எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அவனோடு இனி நானா! - 16

Lufa Novels

Moderator
அவனோடு இனி நானா!


அத்தியாயம் 16


கவின் இல்லம் பிறந்த நாள் விழாவுக்காக தயாராகி கொண்டிருந்தது. பிரணவிகாவும், சாத்விகாவும் அழகான உடையில் தயாராகினர். முதலில் ஷிம்ரித் நிஹாரிகா, அஃஷராவுடன் கல்பனாவும் வந்துவிட்டார். நிஹாரிகா தான் இருவருக்கும் அலங்காரம் செய்ய உதவியாக இருந்தாள்.


சந்தோஷின் காரில் விமலேஷ்ஷூம் விராஜ்ஜும் வந்துக்கொண்டிருந்தனர்.


சந்தோஷ் “இந்த தடவையும் டம்மியா நீ தான மனுதாக்கல் பண்ணின?”


விராஜ் “ஆமாம் பெரியப்பா. ஏன்?”


“இல்ல முத்துவேலு எதிர்கட்சி காரன மீட் பண்ணதா சேதி வந்துச்சு”


“என்ன பெரியப்பா? யார் சொன்னா?”


“நம்ம சீனிச்சாமி தான். முத்துவேலு வாபஸ் வாங்க போறதா விஷயம் வந்துச்சு. வாபஸ் வாங்க லம்ப்பா அமௌன்ட் வாங்கிருக்கார் போல”


“உண்மையாவா? அவர் அப்படிப்பட்ட ஆள் இல்லையே பெரியப்பா!”


“அப்படி தான் நானும் நினைச்சு சீட் கொடுத்தேன். அவன் இப்படி பண்ணுவானானு தெரியல.. பார்க்கலாம். எதுக்கும் நீ வாபஸ் வாங்காத” என்றவர் யோசித்து,


“நாளைக்கு தான வாபஸ் வாங்க கடைசி நாள்?” என்றார்.


“ஆமாம் பெரியப்பா” என்றான்.


“அப்போ நாளைக்கு சாயங்காலம் வரை வெயிட் பண்ணு.. கடைசி நேரம் வரைக்கும் அவர் வாபஸ் வாங்க வரலனா மட்டும் நீ வாபஸ் வாங்கு” எனக்கூறினார்.


“சரிங்க பெரியப்பா” என அவர் கூறி முடிக்க கவின் இல்லமும் வந்துவிட்டது. இவர்கள் வரவும் அனைவரும் வாயிலுக்கே வந்து வரவேற்றனர்.


சந்தோஷ் வந்ததுமே “விஹான் வரவில்லையா?” எனத்தான் கேட்டார்.


கல்பனா “இன்னும் வரலீங்க. ராஜ் கண்ணா அவனுக்கு போன் போடு” எனக்கூற,


கவின் “உள்ள வாங்க எல்லாரும். மாப்பிள்ளை வந்துருவாப்ள” எனக்கூறவும் அனைவரும் உள்ளே வந்தனர்.


விஹான் வருகிறானென தெரிந்ததுமே பிரணவிகாவுக்கு மனதில் கிளி பிடித்துக் கொண்டது.


‘அய்யோ இந்த சிடுமூஞ்சியும் வரானா? இவன யாரு கூப்பிட்டா? இவன் வந்தா முறைச்சிட்டே இருப்பான் இல்ல என்னமாது பண்ணிடுவான்.. ம்கூம் இன்னைக்கு என்னோட டே.. அவன் கையில சிக்கி என்னோட மூட் ஸ்பாயில் ஆக்கிட கூடாது.. அவன் பக்கமே போக கூடாது.. மீறி பக்கத்துல வந்தா இன்னைக்கு கடிச்சு விட்றனும்.. பயப்படக்கூடாது’ என நினைத்தாள். ஆனால் அவன் உயிரை கையோடு உருவிக்கொள்வாள் என அவள் மட்டுமல்ல அவனும் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டான்.


