எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

4 நேத்திரனை ஆளும் பௌர்ணமி!

priya pandees

Moderator
அத்தியாயம் 4

பௌர்ணமி, முன்னால் தோட்டத்தில் போடப்பட்டிருந்த ஊஞ்சலில் வந்து அமர்ந்து கொண்டாள். உண்மையில் மனம் படபடத்தது. அவனை இலகுவாக முறைத்து தான் வந்திருந்தாள். அவனிடம் கூறாமல், அவனை கலந்தாலோசிக்காமல், நேராக 'ட்வீட்!' செய்தது தவறு என மனம் உறைத்ததாலேயே அந்த பதட்டம். ஆனால் பேசுவதற்கு வாய்ப்பை அவனல்லவா தரவேண்டும். பேசக் கூட நேரமில்லாமல் ஓடி கொண்டிருப்பவன் அப்படி ஓடிக்கொண்டே இருக்கட்டும் என்று தானே கோவத்தில் சமூக வலைதளத்தில் பதிவிட்டு அந்த முடிவிற்கு வந்ததும்.

அவள் அவனைப் பார்க்கப் பிடிக்காதது போல் எழுந்து வந்திருந்தாலும், உண்மையில் தப்பித்து வந்த காரணம், அவர்கள் விவாகரத்தைப் பற்றி அந்நொடி அத்தனை பேரின் முன் அவனிடம் விவாதிக்க விரும்பாமல் தான்.

பெண்களோடு சேர்ந்து நின்றாலோ, கை குலுக்கினாலோ, இணைந்து நெருக்கமான காட்சிகளில் நடித்தாலோ முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு தான் திரிவாள். 'அது என் வேலை அப்படிதான் நான்!' என திமிராக திரிவான் அவனும். ஆனால் இன்று அவன் நிற்கும் நிலையில் தவறில்லை என அவளுக்கு தெரியும்.

அழைப்பில் இருப்பவளைக் கவனத்தில் கொண்டு, "நந்தினி?" என்றாள்.

"மேம், ஸ்பான்ஸர் ஓகே சொல்லிட்டாங்க. நம்ம மாடல்ஸ், ட்ரெஸ் கேட்லாக் எல்லாம் ஓகே பண்ணிட்டாங்க. சைன் பண்ண நீங்க வரணும் டேட் ஃபிக்ஸ் பண்ண சொல்லிருக்காங்க"

"நெக்ஸ்ட் வீக்ல ஃபீரி டேட் இருக்கான்னு பாரேன்?"

"வெட்நெஸ்டே இருக்கு மேம்"

"அப்ப அன்னைக்கு அவங்களுக்கு ஓகே வான்னு கேட்டு டைம் ஷெட்யூல் பண்ணிடு"

"ஓகே மேம். தென் இன்னொரு விஷயம்" என தயங்கி தான் கேட்டாள்.

"இழுக்காம‌ சொல்லு"

"ஆயுட்காலம் படம் ப்ரொடக்ஷன் டீம்ல இருந்து கால் பண்ணிருந்தாங்க, உங்கட்ட பேசணும்னு ஜெயராமன் சார் சொன்னாங்களாம்"

"ஏன் என்னாச்சு? அவங்களுக்குத் தான் காஸ்ட்யூம் ஃபுல்லா முடிச்சுக் குடுத்து பேமெண்ட் வாங்கியாச்சே?" அவள் கணவன் கண் முன் வந்து சென்றான்.

"ஆமா மேம். இப்ப ஏதோ அதுல சேஞ்சஸ்னு சொல்றாங்க போல"

"யார் சொல்றது? அக்ரிமெண்ட் காபி இருக்குல்ல? எல்லா மாடலும் ஓகே பண்ணி சைன் பண்ண அப்றம் தானே ஸ்டிட்ச் பண்ணி பேக் பண்ணி குடுத்தோம் பிஃபோர் எக்ஸ்போர்ட் கன்பார்ம் வேற பண்ணேனே நான்?"

"ரெக்வஸ்டா தான் கேக்றாங்க மேம். மேபி அங்க க்ளைமேட்க்கு கலர்ஸ் செட் ஆகலன்னு நினைக்கிறேன்"

"அப்ப காஸ்ட்யூம் பத்தி பேசுனது மிஸ்டர் ஜெயராமன் இல்ல. ரைட்?"

"ஆமா மேம் டைரக்டர் தான் சொல்லிருக்காங்க" என நிறுத்தி, "நம்ம சார் தான் வேற வேணும்னு கேட்ருக்காங்க போல. ஷுட்டிங்கும் ஸ்டாப் பண்ணிட்டாங்களாம்"

"இரிட்டிடேட்டிங்!" எனப் பல்லைக் கடித்தவள், எழுந்து புல்வெளியில் இங்குமங்கும் நடந்தாள்.வேண்டும் என்றே செய்கிறான் என்பதால் அடுத்து என்ன செய்யலாம் என யோசித்தாள். மற்றவர்களுக்கு எப்படியோ அப்படித்தான் கணவனானாலும் அவன் படத்திற்கும் அவள் வேலையின் ஈடுபாடு இருக்கும்.

