உமா கார்த்திக்
Moderator
பவித்ராவிடம் குரல்வளை சவ்வு கிழியும் அளவு ஆவேசமாய் கத்திவிட்டு, தலையை பிடித்து அமர்ந்தவனை ஆத்திரத்துடன் பார்த்தான் சந்தீப்.
" அப்பா இல்லாத பொண்ணுடா அவளுக்கு பீஸ் கட்டுறத சொல்லி காட்டுற ,சீ.. சொல்லி காட்ட எதுக்குடா செய்யனும். நானே அவளுக்கு ஃபீஸ் கட்டுக்கிறேன். தப்பு பண்ணா புரிய வைக்கனும். பாசமா ஒருத்தி இருந்தா அது குத்தமாடா? பாவி அப்டி திட்டி நோகடிக்குற, அவ உன்ன பிடிக்கலை னு ஒதுக்குனது சரி தான் டா.., அதட்டி பேசுனா கூட அழுதுடு வா.. சின்ன பொண்ணுடா, இடி மாதிரி வார்த்தைய இறக்குற,எப்பவுமே பதிலுக்கு பதில் சண்டை போடுறவ நீ திட்டினதும் உடைஞ்சு போய்ட்டா டா.. நாயே. பெரிய கலெக்டர் படிப்பு ஃபெயில் ஆனா இப்ப என்ன டா? கடுப்பாகி ஒங்கி அவன் தலையில் தட்ட, பாருடா உனக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்பி இருக்கா" சோஃபாவில் கிடந்த போனை அவன் கையில் தினித்தான். "பேசி சமாதனம் பண்ணி என் தங்கச்சிய சிரிக்க வைக்குற, இல்லை அவ்வளவு தான். என்று விரல் காட்டி ப்ரீத்தை மிரட்டிட "
நலிந்த குரலில் "நானே நொந்து போய் உட்கார்ந்து இருக்கேன் போடா. என்னால அவளோட படிப்போ கெரியரோ வீணா போக கூடாது. அத்தைக்கு தெரிஞ்சா கொன்னு போட்டுடுவாங்க, பவித்ரா மாதிரி பெர்பெக்ட் யாரும் கிடையாது னு எல்லாத்துலயும் முதல் ல இருந்தவ, இப்ப எல்லா சப்ஜக்ட் டெஸ்ட்ல ஃபெயில். திட்டு வாங்குறா வெளியில நிக்க வைக்கிறாங்க. பனின்ஸ்மெண்ட் வாங்குறா தெரியுமா?என்கிட்ட நல்லா பேசுறா அது போதும்னு என்னால சுயநலமா இருக்க முடியாது. என் பவி எல்லாத்துலயும் பெஸ்ட்டா இருக்கனும்.என்ன விட சக்ஸஸ்ஃபுல் ஆ இருக்கனும் "
" இப்ப தான் எல்லாம் சரி ஆகி நல்லா பேசுறா.., அதை ஏன் டா வாய் வைச்சு நாசமாக்குற,
நீ பாடுறது தியாக ராகம் னு அவளுக்கு புரியாம மறுபடியும் பிடிக்கலை வெறுக்கிறேனு முருங்கை மரம் ஏறிடுவா,காதல் முக்கியமடா தோழா. படிப்புல ஜெயிக்க வைக்குறேன் னு வாழ்க்கையில தோக்க வைச்சிடாத ப்ரீத். அவ இழப்பை தாங்குற அளவு நீ ஸ்ராங் இல்லை மகனே. மரியாதையா கால்ல விழுந்து சமாதானப் பேச்சுவார்த்தை நடத்து " என்று சந்தீப் உறங்க சென்றான்.
போன் கையில் இருந்தும் கூட வாய்ஸ் நோட் ஐ கேட்க பயந்து போய் விட்டத்தை வெறித்தபடி அமர்ந்தான் ப்ரீத். இவனின் பலம் அவள் புன்னகை என்றால் பெரிய பலவீனம் பாவையின் விழி வெதுநீர். அவள் குரல் கொஞ்சமாக உடைந்தால் கூட பாகாய் கரைந்து உருகியவன். வலியில் கதறி துடிப்பாள் என்று தெரிந்தே சொல் எனும் அம்புகள் கொண்டு வதைத்தான் அந்த மெல்லியவளை.
பட்டாசு திரியை பற்ற வைக்க பயம் கொள்ளும் சிறுவனாய் முக்கோண வடிவ ப்ளே பட்டனை தொட பயந்து தினறினான். தயங்கியபடி தைரியத்தை திரட்டி இசைவு தந்தான். அதுவும் ஒலித்தது.!
குரல் செய்தியில் அவள் குரல் முதலில் வர, பின்பு வேறு ஒருவன் குரலும் வரவும், உரையாடலின் உள் பொருள் உணர்ந்து கொண்டதால் தாங்காத பாரம் ஏறி இதயம் வலிப்பது போல உணர்ந்தான். மாறி மாறி அழைப்பு விடுத்தான் அவள் எண்ணிற்க்கு.
ஸ்விட்ச ஆஃப் செய்து வைத்தவளோ நிம்மதியாய் உறங்கிட, இவனுக்கு இதயம் எகிறி இரத்தத்தில் அழுத்தம் கூடி.. சுடுநீரில் அமிழ்ந்திய சிறு பறவை போல எரிச்சல் ஏகத்துக்கும் தேகம் பரவியது.எப்பொழுது வேண்டுமானாலும் வெடிக்கும் எரிமலை ஒத்த நிலையில் இருந்தான்.
பாவம் ஸ்விட்ச் ஆஃப் என வரும் கணினி வாய்ஸோடும் சண்டை போட ஆரம்பித்து விட்டான். ம்.. * யிறு ஆஃப் ஃபோன் எடு டி .., கோபத்தில் தானாக கண்கலங்கி விட "பவித்..ரா ஆ.!" என குரல்வளை அதிர கர்ஜனை போல் கத்தியதும்.
