எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அத்தியாயம் 18

Privi

Moderator

"என் அப்பா என்னுடைய சிறு வயதிலே இறந்து விட்டார். அம்மாதான் என்னையும் என் தங்கையையும் பாத்துக்கொண்டார். எனக்கும் அவளுக்கும் எப்போதுமே ஒத்து வராது. என் சொல்லை மதிக்கவே மாட்டாள். என் அப்பாவின் தங்கை மனம் போன போக்கில் வாழ்பவர். தனது வாழ்க்கை தனது இஷ்டம் எனும் மனப்போக்கு கொண்டவர்.​

இவளும் என் அத்தையின் வாழ்க்கை முறையை பின் பற்றி வாழ்கிறாள். அவளை யாரும் கட்டுப்படுத்தினால் அவளுக்கு பிடிப்பதில்லை. அவளுக்கு நல்வழி சொல்லி சொல்லியே என் அம்மாவுக்கு சலித்து விட்டது. நான் அவளுக்கு அப்படியே எதிரான குணம் உள்ளவன். நன்றாக படிப்பேன். பள்ளியில் நல்ல மதிப்பெண்கள் பெறுவேன். அம்மா சொல்லை தட்ட மாட்டேன்.​

அன்று பள்ளியின் கடைசி நாள். இனிமேல் நண்பர்களை பார்க்க முடியாது என்று அவர்களுடன் சிறிது நேரம் பொழுதை கழித்து விட்டு, வீட்டுக்கு வந்துகொண்டிருக்கும் போது என் அத்தை ஓடி வந்து என் அம்மாவுக்கு விபத்து நேர்ந்து விட்டது தனியார் மருத்துவமனையில் அனுமதித்திருப்பதாக கூறினார்.​

பதறி போய் மருத்துவமனைக்கு சென்றேன் அங்கு என் அம்மா உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அவரை காப்பாற்ற ஆபரேஷன் செய்ய வேண்டும் அதற்கு பத்தாயிரத்திலிருந்து இருபதாயிரம் வரை பணம் தேவை படும் என்று கூறிவிட்டார்கள்.​

என்ன செய்வதென்று தெரியவில்லை. எனக்கு தெரிந்தது என் அத்தையை மட்டும் தான். அவரிடமே உதவிக்கு போய் நின்றேன். அவர்தான் இந்த தொழிலை எனக்கு அறிமுக படுத்தினார்.​

முதலில் எனக்கு விருப்பம் இல்லை ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் என் தாயின் உயிரை விட இவை யாவும் எனக்கு பெரியதாக தெரியவில்லை. அம்மாவின் உடல்நிலை பின்னோக்கி சென்றுகொண்டே இருந்தது.​

பணம் கிடைக்க வேறு வழியும் எனக்கு இல்லை. மனசாட்சியை ஒருபுறம் தள்ளிவைத்து விட்டு இந்த வேலையை பார்கக சென்றேன். பணம் கிடைத்தது ஆனால் காலதாமதம் ஆனதால் அம்மாவை காப்பாற்ற முடியவில்லை.​

அம்மா இன்றி தங்கையை பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு என்னிடம். படிப்பைவிட்டு நம் தொழிற்சாலையில் வேலைக்கு சேர்ந்தேன். எனக்கு அந்த தொழிலை அறிமுக படுத்தியவர் என்னை விடவில்லை.​

அவர்கள் என்னை இத்தொழிலில் ஈடுபட சொல்லி வற்புறுத்தினார்கள். என் தங்கையை இதில் இழுத்து என்னை மிரட்டினார்கள். ஒரே தங்கை, அவள் வாழ்க்கை நல்லபடியாக இருக்க வேண்டும் என்று நானும் என் வாழ்க்கை எப்படி போனாலும் சரி என்று அவர்களின் பேச்சுக்கு தலையாட்டினேன்.​

இருந்தும் என்ன பயன்? என் தங்கை என் அறிவுரைகளை செவிமடுக்கவே இல்லை. என் வாழ்வை பணையம் வைத்தேன், ஆனால் அவளோ என்னையும் என் பேச்சுக்களையும் கேட்கவும் இல்லை மதிக்கவும் இல்லை. என் அத்தையின் போதனையில் வாழ்க்கையை கெடுத்து கொண்டாள்.​

