priya pandees
Moderator
அத்தியாயம் 8
பௌர்ணமி, அவன் இடித்துச் சென்ற வேகத்தில் மூக்கை தேய்த்துக் கொண்டே திரும்பி முறைத்தவள், அவனிடம் திரும்பவும் சென்று நின்று சண்டை பிடிக்கவே ஆயாசமாக இருக்க, வலித்த மூக்கு வேறு, 'என்னை கவனி!' என்றழைத்ததில், உள்ளே சென்று பிள்ளைகளின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாது என தோன்ற அறைக்குள் செல்லாமல் லான்ச்சில் இருந்த குளியலறை சென்றாள். அறைக்குள் மூன்று பேரின் சத்தமும் இவள் பூட்டிய கதவினுடும் நன்கு கேட்டது.
"என்ட்ட ஒரு மூஞ்சு பிள்ளைங்க முன்ன அப்படியே வேற மூஞ்சு" என புலம்பியவாறே கண்ணாடியில் பார்க்க, அவள் நிறத்திற்கு நன்கு சிவந்துவிட்டிருந்தது மூக்கு.
அங்கு அவன் சிரிப்பு சத்தம் பளீரென்று கேட்க, கடுப்பானவள், "குஹன்!" என பல்லை கடித்து கத்த, பிள்ளைகளிடம் நின்றவன், "ட்ரஸ் மாத்துடா கிருத்தி. ரெண்டு பேரும் டிஸ்கஸ் பண்ணி லஞ்ச் டிசைட் பண்ணுங்க. ஆர்டர் பண்றத கண்டிப்பா ஃபினிஷ் பண்ணணும். அம்மாவுக்கு என்ன ஹெல்ப்புன்னு கேட்டு வந்துடுறேன்" என சொல்லிவிட்டே மனைவி அழைப்பிற்கு வந்தான்.
"இப்படி நல்ல பிள்ளை மாதிரி பேசி பேசித்தான் என்னையும் பதினாறு வயசுலயே ப்ராக்கெட் பண்ணியாச்சு" என வார்த்தைகளை கடித்து துப்ப, கதவை லேசாக ஒருக்களித்து தான் சாற்றி வைத்திருந்தாள். அதனால் அவள் பேசியதை கேட்டே குஹன் பட்டென்று திறந்து வர, அதில் திடுக்கிட்டு பயந்தவள் கையிலிருந்த மோதிரத்தால் அதே மூக்கில் மறுபடியும் இடித்துக்கொள்ள, வலியில் கண்கள் கலங்கியது.
"என்ன சித்து? அவசரமா கூப்பிட்ட? டைம் டிசைட் பண்ணிட்டியா?" என வந்து அவள் பின்னால் நின்றான் சின்ன சிரிப்புடன்.
"மெதுவா வந்த என்ன குஹன்?" என்றவள் இன்னும் கண்ணாடியில் தன் மூக்கை இந்தப்பக்கம் அந்தப்பக்கம் என திருப்பி பார்த்திருக்க,
"நீ கத்தினதுல அவசரமோன்னு ஓடி வந்தா மெதுவா வந்தா என்னென்ற?" என்றவன் அவள் அணிந்திருந்த ப்ளௌஸின் கழுத்தின் புறம் மற்றும் மாராப்பின் பக்கம் என இழுத்து எட்டிவேறு பார்த்து, "ட்ரெஸ்குள்ள பல்லி, கரப்பான் எதுவும் விழுந்துட்டோன்னு ஓடி வந்தேன் சித்து. பட் இங்க அதெல்லாம் கிடையாது. ஃபுல் பெஸ்டிசைட் கண்ட்ரோல்" என்றவனை தலையை மட்டும் திருப்பி யோசனையாக பார்த்தாள்.
"என்னடி? நிஜமா தான் சொல்றேன். ரூம் சர்வீஸ்ல வேணா கேளேன்?" என்றவாறு சுவற்றில் சாய்ந்து நின்றவனிடம் அவ்வளவு நக்கல் தெறித்தது.
"நீங்க நல்லா பேசுவீங்கன்னு தெரியும். ஆனா இப்படிலாம் என்ட்ட பேசுனதில்லையே? என்ன புதுசா ட்ரை பண்றீங்க?" என்றாள் இன்னுமே சந்தேகமாக. அவளுக்கு சந்தேகம் இல்லை என்றாலும் உறுத்தல் உண்டு அந்த பல்லவியோடு இவனுக்கிருக்கும் பழக்கத்தில். அதனால் எல்லாமே ஆராய்ச்சியாக தான் பார்க்க வைத்தது, சந்தேகமும் கொள்ள வைத்தது.
