உமா கார்த்திக்
Moderator


"என்னங்க நான் பேச பேச பதில் சொல்ல மாட்றீங்க"
உரிமையாக கோபித்துக் கொண்டான்.
"ஸாரி..தூங்கிட்டேன்..ங்க"
கண்களை கசக்கியபடி
" ஒருத்தவங்க சின்சியரா பேசும் போது சின்ன புள்ள தனமா தூங்கறீங்க"
" நேத்து ஆரம்பிச்சீங்க.. இன்னைக்கு விடிஞ்சிடுச்சு வேலைக்கு போகணும் போன தயவு செஞ்சு வைங்க" வேறு வழி இல்லாமல் அவளே துண்டித்து விட்டு கஃபே செல்வதற்காக குளித்து கிளம்பினால் மதி. அவள் வருவதற்கு முன்னாலே அவளுக்காக காத்திருந்தான் மேகன்.
கஃபேயின் கண்ணாடி கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தவள் அவன் கையில் சாவியை திணித்துவிட்டு நகர்ந்து அவள் வேலைக்கு செல்ல முனைய "உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்"
அழைப்பு விடுத்தான் மேகன்.
" என்ன நெனச்சிட்டு இருக்கீங்க"கடுகடுப்போடு அவன் அருகில் வந்து அமர்ந்தால் மதி.
" இந்தாங்க" டேபிள் மீது இருந்த அவனது பிரமோஷன் ஆர்டர் ஐ அவள் முன் நகர்த்த..எதற்காக என்று புரியாமல் விழித்தால் மதி " என்ன இது ஏன் என்கிட்ட தரீங்க"கையில் எடுத்து பார்த்தாள்.
"இது உங்க அப்பா அம்மா கிட்ட காட்டுங்க.. இந்த சம்பளத்தில மாப்பிள்ளை இருந்தா உங்கள கல்யாணம் பண்ணி கொடுப்பாங்களா னு கேளுங்க."
கோபம் பற்றியது திட்ட தொடங்கினால் " என்ன நெனச்சிட்டு இருக்கீங்க.. நேத்து விளையாட்டுக்கு சொல்றீங்கன்னு நினைச்சேன். ஒரு நாள் நாம பேசுறதை வைச்சு எப்படி உங்களுக்கு காதல் வரும் "
" அது எங்க வந்துச்சு.. நான் உங்கள லவ் பண்றேன்னு எப்ப..ங்க சொன்னேன்." ப்ரோமோஷன் லெட்டரை பிரித்து படித்து பார்த்தவள் கண்கள் மேலும் விரிந்தது பயத்தில் " என்னங்க உங்களுக்கு தான் ப்ரமோஷன் கிடைச்சிருக்கு சம்பளமும் சிக்ஸ் டிஜிட்ல இருக்கு.அந்த பொண்ணு கிட்ட இதை நேத்து காட்டி இருந்தாலே உங்களுக்கு பிரேக் அப் ஆகி இருக்காதே" சந்தேகத்தை தீர்க்க வேண்டி அவனிடமே கேட்டாள் மதி.
" எப்பவும் சொல்ற மாதிரி என்ன வேணாம்னு சொல்லி சண்டை போட்டு இருந்தா.. இத காட்டி சேர்ந்திருக்க வாய்ப்பு இருக்கு. உன்கிட்ட பணம் இல்ல..
இன்னொருத்தன் கிட்ட இருக்கு, அதனால நீ எனக்கு வேணாம், அப்படி சொல்லும் போது அங்க எங்க காதல் இருக்கு. என் மேல காதலே இல்லாத பொண்ணு எனக்கு எதுக்கு, அதான் சொல்லல.." என்றான் அழுத்தமாக அவளை ஒரு பார்வை பார்த்து.
" ஆறுதல் சொன்னதால..சிம்பதில கல்யாணம் பண்ணிக்க கேக்குறீங்களா " அவன் கண்களில் பதிலை தேடினாள் மதி. அனுதாப காதல் அவளுக்கு வேண்டாம்.
" அதெல்லாம் இல்லங்க, முதல் காதல் வெறும் அழகான தோற்றத்தை வச்சு தான் சூஸ் பண்ணேன். அன்பில்லாத அழகு ரொம்ப நாளைக்கு அழகா இருக்காது.நேத்து ஒரு நாள் முழுக்க உங்க கிட்ட பேசி இருக்கேன். நெறைய குணம் நமக்குள்ள ஒத்துப்போகுது காதலுக்கும் எனக்கு செட் ஆகல, அதனால கல்யாணம் பண்ணிக்கலாம் னு முடிவு பண்ணி இருக்கேன். வீட்ல கேட்டு நீங்க சொல்லுங்க.. முடியாதுன் னு சொன்னாலும் பரவாயில்ல, நான் வேற இடத்தில் பொண்ணு பாத்துக்குறேன் " சிரிப்பை அடக்கிக் கொண்டு சீரியஸாக சொன்னான் மேகன்.
