உமா கார்த்திக்
Moderator
அத்தியாயம் -02
பரீத்.. சொல்வதை பார்த்து வியக்கும் அவள் மருண்ட விழிகள் அழகோ..அழகு.!
' ரொம்ப பிடிக்கும் அதனால வேணாம்.எப்படி என புரியாது. குழப்பமான நிலையில் பிரதிக்ஷா.
வேதனையான பாவனையை தாகங்கியது ப்ரீத் முகம். "என்ன காதலிச்சா அவ கஷ்டப்படுவா,
அவளோட அன்புக்கு தகுதி இல்லாத ஒருத்தவன் நான். இதை காரணமா சொன்னா.. அவ ஏத்துக்க மாட்டா னு வேற ஒரு பொண்ண, நான் லவ் பண்ணுறேன் னு பொய் சொல்லி கொஞ்ச நாள் ஓட்டுனுனேன். ஆனா..இப்ப அவளுக்கு சந்தேகம் வந்துடுச்சு, போட்டோ காட்டு, வீடியோ கால் பண்ணி..தா.
அந்த பொண்ண நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வா னு சொல்லி ஒரே டார்ச்சர். எப்படிடா அதை சமாளிக்க போறேன் னு யோசிக்குறப்ப நீங்க வந்திங்க. " என்றவன் இதழ் தவழும் சிரிப்பில் நொடி மயங்கித் தெளிந்தவள்.
தலையை உலுக்கி அவன் கேட்பதன் தீவிரம் உணர்ந்து
" நான் எப்டி இதுக்கு சம்மதிப்பேனு நெனைக்குறீங்க..?" என தன் சுட்டு விரலை முகத்தின் நேராய் நீட்டி கேட்டதும்.
அவள் சுட்டு விரலுக்கு கீழ் தலையை தாழ்த்தி கெஞ்சி கூத்தாடினான்.
" எனக்காக இதை செய்.உனக்கு என்ன வேணுமோ.. அதை நான் செய்வேன் ப்ளீஸ். "
ஆணின் அடிமை செய்கையில் கையை பின்னால் இழுத்தாள் பிரதி. அவளிடம் அவன் தாழ்வு பிடிக்கவில்லை.
" முடியாதுனு சொன்னா என்ன பன்னுவீங்க? "
" பிரியாணி எல்லாம் வாங்கி தந்து இருக்கேன். நன்றி மறப்பது நன்றன்று படிச்ச தில்லை நீங்க " காரிய வாதியாக ஏமாந்த சிறு பெண்ணுக்கு பாடம் நடத்த,
" என்னங்க ஒரு பிரியாணி வாங்கி கொடுத்துட்டு, என் சொத்த எழுதி கேட்பிங்க போல! " சலிப்பாய் தன் கையை கட்டிக் கொண்டாள் பிரதிக்ஷா .
' பெரிய மன்னர் வகை ரா.. காரியம் ஆகனும் ப்ரீத் அமைதி.." பஸ்..க்கு கூட காசு இல்லாத உங்ககிட்டே எந்த சொத்து நான் எழுதி வாங்க போறேன். கெஞ்சி கேக்குறாங்க இந்த உதவி மட்டும் பண்ணுங்க " என்று பாவப்பட்ட ஜீவனை போல் விழிகளை சுருக்கி அவளை ஏறிடவும்.
நடக்கபோவதின் விபரீதம் அறியாமல். " ம்.." என்று தலை அசைத்தால்.. பிரதி. வெட்ட போகும். ஆடு சம்மதம் என்று தலையை சிலுப்புவதை போல.!
" சரி வாங்க போகலாம் என லிஃப்ட் நோக்கி நடந்தான்.. ப்ரீத்.
பின்னாலே ஓட்டமும் நடையுமாக சென்றாள்.. பிரதி.
பெண்ணவள் லிஃப்ட் உள்ளே சென்றதும். பார்வையால் அவனை அளவிட்டு.. காதலன் உயரத்தை தனக்கு சரியாக உள்ளதா? என்று அருகில் சென்று தன்னோடு பொருத்தி பார்த்தாள். அவனது தோள்பட்டையின் நேர்கோட்டில் இவளது தலை நின்றது. உயரம் ஒகே.. என மனதுக்குள் நினைத்து சின்னதாக புன்னதைத்தாள்.. பிரதி.
ஆண்மையான குரல், அழகான தோற்றம், கனிவான பேச்சு ஆகிய எல்லாவற்றையும் கூட்டி மனதில் அவனை பற்றி கூட்டல் கணக்கு போட்டு கொண்டு இருந்தாள்.. விவரம் அற்றவள்.!
"வாங்க " என்ற அவனது குரல் கேட்டு சுயநினைவு வந்தவளாய் வேகமாக வெளியே வந்தாள்..பிரதிக்ஷா ஆதி கேசவன்.
வெளியே தரிப்பிட வரிசையில் தூரமாக நின்ற காரை கை காட்டினான்.. ப்ரீத்.
ஒரு குழந்தை போல அவனை பின் தொடர்ந்து காரில் ஏறி அமர்ந்தாள்.. பிரதி.
மனம் பயம் காட்டியது 'யாரு னே.தெரியாத ஒரு ஆள நம்பி.. எப்டி போறேன் நான்..! என எண்ணியவாறு
' நம்மல எதாவது பண்ணிட்டான்னா என்ன பண்ணுவ..? பாக்க நல்லவனா தான் தெரியுறான். அப்படி எல்லாம் பண்ண மாட்டான். இதுவரை வெறும் தனி வீட்டுல அனாதையாக வாழ்ந்த எனக்கு, ஒரு குடும்பம். என்ன ஒரே ஒரு நாள் உறவா நெனைப்பாங்க, இதுல என் சுயநலமும் இருக்கு. அவங்க வீட்டுல இருக்கவங்க கூட என் மேல அன்பா இருப்பாங்க.!
குடும்பத்தோடு வாழலாம் னு நெனைச்ச ஏக்கம் பொய்யாவாவது இன்று நிறைவேறும். என்று தனக்கு தானே சமாதானம் கூறி மனதை தேற்றிக் கொண்டாள். சூல்ச்சி அறியாத வெகுளிப் பெண்.!
ஒரு பிரமாண்டமான வீட்டின் முன்னே சென்று நின்றது கார். " இது தான் என்னோட வீடு.. வாங்க.." இடைவெளி விட்டு முன்னே நடந்தான். ப்ரீத்.
வீட்டின் வாசல் அடைந்ததும் அவளை " போகலாம். " என நின்று வாசல் வழியாக உள்ளே அழைக்க.
யாருமே .. ஆள் இல்லாத தனிமை தாங்கிய, வீடு நடுக்கத்தை வர வைத்தது.அச்சத்தில் தயங்கி தயங்கி உள்ளே...
சென்றவள். உயிர் மூச்சை விட்டாள். எதிரே நின்ற அழகிய பெண்ணை பார்த்து.!
திகைப்புடன் பிரதியை கண்டு பூரிப்புடன்.
" நீங்க தான் அந்த பொண்ணா? உள்ள வாங்க.." அவள் கரம் பற்றி உள்ளே அழைத்து வந்தாள். பவித்ரா.. அவளின் கைகளின் அணைப்பு இதத்தை உணர்ந்தவாறு அவளை உற்று நோக்கினாள். ஒரு நாள் உறவை உணர வந்த பேதை..!
பவித்ரா " எப்படிங்க இவன லவ் பண்ணிங்க.! என்னால நம்பவே முடியலை..! காசு கொடுத்தா கூட பேச மாட்டான். கொஞ்சம் சிரிக்க மாட்டான். ஒரு பொண்ண லவ் பண்ண வைச்சு இருக்கான். எப்ட்ரா..?? அப்படி இருக்கு.. உங்க பேர் என்ன?
கேள்விக்கு பதில் தெரியாததால் திருதிருவென விழித்தான் ப்ரீத்..!
" பிரதிக்ஷா .. " என்றால் புன்முறுவலோடு,
" என் பேர் " என ஆரம்பித்தவளை இடைமறித்து,
"பவி தான நீங்க தெரியும். உங்கள பத்தி நெறைய சொல்லி இருக்காங்க அவங்க.." என ராகம் இருந்தாள்.. அவன் பெயர் தெரியாதே?
" அவங்க.! ம்.. பரவாயில்லையே.. இன்னும் என்னென்ன சொன்னாங்க.? உங்க அவங்க " என எதிர் ராகம் இழுத்தாள்.. பவித்ரா.