அதற்கு ஏற்றவாறு தான் குஹனும் நடந்து கொண்டிருந்தான். அவளை காதலித்திருக்கிறான், அன்பாக, காமமாக கட்டி அணைத்திருக்கிறான், கடந்த பத்து வருட வாழ்க்கையில் அந்தரங்கமாக கூட அவளிடம் நிறைய பேசியிருக்கிறான்.
ஆனால் விளையாடிதில்லை, மனைவியானவளை சீண்டி விளையாடியதில்லை, நக்கல், நையாண்டி என கணவன் மனைவிக்கான குறும்பு விளையாட்டுகளை அவன் அவளிடம் விளையாடி காண்பித்ததில்லை. அதில் இருவருக்குமே சமமான பங்கு உண்டு. அவளுக்கு அதெல்லாம் பிடிக்காது என்று அவனும், காதல் என்றால் இதுதான் என்ற வட்டத்திற்குள் அவளும் இருந்து கொண்டிருக்க, இப்போது அணைத்தும் இருவருக்குமே புதிதாக இருக்கின்றது.
அவள் ஆராய்ச்சி பார்வையை ஒருசில நொடிகள் உள்வாங்கியவன், "சரி பேசல விடு. நா சொன்னதும் இந்தியால இருந்து இங்க வர வந்து நிக்றியே, அப்டிலாம் வரக்கூடிய ஆள் இல்ல தான நீ? ஆனா வந்த பாரு அதனால் வந்த பாசத்துல நானும் இப்போ ஓடி வந்துட்டேனோ சித்து?" என்றான் அவளிடமே கேள்வியாக,
அதில் அவனை அசட்டை செய்து, மீண்டும் கண்ணாடியின் புறம் திரும்பி, "ம்ச். என் மூக்கை என்ன பண்ணி வச்சுருக்கீங்கன்னு முதல்ல பாருங்க" என்றாள் வலியின் எரிச்சலோடு.
"எங்க பாப்போம்" என அவளை திருப்பி தன்னைப் பார்க்க நிறுத்திக்கொண்டு, கன்னத்தை அழுத்தி பிடித்து அருகில் இழுத்தான்.
"விடுங்க இப்ப கன்னமு சேர்ந்து வலிக்குது" என அவன் கையை தட்டிவிட,
"இதெல்லாம் அநியாயம்டி. ரெண்டு பிள்ளைய நா இப்படிலாம் அமுக்காமலா பெத்துகிட்ட? புதுசு புதுசா பண்ணாதன்னு கொஞ்சம் முன்னாடி தானே வார்ன் பண்ணேன்?" என்றான் முறைப்புடன்,
"என்னையும் பேச வைக்காதீங்க. நா எதையும் புதுசா பண்ணல. நீங்க தான் ரொம்ப ட்ஃப்ரெண்டா இருக்கீங்க. என் புருஷன்ட்ட தான் நா பேசிட்ருக்கேனான்னு எனக்கே டவுட்டா இருக்க அளவுக்கு இருக்கு உங்க சேஞ்சஸ். இவ்வளவு நாள்ல நமக்குள்ள இந்த வயலன்ஸ் தான் இல்லாம இருந்தது இப்ப புதுசா அதையும் கொண்டு வர்றது நீங்க தான்"
"ஓ!" என அவள் கன்னத்தை விட்டு, "அவ்வளவு சாஃப்ட்டா உன்ன டீல் பண்ணவன்ட்ட, நீ ஏன் சித்து டிவோர்ஸ் கேக்குற? ஆமா டிவோர்ஸ்கு என்ன ரீசன் சொல்லாம்னு ப்ளான்?" என்றவாறு இன்னும் அவளை நெருக்கி நிற்க,
பின்னால் சிங்க்கில் சாய்ந்து நின்றவள், "ம்யூச்சுவலா குடுக்க ரீசன் தேவையில்ல. நீங்க சைன் மட்டும் பண்ணா போதும்" என்றாள் அவன் நெஞ்சில் கைவைத்து பின் தள்ள முயன்றுகொண்டு,
"மத்தவங்களுக்கு தேவை இல்ல தான். எனக்கு சொல்லு சித்து. என்ன ரீசன் குடுப்ப? கல்யாணத்துக்கு முன்ன காதலிக்கும் போது உன்னோட தனியா ரூம் போடலன்னா? இல்ல கல்யாணத்துக்கு அப்பறம் உடனே குழந்தை வந்துடுச்சுன்னா?" அவன் கேள்விகள் அனைத்தும் ஏறுக்குமாறாகவே இருக்க, புரியாமல் பார்த்தாள்.
