எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

9 நேத்திரனை ஆளும் பௌர்ணமி!

priya pandees

Moderator


அத்தியாயம் 9

பிள்ளைகள் அறையை நோக்கி சிரித்துக் கொண்டே சென்றவனை, "சே சாரி குஹன். பியர் சாப்ட்டு கிஸ் பண்ணிருக்கீங்க நீங்க. ஐ ஹேட் இட் உவே!" என திரும்பி இவன் சென்ற திசையை நோக்கி கத்திக் கொண்டே எழுந்து சென்று அங்கிருந்த வாஷ்பேஷனில் வாயையும் கொப்பளிக்க,

"வேணாதத வாய்க்குள்ள திணிச்சா எல்லாருக்கும் இப்படித்தான் உவேன்னு இருக்கும் சித்து" என்று மட்டுமே உள்ளிருந்து சத்தம் கொடுத்தான் குஹன்.

"ச்ச!" என மீண்டும் வந்து சாப்பிட அமர்ந்தவளுக்கு, சாப்பாடே இறங்க மாட்டேன் என்றது. ஆனாலும் வெறும் வயிறாக போட பிடிக்காமல் சாப்பாட்டை விழுங்க துவங்கினாள்.

உண்மையில் குஹன் அவளுக்கு புரிய வைக்க முயன்று கொண்டிருந்தான். அவர்கள் உறவு பிரிவை நோக்கி வந்ததற்கு, அவளை அவ்வாறு ஒரு முடிவை எடுக்க வைத்ததற்கு அவன் தான் காரணம் என அவள் இருக்க, 'என்னை விட அதில் உன் பங்கு அதிகம். ஆனால் நீயே எவ்வாறு என்னிடம் விவாகரத்து கேட்கிறாய்!' என புரிய வைக்கவே இவ்வாறெல்லாம் விளையாடிக் கொண்டிருந்தான்.

பௌர்ணமி, உணவை முடித்தவள் அவர்கள் பக்கமே செல்லாமல் மற்றொரு அறைக்குள் நுழைந்து படுத்துவிட்டாள். அங்கு குஹன் பிள்ளைகளுடன் சிறிது நேரம் விளையாண்டுவிட்டு, மூவருக்கும் பிடித்தமான ஒரு ஆங்கில பேய் படத்தை போட்டுவிட, பார்த்து பார்த்து சலித்த படம் தான் என்பதால் சற்று நேரத்திலேயே மூவரும் உறக்கத்திற்குச் சென்றிருந்தனர்.

ஏழு மணி போல், அஞ்சாநம்பி வந்து அழைப்பு மணியை அழுத்தும் வரை, தூங்கியவர்கள் எழுந்து வரவில்லை. அவனும் முதலில் குஹன் அறை சென்று தட்டோ தட்டென்று தட்டி ஓய்ந்து, பின் ஃபோனில் அழைத்து பார்த்தும் பயனற்று போனதில் வரவேற்பிற்கு சென்று விசாரித்து, பௌர்ணமி தனி அறை பதிவு செய்திருப்பதை அறிந்து நெஞ்சை பிடித்து, ஒருவழியாக அவள் அறை வந்து கதவை தட்டிக் கொண்டு நிற்கிறான்.

"இவங்க ஏன் தனி ரூம் புக் பண்ணாங்கன்னு தெரியல. சும்மான்னு இருந்தவங்களுக்கு ஃபோன் போட்டு பல்லவி வர்றது வேற சொல்லிருக்கேன். அதனால அவங்க தனி ரூம் போட்ருந்தாங்கனா? ஆண்டவா அப்படி மட்டும் காரணமா சொல்லிட்டாங்க! நா செத்தேன். இங்க சாரு கூட கம்மியாதான் அடிப்பாரு. ஆனா அங்கிருக்க அத்த தான் ஏர்ல பறந்து பறந்து அடிக்கும். ஸ்காந்துலாந்து வந்த நேரமே சரியில்லை போல, இங்க வந்ததுல இருந்தே நம்மள இப்படி பதட்டத்துல தான் வச்சுருக்காங்க. ச்சை" வாசலில் நின்று எங்கோ பார்த்தவாறு மன உளைச்சலை கொட்டிக் கொண்டிருந்தான்.

மீண்டும் அழைப்பு மணியை அடிக்க திரும்ப, "நம்பி!" என கையை கட்டி கொண்டு அவன் முன் நின்றிருந்தாள் சித்ரா பௌர்ணமி.

சட்டென்று அதிர்ந்தாலும், "மேம்! ஜெர்னி எப்புடி மேம் இருந்துச்சு?" என சமாளித்தான்.

"ஃபைன் நம்பி. எதுக்கு இங்க வெயிட் பண்றீங்க?"

"சார் எங்கன்னு தெரியல?"

"கால் பண்ணுங்க. வருவாங்க"

"கால் எடுக்கல மேம்"

"அப்ப கம்ப்ளைண்ட் பண்ணுங்க"

"மேம்!"

"ம்ச் நம்பி. நீங்க போங்க வர சொல்றேன்"

"எங்க போயிருக்காங்க மேம்?"

"என்ட்ட சொல்லிட்டு போகல. நா தூங்கிட்டேன். மூணு பேர் சத்தமும் காணும். இங்க தான் இருக்காங்களா இல்ல வெளில போயிட்டாங்களான்னு இனி தான் தேடணும். டிடெய்ல்ஸ் போதுமா?" என கேட்டு அவள் நின்ற தோரணையில்,

"சாரி மேம்" என்றவன் தலையை சொரிந்தவாறே மீண்டும் குஹன் அறை சென்று நின்றான். 'சார் அங்க தான் இருந்தாருன்னா அப்ப இந்த ரூம என்ன செய்ய? இது என்ன விளையாட்டு விளையாடுறாங்க புருஷன் பொண்டாட்டியும். இவங்க மட்டும் ஸ்பெஷல் மேக்கா இருக்காங்க ப்பா?' என யோசித்தே நின்றான்.

அங்கு கதவை சாற்றி உள்ளே சென்றவள், முதலில் தன்னை சுத்தப்படுத்தி கொண்டு, முகத்தை துண்டால் துடைத்தவாறே மற்ற அறைக்கு சென்றாள். திறந்ததுமே தெரிந்தது, மூவரும் நல்ல உறக்கத்தில் இருப்பது. லைட்டை போட்டுவிட்டாள். பளீரென்ற வெளிச்சத்திற்கு முதலில் அசைந்து கொடுத்தது குஹன் தான்.

கட்டிலில் ஒரு ஓரத்தில் குஹன், நடுவில் கிருத்தி, மறு ஓரத்தில் ஹரிணி என படுத்திருந்தனர். கிருத்தி அதிகம் உருளுவான் என்பதால் எப்போதுமே அவனை நடுவில் விட்டு உறங்குவது தான் மற்ற மூவரின் வழக்கமும். பிள்ளைகளுக்கு மாற்றுடை எடுத்து வைக்க, கட்டிலை சுற்றி கொண்டு குஹன் இருந்த பக்கம் வந்தாள்.

அவனை ஒரு நிமிடம் நின்று பார்த்தாள். வீட்டுடையில் கவிழ்ந்து படுத்திருந்தான். கையில்லாத டீஷர்ட்டும் ஷார்ட்ஸுமாக , பளீரென்று தெரிந்த ஜிம்மின் உபயத்தில் புசுபுசுவென உப்பி நின்ற கையில் நறுக்கென்று கிள்ளி எழுப்பிவிட தோன்றியது. அவன் நிம்மதியாக தூங்குவதை பார்க்க எரிச்சலாக வேறு வந்தது.

"ஒன் நைட் ஸ்டான்ட்ட அவ்ளோ ஈசியா அதும் பொண்டாட்டி கிட்ட டிவோர்ஸ் டிமாண்ட்டா இந்த உலகத்துலயே எவனும் கேட்ருக்க மாட்டான். ட்ரைக்டர் மூளைல அதான் காம்பிளிகேட்டடா யோசிக்குது. நா அப்படி இல்லன்னு தான் வேற சாய்ஸ் போக தோணிருக்குமோ?" என வாய்விட்டே திட்டிவிட்டு இடுப்பில் கை வைத்து நின்று முறைத்து பார்த்தாள்.

அவனிடம் அவளுக்கு என்னவெல்லாம் பிடிக்கும் என யோசித்து பார்த்தாள். அவனையே பிடித்தது தான். அழகன், ரசிகன், வெளிப்படையாக எதையும் பேச கூடியவன், எதார்த்தமானவன், அவளை அவளாகவே ஏற்றுக் கொண்டவன், என பலவகைகளில் பரிசீலித்து தான் அன்று அவன் காதலை ஏற்றிருந்தாள். சிறுவயதிலிருந்தே நண்பர்கள் வேறு, அனைத்திலும் இருவருக்கும் ஒத்துப்போகும் என்பது அதில் கூடுதல் பாயிண்ட்டாக எடுத்து தான் அவனை தனக்கு பிடித்தம் தான் என்ற முடிவிற்கு வந்திருந்தாள்.

அதன்பிறகும் அவனுக்கு அவள் எந்தவகையிலும் தொந்தரவு கொடுத்ததில்லை. உணவு விஷயத்தில் அவன் கூறியது கூட, அவன் மேல் உள்ள அக்கறையில் அவள் செய்தது தான். இருவரும் சேர்ந்து வேலை பார்க்கும் சூழலில் அவளுக்கு அவள் எடுத்து வரும் உணவை அவனுக்கும் பகிர்ந்து கொள்வது தான் அவள் வழக்கம். பிள்ளைகளையும் முடிந்த அளவு அவள் பொறுப்பில் தான் எடுத்துக் கொள்வாள். அவன் வேலைக்கு எவ்வகையிலும் இடைஞ்சலாக இருக்க கூடாது, தன்னையும் சுயநலம் பிடித்தவளாக யாரும் சொல்லிவிட கூடாது என்பதில் எல்லாம் அவள் எடுத்துக் கொண்ட முன்னேற்பாடுகளும், அதற்கான முக்கியத்துவங்களும் அதிகமே. எந்த வகையிலும் ஒரு மனைவியாக அவனுக்கு அவள் தொந்தரவாக இருந்ததில்லை. அவன் கூறியது போல் அவளாக அவனை நாட துணிந்ததில்லையே தவிர, அவனை என்றும் மறுத்ததுமில்லை. ஒரு சராசரி பெண்ணாக இருந்துவிட கூடாது, என்றும் அவனுக்கு அவள் சமமானவளாக தான் அவன் மனதில் இருக்க வேண்டும் என்பது கொள்கையாகவே இருந்தது அவளுக்கு.

முதல் திருமண நாள் ஏற்பாட்டின் போது அவள் தாமதமாக வந்து அவன் முன்னரே வந்திருந்தது ஒருவகையில் அவளின் உள் பாதித்திருந்தது. அதையும் பெரிதுபடுத்தாமல் அவன் அவளை மிக எளிதாக கையாண்ட விதத்தில் கணவனாக அவனை அடைந்ததற்கு அன்று பெருமிதம் வேறு கொண்டாள்.

"நானே வந்துட்டேன் நீ சீக்கிரம் வர்றதுக்கு என்ன?" என அவன் சண்டையிட்டிருந்தால் அது அன்றே மறந்து மறைந்து போயிருக்கலாம். ஆனால் அவன் குடும்பமும் அங்கு நிற்க அவளை அவர்களிடம் விட்டுகொடுத்தாதது அவனையும் அந்நிகழ்வையும் மனதில் வேரூன்றி நிறுத்தி வைத்தது. அதன் பலன் அதன்பின் அவன் வீட்டிலோ அவள் வீட்டிலோ எதாவது விஷேசம் என்றால் சரியான நேரத்திற்கு சென்று, 'நா வந்துவிட்டேன்' என காண்பித்து கிளம்பிவிடுவாள் இல்லாவிட்டால் தாமதமாக சென்றுனாலும் தலையை காட்டி விடுவாள். ஆனால் அவன் தான் அதில் தொன்னூறு சதவீதம் வரமறுத்து அவளை அனுப்பிவிட்டு அவன் வேலையை பார்க்கச் சென்றுவிடுவான்.

தாமதமாக தான் புரிந்தது, அவன் அன்று ஒரு நாள் அவளுக்காக விட்டுகொடுத்தது அவளுக்காக மட்டும் அன்று அவனுக்காகவும் என. அவன் வராததை அவளால் கேட்க முடிந்ததில்லை. அவள் மனசாட்சியே கேள்வி கேட்க விட்டதில்லை. முடிந்தால் வந்திருப்பார் என்றுதான் பல வருடங்கள் நினைத்திருந்தாள். கடந்த ஆறு மாதங்களாக தான் பலவைகளை நின்று நிதானமாக யோசித்து அவன் ராஜதந்திரங்களை எல்லாம் கண்டு கொண்டிருக்கிறாள்.

உண்மையில் அது குஹனின் ராஜதந்திரம் தான். அன்று அவள் தாமதமாக வந்ததற்கு அவன் கோபம் கொள்ளவில்லை, நல்லது என தான் எடுத்துக் கொண்டான். அதிலும், "பிறந்த நாள மறப்பியா, கல்யாண நாளுக்கான கிஃப்ட் எங்க? என்ன ஏன் வெளில கூட்டிட்டு போகல. என்கூட டைம் ஸ்பென்ட் பண்ணவே இல்ல. இதுமாதிரிலாம் இனி டார்ச்சர் இருக்காது. நம்ம பொண்டாட்டி தான் நார்மல் கேர்ளே இல்லையே. அவ இப்படி இருக்குறது தான் நமக்கு சேஃப்" என சந்தோஷமாக தான் எடுத்துக் கொண்டான். அதன்பிறகும் இருவரும் அதை தான் வழக்கப்படுத்திக் கொண்டிருந்தனர். வாழ்க்கையின் மேல் வரும் சலிப்பின் ஆரம்பக்கட்டம் என உணராமலே அதை அன்று சந்தோஷமாக கடந்திருந்தனர்.

பௌர்ணமிக்கு இன்னும் யோசிக்க யோசிக்க தூங்கி எழுந்ததில் இருந்து எதுவும் குடிக்காமல் இருப்பதற்கும் சேர்த்து தலைவலிக்கும் போலிருந்தது, ஒரு பெருமூச்சுடன் நகர்ந்து விட்டாள்.

இன்னும் சூரிய வெளிச்சம் மிச்சமிருந்தது. ஆனால் விளக்கை போட்டால் மூவரும் விழிப்பர் என பார்க்க, ம்கூம் எழுந்தபாடில்லை. ஜன்னல் கண்ணாடிகளை ஸ்கிரீன் கொண்டு இழுத்து மூடினாள். பிள்ளைகள் இருவரும் எழுந்ததும் குடிக்க கெட்டிலில் தண்ணீரை சுட வைத்தாள். இதை எல்லாம் செய்யும் போது வாய் தானாக, "நா ட்ராவல் டயர்ட்ல இவ்வளவு நேரம் தூங்கிட்டேன் சரி. கிருத்திக்கும் டயர்டா தான் இருக்கும் தூங்குறான் ரைட். ஆனா மத்த ரெண்டு பேரும் தூங்குறத பார்த்தா இந்த பத்து நாளும் தூக்கத்த கூட சரியா ஃபாலோ பண்ணல போல. சொன்னாலும் கேட்டுக்குற கேரக்டரா? தெரியாம செய்ய கள்ளத்தனம் கத்து கொடுக்குறதுல இவர மிஞ்ச முடியுமா? எல்லாம் என்ன சொல்லணும்" என வறுத்தெடுத்துக் கொண்டிருந்தது.

"என்னடி முனங்குற?" என்றவன், கைக்கு எட்டியவாறு நின்றவள் இரட்டையாக குத்தியிருந்த புடவையின் முந்தானையை பிடித்திழுக்க, கவிழ்ந்து படுத்திருந்ததால் அவன் முதுகில் சென்று பொத்தென்று விழுந்தாள்.

"நம்பி உங்கள தேடி வந்தாரு" என்றவள், அவனிலிருந்து இறங்கி எழுந்து கொண்டு, "கிருத்தி, ஹரிணி!" என இருவரையும் தட்டி எழுப்பி விட்டாள்.

அவளையே பார்த்தவன், மீண்டும் இழுத்து அவனுக்கும் கிருத்திக்கிற்கும் இடையில் அவளை பிரட்டி போட, "என்ன பண்றீங்க? ரொம்ப ஓவரா பண்ணிட்ருக்கீங்க. எனக்கு இதெல்லாம் பிடிக்கல. ஹார்ஷா பேச வைக்காதீங்க" என எழ முயல, எழ விடாமல் இழுத்து படுக்க வைத்தான்.

சில நொடிகள் அப்படியே அவன் கைக்குள் படுத்துவிட்டாள். அவள் கழுத்தடியில் முகம் புதைத்தவனும் கண்ணை மூடி அமைதியாக படுத்திருந்தான்.

"இது தான் புதுசா இருக்கு. நா நோ சொன்னா, ஓகேன்னு கைய விலக்கிடுவீங்களே. இன்னைக்கு ஏன் இப்படி?" என்றாள் ஒருவித அமைதியான குரலில்.

"கொஞ்ச நேரமா என்ன விடாம பார்த்து நின்ன தானே? அதுமாதிரி நீ இதுவரை நின்னு என்ன ரசிச்சதே இல்லையா. அதான் கண்ட்ரோல் மிஸ்ஸாகிட்டு"

"ரசிச்சேனா? நீங்க எப்படிலாம் நேக்கா என்ன ஏமாத்தி யூஸ் பண்ணிருக்கீங்கன்னு அட்மைர் பண்ணிட்ருந்தேன்" என நக்கலாக சிரித்தாள்.

"ஆமாதான் உனக்கு தேவையானது இதுதான்னு உன் ரூட்ல நீ போயிட்ருந்த அது எனக்கு கம்பர்டபிளா இருந்ததால நானும் என் ரூட்ல மட்டும் ஃபோகஸா இருந்துட்டேன்" என்றவன் இன்னும் அவள் கழுத்தில் மீசை உரச கண்மூடி படுத்திருந்த விதத்தை மாற்றவில்லை.

"உங்களுக்கு கம்பர்ட் சோன் க்ரியேட் பண்ணி கொடுத்துட்டு தான் நா லைஃப்ல மொத்தமா லாஸாகி நிக்றேன்" என்றாள் மெதுவாக.

"என்ன லாஸ் சித்து? உனக்கு தெரிஞ்சோ தெரியாமலோ உனக்கு ஏத்த மாதிரி தான் என்ன ட்யூன் பண்ணி வச்சுருக்க. சோ உனக்கு வேணுங்குறத கண்ண மூடிட்டு சரின்னு செஞ்சு கொடுத்துடுவேன். பட் அந்த டிசிஷன்ல நீதான் ஸ்டராங்க்கா நிக்கணும். டிவோர்ஸ் கிடைச்சா உனக்கு லாஸா கிடைக்காம போனா லாஸான்னு தெளிவான முடிவுக்கு வா" என்றவன் கைகள் அழுத்தமாக அவள் மேல் இறங்க.

"கிருத்தி, ஹரிணி" என அவள் இடது கை கொண்டு அடுத்தடுத்து படுத்திருந்த இருவரையும் மீண்டும் மீண்டுமாக முதுகில் தட்டி எழுப்பிவிட்டாள். ஆனால் குஹன் கையை தட்டிவிடவுமில்லை, பிள்ளைகள் எழும்பி அமரும் வரை அவனும் அவனாக எடுக்கவுமில்லை.

பிள்ளைகள் எழும்பவும் அவள் அவர்களை பார்க்க எழுந்துவிட, குஹன் எழுந்து நம்பியை பார்க்க சென்றான். அன்று முழுவதும் நடந்ததை விசாரித்து கொண்டு, மறுநாளுக்கான முன்னேற்பாடையும், உதவி இயக்குனர்களுடன் பேசி வைக்க, மணி ஒன்பதை கடந்திருந்தது.

பின் பௌர்ணமி அறை சென்று, மூவரையும் வெளியே செல்லலாம் என அழைக்க, பௌர்ணமி வர மறுத்துவிட, இவர்கள் மூவரும் கூடவே அஞ்சாநம்பியும் என ஊரை சுற்றி பார்க்க கிளம்பிவிட்டனர்.

இரவு நேர மால்களில், குடும்பங்களும் குழந்தைகளும் கொண்டாடும் இடமான மால் ஒன்றை தேர்ந்தெடுத்துச் சென்றனர். சிறுவர்களுக்கான சர்க்கஸ், நகைச்சுவை நிகழ்ச்சிகள், கோமாளி உடை நடனங்கள் என பார்ப்பதற்கும் பொழுது போக்கவும் அங்கு நிறைய இருந்தது.

யானை, சிங்கம், கரடி, குரங்கு என அவைகள் காட்டிய சர்க்கஸ் கூடாரத்தில் அதிக நேரத்தை செலவிட்டவர்கள், அடுத்ததாக கோஸ்ட் ரைடர் என்ற பேய் வீட்டிற்குள் நுழைந்தனர். அங்கு பிள்ளைகள் இருவரையும் சமாளிப்பதற்குள் இயக்குனர் மூச்சு தான் வாங்கிவிட்டான். இதில் அஞ்சா நம்பியின் அலறலில் தான் மற்ற இருவரும் இன்னும் பயந்து அதிகமாக அழுதனர்.

வெளிவருவதற்குள், "வாய மூடிட்டு வர போறியா இல்லையா?" என குஹனிடம் அஞ்சாநம்பி தான் நான்கு அறை வாங்கியிருந்தான். இரண்டு மணிவரை சுற்றி விட்டு அதீத களைப்பில் தான் அறைக்கு திரும்பினர்.

நேராக பௌர்ணமி அறைக்கு வந்து, ஒரு அறையில் பிள்ளைகளை தூங்க விட்டவன், மறக்காமல் கிருத்தி உருண்டு விழாமல் இருக்க ஆவணம் செய்து விட்டே, மற்ற அவள் தூங்கும் அறைக்குள் வந்து அவளை இடித்து கொண்டு படுத்து தூங்கியிருந்தான்.

மறுநாள் அவன் எழுந்தபோது, அறையிலேயே அவள் இல்லை. "இந்த ரூமையும் காலி பண்ணிட்டாளா சிலுப்பி?" என்ற யோசனையோடு தான் எழுந்து வெளியே வந்தான். அவள் உடைமைகள் அங்கு தான் இருந்தது. மற்ற அறைக்குள் பிள்ளைகள் இன்னும் தூக்கத்தில் இருக்க, உடற்பயிற்சி செய்ய போயிருக்கலாம் என நினைத்தவன், அவன் அறை சென்று குளித்து அவன் தொழிலை பார்க்க கிளம்பி விட்டான்.

வழக்கமான செயலாக, அன்று ஷுட்டிங் நடக்கவிருக்கும் இடத்தை அவளுக்கு மெசேஜாக அனுப்பிவிட்டு, அஞ்சாநம்பியோடு கிளம்பி விட்டான்.

பௌர்ணமி அங்குள்ள ஜிம்மில் அன்றாட உடற்பயிற்சியை முடித்து வந்தவள், அவன் மெசேஜை பார்த்து, அசட்டை செய்து விட்டு, பிள்ளைகளோடு அன்றைய பொழுதை கழிக்க துவங்கியிருந்தாள்.

அன்று தான் பல்லவியும் வந்து இறங்கியிருந்தாள், "குஹன் இருக்குற ஹோட்டல்லயே பல்லவிக்கும் ரூம் புக் பண்ணு" என்றிருந்தார் ஜெயராமன். அதன்படி அவளும் மதிய நேரத்தில் அங்கு தான் நேராக வந்திறங்கினாள்.

ஆனால் பல்லவிக்கும், பௌர்ணமிக்கும் நேராக சந்திக்கும் வாய்ப்பு அன்று இரவு வரை அமையவில்லை.

பல்லவி வந்திறங்கிய செய்தி, நேரமும் இடமும் இயக்குனரான குஹனுக்கும் உடனே தெரிவிக்கப்பட்டது. இதையும் படத்திற்கு விளம்பரமாக்க முயல்கின்றனர் என புரிந்தும் அசட்டை செய்தான் அவன்.

மொத்த படக்குழுவும் அவனை தான் குறுகுறுப்புடன் பார்த்திருந்தது. அவன் மனைவி வந்திருப்பது இன்னும் யாருக்கும் தெரியவில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்தில் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப தான் விடுதிகள் ஒதுக்கி கொடுத்திருந்தனர். குஹனுக்கு ஹரிணியுடன் வந்திருப்பதால் இதுதான் வசதி என ஒதுங்கி கொண்டிருந்தான். அதனால் பௌர்ணமி வந்தது படக்குழுவினருக்கு தெரியவில்லை, ஆனால் பல்லவி வந்ததும் குஹனுடன் தங்கவிருப்பதும் வேகமாக பரவியிருந்தது.

"எவ்வளவு நல்லவனா இருந்தாலும் இந்த ஃபீல்டு மாத்திடும் போல. பாரு அங்க பொண்டாட்டி டிவோர்ஸ் கேட்ருக்கு, நெட்டீசன்ஸ், அதுக்கு காரணம் இந்த பல்லவி தான்னு பக்கம் பக்கமா கிழிச்சு தொங்கவிடுறானுங்க. எவ்வளவு தைரியமா, இந்த படத்துக்கு சம்மந்தமே இல்லாத அந்த பொண்ண இங்க வர வரவச்சு. ஆமா அப்படிதான்னு காமிச்சுட்டாரு" என ஹீரோ பேச,

"ஓவர் ஆட்டிட்யூட் இது. ரெண்டு பெரிய பிள்ளைங்க இருக்காங்க. இது வேற மாதிரி இஷ்யூ ஆகும். சிமிக்கு தான் சப்போர்ட் ஜாஸ்தியாகும். இவர் மார்க்கெட்டே போக போகுது" என நாயகி பேச,

"அதெல்லாம் சினிமால இதுமாதிரி பலர் வந்து போயிட்டாங்க மேடம். இது நம்ம ஃப்லீட்ல சகஜம் தான்னு ஈசியா கடந்து போயிருவாங்க. ஒரு ஆளு ஒரே ஃபேமிலின்னு இருக்கவங்களா தான் அதிசயமா பார்ப்பாங்க. இப்படி ரெண்டு மூணு கல்யாணம் நாலஞ்சு டிவோர்ஸ்லாம் தான் சினிமா ட்ரெண்ட் இப்போ. பிடிச்சா சேர்ந்து வாழலாம். இல்லாம கட்டாயம்னு ஏன் சேர்ந்து வாழணும்னு மக்களே பேசுற அளவுக்கு இருக்கு" என்றனர் தயாரிப்பு குழுவினர்.

"ம்ம் கல்ச்சர்னு பேசுனாலே பிடிக்க மாட்டேங்குது இந்த காலத்து பசங்களுக்கு" என சிரித்தார் கேமரா மேன்.

"அடுத்த நிமிஷம் என்ன நடக்கும்னு தெரிய மாட்டேங்குது, நம்மளையே காப்பாத்திக்க வழியில்ல இதுல கல்ச்சர காப்பாத்தி என்ன செய்ய போறோம் சார்?" என நாயகி சொல்லி சிரிக்க, உடன் சேர்ந்து சிரித்தனர் மற்றவர்கள். இப்படி தான் அன்றைய இடைவெளி பொழுதுகள் எல்லாம் கழிந்தது அவர்களுக்கு.

மாலை ஆறு மணி பல்லவி படப்பிடிப்பு தளம் வந்துவிட, எல்லோரும் அவளிடம் நன்முறையில் தான் பேசினர். கொஞ்சம் கலகலப்பான ஆள் தான் அவள். எந்தவித விகல்பமும் இன்றி குஹனுக்கும் மரியாதை அணைப்பை கொடுத்து விலகி நின்றாள். காசிப்ஸ் என அவள் கடந்து வந்தவைகள் பல, அதனால் இதை அவள் பெரிதாக எடுக்கவே இல்லை. அவளுக்கு குஹனிடம் பிடித்தமும் மரியாதையும் அதிகம். அது அப்படியே தான் இருந்தது.

"திடீர் டிஷிசன்ல உங்கள ஆட் பண்ண வேண்டியதா போச்சு. லாஸ்ட் மூவி ஹிட் இப்ப உங்கள ஆட் பண்ணிருக்கிறது ப்ரோமோஷனா தான். சீன்லாம் எதுவும் இல்லை. ஹீரோ ஹீரோயின் பார்ட்டிக்கு பப்புக்கு வந்த இடத்துல ஒரு டாப் ஹீரோயினான உங்கள மீட் பண்றாங்க. நீங்க கூட சேர்ந்து ரெண்டு ஸ்டெப் ஆடுறீங்க. தேட்ஸ் இட்" என குஹன் சொல்ல, மொத்த செட்டும் கேட்டு நின்றது.

"டன் சார். லெட் மீ ப்ராக்டீஸ் எ ஃப்யூ" என சிறிது நேரம் பயிற்சி எடுக்க அனுமதியும் கேட்க, அவன் நடன இயக்குனரை திரும்பி பார்க்க,

"நா அசிஸ்ட்ட அனுப்புறேன் சார்" என நடன இயக்குனர் அவரின் உதவி நடன இயக்குனரை அனுப்பிவிட, பல்லவி அவள் வேலையை பார்க்கச் சென்றுவிட்டாள்.

'என்ன சப்புன்னு முடிஞ்சுட்டு!' என தான் எல்லோரின் எண்ணமும். ஆனாலும் குஹனும் பல்லவியும் இவர்கள் முன் எதையும் காட்டிக்க விரும்பவில்லை என்று தான் அதற்கும் காரணம் எண்ணிக்கொண்டனர். நெருப்பில்லாமல் புகையாது என்பதாக, குஹனுக்கும் பல்லவிக்கும் இடையில் எதுவும் இல்லாமல் பௌர்ணமி இப்போது திடீரென விவாகரத்து கேட்டிருக்க வேண்டியதுமில்லை, மீடியாக்கள் அதற்கு நேரடியாகவே பல்லவியை காரணகர்த்தாவாக கூறபோவதும் இல்லை என முழுமையாக நம்பினர்.

மீண்டும் படப்பிடிப்பு துவங்க ஒருமணிநேரம் பிடித்தது, ஐந்து நிமிட பாட்டில் பல்லவியின் நடனம் இரண்டு நிமிடங்கள் இருக்குமாறு பார்த்துக்கொள்ள சொல்லியிருந்தான் குஹன். அவள் அதை பயின்று அதற்கு ஏற்ற குட்டி உடையிலும் வந்து நின்றாள். ஆனால் சரியாக அவள் உடல் வாகுக்கு அது பொருந்தவில்லை. அது படத்தின் நாயகிக்காக தைக்கப்பட்டிருந்தது, இருவரும் ஒரே உயரம், எடை கொண்டவர்கள் தான் அதனால் பொருந்திவிடும் என இவன் நினைத்திருக்க அது சொதப்பியிருந்தது.

"ம்ம்கூம். ட்ரஸ் செட்டாகல பல்லவி. உங்களுக்கு இன்னைக்கு ஷுட் வேணாம். நீங்க கிளம்புங்க. நாளைக்கு காஸ்ட்யூம் ரெடி பண்ணிட்டு உங்க போர்ஷன் மட்டும் எடுக்கலாம். ஒரே ஷாட்டா எடுக்குற மாதிரி ப்ராக்டீஸ் பண்ணிங்கோங்க" என அவன் முடித்துவிட, மறுநாளும் அந்த பார்ட்டி ஹாலை முன்பதிவு செய்யும் ஏற்பாட்டில் தயாரிப்பு குழு சென்றுவிட்டது.

ஒன்பது மணி வரை ஷுட்டிங் சென்றுவிட, பல்லவியோடு ஆட வேண்டிய நிமிடங்களை தவிர்த்து மற்ற எல்லாவற்றையும் எடுத்து முடித்துவிட்டே அன்றைய படப்பிடிப்பு முடிவிற்கு வந்தது.

கிளம்பும் முன், "நம்பி. பல்லவி காஸ்ட்யூம்ம எடுத்துட்டு வாங்க" என சொல்லி அவன் ப்ரஷாக கேரவனுக்குள் செல்ல, நம்பி அந்த உடையை உதவி இயக்குனர்களிடம் சென்று கேட்டு வாங்க, "ரூம்ல வச்சு அளவெடுத்து அவரே தச்சு கொண்டு வருவாரா இருக்கும்" என ஜாலியாக கலாய்த்து சென்றனர் மற்றவர்கள்.

"சிமி மேடம் வந்துருக்காங்களா?" என சரியாக கேட்டது குஹனின் உதவி இயக்குனர்கள் மட்டுமே.

"ம்ம்" என முடித்துக்கொண்டு கிளம்பிவிட்டான் அஞ்சாநம்பி.

செல்லும் வழியில், உடை சீரமைப்புக்கு(ஆல்ட்ரேஷன்) தேவையானவற்றையும் வாங்கி வர சொல்லி அஞ்சா நம்பியை பாதியில் இறக்கி விட்டுவிட்டு தான் சென்றான் குஹன்.

அடுத்து அவன் அவனது விடுதி வந்ததும் நேராக சென்று நின்றது பௌர்ணமி அறைக்கு முன் தான். இதற்கு முன்னர் இப்படியெல்லாம் வேலை முடித்த கையோடு பரபரப்பாக அவளை தேடிக் கொண்டு சென்று நின்றதில்லை, நின்றதாக ஞாபகமும் இல்லை. எங்கு சென்றுவிடுவாள் வீட்டில் தானே இருப்பாள் என்ற அலட்சியம் இருந்ததோ என்னவோ. அவன் வேலை தான் மண்டையில் எப்போதும் குடைந்த வண்ணம் இருக்கும். ஆனால் இந்த மூன்று நாட்களில் இருபது வருடத்திற்கும் சேர்த்து யோசிக்க வைத்திருந்தாள்.

"அதான்டா சிலுப்பி உன்ன மேலேயும் கீழேயுமா அதிசயமா பாக்குறா" என நினைத்து இப்போது சிரித்தும் கொண்டான்.

ஹரிணி தான் வந்து கதவை திறந்தாள், "லென்ஸ் வ்யூல என்னைய பார்த்தியா ஹரிணி?" என கேட்டே உள்ளே வந்தான்.

"சாரிப்பா அம்மாவா தான் இருக்கும்னு ஓபன் பண்ணிட்டேன்" என காதை பிடித்து நின்றாள் அவள்.

"பீ க்ளவர்டா ஹரிணி" என‌ அவள்‌ கன்னம் தட்டியவன், "அம்மா எங்க?" என கேட்க,

"அம்மா ஸ்விம்மிங். நானும் கிருத்தியும் செஸ் விளையாடுறோம்"

"சரி நா லாக் பண்ணிட்டே போறேன். ரெண்டு பேரும் ரெடி ஆகுங்க, அம்மாவ கூட்டிட்டு வரேன். டின்னர் போலாம்" என அப்படியே சட்டை கையை மடக்கி மேலேற்றிக் கொண்டு குதூகலமாக கிளம்பிவிட்டான்.

இவன் சென்ற நேரம், பல்லவியும் அவன் மனைவியும் எதிர் எதிர் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்படியும் சொல்லிவிட முடியாது பல்லவி ஏதோ பேசியபடி நிற்க, இவன் மனைவி கையைக் கட்டி விரைத்து நின்றபடி அவளை கவனித்திருந்தாள்.

அவள் நின்ற விதத்தில் நிதானமானவன் சுருங்கிய புருவத்துடன் தான் அவர்களை நெருங்கினான்.

"உங்க டிஷிசன் தான் ஃபைனல் சிமி. திங்க் அண்ட் டிசைட்" என பல்லவியின் இறுதி வாக்கியத்தை கேட்டவாறே அவர்களை நெருங்கினான்.

இவனை கண்டதும், எந்தவித மாற்றமும் இன்றி, "ஹாய் சார்!" என பல்லவி கையசைக்க, "ஹாய் பல்லவி!" என்றான்.

பின்னர், "முடிஞ்சதா சித்து. டின்னர் போணும்?" என மனைவியிடம் கேட்க,

"ம்ம்!" என மட்டும் தலையை அசைத்தாள் பௌர்ணமி.

"பை பல்லவி!" என சொல்லி பௌர்ணமியோடு திரும்பி நடக்கவிருந்தவன், ஒரு நொடி நின்று, "சித்து! பல்லவிக்கு காஸ்ட்யூம் செட்டாகல அத கொஞ்சம் ஆல்ட்ரேஷன் பண்ணி தரணும் நீ. அதுக்கு பல்லவி வேணும்னா சொல்லு அவங்க அவங்கள அவாய்லபிள் பண்ணிப்பாங்க" என கூறி, "ஓகே தானே பல்லவி?" என அவளிடமும் கேட்க,

பௌர்ணமி அவனை முறைத்து பார்த்து, "முதல்ல நா ஓகே சொல்லணும் குஹன்" என்க,

"ப்ளீஸ்டி சித்து. நாளைக்கு ஷுட்ட முடிச்சுடுற ப்ளான். பல்லவி போர்ஷன் மட்டும் தான் பென்டிங்"

"ஹீரோயினுக்கு அவங்க கலர் ஷேடுக்கு ரெடி பண்ண ட்ரெஸ் அது எல்லாம். இவங்களுக்கு எப்படி ஷுட்டாகும்?"

"பார்ட்டி லைட் தான் செட்டப். சோ கலர் இஷ்யூ இல்ல, நீ ஃபிட்டிங் மட்டும் பார்த்தா போதும்"

"பேமென்ட்?"

"அது ஜெயராமன்ட்ட நா பேசிக்கிறேன்"

"வில் ட்ரை" என்றாள் அப்போதும்.

"யூ கேன் டி" என அவளை தோளோடு அணைத்து அவன் தட்டிக் கொடுக்க, இருவரையும் மாறி மாறி பார்த்து நின்றாள் பல்லவி.
 
Top