priya pandees
Moderator
அத்தியாயம் 1
"திருவும் கல்வியும், சீரும் தழைக்கவும், கருணை பூக்கவும், தீமையைக் காய்க்கவும், பருவமாய் நமதுள்ளம் பழுக்கவும் பெருகும் ஆழத்துப் பிள்ளையைப் பேணுவாம்!" ௭ன சத்தமாக உச்சரித்து அந்த அரசமர பிள்ளையார் முன் இந்த வயதிலேயும் 9 உக்கிப்போட்டு முடித்தே தன் பேத்தியை பார்வையால் தேடி திரும்பினார் வள்ளிமணாளன்.
அந்நேரம் "என்ன வள்ளி இன்னைக்கு என்னைய கூப்பிடாமயே வந்துட்ட" என்றவாறு அவரைத்தேடி வந்தவராக மறைமாணிக்கம் கேக்க.
"இல்ல மாணிக்கம் என் பேத்திய 108 நாள் இந்த பிள்ளையாரப்பனுக்கு குடம் தண்ணி ஊத்தி அபிஷேகம் பண்ணு சீக்கிரமா நல்ல மாப்பிள்ளையா அமையட்டும்ன்னு கூட்டியாந்தேன். ஆத்துல தண்ணி எடுக்க போயிருக்கா. அஞ்சு மணிக்கு பிள்ளைய ஒத்தைல அனுப்ப வேண்டாம்ன்னு நானும் கூடவே வந்துட்டேன்"
"ஓ பேத்திக்கென்ன தங்கமான புள்ளவே, அவள கட்டிக்க ௭வனுக்கு கசக்கும். நல்ல விவரமான புள்ள இடத்துக்கு தகுந்தமாறி பொருந்தி போய்டுவா. விவரமா இருந்தா தான்டே இப்ப உள்ள காலத்துல பொம்பள பிள்ளைக கட்டிகொடுத்த இடத்துல காலந்தள்ள முடியும்"
"அது சரி கேள்வியும் நீயே, பதிலும் நீயேன்னு எல்லாத்தையும் நீயே சொல்லிட்ட. எப்டியோ சீக்கிரம் அந்த புள்ளைக்கு நல்லது நடந்தா சரி. எனக்கும் வயசாகிட்டே போதுல்ல, ௭னகப்றம் பாக்க ஆளில்லலப்பு"
"உனக்கு வயசாகுதுன்ட்டு கல்யாணம் பண்ணாத, அவளுக்கு இப்ப என்ன வயசாகுது?"
"வர்ற ஆவணியோட 21 முடியுது"
"அப்ப சரி இப்ப ஆரம்பிச்சாதான் 22ல முடிக்க சரியாயிருக்கும், நானு ௭ன் புள்ள காதுல போட்டு வைக்கே"
"அட நீ வேறப்பா, 108 நாள்ல ஒரு நல்ல வழி காட்டிருன்னு தான காலையிலேயே பிள்ளைய கூட்டிட்டு இங்க வந்து நிக்குறேன்".
"அபிஷேகம் பண்ணி, சீக்கிரமா உன் பக்தன் வள்ளிமணாளன் வேண்டுதல்படி எனக்கொரு மணாளன் கொடுத்துடுன்னு 21 சுத்தும் சுத்திட்டேன் தாத்தா” என வந்து நின்றாள் ‘கயமலர்க்கன்னி’.
"சரிடாமா, இரு ரெண்டு நிமிஷம் கிளம்பிறலாம்".
"நீ பேசிட்டு மெதுவா வா தாத்தா, இப்பதான் நல்லா விடிஞ்சுட்டே வேலைக்கு போறவுகளு கிளம்பிட்டாக, ரோடு பூராவும் ஆள் நடமாட்டம் வந்துருச்சுல்ல, அதனால நா போயிடுவேன்".
"அதானடே அந்தப்புள்ள பொறந்து வளந்த ஊரு, எதுக்கு பயப்படுதவேன். இப்படி பயந்து தான் 12ஆம் கிளாஸ்க்கு மேல படிக்க அனுப்பாமலும் விட்டுட்ட. நீ பாத்து போமா, உன் தாத்தன நா பத்ரமா கூட்டியாறேன்".
"சரிங்க தாத்தா" என சிரித்துக் கொண்டவள், காலையிலேயே குளித்ததால் தளர்வாக முனிக்கொண்டை மட்டுமிருந்ததால் முன்முடி முகத்தில் விழ ஒதுக்கிக் கொண்டு நடக்க ஆரம்பித்தாள்.
அவளையே பார்த்துக்கொண்டிருந்த மாணிக்கத்திடம் வள்ளி, "என்னத்த அப்படிபாக்குறவே, அவள கண்டதே இல்லாதமாறி?".
"நம்ம கிரமத்துல இன்னைக்கும் தாவணியோட சுத்துற பிள்ளைகள விரல் விட்டு எண்ணிடலாம்டே. உன் பேத்தியப்பாரு மஹாலக்ஷ்மிடே அவ. இவள கட்டிக்க குடுத்துல்ல வச்சுருக்கனும், பாரு இதுக்காகவே அவளுக்கு சீக்கிரம் வரன் கூடி வரும் விசனப்படாத".
"உன் வாக்கு பளிக்கட்டும்யா, சரி வா, வவுறு காந்துது டீ குடிப்போம்".
வீட்டுக்கு சென்று கொண்டிருந்த கயமலர்க்கன்னியோ, எதிரில் வேலைக்கு கிளம்பி சென்று கொண்டிருந்தவர்களிடம், வழக்கடித்துக் கொண்டே சென்றாள், "என்ன மல்லிகாக்கா நெத்திலி கருவாடா? வாசன சட்டியத் தாண்டி இங்க வர வருதே" ௭ன்க.
"மல்லி கைமணம் அப்படியாக்கும்" ௭ன்றவாறு கடந்து சென்றாள் அந்த மல்லியாகப்பட்டவள்.
"என்ன ஐயம்மா பாட்டி ஓ சோடிய இன்னைக்கு காணும்".
"அந்த ஆளுக்கு கரண்ட காலுல வலின்னு வூட்டுலயே படுத்துக்கிச்சு",
"நீ கூட இருந்து புருஷன கவனிக்காம வேலைக்கு கிளம்பிட்டியாக்கும்".
"ரெண்டு பேரும் ஊட்டுல இருந்துட்டா ராவுக்கு ஏது கஞ்சி".
"அதுவும் சரிதான், தாத்தாக்கு மதிய கஞ்சி ௭ன் தாத்தாகிட்ட குடுத்துவிட்றுதேன் நீ வேலைய முடிச்சே வா கலங்காம".
"சரி த்தா" ௭ன அவள் தாடையை தடவி விட்டு சென்றது ஐயம்மா பாட்டி.
"நீ என்ன கன்னி காலங்காத்தால இந்தப் பக்கம்" ஒரு பெரியவர் கேக்க.
"அது ஒன்னுமில்ல பெரியப்பா, கல்யாண கட்டிக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன், அதான் ஒரு நல்ல மாப்ள பாத்துக்குடுன்னு, நம்ம பிள்ளையாரப்பாவ கேட்டுக்கிட்டு வாரேன்".
"உனக்கென்னத்தா தங்கத் தாரக, ஒன்ன கட்டிக்க எவனுக்கு கசக்கும்" இன்னொரு தாத்தா சொல்ல.
"அப்ப நீ கட்டிக்கிடுதியா?".
"என் பொஞ்சாதிட்ட ஒரு வார்த்த கேட்டிட்டு கட்டிக்கிடுதேன், அவ சொல்லாம நா ௭துவுமே செய்ய மாட்டேனாக்கும்" ௭ன்றார் மிச்சமிருக்கும் 22 பல்லையும் காட்டி.
"எடு வெளக்கமாத்த. எந்துச்சு நிக்க குச்சி தேவப்படுது, இந்த வயசுல ரெண்டாவது கல்யாணம் கட்டிக்கிட்டு என்ன செய்யப் போறீரு" அருகில் அவரது மனைவி அவர் குமட்டில் இடிக்க, சிரித்துக்கொண்டே வீடு வந்து சேர்ந்தாள் நம் கண்ணி.
திருவாடிமலையூர்,
திருநெல்வேலி-தூத்துக்குடி பைபாஸில் அமைந்திருக்கிறது. கிராமமென்ற சேர்க்கையிலயும் வராது நகரமென்ற சேர்க்கையிலயும் வராது. பைபாஸில் இருப்பதாலும் , விமான நிலையம் அருகில் இருப்பதாலும் கொஞ்சம் பேர்போன ஊர், இங்கிட்டு திருநெல்வேலிக்கும் 1/2 மணி நேரம், அங்கிட்டு தூத்துக்குடிக்கும் 1/2 மணி நேரம். அதனால் இளவட்டங்கள்லாம் "எங்க ஊர் எவ்வளவு பெரிய ஊர் தெரியுமா"ன்னு பில்டப் பண்ணிக்குவாங்க. இப்பயிப்பதான் கொஞ்சம் டெவெலப்பாகிட்டுருக்கு.
சுத்துவட்டாரத்த நம்பி, ஒரு பெரிய மனுஷன் மொதமொறையா டவுன் சைடுல இருக்குறமாதிரி 2,3 ஸ்கிரீன், புல்ஏசி இருக்குறாப்ல தியேட்டர் திறக்க போறாரு, அதே பெரிய மனுஷன் அவரோட பையனுக்கு, புது சூப்பர்மார்க்கெட் 5மாடி வச்சது கட்டி குடுத்துருக்காரு, 'அனைத்துப் பொருட்களும் இங்கு வாங்கலாம்'னு 6மாசம் முன்ன தான் ஹன்சிகா வந்து திறந்து வச்சுட்டுப் போச்சு. இது ஒரு பக்கம்னா காட்டு வேலை, தீப்பெட்டி ஆபீஸ், பீடி சுத்துறது, 100 நாள் வேலைன்னு போற மக்களும் இங்குண்டு, இப்படி கிராமம்ன்னு சொலிக்கிறவுங்களுக்கு கிராமம், நகரம் சொல்லிக்கிறவங்களுக்கு நகரம்.
அந்த ஊரில் வளர்ந்த பெரிய குடும்பங்களுள் ஒன்று தான் மறைமாணிக்கம்-செல்லப்பேச்சி குடும்பம். மாணிக்கம் அந்தக் காலத்திலேயே அந்த ஊரில் முதன் முதலில் தீப்பெட்டி ஆபிஸை நிறுவி 4 பேருக்கு வேலை கொடுத்தவர். அவர்களுக்கு இரண்டு மக்கள் பூவேந்தன், பூங்குழலி. பூங்குழலியை திருநெல்வேலி காரரான மருதவிநாயகம் என்பவருக்கு கட்டிவைத்ததால், இரண்டு பெண்பிள்ளைகளோடு, இப்போது திருநெல்வேலியில் வசிக்கிறார். மகன் பூவேந்தன் - பானுச்சந்திரா என்பவரை மணமுடித்து 3 பிள்ளைகள் ௭ன தாத்தா பாட்டியுடன் ஒன்றாக இருக்கின்றனர்,
பூவேந்தன், அவர் தான் தியேட்டர் கட்டிக் கொண்டிருப்பது. அவரது 2வது மகன் பேரறிவாளன், பி.காம், முடித்து 2 வருடம் சென்னையில் வேலை பார்த்து வந்தவன் கடந்த வருடம் அத்தை மகள்(பூங்குழலியின் மகள்) இந்திராணியுடன் கல்யாணம் முடியவும், ஊரிலேயே சொந்த தொழில் செய்கிறேன் என சொல்லவும், சூப்பர் மார்க்கெட்டை கட்டிக் கொடுத்து உக்கார வைத்து விட்டார்.
அவரது மூன்றாவது மகள் மதியொளி பிஎஸ்சி மேக்ஸ் பட்டதாரி, உள்ளூர் பள்ளிக்கூடத்தில் வேலை பார்த்து அங்கு வேலைக்கு வந்த மற்றொரு எம் எஸ் சி பிசிக்ஸ் பட்டதாரியான குமரகுருவை காதல் கல்யாணம் கட்டிக் கொண்டு தவரூபன் என மூன்று வயது மகனுடன், இந்த ஊரிலேயே தாய் தந்தை வீட்டுப் பக்கத்திலேயே குடியிருக்கிறாள்.
அவர்கள் வீட்டில் ஒட்டாத கேரக்டர் ஒன்று உண்டு என்றால் அது ‘மாறன்வழுதி’, பூவேந்தனின் மூத்த உறுப்புடாத பிள்ளை, இவன் ஐந்தாம் கிளாஸ் படிக்கையில் 5 பாடத்திலும் பெயில் ஆயிட்டான்னு கிளாஸ் வாத்தியார் அப்பாவை கூட்டிட்டு வா'ன்னு சொல்ல, ஸ்கூலுக்கு வந்த பூவேந்தன் வாத்தியார் மானாவாரியா திட்டுனதுல கோபப்பட்டு எல்லார் முன்னாடியும் அவனை அடி வெளுத்து விட்டார். இனி அந்த கிளாஸ்ல எப்படி என்னால நுழைய முடியும் என் மானமே போச்சு என்று போர்க்கொடி தூக்கி ஸ்கூல் பக்கமே ஒதுங்காம இருந்துவிட்டான்.
"அடுத்த வகுப்பில் சேர்ந்து படின்னு" சொன்னதற்கும், "அது அதவிட இன்னும் பெருத்த அவமானம்ன்னு" படிக்க மேல் வலிச்சு அஞ்சாம் கிளாஸ் பெயிலாகி சுத்தி வரும் ஒரு மேதாவி. ஆனா அன்னையோட பூவேந்தன் இவன அடிக்கிறத விட்டுட்டார். இப்ப "அடிச்சே வளர்த்திருக்கனுமோ"ன்னு ஃபீல் பண்ணிட்டுருக்காரு.
மறைமாணிக்கம் தாத்தா வள்ளிமணாளன் தாத்தா வோடு டீயை குடித்து முடித்து, நாட்டு நடப்பை பகிர்ந்து கொண்டு வீடு வர 9 மணி ஆகியது. இவர் நுழைய மதியொளி வெளியேறினாள், "சாப்பிட்டியாமா? மாப்பிளய எங்க?" ௭ன்றார் ௭திர்பட்ட பேத்தியிடம்.
"இன்னைக்கு அவரோட சப்ஜட் எக்ஸாம் தாத்தா, அதனால சீக்கிரமா சாப்பிட்டு கிளம்பிட்டாரு. நானும் சாப்ட்டேன். நீங்களும் போய் சாப்பிடுங்க, நா கெளம்புறேன்" என பதிலை எதிர்பாராமல் நடந்து விட்டாள்.
இவர் சென்று டைனிங் டேபிளில் அமர, பானு பரிமாற வர, "கொஞ்ச நேரம் ஆகட்டும்மா, நெஞ்சு எரிச்சலாயிருக்கு".