" பவித்ராவை உற்று நோக்கியவள் .. விழிகள் ஆச்சர்ய குறியீடு பதிந்தது. ' பொன் மெழுகு சிலை தான் பவித்ரா..! ஒருவேளை நான் பையனா இருந்தா கூட இவள லவ் பண்ணி இருப்பேன்.ஏன் இவன்
வேணாம்னு சொன்னான்.அழகு பதுமையாய் பவி நிற்பதை பார்த்து, சிறு பெண் இவளோ..
பெருமூச்சு விட்டாள்.
' எவ்ளோ அழகா இருக்கா..! ' என பொறாமை மேலோங்கியது.
" பிரதி..என்ன ? அதுக்குள்ளே டிரீம் ஆ.. அம்மா.. அப்பா என்ன பண்றாங்க. லவ் பத்தி வீட்டுல சொல்லியாச்சா? எப்ப கல்யாணம் வச்சுக்கலாம். ? " என்றதும் ஒருத்தி முகம் பயத்தில் வெளுத்துப் போனது.
" என்னது கல்யாணமா ? " சிறிய அமைதிக்கு பிறகு. " எனக்கு யாரும் இல்லை.. கார் விபத்துல அம்மா அப்பா இறந்துட்டாங்க.!" குரல் தழுதழுக்க,
கண்கள் கரித்துக் கொண்டு வர அழுகையை சமன்படுத்தி தன்நிலை கூறினாள். பிரதி.
நொடி பொழுதில் அவளை தாயாய் அணைத்தாள்.
பவித்ரா- " சாரிங்க.. எனக்கு தெரியாது.. சாரி... ப்ளீஸ் அழாதிங்க.. ப்ரீத்.. இருக்கான். நான் இருக்கேன்.. கவலை படாதிங்க பிரதி. தாயின் அரவணைப்பை உணர்ந்து.. மேலும் கண்ணீர் வழிய பவியின் தோள் மேல் விழுந்தது பிரதியின் வலியை சுமந்த நிறமற்ற கனமான உவர் துளிகள்..!
தோழியாக அவளது முகம் உயர்த்தி கன்னத்தில் வழிந்த கண்ணீரை துடைத்து விட்டாள் பவி "அழுதா நல்லவே இல்லை.. " என்று தன் முகம் சுழித்தவளை கண்டதும்..உடனே புன்னகைத்தாள் பிரதி.
பவித்ரா -"குட்.. இப்படி தான் அழகா சிரிச்சுட்டு இருக்கனும்.. "
என்ன நடக்கிறது என்று புரியாமல் பேந்த பேந்த விழித்தான் ப்ரீத் குமார்.
தன்னோட கண்ணீரை மறைச்சுகிட்டு மத்தவங்க கண்ணீரை துடைக்க ஒரு பெரிய மனசு வேணும்..
'மிகவும் உயரமாய் தெரிந்தாள் பவி. அவ கண்ணுல அவனுக்காக தெரியுற வலி.. உதட்டுல இருக்க பொய்யான புன்னகை, உடைந்தாலுமே உருவத்தை காட்டும் கண்ணாடி போல..!
பவித்ரா தனக்கு ஆறுதல் சொல்வதை நினைந்து வியந்து போனால் பிரதிக்ஷா.
கலங்கும் விழியை இமை மூடி திறந்து விழிநீரை விழாது நிறுத்தி " ப்ரீத் குமார் பிரதிக்ஷா .. பேர் கூட பொருத்தமா இருக்கு மாமா.. சூப்பர் " என்று மூன்று விரலை காட்டினாள் பவித்ரா.
' தன்னிடம் சண்டை போடுவாள்.. மோசமா பேசுவாள். அப்படி எதிர்மறையை எதிர்பார்த்தவளுக்கு நம்பவே முடியாத அவள் செய்கை. பெரிய ஆச்சர்யத்தை கொடுக்குது.
' சீரியல்ல வர்ற ஹீரோயின் மாதிரி வலிய மறைச்சுட்டு சிரிக்குறாங்க.!! ' என எண்ணி அவளை இமை அகலாமல் நோக்கினாள்.. பிரதி.
' நெடுநேரம் அடக்கிய கண்ணீரை இனியும் அடக்கிட இயலாது என்று எண்ணி. " நீங்க உட்காருங்க.. நான் ப்ரஷ் ஆகிட்டு வர்றேன். " அந்த இடத்தை விட்டு ஓடினாள்.எதிரே இருந்த குளியல் அறைக்குள் வேகமாக சென்றவள்.. தண்ணீர் குழாயை திறந்து விட்டபடி கண்ணீரையும் விடுவித்தாள்.!
இதயம் எவ்வளவு வலித்தது என அளவிடவே முடியாது. அளவில்லா அவளது காதலை போல.! கண் முன்னே உடையும் காதல் அப்படி வலித்தது.!
கண்ணாடியில் தன் முகத்தை பார்க்க கூட பிடிக்கவில்லை. கண்ணாடியை விட்டு தன் பார்வையை வேறு திசையில் மாற்றி.. அவள் அவனோடு கற்பனையில் வாழ்ந்த காலத்தை எண்ணி நொந்து கொண்டாள் பவித்ரா. தேம்பி.. தேம்பி.. அழுது.. அழுது.. மூச்சு முட்டியது. கண்களோ எவ்வளவு கண்ணீரை கொட்டினால் என்று சாட்சியாய் சிவந்து போய்.. வீங்கி புடைத்தது.
மனதை அழுத்தும் உள் உணர்வு அவள் அழுகிறாள்.. என்று உணர்த்த.. பிரதி " சார்.. அந்த பொண்ணு அழறாங்க.. போய் சமாதானப் படுத்துங்க."
" என்ன சொல்லுற.. ?அவ ஏன் அழ போறா.. அங்க நான் எப்டி போக முடியும்..? நீ வேணா போ." குளியலறை என்பதால் ப்ரீத் பவித்ராவிடம் செல்ல தயங்கினான்.
" என்ன ஒன்னும் அவங்க காதலிக்கல.? எதாவது தப்பா பண்ணிக்க போறாங்க.. போங்க ப்ளீஸ்."
என்றதுமே பயம் தொற்றியது.
தயங்கியவாறு உள்ளே நுழைந்தான் ப்ரீத். கண்ணாடி முன்னே நின்று முகம் மூடி அழும் பவி ஐ கண்ட அதிர்ச்சியில் உறைந்தே போனான் காதலன்.
" பவி.. ஏன் டி அழற.. ப்ளீஸ் நீ அழத டி.. என்னால தாங்க முடியாது. ப்ளீஸ் டி ..அழதமா என் குணம் உனக்கே தெரியும். ஏன் வேணாம்னு சொல்லுறேன் னு உனக்கே தெரியும் தானே .
" ம்..ம்.. " என்று விம்மியவள் கண்ணீரை காண முடியாது தவித்தான் ப்ரீத்.
அவன் மார்பில் முகம் புதைத்து அழுகையை தொடர்ந்தாள் பவித்ரா. நிமிர்ந்து அவன் முகம் பார்த்தவள் கண்ணீர் வழிய கேட்டாள்."ஏன் உனக்கு என்ன பிடிக்கலை.? "
அவள் கன்னங்களை இரு கைகளால் பற்றி, ஆழப் பார்வை பார்த்து .. அவள் நெற்றியில் முத்தமிட்டான் முன்னால் காதலன். உனக்கு தோனுதா.? அவள் மீதான விருப்பத்தின் வெளிப்பாடு, அவன் கண்களில் இருந்து வடிந்த கண்ணீர் துளிகள்.. அவள் கண்ணத்தை நனைத்தது.!
" பதறியவள் அவன் கண்களை துடைத்து, தன் கண்களையும் சேர்த்து துடைத்தாள். " நீ ஏன் அழ.ற மாமா.. அசிங்கமா இருக்கு டா பைத்தியம். "
" வலி கொடுக்கும் உறவுகளுடன் சேர்ந்து வலி அனுபவிப்பது விட விலகி நிம்மதியா இருக்கலாம். "
என்று அவளுக்கு நிம்மதி தர நினைத்தவன்.
" நான் வேணாம் டா உனக்கு புரிஞ்சுக்கோ.. அவளை அணைத்தவாறு ஆறுதல் கூறினான் ப்ரீத்.
