அத்தியாயம் : 10
லாவண்யா கலக்கமாக அமைந்திருப்பதை கண்டு, " என்னாச்சு லாவி?. ஏன் என்னவோ போல இருக்க?" என்றாள் வரு.
"அம்மா செல்பி எடுத்து அனுப்ப சொன்னாங்க. வரன் ஏதோ வந்திருக்காம்!. நல்ல இடம்! அப்பா பேசுறாங்கன்னு சொல்லி, அம்மா பீதியை கிளப்புறாங்க" என்றவளின் கண்கள் கலங்கி இருந்தது.
"பொண்ணுன்னு இருந்தால் கேட்க தான் செய்வாங்க லாவி. இதில பொண்ணு பார்க்கிறது! ஜாதகம் பொருந்தி வர்றது! இப்படின்னு வரிசையா ஏகப்பட்ட பார்மாலிட்டீஸ் இருக்கு!. கவலைப்படாதே!. அதே நேரம் நீ இன்னொரு முறை அண்ணணிடம் பேசு!" என்றாள் வரு
"ம்ம். முயற்சி செய்கிறேன் " என்ற லாவி அத்தனை நேரம் இருந்த சந்தோஷம் குறைய எழுந்து உள்ளே சென்று விட்டாள்.
இங்கே! பெண்களை விட்டு விட்டு வந்த ஈஸ்வர் நேராக அரிசி ஆலையில் காரை நிறுத்தி விட்டு உள்ளே வர, ராஜூ மற்றும் ராதாவுடன் மதிக்கத்தக்க தோற்றமுடைய ஆண் பெண் இருவர் நின்று பேசிக் கொண்டிருந்னர். அருகில் கோபால் மட்டும் நின்றிருந்தார். அவர்களை பார்த்தபடியே அருகே வந்து நிற்க,
"இது தான் என்னுடைய மகன் ருத்ரேஸ்வரன் " என்று அறிமுகப்படுத்தினார் ராஜூ.
"ஹலோ " என்று மரியாதை நிமித்தமாக கை குலுக்கினான்.
"இவர் நமக்கு ஒரு வகையில் சொந்தம். பெயர் துரை. அது அவர் மனைவி மணிமேகலை. இவருக்கு பையன் இருக்கார். பெயர் வசந்தன். வெளிநாட்டு கம்பெனியில் நல்ல பொசிசனில் வேலையில் இருக்கார். நம்ம லாவண்யாவை பெண் கேட்குறாங்க" என்றபடி மணமகன் பற்றிய விவரம் அடங்கிய ரிசியூம் தாளை கொடுக்க, ஈஸ்வர் அதை பார்க்க ஆரம்பித்தான்.
"பையன்னு சொன்னதும்! நானும் சின்ன பையன்னு நினைச்சிட்டேன். உங்களுடைய பிஸ்னஸை பையன் தான் பார்த்துக்கிறாரா?" என்றார் துரை.
"ஆமாங்க. அதோட, தனியா டெக்ஸ்டைஸ் தயாரிக்க கம்பெனியும், ஏற்றுமதி வியாபாரமும் செய்யறான்" என்றார் ராஜூ
"எனக்கு ஒரு பொண்ணும் இருக்கான்னு சொன்னேனே. இப்ப தான் காலேஜ் செகண்ட் இயர் படிக்கிறாள். பையனுக்கு கல்யாணம் முடிந்ததும் இரண்டு மூனு வருசத்துக்கு பிறகு, மாப்பிள்ளை பார்க்கலாம்னு இருந்தோம். உங்க பையனை பார்த்ததும் எங்களுக்கு ரொம்ப பிடிச்சிட்டு போயிட்டுது. நாம ஏன் பெண் கொடுத்து பெண் எடுக்க கூடாது?. கல்யாணத்துக்கு பிறகு, என் பொண்ணு தொடர்ந்து படிச்சுக்கட்டுமே?" என்றார் கேள்வியாக
பெண் கொடுத்து பெண் எடுப்போம் என்ற வார்த்தையில் ஈஸ்வர் திடுக்கிட்டு நிற்க, அதே நேரம் இவர்கள் பேசுவதை கேட்டபடியே ராமன் அங்கு வந்து நின்றிருந்தார்.
"இல்லைங்க. அது சரியா வராது. என் பையனுக்கு சின்ன வயசிலேயே ஒரு பெண்ணை பேசி வைச்சிட்டோம். என் பொண்ணு கல்யாணம் முடிஞ்சதும். என் பையனுக்கும் கல்யாணம் பேசி முடிச்சிடுவோம்" என்றார் ராஜூ. பதில் துரைக்கு என்றாலும்! பார்வை ராமனிடம் இருந்தது.
அவரும் ஆமோதிப்பாக தலையசைத்தபடி கோபாலை பார்க்க! அவரும் ஆமோதித்தார்.
இவர்களின் மௌன பரிமாற்றத்தை கவனிக்காமல், ராஜூ பேசியதை கேட்ட ஈஸ்வர்! அதிர்ச்சியில் அப்படியே நின்று விட்டான். எதற்கு இவ்வளவு அதிர்ச்சி? என்றெல்லாம் புரியவில்லை. மனது படபடப்பாக இருந்தது. பொண்ணை பேசி முடித்து விட்டாங்களா?இதை பற்றி நம்மிடம் பேசியதே இல்லையே?.இவங்களா முடிவெடுத்தால்! அதற்கு நான் ஒப்புக் கொள்ளனுமா?' என்று மனம் அங்கலாய்க்க
அதே கேள்வியை துரை கேட்டிருந்தார். "சின்ன வயசில முடிவு பண்ணதையெல்லாம் இப்போ பேச முடியுமா? . அதுக்குள்ள பசங்க மனசு மாறியிருக்கலாமே?" என்றார் துரை விடாமல்
'அதானே!' என்று நினைத்த ஈஸ்வரின் மனதில் வருணாவின் முகம் தன்னையறியாமல் வந்து போனது.
இப்படியே பேசிக் கொண்டிருந்தால்! யார்? என்ன? என்று கேள்வி எழும். அருகில் ஈஸ்வர் வேறு நின்றிருப்பதால்! பதிலும் சொல்ல முடியாது நிலை என்பதால்!
"என் பொண்ணுக்கு பேசறது என்றால் பேசலாம். மற்றபடி பொண்ணு கொடுத்து பொண்ணு எடுக்கிறது எல்லாம் சரியா வராதுங்க!" என்றார் ராஜூ திட்டவட்டமாக
துரை மேலும் ஏதோ கூற வர, "என்னங்க ஒரு நிமிசம் இங்கே வாங்க" என்று தனியே அழைத்த, அவரது மனைவி மணிமேகலை! என்ன கூறினாரோ? தலையை தலையை ஆட்டிய துரை. கடைசியாக வந்து,
"சரிங்க. நாங்க பொண்ணை எப்போ பார்க்க வரலாம் சொல்லுங்க. முதலில் பையன் கல்யாணத்தை முடிச்சிடறேன். என் பொண்ணுக்கு யார் பிராப்தம்னு எழுதியிருக்கோ அதன்படியே நடக்கட்டும் " என்றார் நயந்து
" அப்போ சரிங்க, நாங்க சென்னை போயிட்டு நல்ல நாள் பார்த்து சொல்றோம். அப்போ பொண்ணு பார்க்க வாங்க!" என்று பேசி முறையாக அனுப்பி வைத்தனர்.
மறுநாள் ராஜூ தன் குடும்பத்துடன் கிளம்பினார். ஈஸ்வர் வெளிப்பார்வைக்கு இயல்பு போல இருந்தாலும்! உள்ளுக்குள் ராஜூ சொன்ன விசயமே ஓடிக் கொண்டிருந்தது. வந்தவுடன் இருந்த மகிழ்ச்சி தற்போது இல்லை.
காதல் என்று மகன் எதுவும் சொல்லி விடுவானோ?என்று பயந்து தான் ராஜூ, பெண் பார்த்து வைத்திருப்பதாக ஈஸ்வரிடம் சின்ன கோடிட்டு காட்டியிருந்தார். ஈஸ்வருக்கோ, பரிதவிப்பான நிலை. எதனால் இப்படி?. அவனுக்கு என்ன வேண்டும் என்று கூட சொல்லத் தெரியவில்லை. உள் ஜூரம் போல மனம் சோர்ந்து கிடந்தது.
லாவண்யா மற்றும் ஈஸ்வர் இருவருமே அவரவர்களுக்கான யோசனையில் உழன்றபடியே பெற்றோருடன் சென்னை புறப்பட்டிருந்தனர்.
மாப்பிள்ளை வசந்தன் வேலை, குடும்பம் பற்றி விசாரித்து விட்டு திருப்தி என்றதும் பெண் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டது. பெண் பிடித்து விட, அன்றே நிச்சயதார்த்த நாள் குறிக்கப்பட்டது. அடுத்த பதினைந்து நாளில் பெண் வீட்டில் உறவுகள் முன்னிலையில் நிச்சயித்து கொள்வதாகவும், பிறகு மூன்று மாதங்கள் கழித்து திருமணம் என்று பெரியவர்களால் நாள் குறிக்கப்பட்டது.
நிச்சயதார்த்த செய்தியை கேள்விபட்டு, வீட்டிலுள்ளவர்கள் மகிழ்ச்சியில் இருக்க! வருணா தான் தவித்துக் போனாள். உடனே லாவண்யாவுக்கு அழைத்து விட்டாள்.
அழைப்பு இணைக்கப்பட்டதும். "என்ன லாவி? நான் கேள்விபட்டதெல்லாம் உண்மையா?. வீட்டில் நிச்சயதார்த்தத்துக்கு ஏற்பாடு பண்ணிட்டாங்களா?" என்றாள் ஆதங்கமாக
"ம்ம் " என்றவளின் குரலில் உயிர்ப்பே இல்லை.
"உனக்கு பிடிக்கலைன்னு மாமாவிடம் சொல்லியிருக்கலாமே?" என்றாள் ஆதங்கமாக
"என்னோட விருப்பத்தை கேட்கவே இல்லை வரு. நல்ல இடம்னு அவங்களே பேசி முடிச்சிட்டாங்க" என்றாள் வருத்தமாக
"உங்க அண்ணன் கூட உன் விருப்பத்தை கேட்கலையா?" என்றாள் கோபத்தை அடக்கி
"அண்ணணிடம் கூட இந்த பையனை முடிக்க போறோம்னு தகவல் போல சொல்றாங்க!. அண்ணன் என் முகத்தை பார்க்குது. எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை. அமைதியா நின்னுட்டேன்."
"உனக்கும் இதில் விருப்பம்னு நினைச்சிருப்பாங்களோ?"
"அப்படித்தான் நினைக்கிறேன்!"
"இப்போ என்ன செய்யப் போற லாவி?. உங்க வீட்டில் விஷ்ணு அண்ணண் மேல தான் விருப்பம்னு சொல்லிப்பாறேன்"
"ம்கூம். சொன்னால் விஷ்ணுவிடம் விசாரிப்பாங்க. ஆனால் அவருக்கு என் மேல எந்த விருப்பமுமில்லைனு தெரியவரும். எல்லாருக்கும் தர்ம சங்கடம்" என்றாள் நிதர்சனம் புரிந்தவராக
"ம்ம் " என்றாள் வருவும் ஆமோதிப்பாக. மேற்கொண்டு என்ன பேசுவது என்றே தெரியவில்லை.
"கல்யாணத்துக்கு மூனு மாசம் இருக்கு!. அதுக்குள்ள ஏதாவது வழி கிடைக்கும் பார்க்கலாம் " என்றவள். பொதுவான விசயங்களை பேசிவிட்டு அழைப்பை துண்டித்தாள்.
நிச்சயதார்த்தத்துக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே சோலையூரிலிருந்து இரண்டு குடும்பங்களும் கிளம்பி வந்து விட்டனர். வீட்டிலேயே நிச்சயதார்த்தம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால்! வேலைகள் வரிசைகட்டி இருந்தன.
வந்தவுடனேயே வேலைகளை கையிலெடுத்துக் கொண்டனர் இரு குடும்ப பெரியவர்களும். விஷ்ணு, ஈஸ்வரோட வெளி வேலைகளில் இணைந்து கொள்ள!. வருணா தான் திணறி கொண்டிருந்தாள்.
ராதிகாவுடயே நெருங்கிய சொந்தங்களின் பகட்டான தோற்றத்தை கண்டு, லாவண்யாவுடனே நிற்க வேண்டியிருந்தது. இதில் லாவண்யா முகத்தில் வருத்தமோ கலக்கமோ இல்லாமல், மகிழ்ச்சியாக இருப்பதை கண்டு, குழப்பமே மிஞ்சியது. இதை பற்றி தனியே விசாரிக்கவும் முடியவில்லை.
அன்று மாலை நிச்சயதார்த்தம் . காலையில் ராதாவிடம் வந்து நின்றாள் வரு, " அத்தை" என்றபடியே
"என்ன வரு?"
"அத்தை, நான் குளிக்கனும் எங்கே குளிக்கிறது?. எல்லா பாத்ரூமும் ஃபுல்லா இருக்கு" என்றாள் சிணுங்கலாக
காலை டிபனை செய்து கொண்டிருந்த கோசலை, " அஞ்சு மணிக்கே எழுப்பி விட்டேன்ல! அப்போவே எழுந்து குளிக்காம! எட்டு மணிக்கு வந்து நிற்கிற?" என்றார் அதட்டலாக
"அம்மா, நைட்டெல்லாம் தூங்கவே முடியலை மா. எவ்வளவு நேரம் டிவி சத்தம் கேட்டுச்சுன்னு உனக்கே தெரியும்ல. " என்றாள் ஆதங்கமாக
"இடத்துக்கு தகுந்தது போல நடந்துக்க தெரியனும் வரு. சும்மா வெட்டி பேச்சு பேசக் கூடாது " என்று கண்டித்தார் வேணி.
"பெரியம்மா" என்றாள் சலுகையாக
"நீ போய் ஈஸ்வர் அறையிலிருக்கிற பாத்ரூமில் குளிச்சிட்டு வந்துடு " என்றார் ராதா சட்டென்று
"நானா! அங்கேயா?" என்றாள் அதிர்ந்து
"ஆமாம் வரு. ஈஸ்வர் வெளியில் போயிருக்கான். வர ரொம்பவே நேரம் ஆகும். நீ அங்கேயே குளிச்சிட்டு, ரெடியாகி வந்து விடு. நகையையும் கையோட எடுத்துக்கோ " என்று விட்டு, மற்ற வேலைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார்.
தனது உடைமைகளை எடுத்துக் கொண்டு, மாடியேறி சென்றாள். ஈஸ்வரின் அறைக்கதவை திறக்கும் போது, அவளறியாமல் உடல் சிலிர்த்தது. மெல்ல அடி எடுத்து உள்ளே வைத்தவள். சுற்றிலும் பார்வையை ஓட்டினாள். டைல்ஸ் தரையின் பளபளப்பை மேலே சீலிங் பொருத்தப்பட்டிருந்த லைட்டின் வெளிச்சத்தில் கூடுதலாக தெரிந்தது.
ஏசி அணைக்கப்பட்டிருந்தாலும்! அதன் குளுமையை இன்னும் தக்க வைத்துக் கொண்டிருந்தது அறை. க்குவின் சைஸ் கட்டில மெத்தைகளுடன் போடப்பட்டிருந்தது. அதனையடுத்து வார்ரோப். தனித்தனியாக கதவுகளுடன். ஒரு கதவில் மட்டும் முழுமையாக கண்ணாடி பொருத்தப்பட்டிருந்தது.
ஏதோ மெல்லிய நறுமணமுடன் உள்ளே நுழைந்ததிலிருந்து வீசிக் கொண்டிருந்தது. இது ருத்ரனுடைய அறை என்று நினைக்கும் போதே! அடி வயிற்றில் பட்டாம்பூச்சு பறந்தது. நன்றாக மூச்சை இழுத்து விட்டுக் கொண்டவள். தன்னை சமன் செய்து கொள்ள முயன்றாள். ஓரளவு அதில் வெற்றியும் பெற, கொண்டு வந்து துணிகளை ஓரமாக வைத்து விட்டு, டவல் சோப் சகிதம் பாத்ரூமில் நுழைந்து கொண்டாள்.
குளித்து,ஈரம் போக வேறுடை மாற்றிக் கொண்டு வந்தவள். தலையை ஈரம் போக துடைத்து, தலை சீவி, இரண்டு பக்கமும் சுருட்டி பஃப் வைத்து ஹேர்பின் குத்தியவள். பின்னால் முடியை தளர்வாக பின்னி ரப்பர் பேண்ட் போட்டுக் கொண்டாள்.
அடுத்து, ராதிகா கொடுத்த புடவையை கையிலெடுத்தாள். மஞ்சள் நிற பட்டுப்புடவை, கருநீல நிற பார்டர். உடல் முழுவதும் பட்டு ஜரிகை பளபளவென ஜொலித்தது. அடுத்து இரண்டு கைகளிலும் வளையல்கள் அணிந்தவள். காதிற்கு குடை ஜிமிக்கி போட்டு விட்டு, கழுத்திற்கு ஆரத்தை அணிய முயன்று கொண்டிருந்தவள். ஒரு வழியாக நிமிர, எதிரே இருந்த கண்ணாடியில் ஈஸ்வர் இவளை பார்த்தபடியே உள்ளே வருவது தெரிந்தது.
திகைத்து இவள் திரும்ப! ஈஸ்வரும் உள்ளே வந்து விட்டான். நிச்சயமாக அங்கே வருணாவை அவன் எதிர்பார்க்கவில்லை. உள்ளே வரும் போது, ' யாரது ?என் அறையில்!. பர்மிஸின் கேட்காமல் எப்படி வந்தாள்?' என்று கோபமாகத்தான் உள்ளே நுழைந்தான். முகத்தை அவன் கவனித்திருக்கவில்லை.
திரும்பியதும் வருணாவை அவன் எதிர்பார்க்கவில்லை என்பதை அவன் அதிர்ந்த முகமே காட்டியது. தலை முதல் பாதம் வரை அவளது பார்வை தொடர, கைகளை பிசைந்தபடி அவஸ்தையாக நின்றாள். மீண்டும் அவள் முகத்தில் பார்வை நிலைக்க விட்டவன். அப்படியே நின்று விட்டான்.
எதுவும் பேசவில்லை! தேடிய பொருள் கை சேர்ந்த உணர்வு!. அப்படியே நிற்பதை கண்டு, அங்கேயிருந்து செல்ல, வாயிலை நோக்கி வந்தாள். ஈஸ்வரும் அங்கேயே நிற்பதால்! அவனை இடிக்காமல் பக்கவாட்டில் குறுக்காக செல்லும் நிலை. அதே போன்று நகர,
அவனை நெருங்கி வரும் வரை பொறுமை காத்தவன். மிக நெருங்கமாக வந்தவன். வாயில் பக்கம் கை வைத்து அவளை நகர விடாமல் நிறுத்தியிருந்தான்.
வருணா திகைத்து பார்க்க! " என் அறையில் என்ன பண்ற?" என்றான் மெதுவாக
"அத்தை தான் குளிக்கனும்னு சொன்னதும். இங்கே வந்து குளிக்க சொன்னாங்க" என்றாள் படபடப்பாக
"குளிச்சிட்டியா? "
"ம்ம்ம்"
"சாப்பிட்டியா?"
"இல்லை " என்பது போல மறுப்பாக தலையசைத்தாள்.
"அம்மாவிடம் பூ வாங்கி கொடுத்திருக்கேன். வாங்கி வைச்சுக்கோ" என்றான் கிசுகிசுப்பாக
தலையை ஆமோதிப்பாக ஆட்டி வைத்தாள். வருணாவுக்கும் அவனை விட்டு நகர தோன்றவில்லை. இருவரையும் கட்டி வைத்தது போல மாய வலையில் சிக்கி நின்றிருந்தனர்.
"இந்த டிரஸ் நல்லாயிருக்கா?" என்றாள். ஏதோ கேட்க வேண்டும் என்பதற்காக
"ம்ம்ம் " என்றவன். கொசுவத்தை சரியா வைக்கலையா?" என்றான்.
அவள் குனிந்து பார்க்க! அவளது தலை அவன் புஜத்தில் உரசியது. " இரு நான் சரி பண்றேன்" என்றவன். சற்றும் யோசிக்காமல் அப்படியே குத்துகாலிட்டு அமர்ந்து, நன்றாக இருந்ததை மீண்டும் அதே போன்று வைத்தவன். " ம்ம். இப்போ ஒ.கே " என்றபடி எழுந்தவன். இப்போது நேருக்கு நேராக அவளிடம் நெருங்கி நின்றான்.
ஈஸ்வரது செயலில் அதிர்ந்திருந்தவள். மீண்டும் அவனது நெருக்கத்தில் திகைத்து பார்க்க! அவனும் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
"எ.. என்ன?" என்றாள் திணறி
இப்போது அவளது இரு பக்கமும் கைகளை வைத்து அவளை நகர விடாமல் நிற்க,
"எ.. என்.. என்ன பண்றீங்க?" என்றவளின் குரல் வெளியே வரவில்லை. (வெறும் காத்து தான் வருது மொமெண்ட்)
நெற்றியோட நெற்றி முட்டி, கண்களை மூடி அப்படியே நின்றிருந்தான். அவனுக்கே உரிய மணத்தை ஆழ்ந்த் சுவாசித்தவன்.
வருணாவில் நெற்றியில் அழுந்த முத்தமிட்டான்.
சற்று பொருத்து பெருமூச்சு விட்டபடி அவளை விட்டு நகர்ந்தவன். அவளது முகத்தை பார்த்து, முகத்தில் வந்து விழுந்த ஒற்றை முடியை காதோரம் ஒதுக்கி விட்டபடி,
"லாவண்யா கூடவே இரு. சொந்தக்கார பசங்க வந்திருக்காங்க. தேவையில்லாமல் பேச வருவானுங்க. லாவண்யா கூட இருந்தால் கிட்ட வர மாட்டானுங்க" என்றவன்.
"நீ போ " என்றபடி நகர, அவனது செயலில் இதுவரை மூச்சை இழுத்து பிடித்து நிறுத்தியிருந்தவள். அடித்து பிடித்து அங்கிருந்து ஓடியிருந்தாள்.
ஈஸ்வரோ, கட்டிலில் வந்து அப்படியே படுத்து விட்டான். மீண்டும் மீண்டும் அவனறையில் அவள் நின்றிருந்த தோற்றமே மனக்கண் முன் வந்து நின்றது. அதே நினைவில் மூழ்க இருந்தவனை ராஜூவின் அழைப்பு நடப்புக்கு கொண்டு வந்திருந்தது.
கீழே விஷ்ணு, எதோ வேலையாக வாசலை நோக்கி சென்று கொண்டிருக்க, " மாம்ஸ்" என்ற லாவியின் அழைப்பில் நின்று திருப்பி பார்த்தான்.
"இங்கே வாங்களேன்" என்றாள் கையசைத்து
அவளருகே போய் நிற்க, " எனக்கொரு ஹெல்ப் வேணும். அதை உங்களால மட்டும் தான் செய்ய முடியும்" என்றாள் பீடிகையாக
"என்ன?"
"இதை இந்த அட்ரஸில் இருக்கிறவங்க கிட்ட கொடுத்துட்டு வரணும். அதுவும் இப்பவே " என்றாள். பேக் செய்யப்பட்ட பை ஒன்றை காண்பித்து,
"இப்பவா?"
"ஆமாம். ப்ளீஸ் மாம்ஸ் " என்றாள் கெஞ்சலாக
அவன் அப்போதும் யோசிக்க, " என்னோட லவ்வை தான் நீங்க ஏத்துக்கலை. இது கூட எனக்காகை செய்ய மாட்டீங்களா?" என்றாள் சோகமாக
அவசரமாக சுற்றி முற்றியும் பார்த்தவன். "உனக்கு கல்யாணம் ஆகப் போகுது. இன்னுமும் இப்படி பேசறது தப்பு " என்றான் கண்டிக்கும் விதமாக
" நிச்சயதர்த்தம் கூட இன்னும் நடக்கலை. அதனார் என்னை கட்டுப்படுத்த முடியாது. மனசு என்ன சட்டைனு நினைச்சீங்களா? கழட்டி கழட்டி மாத்த! " என்றவளின் தொண்டையடைத்தது.
"இது தப்பு மா " என்றான். அவளது அழுகை கண்டு ஆதூரமாக
"உங்களுக்கு தான் என்னை பிடிக்காதே. விடுங்க. எனக்கு இந்த சின்ன ஹெல்ப் மட்டும் பண்ணுங்க" என்றாள்.
பெருமூச்சு விட்டவன். "சரி கொடு " என்றபடி வாங்கிக் கொண்டு அங்கிருந்து சென்றான்.
நேரம் செல்ல, மாப்பிள்ளை வீட்டினர் வந்து விட்டனர். அப்போது கோபாலனுக்கு போன் வர, அவர் பதட்டமாவதும்! பிறகு ராமனிடம் ஏதோ சொல்வதும் தெரிந்தது.
ராஜூவும் ஈஸ்வரும் வந்தவர்களை வரவேற்க, " ராஜூ, ஒரு முக்கியமான வேலை பா. ஆட்கள் வந்து நிற்கிறாங்க. நாங்க போய் பார்த்துட்டு வந்திடுறோம்" என்று வாய்க்கு வந்ததை சொல்லி விட்டு அங்கிருந்து இருவரும் கிளம்பி விட்டனர்.
"யார்? என்ன?" என்றதற்கு பதில் சொல்ல அங்கே இருவருமே இல்லை.
இதை கண்டு, லாவண்யாவின் முகத்தில் மென்னகை பூத்தது. நிச்சயதிற்கு மாப்பிள்ளை வீட்டார் வந்திருக்க! கவலைப்படாமல் சிரித்து கொண்டிருக்கிறாளே! காரணம் என்னவோ? பொறுத்திருந்து பார்ப்போம்..