எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அத்தியாயம் 02

Status
Not open for further replies.
❤️இதமான காதல் ❤️- 02

காஃபி காதல் எல்லாம் முடிந்துவிட்டது.செயற்கை மழையாய் பொய்யான காதல். அவன் நிலை புரிந்ததால்.. அவன் போன பின்பு சிரிப்பு தான் வந்தது " கெத்து காட்டுறதுக்கு நான் தான் கிடைச்சனா "டிஷ்யூ பேப்பரில் எழுதியிருந்த நம்பரை கண்களால் வருடினாள் மதி கெட்டவள் " யாருடா நீ ?" அவன் கேட்பது போலவே "யாரையாவது லவ் பண்றீங்களா.." அவளே அவளை கேட்டு அவன் முன் தலையசைத்தது போல தலையசைத்தால்" லவ் யூ இது தான் என் நம்பர் னு சொல்லிட்டு மின்னல் மாதிரி போயிட்டான். காதலிச்சு தான் எல்லாரும் புலம்புவாங்க காதல் சொல்லி என்ன புலம்ப வச்சுட்டான் " மெல்லிய சிரிப்போடு..அந்த டிஷ்யூ பேப்பரை பத்திரப்படுத்தி
விட்டு தலையில் கையால் முட்டி " வேலைய பாருங்க மதி உன் கதையில லவ் சீன் அஞ்சு நிமிஷம் தான் " பெருமூச்சு எழுந்தது ' அந்த பொண்ணு கிட்ட கெஞ்சி இருந்தா கூட எனக்கே கோவம் வந்திருக்கும். வலியையும் கண்ணீரையும் அடக்கி, சண்டை போடாம திட்டி பேசாம, உடனே என்ன லவ் பண்றேன்னு சொல்லி வச்சான் பாரு ட்விஸ்ட்,செம கெத்து தான் நீ.. அந்த திமிரு புடிச்சவகிட்ட கெஞ்சுவே னு எதிர்பார்த்த அந்த பொண்ணுக்கு சரியான பதிலடி.. மொத மொத நமக்கு வர ப்ரோபோசல் கூட பொய்யா கனவு மாதிரி இருந்தா கஷ்டமா தான் இருக்கு. பில்லிங் வேலையை தொடர நினைத்தும் முடியவில்லை. ஏதோ ஒன்று உந்தி தள்ளியது அவன் எங்கே சென்றான் என்ற பதட்டம் உண்டானது. இதயத்துடிப்பு அதிகரித்தது ஏதோ ஒரு உணர்வு.. மதியை எச்சரிக்கை செய்தது, உடனடியாக கஃபேவிலுள்ள சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்தால் மதி. அந்தப் பெண் ரோட்டை கடந்து காரில் ஏறுவதற்கான வீடியோ காட்சிகள் இருந்ததே தவிர இவன் சென்றதற்கான ஒரு காட்சிகளும் இல்லை. நொடி தாமதிக்காமல் பார்க்கிங் நோக்கி ஓடினாள் காதல் சொன்னவனை தேடி.!!

கார் இருசக்கர வாகனம் நிறுத்துவதற்கான தரிப்பிடம் நோக்கி ஓடியவள்.. மூச்சு வாங்க அவனைப் பார்த்து அப்படியே அதிர்ச்சியில் அசையாமல் நின்றால்.