"ஒருவேளை உனக்கு நா குடுத்த ஃப்ரீடம் பத்தலன்னு கொடுப்பியோ?"
"நீங்க எதுக்கு எனக்கு கொடுக்கணும்? நா என்ன உங்களுக்கு அடிமையாவா இருக்கேன்?"
"இல்ல தானே? எல்லாம் உன் இஷ்டம் போல தானே இருக்கு? அப்றம் டிவோர்ஸ் வாங்கிட்டு புதுசா எத தேடிக்க போற? வேற மேரேஜ் பண்ணிக்க போறியா?" என்றவன் அவளின் இடுப்பில் கைகொடுத்து தன்னோடு இழுத்தணைக்க,
"இதோ இப்படி ரொம்ப ரொம்ப அசிங்கமா பேசுறீங்கன்னு குடுப்பேன் போதுமா?" என்றவள் ஒரே தள்ளில் அவன் கைக்குள்ளிருந்து வெளி வந்திருந்தாள்.
"ஏன்டி உன்ன நா கட்டிபிடிக்குறதும், நீ எனக்கு பேபி பெத்து தர்றதும் எப்பிடிடி அசிங்கம் ஆகும்?"
கண்ணை விரித்து அதிர்ந்தவள், "எப்படிலாம் மாத்தி பேசி தப்பிக்கிறீங்க? அவ்வளவு ஈசியா இறங்கி வரமாட்டீங்கன்னு உங்கள பத்தி தெரிஞ்சும் கிளம்பி வந்தேன்ல நாந்தான் முட்டாள். இப்ப நா குளிக்கணும். வெளிய போங்க"
"என்ன பத்தி எவ்வளவு நல்லா தெரியும் சித்து உனக்கு?"
"வாய்ல வட சுடறதுல விசாலாட்சி அம்மையாரோட ஜெராக்ஸா வந்த மகன்னு நல்லா தெரியும்"
"அப்ப தப்பிக்க முடியாதுன்னு சொல்ல வரியா? சோ கேஸ வாபஸ் வாங்கிக்க போறியா?"
"நா வாபஸ் வாங்கணும்னு தான் இவ்வளவும் பேசுறீங்களா? அவ்வளவு லவ்வா என்மேல?"
"ம்ம்ம் லவ் மேரேஜ் தானே பண்ணோம்? உனக்கு அதுல என்ன ட்வன்டி இயர்ஸ்கு அப்றம் டவுட் வந்துருக்கு?"
"தலை வலிக்குதுங்க. ப்ளீஸ்" என முகத்தை இரு கைகளாலும் மூடிக்கொண்டாள்.
அவள் தலையில் லேசாக தட்டி, "இல்லாத மூளைய அதிகமா யூஸ் பண்ண ட்ரை பண்ணா தலை வலிக்கதான் செய்யும்" என்றவன் விருட்டென்று வெளியேறிவிட்டான்.
சற்றுநேரம் அப்படியே சுவற்றில் சாய்ந்து நின்றுவிட்டாள்.
அங்கு இந்தியாவில், விசாலாட்சி விசுவநாதரிடம் ஒரு பாட்டு பாடிவிட்டு அடுத்ததாக அழைத்தது நிலனுக்கு தான். காந்திமதியை நேரடியாக அழைத்து பயம் காட்ட கூடாது என்ற நல்லெண்ணம் அவரிடம் எப்போதும் உண்டு.
சேலத்தில் அதே அரசாங்க மருத்துவமனையின் அலுவலகத்தில் அவன் அப்பாவின் வேலையில் தான் இருந்தான் நிலன். அதனால் அவன் வேலை நேரம் முடிய காத்திருந்து கணித்து தான் அழைத்திருந்தார்.
அப்போது தான் அவனும் வீட்டிற்கு வந்திருக்க, அக்கா சென்று சேர்ந்துவிட்ட செய்தியையும் அப்போது தான் பார்த்தவன், "அக்கா ரீச் ஆகிட்டாளாம்மா" என அருகில் டிவியை பார்த்து கொண்டு அமர்ந்திருந்த காந்திமதிக்கும் சொல்ல, அந்நேரம் தான் அழைப்பில் வந்தார் விசாலாட்சி.
"சித்துவாடா?"
"இல்ல அவ மாமியார். அக்கா ஃபோன் பண்ணி சொல்லலன்னு நினைக்கிறேன். மாமாக்கும் ஃபோன் அடிச்சு அவரும் எடுக்கலையோ என்னவோ எனக்கு கூப்பிடுறாங்க" என காந்திமதிக்கு கூறியவாறே அழைப்பை ஏற்று காதில் வைத்தான்.
"ஹலோ அத்த!"
"ஏன்டா உன் அக்கா என்ன முடிவுல கிளம்பி போயிருக்கா?"
"அதான் நேத்தே சொன்னேனே. டிவோர்ஸ் பேப்பர்ல சைன் வாங்க தான்"
"கொன்னேபோடுவேன் எகத்தாளம் பேசிட்ருந்தனா"
"யாரு நானா? சரி விடுங்க. அக்கா அங்க போய்ட்டு சொல்லலையா? அங்க டைம்கு பத்து மணிக்கு ரீச் ஆகிட்டாளாம். மெசேஜ் போட்ருக்கா. நானும் இப்பதான் பார்த்தேன்"
"அவ அங்க போனத மட்டுந்தான் சொன்னாளா? அவ தான் வேணும்னு கட்டுனவன் கூட ரூம்ல தங்க மாட்டேம்னு தனி ரூம் எடுத்து தங்கிருக்கேம்னு சேர்த்து சொன்னாளா?"
"அதெல்லாம் சொல்லல அத்த"
"சொல்லமாட்டா. அவதான் எதையுமே சொல்லிட்டு செய்ய கூடாதுன்னு கங்கனம் கட்டிட்டு அலையுறாளே"
கண்ணை கட்டியது இவனுக்கு, "எல்லாம் உங்க பிள்ளை பாத்துப்பாரு அத்த. அவங்க என்ன புதுசா கல்யாணம் ஆனவங்களா நாம விரட்டிட்டே இருக்க?"
"உன் அக்கா நல்லா பார்க்க விட்ருவா. ஏன்டா ரெண்டு பேரும் சேர்ந்து பிள்ளைகள அலைகழிக்க பாக்குறாங்கன்னு சொல்லுதேன்ல"
"பேசாம நாமளும் ஸ்காட்லாந்து கிளம்பி போய் ஆளுக்கொரு ரூம் போடுவோமா அத்த"
"குடும்பமா போயி குளிக்க அங்க என்ன குத்தால அருவியா கொட்டுது?"
"ஜாலி மூட்ல இருக்கீங்களா அத்த?"
"அடேய் நிலனு. உண்மையா உன் அக்கா வேணாம்னு முடிவெடுத்துபோட்டாளோடா?" என்றார் திடீரென சோர்வாக.
"உங்க மகன் அப்படி அவர வேணாம்னு சொன்னா என் அக்காவ விட்ருவாரா அத்த?"
"அவன் ஒரு அகம்புடிச்சவம்டா. என்னைய எப்புடி நீ வேணாம்னு சொல்லாம்னே அவ கேட்குறத குடுக்க மாட்டாம்னா பாரு"
"அவ்வளவு தான். பின்ன எதுக்கு கிடந்து அல்லாடுறீங்க?"
"இருந்தாலும் இதெல்லாம் என்ன விளையாட்டுங்கேன். பிள்ளைக எதிர்காலம் என்னாவும்னு யோசிக்க வேணாமா? இப்படி எனக்கா உனக்கான்னு நின்னா மட்டும் இவங்க வாழ்க்கை சிறக்குமா சொல்லு. யாராவது ஒருத்தர் இறங்கி வந்தா தான நல்லது?"
"என்ன செய்யலாம் அத்த?"
"நம்மள பாடா படுத்துற ரெண்டையும் எதாவது செய்யணும்டா நிலா"
"அவங்க வரணும்ல அதுக்கு" என்றான் இவன் சாதாரணமாக.
"வர வைப்போம்!"
"எப்புடி. நீங்க வேணா நெஞ்ச புடிச்சுட்டு விழுந்துருங்க ரெண்டு பேரும் அடிச்சு புடிச்சு ஓடி வந்துருவாங்க"
"ம்க்கும் வந்துட்டாலும். உன் அக்கா நம்புனாலும் நம்புவா நா பெத்தது அங்க இருந்தே, அப்றம் அம்மா எத்தன நாளு கெடு குடுத்தாரு டாக்டருன்னுவான்"
"வேற என்ன செய்யலாம். எங்கம்மாக்குலாம் அவ்வளவு திறமையா நடிக்க வராதே அத்த" என்றான் அவனே சேர்த்து.
"இவங்க செய்யறதுக்குலாம் உன் அம்மா நெசமாவே போய் படுத்துடாம இருந்தா சரி"
"அப்ப மாமாவ?"
