எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அகம் தொலைத்தேன் அசுரனிடம்..

RJ novels

Moderator

அகம் - 48​

அவனுக்கு வர்மன் பதில் உரைப்பதற்குள்ளாகவே முந்தி கொண்ட ஆதிரை, "ராகுல் மைண்ட் யுவர் வர்ட்ஸ் என்ன பேசுற நீ" என்றாள் அதட்டலாக.​

"உனக்காக தான் பேசுறேன் ஆது. இன்னும் எத்தனை நாள் தான் இவர் கூட அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு நீ வாழ போற பிடிக்கலன்னா தூக்கி போட்டுட்டு வா" என்றவனின் வார்த்தையில் அத்தனை ஏக்கம் தென்பட்டது.​

"லூசு மாதிரி உளறாத ராகுல். நான் இவரோட சந்தோஷமா தான் வாழ்ந்துகிட்டு இருக்கேன். இவரால் தான் எனக்கு அவ்வளவு பெரிய ஃபேமிலி கிடைச்சிருக்கு. என்ன தெரியும் உனக்கு இவரை பத்தி..​

எங்க ரெண்டு பேருடைய பர்சனலை இப்படி பப்ளிக்ல பேசுறதுக்கு உனக்கு யாரு ரைட்ஸ் கொடுத்தது. திரும்ப இப்படி எல்லாம் நடந்துக்காத" என்று எச்சரிப்பது போல் அவனிடம் கூறியவள்.​

ஆருத்ரவர்மனின் கையை பற்றி கொண்டு அங்கிருந்து அவனை அழைத்து வந்தாள்.​

வர்மன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அவ்வளவு ஏன் ராகுலின் மேல் அவனுக்கு துளியும் கோபம் எழவில்லை. தன்னவள் தனக்காக பேசினாளே அதை எண்ணியே பூரித்துப் போனான்.​

அவளின் வார்த்தையில் இவனுக்குள் அப்படி ஒரு ஆனந்தம். அவளையே விழி அகலாது பார்த்தவாறு அவள் இழுத்த இழுப்புக்கெல்லாம் அவளின் பின்னோடு சென்று கொண்டிருந்தான்.​

சற்று தூரம் தள்ளி வந்தவள், "அவன் பேசியதை எல்லாம் நீங்க எதுவும் தப்பா நினைச்சுக்காதீங்க. அவன் அப்படித்தான் ஏதாவது லூசு மாதிரி பேசிக்கிட்டு இருப்பான். என்ன சொன்னாலும் புரிஞ்சுக்க மாட்டேங்குறான்".​

"நிஜமாவே நீ என்னோட சந்தோஷமா தான் இருக்கியா?".​

"ம்ம்.. ஆமா".​

"பொய் சொல்லாத அவனுக்காக தானே நீ அப்படி பொய் சொன்ன" என்றவனின் பார்வையோ அவளையே குறுகுறுவென பார்த்துக் கொண்டிருந்தது.​

"பொய் எல்லாம் ஒன்னும் இல்ல. என்னை மாதிரி ஒரு அனாதைக்கு இவ்வளவு பெரிய குடும்பத்தை கொடுத்து இருக்கீங்க. இதைவிட நான் சந்தோஷமா இருக்க எனக்கு வேற என்ன வேணும்" என்கவும்.​

அவளின் வாயின் மீது தன் கையை வைத்து மூடியவன், "திரும்ப அனாதை என்று சொல்லாதடி கஷ்டமா இருக்கு. அன்னைக்கு நான் தெரியாம பேசிட்டேன் அதுக்கு உன்கிட்ட அன்னைக்கே நான் சாரியும் கேட்டுட்டேன். ஆனா என்னுடைய ஒரே ஒரு சாரி உன் மனசுல இருக்க காயத்தை சரி பண்ணாதன்னு எனக்கும் தெரியும்.​

நான் என்ன பண்ணா நீ அதை மறப்பனு சொல்லு நான் செய்கிறேன். உன் காலில் வேணும்னா விழட்டுமா" என்றவனின் வார்த்தையில் வாயடைத்து போய் நிற்பது இப்பொழுது ஆதிரையின் முறையாகிற்று.​

எவ்வளவு பெரிய வார்த்தையை எவ்வளவு சாதாரணமாக கூறிவிட்டான். அதிர்ச்சியில் அவளின் கண்கள் பெரிதாக விரிந்து கொள்ள. அவனுக்கு பதிலுரைக்க வார்த்தைகள் அற்றவளாக அவனையே பார்த்துக் கொண்டு நின்று இருந்தாள்.​

அப்பொழுது அவர்கள் அருகே குரலை செறுமி கொண்டே வந்த கவின், "என்ன மச்சான் காலேஜ்ல வச்சு இப்படி ரொமான்ஸ் பண்றீங்களே பெரிய ரோமியோவா இருப்பீங்க போலருக்கே" என்றான் கிண்டலாக.​

அவனின் வார்த்தையில் தான் தாங்கள் இருவரும் இருக்கும் நிலையை உணர்ந்தவர்கள் சட்டென்று விலகி நிற்கவும். அவர்களின் வகுப்பு ஆரம்பிக்கும் நேரமும் வந்து சேர்ந்தது.​

பல் மருத்துவம் படிப்பதால் ஆளுக்கு ஒரு வாலண்டியரை அழைத்து வந்து அவர்களின் பற்களை பரிசோதித்து ரிப்போர்ட் சமர்ப்பிக்க வேண்டும். அது தான் அவர்களின் இன்றைய வேலை.​

அதற்காக தான் இனியா கவினை வர வழைத்திருந்தாள். ஆதிரையும் ஆதவனை அழைத்து இருந்தாள். ஆனால் ஆதவனுக்கு பதிலாக ஆருத்ரவர்மன் வருவான் என்பதை அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை.​

தன் அருகில் அமர்ந்து தன்னையே பார்த்துக் கொண்டிருப்பவனின் பற்களை பரிசோதித்துக் கொண்டிருந்தவளின் விழிகளும் நொடிக்கு ஒரு முறை அவனின் விழிகளை சந்தித்த வண்ணம் தான் இருந்தது.​

இனியாவும் கவினும் இந்த சந்தர்ப்பத்தை உபயோகித்துக் கொண்டு தங்கள் காதலை வளர்த்துக் கொண்டிருந்தனர்.​

ஆதிரைக்கு தான் ஆருத்ர வர்மனின் அருகில் பெரும் அவஸ்த்தையாக இருந்தது. அதிலும் அவனின் பார்வை வேறு இவளிலிருந்து நொடியும் நகராமல் இருக்க. அவனிலிருந்து தன் சிந்தனையை மாற்ற முடியாது திண்டாடி போனது என்னவோ ஆதிரை தான்.​

ஆதிரை ஆருத்ர வர்மனின் கவனத்தை கலைக்கும் பொருட்டு தன் குரலை சிறுமியவள், "எந்த பல்லை பிடுங்கணும்?" என்று கேள்வி எழுப்பவும்.​

அவளின் வார்த்தையில் பதறியவன், "என்னது பல்ல பிடுங்க போறியா?" என்றான் அதிர்ந்து விரிந்த விழிகளோடு.​

"ஆமா.. ஆதவ் அவருடைய பல்லுல ஏதோ பிரச்சனைனு சொல்லிட்டு இருந்தாரு அதான் அவரை வர சொல்லி இருந்தேன். நீங்க தான் அவசரப்பட்டு குறுக்கில் வந்துட்டீங்க. சரி விடுங்க எந்த பல்ல பிடுங்கணும்னு சொல்லுங்க".​

"ஏய் பல்லை எல்லாம் பிடுங்கிடாத டி" என்றான் சற்று பதட்டமாக.​

"என்கிட்ட எவ்வளவு வாய் பேசி இருப்பீங்க. பேசினது இந்த வாய் தானே எல்லாத்துக்கும் சேர்த்து வச்சு நாலு பல்லாவது பிடுங்கினால் தான் எனக்கு மனசு ஆறும்" என்று விளையாட்டாக கூறியவளிற்கோ தன் சிரிப்பை கட்டுப்படுத்துவது தான் பெரும் பாடகி போனது.​

"விளையாடாத டி அதெல்லாம் எப்பயோ நடந்தது. எல்லாத்துக்கும் சேர்த்து வச்சு இப்போ என்னை பழி வாங்க பார்க்கிறியா".​

"அப்போ இனிமே நான் என்ன பேசினாலும் என்கிட்ட சண்டை போட மாட்டேன்னு சொல்லுங்க பல்லை பிடுங்காமல் மன்னிச்சு விட்டுடுறேன்" என்றாள் பெரிய மனதாக.​

ஆருத்ர வர்மன் அவளின் விழிகளோடு ஊடுருவும் பார்வை பார்த்தவன், "இனி எனக்கும் வேற வழி இல்லையே சரண்டர் ஆகி தானே ஆகணும்" என்றான் ஹஸ்கி வாய்ஸில்.​

அவனின் குரலும் பார்வையும் இவளுக்குள் என்னவோ செய்ய. அதற்கு மேல் அவன் விழிகளை பார்க்க முடியாமல் கடகடவென தன் வேலையை பார்க்க தொடங்கி விட்டாள்.​