"இந்நேரத்துக்குள்ள எத்தன டீ, எத்தன வடை உள்ள போச்சோ? செரிச்சாத்தான அடுத்து பசிக்கும்" என்றார் செல்லப்பேச்சி வெண்பொங்கலை சாப்பிட்டுக்கொண்டே.
"எங்க நீ சாப்பிடுறதப் பாத்தா எனக்கு செரிச்சாலும் சாப்பிட ஒன்னுமிருக்காது போலயே".
"உங்கள மாதிரியா? வெட்டி கதையா பேசி உடம்பு வளையாம கடக்கேன், அஞ்சு மணியிலயிருந்து எம்புட்டு வேலை பாத்திருக்கேன், என் சாப்பாட நீங்க பேசாதீக" ௭ன்றார் டென்ஷனாக பாட்டி.
பானுசந்திரா இருவரையும் பார்த்து சிரித்துக் கொண்டிருக்க. "ம்க்கும்" என கணைத்துக்கொண்டு வந்தமர்ந்தார் பூவேந்தன்.
"ஏன் உன் புருஷனுக்கு நாங்க பயந்துருவோமாக்கும். வரும்போதே கணைச்சுகிட்டு வரான். தொண்டை சரியில்லனா விக்ஸ் வாங்கி போட சொல்லு, கிச்சு கிச்சே இருக்காதாம்" என்றார் மெதுவாக பானுவிடம்.
"அத சத்தமா அந்தப்பக்கம் திரும்பியே சொல்லலாம்ல" என்றார் செல்லபேச்சி சத்தமாக.
"அடி பாதகத்தி கத்தி தொலைச்சுட்டாளே" என முனங்கி, "என்னப்பா தியேட்டர் வேலையெல்லாம் எந்தளவுல இருக்கு. எப்ப திறப்பு விழா வைக்குற ஐடியால இருக்க" ௭ன திசை திருப்பினார்.
"ஏன் ப்பா, சும்மாவே இருக்கதுக்கு அத ஓரெட்டு வந்து பாக்கலாம்ல, அங்க வேல நடக்கான்னு நீங்க பாத்துகிட்டா மத்த வெளி வேலைய நா பாப்பேன்ல" என்றவர், பானு வந்து பரிமாற சாப்பிட்டுக் கொண்டே, "௭ங்க அந்த உறுப்படாத பய, சாருக்கு இன்னும் விடியலயோ?".
"ஏன்டா காலையிலேயே யாரயாவது திட்டிட்டே இருக்கணுமா? இப்படியே வெளிய கிளம்பி போனா அங்க வேலைக்கு வாரவுங்கட்டயும் எறிஞ்சு விழ தான சொல்லும்" ௭ன்றார் தாத்தா.
"கலகலன்னு சிரிச்சு சந்தோஷமா இருக்க மாதிரியா இருக்கு? மூத்த பிள்ள உறுப்படாம சுத்துது. 29 வயசாகுது, ஒருத்தன் கிட்டயும் போய் பொண்ணு ஒன்னு கேக்க முடியல, அப்டி பேரு வாங்கி வச்சிருக்கான் ஊருக்குள்ள. வேலைக்கு போய் வருமானம் இல்லாத பயலுக்கு எந்த மூஞ்ச வச்சிக்கிட்டு நா போய் பொண்ணுக் கேப்பேன். சொந்த தங்கச்சி மவளே இவேன் வேணாம்ட்டு தம்பிய கட்டிக்கிட்டா, அப்டித்தானே எல்லா பிள்ளைகளும் நினைக்கும்".
அந்நேரம் பேரறிவாளன், இந்திராணி, இரண்டு மாத மகள் தீந்தமிழைத் தூக்கிக் கொண்டு வர, அந்தப் பேச்சை அப்படியே நிறுத்திக்கொண்டார் பூவேந்தன்.
"என்ன மாமா, நா மாறன் அத்தான வேணாம்னு சொன்னது உங்களுக்கு வருத்தம் போல?" என அவள் நக்கலாக கேட்க.
"எனக்கு நீ வேணான்னு சொன்னது வருத்தமில்லம்மா, எல்லா பிள்ளைகளும் உன்ன மாதிரி தானே தனக்கு சம்பாதிச்சு போடுற புருஷன் தான் வேணும்னு நினைக்குங்க. எப்படி அவனுக்கு கல்யாணம் பண்ண போறோம்ன்னு வருத்தத்துல சொன்னேன். நீ எதும் மனசுல வச்சுக்காத" என்றார்.
"சரிடா விடு, அவனுக்கு நடக்கணும்னு இருக்குறது நடக்கும்" இடையே பாட்டி சொல்ல.
"என் முன்னாடி பேச தைரியமில்லாம எல்லாவனு பின்னாடி பேசுறான்ப்பா, கேவலமா இருக்கு" ௭ன்றார் பூவேந்தன் மீண்டும். அங்கு கனத்த மௌனம் நிலவியது.
அங்கு ஒருவர் தன்னை பற்றி நொந்துபோய் பேசிக்கொண்டிருக்க, எந்த கவலையும் இல்லாமல், "௭னக்கே ராஜாவான்னா வாழுறேன்." ௭ன நிம்மதியாய் தூங்கிக்கொண்டிருந்தான் மாறன்வழுதி.
