எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

7 நேத்திரனை ஆளும் பௌர்ணமி!

priya pandees

Moderator

அத்தியாயம் 7

கிருத்திக், லேசாக அசைந்து அப்பாவின் வாசனையை உணர முயன்று, கொஞ்சம் தூக்கம் தெளிந்து நிமிர்ந்தாலும், கனவு போல், "ப்பா!" என்றவனுக்கு இன்னுமே இருக்கும் இடம் புரியவில்லை.

"டேய் இறங்குடா" என அவன் முதுகில் ஹரிணி ஒரு அடி போட்டு சிரிக்க,

"ப்பா!" என்றான் மறுபடியும் மகன்.

"அவனுக்கு இன்னும் தூக்கம் தெளியலடா" என மகளுக்கு சொல்லி சிரித்தவன், இரு கை கொண்டும் அவனை அணைவாக பிடித்து தட்டி கொடுத்தான்.

"அம்மாட்ட போட்டு குடுத்துருவான்னு நீங்க சொன்னது இவனத்தானப்பா?" என மகளின் ரகசிய கேள்விக்கு அவன் கண்சிமிட்டி சிரிக்க, மூவரையும் பார்த்து நின்றாள் பௌர்ணமி.

அவர்கள் மூவரும் சேர்ந்து விட்டாள் அவள் தனி தான். அளாகவும் சேர்ந்து கொள்ள மாட்டாள், அவர்களும் சேர்த்து கொள்ள மாட்டார்கள்.

'பிள்ளைங்கட்ட கூட நடிச்சு ஏமாத்திட முடியும்னா அது இவரால தான் முடியும். ஸ்டிரிக்டா இருக்க என்னைய கெட்டவளாவே ஃபார்ம் பண்ணவும் இவரால மட்டுந்தான் முடியும். ஆளுக்கொரு முகம் காட்ட இவருக்கு சொல்லியா கொடுக்கணும்?' என நினைத்தவளுக்கு கஷ்டமாகவும் இருந்தது.

'கோர்ட்ல அப்பா வேணுமா அம்மா வேணுமான்னா ரெண்டு பேரும் அப்பாதான்னு கை காட்டி அவரோட போயிடுவாங்க' என நினைக்கயிலேயே அவள் மனம் படபடத்தது. விவகாரத்து என கேட்டவள் அவள், ஆனால் அந்த மூவரையும் பிரிந்திருக்க முடியாது என நினைத்து அவ்வப்போது திணறுபவளும் அவள் தான்.

அவளை ஓரக்கண்ணால் பார்த்த குஹன், "சரி போலாம். அம்மாவும் ஃப்ரஷாகணும்ல?" என்றவாறு மனைவியின் தோளில் லேசாக இடித்துவிட்டே, மகன், மகளுடன் வெளியே நடக்க, ட்ராலியை தள்ளிக்கொண்டு பின் தொடர்ந்தாள் பௌர்ணமி.

கால் டாக்சி பிடித்து அவன் தங்கியிருந்த ஹோட்டல் வந்திறங்க, "நா ரூம் புக் பண்ணிக்கிறேன்" என்றாள் அவளாகவே.

"நீதான் புக் பண்ணணும் சித்து. மறந்துட்டியா என்ன? எனக்கு ப்ரொடக்ஷன் டீம்ல பண்ணதுமா, நீ அஃபிசியலா வரல சோ உனக்கு அதுல ஆஃபர் கிடையாது" என்றான். அவன் நக்கலாக கூறவில்லை என்ற முக பாவனை என்றாலும் அதில் நக்கல் தான் அதீதமாக இருந்தது.

பல்லை கடித்து, மூக்கு விடைக்க முறைத்து, "அங்கிருந்து ஃப்லைட் டிக்கெட் புக் பண்ணீங்க தான? அன்னஃபிசியலா என்ட்ட கேட்காம தானே புக் பண்ணீங்க? அது மட்டும் தெரிஞ்ச உங்களுக்கு ரூம் புக் பண்ண தெரியாதா? ஏன் பல்லவிக்கு பண்ணிருப்பீங்களே மறக்காம?" என்றாள் கொதிப்புடன்.

"அந்த பொண்ணு ப்ரொடக்ஷன் டீம்ல தான் வர்றாங்க, சோ அவங்களுக்கு அவங்க பண்ணுவாங்க சித்து" என்றான் சட்டென்று மாறிவிட்ட குரலும் முகபாவனையுமாக.