ஒரு ஆணின் உடைந்த பக்கத்தை முதல் முறையாக பார்க்கிறாள்.! கண்ணீர் கோடுகள் கன்னத்தில் நிற்காமல் வழிய அப்படியே தரையில் ஒடுங்கி உட்கார்ந்து இருக்கும் அடிபட்ட பிள்ளையின் தேம்பல் போல அவன் அழுகை 'ஆண்களின் வலியும் கண்ணீரும் யாருக்கும் தெரியாமல் மறைக்கப்பட்டு புதைக்கப்பட்டு விடும்' என்ற வாசகம் உண்மை என்பதை கண்ணெதிரே கண்டாள் மதி. வலிகளுக்கு பாலினங்கள் கிடையாது. ஆண் என்றாலும் காதல் உடைந்தால் வலிக்கும். காதலில் ஏற்படும் பிரச்சனைகள்.குணத்தால் சண்டைகளால் பிரிவுகள் வேறு, வெறும் பணத்தால் வசதியான வாழ்வு தர முடியாது என்ற இயலாமையால் ஒரு காதல் தோல்வி அடைந்தால், நீ இல்லாதவன் நான் இருப்பவனிடம் செல்வேன் என்று சொன்னால்,அந்த அவமானம் அப்படி வலிக்கும் ஒரு ஆணுக்கு, நடப்பது எல்லாம் தாங்க முடியாமல் துடித்தான் மேகன். அவள் போன சோகம் ஒரு புறம் என்றால் மூன்று வருடமாக இப்படி ஒருத்தியை காதலித்த சுயகோபம் அவனை மிருக நிலைக்கு மாற்றியது. எழ முடியாமல் நிலைத்திடுமாறி எழுந்தவன் அவனது பைக்கை ஸ்டார்ட் செய்தான். எங்கே போவது எங்கு சென்றாலும் இந்த நிகழ்வும் நினைவும் கொல்லுமே.. உயிர்பித்து நிற்கும் வாகனத்தின் ஆக்சிலேட்டரை வேகமாக திருகி.. அதன் மீது தன் கோபத்தை காட்டினான். பைக்கில் சைடு மிரரில் ஒப்புக்காக காதல் சொன்ன அந்த பெண் வருவது தெரிய ஆக்சிலேட்டரை திருகுவதிலிருந்து கையை எடுத்தான் மேகன்.

வியர்த்து வழிந்த முகத்தோடு மூச்சிரைக்க பேசினால் "இங்க தான் இருக்கீங்களா.. எங்க எல்லாம் உங்கள தேடுறது "கீழே கிடந்த அவனது தலைக்கவசத்தை எடுத்து அவன் கையில் தர, கையை மட்டும் நீட்டி வாங்கிக்கொண்டு, தலைகுனிந்து வண்டியில் அமர்ந்திருந்தான் மேகன்.

" மன்னிச்சிடுங்க உங்களுக்கு ப்ரொபோஸ் பண்ணது தப்பு. அந்த நேரம் எனக்கு வேற வழி தெரியல,
கெத்து காட்டுறதுக்காக உங்களுக்கு ப்ரொபோஸ் பண்ணல.. அவகிட்ட போய் கெஞ்சுடுவேன் அப்படிங்கற பயம். அதனால தாங்க நான் அந்த இடத்துல நிக்க கூட இல்லை. என்ன மன்னிச்சிடுங்க"
என்று கிளம்புவதற்காக பைக்கை ஸ்டார்ட் செய்ய போக.. நொடியில் பைக் சாவியை எடுத்து கையில் பத்திரப்படுத்திக் கொண்டால் மதி.

அவள்(அனிகா) மீது உள்ள கோபத்தில் மேகன் மதியை எரிக்கும் தீ பிளம்பாக எச்சரிக்கும் பார்வை பார்க்க.! பயம் வந்தது மதிக்கும், இருந்தும் சாவி திரும்பத்தராமல் அழுத்தமாக நின்றாள். " இப்ப நீங்க பைக் ஓட்டிட்டு போறது சரியா இருக்காது. வழியிலையும் வண்டியிலையும் உங்க கோபத்தை காட்டுறது ரொம்ப ஆபத்து உங்களுக்கும், ரோட்ல போறவங்களுக்கும்,நாளைக்கு காலைல வந்து வண்டி சாவி வாங்கிக்கோங்க." பிடுங்கி விடுவான் என்ற பயத்தில் வேகமாக அந்த இடத்தை விட்டு காஃபி ஷாப் உள்ளே சென்று அமர்ந்து கொண்டாள் மதி.

