kalaisree
Moderator
அத்தியாயம்-01
வெளுத்துப்போன மஞ்சள் நிற பலகையில் பஞ்சவர்ணபுரம் என்ற கருநிற எழுத்துக்கள் உதிர்ந்து போய் அந்த ஊரின் நிலையைப் பறைசாற்றியது.
பேருக்கு தார் ரோடு என்று இருக்க,நூறு மீட்டருக்கு ஒரு முறை குண்டும் குழியும் தங்கள் வருகையை பறைசாற்றியது.
அந்த உயர்தரக் கார் மேடு பள்ளங்களை அனாசியமாக கடந்தது.
ஆனால், காரை செலுத்திக் கொண்டிருந்தவனின் வதனமோ ஒவ்வொரு ஏற்ற இறக்கங்களுக்கும் கோபத்தில் சிவந்தது.
ஸ்டேரிங் வீலினை பற்றி இருந்தக் கரத்தின் அழுத்தத்தை கூட்டினான்.
மேலும் இரண்டு கிலோ மீட்டருக்கு இவ்விதமானப் பயணமே தொடர அதற்கு மேல் முடியாமல், "அம்மா என்ன கண்றாவி ரோடு இது " என்று எரிச்சலுடன் சிடுசிடுத்தான் .
தென்னிந்தியாவின் புகழ்பெற்ற இயக்குனர் ஆத்ரேயன்.
ஆறடி உயரம், தேவையற்ற சதைகள் இல்லாதக் கட்டுக்கோப்பான தேகம்.நெற்றியில் அலை என புரளும் கேசத்தை ஜெல் வைத்து அடக்கி இருந்தான்.
கரு நாவல் பழ நிற சர்ட் அவனின் மாநிறத்தை இன்னும் எடுப்பாகக் காட்டியது.
அளவான மீசை தாடி. கருப்பு நிற பிரேம் உடன் கூடிய மெல்லிய கண் கண்ணாடி.வசீகரமான முகம் என அவன் இயக்கம் திரைப்பட ஹீரோவிற்கு சளைக்காமல் மிளிர்ந்தான்.
தென்னிந்தியாவின் வெற்றி இயக்குனரில் ஒருவராக கடந்த ஐந்து வருடங்களாக உள்ளான்.
வருடம் இரண்டு படங்கள் கண்டிப்பாக வந்து விடும். ஆக்சன் மசாலா படங்களில் பின்னி எடுப்பவன் உணர்வுகளுடன் கூடிய காதல் கதைகளில் கண்ணீரை வரவழைத்து விடுவான்.
ஒரே மாதிரியான கதைகளை செய்யாமல் முரணான கதைகளையும் தேர்ந்தெடுத்து அதை வெற்றி படமாக மாற்றும் திறமை கொண்டவன்.
திரைக்கு வந்து இரண்டே வருடத்தில் தேசிய விருதைப் பெற்றப் பெருமையும் இவனை சாரும்.
தெலுங்கு மற்றும் தமிழில் பெரும் புகழை பெற்ற இயக்குனர்களில் ஒருவன்.
முன்னணி நடிகர்களே இவனின் கதைக்காக காத்துள்ளனர்.
முதல் படம் மட்டுமே தந்தையின் புரொடக்ஷன் மூலம் உருவானது மற்ற அனைத்துமே அவன் திறமையை தேடி வந்த வாய்ப்புகள்.
அதை சரியாகப் பயன்படுத்தி இப்போது திரைத்துறையில் கொடிகட்டி பறக்கிறான்.
குறித்த நேரத்தில் படத்தை முடித்து கொடுப்பதிலும் வல்லவன். இரண்டு மாதத்தில் சூட்டிங்கை முடித்து விடுவான்.
ஐந்து மாதம் ஒரு படத்திற்காக கடுமையாக வேலை பார்ப்பவன் ஒரு மாதம் முழுக்க ஓய்வை எடுத்துக் கொள்வான்.
அந்த நேரத்திலே அவனுக்கு அடுத்த கதைக்கானக் கருவும் கிடைத்து விடும்.
அடுத்த கதைக்கான அனைத்தையும் இறுதி பத்து நாட்களில் முடித்து விடுவான்.
முதல் 10 நாட்கள் முழுக்க முழுக்க அவனுக்கான ஓய்வு நாட்கள்.
அந்த நாளில் தான் அவனின் தாய் அன்னபூரணி அவனை மொட்டை காட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.அந்த கோபம் குறையாமல் தாயிடம் காட்டினான்.
"அதுக்கு நான் என்ன பா பண்ணுவேன்" என்று அவன் எரிச்சலுக்கு முற்றிலும் மாறான சாந்தமான குரலில் பதில் அளித்தத் தாயை இயன்றவரை முறைத்து தள்ளினான்.
பாதையில் கண்களைப் பதித்தவன்.
எரிச்சலுடனே, "அஞ்சு மாசம் சரியா அஞ்சு மாசம். ராத்திரி தூக்கம் இல்லாமல் ஒழுங்கான சாப்பாடு இல்லாமல் இராப்பகலா கஷ்டப்பட்டு,இப்போதான் ஒரு மாசம் ரெஸ்ட் கிடைச்சிருக்கு.அதில் ஒரு நாளை கூட முழுசா அனுபவிக்க விடாமல் இப்படி ஒரு மொட்டை காட்டுக்கு கூட்டிட்டு வந்து இருக்கீங்க. இது நியாயமா? "என்றதும்,
அவர் முகத்தை பாவமாக வைத்து கொள்ள இன்னும் எரிச்சலுடன், " சிக்னல் இல்லை சரியான ரோடு இல்லை, ஒன்றரை மணி நேர டிராவலில் ஒரு பெட்டிக் கடை கூட இல்லை "
" இந்த ஊரை தான் பொன்விளைகிற பூமி, எங்க ஊரு மாதிரி வருமானு அப்பா கிட்ட ஃபிலிம் ஓட்டிட்டு இருந்தீங்களா "என்று எரிச்சலுடன் நக்கல் அடித்தான்.