முதலில் எவ்வாறு வேண்டும் என குஹனிடம் கேட்டு, அதை வரைந்து படமாக அவன் முன் வைத்து, அதில் அவன் சரி என்றவற்றை அவளிடம் இருக்கும், 'மாடல்' பெண்களுக்கு அணிய வைத்து, அதை அவனுக்கு மட்டுமின்றி தயாரிப்பாளருக்கும் சேர்த்து நேரில் வரவழைத்துக் காண்பித்து, அதையும் அவர்கள் அங்கீகரித்து சம்மதமாக கையெழுத்திட்டு முன் தொகையைக் கையில் வாங்கிய பின்னரே அந்த வரைபடங்கள் உடைகளாக மாற்றம் கொள்ளும்.

ஆயுட்காலம் படத்திற்கும் அப்படிதான் எல்லாம் முடித்து தான் ஒப்படைத்திருந்தாள். படத்தில் வரும் காட்சிகள் எல்லாம் முடிக்கப் பட்டிருந்தது. நான்கு பாடல்கள், அதிலும் இரண்டு முடிந்திருந்தது. இன்னும் இரண்டு மட்டுமே அதற்கு தான் வெளிநாடு கிளம்பியிருந்தனர். கிட்டத்தட்ட எல்லாம் முடிந்த நிலையில், இப்போது இதை செய்ய‌வேண்டியதே இல்லை, ஆனால் செய்கிறான் என்றால் அவளால் செய்கிறான். அவளைப் பழிவாங்க வேண்டும் என்றே செய்கிறான் என நினைத்தாள்.

"மேம்!"

"என்ன டிசைன் மாத்த சொல்றாங்க?"

"அந்த ஹாஃப் ஸ்லீவ் சாரி டிசைன் மேம்"

"எப்படி வேணும் என்னன்னு கேளு. நா ப்ரொடியூசர்ட்ட பேசுறேன்" என வைக்க, நந்தினி அங்கு ஸ்காட்லாந்தில் இருக்கும் குழுவிற்கு பேச விரைந்தாள்.

பௌர்ணமி, அடுத்ததாக ஜெயராமன் எண்ணைத் தேடி எடுத்து அழைப்பு விடுக்க, காத்திருந்தவராக பட்டென்று எடுத்துவிட்டார் அவர்.

"சொல்லுங்க சார்! எனக்கு ரீச் பண்ண ட்ரை பண்றீங்களாம்?"

"சிமி. ப்ளீஸ்மா எனக்கு தெரியும் லாஸ்ட் மினிட்ல, அங்க ஸ்பாட்ல போய் நின்னுட்டு கேட்கக் கூடாது தான். ஆனாலும் அங்க இருக்க சீசன் க்ளைமேட்டுக்கு ஏதோ டிசைன் சரியா வரலன்னு டைரக்டர் சொல்றாரு" என்றார் நேராகவே.

"இப்படி லாஸ்ட் மினிட்ல சேஞ்ச் பண்ணா அதுக்கான லாஸ அவரே ஏத்துப்பாரான்னு கேட்டீங்களா?"

"க்ளைமேட்ட நாம கணிக்க முடியாதில்லையா சிமி?"

யாருமே அவனை காரணமாக முன் வைக்க முயலவில்லை. அவள் உதவியாளர் நந்தினி, இதோ தயாரிப்பாளர், இன்னும் இனி வருபவர்களும் கூட, அவன் செய்வதை தவறு என சுட்டிக் காட்டி கூறவே மாட்டார்கள். அவ்வளவு நல்ல அபிப்பிராயம் அவன்மீது. ஏனென்றால் அவன் திறமை அப்படி. இப்போது கடைசி நேரத்தில் மாற்றம் கேட்டு அனைவரையும் படுத்துகிறான் தானே, ஆனால் அதற்கு ஏற்ப அந்தக் காட்சியை மெருகேற்றிவிடுவான். அந்தக் காட்சி தனித்து நிற்கும் படி செய்து விடுவான். அது தான் அவன், அதில் மற்றவைகள் அமிழ்ந்து போய்விடும்.

ஜெயராமனும் அதைத் தான் அவர்கள் உதவியாளர்களிடம் கூறி வந்திருந்தார், "அடேய் இப்படி நம்மள சுத்தல்ல விட்டா அதுக்கு ஈடா ப்ரோமோஷன், ட்ரைலர், சீன் டச்னு எதாவது செட்டில் செஞ்சுருவாருடா அந்த மனுஷன். நீங்க கோக்குமாக்கா அந்த அஞ்சாநம்பிட்ட என்னத்தையும் பேசித் தொலைச்சு காரியத்தை கெடுத்துடாதீங்க" என்றுவிட்டே இவளிடம் பேசிக் கொண்டிருக்கிறார்.

"சரி சார். இப்படிதான் வேணும்னு எக்ஸாக்டா ஒரு ஃபோரம் குடுக்கச் சொல்லுங்க. ஏன்னா ஆப்ஷனா செய்ய முடியாது. இதுதான்னு சொன்னா அத அப்படியே செஞ்சு குடுக்க ட்ரை பண்ணுவேன். டைம் சேவ் ஆகும். பட் பேமென்ட் டபுள் தான்" என்றாள்.