அவள் மட்டும் தன் வேலையை பார்க்கவில்லை. ஆருத்ர வர்மனும் தான் வந்த வேலையை சரியாக பார்த்துக் கொண்டிருந்தான்.​

ஆம், அவன் வந்ததே ஆதிரையை பார்ப்பதற்காக தானே. அந்த வேலையை நன்கு திறம்பட பார்த்தான் என்று தான் கூற வேண்டும்.​

அவனின் பார்வையின் வீரியத்தை தாக்கு பிடிக்க முடியாமலே வேகமாக தன் வேலையை முடித்தாள் ஆதிரை.​

"சரி நீங்க கிளம்புங்க" என்று அவனை இங்கிருந்து அனுப்பினால் போதும் என்பது போல் அவள் அவசரப்படவும்.​

"ஏன் என்னை துரத்துவதிலேயே குறியா இருக்க?".​

"அதெல்லாம் ஒன்னும் இல்லையே நான் எங்க துரத்துறேன்" என்றாள் தன் தோள்களை குலுக்கியவாறு தான் சாதாரணமாக இருப்பது போல் காட்டிக் கொண்டு.​

"இன்னும் எத்தனை மந்த் இருக்கு காலேஜ் முடிய?" என்றவனோ அவளை அர்த்தமாய் பார்க்க.​

"த்ரீ மந்த் அதுக்கு அப்புறம் ட்ரைனிங்".​

"அப்போ இன்னும் மூணு மாசம் கழிச்சு தான் நமக்கு ஃபர்ஸ்ட் நைட்டா" என்றான் வெளிப்படையாக.​

முதல் முறை அவன் இவ்வளவு வெளிப்படையாக பேசுவதை கேட்டவளிற்கோ எவ்வளவு முயன்றும் அவளின் முகம் செவ்வண்ணம் பூசிக்கொண்டது.​

"இது காலேஜ் காலேஜ்ல வச்சு பேசுற பேச்சா இதெல்லாம் நீங்க முதல்ல கிளம்புங்க" என்றவளின் பார்வையோ ஒரு இடத்தில் நிலைத்து நிற்காமல் அலை மோதியது.​

"நீ பதில் சொன்னா நான் இப்போவே கூட கிளம்பிடுவேன்".​

"என்ன பதில் வேணும் உங்களுக்கு?".​

"அதான் சொன்னேனே மூணு மாசம் கழிச்சு ஃபர்ஸ்ட் நைட்டுக்கு ஓகே தானே?" என்றவனின் கேள்விக்கு பதில் உரைக்க முடியாமல் தடுமாறியவள், "அதெல்லாம் அப்போ பாத்துக்கலாமே" என்றாள் பரிதவிப்பான குரலில்.​

அவளின் தவிப்பை ரசித்தவன், "ஓகே அப்போவே பாத்துக்கலாம். பட் நீ முடியாதுன்னு சொன்னாலுமே நான் உன்னை எடுத்துப்பேன். அதை மட்டும் நல்லா ஞாபகம் வச்சுக்கோ" என்று விட்டு தன் கூலர்சை அவளைப் பார்த்துக் கொண்டே அணிவித்தவன் அலுவலகம் கிளம்பி விட்டான்.​

இப்பொழுது தான் ஆதிரைக்கு நிம்மதி மூச்சே வெளியேறியது.​

அவன் பேசிய வார்த்தைகளை எண்ணியவளுக்கு வெட்க புன்னகை தான் அரும்பியது. இவருக்கு இப்படி எல்லாம் கூட பேச தெரியுமா என்று ஆச்சரியமாக செல்பவனையே பார்த்துக் கொண்டு நின்று இருந்தாள்.​

அன்று இதழினி அலுவலகம் செல்லவே இல்லை. ஆதவன் அவளின் செல்பேசிக்கு அழைப்பு விடுக்கவும் அழைப்பை ஏற்றவளோ பதில் பேசாமல் அழுது கொண்டே இருந்தாள்.​

"இதழ் என்ன ஆச்சு இப்போ எதுக்காக இப்படி அழுதுகிட்டு இருக்க?" என்றான் பதட்டமான குரலில்.​

இதழினி அழுகையினோடு, "ஆதவ் பாட்டி கால் பண்ணாங்க உடனே ஊருக்கு கிளம்பி வர சொல்றாங்க. ஏதோ மாப்பிள்ளை பார்த்து வச்சிருக்காங்களாம் எனக்கு ரொம்ப பயமா இருக்கு".​

"இதுக்கு ஏன் டி அழற அவ்வளவு தான.. நீ ஊருக்கு கிளம்பி போ" என்றான் இலகுவாக.​

"என்ன அவ்வளவு தானானு இவ்வளவு கூலா கேக்குறீங்க எனக்கு பயமா இருக்கு" என்ற அவளின் குரலே கூறியது அவளின் பயத்தின் அளவை​

"நீ பயப்படுற அளவுக்கு எல்லாம் ஒன்னும் இல்ல உனக்கு என் மேல நம்பிக்கை இருக்கு இல்ல எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன். நீ தைரியமா போ நான் பாட்டியை கூப்பிட்டு வந்து உங்க வீட்டில் பேசுறேன்".​

ஒருவாறு பேசி சமாளித்து அவளை ஊருக்கு அனுப்பி வைத்தவன். நேராக சென்று நின்றது தன் பாட்டியின் முன்னால் தான்.​

அகிலாண்டேஸ்வரி, "என்ன ஆதவ் என்ன விஷயம்?".​

"பாட்டி உங்களுக்கும் நீலவேணி பாட்டி குடும்பத்துக்கும் என்ன பிரச்சனை?" என்றான் நேரடியாக.​

"நீ எதுக்காக இப்போ அதையெல்லாம் கேக்குற?" என்றவரோ அவனை சந்தேகமாக பார்க்க.​

"பாட்டி இதழினி நீலவேணி பாட்டியுடைய பேத்தி" என்றது தான் தாமதம் ஆகிலாண்டேஸ்வரி பாட்டி அதிர்ச்சியில் எழுந்தே நின்று விட்டார்.​

"என்ன ஆதவ் சொல்ற நீலவேணியுடைய பேத்தியா?".​

"ஆமா பாட்டி எனக்குமே இந்த விஷயம் லேட்டா தான் தெரிஞ்சது. நீங்க தான் அவங்க கிட்ட பேசணும். அவங்க எங்க கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டாங்கனு இதழினி ரொம்ப பயப்படுறா".​

"என்ன ஆதவ் சொல்ற அவ யார் சொன்னாலும் கேட்க மாட்டா. ஏற்கனவே அவ பொண்ணு காதலிச்சதால் தான் ரெண்டு குடும்பமுமே பிரிஞ்சு போற அளவுக்கு பிரச்சனை வந்தது. இப்போ நீ என்னடான்னா அவளுடைய பேத்தியையே காதலிக்கிறேன்னு வந்து சொல்றியே" என்றார் அதிருப்தியான குரலில்.​

சரித்திரன், "அம்மா இதுவும் நல்லதுக்கு தான்னு நினைச்சுக்கோங்க. நம்ம குடும்பமும் சித்தி குடும்பமும் திரும்ப சேரணும் என்பதற்காக தான் கடவுள் இவங்க ரெண்டு பேர் மூலமா முடிச்சு போட்டு இருக்காரோ என்னவோ".​

 

RJ novels

Moderator

அகம் - 49​

"ரெண்டு குடும்பமும் ஒன்று சேர்வதிலும் இவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்கிறதுலயும் நம்ம யாருக்குமே எந்த பிரச்சனையுமே இல்லப்பா. ஆனா இதுக்கெல்லாம் நீலவேணி சம்மதிக்கணுமே" என்றார் பெருமூச்சோடு.​

"நீங்க பேசினா கூட அவங்களை சமாதானப்படுத்த முடியாதா பாட்டி" என்றான் ஆதவன்.​

"கஷ்டம் தான் பேசி பார்க்கலாம்" என்றவருக்குமே அவரை மலை இறக்குவது அவ்வளவு லேசான காரியமாக தோன்றவில்லை.​

அன்று இரவு ஆதவன் வருத்தமான குரலில் இனியாவிடமும் ஆதிரையிடமும் இதழினியின் குடும்பத்தை பற்றி விவரித்துக் கொண்டிருந்தான்.​

இனியா மெல்லிய குரலில், "அண்ணா எனக்கும் இதெல்லாம் முன்னாடியே தெரியும்".​

"அது இப்போ பிரச்சனை இல்ல இப்போ எப்படி அவங்க வீட்ல பேசி சம்மதிக்க வைக்கிறது என்று தான் தெரியல" என்றான் அழுத்தமாக தன் தலையை கோதியவாறு.​

"நீங்க ஒன்னும் கவலைப் படாதீங்க ஆதவ். போய் பொண்ணு கேட்கலாம் சப்போஸ் அவங்க கொடுக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்கனா பொண்ண தூக்கிக்கிட்டு வந்து கல்யாணம் பண்ணிடலாம்" என்றாள் ஆதிரை குறும்பு புன்னகையோடு.​

"சரி அப்படியே பண்ணிடலாம்" என்ற கம்பீரமான குரல் அவர்களுக்கு பின்னே கேட்கவும்.​

அனைவருமே திடுக்கிட்டு யார் என்று திரும்பி பார்த்தனர். ஆருத்ரவர்மன் தான் தன் பேண்ட் பாக்கெட்டினுள் இரு கையையும் விட்டவாறு இவர்களையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தான்.​

