Asha Evander
Moderator
அத்தியாயம் 1
“என் மனம் கானலின்
நீரென ஆகுமா கைகளில் சேருமா
அன்பே நேசிக்கும் காலம் தான்
வீணெண போகுமா நினைவுகள்
சோ்க்கிறேன் இங்கே ஆயினும்
காதலின் கைகளில் விரும்பியே
விழுகிறேன் அன்பே!”
சென்னை பெண்கள் சிறைச்சாலை மிகவும் பரபரப்புடன் காணப்பட்டது. ஜெயிலர் சிறைக்கைதிகளின் ஆவணங்களை எல்லாம் ஒழுங்கு படுத்தி வைத்துக் கொண்டிருக்க, அங்கே பாதுகாப்புக்கு இருந்த மற்ற பெண் காவலர்கள் ஒவ்வொரு சிறை கைதிகளின் அறைக்குச் சென்று அவர்களிடம் எதுவும் தேவை இல்லாத பொருட்கள் இருக்கிறதா என்று சோதனை செய்து கொண்டிருந்தனர்.
காரணம் இன்று எஸ்.பி முகிலன் ஐ.பி.எஸ் அந்தச் சிறைக்கு வருகை தர இருக்கின்றான். மிகவும் கண்டிப்பானவன். அதே நேரம் ஒரு நிரபராதி தண்டிக்கப்பட கூடாது என்பதில் தீவிரமாக இருப்பவன். இன்றும் அவனுக்கு நெருங்கிய ஒரு சொந்தம் சிறையில் இருப்பதால் அந்த நபரைப் பார்க்கச் சிறப்பு அனுமதி பெற்றிருந்தான். அவனின் வருகையின் காரணமாகத் தான் இந்தப் பரபரப்பு.
"இன்னைக்கு ஜெயிலுக்கு முகிலன் சார் வரார். எவகிட்டயாச்சும் காசு வாங்கிட்டு போன் கொடுக்குற பழக்கம் இருக்கவ எல்லாம் இன்னைக்கு மட்டும் ஒழுங்கா இரு" என்று அந்தப் பெண் ஜெயிலர் எச்சரிக்கை விடுத்து கொண்டிருக்க, அந்நேரம் பெண்கள் சிறைச்சாலை வாசலின் உள்ளே அடியெடுத்து வைத்திருந்தான் முகிலன்.
முகிலன் ஐ.பி.எஸ், முப்பது வயது இளைஞன். சிவில் சர்வீஸ் தேர்வில் முதல் பதினைந்து இடத்திற்குள் தேர்வாகி சென்னையில் எஸ்.பி ஆக இருந்தான். கட்டுக்கோப்பான உடல், ஐந்து அடி ஒன்பது அங்குலம் உயரத்தில் அந்தச் சீருடை அவனுக்கு இன்னும் அழகை கூட்டியது. ஏதேனும் வித்தியாசமாக இருக்கிறதா, அனைத்தும் ஒழுங்காக நடக்கிறதா என்று சுற்றுப்புறத்தை பார்வையால் அலசியவாறே வந்தவனின் கண்கள் தன் இலக்கையும் தேடியது.
அவனைக் கண்டதும் "குட் மார்னிங் சார்" என்று ஜெயிலர் சல்யூட் அடிக்க அதை ஆமோதித்தவன் தன்னுடன் வந்தவர்களுடன் உள்ளே நுழைந்தான்.
பொதுவான விசாரிப்புகளை முடித்தவன் அவரிடம் தான் தேடி வந்த நபரைப் பற்றி விசாரிக்க, ஜெயிலர் தயங்கினார்.
“என்னாச்சு மேடம்?” அவனின் குரலில் ஓர் அழுத்தம் இருந்தது.
“சார் அந்த பொண்ணு கிச்சனுக்கு போனா” ஜெயிலர் தயங்கி தான் சொன்னார். அவருக்குத் தெரியும் அவன் என்ன மாதிரி கோபப்படுவான் என்று.
“வாட் த ஹெல்?” அடுத்து ஏதோ சொல்ல வந்தவன் தன்னை அடக்கிக் கொண்டு அவரைப் பார்த்தான்.
“சார்.. ரூல்ஸ்”
“உங்க ரூல்ஸ் எல்லாம் இந்த மாதிரி நேரத்தில் தான் காட்டணுமா?” என்றவன் அவரைக் கண்டுகொள்ளாமல் சமையலறையை நோக்கி நடந்தான்.
“சார்! சார்!” அவரின் அழைப்பு ஒன்றும் அவனின் காதை எட்டவில்லை.
அவனின் வேகத்திற்கு அவரால் ஈடு கொடுக்கவும் முடியாது. கண்களில் பரிதவிப்புடன் தேடியவன், அவன் தேடிய பொருள் கிடைத்ததும் ஒரு பெருமூச்சுடன் அவளை நோக்கி நடந்தான்.
"அறிவழகி" என்ற குரலில் குனிந்து வேலை செய்து கொண்டிருந்தவள் அதிர்ந்து நிமிர்ந்து நோக்க அவளையே ஊடுருவிப் பார்த்துக்கொண்டிருந்தான் முகிலன்.
அவளுக்கு அவன் இனி என்ன செய்வான் என்று தெரியும். ஆனாலும் அவனை நேர்க்கொண்டு பார்த்தாள். இந்தப் பார்வையில் தானே அவன் வீழ்ந்து போனான்.
அறிவழகி. முகிலனின் உயிரானவள். சிறு வயது முதலே அவனின் அன்பிற்கு உரியவள். பால் வண்ண நிறமோ அல்லது கோதுமை நிறத்து அழகியோ என்று சொல்ல முடியாது. அவள் ஒரு கருப்பு சாக்லேட் அழகி. முப்பது வயதில் ஒரு கொலைக் குற்றத்திற்காக ஏழு வருட தண்டனை பெற்று சிறையில் இருந்தாள்.
“அழகி” முகிலன் நெருங்கவும் அவளின் பார்வை மற்றவர்களைத் தீண்டியது.
புரிந்து கொண்டவன் போல அந்தப் பெண் ஜெயிலரை பார்த்தான். அவருக்கு அவளைப் பற்றி ஏற்கனவே தெரியும் என்பதால் மற்றவர்களை வேலை செய்யச் சொல்லி விட்டுத் திரும்ப, அதற்குள் அறிவழகியுடன் அடுத்த அறைக்குள் நுழைந்திருந்தான்.
“என்ன பண்ணுற முகி?” அவனின் கை அவளின் வயிற்றை வருட நெளிந்து கொண்டே இருந்தாள்.
ஆனால் அவன் அதை எல்லாம் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. பார்வை மொத்தமும் அவளின் வயிற்றில் தான்.
"வலி ஏதாச்சும் இருக்காடி?" குரலில் பரிவோடு கேட்டவனை முறைத்தவள் பின் "எனக்கு ஒரு ஹெல்ப் பண்றியா?" என்று கேட்டாள்.
"என்னடி?"
"இந்த குழந்தை.. இதை மட்டும் எப்படியாச்சும் நல்லபடியா வளர்த்து விடுறியா? என் குழந்தைன்னு தெரிஞ்சாலே அதோட எதிர்காலம் நாசமாகிடும்"
"அப்போ மேடம் என்ன செய்யுறதா உத்தேசம்?"
அவனின் கண்களில் கோபத்தை கண்டும் "நான்.. என் வாழ்க்கை இங்கேயே தானே முடியபோகுது" என்றவளின் கன்னத்தில் ஓங்கி அறைந்தவன் பின் அவளைத் தன்னோடு சேர்த்து அணைத்து கொண்டான்.
“ஏன்டி இப்படி எல்லாம் பேசுற? யாரை காப்பாற்ற உன் மேல பழியை போட்டுக்குற? உன்னால ஒரு எறும்புக்கு கூட பாவம் செய்ய முடியாது. நீ கொலை செய்தன்னு சொல்லுறத இந்த ஊர் உலகம் நம்பினாலும் என்னால நம்பவே முடியாது. எதுக்காக இந்த தியாகம்? உனக்காக நானும் நம்ம குழந்தையும் இருக்கிறோம்ன்னு நியாபகமே வரலயா?” அவன் குரலில் அவ்வளவு வலி.
அவனின் காதலைப் பற்றி அவளுக்கு நன்றாகவே தெரியும். தனக்காகத் தான் இன்று வரை அவனின் வீட்டை எதிர்த்துத் திருமணம் கூடச் செய்யாமல் இருக்கிறான். அதற்காக ஜெயிலில் தன் வாழ்க்கையை முடித்துக் கொள்ளப் போகும் அவளுக்காக அவன் இன்னும் அவனுடைய வாழ்க்கையை வீணாக்குவதை அவள் விரும்பமாட்டாள்.
மனதை கல்லாக்கி கொண்டவள் “இது உன் குழந்தைன்னு யார் சொன்னா முகி? ஒருவேளை அன்னைக்கு அவனால் கூட” என்று அவள் முடிக்கவில்லை அதற்குள் அவளின் முதுகில் கைக்கொடுத்து தன்னோடு சேர்த்தவன் குனிந்து அவளின் இதழைப் பதம் பார்த்தான்.
அறிவழகி எவ்வளவு முயன்றும் அவனின் பிடியிலிருந்து வெளி வர இயலவில்லை. வயிற்றில் அழுத்தம் வராமல் பிடித்தவன் அவளின் இதழில் உதிரம் வரும் வரை கடித்தான். அவளின் உதிரத்தின் சுவையை அவன் உணர்ந்த பின்பே அவளை விட்டவன் கண்கள் கொலைவெறியில் இருந்தது.
“இனி ஒரு முறை இப்படி பேசினால் உன்னையும் கொல்லுவேன். பின்னாடியே நானும் வந்துடுவேன். நான் சொல்லுறத செய்வேன்னு உனக்கு நல்லாவே தெரியும்”
“முகி” அவளின் குரலின் வலியை அவனும் உணர்ந்து கொண்டான் தான்.
"நீ கண்டிப்பா வெளில வருவடி. உனக்காக நானும் நம்ம குழந்தையும் காத்துட்டு இருப்போம்”
“எப்படி முகி? அவனை நான் தான் விஷம் வச்சு கொன்னேன்னு பார்த்த சாட்சி இருக்கு. அந்த விஷ பாட்டில் அண்ட் அவன் பால் குடித்த சொம்பில் என் கை ரேகை இருக்கு. எல்லாத்துக்கும் மேல அவன் சாகும்போது கைப்பட எழுதின என்னோட பெயர் இருக்கு. எப்படி? எப்படி கொலை பண்ணினேன் நான்? ஆனா நான் தான் கொலை பண்ணிருக்கேன். என்னோட கையில் அவனோட வாயில் இருந்த இரத்தம் எப்படி வந்துச்சு? நான் எதுக்காக நான் தான் கொலை பண்ணினேன்னு வாக்குமூலம் கொடுத்தேன்? தெரியலயே” அவன் அவளை அமைதியாக இருக்க சொல்ல அவளின் பேச்சு நிற்கவில்லை.
“என்னோட குழந்தை யாரோடது முகி? உன்னோடதா? ஒரு வேளை அவனோடதா இருக்குமோ? ஒரு வாரம் தானே கேப் இருந்துச்சு. முகி இது உனக்கும் எனக்கும் பிறக்க போகிற குழந்தை தானே” அவளின் கேள்வியில் அவன் மனம் சுக்கு நூறாகியது.
அது யார் குழந்தை என்று தான் அவனுக்குத் தெரியுமே. இப்போது சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அவள் நம்ப மாட்டாள்.
“அழகி” அவனின் அதட்டலில்
அதிர்ந்து விழிக்க எதிர்பாராத நேரத்தில் அவளின் கழுத்தில் தன் கையில் இருந்த தாலியை கட்டினான் முகிலன். யாரையும் எதிர்பார்க்கவில்லை. எந்தச் சடங்குகளும் தேவை இல்லை. அவனின் பெற்றோர் பற்றிய கவலை இல்லை. ஆனால் அவனின் உயிர் மூச்சானவளுக்கு நிம்மதியான வாழ்க்கை வேண்டும். அவனின் அருகாமை மட்டுமே அவளுக்கான துணை என்பது அவனுக்குத் தெரியும். நேரடியாகக் கொடுக்க முடியாது என்பதால் இனி அவன் கட்டிய தாலி அவளுக்குப் பாதுகாப்பை, நம்பிக்கையைக் கொடுக்கும்.
முகிலன் தாலியை அவளின் கழுத்தில் அணிவித்த நொடி அறிவழகி என்ன மாதிரி உணர்ந்தாள் என்றே தெரியாது.
“முகி” அவளின் நா தழுதழுக்க,
"நீ இப்படி எல்லாம் யோசிப்பேன்னு தான் இன்னைக்கு இந்த முடிவோடு நான் வந்தேன். இனி நீ, நான், நம்ம குழந்தை, இது தான் வாழ்க்கையினு நினைச்சா கண்டிப்பா இந்த முறை நீ கோர்ட்ல உண்மைய சொல்லுவ" என்றவன் அவளின் ஏழு மாத மேடிட்ட வயிற்றில் அழுத்தத்தைக் கொடுத்து விட்டு வெளியே சென்றான். அறிவழகி தான் அதிர்ந்து நின்றாள்.
அவளுக்குத் தெரிந்த வரையில் அவள் தான் அந்தக் கொலையைச் செய்தாள். சாட்சியங்களும் அப்படியே இருக்க என்ன உண்மையை அவள் சொல்வாள்? அன்றைக்கு அந்த நொடி அவளுக்கு எதுவும் நினைவிலும் இல்லையே. கண் விழித்தபோது அவனின் இரத்தம் அவளின் கையில் இருந்தது. அவனோ அவளுக்கு அருகில் வாயில் இரத்தம் வர இறந்து கிடந்தான்.
‘வேறு என்ன நடந்தது? அவர்கள் இருந்த அறையில் வேறு யாரும் இல்லையே. அவள் தானே பாலை காய்ச்சி எடுத்து வந்தாள்? அதுவும் நேரடியாகப் பால் காரரிடம் அவள் தான் போய் வாங்கி வந்தாள். இதில் யார் என்ன சதி செய்திருக்க முடியும்?
ஆனால் பாலில் விஷம் இருந்ததே! அவளின் கையால் தான் குடிக்க கொடுத்தாள். அதன் பிறகு அவளுக்குச் சுயநினைவு இல்லையே. மறக்கக்கூடிய நினைவுகளா அவை? கொடூர இரவு. ஆனால் நான் என்ன உண்மையைச் சொல்ல வேண்டும் என்று முகிலன் எதிர் பார்க்கிறான்?’
அவளுக்குத் தலை வலித்தது. அவளுக்காக வாதாடின வக்கீல் கூடக் கடைசியில் ஆதாரங்களை வைத்துப் பின்வாங்கி விட்டாரே. இனி யாரை அணுகுவது?
அன்று இரவு அவளுக்கு எதனால் மயக்கம் வந்தது? பல கேள்விகள் மனதை வருத்த அப்படியே அமர்ந்தாள்.
அவளைப் பார்த்துக் கொண்டே நின்ற முகிலனுக்கும் வலித்தது. இந்த ஏழு மாதங்களாகச் சிறையில் அவள் மனதால் படும் பாட்டைப் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறான். இனி அவளே உண்மையைச் சொன்னால் தான் உண்டு. அவள் ஏதோ ஒரு சூழ்ச்சியில் மாட்டிக் கொண்டு இருக்கிறாள் என்பது வரை அவனுக்குப் புரிந்தது.
'அன்று இரவு அவளுக்கு எந்தப் போதை மருந்தும் கொடுக்கப் படவில்லை. ஆனால் அவள் மயக்கத்தில் இருந்ததை பயன்படுத்தி யாராவது அவனைக் கொலை செய்திருப்பார்களா? ஆனால் அந்த வீட்டிலேயே அவர்களைத் தவிர யாரும் இருந்தது போலத் தடயம் இல்லையே'
இனி இறந்தவன் வந்து சொல்ல வேண்டும் இல்லையென்றால் அறிவழகி உண்மையைச் சொல்ல வேண்டும். பெருமூச்சை விட்டவன் அவளை ஏக்கமாகப் பார்த்த படி வெளியே வந்தான்.
ஜெயிலர் அவர்களுக்காகக் காத்து கொண்டிருக்க "அவ கழுத்துல இருந்து தாலியை மட்டும் கழட்டாம பாத்துக்கோங்க ப்ளீஸ்" என்றவன் சென்று விட ஜெயிலர் அவசரமாக உள்ளே சென்றார்.
அறிவழகியோ தன் கழுத்தில் தொங்கிய தாலியை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
“என் மனம் கானலின்
நீரென ஆகுமா கைகளில் சேருமா
அன்பே நேசிக்கும் காலம் தான்
வீணெண போகுமா நினைவுகள்
சோ்க்கிறேன் இங்கே ஆயினும்
காதலின் கைகளில் விரும்பியே
விழுகிறேன் அன்பே!”
சென்னை பெண்கள் சிறைச்சாலை மிகவும் பரபரப்புடன் காணப்பட்டது. ஜெயிலர் சிறைக்கைதிகளின் ஆவணங்களை எல்லாம் ஒழுங்கு படுத்தி வைத்துக் கொண்டிருக்க, அங்கே பாதுகாப்புக்கு இருந்த மற்ற பெண் காவலர்கள் ஒவ்வொரு சிறை கைதிகளின் அறைக்குச் சென்று அவர்களிடம் எதுவும் தேவை இல்லாத பொருட்கள் இருக்கிறதா என்று சோதனை செய்து கொண்டிருந்தனர்.
காரணம் இன்று எஸ்.பி முகிலன் ஐ.பி.எஸ் அந்தச் சிறைக்கு வருகை தர இருக்கின்றான். மிகவும் கண்டிப்பானவன். அதே நேரம் ஒரு நிரபராதி தண்டிக்கப்பட கூடாது என்பதில் தீவிரமாக இருப்பவன். இன்றும் அவனுக்கு நெருங்கிய ஒரு சொந்தம் சிறையில் இருப்பதால் அந்த நபரைப் பார்க்கச் சிறப்பு அனுமதி பெற்றிருந்தான். அவனின் வருகையின் காரணமாகத் தான் இந்தப் பரபரப்பு.
"இன்னைக்கு ஜெயிலுக்கு முகிலன் சார் வரார். எவகிட்டயாச்சும் காசு வாங்கிட்டு போன் கொடுக்குற பழக்கம் இருக்கவ எல்லாம் இன்னைக்கு மட்டும் ஒழுங்கா இரு" என்று அந்தப் பெண் ஜெயிலர் எச்சரிக்கை விடுத்து கொண்டிருக்க, அந்நேரம் பெண்கள் சிறைச்சாலை வாசலின் உள்ளே அடியெடுத்து வைத்திருந்தான் முகிலன்.
முகிலன் ஐ.பி.எஸ், முப்பது வயது இளைஞன். சிவில் சர்வீஸ் தேர்வில் முதல் பதினைந்து இடத்திற்குள் தேர்வாகி சென்னையில் எஸ்.பி ஆக இருந்தான். கட்டுக்கோப்பான உடல், ஐந்து அடி ஒன்பது அங்குலம் உயரத்தில் அந்தச் சீருடை அவனுக்கு இன்னும் அழகை கூட்டியது. ஏதேனும் வித்தியாசமாக இருக்கிறதா, அனைத்தும் ஒழுங்காக நடக்கிறதா என்று சுற்றுப்புறத்தை பார்வையால் அலசியவாறே வந்தவனின் கண்கள் தன் இலக்கையும் தேடியது.
அவனைக் கண்டதும் "குட் மார்னிங் சார்" என்று ஜெயிலர் சல்யூட் அடிக்க அதை ஆமோதித்தவன் தன்னுடன் வந்தவர்களுடன் உள்ளே நுழைந்தான்.
பொதுவான விசாரிப்புகளை முடித்தவன் அவரிடம் தான் தேடி வந்த நபரைப் பற்றி விசாரிக்க, ஜெயிலர் தயங்கினார்.
“என்னாச்சு மேடம்?” அவனின் குரலில் ஓர் அழுத்தம் இருந்தது.
“சார் அந்த பொண்ணு கிச்சனுக்கு போனா” ஜெயிலர் தயங்கி தான் சொன்னார். அவருக்குத் தெரியும் அவன் என்ன மாதிரி கோபப்படுவான் என்று.
“வாட் த ஹெல்?” அடுத்து ஏதோ சொல்ல வந்தவன் தன்னை அடக்கிக் கொண்டு அவரைப் பார்த்தான்.
“சார்.. ரூல்ஸ்”
“உங்க ரூல்ஸ் எல்லாம் இந்த மாதிரி நேரத்தில் தான் காட்டணுமா?” என்றவன் அவரைக் கண்டுகொள்ளாமல் சமையலறையை நோக்கி நடந்தான்.
“சார்! சார்!” அவரின் அழைப்பு ஒன்றும் அவனின் காதை எட்டவில்லை.
அவனின் வேகத்திற்கு அவரால் ஈடு கொடுக்கவும் முடியாது. கண்களில் பரிதவிப்புடன் தேடியவன், அவன் தேடிய பொருள் கிடைத்ததும் ஒரு பெருமூச்சுடன் அவளை நோக்கி நடந்தான்.
"அறிவழகி" என்ற குரலில் குனிந்து வேலை செய்து கொண்டிருந்தவள் அதிர்ந்து நிமிர்ந்து நோக்க அவளையே ஊடுருவிப் பார்த்துக்கொண்டிருந்தான் முகிலன்.
அவளுக்கு அவன் இனி என்ன செய்வான் என்று தெரியும். ஆனாலும் அவனை நேர்க்கொண்டு பார்த்தாள். இந்தப் பார்வையில் தானே அவன் வீழ்ந்து போனான்.
அறிவழகி. முகிலனின் உயிரானவள். சிறு வயது முதலே அவனின் அன்பிற்கு உரியவள். பால் வண்ண நிறமோ அல்லது கோதுமை நிறத்து அழகியோ என்று சொல்ல முடியாது. அவள் ஒரு கருப்பு சாக்லேட் அழகி. முப்பது வயதில் ஒரு கொலைக் குற்றத்திற்காக ஏழு வருட தண்டனை பெற்று சிறையில் இருந்தாள்.
“அழகி” முகிலன் நெருங்கவும் அவளின் பார்வை மற்றவர்களைத் தீண்டியது.
புரிந்து கொண்டவன் போல அந்தப் பெண் ஜெயிலரை பார்த்தான். அவருக்கு அவளைப் பற்றி ஏற்கனவே தெரியும் என்பதால் மற்றவர்களை வேலை செய்யச் சொல்லி விட்டுத் திரும்ப, அதற்குள் அறிவழகியுடன் அடுத்த அறைக்குள் நுழைந்திருந்தான்.
“என்ன பண்ணுற முகி?” அவனின் கை அவளின் வயிற்றை வருட நெளிந்து கொண்டே இருந்தாள்.
ஆனால் அவன் அதை எல்லாம் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. பார்வை மொத்தமும் அவளின் வயிற்றில் தான்.
"வலி ஏதாச்சும் இருக்காடி?" குரலில் பரிவோடு கேட்டவனை முறைத்தவள் பின் "எனக்கு ஒரு ஹெல்ப் பண்றியா?" என்று கேட்டாள்.
"என்னடி?"
"இந்த குழந்தை.. இதை மட்டும் எப்படியாச்சும் நல்லபடியா வளர்த்து விடுறியா? என் குழந்தைன்னு தெரிஞ்சாலே அதோட எதிர்காலம் நாசமாகிடும்"
"அப்போ மேடம் என்ன செய்யுறதா உத்தேசம்?"
அவனின் கண்களில் கோபத்தை கண்டும் "நான்.. என் வாழ்க்கை இங்கேயே தானே முடியபோகுது" என்றவளின் கன்னத்தில் ஓங்கி அறைந்தவன் பின் அவளைத் தன்னோடு சேர்த்து அணைத்து கொண்டான்.
“ஏன்டி இப்படி எல்லாம் பேசுற? யாரை காப்பாற்ற உன் மேல பழியை போட்டுக்குற? உன்னால ஒரு எறும்புக்கு கூட பாவம் செய்ய முடியாது. நீ கொலை செய்தன்னு சொல்லுறத இந்த ஊர் உலகம் நம்பினாலும் என்னால நம்பவே முடியாது. எதுக்காக இந்த தியாகம்? உனக்காக நானும் நம்ம குழந்தையும் இருக்கிறோம்ன்னு நியாபகமே வரலயா?” அவன் குரலில் அவ்வளவு வலி.
அவனின் காதலைப் பற்றி அவளுக்கு நன்றாகவே தெரியும். தனக்காகத் தான் இன்று வரை அவனின் வீட்டை எதிர்த்துத் திருமணம் கூடச் செய்யாமல் இருக்கிறான். அதற்காக ஜெயிலில் தன் வாழ்க்கையை முடித்துக் கொள்ளப் போகும் அவளுக்காக அவன் இன்னும் அவனுடைய வாழ்க்கையை வீணாக்குவதை அவள் விரும்பமாட்டாள்.
மனதை கல்லாக்கி கொண்டவள் “இது உன் குழந்தைன்னு யார் சொன்னா முகி? ஒருவேளை அன்னைக்கு அவனால் கூட” என்று அவள் முடிக்கவில்லை அதற்குள் அவளின் முதுகில் கைக்கொடுத்து தன்னோடு சேர்த்தவன் குனிந்து அவளின் இதழைப் பதம் பார்த்தான்.
அறிவழகி எவ்வளவு முயன்றும் அவனின் பிடியிலிருந்து வெளி வர இயலவில்லை. வயிற்றில் அழுத்தம் வராமல் பிடித்தவன் அவளின் இதழில் உதிரம் வரும் வரை கடித்தான். அவளின் உதிரத்தின் சுவையை அவன் உணர்ந்த பின்பே அவளை விட்டவன் கண்கள் கொலைவெறியில் இருந்தது.
“இனி ஒரு முறை இப்படி பேசினால் உன்னையும் கொல்லுவேன். பின்னாடியே நானும் வந்துடுவேன். நான் சொல்லுறத செய்வேன்னு உனக்கு நல்லாவே தெரியும்”
“முகி” அவளின் குரலின் வலியை அவனும் உணர்ந்து கொண்டான் தான்.
"நீ கண்டிப்பா வெளில வருவடி. உனக்காக நானும் நம்ம குழந்தையும் காத்துட்டு இருப்போம்”
“எப்படி முகி? அவனை நான் தான் விஷம் வச்சு கொன்னேன்னு பார்த்த சாட்சி இருக்கு. அந்த விஷ பாட்டில் அண்ட் அவன் பால் குடித்த சொம்பில் என் கை ரேகை இருக்கு. எல்லாத்துக்கும் மேல அவன் சாகும்போது கைப்பட எழுதின என்னோட பெயர் இருக்கு. எப்படி? எப்படி கொலை பண்ணினேன் நான்? ஆனா நான் தான் கொலை பண்ணிருக்கேன். என்னோட கையில் அவனோட வாயில் இருந்த இரத்தம் எப்படி வந்துச்சு? நான் எதுக்காக நான் தான் கொலை பண்ணினேன்னு வாக்குமூலம் கொடுத்தேன்? தெரியலயே” அவன் அவளை அமைதியாக இருக்க சொல்ல அவளின் பேச்சு நிற்கவில்லை.
“என்னோட குழந்தை யாரோடது முகி? உன்னோடதா? ஒரு வேளை அவனோடதா இருக்குமோ? ஒரு வாரம் தானே கேப் இருந்துச்சு. முகி இது உனக்கும் எனக்கும் பிறக்க போகிற குழந்தை தானே” அவளின் கேள்வியில் அவன் மனம் சுக்கு நூறாகியது.
அது யார் குழந்தை என்று தான் அவனுக்குத் தெரியுமே. இப்போது சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அவள் நம்ப மாட்டாள்.
“அழகி” அவனின் அதட்டலில்
அதிர்ந்து விழிக்க எதிர்பாராத நேரத்தில் அவளின் கழுத்தில் தன் கையில் இருந்த தாலியை கட்டினான் முகிலன். யாரையும் எதிர்பார்க்கவில்லை. எந்தச் சடங்குகளும் தேவை இல்லை. அவனின் பெற்றோர் பற்றிய கவலை இல்லை. ஆனால் அவனின் உயிர் மூச்சானவளுக்கு நிம்மதியான வாழ்க்கை வேண்டும். அவனின் அருகாமை மட்டுமே அவளுக்கான துணை என்பது அவனுக்குத் தெரியும். நேரடியாகக் கொடுக்க முடியாது என்பதால் இனி அவன் கட்டிய தாலி அவளுக்குப் பாதுகாப்பை, நம்பிக்கையைக் கொடுக்கும்.
முகிலன் தாலியை அவளின் கழுத்தில் அணிவித்த நொடி அறிவழகி என்ன மாதிரி உணர்ந்தாள் என்றே தெரியாது.
“முகி” அவளின் நா தழுதழுக்க,
"நீ இப்படி எல்லாம் யோசிப்பேன்னு தான் இன்னைக்கு இந்த முடிவோடு நான் வந்தேன். இனி நீ, நான், நம்ம குழந்தை, இது தான் வாழ்க்கையினு நினைச்சா கண்டிப்பா இந்த முறை நீ கோர்ட்ல உண்மைய சொல்லுவ" என்றவன் அவளின் ஏழு மாத மேடிட்ட வயிற்றில் அழுத்தத்தைக் கொடுத்து விட்டு வெளியே சென்றான். அறிவழகி தான் அதிர்ந்து நின்றாள்.
அவளுக்குத் தெரிந்த வரையில் அவள் தான் அந்தக் கொலையைச் செய்தாள். சாட்சியங்களும் அப்படியே இருக்க என்ன உண்மையை அவள் சொல்வாள்? அன்றைக்கு அந்த நொடி அவளுக்கு எதுவும் நினைவிலும் இல்லையே. கண் விழித்தபோது அவனின் இரத்தம் அவளின் கையில் இருந்தது. அவனோ அவளுக்கு அருகில் வாயில் இரத்தம் வர இறந்து கிடந்தான்.
‘வேறு என்ன நடந்தது? அவர்கள் இருந்த அறையில் வேறு யாரும் இல்லையே. அவள் தானே பாலை காய்ச்சி எடுத்து வந்தாள்? அதுவும் நேரடியாகப் பால் காரரிடம் அவள் தான் போய் வாங்கி வந்தாள். இதில் யார் என்ன சதி செய்திருக்க முடியும்?
ஆனால் பாலில் விஷம் இருந்ததே! அவளின் கையால் தான் குடிக்க கொடுத்தாள். அதன் பிறகு அவளுக்குச் சுயநினைவு இல்லையே. மறக்கக்கூடிய நினைவுகளா அவை? கொடூர இரவு. ஆனால் நான் என்ன உண்மையைச் சொல்ல வேண்டும் என்று முகிலன் எதிர் பார்க்கிறான்?’
அவளுக்குத் தலை வலித்தது. அவளுக்காக வாதாடின வக்கீல் கூடக் கடைசியில் ஆதாரங்களை வைத்துப் பின்வாங்கி விட்டாரே. இனி யாரை அணுகுவது?
அன்று இரவு அவளுக்கு எதனால் மயக்கம் வந்தது? பல கேள்விகள் மனதை வருத்த அப்படியே அமர்ந்தாள்.
அவளைப் பார்த்துக் கொண்டே நின்ற முகிலனுக்கும் வலித்தது. இந்த ஏழு மாதங்களாகச் சிறையில் அவள் மனதால் படும் பாட்டைப் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறான். இனி அவளே உண்மையைச் சொன்னால் தான் உண்டு. அவள் ஏதோ ஒரு சூழ்ச்சியில் மாட்டிக் கொண்டு இருக்கிறாள் என்பது வரை அவனுக்குப் புரிந்தது.
'அன்று இரவு அவளுக்கு எந்தப் போதை மருந்தும் கொடுக்கப் படவில்லை. ஆனால் அவள் மயக்கத்தில் இருந்ததை பயன்படுத்தி யாராவது அவனைக் கொலை செய்திருப்பார்களா? ஆனால் அந்த வீட்டிலேயே அவர்களைத் தவிர யாரும் இருந்தது போலத் தடயம் இல்லையே'
இனி இறந்தவன் வந்து சொல்ல வேண்டும் இல்லையென்றால் அறிவழகி உண்மையைச் சொல்ல வேண்டும். பெருமூச்சை விட்டவன் அவளை ஏக்கமாகப் பார்த்த படி வெளியே வந்தான்.
ஜெயிலர் அவர்களுக்காகக் காத்து கொண்டிருக்க "அவ கழுத்துல இருந்து தாலியை மட்டும் கழட்டாம பாத்துக்கோங்க ப்ளீஸ்" என்றவன் சென்று விட ஜெயிலர் அவசரமாக உள்ளே சென்றார்.
அறிவழகியோ தன் கழுத்தில் தொங்கிய தாலியை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்.