"பேமெண்ட்லாம் விஷயமே இல்லைமா. அது நா பாத்துக்குறேன். பட் நீங்க நேர்ல அங்க போய்டீங்கனா இன்னும் ஈசியா இருக்கும்ல சிமி?" எனக் கேட்க,

"இது என்னோட எக்ஸ்டரா வொர்க். ப்ளான்ல இல்லாததுக்காக இங்க நா அல்ரெடி ப்ளான் பண்ணத மாத்திட்ருக்க முடியாது சார்"

"மேக்ஸிமம் ஒன் டேல முடிச்சுட்டு ரிட்டர்ன் ஆகிடுங்க சிமி"

"அப்ப நீங்க வேற காஸ்ட்யூமர் அங்க ஸ்காட்லாண்ட்ல கிடைக்றாங்களான்னு பாருங்க. மேக் இட் ஈசி. அங்க உள்ளவங்க இன்னும் பெர்ஃபெக்டா க்ளைமேட் ப்ளஸ் கேமரா ஸ்கிரீனிங்க்கு ஏத்தமாதிரி ரெடி பண்ணித் தருவாங்க. எனக்கு இன்னொரு கால் வருது நா அப்றம் லைன்ல வரேன் சார்" என்க, அவர் திணற, "பை சார்!" என வைத்துவிட்டாள். தொழிற் முறையாகவே இருவரும் பேசி வைத்திருந்தனர்.

அவர் அங்கு ஸ்காட்லாந்தில் உள்ள குழுவிற்கு அழைத்து பிடிபிடி என பிடித்துவிட்டார்.

"ட்ரைக்டர்ட்ட பேசுங்க. அங்கேயே ஏதாவது காஸ்ட்யூம் டிசைனர ஏற்பாடு பண்ணித் தரட்டுமான்னு கேளுங்க. இல்ல அவருக்கு தெரிஞ்சவங்க இருந்தாலும் ஓகேன்னு பேசுங்க. அந்த பொண்ணுப் பேச்சுலயே வெட்டிட்டுப் போகுது. என்னன்னு தான் குடும்பம் நடத்துறாரோ அவரும். நீ அவர்ட்ட பேசிட்டு சொல்லு" என கோவமாக இரைந்து வைக்க. அதைக்கேட்டவர்கள் அடுத்து அஞ்சாநம்பியைப் பிடித்தனர்.

இதற்குள் இங்கு வீட்டினுள்,

பௌர்ணமி எழுந்து செல்லவும், நிலன் கையிலிருந்த ஃபோனை பிடுங்காத குறையாக வாங்கிய விசாலாட்சி, "இதென்ன சின்னவனே இப்புடி பண்ணுத? வயசு ஏறுதா இறங்குதா உனக்கு?" என முகத்தைச் சுளித்து பேச,

"நீ அங்க என்ன செய்ற?" என்றான் குஹன்.

"நா என்னமு செய்வேன்? என்னைய கேட்காத? நீங்க அடிக்கற கூத்துல இன்னும் நா என்னலாம் செய்யணுமோ தெரியல. உன் பொண்டாட்டிய என்னன்னு கேட்க போறியா இல்லையா நீ? புருஷனுக்கும் பொண்டாட்டிக்கும் ஏழு கழுதை வயசுல தான் கிறுக்கு பிடிக்குமோ?" என சிடுசிடுத்தார்.

"அவள என்ன கேட்கணுமோ அத நா கேட்டுக்குறேன். நீ ஃபர்ஸ்ட் அங்கேயிருந்து கிளம்பு"

"என்ன நீ என்னடா விரட்டுறது? இது நிலன் வீடு. அவன் சொல்லட்டும். நீ சொல்லாத. ஆக்கமத்த வேலை பாக்றவன்லாம் என்னைய பேசக் கூடாது"

"நா என்னத்த பாத்தத நீ பாத்த? சும்மா என் வாய கிண்டாத. உன் பேச்செல்லாம் என் மாமியாரும் மச்சானும் கேட்டுகிட்டு இருந்தா பொழப்ப பாக்க வேணாம்? அப்பா எங்க அவர்ட்ட குடு நீ" என்றான் அதட்டலான குரலில். அந்த குரலுக்கு பயந்து அருகில் நின்ற இரு பெண்களும் ஹரிணியை அழைத்துக் கொண்டு நீந்த நகர்ந்திருந்தனர்.

"உன் பொண்டாட்டி விவாகரத்து கேட்ருக்கா ஏன்னு நீ கேட்டா தான் பதில் சொல்லுவாளாம். நீ சொல்லி தான் நாங்க தெரிஞ்சுக்கணுமாம். இப்பவே நீ கேட்டு சொல்ற" என்றார் அவரும் சத்தமாக.

கௌதமி கிருத்தியோடு அவர்கள் அறை சென்றுவிட, நிலன், காந்திமதி, விஸ்வநாதர் மூவரும் அவர்கள் சண்டையை வேடிக்கைப் பார்த்தனர்.

"மெதுவா பேசேன்டி" என்றார் விஸ்வநாதர்.

"சும்மா இருங்க நீங்களும் கேட்க மாட்டீங்க என்னையும் கேட்க கூடாதுன்னா எப்புடி?" என்றுவிட்டு மீண்டும் அவனிடம், "பதில் சொல்லு நேத்ரா?" என்றார் பிடியை விடாமல்.

"இப்படியே தண்ணிக்குள்ள நின்னு கேட்டு சொல்லணுமா உனக்கு? நா அவகிட்ட தனியா பேசிக்கிறேன். நீங்க யாரும் இத பிள்ளைங்க வரைக் கொண்டு போகக் கூடாது. சோ அவகிட்ட இதப்பத்தி பேசவும் கூடாது" என்றவன், அங்கு மகளிடம், "ஹரிணி கீப் ஸ்விம்மிங்" என குதித்து மேலேறி உடைமாற்றும் அறை வந்தான்.

அனைத்தும் காணொளி அழைப்பில் தான். உடை மாற்றும் அறைக்குள் தானாகவே கேமரா அணைந்திருந்தது.

"இங்க ஊரே கேளு நாடே கேளுன்னு உங்க பொழப்பு நாறுது. நாஞ்சொல்லி தான் உன் பிள்ளைகளுக்கு தெரிய போகுதாக்கும். ஆனா உன் பொண்டாட்டி கூடுதல் விவரம்ன்னு எல்லாத்துலயும் கரெக்டா காட்டுவாடா. எவ்வளவு நேக்கா உன்னைய அந்தப் பக்கம் நாடு கடத்திட்டு, இந்தப் பக்கம் பிள்ளைகளுக்கும் பள்ளிக்கூடம் ஒரு மாசம் லீவு இதயும் கணக்கு பண்ணி நெட்டுல போட்டு விட்ருக்கா பாத்தியா?" என அங்கலாய்க்க,

"என் அக்காவ ஃப்ளோவ்ல பாராட்றீங்க அத்த" என்றான் சாதாரணமாக நிலன். அவனுக்கு நன்கு புரிந்தது, அக்காவிற்கும் அக்கா கணவனுக்கும் ஏதோ லடாய் தான், அதை ஈகோவில் ஊரைப் பேச விட்டு வேடிக்கை பார்க்கின்றனர் என்று. அதனால் மனநிலை இன்னுமே இலகுவாகிவிட்டிருந்தது. காந்திமதி மட்டுமே கப்சிப்பென்று அமர்ந்திருந்தார்.

"நிலா!" என்றான் குஹன்.

"சொல்லுங்க மாமா. இங்க இவ்வளவு பிரச்சினைலயும் அங்க குஜாலா தான் இருக்கீங்க போல?" முகம் தெரியாததால் தைரியமாகவே கேட்டான்.

"ஆமா பத்து வயசு பிள்ளையவும் கூடவே நிப்பாட்டிட்டு சரசம் பண்றேன். வரியா நீயும்?" என அவன் கடுகடுக்கவும், நிலன் பட்டென்று வாயை மூடி கொள்ள,

"பெத்த அம்மாவ பைக்ல பின்னாடி உக்கார வச்சுகிட்டே உன் அக்காவுக்கு மல்லிய பூ வாங்கி குடுத்தான்டா இவேன். பசப்புவான் நம்பாத" என்றார் விசாலாட்சி, என்றோ நடந்ததை இன்று நடந்தது போல கொதித்துக் கொண்டு.

"ம்மா!" என கத்திய குஹன், இதற்குள் டீஷர்டையும், ஷார்ட்ஸையும் மாற்றிக் கொண்டு வெளியே வந்தான்.

"அம்மா சும்மாலாம் வேணாம். இவ என்னத்துக்கு உன்ன டைவோர்ஸு பண்ணணும்னு சொன்னா இப்ப அத நீ எனக்கு சொல்லு, உனக்கு தெரியலனா அவகிட்டயே கேட்டு சொல்லு. நேத்து காலைல இருந்து எத்தன போனு வந்துட்டு தெரியுமா? அவங்களுக்குலாம் நா என்ன பதில சொல்லட்டும்?" என்றவர் திருப்பி காந்திமதியைத் திரையில் காட்டி, "இங்க பாரு உன் அம்மாஞ்சி மாமியார அழுறத தவிர ஒன்னுந்தெரியாத பொம்பளைய இன்னும் இன்னும் அழவிட்டு வேடிக்கைப் பாக்கா உன் பொண்டாட்டி"

"நீ இப்படியே பேசி பேசி தான் அவங்கள இன்னும் அழ வைக்கப் போற" என முறைக்க,

"ஆமா நாந்தான விவாகரத்து கேட்டுட்டு திரியிறேன்"

"அப்பா நா பொறக்கும் முன்ன உன்ன பண்ணிருந்திருக்கணும் தப்பு பண்ணிட்டாரு" என்றான் அவனும் கடுப்புடன்.

நிலனும் விஸ்வநாதரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொள்ள, அடுத்த வாய் தகராறுக்கு தயாரானார் விசாலாட்சி.

அதை அறிந்தவன், "நிலா!" என்றழைத்தான் மீண்டும்.

"சொல்லுங்க மாமா!"

"சித்து இங்க வரணும். நா அவகிட்ட பேசிப்பேன். இந்த விவாகரத்து ம_" என சொல்ல வந்தவன், மூச்சை இழுத்து விட்டு, "அந்த டேஷெல்லாம் பேச்சுக்கே இல்ல. நா இங்க இருந்து அவளுக்கு ப்ரஷர் குடுப்பேன். நீ அங்க இருந்து அவளக் கிளப்பி விடு" என்க, நிலன் தலையை ஆட்ட,

"அப்ப என்ன சண்டைன்னு எங்களுக்கு சொல்ல மாட்ட நீ?" என்றார் விசாலாட்சி.

"உனக்கு அவ விவாகரத்து பண்ணப் போறேன்னு சொன்னதுலாம் பிரச்சினை இல்லை. இவேன் என்ன பண்ணாம்னு அவ விவாகரத்து வர போயிருக்கான்னு உன் மண்டை குடைச்சலுக்கு ஆன்ஸர் தேடி வந்துருக்க அப்படிதான?" என குஹன் முறைத்ததில்.

"உன் பொண்டாட்டி யோக்கியமு தெரியும் உன் வவுசயும் தெரியும்டா. என் வாய அடைப்ப ஊர் வாய எப்படி அடைக்கன்னு பாக்கத் தான போறேன்" என இவர் நொடித்து கொள்கையில், உள்ளே வந்தாள் பௌர்ணமி.