ஆதிரைக்கு, 'இப்பொழுது என்ன சொல்ல போகிறானோ' என்று இதயம் தாளம் தப்பி துடிக்க தொடங்கிவிட்டது.​

'போச்சு போன தடவை இதே மாதிரி ஒரு சீன் நடந்ததுக்கு தான் அண்ணா ஆதிரையை லெப்ட் ரைட் வாங்கினாரு. இப்போ திரும்பவும் மாட்டிக்கிட்டோம். இப்போ என்ன நடக்கப்போகுதோ தெரியலையே' என்று பதட்டத்தோடு அமர்ந்திருந்தாள் இனியா.​

ஆதவன் நிலைமையை சமாளிக்கும் பொருட்டு, "அண்ணா ஆது அண்ணி சும்மா விளையாட்டுக்கு தான் சொன்னாங்க. நீங்க எதையும் சீரியஸா எடுத்துக்காதீங்க. நாங்க சும்மா தான் பேசிக்கிட்டு இருந்தோம்" என்றான் சமாளிப்பாக.​

நிச்சயமாக அவன் ஆதிரையிடம் கண்டிப்புடன் தான் பேசுவான் என்று அனைவரும் எதிர்பார்த்து இருக்க.​

அவனும் எந்த ஒரு உணர்ச்சியையும் தன் முகத்தில் காட்டாதவன் ஆதிரைக்கு அருகில் இருந்த இருக்கையில் வந்து அமர்ந்தவாறு, "எனக்கும் இந்த டீல் ஓகே தான்" என்றான் ஆதிரையை பார்த்துக் கொண்டு புன்னகை முகமாக.​

இனியா அவன் கோபத்தில் தான் இப்படி எல்லாம் பேசுகிறான் என்று எண்ணியவள், "அண்ணா ஆது நிஜமாவே சும்மா தான் சொன்னாள்".​

"இப்போ நான் ஒன்னும் இல்லன்னு சொல்லலையே. எனக்கும் இந்த டீலிங் பிடிச்சு தான் இருக்கு. நீ சொல்லு எப்போ தூங்கலாம்?" என்றான் ஆதிரையை பார்த்துக்கொண்டு.​

'என்ன இவர் இப்படி எல்லாம் பேசுறாரு மனசுல வேற எதையாவது நினைச்சுகிட்டு நம்மகிட்ட இப்படி எல்லாம் பேசுறாரா இல்ல சீரியஸாவே இப்படி எல்லாம் பேசுறாரா என்று புரியலையே' என்று குழம்பிப்போய் அவனை பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தாள் ஆதிரை.​

"அண்ணா நீங்க சீரியஸா தான் பேசுறீங்களா?" என்றாள் இனியா.​

"ஐ அம் சீரியஸ்" என்று வர்மன் அழுத்தமான குரலில் கூறவும்.​

"அப்போ பொண்ண தூக்குற மேட்டர் உங்களுக்கு ஓகேவா?" என்றாள் ஆதிரை தன் கண்கள் இரண்டையும் பெரிதாக ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் விரித்துக்கொண்டு.​

அவளின் செயலில் சுற்றம் மறந்தவன் அவளின் முகத்தையே பார்த்துக் கொண்டு, "நீ என்ன சொன்னாலும் எனக்கு ஓகே" என்றான் மிக மிக மென்மையான குரலில் அவளை ஊடுருவும் பார்வை பார்த்தவாறு.​

முதல் முறை தன்னிடம் மென்மையாக பேசுபவனை பிரம்மிப்போடு பார்த்தாள் ஆதிரை.​

இனியா ஆதவனின் காதில், "என்ன அண்ணா நம்ம வர்மன் அண்ணா இப்படி ஆளே மாறிட்டாரே" என்று கிசுகிசுக்கவும்.​

ஒருவரோடு ஒருவர் பார்வை பின்னிக்கொள்ள வார்த்தைகள் அற்று இப்படியே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தனர். வர்மன் ஆதிரையின் எண்ணத்தை கலைக்கும் பொறுட்டு ஆதவன் செறுமி காட்டவும்.​

இருவரும் அவனின் குரலில் களைந்தவர்கள் வெவ்வேறு புறம் திரும்பிக் கொள்ளவும். ஆதிரையால் அதற்கு மேல் அங்கே அமரவே முடியவில்லை. ஏதோ ஒரு புது வித உணர்வு அவளை வெகுவாக ஆட்டி படைத்தது. அவசரமாக எழுந்து அறைக்கு சென்று விட்டாள்.​

இனியா அவளின் பின்னோடு செல்ல.​

ஆதவன், "என்னண்ணா பயங்கர லவ் மூட்ல இருக்கீங்க போலருக்கே" என்றான் கிண்டல் குரலில்.​

அதில் பெருமூச்சு விட்ட வர்மன், "உண்மை தான். எனக்கு அவளை ரொம்ப பிடிச்சிருக்கு" என்றது தான் தாமதம்.​

அவனின் வார்த்தையில் குதூகளித்த ஆதவன், "என்னண்ணா சொல்றீங்க நிஜமாவா.. இதெல்லாம் எப்போ நடந்தது.. ரெண்டு பேரும் எப்பயுமே சண்டை போட்டுக்கிட்டே தானே சுத்திக்கிட்டு இருப்பீங்க".​

"தெரியல டா. எனக்கே தெரியாம பிடிச்சிடுச்சு. ஆதவ் எனக்கு ஒரு ஹெல்ப் பண்றியா".​

"சொல்லுங்க அண்ணா எதுக்கு ஹெல்ப்னு சொல்றீங்க என்ன செய்யணும்னு சொல்லுங்க".​

"என்னுடைய லவ்வை எப்படி அவ கிட்ட சொல்றதுன்னு எனக்கு தெரியல டா. அவ கிட்ட இதை பத்தி பேசவே ரொம்ப தயக்கமா இருக்கு. அவகிட்ட எப்படி என் மனசுல இருக்குறதை சொல்றதுன்னு எனக்கு ஏதாவது ஐடியா தாயேன்".​

தயக்கமான குரலில் முதல் முறை ஒரு விஷயத்தை செய்ய தயங்கும் தன் அண்ணனை பார்க்கவே ஆச்சரியமாக இருந்தது ஆதவனிற்கு.​

"என்ன அண்ணா நீங்களா இப்படி எல்லாம் பேசுறீங்க. ஆதிரை ரொம்ப நல்ல பொண்ணு நீங்க தைரியமா உங்க மனசுல இருக்கிறத சொல்லுங்க நிச்சயமா அவ உங்க மனசுல இருக்குறத புரிஞ்சிப்பா".​

"நல்லவ தான் டா ஆனா என்கிட்ட மட்டும் தான் சண்டக்கோழி மாதிரி சண்டை போட்டுக்கிட்டே இருக்கா" என்றான்.​

இம்முறை அவன் முகத்தில் கோபம் தென்படவில்லை ஒருவித புன்முறுவல் தான் நிலைத்திருந்தது.​

"அவ மட்டுமா சண்டை போடுறா" என்றான் தன் அண்ணனையே குறுகுறுவென பார்த்தபடி.​

"சரிடா நானும் தான் சண்டை போட்டேன் போதுமா.. இவ்வளவு நாள் சண்டை போட்டுட்டு இப்போ அவகிட்ட போய் எப்படி என் மனசுல இருக்குறத சொல்றதுன்னு தான் எனக்கு கொஞ்சம் தயக்கமா இருக்கு. சொன்னா அவ ஏத்துப்பாலான்னு தெரியலையே".​

"நீங்க சொல்லுங்க அண்ணா அதெல்லாம் அவ நிச்சயமா சம்மதிப்பா அண்ட் ஆல்சோ ஷி இஸ் யுவர் வைஃப்" என்றவாறு தன் அண்ணனின் தோளில் தட்டவும்.​

அவனுக்கு சம்மதமாக தலையசைத்தான் வர்மன்.​

இதழினி பல வேண்டுதல்களுடனும் படபடக்கும் இதயத்துடனும் தான் வீட்டிற்குள் நுழைந்தாள்.​

அவளை பார்த்த அவளின் தாய் சித்ராதேவி, "இதழ் வாடா" என்றவாறு அவளை அணைத்து விடுவித்தார்.​

நீலவேணி பாட்டி, "வந்துட்டியா மா என்ன நீ ஆசைப்பட்ட மாதிரி வேலைக்கு போயிட்டு வந்துட்ட இப்போ உனக்கு சந்தோஷம் தானே?".​

"என்ன பாட்டி ஆறு மாசம் கழிச்சு தானே மாப்பிள்ளை பார்க்க போறதா சொன்னீங்க. என்ன அதுக்குள்ள மாப்பிள்ளை பார்த்தாச்சுன்னு போன் பண்ணி கூப்பிட்டீங்க" என்றாள் தயங்கிய குரலில்.​

"நீ ஆசைப்பட்டனு தான் உன்னை வேலைக்கு அனுப்பினேன். ஆனா நல்ல வரன் வந்திடுச்சு எதுக்காக நாளை கடத்தணும்னு தான் உன்னை கிளம்பி வர சொல்லிட்டேன். எங்க எல்லாருக்குமே மாப்பிள்ளையை ரொம்ப பிடிச்சிருக்கு" என்றார் முகம் கொள்ளா புன்னகையோடு.​

