priya pandees
Moderator
அத்தியாயம் 5
கண்ணை இறுக மூடி, "ச்சை!" என காலை தரை அதிர உதைத்தாள் பௌர்ணமி.
'நா என்ன இறங்கிப் போகணுமாம் இப்போ?' என ஆத்திரமாக வந்தது அவளுக்கு. அனைத்திலும் அவள் செய்வதெல்லாம் அவளுக்கு சரியே, அவன் செய்வதில் அவளுக்கு பிடிக்காததெல்லாம் அவளின் பார்வையில் தவறானவையில் சேர்ந்துவிடும்.
அங்கு ஸ்காட்லாந்தில் இருந்தவனும் உதட்டில் உறைந்த சிரிப்புடன் காஃபியை பருகியவாறு அவளைத் தான் நினைத்துக் கொண்டிருந்தான்.
"இப்ப சொல்லிட்டு வச்சதுக்கு தனியா ஒரு டிவோர்ஸ் கேஸ் அப்ளை பண்ணாலும் பண்ணுவா" என நினைத்தவனின் உதட்டில் சிரிப்பு இன்னுமே விரிந்தது.
உண்மையில் இதுவரை பௌர்ணமி எதற்காகவும் எதையும் விட்டுக் கொடுத்ததோ, இறங்கி வந்ததோ இல்லை. அவனும் வரமாட்டான் தான். பெண் என்பதால் இவளோடது அகம்பாவமாகவும் ஆண் என்பதால் அவனோடது திமிராகவும் தெரியப்படுத்தப்படுகிறது அவ்வளவே. ஆனால் இருவரும் ஒரே தட்டு நாணயங்கள் போல இருக்கக் கூடியவர்கள் தான்.
நண்பர்களாக இருந்தவரை, அந்த ஒரே குணம் இருவருக்கும் சந்தோஷத்தை வாரி வழங்கியது, காதலர்கள் ஆன பிறகு கொஞ்சம் ஆட்டம் காண்பித்தாலும் ஈகோவினாலேயே திருமணம் வரைக் கொண்டு வந்திருந்தனர். திருமணத்திற்கு பிறகு தெரிந்தே இருவரும் இருவரையும் பரபரப்பாக வைத்துக்கொண்டனர்.
இதோ இப்போது தான் சலிப்பு வர, இளைப்பாற நினைக்கையில், முதலில் திரும்பிப் பார்த்த பௌர்ணமிக்கு எதிலோ பெரிதாக இடைவெளி விட்டுவிட்ட தோற்றம். அதை நிரப்பத் தெரியாமல் தான் பிரிவை பகிரங்கமாக கோரி விட்டு நிற்கிறாள்.
அவர்கள் திருமணத்தில் இணைந்தது கூட அப்படி ஒரு சூழ்நிலையில் தான்.
கல்லூரி முடிக்கும் வரை வீட்டில் அவர்கள் விஷயத்தை இருவருமே வெளியிடவில்லை. பௌர்ணமியை நோட்டம் விட்டு முதலில் கண்டு கொண்டவன் நிலன் தான். யோசிக்காமல் காந்திமதியிடம் போட்டும் கொடுத்திருக்க, "என்னடா சொல்ற? நெசமாவா? துடுக்கா பேசுவாளே இவகிட்டலாம் எவனும் வரமாட்டான்னு நெனச்சேனே. யாரா இருக்கும் நிலா? பயமா இருக்கே. நா சொன்னா கேட்க மாட்டா அப்பாவ விட்டு பேச சொல்லுவோமா? அப்பாவும் பயந்துருவாரோ? அவருக்கு ஏற்கனவே உடம்பு சரியில்ல தெரிஞ்சும் ஏன்டா இவ இப்படி பண்ணுதா? சென்னைல வேற இருக்கா எவனாவது ஆசையா பேசி ஏமாத்திட்டா?" அவர் புலம்பலில் இறங்கிவிட, நிலனுக்கு தான் அவர் நிறுத்தாமல் பேசியதில் மூச்சு வாங்கியது.
"ஏன்மா இப்புடி? முதல்ல தண்ணிய குடி. அக்காவலாம் யாரும் ஏமாத்த முடியாது. எதுக்கு லவ் பண்ற? எப்படி என் மேல லவ் வந்துச்சு? நா இப்படி சட்டையும் பேன்ட்டுமா தான் சுத்துவேன். வீட்டு வேலைலாம் செய்ய மாட்டேன். ஹெலிகாப்டர்ல வச்சு கல்யாணம் பண்ணணும்னு கேட்பேன்னு உன் பொண்ணு அடுக்குனதுல தெரிச்சு ஓடுனவங்க தான் அதிகம். இது அக்காவே தேர்ந்தெடுத்த ஆளு" என சிரித்தான்.
"நமக்கு தெரிஞ்ச பையனா நிலா? நம்ம குவாட்ரஸ்ல தான் இருக்காங்களா?" என்றவரிடம் கொஞ்சம் பயம் தெளிந்திருந்தது.
குவாட்ரஸில் உள்ளவர்கள் அனைவரும் அங்குள்ள அரசாங்க மருத்துவமனை சார்ந்த வேலையில் இருக்கக் கூடியவர்கள் தான். எல்லோருக்கும் எல்லோரையும் நன்கு பழக்கமே. யாரையும் குறை சொல்லி ஒதுக்கும் அளவில் எந்த குடும்பமும் இல்லை. அப்போது பௌர்ணமி இருபதில் இருக்க இன்னும் இரண்டு மூன்று வருடத்தில் எப்படியும் திருமணம் முடிக்க வேண்டும் தான். அது குவார்ட்ரஸ் குள்ளேயே இருக்கும் குடும்பம் என்றால் இன்னும் வசதி தான். பௌர்ணமி அப்பாவிற்கும் அடுத்து பனிரெண்டு வருட சர்வீஸ் இருந்ததால் அவர் கணக்கு அப்படி வேகமாக இருந்தது.
"அம்மா!" என அவர் தோளில் அடித்தவன், "என்ன கனவா?" என்றான் முறைத்து.
"இங்கனனா பையன பத்தி அப்பாட்ட சொல்லி ஈசியா விசாரிச்சுடலாம்லடா. ஆனா பையன் வேலை பாக்கானா இல்லையா?"
"உன்னையலாம் வச்சுகிட்டு. ஏம்மா இப்புடி இருக்க நீ?"
"ஏன்டா?"
அவரின் கேள்வியில் தலையை அசைத்துக் கொண்டவன், "குஹநேத்திரன். விசாலாட்சி அத்த பையன். நம்ம அக்காவோட நெருங்கிய தோஸ்த்" அவன் சொன்ன நொடி துள்ளி தான் குதித்தார், காந்திமதிக்கு அதில் அவ்வளவு சந்தோஷம்.
