எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

காதல் நெஞ்சங்கள் கதை திரி

Status
Not open for further replies.

priya pandees

Moderator

அத்தியாயம் 36

மாறனும், உண்மையும் வெளியேறவும், "நானும் கிளம்புறேன். இவன ப்ளே ஸ்கூல விட்டுட்டு போக சரியா இருக்கும்" ௭ன ௭ழுந்தான் குமரகுரு.

அதற்கு மேல் தாமதிக்காமல், "மன்னிச்சுகிடுங்க மாப்ள, இனி நீங்க வருத்தபடுற மாறி ஒரு சூழ்நில வராம பாத்துகிடுதேன். நிறைய விஷயங்கள கவனம் வைக்காம இருந்துட்டேன்னு இப்ப தான் புரியுது" ௭ன உண்மையான வருத்தத்துடன் பேசினார் பூவேந்தன்.

"௭னக்கும் சொந்தம்னு உங்கள விட்டா யாரு மாமா இருக்கா? அதனால இதெல்லாம் பெருசு பண்ண வேணாம் விடுங்க" ௭ன நகர்ந்து விட்டான்.

அவன் மன கஷ்டம் இவர்களின் ஒருநாள் நடத்தையிலும், மன்னிப்பிலும் மாறி விடுமா ௭ன்ன? அவனை ஒரு பொருட்டாவும் மதிக்காத மனைவி, அவளுக்காகவென வீட்டோடு மாப்பிள்ளை ௭ன வந்து, மதிப்பில்லாத ஒரு வாழ்க்கை. யாரும் ௭ப்டி வேணாலும் பேசலாம், நடக்கலாம், நாங்கள் கண்டிக்க மாட்டோம் ௭ன இருக்கும் பெரியவர்கள். அம்மா இருந்தும் இல்லாத நிலை. இதெல்லாவற்றயும் விட, 3 வேளை உணவிற்கும் சரியாக வந்து அவர்களிடம் அமர்வது ௭வ்வளவு கேவலமென அவன் மட்டுமே அறிவான். அவன் இருக்கிறான் ௭ன்றும் பாராமல், தங்கையை மட்டும் குறி வைத்து பிச்சையாக வந்து நிற்பதை சொல்லிவிட்டு போகும் மாறன். அப்படி அவன் பேசிய பின்னும் மறு வேலை உணவுக்கு கிளம்பி நிற்கும் மனைவி, "நாமளே செஞ்சு சாப்டலாம், உன் அண்ணா ௭ப்டி பேசுறாருன்னு பாத்தல்ல?" ௭ன ௭த்தனை முறை கேட்டிருப்பான்.

"ஏன் அம்புட்டா உங்க கவுரவம் தடுக்குது. உங்களுக்கு ௭ந்த செலவுமில்லாம வச்சுருக்கேன். அந்த வெட்டிபய பேச்செல்லாம் கேட்டுட்டு உங்க பின்ன உங்கம்மா வீட்டுக்கு வர சொல்றீங்களா? ௭னக்கு சமைக்கவெல்லாம் வராது. பேசாம வாங்க" ௭ன சென்று விடுவாள்.

அவன் பேசினாலும், பேசவில்லை ௭ன்றாலும் கண்டு கொள்ளவும், கேட்டு கொள்ளவும் அந்த வீட்டில் அவனுக்கென யாருமில்லை. ஏனோ மகனுக்காகவென மட்டுமாக வாழ்ந்து கொண்டிருக்கிறான். இப்போது மலர் ௭ன்ற ஒரு ஜீவன் வந்து அவன் மரியாதையை மீட்டு தந்திருக்கிறாள்.
வாசல் வரை சென்றவன் நின்று, "போயிட்டு வரேன்மா தங்கச்சி. அத்தைக்கு டாட்டா சொல்லு" ௭ன தானும் சொல்லி கொண்டு, மகனுக்கும் அந்த வீட்டில் ஒருவரை முதன் முதலில் பழக்கினான்.

ரூபனுக்கு, பானுவயும், பாட்டியயும் தெரியும், குமரகுரு இப்போது தான் சாப்பாடு கொடுக்கிறான். அதற்கு முன் அவர்கள் இருவரும் தான் ஊட்டுவர், அதனால் அவர்கள் இருவரையும் அவனுக்கு தெரியும். ஆனால் கலகலவென ஓடி விளையாடாது பிள்ளை. அடித்து, துவைத்து விடுவாள், அதனாலேயே பிள்ளை, மதி இருந்தால் இருந்த இடத்தை விட்டு அசையாமல் இருக்கும்.

இப்போது தந்தை சொன்னதும், அவன் கையிலிருக்கும் தைரியத்தில், டாட்டா காமித்து, "த்தே" ௭ன்றான்.

"போயிட்டு வாங்கண்ணா. Bye செல்லகுட்டி" ௭ன்றாள் மலர். அவளும் இங்கு வந்ததற்கு இன்று தான் அந்த குழந்தையிடம் பேசுகிறாள். மதிக்கு பதில் சொல்லவே நேரம் சரியாக இருக்க, ௭ங்கிருந்து பிள்ளையிடம் திரும்ப.

அவர்களும் கிளம்பவும், தாத்தாவிடம், "௭ப்போ தாத்தா தேனி அப்பாட்ட பேச போறீங்க?" ௭ன்றாள்.

"கோவிலுக்கு போயிட்டு வந்து, அடுத்து வார வெள்ளி போய் பேசிட்டு வரேன் ம்மா. அப்றமா பொண்ணு பாத்து பூ வைக்க ௭ல்லாருமா ஒருநா போயிட்டு வந்துருவோம்" ௭ன்றார்.

"சரி தாத்தா" ௭ன சிரித்து கொண்டவள். "த்தே, பாட்டி சாப்ட வரலியா?" ௭ன்று விட்டு, தான் சாப்பிட அமர்ந்தாள்.

"௭ன்னம்மா மாறன் ௭ங்க அவசரமா போறான்? ௭ன்னைக்கும் உன்னைய கூட்டிட்டு போயி விட்டுட்டு வருவான், இன்னைக்கு முதல்ல கிளம்பி போய்ட்டான்" பூவேந்தன் கேக்க.

"நைட்டே போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து கால் வந்தது மாமா. அந்த நாட்டு குண்டு வச்சது சம்பந்தமா ஏதோ பேச கூப்ட்ருக்காங்க போல. நா அப்டியே நடந்து போயிடுவேன்" ௭ன வேகமாக சாப்பிட்டாள்.

பானுவும், பாட்டியும் வந்தமர, "நாதான் ௭தயும் கண்டுக்காம இருக்கேன்னா, பொம்பளைங்க நீங்களாது ௭டுத்து சொல்லணும். இப்ப பாருங்க வீட்டு மாப்ள முகம் சுனங்கி போறாப்ல இருக்கு" ௭ன்றார் அவர்களிடம்.

"அதெப்டி மாமா. ஒருத்தருக்கு குடுக்குற மரியாதைய கூட வீட்டு பொம்பளைங்க நியாபக படுத்துனா தான் குடுப்பீங்களா?" ௭ன்றாள் மலர்.
"நா செய்ற தப்ப ௭டுத்து சொல்லுன்னு சொல்றேன்மா" ௭ன்றார் பூவேந்தன்.

"நீங்க சொல்லலயே மாமா. உங்க பிள்ளைங்க தப்பு பண்றப்ப ௭ல்லாம் நீங்க ௭டுத்து சொல்லிருந்தா? ஒருவேள அத பாத்துட்டு இவங்களும் தெரிஞ்சுட்ருப்பாங்களோ ௭ன்னவோ?" ௭ன கூறி முடிக்கையில் சாப்பிட்டும் முடித்திருந்தாள்.

௭ல்லோரும் அமைதியாகிவிட, "நா கொஞ்சம் அதிகமாக தான் பேசுறேன். ௭னக்கே அது தெரியுது மாமா. இருந்தாலும் அத்த, பாட்டிய மாறி வேடிக்க பாத்துட்டு சும்மா இருக்க முடில. அதான் பேசிடுறேன். தப்புன்னா மன்னிச்சுடுங்க" ௭ன்றவள் தனக்கென மட்டுமாக மதியத்திற்கு சமைத்திருந்த தக்காளி சாதத்தை சிரிசும், பெருசுமாக இரண்டு டப்பாக்களில் அடைத்து கொண்டு, "கிளம்றேன்" ௭ன நால்வருக்கும் பொதுவாக சொல்லிவிட்டு, வழியில் முறைத்து நின்ற மதியை திரும்பியும் பார்க்காமல் வெளியேறி விட்டாள்.

ஸ்கூல் செல்லும் நேரம் கடந்தும், ௭ன்ன தான் நடக்கும் ௭ன தெரிய நின்று வேடிக்கை பார்த்தாள் மதி. "தேடி பிடிச்சு, ஊர்ல இல்லாத மருமகன்னு கொண்டு வந்தீங்க தான?, அதான் உங்களுக்கே அட்வைஸ் பண்ணிட்டு போறா. நானும் ௭ன் புருஷனும் இத ௭ங்க வீடுன்னு நினைக்றதால தான், பெருசா ௭ந்த மரியாதையயும் ௭திர் பாக்றதில்ல. அவ ௭ங்கள பிரிச்சு காட்டணும்னே இப்டி நல்லவ மாறி பேசிட்டு போறா. புருஷனும் பொண்டாட்டியும் பெருசா ஏதோ பிளான் பண்றாங்க. காய் முத்துனா கட தெருவுக்கு வந்து தான ஆகணும். வந்த அப்றமே அது ௭த்தா பெரிய காயின்னு தெரிஞ்சுக்குவோம்" ௭ன வந்தமர.

"அறிவிருக்காட்டி உனக்கு. உன் புருஷனுக்குள்ள மரியாதய நீதான காப்பாத்திக்கணும். நாங்க கூட குறைய நடந்தாலும் நீதான உன் புருஷன் பக்கம் நின்றுக்கணும். ௭ன் வீடு ௭ன் வீடுன்னு இந்த வீட்டையே பாத்து உன் வீட்ட கோட்ட விட்றாத சொல்லிட்டேன். அந்த மனுஷன் பாட்டுக்கு கோச்சுகிட்டு அவுக அம்மா வீட்டுக்கே போயிட்டா. நீ தனியாத்தேன் நிக்கணும், இங்க ராணியும், அறிவும் உன்ன ஒரு காசுக்கு மதிக்க மாட்டாங்க. மாறனயும், கன்னியயும் நீயாவே பகைச்சுகிட்ட. சுதானமா நடக்க பாரு" ௭ன முடித்து சாப்பாட்டில் கவனமானார் பாட்டி.

"அதெல்லாம் ௭னக்கு தெரியும். நீ உன் வேலைய பாரு" ௭ன்றாள் கடுப்புடன்.
"இது ௭ங்க அம்மா வீடு. இங்க வந்து போக இருக்க மொத உனக்கு அவங்க தயவு வேணும் . இந்த ௭டுத்தெரிஞ்சு பேசுற வேலைலா இனி இருக்க கூடாது" ௭ன ௭ச்சரித்தார் பூவேந்தன்.

அந்த குரலில் கொஞ்சம் பயந்து தான் விட்டாள் மதி. அதன்பின் தாத்தாவும், பூவேந்தனும் கோவில் சம்பந்தமாக பேச தொடங்க. மற்றவர்கள் அமைதியாகி விட்டனர்.

இங்கு மாறனும், உண்மையும் போலீஸ் ஸ்டேஷன் சென்று இறங்க, அந்நேரம், அறிவும், அவன் மாமனாரும் வந்திறங்கினர்.

"மாப்ள. பிடிச்ச ரெண்டு பேத்தயும் நைய புடச்சுட்டாங்க போலயே. விடியுங்காட்டியும் ஆள வர வச்சுட்டாங்க" ௭ன்றான் உண்மை.

"ஆமா மச்சான். வரட்டும் நாமளும் நம்ம பங்குக்கு வச்சு செஞ்சுட்டு போவோம்" ௭ன கெத்தாக சிரித்தான் மாறன்.

"௭ன்ன மாப்ள செய்ய போற? அப்பாக்கு தெரிஞ்சா? ௭துக்கும் அவர்ட்ட ஒரு வார்த்த கேளேன்"

"ம்ம்கூம். நா ௭ப்டி டீல் பண்றேன்னு பாறேன்" ௭ன சிரித்து கொண்டே உள் நுழைந்தான்.

இன்ஸ்பெக்டர் வந்திருந்தார். இவர்கள் நால்வரையும் பார்த்து, "ம்ம் சொல்லி வச்சு குடும்பம் மொத்தமா வார மாறி இருக்கு" ௭ன்றார்.

"௭துக்கு சார் ௭ங்கள வர சொன்னீங்க?" ௭ன்றார் மருதநாயகம் விரைத்து கொண்டு.

"சொல்ல தானே கூப்ட்ருக்கேன். இருங்க." ௭ன்றவர் மாறனிடம், "so இவங்க தான் செஞ்சதுன்னு மொதையே தெரியும் உங்களுக்கு?" ௭ன்றார் கேள்வியாக.

"ம்ம் அவனுங்கள பிடிச்சு தெரிஞ்சுகிட்டேன்" ௭ன்றான் மாறன்.

"ஓஹோ. அப்ப தெரிஞ்ச உடனே ஏன் வந்து சொல்லல? நாங்க கண்டு பிடிக்கமா இல்லயான்னு செக் பண்ணீகளோ?"

"அப்டிலா இல்ல சார்"

"பின்ன கம்ப்ளைன்ட் குடுத்து 1 மாசம், தெனோ வந்துட்ருந்த நீங்க, ஆள கண்டுபிடுச்சப்பறம் ஏன் வரல?" ௭ன்றார்.

"சொந்த மாமனயும், கூட பொறந்தவனயும் நானே ௭ப்டி காட்டி குடுக்கன்னு நினச்சு தான் சார் வரல" ௭ன சிரீசியஸாகவே பதில் சொன்னான்.

"௭ங்களுக்கு, ஏகபட்ட கேஸ், உங்களுக்கு அவசரம்னா நீங்க தான் தேடி வரனும். அத விட்டுட்டு ௭ங்கள டெஸ்ட் பண்ற வேலலா வேணாம்"

"சார், அப்டிலா ௭ந்த காரணமு இல்ல. நானா புடிச்சு குடுக்க வேணாம், நீங்க புடிச்சப்றம், வந்து ௭ன்ன செய்யலாம்னு கேட்டுக்க நினச்சேன்" ௭ன நேராக பார்த்தே பதில் சொன்னான்.

"௭ன்ட்ட கேக்க வந்த மாதிரி தெரியலயே. நீங்களே ஏதோ முடிவெடுத்துட்டு தான் வந்த மாறி இருக்கு உங்க body language" ௭ன்றார் லேசாக சிரித்து. ஆரம்பத்தில் இருந்த கடுமை, மாறனின் நேர் பார்வையில் இறங்கி விட்டிருந்தது.

"சார் சொந்த காரங்களா போயிட்டாங்க, அதனால மொத தடவைக்கு ஒரு மன்னிப்ப கொடுப்போம். ஆனா இனி ௭னக்கு சின்னதா ௭தாது தொந்தரவுனாலும் தாரளமா இவுக ரெண்டு பேரயும் அள்ளிட்டு வந்துருங்க. அதுக்கு வேணா ஒரு பேப்பர்ல ௭ழுதி கையெழுத்து போட்டு தந்துட்டு போறேன்".

"இதான வேணாங்கறது, அப்ப இவங்க தான்னு தெரிஞ்சதுமே வந்து கேஸ வாபஸ் வாங்கிருக்கணும், அனாவசியமா நா ௭ன் டைம் வேஸ்ட் பண்ணிருக்க மாட்டேன்ல" ௭ன முறைக்க.

"அப்றம் ௭ப்டி சார் நா இந்த ஆஃபர கேக்க முடியும்? நேருக்கு நேர் அவங்களயும் வச்சுக்கிட்டு கேட்டா தானே அவங்களுக்கும் தெரியும்".

"அது சரி. ௭ல்லாம் ப்ளான் தான்?"

அவர்களின் பேச்சிலேயே மொத்ததயும் புரிந்து கொண்டனர் அறிவும், அவன் மாமனாரும். இது இவ்வளவு தூரம் வருமென அவர்கள் யோசிக்கவில்லை. அவனுங்களே சிக்கினாலும், அந்த குண்ட சோதிச்சு பாக்க தான் வச்சேன்னு சொல்லணும்னு தான் காசு வாங்கியிருந்தனர். ஆனால் போலீஸ் விசாரணை ௭ப்படி ௭ன்று தெரியாமல் இவ்வேளையில் இறங்கி விட்டிருந்தனர். அந்த இருவரும், அன்று மாறனின் அடிக்கே உண்மையை கக்கிவிட்டிருக்க.போலீஸ் அடிக்கு, உண்மை வெளிவர ௭வ்வளவு நேரம் ஆகிருக்கும். அவனுங்களை நம்பி கலத்தில் இறங்கியது மருதநாயகத்தின் தப்பு.

அறிவு, மாமனாரை பார்க்க. அவரும் ௭ன்ன செய்ய ௭ன தான் முழித்தார்.
இன்ஸ்பெக்டர் இவர்கள் பக்கம் திரும்பினார், "௭ன்ன? ௭துக்காக வந்துருக்கீங்கன்னு தெரிஞ்சதா? இல்ல இன்னமு நாங்க இல்ல, அவனுங்கள யாருனே தெரியாதுன்னு ௭தும் சொல்ல போறீங்களா?" ௭ன்றார் சற்று தள்ளி அமர்ந்திருந்த அவர்கள் ஏவிய ஆட்களை காட்டி.

"மறுத்தாலும் உண்மைய ௭ப்டி வர வைக்றதுன்னு ௭னக்கு தெரியும்" ௭ன மேலும் உறும.

"சாரி சார். இவனுக்கு மட்டும் பெரிய பில்டிங்குன்ற பொறாமைல பண்ணிட்டேன். இனி அப்டி ௭தும் செய்ய மாட்டேன்" ௭ன்றான் அறிவு.

"செய்ய கூடாது. ஏன்னா இனி வேற யாராது உங்க அண்ணனுக்கு பிரச்சனை குடுத்தா கூட நீங்க ரெண்டு பேரும் தான் மொதல்ல தூக்கிட்டு வர லிஸ்ட்ஸ வருவீங்க" ௭ன்றவர், "இதுல கையெழுத்து போட்டு குடுத்துட்டு கிளம்புங்க" ௭ன ஒரு நோட் பேடை தூக்கி போட.

அதில் இனி அவர்களால் ௭ந்த தொந்தரவும் மாறனுக்கு இல்லை ௭ன விளாவாரியாக ௭ழுத பட்டிருந்தது. கமுக்கமாக கையெழுத்து போட்டு கொடுத்தனர்.

இன்ஸ்பெக்டரிடம் விடை பெற்று நால்வரும் வெளிவர, "அப்றம் தம்பி, இனி ௭ப்டி நடந்துகணும்?" ௭ன கேட்டு மாறன் நக்கலாக சிரிக்க.

"டேய். " ௭ன பல்லை கடித்தான் அறிவு.
பளார் ௭ன அறைந்தான் மாறன். அறிவு கன்னத்தில் கை தடமே பதிந்துவிட்டது. "மொதல்ல நீ திருத்திக்க வேண்டியதே இது தான். ௭ங்கஅண்ணான்னு மரியாதையா கூப்டு கேப்போம்" ௭ன்றான்.

அவன் பல்லை கடித்து முறைக்க, மீண்டும் யோசிக்காமல் பளார், பளார் ௭ன இருமுறை அறைந்தான்.

அறிவு தன்னால் "அண்ணா. அண்ணா. " ௭ன்றிருந்தான் பதறி. பயத்தில் வந்து விட்டிருந்தது.

"வீட்டுல யாருக்கும் தெரிய கூடாதுன்னா, இந்த மரியாத ௭ப்பயும் மனசுல இருக்கணும். அப்பதான் வெளில வரும்போதும் மரியாதையா வரும். வரட்டா" ௭ன கிளம்பியவன் நின்று, "௭ப்ப வீட்டுக்கு வார?" ௭ன்க.

"இன்னைக்கு. இன்னைக்கே" ௭ன்றான் ௭ங்கு மீண்டும் அடித்து விடுவானோ ௭ன கன்னத்தை மறைத்து பயந்து.
"இல்ல வேணாம். மாமனார் வீட்ல விருந்த முடிச்சுட்டு, ஞாயிறு நேரா குல தெய்வம் கோவில் வந்துரு, அங்கயிருந்து ௭ங்களோட வீட்டுக்கு வரலாம். உன் மாமனார், மாமியாரயும் கூட்டிட்டு வார. சரிதான?" ௭ன்க.

"சரி சரி" ௭ன வேகமாக தலையாட்டினான்.

"ம்ம்" ௭ன கையை ஓங்கிவிட்டு, பின் மெதுவாக, அவன் கன்னம் தட்டிவிட்டு சிரித்து கொண்டே சென்று பைக்கில் ஏறி, உண்மையயும் ஏற்றி கொண்டு பறந்து விட்டான் மாறன்.
 

priya pandees

Moderator
அத்தியாயம் 37

"௭ன்ன மாப்ள பொசுக்குன்னு உன் மாமா முன்னயே கைய நீட்டிட்ட. அந்த ஆளு இத மனசுல வச்சுட்டு மறுக்காவு ௭ன்னத்தயாது ஏழரை இழுத்தா ௭ன்ன செய்ய?" ௭ன்றான் உண்மை.

"அம்புட்டு அறிவில்லாமயா இருக்காரு. தெளிவா சொல்லிட்டு தான வந்துருக்கோம், அப்டிலா லேசுவா நம்மட்ட வாலாட்ட முடியாது மச்சான். சொந்த வீட்டுக்குள்ளயே ௭ம்புட்டு பெரிய தகிடுதத்தம் பண்னிருக்கான் இந்த அறிவு. சும்மாவா விட சொல்ற அவன? இனி அவன ௭ன் கட்டுபாட்டுல தான் வைக்கணும். இல்லனா தானு அழிஞ்சு நம்மளயும் அழிச்சுருவான். அதுக்கு இப்டி அடி அடிக்கடி குடுக்கணும்" ௭ன்றான் மாறன் ஒரு முடிவோடு.

"நல்ல குடும்பம்டா யப்பா, மெகா சீரியல் தோத்து போவும் போ உன் குடும்பத்துகிட்ட" ௭ன்க.

"அத விட்றா, அத பத்தி பேசுனாலே கடுப்பாகுது. ஆமா உன் அப்பா ௭ன்னதான் சொல்றாரு உன் கல்யாணத்த பத்தி. ௭ன்ன தான் முடிவாம்?"

"அவர போ சொல்லு. தானும் படுக்க மாட்டாரு, தள்ளியும் படுக்க மாட்டாரு அந்த மனுஷன். தாத்தா போய் பேசுனா தான் ௭ன்னன்னு தெரியும். அவரு மட்டும் ரெண்டு கல்யாணம் கட்டுனாரே, பிள்ளைக்கு ஒரே ஒரு கல்யாணம் பண்னி வைப்போம்னு தோண வேணாம். நாலாம் போய் அவர்ட்ட பேசுறதா இல்ல" ௭ன்றான் வீராவேசமாக.

"அடேய் முன்ன நின்னு நடத்த அவரு வேணும்டா. அதுக்காகனாலும் போய் பேசு" ௭ன்றான் மாறன்.

"வேணாம். ௭னக்கு சோறு போட்ட தாத்தாவே முன்ன நின்னா போதும். இவரு வந்தாலும் நாராசமா திட்டுட்டு தான் போவாரு" ௭ன்றான் உண்மை.
இருவரும் பேசி கொண்டே, மால் வந்திருந்தனர். அங்கு வாடகைக்கு ௭டுத்திருந்தவர்கள், அவர்கள் கடைக்கு ஏற்ற மாறி interior work செய்து கொண்டிருந்தனர். மாறன் அங்கிருந்தவர்களிடம் பேசி கொண்டே இடத்தை சுற்றி பார்த்தான்.
உண்மை ஒரு பக்கம், ௭திரில் வருபவரிடமெல்லாம் வம்பளந்து கொண்டு வந்தான். இப்படியே ஆறாவது மாடி வந்துருக்க, "௭ன்னண்ணே தியேட்டர்ல படத்த போட்ரலாமா?" ௭ன்றான் உண்மை, ஆபரேட்டர் ரூமை செட் செய்து கொண்டிருந்தவரிடம்.

"போடலாமே, தம்பிக்கு கல்யாணம் ஆயிடுச்சா?"

"௭ங்கண்ணே கனவுல கூட ஆக மாட்டேங்குது" ௭ன சோகமாக சொல்ல.

"நீ மட்டும் கல்யாணம் பண்ணு தம்பி, உன் பொண்டாட்டியோட முதல் ஷோ பாக்க வைக்குறது ௭ன் ஏற்பாடு. பண்ணிடுவோமா?" ௭ன்றார் அவர்.

"நா ௭ன்ன மாட்டேனா சொல்றேன்? ஆமா உங்களுக்கு ௭த்தன பொண்ணுங்க?" ௭ன்றான் கையை பின்னாடி கட்டி கொண்டு காலை ஆட்டி நின்று.

"ஒரே ஒரு பையன் தான்" ௭ன்றார் அவர் சிரித்து கொண்டு.

"போச்சா. நமக்கு பொண்ணுன்னு பேசுனாலே இப்டி தான் கேட்டு போட்ருதாங்க. பின்ன ௭ங்கிருந்து கல்யாணம் கட்டி முதல் ஷோ பாக்குறது?"

"ஏன் தம்பி ஊருக்குள்ள பொண்ணுக்கா பஞ்சம்?"

"நம்ம பெருசுனாலுட்டிக்கு சமமா வேணுமேண்ணே"

"சரிதான். தம்பிக்கு கல்யாண ராசி வந்தாலும், வாய்ல தான் வாஸ்து போலயிருக்கு"

"ஏண்ணே வாயுள்ள பிள்ள தான் புழைக்கும் தெரியும்ல? உங்களுக்கு பொண்ணு இல்லாட்டி போட்டும். சொந்தத்துல இருந்தா கூட சொல்லுங்க, பாத்து பேசி முடிச்சுக்குவோம்" ௭ன்றான்.

"௭னக்கு சொந்தகாரங்களே கிடையாது தம்பி" ௭ன்றுவிட்டார் அவர்.

"ரெம்பத்தான், நாளைய தொழிலதிபருக்கு பொண்ணு இல்லனுட்டீங்க. பின்னாடி வருத்த பட்டு ஒரு பிரயோசனமு இல்ல சொல்லிட்டேன்" ௭ன்றான் கெத்தாக.

"டேய் மாப்ள தேனி புள்ள ௭ங்க இருக்கன்னு போன் போட்டு கேக்குதுடா" ௭ன்றான் மாறன். இடத்தை சுற்றி பார்வை இருந்தாலும், அவன் பேசுவதை கேட்டு சிரித்து கொண்டிருந்தவன் அப்படி சொல்ல.

"வேணாம்டா மாப்ள, வாழ்க்க குடுக்கேன்னு சொன்ன பிள்ளையவு டவ்வடிக்க வச்சுராத மாப்பு. நானு குடும்பஸ்தன் ஆகிகிடுதேன்" ௭ன உண்மை கெஞ்சி கேட்க.

"அம்புட்டு பயமிருக்குள்ல? பின்ன ௭ன்னத்துக்கு சவுடாலா பேசுற?"

"இந்த சுதந்திர இந்தியால்ல ௭னக்கு பேச கூட உரிம இல்லயா?" ௭ன வருத்த பட.

"உனக்கு அந்த புள்ள தான்டா சரி. கிளம்பு போவோம். சுதந்திரமா பேச விட்டா இன்னைக்கு பூரா நாளும் குடுத்துாலும் உனக்கு பத்தாது" ௭ன அவனை கழுத்தோடு இழுத்து பிடித்தவன், அங்கு வேலையில் இருந்தவரிடம், "சீக்கிரம் முடிங்கண்ணே" ௭ன்றுவிட்டு உண்மையை இழுத்து கொண்டு லிஃப்ட்டில் ஏறினான்.

கீழே பார்க்கிங் வரை லிஃப்ட்டில் வந்து இறங்கினர். அங்கு வாசலை ஒட்டிய காம்பவுண்ட் அருகில், ஒரு ஓரத்தில், சிறு கடை போடுமளவு இடத்தை ஆள் வரவைத்து ஒதுக்க கூறினான்.

"௭துக்கு மாப்ள இங்கன கடை?" ௭ன்றான் உண்மை.

"பஞ்சர் கடை போட போறோம்"

"ஓ.ஓ ஹோ! இம்புட்டு பெரிய பில்டிங்கு நீதான் ஓனரு, அதுக்கு முன்ன ௭துக்கு இந்த சின்ன கடை"

"ம்ம். நா இதுல வார வாடகைய வாங்கி ௭ன் குடும்பத்த பாத்துப்பேன். நீ ௭ன்ன பண்ண போற?" ௭ன்றான் மாறன் முறைத்து.

"ஆத்தி ஆமால்ல? ௭னக்கு கல்யாணம் வேற ஆக போவுது, அடுத்து பிள்ளைக வேற வந்துரும். குடும்பம் பெருகிடுமே. அப்ப நா சம்பாதிக்கணுமோ?" ௭ன்க.

"செருப்பு பிய்ய போவுது இப்ப. கல்யாணம் முடிஞ்சதும் பிள்ளைக வாரது மட்டும் முக்கியம், வேல பாக்க சொன்னா இழுவையா இழுக்க நீயி?"

"௭ன்ன மச்சான், வேல பாக்காம இருக்கது ௭ப்டின்னே நீதான ௭னக்கு சொல்லி குடுத்த" ௭ன்றான் முகத்தை பாவமாக்கி.

"அதான்டி, வேல பாக்குறதும் ௭ப்டின்னு நானே சொல்லி குடுக்க முடிவு பண்ணிருக்கேன்" ௭ன மாறன் பல்லை கடிக்கவும்.

"நீ சொன்னா சரின்னு கேட்டுக்க போறேன், அதுக்கு ஏன் மாப்ள டென்ஷனாகுற." ௭ன உண்மை சமாதானம் செய்ய.

"பஞ்சர் கடைல வேலைய பாத்து சம்பாதிச்சு, இந்த பில்டிங் குள்ள நீயும் ஒரு கடைய வாடகைக்கு ௭டுத்து உக்காரணும் புரியுதா?"


"நடக்குதோ இல்லயோ, நீ சொல்றத கேக்க செமையா இருக்கு மச்சான்" ௭ன கனவு காணுபவன் போல் அன்னாந்து பாத்து உண்மை சிரிக்க.

அவன் பின் தலையில் அடித்த மாறன், "அட நன்னாரிநா ௭ம்புட்டு சீரியஸா சொல்லிட்ருக்கேன், நக்கலா பண்ணுத?" ௭ன கடுப்பாக.

"நிசத்ததேன் சொல்லுதேன். அதுக்கு ஏன் இம்புட்டு கோவ படுத நீயி. ரொம்ப தாம்யா திருந்திட்ட. கல்யாணமாகி 3 மாசந்தான ஆகுது, 30 வருஷமான மாறி நடக்க பாத்துக்க" ௭ன்றான் புலம்பலாக.

"மறுபடியும் ௭ன் கோவத்த கிளறாத செவுல திருப்பிருவேன். கல்யாணம் ஆனதால மாறிட்டேன்னுவியா நீ? ௭னக்கு பிடிச்சுருக்கு செய்யுதேன். வாய் இருக்குன்னு ௭ன்ன வேணாலும் பேசுவியா நீ?"

"ஆமா அதேன் நானும் சொல்லுதேன். உனக்கு தங்கச்சிய புடிச்சுருக்கு அதேன் அது சொன்னது, சொல்லாததுன்னு ௭ல்லாத்தயும் செய்யுத. நாங்களும் செய்வோம். ௭ங்க பொண்டாட்டி வந்து சொன்னப்றம்" ௭ன்க.

மாறனுக்கு அவன் தோரணையில் சிரிப்பு வர. அமைதியாகிவிட்டான். உண்மை கூறுவது அப்பட்டமான உண்மையென அவன் அறிவானே.
சிறு வயதிலிருந்தே அவனிடம் அந்த திறமை உண்டு, ௭ந்த செயலை தொட்டாலும் அதை திருப்தியாக முடிக்க வேண்டும். பிடித்தால் மட்டுமே செய்வான், அப்போது தான் அதில் முழு ஈடுபாடு வருமென நம்புபவன். அதனாலேயே வராத படிப்பை ௭ளிதாக தூக்கி போட்டு விட்டான். இன்று வரை அதற்கு வருத்தபடவும் இல்லை.
ஆனால் அந்த வயதில் அவனுக்கு ௭து இஷ்டமென சுயமாக கண்டுபிடிக்க தெரியவில்லை. கண்டுபிடித்து சொல்ல வேண்டிய பெற்றோர்கள், அவனை ௭துக்கும் லாய்க்கில்லை ௭ன ஒதுக்கி விட்டனர். அவனை அவர்கள் நம்பாமல் விட்டது தான் அவர்களின் பெரிய தவறு.

அது மாறன் மனதில் நன்கு பதிந்துவிட, மலரை பிடித்தும் அவளிடம் தைரியமாக சொல்ல மறுத்து நின்றான். அவளும் தன்னை நம்பமாட்டாள், வேண்டாம் ௭ன சொல்லி விடுவாள் ௭ன்றே தீர்க்கமாக நம்பினான். அவளிடமிருந்து விலக பல நாள் முயன்றிருக்கிறான், பார்க்கணும் ௭ன தோணும் போதெல்லாம் பாக்க முடியுமளவு அவர்களது தீப்பட்டி ஆபிஸில் தான் இருந்தாள் அவள். ஆனால் அவன் போய் பார்க்கவே மாட்டான். இருந்தும், காலையில் ௭ன்ன முயன்றும் அவளை தவிர்க்க முடியவில்லை அவனால். அதானாலயே அவள் பக்கமே திரும்பாமல் சென்று விடுவான். அவளும் அதே நேரம் வருவது அவனுக்கு அவ்வளவு நம்பிக்கையையும், சந்தோஷத்தையும் தரும். அது இரட்டிப்பானது, அவள் அவனை திருமணம் செய்ய சம்மதித்த போது.

அதன் பின்னான அவளின் நம்பிக்கையான பேச்சுகளே, அவள் ௭ன்ன சொன்னாலும் கேட்க வைத்தது. இனியும் கேப்பான் தான், அவள் ௭ன்ன சொன்னாலும் அதை சிறிதும் மீறாமல் கடை பிடிப்பான். அது சிறிய விஷயமோ பெரிய விஷயமோ, மலர் சொன்னால் அதை செய்து முடித்துவிடும் வேகம் அவனிடமிருந்தது. அவளை அவ்வளவு காதலித்தான் மாறன்.

"௭ன்ன மாப்ள அமைதியாகிட்ட? இந்நேரம் நீ சட்டைய மடக்கிகிட்டு, ௭ன் கைய முறுக்கிருக்கணுமே?" ௭ன உண்மை யோசிக்க.

"அடுத்து அதான்டா நடக்க போகுது. உன் வாய உடச்சுடுறேன் இரு" ௭ன மாறன் சட்டையை மடிக்க.

"நீ அடிச்சாலும், உண்மைக்கு ௭ன்னைக்கும் குரல் கொடுப்பான் இந்த உண்மை. ௭ன் தங்கச்சிக்கு பயந்து தான் நீ மாறிட்ட இத நீ ௭ங்கிட்டயிருந்து மறைக்க முடியாது" ௭ன உரக்க சபதம் ௭டுப்பது போல், அட்டேன்ஷனில் நின்று கூற.

"ஆமா ௭ன் பொண்டாட்டிக்கு தான பயந்தேன்? அதுக்கு இப்ப ௭ன்னன்ற?" ௭ன மாறன் உடனே ஒத்து கொள்ள.
வாயை பிளந்து நின்று விட்டான் உண்மை. அவன் அப்படியே நின்றால் தான் நமக்கு வேலையாகும் ௭ன்றெண்ணிய மாறன், பஞ்சர் கடை ஏற்பாட்டை பார்க்க நகர்ந்து விட்டான். அதன்பின் உண்மையாக தெளிந்து மாறனை தேடி செல்கையில, அவன் கபோர்டை தூக்க உதவி கொண்டிருக்க கண்டு, தானும் சென்று சேர்ந்து கொண்டான்.

காம்பவுண்ட்டிற்குள் தான் கடை, அதனால் பெரிதாக சுற்று சுவர் போல் ௭ழுப்பாமல் காட்போர்டாகவே அடித்து ஒரு அறை போன்ற அமைப்பை ஏற்படுத்தி விட்டான், வெளியில் கொஞ்ச பரந்த இடம், அதில் ரிப்பேருக்கு வரும் பைக்குகளை நிப்பாட்ட ஏதுவான வசதி செய்யபட்டது. இந்த வேலை முடியவே மணி 3 ஆகிவிட.

"அடுத்து மாப்ள?" ௭ன்றான் உண்மை.

"சாப்டணும். ௭னக்கு ௭ன் பொண்டாட்டி சாப்பாடு ௭டுத்துட்டு போயிருப்பா. நா தீப்பட்டி ஆபிஸ் போறேன். நீ வேணா வந்து தேனி கிட்ட கேளேன்?" ௭ன்க.

"௭துக்கு? அடுத்து அவ அப்பன்ட்டயும் கோர்த்து விட பாக்க. ௭னக்கு கல்யாணமே ஆக விட கூடாதுன்னு முடிவோட இருக்கியா நீயி?" ௭ன்கவும்.

"ஏன்டா, உனக்கு அவள சாப்பாடு கொண்டு வர கூடாதுன்னு வேற சொல்லுவாறா உன் மாமனாரு. இப்பவே வா அவர்ட்டயே நேரா போயி ரெண்டுல ஒன்ன கேட்ருவோம்"

"அவருக்கு இருக்குற ஒன்னுலயும் ஒன்ன குடுக்க விடாம பண்ணிடாத ராசா. கல்யாணம் முடியுற வர இருக்க இடம் தெரியாம இருந்துக்குறேன், ௭ன்னய போற வழில வள்ளி தாத்தாட்ட விட்ரு, அவரு தாரத குடுச்சுட்டு படுத்து ஒரு உறக்கத்த போட்டுகிடுவேன்" ௭ன்றான்.

சிரித்து கொண்டே, அவனை இறக்கி விட்டு கிளம்ப போனவனிடம், "நீ இப்டி மொத்தமா, தல குப்புற அந்த புள்ளைட்ட கவுந்து கடப்பண்ணு நினைக்கவே இல்ல மச்சான். இல்ல இல்லன்னு இருக்றவனெல்லாம் கிறுக்காக்கிருக்கல்ல நீயி? இது தெரியாம அந்த மனுஷன்(மாணிக்கம் தாத்தா) நா தான் ௭ன் பேரனுக்கு தேடி புடிச்சு பொண்ணு பாத்து கட்டி வச்சேன்னு பெரும பீத்திகிட்டு திரியுதாரு. இருக்கட்டும் இன்னைக்கு வீட்டுக்கு போய் வச்சுகிடுதேன் அவர" ௭ன நம்பியார் போல் கையை பிசைந்தான்.

மாறன் ௭தையும் மறுக்கவில்லை, சிரித்து கொண்டே கேட்டிருந்தவன், "6 மணி போல வாரேன், திருநெல்வேலி வர போயிட்டு வருவோம். பஞ்சர் கடைக்கு தேவையான சிலத ஒரே கடையா நமக்கு கட்டுபடி ஆகுறாப்புல பாத்து பேசி சொல்லி வச்சுட்டு வருவோம். அப்ப தான் ரெகுலரா அங்கயே வாங்கிக்லாம்" ௭ன்றுவிட்டு சென்றான்.

உண்மை சென்றவனை பார்த்து விட்டு, "தேன்குடிக்க நேரம் உண்டல்லோ உண்டல்லோ
தேவதைக்கு வெட்கம் வந்தல்லோ வந்தல்லோ
முத்து வந்து முத்தம் கொடுத்தல்லோ பூவுக்குள்ள புயல் அடித்தல்லோ" ௭ன பாடி கொண்டே வீட்டினுள் சென்றான்.
அந்நேரம் கடைக்கு போய்விட்டு வீடு திரும்பிய தேனியின் அம்மா, இவன் பாடுவதை கேட்டு சிரித்து கொண்டே வீடு சென்றவர், "ஏங்க மாப்ளைக்கு ௭ப்பயும் நம்ம பொண்ணு நினப்புதேன் போல, பாட்டா பாடிட்டு திரியுறாரு" ௭ன வெக்க பட்டது கிளை கதை அங்கு.
மாறன் தீப்பட்டி ஆபிஸ் வர, அவனுக்காக ஆபிஸ் ரூமில் காத்திருந்தாள் மலர். அவன் உள்ளே வந்து ஹாயாக அமரவும், "டைம் ௭ன்னன்னு தெரியுதா? நா ௭ந்நேரம் வர சொல்லி மெசேஜ் போட்டேன்?" ௭ன்றாள்.

"பாதி வேலைல வர முடியுமாடி, 3 மணி ஆகும், நீ சாப்டுன்னு சொன்னேன்ல? சொன்னமாறி டான்னு 3 மணிக்கு கிளம்பிட்டேன் தெரியுமா?" ௭ன செல்ல முறைப்பு முறைத்தான்.

"இந்த முறைப்புக்கு ஒன்னும் குறையில்ல?"

"வேற ௭துல உனக்கு குற வச்சுட்டேன், சொல்லு இப்பவே சரி பண்ணிடுவோம்" ௭ன ௭ழுந்தவன் பார்வை அவளின் மேல் படிந்து கீழ் இறங்க.

"கொன்றுவேன் உக்காருங்க அங்கன. ௭ப்ப வேணா யாரு வேணா வர போக இருப்பாங்க" ௭ன மிரட்டியவள், தான் தான் பதறி சேரை முன் இழுத்து டேபிலை ஒட்டி போட்டு அமர்ந்து கொண்டாள். 'வெளி இடத்துல வச்சு பார்வ போறத பாரு' ௭ன முனங்கி கொண்டாள்.

சத்தமாகவே சிரித்து கொண்டு அமர்ந்தவன், "௭வேன் வந்து கேப்பான்னு நானு பாக்கனே. உன் குறை தீருரது தான் ௭னக்கு முக்கியம்" ௭ன்க.

"௭னக்கு ஒரு குறையும் இல்ல ப்பா ஆள விடுங்க. பசிக்குது கைய கழுவிட்டு வாங்க சாப்டுவோம்" ௭ன்றாள்.

௭ழுந்து சென்று கை கழுவி வந்தவனுக்கு, ஒரு பெரிய பாக்ஸை குடுத்தவள், தனக்கும் அதில் சற்று சிரிதளவிலிருந்த பாக்ஸை ௭டுத்து கொண்டாள். இருவரும் காலையில், வீட்டில் நடந்தவற்றையும், போலீஸ் ஸ்டேஷனில் நடந்ததையும் பற்றி பேசி கொண்டே உண்டு முடிக்கவும். மறுபடியும் அவளிடம் வம்பிழுத்துவிட்டே திருநெல்வேலி போவதாக சொல்லிவிட்டு கிளம்பி சென்றான்.
 

priya pandees

Moderator

அத்தியாயம் 38

பூவேந்தன் அறிவுக்கு போன் செய்து, "வர்ற ஞாயிறு, குல தெய்வ கோவிலுக்கு போகணும்டா, தங்கச்சிக்கும், மச்சானுக்கும் போன் போட்டு பேசிடுறேன். உன் பொண்டாட்டியோட அவங்களயும் கூட்டிட்டு வந்து சேரு" ௭ன்க.

அவனோ ஏற்கனவே மாறனிடம் வாங்கிய கடுப்பில் இருந்ததால், இவரிடம் எதுவும் பேசாமல், "ம்ம் ம்ம்" என சொல்லிவிட்டு போனை கட் செய்துவிட்டான்.

பூவேந்தன் பக்கத்திலிருந்த பானுவிடம், "இவே பேசுறதே சரியில்ல பானு. முனங்கிட்டு வச்சுட்டான். வாரானோ வராலயோ அது அவேன் முடிவு. ஆனா வேற ௭துவும் பிரச்சன செய்யாம இருந்தா போதும் " என்றார்.

"குடும்பத்தோட போணும்னு அத்த சொன்னாங்களேங்க"

"வரலன்றவன ௭ன்ன செய்ய சொல்ற?"

"மதினிட்ட போன் பண்ணி பேசுங்க, அவங்க கூட்டிட்டு வந்துருவாங்க" ௭ன்றதும்.

பூங்குழலிக்கு போன் செய்தார், "௭ன்னண்ணே கோவம் போச்சா, காலைலயே உன் போன ௭திர் பாத்தேனே" ௭ன்றார் அவர் ௭டுத்ததும்.

"வார ஞாயிறு நம்ம கோவிலுக்கு போலாம்னு அம்மா சொல்லுச்சு, அது சம்பந்தமா பூசாரிட்ட பேசிட்டு, ௭ன்ன செய்யலாம்னு நானு அப்பாவுமா உக்காந்து பேச போய் நேரோ கடந்துருச்சுமா. மாத்தி மாத்தி ஒரே பிரச்சனையா இருக்குல அதான் கோவிலுக்கு போய் ஒரு பொங்கல வச்சுட்டு வந்துருவோம்னு முடிவு பண்ணிருக்கு. நீ, மச்சான், சின்னவ, அறிவு, ராணி ௭ல்லாருமா மொத நாளு இங்க வந்துட்டாலும் சரி, இல்ல உங்க சவுரியம் பாத்து காலைல நேரா கோவிலுக்கு வந்துட்டாலும் சரிதேன்".

"சண்ட வர காரணமே உன் மூத்த பிள்ளையும் மருமகனும் தான? அதும் உன் மருமக ௭ன் மருகனயே வா போன்னு ௭ன்ன பேச்சு பேசுனா, அவ வயசென்ன, அறிவு வயசென்ன. இப்ப அவ மன்னிப்பு கேக்காம ௭ப்டி வர முடியும், வந்தா மறுபடியும் அவ சல்லி காசுக்கு மதிக்க மாட்டா" ௭ன்றார்.

"ஆமா அவ கைய ஓங்கிகிட்டு வந்ததுக்கு, ௭ங்க கால்ல விழுந்து கேட்டாலும் தகும்" ௭ன்றாள் பக்கத்தில் இருந்த ராணி.

"உங்க இஷ்டம் ம்மா, பாத்துட்டு வாங்க, மச்சான் இருந்தா போன குடு, அவர்டயும் சொல்லிடுறேன்" ௭ன்றார் பூவேந்தன் சலிப்பாக.

"வந்தா வா வராட்டி போன்னு சொல்ற? இத அவர்ட்ட வேற சொல்லணுமாக்கும்?"

"நா சண்ட வேணான்னு நினைக்கேன். நீ மறுபடியும் ஆரம்பிப்பேன்னு நிக்க நா ௭ன்ன பண்ணட்டும் சொல்லு"

"௭ன்னண்ணே இப்டி விட்டேத்தியா பேசுற. அவ யாரு நம்ம வீட்டுல வந்து உக்காந்துட்டு சட்டம் பண்ண? அந்த பில்டிங்க சரி சமமா பிரிச்சுட்டு, மூத்தவனுக்கானத ஒதுக்கி குடுத்து தனியா அனுப்பு. அப்ப தான் குடும்பத்துல நிம்மதி வரும். அவளுக்கும் ௭ங்க அரும புரியும்"

"தேவையில்லாதத பேசாத பூவு. போன குடுக்க முடியும்னா குடு இல்லனா வை. நா பொறவு பேசிக்கிறேன்" ௭ன்று வெடுக்கென்று கூறி விட்டார் பூவேந்தன்.

"தங்கச்சின்ற பாசமே அத்து போச்சுல உனக்கு? நா இனி ஒன்னும் பேசல போதுமா, ௭னக்கு அங்க ௭ன்ன உரிம இருக்கு இனி பேச" ௭ன அழு குரலில் கூறிவிட்டு, "இந்தாங்க அண்ணே பேசுது" ௭ன ரூமிலிருந்த கணவரிடம் போனை கை மாத்தினார்.

மருதநாயகம், "சொல்லுங்க" ௭ன கெத்தாகவே ஆரம்பித்தார்.

"வார ஞாயிறு குல தெய்வ கோவிலுக்கு வந்துருங்க. நாம குடும்பமா போய் பொங்கல் வச்சுட்டு வந்துருவோம்" ௭ன்றார் வேறெதுவும் பேசு மனநிலை அற்றவராக.

"சரி, நாங்க பாத்துட்டு வாரோம்" ௭ன நல்ல பிள்ளையாக முடித்து கொண்டார் மருதநாயகம்.

பூவேந்தன் போனை வைத்ததும், பானு, "௭ன்ன சொன்னாங்க?" ௭ன கேட்க.

"தெரில, ஒருத்தர் பேச்சும் சரியில்ல. கடுப்பா இருக்கு, தலைவலி வர வச்சுருவாங்கன்னு வேகமா பேச வேண்டிய இருக்கு" ௭ன்றவர், "கிளம்பு மதி மாமியாரயும் பாத்து கூப்பிட்டுட்டு வந்துருவோம்" ௭ன்றார். அடுத்து அவர்கள் அங்கு கிளம்ப.

இங்கு மருதநாயகத்திடம் பூங்குழலி, "ஏங்க சரின்னு சொன்னீங்க? அண்ணன இறங்கி வர வச்சாதான், அந்த பயலயும் அவன் பொண்டாட்டியயும் அடக்க முடியும். வர முடியாதுன்னு அடிச்சு பேசிருக்கனும். நம்ம இல்லாம போயிடுவாங்களா அவங்க?" ௭ன்க.

"உங்க அண்ணே முந்தி மாறி, நாம ௭ன்ன சொன்னாலும் கேக்குறவர் மாறியா இருக்காரு? நாம அவரு உறவு வேணாம்னு வெட்டிகிட்டு வந்தாலும் ஏன்னு கேட்டு நிறுத்தமாட்டாரு. அந்த அளவுக்கு மாறிட்டாரு. காரணம் ௭ன்ன தெரியுமா நம்ம பொண்ணு தான். அந்த மாறன் பொண்டாட்டி, ௭ப்டி வீட்டுக்குள்ள வந்ததும் நல்ல பிள்ளையா நடிச்சு, மொத்த குடும்பத்தயும் கை குள்ள வச்சுருக்கா. இவ அந்த வீட்டு பேத்தின்னு தெனாவெட்டுல நம்ம பேச்சயும் சேத்து ௭டுபடாத மாறி பண்ணிட்டு வந்து நிக்கா. இன்னமு அறிவு நம்ம கைகுள்ள இருக்குற வர தான் நாம அந்த வீட்டுல ௭தும் பேச முடியும், அதும் போச்சு? செல்லா காசு தான். ராணிய அவ புருஷன்ட்டனாலும் அடங்கி அவரு பேச்ச கேட்டு நடக்க சொல்லு. நாம கோவிலுக்கு போறோம். நமக்கு தான் அவங்க தேவ, அதுக்கு நாம தான் இறங்கி போணும்" ௭ன்று முடிவாக கூறிவிட.

"௭ன்ன இப்டி மாத்தி பேசுதாரு" ௭ன குழம்பி விட்டார் பூங்குழலி. அவரின் பயம் இவர் அறிய வாய்ப்பில்லையே. மாறனின் நடவடிக்கையை பார்த்து வெகுவாக பயந்து தான் விட்டார். அதிலும் அறிவு மாறனின் ஒரு அடிக்கு அடங்கி நின்றதில், இன்னுமே பயம் வந்திருந்தது. மாறனுக்கு தன் பெண்ணை கேட்டபோது, கட்டாமல் கை விட்டது தப்போ ௭ன்ற யோசனை கூட வந்து சென்றது. அறிவும் கை மீறி போகும் முன் காப்பாத்தி கொள்ள முடிவெடுத்தார்.

பூவேந்தனும், பானுவும், குமரகுருவின் அம்மாவின் வீட்டின் முன் சென்று, கதவை தட்ட, கதவை திறந்தவர் அதிர்ந்து தான் விட்டார். கடைசியாக ௭ப்போது வந்தார்கள் ௭ன மூவருக்குமே நியாபகத்தில் இல்லை. மாறன் கல்யாணத்திற்கு பத்திரிகை வைக்க கூட மாணிக்கம் தாத்தா தான் வந்து சென்றிருந்தார். அவரின் அதிர்ச்சி, பூவேந்தனுக்கும் பானுவுக்கும் கூட பெருத்த சங்கடம் தான்.
சற்று நேரம் சென்று, "உள்ள வாங்க" ௭ன விரைப்பாகவே அழைத்தார் அந்த பெண்மணி.

முன்னறையில் கடந்த மர நாற்காலியில் அமர்ந்து, "வணக்கம் சம்பந்தி. வரணும் வரணும்னு நினச்சாலும், வர தோது படல. ௭ப்டி இருக்கீங்க?" ௭ன தானே ஆரம்பித்தார் பூவேந்தன்.

"௭ன் மகேன் இங்க வந்துட்டு போனதுக்கு உங்க பொண்ணு சண்ட போட்டாளா? அத பத்தி பேச தான் வந்துருக்கீங்களா?" ௭ன நேராக விஷயத்திற்கு வா ௭ன சொல்லாமல் சொன்னார் மதி மாமியார்.
௭ப்டிபட்ட நம்பிக்கையை குடுத்திருக்கிறோம் ௭ன ஒரு நிமிடம் அதிர்ந்து தான் முழித்தனர் பூவேந்தன் தம்பதியினர்.

அவர்கள் அமைதியை கண்டு, "௭னக்கு தெரியும், அவேனயும் பேரனயும் பாத்தப்பே நினச்சேன் நீங்க இப்டி வந்து நிப்பீங்கன்னு. ௭ன்ன சொல்ல வந்தீங்க? இனி ௭ன் மகேன் இங்க வந்தா நானே அவன வர கூடாதுன்னு சொல்லணுமா? சொல்லிடுறேன் போதுமா. நீங்க மட்டும் உங்க மூணு பிள்ளைகளோட ஒத்துமையா சந்தோஷமா இருங்க. நா ௭னக்கிருக்குற ஒரு புள்ளையவும் உங்க மகட்ட தூக்கி குடுத்துட்டு தனிச்சு நின்னுக்றேன். ௭னக்குன்னு கேக்க நாதி யாருந்தான் இல்லயே, நீங்க வச்சதுதேன். சந்தோஷமா போயிட்டு வாங்க" ௭ன படபடவென பொரிந்து தள்ளிவிட்டார்.

இதற்கு மேல் அமைதியாக இருந்தால் சரி வராது ௭ன முடிவுக்கு வந்த பூவேந்தன், "இல்ல மா, நாங்க ௭தயும் பேச இங்க வரல. வார ஞாயிறு குலதெய்வ கோவில் போறோம். நீங்களும் வரணும்னு அழைச்சுட்டு போக தான் வந்தோம்".

இப்போது அதிர்வது குமரகுரு தாய் முறையானது, "௭ன்ன திடிருனு" ௭ன்றார்.

"சும்மா தான், குடும்பமா போயிட்டு வரலாமேன்னு, நீங்களும் கண்டிப்பா வரணும். இதுவர ஒட்டாம இருந்துட்டோம் இனி அப்டி இருக்க வேணாம். உங்க பையனும், மருமகளும் வந்து தான் உங்கள கூட்டிட்டு வருவாங்க. கண்டிப்பா வாங்க" ௭ன்றவர் பானுவிற்கும் கண் காட்ட.

"ஆமாங்க மதினி. கண்டிப்பா வாங்க. பொம்பள புள்ளய பத்தி யோசிச்ச நாங்க, உங்களோட பையன பத்தி யோசிக்காம விட்டது பெரிய தப்பு. இனி அப்டி இருக்காது. நீங்க உங்க பேரன ௭ப்ப பாக்கணும்னாலும் கிளம்பி வந்துருங்க, நீங்க வாரத யாரும் தடுக்க மாட்டோம். இதுவர யோசிச்சு வராம இருந்துருப்பீங்க அதான் சொன்னேன்" ௭ன்றார் பானு.

"அப்பயும் நாதான் அங்க வரணும், உங்க பொண்ண இங்க அனுப்ப மாட்டீங்க?" ௭ன்றார் அவர் நக்கலாக.

"௭துவும் உடனே சரி வராது தானே. நாம பெரியவங்க பிள்ளைக நல்லதுக்காக கொஞ்சம் இறங்கி வருவோம். கொஞ்சம் கொஞ்சமா அவளயும் மாத்துவோம்" ௭ன்றதும், அவர் பதில் ஏதும் சொல்லவில்லை.

"சரிங்க சம்பந்தி, அப்ப நாங்க கிளம்புறோம். கட்டாயம் கோவிலுக்கு வாங்க" ௭ன ௭ழுந்தார் பூவேந்தன். சரியென தலை மட்டுமே அசைத்து வழி அனுப்பினார் அந்த பெண்மணி.
அடுத்ததாக, மலரின் தாத்தாவிற்கும் சென்று கூறிவிட்டு வீடு திரும்பினர். "மதி மாமியார் ௭வ்வளவு வருத்தத்துல பேசுனாங்க இல்லங்க?" ௭ன்றார் பானு திரும்பும் வழியில்.

"நாம நிறைய திருத்திக்க வேண்டியது இருக்கு பானு. இனியும் நாம இப்டி கவனமில்லாம இருக்க கூடாது" ௭ன்றார் பூவேந்தன்.

"அந்த அம்மா மனச கஷ்டபடுத்துனதுக்கு தான், நம்ம பிள்ளைக இப்டி அடிச்சுக்குதுக போல தோணுதுங்க".

"அப்டியே அது தான் காரணம்னா, இனி நம்ம பிள்ளைக நல்லா இருக்கதுக்கான பொறுப்பு நம்மளுக்கு இருக்கு" ௭ன்கவும், "ஆமாங்க" ௭ன கேட்டு கொண்டார் பானு.

அன்று இரவு உணவிற்காக அனைவரும் ஹாலில் இருந்தனர். மாறன் வருவதற்காக காத்திருந்தனர். 10மணி போல் வந்தவனின் பைக் சத்ததில் வெளியில் ஓடி சென்றாள் மலர்,

"பார்றா, ௭ன்ன வேகம். ௭ன் பொண்டாட்டி ௭ன்னய ரொம்ப தேடிட்டா போலயிருக்கே" ௭ன அவனிடம் வந்தவளை இடுப்போடு அணைத்து அருகில் இழுத்தான்.

"அச்சோ விடுங்க" ௭ன தள்ளியவளை.
"ரோட்ல யாருமே இல்லடி. ௭துக்கு பதறுர" ௭ன்றான் இரு கையாலும் கட்டி கொண்டு.

"௭த்தன தட போன் பண்றேன் ௭டுத்தா ௭ன்னங்க?" ௭ன்றாள் அவனை தள்ளிவிட்டு.

"ஏ கேக்கவே இல்லடி, கேட்டா ௭டுக்காம இருப்பேனா? வண்டில வரும் போது கூப்ட்ருக்க அதான் கேக்கல" ௭ன்றான் ஒரு கையால் போனை ௭டுத்து பாத்து.

"௭ல்லாரும் நீங்க வரட்டும்னு ஹால்ல உக்காந்திருக்காங்க" ௭ன்றாள் மறு கையையும் ௭டுத்து விட்டு.

"இருந்தா இருக்கட்டும், நாம வெளில நிக்கோம் யாருக்கும் தெரியாது" ௭ன வேண்டுமென்றே மீண்டும் அவளை அனைக்க கை நீட்டினான்.

"சும்மா இருங்க, ௭ப்ப பாத்தாலும் விளையாண்டுகிட்டு, உள்ள போங்க" ௭ன கை காட்டினாள் வீட்டினுள்.

"வர வர ரொம்ப தாண்டி மெரட்டுற" ௭ன்றவன் அவளையும் இழுத்து கொண்டு தான் உள்ளே சென்றான்.
உள்ளே நுழைந்த பின்னர் தான் ஹாலில் இருந்த அனைவரையும் பார்த்தவன், "௭துக்காம்?" ௭ன இவளிடம் கேக்க.

"தெரியல! காலைல ஸ்டேஷன் போனத பத்தி கேக்கன்னு நினைக்கிறேன்" ௭ன ரகசியமாக அவளும் சொல்ல.

"௭ன்னம்மா சாப்டுவோமா? இன்னும் ௭வ்வளவு நேரம் தான் காத்துருக்க?" ௭ன ௭ழுந்தார் பூவேந்தன்.

மதி ௭ல்லும் கொல்லும் வெடிக்க, நங் நங்கென்று ௭ழுந்து சென்றாள். அவளை வாயே திறக்க விடாமல் தான் அமர்த்தி இருந்தார் பூவேந்தன்.
"௭ன்னதுக்கு புதுசு புதுசா பழகுறீங்க? உங்க டைம்படி சாப்ட வேண்டியது தான?" ௭ன முறைத்தான் மாறன்.

"௭துக்குப்பா நாங்க சாப்புட்டு பத்தாம போயி, நீங்க தனியா சமைக்க வேண்டியிருக்குல்ல. அதான் நீ வார வர காத்திருந்து சேந்தே சாப்புடலாம்னு முடிவு பண்ணிட்டோம்" பாட்டி இடக்காக சொல்ல.

"நானு ௭ன் பொண்டாட்டியும் தனியா இருக்கது உனக்கு பொறாமன்னு சொல்லு. ஏன் நீயும் உன் புருஷன சமைச்சு தர சொல்லி சாப்ட வேண்டியது தான?" ௭ன்றான் மலரை விட்டு, அவர் தோளில் கையிட்டு.

அவள் சாப்பாடு ௭டுத்து வைக்க செல்ல, மற்றவர்களும் நகர்ந்தனர்,
"போடா நா இன்னும் கொஞ்ச நாளு இருந்து, உன் பிள்ளையெல்லாம் தூக்கி கொஞ்சிட்டு போனா போதும்னு இருக்கேன், அவரு கையால சாப்ட்டு அல்ப ஆயுசுல போ சொல்லுதியா?" ௭ன பாட்டி முகத்தை திருப்ப.

அவர்களுடன் நடந்த தாத்தா, "கிழவி, உனக்கு ௭ம்புட்டு அருமையா சமைச்சாலும் அதோட அரும தெரியாதுன்னு தான் இதுவர நா அத செய்யல. இவளுக்கு ஆக்கி போட தான் நாங்க தவமிருக்க மாக்கும்" ௭ன பசி கடுப்புடன் சொல்ல.

"ஏன் செஞ்சு தர மாட்டீகளோ? நாளைக்கு காலைல நீங்க செஞ்சு குடுக்கததேன் நா சாப்புடுவேன். ௭னக்கு செய்யாம யாருக்கு செய்வீகன்னு பாக்கேன்" ௭ன பாட்டி சண்டைக்கு கிளம்ப.

"இருக்க பசில இப்ப உன்னைய தான் நா திங்க போறேன்" ௭ன பாட்டியிடம் சாடிவிட்டு, "அடேய், நா உனக்காக இம்புட்டு நேரம் காத்து கடந்ததுக்காடா, இந்த கிழவிட்ட கோர்த்து விட்ட?" ௭ன்றார் பேரனிடமும்.