"திருவும் கல்வியும், சீரும் தழைக்கவும், கருணை பூக்கவும், தீமையைக் காய்க்கவும், பருவமாய் நமதுள்ளம் பழுக்கவும் பெருகும் ஆழத்துப் பிள்ளையைப் பேணுவாம்!" ௭ன சத்தமாக உச்சரித்து அந்த அரசமர பிள்ளையார் முன் இந்த வயதிலேயும் 9 உக்கிப்போட்டு முடித்தே தன் பேத்தியை பார்வையால் தேடி திரும்பினார் வள்ளிமணாளன்.
அந்நேரம் "என்ன வள்ளி இன்னைக்கு என்னைய கூப்பிடாமயே வந்துட்ட" என்றவாறு அவரைத்தேடி வந்தவராக மறைமாணிக்கம் கேக்க.
"இல்ல மாணிக்கம் என் பேத்திய 108 நாள் இந்த பிள்ளையாரப்பனுக்கு குடம் தண்ணி ஊத்தி அபிஷேகம் பண்ணு சீக்கிரமா நல்ல மாப்பிள்ளையா அமையட்டும்ன்னு கூட்டியாந்தேன். ஆத்துல தண்ணி எடுக்க போயிருக்கா. அஞ்சு மணிக்கு பிள்ளைய ஒத்தைல அனுப்ப வேண்டாம்ன்னு நானும் கூடவே வந்துட்டேன்"
"ஓ பேத்திக்கென்ன தங்கமான புள்ளவே, அவள கட்டிக்க ௭வனுக்கு கசக்கும். நல்ல விவரமான புள்ள இடத்துக்கு தகுந்தமாறி பொருந்தி போய்டுவா. விவரமா இருந்தா தான்டே இப்ப உள்ள காலத்துல பொம்பள பிள்ளைக கட்டிகொடுத்த இடத்துல காலந்தள்ள முடியும்"
"அது சரி கேள்வியும் நீயே, பதிலும் நீயேன்னு எல்லாத்தையும் நீயே சொல்லிட்ட. எப்டியோ சீக்கிரம் அந்த புள்ளைக்கு நல்லது நடந்தா சரி. எனக்கும் வயசாகிட்டே போதுல்ல, ௭னகப்றம் பாக்க ஆளில்லலப்பு"
"உனக்கு வயசாகுதுன்ட்டு கல்யாணம் பண்ணாத, அவளுக்கு இப்ப என்ன வயசாகுது?"
"வர்ற ஆவணியோட 21 முடியுது"
"அப்ப சரி இப்ப ஆரம்பிச்சாதான் 22ல முடிக்க சரியாயிருக்கும், நானு ௭ன் புள்ள காதுல போட்டு வைக்கே"
"அட நீ வேறப்பா, 108 நாள்ல ஒரு நல்ல வழி காட்டிருன்னு தான காலையிலேயே பிள்ளைய கூட்டிட்டு இங்க வந்து நிக்குறேன்".
"அபிஷேகம் பண்ணி, சீக்கிரமா உன் பக்தன் வள்ளிமணாளன் வேண்டுதல்படி எனக்கொரு மணாளன் கொடுத்துடுன்னு 21 சுத்தும் சுத்திட்டேன் தாத்தா” என வந்து நின்றாள் ‘கயமலர்க்கன்னி’.
"சரிடாமா, இரு ரெண்டு நிமிஷம் கிளம்பிறலாம்".
"நீ பேசிட்டு மெதுவா வா தாத்தா, இப்பதான் நல்லா விடிஞ்சுட்டே வேலைக்கு போறவுகளு கிளம்பிட்டாக, ரோடு பூராவும் ஆள் நடமாட்டம் வந்துருச்சுல்ல, அதனால நா போயிடுவேன்".
"அதானடே அந்தப்புள்ள பொறந்து வளந்த ஊரு, எதுக்கு பயப்படுதவேன். இப்படி பயந்து தான் 12ஆம் கிளாஸ்க்கு மேல படிக்க அனுப்பாமலும் விட்டுட்ட. நீ பாத்து போமா, உன் தாத்தன நா பத்ரமா கூட்டியாறேன்".
"சரிங்க தாத்தா" என சிரித்துக் கொண்டவள், காலையிலேயே குளித்ததால் தளர்வாக முனிக்கொண்டை மட்டுமிருந்ததால் முன்முடி முகத்தில் விழ ஒதுக்கிக் கொண்டு நடக்க ஆரம்பித்தாள்.
அவளையே பார்த்துக்கொண்டிருந்த மாணிக்கத்திடம் வள்ளி, "என்னத்த அப்படிபாக்குறவே, அவள கண்டதே இல்லாதமாறி?".
"நம்ம கிரமத்துல இன்னைக்கும் தாவணியோட சுத்துற பிள்ளைகள விரல் விட்டு எண்ணிடலாம்டே. உன் பேத்தியப்பாரு மஹாலக்ஷ்மிடே அவ. இவள கட்டிக்க குடுத்துல்ல வச்சுருக்கனும், பாரு இதுக்காகவே அவளுக்கு சீக்கிரம் வரன் கூடி வரும் விசனப்படாத".