சர்வம் சிவமயம் என அறையில் உறங்கியவனும் அரண்டு போய் எழுந்தான்."அய்யோ.. வென பயத்தில் கீழே விழுந்தான். " டேய் இவனை நிறுத்துங்கடா..., பிளாட்டில போய் கத்துறானே.!
அக்கம் பக்கத்தில கம்ப்ளைன்ட் பண்ணிருவாங்கலே? அசோசியேஷன் மீட்டிங் போட்டு நாளைக்கு மொய் எழுத வைச்சிடுவான் போலயே..டேய் காட்டுக்கு குரங்கு கத்தாத டா.."என்று இவனும் கத்தி கூப்பாடு போட.
" என்னப்பா அங்க சத்தம்?" என்று செகரட்டரி மிஸ்ரா அங்கிள் வரி புத்தகத்தோடு வர " ஒன்னும் இல்லை கால்ல கடப்பரை விழுந்துருச்சு அதான் கத்திட்டோம் அங்கிள்." 'செத்து பிணமாக இருந்தால் கூட வசூல் பண்ணாம போக மாட்டான் பிச்சைக்கார பய..'
" இங்க கட்டின ஐநூறு, மீட்டிங் வச்சா ஆயிரம் எப்படி வசதி" என்று பேரம் பேசிட, சந்தீப் இருநூறு ரூபாய் தருவதாக சலுகை கேட்கவும்.
"முடியாது" என்று மறுப்பாய் தலை ஆட்ட, ஆடிய தலையை அப்படியே கையால் பிடித்து நிறுத்தினான் சந்தீப் "சுழிக்கிக்க போகுது. ஒவரா ஆட்டாம நியாயமா பேசுங்க அங்கிள்.. ரெண்டு தடவை தான் கத்தி இருக்கோம் ஒரு கத்துக்கு நூறுபா னு வெச்சா கூட 200 ரூபாய் வாங்கறது தான் நியாயம். அப்படி இல்லன்னா கேஸ் போடுங்க நான் கோட்டுல பாத்துக்குறேன் " என்று முறுக்கியதும் வந்தவரை லாபம் என மிஸ்ரா அங்கிள் பணம் கேட்டு கை காட்ட,
" ஜி பே..
பண்ணுறேன். ரிசிப்ட் தந்துட்டு போங்க" அவரை அனுப்பிவிட்டு 'திருட்டு பய 'என்று முணகிக்கொண்டே உள்ளே வந்தான்.
" நோட்ஸ் எடுக்க அவன் கூப்பிடல டி போகாத டி.." ப்ரீத் இங்கே இருந்தே .. கத்தி அவளுக்கு காற்றில் சேதி அனுப்பிட, மறுபடியும் கத்தும் சத்தம் கேட்டதும் !
"ஐயோ. மீட்டிங் போட வச்சுருவான் போலயே " பதறி அடித்து கொண்டே ஒடி வந்தவன் அவன் வாயை மூடினான்."டேய் இப்ப தான் டா பைன் கட்டிட்டு வந்துருக்கேன். வாடகை வீடுடா தொட்டதுக்கு எல்லாம் வரி வசூலிப்பாங்க டா.. மாப்ள பீளிஸ் டா ராச கத்தாத.
" போன் எடுக்க மாட்டிங்கிறா டா.."
" டேய் ராசா
தென்றல் விடு தூது ஆ.! இங்க இருந்து கத்துனா அவளுக்கு கேட்காது டா? தூங்கி இருப்பாடா
" ஊருக்கு போகனும் டிக்கெட போடு "
" நீ பண்றது ரொம்ப ஓவர் டா.. போன் எடுக்கல சுவிட்ச் ஆஃப், அதுக்கெல்லாம் ஊருக்கு போவியா டா? அவ சோகமா இருந்தா,பேசாம சாப்பிடாம இருந்தா, இப்படி போயிட்டு போயிட்டு வரதுக்கு ப்ரீ...த் ... மூட்டை சென்னையில இருந்து இருக்கலாம் " என்றான் கடுப்பாக அவனை முறைத்து.
"நான் ஊருக்கு போயிட்டு வந்துடறேன். பொறுமையா உட்கார வைச்சு திட்டி அசிங்கப்படுத்தலாம். டிக்கெட் போட்டுதா டா " என பரிதவிப்போடு கேட்க." டிக்கெட் போட காசு குடு டா " என்றதும் முகம் சுருங்கி நிற்பவனை பார்த்து கிண்டலாக சிரித்தான் சந்தீப்." இன்னும் வேலை பார்த்து முழுசா ஒரு மாசம் சம்பளம் வாங்கல, புது பொண்டாட்டியை விட்டு வந்த மாதிரி பொசுக்கு பொசுக்குன்னு ஊருக்கு போற?"
பொண்டாட்டி என்று பவித்ராவை சொன்னதும் வெட்கம் விளைந்து தலைவன் தலைகுனிய..
" அட ச்சே..