அடுத்த நொடி கணவரிடமும் சொல்லிவிட, அவர் விஸ்வநாதரிடம் பேச, விஸ்வநாதர் விசாலாட்சியிடம் கூறிவிட, வேப்பிலை இல்லாமல் சாமி ஆடிவிட்டார் அவர். அவருக்கு காந்திமதி, நிலன், அவன் அப்பா என அவர்கள் குடும்பத்து சம்மந்தத்தில் முழு திருப்தி தான். சொல்ல போனால் காந்திமதியை அவருக்கு அவ்வளவு பிடிக்கும். என்ன சொன்னாலும், 'அப்படியாக்கா?' என உடனே நம்பிவிடும் அப்புரானி என்ற எண்ணமும் கரிசனையும் அதிகம் உண்டு.
ஆனால் இருவரின் சேர்க்கை மட்டும் ஆகாது அவருக்கு, அந்த இருவர் அவர் மகனும், காந்திமதி மகளும் தான். இருவரும் நண்டு, சிண்டு வயதிலேயே அவர் பேச்சைக் கேட்கக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தவர்கள்.
பௌர்ணமியின் இரண்டரை வயதில் அவளுக்கு அடிக்கடி வயிற்றுவலி, வாய்ப்புண், காய்ச்சல் என வந்து அவதிப்பட்டுக் கொண்டிருந்த சமயத்தில் ஒருநாள், காந்திமதி ரெண்டு அடிபோட்டு அன்று பௌர்ணமியின் பல்லை விளக்கிவிட்டுவிட்டார்.
"எங்கம்மா தான் உனக்கு வாய் நாறுதுன்னு பல்லு விளக்கி பழக்கிவிடுன்னு உங்கம்மாட்ட சொன்னாங்க. அதான் உங்கம்மா உன்ன அடிச்சுட்டாங்க. உனக்கு பல்லு எல்லாம் வந்துருச்சுல்ல இனி டெய்லி ப்ரஷ் பண்ணணும். ஜங்கிள் மின்ட்ல யானையும் குரங்கும் என்ன பல்லா விளக்குது? ஆனா நம்மள மட்டும் பண்ண சொல்றாங்க. எங்கம்மா என்னைய இப்படிதான் பண்ணாங்க இப்ப உனக்கும் பழக்க சொல்லிட்டாங்க. இனி காலைலயும் நைட்டும் பல்லு விளக்கணும் இம்சை" என குஹன் சொல்லியிருக்க, அன்று ஆரம்பித்தது மாமியார் மருமகள் பனிப்போர்.
அன்றே குட்டிக் குண்டுக் கண்ணைக் கொண்டு அவரை முறைத்து நின்றவளை, "என்னடி? இந்த முறைக்குற வேலைலாம் என்ட்ட வேணாம். கண்ணுல மிளகாய வச்சு அரக்கிவிட்ருவேன். ஓடுடி உங்க வீட்டுக்கு" என அவரும் மிரட்டியிருக்க, அது அவள் மனதில் பதிந்து பார்க்கும் போதெல்லாம் இவள் அவரை முறைக்க அவர் பதிலுக்கு இவளை முறைக்க என தான் நாளும் பொழுதும் கழிந்தது.
'சும்மா சாப்பிட மாட்டேன்னு அவ அழுதா, கூட நீயும் உட்கார்ந்து அழுவியா? முதுகில ரெண்டு போட்டு திண்ணுன்னு திணிக்க வேணாம்?' என அவளிடம் துவங்கி, 'உன்னையே ஊர் சுத்த போகாதன்னு சொல்லிட்ருக்கேன் நீ அந்தக் குட்டிப் பிசாசையும் கூடவே இழுத்துட்டுத் திரியித' என அவனையும் வைத்து செய்ததில் குஹனும் பௌர்ணமியும் நெருங்கியிருக்க, அது இவருக்கு இன்னும் தலைவலியானது.
அவர்கள் இருவரும் சேர்ந்தாலே வீட்டில் உள்ளவர்களுக்கு செவிப்பறை கிழிந்துவிடும், கத்தி கத்தி சண்டை போடுவது போல் அடித்துக் கொள்வது, ஆளுக்கொரு சேரை இழுத்துக் கொண்டே திரிவது, டப்பாவும் டின்னுமாக ஆளுக்கொன்றைக் குச்சியோடு எடுத்துக் கொண்டு டம் டம் டம்டமரம் என அடித்து தெருவையே அலறவிடுவது, அடுத்த வீடு எதிர்த்த வீடு என ஏறி குவார்ட்ஸ் தெருவில் இருக்கும் மரங்களில் மாங்காய் பறிக்கிறேன், தேங்காய் பறிக்கிறேன் என கீழே விழுந்து கையையும் காலையும் உடைத்துக் கொள்வது, இவ்வாறு சேட்டைகள் அதிகமோ அதிகம்.
அதில், "வீட்ல இருந்து உசுர வாங்காம வெளில போய் தொலைங்கடா" என்றதில்,
'சற்றுத் தூரத்தில் இருக்கும் காட்டுக்கு சைக்கிளில் சென்று காக்கா முட்டையைத் தூக்கி அதனிடம் கொட்டு வாங்கி வருவது, புறா, நாய், கோழிக்குஞ்சு என எதையாவது பிடித்துக்கொண்டு வந்து நடுவீட்டில் விட்டு வளர்க்கப் போகிறோம் என அழிச்சாட்டியம் செய்வது, கிணற்றில் நீச்சல் பழக சொல்லாமல் கொள்ளாமல் சென்று விசாலாட்சியை ஊரைச் சுற்றித் தேடவிடுவது, எவனிடமாவது சண்டையிட்டு ரத்தகளறியாகி வருவது என நாளுக்கு நாள் விளையாட்டுத்தனமும், சேட்டையும் அதிகரிக்க, விசாலாட்சிக்கு ரத்தக் கொதிப்பே வந்திருந்தது.
"இனி இவங்கள சமாளிக்க முடியாது. இவங்க ரெண்டு பேரும் திருந்தணும்னா ரெண்டு பேரும் இனி தனி தனியா தான் இருக்கணும்" என அவர் பேச்சு காந்திமதிக்குமே நியாயமாகப் பட்டது. பெண்கள் இருவரும் தானே இதில் பெரிதும் பாதிக்கப்பட்டனர். ஆண்களுக்கு அது சாதாரண சிறுபிள்ளைகள் சேட்டை, ஆனால் பெண்களுக்கு அது தினசரி தலைவலியாகிற்றே!
அதிலும் பௌர்ணமி, பெண் பிள்ளை இப்படி கையையும் காலையும் உடைத்துக் கொண்டு வந்தால்? காந்திமதிக்கு விசாலாட்சியைப் போல தைரியமும் இல்லாதவர் என்பதால் அழுது மாளமுடியாது போக, விசாலாட்சி பக்கம் நின்று விட்டார். மொத்தத்தில் அன்று விசாலாட்சி பேச்சிற்கு பெற்றவர்கள் நால்வருமாக முடிவிற்கு வந்திருந்தனர்.
அப்படி வாங்கியது தான் விஸ்வநாதரின் மாற்றலும். அது கூட, "நா எங்க போனாலும் புது இடம்னாலும் சமாளிப்பேன். நீ இப்படி சிணுங்கிட்டு தான் நிப்ப. முதல்ல இப்படி அழுறத நிப்பாட்டிட்டு அவள நாலு போட்டு பொம்பள பிள்ளையா வளர்க்க பாரு. வளர வளர தான்தோன்றியா ஆம்பளத் தனமா அவ வளர்ந்தாலும் பாக்றவனுக்கு பொம்பள புள்ளையா தான் தெரிவா. ஜாக்கிரதை" என்றுவிட்டு தான் கிளம்பியிருந்தார்.
மூன்று வருடங்களுக்குப் பிறகு இருவரும் மீண்டும் சந்தித்துக் கொண்டது தெரிந்தாலும், பெற்றவர்கள் கவனத்தில் அது பதியவில்லை. பௌர்ணமி குடும்பம், பள்ளிப்படிப்பு எல்லாம் சேலத்தில் இருக்க, குஹன் குடும்பம் கோயம்புத்தூரில் இருக்க, அவன் பள்ளிப்படிப்பை முடித்துக் கொண்டு சென்னை சென்றுவிட்டிருந்தான். எப்போதாவது கோயம்புத்தூர் வரும்போது மட்டுமே சேலம் வந்து இவளைப் பள்ளியில் பார்த்து எதையாவது பரிசாக கொடுத்துச் செல்வது மட்டுமே அவர்கள் காதலாக இருந்தது.
அப்படிப் பார்த்துக் கொள்ளும் பொழுதுகளில் கூட, 'நான் இதை தான் செய்ய வேண்டும், இதையெல்லாம் செய்யக் கூடாது என எதையும் என்னிடம் நீ எதிர்பார்க்க கூடாது. உன்னிடம் நான் எதிர்பார்க்க மாட்டேன்' என்ற அளவில் வெளிப்படையாக ஒப்பந்தம் இடாமலே ஒரு புரிதலான ஒப்பந்தத்தில் இருந்த காதலர்கள் அவர்கள்.
அடுத்ததாக பௌர்ணமியும் கல்லூரிக்கென்று சென்னை கிளம்பிவிட, அங்கு அவன் உதவி இயக்குனராக பணியில் சேர்ந்திருக்க, அப்படி தான் அவர்கள் காதல் மேலும் வளர்ந்தது.
இருவரும் எப்போதாவது சந்தித்துக் கொள்வது, அவன் அவனது வேலை பற்றி அதிகம் பேசுவதும், அவனுக்குப் பிடித்ததை வாங்கி உண்பதுமாக இருப்பான், இவள் இவளின் கல்லூரி கதைகளும், அவளின் கனவு ஆசைகளையும், கூறுவதோடு அவளுக்கு பிடித்ததை வாங்கி உண்பாள், மேற்கத்திய சிறிய அணைப்புடன் விடைபெற்றுக் கொள்வார்கள். அதுதான் அவர்களின் சந்திப்புகளில் பெரும்பாலும் நடக்கும்.
அப்படி அவள் கல்லூரி இறுதி ஆண்டில் இருந்தபோது ஒருநாள், அவளாக அவனிடம் கேட்ட பொருள் தான் அந்த 'மல்லிகைப்பூ'.
"இன்னைக்கு நா டிசைன் பண்ண காஸ்ட்யூம்க்கு மாடலா நானே நிக்க போறேன். டிசைனர் லெஹெங்கா ஹாஃப் சேரி. பூவும் வச்சா நல்லாருக்கும். வாங்கிட்டு வர முடியுமா? எனக்கு டைமில்ல. உங்களுக்கும் இல்லனா சொல்லிடுங்க, நா வேற ஹேர்ஸ்டைல் பண்ணிப்பேன்" என்றிருந்தாள்.
"அம்மாவ பிக்கப் பண்ண ஸ்டேஷன் தான் போறேன். வர்ற வழில வாங்கிட்டு வரேன். நீ கேட்ல நில்லு" என்றிருந்தான். அப்போதும் அவளுக்கு குட்டை முடி தான். ஆனால் அதில் முன் இரண்டு முடிகளைவிட்டு பின்னால் ப்ளௌஸ் டிசைனும் தெரியும்படி முடியைக் கொண்டையாக கட்டி நின்றிருந்தவளை, திரும்பிப் பார்க்காமல் கடந்து போனோர் இல்லை.
குஹநேத்திரனின் பார்வையை அன்று நிச்சயம் கொஞ்சமாக உள்ளூர எதிர்பார்த்து தான் நின்றாள். வந்தவனும், தூரத்தில் வரும்போதே புருவத்தை உயர்த்தி மெச்சும் பார்வை தான் பார்த்திருந்தான். அவளது வேலைப்பாடுகளைத் தாண்டி அன்று அவளை ரசித்தது அவன் கண்கள்.
உதட்டை வளைத்து, அவனது பெருமையான தோள் குழுக்களில் முதல் முறையாக லேசாக வெட்கப்பட்டு குனிந்திருந்தாள் பௌர்ணமி.
"இங்கேயா படிக்குற நீ?" என்ற விசாலாட்சியின் கேள்வியில் பட்டென்று சுதாரித்து, "ஆமா ஆன்ட்டி!" என்றிருக்க,
"கட்டுற சேலைய இடுப்பெலும்பு தெரியாம கட்டுனா என்ன? இன்னும் சின்ன பிள்ளையாட்டம் தான் சுத்தி வரியா?" என்றார் அவர் அவளை மேலிருந்து கீழ் அளந்து. அந்த உடையில் அவள் இருபக்க இடுப்பும், பின்புற முதுகும் விரிய தெரிந்தது தான் ஆனால் கவர்ச்சியாக தெரியும்படி இல்லை. பார்த்ததும் பெண்களை கவரும்படி நேர்த்தியாக தான் இருந்தது.
"இதுக்கு பேரே லெஹெங்கா, இதோட மாடல் இதான். இத இப்படி போட்டா தான் அழகு" என இவளும் பதில் சொல்ல,
"சூப்பர் லுக்ல இருக்கடி சிமி. உனக்கு தான் இன்னைக்கு ஃபர்ஸ்ட் ப்ரைஸ். பூ வாங்கி தந்த எனக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ் சொல்லணும் நீ" என அவன் சொல்ல, சிரித்தபடி தலை அசைத்தவள், எட்டி வண்டியில் அமர்ந்திருந்த அவனை கழுத்தோடு அணைத்து, "தேங்க்ஸ் குஹன்!" என விடுவித்து நகர்ந்திருக்க, பின்னால் அமர்ந்திருந்த விசாலாட்சி, 'பே!' என இருவரையும் பார்த்திருந்தார்.
"சரி ஈவ்னிங் கால் பண்றேன். ரிசல்ட் சொல்லு" என அவன் கையசைத்துக் கிளம்பியிருக்க,
"ஏலேய் உன் வயசென்ன அந்த புள்ள வயசென்ன? இன்னும் ரெண்டு வயசுல பாத்தவுகளாட்டம் நடுரோட்ல நின்னு கட்டிகிட்ருக்கீக? அறிவிருக்கா உனக்கு?"
