உமா கார்த்திக்
Moderator
இனிமையான முன் இரவு நிலவு பெண்ணோ.. மேக மெத்தையில் காரிய இருளை போர்வையாய் போர்த்தி உறங்கிட.!நம் கதாநாயகிகள் உறக்கம் வராமல், எதையெதையோ பேசிக்கொண்டிருக்க தலையை வர்ஷாவின் வயிற்றில் வைத்து படுத்தவள் "அக்கா உங்கள பத்தி சொல்லுங்க " என்றாள் ஆர்வமாக
வர்ஷாவின் முகம் மாறியது மெல்ல தலையை வருடியபடியே " என் கதை கேட்காத அதை எல்லாம் மறக்க நினைக்கும் வலிகள். வேதனை மட்டும் மேலோங்கி இருக்கும் நரக வாழ்க்கை எதிரிக்கும் என் கஷ்டம் வர கூடாது."
"சோகமா அப்படினா வேணாம் டார்லிங், அண்ணாவ எப்டி மீட் பன்னிங்க லவ்.? ஸாட் அன்ட் ஸ்வீட் ஆ சொல்லுங்க " என்று பவி கேட்டதும் கண்களில் வெட்கம கரைபுரண்டு ஒடிட,
" அவர் லவ் ஃபெயிலியர் நான் லைப் பெயிலியர் இரண்டு உடைந்த இதயமும் ஆறுதல் தேடி..அன்பு காட்டிட உருவானது காதல் அவ்ளோ தான். "
" மீதி எல்லாம் சொல்லலையே.? "புருவம் தூக்கி வினவிட"கல்யாணம் பண்ண அப்புறம் தெரிஞ்சுக்க பவி " என்றால் கொஞ்சம் கண்டிப்பான குரலில்
" அட போ.. க்கா தெரிஞ்சா தான் கல்யாணமே நடக்கும் போல.! " முகம் சுழித்து சோகமாக சொல்ல
" புதுசா ஒரு காதல் உருவாக்கவா போற பயம் வர, ஏற்கனவே உன் மேல உயிரா இருக்குறவனோட காதல கைப்பற்ற போற. அவ்வளவு
தான். அதுக்கு ஏன் இவ்வளவு பயப்படுற? "
"எங்க அம்மா அடிக்கடி சொல்லுவாங்க, ப்ரீத்துக்கு வந்து ரெண்டு தாரம் இருக்க மாதிரி ஜாதகம் னு
ஒருத்தாரம் ஊர் அறிய கல்யாணம் பண்ணிப்பானாம்.
இன்னொரு தராம் யாருக்குமே தெரியாம ரகசியமா மெயின்டன் பண்ணுவானாம். "
"ஜாதகம் எல்லாம் உண்மை இல்லை ஷோனா அது எப்படி கல்யாண வாழ்க்கை பற்றி சொல்ல முடியும்.
ஒரு பொண்டாட்டியை வைத்து வாழ்றதே கஷ்டம். இங்கு இன்னொன்னு வச்சு சமாளிக்கும் ஆண் அவ்வளவு தான்."
"அவன் அங்க இருக்கும் போதெல்லாம் பயம் வந்தது இல்ல, இங்க வந்தப்புறம் பயமா இருக்கு..கா
என்ன விட்டு தூரமா விலகி போய்டுவானு ஏதோ ஒரு உணர்வு பரவி பூதகரமா ஆழ் மனதில் ஒரு கெட்ட எண்ணம் வந்து
பயமுறுத்துது.
"முதல் முறையா பிரிஞ்சு இருக்கீங்க. அதனால அப்படி இருக்கும்.
ஏன் அவனுக்குமே இதே மாதிரி பயமா இருக்கும். வெறும் காதல் மட்டும் தான் என்றால்'மாறிவிட வாய்ப்பு இருக்கு.
ப்ரீத் உன் மேல் வைத்த அன்பு
அதையும் தாண்டியது மாறவே மாறாது.