ரியாக்ஷன் அ மாத்து பாக்க முடியல, ரெண்டு மாசம் உனக்கு சம்பளமே கிடையாது. போயிட்டு அவகிட்ட என்ன பேச வை போன் எப்போதுமே ஆன்ல வை தாயே! ஒன்பது ஆயிரத்து ஐந்நூறு ரூபாய் செலவு பண்ண முடியலன்னு அதட்டி வைக்கணும் "
"அண்ணன் சொன்னதும் அப்படியே பயந்துருவா .? உன் தொங்கச்சி போடா"
" சரி எதுக்குடா ஊருக்கு போற? வாய்ஸ் நோட் ஆன் செய்து விட, மிளகாய் மிக்ஸியில் அரைத்து மேலிருந்து உடல் முழுதும் பூசி விட்டது போல் எரிச்சல் பரவியது. அண்ணன் அல்லவா..,
தாங்க முடியாமல் கோபம் போகும் வரை கெட்ட வார்த்தையில் அர்ச்சித்து விட்டான் அந்த ஆனந்தை.. சீக்கிரமா நீ கிளம்பி போடா ப்ரீத் நம்ம பாப்பா பயந்துருப்பா "
" ஐயோ குழந்தை பயந்துருப்பா.., காலைல நான் திட்டினதுக்கு போனை சுவிட்ச் ஆஃப் பண்ணிட்டு என்ன கதற விட்டுட்டு இருக்கா"
" கிளம்பு டா ப்ரீத். அம்மாவும் தனியா தான் இருக்காங்க, ஏதாவது பிரச்சனை ஆச்சுன்னா சமாளிக்க முடியாது சீக்கிரம் கிளம்பு "
என்றதும் வேகமாய் சென்று உடை மாத்தியவனுக்கு
விமான நிலையத்திற்கு செல்லும் அளவு கூட நிதானம் இல்லை. சோர்வும் களைப்பும் உடலை பிய்த்து எடுக்க அயர்ச்சியாக சோர்ந்து போய் அமர்ந்து விட்டான். சில நாட்களாக சரியான உறக்கம் இல்லாததால், இமையோ தானாக முடியது. தண்ணீர் பாட்டில் வாங்கி கைகளால் தண்ணீரை முகத்தில் விசிறி அடித்தான். நீர் பட்டதும் கண்களில் எரிச்சல் பரவி, விழி வெண்படலம் மிளகாய் பழம் போல் சிவந்து விட்டது. விமானத்தில் ஏறி அமர்ந்த பிறகு பொட்டு தூக்கம் வரவில்லை, அவளை பார்த்தால் மட்டுமே நிம்மதி பரவும் இவன் நெஞ்சுக்குள்ளே!!
கூட்டை பிரிந்த பறவை போல இனம் புரியாத பரிதவிப்பு. சோதனையாக விமான பழுது காரணமாக இரண்டு மணி நேரம் தாமதமாகவே இருப்பு கொள்ள முடியாது தவித்தான்.
இடையில் எழுந்தவளோ ? ஒரு நொடி ஃபோனை ஆன் செய்து நூறு மிஸ்ட் கால் வந்ததை பார்த்து புன்னகை வர, நிச்சயமாக வருவான் என்று நம்பியவள். மீண்டும் சுவிட்ச் ஆஃப் செய்து அவனை காண போகும் நிம்மதியில் உறங்கியே போனாள்.!
வருகிறான் என்பது சர்வ நிச்சயமே, சரியான நேரத்துக்கு வருவானா??
விடியலை பாராதவள். விடியும் முன் எழுந்து குளித்து தலை காய வைக்க வெளியே வரவும் சூரிய பகவானே ஆடிப்போய் விட்டார் போல!!விருந்தாளி போல புதிதாய் இன்று தன்னை காண வந்தவளை, மேகம் எனும் கதவிடுக்கில் மறைந்து வெம்மை கதிரை விடுத்து மென் கதிரால் மெல்ல வருடிவிட, அவள் தங்க முகம் ஆதவனின் கதிர் வீச்சில் சிவந்தது!!
துண்டில் தலையை உதறியபடி வீட்டுக்குள் வந்தவளை. பார்த்த சுமதியோ உலக அதிசயமாக மலைத்துப் போய் மகளையே பார்க்க!
எதிரில் நிற்கும் தாயின் உருவம் கூடதெரியாதவளாய் வேறு உலகத்தில் சஞ்சரித்து இருந்தால் பவித்ரா.
உற்சாகத்தோடு ஒவ்வொரு அழகு சாதன பொருட்களை தேடி தேடி எடுத்து உபயோகித்தாள்.
அவன் போன பிறகு கல்லூரிக்கு அலங்கரித்து கிளம்பியதே கிடையாது. அரைகுறை தூக்கத்தோடு அறக்க பறக்க குளித்து, தலைக்கூட சீவாமல் கேட்ச் கிளிப்பில் இருபுறமும் முடியை கையால் அள்ளி கிளிப்பில் அடக்கி லூஸ் ஹேரில் கல்லூரி செல்வாள். ஆனால் மாலை வீட்டுக்கு வந்த உடனே மறுபடியும் குளித்து தலை பின்னல் இட்டு பூ வைத்து சந்தனத்தை கீற்றாக நெற்றியில் வைத்து வெண்கல சிலை போல வீற்றிருப்பாள்.
இதை கவனித்த வீட்டில் வேலை செய்யும் முல்லை அக்காவோ ! தினமும் நடப்பது என்ன? என புரியாமல் சந்தேகத்தை கேட்டே விட்டாள்.
" ஏன் பாப்பா எல்லாரும் காலேஜ் போகும்போது அழகா கிளம்பி போவாங்க, நீ என்ன வீட்டுக்கு வந்து பூ வச்சு கிளம்பி இருக்க? " என்றதும் சிரித்தே மலுப்பியவள்.
" வெளியில போறப்ப பூ வச்ச வாடிடுமே .., வீட்டுக்குள்ள பூ வச்ச வாடாது அதான்!" என்று மட்டமான பதிலை கூறி அறைகுள்ளே ஓடிவிட,ஏன்டா கேட்டோம் என்று தலையில் அடித்துக் கொண்டு செல்வார்கள் முல்லை அக்கா.
யாரை சொல்வது எல்லாம் வீடியோ கால் செய்யும் மாயம் !!ஒரு மாதத்திலே ஹெட்போனை அணிந்து கொண்டு சப்தமே கேட்காமல் பேசும் வித்தை எல்லாம் அறிந்து கொண்டாள்.
ஐந்து மணி ஆகிவிட்டால் பவித்ராவை கையில் பிடிக்கவே முடியாது.ஏதாவது கைக்கு கிடைத்த புத்தகத்தை எடுத்து மாடிக்கு ஓடிவிடுவாள்.
