எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அத்தியாயம் _16

Status
Not open for further replies.
மௌன சாமியாராய் உடன் வரும் தவ கொழுந்தை கிள்ளி கூட பார்த்தாள் பவித்ரா. ரத்தம் தான் வந்ததே தவிர, பேச்சு ம்ஹூம்.. எவ்வளவோ கெஞ்சினாள்.

" மாமா.. ப்ளீஸ் ஒரு மாதிரி இருக்கு பேசு டா .. ப்ரீத். என் செல்ல மாமால்ல, உன் பவி கூட பேச மாட்டியா? இப்ப போய்டுவேன் பேசு டா..என புலம்பி துடிப்பவளை பார்க்கையில் எதையோ வென்றவனை போல உணர்ந்தான் ப்ரீத். "ம்கும்ம்" என்ற செருமலுடன் மெல்லிய குரலில் ஒரு காதல் பார்வை தவழ விட்டான் "பார்த்து போடி " என்று அவளை கட்டிக் கொள்ள! அணைப்பில் சிக்குண்டு அவன் இதய துடிப்பில் உணர்ந்தால் சொல்லாத அவனின் காதல் அளவை! மொழி மட்டுமே அன்பை வெளிக்காட்டாது. சிறு தொடுதல், அன்பின் அணைப்பு மூச்சி காற்று கூட உணர வைக்கிறது அவன் அளவில்லா காதலை.

"பிரியமானவர்களை கண்டால் வேகமாக துடிக்கும்!!அவர்களை பிரிந்தால் மெல்லமாய் துடிக்கும். இந்த இதயமும் ஒரு உணர்ச்சி விந்தையே!! "

மெல்ல விலகி அவளது சிக்நேச்சர் முத்தத்தை அவனது இடது பக்க இதயத்தின் மேல் சட்டை மீது
அழுத்தி பதித்திட, பட்டென்று ஒட்டியது அவளின் இதழின் பிரதி அங்கு பவியின் இதழ்ச்சாய
அச்சோடுஎன்னுடய இடம் இது என்று கர்வமாய் வீற்றிருந்தது அவள் இதழ் முத்தம்!!

இந்த இதயத்தின் இளவரசி நான் என்று சிவப்பு கிரீடமாய் வஞ்சியின் முத்த சுவடுகளை தாங்கி இருந்தது. அவன் சட்டையில் அடங்காத வீறு கொண்டு விம்மி புடைத்து நிற்கும் நெஞ்சம்.

விமான புறப்பாட்டுக்கான அழைப்பு வரவே.. வேகமாக பிரிந்து சென்றவள். திரும்பி பார்த்து கண்களை சிமிட்டி "மிஸ் மீ " என்று தொலைவில் நின்று வெறும் உதட்டசைவில் கட்டளை இட்டாள். இரண்டு கையை முடிந்த மட்டும் விரித்து காட்டினான் "மிஸ் யூ" என்று நல்ல வேளையாக
கைகளின் நீளம் குறைவே!! இல்லாவிடில் கிருஷ்ண பரமாத்மா போல் உலகை அளந்து காட்டி இருப்பான். அகம் நிறைந்த
மங்கை இவள் ஒரு நொடி அகலல் கூட பெரிய வலிகளை தரும் அக்ஷயமாக மாறி!! ஆணியின் கூராய் நெஞ்சில் அடித்து அழுத்தி வலித்தது அன்பனை.

பெண்களின் அன்பு பேரன்பு அது கிடைக்கப் பெற்றால் ஆனந்தம் அதிகம் என்றாலும் அவஸ்தையும் அதிகம்.

ஊருக்கு வந்ததில் இருந்தே ஒரே வீடியோ காட்சி மயம் தான். சார்ஜரோடு ஒரு சதவீதம் என்று உயிருக்கு ஊசலாடும் போது கூட செல்போன்னுக்கு ஒய்வு என்பதே இல்லை. அயன் பாக்ஸ் போல செல்ஃபோன் முழுதுமாக சூடு பரவி கிடக்க, காதல் சித்தம் ஏறியவளோ? பூமியை காதலோடு சுற்றும் நிலவென!! அவனையே காதலோடு வட்டமிட்டாள். ஒரு நாளின் எல்லா நாழிகையும் அவனுக்காகவே, அவனோடு பேசவே செலவிட்டாள். 'என்ன தாண்டி ரெண்டு பேரும் பேசுவீங்க' என்று கடிந்த தாயையும் அவனுக்கு பாஷை கற்றுத் தருகிறேன் என்று பொய் கூறி சமாளித்தாள்.

"மே தும் ஸே ப்யார் கர்தி ஹுன் ப்ரீத் "

"அப்டினா என்ன? "

"நான் உன்ன காதலிக்குறேனு
அர்த்தம் டா "

" இத தெரிஞ்சு என்ன ஆக போகுது. வேஸ்ட் இங்க யார நான் காதலிக்க போறேன் "

"நீ சரியான வேஸ்ட்டு னு தெரிஞ்சும் சொல்றேன் பாரு "
'இங்கிலீஷ் சொன்னாலும் புரியலை, இப்ப ஹிந்தி சொல்லியும் புரியாத மங்குனிய என்ன பண்றது' அங்கலாய்போடு" என்ன வேணும் நீயே கேளு, நான் அதை சொல்லி தர்றேன் " என்றதும் ஆவலாய் " அன்னைக்கு ஒரு சைவ ஹோட்டல் போய் சாம்பார கேட்டா? வெறும் பருப்ப மட்டும் வேக வைச்சு தண்ணியா தாரனுங்க,உப்பும் இல்லை. ஒரப்பும் இல்லை. உன் கையால சாப்பதோட சரி, நல்ல சோறே கிடைக்கல "என்று புலம்பினான்.

" பிரியாணி தான் கிடைக்குமே டா "

" அதை சாப்பிட்டு சாப்பிட்டு..,அலுத்து போச்சி.., ரசம் வேணும் பவி. மீன் குளம்பு வேணும்" இப்படி வகை வகையாக பட்டியலை அடுக்க.

" போதும்..,ரொம்ப பெருசா போகுது லிஸ்ட். நீ சமைக்க ஆரம்பி டா..,அங்க காய்கறி கூட்டு பருப்பு தாளிச்சு உப்பு போட்டு தருவாங்க,ருசி காரம் ஒன்னுமே இருக்காது. தேவையான பொருள் மட்டும் வாங்கு சேர்ந்து சமைக்கலாம்" என்று பேசியவள் காலை நேரத்தை அடக்கு முறையோடு ஆட்சி செய்ய, ஒன்பது மணி ஆகவும் அலார்ட் ஆனவனோ மெல்ல பர்மிஷன் கேட்க ஆரம்பிக்க முறைத்தாள் பூம்பாவை. வீடியோ காலில் விழியை உருட்டி மிரட்டி நிற்பவளை பார்த்து அஞ்சியபடி மிடறு விழுங்கினான் ப்ரீத். டீச்சரை பார்த்து பயம் கொள்ளும் சிறு பாலகனாய் .

" ஒரு மணி நேரமா குளிக்க போகணும்னு கேட்டுட்டே இருக்கேன். நீ விடவே மாட்டேங்குற?ப்ளீஸ் பவி ஆபீஸ் போகனும் "
'அய்யய்யோ அமைதியா இருக்காளே.., ஏதோ சண்டை போட போறா ம்..கும்.. ம் 'உள்ளே அழுகை பொங்கியது.

"அப்போ போனா போகுது னு
என்கிட்ட பேசிட்டு இருக்க.பேச பிடிக்கல்லையா? மா..மா.. " என்று
சினத்தில் பல்லை கடித்தாள்.

" அப்படி நான் சொல்லலையே பேபி. குளிச்சிட்டு வந்து பேசணும் னு தான் சொல்றேன்.
'ம்..ம்.. இப்ப பிரம்மாஸ்திரம் எடுத்துடுவா' என்று நினைத்த நொடி.

" அப்ப நான் முக்கியம் இல்லையா? ப்ரீ..த்" என்று குரலில் அழுகை நெடி ஏறிட,குழந்தை போல கண்களை மூடி மூடி உள்ளே நிரம்பிய கண்ணீரை வெளியே இமையாலே தள்ளி விடுபவளை பார்த்து சிரிப்பதா ? அழுவதா?

"காதல் ஒரு ஆணுக்கு, காதலி தான் உலகத்திலே பிடித்தவள் என்று தோன்ற வைக்கும். ஆனால் பெண்களுக்கோ காதலன் தான் உலகம் என்று பேய் பிடிக்கும் ஆட்டி வைக்கும் "
"அம்மா.. தாயே.. என்பதை போல
கெஞ்சி.. கதற வைத்தாள் தினமும். சண்டை எப்படி வந்தது?ஏன் தான் அழுகிறாள்? எதற்காக சிரிக்கிறாள்!! பேசாமல் வதைத்து பேசி பேசி களித்து, உணவோடு காதலையும் பரிமாறி , தொடு திரையில் தெரியும் காதலனுக்கு ஊட்டி விட்டு, சீண்டி விட்டு வெட்கம் தந்து, நாணம் கொண்டு மெல்லிய பேச்சுகளால் இரவுகளில் தாலாட்டி .. அவன் உறங்கியதும் வீடியோவில் தெரியும் அவன் முகத்திற்கு நேராக முத்தமிட்டு, தூங்கும் அவனையே பார்த்து தினமும் உறங்கிவிடுவாள்.

தனிமையை தள்ளிவிட்டு, நேசத்தை வாரி வாரி வழங்கினாள் காதல் பதுமை. ஆனால் இதை காதல் என்று உணர்வானா? ப்ரீத்.

இவளின் புதிய அவதாரத்தை பார்த்து வேப்பிலை அடிக்கும் அளவுக்கு பயந்து போய்விட்டான் பாவம்.

செல்போனையே பார்த்து தனியாக புலம்பும் நண்பனை கண்ட சந்தீப். வேகமாக அவன் அருகே சென்று காதை தீட்டி வைச்சு புலம்புவதை கேட்க?

" ஏன் இப்படி சண்டை போடுறா? குளிக்க கூட விட மாட்றா என்ன தாண்டி ஆச்சு உனக்கு " என யோசித்தவனோ?" தலையை பிய்த்துக் கொள்ள கையோடு முடியும் வர "ஒருவேளை இந்த தண்ணியில குளிச்சா முடி கொட்டுமோ? குளோரின் தண்ணி முடி கொட்டுது தான். இருந்தாலும் "என இழுத்தவன் நண்பன் ஐ கண்டதும் வாயை மூடிட .

"என்னடா ஃபோன பாத்துட்டு உக்காந்து இருக்க.? "

" பவி கால் பன்னுவா அதான் "

" ஏன் போன் ரிங் ஆனா காதுல கேட்காது? போன் வர வரைக்கும் இங்கே சார் வேர் பிடித்து உட்காரனுமா?" என்று கேள்வி கேட்டான் சந்தீப்.

" உடனே எடுக்கலைன்னா சண்டை வருது டா அதான் பார்த்துகிட்டே இருக்கேன். என்னமோ ஆகிடுச்சு அவளுக்கு"

" என்னடா இத்தனை நாள் அவ பேசமாட்டாளா னு ஏங்குன? இப்போ பேசினாலும் கஷ்டமா இருக்குனா எப்படி டா ?" அவன் முகம் போன போக்கை பார்த்து சிரித்து வைத்தான்.

" திடீர்னு ஏன் இப்படி நடந்துக்கிறா? அக்கரையா என் கூட பேசிக்கிட்டே இருக்கது எனக்கு புடிச்சிருக்கு. ஆனா தேவையில்லாம சின்ன சின்ன விஷயத்துக்கும் போடுற சண்டை எல்லாம் பார்த்து பயமா இருக்கு டா பவித்ரா கூட பேசவே நடுக்கமா இருக்கு தெரியுமா! எனக்காக அவ வாழ்க்கை வீணாக்கிடுவாளோ னு தோனுது டா "

" டேய் பைத்தியக்காரா.. நான் உன்ன கண்டுக மாட்டேன்னு சொன்னதும், தனியா இருந்த ஏதாவது பழைய மாதிரி சூசைய்ட் தாட் வரும்னு ஒயாம பேசறா மச்சான். வேற ஒன்னும் இல்லை "

"அவள பத்தி நெறைய கம்ளேன்ட்ஸ் வருது டா.. நெறைய டெஸ்ட் ல ஃபெயில் ஆகிட்டாளாம். அவ சரி இல்ல சந்தீப். நான் தான் இதுக்கு எல்லாம் காரணம். அவகிட்ட பேசுறத சுத்தமா அவாய்ட் பண்ண போறேன் " என்று தீர்க்கமான முடிவோடு அவள் அழைப்புக்கு காத்திருந்தான்.

**********

காலேஜ் ல் கிளாஸ் ரூம் லாஸ்ட் ஃபென்ஜ்சில் கையை வாகாய் வைத்து படுத்தவள் உறக்கத்தை தழுவ.

" பவித்ரா.. உன்ன எம்.எஸ். மேம் ஸ்ஃடாப் ரூம் வர சொன்னாங்க" என்று ஒரு பெண் சொல்லிவிட்டு சென்றிட.