தனிமை நிறைய தவறான புரிதலை உண்டாக்கிடும். அதனால நீ ஊருக்கு போனாலும் சரி. அவன்னோட
மொத்த நேரத்தையும் ஆக்கிரமிச்சுக்கோ,
இடைவெளியே இல்லைனா எந்த பயமும் வராது, கூடவே இல்லாம தூரமா இருந்து செய்யும் காதல். ரொம்ப ஆழமாக மனதில் வேரூன்றி வளரும். பிரிவு உங்களுக்குள்ள இதுவரை இல்லாத நெருக்கத்தையும் முக்கியத்துவத்தை உணர்த்தும்.பார்க்க முடியாமல் பேச முடியும தவிச்சு கிடக்கும் போது இணை கூட பேசுற அந்த ஒரு நிமிஷம் கூட சுகம்தான்.! அனுபவிச்சா தான் புரியும்.உன் அண்ணன் இங்க இருக்கும் போது அவன் எப்படி தப்பு பண்ண முடியும்.
பொண்ணுங்க பிரச்சினை என்ன தெரியுமா.இல்லாத யோசிச்சு.. யோசிச்சு.. சந்தேகத்தை வளர்த்து கொள்வது. ஒரு ஆண கட்டிப் போட்டு வைக்கிறது பெண்ணுடைய நம்பிக்கையும் , காதலும் மட்டும் தான். மீதி எதாலையும் அவர்கள கட்டுப்படுத்தி அடக்க முடியாது "
'ஆண்கள் பம்பரம் போல அன்பெனும் கயிறால் ஆட்டுவித்தால் போதும். சுற்றி சுழன்று தன் இணையின் காலடியில் கிடப்பார்கள்.'
(இது நல்ல ஆண்களுக்கு மட்டும் பொருந்தும் அரக்கர்களுக்கு அல்ல)
இந்த காலத்தில் யாருக்கும் அன்பு செய்ய தெரியவில்லை..தியாகம் தான் உறவை வளர்க்கும். கடமைக்காக ஒரு காதல். சந்தேகம் என்னும் சாட்டையால் மாறி மாறி வேறு அடித்துக் கொள்கின்றர். கோபம் போட்டி, திமிர் ஈகோ ஆதிக்கம் அடக்குமுறை அதீத காமம் நெறி தவறல் பொய் வார்த்தைகள் பேசவது குரங்கு போல மாறி மாறி தாவி கொண்டிருக்கும் காதல். இதுவா காதல் ? இது எல்லாம் எந்த கோணத்தில் காதலாக தெரிகிறது? காதலைப் பற்றிய தெளிவில்லாது தவறாக புரிந்து கொண்டு இது தான் காதல் என நம்பும் மூடர் கூட்டத்திற்கு எப்படி சொல்வது..
காதல் உடல் தேவை அல்ல,
உயிரின் தேவை.!
"நுணுக்கமாக செதுக்கப்படும் தெய்வ சிற்பம் போல.. ஒழுக்கம் எனும் விரதம் மேற்கொண்டு அன்பெனும் உலியால் புரிதலோடு மெல்ல செதுக்கி, நம்பிக்கையால் உருவகம் கொடுத்து மரியாதையால் அரிதாரம் பூசி.. ஒப்பில்லாத தூய அன்பால் உயிரூட்டப்படும் காதல் "
"ப்ரீத் பாவம்.. ஷோனா " அவள் மேல் உருண்டு பிரண்டு அரைத்து எடுக்கும் பவித்ராவை பார்த்து சலித்தவாறு கூறினாள் வர்ஷா.
கோவம் கொப்பளிக்க "அக்கா" என்றவள் "உங்க கிட்ட இப்படி இருந்தா எல்லார்கிட்டயுமே இப்படி இருப்பாங்களா? உங்கள ரொம்ப புடிச்சிருக்கு. அதனால சீண்டி டார்ச்சர் பண்றேன்." உரிமையோடு கன்னத்தில் முத்தமிட்டு வாரி அக்காவை அணைத்து கொண்டாள் பவி.