சித்ராதேவி, "அம்மா மாப்பிள்ளை போட்டோவை இதழ் கிட்டயும் காட்டுங்க".​

"தேவையில்லை என் பேத்தி நான் யாரை கட்டிக்க சொல்றேனோ அவங்கள தான் கட்டுவாள். எனக்கு முழு நம்பிக்கை இருக்கு. நான் சொல்றது சரி தானடா" என்றார் வாஞ்சையாக இதழினியின் தலையை கோதியவாறு.​

அவருக்கு பதில் உரைக்க முடியாமல் எதுவோ தொண்டையை அடைப்பது போல் இருக்கவும், "ம்ம்" என்றதோடு முடித்துக் கொண்டாள்.​

"சரி நீ போய் ரெடியாகு மாப்பிள்ளை வீட்டுக்காரங்க சாயந்திரம் வரோம்னு சொல்லி இருக்காங்க".​

"என்ன பாட்டி சொல்றீங்க அதுக்குள்ளவா" என்றாள் பதட்டமான குரலில்.​

"ஆமாமா இன்னைக்கே வந்து பொண்ணு பாத்துட்டு போயிட்டா தானே கல்யாணத்துக்கு தேதி குறிக்க முடியும்" என்று அவர் சந்தோஷமாக பேசிக்கொண்டே போகவும்.​

இதழினிக்குள் தான் பெரும் பூகம்பே வெடித்துக் கொண்டிருந்தது.​

விட்டாள் அங்கேயே அழுது விடும் நிலை தான். வேகமாக அறைக்குள் நுழைந்தவள் முதலில் அழைத்தது ஆதவனுக்கு தான். இங்கு இருக்கும் சூழலை பற்றி விளக்கி கூறியவளுக்கு அழுகை நிற்கவே இல்லை.​

ஒருவழியாக அவளிடம் பேசி அவளை சமாதானம் செய்து உடனே தாங்கள் வருவதாக கூறி அழைப்பை துண்டித்த ஆதவனும் தன் குடும்பத்தாருடன் உடனே இதழினியின் ஊரை நோக்கி புறப்பட்டான்.​

மாப்பிள்ளை வீட்டினர் அனைவரும் வந்து அமர்ந்திருக்க. அறையில் இதழினியோ கிளம்பாமல் கண்ணாடியில் தெரியும் தன் பிம்பத்தையே வெறித்து பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.​

மனதில் ஆதவனை நினைத்துக் கொண்டு வந்திருப்பவர்களின் முன்பு பொம்மை போல் தன்னை அலங்கரித்துக் கொண்டு சென்று நிற்கவும் அவளுக்கு மனம் முன் வரவில்லை.​

அறைக்குள் நுழைந்த சித்ராதேவி, "என்ன இதழ் அப்படியே உக்காந்திருக்க வெளியில் மாப்பிள்ளை வீட்டுக்காரங்க எல்லாம் வந்துட்டாங்க. சீக்கிரம் ரெடி ஆகு. உன் பாட்டி வேற உன்னை அழைச்சிட்டு வர சொன்னாங்க" என்கவும் வெளியே அகிலாண்டேஸ்வரி பாட்டியின் குரல் கேட்கவும் சரியாக இருந்தது.​

அவரின் குரலை கேட்ட சித்ராதேவி, "பெரியம்மா குரல் போல இருக்கு" என்று பதட்டமாக கூறிவிட்டு வேக எட்டுக்களுடன் அறையை விட்டு வெளியேறினார்.​

அவரின் பின்னோடு வெளியே வந்த இதழினிக்கோ ஒரு புறம் இப்பொழுது தான் நிம்மதியாக இருந்தது. மற்றொருபுறமோ அத்தனை பதட்டம், பயம்..​

தன் பாட்டி என்ன கூற போகிறாரோ என்று எண்ண எண்ண அவளுக்கு மயக்கம் வராத குறை தான். பயப்பந்து வயிற்றுக்குள் சுழன்று கொண்டே இருந்தது.​

வந்தவர்களை உள்ளே வருமாறு கூட அழைக்காமல் இருக்கையில் அமர்ந்திருந்தார் நீலவேணி.​

சித்ராதேவி தான் அவர்களை நோக்கி விரைந்தவர், "வாங்க பெரியம்மா எல்லாரும் உள்ள வாங்க" என்று அவர்களை உள்ளே அழைத்தார்.​

சித்ராதேவியின் பின்னோடு வந்த இதழினியை கண்ட நீலவேணி, "என்ன இதழ் மாப்பிளை வீட்டுக்காரங்க வந்திருக்காங்க தயாராகாமல் நீ பாட்டுக்கு அப்படியே வெளியில் வர சீக்கிரம் போய் தயாராகிட்டு வா" என்றவரோ வந்திருந்தவர்களை சற்றும் சட்டை செய்யவில்லை.​

அவரின் செயல் ஆருத்ர வருமனுக்கு பெரும் கோபத்தை கொடுத்தது. அதிலும், தன் பாட்டியை அவமதிப்பது போல் அவரின் செயல் இருப்பது தான் இவனுக்கு பெரும் கடுப்பாக இருந்தது.​

அவனின் கோபத்தை உணர்ந்த அகிலாண்டேஸ்வரி பாட்டியும் தன் கண்களை மூடி திறந்து தான் பார்த்துக் கொள்வதாக கூறி அவனை சற்று அமைதிபடுத்தினார்.​

"எப்படி இருக்க நீலு?" என்ற அகிலாண்டேஸ்வரி பாட்டியின் வார்த்தைக்கு பதில் உரைக்காமல் வேறு எங்கோ தன் பார்வையை பதித்தவாறு அமர்ந்திருந்தார் நீலவேணி.'​

"வந்த விஷயம் என்னன்னு சொல்லிட்டு கிளம்புங்க" என்றார் வெட்டு ஒன்று துண்டு இரண்டாக.​

"என் பேரன் ஆதவனும் உன் பேத்தி இதழினியும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புறாங்க. அதை பத்தி பேசலாம் என்று தான் நாங்க குடும்பமா கிளம்பி வந்து இருக்கோம்" என்றது தான் தாமதம் நாற்காலியில் இருந்து கோபமாக எழுந்து நின்றவர், "என்ன என் பேத்தி உன் பேரனை விரும்புகிறாளா.. என்ன உளறுர?" என்றார் தன் கோபத்தை உள்ளடக்கிய குரலில்‌.​

"நான் உண்மையை தான் சொல்றேன் நீலு ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் காதலிக்கிறார்கள். உன் பேத்தி இதழினியை பொண்ணு கேட்டு தான் நாங்க இப்போ வந்திருக்கோம்" என்றவரின் வார்த்தையில் வந்திருந்த மாப்பிள்ளை வீட்டார் தங்களுக்குள் சலசலத்தபடி பார்வையை பரிமாறிக் கொண்டனர்.​

"என்ன பேசுற நீ இப்படி சபைக்கு நடுவுல வந்து என் பேத்தியை பத்தி பேசி அவளுடைய கல்யாணத்தை நிறுத்தலாம்னு வந்திருக்கீங்களா.. மரியாதையா எல்லாரும் வீட்டை விட்டு வெளியில் போங்க" .​

"உனக்கு சந்தேகமா இருந்தா நீயே அவகிட்ட கேட்டு பாரு" என்றவரின் வார்த்தையில் நீலவேணியின் பார்வை இதழினியில் தான் படிந்தது.​

அவளோ பதட்டத்தோடு வெடவெடத்து போய் நின்று இருந்தாள்.​

நீலவேணி, "என் பேத்தியை பத்தி எனக்கு தெரியும். நிச்சயமா அவ இப்படி ஒரு காரியத்தை செஞ்சிருக்க மாட்டான். அவ மேல எனக்கு முழு நம்பிக்கை இருக்கு" என்றவரின் வார்த்தையில் இதழினியின் கண்களோ கண்ணீரை சுரந்தன.​

ஆருத்ரவர்மன், "இங்க பாருங்க பாட்டி உங்க வீட்ல நடக்கிற விசேஷத்தை தடுத்து நிறுத்துறது ஒன்னும் எங்களுடைய நோக்கம் கிடையாது. உங்க பேத்தியும் என் தம்பியும் ஒருத்தரை ஒருத்தர் காதலிக்கிறார்கள். என் தம்பியை தவிர உங்க பேத்தி வேற யாரையுமே கல்யாணம் செஞ்சுக்க மாட்டா. நீங்க வேணும்னா அவளையே கேட்டு பாருங்க".​

"சொல்லு இதழ் இவங்க சொல்றதெல்லாம் பொய்யின்னு அவங்க முகத்துல அடிச்ச மாதிரி சொல்லு. அவங்க எல்லாரையும் வீட்டை விட்டு வெளியில் போக சொல்லு. காதல் கத்திரிக்கா என்று என்னென்னமோ வந்து உளறிட்டு இருக்காங்க. எனக்கு தெரியாதா உன்னை பத்தி.. இவங்க என்ன சொன்னாலும் நான் அப்படியே நம்பிடுவேன்னு நினைச்சுட்டாங்க போலருக்கு.​