பவி..நீயும் நானும் சின்ன வயசுல இருந்தே ஒன்னா இருக்கோம். உன் அளவு என்ன தெரிஞ்ச யாருமே கிடையாது. பாசம் அவ்ளோ இருக்கு உன் மேல ,நான் உன்ன கஷ்டப்படுத்திட கூடாது னு விலகுறேன். பிடிக்காம இல்லை. புரிஞ்சுக்கோ ப்ளீஸ். என் ஈகோ உன்ன அழிச்சுடும்.. என் பவிக்கு தகுதியானவன் நான் கிடையாது. என் கோபம் உனக்கு தெரியும். தெரிஞ்சும் கஷ்டப்பட ஏன் ஆசைபடுற பவி.?
" என்ன பிடிக்கலை னு நேராவே சொல்லிட்டு இப்ப பாசம், அன்பு னு கதை சொல்லுற , ம்.. போடா.. லவ் தான் பண்ணலை ல நகரு, அப்பிடியே ஆறுதல் சொல்லுற மாதிரி ஜாலியா கட்டி பிடிச்சுட்டே நிக்குற.? " என தள்ளி நகரப் போனவளை,
"ஏய்.. நானா.. நீயா.." இன்னும் இறுக்கமாக அணைத்து பிடித்து "ஏய்.. அத்தை மவளே.. மாமனுக்கு மிஞ்சி தான் மத்தவனுக்கு." என சிரித்து கொண்ட முத்தமிட நெற்றியின் அருகே வந்தவனை தடுத்தாள் பவி.
" டேய் .. நீ வேற ஏதோ ப்ளான் பன்னுற , ஆள விடு சாமி.. என்று கூறி
கண்ணத்தில் அறைவது போல வலிக்காமல் தட்டிவிட்டு நகர்ந்தாள் பவி.
விலகவிடாமல் அவள் கரம் பற்றி " உன் மேல அன்பு பாசம், காதல் எல்லா உணர்வும் எனக்கு இருக்கு. உயிர விட பெரிய உறவு நீ. " டையலாக் அடிக்க,
எரிச்சலோடு கையை உதறினாள் பவித்ரா. " என்னை நிம்மதியா அழவிடு டா..
நீ போ.. நான் ஏன் அழறேன். எனக்கே தெரியல.? ரொம்ப வலியா இருக்கு ப்ரீத். என்ன விட்டுடு நீ போ.. உன் லவ்வர்
அங்க தனியா இருப்பாங்க. நாம ரெண்டு பேரும் இங்க ஒண்ணா இருக்கது பார்த்தா தப்பா நினைப்பாங்க. முதுகில் கை வைத்து தள்ளி "வெளியே போக வைத்தாள்.
" நீயும் வா.. போகலாம். தனியா விட்டுட்டு என்னால போக முடியாது. " பிடிவாதமாக நின்றான் ப்ரீத்.
ஆற்றாமையோடு உடைந்த குரலில் " ஏன்.. இப்ப நான் எதுக்கு ? நீதான் தனியா விட்டுட்டு போய்ட்டியே..!!
உனக்கு னு தான் இன்னொருத்தவங்க வந்துட்டாங்களே போ மாமா. " அழ ஆரம்பித்தாள்.
" சீ..இது என்ன தமிழ் சீரியல் ஆ.. சீரியல்ல வர்ற மாதிரி ஏன் பேசுற.பச்.. வா " என வலுக்கட்டாயமாக கையோடு அவளை சேர்த்து இழுத்து செல்கிறான் ஆசை காதலன்.
இருவரும் கை கோர்த்து வருவதை கண்டு புன்னகைத்தவாறு பிரதி - " சரி.. நேரம் ஆகிடுச்சு ப்ரீத்.. ஏதாவது நல்ல ஹோட்டல் ல ரூம் புக் பண்ணி தாங்க, புது ஊர் எனக்கு எதுவும் தெரியாது. நீங்க துணைக்கு வந்தா..கொஞ்சம உதவியா இருக்கும். " என பயந்த குரலில் சொன்னாள். தனியாக செல்ல நிஜமாகவே பயந்தாள் பிரதி. காலையில் நடந்த கசப்பான நிகழ்வு. ரட்சகனான இவனை தவிர யார் மீதும் குறிப்பாக ஆண்களை எதிர்கொள்ள பயமே பயம் அவளுக்கு.
யோசித்து விட்டு " எனக்கு தெரிஞ்ச ஒரு நல்ல ஹோட்டல் இருக்கு. ஃபுல் சேஃப்டி . பவி நான் போய் இந்த பொண்ண விட்டுட்டு வந்துடுறேன். " என ஒட்டாமல் யாரோ போல சொல்ல, பவித்ரா முறைப்பது தெரிந்தது.
"அறிவே..இல்லையா உனக்கு. நீ இங்கேயே தங்கு பிரதி. ஹோட்டல் போய் ஏன் தங்கனும். " பிரதிக்ஷாவின் கையை பிடித்து. "நாம ரெண்டு பேரும் ஒன்னா தங்கிக்கலாம். உங்க லவ் ஸ்டோரி நான் எப்ப தெரிஞ்சுக்குறது. ?" என்றதுமே ஜோடிகள் விழிக்க.! கேள்வியாக பிரதியை பார்த்து.
சுடுநீரில் மீன் விழுந்தது போல் பதறும் மாமன் முகத்தை ஆராய்ந்து
பார்த்தாள் பவி.
பிரதி உளறினாள் "லவ்..வ்.. இல்லை. அது.. தேவை இல்லாத சிரமம் ஏன் உங்களுக்கு நான் பொய்டுறேன்."
" ப்ளீஸ். பிரதி எனக்காக இங்க தங்குங்க. அம்மாவுக்கு அப்பறம் ரொம்ப தனியா இருக்கேன். நீங்க என் கூட இருந்தா மனசுக்கு நல்லா இருக்கும். " பவியை தொடர்ந்து வேறு வழியில்லாமல் நடிப்பிற்காக ப்ரீத்..தும் வற்புறுத்த.
" ம்... என்று தலை அசைத்தாள் பிரதி.
பவித்ராவிற்க்கு குழந்தை போல அகம் முகம் கொண்ட பிரதியை அவ்வளவு பிடித்தது. போட்டியாக நினைக்க வரவில்லை. பாவமாக தான் தோன்றியது. தன் மாமனை பற்றி முழுதாய் தெரியாமல் ஏமாந்துவிட்டாள்.என்று வருந்தினாள் பவித்ரா. அவன் இன்னொரு முகம் இவள் மட்டுமே அறிவாள்.! அந்த ப்ரீத்..தை யாராலும் நேசிக்க முடியாது.
மாலை பொழுது பால்கனி அருகே நின்று காற்று வாங்கி கொண்டு இருந்தனர் ப்ரீத் மற்றும் பிரதி.
சூரியன் மறைவின் பொழுது மேகம் செந்நிறமாக ! சூரியக் கதிரோடு மேகம் ஒன்றாய் கலந்த கலவை .. ரம்யமாக இருக்க.. ரசித்தாள் பிரதி..!
" ஏதோ.. பேசனும் வர சொன்னீங்க? என்ன சீக்கிரமா சொல்லுங்க." அவசரப்படுத்தினான்.
" நாம சொல்லுறதால நாம லவ் பண்ணுறோம்னு யாரும் நம்பவே மாட்டாங்க ப்ரீத். ஏன்.. பவியும் நம்புற மாதிரி தெரியலை. அதனால.. கொஞ்சம அவங்க முன்னால நாம நடிக்கனும். " பதிலுக்காக அவன் முகம் பார்த்தாள்.
முகம் சிவந்து..உள்ளே இருக்கும் கெட்டவன் எட்டிப் பார்க்க.. "என்ன சொல்ல வர்றீங்க " சிடுசிடுப்பானது ஆண்டவன் குரல்.
"அதெல்லாம் பண்ண வந்தா நான் பவி.ய லவ் பண்ணி இருக்க மாட்டேனா? " கொந்தளித்து கோபமாக கத்தினான் ப்ரீத்.
" கத்தாதிங்க சார்.. என்ன லவ் பண்ணுற மாதிரி நீங்க தான நடிக்கனும். ஏன்னா பொண்ணுங்க அவ்வளவா காதலை வெளிக்காட்ட மாட்டாங்க.." என தன் ஆண் சூரியனை காதலோடு ரசிக்க !