சுமதியோ .. முல்லை இடம் சொல்லி மெச்சி கொள்வார் தவப்புதல்வியின் படிப்பு ஆர்வத்தை இவர்கள் மெச்சுதலுக்குரியவளோ .., எதன் மீது ஆர்வமா இருக்கிறாள் என்பது நாம் அறிந்ததே.!
மாமாவே நீ வேணும் செவன் ஜென்மம் தான் என விடிய விடிய வீடியோ கால் பேசுவதெல்லாம் இரவு விளக்கின் வெளிச்சத்திற்கும், தனிமை காதலியான நிலவுக்கு மட்டுமே தெரியும்.! அத்திப்பூத்தது போல் யார் கண்ணில் ஆவது இவர்கள் பேசுவது பட்டு விட்டால்
"இங்க பாருமா இவன் படிக்க விடாம போன் பண்ணி சாகடிக்கிறான் " என்று பழியை அவன் மீது திருப்பி போட்டு விடுவாள் கேடி.! காதல் வந்தால் கள்ளமும் வருமோ.?
வாட்ரோப் ல் உள்ள புது உடைகளுக்கு விடுதலை தந்து மெத்தையில் படுக்க வைத்து இருந்தாள்.. புடவையை பார்த்து ஆசை வர கையில் எடுத்தவள்.'அவனுக்கு ஈஸி ஆ இருக்கணும்னு சேலை கட்டுறியா டி 'என்று அசரீரியாக அவன் குரல் மனதில் வரவும்"அய்ய..ய்யோ திட்டுவான் வேணாம்." என்று புடவையை விடுத்து அவனுக்கு பிடித்தமான சுடிதார் அணிந்து நேர்த்தியாக புருவம் தீட்டி ..
மாம்பிஞ்சு கண்களில் மையிட்டு மஸ்காரா ஐ லயின்னர் கோட்டிங் மூலம் விழியை செதுக்கி, வெளிர் பிங்க் நிற இதழ்சாயம் பூசி.. கோல்டன் மணி பதித்த சிவப்பு பொட்டுக்கு மேலே கீற்றாக குங்குமம் தீட்டி "ப " வடிவத்தில் பின்னலில் பூவை வைத்து பின் குத்தியபடி தேவ கன்னிகை போல வெளியே பவனி வரவும்!!
சுமிதியே..,ஒரு நொடி இமைக்க மறந்து நிற்க.! கண் பட போகிறது என பார்வையை வேறு பக்கம் திருப்பி கொண்டார்." என்னடி காலையிலயே கரகாட்டக்காரி மாதிரி எங்க கிளம்பி போற? தினமும் லேட்டா எழுந்து தலை ஒரு கோலம், துணி ஒரு வேஷமா இல்ல போவ, இன்னைக்கு என்ன பின்னி பூவெல்லாம் வச்சிருக்க?" சந்தேகமாய் கீழிருந்து மேலே ஆராயும் பார்வை இட,
" பொண்ணுனா தலை பின்னி பூ வைக்கனும் னு நீ தான சொல்லுவ, தாய் சொல்ல கேட்கலாம்னு தான்..., என்று ராகம் இழுத்திட,
" நானே தலைப்பின்னி பூ வெச்சி விடுகிறேன் னு சொன்னாலுமே வேணாம்னு ஒடுறவ, ஏழரைக்கு எவன் டி காலேஜ் வைக்குறான்?"
"கோவிலுக்கு போறேன்மா.."என்றால் தலை நிமிராமல் .
" புதன் கிழமை ஏன் கோயிலுக்கு போற?" என்று சுமதி அதட்டி கேட்டதும்" அதுவா சீக்கிரமே உனக்கு பேரனோ .. பேத்தியோ.. பெத்து தரனும்னு வேண்டிக்க போறேன் " என்று அவள் பேக்..ஐ எடுத்துக் கொண்டு பட்டாம்பூச்சி போல அவள் பறந்து விட, மகள் தந்த பதிலால் தலையில் அடித்துக் கொண்டார் சுமதி.
" திமிரு கூடி போச்சு வரட்டும் சூடு வைக்கிறேன்." பொரிந்தார் தாய்.
ஆனந்த் அனுப்பிய லொகேஷனுக்கு வந்தவள் சுற்றிலும் பார்வையை சுழல விட்டாள். அவள் தேடியவன் தென்படவில்லை என்பது புரியவும் மனதில் கிலி பரவிட, வண்டியில் அமர்ந்தபடியே ..பதட்டத்தில் நகத்தை கடித்தபடி நின்றாள் பவித்ரா.
" யாரமா பாக்கனும்?" அருகே கடை வைத்திருப்பவர் கேட்க." ஆனந்த் சார்.. அ பார்க்கனும் "
" மாடியில மூனாவது போஷன் அவரோடது. போய் பாரு மா " என்றதும்
மனதே இல்லாமல் ஸ்கூட்டி ஐ விட்டு இறங்கி திரும்பி திரும்பி பார்த்தபடியே.! படி ஏறி ஆனந்த் சாரின் வீட்டு வாசல் முன் நின்றாள் பவி. கண்களில் கண்ணீர் மட்டம் உயர்ந்தது எழாத கையை கடினப்பட்டு உயர்த்தி கதவை அடிக்க ஒங்கிய நொடியே !!
வலிக்கும் படி அவள் மணிக்கட்டை அழுத்திப் பிடித்து ஆவேசமாக இழுந்தான் அவன்!!
எவன்? அவள் தேடியவன் தான் !!
குங்குமத்தில் குழைத்து செய்த சிலை போல அழகோடி நிற்பவளை பார்த்ததும் வெறி வந்தது " எதுக்குடி இங்க வந்த? புது டிரஸ்..சு.. பூ.. அதுவும் நாலு முழம் " தீயென வார்த்தைகள் வந்தது அவனிடம் இருந்து.
