எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மதியின் வேந்தன் கதையின் டீஸர்

subasini

Moderator
ஒரு குட்டி டீஸர்...


"அவள் வேற ஒருத்தனைக் காதலிக்கிறேன் சொல்லி , இந்தக் கல்யாணம் நிறுத்தி இருந்தால் கூட எனக்கு இவ்வளவு கோபம் வந்திருக்காது , வேண்டாம் சொன்னது கூட ஒகே தான் டா ,ஆனால் அதுக்கு ஒரு காரணம் சொன்னாப்பாரு, அது தான் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை கதிர் ".



இதைக் கேட்டதும் " ஓ, அது தான் உனக்கு இவ்வளவு கோபமா ? " . என்றவாறே சத்தமாகச் சிரித்த கதிர் வேந்தன் . "விடுடா மச்சான் பார்த்துக்கலாம்" என்றான்.



"எப்படி , கல்யாணம் பண்ணி ஹனிமூன் எங்கே போறாங்க என்பதையா " . என்ற தருணிண் குரலில் எரிச்சல் நிறைந்திருந்தது.



அதைக் கேட்டதும் கதிருக்குத் பழைய நினைவுகள் மெல்ல ஆனந்த ராகம் மீட்டியது.

'கலைந்த உடையோடு‌, தன் உணர்வுகளை ஏற்க முடியாமல், கண்களில் நீரோடு தன்னிடம் போராடியவளின் உருவம் மனக்கண்ணில் தோன்றியது.



தன்னிடம் எதிர்த்துப் போராடியவளின் செயல் , கூடலின் அழைப்பாகத் தான் அவனுக்குத் தோன்றியது.



ஒரு கட்டத்தில் அவளின் நிலையை உணர்ந்து இதழில் புன்னகையோடு அவளை விட்டவனிடம், அவள் கூறிச் சென்ற வார்த்தைகள் இன்னும் காதில் எதிரொலிக்கிறது.



'இதற்குத் தானடி இத்தனை நாளாகக் காத்திருந்தேன். இனி என்னிடம் இருந்து எப்படித் தப்பிக்கிறாய் என்று நானும் பார்க்கிறேன்' என முணு முணுத்தவன் செயலில்.



"என்னடா , எதாவது ப்ளான் இருக்கோ கல்யாணத்தை நிறுத்த" என்றான் தருண்.



'இவன் வேற', என்று மனதில் நினைத்தவன், "ஏன்டா" என்ற‌படி "நாம‌ நாளைக்குக்கிளம்பறோம் அவ்வளவுதான்" என்று பேச்சுக்கு முற்றுப் புள்ளி வைத்தான் கதிர் வேந்தன்.



மனதில் பல எண்ணங்களின் அலைகள் மோத, நாளைய விடியலுக்காகக் காத்திருந்தான்‌, நம் நாயகன் கதிர்வேந்தன்.



எல்லோருடைய வாழ்க்கையிலும் ஒரு மாற்றத்தை உருவாக்குவது காதல். அவனைப் புதிய மனிதனாக உருவாக்கியது அவளும், மனதில் அவளுக்கான காதலும் தான். காதலியின் நினைவுகள் மனதில் வலம் வந்தது.



குற்றாலச்சாரல் போல் தோன்றியச் சில்லென்ற உணர்வுகளை அனுபவித்தவாறே, தன் இடபக்க மார்பைத் தடவியவன், ' என்னை நியாபகம் இருக்குமாடி உனக்கு? மறந்து இருக்க வாய்ப்பில்லை தான், நமக்குள் நடந்த விஷயம் அப்படி, இல்லை என்னிடம் சொன்னது போல மறந்துப் புதிய வாழ்க்கையைத் தேர்தெடுத்திருப்பாயோ?' என்று தனக்குள்ளே பல கேள்விகளைக் கேட்டான்.



பின் மெதுவாக ‌ அதற்கான பதிலாக , 'அதெப்படி மறப்பாய்' என்ற புன்னகையோடு படுக்கையில் அவள் நினைவுகளோடு புரண்டான். கண்களிலிருந்து உறக்கம் விலகிச்செல்ல, காதல் மயக்கம் அவனை ஆட்கொண்டது.


இந்தக்கதை வியாழன்,வெள்ளி,சனி என்று 3 நாட்கள் வரும் Friends...

படித்து கருத்துகளை என்னோடு பகிருங்கள் ப்ரெண்ட்ஸ்.


காதல் என்பது யாருக்கெல்லாம் எப்படியெல்லாம் வாழ்க்கையை மாற்றி அமைக்கும் என்பது இந்த கதையில் பார்க்கலாம்...

நன்றி...
 
Last edited:
Top