"இதெல்லாம் இங்க ஈசிமா. அதும் சினி ஃபீல்டுல ரொம்ப ஈசியானது. நீ பெருசா ஷாக் ஆகிக்காத"
"கிரகத்துக்கு நீ எல்லா பிள்ளைகளையும் இப்படித்தான் கட்டிகிட்டு திரியிதியா? அதுக்குத்தேன் அந்த வேலையத் தேடித் தேடிப் போறியோ?" என அவன் பின்னந்தலையில் அடிக்க,
"பேசாம வா. இல்ல திரும்பக் கொண்டு ஸ்டேஷன்லயே விட்ருவேன்" என அவனும் சண்டையிட, அன்று பிரச்சினை சினிமாவும் பெண்களும் என திரும்பியிருந்ததில் பௌர்ணமி பின் சென்றிருந்தாள்.
அதன்பின், அவள் அங்கேயே மேற்படிப்பில் சேர, அன்று தான் நிலன் மூலம் விஷயம் தெரிய வர வந்திருந்தது. அங்குசுற்றி இங்குசுற்றி மறுபடியும் அது தன் தலையிலேயே வந்து விடிந்தது போல் இருந்தது விசாலாட்சிக்கு.
"ரெண்டு வாலில்லாத மந்திய சேர்த்து வச்சா வீடு வீடா இருக்குமா? ரெண்டும் சேர்ந்து காடா தான் மாத்தி வைக்குங்க. எவ்வளவு நாளா நடக்குதுன்னு தெரியல. அன்னைக்கு பூ வாங்கி என் முன்ன தான் குடுத்தான், அவ இவன உரிமையா கட்டி வேற புடிச்சா. அப்பவே எனக்கு சந்தேகம் தான். ஹாஸ்டல்ல இருக்காம்மா காலேஜ் ஃபங்ஷனுக்கு பூ வேணும்னு கேட்டான்னு அடிச்சு விட்டான் இவன். நிறைய பிள்ளைக சேலை கட்டி பூ வச்சு நிக்கவும் நானும் நம்பி தொலைச்சுட்டேன். ஒன்னாவே திரிஞ்சதுக தானே அதனால் கட்டிகிடுதுக போல என்னத்த இதுகலாம் லவ்வு பண்ணிட போகுதுன்னு நினைச்சதுக்குத்தான் இத பண்ணிப் போட்டாய்ங்களாட்டமிருக்கு. அதுங்களா வந்து சொல்லுத வர யாரும் மூச்சுவிட கூடாது. பாப்போம் நம்மட்ட வந்து கேட்குறாய்ங்களான்னு" என தான் அவர்கள் திருமணப் பேச்சு ஆரம்பிக்கவே செய்திருந்தது.
அவனும் முதல் படத்தை சொந்தமாக இயக்கிவிட, அவளும் ஒரு உடை வடிவமைப்பாளரிடம் வேலைக்கு சேர்ந்துவிட, இருவீட்டினருக்கும் அவனே விஷயத்தை சொல்ல, அதில் பௌர்ணமிக்கு கோவம்.
"உங்க வீட்ல மட்டுந்தான் நீங்க பேசியிருக்கணும். என் வீட்ல கேட்க எனக்கு தைரியம் இருக்கு. உங்கள கேளுங்கன்னு நா சொல்லவே இல்ல. எதுக்கு எனக்கு முன்ன என்ட்ட கூட சொல்லாம நீங்க பேசுனீங்க?" என சண்டையிட,
"பொறுமையா பேசிட்ருக்கலாம் டைமில்ல. அடுத்தடுத்து வேலை இருக்கு தெரியும்ல? இப்ப என்ன நா கேட்டா என்ன நீ கேட்டா என்ன? வேலை ஈசியா முடியுதா அத தான் பார்க்கணும்"
"நா ஒன்னும் தப்பு செய்யல. செய்ற லவ்ல தெளிவா தான் இருக்கேன். அத சொல்ற தைரியமும் என்கிட்ட இருக்கு" என்றுவிட,
"சரி அப்ப மேரேஜ் வர எல்லாத்தையும் நீயே லீட் பண்ணிடு. நா என் வொர்க்க பாக்றேன். மேரேஜ்ல மீட் பண்ணுவோம்" என சென்றுவிட்டான்.
அவளும் சலைக்கவில்லை, அனைத்தையும் சிறப்பாக செய்தாள். அவனுக்கான உடையை கூட அவளே தயார் செய்து அவனுக்குக் காட்டி, சம்மதம் கேட்டாள்.
"உன் வொர்க்ல எனக்கு டவுட்டே கிடையாது சித்து. பெர்ஃபெக்ட்டா இருக்கு" என்றான் உண்மையிலேயே, அதில் அந்த சந்தோஷத்தோடே மணமேடை ஏறியிருந்தனர் அன்று.
மற்ற எல்லோருக்கும் சந்தோஷம் என்றாலும், "இதுக ரெண்டும் என்னன்னுடா கல்யாணம்லாம் பண்ணி ஒன்னா குடித்தனம் நடத்துங்க. எனக்கு நம்பிக்கையே இல்ல" என விசாலாட்சி தான் நிலனிடம் புலம்பியவாறு அட்சதைப் போட்ட ஒரே ஆள்.
இங்கு மணியைத் திரும்பிப் பார்த்தாள் பௌர்ணமி. அது பனிரெண்டை நெருங்கிக் கொண்டிருந்தது. ஏற்காடு கிளம்பியிருக்க வேண்டியது, நிலன் தான், "நேத்து தானே ட்ராவல் பண்ணி வந்துருக்க. இன்னைக்கு நைட் ரெஸ்ட் எடுத்துட்டு நாளைக்குப் போ" என்றிருந்தான். ஆனால் இப்போது பார்த்தால் இது அவன் மாமனின் உத்தரவு என தோன்றியது அவளுக்கு.
இப்போது இப்படியே கிளம்பினால் தான் காலை ஆறு மணிக்குள் சென்னையை எட்ட முடியும். வீட்டிற்கு சென்று அனைத்தையும் பேக் செய்து இரண்டு மூன்று மணிநேரத்திற்கு முன்பே விமான நிலையத்தில் வேறு இருக்க வேண்டும், என அனைத்தையும் யோசித்தவளுக்கு தலையே சுற்றியது.
'அப்ப நீ போறதா முடிவு பண்ணிட்ட சித்து? நேர்ல போகாத போனன்னா பேசியே கவுத்துடுவான் உன் புருஷன்' என்றது மனசாட்சி. அது இன்னும் எரிச்சல் தர, தலையைத் தாங்கி அமர்ந்துவிட்டாள்.
மறுபடியும் அழைப்பு, அவன் தானோ என கட்டிலில் அருகில் கிடந்த ஃபோனை திரும்பிப் பார்த்தாள். அதில் அஞ்சா நம்பியின் பெயர் வர, சலிப்புடன் அதை ஏற்றாள்.
கண்ணை இறுக மூடி, "ச்சை!" என காலை தரை அதிர உதைத்தாள் பௌர்ணமி.
'நா என்ன இறங்கிப் போகணுமாம் இப்போ?' என ஆத்திரமாக வந்தது அவளுக்கு. அனைத்திலும் அவள் செய்வதெல்லாம் அவளுக்கு சரியே, அவன் செய்வதில் அவளுக்கு பிடிக்காததெல்லாம் அவளின் பார்வையில் தவறானவையில் சேர்ந்துவிடும்.
அங்கு ஸ்காட்லாந்தில் இருந்தவனும் உதட்டில் உறைந்த சிரிப்புடன் காஃபியை பருகியவாறு அவளைத் தான் நினைத்துக் கொண்டிருந்தான்.
"இப்ப சொல்லிட்டு வச்சதுக்கு தனியா ஒரு டிவோர்ஸ் கேஸ் அப்ளை பண்ணாலும் பண்ணுவா" என நினைத்தவனின் உதட்டில் சிரிப்பு இன்னுமே விரிந்தது.
உண்மையில் இதுவரை பௌர்ணமி எதற்காகவும் எதையும் விட்டுக் கொடுத்ததோ, இறங்கி வந்ததோ இல்லை. அவனும் வரமாட்டான் தான். பெண் என்பதால் இவளோடது அகம்பாவமாகவும் ஆண் என்பதால் அவனோடது திமிராகவும் தெரியப்படுத்தப்படுகிறது அவ்வளவே. ஆனால் இருவரும் ஒரே தட்டு நாணயங்கள் போல இருக்கக் கூடியவர்கள் தான்.
நண்பர்களாக இருந்தவரை, அந்த ஒரே குணம் இருவருக்கும் சந்தோஷத்தை வாரி வழங்கியது, காதலர்கள் ஆன பிறகு கொஞ்சம் ஆட்டம் காண்பித்தாலும் ஈகோவினாலேயே திருமணம் வரைக் கொண்டு வந்திருந்தனர். திருமணத்திற்கு பிறகு தெரிந்தே இருவரும் இருவரையும் பரபரப்பாக வைத்துக்கொண்டனர்.
இதோ இப்போது தான் சலிப்பு வர, இளைப்பாற நினைக்கையில், முதலில் திரும்பிப் பார்த்த பௌர்ணமிக்கு எதிலோ பெரிதாக இடைவெளி விட்டுவிட்ட தோற்றம். அதை நிரப்பத் தெரியாமல் தான் பிரிவை பகிரங்கமாக கோரி விட்டு நிற்கிறாள்.
அவர்கள் திருமணத்தில் இணைந்தது கூட அப்படி ஒரு சூழ்நிலையில் தான்.
கல்லூரி முடிக்கும் வரை வீட்டில் அவர்கள் விஷயத்தை இருவருமே வெளியிடவில்லை. பௌர்ணமியை நோட்டம் விட்டு முதலில் கண்டு கொண்டவன் நிலன் தான். யோசிக்காமல் காந்திமதியிடம் போட்டும் கொடுத்திருக்க, "என்னடா சொல்ற? நெசமாவா? துடுக்கா பேசுவாளே இவகிட்டலாம் எவனும் வரமாட்டான்னு நெனச்சேனே. யாரா இருக்கும் நிலா? பயமா இருக்கே. நா சொன்னா கேட்க மாட்டா அப்பாவ விட்டு பேச சொல்லுவோமா? அப்பாவும் பயந்துருவாரோ? அவருக்கு ஏற்கனவே உடம்பு சரியில்ல தெரிஞ்சும் ஏன்டா இவ இப்படி பண்ணுதா? சென்னைல வேற இருக்கா எவனாவது ஆசையா பேசி ஏமாத்திட்டா?" அவர் புலம்பலில் இறங்கிவிட, நிலனுக்கு தான் அவர் நிறுத்தாமல் பேசியதில் மூச்சு வாங்கியது.
"ஏன்மா இப்புடி? முதல்ல தண்ணிய குடி. அக்காவலாம் யாரும் ஏமாத்த முடியாது. எதுக்கு லவ் பண்ற? எப்படி என் மேல லவ் வந்துச்சு? நா இப்படி சட்டையும் பேன்ட்டுமா தான் சுத்துவேன். வீட்டு வேலைலாம் செய்ய மாட்டேன். ஹெலிகாப்டர்ல வச்சு கல்யாணம் பண்ணணும்னு கேட்பேன்னு உன் பொண்ணு அடுக்குனதுல தெரிச்சு ஓடுனவங்க தான் அதிகம். இது அக்காவே தேர்ந்தெடுத்த ஆளு" என சிரித்தான்.
"நமக்கு தெரிஞ்ச பையனா நிலா? நம்ம குவாட்ரஸ்ல தான் இருக்காங்களா?" என்றவரிடம் கொஞ்சம் பயம் தெளிந்திருந்தது.
குவாட்ரஸில் உள்ளவர்கள் அனைவரும் அங்குள்ள அரசாங்க மருத்துவமனை சார்ந்த வேலையில் இருக்கக் கூடியவர்கள் தான். எல்லோருக்கும் எல்லோரையும் நன்கு பழக்கமே. யாரையும் குறை சொல்லி ஒதுக்கும் அளவில் எந்த குடும்பமும் இல்லை. அப்போது பௌர்ணமி இருபதில் இருக்க இன்னும் இரண்டு மூன்று வருடத்தில் எப்படியும் திருமணம் முடிக்க வேண்டும் தான். அது குவார்ட்ரஸ் குள்ளேயே இருக்கும் குடும்பம் என்றால் இன்னும் வசதி தான். பௌர்ணமி அப்பாவிற்கும் அடுத்து பனிரெண்டு வருட சர்வீஸ் இருந்ததால் அவர் கணக்கு அப்படி வேகமாக இருந்தது.
"அம்மா!" என அவர் தோளில் அடித்தவன், "என்ன கனவா?" என்றான் முறைத்து.
"இங்கனனா பையன பத்தி அப்பாட்ட சொல்லி ஈசியா விசாரிச்சுடலாம்லடா. ஆனா பையன் வேலை பாக்கானா இல்லையா?"
"உன்னையலாம் வச்சுகிட்டு. ஏம்மா இப்புடி இருக்க நீ?"
"ஏன்டா?"
அவரின் கேள்வியில் தலையை அசைத்துக் கொண்டவன், "குஹநேத்திரன். விசாலாட்சி அத்த பையன். நம்ம அக்காவோட நெருங்கிய தோஸ்த்" அவன் சொன்ன நொடி துள்ளி தான் குதித்தார், காந்திமதிக்கு அதில் அவ்வளவு சந்தோஷம்.