சில உணர்வுகளுக்கு மொழி பெயர்ப்பு தேவை இல்லை. காதலும் அப்படித்தான். ஏன் எதற்கு எப்படி உருவானது என்ற காரணம் புரியாமல் வரும் நேசம், இரு உள்ளத்தை காந்தமாக ஈர்க்கும் அழகியல் காதல்.!
இந்த பதிலைக் கேட்டு இவள் முகம் தான் சுருங்கி போனது "உங்க பேர் என்ன?"
கவலையாக கேட்டாள்.
அவள் முக மாற்றம் கண்டு " வான்..வான்.."என முழு பெயர் சொல்லாமல் திணறினான் மேகன்.
"என்ன வான்..வான்.. வானவராயரோ?" புருவம் வில்லாக வளைத்து உயர்த்தி மதி சிரிக்க..
அமைதியாக காதல் ஆயுதம் வீசினான் வார்த்தையில்
"ஆமா.. வைத்தீஸ்வரி " என்றதும் மூச்சே வரவில்லை அவளுக்கு.. பக்கத்துக் கடையில் உள்ள ரேடியோ எப்எம்..ல் எஜமான் பட பாடல் சூழ்நிலைக்கு ஏற்ப செவியில் ஒலித்தது
"ஒரு நாளும்
உனை மறவாத இனிதான
வரம் வேண்டும் உறவாலும்
உடல் உயிராலும் பிரியாத
வரம் வேண்டும்.விழியோடு
இமை போலே விலகாத
நிலை வேண்டும் "
பாடலில் உருகி கரைந்தால் வானின் மதி.
" என்ன ஆச்சுங்க? அப்படியே ஃப்ரீஸாகி நிக்கிறீங்க? என் பெயர் வான் மேகன் உங்க பேர் என்ன? " அவன் கேட்டதும் நினைவு வந்தவள் சுதாரித்து கடையின் பெயரை கை காட்டினாள் "
"ஓ.. உங்க பேர் ஒயிட் மூனா? " முகம் சுழித்தான்.
" ஹலோ..என் பேரு வெண்மதி " முகம் வெட்டி திருப்பி நின்றாள் மதி.
" அப்ப இந்த கஃபே உங்களோடதா?"அதிர்ச்சியில் மேகன் கேட்க..
"ஆமா நீங்க என்ன நினைச்சீங்க "
" பில் போடுற பொண்ணு னு நினைச்சேன்ங்க"முகம் வாடியது ஏமாற்றத்தில், கனிகா வசதியான வீட்டு பெண் இல்லை.அவளே வசதியை காட்டி விலகியபோது இவள்? கஃபேவை விழியால் வட்டமடித்தான் மேகன்.
" நினைப்பீங்க.. நினைப்பீங்க.."என்று மாறும் அவன் முகமாற்றம் படித்தவள் வேண்டும் என்று பொய் சொன்னாள்.
" பெரிய கடையை பார்த்து பெரிய இடம் னு தப்பா நினைக்காதீங்க. மொத்த கடையும் இஎம்ஐ கடன் வாங்கி கட்டினது தான். இன்னும் இருபது வருஷத்துக்கு இஎம்ஐ இருக்கு. அதே மாதிரி மேகன். உங்க முன்னாள் காதலி கிட்ட உங்களை நிரூபிக்க என்ன பலியாக சொல்றீங்களா? அவங்க கிட்ட உங்களுக்கும் ஆள் இருக்குன்னு கெத்து காட்டுறதுக்கு மறுநாளே என்ன கல்யாணம் பண்ணிக்க ப்ரொபஷனல் எடுத்துட்டு வரீங்க.. ஒரு நாள் பேசறது வச்சு ஒருத்தவங்கள எப்படி நீங்க கல்யாணம் பண்ணிக்க முடியும்." மனதில் பட்டதை உடனே கேட்டு விட்டாள்.