அனைவரும் சந்தோஷமாக சிரித்து பேசி மகிழ்ச்சியாக இருந்த சமயம், மனம் முழுவதும் மகிழ்ச்சியுடன் தன்னவளுக்கு வாங்கிய பரிசோடு அவளைக் காண புன்னகை முகமாக கவின் வீட்டிற்குள் நுழைந்தான் விஹான். அவன் புன்னகை முகத்தை வீட்டினர் அனைவரும் சந்தோஷமாக பார்க்க, அவனவள் மட்டும் அதிர்ச்சியாக பார்த்தாள்.


‘இவனுக்கு சிரிக்க எல்லாம் தெரியுமா? பரவாயில்ல சிரிச்சா நல்லாத்தான் இருக்கான். ஆனா சிரிக்கத்தான் மாட்டான் லூசு’ என நினைத்தவள், அவனை “வாங்க” என அழைத்துவிட்டு நிஹாரிகாவுக்கு பின்னால் நின்று கொண்டவள்,


“அக்கா! உங்க கொழுந்தனுக்கு சிரிக்க தெரியுமா?” எனக்கேட்க,


“அதெல்லாம் எல்லாம் தெரியும் அவருக்கு.. போக போக நீயே தெரிஞ்சுப்ப..” என ‘எல்லாம்’ என்பதில் அழுத்தம் கொடுத்து கிண்டலாக கூறினாள் நிஹாரிகா.


“நான் ஏன் தெரிஞ்சக்கனும்.. சரி அத விடுங்க இன்னைக்கு அவர் கிளம்புற வரை என்னை நீங்க தான் பத்திரமா பார்த்துக்கனும்” என வடிவேலு மாடுலேஷனில் கூற, பக்கென சிரித்துவிட்டாள் நிஹாரிகா. அனைவரும் இவர்கள் இருவரை பார்க்க, சமாளிப்பாக சிரித்து வைத்தாள் பிரணவிகா.


‘இந்த ஆர்வக்கோளாறு தான் என்னமோ என்னை பத்தி அண்ணிக்கிட்ட சொல்லிருக்கும்’ என நினைத்தவன் அவளைக் கூர்மையாக பார்க்க,


‘ஐயோ பார்க்குறானே! போச்சு செத்தேன்’ என நினைத்தவள் நிஹாரிகா பின்னால் மறைந்து கொண்டாள். அதில் உண்டான சிரிப்பை மறைக்காது மெலிதாய் சிரித்துக் கொண்டான். அதையும் பார்த்தவள்,


‘என்ன இப்பவும் சிரிக்கிறான்.. இன்னைக்கு ஒரு மார்க்கமா தான் இருக்கான்.. ஆனா நான் மட்டும் அவனோட எனிமியோட லவ் ப்ரோபஸல அக்செப்ட் பண்ணிருக்கேனு தெரிஞ்சது.. என்னை வில்லங்கம் பண்ணப் போறானோ! முதல்ல இந்த விஷயத்த என் பாட்னர் கிட்ட சொல்லனும்’ என நினைத்தாள். அவளுக்கு விராஜ்ஜிடம் எதையும் மறைத்து பழக்கமே இல்லையே! அதனால் சாத்விகாவையும், விராஜ்ஜையும் ஒன்றாக வைத்து இதை தெரிவிக்க காத்திருந்தாள்.


கவின் “சரி நேரமாச்சு கேக் வெட்டிலாமா? எல்லாரும் வந்தாச்சே..” எனக்கூற,


பரமேஸ்வரி பாட்டி “கவிதா வரல.. இதுக்கும் வரமாட்டாளா?” என கல்பனாவிடம் கேட்க,


கார்த்திகா “அத்தை! எல்லாம் தெரிஞ்சுக்கிட்டே அண்ணிக்கிட்ட இப்படி கேட்டா அவங்க என்ன சொல்லுவாங்க? உங்க பொண்ணு பத்தி உங்களுக்கு தெரியாதா? விடுங்க பெருசு பண்ணாதீங்க” எனக்கூற, அனைவரும் கேக் வெட்டும் மனநிலைக்கு வந்துவிட்டனர்.


அனைவரும் ஒன்றாக கூடி நிற்க, கேக்கை வெட்டினார்கள் இரட்டையர்கள். சாத்விகா கார்த்திகாவுக்கு ஊட்ட, பிரணவிகா கவினுக்கு ஊட்டினாள். இப்படியே எல்லாருக்கும் கேக் பரிமாறப்பட்டு, அனைவரும் தேநீர், சிற்றுண்டி எல்லாம் சாப்பிட்டுக் கொண்டிருக்க, பிரணவிகாவை தனியாக சந்திக்க சந்தர்பம் பார்த்துக் கொண்டிருந்தான் விஹான். அவளோ அவனிடம் சிக்காமல் வெகு ஜாக்கிரதையாக பெரியவர்களுடனே இருந்தாள்.


அந்த சமயம் தான் விராஜ் மற்றும் விஹானுக்கு ஒரே சமயத்தில் அவரவர் தொலைபேசியில் குறுஞ்செய்தி வர, எடுத்துப் பார்த்த இருவருக்கும் அதிர்ச்சி. அதில் விராஜ் அதிர்ந்து எழுந்து நின்றுவிட்டான். விஹான் உயிரை வேறோடு அறுத்தெரிந்ததுவிட்டது போல் உணர்வுகளின்றி அலைபேசியை பார்த்துக் கொண்டிருந்தான்.


விராஜ்ஜிடம் அனைவரின் பார்வையும் செல்ல, வேறருந்து அமர்ந்திருந்த விஹானை கவனிக்க ஆள் இல்லாமல் போய்விட்டது.


சந்தோஷ் “என்ன விராஜ் என்னாச்சு?”


“பெரியப்பா அந்த முத்துவேலு வாபஸ் வாங்கிட்டான்”


“நினைச்சேன். துரோகி. இனி அவன கட்சிக்குள்ளயே வைக்க கூடாது”


கவின் “என்ன அத்தான்.. இப்படி பண்ணிட்டார்.. இப்போ வாபஸ் வாங்கினா இனி நம்ம கட்சி இந்த எலைக்‌ஷன்ல நிக்காதா?”


“ஏன் நிக்காது? அதெல்லாம் அமோகமா எலெக்‌ஷன்ல நிப்போம்.. வின் பண்ணுவோம்” என்றார்.


“எப்படி அத்தான்?”


“என்ன தான் நான் ஒருத்தருக்கு சீட் கொடுத்து கட்சி சார்பா நிக்க வச்சாலும், எல்லாருக்கும் தெரிஞ்சு ஒருத்தரையும், யாருக்கும் தெரியாம இன்னொருத்தரையும் மனு தாக்கல் பண்ண வச்சிருப்பேன்.. ஒருத்தர் முன்னாடியே வாபஸ் வாங்கிடுவாங்க.. மறைமுகமாக இருக்கும் ஆள் வாபஸ் வாங்கும் கடைசி நாள் வாப்பஸ் வாங்கிடுவாங்க..


ஏற்கனவே எல்லாருக்கும் தெரிஞ்சு மனுதாக்கல் செய்த ஆள் வாபஸ் வாங்கியாச்சு இப்போ இவன வாப்பஸ் வாங்க வச்சிட்டா என் கட்சிய எலெக்‌ஷன்ல நிக்க விடாம பண்ணிடலாம்னு நினைச்சிருக்கானுங்க.. லூசுங்க.. நான் எப்பவும் யாருக்கும் தெரியாம ஒரு பேக்கப் ஆள் வச்சிருப்பேனு யோசிக்காத முட்டாளுங்க” எனக்கூறவும்,


கவின் “நல்ல வேலை அத்தான். அப்போ இப்போ யாரு நம்ம கட்சி சார்பா நிக்க போறது?” எனக்கேட்க,


சந்தோஷ் “வேற யாரு என் புள்ள விராஜ் தான்” என சாத்விகா தலையில் பெரிய குண்டை இறக்கினார்.