உன்னை பார்க்கும் வரை மனம் போன போக்கில் வாழ்ந்து வந்தேன். உன்னை பார்த்ததும் என்னை அறியாமலே உன் மேல் ஒரு ஈர்ப்பு. நாளடைவில் அது விருப்பமாகவும் காதலாகவும் மாறியது.​

புத்திக்கு புரிந்தது இது தவறு என்று. நம் நிலைமை என்ன, நம் வாழ்க்கை என்ன, எதை நோக்கி நாம் செல்கிறோம் என்பதெல்லாம் எனக்கும் உரைத்தது. உன்னையும் சேர்த்து இதில் இழுத்து விட எனக்கு மனசு இல்லை. அதனால்தான் என் விருப்பத்தை சொன்ன பிறகு உன்னிடம் விலகியே இருந்தேன்.​

உனக்கு நினைவிருக்கிறதா உன்னிடம் முதல் முறை பேச முயற்சி செய்தேனே?" என அவளின் கண்களை பார்த்து ஆவலாக கேட்டான்.​

அதற்கு அவள் அவனின் கண்களை பார்த்தாள், அவள் கண்களில் கண்ணீர் நிரம்பி இருந்தது.​

அவனால் அவளை அப்படி பார்க்க முடியவில்லை. அவனின் இரு கைகளையும் உயர்த்தி பெருவிரலால் அவளின் கண்ணீரை துடைத்தான். “அன்றும் இதேபோல் தான் நீ அழுதுகொண்டிருந்தாய். எனக்கு காரணம் தெரியவில்லை ஆனால் உன் அழுகையை நிறுத்த வேண்டும் என்று நினைத்தேன். உன்னிடம் அதனால்தான் பேச முயற்சித்தேன். நீ எனக்கு பிடிகொடுக்கவில்லை. நானும் ஒரு கட்டத்தில் அமைதியாகிவிட்டேன்.​

பின் தான் நீயே என்னிடம் பேச வந்தாய். என்னமோ பேச நினைத்து உன்னை பிடித்திருக்கிறது என்னை கல்யாணம் கட்டிக்கொள்கிறாயா என கேட்டேன். கண்டிப்பாக நீ மறுப்பை என்று தெரியும் அதனால்தான் உன்னை பிறகு வந்து உன் முடிவை சொல்ல சென்னேன்.​

அதன் பின் எதோ ஓர் இடத்தில் உனக்கு என்னை பிடித்திருக்கிறது என்று நினைத்தேன்" என்று அவன் கூறிய பொழுது, அவள் அவனை ஏறிட்டு பார்த்தாள். அவள் தலை தாமாக ஆம் என ஆடியது.​

கரகரப்பான குரலில் அவள் "ஆம் எனக்கு உங்களை கொஞ்சமே கொஞ்சம் பிடித்தது. அது அந்த வயதுக்கே உள்ள ஈர்ப்பா என்று தெரியவில்லை" என்றாள்.​

அதற்கு அவனும் "தெரியும் அதனால்தான் உன்னை மறைவாகவே பார்த்துக்கொண்டிருந்தேன். உன்னிடம் நான் கேட்டது அதிகப்படி என்று நீ சென்ற பிறகுதான் புத்திக்கு எட்டியது. அதனால்தான் அதன் பிறகு விலகி இருந்தேன். நீயாகவே என்னிடம் சம்மதம் சொல்வாய் என நான் எதிர்பார்க்கவில்லை.​

அன்று உன் கண்களில் ஒரு சோகம் அதனால்தான் உன்னிடம் தனியாக பேசினேன். உன்னை பற்றியும் உன் தம்பி, அப்பா பற்றியும் என்னிடம் கூறினாய். அந்த நொடி எனக்கு உன் பாதுகாப்பு மட்டுமே பெரியதாய் தெரிந்தது.​

அதனால்தான் உடனே கல்யாணம் செய்ய ஏற்பாடு செய்தேன். எனக்குள் ஒரே குற்ற உணர்ச்சி நான் உனக்கு தகுந்தவன் இல்லை என்று, உன்னிடம் ஒரு விலகலை காட்டினேன்.​