இவங்க சொல்றதை எல்லாம் நான் எப்படி நம்புவேன். உன்னை பற்றி எனக்கு தெரியாதா.. நீயே உன் வாயை திறந்து இவங்க சொல்றதெல்லாம் பொய் என்று சொல்லுமா. அப்போ தான் இவங்களுக்கு எல்லாம் புத்தி வரும்" என்றார் வந்திருந்தவர்களை உறுத்து விழித்து பார்த்துக் கொண்டு.​

என்ன தான் தன் பாட்டியை எண்ணி பயமாகவும் படபடப்பாகவும் இருந்தாலுமே ஆதவனை விட்டு வேறொருவனை மணப்பதை எல்லாம் இதழினியால் நினைத்தும் பார்க்க முடியாது அல்லவா..​

ஒருவாறு தைரியத்தை வரவழைத்துக்கொண்டு தன் பாட்டியை நேர் பார்வை பார்த்தவள், "பாட்டி அவங்க சொல்றது எல்லாமே உண்மை தான். நான் ஆதவனை தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைப்படுறேன். தயவு செஞ்சு எங்க ரெண்டு பேரையும் சேர்த்து வச்சிடுங்க" என்றாள் தன் கரம் கூப்பி வேண்டுதலாக.​

அவ்வளவு தான்.. மாப்பிள்ளை வீட்டினர் சத்தமின்றி கலைய தொடங்கினர். நிலவேணி பாட்டிக்கோ அனைவரின் முன்னிலையிலும் இதழினி இப்படி பேசியது பெரும் அவமானமாக இருந்தது.​

"என்ன உளறுர இதழ் உன் மேல நம்பிக்கை வச்சு தான் நான் உன்னை வேலைக்கு அனுப்பினேன். இப்படி காதல்னு வந்து நிக்கிறதுக்காகவா நான் உன்னை வேலைக்கு அனுப்பினேன். போகும் போது எனக்கு அவ்வளவு நம்பிக்கையை கொடுத்துட்டு போனையே இப்போ நீயும் மத்தவங்க பண்ண அதே தப்பை தான செஞ்சிருக்க" என்றவரின் பார்வை அகிலாண்டேஸ்வரியின் மீதும் சித்ராதேவியின் மீதும் படிந்து மீண்டது.​

"பாட்டி நான் வேலைக்கு போன பிறகு அவரை விரும்ப ஆரம்பிக்கல. எனக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்தே நான் அவரை என் மனசுல நினைச்சுகிட்டு இருக்கேன். அவருக்காக தான் நான் வேலைக்கு போனேன். இது எல்லாம் முன்னாடியே சொன்னா நீங்க என்னை அனுப்ப மாட்டீங்கன்னு தெரியும்‌ அதனால் தான் நீங்க சொன்ன எல்லாத்துக்கும் சம்மதம்னு சொல்லிட்டு நான் போனேன்.​

அதே சமயம் உங்களுடைய சம்மதம் இல்லாமல் என்னால் கல்யாணம் பண்ணிக்க முடியாது. ப்ளீஸ் பாட்டி, எங்க ரெண்டு பேரையும் நீங்க தான் சேர்த்து வைக்கணும்" என்றவள் நொடியும் தாமதிக்காமல் விறுவிறுவென ஓடிச் சென்று தன் பாட்டியின் கால்களை பிடித்துக் கொண்டு கதறி அழுக தொடங்கி விட்டாள்.​

இதழினியின் செயலில் தன் மூச்சை நன்கு இழுத்து பிடித்த நீலவேணி பாட்டி, "சரி இப்போ உனக்கு என்ன வேணும் அந்த பையனை கல்யாணம் பண்ணிக்கணும் அவ்வளவு தான.. தாராளமா பண்ணிக்கோ" என்றதும் தான் இதழினிக்கு முகத்தில் மெல்லிய புன்னகை அனுப்பியது.​

அழுத்தமாக தன் முகத்தை துடைத்தவள் வேகமாக எழுந்து நிற்கவும்.​

"ஆனா திரும்ப நீ இந்த வீட்டுக்கு வரவே கூடாது. உனக்கு நாங்க யாரும் தேவையில்லை அந்த பையன் தான் வேணும்னா தாராளமா எங்க எல்லாரையும் விட்டுட்டு போய் அவன் கூட சேர்ந்து சந்தோஷமா வாழு. எனக்கு அதில் எந்த பிரச்சனையு​

ம் இல்ல. ஆனா உங்க கல்யாணத்துக்கு ஒரு நாளும் நான் சம்மதிக்க மாட்டேன்" என்று அவளின் தலையில் பெரிய இடியை இறக்கினார்.​

அவரின் வார்த்தையில் செயலற்று நின்று விட்டாள் இதழினி.​

 

RJ novels

Moderator

அகம் - 50​

"ஏன் அப்படியே நிக்கிற.. போ.. போய் அவனை கல்யாணம் பண்ணிக்கோ" என்று இதழினியிடம் கூறிய நீலவேணி பாட்டி அகிலாண்டேஸ்வரி பாட்டியை பார்த்து, "உனக்கு தான் இப்படி காதலிச்சவங்களை சேர்த்து வைக்கிறது ரொம்ப பிடிக்குமே. நீயே என் பேத்தியை கூப்பிட்டு போய் உன் பேரனுக்கு கல்யாணம் பண்ணி வச்சிடு. ஆனால் ஒரு நாளும் இவங்களை நான் ஏத்துக்க மாட்டேன். இன்னையோட இவளை தலைமுழுகிடுவேன்" என்றார் வெளிப்படையாகவே மிரட்டுவது போல்.​

கண்களில் வழியும் நீரோடு வார்த்தைகள் அற்று ஸ்தம்பித்து நின்று இருந்தாள் இதழினி.​

இதற்கு என்ன பதில் கூறுவது.. தன் மேல் பாசம் கொட்டி வளர்த்த குடும்பத்தை வேண்டாம் என்று உதறிவிட்டு எப்படி அவளால் செல்ல முடியும்.​

ஆதவன், "இதழ் உங்க மேல எல்லாம் ரொம்பவே அன்பும் பாசமும் வச்சு இருக்கா. உங்களையெல்லாம் விட்டுட்டு அவ என்னுடன் நிச்சயமாக வர மாட்டா. அப்படியே அவ வரேன்னு சொன்னாலுமே நான் அதை ஏத்துக்க மாட்டேன். குடும்பத்தை விட்டுட்டு அவளை தனியா பிரிச்சு கூப்பிட்டு போய் கல்யாணம் பண்ணிக்கிறதுல எங்களுக்கு என்ன சந்தோஷம் இருக்கு. ரெண்டு குடும்பமும் ஒன்னா சேர்ந்து இந்த கல்யாணத்தை நடத்தி வைக்கணும்னு தான் நாங்க ஆசைப்படுறோம். உங்க எல்லாருடைய சம்மதத்தோடவும் எங்க கல்யாணம் நடக்கணும்னு நாங்க ஆசைப்படுகிறோம்".​

"அது இந்த ஜென்மத்துல நடக்காது. எல்லாருடைய சம்மதத்தோட தான் உங்களுக்கு கல்யாணம் நடக்கணும்னா அது கடைசி வரைக்கும் நடக்காது" என்றார் திடமான குரலில்.​

இதழினி அழுத்தமாக தன் முகத்தை துடைத்துக் கொண்டவள், "சரி பாட்டி எவ்வளவு நாள் எத்தனை வருஷம் ஆனாலும் பரவாயில்ல உங்க எல்லாருடைய சம்மதத்தோடும் தான் நான் அவரை கல்யாணம் பண்ணிப்பேன். அதுவரைக்கும் உங்களுக்கு பேத்தியா நான் இந்த வீட்டில் தான் இருப்பேன்.​

அதுக்காக நீங்க பார்க்கிற மாப்பிள்ளையை நான் கல்யாணம் பண்ணிப்பேன்னு நினைக்காதீங்க. என்னால் ஆதவனை தவிர வேற யாரையும் புருஷனா நினைச்சு கூட பாக்க முடியாது. ஒரு வேளை எனக்கு கல்யாணமே நடக்காமல் போனா கூட பரவாயில்லை. ஆனால் என் கழுத்துல தாலி ஏறுனா அது அவர் கையால் மட்டும் தான் ஏறும்" என்று உறுதியாக நின்றாள்.​

தன் பேத்திக்கு இவ்வளவு எல்லாம் பேச தெரியுமா என்று ஆச்சரியமாக பார்த்தார் நீலவேணி பாட்டி. அவளின் குரலில் இருக்கும் உறுதியே கூறியது அவள் ஆதவனை தவிர வேறு யாரையும் மணக்க மாட்டாள் என்று.​

இருப்பினும் இவரின் வீம்பு அவரை அவ்வளவு எளிதில் இறங்கி வர விடவில்லை.​

அகிலாண்டேஸ்வரி பாட்டி நீலவேணி பாட்டியை பார்த்தவர், "எதுக்காக இந்த வீம்பு நீலு உனக்கு.. வாழ வேண்டிய பசங்க அவங்க வாழ்க்கையில் உனக்கு அப்படி என்ன விம்பு. எல்லாமே முடிஞ்சு போயிடுச்சு நம்ம வாழ்ந்து முடிச்சிட்டோம். வாழ வேண்டியவங்க சந்தோஷமா வாழட்டுமே.. எதுக்காக நீ தடுக்குற அப்படி நாங்க எல்லாம் என்ன பாவம் பண்ணிட்டோம். விரும்புன வாழ்க்கையை வாழுறது ஒரு குத்தமா?"​