" ஒவ்வொரு நாளும் பேசலாம் வெண்மதி. பிடிச்சா மட்டும் கல்யாணம் பண்ணிக்கோங்க காதல் கூட வேணாம். அதே மாதிரி நான் ஏங்க அவகிட்ட என்ன நிரூபிக்கணும். மீதி வாழ்க்கையில அவளை பார்க்கவோ பேசவோ எனக்கு விருப்பம் இல்லை. நமக்கு ஒன்னுனா நமக்கான உறவுக்கு துடிக்கணும். நேத்து நீங்க அந்த உணர்வு எனக்கு கொடுத்தீங்க.. இவ்வளவு வலியிலும் கெடச்ச நிழலா நிம்மதியா இருந்துச்சு,உங்க கிட்ட பேசும் போது நிறைய விஷயம் நமக்கு ஒத்துப் போச்சு.. அதனால"
" என்ன அதனாலே ? மூணு வருஷ காதல ஒரு நாள்ல மறந்தவங்கள நான் ஏங்க நம்பனும்"
" என் மேல எந்த தப்பும் இல்லை அது உங்களுக்கு நல்லாவே தெரியும். இந்த காதலால உருவான காயம் மாறாம இருக்கு. ஆனா அந்த பொண்ணு மேல காதல் இல்லை. ரொம்ப நாள் பேசி பழகணும் அப்படி இல்லங்க.. நமக்காக யோசிக்க உண்மையா ஒரு உயிர் கிடைச்சுட்டா.. மனசு முழுக்க இத மான கா.. கா.." தயங்கி மேலே சொல்லாமல் தடுமாற
" கா..ஆ.. என்ன? கஸ்டமர் வந்துட்டாங்க நான் போறேன் "என்று விட்டு சென்றால் மதி.
"என்ன சொல்ல வரன் னு முழுசா கேட்டுட்டு போங்க மதி "
திருப்பி வந்து கைகளை குறுக்கே கட்டி முறைத்தாள் " உங்களுக்கு ஒரு கோட் தெரியுமா மேகன்.கஸ்டமர்ஸ் கடவுளுக்கு சமம். அவங்கள காக்க வச்சுட்டு உங்க கிட்ட வெட்டி பேச்சு பேச முடியுமா? "
" இவ்வளவு நேரம் மொக்கை போட்டதுக்கு நான் சொன்னதயாவது நீங்க கேட்டிருக்கலாம்.. மனசுல ஒரு இதமான ஒரு ஃபீலிங் அந்த பீலிங்..உங்க மேல கா.."
" டைம் இல்ல.. மிகவும் சின்ன குழந்தை மாதிரி அடம் பிடிக்காம ஓரமா உட்காருங்க மேகன் " விலகி செல்லும் அவளை பார்த்து பேச வராமல் நெளிந்து கொண்டே கேட்டான்." நான் தானே ஃபஸ்ட் வந்தேன் முதல்ல இந்த கஸ்டமர கவனிங்க மேடம் " நிமிர்ந்து அதிகாரமாக அமர்ந்தான்.
" ஸ்மார்ட் தான்.. ஆர்டர் ப்ளீஸ்.."
" இந்த இதமான காதல் எப்போவுமே வேணும் " அவள் கண்களை ஆழம் பார்த்தது இவன் வேல் விழிகள்.
வசிகரிக்கும் அவன் பார்வையை விட்டு விலக்கி கீழே பார்த்தால் மதி " காஃபி கடையில் வந்து காதல் ஆர்டர் பண்றீங்க..ஒரே நாள்ல காதல் வருமா மேகன். "
" உங்க மாதிரி யாரையாவது பார்த்தா.. கண்டிப்பா இந்த இதமான காதல் வந்துடும்ங்க,சீக்கிரமா உங்க கஸ்டமர் கேட்டது கொடுத்துடுங்க."என்றான் மயக்கும் புன்னகை மிளிரும் அவசரக்காரன்.
" என்ன கேட்டீங்க "அறியாதவளாய் நடித்தாள் மதி.
" உங்கள தான் கொடுத்துருங்க "என்றான் அழுத்தமாக..
" வேலை இருக்கு மேகன் போகனும் " இருவரையும் குறுகுறுக்கும் வேலை ஆட்களை மனதில் கொண்டு அந்த இடத்தை விட்டு நாணத்தோடு நகர்ந்தால் வெண்மதி.
"அன்பின் திரை பூட்டிய கண்களில் காதல் என்றுமே குறையாது.புறத்தோற்றங்கள் கடந்து அகம் கண்ட கண்களில் நேசம் நிறைத்து காணும் காட்சிகள் அத்தனையும் அழகு! அந்த அழகான உணர்வை கொடுப்பது தான் காதல். அழகான முகத்தை விட இதமான உணர்வை யார் கொடுக்கிறார்களோ.. அவர்கள் மீது தானாக உருவாகிடும் இந்த "இதமான காதல்"
சுகமாக
தவிப்பதும்
இணையாமல்
துடிப்பதும்
எப்போதும்
நினைப்பதும்
கனவிலே
மிதப்பதும்..
கண்டபின்
உடைவதும்..
கெஞ்சிக்
கிறங்குவதும்
பேச்சில்
மயங்குவதும்
உன்னோடு நான்
உணர்வுகளால்
ஒன்றி விலகாத
உயிராக கலப்பதும்
#இதமான_காதல்



உமா கார்த்திக்