" இதெல்லாம் வைச்சு அவன ம .. ய.. என்று முடிக்கும் முன்னே அவன் இதழைகளை இறுக அழுத்தி மூடிவிட்டாள் பவித்ரா.

ஏக்கம் தொடரும்
உமா கார்த்திக்
" அப்பா இல்லாத பொண்ணுடா அவளுக்கு பீஸ் கட்டுறத சொல்லி காட்டுற ,சீ.. சொல்லி காட்ட எதுக்குடா செய்யனும். நானே அவளுக்கு ஃபீஸ் கட்டுக்கிறேன். தப்பு பண்ணா புரிய வைக்கனும். பாசமா ஒருத்தி இருந்தா அது குத்தமாடா? பாவி அப்டி திட்டி நோகடிக்குற, அவ உன்ன பிடிக்கலை னு ஒதுக்குனது சரி தான் டா.., அதட்டி பேசுனா கூட அழுதுடு வா.. சின்ன பொண்ணுடா, இடி மாதிரி வார்த்தைய இறக்குற,எப்பவுமே பதிலுக்கு பதில் சண்டை போடுறவ நீ திட்டினதும் உடைஞ்சு போய்ட்டா டா.. நாயே. பெரிய கலெக்டர் படிப்பு ஃபெயில் ஆனா இப்ப என்ன டா? கடுப்பாகி ஒங்கி அவன் தலையில் தட்ட, பாருடா உனக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்பி இருக்கா" சோஃபாவில் கிடந்த போனை அவன் கையில் தினித்தான். "பேசி சமாதனம் பண்ணி என் தங்கச்சிய சிரிக்க வைக்குற, இல்லை அவ்வளவு தான். என்று விரல் காட்டி ப்ரீத்தை மிரட்டிட "
நலிந்த குரலில் "நானே நொந்து போய் உட்கார்ந்து இருக்கேன் போடா. என்னால அவளோட படிப்போ கெரியரோ வீணா போக கூடாது. அத்தைக்கு தெரிஞ்சா கொன்னு போட்டுடுவாங்க, பவித்ரா மாதிரி பெர்பெக்ட் யாரும் கிடையாது னு எல்லாத்துலயும் முதல் ல இருந்தவ, இப்ப எல்லா சப்ஜக்ட் டெஸ்ட்ல ஃபெயில். திட்டு வாங்குறா வெளியில நிக்க வைக்கிறாங்க. பனின்ஸ்மெண்ட் வாங்குறா தெரியுமா?என்கிட்ட நல்லா பேசுறா அது போதும்னு என்னால சுயநலமா இருக்க முடியாது. என் பவி எல்லாத்துலயும் பெஸ்ட்டா இருக்கனும்.என்ன விட சக்ஸஸ்ஃபுல் ஆ இருக்கனும் "
" இப்ப தான் எல்லாம் சரி ஆகி நல்லா பேசுறா.., அதை ஏன் டா வாய் வைச்சு நாசமாக்குற,
நீ பாடுறது தியாக ராகம் னு அவளுக்கு புரியாம மறுபடியும் பிடிக்கலை வெறுக்கிறேனு முருங்கை மரம் ஏறிடுவா,காதல் முக்கியமடா தோழா. படிப்புல ஜெயிக்க வைக்குறேன் னு வாழ்க்கையில தோக்க வைச்சிடாத ப்ரீத். அவ இழப்பை தாங்குற அளவு நீ ஸ்ராங் இல்லை மகனே. மரியாதையா கால்ல விழுந்து சமாதானப் பேச்சுவார்த்தை நடத்து " என்று சந்தீப் உறங்க சென்றான்.
போன் கையில் இருந்தும் கூட வாய்ஸ் நோட் ஐ கேட்க பயந்து போய் விட்டத்தை வெறித்தபடி அமர்ந்தான் ப்ரீத். இவனின் பலம் அவள் புன்னகை என்றால் பெரிய பலவீனம் பாவையின் விழி வெதுநீர். அவள் குரல் கொஞ்சமாக உடைந்தால் கூட பாகாய் கரைந்து உருகியவன். வலியில் கதறி துடிப்பாள் என்று தெரிந்தே சொல் எனும் அம்புகள் கொண்டு வதைத்தான் அந்த மெல்லியவளை.
பட்டாசு திரியை பற்ற வைக்க பயம் கொள்ளும் சிறுவனாய் முக்கோண வடிவ ப்ளே பட்டனை தொட பயந்து தினறினான். தயங்கியபடி தைரியத்தை திரட்டி இசைவு தந்தான். அதுவும் ஒலித்தது.!
குரல் செய்தியில் அவள் குரல் முதலில் வர, பின்பு வேறு ஒருவன் குரலும் வரவும், உரையாடலின் உள் பொருள் உணர்ந்து கொண்டதால் தாங்காத பாரம் ஏறி இதயம் வலிப்பது போல உணர்ந்தான். மாறி மாறி அழைப்பு விடுத்தான் அவள் எண்ணிற்க்கு.
ஸ்விட்ச ஆஃப் செய்து வைத்தவளோ நிம்மதியாய் உறங்கிட, இவனுக்கு இதயம் எகிறி இரத்தத்தில் அழுத்தம் கூடி.. சுடுநீரில் அமிழ்ந்திய சிறு பறவை போல எரிச்சல் ஏகத்துக்கும் தேகம் பரவியது.எப்பொழுது வேண்டுமானாலும் வெடிக்கும் எரிமலை ஒத்த நிலையில் இருந்தான்.
பாவம் ஸ்விட்ச் ஆஃப் என வரும் கணினி வாய்ஸோடும் சண்டை போட ஆரம்பித்து விட்டான். ம்.. * யிறு ஆஃப் ஃபோன் எடு டி .., கோபத்தில் தானாக கண்கலங்கி விட "பவித்..ரா ஆ.!" என குரல்வளை அதிர கர்ஜனை போல் கத்தியதும்.
