"அல்லி மலர்க்கொடியே!" - by
@Sirajunisha
அல்லிமலர், தனது குழந்தைத்தனமான ஆசைகளை உயிர்ப்புடன் வைத்திருப்பதில் இருந்து, கதையின் இறுதியில் பக்குவப்பட்டப் பெண்ணாக நடந்துகொள்வதுவரை மனதைக் கவர்கிறாள்; கதையின் ஆரம்பத்திலேயே தனது குறும்பான செய்கையால் ரசிக்கவும், சிரிக்கவும் வைக்கிறாள்.
குடும்பத்திற்காகச் சிறு வயதில் இருந்தே பொறுப்பை ஏற்று, தங்கையாக இருந்தாலும், தந்தை ஸ்தானத்தில் இருந்து வேலைக்குச்சென்றும், தனது படிப்பையும் தொலைதூரக்கல்வி மூலம் கவனித்துக்கொண்டு, குடும்பத்தையும் கவனித்துக்கொள்ளும் அல்லி;
மூத்த மகனாய், தன் தம்பி-தங்கைக்குத் தகப்பன் ஸ்தானத்தில் இருந்து தாயையும், நிறுவனத்தையும் நடத்தி வரும் இரணதீரன் (அல்லியின் 'தீரன்'; மற்றவர்களுக்கு 'இராணா').
WhatsApp DP கலாட்டா, Saree Ki Faal Saa Kabhi Match Kiya Re பாட்டு பாடி முகவரி கேட்க வைக்கிறது, அல்லி-இராணா முதல் phone உரையாடல், Dessert-Desert, பேய் பயத்தால் அப்பத்தாவை அலறவிட்டது எனச் சிரிக்கவைத்த இடங்கள் பல
.
புவனா-குமார் அல்லியின் உற்ற துணைகள்.அல்லி, தான் துவண்டு நிற்கும் இடங்களில் எல்லாம் தன் மனோதிடம் மூலமும், இவர்களின் தக்க ஆறுதலோடும் கடந்து நிமிர்ந்து நிற்கிறாள்.
வேலைக்குச்செல்வதால் தனியாகத் தங்கியிருக்கும் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளைக் கையாளும் விதம்; முதன்முறை இராணா வீட்டிலிருந்து மன வருத்தத்தோடு வெளியேறுவதும், பொங்கல் பண்டிகைக்கு அப்பத்தா வீட்டிற்கு தான் அனுப்பப்பட்டது தெரிந்த ஏமாற்றம், ஆதங்கம்; நேத்ரன் நிச்சயதார்த்தத்தில் தனக்கு ஏற்பட்ட அவமானம் & அதிர்ச்சி இவையனைத்தையும் தன் அன்னை வாணியிடம் மனம்விட்டு அழுது வெளிப்படுத்தும் விதம், வித்யாவிற்குப் பதிலடி கொடுத்த விதம், இராணா அல்லியைத் தெளியவைச்சுக் குழப்பினதுக்கான ('தெரிஞ்ச பிசாசே மேல்') பதிலடி என அல்லியின் பல பரிமாணங்கள்
அல்லி - இராணா கருத்து மோதல்கள் மட்டுமல்ல, இவங்க ஒருத்தரை ஒருத்தர் விரும்புவதை வெளிக்காட்டாம நடந்துக்குறதும் சுவாரசியமா இருந்துச்சு.
மொத்தத்தில் a feel good story