"அந்த மனுஷனெல்லாம் எதுலையும் கூட்டு சேர்க்க கூடாதுடா நிலனு. எப்ப வேணா பல்ட்டி அடிச்சுருவாரு"
"அப்ப என்னதான் செய்றது?"
"இங்க யாருக்கு உடம்பு சரியில்லன்னு சொன்னாலும், உன் அக்கா உன்னையே பாருன்னுட்டு துணி தைக்க போயிருவா, நா பெத்தவன் மூத்த ரெண்டுட்டையும் பாத்துக்க சொல்லிட்டு கேமரா புடிக்க போயிருவான்டா. அதனால் அப்படிலாம் எதுவும் இல்லாம அவங்க வந்து செய்ற மாதிரி எதையாவது சொல்லி தான் வரவழைக்கணும்"
"ஆமா பாய்ன்ட். என்ன செய்யலாம்?" என்றவனும் தீவிரமாக யோசித்தான்.
நாலைந்து நொடி அமைதிக்கு பிறகு, "டேய் நிலா! இந்த சினிமா காரங்க வீட்டுக்குலாம் ரைடு அனுப்புவாங்களே? அதுமாதிரி பண்ணா ரெண்டு பேரும் இங்க வந்து தான ஆகணும்?" என்றார் அவசரமாக.
"ப்பா பயங்கரம். சரியான வில்லி அத்த நீங்க?"
"சொல்லிக்கோ போ. செய்ய முடியுமா முடியாதா?"
"மொட்ட கடுதாசி போட்டுவிடுவோம் அத்த. என் ஃப்ரெண்ட் ஒருத்தன் இருக்கான். அவன வச்சு என்ன பண்ணணும்னு பாக்றேன் நானு"
"சரிடா சீக்கிரம் என்னன்னு பாரு, இல்லைனா நம்மள ஒரு ஆளுங்களா கூட மதிக்காம ரெண்டும் ஆளுக்கொரு திக்கமா போயிடும். தனி தனி ரூமா போடுறாய்ங்க. ரெண்டு பேரையும் ஒரே வீட்டுக்குள்ள போட்டு அடைப்போம் நம்ம" என்றார் படுதீவிர குரலில்.
"பாத்து பண்ணிடலாம் அத்த" என்றவனுக்கும் அப்படியொரு சிரிப்பு. குஹநேத்திரனுக்கும், சித்ரா பௌர்ணமிக்கும் உண்மை தெரிய வரும் நாளில் விசாலாட்சி எடுக்கும் தசாவதாரத்தை நினைத்து இப்போதே சிரித்துக் கொண்டான்.
அங்கு, பௌர்ணமி குளித்து வரவும் மதிய உணவு வந்து சேரவும் சரியாக இருந்தது. கொஞ்சம் ஸ்காட்லான்ட் உணவு வகைகளும், கொஞ்சம் இந்திய உணவு வகைகளும் கலந்து பரப்பி வைக்கப்பட்டிருந்தது.
அவர்கள் மூவரும் சாப்பாட்டை சாப்பிட துவங்கி இருக்க, 'என்ன சாப்பிடுகிறார்கள்!' என பார்த்தவாறு அவளும் வந்தமர்ந்தாள். மறுபடியும் அவனிடம் அவன் அறை போகச் சொல்லி ஒரு வாக்குவாதத்தில் இறங்க விரும்பவில்லை அவள்.
முதலில் பிள்ளைகள் தட்டை கண்டு அதிர்ந்தவள், "இவங்களுக்கு எதுக்கு மீட் எல்லாம் வாங்கிருக்கீங்க. ஃபிஷ் மட்டும் குடுத்தா போதாதா? இங்க என்ன மீட்லாம் கலப்பாங்கன்னு நம்மளலால கண்டு பிடிக்க முடியாது" என்றவாறு அவர்கள் இருவரின் தட்டிலிருந்தும் இறைச்சி வகைகளை எடுத்து விட்டாள்.
"லாங் ட்ராவல் ப்ளஸ் சரியா தூங்கலடா கிருத்தி சோ ஹெவி ஃபுட் உனக்கு வேணாம் ஓகே?" என கூறி எளிதில் செமிக்க கூடிய, கஞ்சி வகைகளை கிருத்திக்கிற்கும், "இங்க வந்து இந்த டென் டேய்ஸா ந்யூட்ரிசியன் ஃபுட்ஸ் ஃபாலோ பண்ணலையா ஹரிணி? ஏதோ ஒரு டைம் பிடிச்சத சாப்பிடலாம். த்ரி டைம்ஸும் சாப்டா வயிறு வலிக்கும்னு சொல்லிருக்கேன்ல?" என திட்டியவாறே இந்திய உணவாக வந்திருந்ததில் சாதம், பருப்பு, நெய் என போட்டு விரவி அந்த தட்டை அவள் முன் வைத்தாள்.