நானே எதிர்பார்க்காததுதான் நமக்குள் நடந்த அந்த முதல் சங்கமம். உன்னுடன் வாழ்ந்த பின் உன்னை இழக்க மனம் இல்லை. எப்படியாவது இந்த தொழிலிருந்து வெளிவரத்தான் நானும் போராடிக்கொண்டிருக்கிறேன். இப்போது அங்கு நான் செல்வது குறைந்து விட்டது அதனால்தான் இன்று என்னை தேடி வீட்டிற்கே ஆள் அனுப்பி உள்ளனர்" என்று அவன் கதையை சொல்லி முடிந்தான்.​

உமையாள் எதுவும் பேசவில்லை. அமைதியாகவே இருந்தாள். அவளின் அமைதி அவனுக்கு ஒரு வித பயத்தை ஏற்படுத்தியது. "உமை தயவு செய்து அமைதியாக இருக்காதே. எனக்கு உன் அமைதி பயமாக உள்ளது. நீ என்னை விட்டு சென்றுவிடலாம் என முடிவு எடுத்தால் கூட அது தவறு இல்லை. ஆனால் எனக்கு ஒரு வாய்ப்பு கொடு என்னை நான் திருத்தி கொள்கிறேன்"​

உமையாள் அமைதியாக இருந்தாள். அருணுக்கு இதற்கு மேல் எப்படி அவளிடம் கெஞ்சுவது என தெரிய வில்லை. அவளையே கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டு இருந்தான்.​

என்ன நினைத்தானோ அமைதியாக வீட்டை விட்டு வெளியேறினான். வாசலில் நீலன் நின்று கொண்டிருந்தான். அவனை பார்க்க கூட அருணுக்கு திராணி இல்லை.​

அவனுள் ஒரு பயம், உமையாள் அவனை விட்டு சென்று விடுவாளோ என்று. அவனுக்கு இப்போது மது குடித்தே ஆகவேண்டும் எனும் நிலை. வேகமாக மதுக்கடைக்கு சென்றான். மதுவை வாங்கி குடிக்க முற்படும் போது அவனின் உமையாள் அவன் கண் முன் வருவது போல் ஒரு பிரம்மை.​

மது புட்டியை கீழே வீசி எறிந்தான். மனம் போன போக்கில் மோட்டார் வண்டியில் சுற்றி திரிந்தான். வீட்டிற்கு செல்ல பிடிக்கவில்லை. இந்நேரம் உமையாள் அவனையும் அவன் வீட்டையும் விட்டு சென்றிருப்பாள் என நினைத்தான்.​

அலைந்து திரிந்ததில் உடல் அசந்து போனது. ஒருவழியாக விடியும் போதுதான் வீட்டிற்கு வந்தான். வீட்டை திறந்து அவன் அறைக்குள் சென்ற போதுதான் உமையாள் கட்டிலில் அவனுக்கு முதுகு காட்டி படுத்திருப்பது தெரிந்தது.​

அவனுக்கு அவ்வளவு மகிழ்ச்சி. அவன் உமையாள் அவனை விட்டு செல்ல வில்லை. கண்கள் கலங்கி விட்டது. அசையாமல் அவளை பார்த்து நின்றுகொண்டிருந்தான்.​

அப்போது "இன்னும் எவ்வளவு நேரம் இப்படி நின்று கொண்டு இருக்கலாம் என உத்தேசம்? வீட்டிற்கும் தாமதமாக வந்தாயிற்று. சீக்கிரம் வந்து படுங்க" என்று உமையாள் கூறினாள்.​

அருண் அமைதியாக வந்து அவள் பக்கத்தில் படுத்தான். உமையாளும் அவனை நோக்கி திரும்பி படுத்தாள். சிறு அமைதிக்கு பின்​

"நல்ல யோசனை செய்து ஒரு முடிவுக்கு வந்து இருக்கேன் உங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கலாம் என்று. தயவு செய்து என்னுடைய நம்பிக்கையை உடைத்து விடாதீர்கள்"​

அவன் அவளிடம் நெருங்கி அவள் கைகளை பிடித்துக்கொண்டான். கண்களில் கண்ணீர் தழும்பு இருந்தது. அவள் பெருவிரல் கொண்டு அவன் கண்ணீரை துடைத்து விட்டாள்.​

"இப்போ ஏன் குழந்தை மாதிரி அழுந்து கொண்டு இருக்குறீங்க?" என்று வினவி அவன் நெற்றியில் முத்தம் பதித்தாள்.​