" கோபப்படாதே டா".
" கோபப்படாமல் என்ன பண்ண சொல்றீங்க" என்று அதற்கும் எரிந்து விழ,
அவரிடம் இருந்து சத்தம் வரவில்லை என்றதும் திரும்பிப் பார்க்க, கண்கள் கலங்க அவர் அமர்ந்திருப்பதை கண்டதும் பெருமூச்சுடன் சாந்தமான குரலில், மாம் என்று அழைக்கவே அதற்காகவே காத்திருந்தது போல்,
" ஒரு வருஷம் சரியா 365 நாளும் சென்னை தான். அதை தாண்டி எங்காவது போய் இருக்கேனா. ஃபாரின் சூட்டிங் எல்லாம் நீ கூப்பிட்ட போதும் வரலை. ஏன்? " தலைசிறந்த இயக்குநர் இடமே அவன் தாய் ரீல் ஓட்ட ஆரம்பிக்க,
கண்களை சுருக்கி அவரை ஆராய்ச்சியுடன் பார்த்துக் கொண்டே "ஏன் "என்றான்.
"உங்க அப்பா இறந்த இந்த ஐந்து வருஷத்தில் எங்கேயும் வெளியே போக பிடிக்கலை. நான் உண்டு என் கேட்டரிங் பிசினஸ் உண்டுன்னு இருக்கேன்"
"அப்படிப்பட்ட நான்.. க்கும்... நான் ஆசைப்பட்டு கேட்ட ஒரே விஷயம் என்ன தங்கமா வைரமா.. ஒரே ஒரு தடவை பொறந்த ஊருக்கு போகணும்.அதுவும் எதுக்காக கேட்டேன் சும்மா சுத்தவா. என் தம்பி பொண்ணு கல்யாணத்தை பாக்கணும்னு தானே... அவன் கூட பேசியே பல வருஷம் ஆச்சு. சரி பழையக் கதை எல்லாம் எதுக்கு".
"அவனும் எனக்காகவே உன்னோட லீவு நாளைப் பார்த்து கல்யாணத்தை வச்சிருக்கான். அப்படிப்பட்டவனோட பொண்ணு கல்யாணத்தைப் பார்க்க ஒரு ரெண்டு நாள், ஒரு ரெண்டு நாள் மட்டும் உன்னால் ஒதுக்க முடியலயில்லை" என்று மூக்கை சிந்த ஆரம்பிக்க,
அவருடையது அப்பட்டமான நடிப்பு என்று தெரிந்த போதிலும் மறுத்து பேச முடியாமல் "சரி ம்மா புலம்புதீங்க" என்று தன் வாதத்திலிருந்து பின்வாங்கினான்.
மற்றவரிடம் பேசுவது போல் கறாராகப் பதில் அளிக்க முடியாமல், தாய் பாசம் கட்டி போட்டது.
மௌனமாக காரை ஓட்ட ஓரளவு ஊர் வந்ததும், அன்னபூரணி கார் கண்ணாடியை திறக்க மகனின் உஷ்ண பெருமூச்சு புரிந்தாலும்,
" ஈஈ ஊர்வாசத்தை சுவாசிக்கணும்டா. எத்தனை வருஷம் ஆச்சு" என்று சிறுபிள்ளை என பல்லை காட்டியவரிடம், கோபப்பட முடியாமல் அவன் பாதையில் கவனத்தை செலுத்த,
சில நிமிடங்களிலே காதினருகே அணுகுண்டு வெடிப்பு ஏற்பட்டது போல், இரைச்சலுடன் ஸ்பீக்கரில் இருந்து பாடல் கேட்க,மகனின் கோபம் புரிந்து ஜன்னலை ஏற்றி இருந்தார்.
"என்ன லூசு தனம் இது" என்று அவன் பொரிய,' சமாளிச்சுட்டோம்னு நினைச்சோமே' என்று எண்ணியபடி முகத்தை பாவமாக வைத்துக் கொண்டவர்.
" விடுடா ஊர் கல்யாணம் இல்லை. அப்படி தான் இருக்கும் "என்றதும், அவன் முறைக்க அவர் சிரிக்க, அவரை மேலே கடிய மனம் இல்லாமல் எரிச்சலுடன் காரை செலுத்தியவனுக்கு தலைவலியே வந்து விட்டது.
கடுப்புடனே பந்தல் இடப்பட்டிருந்த அந்த மண்டபத்தின் முன் காரை நிறுத்தினான்.
கதவை திறந்ததும் பாடல் காதின் செவிப்பறையை அதிரசெய்ய எரிச்சலுடன் நிமிர்ந்தவன்.
என்னடா எய்ட்டீன்ஸ்க்கு வந்துட்டோமா என்று எண்ணும் அளவு அத்தனை பழைய மண்டபமும், திருமண அலங்காரமும்.
சலிப்புடன் தலையாட்டி கொண்டவன். தாயும் அந்த சத்தத்தை தாங்க முடியாமல் காதை பொத்தியபடி இறங்குவதை கண்டு மெல்லிய சிரிப்புடன், அவர் கரங்களை பற்றியப்படி மண்டபத்திற்குள் நுழைந்தான்.
வரவேற்பவர்களின் பேச்சு சத்தம் கூட கேட்காத அளவு ஸ்பீக்கர் ஒலிக்கவே மண்டபத்தில் பார்வையை சுழற்றினான்.
50 அல்லது 60 பிளாஸ்டிக் சேர்கள் போடப்பட்டு அதில் அனைவரும் அமர்ந்திருக்க எதிரே, நடுநாயகமாக மணமேடை அமைக்கப்பட்டு ஓமக் குண்டம் எரிந்து கொண்டிருந்தது. ஐயர் மந்திரத்தை ஓதிக் கொண்டிருந்தார்.
வலப்புறம் நாதஸ்வரம் மற்றும் மேளம் வாசிப்பவர்கள் தங்களின் பணியை செய்வெனே செய்து கொண்டிருக்க,அந்த மொத்தக் காட்சிகளும் பாரதிராஜாவின் படங்களை தான் நினைவு படுத்தியது.
என்ன அப்படங்களை பார்க்கும் போது வரும் இதம் வராமல், இப்போது தலைவலி வந்தது.
கோபத்துடன் இன்னும் மண்டபத்தில் பார்வையை சுழற்ற,பழைய செட்டப்புடன் இருவர் ஒலியின் அளவை கூட்டுவதும் குறைப்பதுமாக அமர்ந்திருந்தனர்.
அழுத்தமாக அவர்களைப் பார்த்திருக்க, அவன் விழிவீச்சை உணர்ந்தது போல் திரும்பியவர்கள்.
அவன் சத்தத்தை குறைக்கும் படி சைகை காட்டவும் அவனின் முறைப்பையும் தோரணையும் கண்டு பயத்துடன் பாடலை நிறுத்தினர்.
தாயைக் காண அவர் உறவுகளுடன் ஐக்கியமாகிவிட்டதைக் கண்டு, ஒரு பெருமூச்சுடன் மேல் பட்டனை கழட்டி விட்டவாறு மண்டபத்தின் முன் இருக்கையில் அமர்ந்து கொண்டான்.
டக் டக் என்ற சத்தத்தில் நிமிர்ந்து பார்க்க எப்பொழுது வேண்டும் என்றாலும் உயிரை விடும் நிலையில் சீலிங் ஃபேன் மெதுவாக சுற்றிக் கொண்டிருந்தது.
கடுப்புடன் பல்லை கடித்தவன். தனது மொபைலை எடுத்துக் கொண்டான்.
படத்திற்கான கதை தோன்றியதுமே மொபைலில் அல்லது கையடக்க நோட்டில் குறித்து வைத்துக் கொள்வான்.
திருமணத்தில் கவனத்தை செலுத்த விருப்பமில்லை என்பதால், இப்பொழுது தயார் செய்து வைத்த தனது திரைக்கதையை சரி பார்க்க ஆரம்பித்தான்.
அடுத்த சில நிமிடத்திலே அதில் ஒன்றிப் போனான்.
சுற்றிலும் நடக்கும் கூச்சல், குழப்பம், காற்று இல்லாத அறை, உஷ்ணத்தை தெறிக்கும் காற்று எதையும் கண்டுகொள்ளாமல் முழு கவனமும் திரைக்கதையின் திருத்தங்களை மேற்கொள்வதில் படிந்தது.
"கண்ணா" என்ற சத்தத்துடன் தோளை உலுக்கிய தாயின் செயலில் தான் உணர்வு பெற்று, " என்னமா" என்றப்படி நிமிர்ந்தான்.
அவனிடம் மஞ்சள் தாலியை கொடுத்து "இந்த டா" என்க,
" மாம் எனக்கு இந்த ஃபார்மாலிட்டிஸ் எல்லாம் பிடிக்காது. நீங்களே தாலி எடுத்து குடுங்க " என்று விட்டு மீண்டும் அவன் போனில் முழ்க போக,
"கண்ணா விளையாடாதே. ஒழுங்கா இந்த தாலியை பொண்ணு கழுத்தில் கட்டு "என்றதும் விக்கித்து போனான்.
"அம்மா" என்று அதிர்ந்து போய் அழைக்க," எதுவும் பேசக்கூடாது.இப்பவே இந்த தாலியை திகழ் கழுத்தில் கட்டு" என்றார் அடமாக.
திகழா என்ற முணுமுணுப்புடன் மேடையை பார்க்க தலைகுனிந்தபடி கழுத்தில் மாலையுடன் ஒடிசலாக ஒரு பெண் அமர்ந்திருக்க, அவளின் அருகில் அன்னபூரணியின் தம்பி அம்மையப்பன் சட்டை கிழிய நின்றிருந்தார்.
'இதெல்லாம் எந்த நேரத்தில் நடந்தது' என்று எரிச்சலுடன் நெற்றியை பிடித்துக் கொண்டவனுக்கு திருமணம் செய்யும் எண்ணம் சிறிதும் இல்லை.
எனவே, " மாம் பி சீரியஸ். நான் டைரக்ட் பண்ற படத்தில் கூட இந்த மாதிரி சீன்ஸ் எல்லாம் வரலை. என் வாழ்க்கையிலும் வரவச்சடாதீங்க. ஐ அம் நாட் இன்ட்ரஸ்ட் இன் மேரேஜ்" என்று திட்டவட்டமாக மறுத்தான்.
" டேய் கண்ணா. அம்மா வாக்கு கொடுத்துட்டேன். ஒழுங்கா வந்து தாலி கட்டு இல்லைனா" என்றதும்,
"போதும் எமோஷனல் ட்ராமா எல்லாம் பண்ணாதீங்க" என்று அவர் பேச்சை கத்திரித்தான்.
"முதலில் இந்த தாலியை எங்கே எடுத்தீங்களோ.அங்கேயே வெச்சுட்டு ஒழுங்கா என்கூட வாங்க. போலாம். இங்கே வந்து உங்களுக்கு மூளை குழம்பிடுச்சு" என்று எரிச்சலுடன் படப்படத்தான்.
" ஆமாடா ஆமா. நான் பைத்தியம் தான். ஆனால் உன்னை பெத்தவ நான் தானே. ஒழுங்கா வந்து தாலி கட்டு. இல்லைனா இந்த அம்மாவை பிணமா தான் பார்ப்ப".
"அம்மா சம்பந்தம் இல்லாமல் பேசி தொலையாதீங்க கடுப்பாகுது"என்று எரிச்சலுடன் கத்த, உடனே அவன் கையைப் பற்றியவர்.
" தப்புதான் உன் மனநிலை புரியுது. ஆனால் வேற வழியில்லை. வாழ்வா சாவானு தம்பி குடும்பமே தவிக்குது. மாமாவை ரொம்ப அசிங்க படுத்திட்டாங்க. இப்போ திகழுக்கு கல்யாணம் நடக்கலைன்னா, இன்னும் அசிங்கமா போய்டும். அம்மா உன்கிட்ட இனிமேல் எதுவும் கேட்க மாட்டேன் இது மட்டும் பண்ணுடா கண்ணா ப்ளீஸ்டா. காலா நினைச்சுக்கறேன் டா " என்று கையை அழுத்தமாக பற்ற, அம்மா என்ற சத்துடன் கையை உதறியவன்.
சுற்றிலும் பார்வையை பதித்தான்.
அனைவரின் கவனமும் தங்கள் இருவரின் மீது இருப்பது, இன்னும் எரிச்சலை தந்தது.
"என்னதான் பிரச்சனை".
"அதெல்லாம் பேசுறதுக்கு நேரமில்லை முதலில் தாலியை கட்டுடா. முகூர்த்த நேரம் முடிய போகுது".
" மாம் கடுப்பை கிளப்பாதீங்க. ஒழுங்கா என்ன நடந்ததுன்னு சொல்லுங்க ".
" ஃப்ளாஷ் பேக் போக நேரமில்லை கண்ணா. முதலில் தாலியை கட்டு. அப்பறம் பொறுமையா சொல்றேன். இப்பயும் உன் மனசு மாறலைன்னா சொல்லு காலில் விழறேன்" என்று அவர் முன்னேற,
எரிச்சலுடன் அவர் கையில் இருந்த தாலியை பற்றியவன்.
" அநியாயத்துக்கு ஆக்டிங் பண்றீங்க மா.வொஸ்ட் ஆக்டிங் ஆனால்..." என நெற்றியில் அறைந்து கொண்டவன்.கோபத்துடன் மணமேடை ஏறினான்.
அம்மையப்பன் நன்றியுடன் அவன் கையை பற்ற போக, "எங்க அம்மாவுக்காக மட்டும் தான்".
அவரின் கையை உதறி கொண்டு மனையில் அமர வர,"தம்பி செருப்பு போட்டுட்டு உக்காரக்கூடாது" என்ற அர்ச்சகரின் குரலில் இன்னும் கடுப்பு ஏற, செருப்பை உதறி தள்ளி விட்டு அமர்ந்தான்.
அருகில் அமர்ந்து இருந்தவளோ விட்டால் அக்னியில் தலையை கொடுத்து விடுவாள் போல அந்த அளவு குனிந்து இருந்தாள்.
அதில் இன்னும் எரிச்சல் பெருக,
"இன்னும் கொஞ்சம் தலையை தள்ளு அப்படியே தலை பொசுங்கி போகட்டும். அடி ச்சி ஒழுங்கா உட்காரு" என்று எரிந்து விழ,
ஐயர் மந்திரத்தை நிறுத்திவிட்டு அவனை அதிர்ந்து பார்க்க, " உனக்கு என்னய்யா ஒழுங்கா ஓது " என்று அவரின் மீதும் கோபத்தைக் காட்டினான்.
கலிகாலம் என்று நொந்து கொண்ட படி, "மாங்கல்யம் தரணம் பண்ணுங்கோ கெட்டிமேளம் கெட்டிமேளம்" என்றதும் கையில் இருந்த தாலியை அவள் கழுத்தின் அருகில் கொண்டு சென்றவன்.
" இப்பயாவது நிமிர போறியா இல்லை. மாட்டுக்கு மூக்கணா கயிறு கட்டுற மாதிரி தான் கட்டணுமா " என்று பற்கள் இடையே வார்த்தைகளை கடித்து துப்ப, கலங்கிய விழிகளுடன் அவனை ஏறிட்டு பார்த்தாள்.
கல்யாண மேக்கப் என ஐந்து கோட்டிங் பெயிண்டை வாரி இரைத்து அவள் உண்மையான அழகை மறைத்து இருக்க,கண்களிலும் உதட்டிலும் பூசி இருந்த அழகு சாதன பொருட்களோ தன் உயிரை விட்டிருந்ததில் அவன் திகைத்து,
"காஞ்சூரிங் பேய்க்கே டஃப் கொடுக்க போல" என்று அவளிடமே கூற, அதிர்ந்து அவனைப் பார்க்க தாலியை கட்டப் போனவன்.
"உனக்கு விருப்பமா இல்லையா" என்று கடுப்புடன் கேட்டான்.
"வாழவே வழியில்லாதவளுக்கு தேர்ந்தெடுக்கிற உரிமை இல்லை" என்று அவள் விரக்தியாக மொழிய, " அப்ப சரி "என்றப்படி அவள் கழுத்தில் மூன்று முடிச்சுட்டு தன்னவளாக்கி கொண்டான்.
வெளுத்துப்போன மஞ்சள் நிற பலகையில் பஞ்சவர்ணபுரம் என்ற கருநிற எழுத்துக்கள் உதிர்ந்து போய் அந்த ஊரின் நிலையைப் பறைசாற்றியது.
பேருக்கு தார் ரோடு என்று இருக்க,நூறு மீட்டருக்கு ஒரு முறை குண்டும் குழியும் தங்கள் வருகையை பறைசாற்றியது.
அந்த உயர்தரக் கார் மேடு பள்ளங்களை அனாசியமாக கடந்தது.
ஆனால், காரை செலுத்திக் கொண்டிருந்தவனின் வதனமோ ஒவ்வொரு ஏற்ற இறக்கங்களுக்கும் கோபத்தில் சிவந்தது.
ஸ்டேரிங் வீலினை பற்றி இருந்தக் கரத்தின் அழுத்தத்தை கூட்டினான்.
மேலும் இரண்டு கிலோ மீட்டருக்கு இவ்விதமானப் பயணமே தொடர அதற்கு மேல் முடியாமல், "அம்மா என்ன கண்றாவி ரோடு இது " என்று எரிச்சலுடன் சிடுசிடுத்தான் .
தென்னிந்தியாவின் புகழ்பெற்ற இயக்குனர் ஆத்ரேயன்.
ஆறடி உயரம், தேவையற்ற சதைகள் இல்லாதக் கட்டுக்கோப்பான தேகம்.நெற்றியில் அலை என புரளும் கேசத்தை ஜெல் வைத்து அடக்கி இருந்தான்.
கரு நாவல் பழ நிற சர்ட் அவனின் மாநிறத்தை இன்னும் எடுப்பாகக் காட்டியது.
அளவான மீசை தாடி. கருப்பு நிற பிரேம் உடன் கூடிய மெல்லிய கண் கண்ணாடி.வசீகரமான முகம் என அவன் இயக்கம் திரைப்பட ஹீரோவிற்கு சளைக்காமல் மிளிர்ந்தான்.
தென்னிந்தியாவின் வெற்றி இயக்குனரில் ஒருவராக கடந்த ஐந்து வருடங்களாக உள்ளான்.
வருடம் இரண்டு படங்கள் கண்டிப்பாக வந்து விடும். ஆக்சன் மசாலா படங்களில் பின்னி எடுப்பவன் உணர்வுகளுடன் கூடிய காதல் கதைகளில் கண்ணீரை வரவழைத்து விடுவான்.
ஒரே மாதிரியான கதைகளை செய்யாமல் முரணான கதைகளையும் தேர்ந்தெடுத்து அதை வெற்றி படமாக மாற்றும் திறமை கொண்டவன்.
திரைக்கு வந்து இரண்டே வருடத்தில் தேசிய விருதைப் பெற்றப் பெருமையும் இவனை சாரும்.
தெலுங்கு மற்றும் தமிழில் பெரும் புகழை பெற்ற இயக்குனர்களில் ஒருவன்.
முன்னணி நடிகர்களே இவனின் கதைக்காக காத்துள்ளனர்.
முதல் படம் மட்டுமே தந்தையின் புரொடக்ஷன் மூலம் உருவானது மற்ற அனைத்துமே அவன் திறமையை தேடி வந்த வாய்ப்புகள்.
அதை சரியாகப் பயன்படுத்தி இப்போது திரைத்துறையில் கொடிகட்டி பறக்கிறான்.
குறித்த நேரத்தில் படத்தை முடித்து கொடுப்பதிலும் வல்லவன். இரண்டு மாதத்தில் சூட்டிங்கை முடித்து விடுவான்.
ஐந்து மாதம் ஒரு படத்திற்காக கடுமையாக வேலை பார்ப்பவன் ஒரு மாதம் முழுக்க ஓய்வை எடுத்துக் கொள்வான்.
அந்த நேரத்திலே அவனுக்கு அடுத்த கதைக்கானக் கருவும் கிடைத்து விடும்.
அடுத்த கதைக்கான அனைத்தையும் இறுதி பத்து நாட்களில் முடித்து விடுவான்.
முதல் 10 நாட்கள் முழுக்க முழுக்க அவனுக்கான ஓய்வு நாட்கள்.
அந்த நாளில் தான் அவனின் தாய் அன்னபூரணி அவனை மொட்டை காட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.அந்த கோபம் குறையாமல் தாயிடம் காட்டினான்.
"அதுக்கு நான் என்ன பா பண்ணுவேன்" என்று அவன் எரிச்சலுக்கு முற்றிலும் மாறான சாந்தமான குரலில் பதில் அளித்தத் தாயை இயன்றவரை முறைத்து தள்ளினான்.
பாதையில் கண்களைப் பதித்தவன்.
எரிச்சலுடனே, "அஞ்சு மாசம் சரியா அஞ்சு மாசம். ராத்திரி தூக்கம் இல்லாமல் ஒழுங்கான சாப்பாடு இல்லாமல் இராப்பகலா கஷ்டப்பட்டு,இப்போதான் ஒரு மாசம் ரெஸ்ட் கிடைச்சிருக்கு.அதில் ஒரு நாளை கூட முழுசா அனுபவிக்க விடாமல் இப்படி ஒரு மொட்டை காட்டுக்கு கூட்டிட்டு வந்து இருக்கீங்க. இது நியாயமா? "என்றதும்,
அவர் முகத்தை பாவமாக வைத்து கொள்ள இன்னும் எரிச்சலுடன், " சிக்னல் இல்லை சரியான ரோடு இல்லை, ஒன்றரை மணி நேர டிராவலில் ஒரு பெட்டிக் கடை கூட இல்லை "
" இந்த ஊரை தான் பொன்விளைகிற பூமி, எங்க ஊரு மாதிரி வருமானு அப்பா கிட்ட ஃபிலிம் ஓட்டிட்டு இருந்தீங்களா "என்று எரிச்சலுடன் நக்கல் அடித்தான்.
" கோபப்படாதே டா".
" கோபப்படாமல் என்ன பண்ண சொல்றீங்க" என்று அதற்கும் எரிந்து விழ,
அவரிடம் இருந்து சத்தம் வரவில்லை என்றதும் திரும்பிப் பார்க்க, கண்கள் கலங்க அவர் அமர்ந்திருப்பதை கண்டதும் பெருமூச்சுடன் சாந்தமான குரலில், மாம் என்று அழைக்கவே அதற்காகவே காத்திருந்தது போல்,
" ஒரு வருஷம் சரியா 365 நாளும் சென்னை தான். அதை தாண்டி எங்காவது போய் இருக்கேனா. ஃபாரின் சூட்டிங் எல்லாம் நீ கூப்பிட்ட போதும் வரலை. ஏன்? " தலைசிறந்த இயக்குநர் இடமே அவன் தாய் ரீல் ஓட்ட ஆரம்பிக்க,
கண்களை சுருக்கி அவரை ஆராய்ச்சியுடன் பார்த்துக் கொண்டே "ஏன் "என்றான்.
"உங்க அப்பா இறந்த இந்த ஐந்து வருஷத்தில் எங்கேயும் வெளியே போக பிடிக்கலை. நான் உண்டு என் கேட்டரிங் பிசினஸ் உண்டுன்னு இருக்கேன்"
"அப்படிப்பட்ட நான்.. க்கும்... நான் ஆசைப்பட்டு கேட்ட ஒரே விஷயம் என்ன தங்கமா வைரமா.. ஒரே ஒரு தடவை பொறந்த ஊருக்கு போகணும்.அதுவும் எதுக்காக கேட்டேன் சும்மா சுத்தவா. என் தம்பி பொண்ணு கல்யாணத்தை பாக்கணும்னு தானே... அவன் கூட பேசியே பல வருஷம் ஆச்சு. சரி பழையக் கதை எல்லாம் எதுக்கு".
"அவனும் எனக்காகவே உன்னோட லீவு நாளைப் பார்த்து கல்யாணத்தை வச்சிருக்கான். அப்படிப்பட்டவனோட பொண்ணு கல்யாணத்தைப் பார்க்க ஒரு ரெண்டு நாள், ஒரு ரெண்டு நாள் மட்டும் உன்னால் ஒதுக்க முடியலயில்லை" என்று மூக்கை சிந்த ஆரம்பிக்க,
அவருடையது அப்பட்டமான நடிப்பு என்று தெரிந்த போதிலும் மறுத்து பேச முடியாமல் "சரி ம்மா புலம்புதீங்க" என்று தன் வாதத்திலிருந்து பின்வாங்கினான்.
மற்றவரிடம் பேசுவது போல் கறாராகப் பதில் அளிக்க முடியாமல், தாய் பாசம் கட்டி போட்டது.
மௌனமாக காரை ஓட்ட ஓரளவு ஊர் வந்ததும், அன்னபூரணி கார் கண்ணாடியை திறக்க மகனின் உஷ்ண பெருமூச்சு புரிந்தாலும்,
" ஈஈ ஊர்வாசத்தை சுவாசிக்கணும்டா. எத்தனை வருஷம் ஆச்சு" என்று சிறுபிள்ளை என பல்லை காட்டியவரிடம், கோபப்பட முடியாமல் அவன் பாதையில் கவனத்தை செலுத்த,
சில நிமிடங்களிலே காதினருகே அணுகுண்டு வெடிப்பு ஏற்பட்டது போல், இரைச்சலுடன் ஸ்பீக்கரில் இருந்து பாடல் கேட்க,மகனின் கோபம் புரிந்து ஜன்னலை ஏற்றி இருந்தார்.
"என்ன லூசு தனம் இது" என்று அவன் பொரிய,' சமாளிச்சுட்டோம்னு நினைச்சோமே' என்று எண்ணியபடி முகத்தை பாவமாக வைத்துக் கொண்டவர்.
" விடுடா ஊர் கல்யாணம் இல்லை. அப்படி தான் இருக்கும் "என்றதும், அவன் முறைக்க அவர் சிரிக்க, அவரை மேலே கடிய மனம் இல்லாமல் எரிச்சலுடன் காரை செலுத்தியவனுக்கு தலைவலியே வந்து விட்டது.
கடுப்புடனே பந்தல் இடப்பட்டிருந்த அந்த மண்டபத்தின் முன் காரை நிறுத்தினான்.
கதவை திறந்ததும் பாடல் காதின் செவிப்பறையை அதிரசெய்ய எரிச்சலுடன் நிமிர்ந்தவன்.
என்னடா எய்ட்டீன்ஸ்க்கு வந்துட்டோமா என்று எண்ணும் அளவு அத்தனை பழைய மண்டபமும், திருமண அலங்காரமும்.
சலிப்புடன் தலையாட்டி கொண்டவன். தாயும் அந்த சத்தத்தை தாங்க முடியாமல் காதை பொத்தியபடி இறங்குவதை கண்டு மெல்லிய சிரிப்புடன், அவர் கரங்களை பற்றியப்படி மண்டபத்திற்குள் நுழைந்தான்.
வரவேற்பவர்களின் பேச்சு சத்தம் கூட கேட்காத அளவு ஸ்பீக்கர் ஒலிக்கவே மண்டபத்தில் பார்வையை சுழற்றினான்.
50 அல்லது 60 பிளாஸ்டிக் சேர்கள் போடப்பட்டு அதில் அனைவரும் அமர்ந்திருக்க எதிரே, நடுநாயகமாக மணமேடை அமைக்கப்பட்டு ஓமக் குண்டம் எரிந்து கொண்டிருந்தது. ஐயர் மந்திரத்தை ஓதிக் கொண்டிருந்தார்.
வலப்புறம் நாதஸ்வரம் மற்றும் மேளம் வாசிப்பவர்கள் தங்களின் பணியை செய்வெனே செய்து கொண்டிருக்க,அந்த மொத்தக் காட்சிகளும் பாரதிராஜாவின் படங்களை தான் நினைவு படுத்தியது.
என்ன அப்படங்களை பார்க்கும் போது வரும் இதம் வராமல், இப்போது தலைவலி வந்தது.
கோபத்துடன் இன்னும் மண்டபத்தில் பார்வையை சுழற்ற,பழைய செட்டப்புடன் இருவர் ஒலியின் அளவை கூட்டுவதும் குறைப்பதுமாக அமர்ந்திருந்தனர்.
அழுத்தமாக அவர்களைப் பார்த்திருக்க, அவன் விழிவீச்சை உணர்ந்தது போல் திரும்பியவர்கள்.
அவன் சத்தத்தை குறைக்கும் படி சைகை காட்டவும் அவனின் முறைப்பையும் தோரணையும் கண்டு பயத்துடன் பாடலை நிறுத்தினர்.
தாயைக் காண அவர் உறவுகளுடன் ஐக்கியமாகிவிட்டதைக் கண்டு, ஒரு பெருமூச்சுடன் மேல் பட்டனை கழட்டி விட்டவாறு மண்டபத்தின் முன் இருக்கையில் அமர்ந்து கொண்டான்.
டக் டக் என்ற சத்தத்தில் நிமிர்ந்து பார்க்க எப்பொழுது வேண்டும் என்றாலும் உயிரை விடும் நிலையில் சீலிங் ஃபேன் மெதுவாக சுற்றிக் கொண்டிருந்தது.
கடுப்புடன் பல்லை கடித்தவன். தனது மொபைலை எடுத்துக் கொண்டான்.
படத்திற்கான கதை தோன்றியதுமே மொபைலில் அல்லது கையடக்க நோட்டில் குறித்து வைத்துக் கொள்வான்.
திருமணத்தில் கவனத்தை செலுத்த விருப்பமில்லை என்பதால், இப்பொழுது தயார் செய்து வைத்த தனது திரைக்கதையை சரி பார்க்க ஆரம்பித்தான்.
அடுத்த சில நிமிடத்திலே அதில் ஒன்றிப் போனான்.
சுற்றிலும் நடக்கும் கூச்சல், குழப்பம், காற்று இல்லாத அறை, உஷ்ணத்தை தெறிக்கும் காற்று எதையும் கண்டுகொள்ளாமல் முழு கவனமும் திரைக்கதையின் திருத்தங்களை மேற்கொள்வதில் படிந்தது.
"கண்ணா" என்ற சத்தத்துடன் தோளை உலுக்கிய தாயின் செயலில் தான் உணர்வு பெற்று, " என்னமா" என்றப்படி நிமிர்ந்தான்.
அவனிடம் மஞ்சள் தாலியை கொடுத்து "இந்த டா" என்க,
" மாம் எனக்கு இந்த ஃபார்மாலிட்டிஸ் எல்லாம் பிடிக்காது. நீங்களே தாலி எடுத்து குடுங்க " என்று விட்டு மீண்டும் அவன் போனில் முழ்க போக,
"கண்ணா விளையாடாதே. ஒழுங்கா இந்த தாலியை பொண்ணு கழுத்தில் கட்டு "என்றதும் விக்கித்து போனான்.
"அம்மா" என்று அதிர்ந்து போய் அழைக்க," எதுவும் பேசக்கூடாது.இப்பவே இந்த தாலியை திகழ் கழுத்தில் கட்டு" என்றார் அடமாக.
திகழா என்ற முணுமுணுப்புடன் மேடையை பார்க்க தலைகுனிந்தபடி கழுத்தில் மாலையுடன் ஒடிசலாக ஒரு பெண் அமர்ந்திருக்க, அவளின் அருகில் அன்னபூரணியின் தம்பி அம்மையப்பன் சட்டை கிழிய நின்றிருந்தார்.
'இதெல்லாம் எந்த நேரத்தில் நடந்தது' என்று எரிச்சலுடன் நெற்றியை பிடித்துக் கொண்டவனுக்கு திருமணம் செய்யும் எண்ணம் சிறிதும் இல்லை.
எனவே, " மாம் பி சீரியஸ். நான் டைரக்ட் பண்ற படத்தில் கூட இந்த மாதிரி சீன்ஸ் எல்லாம் வரலை. என் வாழ்க்கையிலும் வரவச்சடாதீங்க. ஐ அம் நாட் இன்ட்ரஸ்ட் இன் மேரேஜ்" என்று திட்டவட்டமாக மறுத்தான்.
" டேய் கண்ணா. அம்மா வாக்கு கொடுத்துட்டேன். ஒழுங்கா வந்து தாலி கட்டு இல்லைனா" என்றதும்,
"போதும் எமோஷனல் ட்ராமா எல்லாம் பண்ணாதீங்க" என்று அவர் பேச்சை கத்திரித்தான்.
"முதலில் இந்த தாலியை எங்கே எடுத்தீங்களோ.அங்கேயே வெச்சுட்டு ஒழுங்கா என்கூட வாங்க. போலாம். இங்கே வந்து உங்களுக்கு மூளை குழம்பிடுச்சு" என்று எரிச்சலுடன் படப்படத்தான்.
" ஆமாடா ஆமா. நான் பைத்தியம் தான். ஆனால் உன்னை பெத்தவ நான் தானே. ஒழுங்கா வந்து தாலி கட்டு. இல்லைனா இந்த அம்மாவை பிணமா தான் பார்ப்ப".
"அம்மா சம்பந்தம் இல்லாமல் பேசி தொலையாதீங்க கடுப்பாகுது"என்று எரிச்சலுடன் கத்த, உடனே அவன் கையைப் பற்றியவர்.
" தப்புதான் உன் மனநிலை புரியுது. ஆனால் வேற வழியில்லை. வாழ்வா சாவானு தம்பி குடும்பமே தவிக்குது. மாமாவை ரொம்ப அசிங்க படுத்திட்டாங்க. இப்போ திகழுக்கு கல்யாணம் நடக்கலைன்னா, இன்னும் அசிங்கமா போய்டும். அம்மா உன்கிட்ட இனிமேல் எதுவும் கேட்க மாட்டேன் இது மட்டும் பண்ணுடா கண்ணா ப்ளீஸ்டா. காலா நினைச்சுக்கறேன் டா " என்று கையை அழுத்தமாக பற்ற, அம்மா என்ற சத்துடன் கையை உதறியவன்.
சுற்றிலும் பார்வையை பதித்தான்.
அனைவரின் கவனமும் தங்கள் இருவரின் மீது இருப்பது, இன்னும் எரிச்சலை தந்தது.
"என்னதான் பிரச்சனை".
"அதெல்லாம் பேசுறதுக்கு நேரமில்லை முதலில் தாலியை கட்டுடா. முகூர்த்த நேரம் முடிய போகுது".
" மாம் கடுப்பை கிளப்பாதீங்க. ஒழுங்கா என்ன நடந்ததுன்னு சொல்லுங்க ".
" ஃப்ளாஷ் பேக் போக நேரமில்லை கண்ணா. முதலில் தாலியை கட்டு. அப்பறம் பொறுமையா சொல்றேன். இப்பயும் உன் மனசு மாறலைன்னா சொல்லு காலில் விழறேன்" என்று அவர் முன்னேற,
எரிச்சலுடன் அவர் கையில் இருந்த தாலியை பற்றியவன்.
" அநியாயத்துக்கு ஆக்டிங் பண்றீங்க மா.வொஸ்ட் ஆக்டிங் ஆனால்..." என நெற்றியில் அறைந்து கொண்டவன்.கோபத்துடன் மணமேடை ஏறினான்.
அம்மையப்பன் நன்றியுடன் அவன் கையை பற்ற போக, "எங்க அம்மாவுக்காக மட்டும் தான்".
அவரின் கையை உதறி கொண்டு மனையில் அமர வர,"தம்பி செருப்பு போட்டுட்டு உக்காரக்கூடாது" என்ற அர்ச்சகரின் குரலில் இன்னும் கடுப்பு ஏற, செருப்பை உதறி தள்ளி விட்டு அமர்ந்தான்.
அருகில் அமர்ந்து இருந்தவளோ விட்டால் அக்னியில் தலையை கொடுத்து விடுவாள் போல அந்த அளவு குனிந்து இருந்தாள்.
அதில் இன்னும் எரிச்சல் பெருக,
"இன்னும் கொஞ்சம் தலையை தள்ளு அப்படியே தலை பொசுங்கி போகட்டும். அடி ச்சி ஒழுங்கா உட்காரு" என்று எரிந்து விழ,
ஐயர் மந்திரத்தை நிறுத்திவிட்டு அவனை அதிர்ந்து பார்க்க, " உனக்கு என்னய்யா ஒழுங்கா ஓது " என்று அவரின் மீதும் கோபத்தைக் காட்டினான்.
கலிகாலம் என்று நொந்து கொண்ட படி, "மாங்கல்யம் தரணம் பண்ணுங்கோ கெட்டிமேளம் கெட்டிமேளம்" என்றதும் கையில் இருந்த தாலியை அவள் கழுத்தின் அருகில் கொண்டு சென்றவன்.
" இப்பயாவது நிமிர போறியா இல்லை. மாட்டுக்கு மூக்கணா கயிறு கட்டுற மாதிரி தான் கட்டணுமா " என்று பற்கள் இடையே வார்த்தைகளை கடித்து துப்ப, கலங்கிய விழிகளுடன் அவனை ஏறிட்டு பார்த்தாள்.
கல்யாண மேக்கப் என ஐந்து கோட்டிங் பெயிண்டை வாரி இரைத்து அவள் உண்மையான அழகை மறைத்து இருக்க,கண்களிலும் உதட்டிலும் பூசி இருந்த அழகு சாதன பொருட்களோ தன் உயிரை விட்டிருந்ததில் அவன் திகைத்து,
"காஞ்சூரிங் பேய்க்கே டஃப் கொடுக்க போல" என்று அவளிடமே கூற, அதிர்ந்து அவனைப் பார்க்க தாலியை கட்டப் போனவன்.
"உனக்கு விருப்பமா இல்லையா" என்று கடுப்புடன் கேட்டான்.
"வாழவே வழியில்லாதவளுக்கு தேர்ந்தெடுக்கிற உரிமை இல்லை" என்று அவள் விரக்தியாக மொழிய, " அப்ப சரி "என்றப்படி அவள் கழுத்தில் மூன்று முடிச்சுட்டு தன்னவளாக்கி கொண்டான்.