எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அத்தியாயம் 20

Privi

Moderator

மாலை ஆறு மணியளவில் உமையாளின் குட்டி குடும்பம் பார்வதியின் வீட்டிற்கு வந்திருந்தனர். பார்வதிக்கோ தலை கால் புரியவில்லை. பல ஆண்டுகள் கழித்து அவர் வீட்டுக்கு விருந்தினர் வந்துள்ளனர்.​

ருத்ரனின் திருமண முறிவுக்கு பின்னர் சொந்தங்கள் யாரும் அவர் வீட்டிற்கு வருவதில்லை. அதில் பார்வதிக்கு மிகவும் வருதம். அதனாலேயே எல்லா ஏற்பாடுகளையும் அவரே பார்த்து பார்த்து செய்தார்.​

சமையல் கூட அவரின் கைவண்ணம் தான். நீலன் சொன்னதன் படி அவரவருக்கு பிடித்த உணவுகளையே சமைத்து வைத்திருந்தார். வீட்டிற்கு வந்தவர்களை உபசரித்து வரவேற்பறையில் அமர வைத்தார்.​

இன்றுதான் முதல் முறையாக பார்வதி மகிழினியை பார்க்கிறார். பார்த்தும் அவர் மனதில் பதிந்து போய் விட்டாள் மகிழினி. அவளை ஆசையாக தூக்கி அவர் மடியில் அமரவைத்து கொண்டார்.​

"அம்மா உங்களுக்கு கால் வலிக்க போகுது அவளை இறக்கி விடுங்க" என்று உமையாள் கூற, அதற்கு பார்வதியோ​

"இந்த குட்டி அவ்வளவு பாரம் இல்லைம்மா. அதனால பிரச்சனை இல்லை" என்று கூறி அவரே அவர் மடியில் வைத்துக்கொண்டார்.​

"அப்பறம் டார்லிங் எங்கே உங்கள வீட்டு ஹீரோ?" என கேட்டான் நீலன்.​

அதற்கு பார்வதியோ "வரும் நேரம் தான். சரி எல்லாரும் பேசிக்கொண்டு இருங்கள் நான் இதோ வந்து விடுகிறேன்" என கூறி சமையல் அறையை நோக்கி சென்றார்.​

அவர்கள் அருந்துவதற்கு பழச்சாறு தயாரித்தார். தயாரித்து கொண்டே ருத்ரனுக்கு திறன் பேசி மூலம் அழைப்பு விடுத்தார். மறுமுனையில் பார்வதியின் அழைப்பை ஏற்றான் ருத்ரன்​

"சொல்லுங்க என்ன விஷயம்?”​

"ஐயா! நீலன் குடும்பத்தினர் வந்துவிட்டார்கள். நீ எங்க இருக்க?" என கேட்டார்.​

அதற்கு ருத்ரனோ “இதோ இன்னும் கொஞ்ச நேரத்துல வந்திடுவேன்" என்றான்.​

பார்வதியோ "ஹ்ம்ம் சரி ஐயா" என அழைப்பை துண்டித்தார்.​

தயாரித்த பானங்களை எடுத்துக்கொண்டு முன் அறைக்கு சென்றார். அவர்களிடம் பானங்களை கொடுத்து விட்டு அவரும் அவர்களுடன் சேர்த்து அரட்டை அடிக்க துவங்கி விட்டார்.​

அவர்களின் பேச்சு கலகலப்பாக சென்று கொண்டிருந்தது. அப்போது வாசலில் கார் நிற்கும் சத்தம் கேட்டது. பார்வதியோ "ருத்ரன் வந்துட்டான் போல" என நினைத்து கொண்டார்.​

உமையாள் மகிழ் காலில் மாட்டி உள்ள துணியை எடுத்து விட குனிந்தாள். அதே சமயம் ருத்ரன் உள்ளே வரவும் நேரம் சரியாக இருந்தது. அவனை நோக்கி திரும்பிய மூவரின் முகமும் ஒவ்வொரு எதிர்வினையை காட்டியது.​

பார்வதி முகத்திலோ பூரிப்பு, நீலன் முகத்திலோ தோழமை தென்பட்டு. கயல் முகமோ அதிர்ச்சியில் விரிந்து கொண்டது. துணியை சரி செய்து விட்டு நிமிர்த்த உமையாள், கண்டது என்னவோ கயலின் முகத்தைத்தான்.​

" இவள் ஏன் பேய் அறைந்தது போல் பார்க்கிறாள்" என யோசித்துக்கொண்டே அவள் பார்வை போகும் திசையை நோக்கி அவள் தலை திரும்பியது.​

திரும்பிய கணத்தில் அவளின் கண்கள் விரிந்து கொண்டன. சிரித்த முகமாய் இருந்த ருத்ரனோ உமையாளை கண்டவுடன் அதிர்ச்சி அடைந்து விட்டான். திரும்பவும் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து​

"நீயா?..."​

"நீங்களா?...."​

என ஒருசேர கேட்டனர்.​

பார்வதியோ "உங்கள் இருவருக்கும் ஒருவரை ஒருவர் தெரியுமா?" என கேட்டார்.​

உடனே சுதாரித்த உமையாளோ பார்வதி கேட்ட கேள்விக்கு​

"ஏன் தெரியாமல்? திரு ருத்ரன் மஹாலிங்கம் திமிருபிடித்தவர், ஆணவமிக்கவர், இப்படி சொல்லிட்டே போகலாம். சரிதானே மிஸ்டர் ருத்ரன்" என்று அவனிடமே கேட்டாள் உமையாள்.​

உமையாளின் பேச்சை கேட்ட பார்வதியோ "அம்மாடியோ இந்த பொண்ணு என்ன இப்படி பேசுது ருத்ரனிடம்" என மலைத்து தான் போனார்.​

உமையாள் கேட்ட கேள்விக்கு கோவமாக பதில் கூற வந்த ருத்ரனை "ருத்து" என ஒரு குரல் தடுத்தது. சட்டென ஓடி வந்து ருத்ரனின் காலை பிடித்துக்கொண்டாள் மகிழினி.​

ருத்ரனின் கோவம் போன இடம் தெரியாமல் அவன் முகம் கனிவை காட்டியது. முட்டிபோட்டு அமர்ந்து,​

"ஹலோ ஹனிபீ, எப்படி இருக்கீங்க?" என கேட்டான்.​

அதற்கு மகிழும் “நல்ல இருக்கேன். இது உங்க வீடா ருத்து? என கேட்டாள்.​

ஆம் என தலையாட்டினான் ருத்ரன்.​

நீ எப்படி இங்க வந்த என்று மறு கேள்வி கேட்டான். அதற்கு மகிழும் "அம்மா கூடவும், மாமாவுடனும் வந்தேன்" என கூறினாள்.​

"அம்மா?" என சந்தேகமாக கேட்டான் ருத்ரன்.​

"அவுங்க தான் எங்க அம்மா" என குழந்தை கை காட்டியது என்னவோ உமையாளைத்தான்.​

உமையாளுக்கோ இது மிக பெரிய அதிர்ச்சி. மகிழ் இப்படி யாருடனும் நெருங்கி இருந்ததில்லை. உமையாள் அப்படி இருக்க விட்டதும் இல்லை. மகிழின் வட்டம் மிக சிறியது. அவள், நீலன் மற்றும் கயல் இந்த மூவர் அணி கொண்டதுதான் மகிழின் உலகம்.​

பிறகு எப்படி இது சாத்தியம் என்பது உமையாளுக்கு தெரியவில்லை. இங்கு ருத்ரனுக்குமே அதிர்ச்சி தான். கல்யாணம் ஆனவளா? அதுவும் ஒரு குழந்தை தாயா? அவன் மனதுக்கோ சற்றே ஏமாற்றம் அடைத்த உணர்வு.​

அது ஏன் என்றும் அவனுக்கு தெரியவில்லை. அமைதியாக இருந்த அவனை மகிழ் தான் "ருத்து" என உலுக்கி நிகழ் காலத்திற்கு கொண்டு வந்தாள். உடனே அவனும் தெளிந்து​

"ஹே ஹனி பீ சாப்டீங்களா? என்று கேட்டான் அதற்கு பார்வதி "இன்னும் இல்லப்பா உனக்காகத்தான் எல்லோரும் காத்துட்டு இருக்கோம்" என்று கூறினார்.​

உடனே அவன் பார்வை சென்றது என்னவோ உமையாளிடம் தான். உமையாளோ "நான் பார்வதி அம்மா மகனுக்காக காத்திருந்தேன். எனக்கென்ன தெரியும் அது நீங்களா இருப்பிங்க என்று" என அவனின் பதிலளித்தாள்.​

ருத்ரனுக்கு மெலிதாக இதழில் சிரிப்பு கண்களில் ஆச்சரியமும், அவனது ஒற்றை பார்வையை சரியாக கணித்து பதில் சொல்கிறாளே என்று.​

இம்முறை நீலன் உமையாளிடம் "அக்கா உனக்கு ருத்ரனை முன்னமே தெரியுமா?" என கேட்டிருந்தான். அவள் பதிலளிக்கும் முன் ருத்ரன் "ரொம்ப தாமதம் ஆகிவிட்டது. இன்னும் தாமதிக்க வேண்டாம் வாங்களேன் எல்லாரும் சென்று சாப்பிடலாம்" என அழைத்திருந்தான்.​

எல்லோரும் ஆமோதிப்பதாக தலையாட்டினார். உமையாள் மகிழை அழைக்க அவள் ருத்ரன் கையை பிடித்து கொண்டு அவர்களின் உணவு உண்ணும் இடத்திற்கு சென்று விட்டாள்.​

உமையாளுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. அவளும் அமைதியாக அவர்களை பின் தொடர்ந்தாள். இதனை கண்ட பார்வதிக்கோ மனதில் அவ்வளவு ஆனந்தம்.​

உணவறைக்கு சென்றவர்கள், உணவு மேசையின் முன் நாற்காலியில் அமர்த்து கொண்டனர். அவர்களுக்கு ஏற்றார் போல் உணவும் பரிமாற பட்டது.​

மகிழ், ருத்ரன் அருகில் அமர்ந்ததால் உமையாளும் வேறு வழி இல்லாமல் மகிழ் அருகிலே அமர நேர்ந்தது. எல்லோரும் உணவை ரசித்து உண்டனர். உணவு உண்டு முடியும் தருவாயில் பார்வதி பாயசத்தை பரிமாறினார்.​

எல்லோருக்கும் பரிமாறியவர், பாயாச தட்டை தூக்கிக்கொண்டு ருத்ரனிடமும் சென்றார். அவன் கண் அசைவில் வேண்டாம் என்று சொன்னதை அவர் கண்டு கொள்ள வில்லை.​

அவன் இலையில் பாயசத்தை பரிமாற சென்றவர் அவனின் வேண்டாம் எனும் கர்ஜனை குரலில் அப்படியே நின்றார். அனைவரும் ஒருகணம் அவன் முகத்தை பார்த்தனர். அவன் முகம் கோவத்தில் சிவந்திருந்தது.​

பார்வதியோ கண்களில் கெஞ்சலோடு அவனை பார்த்தார். ஆனால் அவன் வேண்டாம் என்று தலையை மட்டும் ஆட்டினான். அவர் மீண்டும் கெஞ்ச உணவு உண்ட தட்டை தூக்கி எறிந்து விட்டு சென்று விட்டான்.​

அங்கு இருந்த அனைவருக்கும் அதிர்ச்சி. உமையாளுக்கு அவன் மேல் உள்ள ஆத்திரம் இந்த செயலில் இருமடங்கானது. நீலனுக்கோ ருத்ரனின் இந்த முகம் புதிதுதான்.​

தாயில்லாத அவனுக்கு ஒரு தாயின் அருமை நன்றாக தெரியும். இவன் இருந்தும் மதிக்கவில்லை என்று ஆற்றாமையாக இருந்தது. பார்வதி அவன் தூக்கி எறிந்து விட்டு சென்ற தட்டை எடுத்து சுத்தம் செய்து கொண்டிருந்தார்.​

உமையாள் அவள் கைகளை சுத்தம் செய்து கொண்டு அவருக்கு உதவி செய்ய சென்றாள். பார்வதியோ​

"​

வேண்டாம் மா நான் பார்த்துக்கொள்கிறேன்" என்றார். அவர் கண்கள் கலங்கிருந்தது.​

அதற்கு உமையாள் "ஏன் நான் செய்தால் இவை அனைத்தும் சுத்தம் ஆகாதா என்ன? நானே செய்கிறேன் அம்மா. நீங்கள் சற்று ஓய்வெடுங்கள்" என்றாள்.​

"நீங்க வீட்டுக்கு வந்த விருந்தாளி மா நானே” என கூற வந்தவரை நீலன் இடைமறித்து​

"அப்போ நாங்க விருந்தினர் அப்படித்தானே டார்லிங். எங்களை விருந்தினர்னு சொல்லி ரொம்ப தள்ளி வைக்கிறீங்க, அக்கா வா நாம் வந்த வேலை முடிந்து விட்டது வீட்டிற்கு போவோம்” என கூறினான்.​

அதற்கு பார்வதியோ "ஐயோ நான் அப்படி கூறவில்லை. ஹ்ம்ம்ம் சரி நீயே சுத்தம் செய் உமையா" என அவர் கையில் உள்ள துணியை அவளிடம் கொடுத்து விட்டார்.​

பின் நீலனை பார்த்து "​

இப்போ சந்தோஷமா?" என கேட்டார். அவனும் இது போதும் என சொல்லி சிரித்தான். அவனின் சிரிப்பு பார்வதி முகத்திலும் பிரதிபலித்தது.​

அவ்விடத்தை சுத்தம் செய்து மீண்டும் முன் அறைக்கே அனைவரும் வந்தனர். முன் அறையின் ஒற்றை சொகுசு இருக்கையில் தான் ருத்ரன் அமர்ந்திருந்தான்.​

அவன் கண்கள் சென்றது என்னவோ மகிழை தேடித்தான். மகிழோ அவனை பார்த்து பயந்து கொண்டே வந்தாள். என்ன இருந்தாலும் அவள் குழந்தை அல்லவா அவன் கோவம் அச்சிறுமியை பயமுறுத்தத்தான் செய்தது.​

அவளின் இந்த பயந்த முகம் அவனுக்கும் வருத்தத்தை கொடுத்தது. உடனே அவளிடம் சென்றான். மகிழ் பயத்தில் உமையாள் ஆடையின் பின்னே ஒளிந்து கொண்டாள்.​

அவள் முன் சென்று மண்டியிட்டு அமர்ந்து தன் இரு கைகளையும் எடுத்து அவன் காதுகளை பற்றி "சாரி ஹனி பீ.. நான் அப்படி செய்துருக்க கூடாது" என மன்னிப்பு கேட்டான்.​

அதற்கு அவளோ "ருது நீங்க செய்தது தப்பு. பாட்டி பீல் பண்ணுவாங்கல. பாட்டிகிட்ட சாரி கேளுங்க" என்று கூறினாள். இதனை வேறு யாரும் கூறியிருந்தால் நடப்பதே வேறு ஆனால் மகிழிடம் என்னவோ தெரியவில்லை அடங்கித்தான் போனான்.​

முடியாது என்று கூறவும் முடியவில்லை. தலையை தூக்கி பார்வதியை பார்த்தான்.​

“சாரி”​

என்று கூறினான். பார்வதிக்கோ மிக பெரிய ஆச்சரியம் யார் சொல்லையும் கேட்காத தன் மகனா இன்று இந்த மழலையின் சொல்லை கேட்பது என.​

அவர் கண்கள் கலங்கி விட்டது. பின் மகிழிடம் திரும்பி "ஹனி பீ நாம் இருவரும் ஐஸ் கிரீம் சாப்பிட போகலாமா?" என கேட்டான். உடனே அதற்கு மறுப்பு தெரிவித்தால் உமையாள். குழந்தை அவனை பார்த்து இதழ்களை பிதுங்கியது.​

அவனோ "நான் அழைத்து செல்லத்தான் போகிறேன் என்னை யார் தடுப்பதற்கு?" என்றான்.​

உடனே உமையாள் "நான் தடுப்பேன் ஏன் என்றால் நான் அவள் அம்மா" என்று அவர்களின் வழியை மறித்தபடி வந்து நின்றாள்.​

இவர்களில் இந்த சண்டையை பார்த்த பார்வதியோ "உமையாள் அவன் பத்திரமாக அழைத்து செல்வான். அவர்கள் சென்று வரட்டுமே" என்று கூறினார். அவரின் சொல்லை மதித்து உமையாளும் விலகி நின்றாள்.​

ருத்ரனும் மகிழை தூக்கிக்கொண்டு சென்று விட்டான். செல்லும் முன் அவளை கண்டு ஒருவித நக்கல் புன்னகை சிந்த தவறவில்லை. இவளும் வாய்க்குள் அவனை திட்டி தீர்த்தாள்.​

இதனை எல்லாம் கண்டா பார்வதிக்கோ மகிழ்ச்சியாக இருந்தது. அவரின் ஆசை நிறைவேறுமா?​

 
Top