அடுத்த நொடி கணவரிடமும் சொல்லிவிட, அவர் விஸ்வநாதரிடம் பேச, விஸ்வநாதர் விசாலாட்சியிடம் கூறிவிட, வேப்பிலை இல்லாமல் சாமி ஆடிவிட்டார் அவர். அவருக்கு காந்திமதி, நிலன், அவன் அப்பா என அவர்கள் குடும்பத்து சம்மந்தத்தில் முழு திருப்தி தான். சொல்ல போனால் காந்திமதியை அவருக்கு அவ்வளவு பிடிக்கும். என்ன சொன்னாலும், 'அப்படியாக்கா?' என உடனே நம்பிவிடும் அப்புரானி என்ற எண்ணமும் கரிசனையும் அதிகம் உண்டு.
ஆனால் இருவரின் சேர்க்கை மட்டும் ஆகாது அவருக்கு, அந்த இருவர் அவர் மகனும், காந்திமதி மகளும் தான். இருவரும் நண்டு, சிண்டு வயதிலேயே அவர் பேச்சைக் கேட்கக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தவர்கள்.
பௌர்ணமியின் இரண்டரை வயதில் அவளுக்கு அடிக்கடி வயிற்றுவலி, வாய்ப்புண், காய்ச்சல் என வந்து அவதிப்பட்டுக் கொண்டிருந்த சமயத்தில் ஒருநாள், காந்திமதி ரெண்டு அடிபோட்டு அன்று பௌர்ணமியின் பல்லை விளக்கிவிட்டுவிட்டார்.
"எங்கம்மா தான் உனக்கு வாய் நாறுதுன்னு பல்லு விளக்கி பழக்கிவிடுன்னு உங்கம்மாட்ட சொன்னாங்க. அதான் உங்கம்மா உன்ன அடிச்சுட்டாங்க. உனக்கு பல்லு எல்லாம் வந்துருச்சுல்ல இனி டெய்லி ப்ரஷ் பண்ணணும். ஜங்கிள் மின்ட்ல யானையும் குரங்கும் என்ன பல்லா விளக்குது? ஆனா நம்மள மட்டும் பண்ண சொல்றாங்க. எங்கம்மா என்னைய இப்படிதான் பண்ணாங்க இப்ப உனக்கும் பழக்க சொல்லிட்டாங்க. இனி காலைலயும் நைட்டும் பல்லு விளக்கணும் இம்சை" என குஹன் சொல்லியிருக்க, அன்று ஆரம்பித்தது மாமியார் மருமகள் பனிப்போர்.
அன்றே குட்டிக் குண்டுக் கண்ணைக் கொண்டு அவரை முறைத்து நின்றவளை, "என்னடி? இந்த முறைக்குற வேலைலாம் என்ட்ட வேணாம். கண்ணுல மிளகாய வச்சு அரக்கிவிட்ருவேன். ஓடுடி உங்க வீட்டுக்கு" என அவரும் மிரட்டியிருக்க, அது அவள் மனதில் பதிந்து பார்க்கும் போதெல்லாம் இவள் அவரை முறைக்க அவர் பதிலுக்கு இவளை முறைக்க என தான் நாளும் பொழுதும் கழிந்தது.
'சும்மா சாப்பிட மாட்டேன்னு அவ அழுதா, கூட நீயும் உட்கார்ந்து அழுவியா? முதுகில ரெண்டு போட்டு திண்ணுன்னு திணிக்க வேணாம்?' என அவளிடம் துவங்கி, 'உன்னையே ஊர் சுத்த போகாதன்னு சொல்லிட்ருக்கேன் நீ அந்தக் குட்டிப் பிசாசையும் கூடவே இழுத்துட்டுத் திரியித' என அவனையும் வைத்து செய்ததில் குஹனும் பௌர்ணமியும் நெருங்கியிருக்க, அது இவருக்கு இன்னும் தலைவலியானது.
அவர்கள் இருவரும் சேர்ந்தாலே வீட்டில் உள்ளவர்களுக்கு செவிப்பறை கிழிந்துவிடும், கத்தி கத்தி சண்டை போடுவது போல் அடித்துக் கொள்வது, ஆளுக்கொரு சேரை இழுத்துக் கொண்டே திரிவது, டப்பாவும் டின்னுமாக ஆளுக்கொன்றைக் குச்சியோடு எடுத்துக் கொண்டு டம் டம் டம்டமரம் என அடித்து தெருவையே அலறவிடுவது, அடுத்த வீடு எதிர்த்த வீடு என ஏறி குவார்ட்ஸ் தெருவில் இருக்கும் மரங்களில் மாங்காய் பறிக்கிறேன், தேங்காய் பறிக்கிறேன் என கீழே விழுந்து கையையும் காலையும் உடைத்துக் கொள்வது, இவ்வாறு சேட்டைகள் அதிகமோ அதிகம்.
அதில், "வீட்ல இருந்து உசுர வாங்காம வெளில போய் தொலைங்கடா" என்றதில்,
'சற்றுத் தூரத்தில் இருக்கும் காட்டுக்கு சைக்கிளில் சென்று காக்கா முட்டையைத் தூக்கி அதனிடம் கொட்டு வாங்கி வருவது, புறா, நாய், கோழிக்குஞ்சு என எதையாவது பிடித்துக்கொண்டு வந்து நடுவீட்டில் விட்டு வளர்க்கப் போகிறோம் என அழிச்சாட்டியம் செய்வது, கிணற்றில் நீச்சல் பழக சொல்லாமல் கொள்ளாமல் சென்று விசாலாட்சியை ஊரைச் சுற்றித் தேடவிடுவது, எவனிடமாவது சண்டையிட்டு ரத்தகளறியாகி வருவது என நாளுக்கு நாள் விளையாட்டுத்தனமும், சேட்டையும் அதிகரிக்க, விசாலாட்சிக்கு ரத்தக் கொதிப்பே வந்திருந்தது.
"இனி இவங்கள சமாளிக்க முடியாது. இவங்க ரெண்டு பேரும் திருந்தணும்னா ரெண்டு பேரும் இனி தனி தனியா தான் இருக்கணும்" என அவர் பேச்சு காந்திமதிக்குமே நியாயமாகப் பட்டது. பெண்கள் இருவரும் தானே இதில் பெரிதும் பாதிக்கப்பட்டனர். ஆண்களுக்கு அது சாதாரண சிறுபிள்ளைகள் சேட்டை, ஆனால் பெண்களுக்கு அது தினசரி தலைவலியாகிற்றே!
அதிலும் பௌர்ணமி, பெண் பிள்ளை இப்படி கையையும் காலையும் உடைத்துக் கொண்டு வந்தால்? காந்திமதிக்கு விசாலாட்சியைப் போல தைரியமும் இல்லாதவர் என்பதால் அழுது மாளமுடியாது போக, விசாலாட்சி பக்கம் நின்று விட்டார். மொத்தத்தில் அன்று விசாலாட்சி பேச்சிற்கு பெற்றவர்கள் நால்வருமாக முடிவிற்கு வந்திருந்தனர்.