அவன் செவிமடத்தில் சென்று "இப்படி அழுதால் உங்க பிள்ளை நாளைக்கு உங்களை அழு மூஞ்சி அப்பா என்று கேலி செய்யும்" என்று கூறினாள்.​

இதனை கேட்ட அவன் கண்கள் விரிந்துகொண்டன.​

அவள் கண்களை பார்த்து "உண்மையா உமையா?" என்று கேட்டான்.​

அவள் ஆம் என கண்களை மூடி திறந்து அவன் கையை எடுத்து அவள் வயிற்றில் வைத்தாள்.​

அவன் குழந்தை. சந்தோஷத்தில் அவன் கண்கள் கலங்கி போயின. "தேங்க் யூ சோ மச் உமையா" என்று கூறினான்.​

"டாக்டர் கிட்ட உறுதி படுத்திவிட்டு நானும் நீலனும் ரொம்ப சந்தோஷமா உங்களிடம் சொல்ல வந்தோம். ஆனால் எங்களுக்கு காத்திருந்தது என்னவோ உங்களை பற்றிய உண்மைகள் தான். என்னால் இதனை எல்லாம் கேட்டு தாங்க முடியவில்லை. உடைந்து விட்டேன். நீங்கள் உங்கள் தரப்பு கதையை சொன்ன பின் தான் மனம் கொஞ்சம் சமாதானம் ஆனது.​

இங்கு யாரும் குற்றவாளிகள் இல்லை. சூழ்நிலைதான் ஒருவரை குற்றவாளியாக்குகிறது. அவர்கள் திருந்த ஒரு வாய்ப்பு கொடுப்பது ஒன்றும் தவறு கிடையாது. உங்களுக்கு நான் ஒரு வாய்ப்பை தருகிறேன். இதிலிருந்து வெளியே வாருங்கள். இனி நாம் நம் குழந்தையுடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வோம். இப்போது நிம்மதியாய் தூங்குங்கள்" என கூறி அவனை ஆதரவாக அணைத்துக்கொண்டு அவளும் உறங்கி விட்டாள்.​

நாட்கள் மாதங்களாக ஓடி எட்டு மாதங்கள் கடந்திருந்தது. உமையாள் எட்டாம் மாத கடைசியில் இருந்தாள். வயிறும் பார்க்க பெரிதாய் இருந்தது. உமையாளுக்கும் சரி அருணுக்கும் சரி ஏன் நீலனுக்கு கூட பெண் குழந்தையாய் இருக்க வேண்டும் என்று தான் ஆசை. அவர்களின் வாழ்க்கையில் அந்த பிரச்சனைக்கு பிறகு சாதாரணமாக சென்றது.​

அருண் நீலனை தனியே அழைத்து சென்று அவன் பக்க நியாயத்தை எடுத்து கூறினான். நீலனுக்கு முதலில் ஒத்துக்கொள்ள முடியவில்லை என்றாலும் பின் கொஞ்ச நாட்கள் கழித்து சமாதானமாகி விட்டான்.​

அருணும் அந்த கும்பலில் இருந்து எப்படியோ வெளியே வந்து விட்டான். அதற்காக அவன் முதலில் செய்த விஷயம் குடியிருந்த வீட்டை மாற்றியது தான். அவன் வீடு மாறியதை யாரிடமும் அவன் கூறவில்லை அவன் தங்கை உட்பட.​

உமையாள் இன்னும் சில நாட்களில் ஒன்பது மாதத்தை அடைந்து விடுவாள். அவளுக்கு வளைகாப்பு செய்து பார்க்க அருண் ஆசை பட்டான். ஆனால் உறவினர் என்று யாரும் இல்லாததால் யாரை கூப்பிட்டு வளைகாப்பை நடத்துவது என்று அவனுக்கு தெரியவில்லை. இருந்தும் நடத்த வேண்டும் என்று முடிவெடுத்து விட்டான்.​

நீலனின் பல்கலைக்கழக தோழிகள், உமையாள் தாயுடன் இருந்த போது அவர்களின் பக்கத்து வீட்டு பெண்ணான பாக்யாவையும் அவள் குடும்பத்தினரையும் , மற்றும் உமையாள், அருண் வேலை செய்யும் இடத்தில உள்ள சக தோழி தோழர்கள் என தெரிந்தவரை அழைத்திருந்தான்.​