"அம்மா கூட இப்படியே தூங்கி பழகிட்டேன் ப்ளீஸ்.. என்று கண்களை மூடி உறங்கிட "
காமம் இல்லாத தூய அன்பில் சேய் போல தங்கையின் அணைப்பில் தாய்மையின் கருவறை உணர்ந்தால் வர்ஷா.!
இரவு தினமும் கோர ராட்சசனை போல மாறி , அவள் உடலையும் உயிரையும் நினைவுகள் எனும் கூர் பற்களால் பிய்த்து திங்கும்.
காம அரக்கர்களால் தன் வாழ்வு சிதைந்தது எல்லாம் காட்சி படுத்தி கண் முன் நிறுத்தி
பயம் காட்டும். தன்னையே வெறுத்து கண்ணீர் வற்றாமல் வழியும். இன்றோ கசப்புகள் இல்லாமல்
முதல் முறையாக சந்தோஷமாக நிம்மதியாய் கண் மூடி உறங்கம்.
சக மனிதர்கள் மேல் அன்பு செய்வதும் கடமை தான்.தங்கை எனும் உறவு வேர்விட்டு வளர அக்கா எனும் பெரும்பதவி தனக்கு கிடைத்ததும் பவித்ரமான இவள் அன்பினால் கறைகள் எல்லாம் கரைந்தது போல் உணர்ந்தால் வர்ஷா..
பயம் வரும் வேலை எல்லாம் சேய் தாயை தேடி ஓடும் போது அன்னையின் சிறிய அணைப்பு, மந்திரம் போல் வேலை செய்யும். அமைதி நிம்மதி ஆறுதலை ஒருசேர தரும். புனிதமான அவளின் பாசம் அக்காவிற்ககு கவலையின் வடிகால்
நான் இருக்கிறேன் உனக்கான
என்ற நம்பிக்கை விருட்சம் போல் அன்பின் நிழலாய் அவள்.! அன்னையாலுமே வஞ்சிக்கப்பட்டவள் தங்கையிடம் அந்த அன்பை உணர்ந்ததும் இதோ நிம்மதியாக விழி அயர்ந்தாள்.
நாட்கள் ஓட்டம் எடுத்தது.. இந்த இரு பாசப்பிணைப்புகளும் மருந்துக்கும் கூட ஆண்கள் பக்கம் திரும்பவில்லை. சமைத்து பரிமாறி விட்டு புது மாப்பிள்ளை பெண் போல.. அறையிலேயே அடைந்து கொண்டனர் வர்ஷா பவி. பேசிக் கொண்டே இருப்பதும் சிரிப்பதுமாக சப்திப்பது மட்டும் வெளியே கேட்கும் ப்ரீத் மிகவும் பொசசீவ்வாயிற்றே பாவம் அவன்
காதுகளில் புகை வந்து உச்சபட்ச கோபம் வரும் ஆடவனுக்கு.
மாமா என்னும் ஒற்றை சினுங்களில் அத்தனையும் மறைத்து விடுவாள் அந்த மாயக்காரி.!
ஐந்து நாட்கள் முடிந்ததால் விடைபெறும் நேரம் வர்ஷாவிற்கு, திரும்பி அழுபவளை கண்டு வரும் கண்ணீரை கட்டுப்படுத்தி, தேற்றிட இயலாது தவித்தாள் வர்ஷா .
"ஷோனா..ஆழாத கஷ்டமாக இருக்கு ப்ளிஸ். " என்று இறுக கட்டிக் கொண்டாள் தங்கையை" மிஸ் யூ..அக்கா.காலேஜ் லீவ்க்கு நான் வருவேன். நீக்களும் வரனும் என்று தங்கை கட்டளையிட மயில் போல் அழகாக தலை அசைத்தாள் வர்ஷா.
வேகமாக தனது ஹேன்ட் பேக் எடுத்து துலாவி அதில் இருந்த பணத்தை திரட்டி கையில் அள்ளி வந்தாள் பவித்ரா.அவள் செய்கை புரியாது உறுத்து விழித்தாள் வர்ஷா.