அப்படி வாங்கியது தான் விஸ்வநாதரின் மாற்றலும். அது கூட, "நா எங்க போனாலும் புது இடம்னாலும் சமாளிப்பேன். நீ இப்படி சிணுங்கிட்டு தான் நிப்ப. முதல்ல இப்படி அழுறத நிப்பாட்டிட்டு அவள நாலு போட்டு பொம்பள பிள்ளையா வளர்க்க பாரு. வளர வளர தான்தோன்றியா ஆம்பளத் தனமா அவ வளர்ந்தாலும் பாக்றவனுக்கு பொம்பள புள்ளையா தான் தெரிவா. ஜாக்கிரதை" என்றுவிட்டு தான் கிளம்பியிருந்தார்.
மூன்று வருடங்களுக்குப் பிறகு இருவரும் மீண்டும் சந்தித்துக் கொண்டது தெரிந்தாலும், பெற்றவர்கள் கவனத்தில் அது பதியவில்லை. பௌர்ணமி குடும்பம், பள்ளிப்படிப்பு எல்லாம் சேலத்தில் இருக்க, குஹன் குடும்பம் கோயம்புத்தூரில் இருக்க, அவன் பள்ளிப்படிப்பை முடித்துக் கொண்டு சென்னை சென்றுவிட்டிருந்தான். எப்போதாவது கோயம்புத்தூர் வரும்போது மட்டுமே சேலம் வந்து இவளைப் பள்ளியில் பார்த்து எதையாவது பரிசாக கொடுத்துச் செல்வது மட்டுமே அவர்கள் காதலாக இருந்தது.
அப்படிப் பார்த்துக் கொள்ளும் பொழுதுகளில் கூட, 'நான் இதை தான் செய்ய வேண்டும், இதையெல்லாம் செய்யக் கூடாது என எதையும் என்னிடம் நீ எதிர்பார்க்க கூடாது. உன்னிடம் நான் எதிர்பார்க்க மாட்டேன்' என்ற அளவில் வெளிப்படையாக ஒப்பந்தம் இடாமலே ஒரு புரிதலான ஒப்பந்தத்தில் இருந்த காதலர்கள் அவர்கள்.
அடுத்ததாக பௌர்ணமியும் கல்லூரிக்கென்று சென்னை கிளம்பிவிட, அங்கு அவன் உதவி இயக்குனராக பணியில் சேர்ந்திருக்க, அப்படி தான் அவர்கள் காதல் மேலும் வளர்ந்தது.
இருவரும் எப்போதாவது சந்தித்துக் கொள்வது, அவன் அவனது வேலை பற்றி அதிகம் பேசுவதும், அவனுக்குப் பிடித்ததை வாங்கி உண்பதுமாக இருப்பான், இவள் இவளின் கல்லூரி கதைகளும், அவளின் கனவு ஆசைகளையும், கூறுவதோடு அவளுக்கு பிடித்ததை வாங்கி உண்பாள், மேற்கத்திய சிறிய அணைப்புடன் விடைபெற்றுக் கொள்வார்கள். அதுதான் அவர்களின் சந்திப்புகளில் பெரும்பாலும் நடக்கும்.
அப்படி அவள் கல்லூரி இறுதி ஆண்டில் இருந்தபோது ஒருநாள், அவளாக அவனிடம் கேட்ட பொருள் தான் அந்த 'மல்லிகைப்பூ'.
"இன்னைக்கு நா டிசைன் பண்ண காஸ்ட்யூம்க்கு மாடலா நானே நிக்க போறேன். டிசைனர் லெஹெங்கா ஹாஃப் சேரி. பூவும் வச்சா நல்லாருக்கும். வாங்கிட்டு வர முடியுமா? எனக்கு டைமில்ல. உங்களுக்கும் இல்லனா சொல்லிடுங்க, நா வேற ஹேர்ஸ்டைல் பண்ணிப்பேன்" என்றிருந்தாள்.
"அம்மாவ பிக்கப் பண்ண ஸ்டேஷன் தான் போறேன். வர்ற வழில வாங்கிட்டு வரேன். நீ கேட்ல நில்லு" என்றிருந்தான். அப்போதும் அவளுக்கு குட்டை முடி தான். ஆனால் அதில் முன் இரண்டு முடிகளைவிட்டு பின்னால் ப்ளௌஸ் டிசைனும் தெரியும்படி முடியைக் கொண்டையாக கட்டி நின்றிருந்தவளை, திரும்பிப் பார்க்காமல் கடந்து போனோர் இல்லை.
குஹநேத்திரனின் பார்வையை அன்று நிச்சயம் கொஞ்சமாக உள்ளூர எதிர்பார்த்து தான் நின்றாள். வந்தவனும், தூரத்தில் வரும்போதே புருவத்தை உயர்த்தி மெச்சும் பார்வை தான் பார்த்திருந்தான். அவளது வேலைப்பாடுகளைத் தாண்டி அன்று அவளை ரசித்தது அவன் கண்கள்.
உதட்டை வளைத்து, அவனது பெருமையான தோள் குழுக்களில் முதல் முறையாக லேசாக வெட்கப்பட்டு குனிந்திருந்தாள் பௌர்ணமி.
"இங்கேயா படிக்குற நீ?" என்ற விசாலாட்சியின் கேள்வியில் பட்டென்று சுதாரித்து, "ஆமா ஆன்ட்டி!" என்றிருக்க,
"கட்டுற சேலைய இடுப்பெலும்பு தெரியாம கட்டுனா என்ன? இன்னும் சின்ன பிள்ளையாட்டம் தான் சுத்தி வரியா?" என்றார் அவர் அவளை மேலிருந்து கீழ் அளந்து. அந்த உடையில் அவள் இருபக்க இடுப்பும், பின்புற முதுகும் விரிய தெரிந்தது தான் ஆனால் கவர்ச்சியாக தெரியும்படி இல்லை. பார்த்ததும் பெண்களை கவரும்படி நேர்த்தியாக தான் இருந்தது.
"இதுக்கு பேரே லெஹெங்கா, இதோட மாடல் இதான். இத இப்படி போட்டா தான் அழகு" என இவளும் பதில் சொல்ல,
"சூப்பர் லுக்ல இருக்கடி சிமி. உனக்கு தான் இன்னைக்கு ஃபர்ஸ்ட் ப்ரைஸ். பூ வாங்கி தந்த எனக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ் சொல்லணும் நீ" என அவன் சொல்ல, சிரித்தபடி தலை அசைத்தவள், எட்டி வண்டியில் அமர்ந்திருந்த அவனை கழுத்தோடு அணைத்து, "தேங்க்ஸ் குஹன்!" என விடுவித்து நகர்ந்திருக்க, பின்னால் அமர்ந்திருந்த விசாலாட்சி, 'பே!' என இருவரையும் பார்த்திருந்தார்.
"சரி ஈவ்னிங் கால் பண்றேன். ரிசல்ட் சொல்லு" என அவன் கையசைத்துக் கிளம்பியிருக்க,
"ஏலேய் உன் வயசென்ன அந்த புள்ள வயசென்ன? இன்னும் ரெண்டு வயசுல பாத்தவுகளாட்டம் நடுரோட்ல நின்னு கட்டிகிட்ருக்கீக? அறிவிருக்கா உனக்கு?"
