L.keerthana
Moderator
பார்வை -2
ஒத்தகல் மந்துவாக தோடாவில் பிறந்து, ஒற்றைகல் மந்தையாக தமிழில் வளர்ந்து, இந்த பெயரை சொல்லத் தெரியாதவன் வாயில் ஊட்டகமண்ட் என மாறி இன்று உதகமண்டலமாய் வாழும் நீலகிரி மலையரசியின் செல்லப் பெண் ஊட்டி, அந்த ‘மலைகளின் இளவரசி’ அந்த நண்பகல் வேளையில் கூட அப்போது தான் துயில் கலைந்ததுபோல மெல்ல தன் பனி போர்வை விளக்கி புத்துணர்வாய் காட்சி தர,
காரில் உறங்கி கொண்டு இருந்த ஆதிரை தன் காந்த கருவிழிகளை மெல்ல மலர்த்தினாள்.
“ஊட்டிக்கு வந்துட்டமா அண்ணா..?” என டிரைவரிடம் அவள் கேட்க,
“ஆமாம்மா” என்றார் டிரைவர்.
“ஸ்ஸ்ஸ்......ப்பா..... என்னமா குளிருது.. என தன் கைகள் இரண்டையும் தேய்த்து தன் கன்னத்தில் வைத்துக் கொண்டே,
“ஏசியை கொஞ்சம் ஆஃப் பண்ணிடுவோமா அண்ணா” என்றாள் இது போன்ற நான்கு மணி நேரத்துக்கும் அதிகமான ஏசி பயணம், மற்றும் ஊட்டியின் சிலுசிலுப்பையும் அனுபவித்திராத ஆதிரை.
“சரிம்மா..” என அவரும் ஏசியை ஆஃப் செய்து விட்டு கண்ணாடிகளை சற்று இறக்கி விட்டார்.
“தாங்க்ஸ் அண்ணா..” என்றாள் புன்னகையுடன்.
‘Pearl bay house’ என பெயர் பதிக்கப்பட்ட ஒரு அலங்கார வளைவின் கீழிருந்த கேட்டின் வழியாக நுழைந்த கார், ஒரு அரை கிலோமீட்டர் தூர வண்ண மலர் மற்றும் அழகாக வெட்டி பராமரிக்கப்பட்ட குரோட்டன் செடிகளால் கரை அமைக்கப்பட்ட தார் சாலையின் வழியாக பயணித்து, சுற்றிலும் பசும் புற்றரைகளும், அழகிய பூந்தொட்டிகளாலும் அலங்கரிக்கப்பட்டு, இரண்டு தளங்களாக அமைக்கப்பட்டிருந்த அந்த அழகிய சிறு மாளிகை போன்ற வீட்டின் வாயிலின் முன் நின்றது.
என்ன தான் இங்கு வருவதற்கு முன் இந்த இடம் பற்றி கூகுள் செய்து தெரிந்து கொண்டிருந்தாலும், நேரில் பார்த்தபோது அதன் பிரமாண்டம் அவளை மிரட்டியது.
இவ்வளவு பெரிய வீட்டில், இல்லையில்லை இந்த மாளிகையில் ஒரு குடும்பம் மட்டுமே வசிக்கும் என்பதை அவளால் கற்பனை கூட செய்ய முடியவில்லை.
அதே மருட்சியுடன் படியேறி, அந்த அரைவட்ட தரை முழுவதும் கறுப்பு நிற கிரானைட்டால் அமைக்கப்பட்டு, அழகிய பூந்தொட்டிகள் சரியான இடைவெளியில் அடுக்கப்பட்டும் சில உயர்தர நாற்காலிகள் ஆங்காங்கே இடப்பட்டுமாக அலங்கரிக்கபட்டிருந்த வராண்டாவைக் கடந்து வீட்டினுள் நுழைந்தவளை,
“நீ தான் இங்க புதுசா வேலைக்கு சேர்ந்துருக்கிற பொண்ணா…?” என்ற குரல் திடுக்கிட செய்து திரும்பி பார்க்க வைத்தது.
அங்கு வெள்ளை நிற பட்டு புடவையில் அதற்கு மேல் சிகப்பு நிற சால்வை ஒன்றை அணிந்து கம்பீரமாக சோபாவில் அமர்ந்து பழச்சாறு ஒன்றை சுவைத்து கொண்டிருந்தார் அகிலாண்டேஷ்வரி.
அவளது மான் விழிகளின் மருட்சியையும், தன் குரலால் ஏற்பட்ட திகைப்பையும் கண்டு கொண்டவர்,
“இங்க வாம்மா..” என கனிவாக அழைத்தார்.
அவளும் மெதுவாக தன் பாதங்களுக்கு கீழ் விரிக்கப்பட்டிருந்த கம்பளங்களின் மென்மையை உணர்ந்தவாறே அவர் அருகே வந்து “வணக்கம் அம்மா...” என இருகைகளையும் மொட்டு போல கூப்பினாள்.
இங்க வந்து “உக்காரும்மா ..” என்றார் .
அவளும் தயங்கியபடி அவர் எதிரே அமர்ந்தாள்.
“அப்படியே மகாலக்ஷ்மி மாதிரியே இருக்கம்மா..... உன்னோட பேர் என்ன?” என கேட்டார்.
“ஆதிரை” என்றாள் மெதுவாக புன்னகைத்தபடி. அப்போது,
“அம்மா.....லஞ்ச் ரெடியா?” என கேட்டபடி அங்கு வந்த அஜய் அவளைப் பார்த்து,
“ஹல்லோ! மிஸ் .....நீங்கதான் ஆதிரையா?....நீங்க கிளம்பினதும் உங்க மேடம் கால் பண்ணி சொன்னாங்க அண்ட் எங்க டிரைவர் நீங்க ரீச் ஆகிட்டத இன்ஃபார்ம் பண்ணினார்.”
“பிரயாணம் எல்லாம் எப்படி இருந்துச்சு? ஊட்டி பிடிச்சிருக்கா?” என புன்னகையுடன் கேட்டான்.
“பை த பை.. ஐ ஆம் அஜய்” என தன்னை அறிமுகபடுத்திக் கொள்ளவும் மறக்கவில்லை.
“பிரயாணம் ரொம்பவே சௌகரியமா இருந்தது சார். அக்சுவலா நான் தூங்கிட்டேன்... அண்ட் ஊட்டி பசேல்னு ரொம்பவே அழகா இருக்கு..... குளிர் தான் கொஞ்சம் பழகிக்கணும்னு நினைக்கிறேன்” என்றாள் சற்று வெட்கத்துடன்.
முன்தினம் இரவில் சரியாக உறங்கி இருக்க மாட்டாள் என சரியாக கணித்த அகிலாண்டேஷ்வரி,
“சரி...மா..நீ சாப்பிட்டு ரெஸ்ட் எடு....என்னோட பெரிய பையன் ஆதவன் பிசினஸ் விஷயமா ஆஸ்ட்ரேலியா போய் இருக்கான்..... அவன் வர இன்னும் ஒரு வாரம் ஆகும்..... உன்னோட எம்ப்லாயர் ஆதவன் தான்.... அஜய் உன்ன அடுத்த வாரம் வர சொல்லலாம்னுதான் சொன்னான்...... நான் தான் பரவால்ல கொஞ்சம் முன்னாடியே வரட்டும்னு சொன்னேன்..... ஏன்னா நீ வேலை செய்யப் போற இடத்த பழகிக்க கொஞ்சம் அவகாசம் கிடைக்கும் இல்லயா?” என்றார் அகிலாண்டேஸ்வரி சற்று இரக்கத்துடன்.
“சரி அம்மா..” என்றாள் நன்றியுடன்.
“கா....வேரி....இங்க வா..” என அங்கு வேலை செய்யும் பெண்ணை சற்று உரக்க அழைத்தார்.
“சொல்லுங்கம்மா..” என்று ஓடி வந்த காவேரியிடம்,
“காவேரி..... இவங்க ஆதிரை.......இங்க புதுசா வந்திருக்கிற மேனேஜர்.... அவங்களுக்கு கெஸ்ட் ரூம காட்டு..” என்றார்.
“வாங்கமா..” என காவேரி அவளது பெட்டியைத் தூக்க முயல,
“ஐயோ!..அக்கா குடுங்க... நானே கொண்டுவரேன்” என காவேரியின் கையில் இருந்த தன் பெட்டியை வாங்கிக் கொண்டாள்.
“என் கூட வாங்கம்மா” என அவளை அழைத்து சென்ற காவேரி,
“இந்த ரூம் தாம்மா” என அங்கு இருந்த ஒரு விசாலமான அறையை திறந்து காட்டினாள்.
“தாங்க்ஸ் அக்கா.... நான் ஃபிரெஷ் ஆகிட்டு சாப்பிட வரேன்... நீங்க போங்க” என்றாள் புன்னகையுடன்.
“சரி மா” என காவேரி வெளியேறி விட்டாள்.
அங்கு வந்ததன் பின் அவளுக்கு வாய்த்த முதல் தனிமை அது, கடந்த சில தினங்களில் தன் வாழ்வில் எதிர் பாராமல் ஏற்பட்ட மாற்றங்களை நினைத்தவள், தான் பயந்தது போலில்லாமல் இங்கிருப்பவர்கள் மிகவும் நல்லவர்களா இருப்பதை நினைத்து பெரும் நிம்மதி அடைந்தாள்.
அந்த விசாலமான அறையை சுற்றி சுற்றி பார்த்தவள், பத்திலிருந்து பதினைந்து பேருடன் ஒற்றை அறையில் வளர்ந்த தனக்கு இது ‘ரொம்பவே’ அதிகம் என நினைத்து கொண்டாள்.
‘வேலைக்கு வந்த எனக்கே இவளோ பிரம்மாண்டமான அறையை கொடுத்து இருக்கும் இந்த அகிலாண்டேஷ்வரி அம்மா மிக நல்லவர் போலும்’ என்று நினைத்தப்படி குளியலறையை நோக்கி சென்றாள்.