" நான்.. லவ் டயலாக்.. பேசுனா.. அது தான் நடிப்பு னு அவ ஈஸியா கண்டு பிடிச்சுடுவா. எனக்கு பேசவே பிடிக்காது.. இதுல லவ்வா பேசனுமாம்..
ம்...கும். ஆகுற கதை இது இல்ல. " கையை விரித்தான்.
வெளிச்சம் மீது வரும் சில நிமிட ஈர்ப்பால் அதன் மீது காதலோடு மோதி தன்னையே எரிக்கும் வெட்டில் பூச்சியாய்..காதல்ஸசாயல் கண்ணில் எழ, வாய்விட்டு கெட்டாள் .
" நான் இருக்கேன். நான் சொல்லித்தர மாதிரி நீங்க நடிச்சா மட்டும் போதும். மீதி எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன்.
நாளைல இருந்து நம்மளோட நாடகம் ஆரம்பிக்குது.
அதுல நான் நினைக்கிறது மட்டும் தான்.. நீங்க பண்ணனும்.
அதாவது நான் எழுதி கொடுக்கிறத எதையும் யோசிக்காமல் என்ன எழுதி இருக்கோ.. அது படி செய்யணும். அது படியே நடக்கும்னும். " என்றதும்
ப்ரீத் உர்.. யென முகம் வைக்க." ஏன் இப்படி மூச்ச வைச்சுக்குறீங்க.? ஏற்கனவே நீங்க சுமார் தான். நடிச்சா தான நம்புவாங்க, நம்புற மாதிரி காதலிக்கலாம். " என்று அவள் ஒரு கணக்கு போட, விதியின் கணக்கு என்னவோ?
" ஒரு நாள் கூத்து னு ஆரம்பிச்சு எதுல போய் முடியுமோ.?" என்று தலையில அடுத்துக்கொண்டு கீழே சென்றான் ப்ரீத்.
இயற்கையின் அழகில் மயங்கி நிலையற்று மாறிக் கொண்டே நிற்க்கும் மேகத்தின் ஓவியங்களை ரசித்தவாறு நின்றிருந்தாள்.. பிரதி.மனதில் நேச விதைகள் மெல்ல துளிர்க்க ஆரம்பித்தது.!
காலை பொழுது விடிந்தது என கடிகாரமும் வீட்டின் பாத்திரங்கள் சத்தமிட்டன. ஹாலில் பவியை கண்டதும் எல்லாருமே இந்த வீட்டுல சீக்கிரமே எழுந்துடுவாங்க போல.! எண்ணியவள் மாடி படிகளை விட்டு வேகமா இறங்கி வந்தாள்.
" குட்மார்னிங் பவி."
" ம்.... குட் மார்னிங். நல்ல தூக்கமா? காஃபி கொண்டு வந்து எழுப்புனேன்.. நீங்க முழிக்கலை, அதான் கீழ வந்துட்டேன். இருங்க காஃபி ஆ.. டீ ஆ .. முல்லை அக்கா (வீட்டில் பணி புரியும் பெண்) என்று பவித்ரா அழைக்கவும்.
" பவி..ம்மா.. இரு வர்றேன்."
என்று ஊதா நிற நைலான் புடவையை தூக்கி சொறுகியவாறு.. வந்தவர் "என்ன பாப்பா உங்களுக்கு வேணும்..?" பிரதியை வினவி " காஃபி..யா டீ ஆ.. ஜூஸ் வேணுமா.. "
" காஃபி ஸ்ட்ராங்கா.. வேணும். ஹாஸ்டல் எல்லாம் யாருமே கேட்க கூட மாட்டாங்க அக்கா. இருக்கதை திங்கனும். முதல் முறை என்ன வேணும்னு கேட்குறீங்க.! ரொம்ப தேங்க்ஸ்.. அக்கா. " என்று மிதமாக புன்னகைத்தாள் பிரதி.
" நன்றி என்ற வார்த்தையை கேட்டு பூரித்து போனவர். ' ஐயோ.. நல்ல பொண்ணா தான் இருக்கு. இந்த ஐயா கிட்ட வந்து மாட்டி இருக்கு பாரு.! தலையெழுத்து குரங்கு கையில பூ மாலை.. ம்... என்று எண்ணியவாறு காஃபி ஐ கலக்கி கொண்டு வந்து அவள் கையில் தந்தார் முல்லை .
வீட்டு சாப்பாடு உணராத அவள் நாவில் காஃபி அமிர்தமாக இறங்க.. கண் மூடி ரசித்தாள். " ம்.. சூப்பர் செம்..ம டேஸ்ட் அக்கா.! "
பவி - " முல்லை யக்கா எங்களுக்கெல்லாம் இப்படி காஃபி போட்டது இல்ல நீங்க.? புதுசா ஆள் வந்த உடனே அவங்களுக்கு மட்டும் டேஸ்ட்டா போட்டு கொடுக்குறீங்களோ.?பொய் கோவத்துடன் சீண்டினாள். பவி.
" இல்லம்மா புதுசா குடிக்கிறாங்க இல்ல! அதனால நல்லா இருக்குற மாதிரி இருக்கும்.. " நமட்டு சிரிப்பை உதிர்க்க.
என்றதும் பக்கென்று சிரித்து .." ஹா..ஹா.. சும்மா சொன்னேன். அக்கா உங்க காஃபி அல்லும்.! ஏன் கா.. அம்மா மட்டும் இப்ப உயிரோட இருந்தாங்க என்ன சொல்லுவாங்க..?"
என்றதுமே சுமதி போல பாவனையில் பேசினார் முல்லை. " ஏன் டி..முல்லை .. காஃபி போட தெரியலை. சூடே.. இல்லையே..ஏன் டி.. இவ்ளோ சூடு, ஏதோ.. சரி இல்லை. " என பேசும் போதே..
பழசை எண்ணியவள் முன் வந்து சென்றது பவித்ராவின் தாய் சுமதியின் முகம்.! தனி ஒருத்தியாக உடலை உருக்கி உழைத்து தன் பெண்ணையும்..தூரத்து உறவான பெற்றோர்கள் இல்லாத மருமகனையும் ஆளாக்கியவர். அதை நினைத்து கண் கலங்கியது முல்லைக்கு,
" குழந்தை தான் உங்க அம்மா.உன் கல்யாணத்த அய்யா (ப்ரீத்) கூட அப்படி பண்ணனும். இப்படி பண்ணனும் னு அம்புட்டு ஆசை.! உன்ன மட்டும் அவர் கையில் பிடிச்சு கொடுத்துட்டு செத்துருந்தா நிம்மதியா செத்து இருப்பாங்க.." தன் முந்தனையில் வழிந்த கண்ணீரை துடைத்துவிட்டு.. கிச்சனுக்குள் சென்றார் முல்லை.
குளத்தில் விழும் கல் என தாயின் கடைசி நிமிட நினைவுகள்.!
"பவி... என் நிலைமை சரியில்ல ...அவன கைவிட்டுடாத பவி.பாவம் அவன். நீ தான் அவன கல்யாணம் பண்ணிக்கனும். சத்தியம் பண்ணு இறுதியாக இறைஞ்சிய போது கண்ணீரோடு தாயின் கையில் கையை வைத்து " ம்.. "
என சத்தியமிட்டு சம்மதித்தாள் பவித்ரா.
அதுவரை ப்ரீத் நண்பனாக, சில நேரம் எதிரியாக கூட பார்த்தவள். கணவனாக காண தன்னை தானே வற்புறுத்தி கொண்டாள். காதலனாக அவனை அவளால் நினைக்கவே முடியாது. புரிதலே இல்லாத முரடன் அல்லவா.. அவன். ரொம்ப டாமினேடிவ் குணம் கொண்டவன்.
தாயின் பிரிவுக்கு பிறகு உனக்கு நான் எனக்கு நீ என்ற நிலையில் இருவரும் நிற்க. அவனின் கோபம், கண்டிப்பு , அன்பும் கூடியது அவளிடம். அப்படி ஒரு ப்ரீத்..தை இத்தனை வருடங்களில் அவள் கண்டது இல்லை.!
அவனது அக்கறை, அன்பு கண்டு நெகிழ்ந்தது பெண்ணவள் மனம். இந்த உலகின் ஒரே உறவான அவன் மீது மெல்ல உருவான காதல்.! உணராது போனான் அவன்.!
" செட்டாகாது பவி உனக்கும் .. எனக்கும். " கல் நெஞ்சோடு அவன் கூறிய பதில்கள் உடைத்து நொருக்கியது பாவை இவள் கண்ணாடி மனதை..!
பரீத்.. சொல்வதை பார்த்து வியக்கும் அவள் மருண்ட விழிகள் அழகோ..அழகு.!
' ரொம்ப பிடிக்கும் அதனால வேணாம்.எப்படி என புரியாது. குழப்பமான நிலையில் பிரதிக்ஷா.
வேதனையான பாவனையை தாகங்கியது ப்ரீத் முகம். "என்ன காதலிச்சா அவ கஷ்டப்படுவா,
அவளோட அன்புக்கு தகுதி இல்லாத ஒருத்தவன் நான். இதை காரணமா சொன்னா.. அவ ஏத்துக்க மாட்டா னு வேற ஒரு பொண்ண, நான் லவ் பண்ணுறேன் னு பொய் சொல்லி கொஞ்ச நாள் ஓட்டுனுனேன். ஆனா..இப்ப அவளுக்கு சந்தேகம் வந்துடுச்சு, போட்டோ காட்டு, வீடியோ கால் பண்ணி..தா.
அந்த பொண்ண நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வா னு சொல்லி ஒரே டார்ச்சர். எப்படிடா அதை சமாளிக்க போறேன் னு யோசிக்குறப்ப நீங்க வந்திங்க. " என்றவன் இதழ் தவழும் சிரிப்பில் நொடி மயங்கித் தெளிந்தவள்.
தலையை உலுக்கி அவன் கேட்பதன் தீவிரம் உணர்ந்து
" நான் எப்டி இதுக்கு சம்மதிப்பேனு நெனைக்குறீங்க..?" என தன் சுட்டு விரலை முகத்தின் நேராய் நீட்டி கேட்டதும்.
அவள் சுட்டு விரலுக்கு கீழ் தலையை தாழ்த்தி கெஞ்சி கூத்தாடினான்.
" எனக்காக இதை செய்.உனக்கு என்ன வேணுமோ.. அதை நான் செய்வேன் ப்ளீஸ். "
ஆணின் அடிமை செய்கையில் கையை பின்னால் இழுத்தாள் பிரதி. அவளிடம் அவன் தாழ்வு பிடிக்கவில்லை.
" முடியாதுனு சொன்னா என்ன பன்னுவீங்க? "
" பிரியாணி எல்லாம் வாங்கி தந்து இருக்கேன். நன்றி மறப்பது நன்றன்று படிச்ச தில்லை நீங்க " காரிய வாதியாக ஏமாந்த சிறு பெண்ணுக்கு பாடம் நடத்த,
" என்னங்க ஒரு பிரியாணி வாங்கி கொடுத்துட்டு, என் சொத்த எழுதி கேட்பிங்க போல! " சலிப்பாய் தன் கையை கட்டிக் கொண்டாள் பிரதிக்ஷா .
' பெரிய மன்னர் வகை ரா.. காரியம் ஆகனும் ப்ரீத் அமைதி.." பஸ்..க்கு கூட காசு இல்லாத உங்ககிட்டே எந்த சொத்து நான் எழுதி வாங்க போறேன். கெஞ்சி கேக்குறாங்க இந்த உதவி மட்டும் பண்ணுங்க " என்று பாவப்பட்ட ஜீவனை போல் விழிகளை சுருக்கி அவளை ஏறிடவும்.
நடக்கபோவதின் விபரீதம் அறியாமல். " ம்.." என்று தலை அசைத்தால்.. பிரதி. வெட்ட போகும். ஆடு சம்மதம் என்று தலையை சிலுப்புவதை போல.!
" சரி வாங்க போகலாம் என லிஃப்ட் நோக்கி நடந்தான்.. ப்ரீத்.
பின்னாலே ஓட்டமும் நடையுமாக சென்றாள்.. பிரதி.
பெண்ணவள் லிஃப்ட் உள்ளே சென்றதும். பார்வையால் அவனை அளவிட்டு.. காதலன் உயரத்தை தனக்கு சரியாக உள்ளதா? என்று அருகில் சென்று தன்னோடு பொருத்தி பார்த்தாள். அவனது தோள்பட்டையின் நேர்கோட்டில் இவளது தலை நின்றது. உயரம் ஒகே.. என மனதுக்குள் நினைத்து சின்னதாக புன்னதைத்தாள்.. பிரதி.
ஆண்மையான குரல், அழகான தோற்றம், கனிவான பேச்சு ஆகிய எல்லாவற்றையும் கூட்டி மனதில் அவனை பற்றி கூட்டல் கணக்கு போட்டு கொண்டு இருந்தாள்.. விவரம் அற்றவள்.!
"வாங்க " என்ற அவனது குரல் கேட்டு சுயநினைவு வந்தவளாய் வேகமாக வெளியே வந்தாள்..பிரதிக்ஷா ஆதி கேசவன்.
வெளியே தரிப்பிட வரிசையில் தூரமாக நின்ற காரை கை காட்டினான்.. ப்ரீத்.
ஒரு குழந்தை போல அவனை பின் தொடர்ந்து காரில் ஏறி அமர்ந்தாள்.. பிரதி.
மனம் பயம் காட்டியது 'யாரு னே.தெரியாத ஒரு ஆள நம்பி.. எப்டி போறேன் நான்..! என எண்ணியவாறு
' நம்மல எதாவது பண்ணிட்டான்னா என்ன பண்ணுவ..? பாக்க நல்லவனா தான் தெரியுறான். அப்படி எல்லாம் பண்ண மாட்டான். இதுவரை வெறும் தனி வீட்டுல அனாதையாக வாழ்ந்த எனக்கு, ஒரு குடும்பம். என்ன ஒரே ஒரு நாள் உறவா நெனைப்பாங்க, இதுல என் சுயநலமும் இருக்கு. அவங்க வீட்டுல இருக்கவங்க கூட என் மேல அன்பா இருப்பாங்க.!
குடும்பத்தோடு வாழலாம் னு நெனைச்ச ஏக்கம் பொய்யாவாவது இன்று நிறைவேறும். என்று தனக்கு தானே சமாதானம் கூறி மனதை தேற்றிக் கொண்டாள். சூல்ச்சி அறியாத வெகுளிப் பெண்.!
ஒரு பிரமாண்டமான வீட்டின் முன்னே சென்று நின்றது கார். " இது தான் என்னோட வீடு.. வாங்க.." இடைவெளி விட்டு முன்னே நடந்தான். ப்ரீத்.
வீட்டின் வாசல் அடைந்ததும் அவளை " போகலாம். " என நின்று வாசல் வழியாக உள்ளே அழைக்க.
யாருமே .. ஆள் இல்லாத தனிமை தாங்கிய, வீடு நடுக்கத்தை வர வைத்தது.அச்சத்தில் தயங்கி தயங்கி உள்ளே...
சென்றவள். உயிர் மூச்சை விட்டாள். எதிரே நின்ற அழகிய பெண்ணை பார்த்து.!
திகைப்புடன் பிரதியை கண்டு பூரிப்புடன்.
" நீங்க தான் அந்த பொண்ணா? உள்ள வாங்க.." அவள் கரம் பற்றி உள்ளே அழைத்து வந்தாள். பவித்ரா.. அவளின் கைகளின் அணைப்பு இதத்தை உணர்ந்தவாறு அவளை உற்று நோக்கினாள். ஒரு நாள் உறவை உணர வந்த பேதை..!
பவித்ரா " எப்படிங்க இவன லவ் பண்ணிங்க.! என்னால நம்பவே முடியலை..! காசு கொடுத்தா கூட பேச மாட்டான். கொஞ்சம் சிரிக்க மாட்டான். ஒரு பொண்ண லவ் பண்ண வைச்சு இருக்கான். எப்ட்ரா..?? அப்படி இருக்கு.. உங்க பேர் என்ன?
கேள்விக்கு பதில் தெரியாததால் திருதிருவென விழித்தான் ப்ரீத்..!
" பிரதிக்ஷா .. " என்றால் புன்முறுவலோடு,
" என் பேர் " என ஆரம்பித்தவளை இடைமறித்து,
"பவி தான நீங்க தெரியும். உங்கள பத்தி நெறைய சொல்லி இருக்காங்க அவங்க.." என ராகம் இருந்தாள்.. அவன் பெயர் தெரியாதே?
" அவங்க.! ம்.. பரவாயில்லையே.. இன்னும் என்னென்ன சொன்னாங்க.? உங்க அவங்க " என எதிர் ராகம் இழுத்தாள்.. பவித்ரா.