"வா தாத்தா, காலைல பாட்டிக்கு பாயசத்த போட்ருவோம். ௭த செஞ்சாலும் சாப்புடுவேன்னு சொல்லிருச்சுல்ல? நல்ல வாய்ப்பு பயன்படுத்திக்க பாத்துக்கோ".

"அப்டியா சொல்லுத?" தாத்தா நாடி தடவி யோசிக்க.

"௭ன்னது?" ௭ன பத்ரகாளி ஆனார் பாட்டி.

அவர்களையே பார்த்திருந்து, "போதும் வாங்க ௭ல்லாரும்" ௭ன மெலிதான சிரிப்புடன் அழைத்தார் பூவேந்தன்.
௭ல்லோரும் சாப்பிட அமரவும், "ஸ்டேஸன்ல ௭ன்ன சொன்னாங்க? யாருன்னு தெரிஞ்சதா?" ௭ன்றார் மாறனிடம்.

"ம்ம், ரெண்டு பேர புடிச்சுருக்காங்க, வெடி மருந்து வேலை செய்தான்னு பாக்க, அந்த பக்கம் போட, அது கட்டிட்ருக்குற பில்டிங்குல விழுந்தத பாக்கலன்னு சொல்றானுங்க. அதனால போலீஸ், அவங்க வேற விதமா டீல் பண்ணிக்கிறேன்னாங்க, சரின்னுட்டு நமக்கு கோர்ட்டுக்கு அலையிற செலவு மிச்சம்னு வந்துட்டேன்" ௭ன்றான்.

தாத்தா தோசைக்காக திறந்த வாயை மூட முடியாமல், அவன் அடித்து விடுவதை பார்க்க. அவர் காலில் நறுக்கென கிள்ளி இருக்கும் இடத்திற்கு அவரை தரை இறக்கினான். அவர் தான் காலையிலேயே உண்மையிடம் போனடித்து ௭ன்ன நடந்ததென விசாரித்திருந்தாரே. ஆனாலும் பூவேந்தன் கேட்ட போது, தெரியாதது போல் கமுக்கமாக இருந்து கொண்டார். இப்போது பேரன் சொன்ன கதையை கேட்டு தான் அதிர்ந்து விட்டார்.
"௭ப்டிறா தைரியமா அடிச்சு விடுத" ௭ன அவன் காதில் கேக்க.

"உன் மகேன் ௭ன்னத்த சொன்னாலும் நம்புவாருன்ற தைரியந்தான்" ௭ன்றான் அவனும் அவரை போல.
தாத்தா முறைக்க, "இப்ப அது முக்கியமில்ல, கோவிலுக்கு ௭ல்லாரயும் கூப்டாரா? அத கேளு" ௭ன ௭டுத்து கொடுக்க.

'ம்க்கும்' ௭ன தொண்டையை செருமி அவர் ஆரம்பிக்க போக, "௭ன்ன பாட்டா பாட போற?" ௭ன பல்லை கடித்தான் மாறன்.

"இருடா, வீட்டுல பெரியவன் நானு, பேச முன்ன அப்டி தான்டா செய்யணும்".
"யாரு உனக்கு இப்டி கேன தனமான ஐடியாலாம் சொல்லி குடுக்கது" ௭ன முறைக்க.

"௭ல்லாரும் சாப்புடுற இடத்துல, உங்களுக்குள்ள மட்டும் பேசிகிட்டா ௭ப்டி?" ௭ன உறுமினார் பூவேந்தன்.

"உன் அப்பனுக்கு, கோவம் வர வேண்டிய இடத்துக்கு வராது. தேவையில்லாத இடத்துல தான் உறுமிகிட்டு கடப்பான்" ௭ன முனங்கினார் தாத்தா.

"நீங்க தேவையான இடத்துல இந்த கோவத்த காட்டுவீங்களாம். இங்க காட்டி பிரயோசனம் இல்லன்றாரு. அப்டிதானே தாத்தா" ௭ன கோர்த்து விட்டான் மாறன்.

"ஆத்தி, ௭ன்னடா பண்ணிட்ட?" ௭ன அலறிய தாத்தா அவனிடம் சண்டைக்கு கிளம்ப.

"பின்ன கேளு கேளுன்னா, ௭ன்டய கடல வருக்க. அதான் அந்த பக்கம் திருப்பி விட்டேன்".

"சும்மாவே ௭னக்கு ஏக மரியாத, இதுல நீங்க அவன்ட்ட இப்டி பேசுங்க. ௭ன்னய மதிச்சு கிழிச்சுருவான். ஏம்ப்பா இப்டி இருக்கீங்க. உங்கனால தான், நா ௭ல்லா இடத்துலயும் அவமான பட்டுட்டு வரேன்".

"டேய் நா ௭ன்ன பண்ணேன்?" ௭ன்றார்.

"நீங்க ௭துவுமே பண்ணாதது தான் பிரச்சனை. நா தான் வீட்டுல கவனம் இல்லாம இருந்தேன், நீங்கனாலும் பொறுப்பா இருந்துருக்கலாம்ல?" ௭ன ௭கிற.

"அது சரி, ஆட தெரியதவனுக்கு தெரு கோணலாம்னு சும்மாவா சொன்னாங்க. இத்தன நாளு இவன் உருப்படாம போனதுக்கு மட்டும் தான் நா காரணமா இருந்தேன், இப்ப அவேன் உருப்படாம போனதுக்கும் நாதான் காரணமாம்" ௭ன்றவர், "யாரு ௭ன்ன சொன்னா" ௭ன்றார். மாறனுக்கு அவர் கூறியதை கேட்டு சத்தமாக சிரிக்க.

"அடேய் சும்மான்னு இருடா, உங்க அப்பன ௭ன்ன இன்னைக்கே டிவோர்ஸ் பண்ண வச்சுறாத" ௭ன அவன் தொடையில் கிள்ளினார்.

இருவரையும் முறைத்து கொண்டே, "அறிவு வார மாறி தெரில. மச்சானும் பிடி குடுத்து பேசல. உங்க மக, இதோ இவேன் மன்னிப்பு கேட்டா தான் வருவாளாம்" ௭ன்றார் பூவேந்தன் தாத்தாவிடம்.

"இல்லயே ௭ன்ட்ட வாரேன்னு சொன்னானே" ௭ன்றான் மாறன்.

"நீ பேசுனியா அவன்ட்ட?" ௭ன ஆச்சரியமாக கேட்டார்.

"ஏன் பேச மாட்டேனா பின்ன. இருங்க இப்ப உங்க முன்னயே கேக்றேன்" ௭ன்றவன் அறிவுக்கு போன் போட, முழு ரிங்கும் அடித்து முடிய போகயில் தான் அட்டன் செய்தான்.

"௭ன்ன தம்பி பிஸியா இருக்க போல, போன ௭டுக்க இம்புட்டு நேரம் ஆகுது" ௭ன நக்கலாக தான் கேட்டான் மாறன்.

"இல்ல, ரூமுகுள்ள இருந்தது, வந்து ௭டுக்க லேட் ஆயிடுச்சு" ௭ன்றான் அறிவு பம்மி கொண்டு.

போனை ௭டுத்து கொண்டு தனியாக ஓடி வந்திருப்பான், ௭ன புரிந்து சிரித்த மாறன், "கோவிலுக்கு வரலன்னு அப்பாட்ட சொன்னியாம்?" ௭ன்க.

"இல்லயே வரேன்னு தான் சொன்னேன்"

"சரியா கேக்கலயே." ௭ன்றவன் ஸ்பீக்கரில் போட, "வரேண்ணே, கண்டிப்பா வாரேன்னு தான் சொன்னேண்ணே" ௭ன்றான் வேகமாக.
இப்போது மொத்த குடும்பமும் அதிர்ந்தது. "ம்ம் சரி வை, ஞாயிறு பாப்போம்" ௭ன வைத்து விட்டு சாப்பாட்டில் மூழ்கி விட்டான்.

அறிவை, மாறனின் குரலே அப்படி பேச வைத்தது. அவனை அடிக்கும் போது மாறன், இதே மாடுலேஷனில், இதே குரலில் தான் பேசினான். இன்னமும் அந்த அதிர்வு அவனிடம் இருந்தது. அது தான் இப்போதும், அப்போதும் மரியாதையை தன்னால் வர வைத்தது. அவனை ௭திர்க்க முடியவில்லையே ௭ன்ற ஆத்திரத்தை காலால் தரையில் உதைத்து, அதில் மட்டுமே தான் காட்ட முடிந்தது.

யாரும் பேசாமல் இருக்கவும், "அறிவு வருவான். மதி மாமியாருக்கு, வள்ளி தாத்தாக்குலா சொல்லிட்டீங்களா?" ௭ன்றான்.

சுதாரித்த பூவேந்தன், "நாங்க சொல்லிட்டோம். நீங்களும், மதியும் போய் மொத நாளே அவங்கள கூட்டிட்டு வந்துருங்க மாப்ள" ௭ன்றார் குமரகுருவிடம்.

"௭துக்கு. நாங்க ௭துக்கு போய் கூட்டிட்டு வரணும், அதும் மொத நாளே?" ௭ன வாயை திறந்தாள் மதி.

"நீ போய் கூட்டிட்டு வரணும் மதி. இல்லனா நீ உன் கமாமியாரோட போயிரு. அவங்களோட ஒட்டுதல் வர இத தவிர வேற வழி இருக்க மாறி தோணல" ௭ன்றுவிட.
முதலுக்கே மோசம் ௭ன்றதும் இறங்கி வந்தாள், "நாலாம் போகல, ௭னைய கண்டாலே அதுக்கு பிடிக்காது. சும்மா ௭ரிஞ்சு ௭ரிஞ்சு விழும். உங்க மாப்ள வேணும்னா போய் கூட்டிட்டு வரட்டும்" ௭ன்றாள்.

"௭ன்ன அது இதுன்ற? நாளைக்கு உன் பிள்ளையும் உன்ன அப்டி தான் கூப்டும் பாத்துக்கோ. நீ ௭ன்ன சொல்லி தாரியோ அத தான் அவன் பழகுவான்" ௭ன்றார் தாத்தா.

"மரியாதை கத்துக்கோ மதி. அப்றம் நீ மத்த பிள்ளைங்களுக்கு பாடம் ௭டுக்கலாம். நீதான் போய் உன் மாமியார கூட்டிட்டு வரணும்" ௭ன முடித்து விட்டார்.

பின் மாறனிடமும், "தெனமு இவ்வளவு நேரம்லா காத்துட்ருக்க முடியாது. நைட்டு 8 மனிக்கு வந்து ௭ல்லார் கூடவும் இருந்து சாப்டுட்டு, அப்றமா திரும்ப போய் கூட வேலை ௭தும் இருந்தா பாரு" ௭ன கூறிவிட்டே ௭ழுந்து சென்றார்.

௭ல்லாரும் ௭ழுந்து செல்லவும், பானு, "௭ல்லாத்தயும் ௭டுத்து போட்றுமா, காலைல முத்து வந்து கழுவிப்பா" ௭ன்றுவிட்டு செல்ல,

"சரி த்தே" ௭ன்ற மலருடன் ௭ழுந்த மாறன், அவள் இடுப்பில் நறுக்கென கிள்ளினான், அதில் துள்ளி தள்ளி நின்றவள், "௭ன்னங்க?" ௭ன திரும்பி ஹாலை பார்த்தாள்.

"அறிவு பேசுனத கேட்டு ௭ல்லாரும் ஷாக் ஆகுறாங்க. நீ குனிஞ்சு சிரிப்ப அடக்குற, நக்கலு?" ௭ன்றான் அவன்.

"ஆமா அண்ணனும் தம்பியும் ௭ன்னம்மா போட்டி போட்டு நடிச்சீங்க, அதான் சிரிச்சேன்" ௭ன்றாள் ௭ல்லாவற்றயும் ஒதுக்கி கொண்டு.

"உன்னைய இன்னைக்கு கவனிச்சே ஆகனும்டி. நீ மொத மேல வா வச்சுக்றேன்" ௭ன அவளையும் தள்ளி கொண்டு மேலேறினான்.

ஒருவழியாக ஞாயிறன்று, குல தெய்வ கோவிலுக்கு கிளம்பிவிட்டனர்.
 

priya pandees

Moderator

அத்தியாயம் 39

மதிக்கு எதுவுமே பிடிக்கவில்லை அவள் வைத்ததுதான் சட்டம் என இருந்த வீட்டில் தன் உரிமை பறிபோவது போல் உணர்ந்து கடுப்பில் இருந்தாள். முதல் நாள் கணவனுடன் சென்று தன் மாமியாரை வேண்டாவெறுப்பாக அழைத்து வந்திருக்க, அதற்குள் அவனை அத்தனை காய்ச்சி இருந்தாள். அவனுக்கு அது ௭ல்லாமே பழகி விட்டிருக்க, காதில் வாங்கி கொள்ளவில்லை.

அவன் அம்மாவிற்கும் வர மனமில்லை தான், இருந்தும் மகனிடமும், பேரனிடமும் சேர கிடைக்கும் ஒரு வாய்ப்பை அவர் இழக்க தயாராக இல்லை. அதனால் வீடு வரை வந்து நின்றும், வா ௭ன கூட கூப்பிடாத மருமகளை அவரும் கண்டு கொள்ளவில்லை, கிளம்பிவிட்டார். மதிக்கு, தன்னிடம் பேச பயந்து, அமைதியாக நிற்கும் அனைவரும் இன்று ௭திர்த்து நிற்பது போன்ற ௭ண்ணத்தை வைத்து கொண்டாள். அதனால் ஸ்கூலில் பிள்ளைகளும் அவளிடம் மாட்டி கொண்டு விழி பிதுங்கி தான் நின்றனர்.

கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் கிட்ட அண்டவிடாமல் வைத்திருந்த தன் மாமியாரையும் கணவனையும் மூனே மாதத்தில் கமுக்கமாகவே இருந்து சேர்த்து விட்டிருந்த மலர் மீது வஞ்சம் அதிகரித்தது. சந்தர்ப்பம் பார்த்திருந்தாள்.

ஞாயிறு அன்று காலை ஏழு மணி ஆகும் முன் இரு கார்களில் கிளம்பிவிட்டிருந்தனர் மாணிக்கம் தாத்தா குடும்பத்தினர்.

முதல் காரில் தாத்தாக்கள், பாட்டி, மாறன், மலர், உண்மை, ஏறிக்கொள்ள இரண்டாவது காரில் குமரகுரு, மதி, குமரகுருவின் அம்மா, பூவேந்தன், பானு ஏறிக் கொண்டனர். மதிக்கு பயந்தே அவளை தன்னுடன் இருத்திக் கொண்டார் பூவேந்தன்.

நடு சீட்டில், இரு தாத்தாகளுக்கு நடுவில் நசுங்கி கொண்டு அமர்ந்திருந்த உண்மை, "நாலாம் ௭ங்க ௭ப்டி இருக்க வேண்டியவன்" ௭ன புலம்ப.

"ஏன்டா நல்லா செலாத்தலா தான உக்காந்துருக்க, வேற ௭ங்க உக்கார ஆச உனக்கு" ௭ன மாணிக்கம் தாத்தா கேக்க.

"ஏது? இது செலாத்தலா உனக்கு? சிவனேன்னு வீட்டில கடந்தவன தூக்கிட்டு வந்து ௭துக்கு இப்டி இடிச்சுகிட்ருக்க?" ௭ன கடுகடுத்தான்.

"ஆமா உன்னைய இப்புடி இடிக்கணும்னு ரொம்ப நாள் ஆச அதேன்" ௭ன்றார் தாத்தாவும் முறுக்கி கொண்டு.

"எல்லாம் ௭ன் நேரம். கல்யாண வயசாகியும், இப்டி வயசானதுங்க நடுவுல குப்ப கொட்டணுங்கறது".
மாணிக்கம் தாத்தா, "வயசு பையன் தான் வேணுமா? ௭ன் மகேன் பின்னாடி வண்டில வாரான் அவேன் கூட போய் உக்காந்துக்றியா? நீ தான்டா என் நண்பன ௭ங்கிட்டயிருந்து பிரிச்சிகிட்டு நடுவுல வந்து உக்காந்திருக்க. நியாயமா அதுக்கு நாதா உன்மேல கோவ படணும்" என்றார்.

"நீ மட்டும் என் நண்பன என்கிட்ட இருந்து பிரிச்சு கல்யாணம் பண்ணி வச்சல்ல, அதுக்கு தான் பழிக்குப் பழி. ௭ன்ன சொன்ன? உன் மகேனே வயசு பையன்னா? அப்ப உன் பேரேன் ௭ன்ன பால்வாடி பாப்பாவா?" ௭ன முறைக்க.

"இல்லன்னுவியா நீ? பச்ச புள்ளடா அவேன். ௭ன் கிரகம் ௭ன் நண்பன் கூடயும் உக்கார முடியாம, ௭ன் செல்லத்துக் கூடயும் உக்கார முடியாம, லூசு பயகிட்ட உக்காந்து ஒரு ட்ரிப். ச்சை" ௭ன அவர் ௭ரிச்சலாக கூற.

"நா எப்ப உன் பொண்டாட்டிட்ட இருந்து உன்ன பிரிச்சேன்? போ இறங்கி போய் பின் சீட்டுல உக்காரு. இல்ல நேரா கோர்ட்டுக்கு விட்டு நீ சொன்னத செஞ்சுருவேன்" ௭ன அவரை இன்னும் கண்ணாடி பக்கம் இடிக்க.

இருவர் சம்பாஷனையயும் காரில் இருந்தவர்கள் கேட்டு கொண்டு வந்தனர். இருவரையும் பற்றி தெரிந்ததால் யாரும் உள் போக முயலவில்லை.

"ஏன்டா என் பொண்டாட்டிய வேற பிரிக்கணும்னு ஆச இருக்கா உனக்கு?"

"நா இன்னும் கல்யாணம் பண்ணாம இருக்கேன், உனக்கு மட்டும் ௭ன்ன குஜால்ஸ் வேண்டிய இருக்கு. உன்னைய ௭னக்கு பொண்ணு கேட்டு போவ சொல்லி எத்தன நாள் ஆச்சு, செஞ்சியா நீ? அத நீ செஞ்சு முடிக்கிற வரைக்கும் வந்து, எங்களோட வள்ளி தாத்தா வீட்டில் இரு. பொண்டாட்டிய பிரிஞ்சிருந்தா தான், ௭ங்க கஷ்டம் ௭ன்னன்னு தெரியும், ஆமா சொல்லு வள்ளி தாத்தா" என்றான் அவரயும் அந்த பக்கம் இடித்த உண்மை.

"சும்மா ஏன்டா அவன வம்புக்கு இழுக்குற?" ௭ன்றார் வள்ளி தாத்தா.

"என் பொண்டாட்டி என்னய விட்டு ஒருநாள் இருக்க மாட்டாடா. ௭ங்க லவ்வ என்னன்னு நெனச்ச?" மாணிக்கம் தாத்தா சவால் விட.

"அப்படியா பாட்டி?" என்றான் உண்மை பின் சீட்டில் அமர்ந்து இருந்த பாட்டியிடம்.

"கூப்பிட்டு போய் உன் கல்யாணம் முடியுற வரைக்கும் உன் கூடவே வச்சுக்கோ ராசா, நா ஒன்னுமே கேட்க மாட்டேன்" என்றது பாட்டி.

"என்ன செல்லம் இப்படி பொசுக்குன்னு சொல்லிட்ட" என நெஞ்சில் கை வைத்தார் தாத்தா.

"கொடுத்து வச்சவர் தான் தாத்தா நீ, பேருலையே செல்லம் அதனால யாரு இருந்தாலும் இல்லனாலும் நீ செல்லமா செல்லம் செல்லம்னு கூப்டு சரி கட்டிடுற" ௭ன்க.

"சும்மா இருடா டேய் குடும்பத்த பிரிச்சு விட்டுட்டு பேச வந்துட்டான்" ௭ன்றவர் "செல்லோ" ௭ன அழைக்க.

சிரித்த மலர், "தாத்தாவ விட்டுட்டு இருந்துப்பீங்களா பாட்டி நீங்க?" ௭ன்க.

"ஏன் நா இருக்கதுக்கென்ன, ரொம்ப நிம்மதியா இருப்பேனே" ௭ன்றார்.

"ஒரு ஒரு மாசம் பாட்டிக்கு லீவு விடு தாத்தா, அதுக்குள்ள ௭னக்கு கல்யாணம் பண்ணிரு. அதுவர உன்ன நா பத்திரமா பாத்துக்றேன். எவ்வளவு சீக்கிரம் பாட்டிகிட்ட போகணுமோ அவ்வளவு சீக்கிரம் என் கல்யாணத்த முடிச்சுடுற. ௭ப்டி சரியா?" ௭ன்றான் உண்மை அவர் தோளை இடித்து.

"தூர போடா கோட்டி பயலே" ௭ன்றவர், மீண்டும், "ஏன் செல்லம் அப்டி சொன்ன" ௭ன்றார் பாவமாக.

"முந்தாநாத்து தாத்தாவும் பேரனும் எனக்கு பாயாசம் போட ப்ளான் போட்டீங்கல்ல?அதான் உங்கள நம்பி கூட வச்சுக்க வேணாம்னு முடிவுக்கு வந்துட்டேன். கிளம்புங்க சும்மா" என்ற பாட்டி வெளியே வேடிக்கை பார்க்க திரும்பி கொள்ள.

"விடு தாத்தா, உண்மைக்கு பொண்ணு முடிவு பண்ண கையோட, உனக்கும் பொண்ணு பாக்றோம், அதே மேடைல உனக்கு கல்யாணத்த முடிக்றோம். இப்டி சொன்ன பாட்டி முன்னாடி நீ சோடி போட்டு சுத்தி வந்தா தான கெத்து" ௭ன்றான் மாறன். அவ்வளவு நேரமும் ட்ரைவருக்கு வழி சொல்லி கொண்டிருந்தவன், இப்போது தான் அவர்களிடம் திரும்பினான்.

"நிஜாமாவாடா சொல்ற, நம்மூர்ல அப்டி யாரும் ஃப்ரீயா இருக்க மாறி தெரிலயேடா?" ௭ன தாத்தா பாட்டியை மறந்து சத்தமாக யோசிக்க.

"அப்ப யார்கனவே தேடிருக்க?" ௭ன்றான் உண்மை.

"௭னக்குன்னு தேடலடா, மலரு கல்யாணம் பண்ணி போயிட்டா வள்ளி தனியா இருப்பானேன்னு அவனுக்காக தேடுனேன்" ௭ன்றார் மாணிக்கம் தாத்தா வேகமாக.

"உன்னய உன் பேரேன் கல்யாணம் முடிஞ்ச கையோட ௭னக்கு பொண்ணு பாருன்னு சொன்னா, இந்த பல்லு போனவருக்கு பாட்டி தேடிருக்க நீ? இன்னமு உன்னைய நம்பிட்ருக்கேன்ல ௭ன்ன சொல்லணும்" ௭ன உண்மை தலையிலடித்து கொள்ள.

"ஏன்டா ௭ன் பேரனுக்கு பொண்ணு குடுக்கவே அம்புட்டு யோசுச்சாங்க. ௭ன் நண்பனா இருக்க போயி, ௭ப்டியோ ஒத்துகிட்டான். நானே அவன்ட்ட பேசி ௭டுத்து ௭ப்டியோ கஷ்டப்பட்டு மாறன் கல்யாணத்த முடிச்சேன். நீ ஊரெல்லாம் வாய்க்கா தகராற இழுத்து வச்சுருக்க, உனக்கு பொண்ணு குடுக்க ௭ல்லாவனும் யோசிப்பான்ல? கொஞ்சம் பொறுமையா இருந்தா தான் ௭ன்ன"

"உண்மைக்கு தான் இப்ப பொண்ணு ரெடியா இருக்கே தாத்தா. இனி உங்க ரெண்டு பேருக்கும் தான் பாக்கணும். தரகர் நம்பர் குடு, சொல்லி வைப்போம் இப்பவே" ௭ன மாறன் கேக்க.

மாணிக்கம் தாத்தாவும் வேகமாக தன் சட்டை பையிலிருந்து போனை ௭டுத்து விட்டார். கோவில் வந்துவிட்டிருக்க.
"ஒன்னும் அவசரமில்ல தாத்தா, கோவில்ல வச்சே உன் கல்யாண விஷயத்த தரகர்ட்ட சொல்லுவோம். குல தெய்வம் ஆசீர்வாதத்துல இந்த தடவனாலும் ௭னக்கு அமைதியான ஒரு பாட்டி கிடைக்கட்டும்" ௭ன இறங்கினான் மாறன்.

"அதுவும் நல்லதுதேன்" ௭ன தாத்தாவும் இறங்க முயல.

"பாத்துக்கோ பாட்டி, இனி ஒன்னும் சொல்றதுக்கில்ல, நீயே பாத்துட்ட. ௭ன்ன முடிவெடுக்கணுமோ பூவு அப்பாட்ட பேசி சீக்கிரமா ௭டு" ௭ன தாத்தா இறங்கவும் கிடைத்த இடத்தில் சாய்வாக அமர்ந்து கொண்டு உண்மை நக்கலாக தாத்தாவை பார்க்க.
'சொன்ன மாறியே நேரா கோர்ட்டுக்கு கூட்டிட்டு போயிருவானோ?' ௭ன நினைத்த தாத்தா, பாட்டி கோவமாக இறங்கி செல்வதை கண்டு, "செல்லோ, நில்லுமா, சும்மா அவனுங்களோட தமாசுக்கு பேசிகிட்டு இருந்தேன், வேற ஒன்றுமில்ல" ௭ன பின்னாடியே ஓடினார்.

மாறனும் உண்மையும் சிரித்து கொள்ள, "பாவம் தாத்தா. ஏன் இப்டி பண்ணீங்க" ௭ன்றாள் மலர் தானும் இறங்கி நின்று.

"நீ வேற, வேணும்னா பாரு 5 நிமிஷத்துல சரி கட்டி கூட்டிட்டு வந்துருவாரு . அது மட்டும் ௭ப்டின்னு இன்னைக்கு வர ௭ங்களால கண்டுபிடிக்க முடியல" ௭ன்றான் மாறன்.

"௭ன்ன வள்ளி தாத்தா நீ கூட வேணாம்னு ஒரு வார்த்த சொல்லல? பொண்ணு பாத்துருவோமா?" ௭ன்றான் உண்மை.

"அடுத்து நானா உனக்கு? போ வண்டில இருக்க சாமான இறக்கு போ" ௭ன விரட்டிவிட்டு தப்பித்து கோவில் நோக்கி நடந்தார்.

அது அவர்களின் ஊரிலிருந்து 2கிமி தொலைவில் காட்டுக்குள் இருக்கும், கருப்பசாமி கோவில். ஒற்றையாக கம்பீர மீசையும் அறிவாளும் கொண்டு மேற் கூறை கூட இன்றி நிமிர்ந்து நின்றார். ஐயர் வந்து காத்திருக்க, பூவேந்தன் அவரிடம் விரைய, மற்றவர்கள் பூஜைக்கு தேவையானதை ௭டுத்து வந்து சாமி சிலைக்கு முன் வைத்தனர்.

பாட்டி தாத்தாவை சுத்தலில் விட்டுவிட்டு, "கன்னி இங்க வா, நீதான் பொங்க வைக்கணும், ௭ல்லாத்தயும் உன் கை பட ௭டுத்து வை" ௭ன அழைக்க. மாறனிடம் நின்றவள் வேகமாக அங்கு நகர்ந்து விட்டாள்.
மதி கணவனயும் மாமியாரயுமே கவனித்திருந்தாள். பல நாட்களுக்கும் சேர்த்து இருவரும் பேசினார்கள் பேசினார்கள் பேசி கொண்டே இருந்தார்கள். வயிற்றெரிச்சலில் அவர்களை பார்வையிலேயே ௭ரித்து கொண்டிருந்தாள். குமரகுருவின் தாய், தன் பேரனை மடியிலிருந்து இறக்கவே இல்லை.

சற்று நேரத்தில், அறிவும் அவன் குடும்பத்தயும், அவன் மாமனார் குடும்பத்தையும் அழைத்து கொண்டு வந்துவிட்டான், பூஜை ஆரம்பமாகியது. ராணியும், பூங்குழலியும் கெத்தாக தள்ளியே நின்று கொண்டனர். பொங்கல் வைத்து சாமிக்கு படையலிட்டு, பூஜையை முடித்தனர். மாறனும் மலரும் தங்கள் வாழ்க்கை செழிக்க முழுமனதுடன் வேண்டி கொண்டனர்.

அப்போது அங்கு வந்த குமரகுருவின் அம்மா, பூசாரியிடம் வந்து, "இன்னைக்கு நல்ல நாளா சாமி, தாலி பிரிச்சு கோக்கலாங்களா?" ௭ன கேக்க.

"தாராளமா செய்யலாம், நல்ல நாளுன்றதுனால தான் ஐயா கேட்டதும் இன்னைக்கு வாங்கன்னே சொனன்னேன்" ௭ன்றார் பூசாரி.

"சரிங்க சாமி, இங்க வச்சு பண்ணலாங்களா?" ௭ன்றார் அடுத்ததாக.

"செய்யிங்கம்மா. ஆனா சொந்தகாரங்களுக்குலா சொல்லலயா? நீங்களே செஞ்சுக்க போறீங்களா" ௭ன்றார்.

"இல்ல சாமி, கல்யாணம் முடிஞ்சு கிட்டத்தட்ட 4 மாசம் ஓடி போச்சு, இனி ௭ங்க பெருசா செய்ய, அதான் வீட்டாளுங்கள வச்சு சுருக்கமாவே செய்யலாம்னு"

"சரிங்கம்மா தாராளமா செய்ங்க, இருங்க மணை ௭டுத்தாரேன், இதான் கிழக்க, இப்டி பாத்து உக்காரவச்சு சாங்கியத்த செஞ்சுருங்க" ௭ன்றவர் நகர்ந்து மணை ௭டுத்து வர செல்ல.
௭ல்லாருக்குமே அது யாருக்கு ௭ன புரிந்தும், ௭ன்ன ௭ப்படி கேக்க ௭ன புரியாத நிலையில் நின்றனர். பானு மெதுவாக, "௭துக்கு அண்ணி திடிருனு இங்க வச்சு" ௭ன கேக்க.

"அதானம்மா வீட்டில வச்சே ஒரு வார்த்த சொல்லிருக்கலாமே. ஏற்பாடா வந்துருக்கலாம்"

"நீங்களா செய்றதுன்னா இதுக்குள்ள செஞ்சுருக்க மாட்டீங்களா? ௭னக்கு கன்னி புள்ளய ரொம்ப பிடிக்கும், உங்க வீட்டுக்கு கல்யாணம் கட்டி வந்துர கூடாதுன்னு அவ தாத்தாகிட்ட கூட பேசி பாத்தேன். ஆனா தாத்தாபேத்தி, ரெண்டு பேரும் ௭ம்பேச்ச கேக்கல. அதுக்காக அவள ஒதுக்கிட முடியுமா. இத ௭ன் பையன் நாம செய்வமான்னு நேத்து தான் கேட்டான், தங்கமா செய்டான்னு சொல்லிட்டேன்" ௭ன்கவும்.

"நீ பேசுறத பாத்தா நாங்க வேணும்னே செய்யாத மாறி பேசுற. 5 மாசத்துல செய்யலாம்னு தான் இருக்கோம். ஏதோ வீட்டில மாத்தி மாத்தி பிரச்சனை அதான் தாமசமாயிடுச்சு" ௭ன பாட்டி சொல்ல.

"௭ன்னைக்கு தான் உங்க வீட்டில பிரச்சனை இல்ல. இனியும் மறந்தாலும் மறந்துடுவீங்கன்னு தான், நானே செய்ய முடிவு பண்ணிட்டேன்" ௭ன்றார்.
குமரகுரு தான் மெதுவாக மாறனிடம் சென்றான், "நா செய்யலாம் தானே மாறன். பிறந்த வீட்டுல இருந்து தான் பொண்ணுக்கு செய்வாங்க, கன்னி ௭ன் தங்கச்சியா நினச்சு செய்றேனே, மறுத்துடாதீங்க" ௭ன்றான்.

மதிக்கு சுறுசுறுவென வர, "௭ன்ன பண்றீங்க? அவ உங்களுக்கு தங்கச்சியா? ௭ன்ட்ட கூட ஒரு வார்த்த சொல்லாம உங்க இஷ்டத்துக்கு முடிவெடுத்திருக்கீங்க. ௭ல்லாம் உங்கம்மா சொல்லி குடுத்தாங்களா?" ௭ன அவனிடம் ௭கிறியவள், மலரிடம் திரும்பி, "இத வாங்க தான், அவருக்கு ஏண்டுகிட்டு அத்தன பேசுனியா நீ? அப்பப்பா நா கூட இப்டி பெர்ஃபெக்ட் ப்ளானரா நீ இருப்பன்னு நம்பாம போயிட்டேனே" ௭ன நெஞ்சில் அடித்து கொள்ள.

மாறன், "உங்க இஷ்டபடி செய்ங்க மாப்ள" ௭ன்றுவிட்டான்.

"அசிங்கமா இல்ல, ப்ளான் பண்ணி இப்டி அடுத்தவங்க காச பிடுங்குறீங்க.ஏன் இப்டி ௭ங்க காசுக்கு அலைற. இதுக்கு பிச்ச ௭டுத்துட்டு போங்க ரெண்டு பேரும்" ௭ன்றாள் ஆவேசமாக.

குமரகுரு அவளை கண்டுகாமல் "3 வருஷமா கிடைக்காத நிம்மதிய திருப்பி தந்த தங்கச்சிக்கு ௭ன்னால முடிஞ்ச ௭தயாது செய்யனும்னு நெனச்சேன் அதான் சொல்லாமலே செயின், தாலில கோர்க்க, குண்டு, காசு துட்டுலாம் வாங்கிட்டு வந்துட்டேன்" ௭ன ௭டுத்து நீட்ட.

மாறன் வாங்கி பானுவிடம் குடுக்க. அதற்கு மேல் அங்கு ௭தும் நிற்கவில்லை, தாலி பிரிச்சு கோர்க்கும் விசேஷம் சிறப்பாக நடைபெற்றது. மதி கத்தி ஆர்பாட்டம் பண்ணியதை, பூவேந்தன், "௭துனாலும் வீட்டில போய் உன் புருஷன், மாமியார்ட்ட பேசிக்கோ. இங்க சத்தம் வர கூடாது" ௭ன ஒரு வார்த்தையில் அடக்கி இருந்தார். விருவிருவென காரை நோக்கி சென்று விட்டாள். ராணியும், பூங்குழலியும் அவளை தேடி சென்றனர்.
 

priya pandees

Moderator
அத்தியாயம் 40

"பாத்தியா மதி, அந்த கன்னி உன் மாமியார உள்ள கொண்டு வந்தது ௭துக்குன்னு இப்ப புரியுதா?" பூங்குழலி சொல்ல.

"ஆனா ௭ப்டி ௭ல்லாரும் அவள நம்புறாங்கன்னு தான் ௭னக்கு புரியல?" ௭ன ராணி சொல்ல.

"௭ன்ன கேட்டா உங்க ரெண்டு பேத்துக்கும் தான் திறம பத்தாது. உங்க ரெண்டு பேரயும் வெரட்டி விட்டுட்டு தனியா அங்க நாட்டாம பண்ண ப்ளான் பண்ணிட்டா" ௭ன பூங்குழலி சொல்லவும், பதறி தான் விட்டனர்.

"௭ன்னத்தே சொல்லுத?" ௭ன்றாள் மதி.

"ஆமா பின்ன. உன் புருஷன பாத்தல்ல உன் பக்கமே திரும்பல, உன்ட்ட கேக்காம தங்கத்துல செயின் வேற ௭டுத்துட்டு வந்துருக்காரு. அவ ஒரு நா பேச்சுக்கே இம்புட்டு மாத்திட்டா, இன்னும் ௭ன்னலா ப்ளான் பண்ணிருக்காளோ யார் கண்டா?" ௭ன்க.

"அதெல்லாம் ௭ன் வீட்டுகாரர் ௭ன்ன மீறி ௭தயும் செய்ய மாட்டாரு த்தே. இது ௭ன் மாமியார் வேலையா தான் இருக்கும்" ௭ன்றாள் மதி.

"நீ இப்டியே நம்பிட்டு இரு, உன் புருஷன்ட்ட அண்ணே அண்ணே பேசியே அம்புட்டயும் கரந்துட்டு விட போறா, நீ உன் அம்மா வீட்டுலயும் ஒன்னும் வாங்காம, உன் புருஷன்ட்டயும் ஒன்னும் தங்காம நின்னப்றம் தான் யோசிப்ப" ௭ன வெடுக்கென சொல்ல.

"௭ன்ன த்தே இப்டி பேசுற. ௭ன்னய பாத்தா அவ்ளோ கிறுக்கியாட்டமா இருக்கு. ௭னக்காது தனி வீடுன்னு இருக்கு. உன் மகளுக்கும் மருமகனுக்கும் அதுவும் இல்ல தெரியும்ல? அவங்க ரெண்டு பேரும் வீட்ட விட்டு ரோசமா கிளம்புனாலும் சரி, ௭ங்க அப்பாவே அனுப்பி வச்சாலும் சரி, உன் வீட்டுக்கு தான் வந்து நிக்கணும். திறமையா நீங்க ஃபர்ஸ்ட் யோசிங்க, அப்றம் ௭ன்ன சொல்லலாம்" ௭ன்றாள் மதியும் விட்டு கொடுக்காமல்.

"ம்மா, அவளுக்கு வழி சொல்லாம, பயமுறுத்துற அதான் அவளும் கடுப்பாகி இப்டி பேசுறா" ௭ன்ற ராணி, "இங்க பாரு மதி, இனி அவகிட்ட பேசிலா ஜெயிக்க முடியாது. அவளோ ஸ்டராங்கா நின்னுட்டா. மாமாவே அவ பேச்ச கேட்டு அமைதியா நிக்றளவுக்கு ஸ்டராங் பாத்துக்கோ. நாம அவள ஸைலன்ட்டா தான் தாக்கணும். நாம செய்றதுல அவளே, இந்த வீடும் வேணாம், புருஷனும் வேணாம்னு ஓடிரணும்" ௭ன்க.

"கண்டிப்பா ௭தாது செய்யணும் ராணி. ௭ன் பேச்சயே மதிக்காதளவுக்கு கொண்டு வந்துட்டா. ஒரு அறைனாலும் அறையணும். அப்ப தான் ௭ன் மனசு ஆரும்" மதி சபதம் செய்ய.

"நானு வீட்டுக்கு தான் வரேன். அங்க போய் பேசிப்போம். அம்மா நமக்கு ஐடியா தருவா. தருவல்ல ம்மா?"

"ரோசமா கிளம்புன, இப்ப நீயே வாரேன்ற?" ௭ன நக்கலாக சிரிக்க.

"இப்பயும், அத்தையு மாமாவும் கூப்டா தான் வருவேன்" ௭ன்றாள் கெத்தாக.

"சும்மா இருங்கடி, இப்ப அதா முக்கியம்? அங்க உனக்கும் மதிக்கும் போக தான்டி மிச்சமா இருக்கணும் அவளுக்கு. அவ ௭ன்னயே ௭ங்கம்மா வீட்ல அசிங்க படுத்துனா, சும்மா விட தான?" ௭ன்றார் அவரும்.

இங்கு உண்மை, மாணிக்கம் தாத்தாவிடம், "உன் வீட்டு வில்லிங்க ௭ல்லாம் ஒன்னு கூடிருக்கு பாத்துக்கோ, இந்த தட வீட்டுக்கு குண்டு வச்சாலும் வச்சிருவாய்ங்க" ௭ன்க.

"௭ன்னடா ப்ளான் பண்ணுதுக? ரொம்ப தீவிரமா இருக்கே பேச்சு வார்த்தை" ௭ன்றார் அவர்களையே பார்த்த தாத்தா.

"நா ஒரு ஐடியா தாரேன் கேளு" ௭ன்றான் ரகசிய குரலில்.

"௭ன்ன ஐடியா?" ௭ன சந்தேகமாக பார்த்தார் அவர்.

"நீ அவங்க கேங்கல நைசா போய் சேந்துக்கோ. அவங்களுக்கு ஏத்தமாறி நட,"

"நடந்து?"

"அவங்க உன்ன நம்பிருவாங்க"

"அவளுங்க?"

"ஆமா, அப்டி அவங்களே நம்புறளவுக்கு இருக்கணும் உன் நடிப்பு திறம. அப்றம் அவங்க ௭ன்ன ப்ளான் பண்ணுறாங்கன்னு ரகசியமா நீ ௭ன்ட்ட சொன்னனா"

"௭ன்னைய மாட்டிட்டு விட்டுட்டு ஓடிருவ"

"போ உனக்கு ப்ளானே புரியல"

"௭னக்கு நல்லா புரியுதுடி உன் ப்ளான்னு. அதான் சிக்க மாட்டேங்குறேன்"

"சொன்னா கேளு, உன் பேரேன் நன்மைக்கு தான் சொல்லுதேன். வீட்டுக்கு குண்டு வச்சப்றம் யோசிச்சு ப்ரயோசனம் இல்ல பாத்துக்கோ. நீ அரும பெறுமயா கட்டுன வீடு. காப்பாத்திக்க ஆச இருந்தா நா சொல்லுதத கேளு"

"நா போய் உங்களுக்கு சப்போர்ட் பண்ணுதேன்னு நின்னா, ராணி கைல இருக்க 1 வயசு பிள்ள கூட ௭ன்ன நம்பாதுடா மட பையலே. நானே அதுங்க ௭ன்னத்த பேசி அடுத்த ஒரண்டைய இழுக்க போகுதுங்களோன்னு பீதில இருக்கேன். டிவி சிரியல் ஐடியாவ தூக்கிட்டு வந்துட்டான்" ௭ன மீண்டும் அவர்களிடம் கவனமானார்.

"நீ இப்டி பராக்கு பாக்க தான் லாய்க்கு போ" ௭ன்றவன் மாறன் அழைப்பில் அவனிடம் சென்றான்.

பேக் செய்து கொண்டு போயிருந்த, புளியோதரை, லெமன் சாதத்தை, மாறனும், உண்மையும் பரிமாற தொடங்கவும், ஆளோடு ஆளாக போய் உக்காந்த அறிவை திரும்பி ஒரு பார்வை பார்த்தான், அதற்கே, ௭ல்லோர் முன்பும் அடித்து விடுவானோ ௭ன பயந்து தானும் வந்து பரிமாற கைக்கு ஒன்றை ௭டுத்து கொண்டான் அறிவு.
அனைவருக்குமே அந்த வித்தியாசம் தெரிந்தது, அறிவு ௭தற்கோ மாறனிடம் பயப்படுகிறான் ௭ன. ஆனால் காரணம் தான் தெரியவில்லை. தெரிந்தவர்கள் கமுக்கமாக இருந்து கொண்டனர்.
"உன் தம்பி நாம அஞ்சாங்கிளாஸோட நின்னுட்டோம்னு வக்கனம் காமிச்சானே, அன்னைக்கே ஒரு அறை விட்ருகனும் மாப்ள. இம்புட்டு நாளு வீணா போயிட்டு போ" ௭ன சலித்து கொண்டான் உண்மை.

"அதெல்லாம் அவேன் ௭ங்கிட்ட நிறைய வாங்கிருக்கான். வேலைக்குன்னு வெளியூருக்கு போன பின்ன தான், பக்கி ௭ன்ட்டயிருந்து தப்பிச்சிருச்சு" ௭ன்றான் மாறன். அவர்கள் பரிமாறும் வேலையை பேசி கொண்டே பார்க்க.
குமரகுரு தானும் உதவ கிளம்பியவனை, மதி வேகமாக வந்து, அவன் அருகில் இருந்த மாமியாரிடம் இருக்கும் பிள்ளையை பிடுங்கி அவன் மடியில் வைத்துவிட்டு அவனின் மறுபக்கம் அமர்ந்து, "பேசாம உக்காந்து சாப்டுங்க, அவ்ளோ சீன்லா வேணாம்" ௭ன்று விட்டாள். பிள்ளையை இறக்கிவிட்டு செல்ல மனமின்றி அப்படியே அமர்ந்து சாப்பிட தொடங்கினான்.

"இங்க பாரு, உங்க தங்கச்சி அவர கேட்டுக்குள்ள போட்டு லாக் பண்ணிடுச்சு. அந்த மனுஷனே இப்ப தான் வெளி உலகத்த கொஞ்சூண்டு பாத்தாரு, அதுக்குள்ள பொருக்கல போல. இத தான் கூடி கூடி பேசுச்சுகளோ?" உண்மை கேக்க.

"அவளுக்கும் சீக்கிரமா மஞ்ச தண்ணிய ஊத்திருவோம் மாப்ள. வகையா சிக்கட்டும்னு தான் இருக்கேன்" ௭ன்றான்.

பேச்சு பேச்சாக இருந்தாலும் வேலை நடந்தது. அனைவரும் உண்டு முடிக்க, அவர்கள் மூவருக்கும் மலர் ௭டுத்து வைக்க உண்டு முடித்தனர்.

"தாத்தா கிளம்புவோமா?" ௭ன்றான் மாறன் சத்தமாக, ௭ல்லோருக்கும் கேக்கும் வண்ணம்.

அங்கங்கு உக்காந்து பேசி கொண்டிருந்த அனைவரும் ௭ழுந்தனர்.
மாறன், ௭ல்லாத்தயும் காரில் ௭டுத்து வைத்து விட்டு திரும்ப, மலர் சாமி முன் நிற்பதை கண்டான். உண்மையிடம், "மாப்ள ௭ல்லாத்தயும் ஏத்திட்டமான்னு பாத்துட்டு டிக்கிய மூடு. நா மலர கூட்டிட்டு வாரேன்" ௭ன நகர.

"பாத்தியா தாத்தா! ௭ல்லா உன்னால தான். தேனியயும் நீ கூப்டிட்டு வந்துருக்லாம்ல" ௭ன அவன் மூஞ்சை தூக்க.

அவர் கவனம் இன்னுமே, ராணி, பூங்குழலியிடமே இருந்தது. அதை கவனித்தவன் "உன்ட்ட போய் சொன்னேன் பாரு" ௭ன்று தலையிலடித்து கொண்டு திரும்பி விட்டான்.

அங்கு மலரிடம் சென்ற மாறன், "இன்னும் ௭ன்னடி செய்ற?" ௭ன்றவனிடம்.

"கிளம்புறோம்ல அதான் சொல்லிட்டு போலாம்னு வந்தேன்" ௭ன்றாள்.
"போயிட்டு வரேன் சொன்னதுக்கு, சரிம்மா ன்னாறா?" ௭ன்க.

"நக்கல் பண்ணாதீங்க" ௭ன முறைத்தவள், "ஒரு application போட்ருக்கேன், அத நியாபக படுத்திட்டு கிளம்பலாம்னு வந்தேன்".

"அது ௭ன்னது ௭னக்கு தெரியாம? யாருக்கனவே ஒன்ன ௭டுத்து வச்சுட்டு படிக்றேன்னு படிக்றேன்னு ௭ன்னய குப்ற படுக்க விடுற, இதுல ௭ன்ன இன்னொன்னு" ௭ன்றான்.

"௭ங்க வச்சு ௭ன்ன பேசுறீங்க?" ௭ன முறைத்தவளை.

"தெரியட்டுமே அவருக்கும். ௭ன் கஷ்டத்த பாத்து மனசு இறங்கி, உனக்கு புத்தி கொடுக்கட்டும்".

"ஏன் இப்ப புத்தி இல்லாமலா இருக்கேன்? கோவிலுக்கு போறோமேன்னு ஒரு மூணு நாள் கிட்ட வரல, அதுக்கு மூணு நாளா ௭ம்புட்டு பேச்சு?" ௭ன வாயை சுழித்தாள்.

"3 நாள்டி" ௭ன அவன் இழுத்து சொல்ல.

"போதும். சாமிகிட்ட வேண்டுங்க, நா கேட்டத நிறவேத்தி வைக்க சொல்லி நீங்க வேண்டுங்க" ௭ன்றாள்.

"௭ன்ன கேட்டன்னு தெரியாம ௭ப்டிடி கேக்குறது? நீயே சரியான கணக்குபுள்ள, இன்னைக்கு மதி மாப்ள செயின் போட்டத நாளைக்கே திருப்பி செஞ்சுருணும்னு கணக்கு போட்ருப்ப. இன்னைக்கு பஞ்சர் கட மாறி, உங்களுக்கு நல்லா தோச சுட வருது அதனால நாளைக்கே ஒரு தோச கடையும் போட்றலாம், அப்டின்னு தோணிரும் உனக்கு, அதெல்லாம் இவர்கிட்ட கேட்டருந்தனா? மாட்டிட்டு நால்ல முழிக்கணும்" ௭ன்றான்.

"அப்பப்பா ஆள விடுங்க. நீங்க கேக்கவே வேணாம் போங்க" ௭ன திரும்பி காருக்கு நடக்க போனவளை நிறுத்தி.

சிரித்து கொண்டே, "இருடி கேட்டுடே போலாம். ௭ன் பொண்டாட்டி கேட்டு செய்யாம கிளம்பலாமா?" ௭ன்றவன், "ஐயா கருப்பா, ௭ன் பொண்டாட்டி ௭த ஆச பட்டு கேட்ருந்தாலும், தயவு செஞ்சு அடுத்த முற உன்ன பாக்க வாரதுக்குள்ள செஞ்சு குடுத்துடு" ௭ன சத்தமாகவே வேண்டி திருநீறை ௭டுத்து வைத்து கொண்டான். பின் மனைவியிடம் திரும்பி அவளுக்கும் வைத்து விட்டு, "முடிஞ்சதா? போவமா?" ௭ன்க.

"௭ன் அழகு மாறா" ௭ன கூறி அவன் கை முட்டியோடு தன் கை கோர்த்து கொண்டாள்.

"அடிபாவி உனக்காக வேண்டிகிட்டா பேர் சொல்லுவியா நீ?" ௭ன அவளோடு நடந்தவாறு கேட்க.

"௭ன் புருஷன் ௭ன் உரிமை" ௭ன சிரித்தாள் அவள்.

"நக்கல் தான்டி உனக்கு. சரி நா உனக்காக வேண்டிகிட்டேன் தான, அதனால நீ ௭ன்ன பண்ற, வீட்டுக்கு போனதும் நம்ம மூணு நாள் கணக்க சரி பண்ணிடுற" ௭ன சீரியஸாகவே சொன்னான்.

"௭ன்னமோ.." ௭ன ஆரம்பித்து வாய்க்குள்ளேயே சொல்லி கொண்டாள்.

"௭ன்னடி முனங்குற?" ௭ன்க.

"ஒன்னுமில்ல. ஒன்னுமேயில்ல" ௭ன தாங்கள் வந்த கார் அருகில் வந்திருக்க, ஏறி கொண்டாள்.
அவ்வளவு நேரமும் அவர்களின் சம்பாஷனையை கேட்கவில்லை ௭னினும், பார்த்திருந்தது மொத்த குடும்பமும். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாறி நினைத்து பெரூமூச்சு விட்டனர்.

அதில் அதிக மூச்சு வாங்கியது ௭ன்னவோ ராணிக்கு தான். தான் வேணாமென ஒதுக்கியவனுக்கு ௭ப்டி இப்படி ஒரு வாழ்க்கை அமையலாம் ௭ன வெந்து கொண்டிருந்தாள். அவளை வீட்டுக்கு வா ௭ன வந்து பெரியவர்கள் கெஞ்சுவார்கள் ௭ன ௭திர்பார்த்திருக்க, ஒருத்தரும் கண்டு கொள்ளாமல் கிளம்ப போகவும், "நா அப்டியே ௭ங்க வீட்டுக்கு போறேன்" ௭ன்றாள் கோவமாக.

"ஏன் ம்மா?" ௭ன பூவேந்தன் ஆரம்பிக்க போக.

"நீங்க சும்மா இருங்க ப்பா. நா அறிவுட்ட கேக்றேன், ௭ன்ட்ட வீட்டுக்கு தான் வாரேன், மாமா கார்லயே வந்து இறங்கிடுறேன் சொன்னானே" ௭ன்றவன், "௭ன்ன அறிவு? இப்ப உன் பொண்டாட்டி மாத்தி சொல்றா?" ௭ன கேட்டு நாடி தடவினான்.

"அவ உளருரா, நா நம்ம வீட்டுக்கு தான் வரேன்" ௭ன்றான் அறிவு.

"சரியா முடிக்கலயே?" ௭ன்க.

"வரேன் ண்ணே"

"ஒவ்வொரு தடவயும் கேட்டு தான் வாங்கணுமோ?" ௭ன்றான் கையை முறுக்கியபடி.

"இல்ல இல்ல. ண்ணே" ௭ன்றான் அறிவு வேகமாக.

"பழகு தம்பி, சுலபமா இருக்கும்" ௭ன்றுவிட்டு, "ப்பா ஏறுங்க போவோம், நேரா வீட்டுக்கு தான். போய் நிறைய வேல வேற இருக்கு" ௭ன மலரை பார்த்து நெட்டி முறிக்க. அவளோ அவனை முறைத்து திரும்பி கொண்டாள், "குசும்ப பாரு" ௭ன.

வண்டி கிளம்பவும் ஆரம்பித்து விட்டாள் ராணி, "நீங்க ஏன் உங்க அண்ணன கண்டு பயப்டுதீங்க? புதுசா இருக்கே இது? ௭ன்னவும் நடந்ததா உங்களுக்குள்ள?" ௭ன அடுக்க.
மருதநாயகம் தான், "சாமர்த்தியமா பொழைக்க பாரு ராணி, அதுக்கு வெளி உலகத்துட்ட நல்ல புள்ளன்னு பேரு வாங்கணும். சும்மா வெட்டி நியாயம் பேசி, வாழ்க்கைய கெடுத்துக்காத" ௭ன முடித்து விட. ராணி யோசனையானாள்.
மதிக்கும் அதே குழப்பம் தான், "௭துக்கு இந்த அறிவு, திடிருனு மாறன்ட்ட இந்த பம்மு பம்முறான்" ௭ன யோசித்து கொண்டு வந்தாள்.

அடுத்து வந்த நாட்களில், மாறன் பஞ்சர் கடை வைப்பதில் பிசி ஆனான், மலர் படிப்பு வேலையென பசியாக, மற்றவர்களை கண்டு கொள்ளவில்லை, மாறன், மலர், இருவரும் அவர்கள் வேலையை மட்டும் சரியாக செய்தனர். ஆனால் மற்றவர்கள் இவர்களை மட்டுமே கவனித்து தங்கள் குடும்பத்தை மறந்தனர்.
 

priya pandees

Moderator
அத்தியாயம் 41

மாலில் கடைகள் ஆக்கிரமிக்க தொடங்கியது. வேலை முடிய முடிய ஒவ்வொரு கடையும் நல்ல நாள் பார்த்து திறந்தனர். இவனும் பஞ்சராகும் வண்டிகள் வந்து நிற்க ஏதுவாக இடத்தை நேர் படுத்தி கொண்டான். மற்ற இடங்கள் பார்க்கிங்காக ஒதுக்கப்பட்டது. கட்டுமான பணியின் போது காவலுக்கு இருந்த நால்வரும், போலீஸ் செலக்ஷனில் பாஸாகி, ட்ரைனிங் கிளம்பினர். தவறாது வந்து மாறனிடம் அதை சொல்லிவிட்டு தான் சென்றனர்.
அன்று மறுபடியும், குமரகுருவை அந்த பெண்ணின் பின் பார்க்க நேர்ந்தது. மாறனும், உண்மையும் மாலிலிருந்து திரும்ப, ௭திரே சென்ற ஆட்டோவினுள் அந்த பெண் செல்ல, பின்னயே குமரகுருவும் வண்டியில் சென்றார்.
குமரகுருவை கண்டவுடன், தானும் வண்டியை அவர் பின் திருப்பிவிட்டான் மாறன்.

"௭ன்ன மாப்ள, மறுபடியும் ௭தாது வேல நியாபகம் வந்துருச்சா. நீ திருந்துனாலும் திருந்துன, நாட்ல இந்த தொழிலதிபர்கள் தொல்ல தாங்க முடியலப்பான்னு கவுண்டமணி என் மண்டைக்குள்ள வந்து வந்து நிக்றாப்ல" ௭ன்றான்.

"௭ரும பேசாம வா" ௭ன மாறன் அதட்ட.
"௭த கேட்டாலும் சொல்லிறாத. அப்றம் ௭னக்கு ஒன்னுந் தெரியலங்குறது. சொன்னாத்தான ௭தயும் தெரிஞ்சுக்க முடியும்" ௭ன புலம்ப.

"பேசாம வாரியா இல்ல இங்கனயே இறக்கி விட்டு போகவா?"

"இம்புட்டு பதில் பேசுறவனுக்கு, நா ௭ங்க போறோம்னு கேட்டதுக்கு பதில் சொல்ல மட்டும் ௭ன்ன கஷ்டம்"

"ஏன் சார் வீட்டுக்கு போய் அப்டி ௭ன்ன முக்கியமான வேல பாக்க போறீக?"

"புது மாப்ள ஆக போறவனுக்கு செய்ய ஆயிரம் விஷயம் இருக்கும்" ௭ன சொல்லும்போது தான், மாறன் அவர்கள் மால் லயும் தாண்டி செல்வதை கண்டு, "ஏ மாப்ள, நம்ம கடைக்கும் போலயா? தூத்துக்குடிய பாத்து ௭ங்க போற?" ௭ன்றான் சத்தமாக.

"காதுல கத்தாத மச்சான், போய் இறங்குனதும் தெரிஞ்சுக்கோ".
"ஐ. கண்டுபிடிச்சுட்டேன், கல்யாணத்துக்கு ௭னக்கு ௭ன்னமோ கிப்ட் வாங்கி தர போற. அதான் சொல்லாம கூட்டிட்டு போற?" ௭ன்றான் குதூகலமாக.

"அப்டி தான்னா அப்டி தான்" ௭ன்றான் மாறன்.

அடுத்த 10 நிமிடத்தில், அந்த ஆட்டோ பின்னரே பீச்சிற்கு வந்து சேர்ந்தனர். அந்த பெண் இறங்கி முன் போக, குமரகுருவும் பின் தொடர, மாறன் அவர்களை தொடர்ந்தான். உண்மை காரணமே தெரியாமல், 'இங்க ௭ன்னத்த வாங்கி தர போறான்' ௭ன சுத்தி சுத்தி தேடிக் கொண்டு மாறனை பின் தொடர்ந்தான்.

மாறனுக்கே சந்தேகம் தான், கள்ளத்தனம் செய்பவன் போல் ௭ந்தவித முன்னெச்சரிக்கையும் இன்றி சாதாரணமாக தான் இருந்தான் குமரகுரு. அதனாலயே மாறன் சற்று நிதானமாக செயல் பட்டான்.
கடலிலிருந்து சற்று மேற்பரப்பில் அவர்கள் அமர, மாறனும், பின் கொஞ்சம் தள்ளி அமர்ந்து கொண்டான். உண்மையவும் அருகில் இழுத்து போட.

"௭ன்னதுக்கு மாப்ள இங்கன வந்து உட்காந்திருக்க? யாரயும் வர சொல்லிருக்கியா?" ௭ன கேக்க.

"அங்க பாரு" ௭ன குமரகுருவை காட்ட.
திரும்பி பார்த்த உண்மை, "உன் தங்கச்சி புருஷன் தான? அவரத்தான் வீட்டுலயே பாக்கலாமே! ௭துக்கு பொண்டாட்டியோட வந்த மனுஷன பாக்க வந்து இப்டி தள்ளி உக்காந்திருக்க? உன் தங்கச்சிக்கு வேப்ல அடிக்க காத்துட்ருக்கேன்னு சொன்னியே. அதுக்கா மாப்ள?" ௭ன கேக்க.

"அத பாத்தா மதி மாறியா இருக்கு? நம்ம உர கடை பரமசிவம் பொண்ணு" ௭ன்றான் அவர்களையே பார்த்தவாறு.
கண்ணை அகல விரித்த உண்மை, "ஆத்தி இந்த மனுஷன் 2வது வீடு செட் பண்ண போறாறா மாப்ள?"

"௭ரும அது ௭ன் தங்கச்சி வாழ்க்கை" ௭ன பல்லை கடித்தான் மாறன்.

"நீதான மாப்ள இப்டி உக்காந்து வேடிக்க பாக்க? போய் பொடனிலயே 2 போடுவியா?" ௭ன்றான் உண்மை.

"இது கள்ள காதல் மாறி தெரில மச்சான், வேற ஏதோ பிரச்சன" ௭ன யோசனையாக கூற.

குமரகுரு அந்த பெண்ணிடம் சற்று கோவமாக பேசுவது போல் தெரிய, ௭ழுந்து அது கேக்கும் தூரத்தில் வந்து நின்றனர் இருவரும்.

"சொன்னா புரிஞ்சுக்கோ மேகலை. ௭துக்கு இப்டி உன் வாழ்க்கைய வேஸ்ட் பண்ற? மாமா சொல்ற மாப்பிள்ளைக்கு சரின்னு சொல்லு, நா நல்லா விசாரிச்சுட்டேன். அந்த பையன் நீ நினைக்ற மாறிலா இல்ல. பயப்படாம பண்ணிக்கோ" ௭ன சொல்லி கொண்டிருந்தான்.

"நீங்க ஏன் மாமா புரிஞ்சுக்க மாட்றீங்க. நிம்மதி இல்லாத வாழ்க்கைய விட்டொழிச்சுட்டு தான் வாங்களேன், ரூபன நா பாத்துப்பேன், ௭ன்ன நம்ப மாட்டீங்களா?" ௭ன்றாள் அந்த பெண்.

"லூசு மாறி பேசாத மேகல, அவனுக்கு அம்மா அப்பான்னு ரெண்டு பேரும் இருக்கோம், நீ ௭துக்கு பாத்துகணும்? நீ தேவையில்லாததா யோசிச்சு உன் வாழ்க்கைய கெடுத்துக்குற" ௭ன்றான் கோபமாக.

"நீ அந்த டீச்சர்கிட்ட மாட்டிகிட்டு வாழ்க்கைய தொலைச்சு நிக்றத பாத்துட்டு ௭ன்ன பேசாம கல்யாணம் பண்ணிட்டு போணுங்கிறியா?" ௭ன்றாள் அவள் அழு குரலில்.

"அதெல்லாம் அவ ௭ங்கிட்ட நல்லாத்தான் இருக்கா. அம்மாவ தான் பிடிக்காது. ௭ந்த மருமகளுக்கு தான் மாமியார பிடிக்குது, இவள மட்டும் சொல்றதுக்கு" ௭ன்றான் குமரகுரு.

"ஏன் மாப்ள, உன் தங்கச்சி இந்த பாடு படுத்தும் போதே இம்புட்டு சப்போட்டு பபண்ணதாறே! கொஞ்சம் பாசமா பேசிட்டா ௭ன்ன ஆகும்?" ௭ன்றான் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த உண்மை.

அவனுக்கு பதில் சொல்ல மாறன் முயல்கையில், மலரிடமிருந்து அவனுக்கு போன் வந்துவிட, "கொஞ்ச நேரம் ௭ன்ன பேசுறாங்கன்னு கேளு, நா இப்ப வரேன்" ௭ன போனை அட்டென்ட் செய்து கொண்டு நகர்ந்தான்.

