priya pandees
Moderator
அத்தியாயம் 4
பௌர்ணமி, முன்னால் தோட்டத்தில் போடப்பட்டிருந்த ஊஞ்சலில் வந்து அமர்ந்து கொண்டாள். உண்மையில் மனம் படபடத்தது. அவனை இலகுவாக முறைத்து தான் வந்திருந்தாள். அவனிடம் கூறாமல், அவனை கலந்தாலோசிக்காமல், நேராக 'ட்வீட்!' செய்தது தவறு என மனம் உறைத்ததாலேயே அந்த பதட்டம். ஆனால் பேசுவதற்கு வாய்ப்பை அவனல்லவா தரவேண்டும். பேசக் கூட நேரமில்லாமல் ஓடி கொண்டிருப்பவன் அப்படி ஓடிக்கொண்டே இருக்கட்டும் என்று தானே கோவத்தில் சமூக வலைதளத்தில் பதிவிட்டு அந்த முடிவிற்கு வந்ததும்.
அவள் அவனைப் பார்க்கப் பிடிக்காதது போல் எழுந்து வந்திருந்தாலும், உண்மையில் தப்பித்து வந்த காரணம், அவர்கள் விவாகரத்தைப் பற்றி அந்நொடி அத்தனை பேரின் முன் அவனிடம் விவாதிக்க விரும்பாமல் தான்.
பெண்களோடு சேர்ந்து நின்றாலோ, கை குலுக்கினாலோ, இணைந்து நெருக்கமான காட்சிகளில் நடித்தாலோ முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு தான் திரிவாள். 'அது என் வேலை அப்படிதான் நான்!' என திமிராக திரிவான் அவனும். ஆனால் இன்று அவன் நிற்கும் நிலையில் தவறில்லை என அவளுக்கு தெரியும்.
அழைப்பில் இருப்பவளைக் கவனத்தில் கொண்டு, "நந்தினி?" என்றாள்.
"மேம், ஸ்பான்ஸர் ஓகே சொல்லிட்டாங்க. நம்ம மாடல்ஸ், ட்ரெஸ் கேட்லாக் எல்லாம் ஓகே பண்ணிட்டாங்க. சைன் பண்ண நீங்க வரணும் டேட் ஃபிக்ஸ் பண்ண சொல்லிருக்காங்க"
"நெக்ஸ்ட் வீக்ல ஃபீரி டேட் இருக்கான்னு பாரேன்?"
"வெட்நெஸ்டே இருக்கு மேம்"
"அப்ப அன்னைக்கு அவங்களுக்கு ஓகே வான்னு கேட்டு டைம் ஷெட்யூல் பண்ணிடு"
"ஓகே மேம். தென் இன்னொரு விஷயம்" என தயங்கி தான் கேட்டாள்.
"இழுக்காம சொல்லு"
"ஆயுட்காலம் படம் ப்ரொடக்ஷன் டீம்ல இருந்து கால் பண்ணிருந்தாங்க, உங்கட்ட பேசணும்னு ஜெயராமன் சார் சொன்னாங்களாம்"
"ஏன் என்னாச்சு? அவங்களுக்குத் தான் காஸ்ட்யூம் ஃபுல்லா முடிச்சுக் குடுத்து பேமெண்ட் வாங்கியாச்சே?" அவள் கணவன் கண் முன் வந்து சென்றான்.
"ஆமா மேம். இப்ப ஏதோ அதுல சேஞ்சஸ்னு சொல்றாங்க போல"
"யார் சொல்றது? அக்ரிமெண்ட் காபி இருக்குல்ல? எல்லா மாடலும் ஓகே பண்ணி சைன் பண்ண அப்றம் தானே ஸ்டிட்ச் பண்ணி பேக் பண்ணி குடுத்தோம் பிஃபோர் எக்ஸ்போர்ட் கன்பார்ம் வேற பண்ணேனே நான்?"
"ரெக்வஸ்டா தான் கேக்றாங்க மேம். மேபி அங்க க்ளைமேட்க்கு கலர்ஸ் செட் ஆகலன்னு நினைக்கிறேன்"
"அப்ப காஸ்ட்யூம் பத்தி பேசுனது மிஸ்டர் ஜெயராமன் இல்ல. ரைட்?"
"ஆமா மேம் டைரக்டர் தான் சொல்லிருக்காங்க" என நிறுத்தி, "நம்ம சார் தான் வேற வேணும்னு கேட்ருக்காங்க போல. ஷுட்டிங்கும் ஸ்டாப் பண்ணிட்டாங்களாம்"
"இரிட்டிடேட்டிங்!" எனப் பல்லைக் கடித்தவள், எழுந்து புல்வெளியில் இங்குமங்கும் நடந்தாள்.வேண்டும் என்றே செய்கிறான் என்பதால் அடுத்து என்ன செய்யலாம் என யோசித்தாள். மற்றவர்களுக்கு எப்படியோ அப்படித்தான் கணவனானாலும் அவன் படத்திற்கும் அவள் வேலையின் ஈடுபாடு இருக்கும்.
முதலில் எவ்வாறு வேண்டும் என குஹனிடம் கேட்டு, அதை வரைந்து படமாக அவன் முன் வைத்து, அதில் அவன் சரி என்றவற்றை அவளிடம் இருக்கும், 'மாடல்' பெண்களுக்கு அணிய வைத்து, அதை அவனுக்கு மட்டுமின்றி தயாரிப்பாளருக்கும் சேர்த்து நேரில் வரவழைத்துக் காண்பித்து, அதையும் அவர்கள் அங்கீகரித்து சம்மதமாக கையெழுத்திட்டு முன் தொகையைக் கையில் வாங்கிய பின்னரே அந்த வரைபடங்கள் உடைகளாக மாற்றம் கொள்ளும்.
ஆயுட்காலம் படத்திற்கும் அப்படிதான் எல்லாம் முடித்து தான் ஒப்படைத்திருந்தாள். படத்தில் வரும் காட்சிகள் எல்லாம் முடிக்கப் பட்டிருந்தது. நான்கு பாடல்கள், அதிலும் இரண்டு முடிந்திருந்தது. இன்னும் இரண்டு மட்டுமே அதற்கு தான் வெளிநாடு கிளம்பியிருந்தனர். கிட்டத்தட்ட எல்லாம் முடிந்த நிலையில், இப்போது இதை செய்யவேண்டியதே இல்லை, ஆனால் செய்கிறான் என்றால் அவளால் செய்கிறான். அவளைப் பழிவாங்க வேண்டும் என்றே செய்கிறான் என நினைத்தாள்.
"மேம்!"
"என்ன டிசைன் மாத்த சொல்றாங்க?"
"அந்த ஹாஃப் ஸ்லீவ் சாரி டிசைன் மேம்"
"எப்படி வேணும் என்னன்னு கேளு. நா ப்ரொடியூசர்ட்ட பேசுறேன்" என வைக்க, நந்தினி அங்கு ஸ்காட்லாந்தில் இருக்கும் குழுவிற்கு பேச விரைந்தாள்.
பௌர்ணமி, அடுத்ததாக ஜெயராமன் எண்ணைத் தேடி எடுத்து அழைப்பு விடுக்க, காத்திருந்தவராக பட்டென்று எடுத்துவிட்டார் அவர்.
"சொல்லுங்க சார்! எனக்கு ரீச் பண்ண ட்ரை பண்றீங்களாம்?"
"சிமி. ப்ளீஸ்மா எனக்கு தெரியும் லாஸ்ட் மினிட்ல, அங்க ஸ்பாட்ல போய் நின்னுட்டு கேட்கக் கூடாது தான். ஆனாலும் அங்க இருக்க சீசன் க்ளைமேட்டுக்கு ஏதோ டிசைன் சரியா வரலன்னு டைரக்டர் சொல்றாரு" என்றார் நேராகவே.
"இப்படி லாஸ்ட் மினிட்ல சேஞ்ச் பண்ணா அதுக்கான லாஸ அவரே ஏத்துப்பாரான்னு கேட்டீங்களா?"
"க்ளைமேட்ட நாம கணிக்க முடியாதில்லையா சிமி?"
யாருமே அவனை காரணமாக முன் வைக்க முயலவில்லை. அவள் உதவியாளர் நந்தினி, இதோ தயாரிப்பாளர், இன்னும் இனி வருபவர்களும் கூட, அவன் செய்வதை தவறு என சுட்டிக் காட்டி கூறவே மாட்டார்கள். அவ்வளவு நல்ல அபிப்பிராயம் அவன்மீது. ஏனென்றால் அவன் திறமை அப்படி. இப்போது கடைசி நேரத்தில் மாற்றம் கேட்டு அனைவரையும் படுத்துகிறான் தானே, ஆனால் அதற்கு ஏற்ப அந்தக் காட்சியை மெருகேற்றிவிடுவான். அந்தக் காட்சி தனித்து நிற்கும் படி செய்து விடுவான். அது தான் அவன், அதில் மற்றவைகள் அமிழ்ந்து போய்விடும்.
ஜெயராமனும் அதைத் தான் அவர்கள் உதவியாளர்களிடம் கூறி வந்திருந்தார், "அடேய் இப்படி நம்மள சுத்தல்ல விட்டா அதுக்கு ஈடா ப்ரோமோஷன், ட்ரைலர், சீன் டச்னு எதாவது செட்டில் செஞ்சுருவாருடா அந்த மனுஷன். நீங்க கோக்குமாக்கா அந்த அஞ்சாநம்பிட்ட என்னத்தையும் பேசித் தொலைச்சு காரியத்தை கெடுத்துடாதீங்க" என்றுவிட்டே இவளிடம் பேசிக் கொண்டிருக்கிறார்.
"சரி சார். இப்படிதான் வேணும்னு எக்ஸாக்டா ஒரு ஃபோரம் குடுக்கச் சொல்லுங்க. ஏன்னா ஆப்ஷனா செய்ய முடியாது. இதுதான்னு சொன்னா அத அப்படியே செஞ்சு குடுக்க ட்ரை பண்ணுவேன். டைம் சேவ் ஆகும். பட் பேமென்ட் டபுள் தான்" என்றாள்.
"பேமெண்ட்லாம் விஷயமே இல்லைமா. அது நா பாத்துக்குறேன். பட் நீங்க நேர்ல அங்க போய்டீங்கனா இன்னும் ஈசியா இருக்கும்ல சிமி?" எனக் கேட்க,
"இது என்னோட எக்ஸ்டரா வொர்க். ப்ளான்ல இல்லாததுக்காக இங்க நா அல்ரெடி ப்ளான் பண்ணத மாத்திட்ருக்க முடியாது சார்"
"மேக்ஸிமம் ஒன் டேல முடிச்சுட்டு ரிட்டர்ன் ஆகிடுங்க சிமி"
"அப்ப நீங்க வேற காஸ்ட்யூமர் அங்க ஸ்காட்லாண்ட்ல கிடைக்றாங்களான்னு பாருங்க. மேக் இட் ஈசி. அங்க உள்ளவங்க இன்னும் பெர்ஃபெக்டா க்ளைமேட் ப்ளஸ் கேமரா ஸ்கிரீனிங்க்கு ஏத்தமாதிரி ரெடி பண்ணித் தருவாங்க. எனக்கு இன்னொரு கால் வருது நா அப்றம் லைன்ல வரேன் சார்" என்க, அவர் திணற, "பை சார்!" என வைத்துவிட்டாள். தொழிற் முறையாகவே இருவரும் பேசி வைத்திருந்தனர்.
அவர் அங்கு ஸ்காட்லாந்தில் உள்ள குழுவிற்கு அழைத்து பிடிபிடி என பிடித்துவிட்டார்.
"ட்ரைக்டர்ட்ட பேசுங்க. அங்கேயே ஏதாவது காஸ்ட்யூம் டிசைனர ஏற்பாடு பண்ணித் தரட்டுமான்னு கேளுங்க. இல்ல அவருக்கு தெரிஞ்சவங்க இருந்தாலும் ஓகேன்னு பேசுங்க. அந்த பொண்ணுப் பேச்சுலயே வெட்டிட்டுப் போகுது. என்னன்னு தான் குடும்பம் நடத்துறாரோ அவரும். நீ அவர்ட்ட பேசிட்டு சொல்லு" என கோவமாக இரைந்து வைக்க. அதைக்கேட்டவர்கள் அடுத்து அஞ்சாநம்பியைப் பிடித்தனர்.
இதற்குள் இங்கு வீட்டினுள்,
பௌர்ணமி எழுந்து செல்லவும், நிலன் கையிலிருந்த ஃபோனை பிடுங்காத குறையாக வாங்கிய விசாலாட்சி, "இதென்ன சின்னவனே இப்புடி பண்ணுத? வயசு ஏறுதா இறங்குதா உனக்கு?" என முகத்தைச் சுளித்து பேச,
"நீ அங்க என்ன செய்ற?" என்றான் குஹன்.
"நா என்னமு செய்வேன்? என்னைய கேட்காத? நீங்க அடிக்கற கூத்துல இன்னும் நா என்னலாம் செய்யணுமோ தெரியல. உன் பொண்டாட்டிய என்னன்னு கேட்க போறியா இல்லையா நீ? புருஷனுக்கும் பொண்டாட்டிக்கும் ஏழு கழுதை வயசுல தான் கிறுக்கு பிடிக்குமோ?" என சிடுசிடுத்தார்.
"அவள என்ன கேட்கணுமோ அத நா கேட்டுக்குறேன். நீ ஃபர்ஸ்ட் அங்கேயிருந்து கிளம்பு"
"என்ன நீ என்னடா விரட்டுறது? இது நிலன் வீடு. அவன் சொல்லட்டும். நீ சொல்லாத. ஆக்கமத்த வேலை பாக்றவன்லாம் என்னைய பேசக் கூடாது"
"நா என்னத்த பாத்தத நீ பாத்த? சும்மா என் வாய கிண்டாத. உன் பேச்செல்லாம் என் மாமியாரும் மச்சானும் கேட்டுகிட்டு இருந்தா பொழப்ப பாக்க வேணாம்? அப்பா எங்க அவர்ட்ட குடு நீ" என்றான் அதட்டலான குரலில். அந்த குரலுக்கு பயந்து அருகில் நின்ற இரு பெண்களும் ஹரிணியை அழைத்துக் கொண்டு நீந்த நகர்ந்திருந்தனர்.
"உன் பொண்டாட்டி விவாகரத்து கேட்ருக்கா ஏன்னு நீ கேட்டா தான் பதில் சொல்லுவாளாம். நீ சொல்லி தான் நாங்க தெரிஞ்சுக்கணுமாம். இப்பவே நீ கேட்டு சொல்ற" என்றார் அவரும் சத்தமாக.
கௌதமி கிருத்தியோடு அவர்கள் அறை சென்றுவிட, நிலன், காந்திமதி, விஸ்வநாதர் மூவரும் அவர்கள் சண்டையை வேடிக்கைப் பார்த்தனர்.
"மெதுவா பேசேன்டி" என்றார் விஸ்வநாதர்.
"சும்மா இருங்க நீங்களும் கேட்க மாட்டீங்க என்னையும் கேட்க கூடாதுன்னா எப்புடி?" என்றுவிட்டு மீண்டும் அவனிடம், "பதில் சொல்லு நேத்ரா?" என்றார் பிடியை விடாமல்.
"இப்படியே தண்ணிக்குள்ள நின்னு கேட்டு சொல்லணுமா உனக்கு? நா அவகிட்ட தனியா பேசிக்கிறேன். நீங்க யாரும் இத பிள்ளைங்க வரைக் கொண்டு போகக் கூடாது. சோ அவகிட்ட இதப்பத்தி பேசவும் கூடாது" என்றவன், அங்கு மகளிடம், "ஹரிணி கீப் ஸ்விம்மிங்" என குதித்து மேலேறி உடைமாற்றும் அறை வந்தான்.
அனைத்தும் காணொளி அழைப்பில் தான். உடை மாற்றும் அறைக்குள் தானாகவே கேமரா அணைந்திருந்தது.