"இதெல்லாம் இங்க ஈசிமா. அதும் சினி ஃபீல்டுல ரொம்ப ஈசியானது. நீ பெருசா ஷாக் ஆகிக்காத"
"கிரகத்துக்கு நீ எல்லா பிள்ளைகளையும் இப்படித்தான் கட்டிகிட்டு திரியிதியா? அதுக்குத்தேன் அந்த வேலையத் தேடித் தேடிப் போறியோ?" என அவன் பின்னந்தலையில் அடிக்க,
"பேசாம வா. இல்ல திரும்பக் கொண்டு ஸ்டேஷன்லயே விட்ருவேன்" என அவனும் சண்டையிட, அன்று பிரச்சினை சினிமாவும் பெண்களும் என திரும்பியிருந்ததில் பௌர்ணமி பின் சென்றிருந்தாள்.
அதன்பின், அவள் அங்கேயே மேற்படிப்பில் சேர, அன்று தான் நிலன் மூலம் விஷயம் தெரிய வர வந்திருந்தது. அங்குசுற்றி இங்குசுற்றி மறுபடியும் அது தன் தலையிலேயே வந்து விடிந்தது போல் இருந்தது விசாலாட்சிக்கு.
"ரெண்டு வாலில்லாத மந்திய சேர்த்து வச்சா வீடு வீடா இருக்குமா? ரெண்டும் சேர்ந்து காடா தான் மாத்தி வைக்குங்க. எவ்வளவு நாளா நடக்குதுன்னு தெரியல. அன்னைக்கு பூ வாங்கி என் முன்ன தான் குடுத்தான், அவ இவன உரிமையா கட்டி வேற புடிச்சா. அப்பவே எனக்கு சந்தேகம் தான். ஹாஸ்டல்ல இருக்காம்மா காலேஜ் ஃபங்ஷனுக்கு பூ வேணும்னு கேட்டான்னு அடிச்சு விட்டான் இவன். நிறைய பிள்ளைக சேலை கட்டி பூ வச்சு நிக்கவும் நானும் நம்பி தொலைச்சுட்டேன். ஒன்னாவே திரிஞ்சதுக தானே அதனால் கட்டிகிடுதுக போல என்னத்த இதுகலாம் லவ்வு பண்ணிட போகுதுன்னு நினைச்சதுக்குத்தான் இத பண்ணிப் போட்டாய்ங்களாட்டமிருக்கு. அதுங்களா வந்து சொல்லுத வர யாரும் மூச்சுவிட கூடாது. பாப்போம் நம்மட்ட வந்து கேட்குறாய்ங்களான்னு" என தான் அவர்கள் திருமணப் பேச்சு ஆரம்பிக்கவே செய்திருந்தது.
அவனும் முதல் படத்தை சொந்தமாக இயக்கிவிட, அவளும் ஒரு உடை வடிவமைப்பாளரிடம் வேலைக்கு சேர்ந்துவிட, இருவீட்டினருக்கும் அவனே விஷயத்தை சொல்ல, அதில் பௌர்ணமிக்கு கோவம்.
"உங்க வீட்ல மட்டுந்தான் நீங்க பேசியிருக்கணும். என் வீட்ல கேட்க எனக்கு தைரியம் இருக்கு. உங்கள கேளுங்கன்னு நா சொல்லவே இல்ல. எதுக்கு எனக்கு முன்ன என்ட்ட கூட சொல்லாம நீங்க பேசுனீங்க?" என சண்டையிட,
"பொறுமையா பேசிட்ருக்கலாம் டைமில்ல. அடுத்தடுத்து வேலை இருக்கு தெரியும்ல? இப்ப என்ன நா கேட்டா என்ன நீ கேட்டா என்ன? வேலை ஈசியா முடியுதா அத தான் பார்க்கணும்"
"நா ஒன்னும் தப்பு செய்யல. செய்ற லவ்ல தெளிவா தான் இருக்கேன். அத சொல்ற தைரியமும் என்கிட்ட இருக்கு" என்றுவிட,
"சரி அப்ப மேரேஜ் வர எல்லாத்தையும் நீயே லீட் பண்ணிடு. நா என் வொர்க்க பாக்றேன். மேரேஜ்ல மீட் பண்ணுவோம்" என சென்றுவிட்டான்.
அவளும் சலைக்கவில்லை, அனைத்தையும் சிறப்பாக செய்தாள். அவனுக்கான உடையை கூட அவளே தயார் செய்து அவனுக்குக் காட்டி, சம்மதம் கேட்டாள்.
"உன் வொர்க்ல எனக்கு டவுட்டே கிடையாது சித்து. பெர்ஃபெக்ட்டா இருக்கு" என்றான் உண்மையிலேயே, அதில் அந்த சந்தோஷத்தோடே மணமேடை ஏறியிருந்தனர் அன்று.
மற்ற எல்லோருக்கும் சந்தோஷம் என்றாலும், "இதுக ரெண்டும் என்னன்னுடா கல்யாணம்லாம் பண்ணி ஒன்னா குடித்தனம் நடத்துங்க. எனக்கு நம்பிக்கையே இல்ல" என விசாலாட்சி தான் நிலனிடம் புலம்பியவாறு அட்சதைப் போட்ட ஒரே ஆள்.
இங்கு மணியைத் திரும்பிப் பார்த்தாள் பௌர்ணமி. அது பனிரெண்டை நெருங்கிக் கொண்டிருந்தது. ஏற்காடு கிளம்பியிருக்க வேண்டியது, நிலன் தான், "நேத்து தானே ட்ராவல் பண்ணி வந்துருக்க. இன்னைக்கு நைட் ரெஸ்ட் எடுத்துட்டு நாளைக்குப் போ" என்றிருந்தான். ஆனால் இப்போது பார்த்தால் இது அவன் மாமனின் உத்தரவு என தோன்றியது அவளுக்கு.
இப்போது இப்படியே கிளம்பினால் தான் காலை ஆறு மணிக்குள் சென்னையை எட்ட முடியும். வீட்டிற்கு சென்று அனைத்தையும் பேக் செய்து இரண்டு மூன்று மணிநேரத்திற்கு முன்பே விமான நிலையத்தில் வேறு இருக்க வேண்டும், என அனைத்தையும் யோசித்தவளுக்கு தலையே சுற்றியது.
'அப்ப நீ போறதா முடிவு பண்ணிட்ட சித்து? நேர்ல போகாத போனன்னா பேசியே கவுத்துடுவான் உன் புருஷன்' என்றது மனசாட்சி. அது இன்னும் எரிச்சல் தர, தலையைத் தாங்கி அமர்ந்துவிட்டாள்.
மறுபடியும் அழைப்பு, அவன் தானோ என கட்டிலில் அருகில் கிடந்த ஃபோனை திரும்பிப் பார்த்தாள். அதில் அஞ்சா நம்பியின் பெயர் வர, சலிப்புடன் அதை ஏற்றாள்.
Last edited: