உமா கார்த்திக்
Moderator




" இதெல்லாம் வைச்சு அவன ம..ய.. " என்று முடிக்கும் முன்னே அவன் இதழ்களை இறுக அழுத்தி மூடி விட்டாள் பவித்ரா.
"ம்..ம்...ம் " என அவன் திமிற, கைகளால் வாயை அழுத்தி மூடினாள்.
"ஸ்..ஸ்.. வார்த்தை விடாத வாபஸ் வாங்க முடியாது."
"ம்..கும்..ம்..ம்.... ம்ஹூம்.. ம் க்..க்கும் "தலையை ஆவேசமாக ஆட்டி ஆட்டி "ம்..கும்.." மொழியில் ஏதோ சொல்ல..நெருப்பில் நீந்தும் அவன் கனல் விழிகளை பார்த்து அஞ்சியே "ம்..கும்.. "ஐ முடிந்த வரை கிரகித்து அதற்க்கு பதில் தந்தாள்.
" பூ... வைச்சா உனக்கு பிடிக்கும். உன்ன பாக்க தான் அவன மயக்க இல்ல.!அவள் கை சிறையில் சிக்கிய அவன் சிற்பி இதழ்கள் மெல்ல விரிவதை.. உள்ளங்கையில் இதழ் தீண்டலின் எல்லை விரிவாக்கம் வைத்தே அறிந்தவள். பதிலாய் அவளும் புன்னகைக்க.. திடீரென கண்கள் சிவக்க, சீற்றத்தால் அவன் முகம் இறுகுவதை பார்த்தவள் அவனை பயபார்வை பார்த்திட .
ப்ரீத் அவள் விரல்களில் சிக்கிய திறவா இதழ்கள் மூலம் மறுபடி ஹம்மிங் பாட ஆரம்பித்து விட, இந்த முறை புருவ ஏற்ற இறக்கம். பார்வையின் காட்டம், முக பாவனை எல்லாம் உஷ்னம் ஏறிட்ட கொதிகலன் போல வெடிக்க தயாராகி இருக்க, தலையை சொரிந்தாள் "புரியலை கெட்ட வார்த்தையா ப்ரீத்"
என்று கேட்டதும் " ம்..ம்.. ம்" என்றான் தலையை மேலிருந்து கீழாக அசைத்து கைய எடுடி என பார்வையால் காதலன் கட்டளை இடடான்.
" ஐய்யய்யோ.. மாட்டேன் பா.. கண்ட கண்ட வார்த்தையில திட்டுவ, சந்தீப் அண்ணா மெசேஜ் பண்ணிட்டாங்க. நீ இங்க ரீச் ஆகிட்ட பயப்பிடாம இரு..னு. நீ வேணும் னு என்ன தவிக்க வைச்ச தான.., சரி சரி நாம பொறுமை ஆ..சண்டை போடலாம். முதல்ல சார் அ போய் பார்த்து, சார்கிட்ட இருக்க புக்க வாங்கிட்டு போகலாம்."
ப்ரீத்தின் மனமோ 'என்ன டி சொன்ன? அவன் சாரா..ஆ' என்று வெறி கொண்ட மிருகமாக அவள் விரல்களை கடித்து குதறிட"அம்மா ஆ.!" என்று வேகமாக அலறியே விட்டாள் பவித்ரா. வலியில் கைகளை உதறியவள் " நாயே ஏன்டா இப்படி பண்ண? புறம் கையை காட்டி
" பல் பதிஞ்சு இருக்கு பாரு வெறி மாடு " கடித்ததால் கைகள் சுருக்கென்று வலித்திட, அவன் பல் தடம் மீது ஊதி விட்டுக் கொண்டாள்.
" சாரு.. கீ..று ந.. வாயஉடைச்சுடுவேன் டி.. அதான் உங்க சார் கூப்டாருல போ..," என்று கதவின் புறம் பிடித்து தள்ளவும், மாட்டேன் என்று நடிங்கியபடி அவன் பின்னால் வந்து ஒழிந்தாள் பவித்ரா.