"நோ நந்தினி. நம்ம ப்ளான் என்னவோ அதான். எனக்கு ரெஸ்ட் வேணும். நெக்ஸ்ட் வீக் நாம ரெண்டு படத்துக்கு காஸ்ட்யூம் மாடல் ரெடி பண்ணி குடுத்தாகணும். இதுக்கு இடைல முடிச்சு குடுத்தவங்களுக்காக இருக்க வேலைய விட்டுட்டு அங்க அலைய முடியாது. வேணும்னா இங்க இருந்தே ஹெல்ப் பண்ணலாம். ஓகேனா வரட்டும் இல்லனா போட்டும்" என அவள் பேசியது, இணைப்பில் இருந்த குஹநேத்திரனுக்கும் கேட்டது.
 

priya pandees

Moderator

"ஏன்டி நா உங்க வாழ்க்கையப் பத்திப் பயந்து பேசிட்ருக்கேன். நீ என்ன துணி தைக்குறதுலயே இருக்க?" என்றார் அடுத்ததாக அவளிடம்.

"துணி தைக்றேனா? புரியாம பேசாதீங்க அத்த"

"இந்தா உன் புருஷன் கேட்டா பதில் சொல்லுவேம்னு சொன்னல்ல? எதுக்கு நெட்டுல அப்படி போட்டன்னு கேட்கான் பதில் சொல்லு" என அவளிடம் சென்று ஃபோனை நீட்டிவிட்டு வந்தமர்ந்தார், இப்போதும் அவள் அவரை முறைத்து விட்டு அவனையும் முறைத்துப் பார்க்க,

தானும் முறைத்தவன், "இன்னும் கிளம்பாம என்னடி பண்ற அங்க?" என்றான் மிரட்டலாக,

"நிலா!" என்றாள் பௌர்ணமி.

"என்ட்ட பேசு சித்து. உன்ன கிளம்ப சொல்லி முழுசா டென் ஹார்ஸ் ஆச்சு"

"நா எதுக்கு வரணும்?"

"ம்ம் நேத்து பாத்துருக்கல்ல ஒரு வேலை அதுக்கு பதில் சொல்லத்தான். நேர்ல வா நல்லா தெளிவா சொல்றேன்" என்றான் இறுகிபோய்.

"அப்ப நீங்க தான் இங்க வரணும்"

"பதில் உனக்கு தானடி வேணும்?"

"நா ஊருக்கு முன்ன தான கொஸ்டீன வச்சுருக்கேன். நீங்களும் ஊருக்கு முன்னவே ஆன்ஸர வைக்கலாம்"

அவள் முகம் தவிர எதுவும் தெரியவில்லை, ஆனால் ஏனோ திமிறிப் பேசிக் கொண்டிருப்பவளை, 'பேசுவியா பேசுவியா?' என கைக்குள் அடக்கிக் கொள்ளும் வெறியே வந்தது அவனுக்கு.

கழுத்தைத் தொட்டு ஆடிக் கொண்டிருந்த முடி அசைய கன்னமும் கண்ணும் சிவக்க முறைத்து நின்றவளை கண்ணை சுருக்கி இரு நொடி பார்த்தான். ஒரு சிறிய கருப்பு பொட்டு, கண்ணுக்கு மை, சாதாரணமாகவே பிங்க் நிறத்தில் பளபளக்கும் உதட்டுக்கு அதை பளீரென்று காட்ட 'லிப் பாம்' என அவள் அலங்காரத்தை வட்டமடித்தது அவன் கண்கள்.

அவளும் அவனைத் தான் பார்த்திருந்தாள். ஆனால் அவனைப் போல ரசிக்கவும் முடியவில்லை, அவன் வட்டமடிக்கும் கண்களை தவிர்க்கவும் விரும்பவில்லை. இவ்வாறு இரு நொடிகள் அவன் நிறுத்தி நிதானமாக அவளைப் பார்த்தே வருடங்கள் ஆகியிருக்கும். அதனால் நன்றாக பார்க்கட்டும் என தான் முறைத்து நின்றாள். இப்படி அவன் அவளை ரசிக்க வேண்டும் எனில் அவள் விவாகரத்து வரை செல்ல வேண்டுமோ என தான் அவள் எண்ணமெல்லாம் ஓடிக்கொண்டிருந்தது.

"நீ எப்படி வராம போறன்னு பாக்றேன்" என்றான் திமிராக,

அவனை பார்த்தே, "நிலா! ஈவ்னிங் ஏற்காடு போறோம். நீ அண்ணிக்கு வர முடியுமான்னு டாக்டர்ட்ட ஒருக்கா கேட்டுக்கோ. நா அம்மா, கிருத்தி, மிதிலா நாலு பேரும் கண்டிப்பா போறோம். நாலு நாள் ட்ரிப். ரிசார்ட் புக் பண்ணிடு" என அதுவரை குஹனைப் பார்த்தே கூறி வந்தவள், இப்போது அதிலிருந்து தலையைத் திருப்பி மாமனாரிடம், "நீங்களும் ஃப்ரீனா வாங்க மாமா" என்றாள்.

"ஏன்டா உன் அக்காக்கு பைத்தியம் கியித்தியம் புடிச்சுருச்சோ? இப்படி விவாகரத்து கேட்ட மறுநாளே எவளாவது டூர் போவாளாடா?" என்றார் விசாலாட்சி மோவாயில் கைவைத்து உண்மையிலேயே வியந்தவராக.