"இங்க ஊரே கேளு நாடே கேளுன்னு உங்க பொழப்பு நாறுது. நாஞ்சொல்லி தான் உன் பிள்ளைகளுக்கு தெரிய போகுதாக்கும். ஆனா உன் பொண்டாட்டி கூடுதல் விவரம்ன்னு எல்லாத்துலயும் கரெக்டா காட்டுவாடா. எவ்வளவு நேக்கா உன்னைய அந்தப் பக்கம் நாடு கடத்திட்டு, இந்தப் பக்கம் பிள்ளைகளுக்கும் பள்ளிக்கூடம் ஒரு மாசம் லீவு இதயும் கணக்கு பண்ணி நெட்டுல போட்டு விட்ருக்கா பாத்தியா?" என அங்கலாய்க்க,
"என் அக்காவ ஃப்ளோவ்ல பாராட்றீங்க அத்த" என்றான் சாதாரணமாக நிலன். அவனுக்கு நன்கு புரிந்தது, அக்காவிற்கும் அக்கா கணவனுக்கும் ஏதோ லடாய் தான், அதை ஈகோவில் ஊரைப் பேச விட்டு வேடிக்கை பார்க்கின்றனர் என்று. அதனால் மனநிலை இன்னுமே இலகுவாகிவிட்டிருந்தது. காந்திமதி மட்டுமே கப்சிப்பென்று அமர்ந்திருந்தார்.
"நிலா!" என்றான் குஹன்.
"சொல்லுங்க மாமா. இங்க இவ்வளவு பிரச்சினைலயும் அங்க குஜாலா தான் இருக்கீங்க போல?" முகம் தெரியாததால் தைரியமாகவே கேட்டான்.
"ஆமா பத்து வயசு பிள்ளையவும் கூடவே நிப்பாட்டிட்டு சரசம் பண்றேன். வரியா நீயும்?" என அவன் கடுகடுக்கவும், நிலன் பட்டென்று வாயை மூடி கொள்ள,
"பெத்த அம்மாவ பைக்ல பின்னாடி உக்கார வச்சுகிட்டே உன் அக்காவுக்கு மல்லிய பூ வாங்கி குடுத்தான்டா இவேன். பசப்புவான் நம்பாத" என்றார் விசாலாட்சி, என்றோ நடந்ததை இன்று நடந்தது போல கொதித்துக் கொண்டு.
"ம்மா!" என கத்திய குஹன், இதற்குள் டீஷர்டையும், ஷார்ட்ஸையும் மாற்றிக் கொண்டு வெளியே வந்தான்.
"அம்மா சும்மாலாம் வேணாம். இவ என்னத்துக்கு உன்ன டைவோர்ஸு பண்ணணும்னு சொன்னா இப்ப அத நீ எனக்கு சொல்லு, உனக்கு தெரியலனா அவகிட்டயே கேட்டு சொல்லு. நேத்து காலைல இருந்து எத்தன போனு வந்துட்டு தெரியுமா? அவங்களுக்குலாம் நா என்ன பதில சொல்லட்டும்?" என்றவர் திருப்பி காந்திமதியைத் திரையில் காட்டி, "இங்க பாரு உன் அம்மாஞ்சி மாமியார அழுறத தவிர ஒன்னுந்தெரியாத பொம்பளைய இன்னும் இன்னும் அழவிட்டு வேடிக்கைப் பாக்கா உன் பொண்டாட்டி"
"நீ இப்படியே பேசி பேசி தான் அவங்கள இன்னும் அழ வைக்கப் போற" என முறைக்க,
"ஆமா நாந்தான விவாகரத்து கேட்டுட்டு திரியிறேன்"
"அப்பா நா பொறக்கும் முன்ன உன்ன பண்ணிருந்திருக்கணும் தப்பு பண்ணிட்டாரு" என்றான் அவனும் கடுப்புடன்.
நிலனும் விஸ்வநாதரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொள்ள, அடுத்த வாய் தகராறுக்கு தயாரானார் விசாலாட்சி.
அதை அறிந்தவன், "நிலா!" என்றழைத்தான் மீண்டும்.
"சொல்லுங்க மாமா!"
"சித்து இங்க வரணும். நா அவகிட்ட பேசிப்பேன். இந்த விவாகரத்து ம_" என சொல்ல வந்தவன், மூச்சை இழுத்து விட்டு, "அந்த டேஷெல்லாம் பேச்சுக்கே இல்ல. நா இங்க இருந்து அவளுக்கு ப்ரஷர் குடுப்பேன். நீ அங்க இருந்து அவளக் கிளப்பி விடு" என்க, நிலன் தலையை ஆட்ட,
"அப்ப என்ன சண்டைன்னு எங்களுக்கு சொல்ல மாட்ட நீ?" என்றார் விசாலாட்சி.
"உனக்கு அவ விவாகரத்து பண்ணப் போறேன்னு சொன்னதுலாம் பிரச்சினை இல்லை. இவேன் என்ன பண்ணாம்னு அவ விவாகரத்து வர போயிருக்கான்னு உன் மண்டை குடைச்சலுக்கு ஆன்ஸர் தேடி வந்துருக்க அப்படிதான?" என குஹன் முறைத்ததில்.
"உன் பொண்டாட்டி யோக்கியமு தெரியும் உன் வவுசயும் தெரியும்டா. என் வாய அடைப்ப ஊர் வாய எப்படி அடைக்கன்னு பாக்கத் தான போறேன்" என இவர் நொடித்து கொள்கையில், உள்ளே வந்தாள் பௌர்ணமி.
"நோ நந்தினி. நம்ம ப்ளான் என்னவோ அதான். எனக்கு ரெஸ்ட் வேணும். நெக்ஸ்ட் வீக் நாம ரெண்டு படத்துக்கு காஸ்ட்யூம் மாடல் ரெடி பண்ணி குடுத்தாகணும். இதுக்கு இடைல முடிச்சு குடுத்தவங்களுக்காக இருக்க வேலைய விட்டுட்டு அங்க அலைய முடியாது. வேணும்னா இங்க இருந்தே ஹெல்ப் பண்ணலாம். ஓகேனா வரட்டும் இல்லனா போட்டும்" என அவள் பேசியது, இணைப்பில் இருந்த குஹநேத்திரனுக்கும் கேட்டது.
பௌர்ணமி, முன்னால் தோட்டத்தில் போடப்பட்டிருந்த ஊஞ்சலில் வந்து அமர்ந்து கொண்டாள். உண்மையில் மனம் படபடத்தது. அவனை இலகுவாக முறைத்து தான் வந்திருந்தாள். அவனிடம் கூறாமல், அவனை கலந்தாலோசிக்காமல், நேராக 'ட்வீட்!' செய்தது தவறு என மனம் உறைத்ததாலேயே அந்த பதட்டம். ஆனால் பேசுவதற்கு வாய்ப்பை அவனல்லவா தரவேண்டும். பேசக் கூட நேரமில்லாமல் ஓடி கொண்டிருப்பவன் அப்படி ஓடிக்கொண்டே இருக்கட்டும் என்று தானே கோவத்தில் சமூக வலைதளத்தில் பதிவிட்டு அந்த முடிவிற்கு வந்ததும்.
அவள் அவனைப் பார்க்கப் பிடிக்காதது போல் எழுந்து வந்திருந்தாலும், உண்மையில் தப்பித்து வந்த காரணம், அவர்கள் விவாகரத்தைப் பற்றி அந்நொடி அத்தனை பேரின் முன் அவனிடம் விவாதிக்க விரும்பாமல் தான்.
பெண்களோடு சேர்ந்து நின்றாலோ, கை குலுக்கினாலோ, இணைந்து நெருக்கமான காட்சிகளில் நடித்தாலோ முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு தான் திரிவாள். 'அது என் வேலை அப்படிதான் நான்!' என திமிராக திரிவான் அவனும். ஆனால் இன்று அவன் நிற்கும் நிலையில் தவறில்லை என அவளுக்கு தெரியும்.
அழைப்பில் இருப்பவளைக் கவனத்தில் கொண்டு, "நந்தினி?" என்றாள்.
"மேம், ஸ்பான்ஸர் ஓகே சொல்லிட்டாங்க. நம்ம மாடல்ஸ், ட்ரெஸ் கேட்லாக் எல்லாம் ஓகே பண்ணிட்டாங்க. சைன் பண்ண நீங்க வரணும் டேட் ஃபிக்ஸ் பண்ண சொல்லிருக்காங்க"
"நெக்ஸ்ட் வீக்ல ஃபீரி டேட் இருக்கான்னு பாரேன்?"
"வெட்நெஸ்டே இருக்கு மேம்"
"அப்ப அன்னைக்கு அவங்களுக்கு ஓகே வான்னு கேட்டு டைம் ஷெட்யூல் பண்ணிடு"
"ஓகே மேம். தென் இன்னொரு விஷயம்" என தயங்கி தான் கேட்டாள்.
"இழுக்காம சொல்லு"
"ஆயுட்காலம் படம் ப்ரொடக்ஷன் டீம்ல இருந்து கால் பண்ணிருந்தாங்க, உங்கட்ட பேசணும்னு ஜெயராமன் சார் சொன்னாங்களாம்"
"ஏன் என்னாச்சு? அவங்களுக்குத் தான் காஸ்ட்யூம் ஃபுல்லா முடிச்சுக் குடுத்து பேமெண்ட் வாங்கியாச்சே?" அவள் கணவன் கண் முன் வந்து சென்றான்.
"ஆமா மேம். இப்ப ஏதோ அதுல சேஞ்சஸ்னு சொல்றாங்க போல"
"யார் சொல்றது? அக்ரிமெண்ட் காபி இருக்குல்ல? எல்லா மாடலும் ஓகே பண்ணி சைன் பண்ண அப்றம் தானே ஸ்டிட்ச் பண்ணி பேக் பண்ணி குடுத்தோம் பிஃபோர் எக்ஸ்போர்ட் கன்பார்ம் வேற பண்ணேனே நான்?"
"ரெக்வஸ்டா தான் கேக்றாங்க மேம். மேபி அங்க க்ளைமேட்க்கு கலர்ஸ் செட் ஆகலன்னு நினைக்கிறேன்"
"அப்ப காஸ்ட்யூம் பத்தி பேசுனது மிஸ்டர் ஜெயராமன் இல்ல. ரைட்?"
"ஆமா மேம் டைரக்டர் தான் சொல்லிருக்காங்க" என நிறுத்தி, "நம்ம சார் தான் வேற வேணும்னு கேட்ருக்காங்க போல. ஷுட்டிங்கும் ஸ்டாப் பண்ணிட்டாங்களாம்"
"இரிட்டிடேட்டிங்!" எனப் பல்லைக் கடித்தவள், எழுந்து புல்வெளியில் இங்குமங்கும் நடந்தாள்.வேண்டும் என்றே செய்கிறான் என்பதால் அடுத்து என்ன செய்யலாம் என யோசித்தாள். மற்றவர்களுக்கு எப்படியோ அப்படித்தான் கணவனானாலும் அவன் படத்திற்கும் அவள் வேலையின் ஈடுபாடு இருக்கும்.
முதலில் எவ்வாறு வேண்டும் என குஹனிடம் கேட்டு, அதை வரைந்து படமாக அவன் முன் வைத்து, அதில் அவன் சரி என்றவற்றை அவளிடம் இருக்கும், 'மாடல்' பெண்களுக்கு அணிய வைத்து, அதை அவனுக்கு மட்டுமின்றி தயாரிப்பாளருக்கும் சேர்த்து நேரில் வரவழைத்துக் காண்பித்து, அதையும் அவர்கள் அங்கீகரித்து சம்மதமாக கையெழுத்திட்டு முன் தொகையைக் கையில் வாங்கிய பின்னரே அந்த வரைபடங்கள் உடைகளாக மாற்றம் கொள்ளும்.
ஆயுட்காலம் படத்திற்கும் அப்படிதான் எல்லாம் முடித்து தான் ஒப்படைத்திருந்தாள். படத்தில் வரும் காட்சிகள் எல்லாம் முடிக்கப் பட்டிருந்தது. நான்கு பாடல்கள், அதிலும் இரண்டு முடிந்திருந்தது. இன்னும் இரண்டு மட்டுமே அதற்கு தான் வெளிநாடு கிளம்பியிருந்தனர். கிட்டத்தட்ட எல்லாம் முடிந்த நிலையில், இப்போது இதை செய்யவேண்டியதே இல்லை, ஆனால் செய்கிறான் என்றால் அவளால் செய்கிறான். அவளைப் பழிவாங்க வேண்டும் என்றே செய்கிறான் என நினைத்தாள்.
"மேம்!"
"என்ன டிசைன் மாத்த சொல்றாங்க?"
"அந்த ஹாஃப் ஸ்லீவ் சாரி டிசைன் மேம்"
"எப்படி வேணும் என்னன்னு கேளு. நா ப்ரொடியூசர்ட்ட பேசுறேன்" என வைக்க, நந்தினி அங்கு ஸ்காட்லாந்தில் இருக்கும் குழுவிற்கு பேச விரைந்தாள்.
பௌர்ணமி, அடுத்ததாக ஜெயராமன் எண்ணைத் தேடி எடுத்து அழைப்பு விடுக்க, காத்திருந்தவராக பட்டென்று எடுத்துவிட்டார் அவர்.
"சொல்லுங்க சார்! எனக்கு ரீச் பண்ண ட்ரை பண்றீங்களாம்?"
"சிமி. ப்ளீஸ்மா எனக்கு தெரியும் லாஸ்ட் மினிட்ல, அங்க ஸ்பாட்ல போய் நின்னுட்டு கேட்கக் கூடாது தான். ஆனாலும் அங்க இருக்க சீசன் க்ளைமேட்டுக்கு ஏதோ டிசைன் சரியா வரலன்னு டைரக்டர் சொல்றாரு" என்றார் நேராகவே.
"இப்படி லாஸ்ட் மினிட்ல சேஞ்ச் பண்ணா அதுக்கான லாஸ அவரே ஏத்துப்பாரான்னு கேட்டீங்களா?"
"க்ளைமேட்ட நாம கணிக்க முடியாதில்லையா சிமி?"
யாருமே அவனை காரணமாக முன் வைக்க முயலவில்லை. அவள் உதவியாளர் நந்தினி, இதோ தயாரிப்பாளர், இன்னும் இனி வருபவர்களும் கூட, அவன் செய்வதை தவறு என சுட்டிக் காட்டி கூறவே மாட்டார்கள். அவ்வளவு நல்ல அபிப்பிராயம் அவன்மீது. ஏனென்றால் அவன் திறமை அப்படி. இப்போது கடைசி நேரத்தில் மாற்றம் கேட்டு அனைவரையும் படுத்துகிறான் தானே, ஆனால் அதற்கு ஏற்ப அந்தக் காட்சியை மெருகேற்றிவிடுவான். அந்தக் காட்சி தனித்து நிற்கும் படி செய்து விடுவான். அது தான் அவன், அதில் மற்றவைகள் அமிழ்ந்து போய்விடும்.
ஜெயராமனும் அதைத் தான் அவர்கள் உதவியாளர்களிடம் கூறி வந்திருந்தார், "அடேய் இப்படி நம்மள சுத்தல்ல விட்டா அதுக்கு ஈடா ப்ரோமோஷன், ட்ரைலர், சீன் டச்னு எதாவது செட்டில் செஞ்சுருவாருடா அந்த மனுஷன். நீங்க கோக்குமாக்கா அந்த அஞ்சாநம்பிட்ட என்னத்தையும் பேசித் தொலைச்சு காரியத்தை கெடுத்துடாதீங்க" என்றுவிட்டே இவளிடம் பேசிக் கொண்டிருக்கிறார்.
"சரி சார். இப்படிதான் வேணும்னு எக்ஸாக்டா ஒரு ஃபோரம் குடுக்கச் சொல்லுங்க. ஏன்னா ஆப்ஷனா செய்ய முடியாது. இதுதான்னு சொன்னா அத அப்படியே செஞ்சு குடுக்க ட்ரை பண்ணுவேன். டைம் சேவ் ஆகும். பட் பேமென்ட் டபுள் தான்" என்றாள்.
"பேமெண்ட்லாம் விஷயமே இல்லைமா. அது நா பாத்துக்குறேன். பட் நீங்க நேர்ல அங்க போய்டீங்கனா இன்னும் ஈசியா இருக்கும்ல சிமி?" எனக் கேட்க,
"இது என்னோட எக்ஸ்டரா வொர்க். ப்ளான்ல இல்லாததுக்காக இங்க நா அல்ரெடி ப்ளான் பண்ணத மாத்திட்ருக்க முடியாது சார்"
"மேக்ஸிமம் ஒன் டேல முடிச்சுட்டு ரிட்டர்ன் ஆகிடுங்க சிமி"
"அப்ப நீங்க வேற காஸ்ட்யூமர் அங்க ஸ்காட்லாண்ட்ல கிடைக்றாங்களான்னு பாருங்க. மேக் இட் ஈசி. அங்க உள்ளவங்க இன்னும் பெர்ஃபெக்டா க்ளைமேட் ப்ளஸ் கேமரா ஸ்கிரீனிங்க்கு ஏத்தமாதிரி ரெடி பண்ணித் தருவாங்க. எனக்கு இன்னொரு கால் வருது நா அப்றம் லைன்ல வரேன் சார்" என்க, அவர் திணற, "பை சார்!" என வைத்துவிட்டாள். தொழிற் முறையாகவே இருவரும் பேசி வைத்திருந்தனர்.
