Shambhavi
Moderator
அத்தியாயம் - 35
இரவு கவிழ்ந்து நிலவு மகள் தன் காதலனிடமிருந்து பெற்ற ஒளியை ஒரு பாதி அண்டத்திற்கு வழங்கிக்கொண்டிருந்தாள்.
அரவிந்த் வீட்டின் பால்கனியில் அதிர்ச்சி மறையாது அமர்ந்திருந்தார் ராகினி.
அரவிந்த் அங்கு வாசுவின் வீட்டில் நடந்ததைச் சொல்ல, மயக்கம் ஒன்று மட்டும் தான் ராகினிக்கு வரவில்லை.
எத்தனை நடந்திருக்கிறது அதைவிட அவரின் மகள் மருமகனை திட்டியும் விட்டுப் பிரிந்து, படிப்பிற்காக செல்ல இருப்பது அத்தனை கோபத்தை கொடுத்தது அவருக்கு.
"இன்னும் கொஞ்ச நேரத்தில வாசு வேதாவ இங்க கொண்டு வந்து விட்டுடுவான் ம்மா. ஜெர்மன் போற வர வேதா இங்க தான் இருப்பா" என்று சொன்ன மகனை அதிர்ச்சி மறையாது பார்த்தவர்,
"என்ன அரவிந்த், அவ தான் புத்தியில்லாம பேசினா உனக்கு எங்கடா போச்சு? அவ பேசும் போது நாலு அரைய விட்டு அங்கையே ராகவ் கூடத் தான் இருக்கனும்னு சொல்ல ஒனக்கு என்ன வந்துச்சாம்? இப்போ இவ அங்க போய் தான் படிக்கனுமா? ஏன் இங்க எத்தன காலேஜ் இருக்கு? சொன்னா நீயோ இல்லை ராகவோ படிக்க வைக்க மாட்டீங்களா? எனக்கு வர ஆத்திரத்துக்கு" என்று அவர் இன்னும் ஆத்திரப்பட்டு பேசிக்கொண்டிருக்க, அரவிந்திற்கு அழைத்திருந்தார், சொக்கநாதன்.
சொக்கநாதன், அரவிந்த் காவ்யாவின் தகப்பன். இதுவரை வெளியில் அதிகம் எங்கும் வந்திராது தொழிலை மட்டும் மூச்சாய் நினைக்கும் மனிதர்.
அவரின் 'வேதா சர்க்யூட்ஸ்' தற்சமயம் தமிழகம் கேளரத்தில் மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பு செய்வதிலும் பெரும் நிறுவனங்களின் உபகரணங்கள் விநியோகம் செய்வதிலும் கொடிக்கட்டி பறக்கிறது.
தன்னை எங்கும் முதன்மை படுத்த நினைக்காத கடும் உழைப்பாளி. தொழில், அது ஒன்று மட்டும் தான் அவருக்கு பிரதானம். அதற்கென்று குடும்பத்தை நட்டாற்றில் விடும் நபரும் அல்ல. அவர்களுக்காக நேரத்தை ஒதுக்கும் அளவிற்கு இடம் கொடுக்காது தொழிலில் ஈடுபடும் நபர்.
அரவிந்த் காவ்யா என்று இருவரும் அவரின் செல்லங்களாக இருந்தாலும் சில வருடங்களாக அரவிந்திடம் ஒரு ஒதுக்கம். அதுவும் அவன் சொக்கநாதனை சார்ந்திராமல் அவனே படித்து இப்போ ஒரு வழக்கறிஞராக இருக்கவும் தந்தையாய் அவரின் இறுமாப்பு அடிவாங்கியிருந்தது.
கிட்டத்தட்ட பல வருடங்களாக இருவரும் பேசிக்கொள்ளவே இல்லை. அப்படியிருக்க இப்போது அவரின் அழைப்பு அவனை யோசிக்க வைத்தது.
இப்போது தொல்லை போல் ஒலித்த தொலைப்பேசியை எடுக்காது தாமதித்தவனை பார்த்த ராகினி, "யாருடா? வேதாவா" என்று அவரே கேட்டு அதை பிடிங்கிக்கொள்ள, அதில் தெரிந்த பெயர் அவருக்கு அத்தனை பயத்தைக் கொடுத்தது.
காவ்யாவின் திருமணமும் சொக்கநாதனிடம் முதலில் சொல்லப்படவில்லை, அதற்கே அத்தனை வருந்தி, நொந்து போனவர் இப்போது மகளின் முடிவில் என்ன முடிவெடுப்பார் என்று தெரியாது பயந்தார் ராகினி.
"அப்பாடா, இவருக்கு நான் என்ன பதில் சொல்லுவேன். என்னைய நம்பி தானே உங்க ரெண்டு பேரையும் விட்டுட்டு இந்த மனுஷே தொழிலக் கட்டி அழுகறார், இப்போ எல்லாம் மண்ணா போச்சு" என்று தன் போக்கில் சொல்லி அழுதவரை சமாதானம் உரைக்கும் நிலையில் அவன் இல்லை.
மனதில் அத்தனை யோசனை. சாதாரணமாக கூப்பிடாத மனிதர் இத்தனை வருடங்களுக்கு பின்னர் அதுவும் இன்று இப்போது அழைத்திருப்பது அவனை ஏதோ சிந்திக்க செய்ய, சட்டென்று அவருக்கு அழைத்திருந்தான்.
இரண்டாம் ரிங்கிலேயே அழைப்பு ஏற்றப்பட்டாலும் பெரும் மௌனம் இருபக்கமும்.
பின் சொக்கநாதனே, "தம்பி, ராணிகிட்ட சொல்லாம கொஞ்சம் செங்கல்பட்டு கவர்மென்ட் காலேஜ் ஹாஸ்டலில் வாரீங்களா?" என்றார் மிகுந்த தயக்கமான மெல்லிய குரலில்.
உடனே பரபரப்பு தொற்றிக் கொண்டது அவனிடம்.
"உங்களுக்கு?" என்று அடுத்து சொல்ல வந்ததை நிறுத்தியவன்,
"வந்தறேன்" என்றுவிட்டு ராகினியிடம் ஏதேதோ காரணத்தை சொல்லி தன் ஜூனியர்ஸ் இருவரை அழைத்தக்கொண்டு அங்கு விரைந்தான்.
கிட்டத்தட்ட இரண்டே கால் மணிநேரம் ஆகியிருந்தது. அரக்கப் பறக்க அவன் மருத்துவமனை வளாகத்தினுள் நுழையும் முன்பே அவன் இதயத்தின் லப் - டப் லயம் பெரியதாய் அதிர்ந்தது.
சொக்கநாதனுக்கு ஒன்றும் இருக்காது என்று அவன் மூளை சொன்னாலும் மகனாய் அவருக்காய் அவனின் இதயம் துவண்டு துடிக்காமல் இல்லை.
நிடத்திற்கு நிமிடம் அவர் இருந்த அறைக்குள் செல்லும் வரை, அவன் உடல் அதிர்வு அதிர்ந்து அவனை நிலைக்கொள்ளாது வைத்திருந்தது.
"எல்லாம் எக்ஸ்டர்ணல் இஞ்சுரிஸ் தான். ப்ளட் அவ்வளவு போகல ஆனா வயசாகறனால கொஞ்சம் நாள் ஆகும் காயம் எல்லாம் ஆற" என்று மருத்துவர் சொல்வதைக் கேட்டு, அதிர்ந்து அறை வாயிலேயே நின்றுவிட்டான் அரவிந்த்.
அத்தனை வருடம் இருந்த வீம்பு முற்றும் அறுந்து, "ப்பா" என்று கூவலுடன் அறைக்குள் பிரவேசித்தவனை வரவேற்றது என்னமோ அவர் தான்.
அவர், புவனா திருமழிசை!
✦
அம்ருதாவின் வீட்டில் இரவு உணவிற்காக அனைவரும் கூடியிருந்தனர்.
எளிதான உணவுகளைத் தான் அன்று சமைத்திருந்தார் நீலாம்பரி. வழக்கம் போல், இரண்டு மூன்று வகைகள் இல்லாது வெறும் இட்லி மட்டும் காட்சி தரவும் ஆதவனுக்கு முகம் கூம்பியது.
"ம்மா, தோசை சுட்டு கொடேன்" என்று மெல்ல அவன் மீனாட்சியை நச்சரிக்க ஆரம்பித்தான்.
வீட்டில் சுந்தரேஸ்வரர் இருந்தால் அங்கிருக்கும் அனைவரும் பூனை பேச்சு தான் பேசுவர். இதில் இன்று சரவணன் வேறு அவருக்கு சரிக்கு சரியாய் பேசியிருக்க, ஒருவருக்கும் சப்தம் வரவில்லை.
வாசு வந்து சென்று பின்னர் அவரின் அறைக்குச் சென்ற சரவணன் இன்னும் வெளியே வரவில்லை. உண்ண கூப்பிட்டாலும் பின்னர் என்றுவிட மற்றவர் வந்துவிட்டனர்.
அவருக்கான தனிமையும் சிந்திக்கும் நேரத்தையும் வழங்கிவிட்டு அனுவும் வந்துவிட்டார்.
"என்ன ஆது வேணும்" என்று மெல்ல அனு அவனிடம் கேட்க,
"அனும்மா, தோச" என்றான் இட்லியை பார்த்தவாறு.
ஆரூரன், "அப்போ எனக்கு பொடி தோச வேணும்"
ஆதவன், "மூடு, இப்போ தானே வயிறு சரியாகியிருக்கு. நீ இட்லி மட்டும் சாப்பிடு"
"உன்னையெல்லாம் யார்டா டாக்டருக்கு படிக்க சொன்னா? எப்ப பார் அத சாப்பிடாத இத சாப்பிடுனு.. இம்ச"
"ஆரவா, வயிறு புண்ணுனா காரமில்லாம சாப்பிடத் தெரியாத உனக்கு. ஆதவா சொல்லுறத கேளு முதல்ல" என்று சுந்தரேஸ்வரர் சொல்லிவிட, புரையேறியிருந்தது அவனுக்கு.
அத்தனை மெல்ல பேசியும் அவர் காதை அடைந்ததன் விளைவு.
சாரங்கன், "என் பையனுக்கு ஊசி காதுன்னு தெரியாம பேசினா இப்படி தான்டா பேராண்டி"
ஆரூரன், "எல்லாம் நீங்க பண்ண வேல. மனுஃபேக்டுரிங் டிபெக்ட்டோட யாரு பெத்துக்க சொன்னா உங்கள?"
"இத நீ உன் நீல்ஸ் கிட்டத்தான் கேட்கனும்"
"வெக்கமே இல்ல தாத்தா உனக்கு" என்று சிரிப்போடு அபூர்வன் கேட்டிட,
"இதில என்னடா இருக்கு வெக்கப்பட? உலகத்துக்குத் தெரியாததையா நான் சொல்லிட்டேன்?"
"அப்பா, போதும். சாப்பிடுங்க, இவனுங்க கூட பேசிட்டு நேரத்தத் தான் போக்குறீங்க"
"சரி தம்பி" என்று அப்படியே பம்மிவிட்டார் சாரங்கன்.
"பாரு.. ஆளுக்கும் பேச்சுக்கும் பண்ணுற வேலைக்கும் சம்மந்தம் இருக்கானு" என்றான் ஆரூரன்.
கிட்டத்தட்ட அனைவரும் உண்டிருந்த நிலையில் வெளியே வந்தார் சரவணன்.
டைனிங்கில் சாரங்கன், சுந்தரேஸ்வரர் இருப்பதை பார்த்துவிட்டு, "அப்பா, முரளி ஸார்கிட்ட நாமளே ஒரு நல்ல நாள் பார்த்து பேசீட்டு வந்துடலாம். சீக்கிரம் கல்யாணத்தையும் முடிச்சிட்டா பெட்டர்" என்று அவர் சொல்லிய நொடி, விசில் சப்தம் பறந்தது.
"சரோப்பா, சூப்பரு போங்க"
"தேங்க்ஸ் ப்பா"
சரவணனின் சம்மதம் அத்தனை ஆசுவாசத்தைக் கொடுத்தது மீனாட்சிக்கு. அதை எல்லாம் ஒரு சிறு சிரிப்புடன் பார்த்துவிட்டு சென்றார் சுந்தரேஸ்வரர்.
சாரங்கன், "அய்யா, நாள கடத்தமா பண்ணீட்டலாம். முரளி கொஞ்சம் கொணமாகட்டும், முறையா எல்லாம் பண்ணீடலாம்"
"ம்ம்.. அண்ணனும் நீங்களும் பாருங்க. நானும் ஒருதடவ முரளி ஸார்கிட்ட பேசீடுறேன்" என்றுவிட்டு அவர் உண்ண அமரவும், இன்று அதிசயத்திலும் அதிசயமாம் அவர் தட்டில் வீற்றிருந்தது ஒரு மைசூர் பாக்!
✦
"கால் பண்ணுங்க, கால் பண்ணுங்க" என்று நச்சரித்த அபூர்வனை தலையில் தட்டி அமர வைத்திருந்தான் ஆரூரன்.
ஒருவித விரிந்த சிரிப்போடு அதை பார்த்திருந்த ஆதவனுக்கு அப்போது தான் தோன்றியது தன் இரட்டையின் அட்டைப் போலான வாசுவிடம் இருந்த ஒட்டுதல்.
"டேய் இரு. உனக்கு எப்படி அவர் கூட இப்படி ஒரு கனெக்ட்? ஐ மீன், அம்ரூவ லவ் பண்ண உன்கிட்ட ஐடியா எல்லாம் அவர் கேட்டதா இவன் சொன்னான்? எனக்குத் தெரியாம எப்படிடா ரெண்டு பேரும் க்ளோஸ் ஆனீங்க?"
"அத்தான்னு சொல்லுங்க ஆதுண்ணா. அவர், இவர், சுவர் எல்லாம் வேண்டாம்"
"ம்ம்ப்ச், அதுதான் எனக்கு வரமாட்டேங்கிதே! அவரும் இதான் சொன்னார் பட் இந்த முறை பெயர் எல்லாம் தானா வரட்டும்"
"நீ தான் ஜீகிட்ட கடுவான் பூனையாச்சே! எப்போ பேசின?"
"நேத்து தான். அம்ரூவ பார்க்க வந்தார். அப்போ தான் கொஞ்சம் பேசினோம்"
"நேத்தா?" என்று ஆரூரனும் அபூர்வனும் கோரசாக கேட்க,
"ஆமாடா. ஏன்?"
இருவரும் ஒருவர் முகத்தை இன்னொருவர் பார்த்தபடி இருக்க, ஆதவனுக்கு ஒன்றும் புரியவில்லை.
அதுவரை நடந்த நிகழ்வுகளும் அவனுக்குத் தெரியாததால் சற்று தயங்கியவாறே ஆரூரன் அவனிடம் சொல்லிக்கொண்டிருந்தான்.
அதை மொத்தமும் கேட்டவனின் முகம் சற்று வாடிக் கூம்பிப் போயிற்று.
"எனக்கு அவர பிடிக்காததால தான இத்தன நடந்தும், உங்க ப்ளான் உட்பட என்கிட்ட எதையும் சொல்லாம இருக்கீங்க?" என்று வருந்திபோனக் குரலில் கேட்டவனை என்ன செய்து தேற்ற என்று தெரியாது விழித்திருந்தனர் இருவரும்.
"அவர பிடிக்காதுன்னு இல்லடா, லவ்னு சொல்லிட்டு அம்ரூவ ஹர்ட் பண்ணிட்டாங்கனா? அந்த பயம் தான். அதுவும் அப்பா, சரோப்பா எல்லாம் அந்த லேடி பத்தி சொல்லவும் எனக்கு சுத்தமா பிடிக்காம தான் இருந்துச்சு. பட் பூர்வா இன்சிடெண்ட், அம்ரூவோட பிடித்தம்.. கொஞ்சம் என்ன யோசிக்க வெச்சாலும் அப்பா கூட அவரைப் பத்தி விசாரிக்க போனப்போ அவர் கேரக்டர் எனக்கு ரொம்ப பிடிச்சுருச்சு" என்றவன் மென்மையாக, "சச் எ ஜெம்" என்றான் சிரித்தவாறு.
"ஓட் ரைட், எங்க தேவா'த்தானா கொக்கா" என்றான் அபூர்பன் ஆர்ப்பாட்டமாக.
"நரம்பா இப்படியே சிரி! ஆனா மூஞ்ச மட்டும் கொஞ்ச நேரம் முன்ன வச்ச மாதிரி வைக்காத, குழில இருந்து புடுங்கிட்டு வந்த மாதிரியே இருக்கு"
"டேய்"
"என்ன டோய், நீ திங்கறது எல்லாம் எங்கத் தான் போகுதோ" என்றான் ஆதவனை இயப்பாக்க.
"அதவிடு, நான் கேட்டதுக்கு பதில் சொல்லு"
"விடமாட்டியே, தாத்தா கோவா போனாரே அப்போவே இவங்க ரெண்டு பேர் மீட்டிங் ஏர் போர்ட்லையே படுபயங்கரமா இருந்துச்சு. அப்போ வெச்சு பார்த்தேன். தென் ஒரு நாள் எனக்கு கால் பண்ணியிருந்தார், தனியா அம்ரூ பத்தி பேசனும்னு. அப்போவே தெரிஞ்சிடுச்சு லவ்வ சொல்லத் தான் கால் பண்ணுறார்னு.. பேசினோம், ஆனா நான் தான் பிடிக்கொடுக்கல. அப்புறம் என்னமோ தோனுச்சு இவர் அம்ரூவுக்கு செட் ஆவார்னு.. அப்படியே பேசி பேசி, ப்ரண்ட் ஆகிட்டோம். அவ்வளவு தான்" என்று அவன் சொல்லி முடித்திருக்க,
அபூர்வன், "எனக்கு வந்தன்னைக்கே அம்ரூக்கா சொல்லிட்டா, தேவா'த்தான் தான் அவளோட ஃபயான்ஸேன்னு" என்றவன் சிரிக்க,
ஆரூரன், "பாரு, ஒன்னும் நடக்கறதுக்கு முன்னவே இந்த லட்சணம்"
ஆதவன், "அவளுக்கு பிடிச்சா ஓகே தான்."
"டூட் நமக்கு அத்தானா வரப்போறவர். நமக்கும் கம்பனி கொடுக்கனும்ல, சோ நமக்கும் பிடிக்கனும். அதுவும் முக்கியம்"
அபூர்வன், "விடுங்க விடுங்க.. முத அரவிந்த் அண்ணாக்கு கால் பண்ணுங்க"
ஆதவன், "என்னடா சொல்லப் போறீங்க?"
அபூர்வன், "அதான் அப்பா ஓகே சொல்லிட்டார்ல அதான்"
ஆதவன், "அத அவருக்கு சொல்லாம ஏன் அரவிந்த் கிட்ட?"
ஆரூரன், "ஏன்னா இன்னிக்கு எங்க ப்ளான் ஃப்ளாப்! அதான் விஷயம் சொன்னா ப்ளான் போட்டவர் கொஞ்சம் ஹாப்பி ஆவாரே"
அரவிந்திற்கு அழைப்பு விடுக்க, அது சென்று கொண்டே இருந்தது. அவன் தான் எடுத்தபாடில்லை.
"சரி விடுங்கடா.. நாளைக்கு சொல்லுங்கோங்க. தூங்கலாம் வா, செம்ம டையர்ட் வேற" என்று அவர்கள் கூட்டம் களைந்தாலும், அங்கு அரவிந்தின் குடும்பமும் களைய காத்திருந்தது.
✦
இருண்டு போய் இருந்த அறைக்குள் செல்ல ஒரு சிறு தயக்கம் அவளுக்கு.
இரண்டு வாரமாக பங்குப் போட்ட அறை தான். ஆனால் இன்று முற்றும் அந்நியமாய் போயிருந்தது.
விளக்கை தட்டிவிட்டு அவனை அறையில் தேடினால். சாரளத்தின் அருகே இருந்த ஒற்றை சாய்விருக்கையில் பின்னோக்கி தலை சாய்ந்தபடி அமர்ந்திருந்தான் அவளின் ரகு.
"இது என்ன இவ்வளவு பெரிய பேரு, ராகவ் முரளி கிருஷ்ணன். சொல்லுறதுக்கே கஷ்டமா இருக்கு. நான் உங்கள சுருக்கி ரகுன்னு கூப்பிடுறேன்" ராகவிடமே பளீர் என்று சொன்ன போது காவ்யாவின் வயது பதினாறு.
அப்போது அவனோ மருத்துவம் நான்காம் ஆண்டு பயின்றுகொண்டிருந்தான். அவளின் பேச்சு ஒரு சிறு பிள்ளை தனமாகத் தோன்றினாலும், அவள் அப்போதே அவன் மனதில் நிறைந்திருந்தால்.
அவனும் சொல்லவில்லை, அவளும் காட்டிக்கொள்ளவில்லை.
ஆனால் காதலானது மெல்ல மெல்ல அவர்கள் இதயத்தை தட்டித் திறந்திருந்தது.
வாசுவின் கூற்றுப்படி அது அவளின் வயதில் வரும் ஒரு இனக்கவர்ச்சி மட்டுமே என்று நினைப்பு அவளிடம். ஆனால் காலப்போக்கில் உரிமை எடுத்து பழகி, அப்பழக்கம் காதலாகி இப்போது அவனின் மனைவியான பதவிக்கு அவளை அழைத்து வந்திருந்தது.
நொடியில் எல்லாம் அவள் மனதில் வந்து போக, அவன் தொண்டை குழி ஏறி இறங்கியதைப் பார்த்தவள் எதுவும் யோசிக்காது அவள் ரகுவிடம் சரணடைந்திருந்தால் பெண்ணவள்.
காயமும் அவனே; அவளின் அழுத்தமும் அவனே; அவளின் முழுதாகிய மருந்தும் அவனே!
தொப்'பென்று அவன் மீதே விழுந்தவளை அணைவாகப் பிடித்து தன்மேலே போட்டுக்கொண்டவனை நினைத்து அத்தனை கண்ணீர் வந்தது அவளுக்கு.
இருந்தும் இருவரும் ஒற்றை வார்த்தை உதிர்க்கவில்லை.
காதலில் வைராக்கியமும் வலி கலந்த அழகு தான் போல.
இறுக்கமான அணைப்பாக இல்லை என்றாலும் அதில் தெரிந்த வழு காவ்யாவை இன்னும் அவனை நெருங்க வைத்திருந்தது.
அவன் கண்ணின் ஓரம் கொடாக வழிந்த கண்ணீர் அவன் தவிப்பையும் அன்பையும் மௌனமாய் சொல்ல, அவளின் கதறலும் கட்டுக்காடங்கா கண்ணீரும் தப்பித் தாளமிடும் இதயமும் அவளின் போராட்டத்தைப் புடம் போட்டு காட்டியது.
அவளின் அழுகை எல்லாம் மெல்ல கறைந்து நீண்ட மூச்சுக்களாக குறைந்திருந்தாலும் அவளின் முதுகை ஆதூரமாய் தடவும் அவரின் வருடல் மட்டும் நின்றபாடில்லை.
இவனின் முகத்தை கூட இனி வரும் வருடங்களில் பார்க்க முடியாதே என்று நினைத்தவள் மறந்தும் அவளெடுத்த முடிவில் மாற்றம் கொண்டு வந்துவிடவில்லை.
அவனோ, அவனின் மூச்சாகிப் போனவளை இன்னுமின்னும் தன் தொடுகையின் மூலம் உணரப் பார்த்தான், இனி அது எப்போது வாய்க்கும் என்று தெரியாது.
ஒரு கழித்த அவனின் மார்பில் தலை வைத்து படுத்திருந்தவளின் பார்வை அவனை துளியும் சீண்டாது பக்கவாட்டில் பெரிய சட்டத்தில் மாட்டியிருந்த அவர்களின் திருமண புகைப்படத்திலேயே நிலைத்திருந்தது.
சிரிப்பு இல்லை என்றாலும் அவள் முகத்தை அலங்கரித்த நிறைவும் அவளை காயப்படுத்திவிட்ட குற்றவுணர்வோடு அவளை கரம் பற்றிய ஆசுவாசமுமாக நின்ற ராகவும் அத்தனை அழகோவியமாய் இருந்தனர் அதில்.
வாயில் மணி அழைப்பு திடும் என்று கேட்டிட வாசு வந்ததை அறிவுருத்தியது அது.
சென்று அழுகை மீண்டது போல் இருந்தது அவளுக்கு. இத்தனை பாடுபடுத்துமா இந்த காதல்? தன்னை இத்தனை பலவீனம் செய்துவிட்டதா இவனின் அன்பு? என்றவள் நினைத்தாலும் அவனே அவளின் உயிராகிப் போனப் பின்பு இதுவெல்லாம் சாதாரணம் என்று புரியவில்லை அவளுக்கு.
அவளை பின்னியிருந்த அவனின் கைகள் நகரும் என்று தோன்றாது அவளே எழுந்தால்.
கிஞ்சித்தும் விலகாத அவனின் கைகளில் இருந்து விலகிய போது உணர்வு பிழம்பாக, அத்தனை துக்கத்தையும் அழுகையும் கட்டுப்படுத்தியவள் நிமிர்ந்து அவன் முகமும் பார்க்கவில்லை, பேசவும் இல்லை.
ஓர் எட்டு வைத்தவளின் புடவை முந்தானை இழுபட, சட்டென்று திரும்பியவள் முகம் அந்த ஒரு விநாடி அந்த ஒற்றை விநாடியில் தெரிந்த சந்தோஷமும் எதிர்பார்ப்பும் அப்பட்டமாகவே காட்டிக்கொடுக்க, ஏறியிரங்கும் நெஞ்சோடு அவனைப் பார்த்திருந்தாள் பேதையவள்.
நேற்றைய தினம் போல் இன்றும் சிவப்பேறி இருந்த அவன் விழிகள் அவள் முகத்தைப் ஆழ்ந்து பார்த்தது. பார்த்துக்கொண்டே இருந்தது.
பதில் மொழியற்று அவள் நின்றிருக்க, அவள் புடவையின் முந்தி அவன் கைகளில்.
கண்கள் கூட இத்தனை தவிப்பை தருமா? என்று இருந்து நொடிகள்.
'ஏதாவது பேசேன்' என்று அவள் மனதில் கத்தினாள், அதை அவள் முகமும் காட்டியது.
அவனும் படித்தான், ஆனால் அந்த பேச்சு அவளின் பிடிவாதத்தை இன்னும் பிடித்து வைத்தது.
"பத்தரம்"
அதற்கு அவள் கண்கள் வடித்த அபிநயம், இதுவரை அவன் பார்த்திராத ஒன்று.
ஒரு சின்ன தலையசைப்பு, அத்தொடு அவள் அந்த அறையை விட்டு, அவளின் ராகவ்வை விட்டு சென்றுவிட்டாள்.
அமுதம் தொடரும்...
இரவு கவிழ்ந்து நிலவு மகள் தன் காதலனிடமிருந்து பெற்ற ஒளியை ஒரு பாதி அண்டத்திற்கு வழங்கிக்கொண்டிருந்தாள்.
அரவிந்த் வீட்டின் பால்கனியில் அதிர்ச்சி மறையாது அமர்ந்திருந்தார் ராகினி.
அரவிந்த் அங்கு வாசுவின் வீட்டில் நடந்ததைச் சொல்ல, மயக்கம் ஒன்று மட்டும் தான் ராகினிக்கு வரவில்லை.
எத்தனை நடந்திருக்கிறது அதைவிட அவரின் மகள் மருமகனை திட்டியும் விட்டுப் பிரிந்து, படிப்பிற்காக செல்ல இருப்பது அத்தனை கோபத்தை கொடுத்தது அவருக்கு.
"இன்னும் கொஞ்ச நேரத்தில வாசு வேதாவ இங்க கொண்டு வந்து விட்டுடுவான் ம்மா. ஜெர்மன் போற வர வேதா இங்க தான் இருப்பா" என்று சொன்ன மகனை அதிர்ச்சி மறையாது பார்த்தவர்,
"என்ன அரவிந்த், அவ தான் புத்தியில்லாம பேசினா உனக்கு எங்கடா போச்சு? அவ பேசும் போது நாலு அரைய விட்டு அங்கையே ராகவ் கூடத் தான் இருக்கனும்னு சொல்ல ஒனக்கு என்ன வந்துச்சாம்? இப்போ இவ அங்க போய் தான் படிக்கனுமா? ஏன் இங்க எத்தன காலேஜ் இருக்கு? சொன்னா நீயோ இல்லை ராகவோ படிக்க வைக்க மாட்டீங்களா? எனக்கு வர ஆத்திரத்துக்கு" என்று அவர் இன்னும் ஆத்திரப்பட்டு பேசிக்கொண்டிருக்க, அரவிந்திற்கு அழைத்திருந்தார், சொக்கநாதன்.
சொக்கநாதன், அரவிந்த் காவ்யாவின் தகப்பன். இதுவரை வெளியில் அதிகம் எங்கும் வந்திராது தொழிலை மட்டும் மூச்சாய் நினைக்கும் மனிதர்.
அவரின் 'வேதா சர்க்யூட்ஸ்' தற்சமயம் தமிழகம் கேளரத்தில் மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பு செய்வதிலும் பெரும் நிறுவனங்களின் உபகரணங்கள் விநியோகம் செய்வதிலும் கொடிக்கட்டி பறக்கிறது.
தன்னை எங்கும் முதன்மை படுத்த நினைக்காத கடும் உழைப்பாளி. தொழில், அது ஒன்று மட்டும் தான் அவருக்கு பிரதானம். அதற்கென்று குடும்பத்தை நட்டாற்றில் விடும் நபரும் அல்ல. அவர்களுக்காக நேரத்தை ஒதுக்கும் அளவிற்கு இடம் கொடுக்காது தொழிலில் ஈடுபடும் நபர்.
அரவிந்த் காவ்யா என்று இருவரும் அவரின் செல்லங்களாக இருந்தாலும் சில வருடங்களாக அரவிந்திடம் ஒரு ஒதுக்கம். அதுவும் அவன் சொக்கநாதனை சார்ந்திராமல் அவனே படித்து இப்போ ஒரு வழக்கறிஞராக இருக்கவும் தந்தையாய் அவரின் இறுமாப்பு அடிவாங்கியிருந்தது.
கிட்டத்தட்ட பல வருடங்களாக இருவரும் பேசிக்கொள்ளவே இல்லை. அப்படியிருக்க இப்போது அவரின் அழைப்பு அவனை யோசிக்க வைத்தது.
இப்போது தொல்லை போல் ஒலித்த தொலைப்பேசியை எடுக்காது தாமதித்தவனை பார்த்த ராகினி, "யாருடா? வேதாவா" என்று அவரே கேட்டு அதை பிடிங்கிக்கொள்ள, அதில் தெரிந்த பெயர் அவருக்கு அத்தனை பயத்தைக் கொடுத்தது.
காவ்யாவின் திருமணமும் சொக்கநாதனிடம் முதலில் சொல்லப்படவில்லை, அதற்கே அத்தனை வருந்தி, நொந்து போனவர் இப்போது மகளின் முடிவில் என்ன முடிவெடுப்பார் என்று தெரியாது பயந்தார் ராகினி.
"அப்பாடா, இவருக்கு நான் என்ன பதில் சொல்லுவேன். என்னைய நம்பி தானே உங்க ரெண்டு பேரையும் விட்டுட்டு இந்த மனுஷே தொழிலக் கட்டி அழுகறார், இப்போ எல்லாம் மண்ணா போச்சு" என்று தன் போக்கில் சொல்லி அழுதவரை சமாதானம் உரைக்கும் நிலையில் அவன் இல்லை.
மனதில் அத்தனை யோசனை. சாதாரணமாக கூப்பிடாத மனிதர் இத்தனை வருடங்களுக்கு பின்னர் அதுவும் இன்று இப்போது அழைத்திருப்பது அவனை ஏதோ சிந்திக்க செய்ய, சட்டென்று அவருக்கு அழைத்திருந்தான்.
இரண்டாம் ரிங்கிலேயே அழைப்பு ஏற்றப்பட்டாலும் பெரும் மௌனம் இருபக்கமும்.
பின் சொக்கநாதனே, "தம்பி, ராணிகிட்ட சொல்லாம கொஞ்சம் செங்கல்பட்டு கவர்மென்ட் காலேஜ் ஹாஸ்டலில் வாரீங்களா?" என்றார் மிகுந்த தயக்கமான மெல்லிய குரலில்.
உடனே பரபரப்பு தொற்றிக் கொண்டது அவனிடம்.
"உங்களுக்கு?" என்று அடுத்து சொல்ல வந்ததை நிறுத்தியவன்,
"வந்தறேன்" என்றுவிட்டு ராகினியிடம் ஏதேதோ காரணத்தை சொல்லி தன் ஜூனியர்ஸ் இருவரை அழைத்தக்கொண்டு அங்கு விரைந்தான்.
கிட்டத்தட்ட இரண்டே கால் மணிநேரம் ஆகியிருந்தது. அரக்கப் பறக்க அவன் மருத்துவமனை வளாகத்தினுள் நுழையும் முன்பே அவன் இதயத்தின் லப் - டப் லயம் பெரியதாய் அதிர்ந்தது.
சொக்கநாதனுக்கு ஒன்றும் இருக்காது என்று அவன் மூளை சொன்னாலும் மகனாய் அவருக்காய் அவனின் இதயம் துவண்டு துடிக்காமல் இல்லை.
நிடத்திற்கு நிமிடம் அவர் இருந்த அறைக்குள் செல்லும் வரை, அவன் உடல் அதிர்வு அதிர்ந்து அவனை நிலைக்கொள்ளாது வைத்திருந்தது.
"எல்லாம் எக்ஸ்டர்ணல் இஞ்சுரிஸ் தான். ப்ளட் அவ்வளவு போகல ஆனா வயசாகறனால கொஞ்சம் நாள் ஆகும் காயம் எல்லாம் ஆற" என்று மருத்துவர் சொல்வதைக் கேட்டு, அதிர்ந்து அறை வாயிலேயே நின்றுவிட்டான் அரவிந்த்.
அத்தனை வருடம் இருந்த வீம்பு முற்றும் அறுந்து, "ப்பா" என்று கூவலுடன் அறைக்குள் பிரவேசித்தவனை வரவேற்றது என்னமோ அவர் தான்.
அவர், புவனா திருமழிசை!
✦
அம்ருதாவின் வீட்டில் இரவு உணவிற்காக அனைவரும் கூடியிருந்தனர்.
எளிதான உணவுகளைத் தான் அன்று சமைத்திருந்தார் நீலாம்பரி. வழக்கம் போல், இரண்டு மூன்று வகைகள் இல்லாது வெறும் இட்லி மட்டும் காட்சி தரவும் ஆதவனுக்கு முகம் கூம்பியது.
"ம்மா, தோசை சுட்டு கொடேன்" என்று மெல்ல அவன் மீனாட்சியை நச்சரிக்க ஆரம்பித்தான்.
வீட்டில் சுந்தரேஸ்வரர் இருந்தால் அங்கிருக்கும் அனைவரும் பூனை பேச்சு தான் பேசுவர். இதில் இன்று சரவணன் வேறு அவருக்கு சரிக்கு சரியாய் பேசியிருக்க, ஒருவருக்கும் சப்தம் வரவில்லை.
வாசு வந்து சென்று பின்னர் அவரின் அறைக்குச் சென்ற சரவணன் இன்னும் வெளியே வரவில்லை. உண்ண கூப்பிட்டாலும் பின்னர் என்றுவிட மற்றவர் வந்துவிட்டனர்.
அவருக்கான தனிமையும் சிந்திக்கும் நேரத்தையும் வழங்கிவிட்டு அனுவும் வந்துவிட்டார்.
"என்ன ஆது வேணும்" என்று மெல்ல அனு அவனிடம் கேட்க,
"அனும்மா, தோச" என்றான் இட்லியை பார்த்தவாறு.
ஆரூரன், "அப்போ எனக்கு பொடி தோச வேணும்"
ஆதவன், "மூடு, இப்போ தானே வயிறு சரியாகியிருக்கு. நீ இட்லி மட்டும் சாப்பிடு"
"உன்னையெல்லாம் யார்டா டாக்டருக்கு படிக்க சொன்னா? எப்ப பார் அத சாப்பிடாத இத சாப்பிடுனு.. இம்ச"
"ஆரவா, வயிறு புண்ணுனா காரமில்லாம சாப்பிடத் தெரியாத உனக்கு. ஆதவா சொல்லுறத கேளு முதல்ல" என்று சுந்தரேஸ்வரர் சொல்லிவிட, புரையேறியிருந்தது அவனுக்கு.
அத்தனை மெல்ல பேசியும் அவர் காதை அடைந்ததன் விளைவு.
சாரங்கன், "என் பையனுக்கு ஊசி காதுன்னு தெரியாம பேசினா இப்படி தான்டா பேராண்டி"
ஆரூரன், "எல்லாம் நீங்க பண்ண வேல. மனுஃபேக்டுரிங் டிபெக்ட்டோட யாரு பெத்துக்க சொன்னா உங்கள?"
"இத நீ உன் நீல்ஸ் கிட்டத்தான் கேட்கனும்"
"வெக்கமே இல்ல தாத்தா உனக்கு" என்று சிரிப்போடு அபூர்வன் கேட்டிட,
"இதில என்னடா இருக்கு வெக்கப்பட? உலகத்துக்குத் தெரியாததையா நான் சொல்லிட்டேன்?"
"அப்பா, போதும். சாப்பிடுங்க, இவனுங்க கூட பேசிட்டு நேரத்தத் தான் போக்குறீங்க"
"சரி தம்பி" என்று அப்படியே பம்மிவிட்டார் சாரங்கன்.
"பாரு.. ஆளுக்கும் பேச்சுக்கும் பண்ணுற வேலைக்கும் சம்மந்தம் இருக்கானு" என்றான் ஆரூரன்.
கிட்டத்தட்ட அனைவரும் உண்டிருந்த நிலையில் வெளியே வந்தார் சரவணன்.
டைனிங்கில் சாரங்கன், சுந்தரேஸ்வரர் இருப்பதை பார்த்துவிட்டு, "அப்பா, முரளி ஸார்கிட்ட நாமளே ஒரு நல்ல நாள் பார்த்து பேசீட்டு வந்துடலாம். சீக்கிரம் கல்யாணத்தையும் முடிச்சிட்டா பெட்டர்" என்று அவர் சொல்லிய நொடி, விசில் சப்தம் பறந்தது.
"சரோப்பா, சூப்பரு போங்க"
"தேங்க்ஸ் ப்பா"
சரவணனின் சம்மதம் அத்தனை ஆசுவாசத்தைக் கொடுத்தது மீனாட்சிக்கு. அதை எல்லாம் ஒரு சிறு சிரிப்புடன் பார்த்துவிட்டு சென்றார் சுந்தரேஸ்வரர்.
சாரங்கன், "அய்யா, நாள கடத்தமா பண்ணீட்டலாம். முரளி கொஞ்சம் கொணமாகட்டும், முறையா எல்லாம் பண்ணீடலாம்"
"ம்ம்.. அண்ணனும் நீங்களும் பாருங்க. நானும் ஒருதடவ முரளி ஸார்கிட்ட பேசீடுறேன்" என்றுவிட்டு அவர் உண்ண அமரவும், இன்று அதிசயத்திலும் அதிசயமாம் அவர் தட்டில் வீற்றிருந்தது ஒரு மைசூர் பாக்!
✦
"கால் பண்ணுங்க, கால் பண்ணுங்க" என்று நச்சரித்த அபூர்வனை தலையில் தட்டி அமர வைத்திருந்தான் ஆரூரன்.
ஒருவித விரிந்த சிரிப்போடு அதை பார்த்திருந்த ஆதவனுக்கு அப்போது தான் தோன்றியது தன் இரட்டையின் அட்டைப் போலான வாசுவிடம் இருந்த ஒட்டுதல்.
"டேய் இரு. உனக்கு எப்படி அவர் கூட இப்படி ஒரு கனெக்ட்? ஐ மீன், அம்ரூவ லவ் பண்ண உன்கிட்ட ஐடியா எல்லாம் அவர் கேட்டதா இவன் சொன்னான்? எனக்குத் தெரியாம எப்படிடா ரெண்டு பேரும் க்ளோஸ் ஆனீங்க?"
"அத்தான்னு சொல்லுங்க ஆதுண்ணா. அவர், இவர், சுவர் எல்லாம் வேண்டாம்"
"ம்ம்ப்ச், அதுதான் எனக்கு வரமாட்டேங்கிதே! அவரும் இதான் சொன்னார் பட் இந்த முறை பெயர் எல்லாம் தானா வரட்டும்"
"நீ தான் ஜீகிட்ட கடுவான் பூனையாச்சே! எப்போ பேசின?"
"நேத்து தான். அம்ரூவ பார்க்க வந்தார். அப்போ தான் கொஞ்சம் பேசினோம்"
"நேத்தா?" என்று ஆரூரனும் அபூர்வனும் கோரசாக கேட்க,
"ஆமாடா. ஏன்?"
இருவரும் ஒருவர் முகத்தை இன்னொருவர் பார்த்தபடி இருக்க, ஆதவனுக்கு ஒன்றும் புரியவில்லை.
அதுவரை நடந்த நிகழ்வுகளும் அவனுக்குத் தெரியாததால் சற்று தயங்கியவாறே ஆரூரன் அவனிடம் சொல்லிக்கொண்டிருந்தான்.
அதை மொத்தமும் கேட்டவனின் முகம் சற்று வாடிக் கூம்பிப் போயிற்று.
"எனக்கு அவர பிடிக்காததால தான இத்தன நடந்தும், உங்க ப்ளான் உட்பட என்கிட்ட எதையும் சொல்லாம இருக்கீங்க?" என்று வருந்திபோனக் குரலில் கேட்டவனை என்ன செய்து தேற்ற என்று தெரியாது விழித்திருந்தனர் இருவரும்.
"அவர பிடிக்காதுன்னு இல்லடா, லவ்னு சொல்லிட்டு அம்ரூவ ஹர்ட் பண்ணிட்டாங்கனா? அந்த பயம் தான். அதுவும் அப்பா, சரோப்பா எல்லாம் அந்த லேடி பத்தி சொல்லவும் எனக்கு சுத்தமா பிடிக்காம தான் இருந்துச்சு. பட் பூர்வா இன்சிடெண்ட், அம்ரூவோட பிடித்தம்.. கொஞ்சம் என்ன யோசிக்க வெச்சாலும் அப்பா கூட அவரைப் பத்தி விசாரிக்க போனப்போ அவர் கேரக்டர் எனக்கு ரொம்ப பிடிச்சுருச்சு" என்றவன் மென்மையாக, "சச் எ ஜெம்" என்றான் சிரித்தவாறு.
"ஓட் ரைட், எங்க தேவா'த்தானா கொக்கா" என்றான் அபூர்பன் ஆர்ப்பாட்டமாக.
"நரம்பா இப்படியே சிரி! ஆனா மூஞ்ச மட்டும் கொஞ்ச நேரம் முன்ன வச்ச மாதிரி வைக்காத, குழில இருந்து புடுங்கிட்டு வந்த மாதிரியே இருக்கு"
"டேய்"
"என்ன டோய், நீ திங்கறது எல்லாம் எங்கத் தான் போகுதோ" என்றான் ஆதவனை இயப்பாக்க.
"அதவிடு, நான் கேட்டதுக்கு பதில் சொல்லு"
"விடமாட்டியே, தாத்தா கோவா போனாரே அப்போவே இவங்க ரெண்டு பேர் மீட்டிங் ஏர் போர்ட்லையே படுபயங்கரமா இருந்துச்சு. அப்போ வெச்சு பார்த்தேன். தென் ஒரு நாள் எனக்கு கால் பண்ணியிருந்தார், தனியா அம்ரூ பத்தி பேசனும்னு. அப்போவே தெரிஞ்சிடுச்சு லவ்வ சொல்லத் தான் கால் பண்ணுறார்னு.. பேசினோம், ஆனா நான் தான் பிடிக்கொடுக்கல. அப்புறம் என்னமோ தோனுச்சு இவர் அம்ரூவுக்கு செட் ஆவார்னு.. அப்படியே பேசி பேசி, ப்ரண்ட் ஆகிட்டோம். அவ்வளவு தான்" என்று அவன் சொல்லி முடித்திருக்க,
அபூர்வன், "எனக்கு வந்தன்னைக்கே அம்ரூக்கா சொல்லிட்டா, தேவா'த்தான் தான் அவளோட ஃபயான்ஸேன்னு" என்றவன் சிரிக்க,
ஆரூரன், "பாரு, ஒன்னும் நடக்கறதுக்கு முன்னவே இந்த லட்சணம்"
ஆதவன், "அவளுக்கு பிடிச்சா ஓகே தான்."
"டூட் நமக்கு அத்தானா வரப்போறவர். நமக்கும் கம்பனி கொடுக்கனும்ல, சோ நமக்கும் பிடிக்கனும். அதுவும் முக்கியம்"
அபூர்வன், "விடுங்க விடுங்க.. முத அரவிந்த் அண்ணாக்கு கால் பண்ணுங்க"
ஆதவன், "என்னடா சொல்லப் போறீங்க?"
அபூர்வன், "அதான் அப்பா ஓகே சொல்லிட்டார்ல அதான்"
ஆதவன், "அத அவருக்கு சொல்லாம ஏன் அரவிந்த் கிட்ட?"
ஆரூரன், "ஏன்னா இன்னிக்கு எங்க ப்ளான் ஃப்ளாப்! அதான் விஷயம் சொன்னா ப்ளான் போட்டவர் கொஞ்சம் ஹாப்பி ஆவாரே"
அரவிந்திற்கு அழைப்பு விடுக்க, அது சென்று கொண்டே இருந்தது. அவன் தான் எடுத்தபாடில்லை.
"சரி விடுங்கடா.. நாளைக்கு சொல்லுங்கோங்க. தூங்கலாம் வா, செம்ம டையர்ட் வேற" என்று அவர்கள் கூட்டம் களைந்தாலும், அங்கு அரவிந்தின் குடும்பமும் களைய காத்திருந்தது.
✦
இருண்டு போய் இருந்த அறைக்குள் செல்ல ஒரு சிறு தயக்கம் அவளுக்கு.
இரண்டு வாரமாக பங்குப் போட்ட அறை தான். ஆனால் இன்று முற்றும் அந்நியமாய் போயிருந்தது.
விளக்கை தட்டிவிட்டு அவனை அறையில் தேடினால். சாரளத்தின் அருகே இருந்த ஒற்றை சாய்விருக்கையில் பின்னோக்கி தலை சாய்ந்தபடி அமர்ந்திருந்தான் அவளின் ரகு.
"இது என்ன இவ்வளவு பெரிய பேரு, ராகவ் முரளி கிருஷ்ணன். சொல்லுறதுக்கே கஷ்டமா இருக்கு. நான் உங்கள சுருக்கி ரகுன்னு கூப்பிடுறேன்" ராகவிடமே பளீர் என்று சொன்ன போது காவ்யாவின் வயது பதினாறு.
அப்போது அவனோ மருத்துவம் நான்காம் ஆண்டு பயின்றுகொண்டிருந்தான். அவளின் பேச்சு ஒரு சிறு பிள்ளை தனமாகத் தோன்றினாலும், அவள் அப்போதே அவன் மனதில் நிறைந்திருந்தால்.
அவனும் சொல்லவில்லை, அவளும் காட்டிக்கொள்ளவில்லை.
ஆனால் காதலானது மெல்ல மெல்ல அவர்கள் இதயத்தை தட்டித் திறந்திருந்தது.
வாசுவின் கூற்றுப்படி அது அவளின் வயதில் வரும் ஒரு இனக்கவர்ச்சி மட்டுமே என்று நினைப்பு அவளிடம். ஆனால் காலப்போக்கில் உரிமை எடுத்து பழகி, அப்பழக்கம் காதலாகி இப்போது அவனின் மனைவியான பதவிக்கு அவளை அழைத்து வந்திருந்தது.
நொடியில் எல்லாம் அவள் மனதில் வந்து போக, அவன் தொண்டை குழி ஏறி இறங்கியதைப் பார்த்தவள் எதுவும் யோசிக்காது அவள் ரகுவிடம் சரணடைந்திருந்தால் பெண்ணவள்.
காயமும் அவனே; அவளின் அழுத்தமும் அவனே; அவளின் முழுதாகிய மருந்தும் அவனே!
தொப்'பென்று அவன் மீதே விழுந்தவளை அணைவாகப் பிடித்து தன்மேலே போட்டுக்கொண்டவனை நினைத்து அத்தனை கண்ணீர் வந்தது அவளுக்கு.
இருந்தும் இருவரும் ஒற்றை வார்த்தை உதிர்க்கவில்லை.
காதலில் வைராக்கியமும் வலி கலந்த அழகு தான் போல.
இறுக்கமான அணைப்பாக இல்லை என்றாலும் அதில் தெரிந்த வழு காவ்யாவை இன்னும் அவனை நெருங்க வைத்திருந்தது.
அவன் கண்ணின் ஓரம் கொடாக வழிந்த கண்ணீர் அவன் தவிப்பையும் அன்பையும் மௌனமாய் சொல்ல, அவளின் கதறலும் கட்டுக்காடங்கா கண்ணீரும் தப்பித் தாளமிடும் இதயமும் அவளின் போராட்டத்தைப் புடம் போட்டு காட்டியது.
அவளின் அழுகை எல்லாம் மெல்ல கறைந்து நீண்ட மூச்சுக்களாக குறைந்திருந்தாலும் அவளின் முதுகை ஆதூரமாய் தடவும் அவரின் வருடல் மட்டும் நின்றபாடில்லை.
இவனின் முகத்தை கூட இனி வரும் வருடங்களில் பார்க்க முடியாதே என்று நினைத்தவள் மறந்தும் அவளெடுத்த முடிவில் மாற்றம் கொண்டு வந்துவிடவில்லை.
அவனோ, அவனின் மூச்சாகிப் போனவளை இன்னுமின்னும் தன் தொடுகையின் மூலம் உணரப் பார்த்தான், இனி அது எப்போது வாய்க்கும் என்று தெரியாது.
ஒரு கழித்த அவனின் மார்பில் தலை வைத்து படுத்திருந்தவளின் பார்வை அவனை துளியும் சீண்டாது பக்கவாட்டில் பெரிய சட்டத்தில் மாட்டியிருந்த அவர்களின் திருமண புகைப்படத்திலேயே நிலைத்திருந்தது.
சிரிப்பு இல்லை என்றாலும் அவள் முகத்தை அலங்கரித்த நிறைவும் அவளை காயப்படுத்திவிட்ட குற்றவுணர்வோடு அவளை கரம் பற்றிய ஆசுவாசமுமாக நின்ற ராகவும் அத்தனை அழகோவியமாய் இருந்தனர் அதில்.
வாயில் மணி அழைப்பு திடும் என்று கேட்டிட வாசு வந்ததை அறிவுருத்தியது அது.
சென்று அழுகை மீண்டது போல் இருந்தது அவளுக்கு. இத்தனை பாடுபடுத்துமா இந்த காதல்? தன்னை இத்தனை பலவீனம் செய்துவிட்டதா இவனின் அன்பு? என்றவள் நினைத்தாலும் அவனே அவளின் உயிராகிப் போனப் பின்பு இதுவெல்லாம் சாதாரணம் என்று புரியவில்லை அவளுக்கு.
அவளை பின்னியிருந்த அவனின் கைகள் நகரும் என்று தோன்றாது அவளே எழுந்தால்.
கிஞ்சித்தும் விலகாத அவனின் கைகளில் இருந்து விலகிய போது உணர்வு பிழம்பாக, அத்தனை துக்கத்தையும் அழுகையும் கட்டுப்படுத்தியவள் நிமிர்ந்து அவன் முகமும் பார்க்கவில்லை, பேசவும் இல்லை.
ஓர் எட்டு வைத்தவளின் புடவை முந்தானை இழுபட, சட்டென்று திரும்பியவள் முகம் அந்த ஒரு விநாடி அந்த ஒற்றை விநாடியில் தெரிந்த சந்தோஷமும் எதிர்பார்ப்பும் அப்பட்டமாகவே காட்டிக்கொடுக்க, ஏறியிரங்கும் நெஞ்சோடு அவனைப் பார்த்திருந்தாள் பேதையவள்.
நேற்றைய தினம் போல் இன்றும் சிவப்பேறி இருந்த அவன் விழிகள் அவள் முகத்தைப் ஆழ்ந்து பார்த்தது. பார்த்துக்கொண்டே இருந்தது.
பதில் மொழியற்று அவள் நின்றிருக்க, அவள் புடவையின் முந்தி அவன் கைகளில்.
கண்கள் கூட இத்தனை தவிப்பை தருமா? என்று இருந்து நொடிகள்.
'ஏதாவது பேசேன்' என்று அவள் மனதில் கத்தினாள், அதை அவள் முகமும் காட்டியது.
அவனும் படித்தான், ஆனால் அந்த பேச்சு அவளின் பிடிவாதத்தை இன்னும் பிடித்து வைத்தது.
"பத்தரம்"
அதற்கு அவள் கண்கள் வடித்த அபிநயம், இதுவரை அவன் பார்த்திராத ஒன்று.
ஒரு சின்ன தலையசைப்பு, அத்தொடு அவள் அந்த அறையை விட்டு, அவளின் ராகவ்வை விட்டு சென்றுவிட்டாள்.
அமுதம் தொடரும்...