தோழி இவளை அடித்து எழுப்பினாள் " ஏய் பவி.. அந்த இம்சை உன்ன வர சொல்லி இருக்காம், போ " என்றதும் அடித்து பிடித்து எழுந்து கண்களை கசக்கியபடி ஸ்ஃடாப் ரூம் விரைந்தாள் பவித்ரா.

" மே ஐ கம் இன் மேம் " என்று கேட்டவளை கையை காட்டி வெளியே நிற்க்க வைக்க, ஒன்றுமே புரியாமல் வாசலிலே நின்றாள். ஒருமணி நேரம் வேண்டுமென்றே நிற்க வைத்து பின்பு உள்ளே அழைக்க, என்ன என்று பயந்து நடுங்கி திக்கி திக்கி நடப்பவள் முன் அவள் நோட்டை தூக்கி எரிந்தார் பேராசிரியர்.
வேகமாக அவளின் முகம் மேல் விசிறி அடித்து கீழே விழ, அதை எடுக்க குனிந்தவளின் கண்ணீர் நோட்டின் மீது விழுந்தது. கண்களை கைகளால் அழுத்தி துடைத்தவள். அழுகையை அடக்கியபடி நிமிர..

" பர்ஸ்ட் பேஜ் திற.. "கோபமான குரலில் சொல்லவும் " விரல் நடுங்க திறந்தவளை கேவளமாய் ஒரு பார்வை பார்த்து விட்டு "தூக்கி பிடி" என்று அதட்டவும் அவர் புறம் தூக்கி காண்பிக்க " பவித்ரா ப்ரீத் குமார் " ச்சீ... ஹாட்டின் வேற, என்ன நெனைச்சுட்டு இருக்க நீ..டெஸ்ட் நோட்டுல அசிங்கமா இல்லை உனக்கு? உன் அப்பா பேர் இந்திரன் தான? காதலோ!! எவ்ளோ நல்லா படிக்குற பொண்ணு ஒரு மாசமா சரி இல்லை. எதுலயும் கவனம் இல்லை. ரெகுலர் டெஸ்ட்ல கூட மார்க் எடுக்கலை கிளாஸ்ல தூங்கி வழியுற, உன் கூட வெட்டியா பேசுற அந்த ரோமியோ ஒன்னும் உன் படிப்புக்காக கவலை பட மாட்டான். அவனுக்கு இது என்டர்டைன்மென்ட் நீ தான் முட்டாளா நிப்ப,நான் சொல்றது இப்ப உனக்கு கசக்கும் பவித்ரா.. கடைசி பக்கத்த எடுத்து வாசிச்சு காமி.

" வே.. வேணாம். மேம் ப்ளீஸ்" கெஞ்சினாள். 'பேர்
எழுதுனதுக்கே இந்த திட்டு கவிதையை வாசிச்சா அவ்ளோ தான்.' என மனதில் நினைத்து அவமானத்தில் நொந்தவளளோ.. கையை பிசைந்து நிற்க.நோட்டை பிடிங்கி வாசிக் ஆரம்பித்தார் பேராசிரியை.

_____________________

" நீ இல்லாத நான் "


"உன் நினைவுகள்
என்னை சுடுவது
போதாது என்று
நிலவும் சுடுகிறது.

தனிமையில் நீ இன்றி
நான் தவிப்பதை

கண்டு சிரிக்கும்
நிலவும் பெண்ணும் .

என்னை போல்
தலைவனை காண
தவமிருக்கிறதோ!

அவன் எழில்முகம்
காணமல் ஏங்கி

தவிக்கிறதோ?

அருகில் இருக்க

அலட்சியம் செய்த
என்னை
தொலைவில்
நின்று துடிக்க
வைக்கிறாய்
என் அன்பு
காதலா!! "

I love you..miss u

♥️PREETH ♥️

" ப்ரீத்.. னா அந்த ரவுடி பய தான?"
" ம் " என்றால் தயக்கமாக.

"இப்ப என்ன பன்றான்?" பேராசிரியை அவளை கேள்வியாக பார்க்க.

" டெல்லியில ஒரு கம்பெனியில ஒர்க் பன்றாங்க மேடம்" லேசான குரலில் பதில் தந்தாள் பவித்ரா.

" காதல் வந்தா உலகத்தையே மறக்கனும், தன்னையே தாழ்த்தி அழிச்சுகனும் னு அவசியம் இல்லை. அளவுக்கு மீறினா அன்பும் ஆபத்து தான். பர்ஸ்னல் புரொபஷனல் லைஃப் அ பிரிச்சு அழகா பேலன்ஸ பண்ண கத்துக்கனும். காதல்கிற ஒரு உணர்வ மட்டும் பிடிச்சு தொங்கினா .. வாழ்கைய லீட் பண்ண முடியாது. புரியுதா? காதல் மட்டும் தானா? இல்லை கல்யாணம் பன்னுற ஐடியா இருக்கா? "என்று கேட்டதும்பதில் அடுத்த நொடியில் வந்தது நிறைய டைய்ம் பாஸ் காதலர்கள் போல் எடை போடும் ஆசிரியையின் பார்வை எள்ளலுக்கு பதிலாய் சொன்னாள்.

" மேரேஜ் பண்ணிப்போம் மேம்" என்றால் உறுதியான குரலில்.
"பரவாயில்லையே நான் கூட காலேஜ் முடியிறவரை டைய்ம் பாஸ்க்கு ஒ
ஓட்டுறது, பாய் பெஸ்டி டைய்ப் ஒ..னு நெனைச்சேன்.
லாங் டிஸ்டன்ஸ் ரிலேஷன்ஷிப் ஆ.!" என கேட்டதும்
ஆமாம் என்று தலை அசைத்தாள்.

பெண்களுக்கு சுயமரியாதை ரொம்ப முக்கியம்.
படிப்பு பதவி பணம் சக்சஸ்ஃபுல்லான குடும்ப வாழ்க்கைக்கு அடிப்படை.திறமை இருந்தும் ஃபெயிலியரா வீட்டில் உட்கார ஆசையா?எவ்வளவு நேசிக்கிற கணவனா இருந்தாலும் சும்மா தானே வீட்டில் இருக்க, நீ சம்பாதிச்சா இப்படி அனாவசியமா செலவு பண்ண மாட்ட, பணத்தோட அருமை தெரியலனு மட்டம் தட்டுவாங்க.சுய சம்பாத்யம் இல்லாம யார் கையை எதிர் பார்த்து நின்னாலும் அது யாசகம் தான்!! புரியும்னு நினைக்கிறேன். " புரிந்தது என்று வேகமாக தலையசைத்தால்.

" டெஸ்ட்க்கு புதுசா நோட்டு போடு, இந்தா என் புக்கக எடுத்துக்கோ..,நாளைக்கு நடத்த போற டாபிக்ஸ்க்கு நீ தான் நோட்ஸ் எடுத்துட்டு வரணும்.காலைல புக்கும் நீ எடுத்த நோட்ஸ்ம்..என் டேபிலுக்கு வரணும் அதுக்கப்புறம் தான் கிளாஸ்க்குள்ள நீ போகணும். கிளாஸ் முழுக்க பாடத்த கவனிக்காம நோட்டு பின்னாடி கிரிக்கிட்டு எப்படா கிளாஸ் விடுவாங்க ஹெட் போன் எடுத்து காதுல மாட்டி பேசலாம் னு இருக்க கூடாது. அப்படி ஏதாவது எனக்கு தெரிஞ்சா தினமும் நீ தான் நோட்ஸ் எடுத்துட்டு வர மாதிரி இருக்கும் பார்த்துக்கோ "

"இனிமே ஒழுங்கா கிளாஸ் கவனிப்பேன் மேடம். இது மாதிரி நடக்காது "

" பாவம் அந்த பையன். நீ இங்க வந்து தூங்கிடுற அவன் நிலமை ? டிரைவ் பண்ணா ? அக்கௌன்ட்ஸ் பார்க்கும் போது வொர்க் பண்ணும் போது ஏன் செக்குல ஒரு ஜீரோ மாத்தி போட்டா கூட ரொம்ப கஷ்டப்பட வேண்டியதா இருக்கும் ப்ரீத். ப்ரீத் னு யாரும் அவன கூப்ட மாட்டோம். பி கே (PK) என்னோட ஸ்டுடென்ட் தான் ரொம்ப நல்ல பையன். கவிதை எல்லாம் நல்லா எழுதுற சப்ஜெக்ட் நோட்டில் எழுதாத வேற யாராவது பார்த்தால் இது பெரிய பிரச்சனை ஆகும். எல்லாரும் தான் லவ் பண்றாங்க, என்ன மட்டும் ஏன்? இப்படி கூப்பிட்டு பேசுற னு தோணுது தானே! உருப்படாதவங்கள பத்தி எல்லாம் எனக்கு கவலை இல்லை. என்னோட பெஸ்ட் ஸ்டூடண்ட் டைவர்ட் டாகி போறது நான் விரும்பல,நீதான் உன் பீலிங்ஸ் கண்ட்ரோல் பண்ண கத்துக்கணும். போக போக சரியாகிடும் எஜுகேஷன் இஸ் மோர் இம்போர்ட்டண்ட் தென் எனிதிங் நீ போகலாம் " என்றதும் ' மேடம் சர்டிபிகேட் தர அளவுக்கு அவ்ளோ நல்ல பையனா டா நீ ' நடப்பதை நம்ப முடியாமல் குழம்பியவளோ வெளியே வந்தாள்.

இருவரின் உரையாடலை மறைந்து நின்று கேட்ட கணினியியல் போராசிரியர் வேட்கையோடு உம்மத்தமாய் வகுப்புக்கு செல்லும் அவளையே பார்த்து கோணலாக சிரித்தபடி பின்னால் தொடர.

பவித்திரா உள்ளே நுழையவும் அவர் வரவும் சரியாக இருந்தது.மரியாதை நிமித்தமாய் ஆசிரியரை கண்டு ஸ்டுடன்ஸ் எழுந்து நின்று மீண்டும் அமர,

நேராக பவித்ரா பென்ச்க்கு அருகில் வந்து ஒவ்வொரு நோட்டாக எடுத்து ஆராய தொடங்கிட,
நடுங்கியவளோ" என்ன வேணும் சார்" என்று பதறியப்படி நடுக்கத்தோடு கேட்டதும். ஒரு மார்க்கமாய் பார்த்து சிரித்துவிட்டு அங்கேயே நிற்க.

பவித்ரா -" உங்களோட சப்ஸக்ட் மட்டும் எடுங்க சார். எல்லா நோட்டையும் ஏன் எடுத்து பாக்குறீங்க?"

"நான் என்ன பண்ணனும் நீ சொல்லத் தேவையில்லை. என்ன இதெல்லாம் காலேஜ் வர்றியா? காதலிக்க வர்றியா.
? "அவள் கவிதை எழுதி வைத்த நோட்டை எடுத்ததும் கூட அவள் பதட்டமும் சலனம் இல்லாமல் நின்றாள் பவித்ரா.
'பயப்படாம நிக்குறா ? வேற பொண்ணா இருந்தா அழுது கதறி இருப்பாளுக. திமிரா நிக்குறா ?'ஆச்சரியமாக அவளையே வெறித்தார் கணினி பேராசிரியர்.

இவளோ 'இது தூக்கி போட வேண்டிய நோட்டு தான். போனா போகுது' என்று எண்ணி அசல்டாக நின்றிட,

வேகமாக பனிஸ்மெண்டாக மேம் நோட்ஸ் எடுக்க கொடுத்த புத்தகத்தை கையில் எடுக்கவும் அதிர்ந்தவள் " சார் இது நோட்ஸ எடுக்க கொடுத்தது காலையில தரலைனா மேம் திட்டுவாங்க ப்ளீஸ் சார்.. " என கெஞ்சலுடன் தர சொல்லி கை நீட்டி நின்றவளை அழுத்தமாக பார்த்து வஞ்சமாய் சிரித்து கொண்டே.

" சி.எஸ் லேப் வந்து வாங்கிக் கோ " என்றதும் அவளின் உள்ளுணர்வு ஏதோ தவறு நடக்கப் போவதை ஆணித்தனமாக உணர்த்த, வேலி இல்லா பயிர் போல பாதுகாப்பு இல்லாத உணர்வு உள்ளம் முழுக்க வியாபித்து இருந்தது.அச்சத்தில் சிந்தை செயலிழக்க செய்வதறியாது தவித்தாள் பவித்ரா.

கல்லூரி முடிந்தவுடன் நேராக ஸ்டாப் ரூம் வந்து எம்.எஸ். மேம் அருகில் சென்றவள் " மேம் ஆனந்த் சார். உங்க புக்கை எடுத்துட்டு பொய்டாங்க. நான் எவ்ளவோ கேட்டும் கூட தரலை மேடம். மதியம் லேப் வந்து வாங்கிக்க சொல்றாங்க. அவர் பார்வையே சாக்கடை மாதிரி அழுக்கா இருக்கு. என்ன கறை படுத்திக்க எனக்கு விருப்பம் இல்லை. புக் விலை என்னவோ அதை நான் தந்துடுறேன்.

" அதெல்லாம் ஒன்னும் வேணாம் பவி. கம்யூட்டர் லேப்ல ஆளே இருக்காது நல்ல வேளை நீ போகலை. போய் எதாவது ஆகி நீ அவன் மேல கம்ப்ளைன்ட் பண்ணாலும். நீ காதலிக்கிறதை கண்டிச்சதனால பழிவாங்குவதற்கு வீண் பழி சுமத்துற னு உன் மேலே பழிய போட்டு தப்பிச்சுடுவான். இதோட அத விட்டுட்டா நீயுமே விட்டுட்டு பவித்ரா. அப்படி இல்லன்னா நாளைக்கு பாத்துக்கலாம்.

ம்.. சரி என்று தலையாட்டி, ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்ய போக, மாமனிடம் சொல்லி உதவி கேட்கலாமா? என போன் செய்தாள் பவித்ரா.

அவள் கண்ணாடி இதயங்களை வார்த்தைகளால் அடித்து உடைத்தான் மாமன்.அன்பில்லா அரக்கனாக!

" என்னடி நெனச்சிட்டு இருக்க? நீ இல்லாம நான் வாழ பழகிட்டேன். நீ இல்லைனா நான் நிம்மதியா தான் இருக்கேன். போன் பண்ணி உயிரை எடுத்துட்டு இருக்க ஏன் இப்படி ஓவரா சீன் கிரியேட் பண்ணிட்டு இருக்க, புடிக்கல புடிக்கலைன்னு என்னை மொத்தமா கொன்னுட்டு இப்ப என்ன அக்கறை ஆடுது? உன் தங்கச்சி கிளாஸ் ல தூங்கிட்டு இருக்காங்க சந்தீப். இவதான் டிஸ்டின்க்ஷன்ல கோல்ட் மெடல் வாங்குவா னு சொன்ன? படிக்க விருப்பம் இல்லனா வீட்டிலேயே உட்கார்ந்து கட டி . கஷ்டப்பட்டு படிச்சா அதோட வலி தெரியும். பணம் கட்ட தான் ஒரு இளிச்ச்சவாயன் உக்காந்து இருக்கேன் இல்ல? அதான் திமிருல நிக்குற, நீ உழைச்சு சம்பாதிச்சா பணத்தோட கஷ்டம் தெரியும். படிப்போட அருமை புரியும். நிம்மதியா உட்கார்ந்து படிக்க கூட எனக்கு நேரம் இருந்தது இல்ல டி. படிக்கிறது மட்டும் தான் உன் வேலையே அது பண்ண கூட உன்னால முடியல! என் மேல பாசம் காட்டி நடிக்கிற வேலை எல்லாம் வேணாம். இனிமே நான் போன் பண்ணாத வரை, எனக்கு நீ போன் பண்ண கூடாது. நான் அங்க இல்ல தான். ஆனா என்ன நடந்தாலும் எனக்கு தெரியும். இந்த மாதிரி கம்ப்ளைன்ட் இனிமே உன் மேல வந்துச்சுன்னா எப்பவுமே உன் கிட்ட பேச மாட்டேன் பவித்ரா..,"என்று ஆத்திரம் பொங்க போனை கட் செய்தவன்.மொபைலை சோபாவில் தூக்கி எறிந்துவிட்டு கோபத்தில் தலையை பிடித்து அமர்ந்து விட்டான்.

இங்கே பவித்ரா. கண்ணீர் வழிய வழிய துடைக்க கூட கை எழவில்லை,ஒரு நாளில் எவ்வளவு பிரச்சனையை தான் அவளும் தாங்குவாள். ப்ரீத் திட்டியதை விட.., அவள் அன்பை நடிப்பு என இழிவாக பேசியதை எண்ணி அழுது கொண்டே நின்றாள்.பேசியது ப்ரீத் தானா என்று நம்பவே முடியாதவளாய் விழிகளில் அருவி வடிவதை நிறுத்த முடியாமல், வண்டியை உயிர்பித்ததும் வேகமாக சீறியது அவள் ஸ்கூட்டி கோபத்தில் வேகத்தை அதிகரிக்க, வழியும் கண்களை துடைத்த வண்ணமே வாகனம் ஓட்ட முடியாமல், ஆள் அரவம் இல்லாத இடத்தில் நிறுத்தி கத்தி அழ தொடங்கினாள் பவி. வெகு நேரம் சென்றும் ஆற்றாமையோடு அழுது கொண்டே நின்றாள். தாயின் அழைப்பு வந்ததுமே, இயல்புநிலை திரும்பியவள் வேகமாக வீட்டிற்கு விரைய.!

வீட்டிற்க்குள் சென்று தன் அறையில் அழுதபடி அமர்தவள் அப்படியே கண்ணீர் வடிய.., வடிய.., தலை வலியால் தரையில் சாய்ந்து உறங்கிக் போனாள்.