அவள் உள்ளே சென்று ஐந்து நிமிடம் ஆகியும் உயிரற்ற ஜடமாய் ஹெல்மெட்டோடு சாவி இல்லாத பைக்கில் அப்படியே நின்றான் மேகன். ஹெல்மெட்டுக்குள் பதுங்கிய முகத்தில் சின்ன புன்னகை அவளின் முகவரி இல்லாத அக்கறை சற்று முன் நடந்த நிகழ்வால் பெண்களை வெறுத்தவன் கண்களில் மாய திரைகளைக் கிழித்து, ஆச்சரியத்தை விதைத்து விட்டு சென்றால் பெயர் தெரியாத அன்பானவள்.

இருள் சூழ்ந்த இரவு நேரம் மேகன் வாழ்வில் புயல் அடித்து ஓய்ந்தது. அவனது செல்போனில் உள்ள அனிகாவின் புகைப்படத்தையும் அவள் நினைவுகளையும் ஒவ்வொன்றாக எடுத்து பார்த்து வலிக்க வலிக்க அவளையும் அவள் மீதுள்ள காதலையும் இருவரும் சேர்ந்து உருவாக்கிய அழகிய பல நினைவுகளையும் மொத்தமாக தேர்ந்தெடுத்து அழித்துக் கொண்டிருந்தான் காதல் தோல்வி அடைந்தவன்.

"லவ் ஃபெயிலியர்? "அவனது அறையின் ரூம் மேட் சந்தேகம் கேட்க. கசங்கிய முகத்தோடு ஆமாம் என்ற தலையசைத்தான்.

" நீ தான் மரியாதையா பேசுவ, தம் தண்ணி அடிக்க மாட்ட, வேற பொண்ணுங்க பழக்கம் கிடையாது அப்புறம் ஏன் உன்னை விட்டுட்டு போயிட்டாங்க? அதுக்கு தான் ட்ருவா லவ் பண்ண கூடாது. உன் ஆளோட ஆளு செம பணக்காரன் போல இங்க பாரு.. இன்ஸ்டால ஜோடியா ரீல்ஸ் போட்டு இருக்காங்க.." அவன் முகத்துக்கு நேராக செல்போனை நீட்ட வெறுப்பில் தோய்த்த கசந்த புன்னகையோடு மறுத்துவிட்டான் மேகன்.

" வேணான்னு முடிவான பிறகு அவங்கள எட்டி பார்த்துட்டு இருக்க கூடாது டா.."செல்போனை அவன் கையில் திணிக்க.. நகைப்போடு சொன்னான் சூரஜ்"அவங்கள எட்டி பார்த்து எனக்கு என்ன ஆக போது.. உனக்காக தான் ப்ரோ சொல்றேன்.அவங்க சந்தோஷமா இருக்காங்க.. சந்தோஷமா இருக்குத எல்லாருக்கும் தெரியப்படுத்துறாங்க.. நீ தான் சோகமா உக்காந்து இருக்க, சாப்பிடாம கவலைப்படுற, சின்சியரா எல்லாம் இருக்காதீங்க ப்ரோ. வாங்க சாப்பிடலாம்." பிடிவாதமாக மேகனை இழுத்து சென்றான் சூரஜ். வடநாட்டை சேர்ந்த மேகனுடன் வேலை பார்க்கும் நண்பன்.

" ஹெல்மெட் மறந்தாச்சு.. எடுத்துட்டு வாங்க ப்ரோ.."என்று வாகனத்தில் அமர்ந்தபடி மேகனை தலை கவசத்தை எடுத்து வர சொல்ல, கையில் எடுத்ததும் அவள் நினைவு வந்து இதமாக மனதிற்குள் பரவியது அதன் வெளிப்பாடாக அழகான புன்னகை தரித்தது அவன் இதழ்கள். அவள்(மதி) நினைவுகளின் தாக்கத்தால் வலியிலும் மெல்லியதாய் சிரித்தான் மேகன். இரவு உணவை முடித்துக் கொண்டு அறையில் வந்து படுத்தவனுக்கு படுத்தாலும் உறக்கம் வரவில்லை,
‌அனிகாவின் நினைவுகளின் கசப்பான தாக்கத்தால் உறங்க மூடியவில்லை.