அடுத்ததாக அவள் பார்வை கணவன் தட்டிற்கு வந்தது. அவனும் அதுவரை அவளின் செயல்களை தான் சாப்பாட்டை நிதானமாக மென்றவாறு பார்த்திருந்தான். பிள்ளைகளுக்கு பழக்கம் தான் என்பதால், பெரிதாக அடம் பிடிக்கவில்லை அவள் மாற்றி வைத்ததை இலகுவாக உண்ண துவங்கிவிட்டிருந்தனர். அம்மா சொல்வது தான் மெனு என தெரிந்தும் அப்பா ஏன் தங்களுக்கு பிடித்ததை வாங்கி நிரப்பினார் என்று யோசிக்க வரவில்லை போலும், இயல்பாக அதை கடந்துவிட்டனர்.
பௌர்ணமி, குஹன் தட்டை பார்த்தவளுக்கு அதிர்ச்சி தான். வானவில் போல பல வண்ணங்களில் பரப்பி வைக்கப்பட்டிருந்தது அது, அருகில் பீர் டின் வேறு இருக்க, கண்ணை சுருக்கி முறைத்தாள் அவனை, வாயை குவித்து பறக்கும் முத்தம் கொடுத்தான் அவன். நீல நிற காட்டன் புடவையில் ஆர்ப்பாட்டமில்லாத அழகோடு வந்தமர்ந்த அழகிக்கு தந்திருந்தான் அந்த முத்தத்தை.
இப்போது அவன் தட்டிலிருப்பதை கேட்காவிட்டால் பிள்ளைகளுக்கும் ஏன் என்ற கேள்வி வரும், கேட்டுவிட்டால் இவனிடம் குட்டு பட் வேண்டுமே என சிறிது நேரம் யோசித்திருந்தாள். அவளை பார்த்தவாறே வேண்டுமென்றே பீர் டின்னை வாயில் வைத்து மிடறு விழுங்கினான் அவன்.
"இதென்ன டிரிங்க்குலாம் ஆர்டர் பண்ணிருக்கீங்க? பேபீஸ்கு அலௌவ்ட் இல்லாதது நமக்கும் கிடையாது தானே? வேணும்னே அவங்கள கெடுக்குறீங்களா? நீங்க ஃபாலோ பண்ணாதான் அவங்களும் பண்ணுவாங்கன்னு தெரியாதா?"
"எப்ப வரை ஃபாலோ பண்ணணும் சித்து?" என்றவன் மீண்டும் ஒரு மிடறு விழுங்கினான். உருத்து விழித்தாள் அவள்.
"அப்பா சொன்னாரும்மா. அது பியர் டின். டயர்டா இருக்கனால கொஞ்சமா குடிக்குறதா சொன்னாரு. ஏஜ் எயிட்டீன் வர அலௌவ்ட் இல்லன்னும் சொன்னாரும்மா" என்றாள் ஹரிணி.
"அதுக்கு அப்றமு அலௌவ்டு இல்ல ஹரிணி. சிலது லைஃப்ல மொத்தமா ரெஸ்டிரிக்ட் பண்ணிடணும். அதனால் உடம்புக்கு கெட்டது இருக்கோ இல்லையோ, நல்லது இல்லன்னு தெரிஞ்சாலே அத நாம ஒதுக்கிடலாம். கெட்டத மட்டுந்தான் அவாய்ட் பண்ணணும்னு இல்ல நமக்கு ஒரு விஷயம் நல்லது தராதுன்னா அதையும் ஒதுக்கி வைக்க பழகிக்கணும்"
"லைக் கிருத்தி விளையாடுற கேம்ஸ் மாதிரி இல்லையாம்மா?" என சிரித்தாள் ஹரிணி.
"எக்ஸாக்ட்லி. அதனால எதாவது அவனுக்கு யூஸ் இருக்கா? டைம் தான் வேஸ்ட். கண்டிப்பா மொபைல் கேம்ஸ் அவன் ரெஸ்டிரிக்ட் பண்ண வேண்டிய விஷயம் தான்"
"போடி சிலுப்பி. அவன் நாளைக்கே அதனால கேம் டெவலப்பரா கூட வரலாம். எல்லாம் தெரிஞ்ச மாதிரி கமாண்டோ பண்ண கிளம்பிருவா" என்றவன் வாய்க்குள் தான் முனங்கினான்.