அவன் குரல் மாறுபாட்டில், பல்லவியை விடுத்து, "என்ன வரவழைச்சது நீங்க தான? அப்ப ஏன் ரூம் புக் பண்ணல?" என மட்டும் கேட்டாள்.

"டிக்கெட் போட்டதுக்கே திட்னியே. இதுக்கும் கோச்சுப்பியோன்னு தான் புக் பண்ணல. இப்ப என்ன நான் பண்ணிடவா?" என்றவனை இன்னும் நன்றாக முறைத்து பார்த்தவள், விறுவிறுவென ரிஷப்ஷன் சென்று நின்றுகொண்டாள்.

"பாப்பாக்கு எக்ஸ்ட்ரா பெட்னு நா பே பண்ணிட்டேன். சோ நீ உனக்கும் கிருத்திக்கும் மட்டும் ரூம் புக் பண்ணு" என வந்தவன் பின்னிருந்து கூற, திரும்பி கூட பார்க்கவில்லை அவள்.

அங்கிருந்த வரவேற்பாளரிடம், ரூம் வசதி, தண்ணீர் வசதி, ரூம் சர்வீஸ் ஆட்கள், பாதுகாப்பு, இறுதியாக வாடகை வரை அனைத்தையும் அவளாகவே விசாரித்து, பின்னரே அவன் கொடுத்த ஃபார்மில் அனைத்தையும் எழுதி கையெழுத்திட்டாள்.

"ஹவ் மெனி டேய்ஸ் மேம்?" என்றான் அவன்.

அப்போது தான் திரும்பி கணவனை பார்த்தவள், "எத்தனை நாள்ல தருவீங்க?" என்றாள்.

"என்ன தரணும்?" என புருவம் உயர்த்தியவன், அந்த வரவேற்பாளர் கைக்குள் இருந்த தாளையும் எட்டி பார்த்தான்.

"டிவோர்ஸ் பேப்பர்ல சைன் வாங்க தான வந்தேன்? அத எத்தனை நாள்ல போட்டு தருவீங்கன்னு சொன்னா நா வெகேட் பண்ண டைம் சொல்ல ஈசியா இருக்கும்?"

குஹன், நாடி தடவி யோசித்தவன், மறுபடியும் தூக்கத்திற்கு சென்றிருந்த மகன் காதை அவனை பிடித்திருந்த கையாலேயே தலையோடு சேர்த்து பொத்திவிட்டு, வரவேற்பு பையனையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு, அவள் காதின் அருகில் செல்ல, தலையை பின்னால் இழுத்துச் சென்றாள் அவள்,

"நேரா நில்லுடி" என்றவன் அவள் கழுத்தில் கைகொடுத்து அருகில் இழுக்க, "குஹன்!" என அவள் அவன் கையை தட்டிவிடும் முன், "நேரா நின்னா ரகசியம் நமக்கு மட்டும். இல்லனா அதோ அவனுக்கும் ஃப்ரீ" என்றுவிட்டு, "ஆன் பெட் சீக்ரெட்" என அவன் ஆரம்பித்ததும், 'என்னவோ?' என அவளும் கூர்மையாக கவனித்து நின்று கொண்டாள்.

"ஒரு அழகான நைட் உனக்கு எனக்குமா மட்டும் இருக்கணும். ஆன் பெட் அந்த நைட் ஃபுல் கண்ட்ரோல் உன்னோடதா இருக்கணும் சித்து. அன்னைக்கு ஃபுல்ஃபில்லா டிவோர்ஸ் பண்ணிக்குவோம். எனக்கு ம்யூச்சுவலா அதான் ஓகே" என ரகசிய குரலில் சொல்லிவிட்டு தள்ளி நின்றான்.

"ஹவ் பேட் யூ ஆர்!" என்றாள் முகத்தை சுளித்து.

"உங்கிட்ட தானே? இது டிவோர்ஸ்கான டிமாண்ட் சித்து. நீ என்ன கன்சோல் பண்ணித்தான் ஆகணும்"

"நா என்ன கேட்டா நீங்க என்ன பேசுறீங்க. எனக்கு உங்க கூட வாழவே வேணாம்னு தான் டிவோர்ஸே? உங்களுக்கு அது புரியல இல்லையா?"

"இவ்வளவு எமோஷன்லா வேணாம் சித்து. உங்கிட்ட எனக்கு வேணுங்குறது என்னோட டிமாண்ட். உனக்கு எங்கிட்ட டிவோர்ஸ் வேணுங்குற டிமாண்ட் மாதிரி தான் இதுவும். உங்கிட்ட ஃபைனலா நா எனக்கு ஃபுல் சேட்டிஸ்ஃபை ஆகுற விஷயத்த தான் கேட்க முடியும். சோ நா ராங் இல்ல சித்து" என்றான் தோள்களை குலுக்கி.

முகமெல்லாம் ரத்தமென சிவக்க, "வெரி ச்சீப்!" என்றாள்.

"உங்கிட்ட இதவிட ச்சீப்பா கூட பேசுவேண்டி. என்ட்ட கேட்காம டிவோர்ஸ ஊருக்கே சொன்னல்ல அதவிட இது ஒன்னும் ச்சீப் இல்ல. நீ எங்கிட்ட மட்டுமா கேட்க வேண்டியத பப்ளிக்கா கேட்ட! ஆனா நா எவ்வளவு கிட்ட நின்னு என் தோள்ல தூங்குறவனுக்கு கூட கேட்காம கேட்குறேன். யாரு ச்சீப்?" என புருவம் உயர்த்தி சிரித்தவனை, முறைக்க கூட முடியவில்லை. வேண்டுமென்றே செய்கிறான், பழி வாங்குகிறான் என தெரிந்ததில் அமைதியாகிவிட்டாள்.

அதற்கு மேல் பேச்சை விடுத்தவள், அங்கிருந்த வரவேற்பாளரிடம் திரும்பி, "டூ டேய்ஸ் புக் பண்ணுங்க" என தன் கார்ட்டை எடுத்து நீட்டினாள்.

"எனக்கு இன்னைக்கேனாலும் கூட, ஈவன் இப்ப கூட ஓகே தான். நைட் ஃப்லைட்ல நீ ரிட்டர்ன் கிளம்பிடலாம்" என்றவனின் நக்கலை கேட்க அங்கு நிற்கவில்லை அவள்.

குட்டை முடியை ஒரு வெட்டாக வெட்டி திரும்பி நடந்தவளை கண்டவன், "போடி சிலுப்பி!" என முனங்கி, வந்த சிரிப்பை வாய்க்குள் மறைத்துக்கொண்டான்.

அவளாக அவனை தேடி வந்ததில்லை. வரவும் மாட்டாள். அவன் தேவைக்கு அவன் யோசித்ததுமில்லை. அவ்வாறு அவன் அவளை தாங்கிய பொழுதுகளை மறுக்கவும் மாட்டாள். எந்தவொரு சூழ்நிலையிலும் இவன் தான் அவளை அரவணைத்து கொள்வான்.

அவளை பொறுத்தவரை அதையும் இவனிடம் இறங்கி சென்றால், இவன் அவளை அந்த காரணத்தை வைத்து குறைத்து எடை போட்டு விடுவான் என எண்ணிக் கொள்வாள் போலும். சுய கௌரவம் என்றவொன்றை வெளியாட்களிடம் எந்தளவிற்கு பாதுகாத்துக் கொள்வாளோ அதே தான் வீட்டில் இருக்கும் இவனிடமும்.

ஆனால் குஹன், அவன் சுதந்திரத்தையும் விட்டு கொடுக்க மாட்டான், அதே நேரத்தில் அவள் சுதந்திரத்தையும் அவளிடமிருந்து பிரித்தெடுக்க மாட்டான். அவளுக்காகவென்று விட்டுக்கொடுக்கும் சிலவற்றையும் அவளறியாமல், அறியவிடாமல், தானாக செய்தது போலவே தான் செய்து கொள்வான். ஒருவேளை அவனாவது தெரிந்து செய்திருந்தால் என்றோ இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள தொடங்கியிருந்திருக்கலாம்.

உதாரணத்திற்கு, அவர்களின் திருமணத்திற்கு பிறகு வந்த முதல் திருமண நாளன்று, விஸ்வநாதர், விசாலாட்சி, அவன் அக்கா மகிமா, அவள் குடும்பம், அண்ணன் நடேஷ்‌ மற்றும் அவன் குடும்பம், அவள் வீட்டினர் மூவரும் என அனைவரும் பௌர்ணமி, குஹன் வீட்டில் வந்து தடபுடலாக சமைத்து ஆரவாரமாக காத்திருக்க, முன்னால் நின்று வரவேற்கவேண்டிய அவர்கள் இருவரும் மட்டும் அவரவர் வேலையை பார்க்கச் சென்றிருந்தனர்.

அவன் அவர்கள் திருமண நாளையே மறந்து தானிருந்தான், விசாலாட்சி தான் நினைவு செய்து மறுநாள் வருவதாகவும் சொல்லி வீட்டிலிருக்க சொல்லியிருந்தார், ஆனால் அவன், "நீங்க வாங்க நா ஈவ்னிங் ஃபோருக்கு கரெக்டா ஜாயின் பண்ணிக்குவேன்" என கூறிவிட்டிருந்தான்.

