santhinagaraj
Well-known member
கூடாரை வெல்லும்
விமர்சனம்
நல்ல ஃபீல் குட் லவ் ஸ்டோரி.
கோதா தேவ் ரெண்டு பேரும் தங்கள் வேலைகளில் பிஸியாக இருக்கும் சமயத்தில் வீட்டில் இருப்பவர்கள் அல்லது கல்யாணம் செய்து இருக்கிறார்கள்.
தேவ்க்கு கோதா மீது காதல் இருப்பதால் சம்மதம் சொல்கிறான். ஆனா கோதா தான் படிக்கணும் வேலைக்கு போகணும் மூணு வருஷம் கழிச்சு கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்ல, எல்லாரும் சேர்ந்து கல்யாணத்துக்கு அப்புறம் படிச்சுக்கோ வேலைக்கு போகனு சொல்லி கல்யாணம் பண்ணி வச்சிடுறாங்க.
தேவ் கோதா ரெண்டு பேரும் தங்களின் வேலை காரணமாக ஆளுக்கு ஒரு பக்கம் பிரிந்து இருக்க வீட்டினர் இப்படி பிரிந்து இருந்தால் எப்படி என்று கோதாவை வேலை விட்டு வர சொல்றாங்க ஆனா போதாது எனக்கு வேலை முக்கியம் என்று அதைவிட மறுக்கிறாள். தேவ் கோதா வேலை விஷயத்தில் பெரிது படுத்தாமல் அவள் மீது கொண்ட காதலில் அவள் தானக்காக திரும்பி வருவாள் என்று அமைதியாக இருக்கிறான்.
ஆனால் வீட்டில் இருக்கவங்க மீண்டும் மீண்டும் வேலையை விட்டு வரச் சொல்லி அவளுக்கு அழுத்தம் கொடுக்க
அதனால் ஏற்படும் மன உளைச்சலில் கோதா கோவமும் அவசரமுமாக ஒரு முடிவை எடுக்க அதனால் கோதா தேவ் இருவருக்கும் இடையே ஒரு பிரிவை ஏற்படுத்துது.
கோதாவிற்கு தேவின் காதல் புரிந்ததா? வீட்டில் உள்ளவர்களுக்காக வேலையை விட்டு வந்தாளா? தேவ் கோதாவின் பிரிவிற்கு காரணம் என்ன என்ற கேள்விகளோடு கதையை ரொம்ப சுவாரஸ்யமான கொண்டு போன விதம் அருமை
வீட்டில் வரும் பிரச்சனைகளை கோதாவிற்காக தேவவும் சீனிவாசனும் சமாளித்து கோதாவிற்கு ஆதரவு தெரிவித்து அவளுக்கு பக்க பலமாக இருப்பது சூப்பர்

டேவ் ஓட காதல் ரொம்ப அருமை


ராணி முந்திரி கோதாவின் சேட்டைகளும் அவளின் கொஞ்சும் தெலுங்கும் ரொம்ப நல்லா ரசிக்கும்படியாக இருந்தது.

கோதாவிற்காகதேவ் பார்த்து பார்த்து செய்யும் ஒவ்வொரு செயல்களும் அருமை

ஒரு பெண்ணிற்கு வேலை விஷயத்தில் வீட்டில் எவ்வளவு எதிர்ப்புகள் இருந்தாலும். தந்தையும் கணவனும் ஆதரவு கொடுத்தால் எவ்வளவு பெரிய பிரச்சனைனாலும் சமாளிக்கலாம் அப்படி பிரச்சினைகளை கோதா எப்படி சமாளித்து வெளியே வருகிறாள் என்பதை கதையின் ஓட்டத்தின் ரொம்ப சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிற இடம் சூப்பர்


தெலுங்கு கலந்த அழகான தமிழ் கதை ரொம்ப நல்லா இருந்தது சூப்பர்

வாழ்த்துக்கள்


விமர்சனம்
நல்ல ஃபீல் குட் லவ் ஸ்டோரி.
கோதா தேவ் ரெண்டு பேரும் தங்கள் வேலைகளில் பிஸியாக இருக்கும் சமயத்தில் வீட்டில் இருப்பவர்கள் அல்லது கல்யாணம் செய்து இருக்கிறார்கள்.
தேவ்க்கு கோதா மீது காதல் இருப்பதால் சம்மதம் சொல்கிறான். ஆனா கோதா தான் படிக்கணும் வேலைக்கு போகணும் மூணு வருஷம் கழிச்சு கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்ல, எல்லாரும் சேர்ந்து கல்யாணத்துக்கு அப்புறம் படிச்சுக்கோ வேலைக்கு போகனு சொல்லி கல்யாணம் பண்ணி வச்சிடுறாங்க.
தேவ் கோதா ரெண்டு பேரும் தங்களின் வேலை காரணமாக ஆளுக்கு ஒரு பக்கம் பிரிந்து இருக்க வீட்டினர் இப்படி பிரிந்து இருந்தால் எப்படி என்று கோதாவை வேலை விட்டு வர சொல்றாங்க ஆனா போதாது எனக்கு வேலை முக்கியம் என்று அதைவிட மறுக்கிறாள். தேவ் கோதா வேலை விஷயத்தில் பெரிது படுத்தாமல் அவள் மீது கொண்ட காதலில் அவள் தானக்காக திரும்பி வருவாள் என்று அமைதியாக இருக்கிறான்.
ஆனால் வீட்டில் இருக்கவங்க மீண்டும் மீண்டும் வேலையை விட்டு வரச் சொல்லி அவளுக்கு அழுத்தம் கொடுக்க
அதனால் ஏற்படும் மன உளைச்சலில் கோதா கோவமும் அவசரமுமாக ஒரு முடிவை எடுக்க அதனால் கோதா தேவ் இருவருக்கும் இடையே ஒரு பிரிவை ஏற்படுத்துது.
கோதாவிற்கு தேவின் காதல் புரிந்ததா? வீட்டில் உள்ளவர்களுக்காக வேலையை விட்டு வந்தாளா? தேவ் கோதாவின் பிரிவிற்கு காரணம் என்ன என்ற கேள்விகளோடு கதையை ரொம்ப சுவாரஸ்யமான கொண்டு போன விதம் அருமை
வீட்டில் வரும் பிரச்சனைகளை கோதாவிற்காக தேவவும் சீனிவாசனும் சமாளித்து கோதாவிற்கு ஆதரவு தெரிவித்து அவளுக்கு பக்க பலமாக இருப்பது சூப்பர்
டேவ் ஓட காதல் ரொம்ப அருமை
ராணி முந்திரி கோதாவின் சேட்டைகளும் அவளின் கொஞ்சும் தெலுங்கும் ரொம்ப நல்லா ரசிக்கும்படியாக இருந்தது.
கோதாவிற்காகதேவ் பார்த்து பார்த்து செய்யும் ஒவ்வொரு செயல்களும் அருமை
ஒரு பெண்ணிற்கு வேலை விஷயத்தில் வீட்டில் எவ்வளவு எதிர்ப்புகள் இருந்தாலும். தந்தையும் கணவனும் ஆதரவு கொடுத்தால் எவ்வளவு பெரிய பிரச்சனைனாலும் சமாளிக்கலாம் அப்படி பிரச்சினைகளை கோதா எப்படி சமாளித்து வெளியே வருகிறாள் என்பதை கதையின் ஓட்டத்தின் ரொம்ப சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிற இடம் சூப்பர்
தெலுங்கு கலந்த அழகான தமிழ் கதை ரொம்ப நல்லா இருந்தது சூப்பர்
வாழ்த்துக்கள்