வளைகாப்பு விழாவுக்கு தேவையானதை ஏற்பாடு செய்துகொண்டிருந்தான்.​

உமையாளும் "ஏன் இவ்வளவு செலவு செய்கிறீர்கள்” என கேட்டே விட்டாள்.​

“என் பொண்டாட்டி பிள்ளைக்கு செய்கிறேன் இதில் என்ன இருக்கு” என்ன கேட்டான். இப்படி இவர்கள் வாழ்க்கை சென்று கொண்டு இருக்க வளைகாப்பிற்கு இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே எஞ்சி இருந்தது.​

அப்போது அவன் சுயமாக வடிவமைத்து முன்பதிவு செய்திருந்த பிள்ளை போடும் தொட்டில் தயாராகி விட்டது என கடையிலிருந்து அவனுக்கு தொலைபேசி மூலம் தகவல் வந்தது.​

உடனே அதனை எடுத்து வர புறப்பட்டான். அப்போது உமையாளோ " எங்க போறிங்க?"​

"தொட்டில் தயாராகி விட்டதாம். கடைக்காரர் தொடர்பு கொண்டாங்க. அதான் அதை எடுக்க போறேன்"​

"ஏன் இப்பவே அதற்குத்தான் இன்னும் கால அவகாசம் இருக்கிறதே பொறுமையா எடுத்துக்கலாம்" என்றாள் உமையாள்.​

“இல்லை முடியாது. நான் சுயமா வடிவமைத்தது வேறு யாரும் அந்த வடிவமைப்பை திருட கூடாது. அதனால் உடனே சென்று எடுத்துவருவதுதான் நல்லது" என கூறினான்.​

உமையாளும் “சரி நானும் வரேன் உங்களுடன்” என கூறினாள்.​

அதற்கு அருணோ "வேண்டாம் மா. நிறைமாதம இருக்கும்போது இப்படி வருவது சரி இல்லை" என்றான்.​

அதற்கு உமையாள் "பாருடா தத்துவம் யார் சொல்வது என்று” என கேட்டாள்.​

அருணோ சரி வரணும் என்று முடிவு எடுத்து விட்டாய், வா போகலாம்" என்று கூறினான். இருவரும் புறப்பட்டு அந்த கடைக்கு சென்றனர். தொட்டிலின் மீத பணத்தையும் குடுத்து தொட்டிலை வாங்கி கொண்டு வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்தனர்.​

அப்பொழுது அவர்கள் மோட்டார்வாகனத்தை காவல் துறை அதிகாரிகள் சுற்றி வளைத்திருந்தனர் . அவர்களிடம் பேசலாம் என்று நினைத்து வாகனத்தை விட்டு வெளியே வந்தான் அருண்.​

வெளியே வரும்போது உமையாளை பார்த்து " என்ன நடந்தாலும் வாகனத்தை விட்டு வெளிவராதே" என்று கூறி அவள் கண்களை ஆழ்ந்து பார்த்து "பாப்பா பாத்திரம்” என்று கூறியவன்,​

”என்னை மன்னித்து விடு உமையா. ஐ லவ் யூ சோ மச்” என கூறினான்.​

ஏன் இவ்வாறு பேசுகிறான் என்று புரியாமல் அவனை பார்த்துக்கொண்டு இருந்தாள் உமையாள். பின் எதோ தோன்ற அவனிடம் அதனை கூறுவதற்குள் அவன் காரை விட்டு வெளியேறி இருந்தான்.​

வெளியேறியவுடன் பேச்சுக்கே இடம் கொடுக்காமல் அவன் மீது துப்பாக்கி சூட்டை நடத்தினர் காவல் துறையினர். அவள் கண் முன்னே உயிர் துறந்து வெறும் உடம்பாக கீழே தரையில் விழுந்தான் அருண்.​

என்னதான் திருந்தினாலும் நாம் செய்த தவறு எப்போதும் நம் தலை மேல் கதியாய் நிற்கும். அப்படிதான் இன்று அந்த கத்தி அவனை பதம் பார்த்து விட்டது. இதனால் அவன் இழந்தது அவனது உயிர்.​

 
Top