" இந்தாங்க அக்கா நீங்க போனா பணம் கேட்பாங்க இதை கையில வைச்சுக்கோங்க மீதம் அக்கௌன்ட் ல அண்ணாவ போட சொல்லேறேன்."
என்ற சொல் கேட்டதும்
பொங்கிய கண்ணீர் அணை தாண்டி பாய்ந்து வழிந்தோடியது வர்ஷாவின் விழியில் விரக்தியில் துண்டானவள் " அன்பு காட்டிட கூலி வாங்குவது இல்லை ஷோனா. வீட்டுக்கு போறதா சொல்லிட்டு வந்தேன் பணம் வேணாம் " அவளின் மனம் உணர்ந்து "பயப்படாதே.. இந்த ஐந்து நாட்கள் தான் நான் ரொம்ப நிம்மதியாக என் வாழ்க்கைய வாழ்ந்த நாட்கள் பொக்கிஷம், வரம் இதை எல்லாம் விட உறவா நீ.. இதுவே போதும் எனக்கு " என்றதும் கண்ணீர் வர நின்றாள் பவி
வெயிலில் வாடிய இதயத்தின் மேல் நிழல் படர்ந்த நிம்மதி வர்ஷாவிற்கு.
வாசல் வரை அக்காவை வழி அனுப்பி வைத்த தங்கையின் மேல் ஆத்திரம் ஜுவலித்தது உரியவனுக்கு.
மெல்ல அவன் அருகே சென்று பிரிவின் ஆற்றாமையில் தோள் மீது சாய்ந்து கண்ணீர் விட " உனக்கு என் ஞாபகம் இருக்கா.. பவி. என்ன மறந்துட்டீகளோ னு நெனைச்சேன்." குரலில் தான் அத்தனை கோபம் மிகைபட பேசுபவனை சோகம் இழையோடும் பார்வை பார்த்துவிட்டு நகர்ந்தாள் பவித்ரா.
வேகமாய் அவள் அருகே வந்து "பவி.. எல்லார் மனசையும் படிக்குற, என் மனசு உனக்கு புரியாதா.? உன் கூட இருக்க ஆசைபட்டு தான.! போடி.. நான் உனக்கு முக்கியமே இல்லை. புதுசா யாராவது வந்தா என்ன கண்டுகாம போய்டுற , அவாய்ட பண்ற ஏத்துக்க தான் முடியல, நான் தான் இப்படி ஏங்கி பயித்தயகாரனா சுத்துறேன்.
ஈவ்னிங் ஃப்ளைய்ட் டிக்கெட் புக் செய்து இருப்பதால் துணிகளை மடித்து பேக்கில் வைத்து அடுக்கிக்கொண்டே அவன் சொல்வதை கேட்காதவளாய் உதட்டில் நிறுத்திய புன்னகையுடன் நின்றாள் பவித்ரா.
" யார்கிட்ட பேசிகிட்டு இருக்கீங்க மாமா.?" கிண்டலாக கேட்பவளை முறைத்தவன்.
" என்ன டி.. திமிரா? " என்றதும் இரு கையால் அவனை சோஃபாவில் தள்ளியவள் அவன் சுதாரிப்பதற்குள் பூனை போல அவன் மடியில் படுத்து கொண்டு கவிதை போல கண்ணோடு கண்களை கலந்திட!!
இங்க ஒரு கோவக்காரன் கோபத்தில் கோட்டைக்கு ஏற.. கொத்தாக அவனைப் பிடித்து தரதரவென்று தரையில் இழுத்து வந்து விட்டது. காதல் பாவையின் வேல்விழி.. ப் ..பா என்ன பார்வை பார்க்கிறாள்.. துண்டு துண்டாக வெட்டி துடிக்க வைத்தது அன்பனை.மூச்..ச் என மிரட்டி விட்டாள் ஒற்றை பார்வையால்.!
தன் குருவை (வர்ஷா) மனதில் மெச்சி கொண்டாள். இதுவே பழைய பவித்ராவாக இருந்தால் ஆமா டா.. நீ யார்? என்ன கேட்க? எனக்கு பிடிச்சுருக்கு நான் பேசுறேன்.
உன்ன பிடிக்கலை , பேச மாட்டேன் போடா.. என மூஞ்சில் அடித்தது போல் பேசி இருப்பாள். ஏற்கனவே தன்னை காதலிக்கிறளா இல்லையா?
என புரியாமல் அலைபவனை
இன்னும் குழப்ப குளத்தில் மூழ்க வைத்து கொன்று இருப்பாள் பவித்ரா.
'இது கோபம் பொறாமை அல்ல, அன்பிற்கான ஏக்கம்.! ஆண்கள் கோபமாக பேசும் போது மௌனமாக கண்களோடு கண்ணை கலக்க விடு,ஒரு நிமிட அமைதிகோபத்தை இளக வைக்கும். இதயங்களை நொருக்கும் வார்த்தைகளை தடுக்கும்.கோபமாக இருக்கும்போது மரியாதையாக பேச வேண்டும்.
எதை கேட்டு
சண்டையிடுகீறார்களோ?அதை
கொடுத்து சண்டையை நிறுத்த வேண்டும். பிடிக்கும் என்ற வார்த்தை கூட இனிக்கும் ஷோனா.. அடிக்கடி ப்ரீத்திடம் சொல்ல வேண்டும்.'
என வர்ஷா கூறியது காதில் ஒலித்தது. மெல்ல இதழ் விரிய
"என்ன ஆச்சி.? ஏன் கோபமா பேசுறீங்க மாமா.. உங்க நெனைப்பு இல்லாம தான் டெல்லி வரை வந்து, கட்டிகிட்டவ போல சவர்டனையா ஆ.. சமைச்சு போடுறனா? உங்க ஞாபகம் இல்லாம தான் ஒரு வாரம் சோறு தண்ணி இல்லாம பட்டினி கிடந்தனா?
"நீங்க பேசுறது புரியது ஆனா யார் பேசுறீங்க அதான் புரியலை? " 'இவ இப்படி எல்லாம் பேசுற ஆள் இல்லையே.! சட்டைய பிடிச்சு சண்டை போடுவாளே'
" என் முகம் என் குரல் தான ப்ரீத். பவித்ரா தான் நான் சந்தேகமா இருக்கா?" என அவன் மடியில் தலை வைத்து படுத்து நிமிர்ந்து புன்னகைத்து அவனையே பார்க்க,அவனும் பார்க்க,கண்களால் வா.. என்று தலைவி தூது விட நாதத்திற்க்கு கட்டுபடும் நாகமாய் மயங்கி அவள் இதழ் நோக்கி நாயகன் முன்னேறிட தொட்டாசினுங்கி போல் நாணத்தில் இமை மூடி கிடந்தாள். ப்ரீத்தின் மொத்த காதலுக்கு உரித்தானவள் .
சந்தீப் "என்னடா நடக்குது இங்க? நடு ஹால்ல போய் சே.!" என்று குரல் வரவும் சட்டென பதறி அடித்து ப்ரீத் பவி விலகித் தள்ளிச்செல்ல.
" கண்ணுல தூசி.. டா" என்று தலையை சொரிந்து அசடு வழிந்தவனை அல்பமாய் ஒரு பார்வை பார்த்துவிட்டு
"தூ.. கேவளமா சமாளிக்காத டா.அவ கண் எங்க இருக்கு? நீ கவர் பண்ண ஏரியா எங்க இருக்கு"
" இல்லை அண்..ணா க.. கண்ணுல தூசி தா.."என்று பயத்தில் திக்கி திக்கி பேசினாள் பவி.
