எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

விழிகளின் வழி(லி)யே!! - டீசர்

Lufa Novels

Moderator
வணக்கம் நண்பர்களே
கதைக்கான டீசர்களை இங்கு காணலாம்.
நன்றி
 
Last edited:

Lufa Novels

Moderator
டீசர் 1

கல்லூரியில் வகுப்பிற்குள் நுழைந்த சத்யன் “டுடே ஆன்வோட்ஸ் வி ஸ்டார்ட் அ கிளாஸ், சோ லிசன்” என சொல்லி பாடத்தை ஆரம்பிக்க இவள் அவளின் தோழி ரம்யாவிடம் கிசுகிசுத்துக் கொண்டிருந்தாள். அவனும் “லிசன். டோண்ட் டாக்” என கூறி பாடத்தை நடத்த இவளின் முனுமுனுப்பு சத்தம் கேட்டபடியே இருக்க பாடத்தை நிறுத்தி ரம்யாவையும் அவளையும் பார்க்க இருவரும் எழுந்து நிற்க “வாட்ஸ் கோயிங் ஆன் ஃதேர்” என பற்களை கடித்த படி கேட்க ரம்யா பயத்தில் “அது… அது..” என திணற “அவுட்” என கைகளை வெளியே நோக்கி காட்ட “யூ டூ” என அவளையும் சேர்த்து வெளியே அனுப்பினான்.

வெளியே வந்த ரம்யா “என்னடி இந்த லாம்போஸ்ட் ஃபஸ்ட் டேயே வெளிய அனுப்பிட்டார். நாம மட்டுமா பேசினோம் எல்லாரும் தான பேசினாங்க.. இவரு கண்ணுக்கு நாம் மட்டும் தான் தெரிஞ்சோமா?” என குதிக்க


“நீ என்கூட இல்லாம வேற யாருகூட பேசினாலும் இவன் கண்ணுல பட்டுருக்க மாட்ட” என கூற

“உனக்கு முன்னாடியே அவர தெரியுமா?” கேட்க “ம்ம்” என மட்டும் கூறினாள்.

“எப்படி தெரியும்” என கேட்க

“விடு அப்புறம் சொல்றேன்” என்றவளை நச்சரிக்க


“ஒரே ஏரியா” என கூறினாள்

“அடியேய் குழாயடி சட்டைய காலேஜ் வரைக்குமா கொண்டுவரிங்க” எனறவள் மேலும் “என்ன உறண்டடி இழுத்து வச்ச” என கேட்க

“தெரியாம ஒரே ஒரு தடவ அவன அடிச்சுட்டேன், அதுக்கு பழிவாங்குறான் போல” எனக்கூற நெஞ்சில் கை வைத்த ரம்யா “உங்கூட சகவாசம் வச்சேன்ல அதுக்கு” என கூறி சுவற்றில் முட்டிக்கொண்டாள்.


———————————————————

சத்யன் வீட்டுக்கு வரும்போதே முகம் சரியில்லாமல் இருந்ததை கவனித்த சிவகாமி கணவர் வீட்டில் இருந்ததால் ஏதுவும் பேசவில்லை. சத்யன் நினைவு முழுவதும் அவளிடம், அவளில்லாத வாழ்வை நினைக்க கூட அவனால் முடியவில்லை. இந்த காதல் தான் எவ்வளவு விசித்திரமானது எவ்வளவு சுகமோ!! அவ்வளவு வலியும் கொடுக்கிறது.

கதிர்வேல் கடைக்கு சென்ற உடன் மகனைத்தேடி வந்த சிவகாமியிடம் அனைத்தையும் கூறிய சத்யன் “ மா அவ இல்லாம சத்யமா முடியாதுமா என்னால” என கலங்கிவிட மகனை அணைத்துக்கொண்ட சிவகாமி “யோசிக்கலாம் கொஞ்சம் பொறு, ஐஸ்ஸ உனக்கு பேசமா இருந்திருந்தா இன்னேரம் உங்கப்பா இழுத்துட்டு போய் பொன்னு கேட்டுருப்பேன். உங்கப்பா சரியான தங்கச்சி கோண்டு, அவக கண்ணக்கசக்கினா போதும் உடனே உருகிடுவாரு. பொறு இன்னைக்கு வந்ததும் நா விஷயத்தை காதுல போடுறேன், நீ நாளைக்கு காலைல அப்பாகிட்ட பேசு. நீ கொஞ்சம் மடங்குன ஐஸ்ஸ உன் தலையில கட்டிடுவாரு பாத்துக்கோ. அதுவரைக்கும் தைரியமா இருக்க சொல்லு, அங்க என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்கோ, கைமீறி போயிடக்கூடாது.” சொல்லி செல்லவும் ஆசுவாசமாக மூச்சை விட்டவன் சூர்யாவை தேடிச் சென்றான்.

