏன் உன் ரூமை கூட கிளீனாக வைத்து கொள்ள தெரியாது…இதை விட காலங்கார்த்தால ஏதோ போலீஸ் போல துப்பு துலக்க இரண்டு ஆம்பள பசங்க கூட போகிற…


நான் பத்தாம்பசலி இல்லை தான் பட் அம்மா என் பெண்ணு வாழ்க்கை நல்லா இருக்க வேணும்… என்று நினைக்கிறேன்…அதற்க்காக அடிமையாக இரு என சொல்லவில்லை.


மற்றவங்க கையை நீ எதிபார்க்காது இதை எல்லாம் செய்ய வேணும் என்று நினைக்கிறேன்….உன்னை பார்த்து தான் உன் கூட பிறந்தவங்களும் கற்று கொள்ள வேணும் பெரிய பாப்பா” என்றாள்.


ஸ்டீபன் “ சுவர்ணா இனாஃப் என் பெண்ணுங்க என் ராஜகுமாரிங்க…அவங்க தங்க வீட்டில் பிடித்து போல இருக்கட்டும் ஏன் சுவர்ணா போர் ஏ சேன்ச் பசங்க நீ சொன்ன வேலை எல்லாம் செய்தால் ஆகாதா?


நம்ம தான் பெண்ணுங்க என்றால் இப்படி தான் இருக்க வேணும் என்று நம்ம வசதிக்காக …அவங்க காலில் தளைகளை பூட்டுகிறோம்…அந்த தளை தான் அவங்களை மொத்தமாக சிறை வைக்க காரணமாகி விடுகிறது.


அவர்கள் அதனால் தான் தங்களுக்குள்ளே ஒரு வட்டத்தை போட்டு கொண்டு… வாழ்ந்து தங்கள் ஆசை இலட்சியங்களை திறந்து மடிந்து போகிறாங்க ஆண்,பெண் இருவருக்கமே கனவுகள், லட்சியங்கள் பொதுவானது.


என் பெண்ணுங்களுக்கு மட்டுமல்ல என் கிட்ட படிக்கும் பெண்ணுங்களுக்கும் நான் சொல்வது இதை தான்…பாரதி கண்ட புதுமை பெண்கள் நீங்கள்…அதைய நேரம் அந்த புதுமை நேர் வழியில் உங்களை உங்க குடும்பத்தை கொண்டு செல்வதாக இருக்க வேணும்.


புதுமை என்ற பெயரில் உங்க எல்லைகளை மீறாது வகுத்து கொண்டால்.. நீங்க தான் பாரதி கண்ட புதுமை பெண்கள் என்று சொல்வேன் …ஒரு அம்மாவாக உன் பயம் புரிகிறது சுவி பட் நம்ம மூன்று பெண்களுக்கும் அது அவசியமற்றது.


காரணம் அவங்க சுவர்ணா பெண்ணுங்க தாயை போல புள்ள நூலை போல சேலை நீ அறிந்தது தான்…நீ செய்வதை பார்த்து அவங்க கற்று கொள்வாங்க மா…ஒரு பெண்ணு முதலில் கற்று கொள்ள ஆரம்பிப்பது தன் அம்மாவிடம் இருந்து தான்.


அது போல பையன் தன் அப்பாவிடம் இருந்து கற்று கொள்ள ஆரம்பிக்கிறான்…இது இரண்டுமே சரியாக அமைந்தால் அந்த புள்ளைங்க வாழ்க்கை நன்றாக இருக்கும்.


நம்ம கடமைகளை சரி வர செய்தால் மற்றதை கர்த்தர் பார்த்து கொள்வார்…நீ தோசையை எடுத்து வா” என்றார் பெண்கள் மூவருமே தந்தையை தான் ஆச்சரியமாகவும் பெருமையாகவும் பார்த்தார்கள்.


இப்படியும் ஒரு ஆண் இருக்க முடியுமா? என்று என்ன தெளிவான விசாலமான ஒரு பார்வை என்று….சுவர்ணாவுக்கு அவரை பற்றி நன்றாக தெரியும் படிக்கும் காலம் தொட்டு… அவர் இப்படி தான் பெண்களை உயர்வாக தான் பார்த்தார், பேசுவார் அதில் தானே!. அவள் மனதை அவரிடம் பறி கொடுத்தது.


சுவர்ணா நெய் தோசை, இட்லி சட்னி, சாம்பார், வடை என எல்லாம் கொண்டு டேபிளில் வைத்தார்…ஸ்டீபன் தோசையை எடுத்து தன் தட்டில் போட்டவர் மகள்கள் மூவருக்குமே ஊட்ட தொடங்கினார்…அவர்கள் சாப்பிட்டு முடிய இட்லியை எடுத்தவர் தன் தட்டில் வைத்தவர்.


சுவி “ இப்போ உன் டர்ன் உன் கோபம் புரிகிறது…பட் நான் சொன்ன விஷயத்தை யோசித்து பாரு அதில் உள்ள உண்மை தெரிய வரும்…அதற்காக உன் கோபத்தை சாப்பாட்டில் காட்ட கூடாது டியர் ஆ!. காட்டு என்றார்.


சுவர்ணா நம்மூர் பெண்ணுங்க போல பிள்ளைங்க…. வளர்ந்தால் புருஷன் என்றாலும் கூட தள்ளி நின்று பேசும் வர்க்கம்…அவள் தயக்கம் உணர்ந்தவர்.


ஸ்டீபன் “ கமான் டியர் இது அன்பை பரிமாறும் ஒரு வழி இதில் தயங்க என்ன இருக்கு…இதை பார்க்கும் போது நம்ம பெண்ணுங்க தங்கள் வாழ்க்கை துணை கூட… இப்படி தான் வாழ வேணும் என்று நினைப்பாங்க…அப்போ அவங்க வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும் மா “ என்றார்.


சுவர்ணாவும் ஒரு வழியாக வாய் திறக்க ஸ்டீபன் மனைவிக்கு ஊட்டி அவரும் சாப்பிட்டு முடிய கை கழுவி விட்டு வர…செளமியா, ரம்யாவுக்கு ஸ்கூல் வேன் வந்தது அவர்களை அனுப்பி விட்டு பரிநிதா தன் ஸ்கூட்டியில் தன் வேலைக்கு கிளம்ப…ஸ்டீபன் தன் பைக்கில் காலேஜ்க்கு போனார்.



தஞ்சம் கொள்ள வருவான்…

 
Status
Not open for further replies.
Top