" வாய மூடு பவி. டேய் மச்சான் இவ உன்ன வேணாம் னு சொன்னா? நீ இவன காதலிக்கலை! யப்பா.. எங்கள பைய்த்தியகாரனா ஆக்குறீங்க
ரெண்டு பேறும், டேய்.. கேணை பயலே, இவ உன்ன லவ் பன்றா டா.! இருக்கு ஆனா இல்லை விளையாட்ட நிறுத்து பவி, இந்த பைய்த்யகாரி வாயால சொல்லுறத நம்பவே நம்பாத டா ப்ரீத். உன்ன சுத்தல்ல விட பொய் பேசுறா. அவ கண்ண பாரு! காதல் காவியமே எழுதலாம்.அவ்ளோ காதல் உன் மேல பொங்கி வழியுது" என்றதும் அவன் பவித்ராவை கேள்வியாய் பார்க்க, ப்ரீத் பார்ப்பது உணர்ந்து கோபமாக முறைத்தாள். "என் கண்ணுக்கு எதுவும் தெரியலையடா?" என்றான் அப்பாவியாக,
" பச்ச புள்ளை னு தான் டா ஏமாத்துறா, அவன ஏங்க வைச்சு தொங்கல்ல விடுறதுல என்னடி உனக்கு கிடைக்குது. இந்த மடசாம்பிராணி நீ சொல்றத எல்லாம் நம்புது. பவித்ராவே என்ன வேணாம்னு சொன்னா நான் கேடு கெட்டவன் போல அதான் பிடிக்கலைனு குத்த வைச்சு அழுவுறான் இந்த நாய்" என்று சலிப்போடு கூறிட,
அதை கேட்டவளால் சிரிப்பை அடக்க முடியாமல் வரும் புன்னகையை கட்டுப்படுத்த கீழ் உதட்டை கடித்து மறைத்தாள்.
" சிரிப்பா இருக்கு நீ வாயால சொல்லுறதுக்கும் மனசுல நெனைக்குறதுக்கும் வித்யாசம் இவனுக்கு புரியாது வெறுப்பேத்த நீ பிடிக்காது னு சொல்லுறத உண்மைனு நம்பிகிட்டு திரியுறான். மடமஸ்கு..இனிமே நீ ஏதாவது பேசி அவன் தூக்குல தொங்க போனா கூட நான் காப்பாத்த மாட்டேன். " என எச்சரித்து அவளை அனல் பார்வை பார்த்துவிட்டு ஆவேசமாக தனது அறையில் நுழைந்தான் அண்ணன்.
சந்தீப் கடைசியாக சொன்னது உயிர்வரை வதைக்க இவளும் அறை சென்று கதவை அடைத்து கொண்டாள்.
பார்ப்பதற்கு அப்பாவி போல் இருக்கும் வாலிபனோ ஓ.. நடு கூடத்தில் அனாதையாக தனித்து விடப்பட்டான்.
ஒரு மணி நேரம் கழித்து டிரவல்
பேக்வுடன் வெளியே வந்தவள்.. சந்தீப்பை முறைத்தாவாறு, சோஃபாவில் காலை அகட்டி மல்லாக்க படுத்து தூக்கும் ப்ரீத்தை பார்த்து கடுப்பாகி, கையில் இருந்த ஹாண்ட் பேக் ஐ அவன் மீது தூக்கி வீசிட , பதறி துடித்து விழுந்து எழுந்தான் நாயகன்.
" தெளிவா இருக்கியா.? " ம்" என்று ப்ரீத் கண்ணை கசக்கவும் " உன்ன பிடிக்கலைனு நான் சொன்னா? அது பொய்யா தான் இருக்கும், உன் முன்கோபம் எனக்கு பிடிக்காது உன்ன ரொம்ப பிடிக்கும் புரியுதா? இன்னும் விளக்கனுமா? கேட்குதா டா "
"கேட்டுச்சு.. கேட்டுச்சு " என்று முணு முணுத்தான் சந்தீப்.
"இனிமே நான் எதாவது சொன்னா இவன் தூக்குல தொங்குனா கூட எவனும் காப்பாத்த வேணாம், நான் கிளம்புறேன் ஏர்ஃபோர்ட் வர்றியா? இல்லையா.?" என காதலி அதட்டவும் டி-ஷர்ட் மட்டும் அணிந்திருப்பதால் ஓடி சென்று ஒரு சட்டை எடுத்து போட்டவாரே வந்தான் ப்ரீத்.
" நான் வர்றேன் " என்று முகத்தைக் கூட பார்க்காமல் சொல்லும் தங்கையை பார்த்து நகைத்தான் அவளின் மூத்தோன்.
நக்கலாக " பார்த்துப் போங்க பவித்ரா மேடம்" என்றான் சந்தீப்.
முறைத்தவளோ "எனக்கு தெரியும். நீ போடா " வெம்மையோடு வெளியே செல்ல.
"அண்ணன மதிக்கவே மாட்டாங்க, இந்த தங்கச்சிகளே இப்படி தான் "என்று விரக்தியில் தத்துவம் மொழிய.
ஆட்டோ அழைத்து வந்து லக்கேஜ் பின்னால் வைத்துவிட்டு ஏர்போர்ட்டிற்க்கு விரைந்தனர் ப்ரீத், பவி இருவரும்.
" போயே ஆகனுமா " அவன் கேட்பதை கண்டு கொள்ளாமல் பவி கைகளால் கழுத்தை துலாவினாள்.
" என்ன மா எதுவும் மறந்து வைச்சுட்டியா?"
" இல்லை. தாலி எதுவும் கட்டி இருக்கியானு பார்த்தேன். இங்கயே இருக்கனுமா? நான் மூடிட்டு வாடா " சந்தீப் மேல் உள்ள கோபம் சரமாரியாக ப்ரீத்திடம் பாய்ந்தது,அவளை அவன் திட்டியது எல்லாம் கணக்கிலே இல்லை. ஏனோ 'இவன் செத்தால் கூட எனக்கு கவலை இல்லை ' என்று சொன்னது விஷம் போல் கோபமாய் உச்சியில் ஏறியது.
' நேத்து நான் போறேன் உனக்கு பீலிங் இல்லடான்னு திட்டினா.? இன்னைக்கு போயே ஆகணுமா னு பசமா கேட்டா? யாருடா நீ ? தாலி கட்டின புருஷனா என்ன போக கூடாதுன்னு சொல்றதுக்கு னு கேக்குறா? இருக்க கொஞ்சம் மூளையும் உருகிரும் போல, ஒன்னும் சொல்றதுக்கு இல்ல' மனதில் புலம்பிக்கொண்டு அமர்ந்திருந்தான்.
.ப்ரீத் ஐ..ஐ!" திக்கி திக்கி.. ஏதோ சொல்ல வருபவளை நல்ல குறி சொல்வாளா? என ஏக்கம் மேலோங்கி மாமன் ஏறிட,
பவித்ரா -" ஐ ..மிஸ் யூ" என்றதும்.. ஏதேதோ எதிர்பார்த்து ஏமாற்றம் வந்தவனாய் விரக்கியில் தலை தானாய் தொங்கி போய் விட்டது.
" அப்ப நீ என்ன மிஸ் பன்னலை " என்று மீண்டும் சண்டையிட ஆரம்பிக்க.
" நான் அழுதுருவேன் பாத்துக்க, என்ன சொன்னாலும் திட்டுற போடி. முறுக்கிக்கொண்டான் மாமன்.
தன்னை சமன்படுத்திக் கொண்டு வராத புன்னகையை வரவைத்து "ஸாரி.. ப்ரீத்.. " ஏதோ போனா போகுது என்று ஒப்புக்கு சொல்லி வைக்க.
வாயில் வலுக்கட்டாயமாக விஷத்தை ஊற்ற போவது போல! வாய்க்கு பூட்டு போட்டுக் கொண்டான் ப்ரீத்.
"மாமா.. என்று பவித்ரா சினுங்கியதும்,
நாக்கை மடக்கி விரலால் எச்சரித்தான் ப்ரீத்.
அவளவனின் கோபம்தை ரசிக்க பிடித்தது கோடைக்கால மழை என அரிதாய் வந்து போகும் கோபம் புது கவிதை அல்லவா! வெட்கம் இல்லாமல் ஆணை அளந்தாள், கல்லமாய் ரசித்தாள், விழிகளில நிறைத்து உயிர் வரை சிலிர்த்தாள்! பெண்ணவள்.