குளியலறையை பார்த்து, ‘யம்மா குளியலறையே ரூம் போல இருக்கே’ என நினைத்து விட்டு, ‘சரி தான் மொத்தத்தில் இங்கே எல்லாமே பிரமாண்டம்தான்..... வந்த நேரத்தில் இருந்து எல்லாவற்றையும் பார்த்து, வாயை பிளந்து கண்ணை விரித்து கண்ணும் வாயும் வலித்தது போதும்’ என குளிருக்கு இதமான சுடுநீரில் குளித்துக்கொண்டே தன்னை நிதானபடுத்திக் கொண்டாள்.
தயாராகி கீழே வந்தவள், கண்களால் அகிலாண்டேஷ்வரியை தேட,
“யார தேடுறீங்க..? என புன்னகையுடன் கேட்டபடி மாடிபடியிறங்கி வந்தான் அஜய்.
“அது....... வந்து.......” என அவள் இழுக்க,
“ஆதிரை...... ஃபீல் ஃப்ரீ... இத உங்க வீடுன்னே நினைங்க.... கல்கி மேடம்.. எங்கள நம்பி தான் உங்கள இங்க அனுப்பி வச்சிருக்காங்க... சோ... எதுவானாலும் ஃப்ரீயா கேளுங்க.. ம்ம்” என்றான்.
அதற்கு என்ன பதில் சொல்வதென்று யோசித்துக்கொண்டு அவள் அமைதியாக நிற்க,
“சரி சாப்பிட்டீங்களா....?” என அவன் கேட்டான்.
“இன்னும் இல்... இல்...ல சார்” என்றாள் தடுமாற்றத்துடன்.
“என்கூட வாங்க” என அவளை சாப்பாட்டு அறைக்கு அழைத்து சென்றவன்,
“இதான் டைனிங் ஹால்.. இங்க எப்பவும் ஏதாவது சாப்பாடு ரெடியா இருக்கும்..... கூச்சப்படாம நீங்க வந்து சாப்பிடலாம்” என்றான் அஜய்.
“சரி சார்” என்றாள்.
“சரி... உக்காந்து சாப்பிடுங்க..... அப்புறம் இன்னொரு விஷயம்.... ஆதிரை..” என்க,
அவள் அவனை கேள்வியாக பார்க்க,
“அண்ணாதான் மெயினா எஸ்டேட் அண்ட் எக்ஸ்போர்ட் பிசினஸ பரத்துக்குராரு.... அவருக்கு சப்போர்ட்டா நான் இருக்கேன்..... அவர்தான் உங்க ஆசிரமத்துல ஒருத்தங்களுக்கு தான் வேலை குடுக்கணும்னு முடிவு பண்ணினார்....இந்த விஷயத்துல கொஞ்சம் பிடிவாதமா இருந்தார்னு கூட சொல்லலாம். உங்க அப்பாய்ன்மெண்ட் அண்ணா வந்ததுக்கு அப்புறம் தான்.. ஸோ அது வரைக்கும் ரிலாக்சா... ஊட்டிய கொஞ்சம் சுத்தி பாருங்க” என்றான் புன்னகையுடன்.
“அப்போ நான் இங்க வேலைக்கு வந்ததுதுல உங்களுக்கு விருப்பம் இல்லயா சார்?”என கேட்டவளை சற்று வியப்புடன் பார்த்தான் அஜய்.
“சாரி சார்” என நாக்கை கடித்து கொண்டாள் தனது அதிகபிரசங்கி தனத்தை நினைத்து.
அவளது சிறு பிள்ளை தனமான செயலை பார்த்து மெல்லிய சிரிப் பொன்றை உதிர்த்தவன்,
"அப்படி எல்லாம் இல்லை ஆதிரை.... அண்ணா சொன்ன விஷயம் எங்களுக்கும் சரின்னு பட்டதனால தான்... நானே நேர்ல வந்து பேசுனேன்.... அது மட்டும் இல்லாம கல்கி மேடம் உங்கள ரெகமண்ட் பண்ணப்ப..... இன்டர்வியுகூட பண்ணாம உங்கள செலக்ட் பண்ணியது நான்தான்" என்றான்.
"கல்கி காப்பகம்கிறது அண்ணாவோட முடிவு....ஆனா ஆதிரைய செலக்ட் பண்ணது அஜய்தான்....ஓகே" என்றான் குறும்பாக.
"ஐயோ!..சார்..... நான் சும்மா தான் கேட்டேன்" என்றாள் பதற்றத்துடன்.
"ரிலாக்ஸ் ஆதிரை.. என்ன உங்க ஃப்ரெண்ட்டா நினைச்சிகோங்க...... எந்த ஹெல்ப் வேணும்னாலும் என்கிட்ட கேளுங்க..... சரியா?" என்றான்.
"ஃப்ரெண்ட்ன்னு சொல்லிட்டு.... வாங்க போங்கன்னு கூப்பிட்டுட்டு இருக்கீங்க" என கேட்டாள் மறுபடியும் அதே துடுக்கு தனத்துடன்.
"ஹா...ஹா... ஹா...." என வாய்விட்டு சிரித்தவனோ,
"தேறிட்டீங்க ஆதிரை.. சாரி..சாரி... தேறிட்ட.. இப்போ நீ ரெஸ்ட் எடு......நான் ஆபீஸ் போறேன்.... சீ யு லேட்டர்...."என அங்கிருந்து கிளம்பினான் அஜய்.
அவளும் உடனே ஒருமை அழைப்புக்கு தாவிய அவனை நினைத்து தனக்குள் ஆச்சரியப்பட்டு கொண்டாள். பின்னே..முதலாளி ஸ்தானத்தில் இருக்கும் ஒருவன் இன்றுதான் வேலைக்கு சேர்ந்த தன்னிடம் இவ்வளவு எளிமையாக பழகினால் ஆச்சரியம் தானே வரும்.
அவளுக்கு தன்னை குறித்தும் ஆச்சிரியமே....அவள் மட்டுமன்றி ஆசிரமத்தில் வளரும் அவள் போன்ற பெண்கள் யாரிடமும் இவ்வளவு எளிதாக பழக மாட்டார்கள். சிறு வயது முதலே ஒவ்வொருவரிடமும் குறிப்பாக ஆண்களிடம் எப்படி பழக வேண்டுமென அவர்களுக்கு கற்பிக்கபட்டிருக்கும். அவர்களிடம் வயதுக்குக்கு மீறிய முதிர்ச்சியும், இறுக்கமும், ஒதுக்கமும் இருக்கும்.
அஜயிடம் தான் இறுக்கம் தளர்ந்து வார்த்தையாடியதை நினைக்கும் போது அவனிடம் ஒரு சகோதர உணர்வு தோன்றியது மட்டுமின்றி, யாரும் இல்லாத அவளுக்கு எல்லோரும் இருப்பது போன்ற உணர்வும் தோன்றி மனதை பூரிப்பு அடைய செய்தது. அவனது இயல்பான போலித்தனமற்ற செயல்கள் அவளை கட்டவிழ செய்ததோ?.. அவளறியாள்.
அதே பூரிப்புடன் தோட்டத்தை சுற்றிப் பார்க்க வெளியே சென்றாள் ஆதிரை.
அவளுக்கு சிறு வயதில் இருந்தே இயற்கையை ரசிப்பதில் அலாதி பிரியம். இத்தனை வருடம் கழித்து இயற்கையழகு மொத்ததையும் 'இந்தா வச்சிக்கோ' என அவள் கையில் வாரிகொடுத்தது போலிருந்தது. வெளியே வந்து தனது இரு கைகளையும் மார்புக்கு இடையே கட்டிக்கொண்டு குளிரை கண்மூடி ரசித்தாள் .
கண்களை திறந்தவளோ 'யப்பா இந்த ஹோம் கார்டன் எவ்ளோ அழகா இருக்கு.... எனக்கு புடிச்ச ரோஜா பூத்து குழுங்குது' என அந்த ரோஜா பூவின் இதழ்களை தன் மென்பஞ்சு விரல் கொண்டு வருடினாள் .
ரோஜா பூவை தான் நாசியால் உரசினாள்.
அப்பொழுது அங்கு வந்த தோட்டக்காரன் "பூ பறிச்சி தரவா மேடம் ?" என கேட்டார்.
"வேணாம் அண்ணா.... எனக்கு பூ செடியில் இருந்தா தான் புடிக்கும்" என்றாள் மென்புன்னகையுடன்.
"அப்புறம் அண்ணா..என்ன மேடம்ன்னு எல்லாம் கூப்புட வேணாம். சும்மா பேர் சொல்லியே கூப்புடுங்க.. என்னோட பேர் ஆதிரை.." என்றாள் மீண்டும் அதே புன்னகையுடன்.
அவளை ஆச்சரியமாக பார்த்த தோட்டக்காரன்,
"பெரிய தம்பியும் உங்கள மாதிரி தான்மா " என்றான்.
"என்ன மாதிரினா.... எப்படி?" என கேட்டாள்.
"அவருக்கும் செடியில் இருந்து பூ பறிச்சா புடிக்காது... அம்மா சாமிக்கு பறிக்க சொன்னாலே கோபப்படுவாரு.... பூ எல்லாம் செடியில் இருந்தா தான் அழகுன்னுசொல்லுவாரு....ரொம்ப ரசனையானவரரு..... இந்த கார்டனோட பிளான் அவருடையது தான்" என்றான்.
பூக்கள் விஷயத்தில் தன்னுடைய ரசனையுடன் ஒத்துபோகும் அவனை பற்றி இதுவரை அவன் தாய், தம்பி, இதோ இந்த தோட்டக்காரன் என பலர் சொல்லக் கேட்டவளுக்கு, அவன்... அந்த ஆதவன்.. தன்னுடைய முதலாளி.. எப்படிபட்டவனாக இருப்பான் என்ற எண்ணம் தோன்ற, கூடவே கடவுளே.... அவன் அஜயை போலவே நல்லவனாக இருக்க வேண்டுமே என்ற பிரார்த்தனையும் எழுந்தது.
ஒருவித எதிர்பார்ப்பும், புதிய சூழல், புதிய மக்கள், புதிய கற்றல் என தன் வாழ்க்கைப் புத்தகத்தின் அந்த அத்தியாயத்தை கடந்து, வேலை எனும் அடுத்த அத்தியாயத்தை திறக்க காத்திருக்கலானாள் ஆதிரை.
ஒத்தகல் மந்துவாக தோடாவில் பிறந்து, ஒற்றைகல் மந்தையாக தமிழில் வளர்ந்து, இந்த பெயரை சொல்லத் தெரியாதவன் வாயில் ஊட்டகமண்ட் என மாறி இன்று உதகமண்டலமாய் வாழும் நீலகிரி மலையரசியின் செல்லப் பெண் ஊட்டி, அந்த ‘மலைகளின் இளவரசி’ அந்த நண்பகல் வேளையில் கூட அப்போது தான் துயில் கலைந்ததுபோல மெல்ல தன் பனி போர்வை விளக்கி புத்துணர்வாய் காட்சி தர,
காரில் உறங்கி கொண்டு இருந்த ஆதிரை தன் காந்த கருவிழிகளை மெல்ல மலர்த்தினாள்.
“ஊட்டிக்கு வந்துட்டமா அண்ணா..?” என டிரைவரிடம் அவள் கேட்க,
“ஆமாம்மா” என்றார் டிரைவர்.
“ஸ்ஸ்ஸ்......ப்பா..... என்னமா குளிருது.. என தன் கைகள் இரண்டையும் தேய்த்து தன் கன்னத்தில் வைத்துக் கொண்டே,
“ஏசியை கொஞ்சம் ஆஃப் பண்ணிடுவோமா அண்ணா” என்றாள் இது போன்ற நான்கு மணி நேரத்துக்கும் அதிகமான ஏசி பயணம், மற்றும் ஊட்டியின் சிலுசிலுப்பையும் அனுபவித்திராத ஆதிரை.
“சரிம்மா..” என அவரும் ஏசியை ஆஃப் செய்து விட்டு கண்ணாடிகளை சற்று இறக்கி விட்டார்.
“தாங்க்ஸ் அண்ணா..” என்றாள் புன்னகையுடன்.
‘Pearl bay house’ என பெயர் பதிக்கப்பட்ட ஒரு அலங்கார வளைவின் கீழிருந்த கேட்டின் வழியாக நுழைந்த கார், ஒரு அரை கிலோமீட்டர் தூர வண்ண மலர் மற்றும் அழகாக வெட்டி பராமரிக்கப்பட்ட குரோட்டன் செடிகளால் கரை அமைக்கப்பட்ட தார் சாலையின் வழியாக பயணித்து, சுற்றிலும் பசும் புற்றரைகளும், அழகிய பூந்தொட்டிகளாலும் அலங்கரிக்கப்பட்டு, இரண்டு தளங்களாக அமைக்கப்பட்டிருந்த அந்த அழகிய சிறு மாளிகை போன்ற வீட்டின் வாயிலின் முன் நின்றது.
என்ன தான் இங்கு வருவதற்கு முன் இந்த இடம் பற்றி கூகுள் செய்து தெரிந்து கொண்டிருந்தாலும், நேரில் பார்த்தபோது அதன் பிரமாண்டம் அவளை மிரட்டியது.
இவ்வளவு பெரிய வீட்டில், இல்லையில்லை இந்த மாளிகையில் ஒரு குடும்பம் மட்டுமே வசிக்கும் என்பதை அவளால் கற்பனை கூட செய்ய முடியவில்லை.
அதே மருட்சியுடன் படியேறி, அந்த அரைவட்ட தரை முழுவதும் கறுப்பு நிற கிரானைட்டால் அமைக்கப்பட்டு, அழகிய பூந்தொட்டிகள் சரியான இடைவெளியில் அடுக்கப்பட்டும் சில உயர்தர நாற்காலிகள் ஆங்காங்கே இடப்பட்டுமாக அலங்கரிக்கபட்டிருந்த வராண்டாவைக் கடந்து வீட்டினுள் நுழைந்தவளை,
“நீ தான் இங்க புதுசா வேலைக்கு சேர்ந்துருக்கிற பொண்ணா…?” என்ற குரல் திடுக்கிட செய்து திரும்பி பார்க்க வைத்தது.
அங்கு வெள்ளை நிற பட்டு புடவையில் அதற்கு மேல் சிகப்பு நிற சால்வை ஒன்றை அணிந்து கம்பீரமாக சோபாவில் அமர்ந்து பழச்சாறு ஒன்றை சுவைத்து கொண்டிருந்தார் அகிலாண்டேஷ்வரி.
அவளது மான் விழிகளின் மருட்சியையும், தன் குரலால் ஏற்பட்ட திகைப்பையும் கண்டு கொண்டவர்,
“இங்க வாம்மா..” என கனிவாக அழைத்தார்.
அவளும் மெதுவாக தன் பாதங்களுக்கு கீழ் விரிக்கப்பட்டிருந்த கம்பளங்களின் மென்மையை உணர்ந்தவாறே அவர் அருகே வந்து “வணக்கம் அம்மா...” என இருகைகளையும் மொட்டு போல கூப்பினாள்.
இங்க வந்து “உக்காரும்மா ..” என்றார் .
அவளும் தயங்கியபடி அவர் எதிரே அமர்ந்தாள்.
“அப்படியே மகாலக்ஷ்மி மாதிரியே இருக்கம்மா..... உன்னோட பேர் என்ன?” என கேட்டார்.
“ஆதிரை” என்றாள் மெதுவாக புன்னகைத்தபடி. அப்போது,
“அம்மா.....லஞ்ச் ரெடியா?” என கேட்டபடி அங்கு வந்த அஜய் அவளைப் பார்த்து,
“ஹல்லோ! மிஸ் .....நீங்கதான் ஆதிரையா?....நீங்க கிளம்பினதும் உங்க மேடம் கால் பண்ணி சொன்னாங்க அண்ட் எங்க டிரைவர் நீங்க ரீச் ஆகிட்டத இன்ஃபார்ம் பண்ணினார்.”
“பிரயாணம் எல்லாம் எப்படி இருந்துச்சு? ஊட்டி பிடிச்சிருக்கா?” என புன்னகையுடன் கேட்டான்.
“பை த பை.. ஐ ஆம் அஜய்” என தன்னை அறிமுகபடுத்திக் கொள்ளவும் மறக்கவில்லை.
“பிரயாணம் ரொம்பவே சௌகரியமா இருந்தது சார். அக்சுவலா நான் தூங்கிட்டேன்... அண்ட் ஊட்டி பசேல்னு ரொம்பவே அழகா இருக்கு..... குளிர் தான் கொஞ்சம் பழகிக்கணும்னு நினைக்கிறேன்” என்றாள் சற்று வெட்கத்துடன்.
முன்தினம் இரவில் சரியாக உறங்கி இருக்க மாட்டாள் என சரியாக கணித்த அகிலாண்டேஷ்வரி,
“சரி...மா..நீ சாப்பிட்டு ரெஸ்ட் எடு....என்னோட பெரிய பையன் ஆதவன் பிசினஸ் விஷயமா ஆஸ்ட்ரேலியா போய் இருக்கான்..... அவன் வர இன்னும் ஒரு வாரம் ஆகும்..... உன்னோட எம்ப்லாயர் ஆதவன் தான்.... அஜய் உன்ன அடுத்த வாரம் வர சொல்லலாம்னுதான் சொன்னான்...... நான் தான் பரவால்ல கொஞ்சம் முன்னாடியே வரட்டும்னு சொன்னேன்..... ஏன்னா நீ வேலை செய்யப் போற இடத்த பழகிக்க கொஞ்சம் அவகாசம் கிடைக்கும் இல்லயா?” என்றார் அகிலாண்டேஸ்வரி சற்று இரக்கத்துடன்.
“சரி அம்மா..” என்றாள் நன்றியுடன்.
“கா....வேரி....இங்க வா..” என அங்கு வேலை செய்யும் பெண்ணை சற்று உரக்க அழைத்தார்.
“சொல்லுங்கம்மா..” என்று ஓடி வந்த காவேரியிடம்,
“காவேரி..... இவங்க ஆதிரை.......இங்க புதுசா வந்திருக்கிற மேனேஜர்.... அவங்களுக்கு கெஸ்ட் ரூம காட்டு..” என்றார்.
“வாங்கமா..” என காவேரி அவளது பெட்டியைத் தூக்க முயல,
“ஐயோ!..அக்கா குடுங்க... நானே கொண்டுவரேன்” என காவேரியின் கையில் இருந்த தன் பெட்டியை வாங்கிக் கொண்டாள்.
“என் கூட வாங்கம்மா” என அவளை அழைத்து சென்ற காவேரி,
“இந்த ரூம் தாம்மா” என அங்கு இருந்த ஒரு விசாலமான அறையை திறந்து காட்டினாள்.
“தாங்க்ஸ் அக்கா.... நான் ஃபிரெஷ் ஆகிட்டு சாப்பிட வரேன்... நீங்க போங்க” என்றாள் புன்னகையுடன்.
“சரி மா” என காவேரி வெளியேறி விட்டாள்.
அங்கு வந்ததன் பின் அவளுக்கு வாய்த்த முதல் தனிமை அது, கடந்த சில தினங்களில் தன் வாழ்வில் எதிர் பாராமல் ஏற்பட்ட மாற்றங்களை நினைத்தவள், தான் பயந்தது போலில்லாமல் இங்கிருப்பவர்கள் மிகவும் நல்லவர்களா இருப்பதை நினைத்து பெரும் நிம்மதி அடைந்தாள்.
அந்த விசாலமான அறையை சுற்றி சுற்றி பார்த்தவள், பத்திலிருந்து பதினைந்து பேருடன் ஒற்றை அறையில் வளர்ந்த தனக்கு இது ‘ரொம்பவே’ அதிகம் என நினைத்து கொண்டாள்.
‘வேலைக்கு வந்த எனக்கே இவளோ பிரம்மாண்டமான அறையை கொடுத்து இருக்கும் இந்த அகிலாண்டேஷ்வரி அம்மா மிக நல்லவர் போலும்’ என்று நினைத்தப்படி குளியலறையை நோக்கி சென்றாள்.
குளியலறையை பார்த்து, ‘யம்மா குளியலறையே ரூம் போல இருக்கே’ என நினைத்து விட்டு, ‘சரி தான் மொத்தத்தில் இங்கே எல்லாமே பிரமாண்டம்தான்..... வந்த நேரத்தில் இருந்து எல்லாவற்றையும் பார்த்து, வாயை பிளந்து கண்ணை விரித்து கண்ணும் வாயும் வலித்தது போதும்’ என குளிருக்கு இதமான சுடுநீரில் குளித்துக்கொண்டே தன்னை நிதானபடுத்திக் கொண்டாள்.
தயாராகி கீழே வந்தவள், கண்களால் அகிலாண்டேஷ்வரியை தேட,
“யார தேடுறீங்க..? என புன்னகையுடன் கேட்டபடி மாடிபடியிறங்கி வந்தான் அஜய்.
“அது....... வந்து.......” என அவள் இழுக்க,
“ஆதிரை...... ஃபீல் ஃப்ரீ... இத உங்க வீடுன்னே நினைங்க.... கல்கி மேடம்.. எங்கள நம்பி தான் உங்கள இங்க அனுப்பி வச்சிருக்காங்க... சோ... எதுவானாலும் ஃப்ரீயா கேளுங்க.. ம்ம்” என்றான்.
அதற்கு என்ன பதில் சொல்வதென்று யோசித்துக்கொண்டு அவள் அமைதியாக நிற்க,
“சரி சாப்பிட்டீங்களா....?” என அவன் கேட்டான்.
“இன்னும் இல்... இல்...ல சார்” என்றாள் தடுமாற்றத்துடன்.
“என்கூட வாங்க” என அவளை சாப்பாட்டு அறைக்கு அழைத்து சென்றவன்,
“இதான் டைனிங் ஹால்.. இங்க எப்பவும் ஏதாவது சாப்பாடு ரெடியா இருக்கும்..... கூச்சப்படாம நீங்க வந்து சாப்பிடலாம்” என்றான் அஜய்.
“சரி சார்” என்றாள்.
“சரி... உக்காந்து சாப்பிடுங்க..... அப்புறம் இன்னொரு விஷயம்.... ஆதிரை..” என்க,
அவள் அவனை கேள்வியாக பார்க்க,
“அண்ணாதான் மெயினா எஸ்டேட் அண்ட் எக்ஸ்போர்ட் பிசினஸ பரத்துக்குராரு.... அவருக்கு சப்போர்ட்டா நான் இருக்கேன்..... அவர்தான் உங்க ஆசிரமத்துல ஒருத்தங்களுக்கு தான் வேலை குடுக்கணும்னு முடிவு பண்ணினார்....இந்த விஷயத்துல கொஞ்சம் பிடிவாதமா இருந்தார்னு கூட சொல்லலாம். உங்க அப்பாய்ன்மெண்ட் அண்ணா வந்ததுக்கு அப்புறம் தான்.. ஸோ அது வரைக்கும் ரிலாக்சா... ஊட்டிய கொஞ்சம் சுத்தி பாருங்க” என்றான் புன்னகையுடன்.
“அப்போ நான் இங்க வேலைக்கு வந்ததுதுல உங்களுக்கு விருப்பம் இல்லயா சார்?”என கேட்டவளை சற்று வியப்புடன் பார்த்தான் அஜய்.
“சாரி சார்” என நாக்கை கடித்து கொண்டாள் தனது அதிகபிரசங்கி தனத்தை நினைத்து.
அவளது சிறு பிள்ளை தனமான செயலை பார்த்து மெல்லிய சிரிப் பொன்றை உதிர்த்தவன்,
"அப்படி எல்லாம் இல்லை ஆதிரை.... அண்ணா சொன்ன விஷயம் எங்களுக்கும் சரின்னு பட்டதனால தான்... நானே நேர்ல வந்து பேசுனேன்.... அது மட்டும் இல்லாம கல்கி மேடம் உங்கள ரெகமண்ட் பண்ணப்ப..... இன்டர்வியுகூட பண்ணாம உங்கள செலக்ட் பண்ணியது நான்தான்" என்றான்.
"கல்கி காப்பகம்கிறது அண்ணாவோட முடிவு....ஆனா ஆதிரைய செலக்ட் பண்ணது அஜய்தான்....ஓகே" என்றான் குறும்பாக.
"ஐயோ!..சார்..... நான் சும்மா தான் கேட்டேன்" என்றாள் பதற்றத்துடன்.
"ரிலாக்ஸ் ஆதிரை.. என்ன உங்க ஃப்ரெண்ட்டா நினைச்சிகோங்க...... எந்த ஹெல்ப் வேணும்னாலும் என்கிட்ட கேளுங்க..... சரியா?" என்றான்.
"ஃப்ரெண்ட்ன்னு சொல்லிட்டு.... வாங்க போங்கன்னு கூப்பிட்டுட்டு இருக்கீங்க" என கேட்டாள் மறுபடியும் அதே துடுக்கு தனத்துடன்.
"ஹா...ஹா... ஹா...." என வாய்விட்டு சிரித்தவனோ,
"தேறிட்டீங்க ஆதிரை.. சாரி..சாரி... தேறிட்ட.. இப்போ நீ ரெஸ்ட் எடு......நான் ஆபீஸ் போறேன்.... சீ யு லேட்டர்...."என அங்கிருந்து கிளம்பினான் அஜய்.
அவளும் உடனே ஒருமை அழைப்புக்கு தாவிய அவனை நினைத்து தனக்குள் ஆச்சரியப்பட்டு கொண்டாள். பின்னே..முதலாளி ஸ்தானத்தில் இருக்கும் ஒருவன் இன்றுதான் வேலைக்கு சேர்ந்த தன்னிடம் இவ்வளவு எளிமையாக பழகினால் ஆச்சரியம் தானே வரும்.
அவளுக்கு தன்னை குறித்தும் ஆச்சிரியமே....அவள் மட்டுமன்றி ஆசிரமத்தில் வளரும் அவள் போன்ற பெண்கள் யாரிடமும் இவ்வளவு எளிதாக பழக மாட்டார்கள். சிறு வயது முதலே ஒவ்வொருவரிடமும் குறிப்பாக ஆண்களிடம் எப்படி பழக வேண்டுமென அவர்களுக்கு கற்பிக்கபட்டிருக்கும். அவர்களிடம் வயதுக்குக்கு மீறிய முதிர்ச்சியும், இறுக்கமும், ஒதுக்கமும் இருக்கும்.
அஜயிடம் தான் இறுக்கம் தளர்ந்து வார்த்தையாடியதை நினைக்கும் போது அவனிடம் ஒரு சகோதர உணர்வு தோன்றியது மட்டுமின்றி, யாரும் இல்லாத அவளுக்கு எல்லோரும் இருப்பது போன்ற உணர்வும் தோன்றி மனதை பூரிப்பு அடைய செய்தது. அவனது இயல்பான போலித்தனமற்ற செயல்கள் அவளை கட்டவிழ செய்ததோ?.. அவளறியாள்.
அதே பூரிப்புடன் தோட்டத்தை சுற்றிப் பார்க்க வெளியே சென்றாள் ஆதிரை.
அவளுக்கு சிறு வயதில் இருந்தே இயற்கையை ரசிப்பதில் அலாதி பிரியம். இத்தனை வருடம் கழித்து இயற்கையழகு மொத்ததையும் 'இந்தா வச்சிக்கோ' என அவள் கையில் வாரிகொடுத்தது போலிருந்தது. வெளியே வந்து தனது இரு கைகளையும் மார்புக்கு இடையே கட்டிக்கொண்டு குளிரை கண்மூடி ரசித்தாள் .
கண்களை திறந்தவளோ 'யப்பா இந்த ஹோம் கார்டன் எவ்ளோ அழகா இருக்கு.... எனக்கு புடிச்ச ரோஜா பூத்து குழுங்குது' என அந்த ரோஜா பூவின் இதழ்களை தன் மென்பஞ்சு விரல் கொண்டு வருடினாள் .
ரோஜா பூவை தான் நாசியால் உரசினாள்.
அப்பொழுது அங்கு வந்த தோட்டக்காரன் "பூ பறிச்சி தரவா மேடம் ?" என கேட்டார்.
"வேணாம் அண்ணா.... எனக்கு பூ செடியில் இருந்தா தான் புடிக்கும்" என்றாள் மென்புன்னகையுடன்.
"அப்புறம் அண்ணா..என்ன மேடம்ன்னு எல்லாம் கூப்புட வேணாம். சும்மா பேர் சொல்லியே கூப்புடுங்க.. என்னோட பேர் ஆதிரை.." என்றாள் மீண்டும் அதே புன்னகையுடன்.
அவளை ஆச்சரியமாக பார்த்த தோட்டக்காரன்,
"பெரிய தம்பியும் உங்கள மாதிரி தான்மா " என்றான்.
"என்ன மாதிரினா.... எப்படி?" என கேட்டாள்.
"அவருக்கும் செடியில் இருந்து பூ பறிச்சா புடிக்காது... அம்மா சாமிக்கு பறிக்க சொன்னாலே கோபப்படுவாரு.... பூ எல்லாம் செடியில் இருந்தா தான் அழகுன்னுசொல்லுவாரு....ரொம்ப ரசனையானவரரு..... இந்த கார்டனோட பிளான் அவருடையது தான்" என்றான்.
பூக்கள் விஷயத்தில் தன்னுடைய ரசனையுடன் ஒத்துபோகும் அவனை பற்றி இதுவரை அவன் தாய், தம்பி, இதோ இந்த தோட்டக்காரன் என பலர் சொல்லக் கேட்டவளுக்கு, அவன்... அந்த ஆதவன்.. தன்னுடைய முதலாளி.. எப்படிபட்டவனாக இருப்பான் என்ற எண்ணம் தோன்ற, கூடவே கடவுளே.... அவன் அஜயை போலவே நல்லவனாக இருக்க வேண்டுமே என்ற பிரார்த்தனையும் எழுந்தது.
ஒருவித எதிர்பார்ப்பும், புதிய சூழல், புதிய மக்கள், புதிய கற்றல் என தன் வாழ்க்கைப் புத்தகத்தின் அந்த அத்தியாயத்தை கடந்து, வேலை எனும் அடுத்த அத்தியாயத்தை திறக்க காத்திருக்கலானாள் ஆதிரை.