இங்கு பௌர்ணமியிடமும் காந்திமதி தான் பேசினார், ஆனால் அவள், "ம்மா ஆஃப்டர் டெலிவரி நா இப்ப தான் என் வொர்க்க ஸ்டார்ட் பண்ணிருக்கேன். ஃபுல் டே கண்டிப்பா இங்க உட்கார்ந்துட்டு இருக்க முடியாது. நீ மேனேஜ் பண்ணிக்கோ" என பேசி சென்றிருந்தாள்.

திருமணம் முடிந்த தினமே பௌர்ணமியும் குஹனும் அவர்கள் வாழ்க்கையை துவங்கியிருக்க, அந்த மாதமே ஹரிணி தங்கியிருந்தாள். ஆனாலும் பௌர்ணமி அவள் வேலையை விட்டு கொடுக்கவில்லை. முதலில் குஹன் சேர்த்துவிட்டவரிடம் உதவியாக இருந்தவள், நிறை மாதத்தை எட்டியிருக்கையில் தான், குஹனின் படத்திற்கு முதல்முறையாக நேரடியான ஆடை வடிவமைப்பாளர் ஆனாள். அந்த மாதம் முழுவதும் அவளுக்கு கீழ் இருவரை வைத்துக்கொண்டு முழுமையாக வேலைப் பார்த்திருந்தாள்.

விசாலாட்சி அவ்வபோது முனங்கத்தான் செய்வார், அவளின் நான்கு மாதத்தில் ஒருமுறை நேரடியாக சண்டையே வந்திருந்தது இருவருக்கும்.

"வயித்துல பிள்ளைய வச்சுகிட்டு துணிய தைக்கியே? படிப்பறிவிருக்குறவ இப்படி செய்வாளா? வயித்துல இருக்க பிள்ளைக்கும் எங்கையாவது எதாவது நீ துணிய வெட்டி வெட்டி அடைக்கியே அதுமாதிரி அடைச்சுக்கும்னு நா எவ்வளவு நாசுக்கா சொல்லிகிட்டே இருக்கேன். சிலுப்பிட்டே திரியிதியே தவிர. பெரியவ ஒருத்தி சொல்லுதாளேன்னு கேட்கியா? பிள்ளைய பெத்து போட்டுட்டு போய் அந்த துணி தைக்குற வேலைய பார்த்தா ஆவாதா? நீ தைச்சு தரலைனா அங்க எல்லாவணும் கோவனத்தோடத்தான் சுத்த போறானுவ மாதிரி இங்குட்டும் அங்குட்டும் ஓடிட்டு திரியித?" என அவர் பேசிவிட,

"என் பிள்ளைய எனக்கு நல்லா பெத்துக்கவும் தெரியும். வளர்த்துக்கவும் தெரியும். அடைப்பு அதிதுன்னு பேசுறது இதே லாஸ்ட்டா இருக்கணும். பிறக்காத பிள்ளைய இப்படி தான் சொல்லுவீங்களா?" என்றவளுக்கு உண்மையில் கலங்கிவிட்டிருந்தது.

எதுவும் ஆகிவிடுமோ என்ற பயமும் வந்துவிட, அன்று இரவு முழுவதும் யோசித்தாள், அவர்கள் சொன்னது உண்மையோ பொய்யோ ஒருவேளை அப்படியாகிவிட்டால் தன்னாலேயே தன்னை மன்னிக்க முடியாது. அதற்காக வேலையையும் விடமுடியாது என யோசித்தவள், அப்போது, தான் ஒருவரிடம் வேளையில் சேர்ந்திருந்தாலும் பிள்ளையை மட்டும் மனதில் வைத்து அவருக்கு இவள் படம் வரைந்து கொடுப்பதோடு நிறுத்தி கொண்டாள். அவளாக செய்ய ஆரம்பித்த பின்னரும் பிள்ளை பிறக்கும் வரை வரைந்து அதை தைத்து தருபவர்களை மேற்பார்வை பார்ப்பதோடு இருந்து கொண்டிருந்தாள். அவ்வாறு அவளை பொறுத்தவரை அவள் அவளின் குடும்பத்தையும் விடவில்லை, தொழிலையும் விடவில்லை என்ற கோணம் தான்.

பிள்ளை பிறந்தது, இரண்டு மாதங்கள் வீட்டிலிருந்தவள், மூன்றாம் மாதம், பிள்ளையை 'பேபி சிட்டரில்' வைத்து தூக்கிக் கொண்டு கிளம்பி விட்டாள். கூடவே இருந்த காந்திமதி எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லை.

தன்னை சுற்றி உள்ளவர்கள் முன்னும் தன்னை விட்டுக்கொடுத்து விட கூடாது என்பதில் அவ்வளவு தெளிவாக இருந்தாள் பௌர்ணமி. அதில் குஹனும் அடக்கம். எதையும் அவனிடம் கேட்டு நின்றோ, ஆலோசித்தோ செய்வதில்லை. அது அவளின் முடிவாக தான் இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருப்பாள். அதனால் அவனும், "அவளுக்கு ஹெல்த், அவளுக்கு முடியும்னா பார்க்கட்டுமே" என்று விட்டுவிடுவான்.

"என்ட்ட ஏன் கேட்கலை? என்ட்ட ஏன் சொல்லல? உனக்கு முடியுமா? சமாளிப்பியா?" என எந்த கேள்வியும் அவனும் அவளிடம் கேட்டதில்லை. அவளை போல நிறைய பெண்களை அவன் வேலையில் அவன் கடந்து தான் வந்து கொண்டிருக்கிறான். மாடலிங்கில் சாதிக்கவும், சினிமா துறையில் தனித்து தெரிய வேண்டியும் அவர்கள் வீட்டையும் எதிர்த்து அவரவர் கொள்கைகளையும் எதிர்த்து ஓடி கொண்டிருக்கின்றனர். சரியோ தவறோ அவனுக்கு அவர்களை கடந்து வருவதால் பௌர்ணமியும் இக்கால பெண், ஃபெமினிசம் பேச கூடியவள், அவளுக்கு புரிய வைப்பதெலாம் கடினமான விஷயம் என்றெண்ணியே விட்டுவிடுவான். அதனால் இருவருக்கும் சண்டை, சமாதானங்கள் என்பதற்கும் வழியின்றி தான் நாட்கள் சென்று விட்டிருந்தது.

இதோ அவர்களின் திருமண நாளுக்கு மொத்த குடும்பமும் வந்திருக்க, அவன் நான்கு மணி என கூறிவிட்டு, ஆறு மணிக்காவது வந்து நின்றான் என்றால், அவள் ஒன்பது மணிக்கு தான் பிள்ளையுடன் வீட்டினுள் நுழைந்தாள்.

"இதெல்லாம் எனக்கு முக்கியம் இல்ல. என்னோட பாதை வேற. நீங்க முழுநேர குடும்ப இஸ்திரியா என்ன மாத்த ட்ரை பண்றதெல்லாம் எங்கிட்ட வேலைக்காகாது. எனக்காக நீங்க எதுவும் செய்யவும் வேணாம், எங்கிட்டயும் எதிர்பாக்காதீங்க" என காட்டிவிடும் முடிவில் தான் அவள் அவ்வளவு தாமதமாக வந்ததும்.

குஹனின் அக்கா குடும்பமும், அண்ணா குடும்பமும், "என் தம்பிக்கு ஏத்த பொண்டாட்டி தான்" என வெளிப்படையாக சொல்லியே கிளம்பிச் சென்றிருந்தது,

"ஏன்டா உன் அக்காவுக்கு தானே இன்னைக்கு கல்யாண நாளு? இல்ல நம்ம வீட்ல ஆக்கி திங்க வழியில்லாம இங்க வந்து உட்கார்ந்துருக்கோம்னு நினைச்சுட்டு இந்நேரம் வந்து நிக்காளா? இந்த ரெண்டுக்கும் கல்யாணம் பண்ணி வைக்க வேணாம்னு சொன்னேன்ல கேட்டீங்களா? இதுங்க வாழுறதுக்கு கல்யாணம் பண்ண மாதிரியா இருக்கு? இது குடும்ப நடத்துற வீடுன்னு நெனப்பு உண்டா உன் அக்காவுக்கு? கெஸ்ட்டு மாதிரி வந்துட்டு போறதுகளுக்கு பிள்ளை வேற" என விசாலாட்சி நிலன் முதுகில் தான் ரெண்டு அடி போட்டிருந்தார்.
 

priya pandees

Moderator
அறைக்குள் அமர்ந்து குஹன் அவன் வேலையில் இருந்தாலும் வெளியே விசாலாட்சி புலம்புவதும் கேட்டது, அமைதியாக யாரோ யாரையோ பேசுவது போல் வரும் மனைவியின் அரவமும் புரிந்தது. அப்போது தான் அவளுக்கே தெரிந்தது அவள் கணவன் முன்பே வந்து காத்திருக்கிறான் என்று.

"நீங்களும் பார்ட்டி ப்ளான் பண்ணிருந்தீங்களா?" என அவனை பார்த்த பின்னரே கேட்டாள்.

"ம்ம்கூம் அம்மா சீக்கிரம் வர சொன்னதால வந்தேன்" என எழுந்து வந்தவன், "ஹேப்பி அனிவேர்சரி சித்து!" என அணைத்து அவள் இதழ்களில் அழுத்தமாக முத்தமிட்டு விலகி கொண்டான்.

அவனிடம் வருத்தம், கோபம் என எதையும் அவளும் உணராததால், "ஹேப்பி அனிவர்சரி குஹன்!" என பதிலுக்கு வாழ்த்தி முடித்துக் கொண்டாள். அவளிடம் அதைவிட வேறென்ன எதிர்பார்த்து விட முடியும் என்பது தான் அன்றைய குஹனின் எண்ணமும்.

இருவரும் இருவரையும் புரிய முயற்சி எடுக்கவில்லை. 'அவள் அவளாக இருக்கட்டும், அப்போதுதான் பொண்டாட்டி என்பவள் இம்சையின்றி தன்னாலும் நிம்மதியாக தன் வேலையை பார்க்க முடியும்' என அவனும், 'நான் என்னளவில் சரியாக தான் இருக்கிறேன், மாற வேண்டியது இக்காலத்தை புரியாத எதிரில் இருக்கும் நீங்கள் தான்' என அவளும் இருந்தனர்.

காலம் அப்படியே இருப்பதற்கா கடவுள் இருவரையும் ஒரே கோட்டில் இணைத்து விட்டார்? அதற்கான காரணத்தை அவர்களாக தேடாவிடிணும் அவரே தேடவைப்பார் இல்லையா? இருவரின் பெற்றோர்களின் புலம்பலுக்கு வடிகால் அமைக்கவாவது சோதனைகள் கொடுத்து யோசிக்க வைப்பார் தானே! அதற்கான காலத்தை தான் எட்டிவிட்டார்கள் போலும்.

வெளியே வரவேற்பரையில் இருந்த, கிளி கூண்டின் அருகில் நின்று அதனுடன் விளையாட்டில் இருந்த மகளை, "ஹரிணி!" என அழைத்து உடன் சேர்த்து கொண்டு அவனறை வந்தவன், கிருத்தியை மெத்தையில் படுக்க வைத்துவிட, "அம்மா எங்கப்பா?" என்ற மகளுக்கு, "தம்பி எந்திக்கவும் போலாம்டா. அம்மாவும் அதுக்குள்ள ரெஃப்ரெஷ் ஆகட்டும்" என்றுவிட்டான்.

அடுத்து சற்று நேரம் அவனுக்கு அங்கு நம்பியோடு அலைபேசியில் கழிய, மகள் பொருட்களை உருட்டுவதில் கழித்தாள். ஆனாலும் தூங்கும் தம்பி அவள் கண்ணை உறுத்திக் கொண்டே இருந்ததில், அவன் தூங்கி கொண்டிருந்த பஞ்சு மெத்தையில் ஓடி வந்து குதித்து ஏறினாள், அதில் அவன் மெத்தையை விட்டு ஒரு அடி மேலே சென்று மீண்டும் விழுந்ததில், பதறி கண்ணை முழிக்காமலே அழ துவங்கிவிட்டிருந்தான்.

ஹரிணி, "ஷ்! அழாதடா கிருத்தி. நாந்தான். இங்க பாரு" என அவன் முதுகில் அடித்து அவளை பார்க்க வைக்க முயல, அவன் இன்னும் சத்தமிட்டு அழுதான்.

"கிருத்தி! ஹரிணி!" என ஹாலில் நின்று ஃபோன் பேசிக் கொண்டிருந்தவன் உள்ளே வேகமாக வர,

"அழாதடா இடியட். கண்ணை திறந்து பக்கத்துல இருக்குறவள பாரு" என ஹரிணி திட்டிக்கொண்டிருப்பதை கண்டவாறு வந்தவன், "எழுப்பிவிட்டியா அவன நீ?" என்று கேட்டவாறே ஃபோனை அனைத்து கட்டிலில் போட்டுவிட்டு மகனை கையில் தூக்கிக் கொண்டான்.

"சும்மா ஒரு ஜம்ப் தான் பண்ணேன் ப்பா" என்றாள் மகளும் அவனை போலவே கண்ணடித்து சிரித்து.

"ஃபர்ஸ்ட் டைம் லாங் ட்ராவல்டா அவனுக்கு. மைண்ட் இன்னும் ஃப்ரீயா ஆகிருக்காது" என்றவன், "கிருத்தி ட்ரிப் வந்துருக்காங்களா? அப்பா, அக்கா பாக்கலையா?" என தோளில் கிடந்தவன் காதில் மெல்ல பேச, கொஞ்சம் கொஞ்சமாக இயல்புக்கு வந்து, கலங்கிய கண்களுடன் மெல்ல தலையை மட்டும் திருப்பி ஹரிணியை பார்த்தான்.

"போடா அழுமூஞ்சி" என அவள் அவனை முறைக்க, அப்பாவிடம் இருந்தே காலை மட்டும் நீட்டி அவளை மிதித்து சிரித்தான். அதற்கு அவள் அவன் காலிலேயே அடிக்க, அவன் மிதிக்க, சிரிப்பும் முறைப்புமாக செல்ல சண்டை நடக்க, விட்டு வேடிக்கை பார்த்தான் குஹன்.

அந்நேரம் விசாலாட்சி, சரியாக அழைப்பில் வர, "அப்பத்தா!" என ஹரிணி தான் எட்டி எடுத்து பேச, கிருத்தியும் குஹனை விட்டிறங்கி அவளோடு இணைந்து கொண்டான்.

"எப்ப கண்ணு வந்தாங்க உன் அம்மாவும், கிருத்தியும்?"

"இப்ப தான் அப்பத்தா. ஏர்போர்ட் போய் நானும் அப்பாவும் கூட்டிட்டு வந்தோம். தம்பி வந்து ஒரே அழுகை" என கதையை ஆரம்பிக்க, குஹன் மதிய உணவை ஆர்டர் கொடுக்க நகர்ந்தான்.

"இல்ல அப்பத்தா. அக்கா தான் அடிச்சா"

"சண்டை போட‌ கூடாது கண்ணுகளா. சரி போயிட்டீகளான்னு கேட்கத்தான் கூப்புட்டேன். உன் அம்மாவ எங்க?" அந்த கேள்விக்கு பதில் சொல்ல குஹன் வேகமாக வர,

"அம்மா வேற ரூம் போய்ட்டாங்க" ஹரிணி சொல்லிவிட்ருந்தாள்.

"ஏன்? உங்க ரூம்ல அவ ஒருத்தி தூங்க இடம் இல்லையாமா?"

"இல்ல குளிச்சுட்டு வர அங்க போயிருக்காங்க"

"ஏன்டி உன் அப்பன் பார்த்த ஹோட்டல் ரூம்ல ஒரு பாத்ரூம் கூடவா இல்ல? அதேன் நீயும் உன் அப்பனும் அந்த பொம்பள பிள்ளைகளோட நீச்சல் குளத்துல போயி தெனமு குளிக்கிறீங்களோ? நம்ம ஊர் சைடே வீட்டு வீட்டுக்கு இப்பல்லாம் பாத்ரூம் வந்துருச்சு. ஆனா வெளிநாட்டு காரணுவ இன்னும் வளராம இப்படி பொதுவுல குளிக்கிறாய்ங்க. எந்த காலத்துல இருக்கானுவ? நாட்டுல இருக்க பாதுகாப்புக்கு இப்படிலாம்‌ இருந்தா என்னன்னு உருப்பட. உன் அப்பன் அங்க என்னவும் பண்ணட்டும், நீயும் தம்பியும் அம்மாவ கூட்டிட்டு இங்க வர பாருங்க. சரியா?" அவர் போக்கில் அங்கலாய்க்க,

தலையில் அடித்துக் கொண்ட குஹன், ஹரிணியிடமிருந்து ஃபோனை வாங்கி, "ஸ்காட்லாண்ட்ல பாத்ரூம் கட்டி ஓபனிங் செரிமெனிக்கு உன்னையே கூப்பிடலாம். இப்ப ஃபோன வச்சுட்டு போய் காலை சாப்பாட்டை ஆக்குற வழிய பாரும்மா. நாங்க லஞ்ச் போறோம்" என அழைப்பை நிறுத்தியேவிட்டான்.

அப்பத்தா, பேச்சு அப்படிதான் பாதி புரியும் பாதி புரியாது என உணர்ந்திருந்த பிள்ளைகள், மறுபடியும் விளையாட்டில் இறங்கியிருக்க, "கிருத்தி! கமான் குளிச்சு ஃப்ரஷாகிட்டு லஞ்ச் எடுக்கலாம். அம்மா ரூம் போகணும். கம்" என அவனை அழைத்துச் சென்று, அவனை சுத்தப்படுத்தி அழைத்துவர, அவனுக்கான உடை அங்கு பௌர்ணமியிடம் இருந்தது.

இப்படியே வரமாட்டேன் என அடம்பிடித்தவனை, துண்டோடே தூக்கி கொண்டு, வெளியே வர, ஹரிணி சிரிப்புடன் அவர்கள் அறையின் கதவை மூடிவர, மூவருமாக பௌர்ணமி இருந்த அறையை அடைந்து தட்டி விட்டு நின்றனர். கிருத்தி வெட்கப்பட்டு குஹன் கையில் மறைய முயல, குஹனும், ஹரிணியும் அவனை கிச்சுகிச்சு மூட்டி விளையாண்டனர்.

இங்கு குஹனிடம் கோபித்துக் கொண்டு அறைக்குள் வந்தவள் அப்படியே கட்டிலில் விழுந்திருக்க, இவர்கள் வந்து அழைத்ததில் தான் எழுந்தே வந்தாள். குஹன் விவாகரத்து கொடுத்து விடுவானோ என ஒரு மனம் பயந்ததென்றால் கொடுத்தே ஆகவேண்டும், எதற்காகவும் அவனிடம் இறங்கிச்‌ சென்று அந்த வாழ்க்கையை தக்க வைத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. அப்படி பெறும் வாழ்க்கையில் அதன் பின் அவள் மரியாதையே கேள்விக்குறியாகிவிடும் என பல யோசனைகளோடு அப்படியே படுத்திருந்துவிட்டாள். கதவை திறந்து மூவரையும் சிரிப்புடன் பார்த்தவளுக்கு இவன் இதுபோல் தன்னையும் சேர்த்து கொண்டால் என்ன என நினைக்காமல் இருக்க முடியவில்லை.

"ம்மா!" என கிருத்தி பௌர்ணமியிடம் தாவ, "டேய் வாடா. டவல் கீழ விழுந்தா ஷேம் ஷேம் ஆகிடும்" என ஹரிணி அவன் டவலை பிடித்திழுக்க, "ம்மா அக்கா!" என சினுங்கியவனும் பௌர்ணமி கையிலிருந்து இறங்கி இடுப்போடு டவலை பிடித்துக் கொண்டே உள்ளே அவளை துரத்தி ஓடிவிட, அடுத்து உள்ளை வரவிருந்தவனை வரவிடாமல் கையை கட்டிக்கொண்டு மறித்து நின்றாள் பௌர்ணமி.

"பிள்ளைங்கள விட்டீங்க தான? இனி நா பாத்துக்குறேன். நீங்க உங்க ரூம் போலாம்"

"அடேங்கப்பா. புதுசு புதுசா பண்ணுற? பத்து நாளுக்கு முன்ன இப்படி இல்லையே? ஒரே ரூம்ல தான எல்லாம்? இந்த கேப்ல என்ன நடந்தது சித்து?" என நாடியில் லேசாக முளைத்திருந்த தாடியை தடவிக் கொண்டே அவனும் யோசித்தவாறே அவளிடமும் கேட்டான்.

"புத்தி தெளிஞ்சுட்டுன்னு வச்சுக்கோங்க. எது யோசிக்குறதா இருந்தாலும் உங்க ரூம் போய் யோசிக்கலாம்"

"ஓ! உள்ள விட மாட்டனா. நா நிக்ற இடத்தையே யூஸ் பண்ணிக்கிறேன். பத்து நாள்ல தெளிஞ்ச புத்தி மறுபடியும் குழம்பி போகட்டும்டி" என்றவன் அவள் நாடி பிடித்து அருகில் இழுக்க, அவள் வாயை மூடிக்கொண்டாள்.

"வேற இடமா இல்ல?" என்றவன் சற்று மேலே இருந்த அவள் நீள மூக்கில் பல் பதிய கடித்து வைத்து, வலியில் அவள் அதை தேய்க்க முயல்கையில் தோளில் இடித்து சேலை விலகி தெரிந்த இடுப்பிலும் வலிக்க கிள்ளி வைத்துவிட்டு, "நிலா நிலா கைவருமா இல்லை இல்லை கை சுடுமா?" என விசிலடித்துக் கொண்டு அவளை கடந்து உள்ளே சென்றிருந்தான்.

 
Top