"உன் வாக்கு பளிக்கட்டும்யா, சரி வா, வவுறு காந்துது டீ குடிப்போம்".
வீட்டுக்கு சென்று கொண்டிருந்த கயமலர்க்கன்னியோ, எதிரில் வேலைக்கு கிளம்பி சென்று கொண்டிருந்தவர்களிடம், வழக்கடித்துக் கொண்டே சென்றாள், "என்ன மல்லிகாக்கா நெத்திலி கருவாடா? வாசன சட்டியத் தாண்டி இங்க வர வருதே" ௭ன்க.
"மல்லி கைமணம் அப்படியாக்கும்" ௭ன்றவாறு கடந்து சென்றாள் அந்த மல்லியாகப்பட்டவள்.
"என்ன ஐயம்மா பாட்டி ஓ சோடிய இன்னைக்கு காணும்".
"அந்த ஆளுக்கு கரண்ட காலுல வலின்னு வூட்டுலயே படுத்துக்கிச்சு",
"நீ கூட இருந்து புருஷன கவனிக்காம வேலைக்கு கிளம்பிட்டியாக்கும்".
"ரெண்டு பேரும் ஊட்டுல இருந்துட்டா ராவுக்கு ஏது கஞ்சி".
"அதுவும் சரிதான், தாத்தாக்கு மதிய கஞ்சி ௭ன் தாத்தாகிட்ட குடுத்துவிட்றுதேன் நீ வேலைய முடிச்சே வா கலங்காம".
"சரி த்தா" ௭ன அவள் தாடையை தடவி விட்டு சென்றது ஐயம்மா பாட்டி.
"நீ என்ன கன்னி காலங்காத்தால இந்தப் பக்கம்" ஒரு பெரியவர் கேக்க.
"அது ஒன்னுமில்ல பெரியப்பா, கல்யாண கட்டிக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன், அதான் ஒரு நல்ல மாப்ள பாத்துக்குடுன்னு, நம்ம பிள்ளையாரப்பாவ கேட்டுக்கிட்டு வாரேன்".
"உனக்கென்னத்தா தங்கத் தாரக, ஒன்ன கட்டிக்க எவனுக்கு கசக்கும்" இன்னொரு தாத்தா சொல்ல.
"அப்ப நீ கட்டிக்கிடுதியா?".
"என் பொஞ்சாதிட்ட ஒரு வார்த்த கேட்டிட்டு கட்டிக்கிடுதேன், அவ சொல்லாம நா ௭துவுமே செய்ய மாட்டேனாக்கும்" ௭ன்றார் மிச்சமிருக்கும் 22 பல்லையும் காட்டி.
"எடு வெளக்கமாத்த. எந்துச்சு நிக்க குச்சி தேவப்படுது, இந்த வயசுல ரெண்டாவது கல்யாணம் கட்டிக்கிட்டு என்ன செய்யப் போறீரு" அருகில் அவரது மனைவி அவர் குமட்டில் இடிக்க, சிரித்துக்கொண்டே வீடு வந்து சேர்ந்தாள் நம் கண்ணி.
திருவாடிமலையூர்,
திருநெல்வேலி-தூத்துக்குடி பைபாஸில் அமைந்திருக்கிறது. கிராமமென்ற சேர்க்கையிலயும் வராது நகரமென்ற சேர்க்கையிலயும் வராது. பைபாஸில் இருப்பதாலும் , விமான நிலையம் அருகில் இருப்பதாலும் கொஞ்சம் பேர்போன ஊர், இங்கிட்டு திருநெல்வேலிக்கும் 1/2 மணி நேரம், அங்கிட்டு தூத்துக்குடிக்கும் 1/2 மணி நேரம். அதனால் இளவட்டங்கள்லாம் "எங்க ஊர் எவ்வளவு பெரிய ஊர் தெரியுமா"ன்னு பில்டப் பண்ணிக்குவாங்க. இப்பயிப்பதான் கொஞ்சம் டெவெலப்பாகிட்டுருக்கு.
சுத்துவட்டாரத்த நம்பி, ஒரு பெரிய மனுஷன் மொதமொறையா டவுன் சைடுல இருக்குறமாதிரி 2,3 ஸ்கிரீன், புல்ஏசி இருக்குறாப்ல தியேட்டர் திறக்க போறாரு, அதே பெரிய மனுஷன் அவரோட பையனுக்கு, புது சூப்பர்மார்க்கெட் 5மாடி வச்சது கட்டி குடுத்துருக்காரு, 'அனைத்துப் பொருட்களும் இங்கு வாங்கலாம்'னு 6மாசம் முன்ன தான் ஹன்சிகா வந்து திறந்து வச்சுட்டுப் போச்சு. இது ஒரு பக்கம்னா காட்டு வேலை, தீப்பெட்டி ஆபீஸ், பீடி சுத்துறது, 100 நாள் வேலைன்னு போற மக்களும் இங்குண்டு, இப்படி கிராமம்ன்னு சொலிக்கிறவுங்களுக்கு கிராமம், நகரம் சொல்லிக்கிறவங்களுக்கு நகரம்.
அந்த ஊரில் வளர்ந்த பெரிய குடும்பங்களுள் ஒன்று தான் மறைமாணிக்கம்-செல்லப்பேச்சி குடும்பம். மாணிக்கம் அந்தக் காலத்திலேயே அந்த ஊரில் முதன் முதலில் தீப்பெட்டி ஆபிஸை நிறுவி 4 பேருக்கு வேலை கொடுத்தவர். அவர்களுக்கு இரண்டு மக்கள் பூவேந்தன், பூங்குழலி. பூங்குழலியை திருநெல்வேலி காரரான மருதவிநாயகம் என்பவருக்கு கட்டிவைத்ததால், இரண்டு பெண்பிள்ளைகளோடு, இப்போது திருநெல்வேலியில் வசிக்கிறார். மகன் பூவேந்தன் - பானுச்சந்திரா என்பவரை மணமுடித்து 3 பிள்ளைகள் ௭ன தாத்தா பாட்டியுடன் ஒன்றாக இருக்கின்றனர்,
பூவேந்தன், அவர் தான் தியேட்டர் கட்டிக் கொண்டிருப்பது. அவரது 2வது மகன் பேரறிவாளன், பி.காம், முடித்து 2 வருடம் சென்னையில் வேலை பார்த்து வந்தவன் கடந்த வருடம் அத்தை மகள்(பூங்குழலியின் மகள்) இந்திராணியுடன் கல்யாணம் முடியவும், ஊரிலேயே சொந்த தொழில் செய்கிறேன் என சொல்லவும், சூப்பர் மார்க்கெட்டை கட்டிக் கொடுத்து உக்கார வைத்து விட்டார்.
அவரது மூன்றாவது மகள் மதியொளி பிஎஸ்சி மேக்ஸ் பட்டதாரி, உள்ளூர் பள்ளிக்கூடத்தில் வேலை பார்த்து அங்கு வேலைக்கு வந்த மற்றொரு எம் எஸ் சி பிசிக்ஸ் பட்டதாரியான குமரகுருவை காதல் கல்யாணம் கட்டிக் கொண்டு தவரூபன் என மூன்று வயது மகனுடன், இந்த ஊரிலேயே தாய் தந்தை வீட்டுப் பக்கத்திலேயே குடியிருக்கிறாள்.
அவர்கள் வீட்டில் ஒட்டாத கேரக்டர் ஒன்று உண்டு என்றால் அது ‘மாறன்வழுதி’, பூவேந்தனின் மூத்த உறுப்புடாத பிள்ளை, இவன் ஐந்தாம் கிளாஸ் படிக்கையில் 5 பாடத்திலும் பெயில் ஆயிட்டான்னு கிளாஸ் வாத்தியார் அப்பாவை கூட்டிட்டு வா'ன்னு சொல்ல, ஸ்கூலுக்கு வந்த பூவேந்தன் வாத்தியார் மானாவாரியா திட்டுனதுல கோபப்பட்டு எல்லார் முன்னாடியும் அவனை அடி வெளுத்து விட்டார். இனி அந்த கிளாஸ்ல எப்படி என்னால நுழைய முடியும் என் மானமே போச்சு என்று போர்க்கொடி தூக்கி ஸ்கூல் பக்கமே ஒதுங்காம இருந்துவிட்டான்.
"அடுத்த வகுப்பில் சேர்ந்து படின்னு" சொன்னதற்கும், "அது அதவிட இன்னும் பெருத்த அவமானம்ன்னு" படிக்க மேல் வலிச்சு அஞ்சாம் கிளாஸ் பெயிலாகி சுத்தி வரும் ஒரு மேதாவி. ஆனா அன்னையோட பூவேந்தன் இவன அடிக்கிறத விட்டுட்டார். இப்ப "அடிச்சே வளர்த்திருக்கனுமோ"ன்னு ஃபீல் பண்ணிட்டுருக்காரு.
மறைமாணிக்கம் தாத்தா வள்ளிமணாளன் தாத்தா வோடு டீயை குடித்து முடித்து, நாட்டு நடப்பை பகிர்ந்து கொண்டு வீடு வர 9 மணி ஆகியது. இவர் நுழைய மதியொளி வெளியேறினாள், "சாப்பிட்டியாமா? மாப்பிளய எங்க?" ௭ன்றார் ௭திர்பட்ட பேத்தியிடம்.
"இன்னைக்கு அவரோட சப்ஜட் எக்ஸாம் தாத்தா, அதனால சீக்கிரமா சாப்பிட்டு கிளம்பிட்டாரு. நானும் சாப்ட்டேன். நீங்களும் போய் சாப்பிடுங்க, நா கெளம்புறேன்" என பதிலை எதிர்பாராமல் நடந்து விட்டாள்.
இவர் சென்று டைனிங் டேபிளில் அமர, பானு பரிமாற வர, "கொஞ்ச நேரம் ஆகட்டும்மா, நெஞ்சு எரிச்சலாயிருக்கு".
"இந்நேரத்துக்குள்ள எத்தன டீ, எத்தன வடை உள்ள போச்சோ? செரிச்சாத்தான அடுத்து பசிக்கும்" என்றார் செல்லப்பேச்சி வெண்பொங்கலை சாப்பிட்டுக்கொண்டே.
"எங்க நீ சாப்பிடுறதப் பாத்தா எனக்கு செரிச்சாலும் சாப்பிட ஒன்னுமிருக்காது போலயே".
"உங்கள மாதிரியா? வெட்டி கதையா பேசி உடம்பு வளையாம கடக்கேன், அஞ்சு மணியிலயிருந்து எம்புட்டு வேலை பாத்திருக்கேன், என் சாப்பாட நீங்க பேசாதீக" ௭ன்றார் டென்ஷனாக பாட்டி.
பானுசந்திரா இருவரையும் பார்த்து சிரித்துக் கொண்டிருக்க. "ம்க்கும்" என கணைத்துக்கொண்டு வந்தமர்ந்தார் பூவேந்தன்.
"ஏன் உன் புருஷனுக்கு நாங்க பயந்துருவோமாக்கும். வரும்போதே கணைச்சுகிட்டு வரான். தொண்டை சரியில்லனா விக்ஸ் வாங்கி போட சொல்லு, கிச்சு கிச்சே இருக்காதாம்" என்றார் மெதுவாக பானுவிடம்.
"அத சத்தமா அந்தப்பக்கம் திரும்பியே சொல்லலாம்ல" என்றார் செல்லபேச்சி சத்தமாக.
"அடி பாதகத்தி கத்தி தொலைச்சுட்டாளே" என முனங்கி, "என்னப்பா தியேட்டர் வேலையெல்லாம் எந்தளவுல இருக்கு. எப்ப திறப்பு விழா வைக்குற ஐடியால இருக்க" ௭ன திசை திருப்பினார்.
"ஏன் ப்பா, சும்மாவே இருக்கதுக்கு அத ஓரெட்டு வந்து பாக்கலாம்ல, அங்க வேல நடக்கான்னு நீங்க பாத்துகிட்டா மத்த வெளி வேலைய நா பாப்பேன்ல" என்றவர், பானு வந்து பரிமாற சாப்பிட்டுக் கொண்டே, "௭ங்க அந்த உறுப்படாத பய, சாருக்கு இன்னும் விடியலயோ?".
"ஏன்டா காலையிலேயே யாரயாவது திட்டிட்டே இருக்கணுமா? இப்படியே வெளிய கிளம்பி போனா அங்க வேலைக்கு வாரவுங்கட்டயும் எறிஞ்சு விழ தான சொல்லும்" ௭ன்றார் தாத்தா.
"கலகலன்னு சிரிச்சு சந்தோஷமா இருக்க மாதிரியா இருக்கு? மூத்த பிள்ள உறுப்படாம சுத்துது. 29 வயசாகுது, ஒருத்தன் கிட்டயும் போய் பொண்ணு ஒன்னு கேக்க முடியல, அப்டி பேரு வாங்கி வச்சிருக்கான் ஊருக்குள்ள. வேலைக்கு போய் வருமானம் இல்லாத பயலுக்கு எந்த மூஞ்ச வச்சிக்கிட்டு நா போய் பொண்ணுக் கேப்பேன். சொந்த தங்கச்சி மவளே இவேன் வேணாம்ட்டு தம்பிய கட்டிக்கிட்டா, அப்டித்தானே எல்லா பிள்ளைகளும் நினைக்கும்".
அந்நேரம் பேரறிவாளன், இந்திராணி, இரண்டு மாத மகள் தீந்தமிழைத் தூக்கிக் கொண்டு வர, அந்தப் பேச்சை அப்படியே நிறுத்திக்கொண்டார் பூவேந்தன்.
"என்ன மாமா, நா மாறன் அத்தான வேணாம்னு சொன்னது உங்களுக்கு வருத்தம் போல?" என அவள் நக்கலாக கேட்க.
"எனக்கு நீ வேணான்னு சொன்னது வருத்தமில்லம்மா, எல்லா பிள்ளைகளும் உன்ன மாதிரி தானே தனக்கு சம்பாதிச்சு போடுற புருஷன் தான் வேணும்னு நினைக்குங்க. எப்படி அவனுக்கு கல்யாணம் பண்ண போறோம்ன்னு வருத்தத்துல சொன்னேன். நீ எதும் மனசுல வச்சுக்காத" என்றார்.
"சரிடா விடு, அவனுக்கு நடக்கணும்னு இருக்குறது நடக்கும்" இடையே பாட்டி சொல்ல.
"என் முன்னாடி பேச தைரியமில்லாம எல்லாவனு பின்னாடி பேசுறான்ப்பா, கேவலமா இருக்கு" ௭ன்றார் பூவேந்தன் மீண்டும். அங்கு கனத்த மௌனம் நிலவியது.
அங்கு ஒருவர் தன்னை பற்றி நொந்துபோய் பேசிக்கொண்டிருக்க, எந்த கவலையும் இல்லாமல், "௭னக்கே ராஜாவான்னா வாழுறேன்." ௭ன நிம்மதியாய் தூங்கிக்கொண்டிருந்தான் மாறன்வழுதி.