எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

நேசப் பொருண்மை அழியுமோ கதை திரி

Status
Not open for further replies.
அத்தியாயம் 1

"விஸ் யூ ஆல் சக்ஸஸ் சர்"

"பெஸ்ட் ஆப் லக் சர்"

"வாழ்த்துகள் அமுதன் ஆழியன்"

அறை முழுவதும் பூங்கொத்துகளாக இரைந்து கிடந்தன. அனைவரது வாழ்த்துக்களையும் ஏற்றுக் கொண்டவன் தனது நாற்காலியில் அமரந்தான்.அப்போது அறைக்குள் நுழைந்த ஸ்ரீதரன்

"யு டி சேர்வ் இட் டா காங்குராஜிலேஷன்" என்றபடி தன் கையில் இருந்த மலர்கொத்தை தர

"ஸ்ரீதர் நீயுமாடா " என அவன் கையில் இருந்த செண்டை வாங்கி மேசையில் ஓரமாக வைத்தவன் "ஸ்ரீ உட்காருடா ."
எனவும் அமர்ந்தவன்.

"டேய் வைஷ்ணவி உன்ன இன்னிக்கு வீட்டு சாப்பிட வரச்சொன்னா டா நீ வரலை நானும் உள்ளவரப்படாதுன்னு சொல்லியிருக்காடா"

அவனும் வேறு எங்கும் பார்ட்டி அது இது என போவதில்லை. மீறி சூழ்நிலை அப்படி அமைந்தாலும் தலையைக் காட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றுவிடுவான். ஸ்ரீதரன் மட்டும்தான் அவனது பால்ய சினேகிதன்,
"சரி டா வரேன் "
என்று அவனின் ஒப்புதலை வாங்கியபின்பே வெளியே வந்தான்.
"இருடா நானும் வரேன்"
என்றான்
ஸ்ரீதரனும் அவனுடன் இணைந்து ஏதோ பேசிக் கொண்டு உணவுக் கூடத்தை தாண்டிச் சென்றனர் .

உணவருந்தி கொண்டிருந்த பெண்களில் ஒருத்தி

"ஏய் அங்க பாரு அமுதன் ஆழியன் சார் கூட போறது நம்ம ஹெச்ஆர் ஸ்ரீ தரன் தான..."

என்று ஒருவள் கேட்க. அனைவரும் ஒருசேர கை வேலையை நிறுத்தி அவர்களைப் பார்த்தனர். அவர்கள் இவர்களை தாண்டிச் சென்ற பிறகு அவர்களை பற்றி அரைக்கத் துவங்கினர்.

"ஏன் நித்யா நம்ம ஸ்ரீ யும் அமுதனும் ஒரே வயசாடி?"

என்றாள் ஸ்ரீதரனின் லேசாக விழுந்த தொப்பை தனது கண்ணாடி மற்றும் அவனது பதினைந்து வயது மற்றும் பதிமூன்று வயது மகள்களை சென்ற முறை கெட்டு கெதரில் பார்த்ததை நினைவுக்கு கொண்டுவந்த லதா கேட்க நித்யா

"அதென்ன ஸ்ரீ அமுதன் நீயாடி பெயர் வைச்ச மரியாதை கொடுக்கனும்னு தெரியுதா?"

"இதென்னடி வம்பா போச்சு . அவங்கதான சொன்னாங்க"

"என்ன சொன்னாங்க போடா வாடா பொட்ட கண்ணான்னு கூப்பிடுன்னா…ப்ரண்டு மாதிரின்னு சொல்லியிருக்காங்க ப்ரண்டுன்னு சொல்லல புரியதா"

"சரி அத வுடு நித்தி நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு?"

"என்னடி கேட்ட என்றாள் புளியோதரையில் கைவைத்த படி "

அவளது டிபன் பாக்ஸை பிடிங்கியவள்

." உனக்கு புளியோதரைய பார்த்தா பூலோகமே மறந்துருமே"

எனவும் டிபன் பாக்ஸில் இருந்து கண்ணை அப்போதும் எடுக்காமல் புளியோதரைக்கு கைநீட்ட லதா இன்னும் தள்ளி வைத்தாள். நித்யாவுக்கு கேள்விக்கு பதில் கூறாமல் அது கிடைக்காது என்பது புரிய

"சொல்லித் தொலை என்ன தெரியனும்?"

"அமுதா சார பத்தி சொல்லு"

"அவரோட முழு பெயர் அமுதன் ஆழியன் வயசு ப்ரட்டி பார்ட்டி ப்ளஸ் , ஒரே ஒரு தடவ கல்யணம் ஆகி
டிவெர்ஸ் ஆகிருச்சி. வீட்ல சாரும் அவங்க அம்மாவும் தான் … ஆனா அப்புறம் எந்த பொண்ணையும் பார்க்கிறது இல்லை. எந்த கெட்ட பழக்கமும் இல்லாத எலிஜிபில் பேச்சிலர் . நம்ம எச்ஆரும் அவரும் ஒன்னா படிச்சவங்க. இதுக்கு மேல எதுவும் தேவைன்னா நீ சார்கிட்ட தான் கேட்கனும். "

"இதான் எல்லாருக்கும் தெரியுமே என்ன காரணத்துக்கு டிவெர்ஸ் ஆச்சி "

"அது சரியா தெரியல ஆனா ஒரே வருஷத்தில் டிவெர்ஸ் ஆகி அந்த பொண்ணு இப்ப பாரின்ல எங்கயோ இருக்குறதா கேள்வி. "

"என்ன காரணமா இருக்கும் சர் இருக்கற அழகுக்கும் பிட்னஸ்க்கும் அவ்வளவு பொண்ணுங்களும் ஆசைதான படனும் . எந்த கெட்ட பழக்கமும் கிடையாது வேற ஏன் டிவெர்ஸ் பண்ணா"

"யாரு கண்டா பட் அமுதன் சார பத்தி யாருக்கும் இங்க அவ்வளவா தெரியாது. அவரோட பர்சனல் பத்தி தெரிஞ்சது ஸ்ரீ சர் மட்டும் தான் ஆனா அவரும் எந்த சூழ்நிலையிலும் ஒரு வார்த்தை சொல்ல மாட்டார்."

"ஆமா அவர்கிட்ட கேட்கறதுக்கு சுவத்தில முட்டிக்கலாம். இப்ப எப்படி தெரிஞ்சிக்கறது ". என புலம்பியவாறு சிந்திக்க

"ஆங்...வீட்டுக்கு போய் நேர்ல கேட்டுட்டு வா, கை காயுது எந்திரிடி.இந்த கவலைய அப்புறம் படலாம் முத வேலைய முடிச்சிட்டு நேரங்காலத்தில வீட்டுக்கு போய் உன் புள்ளைய பார்க்கிற வழியப் பாரு"
என்று எழுந்து கொண்டா நித்யா சுற்றிலும் ஒரு பார்வை பார்க்க,

அது லதாவுக்கான வார்த்தைகள் மட்டும் அல்ல என்னவாக இருக்கும் என்று அறிய இவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த தங்களுக்கும் சேர்த்துதான் என்பதை புரிந்து கொண்டவர்கள் தலையை கவிழ்ந்து கொண்டனர்.லதா தனது உணவுப்பாத்திரத்தை மூடியவள்

"ஆமா நித்து வீட்டுக்கு ஹோம் வொர்க் செய்ய வைக்கறதுக்குள்ள சின்ன யுத்தகாண்டமே நடக்குது. என்னால முடியல … நீ அந்த ஸ்கூல்ல அப்ளிகேஷன நாளைக்கு வரும்போது வாங்கிட்டு வாடி அங்க ட்யூஷனும் சேர்த்து பார்த்துக்கறாங்க தான"

என்றவாறு எழுந்து கொண்டாள் . பேசிக்கொண்டே கைகளைகழுவிட்டு பணியிடத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்கள்
எதிரில் வந்த ஆழியன்.

" நித்யா, நான் யுகே கிளையன்ட் மீட்டிங்காக போறேன் அந்த டீடெய்ல்ஸ் எனக்கு மெயில் பண்ணுங்க "

"ஒகே சர் வித் இன் ப்யூ மினிட்ஸ்ல "
என்றவள் தனது கேபினை நோக்கி ஓடினாள்.

அந்த உயர்தர ஐந்து நட்சத்திர உணவகத்தில் தனது வாடிக்கையாளர்களுடனான சந்திப்பையும் உணவையும் முடித்தவன். கடிகாரத்தை பார்க்க நேரமாகிவிட்டது புரிய நேரமாகிவிட்டதை உணர்ந்தவன் ஸ்ரீதரனுக்கு அழைத்தான்.

"ஸ்ரீ இங்க இப்பதான் மீட்டிங் முடிஞ்சது. இங்க இருந்து உங்க வீட்டுக்கு வர லேட் நைட் ஆயிடுமேடா"

பதிலுக்கு அவன் ஏதோ கூற

" சரிடா அவ கிட்ட நான் பேசிக்கறேன். சன்டே வரேன்டா ப்ரீயா இருக்கும்."

என்றவன் அலைபேசியை வைத்துவிட்டு எழுந்தான். அவன் முன் அவள் வந்து நின்றாள்.


அமெரிக்காவில்

தனது அறையில் இருந்த வந்த மகரவிழி. நேரே அடுப்படிக்கு சென்று தேனீர் தயாரித்தாள். கூடவே இரண்டு பிரட் துண்டுகளையும் டோஸ்ட் செய்தவள் . தேனீர், ப்ரட் இரண்டையும் மேசை மீது வைத்தவள்.

தனது அறைக்கு பக்கத்தில் இருந்த அறைக்கதவை தட்டியவள் "நிலன்" என்றாள்.

"யா மாம் " என்றவன் வெளியே வந்தான். பள்ளிக்கு செல்ல ஆயத்தமாகி இருந்தவன் சீருடையோடு வந்து உணவு மேசையில் அமர்ந்தான். நிலன் தனது பதின் பருவத்தில் இருந்தான். அதிகமாக தாயை ஒத்திருந்தவனின் கண்கள் மட்டும் அவனை ஒத்திருந்தன. எப்போதும் அவனை நினைவு படுத்துவது போல் இப்போதும் படுத்தியது. அதை ஒதுக்கி தன் நினைவுக்கு வந்தவள்

"நிலா மாம்க்கு இன்னிக்கு கிறிஸ்மஸ் கலெக்ஷன்ஸ் வெர்க் இருக்கு நீ இருந்துகறியா ? இல்ல ஆபிஸ் வந்து வெயிட் பண்றியா?"

"எனக்கும் ஸ்கூல்ல கொஞ்சம் ப்ரொஜட் வெர்க் இருக்கு."

"அப்ப உன் ப்ரண்ட் நரேன் வீட்டுக்கு போயிடு. உன்ன அங்க வந்து பிக்கப் பண்ணிக்கறேன்."

"நோ மாம் அங்க போனா, எனக்கு பிடிக்கல ஓவர் ரெஸ்ட்ரிக்ஷன்ஸ். "

"என்ன ரெஸ்ட்ரிக்ஷன்ஸ் பண்ணாங்க எதாவது பேசிட்டாங்களா.?"

" அதிகமா மொபைல் யூஸ் பண்ண கூடாது. அது இதுன்னு "

" நல்லதுக்கு தானடா சொல்லறாங்க.படிக்கும்போது கவனம் சிதறக் கூடாதுன்னு"

"அவங்க யாரு என்ன கண்ட்ரோல் பண்ண? ஐ ஹேவ் மை ஒன் ப்ரீடம். அது மட்டுமில்லாம உங்களையும் டாட்யும் பத்தி தப்பா பேசறாங்க."

என்றவன் விழிகள் நடுவில் தான் நிற்க ஒரு புறம் மேத்யூவும் மறுபுறம் மகர விழியும் இருக்கும் அந்த புகைப்படத்தில் நிலைத்தது.

"எங்கள பத்தி என்னடா தப்பா பேச போறாங்க. அவங்க வேற எதையாவது சொல்லி இருப்பாங்க உனக்கு தப்பா புரிஞ்சிருக்கும் " என்றாள்

ஆனாலும் தனிமனித உரிமையை பற்றி பேச, உள்ளுக்குள் உதறத் தொடங்கியது என்றால் அவன் விழிகள் படத்தில் நிலைத்திருந்ததில் அடுத்து என்னவருமோ என பயம் வந்திருந்தது அவளக்கு, பதின் பருவ குமரக்குழந்தை அவனை கையாளுவது எளிதாக இல்லை.

ஏதேனும் கூறும் முன் பலமுறை யோசிக்க வேண்டியிருக்கிறது. மூச்சை உள்ளிழித்து நிலைப்படுத்தியவள்.

"என்ன ஆச்சு நிலன் என்றாள்?"

போன சன்டே அவங்க வீட்டுக்கு போயிருந்தேன்ல. நானும் அவனும் பேசிட்டு இருக்கும் போது
நரேன் அம்மா கொஞ்சம் கூட மேனர்ஸ் இல்லாம அவங்க பாட்டு உள்ள வராங்க. என்ன பேசிக்கறீங்க சொல்லுங்கங்கறாங்க.

"அவன் அவங்க அம்மா கேட்ட உடனே ப்ரொஜெட் பத்தி சொன்னான்."

"இதுல என்ன தப்பு இருக்கு "
அவன் பொய் சொன்னான் மாம் அது வரைக்கும் அவன் அவங்க வீட்டுக்கு தெரியாம லிசி கூட டேட் போனத பத்தி சொல்லிட்டு இருந்தான். "

அவளுக்கு திக் என்று இருந்தது. எவ்வளவு தான் இதைப்பற்றிய தெளிவும் புரிதலும் நிலனுக்கு இருக்கிறது. என்பதை அவனிடம் வெளிப்படையாக மேத்யூ பேசி புரிய வைத்து இருந்தாலும் ஒரு தாய் எனும் முறையில் இதைக் கேட்டு திக்கென்று இருந்தது .தனது மகன் தவறிவிடக் கூடாதே என்று பதட்டம் வந்து சேர்ந்தது.

பட் நான் சொன்னேன் இப்ப சும்மா சுத்தி வரலாம் ஆனா எல்லைய தாண்டி போனா நம்ம ப்யூச்சர் ஸ்பாயில் ஆகும் ன்னு எங்கப்பா சொல்லி இருக்காங்க. அது மட்டும் இல்லைமா இப்படி பேரண்ட்ஸ்ட மறைச்சி செய்ய னற எந்த விஷயமும் பிரச்சினையாத்தான் வரும்ன்னு நீங்க சொன்னத சொன்னேன். "

என்றவனை அனைத்து முத்தம் வைத்தாள். இப்போது குழந்தையாகி விட்டிருந்தான்.

"அன்னிக்கு நரேன் எனக்கு அவங்க அம்மா அப்பா கல்யான ஆல்பம் காட்டினான்."

" அதில் அவன் இல்லை நான் நீ ஏன்டா இல்லைன்னு கேட்டேன் "

" அப்ப அவங்க அம்மா அதெல்லாம் முறைப்படி கல்யாணம் பண்ணி புள்ளய பெத்தா தெரியும் இப்படி பெத்தா எது முறைன்னு எப்படி தெரியும்னு கேட்டாங்க? "

"ஏன் ஆண்டி இப்படி சொல்றீங்கன்னு கேட்டேன் .அதுக்குள்ள அவங்க அப்பா வந்து அவ ஏதோ உளறிட்டா நிலன் நீ தப்பா நினைச்சிக்காதன்னு சொல்லி எங்க இரண்டுபேரையும் வெளியபோக சொல்லிட்டாங்க"

"நான் தப்பா பொறந்த பையனா மா?"

இந்த வார்தைகள் தந்த வலியில் முகம் சிவந்து விட அவள் கண்களில் கண்ணீர் பெருகியது.

" நோ நிலா டாட் ஆல்ரெடி டொல்ட் யூ . அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இந்தியாவில கல்யானம் ஆகிருச்சி சிம்பிளா. அதுக்கு அப்புறம் இங்க அமெரிக்கா கிராண்டா வெட்டிங் பண்ணிக்கிட்டோம்ன்னு சொல்லி இருக்கேன் தான...அப்புறம் எப்படி நீ முறையில்லாத பையன் ஆவ?"

என தனது மகன் அருகில் வந்து அமர்ந்து கொண்டான் மேத்யூ ஹைடன்.அவனது தலையை கோதியவனிடம்
"எஸ் டாட் யூவார்…"
என ஆமோதிதத்தவன்" தென் மாம் ஏன் அழறாங்க"
"அவங்க அவங்க அப்பாவ நினைச்சி அழறாங்க அப்படிதான ஹனி "
எனவும்
"ம் ம் "
என தலையை ஆட்டியவளுக்கு டிஷ்யூவை எடுத்து முகம் துடைத்து விட்டான்.
"ஓ நோ "என்ற நிலன்
என்னாச்சு என்பது போல் பார்க்க
"என் ஹேர் ஸ்டைல் கலைச்சிட்டீங்க திரும்ப கோம்ப் பண்ணிக்கனும் "
என அறைக்குள் ஓடினான்.

"ஈஸி ஹனி அழாத"

என்றவன் அவளை அனைத்து கொண்டான்.



 
அத்தியாயம் 2

இந்தியாவில்

அமுதன் அவளை கடந்து வெளியேற முற்பட அவளோ அவன் பின்னும் முன்னும் குறுக்கே வந்தபடி

"ப்ளீஸ் அமுதன் நான் …சொல்லறத கேளுங்க, ஒரு இரண்டு நிமிஷம்"
என அவனைத் கண்களில் நீருடன் அவனைத் தொடர அதனை அங்கிருந்தவர்கள் வேடிக்கை பார்க்க தொடங்கி விட

" டோன்ட் பாலோ மீ மிஸ்ஸ். அமிர்தசாகரன் ஐ ஹேவ் டு கோ"

என அடக்கப்பட்ட சினத்துடன் கீழ் குரலில் அவளை எச்சரித்தான். அதில் ஒரு நொடி நின்றுவிட்டவள்
வேறு வழியின்றி மீண்டும் அவன் விரைவுக்கு நடந்தவள்

"மகரவிழிய பத்தி சொல்லனும்"என்றாள்.


உயர்வேக வாகனம் செல்லும் வேகத்தில் சட்டென்று திருப்பி நிறுத்தப்பட்டது போல் திரும்பி நின்றான்.. நிறுத்தப்பட்ட வாகனத்தின் மீது மற்றோர் வாகனம் மோதுவது போல்.அவன் நின்று விட்டதை அறியாது பின்னே வந்தவள் அவன் மீது மோதி நின்றாள்.

"என்ன சொல்லனும் சொல்லு"

"உட்காந்து பேசலாம் அமுதன் " எனவும் வேறு வழியின்றிஆழியன் அருகில் இருந்த லவுன்சில் அமர்ந்தான்.

"ஸாரி ஆழியன் என்னோட சூழ்நிலை"

மன்னிப்பு கேட்கும்படியான தவறை அவள் செய்யவில்லை. இருந்தாலும் வேறு வார்த்தைகள் அவளிடம் இல்லையே … தத்தி தத்தி தான் அவள் கேட்டாள் அதற்குள்ளாகவே அவன்

"ஜஸ்ட் ஸ்டாப் இட் வந்த விஷயத்தை மட்டும் சொல்லுங்க இல்ல கிளம்பறேன்?"

என எழுந்து கொள்ள முற்பட அவள் வேறு வழியின்றி தனது கைப்பையில் இருந்து அந்த கவரை எடுத்து அவன் கையில் கொடுத்தாள்.அதையும் அவளையும் பார்க்க

"இதுல விழிய பத்தி உங்களுக்கு தேவையான ஒரு விஷயம் இருக்கு இதுக்காகத்தான் நான் வந்தது."

அதை வாங்கக் கூட இல்லை நீ யார் எனக்கு தர உன்னிடம் கேட்டேனா என்பதைப் போல் பார்த்தவனிடம்,

"உங்களுக்கே அவளைப் பற்றித் தெரிஞ்சிருக்க வாய்ப்பு அதிகம். இருந்தாலும் , ஆனா நீங்க அவங்கள பத்தி தெரிஞ்சிக்க விரும்ப மாட்டீங்க அதனால. "

"விரும்பமாட்டேன்னு தெரியுதுதில்லையா அப்ப ஏன் சொல்ல ட்ரை பண்றீங்க " என எழுந்து கொண்டான்.

"ப்ளீஸ் மாமா இத மட்டும் வாங்கிக்கோங்க " எனவும் என்ன நினைத்தானோ அந்த உறையை வெடுக்கென பறித்தவன்

" என்ன பொறுத்த வரைக்கும் நீங்க யாரோ தான் எப்பவும் பட் ஒரு சின்ன அட்வைஸ் ஸாகருருக்காவது உண்மையா இருங்க."

பிறகு நக்கலாக

"ஸாரி நீங்க மிஸஸ்.அமுதன் ஆழியனா இருக்கும்போதே அவருக்கு உண்மையாத்தான் இருப்பீங்க நான் தான் தேவையில்லாம சொல்லிட்டேன் குட் பை "

என்றவன் மடமடவென இறங்கி சென்றுவிட அமிர்தா தான் கழிவிரக்கத்தில் அமர்ந்திருந்தாள். அத்தனையும் தன்னால் தானே... தீர்வு இருந்தும் அதனை செயல்படுத்தாத தனது சுய நலம் கோழைத்தனம் இவற்றின் விளைவு அவன் இழப்பு.


அதனை நினைத்து கண்கள் கலங்க அமர்ந்துதிருந்தாள். அவள் அருகில் அமர்ந்த ஸாகரன் அவள் மீது கரம் போட்டு அனைத்துக் கொண்டான்.
"வருத்தப்படாத அம்ரு சரியாகிடும் நம்ம என்ன செய்ய முடியுமோ அத செய்தாச்சி இனி விதிப்படி நடக்கும். "

"மனசு தாங்கலை என்னாலதான "

"நீ இதையே நினைச்சிட்டு இருக்காத நமக்கு ஈவினிங் ப்ளைட் இருக்கு . பிள்ளைங்க தேடறாங்க வா" என அவளது தோளில் கை போட்டு அழைத்துச் சென்றான்.

அமுதன் தனது வாகனத்தை அதற்கு உரிய இடத்தில் நிறுத்தியவன் வாகனத்தை விட்டு இறங்கவே இல்லை. அந்த உறையில் இருந்து அந்த புகைப்படத்தை எடுத்தான். அது தற்போதைய நிலனின் புகைப்படம் ஏதோ கடற்கரையில் தங்களது வாகனத்தை நிறுத்திவிட்டு இருவரும் தோளின் மீது கை போட்டபடி எடுக்கப்பட்டிருந்தது. மேத்யூ தன் உயரத்திற்கு இவனுக்கு இணையாக குனிந்து தன் மகனின் கரத்திற்கு தோள் தந்து இருந்தான். நிலனும் தனது கரத்தை அவன் மீது போட்டபடி நின்றிருந்தான்.