சூர்யாவை கூட்டிக்கொண்டு பார்க் சென்று அவனிடம் அவளை சந்தித்தது முதல் இன்று வரை நடந்ததை சொன்னான்.

சூர்யா “அட நாசமா போன எடுவெட்ட பயலுகளா….. என் வாழ்க்கையில சரசம் பண்ணுறதுக்கே உங்க அப்பனாத்தா பெத்துவிட்டாங்களா…. இப்போ தான் எனக்கு வாரிசு ரெடி பண்ணிருக்கேன், அத கண்ணுல கூட பாக்காம எனக்கு உயிரோட சமாதி கட்டிடுவிங்க போலயே… கீதா சீதா வேற சீரில்லாம ஆடுமே…” என புலம்பிய பாவனையில் சத்யனே வாய் விட்டு சிரித்தான்.


——————————————————

தன் காதருகில் கேட்ட சத்யனின் குரலில் திடுக்கிட்டு நெஞ்சில் கை வைத்து இரண்டடி தள்ளி நின்றவளை அழுத்தமாக ஒர் பார்வை பார்த்து விட்டு அறையினுள் நுழைய, செம்மறி ஆடு போல அவன் பின்னாலே குனிந்து கொண்டே சென்றாள். அவன் சட்டென திரும்புவானென அறியாது அவனை முட்டி நின்றதில் தடுமாறி கீழே விழப்போக அவன் கைகளிலே தஞ்சமடைந்தவள் ‘இன்னுமா விழல’ என எண்ணி ஒற்றை கண்ணை திறந்து சத்யனின் கைகளில் சுகமாய் சாய்ந்தபடி சத்யனை பார்க்க அவன் தீயாய்விழித்தான். அதில் பதறி அவனிடம் இருந்து பிரிந்து தனியாய் நின்றாள்.

தன்னிடம் இருந்து பிரிந்து நின்றவளை பார்த்து “என்னோட இந்த சின்ன தொடுகையையே உன்னால தாங்க முடியல, துள்ளிக்கிட்டு தள்ளி நிக்கிற, அப்புறம் எதுக்குடி என்னை கல்யாணம் பண்ணுன? உனக்கு தான் என்னை பிடிக்காதுல!! நான் அவ்ளோ சொன்னேன்னே அப்புறம் ஏண்டி இந்த கல்யாணம்.

அவனை விட்டு தள்ளி நின்றவள் கண்களில் எதேர்ச்சியாக பட்டது சத்யன் அறையில் உள்ள அந்த குளியலறை. தன் வாழ்க்கையையே மாற்றிய அந்த குளியலறை கண்ணில் பட்டதும் கண்ணில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் வடிந்தது. இவ்வளவு நேரமும் சத்யன் பேசுவதே அவளுக்கு கேட்கவில்லை அவள் மூளை இந்த கணத்தின் நிஜத்தை நம்பமுடியாமல் மூச்சு விடுவதற்கே சிரமபட்டாள்.
 

Lufa Novels

Moderator
டீசர் 2

கெளதம் “க்கூம் ஒரு போன் நம்பரே என்ன நம்பி கொடுக்க மாட்டேன்னுட்டா… இதுல தனியா மொட்டமாடிக்கு கூப்பிட்டா!!! ம்கூம் நினைக்க கூட மாட்டேன். நீங்களே அவளை வரவைங்க நான் வேணும்னா நீங்க உள்ள வரதுக்கு ஹெல்ப் பண்றேன், நீங்க பேசி முடிக்குற வரை யாரும் அந்த பக்கம் வராதமாதிரி காவக்காக்குறேன்.. இந்த புள்ளைக்காக என்ன வேலையெல்லாம் செய்யவைக்குறாங்க” என புலம்பி அவளை சத்யன் சொன்னதுபோல அவளுக்கே தெரியாமல் பாதுகாப்பாய் அனுப்பி வைத்து இப்போது மாடிப்படிக்கு கீழ காவல்காக்குறான்னு சொல்ல அவளுக்கு தான் ஒரு மாதிரி போனது அவனை சந்தேகப்பட்டதுக்கு.

பேச்சின் நடுவே அவளை மிக நெருக்கமாக அணைத்து அமர்ந்து அவளின் மேல் சத்யனின் கைகள் வலம் வந்ததை அவளும் கவணிக்கவில்லை. இப்போதும் அதே வேலையை தான் சத்யன் கைகள் செய்தது ஆனால் அவள்தான் நெளிந்துகொண்டே இருந்தாள். சத்யனோ “கொஞ்ச நேரம் ஆடாமதான் இருவே” என குழைந்தவாறு சொல்ல அவனின் நெருக்கத்தில் தடுமாறினாள். சட்டென அவளின் இடுப்பினூடே கைகளை விட்டு தூக்கி தன் மடியில் அமர்த்தினான் திமிற திமிற.

இரவின் குளிர்ச்சியும் அழகிய வானத்து நிலாவுடன் போட்டிபோடும் அவனவளும் அவன் மடியில் தவழ அவள் கழுத்துவளைவில் முகம் பதித்து அவன் இதழால் கவி எழுத… அவன் கைகள் ஊர்வலம் போன இடத்திற்கெல்லாம் இதழும் செல்ல ஆவல் கொள்ள… மெல்ல அவள் முகம் திருப்பி அவளின் கண்களை நேருக்கு நேர் பார்த்து “ஐ லவ் யூ” எனக்கூறி அவளின் இதழை முற்றுகை இட்டான். முதன் முறை பெண்ணின் இதழ்முத்தம் ஆழ்ந்து அனுபவித்து அதன் சுவை அறிந்தவன் கல்லுண்ட வண்டாய் மீண்டும் மீண்டும் சுவைக்க வானத்திலிருந்து கேட்ட இடி சத்தத்தில் இருவரும் பிரிந்தனர்.

*************************************************

மறுநாள் வகுப்புக்கு வந்த சத்யனை பார்த்து ‘என்னயவா நேத்து வெளிய அனுப்பின, இன்னைக்கு நீ எப்படி பாடம் எடுக்குறனு நானும் பார்க்குறேன்’ என மனதோடு கருவியவள் அவளின் குறும்புத்தனம் தலைதூக்க சந்தேகம் கேட்பது போல கையை தூக்க, சத்யன் என்னவென பார்க்கும் போது கையை அப்படியே தலைவாருவது போல சைகை செய்து சத்யனை பார்த்து கண்ணடிக்க, இச்செயலை எதிர்பார்க்காத சத்யன் முதலில் சற்று தடுமாறி பின் தன்னை மீட்டு அவளை முறைத்துவிட்டு பாடம் எடுக்க ஆரம்பித்தான்.

அடுத்ததாக வகுப்பில் இருந்து எழும்புவது போல எழ அவன் என்னவென பார்க்கும் போது இருக்கையை தூசிதட்டுவது போல செய்து, அமரும்போது அவன் கண்ணோடு கண்ணை உறவாடவிட்டு மீண்டும் கண்ணடிக்க இப்போது சத்யன் நேரடியாகவே முறைத்தான். அவன் முறைப்பதைப் பார்த்து மொத்த வகுப்பும் அவளை பார்க்க ஒன்றுமறியாத குழந்தைபோல முகத்தை வைத்துக்கொண்டாள் ஆனால் பாம்பின் கால் பாம்பறியும் என்பது போல தோழியை கண்டுகொண்டாள் ரம்யா. “என்னடி பண்ணுன” என மெதுவாக கேட்க “நான் என்ன பண்ணேன் ஒன்னுமே பண்ணல” கூற ரம்யா “ஒழுங்கா உக்காரு அவருகிட்ட எதாவது வம்பு பண்ணின கொன்றுவேன்” கூற தோளைக்குலுக்கினாள்.

சத்யனுக்கு அவள் வம்பிழுக்கிறாள் என புரிந்தது ஆகையால் அவளை பார்க்காமல் அவளின் கண்களை சந்திக்காமல் பாடம் எடுக்க ஆரம்பிக்க ‘என்னடா இவன் இவ்ளோ ஸ்டெடியா இருக்கான் இனி என்ன பண்றது’ என யோசித்து அவள் தண்ணீர் பாட்டிலை எடுத்து அவனிடம் அனுமதிகூட பெறாமல் தண்ணீரை பருக சத்யன் அவளை திட்டுவதற்காக பார்க்க உதடுகுவித்து முத்தமிடுவது போல செய்ய சத்யனின் கோபம் எல்லையை கடந்து அவளை பார்த்து “கெட் அவுட்” என கர்ஜிக்க சிரித்துக்கொண்டே வகுப்பை விட்டு வெளியேறினாள்.
 

Shamugasree

Well-known member
Nice teaser... college la vambu panrathu... sathyan love panrathu.... avana pidikama kalyanam pannathu ellame Unga heroine thana... ava name enna...
Gowtham and Surya Sathyan ku kidaicha adimaigala ?
 

Lufa Novels

Moderator
Nice teaser... college la vambu panrathu... sathyan love panrathu.... avana pidikama kalyanam pannathu ellame Unga heroine thana... ava name enna...
Gowtham and Surya Sathyan ku kidaicha adimaigala ?
Kandipa solren da storyla… ipo sonna na create panna andha suspense poidum…
 
Top