அவர் அங்கு ஸ்காட்லாந்தில் உள்ள குழுவிற்கு அழைத்து பிடிபிடி என பிடித்துவிட்டார்.
"ட்ரைக்டர்ட்ட பேசுங்க. அங்கேயே ஏதாவது காஸ்ட்யூம் டிசைனர ஏற்பாடு பண்ணித் தரட்டுமான்னு கேளுங்க. இல்ல அவருக்கு தெரிஞ்சவங்க இருந்தாலும் ஓகேன்னு பேசுங்க. அந்த பொண்ணுப் பேச்சுலயே வெட்டிட்டுப் போகுது. என்னன்னு தான் குடும்பம் நடத்துறாரோ அவரும். நீ அவர்ட்ட பேசிட்டு சொல்லு" என கோவமாக இரைந்து வைக்க. அதைக்கேட்டவர்கள் அடுத்து அஞ்சாநம்பியைப் பிடித்தனர்.
இதற்குள் இங்கு வீட்டினுள்,
பௌர்ணமி எழுந்து செல்லவும், நிலன் கையிலிருந்த ஃபோனை பிடுங்காத குறையாக வாங்கிய விசாலாட்சி, "இதென்ன சின்னவனே இப்புடி பண்ணுத? வயசு ஏறுதா இறங்குதா உனக்கு?" என முகத்தைச் சுளித்து பேச,
"நீ அங்க என்ன செய்ற?" என்றான் குஹன்.
"நா என்னமு செய்வேன்? என்னைய கேட்காத? நீங்க அடிக்கற கூத்துல இன்னும் நா என்னலாம் செய்யணுமோ தெரியல. உன் பொண்டாட்டிய என்னன்னு கேட்க போறியா இல்லையா நீ? புருஷனுக்கும் பொண்டாட்டிக்கும் ஏழு கழுதை வயசுல தான் கிறுக்கு பிடிக்குமோ?" என சிடுசிடுத்தார்.
"அவள என்ன கேட்கணுமோ அத நா கேட்டுக்குறேன். நீ ஃபர்ஸ்ட் அங்கேயிருந்து கிளம்பு"
"என்ன நீ என்னடா விரட்டுறது? இது நிலன் வீடு. அவன் சொல்லட்டும். நீ சொல்லாத. ஆக்கமத்த வேலை பாக்றவன்லாம் என்னைய பேசக் கூடாது"
"நா என்னத்த பாத்தத நீ பாத்த? சும்மா என் வாய கிண்டாத. உன் பேச்செல்லாம் என் மாமியாரும் மச்சானும் கேட்டுகிட்டு இருந்தா பொழப்ப பாக்க வேணாம்? அப்பா எங்க அவர்ட்ட குடு நீ" என்றான் அதட்டலான குரலில். அந்த குரலுக்கு பயந்து அருகில் நின்ற இரு பெண்களும் ஹரிணியை அழைத்துக் கொண்டு நீந்த நகர்ந்திருந்தனர்.
"உன் பொண்டாட்டி விவாகரத்து கேட்ருக்கா ஏன்னு நீ கேட்டா தான் பதில் சொல்லுவாளாம். நீ சொல்லி தான் நாங்க தெரிஞ்சுக்கணுமாம். இப்பவே நீ கேட்டு சொல்ற" என்றார் அவரும் சத்தமாக.
கௌதமி கிருத்தியோடு அவர்கள் அறை சென்றுவிட, நிலன், காந்திமதி, விஸ்வநாதர் மூவரும் அவர்கள் சண்டையை வேடிக்கைப் பார்த்தனர்.
"மெதுவா பேசேன்டி" என்றார் விஸ்வநாதர்.
"சும்மா இருங்க நீங்களும் கேட்க மாட்டீங்க என்னையும் கேட்க கூடாதுன்னா எப்புடி?" என்றுவிட்டு மீண்டும் அவனிடம், "பதில் சொல்லு நேத்ரா?" என்றார் பிடியை விடாமல்.
"இப்படியே தண்ணிக்குள்ள நின்னு கேட்டு சொல்லணுமா உனக்கு? நா அவகிட்ட தனியா பேசிக்கிறேன். நீங்க யாரும் இத பிள்ளைங்க வரைக் கொண்டு போகக் கூடாது. சோ அவகிட்ட இதப்பத்தி பேசவும் கூடாது" என்றவன், அங்கு மகளிடம், "ஹரிணி கீப் ஸ்விம்மிங்" என குதித்து மேலேறி உடைமாற்றும் அறை வந்தான்.
அனைத்தும் காணொளி அழைப்பில் தான். உடை மாற்றும் அறைக்குள் தானாகவே கேமரா அணைந்திருந்தது.
"இங்க ஊரே கேளு நாடே கேளுன்னு உங்க பொழப்பு நாறுது. நாஞ்சொல்லி தான் உன் பிள்ளைகளுக்கு தெரிய போகுதாக்கும். ஆனா உன் பொண்டாட்டி கூடுதல் விவரம்ன்னு எல்லாத்துலயும் கரெக்டா காட்டுவாடா. எவ்வளவு நேக்கா உன்னைய அந்தப் பக்கம் நாடு கடத்திட்டு, இந்தப் பக்கம் பிள்ளைகளுக்கும் பள்ளிக்கூடம் ஒரு மாசம் லீவு இதயும் கணக்கு பண்ணி நெட்டுல போட்டு விட்ருக்கா பாத்தியா?" என அங்கலாய்க்க,
"என் அக்காவ ஃப்ளோவ்ல பாராட்றீங்க அத்த" என்றான் சாதாரணமாக நிலன். அவனுக்கு நன்கு புரிந்தது, அக்காவிற்கும் அக்கா கணவனுக்கும் ஏதோ லடாய் தான், அதை ஈகோவில் ஊரைப் பேச விட்டு வேடிக்கை பார்க்கின்றனர் என்று. அதனால் மனநிலை இன்னுமே இலகுவாகிவிட்டிருந்தது. காந்திமதி மட்டுமே கப்சிப்பென்று அமர்ந்திருந்தார்.
"நிலா!" என்றான் குஹன்.
"சொல்லுங்க மாமா. இங்க இவ்வளவு பிரச்சினைலயும் அங்க குஜாலா தான் இருக்கீங்க போல?" முகம் தெரியாததால் தைரியமாகவே கேட்டான்.
"ஆமா பத்து வயசு பிள்ளையவும் கூடவே நிப்பாட்டிட்டு சரசம் பண்றேன். வரியா நீயும்?" என அவன் கடுகடுக்கவும், நிலன் பட்டென்று வாயை மூடி கொள்ள,
"பெத்த அம்மாவ பைக்ல பின்னாடி உக்கார வச்சுகிட்டே உன் அக்காவுக்கு மல்லிய பூ வாங்கி குடுத்தான்டா இவேன். பசப்புவான் நம்பாத" என்றார் விசாலாட்சி, என்றோ நடந்ததை இன்று நடந்தது போல கொதித்துக் கொண்டு.
"ம்மா!" என கத்திய குஹன், இதற்குள் டீஷர்டையும், ஷார்ட்ஸையும் மாற்றிக் கொண்டு வெளியே வந்தான்.
"அம்மா சும்மாலாம் வேணாம். இவ என்னத்துக்கு உன்ன டைவோர்ஸு பண்ணணும்னு சொன்னா இப்ப அத நீ எனக்கு சொல்லு, உனக்கு தெரியலனா அவகிட்டயே கேட்டு சொல்லு. நேத்து காலைல இருந்து எத்தன போனு வந்துட்டு தெரியுமா? அவங்களுக்குலாம் நா என்ன பதில சொல்லட்டும்?" என்றவர் திருப்பி காந்திமதியைத் திரையில் காட்டி, "இங்க பாரு உன் அம்மாஞ்சி மாமியார அழுறத தவிர ஒன்னுந்தெரியாத பொம்பளைய இன்னும் இன்னும் அழவிட்டு வேடிக்கைப் பாக்கா உன் பொண்டாட்டி"
"நீ இப்படியே பேசி பேசி தான் அவங்கள இன்னும் அழ வைக்கப் போற" என முறைக்க,
"ஆமா நாந்தான விவாகரத்து கேட்டுட்டு திரியிறேன்"
"அப்பா நா பொறக்கும் முன்ன உன்ன பண்ணிருந்திருக்கணும் தப்பு பண்ணிட்டாரு" என்றான் அவனும் கடுப்புடன்.
நிலனும் விஸ்வநாதரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொள்ள, அடுத்த வாய் தகராறுக்கு தயாரானார் விசாலாட்சி.
அதை அறிந்தவன், "நிலா!" என்றழைத்தான் மீண்டும்.
"சொல்லுங்க மாமா!"
"சித்து இங்க வரணும். நா அவகிட்ட பேசிப்பேன். இந்த விவாகரத்து ம_" என சொல்ல வந்தவன், மூச்சை இழுத்து விட்டு, "அந்த டேஷெல்லாம் பேச்சுக்கே இல்ல. நா இங்க இருந்து அவளுக்கு ப்ரஷர் குடுப்பேன். நீ அங்க இருந்து அவளக் கிளப்பி விடு" என்க, நிலன் தலையை ஆட்ட,
"அப்ப என்ன சண்டைன்னு எங்களுக்கு சொல்ல மாட்ட நீ?" என்றார் விசாலாட்சி.
"உனக்கு அவ விவாகரத்து பண்ணப் போறேன்னு சொன்னதுலாம் பிரச்சினை இல்லை. இவேன் என்ன பண்ணாம்னு அவ விவாகரத்து வர போயிருக்கான்னு உன் மண்டை குடைச்சலுக்கு ஆன்ஸர் தேடி வந்துருக்க அப்படிதான?" என குஹன் முறைத்ததில்.
"உன் பொண்டாட்டி யோக்கியமு தெரியும் உன் வவுசயும் தெரியும்டா. என் வாய அடைப்ப ஊர் வாய எப்படி அடைக்கன்னு பாக்கத் தான போறேன்" என இவர் நொடித்து கொள்கையில், உள்ளே வந்தாள் பௌர்ணமி.
"நோ நந்தினி. நம்ம ப்ளான் என்னவோ அதான். எனக்கு ரெஸ்ட் வேணும். நெக்ஸ்ட் வீக் நாம ரெண்டு படத்துக்கு காஸ்ட்யூம் மாடல் ரெடி பண்ணி குடுத்தாகணும். இதுக்கு இடைல முடிச்சு குடுத்தவங்களுக்காக இருக்க வேலைய விட்டுட்டு அங்க அலைய முடியாது. வேணும்னா இங்க இருந்தே ஹெல்ப் பண்ணலாம். ஓகேனா வரட்டும் இல்லனா போட்டும்" என அவள் பேசியது, இணைப்பில் இருந்த குஹநேத்திரனுக்கும் கேட்டது.