இரவு நேரத்தில் முழித்தவள். எழ மனம் இல்லாது தரையில் கிடக்க, அழைப்பு வந்து கொண்டே இருந்தது. காலேஜ் பேக் ஒரு மூலையில் கிடக்க, வலியில் தலையை தூக்க முடியாமல் சிரத்தை அழுத்தி பிடித்து கொண்டு போனை பையில் இருந்து எடுக்க, ட்ரூ காலர் உதவியால் ஆனந்த்..ஆனந்த் காலிங் என்று வரவும் கோபம் ஏறி விழிகளில் அழுத்தம் கூடி,
பார்வை நரம்பு புடைத்து கண்கள் இரத்த நிறத்தில் சிவந்து நின்றது.

அவள் எடுக்காததால் குறுஞ்செய்திகள் வந்து குவிய, வாட்ஸ் ஆப் ல் "போட்டோ அனுப்பு டி" என்று வரவும், அடுத்து செய்ய வேண்டியது எல்லாம் முடிவெடுத்தவளாய் கால் அட்டர்ன் செய்தாள் பவித்ரா.

" சொல்லுங்க சார்."

"பாக்காம ஏன் போன ?கீழ்படிதல் தெரியாத பொண்ணா இருக்கியே " இரட்டை அர்த்தத்தில் பேசவும்.
கொதித்கும் நெஞ்சம் எரிமலையாகி வெடிக்கும் நிலைக்கு போய்விட, பேசி முடிக்கட்டும் என மௌனம் காத்தாள்.

"இங்க பக்கத்துல தான் என் ரூம் இருக்கு.கிளம்பி வர்றியா? நாளைக்கு கிளாஸ் நடத்த நோட்ஸ் எடுக்கனும் தான? பவி..த்..த்..ரா "குழைவான குரலில் வார்த்தை வர.

" ஆமா சார். இல்லைனா மேடம் கிளாஸ் உள்ள வரகூடாது னு சொல்லிட்டாங்க. "
" பச்..பச்.. ஓ.. அப்படியா?"என்று எதுவும் அறியாதவன் போல கேட்டான்.

"ம்..சரி..சரி.. கிளம்பி வா " நாம ரெண்டுபேறும் ஒன்னா சேர்ந்..தே ஏ வுக்கு அழுத்தம் கூட்டி சொன்னான். "நோட்ஸ் எடுப்போம் ஒரு மணி நேரத்துல பொய்டலாம் பவி"

மறுத்தாள் "இப்ப முடியாது சார்.. நீங்க கொஞ்சம் நோட்ஸ் எடுத்து வைய்ங்க,காலையில சேர்ந்து வந்து நோட்ஸ் வாங்கிகறேன் சார்."

" இன்னைக்கு ஏமாத்துன மாதிரி ஏமாத்த மாட்டல்ல? "ஏக்கமாய் கேட்க ?

"இல்லை சார் கண்டிப்பா வருவேன் வைச்சுடுறேன் " என்று கட் செய்தாள்.

'காலைல இருந்து என்ன அழ வைச்ச இல்லை டா.. சாவு டா ..," என இதுவரை போனில் நடந்த உரையாடலை கால் ரெக்கார்டர் சாதனத்தில் இருந்து வாட்ஸ் ஆப் ஷேர் செய்து மை டியர் மாம்ஸ்க்கு (ப்ரீத்) அனுப்பி விட்டு, தாங்காத பாரத்தை டெல்லியில் இருக்கவன் பார்த்துகுவான் என போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு அம்மா உன் போன் கொடேன் என்று வாங்கி ப்ளைய்ட மோட் ஆன் செய்து விட,

சுமதி "என்ன டி நெட் ஏ வரலை சுத்துது போனை வாங்கி என்ன பண்ண?"

"ஒன்னும் பண்ணல மா. நெட்வொர்க் பிரச்சினை ஆ இருக்கும். காலையில் சரி ஆகிடும் "

வாய்ஸ் நோட் கேட்டதும் ஒருவன் நெஞ்சம் வெடிக்கும் என்று குதுகலமாக உறங்க சென்றாள் பவித்ரா.
'யோவ்..ஆனந்த்..து உனக்கு ஆனந்தம ஆனந்தம் பாட நாளைக்கு என் மாமன் வரான்.
அவன் எடுப்பான் பாரு நோட்ஸ்..சு
ரூம்..கா என்னை கூப்பிடுற?

♥️ ஏக்கம் தொடரும் ♥️

♥️தொடரும்♥️
 
Status
Not open for further replies.
Top