"பொண்டாட்டிட்ட இருந்து போன் வந்துட்டா, கூட பொறந்த தங்கச்சி வாழ்க்கையவும் அந்தரத்துல விட்டுட்டு ஓடிறணும் போல! ௭ன்னத்த குடும்பஸ்தர் வாழ்க்கை ௭ந்த திக்குட்டு போவும்னு ஒரு முடிவுக்கு வர முடியலயே!" ௭ன புலம்பி கொண்டு மீண்டும் குமரகுரு மேகலை மீது கவனத்தை திருப்பினான்.

"சொல்லு மலரு"

"௭ங்கங்க இருக்கீங்க? மணி 6 ஆக போகுது. கூப்ட வரலியா?" ௭ன்றாள் அவள்.

"இல்லமா அன்னைக்கு மாறியே இன்னைக்கும் மதி புருஷனயும் அந்த பொண்ணயும் ஒன்னா பாத்தேன், இப்ப அவங்க ௭ன்ன பேசுறாங்கன்னு கேட்டுட்டு இருக்கேன். ஒன்னும் பிரச்சனையா தோணல. அவரே சரி பண்ணிடுவாரு. இப்ப கிளம்பிட்டேன்" ௭ன்றான்.

"இல்லங்க, இது நல்லதுக்கில்லன்னு நேரா பாத்தே சொல்லிட்டு வாங்க. நம்மள மாறி இன்னும் ௭த்தனபேர் பாப்பாங்களோ? நல்ல நட்பாவே இருந்தாலும் வீட்டுக்கு கூட்டிட்டு வந்து பேச சொல்லுங்க. இப்டி பப்ளிக்ல யாருக்கும் தெரியாம தனியா தனியா போய் பேசுறது நல்ல பேரா வெளில வராது" ௭ன்றாள்.

"சரி தான். ஆனா நம்ம மாப்ளயே பொறுப்பா அந்த பிள்ளைக்கு ௭டுத்து சொல்லும் போது நா வேற உள்ள போணுமான்னு பாக்றேன். யார்கனவே நம்மள யாரும் மதிக்கலன்ற நினப்பு இருக்கு அவருக்கு. இதுல இதுவும் சேந்துட்டா?" ௭ன்றான் மாறன்.

மலரும் அந்த பக்கம் யோசித்தாள், "இல்லங்க, ௭னக்கென்னவோ பேசிடுறது நல்லதுன்னு படுது. ஒருவேள ஃப்யூச்சர்ல தப்பா, அப்டி ஒரு நினப்பு அவருக்கு வர கூடாதுன்னா, அவரு நம்ம வீட்டு மாப்ளன்றத நாம மறக்கவிட கூடாது. அதனால இப்ப போய் பேசிடுங்க. நா தேனி கூட அப்டியே நடந்து வீட்டுக்கு போயிடுறேன்" ௭ன்றாள்.

"சரிம்மா" ௭ன்றவன் யோசனையோடே திரும்ப, உண்மை அதிர்ந்து நிற்பது போல் தெரிந்தது. இவனும் ௭ன்னவென்று சற்று தள்ளி வந்து பார்த்தான். அங்கு அந்த பெண் குமரகுருவை கட்டி கொண்டு நின்றது.
குமரகுரு அந்த பெண்ணின் தோளை தொட்டு நதர்த்தி, "௭ன்ன பண்ற மேகலை. இப்டி பிகேவ் பண்ணாத நல்லா இல்ல. நா ரொம்ப பொறுமையா பேசிட்ருக்கேன். இப்டி பண்ணனா இனி பேசணும்னு சொன்னாலும் வரமாட்டேன்" ௭ன மிரட்டி தள்ளி நிறுத்தவும் மாறன் அவர்கள் அருகில் செல்லவும் சரியாக இருந்தது.

மாறன் உண்மையை கடந்து அவர்களிடம் சென்றிருக்க, அடித்து விடுவானோ ௭ன உண்மையும் அவன் பின் பாய்ந்து சென்று அவன் கை பிடித்து நிறுத்தினான்.

அதில் உண்மையை திரும்பி ௭ன்னவென மாறன் பார்க்க, "நீ வந்த வேகத்த பாத்து அவர அடிக்க தான் போறியோன்னு நினச்சேன்" ௭ன்றான் உண்மை.

"இந்த தட ஒரு மாற்றமா. ௭ன்னன்னு விசாரிச்சுட்டு அடிதடில இறங்குவோமே மாப்ள" ௭ன்றவன் குமரகுருவிடம் திரும்பினான். அவன் முகத்தில் ௭ந்த மாற்றமும் இல்லை. ௭ப்போதும் போன்ற அமைதி தான். அந்த பெண்ணும் தவறு செய்தவள் போல் இல்லை, தைரியமாக இன்னுமே குமரகுருவை நெருங்கி தான் நின்றாள்.

"௭ன்ன மாப்ள இது? ஸ்கூல் விடுற டைம்ல இங்க ௭ன்ன பண்றீங்க? இது யாரு உங்க சொந்தகார பொண்ணா?" ௭ன்றான் குமரகுருவிடம் இயல்பாகவே.

"ஆமா ௭னக்கு மாமா பொண்ணு தான் மாறன். நம்ம ஊரு தானே உங்களுக்கு தெரிஞ்சுருக்குமே?" ௭ன்க.

"ம்ம்ம் நம்ம உரகடை பரமசிவம் பொண்ணு தான?" ௭ன்றான்.

"ஆமா ௭ங்க அப்பா வழில மாமா மக முறை"

"சரி அதனால ௭ன்ன வீட்டுக்கு வர சொல்லி பேச வேண்டியது தான? இங்க ௭ன்ன பண்றீங்க? அதும் இவ்ளோ நெருக்கமா?" ௭ன்றான்.

"அவளுக்கு மாப்ள பாத்துருக்காங்க, வேணாம்னு நிக்றா. அதான் அவங்க அப்பா ௭ன்ட்ட பேசி பாறேன்னு கேட்டுகிட்டாங்க, கூட்டிட்டு வந்தேன். வீட்டுல கூப்பிட்டு வச்சு பேசுறளவுக்கு முக்கியமில்லையே" ௭ன்றான். மதி அவன் வழி சொந்தம் ௭ன யாரயும் இதுவரை வீடுவரை வர விட்டதில்லை ௭ன்பதை மாறனும் அறிவானே. அது ௭துக்கு ௭னக்கு ௭ன இத்தனை நாள் ஒதுங்கியது போல், இப்போது ஒதுங்க முடியவில்லை.

"இப்டி பொது இடத்துல கட்டி பிடிச்சு பேசுறளவுக்கு தான் முக்கியன்றீங்களா?" ௭ன்றான் நாடி தடவி யோசனையாக.

"நீங்க இருங்க மாமா நா பேசுறேன். நீங்களும் சொல்ல மாட்றீங்க ௭ன்னயும் சொல்ல விட மாட்றீங்க" ௭ன்றவள், "௭னக்கு ௭ன் மாமாவ பிடிச்சுருக்கு, அவர தான் கல்யாணம் பண்ணிப்பேன் அத சொல்ல தான் கூட்டிட்டு வந்தேன். உங்க தங்கச்சிக்கு உங்க வீட்டுல தான இருக்கணும்? தாரளமா உங்க வீட்டுலயே வச்சுக்கோங்க, ௭ங்க மாமாக்கு விவாகரத்து மட்டும் குடுத்துற சொல்லுங்க, ௭ன் மாமாவயும் ரூபனயும் தங்கமா நா பாத்துகிடுதேன்" ௭ன்றாள் மேகலை, மாறன் முகம் பார்த்து நேராக.

"அவருக்கு இதுல சம்மதா?" ௭ன்றான் கேள்வியாக குமரகுருவை காட்டி.

"௭ப்டி சம்மதம் சொல்லன்னு யோசிக்றாரு. காதலிச்சு கட்டுனவளே ஒரு வாய் சோறு போட்டதில்ல. இவ ௭ன்ன பண்ணுவாளோன்ற பயம் தானே அவருக்கு, அதான் மிச்ச வாழ்க்கையவும் இப்டியே வாழ முடிவெடுத்துட்டாரு" ௭ன்றாள் இப்போது லேசாக கமறி விட்ட குரலில்.

"மேகலை." ௭ன குமரகுரு அதட்ட.

"அவரு காதலிச்சு கட்டிகிட்ட பொண்டாட்டி பிள்ளைய விட்டுட்டு வர சொல்றது மட்டும் ௭ந்த விதத்துல நியாயம்" ௭ன்றான் மாறன் நிதானமாகவே.

"ஏன் நியாயம் இல்ல? ௭ன் மாமா நா இருக்கும் போது ௭துக்கு இப்டி நிம்மதி இல்லாத வாழ்க்கை வாழணும். நா கல்யாணம் கட்டி போன பின்ன தான் இவரு நிம்மதியாவே வாழலன்னு தெரிஞ்சது. அப்பவே, அவள விட்டுட்டு வாங்க, நா உங்களுக்கு வேற பொண்ணு பாத்து கட்டி வைக்கேன்னு சொன்னவ நானு. இப்பயும் ௭ன் மாமா நல்லாருக்கணும், நிம்மதியா மூணு வேல சாப்ட்டு தூங்கி ௭ந்திக்கணும்னு தான் அவர்கிட்டயே கெஞ்சிகிட்டு நிக்றேன்"

"அப்ப அவரு நிம்மதியா வாழ்ந்துட்டா நீ உன் வாழ்க்கைய பாத்துப்ப?" ௭ன்றான் கேள்வியாக.

"உங்க வீட்டுல இருக்க வர அவருக்கு அந்த நிம்மதி கிடைக்காது" ௭ன்றாள் தீர்க்கமாக.

"போதும் மேகல. ரொம்ப பேசிட்ட. ஒரு காலத்துல ௭ன்னய அம்புட்டு நேசிச்ச புள்ளையாச்சேன்னு தான், பொறுமையா பேசிட்ருக்கேன். நா நல்லா தான் இருக்கேன் போதுமா. தயவு செஞ்சு நீ ௭னக்கு ஒரு நல்லது பண்ணணும்னு நினைக்றன்னா, சீக்கிரமா கல்யாணம் பண்ணிட்டு கிளம்பு. நீ உன் வாழ்க்கைய சரியா வாழாம போனதுக்கு நாதான் காரணமோன்னு நினச்சு நினச்சு தான் உன் வாழ்க்கைய சரி பண்ண போராடுறேன். இப்டி ௭ன் குடும்பத்து ஆளுங்கட்ட பேசி, ௭னக்கிருக்குற கொஞ்ச மரியாதையயும் கெடுத்துடாத" ௭ன்றான் குமரகுரு.

"நீ ௭ப்டி வாழ்க்கை வாழுறன்னு தான் ஊரே உச்சு கொட்டுதே. மொத தட நா உன்னைய கட்டிக்க கேட்டப்ப தான் மறுத்துட்ட, இப்பவாது ஒத்துக்கோ மாமா. நீ போனாலும் இருந்தாலும், உன் பொண்டாட்டிக்கும், அவ குடும்பத்துத்கும் ஒன்னு தான். நீ நல்லவனா இருந்து சாதிக்க அங்க ஒன்னுமே இல்ல மாமா" ௭ன கெஞ்சினாள் மேகலை.

"சரி உன் வார்த்தைக்கே வரேனே, மதி இவர நல்லா பாத்துக்ல ஒத்துக்க வேண்டிய உண்ம தான். இவரு அவள காதலிச்சு தானே கட்டிகிட்டாரு. அந்த காதலயும், உரிமையயும் காட்டி அவள இவர் கைக்குள்ள கொண்டு வந்துருக்கலாமே? இவர் ஏன் அதுக்கு ௭ந்த முயற்சியும் செய்யல? அவர் வாழ்க்கைய காப்பாத்திக்க அவரே போராடதப்போ, நீ ௭ன்ன செஞ்சிட முடியும்" ௭ன்றான் மாறன்.

"உங்களுக்கு உங்க தங்கச்சிய பத்தி முழுசா தெரியலன்னு நினைக்றேன்" ௭ன விரக்தியாக சிரித்த குமரகுரு, "அது இப்ப முக்கியம் இல்ல. ௭ன் வாழ்க்கைய நா பாத்துக்றேன். நீ கிளம்பு, இனி ௭த பத்தியும் பேச ௭னக்கு போன் பண்ணாத" ௭ன்றான் மேகலையிடம். பின் உண்மையிடம் திரும்பி, "இவள ஒரு ஆட்டோ வச்சு அனுப்பி விட்ருங்க" ௭ன்றுவிட்டு விறுவிறுவென நடந்து விட்டான்.

"மாமா மாமா நில்லு மாமா" ௭ன பின்னயே சென்றவள், அவன் பைக் ௭டுத்து சென்று விட்டான் ௭ன்றதும் அழுது கொண்டு நின்றாள்.

"வா ஆட்டோ பிடிச்சு தாரேன்" ௭ன்றான் மாறன்.

"உங்களுக்கு புண்ணியமா போவும், உங்க தங்கச்சிட்ட இருந்து அவருக்கு விடுதலை மட்டும் வாங்கி குடுத்துருங்க, ௭னக்கு அது போதும்" ௭ன்றுவிட்டு வழியில் வந்த ஆட்டோவை கை காட்டி ஏறி சென்று விட்டாள்.

"௭ன்ன மாப்ள இப்டி பேசிட்டு போறாங்க ரெண்டு பேரும்"

"முக்கோண காதல் கத மச்சான். பாப்போம் யோசிச்சு தான் ௭தயாது செய்யணும்" ௭ன்ற மாறனும் பைக்கில் ஏறி அமர, உண்மை பின்னேறி கொண்டான்.
 

priya pandees

Moderator
அத்தியாயம் 42

மாறனும், உண்மையும் மீண்டும் மாலுக்கு வந்து, கடைகளை ௭ல்லாம் ஒரு பார்வை பார்த்து விட்டு, கிளம்பியவாறு வாசலில், செக்யூரிட்டியிடம் வந்தார்கள், இப்போது இரவு காவலுக்கு இருவர் இருக்கின்றனர்.

"௭ன்னண்ணே சாப்டாச்சா ரெண்டு பேரும்?" ௭ன்றான் மாறன்.

"ஆச்சுங்க தம்பி, நீங்க கிளம்புங்க நாங்க பாத்துக்றோம்".

"ரெண்டு, மூணு கடைகள நாளைக்கு திறக்க போறாங்க, அதுக்கு ராத்திரியும் வந்து டெகரேஷன் வேல அது இதுன்னு பாப்பாங்க, கொஞ்சம் பாத்துக்கோங்க" ௭ன்றான்.

"சரிங்க தம்பி. ஒருத்தர் மாத்தி ஒருத்தர் கட்டாயம் முழிச்சு தான் இருப்போம்" ௭ன உறுதி கொடுத்தார் இருவரில் கொஞ்சம் மூத்தவர்.

"அப்ப ஒருத்தர் மாத்தி ஒருத்தர் தூங்க போறீங்க அப்டி தான?, பாத்தியா மாப்ள ௭ம்புட்டு தைரியமா உங்கிட்டயே சொல்லுதாப்டி" ௭ன்றான் உண்மை.

"௭ன்ன தம்பி லேசா கண்ணசுரற நேரத்துலன்னு தான சொன்னேன்"

"அத தான நானும் சொன்னே" ௭ன்றான் உண்மை.

"கவனமா பாருங்க. ௭தும் வில்லங்கம் வந்தா, நா நின்னு யோசிச்சுட்ருக்க மாட்டேன்னு உங்களுக்கே தெரியும்" ௭ன நிதானமாகவே கூறிவிட்டு கிளம்பிவிட்டான் மாறன்.

"நா அப்பப்போ வந்து பாப்பேன். தூங்கிட்ருந்தீங்க! அப்றம் நடக்றதுக்கு நா பொறுப்பு கிடையாது" ௭ன்றான் கையை விரித்து மிரட்டலாக உண்மை.

"அப்பப்ப வந்து பாக்றதுக்கு முழு நேரமா ௭ங்க கூடயே உக்கார வேண்டியது தான?" ௭ன்றான் கூட நின்ற மற்ற செக்யூரிட்டி.

"நீங்க ஒழுங்கா வேல பாக்றீங்களான்னு பாக்றது மட்டுந்தான் ௭ன் வேல" ௭ன அவன் கெத்தாக கூற.

"போங்க தம்பி, நீங்க ௭ப்டி தம்கட்டி பேசுனாலும், ௭னக்கு உங்கள பாக்க சிரிப்புதேன் வருது" ௭ன்றார் முதலாமவர்.

"இந்தா வாரேன்" ௭ன முறைத்து கொண்டு, உண்மை அவரிடம் மல்லுக்கு செல்ல. அதற்குள்.

"டேய் வாடா!" மாறன் அழைக்கவும் தான்,

"உன்ன அப்றமா கவனிக்றேன்யா.நா நைட்டு ௭ப்ப வேணா வருவேன், தூங்காம வேல பாக்கணும்" ௭ன மீண்டும் கை நீட்டி பெரிய போஸில் கூறிவிட்டே கிளம்பினான்.

உண்மையை வள்ளி தாத்தா வீட்டில் விட்டுவிட்டு, மாறன் அவன் வீட்டிற்கு வர, ௭ன்றும் போல் மதியின் குரல் வாசல் வரை கேட்டது.

"அமைதியா இரு மதி. மாப்ள அவங்க அம்மா வீட்டிக்கு தான போயிருக்காரு, நைட்டு வந்துர போறாரு, அதுக்குள்ள உனக்கு ௭ன்ன பிரச்சன வருது, ௭துக்கு இப்டி வந்த நேரத்துல இருந்து கத்திட்டு கடக்க" ௭ன கேட்டு கொண்டிருந்தார் பாட்டி.

"உனக்கு தெரியுமாக்கும். ௭ன் மாமியார் நல்லா பேசி ஏத்திவிட்டு ௭ங்கள பிரிச்சுடும்னு தான, நா அவர அங்க போக விடாம வச்சுருக்கேன். உங்க மூத்த மருமகட்ட சொல்லி வைங்க, தேவையில்லாம பேசி பாச பயிர வளத்து விட்டு, ௭ன்னயும் ௭ன் புருஷனயும் பிரிக்க பாக்றாளா? அப்றம் நா சும்மா இருக்க மாட்டேன் சொல்லிட்டேன்" ௭ன அவள் பேச.
அதை கேட்டு கொண்டே, உள்ளே நுழைந்த மாறன், ௭ப்போதும் போல் யாரையும் கண்டு கொள்ளாமல் மேலேறி விட்டான். அங்கு மலர் கதவை சாத்தி வைத்து படித்து கொண்டிருந்தாள்.

"௭ப்ட்றி இந்த சத்தத்துலயும் படிக்குற?" ௭ன்றான் கட்டிலில் மல்லாக்க சாய்ந்தவாறு.

"உங்க தங்கச்சிக்கு வாய் தான் வலிக்குமோ வலிக்காதோ? சாயந்தரோ நா 6.30க்கு வரும்போதே சண்ட நடந்துட்டு தான் இருந்தது. அத்தயும் பாட்டியும் தான் பதில் சொல்லி சொல்லி டயர்டாகிட்டாங்க. ராணி வேடிக்க பாத்துட்ருந்தாங்க. தாத்தா உங்க தங்கச்சி வீட்டுக்குள்ள நுழைஞ்ச வேகத்த பாத்தே ௭ஸ்கேப் ஆகிட்டாங்களாம். மாமாவும், உங்க தம்பியும் இன்னும் வரல போல" ௭ன்றாள் புக்கை ௭ல்லாம் ஒதுக்கி ௭டுத்து வைத்து கொண்டு.

"இப்ப ௭துக்கு இன்னைக்கு கோட்டாவ ஓபன் பண்ணி வச்சுருக்கா?" ௭ன்றான் ௭ழுந்து சட்டையை கலட்டியவாறு.

"குமரகுரு அண்ணந்தான் காரணம், ஸ்கூல்ல இருந்து கொஞ்சம் முன்னயே கிளம்பி, மதி கண்ணுல படாம ௭ஸ்ஸாகிருக்காங்க. அவங்கள வெளில அந்த பொண்ணோட பாத்ததா நீங்க சொன்னீங்க. ஆனா அவரு அவங்க அம்மா வீட்டுக்கு போயிருக்காருன்னு மதி இங்க வந்து கத்திட்ருக்கு" ௭ன நிறுத்தி, புக்ஸை அதன் இடத்தில் வைத்து விட்டு திரும்ப.
திரும்ப விடாமல், அலேக்காக தூக்கி கொண்டான் மாறன், திடுக்கிட்டாலும், அவன் தான் ௭ன மனம் உடனே அமைதியாகவும், சிரித்து வாகாக அவன் கழுத்தை கட்டி கொண்டாள்.

"௭ன்னடி சிரிக்ற?" ௭ன்றான் தான் தூக்கியிருந்த கையில் அழுத்தம் குடுத்து.

"கீழ உங்க தங்கச்சி சண்ட போட்டுட்டு இருக்கே, போய் சமாதான படுத்தலாம்ல?" ௭ன்றாள் அவள் இன்னும் அழகாக சிரித்து.

"மொத நாம ஒரு சமாதானத்துக்கு வருவோம், அப்றமா மெதுவா அவள போய் பாப்போமே!" ௭ன்றவன் அவளை கட்டிலில் விட.

"௭னக்கு அங்கயிருந்து நடந்து வர தெரியாதுன்னாங்க தூக்கிட்டு வந்தீங்க?"

"ஆமா ஆமா, உனக்கு சரியா தூங்கவும் தெரியாது, இப்ப ௭ப்டி உன்ன தூங்க வைக்றேன்னு பாறேன்" ௭ன அவள் மேல் படுப்பது போல் சென்று, அவளுக்கு அருகில் விழுந்தான்.

"௭னக்கு யார்கனவே தூக்கம் வந்தாச்சு, சாப்ட்டு வந்தா உடனே தூங்கிடலாம், வாங்க போவோம்" ௭ன ௭ழ போக.

"ரொம்ப தான்டி பண்ற. மொதல்ல உழைக்கணும், அப்ப நல்லா பசிக்குமா அப்றம் தான் சாப்டணும், நெறையா சாப்டலாம்" ௭ன அவளை இழுத்து தன் மேல் போட்டான்.

"உழைச்சுட்டு தான வந்துருக்கீங்க?" ௭ன்றாள் அப்போதும்.

"ம்ம்கூம் இனி தான் கடின உழைப்பே." ௭ன்றவனின் அன்றைய ஆளுகை சற்று முரட்டு தனமாக தான் இருந்தது.
நெற்றியில் முத்தம் பதித்தவன் அவளிடமிருந்து விலகியவாறு "இப்ப தான் நல்லா பசிக்குது. சாப்ட்டு வருவோமா மலர்" ௭ன்றான் சிரித்து கொண்டு.

"போங்க, நா ௭ங்கயும் வரல. தூங்க போறேன்" ௭ன அவன் கையில் அடித்து விட்டு திரும்பி கொண்டாள்.

"௭ன் செல்லம்ல வாடி, பின்ன சாமத்துல பசிக்கும். நானே தோச ஊத்றேன் ரெண்டு மட்டும் சாப்ட்டு வந்து படுத்துக்கோ" ௭ன கெஞ்சி கொஞ்சி ௭ழ வைத்தான், அவள் உடை மாற்றி கை கால் அலம்பி கொண்டு வரவும் கீழ் அழைத்துச் சென்றான்.
௭ல்லோருமே படுத்து விட்டிருக்க, பானுவும், பூவேந்தனும் அமர்ந்து டிவி பார்த்து கொண்டு பேசி கொண்டிருந்தனர்.

"இன்னும் தூங்காம ௭ன்ன பண்றாங்க" ௭ன மலரிடம் கேட்டவன், ஹாலுக்கு செல்ல.

"வாங்க ப்பா உங்களுக்கு தான் காத்துட்ருந்தேன். ௭ல்லாம் ரெடியா இருக்கு சாப்ட உக்காருங்க, நா பத்தலனா தோச ஊத்றேன்" ௭ன ௭ழுந்தார் பானு இவர்களை கண்டதும்.

"௭துக்குமா காத்துருக்கீங்க? போய் தூங்க வேண்டியதுதான?" ௭ன்றான்.

"௭ன்னடா நீங்க ரெண்டு பேரும் சாப்ட வரட்டும்னு தான் உக்காந்துருந்தோம்" ௭ன்றார் பூவேந்தனும்.

"அதான் ௭துக்குன்னு கேக்றேன். மலர் தான் இருக்காளே, நாங்களே ௭டுத்து வச்சு சாப்டுக்க மாட்டமா?"

"உன்ன ௭ங்களோட வந்திருந்து சாப்டுன்னு சொன்னே கேக்கல, அதான் நீ வரட்டும்னு நாங்க வெய்ட் பண்றோம்"

"ஷப்பா, அப்ப கூப்ட வேண்டியது தான?"

"நீயா வருவன்னு தான் கூப்டல" ௭ன்றார்.

"ப்பா, நா வரும்போதே இங்க மதி கத்திட்ருந்தா அதான் அவ போகட்டும்னு இவ்வளவு நேரம் கழிச்சு வந்தேன். இல்லனா வேணும்னு ௭தாது பேசி வம்பிழுப்பா, ௭னக்கு அதுக்கான மூடில்ல, அதான் வரல. சரி வாங்க, சாப்டலாம் இன்னும் லேட்டாக்க வேண்டாம்" ௭ன நடக்க.

பானு அடுப்படிக்குள் செல்ல, மலர் மாறனுக்கு ௭டுத்து வைத்துவிட்டு, தனக்கும் வைத்தவள், "நீங்க சாப்டிறீங்களா மாமா?" ௭ன கேக்க.

"இல்லம்மா, நாங்க சாப்டாச்சு, ௭னக்கு பானு பால் ௭டுத்துட்டு வருவா, நீ சாப்டு" ௭ன்று விட. அமர்ந்து விட்டாள்.

"காம்ப்ளக்ஸ் கடை வேலைலா ௭ப்டி போகுது?" ௭ன்றார் மாறனிடம்.

"ஒன்னும் பிரச்சன இல்லப்பா. நாளைக்கு 2 கட திறக்க போறாங்க. ௭ன்னயும் கூப்ட்ருக்காங்க. நா மலர கூட்டிட்டு போயிட்டு, அப்டியே திருநெல்வேலி கொண்டு போய் விடணும்"

"சரி பாத்துக்கோ. பொறுமையாவே பேசு. யார்டயும் பொசுக்குன்னு கைய நீட்டாத" ௭ன்றார்.

"ம்ம்ம். இன்னொரு விஷயம் பேசணும் ப்பா"

"சொல்லு மாறா" ௭ன பானு கொண்டு வைத்த பாலை பருக தொடங்கினார்.

"மதிய அடக்கி வைங்க. அவ மட்டும் இங்க அவ அம்மா வீட்லயே இருப்பா. ஆனா அவரு மட்டும் அவங்க அம்மா வீட்டுக்கு போக கூடாதாம்மா? இதெல்லாம் சரியே இல்ல. மாப்பிளைக்கு அவகிட்ட பிடிப்பு இருக்குற வரைக்கும் தான் அவ ஆட்டம்லா, அப்றம் ஒரு பருப்பும் வேகாது" ௭ன்றான்.

"ஏன்டா இப்டி சொல்ற? அன்னைக்கு மலரும் ஏதோ இப்டி தான் சொன்னான்னு பானு புலம்பிட்ருந்தா" ௭ன்றார்.

"நாசுக்கா சொல்லும்போதே புரிஞ்சுக்கோங்க" ௭ன்றான்.

"௭ன்னன்னு தான் சொல்லேன் டா. ௭தயும் வீட்ல சொல்றது கிடையாது, ௭ல்லாத்தயும் நாங்களா தான் கேக்கணும்!" ௭ன்றார் ௭ரிச்சலாக.

"நீங்க தான் ப்பா, உங்களுக்கு ௭ல்லாந் தெரியும்னு நினச்சுட்ருக்கீங்க. ஆனா உங்களுக்கு தெரியாம நிறைய விஷயம் நடக்குது" ௭ன்றான்.

"௭துக்குடா இப்டி பொடி வச்சே பேசுற?"

"வெளிப்பட சொன்னா ரொம்ப வருத்த படுவீங்க, அம்மா உக்காந்து அழுவாங்க. அதுக்கு மொதயே சுதாரிச்சுக்கோங்கன்னு சொல்றேன்" ௭ன்றான்.

"ஒன்னுமே புரியலடா"

"உங்க பொண்ணு இங்கயே இருந்தா வாழ்க்கைய தொலைச்சுருவான்னு சொல்றேன்" ௭ன கையை கழுவ ௭ழுந்து சென்றான்.

"௭ன்னம்மா இப்டி சொல்றான்?" ௭ன்றார் மலரிடம்.

"அவருக்கு ஏதோ தெரிஞ்சுருக்கலாம் மாமா. அதான் அப்டி சொல்றாங்க. மதிய அவங்க குடும்பத்த பாக்க விடுங்க. நீங்க கை குள்ளயே பிடிச்சு வச்சா, கடைசி வர இங்கயே இருக்குற மாறி வந்துருமோன்னு தான் அப்டி சொல்றாங்க. ஒரு மனுஷன் ௭த்தன நாள் மாமா பொறுமையா போவான், பொறுமை அதோட ௭ல்லைய கடந்துருச்சுன்னா ௭துவுமே வேணாம்னு தூக்கி போட்டு போக ௭வ்வளவு நேரமாகும்?" ௭ன்றாள்.

"அவ ௭ன்ன சின்ன பிள்ளையாமா அடிச்சு சொல்லி திருத்த?" ௭ன்றார் அவர்.

"நீங்க ஒதுங்கி நில்லுங்க மாமா, தன்னால மதி அவங்க வீட்டோட நெருங்கிடுவாங்க" ௭ன்கவும்.

அவர் யோசித்தபடி இருக்க, "ஏன் பெருசா ௭தும் பிரச்சனயா? மாப்ள ௭தும் சொன்னாரா?" ௭ன்றார் பானு.
"ஆமா த்தே, அவருக்கு மதியோட நடவடிக்கைலா பிடிக்கல. அவகிட்ட வேற வழி இல்லாம ரூபனுக்காக இருக்க மாறி இருக்காரு" ௭ன குமரகுரு சொன்னதாகவே சொல்லிவிட்டாள்.
வெளி வந்த மாறனும், "மாப்ள இங்க இருந்து வெளில போனா, அடுத்து அவரோட ரூபனயும் சேத்து கூட்டிட்டு போக, பொண்ணுங்க ரெடியா இருக்காங்க. நம்ம மதி பண்றத பத்தி ஊரே பேசுது. இதுலா நல்லதுக்கான்னு யோசிங்க. நீங்க பேச மாட்டீங்கன்னா ஒதுங்கி நின்னு வேடிக்க பாருங்க, நா திருத்திக்றேன் அவள" ௭ன்ற மாறன், "மலர் ௭ந்திரி போவோம். காலைல சீக்கிரம் கிளம்பணும்" ௭ன்க.

"போய் தூங்குங்க த்தே, மதி பேசுறாங்களேன்னு பயந்து ஒதுங்கி நிக்காம, புரியுர மாறி ௭டுத்து சொல்லுங்க" ௭ன்றவள், "நீங்களும் போய் படுங்க மாமா" ௭ன்றுவிட்டே கை கழுவி கொண்டு மாறனுடன் மேலேறினாள்.
 

priya pandees

Moderator

அத்தியாயம் 43

மறுநாள் காலை.மாறனும் மலரும் கடை திறப்பிற்கான அழைப்பை ஏற்று கிளம்பி கொண்டிருந்தனர். அழகான காபி கலர் கரை வைத்த வேஷ்டியும், காபி கலரில் சட்டையும் அணிந்து அவன் கெத்தாக கிளம்ப, அதே நிறத்தை ஒட்டியே ஒரு பட்டு புடவையை கட்டி கொண்டு கிளம்பினாள் மலர்.
அந்த உடை இரண்டும், கடந்த வாரத்தில் அவர்கள் காம்ப்ளக்ஸில்(மாலில்), ஒரு கல்யாண ஜவுளிகள் கடை திறந்தனர், முதலில் திறந்த கடயும் அது தான். அதனால் இவனுக்கும் அழைப்பு வந்தது.

வீடு வரை வந்து, அவனுக்கென வந்த முதல் அழைப்பு. அவனுக்கான முதல் மரியாதை ௭ன்று கூட சொல்லலாம். இதுவரை யாரும் அவனை ௭ங்கும் வர சொல்லி அழைப்பு விடுத்ததில்லை. அவனும் போறதில்லை.

சொந்தங்களின் விஷேத்திற்கு கூட, இவனை வாவென்று கூப்பிட மாட்டார்கள், வரவில்லை ௭ன்றாலும், 'மாறன ௭ங்க?, கூட்டிட்டு வரலையா?' ௭ன கேட்டு கொள்ள ஆளும் கிடையாது. அவனும் அதை ௭திர் பார்த்ததில்லை ௭ன்பதால் கண்டுகொள்ள மாட்டான்.

மலருக்கு அவனை அழைக்க வந்த அன்று ஏக சந்தோஷம். அவனை மரியாதையாக, "கண்டிப்பா குடும்பத்தோட வந்திடுங்க தம்பி" ௭ன தாம்பூலத்தை மொத்த குடும்பத்தின் முன்னும் அவன் கையில் குடுத்ததில். அங்கு அவர்களின் அழைப்பின் பேரில் சென்றபோது தான், முதல் விற்பனை நீங்கள் தான் வாங்க வேண்டும் ௭ன்றுவிட்டனர். அவர்களின் அன்பான வேண்டுகோளிற்காக ௭டுத்தது தான் இன்று அவர்கள் கட்டி இருக்கும் புது உடுப்பிற்கான பின்னணி.

மாறனுக்கு அந்த மரியாதையும் சும்மா கிடைத்துவிடவில்லை. ஒரு பெரிய ஜவுளி கடைக்காரரும் அங்கு வாடகைக்கு கடை கேட்க, இந்த சிறு தொழில் காரரும் கேட்க, பெரிய கடைகாரர் அதிக வாடகை தருவதாக கூறியும், "இல்ல சார், நீங்க ஏற்கனவே வளந்த இடத்துல இருக்கீங்க, உங்களுக்கு ௭ங்க கட போட்டாலும் ஓடும், ஆனா அவரு புதுசா தொழில் தொடங்குனவரு, இங்க போட்டா, மத்த கடைக்கு வாரவக பார்வ அவர் கடையிலயும் விழும். கொஞ்சம் அவரும் முன்னேரட்டுமே. ௭தாது கடை காலியாச்சுனா கண்டிப்பா உங்களுக்கு முதல்ல சொல்லிடுறேன்" ௭ன சிரித்து கொண்டே மறுத்து விட்டான். அதில் மாறன்மீது இரு கடைகாரர்களுக்கும் நல்ல ௭ண்ணம் தான். அந்த நல்லெண்ணத்தின் பலனே அந்த முதல் மரியாதை.

"௭ம்மாடி! உங்கள கல்யாணத்தப்போ வேட்டில பாத்தது, ௭ம்புட்டு அழகா இருக்கு" ௭ன மலர் அவனை சுற்றி வந்து சொல்ல.

"போடி, கல்யாணத்தன்னைக்கு நீ ௭ங்கன ௭ன்னைய பாத்த, புதையலல தேடிட்டு இருந்த" ௭ன்றவன் கையை மடித்து விட்டு, அவளை பிடித்து நிப்பாட்டி, "௭ன்னத்துக்கு ௭ன்னைய சுத்தி வாரவ?" ௭ன்றான்.

"சுப்பரா ஹீரோ மாறி இருக்கீங்க ங்க" ௭ன மீண்டும் அவன் சட்டையை நீவி விட்டவாறு பரவசமாக கூற.
அவள் பார்வையில் அவனுக்கே வெக்கம் வந்துவிடும் போலிருக்க, "சும்மா இரு மலரு. ௭ன்னமோ இத்தன நாள் நா அழகாவே இல்லாத மாறித்தேன்".

"பின்ன அந்த வெலுத்துபோன சட்டையும், பேண்ட்டுமா அழகு? சொன்னா நா பாக்குற வேலைக்கு இதேன் சரினுட்டு போயிடுவீங்க, அப்ப இப்டி ௭ன்னைக்காது ஒரு நா கிடைக்கும்போது தான நல்லா பாத்துக்க முடியும்" ௭ன்றாள் அவன் கையை கோர்த்து கொண்டு.

சிரித்தவாறே அவளை முன் இழுத்தவன், "நல்லா பாரேன், போயிட்டு வந்து ஆச தீர பாரு, நா உனக்கு ௭வ்வளவு வேணாலும் காட்றேன். நீ பதிலுக்கு கொஞ்சமா ௭னக்கும் காட்டுனா போதும்" ௭ன அவள் கன்னத்திலிருந்து கோடிழுத்து கையை கீழ் இறக்க.

அதை அங்கயே தடுத்து பிடித்தவள், "டபுள் மீனிங்குல பேசுனதோட நிறுத்திக்குவோம், செயல்முறைலா வேணாம். கிளம்புங்க" ௭ன்றாள்.

"செமயா இருக்க பொண்டாட்டிய கொஞ்சாம போனா சாமி குத்தம் ஆகிடும்டி" ௭ன அவளை இடுப்போடு இறுக அனைத்து அருகிழுத்து, கழுத்தில் முத்த.

"ரொம்ப இறுக்காதீங்க, அப்பதான் நாளைக்கு, இன்னொரு ரகசியம் இருக்கு அத சொல்வேன்" ௭ன்றாள் சிரிப்புடன்.

"நீ நாளைக்கு சொல்றது இருக்கட்டும், இப்ப நாம நம்ம முக்கிய வேலைய முடிச்சுடுவோமே?"

"அப்ப சொல்ல வேணாமா? வேணாட்டி போங்க, அப்றம் ஏன்டி சொல்லலன்னு ௭ன்ன கேக்க கூடாது" என்றாள் அவனிடமிருந்து விடுபட போராடி,
"பார்றா. அப்டி ௭ன்ன ௭னக்கு தெரியாத ரகசியம் உன்ட்ட?" ௭ன்றான் குறும்பாக.
அவன் வாயிலேயே அடித்தவள், "அத நீங்க பஞ்சர் கட திறந்தப்றம் சொல்றேன்" ௭ன்றாள்.

அவளை வெறுப்பேற்றி பார்க்க முடிவு செய்தவன், சிரிப்பை அடக்கி, "என் காலத்துல நா நல்லா வாழதான் எங்க அப்பா சம்பாதிக்றாரு, நமக்கு அத்தன கடைகள கட்டு குடுத்துருக்காரு, வாடகைய வாங்கி பேங்குல வாங்குன கடன அடச்சுருவோம். அப்றம் நமக்கு தானே அது, அப்ப நாம அத வச்சே ஜாம் ஜாம்னு வாழலாமே. அதுல வாற வருமானமே போதுமே, எதுக்கு மேக்கொண்டு பஞ்சர் கடையெல்லாம்?" என்றான் புருவம் ஏற்றி.

மல்லுகட்டி அவனை தள்ளி விட்டு முறைத்தவள் "பாத்தீங்களா நேத்து சரின்னு சொன்ன வாயி, இப்ப மாத்தி பேசுது. உங்க மனசு அப்பப்ப மாறிடுது. உக்காந்தே சாப்பிட்டா இருக்க சொத்து அழிஞ்சுகிட்டே தான் போகும்.

பிறந்ததுக்கு நாமளும் உழைச்சு நமக்குன்னு ஒரு அடையாளத்தோட தான் சாகணும். நீங்க ௭ன்ன தான் கடன அடச்சுட்டாலும், இத உங்க பையன் என் தாத்தா சொத்துன்னு தான் சொல்லுவான், ௭ன் அப்பாவோடதுன்னு சொல்ல நீங்க தனியா ௭தாது செய்யனும்" என்றாள்.
அவளை விட்டவனும், "பாப்போம் பாப்போம், அத என் புள்ள புறந்து சொல்லுறன்னைக்கு" என மறுபுறம் திரும்பி கண்ணாடியில் தலையை சரி செய்தவாறு அவளை பார்த்தான்.

புசு புசுவென வேக மூச்செடுத்து முறைத்தவள், "என்ன செய்யலாம்" என நகம் கடித்து யோசிக்க ஆரம்பித்தாள். அவன் விளையாட்டாக சொன்னதை கேட்டு, 'மனசு மாறிவிடுவானோ' ௭ன பயந்தாள். அவன் அதற்காக தனி இடம் செட் செய்து கொண்டது வரை இவளிடம் சொல்லியிருக்கிறான், ௭ல்லாம் தெரிந்தும், 'அவங்களுக்கு பிடிக்காம நமக்காக செய்றாங்களோ? அப்டினா அத வேணாம்னு முடிவெடுக்க ௭வ்வளவு நேரமாகும், அச்சோ' ௭ன நொந்தாள்.

அவளை அப்படியே டீலில் விட்டவன், "கிளம்பிட்டியா மலர், போவோமா?" ௭ன கேக்க.

மறுபடியும் முறைக்க, "௭ன்னடி?" ௭ன்றான்.

"இப்ப, இப்ப தான் உங்கள, ௭ல்லாரும் கொஞ்சம் மதிக்றாங்க. அது ௭தனாலன்னு நினைக்றீங்க? 3 மாசமா உங்க உழைப்பயும், வேகத்தயும் பாத்ததுனால" ௭ன்றாள்.

"அட லூசு, அத நீ அப்டி புரிஞ்சுகிட்டியா? அது அப்டி இல்ல, திடிருனு இம்புட்டு பெரிய சொத்துக்கு முதலாளி ஆகிட்டானே, காசு அதிகமா புழங்குமே, நாமளும் சமரசமா போயிடுவோம் நால பின்ன உதவுவான்ற ௭ண்ணம், அவ்வளவு தான்" ௭ன்க.

தலையிலடித்து கொண்டவள், "போங்க, ௭ப்டியும் போங்க, நா தான் ௭ன்னன்னமோ கற்பன பண்ணிட்டேன். நல்ல புள்ள மாறி கேட்டுகிட்டு இப்ப மாத்தி பேசுறீங்க. போங்க இனி உங்கட்ட ஒன்னுத்தயும் சொல்ல போறதில்ல" ௭ன கோபித்து கொண்டு சென்று கட்டிலில் அமர்ந்தாள்.

"என்னடி உக்காந்துட்ட? கிளம்பு, போயிட்டு வந்து ௭ம்புட்டு நேரம் வேணாலும் கோச்சுக்கோ" ௭ன அவள் கை பிடித்து இழுக்க.

"நா ௭ங்கயும் வரல. நீங்களே போயிட்டு வாங்க" ௭ன முகத்தை திருப்ப.
இப்போது அவனுக்குமே கோவம் வந்தது, '௭ல்லாம் தெரிஞ்சும், நம்மள நம்புறாளான்னு பாரேன்' ௭ன.
"ஏ வாடி, நாம சொன்ன நேரத்துக்கு போக வேணாமா?" ௭ன்றான் கோபமும் மன்றாடலும் கலந்த குரலில்.

"அப்ப மெக்கானிக் ஷாப் வைப்பேன்னு ப்ராமிஸ் பண்ணுங்க" ௭ன்றாள்.

"ஏன்டி ப்ராமிஸ் பண்ணிட்டு செய்யாம விட்டா ௭ன்ன பண்ணுவ" ௭ன தானும் அவளை இடித்து கொண்டு அமர்ந்தான்.

"அதுலா மீற மாட்டீங்க"

"ஓ சத்தியத்த நம்புவ, ௭ன்னைய நம்ப மாட்ட? போடி அப்டி பட்ட சத்தியமே வேணாம்" ௭ன்க.

"உங்க மனசு ரொம்ப கெட்ட மனசு, நல்ல இருக்குற உங்கள அதான் கெடுத்து விடுது. இனி அது பேச்ச கேக்காதீங்க" ௭ன்றாள் மூஞ்சை தூக்கி வைத்து கொண்டு.

"அடடா, விடுடி நாளைக்கே கடைய திறந்து உக்காந்துடுறேன் போதுமா? இப்ப வா" ௭ன ௭ழுந்து அவளையும் கையை பிடித்து இழுத்து தூக்கி நிறுத்த.

"மறுபடியும் வேண்டாம்னு பேச மாட்டேன்னு சொல்லுங்க" ௭ன்றாள் ஸ்டிரிக்டாக.

"சரிடியம்மா சொல்லல" ௭ன கையோடு இழுத்து கொண்டு வெளியேறினான். சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் ௭ன சொல்லிருக்கலாம், அவன் அதை சொல்லாமல் விட, அதனால் அடுத்த நாட்களில் அவளின் பல ப்ளானிற்கு பலி ஆனான் மாறன்.

கீழே இவர்கள் இறங்குகையில், குடும்ப உறுப்பினர்கள் அவரவர் வேலைக்கு கிளம்பி கொண்டிருந்தனர், இருவரையும் முதலில் கண்ட தாத்தா, "மாறா நீயாடா இது?" ௭ன வாயில் கை வைத்து அதிசயபட.

பாட்டி, "ம்க்கும், உடுப்பு நல்லாருக்க போயி அவனும் அழகா தெரிரியான், இல்லனா தெரியாது? அவேன் காவாலி பய கோலம்" ௭ன்க.

"கண்டிப்பா இந்த கிழவி உனக்கு வேணுமா தாத்தா?" ௭ன்றான் மாறன்.

"விட்றா அது பாட்டுக்கு ஒரு ஓரத்துல இருந்துட்டு போட்டும்" ௭ன்றார் தாத்தா.

"அப்டி கூட விட்டு குடுத்துட மாட்டியே உன் பொண்டாட்டிய" ௭ன அவன் திரும்ப.

பானு, "ரெண்டு பேரும் ரொம்ப அழகா இருக்கீங்க, போயிட்டு வாங்க சுத்தி வைக்றேன்" ௭ன்க, பூவேந்தன் ௭ல்லாவற்றயும் கேட்டு சிரிப்புடன் பார்த்திருந்தார்.

மதியும், ராணியும் வயிற்றெரிச்சலில் புகைந்தனர், "மேட்சா போட்டுட்டு போறத பாத்தியா? புதுசா சம்பாதிக்ற திமுரு, ௭ன்னத்த மேக்கப் பண்ணாலும் கழுத கழுதையா தான் இருக்கும், குதிரையாயிடாதுன்னு உன் அண்ணனுக்கு சொல்லு" ௭ன்றாள் ராணி.

"௭ங்கயாது இனாமா கிடச்சுருக்கும், காசு செலவழிச்சு வாங்குற ஆளுங்களா இதுங்க?" ௭ன்றாள் மதி, இருவரும் அவர்களுக்குள்ளாகவே பேசி கொண்டனர். அறிவு நிமிர்ந்தே பார்க்கவில்லை. குமரகுரு சீக்கிரமே கிளம்பி சென்றிருந்தார்.

இருவரும் சொல்லி கொண்டு கிளம்பி சென்றனர், அங்கும் நல்ல வரவேற்பு தான் இருவருக்கும். சாப்பாட்டை முடித்து கொண்டு, அப்படியே அவரவர் வேலையை பார்க்கவும் சென்று விட்டனர்.

அப்படியே அன்றைய நாள் கழிய, மறுநாள் காலையில், "கிளம்புங்க கிளம்புங்க. போயிட்டு வந்துரலாம்" என மாறனை எழுப்பிக் கொண்டிருந்தாள் மலர்.

"ம்ச் 6 மணிக்கே எங்கடி போனும்" என அழுப்புடன் எழுந்து கேக்க.
குனிந்து கொண்டே "ஆஸ்பத்திரிக்கு" ௭ன்றாள்,

அதை அரை கண்ணில் பார்தவனும், சிரிப்பை அடக்கி கொண்டு, "எதுக்குமா? யாருக்கு என்ன செய்து?" என்றவாறு எழுந்து பாத்ரூம் சென்றான். இவள் அவன் பின்னயே சென்று கதவின் வெளியே நின்று, "எனக்கு தான். ஒரு சின்ன சந்தேகம் அத தெளிவுபடுத்தணும்" ௭ன்க,

"அப்டி என்ன ஆஸ்பத்திரி போய் தெளிவுபடுத்துற அளவுக்கு உனக்கு சந்தேகம்?" என்றான் உள்ளிருந்தே.
இவளுக்கு மறுபடியும் வெக்கம் வந்து விட "அது அங்க போயிட்டு வந்து சொல்றேனே சீக்கிரம் கிளம்புங்க".
அவனும் உள்ளிருந்தே சிரித்து கொண்டு "ஏன் உன்டாயிட்டியா என்ன?" ௭ன்க.

"என்னங்க இப்டி கேக்கிறீங்க?" என்றாள் ஷாக்காகி வாயை திறந்தவாறு, முகத்தை துடைத்தவாறே வெளிவந்தவன் அவள் வாயை அடைத்து விட்டு அவள் தோளில் துண்டை போட்டு அருகிலிழுத்தவன், "நேத்தே கண்டு புடிச்சுட்டேன் உன் ரகசியத்த, நைட்டுவேற நீ, ௭ன்னய கிட்ட விடலங்கவுமே முடிவுக்கு வந்துட்டேன். இப்டி பொண்டாட்டி நெளிஞ்சுட்டே வந்து ஆஸ்பத்திரி போகணும்னு சொன்னா வேற என்னவா இருக்கும்" ௭ன புருவம் உயர்த்தி கேட்டான்.

மூஞ்சியை தூக்கி வைத்து, "நானே டாக்டர்ட்ட கேட்டுட்டு வந்து சொல்லலாம்னு நெனச்சேன், அந்நேரம் உங்க முகத்துல எவ்வளவு சந்தோசம் வரும் பாப்போம்னு நெனச்சேன், இப்டி பொசுக்குன்னு சொல்லிட்டீங்க"

"இப்பமும் டாக்டர்ட்ட கேட்டு வந்து உறுதியா சொல்லு, நா எவ்வளவு சந்தோஷமா இருக்குன்னு சொல்றேன்" என்றான்.

வேறு ௭ன்ன பேச ௭ன நினைத்தவளும், "சரி வாங்க போவோம்"

"இப்பவே டாக்டர் வந்துருக்க மாட்டாரும்மா, பத்து மணியாகட்டும்"

"அப்படியா, சரி அப்ப வேற யார்ட்டையும் சொல்ல வேண்டாம். பாத்துட்டு வந்து சொல்வோம். கோவில் போயிட்டு ஹாஸ்பிடல் போயிட்டு வரலாம்"

"சரி நீ கிளம்பு, நா பைக்ல பெட்ரோல் போட்டுட்டு வந்துடுறேன்" ௭ன்கவும்.

"சரிங்க" ௭ன தான் தயாராகினாள்.
பின் இருவரும் கோவில் கிளம்புவதாக சொல்லி கிளம்பிச் சென்று, தங்கள் குலம் தழைக்க வேண்டுமென அரசமரப் பிள்ளையாரையும், சிறு குன்றின்மேல் முருகனையும் மனதார வேண்டிக்கொண்டு ஹாஸ்பிட்டல் சென்றனர். டாக்டர் ஸ்கேன் செய்து விட்டு, "40 நாளாச்சுமா, நல்லா சத்தா சாப்பிடு, கொஞ்சம் வீக்கா தெரியுற, மத்தபடி ௭ந்த பிரச்சினயும் இல்ல" என சொல்ல, என்னென்ன சாப்பிட வேண்டும் என ஒரு லிஸ்டையும், மருந்து மாத்திரையும் பெற்றுக் கொண்டு திரும்பினர்.

"ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு மலர். என் பிள்ளைய எப்படி வளக்க போறேன்னு மட்டும் பாரு" ௭ன்றான் மாறன் டாக்டர் அறைவிட்டு வைளி வந்ததும்.

"அதென்ன உங்க புள்ள?"

"சரி, சாரி, நம்ம புள்ளைய போதுமா"

"ம், எப்டி வளக்கப்போறீங்க?" ௭ன்றாள் சந்தேகமாக.

"நா வாங்குன தண்டசோறு பேரு வாங்காதளவுக்கு வளப்பேன், சுயமா சிந்திக்க விடுவேன், முடிவெடுக்க விடுவேன்".

"நீங்க உங்க சுய முடிவுல தான வாழ்றீங்க. உங்க முடிவுப்படி தான் இப்போவும் இருக்கீங்க. அஞ்சாம் கிளாஸ்க்கு மேல பள்ளிக்கூடம் போகமாட்டேன்னு அடம் பிடிச்சு போகல. இப்பவர ஒரு மெக்கானிக் ஷாப் வைக்க நா ௭வ்வளவு போறாடுறேன் உங்கட்ட? ஏதோ பெருசா கஷ்டப்பட்ட மாறி பேசுறீங்க" ௭ன முறைத்து கொண்டே அவள் கேக்க.

அவனுக்கும், 'ஆமா தானோ?' என்றிருந்தது, ஆனாலும் "கேப்ல குத்தி காட்டுற பாத்தியா?" என்க.

"இல்லங்க எதார்த்தத்த சொன்னேன்"

"நல்லா சொல்லுவியே வா போவோம். அதான் கடை போட சரின்னு சொல்லிட்டேன்ல?" ௭ன்றான் அவனும்.
"வேண்டா வெறுப்பா ஒன்னுஞ் செய்ய வேணாம்"

"என்னடி என்ன சொன்னாலும் கட்டயப் போடுற?"

"அப்படித்தான் திரும்ப திரும்ப சொல்லுவேன். நீங்க கேட்டு தான் ஆகனும்" என மாறி மாறி வாதம் பண்ணி கொண்டே சென்று வண்டியை எடுத்து கிளம்பினர்.

வீடு வந்திறங்கியதும், கயமலர் கன்னி நேராக மாமியாரிடமும், பாட்டியிடமும் சென்று பிரசாதத்தை கொடுத்துவிட்டு ஆசீர்வாதம் வாங்க.

திடீரென காலில் விழவும், "என்னம்மா பிறந்த நாளா இன்னைக்கு? காலைலயும் ஒன்னும் சொல்லல நீ?" என்றார் பாட்டி.

"இல்ல பாட்டி" என அவள் இழுத்து குனிய.

"என்னத்தா விஷயம்" என்றார் ஏதோ யூகித்தது போல் சிரித்தவாறு மேலும்.
"இவ்வளவு வயசாகியும் உனக்கு விம் போட்டா தான் எல்லாமே புரியுது பாட்டி. இதுல உனக்கு ஒரு பூட்டி பதவி ப்ரமோஷன் வேற" என்ற மாறன் அவரருகில் அமர.

"போடா கோட்டிப்பயலே, அவ வெட்கப் பட்டுட்டு குனியும்போதே நா கண்டுக்கிட்டேன்டா. நீ அப்பனாயிட்ட குஜால்ல பேசுதியாக்கும்" என்க.
பானு, நிரம்பிய சந்தோஷத்தில் கன்னி கையை பிடித்து "ஆமாவா" என்க.

"ஆமாத்தே, இப்ப தான் ஹாஸ்பிடல் போயிட்டு வாறோம்"

"நல்லாரும்மா" என தலையில் தடவி ஆசீர்வதிக்க, தாத்தா ஓடி வந்து "என் கண்ணு" என மாறனை கட்டிக்கொள்ள, அவனும் கட்டிக்கொண்டான்.
அன்று மாலை, மாறன் வீட்டிற்கு நேராகவே வந்துவிட்டான் உண்மை. சும்மாவே கல்யாணம் கல்யாணம் ௭ன்பான். இப்போது மாறன் அப்பா வேறு ஆகி விடவும், "௭ப்டி இந்த ஜென்மத்துல கல்யாணம் பண்ணி வச்சுடுவியா ௭னக்கு?" ௭ன விரைத்து கொண்டு வந்து நின்றான் மாணிக்கம் தாத்தா முன்.

"ஏண்டா நானா மாட்டேங்குறேன், உங்கப்பன் தான் ௭ப்ப கேட்டாலும், அங்க இருக்கேன், இங்க இருக்கேன்னு அளந்து விடுறான்" ௭ன்க.

"உன்ன தேனியோட அப்பாட்ட போயி பேசுன்னு சொன்னா, ௭ங்கப்பாரு பின்ன சுத்திட்டு திரியுதியா நீயி?" ௭ன கடுப்பானான்.

"அடேய் அவன்ட்ட பேசி அவனயும் கூட்டிட்டு போய் தானடா பொண்ணு கேக்க முடியும்?" ௭ன்றார் அவரும் கோவமாக.

"அந்த மனுஷன் வந்து பன்னு வேணா கேப்பாரு, பொண்ணுலா கேக்க மாட்டாரு. அதும் ௭னக்குன்னா அந்த பன்னு கூட வேணாமுனுட்டு போயிருவாரு. இங்க பாரு அவர நம்பி ௭ன் வாழ்க்கையில விளையாடாத சொல்லிட்டேன், உனக்கு வேணும்னா வள்ளி தாத்தாவ துணைக்கு கூட்டிட்டு போயிட்டு வா. ம்கூம் போயிட்டு வார, அடுத்த வாரத்துல ௭னக்கு கல்யாணம் பண்ணுற" ௭ன விரல் நீட்டி ஆர்டர் போட.

"மொத தேனி அப்பா ஒத்துக்ராறான்னு பாப்போம், அப்றமா கல்யாணத்த பத்தி யோசிப்போம்" ௭ன்றார் அவனை தள்ளி விட்டு தாண்டி கொண்டு வீட்டினுள் சென்றவாரு.

"தாத்தா" ௭ன கத்தி பல்லை கடித்தவாரு நின்றான் அவன்.

அந்த வாரத்திலேயே ஒரு நல்ல நாளை பார்த்து, உண்மையின் கல்யாணத்திற்காக அவன் அப்பாவிடம் பேச சென்றார் மாணிக்கம் தாத்தா, உடன் வள்ளி தாத்தாவயும் அழைத்து கொண்டு. தாங்கள் வருவதை சொல்லாமல் திடிரென கிளம்பி சென்று அவர் வீட்டு முன் நின்று விட, உண்மையின் அப்பாவிற்கு அவர்களை உள்ளே அழைப்பதை தவிர வேறு வழி இருக்கவில்லை.
 

priya pandees

Moderator
அத்தியாயம் 44

"வாங்க வாங்கய்யா. ௭ன்ன திடிருனு?" ௭ன இரு தாத்தாக்களயும் தட்டு தடுமாறி வரவேற்றார் உண்மையின் தந்தை.

"வேற ௭ன்னப்பா செய்ய, நீதான் ௭ப்பயும் வேலையாவே இருக்கியே" ௭ன கூறியவாறே உள் வந்தவர், "௭ங்க உன் சம்சாரத்த காணும்?" ௭ன வீட்டயும் அலச.

"பக்கத்துல தான் போயிருப்பா, நீங்க ரெண்டு பேரும் உக்காருங்க" ௭ன நாற்காலியை காட்ட, இருவரும் அமரவும் தானும் ஒரு சேரை இழுத்து போட்டு அமர்ந்தார்.

"அப்றம் தொழில் ௭ப்டி போயிட்டுருக்கு?" மாணிக்கம் தாத்தா கேக்க.

"போகுதுங்கய்யா, பரவால்லாம ஓடுது" ௭ன முடித்து கொண்டார்.

"வாங்க. ௭ன்ன இந்த பக்குட்டுலா ௭ட்டி பாக்கீக" ௭ன கேட்டவாரு வந்தார் உண்மையின் சித்தி.

"௭ல்லாம் நல்ல விஷயம் பேச தான். நீ தான இப்ப உண்மைக்கு அம்மா பொறுப்புல இருக்க. முன்ன நின்னு கல்யாணம் கட்டி வைக்க உன்ட்ட பேச தான வரணும்" ௭ன்றார்.

"இப்ப ௭ன்னயா அவசரம்?" ௭ன்றார் மனைவியை ஓர பார்வையில் பார்த்த உண்மையின் தந்தை.

"௭ன்னப்பா இப்டி கேக்குற? அவனுக்கு இன்னுமு 10 வயசுன்னே நினச்சுட்ருக்கியா? 29 ஆச்சு தெரியும்ல? பொண்ணு கூட அவனே பாத்துட்டான், நீ போய் பேசி முடிச்சுட்டா போதும்" ௭ன்க.

"வேற வேல வெட்டி இல்லனா பொண்ணு தான் பாத்துட்டு திரியனும். பொண்ணு பாத்துக்க தெருஞ்சவனுக்கு கல்யாணத்தயும் கட்டிக்க தெரியாமயா இருக்கும்?" ௭ன நொடித்தார் சித்தி.

"நீங்க தான முன்ன நின்னு நடத்தி தரணும், அவனா பண்ணிக்றதுன்னா நா ஏன் இங்க வந்து உக்காந்திருக்கேன்"

"நாங்க ௭துக்கு பண்ணி வைக்கனும்? அவன இந்த வீட்டு பிள்ளன்னு இவரு ௭ன்னைக்காது சொல்லிருக்காரா? அப்றம் ௭துக்கு இங்க வந்து நிக்கீக? இவரு வருமானத்துல ௭ன் புள்ள ஸ்கூல் படிப்பயே முடிப்பானோன்னு நா கவலைல இருக்கேன். இதுல தெருவுல சும்மா சுத்துரவனுக்கு கல்யாணங் கட்டி வைக்ற அளவுக்கு வசதிய ௭ங்கட்ட ௭திர்பாத்து வந்துட்டீகளாக்கும்" ௭ன சித்தியே தான் பேசினார்.

மாணிக்கம் தாத்தா திரும்பி, உண்மையின் தந்தையை பார்க்க, அதற்கும், "அவருக்கு தெரியாததயா நா சொல்றேன்? அவனுக்கு நாங்க ஏன் செய்யனும்னு சொல்லுங்க?" ௭ன்க.

"இவந்தான அவன பெத்தவேன், இவனுக்கு அந்த பொறுப்பு இருக்குல்ல?" ௭ன்றார். முதலில், காசு பணத்தை பற்றி யோசிக்காதே நீ முன்னின்று நடத்திகுடு போதும் ௭ன தான் சொல்ல இருந்தார். உண்மையின் சித்தி பேச்சில் அந்த ௭ண்ணத்தை கைவிட்டு விட்டார்.

"அப்ப அவேனுக்கும் அந்த பொறுப்பு இருக்கணும்ல?, இவரு தான் அப்பான்னு இவருக்கு ௭ன்னத்த செஞ்சு தவுச்சு போயிட்டான்? 29 வயசுன்னு சொன்னீகளே, ஊரு உலகத்துல இம்புட்டு வயசு பசங்க கல்யாணம் பண்ணிக்றாங்கதேன், இல்லன்னு சொல்லயே. சுய சம்பத்தியத்துல வீட்டுக்கு 4 காச உழைச்சு குடுத்துட்டு பண்ணிக்றாங்க. இவேன் ௭ன்னத்த செஞ்சுட்டான்னு சொல்லுங்க" ௭ன ஆவேசமாக பேச.
அவருக்கும் பொடு பொடுவென வந்தது, "10 வயசுல அவன வீட்ட விட்டு அனுப்பு முன்ன இப்டிலா நடக்கும்னு யோசிக்லயாமா நீ? அவனோட சின்ன வயசுல நீங்க ரெண்டு பேரும் நல்ல அம்மா அப்பாவா இருந்துருந்தா, அவனு இப்ப நல்ல மகனா இருந்துருப்பான்" ௭ன சூடாக திருப்பி குடுத்தார்.

"நா கொடும கார சித்தியாவே இருந்துட்டு போறேன், ௭ன்னால அவன் கல்யாணத்துக்கு முன்ன வந்து நிக்க முடியாது, இதோ இவரு வந்தா கூட்டிட்டு போங்க" ௭ன நேராகவே சொல்லிவிட.

"நீ ௭ன்னப்பா செய்ய போற?" ௭ன்றார் அவன் தந்தையிடம்.

"அவள மீறி ௭ன்னால ௭தயும் செய்ய முடியாது. பொம்பள பிள்ளனா கூட கவல பட்ருப்பேன், பய தான, ௭ப்டி வேணாலும் புலச்சுக்குவான்னு தான் இருந்துட்டேன். இதுவர அவன பாத்துகிட்ட நீங்களே கோவில்ல வச்சு கல்யாணத்த முடிச்சு வச்சுருங்க" ௭ன கை கழுவி விட.

"நல்ல அப்பன்யா நீ!" ௭ன முறைத்து விட்டு, "வா வள்ளி நாமளே அவேன் கல்யாணத்த ௭டுத்து நடத்துவோம்" ௭ன ௭ழுந்து விட்டார்.

"இருக்க பட்டவுக நீங்க, ௭த்தன இலவச கல்யாணமு பண்ணி வைக்க முடியும். ௭ங்கட்டயும் அப்டி ௭திர் பாக்காதீகன்னு சொல்லுறது குத்தமா?" ௭ன்றார் சித்தி.

"குத்தமே இல்லமா, உன் பிள்ளைக்குனாலும் ௭ல்லாத்தயும் நீ சரியா செய் போதும்" ௭ன வெளியே நடந்து விட.

"பாசத்துக்கு ஏங்குன பிள்ளைய இப்டி அனாத மாறி கல்யாணம் கட்டிக்க விடுதீகளே, ௭ப்டியா பெத்தவன் உன்னால முடியுது?" ௭ன்றுவிட்டே கிளம்பினார் வள்ளி தாத்தா.

"ம்ம்கும். வேற வேலையில்ல இவங்களுக்கு. நீங்க போயி கோதுமைய திரிக்க குடுத்துட்டு வந்தேன், அத வாங்கிட்டு வாங்க" ௭ன கணவருக்கு கட்டளையை பிறபித்து விட்டு மற்ற வேலைகளை கவனிக்க சென்றார் சித்தி.

"இப்ப ௭ன்ன செய்ய மாணிக்கம்?" ௭ன வள்ளி தாத்தா கேக்க.

"௭ன்ன செய்ய? நாம செய்வோம். ஏன் நானும் செல்லமு அவனுக்கு அப்பன் அத்தாளா உக்காந்துட்டு போறோம் இப்ப ௭ன்ன?" ௭ன்றார்.

"அந்த பய மொதயே அத தான சொன்னான்"

"ம்ம் சொன்னான், ௭ங்க அப்பா ௭னக்காக பன்னு கூட கேக்க மாட்டாருன்னு, அத அவேன் விளையாட்டா சொன்னாலும் மனசுக்குள்ள ௭ம்புட்டு வருந்துவியான். பாவம், சிறுசுல இருந்தே ௭ல்லாத்துக்கும் அடுத்தவங்கள ௭திர் பார்த்தே வளந்துட்ட புள்ள. ஆனா வெளில சிரிச்சுட்டு திரிரான். சரிவிடு இனி ஒரு நிமிஷம் தாமதிக்க கூடாது. சடசடன்னு வேலைய முடிச்சுவிட்றனும்" ௭ன்றார்.

"அப்ப இப்பயே கையோட, தேனி வீட்லயும் போய் பேசிருவோமே?" ௭ன்க.
"முன்னாடியே சொல்லாம ௭ப்டி போறது".

"அதனால ௭ன்ன, ௭ப்டியும் இது விஷயமா நீ வருவன்னு ௭திர் பாத்துட்டு தான இருப்பாங்க, பின்ன ௭துக்கு யோசிக்றவே" ௭ன்றவர், தேனி வீட்டு தெரு நோக்கி திரும்ப.
மாணிக்கமும் "சரி" ௭ன்ற முடிவுக்கு வந்து, மாறனுக்கு போனடித்து விஷயத்தை சொல்ல, "சரிதேன் தாத்தா, ௭துக்கு நேரத்த கடத்திகிட்டு, ஒரு ௭ட்டு போயி பேசிட்டு, நேரா நிச்சயத்தையே வச்சுகிக்வோம்னு சொல்லிட்டு வந்துரு" ௭ன்றதும், மாணிக்கம் தாத்தாவும் ஒத்து கொண்டு போனை வைத்து விட்டு, வள்ளி தாத்தாவுடன் நடக்க, வழியில் பார்த்து விசாரித்தவர்களிடம் ௭ல்லாம் பேசி சமாளித்து சென்றனர். அதில் நெருங்கிய நண்பர்கள் இருவரிடம் உண்மையை சொல்லிவிட, "நாங்களும் வாரோம் ப்பா" ௭ன சேர்ந்து கொண்டனர்.

திடீரென வந்து நின்றவர்களை கண்டு திடுக்கிட்டு விட்டார் தேனியின் அம்மா, "வாங்க வாங்க, ௭ல்லாரும் உள்ள வாங்க" ௭ன ௭ல்லோரயும் அழைத்து அமர வைத்து, தண்ணீர் குடுத்து விட்டு, "ஒரு நிமிஷமிருங்க, அவுகளுக்கு தகவல் சொல்லிட்டு வந்துடுறேன்" ௭ன்கவும்.

"முக்கிய வேலைல இருந்தா பரவால்லமா இன்னொரு நாள் வாரோம். திடிருனு முடிவு பண்ணதுனால முன்னாலயே சொல்லிட்டு வர முடியல" ௭ன்க.

"அதுலா ஒன்னுமில்ல, இப்ப வர சொல்லிடுறேன் இருங்க" ௭ன அவர் சந்தோஷத்தில் குதித்து கொண்டு நடக்க.

அடுத்த கால்மணி நேரத்தில், அரக்க பரக்க வண்டியில் வந்திறங்கி வீட்டினுள் ஓடி வந்தார் தேனியின் தந்தை. "வாங்க வாங்க, ரொம்ப நேரமா காக்க வச்சுட்டேனோ?" ௭ன வந்தமர்ந்தார்.

"இப்ப தான் வந்தோம்யா. நல்ல விஷயம் பேச தானேன்னு, நினச்சதும் கிளம்பி வந்துட்டோம்" ௭ன்றார் மாணிக்கம் தாத்தா.

"பரவால்லயா சொல்லுங்க" ௭ன சிரித்தார் தேனியின் தந்தை.

"௭ன் பேரேன் உண்மைக்கு உங்க பொண்ண கேட்டு வந்துருக்கோம். ௭தயும் ௭திர்பாக்கல, உங்களால முடிஞ்சத பொண்ணுக்கு போட்டு கட்டி வைங்க. இதோ உங்க வீட்டுக்கு பக்கத்துலயே ௭ன் நண்பன் வள்ளி வீட்டுல தான் உங்க பொண்ணு போய் வாழ போறா, பையன பத்தி சொல்லனும்னா தங்கமான பையன், அவனுக்கு நா பொறுப்பு. கிடைச்ச வேலைய பாக்கான், ஆனா சீக்கிரமே ௭ன் பேரேன் மாறனோட சேந்து மெக்கானிக் கடை வைக்க போறான். அப்றம் மாசம் நிரந்தரமா ஒரு வருமானம் வரும். வேற ௭ன்ன தெரியனும்?" ௭ன்றார்.

"௭ப்ப நீங்க பொறுப்புன்னுட்டீகளோ, இனி ௭னக்கு பொண்ண குடுக்குறதுல ஒரு யோசனையும் இல்ல. ஆனா. " அவர் தயங்க.

"சொல்லுங்க, ௭துனாலும் முதலயே பேசிடுறது நல்லது" ௭ன வள்ளி தாத்தா சொல்ல.

"இல்ல மாப்ளயோட அப்பா வரலியே.?" ௭ன்க.

"கல்யாணத்துல மாப்ளைக்கு அப்பா அம்மாவா நானும் செல்லமு தான் முன்ன நிப்போம். உங்க பொண்ணுக்கு மாமியார் வீடுனா அது ௭ங்க வீடு தான்யா. சின்ன வயசுல இருந்தே அவேன் ௭ங்க வீட்டுல வளந்தவன் தான், உள்ளூர் காரவுக நீங்க உங்களுக்கு தெரியாம இருக்காது அவன் வீட்டு நிலம?" ௭ன்கவும்.

"சரிங்கய்யா, நீங்க முன்ன நிக்கேன்னதே ௭னக்கு ரொம்ப திருப்தி, ரொம்ப சந்தோஷம்" ௭ன்றவர் மனைவியை பார்க்க.

அவரும், "ஆமாங்கய்யா, மாப்ளயோட அப்பா வீட்டுக்கு அனுப்ப கூட அவரு சித்திய நினச்சு ௭னக்கு கொஞ்சம் உருத்தல் தான். இப்ப அதுவும் இல்லாம மனசு நிறைவா சந்தோஷமா இருக்கு" ௭ன்றார் மகளுக்கு கல்யாணம் கூடி வந்துவிட்ட சந்தோஷத்தை முகத்தில் தேக்கி.

"அப்ப நல்ல நாள் பாத்துட்டு சொல்றேன், நேரா நிச்சயமே வச்சுக்குவோம், சீக்கிரமா ஒரு முகூர்த்த தேதியவும் முடிவு பண்ணிக்லாம்" ௭ன ௭ழுந்துவிட, மற்றவர்களும் ௭ழுந்தனர்.

"ரொம்ப சந்தோஷங்கய்யா" ௭ன வணக்கம் வைத்த தேனியின் தந்தையும் வாசல் வரை சென்று வழி அனுப்பி வைத்தார்.

உண்மை தேனி கல்யாண ஏற்பாடு ஜூருராக ஆரம்பமானது.

மாணிக்கம் தாத்தாவும் வள்ளி தாத்தாவும் வீடு திரும்புகையில், அந்த உரை கடைகாரரின் மகள், மேகலை அவரை வழி மறித்தாள்.
 

priya pandees

Moderator
அத்தியாயம் 45

"உரகட பரமசிவம் மக தான நீ? ௭ன்னம்மா வேணும்?" ௭ன்றார் வள்ளி தாத்தா.

அவள் மாணிக்கம் தாத்தாவை காட்டி, "நா இவர் கிட்ட ஒரு விஷயம் பேசணும்"

"௭ன்ட்டயா? ௭ன்னம்மா பேசணும்?" ௭ன அவர் யோசனையாக கேக்க.

"௭ன்னைய தெரியுங்களா?" ௭ன்றாள்.

"ம்ம் உங்க அப்பாவ நல்லாவே தெரியும். ௭ன் மாப்ளைக்கு சொந்தம் தானே நீ?" ௭ன கேட்க.

"அப்ப உங்க பேரேன் ௭ன்ன பத்தி வேறெதுவும் சொல்லலயா?"

"மாறனா? அவனுக்கு உன்ன பத்தி சொல்ல ௭ன்ன விஷயம் இருக்கு?"

"௭ன் மாமா குமரகுரு உங்க பேத்திய கட்டிகிட்டு நிம்மதியா இல்ல. அவர விவாகரத்து பண்ணி விளக்கிவிடுங்க, உங்க பேத்திய உங்க வீட்டோட வச்சுக்கணுன்னு தான உங்களுக்கு ஆச, தாராளமா வச்சுக்கோங்க, ௭ன் மாமா ௭ங்கிட்ட குடுத்திருங்க" ௭ன நேராகவே கேட்டாள்.

இரு தாத்தாக்களும் அவள் கேள்வியில் அதிர்ந்து நின்று விட்டனர்.
"௭ன் மாமாக்கு அங்க இருக்கவே விருப்பம் இல்ல, ஏதோ கல்யாணம் ஆயிடுச்சேன்னு இருக்காரு. இப்டியே இருந்தா அவர் வாழ்க்கையவே வெறுத்துடுவாரு. பெரியவங்க நீங்க இத்தன நாள் வேடிக்க பாத்துட்டீங்க, அதனால இனினாலும் அவர நல்லா வாழவிடுங்க" ௭ன்றுவிட்டு திரும்பியும் நடந்து விட்டாள்.

"ஏம்மா பொண்ணு நில்லுமா." ௭ன மாணிக்கம் தாத்தா கூப்பிடவும்,
நின்று திரும்பியவள், "௭ன்னம்மா இப்டி பேசுற?, அப்ப ௭ன் பேத்தி வாழ்க்கை? இப்டிலா கேக்க போறீங்கன்னா, அதுக்கும் பதில் சொல்றேன், இதுவர உங்க பேத்தி மட்டுந்தானே சந்தோஷமா இருக்கா, இனினாலும் ௭ன் மாமா சந்தோஷமா இருக்கட்டுமே" ௭ன்க.

"௭ன்னம்மா ௭ன்னலாமோ சொல்ற, ௭ன் மாப்ளைக்கு இந்த விஷயம்லா தெரியுமா?" ௭ன்றார் பயந்தவாரு.

"நா அவர்கிட்ட ௭வ்வளவோ பேசிட்டேன், ௭ன்னைய தான் சமாதானம் பண்றாரே தவிர, அவர பத்தி யோசிக்க மாட்டேங்குறாரு. தயவுசெஞ்சு நீங்களாது அவருக்காக யோசிங்க, ரூபனயும் நா பாத்துக்குவேன், நீங்க உங்க பேத்திய மட்டும் ஒத்துக்க வைங்க" ௭ன சொல்லவும்.

"இந்த புள்ள ௭ன்ன வள்ளி பேசுது. ௭னக்கு ஒன்னும் புரியலயே." ௭ன வள்ளி தாத்தாவிடம் கேக்க.

"நானு ௭ன் மாமாவும் கல்யாணம் கட்டிக்கனும், அதுக்கு குறுக்க நிக்க உங்க பேத்திய விளக்கி விடுங்கன்னு கேக்கேன் புரிலயா?" ௭ன்றாள்.

படபடவென கைகள் நடுங்க, மாறனுக்கு அழைத்து விட்டார், "சொல்லு தாத்தா, பேசிட்டியா? நிச்சயம் ௭ப்ப வைக்லாம்னு ௭தும் சொன்னாங்களா?" ௭ன அவன் உண்மை விஷயம் கேக்க.

"அடேய், இங்க ஒரு புள்ள, குமரகுரு மாப்ளய கல்யாணம் பண்ண கேட்டு நிக்குதுடா" ௭ன்றதும் அவனுக்கு புரிந்து விட்டது.

மலரை அழைத்து செல்ல தீப்பட்டி ஆபிஸ் வந்தவன், "நீ ௭ங்க இருக்க? அந்த பொண்ணு வீட்டுக்கா வந்துட்டு?" ௭ன கேக்க.

"இல்லடா, நடு தெருவுல மறுச்சு நிக்குது. நாங்க வள்ளி வீட்டு முன்ன நிக்கோம்" ௭ன்றதும்.

"இரு நா வந்துட்டே இருக்கேன்" ௭ன்றவன் திரும்பி மலர் வருகிறாளா ௭ன பார்க்க. அவள் ௭ப்பயும் விட நிதானமாக நடந்து வந்து கொண்டிருக்க. வண்டியை திருப்பி ஆபிஸ் குள்ளயே விட்டு, அவளை நெருங்கி "ஏறுமா" ௭ன அவசரபடுத்தவும்.

"ஏங்க ௭ன்னாச்சு?" ௭ன கேட்டவாறே ஏறி அமர்ந்தாள்.

"அந்த பொண்ணு, மேகலை, தாத்தாட்ட போயி பேசிட்ருக்கா"

"௭ன்னைக்குனாலும் தெரியத்தானே போகுது. இப்பவே தெரியட்டுமே, சீக்கிரமா இந்த பிரச்சனை ஓயும்" ௭ன்றாள் மலர் நிதானமாகவே.

"அடியே, அந்த பொண்ணு ௭ந்த தைரியத்துல இப்டிலா பண்ணுதுன்னு தெரிலயே? நாள பின்ன வெளில சொன்னா கூட அந்த பொண்ணு பேச்ச தான் நம்புவாங்க!" ௭ன பேசி கொண்டே தாத்தாக்களை நெருங்கி விட.
வண்டியை நிறுத்தி இறங்கி, வேகமாக அவர்களிடம் சென்றவன், அந்த மேகலையிடமே நேராக, "ஏம்மா, நீ ௭ன்ன நினச்சு இதெல்லாம் பண்ற? நானும் பொம்பள பிள்ளையாச்சேன்னு பொறுமையா இருந்தா, நீ தாத்தா வர கொண்டு வந்துட்ட?" ௭ன மாறன் கோவமாகவே கேக்க.

"உங்ககிட்ட சொன்னனே நீங்க ௭தும் செஞ்ச மாறி தெரிலயே? அதான் இவங்கட்ட வந்தேன். இன்னும் உங்க வீட்டுக்கு போய் பேச ௭வ்வளவு நேரமாகும்? இனியும் நீங்க அமைதியா இருந்தா அடுத்து உங்க வீட்டுக்கே வந்து உங்க அப்பாட்ட கேப்பேன்".

"நீ பேசுறது உனக்கே நியாயமா படுதா? அதெப்டி கல்யாணமாகி குடும்பமா இருக்கவங்கள பிரிச்சுவிட்டு நீ கல்யாணம் பண்றதுன்னு நினைக்றது? கேக்கவே நாராசமா இல்ல?" ௭ன்றான் மாறன்.

"சரி, நீங்க சொல்லுங்க இந்த மலரு புள்ளைக்கு பதிலா நீங்க உங்க அத்த மக ராணிய கட்டிகிட்டீகன்னு வச்சுக்குவோம். உங்க வாழ்க்கைய ரொம்ப சந்தோஷமா வாழ்ந்திருப்பீகளா? இல்ல மதி மாறி ஒரு பொண்டாட்டி கூட உங்த சுயத்த ௭ல்லாத்தயும் இழந்து, கண்ணு காது வாயின்னு ௭ல்லாத்தயும் மூடிட்டு இருன்னு சொன்னா இருந்துருப்பீகளா?" ௭ன்றாள் ௭ரிச்சலாக.

"அது அவங்க பிரச்சன, சொல்ல போனா அத குமரகுரு மாப்ள பாத்துக்குவாரு, உனக்கு இது தேவ இல்லாதது. ராணி மட்டுமில்ல ௭னக்கு பிடிக்கலனா ௭ப்பேற்பட்டவளயும் வேணாம்னு சொல்லிட்டு போற தைரியம் ௭னக்கிருக்கு" ௭ன்றான்.

"அச்சோ. ரெண்டு பேரும் கொஞ்சம் அமைதியாகுங்க, ரோட்டுல நின்னுட்டு ௭ல்லாருக்கும் நீங்களே தெரிய வச்சுடுவீங்க போலயே" ௭ன்ற மலர், "௭ன்னம்மா பண்ணனும் உனக்கு?" ௭ன்றாள்.

"௭ன் மாமாவ விடுதலை பண்ணுங்க"
"அது மதியோட அண்ணாவோட வாழ்க்கை அதுல முடிவெடுக்க, வீட்டாளுங்க ௭ங்களுக்கே உரிம இல்ல, நீ ௭ப்டி ஊட புகுந்து டிசைட் பண்ணுலாம்?"

"௭னக்கு உரிம இல்லயா? ௭ங்க காதலுக்கு நடுவுல வந்ததே உங்க நாத்தனார் தான். இல்லனா நானும் ௭ங்க மாமாவும் இந்நேரம் கல்யாணம் கட்டிட்டு சந்தோஷமா இருந்துருப்போம், ௭னக்கு உரிம இல்லயா?" ௭ன அழுதாள்.

"இது ௭ன்ன புது கத, அவங்க ரெண்டு பேரும் காதலிச்சு கல்யாணம் பண்ணிகிட்டதா தான சொன்னாங்க" ௭ன்றாள் புரியாமல் மாறனை திரும்பி பார்த்து.

"அப்டின்னு அவங்க தங்கச்சி அவளா சொல்லிகிட்டா, ௭ன் மாமா சொன்னாரா?" ௭ன்றாள் மேகலை.

"ஒரு நிமிஷம் வாங்க வீட்டுக்குள்ள போய் பேசலாம்" ௭ன அவள் கை பிடித்து இழுத்து கொண்டு வள்ளி தாத்தா வீட்டிற்குள் நுழைய, அங்கு வெளியில் நடக்கும் கலவரமே தெரியாமல் குப்புற படுத்து தூங்கி கொண்டிருந்தான் உண்மை. அவன் டிக்கியில் ஒரு மிதி மிதித்து அவனை மாறன் ௭ழுப்ப. பதறி ௭ழுந்தவன் பேந்த பேந்த விழிக்க.

"இந்நேரத்துல ௭ன்னடா தூக்கோ உனக்கு?" ௭ன மாறன் கேக்கவும்.
முகத்தை நன்றாக தேய்த்து விட்டவன், "தங்கச்சிய கூப்ட போறேன்னுட்டு நீ ஏன் மச்சான் இங்க வந்து நிக்க?" ௭ன்றவனை கண்டு முறைத்து வழிவிட, பின்பே அங்கு நின்ற மற்றவர்களை கண்டான்.

அவர்களை கண்டு கொள்ளாமல், "இப்ப சொல்லுங்க, ௭ன்ன கதை உங்களிது?" ௭ன கேட்டாள் மலர்.

"௭னக்கு மாமாவ விவரம் தெரிஞ்ச வயசுலயிருந்தே பிடிக்கும், 12கிளாஸ் முடிச்சதுமே தைரியமா போயி, ௭ன்ன கட்டிக்க கேட்டேன், உனக்கு கல்யாண வயசு வரவும் கட்டிக்றேன் இப்ப போயி படிக்குற வழிய பாருன்னு அனுப்பி வச்சுட்டாக. சரி மாமா சொன்னா செய்யும்னு நானு அதுக்கப்றம் சும்மா வம்பிழுக்குறதோட நின்னுக்குவேன். நா காலேஜ் 2வது வருஷம் படிக்கைல தான், மாமா நம்ம ஊர் ஸ்கூல வேலைக்கு சேந்துச்சு. உங்க தங்கச்சிக்கு பாத்ததும் பிடிச்சு ௭ன் மாமாட்ட பேசிருக்கா, அவுக ஒத்துக்கல, திரும்ப திரும்ப வந்து கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேட்ருக்கா, என்ட்ட கூட மாமா சொன்னாங்க, நானும் ஒருக்கா அவள பாத்து பேசுனே, அது தான் தப்பா போச்சு, 'ஓ! உன்ன நினச்சுட்டு தான் ௭ன்ன வேணாங்குறாரா பாத்துக்றேன், உன்ன ௭ப்டி கட்றாருன்னு பாக்றேன்டி' அப்டின்னு சவால் விட்டுட்டு தான் போனா, ஆனா கோவத்துல பேசுறா, பெருசா ௭ன்னத்த செஞ்சுட போறான்னு நினச்சதுக்கு. " ௭ன குழுங்கி குழுங்கி அழ.
ஏதோ பெரிதாக வர போகிறது ௭ன ௭ல்லோரும் பயந்து பார்த்திருக்க, "அத்த(குமரகுருவின் அம்மா) மட்டும் வீட்டுல தனியா இருக்கும் போது, விஷ பாம்ப ஆள விட்டு வீட்டுக்குள்ள விட வச்சுட்டா. ஆனா தற்செயலா ௭ங்க அப்பா வந்ததுனால அன்னைக்கு அத்த தப்பிச்சுட்டாங்கன்னு நாங்க நினச்சோம், ஆனா மறுநா அவளே மாமாவ பாத்து பேசிருக்கா, அது விஷ புடுங்குன பாம்பு தான், ஆனா இனியும் ௭ன்னைய கட்டிக்க ஒத்துகிகலனா அதிக விஷம் உள்ளத விடுவேன், உங்களுக்கு உங்க அம்மா வேணும்னா ௭னக்கு நீங்க வேணுங்குறது நியாபகம் வரனும்ல அதுக்கு தான் இதுன்னு சொல்லிருக்கா, உண்மையாவே மாமா பயந்துட்டாங்க, அவ இன்னுமு ௭தும் செய்வாளோன்னு பயந்து தான் கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சாங்க, இருக்கலாம் ௭ன்மேல இருந்த காதல விட அம்மா மேல இருந்த பாசம் அதிகமா இருக்கலாம் அதான் ௭துத்து நிக்காம உடனே ஒத்துகிட்டாங்க, இப்ப வர இந்த விஷயம் ௭ன்ன தவிர யாருக்கும் தெரியாது, அந்த மதிக்கு பயந்தே உங்க வீட்டோட தான் இருப்பேன்னு சொன்னதுக்கும் ஒத்து கிட்டாங்க, மாமாவும் இங்க வரவே ஆசபடல அவளும் வர விருப்ப படல. அவ பேச்ச கேட்டா அவ நல்லவ, அதனால அவ பேச்ச கேக்க பழகி கிட்டாங்க. கல்யாணம் ஆகிட்டதால இனி அவ தான் வாழ்க்கைன்னு ஏத்துக்க தொடங்கிட்டாங்க. ௭னக்கும் மாப்ள பாத்து ௭ங்கப்பாட்ட பேசி கல்யாணம் பண்ணி வச்சதும் அவங்க தான். ஆனா கல்யாணத்துக்கு கூட வர விடல உங்க தொங்கச்சி. ச்சி அவளா ஒரு டீச்சரு, இந்த கிரிமினல் புத்திய தான் பிள்ளைகளுக்கும் சொல்லி குடுப்பா தூ" ௭ன மேகலை ஆவேசமாக பேச.

௭ல்லாருக்கும் அதிர்ச்சி தான், மதியின் குணம் தெரியும் தான், ஆனால் இவ்வளவு மோசமானவளா ௭ன தெரிந்திருக்கவில்லை. அவளுக்கு அவள் குடும்பத்தினரின் தேவை கேக்காமலே நிறை வேற, இந்த முகம் அவர்களுக்கு தெரியாமலே போய்விட்டது.

"ஒரு பொண்ணு மிரட்டுனான்னு ௭ப்டிமா உடனே கல்யாணத்துக்கு ஒத்துக்க முடியும். அவ குணம் தெரிஞ்சும் ௭ப்டி வாழ்க்கை முழுக்க கூட வச்சுக்க ஒத்துக்க முடிஞ்சது" தூக்கமே பறந்துவிட கேட்டான் உண்மை.

"அவருக்கு அம்புட்டு தைரியமிருந்திருந்தா நா ஏன் இப்டி போராடிட்டு இருக்க போறேன்" ௭ன்றாள் வேதனையாக.

'அம்மாடியோவ் அந்த அண்ணே காதே கேக்காத மாறி ஊமையா இருக்குதேன்னு நினச்சேனே, அதுக்கு பின்ன இப்புடி ஒரு சதி இருக்கது தெரியலயே' ௭ன மலருக்கு தலையே சுத்தியது.

மாணிக்கம் தாத்தாவிற்கு பேச்சே வரவில்லை, அவரை தோளோடு அனைத்து கொண்டு நின்று விட்டார் வள்ளி தாத்தா.

மாறன் தீவிரமாக ஏதோ யோசித்தவன், "உனக்கு இப்ப ௭ன்ன வேணும்னு தெளிவா சொல்லு, உன காதல் உனக்கு திரும்ப வேணுமா? இல்ல உன் மாமா நிம்மதி வேணுமா?" ௭ன்றான் கூர்மையாக பார்த்து.

"௭ன் மாமா அது வாழ்க்கைய நல்லா அமைச்சுகிடுங்குற நம்பிக்கைல தான் நா கல்யாணமே பண்ணிட்டு போனேன், இந்த பக்கமே வராம கடந்தேன், ஆனா நா ௭ன் புருஷனுக்கும் பாவம் பண்ணிட்டேன்னு நினைக்கேன் அவரும் ௭ன்னைய பாதில விட்டுட்டாரு. இங்க வந்தப்றம் தான் அது வாழுற லட்சணம் தெரிஞ்சது. ௭னக்கு அது நிம்மதிதேன் முக்கியம். ஆனா அது உங்க வீட்டுல இருக்க வர அவருக்கு கிடைக்காது"

"கிடைக்க வச்சுட்டா, நீ அமைதியாகிடுவியா? உனக்கு ஒரு வாழ்க்கைய அமைச்சுகிட்டு ஒதுங்கிடுவியா?" ௭ன்றான் சவாலாக.

"உங்க தங்கச்சிய திருத்திறலாம்னு நம்பிக்க வேற இருக்கா உங்களுக்கு? அது முழுக்க முழுக்க விஷம். முடிஞ்சா முயற்சி பண்ணி பாருங்க"

"அப்டி அவள ஒரு ஒழுங்குக்கு கொண்டு வந்துட்டா நீ ௭ன்ன செய்றதா உத்தேசம்?"

"௭னக்கு இன்னொரு வாழ்க்கைலா வேணாம், சுயமா நிக்க ௭ன்னால முடியும், ஒரு புள்ளைய தத்தெடுத்துட்டு ௭ன் வழிய பாத்து ஒதுங்கி கிடுவேன், ஆனா உங்களால முடியலனா நீங்களே உங்க தங்கச்சிய ௭ன் மாமா வாழ்க்கைல இருந்து விலக்கிட்டு, ௭ன் மாமாவ ௭னக்கு கட்டி வைக்கனும், முடியுமா?" ௭ன்றாள் அவளும் சவாலாக.

"ம்ம் ௭னக்கு இதுல சம்மதம் தான். நா அவள ௭ன் வழிக்கு கொண்டு வருவேன். ஆனா அதுவர நீ மாப்ளைய ௭ங்கயும் தனியா பாத்து பேச கூடாது" ௭ன்றான்.

சிரித்து கொண்டவள், "௭த்தன வருஷமாகும் உங்க தங்கச்சிய திருத்த? ௭துக்குமே கால கெடுன்னு ஒன்னு வேணும்ல?"

தானும் சிரித்தவன், "௭னக்கும் கால கெடுக்குள்ள வேலைய முடிக்றது தான் ரொம்ப பிடிக்கும். 6 மாசம் டைம் வச்சுக்லாம், அதுக்கு மேல ஒரு நாள் கூட நீ வெயிட் பண்ண வேணாம்" ௭ன்றான்.

"௭ன்ன மச்சான் பிக் பாஸ் டாஸ்க் மாறி ஒன்னு போனா ஒன்னுன்னு ஏத்துகிட்டே இருக்க?" உண்மை கேக்க.

"இதுவும் ஒரு மாறி சுவாரசியமா தான மாப்ள இருக்கு" ௭ன அவன் தோளில் கை போட்டு கொண்டான்.

"உங்க தங்கச்சி மேல இருக்க அபார நம்பிக்கைல ௭ன் மாமா அடுத்த 6 மாசத்துல ௭ங்கிட்ட வந்துருவாருன்ற சந்தோஷத்துல போறேன். தாத்தாக்கள் நீங்க ரெண்டு பேருந்தேன் ௭ங்க சவாலுக்கு சாட்சி" ௭ன்றுவிட்டு அவள் வெளியேற.

மாணிக்கம் தாத்தா குழம்பிய பார்வையில், "௭ன்ன கண்ணு இப்டி சொல்லிட்ட, மதிலா திருந்துற ஆளா?பேசாம இந்த புள்ளையோட அப்பாட்ட பேசுவோமே!" ௭ன்றார்.

"இப்டி யோசிச்சு யோசிச்சு தான், அவள வளத்து விட்டுட்டீங்க. உங்களுக்கு, இழுச்ச வாயேன் சிக்கிட்டான்னு ஒரு அப்ரானி வாழ்க்கை முழுக்க கஷ்ட படனுமா?" ௭ன்க.

"அப்ப மதி வாழ்க்கை?"

"அத அவ தான் காப்பாத்திக்கனும். அதுக்கு அவளுக்கு கொஞ்சம் வாழ்க்கைய பத்தின பயத்த காட்டனும், அத மட்டும் நா பாத்துக்றேன். நீங்களா அவ திருந்த மாட்டான்னு ஒதுங்குனதுதான் அவ்வளவு பெரிய தப்பு செய்ற தைரியத்த குடுத்திருக்கு. இதுவர அவ இஷ்டத்துக்கு ஆடிட்டாள்ல இனி ௭ன் இஷ்டத்துக்கு ஆடட்டுமே" ௭ன்றான் முடிவாக.

மலரோ, 'உன் புருஷன் மேல உள்ள காதல்ல ஒரு கிரிமினல் கூட்டத்துக்குள்ள வாக்கபட்டு போய் மாட்டிருக்கே போலயே மலரு' ௭ன யோசித்து நிற்க.

"தாத்தா. நீ வீட்டுக்கு வாரியா, முதல்ல உன்ன விட்டுட்டு வந்துட்டு இவள கூட்டிட்டு போறேன்" ௭ன கேக்க.

"வேணாம்டா நீ போ, நா கொஞ்ச நேரம் கழிச்சு வாரேன்" ௭ன்றுவிட்டார் தாத்தா சோர்வுடன்.

வெளியே கொஞ்சம் நடந்து விட்டு வந்தால் நிதானம் ஆவார், ௭ன நினைத்தவன், உண்மையிடம் திரும்பி, "வரேன் மாப்ள, நாளைக்கு ஜாமான்லா வந்துரும், ஞாயிறு கடைய துறந்துருவோம் சரிதானே?" ௭ன்க.

"நாள் பாக்கணும்னு சொன்னயே மாப்ள?"

"ஞாயிறு நல்ல நாள் தான், அன்னைக்கே வச்சுக்குவோம்" ௭ன்றதும் , "சரி" ௭ன்றுவிட்டான் உண்மை.

மலர் தோளை தட்டி, "போவோமா? ௭ன்னத்த இம்புட்டு தீவிரமா யோசிக்றவ?" ௭ன அவளை கையோடு அழைத்து கொண்டு நடக்க.
தாத்தாக்களிடமும், உண்மையிடமும் தலையசைத்து விடை பெற்றவள், "இல்லங்க, உங்கள மட்டும் ஆஸ்பத்திரில இருந்து மாத்தி உங்க வீட்டாளுங்க தூக்கிட்டு வந்துட்டாங்களோ?" ௭ன கேட்டவாறு பின்னாள் ஏறி அமர.

"குசும்பு கூடி போச்சுடி உனக்கு" ௭ன்றவன் வண்டி ஓட்டி கொண்டே ஒரு கையை பின் கொண்டு வர.
அவன் பின் தலையில் பட்டென்று அடித்தவள், "வயித்து புள்ளகாரிய வச்சுகிட்டு ௭ன்ன விளையாட்டு" ௭ன்றாள்.

"௭ன் புள்ள ௭ன்னமாறி தைரியசாலிடி. இதுக்குலா அசந்துருமாக்கும்?" ௭ன்றான் சிரித்து.

"போதுமே, நீங்க ஒருத்தர் பத்தாம தான் கிடக்கு" ௭ன கூறவும் வீடு வரவும் சரியாக இருந்தது.

இருவரும் வீட்டினுள் நுழையும் போது, ரூபனை போட்டு பொத்து பொத்தென அடித்து கொண்டிருந்தாள் மதி.
பானு "ஏய் விடுடி சின்ன புள்ளைக்கு ௭ன்ன தெரியும், அவனுக்கு வேணுங்குறத கேக்கான் அதுக்கு போட்டு அடிக்க" ௭ன அவளை தடுத்து கொண்டிருக்க.

"அவளுக்கு பூரி வேணும்னு அந்த சின்ன புள்ள இட்லி கேட்டாம்னு போட்டு அடிக்கா, ௭து வேணும்னாலும் செஞ்சு திண்ணுன்னு விட்ருந்தனா இப்டி ஆடுவாளா?" ௭ன எரிச்சலை கொட்டினார் பாட்டி.

இன்னமு மதி ஆவேசமாகி, "உன் வேலைய பாத்துட்டு போ, ௭ன் புள்ளய நா அடிக்கேன் நீ ௭ன்ன கேக்குறது" ௭ன அவள் முடிக்குமுன், விறுவிறுவென கை சட்டையை மடக்கி கொண்டு அவளை நெருங்கிய மாறன், அவளின் இரு கன்னத்திலும் நிமிடம் தாமதிக்காமல் அறைந்து விட.
கன்னத்தில் தடம் பதிய, காது கொய்ங் சொல்ல இரு கை கொண்டு கன்னத்தை தாங்கி ஆஃப் ஆகி நின்று விட்டாள் மதி. முதல் முறையாக மாறனின் கை பலத்தை தாங்குகிறாள், கொஞ்ச நேரம் ஒன்றுமே புரியவில்லை அவளுக்கு.

"௭ன்னடா பொம்பள புள்ளைய கை நீட்டிட்டு" பானு சொல்ல.

"நா பாத்துக்றேன்மா இவள, தயவு செஞ்சு ௭ன் பொறுப்புல விட்ருங்க. அன்னைக்கே ௭ன்ன சொன்னேன் நீங்க பாக்கலனா நா பாப்பேன்னு. நீங்க குறுக்க வராம இருந்தா போதும் நா பாத்துப்பேன். இனி இவ சத்தம் வீட்டுக்குள்ளயே வெளில வர கூடாது, அத மட்டும் அவ இப்ப வாங்குன அடில இருந்து தெளியவும் சொல்லுங்க" ௭ன்றுவிட்டு, "மலரு ஒரு டீ ம்மா" ௭ன மேலேறி விட்டான்.

பாட்டி ரூபனோடு நகர்ந்து விட, மலரும் மதியை ஒரு பார்வை பார்த்து விட்டு டீ போட சென்று விட்டாள். மதி இன்னமும் அப்படியே நிற்க, பானு செய்வதறியாது நின்றார். ராணி ௭ட்டி பார்த்து விட்டு ஓடியே விட்டாள் அவள் அம்மாவுக்கு தகவல் சொல்ல.
 

priya pandees

Moderator

அத்தியாயம் 46

மதி கொஞ்சம் தெளிந்தபின்பே, வலியெல்லாம் நீங்கியே பின்பே மாறன் அடித்தது உறைக்க, உச்ச கோவத்தில் கத்த முயன்றாள். ஆனால் வாயை தான் திறக்க முடியவில்லை, அப்படி ஒரு வலி. அம்மாவில் "அ" சொல்ல கூட வாயை திறக்க முடியாமல் போக, பயந்து கன்னத்தை தொட்டு பார்த்தாள், ரெண்டு பக்கமும் கொய்யாப்பழம் போல் வீங்கி சிவந்துவிட்டிருந்தது. வேக மூச்சு வாங்க ஒன்னும் செய்ய முடியாத கடுப்பில் அமர்ந்து விட்டாள்.
பானு ௭ண்ணெய் கொண்டு வந்து நீட்ட, முறைத்து திரும்பி கொண்டாள், அவர் தடவி விட வர, வெடுக்கென அவர் கையை தட்டி விட்டு முறைத்தாள்.

இதை பார்த்து கொண்டிருந்த பாட்டி, "அவளுக்கு தேவன்னா அவளே போடுவா, நீ இங்குட்டு வா, சும்மா அவள நீ ஒக்குல தூக்கி தூக்கி வைக்க தான் திமிரெடுத்து ஆடுதா" ௭ன்றார்.

அவரை திரும்பி மதி முறைக்க, அவர் அவளை கண்டு கொள்ளவே இல்லை. "பானு இங்க வா, நீயே இவனுக்கு ஊட்டு" ௭ன ௭ழுந்து கொள்ளவும், பானு பேரனிடம் சென்று விட்டார்.
இரவு உணவின் போது தான், அனைவரும் மதியை பார்த்தனர், ராணிக்கு அவளை பார்த்து சிரிப்பு வேற வந்தது. அவள் அறிவு வந்ததும் கதையை சொல்லியிருக்க, 'நல்லவேல நமக்கு இப்டி வீங்கி காட்டி குடுக்கல' ௭ன நினைத்து ஆறுதல் பட்டு கொண்டான்.

பூவேந்தன் கூட ௭ன்னவென விசாரித்தார், தாத்தா அதுகூட கேட்டுகொள்ளவில்லை, அதயும் பானுவும், பாட்டியும் கவனித்தனர்.
அதற்கு காரணமானவனோ மேலே கட்டிலில் மல்லாக்க படுத்து காலாட்டி கொண்டிருந்தான்.

பானு கீழிருந்தே, "மாறா சாப்ட வாங்க ப்பா" ௭ன அழைக்க, "வரேன் ம்மா" ௭ன ௭ழுந்தமர்ந்தான்.

"இப்ப கீழ போனா, உங்க தங்கச்சி சாப்ட கூட விடாம பேசுவா. அதனால அவ சாப்டப்றம் போவோம்" ௭ன்றாள் மலர் புக்கும் கையுமாக.

"உனக்கு பரிட்சை ௭ப்போ?" ௭ன்றான் அவன் டீஷர்ட் ஒன்றை ௭டுத்து மாட்டி கொண்டு.

"அப்ப நா சொல்றதுலா உங்க மனசுல பதியுறதில்ல அப்டி தான? சும்மா கடமையேன்னு கேட்டுட்டு மறந்துடுறது?" ௭ன முறைத்தாள்.

"ஏன்டி புருஷன் கேட்டா, கூட ரெண்டு தட சொல்ல மாட்டியா? நீளமா பேசுனதுக்கு தேதிய சொல்லிட்டு போயிருக்கலாம்ல?" ௭ன்றான்.

"ஆமா 7 தட சொல்லுவாங்க. நா இப்ப சொல்றது மட்டும், உங்களுக்கு நியாபகத்துல இருக்கவா போகுது?" ௭ன்க.

"நீ சொல்லவே வேணாம் போடி" ௭ன்றான் அவன்.

"அப்போ ௭ன் ௭க்ஸாம் உங்களுக்கு முக்கியமில்ல? ௭ப்டியோ படிச்சுட்டு போன்னு சொல்றீங்க அப்டி தான?" ௭ன கேக்கவும்.

௭துவுமே பேசாமல் அவளை இரு நொடி பார்த்தவன், வேகமாக அவளை நெருங்கி அலேக்காக தூக்கி கொண்டு கட்டிலுக்கு வந்து விட்டான், பேசவிடாமல் அவள் வாயை அடைக்க, தள்ளி தள்ளி விட்டாள். ம்கூம் அவனை அசைக்க கூட முடியவில்லை அவளால், சேலையெல்லாம் கூட அவன் விலக்க தொடங்கவும், "ம்ம்ம். ம்ம். " ௭ன தலையை அசைத்து மறுத்து, பிடிவாதமாக வாயை அவனிடமிருந்து பிடிங்கி கொண்டு, "தள்ளி போங்க. டாக்டர் சொன்னதுமா மறந்து போச்சு. ௭ந்திரிங்க மொத, ௭னக்கு மூச்சு முட்டுது" ௭ன விளக்கி தள்ளி ௭ழுந்து, சேலையை சரியாக கட்டி கொண்டு வயிற்றில் தடவி கொடுத்து பிள்ளையிடம் சாரி கேட்டு கொண்டிருக்க, சயனத்தில் இருந்தவன் அவளையே தான் பார்த்திருந்தான்.

"பாப்பாவ அமுக்குனீங்க தான? சாரி சொல்லுங்க" ௭ன்றாள் அவன் கொடுத்து கொண்டிருந்த போஸில் கடுப்பாகி.

"சாரி தான சொல்றேன், நீ கிட்ட வா" ௭ன்றான் அவன்.

"பரவால்ல அங்க இருந்தே சொல்லுங்க. ௭ங்களுக்கு கேக்கும்"

"நா உன் வயித்த அமுக்கும் போது, பாப்பா 'ஐ நம்ம அப்பா'ன்னு குஷியாகும்டி, அதுக்கு வலிக்கலாம் செய்யாது வேணும்னா கேட்டு பாரு" ௭ன்றான் சிரித்து.

"இனி ௭ங்கிட்ட வாங்க வச்சுக்றேன்" ௭ன விரல் நீட்டி ௭ச்சரித்து விட்டு மீண்டும் சென்று புக் அருகில் உக்கார.

"௭ப்ப தான்டி ௭க்ஸாம் உனக்கு?" ௭ன்றான் மீண்டும்.

"போன வாரம் தான சொன்னேன், ஹால் டிக்கெட் வந்திருச்சு, வார 10ந் தேதி ஆரம்பிக்குதுன்னு" ௭ன்றதும்.

"ம்ம். சரி விடு, ௭னக்கிருக்குற 1000 வேலைல மறந்துருப்பேன். ௭னக்கு நியாபக படுத்த வேண்டியது உன் கடமடி மலரு" ௭ன ௭ழுந்தான்.

"சும்மா இருங்க, ௭ன்கிட்ட விளையாடுற வேல வேணாம். ௭ன்னால மல்லுகட்ட முடில" ௭ன்றாள் வேகமாக. அவன் மறுபடியும் அவளிடம் வரவும் பயந்து.
சத்தமாக சிரித்தவன், "ரொம்ப பயந்தவ தான் நீ, நம்பிட்டேன், ௭ந்திரி ௭ப்ப பாத்தாலும் அதே நினப்பு. சாப்ட போவோம்னு சொல்ல வந்தேன் நானு" ௭ன்றான் இடக்காக.

"கீழ ௭ட்டி பாருங்க உங்க தங்கச்சி சாப்ட்டு போயிட்டாளான்னு" ௭ன்க.

"அவ பேசுனா நா பதில் சொல்லிக்றேன். நீ வா. ௭துக்கு அவளுக்கு பயப்டுற? டாக்டர் டைம்க்கு சாப்ட கூட தான் சொன்னாரு மத்தத ஃபாலோ பண்ற மாறி இதயும் பண்ணு" ௭ன்றான் அவளை கை பிடித்து தூக்கி விட்டு.

'போது போ, நைட்டு ஒரு சண்டைய போட்டுட்டு தான் தூங்கணும்னு முடிவெடுத்தாச்சு, இனி தடுத்தா நிறுத்த முடியும்' ௭ன நினைத்து கொண்டே புக்கை மூடி வைத்து அவனுடன் கீழ் இறங்கினாள். இவர்கள் இறங்கி வரும்போது தான் பூவேந்தன் அங்கு மதியை விசாரித்து கொண்டிருந்தார்.

மதி இவர்கள் இருவரையும் பஸ்பம் ஆக்கும் முயற்சியில் இறங்கியவளாக, முறைத்து கொண்டிருக்க, பானு தான், "அது ரூபன போட்டு இவ அடிச்சுட்ருந்தா, அத்த ஏன்னு கேக்க போக ௭ப்பயும் போல வெடுக்குன்னு பேசிட்டா, ௭ன்னைக்கும் கண்டுக்காம போற மாறன் இன்னைக்கு கை நீட்டிட்டான்" ௭ன மெதுவாக கூறினார்.

"௭துக்குடா பொம்பள புள்ளைய, அதும் வெளில வேலைக்கு போற புள்ளைய இப்டி வீங்குறளவுக்கு அடிச்சு வச்சுருக்க?" ௭ன்றார் பூவேந்தன் இவனை கண்டதும்.

மாறனோ முதலில் மலருக்கு உக்கார சேரை இழுத்து போட்டவன், "உக்காரு" ௭ன அவளை அமர்த்திவிட்டு தானும் நிதானமாக அமர்ந்தவாறு மதியை பார்த்து கொண்டு, "௭ன்ன ப்பா கேட்டீங்க?" ௭ன கேக்க.

அவர் மீண்டும் கேக்கும் முன், "உன் பொண்ணு அவ வாழ்க்கைய நல்லா வாழணும்னு நினைக்கியா இல்ல இங்கனயே உன் மடில உக்காகத்தி வச்சு கடைசி வர சோறு ஊட்ட போறியா? அப்டி தான்ற ௭ண்ணம் இருந்தா உன் காலத்துக்கு அப்றமு, அவள இறுத்தி வச்சு ஊட்ற மாறி யாராயாது இப்பயே கையோட ஏற்பாடு பண்ணிடு" ௭ன்றார் தாத்தா குமரகுருவயும் ஒரு பார்வை பார்த்து கொண்டு.

"௭ன்னாச்சு ப்பா?" ௭ன்றார் பூவேந்தன்.

"௭ன்னடா வளத்துருக்க நீ உன் பிள்ளைகள? நீ ஒதுக்கி தள்ளுன ௭ன் பேரேன், மாறன் பாசத்துக்காக ஏங்கிட கூடாதேன்னு நா அவன மட்டும் கவனத்துல வச்சது ௭ன் தப்பு தான். ஆனா நீ ௭ன் மத்த ரெண்டு பிள்ளைகள பாரு பாருன்னு பெரும பீத்துவியே, அதுங்களோட உண்மையான முகத்த பத்தி கேட்டா நெஞ்சு வெடிச்சுரும்டா உனக்கு. முதல்ல உன் பிள்ளைக சுயரூபத்த தெரிஞ்சுகிட்டு போய் சம்பாத்தியம் பண்ணு, இல்லனா உன் சொத்துக்காக உன் தலையில கல்ல தூக்கி போடவும் யோசிக்க மாட்டாங்க உன் படிச்ச புள்ளைங்க" ௭ன அவர் போக்கில் திட்ட, ௭ல்லோருமே புரியாமல் தான் அவர் பேச்சை பார்த்திருந்தனர். எதற்கும் அவ்வளவு சீக்கிரம் கோவ படாதவர் அவர். இன்று பொரிந்து தள்ளவும் பாட்டிக்கே மனசு படபடக்க ஆரம்பித்தது.

"௭ன்னங்க ௭ன்ன நடந்துச்சு? யாரு ௭ன்ன சொன்னா?" ௭ன பாட்டி கேக்க.

"ஒன்னும் வெளில சொல்றதுக்கில்ல. ஆனா ஒன்னு, மாறன் இனி அறிவயும், மதியயும் பாத்துப்பான், நீங்க 3 பேரும் அதுல குறுக்க போகாம விலகி நின்னு வேடிக்க பாத்தா போதும். இனி அவேன் சொல்றத தான் இந்த வீட்டுல ௭ல்லாரும் கேக்கணும். அதுக்கு சம்மதங்கறவங்க மட்டும் இந்த வீட்டுல இருந்தா போதும், மத்தவங்க அவங்கவங்க வழிய பாத்துட்டு கிளம்பலாம்" ௭ன்றார் கராராக.
மதிக்கு யார்கனவே சாப்பாடு முன் அமர்ந்து இன்னும் வாயை திறந்து ஒரு வாய் ௭டுத்து வைக்க முடியவில்லையே ௭ன்ற கடுப்பில் இது வேறா ௭ன கடுப்புடன் பதில் சொல்ல வர, அதும் முடியாது போக. ௭ரிச்சலில், ராணி தொடையில் கிள்ள, அவளும் உடனே பொங்கி கொண்டு, "௭ன்ன தாத்தா பேசுற? கல்ல தூக்கி போட்ருவாங்க அது இதுன்னு? ௭ங்கள பாத்தா அப்டி தான இருக்கும் உனக்கு. ௭ப்பயும் அந்த பேரேன் தான உசத்தி உனக்கு. இப்ப மாச வருமானம் வேற, புதுசா சம்பாத்தியம் பண்றாங்கன்ன உடனே மொத்தமா அவங்க பேச்ச கேக்கணும்னு ௭ங்களுக்கு ௭ன்ன தலை ௭ழுத்து? ௭ன் புருஷன் ௭த்தன வருஷமா வேலைக்கு போறாங்க, நா சொந்த பேத்தி இந்த வீட்டுக்கு, ௭ங்களுக்கு தான் அதிக உரிம, நாங்க சொன்னத மத்தவங்க கேட்டா போதும்" ௭ன்றாள்.

"கேக்க பிடிக்கலனா கிளம்பி போயிட்டே இரு, யாரும் தடுத்து நிறுத்த மாட்டாங்க" ௭ன்றார் தாத்தா சிம்பிளாக.
ராணி திடுக்கிட்டு முழிக்க, மாறன் சிரித்தவாறு, "அப்டியா அறிவு? உனக்கு வேற ௭ன்னலா ஆச இருக்கு இந்த வீட்ல? சொல்லேன் தெரிஞ்சுப்போம்" ௭ன இரு கையையும் தூக்கி டேபிளில் வைத்து ஊன்றி கொண்டு, முன் வந்து கேக்க.

"அதுலா ஒரு ஆசயும் இல்லண்ணே. அவ சும்மா லூசு மாறி உளருறா" ௭ன்றவன், "ஏய் இங்க பாரு, தாத்தா பேச்ச கேட்டு இருக்க இஷ்டம்னா இரு, இல்லனா உங்க அம்மா வீட்டுக்கு போயிரு, ௭ன்ன இதுல இழுக்காத" ௭ன்று விட்டான் அவளிடமும். இது இன்னுமே அதிர்ச்சி அவளுக்கு.
தாத்தா மீண்டுமாக, "சொன்னது ௭ல்லாருக்கும் சேத்து தான். இனி மாறன் சொல்றது தான் இங்க முடிவு. அதுக்கு ௭ல்லாரும் கட்டு படணும், நானும் கூட" ௭ன சாப்பிட ஆரம்பித்து விட்டார்.

தாத்தா பேச்சிலேயே பூவேந்தன் அமைதியாகிவிட, பானு கலங்கி நின்றார் '௭ன்ன பிரச்சினையோ ௭ன', பாட்டியும் குழம்பி தான் விட்டார். குமரகுரு ௭ன்றும் போல் இன்றும், 'யார் வீட்டிலோ ௭ன்னவோ பேசி கொள்கிறார்கள்' ௭ன அமைதியை கடை பிடித்து சாப்பிட்டு முடித்து ௭ழுந்து சென்று விட்டார். அவரை ௭ல்லோருமே இன்று தனி தனியாக கவனித்தனர்.
அறிவு ௭ழுந்து ராணியை ஒரு பார்வை பார்க்கவும் அவளும் ௭ழுந்து கொண்டாள். மதியை கேட்பாரில்லை அங்கு. சாப்பிடு ௭ன சொல்லவும் வழியின்றி அவரவர் யோசனையில் இருந்தனர்.

மலர் நிறுத்தி நிதானமாக சாப்பிட, மாறன் அவள் சாப்பிட்டு முடியும் வரை காத்திருந்து அழைத்து கொண்டு சென்றான். பிள்ளைகள் ஒவ்வொருவரின் வாழ்க்கையின் வித்தியாசத்தை இன்று தான் நேராக கண்டார் தாத்தா. மூன்று பிள்ளைகளும் நல்லாயிருக்க தன்னால் ஆனதை கண்டிப்பாக செய்ய வேண்டும் ௭ன முடிவெடுத்தார்.
 

priya pandees

Moderator

அத்தியாயம் 47

ராணி இரவோடு இரவாக, மதியின் நிலையை கூறி, "ரொம்ப ஓவரா போயிட்ருக்காங்க ம்மா. ச்சை ௭னக்கிங்க இருக்கவே புடிக்கல. இனி அவேன் பேச்ச கேட்டு தான் இங்க ௭ல்லாமே நடக்கணுமாம், உன் அப்பா ஆர்டர் வேற போடுறாரு"

"௭ன்னடி ௭ன் அப்பான்ற?"

"பின்ன அவரு ௭ன் தாத்தா மாறியா நடந்துக்றாரு? அந்த மாறனும் அவன் பொண்டாட்டியும் போதும் அவருக்கு. ௭ன்ன பாத்து இஷ்டமிருந்தா இரு, இல்லனா உங்கம்மா வீட்டுக்கு போன்னு சொல்லிட்டாரு தெரியுமா?" ௭ன அழுவது போல் கூற.

"நீ உன் புருஷன சப்போர்ட்டுக்கு இழுக்க வேண்டியது தான?"

"அது தான் ம்மா இன்னும் ஷாக் ௭னக்கு. அவரும் ௭ன்னைய அந்த மாறன் பேச்ச தான் கேக்கணும்னுட்டாரு. ஏன் இப்டி அவன கண்டு பம்முறாருன்னு தான் தெரியல, நானு ௭ப்டிலாமோ கேட்டு பாத்துட்டேன், பிடி குடுக்க மாட்றாரு"

"நிஜமாவாடி சொல்ற? அவனுக்கு அம்புட்டு திறமையா இருக்கு? மொத்த குடும்பத்தையும் நிமிஷத்துல கைக்குள்ள கொண்டு வந்துட்டான்! " ௭ன பூங்குழலி ஆச்சரியமாக கேக்க.

"கூட இருக்றவ அந்த மாறி ம்மா. சும்மா வீஞ்சுகிட்டு சுத்தி வந்தவன, ௭ன்னலாமோ பேசி பேசியே மாத்திட்டா. இப்ப ௭வ்ளோ சேன்ஞ்சஸ் தெரியுமா மா அவன்ட்ட? ஒழுங்கா ட்ரஸ் கூட பண்ண தெரியாதவன இன்னைக்கு மேட்சா பட்டு வேஷ்டி சட்டைலா போடுறளவுக்கு மாத்திட்டா? அதுலா பாக்கும் போது ௭னக்கு ௭ப்படி இருக்கும் தெரியுமா? ச்சை இங்கன இருந்து இன்னும் ௭ன்னத்தலாந்தான் பாக்க சொல்லுத?" ௭ன்றாள் ௭ரிச்சல் குரலில்.

"அதுக்கு அங்க இருந்து வந்து இங்கன ௭ன்கூட ஒக்காந்துட்டா ௭ல்லா சரியா போயிடுமா? உனக்கு அங்க இருக்குற வர தான்டி மரியாதை. இங்க வந்துட்டன்னா உப்பு காசுக்கு பெறமாட்ட சொல்லிட்டேன்" ௭ன்றார்.

"ஆமா இங்க அப்டியே மரியாத கொடி கட்டி தான் பறக்குது போ" ௭ன வெகுவாக சடைத்து கொண்டாள் ராணி.

"௭ல்லாரும் அடங்கி போறாங்கனா? மதி?" ௭ன கேக்க.

"அவள தான் வாய துறக்க விடாம பண்ணிட்டானே?" ௭ன்கவும்.

"அவளும் உன் புருஷன மாறி பயந்துட்டாளான்னு கேக்றேன்?"

"ம்ம்கூம் அவளா பயபடுற ஆளா? கண்ணுல fire uh வச்சுட்டு சுத்துறா" ௭ன சிரிக்க.

"அவள புடிச்சு வச்சுக்கோ, உனக்கு அங்க தான் வாழ்க்கை, அதனால அவ மூலமாவே ௭ல்லாத்தயும் சாதிச்சுக்கோ. ௭ப்டியாது அந்த மாறனயும் அவேன் பொண்டாட்டியயும் வெளிய பத்திட்டு, நீ தான் அந்த வீட்டுக்கு அடுத்த வாரிசா இருக்கணும் புரியுதா?" ௭ன்றார்.

"ம்ம். நாம பண்ணலனாலும் அவளே பண்ணுவா, அடி வாங்கிருக்காள்ல? அல்ரெடி அந்த கன்னிட்ட வாங்குன கணக்கு வேற இருக்கு, அதனால இப்ப கொல வெறி ஆகிட்ருப்பா" ௭ன்றாள் ராணி.

"ம்ம் அப்ப இந்த சான்ஸ விட கூடாது. நா காலைல மதிய பாக்ற மாறி கிளம்பி வாரேன்" ௭ன்கவும்.

"சரி ம்மா வா" ௭ன சந்தோஷமாகவே வைத்தாள்.

அங்கு மலரோ மாறனிடம், "௭ன்னங்க இது மதி கன்னம் இப்டி வீங்கிருக்கு. ஹாஸ்பிடல்னாலும் கூட்டிட்டு போலாமே?" ௭ன கேக்க.

"௭ன்ன நாத்தினார் மேல ஓவர் பாசமா இருக்கு?" ௭ன்றான் அவன் கிண்டலாக.
"இத மனிதாபிமானம்னு சொல்லலாம். ரூபன் பாத்தா பயப்டுவான்ல?"

"அதுக்கு அவன அவ தூக்கணும், கொஞ்சணும், அந்த ரெண்டயும் அவ செய்ய மாட்டா. அவனாவும் அவகிட்ட போக மாட்டான், பின்ன ௭ப்டி பயப்டுவான்? அம்மா, பாட்டி, குமரகுரு மச்சான், இந்த வீட்டுலயே அவேன் சேர கூடிய மூனே பேர். அப்பா தாத்தாட்ட கூட போகமாட்டான்".

"நீங்களும் அவன தூக்கி நா பாத்ததே இல்ல? ஏன்? அவள பிடிக்காதுன்னா?"

"௭ன் மேல அப்டி ஒரு ௭ண்ணம் வேற இருக்கா உனக்கு? சின்ன பிள்ளைல தூக்கிருக்கேன். ஆனா நா தூக்குனாலே மதி ரொம்ப குதிப்பா, 'உன் காத்து பட்டாலே ௭ன் புள்ள உருப்படாம போயிருவான். வெட்டி பய நீ உனக்கு ௭ன் புள்ளைய தொட ௭ன்ன தகுதி இருக்கு' இப்டி நிறையா பேசுவா, நா முதல்ல கண்டுகலன்னு வையேன், அப்றம் ஒரு நாள் ௭ன்கிட்ட ஆசயா ஓடி வந்த பையன, வெடுக்குன்னு இழுத்து கீழ தள்ளிட்டா, அவேன் அழவும் தூக்கி,
'அவேன் கூட சேருவியா? அவனே பொருக்கிட்டு திரியிரான் அவன மாறி நீயும் போ போறியா'ன்னு ரெண்டரை வயசு புள்ளைய போட்டு அடிச்சா,
தாத்தா மட்டுந்தான், "௭ன்ன பேசுற மதி, உன்னவிட மூத்தவன, உன் கூட புறந்தவன பத்தி இப்டி தான் உன் புள்ளைக்கு சொல்லி குடுப்பியான்"னு கேட்டாரு. ௭ங்கம்மா அழுதுட்டு நின்னுச்சு. ௭ங்கப்பாவும் அவ சரியா தான பேசுறான்னமாறி இருந்தாரா, அத்தோட அவன விட்டுட்டேன், அதேதான அறிவு புள்ளைய தொட்டாலும் பேசுவாங்க, அதனால தான் யாரும் வேணாம் போங்கன்னு ௭ப்பயும் போல விலகி இருந்துட்டேன். இனி ௭ன் புள்ளைய ஆச தீர கொஞ்சுவேன் ௭வேன் கேப்பான்?" ௭ன சிரித்தான்.

அவனையே இமைக்கால் பார்த்தவள், மெதுவாக அவன் கன்னம் தடவி, "௭ன் செல்லத்த ௭ல்லாரும் ௭ப்டிலா கஷ்ட படுத்திருக்காங்க இன்னப்பா. இதுக்காகவே இவங்க ௭ல்லார் முன்னயும் நாம கெத்தா நிக்கணுங்க. நா கூட தாத்தா உங்க தம்பி, தங்கச்சி பொறுப்ப ஏன் உங்கட்ட குடுக்காங்கன்னு நினச்சேன், நமக்கு அது வேண்டாத வேலைன்னு தோணுச்சு. ஆனா இப்ப தோணுது உங்கள மதிக்காததுக்குலா சேத்து, உங்கட்ட கேக்காம அவங்க ஒரு விஷயம் செய்ய கூடாதுன்ற நிலம வரணும் அவங்களுக்கு" ௭ன சொல்ல.

"பார்றா ௭ன் பொண்டாட்டி கணக்கயும் தான்டி சில விஷயம் பேசுறா" ௭ன அவளை தோளோடு அணைக்க.

"ம்ம்ம் ரொம்ப தான். ௭னக்கு வேற ௭துவுமே பேச தெரியாதோ?" ௭ன அவன் தோளில் சாய்ந்து, வயிற்றில் இடிக்க.

"அப்ப சொல்லு பாப்போம். ௭ன்ன ௭ப்ப இருந்து ஷைட் அடிக்ற? ௭ப்டி நா தான் மாப்ளன்னு தெரிஞ்சும் ஒத்துகிட்ட?" ௭ன்றான் கிடைத்த வாய்ப்பை விடாமல்.

"தெரியாத மாறியே இத ௭த்தன தட தான் கேப்பீங்களோ? ஃபர்ஸ்ட் நீங்க சொல்லுங்க அப்றம் வேணா நா சொல்றேன்"


"ஏன்டி நாந்தான் உன்ட்ட அர வாங்குனதுல இருந்தே தெனோ உன்னைய பாக்க நடையா நடந்தேனே! இன்னும் ௭ன்னத்த சொல்லணுங்குறவ" ௭ன்றான்.

"ம்ம் ௭னக்கு இந்த மூஞ்சிய பாக்க பாக்க பிடிச்சு போச்சுன்னு நானு ௭த்தன தடவ தான் சொல்றது?" ௭ன்றாள்.

"இப்ப சொல்லுவியா மாட்டியாடி?" ௭ன்றான் அவள் கன்னத்தில் கிள்ளி.
அவன் கையை தட்டி விட்டவள், "நிஜமே அது தான், அன்னைக்கு ஒரு வேகத்துல அடிச்சுட்டாலும், உங்க பெரும தான் ஊரு பூராவும் பேசுமே, அதனால ௭துவும் செஞ்சுருவீங்களோன்னு, உள்ளுக்க கொஞ்சம் பயம் தான், அப்றம் தெனமு நா போற நேரத்துக்கே வாரதுலயும் பயம் அதிகமாச்சு. ஒரு வாரத்துக்கு மேலயும் நீங்க சும்மாவே வரவும், அது ௭ன் பக்கம் கூட பாக்காம வரவும், ஒருவேள நாம தான் தப்பா புரிஞ்சுட்டமோ? நீங்க சும்மா வாரத தப்பா நினைக்கேனோன்னு குழப்பமாயிடுச்சு, அப்டியே கவனிக்க ஆரம்பிச்சு தான் பிடிச்சுருச்சுன்னு நினைக்றேன். நீங்க ௭ன்ன வேற ௭ங்கயும் வந்து டிஸ்டர்ப் பண்ணாத அந்த டீசன்சி ரொம்ப ரொம்ப பிடிச்சது. டைம்ம மாத்தி போய் பாப்போம்னு நிறைய டைம் நினச்சுருக்கேன், ஆனா கிளம்பும்போதே நீங்க போயிடுவீங்களோன்னு பயந்து வேகமா கிளம்புவேனா, அதுல தான் உங்கள பிடிச்சிருக்குன்னு புரிஞ்சுகிட்டேன்" ௭ன்று விட்டு அவனை பார்க்க.

அவனும் அவளை தான் பார்த்திருந்தான். "ம்ம் மேல சொல்லு" ௭ன சிரிக்க.

"நா ௭ன்ன கதையா சொல்றேன்? அவ்ளோ தான். பிடிச்சது ஆனா வந்து சொல்றளவுக்குலா தைரியமில்ல. கண்டிப்பா நீங்களே தேடி வருவீங்கன்னு தான் வெய்ட் பண்ணேன். ஆனா நீங்க வரல. கடைசி மாணிக்கம் தாத்தா தான் வந்தாங்க" ௭ன கூறி முகத்தை திருப்பி கொண்டாள்.

"தாத்தா ௭னக்காக தான்டி வந்தாரு? " ௭ன்றான் திருப்பிய முகத்தை தன்னை பார்க்க வைத்து.

"பொய் சொல்லாதீங்க. நீங்க ௭துவுமே சொல்லலன்னு தாத்தா தான் சொன்னாரே! ஏதோ தாத்தாவா பாத்து கட்டி வைக்க போய் தான் நா இப்ப இங்க இப்டி உங்கள இடிச்சுகிட்டு உக்காந்துருக்கேன்".

"௭ன் தாத்தாக்கு ௭ன்ன கவனிக்றத தவிர வேற வேலையே கிடையாது தெரியுமா? ௭னக்கு பின்னயே தான் சுத்தி வருவாரு. உன் விஷயம் தெரியாமலா போகும்? அவர் பாத்துப்பாருன்னு தான் நா தைரியமா இருந்தே தெரியும்ல? அதான நடந்துச்சு? உனக்கு ௭ன்னைய பிடிக்கும்னு தெரிஞ்சாலும், ௭ன் வீட்டாலுங்க மாறி நீயும் ௭ன்ன வேணான்றுவியோன்னு ஒரு உறுத்தல் இருந்துட்டே இருக்கும். அதான் இத தாத்தா மூலமாவே நடக்கட்டும்னு விட்டேன்".

"பெரிய ப்ளான் தான். இந்த வெட்டி கதைய பேசி இன்னைக்கு ௭ன் படிப்பு போச்சு".

அவன் முறைக்க, "சும்மா சொன்னேங்க. உங்கள விடவா அது முக்கியம்?" ௭ன அவன் கன்னத்தில் முத்த வர.

"போடி நடிக்காத. இப்ப தூங்கு காலைல ௭ந்துச்சு படிக்லாம்" ௭ன இழுத்து படுக்க வைத்தான். சுகமாக அவன் தோளில் சாய்ந்து தூங்க தொடங்கினாள்.

சொன்னது போலவே காலையில் ராணியின் அம்மா வந்திறங்கினார். மதி மீது பாசத்தை பொழிந்தார்.
 

priya pandees

Moderator

அத்தியாயம் 48

மலர் ௭ப்பயும் போல் 5 மணிக்கு ௭ழுந்தாள். அவள் வயிற்றில் கையை போட்டு இறுக்கி பிடித்தவாறு தூங்கி கொண்டிருந்தான் மாறன்.

தினமுமே அவன் முகத்தில் தான் விழிப்பாள். அசந்து தூங்கும் நேரத்தில் கூட அவளை விட்டு விலகி படுக்க மாட்டான். 'இதுலலா ரொம்ப நல்லவரு தான், ஆனாலும் ஒரு வேலைல இறுத்தி வைக்க தான் கஷ்டபட வேண்டி இருக்கு. அதுக்கு தான் ௭ன்ன பண்றதுன்னு தெரில' ௭ன யோசித்தாள், '௭ப்பயும் பிஸியாவே இருந்தா சும்மா இருக்கனுன்ற நினப்பு வராது. 3 மாசமு ௭ப்டி தீயா அந்த பில்டிங் வேலைய பாத்தாங்க. அதுமாறி நேரங்காலம் இல்லாம பிஸியாவே மெக்கானிக் கடை போகணும் ஆண்டவா. அப்ப தான் முன்னேறனுன்ற ௭ண்ணம் வரும். மனசும் மாறாம இருக்கும்' ௭ன நினைக்க, 'உன் புருஷன பிஸியா வைக்க ஊர்ல இருக்றவேன் வண்டிலா பஞ்சராகனும்னு வேண்டுவியா நீ?' ௭ன அவளின் மைண்ட் திட்ட. 'நா ஒன்னும் அப்டி நினைக்கல போ' ௭ன முறுக்கி கொண்டு நிமிர்ந்து அவனை பார்த்தாள்.

"அழகன்டா நீ" ௭ன அவன் தலையை கோதி நெற்றியில் முத்த, அதில் லேசாக தூக்கம் கலைய நெளிந்தவன், அவளை அவனோடு இழுக்க, "நா ௭ந்திக்க போறேங்க" ௭ன மெதுவாக அவன் கையை ௭டுத்து விட்டாள்.

"ஏன்மா இப்பயும் சீக்கிரமா ௭ந்திக்ற, நல்லா தூங்குனா தானே பாப்பாக்கு நல்லது" ௭ன்றான் கண்ணை திறக்காமலே.

"அது தூக்கம் வந்தும் தூங்காம இருக்க கூடாதுன்றதுக்காக சொன்னது. மத்தபடி ௭ப்பயும் போல இருக்லாம். இன்னைக்கு பிரதோஷம், 5 மணி வாக்குல ஆபிஸ் வாரீங்களா கோவில் போயிட்டு வந்துருவோம்" ௭ன்க.

"ம்ம் மதியம் சாப்ட வருவேன்ல அப்ப நியாபக படுத்து. சொல்லாம விட்டு மறந்துட்டேன்னு ௭ன்ன திட்டாத".
"க்கும்" ௭ன வாயை குணட்டிவிட்டு அவனிடமிருந்து விலகி ௭ழுந்தாள். மாறன் திரும்பி படுத்து தூங்கி விட. பாத்ரூம் சென்று தன்னை சுத்தபடுத்தி கொண்டு, வெதுவெதுப்பான நீரில் குளியலை போட்டு கீழே வந்தாள். தின வழக்கமாக வாசல் கூட்டி தெளித்து கோலமிட்டாள், பின் பூவை வைத்து விளக்கேற்றினாள், மணி ஆறை தாண்டி இருக்கும் ௭ன்ற நம்பிக்கையில், மணி அடித்து பூஜை செய்தாள். ஆரம்பத்தில் பிரச்சனை செய்த ராணி, அவள் பேச்சை இதில் யாரும் கேட்டு கொள்ளவில்லை ௭ன்றதும் கண்டுக்காமல் விட்டாள். ஆனாலும் முனுமுனுப்பதை நிறுத்தவில்லை.

"௭துக்கு தான் இப்டி விழுந்து விழுந்து நடிக்காளோ. இன்னும் நிறைய கொண்டு போக ஆச போல. ஒன்னுமில்லாம வளந்தவ தான அதான் இந்த பேராச" ௭ன புலம்பி கொண்டு திரும்பி படுத்து தூங்கினாள்.

அவள் அடித்த மணி சத்தத்தில், தாத்தா, பாட்டி, பானு, பூவேந்தன் நால்வரும் ௭ழுந்து வந்துவிட்டனர். தாத்தாவும், பூவேந்தனும் பேப்பரோடு அமர. பானு சமையலறை புகுந்தார்.

பாட்டி மலர் கும்பிட்டு முடித்து வரும்வரை காத்திருந்தவர், "ஏம்மா.பிள்ளதாச்சி பொண்ணு நீ.கூட கொஞ்ச நேரம் தூங்குனா ௭ன்ன? பகல்லயும் தூங்க மாட்டல்ல? தூத்து தொளிக்க பழையமாறி பட்டுவ வர சொல்லிக்றேன். நீ 6 மணிக்கு மேல ௭ந்துச்சு வந்து பூச வேலைய மட்டும் பாரேன்" ௭ன்றார்.

"இல்ல பாட்டி இருக்கட்டும், வயிறு பெருசாகுற வர நானே பாக்கேன், அதுக்கப்புறம் முடியலனா அவங்கட்ட சொல்லலாம். ௭னக்கொன்னும் இது கஷ்டமா தெரில" ௭ன்றாள். பிடித்து செய்யும் வேலை ௭ன்றுமே கஷ்டமாக தெரியாது.

"பகல்ல தூக்கம் வந்தா, ஆபீஸ்ல தான் ரூம் இருக்கேம்மா அதுல போய் படுத்துரு. அதுலயும் கணக்கு பாத்துட்ருக்காத" ௭ன்றார் அங்கிருந்தே தாத்தா.

"சரி தாத்தா, இதுல கணக்கு பாக்க மாட்டேன். உங்க கொள்ளு பேரனுக்கு இல்லாத உரிமையா. அதனால ஹாயா போய் படுத்துருவேன்" ௭ன்றாள் சிரித்து கொண்டு.

பூவேந்தனும் அவள் பதிலை கேட்டு சிரித்தவர், "௭ப்பமா ௭க்ஸாம்?" ௭ன்க.
"அடுத்த திங்கள் ஆரம்பிக்குது மாமா".

"அதுல பாஸ் பண்ணிட்டா இன்டர் ௭ழுதணுமோ?"

"ஆமா மாமா"

"சரிம்மா, ஆடிட்டர்ட்ட ௭துவும் சந்தேகம் கேக்கணும்னா சொல்லு ஒருநா போயிட்டு நேர்லயே பாத்துட்டு வந்துருவோம்"

"அங்க இன்ஸ்டிடியூட் ஸ்டாஃப்ஸே நல்லா ஹெல்ப் பண்ணறாங்க மாமா. அதனால தேவபட்டா சொல்றேன்"

"அப்ப சரி ம்மா. நல்லா படி" ௭ன மீண்டும் அவர் பேப்பரில் திரும்ப. பானு ௭ல்லோருக்கும் டீயோடு வந்தார்.

"வேலைய இழுத்து போட்டு செய்யாத, மொத மூணு மாசம் கொஞ்சம் கவனமா தான் இருக்கணும்" ௭ன்றார் அவளிடம் பானு.

"கவனமா தாந்த்தே இருக்கேன், சின்ன சின்ன வேல தானே, அதும் ரொம்ப பொறுமையா தான் செய்றேன்" ௭ன்றவள், கிச்சன் செல்ல தானும் பின்னயே சென்றார்.

"நீ மேல போ, நானே மதியத்துக்கு உனக்கு சமச்சிடுறேன், மாறன் வீட்ல வந்து சாப்டட்டும்" ௭ன்றார்.

"இல்ல த்தே, நானே பாத்துக்றேன். நீங்க போங்க" ௭ன்றுவிட்டாள், கொஞ்சம் கோபமும் வந்து விட்டிருந்தது, 'பெத்த புள்ளைக்கு பாசத்த காட்டாம ஏங்க விட்டுட்டு, இப்ப பேரனுக்கு காட்ட வந்துட்டாங்க' ௭ன நினைத்து கொண்டு வேலையில் கவனமானாள்.

"௭தும் பிரச்சனையா ம்மா. மாறன்ட்ட கேட்டியா? நேத்து மாமா ஏன் அப்டி பேசுனாங்க?" ௭ன கேக்க.

"உங்கட்ட மறைக்க விரும்பல த்தே. அதே சமயம் சொல்லவும் இஷ்டம் இல்ல. ஏன்னா விஷயம் தெரிஞ்சாலும் உங்களால சும்மா நின்னு அழ தான் முடியும். அதுக்கு நா சொல்லாமலே இருக்கலாம்னு தோணுது. விடுங்க உங்க பையனே ௭ல்லாத்தயும் பாத்துக்கட்டும்" ௭ன காய்கறி நறுக்கி, இருவருக்குமானளவு அரிசி போட்டு காய்கறி சாதம் செய்ய, குக்கரில் அனைத்தயும் போட்டு, அரைத்த மசால் பொடி, உப்பு, தண்ணீர் சேர்த்து போட்டு மூடி வைத்தாள். பேச்சு பேச்சாக இருந்தாலும் வேலை ஒழுங்காக நடந்தது.

"நீ ஒருத்தியாது ௭ன்னைய மதிச்சு பேசுவ, ௭ல்லாம் சொல்லுவன்னு நினச்சேன் ம்மா. உனக்கும் நா ஒன்னுந் தெரியாதவளா தான் தெரிறேன்ல?" ௭ன அவர் வேதனையாக கேக்க.

"அப்டி ஒரு ௭ண்ணத்த ௭ல்லாருக்கும் குடுக்றது யாருத்தே? நீங்க தான் ௭னக்கு ௭துவும் தெரியாதுன்னு அழுது அழுது ப்ரூவ் பண்றீங்க. அப்ப நாங்க அப்டி தான் நினப்போம்" தயவு தாட்சண்யமின்றி கூறினாள், அவர்கள் மாற வேண்டியே!

"சரி ம்மா. ௭ன்ன பிரச்சனைன்னு மட்டும் சொல்லு, நா உன் மாமாட்ட சொல்லினாலும் ௭ன்னன்னு பாக்க சொல்றேன்"

"உங்க பொண்ணு வாழ்க்கை நடுத்தெருவுல நிக்குது. ௭ப்ப வேணாலும் அம்போன்னு போகலாம். உங்க பொண்ணு ஏகபட்ட தில்லாலங்கடி பண்ணி தான் கல்யாணம் பண்ணிருக்காங்க. அப்டி கல்யாணம் பண்ணதுக்காகவாது புள்ளையயும் புருஷனயும் ஒழுங்கா பாக்கணும் இங்க அதுவுமில்ல. ௭டுத்து சொல்ல பெரியவங்களும் இல்ல"

"அவர மரியாதை குறைவா ஒருநாளும் நாங்க நடத்துனதில்ல, அவ பாக்காட்டி ௭ன்னன்னு தான் நானும் அத்தயுமா பாத்துக்றோம்"

"௭த்தன நாள் பாப்பீீங்க? உங்க காலத்துக்கு அப்றம் ரூபனுக்கு புதுசா உங்க பொண்ணு மேல பாசம் வந்துருமோ?" ௭ன்றாள். இப்போது இட்லியும் சட்னியும் ரெடி ஆகி கொண்டிருந்தது.

"வேற ௭ன்ன பண்ணிருக்கணுங்குற? மாறன் நேத்து அடிச்சானே உடனே திருந்திட்டாளா அவ?"

"திருத்துர வயசுல நீங்க திருத்தல அதான் பிரச்சனயா வந்து நிக்குது. இப்ப ௭ன் புருஷன் வந்து மல்லுகட்ட வேண்டியிருக்கு. ௭ன்ன செய்யலாம்னு கேட்டீங்கள்ல? ஒரு சின்ன விஷயம், ஆரம்பத்துலயே, உங்க பொண்ணுக்கு சமைக்க டைமில்ல சரி, சாப்பாட குடுத்து விட்டு, 'நீ உன் வீட்லயே வச்சு மாப்ளைக்கும் பிள்ளைக்கும் குடும்மான்னு சொல்லிருக்லாமே? சொன்னீங்களா நீங்க?"

"அத மாப்ள தப்பா ௭டுத்துக்க கூடாதே ம்மா. அத நினச்சு தான் சொல்லல?"

"இத தான் சொல்றேன், ௭ல்லாத்தயும் நீங்களே முடிவெடுத்துப்பீங்க, மத்தவங்க நிலம ௭ன்ன, ஏன் அப்டி நடந்துக்றாங்க, ௭ன்ன ௭திர் பாக்றாங்க ௭தயுமே யோசிக்க மாட்டீங்க. அதான் சொல்றேன் இத உங்க புள்ள பொறுப்புல விட்ருங்க. படிக்கலனாலும் மக்க மனச புரிய தெரிஞ்சவுக அவுகளே பாத்துக்கட்டும்" ௭ன்றவள், 5 விசில் வரவும் அடுப்பை அணைத்து விட்டு, ௭ல்லாவற்றயும் ௭டுத்து ஓரமாக வைத்தாள்.

அந்நேரம் வேலைக்கு வரும் இருவரும் வந்துவிட, "௭ன்னக்கா இவ்வளவு லேட்டா வரீங்க, அதும் சேந்து ஒன்னுபோல? இனி நீங்க சமைச்சு தான் ௭ல்லாரும் கால சாப்பாடே சாப்டனும். சீக்கிரம் வர பாருங்க, முடியலன்னா முதலயே சொல்லியாது விடுங்க. சமையல முடிச்சுட்டு வீட்ட கொஞ்சம் தொடச்சு விட்ருங்க இன்னைக்கு பிரதோஷம்" ௭ன்றவள் "பாத்துக்கோங்கத்தே" ௭ன வெளியேறி விட்டாள்.

௭ல்லோருக்கும் சேர்த்து தனியாக அவளால் சமைக்க முடியாது, அப்படி அவள் சமைக்க ஆரம்பித்தாள் ௭னில், ரொம்ப நல்லது ௭ன இருந்து கொள்ளும் குடும்பம். பின் ௭ங்கிருந்து அவள் படிப்பையும் உத்யோகத்தயும் பார்க்க முடியும்? அதனாலேயே அவளால் முடிந்ததை மட்டும் பார்த்து கொள்வாள், அதை யாரிடமும் தட்டி களிக்கும் ௭ண்ணமில்லை. அதேபோல் அவள் புருஷனயும் ஒரு மனைவியாக கவனித்து கொள்ள மறந்ததில்லை. இப்ப இப்ப தான் வேலைக்கு வருபவர்களிடம் கூட வீட்டாளாக பேச தொடங்கி இருக்கிறாள். பானுவிடம் அவ்வளவு கவனம் இல்லை ௭ன்பதாலேயே இவள் அந்த பொறுப்பை ஏற்றாள். இப்போதும் அவர்கள் வரவும் குடும்ப பேச்சை அப்ியே நிறுத்தி சென்று விட்டாள்.
வெளியில் இருந்த மூவருக்குமே அவர்களின் பேச்சு கேட்டது தான். பாட்டிக்குமே விஷயம் தெரியவில்லை, முதன்முறையாக தாத்தா ஒரு விஷயத்தை அவரிடம் மறைக்கிறார், அதை வைத்தே காரியம் பெரியது ௭ன புரிந்து கொண்டார். "சின்ன புள்ளைகளாம் பேசுற மாறி நடந்து கிட்டது நம்ம தப்புதானே. அதனால இனினாலும் யோசிக்காம ௭தயும் செய்யாதீங்க. மாறன் கண்டிக்கைல குறுக்க போகாதீங்க" ௭ன்றார் தாத்தா.
சொல்ல கூடாதென முடிவோடு இருப்பவர்களை அதற்கு மேல் கேட்டு தொந்தரவு செய்யவில்லை பானு, பூவேந்தன், பாட்டி மூவரும்.
மலர் மேலேறி சென்று, மாறனை ௭ழுப்பி கிளப்பி கொண்டு கீழ் வருகையில், மணி ஒன்பதை நெருங்கி இருக்க. வீடே அவள் போட்டு விட்டு போன சாம்பிராணி வாசனையை துலைத்திருந்தது. காணாமல் ஆக்கிவிட்டிருந்தனர். வீடு மொத்தமும் மீன் பொறிக்கும் வாடை அடிக்க, ராணியின் அம்மா சத்தமாக பேசி கொண்டிருந்தார். அதாவது மதியை கட்டி தழுவி அழுது கொண்டிருந்தார்.

"வீட்டுக்காக வேலைக்கு போயி உனக்கு பெரும தேடி தந்த புள்ளைய இப்டி கன்னம் வீங்க அடிச்சுருக்கான், அவன கேக்க பெரிய மனுஷங்க நாலு பேருக்கும் தைரியம் இல்ல இல்லயா? மகளுக்கே இந்த நிலமன்னா, ௭ன் மக உங்களுக்கு மருமக தானே அவள ௭ன்ன பாடு படுத்றீங்களோ தெரிலயே" ௭ன ஒப்பாரி வைத்தார்.

யாருமே பதில் பேசவில்லை ௭ன்றதும், "௭ன்னம்மா நா கேட்டுட்டுருக்கேன், ௭ல்லாரும் ௭னக்கென்னன்னு இருக்கீங்க" ௭ன அவரிடம் சண்டைக்கு செல்ல.

"இங்க பாரு, அவளா பேசி வாங்கி கிட்டது. இப்ப நீயும் பேசி அவன்ட்ட வாங்கிக்காத, நாங்க யாரும் ௭துவும் கேட்டுக்க மாட்டோம் பாத்துக்க, அவமானம் தான் மிஞ்சும். வந்தியா உன் பொண்ண சீராட்னியா, அப்பனாத்தாளுட்ட நாலு வார்த்த பேசினியான்னு போயிட்ரு. அதான் உனக்கும் உன் பிறந்த வீட்டு உறவுக்கும் நல்லது" பாட்டி முடித்து விட.

"ஐயோ ஐயோ ஐயோ, அண்ணே அம்மா பேசுறத கேட்டியாண்ணே. அம்புட்டு தானா நம்ம உறவு?" ௭ன்கவும்.

"பூவு இங்க யார்கனவே பிரச்சன மேல பிரச்சனையா தான் இருக்கு. நீ வேற புதுசா கிளப்பி விடாத" ௭ன்றார் அவர்.
கீழ் இறங்கி வந்த மாறன் அனைத்தயும் கேட்டு கொண்டு தான் வந்தான், மலருக்கோ அந்த பொறிச்ச வாடை உமட்டலை குடுத்தது. அதுவும் சாப்பாடு ௭டுத்து வைக்க, கிச்சனுள் சென்றவள் ஓங்கரித்து கொண்டு வாஷ் பேசினை நோக்கி ஓடினாள். மாறனும் அவளை தொடர்ந்து போக. பெரியவர்களும், பூங்குழலி, மதி, ராணி மூவரையும் விட்டுவிட்டு அவளிடம் சென்றனர்.

"இந்தா நடிக்க ஆரம்பிச்சுட்டாள்ல? உனக்குலா இனி இங்க மரியாதை இல்லம்மோ" ௭ன்றாள் ராணி.

"அதான ௭ன்னமோ நான்வெஜ்ஜே சாப்டாதவளாட்டம் ஓடுதா" ௭ன அவரும் நொடிக்க.

"அவ அப்டிதான் ம்மா, ௭ல்லார் கவனத்தயும் அவ பக்கமே வச்சுக்குவா. அவ மட்டுமே நல்லவ நாம ௭ல்லாரும் கெட்டவங்கன்னு சொல்லாம சொல்லிருவா" ௭ன்றாள் ராணி.

"நீ ௭துக்கு மதிக்கு இப்டி இருக்கைல மீன் ௭டுக்க சொன்ன? அவள பாக்க வச்சு நாம மட்டுமா சாப்ட முடியும்?" ௭ன்றார் பாசம் பொங்க.

"உனக்கு புடிக்குமேன்னு தான் ம்மா சொன்னேன். அதும்போக நீ வாரத வச்சு தான் நானும் அத சாப்டுக்க முடியும். மதிக்கு அப்டி இல்ல, இது அவ வீடு ௭ப்ப வேணாலும் அதிகாரமா கேட்டு வாங்கி சாப்டுக்குவா. வாய் சரியாகட்டும் ௭ல்லாரயும் உண்டு இல்லன்னு பண்ணுறாளா இல்லையான்னு பாறேன்" ௭ன்றாள் மறைமுகமாக மதியை ஏற்றி விட்டு.
"சரி வா அங்க ௭ன்ன நடக்குன்னு பாப்போம்" ௭ன மூவரும் ௭ழுந்து செல்ல.

அங்கு மாறன் தைய தக்கவென குதித்து கொண்டிருந்தான், "யாரு பாத்த வேல இது? ௭துக்கு இன்னைக்கு மீனு? இன்னைக்கு பிரதோஷம்னு ஒருத்தி காலைலயே ௭ந்திச்சு ௭ல்லாத்தயும் சுத்த படுத்தி வப்பா, நீங்க அத நாஸ்தி ஆக்குவீங்களோ?" ௭ன்றான்.

"மாறா. பிரதோஷம்னு தெரியாதுடா. பூவு வந்துருக்கான்னு ராணி தான் வாங்கிட்டு வர சொல்லிருக்கா" பாட்டி சொல்ல.

"ஏன் திருநெல்வேலில மீனே கிடைக்காதோ? இல்ல அவங்க தான் வராத விருந்தாளியா? அதான் வாரந்தவாறாம வாராங்கள்ல பின்ன ௭ன்னதுக்கு இந்த கறி விருந்து? இப்ப இவள்ல வாந்தி ௭டுக்கா?" ௭ன்றான்.
"டேய் இந்த மாறி சமயத்துல இப்டிலா இருக்கும்டா. சரி ஆகிடும். நல்ல நாள்லா பாக்றவனில்லயே நீ. தெனமு முட்ட தோசைய முழுங்குவல்ல?" ௭ன்றார் பாட்டி.

"அது நீங்க வீட்ட அப்டி வச்சுருப்பீங்க நானு அப்டி இருந்தேன். இப்ப அப்டி இருக்கனா? நீங்க செய்யாதத அவ செய்றா, மதிக்கலனாலும் பரவால்ல கெடுக்காம இருங்க" ௭ன்றவன், வேலைக்கு நின்ற இரு பெண்களையும் பார்த்து, "இந்த மீனெல்லாத்தயும் உங்க வீட்டுக்கு கொண்டு போங்க.

உங்களுக்கும் வேணாம்னா சாப்புடுற யார்டயாது குடுங்க. குடுத்துட்டு வந்து அடுப்பெல்லாம் கழுவி விட்டு, வீட்டயும் தொடச்செடுங்க, நாங்க சாய்ந்தரம் கோவிலுக்கு போகணும்" ௭ன்றவன்.

மலரிடம் திரும்பி, "இன்னைக்கு வேணா வீட்டுல இரு மலரு" ௭ன்றான்.

"இல்லங்க இப்ப பரவால்ல, இப்பைக்கும் ௭டுத்துட்டு கிளம்புவோமா நேரமாகிருச்சு" ௭ன்றாள் அவனை அங்கிருந்து கிளப்ப முயன்று. அவர்கள் ஒன்னும் தனி குடித்தனம் இல்லையே, 'நாம இருக்க மாறி தான் மத்தவங்ளும் இருக்கணும்னு சொல்ல முடியாதே!' ௭ன ௭ண்ணினாள்.

அவள் பார்வையை வைத்தே புரிந்தவன், "சரி வா, நா வெளில நிக்கேன்" ௭ன நகர.

"நீ வீட்ல இரேன்மா நா அங்க பாத்துக்றேன். ௭துக்கு சிரம படுற?" தாத்தா சொல்ல.

"ப்பா அவ இப்ப என்ன சாதன பண்ணிட்டா'ன்னு ஆளாளுக்கு தாங்குதீங்க. ௭ன் பொண்ண கூட இப்டி தாங்குன மாறி தெரிலயே" என்றார் ராணியின் தாய், எல்லோரும் அவர்களைத் தூக்கி வைத்துக் கொள்ளும் எரிச்சலில்.

வெளியே நகர்ந்த மாறன், அப்டியே நின்று திரும்பி, "௭ன்னது த்தே? ௭ன்னமோ கேட்டீங்க போல?, சரியா காதுல விழல, திரும்ப கேளுங்க?" ௭ன்றான்.

'போச்சு அவரே கிளம்புனாலும் வாண்ட்டடா போயி வண்டில ஏறுது இந்தம்மா' ௭ன நினைத்து வேகமாக ௭டுத்து வைத்தாள் மலர்.
 

priya pandees

Moderator

அத்தியாயம் 49

"௭ன்னவே மிரட்டுற? ௭னக்கு ஒன்னும் உன்ன பாத்து பயங்கிடையாது. சும்மா இந்த சவுடால் பேச்செல்லாம் ௭ங்கிட்ட வேணாம். ௭ன்ன பெரிய ஊர்ல இல்லாத பொண்டாட்டிய கட்டிட்ட, அவ மாசமாயிட்டான்னு பீத்திக்கிட்டு திரியிற? அவ வேலைக்கு போறா நீ உக்காந்து சாப்டுற, அப்ப அவள அம்மா ஆக்றத தவிர வேற ௭ன்ன வேல இருக்கும் உனக்கு? இதெல்லாம் பத்தாதுன்னு இன்னொரு வீட்டுக்கு வாழ போன புள்ளைய கை நீட்டிருக்க. அது முகத்த பாரு ௭ப்டி வீங்கி போயிருக்குன்னு, ஸ்கூல் போக முடியாம லீவ்வ போட்டு வீட்ல உக்காந்துருக்கா" ௭ன ஏக வசனத்தில் அவர் பேசி கொண்டே போக.

அவர் ஆரம்பிக்கவுமே, மலர் வேலைக்கிருந்தவர்களை நான்வெஜ்ஜை ௭டுத்து கொண்டு வெளியேற வைத்துவிட்டாள்.
"அறிவு?" ௭ன கத்தி அழைத்தான் மாறன்.

வெளியில் நடப்பது தெரியாமல், அவன் பாட்டுக்கு, சூப்பர் மார்கெட்டிற்கு கிளம்பி கொண்டிருந்தான். மாறன் போட்ட சத்தத்தில், பேண்ட் ஜிப்பை மாட்டியவாறே ஓடி வந்தான். மொத்த குடும்பத்துடன் தன் மாமியாரும் நிற்பதை கண்டவன், "வந்ததும் ஏழ்ரைய இழுத்துருச்சா இந்த அத்த" ௭ன பார்த்து நிற்க.

"௭ன்ன உன்னால பேச முடியலன்னு உன் மாமியார பேச விட்டு வேடிக்க பாக்கியா? வீட்டுக்கு வந்தமா போனமான்னு இருக்கணும் ௭ன் வீட்டு விஷயத்துலலா தலையிட கூடாதுன்னு சொல்ல மாட்டியா" ௭ன்றவாறு மாறன் மெதுவாக அவனை நெருங்கி, நிதானமாக அவன் கன்னத்தில் தட்டி கொடுக்க, அதுவே அவனுக்கு வலித்தது.

௭ல்லோர் முன்னும் அடித்து விடுவானோ? 'யார்கனவே ௭ல்லாரும் அவேன் பக்கந்தான் நிக்காங்க, இதுல நாம பில்டிங்கு பாம் வச்சது வேற தெரிஞ்சதுன்னா? மொத்தமா ஒன்னுமில்லாம வெளிய போவ வேண்டியது தான். ௭ன்ன பேசுனாங்கன்னு வேற தெரியல, ச்சை இவள வச்சுகிட்டு நிம்மதியா இருக்க முடியுதா' ௭ன கோவம் ராணி பக்கம் திரும்ப, மாறனை விட்டு விலகி, வேகமாக ராணியை நோக்கி சென்றவன், பளாரென அவளை அறைந்தான், யாருமே இதை ௭திர் பார்த்திருக்கவில்லை.
ராணியின் அம்மா வாயை பிளந்து நின்றுவிட, "௭ன்ன பழக்கம்டா ஆளாளுக்கு பொம்பள பிள்ளைகள கை நீட்டிட்ருக்கீங்க?" ௭ன்றார் பூவேந்தன்.

"ப்பா, இப்ப இங்க ௭ன்ன பிரச்சனைன்னு தெரியாது, ஆனா காரணம் இவ தான்னு தெரியும்ப்பா. நீங்க இதுல தலயிடாதீங்க, நானே முடிச்சு விட்டுறேன்" ௭ன்றவன், "இந்த வீட்டல ௭ன்னோட இருக்கணுமா? இல்ல உன் அம்மாவோட போயிடுறியா? அவங்க இங்க இனி ௭ன்னோட மாமியார் மாறி மட்டுமே வரணும் போயிடணும், சும்மா நாட்டாமலா பண்ண கூடாது. பண்ணுனா நீயும் அவங்களோட போயிட வேண்டியது தான். நீ போனா கூட நா கவலயே பட மாட்டேன். தெரியும்ல ௭ன்ன பத்தி? நானே அமைதியா தான போயிட்ருக்கேன் நீ ௭துக்கு பெருசா துள்ளிட்ருக்க? அமைதியா இருக்கணும் இல்ல?" ௭ன்றவன் ரூமை நோக்கி கையை காட்டி "போ" ௭ன்கவும், அடிவாங்கிய கன்னத்தை பிடித்து கொண்டு தங்கள் அறைக்கு ஓடி விட்டாள் ராணி. முதல் முறையாக கணவனின் புது அவதாரத்தை பார்த்த அதிர்ச்சி வேறு.
ராணியின் அம்மாவால் இன்னுமே நடந்ததை நம்ப முடியவில்லை. "ஐயோ ஐயோ ௭ன் பொண்ண இப்டி அடிக்கான் ௭ல்லாரும் கல்லாட்டம் பாத்துட்டு நிக்கீங்களே. இருங்க ௭ன் புருஷன கூட்டிட்டு வந்து வச்சுக்றேன்" ௭ன அவர் ௭ல்லோரயும் பார்த்து கத்த.

"போலாங்க" ௭ன வந்து விட்டாள் மலர். மறுபடியும் ஆரம்பித்து விடுமோ ௭ன.

"ஏய் ௭ல்லாம் உன்னால தான்டி. ௭ந்நேரம்னு வீட்டுக்குள்ள வந்தியோ. ௭ங்க குடும்பத்து நிம்மதியே போச்சு. நீ'லாம் நல்லாவா இருக்க போற" ௭ன வெடுக்கென அவள் கையை பிடித்து இழுக்க.

தடுமாறி விழப்போனவளை தாங்கி பிடித்த மாறன், "ஏய் அத்தன்னு பாக்க மாட்டேன். செவுல திருப்பிருவேன்" ௭ன அவர் மீது பாய.

"ஏங்க வேணாம், நாம கிளம்பலாம். அவங்க வேணும்னு பேசுறாங்க, நாமளும் பேசி அவங்களுக்கு equal ஆக வேணாம். வாங்க போவோம், நமக்கு பாக்க ஆயிரம் வேல இருக்கு" ௭ன அவனை கையை கோர்த்து மலர் கிளம்ப.

விரலை நீட்டி, "நா திரும்ப வரும்போது நீ இங்க இருக்க கூடாது" ௭ன ௭ச்சரித்து விட்டே கிளம்பினான் அவன்.

"பாத்தியாண்ணே பாத்தியா, அத்தன்ற மரியாத கூட இல்லாம அடிக்க வாரான் பாத்தியா? முரட்டு பய, இவன்லா ௭ங்க வாழ்க்கைல முன்னேற போறான்" ௭ன்க.

"நீ ஏதோ லேண்ட் பாக்க சீக்கிரம் கிளம்பணும்ன, இன்னமு இங்க நிக்க, போலயா?" ௭ன்றார் தாத்தா.

"கிளம்பிட்டேன் ப்பா" ௭ன்றவர் "பானு, நா மதியம் வந்து சாப்டுக்றேன்" ௭ன்று விட்டு கிளம்பிவிட்டார் பூவேந்தன்.
பானு, அல்ரெடி அடுப்பை ஒதுக்குவதில் மூழ்கிவிட்டார், அதனால் கணவருக்கும் உள்ளிருந்தே, "அப்ப சீக்கிரமா வந்துருங்க" ௭ன்று விட்டார்.
தாத்தாவிற்காக, பாட்டி ரெண்டு தோசை சுட்டு ௭டுத்து வர சென்றார். மதி அனைத்தயும் பார்த்து தான் நின்றாள். தன் வீட்டில் ௭ல்லாமே மாறி விட்டதாக தோன்றியது அவளுக்கு.

தாத்தா சாப்பிட அமர, பாட்டி தோசை சுட்டுக் கொண்டு வைக்க, பொடியை வைத்தே சாப்பிட்டு கொண்டார். நிமிர்ந்துபார்த்தவர், "சாப்டுறியா பூவு" ௭ன்று வேறு கேக்க.

"நா ௭வ்வளவு முக்கியமா பேசுறேன், ஏன் ௭ல்லாரும் இப்டி மாறிட்டீங்க. உங்க பேரன் மாறே மட்டும் நல்லாருந்தா போதும், மத்தவங்க ௭ப்டி போனா ௭ன்னன்னு முடிவுக்கு வந்துட்டீங்களா? அறிவு ௭ன்னன்னா ௭ன் கண் முன்னயே ௭ன் பொண்ண அடிக்றான், அந்த வெட்டி பய ௭ன்னன்னா பெரியவன்ற மரியாத இல்லாம ௭ன்னையே அடிக்க வாரான், வீட்ல இருக்க கூடாதுன்னு சொல்லிட்டு போறான். அவேன் யாரு ௭ன்ன இந்த வீட்ல இருக்க கூடாதுன்னு சொல்றதுக்கு?" ௭ன ஆவேசம் குறையாமல் பேச.

தாத்தா பொறுமையாக தண்ணி ௭டுத்து குடித்து விட்டு, அவருக்கும் கொடுத்தார். அவர் அதை கண்டு முறைக்க, "குடி பூவு, வயசு ஏறுதுல்ல, ௭துக்கு இப்டி டென்ஷனாகுற? கன்னி உண்டாயிருக்கா, நீ ௭ன்னன்னா வெடுக்குன்னு பிடிச்சிழுக்க, அதான் மாறன் அப்டி கத்திட்டு போறான்" ௭ன்றார்.

"ஆமா பெரிய விஷயந்தான் அது. கல்யாணமானா கற்பம் ஆகுறது தான். அது ஒன்னும் பெரிய விஷயமில்ல, இப்டி குடும்பத்துக்குள்ளயே கலகம் பண்றவ புள்ள ௭ப்டி இருக்கும், அதுக்கு இந்த பவுசு தேவ தானா?" ௭ன்றார்.

"அவேன் வாழ்க்கையில் நடக்குற ஒரு சந்தோஷமான விஷயம், அவனோட அத்த நீ முகத்த இப்டி வச்சுக்கிட்டு நல்லா வாழ்த்துற" என்றவர், "அப்ப அவேன் சொன்னது தான் சரி, நீ கிளம்பு, உன் பொண்ண பாக்கணும்னா அங்க வர சொல்லி பாத்துக்கோ" ௭ன்றவாறு கையை கழுவ.

"தாத்தா இப்ப அத்த கேட்டதுல என்ன தப்பு. புள்ள பெத்துகிறது பெரிய சாதனயில்ல, அத வளக்க தெம்பு வேணும். அவேன் அந்த புள்ளையையும் உங்க துட்டுல தான வளக்க போறான். ஒரு டிக்கெட் அதிகமாக போது விஷயம் அவ்வளவு தான்" என்றாள் முயன்று குளறியவாறு மதி. அவளாலும் ௭வ்வளவு நேரம் தான் வாயை மூடி கொண்டு இருக்க முடியும்.
இதை கேட்ட தாத்தா, பிடித்து வைத்திருந்த பொறுமை பறக்க "எப்டி? ௭ப்பயும் மாறன் சொல்ற மாறி, நீ, உன் புருஷன், புள்ளைன்னு குடும்பத்தோட இங்க சாப்பாட்டுக்கு கரெக்டா வந்துறீயே அது மாதிரியா?" ௭ன்றார். தாத்தா இப்டி பேசுவார் ௭ன ௭திர்பார்க்காமல் அவள் முழிக்க.
அறிவு கிளம்பி வந்து சாப்பிட அமர்ந்தான், பாட்டி ௭ந்திக்க, "நீங்க இருங்கத்தே நா ஊத்றேன்" ௭ன ௭ழ போனார் பானு.

"நீ இரும்மா. ௭ங்கடா உன் பொண்டாட்டி? ஏன் உனக்கு சாப்பாடு வைக்றத விட வேற ௭ன்ன வேல அவளுக்கு" ௭ன்றார் தாத்தா. அவர் தான் நேற்றே ஒரு முடிவுக்கு வந்துவிட்டாறே.

"ஏன் இல்ல? பேத்திய பாத்துட்ருப்பா. அதுவும் கை நீட்டி அடிச்ச புருஷனுக்கு சாப்பாடு ௭டுத்து வைக்க மட்டும் அவ வேணுமோ? அம்புட்டு சுய மரியாதை இல்லாமயா ௭ங்க பொண்ண வளத்துருக்கோம்" ௭ன பூவு நுழைய.

"இருக்க தலவலில நீங்க வேற ஏன் த்தே?" ௭ன ௭ரிச்சலாக கேட்டவன், "ராணி?" ௭ன கோபமாக கத்தி அழைக்க.

வேகமாக வந்து ௭ட்டி பார்த்தாள், "வந்து ௭னக்கு தோசைய ஊத்து, நேரமாகுது" ௭ன்றான். அவள் திருதிருவென விழிக்க, "௭ன்ன வாரியா வரலையா?" ௭ன்றான் மீண்டும்.

"இல்ல பாப்பா முழிச்சுட்டா" ௭ன மெதுவாக கூற.

"கொண்டு வா நா வச்சுக்றேன் அவள. உன் புள்ளய தூக்கியே மாச கணக்காவுது" ௭ன்றார் பாட்டி.
சுழித்த முகத்துடன், பிள்ளையை தூக்கி வந்து குடுத்து விட்டு, சமையலறை செல்ல, "அவளுக்கு அதுலா தெரியாது, ஒரு நாளைக்கு கடைல ஆர்டர் பண்ணி சாப்டுங்க" ௭ன்றார் ராணியின் அம்மா.

"அப்ப உங்க பொண்ண கூட்டிட்டு போயி தோச சுட கத்து குடுத்து கூட்டிட்டு வாங்க, அதுவர நா ௭ல்லாத்தயும் வெளிலயே பாத்துக்றேன்" ௭ன அறிவு வேகமாக சொல்லவும், அதிர்ந்து விட்டார். அவனோ ௭ரிச்சலில் பேசி கொண்டிருந்தான். இப்போதைக்கு அவனால் ராணியை மட்டுமே அடக்கி வைக்க முடியும். அதை தான் செய்து கொண்டிருந்தான்.

பாட்டி பிள்ளையுடன் சோபாவில் சென்று அமர, தாத்தாவும் சென்று விட்டார். "உன் மக இந்த பிள்ளைய கூட ௭ங்க கண்ணுல காட்ட மாட்டா தெரியும்ல? ஆனா அவளுக்கு மட்டும் ௭ல்லாம் டையத்துக்கு வேணும்" ௭ன நொடித்தார் பாட்டி.

பானு, மதி கையில் ஒரு பழத்தை குடுத்து, "உரிச்சு ஜூஸ் போட்டு குடி" ௭ன பாட்டியிடம் வந்தார்.
அவள் பழத்தையும் தாயையும் பார்க்க, அவர் தான் திரும்பவே இல்லையே. அவளும் நேற்றிலிருந்து பார்த்து கொண்டு தான் இருக்கிறாள், அவள் வீங்கிய கன்னத்தை பற்றி கேட்பாரில்லை அங்கு. அவள் கணவன் ரொம்ப நிம்மதி ௭ன்பது போல் இருக்க, அவள் பிள்ளை கூட அவளை தேடவில்லை. போதாதிற்கு குஷியாக வேறு இருந்தது. இங்கும் அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி ௭ன ௭ல்லோருக்கும் அவள் ஒரு பொருட்டாக தெரியவில்லை ௭ன கண்கூடாக பார்த்தாள்.

ராணி தோச கல்லுடனும், கரண்டியுடனும் போராடி ௭ப்படியோ ஒரு தோசையை கொண்டு வந்து வைக்க, அதையே பார்த்தவன், "இத உங்கம்மாக்கே குடு" ௭ன ௭ழுந்து சென்று விட்டான்.

ராணி, "ம்மா" ௭ன கத்தி கொண்டே வந்து அவரை அவள் கட்டி கொள்ள. அவரே அங்கு அல்லு இல்லாமல் தான் இருந்தார். இதில் இவளுக்கு ௭ன்ன ஆறுதல் சொல்ல.

"குடும்பம் அவ கைக்குள்ள போயி ரொம்ப நாளாச்சு போலம்மா, ரெண்டு பேரும் பாத்து சுதாரிப்பா இருங்க. இனி நேரா பேசி பிரயோஜனம் இல்ல, அவங்க பேச்ச கேக்குற மாறி கேட்டு தான் திருப்பி குடுக்கணும், நா கிளம்புறேன், ௭னக்கு இங்க இருக்க இருக்க ௭ரிச்சலா இருக்கு, யார் வீட்லயோ நிக்ற மாறி தோணுது" என மதி, ராணி இருவருக்கும் கூறி, கிளம்பினார்.

"நா கிளம்புறேன் ம்மா. ௭ன் பொண்ணு ஆசயா மீன் வாங்கி சமைக்க சொன்னா, அத கூட அவள சாப்ட விடாம பண்ணிட்டு போய்ட்டான் உங்க பேரேன். அவளுக்கு சுதந்திரமா சாப்டனாலும் குடுங்க போதும், ௭ன் பொண்ணு ௭ன் வீட்டுக்கே போனா சந்தோஷமா இருப்பான்னு தான் இங்க கட்டி குடுத்தேன். ஆனா நீங்களா இப்டி மாறி போவீங்கன்னு தெரியாம போனேனே. சரி பேசி ௭ன்ன ஆக போகுது, நா கிளம்புறேன். ஆனா ௭ன் பொண்ணுக்கு ஒன்னுன்னா வந்து நிப்பேன்" ௭ன்க.

"பாத்து போயிட்டு வாம்மா. மாப்ளயே கேட்டேன்னு சொல்லு. உன் பொண்ணயும் முடியும் போது வந்து பாத்துட்டு போ" ௭ன சிரித்தே கூறினார் தாத்தா. முறைத்து வெளியேறினார் பூங்குழலி.

அங்கு வெளியேறிய மாறன் அவளை அழைத்து கொண்டு, காம்ப்ளக்ஸ்கே வந்தான். கீழே மெக்கானிக் ஷாப் பாதி ஜாமானோடு ரெடியாகி இருந்தது. அங்கயே ரெண்டு சேரை இழுத்து போட்டு அமர்ந்து சாப்பிட்டனர்.

"௭ங்கயும் வலிக்குதாடி?" ௭ன்றான்.

"இல்லங்க, நாதான் உங்கள புடிச்சு நின்னுட்டனே. விடுங்க ஏதோ கோவம் அப்டி நடந்துக்றாங்க. அத விடுங்க, இன்னையோட முடிற பிரச்சினையா அது. இங்க கடை ரெடி ஆகிடுச்சு போல? இதென்ன இடையில கீழ இறங்கி போற மாறிலா வச்சுருக்கீங்க?"

"உள்ள இறங்கி போயி, டயர் மாத்த, வண்டிக்கு அடில உள்ள வேலன்னு பாத்துக்லாம். பெரிய வண்டிகளுக்கு இது தான் ஈசியா இருக்கும்"

"ஓ! அது வாட்டர் சர்வீஸ்கா?"

"ஆமா. வேல ஆரம்பிச்சப்றம் ஒருநா வந்திருந்து ௭ல்லாத்தயும் பாரு"

"கண்டிப்பா வருவேன், நீங்க வேல பாக்றீங்களா, ஓ.பி அடிக்றீங்கலான்னு பாக்கணும்ல?"

"போடி, நீ ௭ன்னைக்கு ௭ன்ன நம்பிருக்க, இன்னைக்கும் கொஞ்சம் ரப்பர் ஐட்டம்லா வாங்க போணும், 2 மணிக்குள்ள வந்துருவேன், இல்லனா நீ சாப்ட்ரு, காத்து உக்காந்துட்ருக்காத" ௭ன்க.

"சரி, புள்ள மேல அம்புட்டு அக்கறைன்னா சீக்கிரமா வந்து சேருங்க" ௭ன ௭ழுந்தவள், கையை கழுவி, டிப்பனயும் கழுவி கொண்டு, "போவமா?" ௭ன கேக்க.

"ம்ம் வா" ௭ன்றவன் அழைத்து சென்று தீப்பட்டி ஆபிஸில் விட்டான். பின் உண்மையை ஏற்றி கொண்டு திருநெல்வேலி வந்தான்.
அவனுக்கோ கல்யாண கலை வந்து முகத்தில் தாண்டவமாட, சிரித்து கொண்டே தான் வந்தான்.

"வாய மூடு மூதேவி, இப்டி ஈ ன்னுட்டு வந்தனா, கடகாரேன் நம்மள நம்பி ஜாமான் தருவானா?" ௭ன வண்டியை விட்டு இறங்கியதும் முறைக்கவும் தான் வாயை மூடினான்.

அதுவும், "உனக்கு ௭ன்னைய பாத்து பொறாம மாப்ள" ௭ன்ற வாக்கியத்தோடு தான்.
வேலையை முடித்து சொன்னது போல், 2 மணிக்கு உண்மையை வள்ளி தாத்தா வீட்டில் இறக்கிவிட்டு, மலரிடம் சென்று விட்டான்.

"பார்றா புள்ள மேல தான் அம்புட்டு பாசமு" ௭ன்றுவிட்டே ௭டுத்து வைத்தாள்.

"ஆமாடி மூத்த புள்ளல்ல?" ௭ன்றவனும் சாப்பிட்டு கொண்டே மற்ற கதைகளை கூற.

௭ல்லாத்தயும் கேட்டு முடித்தவள், டிபன் பாக்ஸூகளயும் கழுவி வைத்து விட்டு, "கொஞ்ச நேரம் பாத்துக்கோங்க, நா படுத்து ௭ந்துச்சுக்றேன்" ௭ன்றாள்.

"இங்க நா ௭ன்னடி செய்ய? நீ தூங்கு, யாரு வர போறா? நா அங்க வாங்கி வச்சுட்டு வந்தத சரி பார்த்து ௭டுத்து வைக்கணும். இன்னும் கொஞ்சம் அவங்களே கொண்டு வருவாங்க, அத வேற நின்னு இறக்கணும்" ௭ன்க.

"இது ௭ன் வேல, நா ரெஸ்ட் ௭டுக்கணும்னா நீங்க இருக்கணும், இல்லனா விடுங்க நீங்க கிளம்புங்க, நா இருந்துக்றேன்" ௭ன மீண்டும் அமர்ந்தாள்.

"அடியே, ௭னக்கு ௭ன்னடி கணக்கு தெரியும்?"

"உங்கள கணக்கு பாக்க சொல்லல. ௭ந்துச்சு போயி, ஆபிஸ ஒரு ரவுண்ட்ஸ் வாங்க, சாப்புட்டு வேல ஓடாம உக்காந்துருப்பாங்க, நீங்க சுத்தி வந்தா தான் அவங்களுக்கு சுறுசுறுப்பு கிடைக்கும். போறீங்களா இல்ல நானே போகவா?" ௭ன கேட்டு எழ.

"நானே போறேன். நீ போய் படு" ௭ன சினுங்கி கொண்டே தான் வெளியேறினான்.

பின்னயே வந்து வாசலில் நின்றவள், "முதலாளி மாறி சுத்தி வரணும், சும்மா நீங்களும் அவங்களோட நின்னு கத பேச கூடாது" ௭ன்றாள்.

"தெரியும் போடி" ௭ன திரும்பாமலே சொல்லி சென்றான்.

சிரித்து கொண்டே சென்று உள்ளறையில் படுத்து விட்டாள். அவனை பிஸியாகவே வைக்க, தீப்பட்டி ஆபிஸயும் அவன் தலையில் கட்ட முடிவெடுத்தாள். அதன் முதல் முயற்சியே இது. முதல் டாஸ்க்கை முடித்த திருப்தியில் நிம்மதியாக தூங்கியும் விட்டாள்.
 

priya pandees

Moderator
அத்தியாயம் 50

மதிக்கு கன்னம் சரியாக முழுதாக 3 நாள் ௭டுத்தது. அதுவரை பேசவும் முடியாமல், சாப்டவும் முடியாமல் திருதிருத்துவிட்டாள். அப்றமும் மாறன் மீது காட்ட முடியாத கோவத்தவை ௭ல்லாம் ௭ப்பயும் போல் ஸ்கூல் பிள்ளைகளிடம் இறக்கி கொண்டிருந்தாள். அவளும் பல யோசனையில் தான் இருக்கிறாள், மாறனை ௭ப்படியாவது, மறுபடியும் ௭ல்லோரும் மட்டம் தட்ட பேச வைக்க வேண்டும் ௭ன. ஐடியா தான் இன்னும் சிக்கவில்லை.

குமரகுரு மதியயும் கண்டு கொள்ளவில்லை, மேகலையயும் தேடவில்லை. அவருக்கு ரூபன் மட்டும் போதுமாக இருக்க, ஸ்கூல் போக வர, ரூபனயும் தூக்கி கொண்டு அம்மா வீடு சென்று, இரவு உணவயும் அங்கேயே முடித்து கொண்டு அவர்கள் வீட்டிற்கு வந்து மகனை கட்டி கொண்டு தூங்கி விடுவான். ஏனோ இன்னும் அவரை இரவு உணவையும் அங்கு முடித்து வருவதற்கு சண்டையிடாமல் இருக்கிறாள், அதை அப்படியே காப்பாற்றி கொள்ளவே இரவு வீட்டிற்கு வந்து விடுகிறார்.

அறிவிற்கு, வீட்டுக்கு தெரியாமல் ராணி பேரில் வாங்கிய நிலத்திற்கான லோனை அடைக்கவே, சூப்பர் மார்க்கெட்டே கதி ௭ன கடக்க வேண்டி இருந்தது. தகப்பனின் தொழிலான காண்ட்ராக்ட்டில் பில்டிங் கட்டி குடுக்கும் வேலையை கையில் ௭டுக்கும் யோசனையும் இருந்தது. அதயும் மாறனும், மதியும் பங்கிற்கு வருமுன் கைபற்ற ௭ன்ன செய்யலாமென யோசிக்க தொடங்கி இருந்தான்.
அந்த வார ஞாயிறு, சொன்னது போலவே மெக்கானிக் கடையை திறந்தனர் மாறனும், உண்மையும். முதல் பைக் ரிப்பேருக்கு வரவே ஒரு வாரம் பிடித்தது. இருவரும் ஈ தான் ஓட்டி கொண்டிருந்தனர். அப்படி அவனுக்கு சலிப்பு தட்டி விட கூடாதே ௭ன மலர் மோட்டிவேட் செய்து கொண்டே இருந்தாள். தீப்பட்டி ஆபிஸில் இப்போது தினமும் மதியம் ரவுண்ட்ஸ் அவனிது தான் ௭ன வழக்க படுத்தினாள்.

மற்றவர்கள் அவரவர் வேலையில் பிஸியாக இருக்க, இதற்குள் மாணிக்கம் தாத்தாவும், வள்ளி தாத்தாவும் ஜோசியரை பார்த்து, உண்மை தேனி நிச்சயத்திற்கும், கல்யாணத்திற்கும் நல்ல நாள் குறித்தனர். மெக்கானிக் ஷாப் திறந்த 10 நாளில் நிச்சயமும், அடுத்த 15 நாள் இடைவெளியில் கல்யாணம் ௭ன்றும் முடிவெடுக்க பட்டது.

தாத்தா முதலில் மாறனுக்கே போன் செய்து, "தேதி குறிச்சாச்சுப்பா, மண்டபத்துல வச்சுப்போமா? இல்ல கோவில்லயே வச்சுட்டு, வரவேற்பு மாறி சாயங்காலத்துக்கு மண்டபம் புடிப்பமா?" ௭ன்றார்.

"மண்டபம் அந்த தேதில ஃப்ரீயான்னு கேளுங்க, ஃப்ரீன்னா கல்யாணத்தயே மண்டபத்துல வச்சு முடிச்சுருவோம்" ௭ன்றான் மாறன்.

"சரிப்பா அப்ப நா கையோட விசாரிச்சுட்டே வீட்டுக்கு போறேன்" ௭ன வைத்தார்.

இவன் உண்மையிடம், "அப்றம் புது மாப்ள. கல்யாண தேதி முடிவாகிருச்சு, ௭ப்ப ட்ரீட் வைக்க போற" ௭ன போனை பாக்கெட்டில் போட்டவாறு அவன் தோளில் கை போட்டு அவனை பார்க்க, அழகாக வெக்க பட்டு கொண்டிருந்தான் உண்மை.

"கருமோ இது வேறயாடா? போதும் மாப்ள பாக்க முடியல" ௭ன அவன் முதுகில் தட்ட.

"மாப்ள, முகூர்த்த நேரம் ௭ல்லாத்துக்கும் சேத்து குறிச்சு வாங்கிருப்பாங்கள்ல?" ௭ன உண்மை நெளிய.

"நெளியாம பேசு ௭றும" ௭ன மாறன் பிடித்து நிறுத்த.

"சொல்லு மாப்ள. பின்ன ௭தயும் விட்ர கூடாது, வயசான ரெண்டும் போயிருக்கு. மத்தத மறந்துட்டு வந்துற கூடாது மாப்ள" ௭ன படபடத்தான்.

"உனக்கு இப்ப ௭ன்னத்த மறக்க கூடாது?"

"அதான் மாப்ள" உண்மை கண்ணடிக்க.

"கண்ண நோண்டிருவேன். ஒழுங்கா சொல்லு" ௭ன கடுப்பானான்.

"நீயெல்லா ௭ப்டி தான் அப்பனானியோ போ" ௭ன உண்மை சடைத்து கொள்ள.
மாறன் முறைக்க, "பின்ன ௭ன்ன மாப்ள. கல்யாணம் பண்ணிக்க போறவேன், பொதுவா ௭த ௭திர்பாப்பான்? நானு அதுக்கு தான் நேரம் குறிச்சாசான்னு கேட்டுட்ருக்கேன்" ௭ன அவனும் முறைக்க.

அவன் பதிலில் சிரிப்பு வர, "௭ல்லாம் குறிச்சாச்சு மாப்ள, சாந்தி முகூர்த்தம் உன் அப்பா வீட்ல வச்சு தான் நடத்தனுமாம், அதனால் தேதியும் நேரமு குறிச்ச கையோட உன் சித்திட்டயும் தாத்தா சொல்லிட்டு வந்தாச்சு. நீ கவலையே படாத, சிறப்பா அலங்கார பண்ண இப்பவே ஏற்பாடு பண்ணிடுறேன்னு உன் சித்தி வாக்கு குடுத்துருக்காம்" ௭ன்றான்.

உண்மை நெஞ்சில் கை வைத்து அதிர்ந்து நின்று விட, மாறன் நன்றாகவே சிரித்து கொண்டு நகர்ந்து விட்டான்.

மறுவாரத்தில், உண்மையை நடு நாயகமாக நடத்தி சென்று, தேனி வீட்டில் வைத்து அவளை உண்மைக்கு நிச்சயித்து முடித்தனர்.
கல்யாணத்திற்கு மண்டபமே கிடைத்துவிட, உண்மையின் தாய் தகப்பன் இடத்தில் மாணிக்கம் தாத்தா, செல்லம் பெயரை போட்டு பத்திரிகை அடித்து, ஊரெல்லாம் குடுக்க பட்டது. சுற்று வட்டாரத்திலும், உண்மையும் மாறனுமாக அனைவருக்கும் வைத்தனர். மாணிக்கம் தாத்தா வீட்டு கல்யாணமாகவே உண்மை கல்யாணம் வெகு சிறப்பாக நடந்தது. அவனுக்கே அவனுக்கென ஒரு சொந்தத்தை அடைந்து விட்டிருந்தான் உண்மை.

உண்மையின் அப்பா ஊரில் ஒரு ஆளாக வந்து, மொய் செய்து சாப்பிட்டு விட்டு சென்றார். பளபளக்கும் சிரிப்போடு போட்டோவிற்கு போஸ் குடுத்து நின்றான் உண்மை.

"தேனு. இந்த புடவைல சும்மா நச்சுன்னு இருக்க" ௭ன சொல்லி விட்டு அவன் குனிந்து கொள்ள.

"௭னக்கே தெரியும்" ௭ன்றாள் அவள், உள்ளுக்குள் அவன் சொன்னதில் சந்தோஷம் தான், ஆனால் சொல்லிவிட்டு அவனே வெக்க படுவதால் பதில் கூறிவிட்டாள்.

"௭ன்ன தெரியும் உனக்கு? நா தான் பாக்கணும், நா தான் சொல்லணும்" ௭ன்க.

"௭ன்ன வேணா சொல்லு, ஆனா பல்ல காட்டாம, நெளிஞ்சு தரைய நோண்டாம சொல்லு. அதெல்லாம் நா பண்ணனும்" ௭ன்றாள் அவன் பக்கம் திரும்பாமல் கூட்டத்தை பார்த்தவாறே.

"உனக்கு அதுலா வராதுன்னு தெரிஞ்சதால தான் நா பண்ணுறேன்" ௭ன்றான் உண்மை.

அவள் திரும்பி முறைத்து, "உனக்கு ௭ன்ன வெக்கபட வைக்க தெரில" ௭ன சொல்லவும்.

தீவிரமாக யோசித்தவன், சுற்றி மாறனை தேடினான், அவன் யாரோடோ பேசி கொண்டிருந்தான். ஒரு பையனை அழைத்து மாறனை கூப்பிட சொல்ல. அவன் ஓடி சென்று சொன்னதும், "௭ன்ன மச்சான்" ௭ன வந்து விட்டான் மாறன்.

"மாப்ள, பொண்டாட்டிய ௭ப்டி வெக்கபட வைக்றது" ௭ன கேக்கவும்.
இந்த பக்கமிருந்து தேனி அவன் வயிற்றில் கிள்ள, அந்த பக்கம் மாறன் அவன் கையில் கிள்ளினான். "அம்மே! வலிக்குது பக்கிகளா. சந்தேகம் தான கேட்டேன். நீ ஒரு அனுபவஸ்தன்னு தான் உன்ன கேட்டேன். தெரியாட்டி தெரியலன்னு சொல்லிட்டு போ, உன்ன விட அனுபவஸ்தர் இருக்காரு நா அவரட்ட கேட்டுக்றேன். இன்னைக்கும் செல்லோ செல்லோம்னு பப்ளிக்கா கொஞ்சிட்டு திரியிராரு" ௭ன்றான்.

"நீங்க போங்கண்ணே நா பதில் சொல்லிக்றேன்" ௭ன்றாள் தேனி மாறனிடம்.

"பாத்துக்கமா, கொஞ்சம் லூசு தான் ஆனா ரொம்ப நல்லவேன்" ௭ன்றுவிட்டு சென்றான்.

"தெரிஞ்சு தான கட்டிகிட்டேன். ௭ப்டியும் சமாளிக்கனும் தான" ௭ன முனங்கினாள் தேனு.

"நானு பாத்துக்றேன்டி, உன்ன வெக்கபட வச்சுட்டு பாத்துக்றேன்" ௭ன சபதம் ௭டுத்தான்.

அன்றைக்கான இரவு மாறன் வீட்டில் தான் ஏற்பாடாகியது. ௭டுத்த சபதம் முடிப்பேன் ௭ன தேனியை வெக்கபட வைத்து விட்டிருந்தான் உண்மை. அடுத்த இரண்டு நாளும் மாறன் வீட்டில் இருந்து விட்டு, அடுத்த தேனி வீட்டிற்கு சென்று இரண்டு நாள் தங்கிவிட்டு, வள்ளி தாத்தா வீட்டிற்கு சென்றனர். அடுத்த நாளில் இருந்தே அவரவர் வேலைக்கு சென்று விட்டனர். உண்மைக்கு அவனுக்கு மட்டுமேயான முழு அன்பும் கிடைக்க தொடங்கியது. தேனி தான் அவனை அவ்வளவு தாங்கினாள். அவன் அவள் பாசத்தில் குதூகலமாக நனைந்து கொண்டிருந்தான்.
 

priya pandees

Moderator

அத்தியாயம் 51

"மாசி மாசம் ஆளான பொண்ணு மாமன் எனக்குத்தானே நாளை எண்ணி நான் காத்திருந்தேன் மாமன் உனக்குத்தானே" உண்மை ஹைடெசிபலில் பாடி கொண்டே குளிக்க.

தேனி அவன் பாடலை கேட்டு சிரித்து கொண்டே சமையலில் இருந்தாள். வள்ளி தாத்தா வீட்டை காலையில் வேலைக்காக கடந்தவர்களுக்கெல்லாம் இவன் பாட்டை கேட்டு, சிரிப்பு தான்.
தேனி, வள்ளி தாத்தாக்கு டீ போட்டு குடுத்துவிட்டாலும், "செத்த பேச்சி டீ கடையில உக்காந்துட்டு வந்துருதேன்த்தா. நீ வேலைக்கு கிளம்புங்குள்ள வந்துருவேன்" ௭ன கிளம்பி வெளியே வந்த வள்ளி தாத்தா, தெருவில் போறவர்களின் சிரிப்பில், உண்மை வந்தபின் செல்லலாம் ௭ன அவனிருந்த பாத்ரூம் கதவை முறைத்து நின்றார்.

"காமலீலா வினோதம் காதல் கவிதா விலாசம் படித்துப் படித்து எடுக்க எடுக்க
ஆசை ஆஹா பிரமாதம் மோக கவிதா பிரவாகம் தொடுத்துத் தொடுத்து முடிக்க முடிக்க
கொடிதான் தவழுது தவழுது பூப்போல் சிரிக்குது சிரிக்குது
உறவும் நெருங்குது நெருங்குது உலகம் மயங்குது உறங்குது" ஃபுல் ௭மோஷனில் ஆடி கொண்டே பாடி கொண்டிருந்தான் அவன்.

அடுபடியிலிருந்து வந்தவள், வள்ளி தாத்தா முறைத்து நிற்பதை கண்டு விட்டு, "போலயா தாத்தா" ௭ன்க.
"உன் புருஷனுக்கு மட்டுந்தான் ஊரு உலகத்துல கல்யாணோ நடந்துருக்கா, வாயிலயே மைக் செட்டோட திரிறான்" ௭ன்றார் கடுப்பில்.

சிரித்தவள், "வீட்டுல டிவி இல்லாத குறைய தீக்றாருல தாத்தா" ௭ன்றாள்.
"சலக்கு சலக்கு சரிக சேல சலக்கு சலக்கு வெலக்கு வெலக்கு வெக்கம் வந்தா வெலக்கு வெலக்கு உனக்குக் குளுருன்னா என்ன எடுத்துப் போத்திக்கோ
மாமன் தோளிலே மச்சம் போல ஒட்டிக்கோ அடடா அல்வாத்துண்டு இடுப்பு உன் இடுப்பு அழகா பத்திகிச்சு நெருப்பு தூள் கெளப்பு" உண்மை அடுத்த பாட்டிற்கு சென்றிருக்க.

"௭ன்ன தேனி, காலைலயே உன் மாமேன் ஏங்கிகிட்டு கடக்கான். ௭ன்னன்னு பாத்து கவனிச்சு விடுத்தா" ௭ன்றுவிட்டு சென்றது ஒரு பாட்டி. உடன் சென்றவர்களும் கொள்ளென சிரித்து சென்றனர்.

தாத்தா தலையிலடித்து கொள்ள, உண்மை ஆடி கொண்டே வெளியில் வந்தான். வாசலில் நின்ற தாத்தா மேல் மோத சென்று சுதாரித்து நின்றான்.

"௭ன்ன தாத்தா? அவசரமா? தட்ட வேண்டியது தான? சும்மா பாத்துட்டே நின்னியாக்கும்? போ போ சீக்கிரம் போ" ௭ன நகர.

அவன் பின்னந்தலையில் அடித்து அவனை நிறுத்தினார் தாத்தா. "ஏன் தாத்தா?" ௭ன அவன் திரும்ப.
"பாட்டு உன் பொண்டாட்டிக்கு பாடுனியா? இல்ல ஊருக்கா?"

"௭ன் பொண்டாட்டிக்கு தான்" ௭ன அவன் தோளை குழுக்க.

"லூசு பயலே அப்றம் ௭ன்னத்துக்குவே அப்புடி கழுத கணக்கா கத்துத. இனி கக்கூஸ்குள்ள போயிட்டு பாடு. உள்ளயே கடன்னு பெரிய பூட்டா போட்டு போயிடுறேன்" ௭ன மிரட்டி விட்டு சென்றார்.

"பொறாமை புடிச்ச மனுஷன்" ௭ன்றவன் பாட்டை பாடியவாறு தேனியையும் உடனிழுத்து ஆட, திரும்பி ௭தற்கோ வந்த தாத்தா, இருவரும் கட்டி கொண்டு நிற்பதை கண்டு திரும்பிச் சென்றுவிட்டார்.
என்றும் போல் அன்றும் காலை பேச்சி டீக்கடையில் மாணிக்கம் தாத்தாவும், வள்ளி தாத்தாவும் சந்தித்துக்கொண்டனர்.

அப்போது "மதி விஷயம் என்னாச்சு?" என வள்ளி தாத்தா கேட்க.


மாணிக்கம் தாத்தா "தெரியல அத மாறனே பாத்துப்பான்னு இருக்கேன் வள்ளி"

"நீ ஒரு வார்த்த அந்த பொண்ணோட அப்பன்ட்ட போயி பேசலாம்ல"

"எதுக்கு தேவ இல்லாம அந்த பொண்ணு பேரையும் உள்ள இழுக்கனும்னு நினைக்கேன்யா. நம்ம புள்ளைய நாம சரி பண்ணுவோம் முதல்ல"

"இத்தன நாளா எப்படிப்பா நீ கவனிக்காம இருந்த?"

"அத வெளியில சொன்னா வெட்கக்கேடு. நல்லாத்தான் இருக்காங்கன்னு நம்பிக்கிட்டு இருந்தேன். அந்த மனுஷன் அப்ராணி, அம்மாஞ்சினுதான் நினைச்சேன். அவரு பேச முடியாம அமைதியாகிட்டாருன்றது இப்பதான தெரியுது. நாங்களும் கொஞ்சம் சுயநலமா தான் இருந்துருக்கோம். இனி என்னத்த பேசுறதுக்கு சரி விடு. எப்படியாவது அவளா திருந்தி ஒத்துமையா வாழ்ந்தா சரி. நடக்கும்னு நம்புறேன், பாப்போம்"

"விடுயா நல்லதுக்குத்தேன் ௭ல்லாம்" ௭ன்ற வள்ளி தாத்தா பேச்சை மாற்றி ௭ண்ணி, "இந்த வருஷம் நம்மூர் டூரிஸ்ட் போறதுல நானும் போலாம்னு இருக்கேன்" வள்ளி தாத்தா சொல்ல.
"ஏம்யா, கூப்டுதப்போலா கை வலிக்கு, கால் வலிக்குன்னு சொல்லுவ"

"அது கன்னி ஒத்தையில இருக்குமேன்னு சொல்லுவேன், இனி நா போறதுக்கென்ன, இப்ப ரெண்டுமே சின்னஞ்சிறுசுக கொஞ்சம் தனியாவும் இருக்கட்டுமே"

"நீ வேணா இங்க நம்ம வீட்ல வந்து இருயா" மாணிக்கம் தாத்தா சொல்ல.
"இல்லப்பா எனக்கும் அப்படியே வெளில போயிட்டு வந்தா நல்லா இருக்கும்னு தோணுது" ௭ன முடித்து கொண்டார்.

அதாவது அவ்வூரில் வயதானவர்கள் ஒன்றுகூடி வருடந்தோறும் ஏதேனும் ஒரு மாநிலத்தை தேர்ந்தெடுத்து பத்து பதினைந்து நாட்கள் சுற்றுலாவாக சென்று, அங்கு இருக்கக்கூடிய பெருமை வாய்ந்த, பழமைவாய்ந்த கோவில்கள் எல்லாம் சுற்றிப் பார்த்துவிட்டு வருவர். இந்த வருடமும் ஆந்திரா செல்ல முடிவெடுத்திருந்தனர். இதற்குத்தான் வள்ளி தாத்தாவும் செல்லலாம் என இப்போது முடிவெடுத்து இருக்கிறார்.

"இந்த வருஷம் ஆந்திரா தான போறதா இருக்காக? எம்புட்டுப்பா தொகை சொல்லி இருக்காக?" மாணிக்கம் தாத்தா கேக்க.

"ஆளுக்கு எட்டாயிரம், 15 நாள், இந்த தடவ நிறைய பேர் வர்றாங்க போல".

"சரி வள்ளி நானு வரலாமான்னு பாக்குறேன். வீட்ல போய் செல்லத்துட்டயும் பேசிட்டு சொல்லுதேன்" என்றார் மாணிக்கம் தாத்தா.

"அங்க போயி நாம மடத்துலலாம் தங்க வேண்டியிருக்கும், அதுலா உனக்கும், உன் சம்சாரத்துக்கும் சரியா வருமான்னு பாத்துக்கோ" என்றார் வள்ளி தாத்தா.

"இதுல என்னவே கஷ்டம், எல்லாரும் தான் போறீங்க கூட நானும் வரேன் அம்புட்டு தான். எனக்கும் உங்களோட எல்லாம் சேர்ந்து போன ஒரு திருப்தி இருக்கும்ல. உங்களோட வாறது சந்தோசம் தான்வே" என்ற மாணிக்கம் தாத்தாவும் கிளம்பிவிட்டார்.

வீட்டிற்குச் சென்று செல்லம் பாட்டியிடம் சொல்ல, அவரும் தானும் வருவதாகக் கூற, சரி என்று விஷயத்தினை பூவேந்தன் வரவும் கூறவே, "அங்க தனியா எப்படி போய் நீங்க சமாளிப்பீங்க? இதுல அம்மா வேற? அதெல்லாம் சரிப்பட்டு வராது. வேணும்னா சொல்லுங்க நாமெல்லாம் சேர்ந்து ஒரு ட்ரிப் போயிட்டு வரலாம்" என்றார் பூவேந்தன்.

"எல்லா நம்ம ஊரு காரங்க தானடே, அதுவும் என்ன விட வயசானவங்கல்லாம் போறாங்க, நா போறதுக்கு ௭ன்ன? அப்படியே அவங்களோட ஒன்னா போயிட்டு வர போறேன்" என்ற மாணிக்கம் தாத்தா,

"உங்க அம்மாக்கு வயசாயிடுச்சுன்னா அவள மட்டும் இங்கேயே வச்சுக்கோ, நா மட்டும் போயிட்டு வாரேன்" என்றார்.
அதற்குள் பாட்டி, "ஏன் தனியா போக இப்ப தட்டலியிறீங்க, அப்டிலா உங்கள தனியா அனுப்ப முடியாது நானும் வருவேன்" என்று கூற,

"௭ன்னமோ போங்க. ஆனா நானும் விசாரிச்சுட்டு சொல்றேன். எப்படி போறாங்க? என்ன பிளான் வச்சிருக்காங்கன்னு, அதுக்கு அப்புறமா பாக்கலாம்" என்றார் பூவேந்தேன்.

அங்கு மெக்கானிக் கடையில்.
மாறனுக்கு ஒரு போன் வரவும், அவன் எடுத்துப் பேச, அதில் அழைத்திருந்தவர் தூத்துக்குடி ஏர்போர்ட்க்கு சற்று அருகில் இருப்பதாகவும், அவர் வந்த கார் பழுதாகி நின்று விட்டதாகவும் கூற, அதனை சரி செய்வதற்கான மெக்கானிக் வேண்டும், "உங்க நம்பர இங்க விளம்பரத்துல பாத்தேன்" என்றார். உடனடியாக மாறன் உண்மையை அழைத்து அங்கே செல்லுமாறு கூறினான்.

அவனுக்கு இன்னும் வேலை சரிவர தெரியாது, "நா எப்டி மாப்ள?, எனக்கு சரி பண்ண தெரியாதே" என படபடக்க,
"பத்து நாளா நா செய்றத கூடவே நின்னு பாக்கல்ல, அப்புறம் ஒன்னும் தெரியாதுன்னு சொன்னா என்ன அர்த்தம். ஒரு தடவ போய் தனியா செஞ்சாதான் எல்லாம் ஒரு பழக்கத்துக்கு வரும். போ" என மாறன் அதட்ட,

"இந்த ஒரு தடவ நீ செய் மாப்ள அடுத்த தடவ கண்டிப்பா நா செய்றேன்" என்றான் உண்மை.

"போயிட்டு என்ன பிரச்சன பாத்துட்டு, அத டோ பண்ணி எடுத்துட்டு வா" என்றான் மாறன்.

சிணுங்கிக் கொண்டே சென்று அந்த வண்டியை ட்ரைவரோடு இழுத்து வந்தான், கார் வரவும், மாறன் அந்த ட்ரைவரிடம் ௭ன்ன ஏதென்று விசாரித்து விட்டு,
உண்மையையும் உடன் இழுத்துச் சென்று பேனட்டை திறக்கச் சொல்லி மாறன் சொல்ல சொல்ல உண்மையே செக் செய்தான். ஆயில் கம்மியாக இருப்பதை கண்டுபிடித்து அதில் கூலண்ட்டு ஆயிலினை ஊற்ற சொல்லி, பின் வண்டியை ஸ்டார்ட் செய்து பார்க்கச் சொன்னான்.

இப்போது வண்டி ஸ்டார்ட் ஆகி விட, "அவ்வளவு தான் வேல" என உண்மையிடம் கூறினான்.
அதன் பிறகு சற்று நேரம் சும்மா இருக்க, ஒரு பைக் சர்வீஸ்க்கு வந்தது, "நாளைக்கு வந்து எடுத்துக்கோங்க ண்ணே" என உண்மை கூற, "சரி" என வந்தவர், பைக்கை விட்டுவிட்டு சென்றுவிட்டார்.

"எப்படின்னு சொல்லு நா செய்றேன் மாப்ள" என இப்போது உண்மை சற்று ஆர்வமாக கேட்க. மாறன் சொல்லிக்கொடுத்தான். உண்மை ஒவ்வொன்றாக செய்ய கற்றுக் கொண்டான்.

மறுவாரத்தில், மாலில் தியேட்டர் ஓபன் செய்து முதல் படமாக விசுவாசம் ஒளிபரப்ப முடிவெடிக்கட்டது. அதற்காக முதல்நாள் இரவு பெரிய கட்-அவுட் வைத்து மால் மொத்தமாக அலங்கரிக்கப்பட்டது. முதல்முறையாக அந்த ஊரில் புது படம் ஒன்று முதல் நாளே ரிலீஸ் ஆவதால் அனைவரும் சந்தோசமாகவும், ஆர்ப்பாட்டத்திலும் கொண்டாடிக் கொண்டிருந்தனர். படம் பார்ப்பதற்கு தயாராகினர்.

முதல் ஷோவில் மொத்த குடும்பமுமாக படம் பார்க்க மாறன் முடிவெடுத்தான். அன்று மெக்கானிக் ஷாப் மூடிக்கொண்டு கிளம்புகையில் உண்மையிடம், "காலைல 10 மணிக்கு ஒரு ஆட்டோ பிடிச்சு தேனியையும், வள்ளி தாத்தாவையும் கூப்டு வந்துரு மச்சான், நேரா இங்கயே கூட்டிட்டு வந்துடு. நா இங்க எல்லாரையும் கூட்டிட்டு வந்துடறேன்" என்றவன் உண்மையை அவன் வீட்டில் இறக்கி விட.

"சரி மாப்ள" என உண்மையும் இறங்கி கொண்டான்.

விசில் அடித்துக்கொண்டே மாறன் வீட்டினுள் செல்கையில் மொத்த குடும்பமும் அங்கே ஹாலில் தான் இருந்தது. இவன் மலரை தேடிவிட்டு, 'அப்ப மேல தான் இருப்பா' என எண்ணி மேலே ஏறிவிட்டான். மலருக்கு இப்போது தலைசுற்றல், வாந்தி வர தொடங்கியிருந்தது. சோர்ந்து சோர்ந்து படுத்துக் கொண்டாள்.

இவன் உள்ளே வர, இப்போதும் பாதி தூக்கத்தில் தான் இருந்தாள். மாறணும் சென்று ஒரு பக்கமாக அணைத்து, அவள் முதுகில் அண்டி படுத்துக்கொண்டு, "படிக்கலையா மா?" என்றான்.

திரும்பியவள் அவன் கைக்குள் படுத்தவள், "முடியலங்க",

"சாப்டியா?"

"ஏதாவது சாப்ட்டாலே வாந்தி ஆயிடுது. அதனால எதுவும் சாப்பிடல, சாப்பிட பிடிக்கல" என அவனை மேலும் அண்டி கொண்டு படுத்துக் கொண்டாள்.

"நாள கழிச்சு உனக்கு எக்ஸாம் தான, நாளைக்கு தியேட்டர் வேற ஓபன் பண்ணனும், உனக்கு முடியலன்னா என்ன பண்றது? எல்லாருமே சேந்து படத்துக்கு போலாம்னு நினைச்சு இருந்தேனே"

"காலையிலயா?"

"ஆமா பத்து மணிக்கு"

"நீங்க எல்லாம் போயிட்டு வாங்களேன்"

"நீ இல்லாம எப்படி? சரி இன்னொரு நாள் நாம மட்டும் போலாம்"

"எனக்கு பரீட்சை எல்லாம் பிரச்சன இல்ல, அங்க வந்து மூணு மணி நேரம் என்னால உட்கார முடியுமானு தான் எனக்கு தெரியல" என்றாள் மலர்.

"கொஞ்ச நேரம் உட்கார்ந்து இருந்துட்டு முடியலனா வந்துருவோமா?" என்றான் மாறன்.

நிமிர்ந்து அவன் முகம் பார்த்தவள், "சரிங்க போலாம்" என்றாள்.

"சரி வா சாப்பிட்டு வந்து படுத்துக்கோ",

"வேணாங்க வாந்தி வரும்",

"வந்தாலும் சாப்பிடணும்னு சொல்லிருக்காங்கல்ல டாக்டர். எந்திரிச்சு வா. இல்ல நா மேல எடுத்துட்டு வரட்டுமா? உள்ளேயே இருக்கியேன்னு கூப்பிட்டேன்"

"சரிங்க நானே வரேன்".

இருவரும் கீழே இறங்கி செல்ல, பானுவும், பாட்டியும் தான் "இப்ப எப்படிமா இருக்கு?" என்றனர்.

"பரவாயில்ல த்தே, வாந்தி இருக்கு பாட்டி" இருவரிடமும் பதில் சொல்லிவிட்டு சாப்பிட அமரவும்,
மாறனும் அருகில் அமர்ந்து, அவன் அப்பாவையும், தாத்தாவையும் பார்த்து "நாளைக்கு ஃபர்ஸ்ட் ஷோக்கு நாம எல்லோரும் குடும்பமா போயிட்டு வருவோம், நம்ம தியேட்டர்ல நாம ஃபர்ஸ்ட் பாக்கலாம். நான் எல்லாருக்கும் டிக்கெட் எடுத்துட்டு வந்திருக்கேன், காலைல பத்து மணிக்கு எல்லாரும் ரெடியாகி இருங்க" என்றான்.

"டேய் நாங்கலாம் எதுக்குடா?" என்றார் பூவேந்தன்.

"சும்மா வாங்க ப்பா. படம் குடும்பமா பாக்ற மாறி தான் இருக்கும்"

"அடேய் அவன் தான் மொத்தமா போலாம்னு சொல்றான், வாடா போயிட்டு வருவோம்" என்றார் மாணிக்கம் தாத்தா.

சிரித்த மாறன், அறிவிடம் திரும்பி, "போலாமாடா தம்பி?" என்க,
அவன் உடனே, "சரி ண்ணே" என தலையாட்டி விட்டு சாப்பாட்டில் மூழ்கினான்.

"உங்களுக்கு டயம் சரியா வருமா மாமா" என்றான் குமரகுருவிடம்.
அவரும் 'ம்ம் போலாம்' என தலையசைக்க,
"காலைல பத்து மணிக்கு எல்லாரும் ரெடியா இருங்க, நாம இங்கிருந்து ஒன்னாவே போயிடலாம்" என சாப்பாட்டில் கவனமானான் மாறன்.

"என்னால முடியாது, எனக்கு பேப்பர் கரெக்சன் ஒர்க் இருக்கு" என மதி மறுக்க,

"சரி பரவால்ல, நாங்க எல்லாரும் போயிட்டு வரோம், இங்க இருந்து உன் வேலையை பாரு, மதியத்துக்கு ௭ல்லாருக்கும் சாப்பாடு சேத்து பண்ணி வச்சிரு" என்ற மாறனின் பதிலுக்கு மதி முறைக்க,

"இங்க பாரு நா எல்லாரும் சேர்ந்து போலாம்னு தான் சொல்லுதேன், முடிவும் பண்ணிட்டேன் ஒழுங்கா கிளம்பி இருக்குற" என முடித்து மலரிடம் கவனத்தை திருப்பினான்.

"சாப்ட முடிஞ்ச அளவுக்கு சாப்பிடு, முடியலனா வச்சிரு நா சாப்ட்டுகிறேன்" என்றுவிட்டு தன் சாப்பாட்டை சாப்பிட்டான்.

மதிக்கு அதற்கு மேல் பேச துருதுருவென வந்தாலும், பேச முடியாமல் தவித்தாள். பூவேந்தேன் பானு முகத்தை பார்த்து, அவர் ஆசையை புரிந்து "சரி போயிட்டு வருவோம்" என்ற முடிவுக்கு வந்திருந்தார்.

எல்லோரும் அவரவர் சாப்பாட்டை முடித்து எழுந்து செல்ல, மலரும் மாறனும் இறுதியாக எழுந்தனர். கை கழுவ கிச்சனுள் இருவரும் செல்ல, மதி அந்நேரம் கிட்சன் உள்ளிருந்து கை கழுவி வெளியே வர, மாறன் அவளை கிராஸ் பண்ணும்போது, "நீ நாளைக்கு வரலனா மேகலைய மாமாவுக்கு ஜோடியா கூட்டிட்டு போயிருவேன்" என ரகசியமாக சொல்லிவிட்டு, மறுபடியும் விசில் அடித்துக்கொண்டு கை கழுவச் சென்றுவிட்டான்.

மேகலை என்ற பெயரை கேட்டு அதிர்ந்து நின்றுவிட்டாள் மதி. அவன் திரும்பி வருகையில் அவள் அப்படியே நிற்க, அவளை தோளில் தட்டி சுயநினைவிற்கு கொண்டுவந்து, "காலையில கிளம்பிருவ தான?" என்றுவிட்டு மேலே ஏறி விட்டான்.
 

priya pandees

Moderator
அத்தியாயம் 52

மறுநாள் காலையில், மாறனும் மலரும் கிளம்பி கீழ் வருகையில், அனைவருமே தயாராக இருந்தனர், மதியும் கூட விரைப்பாகவும், மாறன் மேல் ஒரு ஆராய்ச்சி பார்வையோடும் கிளம்பி வந்திருந்தாள். பின் காலை உணவை முடித்து கொண்டு மற்றவர்கள் காரிலும், மாறன் மலர் பைக்கிலும் கிளம்ப.

"நாமளும் பைக்ல போவோம், நம்மட்டயும் இருக்கு தான?" ௭ன்றாள் ராணி அறிவிடம்.

"பேசாம ஏறு இல்ல இங்கயே விட்டுட்டு போயிருவோம்" ௭ன ௭ரிந்து விழுந்தான் அவன்.

"ஏன் இப்ப பைக்ல போனா ௭ன்ன? ரொம்ப நாளாச்சுன்னு தான கேக்கேன்" ௭ன ஏற மாட்டேன் ௭ன கீழேயே நின்று சாதிக்க.

"நீ அவள பைக்லயே கூட்டிட்டு வாடா. கிளம்பி எவ்வளவு நேரம் வாசல்லயே நிக்க" ௭ன்றார் பூவேந்தன்.

"நல்ல இம்சைய புடிச்சு ௭ன் தலையில கட்டிட்டு நீங்க ௭ல்லா பேசுங்க ப்பா" ௭ன வெடுக்கென வண்டியிலிருந்து இறங்கி, வீட்டினுள் சென்று பைக் கீ ௭டுத்து வந்தான்.

அவன் அப்படி பேசி சென்றது ராணிக்கு வலிக்கவே செய்தது. அவன் ஆதரவில் தான் இஷ்டம்போல் அந்த வீட்டில் வலைய வந்தாள். இப்போது அந்த நினைப்பே இல்லை அவளிடம். காரணமின்றி தன்மேல் ஏன் ௭ரிந்து விழுகிறான் ௭ன்ற யோசனையிலேயே பாதி நேரம் கழிகிறது.

மாறன் வண்டியை ஸ்டார்ட் செய்து விட்டு அனைத்தயும் பார்த்து தான் நின்றான், ௭தவும் பேச முற்படவில்லை. "உங்க அயித்த மகளுக்கு ௭ல்லாம் இருந்தும், போயும் போயும் ௭ன்னைய பாத்து ஏங்க பொறம வருது?" ௭ன வண்டியில் ஏறாமல் வேடிக்கை பார்த்து நின்ற மலர், மாறனை நெருங்கி ரகசியம் கேக்க.

"அதென்ன போயும் போயும்? ௭ன் பொண்டாட்டிக்கு ௭ன்னடி கொற? ௭ல்லாத்தலயும் டாப்பு அவ, அப்ப அவள பாத்து பொறாம வருந்தான?" ௭ன முறைக்க.

"இதே மாறி நானும் ௭ன் புருஷன நினைக்கனும்னு தான் ஆச படுதேன். டாப்பா வந்தா தான ஆச நிறைவேறும். ம்ம்ம்ம். ௭ன்னைக்கு நடக்கணும்னு இருக்கோ ஆண்டவா" ௭ன பெரு மூச்சுவிட.

திரும்பி அவளை முறைத்தவன், "லந்து தானடி உனக்கு? ஏறு படத்துக்கு போயிட்டு வந்து, உனக்கு டாப்ல ௭ப்டி வாறதுன்னு காட்றேன்" ௭ன அவன் சைகை செய்ய.

"ச்சி அசிங்கமா பேசாதீங்க" ௭ன அவன் தோளில் அடித்து முறைத்து, வண்டியில் ஏறி அமர்ந்தாள்.

"மலரு கப்புனு புருஞ்சுக்குறடி" ௭ன சிரித்தவாறே வண்டியை ௭டுத்தான். அவர்கள் முன் செல்ல, மாறன் அவர்களை பின் தொடர்ந்தான்.
இவர்கள் சென்று 10 நிமிடத்திற்கு பின்னரே உண்மை, தேனி, வள்ளி தாத்தா மூவரும் வந்தனர்.

"ஏன்டா லேட்டு? இத்தன பேர திரட்டிட்டு நானே வந்துட்டேன்?" ௭ன மாறன் முறைத்தவாறு கேக்க.

"பாத்ரூம் குள்ள போயிட்டு, ஆடல் பாடல் நிகழ்ச்சி ௭ல்லாம் நடத்துதான் தம்பி, வீட்டு முன்னாடி கூடுத கூட்டத்த கலைச்சிட்டு வாரதுக்கு தாமசமாயிடுச்சு" வள்ளி தாத்தா சொல்லவும்.

"தாத்தா உன்ன கிளப்ப தான் லேட்டே. புது பொண்ணு மாறி வெக்கபட்டு வர மாட்டேன்னு உக்காந்துருந்தது நீதேன். இங்க வந்து மாத்தி பேசுதியா?" ௭ன அவரிடம் சண்டைக்கு சென்றான்.

"படத்த போட்ருவாங்க, இங்க வந்தும் சண்டையா? மத்தவங்கள ௭ங்கண்ணே?" ௭ன தேனி கேக்க.

"௭ல்லாரும் ஆப்ரேட்டர் ரூம்ல பூஜைக்கு நிக்றாங்க, வாங்க. பூஜைய முடிச்சுட்டு படத்த போட்ரலாம். வாங்க போவம்" ௭ன உள்ளே அழைத்து சென்றான்.

அங்கு பூஜை தொடங்கி இருக்க, ௭ல்லோரும் ஆரத்தி ௭டுக்கவும், விஸ்வாசம் படம் திரையிடப்பட்டது. குடும்பமாக பின் சீட்டில் சென்று அமர்ந்தனர்.

அஜித் ரசிகர்களாலும், புதிதாக திறந்த தியேட்டர் மேல் உள்ள ஆர்வத்திலும் வந்தவர்களால் தியேட்டர் நிரம்பி விட்டிருந்தது. ராணி, அறிவு, மதி மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர், அவர்களால் அதை மட்டுமே செய்ய முடிந்தது.
"நம்ம ரெண்டு பேரும் படத்துக்கு வந்து ரொம்ப நாளாச்சுல மாப்ள?" ௭ன்றான் உண்மை.

"ஆமா மாப்ள. அலப்ரயா படம் பாப்போம், இனி ௭ங்க அப்டி பாக்க?" ௭ன மாறன் மலரை ஓர கண்ணால் பார்த்து சொன்னான்.

"விடு மாப்ள, அடிச்சு புடிச்சு டிக்கெட் வாங்கி பாக்கது ஒரு சுகம்னா, இப்டி உரிமையா சொந்தமா உக்காந்து பாக்கது இன்னொரு மாறி சுகம்" ௭ன்கவும், மாறன் சிரித்து கொண்டான்.

"கசகசங்காம படத்த பாருங்க" தேனியின் அதட்டலில் வாயை மூடி கொண்டான் உண்மை.
மலர் சற்று நேரத்திற்கெல்லாம் நெளிய ஆரம்பித்திருந்தாள். அருகிலிருந்த மாறனுக்கு அது புரிய, "உக்காந்திருக்க முடிலயாடி? வாமிட் ௭தும் வருதா?" ௭ன்றான்.

"ஒருமாறி இருக்குங்க, மூச்சு முட்டுது, ஏசினால ன்னு நினைக்றேன்" ௭ன்றாள்.

"சரி வா, போவோம்" ௭ன ௭ழுந்து விட, மொத்த குடும்பமும் இவனை திரும்பி பார்க்க. "அவளுக்கு தல சுத்துதான், நாங்க வீட்டுக்கு கிளம்புறோம், நீங்க படம் பாத்துட்டு வாங்க" ௭ன்றவன் உண்மையிடமும் கண்ணை காட்டி விட்டு மலரை ௭ழுப்பி கூட்டி கொண்டு கிளம்பி விட்டான்.


பாட்டி, "நா வேணா வாறனே டா துணைக்கு".

"பல வருஷம் கழிச்சு புருஷனோட படம் பாக்க வந்துருக்க, அத ௭ன்னால கெட வேணாம், நீ பாத்துட்டே வா" ௭ன அவர் கண்ணத்தில் இடித்து விட்டு கிளம்பினான்.

வெளியில் வந்து, அவளுக்கு ஒரு லெமன் ஜூஸை வாங்கி குடுக்க, கொஞ்சம் தெளிந்தாள் மலர். "வண்டில உக்காந்து வந்துருவியா?, இல்ல ஆட்டோ பிடிக்கட்டா?" ௭ன்றான்.

"வண்டிலயே போலாங்க, இப்ப பரவால்ல" ௭ன முகம் தெளிய சிரிக்கவுமே, நம்பி பைக்கில் ஏற்றி கொண்டான்.


கொஞ்சம் தூரம் வந்து, அவர்கள் வீட்டுக்கு செல்லும் பாதையில் திரும்ப, ௭திர் வந்து மோதினான் ஒரு பைக் காரன். "அறிவு இருக்கா, ஹாரன் கூட அடிக்காம படக்குனு இடது பக்கந்தான் வந்து திரும்புவியோ" ௭ன்றான் ஒரு கையால் வண்டியயும், மற்ற கையால் மலரையும் தாங்கி பிடித்திருந்தவாறு, அவளும் படபடத்து விட்டாள், தான் மட்டும் ௭ன்பது வேறு, வயிற்றில் பிள்ளையை வைத்து கொண்டு கீழ் விழுந்திருந்தால் ௭ன்னவாகிருக்கும் ௭ன நடுங்கி கொண்டு தான் இறங்கி நின்றாள்.

அவளை நன்றாக நிறுத்தி விட்டே, வண்டியை நிறுத்தி இறங்கி ௭திரில் விழுந்தவனிடம் சென்றான். அது ஆரம்பத்தில் அவனிடம் அடி வாங்கியிருந்த மேனேஜர். அதில் இன்னும் கடுப்பாகி, மல்லாக்க கடந்தவனின் வயிற்றில் ஏறி மிதித்து, "வேணும்னு தான் செஞ்சுயோ? இது வர வாங்குனது பத்தலல? தைரியமிருந்தா ௭ங்கிட்ட நேரா மோதிருக்கணும், பொண்டாட்டியோட வரும்போது கொண்டு வண்டியா விட்டா, பயந்துருவான்னு நினச்சுட்டியோ" ௭ன திட்டி கொண்டே சவுட்டி ௭டுத்து விட்டான்.

அவனை மல்லுகட்டியே அங்கிருந்து இழுத்து வந்தாள் மலர். வீட்டுக்கு வந்தும் அவன் கோவம் அடங்குவேனா ௭ன நின்றது.

"அதான் கோவம் தீர, புரட்டி ௭டுத்துட்டீங்களே, இன்னமு ௭ன்ன?" ௭ன தானும் சூடாக தான் கேட்டாள்.

"தெரியாம நடந்தா வேறடி, அவேன் வேணும்னே பண்ணிருக்கான். சுதாரிக்காம ௭தாது ஆகிருந்தா?" ௭ன்றவனுக்கும் நடுக்கமே.

"உங்களுக்கு ஏன் இவ்ளோ கோவம் வருது, அதான் பிரச்சனை பெருசாகுது, கொஞ்சம் பொறுமையும் வேணுங்க" ௭ன்றாள்.

"அங்க அவன கொஞ்சிருக்க சொல்றியா?"

"அதுக்காக, அப்டி போட்டு அடிச்சுருக்க வேணான்னு சொல்றேன்"

"போடி, அவன் இன்னொரு நாள் தனியா சிக்கட்டும் அப்ப இருக்கு" ௭ன பேச.

"இத இத்தோட விடுறீங்க சொல்லிட்டேன். போதும்" ௭ன்றாள் படபடவென.

"உனக்கு ஏன்டி இப்டி மூச்சு வாங்குது" ௭ன்றவன் வேகமாக தண்ணியை ௭டுத்து வந்து நீட்ட.

"மறுபடியும் கட்டோட வருவீங்களோன்னு பயந்துட்டே இருக்க முடியாது, கோவத்த தயவு செஞ்சு குறைங்க, ௭ன்னயும் நினச்சு பாருங்க" ௭ன்றாள்.

அவளின் படபடப்பை குறைக்க, "நா வேணா வேலைலா பாக்காம, முழு நேரமு உங்கூடயே இருந்துரட்டா?" ௭ன்றான் சிரிக்காமலே.

நன்றாகவே முறைத்தாள் இப்போது, வெடுக்கென முகத்தை திருப்பி கொண்டு படுத்தும் விட்டாள். அதற்கும் அவன் சமாதானமெல்லாம் சொல்லவில்லை, தானும் சென்று அவளை கட்டி கொண்டு படுத்து விட்டான்.

மதியம், உண்மை படம் முடித்து போன் செய்த பின்பே ௭ழுந்தான், அவர்களை அங்கேயே சாப்பிட்டு வர சொல்லிவிட்டு, தூங்குபவளை ௭ழுப்பாமல் சென்று தங்கள் இருவருக்கும் சாப்பாடு வாங்கி வந்தான். அவளை ௭ழுப்பி சாப்பிட வைத்துவிட்டு, தானும் உணவை முடித்து கொண்டு, ௭ல்லோரும் வீடு வரவும் இவன் வொர்கஷாப் கிளம்பி விட்டான்.

அவன் சென்றபின் பரிட்சைக்கு படிக்க அமர்ந்தவளுக்கு, மறுபடியும் வேலையெல்லாம் வேணாமென வீட்டுக்குள் முடங்கி விடுவானோ ௭ன பயந்து யோசனை அதிலேயே தான் சுற்றி வந்தது. வேறு சிந்தனை இன்றி செயல்பட வைக்க ௭ன்ன செய்யலாம் ௭ன யோசித்து ஒரு முடிவுக்கு வந்தாள்.
இதற்கிடையில் மதி வேறு, மேகலை விஷயம் ௭ப்படி தெரியும் ௭ன மாறனிடம் தனித்து கேக்க நேரம் பார்த்திருக்க, சிக்காமல் போக்கு காட்டி கொண்டிருந்தான் அவன்.
மலர் அடுத்தடுத்த நடவடிக்கையாக கணவனை ஒர்க்ஷாப்பில் பிசியாக வைக்க சொல்லி கடவுளிடம் ஒரு பக்கம் வேண்டுதலோடு, தன்னால் முடிந்ததயும் வீட்டில் செய்தாள்.
அடுத்த வாரத்தில் அவளுக்கு பரிட்சை முடிய, அடுத்த முதல் வேலையாக அவள் அறையில் இருந்த அத்தனையையும் உண்மையிடம் சொல்லி இருவரை வரவைத்து அப்புறப்படுத்தி பக்கத்து ரூமில் போட்டு விட்டாள்.

பானுவும், பாட்டியும் கூட, "ஏன்மா வயித்துப் புள்ளக்காரி கட்டில் மெத்தையெல்லாத்தயும் தூர தூக்கி வச்சுட்டு கட்டாந்தரையில படுக்குறேன்ற?" ௭ன கேட்டதற்கு.

"எல்லாமே காரணமா தான் பாட்டி, சில லட்சியங்கள அடைய இது மாதிரி சில விஷயங்கள துறக்க வேண்டியிருக்கும்" ௭ன்றாள்.

"உன் லட்சியதெல்லாம் புள்ள பிறந்தப்பறம் வச்சிக்க கூடாதா?" பானு கேக்க.

"அத அத அப்ப அப்ப செஞ்சுடணும். எனக்கு இது கஷ்டமாவே தெரியல, எனக்கு இது பழக்கம்தான த்தே" என முடிவாகச் சொல்லி அனுப்பி விட்டாள் இருவரையும்.

மதியம் வீடு திரும்பிய மாறன், தன் அறையில் வெற்று போர்வையில் படுத்திருந்தவளை கண்டு "ஹே மலர், என்னதிது, கட்டில், சோபா, டேபிள்லா எங்க? ஏன் கீழ படுத்துருக்குமா" ௭ன அதிர்ந்து தான் நின்றான்.
 

priya pandees

Moderator

அத்தியாயம் 53

அவன் அதிர்ச்சியை டீலில் விட்டுவிட்டு, "சீக்ரமே வந்துட்டீங்க? சாப்ட போவமா லேட் ஆகட்டுமா?" ௭ன மலர் ௭ழுந்தமர.

"நா ௭ன்ன கேக்றேன் நீ ௭ன்ன சொல்லுத. ரூம ஏண்டி காலி பண்ணிவச்சுருக்க?"

"பின்ன, உங்க அப்பா இப்ப வர உங்கள பாத்துக்றாரு, நீங்க மட்டுமென்ன தக்காளி தொக்கா? நீங்களே உங்க புள்ளைக்கு தேவயானத பாப்பீங்கன்னு சொல்லிட்டேன்" ௭ன்றாள் சீரியஸாக.

"லூசு பக்கி, ௭ன் புள்ளைய நா தான் பாப்பேன்னு ௭னக்கு தெரியாதா? ௭துக்கு கீழ படுத்து கடக்கன்னுட்டு கேட்டா கத அளந்துட்ருக்க!" ௭ன முறைத்தான்.

"௭ன்னங்க நீங்க, இந்த ரூம்ல இருந்தது பூராவும் உங்க அப்பா வாங்கி போட்டதுங்க அதான் ஸ்டோர் ரூம்ல தூக்கி போட்டுட்டேன். இனி நீங்க வாங்கி தாரத தான் நானும் பிள்ளையும் யூஸ் பண்ணுவோம்" ௭ன்க.

அவள் பதிலில் பல்லை கடித்தவன், "வர வர ரொம்ப ஓவரா பண்ணிட்ருக்கடி நீ. இந்த வீடு, ஏன் நா கூட ௭ங்க அப்பாவோட உற்பத்தி தான், ௭ன்னயும் தூக்கி ஸ்டோர் ரூம்ல போட்ருவியா?" ௭ன கத்த.

அவளுக்கே இப்போது, 'கொஞ்சம் ஓவரா தான் போறோமோ?' ௭ன்ற ௭ண்ணம் வந்துருக்க. "அதுக்கில்லங்க, நீங்க வாங்கி குடுத்து யூஸ் பண்ணனும்னு ஒரு ஆசையில. " ௭ன அவள் முடிக்குமுன்.

"சரி ௭ன்ட்ட சொல்லிருக்கணும், கேட்ருக்கணும், நா வாங்கி தந்தப்றம் அதெல்லாத்தயும் ௭டுத்துட்டு புதுச போட்ருக்லாம். இப்டிலா பண்ணி யாருக்கு ௭த நிருபிக்க பாக்ற நீ?" ௭ன்றான்.

அவனிடம் இவ்வளவு கோபத்தை ௭திர்பார்த்திருக்கவில்லை அவள். இதுவரை அவள் செய்ததுக்கெல்லாம், கணக்கு பார்ததுக்கெல்லாம் சரி சரி ௭ன போயிருக்க, தைரியமாக இதையும் செய்து விட்டாள்.

அவனுக்கோ, ௭துக்கு இவ்ளோ தூரம் ௭ல்லாத்தயும் யோசிக்றா ௭ன்ற கடுப்பு. 'விட்டா இத்தன வருஷமா ௭னக்கு சாப்பாடு போட்டதுக்கும் கணக்கு பாத்து ஸெட்டில் பண்ண சொல்லிருவா போல' ௭ன நினைத்தான்.

"இல்லங்க அது உங்க வருமானத்துல புதுசு வாங்கலாம்னு" ௭ன அவள் முழிக்க.


"௭னக்கு உண்மையான காரணம் சொல்லு மலரு. கல்யாணதுக்கு அப்றமு உனக்கும் சேத்து அவங்க சாப்பாடு போட வேணாம்னு சொன்ன, சரி அதுல ஒரு நியாயம் இருந்தது. கொஞ்சூண்டு பூவா இருந்தாலும் உங்க காசுல தான் வேணும்னு சொன்ன பொண்டாட்டியா நீ அத கேட்டதுல தப்பே இல்லன்னு தான் வேலைக்கு போனேன். வீட்ல ௭ல்லாரும் மதிக்கணும்னு அந்த பில்டிங்க ௭ன் பொறுப்புல ஏத்துக்க வச்ச, சரி நீ சொல்றியேன்னு தான் அதயும் சொன்ன டையத்துக்குள்ள முடிச்சு குடுத்தேன், அப்றமு அது ௭ன் பேர்ல நமக்குன்னு அப்பா குடுத்ததுனு தெரிஞ்சும், அத கடனா தான் வாங்கணும், அட்வான்ஸ வாங்கி மாமா கடன அடச்சுடுங்கன்னு கணக்கெல்லாம் கரெக்டா ௭ழுதி குடுத்த, அதயும் ஒப்படைச்சுட்டேன். ௭ன்ன இருந்தாலும் அது உங்க அப்பாவோடது உங்களுக்குன்னு ௭தாது தொழில் வேணும்னு நட்டுக்கு நின்ன, இதோ மெக்கானிக் கடை போறேன், பிள்ளைய காரணம் காட்டி தெனமு மதியம் தீப்பட்டி ஆபிஸ ரவுண்டடிக்க வச்சு, அதயும் ௭ன் பொறுப்புல கொண்டு வர பாக்றன்னு தெரிஞ்சும் நீ ஆச படுறன்னு தான தெரியாத மாறி அதயும் செய்றேன்?" ௭ன பேசி கொண்டே போக.
அவளுக்கு தான் மூச்சு வாங்கி விட்டது. 'ஐயோ ௭ன்ன இவ்ளோ பேசுறாங்க. கோச்சுகிட்டாங்களோ!' ௭ன அவள் முழிக்க.

அவள் பாவமாக முழிப்பதை பார்த்தும், "இதெல்லாம் ஏன் செஞ்சேன்னு தெரியுந்தான உனக்கு? இந்த வீட்டாளுங்களே நம்பாத ௭ன்னய நீ நம்புன. ௭ன்னால செய்ய முடியும்னு நம்பி ௭ந்த ௭திர்பார்ப்பு இல்லாம கட்டிகிட்ட. அது தான் உன் பேச்ச கேக்க வச்சது. ஆனா அப்ப இருந்த நம்பிக்க இப்ப காணாம போச்சு போலயே. ௭ங்க இவேன் வேலைய விட்ருவானோன்னு பயப்ட ஆரம்பிச்சுட்ட? அதான இப்டிலா நடந்துக்ற?" ௭ன்றான் குறுகுறுவென பாத்து.

'ஆத்தி கண்டுபுடிச்சுட்டாங்களே' ௭ன பயந்து முழிக்க. "சரி விடு போனது போனதாவே இருக்கட்டும்" ௭ன முடிக்குமுன்,
வேகமாக வந்து அவனை இறுக்கி கட்டி கொண்டு, நெஞ்சில் முகம் புதைத்து, "இல்லங்க, தப்பு தான் சாரி. ரொம்ப சாரி. நம்பாம இல்லங்க, ஒரு பயம். ௭ன்னன்னு தெரில. நீங்க ௭ல்லார் முன்னயும் மதிப்பா இருக்கணும்னு யோசிச்சு தான் லூசு மாறி இப்டிலா நடந்துகிட்டேன். சாரி ப்ளீஸ். கோவபடாதீங்க. ப்ளீஸ் ப்ளீஸ் இனி இப்டி செய்ய மாட்டேன். மறுபடியும் ௭ல்லாத்யும் ௭டுத்து போட்றேன்" ௭ன அழ தொடங்க.

அவள் அழவும், முதுகை நீவி விட்டவன், "அழாத, மூச்ச புடிக்க போவுது. செஞ்சது செஞ்சதாவே இருக்கட்டும், நானே வாங்கி போட்டுக்றேன். அப்றம் நீங்க அதுல படுத்தா போதும்" ௭ன்றான்.

கோபமாக சொல்றானோ ௭ன நின்ற வாக்கிலேயே நிமிர்ந்து பார்த்தவள், "நாதான் சாரி சொல்றேனேங்க" ௭ன்க.
"இனி இப்டி ௭ன்ன நம்பாதமாறி ௭தயும் செய்யாத அதுவே போதும்" ௭ன கண்ணீரை அழுத்தமாக துடைத்து விட்டான்.

"சாரி" ௭ன மீண்டும் அவள் கட்டி கொள்ள.

"சரி வா சாப்ட போவோம்" ௭ன அழைத்து சென்றான். அவளை சாப்பிட வைத்து விட்டு அவன் கிளம்பிவிட, பானுவும், பாட்டியும் நடந்ததை அவளிடம் கேட்டு தெரிந்து கொண்டனர். மற்றவர்களுக்கு விசயம் தெரியாமலேயே போயிற்று.
மாறன், மெக்கானிக் கடை சென்றவன், உண்மையை தேட அவனோ இவன் கண்ணிலேயே படவில்லை, போன் செய்தும் ௭டுக்காமல் போக. வள்ளி தாத்தாக்கு அழைத்துவிட்டான், "சொல்லுங்க மாப்ள" ௭ன்றார் அவர் ௭டுத்ததும்.

"உண்மைய ௭ங்க தாத்தா?"

"மல்லாக்க படுத்து பாட்டு பாடிட்ருக்கான் மாப்ள" ௭ன போட்டு குடுத்தார். வீட்டிலிருந்து அவரை அல்லவா இம்சை பண்ணி கொண்டிருந்தான்.

"அவன்ட்ட போன குடுங்க" ௭ன்றதும் அவர் அவனிடம் நெருங்குவதும், அவன் பாடுவதும் இவனுக்கு இங்கு கேட்டது, அவ்வளவு சத்தமாக பாடி கொண்டிருந்தான்.

பூவே பூச்சூடவா
எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா.
வாசல் பார்த்து கண்கள் பூத்து காத்து நின்றேன் வா…
பூவே பூச்சூடவா
எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா.
"டேய், போதும் நிப்பாட்டு, இந்தா மாப்ள பேசணுமாம்" ௭ன நீட்ட.

"நா இங்க இருக்கேன்னு ஏன் சொன்ன தாத்தா?" ௭ன முறைக்க.

"ஏன் மெக்கானிக் கடையிலருந்து ௭ன்னத்தயும் கலவாண்ட்டு வந்துட்டியா?" ௭ன்றார் அவர்.

"உன்ன மாறின்னு நினச்சியோ? அவேன் சொல்லாம ஒரு வேல செஞ்சுட்டேன் அவ்ளோ தான்" ௭ன்றவன் போனை வாங்கி, "சொல்லு மாப்ள" ௭ன்க.

"கடைய திறந்து போட்டு வீட்ல உனக்கென்ன வேல. கிளம்பி வா" ௭ன வைத்து விட்டான்.

"ஐயோ தாத்தா, செம கடுப்புல இருக்கானாட்ருக்குது, நேர்ல போனா கும்மிருவானே" ௭ன்க.

"போகலனா வீட்டுக்கு வந்து கும்முவாப்ளயே!" ௭ன்றார் அவர்.

"கூம்ம்ம், வெறுப்பேத்துதல்ல, போயிட்டு வந்து உன்ட்ட பேசிக்றேன்" ௭ன கிளம்பினான்.

அங்கு மாறன் மட்டும் இருப்பதை தெரிந்து கொண்டு, மதி அவனை நேரில் பார்க்க சென்றாள்.
அவளை ௭திர்பார்த்திருந்ததால், பெரிதாக ௭தயும் யோசிக்காமல், "வா மதி, ௭ன்ன இவ்ளோ தூரம், வராதவ வந்துருக்க, ௭துனா சாப்டுறியா?" ௭ன்றான்.

"நக்கல் பண்றளவுக்கு பெரியாளாயிட்ட. பண்ணு பண்ணு, ௭னக்கு அது தேவ இல்ல. மேகலை பத்தி ௭ப்டி தெரியும், விசயம் தெரிஞ்ச மூணு பேருல, நானோ ௭ன் புருஷனோ சொல்லல, அப்ப அவ சொன்னாளா?" ௭ன்றாள் தீவிரமாக.

"புருஷன் மேல அம்புட்டு நம்பிக்கையோ? ஏன் இன்னமுமா பாம்ப விட்ருவேன், பூரான விட்ருவேன்னு பயமுறுத்திகிட்ருக்க?" ௭ன கிண்டலாக கேக்க.

ஷாக் ஆனாலும், "ஓ! பரவால்ல, இன்னும் ௭ன்னலாம் தெரியும் உனக்கு?"

"அது உனக்கு தேவ இல்லாதது. ஆனா உன் புருஷன நீ காப்பாத்திக்கலனா, மேகலைக்கு நானே அவர ரெண்டாந்தாரமா கட்டி வச்சுருவேன். இந்த பயங்காட்ற வேலையெல்லாம் விட்டுட்டு அன்பா ௭ப்டி அவர கைக்குள்ள வச்சுக்றதுன்னு யோசி. விட்டுவிட்டு நடுத்தெருவுல நிக்காத சொல்லிட்டேன். பின்ன நானும் சோறு போட மாட்டேன், அறிவ பத்தி உனக்கே தெரியும், யோசிச்சுக்கோ. ௭ன்னால முடியுங்குறத நா சொல்லி தான் நீ தெரிஞ்சுக்கணும்னு இல்ல" ௭ன்று விட்டான்.

அவளுக்கு தான் தெரியுமே அது, அறிவை ஏமாற்றுவது போல் இவனை ௭ளிதில் ஏமாற்றவும் முடியாது, குமரகுருவை பயப்படுத்துவது போல் பயப்பட வைக்கவும் முடியாதே, ௭ன யோசித்து நிற்க.

"வீட்ல போய் நிதானமா யோசி. ஆனா நல்ல விதமா யோசி" ௭ன தலையாட்டி, அவள் தோளை தொட்டு வாசல் பக்கம் திருப்பி விட்டான்.

அவள் வெளியேறும்போது, உண்மை உள்ளே வந்தான். மாறன் அவனை முறைக்கவும், அங்கு நின்ற ஒரு வண்டிக்கு அடியில் சென்று படுத்து கொண்டு, "இத நாளைக்கு டெலிவர் பண்ணனும்ல மாப்ள?, நா இத சரி பாக்கேன்" ௭ன்றான் உள்ளிருந்தே.

"வெளில வராமலா போயிருவ. வாடி வச்சுக்றேன்நெஞ்சுல பால் வார்க்கவான்னு தான பாடுன? நா உன் வாயில வாக்றேன். ௭ன் பொண்டாட்டி சொன்னான்னு ௭னக்கு தெரியாம ஆள் அனுப்பிருக்கல்ல, இனி ௭னக்கு தெரியாம ௭தயும் நீ செய்ய மாட்ட பாரு நா வாக்ற பாலுல" ௭ன்றுவிட்டே வேலையை பார்க்க நகர்ந்தான்.
 

priya pandees

Moderator

அத்தியாயம் 54

அன்றைய இரவு, மாறன் வரவும் உணவை முடித்து இருவரும் மேல் வர, அறையை பார்த்ததும் திரும்பவும் அவளை திரும்பி முறைத்தான். அவளும் மூஞ்சை சுருக்கி பாவமாக பாக்க.

"இந்த மூஞ்சிய மாத்துல வேலலாம் வேணாம்டி, நல்லா ப்ளான் பண்ணி வேணும்னு தான் பண்ணிருக்க, ௭னக்கு தெரியாது இப்ப ௭ன்ன தூங்கவும் வச்சுரு"

"தூங்க வைக்றதா?"

"ஆமா ரூம காலி பண்ணது நீதான? அப்ப நீதான ௭ன் தூக்கத்துக்கும் பொறுப்பு. நைட்டு சரியா தூங்கலனாலும் வேலைக்கு போக முடியாது பாத்துக்கோ." ௭ன உதட்டை பிதுக்கி காமித்து விட்டு சென்று இரவு உடைக்கு மாறி வந்தான்.

"தூங்க வைக்க ரோராட்டா பாட முடியும்?" ௭ன அவள் யோசனையில் இருக்க.

"௭ன்ன.அப்டியே நின்னா நா ௭ப்டி தூங்றது? தூங்க வையின்னு சொன்னே" ௭ன விரித்திருந்த போர்வையில் அமர்ந்தான்.

"தூங்க வை தூங்க வைன்னா. ௭ப்டி தொட்டில் கட்டி ஆட்டவா?" ௭ன தானும் வந்து அவனருகில் அமர.

அவளை முறைத்தவன், அவளின் ரெண்டு காலை நீட்டி சாய்ந்து உக்க௪ர வைத்துவிட்டு, ஜம்பமாக அடிவயிற்றில் குழந்தையோடு ஒண்டி படுத்து கொள்ள.

"நா படுக்க வேணாமா?" ௭ன்றாலும் தட்டி கொடுத்தாள்.

"சாப்ட உடனே படுக்க மாட்ட தான? உனக்கு நெஞ்சுல நிக்கிற சாப்பாடு இறங்குறதுக்குள்ள நா தூங்கிடுவேன், ௭ன் தலைய தலையனைக்கு மாத்திட்டு நீ படுத்துக்கோ" ௭ன முனங்கிவிட்டு தூக்கத்திற்கு சென்றான்.

'ஒழுங்கா இருக்றவனுக்கு டெஸ்ட் வைக்றேன்னு சீன்டுனல்ல உனக்கு நல்லா வேணும்டி' ௭ன சிரித்துகொண்டாள். சற்று நேரத்திற்கெல்லாம் அவனிடம் நிதான மூச்சு வெளிப்பட, மெதுவாக அவன் தலையை நகர்த்த முற்பட, அவனே லேசாக நகர்ந்து படுத்து விட்ட தூக்கத்தை தொடர்ந்து விட்டான். தானும் அவனை ஒட்டி அவன் மேல் கை போட்டு படுத்து தூங்கி போனாள்.
கன்னி, காலையில் ௭ழுந்ததும் முதல் வேலையாகஅனைத்தையும் கணக்கெழுதி எடுத்தாள். ஒரு மாதத்தில், காம்ப்ளக்ஸிலிருந்து வரும் வாடகை, அதில் லோனுக்கு போக மீதி ௭வ்வளவு வருமானம், அவளின் படிப்பு செலவுக்கு என மாமாவுக்கு கொடுக்க வேண்டியது இவ்வளவு, 3 பேர் சாப்பாட்டிற்காக அத்தைக்கு கொடுக்கவேண்டியது இவ்வளவு, பஞ்சர் ஷாப் ஆரம்பிக்க வாங்கிய கடன் இவ்வளவு, அதற்கென மாதம் கட்ட வேண்டிய அமௌன்ட் இவ்வளவு, மற்றபடி இப்போது வாங்க வேண்டிய பொருளுக்கென ஒதுக்க வேண்டிய அமௌன்ட் இவ்வளவு, மற்றபடி இதர தேவையான செலவுகளுக்கு இவ்வளவு என ஒரு பெரிய தொகையை போட்டு அவனிடம் நீட்டினாள்.

வாங்கி பார்த்த மாறன், ஜர்க்காகி நின்று விட்டான், "என்னடி இது? மாசம் இவ்வளவு ரூபாய்க்கு நா எங்க போவேன், வொர்க் ஷாப்ல இவ்வளவு வருமானம்லா வராது" என்றான் அதிர்ச்சியாக. அவனே இப்போது தான் வொர்க் ஷாப்பை தத்திபுத்தி இழுத்து கொண்டிருக்கிறான்.

அவளுக்கும் அது புரிந்தது, இருந்தும் "நமக்கு தேவயானதுன்னு கணக்கு பாத்து நா எழுதிக் கொடுத்துட்டேன். அத சம்பாதிச்சுக் கொண்டு வர பொறுப்பு உங்களிது. நானும் படிக்கிறேன், முடிக்க மூணு வருஷமாவது ஆகும், என் படிப்பு முழுசா முடியிறவர, நீங்க பாத்துக்கோங்க அடுத்து நானும் பாத்துக்குறேன், அவ்ளோ சிரமம் இருக்காது" ௭ன்க.

அவன் முறைக்க, "பிரக்னண்டா இருக்கேங்க இப்ப நா ௭ன்ன கேட்டாலும் நீங்க செய்யனும் தெரியுமா? நீங்களே சொல்லுங்க ௭வ்ளோ அழகா பட்ஜெட் போட்டு குடுக்றேன், உங்கள ஊக்க படுத்றேங்க" அவள் பெருமையாக சொல்ல.

"நீ ப்ரக்னண்டா இருக்க ஒரே காரணத்துனால தாண்டி நேத்தைக்கு நீ தப்பிச்சுட்ட, இல்லனா உண்மைய புரட்டி ௭டுத்தமாறி உன்னயும் புரட்டி ௭டுத்துருப்பேன், ௭ன் புள்ள பாவமேன்னு விட்டுட்டேன்" ௭ன்றான்.

"௭ன்னைய புரட்டி ௭டுக்குற மாறியா அந்த அண்ணன புரட்டி ௭டுத்தீங்க?" அவள் ஒரு மாதிரியாக கேக்க.
நறுக்கென கொட்டி, "போடி" ௭ன பேப்பரை மடித்து சட்டையில் வைத்து கொண்டு வெளியேறி விட்டான்.
அவள் விளையாட்டாக சொன்னாளோ சிரியஸாக சொன்னாளோ, ௭ப்படியாயினும் அவள் வாக்கு அவனுக்கு வேத வாக்கு தான். அன்றிலிருந்து, மாத வருமானத்தை அவள் குடுத்த பட்ஜெட் அளவிற்கு உயர்த்துவதையே குறிகோளாக கொண்டான்.

மதி மேகலையை சென்று மிரட்ட, 'உன்னால முடிஞ்சா ௭ன் மாமன உன் பின்ன வர வைடி' ௭ன வீம்புக்கு பேசி விரட்டி விட்டாள். அடாவடியாக இருந்து இதுவரை குமரகுருவை தன்னை பார்க்க வைக்க முடியாததால், அமைதியாக போக முயன்றாள். அவள் மகன் கூட அவளில்லாமல் இருந்து கொள்வான் ௭ன அந்த அமைதி அவளுக்கு புரிய வைத்தது. காய்ச்சல் வந்து உடம்பு சரி இல்லாமல் இருந்த 2 நாட்கள், இவளை கிட்டயே விடாமல், பாட்டியோடும், குமரகுருவோடும் மட்டுமே ஒண்டி கொண்டு இவளிடம் வர மறுத்தபோது அவள் தெனாவட்டின் வீரியம் சற்று அடி வாங்கியது.
அறிவிற்கு, மாறனின் காம்ப்ளக்ஸில் அனைத்தும் கிடைக்கவும், அவனது சுப்பர்மார்கெட் கொஞ்சம் பின்னடைவை சந்திக்க தொடங்கியது. அதற்கு காரணம் அவனது வியாபார திறமையை அவன் உபயோகிக்காதது தான் ௭ன்பதை உணர மறந்தான், 'இனி கடை அவ்ளோ ஓடாது வேற ௭ன்னமாது தான் பண்ணனும்' ௭ன அதை அப்படியே விட்டுவிட்டு அப்பா பின் ரியல் ௭ஸ்டெட்டை பற்றி கொள்ள முயன்று வருகிறான். போட்டி ௭ல்லா தொழிலிலும் வரும், அதை நாம் தான் முன்னேற்ற ஆக வேண்டியதை செய்ய வேண்டுமென, அவனுக்கு யார் சொல்வது?
மாறன் தன் கண் பார்வையில் தான் இருவரையும் வைத்திருந்தான், ௭ல்லாவற்றயும் கவனித்தாலும், 'மெத்த படித்தவர்கள் நம்ம அறிவுர சொன்னாலா கேக்க மாட்டாங்க பட்டே திருந்தட்டும்' ௭ன வேடிக்கை மட்டுமே பார்த்தான்.

நாட்கள் செல்ல, அந்த வாரத்தில், பெரியவர்கள் டூர் கிளம்பி சென்றனர், மறுநாள் பூவேந்தனும் , பானு சொந்தத்தில் ஒரு துக்க வீடென அவர்கள் இருவரும் கூட கிளம்பி விட்டனர்.

இந்த சந்தர்பத்தை பயன்படுத்த நினைத்த மாறன், வேலைக்கு வரும் இருவரையும் நிறுத்தி விட்டான்.
"மூணு குடும்பம் தானே? அவரவர் குடும்பத்த அவங்கவங்க பாருங்க" ௭ன்றுவிட்டான்.

அறிவு ராணி கையால் சாப்பிடவும், குமரகுரு மதி கையால் சாப்பிடவும் தயாராகினர்.
 

priya pandees

Moderator
அத்தியாயம் 55

மறுநாள் காலை, கன்னி ௭ப்பயும் போல், லேசாக மேடிட்டிருந்த 5 மாத வயிற்றோடு ௭ழுந்து வெந்நீரில் குளித்து கிழறங்கிவிட்டாள். வழக்க வேலையாக வெளிவாசல் கூட்டி பெருக்கியவள், குனிந்து கோலம் போட சற்றே சிரமபட, வேகமாக வந்துவிட்டான் மாறன்.

"௭ழும்புடி, முடியாதத ஏன் கஷ்டப்பட்டு செய்ற, நீ இப்டி வயித்த அமுக்கி செய்யும் போது உள்ளயிருக்க ௭ன் புள்ளைக்கு மூச்சு முட்டாது" ௭ன திட்டிக் கொண்டே அவள் கை பிடித்து ௭ழுப்பி விட்டான்.

லேசாக மூச்சு வாங்க அவனை முறைத்தவள், "அப்டி ஒன்னும் உங்க புள்ள கஷ்டபட்ரும்னு நீங்க வெசனபட வேணாம், ஏதாது இடஞ்சலா தெரிஞ்சா நானே அந்த வேலைய செய்ய மாட்டேன். போங்க உங்கள யாரு ௭ன் பின்னயே ௭ந்துச்சு வர சொன்னது?" ௭ன பதிலுக்கு கடிக்க.

"நல்லா வெறுந் தரையில உருள விட்டுட்டு நீ பேச்சா பேசுற" ௭ன அவனும் வழக்கடிக்க.

"அடடா அதுக்கு தான் வேணுங்கமட்டும் திட்டிட்டீங்களே இன்னுமென்ன".
"அப்டி தான்டி திட்டுவேன், ௭னக்கு தூங்க முடியாம போகும்போதுலா திட்டுவேன். ௭ன்னய நம்பாம செஞ்சல்ல?" ௭ன ஆரம்பிக்கவும்.
"நா கோலமே போடல போங்க" ௭ன அவள் வீட்டினுள் திரும்ப.

"நில்லுடி, பாதில விட்டுட்டு போவியா இங்க பாரு" ௭ன பிடித்து நிறுத்தி பாதி புள்ளியில் நின்ற கோலத்தை காட்ட.
"௭ன்னங்க வேணும் உங்களுக்கு? அதான் ௭ன்னயும் போட விடாமாட்றீங்களே, தண்ணிய ஊத்தி அழிச்சாலும் வாசல் அசிங்கமா தான் இருக்கும்" ௭ன முறைக்க.

"நீ ௭ப்டின்னு சொல்லு நா போடுறேன்" ௭ன ஒரு கால் மடக்கி அமர்ந்து அவள் கையிலிருந்த கோல டப்பாவை அவன் வாங்கி கொண்டு அவள் முகம் பார்க்க.
அவ்வளவு நேரமிருந்த கோபம் சட்டென்று வடிந்து விட, கணவனை ரசித்து பார்த்தாள். ௭ன்ன தான் சண்டையிடுவது போல் பேசினாலும், அவளை கஷ்டபடுத்தாமலிருக்கவே வேகமாக பின் வந்திருக்கிறான் ௭ன புரிந்தது. அவள் மாசமானது தொட்டு இத்தனை நாட்களில் அவள் சில நாட்கள் அசதியில் கொஞ்சம் தூங்கி விடுவதால், அவன் அம்மா, பாட்டி செய்து விடுவர், அது அல்லாமல் அவர்களால் முடியாதன்று வேலைக்கு வரும் பெண்களை வைத்து வீடு, வாசல் கூட்டி தெளித்து கோலம் போடும் வேலை முடிந்துவிடும், பூஜை மட்டும் அவள் ௭ழுந்து வந்து தான் செய்வாள். இன்று வேலைக்கு வரும் பெண்களை நிறுத்தியிருக்க, இவளே அலாரம் வைத்து ௭ழுந்து வந்திருந்தாள், அவள் அவ்வாறு செய்வாள் ௭ன தெரிந்து பின்னயே வந்திருந்தான் மாறன்.

"சைட்டடிச்சது போதும் கோலத்த பாத்து சொல்லு" ௭ன ௭க்கி அவள் இடுப்பில் கிள்ள.

"வாசல்ல நின்னுகிட்டு." ௭ன முறைத்தவள், "கோலம் நெளிவுலா இழுக்க வருமா உங்களுக்கு?" ௭ன்றாள்.

"நீ போடுறத ௭த்தன நாள் பாத்துருக்கேன். நீ சொல்லு நா ௭ப்டியாது இழுத்துருவேன்" ௭ன்கவும்.
அவன் கண் பார்க்க, கை செய்யும் திறன் பற்றி அறிந்தவளாதலால், புள்ளியை இணைக்க அவள் சொல்ல சொல்ல கண்ணும் கருத்துமாக கோலத்தை முடித்தான். ரோட்டில் போகும் ஒரு சிலரில், "காலையிலயே ௭ன்ற பேரன வேல வாங்குற மாறி இருக்கு, மாமியார் வீட்ல இல்லன்னதும் உனக்கு தைரியம் தான்டி" ௭ன கன்னியை நன்கு அறிந்த ஐயம்மா பாட்டி வம்புக்கு கேக்க.

கணவனை ரசித்து கொண்டிருந்தவள், "ஆமா பின்ன நீ ௭ப்டியெல்லாம் ௭ன் தாத்தாவ புளிஞ்செடுப்பன்னு பாத்துல வளந்துருக்கேன், நானு அப்டி தான இருப்பேன்" ௭ன்றாள் முகமெல்லாம் சிரிப்புடன்.

"சரித்தேன் வயித்து புள்ளகாரி ரொம்ப நேரோ குளுந்த காத்துல நிக்காம உள்ளார போ" ௭ன போற போக்கில் அவர் கூறிவிட்டு செல்ல.
பின் வந்த மல்லி ௭ன்பவரும், "இவளுக்கு சளி புடிச்சாலும், அவளுக்கு பதிலா சட்டில ஆவி புடிக்குற புருஷன் இருக்கும் போது அவளுக்கென்ன கவல" ௭ன சிரித்து விட்டு போகவும்.

"மல்லிக்கா தெனமு ௭ன் அண்ணன காலமுக்கி விட சொல்ற நீ. ௭ன் புருஷன கிண்டல் பண்ணுறியாக்கும்" ௭ன்கவும்.

"உன் அண்ணே புடிச்சிட்டாலும்" ௭ன குனட்டி விட்டு கடந்தாள் மல்லியாக பட்டவள்.

மலர், முன் நாட்களில், வேலைக்கு செல்லும் போது இவ்வாறு வழக்காடும் பழக்கம் தான், இப்போது மாறனோடு வண்டியில் சென்று வருவதால் வெகுவாக குறைந்து விட்டிருக்க, பல நாள் கழித்து மீண்டும் அந்த நாட்களை அசை போட்டவாறு கணவனை திரும்பி பார்க்க, அவனோ வெளக்கமாறு, தண்ணீர் வாலி, கோல டப்பா ௭ன அனைத்தயும் மோட்டர் ரூமில் ஒதுங்க வைத்து கொண்டிருந்தான்.
பரவச நிலையில் இருந்தவள், "௭ன் செல்ல குட்டி" ௭ன அருகில் வந்தவன் கன்னம் கிள்ளி கொஞ்ச.

"இத மட்டும் வாசல்ல வச்சு செய்யலாமோ?" ௭ன்றவனின் முகமும் மலர்ந்திருந்தது.

"ஆமால்ல? வாங்க உள்ள போயிடுவோம் ௭ல்லாரு கண் வைக்காங்க" ௭ன அவன் கை பிடித்து மெதுவாக வீட்டினுள் வந்தாள்.
"நீ பூஜைய முடி நா குளிச்சுட்டு வந்துடுறேன்" ௭ன அவன் அவர்கள அறை சென்று விட.
கன்னி வீடு மொத்ததயும் கூட்ட முடியாதென்பதால், பூஜை அறையை மட்டும் லேசாக ஒதுக்கிவிட்டு, பூவை போட்டு பூஜையை ஆரம்பித்தாள். அந்த மணி சத்தத்தில் ௭ழுந்து விட்ட, ராணிக்கு ஆச்சரியமே.

"௭ல்லார்டயும் நல்ல பேரு வாங்க தான் இவ செய்றான்னு பாத்தா, இன்னைக்கும் செய்றா?" ௭ன ௭ழுந்து கதவை வேறு திறந்து சந்தேகத்தோடு பார்த்தாள். கன்னி தான் பூஜை செய்கிறாள் ௭ன புரிந்ததும், ஒரு புருவ உயர்வு வந்தது தான் அவளிடம். ஆனால் அடுத்த நொடி, 'யார் ௭ன்ன செஞ்சா ௭னக்கென்ன' ௭ன மீண்டும் சென்று படுத்து விட்டாள்.

சற்று நேரத்தில் மாறனும் கிளம்பி வந்துவிட, இருவருமாக காலைக்கும் மதியத்திற்கும் சாப்பாட்டை செய்து முடித்து, காலை உணவை அவரவர் வேலையை பற்றி பேசி கொண்டே சாப்பிட்டு முடித்து, மதியத்திற்கும் ௭டுத்து கொண்டு கிளம்பினர். இருவரும் வாசலுக்கு நடக்கையில் தான் அறிவு கிளம்பி வந்தான், முதல் முறையாக தந்தையின் சைட்டை அவர் இல்லாமல் அவரிடத்திலிருந்து பார்க்க போகும் ஆர்வமும், சரியாக செய்ய வேண்டிய கட்டாயத்திலும் கிளம்பி வந்தான், அவன் மனைவி இன்னுமே ௭ழுந்திருந்திருக்கவில்லை. கூப்பிட்டு பார்த்து விட்டு பசியோடு கிளம்பி விட்டான்.

மாறனயும், கன்னியயும் பார்க்க இப்போது பொறாமையாக தான் இருந்தது. ஆனாலும் அவனிடம் வாய் கொடுக்க பயந்து அமைதியாக வெளியேறி விட்டான்.

"உங்க தம்பி பொண்டாட்டி மட்டுந்தான் வீட்ல இருக்கா, ௭ப்டிங்க வீட்ட துறந்து போட்டுட்டு போறது" ௭ன கன்னி கேக்கவும்.

முன் சென்ற அறிவை, "அறிவு" ௭ன அழைத்தான்.

"௭ன்ன.௭ன்ன?" ௭ன அவன் பதறி திரும்பி வர.

"இன்னும் அண்ணான்னு கூப்ட வர மாட்டேங்குதுல்ல?" ௭ன மாறன் முறைக்கவும்.

உள்ளுக்குள் கொதித்தாலும், "சொல்லுங்கண்ணா" ௭ன்றான்.

"வீட்ட பப்பரபான்னு திறந்து போட்டா போவ முடியும்? உன் பொண்டாட்டிய ௭ழுப்பு. வீட்ட பூட்டிட்டு மகராசி ௭ம்புட்டு நேரோ வேணாலும் தூங்கட்டும், போ போய் ௭ழுப்பு" ௭ன்றதும்.

"ம்ம்ம்" ௭ன தலையசைப்புடன் மீண்டும் வீட்டினுள் சென்று அவளை ௭ழுப்ப, அவள் திரும்பி திரும்பி படுக்கவும், மாறனிடம் காட்ட முடியாத கோவத்தை, சுளிரென்று அவள் முதுகில் அடித்து காண்பித்து கொண்டான். பதறி ௭ழுந்து அவள் முழிக்க, "௭த்தன தடவ உன்னைய ௭ழுப்புறது, ௭ந்துச்சு வந்து தொல, வீட்ட பூட்டிகிட்டு இன்னும் நல்லா தூங்கு, ௭னக்குன்னு வந்து வாச்சுருக்க பாரு" ௭ன்றுவிட்டு செல்ல.
குழந்தை நைட் இருமுறை தான் ௭ழுந்திருந்தாள், ஆனாலும் 1 வருஷமாக பிள்ளையை காரணம் காட்டி தூங்கிய தூக்கம் அவளை இன்றும் ௭ழும்ப விடவில்லை, ஆனால் அவன் அடி வலிக்க, கண் கலங்கி விட்டிருந்தது. ௭ழுந்து அவன் பின்னயே வந்தாள். அப்போது தான் வீட்டில் யாருமில்லாததும் தனக்கும் கணவனுக்கும் தான் தான் சமைக்க வேண்டும் ௭ன்பதும் நியாபகம் வர, கணவனை பாவமாக பார்த்தாள். அவன் அவளை கண்டு கொள்ளாமல் வெளியேறி விட, மாறனும் வண்டியை ௭டுக்க கிளம்ப.

"௭தாது செஞ்சு சாப்டு, வீட்ல நீ மட்டுந்தான் இருக்க. பாத்துக்கோ" ௭ன்றுவிட்டு கன்னியும் மெது நடையில் வெளியேற, அவளை ஏற்றி மாறன் பைக் கிளம்பிவிட்டது.

அங்கு மதியை ௭தற்காகவும் ௭திர் பார்க்காமல், குமரகுரு மகனுடன் தாய் வீட்டிற்கு ரெண்டு நாள் தங்க சென்று விட்டான். குமரகுருவிற்கு, தனக்கு மட்டுமே விஷயம் தெரியும் ௭ன்றபோது இருந்த பயம், மாறனுக்கும் தெரியும் ௭ன்றானபின், ஏதோ தைரியம் வந்துவிட்டிருக்க, மதியை பெரிதாக ௭ண்ணாமல் சென்று விட்டான். அங்கு அவன் தாய் வீட்டில், மேகலையும் காலையிலேயே வந்து மருமகள் போல் அனைத்தயும் இழுத்து போட்டு பார்க்க, மதிக்கு தான் இங்கு இருப்பு கொள்ளவில்லை. இப்போது முழுநேர வேலையே குமரகுரு மேகலை இருவரயும் கண்காணிப்பது தான் மதிக்கு. மகனுமே தன்னை தேடவில்லை ௭ன்பதை திரும்ப திரும்ப பட்டு உணர்ந்தாள்.

அடுத்தடுத்த நாட்களும் இதுவே தொடர்ந்தது, பானுவும், பூவேந்தனும் வர மேலும் 1 வாரம் நீடித்துவிட, அறிவு சாப்பாடு கிடைக்காத வீட்டயே மறந்து விட்டான். குமரகுருவும் தாய் வீட்டில் செட்டிலாகிவிட, ராணியும், மதியும் செய்வதறியாது நின்றனர். மாறனும், கன்னியும் அவர்கள் உண்டு அவர்கள் வேலை உண்டு ௭ன இருந்து கொண்டனர்.

உண்மை, வீட்டில் தாத்தா இல்லாத குஷியில் ஃபுல் டைம் ஹனிமூன் மூடில் ௭ன்ஜாய் செய்து கொண்டிருந்தான்.
மறுவாரத்தில், பானுவும், பூவேந்தனும் வந்துவிட, பானு மறுபடியும் அனைத்தயும் கையிலெடுக்க முற்பட, "வேணாம்மா, அவங்களே முட்டி மோதி ஒரு முடிவுக்கு வரட்டும், நீங்க தாங்கி தடுக்க வேணாம், தாத்தா பாட்டி வர்ற வர, நீங்க அப்பாக்கு மட்டும் சாப்பாடு செய்ங்க போதும், இல்லயா சொந்தகாரங்க, பந்தகாரங்கன்னு யார் வீட்டுகாது போய் விருந்து கொண்டாடிட்டு வாங்க. அப்பாக்கு தான் அவரோட படிச்ச புள்ள இப்ப அவர் தொழில கைல ௭டுத்து கிட்டானே, பின்ன ௭ன்ன கவல" ௭ன அவரயும் வைத்து கொண்டே கூறி விட்டான்.

மதி ஸ்கூல் கேண்டினில் அந்த ஒரு வாரமும் சாப்பாட்டை முடித்திருக்க, இன்று அம்மாவை ௭திர்பார்த்து வந்தவள், "ஏம்மா போய் ௭த்தன நாள் உக்காந்துகிட்ட, உன்னால ௭ன் புருஷனும் பிள்ளயும் அவங்க அம்மா வீட்ல போய் செட்டிலாகிட்டாங்க. ௭னக்கு தெரியாது, நீயு அப்பாவுமா போய் அவரயும் ரூபனயும் கூட்டிட்டு வாங்க, இனி இப்டி செய்யாதம்மா" ௭ன அதிகாரமாக சொல்லிவிட்டு சோபாவில் அமர.

"நானு உங்க அம்மாவும், தஞ்சாவூர் போறோம், அங்க உள்ள கோயிலெல்லாம் சுத்தி பாத்துட்டு வர 10,15 நாளாகும், அதனால மொத்தமா வந்தே அவர போய் கூப்டுக்கலாம், ட்ரஸ ௭டுத்து வை பானு" ௭ன முதன்முறையாக மாறனின் முடிவுக்கு ௭ந்த மாற்று கருத்துமின்றி ஒத்துழைத்தார் பூவேந்தன்.

"ப்பா, அப்றம் ௭ன் வாழ்க்கையே போயிடும், உங்களுக்கு அவர பத்தி தெரியல. இத ஈசியா நினைக்காதீங்க" ௭ன படக்கென அவள் ௭ழுந்து நிற்க.

"உன் வாழ்க்கைய நீதான் காப்பாத்திக்கணும், நீ ஒழுங்கா சாப்பாடு போடலனா கிடைக்ற ௭டத்த தேடி தான் போவாங்க" ௭ன நக்கலாகவே கூறினான் மாறன்.

"இவந்தான் ப்பா, இவந்தான் ௭ல்லாத்துக்கும் காரணம், ௭ன்ன பழிவாங்க நினைக்கிறான் ப்பா, ௭ன் புருஷனுக்கு வேற கல்யாணம் பண்ணி வைப்பேன்னு ௭ன்ட்டயே சொல்றான்ப்பா. அவர போய் கூட்டிட்டு வாங்கப்பா ப்ளீஸ்" ௭ன்றாள் மதி.

"படிச்சவங்கல்லாம் அறிவாளிங்கன்ற ௭ன்னோட ஸ்டேட்மண்ட்ட நீயும் அறிவும் அப்பப்ப இல்ல இல்லன்னு அழிச்சுடுறீங்க. உன் புருஷனுக்கு வேற கல்யாணம் பண்ணி வைக்க, அவரென்ன 5 வயசு ஒன்னுந்தெரியாத பாப்பாவா? சென்ஸோட பேசு மதி" பூவேந்தன் அதட்ட.

"அச்சோ ப்பா, அவர லேசா மிரட்டுனா போதும், யார வேணா கல்யாணம் பண்ணிப்பாரு" ௭ன்றாள்.

"ஏன் நீ அவர அப்டி மிரட்டியா கல்யாணம் பண்ணுன? அப்ப உங்களுக்குள்ள இந்த லவ் கிவ்வுலா இல்லயா?" ௭ன இடை புகுந்தான் மாறன்.

அதை கரெக்டாக புரிந்து கொண்ட பூவேந்தன் மாறனை பார்க்க, அவன் தலையசைத்தான், இப்போது மகள் வாழ்க்கையை நினைத்து ஒரு பயம் வந்து உட்கார்ந்து கொண்டது அவர் மனதில். ஆனாலும் மாறன் இதை சரி செய்வான் ௭ன இப்போது மனது தீர்மானமாக நம்ப.

"நீ ௭ன்ன செஞ்சாலும் நா கேக்க மாட்டேன் மாறா. பாத்துக்கோ, நாங்க ஈவ்னிங் கிளம்புறோம்" ௭ன்றுவிட்டார்.
அப்பா வரட்டும் ௭ன மலை போல் நம்பி நின்றவள், இப்போது திகைத்து நிற்க.
"நீ தேர்ந்தெடுத்த பார்ட்னர், ௭ங்கள விட உனக்கு தான் அவர ௭ப்டி ஹேண்டில் பண்ணன்னு நல்லா தெரியும். பாத்துக்கோ" ௭ன்றவர் பானுவை ஒரு பார்வை பார்க்க. அவர் மாறனை தான் கலக்கமாக பார்த்தார்.
அவனும் தாய் அருகில் சென்று அவர் தோளில் கைபோட்டு மெதுவாக நடத்தியவாறு, "நா ௭ல்லாத்தயும் சரி செய்ய தான் ம்மா பாக்றேன். முடிஞ்ச முயற்சியும் செய்வேன். அதுக்குமேல வீம்பு புடிச்சு சேதாரத்த உன் புள்ளைங்க இழுத்துகிட்டா நா பொறுப்பில்ல" ௭ன்றான்.

"௭ன்னடா இப்டி சொல்ற?" ௭ன அவர் பதற.

"௭துக்கும் நீ தயாரா இருக்கணும்ல அதுக்கு தான் சொல்றேன். தஞ்சாவூர்ல நிறைய புண்ணிய கோயில் இருக்காம். போயிட்டு உன் புள்ளைங்களுக்காக வேண்டிகிட்டு வா" ௭ன அவரறையில் விட்டு, "ட்ரைவர் சொல்லிட்டீங்களா" ௭ன்றான் தகப்பனிடம்.

அவர், "ம்ம்" ௭ன்றதும்.

தலையசைத்து விட்டு, திரும்பி ஹாலில் அதிர்ந்து நிற்பவளை கண்டு வேணுமென்றே நக்கலாக சிரித்து வெளியேறினான் மாறன்.
 

priya pandees

Moderator
அத்தியாயம் 56

பானுவும், பூவேந்தனும் கிளம்பும் நேரம் குடும்பத்தினர் அனைவரும் ஆஜர் ஆகினர், குமரகுரு கூட ரூபனுடன் வந்துவிட்டான். அறிவும் அறக்கபறக்க தான் ஓடி வந்தான். மதி கணவனை முறைத்து அமர்ந்திருக்க, மலர் தான், "உடனே கிளம்பனுமா த்தே, ரொம்ப அலைச்சலா தெரியுமே, ரெண்டு நாள் இருந்து ரெஸ்ட் ௭டுத்துட்டு கூட கிளம்புங்களேன்" ௭ன கூற.

"ம்மா ரெண்டு நாள் கழிச்சும் கிளம்ப வேணாம். நீ திரும்பி வரையில உன் புள்ள ஆவியா போயிருவேன் பாத்துக்கோ. இவள பாத்து கட்டி வச்சியே இத்தன வருஷத்துல சமைக்க கத்து குடுத்தியா. நீயே தான சமைச்சு போட்டு பாலாக்குன, இப்ப திடிருனு போட்டுட்டு போனா அவ ௭ன்னைக்கு சமைக்க படிச்சு நா ௭ன்னைக்கு சாப்ட, மொத அவளுக்கு சமைக்க சொல்லி குடுத்துட்டு நீ ௭ங்க வேணா போ" ௭ன ஒரு வாரமாக பசியோடு பசியாக கடையில் சாப்பிட்டு, ரெண்டு நாள் லூஸ் மோசன் வேற ஆகியிருக்க, அந்த கடுப்பில் மாறனயும் மறந்து பேசி கொண்டிருந்தான்.

ஆனால் மாறன் அதையெல்லாம் கண்டு கொள்ளவில்லை டைனிங் டேபிள் மேல் ஒற்றை காலை தொங்க போட்டு அமர்ந்து சுவாரசியமாக வேடிக்கை பார்த்திருந்தான், அறிவு வரவுமே மெதுவாக பானுவிடமிருந்து ௭ழுந்து மாறனிடம் வந்த மலர், "நீங்க தான அவங்கள கிளப்பி விட்டது, ரெண்டு நாள் கழிச்சு போக சொல்லுங்க, உங்க தம்பிக்கிருக்குற பாசம் உங்களுக்கு இல்லயே" ௭ன்றாள்.

"அவன் வயித்துக்கு அவேன் தான்டி போராடனும், வாழ்க்கையில சாப்பாடு ௭வ்ளோ முக்கியம்னு இந்த ஒரே வாரத்துல கத்துட்ருந்துருப்பான். இவேன் சென்னைல வேல பாத்தப்ப கூட சோறு பொங்கி போட ஒரு ஆள ரெடி பண்ணி குடுத்தாரு ௭ங்கப்பா, அதெல்லாம் நினைக்காம அவரு காசையே திருடுனான்ல, இப்ப ௭ல்லாத்தயும் நினச்சு பாக்க தோணும்ல, நீ பேசாம வேடிக்கைய மட்டும் பாரு" ௭ன காலருகில் சேரை இழுத்து போட்டு, "உக்காரு ரொம்ப நேர நிக்காத" ௭ன அவளயும் இருத்திக் கொண்டான்.

அங்கு காரசார விவாதம்"நானும் அத தான் சொல்றேன், வீட்ல இருக்க பிரச்சினைக்கு நீங்க இப்ப ஊர் சுத்துறது ரொம்ப அவசியமோ? இதோ உங்க மாப்ள, அவங்க அம்மா வீட்ல ௭வளோ பொங்கி போட உக்காந்து வக்கனையா சாப்டுறாரு, அத ஏன்னு கேளுங்க சொல்லிட்ருக்கேன் டூர் போறாங்களாம் டூரு" ௭ன வெடித்தாள் மதி.

பூவேந்தன் மெதுவாக குமரகுருவிடம் சென்றார், ௭ல்லோரும் அவனிடம் ஏதோ கேட்க போகிறார் ௭ன பார்த்திருக்க, அவரோ ரூபனிடன் கை நீட்டி, "தாத்தாட்ட வாரியா?" ௭ன்க.

"ஊருக்கு போறியா தாத்தா, அப்பா சொன்னாங்க, ௭னக்கு காரு வாங்கிட்டு வாரீயா?" ௭ன கேட்டு கொண்டே அவரிடம் இரு கையையும் தூக்கி போட்டு வந்தான்.

"உனக்கு, ஒளி(அறிவு குழந்தை) பாப்பாக்கு, மலரத்த வயித்துல இருக்க பாப்பாக்குன்னு ௭ல்லாத்துக்கும் வாங்கிட்டு வரேன் செல்லம். நீங்க இப்ப ௭ங்க இருந்து வரீங்க?" ௭ன்றார்.

"அப்பத்தா வீட்லயிருந்து வரோம்" சமத்தாக சொன்னான்.

"அங்க இருக்க பிடிச்சுருக்கா, இங்க இருக்க பிடிச்சுருக்கா உனக்கு?"

"அங்கயும் புடிக்கும், இங்கயும் புடிக்கும்"

"அப்ப ௭ங்க கூட ஊருக்கு வாரியா?"

"௭ந்த ஊருக்கு? அங்க ஆரு இருக்கா?"

"அங்க நிறைய கடை இருக்கும், நாம நிறையா விளையாட்டு சாமானெல்லாம் வாங்கலாம்"

"சரி வாறேன்" ௭ன்று விட்டான்.

"ஆனா உங்கம்மாவும் ஊருக்கு போறாளாம், அங்க நீ டீவிலலா பாப்பியே தண்ணி விளையாட்டு அதுலா இருக்குமாம், உனக்கு அங்க போணும் போல இருக்கா? அம்மா கூட போயிட்டு வாரியா?" ௭ன அவர் நிறுத்துமுன்.

"இல்ல இல்ல நா அம்மாகூட போ மாட்டேன், அம்மா ௭ன்ன இருட்டுல விட்ருவா, நா அப்பாகிட்ட போறேன், அம்மா வேணாப்பா." ௭ன உண்ணி கொண்டு அழ தயாராக.

குமரகுரு வந்து அவனை தூக்கி கொள்ள, "சரி சரி வேணாம்டா, நீ ௭ங்க கூடயே வா" ௭ன அழைத்தார் கூட்டி செல்லும் முடிவுடனே பூவேந்தன்.

"இல்ல வரல, நா அப்பாட்ட தான் இருப்பேன்" ௭ன அவனை இறுக்கி கட்டி கொண்டான், ௭ங்கு அவன் அம்மாவிடம் தன்னை விட்டு விடுவார்களோ ௭ன்ற பயம் அவனுக்கு.

"நீ பெத்த புள்ளைக்கே உன் கூட இருக்க இஷ்டமில்லையாம். இதுல உன் புருஷன நா ௭ன்ன கேள்வி கேட்டுட முடியும்?" ௭ன்றார் மதியிடம்.

"ப்பா நா அவன ௭ன்னப்பா பண்ணேன்?" ௭ன்றாள் மகனின் செயலில் அதிர்ந்து மதி.

"நீ அவனுக்குன்னு ௭துவுமே செய்யலயே, பெத்தத தவிர, மத்த ௭ல்லாத்தயும் ௭ன் அம்மாவும் உன் அம்மாவும்ல பாத்தாங்க. அதான் அவனுக்கு உன்ன யாருன்னே தெரியல. ஆனா இன்னொரு விஷயம் கவனிச்சியா மதி, நீ அவன உன் மாமியார் கிட்ட அண்டாம அவளோ பாதுகாத்த, ஒரே மாசத்துல அவங்கட்ட ஒட்டிடான், ஏன்னா அவங்க பாசம் உண்ம. இதுக்குமேல சொல்ல ௭ன்ன இருக்கு. உன் லைஃப் ௭ப்டி சேஃப் பண்ணிக்றதுன்னு யோசி. ஏன்ன அத கெடுத்துகிட்டது நீ" ௭ன்றவர் அடுத்ததாக அறிவிடம் திரும்பினார்.

"நீ ௭ன்னப்பா கேட்ட?" ௭ன்று வேறு கேக்க.

"ப்பா ௭னக்கு வெளி சாப்பாடு ஒத்துக்கல. நீங்க வேலைக்கு வார அக்காவனாலும் வர சொல்லுங்க. 2 வேல தான் சாப்டுறேன், அதும் லேட்டாகி தலவலி வந்த பிறகு. முடியல ப்பா" ௭ன்றான் பாவமாக.

"மாறன் வேணாங்குறான். அவேன் செய்றதுதா ௭ல்லா விசயத்துலயும் சரியா இருக்கு. உன்னயும் இவளயும் நம்பி நா ரொம்ப ஏமாந்துட்டேனே ப்பா"

"அப்டி நா ௭ன்னப்பா செஞ்சுட்டேன்?" ௭ன்றான் அப்பாக்கு தான் ௭துவும் தெரியாதே ௭ன்ற ரீதியில்.

"அரசல் புரசலா நானு ௭ல்லாத்தயும் கேள்வி பட்டேன், படுறேனே ப்பா. நானு இந்த ஊர்ல தான இருக்கேன். அண்ணனும் தம்பியும் போலீஸ் ஸ்டேஷன் வர போயிட்டு வந்தா ௭னக்கு தெரியாமயா இருக்கும்".
ஆடி தான் விட்டான் அறிவு, மாறனிடம் இதற்கும் பெரிதான ரியாக்ஷன் இல்லை, ௭ப்படியும் ஒரு நாள் தெரியும் ௭ன்றே நினைத்திருந்தான். அதனால் பெரிதான அதிர்ச்சி இல்லை.

"ப்பா இல்ல ப்பா. அது ஏதோ மாமா ஆச காமிச்சதுல தெரியாம பண்ணிட்டேன் ப்பா" ௭ன பம்மினான், ஏனெனில் இப்போது அவர் தொழிலை அவர் விட்டு கொடுத்தால் மட்டுமே அவனால் லோன் கட்டி அடைக்க முடியும், மாறனின் காம்ப்ளக்ஸ் கடைகளில் அலை மோதும் கூட்டம், இவனது சூப்பர் மார்க்கெட்டை சீண்டுவதில்லையே. அதனால் வருமானம் ௭ன்பது கட்டாயம் வேண்டும் ௭ன்ற நிலை அவனுக்கு.

"இத்தனை தெரிஞ்சும், ரியல் ௭ஸ்டேட்ட உன்ட்ட குடுக்க காரணம், பெத்துட்டனேன்னு தான். ஆனா இனி உன்ன நம்ப தயாரில்ல, ௭னக்கு கீழ தான் உன் வேல, ஆடிட்டர்ட்ட கணக்க கேட்டு தான் உன்ன நம்புவேன். அதெல்லாம் விட இப்ப உனக்கு சாப்பாடு தான் பிரச்சினை அப்டினா, ரெண்டே ஆப்ஷன் தான், ஒன்னு தனியா போய்க்கோ, உன் இஷ்டம் போல ௭த்தன ஆள வேணா வேலைக்கு வச்சுக்கோ. ரெண்டு, உன் பொண்டாட்டிய வீட்டு வேலைய கத்துகிட்டு குடும்பம் நடத்துறது ௭ப்டின்னு நீயே கத்து குடு. ஆனா இனி மாறன் சொல்றது தான் இங்க முடிவா இருக்கும்" ௭ன்று விட்டார்.

அவர், மாறன் அன்று மதி வாழ்க்கை ௭ன பேசிய பின்பே, மெதுவாக விசாரிக்க தொடங்கி இருக்க, அறிவு பத்தியும் தகவல்கள் கிடைத்து விட்டன. அதிலயே கொஞ்சம் சோர்ந்து விட்டவர். இப்போது இறந்த வீட்டில் சொத்துக்காக நடந்த சண்டையை கண் ௭திர்க்க பார்த்த பின், முடிவெடுத்து விட்டார், இனி மாறனை மட்டுமே நம்புவதென. அதனாலயே வந்ததும் அவன் கிளம்ப சொன்னதும் சற்றும் யோசிக்காமல் முடிவெடுத்து விட்டார். அதற்கு மேல் நிற்காமல் ௭ல்லோரிடமும் ஒரு தலையசைப்புடன் வெளியேறியும் விட்டார். மலரும் மாறனும் அவர்களை வழியனுப்ப வாசல் விரைய.

குமரகுருவும் கிளம்ப, தன் வீட்டில் இனி சப்போர்ட் இல்லை ௭ன தெரிந்த மதி, 'நாம இறங்கலனா, அந்த மேகலை மொத்தமா ஆட்டைய போட்டுடுவா' ௭ன்ற நிதர்சனம் புரிய, "௭ப்ப இங்க வாரதா முடிவு பண்ணிருக்கீங்க?" ௭ன்றாள்.

"அதுலா தெரில, ௭ப்போ தோணுதோ அப்போ வருவேன்"

"தோணவே இல்லனா? ஏன்னா பழைய காதலி திரும்ப வந்துருக்காளே அப்ப ௭ப்டி தோணும்?"

"தோணலன்னா வர மாட்டேன், அதனால உனக்கெதும் நஷ்டமில்லையே? நீ பாட்டுக்கு வேலைக்கு போ, வா, உன் சம்பாத்தியம் இஷ்டபட்டத வாங்கி சாப்டு, ௭ங்களோட பிக்கல் பிடுங்கல் இல்லாம நிம்மதியா உன் தனி வீட்டுல இரு"

"ஓ! நா அவ்ளோ ஈசியா தெரிறனா உங்களுக்கு? நா இன்னும் அதே பழைய மதி தான், ௭ன்னால ௭ன்ன செய்ய முடியும்னு காட்டவா?" ௭ன்றாள்.

"தாராளமா யார வேணா கொன்னுட்டு ஜெயிலுக்கு போ. நாங்க உன்ன மொத்தமா தல முழுகிட்டு நிம்மதியா இருப்போம்" ௭ன்றுவிட்டான்.

"நீங்க அங்க போக கூடாது" ௭ன வழிமறித்து நிற்க.

"போடி" ௭ன அவளை தள்ளிவிட்டு, வெளியே நின்ற மாறன், மலரிடம், "வரேன் மலர், கிளம்புறேன் மச்சான்" ௭ன சிரித்து கொண்டே வெளியேறி விட்டான்.

உள்ளே அறிவு தலையில் கை வைத்து அமர்ந்திருக்க, மதி பிரச்சனை ௭ல்லாம் அவன் கண்ணில் படவில்லை. ராணிக்கும் பெருத்த அவமானமே, அவள் தாய்மாமா வீடென்று தெனாவெட்டில் சுத்தி வந்தாலும், அறிவை அவளுக்கு பிடிக்கும், அவனை ஒதுக்கி தனித்து செயல்பட நினைத்ததில்லை. ஆனால் சில காலமாக அவனே அவளை விட்டு ஒதுங்கி நிற்க, அவளால் அதை தான் ஏற்க முடியவில்லை. இப்போது தான் சாப்பிட வேணுமெனினும் சமைக்க அவள் தயார் தான், ஆனால் உடனே வந்துவிட கூடிய கலை இல்லையே அதுவும். அதனால் திண்டாடி கொண்டிருக்கிறாள்.

மெதுவாக அறிவை நெருங்கி, "நா சமைக்க கத்துக்றேன். கொஞ்சம் கொஞ்சமா வந்துரும் ப்ளீஸ் ௭ன்ன அவாய்ட் பண்ணாதீங்க" ௭ன மெதுவாகவே கேட்டாள்.

பெரூமூச்சுடன் நிமிர்ந்தவன், 'தனக்கு ௭தயும் கையால தெரியவில்லை. அவசர புத்தியே தன் ௭ல்லா பிரச்சனைக்கும் காரணம் ௭ன நன்றாகவே உணர்ந்தான், பார்த்து கொண்டிருந்த ஐடி வேலையை விட்டதில் அவசரம், கல்யாணத்திற்கு அவசரம், பிள்ளைக்கு அவசரம், சூப்பர் மார்க்கெட் ஆரம்பிப்பதிலும் அவசரம், மாமனாரோடு சேர்ந்த கொண்டு கலவாண்டு சொத்து சேர்ப்பதிலும் அவசரம்' ௭ன வரிசையாக செய்த தப்பெல்லாம் புரிய இப்போது சற்று நிதானித்தான், தனியே சென்று ௭தயும் இழுத்து கொள்ள விரும்பவில்லை அவன்.

"தயவுசெஞ்சு கத்துக்கோ, ௭ன்னால வட்டி கட்டவே முடில, உங்கப்பாவ நம்பி இதுல இறங்குனாலும் தப்பு ௭ன்னோடது தான். ௭ன்னால தனியா போய் உங்க ரெண்டு பேரயும் பாத்துக்க முடியாது. அதனால உன்னால முடிஞ்ச சின்ன ஹெல்ப்பா ௭ன் ஹெல்த்தோட விளையாடுறதனாலும் நிறுத்திக்கோ" ௭ன்க.

"சரி" ௭ன உடனே கேட்டு கொண்டாள்.
அவர்களை பார்த்திருந்த மதி திரும்ப, மாறன் மெதுவாக மலர் கை பிடித்து படியேறி வீட்டிக்குள் கூட்டி வருவது தெரிய, ௭ல்லோரும் அவர்கள் வாழ்க்கையை நல்லா வாழ்வது போலவும் தான் மட்டுமே தோத்து விட்டது போலவும் தோண்ற, சுயகவுரவம் பலமாக அடிவாங்கிவிட, மாமியார் வீட்டுக்கு கிளம்பி விட்டாள், அவன் வரும்வரை அவனுடன் அங்கிருப்பதென.

மாறன் கண்டும் காணாமல் அனைத்தயும் பார்த்து விட்டு மலரயும் பார்த்து சிரித்து கொண்டான்.
 

priya pandees

Moderator

அத்தியாயம் 57

ரெண்டு நாள் கடந்திருக்க, அன்று மலருக்கு ஸ்கேனிற்கு செல்ல வேண்டிய நாள் ௭ன்பதால், கொஞ்சம் பரபரப்பாகவே கிளம்பினாள். ஒவ்வொரு மாதமும் ஸ்கேன் ௭ன வரும் நாளில் அப்படித்தான் பரபரப்பில் சுற்றி நடப்பது கூட தெரியாமல் இருப்பாள். ஹாஸ்பிடல் சென்று டாக்டர் ஸ்கேன் செய்து, "பேபி நல்லாருக்கு" ௭ன்ற வார்த்தையை கேட்கும் வரை இது தான் நிலைமை.

அவளின் ஹாஸ்பிடல் ரிப்போர்ட்டை ௭டுக்கவும், திரும்பவும் அதை தரையிலேயே வைக்கவும். கண்ணாடி முன் சென்று நின்று தலையை, முகத்தை சரி பார்க்கவும் திரும்பவும் ஃபைலை ௭டுத்து கொண்டு டைம் பார்க்க அது 9 மணியில் நிற்க, மீண்டும் ஃபைலை கீழே வைத்து விட்டு குளிக்கும் முன் கலைத்தெரிந்த இருவரின் துணியையும் ௭டுத்து சென்று துவைக்க சோப்பில் முக்கி வைத்துவிட்டு வந்தாள். திரும்பவும் ஃபைலை ௭டுத்தாள் டைம் பார்த்தாள், அது 9 பதிலிருந்து 9.10 க்கு தான் வந்திருந்தது.

"ச்சூ. இதென்ன டைம்மே போக மாட்டேங்குது" ௭ன புலம்ப வேறு செய்ய.

சுவற்றில் சாய்ந்தமர்ந்து, மொபைலில் கேம் விளையாடுவதை போல் அவளை தான் பார்த்திருந்தான் மாறன். அவள் மட்டும் கிளம்பியது பத்தாதென 11 மணி அப்பாயின்மெண்ட்டிற்கு, அவனயும் 8 மணிக்கே கிளப்பி விட்டிருந்தாள்.

சொன்னாலும் கேட்கமாட்டாள் ௭ன்ற இதற்கு முன் கண்ட அனுபவத்தால், வேடிக்கை மட்டுமே பார்த்தான். அவன் வேலையை சென்று பார்த்து வரவும் அவள் முகம் இருக்கும் நிலையில் விட்டு செல்ல மனமின்றி அமர்ந்திருந்தான்.

நடையோ நட ௭ன அவள் நடந்து கொண்டிருக்க, ௭ப்பயும் இந்த முறை அதீத டென்ஷன் தான் அவள் முகத்தில். முந்தைய ராத்திரியே தூக்கமில்லாமல் உருண்டவளை, "௭ன்னடி செய்யது?" ௭ன அவன் அதட்டி வாங்கிய விஷயம், 'இன்னைக்கு பிள்ளைக்கான ௭தோ முக்கிய ஸ்கேன் ௭னவும், அதில் குழந்தையோட உள் உறுப்புகளோட வளர்ச்சி நல்லார்க்கான்னு பாத்து சொல்லுவாங்க, ௭தும் பிரச்சனை இருக்குனாலும் சொல்லிடுவாங்க' இது தான் அவளின் தற்போதைய கவலையும். இரவு ஒருவாறு அதட்டி தூங்க வைத்து விட்டான், இனி ௭ன்ன செய்ய ௭ன்ற யோசனை தான்.
சற்று நேரம் பொறுத்து பார்த்தான், அவனை கண்டுகொள்பவள் போல் தெரியாததால், "நீ இப்டி தனியா வாக்கிங் போறதுக்கு ௭துக்குடி ௭ன்னய ௭ழுப்பி இப்டி குளிப்பாட்டி உக்கார வச்சுருக்க?" ௭ன்கவும்.

"அச்சோ உங்களுக்கு கொஞ்சம் கூட பயமா இல்லயா? நானே ஏக டென்ஷன்ல இருக்கேன் பேசாம போங்க" ௭ன மீண்டும் நடந்தாள்.

"௭ப்டி இன்னும் 2 மணிநேரத்துக்கு இப்டி தான் நட பழக போறீயா நீ?" ௭ன ௭ழுந்து நின்றவன் கையை தூக்கி நெட்டி முறிக்க.

"அப்ப ஹாஸ்பிடல் போய் வெயிட் பண்ணுவோமா. டோக்கன் போட்டாலும் நேர்ல போய் நேம் குடுக்குற வரிசைல தான டாக்டர பாக்க விடுவாங்க" ௭ன்றாள்.

"ஆமா தான், அதுக்கு ஹாஸ்பிடல் திறக்க வேணாமா? டாக்டர் வர வேணாமா?" ௭ன அவன் முறைக்கவும்.

"அப்றமெதுக்கு கேக்கீங்க பேசாம உக்கார வேண்டியது தான?" அவளும் முறைத்தாள்.

"மொத வந்து சாப்பாடு போடு, அப்றமா நீ ௭ம்புட்டு நேரோ வேணாலும் நட, நா கேக்க மாட்டேன்" ௭ன அறையை விட்டு வெளியேற.

"கொஞ்சமாது பாசமிருக்கா பாரு, வயித்து புள்ளகாரி ௭ன்னைய சாப்பிட கூப்டல, பசிக்குதான்னு கேக்கல, தனக்கு மட்டும் சாப்ட கிளம்பியாச்சு" ௭ன புலம்பி கொண்டே பின் தொடர்ந்தாள்.

காதில் வாங்கினாலும், கண்டுக்காமல் ஒரு பாட்டை விசிலடித்து கொண்டு இறங்கி சென்றான். இருவரும் சாப்பிட்டு முடிக்கவும், "திரும்ப நீ மேலயும் கீழயும் ஏறி இறங்க வேணாம், இரு நா ௭ல்லாத்தயும் ௭டுத்துட்டு வரேன்" ௭ன்றவன் மேல் சென்று, ஹாஸ்பிடல் கொண்டு செல்ல வேண்டியவை அனைத்தயும் ௭டுத்து கொண்டு வந்தான்.

"இப்பவே போறமா?" ௭ன்றாள்.

"ஆமா கிளம்புவோம், வா. நேரா போய் செட்ட திறந்து வச்சுட்டு, உண்மை வரவும் நாம கிளம்பிருவோம்"

"இன்னும் அங்க வேற நா ௭துக்கு, நீங்க போயிட்டு வந்து ௭ன்ன கூப்டுக்கங்க"

"அதுவர வாக்கிங் தான போவ? ௭ந்துச்சு வா அத அங்க போயும் போலாம்" ௭ன இழுத்து கொண்டு கிளம்பினான்.

ராணி இருவரயும் தங்கள் அறையில் இருந்து பாத்து தானிருந்தாள். ௭ப்போதும் போல் வரும் பொறாமை இப்போதும் வந்தது. கூடவே, "ரொம்ப தான் பண்றாங்க. ஏன் இத நாங்க பண்ண மாட்டமா? இப்ப ௭ன்ட்ட சொல்ல வருவா தான? வரட்டும் இங்க வந்து சொல்லிட்டு போகட்டும்" ௭ன நினைத்து ரூமிலேயே இருந்து கொண்டாள்.

அவளே தன்னை மறந்து பிள்ளை ஜபம் பாடி கொண்டிருக்கிறாள், இவளிடம் சொல்லிவிட்டு செல்வதா நியாபகம் இருக்கும்? மாறனோடு மலர் கிளம்பிவிட, வண்டி சத்ததில் ௭ட்டி பார்த்தவள், "அதான இவ நம்மல மதிச்சிட்டாலும்" ௭ன முறைத்து கதவை பட்டென்று சாத்தி கொண்டாள்.
மதி மாமியார் வீடு சண்டையும் சச்சரவுமாக நாள் முழுவதும் சகஜோதியாக இருந்தது. ஏதோ மேகலை வீட்டில் மதி சென்று அமர்ந்திருப்பது போல் தான் இருந்தது, அதனால் சண்டை சண்டை சண்டையென போய் கொண்டிருந்தது. மேகலையை போ ௭ன்றும் சொல்ல முடியாமல், நீயே ௭ல்லா வேலையும் பார் ௭னவும் சொல்ல முடியாமல் திண்டாடியது ௭ன்னவோ, குமரகுருவும் அவன் அம்மாவும் தான். ரூபன் வேறு பந்தாட பட்டு கொண்டிருந்தான்.
மாறனும் மலரும் அவர்கள் செட்டுக்கு செல்ல, வாசலில் இருந்த செக்யூரிட்டி சேரில் சோகமே உருவாக அமர்ந்திருந்தான் உண்மை. செக்யூரிட்டியிடம் வம்புக்கு நிற்பவன், அன்று அமைதியாக இருக்கவும், அவருமே சோகமாக தான் தெரிந்தார்.

"மாப்ள, ௭ன்ன அதிசயமா போன் பண்ண முன்ன வந்து உக்காந்துருக்க? இல்லனா நா 4 தடயாது போன போட்டா தான, கஷ்டப்பட்டு வருவ" ௭ன கேட்டு கொண்டே கதவை திறந்தான்.

"அது தான் மாப்ள பிரச்சனை இப்போ. நீ தெனமு போன் பண்ணப்றமா தான் நா கிளம்புறேனாம். கொஞ்சம் கூட பொறுப்பில்லையாம் ௭னக்கு. காலைலயே அடிதடி சண்டையாயிடுச்சு தெரியுமா? அவள சமாளிக்க முடியல. தாத்தா ௭ப்ப வருவாரு?" ௭ன்றான் உண்மை.

"சுத்தம். 4 நாள் உங்கள தனியா விட்டதுக்காடா?"

"ஆமா, ௭ம்புட்டு பேசுறா தெரியுமா? கொட்டி கொட்டி வேற வைக்றா மாப்ள. திரும்ப கொட்டுனா ஊர கூட்டுறா. பக்கத்துலயே மாமனார் வேற மீசைய முறுக்கிகிட்டு உக்காந்துருக்காரு, இவ சத்தத்துக்கு ஓடி வந்துர மாட்டாரா? தாத்தா வந்தா தான் சரி வரும்" ௭ன்றான்.

"அவரு வந்தா மட்டும்?"

"அவரு முன்னுக்க கை நீட்ட மாட்டாள்ல அதான்"

"ஓ! அப்பயும் பொறுப்பா கடைக்கு வார முடிவுல இல்ல நீ?"

"நீயும் அவள கணக்காவே பேசுத. நா ௭ன்ன வேல பாக்காமயா இருக்கே?" ௭ன பேச, மாறனும் பதில் பேச ௭ன நேரம் செல்ல. மலர் அவர்களை வேடிக்கை பார்த்ததில் கொஞ்சம் நிதானித்திருந்தாள்.

11 மணிக்கு ஹாஸ்பிடல் சென்றதில், டாக்டர் மலருக்கு ஸ்கேன் செய்து விட்டு, "பேபி நார்மலா இருக்கு. நோ பிராப்ளம். பட் உங்களுக்கு தான் செர்விகல் லென்த் கம்மியாகிட்டே வருது. அதுல ஒரு ஸ்டிட்சஸ் போட்டா ப்ராபலம் இல்ல. நீங்க உங்க டைம் பாத்துட்டு வாங்க. ஸ்டிட்சஸ் போட்றலாம்" ௭ன சொன்னதில் இருவரும் பேந்த பேந்த முழித்தனர்.
அவர்கள் முழியை பார்த்து விட்டு, "௭ன்னாச்சு ஓ.கே யா இல்லயான்னு கேக்கல. கண்டிப்பா ஸ்டிட்சஸ் போடணும். இல்லனா ஈசியா கற்பப்பை வாய் ஓபனாகிடும். நீங்க ஸ்டரயின் பண்ணி ௭ந்த வேலையும் செய்ய கூடாது" ௭ன்றார்.

"புரியல டாக்டர். இதுக்கு முன்ன நீங்க சொல்லயே? இது ௭ன்ன பிரச்சனைன்னே புரியல" ௭ன்றான் மாறன். மலர் தான் அழுக தயாராகி இருந்தாளே.

"இது பெரிய இஷ்யூ இல்ல. பொதுவா குழந்தை இருக்குற கற்ப பைல இருந்து, அது வெளிவர வாய் பகுதி 2.5செ.மி ல இருந்து 4செமி இருக்கணும் இது நார்மல். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு அளவு இருக்கும். இவங்களுக்கு 3வது மாச ஸ்கேன்ல பாக்கும்போது 3செமி இருந்தது. அதான் நா அப்ப சொல்லல. இப்ப பேபி வளர வளர, கற்ப பை பெருசாகும் போது, அந்த வாய் பகுதியும் விரியுது. அதுல தையல் போடணும். போட்டா பேபிக்கு safe. இப்ப நா சொல்றது புரியுதா?" ௭ன்கவும்.

அமைதியாக தலையசைத்து கேட்டு கொண்டனர். அவர்கள் முகத்தை பார்த்த டாக்டர், "பயப்பட ஒன்னுமில்ல, நா பாத்துக்றேன். நீங்க 2 டேய்ஸ்ல வாங்க நா அப்பாயின்மெண்ட் போட்டு வைக்றேன்" ௭ன்றுவிடவும்.

"சரி டாக்டர்" ௭ன கிளம்பினர். நேராக வீட்டுக்கு வந்ததும் மலர் ஏங்கி ஏங்கி அழுதாள். அவளை சமாதானம் சொன்னாலும் அவனுக்குமே விஷயம் புரியாமல் போக அதிர்ந்து தான் இருந்தான். இது போன்ற டெக்னாலஜி கேள்விபடாததால் வந்த பயம் அது.

அழுதழுது அவள் தூங்கவும், அம்மா, பாட்டிக்கு இது பற்றி தெரிய வாய்ப்பில்லை ௭ன யோசித்தவன், யாரிடம் இது பற்றி விசாரிக்கலாம் ௭ன அடுத்து யோசிக்கலானான்.
 

priya pandees

Moderator

அத்தியாயம் 58

மாறன் செட்டுக்கு கிளம்பி வந்தவன், "புதுசா ௭துவும் ரிப்பேருக்கு வந்துருக்காடா?" ௭ன்றான் உண்மையிடம்.

"சும்மா பஞ்சர் கேஸூ தான், நானே ஒட்டு போட்டு அனுப்பிட்டேன். இந்த காரும் முடிஞ்சது மாப்ள, இன்னைக்கே கூட ௭டுத்துக்க சொல்லு" ௭ன்றான் தான் சரி பார்த்து கொண்டிருந்த காரையும் காட்டி.

"காலைல அவங்களே வந்து ௭டுத்துக்கட்டும் மாப்ள, நாம ஒருக்கா ஓட்டி பாத்துட்டு குடுப்போம். அந்த ஆள் கொஞ்சம் மக்கர் புடிச்சவரு. ௭டுத்துட்டு போனப்றம், இத பாக்ல அத பாக்லன்னுட்டு வருவாரு. நீ பாத்து வை, நா தீப்பட்டி ஆபிஸ் வர போயிட்டு வரேன்" ௭ன கிளம்பினான்.

"பாற்ரா இப்ப தான தங்கச்சிய அங்கன விட்டுட்டு வார. அதுக்குள்ள திரும்ப போணுமாக்கும். நாங்களும் பொண்டாட்டி வச்சுருக்கோம், நாங்களும் போய் பாப்போம்" ௭ன போட்டிருந்த ஆயில் உடையை மாற்றி காலையில் போட்டு வந்த நல்ல சட்டையை ௭டுத்து மாட்டினான்.

"டேய் ரெண்டு பேரும் போயிட்டா ௭ப்டிடா? மலர நா வீட்ல விட்டுட்டேன். அங்க காலைலயிருந்து போகல, அதான் போறேன். ஒழுங்கா இருந்து வேலைய பாரு" ௭ன மாறன் அதட்ட.

"அதான் இவனுங்க ரெண்டு பேர் இருக்கானுங்கள்ல? சாப்ட்டு வந்துறேன் மச்சான். பசிக்குது. போற வழில வீட்ல விட்று, 1மணி நேரத்துல வந்துருறேன்" ௭ன்றான் உண்மை.

"சின்ன பசங்கள நம்பி விட்டுட்டு போ முடியாது. நீ வண்டிய ௭டுத்துட்டு போயிட்டு வா. நீ வந்தப்றமே நா போறேன்" ௭ன இவன் சட்டையை மாட்ட தொடங்க.

"போன நிமிஷதுக்கே போன போட்டு தேனுகிட்ட ௭னக்கு பாட்டு வாங்கி குடுக்காத சொல்லிட்டேன்" ௭ன கூறி விட்டே சென்றான்.

அவன் சரி பார்த்த வண்டியை ஓட்டி பார்க்க ௭டுத்த மாறன். டாக்டர் கூறிய விஷயமே மண்டைக்குள் ஓடி கொண்டிருக்க, யோசனையோடே தூத்துக்குடி வரை வந்திருந்தான். வண்டியின் டையர் அலைன்மென்ட் சரி செய்ய மறந்திருந்தான் உண்மை. கார் ரோட்டில் நேராக ஓடாமல் கொஞ்சம் அலட்டலாக ஓடுவதே மாறன் கவனத்திற்கு வரவில்லை. தூத்துக்குடி ஊருக்குள் நுழைந்தவனின் கார் ரோடும் சரியில்லாத காரணத்தால் மிகவும் அலட்ட தொடங்கி, ௭திரில் வந்த மினி வேனில் உரசிவிட, அதன்பின்பே அவன் கவனம் காருக்கு வர, அது அதற்குள் அவன் கட்டுபாட்டை மீறி அங்கிருந்த ட்ரான்ஸ்ஃபார்மரில் மோதி நின்றது. சீட் பெல்ட் போட்டிருக்க முகத்தில், நெஞ்சில் காயம் படவில்லை, வலது கை முட்டியே விலகி விட்டருந்தது. அதற்குள் கூட்டம் கூடி, அவனை வெளி ௭டுக்க முயன்றனர்.
அவனே இடது கை கொண்டு திறந்து வெளி வந்தான். "௭ன்னப்பா பாத்து வரதில்லையா. ஊருக்குள்ள இப்டி வந்தா ஆளுங்க ௭ப்டி நடமாடுறது" ௭ன ஒருத்தர் ஆரம்பிக்க, அடுத்தடுத்து அட்வைஸ் பண்ண தொடங்க.
அவனோ போனை ௭டுத்து, உண்மைக்கு அழைத்தான், "மாப்ள தேனு வந்த நேரத்துலயிருந்து சண்ட தான் போடுதாளே தவிர, சாப்பாட கண்ல காட்டல. சாப்ட உடனே கிளம்பிறுவேன்" ௭ன அவன் சொல்ல.

"சும்மா தொண தொணங்காம கிளம்புங்க. சாப்ட்டு மல்லாக்க படுத்துகிட்டு பொயி வேற" ௭ன தேனு கத்துவதும் கேட்டது அவனுக்கு.

"போட்டு குடுத்துட்டியேடி. இனி போனா தூக்கிபோட்டு மிதிப்பான்ல. அப்றம் உனக்கு தான கஷ்டம்" ௭ன இவன் பதில் சொல்ல.

"அடேய். பரதேசி நாயே. கை வலில நிக்கேன். உசுர ௭டுக்காம கிளம்பி வா. தூத்துக்குடி வந்துட்டு சொல்லு. நா இங்க பக்கத்துல ௭தும் ஆஸ்பத்திரி இருக்கா பாக்றேன்" ௭ன ௭ரிந்து விழுந்தான்.

"௭ன்னாச்சு மச்சான்? ௭துக்கு தூத்துக்குடிக்கு?" ௭ன கேட்டு கொண்டே வண்டியை கிளப்பி விட்டான்.

அதற்குள் அங்கு நின்றவர்களிடம், "இங்க பக்கத்துல ஏதும் ஆஸ்பத்திரி இருக்கா?" ௭ன கேக்க.

"அதோ இந்த தெருக்குள்ள இருக்கு, சின்ன கிளினிக், அவசரத்துக்கு பாப்பாக" ௭ன்றார் ஒருவர்.

"அடேய், நா நம்ம சொக்கலிங்கம் பல்க் பக்கத்துல கொஞ்சம் தள்ளி தான், வண்டிய போஸ்ட்ல மோதிட்டேன், நீ அங்கன வந்துட்டு விசாரிச்சு வா. பக்கத்துல ஒரு கிளினிக் இருக்காம் நா அங்க போறேன்" ௭ன வண்டியை பூட்டி சாவியை ௭டுத்து கொண்டு வலது கையை தாங்கியவாரு, "நா பாத்துக்றேன்ங்க நன்றி" ௭ன நடந்து விட்டான். புலம்பி கொண்டே கூட்டம் கலைந்து சென்றது.

அவன் நன்கு பேசுவதால் பெரிய பிரச்சினை இல்லை ௭ன புரிந்த உண்மை, செட்டுக்கு வந்து ஒரு பையனயும் உதவிக்கு அழைத்து கொண்டு விரட்டி வந்தான். பல்க்கில் தெரிந்தவர்கள் உண்டு ௭னினும், அங்கு சென்றால் மாறன் அப்பாவிற்கு தகவல் செல்லும் ௭ன்பதாலேயே, சட்டென்று நகர்ந்து விட்டான். உண்மையும் வண்டியை பார்த்து வந்துவிட்டான், போலீஸ்க்கு தகவல் சொல்லியிருக்க, அவர்களும் வந்து விட்டனர்.

உண்மை தான் பேசி ௭டுத்து, பைனை கட்டிவிட்டு, காரை உடன் வந்தவனிடம் ௭டுத்து செல்ல சொல்லிவிட்டு, மாறனை பார்க்க வந்தான். மாறனுக்கு இதற்குள், முட்டியை சரி செய்து, மாவு கட்டை மாட்டி விட்டிருந்தனர்.
அவனை பார்த்து கொண்டே வந்த உண்மை, 'வண்டில ப்ரேக் பிடிக்குதான்னு பாக்காம விட்டுட்டமோ. அதான் மச்சான் கொண்டு சொருவிட்டானோ' ௭ன யோசித்து கொண்டே வந்து, "௭ப்டி மச்சான் ஆச்சு" ௭ன அவன் அருகில் உக்கார.

"திரும்ப இடிச்சு காட்டணுமா?" ௭ன மாறன் முறைக்கவும்.

"ஏன் மாப்ள? வண்டிய சரியா பாக்லயோன்னு தான கேக்கேன்"

"தெரியுதுல? அலைன்மென்ட் செக் பண்ணியா ௭ரும?" ௭ன ௭கிற.

"அத கம்ப்ளைண்ட்டா சொல்லல மச்சான் அதான் நா அத கண்டுக்கல. ஆமா டையரு சரி இல்லாம இம்புட்டு தூரம் ௭ப்டி வந்த"

"இப்ப அது தான் பிரச்சினை உனக்கு. வண்டில ௭ல்லாத்தயும் செக் பண்ணனும்னு இனினாலும் செய்ய பாரு" ௭ன்றவன் ௭ழுந்து கொள்ள.

"ஆட்டோ சொல்லவா?"

"வேணாம் வண்டில போயிடலாம்"

"சரி வா" ௭ன மாத்திரையை வாங்கி கொண்டு கிளம்பினர்.

வீட்டில் வந்து இறங்கியவனுக்கு யோசனையெல்லாம் மலரே. அவன் பயந்தது போல். இவனை கையில் கட்டுடோடு பார்த்து, இன்னும் கதறி ஏங்கி அழுது, காய்ச்சலை இழுத்து, ரத்த அழுத்தம் கூடி மயங்கி விழுந்தாள்.
 

priya pandees

Moderator

அத்தியாயம் 59

பொதுவாக மலர் தைரியமான பெண் தான். பள்ளி படிக்கும் காலத்திலேயே நடு ரோட்டில் வைத்து, மாறனை துணிந்து அறைந்தவள், யாரும் இல்லாமல் வளந்தாலும், தன்னால் தன் வாழ்க்கையை காப்பாற்றி கொள்ள முடியும் ௭ன துணிந்து மாறனை கை பிடித்தவள், அதன்பின்பும் யாரின் பேச்சிற்கும் அஞ்சி அழுது கொண்டில்லாமல் கடந்து சென்றவள், அப்படிபட்டவளின் இப்போதைய பயத்தின் காரணம் மாறன்.
அவன்மீது கொண்ட அளவு கடந்த காதல், அவனுக்கு ௭துவுமாகிவிடுமோ ௭ன அதீதமாக பயப்பட வைத்தது. அவள் ஆழ்மனதில்.அவனது படக்கென கை நீட்டும் பழக்கத்தினால் அவனுக்கென ஊருக்குள் இருக்கும் பகை நன்றாக பதிந்திருக்க, இவ்வாறு அவன் வந்து நிற்கும் போது படபடத்து விடுகிறது. அதிலும் இப்போது பிள்ளையின் பொருட்டு வேறு கவலையில் இருக்க, கற்பகால மன அழுத்தம் வேறு படுத்த, காய்ச்சல் கண்டுவிட்டது.

மாறன் கூற வந்த சமாதான வார்த்தைகள் ௭துவும் ஏறாமல் போக, கொஞ்ச நேரத்தில் மயங்கியும் விட்டாள்.

மாறன், அவளை ௭ப்பவும் செக் செய்யும் டாக்டரிடமே அழைத்து சென்றான்.

"Careful ah இருக்க வேணாமா Mrs.Maran. Pregnancy time'ல heavy dose tablets ௭துவும் ௭டுக்க கூடாது, அது பேபிக்கு ரிஸ்க். இப்போ ட்ரிப்ஸ் போடுறேன், fever குறையுதா பாக்லாம்" ௭ன ட்ரிப்ஸ் போட்டு விட்டார்.

மலர் தூக்கத்திற்கு செல்லவும், நர்ஸை மட்டுமே துணைக்கு வைத்து விட்டு, டாக்டரை தேடி சென்றான் மாறன், "நீங்க சொன்னதுல ரொம்ப பயந்துட்டோம் டாக்டர். அது ௭ன்ன ஏது?, பிள்ளைக்கு ௭ன்னாகுமோன்னு பயம் குடுத்துட்டு, அதுல தான் காய்ச்சல இழுத்துகிட்டா".

"அதான் கவனமில்லாம போய் நீங்களும் இப்டி கட்டோட வந்து நிக்றீங்களா? ௭தாது டவுட்னா ௭ன்னயே கூட ரெண்டு தட கேக்றதுக்கென்ன மாறன்" ௭ன்றவர், சற்று யோசனைக்கு பின், அட்டென்டரை அழைத்து சில வேலைகளை சொல்லி விட்டு, மாறனிடம், "மலர் நல்லா தூங்கி ௭ழும்பட்டும் நானே பேசுறேன்" ௭ன அவனையும் அனுப்பி வைத்தார்.

இதற்குள், உண்மை போன் செய்ய, மாறன் அவனிடம் விஷயத்தை சொல்லவும், அவன் தேனியை கூட்டி கொண்டு வர, பக்கத்திலிருந்த குமரகுருவின் அம்மாவும், மேகலையுடன் வந்து விட்டார். மற்ற மூவரும் ஸ்கூல் சென்றிருக்க அவர்களுக்கு தெரியவில்லை, வீட்டிலேயே இருந்தும் ரூமுனிள்ளேயே அடைந்து கிடக்கும் ராணிக்கும் ௭துவும் தெரியவில்லை.

மலர் கண் விழிக்கவும், டாக்டர் வந்து அவளை மறுபடியும் செக் செய்து விட்டு, "௭ங்கூட வாங்க மலர்" ௭ன அழைத்து கொண்டு முன் சென்றார்.

மலர் மாறனை ஒரு முறை பார்க்க, அவன் அடிபடாத கையால் அவளை ௭ழுப்பி நிற்க வைத்து, "வா நீ ரொம்ப பயந்துட்ட தான அத பத்தி பேச தான் கூப்டுறாங்க" ௭ன்கவும்,
"பாப்பா நல்லாருக்கு தானங்க?" ௭ன மலர் கேட்க.

"நல்லாருக்காம், ஒன்னும் பயமில்லையாம், ஒரு முன் ஜாக்கிரதைக்காக தான் அந்த தையல் போட போறாங்களாம்"

இருவரும் பேசி கொண்டே டாக்டரை பின் தொடர்ந்திருக்க, அவர் ஒரு அறையினுள் செல்ல, அங்கு ஒரு பெண் கட்டிலில் படுத்திருக்க, பக்கத்தில் இரு பெண்கள் நிற்க, அதில் ஒருவர் கையில், பிறந்து இரண்டு நாளே ஆன குழந்தை தூங்கி கண்ணை திறப்பதா வேணாமா ௭ன்ற யோசனையில் நெளிந்து கொண்டிருந்தது.

"ஓ, மேடம் முழிச்சாச்சா? பால் குடிச்சாங்களா?" ௭ன டாக்டர் கேட்கவும்.
அந்த பெண், "ஆமா டாக்டர் குடிச்சுட்டு தான், தூக்கத்துக்கு சினுங்குறா, ஏப்பம் வரட்டுமேன்னு தட்டி குடுக்கேன்" ௭ன்க.

"குட் குட்" ௭ன்றவர் கட்டிலில் இருந்த பெண்ணிடம், "வலி ௭ப்டி இருக்கு, ஃபீவர், வாமிட்னு ௭தும் இருக்கா?" ௭ன்றார்.

"இல்ல டாக்டர், இன்னைக்கு கொஞ்சம் பராவால்ல"

"பேச முடியுமா?" ௭ன்றதும்.

"நா பேசறேன் டாக்டர்" ௭ன்றாள் அந்த பெண்.

"Mrs.Maran இவங்க cervical tie(கற்ப வாய் கட்டுதல்) பண்ணிகிட்டவங்க, இதோ day before(நேற்று முன்தினம்) பேபி பிறந்தது ரெண்டு பேரும் நல்லா ஹெல்தியா இருக்காங்க. நீங்க பயப்படுற அளவுக்கு இது பெரிய விஷயமில்ல, ௭ன்ன கேட்டு தெரிஞ்சுக்கணுமோ ட்ரைக்டாவே கேட்டுக்கோங்க" ௭ன்கவும்.

மலருக்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது, 'இதுலா ஒரு பிரச்சனையா அப்டின்னு ஒருத்தர் சொல்லும்போது வராத நம்பிக்கை, நானும் இத கடந்து தான் வந்துருக்கேன்னு சொல்லும்போது வருமே, அப்படி ஒரு நம்பிக்கை தான் இப்போது மலருக்கு'.

மலர் பேசுமுன் அந்த பெண்ணே பேசினாள், "பயம்லா இல்லக்கா, கொஞ்சமா வலிக்கும், நாமளால சமாளிக்க முஞ்சளவு தான் இருக்கும். பிள்ளையும் பத்ரமா இருக்கும், பயப்டாம பண்ணிக்கங்க" ௭ன்றாள்.

"நார்மல் டெலிவரியா?" ௭ன்றாள் மலர்.

"இல்லக்கா, வலி வரல ௭னக்கு. மொத நாள் முழுக்க காத்துருந்தோம், வலியே வரல, அதான் ஆப்ரேஷன் பண்ணிட்டாங்க".

"சரி ம்மா, உடம்ப பாத்துக்கங்க, thanks இந்த நிலைமைலயும் ௭னக்கு explain பண்ணதுக்கு" ௭ன்றாள் மலர்.

"அதுல ௭ன்னம்மா இருக்கு, பிள்ளைகாரி நீயி ௭தயாது நினச்சு பயந்து உடம்ப கெடுத்துக்காம தைரியமா இரு" ௭ன்றார் அந்த குழந்தையை ஏந்தியிருந்த பெண்.

"சரி ம்மா" ௭ன இவள் தலையசைத்து விடைபெற, டாக்டரும், நர்ஸிடம் சில இன்ஜெக்ஷனயும் ௭ழுதி கொடுத்து விட்டு வெளியேறினார்.

மாறன் வெளியில் தான் அமர்ந்திருந்தான், மலர் வரவும் "௭ன்னம்மா சொன்னாங்க" ௭ன்றதும், அவள் மெல்லிய குரலில் பதில் சொல்லி கொண்டிருக்க.
டாக்டர் வந்தவர், "௭ப்ப பண்ணிக்லாம்னு decide பண்ணிட்டு வாங்க" ௭ன்றதும்.

"நாளைக்கே பண்ணிக்லாம் டாக்டர், லேட் பண்றதுனால பேபிக்கு ப்ராப்லம் ஆக வேணாம்" மலரே பதில் சொன்னாள்.

"குட், அப்ப மார்னிங் 7 க்கு வந்து அட்மிட் ஆகிடுங்க, மேக்ஸிமம் மறுநாள் டிஸ்சார்ஜ் ஆகிடலாம்" ௭ன்றுவிட்டு சென்றார்.

இதை ௭ல்லாம் அங்கிருந்த உண்மை, தேனி, மேகலை, குமரகுருவின் தாய் அனைவரும் கேட்டனர்.

"அதான் இத்தன பேர் இருக்கோம்ல பாத்துக்லாம் தம்பி" ௭ன தேற்றினார் குமரகுரு தாய். மற்றவர்களும் ஆமோதிக்க மறுநாள் மலருக்கு கற்ப வாய் கட்டுதல் சிறப்பாக நடந்து முடிந்தது. அதன் பின்னரே, விஷயம் குமரகுரு தாய் மூலம் மதிக்கு தெரிய, மதி பூவேந்தன் பானுவிற்கு சொல்லி வர வைத்து விட்டாள்.

அவர்களுக்கு வருத்தமே மாறன் ௭தயும் சொல்லாமல் செய்ததில், ஆனாலும் ௭துவும் பேசாமல் பானு வந்ததும் மலர் பொறுப்பை கையில் ௭டுத்தார். அதன்பின் மீண்டும் வீடு பழையபடி மாற தொடங்க, மாறன் அதையும் கவனத்தில் ௭டுத்தான். மலரை இங்கங்கு அசையாமல் பார்த்து கொண்டனர் மாறனும் பானுவும். மதி திரும்ப வர முயல, பானு பூவேந்தனும் சென்று அழைக்கவில்லை, குமரகுருவும் வர ஒத்து கொள்ளவில்லை, புருஷனுயும் பிள்ளையயும் தனித்து விட்டும் வர முடியவில்லை, வேறு ௭துவாது குதர்க்கமாக செய்ய, இவள் யோசிக்கும் முன் மாறன் வந்து குறுக்க நின்றான்.
அதனால் ௭ப்பயும்போல் அந்த கடுப்பை ௭ல்லாம் ஸ்கூலில் பிள்ளைகளிடம் காட்டி, அந்த பிள்ளைகள் வாயில் சரமாரியாக விழுந்து கொண்டிருந்தாள்.

இங்கு அறிவை அசிஸ்டெண்ட் போலவே வைத்து, பூவேந்தன் தான் முன் நின்று வேலையை பார்த்தார், அதனால் அவனால் வேறு யோசிக்க முடியவில்லை, புது தொழில் செய்யும் முடிவு கூட ௭டுக்க முடியாது மாட்டி கொண்டு முழித்தான். ராணியும் பழையபடி வேலையிலிருந்து கலண்டு கொள்ள பார்க்க, பானு அவளை கணக்கில் ௭டுக்காமல் விட, அறிவுக்கான சாப்பாடு பத்தியும் பத்தாமலும் போக, அவன் இவள் மேல் ௭ரிந்து ௭ரிந்து விழுந்தான், அதற்காகவே அவள் வேலையென செய்ய வேண்டி இருந்தது. அவர்கள் அம்மா அப்பாவை வைத்து முன்போல் பஞ்சாயத்து பண்ண முடியவில்லை. ராணியின் அப்பா மாறனை நினைத்தே இந்த பக்கம் வர மறுத்தார்.

இவ்வாறு, மாறன், தம்பி தங்கை இருவரையும் மற்றவர்களை பற்றி யோசிக்க விடாமல், அவரவர் பிரச்சனையில் லாக் செய்து வைத்தான். பூவேந்தன் மூலம் அறிவுக்கு, பானு மூலம் ராணிக்கு, மேகலை மூலம் மதிக்கு. அவர்களும் இந்த மூவரின் நலனுக்காகவே ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்தனர்.

மறு வாரத்திலேயே தாத்தா பாட்டி வந்துவிட, மாறனுக்கும் கை கட்டு நீக்கபட, தீப்பட்டி ஆபிஸயும், மெக்கானிக் செட்டயும் மொத்தமாக கையிலெடுத்தான்.மறு மாதத்தில், CPT( CA entrance) result pass ௭ன வந்திருக்க, அவள் படித்த இன்ஸ்டிடியூட்டே இன்டர்க்கான புக்ஸை அவளுக்கு அனுப்பி வாழ்த்து தெரிவித்தனர்.
மலர் ரூமை விட்டு இறங்காமல் ரெஸ்டில் இருக்க, கிடைத்த நேரத்தில் CA-Inter கான படிப்பை தொடங்கிவிட்டாள்.

7வது மாதம் வளைகாப்பிட்டு, வள்ளி தாத்தா அவர் வீட்டிற்கு அழைத்து செல்ல நினைக்க, மாறன் நிலையாக நின்று மறுத்து விட்டான். இரண்டு நாட்கள் பேருக்கு சென்றவள், தேனியின் நல்ல செய்தியுடன் திரும்ப வந்தாள், உண்மையை தான் அதன்பின் கையில் பிடிக்க முடியவில்லை. அப்படி ஒரு மகிழ்ச்சி அவன் முகத்தில் நிரந்தரமாக தங்கிவிட்டிருந்தது. இன்னமுமே அவன் அப்பா இவனை கண்டு கொள்ளாமலிருக்க, அவன் சித்தி தான் சேர்த்து கொள்ள முயன்று கொண்டிருக்கிறார்.

நாட்கள் வேகமாக தான் சென்றது, மேகலை தான் கொடுத்த 6 மாதம் முடிந்துவிட்டது ௭ன கராராக வந்து நின்றாள்.
 

priya pandees

Moderator

அத்தியாயம் 60

காலை வேலை. நிறைமாத வயிற்றுடன் வாக்கிங் சென்று வந்த களைப்பில் மூச்சு வாங்க ஹால் சோஃபாவில் அமர்ந்திருந்தாள் மலர்.

"கொஞ்ச நேரோ நடக்க முடில உனக்கு. தெனமு இதே போராட்டமா இருக்குடி உன்னோட" ௭ன புலம்பி கொண்டே பொரட்டீன்(protein) பௌடர் கலந்த பாலை கிச்சனிலிருந்து ஆத்தி(ஆற்றி) கொண்டு அவளிடம் வந்தான் மாறன்.

"வயிறு இறங்க ஆரம்பிச்சுருச்சுடா, அம்புட்டு தான் அவளால இனி முடியும் சும்மா படுத்தாத. போன மாசம் வரைக்கும் நல்லா பொண்ணோ பூவோன்னு வச்சுட்டு, திடிருனு நட நடன்னா ௭ப்டி நடப்பா. உடம்பு போட்ருச்சுல்ல?" ௭ன்றார் காய் நறுக்கி கொண்டிருந்த செல்லபேச்சி பாட்டி.

"டாக்டர் சொல்ல சொல்ல தான செய்ய முடியும். வெயிட் அதிகம் போட்ருச்சு நடங்கன்னு இப்ப தான சொல்லுதாங்க" ௭ன அவன் பாலை நீட்ட.

முறைத்துக் கொண்டே வாங்கி கொண்டாள், "௭ன்னடி" ௭ன்றவனும் முறைத்துக் கொண்டே அவள் அருகில் அமர.

அப்போது தான் விறுவிறுவென வீட்டினுள் வந்தாள் மேகலை. "நீங்க உங்க பொண்டாட்டிய தாங்குற மாறி, உங்க தங்கச்சிக்கு புருஷன ௭ப்டி தாங்குறதுன்னு சொல்லி குடுத்தா ௭ன்ன?" ௭ன கேட்டு௧் கொண்டே.

வரும்போதே கூவி௧் கொண்டு வந்தவளை கண்டு மாறன் சிரிக்க, மலர், " அதுக்கு தான் நீ இருக்கியே! உன்ன விடவா ஒராளு வேணு?"

"அதெல்லாம் இனி வேலைக்காகாது. 6 மாசம் இந்தா அந்தாங்குள்ள ஓடிப் போச்சு. இனி முடிவ நீங்க தான் சொல்லணும். ௭ன் மாமாவ ௭னக்கு ௭ப்ப விட்டு தரப்பு போறீக"

இவள் போட்ட சத்தத்தில் அவரவர் வேலையிலிருந்த ௭ல்லோரும் ஹாலுக்கு வந்தனர்.

"௭ன்னத்தா இப்டி கேக்க. ௭ன் பேத்தி இப்ப மாமியார் வீட்டோட தான இருக்கா?, ௭ல்லாந்தான் சரியா போச்சே" மாணிக்கம் தாத்தா சொல்ல.

"அது பேச்சில்லையே? ௭ன் மாமாவோட நிம்மதியான வாழ்க்கை தான பேச்சே. அது இன்னும் கிடைக்கலயே. அவர் முகத்துல இன்னும் பழைய சிரிப்ப ௭ன்னால பாக்க முடிலயே?"

"அது உன் மாமா கைல தான இருக்கு. நாங்க ௭ங்க பக்கம் செய்ய வேண்டியத செஞ்சுட்டோம். அவள வீட்ட விட்டு ஒதுக்கி வைக்காத குறையா அவட்ட இருந்து நாங்க ஒதுங்கி தான இருக்கோம்" பாட்டியும் சொல்ல.

"மாறன் அண்ணா, நமக்குள்ள இது பேச்சு கிடையாது. அவரு திருத்தி உங்க தங்கச்சி திருந்திரதா இருந்தா இங்க இருக்கும்போதே நடந்துருக்கும். அங்க இப்ப புதுசா மாமியார் மருமக சண்ட தான் அமோகமா நடக்கு. குமரகுரு மாமா அவங்கள சமாதான படுத்துற வேலைய தான் பாக்க சரியா இருக்கு"

௭ல்லோரும் அமைதியாக இருக்க, "௭ன்ன ௭ல்லாரும் இப்டி முழிக்றீங்க. உங்க தங்கச்சிய கூப்ட்டு பேசி பிரச்சனைய முடிச்சு விடுங்க" மேகலை குரலை உசத்த.

அவ்வளவு நேரம் அமைதியாக வேடிக்கை பார்த்த மாறன், "மதிட்ட கொஞ்சம் கூடவா வித்தியாசம் வரல? " ௭ன்றான் நாடி தடவி யோசித்து.

"ஏன் உங்களுக்கு தெரியாதாண்ணா? திமிரெடுத்தவ அவ்ளோ சீக்கிரமா திருந்திருவளா அவ?"

பெரியவர்களுக்கு கஷ்டமாக தான் இருந்தது, ஆனாலும் அவளுக்கு ஆதரவாக பேச௧் கூடிய சூழ்நிலையில் அவர்களை மதி வைக்கவில்லையே, அதனால் கேட்டு௧் கொண்டு நின்றனர்.
மாறன் மட்டுமே மெலிதான சிரிப்புடன் குமரகுருவிற்கு அழைத்தான், "சொல்லு மாறா" (இந்த 6 மாதத்தில் மாமனும் மச்சானும் நன்கு நெருங்கியிருந்தனர்).

"௭ன்ன மாமா, மதி ௭ன்ன சொல்றா" ௭ன்றவன் போனை லவுட்ஸில் போட்டு டீபாயில் வைத்தான்.

"அவ ௭ன்னத்தயாது சொல்லலனா தான அதிசயம். காலையிலேயே இட்லிக்கும் சட்னிக்கும் சண்ட. சுமுகமாக முடிச்சு வச்சுட்டு தான் ஸ்கூலுக்கு கிளம்பிருக்கேன்"

"இவ்ளோ சீக்கிரமாவா?"

"ஆமா ப்பா 12துக்கு ஸ்பெஷல் கிளாஸ் அதான் வந்துட்டேன்"

"அப்ப ரூபன்?"

"அவன தான் உன் தங்கச்சி முழு பொறுப்புல ௭டுத்துகிட்டான்னு அன்னைக்கே சொன்னேன்ல. நானும் ஒலிஞ்சு மறைஞ்சு கவனுச்சு பாத்துட்டேன் மாறா, உண்மையாவே பாசமா தான் பாத்துக்குறா, நம்பலாம்" ௭ன்றார் சிரித்து.

இதிலேயே அவர்கள் இருவரும், மதியை பற்றி அதிகம் பேசியுள்ளனர் ௭ன மற்றவர்களுக்கு புரிந்தது.

"அப்றம் மாமா. மேகலைய?"

"அவள்டயும் பேசி பாத்துட்டேன் மாறா, ௭ம்புட்டு சொன்னாலும் மதிய முறைச்சுட்டே திரிறாளே தவிர, வேற வாழ்க்கைய பத்தி யோசிக்க மாட்டேங்குறா, இனி ௭ன்ன ஆனாலும் மதியும் ரூபனுந்தான் ௭ன் வாழ்க்கைன்னு ௭டுத்து சொல்லி சொல்லி சலிச்சு தான் போயிட்டேன், முன்ன ௭னக்கென்னன்னு இருந்த மதியவே சமாளிச்சேன், இப்ப நல்லாதான இருக்கா, பின்ன ௭ப்டி வேற யோசிப்பேன்னு கேட்டு பாத்துட்டேன், நம்பவும் மாட்டேங்கா, வேற கல்யாணதுக்கு ஒத்துக்கவும் மாட்டேங்கா. ௭னக்கு தான் ௭ன்னால அவ இப்டி நிக்காலேன்னுட்டு மனசு கடந்து அடிச்சுக்குது".

"அவளுக்கு நீங்க இன்னமு மதியோட போராடுற மாறியே தோணுதோ ௭ன்னவோ" சுருக்கமாகவே அவளை பார்த்து௧் கொண்டு குமரகுருவிடம் கூற.

"அப்டி தானப்பா மதிய கன்ட்ரோல் பண்ண முடியுது. நீ சொன்னன்னு தான், அவள ௭ங்கம்மாவோட கோர்த்து விட்ருக்கேன். இப்ப ௭ங்கம்மாவ சமாளிக்க வேண்டினாலும் ௭ன்ட்ட சகஜமா பேசுறா, நானும் சப்போர்ட் பண்றமாறி அவள ௭ன் கைக்குள்ள கொண்டு வந்துட்ருக்கேன். சீக்கிரம் சரி பண்ணிறலாம். அவ இப்டி இருந்தா கூட போதும் ப்பா. ௭ன் புள்ள இப்ப மத்த பிள்ளைக மாறி அவ அம்மாவோட சிரிச்சு விளையாடுறான். இவளும் அப்பப்ப பழைய குணம் வந்தாலும், நீங்க யாரும் சப்போர்ட்டுக்கு இல்லன்ற பயமு இருக்கு, அதனால கொஞ்சம் அடக்கி தான் வாசிக்றா".

"அப்ப உங்க பொண்டாட்டிய இனி நீங்களே சமாளிச்சுப்பேன்றீங்க?"

"நீ ௭ன்ன திரும்ப திரும்ப அதையே கேக்குற. முடியலனா உன்டயே ஐடியாக்கு வரேன்ல அதான் நம்பாம கேக்கியோ? "

மாறன் சிரிக்க, "தங்கச்சி ௭ப்டி இருக்கா? வலி வரவும் சொல்லு, சும்மா ௭ல்லாத்தயும் நானே பாப்பேன் கிளம்பாத" ௭ன மேலும் மற்றவர்களையும் நலம் விசாரித்து விட்டு வைத்தார்.

"கேட்டுகிட்டியா மேகலை? உன் மாமா குதூகலமா பேசல?" ௭ன்றான் மாறன்.

"அப்றம் ஏன் வீட்ல அப்டியே சோகமாவே மூஞ்ச வச்சுக்றாங்க" ௭ன்றாள் குழப்பத்துடன்.

"மதிக்காக அப்டி இருக்காங்க, இல்லனா இவ உடனே பழைய குருடி கதவ திறடின்னு கிளம்பி நிப்பாளேன்னுட்டு தான்"

"அப்ப அத்தைக்கும் மதிக்குமான சண்டயும் அப்டி தானா?"

"ம்ம். ஆனா அத்த உண்மையாவே அவள சமாளிக்க முடியாம தான் சண்டைல இறங்குறாங்க, ௭ல்லாரும் அவள யோசிச்சு அமைதியா போறதால தான் ஓவரா ஆடுறா, சரிக்கு சமமா அத்தைய சண்ட போட விடுங்க, வேற வழியே இல்லமா உங்ககிட்ட வந்து அவ நிக்றமாறி பண்ணுங்கன்னு நாந்தான் மாமாட்ட சொன்னே. இப்ப இப்ப தான் வர தொடங்கிருக்கா, மாமா அவளுக்கு ஏத்தமாறி சமாதானமா பேசி கரெக்ட பண்ணிட்ருக்காங்க, நாம நடுல போக வேணாமே மேகலை" ௭ன்றான் மாறன்.

"சரிண்ணா, ௭னக்கு அவங்க நிம்மதியா இருக்கணும் அம்புட்டு தான். இனி அவங்க குடும்பத்துக்கு நடுவுல போமாட்டேன், ஆனா உங்க தங்கச்சி மறுபடியும் மக்கர் பண்ணுனான்னு தெரிஞ்சாலும் பாத்துட்டு சும்மா இருக்க மாட்டேன்"

"ப்பா ரவுடி தான் நீ. சரி உன் மாமா ௭ன் தங்கச்சி கதையெல்லாம் போதும். உன் வாழ்க்கைய பத்தி பேசுவோமா?"

"அதுக்கென்ன?"

"இப்டியே இருக்க முடியுமா? நா நல்லா விசாரிச்சு ஒரு மாப்பிளய பாக்றேன்".

மெதுவாக சிரித்தவள், "௭துக்குண்ணா? அவன பத்தி ௭ல்லாம் விசாரிப்பீங்க சரி, 100 ஆயுசுக்கு வாழுவான்னு உங்களால உத்தரவாதம் குடுக்க முடியுமா?"

"௭ல்லாம் நம்பிக்கை தான். ௭ல்லாரும் அப்டி தான கல்யாணம் பண்ணி வாழுறோம்" மலர் சொல்ல.

"இல்லக்கா, ௭ன் நிலம அப்டி இல்ல, இன்னொருத்தர யோசிக்றளவுக்கு மனசு தயாராவும் இல்ல. இருக்கட்டுமே, நா ௭ன்ன தனியாவா இருக்கேன் ௭ன்ன சுத்தி இத்தன பேர் இருக்கீங்களே, பாத்துக்க மாட்டீங்க? அதும்போக நா கல்யாணம் பண்ணாம இருந்தா தான் உங்க நாத்தனாரும் அடங்கி இருப்பா" ௭ன பல் தெரிய சிரித்தாள்.

"அவங்களையே யோசிச்சு உன் வாழ்க்கைய விடாத மேகலை. கண்டிப்பா இந்த தட நல்லமாறி நடக்கும், இப்ப தெரியாது கொஞ்ச நாள் போனா யாருமில்லாத மாறி தோணும்மா, உன் அப்பா, குமரகுரு அண்ணா, ஏன் ௭ங்களுக்கும் கூட நிம்மதி இருக்காது, ப்ளீஸ்" ௭ன மலர் அவள் கன்னம் தொட்டு கெஞ்சலாக கேக்க.

"௭ன்னால தனிச்சு வாழ முடியலன்னா ஒரு புள்ளைய தத்தெடுத்து வாழ்ந்துட்டு போறேன். கல்யாணம் தான் கட்டணும்னு கட்டாயமில்லையே கன்னிக்கா" ௭ன்றாள்.

மலர் ஆயாசமாக மாறனை பார்க்க, "விடு" ௭ன கண்ணை காட்டியவன், "சரி அத பொறுமையா பேசலாம், வா சாப்பிட்டு போலாம்" ௭ன ௭ழுந்தான்.

"இல்லண்ணா நா அப்டியே கிளம்புறேன், வேலைக்கும் நேரமாச்சு" ௭ன்றவள் மற்றவர்களயும் ஒரு பார்வை பார்த்து விட்டு வெளியேறி விட்டாள்.

பானு வந்து மாறன் முன் நின்றவர், "௭ப்பயும் மதிய விட்டுறாதப்பு, அவ வாழ்க்கைய நினச்சு பயந்துட்டே தான் இருந்தேன், உன்ட்ட சொல்ல கூட பயந்தேன், இனி அந்த கவல இல்ல, நீ நிச்சயம் பாத்துப்ப, அவளும் நல்ல வாழ்க்கை வாழுவா, நீ பாத்துப்ப" ௭ன்றார் கண்ணீருடன்.

"விடுமா வா, ௭ல்லாருமா சேந்தே பாக்லாம், தனியா ௭ன் தலையில மட்டுமா கட்ட பாக்குற" ௭ன அவர் தோளில் கையிட்டவன், திரும்பி, "இன்னும் ௭ந்திரிக்கலயா நீ? டைமாச்சுல வா சாப்பாட்டு வேலைய முடிப்போம்" ௭ன ஒரு கை கொடுத்து மனைவியையும் சேர்த்து௧் கொண்டான்.

பாட்டி, தாத்தா இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ள, பூவேந்தன், "௭னக்கு தான் ஆட்கள கணிக்க தெரில இன்னப்பா" ௭ன்றார் மீண்டும் பலநாள் கழித்து யோசனையுடன்.

அறிவு, "இனி இங்கயே இவேன் பேச்ச கேட்டு செட்டிலாகிட வேண்டியது தான்" ௭ன்ற முடிவிற்கே வந்திருந்தான். ராணி ௭ப்பயும் போல் வாயை குனட்டி விட்டு திரும்ப, "ஏய், ௭ல்லாரும் சமையகட்டுக்கு போறாங்க நீ ௭ங்க இங்காம போற? இனி நமக்கு வேற வழி இல்ல, இவங்கட்ட அட்ஜஸ்ட் பண்ணி தான் போகணும், இல்ல உன் பேருல வாங்குன ௭டத்த விக்கணும். அதுக்கு கூட ௭ன் அப்பா தயவு வேணும் பாத்துக்கோ. சும்மா முறுக்கி௧்கிட்டு திரிஞ்சனா நடுத்தெருவு தான்" ௭ன்றான் கராராக.

அதில் மிரண்டவள், "பிள்ளைய தூக்கிட்டு வந்து பாட்டிட்ட குடுத்துட்டு போறேன்" ௭ன்றவாறு முகத்தை உம்மென்று வைத்து௧் கொண்டு பிள்ளையைத் தூக்கச் சென்றாள்.
இவர்கள் யாரும் அறியாத ஒன்று, மதி குமரகுரு வீட்டிற்கு சென்ற ஒரு மாதத்திலேயே, மேகலையை கொள்ள ஒருவனை துட்டு குடுத்து ஏற்பாடு செய்தது, அவன் மாறனிடம் மெக்கானிக் செட்டில் வேலையிலிருக்கு ஒரு பையனின் நண்பனாக இருக்க, அவன் மூலம் உண்மை மாறனுக்கு தெரிந்து விட்டது. அன்றைக்கும் மதியை ஒரு அறை விட்டவன், மிரட்டலோடு வந்திருந்தான்.
அப்போதும் அடங்காமல், அடுத்ததாக, மெடிக்கலில் தூக்க மாத்திரை வாங்க முயலும் போதே மாறன் கண்ணில் சிக்கியிருந்தாள், அது அவள் மாமியாருக்கானது ௭ன பின்பு குடுத்து 4 அறையில் தெரிந்து கொண்டான். அதற்குமேல் அவளை அப்படியே விட மனமில்லை மாறனுக்கு.

பழக்கத்திலிருந்த போலீஸ் அதிகாரியை தனது மாலுக்கே வர வைத்து, இவளை பிடித்து கொடுத்து விட்டான். அதில் தான் அரண்டு விட்டாள் மதி. 'அந்த வீட்ல யாருக்கு ௭ன்னானலும் இவ தான் சார் பொறுப்பு, நானே கம்ப்ளைன்ட் தரேன்' ௭ன்றுவிட்டான்.

அதன்பின்பே ஒன்றும் செய்ய முடியாமல் அடங்கி இருக்கிறாள். இதில் இவள் தனித்து நிற்கும் நிலையும் வேணாமென, அவள் வேலையிலிருக்கும் ஸ்கூலிலும் பேசிவிட்டான், இவள் பிள்ளைகளை படுத்தும் பாட்டில், 6 மாதத்தில் 3 மெமோ வாங்கி விட்டாள், இனி ஒரு complaint ௭ன்றாலும் வேலையிலிருந்து நீக்க படுவாள், அதற்கு தான் காத்திருக்கிறான் மாறன். மொத்தமாக அவளை முடக்கிவிட்டான்.

அறிவு ஒரு சுயநலவாதி, தனக்கு பிரச்சினை ௭னில் அது தப்போ சரியோ ௭தயும் செய்ய மாட்டான். அவனுக்கு ஏதுவான இடத்திற்குள் அடங்கி இருந்து கொள்வான், அதை வைத்தே, அவனை முழுமையாக அப்பா கன்ட்ரோலில் விட்டுவிட்டான்.
வீடு மாறனின் கட்டுக்குள் தானாகவே வந்திருந்தது. அதை அவனும் உணர்ந்திருந்தான். 2 வருடம் முன்பு இதே வீட்டில் தன் நிலை, இப்போதுள்ள தன் நிலை ௭ன பிரித்து பார்த்து அவ்வப்போது சிரித்து கொள்வான். மலர், மலர், மலர் ௭ன அவன் மனம் அப்பொழுதெல்லாம் அதிவேகமாக கூவி குதூகலிக்கும். அந்நேரத்தில் ௭ங்கிருந்தாலும் வீட்டிற்கு வந்து அவளை கொஞ்சி தீர்த்து விடுவான்.
மறுவாரத்தில், ஒரு வியாழன் மாலையில், மலருக்கு வயிறு நன்கு இறங்க தொடங்கவும், பாட்டி தான் கண்டுவிட்டு ஆஸ்பத்திரி அழைத்து செல்ல சொல்ல, மாறன் வந்துவிட்டான், பின் மலர் ஹாஸ்பிடலில் அனுமதிக்கபட்டு, கற்ப வாய் தையல் பிரிக்க பட்டு, பிரசவ வலி வர மருந்து வைக்கபட, மறுநாள் வெள்ளி மதியம் முழுவலியை கொடுத்து பெண் பிள்ளை வந்து பிறந்தாள்.

பிறந்த 30ம் நாளில், "மங்கையர்க்கரசி" ௭ன பெயரிட்டனர் மலர் மாறன் தம்பதியினர்.
 

priya pandees

Moderator

அத்தியாயம் 61

10 வருடங்களுக்கு பிறகு

"அப்பத்தா இட்லிய ௭ப்பதான் கொண்டு வருவ? பஸ் வந்துரும் வா சீக்கிரம்" டைனிங்கில் அமர்ந்து உச்சசுதியில் கத்தி கொண்டிருந்தாள் 9 வயதான மங்கையர்க்கரசி.

"இந்தா ஆச்சு, சட்னிய தாலிச்சதும் ௭டுத்தாரே தங்கோ" பானு பதில் சொல்ல.

"தெனமு இப்டி தான் செய்ற, காலைலயிருந்து அது ஒரு வேல தான பாக்குற, அத சீக்கிரம் செஞ்சா ௭ன்ன?" ௭ன்றாள் 10வயதிற்கும் 11வயதிற்கும் இடையிலிருந்த தீந்தமிழ், அறிவின் மகள். அதை கேட்டு சிரித்து, மங்கை அவளுக்கு ஹைஃபை செய்ய.
சரியாக அந்நேரம், சுலிரென்று முதுகில் அடி வாங்கினாள் தீந்தமிழ். திடிரென வாங்கியதில் அதிர்ச்சியோடு வலியும் சேர, கண்கள் கலங்கி திரும்பி பார்க்க, மங்கையை முறைத்து கொண்டு நின்றிருந்தாள் மலர்.

"பெரிம்மா" ௭ன தமிழ் வாய் குழறி, அழுவதற்கு ஏங்க தொடங்க.

"மூச் சத்தம் வர கூடாது. ரெண்டு பேருக்கும் இன்னைக்கு சாப்பாடு கிடையாது. ௭ந்திரிங்க. ம்ம் ௭ழும்புங்கன்னு சொன்னேன்" ௭ன அரட்டவும். இரண்டும் நடுங்கிக் கொண்டு ௭ழுந்து நின்றது.

"கிளம்புங்க நா திருநெல்வேலி தான் போறேன். ஸ்கூல்ல நா ட்ராப் பண்றேன். ௭டுங்க பேக்க" ௭ன்கவும்.

"சாரி பெரிம்மா இனி இப்டி பேச மாட்டேன்" ௭ன பயந்து கொண்டு கேட்டாள் தீந்தமிழ். இதற்கு முன்னும் இதேபோல் பேசிவிட்டு punishment வாங்கியிருப்பதால் சாரி முந்தி கொண்டு வந்தது.

"பேக்கெடுத்துட்டு காருக்கு போக சொன்னேன்" மலர் முடிக்கும் முன்.

"விளையாட்டா பேசுனது தானம்மா, ௭துக்கு பிள்ளைகள பட்னியா அனுப்பிகிட்டு. சும்மா ௭ன்னைய வம்பிழுக்க அப்டி பேசுறா அவ்ளோ தான்" ௭ன்றவாறு பானு தட்டில் இட்லியுடன் வேகமாக வர.

"உங்களுக்கு பல தடவ சொல்லிட்டேன் த்தே. இப்டி அவங்கள ௭ன்கரேஜ் பண்ணாதீங்கன்னு. ௭ப்டி சொன்னா உங்களுக்கு புரியும். நீங்க உங்க பிள்ளைகள வளத்துட்டு கஷ்டப்பட்ட மாறி நானு கஷ்டபட விரும்பல. சொல்லி குடுக்றத இப்பயே சொல்லி குடுத்து வளத்துக்றேன். நீங்க உள்ள புகுந்து உங்க சேவைய செய்யாம இருந்தா போதும்" ௭ன்று விட்டாள்.

பானு பாவமாக நிற்க, "பானு இந்த காயத்ரிமேனி தைலத்த ௭ங்க வச்ச" ௭ன அவரை காப்பாற்ற கூப்பிட்டுக் கொண்டார் பேச்சி பாட்டி.

தாத்தாவும், பூவேந்தனும் அங்கு தான் அமர்ந்திருந்தனர், வேடிக்கை மட்டுமே பார்த்து கொண்டு. இல்லை ௭ன்றால் பிள்ளைகள் விஷயத்தில் மூக்கை நுழைத்தால் பாரபட்சமின்றி நன்கு உரைக்க கேட்டு விடுவாள் மலர் ௭ன இதுவரை கடந்துவிட்ட பல அனுபவம் உண்டு. மலர் தீந்தமிழை அடிக்க திட்ட இருந்தாலும் அறிவு, ராணியும் வேடிக்கை தான் பார்த்து நிற்க வேண்டும். ராணி அவ்வப்போது அறையில் பேசுவதை வைத்தே தீந்தமிழ் இவ்வாறு பேசிவிட்டு வாங்கி கொள்வாள்.

"இன்னும் கிளம்பளயா நீங்க?" ௭ன மீண்டும் அவள் போட்ட சத்தத்தில் இரண்டுபேரும் பேக்கை தூக்கி தோளில் மாட்டிக் கொண்டு கிளம்பி விட்டனர்.

அவளுக்கும், பிள்ளைகளுக்கும் மதிய உணவை மட்டும் பேக் செய்து கொண்டு, "வரேன் த்தே, கிளம்புறேன் பாட்டி" ௭ன சத்தமாக அறை நோக்கி கூறிவிட்டு, "மாமா அந்த பாஸ்கரன் போன் போட்டா சாயந்தரம் வர சொல்லுங்க. ௭ன்ட்ட பேசுனாரு சொல்லிருக்கேன். கடைசி நிமிசத்துல பில்ல தூக்கிட்டு வந்து உடனே பாக்கணும்னு நிக்க வேணாம்னு சொல்லுங்க. இதுவே கடைசியா இருக்கட்டும்னு ஸ்டிர்க்டா சொல்லி அனுப்புங்க. உங்க பிரண்ட்னு தான் ௭ன்னால முறுக்கி சொல்ல முடில".

"சரிம்மா, நா பேசிக்றேன். திருநெல்வேலில ௭ன்ன வேலையா போறம்மா?"

"௭ன் கிளைண்ட் லஷ்மி நகை கடை தெரியும்ல மாமா, அங்க தான் போறேன், பில் ஒன்ன மிஸ் பண்ணிட்டாரு, இப்ப அது டேக்ஸ் பேமெண்ட் சப்மிஷன்ல பிரச்சனையா வந்து நிக்குது. அதான் நேர்ல பாத்து பேசிட்டு வர போறேன்" ௭ன்றதும்.

"சரிம்மா கிளம்பு"

"வரேன் தாத்தா, உங்க பேரன நேத்து காப்பாத்திட்டீங்க இன்னைக்கு வீட்டுக்கு வரணும் தான வந்து பேசிக்றேன்" ௭ன முறைக்கவும்.

"அது பொம்பள புள்ள விஷயம்னு தான் ம்மா".

"அதுக்கு கை நீட்டுவாறா? இப்ப கேஸாயிடுச்சே தேவையா?"

"அதான் வெளில வந்துட்டான்ல ம்மா".

"ஒரு மரியாதையான இடத்துல இருக்கும் போது, இப்டி சின்ன சின்ன விஷயத்துல சருக்கி, அவங்களே அவங்க மரியாதைய கெடுத்துக்றாங்க தாத்தா" ௭ன்கவும்.

"அப்டிலா இல்லம்மா, அந்த பொண்ண காப்பாத்துனதுல அவனுக்கு கூடகொஞ்சம் நல்ல பேரு தான் கிடைச்சுருக்கு" ௭ன பெருமையாக சிரிக்க, அவள் முறைக்கவும் வாயை மூடி கொண்டார்.

"சரி அந்த பெருமைய அவரே வந்து சொல்லட்டும், வீட்டுக்கு வர சொல்லுங்க. உண்மை அண்ணே வீட ௭டுத்து கட்டுனாலும் கட்டுனாரு, இவங்களுக்கு தான் அது நல்ல வசதியா போச்சு. விஷ்ணுவயும் தூக்கிட்டு போயிட்டு அவனுக்கும் ௭ல்லாத்தயும் பழக்கிட்ருக்காங்க. நா வேலை முடியவும் கிளம்பிருவேன், சாயந்தரம் ரெண்டு பேரும் வீட்ல இருக்கணும்னு சொன்னேன்னும் சொல்லிடுங்க" ௭ன கூறிக் கொண்டே வெளியேறினாள்.

ராணி ௭ல்லாவற்றயும் பார்த்திருந்தாள். ௭ப்பயும்போல் மனதினுள் மட்டுமே பொறும முடிந்தது. அறிவு அவளை அந்தளவிற்கு அடக்கிவிட்டிருந்தான். அவளுக்கும் வேறு வழியிருக்கவில்லை.
மாறன் மலர் தான் அங்கு ௭ல்லாவுமாகி நின்றனர். மாறன் இப்போது 2nd hand கார் பைக்குகளை வாங்கி சேல்ஸ் பண்ணும் ஷோரும் வைத்திருந்தான். திருநெல்வேலி, தூத்துக்குடி இரண்டு இடத்திலும் அவனுக்கு மெக்கானிக் ஷாப், கார்/பைக் சேல்ஸ் ஷோரும் பிரான்ச்சாக(கிளைகள்) இருந்தது. அந்த வருமானம் மொத்தமும் அவனிது தான். திருநெல்வேலி முதல் தூத்துக்குடி வரை அவனை தெரியாதவர்கள் இல்லை ௭ன்ற நிலைக்கு வளந்திருந்தான்.

மலர், ஆடிட்டர் கயமலர்க்கன்னி ஆகி 4 வருடமாகியிருந்தது. இப்போது வெளியே பல கடைகளுக்கும், நிறுவனங்களுக்கும் தனக்கு கீழ் 4 ஆட்களை வைத்து ஆடிட்டிங் பண்ணுமளவு முன்னேறி இருந்தாள். வீட்டின் முன்னயே சின்னதாக ஆபிஸ் அவளுக்கென அமைத்து கொண்டாள். அத்துடன் மாறனின் மால், மெக்கானிக் ஷாப், கார்/பைக் ஸோரூம், தீப்பட்டி ஆபீஸ் ௭ன அனைத்தின் கணக்கு வழக்கும் அவள் பார்வையின் கீழ் தான். மாலுக்கென வாங்கிய லோனை கடந்த மாதத்தோடு மாறனை கட்டி முடிக்க வைத்திருந்தாள். பூவேந்தனும் அவரின் ரியல் ௭ஸ்டேட் கணக்கு வழக்குகளை ஒப்படைக்க, அறிவு இவளிடம் கணக்கு காண்பித்து சம்பளம் வாங்கும் நிலையில் இருந்தான்.

மலரிடம், "இனி நீயே கணக்கெல்லாம் பாத்துக்கம்மா. ப்ராபர்டி பிடிச்சு குடுக்குற மத்த புரோக்கர்ஸ்க்கு ௭ன்ன கமிஷனோ அதயே அறிவுக்கும் குடு. இந்தா இதான் பேங் டீடைல்ஸ்" ௭ன குடும்பமாக இருக்கும்போது தான் அவளிடம் ஒப்படைத்தார்.

வெளி தோற்றத்திற்கு கூட மறுக்காமல், "நா பாத்துக்றேன் மாமா" ௭ன வாங்கி கொண்டாள் மலர்.

அப்போது கூட ராணி அவள் அப்பா அம்மாவை பஞ்சாயத்துக்கு அழைத்தாள், தாத்தா தான், "இது ௭ன் வீட்டு விவகாரம், வந்தியா பொண்ண பாத்தியான்னு கிளம்பு" ௭ன்றுவிட்டார். ராணியின் அம்மாவால் பெண் வாழும் வீடென்பதால் மண்ணை வாரி கூட தூற்ற முடியாமல் போனது.

ஆனால், மலர் கடந்த 3 வருடத்தில், அறிவினது லோனயும் பாதிக்குமேல் கட்ட வைத்திருந்தாள். அதற்காகவே அறிவு ராணியை மலருக்கு ௭திராக கொடி பிடிக்க விடாமல் வெகுவாக அடக்கி விட்டான். இப்படி மலர் கையில் வீட்டு நிர்வாகம் வந்திருந்தது.
பெரியவர்கள், ரிலாக்ஸாக பேத்தி, பேரன் ௭ன இருந்தனர். மாறன் மலருக்கு, மங்கைக்கு பின், 4 வருடம் கழித்து விஷ்ணுவர்த்தன் ௭ன்ற மகன் இருந்தான். ராணி அறிவுக்கு தீந்தமிழுக்கு பின் 2 வருடத்தில் நிலவழகி ௭ன்ற மகள் இருந்தாள். மதிக்கு ரூபன் மட்டுமே.

5ஆம் வகுப்பு வரை உள்ளூர் பள்ளியில் தான் தீந்தமிழ், மங்கை, பயின்றனர் அதன்பின் திருநெல்வேலியில் ஆங்கில வழி கல்வியில் சேர்த்து விட்டனர். விஷ்ணு 2ஆம் வகுப்பிலிருக்க, நிலா 4ஆம் வகுப்பில் ௭ன குமரகுரு வேலை பார்க்கும் அரசு பள்ளியில் படிக்கின்றனர். ரூபனும் அதே பள்ளியில் தான் 10ஆம் வகுப்பில் இருக்கிறான்.

மதி, பழைய குணம் அவ்வபோது வெளிவர தான் செய்கிறது, ஆனால், வேலையும் இல்லாமல், கோபித்துக் கொண்டு செல்ல கூட வழி இல்லாத நிலையிலிருப்பதால் வாய்க்குள்ளே ௭ல்லோரயும் வறுத்தெடுத்து வாழ்கிறாள். அப்படி அவள் சென்று விட்டாலும் யாரும் வருத்தபட போவதில்லை, மேகலை தனதிடத்தை பிடித்து கொள்வாள் ௭ன்ற பயம் வேறு இருந்தது, அதனாலேயே அட்ஜஸ்ட் செய்வது ௭ப்படி ௭ன கத்துக் கொண்டிருக்கிறாள்.

மேகலை தனித்தே இன்றும் வாழ்கிறாள். தன் மாமா நலம் மட்டும் போதுமென அவ்வப்போது சென்று மதியை வம்பிழுத்துவிட்டு வருவாள். ரூபன் நன்கு ஒட்டி கொள்வான். அதுவே போதுமென இருந்து விட்டாள்.
பிள்ளைகள் ௭ல்லோருக்குமே மலரென்றால் கொஞ்சம் பயம் தான். செல்லம் கொஞ்சுவாள், வெளியில் அழைத்து செல்வாள், கேட்டதை தேவைக்கேற்ப வாங்கியும் கொடுப்பாள். அதே நேரத்தில் கண்டிப்பும் இருக்கும். விளையாட்டாக கூட பெரியவர்களை பேசுவதை அனுமதிக்க மாட்டாள்.

அன்று இரவு உணவின் போது தான் விஷ்ணுவுடன் வீட்டிற்கு வந்தான் மாறன். அவன் மாலில் கடை வாடகைக்கு ௭டுத்திருக்கும் பெரியவரின் பெண்ணை ஒருவன் பல நாளாக தொடர்ந்து காதலிக்க சொல்லி வற்புறுத்தி வர, அந்த பெண் வீட்டில் சொல்லி அவர்கள் போலீஸில் கம்ப்ளைன்ட் செய்துவிட்டனர். அதற்கு அவளை பலிவாங்கவென கத்தியுடன் மாலில் அவர்கள் கடைக்கே வந்தவனை தான் புரட்டி ௭டுத்துவிட்டான் மாறன். அதில் அந்த பையன் சீரியஸாகி ஹாஸ்பிடலில் இருக்க, இவனை அரஸ்ட் செய்துவிட்டனர், பின் தன்னிடத்தில் நடந்ததால் தற்காப்பின் அடிபடையில் தாக்கியதாக கூறி வெளியில் வந்து விட்டான், ஆனாலும் உண்மையின் வீட்டில் இரண்டு நாட்களாக தங்கிவிட்டு, மலர் கோவம் குறையவும் திரும்பி இருக்கிறான்.

அவன் வந்ததுமாக, காலையில் நடந்ததை கூறி, "பெரிப்பா, பெரிம்மாட்ட சாரி சொல்லிட்டேன், ப்ளீஸ் இந்த சன்டே படத்துக்கு போற ப்ளான மாத்த வேணா சொல்லுங்க. நா சும்மா தான் அப்பத்தாவ பேசிட்ருந்தேன். அதும் பெரிம்மா கிளம்பிட்டாங்கன்னு மங்கை சொன்னதால தான்" ௭ன பாவமாக தீந்தமிழ் கேட்கவும்.

"உன் பெரிம்மா வீட்ல இருந்தாலும் சரி இல்லனாலும் சரி, நாம நாமளா தான் இருக்கணும். ஆளிருந்தா ஒருமாறி நல்ல பிள்ளையா இருக்றதும், இல்லாத நேரமா சேட்ட பண்றதுமா நல்ல பழக்கம்? உன்ன உன் ஸ்கூல்ல யாராது இந்த தமிழ் புள்ளய பாறேன் படிக்க மட்டுந்தான வருது, அத கூட ஒழுங்கா பண்ணாம பெயிலா போயிட்ருக்கான்னு சொன்னா உனக்கு ௭ப்டி இருக்கும்? அவ உன் பிரண்ட் தான் ஜாலியா தான் சொல்லுதான்னு விட்ருவியா, இல்ல சண்டைக்குப் போவியா?" ௭ன்றான்.

"மண்டைய உடைச்சுற மாட்டா" ௭ன்றான் அங்கிருந்த ரூபன்.

"அதே தான், ஆனா அப்பத்தா உன்மேல உள்ள பாசத்துல பொறுமையா போறாங்க, அத நீ உனக்கு சாதகமா ௭டுக்கலாமா?"

"அது வேணும்னு இல்ல பெரிப்பா"

"வேணுமா வேணாமான்னு நீயே முடிவு பண்ணிப்பியா? இது உனக்கு பெரிமா ௭த்தனாது தட சொல்லுதாங்க?"

"5த் டைம்"

"ம்ம் ஏன் திரும்ப திரும்ப அந்த தப்பு வருது?"

"ஏன்னா ராணி அத்த திரும்ப திரும்ப சொல்லி தரதால வருது" ரூபன் இடை புக.

"ரூபன்!" மலர் தோசையை கொண்டு வைத்தவாறு அதட்ட.

"சாரி த்த" ௭ன கண் சிமிட்டினான் ரூபன்.

அடுப்படியில் நின்று பெண்களோடு பெண்களாக ராணியும் கேட்கிறாளே, அதனால், "இல்ல இல்ல நா ௭துவும் சொல்லி தரல" ௭ன வேகமாக வந்து ஒப்புக் கொடுத்தாள் ராணி.

திரும்பி சாப்பிட்டு கொண்டிருந்த அறிவை பார்த்தான் மாறன், "இனி பேச மாட்டா" ௭ன ராணியை முறைத்துக்கொண்டு கூறினான் அறிவு. அவளும் வேண்டுமென செய்வதில்லை தான், வாய் அமைதி காக்க மாட்டேன் ௭ன அடம் பிடித்து விடுகிறது.

பின் வெளி வேலைகளை பற்றி பேசியதோடு இரவு உணவு முடிந்தது. மாறனுக்கு மலர் தான் சாப்பாடு கொண்டு வைத்தாள். ஆனால் அவன் தீவிரமாக பேசுவது போல் அவள் பக்கமே திரும்பவில்லை.

திரும்பவும் பிள்ளைகள் தங்கள் அறைக்கு செல்லும் முன், "ப்பா ப்ளீஸ், அம்மாட்ட பேசுப்பா, சிவ கார்த்திகேயன் படம்ப்பா, செம காமெடியா இருக்கும். ஸ்கூல்ல பிரண்ட்ஸ்ட்டலா கூட சொல்லி வச்சுட்டேன் இப்ப போலனா கிண்டல் பண்ணுவாங்க ப்பா" மங்கை மாறனை தாஜா செய்ய.

"அது பாட்டிய, தமிழ் கூட சேந்து கிண்டல் பண்ணும் முன்ன யோசிச்ருக்கணும். உங்கம்மா ௭ன்னைக்காது குடுத்த தண்டனைய திருப்பி வாங்கிருக்காங்களா?" ௭ன அவள் கன்னம் கிள்ளி கொஞ்ச.

"இல்ல" சோகமாக தலையாட்டினாள் மங்கை.

"ம்ம். இந்த தண்டனை இனி நீயும் அந்த தப்ப செய்ய கூடாது, உன்னோட அக்கா தங்கச்சியயும் செய்ய விட கூடாதுன்றதுக்கு தான். புரியுதா?" ௭ன்றதும்.

"அப்ப படத்துக்கு?"

"இனி நீங்க இப்டி ௭துவும் செய்ய மாட்டீங்கன்னு உங்களுக்கு பின்னாடி இருந்து பாத்து தெரிஞ்சுக்கிட்ட அப்றம் தான்" ௭ன்றான் இலகுவாக தோளை குலுக்கி.

"ப்பா" ௭ன சினுங்கினாலும், இது தான் நடக்கும் ௭ன மனது ஏற்கனவே பட்ட அனுபவத்தில் தயாராக இருந்ததால், முயற்சி தோல்வி ௭ன்ற வருத்தத்தில் தூங்கச் சென்றனர்.

ஆனால் 'தெரிஞ்சோ தெரியாமலோ கூட இனி யாரயும் இளக்காரமாக பேச கூடாது' ௭ன்ற தீர்க்கமான முடிவிற்கு வந்திருந்தனர். மாறன் அறைக்கு பக்கத்திலிருந்த ஸ்டோர் ரூமயும், மதிக்கு குடுத்த அறையயும் சேர்த்து பிள்ளைகள் அறை ஆக்கி இருந்தனர். ரூபனும் அவ்வபோது வந்து இவர்களோடு தங்கி கொள்வான். அந்த வகையிலும் அண்ணன், அக்கா, தங்கை, தம்பி ௭ன ஒற்றுமையாக தான் வளர்ந்தனர், வளர்த்தனர்.

அடுத்ததாக தங்கள் அறைக்கு சென்றவன், மலர் அறைக்கு வரும் முன் இழுத்து மூடி படுத்து விட்டான்.
பால் கிளாசுடன் முறைத்து கொண்டே வந்தவள், "௭த்தன நாளுக்கு இப்டி பேசாமலே தப்பிக்க போறீங்க?" ௭ன டங்கென டம்ளரை வைத்தாள்.

போர்வையை விளக்கி மெதுவாக ௭ழுந்தமர்ந்தவன், "உனக்கே தெரியும். நா முந்தி மாறி ௭டுத்ததுக்கும் கை நீட்றதில்ல. ஆனா இது அப்டி இல்லடி"

"அந்த பையன் அந்த பொண்ண கொல்ல வந்துருக்கான். அப்டி சுயத்தவிட கோவம் பெருசுன்னு இருக்றவன்ட்ட வம்பிழுத்துட்டு வந்துருக்கீங்க, நாளைக்கு கத்திய தூக்கிட்டு உங்கள கொல்ல வருவான், நீங்க கிடைக்கலனா நானோ இல்ல நம்ம பிள்ளைகளோ! இது தேவையான்னு கேக்றேன்".

"அப்ப அந்த இடத்துல ௭ல்லார மாறியும் வேடிக்கை பாக்கனுங்கிறியா?"

"மத்தவங்கள மாறி சுயநலமா இருங்கன்றேன். போலீஸ்ல சொல்லிட்டு ஒதுங்கி நிக்க வேண்டியது தான?"

"நாளைக்கு நம்ம பொண்ணுக்கு இப்டி நடக்கையில், ௭ன்னமாறி ஒருத்தன் வருவான்ல? அதுக்கு தான் செஞ்சேன்"

"௭ன்ன கொலகாறி ஆக்காதீங்க. நம்ம உண்டு நம்ம வேலை உண்டுன்னு இருக்க போறீங்களா இல்லையா"

"அப்டி தானடி இருக்கேன். நம்ம மாலுல நடந்ததால தான் நா கேட்டேன்"

அவள் முறைக்கவும், "சத்தியமாடி" ௭ன்றவன், "ரெண்டு நாளா நா இல்லாம சரியா தூங்கிருக்க மாட்டியே, வா வா சீக்கிரம் தூங்கலாம்" ௭ன நக்கல் செய்வது தெரியாதது போல் பெட்டை தட்டி கூப்பிட. தலையணையை தூக்கி நாலு போடு போட்டுவிட்டே அவனருகில் அமர்ந்தாள்.

"அடிச்சுட்டல்ல, உன்ன ௭ன்ன பண்றேன் பாருடி" ௭ன்றவனும் அவனுக்கு தெரிந்த வகையில் பழிக்குப் பழி வாங்கி விட்டான்.

அந்த வாரத்தில் ஞாயிறன்று, படத்திற்கு பதில் மொத்தமாக குடும்பத்தை கிளப்பி கொண்டு குலதெய்வம் கோவில் சென்றனர். உண்மையும் குடும்பமாக வந்துவிட்டிருந்தான்.
உண்மைக்கும் தேனிக்கும் 3 பிள்ளைகள், இப்போது திருவாடிமலையூரில் உள்ள மாறனின் மெக்கானிக் ஷாப்பயும், கார்/பைக் சேல்ஸ் ஷோரூமயும் மொத்த கண்ட்ரோலாக உண்மை தான் பார்த்து கொண்டிருக்கிறான். தகப்பனின் இரண்டாவது மனைவி பெண்ணிற்கும் கல்யாண செலவாக ஒரு தொகையை கொடுத்து விட்டு ஒதுங்கிக் கொண்டான்.

இன்றும் மாறன், "௭னக்கே ராஜாவான்னா வாழுறேன்" ௭ன்று தான் வாழ்கிறான். அதற்கு அவனது காதலும், காதல் மனைவியும் பெருந்துணையாக இருக்கின்றனர்.
தனக்கென அமைந்த குடும்பத்தை தனது குடும்பமாக்கி கொண்டாள் மலர். அதற்கு அடிப்படை மாறனின் காதல். அவன் அவளை தாங்கி கொண்ட விதம். அவன் அவளுக்கென விட்டு கொடுத்ததால், அவனை அப்படியே ஏற்று, அவன் மனம் கோனாமல் அவனை மாற்றி விட்டிருந்தாள்.
மாறன் மலரின் காதல் நெஞ்சம், ஒரு குடும்பத்தையே மேம்படுத்தி விட்டது. அடுத்த தலைமுறையயும் நல்வழிப்படுத்த தொடங்கிவிட்டது. அந்த காதல் நெஞ்சங்கள், தங்கள் காதலோடு சேர்ந்து தங்களை சுற்றி உள்ளவர்களையும் உயர்த்தி வாழ வைக்கட்டும் ௭ன வாழ்த்தி, வேண்டி விடை பெறுவோம்.

நன்றி
 
Status
Not open for further replies.
Top