Shambhavi
Moderator
கண்ணம்மா - 01
அதிகாலை வேலையில் ஆதவனின் தரிசனத்தை நின்று, நிதானமாக ரசித்துப் பார்ப்பதென்பது பலருக்கு வாய்ப்பதே இல்லை. ஆனால் இன்று அதற்கென்றே நன்னாளாக அமைந்ததுவோ என்று என்னும் அளவிற்கு அவருமே தன் கதிர்களை எல்லாம் மெல்ல மெல்ல பார் எங்கும் பரப்பிக் கொண்டே துயில் கலைந்தார்.
மஞ்சளும் சிவப்பும் ஆரஞ்சும் கலந்து, நீ பெரியவளா இல்லை நான் பெரியவளா என்று சண்டையிட்டவாறே கதிர்கள் தங்களின் நிறத்தை வானம் என்னும் தாளில் தீட்டிக்கொண்டிருக்க,
நன்கு தெளிந்த நீல வானமும் அதற்கு தோதாய் வெண்ணிற மேகங்களை கொண்டு கண்ணைப் பறித்தது.
கடல் அன்னையின் மேற்புறத்தில் சூரியனவனின் கதிரொலிகள் பட்டு தங்கமென ஜொலிக்க, அந்த அதிகாலை வேளையில் பாய்மர கப்பலில் பயணம் செய்வோர் கூட, அந்த ஒளியில் எறும்புகளாய் தான் தோன்றினர் அவனின் கண்களுக்கு.
கடலை ஒட்டியிருந்த வானைத் தொட்டுவிடும் உயரத்தில் ஓங்கி உயர்ந்த ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் எட்டாவது தளத்தில் ஜம்மென்று நின்றவாறே ஆற அமர இக்காட்சிகளை பார்த்துக்கொண்டிருந்தான், வாசுதேவ கிருஷ்ணன்.
அந்த நேரத்திலேயே குளித்து முடித்து, வீட்டில் அணியும் ஒரு இலகுவான ஆடையை அணிந்து கொண்டு, இடக்கையில் தனது காஃபி கப்புடன் கண்களில் ஒரு தீர்க்க பார்வையைக் கொண்டு நின்றிருந்தான் அவன்.
குளிர்ந்த காற்று அவன் மேனியை இதமாகச் தழுவிச் செல்ல, அதனை ரசித்தவனின் கண்களும் இதழ்களும் ஒரு மென்னகை புரிந்தன.
சொட்டு விடாது ரசித்து குடித்த காஃபியின் கசப்பு நாவில் தவழ்ந்த வண்ணம் இருக்க, உமிழ் நீரைக் கூட்டி விழுங்கியவனின் காதுகளை தீண்டியது வீட்டின் அழைப்பு மணி.
"தம்பி, கிளம்பிட்டீங்களா? செத்த நேரமிருங்க டிஃபன் செஞ்சு தாரேன்" என்றவாறே தன் வயர் கூடையுடன் சமையல் அறை நோக்கி சென்றார் சாந்தா, அந்த வீட்டின் சமையல் அம்மா.
"சாந்தா ம்மா, எனக்கு கஞ்சி மட்டும் செஞ்சு வைங்க. மதியம் ராகவ் வருவான், அவன கேட்டு லஞ்ச் செஞ்சுடுங்க" என்றவன் தன் குடித்தக் கப்பை கழுவி, அதன் இடத்தில் வைத்துவிட்டு தன் அறையை நோக்கிச் சென்றான்.
அவனின் செயலால் மனதில் எப்போதும் துளிர்க்கும் மகிழ்வு, இன்றுமே வந்து சாந்தாவின் முகத்தில் ஒரு மலர்ச்சியைக் கொடுத்தது.
என்றும் இல்லாத ஒரு நிறைவு அவன் மனதில். ஒரு நீண்ட மூச்சை இழுத்துவிட்டவாறே கட்டிலில் இருந்த சீருடையை அணிந்துக் கொண்டான், வாசுதேவ கிருஷ்ணன்.
வெள்ளை நிற முழுக்கை சட்டையும், ஆழ்ந்த நீல நிற காற்சட்டையும் அதன் நிறத்திலேயே வெள்ளை பட்டைகளைக் கொண்ட கழுத்து அட்டியும் (டை!) அணிந்து நின்றவனின் தோற்றம் அவனுக்கே ஒரு கர்வத்தைக் கொடுத்தது.
இறுதியாய் 'என்னையும் அணிந்து கொள்ளேன்' என்ற தொப்பி அவனின் கவனத்தை தன்பால் ஈர்க்க, அதனை அணிந்துகொண்டு நிமிர்ந்து நின்றவன் மகிழ்ச்சியின் பயனாய் ஒரு விரிந்த சிரிப்பின்னூடே தன்னுடைய மீசையையும் முறுக்கிக் கொண்டான்.
ஆறடியைத் தாண்டும் அசாத்திய உயரம் கொண்டவனுக்கு கனகச்சிதமாக இருந்தது அந்த உடை. அதிலும் அவனின் சற்று அடர்ந்த மில்க் சாக்லேட் நிறத்திற்கு அத்தனை எடுப்பாய் இருந்தது.
இன்று தான் முதல் நாள் வேலையில் சேர இருக்கிறான். முழுவதுமாக தயாராகி வெளியே வந்தவனை இமை கொட்டாது பார்த்து நின்றிருந்தார் சாந்தா.
அவரைக் கவனித்துவிட்டவனோ,
ஒரு சின்ன சிரிப்புடன் அவர் கொடுத்த கஞ்சியை பருகியவாறு பணிக்கு கிளம்பி சென்றான்.
திருவான்மியூரில் இருந்து கிளம்பிய அவன் சாக்லேட் நிற டஸ்டர் சென்று நின்ற இடமோ, சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில்!
நேரம் சரியாய் ஆறரை என அவன் ரோலக்ஸ் காட்ட, நிமிர்ந்த நடையுடன் தன்னின் உடமைகளை எடுத்துக்கொண்டு விமான நிலையத்தின் உள்ளே பிரவேசித்தான், வாசுதேவ கிருஷ்ணன்.
★
"தாத்தா, பாட்டிய பத்ரமா பார்த்துப்பீங்களாம். அவசரம்னா எனக்கு போன் பண்ண மறந்துடாதீங்க. நேரத்துக்கு மருந்து சாப்பிடுங்க. அப்புறம்.." என்று சிந்தித்தவள் அருகே நின்றிருந்த தன்னுடைய பாட்டியை கட்டிக்கொண்டு,
"அங்க போன உடன என்னைய மறந்தராத நீலா.." என்று போலி கண்ணீருடன் அவரை இறுக்கிக் கொண்டாள், அம்ருதவர்ஷினி.
தலையில் அடித்துக்கொண்ட அவரோ, "ஏன்டீ.. ஏன்டீ என் மனத்தையே வாங்குற? இப்போ நான் இந்த கண்ராவிய எல்லாம் கேட்டேனா" என்றவர் முகத்தை அஸ்ட கோணலாக வைத்துக்கொள்ள, ஒரு பொங்கிய சிரிப்பு அம்ருதாவின் முகத்தில்.
"டார்லிங்.. அப்போ என் கூட வரது உனக்கு பிடிக்கலையா" என்று நீலாம்பரியாகிய நீலாவை உரசிக்கொண்டே கேட்டார் அவரின் ஆருயிர் கணவரான சாரங்கன்.
"அய்யோ.. காலம் போன கடசீல இதுலாம் தேவையா உங்களுக்கு" அவர் பல்லைக் கடிக்க,
"சாரு நீ விடு, நீலாவுக்கு ஒரே வெக்கம் வெக்கம்.. கம்மிங் கம்மிங், அதான் ஓவரா பிகு பண்ணுது" என்றாள் நீலாவை லேசாக இடித்துக் கொண்டு.
"வெக்கப்படுறீயா டார்லிங்.." என்று கேட்டுக்கொண்ட நீலாவின் பக்கம் வந்த சாரங்கனைப் பார்த்து சற்று அவரே மிரண்டு விட்டார்.
அவரின் அதிர்வு முகத்தில் அப்பட்டமாகத் தெரிய, பொது இடமாக இருக்க அம்ருதாவிற்கு தான் சிரிப்பை அடக்க பெரும்பாடானது.
"ஆனாலும் உனக்கு எங்கையோ மச்சமிருக்கு தாத்தா" என்று அவர்களின் பயண பொதிகளை டிராலியில் தள்ளிக்கொண்டு வந்து நின்ற ஆதவன் கூற,
"நீ ஏன் வயிறு எரியுர பேராண்டி" - சாரங்கன்.
"என்னைய இங்க இருக்குற கேரளாவுக்கு அனுப்ப அத்தன யோசிச்ச உங்க பையன், இந்த வயசுல உங்கள கோ..வா அனுப்புறாரே! அதான்" - ஆதவன்.
"அதுக்கெல்லாம் ஒரு கொடுப்பினை வேணும்டா" - அம்ருதா.
"ஆமா ஆமா.. பேரன் பேத்தியே எடுத்தாச்சு.. இதுல செகண்ட் ஹனிமூன்" என்றவன் முணுமுணுக்க,
"தப்பா சொல்லுறடா பேராண்டி, இது எங்க நாலாவது ஹனிமூன்" என்றார் முகத்தில் சிறு வெக்கச் சாயலுடன்.
"எதேய்.. கஷ்டம், கஷ்டம்.. தயவு செஞ்சு மூஞ்ச அப்படி வெக்காத தாத்தா.. கடுப்பாகுது" என்றவன் பார்வையைத் திருப்பிக் கொண்டான்.
அவரின் பாவனையை பார்த்தபடி நின்றிருந்த அம்ருதா, "சாரு" என்று சிரிப்பினூடே அவரை அணைத்துக் கொண்டாள்.
"வயசு பசங்க கிட்ட பேசுற பேச்சா இது" என்று வெளியே சொன்னாலுமே நீலாம்பரியின் முகமும் ஒரு மென்மையை கொண்டிருந்தது.
"அப்பா, மாத்திரை மருந்தெல்லாம் எடுத்துட்டீங்களா? ஸ்டீமர், ஸ்கார்ப் எல்லாம் இருக்கா?" என்று கேட்டுக்கொண்டே அவர்களின் டிக்கெட்டை சரி பார்த்தவாறு வந்து நின்றார், சுந்தரேஸ்வரர்.
"எல்லாம் இருக்குடா. நீ மொதல்ல டிக்கெட்ட கொடு. நாங்க கிளம்புறோம்" என்றவர் பரபரக்க, 'கிழவனுக்கு அவசரத்த பாரேன்' என்று மனதில் அவரால் நினைக்காமல் இருக்க முடியவில்லை.
"உங்க மைண்ட் வாய்ஸ்ஸ நான் கேச் பண்ணிட்டேன் டாடி" என்ற சிரித்துக் கொண்டே சொன்ன அம்ருதாவை,
"அம்ரூ, நீயும் தான் இவங்க கூட போற" என்று கடைசி நேர அணுகுண்டைப் போட்டார் அவளின் தந்தை சுந்தரேஸ்வரர்.
"வாட்" என்று அதிர்ந்த குரல்கள் கேட்க,
"என்ன வாட்? உங்கள தனியா அனுப்ப வேண்டாம்னு சரோ சொல்லுறான். அதான் அம்ரூ வில் அக்கோம்பனி யூ போத்" என்றார் சுந்தரேஸ்வரர்.
"அப்பா, நான் ஒன்னுமே பேக் பண்ணல அண்ட் இட்ஸ் தேயர் டிரிப்"
"அம்மா எடுத்துட்டு வராங்க அம்ரூ. அவங்க எல்டர்லி பீப்பிள்டா, அதான்" என்று தன்மையாகவே மகளிடம் சுந்தரேஸ்வரர் பேசப் பேச,
"யாருடா உனக்கு எல்டர்லி பீப்பிள்? நானா.. நானா.." என்று அவரிடம் சண்டைக்கு வந்திருந்தார் சாரங்கன்.
அவரின் பாவனையே அனைவருக்கும் சிரிப்பைக் கொடுக்க ஆதவன், "அப்புறம்.. யங் மேன், பேத்திய கூட வெச்சுட்டே ஃபோர்த் ஹனிமூன் போல" எனச் சிரித்துக்கொண்டே கேட்டவனை வெட்டவா குத்தவா என்ற திக்கில் பார்த்து வைத்தார், சாரங்கன்.
"சரி அப்பா நீங்க முன்னாடி போங்க, மீனா வந்துட்டு இருக்கா. அம்ரூ லக்கேஜ் வந்தோடனே செக்-இன் பண்ணிக்கலாம்" என்றவர் ஆதவனிடம் ஏதோ வாங்கி வர சொல்லி அனுப்பி வைத்தார்.
இதற்கிடையே அவர் மனைவி மீனாட்சியிடமிருந்து அழைப்பு வர, அதனை எடுத்துக்கொண்டே சிறிது தள்ளி நின்றிருந்தார் சுந்தரேஸ்வரர்.
"ஆம் சாரி சாரு" சாரங்கனை அணைத்துக்கொண்டே அம்ரூ அவரிடம் சொல்ல,
"என் பேபி எங்க கூட தான வரப்போறாங்க.. யூ டோண்ட் ஃபீல் ஃபார் தட்" என்றவர் மென்மையாய் அவளின் நெற்றியில் முத்தமிட, பார்க்க அத்தனை நிறைவாக இருந்தது.
நீலாம்பரி அவர்களின் பக்கவாட்டில் நின்றவாறு இவங்களின் பாசம் பிணைப்பை பார்த்துக்கொண்டு இருக்க, அவரை இடித்து தள்ளியவாறே முன்னோக்கி சென்றான் வாசுதேவ கிருஷ்ணன்.
ஒரு நிமிடம் நிலை தடுமாறி விட்டவர், அங்கிருந்த தடுப்பு கம்பியை பிடித்துக் கொண்டு சமாளித்து நின்றுகொண்டார்.
அவரின் தள்ளாடலை பார்த்த தாத்தாவும் பெயர்த்தியும் ஒரு விநாடி அதிர்ந்து பின் அவரைத் தாங்கிக் கொண்டனர்.
வாசுதேவ கிருஷ்ணனுக்கு இருந்த அவசரத்தில் ஓடிக்கொண்டே "ஆம் சாரி" என்று திரும்பிக் கூடப் பார்க்காமல் விரைந்திருந்தான்.
"டி பாரி.. ஒன்னுமில்லையே" என பதறிப் போய் கேட்ட சாரங்கனின் உடலிலுமே ஒரு உதறல் தோன்ற, அதை கவனித்துவிட்ட அம்ருதாவிற்கோ கோபம் கண்ணை மறைத்திருந்தது.
"ஈஸ்வரா.." என்று சற்று பதட்டமான குரலில் நீலாம்பரி கடவுளையும் மகனையும் அழைத்தவாறு தரையில் அமர்ந்துவிட, சாரங்கனுக்கு மனது படபடத்தது.
அவருக்கு ஒன்றும் ஆகவில்லை என்று ஊர்ஜிதப்படுத்திய அம்ருதா, "யூ பிலடி ***" என்று அவனை அர்ச்சித்தவாறே வாசுவின் பின்னால் ஓடினாள்.
அவள் அணிந்திருந்த ஸ்கட்டை தூக்கியபடி ஓடியவளை என்னவோ ஏதோவென்று பின் தொடர்ந்து ஓடினர், விமான நிலைய காவல் அதிகாரிகள்.
கேட்டை தாண்டி செக்யூரிட்டி செக்கிங் வந்தும் கூட அவளின் ஓட்டம் தடைபடவில்லை.
ஓட்டம் முழுவதிலும் அவனை வசைபாடியவாறே இருந்தவள் சட்டென்று அங்கிருந்த பயணி ஒருவரின் காஃபி கப்பை பறித்த வேகத்தில் வாசுவை நோக்கி இன்னும் வேகமாக ஓடினாள்.
சுற்றி நடக்கும் எந்த விசயத்தையும் கருத்தில் கொள்ளாமல் அவள் பாட்டிற்கு நடந்துகொள்ள, அங்கு தன்னின் அடையாளத்தை உறுதி செய்ய நின்றிருந்தவனின் பின்புற சட்டையானது காஃபி அபிஷேகம் செய்யப்பட்டது, அம்ருதவர்ஷினியால்!
ஒரு நொடி அங்கிருந்த அனைவருமே ஸ்தம்பித்து விட்டனர்!
எதற்காக? என்ற கேள்வி அனைவர் முகத்திலுமே இருக்க, வாசுதேவிற்கோ பற்றிக்கொண்டு ஆத்திரம் வந்தது.
"வாட் தி ஹெல்" என்று அவன் திரும்ப, அங்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியவாறு நின்றிருந்தாள் அம்ருதா.
கண்களில் ஆத்திரத்தை தோக்கியபடி அவள் நின்றிருக்க, "என்ன ம்மா நீ.. என்ன பிரச்சன உனக்கு" என்று அங்கிருந்த காவலர்கள் அவளை சூழ்ந்து கொண்டனர்.
"அறிவில்ல" என்று எகிறியபடி கோபத்துடன் அவளை நெருங்கியிருந்தான் வாசுதேவ கிருஷ்ணன்.
"உனக்கு மட்டும் கிலோ கணக்கில இருக்கா என்ன?" என்றவளின் கூற்றிற்கு ஆத்திரம் கட்டுக்கடங்காது வர, அவனை தடை செய்தது அங்கிருந்த பணிபெண்ணின் குரல்.
"ஸார், இட்ஸ் கெட்டிங் லேட். ப்ளீஸ் கெட் ச்சேஞ்ட் ஆப் யுவர் செல்ஃப்" என்று அடக்கத்துடன் அப்பெண் சொல்லியிருந்தாலும், இந்த நிலைமை தனக்கு வந்ததற்கான காரணகர்த்தாவை அடித்து வீழ்த்தும் கோபம் அவன் முகத்தில்.
அதற்குள் காவலர்கள் அவளை விசாரிக்க ஆரம்பித்திருக்க, வாசுதேவகிருஷ்ணனையும் இங்கிருந்து அழைத்துச் சென்றிருந்தனர் விமான நிலைய அதிகாரிகள்.
போகும் அவனையே பார்த்திருந்தவள் அப்போது தான் அவனைத் திரும்பி ஏதும் கேட்காதது நினைவிற்கு வர,
"டேய் முள்ளபன்னி தலையா.. வாய் நீளத்துக்கு இங்கிலிஷ் பேசுனா மட்டும் போதாது. மூஞ்சில இருக்கிற கண்ணும் தெரியனும்! அதவிட முக்கியமா மேனர்ஸ் இருக்கனும்" என்றவள் அவனையே பார்த்தவாறு காவலர்களின் இழுப்பிற்கு சென்றாள்.
முதலில் யாரோ என்று நினைத்தவன், பின் அவள் குரலின் அடையாளத்துடன் திரும்பிப் பார்க்க அவளின் சொற்கள் இவனுக்குத் தான் தீயாய் எரிந்தது!
அதிலும் 'என்ன, என்ன வார்த்தைகளை பிரயோகிக்கிறாள் இந்த பெண்' என்று நினைக்கையில் அவனின் கை முஷ்டிகளை இறுக்கி தன்னின் கோபத்தை அவன் கட்டுக்குள் கொண்டு வர மிகுந்த பிரயத்தனபட்டான், வாசுதேவ கிருஷ்ணன்.
அம்ருதாவை அங்கிருந்த காவலர் கண்கணிப்பு அறைக்கு அழைத்துச் சென்றுவிட்டனர் அந்த அதிகாரிகள். அங்கு அவளை விசாரிக்கிறேன் என்ற பெயரில் போட்டு துளைத்து எடுக்க, அவளின் கோபம் ஹை பிச்சில் ஏறி நின்றிருந்தது.
அப்போது சரியாய் சுந்தரேஸ்வரர் வந்து அவளை வினவ, பொங்கிவிட்டாள் அவரிடம்.
"வயசானவங்கள இடிச்சுட்டு ஓடி வந்தது அவன்! அவன் சட்டைய பிடிச்சு ஏன்டானு கேட்கறதுக்குள்ள என்னைய தூக்கிட்டு வந்தது இவங்க! இதுல என் தப்பு எங்க இருக்கு டாடி" என்று சுந்தரேஸ்வரரிடம் சண்டைக்கு நின்றிருந்தாள் அம்ருதா.
அவளை முறைத்துக்கொண்டே, "என் மதர் கொஞ்சம் ஸ்லிப் ஆகிட்டாங்க ஸார். தட்ஸ் வை ஷி பெஹோவ்ட் லைக் தட் (எங்க அம்மா கொஞ்சம் தடுமாறிட்டாங்க. அதான் இவள் இப்படி நடந்து கொண்டாள்) " என்ற சுந்தரேஸ்வரரின் விளக்கம் அந்த அதிகாரிக்கு திருப்தியாக இல்லை என்று அவர் முகத்திலேயே நன்கு தெரிந்து.
இருந்தும் ஒரு பெரிய மனிதர், மகளின் செயலால் மன்னிப்பு வேறு கேட்க என்ன செய்ய முடியும் அவர்களால்?
"டோன்ட் ரிப்பீட் இட் அகைன் மிஸ் (இதை திரும்ப செய்யாதீர்கள்) " என்ற எச்சரிக்கையுடன் அவர்களை விட்டுவிட்டனர்.
"அப்பா, தயவு செஞ்சு திரும்ப ஆரம்பிக்காதீங்க. எனக்கு முடியல" என்றவள் அவரிடம் விடைப்பெற்று செக்-இன் நோக்கி சென்றாள்.
அவளுக்கு முன்பே சாரங்கனும் நீலாம்பரியும் பரிசோதனை செய்து உள்ளே சென்றிருக்க, அந்த பிரச்சனையால் சிறிது தாமதமாகியிருந்தது.
'உர்' என்ற முகத்துடன் விமானத்திற்குள்ளே சென்றவளின் பார்வையில் விழுந்தான் அவன்.
"எதேய்ய்.. இவன் தான் பைலட்டா!" என்று யூனிபார்ம் அணிந்து நின்றவனை முழுதாக பார்த்தபின் அவள் ஸ்தம்பித்துவிட்டாள் என்பதே உண்மை.
அமுதம் தொடரும்...
அதிகாலை வேலையில் ஆதவனின் தரிசனத்தை நின்று, நிதானமாக ரசித்துப் பார்ப்பதென்பது பலருக்கு வாய்ப்பதே இல்லை. ஆனால் இன்று அதற்கென்றே நன்னாளாக அமைந்ததுவோ என்று என்னும் அளவிற்கு அவருமே தன் கதிர்களை எல்லாம் மெல்ல மெல்ல பார் எங்கும் பரப்பிக் கொண்டே துயில் கலைந்தார்.
மஞ்சளும் சிவப்பும் ஆரஞ்சும் கலந்து, நீ பெரியவளா இல்லை நான் பெரியவளா என்று சண்டையிட்டவாறே கதிர்கள் தங்களின் நிறத்தை வானம் என்னும் தாளில் தீட்டிக்கொண்டிருக்க,
நன்கு தெளிந்த நீல வானமும் அதற்கு தோதாய் வெண்ணிற மேகங்களை கொண்டு கண்ணைப் பறித்தது.
கடல் அன்னையின் மேற்புறத்தில் சூரியனவனின் கதிரொலிகள் பட்டு தங்கமென ஜொலிக்க, அந்த அதிகாலை வேளையில் பாய்மர கப்பலில் பயணம் செய்வோர் கூட, அந்த ஒளியில் எறும்புகளாய் தான் தோன்றினர் அவனின் கண்களுக்கு.
கடலை ஒட்டியிருந்த வானைத் தொட்டுவிடும் உயரத்தில் ஓங்கி உயர்ந்த ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் எட்டாவது தளத்தில் ஜம்மென்று நின்றவாறே ஆற அமர இக்காட்சிகளை பார்த்துக்கொண்டிருந்தான், வாசுதேவ கிருஷ்ணன்.
அந்த நேரத்திலேயே குளித்து முடித்து, வீட்டில் அணியும் ஒரு இலகுவான ஆடையை அணிந்து கொண்டு, இடக்கையில் தனது காஃபி கப்புடன் கண்களில் ஒரு தீர்க்க பார்வையைக் கொண்டு நின்றிருந்தான் அவன்.
குளிர்ந்த காற்று அவன் மேனியை இதமாகச் தழுவிச் செல்ல, அதனை ரசித்தவனின் கண்களும் இதழ்களும் ஒரு மென்னகை புரிந்தன.
சொட்டு விடாது ரசித்து குடித்த காஃபியின் கசப்பு நாவில் தவழ்ந்த வண்ணம் இருக்க, உமிழ் நீரைக் கூட்டி விழுங்கியவனின் காதுகளை தீண்டியது வீட்டின் அழைப்பு மணி.
"தம்பி, கிளம்பிட்டீங்களா? செத்த நேரமிருங்க டிஃபன் செஞ்சு தாரேன்" என்றவாறே தன் வயர் கூடையுடன் சமையல் அறை நோக்கி சென்றார் சாந்தா, அந்த வீட்டின் சமையல் அம்மா.
"சாந்தா ம்மா, எனக்கு கஞ்சி மட்டும் செஞ்சு வைங்க. மதியம் ராகவ் வருவான், அவன கேட்டு லஞ்ச் செஞ்சுடுங்க" என்றவன் தன் குடித்தக் கப்பை கழுவி, அதன் இடத்தில் வைத்துவிட்டு தன் அறையை நோக்கிச் சென்றான்.
அவனின் செயலால் மனதில் எப்போதும் துளிர்க்கும் மகிழ்வு, இன்றுமே வந்து சாந்தாவின் முகத்தில் ஒரு மலர்ச்சியைக் கொடுத்தது.
என்றும் இல்லாத ஒரு நிறைவு அவன் மனதில். ஒரு நீண்ட மூச்சை இழுத்துவிட்டவாறே கட்டிலில் இருந்த சீருடையை அணிந்துக் கொண்டான், வாசுதேவ கிருஷ்ணன்.
வெள்ளை நிற முழுக்கை சட்டையும், ஆழ்ந்த நீல நிற காற்சட்டையும் அதன் நிறத்திலேயே வெள்ளை பட்டைகளைக் கொண்ட கழுத்து அட்டியும் (டை!) அணிந்து நின்றவனின் தோற்றம் அவனுக்கே ஒரு கர்வத்தைக் கொடுத்தது.
இறுதியாய் 'என்னையும் அணிந்து கொள்ளேன்' என்ற தொப்பி அவனின் கவனத்தை தன்பால் ஈர்க்க, அதனை அணிந்துகொண்டு நிமிர்ந்து நின்றவன் மகிழ்ச்சியின் பயனாய் ஒரு விரிந்த சிரிப்பின்னூடே தன்னுடைய மீசையையும் முறுக்கிக் கொண்டான்.
ஆறடியைத் தாண்டும் அசாத்திய உயரம் கொண்டவனுக்கு கனகச்சிதமாக இருந்தது அந்த உடை. அதிலும் அவனின் சற்று அடர்ந்த மில்க் சாக்லேட் நிறத்திற்கு அத்தனை எடுப்பாய் இருந்தது.
இன்று தான் முதல் நாள் வேலையில் சேர இருக்கிறான். முழுவதுமாக தயாராகி வெளியே வந்தவனை இமை கொட்டாது பார்த்து நின்றிருந்தார் சாந்தா.
அவரைக் கவனித்துவிட்டவனோ,
ஒரு சின்ன சிரிப்புடன் அவர் கொடுத்த கஞ்சியை பருகியவாறு பணிக்கு கிளம்பி சென்றான்.
திருவான்மியூரில் இருந்து கிளம்பிய அவன் சாக்லேட் நிற டஸ்டர் சென்று நின்ற இடமோ, சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில்!
நேரம் சரியாய் ஆறரை என அவன் ரோலக்ஸ் காட்ட, நிமிர்ந்த நடையுடன் தன்னின் உடமைகளை எடுத்துக்கொண்டு விமான நிலையத்தின் உள்ளே பிரவேசித்தான், வாசுதேவ கிருஷ்ணன்.
★
"தாத்தா, பாட்டிய பத்ரமா பார்த்துப்பீங்களாம். அவசரம்னா எனக்கு போன் பண்ண மறந்துடாதீங்க. நேரத்துக்கு மருந்து சாப்பிடுங்க. அப்புறம்.." என்று சிந்தித்தவள் அருகே நின்றிருந்த தன்னுடைய பாட்டியை கட்டிக்கொண்டு,
"அங்க போன உடன என்னைய மறந்தராத நீலா.." என்று போலி கண்ணீருடன் அவரை இறுக்கிக் கொண்டாள், அம்ருதவர்ஷினி.
தலையில் அடித்துக்கொண்ட அவரோ, "ஏன்டீ.. ஏன்டீ என் மனத்தையே வாங்குற? இப்போ நான் இந்த கண்ராவிய எல்லாம் கேட்டேனா" என்றவர் முகத்தை அஸ்ட கோணலாக வைத்துக்கொள்ள, ஒரு பொங்கிய சிரிப்பு அம்ருதாவின் முகத்தில்.
"டார்லிங்.. அப்போ என் கூட வரது உனக்கு பிடிக்கலையா" என்று நீலாம்பரியாகிய நீலாவை உரசிக்கொண்டே கேட்டார் அவரின் ஆருயிர் கணவரான சாரங்கன்.
"அய்யோ.. காலம் போன கடசீல இதுலாம் தேவையா உங்களுக்கு" அவர் பல்லைக் கடிக்க,
"சாரு நீ விடு, நீலாவுக்கு ஒரே வெக்கம் வெக்கம்.. கம்மிங் கம்மிங், அதான் ஓவரா பிகு பண்ணுது" என்றாள் நீலாவை லேசாக இடித்துக் கொண்டு.
"வெக்கப்படுறீயா டார்லிங்.." என்று கேட்டுக்கொண்ட நீலாவின் பக்கம் வந்த சாரங்கனைப் பார்த்து சற்று அவரே மிரண்டு விட்டார்.
அவரின் அதிர்வு முகத்தில் அப்பட்டமாகத் தெரிய, பொது இடமாக இருக்க அம்ருதாவிற்கு தான் சிரிப்பை அடக்க பெரும்பாடானது.
"ஆனாலும் உனக்கு எங்கையோ மச்சமிருக்கு தாத்தா" என்று அவர்களின் பயண பொதிகளை டிராலியில் தள்ளிக்கொண்டு வந்து நின்ற ஆதவன் கூற,
"நீ ஏன் வயிறு எரியுர பேராண்டி" - சாரங்கன்.
"என்னைய இங்க இருக்குற கேரளாவுக்கு அனுப்ப அத்தன யோசிச்ச உங்க பையன், இந்த வயசுல உங்கள கோ..வா அனுப்புறாரே! அதான்" - ஆதவன்.
"அதுக்கெல்லாம் ஒரு கொடுப்பினை வேணும்டா" - அம்ருதா.
"ஆமா ஆமா.. பேரன் பேத்தியே எடுத்தாச்சு.. இதுல செகண்ட் ஹனிமூன்" என்றவன் முணுமுணுக்க,
"தப்பா சொல்லுறடா பேராண்டி, இது எங்க நாலாவது ஹனிமூன்" என்றார் முகத்தில் சிறு வெக்கச் சாயலுடன்.
"எதேய்.. கஷ்டம், கஷ்டம்.. தயவு செஞ்சு மூஞ்ச அப்படி வெக்காத தாத்தா.. கடுப்பாகுது" என்றவன் பார்வையைத் திருப்பிக் கொண்டான்.
அவரின் பாவனையை பார்த்தபடி நின்றிருந்த அம்ருதா, "சாரு" என்று சிரிப்பினூடே அவரை அணைத்துக் கொண்டாள்.
"வயசு பசங்க கிட்ட பேசுற பேச்சா இது" என்று வெளியே சொன்னாலுமே நீலாம்பரியின் முகமும் ஒரு மென்மையை கொண்டிருந்தது.
"அப்பா, மாத்திரை மருந்தெல்லாம் எடுத்துட்டீங்களா? ஸ்டீமர், ஸ்கார்ப் எல்லாம் இருக்கா?" என்று கேட்டுக்கொண்டே அவர்களின் டிக்கெட்டை சரி பார்த்தவாறு வந்து நின்றார், சுந்தரேஸ்வரர்.
"எல்லாம் இருக்குடா. நீ மொதல்ல டிக்கெட்ட கொடு. நாங்க கிளம்புறோம்" என்றவர் பரபரக்க, 'கிழவனுக்கு அவசரத்த பாரேன்' என்று மனதில் அவரால் நினைக்காமல் இருக்க முடியவில்லை.
"உங்க மைண்ட் வாய்ஸ்ஸ நான் கேச் பண்ணிட்டேன் டாடி" என்ற சிரித்துக் கொண்டே சொன்ன அம்ருதாவை,
"அம்ரூ, நீயும் தான் இவங்க கூட போற" என்று கடைசி நேர அணுகுண்டைப் போட்டார் அவளின் தந்தை சுந்தரேஸ்வரர்.
"வாட்" என்று அதிர்ந்த குரல்கள் கேட்க,
"என்ன வாட்? உங்கள தனியா அனுப்ப வேண்டாம்னு சரோ சொல்லுறான். அதான் அம்ரூ வில் அக்கோம்பனி யூ போத்" என்றார் சுந்தரேஸ்வரர்.
"அப்பா, நான் ஒன்னுமே பேக் பண்ணல அண்ட் இட்ஸ் தேயர் டிரிப்"
"அம்மா எடுத்துட்டு வராங்க அம்ரூ. அவங்க எல்டர்லி பீப்பிள்டா, அதான்" என்று தன்மையாகவே மகளிடம் சுந்தரேஸ்வரர் பேசப் பேச,
"யாருடா உனக்கு எல்டர்லி பீப்பிள்? நானா.. நானா.." என்று அவரிடம் சண்டைக்கு வந்திருந்தார் சாரங்கன்.
அவரின் பாவனையே அனைவருக்கும் சிரிப்பைக் கொடுக்க ஆதவன், "அப்புறம்.. யங் மேன், பேத்திய கூட வெச்சுட்டே ஃபோர்த் ஹனிமூன் போல" எனச் சிரித்துக்கொண்டே கேட்டவனை வெட்டவா குத்தவா என்ற திக்கில் பார்த்து வைத்தார், சாரங்கன்.
"சரி அப்பா நீங்க முன்னாடி போங்க, மீனா வந்துட்டு இருக்கா. அம்ரூ லக்கேஜ் வந்தோடனே செக்-இன் பண்ணிக்கலாம்" என்றவர் ஆதவனிடம் ஏதோ வாங்கி வர சொல்லி அனுப்பி வைத்தார்.
இதற்கிடையே அவர் மனைவி மீனாட்சியிடமிருந்து அழைப்பு வர, அதனை எடுத்துக்கொண்டே சிறிது தள்ளி நின்றிருந்தார் சுந்தரேஸ்வரர்.
"ஆம் சாரி சாரு" சாரங்கனை அணைத்துக்கொண்டே அம்ரூ அவரிடம் சொல்ல,
"என் பேபி எங்க கூட தான வரப்போறாங்க.. யூ டோண்ட் ஃபீல் ஃபார் தட்" என்றவர் மென்மையாய் அவளின் நெற்றியில் முத்தமிட, பார்க்க அத்தனை நிறைவாக இருந்தது.
நீலாம்பரி அவர்களின் பக்கவாட்டில் நின்றவாறு இவங்களின் பாசம் பிணைப்பை பார்த்துக்கொண்டு இருக்க, அவரை இடித்து தள்ளியவாறே முன்னோக்கி சென்றான் வாசுதேவ கிருஷ்ணன்.
ஒரு நிமிடம் நிலை தடுமாறி விட்டவர், அங்கிருந்த தடுப்பு கம்பியை பிடித்துக் கொண்டு சமாளித்து நின்றுகொண்டார்.
அவரின் தள்ளாடலை பார்த்த தாத்தாவும் பெயர்த்தியும் ஒரு விநாடி அதிர்ந்து பின் அவரைத் தாங்கிக் கொண்டனர்.
வாசுதேவ கிருஷ்ணனுக்கு இருந்த அவசரத்தில் ஓடிக்கொண்டே "ஆம் சாரி" என்று திரும்பிக் கூடப் பார்க்காமல் விரைந்திருந்தான்.
"டி பாரி.. ஒன்னுமில்லையே" என பதறிப் போய் கேட்ட சாரங்கனின் உடலிலுமே ஒரு உதறல் தோன்ற, அதை கவனித்துவிட்ட அம்ருதாவிற்கோ கோபம் கண்ணை மறைத்திருந்தது.
"ஈஸ்வரா.." என்று சற்று பதட்டமான குரலில் நீலாம்பரி கடவுளையும் மகனையும் அழைத்தவாறு தரையில் அமர்ந்துவிட, சாரங்கனுக்கு மனது படபடத்தது.
அவருக்கு ஒன்றும் ஆகவில்லை என்று ஊர்ஜிதப்படுத்திய அம்ருதா, "யூ பிலடி ***" என்று அவனை அர்ச்சித்தவாறே வாசுவின் பின்னால் ஓடினாள்.
அவள் அணிந்திருந்த ஸ்கட்டை தூக்கியபடி ஓடியவளை என்னவோ ஏதோவென்று பின் தொடர்ந்து ஓடினர், விமான நிலைய காவல் அதிகாரிகள்.
கேட்டை தாண்டி செக்யூரிட்டி செக்கிங் வந்தும் கூட அவளின் ஓட்டம் தடைபடவில்லை.
ஓட்டம் முழுவதிலும் அவனை வசைபாடியவாறே இருந்தவள் சட்டென்று அங்கிருந்த பயணி ஒருவரின் காஃபி கப்பை பறித்த வேகத்தில் வாசுவை நோக்கி இன்னும் வேகமாக ஓடினாள்.
சுற்றி நடக்கும் எந்த விசயத்தையும் கருத்தில் கொள்ளாமல் அவள் பாட்டிற்கு நடந்துகொள்ள, அங்கு தன்னின் அடையாளத்தை உறுதி செய்ய நின்றிருந்தவனின் பின்புற சட்டையானது காஃபி அபிஷேகம் செய்யப்பட்டது, அம்ருதவர்ஷினியால்!
ஒரு நொடி அங்கிருந்த அனைவருமே ஸ்தம்பித்து விட்டனர்!
எதற்காக? என்ற கேள்வி அனைவர் முகத்திலுமே இருக்க, வாசுதேவிற்கோ பற்றிக்கொண்டு ஆத்திரம் வந்தது.
"வாட் தி ஹெல்" என்று அவன் திரும்ப, அங்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியவாறு நின்றிருந்தாள் அம்ருதா.
கண்களில் ஆத்திரத்தை தோக்கியபடி அவள் நின்றிருக்க, "என்ன ம்மா நீ.. என்ன பிரச்சன உனக்கு" என்று அங்கிருந்த காவலர்கள் அவளை சூழ்ந்து கொண்டனர்.
"அறிவில்ல" என்று எகிறியபடி கோபத்துடன் அவளை நெருங்கியிருந்தான் வாசுதேவ கிருஷ்ணன்.
"உனக்கு மட்டும் கிலோ கணக்கில இருக்கா என்ன?" என்றவளின் கூற்றிற்கு ஆத்திரம் கட்டுக்கடங்காது வர, அவனை தடை செய்தது அங்கிருந்த பணிபெண்ணின் குரல்.
"ஸார், இட்ஸ் கெட்டிங் லேட். ப்ளீஸ் கெட் ச்சேஞ்ட் ஆப் யுவர் செல்ஃப்" என்று அடக்கத்துடன் அப்பெண் சொல்லியிருந்தாலும், இந்த நிலைமை தனக்கு வந்ததற்கான காரணகர்த்தாவை அடித்து வீழ்த்தும் கோபம் அவன் முகத்தில்.
அதற்குள் காவலர்கள் அவளை விசாரிக்க ஆரம்பித்திருக்க, வாசுதேவகிருஷ்ணனையும் இங்கிருந்து அழைத்துச் சென்றிருந்தனர் விமான நிலைய அதிகாரிகள்.
போகும் அவனையே பார்த்திருந்தவள் அப்போது தான் அவனைத் திரும்பி ஏதும் கேட்காதது நினைவிற்கு வர,
"டேய் முள்ளபன்னி தலையா.. வாய் நீளத்துக்கு இங்கிலிஷ் பேசுனா மட்டும் போதாது. மூஞ்சில இருக்கிற கண்ணும் தெரியனும்! அதவிட முக்கியமா மேனர்ஸ் இருக்கனும்" என்றவள் அவனையே பார்த்தவாறு காவலர்களின் இழுப்பிற்கு சென்றாள்.
முதலில் யாரோ என்று நினைத்தவன், பின் அவள் குரலின் அடையாளத்துடன் திரும்பிப் பார்க்க அவளின் சொற்கள் இவனுக்குத் தான் தீயாய் எரிந்தது!
அதிலும் 'என்ன, என்ன வார்த்தைகளை பிரயோகிக்கிறாள் இந்த பெண்' என்று நினைக்கையில் அவனின் கை முஷ்டிகளை இறுக்கி தன்னின் கோபத்தை அவன் கட்டுக்குள் கொண்டு வர மிகுந்த பிரயத்தனபட்டான், வாசுதேவ கிருஷ்ணன்.
அம்ருதாவை அங்கிருந்த காவலர் கண்கணிப்பு அறைக்கு அழைத்துச் சென்றுவிட்டனர் அந்த அதிகாரிகள். அங்கு அவளை விசாரிக்கிறேன் என்ற பெயரில் போட்டு துளைத்து எடுக்க, அவளின் கோபம் ஹை பிச்சில் ஏறி நின்றிருந்தது.
அப்போது சரியாய் சுந்தரேஸ்வரர் வந்து அவளை வினவ, பொங்கிவிட்டாள் அவரிடம்.
"வயசானவங்கள இடிச்சுட்டு ஓடி வந்தது அவன்! அவன் சட்டைய பிடிச்சு ஏன்டானு கேட்கறதுக்குள்ள என்னைய தூக்கிட்டு வந்தது இவங்க! இதுல என் தப்பு எங்க இருக்கு டாடி" என்று சுந்தரேஸ்வரரிடம் சண்டைக்கு நின்றிருந்தாள் அம்ருதா.
அவளை முறைத்துக்கொண்டே, "என் மதர் கொஞ்சம் ஸ்லிப் ஆகிட்டாங்க ஸார். தட்ஸ் வை ஷி பெஹோவ்ட் லைக் தட் (எங்க அம்மா கொஞ்சம் தடுமாறிட்டாங்க. அதான் இவள் இப்படி நடந்து கொண்டாள்) " என்ற சுந்தரேஸ்வரரின் விளக்கம் அந்த அதிகாரிக்கு திருப்தியாக இல்லை என்று அவர் முகத்திலேயே நன்கு தெரிந்து.
இருந்தும் ஒரு பெரிய மனிதர், மகளின் செயலால் மன்னிப்பு வேறு கேட்க என்ன செய்ய முடியும் அவர்களால்?
"டோன்ட் ரிப்பீட் இட் அகைன் மிஸ் (இதை திரும்ப செய்யாதீர்கள்) " என்ற எச்சரிக்கையுடன் அவர்களை விட்டுவிட்டனர்.
"அப்பா, தயவு செஞ்சு திரும்ப ஆரம்பிக்காதீங்க. எனக்கு முடியல" என்றவள் அவரிடம் விடைப்பெற்று செக்-இன் நோக்கி சென்றாள்.
அவளுக்கு முன்பே சாரங்கனும் நீலாம்பரியும் பரிசோதனை செய்து உள்ளே சென்றிருக்க, அந்த பிரச்சனையால் சிறிது தாமதமாகியிருந்தது.
'உர்' என்ற முகத்துடன் விமானத்திற்குள்ளே சென்றவளின் பார்வையில் விழுந்தான் அவன்.
"எதேய்ய்.. இவன் தான் பைலட்டா!" என்று யூனிபார்ம் அணிந்து நின்றவனை முழுதாக பார்த்தபின் அவள் ஸ்தம்பித்துவிட்டாள் என்பதே உண்மை.
அமுதம் தொடரும்...