மீண்டும் குஹனை திரும்பி பார்த்தாள் அவன் இன்னும் அந்த பீர் டின்னை கீழே வைத்தபாடில்லை. வைக்கவும் மாட்டான் என புரிந்து விட, அவளுக்கான உணவை தேடினாள். பிள்ளைகளிடம் இருந்து அவள் எடுத்து வைத்ததையும் தன்னிடம் எடுத்துக் கொண்டிருந்தான் குஹன்.
அவளுக்கு அவன் ஆர்டர் செய்யவில்லை என்பதே அப்போது தான் புரிய, ஒரு நொடியில் உள்ளுக்குள் கசகசத்து விட்டது. ஆனாலும் அவனிடம் கேட்க பிடிக்காது போக, பட்டென்று எழுந்து கொண்டாள்.
"சாப்பிடலையாம்மா?" என ஹரிணி தான் கேட்டாள்.
"ஆர்டர் பண்ணிட்டு வரேன்டா" என அவளிடம் சிரிக்க முயன்றவளுக்கு, என்ன முயன்றும் சிரிக்க வரவில்லை.
"உங்களுக்கு தான் அப்பா மீல்ஸும் கஞ்சியும் ஆர்டர் பண்ணிருந்தாங்க. நீங்க அத எங்க ரெண்டு பேருக்கும் வச்சுட்டீங்க" என்றாள் அவளாகவே. ஆனால் பௌர்ணமிக்கு புரிந்தது அவன் தெரிந்து தான் அனைத்தும் செய்கிறான் என்று.
"நா என்ன சாப்பிடவேன்னு அப்பாக்கு தெரியாதுல்லடா அதான் மீல்ஸ்லாம் ஆர்டர் பண்ணிட்டாங்க"
"நா ஆர்டர் பண்ணிருந்தா. எனக்கு தேவையானத நானே பண்ணிப்பேன் நீங்க ஏன் பண்ணீங்கன்னு கேட்பன்னு தான் பண்ணல சித்து. ஃபைவ் மினிட்ஸ்ல கொண்டு வந்துருவான். இந்தா வைர்லெஸ்" என நல்ல பிள்ளையாக அவன் அருகிருந்த ஃபோனை எடுத்து நீட்ட, அவனிடம் வாக்குவாதம் கூட செய்ய பிடிக்காமல் வாங்கி ஆர்டர் கொடுத்து அமர்ந்து விட்டாள்.
பிள்ளைகளிடம் இருந்து பார்வையை அவள் திருப்பவில்லை, அவளிடமிருந்து அவன் திருப்பவில்லை.
பிள்ளைகள் இருவரும் உண்டு எழுந்து விளையாட சென்றுவிட, இவ்விருவர் மட்டுமே, அப்போது தான் அவளுக்கான சாப்பாடு வர, தானே எழுந்து சென்று வாங்கி வந்து அமர்ந்தாள்.
அவள் பிரிப்பதை எட்டி பார்த்தான், எப்போதும் போல், சிக்கன் சூப், வேகவைத்த முட்டை, டோஸ்ட் செய்த பண்ணீர் கலவையில் இரண்டு என்று வெகு எளிமையாக இருந்தது அவள் உணவு.
"சித்து!" என மேசையின் அடியில் கால் கொண்டு தன் விரல்களால் அவளின் விரல்களில் அழுத்தமாக படம் வரைந்தான். காலை மட்டும் பின்னால் இழுத்துக் கொண்டவள் அவனிடம் நிமரவே இல்லை.
"டி சிலுப்பி!" என சேலையை விரல் கொண்டு முட்டி வரை கோடிழுத்து தூக்கிவிட, நிமிர்ந்து முறைத்தவள், இன்னும் பின்னால் நகர்ந்து அமர்ந்து காலை உள்ளிழுத்தாள்.
"இன்னும் மேல தூக்கிருவேன்டி, யோசிக்கவே மாட்டேன். ஆமா கோவமா இருக்கியா என்ன?" என்றான்.
"என்ன வேணும் இப்போ?"
தலையை முன்னால் கொண்டு வந்து ரகசியமாக, "எதுக்கு கோவமா இருக்க?" என கேட்க,
திடுக்கிட்டாள், 'அவன் கேட்பதும் சரிதானே? எதற்காக இப்போது அவள் கோபம் கொள்ள வேண்டும்? அதுவும் விவாகரத்து கொடு என அவனிடமே கேட்டுவிட்டு? அப்படியானால் அவன் நக்கல் தானே செய்வான்?' என அவள் விழிக்க, அவனுக்கே பாவமாக இருந்தது.
"சாரி" என்றாள் தெளிந்து நிமிர்ந்து.
"தெளிஞ்சுட்ட?" என்றான் இப்போது நக்கலாக.
"எஸ் நா எக்ஸ்பெக்ட் பண்ணிருக்க கூடாது. பட் இது சிம்பிள் மேனர்ஸ் தான். நாளைக்கு நமக்கு டிவோர்ஸே ஆனாலும் அடுத்து எப்போதாவது நாம சேர்ந்து சாப்பிடுற ஒரு சிட்யூவேஷன் வந்தா, உங்கள விட்டுட்டு நா எனக்கு மட்டும் ஆர்டர் பண்ணிக்க மாட்டேன். ஒன்னு வெயிட் பண்ணுவேன் இல்லனா இதோ இந்த டின் பீர் மாதிரி எதையாவது உங்களுக்கும் சேர்த்து ஆர்டர் பண்ணிடுவேன். ஏன்னா அப்போ நீங்க என்ன சாப்பிட்டாலும் எனக்கு அக்கறை இருக்காது பாருங்க"
உதட்டை வளைத்து தோள்களை ஆட்டியவன், "அதுக்கும் என்ன ரீசனா இருக்கும்னு யோசிச்சுயா சித்து?"
"பேசிக் மேனர்ஸ் தான் ரீசன்"
இல்லை என்பதாக தலை அசைத்தவன், "மேரேஜ்கு முன்ன நம்ம மேக்ஸிமம் டைம் இதுமாதிரி ரெஸ்டாரன்ட் டைம்ஸ் தான் இல்லையா சித்து?" என கேட்டான்.
"ம்ம்"
"அப்ப நாம நமக்கு பிடிச்சது தான் சாப்பிடுவோம் இல்லையா சித்து?"
"எஸ். பட் ஸ்டில் ஆஃப்டர் மேரேஜ். ஹரிணி டெலிவரி அப்றம் நா ஹெல்த் கான்சியஸா இருக்கனால ஒரே வீட்ல இருக்கோம் சோ உங்களையும் இருக்க சொன்னேன்" என்றாள் அவளாகவே.
"அதாவது என்மேல அக்கறைல சொன்ன இல்லையா?" என கேட்டான் அழுத்தமாக.
"அதுல கேர் இல்லன்னு சொல்ல போறீங்களா? நாம ரெண்டு பேரும் சேர்ந்து சாப்பிடுற டைம் ரொம்ப கம்மி. எப்பவுமே உங்க ஃபுட் வெளில தான். சோ வீட்ல என்னோட சாப்பிடுற டைம்லயாவது ஹெல்தியா இருக்கட்டும்னு கேர்ல செஞ்சது தான் அது"
"ஆனா நா என்ன நினைப்பேன் தெரியுமா? இவளுக்கு சாப்பாடு இறங்கல. நாம மட்டும் பத்தியமா சாப்பிட இவன் மட்டும் இந்த வெட்டு வெட்டுறானேன்னு என்னையும் சாப்பிட வைக்கிறன்னு நினைப்பேன். அப்படி நினைச்சாலும் யூ க்நோ நீ சொன்னத மறுக்காம சாப்பிட தான் செஞ்சேன்மா"
முறைத்தாலும் "இப்ப என்ன சொல்ல வரீங்க?" பொறுமையாகவே கேட்டாள்.
"நீ என்ன உன்னோட கண்ட்ரோல்ல எடுத்துட்ட ஃபர்ஸ்ட் விஷயம் அது தான். இப்ப வரை. இன்னைக்கு நா அத மீறிட்டேன்னு தான் உனக்கு அவ்வளவு கோவமா இருக்குமோன்னு தோணுச்சு அதான் கேட்டேன். சூப் சூடு ஆறும் முன்ன குடிச்சுடு சிலுப்பி" என்றவன் கடைசி மிடறு பீரை வாய்க்குள் கவிழ்த்து கொண்டு எழுந்து லேசாக எம்பி, அவள் புறம் குனிந்து பிள்ளைகள் பார்வை வட்டத்தில் இல்லை என்பதை உணர்ந்து நொடியில் அதை அவள் வாய்க்குள் கடத்தியிருந்தான்.
"குஹன்!" என அவன் தந்தததை தொண்டைக்குள் இறக்கி விட்டு அவள் கத்த, மறுபடியும் அந்த வாயை அடைத்தான்.
"குஹன். ப்ளீஸ்" என அவனை நிறுத்தி அவள் மூச்சு வாங்க, சிரித்தவாறே நகர்ந்து கைகழுவி பிள்ளைகளிடம் சென்று விட்டான்.