" நிஜமா தான் சொல்லுறேன்.நீ முதல்ல போ.. நான் பின்னாடி வர்றேன் "
" வேணா ப்ரீத்.
அந்தாளு டக்குன்னு கதவ சாத்திட்டா.! பயமா இருக்கு டா" போ.. என்று ப்ரீத் கண்களாலே சொன்னதும் கதவை தட்டினாள்.
" திறந்து தான் இருக்கு உள்ள வாங்க .. " என்று குரல் வரவும் பாவமாய் இவனை பார்த்து விட்டு தயங்கியபடி உள்ளே நுழைந்தாள் பவித்ரா.
" வீடு முழுதும் பரவிடும் சாம்பிராணி மணம் நாசியில் ஏறி சுகந்தத்தை பரப்பிட, சஷ்டி கவசம் பாடல் அறை முழுவதும் எதிராலித்தது நேர்மறை அதிர்வுகள் நிறைந்து காணபட , ஜவ்வாது நறுமணம் கமழ, விபூதியால் நெற்றி நிரம்பி அதில் நடுநாயகமாய் சந்தணம் குங்குமம் இட்டு, கழுத்தில் ஸ்படிக மாலையில் கந்த கடவுளை தாங்கி.! பூஜை அறையை விட்டு பக்திமான்னாக வெளியே அவர் வருவதை பார்த்த பவித்ராவுக்கு பேரதிர்ச்சி.! இவரிடமிருந்து நேற்று வந்த ஆபாச குறுஞ்செய்திகள் யாவும் கண் முன்னே ஒட, திகைத்து போய் நின்றாள்.!
"உட்காருமா.., ஏன் நிக்குற "என்றதும் சோஃபாவின் நுனியில் அமர்ந்தாள்."நல்லா படிக்குறபொண்ணு இப்படி கெட்டு போகலாமா? இது எல்லாம் உங்க வீட்டுக்கு தெரிஞ்சா என்ன ஆகும்?இனிமே இப்படி பண்ணாம நல்லா படி மா .. நோட்ஸ் எடுக்க எனக்கு நேரம் இல்லை. இரு புக்க எடுத்து தர்றேன். வாங்கிட்டு நீ கிளம்பு என்றவர் புத்தகத்தை எடுக்க அவரது அறைக்குள் நுழைய..அவரையே மிரட்சியுடன் எறிட்டாள் பவித்ரா. பயத்தில் சிந்தனை தொலைய, அறை கதவை வெறித்து பார்த்தபடி,சிலயென அமர்திருந்தாள் பேதை.ப்ரீத் அவள் அருகில் வந்து அமர்ந்தது கூட உணராமல் சிலையாக சமைந்தவளை, வேண்டும் என்றே பதற வைக்க தோளில் கை போட்டான் ப்ரீத்.
ஆனந்த் தொடுவதாய் நினைத்து பயத்தில் உடல் தூக்கிவாரி போட்டது அவளுக்கு "பிசாசு இப்படியா? வருவ பயந்துட்டேன்"பவித்ரா அருகில் கால் மேல் கால் போட்டு அமர்ந்துள்ள இவனைப் பார்த்ததுமே! ஒருவருக்கு தூக்கில் இட்டது போல் கால்கள் உதறல் எடுக்க சமாளித்தவர் நடுங்கிய படி இரண்டு கண்ணாடி டம்ளர் அடங்கிய பழச்சாறோடு வந்தார்."வாப்..பா நீங்க?"கேள்வியாய் இழுக்க"துணைக்கு வந்துருக்கேன் சார். ஆமா கிட்சன் அங்க இருக்கும் போது ரூம் உள்ள இருந்து கூல்டிரிங்ஸ் கொண்டு வர்றீங்க? ஏன்?" என்று சந்தேகம் கேட்க ?
"அது அது.. " பதறியபடி திருட்டு முழி முழித்தார் ஆனந்த்.