வீட்டில் ஆள் ஆளுக்கு ஒரு விதமான மனநிலையில் இருந்தனர். சந்தோஷ், விமலேஷ், ஷிம்ரித், கவின் என ஆண்கள் அனைவரும் அவனுக்கு ஒரு வாய்ப்பு தன்னால் அமைந்துவிட்ட சந்தோஷத்தில் இருந்தனர்.


மகளிர் அணியான கல்பனா, பரமேஸ்வரி பாட்டி, நிஹாரிகா அனைவரும் கவிதா வீட்டில் என்ன ஆட்டம் ஆடுவாரோ என்ற பதட்டத்தில் இருந்தனர்.


பிரணவிகா சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தாள். தன்னுடைய தோழன் வாழ்க்கையில் அவனுக்கு பிடித்த துறையில் இன்னும் ஒரு படி முன்னேறி சென்றதில் அவ்வளவு மகிழ்ச்சி. சந்தோஷமாக துள்ளிக் குதிக்கும் ஒருத்தியை ஒருவன் வேறருந்த மரமாய் கண்களில் நீர் கோர்க்க பார்த்துக் கொண்டிருந்ததை யாரும் கவனிக்கவில்லை.


விஹானுக்கு இதற்கு மேல் அங்கு நிற்க தெம்பில்லை. யாரின் கவனத்தையும் ஈர்க்காமல் மெல்ல அவ்விடம் விட்டு வெளியேறிவிட்டான். மனம் கொதிகலனாய் கொதித்துக் கொண்டிருந்தது. எப்படி தோற்றோம்? எப்படி கவனிக்காமல் விட்டோம்? என மனம் அவனையே திரும்ப திரும்ப குற்றம் சாட்டியது.


கண்கள் குளம் கட்டியது. ஆம் அழுகிறான் யாருக்கும் தலை வணங்காத அந்த காளை அழுகிறான். அவன் கண்களில் கண்ணீர் முதன்முதலாய் வருகிறது. வாழ்க்கையில் தோற்றுவிட்டு நிற்கிறான். ஆம் தோற்றுவிட்டான். தான் சிறுவயதிலிருந்து விரும்பிய தன் மாமன் மகளை தன் எதிரியிடம் தோற்றுவிட்டான்.


சற்று நேரத்திற்கு முன்பு அவன் கைப்பேசிக்கு ஒரு குறும்படம் வந்தது. அதில் சூர்யான்ஷ் பிரணவிகாவிடம் காதலை வெளிப்படுத்தியதும் அவள் அவன் காதலை ஏற்றுக்கொண்ட்டு அவன் கையணைப்பில் நின்றதும் தான் வந்தது. சூர்யான்ஷ் தான் அதையும் அனுப்பியிருந்தான்.


எப்படி? எப்படி இது நடந்தது? அவளிடம் வார்த்தைகளால் அல்லாவிடிலும் தன் ஒவ்வொரு செயல் மூலமும் அவளுக்கு தன் காதலை வெளிப்படுத்தத்தானே செய்தேன். எனக்கு அவள் மேல் ஏற்பட்ட காதல்.. அவளுக்கு என் மேல் ஏற்பட வில்லையா? என் காதல் அவளை கொஞ்சமும் பாதிக்கவில்லையா?


எப்படி அதுவும் தன் எதிரியுடன்.. அவன் கையணைப்பில்.. அதை நினைக்கும் போதெல்லாம் இதயத்தை யாரோ வால் கொண்டு வெட்டுவது போல துடித்தான். அவளை வேறொருவனுக்கே விட்டுக்கொடுக்க முடியாதவன் தன் எதிராளிடம் எப்படி விட்டு விட்டு நிற்பான்.


அவளையும், அவனையும் நினைக்கும் போது இப்போதே இந்த உலகம் நின்று, சற்று பின்நோக்கி சென்று, அவர்கள் இருவரும் சந்தித்த நாளுக்கு சென்று அவர்களின் சந்திப்பை நிறுத்த முடியாதா? அவனுக்கு முன் தன் காதலை அவளிடம் கூறி அவளை தன்னவளாகவே கடைசி வரை வைத்திருக்க முடியாதா என தவித்தான்.


கண்கள் கோவைப் பழமாக இருக்க, மூக்கும் முகமும் சிவந்து வீங்கி, கலைந்த தலையும், களைத்த உடலுமாக, ஏனோ தானோவென வீட்டிற்குள் நுழைந்தவனை கவிதாவின் கண்கள் சந்தேகமாக பார்க்க, அவரை பொருட்படுத்தாமல் அவனறைக்குள் புகுந்து தாளிட்டான்.


மகனின் நிலையை பார்த்தவருக்கு ஏதோ தவறாக பட, அவனறைக்கு சென்று கதவைத் தட்ட, சற்று நேரம் கதவே திறக்கவில்லை. பெற்ற தாயல்லவா! அதுவும் தனக்கு பிடித்த தன் மூத்த மகனல்லவா! தன் கனவை நிறைவேற்றிய செல்ல மகனல்லவா! அவரும் துடித்து தான் போய்விட்டார். விடாமல் தட்ட திறக்கத்தான் இல்ல.


ஓடிச்சென்று வீட்டின் மொத்த சாவியை எடுத்து அவன் அறையைத் திறக்க, எப்படி வந்தானோ அப்படியே கட்டிலில் குப்பறக்கிடந்தான். கண்களில் மட்டும் கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது.


“விஹான் விஹான்! என்னடா ஆச்சு? ஏன் இப்படி இருக்க?” எனக்கேட்கவும் தாயைக் கண்ட கன்று போல தாவி அன்னையின் மடியில் படுத்துக் கொண்டான். மகனின் நிலையை காண சகியாது அவன் தலை முடியை கோதிக்கொண்டே,


“என்னாச்சு விஹான்? நீ அந்த வீட்டு விஷேசத்துக்கு தான போன? அங்க என்ன நடந்துச்சு?” எனக்கேட்டார். ஆனால் அவனிடமிருந்து பதில் தான் வரவில்லை. மாறாக அவன் கண்ணீர் அவர் மடியை நனைக்க, மகன் அழுவது புரிய துடித்து தான் போனது தாய் மனது.


“விஹான் விஹான் ஏண்டா அழற? எனக்கு பதட்டமா இருக்குடா.. சொல்லு என்னாச்சு சொல்லு” என அவனை உலுக்க,


“ம்மா.. நான்.. நான்.. எனக்கு என்னம்மா குறை? என்ன ஏன்மா அவளுக்கு பிடிக்காம போச்சு?” என கேட்க, புரியாமல் முழித்தார் கவிதா.


“என்ன விஹான் சொல்ற? யாருக்கு உன்னை பிடிக்கல?”


“பிரணி.. பிரணிக்கு என்னை பிடிக்கலம்மா” எனக்கூற, ஆத்திரத்தில் எழுந்தவர்,


“அவளுக்கு ஏண்டா உன்னை பிடிக்கனும்? அவளுக்கும் நமக்கும் எப்பவும் ஒத்து வராது.. அப்படியே அவளுக்கு பிடிக்காட்டியும் நல்லது தான..


அம்மா உனக்கு எப்படி பொண்ணு பார்க்குறேன் தெரியுமா? நல்ல ரிச்சா, சூப்பரா, மாடல் மாதிரி அழகா ஒரு பொண்ணை ஊர் முழுக்க சல்லடை போட்டு தேடுறேன் நீ அந்த மூதேவிக்கு பிடிக்கலனு வந்து அழுதுட்டு இருக்க..


எந்திரி முதல்ல.. உன் மனசுல அவ பத்தின நினைப்பு இருந்தா முழுசா அழிச்சிடு.. அவ என்னடா உன்னை வேணாம்னு சொல்றது? அவ குடும்பமே நமக்கு வேணாம்.. அம்மா உனக்கு ஏத்த பொண்ண சீக்கிரம் உன் கண்ணு முன்னால நிறுத்துறேன்.


அவ கண்ணு முன்னாடி நீ அந்த பொண்ணு கூட சந்தோஷமா இருக்கனும்” என அவர் கூறிய தோரனையில் விஹானுக்கு ஒரு நிமிஷம் அனைத்தும் மறந்து தான் போனது தாய்க்கு தன் மாமன் குடும்பத்தின் மீதிருக்கும் கோபத்தில்.


தாயிடம் தேவையில்லாமல் உலறிவிட்டோமோ என நினைத்தான். அவன் இருந்த நிலையில் தாயிடம் அரவணைப்பு தேடும் பொருட்டு அனைத்தையும் கூறியது தன் தவறு தான் என நினைத்தவன், மேலும் எதுவும் பேசாது அமைதியாக நின்றான்.


“நான் சொல்றது புரியுது தான விஹான். எதையும் நினைச்சு குழம்பாத.. சரியா? அதுங்க எல்லாம் சரியான மாயாஜால மைக்காரிங்க.. என் குடும்பத்தையே கைகுள்ள வச்சிருக்கா அந்த கார்த்திகா.. நீயும் போய் அங்க சிக்கித் தொலைஞ்சிராத” எனக்கூறவும் தலையை மட்டும் ஆட்டினான்.


“அவ உன்னை பிடிக்கலனு சொன்னதால தப்பிச்சா இல்ல அவள உண்டு இல்லைனு ஆக்கிருப்பேன் இந்நேரம். ஏற்கனவே அவ வால ஒட்ட நறுக்கித்தான் வச்சிருக்கேன். அதனால தான் அவ உன்னை பிடிக்கலனு சொல்லிருக்கா.. நான் மட்டும் அவள மிரட்டி வைக்கல அவ என்னைக்கோ உன்னை அவ முந்தாணையில முடிஞ்சிருப்பா” என அன்னைக் கூறியதை அதிர்வுடன் கேட்டுக் கொண்டிருந்தான்.


‘ஆக அம்மா அவளை என்னமோ சொல்லி மிரட்டி இருக்காங்க. இது எப்போ நடந்து? நான் அவள காதலிக்கிறத தெரிஞ்சு தான் அவள மிரட்டினாங்களா? இல்ல முன்னவே மிரட்டினதால தான் அவ என் காதல ஏத்துக்கவே இல்லையோ! அம்மா மிரட்டினதால தான் அவ என் கிட்டயே வராம ஒதுங்கிட்டாளோ? என் கிட்ட சொல்லிருக்கலாமே நான் சரி பண்ணிருப்பேனே! அதவிட்டுட்டு அவன் கிட்ட போய்’ என நினைக்க மீண்டும் அவன் மனம் மரண வேதனையை சுமந்தது.


சூர்யான்ஷ் வேலையாக இருந்தால் அவனை எப்பாடு பட்டாவது விரட்டியிருப்பான்.. ஆனால் பிரணவிகா சந்தோஷமாக அவனருகில் இருக்கும் போது என்ன செய்வது? அவனை விட்டுவிட்டு தன்னிடம் வந்துவிடு என கெஞ்சும் மனதும் அவனுக்கு இல்லை. புரியாதவளுக்கு தன் காதலை எடுத்துக்கூறி புரிய வைத்து தன்னை பிடிக்கவைக்க முயற்சிக்கலாம் ஆனால் அடுத்தவனை அவளுக்கு பிடித்திருக்கும் போது அவனை விட்டுவிட்டு என்னிடம் வந்துவிடு என எவ்வாறு கூற முடியும்?


அவளை விட்டுக்கொடுக்கவும் முடியாமல், அவளை தன்னிடம் மீண்டும் கொண்டுவரவும் முடியாத நிலையில் நெருப்புக்கு மேல் நிற்கும் நிலையில் அப்படியே கட்டிலில் சரிந்தான்.


இந்த நிலையிலிருந்து வெளிவருவானா விஹான்? தன்னவளை அந்த கயவனின் பிடியிலிருந்து காப்பானா? பொறுத்திருந்து பார்க்கலாம்..
 
Top