"விரும்புன வாழ்க்கையை வாழறது குத்தமில்ல. அதுக்காக மத்தவங்களை எல்லாம் கஷ்டப்படுத்திட்டு வாழுறது குத்தம் தானே" என்றார் பதிலுக்கு.​

இவருக்கு என்ன பதில் கூறினாலும் அவர் ஏற்க மாட்டார் என்பது அனைவருக்குமே தெளிவாக தெரிந்தது. அவரின் மனநிலை காதல் என்றாலே வெறுப்பு மட்டும் தான்.​

"இப்போ என்ன பண்ணலாம் வர்மா?" என்றார் ஆருத்ர வர்மனை பார்த்து.​

வர்மனின் பார்வையோ ஆதவனில் நிலைக்க.​

"பாட்டி இதழ் கண்டிப்பா அவங்க குடும்பத்தை மீறி என்னை கல்யாணம் பண்ணிக்க வர மாட்டா. அதனால் என்ன அவ தான வர மாட்டா.. அவளுக்காக நான் இங்க இருக்கேன். அவளுக்கும் எனக்கும் எப்போ கல்யாணம் நடக்குதோ அப்போ தான் நான் நம்ம வீட்டுக்கு வருவேன். அதுவரைக்கும் நானும் இங்கேயே இருக்கேன். இதுவும் எனக்கு ஒரு பாட்டி வீடு தானே" என்றான் அங்கே முறைத்துக் கொண்டு நின்று இருக்கும் நீலவேணியை பார்த்தவாறு.​

இனி தன் பேரனே பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கை அகிலாண்டேஸ்வரிக்கு பிறக்க, "சரி அப்போ நம்ம எல்லாரும் கிளம்பலாம் வர்மா" என்று அனைவரையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டார்.​

ஆதவன் கூலாக விசில் அடித்தவாறு அந்த வீட்டை சுற்றிப் பார்த்துக் கொண்டு நின்று இருக்க.​

அவனை பொசுக்கி விடுவது போல் முறைத்து பார்த்த நீலவேணி பாட்டி, "நீ என்ன பண்ணாலும் என் மனசு மாறாது. தேவையில்லாம இங்க இருந்து உன் டைமை வேஸ்ட் பண்ணாத".​

"நான் இங்க இருந்து போகணும்னா இதழையும் என் கூட கூப்பிட்டு தான் போவேன். இதழ் என்கூட வரணும்னா நீங்க எல்லாருமே எங்க கல்யாணத்துக்கு சம்மதிக்கணும். இதெல்லாம் எப்போ நடக்குதோ அப்போ தான் நான் இங்க இருந்து போவேன்" என்றவன் அங்கிருந்த சோபாவில் சாவகாசமாக சாய்ந்து அமர்ந்தான்.​

இதழினிக்கு அவனின் செயலில் ஆனந்தத்தில் கண்கள் குளம் கட்டிவிட்டது.​

அன்றைய இரவு உணவிற்கு அனைவரும் சாப்பிட அமரவும். ஆதவனும் அவர்களின் அழைப்பை எதிர்பாராமல் அவர்களுடன் வந்து அமர்ந்தான்.​

நீலவேணி பாட்டி தன் எதிரே இருந்த தட்டை வேகமாக தள்ளிவிட்டவர், "உன்னை யார் இப்போ கூப்பிட்டா. எங்க குடும்பத்தில் இருக்கிறவங்க மட்டும் தான் சாப்பிட போறோம். இங்க இருந்து எழுந்திரிச்சு போ" என்று முகத்தில் அடித்தது போல் ஆதவனிடம் கூறவும் இதழினிக்கு ஒரு மாதிரியாகி போனது.​

"பாட்டி என்ன பேசுறீங்க?" என்றாள் துக்கம் தொண்டையை அடைக்கும் குரலில்.​

"ஏன் அவனை சொன்னதும் உனக்கு கஷ்டமா இருக்கா.. வேணும்னா நீயும் அவனோடவே எழுந்திரிச்சு போ. எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல" என்றார் வெடுக்கென்று.​

ஆதவன் அவர் கூறியதையே சற்றும் சட்டை செய்யாதவன் தானாக தட்டில் உணவை பரிமாறிக் கொண்டு உண்ண தொடங்கி விட்டான். அவனை முறைத்து பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தார் நீலவேணி பாட்டி.​

இதழினியோ குளம் கட்டிய கண்ணோடு ஆதவனை பார்த்துக் கொண்டிருந்தாள். தனக்காக தானே அவன் இது அனைத்தையும் செய்கிறான். இவ்வளவு அவமதிப்பும் தன்னால் தானே என்று எண்ண எண்ண அவளுக்கோ தாங்க முடியவில்லை.​

தன் பாட்டியை மீறி எதுவும் செய்யவும் முடியாமல் அவனின் இந்த நிலையை கண் கொண்டு காணவும் முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தாள்.​

உணவை உண்டு முடித்து ஆதவன் எழுந்து கொள்ளவும் இதழினி உணவு உண்ணாமலே தன் அறைக்கு சென்று விட்டாள்.​

நீலவேணி பாட்டிக்கு உணவை பரிமாறிக் கொண்டே சித்ராதேவி, "ஏன் மா அந்த பையன் கிட்ட இவ்வளவு கடுமையா பேசுறீங்க. பாவம் பார்க்க ரொம்ப நல்ல பையன் மாதிரி தான் தெரிகிறான்".​

"நீ வாயை மூடு. உன் பொண்ணு நல்லா நம்மை எல்லாம் நம்ப வச்சு கழுத்தை அறுத்துட்டா.. நமக்கு எல்லாம் இவ்வளவு பெரிய நம்பிக்கை துரோகம் செஞ்சிருக்கா.. அதுவும் அந்த குடும்பத்து பையனை போய் காதலிக்கிறா இதை என்னை ஏத்துக்க சொல்றியா.. நான் சொல்றதை நல்லா கேட்டுக்கோ இந்த ஜென்மத்துல இந்த கல்யாணத்துக்கு நான் சம்மதிக்க மாட்டேன்".​

இவர் கூறிய அனைத்தையும் கேட்டுக் கொண்டு நின்ற இதழினிக்கு இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் மொத்தமாக வற்றிவிட்ட உணர்வு தான்.​

விரக்தியான நடையோடு தன் பாட்டியின் அறைக்குள் நுழைந்தவள் அங்கே வீற்றிருந்த தூக்க மாத்திரையை எடுத்து அப்படியே தன் வாய்க்குள் சரித்தாள்.​

ஆதவனை மறந்து வேறொருவனை மணக்கவும் முடியாது. தன் பாட்டி ஒருநாளும் தங்கள் காதலுக்கு சம்மதிக்கவும் போவதில்லை. அனைவருக்குமே என்னால் பிரச்சனை தான் நான் இல்லை என்றால் இந்த பிரச்சனை அனைத்தும் தீர்ந்துவிடும் என்று ஏதேதோ பைத்தியம் போல் எண்ணியவள் தற்கொலைக்கு முயற்சித்து விட்டாள்.​

உணவை உண்டுவிட்டு அறைக்குள் நுழைந்த பாட்டி தன் அறையில் இதழினி படுத்திருப்பதை புருவம் சுருக்கி பார்த்தார். அவள் அருகில் சென்று பார்த்தவருக்கு அவள் கையில் வீற்றிருந்த தூக்க மாத்திரையை பார்க்கவும் எதுவோ சரியில்லை என்று பட்டது.​

அவளின் கன்னத்தில் தட்டி பார்த்தார். எந்த ஒரு அசைவும் தென்படவில்லை உண்மையிலேயே பதறிப் போய்விட்டார்.​

"ஐயோ இதழ்! என்ன காரியம் மா செஞ்சிருக்க.. யாராவது இங்க சீக்கிரம் வாங்க.. சித்ரா சீக்கிரம் இங்க வா.. நம்ம இதழ் தூக்க மாத்திரையை சாப்பிட்டா" என்று சத்தமாக கத்தினார்.​

அவரின் குரலுக்கு முதலில் ஓடி வந்தது ஆதவன் தான். அவரின் மடியில் துவண்டு கிடக்கும் தன்னவளை பார்த்தவனுக்கு தன் இதயத்தை யாரோ கையோடு பிடுங்கி எடுத்த உணர்வு தான்.​

பதறி அவர் அருகில் ஓடியவன் தன்னவளை தன் மடியில் தாங்கியவாறு, "இதழ் என்ன ஆச்சு இங்க பாருடி" என்று அவளின் கன்னத்தில் தட்டினான்.​

"தூக்க மாத்திரை சாப்பிட்டானு நினைக்கிறேன். அவ கையில் இந்த மாத்திரை தான் இருந்துச்சு" என்று அவர் படபடப்பாக கூறவும்.​

நொடியும் தாமதிக்காது அவளை தன் கையில் தாங்கிக் கொண்டவன் அவசரமாக காரை நோக்கி ஓடினான்.​

பின் சீட்டில் இதழினியுடன் அவளின் அன்னையும் பாட்டியும் ஏறிக்கொள்ள. முன் சீட்டில் அவளின் தந்தை ஏறிக்கொண்டார்.​

சற்று நேரத்தில் மருத்துவமனையை அடைந்தவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அவளை அனுமதித்தனர். ஆதவனால் நிலை கொள்ள முடியவில்லை. எதற்காக இப்படி செய்தாய் என்று மானசீகமாக அவளுக்கு பல திட்டுகளை வாரி வழங்கிக் கொண்டிருந்தான்.​

தன் பேத்திக்கு தன்னால் தான் இத்தகைய நிலை என்று எண்ண எண்ண நீலவேணி பாட்டிற்கு மனம் தாங்கவில்லை. என்ன இருந்தாலும் ஆசை பேத்தி ஆயிற்றே.. ஆதவனின் மேல் அவளுக்கு இருக்கும் அதீத காதல் அவளின் செயலிலேயே பாட்டிக்கு நன்கு விளங்கி விட்டது.​

பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு வெளியே வந்த மருத்துவர், "இன்னும் மயக்கத்தில் தான் இருக்காங்க மயக்கம் தெளிஞ்சதும் நார்மல் வார்டுக்கு மாத்துவாங்க. அதுக்கு பிறகு எல்லாரும் போய் பாருங்க" என்று விட்டு நகர்ந்து விட்டார்.​

ஆதவனிற்கோ அவளின் மேல் அவ்வளவு கோபம். எப்பொழுது அவளைப் பார்ப்போம் என்ற பரிதவிப்போடு நின்று இருந்தான்.​

சற்று நேரத்தில் செவி​

லியர் வந்து அவளை நார்மல் வார்டிற்கு மாற்றிவிட்டதாக கூறவும் அனைவரும் அறைக்குள் விரைந்தனர்.​

 

RJ novels

Moderator

அகம் - 51​

அங்கே வாடிய கொடியாய் படுத்திருந்தவளின் அருகில் முதலில் விரைந்தது ஆதவன் தான்.​

"அறிவு இருக்காடி உனக்கு.. படிச்சவ தான.. பைத்தியம்.. இப்படியா செய்வ.. செத்துட்டேண்டி ஒரு நிமிஷம். எதுக்குடி இப்படி செஞ்ச.. நான் தான் எவ்வளவு பிரச்சனையா இருந்தாலும் சரி பண்ணி உன்னை கல்யாணம் பண்ணிப்பேன்னு சொன்னேன்ல. அதுக்குள்ள உனக்கு என்னடி அவசரம். கொஞ்ச நாள் உன்னால் பொறுமையா இருக்க முடியாதா.. உயிரே போயிடுச்சு எனக்கு.. உனக்கு மட்டும் ஏதாவது ஆயிருந்தா நான் என்னடி செஞ்சு இருப்பேன்" என்று கண்ணீர் மல்க சரமாரியாக அவளை திட்டிக் கொண்டிருந்தான்.​

அவனின் வார்த்தையில் அவளின் மனமோ அப்படி தித்தித்தது. அவனின் மேலிருக்கும் காதல் மேலும் மேலும் அதிகரித்தது.​

"பாட்டி நிச்சயமா நம்ம காதலுக்கு ஒத்துக்க மாட்டாங்க. நீங்க இல்லாத ஒரு வாழ்க்கையை என்னால் நினைச்சு கூட பார்க்க முடியாது. மனசுல உங்களை வச்சுக்கிட்டு எப்படி வேற யாரையோ கல்யாணம் செஞ்சிக்க முடியும். என்னால் உங்களுடைய வாழ்க்கையும் சேர்ந்து வீணா போயிடுமோனு பயமா இருந்துச்சு. அதான் இப்படி பண்ணிட்டேன்" என்றாள் மெல்லிய குரலில்.​

"வாய மூடுடி. லூசு மாதிரி பேசாத.. வாழ்க்கை வீணா போயிடுமா.. என் வாழ்க்கையே நீ தான் டி. நீ இல்லாம எனக்கு ஏது டி வாழ்க்கை. சாகுறதுனா எனக்கும் கொஞ்சம் தூக்க மாத்திரையை குடுத்துட்டு செத்து தொலைந்து இருக்க வேண்டியது தான.. நானும் உன்னோடவே சந்தோஷமா வந்து இருப்பேன். என்னை இப்படி தனியாக விட்டுட்டு போறதுக்கு தான் என்னை காதலிச்சியா.. என்னை உயிரோட கொன்னுட்ட டி நீ" என்றான் முற்றிலுமாக உடைந்த குரலில்.​

அதற்கு மேல் பேச முடியவில்லை குரல் உடைந்து விட்டது. மௌனமாக அவளின் கையை பற்றி கொண்டு கண்ணீர் வடித்தான்.​

குடும்பத்தார் அனைவருமே இவர்கள் இருவரையும் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களின் நிலையை கண்ட பாட்டிக்கு நிச்சயமாக மனம் மாறி இருக்க வேண்டும்.​

வேகமாக இதழினியை நோக்கி விரைந்த சித்ராதேவி, "என்ன காரியம் டி பண்ணிட்ட.. இதுக்கு தான் நான் உன்னை பத்து மாசம் சுமந்து பெத்தேனா.. என் தலையில் இப்படி மண் அள்ளிப்போட பார்த்தியே" என்று தன் முந்தானையால் வாயை மூடிக்கொண்டு ஓவென்று கதறி அழுகத் தொடங்கி விட்டார்.​

அதன் பிறகு அவளின் தந்தை அவரின் பங்கிற்கு பேசினார். அனைவருமே மாற்றி மாற்றி பேச நீலவேணி பாட்டியோ எதுவுமே பேசவில்லை. அவளையே வெறித்த பார்வை பார்த்துக்கொண்டு நின்றிருந்தார்.​

இறுதியாக இதழினியின் விழிகளும் பாட்டியின் மேல் தான் படிந்தது. மெதுவாக தள்ளாடிய நடையுடன் அவள் அருகில் வந்தவர்.​

அவளின் தலையை வருடி கொடுத்தவாறு, "என்னை மன்னிச்சிடு வயசுல பெரியவளா இருந்தாலும் நிறைய தப்பு பண்ணிட்டேன். என்னுடைய வீம்புக்காக உனக்கு கல்யாணம் பண்ணி வைக்க மாட்டேன்னு சொல்லிட்டேன். உன் இஷ்டப்படி நீ யாரை விரும்புகிறாயோ அவரையே கல்யாணம் பண்ணிக்கோ. எனக்கு இதில் எந்த பிரச்சனையும் இல்லை. உனக்கு என்ன இப்போ இந்த பையனை கல்யாணம் பண்ணிக்கணும் அவ்வளவு தான.. உனக்காக நான் சம்மதிக்கிறேன். நானே முன் இருந்து உனக்கு இந்த கல்யாணத்தை செய்து வைக்கிறேன்".​

இதழினியின் செயலில் தான் அவர் தன் தவறை உணர்ந்தார்.​

மறுநாள் விடிந்ததும் நேராக குடும்பமாக கிளம்பி அகிலாண்டேஸ்வரியின் வீட்டை அடைந்தவர்கள். வீட்டிற்குள் நுழையவும் அனைவருக்குமே ஒன்றும் புரியவில்லை.​

பிறகு நேற்று அவ்வளவு பேச்சு பேசி சண்டையிட்டவர் இப்படி திடீரென மறுநாளே தங்கள் வீட்டு வாசலில் வந்து நின்றால் அவர்களும் என்ன தான் நினைப்பார்கள்.​

அகிலாண்டேஸ்வரி, "எல்லாரும் உள்ள வாங்க" என்று குழப்பமான குரலில் அழைத்தவர்.​

அடுத்து என்ன கூறுவது என்று தெரியாமல் பார்த்துக் கொண்டிருந்தார்.​

"வாங்க உட்காருங்க" என்று ஆருத்ர வர்மன் தான் நிலைமையை கையில் எடுத்துக் கொண்டு அனைவரையும் வரவேற்று அமர வைத்தான்.​

சற்று நேரம் அமைதி நிலவியது. யாருக்குமே என்ன கூறுவது என்று தெரியவில்லை. மிகவும் சங்கடமான சூழல். ஆதவன் ஒருவாறு அனைத்து கதையையும் கூறி முடிக்கவும்.​

சுப்புலட்சுமி பதட்டமான குரலில், "என்னமா இது.. அதுக்காக இவ்வளவு பெரிய முடிவா எடுப்ப" என்று இதழினியை தொட்டு பார்த்தவாறு, "இப்போ ஒன்னும் இல்லையே எல்லாம் சரியாயிடுச்சு இல்ல".​

அவரின் செயலில் சித்ராதேவிக்கு தான் நெகிழ்ச்சியாக இருந்தது. தன் மகளை மருமகளாக நினைக்காமல் மகள் போல் பாவிக்கும் மாமியார் கிடைத்திருப்பதை எண்ணி உள்ளம் மகிழ்ந்து போனார்.​