" மாத்திரை போடனுமா.. என்ன?இல்லை கை கால் எல்லாம் நடுங்குது. நரம்பு தளர்ச்சியா? பதட்டப்படாம பொறுமையா யோசிச்சு சொல்லுங்க சார். நான் இங்கதான் இருப்பேன். பவி போய் வீட்டை சுத்தி பாரு..நான் சார்ட கொஞ்சம் பேசிட்டு வரேன்..பவித்ரா ரூமை நோக்கி சென்றதும்"உங்கள மாதிரி யாரால பாடம் எடுக்க முடியும் தோள்களில் கை போட்டு கிச்சனுக்கு இழுத்து சென்றான் ப்ரீத்." என் பொண்டாட்டிடா அவ ரூம்க்கு கூப்டுவியா?" ஆக்ரோசமாய் அவன் வாயிலேயே தன் கைகளை மடக்கி மொத்த வலிமையை தேக்கி தொடர் குத்துகள் விட, உதடு கிழிந்து ரத்தம் வழிந்தது ஆனந்துக்கு தலையை பிடித்து கிட்சன் மேடையில் புட் பால் போல கோபம் தீரும் மட்டும் ஓங்கி .. ஒங்கி ..ப்ரீத் அடிக்கவும். தலை வீங்கி, புடைத்து புருவத்தில் கடையோரம் சிறிது வெட்டி ரத்தம் கசிந்தபடி இருக்க.! சட்டென்று அவர் வேஷ்டியை உருவினான் ப்ரீத். எதிர்பாராத செய்கையால் தடுமாறி கீழே விழுந்திட்டான் ஆனந்த். பொட்டலம் போல கால் கைகளை வேட்டியாலே சுற்றி கட்டி ஹாலில் மிதித்தபடியே உருட்டி விட்டு, வேகமாய் அறைக்குள் சென்றான் வீறு கொண்ட காளையாக!
அதி தீவிரமாக புக்கை தேடிக் கொண்டிருப்பவளை பார்த்ததும்.. தலையில் அடித்தபடி அருகில் வந்தவன்."என்ன பவி பண்ணுற?"
" அந்த லூசு பய புக்கை எடுத்துட்டு வறேன் னு போய் ஜூஸ் கொண்டு வர்றான். காலைல யாராவது ஜூஸ் குடிப்பாங்களா? ப்ரீத். "
அவனாடி லூசு! இந்த ரூம்ல எதுவுமே உனக்கு வித்யாசமா தெரியலை யா?ஒரு ஜன்னல் கூட திறந்து இல்லை. சேர் மேல கேமரா ஸ்டாண்ட் அட்டென்ஷன்ல ஏன் நிற்குது? பார்த்தியா இல்லையா!"
" அவன் வீட்ல எங்கயோ எதையோ வச்சிருக்கான். நமக்கு என்ன? ப்ரீத்." என சலிப்பாய் முகம் சுழித்தாள்.
மெல்ல அவள் விரல்களை பிடித்து இழுத்து மெத்தையின் முகப்பில் அமர வைத்தான் ப்ரீத். கேமரா ஸ்டான்ட் அருகே சென்று, அவன் மொபைலை அதில் மாட்டியவாறு பவித்ரா மொபைலிற்க்கு வீடியோ கால் செய்தான்.வேகமாக ஓடி வந்து அவள் அருகில் அமர்ந்து கொண்டு கால் ஆன் செய்து " பாருடி" என்றதும்
"ப்ச்..என்னடா? " என்று மடியில் கிடந்த ஃபோனில் இருவரும் மெத்தையில் அமர்ந்து இருப்பது வீடியோ காட்சிகளாய் தெரிய.. பவித்ரா அதிர்ந்தாள்.!
பயத்தில் இதயமே உறைந்து போனது அவளுக்கு.!!"அப்போ.. இது எதுக்கு? ப்ரீத்." கேமரா ஸ்டாண்டை ஐ விரல் நடுநடுங்க சுட்டி காட்டியவள் பதறியபடி கேட்கவும்.