" பவித்ராவை உற்று நோக்கியவள் .. விழிகள் ஆச்சர்ய குறியீடு பதிந்தது. ' பொன் மெழுகு சிலை தான் பவித்ரா..! ஒருவேளை நான் பையனா இருந்தா கூட இவள லவ் பண்ணி இருப்பேன்.ஏன் இவன்
வேணாம்னு சொன்னான்.அழகு பதுமையாய் பவி நிற்பதை பார்த்து, சிறு பெண் இவளோ..
பெருமூச்சு விட்டாள்.
' எவ்ளோ அழகா இருக்கா..! ' என பொறாமை மேலோங்கியது.
" பிரதி..என்ன ? அதுக்குள்ளே டிரீம் ஆ.. அம்மா.. அப்பா என்ன பண்றாங்க. லவ் பத்தி வீட்டுல சொல்லியாச்சா? எப்ப கல்யாணம் வச்சுக்கலாம். ? " என்றதும் ஒருத்தி முகம் பயத்தில் வெளுத்துப் போனது.
" என்னது கல்யாணமா ? " சிறிய அமைதிக்கு பிறகு. " எனக்கு யாரும் இல்லை.. கார் விபத்துல அம்மா அப்பா இறந்துட்டாங்க.!" குரல் தழுதழுக்க,
கண்கள் கரித்துக் கொண்டு வர அழுகையை சமன்படுத்தி தன்நிலை கூறினாள். பிரதி.
நொடி பொழுதில் அவளை தாயாய் அணைத்தாள்.
பவித்ரா- " சாரிங்க.. எனக்கு தெரியாது.. சாரி... ப்ளீஸ் அழாதிங்க.. ப்ரீத்.. இருக்கான். நான் இருக்கேன்.. கவலை படாதிங்க பிரதி. தாயின் அரவணைப்பை உணர்ந்து.. மேலும் கண்ணீர் வழிய பவியின் தோள் மேல் விழுந்தது பிரதியின் வலியை சுமந்த நிறமற்ற கனமான உவர் துளிகள்..!
தோழியாக அவளது முகம் உயர்த்தி கன்னத்தில் வழிந்த கண்ணீரை துடைத்து விட்டாள் பவி "அழுதா நல்லவே இல்லை.. " என்று தன் முகம் சுழித்தவளை கண்டதும்..உடனே புன்னகைத்தாள் பிரதி.
பவித்ரா -"குட்.. இப்படி தான் அழகா சிரிச்சுட்டு இருக்கனும்.. "
என்ன நடக்கிறது என்று புரியாமல் பேந்த பேந்த விழித்தான் ப்ரீத் குமார்.
தன்னோட கண்ணீரை மறைச்சுகிட்டு மத்தவங்க கண்ணீரை துடைக்க ஒரு பெரிய மனசு வேணும்..
'மிகவும் உயரமாய் தெரிந்தாள் பவி. அவ கண்ணுல அவனுக்காக தெரியுற வலி.. உதட்டுல இருக்க பொய்யான புன்னகை, உடைந்தாலுமே உருவத்தை காட்டும் கண்ணாடி போல..!
பவித்ரா தனக்கு ஆறுதல் சொல்வதை நினைந்து வியந்து போனால் பிரதிக்ஷா.
கலங்கும் விழியை இமை மூடி திறந்து விழிநீரை விழாது நிறுத்தி " ப்ரீத் குமார் பிரதிக்ஷா .. பேர் கூட பொருத்தமா இருக்கு மாமா.. சூப்பர் " என்று மூன்று விரலை காட்டினாள் பவித்ரா.
' தன்னிடம் சண்டை போடுவாள்.. மோசமா பேசுவாள். அப்படி எதிர்மறையை எதிர்பார்த்தவளுக்கு நம்பவே முடியாத அவள் செய்கை. பெரிய ஆச்சர்யத்தை கொடுக்குது.
' சீரியல்ல வர்ற ஹீரோயின் மாதிரி வலிய மறைச்சுட்டு சிரிக்குறாங்க.!! ' என எண்ணி அவளை இமை அகலாமல் நோக்கினாள்.. பிரதி.
' நெடுநேரம் அடக்கிய கண்ணீரை இனியும் அடக்கிட இயலாது என்று எண்ணி. " நீங்க உட்காருங்க.. நான் ப்ரஷ் ஆகிட்டு வர்றேன். " அந்த இடத்தை விட்டு ஓடினாள்.எதிரே இருந்த குளியல் அறைக்குள் வேகமாக சென்றவள்.. தண்ணீர் குழாயை திறந்து விட்டபடி கண்ணீரையும் விடுவித்தாள்.!
இதயம் எவ்வளவு வலித்தது என அளவிடவே முடியாது. அளவில்லா அவளது காதலை போல.! கண் முன்னே உடையும் காதல் அப்படி வலித்தது.!
கண்ணாடியில் தன் முகத்தை பார்க்க கூட பிடிக்கவில்லை. கண்ணாடியை விட்டு தன் பார்வையை வேறு திசையில் மாற்றி.. அவள் அவனோடு கற்பனையில் வாழ்ந்த காலத்தை எண்ணி நொந்து கொண்டாள் பவித்ரா. தேம்பி.. தேம்பி.. அழுது.. அழுது.. மூச்சு முட்டியது. கண்களோ எவ்வளவு கண்ணீரை கொட்டினால் என்று சாட்சியாய் சிவந்து போய்.. வீங்கி புடைத்தது.
மனதை அழுத்தும் உள் உணர்வு அவள் அழுகிறாள்.. என்று உணர்த்த.. பிரதி " சார்.. அந்த பொண்ணு அழறாங்க.. போய் சமாதானப் படுத்துங்க."
" என்ன சொல்லுற.. ?அவ ஏன் அழ போறா.. அங்க நான் எப்டி போக முடியும்..? நீ வேணா போ." குளியலறை என்பதால் ப்ரீத் பவித்ராவிடம் செல்ல தயங்கினான்.
" என்ன ஒன்னும் அவங்க காதலிக்கல.? எதாவது தப்பா பண்ணிக்க போறாங்க.. போங்க ப்ளீஸ்."
என்றதுமே பயம் தொற்றியது.
தயங்கியவாறு உள்ளே நுழைந்தான் ப்ரீத். கண்ணாடி முன்னே நின்று முகம் மூடி அழும் பவி ஐ கண்ட அதிர்ச்சியில் உறைந்தே போனான் காதலன்.
" பவி.. ஏன் டி அழற.. ப்ளீஸ் நீ அழத டி.. என்னால தாங்க முடியாது. ப்ளீஸ் டி ..அழதமா என் குணம் உனக்கே தெரியும். ஏன் வேணாம்னு சொல்லுறேன் னு உனக்கே தெரியும் தானே .
" ம்..ம்.. " என்று விம்மியவள் கண்ணீரை காண முடியாது தவித்தான் ப்ரீத்.
அவன் மார்பில் முகம் புதைத்து அழுகையை தொடர்ந்தாள் பவித்ரா. நிமிர்ந்து அவன் முகம் பார்த்தவள் கண்ணீர் வழிய கேட்டாள்."ஏன் உனக்கு என்ன பிடிக்கலை.? "
அவள் கன்னங்களை இரு கைகளால் பற்றி, ஆழப் பார்வை பார்த்து .. அவள் நெற்றியில் முத்தமிட்டான் முன்னால் காதலன். உனக்கு தோனுதா.? அவள் மீதான விருப்பத்தின் வெளிப்பாடு, அவன் கண்களில் இருந்து வடிந்த கண்ணீர் துளிகள்.. அவள் கண்ணத்தை நனைத்தது.!
" பதறியவள் அவன் கண்களை துடைத்து, தன் கண்களையும் சேர்த்து துடைத்தாள். " நீ ஏன் அழ.ற மாமா.. அசிங்கமா இருக்கு டா பைத்தியம். "
" வலி கொடுக்கும் உறவுகளுடன் சேர்ந்து வலி அனுபவிப்பது விட விலகி நிம்மதியா இருக்கலாம். "
என்று அவளுக்கு நிம்மதி தர நினைத்தவன்.
" நான் வேணாம் டா உனக்கு புரிஞ்சுக்கோ.. அவளை அணைத்தவாறு ஆறுதல் கூறினான் ப்ரீத்.
பவி..நீயும் நானும் சின்ன வயசுல இருந்தே ஒன்னா இருக்கோம். உன் அளவு என்ன தெரிஞ்ச யாருமே கிடையாது. பாசம் அவ்ளோ இருக்கு உன் மேல ,நான் உன்ன கஷ்டப்படுத்திட கூடாது னு விலகுறேன். பிடிக்காம இல்லை. புரிஞ்சுக்கோ ப்ளீஸ். என் ஈகோ உன்ன அழிச்சுடும்.. என் பவிக்கு தகுதியானவன் நான் கிடையாது. என் கோபம் உனக்கு தெரியும். தெரிஞ்சும் கஷ்டப்பட ஏன் ஆசைபடுற பவி.?
" என்ன பிடிக்கலை னு நேராவே சொல்லிட்டு இப்ப பாசம், அன்பு னு கதை சொல்லுற , ம்.. போடா.. லவ் தான் பண்ணலை ல நகரு, அப்பிடியே ஆறுதல் சொல்லுற மாதிரி ஜாலியா கட்டி பிடிச்சுட்டே நிக்குற.? " என தள்ளி நகரப் போனவளை,
"ஏய்.. நானா.. நீயா.." இன்னும் இறுக்கமாக அணைத்து பிடித்து "ஏய்.. அத்தை மவளே.. மாமனுக்கு மிஞ்சி தான் மத்தவனுக்கு." என சிரித்து கொண்ட முத்தமிட நெற்றியின் அருகே வந்தவனை தடுத்தாள் பவி.
" டேய் .. நீ வேற ஏதோ ப்ளான் பன்னுற , ஆள விடு சாமி.. என்று கூறி
கண்ணத்தில் அறைவது போல வலிக்காமல் தட்டிவிட்டு நகர்ந்தாள் பவி.
விலகவிடாமல் அவள் கரம் பற்றி " உன் மேல அன்பு பாசம், காதல் எல்லா உணர்வும் எனக்கு இருக்கு. உயிர விட பெரிய உறவு நீ. " டையலாக் அடிக்க,
எரிச்சலோடு கையை உதறினாள் பவித்ரா. " என்னை நிம்மதியா அழவிடு டா..
நீ போ.. நான் ஏன் அழறேன். எனக்கே தெரியல.? ரொம்ப வலியா இருக்கு ப்ரீத். என்ன விட்டுடு நீ போ.. உன் லவ்வர்
அங்க தனியா இருப்பாங்க. நாம ரெண்டு பேரும் இங்க ஒண்ணா இருக்கது பார்த்தா தப்பா நினைப்பாங்க. முதுகில் கை வைத்து தள்ளி "வெளியே போக வைத்தாள்.
" நீயும் வா.. போகலாம். தனியா விட்டுட்டு என்னால போக முடியாது. " பிடிவாதமாக நின்றான் ப்ரீத்.
ஆற்றாமையோடு உடைந்த குரலில் " ஏன்.. இப்ப நான் எதுக்கு ? நீதான் தனியா விட்டுட்டு போய்ட்டியே..!!
உனக்கு னு தான் இன்னொருத்தவங்க வந்துட்டாங்களே போ மாமா. " அழ ஆரம்பித்தாள்.
" சீ..இது என்ன தமிழ் சீரியல் ஆ.. சீரியல்ல வர்ற மாதிரி ஏன் பேசுற.பச்.. வா " என வலுக்கட்டாயமாக கையோடு அவளை சேர்த்து இழுத்து செல்கிறான் ஆசை காதலன்.
இருவரும் கை கோர்த்து வருவதை கண்டு புன்னகைத்தவாறு பிரதி - " சரி.. நேரம் ஆகிடுச்சு ப்ரீத்.. ஏதாவது நல்ல ஹோட்டல் ல ரூம் புக் பண்ணி தாங்க, புது ஊர் எனக்கு எதுவும் தெரியாது. நீங்க துணைக்கு வந்தா..கொஞ்சம உதவியா இருக்கும். " என பயந்த குரலில் சொன்னாள். தனியாக செல்ல நிஜமாகவே பயந்தாள் பிரதி. காலையில் நடந்த கசப்பான நிகழ்வு. ரட்சகனான இவனை தவிர யார் மீதும் குறிப்பாக ஆண்களை எதிர்கொள்ள பயமே பயம் அவளுக்கு.
யோசித்து விட்டு " எனக்கு தெரிஞ்ச ஒரு நல்ல ஹோட்டல் இருக்கு. ஃபுல் சேஃப்டி . பவி நான் போய் இந்த பொண்ண விட்டுட்டு வந்துடுறேன். " என ஒட்டாமல் யாரோ போல சொல்ல, பவித்ரா முறைப்பது தெரிந்தது.
"அறிவே..இல்லையா உனக்கு. நீ இங்கேயே தங்கு பிரதி. ஹோட்டல் போய் ஏன் தங்கனும். " பிரதிக்ஷாவின் கையை பிடித்து. "நாம ரெண்டு பேரும் ஒன்னா தங்கிக்கலாம். உங்க லவ் ஸ்டோரி நான் எப்ப தெரிஞ்சுக்குறது. ?" என்றதுமே ஜோடிகள் விழிக்க.! கேள்வியாக பிரதியை பார்த்து.
சுடுநீரில் மீன் விழுந்தது போல் பதறும் மாமன் முகத்தை ஆராய்ந்து
பார்த்தாள் பவி.
பிரதி உளறினாள் "லவ்..வ்.. இல்லை. அது.. தேவை இல்லாத சிரமம் ஏன் உங்களுக்கு நான் பொய்டுறேன்."
" ப்ளீஸ். பிரதி எனக்காக இங்க தங்குங்க. அம்மாவுக்கு அப்பறம் ரொம்ப தனியா இருக்கேன். நீங்க என் கூட இருந்தா மனசுக்கு நல்லா இருக்கும். " பவியை தொடர்ந்து வேறு வழியில்லாமல் நடிப்பிற்காக ப்ரீத்..தும் வற்புறுத்த.
" ம்... என்று தலை அசைத்தாள் பிரதி.
பவித்ராவிற்க்கு குழந்தை போல அகம் முகம் கொண்ட பிரதியை அவ்வளவு பிடித்தது. போட்டியாக நினைக்க வரவில்லை. பாவமாக தான் தோன்றியது. தன் மாமனை பற்றி முழுதாய் தெரியாமல் ஏமாந்துவிட்டாள்.என்று வருந்தினாள் பவித்ரா. அவன் இன்னொரு முகம் இவள் மட்டுமே அறிவாள்.! அந்த ப்ரீத்..தை யாராலும் நேசிக்க முடியாது.
மாலை பொழுது பால்கனி அருகே நின்று காற்று வாங்கி கொண்டு இருந்தனர் ப்ரீத் மற்றும் பிரதி.
சூரியன் மறைவின் பொழுது மேகம் செந்நிறமாக ! சூரியக் கதிரோடு மேகம் ஒன்றாய் கலந்த கலவை .. ரம்யமாக இருக்க.. ரசித்தாள் பிரதி..!
" ஏதோ.. பேசனும் வர சொன்னீங்க? என்ன சீக்கிரமா சொல்லுங்க." அவசரப்படுத்தினான்.
" நாம சொல்லுறதால நாம லவ் பண்ணுறோம்னு யாரும் நம்பவே மாட்டாங்க ப்ரீத். ஏன்.. பவியும் நம்புற மாதிரி தெரியலை. அதனால.. கொஞ்சம அவங்க முன்னால நாம நடிக்கனும். " பதிலுக்காக அவன் முகம் பார்த்தாள்.
முகம் சிவந்து..உள்ளே இருக்கும் கெட்டவன் எட்டிப் பார்க்க.. "என்ன சொல்ல வர்றீங்க " சிடுசிடுப்பானது ஆண்டவன் குரல்.
"அதெல்லாம் பண்ண வந்தா நான் பவி.ய லவ் பண்ணி இருக்க மாட்டேனா? " கொந்தளித்து கோபமாக கத்தினான் ப்ரீத்.
" கத்தாதிங்க சார்.. என்ன லவ் பண்ணுற மாதிரி நீங்க தான நடிக்கனும். ஏன்னா பொண்ணுங்க அவ்வளவா காதலை வெளிக்காட்ட மாட்டாங்க.." என தன் ஆண் சூரியனை காதலோடு ரசிக்க !
" நான்.. லவ் டயலாக்.. பேசுனா.. அது தான் நடிப்பு னு அவ ஈஸியா கண்டு பிடிச்சுடுவா. எனக்கு பேசவே பிடிக்காது.. இதுல லவ்வா பேசனுமாம்..
ம்...கும். ஆகுற கதை இது இல்ல. " கையை விரித்தான்.
வெளிச்சம் மீது வரும் சில நிமிட ஈர்ப்பால் அதன் மீது காதலோடு மோதி தன்னையே எரிக்கும் வெட்டில் பூச்சியாய்..காதல்ஸசாயல் கண்ணில் எழ, வாய்விட்டு கெட்டாள் .
" நான் இருக்கேன். நான் சொல்லித்தர மாதிரி நீங்க நடிச்சா மட்டும் போதும். மீதி எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன்.
நாளைல இருந்து நம்மளோட நாடகம் ஆரம்பிக்குது.
அதுல நான் நினைக்கிறது மட்டும் தான்.. நீங்க பண்ணனும்.
அதாவது நான் எழுதி கொடுக்கிறத எதையும் யோசிக்காமல் என்ன எழுதி இருக்கோ.. அது படி செய்யணும். அது படியே நடக்கும்னும். " என்றதும்
ப்ரீத் உர்.. யென முகம் வைக்க." ஏன் இப்படி மூச்ச வைச்சுக்குறீங்க.? ஏற்கனவே நீங்க சுமார் தான். நடிச்சா தான நம்புவாங்க, நம்புற மாதிரி காதலிக்கலாம். " என்று அவள் ஒரு கணக்கு போட, விதியின் கணக்கு என்னவோ?
" ஒரு நாள் கூத்து னு ஆரம்பிச்சு எதுல போய் முடியுமோ.?" என்று தலையில அடுத்துக்கொண்டு கீழே சென்றான் ப்ரீத்.
இயற்கையின் அழகில் மயங்கி நிலையற்று மாறிக் கொண்டே நிற்க்கும் மேகத்தின் ஓவியங்களை ரசித்தவாறு நின்றிருந்தாள்.. பிரதி.மனதில் நேச விதைகள் மெல்ல துளிர்க்க ஆரம்பித்தது.!
காலை பொழுது விடிந்தது என கடிகாரமும் வீட்டின் பாத்திரங்கள் சத்தமிட்டன. ஹாலில் பவியை கண்டதும் எல்லாருமே இந்த வீட்டுல சீக்கிரமே எழுந்துடுவாங்க போல.! எண்ணியவள் மாடி படிகளை விட்டு வேகமா இறங்கி வந்தாள்.
" குட்மார்னிங் பவி."
" ம்.... குட் மார்னிங். நல்ல தூக்கமா? காஃபி கொண்டு வந்து எழுப்புனேன்.. நீங்க முழிக்கலை, அதான் கீழ வந்துட்டேன். இருங்க காஃபி ஆ.. டீ ஆ .. முல்லை அக்கா (வீட்டில் பணி புரியும் பெண்) என்று பவித்ரா அழைக்கவும்.
" பவி..ம்மா.. இரு வர்றேன்."
என்று ஊதா நிற நைலான் புடவையை தூக்கி சொறுகியவாறு.. வந்தவர் "என்ன பாப்பா உங்களுக்கு வேணும்..?" பிரதியை வினவி " காஃபி..யா டீ ஆ.. ஜூஸ் வேணுமா.. "
" காஃபி ஸ்ட்ராங்கா.. வேணும். ஹாஸ்டல் எல்லாம் யாருமே கேட்க கூட மாட்டாங்க அக்கா. இருக்கதை திங்கனும். முதல் முறை என்ன வேணும்னு கேட்குறீங்க.! ரொம்ப தேங்க்ஸ்.. அக்கா. " என்று மிதமாக புன்னகைத்தாள் பிரதி.
" நன்றி என்ற வார்த்தையை கேட்டு பூரித்து போனவர். ' ஐயோ.. நல்ல பொண்ணா தான் இருக்கு. இந்த ஐயா கிட்ட வந்து மாட்டி இருக்கு பாரு.! தலையெழுத்து குரங்கு கையில பூ மாலை.. ம்... என்று எண்ணியவாறு காஃபி ஐ கலக்கி கொண்டு வந்து அவள் கையில் தந்தார் முல்லை .
வீட்டு சாப்பாடு உணராத அவள் நாவில் காஃபி அமிர்தமாக இறங்க.. கண் மூடி ரசித்தாள். " ம்.. சூப்பர் செம்..ம டேஸ்ட் அக்கா.! "
பவி - " முல்லை யக்கா எங்களுக்கெல்லாம் இப்படி காஃபி போட்டது இல்ல நீங்க.? புதுசா ஆள் வந்த உடனே அவங்களுக்கு மட்டும் டேஸ்ட்டா போட்டு கொடுக்குறீங்களோ.?பொய் கோவத்துடன் சீண்டினாள். பவி.
" இல்லம்மா புதுசா குடிக்கிறாங்க இல்ல! அதனால நல்லா இருக்குற மாதிரி இருக்கும்.. " நமட்டு சிரிப்பை உதிர்க்க.
என்றதும் பக்கென்று சிரித்து .." ஹா..ஹா.. சும்மா சொன்னேன். அக்கா உங்க காஃபி அல்லும்.! ஏன் கா.. அம்மா மட்டும் இப்ப உயிரோட இருந்தாங்க என்ன சொல்லுவாங்க..?"
என்றதுமே சுமதி போல பாவனையில் பேசினார் முல்லை. " ஏன் டி..முல்லை .. காஃபி போட தெரியலை. சூடே.. இல்லையே..ஏன் டி.. இவ்ளோ சூடு, ஏதோ.. சரி இல்லை. " என பேசும் போதே..
பழசை எண்ணியவள் முன் வந்து சென்றது பவித்ராவின் தாய் சுமதியின் முகம்.! தனி ஒருத்தியாக உடலை உருக்கி உழைத்து தன் பெண்ணையும்..தூரத்து உறவான பெற்றோர்கள் இல்லாத மருமகனையும் ஆளாக்கியவர். அதை நினைத்து கண் கலங்கியது முல்லைக்கு,
" குழந்தை தான் உங்க அம்மா.உன் கல்யாணத்த அய்யா (ப்ரீத்) கூட அப்படி பண்ணனும். இப்படி பண்ணனும் னு அம்புட்டு ஆசை.! உன்ன மட்டும் அவர் கையில் பிடிச்சு கொடுத்துட்டு செத்துருந்தா நிம்மதியா செத்து இருப்பாங்க.." தன் முந்தனையில் வழிந்த கண்ணீரை துடைத்துவிட்டு.. கிச்சனுக்குள் சென்றார் முல்லை.
குளத்தில் விழும் கல் என தாயின் கடைசி நிமிட நினைவுகள்.!
"பவி... என் நிலைமை சரியில்ல ...அவன கைவிட்டுடாத பவி.பாவம் அவன். நீ தான் அவன கல்யாணம் பண்ணிக்கனும். சத்தியம் பண்ணு இறுதியாக இறைஞ்சிய போது கண்ணீரோடு தாயின் கையில் கையை வைத்து " ம்.. "
என சத்தியமிட்டு சம்மதித்தாள் பவித்ரா.
அதுவரை ப்ரீத் நண்பனாக, சில நேரம் எதிரியாக கூட பார்த்தவள். கணவனாக காண தன்னை தானே வற்புறுத்தி கொண்டாள். காதலனாக அவனை அவளால் நினைக்கவே முடியாது. புரிதலே இல்லாத முரடன் அல்லவா.. அவன். ரொம்ப டாமினேடிவ் குணம் கொண்டவன்.
தாயின் பிரிவுக்கு பிறகு உனக்கு நான் எனக்கு நீ என்ற நிலையில் இருவரும் நிற்க. அவனின் கோபம், கண்டிப்பு , அன்பும் கூடியது அவளிடம். அப்படி ஒரு ப்ரீத்..தை இத்தனை வருடங்களில் அவள் கண்டது இல்லை.!
அவனது அக்கறை, அன்பு கண்டு நெகிழ்ந்தது பெண்ணவள் மனம். இந்த உலகின் ஒரே உறவான அவன் மீது மெல்ல உருவான காதல்.! உணராது போனான் அவன்.!
" செட்டாகாது பவி உனக்கும் .. எனக்கும். " கல் நெஞ்சோடு அவன் கூறிய பதில்கள் உடைத்து நொருக்கியது பாவை இவள் கண்ணாடி மனதை..!
Last edited: