மகா சமுத்ரா
Moderator
நயனங்களால் பேசாதேடி
என் நச்சினார்க்கினியா!
நா வழி நவிழ்.
வேதபோதனின் உரைகளை
ஓரம் வை!
காதல்தேவனின் கதைகளுக்கு
நியாயம் செய்!
பாய்ந்து வரும் அலக்நந்தாவாம் பத்ரியின் வழி
பாசுரம் பல பாடுதடி
நம் காதலைக் கண்டு!
நாசி வழி வரும் காற்று கூட
நின் நாமத்தையே நவிழுதே...
எதிரே நீ இருக்க
என்னுலகம் உன்னில் சுருங்குதடி
விழி அகற்ற முடியவில்லை!
விருப்பமுமில்லை!
காலம் முழுமையும் வேண்டும் உன்னுடன்!
அவா பெருகுதடி!
ஆயுள் நீளுதடி!
அழகு கூடுதடி!
என் இல்லக் கண்ணாடிக்கூட வெட்கி நாணுதடி
ஏனோ! ரசனை எழவில்லை
நின்முகத்தைப் பார்க்கும் வரை...
உன்னாலே கவிஞனானேன் இன்று
என் கவிதைகளுக்கு உயிர் கொடு வா!
எல்லையில்லா என் காதலே...
என் நச்சினார்க்கினியா!
நா வழி நவிழ்.
வேதபோதனின் உரைகளை
ஓரம் வை!
காதல்தேவனின் கதைகளுக்கு
நியாயம் செய்!
பாய்ந்து வரும் அலக்நந்தாவாம் பத்ரியின் வழி
பாசுரம் பல பாடுதடி
நம் காதலைக் கண்டு!
நாசி வழி வரும் காற்று கூட
நின் நாமத்தையே நவிழுதே...
எதிரே நீ இருக்க
என்னுலகம் உன்னில் சுருங்குதடி
விழி அகற்ற முடியவில்லை!
விருப்பமுமில்லை!
காலம் முழுமையும் வேண்டும் உன்னுடன்!
அவா பெருகுதடி!
ஆயுள் நீளுதடி!
அழகு கூடுதடி!
என் இல்லக் கண்ணாடிக்கூட வெட்கி நாணுதடி
ஏனோ! ரசனை எழவில்லை
நின்முகத்தைப் பார்க்கும் வரை...
உன்னாலே கவிஞனானேன் இன்று
என் கவிதைகளுக்கு உயிர் கொடு வா!
எல்லையில்லா என் காதலே...
Last edited: