எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

கட்டியமுதே! என் கண்ணம்மா! - கதைத் திரி

Shambhavi

Moderator
அத்தியாயம் - 35


இரவு கவிழ்ந்து நிலவு மகள் தன் காதலனிடமிருந்து பெற்ற ஒளியை ஒரு பாதி அண்டத்திற்கு வழங்கிக்கொண்டிருந்தாள்.

அரவிந்த் வீட்டின் பால்கனியில் அதிர்ச்சி மறையாது அமர்ந்திருந்தார் ராகினி.

அரவிந்த் அங்கு வாசுவின் வீட்டில் நடந்ததைச் சொல்ல, மயக்கம் ஒன்று மட்டும் தான் ராகினிக்கு வரவில்லை.

எத்தனை நடந்திருக்கிறது அதைவிட அவரின் மகள் மருமகனை திட்டியும் விட்டுப் பிரிந்து, படிப்பிற்காக செல்ல இருப்பது அத்தனை கோபத்தை கொடுத்தது அவருக்கு.

"இன்னும் கொஞ்ச நேரத்தில வாசு வேதாவ இங்க கொண்டு வந்து விட்டுடுவான் ம்மா. ஜெர்மன் போற வர வேதா இங்க தான் இருப்பா" என்று சொன்ன மகனை அதிர்ச்சி மறையாது பார்த்தவர்,

"என்ன அரவிந்த், அவ தான் புத்தியில்லாம பேசினா உனக்கு எங்கடா போச்சு? அவ பேசும் போது நாலு அரைய விட்டு அங்கையே ராகவ் கூடத் தான் இருக்கனும்னு சொல்ல ஒனக்கு என்ன வந்துச்சாம்? இப்போ இவ அங்க போய் தான் படிக்கனுமா? ஏன் இங்க எத்தன காலேஜ் இருக்கு? சொன்னா நீயோ இல்லை ராகவோ படிக்க வைக்க மாட்டீங்களா? எனக்கு வர ஆத்திரத்துக்கு" என்று அவர் இன்னும் ஆத்திரப்பட்டு பேசிக்கொண்டிருக்க, அரவிந்திற்கு அழைத்திருந்தார், சொக்கநாதன்.

சொக்கநாதன், அரவிந்த் காவ்யாவின் தகப்பன். இதுவரை வெளியில் அதிகம் எங்கும் வந்திராது தொழிலை மட்டும் மூச்சாய் நினைக்கும் மனிதர்.

அவரின் 'வேதா சர்க்யூட்ஸ்' தற்சமயம் தமிழகம் கேளரத்தில் மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பு செய்வதிலும் பெரும் நிறுவனங்களின் உபகரணங்கள் விநியோகம் செய்வதிலும் கொடிக்கட்டி பறக்கிறது.

தன்னை எங்கும் முதன்மை படுத்த நினைக்காத கடும் உழைப்பாளி. தொழில், அது ஒன்று மட்டும் தான் அவருக்கு பிரதானம். அதற்கென்று குடும்பத்தை நட்டாற்றில் விடும் நபரும் அல்ல. அவர்களுக்காக நேரத்தை ஒதுக்கும் அளவிற்கு இடம் கொடுக்காது தொழிலில் ஈடுபடும் நபர்.

அரவிந்த் காவ்யா என்று இருவரும் அவரின் செல்லங்களாக இருந்தாலும் சில வருடங்களாக அரவிந்திடம் ஒரு ஒதுக்கம். அதுவும் அவன் சொக்கநாதனை சார்ந்திராமல் அவனே படித்து இப்போ ஒரு வழக்கறிஞராக இருக்கவும் தந்தையாய் அவரின் இறுமாப்பு அடிவாங்கியிருந்தது.

கிட்டத்தட்ட பல வருடங்களாக இருவரும் பேசிக்கொள்ளவே இல்லை. அப்படியிருக்க இப்போது அவரின் அழைப்பு அவனை யோசிக்க வைத்தது.

இப்போது தொல்லை போல் ஒலித்த தொலைப்பேசியை எடுக்காது தாமதித்தவனை பார்த்த ராகினி, "யாருடா? வேதாவா" என்று அவரே கேட்டு அதை பிடிங்கிக்கொள்ள, அதில் தெரிந்த பெயர் அவருக்கு அத்தனை பயத்தைக் கொடுத்தது.

காவ்யாவின் திருமணமும் சொக்கநாதனிடம் முதலில் சொல்லப்படவில்லை, அதற்கே அத்தனை வருந்தி, நொந்து போனவர் இப்போது மகளின் முடிவில் என்ன முடிவெடுப்பார் என்று தெரியாது பயந்தார் ராகினி.

"அப்பாடா, இவருக்கு நான் என்ன பதில் சொல்லுவேன். என்னைய நம்பி தானே உங்க ரெண்டு பேரையும் விட்டுட்டு இந்த மனுஷே தொழிலக் கட்டி அழுகறார், இப்போ எல்லாம் மண்ணா போச்சு" என்று தன் போக்கில் சொல்லி அழுதவரை சமாதானம் உரைக்கும் நிலையில் அவன் இல்லை.

மனதில் அத்தனை யோசனை. சாதாரணமாக கூப்பிடாத மனிதர் இத்தனை வருடங்களுக்கு பின்னர் அதுவும் இன்று இப்போது அழைத்திருப்பது அவனை ஏதோ சிந்திக்க செய்ய, சட்டென்று அவருக்கு அழைத்திருந்தான்.

இரண்டாம் ரிங்கிலேயே அழைப்பு ஏற்றப்பட்டாலும் பெரும் மௌனம் இருபக்கமும்.

பின் சொக்கநாதனே, "தம்பி, ராணிகிட்ட சொல்லாம கொஞ்சம் செங்கல்பட்டு கவர்மென்ட் காலேஜ் ஹாஸ்டலில் வாரீங்களா?" என்றார் மிகுந்த தயக்கமான மெல்லிய குரலில்.

உடனே பரபரப்பு தொற்றிக் கொண்டது அவனிடம்.

"உங்களுக்கு?" என்று அடுத்து சொல்ல வந்ததை நிறுத்தியவன்,

"வந்தறேன்" என்றுவிட்டு ராகினியிடம் ஏதேதோ காரணத்தை சொல்லி தன் ஜூனியர்ஸ் இருவரை அழைத்தக்கொண்டு அங்கு விரைந்தான்.

கிட்டத்தட்ட இரண்டே கால் மணிநேரம் ஆகியிருந்தது. அரக்கப் பறக்க அவன் மருத்துவமனை வளாகத்தினுள் நுழையும் முன்பே அவன் இதயத்தின் லப் - டப் லயம் பெரியதாய் அதிர்ந்தது‌.

சொக்கநாதனுக்கு ஒன்றும் இருக்காது என்று அவன் மூளை சொன்னாலும் மகனாய் அவருக்காய் அவனின் இதயம் துவண்டு துடிக்காமல் இல்லை.

நிடத்திற்கு நிமிடம் அவர் இருந்த அறைக்குள் செல்லும் வரை, அவன் உடல் அதிர்வு அதிர்ந்து அவனை நிலைக்கொள்ளாது வைத்திருந்தது.

"எல்லாம் எக்ஸ்டர்ணல் இஞ்சுரிஸ் தான். ப்ளட் அவ்வளவு போகல ஆனா வயசாகறனால கொஞ்சம் நாள் ஆகும் காயம் எல்லாம் ஆற" என்று மருத்துவர் சொல்வதைக் கேட்டு, அதிர்ந்து அறை வாயிலேயே நின்றுவிட்டான் அரவிந்த்.

அத்தனை வருடம் இருந்த வீம்பு முற்றும் அறுந்து, "ப்பா" என்று கூவலுடன் அறைக்குள் பிரவேசித்தவனை வரவேற்றது என்னமோ அவர் தான்.

அவர், புவனா திருமழிசை!





அம்ருதாவின் வீட்டில் இரவு உணவிற்காக அனைவரும் கூடியிருந்தனர்.

எளிதான உணவுகளைத் தான் அன்று சமைத்திருந்தார் நீலாம்பரி. வழக்கம் போல், இரண்டு மூன்று வகைகள் இல்லாது வெறும் இட்லி மட்டும் காட்சி தரவும் ஆதவனுக்கு முகம் கூம்பியது.

"ம்மா, தோசை சுட்டு கொடேன்" என்று மெல்ல அவன் மீனாட்சியை நச்சரிக்க ஆரம்பித்தான்.

வீட்டில் சுந்தரேஸ்வரர் இருந்தால் அங்கிருக்கும் அனைவரும் பூனை பேச்சு தான் பேசுவர். இதில் இன்று சரவணன் வேறு அவருக்கு சரிக்கு சரியாய் பேசியிருக்க, ஒருவருக்கும் சப்தம் வரவில்லை.

வாசு வந்து சென்று பின்னர் அவரின் அறைக்குச் சென்ற சரவணன் இன்னும் வெளியே வரவில்லை. உண்ண கூப்பிட்டாலும் பின்னர் என்றுவிட மற்றவர் வந்துவிட்டனர்.

அவருக்கான தனிமையும் சிந்திக்கும் நேரத்தையும் வழங்கிவிட்டு அனுவும் வந்துவிட்டார்.

"என்ன ஆது வேணும்" என்று மெல்ல அனு அவனிடம் கேட்க,

"அனும்மா, தோச" என்றான் இட்லியை பார்த்தவாறு.

ஆரூரன், "அப்போ எனக்கு பொடி தோச வேணும்"

ஆதவன், "மூடு, இப்போ தானே வயிறு சரியாகியிருக்கு. நீ இட்லி மட்டும் சாப்பிடு"

"உன்னையெல்லாம் யார்டா டாக்டருக்கு படிக்க சொன்னா? எப்ப பார் அத சாப்பிடாத இத சாப்பிடுனு.. இம்ச"

"ஆரவா, வயிறு புண்ணுனா காரமில்லாம சாப்பிடத் தெரியாத உனக்கு. ஆதவா சொல்லுறத கேளு முதல்ல" என்று சுந்தரேஸ்வரர் சொல்லிவிட, புரையேறியிருந்தது அவனுக்கு.

அத்தனை மெல்ல பேசியும் அவர் காதை அடைந்ததன் விளைவு.

சாரங்கன், "என் பையனுக்கு ஊசி காதுன்னு தெரியாம பேசினா இப்படி தான்டா பேராண்டி"

ஆரூரன், "எல்லாம் நீங்க பண்ண வேல. மனுஃபேக்டுரிங் டிபெக்ட்டோட யாரு பெத்துக்க சொன்னா உங்கள?"