"விசாலா!" என விஸ்வநாதர் அதட்ட,

"குறைபிரசவத்துல பிறந்துட்டாளா காந்தி இவ?" என அந்தப்பக்கம் காந்திமதியிடம் கேட்டார்.

"சித்து!" என்றழைத்தான் குஹன்.

திரும்பி அவன் முகம் பார்த்தாள், எதுவும் பேசவில்லை, அழைத்தாய் தானே, பேசு என்பதாக பார்த்திருக்க, "நா அங்க வரணுமாடி?" என்றான் மெதுவான ஆளுமையான குரலில். அவன் பார்வை அவள் கண்களை நேராகப் பார்த்திருந்தது. அங்கு விசாலாட்சி பேசிக் கொண்டே இருந்ததில் எல்லோரும் அவரிடம் பேச்சுவார்த்தையில் இருக்க, இவன் கேட்டது அவர்கள் காதில் விழவில்லை.

"வந்தா மட்டும் பொறுமையா நா பேசுறத கேட்கவா போறீங்க? அதுக்கு உங்களுக்கு டைம் இருக்குமா? நா பேசறதெல்லாம் உங்களுக்கு தேவையில்லாததா தானே தெரியும்? எதுக்கு உங்க வேலையோட மத்தவங்க வேலையவும் சேர்த்துக் கெடுக்க போறீங்க? டேக் யுவர் டைம். பை. ஹரிணிட்ட சொல்லிடுங்க"

"நா பேசிட்ருக்கேன் சித்து!"

"நானும் பலநாள் பல டைம் இப்படி தான் பேச வருவேன். என் மூஞ்சக் கூட பாக்காம செல்லையும் லேப்டாப்பையும் பார்த்து, 'உம்' கொட்டுவீங்களே? நீங்க அவாய்ட் பண்ணியும், இன்சல்ட் பண்ணியும் அதை பெருசாக்காம நா பேசுனா, அந்நேரம் கரெக்ட்டா உங்களுக்கும் ஏதோ சொல்ல வேண்டியது ஞாபகம் வரும், 'இப்ப விட்டா சொல்ல மறந்துருவே'ன்னு உங்க காரியத்தை மட்டும் பேசிட்டு, ஏற்கனவே பேசிட்ருந்தவள அம்போன்னு விட்டுட்டு எழுந்து போவீங்களே? அந்த வலி தெரியுமா? பேச வந்தது சின்ன விஷயமோ, பெரிய விஷயமோ, தேவையானதோ, தேவை இல்லாததோ, அத கேட்கணும்னு நினைக்க அந்த இடத்துல நிறைய அன்பு வேணும். உங்க பொண்ணும் பையனும் காரணமில்லாம என்ன பேசுனாலும் கேட்டுட்டு இருப்பீங்களே அந்த அடிப்படை அன்பு வேணும், ஆனா இங்க நா பேச மட்டும் வேலிட் ரீசனோட வந்து உட்காரணும். ரைட்?"

"தென்?" என்றான் இரு புருவம் உயர்த்தி.

தன்னை மீறி பேசிக் கொண்டிருப்பதை அப்போது தான் உணர்ந்தவள், "உங்களுக்கு என்ன சொல்லணும்?" என்றாள்.

"கிருத்தி எங்க?" என்றான் அவன்.

எரிச்சலாக வந்தது அவளுக்கு, ஆனாலும், "கிருத்தி" என மிதிலா அறையில் தூங்கும் அவளருகில் அமைதியாக அவள் பொருட்களை ஆராய்ந்து கொண்டிருந்தவனை அழைத்தாள்.

"ம்மா!" என அப்படியே போட்டுவிட்டு எழுந்து ஓடி வந்தவனிடம், "அப்பா பேசணுமாம்" என கொடுத்துவிட, கிருத்தி, வாங்கிய வேகத்தில் முதல் நாள் கதையெல்லாம் சொல்லத் துவங்கியிருந்தான்.

"என்ன? பேசி முடிவு பண்ணிட்டீங்களா? நா சும்மா பொழுது போகாம விளையாண்டேன்னு நீயே அந்த நெட்டுல மறுபடியும் போட்டு‌விட்ருவ தான?" என்றார் விசாலாட்சி.

"ம்ச் அத்த. அத விடுங்க. இருந்து சாப்பிட்டு போங்க. நானே லஞ்ச் ரெடி பண்ணுறேன்" என்றவள் மீண்டும் நந்தினிக்கு அழைத்து அலுவலாக பேசியவாறு சமையலறை சென்றுவிட்டாள்.

"இந்த சிலுப்பட்ட முடிய என்னைக்கு வளர்க்காளோ அன்னைக்கு தான் இவளுக்கு மூளையும் வளரும்" என்றார் சென்றவளை முறைத்து எரிச்சலாக.

"அத்த! மாமா கூலா தான் இருக்காரு. எனக்குத் தெரிஞ்சுப் பிரச்சினைய அவர் சரி பண்ணிப்பாரு" என்றான் நிலன்.

இருந்து பௌர்ணமி சமைத்து தந்த மதிய உணவை உண்டுவிட்டே விசாலாட்சி விஸ்வநாதர் இருவரும் கிளம்பினர்.

"நீ எதுக்கு அந்த முடிவெடுத்தன்னு தெரியல. ஆனா அது சரியான முடிவா உனக்கும் அமையாது அவனுக்கும் அமையாது உங்க பிள்ளைகளுக்கும் அமையாதுமா. பாத்துக்கோ" என மட்டும் கூறி கிளம்பினார் விஸ்வநாதர்.