"அதுக்கு தான் " என்றதுமே பேச்சற்று போய்விட்டாள். சுவாசம் தடைபட்ட உணர்வு முகத்தை மூடி அழ தொடங்கினாள் பவித்ரா. நடக்காத நிகழ்வுகளை நினைத்து நினைத்து நடுக்கம் கூடியது அவள் அழுகையை சகிக்க முடியாமல்
" பவி.. "என்று அழைத்து எழுந்து சென்று அவள் முன் நின்றான். இடுப்போடு அவனை அணைத்து அஞ்சியபடியே குலுங்கி அழுதாள். விதிர்விதிர்த்து உடல் வெளிறி நா தழுதழுக்க.. "ஏன்டா தேம்பியபடி வார்த்தைகள் வர, "அவருக்கு ஒரு பொண்ணு இருக்கா? என்ன விட ரெண்டு வயசு சின்னவ தான்.! எப்படி இவனால மக வயசுல இருக்க பொண்ண த.. " வார்த்தை வராமல் அழுகை தொண்டையை அடைத்தது. மேலும் திக்கி திக்கி விசிம்பலோடு அழுதாள் பவி.
" அவன் வீட்ல இருக்க பொண்ணுங்கள தான் பொண்ணா பாக்குறாங்க. அடுத்தவங்க வீட்டு பொண்ணா இருந்தா தப்பா தான் பார்க்கிறாங்க. நாம தான் பாதுகாப்பா இருக்கனும். "
" எனக்கு இங்க இருக்க பிடிக்கலை டா வா போகலாம்."
" இரு குளிச்சிட்டு வர்றேன். ரத்தம் தெறிக்க தெறிக்க சம்காரம் தான். கரைப்பான் பூச்சி மாதிரி அவன கட்டிப் போட்டு வைச்சுருககேன்.
" நிஜமா.. வா " சந்தோஷம் மிளிர கேட்டாள். "ம் பசிக்குது டி " அவன அடிக்கிற வரை அன்னம் தண்ணீ இறங்கல,வயிறு பிடிச்சு இழுக்குது டி.."என்று குளியல் அறையில் நுழைய
பசி.. என்றவன் விழிகள் பட்டனியை பறை சாற்ற.. மனம் தாளாமல் துடித்தாள் பாவை.
கிச்சன் நோக்கி சென்று ஆராய தொடங்கினாள். துடைத்து வைத்தது போல் இருக்க பகைவன் வீட்டில் பால் ஆவது உள்ளதா என ஃபிரிட்ஜ் ல் தேடி எடுத்து தேநீர் தயாரித்து.. இரு கப்பில் எடுத்து வந்து ஹாலில் அமர்ந்தாள் பவித்ரா.எங்கேயோ கேட்கும் பாடல் இன்பத்தை அள்ளி தெளிக்கும்.அதுபோல இந்த பாடல் காதில் விழ புன்னகை பூத்தது அவள் இதழ்கள் குளித்து முடித்து வந்தவன் டீயை பார்த்ததும், பட்டினி காரனோ ஓ.. உயிர் பானமாய் டீயை எடுத்து பருகிட, வாகாய் அவன் தோள் மீது சாய்ந்து கொண்டாள் தேவதை.வலது கையில் சாய்ந்ததும் " டீ குடிக்க விடுடி " என திட்டினான்.
"பீல் பண்ண விடு டா.. " என அவனை திட்டிக் கொண்டே இன்னும் இறுக அணைந்தால் அவன் தோளோடு . கண்களில் ஆனந்த கண்ணீர் கீற்றிட்டது.! காரணம் பாடல் வரிகள்..
" பாவாடை அவிழும் வயதில் கையிறு கட்டிவிட்டவன் எவனோ தாலி கட்ட வந்தவன் அவனே உறவானவன் கொழுசுயிடும் ஓசை கேட்டே மனசில் உள்ள பாஷை சொல்வாய் மழை நின்ற மலரை போல பதமானவன்உறவெல்லாம் ஒன்றாய் ஒன்றாய் கூடியவன் "
வேகமாக ஆனந்த் கைக்கட்டுகளை எடுத்து விட்டவன். பவித்ராவை தன் தோளோடு சேர்த்தணைத்து என் பொண்டாட்டி டா கொன்றுவேன்" விரல் நீட்டி எச்சரித்து..வெளியே வந்தான் ப்ரீத்.
ஸ்கூட்டியை ஸ்டார்ட செய்தபடி பவி கேட்டாள் " ஆமா அவன அடிச்ச சரி, யார கேட்டு என்ன உன் பொண்டாட்டி னு சொன்ன?"சிறுவனாக உதட்டை பிதுக்கி கையை கட்டி, வண்டியில் ஏறாது முறுக்கியபடி திரும்பி நின்றான்.
வஞ்சியின் உரிமைகாரன்.
"வாடா "அவள் அழைத்தும் திரும்பவில்லை ப்ரீத். " சும்மா கூட பொண்டாட்டி னு சொல்ல கூடாதா?"என்று எரிச்சல் ஆனான். அந்த இடத்தை விட்டு ஸ்கூட்டி போகும் சந்தம் வந்ததும் திரும்ப சென்றே விட்டாள் பவித்ரா.
"ஏய்.." கத்தியபடி பின்னால் ஒட, அவளிடம் இருந்து அழைப்பு வரவும் " ஹலோ.! என்ன திமிராடி..,"என்று கத்தினான் ப்ரீத்.
"இல்லையே.., கூப்டப்ப நீ தான
வரலை "
"ம்.. "ஓடியதால் அவன் மூச்சு வாங்கும் சத்தம் கேட்டது இவள் செவியில்" வரியா.. போக வா? " அழுத்தமாக கேட்க,
"போ " என்றான் கோபமாக மாமன்.
"ம்ஹூம்.. நீயும் வா "
ப்ரீத் "எத்தனை கிலோ மீட்டர்க்கு அங்குட்டு இருக்க கால் வலிக்கும் டி.., " "வலிக்கட்டும் மாமா. "
"எதுக்குடி என்ன ஒட விடுற? " வேகமாக வந்ததில் மூச்சு வாங்க.. "பசியில ஒட விடறது பாவம் இல்லையா? "
"இல்லை.." தீர்க்கமாக சொன்னாள்பவித்ரா." உயிர எடுக்காத.., - பேசாத அக்கறை ஆடுதா, நீ சொன்னது தான?அப்ப அது பாவம் இல்லையா?
"சும்மா... சொன்னேன் பவி. நீ பேசலனா மனசு வலிக்கும் டி.."
" கிழிக்கும்.. நடிக்காத டா.. வீட்டுக்கு போலாமா? " என கேட்டதும்
வேண்டாம் என்று தலை அசைத்தான்.
"ஏன் டி வீட்டுக்கு கூட்டு போய் அடி வாங்கி கொடுக்கலாம் னு ஐடியாவா? போன வாட்டி வந்ததுக்கு எவ்வளவு திட்டு வாங்குனேன் தெரியுமா? நான் சும்மா வரமாட்டேன்கிறது அவங்களுக்கு தெரியும்.அத்தைக்கு எதுவும் தெரிய வேணாம். அப்புறம் நான் உன்கிட்ட பேசினது எல்லாமே தப்பு தான் ஸாரி.., என்கிட்ட இப்படி பாசமா பேச மாட்டியான்னு எவ்வளவு நாளா ஏங்கி இருக்கேன் தெரியுமா? இப்பல்லாம் பாசமா பேசுறியா.!! அப்படியே சொர்க்கத்தில இருக்குற மாதிரி இருக்கு.அத்தைக்கு படிப்பு ரொம்ப முக்கியம் கொஞ்சம் மார்க் குறைஞ்சாலே நான் சொல்லி உனக்கு தெரிய வேணாம். என்னால அடி வாங்குவ னு பயம் வந்துருச்சு, அதான் அப்படி சொன்னேன். நீ பேசாம இருந்தா என்னால முடியல டி.. சுகமான ஒரு அவஸ்தை நீ.. உன்கிட்ட பேசிக்கிட்டே இருக்கணும் போல இருக்கு.தனியா இருக்கிறதுனால உன்னை ரொம்ப தேடுறேன் டி.ஒரே வீட்டுல இருக்கும் போது கூட இவ்வளவு நெருக்கமா இருந்ததில்லை. எல்லாமே நீ தான் டி இப்ப எனக்கு உன்கிட்ட பேசறதுக்காக சீக்கிரமா விடியுது. உன்னோட முகம் பார்த்துட்டே என்னோட இரவு முடியது. லவ்வர்ஸ் மாதிரி பேசிக்கிறோம் இல்ல.! என்றான் அவளை ஏக்கத்தோடு பார்வையால் வருடியபடி,
" மாதிரி தானா.? " குரலில் ஏக்கம் வழிய கேட்டாள்.
" பவி.. என்ன லவ் பண்ணா சொல்லிடு டி.. நீ வேணும் னு ஏங்கி நிக்கிற எனன தவிக்க விடாத டி மாதிரி தானா..! அதுக்கு அர்த்தம் என்ன.?
"நான் சாதாரணமா தான் பேசுறேன். நீ தான் வேற மாதிரி யோசிக்குற போலாம் வா.." 'காதல் ஈஸியா கிடைச்சிடாது தவிச்சு துடிச்சு ஏங்கி கிடைச்சா தான்.. அதுக்கு மதிப்பு இருக்கும் மாம்ஸ்.'
அவள் பின்னால் அமர்ந்து ஆதங்கமாய் மனகுமுறலை கொட்டினான் வார்த்தையாக, "ஏன்டி ஒரு ஆறுதலுக்காக என்னை காதலிக்கிறேன் னு சொல்லலாம் இல்ல"வண்டியை ஒட்டியபடி.. சைடு மிரரில் தெரியும் அவன் முகம் பார்த்து நகைத்தவள் " ஒய்.. உன்ன போய் நான் லவ் பண்ணுவனா.? பாசமா பேசுறதுக்கும் காதலா பேசுறதுக்கும் கூட உனக்கு வித்தியாசம் தெரியாதா?"
ப்ரீத் " லவ் பண்ற மாதிரி பாப்பிங்க, லவ் பண்ற மாதிரி பேசுவீங்க.., அது புரிஞ்சுகிட்டு நாங்களா கேட்டா? பாசம் னு பாயாசம் கிண்டுவீங்க, இப்பதான் இல்ல பிற்காலத்தாலத்துல எதாவது வர வாய்ப்பு?" பதபதப்புடன் அவள் பதிலுக்காக காத்திருக்க.
" ம்.. பாக்கலாம். என்று கூறி நேராக ஒரு கோயில் முன் நிறுத்தி விட்டு, கையை பிடித்து உள்ளே அழைத்து சென்றாள்.அங்கு தரிசனம் முடித்து கோவிலின் பக்க வாட்டில் கார்டன், பச்சை பசேலென்று பசுமை போர்த்தி இருக்க.! ஆங்காங்கே பருமனான மரங்கள் பெரிய அளவான பச்சை நிற காலன் குடை போல வெயில் படாத வண்ணம் மரங்கள் குடை பிடித்து கொண்டு நின்றிட!! பறவைகள் இளைப்பாற கிளைகளில் தஞ்சம் புகுந்தது. ஆள் இல்லாத மறைவிடத்தில் காதல் வளர்க்க சிலர்.. இதையெல்லாம் நோட்டுமிட்டவாறு அவள் பின்னால் இவன்.மரத்தின் நிழற்குடையில் இடைவெளி விட்டு அமர்ந்தனர் ப்ரீத் பவி இருவரும். பையை துலாவி டிபன் பாக்ஸ் எடுத்து அவனிடம் நீட்டினாள். வெடுக்கென்று பிடிங்கியவன் சாப்பிட்டு முடித்ததும் தான் அவள் முகத்தையே நிமிர்த்து பார்த்தான், அவ்வளவு பசி.
" தூ... சாப்டுறியா னு ஓரு வார்த்தை? சோத்துக்கு செத்த மாதிரி ஏன் டா?
" தண்ணி இருக்கா?" அவள் முறைக்கவும் அவள் பையில் இருக்கும் பாட்டிலை எடுத்து கை கழுவியவன் அவன் பேக்கில் வாங்கி எடுத்து வந்த அவளுக்கு பிடித்த ஸ்நாக்ஸ் எல்லாம் அடங்கிய கவரை தந்து " தூக்கம் வருது சாப்பிட்டுகிட்டே மாமா வ சைய்ட் அடி " என்றவனோ.., வானம் பார்த்து புல்தரையில் படுத்துவிட, மெல்ல அவன் ஷூ வை கலட்டி விட்டு வலது கை விரல்களால் பாதங்களை மெல்ல அமுக்கி பிடித்து விட்டபடி இடது கையில் மோபைலில் வீடியோ பார்த்தாள் பவித்ரா.
ப்ரீத் தலையை மட்டும் உயர்த்தி"என்னமா பண்ற?" " சேவை" என்று மீண்டும் தொடர இப்படி காலில் செய்ததும் வலிகளுக்கு இதமாக இருக்க நொடியில் உறங்கினான். அவன் உறங்கும் வரையில் தான் செல்போன் திரையில் கண்! உறங்கிய உடனே அவன் மீது லயித்தாள். கண் கருத்து இதயம் எல்லாமுமே.. அவன் மீதே.!!பரவி கிடந்தது.
உறக்கம் கலைந்ததும் ட்ரெயினுக்கு நேரம் ஆனதால் பதறி ரயில்வே ஸ்டேஷனில் பவித்ராவை ட்ராப் செய்ய சொன்னான் ப்ரீத். இரயில் நிலையம் முன்னால் இறங்கியவன்.
" ஏன் ரூம்ல உட்கார்ந்து அப்படி கட்டிபிடிச்சு அழுத? கேட்டநொடி,அவனை பார்த்து" நீ வராம.., "
" நான் வருவேன் உனக்கு தெரியும்." என்றதுமே புன்னகைத்தாள்.
அவள் கையில் கவர் ஒன்றை தந்து "இந்த டிரஸ் போட்டு பார்த்து போட்டோ அனுப்பு.. " என்றான்." என்னடி போனவாட்டி வந்தப்ப,
சின்ன புள்ள மாதிரி வந்தவுடனே டிரஸ் வாங்கிட்டு வரலையானு சோகமா கேட்ட?
இப்ப என்ன வளந்துட்டியா? திருந்திட்டியா.." என சந்தேகமாய் அவளை பார்த்து கேட்டான்.. ப்ரீத்.
அவனை வைத்த விழி அகலாது பார்வையால் தின்றவள் "
இவ்ளோ டென்ஷன்லையும் உனக்கு இதெல்லாம் ஞாபகம் இருக்கா? " வண்டியில் அமர்ந்தபடி கேட்டதும், மெல்ல அவள் கண்ணம் நோக்கி குனிந்தான் ஆண்மகன்.
முத்தம் என்று பயந்தவள் கண்களை சட்டென மூடி.. ஸ்டேரிங் ஐ அழுத்தி பிடித்தாள்.
" எங்கே நான் போனா என்ன
எண்ணம் யாவும் இங்கே தான்." என்று பாடியபடி அவள் முகம் பார்த்து பின்னாலே நடந்தவன் தன் கையால் கழுத்து நெறிப்பது போல் பாவனையுடன்
"உன்னாலே தூக்கம் போயாச்சு
உள்ளார ஏதேதோ ஆயாச்சு" ஷாக் அடிப்பது போல உடலை உதறவும் அவன் செய்கையை பார்த்து வாய் விட்டே சிரித்து விட்டாள் பவித்ரா.
அவள் சிரிப்புடன் நிம்மதியாக டெல்லி பயணித்தான் ப்ரீத்.