"ப்ரோபோசல் அக்செப்ட் பண்ணதால நான் உன்னை பிரேக்கப் பண்றேன்." என்று காதல் முறிவின் போது சொன்ன வார்த்தை திரும்ப திரும்ப ஒலித்தது மேகனின் செவியில்.! அரக்கனை போல் ஆழ்மனம் கத்தியது,
அவளைக் கொன்றுவிடும் கோபம் வந்தது" அண்ணா உங்க போன் அடிக்குது பாருங்க" சூரஜ் கூறியதும் நிஜ உலகிற்கு வந்தவன் புது நம்பரில் இருந்து அழைப்பு வர தயக்கத்தோடு ஏற்றான்.

" சாப்டீங்களா.." அதே குரல் அவளே தான்.." நாளைக்கு காலைல பத்து மணிக்கு வந்து பைக் சாவி வாங்கிக்கோங்க. அதையே நினைச்சுட்டு இருக்காதீங்க,ஒரு கெட்டது போனா தான் ஒரு நல்லது வரும். கேட்டதுக்கு பதிலே சொல்லல நீங்க சாப்டிங்களா?" அக்கறையாக கேட்டாள் மதி.

" சாப்பிடேன்ங்க "என்று பதில் சொன்னான்.இது கனவா நிஜமா என்று புரியாமல்.

"நல்லது வச்சிடவா "

" கேட்கிறேன் னு தப்பா நினைச்சுக்காதீங்க. கொஞ்ச நேரம் என்கிட்ட பேசிட்டு இருக்க முடியுமா, இதையே யோசிச்சா.. பைத்தியம் பிடிக்கிற மாதிரி இருக்குங்க ப்ளீஸ்.. ப்ளீஸ்.." பலமாக கெஞ்சினான் மேகன்.

" ஏங்க சும்மா தானே ப்ரொபோஸ் பண்ணீங்க" பதட்டத்தோடு கேட்டால் மதி.

" இனிமே என் வாழ்க்கையில நான் காதலிக்கவே மாட்டேன். பயப்படாதீங்க, காலைல சும்மா தான் சொன்னேன். நீங்க பேசினா இங்க.. மனசுல ஒரு மாதிரி இதமா இருக்குங்க. ப்ளீஸ் கொஞ்ச நேரம் என் கூட பேசுங்க "

" பாவம் னு போன் பண்ணா அட்வான்டேஜ் எடுத்துக்கறீங்க"என்று அதட்டுவது போல கேட்க..

"ஐயோ அப்படியெல்லாம் இல்லைங்க தனியா இருக்குற மாதிரி ஒரு ஃபீலிங், அதனால தானே பேச சொல்றேன். உங்களுக்கு பேச புடிக்கலைன்னா நான் பேசுறேன் நீங்க கேளுங்க"

உடனே மறுத்தாள் "நான் அப்படி காதலிச்சேன். இப்படி காதலிச்சேன். ஏமாத்திட்டு போயிட்டா.. புலம்பல் உளறல் அதெல்லாம் என்னால கேட்க முடியாது சாமி போன வைக்கிறேன். "

"வேணாம் னு முடிவானவங்கள பத்தி நான் பேச மாட்டேன். ஒரு மாதிரி அழுத்தமா இருக்குங்க, கொஞ்ச நேரம் பேசுங்க ப்ளீஸ்.." கெஞ்சும்போது மறுக்க முடியாமல் பேச தொடங்கினால் மதி.

வெண்மதி மேகத்தோடு விளையாடும்
நேரம் தொடங்கி.. ஆதவன் வந்தும் பேச்சு முடியவில்லை.‌

♥️ நன்றிகள்🙏கோடி ♥️
உமா கார்த்திக்
 
Status
Not open for further replies.
Top