அங்கு ஸ்காட்லாந்தில், குஹன் காலையில் மனைவி மகனுடன் பேசியபின், மகளை அழைத்துக் கொண்டு ஊர் சுற்ற கிளம்பிச் சென்றுவிட்டான். அஞ்சாநம்பி மட்டுமே விழி பிதுங்க மாட்டிக் கொண்டு நின்றான்.

தயாரிப்பாளர் குழுவிலிருந்து, அங்குள்ள இரு ஆடை வடிவமைப்பாளர்களை நேரிலேயே அழைத்துக் கொண்டு குஹன் தங்கியிருந்த விடுதிக்கு வந்திருக்க, "சாரே இங்க இல்ல. உங்கள யாரு இவங்கள நேர்ல கூட்டிட்டு வர சொன்னது. அப்பாயின்மென்ட் கேட்காம ஏன் செஞ்சீங்க?" என்றான் இவன்.

"அதுக்கு நீ ஃபோன எடுக்கணும். இன்னைக்கு ஷுட்டிங்கே நடக்கல. ஹீரோ ஹீரோயின் டேய்ஸூம் வேஸ்ட்டா போகுது. அவங்க அங்க போட்டு குடையிறாங்க. எல்லாத்தையும் நாங்க சமாளிக்க, நீ ஃபோன கூட எடுக்க மாட்டியா? ஸ்காட்லேண்ட் எவ்வளவு எக்ஸ்பென்சிவ்னு தெரிஞ்சும் இப்படி பண்ணா எப்படி?" என தயாரிப்பு குழுவும் பேச,

"சார், வேற காஸ்ட்யூம் வேணாம்னு சொல்லிட்டாரு. சிமி மேடம் தான் பண்ணணும். அவங்கள பேசி வரவைங்க" என இவன் முடித்துவிட, அவர்கள் மறுபடியும் ஜெயராமன், நந்தினி, பௌர்ணமி என சுற்றி வர,

பௌர்ணமி நேராக நம்பிக்கு அழைத்தாள், "என்ன நம்பி? ரூல்ஸ் ஃபாலோ பண்ண தெரியாம என்ன தொழில் பண்றீங்க நீங்க? எல்லாம் உங்க இஷ்டமா? உங்க வேலைகாரங்களா நாங்க? என்னால வர முடியாது சொல்லிடுங்க உங்க சார்கிட்ட" என அவனை பேசவே விடாமல் கத்தி வைத்துவிட்டாள்.

"அடேய் என்னதான்டா பண்ணுதான் நா பெத்தவன்" என விசாலாட்சி வேறு அழைத்து கேட்கையில் இவன் தெரியாது என சொல்லி வாங்கி கட்டிக்கொள்ள, அன்றைய நாள் வெகு சிறப்பாக கழிந்தது அஞ்சா நம்பிக்கு.

அதன் பலனாக, இரவு வரை ஊர் சுற்றி விட்டு திரும்பி வந்த அப்பா மகள் முன் பாவமாக சென்று நின்றுவிட்டான்‌.

"என்ன நம்பி? இன்னும் தூங்கல? பகலெல்லாம் தூங்கிருப்ப. சோ இப்ப தூக்கம் வரலையோ?" என அவன் கேட்டதில் எவ்வளவு நக்கல் என முகத்தில் காட்டாமல் பார்த்திருந்தான் நம்பி.

"அவுட்டிங் போக கேட்க வந்தியா? போய்ட்டு வா. நோ இஷ்யூஸ்" என சோஃபாவில் அமர்ந்து காலைத் தூக்கி டீபாயில் வைத்து ரிலாக்ஸாக அமர்ந்தான்.

"சார்!"

"எஸ் நம்பி!"

"சிமி மேடம்ம உங்கள தவிர வேற யாராலையும் வரவழைக்க முடியாது சார். இதனால யூனிட்டே டேக் ஃபார் கிரான்ட்டடா நடந்துக்குறாங்க. ப்ளீஸ் சார்" என அவன் அமைதியாக கூற, கண்ணை மூடி பின்னால் சாய்ந்து கை இரண்டையும் அலுப்பு போக நீட்டிக் கொண்டான் குஹன்.

'என்ன தூங்கிட்டாரு! அப்ப நாளைக்கு ஷுட்டிங்?' என இவன் நெஞ்சில் கைவைத்து அதிர, நம்பி ஃபோன் இன்னும் அவன் பாக்கெட்டில் அதிர்ந்து கொண்டே இருந்தது. குஹன் பதில் தெரியாமல் அங்கு யாராலும் தூங்க முடியாதே!

"சார்!" என்றான் மறுபடியும்.

கண்ணைத் திறந்து சாய்ந்திருந்தவாறே திரும்பி பார்த்தவன், "பல்லவி இந்த படத்தில ஒரு கெஸ்ட் ரோல் பண்ணா எப்படி இருக்கும்?" என கேட்க, நம்பி அதிர்ந்து நிற்க,

"காஸ்ட்யூம் டிசைனர் வரவேண்டாம். பல்லவி வரட்டும் ப்ரொடியூசர்ட்ட இன்பார்ம் பண்ணிடு" என்றுவிட்டு மீண்டும் கண்ணை மூடி கொள்ள, உள்ளேயே நின்று தலையை பிய்த்துக் கொள்ள முடியாது என விறுவிறுவென வெளியேறிவிட்டான் நம்பி.

குஹன், பத்து நிமிடம் அப்படியே இருந்தவன், "ஹரிணி குட்டி ஃப்ரஷ் ஆகியாச்சா?" என சத்தம் கொடுக்க, அந்தப்பக்கம் சத்தம் இல்லை என்றதும் எழுந்து சென்று பார்க்க, தூங்கி இருந்தாள் அவன் மகள்.

"ட்ரெஸ் கூட மாத்தல. ஹரிணி" என லேசாக முதுகில் தட்ட,

"ப்ளீஸ்ப்பா" என்றாள் மகள்.

"உன் அம்மா பாக்கணும் இத. இனி என்னோட ட்ரிப்பே அனுப்ப மாட்டா" என்றுவிட்டு அவன் சென்று குளித்து உடை மாற்றி, அறைக்குள் இருந்த காஃபி மேக்கரில், ஒரு காஃபியைப் போட்டு எடுத்துக்கொண்டு பால்கனி வந்து அமர்ந்தான்.

மொபைலில், பௌர்ணமிக்கும் கிருத்திற்கும், இந்தியாவிலிருந்து துபாய் வழி ஸ்காட்லாந்து வர விமான பதிவு செய்து அதை அவளுக்கும் அனுப்பி வைத்தான். மறுநாள் காலை பத்து மணிக்கு சென்னையில் இருந்து விமானம்.

விசா, எப்போதும் பௌர்ணமி குஹன் இருவருக்கும் சேர்த்தே தயாரிப்பு நிறுவனம் எடுத்து வைத்துவிடும். இந்தமுறை பிள்ளைகளுக்கு விடுமுறை என்பதால் அவர்களுக்கும் சேர்த்தே குஹன் எடுத்து வைத்திருக்க, இப்போது எதைப்பற்றியும் யோசிக்காமல் விமானச் சீட்டு போட்டுவிட்டான்.

அடுத்த நொடி அவனுக்கு அவன் மனைவியிடமிருந்து அழைப்பு வந்துவிட, சின்னச் சிரிப்புடன் அதை ஏற்றவன், "பேக் பண்ணுடி. நாளைகழிச்சு இங்க வந்து திட்டிக்கலாம். இப்ப டைமில்ல" என அவனே முந்தி பேச,

"நா வரமாட்டேன்" என்றாள் பட்டென,

"நீ வர்ற சித்து. கண்டிப்பா வரணும்" என்றவன் காஃபியை நிதானமாக பருகினான்.

"என்ன மிரட்றீங்க? நா வரமாட்டேன். காஸ்ட்யூம் சரி இல்லன்னு சொல்லி ப்ளான் பண்ணிட்டு அது வொர்க் அவுட் ஆகலன்னு ட்ரைக்டா டிக்கெட் புக் பண்ணிட்டு சொல்றீங்களா?"

"அது காஸ்ட்யூம் டிசைனரா கூப்பிட்டது சோ ஃபார்மல், இது என் பொண்டாட்டிய நா கூப்பிடுறேன் இதுக்கு டிக்கெட் போட எவன கேட்கணும்?"

"என்ட்ட கேட்கணும். நீங்க நினைச்சதும் வர நா சும்மா இல்ல. அண்ட் நா தடவ கட்ட டிவோர்ஸ் வாங்கணும்னு இருக்கேன். அதுக்கு முன்ன வீ கான்ட் மீட் ஈச் அதர்"

"ஹே ப்ளீஸ்டி வா. காலைல உன்ன பார்த்ததுல இருந்து ஒரே க்ரிப்பா இருக்கு. தனியா சமாளிக்க முடியலன்னு சொல்றேன்ல" என்றவனை முறைக்க முடியாது தலையில் அடித்தாள் பௌர்ணமி.

"சீட் பண்றீங்களா? நா அவ்ளோ சீப்பா தெரியிறேனா உங்களுக்கு?" கடுப்பின் உச்சத்தில் பௌர்ணமி கத்த.

"சித்து கிளம்பி வாடி!" என மீண்டும் அவன் அதை மட்டுமே கூற,

"நோ!"

"கெட்டிங் லேட் சித்து. நா உங்க ரெண்டு பேரையும் ரிசீவ் பண்ண ஏர்போர்ட்ல வெயிட் பண்ணுவேன்"

"நீங்க நினைச்சது தான் செய்வீங்க இல்ல? அதான் நடக்கணும் அப்படிதான? நா வரமாட்டேன். வரவே மாட்டேன்"

"இதுவரை எத்தனை தடவ, எத்தனை விஷயத்துக்கு எனக்காக நீ இறங்கி வந்துட்டன்னு யோசி. கவுண்ட் கிடைச்சா எனக்கு அத மட்டும் மெசேஜா அனுப்பிட்டு நீ வராம இருந்துக்கோ. நா இங்க தனியாவே அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன். பை சித்து!" என வைத்திருந்தான்.
 

Mathykarthy

Well-known member
விசாம்மா செம கேரக்டர் நீங்க 😍

அடமா தெரிஞ்சாலும் சிமி எதிர்பார்ப்பு வலி புரியுது 🙁🙁🙁

அடப்பாவி 😯😯😯😯😯 சரியான கேடி இவன்.... 😂 என்னமா பேசுறான் டிக்கெட் போட்டுட்டு பொண்டாட்டியை கூப்புடுறானாம் 😒
இதுல பொண்டாட்டியை வரவைக்க பல்லவியை கூப்பிட்டு சோசியல் மீடியாக்கு வேற தீனி போடுறான் 🤫🤫🤫
 
Top