அது தான் இருக்க வேண்டிய இடம் அல்லவா எத்தகைய இன்பம் வரம் அத்தனையும் ...அத்தனையும்…
என மேலும் யோசிக்க இயலாமல் கண்களில் கண்ணீர் மல்க.அந்த ஸ்டீயரிங் வீலில் இரு கரங்களையும் வைத்தவன் அதில் தலையை கவிழ்த்து அமர்ந்து கொணடான்.

எந்த தகப்பனுக்கு கிடைக்கும் இப்படி ஓர் பாக்கியம் தான் அறியாத மகனை தாயின் திருமணத்தில் அறிந்து கொள்ளும் பாக்கியம். அந்த நாள் நினைவுக்கு வந்தது. ஏதோ வேலையாக போனவன் சற்று நேரம் இருந்ததால் தொலைக்காட்சியை உயிர்ப்பிக்க


வெண்ணிற ஆடை முழுவதும் கற்கள் பதிக்கபட்டு மிக அருமையான தங்க இழை கொண்டு வேலைப்பாடுகள் செய்யப்பட்ட மேத்யூ ஹைடன் அவனே பார்த்து வடிவமைத்த அந்த கவுன் அதில் மகரவிழியாளைப் பார்த்தான். இங்கே ஆழியன் அமிழ்ந்து போனான்.

அவளை அப்போதே தேவதூதர்கள் தோன்றி இவள் எங்கள் உலகம் சார்ந்தவள் வழிதவறி விட்டாள் என்று அழைத்துக்கொண்டு சென்று விடுவார்களோ எனும் அச்சம் தோன்றியது போலும் மேத்யூவிற்கு. உடனே அவள் கரம் பற்றி அவள் இருப்பை உறுதி செய்து கொள்ள விழைந்தவன் இத்துடன் எத்தனாவது முறையாக மணமகள் அறைக்குள் நுழைகிறான் என்றால் யாருக்கும் கணக்கு தெரியாது.


தேவதை போன்ற தோற்றப் பொலிவு கொண்ட அவளுக்கு அதுபோல மிகையற்ற தலைஅலங்காரம் செய்து முடித்துவிட்டு
"மேடம் செக் திஸ் ஸ்டைல் இஸ்இட் ஓகே ?"
என அதனை கண்ணாடியில் பார்த்துக்கொண்டிருந்த அவளிடம் கேட்டாள்.
"ம்"என வெறுமே தலையை அசைத்தவளுக்கு உச்சபட்ச பதற்றம் முகம் சிவக்க கைகுட்டையை அழுத்தி பிடித்தவள் கரங்களை மெல்ல பற்றிக் கொண்டான் உள்ளே வந்த அவன் மேத்யூஹைடன். அவன் உள்ளே வரவுமே ஒப்பனையாளர் முதல் அனைவரும் வெளியேறி இருந்தனர். அவளை ஆதூரமாக தழுவிக் கொண்டவன்
"கூல் கூல் காம்டவுன் ஒன்னும் இல்லை மகரா "
என அவளை அமைதி படுத்தியவன்
"மகரா இங்க நிறைய பேர் இல்லை ஒன்லி டென் டூ ட்வன்டி மெம்பர்ஸ் தான் அதுவும் உனக்கு தெரிஞ்சவங்க தான் "
எனவும் இலேசாக அமைதிப்பட்டவளுக்கு தண்ணிர் கொடுத்தவன்
"அங்கில் கூட வந்துருவியா அங்க வரைக்கும் இல்ல நான் கூட்டிட்டு போக வா நீ இப்படி மெல்ட் டவுன் ஆகிடுவியோன்னு தான் ரிஜிஸ்டர் மட்டும் பண்ணிக்கலாம் சொன்னேன் இப்ப பாரு குழந்தை மாறி பயந்துக்கற வேண்டாம்ன்னு நிப்பாட்டிற வா " என்றதும் சில பழைய நினைவுகள் வர
"நோ நோ மேத்யூ ஐ கேன்" திடமாக உரைத்தவள் டிஸ்யூ பேப்பரில் மூக்கை துடைத்து முகத்தை சீர்திருத்திக் கொண்டவள்

" ஹவ் அயம் ?" எனக் கேட்க
"பரட்டி ஹனி "நுதலில் முத்தமிட்டவன்
வெளியே சென்றான்.

அவளது கரம் பிடித்து அழைத்து வந்து தந்தை அவளை மேத்யூவின் கரங்களில் ஒப்படைக்க அவனுடன் கரம் கோர்த்து இணைந்து நடந்தாள்.அவர்கள் திருமணம் நடத்தி வைப்பவர் முன் நிற்க அவர்களது ஐந்துவயது மகன் நிலன்ஹைடன் மோதிரம் இருந்த பேழையை கொண்டு வந்தான்.
அந்தக் தொலைக்காட்சியில் அதனை ஒலிபரப்பிக் ஒடிக்கொண்டிருந்தனர். பிரபல மாடல் மற்றும் நடிகையுமான மகரா புகழ்பெற்ற பேஷன்டிசைனர் மற்றும் ஸீக்மீ எனும் பெயரில் உலகம் முழுவதும் பரந்துள்ள செயின்ஸ் ஆப் ஸ்டோர் எனும் சங்கிலிதொடர் துணிக்கடை மற்றும் தயாரிப்பாளரான மேத்யூ ஹைடனை மணந்து கொண்டார். என அந்த காணெலியை பதிவிட்டார்கள் அந்த ஐந்துவயது இளம் சிறுவன் நடுவில் இருக்க சிரித்தபடி இருபுறமும் மகராவும் மேத்யூவும் நிற்பது போன்ற புகைப்படம் காட்டப்பட்டது.

அதில் நிலனை பார்த்ததுமே புரிந்து விட்டது. ஆழியவனுக்கு அது யார் மகன் என்பது புரிந்துவிட்டது. உடலில் அத்தனை செல்களும் அவனை ஏந்திக் கொள்ள பரபரத்தது. தன் குழந்தையை எப்படி அவள் மறைக்கலாம் ... எனும் ஆத்திரம் கிளர்த்தெழ ஆவேசம் வந்தது அவனைக் கைக்கொள்ள

பிறகு தான் தன்னிலை தான் செய்த காரியம் நினைவு வர நிமிர்ந்து பார்த்தான். தன் குழந்தையை
சொந்தமில்லாமல் செய்த அன்னையை பார்த்தான். இதற்கு என்னை இந்த நிலைக்கு கொண்டு வரத் தானே இவ்வளவு பாடுபட்டீர்கள்? எனக் கேட்டது.

அன்று தன் மகன் பார்வையில் இருந்த கேள்வியின் வீரியம் தாங்காமல் கண்ணீருடன். இறைவனை நாடினார். செய்வதை எல்லாம் செய்துவிட்டு அதன் விளைவுகள் மனதுக்கு இதமில்லை என்றதும் தான் நாம் செய்தது தான் செய்தது தவறு என்றே புரிகிறது. கடத்தப்பட்ட நிஜங்கள் ,காலம் வைத்திருக்கும் சாட்சியம் அறம் கூறும் நீதி அனுபவித்து தானே ஆகவேண்டும்.

இதோ இன்றும் இனி என்று அவன் தந்தையாவது , இதோ மடியில் மார்பில் தாங்கும் காலம் போனது தோழனாக. தாங்கும் பாக்கியமாவது கிடைக்காதா என ஏங்கும் மனதிற்கு என்ன மாற்று உண்டு. கைகேயி தசரதனிடம் கேட்ட வரத்தை சென்பகவல்லி சீதையிடம் கேட்டாளோ விளைவு இதோ தனதுயிரை தன் பொருளை தான் அறியவில்லை . அறிந்தாலும் உரிமை கொண்டாட முடியவில்லை...