"என்னை மன்னிச்சிடுங்க நான் நிறைய தப்பு பண்ணிட்டேன். என்னை என்ன பண்ண சொல்ற.. விவரம் புரியாத வயசுல நம்ம அம்மா அப்பா அழுததை பார்த்தேன். என் மனசுல காதல் மேல பெரிய அளவில் வெறுப்பு வந்திடுச்சு. அவங்க கண்ணீர் மட்டும் தான் என் மனசுல பதிஞ்சிருக்கு. அதனாலேயே உன்கிட்ட இருந்து கொஞ்சம் கொஞ்சமா விலக ஆரம்பிச்சிட்டேன். அதுக்கப்புறம் என் பொண்ணும் அதே தப்பு செஞ்சிட்டு வந்து நிக்கும் பொழுது அவ செஞ்ச தப்புக்கும் சேர்த்து எனக்கு கோபம் உன் மேல தான் திரும்புச்சு.​

எனக்கு புரியுது இது தேவையில்லாத வீம்பு தான். என்னுடைய வீண் பிடிவாதத்தால் ரெண்டு குடும்பமும் இத்தனை நாள் பிரிஞ்சு இருந்துச்சு. ஆனா இப்போ என் பேத்திக்காக என்னுடைய எல்லா வீம்பையும் விட்டுட்டு நான் வர தயாரா இருக்கேன். அவளுக்காக என்னுடைய மொத்த வீம்பையும் நான் விட்டுக் கொடுக்கிறேன். என் பேத்திக்கும் உன் பேரனுக்கும் கல்யாணம் செஞ்சு வைக்க எனக்கு முழு சம்மதம்" என்றார் அகிலாண்டேஸ்வரியின் கையை பிடித்துக் கொண்டு.​

"ரொம்ப சந்தோஷம் நீலு இப்போவாவது நீ புரிஞ்சுகிட்டியே ரொம்ப சந்தோஷமா இருக்கு. காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிறது ரொம்ப பெரிய பாவம் இல்லையே.. மனசுக்கு ஒருத்தவங்களை பிடிச்சிட்டா என்ன பண்றது யாருக்காகவும் மாத்திக்க முடியல. அவங்க தான் வேணும்னு நிக்குது என்ன செய்யட்டும்" என்று பெருமூச்சை வெளியேறியவர்.​

"ஆனால் நான் செஞ்ச காரியம் உன் மனசுல இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்னு நான் நினைச்சு கூட பாக்கல" என்றார் வருத்தம் இழைந்தோடும் குரலில்.​

இதழினி அழுகையினோடு ஓடி வந்து தன் பாட்டியை அணைத்துக் கொண்டவள், "தேங்க்ஸ் பாட்டி" என்றாள் வழியும் கண்ணீரோடு.​

அவளின் தலையில் இதழ் பதித்தவர், "நீ சந்தோஷமா இருக்கணும் எனக்கு அதான் முக்கியம். இந்த பையனுக்காக நீ உன் உயிரை விட துணிஞ்சிருக்கனா அதுல இருந்தே எனக்கு தெரியுது நீ எந்த‌ அளவுக்கு காதல் வச்சிருக்கனு. எனக்கு வயசு ஆயிடுச்சு பெருசா நான் என்ன கேட்டுட போறேன். நீ சந்தோஷமா இருந்தாலே எனக்கு போதும்" என்றார் கண்ணீர் ததும்பும் விழிகளோடு.​

சற்று நேரம் அந்த இடமே உணர்வுகளின் பிடியில் சிக்கி சின்னாபின்னமாகி கொண்டிருந்தது.​

இரு குடும்பமும் ஒரு வழியாக ஒன்று சேர்ந்து விட்டனர். ஆதவனுக்கும் இதழினிக்கும் திருமண தேதியும் குறித்து விட்டனர்.​

ஆருத்ரவர்மன் ஆதிரை ஜோடிக்கும் கவின் இனியா ஜோடிக்கும் ரிசெப்ஷன் வைக்க இருப்பதால் அதற்கு தகுந்தார் போல் இவர்களின் திருமண தேதியை குறித்து விடலாம் என முடிவு செய்தவர்கள் ஆதிரை மற்றும் இனியாவின் கல்லூரி படிப்பு முடிந்ததும் ஆதவனுக்கும் இதழினிக்கும் திருமண தேதியை குறித்தனர்.​

முந்தைய நாள் மூன்று ஜோடிகளுக்கும் ஒரே மண்டபத்தில் ரிசப்ஷன் வைக்கவும் ஏற்பாடு செய்திருந்தனர்.​

இதழினிக்கும் ஆதவனுக்கும் சொல்லலா மகிழ்ச்சி. அதிலும் இதழினிக்கு தான் தன் மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகளே இல்லை. எத்தனை வருட காதல்.. எப்படி எல்லாமோ சென்று கடைசியில் அனைத்தும் சுபமாக முடிந்ததை எண்ணி அவளுக்கு அப்படி ஒரு பேரானந்தம்.​

திருமணத்திற்கு இன்னும் மூன்று மாத காலங்கள் இடைவெளி இருப்பதால் அதுவரை இதழினி வேலைக்கு செல்லாமல் அவளின் சொந்த ஊருக்கே செல்வதாக பேசினர்.​

அதில் ஆதவனுக்கு தான் பெரும் வருத்தம். இந்த இடைப்பட்ட மூன்று மாத காலமும் அவளை காண இயலாதே.​

யாரும் அறியாத வண்ணம் தன் பார்வையால் அவளை வரும்படி சைகை செய்தவன் மொட்டைமாடி நோக்கி நடக்கவும். அவனின் பின்னோடு யாரின் கவனத்தையும் கவராமல் இதழினியும் எழுந்து சென்றாள்.​

அவள் அறியாத வண்ணம் அவளை பின்னிருந்து அணைத்தவன்.​

அவளின் காது மடலில் கிசுகிசுப்பாக தன் மீசை முடி உரசும் வண்ணம், "இன்னும் மூணு மாசம் உன்னை பாக்காம எப்படி இருக்க போறேன்னு தெரியல".​

அவனின் குரலில் அவ்வளவு ஏக்கம் அப்பட்டமாக தெரிந்தது. அதில் இதழினியின் முகம் சட்டென்று சிவந்துவிட.​

"என்ன அமைதியா இருக்க நான் கஷ்டப்படுவதை பார்த்தால் உனக்கு சந்தோஷமா இருக்கா".​

அதற்கு மறுப்பாக தலை அசைத்தாளே தவிர அவளிடம் வார்த்தை இல்லை.​

அவளை தன்னை நோக்கி பார்க்கச் செய்தவன், "என்னடி நான் பாட்டுக்கு பேசிக்கிட்டே இருக்கேன். நீ இப்படி அமைதியாகவே இருக்க. இன்னும் மூணு மாசம்.. உனக்கு அதை நினைச்சா கவலையா இல்லையா".​

"இல்ல" என்றாள் ஒற்றை வார்த்தையில்.​

"எப்படி டி.. எப்படி நீ இப்படி இருக்க. என்னால் உன்னை பார்க்காமல் எப்படி இருக்க போறேன்னு தெரியல. ஆனா நீ இவ்வளவு கூலா இருக்க. உனக்கு கொஞ்சம் கூட கஷ்டமா இல்லையா" என்றான் தவிப்பாக.​

"மூணு மாசம் தான அதெல்லாம் சீக்கிரம் போயிடும். நமக்கு கல்யாணம் முடிவு பண்ணதே எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு ஆதவ். இன்னும் 3 மாசம் இல்ல எவ்வளவு நாள் வேணும்னாலும் நான் காத்துக்கிட்டு இருப்பேன்" என்றாள் காதலோடு அவனை பார்த்து.​

"ம்கூம்.. எப்போ நீ ஸ்லீப்பிங் டேப்லெட்ஸ் சாப்பிட்டியோ அப்போலருந்து என்னால் ஒரு செகண்ட் கூட உன்னை விட்டு தனியா இருக்க முடியல. என்னமோ தெரியல ரொம்ப பதட்டமா இருக்கு. தினமும் ஒரு தடவையாவது உன் முகத்தை பார்க்கணும்னு தோணுது. இப்போ தொடர்ந்து மூணு மாசம் உன்னை பார்க்காமல் இருப்பதெல்லாம் எவ்வளவு கொடுமையான விஷயம்னு தெரியுமா. ஏதோ என்னை விட்டு நீ ரொம்ப தூரம் விலகி போற மாதிரி இருக்குடி".​

"அதான் போன் இருக்குல்ல நாம வீடியோ காலில் பேசலாம்" என்றவளுக்கும் அவனின் வார்த்தையில் வெட்கம் அழையா விருந்தாளியாக வந்துவிட்டது.​

"என்ன இருந்தாலும் நேர்ல பாக்குற மாதிரி இருக்காதுல.. பாரு நேர்ல பார்த்தா நம்ம இஷ்டத்துக்கு என்ன வேணும்னாலும் பண்ணலாம்" என்றவன்.​

சட்டென்று அவளின் கன்னத்தில் இதழ் பதித்து விலகியவாறு, "இப்படி நினைச்ச நேரம் கிஸ் பண்ணலாம். வீடியோ கால்ல அதெல்லாம் பண்ண முடியாதுல".​

அவனின் செயலில் அவனின் முகத்தை பார்க்க முடியாமல் தன் தலையை தாழ்த்திக் கொண்டவள், "சரி எல்லாரும் வெயிட் பண்ணுவாங்க கீழே போகலாம்" என்றவாறு அங்கிருந்து நகர்ந்தாள்.​

 
Top