"இத நீ உன் நீல்ஸ் கிட்டத்தான் கேட்கனும்"

"வெக்கமே இல்ல தாத்தா உனக்கு" என்று சிரிப்போடு அபூர்வன் கேட்டிட,

"இதில என்னடா இருக்கு வெக்கப்பட? உலகத்துக்குத் தெரியாததையா நான் சொல்லிட்டேன்?"

"அப்பா, போதும். சாப்பிடுங்க, இவனுங்க கூட பேசிட்டு நேரத்தத் தான் போக்குறீங்க"

"சரி தம்பி" என்று அப்படியே பம்மிவிட்டார் சாரங்கன்.

"பாரு.. ஆளுக்கும் பேச்சுக்கும் பண்ணுற வேலைக்கும் சம்மந்தம் இருக்கானு" என்றான் ஆரூரன்.

கிட்டத்தட்ட அனைவரும் உண்டிருந்த நிலையில் வெளியே வந்தார் சரவணன்.

டைனிங்கில் சாரங்கன், சுந்தரேஸ்வரர் இருப்பதை பார்த்துவிட்டு, "அப்பா, முரளி ஸார்கிட்ட நாமளே ஒரு நல்ல நாள் பார்த்து பேசீட்டு வந்துடலாம். சீக்கிரம் கல்யாணத்தையும் முடிச்சிட்டா பெட்டர்" என்று அவர் சொல்லிய நொடி, விசில் சப்தம் பறந்தது.

"சரோப்பா, சூப்பரு போங்க"

"தேங்க்ஸ் ப்பா"

சரவணனின் சம்மதம் அத்தனை ஆசுவாசத்தைக் கொடுத்தது மீனாட்சிக்கு. அதை எல்லாம் ஒரு சிறு சிரிப்புடன் பார்த்துவிட்டு சென்றார் சுந்தரேஸ்வரர்.

சாரங்கன், "அய்யா, நாள கடத்தமா பண்ணீட்டலாம். முரளி கொஞ்சம் கொணமாகட்டும், முறையா எல்லாம் பண்ணீடலாம்"

"ம்ம்.. அண்ணனும் நீங்களும் பாருங்க. நானும் ஒருதடவ முரளி ஸார்கிட்ட பேசீடுறேன்" என்றுவிட்டு அவர் உண்ண அமரவும், இன்று அதிசயத்திலும் அதிசயமாம் அவர் தட்டில் வீற்றிருந்தது ஒரு மைசூர் பாக்!



"கால் பண்ணுங்க, கால் பண்ணுங்க" என்று நச்சரித்த அபூர்வனை தலையில் தட்டி அமர வைத்திருந்தான் ஆரூரன்.

ஒருவித விரிந்த சிரிப்போடு அதை பார்த்திருந்த ஆதவனுக்கு அப்போது தான் தோன்றியது தன் இரட்டையின் அட்டைப் போலான வாசுவிடம் இருந்த ஒட்டுதல்.

"டேய் இரு. உனக்கு எப்படி அவர் கூட இப்படி ஒரு கனெக்ட்? ஐ மீன், அம்ரூவ லவ் பண்ண உன்கிட்ட ஐடியா எல்லாம் அவர் கேட்டதா இவன் சொன்னான்? எனக்குத் தெரியாம எப்படிடா ரெண்டு பேரும் க்ளோஸ் ஆனீங்க?"

"அத்தான்னு சொல்லுங்க ஆதுண்ணா. அவர், இவர், சுவர் எல்லாம் வேண்டாம்"

"ம்ம்ப்ச், அதுதான் எனக்கு வரமாட்டேங்கிதே! அவரும் இதான் சொன்னார் பட் இந்த முறை பெயர் எல்லாம் தானா வரட்டும்"

"நீ தான் ஜீகிட்ட கடுவான் பூனையாச்சே! எப்போ பேசின?"

"நேத்து தான். அம்ரூவ பார்க்க வந்தார். அப்போ தான் கொஞ்சம் பேசினோம்"

"நேத்தா?" என்று ஆரூரனும் அபூர்வனும் கோரசாக கேட்க,

"ஆமாடா. ஏன்?"

இருவரும் ஒருவர் முகத்தை இன்னொருவர் பார்த்தபடி இருக்க, ஆதவனுக்கு ஒன்றும் புரியவில்லை.

அதுவரை நடந்த நிகழ்வுகளும் அவனுக்குத் தெரியாததால் சற்று தயங்கியவாறே ஆரூரன் அவனிடம் சொல்லிக்கொண்டிருந்தான்.

அதை மொத்தமும் கேட்டவனின் முகம் சற்று வாடிக் கூம்பிப் போயிற்று.

"எனக்கு அவர பிடிக்காததால தான இத்தன நடந்தும், உங்க ப்ளான் உட்பட என்கிட்ட எதையும் சொல்லாம இருக்கீங்க?" என்று வருந்திபோனக் குரலில் கேட்டவனை என்ன செய்து தேற்ற என்று தெரியாது விழித்திருந்தனர் இருவரும்.

"அவர பிடிக்காதுன்னு இல்லடா, லவ்னு சொல்லிட்டு அம்ரூவ ஹர்ட் பண்ணிட்டாங்கனா? அந்த பயம் தான். அதுவும் அப்பா, சரோப்பா எல்லாம் அந்த லேடி பத்தி சொல்லவும் எனக்கு சுத்தமா பிடிக்காம தான் இருந்துச்சு. பட் பூர்வா இன்சிடெண்ட், அம்ரூவோட பிடித்தம்.. கொஞ்சம் என்ன யோசிக்க வெச்சாலும் அப்பா கூட அவரைப் பத்தி விசாரிக்க போனப்போ அவர் கேரக்டர் எனக்கு ரொம்ப பிடிச்சுருச்சு" என்றவன் மென்மையாக, "சச் எ ஜெம்" என்றான் சிரித்தவாறு.

"ஓட் ரைட், எங்க தேவா'த்தானா கொக்கா" என்றான் அபூர்பன் ஆர்ப்பாட்டமாக.

"நரம்பா இப்படியே சிரி! ஆனா மூஞ்ச மட்டும் கொஞ்ச நேரம் முன்ன வச்ச மாதிரி வைக்காத, குழில இருந்து புடுங்கிட்டு வந்த மாதிரியே இருக்கு"

"டேய்"

"என்ன டோய், நீ திங்கறது எல்லாம் எங்கத் தான் போகுதோ" என்றான் ஆதவனை இயப்பாக்க.

"அதவிடு, நான் கேட்டதுக்கு பதில் சொல்லு"

"விடமாட்டியே, தாத்தா கோவா போனாரே அப்போவே இவங்க ரெண்டு பேர் மீட்டிங் ஏர் போர்ட்லையே படுபயங்கரமா இருந்துச்சு. அப்போ வெச்சு பார்த்தேன். தென் ஒரு நாள் எனக்கு கால் பண்ணியிருந்தார், தனியா அம்ரூ பத்தி பேசனும்னு. அப்போவே தெரிஞ்சிடுச்சு லவ்வ சொல்லத் தான் கால் பண்ணுறார்னு.. பேசினோம், ஆனா நான் தான் பிடிக்கொடுக்கல. அப்புறம் என்னமோ தோனுச்சு இவர் அம்ரூவுக்கு செட் ஆவார்னு.. அப்படியே பேசி பேசி, ப்ரண்ட் ஆகிட்டோம். அவ்வளவு தான்" என்று அவன் சொல்லி முடித்திருக்க,

அபூர்வன், "எனக்கு வந்தன்னைக்கே அம்ரூக்கா சொல்லிட்டா, தேவா'த்தான் தான் அவளோட ஃபயான்ஸேன்னு" என்றவன் சிரிக்க,

ஆரூரன், "பாரு, ஒன்னும் நடக்கறதுக்கு முன்னவே இந்த லட்சணம்"

ஆதவன், "அவளுக்கு பிடிச்சா ஓகே தான்."

"டூட் நமக்கு அத்தானா வரப்போறவர். நமக்கும் கம்பனி கொடுக்கனும்ல, சோ நமக்கும் பிடிக்கனும். அதுவும் முக்கியம்"

அபூர்வன், "விடுங்க விடுங்க.. முத அரவிந்த் அண்ணாக்கு கால் பண்ணுங்க"

ஆதவன், "என்னடா சொல்லப் போறீங்க?"

அபூர்வன், "அதான் அப்பா ஓகே சொல்லிட்டார்ல அதான்"

ஆதவன், "அத அவருக்கு சொல்லாம ஏன் அரவிந்த் கிட்ட?"

ஆரூரன், "ஏன்னா இன்னிக்கு எங்க ப்ளான் ஃப்ளாப்! அதான் விஷயம் சொன்னா ப்ளான் போட்டவர் கொஞ்சம் ஹாப்பி ஆவாரே"

அரவிந்திற்கு அழைப்பு விடுக்க, அது சென்று கொண்டே இருந்தது. அவன் தான் எடுத்தபாடில்லை.

"சரி விடுங்கடா.. நாளைக்கு சொல்லுங்கோங்க. தூங்கலாம் வா, செம்ம டையர்ட் வேற" என்று அவர்கள் கூட்டம் களைந்தாலும், அங்கு அரவிந்தின் குடும்பமும் களைய காத்திருந்தது.





இருண்டு போய் இருந்த அறைக்குள் செல்ல ஒரு சிறு தயக்கம் அவளுக்கு.

இரண்டு வாரமாக பங்குப் போட்ட அறை தான். ஆனால் இன்று முற்றும் அந்நியமாய் போயிருந்தது.

விளக்கை தட்டிவிட்டு அவனை அறையில் தேடினால். சாரளத்தின் அருகே இருந்த ஒற்றை சாய்விருக்கையில் பின்னோக்கி தலை சாய்ந்தபடி அமர்ந்திருந்தான் அவளின் ரகு.

"இது என்ன இவ்வளவு பெரிய பேரு, ராகவ் முரளி கிருஷ்ணன். சொல்லுறதுக்கே கஷ்டமா இருக்கு. நான் உங்கள சுருக்கி ரகுன்னு கூப்பிடுறேன்" ராகவிடமே பளீர் என்று சொன்ன போது காவ்யாவின் வயது பதினாறு.

அப்போது அவனோ மருத்துவம் நான்காம் ஆண்டு பயின்றுகொண்டிருந்தான். அவளின் பேச்சு ஒரு சிறு பிள்ளை தனமாகத் தோன்றினாலும், அவள் அப்போதே அவன் மனதில் நிறைந்திருந்தால்.

அவனும் சொல்லவில்லை, அவளும் காட்டிக்கொள்ளவில்லை.
ஆனால் காதலானது மெல்ல மெல்ல அவர்கள் இதயத்தை தட்டித் திறந்திருந்தது.

வாசுவின் கூற்றுப்படி அது அவளின் வயதில் வரும் ஒரு இனக்கவர்ச்சி மட்டுமே என்று நினைப்பு அவளிடம். ஆனால் காலப்போக்கில் உரிமை எடுத்து பழகி, அப்பழக்கம் காதலாகி இப்போது அவனின் மனைவியான பதவிக்கு அவளை அழைத்து வந்திருந்தது‌.

நொடியில் எல்லாம் அவள் மனதில் வந்து போக, அவன் தொண்டை குழி ஏறி இறங்கியதைப் பார்த்தவள் எதுவும் யோசிக்காது அவள் ரகுவிடம் சரணடைந்திருந்தால் பெண்ணவள்.

காயமும் அவனே; அவளின் அழுத்தமும் அவனே; அவளின் முழுதாகிய மருந்தும் அவனே!

தொப்'பென்று அவன் மீதே விழுந்தவளை அணைவாகப் பிடித்து தன்மேலே போட்டுக்கொண்டவனை நினைத்து அத்தனை கண்ணீர் வந்தது அவளுக்கு.

இருந்தும் இருவரும் ஒற்றை வார்த்தை உதிர்க்கவில்லை.
காதலில் வைராக்கியமும் வலி கலந்த அழகு தான் போல.

இறுக்கமான அணைப்பாக இல்லை என்றாலும் அதில் தெரிந்த வழு காவ்யாவை இன்னும் அவனை நெருங்க வைத்திருந்தது.

அவன் கண்ணின் ஓரம் கொடாக வழிந்த கண்ணீர் அவன் தவிப்பையும் அன்பையும் மௌனமாய் சொல்ல, அவளின் கதறலும் கட்டுக்காடங்கா கண்ணீரும் தப்பித் தாளமிடும் இதயமும் அவளின் போராட்டத்தைப் புடம் போட்டு காட்டியது.

அவளின் அழுகை எல்லாம் மெல்ல கறைந்து நீண்ட மூச்சுக்களாக குறைந்திருந்தாலும் அவளின் முதுகை ஆதூரமாய் தடவும் அவரின் வருடல் மட்டும் நின்றபாடில்லை.

இவனின் முகத்தை கூட இனி வரும் வருடங்களில் பார்க்க முடியாதே என்று நினைத்தவள் மறந்தும் அவளெடுத்த முடிவில் மாற்றம் கொண்டு வந்துவிடவில்லை.

அவனோ, அவனின் மூச்சாகிப் போனவளை இன்னுமின்னும் தன் தொடுகையின் மூலம் உணரப் பார்த்தான், இனி அது எப்போது வாய்க்கும் என்று தெரியாது.

ஒரு கழித்த அவனின் மார்பில் தலை வைத்து படுத்திருந்தவளின் பார்வை அவனை துளியும் சீண்டாது பக்கவாட்டில் பெரிய சட்டத்தில் மாட்டியிருந்த அவர்களின் திருமண புகைப்படத்திலேயே நிலைத்திருந்தது.

சிரிப்பு இல்லை என்றாலும் அவள் முகத்தை அலங்கரித்த நிறைவும் அவளை காயப்படுத்திவிட்ட குற்றவுணர்வோடு அவளை கரம் பற்றிய ஆசுவாசமுமாக நின்ற ராகவும் அத்தனை அழகோவியமாய் இருந்தனர் அதில்.

வாயில் மணி அழைப்பு திடும் என்று கேட்டிட வாசு வந்ததை அறிவுருத்தியது அது.

சென்று அழுகை மீண்டது போல் இருந்தது அவளுக்கு. இத்தனை பாடுபடுத்துமா இந்த காதல்? தன்னை இத்தனை பலவீனம் செய்துவிட்டதா இவனின் அன்பு? என்றவள் நினைத்தாலும் அவனே அவளின் உயிராகிப் போனப் பின்பு இதுவெல்லாம் சாதாரணம் என்று புரியவில்லை அவளுக்கு.

அவளை பின்னியிருந்த அவனின் கைகள் நகரும் என்று தோன்றாது அவளே எழுந்தால்.

கிஞ்சித்தும் விலகாத அவனின் கைகளில் இருந்து விலகிய போது உணர்வு பிழம்பாக, அத்தனை துக்கத்தையும் அழுகையும் கட்டுப்படுத்தியவள் நிமிர்ந்து அவன் முகமும் பார்க்கவில்லை, பேசவும் இல்லை.

ஓர் எட்டு வைத்தவளின் புடவை முந்தானை இழுபட, சட்டென்று திரும்பியவள் முகம் அந்த ஒரு விநாடி அந்த ஒற்றை விநாடியில் தெரிந்த சந்தோஷமும் எதிர்பார்ப்பும் அப்பட்டமாகவே காட்டிக்கொடுக்க, ஏறியிரங்கும் நெஞ்சோடு அவனைப் பார்த்திருந்தாள் பேதையவள்.

நேற்றைய தினம் போல் இன்றும் சிவப்பேறி இருந்த அவன் விழிகள் அவள் முகத்தைப் ஆழ்ந்து பார்த்தது. பார்த்துக்கொண்டே இருந்தது.

பதில் மொழியற்று அவள் நின்றிருக்க, அவள் புடவையின் முந்தி அவன் கைகளில்.

கண்கள் கூட இத்தனை தவிப்பை தருமா? என்று இருந்து நொடிகள்.

'ஏதாவது பேசேன்' என்று அவள் மனதில் கத்தினாள், அதை அவள் முகமும் காட்டியது.

அவனும் படித்தான், ஆனால் அந்த பேச்சு அவளின் பிடிவாதத்தை இன்னும் பிடித்து வைத்தது.

"பத்தரம்"

அதற்கு அவள் கண்கள் வடித்த அபிநயம், இதுவரை அவன் பார்த்திராத ஒன்று.

ஒரு சின்ன தலையசைப்பு, அத்தொடு அவள் அந்த அறையை விட்டு, அவளின் ராகவ்வை விட்டு சென்றுவிட்டாள்.

அமுதம் தொடரும்...
 

Shambhavi

Moderator
அத்தியாயம் - 36

கிச்சனில் காலை சமையலை செய்துகொண்டிருந்த ராகினியின் முகத்தில் அத்தனை கலக்கமும் அழுகையும்.

வாழ்க்கை ஒரு மகிழ்ச்சியை தந்தால் அதை ஆழ்ந்து அனுபவிக்கும் முன்பே அதைவிட இரட்டிப்பான அதிர்வையும் தருவது அவருக்கு புதியது இல்லை என்றாலும் இந்தமுறை மனது விட்டுவிட்டது போன்ற உணர்வு.

நேற்று மகள் பொட்டியோடு வந்து நிற்கும் போது பெற்றவறாக ஆத்திரம் வந்தாலும் அதே அளவிற்கு அழுகையும் வெடித்தது.

அவளாகத் தேடிக்கொண்டது என்று சொல்லவும் முடியாது. அவள் காதல் எப்போதோ தெரிந்து சம்மதித்த ஒன்று என்றாலும் இப்படி வாழாது அவள் வந்து நிற்கும் போது உள்ளம் பதறத்தானே செய்யும்.

அதிலும் அவளே தன் வாழ்க்கையை கெடுத்துக்கொண்டால் என்ற எண்ணம் வந்தால், கேட்கவா வேண்டும்.

மகன் இரவில் வராதது, சொக்கநாதன் திடீர் என்று மகனுக்கு அழைத்தது என்று அதுவேறு மனதை பிசைய, இம்மித் தூக்கம் இரவில் இல்லை.

நிச்சயமாக ஏதோ கணவனுக்கு நேர்ந்திருக்கிறது என்பதில் மட்டும் அவர் மனது ஆணியடித்தால் போல் நின்றிருக்க, அதை ஊர்ஜிதம் செய்யும்படி அதிகாலையில் சொக்கநாதனைத் தாங்கியபடி வீட்டிற்கு வந்தான் அரவிந்த்.

"முருகா" என்று நெஞ்சை பிடித்து நின்றவர் தான் ராகினி.

பெரும் அதிர்ச்சி, அந்த அதிர்ச்சி அவரை எதிர்வினைக் கூட செய்ய முடியாது முடக்கியிருந்தது.

சொக்கநாதனை ராகினியின் அறையில் படுக்க வைத்து, மருத்துவர் உரைத்த விஷயத்தை காவ்யாவிடம் சொல்லிவிட்டு, மாத்திரைகளை சரி பார்த்து அவர் உறங்கிய பின்னர் வெளிவந்த இருவரும் ராகினியைப் பார்க்க, அவர் அப்போதும் எதுவும் பேசாது அமர்ந்திருந்தார்.

ஓர் அளவிற்கு எதிர்பார்த்த ஒன்று என்றாலும் கணவனை இப்படி அடிபட்டு பார்த்தும் இதயத் துடிப்பு வேகமாய் துடித்தும், அவரிடம் ராகினியால் செல்ல முடியவில்லை.

அதுவேறு ஒருபக்கம் போட்டு படுத்த, 'இனி வருவதை தாங்கும் தெம்பைக் கொடு கடவுளே' என்று நினைப்பதை தவிர்த்து வேற என்ன வேண்டிக்கெள்ள என்று தெரியவில்லை அவருக்கு.

இனிமையான திருமண வாழ்க்கை என்று சொல்ல முடியவில்லை என்றாலும் அத்தனை வருடத்தில் நிம்மதி இருந்தது. ஆனால் எப்போது அவர் 'வேதா சர்க்யூட்'ஸ் ஆரம்பித்தாரோ அப்போதே சொக்கநாதனிடமிருந்து ஒரு மெல்லிய விலகலை அவர் உணர ஆரம்பித்திருந்தார்.

அந்த விலகலை இருவரும் உணர்ந்தாலும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் சொக்கநாதனை மேலும் ராகினியிடமிருந்து பிரித்தது. அதை அப்படி அவர் காட்டிக்கொண்டார் என்றே சொல்ல வேண்டும்‌.

பேச்சுக்கள் குறைந்தாலும், அவர்கள் இருவர் கொண்ட அன்பு எனும் சக்கரம் திருமண வாழ்க்கையை இன்றும் ஓட்டிக்கொண்டிருந்து.

அரவிந்த், "அம்மா எழுந்து போய் அப்பாவ பாரு. ஒரு வார்த்தக் கூட இப்படி பேசாம இருந்தா எப்படி? அவர் தூங்கி எழுத பின்னயாவது பேசு"

காவ்யா, "இப்போ என்ன தான்'ம்மா உன் பிரச்சனை? இப்படியே உட்காந்திருக்க. ஆர்வி'கிட்ட அவர் பேசாதனால அவர விட்டு விலக ஆரம்பிச்சு இப்போ சுத்தமா பேசவே மாட்டேங்கிற. பிரச்சனை வந்தவுடனே ஆர்விய தான கூப்பிட்டார், என்னையோ ஒன்னையோ இல்லையே. பாசமில்லாமையா இருக்கும். அவரா இப்போ இங்க வந்துட்டார்ல இன்னும் என்ன'ம்மா"

"விடு வேதா. அவங்களா போவாங்க. எனக்கு பசிக்குது ம்மா. ஏதாவது செஞ்சையா? இருக்கா?" என்றபடி அரவிந்த் சமயல் அறைக்குச் செல்ல,

"இரு ஆர்வி, காப்பி போட்டுத் தரறேன். முதல் குடி அப்புறம் சாப்பிடலாம்" என்றவர் மெல்ல தயங்கியபடி, "அடிபட்டு வந்த மனுஷே கொஞ்சம் காரம் எல்லாம் கம்மியா போட்டுத் தான் சமைப்பேன். அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க" என்றுவிட்டு சென்றவரின் முகத்தில் தான் அத்தனை கலக்கம்.

"இப்போ காரமா முக்கியம்" என்று காவ்யா பல்லைக் கடித்தாள்.

"வேதா போ, என்ன பண்ணுறாங்கனு பாரு. இத்தன அமைதி அவங்களுக்கு சூட் ஆகல.. பேச்சும் கடமையா தான் வருது பார்." என்றுவிட்டு அவன் அறைக்குள் சென்றதும் அத்தனை யோசனை அவனுக்கு.

நேற்று அந்த இரவு நேரத்தில் புவனாவை மருத்துவமனையில் பார்த்தவனுக்கு ஒன்றும் புரியவில்லை தான்.

ஆனால் அதன்பின்னர் அவன் தெரிந்துகொண்ட செய்தி, உண்மையில் தலைவலியைத் தான் கொடுத்தது.

புவனா, சொக்கநாதனுக்கு ஆஸ்தான வழக்கறிஞர். அதைவிட அவர் மேல் அதிகமான மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கும் நபர். சுருங்க சொன்னால், புவனா ஒரு விஷயத்தை மறுத்தால் அதன் பின்னர் சொக்கநாதன் அதனை செய்யவே மாட்டார்.

முரளியைத் தொட்டு ஒருவகை மெல்லிய நட்புறவு கூட இருவருக்கும். சொக்கநாதனுக்கு ஒரு நல்ல நலம் விரும்பியும் என்றே சொல்லலாம்.

"இவ்வளவு தூரம் வந்த பின்னையும் எப்படி அந்த தில்லைய விட்டு வைக்க சொல்லுறீங்க நாதன்?" என்று அரவிந்த் இருப்பதையும் பொருட்படுத்தாது கத்தினார் புவனா.

நீதி மன்றத்தில் இருக்கும் பெண் சிங்கமாய் அவர் கர்ஜனை இருக்க, முகத்தில் கோபம் அப்பட்ட கோலம் போட்டிருந்தது.

அவர் தில்லை நாதன் என்றவுடனே அரவிந்திற்கு நினைவு வந்தது என்னவோ,
முன்னாள் உணவுத்துறை அமைச்சர். தில்லைநாதனே.

அவனைப் சட்ட ரீதியாகப் பிடிப்பதற்கு புவனா கிட்டத்தட்ட ஆறு வருடங்களாக முயன்று வருகிறார் என்பது அரவிந்திற்கு செவி வழி செய்தி.

ஆனால், ராகவை தில்லைநாதனின் பெண்ணிற்கு மணமுடிக்க அவர் காத்திருக்கிறார் என்று சில தினங்களுக்கு முன்பு வந்த செய்தி, அவன் புருவத்தை உயர்த்தியிருந்தது.

ராகவை பகடையாக வைத்து அவர் காரியத்தை சாதிக்கப் பார்க்கிறார் என்பது தெரிந்தாலும், மகனின் வாழ்க்கையில் போய் விளையாடுவதா என்று கோபமும் மூண்டது அவனுக்கு.

ஆனால் சொக்கநாதன் 'அவனை ஒன்றும் செய்ய வேண்டாம்' என்பது தான் அரவிந்திற்கு இடித்தது. எதனால்? என்ற கேள்வி எழுந்தவுடன் அதற்கான விடையும் சற்று நேரத்திலேயே கிடைத்தது அவனுக்கு.

மருத்துவ பரிசோதனை முடிவடைந்து அதிகாலையில் அவர்கள் கிளம்ப முற்படும் சமயம், "புவனா ம்மா நீங்க கிளம்புங்க. நேத்து வந்தவுங்க இத்தன நேரம் இருந்ததே பெரிசு" என்று சொக்கநாதன் புவனாவிடம் சொல்ல,

"நான் இருந்தனால ஆச்சு. இல்லேனா என்ன ஆகியிருக்கறது. தனியா இனி இப்படி வண்டியோட்டு வராதீங்க நாதன்." என்றவர் அரவிந்திடம் ஒரு பார்வை வைத்துவிட்டு,

"கவனமா போங்க" என்றுவிட்டு கிளம்பியவர் முகத்தில் அத்தனை ஆத்திரம்.

காவ்யாவை பற்றி செய்தி அப்போது தான் அவருக்கு வந்திருந்தது. இதில் ராகவ் திரும்பவும் முரளியுடன் சென்றிருப்பது துவங்கி எல்லாம் செய்தியாகவும் புகைப்படமாகவும் வந்துவிட கொதித்துப் போய் கிளம்பியிருந்தார் முரளியின் வீட்டிற்கு.

காரில் செங்கல்பட்டை தாண்டி வந்து கொண்டிருக்கும் போது,"தில்லைநாதன் உங்கள என்ன பண்ணான்?" என்று சுற்றி வளைக்காது சொக்கநாதனிடம் கேட்டுவிட்டான் அரவிந்த்.

சொக்கநாதன் எப்படியும் மகன் கேட்பான் என்று நினைத்து வந்தார் தான். சிறிது நேரம் மௌனமாய் இருந்தவர் பின் அவனுக்கு இதெல்லாம் தெரிந்திருக்க வேண்டும் என்று நினைத்து சொல்லிவிட்டார்.

சரண், தில்லைநாதனின் மகன்.
அவனும் மருத்துவ உபகரணங்கள் தொழில் தான் செய்து வந்தான். முதலில் தொழில் ரீதியாக சொக்கநாதனை அறிந்தவன் பின் அது போட்டி வெறியாக மாறியிருக்க, பிரச்சனை மேல் பிரச்சனைகளை அடுக்க ஆரம்பித்திருந்தான்.

அதை சட்டப்படி முறையாக சொக்கநாதன் கையால நினைக்கும் போது முரளியின் மூலம் அறிமுகமானவரே புவனா.

ஒன்று தொட்டு ஒன்று என்று வழக்கிற்காக விசாரிக்க போகும் போதுதான் தில்லைநாதனை பற்றியும் சரண் பற்றியும் பல முறைகேடான விஷயங்கள் வெளியே வந்தனர்.

அரசியலில் இருப்பவர்களுக்கு இது சாதாரணம் என்று நினைத்தாலும் ஒரு தேர்ந்த வழக்கறிஞர் புவனாவால் அதை சட்டென்று விட்டுவிட முடியவில்லை.

காத்துதிருந்து கண்ணி வைத்து பிடிக்க அவர் நினைத்திருக்க, அப்போது அபிநயாவிடம் சீக்கிய அபூர்வன் தவிர்த்து அனைத்தும் அவர் கண்ணில் பட்டது. ஆனால் பட்ட அனைத்திற்கும் ஆதாரமில்லை!

சட்டத்திற்கு சாட்சியும் ஆதாரமும் தானே முக்கியம். இதனிடையில் வரிசையாக நான்கு வழக்குகள் சரணின் நிறுவனத்தின் மீது சொக்கநாதன் பதிவு செய்ய, அவரை தொடர்ந்து அத்தொழிலில் இருப்போர் இரண்டு பேரும் புகார் கொடுத்தனர்.

அது அப்போது இருந்த ஒரு புகைச்சலை கொடுத்திருந்தது தில்லைநாதனிற்கு. இடையில் முரளி வேறு அபூர்வனுக்காய் மேலிடத்தில் பேசி வைக்க, விஷயம் விபரீதம் ஆகியிருந்தது.

எங்கு தில்லையின் பார்வை தன் குடும்பத்தார் மேல் சென்றுவிடுமோ என்று நினைத்து சொக்கநாதன் அரவிந்த், காவ்யா, ராகினியிடம் சற்று விலக ஆரம்பித்திருக்க, குடும்பத்தில் அதில் வேறாக பிரதிபலித்தது.

அதிலும் புவனா முரளியை வெளிப்படையாகவே சாடியிருந்தார்.

இப்படி ஒன்றிற்கு ஒன்று என்று சங்கிலி தொடர் போல் சென்ற நிகழ்வு வந்து நின்ற இடம், ராகவ்வை தில்லையின் மகள் விரும்புகிறாள் என்பதிலேயே.

அதை கோபத்துடன் புவனா கேட்டாலும் அதிலும் ஒரு ஆதாயத்தை எதிர்ப்பார்த்தார் என்பதே உண்மை. எப்படியும் ராகவ் இதற்கு சம்மதிக்க மாட்டான் என்று தெரிந்தே தில்லையிடம் உறுதி கூறி பின் அதை வைத்தே தன் காரியத்தை சாதிக்க அவர் நினைத்திற்க, அத்தனையும் வீணானது தான் மிச்சம்.

ஆனால் இப்போது ராகவ் திருமணம் செய்திருப்பதே சொக்கநாதனின் மகள் காவ்யா என்று தெரிந்த பின்னர் ஆறு வருட வஞ்சம் அவரை நோக்கி படு உக்கிரமாக திரும்பியிருந்தது.

மதுரா அவர் கைவிட்டு போனது ஒரு தனிக்கதை.

ஏன் இத்தனை நாட்கள் அவரையோ இல்லை அவர் சார்ந்தவர்களையோ தில்லை ஏதும் செய்யாது இருந்ததற்கு காரணம் புவனா திருமழிசை!!

எப்படியும் அந்த பெண் தன்னை நாராக கிழித்து விடுவார் என்று தெரிந்து அமைதிகாத்தவர் இப்போது அவர்கள் இருவரின் பால் கொண்ட கோபத்தின் விளைவுகள் தான் சொக்கநாதனின் விபத்து.

எப்படியும் யாரும் ஓய்ந்துவிடப் போவதில்லை. தில்லைக்கான தண்டனை கிடைக்கும் வரை புவனாவும் விட்டுவிட மாட்டார் தான். ஆனால் அவரிடம் இருக்கும் ஆதரமும் சாட்சியும் போதாது. இன்னும் தேடிக்கெண்டே தான் இருக்கிறார். நிச்சயமாக ஒரு வழி கிடைக்கும் என்று.

அதுவரை தில்லையின் தொல்லையை சமாளித்தாக வேண்டும். அதில் எந்தவித மாற்றமும் இல்லை.

செய்தியை சொக்கநாதன் வழி கேட்ட அரவிந்திற்கு ஆற்றமை தான் வந்தது.

எவனோ ஒருவனுக்காக பயந்து தன் குடும்பத்திடமிருந்து அவர் விலகியிருந்தது அத்தனை வருந்த செய்தது அவனை.

தன்னை பிள்ளையாய் அவர் நினைத்திருந்தால் இத்தனை தூரம் இதனை வளர விட்டிருப்பானா? என்ற கோபமும் மூண்டது.

இத்தனை வருடங்களாக இருக்கும் அவனின் ஏக்கம், ராகினியின் மகிழ்வு, காவ்யாவின் சந்தோஷம் என்று அவர்களின் சிறு சிறு உணர்வுகள் கூட மறிந்திருந்தது சொக்கநாதனின் செயலால்.

இனி பேசி என்ன பயன். காவ்யாவின் வாழ்க்கையும் இதில் அடங்கியிருக்க, புவனாவிடம் பேச வேண்டும் என்பதை மட்டும் அவன் மனம் ஆழ சொன்னது.

பதவியில் இருக்கும் போதும் சரி இல்லாத போதும் சரி, ஒரு அரசியல்வாதியிடம் மோதுவது என்பது அத்தனை எளிதான விஷயமல்ல.

அதிலும் தொழிலும் குடும்பமும் இணைந்தாற் போல் நடக்கும் பிரச்சனைக்கு எத்தனை கவனமான அடிகளை அவர்கள் எடுத்து வைக்க வேண்டும்.

"ஆல் இஸ் வெல், தட் எண்ட்ஸ் வெல்டா ஆர்வி. போராடி பார்க்கலாம்" என்று அவனுக்கு அவனே சொல்லிக்கொண்டான்.

"என்னடா தனியா பேசீட்டு இருக்க" என்று அவனுக்கான குழம்பியுடன் வந்தாள் காவ்யா.

அவளை ஏறயிறங்கப் பார்த்தவன், "நார்மலா இருக்க மாதிரி நடிக்காத வேதா. இன்னும் உங்களுக்கு டைம் இருக்கு. ராகவ்கிட்ட பேசு" என்றவன் திரும்பவும் சொல்ல,

"ம்ம்ப்ச்.. என்ன பேசறது? அதெல்லாம் பேசி, சண்ட போட்டு எல்லாம் ஆச்சு‌. எங்களுக்கு கொஞ்சம் தனிமை வேண்டும், அதுவும் தனியா தான் வேணும்!"

"நல்லா பேசு"

"பேசலேனா வாழ்க்கையே போயிடும் ஆர்வி. என் ரகுவ விட்டு நான் எங்கையும் போகமாட்டேன். இது ஒரு தற்காலிக பிரிவுனு நினைச்சுக்கோ" என்று அவனுக்கு சொல்வது போல் தனக்கும் சொல்லிக்கொண்டாள் அவள்.

தங்கையிடம் இருந்த தெளிவு அவனை சமாதானம் செய்தது. இனி நண்பனை தான் பார்க்க வேண்டும். நிச்சயம் உடைந்திருப்பான் தான், அவனை தேற்றி தவறிய இடத்தை சரி செய்ய அவனை ஆயத்தபடுத்த வேண்டும் என்ற நினைப்புடன் இருந்தான் அவன்.

"அம்மா எப்படி? நார்மலா?"

"அழுகை தான், சரியாகிடும். எங்க எல்லாம் அடிபட்டிருக்குனு கேட்டாங்க, சொன்னதும் அப்பாவ பார்க்க போயாச்சு" என்று சொல்லியவளிடம் விபத்து நடந்ததைப் பற்றி பகிர்ந்தான்.

"வயசாகுதில்ல அவருக்கும். கவனமிருந்திருக்காது. இத்தோட முடிஞ்சதுனு நினச்சுக்க வேண்டியது தான்" என்றவள் சிறிது தயக்கத்திற்கு பின்,

"ஆர்வி, பிஜி என்ட்ரன்ஸ் படிக்கனும்.. அங்க காலேஜ் சேரனும் டிராவல் ஃபீஸ்னு நிறையா வரும்.. எனக்காக" என்றவளை இடைமறித்தவன்,

"ஒத்த பைசா தரமாட்டேன்" என்றான் அழுத்தமாய்.

அவள் விக்கித்து அவனைப் பார்க்க, "என்ன லுக், நீ ராகவோட புரோபர்டி. அதுக்கு அவன் தான் செலவு செய்யனும், நானில்லை. போய் அவனையே கேளு" என்று சொன்னவனைக் கடுப்பாய் பார்த்திருந்தாள் அவள்.


அமுதம் தொடரும்...
 

Shambhavi

Moderator
அத்தியாயம் - 37


அதிகாலையிலேயே சூரிய ஒளி மெல்ல மெல்ல புவியில் பரவ ஆரம்பித்திருந்தாலும் ஏனோ முரளியின் இல்லம் மட்டும் இருளில்.

நேற்றைய இரவே தன் அத்தியாவசிய பொருட்களுடன் அரவிந்தின் வீட்டிற்கு சென்றுவிட்டாள், காவ்யா.

அவளை விட்டுவிட்டு திரும்பவும் வாசு தன் அப்பார்ட்மெண்ட் வரும் அந்த இடைப்பட்ட நேரத்தில் ராகவின் உலகம் சூன்யமானது போல் இருந்தது.

படித்தவன்; மருத்துவன் என்பதை எல்லாம் மீறி காதலன்; கணவன் என்பது மட்டும் அவனின் உயிர்பாக இருந்தது. அதை உயிரோடு வைத்திருந்தவளே அவனை விட்டு சென்றிருக்க, இனி அவளாக வந்தாள் தான் அந்த உயிர்ப்பு உயிருட்டப்படும்.

அவன் அமர்ந்திருந்த கோலமும் அத்தனை மனதை உலுக்க, வம்படியாக முரளியின் இல்லத்திற்கு அழைத்து வந்திருந்தான் வாசு.

"பறிகொடுத்த மாதிரி உக்காந்திருக்கான் ப்பா. என்னாலையே முடியலை, ஏந்தான் இப்படி இருக்காங்களோ ரெண்டு பேரும்" என்று வாசு தன் ஆதங்கத்தைக் கொட்டினான்.

ஆனால் அதே நிலைமையில் இரண்டு பிள்ளைகளோடு அத்தனை பெரும் மருத்துவமனை நிர்வாகத்தையும் கையில் வைத்து கொண்டு அமர்ந்திருந்தவர் தான் முரளி கிருஷ்ணனும்.

தன் நிலையில் பாதி கூட மகனுக்கு வரவில்லை என்று மகிழ்வதா இல்லை வேதனைப்படுவதா என்று தெரியாது ராகவையே பார்த்தபடி இருந்தார் அவர்.

காதல், அது செய்யும் மாற்றம் தான் எத்தனை விந்தையானது. மனதளவில் ஒரு மனிதனை அன்பால் உணர்வால் அசைக்கும் வித்தையை பரிபூரணமாய் செய்து விடுகிறது.

அக்காலத்தில் கணவன் இறந்தால் மனைவி உடன்கட்டை ஏறுவது ஒரு சடங்காக இருந்தது. அதில் சிலரை தவிர்த்து மற்றவர் மனமுவந்து தானே தன் உயிரை கணவனுக்காய் துறக்கவும் செய்தனர்.

அவனில்லா உலகில் நமக்கென்ன இனி வேலை என்பது போன்ற எண்ணங்கள் இருந்திருக்கலாம்; அதை தாண்டி வேறும் இருக்கக் கூடும். அதை ஆராயாது அவர்களின் அன்பை மட்டும் பார்ப்போம்.

ஆனால் இன்று, தொட்டதுக்கொள்ளாம் விவாகரத்து. நீ சரியா; நான் சரியா என்பதை பார்க்க மட்டுமே நம்மவர்களுக்கு நேரமிருக்க, குற்றத்தை பார்க்காது துணையிடத்தில் காதலை எத்தனை பேர் இப்போது பார்க்கின்றனர்?

இருவரும் உயர்ந்தோராக இல்லது சமமாய் இருந்தாலே போதும், பிரச்சனைகளை பெரியதாய் தவிர்ப்பதற்கு.

ஆனால் அடிப்படை புரிதலும் காதலும் விட்டுக்கொடுத்து செல்லவது இல்லாமல் ஒரு சிறு விவாதமோ வாக்குவாதமோ ஏன் சண்டை என்று வந்தால் விட்டுச் செல்லவது தான் இப்போதைய தம்பதியரின் நிலை.

இதில் காதல் என்று எங்கே சென்று பார்க்க. அப்படியே காதலைப் பார்த்தாலும் அதுதான் முன்பு போல் அவர்(கள்) மனதில் அஸ்திவாரமிட்டு இருக்குமா? சற்று ஆட்டம் கண்டிருக்கத் தான் செய்யும்.

ஏன் விட்டுக்கொடுத்தால் கெட்டா போய் விடுவோம்? அதுவும் ஒரு அடிப்படை பண்பு தான். வாழ்க்கையில் சிற்சில கஷ்டங்கள் வந்தாலும் அந்த விட்டுக்கொடுத்தலில் இருக்கும் சூட்சுமம் புரிந்தால், வாழ்க்கை அழகு தான்.

காதலின் அடிப்படையில் இவை இருந்தாலும் எல்லாவற்றிக்கும் இருக்கும் அளவீதம் கூட இதற்கு பொருந்தும்.

அமிர்தமே ஆயினும் அளவோடு இருக்க வேண்டும்.

அளவை மீறிய காதல் அழிவை தரும் தான். ஆனால் அதற்குன்டான ஒரு புரிதலும் துணையை உணர்ந்தலும் இருந்தால் அளவை மீறினாலும் அது கட்டுப்பாட்டில் இருக்கும்.

அத்தகு கட்டுப்பாடு ராகவின் காதலில் இருந்தது. ஆனால் முரளியின் காதல் அங்கு தான் தோற்று நிற்கிறது.

"டேய் வா தூங்கலாம்" என்று இரவே அவனை முரளியின் அறைக்கு இழுத்துச் சென்றான் வாசு.

"ம்ம்ப்ச்" என்று சலித்து கொண்டவனை, பேசிப் பேசியே தூக்க வைக்க முயல, ராகவ் தூங்காது வாசு தான் தூங்கியிருந்தான்.

முன்பு இருந்தே அவர்களுக்கு தனித் தனி அறை இருந்தாலும் முரளியுடன் தூங்குவதென்பது சகோதரர்கள் இருவருக்கும் அத்தனை அலாதி ப்ரியம்.

வளர்ந்த பின்னர் வாசு தனக்கான ஒரு இடமும் அங்கீகாரமும் தேவை என்று கருதி தனியே அப்பார்ட்மெண்ட் வாங்கிச் சென்றிருந்தாலும் வாரத்தில் இரண்டு நாட்களாவது முரளியுடன் இருக்கும் படி பார்த்துக்கொள்வான்.

இப்போது அவையெல்லாவற்றையும் விட, ராகவின் மனநிலைக்காகவே ஒன்றாக இருப்பது சிறந்தது என்று எண்ணி அதை செயல் படுத்தவும் செய்தான்.

இதோ காலை சூரியன் புலர்ந்த பின்பும் பொட்டு தூங்கும் இருந்திருக்கவில்லை முரளியிடமும் ராகவிடமும்.

எத்தனையோ யோசனைகள் மனதில் வலம் வர, அதுவெல்லாம் அத்தனை பூதாகரமாக இருந்தது அவனுக்கு.

போதும் இதற்கு மேலும் முடியாது என்று நினைத்தானோ என்னவோ அவன் மனது முரளியை தேடியது.

சாய்விருக்கையில் அமர்ந்தவாறு சற்று கண்மூடியிருந்த முரளிடம், "அப்பா, மடியில படுத்துக்கவா?"

பதில் பேசாது அவர் தன் தொடையை தட்டிக் காட்ட, உடலை சுருக்கி அவரிடம் அடங்கிவிட்டான்.

நேற்று வரை சிறியதாய் கசிந்த கண்ணீர் இன்று முரளியிடம் வந்த பின்னர், மடைத்திறந்திருந்தது.

"ஸாரி ப்பா! உங்கள எல்லாம் ரொம்ப கஷ்டப்படுத்தீட்டு இருக்கேன்ல நான்?"

".."

"ஏன் இப்படி எமோஷனலா இருக்கேன்னு எனக்குத் தெரியல ப்பா. ரொம்ப ஹர்டிங்கா வேற இருக்கு"

".."

"என்னமோ ஒரு ப்ரஷர் மனசுக்குள்ள. மைண்ட் அதில இருந்து வெளிய வராம அப்படி ஒழண்டுட்டு இருக்கு"

".."

"பயமா வேற இருக்கு'ப்பா. நான் ஒரு நிலையிலேயே இல்ல. அவ என்னவிட்ட போகல படிக்கத் தான் போறா ஆனா மனசு நொந்து போய், என் காதல கேள்விக்குறியாக்கிட்டு" என்று அவன் உடைந்து அழ, அவன் தலைக் கோதுவதை மட்டும் முரளி நிறுத்தவில்லை.

இதுவும் ஒரு வகை சிகிச்சை தான். மனது லேசாகும் வரை அழுதால், மன அழுத்தம் குறையும். நம் உணர்வுகளை எண்ணங்களை மனது விட்டு பகிர்த்தால், மன அழுத்தம் குறையும். நாம் எண்ணுவதை பயமில்லாத செய்தால் கூட ஒருவகையில் அதுவும் நம் மன அழுத்ததைக் குறைக்கும்.

இதையெல்லாம் ராகவாகவே முன்வந்து செய்ய வேண்டும் என்பதற்காகவே தான் முரளி பேசாது இருந்தது.

அவன் எப்போது தூக்கத்திற்காக மாத்திரை உட்கொள்கிறான் என்று தெரிந்ததோ, நேற்றே முடிவெடுத்திருந்தார் அவனை அவன் போக்கில் சென்று தான் சரி செய்ய வேண்டும் என்று.

எல்லாரிடமும் மனோதத்துவ முறையில் சென்று தான் சிகிச்சை செய்ய வேண்டும் என்றில்லை. ஒருவரின் இயல்பு புரிந்தால் கூட பேசிப் பேசியே மனதை மாற்றவும் முடிவும். மருத்துவ மனோதத்துவம் படித்த முரளிக்கு இதுவெல்லாம் தெரியாமலா போகும்.

அதுவும் அவர் பெற்ற மகன். மலையை புரட்டியாவது அவன் துக்கத்தை, அழுத்ததைப் போக்கிவிட மாட்டாரா என்ன?

"ப்பா" என்று விசும்பலுடன் முரளியின் முகத்தை அவன் பார்க்க,

"அழுதா நல்லது ராகவ். அதுவும் ஆண்பிள்ளைகள் அழுதா இன்னுமே நல்லது. உனக்கு சொல்லியிருக்கேன் தானே. இந்த சமூகம் ஆணா பிறந்தா அழுகக் கூடாதுனு ஒரு ரூல் போட்டு வெச்சிருக்கு, யார் போட்டானு தெரியலை ஆனா ஒரு முட்டாளா கோழையாத் தான் நிச்சயம் இருக்கும். இன்னும் உனக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு அழுதுடு, பட் அப்புறம் நோ க்ரையிங்"

அது அவனை ஏதோ செய்ய, தாவி அணைத்துக்கொண்டான் அவரை.

"ரொம்ப தூரம் போயிட்டேன் ப்பா உங்கள விட்டு. அதான் இத்தன நாளா இந்த பாடு."

"நான் இனி விடரதா இல்லடா. என் பசங்க என் கண் பார்வையிலேயே இனி இருக்கட்டும்.. நீங்க வளர்ந்துட்டதா நினைச்சு விட்டா, இன்னும் அதே குழந்த பிள்ளைங்கத் தான்" என்றவர் அவனின் முதுகை வருடியபடி,

"என்ன பிரச்சனை வந்தாலும் முதல்ல நிதானம் வேணும் ராகவா. கோபம் தான் நமக்கு முதல் சத்ரு. அதோட இம்பாக்ட் நம்ம வார்த்தைகள்ல காட்டிடறோம். அதோட ரிசால்ட், நம்ம வாழ்க்கையே சம்டைம்ஸ் போயிடும்‌. உன் பிரச்சனை என்னென்னு நான் கேட்கல, ஆனா அதுக்கான சொல்யூஷன் உனக்கு கிடைக்கலேனா கண்டிப்பா என்கிட்ட வா. இல்லையா நானே உன்ன தேவைப்பட்டா ஒரு ரெலாஷேஷன்காக சைக்காலஜிஸ்ட் கிட்ட கூட்டிட்டு போறேன், ஓகே. ச்சியர் ஆப் மை பாய்! எது வந்தாலும் பேஸ் பண்ணணும்."

முரளி சொல்லிய வார்த்தை ராகவிற்கு மட்டுமல்ல வாசுவையும் சென்று சேர்ந்திருந்தது. இருவருக்கும் ஒரு தந்தையாய் அவர் கூறிய அறிவுரை, வாழ்க்கைக்கு ஏற்ற ஒரு அனுபவ வார்த்தை.

"அவன் அதெல்லாம் சமாளிச்சிடுவான் டேட். நீயோ காவ்ஸ்ஸோ எங்க தப்பு விட்டீங்கனு பாரு, இருக்கற கொஞ்ச ஸ்பேஸ் கூட இனி வராத அளவுக்கு பண்ண தப்ப ரிப்பீட் பண்ணாம இருங்க. போதும்."

"கண்ணா டிஃபன் லைட்டா என்னாவது செய்யேன். பசிக்குது" என்றவர் அயர்வாகத் தெரிய,

"தூங்கலையா டேட் நீங்க?"

"ம்ஹூம். என் வெள்ளெலி இப்படி இருக்க, எனக்கு எப்படிடா தூக்கம் வரும். இப்போ கொஞ்சம் தெளிவு வந்திருக்கும் அவனுக்கு, அது போதும். இனி அவனே பார்த்துப்பான்ற நம்பிக்கை வந்த பின்ன தான் தூக்கமே வருது எனக்கு"

"உனக்கு எப்படிடா, பில்ஸ் தரவா என்ன?" என்று வாசு நக்கலாக கேட்டிட,

"அத விட மாட்டியா நீ? தூங்க தான் போட்டேன்டா. வேற எதுக்காவும் இல்லை"

"இனி அத கன்ஸ்யூம் பண்ணாத ராகவ். நான் சொல்ல வேண்டியதில்லை உனக்கு, இருந்தாலும் அஸ் எ டாக்டரா உன்னோட அப்பாவ சொல்லுறேன்.. ட்ராப் தட்"

"ஓகே ப்பா"

"சரி போய் ரெண்டு பேரும் ஃப்ரெஷ் ஆகிட்டு வாங்க.. வில் ஹவ் சம் ஹாட் சாக்லேட்" என்று அவன் எதார்த்தமாய் சொல்லவும் அவன் மனதில் வந்து நின்றாள் அன்று அவன் இதழ் கொய்ந்த அவனின் பப்ளிமாஸ்.

அதை நினைத்த நொடி இதழ் விரிய அவன் சிரித்தாலும், தலையில் தட்டி நடப்பிற்கு வந்துவிட்டான்.

ஆனால் என்ன முயன்றும் அவன் காதோரம் 'மாஷ்மெலோ' என்று கிசுகிசுப்பாய் அவள் அழைப்பது போன்று தோன்றிட, பலிக்கு மஞ்சள் நீர் தொளித்த ஆடாய் தலையை உலுக்கிக்கொண்டான், வாசுதேவ கிருஷ்ணன்.

அதே சிரிப்போடு அல்மொண்ட் மில்க் தயாரித்தவன் அதை மிதமான தீயில் சூட வைத்து கொண்டான். பின்னர் மில்க் சாக்லெட் சிறிதும், டார்க் சாக்லெட்ஸை சற்று தாராளமாகவும் பாலில் சேர்ந்து கறைய வைத்தவன் கடைசியாக டம்ளரில் மாற்றிக்கொண்டு இருக்கும் நேரம் புவனாவின் பேச்சு அவனை நிறுத்தியிருந்தது.

"என்ன நடக்குது இங்க? அவன் இஷ்டத்துக்கு ஆடி இப்போ எங்க வந்து நின்றுருக்கு பாருங்க?" என்று முரளியிடம் சண்டைக்கு நின்றிருந்தார் புவனா.

அவரை அழுத்தமாய் பார்த்தபடி நின்றிருந்த ராகவின் மனதில் இன்னுமின்னும் அவர் கீழிறங்கி சென்றிருந்தார் அவரின் பேச்சாலும் செயலாலும்.

"எங்க வந்து நின்னு இருக்கு?" என்றபடி வாசு வர,

"வாசு, நீயும் சேர்ந்து தான இவங்களுக்கு ஒத்து ஊதின, பாரு இப்போ‌. அதுசரி நீயும் என் பேச்ச கேட்காம எவளையோ கல்யாணம் பண்ண ரெடி ஆகிட்ட போல?" என்று நக்கலாக கேட்டார் புவனா.

"மைண்ட் யூவர் வேர்ட் மிஸ். புவனா, எவளோ இல்லை மை லவ். எனக்கு மரியாத கொடுக்கலேனாலும் பரவாயில்லை அவங்களுக்கு நிச்சயம் இருக்கனும்" என்றவனையே பார்த்திருந்தான் ராகவ்.

அவன் மனதில் அதை கேட்டபின் ஆயிரம் கேள்விகள் சூழ்ந்திருந்தது. ஆனால் புவனாவோ முற்றிலும் அதிர்ந்திருந்தார்.

'மிஸ். புவனா' என்று ராகவ் ஒவ்வொரு முறை சொல்லும் போதும் அவருக்கு ரணமாய் இருந்தாலும் இப்போது வாசுவும் சேர்ந்து அதையோ சொல்ல, உள்ளுக்குள் ஏதோ உடையும் வலி.

ஒரு தாய்க்கு தன் மக்கள் வாய் நிறைய ஆசையாய் 'அம்மா' என்றழைக்கும் போது நெஞ்சில் பிறக்கும் உணர்வுகள் வார்த்தையால் சொல்லிவிட முடியாது.

அதேதான் இப்போதும், அவர் ஈன்ற இரு மக்களும் தன்னை அந்நியமாய் கருதி, தள்ளி வைத்து பார்ப்பது நெஞ்சில் சொல்லில் வடிக்கா ஒரு உணர்வை தந்தது.

அவர்கள் இருவரும் வளர்ந்து நிற்கும் வரை எதுவும் பெரியதாய் புவனா கண்டுக்கொண்டது போல் தெரியவில்லை. ஆனால் இப்போது அவருக்கும் முதுமை ஆரம்பித்திருக்க அவர் இழந்த தாய்மையில் சாரல் இப்போது லேசாய் தூர ஆரம்பிக்கவும் மகன்களின் உதாசீனம் வலித்தது.

வலியை புடம் போட்டு காட்டிவிட்டால் அவர் புவனாவே இல்லையே!

"என்கிட்டவே அதிகாரமா பேச ஆரம்பிச்சுட்டியா வாசு நீ? பார்க்கறேன் பெத்தவள ஒதுக்கி அப்படி என்ன சாதிக்கபோறீங்கனு.. நான் சொன்னத கேட்டிருந்தா இப்படியெல்லாம் ஆகியிருக்குமா ராகவ்?" என்று கத்தியவர் பேச்சு அம்மூவருக்கும் சகிக்கவில்லை.

"இப்போ நீ இங்க வந்து கத்தறனால எதுவும் சரியாகப் போறதில்ல இசை" என்று அடக்கப்பட்ட கோபத்துடன் பேசினார் முரளி.

"என்ன ஆகப்போறதில்லை. என்னைய மீறி கல்யாணம் பண்ணிட்டாங்க, சரி. ஆனா ராகவ் கூட வாழாம எப்படி அவ போனா? அவ போனா இவன் ஏன் இப்படி உங்காந்திருக்கான்? ரெஜிஸ்டர் இன்னும் பண்ணாத கல்யாணம் தானே, அவள அப்படியே எங்கையாவது போக சொல்லிட்டு, வேற பொண்ண பார்க்க வேண்டியது தான்" என்று சொன்ன புவனாவின் பேச்சில் அத்தனை ஏளனம்.

தன்னை மீறி நடந்த ஒரு நிகழ்வு, அறுந்துவிட்ட நினைப்பு மட்டும் அவருக்கு. ஆனால் மகனின் நிலையை பார்க்க தவறியிருந்தார்.

"டேட், முதல்ல அவங்கள கிளம்பச் சொல்லுங்க.. அவங்கள மாதிரி யாரும் இங்க இருக்கப் போறதில்லைன்றதும் தெரிவா சொல்லிடுங்க"

"வாசு என்ன நான் இப்போ தப்பா சொல்லிட்டேன். ராகவ்வ பாரு, என் பையன நான் இப்படி பார்த்ததுக் கூட இல்லை. இந்த நிலமையில உட்கார வெச்சுட்டு போயிருக்கா அவ. இனி அவ தேவையா என்ன?"

"திரும்பத் திரும்ப அதையே சொல்லாத இசை. ஒரு சின்ன பிரிவு ஒன்னு அவங்க வாழ்க்கைய மொத்தமும் கெடுத்துடாது"

"சின்ன பிரிவு.. அப்படிதான் எல்லாம் ஆரம்பிக்கும். நானும் அப்படி நினைச்சு நினைச்சே வருஷத்த ஓட்டினவதான். வந்தீங்களா நீங்க, இல்லையே. அதே நிலம என் பையனுக்கு வேண்டாம். என்ன பெரிசா ரெண்டு வார்த்தை சேர்த்து சொல்லிட்டா ஒடனே விட்டுட்டு போயிடுவாளா? அப்படியே அவ அம்மா மாதிரி"

அதுவரை மௌனமாய் இருந்த ராகவோ, "உங்க தொழில இங்க வந்து காட்டாதீங்க மிஸ்‌. புவனா. என் வைஃப் படிக்க தான் போறா, என்விட்டு இல்லை. தேவையில்லாம ராகினி'ம்மா பத்தி பேசாதீங்க. என்ன தெரியும் உங்களுக்கு அவங்கள பத்தி? மகன்கிட்ட பேசலன்னு அவங்க புருஷன்கிட்ட கூட பேசாம இருந்தவங்க அவங்க, ஆனா நீங்க? சொல்ல விரும்பல, உங்களுக்கே உங்க லட்சணம் தெரியும்" என்று சொல்லிவிட்டு அவன் அறைக்குள் சென்றுவிட்டான்.

"உங்க சம்மதம் இல்லாம எனக்கு கல்யாணம் நடக்காதுன்னு சொல்லிட்டு இருந்தவன் தான் நான். ஏன் டேட் கூட உங்க சம்மதம் வேணும் தான் அமைதியாக இருந்தார். ஆனா நீங்க எல்லாத்தையும் தப்பு தப்பா தான் பார்ப்பீங்க இல்ல. எத்தனை நாள் மாம், மாம்னு பின்னாடி வந்து இருக்கேன். திரும்பி பாத்தீங்களா? இப்பவும் எனக்கு வலிக்குது என்னைவிட ராகவ் மேல உங்களுக்கு அப்படி என்ன பாசம்னு.

நான் உங்களோட இருந்த ஒரு நாளாவது என் கிட்ட பேசி இருக்கீங்களா? 'உங்க அப்பா என்ன சொன்னார் என்ன பத்தி?' இத தாண்டி சாப்டியா, தூங்கினியான்னு கேட்டீங்களா? கேட்டாலும் அதுல வெறும் கடமை தான் இருக்கும், அன்பு இருக்காது.

எனக்கு என்ன பிடிக்கும், நான் என்ன செய்வேன் எதையும் பார்க்காமல் உங்க இஷ்டத்துக்கு என்ன ஆட்டி வச்சீங்க. அந்த கட்டுல இருந்து நான் வெளிய வந்தா என்னையும் இப்போ உங்க எதிரி மாதிரி பாக்குறீங்க. நல்லா இருக்கு மாம்.

எல்லாம் உங்களுக்கு பிடிச்சது தான் என்னை பண்ண வச்சீங்க பட் அப்படியும் உங்களுக்கு நான் பண்ண எதுவும் பிடிக்கல. ம்ஹும் இப்ப மட்டும் என்னை பிடிக்குதா என்ன?" என்று அவன் குரல் கம்மி வந்தது.

"கண்ணா"

"இருங்க டேட், என் வாழ்க்கையில எந்த ஒரு விஷயம் நடந்தாலும் அதுல எங்க அப்பாவோட பங்கு தான் மிகையா இருக்கும். தேடுனா கூட ஒரு இம்மி அளவு கூட நீங்க இருக்க மாட்டீங்க. நான் மட்டும் உங்களை எல்லாத்துக்கும் கேட்கனும், ரைட்? ம்ம்ம்.. போதும் நினைக்கிறேன் என்ன பெத்தவங்களா உங்களுக்கு எப்பவும் என்கிட்ட மரியாதை இருக்கும். அதை தாண்டி வேற எதையும் எக்ஸ்பெக்ட் பண்ணாதீங்க" என்றவன் சென்றுவிட, முற்றிலும் உடைந்து போனார் புவனா திருமழிசை.

அங்கு நடப்பதை வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தார் முரளி. அவர் மனதோ 'இதையெல்லாம் இவள் கேட்க வேண்டுமா' என்று கூப்பாடு போட்டது. ஆனால் மகன்கள் இன்று வரை அனுபவித்ததை வாய்விட்டு சொல்லிவிட மூளை வேறு செய்தி சொன்னது.

அவரின் புவனாவின் மனநிலை இப்போது அவருக்கு புரிந்தது. எப்போது மருத்துவமனையில் இருந்து தன்னை அவள் பார்த்தாள் என்ற செய்தி கிடைத்ததோ அப்போது அவர் மனது இலக ஆரம்பித்திருக்கிறது என்று உணர்ந்தார் முரளி.

யாராக இருந்தாலும் சரி, புவனாவை அவரால் விட்டுக்கொடுக்க முடியாது. ஏன் ராகவ், வாசுவாக இருந்தாலும். அதை அன்றே சுந்தரேஸ்வரரிடம் தெளிவாக சொல்லியும் விட்டார்.

வயதானாலும், அனுபவம் இருந்தாலும் அவர் புவனா என்றுமே அவருக்கு கைகுள் அடங்கும் சிறு பெண் தான். அதை சரியாக தான் தான் வழிநடத்தவில்லை என்ற எண்ணம் இன்னமும் அவருக்கு இருக்கிறது தான்.

இப்போது கூட அவரின் புரியாத பேச்சு அவரை கோபம் கொள்ள வைத்ததே தவிர, அவரைத் துளி விலக்கி வைக்கும் எண்ணமில்லை. இனி எண்ணவும் மாட்டார்.

அன்று அம்ருதா சொன்ன செய்தியும் இதுவே. "அவங்க உங்க வைஃப், தேவா அம்மா. எப்பவும் அவங்களுக்கான மரியாதை, இன்பாட்டன்ஸ் என்கிட்ட இருக்கும். பட் அவங்க பேசினா, பொறுத்துக்க முடியலேனா நான் பேச தான் செய்வேன் அங்கிள்" என்று சொல்லியிருந்தாள்.

காவ்யா, அவர் பார்த்து வளர்ந்த பெண். தன்னிடம் உள்ள கோபத்தைக் கூட சொல்லிக்காட்டிவிட்டவள் நிச்சயம் அப்படி வெளிப்படையாகவே தான் இருப்பால் என்று தெரியும். மருமகள் வழியில் புவனாவின் பிரச்சனை இல்லை.

ஆனால் மகன்களுக்கு அவர் செய்ததை நினைத்தால் தான், நெஞ்சில் வலி நிறைந்தது.

போகட்டும். இத்தனை பார்த்தாயிற்று என்று நினைத்தவர் மனதை சற்று திடப்படுத்தி, "இசை" என்றார்.

பார்வை மட்டும் பார்த்தவர் வேறேதும் இல்லை. அதுவே முரளிக்குப் போதுமாக இருந்தது.

"பசங்க வாழ்க்கையில நீ குறுக்க வந்தா நான் நிச்சயம் கேட்பேன்னு அன்னிக்கே சொன்னேன். ஞாபகம் இருக்கா? ராகவ் வாழ்க்கை அவன் பொறுப்பு. நீ தேவையில்லாம அவங்களப் பிரிக்க பார்க்காத. அதேதான் வாசுவுக்கும். ஒரு அப்பாவா என் பசங்களோட லவ்வ நான் ஏத்துக்கிட்டாலும், உன் சம்மதம் இல்லாம கல்யாணம் பண்ண போறது குற்றவுணர்வு இருக்கத் தான் செய்யுது‌. ஆனா நீ சொன்னாலும் புரிந்துகொள்ள முடியாம இருக்கறப்போ நான் என்ன பண்ண?

ராகவ்வ மட்டும் தான் நீ பார்த்தேன்னு நான் சொல்ல மாட்டேன். ரெண்டு பேரும் உனக்கு முக்கியம் தான் ஆனா வாசு பேசினத கேட்ட தான? அவங்க மனசுல உன்மேல வைச்சிருந்த சின்ன பாசத்தையும் அடியோட கெடுத்துட்ட. அவங்க வாழ்க்கையில நடக்கறதுக்கு எல்லாதுக்கும் உனக்கும் பங்கு இருந்துச்சு இப்போ இல்லை, கொஞ்ச நாள் முன்னாடி வரை. அதையும் உன் பேச்சுனாலையே கெடுத்துட்ட. இனியும் அத தொடற வேண்டாம். வளர்ந்த பசங்க, அவங்க வாழ்க்கையாவது நல்லபடியா இருக்கட்டும். குறுக்க நிக்காத" என்று இத்தனை வருடம் அவர் சொல்லாத ஒன்றை சொல்லிவிட்டு சென்றார் முரளி.

என்ன பதில் பேச வேண்டும், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று எதுவும் தெரியாது சமைந்து நின்றுவிட்டார் புவனா.

சிங்கமாய் இருந்த பெண், 'தான்' என்ற எண்ணத்தால் சீண்டக் கூட ஆளில்லாது ஆனாது தான் விதி!



எப்போதும் இருக்கும் காலை நேர பரபரப்பு இல்லாத அமைதியாகவே இருந்தது அம்ருதாவின் வீடு‌.

ஹாலில் அமர்ந்து தினசரியை வாசித்துக் கொண்டிருந்த சுந்தரேஸ்வரரின் அலைப்பேசியில் அழைப்பு சப்தமாக அவ்வீடு முழுவதிலும் எதிரொலித்தது.

"அப்பா, முரளி தான் கூப்பிடுறார்" என்று அருகே இருந்த சாரங்கனிடம் சொன்னார் சுந்தரேஸ்வரர்.

"என்னனு கேளு ஈஸ்வரா. நல்ல விஷயமா இருந்தா உடனே சரின்னு சொல்லிட்டு, ஆரம்பிச்சுடலாம்" என்றவருக்கு புரிந்தது என்னும் விதமாய் தலையசைத்து அழைப்பை ஏற்றார்.

"சொல்லுங்க முரளி ஸார்"

"ஹான் குட் மார்னிங் மிஸ்டர். சுந்தரேஸ்வரர். ப்ரீ தானே நீங்க? பேசலாமா?"

"சொல்லுங்க ஸார், ப்ரீ தான்"

"இன்னிக்கு ஈவ்னிங் நாங்க உங்க வீட்டுக்கு வரோம் மிஸ்டர். ஈஸ்வர். வாசு - அம்ருதா கல்யாண விஷயத்தை பத்தி மேற்கொண்டு பேசிடலாம், ரொம்ப நாள் தள்ளிப்போயிட்டே இருக்கு" என்றார் சுற்றி வளைக்காமல்.

எதிர்பார்த்த ஒன்று என்றாலும் சட்டென்று மறுமொழி சொல்லிவிட முடியவில்லை. மகிழ்ச்சியான செய்தி என்றாலும் அவரின் 'அம்ரூடா' கண்முன்னே வந்து கண் சிமிட்டி சிரித்தாள்.

"சரி ஸார், வாங்க. யூ ஆர் மோஸ்ட் வெல்கம்" என்று சொன்னவர் குரல் கரகரத்தது.


***

உடன்கட்டை ஏறுதல் - இங்கு நான் அன்பின் அடிப்படையில் கணவன் இறந்தவுடன் உடன் கட்டை ஏறுதல் பற்றி சொல்லியுள்ளேன். அதற்காகன குறிப்புகள் நம் தமிழ் இலக்கியத்தில் உள்ளதாம்.

ஆனால் உடன்கட்டை ஏறுதல் அதன்பின் ஒரு திணிக்கப்பட்ட, தன்னை இச்சமூகத்தில் இருந்து காத்துக்கொள்ள, கௌவரத்திற்காக பெண்கள் அதனை ஏற்றனர் என்பது தான் உண்மை.



கணவன் இறந்த பின்பு மனைவியும் இணைந்து கணவனுடன் சிதையில் ஏறி, அத்தீயில் தன்னைத் தானே அழித்துக்கொள்வது சதி முறைமை எனப்பட்டது. இந்த சதி முறைமையானது இந்துமத புராணங்களில் இருந்து பெறப்பட்டுள்ளது. தக்ஷனின் மகளான சதி தேவி தனது தந்தையின் யாகத்தில் தன் கணவனுக்கு ஏற்பட்ட அவமானம் தாளாது அக்னிக்கு தன்னை இறையாக்கிக்கொண்டாள். இதன் தாக்கமாகவே சதி எனும் பெயருடன் உடன்கட்டை ஏறும் வழமை கைக்கொள்ளப்பட்டது. மேலும் சமஸ்கிருத சொல்லான सती (sati) எனும் சொல்லின் பொருள் நல்ல மனைவி என்பதாகும். எனவே நல்லதொரு மனைவியின் அடையாளமாக இந்த உடன்கட்டை ஏறும் வழமை பிற்காலத்தில் மாற்றப்பட்டிருக்க வேண்டும்.

தமிழ் இலக்கிய குறிப்புகளின் பிரகாரம், பாண்டியன் மாதேவியால் பாடப்பட்ட புறநானூறு பாடல் ஒன்றில் அரசனுடன், அரசியும் உடன்கட்டை ஏறிய குறிப்பு உள்ளது. அதன் படி பூதப்பாண்டியன் தேவி நாட்டின் அமைச்சர்கள் அனைவரினதும் ஆலோசனையையும் தவிர்த்து அரசனுடன் உடன்கட்டை ஏறியுள்ளாள். இங்ஙனமே மஹாபாரதத்தில் மஹாராஜா பாண்டுவின் இறப்புக்கு பின்னர், இளைய அரசி மாத்ரி உடன்கட்டை ஏறினாள், ஆனால் முதல் அரசி குந்தி அவ்வாறு செய்யவில்லை. சோழ சாம்ராஜ்யத்தின் முக்கிய அரசரான ராஜராஜரின் தாயான வானவன்மாதேவியும், ராஜேந்திர சோழரின் மனைவி வீரமாதேவியும் தங்கள் கணவர்களின் இறப்பினால் முழுமனதுடன் உடன்கட்டை ஏறினார்கள். இதன் மூலம் ஆரம்பகாலத்தில் சதி முறைமையானது முழுக்க முழுக்க பெண்களின் தன்னிச்சையான முடிவாகவே அமைந்தது தெளிவுற தெரிகிறது. பெண்கள் தம் கணவனின் மீது கொண்ட அதீத அன்பின் விளைவால் இத்தகைய பழக்கத்தை கைக்கொண்டனர். எனினும் பின்பு இம்முறைமையானது கௌரவத்தின் சின்னமாக மாற்றப்பட்டு, கணவனை இழக்கும் அத்தனை பெண்கள் மீதும் திணிக்கப்பட்டது.

Source : Roar Media

கணவன் இறந்துவிட்டால், குடும்பத்தில் மூத்த ஆண்பிள்ளை குடும்ப "கர்த்தா " பொறுப்பை ஏற்கின்றான். அவளுக்கு, தனது மகன் குழந்தையாக இருப்பின், அவளே உடனடியாக ( உடன்) கட்டை ஏற்கின்றாள் (ஏற்கின்றாள்). அவளின் உறவுநிலையில், பெற்றோர்கள் இருப்பின் அவளின் தந்தை கர்தாவாகின்றார். தந்தை இல்லாநிலையில் , மூத்த சகோதரன் கர்த்தா ஆகின்றார். இவர்கள் இல்லாநிலையில் , அந்த பெண்ணே, "கர்தா" பொறுப்பை, உடன் (உடனடியாக) கட்டை ( உடல்) ஏறுகின்றாள் ( ஏற்கின்றாள்).

அன்னியர்கள், குறிப்பாக முகலாயர்கள், பெண்ணின் கணவர்களை கொன்று, அவளின் கற்பை சூரையாட முனையும் போது அவள் தனது கற்பைக்காக்க , இந்த உடல் அன்னியர்களிக்கு போவதைவிட அக்கினிக்கு போவதே மேல் என அக்கினியில் விழுந்து உயிரைவிட்டனர்.

குறிப்பாக, சித்தூர் ராணி பத்மினி (ஹிந்தி திரைப்படம் பத்மாவதில் காட்டப்படும் கடைசி காட்சி) ஒரு உதாரணம். இதை அன்னியர்கள், குடும்ப கலாச்
சார பெண்களை அழிக்கவும், இந்துமத்த்தில், மூடநம்பிக்கை இருப்பதுபோல் ஒரு மாய பிம்பத்தை ஏற்படுத்திவிட்டனர். இதை, இந்துக்களையும் நம்பவைத்து, மூடநம்பிக்கையாக சிதையில் விழ கட்டாயப்படுத்தினர். இதைத்தான், இராஜாராம் மோகன்ராய் எதிர்த்தார்.

Source : Google
 
Top