சர்வம் சிவமயம் என அறையில் உறங்கியவனும் அரண்டு போய் எழுந்தான்."அய்யோ.. வென பயத்தில் கீழே விழுந்தான். " டேய் இவனை நிறுத்துங்கடா..., பிளாட்டில போய் கத்துறானே.!
அக்கம் பக்கத்தில கம்ப்ளைன்ட் பண்ணிருவாங்கலே? அசோசியேஷன் மீட்டிங் போட்டு நாளைக்கு மொய் எழுத வைச்சிடுவான் போலயே..டேய் காட்டுக்கு குரங்கு கத்தாத டா.."என்று இவனும் கத்தி கூப்பாடு போட.
" என்னப்பா அங்க சத்தம்?" என்று செகரட்டரி மிஸ்ரா அங்கிள் வரி புத்தகத்தோடு வர " ஒன்னும் இல்லை கால்ல கடப்பரை விழுந்துருச்சு அதான் கத்திட்டோம் அங்கிள்." 'செத்து பிணமாக இருந்தால் கூட வசூல் பண்ணாம போக மாட்டான் பிச்சைக்கார பய..'
" இங்க கட்டின ஐநூறு, மீட்டிங் வச்சா ஆயிரம் எப்படி வசதி" என்று பேரம் பேசிட, சந்தீப் இருநூறு ரூபாய் தருவதாக சலுகை கேட்கவும்.
"முடியாது" என்று மறுப்பாய் தலை ஆட்ட, ஆடிய தலையை அப்படியே கையால் பிடித்து நிறுத்தினான் சந்தீப் "சுழிக்கிக்க போகுது. ஒவரா ஆட்டாம நியாயமா பேசுங்க அங்கிள்.. ரெண்டு தடவை தான் கத்தி இருக்கோம் ஒரு கத்துக்கு நூறுபா னு வெச்சா கூட 200 ரூபாய் வாங்கறது தான் நியாயம். அப்படி இல்லன்னா கேஸ் போடுங்க நான் கோட்டுல பாத்துக்குறேன் " என்று முறுக்கியதும் வந்தவரை லாபம் என மிஸ்ரா அங்கிள் பணம் கேட்டு கை காட்ட,
" ஜி பே..
பண்ணுறேன். ரிசிப்ட் தந்துட்டு போங்க" அவரை அனுப்பிவிட்டு 'திருட்டு பய 'என்று முணகிக்கொண்டே உள்ளே வந்தான்.
" நோட்ஸ் எடுக்க அவன் கூப்பிடல டி போகாத டி.." ப்ரீத் இங்கே இருந்தே .. கத்தி அவளுக்கு காற்றில் சேதி அனுப்பிட, மறுபடியும் கத்தும் சத்தம் கேட்டதும் !
"ஐயோ. மீட்டிங் போட வச்சுருவான் போலயே " பதறி அடித்து கொண்டே ஒடி வந்தவன் அவன் வாயை மூடினான்."டேய் இப்ப தான் டா பைன் கட்டிட்டு வந்துருக்கேன். வாடகை வீடுடா தொட்டதுக்கு எல்லாம் வரி வசூலிப்பாங்க டா.. மாப்ள பீளிஸ் டா ராச கத்தாத.
" போன் எடுக்க மாட்டிங்கிறா டா.."
" டேய் ராசா
தென்றல் விடு தூது ஆ.! இங்க இருந்து கத்துனா அவளுக்கு கேட்காது டா? தூங்கி இருப்பாடா
" ஊருக்கு போகனும் டிக்கெட போடு "
" நீ பண்றது ரொம்ப ஓவர் டா.. போன் எடுக்கல சுவிட்ச் ஆஃப், அதுக்கெல்லாம் ஊருக்கு போவியா டா? அவ சோகமா இருந்தா,பேசாம சாப்பிடாம இருந்தா, இப்படி போயிட்டு போயிட்டு வரதுக்கு ப்ரீ...த் ... மூட்டை சென்னையில இருந்து இருக்கலாம் " என்றான் கடுப்பாக அவனை முறைத்து.
"நான் ஊருக்கு போயிட்டு வந்துடறேன். பொறுமையா உட்கார வைச்சு திட்டி அசிங்கப்படுத்தலாம். டிக்கெட் போட்டுதா டா " என பரிதவிப்போடு கேட்க." டிக்கெட் போட காசு குடு டா " என்றதும் முகம் சுருங்கி நிற்பவனை பார்த்து கிண்டலாக சிரித்தான் சந்தீப்." இன்னும் வேலை பார்த்து முழுசா ஒரு மாசம் சம்பளம் வாங்கல, புது பொண்டாட்டியை விட்டு வந்த மாதிரி பொசுக்கு பொசுக்குன்னு ஊருக்கு போற?"
பொண்டாட்டி என்று பவித்ராவை சொன்னதும் வெட்கம் விளைந்து தலைவன் தலைகுனிய..
" அட ச்சே..
ரியாக்ஷன் அ மாத்து பாக்க முடியல, ரெண்டு மாசம் உனக்கு சம்பளமே கிடையாது. போயிட்டு அவகிட்ட என்ன பேச வை போன் எப்போதுமே ஆன்ல வை தாயே! ஒன்பது ஆயிரத்து ஐந்நூறு ரூபாய் செலவு பண்ண முடியலன்னு அதட்டி வைக்கணும் "
"அண்ணன் சொன்னதும் அப்படியே பயந்துருவா .? உன் தொங்கச்சி போடா"
" சரி எதுக்குடா ஊருக்கு போற? வாய்ஸ் நோட் ஆன் செய்து விட, மிளகாய் மிக்ஸியில் அரைத்து மேலிருந்து உடல் முழுதும் பூசி விட்டது போல் எரிச்சல் பரவியது. அண்ணன் அல்லவா..,
தாங்க முடியாமல் கோபம் போகும் வரை கெட்ட வார்த்தையில் அர்ச்சித்து விட்டான் அந்த ஆனந்தை.. சீக்கிரமா நீ கிளம்பி போடா ப்ரீத் நம்ம பாப்பா பயந்துருப்பா "
" ஐயோ குழந்தை பயந்துருப்பா.., காலைல நான் திட்டினதுக்கு போனை சுவிட்ச் ஆஃப் பண்ணிட்டு என்ன கதற விட்டுட்டு இருக்கா"
" கிளம்பு டா ப்ரீத். அம்மாவும் தனியா தான் இருக்காங்க, ஏதாவது பிரச்சனை ஆச்சுன்னா சமாளிக்க முடியாது சீக்கிரம் கிளம்பு "
என்றதும் வேகமாய் சென்று உடை மாத்தியவனுக்கு
விமான நிலையத்திற்கு செல்லும் அளவு கூட நிதானம் இல்லை. சோர்வும் களைப்பும் உடலை பிய்த்து எடுக்க அயர்ச்சியாக சோர்ந்து போய் அமர்ந்து விட்டான். சில நாட்களாக சரியான உறக்கம் இல்லாததால், இமையோ தானாக முடியது. தண்ணீர் பாட்டில் வாங்கி கைகளால் தண்ணீரை முகத்தில் விசிறி அடித்தான். நீர் பட்டதும் கண்களில் எரிச்சல் பரவி, விழி வெண்படலம் மிளகாய் பழம் போல் சிவந்து விட்டது. விமானத்தில் ஏறி அமர்ந்த பிறகு பொட்டு தூக்கம் வரவில்லை, அவளை பார்த்தால் மட்டுமே நிம்மதி பரவும் இவன் நெஞ்சுக்குள்ளே!!
கூட்டை பிரிந்த பறவை போல இனம் புரியாத பரிதவிப்பு. சோதனையாக விமான பழுது காரணமாக இரண்டு மணி நேரம் தாமதமாகவே இருப்பு கொள்ள முடியாது தவித்தான்.
இடையில் எழுந்தவளோ ? ஒரு நொடி ஃபோனை ஆன் செய்து நூறு மிஸ்ட் கால் வந்ததை பார்த்து புன்னகை வர, நிச்சயமாக வருவான் என்று நம்பியவள். மீண்டும் சுவிட்ச் ஆஃப் செய்து அவனை காண போகும் நிம்மதியில் உறங்கியே போனாள்.!
வருகிறான் என்பது சர்வ நிச்சயமே, சரியான நேரத்துக்கு வருவானா??
விடியலை பாராதவள். விடியும் முன் எழுந்து குளித்து தலை காய வைக்க வெளியே வரவும் சூரிய பகவானே ஆடிப்போய் விட்டார் போல!!விருந்தாளி போல புதிதாய் இன்று தன்னை காண வந்தவளை, மேகம் எனும் கதவிடுக்கில் மறைந்து வெம்மை கதிரை விடுத்து மென் கதிரால் மெல்ல வருடிவிட, அவள் தங்க முகம் ஆதவனின் கதிர் வீச்சில் சிவந்தது!!
துண்டில் தலையை உதறியபடி வீட்டுக்குள் வந்தவளை. பார்த்த சுமதியோ உலக அதிசயமாக மலைத்துப் போய் மகளையே பார்க்க!
எதிரில் நிற்கும் தாயின் உருவம் கூடதெரியாதவளாய் வேறு உலகத்தில் சஞ்சரித்து இருந்தால் பவித்ரா.
உற்சாகத்தோடு ஒவ்வொரு அழகு சாதன பொருட்களை தேடி தேடி எடுத்து உபயோகித்தாள்.
அவன் போன பிறகு கல்லூரிக்கு அலங்கரித்து கிளம்பியதே கிடையாது. அரைகுறை தூக்கத்தோடு அறக்க பறக்க குளித்து, தலைக்கூட சீவாமல் கேட்ச் கிளிப்பில் இருபுறமும் முடியை கையால் அள்ளி கிளிப்பில் அடக்கி லூஸ் ஹேரில் கல்லூரி செல்வாள். ஆனால் மாலை வீட்டுக்கு வந்த உடனே மறுபடியும் குளித்து தலை பின்னல் இட்டு பூ வைத்து சந்தனத்தை கீற்றாக நெற்றியில் வைத்து வெண்கல சிலை போல வீற்றிருப்பாள்.
இதை கவனித்த வீட்டில் வேலை செய்யும் முல்லை அக்காவோ ! தினமும் நடப்பது என்ன? என புரியாமல் சந்தேகத்தை கேட்டே விட்டாள்.
" ஏன் பாப்பா எல்லாரும் காலேஜ் போகும்போது அழகா கிளம்பி போவாங்க, நீ என்ன வீட்டுக்கு வந்து பூ வச்சு கிளம்பி இருக்க? " என்றதும் சிரித்தே மலுப்பியவள்.
" வெளியில போறப்ப பூ வச்ச வாடிடுமே .., வீட்டுக்குள்ள பூ வச்ச வாடாது அதான்!" என்று மட்டமான பதிலை கூறி அறைகுள்ளே ஓடிவிட,ஏன்டா கேட்டோம் என்று தலையில் அடித்துக் கொண்டு செல்வார்கள் முல்லை அக்கா.
யாரை சொல்வது எல்லாம் வீடியோ கால் செய்யும் மாயம் !!ஒரு மாதத்திலே ஹெட்போனை அணிந்து கொண்டு சப்தமே கேட்காமல் பேசும் வித்தை எல்லாம் அறிந்து கொண்டாள்.
ஐந்து மணி ஆகிவிட்டால் பவித்ராவை கையில் பிடிக்கவே முடியாது.ஏதாவது கைக்கு கிடைத்த புத்தகத்தை எடுத்து மாடிக்கு ஓடிவிடுவாள்.
சுமதியோ .. முல்லை இடம் சொல்லி மெச்சி கொள்வார் தவப்புதல்வியின் படிப்பு ஆர்வத்தை இவர்கள் மெச்சுதலுக்குரியவளோ .., எதன் மீது ஆர்வமா இருக்கிறாள் என்பது நாம் அறிந்ததே.!
மாமாவே நீ வேணும் செவன் ஜென்மம் தான் என விடிய விடிய வீடியோ கால் பேசுவதெல்லாம் இரவு விளக்கின் வெளிச்சத்திற்கும், தனிமை காதலியான நிலவுக்கு மட்டுமே தெரியும்.! அத்திப்பூத்தது போல் யார் கண்ணில் ஆவது இவர்கள் பேசுவது பட்டு விட்டால்
"இங்க பாருமா இவன் படிக்க விடாம போன் பண்ணி சாகடிக்கிறான் " என்று பழியை அவன் மீது திருப்பி போட்டு விடுவாள் கேடி.! காதல் வந்தால் கள்ளமும் வருமோ.?
வாட்ரோப் ல் உள்ள புது உடைகளுக்கு விடுதலை தந்து மெத்தையில் படுக்க வைத்து இருந்தாள்.. புடவையை பார்த்து ஆசை வர கையில் எடுத்தவள்.'அவனுக்கு ஈஸி ஆ இருக்கணும்னு சேலை கட்டுறியா டி 'என்று அசரீரியாக அவன் குரல் மனதில் வரவும்"அய்ய..ய்யோ திட்டுவான் வேணாம்." என்று புடவையை விடுத்து அவனுக்கு பிடித்தமான சுடிதார் அணிந்து நேர்த்தியாக புருவம் தீட்டி ..
மாம்பிஞ்சு கண்களில் மையிட்டு மஸ்காரா ஐ லயின்னர் கோட்டிங் மூலம் விழியை செதுக்கி, வெளிர் பிங்க் நிற இதழ்சாயம் பூசி.. கோல்டன் மணி பதித்த சிவப்பு பொட்டுக்கு மேலே கீற்றாக குங்குமம் தீட்டி "ப " வடிவத்தில் பின்னலில் பூவை வைத்து பின் குத்தியபடி தேவ கன்னிகை போல வெளியே பவனி வரவும்!!
சுமிதியே..,ஒரு நொடி இமைக்க மறந்து நிற்க.! கண் பட போகிறது என பார்வையை வேறு பக்கம் திருப்பி கொண்டார்." என்னடி காலையிலயே கரகாட்டக்காரி மாதிரி எங்க கிளம்பி போற? தினமும் லேட்டா எழுந்து தலை ஒரு கோலம், துணி ஒரு வேஷமா இல்ல போவ, இன்னைக்கு என்ன பின்னி பூவெல்லாம் வச்சிருக்க?" சந்தேகமாய் கீழிருந்து மேலே ஆராயும் பார்வை இட,
" பொண்ணுனா தலை பின்னி பூ வைக்கனும் னு நீ தான சொல்லுவ, தாய் சொல்ல கேட்கலாம்னு தான்..., என்று ராகம் இழுத்திட,
" நானே தலைப்பின்னி பூ வெச்சி விடுகிறேன் னு சொன்னாலுமே வேணாம்னு ஒடுறவ, ஏழரைக்கு எவன் டி காலேஜ் வைக்குறான்?"
"கோவிலுக்கு போறேன்மா.."என்றால் தலை நிமிராமல் .
" புதன் கிழமை ஏன் கோயிலுக்கு போற?" என்று சுமதி அதட்டி கேட்டதும்" அதுவா சீக்கிரமே உனக்கு பேரனோ .. பேத்தியோ.. பெத்து தரனும்னு வேண்டிக்க போறேன் " என்று அவள் பேக்..ஐ எடுத்துக் கொண்டு பட்டாம்பூச்சி போல அவள் பறந்து விட, மகள் தந்த பதிலால் தலையில் அடித்துக் கொண்டார் சுமதி.
" திமிரு கூடி போச்சு வரட்டும் சூடு வைக்கிறேன்." பொரிந்தார் தாய்.
ஆனந்த் அனுப்பிய லொகேஷனுக்கு வந்தவள் சுற்றிலும் பார்வையை சுழல விட்டாள். அவள் தேடியவன் தென்படவில்லை என்பது புரியவும் மனதில் கிலி பரவிட, வண்டியில் அமர்ந்தபடியே ..பதட்டத்தில் நகத்தை கடித்தபடி நின்றாள் பவித்ரா.
" யாரமா பாக்கனும்?" அருகே கடை வைத்திருப்பவர் கேட்க." ஆனந்த் சார்.. அ பார்க்கனும் "
" மாடியில மூனாவது போஷன் அவரோடது. போய் பாரு மா " என்றதும்
மனதே இல்லாமல் ஸ்கூட்டி ஐ விட்டு இறங்கி திரும்பி திரும்பி பார்த்தபடியே.! படி ஏறி ஆனந்த் சாரின் வீட்டு வாசல் முன் நின்றாள் பவி. கண்களில் கண்ணீர் மட்டம் உயர்ந்தது எழாத கையை கடினப்பட்டு உயர்த்தி கதவை அடிக்க ஒங்கிய நொடியே !!
வலிக்கும் படி அவள் மணிக்கட்டை அழுத்திப் பிடித்து ஆவேசமாக இழுந்தான் அவன்!!
எவன்? அவள் தேடியவன் தான் !!
குங்குமத்தில் குழைத்து செய்த சிலை போல அழகோடி நிற்பவளை பார்த்ததும் வெறி வந்தது " எதுக்குடி இங்க வந்த? புது டிரஸ்..சு.. பூ.. அதுவும் நாலு முழம் " தீயென வார்த்தைகள் வந்தது அவனிடம் இருந்து.
" இதெல்லாம் வைச்சு அவன ம .. ய.. என்று முடிக்கும் முன்னே அவன் இதழைகளை இறுக அழுத்தி மூடிவிட்டாள் பவித்ரா.