நெஞ்சம் அழுத்த தனது வாகனத்தில் இருந்து இறங்கவில்லை. வந்து சேர்ந்து இவ்வளவு நேரம் ஆகியும் அவன் உள்ளே வரவில்லை என்றதும் அவனது அன்னை செண்பகவல்லி வாசலுக்கு வந்தார்.

"அமுதா என்னப்பா என்ன ஆச்சு அப்பவே கார் சத்தம் கேட்டுச்சே உனக்கு காபி போட்டு கூட வைச்சிட்டேன் உன்ன காணும் , இங்க வந்தா காருக்குள்ளே உட்கார்ந்திருக்க," என பேசிக் கொண்டிருக்கையிலேயே அவரின் முகம் பாராமல் இறங்கி வாகனத்தின் கதவை அடைத்த வேகத்தில் வாகனம் ஒருமுறை குலுங்கி நிற்க சென்பகவல்லி அதிர்ந்து தன் வாயை மூடிக்கொண்டார்.


விடுவிடுவென உள்ளே போனவன் தனது கையில் இருந்த அந்த கவரை டீபாயின் மீது வீச அதில் இருந்து நிலன் விழி மேத்யூ இணைந்து இருக்கும் புகைப்படம் விழுந்தது
 

அத்தியாயம் 3

தனது அறைக்குள் நுழைந்த ஆழியனுக்கு என்ன முயன்றும் கண்களை கட்டுபடுத்த முடியவில்லை.

சிறு நெருப்பில் திகுதிகுவென எரியும் காய்ந்த சருகாக நினைவுகள் அவனை எரிக்க துவங்கியது. வெப்பம் தாளாமல் எரிந்தவன் தானும் சாம்பல் போல் கரைந்து போய்விட மாட்டோமா என தனது குளியல் அறையில் நீர்த்தாரையின் அடியில் நின்றான்.

ஓடும் நீர்போல் நிகழ்காலம் ஓடி தேங்கிய கடந்தகாலத்தில் சேர்ந்தது. தேங்கிய நினைவு நீரின் அழகு தாமரைத் தடாகம் மனதிற்கு இதம் தரும் சில நேரம் அழுகிய மீன் மிதக்கும் உபயோகமற்ற நச்சு பொய்கை சிலநேரம். நினைவு ஏரியில் படகாய் சில ரசனைகளும் உண்டு முழ்கித் தவிக்கும் பல வேதனைகளும் உண்டு.அவனுக்கும் அவன் மகர விழிக்கும் இடையேயான தொடர்பும் அப்படித்தானே...

குளித்த குழந்தையாய் ஓட முயன்ற மனதை பிடித்து நிறுத்தி துவட்டும் தாயாய் தன் மனதையும் தன்னையும் கட்டுக்குள் கொணர்ந்தவன் நீர் தாரையை நிறுத்திவிட்டு தன்னை தூவாலை கொண்டு துடைத்தபடி வெளியே வந்தான். இதுபோல நினைவுத் தாரைகள் நிறுத்திட இயன்றால் நன்றாகத்தான் இருக்கும் என மீண்டும் ஓடிய நினைவின் பிடியை தளர்த்த அவசரமாக உடையை மாற்றிக் கொண்டவன் கீழே இறங்கினான்.

. உணவு மேசையில் அமர்ந்திருந்தார் சென்பகவல்லி. தனது முன்பு உறையில் இருந்து விழுந்த புகைப்படங்களை பார்த்தவருக்கு மகனின் நிலைமை புரிந்தது.

புகைப்படத்தில் இருந்த நிலனை பார்க்க தனது குடும்பத்து வாரிசாக இருந்திருக்க வேண்டியவனை இப்படி மற்றோர்வனுக்கு மகனாக்கி விட்டோமே பேரனுக்கு மட்டும் வருத்தியவர்.


தான் அன்று நிகழ்தியவைகளை நினைவுக்கு கொணர்ந்தார். ஆழியன் மற்றும் மகரவிழி இவர்கள் இருவரும் ஊழ்வினைக் காதல் மட்டும் உறுதியாய் இருக்க திருமணம் இன்றி கணவன் மனைவியாய் சேர்ந்து இருந்தனர்.

செண்பகவல்லிக்கு இந்த வந்து சேர்ந்த செய்தி
உன் மகன் ஒரு பொண்ணு கூட தாலி கட்டாம குடும்பம் நடத்திட்டு இருக்கான் அந்த பொண்ணு ஏதோ மாடலிங் ல இருக்காளாம்.

அவரைப் பொறுத்தவரையில் மாடலிங் என்பது பெண்கள் அரைகுறை உடையணிந்து ஆயிரம்பேர் பார்க்க வலம் வருவது. எனவே அந்த துறை சார்ந்த பெண் குடும்பத்திற்கு ஏற்ற பெண்ணாய் இருக்க மாட்டாள் என்பது அவர் வாழ்ந்த சூழல் விளைவித்த எண்ணம்.

இன்றும் கூட மகர விழி தானாக போகவில்லை அதனை என்பதோ அவளது நிலைக்கு தான் காரணம் அது தான் தன் மகனை திருப்பி தாக்குகிறது என்பதையோ உணரவில்லை . அவர் என்ன காதலையோ காதலின் உண்மை தன்மையை அறிய உளவியல் ஆராய்ச்சியாளாராக வா இருக்கிறார். அன்று தவறு என பிரித்து விட்டார் இன்றும் தவறு தான் என்றாலும் தன் மகனுக்காக ஏற்க திருவுள்ளம் கொண்டிருந்தார்.

மனிதன் எனும் சமுதாய விலங்கு தான் அவர்கள் வாழும் சூழ்நிலை பெறும் அனுபவங்கள் இதிலிருந்து தான் ஒரு குணத்தை தனக்கென வகுத்து கொள்கிறது. விலகி சிந்திப்பவர்களை அது மாற்றுதிறனாளியாக மாற்றிவிடும் அன்றி அறிக்கை செய்துவிடும்.

செண்பகவல்லியின் கணவர் ராஜமாணிக்கம் செண்பகவல்லியை முறையாய் மணந்திருந்தாலும் முறைதவறி சில தொடர்புகள் இருக்கத்தான் செய்தன. அவற்றிக்கு சாம, தான பேத தண்டம் என பலமுறைகளை கையாண்டு கணவனை மீட்டவர் இறுதியில் எமனிடம் ஈந்துவிட்டார்.

மகனும் அதுபோல் ஆரம்பித்து விட்டாடோனோ என்று பயம் சூழ மகனின் மீட்க நடவடிக்கைகளை எடுத்தார் விளைவு ?

ஆழியன் ஒரு கடிமணத்தை மறுதலித்து தன் காதல்சகுந்தலையை பிரிந்து அறமணம் செய்தான் மற்றொறுவன் மங்கையை அவன் மனம் இல்லா அது அவன் மானத்தை விலையாக்கி விடைபெற்றுக் கொண்டது.

இதோ இன்றுவரை இறுதிவரை சீதை வனம் புகுந்த பின் இருந்த ராஜா ராமனாக இருந்தான்.தன் மகனின் இந்த வாழ்வு அவளை வேதனை கொள்ள செய்தது. ஆழியன் அவன் தந்தையைப் போல் இல்லை என நிறுவிவிட்டான். நித்தம் தன் மகனை இப்படி கண்டு அவன் மறுவாழ்விற்காய் எத்தனையோ கூறி அத்தனையும் அவனால் நிராகரிக்கப்பட்டது. தன் மகன் தனிமையில் மறுகுவதை வருடங்களாய் கண்ட தாயுள்ளம் இன்று சிதறிய புகைப்படங்களை கண்டதும் பொறுக்காமல்

"இவ எல்லாம் என்ன பொண்ணு நான் போன்னு சொன்ன உடனே போயிடுவாளா ?

போனவ ஒத்தையா தான இருக்கனும் எப்படி இன்னொருத்தன கல்யாணம் பண்ணலாம் .
அப்புறம் என்ன பெரிய காதல் புண்ணாக்கு காதல் ?
எல்லாம் இவனுகள சொல்லனும் அடுத்தவன் பொண்டாட்டி தெரிஞ்ச அப்புறம் என்ன கல்யானம் ?
இந்த இலட்சணத்தில் இவன் பூலோகம் காணாத காதலி காதல் இவன் வேற இந்த உருகு உருகறான் பதினைஞ்சி வருஷமா.நான் பண்ணி வைச்சிதாவது உருப்படியா இருந்திருந்தா? எனக்கு வயசான காலத்தில் நிம்மதி கிடைச்சி இருக்கும்.

இவள அத்துவுட்டதல என்ன தப்பு இவளுக்கு என்ன நல்லா வாழறா எம்புள்ளதான்
வாழ்கைய தொலைச்சிட்டு நிக்கறான். என புலம்பியபடி இருந்தவருக்கு '

தான் செய்ததில் தவறு என்ன என்றுதான் இன்று வரை புரியவில்லை. அவர் புலம்பியதை கேட்டபடி வந்தவன்

"நீங்க உங்களோட தவறான பார்வை , என்மேல உங்களுக்கு இல்லாத நம்பிக்கை . ஒழுங்கா நீங்க விசாரிக்காதது அதுதான் என்ன என்னோட விழிகிட்ட இருந்து பிரிச்சது."

"ஏன் நீங்க நினைக்கல நான் அவள மறந்துட்டு இன்னோருத்தி கூட சந்தோஷமா வாழனும்னு அத அவள பெத்தவங்க நினைக்க மாட்டாங்க.

அவ எனக்கு துரோகம் பண்ணல காதல்னு ஏமாத்தல உங்களால... உங்களால நான்தான் அதை செஞ்சேன் அனுபவிக்கிறேன்.

நீங்க நினைக்கற மாதிரி மாடலிங் ஒன்னும் கேவலம் இல்லை. எல்லா தொழில் போலவும் அதுவும் ஒரு தொழில் அவ்வளவுதான்.
உங்களுக்கு தெரிஞ்சது அரைகுறையும் அலையறது மட்டும் தான் அதையும் தாண்டி அதுல எவ்வளவு விஷயங்கள் இருக்கு தெரியுமா அது அவளோட கனவு அதுக்கு அவ எவ்வளவு கஷ்டப்பட்டா தெரியுமா?"

என்றவன் மனம் கனக்க கூறினான். அதில் சற்று பயந்த சென்பகவல்லி
"நான் தான் யாரவேன்னும்னாலும் இல்லை அவளையே கூட கல்யானம் பண்ணிக்கோ சொல்லிட்டேனே. ஆனா நீதான போகல"

செண்பகவல்லியை பார்த்து விரக்தியான சிரிப்பை உதிர்த்தவன்
"எப்படிம்மா போக முடியும் ? அது மாதிரியான துரோகத்தையா நான் செஞ்சிருக்கேன். "

என்றவன் அவரையும் உணவையும் தவிர்த்துவிட்டு மேசையில் கிடந்த அத்தனை புகைப்படத்தையும் எடுத்துக் கொண்டு தனது அறைக்கு வந்தான்.தனது மேசையின் இழுப்பறையை திறந்தவன் உள்ளே இருந்த அந்
அந்த ஆல்பத்தை திறந்தான்.


அதில் மகரவிழி பல்வேறு கோணங்களில் பிண்ணணிகளில் இருக்கும்படி மிக அழகாக படமாக்கப்பட்டிருந்தது.
மெல்ல வருடியவன் மனமும் அந்த மெல்லியளாளை அவன் கண்ட தினம் நோக்கி போனது.

அந்த அடுக்கு மாடி குடியிருப்பின் அந்த வீட்டினை பார்த்தவனுக்கு அது மிகவும் பிடித்திருந்தது. வாடகை சற்று அதிகம் இருந்தாலும் அதையே பேசி முடித்தவன் வெளியே வர அவளைப் பார்த்தான். எதிர் வீட்டில் இருந்து வெளியே வந்தாள் அவள் அவனது மகர விழியாள். ஒரு ஊதா நிற ஜீன்ஸ் வெளிர் நிற டீசர்ட் ஒரு ஷோல்டர் பேக் காதில் இயர் சகிதம் வந்தவள்.இவனை கவனிக்கவே இல்லை . தனது கூந்தலை அள்ளி முடிந்தபடியே அவனைக் கடந்து போனாள்.

அவளது ஐந்தே முக்காலுக்கு சற்று கூடுதல் உயரமும் கவனமாக பராமரிக்கப்பட்ட உடலமைப்பும் காட்டி கொடுத்தது அவள் ஒரு மாடல் என்பதை ஆழியன் அவள் கடந்ததில் நின்றுவிட விழியாளோ மின்தூக்கியை அடைந்து அதனுள் நுழைந்திருந்தாள். கதவுகள் மூடத் தொடங்க அவள் முகம் காணவேண்டும் எனும் ஆவல் மிக ஓடிவந்து இறுதி நொடியில் மின் தூக்கியில் நுழைந்தான்.அதுவரை அலைபேசியில் கவனமாய் தீடீரென்று உள்ளே நுழைந்தவனை நிமர்ந்து பார்த்தாள்.

எந்தவித ஒப்பனையும் செய்து கொள்ளவில்லை. ஆனாலும் அவளது திருத்தப்பட்ட புருவங்களும் பளபளக்கும் மேனியும் கூர்நாசி செதுக்கப்பட்ட முகவடிவும் சிறு காந்தள் மலரிதழ்களும் அவனை ஈர்க்க பார்த்துக் கொண்டிருந்தான்.

இவன் பார்வை அவளுள் ஏதோ செய்தது. அவளது இந்த துறையில் அவள் பலவித பார்வைகளை அதன் தேடல்களை தாண்டிவிட்டாள்.

சில தவறான பார்வைகளை முதல் சுற்றிலேயே கண்டறிந்து அவர்களை தன்னிடம் இருந்து தகுதி நீக்கம் செய்து விடுபவள் அவளது அந்த கூர்ந்து நோக்கும் திறன் அதனால் தான் இந்த இருபத்து மூன்று வயதில் அதிக ஊதியம் பெறும் மாடலாக விழியாள் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளாள்.

அவள் இந்த ஆர்வப்பார்வைகள் சகஜம் அதை எதிர்கொண்டு கடந்துவரும் முறையும் அவள் அறிவாள். ஆனால் இவன் பார்வை உடலில் அதிகமாக பதியவில்லை ஏதோ பல நாட்கள் பிரிந்த ஒருவரை கண்டதும் கண்ணும் நெஞ்சும் ஒருசேர பார்த்து இது அவள் தானா என ஆராய்வதுபோல் முதலில்... பிறகு மகிழ்வின் உச்சியில் இப்போது எப்படி இருக்கிறாய் என்பதுபோல் வருடி அவள் விழி வழி எதையோ தேடி உயிருள் நுழைய மகரவிழியாள் அலமலந்து போனாள் .

' இது ஏதேடா வம்பு' என தனது கூலர்ஸை எடுத்து அணிந்து கொண்டவள் திரும்பிக் கொண்டதில் சற்றே நினைவுக்கு வந்தவன் தரைதளத்திற்கான பொத்தானை அழுத்தி விட்டு நின்று கொண்டான். விழிகள் அவள் மேலிருந்து நகரவில்லை ஆயினும் சிரமப்பட்டு பிரித்து வேறு இடத்தில் பதித்தான்.
 

அத்தியாயம் 4

ஆழியனின் ஆழி போன்ற விழிகள் தன்னை உள்ளே மகரமாக இழுத்து செல்ல முனைவதை உணர்ந்து கொண்டவள் தனது கண்ணாடியை அணிந்து கொண்டு அவனுக்கு தனது பின்புறம் தெரியும் படி சுவரில் சாய்ந்து அலைபேசியை எடுத்து பார்வையிட தொடங்கினாள் தன் படபடப்பை அவனை திரும்பி பார்க்கச் சொல்லும் மனதை என்ன 'முயன்றும் கட்டி வைக்க முடியாது தவித்தவள் . தானே திரும்பி அவனை போல நின்று கொண்டு ஓரவிழியை அவன் மீது பதித்தாள்.

அவனுக்கு இதுபோன்ற சங்கடங்கள் இல்லை போலும் இவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான். அதில் மகிழம்பூவாய் அவள் மனம் அவன்தென்றல் பார்வையில் தானே உதிர்ந்து அவன் வசம் சேர்ந்தது.

இவர்களோ அது எப்படி ஒரே பார்வையில் ஒருவர் மீது காதல் வரும் வெறும் கவர்ச்சி என தான் என்று முடிவு செய்து கொண்டவர்கள் சற்று திடமாக எதிரெதிர் புறம் சென்றனர்.

ஆழியன் அங்கு குடிவந்து சில மாதங்கள் ஆகியிருக்க அவன் அவளையோ இல்லை அவள் அவனையோ நெருங்க முயலவில்லை. தங்கள் நிலையைப் பற்றி இருவருமே உணர்ந்து இருந்தனர். நெருங்கினால் தங்களால் பிரிய இயலாது என்பதனை.ஆனாலும் விதி அவர்கள் நினைப்பது போல் இல்லை.

அன்று மின்தூக்கி பராமரிப்பிற்காக நிறுத்தப்பட்டிருக்க நேரமாகிவிடும் என்று உணர்ந்ததால் வேறு வழியின்றி அவசரமாக படிகளை உபயோகித்து இறங்கினான். வீட்டை பூட்டி சாவியை வைக்கும்போது ஏற்கனவே உள்ளே வைத்திருந்த மோட்டார் வாகனத்தின் சாவி கீழே விழுந்திருந்தது.

அதைக் கவனியாமல் கீழே வந்தவன் சாவிக்காக தனது பையை துழாவஅதைக் காணவில்லை என்றதும் வாகனத்தின் அருகில் விழுந்திருக்குமோ எனத் தேடிப் பார்த்தவனுக்கு
வழியில் விழுந்து இருக்குமோ எனத் தோன்ற மீண்டும் மேலே ஒவ்வோரு தளமாக படி வழியே சென்று தேடவேண்டும் என்ற சலிப்பும் அதற்குள் வேலைக்கு நேரமாகிவிடும் என்ற நினைவும் எரிச்சலைத் தர தரையில் ஒங்கி உதைத்தான்.

அப்போது சாவியை அவன் முன் நீட்டிய மகரவிழி " இது உங்களோடது தான வீட்டு வாசல்ல கிடந்தது."

அதைக் கண்டதும் அடுத்த கனம் கொழுத்தி வைத்த புஸ்வானம் போல ஆனந்தம் பொங்க "ஆமா ஆமாங்க என்னோடது தான் ரொம்ப தேங்ஸ், இவ்வளவு நேரம் இதைத்தான் தேடிட்டு
இருந்தேன்."

"வீட்டு வாசல்ல போட்டுட்டு இங்க தேடினா எப்படி சார்?"

"அது அவசரத்தில் கவனிக்காம வந்துட்டேன்."

என்றபடி சாவியை வாங்கிக் கொண்டான். அதற்குள் அவளுக்கு அலைபேசி அழைக்க மறுமுனை என்ன கூறியதோ

" இன்னும் அரைமணிநேரம் ஆகுமா. அப்ப வேண்டாம்"

என்றவள் வாசலை நோக்கி நடந்தாள். ஆழியன் அவளுக்கு ஏதோ தேவை என்பதை ஊகித்தவனாய் தனது தலைக்கவசத்தை அணிந்தவன் வாகனத்தை இயக்க அதற்குள் அவள் முன்வாசலை கடந்து திரும்பி இருந்தாள். அவன் வாயிலை கடப்பதற்குள் மேலும் வாகனங்கள் பள்ளி குழந்தைகள் செல்ல அவன் சற்று தாமதிக்க வேண்டியதாயிற்று.

இப்போது அந்த பேருந்து நிறுத்தத்தில் விழியாள் நின்று கொண்டிருந்தாள். கடந்து செல்ல மனம் வராமல் அவள் அருகில் தனது வாகனத்தை நிறுத்தினான். அவன் தன் முன் வாகனத்தை நிறுத்தவும் என்ன என்பதுபோல் அவனைப் பார்க்க ஆழியனோ எங்கே அவள் தன்னை தவறாக நினைத்து விட கூடுமோ என அச்சம் கொண்டு

"ஸாரிங்க உங்களுக்கும் ஏதோ அவசரம் போல அப்படியே விட்டுட்டு போக மனசு வரல. உங்களுக்கு ஆட்சேபனை இல்லைன்னா சொல்லுங்க நான் டிராப் பண்ணிட்டு போறேன்."

என்றான். மகர விழி எதுவும் பேசாமல் வந்து அவன் பின்னால் ஏறிக்கொண்டாள். அவன் வாகனத்தை செலுத்தினானேயன்றி எங்கே எனக் கேட்கவே இல்லை. அவனுக்கு இந்த சாலைகள் முடியாமல் நீளாதா இந்த கனங்களை காலங்கள் நீட்டிக்க கூடாதா என
வீட்டு பாடம் செய்யாத சிறுவன் ஆசிரியர் வரக்கூடாது என வேண்டுவது போல் ஆசை கொண்டிருந்தான்.

எதிரில் வந்த வாகனத்தின் ஒலியில் நினைவுக்கு வந்தவன் சடுதியில் வாகனத்தை திருப்பி வாகனத்தை நிறுத்தியவன் அப்போதுதான் அவளை தன் மீது உணர்ந்தான்.
இவன் வாகனம் ஓட்டிய அழகில் அவள் வெருண்டு இவன் முதுகோடு பினைந்திருந்தாள்.
நிலவொன்று பின்னிருந்து அனைப்பதுபோல் குளிர்ந்து தகித்தது அவன் மேனி அவளின் அந்த ஒளி வெள்ளத்திற்குள் முழ்கியவனுக்கு வெண் பணி சாரலில் நின்றது போல் மேனி சிலர்த்திருந்தது. அவளை கண்ட கனத்தில் களவு போயிருந்தது அவனது நிலைத்தன்மை.

தினமும் அவளை எப்படியாவது பார்க்கச் சொல்லும் என்ன காரணத்தை கொண்டாவது அவள் வீடு தேடி போகும் கால்களையும் முன்னிரவில் முயற்சித்து அயர்ந்தது பின்னிரவின் அமைதியிலும் தான். ஆட்கள் இல்லா சாலையின் தெருவிளக்கின் ஒளிபோல அவள் வரவை தேடி அதன் நினைவில் இருந்தவன் அருகில் இன்று அவள்


"ஆழியன் கவனமா போங்க நானும் ஏறினதுலர்ந்தது இறங்க வேண்டிய இடத்தை சொல்லிட்டே வரேன் நீங்க கவனிக்கவே இல்லை."

என அவள் படபடத்துக் கொண்டிருந்தாள். அவனோ தன்வயமின்றி போவதை உணர்ந்தவன் .

"ஐ திங் ஐம் இன் லவ் வித் யூ "

என்றிருந்தான். அவனது அதிரடியில் அதிர்ந்தவள்

"வாட் " என்றவள் விழிகளில் என்ன இருந்ததோ.

பிறகு அவன் ஏதோ கூறவர கை உயர்த்தி அவனைத் தடுத்தவள்.

" இது சினிமா இல்ல நீங்க சொன்ன உடனே நானும் ஒகே சொல்லி கட்டி புடிச்சி டூயட் பாட. இது நடுரோடு பீக் அவர்ஸ் மேலும் எனக்கு இன்னிக்கு முக்கியமான ஷோ இருக்கு. நாம இதை பத்தி நாளைக்கு ஈவினிங் பேசலாம். நீங்களும் அதுவரைக்கும் யோசிங்க."

என்றவள் ஆட்டோவை நிறுத்த அவளின் கரம்பிடித்து நிறுத்தியவன் ஆட்டோவை அனுப்பிவிட்டு

"உங்ககிட்ட சொல்லற வரை தான் தடுமாற்றம். ஆனா இப்ப இதான் தெளிவு கிடைச்சிடுச்சி அந்த மூச்சடைப்பு போயிருச்சி எனக்கு . நாளைக்கு பேசலாம் இப்ப எங்க போகனும் சொல்லுங்க? "

என்றவன் முகத்தில் கவர்ச்சி திரை விலகி தெளிவு இருந்தது. அதை கவனித்தபடி ஏறியவள். ஒரு வெளிநாட்டு விளம்பர பத்திரிக்கை இருக்கும் இடத்தை சொல்ல
சற்று கூட கவனம் சிதறாமல் மிக அழகாக அவன் வாகனத்தை செலுத்துவதை பார்த்துக் கொண்டே வந்தாள்.

மகர விழியும் தன்னிலை இழந்து தடுமாறினாலும் சில நொடிகளில் தன்னை மீட்டுக் கொண்டு இருந்தாள். இல்லையெனில் அவளும் அவனைக் கண்ட நாள் முதல் தன்னுள் தனக்கான நேரங்களில் அவன் நுழைவதை தவிர்க்க இயலாமல் தவிப்பதையும் அன்று முதல் அது காதலோ எனும் ஐயப்பாடு இன்று இவன் அவரசத்தில் கவர்ச்சியோ என்று மாற்று உரைக்க சற்றேனும் அவகாசம் தேவைப்பட்டது.
அந்த உறுதி,பக்குவம் பொறுமை இல்லை எனில் இந்த துறையில் சூப்பர் மாடலாக வலம் வர முடியாது.


அவளது மாடலிங் துறையில் பல தரப்பட்ட மனிதர்களை பார்ப்பதாலும் மேலும் அவர்களைப் பற்றிய புரிதலை அவர்கள் உடல்மொழி பேச்சு கண்களின் மூலம் அனுமானிக்க பயிற்றுவிக்கபட்டு பழகியும் இருந்தாள். எந்த விஷயத்தையும் சற்று கூர்ந்து கவனிக்கும் திறனை வளர்த்துக் கொண்டாள்.
இல்லை எனில் இந்த துறையில் அவள் இத்தனை தூரம் சாதிப்பதோ அல்லது வாய்ப்பிற்காக தரம் இறங்கிவிடாமல் எல்லை மீறாமல் தன்னை காத்து இருக்கவோ இயலாது.
அது போன்ற காரணங்களால் சில வாய்ப்புகள் போனாலும் அதை கவனத்தில் கொள்வதில்லை.

மாடலிங் என்பது மகர விழியினது கனவு . சிறுவயதில் இருந்து விதவிதமான ஆடைகளை அணிந்து கொண்டு அந்த பெண்கள் நடைபயலுவதை பார்ப்பவள் தானும் அது போல முயல்வது என்று இருப்பதை பார்த்த அவளது தாய் மஞ்சுளாவும், ரகுநந்தனும் அவளது ஆர்வத்தை புரிந்து கொண்டு அவளுக்கு ஆதரவும் பாதுகாப்பும் தர அவரது துணையோடு பத்தொன்பது வயதிலேயே மாடலிங்கில் நுழைந்திருந்தாள்.

மாடலிங்கில் எடிட்டோரியல் , கமர்சியல், ஸ்போர்ட்ஸ், ஸ்விம் சூட், ப்ரோமோ , ப்ரொடெக்டிவ், பாடி பார்ட்ஸ். ப்ரிலான்ஸ் எனப் பல வகை உண்டு.

எடிட்டோரியல் என்பது ஒரு மாடலுக்கான அத்தனை அம்சங்களும் இருக்கும் பெண்களை ஒப்பந்தம் மூலம் புகழ்பெற்ற பத்திரிக்கை மற்றும் விளம்பர நிறுவனங்கள் தங்களுடைய ஷோக்களுக்கு மட்டும் உபயோகத்து கொள்ளும்
ஒரு ஷோவிற்கு இவ்வளவு அதற்கான தொகை
வழங்கப்படும். அதன் புகழ் மிக அதிகம்.
கமர்ஷியல் என்பது நாம் காணும் விளம்பரங்களில் நடிப்பவர்கள். ஸ்போர்ட்ஸ் என்பது விளையாட்டு மற்றும் பிட்னஸ் எனும் உடற்பயிற்சிக் கானது. ஸ்விம் சூட் மற்றும் நியுட் செக்ஸி வகையிலான பெண்களுக்கு மாடலிங். சில பொருட்களின் ப்ரோமோ விளம்பர தூதர். ப்ரொடக்டிவ் என்பது ஆடை தாயரிப்பு நிறுவனங்கள் தங்களது ரெடிமேட் தயாரிப்புகளுக்காக இவர்களின் அளவுகளின் அடிப்படையில் ஆடை நெய்து இவர்களுக்கு அணிவித்து சரிபார்ப்பது பிறகு ப்ரொடெக்க்ஷனுக்கு தருவது வழக்கம் . பாடி பார்ட்ஸ் என்பது உடலின் குறிபிட்ட பாகங்களை மட்டும் அதாவது கண் கை கால் போன்றவற்றை மட்டும் விளம்பரத்தில் மாடலாக உபயோகிப்பது

இதில் மகர விழி கமர்ஷியில் மாடலாக அறிமுகமாகி இன்று சூப்பர் மாடல்.
எப்போதும் உடன் வரும் மஞ்சுளா ஹார்ட் அட்டாக்கில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் இறந்தபின் ரகுநந்தன் வேலையினால் வெளியூரில் தங்க வேண்டியதாயிற்று.

இன்று ஒரு பிரபல பேஷன்பத்திரிக்கையின் எடிட்டோரியல் மாடலாக அந்த ஷோவிற்காகத் கிளம்பியவள் வெளியே வரும்போது ஆழியனின் பைக் சாவியை பார்த்தாள். அதை 'அவனிடம் தந்தவள். தனது வாகனத்தை சர்வீஸுக்கு கொடுத்திருந்தாள். கால்டாக்சியோ நேரமாகும் எனக் கூறிவிட என்ன செய்வது என பேருந்து நிலையத்திற்கு வந்து நின்றாள்.ஆழியன் அழைக்கவும் ஏறிக் கொண்டாள்.


"இன்னிக்கு ஈவினிங் ஷோ இருக்கு முடிந்தால் வாங்க" என ஒரு இன்விடேஷனை தந்துவிட்டு

உள்ளே சென்று விட்டாள்
 
Status
Not open for further replies.
Top